<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-27T12:51:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வருவது கடினமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-is-difficult-to-bring-back-to-sri-lanka-1785153948"></link>
            <id>https://ibctamil.com/article/basil-is-difficult-to-bring-back-to-sri-lanka-1785153948</id>
            <summary type="text">மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>
பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவர் இவ்வாறு கூறினார்.</p><h2>அது எளிதான காரியம் அல்ல</h2><p>பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியம் என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் அலி சப்ரி மேலும் கூறினார். இதனை அமெரிக்க நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea04301-f50e-4df8-897f-df15e124688c/26-6a67515266fcf.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவரவும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.</p><p>

மாத்தறைப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை முறைகேடாகச் சம்பாதித்த பணத்தில் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாத்தறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராகத் தவறியதையடுத்து, பசில் ராஜபக்சவுக்கு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சல்லேயின் மனு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-of-appeal-postponed-suresh-salley-s-petition-1785153181"></link>
            <id>https://ibctamil.com/article/court-of-appeal-postponed-suresh-salley-s-petition-1785153181</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று (27.07.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இவர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
வழக்கு விசாரணையின் போது, முன்னாள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலைப்படுத்தபட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், நீதிமன்றத்தில் விரிவான சட்ட வாதங்களை முன்வைத்தார்.</p><p></p><h2>ஒத்திவைக்கபட்ட மனு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24a7de07-60a5-4a64-80d1-46dc5e9671b8/26-6a674e43221a8.webp' /></p><p>
</p><p>
இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை நாளை (28.07.2026) மீண்டும் முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மேலும், மனுவின் அடுத்தகட்ட விசாரணைக்கான திகதியையும் நாளைய தினம் நீதிமன்றம் நிர்ணயிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவகக் கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nainativu-fishermen-to-protest-indian-boats-1785153686"></link>
            <id>https://ibctamil.com/article/nainativu-fishermen-to-protest-indian-boats-1785153686</id>
            <summary type="text">&amp;nbsp;நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்
போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்
போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் மற்றும் அதனை கட்டுப்படுத்த
கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>

நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை
படகுகளில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த
போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>வடக்கு கடற்றொழிலாளர்கள்</h2><p>இத தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், இந்திய இழுவை மடி படகுகளில் தொடர்ச்சியாக மனிதாபிமானமற்ற முறையில் எல்லை
தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன் தீவக மற்றும் வடக்கு
கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும்
கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3cade4-a84f-4512-823f-99bcb8f3e746/26-6a674a885b21a.webp' /></p><p>அதனால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை
படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
</p><p>
வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சாமாச பிரதிநிதிகள்,
கடற்றொழிலாளர்கள் இணையம் வடமாகாண பிரதிநிதிகள், ஏனைய கடற்றொழிலாளர் நலன்
சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் கடற்றொழிலாளர்களுக்கு குரல்
கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்துக்கு
வலுசேர்க்க வியாழக்கிழமை குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேர வேண்டும் என
கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் பிணை குறித்து சாந்த பண்டார வெளியிட்ட தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-s-son-bailed-in-theft-case-1785150727"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-s-son-bailed-in-theft-case-1785150727</id>
            <summary type="text">தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், தனது மகனாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், தனது மகனாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>
இருப்பினும் ஊகங்களின் அடிப்படையில் மனிதர்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>


சீனக் பிரஜை ஒருவரிடமிருந்து ரூபாய் இரண்டு கோடி நிதியைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரது மகன் அனுத பண்டார மற்றும் ஏனைய 5 சந்தேகநபர்களுக்குக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27-07-2026) பிணை வழங்கியது.</p><p>
</p><p></p><h2>சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு பேசிய சாந்த பண்டார, நாட்டின் நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் குறித்துத் தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2743bf2c-1ca4-47f6-8485-c36ab1e1eff0/26-6a6744f2a9614.webp' /></p><p>

மேலும் தெரிவித்த அவர், “எனது மகன் மட்டுமல்ல, யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். </p><p>

எனது மகனுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர அரசியல்</h2><p>உண்மை எப்போதும் வெல்லும் இன்று அந்த உண்மை வென்றுள்ளது.</p><p>

 நீதித்துறைக்கு எங்களது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0c6341-d3ee-48af-89cd-c0e0a3d5992b/26-6a6744f360785.webp' /></p><p>மேலும், சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் பல கோணங்களில் நடத்திய விசாரணைகளைத் தான் வரவேற்பதாக தெரிவித்த அவர், ஊகங்களின் அடிப்படையில் ஒருவரைத் குற்றவாளியாக்குவது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்தோடு, தாம் இன்னமும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதன் காரணமாகவே இந்த விவகாரம் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் சாந்த பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாதனை படைத்த டைனோசர் எலும்புக்கூடு: கோடிகளை தொட்ட ஏல விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/67-million-year-old-t-rex-skeleton-sells-482-crore-1785151068"></link>
            <id>https://ibctamil.com/article/67-million-year-old-t-rex-skeleton-sells-482-crore-1785151068</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில், சுமார் 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகள் பழமையான டைரானோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) வகை டைனோசரின் எலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில், சுமார் 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகள் பழமையான டைரானோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) வகை டைனோசரின் எலும்புக்கூடு இந்திய மதிப்பில் ரூ.482 கோடியே 11 லட்சத்திற்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.</p><p>

பிரபல ஏல நிறுவனமான Sotheby's நடத்திய இந்த ஏலத்தில், கிரெட்டேசியஸ் (Cretaceous) காலத்தைச் சேர்ந்த சுமார் 38 அடி உயரமுள்ள ராட்சத டி-ரெக்ஸ் டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு காட்சிப்படுத்தப்பட்டது.</p><p>

ஆரம்பத்தில் சுமார் ரூ.413 கோடி மதிப்பில் ஏலம் தொடங்கப்பட்ட நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>413 கோடி மதிப்புடைய&nbsp;டைனோசர் எலும்புக்கூடு</h2><p>
</p><p>
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தின் இறுதியில்,&nbsp; டி-ரெக்ஸ் எலும்புக்கூடு ரூ.482 கோடியே 11 லட்சத்திற்கு விற்பனையாகி புதிய சாதனையைப் பதிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3070f6ac-8611-44f7-b0bb-39883e5237d0/26-6a67409aab2cb.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னர், இதே ஏல (Sotheby's) நிறுவனம் 2024ஆம் ஆண்டு ஸ்டெகோசரஸ் (Stegosaurus) வகை டைனோசரின் எலும்புக்கூட்டை ரூ.425 கோடிக்கு ஏலம் விட்டிருந்தது. </p><p>அந்த சாதனையையும் முறியடித்து தற்போது டி-ரெக்ஸ் எலும்புக்கூடு ஏலம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் சிறீதரன் எம்.பி கலந்தரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sritharan-mp-talks-myiliti-land-release-1785149869"></link>
            <id>https://ibctamil.com/article/sritharan-mp-talks-myiliti-land-release-1785149869</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான
கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
</p><p>
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின்
பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள
எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தமது ஆழ்ந்த கவலையை
வெளிப்படுத்தினர்.&nbsp;</p><h2>எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை</h2><p>பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே
தங்களது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் என்றும்,
அவற்றை எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை எனவும், இதற்கு மாற்றாக வேறு
காணிகளையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ வழங்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள்
ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed894d70-ebb6-44f8-aec2-913361532259/26-6a673ccec7ed8.webp' /></p><p>காணி சுவீகரிப்புக்கு எதிராக நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், மீண்டும் காணிகளைப் பறிக்கும்
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது பெரும் அநீதியாகும் எனக் குறிப்பிட்ட
அவர்கள், இவ்விடயத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, தங்களது
உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஜனாதிபதியுடன் சந்திக்க ஏற்பாடு செய்து தர கோரிக்கை</h2><p>அத்துடன், மயிலிட்டி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலமாகத்
தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் அவசர
சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e938178a-9a65-4b53-b7af-63cf6a89a13b/26-6a673ccf929e1.webp' /></p><p>
</p><p>
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக்
கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம்
சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் செ. விஜயராஜ், வலி.
மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சபேசன் மற்றும் காணி
விடுவிப்புச் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் திடீர் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-near-jaffna-kks-fuel-depot-1785148763"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-near-jaffna-kks-fuel-depot-1785148763</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கடற்படையினர், பெட்ரோல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>
கடற்படையினர், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பு
இன்றி காணப்படுவதுடன், அந்தக் காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது</h2><p>இந்தநிலையில், இது தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு
தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் , அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54444c34-3f97-4029-a36d-0e968b79a4b1/26-6a67393a6e70e.webp' /></p><p>
</p><p>
இன்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும்
பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
</p><p>இதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை
பதாகைகளை காட்சிப்படுத்துமாறு ,பிரதேச சபையின் காங்கேசன்துறை உப
அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவித்த போதும், அது தொடர்பில் வேண்டுகோள் கடிதம்
அனுப்புமாறு கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினர்</h2><p>

அதேவேளை குறித்த எரிபொருள் களஞ்சியசாலை அப்பகுதியில் நிறுவப்படும் போது,
அதனைச் சூழவுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படும்
எனவும், தீ விபத்துக்கள் ஏற்படாதவாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என
உறுதி வழங்கப்பட்டு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ffe020-eb29-4385-b9e4-baadca5aa22e/26-6a6739c92c442.webp' /></p><p>இந்த நிலையில் எரிபொருள் களஞ்சியசாலையை சுற்றி கம்பி வேலிகள்
மாத்திரமே காணப்படுவதுடன் , இன்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்ட வெற்றுக்காணிக்கு
அருகில் தான் எரிபொருள் தாங்கிகள் காணப்படுவதாகவும் தீப்பரவல் உடனடியாக
கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பாரிய அனர்த்தம்
தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>எனவே குறித்த எரிபொருள் களஞ்சியசாலையை சூழ பாரிய மதில்களை கட்டி , அதனை
பாதுகாப்பான களஞ்சிய சாலையாக மாற்றுமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.</p><p>

இது தொடர்பில் அயலவர்களால், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தராஜாவின்
கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில், அவர் இது தொடர்பில் நடவடிக்கை
எடுப்பதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதவி நீடிப்பில் சிறிலங்கா கடுப்பு...! வாக்களிப்புக்கு ஓடி ஒளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-skips-un-human-rights-chief-term-vote-1785150115"></link>
            <id>https://ibctamil.com/article/sl-skips-un-human-rights-chief-term-vote-1785150115</id>
            <summary type="text">ஐ.நாவின் தற்போதைய மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களிப்பு நடந்தபோது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நாவின் தற்போதைய மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களிப்பு நடந்தபோது, அந்த வாக்களிப்பில் பங்கெடுக்காமல் விலகியிருந்த 13 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று.
</p><p>
இந்த நகர்வின் மூலம் வோல்கர் டர்க்கின் பதவி நீடிப்பில் தனக்கு உடன்பாடு இல்லையெனக் காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடம் இலங்கைக்குச் சென்ற துர்க், அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது யாழ். செம்மணிப் புதைகுழிப் பகுதிக்கும் சென்று பார்வையிட்டிருந்தார்.
</p><p>
அத்துடன், சிறிலங்கா விரும்பியது போலத் தமிழர்கள் மீதான மனித உரிமை மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய செயல்முறைகளை அவர் கைவிடத் தயாராக இல்லை.</p><p>

இதற்கு மாறாக, போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் திட்டத்திற்கு மனித உரிமைப் பேரவை தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை வெளியிட்டதால் இந்த நிலைக்கு வந்துள்ள சூழலில், இலங்கையிலும் அனுர அரசாங்கத்துக்கு எதிராக இந்தியப் பாணி கரப்பான்பூச்சி போராட்டம் வெடிக்கும் என எதிர்க்கட்சிகள் நம்பிக் கை வைக்கத் தலைப்படும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_eMpGLV7Jx4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கெடுபிடி...! திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-turns-back-ships-in-strait-of-hormuz-1785146776"></link>
            <id>https://ibctamil.com/article/iran-turns-back-ships-in-strait-of-hormuz-1785146776</id>
            <summary type="text">ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) தெற்குப் பகுதியில் சட்டவிரோதமான மற்றும் பாதுகாப்பற்ற பாதையைப் பயன்படுத்த முயன்ற கப்பல்களைத் தான் திருப்பி அனுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) தெற்குப் பகுதியில் சட்டவிரோதமான மற்றும் பாதுகாப்பற்ற பாதையைப் பயன்படுத்த முயன்ற கப்பல்களைத் தான் திருப்பி அனுப்பியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>
ஈரானிய அரசு ஊடகமான IRIB இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

குறித்த தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தின் தூண்டுதலால் ஆறு கப்பல்கள் ஈரானின் நாவிகேஷன் மற்றும் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்புகளை (Navigation and Positioning Systems) முடக்கி விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>பாரசீக வளைகுடா</h2><p>இந்தநிலையில் குறித்த கப்பல்களில் ஒரு கப்பல் தொடர்பில் மாத்திரம் தகவல் வெளியிடப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f526784f-9fa5-4f4d-908d-aaf664eaab97/26-6a673310b1783.webp' /></p><p>இருப்பினும், ஏனைய கப்பல்கள் ஈரானியப் படைகளால் மீண்டும் பாரசீக வளைகுடாவை (Persian Gulf) நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்காவுடனான மோதல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஈரான் தொடர்ந்து கப்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வருவதை இது சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை : இராணுவச்சிப்பாய் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-soldier-arrested-for-strangling-death-1785147236"></link>
            <id>https://ibctamil.com/article/army-soldier-arrested-for-strangling-death-1785147236</id>
            <summary type="text">&amp;nbsp;கூலிக்கு மோட்டார் சைக்கிள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த ஆடைத் தொழிற்சாலையின் தரக் கட்டுப்பாட்டாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்தமை மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கூலிக்கு மோட்டார் சைக்கிள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த ஆடைத் தொழிற்சாலையின் தரக் கட்டுப்பாட்டாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்தமை மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் ஹோமாகம தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>




பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றும் 29 வயதுடைய சந்தேகநபர் ஹோமாகமவில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு ஹெரோயின் மீட்பு</h2><p>&nbsp;கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஒன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e288858-0a18-482b-9e3d-e088eb1e0ad5/26-6a67356952c54.webp' /></p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன வடக்கு, சமகி மாவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய கே.ஏ.டி. ரஜித் தனுஷ்க என்பவராவார். கடந்த 16ஆம் திகதி ஹோமாகம பிட்டிபன கலாகஹேன சிங்க அரண பிரதேசத்தில் இக்குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், சடலம் தொளஹேன பிட்டிபன கலாகஹேன முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள ஏல விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள கால்வாய்க் கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>
நீதிமன்றில் முன்னிலை</h2><p>






காவல்துறை விசாரணைகளில், உயிரிழந்தவர் தனது மோட்டார் சைக்கிளில் கடைசியாக மேற்கொண்ட வாடகை பயணத்தின் போது இந்த சந்தேகநபரால் அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae24f7d5-5ca7-482a-8dba-351548088740/26-6a6737771a109.webp' /></p><p> பின்னர் சந்தேகநபர் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், பணப்பை, ஒரு பவுண் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மொரகஹஹேன காவல்துறை பிரிவில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ வீரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 31ஆம் திகதி வரை தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmt-officer-arrested-illegal-vehicle-registration-1785143654"></link>
            <id>https://ibctamil.com/article/dmt-officer-arrested-illegal-vehicle-registration-1785143654</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல் மற்றும் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>

இலங்கைச் சுங்கத்துறையிடமிருந்து அனுமதி பெறாமலும், உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட&nbsp; கார் ஒன்றை பதிவு செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>முன்னாள் (DMT) அதிகாரி கைது</h2><p>ஆணைக்குழுவின் தகவலின்படி, அந்த முன்னாள் அதிகாரி, வாகனத்தின் முதல் உரிமை மாற்றத்திற்குத் தேவையான ஒரு கவுண்டர் எண்ணை வழங்கி, அது தொடர்பான தகவல்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a673af9c-d825-4da5-ae40-db9a0633050d/26-6a67355aef418.webp' /></p><p>இந்த நிலையில் சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இனப்படுகொலையின் 43ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemoration-tamils-massacred-in-welikada-prison-1785147275"></link>
            <id>https://ibctamil.com/article/commemoration-tamils-massacred-in-welikada-prison-1785147275</id>
            <summary type="text">நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி
மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்
வாரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி
மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்
வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும்
பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் மன்னாரில் இடம்பெற்றது.</p><p>தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரிலுள்ள ரெலோ அலுவலகத்தில் நேற்று (26) மாலை 43 ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின&nbsp; நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.</p><p>கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன்
தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின்
உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><p></p><h2>அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி&nbsp;</h2><p>
</p><p>
இதன் போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்கலாக 53 அரசியல்
கைதிகளுக்கும், பொது மக்களுக்குமான நினைவேந்தல் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ec7e27-48aa-4c19-8a9c-63824028a829/26-6a67335acbae3.webp' /></p><p>
</p><p>அந்தவகையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரின் திருவுருவப்படத்திற்கு மாலை
அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>அத்துடன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-passenger-arrested-at-bia-with-drugs-1785138403"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-passenger-arrested-at-bia-with-drugs-1785138403</id>
            <summary type="text">இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை வெளியே கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை வெளியே கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் இன்று காலை (27.07.2026) காவல்துறை போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சந்தேக நபர் மொனராகல பகுதியில் வசித்து வரும் 24 வயது ஓவியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>போதைபொருளுடன் ஒருவர் கைது</h2><p>சந்தேக நபர் காலை 9:25 மணிக்கு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5bfbf8-48df-41c7-9012-7120ba7d614e/26-6a672aba561be.webp' /></p><p>குற்றம் சுமத்தப்பட்டவரின் பயணப்பை சோதனை செய்யட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.480 கிலோகிராம் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p> அந்த போதைப்பொருள், சாசேஜ்களைப் போல இயந்திரம் மூலம் வடிவமைக்கப்பட்டு, சாக்லேட்டால் பூசப்பட்டு, வெற்றிடமாக அடைக்கப்பட்டு, ஒரு பிரபலமான சாக்லேட் பிராண்டைப் போலவே பொட்டலமிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

 

இந்த போதைப்பொருள்&nbsp; சாதாரண சாக்லேட்டுகள் மற்றும் டாஃபிகளுக்கு மத்தியில் மறைக்கப்பட்டு 70 சாக்லேட் உறைகளில் கவனமாகப் பொதி செய்யப்பட்டு இருந்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக இன்று&nbsp; நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய நேர்மை வாரம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/national-integrity-week-begins-in-sl-govt-offices-1785143655"></link>
            <id>https://ibctamil.com/article/national-integrity-week-begins-in-sl-govt-offices-1785143655</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் “நேர்மையான கலாசாரம் – க்ளீன் சிறிலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் “நேர்மையான கலாசாரம் – க்ளீன் சிறிலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த திட்டம்,&nbsp; இன்று காலை 9 மணிக்கு தேசிய நேர்மைப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளல் மற்றும் புதிய ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தல் ஆகியவற்றுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
</p><p>
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஜனாதிபதி செயலகம் மற்றும் 'க்ளீன் சிறிலங்கா' திட்டத்தினால் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p></p><h2>ஊழலற்ற ஆட்சிமுறை</h2><p>

அரச சேவையின் தரம், செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன், ஊழலற்ற ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b79a89a-8429-4c12-b924-364aa55a056b/26-6a672b8ae18b9.webp' /></p><p>
</p><p>
இந்த வாரத்துக்கான நிகழ்ச்சிகள் தினசரி அடிப்படையில் பின்வரும் தொனிப்பொருள்களில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 28: நிதியியல், டிஜிட்டல், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 29: ஆன்மீக, ஒழுக்கவியல், கலாசார மற்றும் சமூக நேர்மையை ஊக்குவித்தல்,&nbsp; ஜூலை 30: செயற்பாட்டு, உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் தொழிலாளர் நேர்மையை ஊக்குவித்தல். ஜூலை 31: சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமப்புற மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தல் என்பனவாகும்.</p><p></p><h2>ஜனாதிபதி ஊடகப்பிரிவு&nbsp;</h2><p>

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவுகள் மூலம் ஊழல், துஷ்பிரயோகம் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00654d4c-9a6e-46f0-9c0c-16ad60e65cc7/26-6a672b8bc4265.webp' /></p><p>இந்த முறைப்பாடுகளை QR குறியீடு, மின்னஞ்சல், அஞ்சல், தொலைபேசி அல்லது இணையவழிச் செய்தித் தளங்கள் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.</p><p> பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகள் மீது நிறுவனங்களின் தலைவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிரத்தியேக டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும்.
</p><p>எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தேசிய நேர்மை வாரம் நிறைவடைந்த போதிலும், இந்த திட்டம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>திருகோணமலை மாவட்ட செயலகம்</h2><p>அந்த வகையில்&nbsp;"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (27) சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.</p><p>திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு
மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன்
நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில், பொதுமக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும்
மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான உறுதிமொழியை அதிகாரிகள்
எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d860f3d4-9bf6-433f-9440-04187ea491e4/26-6a673d54ac9fc.webp' /></p><p><b><i>செய்தி -&nbsp;ஹஸ்பர் ஏ.எச், எம்.என்.எம்.புஹாரி, NICKEY THOMSON</i></b></p><h2>வடக்கு மாகாண ஆளுநர் செயலகம்&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை' தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான
அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக
உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றைய தினம் (27) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb309199-4c2e-4744-a1f2-d9228a093127/26-6a674021efa2f.webp' /></p><p>தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர்
செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து,
உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.</p><h2>யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்</h2><p>"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய
செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச்
செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றைய தினம் (27) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66f66e-ee4c-4078-8300-522199f7005a/26-6a674022e5661.webp' /></p><p>சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p><b><i>செய்தி - பு.கஜிந்தன், த. பிரதீபன்&nbsp;</i></b></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:04:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-athletics-selection-committee-resigns-1785144346"></link>
            <id>https://ibctamil.com/article/sl-athletics-selection-committee-resigns-1785144346</id>
            <summary type="text">இலங்கையின் மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

நாட்டில் மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
</p><p>
நாட்டில் மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனடிப்படையில் தங்களது பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.</p><p></p><h2>விளையாட்டு ஆளுமை</h2><p>

குறித்த கடிதம் இன்று (27-07-2026) கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4afa3a7-8883-4792-8a7a-d55eeab8a312/26-6a672b97c2158.webp' /></p><p>

பதவி விலகிய இந்த குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் D.A. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுநர் வீரரும் சாதனையாளருமான கேணல் M.K.P. ஜயசேகர மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான முன்னாள் மெய்வல்லுநர் சாதனையாளரான ரவி வித்யாலங்கார ஆகிய முன்னணி விளையாட்டு ஆளுமைகளும் அங்கத்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:03:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் கல்வி நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tuition-centre-owner-arrested-with-crystal-meth-1785145343"></link>
            <id>https://ibctamil.com/article/tuition-centre-owner-arrested-with-crystal-meth-1785145343</id>
            <summary type="text">ஹொரணவில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், &#039;ஐஸ்&#039; (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணவில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
ஹொரணநார்த்தனாகலா பகுதியைச் சேர்ந்த 44 வயதான அந்த சந்தேக நபர், அவரது இல்லத்தில் காவல்துறை நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்டார்.</p><h2>சந்தேக நபரிடம் மீட்கப்பட்ட பொருட்கள்</h2><p>சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் (250 மி.கி) கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கைபேசி, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிம் அட்டை மற்றும் ஒரு மின்னணு எடை அளக்கும் கருவி ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f98f69-fd8e-4d42-8e3d-cfa9e1a527af/26-6a672a30a1331.webp' /></p><p>
</p><p>
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, காவல்துறை அவரது இல்லத்திற்கு வந்தபோது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றார், ஆனால் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு அவர் பிடிபட்டார்.</p><p></p><h2>தொழிலதிபரின் மகன்</h2><p>

ஹொரண பகுதியில் நன்கு அறியப்பட்ட ஒரு தொழிலதிபரின் மகன் தான் அந்த சந்தேக நபர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4539a66-bb7d-46d6-82be-9b004d01f907/26-6a672a2fef9bd.webp' /></p><p> </p><p>அவர் இதற்கு முன்பும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

சந்தேக நபருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா, அவர் ஒரு பரந்த போதைப்பொருள் விநியோக நடவடிக்கையை நடத்தி வந்தாரா, மேலும் அவரது பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு ஆதரவாக மொரட்டுவையில் பிரமாண்டமான பதாகைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/banners-congratulate-justice-min-harshana-1785140965"></link>
            <id>https://ibctamil.com/article/banners-congratulate-justice-min-harshana-1785140965</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண்டமான பதாகைகள் (Banners) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



மொரட்டுவை பகுதி முழுவதும் இந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண்டமான பதாகைகள் (Banners) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>



மொரட்டுவை பகுதி முழுவதும் இந்த பதாகைகைள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.</p><p>



நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்ற ஹர்ஷண நாணயக்காரவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னணியில் உள்ள உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அதனைத் தோற்கடிப்பதற்கு ஆதரவளித்த பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602857bc-88db-43e3-8ece-3db9de5f0eb5/26-6a67226c90c52.webp' /></p><p>குறித்த பதாகைகளைக் காட்சிப்படுத்தியதற்கான முழுமையான பொறுப்பையும் மொரட்டுவை பிரதேச மக்களே ஏற்றுக்கொள்வதாக அந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T09:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recruit-private-graduates-to-fill-teacher-vacancy-1785138156"></link>
            <id>https://ibctamil.com/article/recruit-private-graduates-to-fill-teacher-vacancy-1785138156</id>
            <summary type="text">இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. </p><p>இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின்&nbsp;பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கல்வித்துறையில் 40000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் 23000 பேரையே சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு</h2><p>தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் முயற்சிக்கு முன்னர் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a73910c-e497-4930-9e2d-1baff6d6174d/26-6a671f80c9102.webp' /></p><p>அப்போது ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களை குறிப்பிட்ட பதவிகளுக்கு இணைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். </p><p>எனினும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு தரப்பு பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கல்வி அமைச்சர் உறுதி</h2><p> </p><p>அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கப் போவதில்லை என்றும் அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd27a4c-9e3e-4e57-808b-9dcc43cc0575/26-6a671f7fed0e0.webp' /></p><p> </p><p>ஆனால் தற்போது அந்த நிலைப்பாடுகள் மாற்றமடைந்துள்ளதுடன் ஆசிரியர் நியமனங்கள் தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T09:08:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deputy-min-questions-basl-integrity-1785132586"></link>
            <id>https://ibctamil.com/article/deputy-min-questions-basl-integrity-1785132586</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு குறிப்பிட்ட விசேட குழுவைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறதா என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கேள்வி எழுப்பியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு குறிப்பிட்ட விசேட குழுவைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறதா என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>

அத்தோடு, முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அல்லது அவரது மகன் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டால் தான் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசியல் அமைப்பு</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே நேர்மையானவையா அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0a3d141-002a-4fb9-b1aa-0bcc7c6a6d5e/26-6a6710bf6f0ca.webp' /></p><p>


அத்தோடு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் அமைப்பு திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளதை பிரதியமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>மேலதிக விவரங்கள்</h2><p>நீதித்துறை தொடர்பான மாற்றங்களுக்கு அரசியல் அமைப்பு திருத்தம் (Constitutional Amendment) அவசியமானது என்றும் மற்றும் ஏனைய மறுசீரமைப்புகளை அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab57572-712b-490c-83f5-33f788bb3cb1/26-6a6710c049fc4.webp' /></p><p>

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலும் பிரதியமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>இது குறித்து தெரிவித்தஅவர், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மட்டுமே அசித நிரோஷன இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என நான் நம்பவில்லை எனவும் இது குறித்த மேலதிக விவரங்களை அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தே கேட்டுப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T09:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துடன், முச்சக்கரவண்டி மோதிய கோர விபத்தில் சாரதி ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-bus-and-a-three-wheeler-one-person-dead-1785136452"></link>
            <id>https://ibctamil.com/article/accident-bus-and-a-three-wheeler-one-person-dead-1785136452</id>
            <summary type="text">கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று&amp;nbsp;பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்உயிரிழந்துள்ளார்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று&nbsp;பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்உயிரிழந்துள்ளார்&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்று (27.07.2026) காலை இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>சாரதி உயிரிழப்பு</h2><p>கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2314ea0a-29ff-4436-9c58-18e5f44310ca/26-6a67117d54739.webp' /></p><p>

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த விபத்து தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை கோமாளி பாண்டமாக்கிய ட்ரம்ப் நாட்டின் மதிப்பு மிக்க citizen]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-citizen-basil-bought-weapons-northkorea-1785135266"></link>
            <id>https://ibctamil.com/article/american-citizen-basil-bought-weapons-northkorea-1785135266</id>
            <summary type="text"> இலங்கை அரசியலில் இன்றும் பசில் ராஜபக்சவைச் சுற்றியுள்ள விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. 

அவர்மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலங்கை அரசியலில் இன்றும் பசில் ராஜபக்சவைச் சுற்றியுள்ள விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. </p><p>

அவர்மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் சவாலுக்குள்ளாகியுள்ளன. சில வழக்குகள் முடிவடைந்துள்ளன. சிலவற்றின் சட்டநிலை காலப்போக்கில் மாறியுள்ளது.
</p><p>
மேலும் சில விவகாரங்கள் இன்னும் விசாரணை அல்லது நீதிமன்ற பரிசீலனையில் இருக்கலாம். எனவே, அவரைச் சார்ந்த எந்தக் குற்றச்சாட்டும் இறுதி நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.</p><p></p><p>
</p><h2>பசிலை சுற்றியுள்ள விவாதங்கள்</h2><p>
இன்றும் பசிலை சுற்றியுள்ள விவாதங்கள் இலங்கை அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவர்மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் சவாலுக்குள்ளாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecfa7d0-463f-4e94-b5f0-fd967c89f10b/26-6a6706fb1c068.webp' /></p><p>

சில வழக்குகள் முடிவடைந்துள்ளன; சிலவற்றின் சட்டநிலை காலப்போக்கில் மாறியுள்ளது. மேலும் சில விவகாரங்கள் இன்னும் விசாரணை அல்லது நீதிமன்ற பரிசீலனையில் இருக்கலாம். 

எனவே, அவரைச் சார்ந்த எந்தக் குற்றச்சாட்டும் இறுதி நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
</p><p>
மாத்தறை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் அவருக்கு பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வர வேண்டுமெனில், அதற்கு அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் என முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>

பசில் ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
பசில் ராஜபக்சவை நாட்டிற்கு அழைத்து வர சட்டரீதியான வாய்ப்பு உள்ளது. ஆனால் அது எளிதான செயல் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கான கோரிக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அங்குள்ள சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பான இன்டர்போலின் முழுமையான ஒத்துழைப்பையும், இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளையும் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார்.
</p><p></p><h2>சட்டவிரோதமாக ஈட்டிய&nbsp;பணம்</h2><p>
மாத்தறை பகுதியில் ஒன்றரை ஏக்கர் காணியை, சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தின் மூலம் வாங்கியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகததை, பசிலுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766f316e-b509-41bb-8d6c-08cca8d7e788/26-6a6706fbe3567.webp' /></p><p>
</p><p>
அவர்மீது அதிகம் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்றாக திவிநெகும நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரம் இருந்தது. 

அரச நிதி சட்டப்படி பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>

இந்த வழக்கு பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் இடம்பெற்றாலும், அதன் சட்டநிலை காலப்போக்கில் மாறி, சில குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது மேல்நீதிமன்றத் தீர்ப்புகளால் மாற்றமடைந்தன.
</p><p>
மேலும் மல்வானை பகுதியில் உள்ள சொத்து தொடர்பாகவும் பசிலில் பெயர் நீண்ட காலம் அரசியல் விவாதங்களில் இடம்பெற்றது. 

அந்தச் சொத்து அவருக்குச் சொந்தமானதா, வேறு ஒருவரின் பெயரில் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. </p><p>

எனினும், அந்த வழக்கிலும் நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை அல்லது வழக்குகள் முடிவுக்கு வந்தன.

இந்நிலையில் அண்மையில் அதிக கவனம் பெற்றுள்ள விவகாரம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள காணி தொடர்பான வழக்காகும்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவரை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச சட்ட நடைமுறைகள் மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு தேவைப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>

அமெரிக்க குடியுரிமை தொடர்பான விவகாரமும் அவரது அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி பேசப்பட்ட சர்ச்சையாகும். 

இரட்டை குடியுரிமை, அரசியல் பதவிக்கான தகுதி, வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட அம்சங்கள் பலமுறை பொதுவிவாதத்திற்கு உள்ளானன.
</p><p>
பின்னர் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை குடியுரிமை தொடர்பான சட்ட நடைமுறைகளை பின்பற்றியதாக அவரது தரப்பு தெரிவித்தது.&nbsp;</p><p></p><h2>வடகொரியாவிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்கள்</h2><p> இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரும், அமெரிக்க-இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான பசில் ராஜபக்ச, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று, வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விதித்த சர்வதேசத் தடைகளை மீறியதாக அதிர்ச்சியூட்டும் தகவலை கடந்த ஆண்டு வெளியாகிய ஒரு கட்டுரையில் சஞ்சய தசநாயக்க என்ற ஊடகவியலாளர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f5f3bda-5e7e-4f63-9674-b1647c9de95b/26-6a6706fc9a701.webp' /></p><p>இந்த ஒப்புதல் ஒரு வரலாற்று அடிக்குறிப்புக்கு அப்பாற்பட்டது. இது ஐ.நா. தடைகள் மற்றும் அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டம் ஆகிய இரண்டையும் மீறுவதாகும்.</p><p>

இந்த வெளிப்பாட்டின் விளைவுகள் உலகளாவிய கண்டனக் குரலைத் தூண்டியுள்ளதுடன், பொறுப்புக்கூறல், சர்வதேசச் சட்டம் மற்றும் ஒரு அமெரிக்கக் குடிமகனால் செய்யப்படும் கடுமையான சட்ட மீறல்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் பங்கு ஆகியவை குறித்து தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
</p><p>&nbsp;இலங்கையின் ராஜபக்ச குடும்பத்தின் சக்திவாய்ந்த உறுப்பினரான பசில் ராஜபக்ச, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி ஆண்டுகளில் நாட்டின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 

அக்காலத்தில் அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மற்றொரு சகோதரரான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தனர். </p><p>அவர்கள் இருவரும் இணைந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு கொடூரமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
</p><p>
ஐ.நா.வின் கடுமையான தடைகளுக்கு உள்ளான நாடான வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை பசில் ஒப்புக்கொண்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதைவிடவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில், அவரது செயல்கள் அமெரிக்கச் சட்டங்களான சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மற்றும் எதிரியுடன் வர்த்தகம் செய்யும் சட்டம் (TWEA) ஆகியவற்றை நேரடியாக மீறுகின்றன.
</p><p>
இந்தச் சட்டங்கள், வடகொரியா உட்பட, தடைசெய்யப்பட்ட நாடுகளுடன் அமெரிக்கக் குடிமக்கள் எந்தவொரு வர்த்தக அல்லது நிதிப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபடுவதைத் தடை செய்கின்றன. </p><p>

இந்தச் சட்டங்களை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள், பெரும் அபராதங்கள் மற்றும் நீண்ட சிறைத் தண்டனைகள் விதிக்கப்படும்.</p><p></p><p>
</p><h2>அமெரிக்கத் தடைகளை அப்பட்டமாக மீறுதல்</h2><p>கொழும்பு கள்ளச் சந்தையில் பெறப்பட்ட அமெரிக்க டாலர்களை, இலங்கை அதிகாரிகள் உட்பட பசில் ராஜபக்ச வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது என, பசில் ராஜபக்ச ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378e9441-d3e9-4dfc-b7fd-1eaf6e19cb80/26-6a6706fd4eebb.webp' /></p><p> </p><p>

இவ்வாறு ஆயுத ஒப்பந்தங்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்த ஒப்புதல் வாக்குமூலம் அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது.
</p><p>
வடகொரியா 2006-ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் ஆதரவுடன் விதிக்கப்பட்ட தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தத் தடைகள், அந்நாட்டிற்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வர்த்தகம் செய்வதை வெளிப்படையாகத் தடை செய்கின்றன. 

வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கையகப்படுத்துவதன் மூலம், ராஜபக்ச இந்த சர்வதேசத் தடைகளை மீறியது மட்டுமல்லாமல், தனது அணு ஆயுதத் திட்டம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகப் பெயர்போன ஓர் ஆட்சியைத் தனிமைப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளையும் சீர்குலைத்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் மௌனமா அல்லது பொறுப்புக்கூறலா</h2><p>ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில், பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகள் கூட்டாட்சிச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9956be77-c16d-4186-b804-bbc1d67eee96/26-6a6706fe068d9.webp' /></p><p> </p><p>

அமெரிக்கக் கூட்டாட்சித் தண்டனைச் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்படாத அமைப்புகளுடன் வர்த்தகம் அல்லது நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எந்தவொரு அமெரிக்கக் குடிமகனும், கடுமையான குற்றங்களுக்குப் பெரும் அபராதங்கள் மற்றும் ஆயுள் தண்டனை உட்படக் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்.
</p><p>
ஆனால், இந்த ஒப்புதல்கள் இருந்தபோதிலும், ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எந்த விசாரணையையும் தொடங்கவில்லை.

பசில் ராஜபக்ச என்ற அமெரிக்கக் குடிமகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியது, அமெரிக்கத் தடைகளின் நம்பகத்தன்மையையும் சர்வதேசச் சட்டத்தை நிலைநிறுத்துவதில் அதன் அர்ப்பணிப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று வாதிடும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட அறிஞர்களால் இந்தச் செயலற்ற தன்மை விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p>


தடைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் அமெரிக்க நீதித்துறை (DOJ) மற்றும் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) ஆகியவை, விசாரணைக்கான கோரிக்கைகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. </p><p>

இந்த மௌனம், சட்டப்பூர்வக் கடமைகளை விட அரசியல் நோக்கங்கள் மேலோங்குகின்றனவா என்ற கேள்வியை பலரிடையே எழுப்பியுள்ளது.

ராஜபக்சவின் ஒப்புதல் வாக்குமூலம், சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளின் ஒரு பரந்த, மர்மமான வலைப்பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p> 

அவரது கூற்றுக்களின்படி, பாதாள உலகப் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக விளங்கும் கொழும்பில் உள்ள கள்ளச் சந்தையிலிருந்து இலங்கை அதிகாரிகள் அமெரிக்க டொலர்களைப் பெற்று, அந்தப் பணத்தை வட கொரிய அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>

இந்த ஒப்பந்தங்களின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உள்நாட்டுப் போரின் போது வடகொரியாவுடன் இலங்கை செய்துகொண்ட ஆயுத ஒப்பந்தங்களின் மதிப்பு பல நூறு மில்லியன் டொலர்களாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.</p><p> 

2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த, அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது.

 அக்காலத்தில் இலங்கை அதிகாரிகள் ஆயுத ஒப்பந்தங்களுக்காக வடகொரியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததை அது வெளிப்படுத்துகிறது.</p><p></p><h2>கேள்விக்குரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்</h2><p>

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? ராஜபக்சவின் பேட்டியானது, கள்ளச் சந்தைப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து கூட உருவாகியிருக்கக்கூடிய சட்டவிரோத ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. </p><p>

இந்த வெளிப்பாடு, மோதல்களைத் தொடரச் செய்வதிலும் சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதிலும் ஒழுங்குபடுத்தப்படாத நிதி வலையமைப்புகளின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

ராஜபக்சவின் நடவடிக்கைகள் அமெரிக்கச் சட்டத்தை மீறியது மட்டுமல்லாமல், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மரபுகளை மீறும் நிலையிலும் வைத்தன. </p><p>

சம்பந்தப்பட்ட காலகட்டத்தில், சுனாமிக்குப் பிந்தைய புனரமைப்பு மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இலங்கைக்கு மில்லியன் கணக்கான டொலர் நிதியுதவிகளை வழங்கி, அபிவிருத்தி உதவிகளை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்கியது.
</p><p>
ராஜபக்சவின் வெளிப்படுத்தல்கள், மனித உரிமை அமைப்புகள், சட்ட அறிஞர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்தினரை, அவரது நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டாட்சிச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கத் தூண்டியுள்ளது.</p><p>

ராஜபக்ச குடும்பத்தின் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது இது முதல் முறையல்ல. 

மகிந்தவின் ஜனாதிபதி பதவிக் காலத்தில், அக்குடும்பம் முக்கிய அரசாங்கத் துறைகளைக் கட்டுப்படுத்தி, பெரும் செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் குவித்தது.

கேள்விக்குரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முதல் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் வரை பல்வேறு ஊழல்களில் ராஜபக்சக்கள் சிக்கியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், பொறுப்புக்கூறல் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அரசியல் அழுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையின்மை குறித்த அச்சங்களைக் காரணம் காட்டி, அக்குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக வழக்குத் தொடரத் தவறிவிட்டன.
</p><p>
அரசியல் அதிகாரமும் நிதி வலையமைப்புகளும் பெரும்பாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்படும் உலகில், சர்வதேசத் தடைகளைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களை பசில் ராஜபக்ச ஊழல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.</p><h2>பின்விளைவுகளுக்கு அஞ்சாத&nbsp;ராஜபக்சர்கள் </h2><p> </p><p>

ராஜபக்சவைப் போன்ற தனிநபர்கள், பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் தடைகளை மீறியதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, ​​அதுபோன்ற செயல்களைச் செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கு அது ஒரு அபாயகரமான செய்தியை அனுப்புகிறது.
</p><p>
தடைகளை நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய தலைவராக விளங்கும் அமெரிக்கா, தனது சட்டங்களின் நேர்மையைக் காக்கவும் நீதிக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும்.
</p><p>
 அவ்வாறு செய்யத் தவறினால், தடைகள் பாதுகாக்க நோக்கமாகக் கொண்ட அடிப்படைக் கொள்கைகளையே சீர்குலைக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T08:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-prices-rise-in-the-world-market-cpc-anura-meet-1785135043"></link>
            <id>https://ibctamil.com/article/oil-prices-rise-in-the-world-market-cpc-anura-meet-1785135043</id>
            <summary type="text">உலக சந்தையின் எண்ணெய் விலை நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையின் எண்ணெய் விலை நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றைக் கோரியுள்ளது.</p><p>அத்துடன் உலகளாவிய எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்குக் கவலையளிப்பதாக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் மோசமடைந்துவரும் இந்த நிலைமையைப் பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் விநியோக நிறுவனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாதத் தொடக்கத்தில் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45 சதவீதமும் பெட்ரோல் விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.</p><p>
</p><p>
மேலும், மசகு எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருக்கும் இலங்கைக்குக் கூடுதல் சவால்கள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4288adf-ba3a-4190-9a22-281bb5b14738/26-6a670a11206c7.webp' /></p><p>

இந்த நிலையில், எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடச் சந்திப்பைக் கோரியுள்ளதுடன், எரிபொருள் நுகர்வைக் குறைப்பதும் அவசியமாகியுள்ளது.</p><p>தற்போதைய உலக சந்தை விலைகளின் பின்னணியில், தற்போதைய உள்நாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் சிரமங்கள் இருப்பதாக, நாட்டில் செயற்படும் ஏனைய சில்லறை எரிபொருள் விநியோக நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்</h2><p>
இதற்கிடையில், ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்களால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் மசகு எண்ணெய் விலைகள் இந்த வாரம் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயர்வை எட்டியுள்ளது. சில சந்தைகளில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc86f50-c965-4019-9bba-bea99f04b769/26-6a670a105c79e.webp' /></p><p>

அத்துடன், 'எல் நினோ' வானிலை தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதால், மின் உற்பத்திக்காக அதிகளவு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
</p><p>போதுமான நீர்மின் உற்பத்தி இல்லாத காரணத்தால், மின்சார உற்பத்திக்காக இருப்பிலிருந்து அதிகளவு எரிபொருளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது எங்களுக்கு மேலும் ஒரு கடுமையான சவாலாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T07:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1785136080"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1785136080</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,317,667 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 46,480ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 371,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,610 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d52107-c481-459e-b00a-a63ea1844806/26-6a6708b9e6508.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 340,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 325,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-27T07:39:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-rupee-depreciates-slightly-against-us-dollar-1785135272"></link>
            <id>https://ibctamil.com/article/sl-rupee-depreciates-slightly-against-us-dollar-1785135272</id>
            <summary type="text">கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒப்பிடுகையில், இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிந்துள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒப்பிடுகையில், இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிந்துள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் நிலையாக உள்ளது.</p><p>இன்றைய நாளுக்கான (27.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.83 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 456.39 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.17ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467c09df-c9b9-4e0c-938b-223bee3ec2ff/26-6a6704693730d.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.21 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	229.78 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.85 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.02 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T07:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பௌத்த பிக்கு அதிரடியாக கைது - தோளில் தொங்கிய பைக்குள் பயங்கர பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buddhist-monk-arrested-with-illegal-goods-1785132380"></link>
            <id>https://ibctamil.com/article/buddhist-monk-arrested-with-illegal-goods-1785132380</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04 ஆவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04 ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.</p><p></p><h2>தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பை</h2><p>



ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07e8758-dee0-493e-9666-e435faf8a72a/26-6a66f76bc3946.webp' /></p><p>


குறித்த பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று நிறுத்துப் பார்த்தபோது, குறித்த பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>



சந்தேகத்திற்கிடமான பிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T07:09:03+00:00</updated>
        </entry>
    </feed>
