<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-30T13:45:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுழிபுரம் விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல்...! பழைய மாணவன் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178</id>
            <summary type="text">யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று
வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.</p><p>&nbsp; குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில்
சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில்
அமைக்கப்பட்டது.</p><h2>பாடசாலை மதில் விவகாரம்</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும்
முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில்
வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb75dcc6-69b2-469b-86e9-654abe27db5e/26-6a6b4d427f4f1.webp' /></p><p>அதாவது வலிகாமம் கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன்
ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.</p><p>அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி
அமைச்சின் செயலாளரால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில்
யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.</p><p>குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளரால்
பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை
ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>150வது ஆண்டு விழாவுக்கான நிதி சேகரிப்பு&nbsp;</h2><p>மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில்
அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை
தொடர்பிலும் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1ea989-589d-42c8-925e-b5cef6c61e50/26-6a6b4d4339c27.webp' /></p><p>எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித்
திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை
முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.</p><p>ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை
மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும்
செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.
</p><p>
இவர்களின் நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய
நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37 வது நாளாக தொடரும் போராட்டம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-continues-for-37th-day-in-keppapilavu-1785416787"></link>
            <id>https://ibctamil.com/article/protest-continues-for-37th-day-in-keppapilavu-1785416787</id>
            <summary type="text">இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 37 வது
நாளை எட்டியுள்ளது.</p><p>

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இன்று (30.07.2026) 37 வது
நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.</p><p></p><h2>&nbsp;பிரதான கோரிக்கை</h2><p>


தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர். 

தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58ddb9c-b0cf-43db-b377-792ab0489e28/26-6a6b4c557756a.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T13:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை விமர்சிப்பது பெரும் அபத்தம்! ஐங்கரநேசன் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thamizh-thaesiya-arasiyal-criticism-speech-1785415698"></link>
            <id>https://ibctamil.com/article/thamizh-thaesiya-arasiyal-criticism-speech-1785415698</id>
            <summary type="text">தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று புதன்கிழமை
(29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
</p><p></p><h2>ஒரு வரலாற்றுத் தவறு</h2><p>
ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும்
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி
அழிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b16bf39-31e6-4629-be48-badcdc9c4a1c/26-6a6b48140f975.webp' /></p><p> </p><p>ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும்
காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.
இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே
அரங்கேற்றியது.</p><p> நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப்
படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம்
பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். </p><p>ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப்
புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப்
பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.

இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி
2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள்
இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. </p><p>முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல்
நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான
உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய
முதலாவது இனப்படுகொலையாகும்.</p><p> இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை
எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும். ஆனால்
இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய
நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத்
தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது."என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-30T12:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சி வில்பத்து பூங்கா குளங்கள் வற்றின : பவுசர்கள் மூலம் நிரப்பப்படும் நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wilpattu-tanks-dry-up-1785413271"></link>
            <id>https://ibctamil.com/article/wilpattu-tanks-dry-up-1785413271</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் நீர் நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பூங்கா காப்பாளர் ஆர்.டி.டி.டி. சமரநாயக்க தெரிவித்தார்.</p><p>

வில்பத்து தேசிய பூங்காவின் கிழக்கு வலயத்தில் உள்ள மரதன்மடுவ, பெர்சிபெடிவ மற்றும் குக்குல்கடுவ குளங்களில் நீர் படிப்படியாக வறண்டு வருவதால், கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;ஏனைய குளங்களின் நீர்மட்டம்</h2><p>இருப்பினும், வில்பத்து தேசிய பூங்காவின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள குளங்களில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் வறட்சி நிலைமை மோசமடைந்தால், நீர்மட்டமும் கணிசமாகக் குறையும் என்றும் பூங்கா காப்பாளர் சமரநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd526e3-609c-4c04-a36a-e90096ad58cd/26-6a6b40d21561f.webp' /></p><p>
</p><p>
வில்பத்து தேசிய பூங்கா இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய வனப் பூங்காவாகும். இது புத்தளம், அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் நடுவில் அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் எழும் எலும்புக்கூடுகளின் குரல் உலகிற்குக் கேட்கிறதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-hear-the-voices-skeletons-rising-semmani-1785412444"></link>
            <id>https://ibctamil.com/article/world-hear-the-voices-skeletons-rising-semmani-1785412444</id>
            <summary type="text">கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதைகளிலும் கவிதைகளிலும் வருவதைப் போலாக நிகழ்கிறது செம்மணி. மாவீரர்களின் தியாகம் மண்ணுக்குள் இருந்து எங்கள் கனவையும் தாகத்தையும் சொல்கிறது. அப்படித்தான் செம்மணியும். ஈழ நிலமே பேசுகிற குரலுள்ள நிலம். </p><p>ஈழக் கதையொன்றில் காணாமல் ஆக்கப்பட்ட மனிதனொருவன் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டு, அவனை அடையாளம் காணாத நிலையில் மீண்டும் மண்ணுக்குள் புதைத்துவிடுவதாக கதை முடிகிறது. ஈழ நிலத்தில் வெளிவரும் புதைக்குழிகளின் கதைகளும் அப்படித்தான் முடிகின்றன.</p><p></p><p>
</p><h2>
471 மனித எலும்புத் தொகுதிகள்
</h2><p>ஆனால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனித உடல்கள் பேசத் தொடங்கினால், அவை என்ன சொல்லும்? தம்மைக் கொன்றவர்களின் பெயர்களையா? தமக்காக இன்னும் காத்திருக்கும் தாய்மார்களின் கண்ணீரையா? அல்லது, தங்களை மறைத்துவிட்டு உலகத்தின் முன் நீதியைப் பற்றி பேசும் அரசின் இரட்டை முகத்தையா? ஆம், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தியில் மண்ணிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் மனித எலும்புக்கூடுகளுக்கு ஒரு மொழியிருக்கிறது. அவைகளின் குரல்மொழி நமக்குக் கேட்கிறதுதான். </p><p>அவற்றின் &nbsp;மொழி துயரத்தின் மொழி. அவற்றின் குரல் நீதியைத் தேடும் குரல். இதுவரை 471 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அண்மையில் உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, இந்த மண் இன்னும் எத்தனை சொல்லப்படாத கதைகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது என்பதைச் சொல்கிறது.
</p><p>
செம்மணி என்பத வெறுமனே மனித புதைகுழியின் அகழ்வுத் தளம் மட்டுமல்ல, அது இலங்கையின் போர்க்கால வரலாறு, கட்டாயக் காணாமலாக்கங்கள், இரகசியப் புதைகுழிகள், தண்டனையின்றி தொடர்ந்த அரச வன்முறை ஆகியவற்றின் உயிருள்ள சாட்சி.</p><p> ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு மனிதனின் இறப்பை மட்டும் சாட்சியப்படுத்தவில்லை. இலங்கைத் தீவில் தமிழ் குடிமகன் ஒருவனின் இருப்பின் நிலையை இனவழிப்பு குறித்த உண்மையை மறைக்க முயன்ற அரசியல் வரலாற்றின் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்நிலையில், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்தைப் பார்வையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது. </p><p>அந்தச் சந்திப்பில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை; அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f11b2a0-e042-46af-8e2e-c5b31e36ebe3/26-6a6b3ea96a28b.webp' /></p><h3>கிரிஷாந்தி படுகொலை</h3><p>ஆனால் செம்மணியின் குரலுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்குமா என்ற கேள்வி இன்னும் அப்படியே உள்ளது. செம்மணியின் மண்ணிலிருந்து எழும் இந்த எலும்புக்கூடுகளின் அமைதியான சாட்சியத்திற்கு சர்வதேச சமூகம் இறுதியாக செவிசாய்க்குமா? </p><p>அவற்றின் மொழிக்கும் குரலுக்கும் உரிய மதிப்பளித்து, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுக்குமா? அல்லது, இந்த எலும்புகளும் உலக அரசியலின் மௌனத்திற்குள் மீண்டும் ஒருமுறை புதைக்கப்படுமா?</p><p>1998ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கின் விசாரணைகளின்போது, தண்டனை பெற்ற இலங்கை இராணுவ உறுப்பினர் சோமரத்தின ராஜபக்ச, நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார். </p><p>அந்த ஒப்புதல் உலகின் கவனத்தை ஈர்த்தபோதும், முழுமையான உண்மையை வெளிக்கொணரும் எண்ணம் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அரசின் படைகள் நிகழ்த்திய இக் குற்றம் பற்றிய உண்மையை அரசு மறைக்கவே முயலும். அதுவே சர்வதேச தலையீட்டின் அவசியத்தை இன்றும் கோரி நிற்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45e75569-63e7-4565-b737-d0308149f5f1/26-6a6b3eaa23d9f.webp' /></p><h3>&nbsp;புதைக்கப்பட்ட செம்மணி
</h3><p>
ஏனெனில் அன்றைய காலத்தில் குறுகிய அளவிலான அகழ்வுகள் உண்மையின் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தின. அதன் பின் செம்மணி மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. </p><p>ஆனால் உண்மையை புதைக்க முடியாது என்பதற்கச் சாட்சியாகவே செம்மணி இன்று பேசுகிறது. அது உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கண்ணீரிலாலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டங்களாலும் உயிர்பெறுகிறது.</p><p> அந்த வகையில் இன்று மீண்டும் அகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய எலும்புகள் வெளிவருகின்றன. ஒவ்வொரு எலும்பும் ஒரு மனிதனின் வாழ்வை மாத்திரமின்றி அதன் பின்னாலுள்ள ஒரு குடும்பத்தின் காத்திருப்பையும், ஒரு சமூகத்தின் தீராத துயரத்தையும் சாட்சியமாக்குகிறது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு செம்மணி அகழ்வுத் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>இன்றும் அவர்கள் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை என்பதையும் சர்வதேசம் தமக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் புலப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை பல ஆண்டுகளாக அவர்கள் இதையே உலக நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும் வலியுறுத்தி வருகின்றனர். &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea30e80e-f8bd-459e-acf8-0c08db188329/26-6a6b3eaac93f2.webp' /></p><p></p><p>
</p><h3>உலகின் செவிகளுக்கு கேட்குமா?
</h3><p>
பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் எந்த அரசும் தயாராக இருக்கவில்லை என்பதால்தான் இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகள் மீதான நம்பிக்கையை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முழுமையாக இழந்துவிட்டனர்.</p><p> எனவே செம்மணியில் கிடைக்கும் ஒவ்வொரு மனித எலும்புக்கும் சர்வதேச தரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதாரங்கள் அனைத்தும் சுயாதீன சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக வலியுறுத்துகின்றனர்.

இன்று செம்மணியில் மண்ணை அகழும் ஒவ்வொரு கருவியம் இலங்கையின் அதிகாரபூர்வ வரலாற்றைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.</p><p> மண்ணுக்குள் இருந்து வெளிவரும் ஒவ்வொரு எலும்புக்கூடும், எங்கள் தேசத்தில் வாழ்ந்த மனிதர்கள், தமிழர்கள் என்ற காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டார்கள், இப்படியாக மனிதர்கள் கூட்டாக திட்டமிட்டுக்கொன்றழிக்கப்பட்டது இனப்படுகொலை என்பதை உலகிற்குச் சாட்சி சொல்கிறது.</p><p>இப்படியாக செம்மணி மண் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரலை உலகம் கேட்கிறதா? என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல்கலைக்கழக தரவரிசை : யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-regains-top-spot-among-sri-lankan-uni-1785409034"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-regains-top-spot-among-sri-lankan-uni-1785409034</id>
            <summary type="text">அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் உலக அளவில் 1,745-வது இடத்தையும் பிடித்துள்ளது.தமிழர் பகுதியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தையே பிடித்துள்ளது.

</p><p>
இதே தரவரிசையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் இலங்கையில் இரண்டாவது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்ரீ ஜெயவர்தனபுரப் பல்கலைக்கழகம் உலக அளவில் 2,125-வது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் 2,258-வது இடத்தையும் பிடித்துள்ளன.</p><h2>யாழ்ப்பாண பல்கலைக்கழகம்</h2><p>இந்தத் தரவரிசையின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ரூஹுனப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தையும், மொரட்டுவப் பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f6f333-c583-4a70-9fd6-b8018a44f37e/26-6a6b33b76bae8.webp' /></p><h2>உலகளவில் முதலிடம்</h2><p>
</p><p>
அத்துடன் ஆறாவது இடத்தை களனி பல்கலைக்கழகமும் ஏழாவது இடத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd85332a-9491-4618-836d-817501589ea0/26-6a6b33b6b5ae1.webp' /></p><p>

சமீபத்திய வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையின்படி, உலகின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான முதல் இடத்தை அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகமும், இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், ஐக்கிய ராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tasmac-case-senthil-balaji-bail-rejected-1785409550"></link>
            <id>https://ibctamil.com/article/tasmac-case-senthil-balaji-bail-rejected-1785409550</id>
            <summary type="text">தமிழ்நாடு மதுபானசாலை (TASMAC) ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தாக்கல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு மதுபானசாலை (TASMAC) ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சென்னை உயர் நீதிமன்றம் இன்று (30-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
</p><p>
இவ்வழக்கில் அரசுக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகச் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>காவல்துறை விசாரணை</h2><p>இந்தநிலையில் அவரைப் காவல்துறை விசாரணை செய்ய வேண்டியது அவசியமானது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
கரூர் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்திய அடுத்த நாளே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7587c4ee-69ec-4699-99a0-42a30043f6fe/26-6a6b3ae8ceaae.webp' /></p><p>செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாகச் செயற்பட்ட அதிகாரிகள், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு தமிழ்நாட்டு இலஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முறைப்பாட்டில், மதுபானசாலைகள் மற்றும் போக்குவரத்து கேள்வி பத்திரங்களை தங்களுக்குச் சாதகமாக முறைகேடு செய்து, குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வழக்குப்பதிவு&nbsp;</h2><p>இந்தநிலையில் செந்தில் பாலாஜி, முன்னாள் மதுபானசாலை மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

கார்த்திக் (என்ற முலானூர் கார்த்திக்) என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய கரூர் கேங் என்ற கூட்டமைப்பு, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் கட்டுப்படுத்தியதுடன், தமிழ்நாடு முழுவதுமுள்ள மதுபானசாலை உரிமங்களைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குமாறு அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c88e2a0-e3ed-489d-94ec-c495798d7406/26-6a6b3ae985524.webp' /></p><p>அததோடு மதுபானசாலைகள் சில்லறை விற்பனைக் கடைகளில் சாதாரணமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) ரூபாய் 10 முதல் ரூபாய் 100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூபாய் 500 வரையிலும் சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு லஞ்சமாகக் கைமாற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியத் தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா (BNS 2023) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளரானார் ஸ்டீபன் பிளெமிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stephen-fleming-named-england-test-coach-1785411348"></link>
            <id>https://ibctamil.com/article/stephen-fleming-named-england-test-coach-1785411348</id>
            <summary type="text">&amp;nbsp;சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்டகால பயிற்சியாளராக இருந்து அண்மையில் விலகிய ஸ்டீபன் பிளெமிங் இங்கிலாந்து ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்டகால பயிற்சியாளராக இருந்து அண்மையில் விலகிய ஸ்டீபன் பிளெமிங் இங்கிலாந்து ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அதே வேளை, ஜோ ரூட் டெஸ்ட்அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பிரெண்டன் மெக்கல்லம் அணியின் ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் விரிவான பொறுப்பிற்கு மாறியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஃபிளெமிங் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>சென்னை அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளர்</h2><p>முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவரான இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியபோது பல இந்தியன் பிரீமியர் லீக் பட்டங்களை வென்று கொடுத்ததன் மூலம், ஒரு வலுவான பயிற்சியாளர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcee7109-6bee-47f9-95dc-a5a45dab765b/26-6a6b3abeefdf4.webp' /></p><p>

2022-ல் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, 64 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்திய ஜோ ரூட், அணி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் வேளையில் மீண்டும் அணித்தலைவர் பொறுப்பிற்குத் திரும்பியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மீண்டும் அணித்தலைவராக ஜோ ரூட்</h2><p> </p><p>அனுபவம் வாய்ந்த இந்த துடுப்பாட்டவீரர், இங்கிலாந்தின் முன்னணி டெஸ்ட் ஓட்ட குவிப்பாளராகத் தொடர்கிறார். எதிர்கால சவால்களுக்கு முன்னதாக அணியை மீண்டும் கட்டமைக்க ஃபிளெமிங்குடன் இணைந்து பணியாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d475d4e0-4a6a-42e9-a935-56a3f7d2fdc5/26-6a6b3abfa1156.webp' /></p><p>
</p><p>
ஃபிளெமிங்கின் இந்த நியமனம், அவரது முதல் பெரிய சர்வதேச பயிற்சியாளர் பொறுப்பைக் குறிக்கிறது. மெக்கல்லம் வெளியேறியதாலும், பென் ஸ்டோக்ஸின் அணித்தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததாலும், இங்கிலாந்தின் ஆக்ரோஷமான ஆட்ட பாணியைத் தக்கவைத்துக்கொண்டு, டெஸ்ட் அணிக்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதே அவருடைய உடனடிப் பணியாக இருக்கும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T11:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/physiotherapist-death-case-police-investication-1785410956"></link>
            <id>https://ibctamil.com/article/physiotherapist-death-case-police-investication-1785410956</id>
            <summary type="text">நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்
குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின்
விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த நால்வரும் இன்று (30.07.2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p> சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும்
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு</h2><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய
ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய
ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு
உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க
ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை கபவல்துறை பயிற்சி கல்லூரியின்
காவல்துறை பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோராவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8126d6-3e66-41a7-875c-59f042d39f24/26-6a6b3a369b4c1.webp' /></p><p>
</p><p>
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp; காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:49:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-cannot-reopen-while-us-threats-1785406649"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-cannot-reopen-while-us-threats-1785406649</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இன்று வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p>

"அமெரிக்க அதிகாரிகளின் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும், பிராந்தியத்தில் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது," என்று IRGC வெளியிட்ட அறிக்கையில் கூறியது.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் கப்பலில் பற்றிய தீ</h2><p>தொடர்ச்சியான "அச்சுறுத்தல்களும் தலையீடுகளும்" நிலைமையை "மேலும் கடினமாகவும் சிக்கலாகவும்" மாற்றும் என்று அது எச்சரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1a0a00-dfdd-4360-86b3-e614919cb185/26-6a6b296840b2e.webp' /></p><p>&nbsp;"அமெரிக்க விமானங்களின் தூண்டுதலின் பேரில்," இரண்டு எண்ணெய் கப்பல்கள், ஹோர்முஸ் eீரிணைக்கு தெற்கே "பாதுகாப்பற்ற பாதை" வழியாக இரவோடு இரவாகச் செல்ல முயன்றதாக IRGC கூறியது.

அவற்றில் ஒரு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கப்பல்களும் உடனடியாகத் திரும்பிச் சென்றதாக புரட்சிகர படை தெரிவித்தது.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் வெளிச்சக்திக்கு இடமே இல்லை</h2><p>

"ஹோர்முஸ் நீரிணை எங்கள் பிரதேசம், அதை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை உறுதியாகக் கட்டுப்படுத்துகிறது," என்று அந்த அறிக்கை கூறியதுடன், "ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரும்" எந்தவொரு வெளி சக்தியும் அதற்குள் தலையிட அனுமதிக்கப்படாது என்றும் அது மேலும் குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130b3f0a-4fa1-439a-8aa3-fd88cd3d4bbd/26-6a6b2968e58c0.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்திருந்தது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு நிதி உதவி செய்ததால் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-female-journalist-to-12-years-in-prison-1785406488"></link>
            <id>https://ibctamil.com/article/russian-female-journalist-to-12-years-in-prison-1785406488</id>
            <summary type="text">உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு&amp;nbsp; 12 ஆண்டுகள் கடூழிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு&nbsp; 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட பெண்&nbsp;அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா என்பவராவார்.&nbsp;</p><p>இவர்&nbsp;ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>தேசத்துரோக வழக்கு</h2><p> 


இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a393bab-9afe-4f15-8202-75e0efce9eaa/26-6a6b31d0bd7df.webp' /></p><p> </p><p>

உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்படுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது குறித்த பெண் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>இதனை தொடர்ந்து இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.</p><p>ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் புலி முரளியின் பிரகீத் பரபரப்பும்... யூலை 30 ராஜீவ் அடியும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajiv-attack-to-prageeth-case-news-update-1785408048"></link>
            <id>https://ibctamil.com/article/rajiv-attack-to-prageeth-case-news-update-1785408048</id>
            <summary type="text">ரோஹன விஜயவீரா கொல்லப்பட்ட பின்னர் ஜேவிபியின் மறுபிறப்புக்கு உதவியதாகக் கிசுகிசுக்கப்படும் இந்தியாவின் றோ அமைப்பு, இலங்கை தொடர்பான சில விடயங்களை மறக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரோஹன விஜயவீரா கொல்லப்பட்ட பின்னர் ஜேவிபியின் மறுபிறப்புக்கு உதவியதாகக் கிசுகிசுக்கப்படும் இந்தியாவின் றோ அமைப்பு, இலங்கை தொடர்பான சில விடயங்களை மறக்க விரும்புவதான உபரிகிசுகிசுக்களும் உண்டு.</p><p>

அந்தப் பட்டியல்களில் ஒன்றாக, 1987 யூலை 30ஆம் திகதியான இன்றைய நாளில் அன்று கொழும்பில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளது.</p><p> எனினும், இன்றுவரை இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலகின் இராஜதந்திர வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு தாக்குதலாகவே இது உள்ளது.</p><p>

ஏனெனில், அது ஒரு வெளிப்புறத் தாக்குதலாக இல்லாமல், விருந்தினராக அழைத்த நாடு ஒன்றின் இராணுவ அணிவகுப்பில் நடந்த தாக்குதல் இது.
</p><p>
அன்று ஒருவேளை சிறிலங்கா கடற்படை விஜிதரோஹனவின் துப்பாக்கிப்பிடி ராஜீவ் தலையைப் பிளந்திருந்தால், அது இந்தோ - சிறிலங்காவின் வரலாற்றை வேறு திசைக்கு இழுத்த ஒரு நாளாக இந்த யூலை 30 ஐ மாற்றியிருக்கும்.
</p><p>
இவ்வாறான பழைய பரபரப்புக்களின் பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மையப்படுத்திய ஆட்டங்கள் மற்றும் பிரகீத் எக்னலிகொட என்ற ஊடகர் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் ஒரு சாட்சியான முரளி என அறியப்படும் சுரேஷ்குமார் தவேந்திரன் வழங்கும் புதிய புதிய பரபரப்புகளும் வந்துள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KTM6sOleoGg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/phu-files-graft-complaint-against-speaker-1785404349"></link>
            <id>https://ibctamil.com/article/phu-files-graft-complaint-against-speaker-1785404349</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு கோரி முறைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு கோரி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பிவிதுரு ஹெல உறுமய கட்சி இன்று (30)-07-2026) லஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் (CIABOC) இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
</p><p>
அக்கட்சியின் பொதுச்செயலாளர் உபுல் கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முறைப்பாட்டுடன் சபாநாயகரின் ஊழல் செயற்பாடுகளுக்குச் சான்றாக 10 எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகளும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.</p><p></p><h2>எரிபொருள் ஒதுக்கீடு</h2><p>

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சான்றுகளில் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளாக, “சபாநாயகருக்கு உரித்தான உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மேலதிகமாக பிறிதொரு வீட்டையும் பயன்படுத்தியமை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3118dd6d-cffe-44c7-8b10-a0f0181b2888/26-6a6b20fcb0eeb.webp' /></p><p>

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த தளபாடங்கள் மற்றும் சாதனங்களைத் தனது தனிப்பட்ட வீட்டிற்கு எடுத்துச் சென்றமை மற்றும் அங்குத் தனிப்பட்ட ஊழியர்களைத் தங்க வைத்திருந்தமை.
</p><p>
 நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனக்கு உரித்தான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கும் (Fuel Quota) அதிகமாக மேலதிக எரிபொருளைப் பெற்றுக்கொண்டமை” என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல மாதங்கள்</h2><p>இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பல மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றப் பணியாளர் பிரதானி சாமிந்த குலரத்ன கருத்து வெளியிட்டிருந்த போதிலும், அது குறித்து இதுவரை எவ்வித முறைப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பிவிதுரு ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>


முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுச்செயலாளர் உபுல் கமகே, “லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, இதுவொரு சுயாதீனமான நிறுவனம் என அடிக்கடி கூறி வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9c93772-68f0-4a95-a6b4-d1d6512b7865/26-6a6b20fd79d66.webp' /></p><p>நாட்டின் மூன்றாவது பிரஜையான சபாநாயகருக்கு எதிராக நாங்கள் சமர்ப்பித்துள்ள இந்தச் சான்றுகளின் அடிப்படையில் ஆணைக்குழு எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் சுயாதீனத்தை முழு நாடும் கண்டுகொள்ள முடியும்.</p><p> 

இது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமல்ல மாறாக ஊழலுக்கு எதிராக எமது கட்சி எடுக்கும் பொறுப்புள்ள நடவடிக்கையாகும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா தாக்குதல் குறித்து ஐ.நா உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-attacks-un-calls-for-immediate-talks-1785398415"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-attacks-un-calls-for-immediate-talks-1785398415</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&amp;nbsp;இதன்படி சண்டையை நிறுத்திவிட்டு, ராஜதந்திரப் பேச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இதன்படி சண்டையை நிறுத்திவிட்டு, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>
இதற்கமைய பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லை என்றால், மோதல் மேலும் விரிவடையக்கூடும் என்று பொதுச்செயலாளர்&nbsp; கவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஐ.நா உடனடி பேச்சுவார்த்தை</h2><p>மேலும் கடந்த சில மணிநேரங்களில் அதுவே நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d382f2f1-b1ff-4b5b-a838-9e8dbd68bb2d/26-6a6b0fd519631.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல் சாதகமான முன்னேற்றங்கள் அல்ல, மேலும் இரு தரப்பினரும் சண்டையை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான், கத்தார் மற்றும் பிறரால் முன்னெடுக்கப்படும் மத்தியஸ்த முயற்சிகள் உள்ளிட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மீண்டும் திரும்புவதை அவர் உறுதிசெய்ய விரும்புவதாக ஐ.நா பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ambulance-ஐ அடுத்து மோட்டார் சைக்கிள் சேவையை ஆரம்பிக்கும் சுவசெரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suwa-seriya-motorcycle-emergency-medical-service-1785405361"></link>
            <id>https://ibctamil.com/article/suwa-seriya-motorcycle-emergency-medical-service-1785405361</id>
            <summary type="text">அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகவும் திறமையாகவும் சென்றடையும் நோக்கில், 1990 சுவசெரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகவும் திறமையாகவும் சென்றடையும் நோக்கில், 1990 சுவசெரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.</p><p>கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதித் தடைகள் காரணமாக அம்புலன்ஸ் வந்து சேரும் நேரம் தாமதமாகும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளை இந்த புதிய சேவை ஆரம்பத்தில் இலக்காகக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி&nbsp;</h2><p>அம்புலன்ஸ் வருவதற்கு முன்பே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று சுவசெரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a666cc6-688b-4bfd-adf8-c5e5cb643ec9/26-6a6b25669b1db.webp' /></p><p>
</p><p>
இந்த முயற்சியின் கீழ், சிறப்பாகப் பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள், அதே நேரத்தில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அவசரநிலைகளுக்குப் பயன்படுத்தப்படும்.</p><h2>இந்த ஆண்டு இறுதிக்குள்&nbsp;சேவை ஆரம்பம்</h2><p>
</p><p>
இந்த மோட்டார் சைக்கிள் அவசர சேவையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறப் பகுதிகளில் ஒரு முன்னோட்டத் திட்டமாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29736381-d7ec-46e2-b0a1-64c6a3586df9/26-6a6b22f52548d.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மீதான ஈரானின் திடீர் தாக்குதல்...! தொழிலாளி ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-attacks-kuwait-as-mideast-tensions-rise-1785403335"></link>
            <id>https://ibctamil.com/article/iran-attacks-kuwait-as-mideast-tensions-rise-1785403335</id>
            <summary type="text">குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குவைத் இராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்புப் படை</h2><p>ஈரானில் இருந்து ஏவப்பட்ட 5 ஏவுகணைகளை ஜோர்தானிய வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்திய சில மணி நேரங்களிலேயே குவைத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15e67a46-0bf4-465d-85e0-c99f01f6f08c/26-6a6b1a04dbde6.webp' /></p><p>ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் உட்படப் பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் (Qeshm) தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

அத்தோடு எகிப்தின் டமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு இயற்கை எரிவாயுப் படகுகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77de10a3-32f7-487a-b6e8-225d024f675c/26-6a6b1a041b7d7.webp' /></p><p>இதனுடன் சவுதி அரேபியாவின் அப்கேக் (Abqaiq) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>
ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற குழுக்கள் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதல்களால் பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதாரத்திலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை இலக்குவைத்த மத்தியகிழக்கு நகர்வில் அழிக்கப்பட்ட ஈரானின் இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-secret-destroyed-in-middle-east-move-1785401094"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-secret-destroyed-in-middle-east-move-1785401094</id>
            <summary type="text">பூகோள அரசியலின் எதிர்கால நிலைகளை தீர்மானித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஈரான் யுத்ததின் தாக்கம் இன்றைய உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பிடியை தக்கவைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூகோள அரசியலின் எதிர்கால நிலைகளை தீர்மானித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஈரான் யுத்ததின் தாக்கம் இன்றைய உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பிடியை தக்கவைத்துள்ளது.
</p><p>
இந்த போரில் ஈரானின் யுத்த கோட்பாட்டின் அர்த்தம் அமெரிக்காவின் நிலைகளை அழிப்பதும், அதேபோல இஸ்ரேலை முற்றுமுழுத்தக்க தாக்குவதுமே.
</p><p>
ஆனால் அமேரிக்கா ஈரானை நோக்கி மேற்கொண்ட தாக்குதல் அனைத்தும் கொடிய தாக்குதல்களே. இது குறித்த அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பிரிவு வெளியிட்ட அறிக்கைகள் ஈரானின் 300க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கி அழித்ததாக கூறியுள்ளது.</p><p>

எனினும் மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்காவின் பலவீனங்களை தாக்கி தனது பலத்தை நிரூபித்த ஈரானின் தற்போதைய நகர்வு, மற்றும் இந்த போரில் வெல்லப்போவது யார்? சிக்கப்போவது யார் என்பதை விரிவாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8aslwnVLg9c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T09:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீண்டும் ஒலித்த நீதிக்கான குரல்! ஐ.நாவிடம் அவசரக் கோரிக்கை.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-jaffna-demanding-chemmani-justice-1785401126"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-jaffna-demanding-chemmani-justice-1785401126</id>
            <summary type="text">
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த போராட்டம் இன்று (30-07-2026) செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிசுக்களின் எச்சங்கள்&nbsp;</h2><p>ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதாததேயு திருச்சுரூபம் முன்பாக ஆரம்பமான
பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da25294b-32cf-4485-9079-3b8efc34429a/26-6a6b1655a93ac.webp' /></p><p>பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் டெர்க்கிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை
அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் வாசித்தார்.
</p><p>
அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 21ஆம் திகதி வரையில் சிறுவர்கள் மற்றும்
சிசுக்களின் எச்சங்கள் உட்பட 454 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள
நிலையில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சுயாதீன சர்வதேச
விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p></p><h2>சர்வதேச தரநிலை</h2><p>

மேலும், மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், அடையாளம் காணல் மற்றும் பாதுகாத்தல்
ஆகியவை மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுயாதீன டி.என்.ஏ. பரிசோதனை, குடும்பங்களின்
பங்கேற்பு மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea6fa3bf-f7bd-47b6-ba6f-274182abd3be/26-6a6b16361d4cf.webp' /></p><p>அத்துடன், செம்மணி அகழ்வுப் பணிகளை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து
கண்காணித்து சான்றுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைப்
பொறிமுறையின் பிரசன்னம் அவசியம் என்றும் கோரப்பட்டுள்ளது.
</p><p>
இப்போராட்டத்தில் யாழ்ப்பாண மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்,
யாழ்ப்பாண மாகாண அமல மரித்தியாகிகள் சபையின் முதல்வர் அருட்தந்தை போல்
ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் என
100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xWy1JVfSNlg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738</id>
            <summary type="text">🛑&amp;nbsp;புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>விளக்கமறியல் காலம்</h2><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0334586f-d8e4-4d81-84d8-1a717b4317a4/26-6a6b0e6c490bb.webp' /></p><p>ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். </p><p>

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>முதலாம் இணைப்பு</u></b></h5><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/f68EHX3xyEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050"></link>
            <id>https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( &#039;பிள்ளையன்&#039;) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( 'பிள்ளையன்') தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்&nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் இந்த வழக்கு 2025.10.31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>பிள்ளையான் மனு அடுத்த ஆண்டு விசாரணை</h2><p>அன்றைய வழக்கில்&nbsp;ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ae0e68-c2a0-4c66-a7c1-542cbc3892a3/26-6a6b08022c76e.webp' /></p><p>இந்நிலையில் இந்த மனு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த மனு ஜனவரி 19, 2027 அன்று விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஏவுகணைகளுக்கு எதிராக எதிர் தாக்குதலை ஆரம்பித்த ஜோர்தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088"></link>
            <id>https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&amp;nbsp;ஈரான் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&nbsp;</p><p>ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு ஜோர்தானில் உள்ள இராணுவத்தலங்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் ஜோர்தான் இந்நகர்வை மேற்கொண்டு உள்ளது.&nbsp;</p><p>ஈரானிய ஏவுகணைகளை ஜோர்தான் வீழ்த்தியதுடன், நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளது.</p><p></p><h2>ஈரானிய ஏவுகணை</h2><p>ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளைத் தனது வான்வெளியில் இடைமறித்து அழித்ததாக ஜோர்தானின் ஆயுதப் படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c10b99-4d8c-4552-842c-056b23deeff1/26-6a6b0116400a7.webp' /></p><p>மேலும் அந்த அறிக்கையில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆனாலும் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், நாட்டையும் அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கடந்த புதன்கிழமை காலை ஜோர்டான் மேலும் ஐந்து ஏவுகணைகளை இடைமறித்ததாக உறுதிப்படுத்திய நிலையில் ஈரானின் தற்போதைய இலக்குத் தாக்குதல் நடந்துள்ளது. அவையும் அதன் வான்வெளியில், ஈரானிலிருந்து ஏவப்பட்டவை என்று கூறப்படுகிறது.
</p><p>
தற்போது, ​​ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் கட்டளைத் தலைமையகத்தைத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவே இது செய்யப்பட்டதாக அது கூறுகிறது.</p><h2>ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை</h2><p>அந்த ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

அந்தத் தாக்குதலை புதன்கிழமை அன்று வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb19cd2-8629-4cc4-98c9-51354ef20a1c/26-6a6b011713cd8.webp' /></p><p> </p><p>ஜோர்டான் மீதான இந்தத் தாக்குதல்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது சவூதி அரேபியா பதிலடித் தாக்குதல்களை நடத்திய புதன்கிழமை நிகழ்வுகளும் தற்போது இந்தப் பிராந்தியத்தில் சில கவலைகளை ஏற்படுத்தி வருகின்றன.</p><p>

இந்தப் போர் விரிவடைந்து, மற்ற நாடுகளையும் தனக்குள் இழுத்துவிடும் என்ற கவலை நிலவுகிறது. அதைத்தான் வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் தவிர்க்க விரும்புகின்றன.</p><p> எனவே, அமெரிக்காவும் ஈரானும் ஆகிய இரு தரப்பினரும் தற்சமயம் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த நெருக்கடிக்கு இராஜதந்திரத் தீர்வுகளை முன்னெடுக்க வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்து வருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374"></link>
            <id>https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசுக்குச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினை பொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நுகர்வுப் பரிசோதனை</h2><p>அத்துடன், நாடாளுமன்றத்தின் 41 வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை (Fuel Efficiency Test) சுற்றுநிருப விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42afcb41-6ab4-4703-bc03-862fafd4c23d/26-6a6b0570c5e1b.webp' /></p><p>
2016 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின்படி, ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனைக்குப் பின்னரும் 12 மாதங்கள் கழித்து அல்லது 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு அல்லது எஞ்சின் தொடர்பான முக்கிய பழுதுபார்ப்புக்குப் பிறகு எது முதலில் வருகிறதோ, அதன் பிறகு மீண்டும் எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். </p><p>

ஆனால் இப்பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தீவிர சேவைக்காலம்</h2><p>நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 12 வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 5 அதிகாரிகள் கொண்ட குழுவினால் கடந்த ஆண்டின் மே 28 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99744e38-919d-42cd-8c99-25419a5720ce/26-6a6b056fe5c65.webp' /></p><p>
அத்தோடு நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (Duty-free Vehicle Permits) வழங்குவது தொடர்பான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிரேஷ்ட நிர்வாகப் பதவியொன்றில் 6 ஆண்டுகள் தீவிர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்யாத மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறைப்படியான அனுமதி தொடர்பான ஆவணங்கள் தணிக்கைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R1DeibMI-g4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:09:41+00:00</updated>
        </entry>
    </feed>
