<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-07T05:20:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகசின் சிறை மோதலில் ஒருவர் பலி! பலர் காயம் - அரசுக்கு கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magazine-prison-unrest-fully-under-control-1786068337"></link>
            <id>https://ibctamil.com/article/magazine-prison-unrest-fully-under-control-1786068337</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>சிறைச்சாலையில் உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h2> </h2><p>மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில், புதிய மகசின் சிறையில் நேற்று நடந்த கலவரத்தில் காயமடைந்த 11 கைதிகள் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.</p><p>



9 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர் என்று சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு புதிய மெகசின் சி<a href="https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279" target="_blank">றைச்சாலையில்</a> நேற்றிரவு (6) பதற்றமான சூழல்நிலை உருவாகியதுடன் போதைப்பொருள் தொடர்பான தகராறே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ab7037-8b0b-4ef4-8dee-4d9553812f9b/26-6a75591ea47ff.webp' /></p><p>இந்நிலையில், மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p> 

சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விமானப்படை ட்ரோன்</h2><p> 

சிறைச்சாலைச் சுவருக்கு மேல் உள்ளே வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51e8b7b-d2fc-44ed-bb44-1ce9bea8a7a7/26-6a75591dbaedf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அறை ஒன்றின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்திருந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து </p><p>அவர்களை மீண்டும் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். 

இதற்கிடையில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். </p><p>

நிலைமையைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QqamGds3hEI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:19:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-uni-academic-activities-will-resume-1786076545"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-uni-academic-activities-will-resume-1786076545</id>
            <summary type="text">நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பொன்று வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கமைய, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெள்ளப்பெருக்கு அனர்த்தம்&nbsp;</h2><p>இதேவேளை மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b618ca5-d62e-46ef-bbd0-fd595624634b/26-6a75690847046.webp' /></p><p>அத்துடன் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய முக்கிய புள்ளியின் மகன்கள்! சுருட்டப்பட்ட 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-vip-s-sons-accused-of-135-acre-land-grab-1786074801"></link>
            <id>https://ibctamil.com/article/ex-vip-s-sons-accused-of-135-acre-land-grab-1786074801</id>
            <summary type="text">கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் <a href="https://ibctamil.com/article/magazine-prison-unrest-fully-under-control-1786068337" target="_blank">குற்றச்சாட்டுக்கள் </a>முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொலொஸ்பாக பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் அரை ஏக்கர் காணியில் 1918 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் பங்களா ஒன்றும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இது <a href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-kuruwita-prison-1786070913" target="_blank">தொடர்பில் விசாரணை</a> நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதனடிப்படையில் இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி நேற்று (06-08-2026) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d11805-6acf-496a-8dd0-f5aa714833e4/26-6a755bbb7d329.webp' /></p><p>தமது அமைப்புக்கு அநாமதேயமாக கிடைத்த தகவலுக்கமைய, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் இந்த காணிக்கான 1386 இலக்கப் பத்திரம் மற்றும் 876 இலக்கக் காணி வரைபடம், காணி உறுதிக் குறிப்பேடு என்பவற்றையும் மேலதிக விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என முறைப்பாட்டைச் சமர்ப்பித்த குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T04:54:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-women-were-arrested-in-a-property-theft-case-1786074059"></link>
            <id>https://ibctamil.com/article/three-women-were-arrested-in-a-property-theft-case-1786074059</id>
            <summary type="text">சொத்துத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு இரண்டு பெண் சந்தேகநபர்கள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆண் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் சந்தேகநபர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொத்துத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு இரண்டு பெண் சந்தேகநபர்கள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆண் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் சந்தேகநபர் என மொத்தம் நான்கு பேர் மவுண்ட் லவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>ஜூலை 18 ஆம் தேதி ஒரு வீட்டிற்குள் புகுந்து ரூ. 1,41,00,000&nbsp; மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடிய குற்றம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
</p><p>அதன்படி இந்த திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (06.08.2026) தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><p></p><h2>&nbsp;நான்கு பேர் கைது</h2><p>மேலும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபர் ஹட்டன் பதானா பகுதியில் கைது செய்யப்படார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c1fda2-9bf3-4cdb-906a-dfc5025e08b7/26-6a75612ad906c.webp' /></p><p>குறித்த சந்தேக நபர்களால் 8 ஜோடி தங்கக் காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு கைக்காப்பு, 10 தங்க நெக்லஸ்கள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள் திருடபட்டுள்ளது. </p><p>இந்த நகைகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, மவுண்ட் லவினியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேக நபர்களுக்கு 28, 46, மற்றும் 53 வயது என்றும், அவர்களில் ஒருவருக்கு 28 வயது என்றும், அவர்கள் ஹட்டன் பதானா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை விசரணையில் தெரியவந்துள்ளது. </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் லவினியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட பதற்றம் : அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த வன்முறை - இருவர் பலி : நடந்த துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-kuruwita-prison-1786070913"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-kuruwita-prison-1786070913</id>
            <summary type="text">புதிய இணைப்புகுறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட காவல்துறை அதிரடிப்படையினரும், கலகத்தடுப்பு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7647c8-28d4-4c57-8c6b-1b8a6cf59eca/26-6a755aa075f5a.webp' /></p><p>நேற்றிரவு (06) குறித்த சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>கண்ணீர்புகை பிரயோகம்</h2><p> </p><p>

இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6fef9f6-d682-4774-ad1f-012ea29e2d6e/26-6a754b58a7399.webp' /></p><p> </p><p>

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/private-members-motions-to-be-moved-in-parliament-1786075522"></link>
            <id>https://ibctamil.com/article/private-members-motions-to-be-moved-in-parliament-1786075522</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(07.08.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(07.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 5.00 வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.</p><p> (i) பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல் (கந்தசாமி பிரபு)</p><p>
(ii) கண்டல் தாவர சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (ஹெக்டர் அப்புஹாமி)</p><p>
(iii) மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை தொடருந்துப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை தொடருந்துப் பாதையை விஸ்தரித்தல் (எம்.எஸ். உதுமாலெப்பை)
</p><p>(iv) கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல் (இம்ரான் மகரூப்)</p><p>
(v) இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல் (தயாசிறி ஜயசேகர)
</p><p>(vi) இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல் (சுசந்த குமார நவரத்ன)</p><p>
(vii) அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல் (சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்.</p><p>மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mjiVa_E9868" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-07T04:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதைக்கப்பட்ட மக்கள்: யாழில் வேறு இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம்..! எழுமாற்றாக அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/excavation-work-outside-the-sindhubathi-mass-grave-1786073453"></link>
            <id>https://ibctamil.com/article/excavation-work-outside-the-sindhubathi-mass-grave-1786073453</id>
            <summary type="text">செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய
இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த
பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய
இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த
பகுதிகளில் இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக
சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்

செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக மேலும்
புதைகுழிகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் எழுமாற்றாக இரு இடங்களில்
தொல்பொருள் பேராசிரியர் ராஜ் செமதவா வினால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>அதில் என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டால் நிலத்தை ஊடுருவி பரிசோதிக்கும்
"GPR" (Ground-penetrating radar) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அகழ்வு பணிகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமா எனும் முடிவுக்கு வருவதற்காகவே இரு
இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f5a354f-9f23-4bc3-b96c-8b5b6e911118/26-6a75563a9b5ac.webp' /></p><p>
அதேவேளை, தற்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் சிந்துபாத்தி மயானத்தின்
சுற்றுமதில்கள் அண்மைய காலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. </p><p>ஆரம்ப காலத்தில்
இதொரு வெட்ட வெளியாக இருந்தமையால், அகழ்வு பணிகள் நான்கு சுற்று மதில்களுக்கு
இடையில் நடைபெறாது, அதன் வெளியேயும் நடைபெற வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>இறுதி தீர்மானங்கள்</h2><p>
அதன் அடிப்படையில் செய்மதி படங்களின் அடிப்படையில் ஏதேனும் சந்தேகமான இடங்கள்
அடையாளம் காணப்பட்டால் , அந்த இடங்களிலும் எழுமாற்றாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள
வேண்டும் என பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2981535-abdd-4844-b4a5-dc640c0780d1/26-6a75563b523ad.webp' /></p><p>

இவை தொடர்பிலான இறுதி தீர்மானங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி
நடைபெறவுள்ள வழக்கின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/isE7xafy7h4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T03:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1786072808"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1786072808</id>
            <summary type="text">நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய (07.08.2026) நாளுக்கான வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த அறிக்கையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p></p><h2>பலத்த காற்று வீசும்&nbsp;</h2><p>வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f2b11b-066a-4bd2-8352-7c553b2a2411/26-6a7555ad8d4a9.webp' /></p><p> 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது.</p><p></p><h2>கடற்கொந்தளிப்பாகக் காணப்படும்</h2><p> 

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகக் கொந்தளிப்பாகவோ காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e31b79-5168-4394-bd33-28d93e328564/26-6a7555ae5abf5.webp' /></p><p> 

காங்கேசன்துறையில் இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். </p><p>

எனவே, இக்கடற் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T03:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-to-close-for-august-holidays-today-1786071617"></link>
            <id>https://ibctamil.com/article/schools-to-close-for-august-holidays-today-1786071617</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதில், அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதில், அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று (07) வெள்ளிக்கிழமை நிறைவடையும்&nbsp;என அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>க.பொ.த உயர்தர பரீட்சை</h2><p>அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் இன்றுடன் (07)&nbsp; நிறைவடையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5f3044-06aa-4653-a83b-4dee2bde25c8/26-6a754de84542d.webp' /></p><p> முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளது.</p><p>

அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி (திங்கட்கிழமை) அன்று ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவடைகிறது</p><p>மேலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T03:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்கள் - குடும்பத்தினர் தயவில் வாழும் ராஜித! தொலைக்காட்சியில் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/don-t-have-a-single-cent-of-income-now-rajitha-1786061509"></link>
            <id>https://ibctamil.com/article/don-t-have-a-single-cent-of-income-now-rajitha-1786061509</id>
            <summary type="text">


தனக்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லை என்றும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவில் வாழ்வதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


தனக்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லை என்றும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவில் வாழ்வதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது தற்போதைய நிதி நிலைமை குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், தற்போது தான் பயன்படுத்தும் வாகனம் ஒரு நண்பரால் வழங்கப்பட்டது என்றும், தான் வசிக்கும் வீட்டின் வாடகையைக்கூட ஒரு நெருங்கிய நண்பர் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
அரசியலில் நுழைவதற்கு முன்பு நாட்டில் மிகவும் வெற்றிகரமான பல் மருத்துவராக தான் பணியாற்றியதாகவும் அக்காலத்தில் மிஸ் சிறிலங்கா போட்டியாளர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமானோர் தன்னிடம் சிகிச்சை பெற்றதாகவும், அதன் மூலம் மிக அதிக வருமானம் ஈட்டியதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இழக்கப்பட்ட வருமானம்</h2><p>

எனினும், தான் அரசியலில் நுழைந்த பிறகு அந்த வருமான ஆதாரங்கள் அனைத்தையும் இழந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69cca4bf-8ec7-4c60-a874-8b3d2eb2f1d5/26-6a7528327f5cb.webp' /></p><p>

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இப்போது எனக்கு ஒரு பைசா கூட வருமானம் இல்லை.என் மனைவி ஒரு சிறப்பு மருத்துவர், அதனால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. </p><p>என் பாட்டியிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற ஒரு சிறிய தோட்டமும் எனக்கு உள்ளது, அது ஓரளவு வருமானத்தைத் தருகிறது. 

வாழ்வதற்குப் போதுமான பணம் எங்களிடம் இருந்தாலும், அரசியல் செய்வதற்கு அந்தப் பணம் போதாது. என் நண்பர்கள்தான் என் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புகிறார்கள், வாடகையையும் செலுத்துகிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T00:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொசாட் அமைப்பின் இரண்டு உயர் அதிகாரிகள் பணி நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mossad-chief-fires-2-senior-officials-1786056818"></link>
            <id>https://ibctamil.com/article/mossad-chief-fires-2-senior-officials-1786056818</id>
            <summary type="text">
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் வகுக்கப்பட்டத் திட்டம் தோல்வியடைந்ததால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் வகுக்கப்பட்டத் திட்டம் தோல்வியடைந்ததால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலைவர் ரோமன் கோஃப்மேன் பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மொசாட்டின் உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவராகவும், மற்றொருவர் அந்த அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்ததாக தெரியவருகிறது.</p><p></p><h2>எழுத்துப்பூர்வத் திட்டம்</h2><p>
</p><p>
ஈரானில் உள்ள சிறுபான்மைக் குழுக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டி, நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை உருவாக்கி தற்போதைய ஈரானிய ஆட்சியை அகற்றுவதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தை இவ்விரு அதிகாரிகளும் உருவாக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce15cba1-7a4a-4351-838b-44ff6f597b50/26-6a75170ae85b6.webp' /></p><p> </p><p>

அதன்படி, இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படாமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மொசாட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இவர்களது பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T23:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போருக்கு விரைவில் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-he-hopes-war-with-iran-will-end-soon-1786053060"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-he-hopes-war-with-iran-will-end-soon-1786053060</id>
            <summary type="text">ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில வகை ஆயுதங்களின் விநியோகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தோடு, சில வகை ஆயுதங்களின் விநியோகத்தில் அமெரிக்க ஆயுதப் படைகள் சவால்களைச் சந்தித்து வருவதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p> 

 ஓவல் அலுவலகத்தில் பேசிய அவர், போர் மிக விரைவில் முடியும் என்றும், ஈரானால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆயுதங்களின் விநியோகம்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானுடனான ஐந்து மாத போரின் போது, அமெரிக்க இராணுவம் தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் பெரும் பகுதியை முடித்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a59b9977-e7e0-4cbc-82fd-38dd42ca846c/26-6a750e1d1658a.webp' /></p><p><i>Image Credit: GVA</i></p><p>
</p><p>
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவிடம் சில குறிப்பிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் கையிருப்பில் உள்ள போதிலும், மற்ற சில ஆயுதங்களின் விநியோகம் சற்று குறைவாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும் நிலைமையைச் சமாளிக்க, பேட்ரியாட் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளுக்கான வசதிகள் உட்பட, கூடுதல் உற்பத்தி ஆலைகளை அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்கள் கட்டியெழுப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T23:39:04+00:00</updated>
        </entry>
    </feed>
