<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-10T16:42:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-8-deceased-cops-promoted-1783699128"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-8-deceased-cops-promoted-1783699128</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த எட்டு அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 5 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த எட்டு அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்குள் கிளம்பிய மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><h2>மருத்துவமனையில் சிகிச்சை&nbsp;</h2><p>

இதன் அடிப்படையில், நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1afc9db-b1b3-4ab8-865a-d712c200550c/26-6a511e4173d1f.webp' /></p><p>அத்தோடு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர்களில் உள்ள அனைத்து கைதிகளும் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>

இந்தநிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் அவற்றை இன்னும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0493779-b1e2-4edd-a2b2-1fd1afbc797a/26-6a511e40c3cbe.webp' /></p><p>

ஏனெனில் சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்கு உகந்த உடல்நிலையில் இல்லை.
</p><p>
இதற்கிடையில் மோதலில் உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறைக்காவலர்கள்&nbsp;</h2><p>கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும் மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89fa4262-8342-4196-92f5-b34ce6c76843/26-6a511e4224c45.webp' /></p><p>சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜென்ட் கமகே உபாலியின் உடல், இன்று (10.07.2026) கம்புருபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில் மோதலில் உயிரிழந்த சார்ஜென்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று (10) பிற்பகல் அம்பகஹாவெவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T16:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை நிலைகுலைய செய்த பாவி புயல்! அடுத்து தாய்வானை நோக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-bavi-taiwan-about-to-hit-japan-1783692046"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-bavi-taiwan-about-to-hit-japan-1783692046</id>
            <summary type="text">சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் கூடிய இந்த புயல், தற்போது&nbsp;தாய்வானின் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை தாய்வானில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p></p><h2>முடப்பட்ட&nbsp;பாடசாலைகள்</h2><p>இதன்படி அந்நாட்டின் தலைநகரான தாய்பேயில் அனைத்து பாடசாலைகளும் முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612731f0-a830-487c-9755-80f699356ff4/26-6a50fb10a5eae.webp' /></p><p>மேலும், ஜப்பான், ஹாங்காங் மற்றும் பிற இடங்களுக்கான பல விமானங்கள் சனிக்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>புயலின் தற்போதைய வடமேற்குப் பாதையானது, சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கே கடந்து செல்வதற்கு முன்பு, சில தொலைதூர ஜப்பானியத் தீவுகளைக் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சீனாவின் ஃபுஜியான் சில படகு வழித்தடங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், படகுகளைத் துறைமுகத்திற்குத் திரும்புமாறும் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>இடிந்து விழுந்த&nbsp;அணை</h2><p>மழையால் நீர்த்தேக்கங்கள் உடைந்த நிலையில், ஹெங்சோவில் உள்ள ஒரு அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், வேகமாகப் பாய்ந்த சேற்று நீர் ஒரு பரந்த பகுதியை மூழ்கடித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915dafd1-5f39-486d-86fb-5628668b89f8/26-6a50fb0fee5fa.webp' /></p><p>இந்த வெள்ளத்தால், கட்டிடங்களின் இரண்டாவது மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகளில் இருந்த மக்கள், மீட்புக் குழுவினர் வந்து சேரும் வரை பல நாட்களாக மின்சாரமின்றி சிக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T15:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695"></link>
            <id>https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695</id>
            <summary type="text">யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ். காவல்துறையின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>
இது தொடர்பில் அவர் கூறுகையில்,&nbsp; &nbsp;“சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து
நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய
பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும்
உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற
போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம்
கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p></p><h2>30 யாசகர்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித
செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb2442d-92a5-4a81-b30a-0206dded6699/26-6a50f5c8c0428.webp' /></p><p>
</p><p>
அத்துடன் யாழ் மா நகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம். இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும்
வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் கைதுசெய்யப்படு,&nbsp; தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286"></link>
            <id>https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286</id>
            <summary type="text">தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>முன்னரே எச்சரித்தபடி, ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட றிலையில்&nbsp;ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் முகமது பாகர் சுல்காத்ரினால் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும் ஈரானிய ஆயுதப் படைகளின் எதிர்வினையிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்காது என்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் எதிரொலி</h2><p>ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4e7911-3580-4201-8b25-a13fc1603c79/26-6a51005e3b4d4.webp' /></p><p>மேலும், வடகிழக்கு ஈரானில் உள்ள இரண்டு தொடருந்து பாலங்களையும் இந்த தாக்குதல் குறிவைத்தது.</p><p>இதற்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கட்டார் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையும் இராணுவமும் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானும் அமெரிக்காவும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த மோதல்கள் நிகழ்ந்தமை அமைதியடைந்த மத்தியகிழக்கின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-uni-faculty-of-arts-fomer-dean-court-case-1783691084"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-uni-faculty-of-arts-fomer-dean-court-case-1783691084</id>
            <summary type="text">


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>தொடரப்பட்டுள்ள&nbsp;வழக்கு </h2><p>

இந்நிலையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a43d160-a399-4870-b226-61817768a671/26-6a50fe28b4a46.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
</p><p>
இந்நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><h2>தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்</h2><p>

குறித்த 14 பேரில், சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக், பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad778b9-dea3-4373-9e74-4deae61f5b75/26-6a50fe296bc7e.webp' /></p><p>
</p><p>
சம்பந்தப்பட்ட வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை இன்றையதினம் வெள்ளிக்கிழமைக்கு திகதிக்கு மன்று திகதியிட்டு இருந்தது.
</p><p>
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எவ்வித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-conducts-investigation-prisons-incidents-1783688425"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-conducts-investigation-prisons-incidents-1783688425</id>
            <summary type="text">


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை மனித...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையொன்றைத் தொடங்கியுள்ளது.</p><p> 

இந்த மோதல்களுக்கு வழிவகுத்த பின்னணி, கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் மரணங்கள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து இந்த விசாரணை முக்கிய கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன், சிறை அதிகாரிகளின் காவலில் இருந்தபோது நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்தும் இந்த விசாரணையின் போது ஆராயப்படும் என ஆணைக்குழு இன்று(10) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இறுதி முடிவு</h2><p>
தற்போது கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்று ஆதாரங்களைச் சேகரிக்கும் முதற்கட்டப் பணிகளே முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எதற்கும் வரவில்லை என்று ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1ab8b20-8670-46f4-89c4-3bf930b53d23/26-6a50f2cc8bf46.webp' /></p><p> </p><p>

எனினும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டபோது, பல கைதிகள் காயமடைந்திருப்பதும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

எனவே, காயமடைந்த கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள ஆணைக்குழு, சிகிச்சைகளை திட்டமிட்டு தாமதப்படுத்துவது ஒரு வகையான பழிவாங்கலாகக் கருதப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.</p><h2>வெலிக்கடையில் அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>
இதற்கிடையில், கடந்த ஜூலை 7ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஆணைக்குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டபோது, அங்கு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f79c8ed9-269c-4c63-8656-be7291682f45/26-6a50f2cd3fa65.webp' /></p><p>

 இந்த அனுமதி மறுப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயல் என்றும், சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், மறுநாள் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஏற்பட்ட காலதாமதம் காரணமாக உரிய நேரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு பறிபோனதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த நிலையில், சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை நேரில் விளக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு ஆணைக்குழு தற்போது அழைப்பாணை விடுத்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T13:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்கப்படவுள்ள செம்மணி அவலத்திற்கான நீதி நகர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-issue-in-tamil-nadu-assembly-1783683230"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-issue-in-tamil-nadu-assembly-1783683230</id>
            <summary type="text">செம்மணி அவலத்தின் இனப்படுகொலை சாட்சியங்களை தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி அவலத்தின் இனப்படுகொலை சாட்சியங்களை தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>
அண்மையில் தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ண அரசியல் ரீதியான விஜயத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்தமை குறித்து ஐ.பி.சி தமிழ் ஊடகங்கத்துக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறினார்.
</p><p>
மேலும் செம்மணி போன்ற இனப்படுகொலை சாட்சியங்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் நகர்வில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கது எனவும் விளக்கியிருந்தார்.
</p><p>
அத்தோடு, செம்மணி சாட்சியங்களை மன்னார் மனித புதைகுழி போல மூடு மறைக்க அனுமதிக்ககூடாது என்றும் சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/o8ADVJMv44E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T13:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொண்டமானாறு - அச்சுவேலி வீதி அபிவிருத்திக்கு தடையாகும் பொறுப்பற்ற கழிவு கொட்டல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thondamanaru-achuveli-road-development-banned-1783688521"></link>
            <id>https://ibctamil.com/article/thondamanaru-achuveli-road-development-banned-1783688521</id>
            <summary type="text">தொண்டமானாறு - அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும்
கழிவுகளால் தாம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டமானாறு - அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும்
கழிவுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப்
பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீதியின் திருத்த வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் போதிலும்,
பிரதேசவாசிகள் சிலர் தங்களது வீட்டுப் பாவனைக் கழிவுகளை வீதியோரங்களில் கொட்டி
வருவதால், அவ்விடங்களில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகின்றது. </p><p>இதனால், நாள்
முழுவதும் வீதியில் நின்று வேலை செய்யும் பணியாளர்கள் பெரும் சுகாதார
சீர்கேடுகளுக்கும், வேலை செய்ய முடியாத அளவிற்கான நெருக்கடிகளுக்கும்
முகம்கொடுத்து வருகின்றனர்.
</p><p>

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கழிவுகள்

பணியாளர்களின் குற்றச்சாட்டுகளின்படி, வீதியோரங்களில் சாதாரணமாக வீசப்படும்
குப்பைகளுக்கும் அப்பால், பின்வரும் ஆபத்தான கழிவுகளும் வீசப்படுகின்றன.</p><p> மனிதக்
கழிவுகள் மற்றும் சிறுவர்களின் மலச் சலக் கழிவுகள் (Diapers) இறந்த
மிருகங்களின் உடலங்கள் மற்றும் மிருகக் கழிவுகள் இவ்வாறான கழிவுகள்
வீசப்படுவதால், கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தங்களுக்கு வாந்தி, மயக்கம்
மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>


அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, பொதுமக்களே இவ்வாறு
பொறுப்பற்ற முறையில் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள்
தெரிவிக்கின்றனர்.
</p><p>

எனவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும், சுகாதாரப்
பிரிவினரும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பணியாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். </p><p>வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு எதிராக கடுமையான
சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த அவல நிலைக்கு மிக விரைவில்
தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T13:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த கட்டத்தில் யோஷித மீதான ஊழல் வழக்கு! முன்னாள் காதலியின் முழுமையான வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/is-yoshitha-s-ex-girlfriend-taking-revenge-on-him-1783687295"></link>
            <id>https://ibctamil.com/article/is-yoshitha-s-ex-girlfriend-taking-revenge-on-him-1783687295</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில், சி.எஸ்.என். (CSN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை அதிகாரி யசாரா அபேநாயக்க முக்கிய சாட்சியமாக மாறியுள்ளார்.</p><p>பணச்சலவை குற்றச்சாட்டு யோஷித மீது ரூ.7 கோடியே 30 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தை மீறியதாக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் சாட்சியம் அளித்த யசாரா அபேநாயக்க, தாம் மற்றும் யோஷித இடையே 2009 முதல் 2013 வரை சுமார் நான்கு ஆண்டுகள் காதல் உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>டெய்ஸி ஃபாரெஸ்டின் கல்கிஸ்ஸை வீடு</h2><p>அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தோம். திருமணத்திற்குப் பிறகு யோஷிதவின் பாட்டி டெய்ஸி ஃபாரெஸ்டுக்கு சொந்தமான கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் உள்ள வீட்டில் குடியேற திட்டமிட்டோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05886df-2e86-48f3-9e54-00c3c889bc32/26-6a50e91b38880.webp' /></p><p> </p><p>அதற்காக அந்த வீட்டின் உள் அலங்காரப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு வடிவமைப்பாளருடன் கலந்துரையாடினோம்.</p><p> ஆனால், இருவரின் ஜாதகங்கள் பொருந்தவில்லை என்ற காரணத்தால் 2013 ஆம் ஆண்டு அந்த காதல் உறவு முடிவுக்கு வந்தது.</p><p>முதலில் ஐ.டி.என். (ITN) தொலைக்காட்சியில் பணியாற்றினேன். பின்னர் சி.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவராக சேர்ந்தேன்.</p><p>மேலும், நான் CSN-இல் பணிபுரிந்த காலத்தில் யோஷித அங்கு பணியாற்றவில்லை. ஆனால் எனது பணிகளுக்கு அவர் உதவி செய்து வந்தார்.</p><p>காதல் உறவு நீடித்த காலத்தில் யோஷிதவுடன் சேர்ந்து அவரது பாட்டி டெய்ஸி ஃபாரெஸ்டின் கல்கிஸ்ஸை வீட்டைப் பார்வையிட்டோம், திருமணத்திற்குப் பிறகு அங்கே வசிப்பதற்காக வீட்டை புதுப்பிக்கும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்” என கூறியுள்ளார்.</p><p></p><h2>சாட்சியம் வழங்கிய லுஷான் ரத்நாயக்க</h2><p>இதன்படி இந்த வழக்கில் மற்றொரு சாட்சியம் வழங்கிய லுஷான் ரத்நாயக்க, கல்கிஸ்ஸை சிறிமல் உயன பகுதியில் இருந்த தனது காணியை ரூ.3 கோடியே 45 லட்சத்து 40 ஆயிரத்திற்கு டெய்ஸி ஃபாரெஸ்ட் பெயரில் விற்றதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef966abf-5c15-40e2-ab02-a496b6819077/26-6a50e91bf36e6.webp' /></p><p>அவர் கூறியதாவது,&nbsp; “தனது மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அந்த வீட்டை விற்க முடிவு செய்தோம்.
அந்த வீட்டை விற்று ரோயல் பார்க் பகுதியில் உள்ள ஒரு அனெக்ஸுக்கு செல்ல திட்டமிட்டோம்.
</p><p>நண்பரான வசந்த ஜயசூரியவிடம் வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்தேன்.
பின்னர் அவர் ஒரு வாங்குபவரை அழைத்து வந்தார். </p><p>ஆனால் வாங்குபவர் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
ஒப்பந்தத்தில் வாங்குபவராக டெய்ஸி ஃபாரெஸ்ட் என்ற பெயர் இருந்தது.
முழு தொகையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகே ஆவணங்களில் கையெழுத்திட்டோம்.
</p><p>வீட்டை விற்பனைக்கு அறிவிப்பதற்கு முன் நடந்த Garage sale நிகழ்விற்கு யோஷித ராஜபக்சவும் யசாராவும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்துச் சென்றனர்” என்றார்.</p><p></p><h2>வசந்த ஜயசூரியாவின் சாட்சியம்</h2><p>யசாரா அபேநாயக்கின் உறவினரான வசந்த ஜயசூரியவும் நீதிமன்றத்தில் இதன்போது சாட்சியம் அளித்தார்.</p><p></p><p>

அவர் கூறியதாவது,&nbsp; “யசாராவும் யோஷித ராஜபக்சவும் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்திற்கு தயாராக இருந்தனர்.
லுஷான் ரத்நாயக்கவின் காணி விற்பனைக்கு இருப்பதை யோஷிதவிடம் தெரிவித்தேன்.
</p><p>அந்த காணியை வாங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
அதன் பின்னர் வாங்கும் நடவடிக்கைகளை நான் ஒருங்கிணைத்தேன்.
</p><p>
மேலும், காணி வாங்குவதற்கான முழுத் தொகையும் பணமாக ஒரு பயணப்பையில் கொண்டு வரப்பட்டது.</p><p>ஆவணங்களில் கையெழுத்திடும் நாளன்று பாதுகாப்பு அதிகாரியைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், பணம் நிரம்பிய பயணப்பையை ராஜகிரியிலுள்ள&nbsp; வங்கிக்கு கொண்டு வந்தார்.</p><p> காணியை வாங்க தேவையான முழுத் தொகையும் பணமாகவே கொண்டு வரப்பட்டது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T12:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவரை மிரட்டி 3 மில்லியன் ரூபா கப்பம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gang-arrested-demanding-ransom-from-foreigner-1783683472"></link>
            <id>https://ibctamil.com/article/gang-arrested-demanding-ransom-from-foreigner-1783683472</id>
            <summary type="text">

பிரேசில் நாட்டவர் ஒருவரைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்து, 3 மில்லியன் ரூபாயை பிணைப்பணமாகக் கோரிய மூன்று நபர்களை உனவட்டுன சுற்றுலான காவல்துறையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரேசில் நாட்டவர் ஒருவரைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்து, 3 மில்லியன் ரூபாயை பிணைப்பணமாகக் கோரிய மூன்று நபர்களை உனவட்டுன சுற்றுலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டவர் காலி, தல்பேவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு நபர்கள் தங்களை சுற்றுலா காவல்துறையினர் என்று கூறி அறையைச் சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அதன்போது, குறித்த சந்தேகநபர்கள், அந்த வெளிநாட்டவரின் பிரேசில் கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், கைபேசிகள் மற்றும் பல பொருட்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>3 மில்லியன் ரூபாய்</h2><p>
</p><p>
பின்னர், மற்றொரு நபர் அந்த இடத்திற்கு வந்து, அவரும் அந்தப் போலி காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அந்த வெளிநாட்டவருக்குக் கைவிலங்கிட்டு அவரிடமிருந்த 3 மில்லியன் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0095cd-5afc-4a89-8da6-1080f2c9de9f/26-6a50e39181b5c.webp' /></p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலா காவல் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதேவேளை, இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஆல்டோ காரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94fb1c6-7183-420f-b78a-e2303815d470/26-6a50e3924be80.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-10T12:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-arrested-with-two-swords-in-jaffna-1783680684"></link>
            <id>https://ibctamil.com/article/five-arrested-with-two-swords-in-jaffna-1783680684</id>
            <summary type="text">


திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>


திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அத்துடன், யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றிருந்தது.</p><p></p><h2>நிறுத்தாது சென்ற கார்</h2><p>

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற சம்பந்தப்பட்ட கும்பல் அந்த இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ். பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740cfc37-cb5c-4766-900e-2b59fe5641fa/26-6a50d3d6820f5.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த காவல்துறையினர் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.</p><p>

சந்தேகமுற்ற காவல்துறையினர் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்த நிலையில், அதற்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளதோடு, ஆணொருவரின் சட்டையும் இரத்தக் கறையுடன் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1be10a0b-f09b-4cd1-a7c6-195090475672/26-6a50d3d7547e4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து காவல்துறையினர், குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
இதேவேளை, விசாரணையில் கடத்தலுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>மேலதிக தகவல் - தீபன்&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T12:05:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழ மக்கள் 147பேரை பலியெடுத்த நவாலி தேவாலயம் மீதான விமானத் தாக்குதல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-attack-on-the-navali-church-1783684699"></link>
            <id>https://ibctamil.com/article/the-attack-on-the-navali-church-1783684699</id>
            <summary type="text">சந்திரிகாவினால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட &amp;nbsp;நவாலி தேவாலயப் படுகொலையின் &amp;nbsp; இனப்படுகொலையின் நினைவுநாள் 09.07.1995ஆம் அன்று. அதுதான் நவாலி தேவாலய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்திரிகாவினால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட &nbsp;நவாலி தேவாலயப் படுகொலையின் &nbsp; இனப்படுகொலையின் நினைவுநாள் 09.07.1995ஆம் அன்று. </p><p>அதுதான் நவாலி தேவாலயப்படுகொலையின் நினைவேந்தல் நாள். </p><p>இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் மிகவும் கொடூரமாக எமது மக்கள் கொன்றழிக்கப்பட்ட கசந்த நினைவுகளைக் கொண்டது நவாலி தேவாலயப் படுகொலை.</p><p></p><h2>வானத்தை கண்டு அஞ்சினோம்</h2><p>வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. </p><p>புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட &nbsp;எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.
</p><p>
நவாலிப்படுகொலை நடைபெற்று &nbsp;இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். </p><p>அந்தப் படுகொலை இடம்பெற்றபோது அதிபராக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இருபத்து ஆண்டுகளின் பிறகு, யாழ்ப்பாணத்தில் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.</p><p></p><p>
</p><h2>மறக்க முடியாத வடு</h2><p> உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்கள் எவராலும் &nbsp;மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது.</p><p> 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
</p><p>
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர்.</p><p> இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன.</p><p> யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீது கொட்டி வெறி தீர்த்தன.</p><p></p><p>
</p><h2>147பேரை காவு கொண்ட தாக்குதல்</h2><p> இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் &nbsp;செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது.</p><p> இந்த இனப்படுகொலைத் தாக்குதலில்147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள்.

சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.</p><p> &nbsp;உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு.

அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். </p><p>மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். </p><p>இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.</p><p></p><p>
</p><h2>இனப்படுகொலையை புனித யுத்தமெனும் அரசு</h2><p> இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. </p><p>அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு.

நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் சந்திரிக்கா கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்த பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் - &nbsp;தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.</p><p> நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.
</p><p>
இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் &nbsp;அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். </p><p>அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள்.</p><p></p><p>
</p><h2>சந்திரிகா அரசின் விமானத்தாக்குதல்கள்</h2><p>போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள். &nbsp;</p><p>அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர்.

எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது. &nbsp; </p><p>சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. </p><p>சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள் மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சக்கள் குண்டுகளை கொட்டினர்.
</p><p>
போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை. இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன் அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு வேண்டும்.</p><p> அத்தடன் நவாலி இனப்படுகொலை உள்ளிட்ட படுகொலைகளுக்கு சிறிலங்கா அரசு மன்னிப்புக் கோர வேண்டும். நடந்த அநீகளை ஏற்றுக்கொள்ளாதவிடத்து எந்தவொரு நிலையான தீர்வையும் காணும் சூழல் ஏற்படாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T11:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-wrong-decision-by-slitting-his-own-throat-1783681095"></link>
            <id>https://ibctamil.com/article/man-wrong-decision-by-slitting-his-own-throat-1783681095</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (10) பகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.</p><p>இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.</p><p>இவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே
பிளேற்றினால் வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>மனநலம் பாதிக்கப்பட்ட நபர்</h2><p>குறிப்பிட்ட நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் என்பவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bbeca24-0a03-4501-9ac9-8b05655843bc/26-6a50dae5a9f8d.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட நபர் தவறான முடிவை செய்ய முற்படும் சமயத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மக்கள் அவரின் கால் கைகளை பிடித்து கட்டி 1919 காவுவண்டியில் ஏற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;</p><p> மேலும் அந்த நபர் மனநோய் கொண்டவர் என காவல்துறையின் ஆரம்பகட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் மட்டு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-of-high-security-zone-lands-in-jaffna-1783682020"></link>
            <id>https://ibctamil.com/article/release-of-high-security-zone-lands-in-jaffna-1783682020</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள்&amp;nbsp;அமைதி வழியில் போராட்டத்தினை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள்&nbsp;அமைதி வழியில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p> இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (10) 12வது வாரமாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வலி. வடக்கு பலாலி, மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத
கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,
அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.</p><p></p><h2>தொடர் போராட்டம்&nbsp;</h2><p>

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ccc906-c0b8-4056-81da-74df61194888/26-6a50d5cf0cbea.webp' /></p><p> தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில்
காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.</p><p>
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e446b3f-2dce-4acf-bf2c-a0b9a24da5d6/26-6a50d5d036e39.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffe2068d-6fb1-436d-9c50-c1ef5a6484dd/26-6a50d5d1115b4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:28:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய - அசாத் மௌலானா சந்திப்பில் மேலும் பல தகவல்கள்! நீதிமன்றில் இரகசிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-info-on-the-gotabaya-azad-maulana-meeting-1783678613"></link>
            <id>https://ibctamil.com/article/more-info-on-the-gotabaya-azad-maulana-meeting-1783678613</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா குறித்து மேலும் பல உண்மைகள் நீதிமன்றில் வெளிப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா குறித்து மேலும் பல உண்மைகள் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பு, இந்த மனு நேற்று நான்காவது நாளாகப் பரிசீலிக்கப்பட்டது.</p><p></p><h2>ஆணைக்குழுவின் பரிந்துரை</h2><p>
</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் தொடர்புடைய மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட ஒரு குழுவினர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629f2213-0a4c-414a-bb56-a74b2d214327/26-6a50cd8b7950a.webp' /></p><p>
</p><p>அவர் முன்வைத்ததன்படி, 
“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, எதிர்வாதியான ஷானி அபேசேகராவுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியிருந்ததாக மனுதாரர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
</p><p>இதை நீதிமன்றத்தின் முழுமையான திசைதிருப்பல் என்று விவரிக்கலாம். அது சம்பந்தமாக இது ஒரு பொய்யான கூற்று.
இந்த ஆணையத்தின் அறிக்கையில், விடுபட்ட அம்சங்களின் கீழ் காவல்துறை தொடர்பாகப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>அதில் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன, நான்கு முன்னாள் சிரேஷ்ட பிரதிப் புலனாய்வாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவற்றுள், முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தர மீது ஏற்கனவே குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்துள்ள சட்டமா அதிபர், அந்தத் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>நிலந்த ஜயவர்தன மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை சட்டமா அதிபர் ஆராய்ந்து வருகிறார்.
இந்த ஆணைக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளில், பிரதிவாதி ஷானி அபேசேகரவுக்கு எதிராக எதுவும் கூறப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902d0c0b-2beb-4a03-8e34-b0601e55b7bf/26-6a50cd8c2cff2.webp' /></p><p>எனவே, மனுதாரரால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் முற்றிலும் தவறானவை.
மேலும், இந்த மனுதாரர் ஜனாதிபதியான பிறகு அவரால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் விசாரணை ஆணைக்குழு, பிரதிவாதி ஷானி அபேசேகரவைக் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><p>ஆனால், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆணையத்தின் முழு அறிக்கையுமே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, மனுதாரர் வேண்டுமென்றே நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, உண்மைகளை மறைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
இவ்விஷயத்தை மேலும் விளக்கிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஷானி அபேசேகரா தீய எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.</p><p>
இந்த மனுதாரர், அசாத் மௌலானா என்ற நபரைத் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
அரசியலில் இது போன்ற நபர்களைச் சந்திப்பது சகஜம்தான் என்றும் மனுதாரரின் கூறியிருந்தனர். </p><p>


இது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் ஆசாத் மௌலானா ஒரு சாதாரண நபர் அல்ல.


அவர் பிள்ளையனின் செயலாளர். எனவே, மனுதாரர் அவரைத் தெரியாது என்று கூற முடியாது.</p><p></p><h2>தொலைபேசி அழைப்புப் பதிவுகள்&nbsp;</h2><p>மேலும், இந்த மனுவை கூடிய விரைவில் தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். 


மனுதாரர் தனது மனுவில், பிரதிவாதி ஷானி அபேசேகர ஜனாதிபதியான பிறகு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/388218e8-f031-40d0-81b3-12a33ba3270f/26-6a50cd8cd25ea.webp' /></p><p> </p><p>


எனவே, அவர் தன்மீது வன்மத்துடன் செயல்படுவதாக பிரதிவாதி கூறியுள்ளார். 


இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், ஜனாதிபதி காவல்துறை இடமாற்றங்களைச் செய்வதில்லை.
</p><p>

 அந்த இடமாற்றங்களை தேசிய காவல்துறை ஆணைக்குழுவே செய்கிறது. எனவே, மனுதாரரால் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
</p><p>

 ஷானி அபேசேகர வன்மத்துடன் செயல்பட்டார் என்பதை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. 


மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். </p><p>


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மிகவும் சிக்கலான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.


 அது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ முடிந்துவிடும் என்று கூற முடியாது.</p><p> 


அதற்குப் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. தற்போது பணியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். 


அதன் நகல் ஒன்று இரகசிய உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 


தொலைபேசி அழைப்புப் பதிவுகள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக, அமெரிக்காவில் உள்ள அந்த சமூக ஊடக நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 


எனவே, இது ஒரு சிக்கலான வழக்கு. இந்த நேரத்தில், மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்தை வழங்க முடியாது” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T11:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-jaffna-for-smuggling-heroin-1783680181"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-jaffna-for-smuggling-heroin-1783680181</id>
            <summary type="text">யாழில் வாசனை சவற்காரத்திற்குள் வைத்து நூதனமான முறையில்
போதைப் பொருள் கடத்திய ஒருவர்&amp;nbsp;யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் வாசனை சவற்காரத்திற்குள் வைத்து நூதனமான முறையில்
போதைப் பொருள் கடத்திய ஒருவர்&nbsp;யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>யாழ்ப்பாண நகர்புறப் பகுதியில் போதைப்பொருளை விற்பனைக்காக
கொண்டு சென்றவேளை உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று (9) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில்
இடம்பெற்று வருவதாக யாழ் காவல்துறையினருக்கு இரகசிய தகவல்&nbsp;கிடைத்தது.</p><p></p><h2>&nbsp;நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>அதன் அடிப்படையில்
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் காவல்துறை புலனாய்வு பிரிவினரும் இணைந்து
முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
</p><p>காவல்துறையினரின் சோதனையின் பொது
வெளியிடம் ஒன்றிலிருந்து பொதிகள் அனுப்பும் சேவை மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில்
மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abe75a7-b089-49be-b448-17de05af1909/26-6a50d1335c80f.webp' /></p><p>கைதுசெய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த
மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட
ஒருவராவார்.</p><p>
கைதான நபரரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ் காவல்துறை பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-summons-opposition-sajith-1783673917"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-summons-opposition-sajith-1783673917</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.ஆணைக்குழுவினால் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஆணைக்குழுவினால் பிரப்பிக்கபட்ட இந்த அழைப்பானையானது இவரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த மாதம் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>சேவை நீக்கம் செய்யபட்ட சமிந்த குலரத்ன</h2><p>முந்தைய அரசாங்கத்தின் போது, ​​சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f56f46e-509a-4459-aa2d-f824a503dc89/26-6a50c597bd171.webp' /></p><p>
அந்த நியமனம் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும், அது குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கும் சஜித் பிரேமதாசவை இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்னவின் சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:04:18+00:00</updated>
        </entry>
    </feed>
