<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-02T18:30:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிய வேட்டைக்காரன்! சமூக ஊடகங்களில் பரவும் பரபரப்பு காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-hunter-in-the-yala-forest-1788371407"></link>
            <id>https://ibctamil.com/article/the-hunter-in-the-yala-forest-1788371407</id>
            <summary type="text">யால தேசியப் பூங்காவின் பிரிவு 5-இல் உள்ள வெஹரகல பகுதியில், எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக விலங்குகளை வேட்டையாடும் நபர் ஒருவர் தொடர்பான காணொளிகள் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசியப் பூங்காவின் பிரிவு 5-இல் உள்ள வெஹரகல பகுதியில், எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக விலங்குகளை வேட்டையாடும் நபர் ஒருவர் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.</p><p>

இந்நிலையில், குறித்த சந்தேகநபர், தற்போது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்த நாளிலிருந்து, பணியில் இருந்த வனக்காவலர், சம்பந்தப்பட்ட வேட்டைக்காரரைத் தேடுவதற்காக 2 நாட்கள் பூங்காவை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தப்பியோட்டம்</h2><p>இருப்பினும், அந்த வேட்டைக்காரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் தற்போது தான் வசிக்கும் பகுதியை விட்டும் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1595844305283299%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
இந்த வேட்டைக்காரரைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள் தற்போது தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியருகிறது.
</p><p>
இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவத்திற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வேட்டைக்காரர் வனவிலங்கு அதிகாரிகளால் மூன்று முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T18:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-drugs-worth-over-rs-20-crore-1788369083"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-drugs-worth-over-rs-20-crore-1788369083</id>
            <summary type="text">


20 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களுடன் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


20 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களுடன் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(02) கொழும்பு குற்றப் பிரிவினால் (CCD) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய, சேதவத்தை பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், “சேதவத்த கசுன்” என்ற போதைப்பொருள் கடத்தல்காரின் போதைப்பொருள் விற்பனையாளராக செயல்பட்டு வந்தது காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60457d1b-2fa8-413e-aa42-496d5a7e28f2/26-6a985b8815f3e.webp' /></p><p>

இந்நிலையில், கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர்(DIG) நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு குற்றப் பிரிவால் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T17:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை எம்வசமே : மீண்டும் மார் தட்டும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-under-us-control-reiterates-trump-1788366606"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-under-us-control-reiterates-trump-1788366606</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா, ஈரான் ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p>

அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து அவர் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறி உள்ளதாவது;&nbsp;</p><h2>ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கட்டாயப்படுத்தவில்லை</h2><p>ஏபிசி போலிச் செய்தி நிறுவனம் தெரிவித்ததைப் போல, நான் ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. அவர்களுக்குப் பயனற்றதாகத் தோன்றும் ஒரு ஒப்பந்தத்தில், அவர்கள் கையெழுத்திட்டாலும் எனக்குக் கவலையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb9c3c53-eee8-4f06-b62f-c41467473230/26-6a9853106dd32.webp' /></p><p>
</p><p>

அவர்களை வலுக்கட்டாயமாக ஒரு ஒப்பந்தம் செய்ய நான் விரும்பவில்லை. ஹோர்முஸ் நீரிணையின் மீது முழுமையான கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருக்கிறது. </p><p>ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையையே நான் விரும்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T16:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-august-1788364358"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-august-1788364358</id>
            <summary type="text">&amp;nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோருக்கான 2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோருக்கான 2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>வைப்பிலிடப்படவுள்ள தொகை</h2><p>மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/793fa3c0-3d7b-43d0-9e0c-11939eb382b4/26-6a9847cb6b76d.webp' /></p><p> </p><p>

உரிய பயனாளிகள் நாளை (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T16:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-district-first-nationally-scholarship-exam-1788354368"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-district-first-nationally-scholarship-exam-1788354368</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p>

அதேவேளை தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளது&nbsp;</p><h2>பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு</h2><p>இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9125c8d-c35b-4090-83d0-6c49485087c5/26-6a982241d994a.webp' /></p><p> </p><p>



இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p></p><p> </p><p>

</p><h2>56,000 மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளியை விடவும் அதிக புள்ளி</h2><p>அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பெறுபேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802fbd29-c285-44a2-a295-6b4b7e3760f2/26-6a9822428cbd3.webp' /></p><p> </p><p>

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-time-cattle-thief-caught-in-batticaloa-1788361372"></link>
            <id>https://ibctamil.com/article/long-time-cattle-thief-caught-in-batticaloa-1788361372</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று
செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று
செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக
காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டவராவார்.&nbsp;</p><p>&nbsp;கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஓரமாக
மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்ட நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற
திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச்
சென்றுள்ளார்.
</p><p>
</p><h2>ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து
காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர்
வை. விஜயராஜ் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
சிசிடிவி கமரா மூலம் ஆட்டை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d192bd95-a59d-4ce9-b35f-3022f3b3e299/26-6a984000385e6.webp' /></p><p>
</p><p>&nbsp;நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை
காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும்
மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை
திருடி கடத்தி சென்று வருவதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>
</p><p>கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c2c49d9-39d3-44e9-91ca-72fafa1cba6b/26-6a98400106763.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஆணைக்குழு நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-summoned-to-bribery-on-4th-1788359476"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-summoned-to-bribery-on-4th-1788359476</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ராஜபக்சவின் வழக்கறிஞர், முதித ஆர். லொகுமுதலி, தனது கட்சிக்காரருக்கு காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு CIABOC எழுத்துபூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.&nbsp;</p><h2>ஆணைக்குழு முன் முன்னிலையாவார்</h2><p>வழக்கறிஞரின் தகவலின்படி, ராஜபக்ச அழைப்பாணைக்கு இணங்க ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் கோரப்பட்டபடி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17c0d651-d60f-4dad-923f-bc5b0d522691/26-6a9836921ca5e.webp' /></p><p>

செப்டம்பர் 4 ஆம் திகதி CIABOC முன் முன்னிலையாக வேண்டும் என்று நாமல் ராஜபக்சவுக்கு திங்கட்கிழமை முதலில் தெரிவிக்கப்பட்டது.

அழைப்பாணைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : சிறுவர்களை தண்டித்தால் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dont-punish-children-over-scholarship-results-1788356433"></link>
            <id>https://ibctamil.com/article/dont-punish-children-over-scholarship-results-1788356433</id>
            <summary type="text">&amp;nbsp;தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில், பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது மனரீதியாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில், பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது மனரீதியாகத் துன்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் நல அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><h2>உடல், உள ரீதியாக தண்டிக்காதீர்கள்</h2><p>பரீட்சை முடிவுகளுக்காக குழந்தைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை மனரீதியாகத் துன்புறுத்துவதையோ தவிர்க்குமாறு பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419c0f3a-2ba9-4c4e-a90e-ad27d28c7231/26-6a98311fa1e57.webp' /></p><p>
</p><p>
மேலும், பரீட்சை முடிவுகள் தொடர்பான உள்ளடக்கங்களை, குழந்தைகளுக்கு சங்கடத்தையோ, மன உளைச்சலையோ அல்லது அசௌகரியத்தையோ ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் எதிராக ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் அது எச்சரித்துள்ளது.</p><p></p><p>

</p><h2>அதிகபட்ச சட்ட நடவடிக்கை</h2><p>இத்தகைய நடத்தை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாக அமையக்கூடும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a07dd7-7c6e-404a-a4cc-b6592e567a2a/26-6a98312052854.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petroleum-seaplatform-given-india-for-katchatheevu-1788355261"></link>
            <id>https://ibctamil.com/article/petroleum-seaplatform-given-india-for-katchatheevu-1788355261</id>
            <summary type="text">கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. 


காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக நீருக்கடியில் உள்ள பெட்ரோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. 


காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக நீருக்கடியில் உள்ள பெட்ரோலியம் வளமிக்க மேடைக் கடற்பகுதி இந்தியாவுக்கு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடும் வாக்குவத்தின்போது காங்கிரஸ் தரப்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது.</p><p>

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்,</p><p></p><h2>25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள&nbsp;பகுதி</h2><p>
</p><p>
கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. அதைக் கொடுத்துவிட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் கடற்பகுதியில் இந்தியாவுக்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67e0ca6c-d5bb-40b7-a3c5-b523550c4861/26-6a9826a171225.webp' /></p><p>
</p><p>
இன்று அந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோலியம் உள்ளிட்ட வளங்களுக்கான உரிமைகள் யாரிடம் இருக்கின்றன? 

மத்திய அரசிடம்தானே இருக்கின்றன? அதன்மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கிறது?</p><p>
285 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவைக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்காக 25 லட்சம் ஏக்கர் கடற்பகுதியின் உரிமையைப் பெற்றிருக்கிறோம். </p><p>

இதுதான் வரலாறு. முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுபவர்கள் ஏன் 2-வது ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவதில்லை? இந்தியாவின் பொருளாதார மண்டலத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?</p><p>

இதையும் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். கச்சத்தீவைக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக மிகப்பெரிய கடற்பகுதியின் உரிமையை இந்தியா பெற்றது என்பதுதான் வரலாறு.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T13:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க: தமிழக சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-nadu-assembly-over-katchatheevu-issue-1788353656"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-nadu-assembly-over-katchatheevu-issue-1788353656</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றுள்ளது.

இதன்போது சட்டப்பேரவையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். </p><p>இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளர் எ.வ. வேலு, கச்சத்தீவு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை</h2><p> </p><p>அத்துடன், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9889a9-9368-4943-ad98-8a75b07cab32/26-6a98202f725a5.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கச்சத்தீவு தொடர்பான அன்றைய மத்திய அரசின் முடிவின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். </p><p>மேலும், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்த பின்னரே கச்சத்தீவு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.</p><p>

இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.வுக்கும் பொறுப்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
இதன்போது, கச்சத்தீவு விவகாரத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அமைச்சர் ராஜமோகன் சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இந்த விவாதத்தின்போது ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T13:04:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைமுகமாக தாக்குவதை நிறுத்துங்கள் : ட்ரம்பிற்கு கனடா பிரதமர் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-pm-carney-fires-back-at-trump-1788351350"></link>
            <id>https://ibctamil.com/article/canada-pm-carney-fires-back-at-trump-1788351350</id>
            <summary type="text">&amp;nbsp;மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>


வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ட்ரம்பின் 50% வரி விதிப்பு,ஒன்ராறியோ ஏரிக்கு பெயர் மாற்றம் மற்றும் பெண் ராணுவப் பயிற்சி அதிகாரிகளை பென்டகன் கேலி செய்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவை மீம்ஸ்களையும் மறைமுகமான விமர்சனங்களையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.</p><h2>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை</h2><p>&nbsp;இது குறித்து மார்க் கார்னி தெரிவித்துள்ளதாவது, </p><p>

பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தினால், அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ed5f0f-ce51-40a9-ac53-5c911f705acd/26-6a981d32ca0d6.webp' /></p><p> </p><p>கனடா தொழில்துறைகள் படிப்படியாகச் சுருங்கி அழிந்துபோகும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது. நாங்கள் நிச்சயமாக அந்த நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை. மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்.</p><p></p><h2>மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்</h2><p>
</p><p>

மேலும் கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள். மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி, தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை நிறுத்தினால், மீண்டும் நம்மால் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2c0719-4943-4a85-8d12-2949089f16b4/26-6a981d337b866.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-teachers-protest-1788353141"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-teachers-protest-1788353141</id>
            <summary type="text">மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் மதிய உணவு இடைவேளையின்போது இந்த அடையாளப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை</h2><p> இதில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்று, தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9787ff-cd2a-4e0f-9625-dbdd7ce56ad0/26-6a981a7699821.webp' /></p><p>

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், அத்துடன் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
</p><p>
போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
</p><p>
மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாத நிலையில், மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதுடன், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fced8e2-87a6-44ae-a771-e9ceb4157aa0/26-6a981b0c61d5b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29eb13d8-fbf6-4e3c-93dd-944f8ba16d7e/26-6a981b0d30355.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb51334-be7d-4d80-82b5-ce67c4ee9672/26-6a981b0de6459.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d92ee4-5fa4-4761-99be-e1432e041775/26-6a981b0ea93be.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T12:48:26+00:00</updated>
        </entry>
    </feed>
