<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-20T06:44:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் வங்கிக் கணக்குகள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/examination-all-bank-accounts-linked-shiran-basik-1787206700"></link>
            <id>https://ibctamil.com/article/examination-all-bank-accounts-linked-shiran-basik-1787206700</id>
            <summary type="text">

தற்போது 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அனைத்து வங்கிக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தற்போது 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அனைத்து வங்கிக் கணக்குகளையும் விரிவாக ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த உத்தரவின்படி, இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றில் விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து அவரது நிதிக் கணக்குகளை மீளாய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், அவரது செல்வம் மற்றும் சொத்துக்கள் குறித்து, சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவின் மேற்பார்வையில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.</p><p></p><h2>விசாரணைகள்&nbsp;</h2><p>

இந்நிலையில், விசாரணையின் போது கிடைத்த தகவலின் மூலம் கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் உள்ள பாசிக்கிற்கு சொந்தமானதாக கூறப்படும் ஐந்து ஹோட்டல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60907f45-eb0b-4345-b5c3-3c142bdd6233/26-6a869e6d2acfb.webp' /></p><p>

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் ஷிரான் பாசிக், அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, அவரது குற்றச் செயல்கள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக்கள் குறித்து பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T06:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலை மாணவர்களுக்காக மகாபொல நிதியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahapola-digital-information-system-uni-students-1787202092"></link>
            <id>https://ibctamil.com/article/mahapola-digital-information-system-uni-students-1787202092</id>
            <summary type="text">மகாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு புதிய தகவல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாபொல நிதியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு புதிய தகவல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
மகாபொல நிதியத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான விஜித் மலகொட இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி, இந்த அமைப்பு மகாபொல உதவித்தொகை நிதி விநியோகம் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>
</p><p></p><h2>மகாபொல இணையத்தளம் மூலம் கிடைக்கும்&nbsp;</h2><p>இந்த புதிய அமைப்பு, இந்த மாதம் முதல் <a href="https://www.mahapola.lk/index.php?option=com_content&amp;view=article&amp;id=78&amp;Itemid=190&amp;lang=en" target="_blank">www.mahapola.lk</a> என்ற அதிகாரப்பூர்வ மகாபொல இணையத்தளத்தின் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் என சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8105a8b6-bda5-4a5a-a167-db29f862eeae/26-6a86975c7f7b7.webp' /></p><p>
இந்தநிலையில் குறித்த அமைப்பு, மாணவர்கள் தங்களின் உதவித்தொகை கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான விபரங்களை எளிதாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Luxshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள்! அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-refugees-in-india-can-return-home-1787200480"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-refugees-in-india-can-return-home-1787200480</id>
            <summary type="text">இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p>


நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,



‘‘யுத்தக் காலத்தின்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>அமைச்சரவை அனுமதி</h2><p>


அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள், மீண்டும் நாட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fdd4ab8-d6b1-494f-b556-018f2ff0c07b/26-6a86936c9b48e.webp' /></p><p>அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அங்கீகரிக்கப்பட்ட வகையில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டார்கள்.</p><p> குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் சட்டத்துக்கு அமைவாகவே அவ்வாறு செயற்பட்டது. தற்போதைய தீர்மானத்துக்கமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>


இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின், அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்து தாம் இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.</p><p></p><p> </p><h2>இரண்டு வாரகால அவகாசம்</h2><p>அதனைத்தொடர்ந்து அரசப்புலனாய்வு சேவை பிரிவினூடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்களால் இலங்கைக்கு வருகை தர முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db642d59-34a3-4203-a34a-cf485d3894aa/26-6a86936bccbb2.webp' /></p><p>



நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்த பல கேள்விகளுக்கு நீதியமைச்சுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது.</p><p> ஆகவே இதற்கு பதிலளிக்க இரண்டு வாரகால அவகாசம் வேண்டும். அதனைத் தொடர்ந்து முழுமையான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும்’’ என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-child-employment-amendment-bill-1787200478"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-child-employment-amendment-bill-1787200478</id>
            <summary type="text">புதிய இணைப்புஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.&amp;nbsp; &amp;nbsp;நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இன்றைய அமர்வில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5428c8ca-ec46-4062-a894-819881061456/26-6a8692cb2bd24.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(20.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 5.00 வரை&nbsp;பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.</p><p>மாலை 5.00 முதல் 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணை ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvBKgryxFpE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/families-of-missing-persons-in-sri-lanka-1787199364"></link>
            <id>https://ibctamil.com/article/families-of-missing-persons-in-sri-lanka-1787199364</id>
            <summary type="text">கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால்
இன்று வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால்
இன்று வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித்
திட்டத்தில், நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டன.
</p><p>ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் போன காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
தகவல்களைப் பதிவு செய்தனர்.</p><p></p><h2>வயது முதிர்ந்த பெற்றோர்</h2><p>
இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர்
வயது முதிர்ந்த பெற்றோர்களாகவும் உறவினர்களாகவும் காணப்பட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4eb83b6-7f5b-429f-9c94-146f9a07e319/26-6a86903b318ef.webp' /></p><p>பல வருடங்களாக
தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்கள், தமக்கு பணம்
அல்லது இழப்பீடு தேவையில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத்
தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும்
உருக்கமாக தெரிவித்தனர்.
</p><p>“பல வருடங்களாக வந்து பதிவு செய்கிறோம்; ஆனால் எங்களுக்கு இன்னும் எமது
பிள்ளைகள் பற்றிய பதில் கிடைக்கவில்லை” என மனவேதனையுடன் தெரிவித்த சில
உறவினர்கள், தற்போது தாங்கள் வயது முதிர்ந்த நிலையில் இருப்பதாகவும்,
தங்களுக்குப் பின்னர் தமது பிள்ளைகளின் கதையை யார் பேசுவார்கள் என்ற கவலையும்
இருப்பதாகவும் தெரிவித்தனர்.
</p><p>“இப்போது எஞ்சியிருப்பது நாங்கள் மட்டுமே. நாங்களும் இல்லாமல் போனால்,
எங்களுடைய பிள்ளைகளின் கதைகளும் முடிந்துவிடும்” என்ற அவர்களின் கண்ணீர் கலந்த
வார்த்தைகள், பல ஆண்டுகளாக நீடித்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின்
குடும்பங்களின் வலியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தின.
</p><p>காலம் கடந்து சென்றாலும் தமது உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் தேடும்
இந்த குடும்பங்கள், தங்களது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா அல்லது அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதற்கான உறுதியான பதிலை வழங்க வேண்டும் என தொடர்ந்தும்
வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-and-karannagoda-chargesheet-1787201754"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-and-karannagoda-chargesheet-1787201754</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக&nbsp; குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இதன்படி இன்று (20.08.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த இருவரும் எதிரான குற்றப்பத்திரிகைகள்&nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பிரதிவாதிகளையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிக்கை தாக்கல்</h2><p>இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0415983f-ede0-4c18-8184-05e1cc99acc1/26-6a868e9882576.webp' /></p><p>2006 ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ச தகுதிகளின்றி கடற்படையில் இணைக்கப்பட்டமை மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது குற்றம் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டது.&nbsp;</p><p>மேலும் தகுதியின்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தமை மற்றும் அரச நிதியில் வெளிநாட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தமை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சியின் இரு முக்கிய புள்ளிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை வாரி வழங்கிய ஷிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-donated-crores-rupees-to-opposition-parties-1787201321"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-donated-crores-rupees-to-opposition-parties-1787201321</id>
            <summary type="text">எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணத்தை செலவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணத்தை செலவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும் கொழும்பு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை நிர்மாணிப்பதற்கு பணத்தை செலவிட்டு கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியதாகவும், தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்கரையில் 5 சொகுசு ஹோட்டல்களை நிர்மாணித்துள்ளதாகவும் அவர் விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட பணம் எவ்வளவு என்பது இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை என விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p></p><h2>தேர்தல் நடவடிக்கை</h2><p>
</p><p>
மேலும் ஒரு அரசியல்வாதியின் தேர்தல் பிரசாரத்திற்காக 50 பேருந்துகளையும் வழங்கியதுடன், மேலும் பெருமளவு பணமும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a59cfe-f744-48d7-95c9-91cd44ff30b4/26-6a868b4231364.webp' /></p><p>
</p><p>
இந்த போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பணத்தைப் பெற்று தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு அரசியல்வாதிகளிடமும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இவ்வாறு ஷிரான் பாசிக்கிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் களுத்துறை பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், தனக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 5 முன்னணி ஹோட்டல்கள் குறித்தும் ஷிரான் பாசிக் தகவல்களை வெளியிட்டுள்ளார். 

அந்த ஹோட்டல்கள் தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முன்னணி ஹோட்டல்கள் என தற்போது தெரியவந்துள்ளது.
</p><p>
கடந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சோல் பீச் ஹோட்டலும் தனக்குச் சொந்தமானது என்றும், அதற்கான பணத்தைத் தானே செலவிட்டதாகவும் ஷிரான் பாசிக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள்</h2><p>
</p><p>
அத்துடன், பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை ஷிரான் பாசிக் பணத்தை முதலீடு செய்து நிர்மாணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6472b-959e-4b8c-8ef0-28389f4b8521/26-6a868b41783a1.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் சம்பாதிக்கப்பட்ட சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றும் நோக்கில் இந்த வணிகங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
ஷிரான் பாசிக் கடற்கரைப் பகுதியில் நிர்மாணித்துள்ள ஹோட்டல்கள் வேறு நபர்களின் பெயர்களில் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
அத்தோடு கடற்கரைப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் ஏழை மக்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஹோட்டல்களை நிர்மாணித்து அவற்றை நடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களில்கூட ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்து, சட்டவிரோதமான வழிகளில் அவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

கல்கிஸ்ஸ பகுதியில் செயல்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுமான அல்டோ தர்மே, படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்களும் தனது போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் ஷிரான் பாசிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T05:06:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சமித்புர சத்து : விசாரணையில் சிக்கிய ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-made-revolver-12-live-rounds-samithpura-1787198638"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-made-revolver-12-live-rounds-samithpura-1787198638</id>
            <summary type="text">கடந்த 18ஆம் திகதி ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட &#039;சமித்புர சத்து&#039; என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 18ஆம் திகதி ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'சமித்புர சத்து' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p>

இதற்கமைய, வெளிநாடொன்றிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>சமித்புர சத்து எனப்படுபவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p></p><h2>கணேமுல்ல சஞ்சீவ கொலை</h2><p> </p><p>

கொழும்பு 15, மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திமுத்து சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/500b78a3-fc95-4ee7-9a0b-1016a14f0475/26-6a8687e481a5a.webp' /></p><p> 

அவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராவார் என்பதுடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:56:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக தொல்பொருட்கள் தேடி அகழ்வில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-while-excavating-artifacts-in-kilinochchi-1787198275"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-while-excavating-artifacts-in-kilinochchi-1787198275</id>
            <summary type="text">கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கிளிநொச்சி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் முந்தலம், உக்குவெல, தும்மலசூரிய, பிலியந்தலை, யாழ்ப்பாணம், மாதம்பே மற்றும் கெசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>எட்டு பேர் கைது</h2><p>

சந்தேக நபர்கள் தொல்பொருள் பெறுமதியுடைய கலைப்பொருட்களைத் தேடி குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41622156-8bae-44d6-b87a-053454c70bf6/26-6a8685f19bc54.webp' /></p><p>
</p><p>குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-police-investigation-1787194739"></link>
            <id>https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-police-investigation-1787194739</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் விசாரணைகளில் தெரியவந்த விடயங்கள் குறித்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். </p><p>

அந்த அறிக்கையில், குறித்த காணொளிக்கு அமைய அந்த இடமானது கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு முக்கொம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்&nbsp;</h2><p> </p><p>

பளை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டை அழித்து 3 மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் முகாம் எனவும், இங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் சந்தேகநபர் காணொளியில் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28861255-18bc-498e-8c2c-872b88069e4d/26-6a8678a5c5925.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். </p><p>

அவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அடிப்படையற்ற மற்றும் போலியானது என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>அந்த இடத்தை மையமாகக் கொண்டு வெடிபொருட்கள் உற்பத்தி, சட்டவிரோத பொருட்கள் உற்பத்தி அல்லது குண்டு தயாரிப்பு இடம்பெறுவதாக விசாரணைகளில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p>மேலும், விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்பு அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி நிலையமாக அந்த இடம் பராமரிக்கப்படவில்லை.</p><p>

எனினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது, அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d84b665-3411-4762-a8a0-249bdb5f1b70/26-6a8678a511fd5.webp' /></p><p> 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர். </p><p>

பின்னர் அவர் நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lDfd6TcaGVA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து - சிறுமி உட்பட மூவர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-including-7-year-old-girl-killed-in-delgoda-road-1787199651"></link>
            <id>https://ibctamil.com/article/3-including-7-year-old-girl-killed-in-delgoda-road-1787199651</id>
            <summary type="text">தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து நேற்று (19.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து நேற்று (19.08.2026) பிற்பகல் மீகஹாவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட புது கண்டி வீதியின் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனம் ஒன்று வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, ​​எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32a89bb8-c574-4967-adc9-cb9d3fe6633b/26-6a86833c2e7a7.webp' /></p><p>உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டி சாரதி 69 வயதுடைய தெல்கொட சேர்ந்தவர் எனவும், 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 07 வயது மகள் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காரில் பயணித்த சிறுமி ராகம வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உதவும் நாட்டுகளுக்கு கடும் தண்டனை - ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-country-who-helping-iran-1787193008"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-country-who-helping-iran-1787193008</id>
            <summary type="text">ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>நவம்பர் மாதத் தேர்தல்கள் மிக வேகமாக நெருங்கி வரும் நிலையில், இந்தப் போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.</p><p>குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரிய பொருளாதார விளைவு</h2><p>ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடியாகச் செயல்படுவதற்குத் தமது நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்கும் என்பதையும் நான் அறிவிக்கிறேன்&nbsp;என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76c0271-e5b2-4d55-8781-12c5f080b2ba/26-6a866973ba3a5.webp' /></p><p>குறித்த நாடுகள் என்ன மாதிரியான தண்டனையை எதிர்கொள்ளும் என்பதை அவர் குறிப்பிடவில்லை, மேலும் ஈரான் தவிர வேறு எந்த நாடும் அவரால் பெயரிடப்படவில்லை. </p><p>

ஈரானின் மீது உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை அமெரிக்கா விதிக்கும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T02:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு அமெரிக்க விசாவில் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148</id>
            <summary type="text">மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.குழந்தைக்கு அமெரிக்கக் குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா விசா விண்ணப்பங்கள்</h2><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff47b590-1833-4afb-8b62-bade95fcec64/26-6a865eab3d672.webp' /></p><p>இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும்&nbsp;தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p>குநித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e28398-e08b-4ddb-8bc4-106c65712d51/26-6a86592e02786.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.&nbsp;இதில் மொத்தம் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.</p><p>

சிங்கள மொழிமூலப் பரீட்சைக்கு 220,366 மாணவர்களும், தமிழ் மொழிமூலப் பரீட்சைக்கு 73,723 மாணவர்களும் தோற்றியுள்ளனர்.</p><p> 

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K43YIDN-Oj0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
</p><p>







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7b1662-4b0e-4921-a1e6-22ad229db481/26-6a86495e9dc6e.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:06:02+00:00</updated>
        </entry>
    </feed>
