<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-24T16:21:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காரணமாக மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/power-shortage-likely-due-to-el-nino-1787587185"></link>
            <id>https://ibctamil.com/article/power-shortage-likely-due-to-el-nino-1787587185</id>
            <summary type="text">தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது.</p><p>

இத்தகைய சூழ்நிலைகளில், நாடு மின்சாரப் பற்றாக்குறை அபாயத்தை எதிர்கொள்ளும் என்று PUCSL தலைவர் கே.பி.எல். சந்திரலால் கூறயுள்ளார்.</p><p>

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்காக புதிதாக அறிவிக்கப்பட்ட மின் கொள்முதல் கட்டணங்கள் குறித்த இன்றைய ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மின் விநியோக உறுதி&nbsp;</h2><p>

தற்போது நிலவும் சூழ்நிலைகளின் விளைவாக, மின்கல சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் நுகர்வுக் குறைவு ஏற்படக்கூடும் என்றும், இது தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதை மேலும் கடினமாக்கும் என்றும் சந்திரலால் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5d76890-a5df-4371-b701-96220c22c443/26-6a8c6aa158e8c.webp' /></p><p>இதன்படி மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையையும் நம்பகமான மின்சார விநியோகத்தையும் உறுதி செய்வதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், போதுமான சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலமும் இந்த சவால்களுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T16:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க H-1B தொழிலாளர் விசாக்களுக்கு 100,000டொலர்க்கும் அதிக கட்டணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-h-1b-worker-visas-cost-more-than-100-000-1787586347"></link>
            <id>https://ibctamil.com/article/us-h-1b-worker-visas-cost-more-than-100-000-1787586347</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் (சுமார் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 3கோடிக்கும் அதிகம்) கட்டணம் விதிக்கும் முன்மொழியப்பட்ட விதிமுறையை வெளியிட்டுள்ளது.</p><p>

இந்தக் கட்டணம் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் தற்காலிக உத்தரவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>ஆனால், அதை அறவிட அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.</p><p>
</p><p></p><h2>கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை</h2><p>தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் H-1B விசாக்களின் செலவை இந்தக் கட்டணம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/964a80d8-bb13-4be1-855f-ede3b34c39bb/26-6a8c6824c9dfc.webp' /></p><p>இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 30 நாட்களுக்கு கருத்துகள் பெறப்படும் என அமெரிக்க தரப்புக்கள் தெரிவிக்கின்றன.</p><p> இந்த விதிமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>

H-1B விசா</h2><p>
H-1B விசா திட்டத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பு திறன் மற்றும் பயிற்சி தேவைப்படும் துறைகளில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க முடியும்.</p><p>

ஒவ்வொரு ஆண்டும்:

65,000 H-1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.
மேம்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன.
</p><p>விசாக்கள் பொதுவாக 3 முதல் 6 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
கட்டணத்தில் மிகப்பெரிய உயர்வு
இதுவரை H-1B விசாவைப் பெறுவதற்கான கட்டணங்கள், பல்வேறு காரணிகளைப் பொறுத்து பொதுவாக சுமார் 2,000 டொலர் முதல் முதல் 5,000 டொலர் வரை இருந்தன.</p><p>

ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட புதிய H-1B விசாக்களுக்கு 103,265 டொலர் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். </p><p>இதனால் வெளிநாட்டு திறமையான பணியாளர்களை அமெரிக்காவில் நியமிக்கும் நிறுவனங்களுக்கு செலவு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T15:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் கைவரிசை காட்டிய சந்தேகநபர்! வெளியாகிய காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/theft-at-pettah-bus-stand-cctv-1787581648"></link>
            <id>https://ibctamil.com/article/theft-at-pettah-bus-stand-cctv-1787581648</id>
            <summary type="text">கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சிசிரிவி கண்காணிப்பின் உதவியுடன் உடனடியாகக் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சிசிரிவி கண்காணிப்பின் உதவியுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p>
மேம்படுத்தப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயல்பாட்டு அறையில் உள்ள சிசிரிவி கண்காணிப்பு அமைப்பு மூலம், நேற்று (23) இந்தத் திருட்டுச் சம்பவம் கண்டறியப்பட்டது.
</p><p>
பணியில் இருந்த விமானப்படை வீரர்கள் சந்தேக நபரை உடனடியாக அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1103837022210683%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>[HEU3D6F
]</p><h2>சிசிரிவி கண்காணிப்பு</h2><p>

'தூய்மையான இலங்கை' திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிசிரிவி கண்காணிப்பு அமைப்பானது, பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef738dd1-07a6-435d-a4b1-e97271b1c1cd/26-6a8c54d2eae63.webp' /></p><p>
</p><p>
பயணிகள் திடீரென நோய்வாய்ப்படுதல், விபத்துகளில் சிக்குதல் அல்லது பிற அவசர உதவி தேவைப்படும் சூழ்நிலைகள் உள்ளிட்ட அவசர காலங்களில் விரைவான உதவியை வழங்குவதற்கான வசதிகளுடனும் செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T15:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கன திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announce-date-for-judgment-easter-sunday-attack-1787580663"></link>
            <id>https://ibctamil.com/article/announce-date-for-judgment-easter-sunday-attack-1787580663</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிரான தீர்ப்பை அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிரான தீர்ப்பை அறிவிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி இது குறித்து விசாரித்துவரும் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>
இந்த வழக்கினை மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய சிறப்பு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகின்றது.</p><p></p><h2>&nbsp;23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்</h2><p>

 இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, கொலை செய்ய உந்துதலாக இருந்தமை, ஆயுதங்களைச் சேகரித்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட பாரிய குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d46db55-a682-4d77-bd31-da0b31b11b84/26-6a8c50f94ac07.webp' /></p><p>
</p><p>
விசாரணையின்போது சந்தேகநபர்களான முகமது நௌபர் (Naufer Maulavi) என்பவரை முதன்மைப் பிரதிவாதியாகக் கொண்டு மொத்தம் 24 முதல் 25 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அண்மையில் (ஆகஸ்ட் 17 அன்று) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான செய்னுல் ஆப்தீன் முகமது ஜாஸ்மி, முகமது முஸ்தபா முகமது ரிஸ்வான் மற்றும் மீரா சாஹிர் முகமது நப்லி ஆகியோர் கூண்டிலிருந்து தங்களது தரப்பு நியாயங்களை விளக்கி வாக்குமூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988"></link>
            <id>https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே அறிவித்துள்ளார்.</p><p>
</p><p>
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, ''5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>தேவையான முன்னேற்பாடுகள்</h2><p>''கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d9128f8-eb29-461d-b740-a95e9ab21c21/26-6a8c4e5616d4b.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L) 2027 டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது"&nbsp;என்றுள்ளது </p><p>
அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சைத் திகதிகளுக்கு அமைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலைகள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T14:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககேளின் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/struggle-of-relatives-of-the-disappeared-jaffna-1787579075"></link>
            <id>https://ibctamil.com/article/struggle-of-relatives-of-the-disappeared-jaffna-1787579075</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் 
தமிழ்த்தேசியப் பேரவை தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் 
தமிழ்த்தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ்
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த
தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம்
காரணமாக ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக சுகாஸ் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம்&nbsp;</h2><p>
</p><p>
அதோடு காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும்
ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச
விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால்
நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2784248c-0125-4e67-b7b1-2f9f23c0d358/26-6a8c4ac60f3e8.webp' /></p><p>

''காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ
காணாமல் ஆக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் மக்களின்
உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்.
</p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட
குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின்
நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.
</p><p>
தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள்
மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல்
கொடுக்க வேண்டும்." எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் .</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஹோர்மோஸில் புதிய நிபந்தனையை விதித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-imposes-new-conditions-on-hormuz-1787577843"></link>
            <id>https://ibctamil.com/article/iran-imposes-new-conditions-on-hormuz-1787577843</id>
            <summary type="text">ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஒரு பொருளாதார பேரழிவு நாளில் அமெரிக்கா அந்நாட்டுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்கும் என்றும், ஈரானுடன் நிதி ரீதியாக கூட்டு சேரும் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
</p><p>
முந்தைய அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பலமுறை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காலக்கெடுவை நீட்டித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ஆட்சிக்கு பெசென்ட் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஈரான் புதிய எச்சரிக்கை</h2><p>
இந்நிலையில் பெசென்ட்டின் கருத்துக்களை ஈரான் நிராகரித்ததோடு, போர் தொடர்ந்தால் அப்பகுதியிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bcae47-2496-4028-9015-833b2608e3d6/26-6a8c4715a135f.webp' /></p><p>
 

மேலும் தனது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லக்கூடாது என ஈரான் அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகஉம கூறப்படுகிறது.
</p><p>
 உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக ஈரானுக்குத் தெற்கே உள்ள நீர்வழியான குறித்த நீரிணை வழியாகச் செல்கிறது, ஆனால் பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து அந்த நாடு இந்த ஓட்டத்தைத் திறம்படத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779"></link>
            <id>https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779</id>
            <summary type="text">புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.

இந்த காலப்பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.</p><p>

இந்த காலப்பகுதியில் இருதரப்பு மோதல்களால் இடம்பெற்ற படுகொலைகள், மற்றும் கிரானில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவங்களை அந்த காலத்து பத்திரிகைகள் அடிகோடிட்டிருந்தன.
</p><p>
மட்டக்களப்பில் புளொட் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்புக்களிடையே மூண்ட தாக்குதல்களின் திட்டமிடல்கள், இதில் புளொட் அமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் என்பவற்றையும் பத்திரிகைகள் மையப்படுத்தியிருந்தன.</p><p>
இவ்வாறு மட்டக்களப்பில் இந்த மோதல் எங்கிருந்து ஆரம்பித்தது, அதில் கொல்லப்பட்ட முக்கிய தளபதிகள் யார், மேலும் கருணா எந்த இடத்தில் தனது திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள்...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:46:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களின் திறமைகளுக்கு உலகளாவிய ரீதியில் விரிந்த வாய்ப்புகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aravind-urges-eelam-tamils-to-go-global-1787573181"></link>
            <id>https://ibctamil.com/article/aravind-urges-eelam-tamils-to-go-global-1787573181</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உலகலாவிய ரீதியில் காணப்படுவதாக தென்னிந்திய திரை தொழிநுட்ப பிரபலம் அரவிந்த் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உலகலாவிய ரீதியில் காணப்படுவதாக தென்னிந்திய திரை தொழிநுட்ப பிரபலம் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திய சினிமா துறையில் திறமையை காட்ட இங்கிருக்கும் இளைஞர்கள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர்.</p><p>

இருப்பினும் இதனை தாண்டி புலம்பெயர் நாடுகளில் அவர்களது திறைமையை காட்டுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது.
</p><p>
இதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும் அவர்களது திறமை மேம்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தொழிநுட்ப வளர்ச்சி, புலம்பெயர் மக்களின் வளர்ச்சி மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது அகளங்கம் நிகழ்ச்சி....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AW0HoiBGzaQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள்களை செலுத்தி மக்களை அச்சுறுத்துவோருக்கு வடக்கு ஆளுநரின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-to-motorcyclists-1787573035"></link>
            <id>https://ibctamil.com/article/warning-to-motorcyclists-1787573035</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மற்றும் அபுதிதாக வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.</p><p> 

இதன் பொது கருத்து வெளியிட்ட அமைச்சர், 

'வடக்கு மாகாணத்தில் காவல்துறையின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம்
காணப்படுகிறது.</p><p></p><h2>போதைப்பொருட்களின் பரவல்</h2><p>

குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab6b0c3-a927-4b19-80ce-1f62f9f44a3f/26-6a8c332d921a3.webp' /></p><p>
</p><p>
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல்
மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு,
பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில்
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது" என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T12:04:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார கொள்வனவிற்கான புதிய கட்டண முறைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-procurement-price-electricity-released-1787569980"></link>
            <id>https://ibctamil.com/article/new-procurement-price-electricity-released-1787569980</id>
            <summary type="text">புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இதற்கமைய, ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, புதிய மின்சார கொள்வனவு கட்டண முறை நாளை (25) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மின் உற்பத்தியின் தன்மையை கருத்திற்கொண்டு, புதிய கட்டண முறை மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய கொள்முதல் விலைகள்</h2><p>அதன்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்களுக்கான கட்டண முறை, மின் நுகர்வோருக்கான கட்டண முறை, மின்கல சேமிப்பு அமைப்புடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்களுக்கான கட்டண முறை போன்றவை இந்த வகைப்படுத்தலில் அடங்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e211ccf-3407-4ac6-b425-b4219004f3b1/26-6a8c2e2a4bc07.webp' /></p><p>இந்தக் கட்டண முறைக்கான நடைமுறைகள் மற்றும் மின்சார கொள்வனவு விலைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-vehicle-imports-ban-lift-govt-revenue-increase-1787568978"></link>
            <id>https://ibctamil.com/article/sl-vehicle-imports-ban-lift-govt-revenue-increase-1787568978</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக&amp;nbsp;நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.பல ஆண்டுகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக&nbsp;நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>பல ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கான வாகன இறக்குமதி தடையை நீக்கியதன் மூலம் இந்த வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>நிதி அமைச்ச வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.</p><p></p><h2>அரசாங்கத்தின் நேரடி வருமானம்</h2><p>
</p><p>
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f575d1d-1b64-40db-b889-1471891e77be/26-6a8c281875003.webp' /></p><p> </p><p>இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><p>

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p> 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் பயன்படுத்த தடை: பிரதமரின் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/social-media-ban-for-under-16s-in-new-zealand-1787566637"></link>
            <id>https://ibctamil.com/article/social-media-ban-for-under-16s-in-new-zealand-1787566637</id>
            <summary type="text">16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த விடயத்தை அவர் இன்று (23.08.2026) வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>மேலும் இச்சட்டத்தை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரையிலான அபராதம் விதிக்கவும் அச் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;சமூக ஊடகத் தடை</h2><p>
</p><p>இந்த புதிய சட்டத்தின்படி, சமூக ஊடநிறுவனங்கள் பயனர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முக அடையாள தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4bc8181-4341-411e-bd5c-a7d68961f787/26-6a8c23eddc8f3.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. </p><p>&nbsp;லக்சனின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி இந்த முன்மொழிவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிராஜா திரைப்படங்களை நினைவூட்டும் போராட்டம் திரைப்பட இசையும் பாடல்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-mv-reminiscent-bharathiraja-film-music-1787569151"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-mv-reminiscent-bharathiraja-film-music-1787569151</id>
            <summary type="text">‘போராட்டம்’&amp;nbsp; திரைப்படத்தின் நாயகன் - நாயகி சந்திக்கும் காட்சிகளில் இடம்பெறும் இசையமைப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்களை நினைவூட்டும் வகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘போராட்டம்’&nbsp; திரைப்படத்தின் நாயகன் - நாயகி சந்திக்கும் காட்சிகளில் இடம்பெறும் இசையமைப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, நாயகன் மற்றும் நாயகி சந்திக்கும் தருணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இசை, காட்சிகளின் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்துவதாகவும், பாரதிராஜா திரைப்படங்களில் காணப்படும் இயல்பான காதல் உணர்வையும் மென்மையான இசை அனுபவத்தையும் நினைவூட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

முக்கிய காட்சிகளுக்கு இசையமைப்பாளர் வழங்கியுள்ள முக்கியத்துவம் திரைப்படத்தின் உணர்வோட்டத்திற்கு வலுசேர்ப்பதாகவும், காட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையில் இசை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இவ்வாறான இசையமைப்பு காட்சிகளை வெறுமனே நகர்த்திச் செல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் பாராட்டியுள்ளனர்,

இலங்கைத் தமிழ் சினிமாவில் உருவாகிவரும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கு ‘போராட்டம்’ திரைப்படம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறக்கூடியதாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குறிப்பாக, காட்சிகளில் இசைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் திரைப்படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக தமக்குத் தோன்றியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5244cbf5-fec2-48c0-aa5e-6209522b2364/26-6a8c242d1c32a.webp' /></p><p>கருத்து -&nbsp; ம.வேல்</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T11:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : கைகொடுக்குமாறு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-disappeared-conference-jaffna-1787566377"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-disappeared-conference-jaffna-1787566377</id>
            <summary type="text">சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என மன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
மன்னாரில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.</p><p></p><h2>சர்வதேச மாநாடு&nbsp;</h2><p>
</p><p>
இந்த தினத்தன்று ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள்
துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ
அரசுகள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு
இருக்கிறோம்.</p><p>
காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது
அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a40c21-6d53-4151-bd00-6d56a4ee4483/26-6a8c1f1ca4e8f.webp' /></p><p>
</p><p>
ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து
பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த சர்வதேச
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த
தீர்மானித்திருக்கிறோம்.</p><p>

எதிர்வரும் 30ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை
செல்வா கலையரங்கத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.</p><p>

உறவுகளைத் தேடித் திரிந்த தாய்மார்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம்
மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு
இருக்கிறோம். காணாமல் போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம்
வெளியிடுவதற்கு இருக்கிறோம்.</p><p></p><h2>17 ஆயிரம் உறவுகள் காணாமல் போயுள்ளனர்&nbsp;&nbsp;</h2><p>

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு
மகஜர் கையளித்தோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார்
யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள்
தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம்
வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ff9755-f903-4bf3-ab87-32081a004e43/26-6a8c1f1d862c1.webp' /></p><p>
</p><p>காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17 ஆயிரம்
உறவுகள் 8 மாவட்டத்திலும் காணாமல் போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும்
மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு
அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
</p><p>ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து
வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த
மாநாட்டை செய்கிறோம்.
</p><p>
இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த
அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை&nbsp; நடத்துகின்றோம் ”என அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் போலி உறுதிமொழிகள்! சைக்கிள் தரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/t-suresh-national-organizer-tamil-national-people-1787557119"></link>
            <id>https://ibctamil.com/article/t-suresh-national-organizer-tamil-national-people-1787557119</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு, துறைநீலாவணை பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்றது.</p><p>இதன்போது உரையாற்றிய த.சுரேஸ், கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் பிரச்சினைகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;76 வருடங்களாக இன அடக்குமுறை</h2><p>&nbsp;மேலும் கருத்து தெரிவித்த அவர் பட்டிருப்பு தொகுதி என்றால் அது தமிழ் தொகுதி இங்கு தேசிய கட்சிகளே மாற்றுக்
கட்சிகளே ஆசனங்களை பெறமுடியாது துறைநீலாவணை, கல்லாறு , பட்டிருப்பு தமிழ்
தேசிய உணர்வுடன் தமிழ் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம் என்ற மக்கள் வாழும்
பகுதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf34917b-432b-48fd-981c-08e6d1b79707/26-6a8c17a969e4b.webp' /></p><p>

அதனடிப்படையில் இந்த சந்தர்ப்பங்களை பாவித்து அந்த வாக்குகளை சூறையாடி
தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன் படுத்தப்படுகின்றது. தேர்தல்
காலங்களில் இங்கு வந்து போரடினோம் மாவீரர்களை இழந்திருக்கிறோம். </p><p>என கூறி
எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம், பிரதேச
சபை பிரதிநிதித்துவத்தை பெற்று அதிகாரங்கள் கைக்கு கிடைத்த பின்னர் அந்த
மக்களின் குறைகளை கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><p>
இந்த மண்ணில் 76 வருடங்களாக ஒரு மிக பெரிய இன அடக்குமுறைக்குள் இருக்கின்றோம்
சிங்கள பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்குகிறது ஒவ்வொரு தலைவர்களும் இந்த
நாட்டை ஆட்சி செய்ய வருகின்றனர் இவர்கள் ஒவ்வொருவரும் உரிமை தருகின்றோம்
பூனையை யானை ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டு மாறாக தமிழர்களுடைய இருப்பை
இல்லாமல் செய்வதற்கான புதிய புதிய சட்டங்களை இயற்றி தமிழர்களை அடக்கி ஒடுக்கி
வந்தது தான் வரலாறு.
</p><p>
இதனைத்தான் இந்த புதிய அரசும் செய்கிறது உலகத்துக்கு சுபீட்சமாக இருப்பதாகக்
காட்டிக் கொண்டு தமிழர்களை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் மிக கட்சிதமாக எம்
இனத்தவர்களையே வாங்கி வெற்றி கண்டுள்ள தோற்றப்பாடு தெரிகிறது

உண்மையில் புது புது சட்டங்கள் என்பது எமது மக்கள் ஜனநாயக ரீதியாக
கருத்துக்களை பேச முடியாத அளவிற்கு ஊடகத்துறை மற்றும் மக்களின் கருத்துக்களை
வெளிப்படுத்தும் நிறுவனங்களை அடக்குவதற்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது
இதன் நோக்கம் இது சிங்கள பௌத்த நாடு என்ற சிங்கள பேரினவாதத்தின் அடிப்படை
சிந்தனையாக இருக்கின்றது.
</p><p>
தமிழர்கள் ஒரு தேசிய இனம் இந்த இனத்தின் தனித்துவம் பேனக்கூடாது என்பதற்காக
புதுபுது திணைக்களங்களை உருவாக்கி தமிழர்களின் காணிகளை அபகரித்து வருகின்றனர்.
</p><p>தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் புத்தவிகாரை என்றால் தமிழர்களை
இனழிப்பு செய்து பௌத்த நாடாக்குவது திட்டம் இதன் உள்நோக்கம் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:23:30+00:00</updated>
        </entry>
    </feed>
