<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-02T11:20:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/japan-donates-seven-buses-to-boost-sri-lanka-1788347504"></link>
            <id>https://ibctamil.com/article/japan-donates-seven-buses-to-boost-sri-lanka-1788347504</id>
            <summary type="text">ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
</p><p>

ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யொகோஹாமா நகர மக்களின் கூட்டு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த புதியபேருந்துகள், இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.</p><h2>உத்தியோகபூர்வமாக கையளிப்பு</h2><p>இந்த பேருந்துகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) கலந்து கொண்டு பேருந்துகளை உத்தியோகபூர்வமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்காவிடம் கையளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e365f6c7-19c2-4994-ac86-525e721b6381/26-6a98058a101e8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994"></link>
            <id>https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994</id>
            <summary type="text">புதிய இணைப்பு2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.&amp;nbsp;முதலாம் இணைப்பு2026 ஆம் ஆண்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1rem;"><u>முதலாம் இணைப்பு</u></b></p><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று (02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை <a href="https://doenets.lk/" target="_blank">doenets.lk</a> என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T11:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earth-observation-satellite-isro-to-launch-sep-4-1788344071"></link>
            <id>https://ibctamil.com/article/earth-observation-satellite-isro-to-launch-sep-4-1788344071</id>
            <summary type="text">இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஏவுதல் இடம்பெறவுள்ளது.
</p><p>
EOS-05 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.</p><p></p><h2>&nbsp;EOS-05 செயற்கைக்கோள்</h2><p>
</p><p>
பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிப்பதற்கும், பேரிடர் மீட்புப் பணிகளை விரைவாகத் திட்டமிடுவதற்கும் உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98c72ab-3546-4548-ba13-2499d54cc5de/26-6a97feaa43e56.webp' /></p><p>மேலும், சுமார் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் புவிப் படங்களை வழங்கும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், முக்கியமான புவியியல் தகவல்களைப் பெறவும் முடியும்.</p><p>
</p><p>
இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட EOS-03 (GISAT-1) செயற்கைக்கோள், GSLV ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையாமல் தோல்வியடைந்தது.
</p><p>
அதன் தொடர்ச்சியாக, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய EOS-05 (GISAT-1A) திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.</p><p>சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் இஸ்ரோ மீண்டும் செயற்கைக்கோள் ஏவுதலை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியாவின் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சாலே தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/courts-swift-order-regarding-suresh-saleh-1788345269"></link>
            <id>https://ibctamil.com/article/courts-swift-order-regarding-suresh-saleh-1788345269</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உடல்நிலை குறித்தும், அவர் தேசிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (02) உத்தரவிட்டார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஒக்ஸ்ஃபோர்ட் பெரேரா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஷம்மி சில்வா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-slc-officials-summoned-by-illegal-assets-unit-1788341989"></link>
            <id>https://ibctamil.com/article/ex-slc-officials-summoned-by-illegal-assets-unit-1788341989</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அதிகாரிகளின் கூற்றுப்படி, விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பான 36 அம்சங்களைக் கொண்ட ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்குமாறு குறித்த இரண்டு முன்னாள் பதவியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>நிர்வாக அமைப்பு</h2><p>நாட்டின் விளையாட்டு நிர்வாக அமைப்பிற்குள் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a207b86b-0486-4778-85e7-f1f4370871cd/26-6a97f855431d9.webp' /></p><p>இந்நிலையில், அவர்கள் பதவி விலகி சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/in-piyankaras-hand-are-two-jumpers-a-tin-plate-1788343237"></link>
            <id>https://ibctamil.com/article/in-piyankaras-hand-are-two-jumpers-a-tin-plate-1788343237</id>
            <summary type="text">2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தை முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தை முதலீடு செய்யுமாறு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியை வற்புறுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல், முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்தச் சிறைத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p><h2>வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர்&nbsp;</h2><p>நேற்று(01) மாலை 5 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரதான வாயிலுக்குள் நுழைந்ததும், கைதிகளுக்கு வழங்கப்படும் இரண்டு ஜம்பர்கள், தகரத் தட்டு, தகரக் கோப்பை மற்றும் கூடை என்பன வழங்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் ஒரு கைதியாகப் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட கைதி இலக்கம் சிறைத்தண்டனைக் காலம் முடியும் வரை பயன்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa74e21-222f-4e2d-ae6e-5e51aedc2780/26-6a97f928e2f3a.webp' /></p><p>&nbsp;சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது ஏற்படும் கடுமையான மன உளைச்சல் காரணமாக சிறைச்சாலையில் சேர்க்கப்படும் மற்ற கைதிகளைப் போலவே பியங்கர ஜயரத்னவுக்கும் மனநல ஆலோசனை சேவை வழங்கப்பட்டதுடன், நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிறைச்சாலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் கிடைக்கும் சலுகைகள் குறித்து அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>சாதாரண கைதியை போலவே நடத்தப்படுவார்</h2><p>சாதாரண கைதியைப் போலவே காலை 6 மணிக்கு வார்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் வார்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் அமைச்சருக்கு வீட்டிலிருந்தோ அல்லது வெளித் தரப்பினரிடமிருந்தோ உணவு பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் மூன்று வேளை உணவை மட்டுமே பெற முடியும். அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் குடும்ப சந்திப்புகளின் போது சுகாதாரப் பொருட்களை மட்டுமே பெறுவதற்கு அனுமதி உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fb9b7a-6071-4435-b784-c3266e05ddc8/26-6a97f92997d48.webp' /></p><p>&nbsp;இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன இன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதுடன், அங்கு அவரது திறன்கள் மற்றும் ஆற்றல்கள் ஆராயப்பட்ட பின்னர், மேசன், தச்சு, அச்சு, பேக்கரி அல்லது சமையல் போன்ற சிறைச்சாலையில் இயங்கும் பொருத்தமான வேலைப் பிரிவொன்றுக்கு அவர் அனுப்பப்படவுள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T10:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான மோசடி விசாரணை! தயாராகிறது குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-action-on-mig-aircraft-scam-1788343706"></link>
            <id>https://ibctamil.com/article/cid-action-on-mig-aircraft-scam-1788343706</id>
            <summary type="text">இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(02.09.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தசம்பவம் தொடர்பில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>நிதி புலனாய்வு&nbsp;பிரிவு </h2><p>
</p><p>
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குரிய ஆவணத் தொகுப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c40394-74aa-44ca-a1f6-8d8123b7537e/26-6a980373376a7.webp' /></p><p>இந்நிலையில் இந்த வழக்கை&nbsp;எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.</p><p>2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கும், ஏற்கனவே இருந்த சில விமானங்களை பழுதுபார்ப்பதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>அப்போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். இந்தக் கொள்வனவு தொடர்பில் பின்னர் முறைகேடுகள் மற்றும் அரச நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p></p><h2>கோட்டாபய ராஜபக்ச</h2><p> </p><p>குறிப்பாக, இந்த ஒப்பந்தம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் (Government-to-Government) என்ற அடிப்படையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் உக்ரைன் அரச நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படாமல் Bellimissa Holdings Limited என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2f6f2e1-eb93-4b37-8a69-4a8bbef71044/26-6a98037268b00.webp' /></p><p>அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்ட தரப்பினர் சந்தித்ததாக விசாரணை ஆவணங்களை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p> விமானப்படைத் தளபதி முன்னதாக வழக்கமான டெண்டர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், 2006 பெப்ரவரி 6ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் உக்ரைன் தரப்பின் முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>எனினும், கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவில் ஊழல் செய்தார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.</p><p>எனினும் அவர் முன்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார். </p><p>உதயங்க வீரதுங்க தொடர்பான தற்போதைய நிலை
இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேகநபராகக் குறிப்பிடப்படும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் தொடர்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T10:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் உணவு நஞ்சாகியதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesian-officials-suspect-food-poisoning-1788341174"></link>
            <id>https://ibctamil.com/article/indonesian-officials-suspect-food-poisoning-1788341174</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த சம்பவம்&nbsp;கிழக்கு ஜாவாவின் சிடோஆர்ஜோ பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய குடியிருப்புப் பாடசாலையில் நேற்று (01.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இது குறித்த விசாரணையில் தெரியவருகையில், மதிய உணவு சாப்பிட்ட பின்னரே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலைய அதிகாரி கெதுத் சுமேதான தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 80 குழந்தைகள் பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e43d17-8147-41aa-a964-eba8ad2b1eeb/26-6a97f0244c542.webp' /></p><p>உணவு விநியோகம் செய்த சந்தேகத்திற்குரிய சமையலறை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டு, அதிகாரிகளால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் ஊட்டச்சத்து முறைகேட்டை ஒழிப்பதற்காகப் பல பில்லியன் டொலர் செலவில் இந்த இலவச உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.</p><p>
'Network for Education Watch' அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நிலவரப்படி இத்திட்டம் தொடர்பான 37,600 உணவு ஒவ்வாமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. </p><p>இந்த நிலையில் முறையற்ற உணவு சேமிப்பு மற்றும் தாமதமான விநியோகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sivajilingam-in-the-icu-1788342497"></link>
            <id>https://ibctamil.com/article/sivajilingam-in-the-icu-1788342497</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/official-trailer-of-eelam-film-porattam-today-1788337266"></link>
            <id>https://ibctamil.com/article/official-trailer-of-eelam-film-porattam-today-1788337266</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.&amp;nbsp;ஈழத்து கலைஞர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.&nbsp;</p><p>ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><p> திரைப்படத்தை தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முழுநீளத் திரைப்படம்</h2><p>போராட்டம் திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p></p><p>திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் அதன் முதல் பார்வையில் (First Look) அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியமை ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான முழுநீளத் திரைப்படமாக போராட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பாடல்கள் ரசிகர்கள்&nbsp;</h2><p>இந்நிலையில், ஏற்கனவே திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெளியாகவுள்ள ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4512295f-84e3-4569-ba76-c2c1f343b5c5/26-6a97e9e325341.webp' /></p><p>
</p><p>
ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படமான போராட்டம், எதிர்வரும் ஒக்டோபர் இரண்டாம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
</p><p>
இந்நிலையில், திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-saudioiltanker-strait-of-hormuz-two-killed-1788341141"></link>
            <id>https://ibctamil.com/article/attack-saudioiltanker-strait-of-hormuz-two-killed-1788341141</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

ஓமானின் கச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.</p><p>

ஓமானின் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 16.6 கடல் மைல் (19 மைல்) தொலைவில், சித்ர் என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் அடையாளம் தெரியாத எறிகணைகளால் தாக்கப்பட்டதாக, கப்பல் கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டன.
</p><p>
இந்நிலையிலேயே அந்த நிறுவனம் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தேசிய கப்பல் நிறுவனமான பஹ்ரி , இந்தச் சம்பவத்தில் இரண்டு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது .</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
இன்று காலை X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பஹ்ரி நிறுவனம் பின்வருமாறு கூறியுள்ளது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32547dc4-e169-48e3-8a48-51980ba2950f/26-6a97ec4b95131.webp' /></p><p>
</p><p>
 “இந்தக் கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சக ஊழியர்களுக்கும் தனது முழு ஆதரவையும் வழங்கி வருகிறது.” என்றுள்ளது.
</p><p>
பெப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T09:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dharmalingam-observed-today-at-thavadi-1788331816"></link>
            <id>https://ibctamil.com/article/dharmalingam-observed-today-at-thavadi-1788331816</id>
            <summary type="text">யாழ். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு&nbsp; முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த நிகழ்வு இன்று (02.09.2026) காலை யாழ்ப்பாணம்
தாவடியில் நடைபெற்றது.
</p><p>1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில்
இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் வி. தர்மலிங்கத்தின் நினைவாக
அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.</p><p></p><h2>மலரஞ்சலி</h2><p> </p><p>நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def220ef-1ee8-4ca3-a6ef-ed2b28d4956c/26-6a97de096b642.webp' /></p><p>தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.</p><p>
</p><p>அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1918 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி
யாழ்ப்பாணம் கந்தரோடையில் விஸ்வநாதர் – சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாகப்
பிறந்தார்.
</p><p>சிறுவயது முதலே சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அவர், தனது அரசியல்
மற்றும் சமூகப் பணியின் பயணத்தை உள்ளூராட்சி மட்டத்திலிருந்து ஆரம்பித்தார்.
உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், ஐந்துக்கும்
மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக அப்பதவியை வகித்தார்.</p><h2>&nbsp;மானிப்பாய் தொகுதி</h2><p> </p><p>பின்னர் சுன்னாகம் பட்டின
சபையின் தலைவராகவும் பணியாற்றினார்.
1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு
முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 1983 ஆம் ஆண்டு வரை
நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4654df6-9209-4c3b-9629-1d24c5b69943/26-6a97e473e02f6.webp' /></p><p> தான் போட்டியிட்ட தேர்தல்களில்
தொடர்ச்சியாக வெற்றிபெற்று, உடுவில் – மானிப்பாய் தொகுதி மக்களின்
நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக விளங்கினார்.
</p><p>தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில்
ஒருவராக விளங்கிய அமரர் வி. தர்மலிங்கம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து
தடவைகள் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின்
புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி.வி.கே. சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா,
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம்
வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hambantota-municipal-council-eraj-fernando-dead-1788332953"></link>
            <id>https://ibctamil.com/article/hambantota-municipal-council-eraj-fernando-dead-1788332953</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
சடலம் இவ்வாறு மீட்டக்கப்பட்ட நிலையில், உயிரை மாய்த்துக்கொள்ள முயச்சி செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p></p><h2>எராஜ் பெர்னாண்டோ&nbsp;</h2><p>தற்போது அவருக்கு 57 வயது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c40d4e-8da3-453c-9fa4-d05fefd8d9bd/26-6a97ceb512be5.webp' /></p><p> </p><p>அம்பாந்தோட்டை மாநகரசபைக்கு மேயராக 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தெரிவாகியிருந்தார் என தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T08:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/apple-to-launch-iphone-18-pro-series-on-sept-9-1788334301"></link>
            <id>https://ibctamil.com/article/apple-to-launch-iphone-18-pro-series-on-sept-9-1788334301</id>
            <summary type="text">ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி&nbsp; நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்பதிவுகள்&nbsp;</h2><p>இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகளுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a81dc5c-f32a-4c1e-bfa6-bfb8a3eccd71/26-6a97da6c0f515.webp' /></p><p>அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:18:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-against-159-mps-of-npp-1788335963"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-against-159-mps-of-npp-1788335963</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவிக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், அவை வழங்கப்படுவதன் நோக்கமான பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படாமல், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதுதொடர்பில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, “தினன தகுண” அமைப்பு இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வாக்குமூல&nbsp;பதிவு </h2><p>
</p><p>
மேலும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துவதுடன், குறித்த அரசியல் கட்சியின் வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறும் முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3eb839a-c27f-4b98-9614-c36e17fe1ac7/26-6a97d9ca0bb90.webp' /></p><p>
</p><p>
மொத்தம் ஐந்து விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T08:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 ஆண்டுகளில் உலகில் 100 கோடி மனித உருவ ரோபோக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/at-least-a-billion-humanoid-robots-in-10-years-1788317391"></link>
            <id>https://ibctamil.com/article/at-least-a-billion-humanoid-robots-in-10-years-1788317391</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள்
பயன்பாட்டிற்கு வரும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தை அவர் தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள்
பயன்பாட்டிற்கு வரும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயத்தை அவர் தனது சமூக வலைதள காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில் ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது,
அவற்றின் வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத வேகத்தை எட்டும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>
</p><p>
அதே போன்று ஒரு ரோபோவின் செயல்திறன் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும்
என்று எலான் மாஸ்க் கணித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">ELON MUSK: A billion humanoid robots will be more productive than all humans combined within 10 years.<br><br>“There will be at least a billion robots in 10 years, and each will produce at least five times the output of a human.” <a href="https://t.co/4N6etC48L5">pic.twitter.com/4N6etC48L5</a></p>&mdash; DogeDesigner (@cb_doge) <a href="https://x.com/cb_doge/status/2094793785523962255?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஒரு வருடத்திற்குள் அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மனிதனின் அறிவாற்றல் திறன்களை விஞ்சிவிடும் என்றும் இந்த தசாப்தத்தின் முடிவில் மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த நுண்ணறிவையும் மிஞ்சிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர் - தவறான மருந்து கொடுத்தாக சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-suddenly-dies-after-discharge-from-hospital-1788329863"></link>
            <id>https://ibctamil.com/article/boy-suddenly-dies-after-discharge-from-hospital-1788329863</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் மருந்துச் சீட்டைச் சரியாக வாசித்துச் செயற்படாததே இத்தவறுக்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/015e1de1-367a-48c0-84fa-d65a29272744/26-6a97c64fbc900.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களின்படி, இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும் அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
</p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:53:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு ஈரான் கடும் பதிலடி - 96 டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/global-oil-prices-jump-after-us-iran-trade-attacks-1788328869"></link>
            <id>https://ibctamil.com/article/global-oil-prices-jump-after-us-iran-trade-attacks-1788328869</id>
            <summary type="text">2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அமெரிக்காவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நிலைமை மோசமடைந்ததன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>மசகு எண்ணெய்யின் விலை&nbsp;&nbsp;</h2><p>இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/041f5f99-c306-4a94-9407-af4e5c7503cb/26-6a97be0525ace.webp' /></p><p>அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91 அமெரிக்க டொலராகக்கும் மேல் அதிகரித்துள்ளது.
</p><p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>விமானப்படைத் தளத்தின் மீது&nbsp;தாக்குதல்</h2><p>இதேவேளை ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e6b24f-021d-426a-9994-512279cd15d6/26-6a97be05d1f89.webp' /></p><p>ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-cabinet-has-granted-approval-1788328176"></link>
            <id>https://ibctamil.com/article/the-cabinet-has-granted-approval-1788328176</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுகுடியமர்வு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலங்களை விடுவிக்கும் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
</p><p>
இலங்கையில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகள் 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஊடாக ஆரம்பிக்கப்பட்டன. </p><p>பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவும் இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p></p><h2>அமைச்சரவை அனுமதி</h2><p>

2026 ஜனவரி 1ஆம் திகதி நிலவரப்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் 21.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7141515-9963-42fa-a5b3-164d8aae65eb/26-6a97c0838eb16.webp' /></p><p>
</p><p>
தற்போது Mines Advisory Group (MAG), The HALO Trust, Delvon Assistance for Social Harmony (DASH) மற்றும் Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP) ஆகிய நான்கு நிறுவனங்கள் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், 2026 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறித்த நான்கு நிறுவனங்களுடனும் தலா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பாக விடுவித்து, மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தேவையான நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1788329742"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1788329742</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (02-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (02-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,337,158 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்க விலை</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 377,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,240 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49521dbe-5395-44f1-80c7-8337b929ab6f/26-6a97c03fba9a7.webp' /></p><p>22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 345,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 330,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:21:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-insurance-for-fruit-farmers-1788326524"></link>
            <id>https://ibctamil.com/article/government-insurance-for-fruit-farmers-1788326524</id>
            <summary type="text">பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பழச் செய்கையின் போது ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>பழச் செய்கையின் போது ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>விவசாய, கால்நடை வளர்ப்பு, காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><h2>முதன்மை நோக்கம்</h2><p>இதனடிப்படையில் விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 7 சதவீதத்தை பிரீமியம் தொகையாகச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4ef51f-8bc1-4a35-82d8-f7fa2d9dc3bc/26-6a97bcd7ee15b.webp' /></p><p>இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சித் தாக்குதல்கள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.</p><p>பயிர்ச்சேதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை இழப்பீடு பெறத் தகுதி உரித்தாகும் என விவசாயக் காப்புறுதிச் சபை தெரிவித்தது.
</p><p>விவசாய அபாயங்களை நிர்வகிக்க விவசாயிகளுக்கு உதவுவதும் பழச் செய்கையில் தொடர்ந்து ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீலரத்ன தேரர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-seelarathna-thero-1788328620"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-seelarathna-thero-1788328620</id>
            <summary type="text">ஜன சேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது&amp;nbsp; அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்&amp;nbsp;மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன சேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது&nbsp; அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்&nbsp;மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில் அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>காயமடைந்த சீலரத்ன தேரர்&nbsp;</h2><p> </p><p>இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bea5e7d-6f54-4fc8-8da5-714635ae7998/26-6a97be377825b.webp' /></p><p>
</p><p>
தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக பல விசேட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது</p><p>தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T05:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/advisory-issued-for-strong-winds-and-rough-seas-1788321718"></link>
            <id>https://ibctamil.com/article/advisory-issued-for-strong-winds-and-rough-seas-1788321718</id>
            <summary type="text">யாழ். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>காற்றின் வேகம்</h2><p>ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8a27fc-e423-4a09-9847-d5a809a2f0d1/26-6a97b9ebe6bb8.webp' /></p><p>அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனால், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T05:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sharp-weapon-in-anuradhapura-suspect-arrested-1788325335"></link>
            <id>https://ibctamil.com/article/sharp-weapon-in-anuradhapura-suspect-arrested-1788325335</id>
            <summary type="text">அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில்&amp;nbsp; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில்&nbsp; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>காவல்துறை விசாரணை</h2><p>
</p><p>மேலும் உயிரிழந்தவர் அநுராதபுரம், யாய 05 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894fc063-86fd-45f7-b430-aaead2ccbda6/26-6a97b7e312575.webp' /></p><p>உயிரிழந்த நபருக்கும் வேறு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவர் கோடாரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T05:46:04+00:00</updated>
        </entry>
    </feed>
