<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-14T06:06:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று 21 மாவட்டங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lightning-warning-for-21-districts-today-1789362576"></link>
            <id>https://ibctamil.com/article/lightning-warning-for-21-districts-today-1789362576</id>
            <summary type="text">பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p>
இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு காலை 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மின்னல் தாக்கத்துக்கான அதிக அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை</h2><p>
</p><p>
குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26681352-ca0b-4f48-9e78-56402d240884/26-6aa785360787f.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/121000-people-to-be-recruited-into-govt-service-1789359064"></link>
            <id>https://ibctamil.com/article/121000-people-to-be-recruited-into-govt-service-1789359064</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நொச்சியாகமவில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்காக அரசாங்கத்தால் அதிக முதலீடுகளைச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.</p><p></p><h2>வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்</h2><p>இதேவேளை நேற்று (13) கஹட்டகஸ்திகிலியவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கபிதிகொல்லேவ நீர் விநியோகத் திட்டம் மற்றும் 47 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24b5497f-d4f2-4e9d-bca3-7a9b4cc56d58/26-6aa77e8b1cca1.webp' /></p><p>மனித - யானை மோதல் விவகாரத்தைக் கையாளுவதற்காக 3,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 5,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.</p><p>மேலும், சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 5,000 பணியாளர்கள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைக்கப்படவுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugandan-national-arrested-with-cocaine-1789360351"></link>
            <id>https://ibctamil.com/article/ugandan-national-arrested-with-cocaine-1789360351</id>
            <summary type="text">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைதாகியுள்ளார்.&nbsp;</p><p>

கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>போதைப்பொருள் உருண்டைகள்</h2><p> </p><p>

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13.09.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa6561b-584f-41d2-b476-298a3b8172c6/26-6aa77c6800086.webp' /></p><p> </p><p>

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.</p><p> 

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>

விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T04:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vat-imposed-on-school-books-will-be-removed-anura-1789356711"></link>
            <id>https://ibctamil.com/article/vat-imposed-on-school-books-will-be-removed-anura-1789356711</id>
            <summary type="text">இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நொச்சியாகம பகுதியில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.</p><p></p><h2>வரவு - செலவுத் திட்டம்</h2><p> </p><p>பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை. பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d90915f-47ee-4c28-a4df-aba5f6baf26e/26-6aa76e275cb22.webp' /></p><p>இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.</p><p>பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T03:52:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781</id>
            <summary type="text">அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் நேற்று (13.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>உயிரிழந்த நபர் கஹட்டகஸ்திகிலிய, பேத்கேவ பகுதியில் வசித்து வந்த 41 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ஒரவர் பலி&nbsp;</h2><p>
</p><p>மேலும் விசாரணைகளில் தெரியவந்தது உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c40470e-47c6-4f49-9d0a-5fd70bf39cf7/26-6aa76eeab4900.webp' /></p><p>மின்னல் தாக்குதலில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p> பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789355305"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789355305</id>
            <summary type="text">இலங்கையின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> 

அத்துடன் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f4cd3ca-29a5-45a4-9449-98c316ed4381/26-6aa768839a280.webp' /></p><p>

அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள் தள்ளிய சஜித் பிரேமதாச தரப்பின் ஆட்சிக்காலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-election-in-crisis-1789348855"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-election-in-crisis-1789348855</id>
            <summary type="text">எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த விடயம் குறித்து நேற்று(13.09.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், </p><p>


“பழைய தேர்தல் முறைமை குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
</p><p></p><h2>பழையத் தேர்தல் முறைமை</h2><p>
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d96802ed-7cbd-4104-98d2-b2a3dade03fb/26-6aa74bf9f07fc.webp' /></p><p> </p><p>

அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்தார்கள். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் மகிந்தவை தஞ்சமடைந்துள்ளார்கள்.
</p><p>
இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவே. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவார்கள்.

கடந்த காலங்களில் இவர்கள் தமது சுய நல தேவைகளுக்காகவே அரசியல் செய்தார்கள். </p><p>தற்போது மீண்டும் தமது சுயநல தேவைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
</p><p>
முறையற்ற மற்றும் மோசடியான பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் முறையற்ற அரச நிர்வாகமே தோற்றம் பெறும். தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்படும்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T02:27:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigat-into-financial-irregularities-siriliya-1789351436"></link>
            <id>https://ibctamil.com/article/investigat-into-financial-irregularities-siriliya-1789351436</id>
            <summary type="text">விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கீழ் நடத்தப்படும் கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கியதாகக் கூறப்படும் இந்த&nbsp;ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>100 மில்லியன் ரூபாய் தொகை</h2><p>
</p><p>
இதேவேளை, சிரிலிய சவிய அல்லது சிரிலிய அறக்கட்டளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் அமைப்பு எனக் காட்டி இந்த நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce73a813-0e85-4235-8270-ee45f4fa9ecf/26-6aa7560f66af3.webp' /></p><p>

இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளையால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p>
கொழும்பு ரிஜ்வே ஆதார சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குவதற்காக நிதி தேவைப்படுவதாக சிரிலிய அறக்கட்டளை முன்வைத்த கடிதத்தின் அடிப்படையில், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவரின் வாய்மொழி உத்தரவின் பேரில் அந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், அந்த நிதியில் CT ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் காட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
எனினும், குறித்த CT ஸ்கேன் இயந்திரம் உண்மையில் சீன அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிதியைப் பயன்படுத்தியே பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3753c31-6301-403d-a78d-40761d396b0c/26-6aa7560eb116a.webp' /></p><p>
</p><p>
இதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ள நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவரான ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் காரியவசம் உள்ளிட்டோரிடம் இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அந்த வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T02:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச - ரணில் இடையே வரலாறு படைக்கும் ஒரு போட்டி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/historic-contest-between-rajapaksa-and-ranil-1789342614"></link>
            <id>https://ibctamil.com/article/historic-contest-between-rajapaksa-and-ranil-1789342614</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் அவரது ஆட்சியின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் பல மில்லியன் டொலர் பெறுமதியான நிதி மோசடிகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதேபோன்று, ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் பதவியேற்று 45 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு ஆட்சிக் காலங்களில், ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டு குறித்த நிதிக் குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>நிதி மோசடி திட்டம்</h2><p>
</p><p>
எனினும், தற்போது இந்த நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad394e0-0f58-484f-a8f2-ce1e31436e62/26-6aa7342c792b0.webp' /></p><p>
மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.</p><p>

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2,300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று 2013ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தது.
</p><p>
அந்தக் கொடுக்கல் வாங்கலின் ஊடாக 1,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி மோசடியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், குறித்த கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கை எனக் கூறி, 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீட்டை செலுத்தியதன் ஊடாக நிதிக் குற்றமொன்று இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>ராஜீவ ஜயவீர கொலை</h2><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ராஜீவ ஜயவீர, டொரிங்டன் சதுக்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dceaf8-8ef7-4390-92dc-02ee502034d5/26-6aa7342bbaa5c.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்த கபில சந்திரசேனவும் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இவ்வாறான பின்னணியில், கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-14T01:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளகப் பொறிமுறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inquiry-into-justice-for-the-tamil-people-1789347817"></link>
            <id>https://ibctamil.com/article/inquiry-into-justice-for-the-tamil-people-1789347817</id>
            <summary type="text">தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த
ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்" என தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின்
இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும்
தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச
விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக்
கூட்டம் நடைபெற்றது.</p><p> அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,</p><p></p><h2>போர் முடிந்து 17 வருடங்கள்</h2><p>

"போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம்
தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159c05e8-3101-4633-8932-2f6f97213e4e/26-6aa747ea74ffc.webp' /></p><p> </p><p>கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர,
ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத்
தவிர்த்து வருகின்றனர்.
</p><p>
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும்
வெளிவர ஆரம்பித்துள்ளன. </p><p>1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள்
புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். </p><p>ஆனால், அப்போதும் கூட
அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல
முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள்
மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T01:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தடகள ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827"></link>
            <id>https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827</id>
            <summary type="text">இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற போட்டியில், மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து முன்னிலை பெற்ற ருமேஷ் பதிரகே, இறுதிச் சுற்றில் தனது சிறந்த முயற்சியாக 91.09 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
</p><p>
இரண்டு முறை உலக சம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றர் தூரத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.</p><p></p><h2>அதிரடியான முன்னேற்றம்</h2><p>
</p><p>
ஐரோப்பிய சம்பியனான ஜூலியன் வெபர், முதல் சுற்றில் முன்னிலை வகித்திருந்த போதிலும், 85.89 மீற்றர் தூரத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eebdf02-f10d-47cb-962e-4e2be81ed60b/26-6aa74025b3960.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் ருமேஷ் பதிரகே தனது அதிரடியான முன்னேற்றம் நிறைந்த பருவத்தை உலகத் தரத்திலான வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T00:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய கோப்பை தொடரை வென்றும் பரிசை பெற மறுத்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-refused-to-accept-the-asia-cup-trophy-1789344624"></link>
            <id>https://ibctamil.com/article/india-refused-to-accept-the-asia-cup-trophy-1789344624</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற மறுத்துள்ளது.
</p><p>
பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்த போதிலும், இந்திய அணியின் வீராங்கனைகள் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வரவில்லை.
</p><p>
எனினும், இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.</p><p></p><h2>சம்பியன் பட்டம்&nbsp;</h2><p>
</p><p>
இந்த சம்பவம், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது. அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af690e5c-7f93-4037-9b30-d5bead9bacef/26-6aa73b722354f.webp' /></p><p>
</p><p>
மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிகளுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இந்திய அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T00:10:59+00:00</updated>
        </entry>
    </feed>
