<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-16T08:15:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மின்னல் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-severe-lightning-1789544573"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-severe-lightning-1789544573</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த மின்னலு்ககான எச்சரிக்கை</h2><p>

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942826b7-5733-444d-934b-5ffe35cfed96/26-6aaa4c3a1172b.webp' /></p><p>

இன்று (16.09.2026) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:59:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/value-of-the-rupee-against-the-dollar-1789542164"></link>
            <id>https://ibctamil.com/article/value-of-the-rupee-against-the-dollar-1789542164</id>
            <summary type="text">செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயைத் தாண்டியுள்ளது.</p><p>

சேலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.15 ரூபாயிலிருந்து 325.75 ரூபாயாகவும், விற்பனை விலை 334.40 ரூபாயிலிருந்து 335.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>டொலரின் கொள்வனவு</h2><p>
</p><p>
NDB வங்கியில் கொள்வனவு விலை 325.00 ரூபாயிலிருந்து 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339d94be-3598-49b3-ba3c-bbe0140af9b6/26-6aaa43abc12a2.webp' /></p><p>
</p><p>
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 325.93 ரூபாயிலிருந்து 327.91 ரூபாயாகவும், விற்பனை விலை 334.01 ரூபாயிலிருந்து 336.04 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p>

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 323.35 ரூபாயிலிருந்து 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 333.25 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p><p>

சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 326.00 ரூபாயிலிருந்து 328.00 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCIDயின் அழைப்பாணையைப் புறக்கணித்த ஷிரந்தி : குற்றச்சாட்டை மறுக்கும் ராஜபக்ச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-rejects-shiranthi-ignored-fcid-summons-1789540570"></link>
            <id>https://ibctamil.com/article/family-rejects-shiranthi-ignored-fcid-summons-1789540570</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ராஜபக்ச குடும்பம் நிராகரித்துள்ளது.</p><p>ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாடு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது.</p><p>அதன்படி, குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று குறிப்பிட்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்ட கடிதம்&nbsp;</h2><p>குடும்ப உறுப்பினர் தெரிவித்ததாவது, ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152604c8-98ac-494c-baef-8ed2dc4bd953/26-6aaa4216c659f.webp' /></p><p>மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் கூறினார்.</p><p></p><h2>அழைப்பாணை அனுப்பப்படவில்லை</h2><p>
</p><p>
 

முன்னதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb827ba-8a95-49e8-94a3-1cb9dc801fd5/26-6aaa42177d4a4.webp' /></p><p>இந்தநிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accusation-of-insulting-islam-court-issues-order-1789540202"></link>
            <id>https://ibctamil.com/article/accusation-of-insulting-islam-court-issues-order-1789540202</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. </p><p>இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று (16.09.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>விசாரணைகளின் முடிவில் குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
இதன்போது, வழக்கின் பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f3e7b8-ddb2-4f67-9b31-331deea53280/26-6aaa3daba48aa.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் நடந்த தியாக யாகம் : பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-journey-of-sacrifice-1789538593"></link>
            <id>https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-journey-of-sacrifice-1789538593</id>
            <summary type="text">1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்க உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார்.
</p><p>

அன்றைய காலகட்டத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகால சட்டத்தை நீக்குதல், ஊர்காவல் படையினரின் ஆயுதக் களைவு மற்றும் காவல் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் ஆகிய ஐந்தம்ச கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.</p><p>
இந்த உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் “எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன். அதுவே எனது இறுதி ஆசை“ என்று தியாக தீபம் ஆற்றிய உரை அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.</p><p>அத்துடன் “பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்“ என்ற வாசகம் 1987ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஈழத்தமிழினம் சார்ந்த பசியோடு தான் தியாக தீபம் திலீபன் இருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.&nbsp;</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ayAn3flXxYM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர் முற்றாக வற்றச் செய்யப்படவுள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கம்: வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/polgolla-reservoir-which-is-set-completely-drained-1789538274"></link>
            <id>https://ibctamil.com/article/polgolla-reservoir-which-is-set-completely-drained-1789538274</id>
            <summary type="text">செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும் என நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
</p><p>
 

எல் நினோ (El Niño) காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

 

நீர்த்தேக்கத்தின் மதகுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு இரண்டரை நாட்களுக்கு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.</p><p></p><h2>எல் நினோ</h2><p>

 

இதனால், பொல்கொல்ல மற்றும் பாலகொல்ல ஆகிய பகுதிகளிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596f5bf6-169f-4163-a11d-db298c5d2f9b/26-6aaa36ef2a5cb.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-case-fixed-for-oct28-1789537621"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-case-fixed-for-oct28-1789537621</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 

இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>உத்தரவிட்ட நீதவான்&nbsp;</h2><p>இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40bb2870-3bec-4d53-b21d-fdb54a8c75da/26-6aaa34ada6568.webp' /></p><p>
 

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
</p><p>
 

எனினும், இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T06:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452</id>
            <summary type="text">கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>கோட்டை நீதவான் நீதிமன்றம்</h2><p>இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8914347-9d7c-4b3a-945b-c5bf9b61d736/26-6aaa28e5b7e1c.webp' /></p><p>இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில்,நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T05:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-genuine-tribute-to-the-beacon-of-sacrifice-1789533492"></link>
            <id>https://ibctamil.com/article/a-genuine-tribute-to-the-beacon-of-sacrifice-1789533492</id>
            <summary type="text">மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிகமும் விரும்பினார். </p><p>இன இலட்சத்தியத்திலும் சமூக வாழ்விலும் தமிழச் சமூகம் விழிப்பும் அறிவும் கொண்டு எழுவதே தமிழர் தேசத்திற்கான அடிப்படை என்ற கனவைக் கொண்டிருந்தார் என்பதை அவரது உரைகளில் உணர முடிகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் துவங்கியுள்ளன.</p><p></p><h3>தியாக தீபத்தின் நினைவுநாட்கள்</h3><p>2009இற்கு முந்தைய காலத்தில் தியாக தீபத்தின் நினைவு நாட்கள் என்றால் ஈழம் அவரது நினைவுகளால் மூழ்கியிருக்கும். கடுமையான போர், அலைச்சல், பட்டினி வாழ்வு பிய்ந்துபோன குடிசை என்ற நிலைகளிலும் வீட்டின் முன்னால் திலீபன் அவர்களின் நினைவுப்படம் வைக்கப்பட்டு பூமாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d551f4d2-3cf3-4889-bc41-e82ccb605a9b/26-6aaa25a5124ae.webp' /></p><p> ஈழத் தெருவெங்கும் திலீபனின் முகங்களால், சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிறைந்திருக்கும். 2009இற்குப் பின்னரான காலத்தில் தியாக தீபத்தின் நினைவுநாட்கள் புலம்பெயர் தேசங்களிலும் இணையங்களிலுமே அனுஷ்டிக்கப்படுவதுண்டு. </p><p>இப்போது ஈழ நிலத்தில் திலீபன் அவர்களின் உருவச் சிலை&nbsp;நிமிர்ந்திருக்கிறது. அவர் முன்னால் தீப ஒளிகளை இன்றைய தலைமுறையினர் ஏற்றுகின்றனர்.</p><h2>சிங்களக் கலைஞர்</h2><p>தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபி எழுச்சிக் கோலம் பூணத் தொடங்கியுள்ளது. அங்கே சிங்கள இளைஞர்களும் மக்களும்கூட சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc27a60-d00a-41e3-8cd1-8896b946fa67/26-6aaa25a5bb110.webp' /></p><p> சிங்கள மக்களும் சிங்களக் கலைஞர்களும் தியாக தீபம் திலீபனை பெருமதிப்போடு நினைவு கொள்வதுதான் தியாக தீபத்தின் மகத்துவமாகும். சிங்களத்திலும் தியாக தீபம் பற்றிய பாடல் பெருமையுடன் நினைவுகொண்டு பாடப்படுகிறது.</p><p>நம் எழுத்துக்களால், கவிதைகளால், பாடல்களால் நினைவுகூரப்படும் தியாக தீபத்தின் நினைவுநாளை, அவர் எந்த நிலத்திற்காக, எந்த நிலத்தின் சனங்களுக்காக துளி நீரும் அருந்தால் 12 நாட்கள் நோன்பிருந்து, உயிர் துறந்தாரோ, அந்த நிலத்தில், அந்த நிலத்தின் சனங்களால் அவரது நினைவுநாளைக் கொண்டாட முடியாதிருந்த ஒரு காலத்தை எதிர்கொண்டோம்.</p><p> சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனாலும் &nbsp;எதனாலும் அழிக்க முடியாத &nbsp;திலீபனின் நினைவுகளையும் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.</p><h2>உண்ணா நோன்பு</h2><p>இணையத்தில் தியாக தீபம் போன்றவர்களின் நினைவுநாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, ஈழ விடுதலை மறுப்பாளர்களும் சிங்கள அரசின் கைக்கூலிகளும் அதனை இணையப் போராளிகளின் இயலாமை என கிண்டல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12318e2c-9c7a-45cf-b2ca-47480423b574/26-6aaa25a67775f.webp' /></p><p> </p><p>பலம் மிக்க நவீன ஊடகமான இணையத்தில் நினைகூரப்பட்ட தியாக தீபத்தின் நினைவுநாட்களை, இப்போது ஈழ நிலத்தில் எமது மக்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன் ஒருபடி கடந்து சிங்கள மக்களும் திலீபன் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர்.</p><p> 2009 இனப்படுகொலைப் போரின் பின்னரான இன்றைய காலத்தில், நம்பிக்கையற்ற அரசியல் சூழல் நிலவும் இன்றைய காலத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்வதும் அவரது கனவை நினைகூர்வதும் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது.</p><p>இன்றைய காலத்தில், திலீபன் அவர்களை நினைகூருகின்றபோது இரண்டு விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது, அல்லது பின்பற்ற வேண்டியுள்ளது. ஒன்று, தன்னலமற்ற அரசியல் எமக்கு அவசியமானது.</p><p> மற்றையது, திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மெய்யான மரியாதை. அதுவே அவரை நினைவுகூர்வதற்கு அர்த்தமானதாயிருக்கும்.</p><p> 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையற்ற, சூன்யமான அரசியல் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர், எடுத்துரைத்தனர்.</p><h3>இனத்திற்கான அர்ப்பணிப்பு</h3><p>&nbsp;தனிப்பட்ட இருப்புக்களின் மோதல் களமாகியுள்ள தமிழ் அரசியல் சூழலில் அறம் சாகடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f8edc-030b-4494-a350-c0b55e5df763/26-6aaa25a73cd63.webp' /></p><p> </p><p>ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் போராட்டத்தை தமிழ் தலைமைகள் கையில் எடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் துகள் துகளாய் சிதறி இருக்கிறோம். </p><p>நேர்மையான அணுகுமுறை, உண்மையான பேச்சு, இனத்திற்கான அர்ப்பணிப்பு, ஒற்றுமைப்பட்ட குரல் என்று எதுவும் இல்லாமல் மாறிமாறி ஒருவரை ஒருவர் அழிக்கும் அரசியலில் ஈடுப்பட்டு ஈழத் தமிழ் மக்களை இப்போது தமிழ் அரசியல் சூழலே இனவழிப்பு செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.</p><p>அந்தப் போராட்டத்தை ஒரு அசியல் போராட்டமாக, ஒரு அரசியல் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திலீபன் போன்ற உன்னதமான போராளிகள் சுமந்த கனவை, எடுத்து வந்த ஆயுதத்தை தொடர்ந்து ஏந்திச் செல்வதுதான் இன்றைய காலத்தின் அவசியமாகும். </p><p>தன்னலமற்ற, ஆழமான புரிதல் கொண்ட, தமிழ் ஈழ நிலத்தின் ஆன்மாவை நேசிக்கும் இளைஞர்களும் அரசியல் தலைமைகளுமே எமக்கு அவசியமானவை. </p><p>திலீபன் போன்ற போராளிகளை நினைவுகூரும்போது, நம்மையும் நமது நிலத்தின் இன்றைய சூழலையும் குறித்து ஆழமாக சிந்திப்பது, அதன் நிமர்வுக்காய் நம் பங்களிப்பை செய்வது என்பனவே அவருக்குச் செய்யும் அஞ்சலியும் அவரை நினைவுகூர்வதன் அர்த்தமுமாக இருக்கும்.</p><p>தமிழ் மக்களின் கோரிக்கையை - அபிலாசையை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு, எமது மக்களை தொடர்ந்தும் அழித் தொழிக்கும் ஆயுதம் அல்லது யுத்தமாகும். அதுவே இப்போதும் நிகழ்கிறது. </p><p>எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமையைப் பறிக்காத, அவர்களை அழித்தொழிக்க முடியாத தீர்வொன்றே எமக்கு வேண்டும். அதற்காகவே திலீபன் போன்றவர்கள் கனவையும் பசியையும் சுமந்தார்கள்.</p><p> எமது மக்கள் எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவ ஈழ மண்ணில் வாழ வேண்டும் என்பதுவே திலீபன் அவர்களின் கனவு.</p><p> &nbsp;தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் துவங்கும் இத் தருணத்தில் அவருக்கான மெய்யான அஞ்சலி குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். திலீபன்; எந்தக் காலத்திலும் அணையாத ஒளி. அந்த ஒளியிற்கு நாம் ஏற்றும் தீபம் உண்மையும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p><p>
</p><p>

</p>]]></content>
            <updated>2026-09-16T05:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-leaves-for-singapore-1789532914"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-leaves-for-singapore-1789532914</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான&amp;nbsp;ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான&nbsp;ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு</h2><p>உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (15) கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d825d0d5-d1a2-4ced-bc90-624d74db45f9/26-6aaa1e2eb81da.webp' /></p><p>
</p><p>


பின்னர், இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து அவர் நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்தநிலையில், ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jP3ECwPjlFM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படுகொலை சதித்திட்டம் முறியடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-foil-assassination-plot-linked-to-drug-bust-1789529724"></link>
            <id>https://ibctamil.com/article/police-foil-assassination-plot-linked-to-drug-bust-1789529724</id>
            <summary type="text">சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேகநபர்களை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிரிந்த, அந்தகல்வெல்ல கடற்பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><h2>காவல்துறை அத்தியட்சகரின் வீடு&nbsp;</h2><p>காவல்துறை உளவாளி ஒருவர் வழங்கிய துல்லியமான புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe9956a-ecff-4cad-88c8-e6482ccbdda9/26-6aaa17081595f.webp' /></p><p>
</p><p>இதற்கு பழிவாங்கும் வகையில், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘ரூபன்’ மற்றும் ‘அங்கொட பிரியங்கர’ என அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள், குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

அவரைக் கொலை செய்த பின்னர், தலையை துண்டித்து உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் வீட்டுக்கு முன்பாக விட்டுச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>முதற்கட்ட கொலைத் திட்டம் தோல்வியடைந்த பின்னர், கடந்த 5ஆம் திகதி காவல்துறை ஜீப் வாகனத்தைப் போன்ற போலி ஜீப் ஒன்றில் வந்த குழுவினர், குறித்த உளவாளியை வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.</p><p></p><h2>வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது</h2><p>
குறித்த குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனம், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள ஒரு வாகன திருத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வருகை தந்ததாகக் கூறப்படும் இரண்டு கூலிக் கொலையாளிகள், செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead8ba31-0e9a-45ec-9bd3-4d6d10b7dd06/26-6aaa185bab960.webp' /></p><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 41 வயதான மதுக சாமர எனப்படும் மதுவா மற்றும் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலின்&nbsp; என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
<br></p><p>அத்துடன் குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்து தலையை துண்டிப்பதற்காக தயாராக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு மன்னா கத்திகளும், போதைப்பொருள் தொகையொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:23:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலிப் பத்திரங்களைத் தயாரித்து மோசடி செய்த சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-creating-1789529669"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-creating-1789529669</id>
            <summary type="text">கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (15.09.2026) களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
</p><p>
விசாரணைகளில், குறித்த சொத்து தொடர்பில் சந்தேகநபர் போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளின்போதும் சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7b8ba18-9916-429f-9d4d-a2d9fac0e56e/26-6aaa16afdf08f.webp' /></p><p>

மேலும், குறித்த சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை விலகல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/instability-in-the-lower-atmosphere-near-sri-lanka-1789527889"></link>
            <id>https://ibctamil.com/article/instability-in-the-lower-atmosphere-near-sri-lanka-1789527889</id>
            <summary type="text">இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதனால்&amp;nbsp; இதன் தாக்கமானது பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதனால்&nbsp; இதன் தாக்கமானது படிப்படியாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>
</p><p>
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9798d3-1170-4b3f-9504-0a52d4aedfac/26-6aaa0c7589fb9.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்</h2><p>

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc2dab6-df6e-44bc-a171-f3aacc66fd3f/26-6aaa0c7644023.webp' /></p><p>காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T03:25:08+00:00</updated>
        </entry>
    </feed>
