<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-18T23:40:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓயாது தொடரும் கேப்பாப்புல நிலத்திற்கான பல வருட போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/in-the-keppapulavu-protest-1784416221"></link>
            <id>https://ibctamil.com/article/in-the-keppapulavu-protest-1784416221</id>
            <summary type="text">கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக்
காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக்
காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின்
போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம்
சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் ஆதரவை
வழங்கியுள்ளனர்.</p><p>இராணுவத்தினரின்
கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி,
அப்பகுதி மக்கள் தங்களது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க மீண்டும் இரண்டாவது
கட்டமாக ஆரம்பித்த தொடர் போராட்டம் 25 ஆவது நாளாக தொடர்ந்து
இடம்பெற்று வருகிறது.</p><p>பல வருடங்களாக இடம்பெற்ற தொடர் போராட்டம் காரணமாக வற்றாப்பளை
புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் இருந்த காணிகளை இராணுவம் விடுவித்தது.</p><p></p><h2>பல வருடங்களாக போராடிய&nbsp;மக்கள் </h2><p> இருப்பினும் முழுமையாக காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து பல வருடங்களாக
போராடிய போது அரச தரப்புக்களினால் உங்களுக்காக காணிகள் முழுமையாக
விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழிகளோடு இந்த தொடர் போராட்டத்தை மக்கள் 1111
ஆவது நாளில் நிறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8fe16b-a47b-4cbc-8ff3-d402fa49a58d/26-6a5c0b197f79d.webp' /></p><p> இதன் பின்னர் இன்று வரை மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை. எனினும் மக்கள்
இது தொடர்பில் ஜனாதிபதி , ஆளுநர் , மாவட்ட செயலாளர் என பலரிடமும் பலதடவைகள்
தமது காணி விடுவிப்பு தொடர்பாக கோரியும் எந்த தீர்வுமற்ற நிலையில் போராடியே
தமது நிலங்களை பெறுவது என்ற அடிப்படையில் மீண்டும் தொடர் போராட்டத்தை
ஆரம்பித்துள்ளனர்.</p><p>

​பல வருடங்களாகத் தொடரும் இந்த நில உரிமைப் போராட்டத்தில், தங்களின் சொந்தக்
குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரக் காணிகள் முழுமையாகத் தங்களிடம்
ஒப்படைக்கப்படும் வரை தங்களின் தார்மீகப் போராட்டம் ஓயாது என்பதை மக்கள்
இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தி தொடர்
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T23:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-missile-hit-jordan-american-soldier-killed-1784403173"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-missile-hit-jordan-american-soldier-killed-1784403173</id>
            <summary type="text">ஜோர்தானில் ஈரான் மேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின்போது, இரண்டு அமெரிக்க இராணுவ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் ஈரான் மேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின்போது, இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>மேலும், ஒரு வீரர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்டகன் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 17-ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதலின்போது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. </p><p>இதில் நான்கு அமெரிக்க வீரர்கள் காயமடைந்து ஜோர்தானில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM Statement on Recently Fallen, Missing U.S. Service Members<br><br>TAMPA, Fla. — On July 17, two U.S. service members in Jordan were killed in action as U.S. Central Command (CENTCOM) and partner forces defended against Iranian ballistic missile and drone attacks. Additionally,…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2078530691109974522?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின்&nbsp;</h2><p> </p><p>பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும், லேசான காயமடைந்த மற்ற வீரர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ad650d-5eec-4bbc-a6c3-722b8054ed65/26-6a5bd4e6c3a91.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவத்துடன், தற்போதைய மோதல் தொடங்கியதிலிருந்து உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள், அவர்களது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியிடப்படும் என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தால் மறக்க முடியாத பாடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானின் உயர்மட்ட தலைமையிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> மறுபுறம், ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதக் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கு பதிலடியாக, குவைத், ஈராக், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குவைத்தில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் நிலையம் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T22:27:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடையாளங்களை அழிக்க முற்படும் சந்திரசேகர் எம்.பி! கடற்றொழில் சமூகத்தின் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/r-chandrasekar-mp-seeks-to-destroy-identities-1784413520"></link>
            <id>https://ibctamil.com/article/r-chandrasekar-mp-seeks-to-destroy-identities-1784413520</id>
            <summary type="text">கடற்றொழில்&amp;nbsp; அமைச்சர் சந்திரசேகரன் யாழ். மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில்&nbsp; அமைச்சர் சந்திரசேகரன் யாழ். மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற்றொழில் சமூக அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்றொழில் சமாசத்தின்
தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடக்கு
கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள்
போராட்ட முன்னணியியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை
பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற்தொழில்
மக்களை கருவறுக்கம் செயற்பாடாக பார்க்கிறோம்.</p><p></p><h2>மீளவும் அட்டை பண்ணை</h2><p>
</p><p>
இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக
இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccea50eb-3b80-4dfd-9605-efe07608fc57/26-6a5bfd884dbe1.webp' /></p><p>ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர்
பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள
நினைக்கிறார்கள்.
</p><p>
எமது கடல் எமக்குச் சொந்தம். கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது.
அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என
கேட்க விரும்புகிறோம்.
</p><p>
ஒட்டுமொத்த சமூகத்தின் பாரம்பரிய தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு
அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T22:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்படும் ஈரானின் தெற்கு துறைமுகங்கள்! கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ள அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-tightens-naval-blockade-on-irans-southern-ports-1784399292"></link>
            <id>https://ibctamil.com/article/us-tightens-naval-blockade-on-irans-southern-ports-1784399292</id>
            <summary type="text">இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானின் தெற்குத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை வலுப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானின் தெற்குத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக சமீபத்தில் மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

இதுதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட எண்ணெய் மற்றும் வங்கி விலக்குகளை அமெரிக்கா இரத்து செய்ததுடன், ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் மேலும் ஈரானிய எண்ணெயை ஏற்றுவதற்காகத் துறைமுகத்திற்குத் திரும்புவதையும் தடுத்த நிலையில் மோதலின் நிலை தீவிரமடைந்திருந்தது.
</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
சமீபத்திய தாக்குதல்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலிழந்ததால், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஹோர்முஸ் நீரிணையில் இயங்கி வந்த பல கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb35f9f5-8dd4-4460-9872-846331cdf507/26-6a5bc5be6b5dc.webp' /></p><p> 

மேலும், போரின் போது ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்பட்ட, குராசோ கொடியை ஏந்திய பெல்மா என்ற சூப்பர்டேங்கர் கப்பலைச் செயலிழக்கச் செய்வதற்காகவும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டது.
</p><p> 
அமெரிக்க தற்போதைய புதிய முற்றுகையின் காரணமாக, ஈரானின் தினசரி எண்ணெய் ஏற்றுமதியில் குறைந்தது 1.5 மில்லியன் பீப்பாய்கள் சந்தையிலிருந்து நீக்கப்படும் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.</p><p>

இது எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு சுமார் 90 டொலர் வரை உயர்த்தியுள்ளதுடன், நீடித்த மோதல் மேலும் விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T21:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோசியல் பதிவுகளை பெற ஒரு கோடி ரூபாய் அறவீடு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-crore-rupees-to-get-trump-truth-social-post-1784410051"></link>
            <id>https://ibctamil.com/article/one-crore-rupees-to-get-trump-truth-social-post-1784410051</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதிவுகளை விரைவாக பெற ஒரு கோடி ரூபாய் வரை பெற அவரின் ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பங்குச்சந்தை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதிவுகளை விரைவாக பெற ஒரு கோடி ரூபாய் வரை பெற அவரின் ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
</p><p>
</p><p>பங்குச்சந்தை மீதான ட்ரம்பின் தாக்கத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக விதிமுறைகளை மீறியதாக எக்ஸ் தளம் (அப்போது டுவிட்டர்) டொனால்ட் ட்ரம்பை BLOCK செய்தது.</p><p></p><h2>ட்ரூத் சோசியல்&nbsp;</h2><p>இதனால் அவர் சொந்தமாக ட்ரூத் சோசியல் செயலியை உருவாக்கி அதில் செய்திகளை பதிவிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd4255f-986a-4050-9ad4-d60b99bcfbc1/26-6a5befc561c32.webp' /></p><p>

அவர் வெளியிடும் சில பதிவுகள் அமெரிக்கா மற்றும் உலகளவில் உள்ள பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. </p><p>உதாரணமாக, மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்தது.

அப்போது வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார்.</p><p> இதனால் அந்த நேரத்தில் பங்குகளை வாங்கியவர்கள் மிகப்பெரிய அளவில் பயனடைந்தனர்.

பின்னர், ஈரான் உடன் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஈரானுடன் மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நடந்தன என்று பதிவிட்டார்.
</p><p>
இதனால் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தன. மற்ற நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சியை நோக்கி சென்றன. ட்ரம்பின் ஒவ்வொரு பதிவும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகமிக முக்கியமானதாக அமைகிறது.</p><p></p><h2>மூன்றாண்டுத் திட்டம்</h2><p>அவருடைய பதிவு மில்லி விநாடிகளில் கிடைத்தால், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்கு சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும். இல்லையென்றால் பணத்தை இலக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174983e-3f15-4a6e-b5dd-81fb06f89110/26-6a5befc6168c2.webp' /></p><p>இதன்படி ட்ரூத் சோசியல் தளத்தில் இருந்து மற்றவர்களுக்கு ட்ரம்பின் பதிவை விரைவாக ட்ரூத் ஏ.பி.ஐ தரவு சேவை வழங்கி வருகிறது.
</p><p>இதற்காக மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை அறவிட ட்ரம்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>
மேலும் மூன்றாண்டுத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு சுமார் ரூ.60 லட்சம் வரை தள்ளுபடி எனவும் முன்மொழியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T21:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI உலகில் சீனாவின் அடுத்த தடம்! புதிய AI மாதிரியான KIMI K3 அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/introducing-the-new-ai-model-kimi-k3-1784405855"></link>
            <id>https://ibctamil.com/article/introducing-the-new-ai-model-kimi-k3-1784405855</id>
            <summary type="text">AI துறையில் சீனாவின் புதிய அதிரடியாக மூன்ஷாட் நிறுவனம் உருவாக்கிய KIMI K3 மாதிரியை அறிமுகமாகியுள்ளது. உலகளவில் பிரபலமான கிளாட், Chad GBT போன்ற மாதிரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI துறையில் சீனாவின் புதிய அதிரடியாக மூன்ஷாட் நிறுவனம் உருவாக்கிய KIMI K3 மாதிரியை அறிமுகமாகியுள்ளது. </p><p>உலகளவில் பிரபலமான கிளாட், Chad GBT போன்ற மாதிரியை விட இது மேம்பட்டது என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.</p><p> AI ஆதிக்கம் ஒரே நாட்டுக்குச் செல்லக்கூடாது, உலகளாவிய ஒத்துழைப்பின் பலனாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும்போட்டி</h2><p>
</p><p>
AI துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும்போட்டி தந்துவரும் சீனா அடுத்து புதிதாக மேலும் ஒரு திறன் மிகுந்த AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40200548-6e42-44ef-85e2-0cb9fa6b996e/26-6a5be29fb8ef0.webp' /></p><p> KIMI K3&nbsp; என்ற இந்த மாதிரியை பீஜிங்கை சேர்ந்த மூன்ஷாட் என்ற புத்தாக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. </p><p>AI உலகளவில் பிரபலமாக உள்ள ஆந்த்ரபிக் நிறுவனத்தின் கிளாட் மற்றம் ஓபன் AI-யில் Chad GBTயை விட திறன்மிக்கது என மூன் ஷாட் கூறியுள்ளது.
</p><p>

அதிநவீன தொழில்நுட்பங்கள் சீனாவிற்கு கிடைப்பதற்கு அமெரிக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போடும் நிலையில் இந்த புதிய AI உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p> செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு நாட்டின் ஆதிக்கம் செலுத்துவது சரியாகாது என்றும் அது உலகளாவிய கூட்டு ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T20:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உயிமையாளருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-of-fashions-owner-remanded-1784394629"></link>
            <id>https://ibctamil.com/article/house-of-fashions-owner-remanded-1784394629</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள முன்னணி ஆடை விற்பணை நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை சுங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள முன்னணி ஆடை விற்பணை நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> 

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது அவருக்கு இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p> இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை&nbsp;</h2><p>

சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8e899d-4ae2-4aae-ae27-7fcdddc4de2d/26-6a5bb38762819.webp' /></p><p> 

இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T18:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப் போட்டி! புயல் காரணமாக இரத்து செய்யப்பட்ட ஸ்பெயினின் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-s-training-cancelled-due-to-storm-1784397687"></link>
            <id>https://ibctamil.com/article/spain-s-training-cancelled-due-to-storm-1784397687</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் சீரற்ற காலநிலையால்&amp;nbsp;ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் சீரற்ற காலநிலையால்&nbsp;ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளின் இறுதி பயிற்சி அமர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு (RFEF) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் புயல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க, நியூ ஜெர்சியில் உள்ள மெலனி லேன் பயிற்சி மைதானத்தில் நடைபெற இருந்த அணியின் வெளிப்புற பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மேலும், வீரர்கள் தற்போது உட்புற அரங்கில் உடற்தகுதி மற்றும் வார்ம்-அப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலகக் கோப்பை இறுதிப்போட்டி</h2><p>

இதேபோல், அர்ஜென்டினா அணியின் பயிற்சியும் திட்டமிட்ட நேரத்தை விட 45 நிமிடங்கள் தாமதமாக, நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3b37faa-67ef-4841-b347-cac84f82b745/26-6a5bbf78d6685.webp' /></p><p>
உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி (அமெரிக்க நேரம்)(7.00 மணி - GMT) (இலங்கை நேரம் 20ஆம் திகதி அதிகாலை) நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T18:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz-1784394332"></link>
            <id>https://ibctamil.com/article/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz-1784394332</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக வழிநடத்தப்பட்டதாலேயே அந்த கப்பல்கள் அப்பகுதி வழியாக செல்ல முயன்றதாக ஈரான் தெரிவித்து உள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கை</h2><p>இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கையால், ஹோர்முஸ் நீரிணைக்கு தெற்கே உள்ள கண்ணிவெடிகள் நிறைந்த பகுதி வழியாகச் செல்ல முயன்ற 2 எண்ணை கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6684121f-5f6c-4ad8-86db-2ca3198bce01/26-6a5bc1c05f451.webp' /></p><p>&nbsp;ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மிகவும் பாதுகாப்பற்றதாகவும் முழுமையாக மூடப்பட்டதாகவும் இருக்கும்.

தங்கள் சொத்துகளையும், மிக முக்கியமாகத் தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள கண்ணி வெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்தது.</p><p></p><p> </p><h2>எச்சரிக்கையை புறக்கணித்த கப்பல்கள்</h2><p>அதேபோல் கண்ணிவெடிகள் உள்ள பாதையில் நுழைவதற்கு முன்பு ஈரான் கடற்படையின் எச்சரிக்கைகளை 2 கப்பல்களும் புறக்கணித்ததாகவும், அதனால் வெடிப்புகளும், பெரிய தீ விபத்துகளும் ஏற்பட்டதாகவும் ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82813a95-db70-46c1-ba32-2780300f0599/26-6a5bc1bfb0ff5.webp' /></p><p> </p><p>கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்களின் நிலைமை குறித்து தகவலை ஈரான் வெளியிடவில்லை.
</p><p>

இதேவேளை கண்ணிவெடியில் கப் பல்கள் சிக்கியதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு கூறும்போது, ஈரானின் குற்றச்சாட்டு பொய்யானது. இது சரிபார்க்கப்படாத ஈரான் ராணுவத்தின் வழக்கமான தகவல்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T18:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானில் பறிக்கப்பட்ட உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-50-killed-in-us-strikes-since-june-27-1784384217"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-50-killed-in-us-strikes-since-june-27-1784384217</id>
            <summary type="text">ஜூன் 27 முதல் அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் 27 முதல் அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று சனிக்கிழமை தெரிவித்தது.
</p><p>
"கொல்லப்பட்டவர்களில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர் அடங்குவர்," என்று சுகாதார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் மையத்தின் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், சமூக ஊடக நிறுவனமான X மூலம் தெரிவித்தார்.</p><h2>கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள்</h2><p>&nbsp;காயமடைந்தவர்களில் 32 பெண்கள், அத்துடன் 18 குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரும் அடங்குவர் என்று கெர்மன்பூர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a27f29e6-aaf5-42dd-a366-ce437df0264e/26-6a5b8fa7ded11.webp' /></p><p>

அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களைப் பரிமாறிக்கொள்வதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டவும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இந்த இராணுவ மோதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T17:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்போகும் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relief-package-for-the-deceased-prison-officers-1784386490"></link>
            <id>https://ibctamil.com/article/relief-package-for-the-deceased-prison-officers-1784386490</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பத்து சிறை அதிகாரிகளுக்கும் தலா ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு முடிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பத்து சிறை அதிகாரிகளுக்கும் தலா ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
மேலும், இது தொடர்பான அமைச்சரவைக் குறிப்பையும் அமைச்சு தயாரித்துள்ளது. இது வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><h2>&nbsp;சம்பளமும் ஓய்வூதியமும் வழங்க நடவடிக்கை</h2><p>அதன்படி, உயிரிழந்த அதிகாரிகளுக்கு 55 வயது வரை மாதச் சம்பளமும், 55 வயதுக்கு மேல் ஓய்வூதியமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de1252b-4e03-4a12-a5bc-1d076a4011e7/26-6a5b974d204f2.webp' /></p><p> </p><p>இது தொடர்பாக, சிறைத்துறைத் தலைவர்கள், நீதித்துறை அமைச்சர் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (17ஆம் திகதி) ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;நீர்கொழும்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் பத்து சிறை அதிகாரிகளும், இருபத்தொரு கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e29334b-c071-44c8-878d-1eb1a30ae627/26-6a5b974c6fc32.webp' /></p><p> நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 21 சிறை அதிகாரிகளும் அடங்குவர். அவர்களில் மூவர், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T17:56:14+00:00</updated>
        </entry>
    </feed>
