<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-14T07:24:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள்: பதிலடி கொடுப்போம்: இந்தியர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-oil-tankers-in-strait-of-hormuz-indian-dies-1784009035"></link>
            <id>https://ibctamil.com/article/attack-oil-tankers-in-strait-of-hormuz-indian-dies-1784009035</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>ஒமான் கடல் எல்லை</h2><p>

'மொம்பாசா' (Mombasa) மற்றும் 'அல் பாஹியா' (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e0bd881-b904-4064-b63b-5843d9ac6131/26-6a55e0642aa34.webp' /></p><p>ஒமான் கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>கப்பல்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல்களால் இரண்டு டேங்கர் கப்பல்களுக்கும் பொருள் சேதம் ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>"அப்பட்டமான தாக்குதல்" என்று கண்டித்ததோடு, "இதற்கு பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையையும் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளது" என்றும் கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-in-second-term-examination-dates-1784011743"></link>
            <id>https://ibctamil.com/article/change-in-second-term-examination-dates-1784011743</id>
            <summary type="text">வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, வடமேல் மாகாணத்தில் நாளை (15) முதல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த பரீட்சைகள், ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திருத்தப்பட்ட கால அட்டவணை</h2><p>

வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 6 - 9 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.17 வரையிலும், 10 - 11 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.20 வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82040ef5-9237-44a1-962b-f24888d507ab/26-6a55dd52b209b.webp' /></p><p>எவ்வாறாயினும், திட்டமிட்டபடி பரீட்சை நடவடிக்கைகளை நாளை முதல் 20 ஆம் திகதி வரை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய, இவ்வாறு பரீட்சையின் 4 நாட்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த 4 நாட்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை இன்றைய தினம் (14) வழங்கப்படவுள்ளது.</p><p>வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நிறுவனம்இ அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கோட்ட அலுவலகங்களுக்கு விடுவிப்பதில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல ட்ரோன் விமான சேவை : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-test-plans-for-passenger-carrying-drone-service-1784009813"></link>
            <id>https://ibctamil.com/article/sl-test-plans-for-passenger-carrying-drone-service-1784009813</id>
            <summary type="text">நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>இலங்கையின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளன&nbsp;</h2><p>

இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3fbb24-9327-45e0-a0a4-f42f307f46cc/26-6a55d9781c575.webp' /></p><p>சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த நிலையில் அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுதான் பசிலும் கப்ராலும் அரங்கேற்றிய சர்ச்சைக்குரிய ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-cabral-s-bad-economic-plan-for-sri-lanka-1784009410"></link>
            <id>https://ibctamil.com/article/basil-cabral-s-bad-economic-plan-for-sri-lanka-1784009410</id>
            <summary type="text">இலங்கை மக்களின் பணத்தை கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு செய்து நாட்டிற்கு ரூ. 184 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களின் பணத்தை கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு செய்து நாட்டிற்கு ரூ. 184 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மீதான வழக்கு விசாரணை, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளது.</p><p>

2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, ரூ. 184 மில்லியன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின் பேரில் திரும்பப் பெறப்பட்டது.</p><p> இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி உரிய தொகையைச் செலுத்தாமல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>நிதி அமைச்சராக இருந்த&nbsp;பசில் </h2><p>அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (13) தனது தீர்ப்பை அறிவித்து. அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3032b268-f979-4726-a798-bff382cfbc8a/26-6a55d6abdc332.webp' /></p><p>பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சரவை அதிகாரங்களுடன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவர்த் கப்ரால், இலங்கையைத் திவாலாக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளை, 2022 மார்ச் 4 அன்று பி.பி.சி சிங்கள இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பு உறுதிப்படுத்துகிறது.</p><p>&nbsp;இலங்கை மத்திய வங்கியின் பணவியல் சபை, நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார சவால்களைச் சமாளிப்பதற்காக 8 முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. </p><p>அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் பணவியல் ஆலோசகராக, இலங்கை மத்திய வங்கி இந்த முன்மொழிவுகளை உடனடியாகச் செயல்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவை அறிவித்து, மத்திய வங்கியின் பணவியல் சபை இந்தப் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது.</p><p></p><h2>உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கை</h2><p>

அதன்படி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக, இலங்கை மத்திய வங்கியானது நிலை வைப்பு வசதி விகிதத்தையும் (SDFR) நிலை கடன் வசதி விகிதத்தையும் (SLFR) 100 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.</p><p></p><p>வெளிப்புற அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் இடையூறுகளையும் கருத்தில் கொண்டு, இத்தகைய பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்க, வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், அத்துடன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு கொள்கைத் தொகுப்பு அவசியம் என்று பணவியல் வாரியம் கருதியது," என மத்திய வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், நாட்டின் பணவியல் கொள்கை வகுக்கும் அமைப்பான மத்திய வங்கி, அரசு வருவாய்க் கொள்கையை மாற்றுவது தொடர்பான பல பரிந்துரைகளை முன்வைத்தது.</p><p></p><h2>அந்நிய செலாவணி வரவு</h2><p> அந்த முன்மொழிவுகள் பின்வருமாறு:
</p><ul><li>
மத்திய வங்கியின் முந்தைய பரிந்துரையின் அடிப்படையில், அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a0aa44-f573-4684-bebc-eb1b193f93cd/26-6a55d6ac94649.webp' /></p><ul><li>
எரிபொருள் விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்களில் உடனடி உயர்வு
வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களையும் முதலீடுகளையும் மேலும் ஊக்குவித்தல்.</li><li>ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நகர்வை விரைவுபடுத்துதல்.</li><li>பொருத்தமான வரி உயர்வுகளின் மூலம் நிலையான அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரித்தல்
</li><li>அவசர அடிப்படையில் வெளி நிதியுதவி மற்றும் கடன் அல்லாத அந்நிய செலாவணி வரவுகளைத் திரட்டல்.</li><li>உத்திசார்ந்ததல்லாத மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத சொத்துக்களைப் பணமாக்குதல்
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதனத் திட்டங்களை ஒத்திவைத்தல்.&nbsp;</li></ul><p> இந்த முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக, வங்கி வட்டி விகிதங்களைப் பாதிக்கும் கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிப்பது, பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை மேலும் ஊக்குவிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவை முறையே 6.50% மற்றும் 7.50% ஆக உயர்த்தப்பட்டன. அதே நேரத்தில், வங்கி வட்டி விகிதம் தானாகவே 10.5% ஆக உயரும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><h2>டொருக்கும் அதிகமான வருமானம்</h2><p>மத்திய வங்கியும் ஒழுங்குபடுத்தப்பட்ட வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

அதன்படி,

கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 20.00% ஆகும்.
வங்கி மேலிருப்புக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 18.00% ஆகும்.
வீட்டுக் கடன் வசதிகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12.00% ஆக உயர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86966843-91d6-4a69-92f4-e46ebeb4872b/26-6a55d6ab226cd.webp' /></p><p> </p><p>பொருட்கள் ஏற்றுமதி மூலம் தொடர்ந்து ஒரு பில்லியன் டொருக்கும் அதிகமான வருமானம் கிடைத்தபோதிலும், 2022 ஜனவரி மாதத்தில் தொடர்ந்து எட்டாவது மாதமாக இறக்குமதி செலவினங்கள் அதிகமாகவே இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டது.</p><p>

சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், சமீபத்திய புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், இலங்கைத் தொழிலாளர்களின் இடம்பெயர்வு கணிசமாக அதிகரித்துள்ளதால், வரும் காலத்தில் வெளிநாட்டுப் பணவரவு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
2022 ஜனவரி மாத இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெருமளவில் நிலையாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவிக்கிறது.</p><p>

இக்காலகட்டத்தில் மொத்த அதிகாரப்பூர்வ கையிருப்பு, 1.3 மாத இறக்குமதிகளுக்குச் சமமாக, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அரசின் வெற்றிகரமான கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இருப்பினும், சமீபத்திய உலகளாவிய பாதகமான நிகழ்வுகள் பொருளாதார நடவடிக்கைகளில் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டது. </p><p>இது விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கும், பண்டங்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது என்றும், உள்நாட்டு உற்பத்தியைத் தக்கவைத்து, சாதகமான ஏற்றுமதி நிலைமைகளைப் பேணுவதற்கு உள்நாட்டு எரிசக்தி மற்றும் விநியோக இடையூறுகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T06:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு படைத்த நோர்வே: 90,000 இரசிகர்கள் உற்சாக வரவேற்பு - ஹாலண்ட் செய்த தவறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norway-receive-heros-welcome-after-world-cup-exit-1784005439"></link>
            <id>https://ibctamil.com/article/norway-receive-heros-welcome-after-world-cup-exit-1784005439</id>
            <summary type="text">நோர்வேயில் உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாகக் கால் இறுதி வரை முன்னேறிப் புதிய சாதனை படைத்த நோர்வே தேசிய கால்பந்து அணி வீரர்களை வரவேற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயில் உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாகக் கால் இறுதி வரை முன்னேறிப் புதிய சாதனை படைத்த நோர்வே தேசிய கால்பந்து அணி வீரர்களை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டனர்.</p><p>நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சுமார் 90,000 இரசிகர்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான மற்றும் உற்சாகமான வரவேற்பை அளித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>அதிக கோல்கள்&nbsp;</h2><p>ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலியிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நோர்வே அணி களமிறங்கியது. காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணியை வீழ்த்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130adda8-3eda-4698-81de-a96378dade2b/26-6a55cc428fe78.webp' /></p><p> நோர்வே வீரர எர்லிங் ஹாலண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எர்லிங் ஹாலண்ட் மேஜிக்கை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.&nbsp;</p><p> </p><p>இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக&nbsp; 7 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பே, மெஸ்சிக்கு அடுத்த இடத்தில்&nbsp;ஹாலண்ட் இருந்தார்.</p><p></p><h2>தோல்விக்கு முக்கிய காரணம்</h2><p>ஆனால் எர்லிங் ஹாலண்ட் செய்த தவறே நோர்வே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🇳🇴 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧<br><br>This is how the Norway national team were welcomed back in Oslo after their FIFA World Cup campaign came to an end. ❤️🤍💙<br><br>A heartfelt reception from supporters, celebrating a memorable tournament despite their quarter-final exit. 👏🇳🇴 <a href="https://t.co/quZhH7xl6E">pic.twitter.com/quZhH7xl6E</a></p>&mdash; WorldCup2026🏆 (@1amsepp) <a href="https://x.com/1amsepp/status/2076854693054095504?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தப் போட்டியின் 55வது நிமிடத்தில் நோர்வே அணி அடித்த கோல் நடுவரால் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது.&nbsp;</p><p>உலகத் தரவரிசையின் முன்னணி 4 அணிகளான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஆர்ஜெண்டினா ஆகியன தற்போது அரையிறுதிச் சுற்றில் மோதவுள்ளன.</p><p>


இந்நிலையில், இத்தொடரில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதி வரை தகுதிபெற்று வெளியேறிய நோர்வே அணிக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான வெளிநாட்டுப் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/philippines-woman-arrested-with-kush-at-bia-1784006631"></link>
            <id>https://ibctamil.com/article/philippines-woman-arrested-with-kush-at-bia-1784006631</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்போது அவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 180 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த போதைப்பொருளுடன் சந்தேக நபரான பெண்ணிடம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95ded461-6089-484a-8c9e-dc5b649608b2/26-6a55ccf40749c.webp' /></p><p>

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T05:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரகுராம் மீதான அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defamatory-statement-against-professor-raghuram-1783950083"></link>
            <id>https://ibctamil.com/article/defamatory-statement-against-professor-raghuram-1783950083</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுவதுடன், பேராசிரியர் ரகுராம் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது என இடைக்கால கட்டளையொன்றை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>இந்த வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர்
என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>

</p><h2>தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்&nbsp;</h2><p>
குறித்த வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதலாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரை அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc0cfc9-447c-4088-bea6-dae96164b803/26-6a54eb0519b1b.webp' /> </p><p>

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு
இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றுக்கு முனிலையாகி தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும்
காரணங்காட்டுதலுக்காகவும் ஜூலை 27ம் திகதிக்கு வழக்கை மன்று திகதியிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T05:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் : எதிர்தரப்பு எம்.பியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extend-supreme-court-judges-retirement-age-1784001996"></link>
            <id>https://ibctamil.com/article/extend-supreme-court-judges-retirement-age-1784001996</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து&amp;nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து&nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்த முன்மொழிவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட போது அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படாத பின்னணியில், அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் கடுமையான பிரச்சினை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>&nbsp;சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில், "இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு பிரதம நீதியரசர் கோரவில்லை. உயர்நீதிமன்ற நீதியரசர்களோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களோ கோரிக்கை விடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6053f2c8-7c69-493b-894a-fa7ef2abb028/26-6a55c29c6c71e.webp' /></p><p> </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரவில்லை. அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. </p><p>அதேபோல், நாடாளுமன்றத்தில் இதுவரை எவரும் இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான அடிப்படை என்ன என்பதை முன்வைக்கவில்லை. நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுவிலும் இந்த யோசனை விவாதிக்கப்படவில்லை.</p><p></p><h2>அரசாங்கத்தின் செயற்பாடு</h2><p> </p><p>அப்படியானால், யார் இவ்வாறானதொரு முன்மொழிவைக் கொண்டு வருகிறார்கள், யாரும் இல்லை. அதாவது இதன் பின்னணியில் மறைமுக நோக்கம் உள்ளது. தனிப்பட்ட மட்டத்திலான குழுவொன்றின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைவு எமக்குக் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04368d6-a338-4e8d-a5b1-7ce19e47dd62/26-6a55c29d6cb90.webp' /></p><p> </p><p>அரசாங்கம் நிச்சயமாக இதனைச் செய்யும். நீதிமன்றத்தின் அதிகார சமநிலையை தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்ற விடயத்தை நாம் இப்போது உறுதியாக அறிவோம்.</p><p> டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. எனவே இதில் பெரும் மர்மம் நிலவுகிறது." என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது பாடசாலை மாணவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966"></link>
            <id>https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966</id>
            <summary type="text">ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p> 

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சிறுவனைத் தேடும் பணி</h2><p> 

காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d34e4c-2d79-4fee-8d27-d6a29c1758ce/26-6a55bd1436a70.webp' /></p><p>காவல்துறை கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:45:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/agrahara-insurance-database-of-govt-employees-1783998965"></link>
            <id>https://ibctamil.com/article/agrahara-insurance-database-of-govt-employees-1783998965</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, அக்ரஹார காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்&nbsp;அனைத்து அரச ஊழியர்களும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் இக்காப்புறுதியின் நேரடிப் பயனாளிகளாக உள்ளதுடன் இவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 30 இலட்சம் பேர் இதன் கீழ் பயன் பெறுகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>6 இலட்சம் அரச ஊழியர்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்ரஹார தரவுத்தளத்தை புதுப்பிக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரையில் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் தங்களது விபரங்களை புதுப்பிப்பு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e9b62-2650-460e-8429-2d9738eca6b6/26-6a55b1bc0ce39.webp' /></p><p> </p><p>

சுமார் 1,900 அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அக்ரஹார காப்புறுதியில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் அக்ரஹார ஒருங்கிணைப்பு அதிகாரிகளைப் பெயரிட்டு அனுப்புமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p> இதுவரை அவ்வாறு அதிகாரிகளைப் பெயரிடாத நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.&nbsp;</p><p></p><h2>காப்புறுதிப் பயன்கள்</h2><p> அரச ஊழியர்கள் இந்த தரவுத்தளத்தில் உள்ளிடும் விபரங்களின் துல்லியத்தன்மையை அந்தந்த நிறுவனத்தின் அக்ரஹார விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும் நிறுவனத் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமே இந்த தரவுத்தள திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673b1359-f5d5-4f25-b727-0d6f6c9a4948/26-6a55b214244bd.webp' /></p><p> 

ஒவ்வொரு அரச நிறுவனமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் இந்த தரவுத்தளத்தின் ஊடாக மட்டுமே காப்புறுதிப் பயன்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-kks-to-colombo-fort-train-time-table-today-1783999452"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-kks-to-colombo-fort-train-time-table-today-1783999452</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>குறித்த தொடருந்து சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு தொடருந்து நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, நாளை (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

தொடருந்து இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தொடருந்து சேவையை நிறுத்துவதற்கு தொடருந்து நிர்வாகம் தீர்மானித்திருந்தது.</p><p></p><h2>நகராந்தர கடுகதி தொடருந்து&nbsp;</h2><p> 

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு தொடருந்து பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcbeb92-6551-42d5-8e05-98f3d2d681e7/26-6a55b480ea80a.webp' /></p><p>விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி தொடருந்து நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தொடருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செக் வைத்த ஹவுதி - எழும்பும் புகை: சவுதி விமான நிலையம் மீது பயங்கரத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-houthis-strikes-abha-airport-in-saudi-1783996468"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-houthis-strikes-abha-airport-in-saudi-1783996468</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.ஹவுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>முன்னதாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p></p><h2> பதிலடி தாக்குதல்கள்</h2><p>ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, திங்களன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b9a52eb-d120-42f9-8c8d-c1e17c7582fa/26-6a55a4fd658c8.webp' /></p><p>சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள், ஒரு ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏமனில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><p>ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>அபா பகுதி சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:51:49+00:00</updated>
        </entry>
    </feed>
