<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T23:27:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899"></link>
            <id>https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றாக மறுத்துள்ளார்.
</p><p>பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், டோமாஹாக்ஸ், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் 'தாட்' (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் தீர்ந்து வருவதாகச் சமீபத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. </p><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும், அமெரிக்க இராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர் தரத்திலான ஆயுதங்கள் அளவற்ற அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விரைவில் ஆயுத விற்பனை</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தற்போது ஆயுத உற்பத்தியைத் தீவிரப்படுத்தி வருவதாகவும், தனது நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207685733693672/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

ஈரானுக்கு எதிரான போர் பதற்றங்கள் மற்றும் இராணுவத் தேவைகள் காரணமாகச் சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் பல மாதங்களாகத் தாமதமாகியிருந்த நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T22:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vance-said-possible-measures-against-iran-1788470211"></link>
            <id>https://ibctamil.com/article/vance-said-possible-measures-against-iran-1788470211</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணைியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தாத வரை, ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த அமெரிக்கா திட்டமிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>போரின் முடிவு</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து ஈரானிடமே கேட்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc87a8e6-e5c7-43ce-afe4-062b3cca89dd/26-6a99e8a1a0eb8.webp' /></p><p><i>Image Credit: BBC</i></p><p>
</p><p>
மேலும், ஈரானியர்கள் நாளுக்கு நாள் தங்களது இராணுவ மற்றும் தற்காப்புத் திறன்களை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போது முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதை அவர்களும் உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
</p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம்</h2><p>
மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரானின் அச்சுறுத்தல்களால் அந்த நீரிணை வழியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த போதிலும், தற்போது அது மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e366f6-d7fb-4a3c-bff8-3b34fabecb8e/26-6a99e8a265791.webp' /></p><p><i>Image Credit:&nbsp;thedailyaus</i></p><p> </p><p>

எனவே, வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் செயல்படுமாறு ஈரானுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T21:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்தியுள்ள பயங்கர தாக்குதல்! குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-attack-on-ukrainian-capital-kiev-1788468042"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-attack-on-ukrainian-capital-kiev-1788468042</id>
            <summary type="text">
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஆறு மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஆறு மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, உயரமான குடியிருப்பு கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக நகரத்தின் இராணுவ நிர்வாகம் முதலில் தெரிவித்த போதிலும், பின்னர் அந்தத் தகவல் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தொடர்ச்சியான தாக்குதல்கள்</h2><p>
</p><p>
நகர மையத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ள அந்த உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் ஒன்பதாவது தளம் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து 15 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f26a36-fede-4626-ac88-2c7d448cf9f0/26-6a99de08e31a8.webp' /></p><p><i>Image Credit: spokesman.com</i></p><p>

இதன்போது, ஜெட் எஞ்சின் மூலம் இயங்கும் ட்ரோன் ஒன்றினால் குறித்த கட்டடிடம் தாக்கப்பட்டதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் கீவ் நகரில், இதற்கு முன்னதாக நடந்த தாக்குதல்களிலும் ஆறு பேர் காயமடைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T20:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kudu-salindu-s-case-files-missing-1788463151"></link>
            <id>https://ibctamil.com/article/kudu-salindu-s-case-files-missing-1788463151</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &quot;குடு சலிந்து&quot; என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது தொடர்பாக ஏழு பெண் அதிகாரிகள் உட்பட பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பானந்துறை பிரிவு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>காணாமல் போன கோப்புகள்</h2><p>

காணாமல் போன கோப்புகளில் ஒன்று பானந்துறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் தூண்டுதலின் பேரில் நடந்ததாகக் கூறப்படும் கொலை வழக்கு தொடர்பானது என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65668b92-be88-42ca-8381-9e4e9654181c/26-6a99ccfcb085c.webp' /></p><p>
</p><p>
மற்றொன்று குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் 28 அன்று மனு மூலமாக நீதிமன்றத்தின் முன் இந்த வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிஐடி அதிகாரிகளால் வழக்கு அறிக்கையைக் கண்டறிய முடியவில்லை.இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே வழக்குக் கோப்புகள் முழுமையாகக் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.</p><h2>சிசிரிவி கமரா ஆய்வு</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 1 அன்று அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, 'பி அறிக்கை' தாக்கல் செய்யப்பட்டு பானந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd70a55-a95f-43e7-af29-91d5b68de42b/26-6a99ccfd66e70.webp' /></p><p>
</p><p>
நகல்களைப் பெறுவதற்காக இந்த ஆவணங்கள் ஓர் அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காப்பகத்தில் வைக்கப்பட்ட போதே காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

 இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிரிவி (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T19:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hearings-on-22nd-amendment-bill-completed-1788460508"></link>
            <id>https://ibctamil.com/article/hearings-on-22nd-amendment-bill-completed-1788460508</id>
            <summary type="text">இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.</p><p> 

இதுகுறித்த எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கடந்த செப்டம்பர் 1 அன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p></p><h2>எழுத்துப்பூர்வ வாதங்கள்</h2><p> </p><p>

அதன்போது, இவ்விவகாரத்தை ஒரு முழு அமர்வின் முன் விசாரிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், அக்க கோரிக்கை எவ்வித காரணமும் குறிப்பிடப்படாமல் நிராகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0aca88-59f4-4a74-82b9-b9a2317236b4/26-6a99c0e5f37fc.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

விசாரணையின் முடிவில், எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிக்க இன்று பிற்பகல் 3.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர், தாம் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்யப் போவதில்லை என மனுக்கள் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.</p><h2>நீதிபதிகள் அமர்வின் தீர்மானம்</h2><p>
</p><p>
அரசாங்க வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து, அதற்கு வாய்மொழி மூலம் பதில் அளிக்க தமக்கு வாய்ப்பு கேட்கப்பட்டும் அது வழங்கப்படவில்லை என்றும், அதனால் அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க இயலாமல் போனதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c8b5da-0afc-4661-a201-2ef1fe3f8fd4/26-6a99c0e6a9c54.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தும் எதிர்த்தும் மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடி குறித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்மானம், உரிய நேரத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இரகசியமாகத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733"></link>
            <id>https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>


 யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட காணொளியில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.</p><h2>&nbsp;அவர் வெளியிட்டுள்ள காணொளி</h2><p>
</p><p>
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=526&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1523240569471077%2F&show_text=false&width=560&t=0" width="560" height="526" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.



நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் </p><p>நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T18:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601"></link>
            <id>https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601</id>
            <summary type="text"> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, கற்பிட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
காவல்துறையினருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான திலினி தில்ருக்ஷி என்ற கர்ப்பிணித் தாய் என தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1e6b91-99b1-4617-853a-d10b9e6c12e3/26-6a99b5a3c4e77.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/entrance-applications-for-grade-six-1788456333"></link>
            <id>https://ibctamil.com/article/entrance-applications-for-grade-six-1788456333</id>
            <summary type="text">

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிவிப்பானது, இன்று(03) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படவேண்டிய திகதிகள் மற்றும் வழிமுறைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>56,000 மாணவர்கள் சித்தி</h2><p>
</p><p>
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0122a10f-2f34-470f-8308-635cd4f8e06d/26-6a99b0984b66a.webp' /></p><p>
</p><p>
அதன்போது, குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a>WHATSAPP CHANNE</a></b><a>L</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T17:38:36+00:00</updated>
        </entry>
    </feed>
