<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-24T23:11:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமதி வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 வீதமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், அமெரிக்காவில் வாகனங்களை உற்பத்தி செய்தால் பூஜ்ஜிய வீத வரியே விதிக்கப்படும் என்றும், கனடாவை இனி ஒரு மாநிலத்தைப் போல அமெரிக்கா நடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். &nbsp;</p><p></p><h2>ஒப்பந்த முறிவு</h2><p> 

முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், கனடிய கார்கள் மற்றும் இலகுரக லொரிகள் மீதான வரியை 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கவும், அலுமினியம் மற்றும் எஃகு மீதான வரியை 50 வீதத்திலிருந்து 25% வீதமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bc8f49-7954-423c-827c-b05baae85f6b/26-6a8cba5a3b8c9.webp' /></p><p> </p><p>

இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக லொரிகளுக்கான வரி விலக்குகள் உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை முறிந்தது.</p><p>அதனை தொடர்ந்து ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ், ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைக் கண்டன.</p><h2>கனடாவின் பதிலடி</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, செப்டம்பர் 8 முதல் $20 பில்லியன் மதிப்பிலான சில அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d580cbde-68ab-4f97-b0fd-09a7f40ce384/26-6a8cba5ae6e9e.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அமெரிக்கர்கள் கனடாவின் இறையாண்மையை மதித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T22:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-claim-again-us-is-winning-against-iran-1787609656"></link>
            <id>https://ibctamil.com/article/trump-claim-again-us-is-winning-against-iran-1787609656</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தனது ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், குடியரசுக் கட்சியினரின் மன உறுதியைக் குலைப்பதற்காக ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>போலி கருத்துக்கணிப்புகள்</h2><p>

இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளால் வெறித்தனமாகச் செயல்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d0cbe-be18-4d89-bbf0-0e2c651bcfe6/26-6a8cc7a268ee1.webp' /></p><p> இதற்கு முன் கண்டிராத அளவிற்கு அவர்கள் அவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

குடியரசுக் கட்சியினர் வெளியே வந்து வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் மன உறுதி குலைப்பு நடவடிக்கைகள் இவை. </p><p>ஆனால், உண்மையான கருத்துக்கணிப்புகள் நமக்கு சாதகமாக மிகச் சிறப்பாக உள்ளன. 

நமது நாட்டின் மன உறுதியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.</p><p> பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக வீழ்ச்சியின் விளிம்பில் (Death Spiral) இருக்கும் ஈரான் உட்பட, அனைவருக்கும் எதிராக நாம் வெற்றி பெற்று வருகிறோம்”&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T22:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பேரிடி! கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-announced-economic-sanctions-against-iran-1787603118"></link>
            <id>https://ibctamil.com/article/us-announced-economic-sanctions-against-iran-1787603118</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அதற்குத் துணைபுரியும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அதற்குத் துணைபுரியும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.</p><p>

உலகெங்கிலும் உள்ள ஈரானின் நிதித் தொடர்புகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்குவதாகவும், அந்த ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஈரான் அரசு தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்கப் பயன்படுத்தும் டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், வான்வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய ஐந்து முக்கியத் துறைகளைக் குறிவைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அமெரிக்காவின் நிலைப்பாடு</h2><p>
</p><p>
மேலும், சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீதும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a11dd09-1958-49e2-b532-37e9c719a583/26-6a8cac151ec74.webp' /></p><p><i>Image Credit: Bloomberg</i></p><p>

இந்த மோதலில் தெளிவற்ற பகுதிகளில் இயங்குவது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த பெசென்ட், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவிதக் குழப்பமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ஈரானுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பொருளாதார ஈடுபாடும், அதற்குப் பொறுப்பானவர்களை அமெரிக்க அதிகாரத்தின் முழுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T20:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-warning-to-the-us-1787600564"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-warning-to-the-us-1787600564</id>
            <summary type="text">ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் எரிசக்தித் தடைப் புள்ளிகள் மீது பலத்த பதிலடித் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் எரிசக்தித் தடைப் புள்ளிகள் மீது பலத்த பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
குறித்த எச்சரிக்கையை ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வழியாக அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எதிரிகளின் தவறான கணிப்பு</h2><p>
</p><p>
ஈரானின் ஆயுத உற்பத்தி தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் இலக்குகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a204caaf-0eb2-4947-ab56-1e9efa7da794/26-6a8ca1f230b59.webp' /></p><p>

மேலும், ஈரானிய இராணுவத்திடம் குறைந்த அளவிலான ஆயுதக் கையிருப்பே உள்ளது என்ற எதிரிகளின் தவறான கணிப்புக்கு மாறாக, நாட்டின் அதிநவீன மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவிலிருந்து உறவினர் வீடொன்றுக்கு வந்த மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-drunk-chemical-mistaking-it-for-water-1787598051"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-drunk-chemical-mistaking-it-for-water-1787598051</id>
            <summary type="text">கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து திரவமொன்றை குடித்து உயிரிழந்துள்ளார்.</p><p>

குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் மற்றும் மாலையில் வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று அங்கு ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்துள்ளார்.</p><p>

இதனை தொடர்ந்து, குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
பின்னர், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ce647e-3d70-41af-9f02-0e543b4176c7/26-6a8c9689ab44d.webp' /></p><p>இதன்போது, வவுனியாவின் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்கரன் ஹயனிகா என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை கைதி வீட்டிற்கு உயிருடன் வந்ததால் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-who-was-declared-dead-came-back-alive-1787593065"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-who-was-declared-dead-came-back-alive-1787593065</id>
            <summary type="text">கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்கே உயிருடன் திரும்பி வந்த விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொஹோபங்குளத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக நன்னேரியா காவல்துறையினர் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கேட்ட உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக ஒன்றிணைந்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>திகைப்பில் உறவினர்கள்</h2><p>

கிராமம் முழுவதும் இறுதி அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டு, பந்தல்கள் அமைக்கப்பட்டு, தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a70ce782-5e58-45a2-be76-9c48c96d63ae/26-6a8c836506db0.webp' /></p><p>

எனினும், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட கீர்த்திசேன சிறையில் இருந்து இன்றையதினம் விடுவிக்கப்பட்டு, திடீரென உயிருடன் வீட்டிற்குள் நடந்து வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

த</p><p>னக்காகவே நடத்தப்பட்டு வந்த இறுதிச் சடங்கு வீட்டிற்குள் அவர் உயிருடன் நுழைந்ததைக் கண்டு உறவினர்களும் ஊர் மக்களும் பேரதிர்ச்சியும் பெரும் குழப்பமும் அடைந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டண ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கான வழி! வெளியிடப்பட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/way-to-reduce-electricity-price-fluctuations-1787596776"></link>
            <id>https://ibctamil.com/article/way-to-reduce-electricity-price-fluctuations-1787596776</id>
            <summary type="text">இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் மின் கட்டணங்கள் அடிக்கடி மாறுபடுவதற்கு அனல் மின் உற்பத்திக்காகும் அதிக செலவே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே, தொடர்ந்து அனல் மின்சாரத்தையே நம்பியிருக்காமல் சூரிய சக்தி உள்ளிட்ட கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நாடு அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>மின் உற்பத்திச் செலவு</h2><p>
</p><p>
மேலும், அனல் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab512068-2454-4fd4-8c32-e47b73d6ed28/26-6a8c9186de15a.webp' /></p><p> </p><p>

உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இறக்குமதி எரிபொருள் செலவையும், அதன் மூலம் மின் உற்பத்திச் செலவையும் நேரடியாகப் பாதிக்கின்றன.</p><p>

எனவே, நாட்டின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரிப்பது உற்பத்திச் செலவு மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, மின் கட்டணங்களில் ஒரு நிலையான தன்மையை உறுதிசெய்ய உதவும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T18:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை அவதிக்கு உள்ளாக்கிய அரச பேருந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-suffer-due-to-bus-competition-in-jaffna-1787591591"></link>
            <id>https://ibctamil.com/article/students-suffer-due-to-bus-competition-in-jaffna-1787591591</id>
            <summary type="text">

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கேவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
</p><p>
ஆனால் இன்றைய தினம் குறித்த பேருந்தானது வழமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p></p><h2>மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்</h2><p>
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை என்பவற்றால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba7d3b-c90d-43e8-ab56-6199e6fdfc01/26-6a8c7e5d6021f.webp' /></p><p>

இந்நிலையில், இன்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T17:26:06+00:00</updated>
        </entry>
    </feed>
