<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-12T07:27:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு கோரி பலாலியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protests-continue-in-palali-demanding-land-release-1783838953"></link>
            <id>https://ibctamil.com/article/protests-continue-in-palali-demanding-land-release-1783838953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்று (12) நான்காவது
தடவையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாங்கள் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>காவல்துறையினர் தடுத்தனர்</h2><p>
</p><p>இந்தநிலையில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e712552-70e8-474d-918f-87653151d70a/26-6a533babdc532.webp' /></p><p>இதனையடுத்து மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மலையக மக்கள்! தீர்வுக்காக முன்வந்தது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-evicted-from-homes-govt-seeks-solution-1783838779"></link>
            <id>https://ibctamil.com/article/people-evicted-from-homes-govt-seeks-solution-1783838779</id>
            <summary type="text">

அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்றை அரசாங்கம் வழங்கும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு இன்றையதினம்(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் பிரதீப், கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பாகவே இது அமைந்திருந்ததாகவும் எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விடயம் என பலர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>நிரந்தரமான தீர்வு</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், இச்சம்பவத்தை பொறுத்தமட்டில் LRC நிறுவனத்தோடு கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான தீர்வை உரிய நகர்வுகளின் பின்னர் விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c1606-ae49-4fb9-97e1-3235fef896ad/26-6a533eb87e46c.webp' /></p><p>
</p><p>
மேலும், அமைச்சர் லால்காந்த குறித்த பகுதிக்கு இன்னும் சில நாட்களில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், அவருடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக தமது அரசாங்கம் முன்நின்று செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-12T07:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100000-rs-fund-for-uni-students-with-special-needs-1783836200"></link>
            <id>https://ibctamil.com/article/100000-rs-fund-for-uni-students-with-special-needs-1783836200</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதற்கமைய, ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ள குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதன் முதற்கட்டமாக, நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்ற 'சரஸ்வி திரியோ அபிமான் 2026' நிகழ்வில், 236 மாணவர்களுக்கு இதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><p></p><h2>விசேட தேவையுடையோர்</h2><p>
</p><p>
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவையுடையோர் என வகைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd9cf5a-6336-407c-9883-cab4b7f84983/26-6a5332e0f41b5.webp' /></p><p>
விசேட தேவையுடைய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T06:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தள விமான நிலையத்தில் முதலீடு! முன்வந்துள்ள 19 நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/19-investors-approved-to-invest-in-mattala-airport-1783836291"></link>
            <id>https://ibctamil.com/article/19-investors-approved-to-invest-in-mattala-airport-1783836291</id>
            <summary type="text">

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேற்படி, செய்தியானது, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ளது.
</p><p>
மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்ப காலக்கெடு 10ஆம் திகதியுடன் முடிவடைந்ததாக பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேம்பாட்டுக்கான திட்டங்கள்&nbsp;</h2><p>

இதன்படி, விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83ba82a-0119-4c52-b602-d38a898a199b/26-6a53322337a0e.webp' /></p><p>

இதற்கிடையில், விருப்பம் தெரிவித்தல் (EOI) கோரிக்கை திறக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முன்மொழிவுக் கூட்டங்களில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றதாக பிரதி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்த நிறையில், குறித்த செயல்முறை இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய பிரதி அமைச்சர், விமான நிலையத்தைப் பராமரிக்க ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T06:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் : கத்தார் விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missiles-qatar-raises-security-threat-level-1783832520"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missiles-qatar-raises-security-threat-level-1783832520</id>
            <summary type="text">ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் ஈரானிலிருந்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>எனினும் ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.</p><p>கத்தாரின் உள்துறை அமைச்சகம் இன்று காலை இரண்டாவது முறையாக நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை உயர் நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>அதே நேரத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை நிலைகளை உயர்த்தி, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d5644c-e75b-45a2-8904-9276d1036577/26-6a53258c915f9.webp' /></p><p>அண்டை நாடான கத்தாரில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததுடன், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பிற பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p> மேலும், குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
</p><p>
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளை மையம்</h2><p>சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் "வெளிப்படையாகத் தாக்குதல்" நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 7:15 p.m. ET today, U.S. Central Command forces began launching the third round of strikes this week against Iran after Islamic Revolutionary Guard Corps forces blatantly attacked M/V GFS Galaxy, a Cyprus-flagged container ship transiting the Strait of Hormuz. A civilian crew…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2076089130857951463?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஈரானின் தவறான முடிவு</h2><p>அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran made a poor choice. Now they pay. <a href="https://t.co/8m4fEfgrXv">https://t.co/8m4fEfgrXv</a></p>&mdash; Pete Hegseth (@PeteHegseth) <a href="https://x.com/PeteHegseth/status/2076091042693071025?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p> 

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்புக்கும்" கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க&nbsp;குறித்த விடயத்தினை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்</h2><p>உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.</p><p> அத்துடன், உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf94eee7-8392-473a-a619-e6989312bd2d/26-6a53193830f2f.webp' /></p><p> 

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் - தேசபந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255"></link>
            <id>https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255</id>
            <summary type="text">சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&amp;nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய அரசாங்கம், கடந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட எம். பிக்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு</h2><p>மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்தா ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152adb0a-1068-45f5-80e6-af9acf7b1ff3/26-6a52efe14e931.webp' /></p><p>
</p><p>
மேலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கூன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
</p><p>
பொதுபல பால சேனா கட்சியின் தேசிய அமைப்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7daf4ed-c78c-47a5-b7ca-78a2540290a1/26-6a52efe206a83.webp' /></p><p>இதற்கிடையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேட்படி விடயங்களை உள்ளடக்கி தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>வி.பி.ஏ பாதுகாப்பு வழங்கப்பட்ட நபர்கள் யார் என்று எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T04:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267"></link>
            <id>https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267</id>
            <summary type="text">நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&amp;nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிவிப்பில், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.</p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008cf931-d44a-46be-a1d5-f340e538b577/26-6a5306094bf06.webp' /></p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023"></link>
            <id>https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023</id>
            <summary type="text">இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&amp;nbsp;நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>
பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அதிக அறுவடை உள்ள பகுதிகளைக் அடையாளப்படுத்தி நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என வாரியத்தின் தலைவர் மஞ்சுலா பின்னலந்த கூறியுள்ளார்.</p><p>

அதன்படி, நாடு முழுவதும் 143 இடங்களில் அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தனியார் துறை களஞ்சியசாலை</h2><p>
களஞ்சியசாலைகளின் கொள்ளளவு நிரம்பிவிட்டால், அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளை பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f86d15-6441-467e-b6ec-de65abdea8f8/26-6a52f6c8aad7c.webp' /></p><p>மேலும், குறிப்பிட்ட நெல் ஆலை உரிமையாளர்களும் தனியார் நிறுவனங்களும் அந்தக் களஞ்சியசாலைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bixybK-ctLs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T02:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் பதவி விவகாரத்தில் விஜித ஹேரத்தின் பதிலால் கிளம்பிய புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782"></link>
            <id>https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782</id>
            <summary type="text">வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இது குறித்த செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
</p><p>
ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரின் மகளுடைய திருமணம், கடந்த வாரம் காலியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><p> </p><h2>ரணிலின் கருத்து&nbsp;&nbsp;</h2><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் அமைச்சர்கள் தலதா அதுகோரல மற்றும் வஜிர அபேவர்தன மற்றும் மேலும் பலர் அதே மேசையில் அமர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcf1003-9f3d-4ac7-8bce-9ba207b0db09/26-6a52c58f2d3d0.webp' /></p><p>இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கியமை குறித்துப் பேச்சு எழுந்துள்ளது.</p><p>
அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கையில்,

 "அதற்கு நான் பதிலளிக்கிறேன். நான் தலையிடச் செல்லவில்லை. அவர்கள் என்னுடன் விளையாட்டு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.</p><p> அந்தப் பெண்மணிதான் எல்லாவற்றிலும் தலையிட்டார்," என்பதே முன்னாள் ஜனாதிபதியின் பதிலாக இருந்தது என கூறியுள்ளார்.
</p><p></p><h2>சர்வதேசத்தின் பார்வை&nbsp;</h2><p>
இந்த உரையாடலின் போது, ​​வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அங்கு வந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அருகில் அமர்ந்துள்ளார்.
</p><p>
அந்த மேசையில் இருந்த ஒரு பத்திரிகையாளர் வெளியுறவு அமைச்சரிடம், "நீங்கள் அடுத்த ஆண்டு பிரதமராகிவிடுவீர்கள் என்று கேள்விப்படுகிறேன்" என்று கேட்டுள்ளார்.</p><p>

" இந்த வருடமே ஏன் கூடாது?" என்று அமைச்சர் புன்னகையுடன் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

இவ்வாறான பின்னணியில், அமெரிக்கத் தூதரகத்தின் 250வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது, ​​பல தூதரகங்களின் அதிகாரிகளும், ஒரு மேற்கத்திய தூதரகத்தின் அதிகாரிகளும், எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கான போட்டி உருவாகும் என்று ஊகித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bixybK-ctLs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T02:06:54+00:00</updated>
        </entry>
    </feed>
