<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-26T09:17:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லன்வில துப்பாக்கிச் சூடு சம்பவம்! தப்பியோட முயன்ற இரு சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bellanwila-shooting-2-suspects-arrested-1785050187"></link>
            <id>https://ibctamil.com/article/bellanwila-shooting-2-suspects-arrested-1785050187</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த சந்தேகநபர்கள், தப்பிச் செல்ல முயன்ற வேளையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 37 வயதுடைய பக்மீன (Bakamuna) பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொரலஸ்கமுவ காவல் பிரிவுக்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் நேற்று (25-07-2026) இரவு துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
</p><p>
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9143cdcc-cec0-4eae-88e2-5f8a5858f1f9/26-6a65cdb3ced85.webp' /></p><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நாவகமுவ காவல் நிலைய உத்தியோகத்தர்கள் குழு, இரவே ரனல பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 6.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவகமுவ காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயகவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-srilankan-arreste-indian-airport-with-64-pigeons-1785052293"></link>
            <id>https://ibctamil.com/article/2-srilankan-arreste-indian-airport-with-64-pigeons-1785052293</id>
            <summary type="text">சட்டவிரோத புறாக்களை&amp;nbsp; நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு இலங்கை நாட்டினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத புறாக்களை&nbsp; நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு இலங்கை நாட்டினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த நபர்கள் நேற்று இரவு (25.07.2026) கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>​கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவாவைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>அரியவகை புறாக்களுடன் 2 இலங்கையர் கைது</h2><p>
 

</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புறாக்கள் சட்டவிரோதமானது என்றும் அவை ரூ. 3,431,400 மதிப்புள்ள 64 அரிய வகை புறாக்கள் என்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2da506f-6f88-4d94-ab4a-2fc0ea8d4ddd/26-6a65ca8dc5281.webp' /></p><p>அறிவிக்க எதுவும் இல்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 'பசுமை வழித்தடம்' வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோதே சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்கள் துபாய் வழியாக இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு முன்பு இத்தாலியில் பறவைகளை வாங்கியதாகக் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நாட்டின் விலங்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புறாக்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
 

விசாரணையைத் தொடர்ந்து, ஒரு பயணிக்கு ரூ. 4 லட்சம்,000-ம், மற்றொருவருக்கு ரூ. 1 லட்சம்,000-ம் அபராதமாக&nbsp;மொத்தம் ரூ. 5 லட்சம் விதிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட புறாக்கள் இத்தாலிக்கு திருப்பி அனுப்ப&nbsp;சுங்கத்துறை நடவெடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தொடரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-to-release-jaffna-lands-held-by-the-army-1785053064"></link>
            <id>https://ibctamil.com/article/protest-to-release-jaffna-lands-held-by-the-army-1785053064</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 36 வருடங்களாக காணிகளை இழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். </p><p>36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26) ஆறாவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள், வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>பலாலி காவல்துறையினர்</h2><p>இதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய பலாலி பொது
நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி காவல்துறையினர் அவ்விடத்தில்
இருந்து எடுத்து சென்று காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9900ba8c-e878-41f4-b9d0-0d272d617706/26-6a65c79245637.webp' /></p><p>இதனால் இன்றைய தினம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் இன்றி பல்வேறு
இன்னல்களையும் அனுபவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அத்துடன் தற்காலிக கொட்டகை அமைக்கவும், தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட
கூட காவல்துறையினர் அனுமதிக்காததால், கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலுக்கு மத்தியில் முதியவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடைந்துள்ள டெங்கு : 81,000 ஐ கடந்த நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/81500-dengue-cases-in-sl-with-death-toll-at-61-1785048059"></link>
            <id>https://ibctamil.com/article/81500-dengue-cases-in-sl-with-death-toll-at-61-1785048059</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>அத்துடன் இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

 

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ள நிலையில் இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேல் மாகாணத்தில் அதிகளவு நோயளர்கள்&nbsp;</h2><p>
 

மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c7f8ee-d860-4eba-bf9b-8361f66c102b/26-6a65bd246d95c.webp' /></p><p>

 

இக்காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 43,132 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

அவற்றுள் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ள நிலையில் கம்பஹாவில் 17,280 நோயாளர்களும், கொழும்பில் 16,213 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>

 

அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T07:57:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-student-dies-while-bathing-in-the-river-1785048821"></link>
            <id>https://ibctamil.com/article/school-student-dies-while-bathing-in-the-river-1785048821</id>
            <summary type="text">கலவான, வெத்தாக்கல பகுதியில்&amp;nbsp;ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார்.&amp;nbsp;இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த கயான் சதர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலவான, வெத்தாக்கல பகுதியில்&nbsp;ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார்.&nbsp;</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த கயான் சதருவன் எனும் 16 வயதுடையவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>மேலும் காவல்துறையின் மேலதிக விசாரணைப்படி இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பாடசாலை மாணவன் பலி</h2><p>
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் கலவான காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fbb1004-da55-4bcc-aae1-cfa6a52e0579/26-6a65b61d9871c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T07:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை...! முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-cid-inquiry-flawed-1785048064"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-cid-inquiry-flawed-1785048064</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நடுநிலையானதாக இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே CPRP இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>கூர்மையற்ற ஆயுதங்கள்</h2><p>மேலும் தெரிவித்த அக்குழு, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டினாலும் மேலும் 11 பேர் கூர்மையற்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலும் உயிரிழந்துள்ளமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நான்கு உதவி காவல்துறை அத்தியட்சகர்களின் கீழ் பிரத்யேக விசாரணைகளை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f691b35-a44d-46a3-a35f-4871e13762bc/26-6a65b201e2d54.webp' /></p><p>

இந்தநிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா, “தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் முழுப் பழியையும் சிறைக்கைதிகள் மீது மட்டுமே சுமத்த முயற்சி நடக்கிறது.</p><p> </p><p>இச்சம்பவத்திற்குப் பொறுப்பான ஏனைய தரப்பினரைக் காப்பாற்றவே அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடுகள்</h2><p>

ஜன்னல்கள் வழியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தண்டனைச் சட்டக் கோவையின் 294 ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p> 

ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அது குறித்துச் சரியான கவனத்தைச் செலுத்தவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77cd76c9-a5e6-48c8-9187-8bf47fec4ff8/26-6a65b20133ac8.webp' /></p><p>சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம் எனச் சாடிய சேனக்க பெரேரா, மோதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போன்ற அடிப்படை கலவரத் தடுப்பு உபகரணங்கள் கூட நீர்கொழும்பு சிறைச்சாலையிடம் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கைதிகளை முழங்கால் இடவைத்து மன்னிப்புக் கேட்கச் செய்தமை மற்றும் மின்சாரத்தைத் துண்டித்தமை போன்ற செயல்கள் மூலம் கைதிகள் மேலும் கோபமூட்டப்பட்டு வன்முறைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்: வெடிவிபத்தில் மாலுமி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-accuses-ukraine-of-deadly-attack-on-caspian-1785039455"></link>
            <id>https://ibctamil.com/article/iran-accuses-ukraine-of-deadly-attack-on-caspian-1785039455</id>
            <summary type="text">காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த தாக்குதலில் ஏற்பட்ட வெடி விபத்தில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை "ஆக்கிரமிப்புச் செயல்" என்றும், "பகைமையான மற்றும் குற்றவியல் தாக்குதல்" என்றும் ஈரான் கூறி உள்ளது.</p><p></p><h2>வெடிவிபத்தில் மாலுமி உயிரிழப்பு</h2><p>இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் பொறுப்பாளரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcb4e808-b718-43ce-9877-dbfb9fff8190/26-6a65a8926d1b4.webp' /></p><p>உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா பயன்படுத்தி வரும் ஈரான் வடிவமைத்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரானுக்கு ஏதுவாக, ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை அந்நாட்டிற்கு வழங்கி வருவதை கீவ் கவனித்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
 

காஸ்பியன் கடலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றையும், ஈரானுடன் தொடர்புடைய இராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களையும் உக்ரைன் படைகள் தாக்கியதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவருடைய X தளத்தில்&nbsp; வெளியிடப்பட்ட கருத்துக்களில், உக்ரைன் ஜனாதிபதி, ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்து "வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ரஷ்யாவின் தீவிர செயற்கைக்கோள் கண்காணிப்பை" கீவ் பதிவு செய்து வந்ததாகவும், "இந்தக் காட்சிகள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன" என்றும் கூறினார்.
</p><p>
 

"அதே நேரத்தில், இந்த இடங்கள் குறித்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் படங்களுக்கும் ஈரானியத் தாக்குதல்களுக்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. தாக்குதல்களுக்கு முன்னரும், அவற்றுக்கான தயாரிப்பாகவும், பின்னரும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காகவும் இந்தத் தொடர்பு காணப்படுகிறது," என்று ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:50:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியை உலுக்கிய பிரைட் பேரணி விபத்து...! ஒருவர் பலி பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/berlin-pride-parade-event-accident-update-1785045353"></link>
            <id>https://ibctamil.com/article/berlin-pride-parade-event-accident-update-1785045353</id>
            <summary type="text">ஜேர்மனியில் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே (CSD Pride Parade) எல்ஜிபிடிகியூ (LGBTQ+) பேரணியில் வாகனம் ஒன்று புகுந்து விபத்திற்குள்ளகியுள்ளது.

தலைநகர் பெர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே (CSD Pride Parade) எல்ஜிபிடிகியூ (LGBTQ+) பேரணியில் வாகனம் ஒன்று புகுந்து விபத்திற்குள்ளகியுள்ளது.
</p><p>
தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பேரணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>நடைபவனி பேரணி</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெர்லினில் உள்ள டியர்கார்டன் பூங்கா பகுதிக்கு அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef3019a-9788-46aa-89aa-347c8aef4db2/26-6a65a962d8fda.webp' /></p><p>எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் நடைபவனி பேரணியின் போது வெள்ளை நிற வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துள்ளது.
</p><p>
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பேரணி உடனடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>தாக்குதலைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை அப்துல் பி (Abdul B.) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f46d05d-5a22-411e-bfd8-95a943650c2c/26-6a65a961ea2a5.webp' /></p><p>

அத்தோடு, அவர் ஆயுதம் ஏந்தியவர் மற்றும் ஆபத்தானவர் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
தப்பியோடிய சந்தேகநபரைப் பிடிப்பதற்காக பெர்லின் நகரம் முழுவதிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-26T06:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முடங்கியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1025-vehicles-imported-to-sri-lanka-frozen-at-port-1785044870"></link>
            <id>https://ibctamil.com/article/1025-vehicles-imported-to-sri-lanka-frozen-at-port-1785044870</id>
            <summary type="text">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றதாகவும் குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை எனவும் சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
</p><p>அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வரிகளை செலுத்த வேண்டும்</h2><p>
 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab23789f-3025-4a6e-a9cb-01b033e61175/26-6a65a7ae2b252.webp' /></p><p>
</p><p>
 

அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>உரிய வரிகளைச் செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.</p><p>

 

அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சிய தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இலங்கைச் சுங்கத்திற்கு அறிவித்தல்</h2><p>
</p><p>
 

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை எனில், அது குறித்து துறைமுகக் கட்டுப்பாட்டாளர் இலங்கைச் சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b098976d-570b-47e6-b014-d653d63a059f/26-6a65a7af05a0c.webp' /></p><p>
</p><p>
 

தற்போது வரை விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>எனினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[7.5 பில்லியன் டொலரைக் கடந்த இலங்கைக்கான இந்திய உதவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-assistance-to-sri-lanka-crosses-7-5-bn-usd-1785040889"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-assistance-to-sri-lanka-crosses-7-5-bn-usd-1785040889</id>
            <summary type="text">இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து&amp;nbsp;இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்து தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கைக்கான இந்தியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து&nbsp;இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி, இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்“ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>டித்வா புயல் மீட்பு நடவடிக்கை</h2><p>அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5c3d37-7c6e-472b-898b-29a077165374/26-6a659ad51c67b.webp' /></p><p>
</p><p>
இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கின்றது. பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளது.
</p><p>
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்தது.</p><p> இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளது” என சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-si-suspended-for-misconduct-1785042195"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-si-suspended-for-misconduct-1785042195</id>
            <summary type="text">கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் பணி இடைநிறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த விடயத்தை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
</p><p>
வதுபிட்டிவல முதலீட்டு மண்டல காவல்துறை சாவடியில் கடமையாற்றி வந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சீர்கேடான நடவடிக்கை&nbsp;</h2><p>இது தொடர்பில் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இலங்கை காவல்துறை விளக்கமளித்துள்ளது.
</p><p>
மேலும் தெரிவித்துள்ள காவல்துறை, “கடந்த 2026 ஜூலை 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு முன்னால் சீருடையில் நின்றவாறு கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்துகொண்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8ab723-a903-45f5-bf66-9fa7d528384a/26-6a659c3f24474.webp' /></p><p>அத்துடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.
</p><p>
குறித்த அதிகாரியின் இத்தகைய சீர்கேடான நடவடிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள், அவருக்கு எதிராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தச் பணி இடைநிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>&nbsp;தவறான நடவடிக்கை&nbsp;</h2><p>குறித்த அதிகாரியின் இத்தகைய தவறான நடவடிக்கை இலங்கை காவல்துறை சேவைக்கும் முழுமையான அரச சேவைக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இது ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைவதுடன் அவரை மேலும் சேவையில் வைத்திருப்பது காவல்துறை சேவையின் கீர்த்திநாமத்திற்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிறுவன விதிக் கோவையின் பிரிவுகளுக்கு அமைவாக அவர் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsrilankapoliceofficial%2Fposts%2Fpfbid0RN7YeY99PwQQ1MgyN9riaumoy73Ct54YiF2YoHqbsZMgH5ms74e6S4KAoHsBu5rYl&show_text=true&width=500" width="500" height="770" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமான காவல்துறை சேவையைப் பேணுவதே தங்களது முதன்மை நோக்கம்” என தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், சட்டம் மற்றும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் இத்தகைய நாகரிகமற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக நீதியின் பக்கம் நிற்க இலங்கை காவல்துறை சேவை கடமைப்பட்டுள்ளது எனவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:45:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-pauses-us-strikes-on-iran-temporarily-1785039367"></link>
            <id>https://ibctamil.com/article/trump-pauses-us-strikes-on-iran-temporarily-1785039367</id>
            <summary type="text">ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
போரை மேலும் தீவிரப்படுத்துவது மத்திய கிழக்கில் அமைந்துள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள் மற்றும் பிற வான் பாதுகாப்பு வெடிமருந்துகளின் இருப்பை ஆபத்தான நிலைக்குக் குறைத்துவிடும்.
</p><p>
இதனாலேயே இந்த முடிவை ட்ரம்ப் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மூத்த ஆலோசகர்கள்</h2><p>

ட்ரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்கள் அத்தோடு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு ஒரு தற்காலிகமானதா அல்லது இந்த அமைதியான சூழல் நீடிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0ab35c-2c0d-4a72-a6f3-86aec93d3e98/26-6a6592ce293bc.webp' /></p><p>இருப்பினும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் வாய்ப்பளிக்கும் ட்ரம்பின் விருப்பத்தையும் மற்றும் தற்போதைய அளவிலான தாக்குதல்கள் அதன் செயல்திறனின் எல்லையை எட்டிவிட்டன என்பதையுமே இத்தீர்மானம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் மிகப்பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சாத்தியமான திட்டங்களை அமெரிக்க இராணுவம் ஏற்கனவே தயார் செய்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-national-arrested-with-over-20kg-drugs-1785039573"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-national-arrested-with-over-20kg-drugs-1785039573</id>
            <summary type="text">இலங்கைக்குள்&amp;nbsp;போதைப்பொருளை&amp;nbsp;கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர்&amp;nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது&amp;nbsp;செய்யப்பட்டுள்ளார். குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்குள்&nbsp;போதைப்பொருளை&nbsp;கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர்&nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது&nbsp;செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த நபர் 20 கிலோகிராம் 'ஹஷிஷ்' என்ற போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற போதே இன்று (26.07.2026) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp;இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ் என்ற போதைப்பொருளின் மதிப்பு 201.89 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கனடா நாட்டவர் கைது</h2><p>கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஓவியராகப் பணிபுரியும் 27 வயதுடையவர் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257937e3-d1dc-482f-8e9c-d4f54df86732/26-6a65945d8f150.webp' /></p><p>இவர் கனடாவின் டொராண்டோவில் போதைப்பொருட்களை வாங்கியதாகவும், பின்னர் கத்தாரின் தோஹாவிற்குப் பயணம் செய்து, அதிகாலை 2:30 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் இலங்கை சுங்க அதிகரிகள் அவரது பயணப் பைகளைச் சோதனையிட்டபோது, ​ 80 கட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் மற்றும் 117 கிராம் பழுப்பு நிற ஹஷிஷைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p>
 

சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெடித்த சர்ச்சை : குற்றச்சாட்டை மறுத்து வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-outsiders-staying-at-the-presidential-palaces-1785038762"></link>
            <id>https://ibctamil.com/article/no-outsiders-staying-at-the-presidential-palaces-1785038762</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகப் செய்தி வெளியானது குறித்தே ஜனாதிபதி ஊடகப் பிரிவு அந்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.</p><p></p><h2>பாதுகாப்புப் படை அதிகாரிகள்</h2><p>
</p><p>
 

அந்த அறிக்கையில், குறித்த ஆண்டின் போது ஜனாதிபதி மாளிகைகளின் வளாகத்தில் உள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரபூர்வ தேவைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f69a0847-db91-4480-98cd-df1f93e97367/26-6a658c0f74e5a.webp' /></p><p>ஆனால் அந்த அதிகாரிகள் யாரும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள் தங்கியிருக்கவில்லை“ என்றும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T04:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி அசித நிரோஷனவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள் சங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basl-condemns-mp-s-attack-on-its-president-1785036400"></link>
            <id>https://ibctamil.com/article/basl-condemns-mp-s-attack-on-its-president-1785036400</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தான முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் துர்நோக்கம் கொண்டவை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று (25-07-2026) நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.</p><p></p><h2>நாடாளுமன்றச் சிறப்புரிமை</h2><p>

இதில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ராஜீவ் அமரசூரிய தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>

அதற்கு பதிலளித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aca2dd8-e8b4-4ab1-ac41-b78b8e360834/26-6a65873f97c6a.webp' /></p><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை பயன்படுத்திப் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தவே இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிரான இத்தகைய அரசியல் ரீதியான தாக்குதல்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.</p><p></p><h2>சட்டத்தரணிகள் சங்கம்</h2><p> 

இலங்கையின் சட்டச் சமூகம் என்றும் ஒற்றுமையுடன் திகழ்கிறது.</p><p> </p><p>சட்டத் துறையின் சுதந்திரம் மற்றும் நேர்மைக்கு எதிராக வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f5134f-bf83-4f85-992a-37199c97d59d/26-6a658741269e0.webp' /></p><p>

அத்துடன், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளின் பாதுகாப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறுமாறு எம்பி அசித நிரோஷனவுக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அவ்வாறு கூறினால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p>

இதேவேளை, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்தும் சட்டத்தரணிகள் சங்கம் தனது நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தற்காலிகச் சூழ்நிலை</h2><p>மேலும், “உயர் நீதிமன்றங்களைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தற்காலிகச் சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ கொண்டு வரப்படக் கூடாது.</p><p>
</p><p>தெளிவான நிறுவனத் தேவை, வெளிப்படையான நியாயப்படுத்துதல் மற்றும் துறைசார் பங்குதாரர்களின் பரந்த கலந்தாலோசனை இருக்கும் இடங்களில் மட்டுமே இத்தகைய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d908d803-e20f-488e-a9d4-aabe177baa26/26-6a658740781b0.webp' /></p><p>
அரசியலமைப்பு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை என்பது கொண்டு வரப்படும் திருத்தத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அது கொண்டு வரப்படும் நடைமுறையிலும் தங்கியுள்ளது.
</p><p>
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம் மற்றும் போராடும் உரிமை உள்ளிட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒன்றிணையும் ரணில் - சஜித் : கடுமையாக விமர்சிக்கும் அநுர தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-sajith-to-reunite-anura-side-is-in-fear-1785036574"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-sajith-to-reunite-anura-side-is-in-fear-1785036574</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்கு எந்தவித சவாலையும் அல்லது தாக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்கு எந்தவித சவாலையும் அல்லது தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என&nbsp;அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p> ரணில் விக்ரமசிங்க தன்னை மீண்டும் தலைவராகவும், சஜித் பிரேமதாசவை தனக்குக் கீழ் செயல்படும் சீடராகவும் மாற்றவே இச்சந்திப்புகள் ஊடாக முயல்கிறார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p> களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சஜித்தை கீழே தள்ளிவிட்டார்</h2><p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோதே எதையும் சாதிக்க முடியாமல் பிரிந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதையும் செய்துவிட முடியாது. இதனை ஒரு சமமான கூட்டிணைவாகப் பார்க்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d40d86a-7daf-4b78-a59e-2cf361d0ee72/26-6a6585a39b7ff.webp' /></p><p>சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க கட்டளைகளைப் பிறப்பிக்க, சஜித் பிரேமதாச அவற்றை அமைதியாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதே தெரிகிறது.</p><p> ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தன்னைத் தலைவராகக் காட்டிக்கொண்டுள்ளார்; சஜித்தை இரண்டாம் இடத்திற்கும் கீழே தள்ளிவிட்டார்.</p><p></p><h2>குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கம்</h2><p>

அத்துடன், இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நபர்களைக் கவனித்தால், அங்கிருந்த அனைவரும் ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடையவர்களாகவோ, பிணையில் உள்ளவர்களாகவோ அல்லது சந்தேகநபர்களாகவோ மட்டுமே இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96cfde54-a842-4ad3-95e9-c644dbbda962/26-6a6585a2eb30e.webp' /></p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
</p><p>
இவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலும், பயத்திலுமே சஜித், ரணில், நாமல் போன்றோர் பதற்றமடைந்து ஒன்றாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்“ என தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uYsKBg_ueGs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T03:57:02+00:00</updated>
        </entry>
    </feed>
