<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T14:49:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவில் பெரும் தாக்குதலை நடத்திய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530</id>
            <summary type="text">&amp;nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

இந்தத் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தாக்குதல் நேற்று இரவு (15) முதல் இன்று காலை (16) 6.30 மணி வரை நடைபெற்றது என்றும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு 201 ஆளில்லா விமானங்களை அழித்தது என்றும் அவர் கூறினார்.</p><h2>மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல்</h2><p>மொஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec543-84ad-41e5-9c6e-ec7495c95b89/26-6a81b5e30aa48.webp' /></p><p> </p><p>ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மூன்று நகரங்கள் மற்றும் ஒன்பது மாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரஷ்ய இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! பயணிகள் கடலில் தத்தளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827</id>
            <summary type="text">குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த படகானது இன்று பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகாட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.</p><h2>இடைநடுவில் கவிழ்ந்தது படகு</h2><p>இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef7245b-301e-4f99-832c-17dc4c3c146f/26-6a81ca4d38c15.webp' /></p><p>

இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினர் மற்றும்,
கடற்றொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப்
பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​</p><p>இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் நாட்டப்பட்டது சேவல் கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
</p><h2>பக்தர்களின் கவனத்தை ஈர்த்த&nbsp;நிகழ்வு </h2><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19962acf-edd9-4852-90ad-1e0d5d881ad7/26-6a81c288c90f0.webp' /></p><p>
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-rider-kills-father-and-son-1786886143"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-rider-kills-father-and-son-1786886143</id>
            <summary type="text">&amp;nbsp;மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்பிட்டிய காவல்தறையினர் தெரிவித்தனர்
</p><p>
மகனுடன் தேவையான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பு</h2><p>அவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாததால், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கல்பிட்டிய காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09fddf91-e2a2-4a07-94a6-b6c484061920/26-6a81bd818c3db.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர்கள் மீனவரான துஷ்மந்த ரோஹன மற்றும் அவரது ஆறு வயது பாடசாலை மாணவனான ரவீன் கனிஷ்கா ஆவர். அந்தச் சிறுவன் கந்தகுலியாவில் உள்ள புனித செபாஸ்டியன் பாடசாலையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T13:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கொடியேற்றம் : இன்று கொண்டு வரப்பட்டது நல்லூரான் கொடிச்சீலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kovil-festivel-1786882214"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kovil-festivel-1786882214</id>
            <summary type="text">இன்று(16) காலை 10 மணியளவில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப்
பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று(16) காலை 10 மணியளவில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப்
பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி,
கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து எடுத்துவரப்பட்டது.</p><p>கல்வியன்காட்டில் உள்ள இல்லத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட
பின்னர், கொடிச்சீலை பக்திபூர்வமாக தலையில் சுமந்து சட்டநாதர் வீதியில்
அமைந்துள்ள வேல் முருகன் மடத்திற்கு கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது</p><h2>&nbsp;பாரம்பரியத்தின் அழகிய அடையாளம்</h2><p>
</p><p>அங்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாரம்பரிய முறையில்
சிறிய தேரில் கொடிச்சீலை வைத்து, பக்தர்கள் புடைசூழ நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922b2f8-14b0-4caa-a306-76954197a5e4/26-6a81a8a8eeed8.webp' /></p><p>
தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் இந்த மரபு, நல்லூர் கந்தசுவாமி ஆலய
மகோற்சவத்துடன் இணைந்துள்ள பண்பாட்டு, ஆன்மிக மற்றும் பாரம்பரியத்தின் அழகிய
அடையாளமாக திகழ்கிறது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனானுக்கான ஹிஸ்புல்லா தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-army-killed-senior-hezbollah-commander-1786880385"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-army-killed-senior-hezbollah-commander-1786880385</id>
            <summary type="text">&amp;nbsp;தெற்கு லெபனானின் அன்சார் மாநகராட்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில், லெபனானுக்கான ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான அபு ஹசன் அலாவைக் கொன்றதாக இஸ்ரேலிய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெற்கு லெபனானின் அன்சார் மாநகராட்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில், லெபனானுக்கான ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான அபு ஹசன் அலாவைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
</p><p>
 அலா "ஹிஸ்புல்லாவின் 'பட்டர் யூனிட்'('Badder Unit'" )-இல் ஒரு மூத்த தளபதியாக இருந்தார்" என்றும், ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைமையகத்தை குறிவைத்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்றும், "பாதுகாப்பு வலயத்தில்" இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சமூக ஊடக தளமான X-இல் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
</p><h2>ஹிஸ்புல்லா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை</h2><p>இஸ்ரேலிய அறிக்கை குறித்து ஹிஸ்புல்லா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b869986-13a8-44a6-a4c6-31509212d108/26-6a81a49b86968.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், எல்லையருகே ஹிஸ்புல்லாவால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் படுகாயமடைந்ததாகக் கூறியது.</p><p></p><h2>லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்</h2><p>
</p><p>
லெபனான் நிலப்பரப்பிலிருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறுவதற்கும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கும் வழிவகுக்கும் பெய்ரூட்-டெல் அவிவ் கட்டமைப்பு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல், லெபனானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f9efc6e-eb42-4088-82c1-358cf78d4a2e/26-6a81a49ad1b96.webp' /></p><p>
</p><p>
பல மாதப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், மார்ச் 2 அன்று தொடங்கிய லெபனானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்கிறது. </p><p>லெபனான் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கைகளில் குறைந்தது 4,335 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 12,277 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:53:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761"></link>
            <id>https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்
</p><p>
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளை கொக்குளாய் காவல்துறையின் சோதனை
நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5
பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><h2>கொக்குளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு</h2><p>குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களுடன் கொக்குளாய் காவல்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37430b80-5e69-497a-9f92-a1ce62e33964/26-6a81875d50e49.webp' /></p><p>
</p><p>
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் காவல்துறையினர்
ஈடுபட்டுள்ளார்கள்.
</p><p>
குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக
தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607"></link>
            <id>https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட
பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.</p><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை
உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை
மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி
கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு
மூவரும் சேர்ந்து கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தினர் </p><h2>&nbsp;வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை</h2><p>பின்னர் வீட்டில் மறைத்து
வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15
பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி
மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0287ae47-dde9-4257-990e-b27af8af54f6/26-6a818ed895996.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமை காவல் நிலையத்தின்
குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட
காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
</p><p>
இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35
வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான
களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின்
பேரில் கைது செய்தனர்.</p><p></p><h2>காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு</h2><p> அதனைத்தொடர்ந்து நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப்
புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு
உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன
மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d963580-b6c6-419a-aad8-e2e1804647e8/26-6a818ed969242.webp' /></p><p>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை
வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா 
வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க,
பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் காவல்துறை சார்ஜன்டுகளான சந்தன
(16446), கேரத் (14692), பிரியங்கர(47358) உபாலி(60954)
சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923"></link>
            <id>https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ குறித்த
வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட
இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்காவினால் கையளிக்கப்பட்டது.</p><h2>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ சிப்பாய்க்கே வீடு</h2><p>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லான்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா
என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6dd1c2-1972-4a9b-88c4-d9a77eeef14b/26-6a819bce23dfd.webp' /></p><p>
</p><p>
இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த
வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட
கட்டளைத் தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T11:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632"></link>
            <id>https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632</id>
            <summary type="text">கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல்
துஷ்யந்தன் தலைமையில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்று (16/08/2026) காலை
10:30 மணியளவில் இடம்பெற்றது.
</p><p>
இதில் ஆறுமுகம் சபைஸ்வரன் அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம்
செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>நினைவுரைகள்</h2><p>
தொடர்ந்து நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளரும், யாழ்ப்பாணம் ஊடக மையத்தின்
தொடக்குனருமான தயாபரன், முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பிருந்தாபன்
பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி., சி.த.காண்டீபன். உட்பட ஊடகவியலாளர்
ஆறுமுகம் சபேஸ்வரனின் நண்பர்கள் நிகழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5bcf41f-e37e-44a8-9a49-dfd6df00a61a/26-6a8196c2d0871.webp' /></p><p>
</p><p>
இன்றைய நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள்,
மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,
பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T10:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை படகு விபத்துக்கான காரணம்! ஆரம்பமாகும் தீவிர விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inquiry-board-appointed-angulana-naval-accident-1786875328"></link>
            <id>https://ibctamil.com/article/inquiry-board-appointed-angulana-naval-accident-1786875328</id>
            <summary type="text">அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p> </p><p>

இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக இலங்கை விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412ஆகிய இரண்டு உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1098eb0-2ed0-4816-8cc9-63fdab8d8318/26-6a8190dd99ebd.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்பதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T10:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-fraud-legal-action-against-14-officials-1786871624"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-fraud-legal-action-against-14-officials-1786871624</id>
            <summary type="text">

நாடு முழுவதும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 அரசு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நாடு முழுவதும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 அரசு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஸ்வெசும நிதியைத் தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.</p><p>

2023 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி உதவிகளை வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p></p><h2>சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில், பதவி அல்லது தரம் எதுவாக இருப்பினும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெலகெதர வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a31f658-1ad8-478c-8646-4b06699ff413/26-6a81843aa1332.webp' /></p><p>

இந்த அஸ்வசும கொடுப்பனவு மோசடி தொடர்பாக நோர்வுட் பிரதேச செயலகம் மற்றும் பல பிரதேச செயலக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
விசாரணைகளின்படி, நோர்வுட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மோசடியான முறையில் நிதி மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a06e4a2-a4bb-4d41-9728-4238b82b3ae8/26-6a81843b70106.webp' /></p><p> </p><p>

அரசு அதிகாரிகள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தவறிழைக்கும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T09:43:09+00:00</updated>
        </entry>
    </feed>
