<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T05:34:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய - இலங்கை ஆடைத் துறை வர்த்தகம் குறித்து விசேட பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920"></link>
            <id>https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920</id>
            <summary type="text">இந்திய - இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய - இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.
</p><p>
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் சர்வதேச ஆடை வர்த்தகக் கண்காட்சியில் வைத்து அந்நாட்டு ஆடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையிலும் அக்குழு ஈடுபட்டுள்ளது.
</p><p>
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் பயனுள்ள வகையில் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. </p><p></p><h2>இந்திய ஆடைத்துறை அமைச்சர்&nbsp;</h2><p>

அத்துடன், கைத்தறித் துறையின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு வழங்கப்பட்ட இரண்டு வார கால விசேட பயிற்சித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கைத் தரப்பால் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1115ddde-a1df-4feb-80dd-1d912764647a/26-6a586501b8f3e.webp' /></p><p>
</p><p>
மேலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2027' நிகழ்வில் பங்கேற்குமாறு இந்திய ஆடைத்துறை அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் முன்னணி வர்த்தக முயற்சியாளர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்புகள் மற்றும் திறமையான மனிதவளத்தின் ஆற்றல்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹீஷினி கொலன்னே உட்பட இரு நாடுகளினதும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T04:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-5-mn-usd-fraud-court-order-to-sri-lanka-telecom-1784174422"></link>
            <id>https://ibctamil.com/article/2-5-mn-usd-fraud-court-order-to-sri-lanka-telecom-1784174422</id>
            <summary type="text">திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பாபான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>கொழும்பு பல்கலைக்கழகம்</h2><p>
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்தட்டுக்கள், மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னைய நீதிமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba252415-940f-4b8c-a102-9f491606ca87/26-6a585c1ca2c70.webp' /></p><p>
</p><p>
குறித்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகள் அவசியமெனவும், அதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விசாரணைகளுக்காக குறித்த தரவுகளை தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-jaffnas-3-islands-into-green-energy-islands-1784170280"></link>
            <id>https://ibctamil.com/article/change-jaffnas-3-islands-into-green-energy-islands-1784170280</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி, குறித்த மூன்று தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d06c80e-7b3e-4625-9b76-c44d0cd4cd8d/26-6a58498c484cf.webp' /></p><p>பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இது தவிர, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் - கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை நிலவரம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unable-to-purchase-fuel-world-market-lowest-price-1784172260"></link>
            <id>https://ibctamil.com/article/unable-to-purchase-fuel-world-market-lowest-price-1784172260</id>
            <summary type="text">இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது.</p><p></p><h2>மத்திய கிழக்கு சூழ்நிலை&nbsp;</h2><p> </p><p>நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராகி வரும் போதிலும், ஏதேனும் ஒரு துறையை முடக்கிவிட்டு எம்மால் முன்னோக்கி நகர முடியாது.


அவ்வாறு முடக்கினால் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b17219-38fe-4a2d-8b1c-b3bfbc2c32d5/26-6a5852536aec5.webp' /></p><p> </p><p>எனவே, எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். </p><p> தற்போது டீசல் நுகர்வு 11 வீதத்தாலும், பெட்ரோல் நுகர்வு 9 வீதத்தாலும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.</p><p></p><h2>மசகு எண்ணெய் விலை</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாகவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af0a9e3-ac38-463c-999e-c8c2992ea3ac/26-6a5852529bc26.webp' /></p><p> சர்வதேச ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.</p><p> இதனால், நாட்டில் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதால், உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எம்மால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T03:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில், ஆரம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்தநிலையில், ஆரம்பத்தில் அதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் குரல் எழுப்பிய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மௌனமாகியுள்ளனர். </p><p>

இந்தத் திடீர் அமைதியானது, வழக்கின் போக்கை பாதிக்காமல் இருப்பதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட தற்காப்பு தந்திரோபாய நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>

மறுபுறம், விசாரணைகளின் தீவிரத்தைக் குறைக்க அதிகார மட்டங்களுடன் எட்டப்பட்ட மறைமுக உடன்பாடுகளின் விளைவா அல்லது அவர்களின் குரலை ஒடுக்க விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களா என்ற பலத்த சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8?start=99" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313"></link>
            <id>https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் முன் கார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த பாடசாலையின் முன் கார் ஒன்று தீப்பற்றிய சம்பவத்திற்கும் அங்கிருந்த எட்டு வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டு இது குறித்துக் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த சிறுவன் தான் காரைத் தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பிரபல பாடசாலை&nbsp;</h2><p>கடந்த ஜூலை மூன்றாம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b693c6-ffbf-4c76-87b7-9fda9e63b909/26-6a582bf37f612.webp' /></p><p>

இந்தச் சம்பவத்திற்கு அங்கு நின்ற எட்டு வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்துக் குருணாகல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் எட்டு வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்தக் காரின் அருகே நடந்து சென்றதும் காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e6abbd-403a-48c6-8574-c52305f62fd4/26-6a5826fd8ceea.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:34:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/underworld-leader-kempa-and-two-others-arrested-1784161343"></link>
            <id>https://ibctamil.com/article/underworld-leader-kempa-and-two-others-arrested-1784161343</id>
            <summary type="text">திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான கெம்பா உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான கெம்பா உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசேட காவல்துறை அதிரடிப்படையினர் இந்தக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள்&nbsp;</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம் (14.07.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f84b39c-ed16-404c-9c4b-6b6c66a40246/26-6a582441ed512.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது, முக்கிய சந்தேகநபரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும், இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 8 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத செயல்கள்</h2><p>கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd231bf-a215-4909-956c-4ed04ee5ea40/26-6a5824414796e.webp' /></p><p>

அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்திப் பணம் பறித்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சொத்து வரி விதிப்பு...! இறுதி முடிவை நோக்கி நகரும் அரசாங்கம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034"></link>
            <id>https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034</id>
            <summary type="text">நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்த வரியை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தபோதிலும், கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது ஒத்திவைத்து வந்தது.</p><p>
</p><p></p><h2>நாணய நிதியம்</h2><p>எவ்வாறாயினும், இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் அடுத்த கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னர் அரசாங்க வருமானத்தை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் தற்போது வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6616cf11-ae80-431a-a958-6d4469cda38e/26-6a581f24994dc.webp' /></p><p>இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்காதபோதிலும், தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் இது குறித்து எதிர்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692"></link>
            <id>https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.

தன்னம்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.</p><p>இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.
</p><p>
தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியான சூரியன், உணர்வுகளின் ராசியான கடகத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. </p><p>இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. அவர்கள் யார் என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும்.</li><li> வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.</li><li> மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.</li><li> அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.
</li><li>
சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். </li><li>அவர்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் சூழல் மாறும்.</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.</li><li> சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</li><li>பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு அல்லது லாபகரமான வணிக ஒப்பந்தம் என எதுவாக இருந்தாலும் இந்த போக்குவரத்து மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை உறுதியளிக்கிறது. </li><li>நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். </li><li>இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். </li><li>உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</li><li>உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.</li><li>இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும் மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும் இதனால் வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளுநர்களின் பதவி விலகல் - பிரதமரும் விலகுவாரா...! சீலரத்ன தேரர் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seelaratna-thero-slams-govt-over-resignations-1784157189"></link>
            <id>https://ibctamil.com/article/seelaratna-thero-slams-govt-over-resignations-1784157189</id>
            <summary type="text">மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், தற்போதைய பிரதமரும் பதவி விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், தற்போதைய பிரதமரும் பதவி விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் தனது பதவி விலகியமைக்குச் சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்திப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>நகர அபிவிருத்தி</h2><p>மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b163c63-2764-40ac-a8e1-60f18dcb8b30/26-6a581406d345b.webp' /></p><p>

அத்தோடு, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்துள்ளார்.</p><p>மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது.</p><p>
</p><p></p><h2>போதைப்பொருள்கள்</h2><p>அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும்.
</p><p>
இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0c84e1-b3b9-4791-a799-f043cf6ecf01/26-6a5814078351f.webp' /></p><p>போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது.</p><p>

இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:43:15+00:00</updated>
        </entry>
    </feed>
