<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-27T18:52:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-details-about-the-body-of-chinese-national-1785175490"></link>
            <id>https://ibctamil.com/article/new-details-about-the-body-of-chinese-national-1785175490</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.</p><p> 

பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் சம்பந்தப்பட்ட அந்த சிக்கலான விவகாரத்தின் விசாரணைகளில் புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>

அந்தவகையில், கொலை செய்யப்பட்ட சீன நாட்டவர், ஏப்ரல் 7 ஆம் திகதி ஒரு குழுவினருடன் கம்போடியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>போலி கடவுச்சீட்டு</h2><p>

அதன்போது, அவர் சுரினாம் குடியரசினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec0eb579-5544-46c9-a333-8e14c676f658/26-6a67a2cbeb445.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இறந்தவருடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பெரும் தொகைகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த நிதிகள் தொடர்பான ஒரு தகராறுடன் இந்தக் கொலை தொடர்புடையதாக கருதப்படுகிறது.</p><h2>ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் </h2><p>

ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட சீன நாட்டவர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிக் குற்றச் செயல்பாட்டின் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பதை இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f788e99f-32d1-490e-81dc-9262b70fa1aa/26-6a67a2cb2fda8.webp' /></p><p>

இதற்கிடையில், கொல்லப்பட்டவரின் சாரதி, சமையல்காரர் மற்றும் காதலி ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் எடுக்கப்பட்டு, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
</p><p>
இதன்படி, குறித்த விவகாரத்தின் பல்வேறு விடயங்களை விசாரிப்பதற்காக ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T18:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நான்கு கோடி பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-40-million-people-warned-1785175728"></link>
            <id>https://ibctamil.com/article/america-40-million-people-warned-1785175728</id>
            <summary type="text">அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் &#039;ஹீட் டோம்&#039; எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் 'ஹீட் டோம்' எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்கு கோடி மக்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களான மின்னசோட்டா முதல் மிசிசிபி வரையிலும், மேற்கில் நெவேடா மற்றும் தெற்கு கலிபோர்னியா வரையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.</p><h2>வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை</h2><p>&nbsp;காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை இணைத்து கணக்கிடப்படும் 'ஹீட் இண்டெக்ஸ்' அளவு பல இடங்களில் 38 டிகிரி செல்ஷியசைத் தாண்டி பதிவாகி மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038e7b37-b475-4121-99c5-c57b1074dc74/26-6a67a15ba1b5f.webp' /></p><p>
</p><p>



ரேபிட் சிட்டியில் வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மின்னசோட்டாவில் வெப்பத்தின் கொடூரம் தாங்க முடியாமல் புகழ்பெற்ற குதிரைப் பந்தயங்கள் உட்பட பல வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்</h2><p>


அமெரிக்க தேசிய வானிலை மையம் அளித்துள்ள எச்சரிக்கையில், வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என, தெரிவித்துள்ளது. திடீரென இந்த அளவுக்கு வெயில் அதிகரிக்க, 'ஹீட் டோம்' எனப்படும் உயர் அழுத்த வெப்ப மண்டலம் தான் காரணம் என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06fd8bf1-3153-4213-8abb-ac7b29c77238/26-6a67a15aec0c6.webp' /></p><p>


இது பூமியின் மேற்பரப்பில் சூடான காற்றை வெளியேற விடாமல் ஒரு கூம்பு போல அடைத்து வைத்துக் கொள்கிறது. இதனால் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் தடுத்து நிறுத்தி, மக்களை புழுக்கத்தில் தவிக்க வைக்கிறது.


இதனால், 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் முடங்கியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T18:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-urban-council-deputy-chairman-1785173801"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-urban-council-deputy-chairman-1785173801</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(28) நடைபெறவுள்ளது.

குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(28) நடைபெறவுள்ளது.
</p><p>
குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்ததை அடுத்து, நாளைய தினம் உப தவிசாளர் தெரிவு திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.</p><p>

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், சபையில் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் இன்றையதினம்(27) திங்கட்கிழமை எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><h2>வர்த்தமானி<span style="color: inherit; font-size: 1.75rem;">அறிவித்தல்</span></h2><p>
</p><p> 
இதன்போது, மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் தெரிவை, இவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை நடாத்த வேண்டாம் எனக் கட்டளையிடுமாறு மன்றிலே கோரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da02c13-4469-4580-985d-aaa958105e40/26-6a67982996a7c.webp' /></p><p>

அதன் போது, முதலாம் இரண்டாம் எதிர்மனுதாரர்களான ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பாக மன்றில் தோன்றிய அரச சட்டவாதி, உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரச செலவிலே வர்த்தமானி அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையால், அதனை நிறுத்த முடியாது என வாதிட்டார்.</p><p>
இரு தரப்பின் வாதங்களை அடுத்து , உபதவிசாளர் தெரிவுக்கு தடைவிதிக்க மன்று மறுத்தமையால், நாளைய தினம் திட்டமிட்டபடி உப தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T17:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் கோரி வெடித்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-kumbabhishekam-at-sitthandi-murugan-kovil-1785171955"></link>
            <id>https://ibctamil.com/article/protest-kumbabhishekam-at-sitthandi-murugan-kovil-1785171955</id>
            <summary type="text">


சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறாத நிலையில், ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>


சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறாத நிலையில், ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
ஆலயத்திற்கு முன்னால் இன்று(27) இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வருடாந்த திருவிழா வேண்டாம் கும்பாபிஷேகம் வேண்டும் என கோரி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

இளம் சைவ மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டினையடுத்து ஆலயத்தின் முன்னால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>ஆர்ப்பாட்ட&nbsp;சுலோகங்கள் </h2><p>
</p><p>
இதன்போது, இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள், வெளிப்படை தன்மையை பேணி ஒற்றுமையாக செயல்படுங்கள், வேண்டாம் வேண்டாம் ஊரை ஏமாற்றாதீர்கள், முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ? கடும் சொல் பேசாத பூட்டிய அறைக்குள் கூட்டமா?, இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள் மக்களே விழித்தெழு என சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137123e0-bd71-4ff7-bf4e-3e7ca34de02d/26-6a67941b9684e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயில் 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்து சமய ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும்.</p><p> 

எனினும், தற்போது 14 வருடங்கள் கடந்தும் பாலஸ்தாபனம் செய்து கோவிலில் திருத்த பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table></h5><p>
</p>]]></content>
            <updated>2026-07-27T17:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போர் : 600 ற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-than-600-us-military-personnel-injured-in-war-1785168804"></link>
            <id>https://ibctamil.com/article/more-than-600-us-military-personnel-injured-in-war-1785168804</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த பெப்ரவரியில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என பென்டகன் வெளியிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த பெப்ரவரியில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என பென்டகன் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
காயமடைந்தவர்களில், 417 பேர் 'ஒபரேஷன் எபிக் ஃபியூரி'யிலும், 207 பேர் 'வெளிநாட்டு நடவடிக்கைகள்' கீழும் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தனது தரவுகளைத் திருத்தியுள்ள&nbsp;பென்டகன்</h2><p>&nbsp;ஏப்ரலில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் தொடர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93028f68-3974-4ed3-9f13-3edd273fd571/26-6a678e302c37b.webp' /></p><p>பென்டகன் சமீபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தனது தரவுகளைத் திருத்தியுள்ளது, இது வெளிப்படைத்தன்மையை சமரசம் செய்வதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ட்ரம்ப் நிர்வாகம் மீது விமர்சனம்</h2><p>முன்னாள் ஜெனரல்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள்,ட்ரம்ப் நிர்வாகம் போர் குறித்து நேர்மையாக இல்லை என்று கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6d8268e-cd2c-43a7-9241-27294e00e35a/26-6a678e2f79b2e.webp' /></p><p>
</p><p>
ஜூலை மாத நடுப்பகுதியில், ஜோர்டான் மற்றும் ஈராக்கில் உள்ள ஒரு தளத்தின் மீதான தாக்குதல்களில் நான்கு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டிரம்ப் போர் நிறுத்தம் "இறுதியானது" என்று அறிவித்தார். அன்று முதல், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
</p><p>
தரவு மாற்றங்கள் என்பவை வெறும் "தற்காலிக தரவு இடையூறுகள்" என்றும், அவை சம்பந்தப்பட்ட முகமைகளுடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T17:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் யாழில் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/discussion-jaffna-relatives-forcibly-disappeared-1785166188"></link>
            <id>https://ibctamil.com/article/discussion-jaffna-relatives-forcibly-disappeared-1785166188</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எதிர்வரும் ஓகஸ்ட் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.</p><p>

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த
"வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம்" ஏற்பாடு செய்துள்ளது.</p><h2>சர்வதேச விசாரணையேதேவை என்பதை வலியுறுத்த மாநாடு</h2><p>இலங்கை அரசிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது
நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எவ்வித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை
என்பதையும், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும்
வகையில் இம்மாநாடு அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c25e1e-0539-4f03-9b99-0476427bee93/26-6a677da481d9f.webp' /></p><h2>மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு&nbsp;</h2><p>இம்மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்
நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f24f6b-9c83-4e1e-b64b-7796a24ec4fd/26-6a677da588836.webp' /></p><p>குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத் திரு வேலன் சுவாமிகள்,
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராஜா நிரோஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T15:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதல் அச்சம் : விமானத்தை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-changes-plane-due-to-iran-attack-fears-1785164423"></link>
            <id>https://ibctamil.com/article/trump-changes-plane-due-to-iran-attack-fears-1785164423</id>
            <summary type="text">ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருதாவது, </p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,துருக்கியில் நடைபெற்ற NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.இதன்போது ஈரான் படைகள் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தகவல் பெற்றது. இதனால், அவர் பயணித்த புதிய Boeing 747-8 விமானத்திலிருந்து பழைய Air Force One-க்கு மாற்றப்பட்டார்.</p><h2>அமெரிக்காவிற்கு கத்தார் வழங்கிய விமானம்</h2><p>இந்த Boeing 747-8 விமானத்தை கத்தார் அரசு அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதில் பழைய Air Force One-ல் உள்ள மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால், ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f1c7aa3-21f4-44ef-891b-6724917ed848/26-6a677644397ea.webp' /></p><p>

ட்ரம்ப் இந்த மாற்றத்தை “பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க படையினருக்கு புதிய விமானத்தை காட்டுவதற்காக” என கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் பாதுகாப்பு காரணமே உண்மையான காரணம் என உறுதிப்படுத்துகின்றன.</p><p></p><h2>&nbsp;புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடு</h2><p>
</p><p>
இந்த சம்பவம், புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் கூட, “விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு இல்லை, ஆனால் விரைவில் மேம்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dac8cd7-d41d-4c4d-8001-b0b4c10c8b21/26-6a677644dbb83.webp' /></p><p> </p><p>வெள்ளை மாளிகை, இந்த புதிய விமானம் பாதுகாப்பானது என்றாலும், கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்க ரகசிய சேவை பணிப்பாளர், “அமெரிக்க தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன” என எச்சரித்துள்ளார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T15:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extension-of-retirement-age-for-judges-1785162216"></link>
            <id>https://ibctamil.com/article/extension-of-retirement-age-for-judges-1785162216</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டம்</h2><p>&nbsp;அதன்படி, தற்போது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6636339c-0112-4f36-a243-8b67215dabde/26-6a676d6a4b785.webp' /></p><p>
</p><p>

இதேவேளை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் தாக்குதல் நிறுத்தம் : கச்சாய் எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-price-dives-as-us-and-iran-pause-attacks-1785160051"></link>
            <id>https://ibctamil.com/article/oil-price-dives-as-us-and-iran-pause-attacks-1785160051</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படுவது, மோதலுக்கு ஒரு தீர்வைக் காண உதவும் என்ற நம்பிக்கையில் உலகளவில் எண்ணெய் விலை கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படுவது, மோதலுக்கு ஒரு தீர்வைக் காண உதவும் என்ற நம்பிக்கையில் உலகளவில் எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
</p><p>
எண்ணெய்க்கான உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு கட்டத்தில் 9%க்கும் மேல் சரிந்து ஒரு பீப்பாய் 88 டொலருக்கும் கீழே சென்றது. கடந்த வாரம் 100 டொலருக்கும் மேல் உயர்ந்திருந்த நிலையில், இது ஒரு சடுதியான மாற்றத்தைக் குறிக்கிறது.</p><h2>&nbsp;தாக்குதல்கள் நிறுத்தம்</h2><p>"பேச்சுவார்த்தைகளுக்குச் சிறிது அவகாசம் அளிப்பதற்காக" ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் கூறியதைத் தொடர்ந்து இந்தச் சரிவு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f0b411-c2bc-4d97-8a0c-70ac5f814524/26-6a6764b6b6455.webp' /></p><p>&nbsp;பதிலடியாக, தெஹ்ரான் அப்பகுதியில் "பதிலடி" தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.</p><p></p><h2>போர் வெடித்ததால் எண்ணெய் விலையில் சடுதியான உயர்வு</h2><p>&nbsp;ஈரான் போர் வெடித்ததால் எண்ணெய் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டது. ஏனெனில், இந்த மோதல், உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கொண்டு செல்லும் முக்கிய கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு வழிவகுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8678a210-353f-4b32-a45f-f56e6c750752/26-6a6764b7ba650.webp' /></p><p>&nbsp;இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானும் அமெரிக்காவும் ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, ​​எண்ணெயின் விலை போருக்கு முந்தைய நிலைகளான ஒரு பீப்பாய் சுமார் 70 டொலர் என்ற அளவிற்கு மீண்டும் சரிந்தது.</p><p>&nbsp;
இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் முறிந்ததால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்கள் மீண்டும் மேலெழும்பி, எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது.</p><p>

கடந்த வாரம், மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் 100 டொலரை எட்டியது. ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் செங்கடலில் எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதால் கூடுதல் கவலைகள் எழுந்தன. இந்தத் தாக்குதல், சவூதி அரேபியா ஹோர்முஸ் நீரிணையை தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தி வந்த ஒரு முக்கிய ஏற்றுமதிப் பாதைக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-officials-visit-mannar-1785157626"></link>
            <id>https://ibctamil.com/article/us-officials-visit-mannar-1785157626</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States)இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States)இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை
மன்னாருக்கு விஜயம் செய்துள்ள நிலையில் மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.</p><p>மன்னாரிலுள்ள (மெசிடோ) நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடலில்
ஈடுபட்டனர்.</p><h2>மன்னார் மாவட்ட சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை</h2><p>
</p><p>
இக்கலந்துரையாடலில் , வடக்கு மற்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின்
தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள்
 ஆர்வத்துடன் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed6e416-9179-4ebc-84cf-89a27403c432/26-6a675c9d99f20.webp' /></p><p>மேலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக
நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால
அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான
கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.</p><p></p><h2>&nbsp;மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்கொள்ளும்&nbsp; சவால்கள்</h2><p>அதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும்
எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு,
இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித
உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள்
சிவில் சமூக பிரதி நிதிகளால் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef37f42-fac2-4fd8-bba6-990fb52a46f2/26-6a675c9e4a7ce.webp' /></p><p>பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள்,
களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக
பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.</p><p>&nbsp;அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு
மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
</p><p>
இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில்
சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள்,
ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான
பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வருவது கடினமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-is-difficult-to-bring-back-to-sri-lanka-1785153948"></link>
            <id>https://ibctamil.com/article/basil-is-difficult-to-bring-back-to-sri-lanka-1785153948</id>
            <summary type="text">மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>
பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவர் இவ்வாறு கூறினார்.</p><h2>அது எளிதான காரியம் அல்ல</h2><p>பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியம் என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் அலி சப்ரி மேலும் கூறினார். இதனை அமெரிக்க நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea04301-f50e-4df8-897f-df15e124688c/26-6a67515266fcf.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவரவும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.</p><p>

மாத்தறைப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை முறைகேடாகச் சம்பாதித்த பணத்தில் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாத்தறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராகத் தவறியதையடுத்து, பசில் ராஜபக்சவுக்கு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:58:51+00:00</updated>
        </entry>
    </feed>
