<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T11:24:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களால் விலை உயர்வை சந்திக்கும் கச்சா எண்ணெய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-prices-rise-due-to-iran-us-attacks-1788260487"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-prices-rise-due-to-iran-us-attacks-1788260487</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு 1.18 டொலர் (1.3 சதவீதம்) அதிகரித்து 91.67 டொலராக பதிவாகியுள்ளது.
</p><p>
அதே நேரத்தில் அமெரிக்க டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.27 டொலர் (1.48 சதவீதம்) அதிகரித்து 87.03 91.67 பதிவாகியுள்ளது.
</p><p></p><h2>பதிலடி ஏவுகணைப் தாக்குதல்</h2><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதிலடி ஏவுகணை தாக்குதல் நகர்வுகள் இது ஒரு போர் நிறுத்த நிலையை கடந்து செல்வதாக ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17d07bb-aba1-4057-a45c-02930a2db1e4/26-6a96b5cbc13da.webp' /></p><p>

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த, கட்டார் மற்றும் ஓமான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
</p><p>
எண்ணெய் விலையால் ஏற்படும் பணவீக்கம் குறித்து வர்த்தகர்கள் கவலை கொண்டதால், உலகளாவிய கடன் பத்திர விற்பனை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜப்பானின் முக்கிய 10 ஆண்டு காலப் பத்திர வருவாய், 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக செவ்வாயன்று 3 சதவீத தடையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடி உலகளவில் விலை அழுத்தங்களைத் தூண்டி வருவதால் , மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், டோக்கியோ மற்றும் சிட்னியிலிருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை பத்திர வருவாய்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை வழங்கிய துல்லிய தகவல் : வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dehibales-brother-kalu-malli-arrested-in-dubai-1788260313"></link>
            <id>https://ibctamil.com/article/dehibales-brother-kalu-malli-arrested-in-dubai-1788260313</id>
            <summary type="text">இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேக நபர், “தெஹிபாலே” என அறியப்படும் ஷெஹான் சட்சராவின் சகோதரர் ஆவார். இவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஆவார்.</p><h2>அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்</h2><p>&nbsp; அதிகாரிகளின் முயற்சியை அடுத்து, சந்தேக நபர் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d2a731-fdf2-4101-9b43-d158ce832f66/26-6a96b4a5eff41.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வறட்சியின் பிடியில் விவசாயிகள்...! கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drought-dries-up-puliuuthu-tank-in-trincomalee-1788260740"></link>
            <id>https://ibctamil.com/article/drought-dries-up-puliuuthu-tank-in-trincomalee-1788260740</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும்
தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்
புளிஊத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும்
தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குளம் தற்போது வறண்டு
வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன் குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h2>கடுமையான நீர்ப்பற்றாக்குறை</h2><p> குளம்
முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு
நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478921cb-b0fa-44a8-ada4-7928539c946d/26-6a96b18609cd9.webp' /></p><p>

எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை
ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p>அத்தோடு&nbsp;எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர்
பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன
மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர்
எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம்
இடம் பெற்றன.</p><p>நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள்
வற்றியுள்ளதுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>
</p><p></p><h2>குடிநீர் பற்றாக்குறை</h2><p>இதனையடுத்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அவசர
தேவையாக குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb2f9fa-4e58-4919-963e-fa636b867358/26-6a96b186e236a.webp' /></p><p>

குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைகளுக்குக் கூட நீரைப்
பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை ஓரளவு
நிவாரணமாக அமைந்துள்ளது.
</p><p>
தொடர்ந்து வறட்சி நிலை நீடிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
குடிநீர் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மணற்காடு சவுக்கங்காட்டில் மீண்டும் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-again-in-the-manrkadu-forest-1788259802"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-again-in-the-manrkadu-forest-1788259802</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு
வானூர்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை</h2><p>குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி
உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029c2e1d-4bb8-4ade-a912-7c9a72d806cd/26-6a96b1b129359.webp' /></p><p>அத்துடன் யாழ் மாவட்டத்தின் அனர்த்த
முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திற்கு சமூகமளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல்...! பொதுச்சுகாதார பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pho-remanded-over-school-abuse-claims-in-kalmunai-1788257284"></link>
            <id>https://ibctamil.com/article/pho-remanded-over-school-abuse-claims-in-kalmunai-1788257284</id>
            <summary type="text">கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்&amp;nbsp;பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் 51 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்&nbsp;பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் உள்ள மாணவகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகாரி வாக்குமூலம்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31-08-2026) கல்முனைத் தலைமையக காவல் நிலையத்திற்கு வருகை தந்தபோதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed2b7d8-600d-4712-9939-37b9e64bae88/26-6a96abcfbb120.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.
சாஜித் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>இதன்போது இரு தரப்பு
வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும்
செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
கட்டளையிட்டார்.</p><p>
</p><p></p><h2>சுகாதாரப் பரிசோதனை</h2><p>குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான
வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. </p><p>இதன்போது பரிசோதனையில்
ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை
கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c0247b-c200-4582-9c95-26a7642db8a8/26-6a96abcf10b2e.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக்
கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் காவல் நிலையத்தில்
ஒப்படைத்திருந்தனர். </p><p>அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த கைது நடவடிக்கை
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பகுதியில் ஈரானிய கப்பல்கள் :அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/12-iranian-ships-enter-sri-lankan-waters-1788259128"></link>
            <id>https://ibctamil.com/article/12-iranian-ships-enter-sri-lankan-waters-1788259128</id>
            <summary type="text">அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்காக இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.
</p><p>
அச்சந்திப்பில், கடந்த சில நாட்களில் சுமார் 12 ஈரானியக் கப்பல்கள் நாட்டின் அனுமதியின்றி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.</p><h2>எனக்கு எதுவும் தெரியாது&nbsp;</h2><p>&nbsp; நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் எல்லையான தரைப்பகுதியிலிருந்து 12 கடல் மைல் எல்லையைக் கடந்து, கப்பல்கள் 11.5 கடல் மைல் வரை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d14fa25-161d-4cd2-84bf-7733f11062e3/26-6a96ad942d20c.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இவ்விஷயம் குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இவ்விஷயம் குறித்து தமக்குத் தெரியாது என்றும், இது குறித்து வெளியுறவு அமைச்சு விசாரிக்கும் என்றும் கூறினார்.
</p><p>
மத்திய கிழக்கில் போரின் தீவிரம் அதிகமாக இருந்தபோதும், உயிர்களைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்திற்காக இரு தரப்பினரும் உதவிகரமான முறையில் செயல்பட்டனர் என்றும், அத்தகைய சூழ்நிலையில் போரில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மீண்டும் குற்றமிழைப்போருக்கான சட்டத்தில் திருத்தம் : கிடைத்தது அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amendment-to-the-law-against-repeat-offenders-1788257968"></link>
            <id>https://ibctamil.com/article/amendment-to-the-law-against-repeat-offenders-1788257968</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>&nbsp;சட்ட மாஅதிபரின் அங்கீகாரம்&nbsp;</h2><p>

அதன்படி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்ட மாஅதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f19767-f9e8-4b90-9be5-57e142b00929/26-6a96a956592b4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைச் சீர்திருத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-results-of-the-2005-scholarship-exam-1788257743"></link>
            <id>https://ibctamil.com/article/the-results-of-the-2005-scholarship-exam-1788257743</id>
            <summary type="text">கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டது போல, அனைத்து மதிப்பெண் பட்டியல்களும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளன, அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை மீண்டும் சரிபார்க்கும் இறுதி கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2>பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு</h2><p>&nbsp; நாடு முழுவதும் 2,723 நிலையங்களை உள்ளடக்கி கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa157e4-29bc-4513-9dc6-71689e35b440/26-6a96a7eeee844.webp' /></p><p> </p><p>பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யும் என்று பரீட்சை நடைபெற்ற அதே நாளில் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு செயல்முறை கடந்த 20ஆம் திகதி நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 48 நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமானது. அங்கு 380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ் 6,000க்கும் மேற்பட்ட பரீட்சகர்கள் விடைத்தாள்களைச் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/appointed-the-new-commissioner-general-of-dmt-1788256386"></link>
            <id>https://ibctamil.com/article/appointed-the-new-commissioner-general-of-dmt-1788256386</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) காலை கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p></p><h2>கடமையேற்றல் நிகழ்வு</h2><p>
</p><p>
 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த கடமையேற்றல் நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab3a725-855e-4d74-816e-0c7cadda2276/26-6a96a2359b1a6.webp' /></p><p>

 

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255879"></link>
            <id>https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255879</id>
            <summary type="text">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவருக்கும் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு, இன்று&nbsp;(01.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>15திகதி வரை விளக்கமறியல்</h2><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், பதில் நீதவான் தலைமையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் இணையவழி காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc349953-6fba-48c9-a8d2-eb1ac6296f88/26-6a96a6fb7c520.webp' /></p><p>இதன்படி முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 15திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்துள்ளார்.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இடம்பெற்று வருகிறது.</p><p>இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜுன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T09:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-glacier-disaster-death-toll-crosses-1-000-1788255357"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-glacier-disaster-death-toll-crosses-1-000-1788255357</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. </p><p>துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>இந்தநிலையில் 987 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>வெளிநாட்டவர்கள்&nbsp;</h2><p>அத்தோடு 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>இதனுடன் சீனா வெளியிட்டுள்ள தரவுகளின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83467c71-4fbe-4521-9daf-5c11aa207d2a/26-6a96a114b9495.webp' /></p><p>இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 4,460 இற்கும் அதிகமானோர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.
</p><p>வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.</p><p>

அவர்களுள் 500 இற்கும் மேற்பட்டோர் சேறும் சகதியும் நிறைந்த இருண்ட சுரங்கங்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.</p><p> </p><p></p><h2>மீட்புக் குழுக்கள்</h2><p>அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கி மீட்டெடுக்க இராணுவ மீட்புக் குழுக்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.</p><p>இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட பனிப்பாறை முறிவே இப் பேரழிவிற்குக் காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e29ce80-7030-4b1c-80dd-fef1614f05b6/26-6a96a11579644.webp' /></p><p>

இந்த வீழ்ச்சி 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு நிகரான அதிர்வை ஏற்படுத்தியதுடன், பனி, பாறைகள் மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு த்ரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளை அடியோடு அழித்தது.</p><p>இதுவரை 11,814 க்கும் அதிகமானோர் ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
உடல்களைப் பாதுகாப்பதற்காக 1,000 இற்கும் மேற்பட்ட ஃப்ரீஸர் பெட்டிகள் (Freezer units) மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனை உபகரணங்களை நேபாள அரசு சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788246862"></link>
            <id>https://ibctamil.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788246862</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அங...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, அங்கு செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p><p> சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி ஹோட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உலகப் பாரம்பரிய களம்&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, இணையவழி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்யும் முறையின் மூலம், எந்தவொரு நேரத்திலும் பூங்காவிற்குள் இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் துல்லியமாகக் ஒழுங்குபடுத்த முடியும்.</p><p>
</p><p>
அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உயர்தர சுற்றாடல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கவும் புதிய கட்டண மூலோபாயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c6c2e1-ac5c-48e3-a39a-25a28289fb32/26-6a969b008e2d3.webp' /></p><p>
</p><p>

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி, தனது தனித்துவமான உயிர்பல்வகைமை பெருக்கத்திற்கும் நுட்பமான மலைக்காட்டுச் சூழலுக்கும் பெயர் பெற்றதாகும்.</p><p>
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டன் சமவெளி பூங்கா காப்பாளர் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து நிலையான சூழல் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - சீனா இடையே குடிவரவு கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு: அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/immigration-control-cooperation-srilanka-china-1788253004"></link>
            <id>https://ibctamil.com/article/immigration-control-cooperation-srilanka-china-1788253004</id>
            <summary type="text">இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.</p><p>வாராந்த அமைச்சரவை முடிவுகள்&nbsp; குறித்த அறிக்கையில் இந்த விடயம்&nbsp; வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகள்</h2><p>இந்த திட்டத்தின் அடிப்படை&nbsp; நோக்கங்களாக, இரு நாடுகளின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர விஜயங்களை எளிதாக்குதல்,&nbsp;எல்லை பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான அதிகாரப்பூர்வ மற்றும் உளவுத்துறை தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளுதல்,&nbsp;வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு குடிமக்களின் விசா, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகளை மேலும் விரைவுபடுத்தி சுமுகமாக்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659ce5c0-765e-4e21-ae54-e9af9e8f7679/26-6a969b40b5ee3.webp' /></p><p>மேலும்,&nbsp;&nbsp;சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் ஆள் கடத்தல், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்,&nbsp;குடிவரவுத் துறை அதிகாரிகளின் அறிவு, தொழில்முறை நுணுக்கங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக கூட்டுப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு ஆவணத்திற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை தங்களது சட்டபூர்வ அனுமதியை (Clearance) ஏற்கனவே வழங்கியுள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த விசேட முன்மொழிவுக்கு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 31) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T09:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் கோவில்களில் தொலைபேசிகளுக்கு தடை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tn-bans-mobile-phones-in-52-major-temples-1788250881"></link>
            <id>https://ibctamil.com/article/tn-bans-mobile-phones-in-52-major-temples-1788250881</id>
            <summary type="text">தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><p>
இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப்
பாதுகாக்கவும், ரீல்ஸ் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதால் பிற
பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இந்ந நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கோயில்களின் நுழைவு</h2><p>இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்
பெட்டகங்களில் ரூபாய் ஐந்து கட்டணம் செலுத்தி தொலைபேசிகளை பாதுகாப்பாக
ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4924df-7cfb-44ad-9a93-76d58b05bc09/26-6a9695e63b32a.webp' /></p><p>
அத்துடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தரும் போது
முன்னறிவிப்பு இன்றி காணொளி புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தடை விதிக்கப்பட்டுள்ள சில முக்கிய கோயில்களில் சென்னை மற்றும் அதன்
சுற்றுவட்டாரத்தில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு
தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,
குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன் ஆகிய கோயில்களும்,

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்,
வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருத்தணி முருகன், திருவள்ளூர் வீரராகவர்
போன்ற கோயில்களும்,

மேலும் தென் மத்திய மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன், பழனி முருகன்,
திருப்பரங்குன்றம் முருகன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சமயபுரம்
மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் , ராமேசுவரம் ராமநாதசாமி,
நெல்லையப்பர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கோவை கோணியம்மன், சேலம் கோட்டை
மாரியம்மன் உள்ளிட்ட 52 கோயில்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nio-sri-lanka-must-prepare-climate-crisis-un-1788231584"></link>
            <id>https://ibctamil.com/article/el-nio-sri-lanka-must-prepare-climate-crisis-un-1788231584</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக இலங்கைக்கு இந்த நிலை ஏற்படலாம் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.</p><p>எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெள்ளப்பெருக்கு</h2><p>இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3906e41-6871-4ee0-bad7-2c252c66c032/26-6a9691bec58e5.webp' /></p><p>
 

அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>பொருளாதார அழுத்தம்&nbsp;</h2><p>
 

இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e094b771-b4db-493c-a7c9-f707094e77b5/26-6a9691be1970f.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

 

இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
 

எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/little-boy-heartbreaking-visuals-from-nepal-flood-1788239107"></link>
            <id>https://ibctamil.com/article/little-boy-heartbreaking-visuals-from-nepal-flood-1788239107</id>
            <summary type="text">வெள்ளத்தின் கோர தாண்டவதால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளிவரும் காணொளிகள் பல மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.அவற்றில் ஒன்றாக சிறுவன் ஒருவன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளத்தின் கோர தாண்டவதால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளிவரும் காணொளிகள் பல மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>அவற்றில் ஒன்றாக சிறுவன் ஒருவன் தன் தங்கையைத் தன் கைகளில் ஏந்தியபடி தன் பெற்றோரைத் தேடி அந்தப் பேரழிவின் ஊடாக நடந்து செல்கிற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.</p><p>நேபாளம் தனது மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றைச் சந்தித்து வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>இடிபாடுகளுக்குள் தேடி வரும் குழந்தை</h2><p>
மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடி வரும் வேளையில், குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartbreaking Visual from Nepal 💔<br><br>Little boy caring his younger sister 🥹 and finding their parents 😭.<br><br>Look at the pain and scratches on their faces. 💔💔💔 <a href="https://t.co/oREDLzii6g">pic.twitter.com/oREDLzii6g</a></p>&mdash; Jeet (@JeetN25) <a href="https://x.com/JeetN25/status/2094010755343589623?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்த இந்த இரண்டு குழந்தைகளும், காயங்களுடன் தங்களது பெற்றோரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
குழந்தைகளின் முகத்தில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட கீறல்களும் காயங்களும், பயமும் அப்பட்டமாகத் தெரிகின்றன.</p><p>இக்காட்சி ஜப்பானிய அனிமேஷன் படமான 'கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ்' (Grave of the Fireflies) கதையை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் ஆலய சூழலில் ஏலம் விடப்பட்ட கடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shops-auctioned-in-nallur-temple-festival-1788250458"></link>
            <id>https://ibctamil.com/article/shops-auctioned-in-nallur-temple-festival-1788250458</id>
            <summary type="text">நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால்
தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை&amp;nbsp; நடைபெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால்
தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை&nbsp; நடைபெற்றது.
</p><p>
மாநகர சபை கணக்காளர் செ.காண்டீபன் தலமையிலான மாநகர சபையின் ஏல குழுவினர் யாழ்.
மாநகர சபை பிரதி முதல்வரின் பிரசன்னத்துடன் ஏலம் விடப்பட்டன. </p><p>அதன்போது பலர்
ஆர்வத்துடன் பங்கேற்று தமக்கான கடைகளை பெற்றுக்கொண்டனர்.
</p><p>
திருவிழாவிற்கான தற்காலிக கடைகள் திருவிழாவின் ஆரம்பத்தில் ஏலம் விடப்பட்ட
நிலையில், அதில் பெற்றுக்கொள்ளப்படாத கடைகள் நேரில் இன்று ஏலம் விடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/927720bc-a3f3-43a3-a29b-52753dee8124/26-6a968cb34bd0e.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் வீதியோடு பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-motorbikes-seized-in-sammanthurai-traffic-drive-1788243645"></link>
            <id>https://ibctamil.com/article/10-motorbikes-seized-in-sammanthurai-traffic-drive-1788243645</id>
            <summary type="text">சம்மாந்துறையில் காவல்துறையினரின்&amp;nbsp; திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறையில் காவல்துறையினரின்&nbsp; திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை
மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல்
மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் காவல்துறையினரால் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இதன்போதே குறித்த&nbsp;மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கைகள்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்மாந்துறை காவல் நிலையப் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினரால் நேற்று (01-09-2026) இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>

அம்பாறை மாவட்ட பிரதிப் காவல்துறை அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின்
மேற்பார்வையில், சிரேஷ்ட காவல்துறை அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின்
ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e9ccf6-bdcc-492b-a098-bac8985e7e93/26-6a96888a64292.webp' /></p><p>மேலும் கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி
வழிகாட்டலில் காவல்துறையினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p>
</p><p>இதன்போது, பிரதான வீதிகளில் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச்
செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள்
அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதுடன் 10 மோட்டார் சைக்கிள்களும் காவல் நிலையத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர்
சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி
வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள்
கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-legal-battle-intensifies-around-ranil-1788244504"></link>
            <id>https://ibctamil.com/article/political-legal-battle-intensifies-around-ranil-1788244504</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ளன.</p><p> இந்த சட்டப் போராட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் மற்றும் சட்டரீதியான நிலைப்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.</p><p>

22ஆவது திருத்தம் நீதித்துறையின் ஓய்வுபெறும் வயது மற்றும் உயர் நீதிமன்றத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத் தரப்புகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஐந்து தசாப்த அரசியல் பயணம்</h2><p>
</p><p>
இந்த விவகாரம் வெறும் அரசியலமைப்புச் சட்டத்தின் தொழில்நுட்பப் பிரச்சினையாக மட்டுமன்றி, இலங்கையின் அதிகாரப் பிரிவு, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் எதிர்காலம் தொடர்பான முக்கியமான சோதனையாகவும் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d88978-8d64-4d1d-9b7e-0bf38f31b585/26-6a967a49b49ba.webp' /></p><p>ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களை நெருங்குகிறது. 1970களின் இறுதியில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், பல்வேறு அரசியல் நெருக்கடிகள், தேர்தல் தோல்விகள், கூட்டணி அரசுகள் மற்றும் அதிகார மாற்றங்களைக் கடந்து சென்றுள்ளது.
</p><p>
1988–1989 காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விக்ரமசிங்கவின் பங்கு குறித்து நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>குறிப்பாக, பத்தரமுல்லை பிரதேசத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படும் ‘பட்டலந்த’ தடுப்பு மற்றும் விசாரணை மையம் தொடர்பான விவகாரம் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கும் உட்பட்டது.
</p><p>
இந்தக் காலப்பகுதியை ஆதரவாளர்கள் அரசை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் காலமாகக் கருதினாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இதனை இலங்கையின் இருண்ட அரசியல் அத்தியாயங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.</p><p>மேலும், 2001ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற விக்ரமசிங்க, விடுதலைப் புலிகள் அமைப்புடனான சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கினார். 2002ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
</p><p>
அந்த முயற்சி நாட்டின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தவும் சர்வதேச ஆதரவைப் பெறவும் உதவியதாக அவரது ஆதரவாளர்கள் வாதிட்டனர்.</p><p> அதேவேளை, தேசியவாத அரசியல் தரப்புகள் அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தன. அது விடுதலைப் புலிகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான இடத்தை வழங்கியதாக அவர்கள் விமர்சித்தனர்.</p><p></p><h2>நல்லாட்சியின் பரிசோதனை</h2><p>2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியுடன் விக்ரமசிங்க மீண்டும் அதிகாரத்தின் மையத்துக்கு வந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த இந்தக் காலகட்டம் ‘நல்லாட்சி’ என அடையாளப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdea159c-3824-4ff7-b3a8-3fe3c1be3daf/26-6a967a4aa18fa.webp' /></p><p> </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தம், நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவை முக்கிய இலக்குகளாக முன்வைக்கப்பட்டன.
</p><p>
ஆனால் இந்த ஆட்சி காலம் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளாலும் அரசியல் மோதல்களாலும் பாதிக்கப்பட்டது.</p><p>

2018ஆம் ஆண்டு ஜனாதிபதி சிறிசேன, விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை அந்தப் பதவிக்கு நியமித்தபோது அரசியலமைப்பு நெருக்கடி உருவானது.</p><p> பின்னர் நீதித்துறை தலையீட்டின் மூலம் அந்த நடவடிக்கைகள் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டன. விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்றார்.</p><p>2022ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடி மற்றும் ‘அரகலய’ போராட்டங்களின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>

அப்போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்தார். இதனால், ஒரு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நேரடியாக மக்களின் வாக்கைப் பெறாமல் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து அரசியல் விவாதம் எழுந்தது.
</p><p>
விக்ரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பொருளாதாரத்தை நிலைப்படுத்தியமை அவரது ஆதரவாளர்களால் முக்கிய சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p>எனினும், போராட்ட இயக்கத்தின் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகி, அப்போதைய ஆளும் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டதாக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>புதிய சட்டப் போராட்டம்&nbsp;</h2><p>2024க்குப் பின்னர் விக்ரமசிங்க அரசியலிலிருந்து பின்வாங்கியிருந்தாலும், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான விவாதங்களில் அவரது பெயர் தொடர்ந்து இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41915769-f833-4827-95fb-2ee943f3e80b/26-6a967a4b589bd.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகள் மற்றும் மக்கள் இறையாண்மை தொடர்பான கேள்விகளை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்துள்ளன.
</p><p>
இந்தத் திருத்தம் நீதிபதிகளின் பதவிக்காலம் மற்றும் ஓய்வுபெறும் வயது உள்ளிட்ட விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p><p> இதனால், நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.</p><p>

சில அரசியல் விமர்சகர்கள், இந்தத் திருத்தத்திற்கு எதிரான விக்ரமசிங்கவின் நிலைப்பாடு அரசியலமைப்புக் கொள்கைகளில் மட்டுமே அடிப்படையைக் கொண்டதல்ல என்றும், எதிர்கால சட்ட மற்றும் அரசியல் சூழலில் தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியல் கணக்கீடாகவும் இருக்கலாம் என்றும் வாதிடுகின்றனர். </p><p>ஆனால் இத்தகைய கருத்துகள் அரசியல் விளக்கங்களாகவே பார்க்கப்பட வேண்டும். அவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள் எனக் கருத முடியாது.</p><p>இன்றைய சூழலில் முக்கியமான கேள்வி ஒன்றே: அரசியலமைப்பு தொடர்பான இந்தப் போராட்டத்தில் இறுதி தீர்மானம் அரசியல் சக்திகளின் கைகளிலா அல்லது நீதித்துறையின் சுயாதீனமான பரிசீலனையிலா இருக்கும்?
</p><p>
22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை, நீதித்துறை அரசியலமைப்பின் பாதுகாவலராக எந்த அளவுக்கு சுயாதீனமாக செயல்படுகிறது என்பதற்கான முக்கியமான பரிசோதனையாக அமையக்கூடும்.
</p><p>
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை பலமுறை தோல்விக்குப் பின்னரும் அவர் மீண்டும் அதிகாரத்தின் மையத்துக்கு திரும்பியதற்காக தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. </p><p>அதே நேரத்தில், அவரது நீண்ட அரசியல் பயணம் பல்வேறு சர்ச்சைகளையும் கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
</p><p>
அவரை ஆதரிப்பவர்கள் அவரை நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய அனுபவமிக்க அரசியல்வாதியாக பார்க்கின்றனர். </p><p>விமர்சகர்கள், அவர் நிறுவனங்களை விட அதிகாரத்தின் தொடர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைச் சுற்றியுள்ள தற்போதைய சட்டப் போராட்டம் ரணில் விக்ரமசிங்கைத் தாண்டிய ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-piyankara-jayaratne-sentenced-to-7-years-1788248611"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-piyankara-jayaratne-sentenced-to-7-years-1788248611</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் குறித்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><h2>குற்றப்பத்திரிகை தாக்கல்&nbsp;</h2><p> </p><p>

 

2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின பேரணியில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணம் செலுத்தியமை தொடர்பாக, அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான பியங்கர ஜெயரத்னவிற்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef99d72-61ec-4a32-90fd-798ff799991c/26-6a96875c4b30c.webp' /></p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், அதன் தீர்ப்பை அறிவிப்பதற்காக இன்றைய தினம் (01) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h2>பணம் செலுத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
 

அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து குறித்த உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக மாரவில பகுதியில் அமைந்துள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் ஒன்றுக்கு 3,30,000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e21dfda6-f829-45dc-9154-0f32f960460c/26-6a96875cf2cb6.webp' />&nbsp;</p><p>
</p><p>
 

இதன்போது, குறித்த பணத்தைச் செலுத்துவதற்காக அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜெயரத்ன, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியைத் தூண்டியுள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு நெருக்கடியை தீர்க்க பாரம்பரிய ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும்! சர்வதேசத்திடம் ஹரிணி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prime-minister-harini-reveals-solution-food-crisis-1788248583"></link>
            <id>https://ibctamil.com/article/prime-minister-harini-reveals-solution-food-crisis-1788248583</id>
            <summary type="text">இன்றைய உணவு நெருக்கடிக்கான தீர்வு, காலத்தைப் பின்னோக்கிச் செல்வதிலும் இல்லை, கடந்த காலப் படிப்பினைகளை மறப்பதிலும் இல்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய உணவு நெருக்கடிக்கான தீர்வு, காலத்தைப் பின்னோக்கிச் செல்வதிலும் இல்லை, கடந்த காலப் படிப்பினைகளை மறப்பதிலும் இல்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>பூட்டானில் நடைபெற்ற 2026 உலகளாவிய விழிப்புணர்வு உணவு அமைப்புகள் உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட உணவு அமைப்புகளைக் கட்டமைப்பதற்காக, நவீன தீர்வுகளைத் தழுவிக்கொண்டே பாரம்பரிய ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>இலங்கையின் வறண்ட மண்டலம்</h2><p>
</p><p>
உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், 

“இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுடன் நெருங்கிய உறவைப் பேணிக்கொண்டே, சமூகங்கள் உணவுப் பாதுகாப்பை அடைய உதவும் உணவு தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகளின் வளமான பாரம்பரியத்தை இலங்கை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bd5e59-20ec-4a14-8bd1-d7e3661a0c90/26-6a96862193b7e.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் பண்டைய வேவா-கம அல்லது குள-கிராம அடுக்கு அமைப்பானது, மனித வரலாற்றில் நீடித்த வள மேலாண்மையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.</p><p>

சுமார் 2,000 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்ட, இலங்கையின் வறண்ட மண்டலம் முழுவதும் பரவியுள்ள ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களின் வலையமைப்பு, தண்ணீரைச் சேமிப்பதற்காக மட்டுமல்லாமல், முழுமையான சூழல் அமைப்புகளையும் சமூகங்களையும் நிலைநிறுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.</p><p>

இயற்கைச் சூழலின் ஆரோக்கியத்தையே மனித வளம் சார்ந்துள்ளது என்ற பரந்த புரிதலைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இந்த அமைப்பு விவசாயம், வீட்டுத் தோட்டங்கள், காடுகள், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கிறது.
</p><p>
இலங்கையின் பண்டைய ஆட்சியாளர்கள் வருங்கால சந்ததியினருக்காக வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர்.</p><p></p><h2>ஆக்கப்பூர்வமான பயன்பாடு</h2><p>
</p><p>
ஒரு துளி நீர் கூட ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாமல் கடலில் கலக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று அறிவித்த, மாமன்னர் பராக்கிரமபாகுவுக்குக் கூறப்படும் புகழ்பெற்ற கொள்கையை நினைவுகூறவேண்டும்.</p><p>

இந்தக் கொள்கையானது நீர்ப்பாசனத்திற்கான அர்ப்பணிப்பை விட மிக அதிகமானவற்றைப் பிரதிபலிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/103bbb0f-24ae-4563-82b7-34a6062e1aa6/26-6a9686224f179.webp' /></p><p>
</p><p>
மாறாக, அது மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு குறித்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது.

நீர் ஒரு பகிரப்பட்ட தேசிய வளமாகக் கருதப்பட்டது.</p><p> உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் பயிரிடப்பட்டன. 

வேளாண்மை, காடுகள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மனிதக் குடியிருப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த ஒரே அமைப்பின் பாகங்களாகச் செயல்பட்டன.
</p><p>
இலங்கையின் பண்டைய குள கிராம நாகரிகம், அதன் மீள்திறன், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவசாய பாரம்பரிய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">புதிய இணைப்பு22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>

 

இன்று (01) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனுக்கள் அழைக்கப்பட்டபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. </p><p>ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்த போதும், சட்டமா அதிபர் சார்பில் முன்னலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின்படி நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என வாதிட்டார்.
</p><p>
 

அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள் விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இன்மையால் 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>இந்தநிலையில் அந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
</p><p>
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IEDdInNGtNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொதுமக்களிடம் காவல்துறை அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-schoolgirls-reported-missing-in-balangoda-1788246936"></link>
            <id>https://ibctamil.com/article/three-schoolgirls-reported-missing-in-balangoda-1788246936</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



பெற்றோரின் தகவலின்படி, குறித்த மாணவிகள் நேற்று (31) மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>


காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d95d21-0bed-49fe-8c85-3d5bf2e6c876/26-6a967df1069b6.webp' /></p><p>



பலாங்கொடை காவல் நிலையம்: 045-2287222



பெற்றோரின் தொலைபேசி இலக்கங்கள்: 076-7070913 / 077-1658788</p><p>



இச்சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:26:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் CCIB இல் விசாரணைக்கு முன்னிலை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்புதெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) ச...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு</u></b></h5><p>தெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 முதலாம் இணைப்பு</u></b></h5><p>மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவரை முன்னிலையாகுமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) அவரை&nbsp;CCIB இல் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடத்தல்காரர்களில் ஒருவர்</h2><p>

இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதாள உலகக் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d7ffe9-8f67-424f-a4b5-74e903ef2b6d/26-6a9656943ca12.webp' /></p><p>இதனடிப்படையில் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவாக்குவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eZRrNo0GL2A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயாகல துப்பாக்கிச்சூடு - தடயங்களை அழிக்க பைக்கிற்குத் தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-the-payagala-koshena-area-1788231324"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-the-payagala-koshena-area-1788231324</id>
            <summary type="text">பயாகலஇ கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயாகலஇ கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.</p><p>மோட்டார் சைக்கிள், இன்று (01) காலை தொடங்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொடங்கொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
 

நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான "பானந்துரே நிலங்க" என்பவரின் மைத்துனரான "டிலா" என அழைக்கப்படுபவர் ஆவார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:56:10+00:00</updated>
        </entry>
    </feed>
