<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-25T14:22:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/visas-for-sri-lankans-traveling-to-india-1784987752"></link>
            <id>https://ibctamil.com/article/visas-for-sri-lankans-traveling-to-india-1784987752</id>
            <summary type="text">இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஒன்லைனில் விண்ணப்பித்து இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,</p><p>&nbsp;இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத்
தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக
வழங்கப்படுகின்றன.</p><h2>&nbsp;புத்தசாசன,&nbsp; அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள்</h2><p> </p><p>இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட
யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a545183d-177e-4b6b-9edc-4eecbc15ce5d/26-6a64c5681bc69.webp' /></p><p>இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம்
மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்நடைமுறை
நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 2026 ஜூலை 7 ஆம்திகதி முதல் புதிய சேவை
வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான
கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>&nbsp;முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். 10 அல்லது
அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும்.</p><p></p><p> </p><h2>உயிரியல் அடையாளத் தகவல்</h2><p>மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு
செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC
மையங்களுக்கு வரலாம். இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே
உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed31ae86-d63e-42a0-99e1-58ef5b457e5c/26-6a64c568bfd52.webp' /></p><p>&nbsp;உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த
குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில்
சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு
வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய
முடியும்.
</p><p> மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை. </p><p>எனவே, இலங்கை
யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே
எழுவதில்லை. இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள்
இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p>[Q7ZEERM[</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T14:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649</id>
            <summary type="text">கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்குற்றவலையமைப்பில் முக்கிய புள்ளி என தெரியவந்துள்ளது.
</p><p>
சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜையே கொல்லப்பட்டவராவார்.</p><p>இந்த கொலை சம்பவத்திற்குப் பின்னால் சர்வதேச மாஃபியா கும்பல் ஒன்று இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2>&nbsp;பணம் தொடர்பான கடுமையான தகராறு</h2><p>கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faa28e9-37a6-4396-89e6-48e8032ac4cd/26-6a64aa752d8cc.webp' /></p><p>
</p><p>





இந்த குற்றத்தில் சுமார் இருபது சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த இரண்டு சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை</h2><p> அவர்கள் ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்திச் சென்றுள்ளது. அதன் பின்னர் எஹலியகொட கரதன பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கைகால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e57a38-4480-4737-8005-5d9c572ee253/26-6a64aa747c0f9.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் எஹலியகொட காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T13:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த சொத்துக்கள் : காவல்துறை எடுத்த முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freezing-of-assets-through-drug-trafficking-1784985542"></link>
            <id>https://ibctamil.com/article/freezing-of-assets-through-drug-trafficking-1784985542</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>


 இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.</p><h2>சொத்துக்கள் முடக்கம்</h2><p>விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தில் சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு உழவு இயந்திரத்தை வாங்கியதும், 10 மில்லியன் ரூபாயை (10,000,000/=) ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207ff367-789e-4f15-a098-840ef3aa3822/26-6a64bd1fd3409.webp' /></p><p>

அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நேற்று (24) முதல் 07 நாட்களுக்குக் குறிப்பிட்ட சொத்துக்களை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-is-no-money-3000-prisoners-are-in-jail-1784982501"></link>
            <id>https://ibctamil.com/article/there-is-no-money-3000-prisoners-are-in-jail-1784982501</id>
            <summary type="text">&amp;nbsp;பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.</p><p>சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலுக்கு இந்த நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>அபராதம்,பிணைப்பணம் செலுத்தமுடியாதவர்கள்</h2><p>சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அபராதம் செலுத்த முடியாமல் 28 சிறைகளில் 1,940 கைதிகள் உள்ளனர், மேலும் பிணைப் பணம் செலுத்த முடியாமல் 21 சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,431 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13017fe9-ef7a-4e32-9e1d-a900b512ac70/26-6a64b5ef676de.webp' /></p><p> </p><p>இவ்வாறு விடுதலை செய்ய முடியாமல் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் சிறைச்சாலை போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
</p><p>
</p><h2>உணவு மற்றும் வசதிகளுக்காக பெரும் தொகை செலவு</h2><p>இவ்வாறு வீணாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உணவு மற்றும் வசதிகளுக்காக அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1292cfff-434e-4355-96cf-274555fa0146/26-6a64b5eebab57.webp' /></p><p> </p><p>மேலும், பிணை வழங்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும், கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 21 சிறைச்சாலை நிறுவனங்களில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜனாதிபதி பொது மன்னிப்பு&nbsp;</h2><p>நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமை மற்றும் உறவினர்கள் பிணை வழங்க முன்வராமை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள் என கணக்காய்வு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd1204c-cd21-4ac3-8eff-37f59cee0bfe/26-6a64b5ee18f25.webp' /></p><p> </p><p>ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான கைதிகள் மீது விசேட கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 நாட்களாக கடலில் தத்தளிப்பு! வங்காள விரிகுடாவில் உயிருடன் மீட்கப்பட்ட இரு இலங்கை கடற்றொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-fishermen-rescued-off-bangladesh-1784982656"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-fishermen-rescued-off-bangladesh-1784982656</id>
            <summary type="text">
வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் பங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் பங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹேஷ்காலி பகுதியின் கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவில் உள்ள சோனார்சார் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த ஃபைபர் கிளாஸ் படகில் இருந்து இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மொஹேஷ்காலி கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்புப் பணியை வழிநடத்திய படகின் தலைவர் ஜியாவுர் ரஹ்மான் கூறுகையில், அவர்கள் தங்களைத் தந்தை மற்றும் மகன் என அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போய்க் கடலில் தத்தளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>உயிர் வாழ்ந்த விதம்</h2><p>
</p><p>
உணவு மற்றும் நன்னீர் பற்றாக்குறை நிலவிய நிலையிலும், மீன்களை பச்சையாக பிடித்துச் சாப்பிட்டே இத்தனை நாட்களும் உயிர் பிழைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f815defa-5559-4224-9579-787b461e26a9/26-6a64b2381f499.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் இலங்கையின் தேவினுவர பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 30 வயதுடைய தந்தை - மகன் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், அவர்கள் கடலில் தத்தளித்த விதம் மற்றும் அவர்களின் தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதுடன், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள பங்களாதேஷ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T12:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016</id>
            <summary type="text">&quot;2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்,&quot; என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
</p><p>

 நேற்று (24)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மது அருந்திய நீதியமைச்சர்&nbsp;</h2><p>நீர் கொழும்பு சிறையில் மோதல் நடந்த நேரத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்தியிருந்ததால் உறங்கிக் கொண்டிருந்தார்.




"அமைச்சருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23911b7e-6c99-4bbb-a19b-e3b4833a3ae2/26-6a648db11faa8.webp' /></p><p>
</p><p>


</p><h2>அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம் என்றார். "இந்த எம்.பி.க்கள் அமைச்சரின் பானத்தில் சோடாவைக் கலந்தது போல் பேசுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e16a728-8015-428a-a7b3-eda052e2868f/26-6a648db1de0aa.webp' /></p><p> </p><p>மோதலுக்குப் பிறகு அமைச்சர் தனது கடமையைச் செய்தார். மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அனைத்தையும் செய்தார்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிக்கே வெற்றி! மார்தட்டிக் கொள்ளும் முஜிபுர் ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mujibur-said-govt-failed-among-the-people-1784978786"></link>
            <id>https://ibctamil.com/article/mujibur-said-govt-failed-among-the-people-1784978786</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி முன்வைத்த உண்மைகளே வெற்றிபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்துக்கு 159 பெரும்பான்மை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிக்கு 80 உறுப்பினர்களும் உள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவந்ததற்கான முதன்மை காரணம், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதற்கே ஆகும்.</p><p></p><h2>நீதி அமைச்சரின்&nbsp;அலட்சியம்</h2><p>
பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த அரசாங்கம், நீதி அமைச்சரின் பொறுப்பற்றத்தனத்தையும் அலட்சியத்தையும் மறைக்க முயல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9884c39-bd8a-4421-8bc7-b65212e92e08/26-6a64a4fb0a974.webp' /></p><p>
விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பலமான ஆதாரங்கள் மற்றும் கேள்விகள் எதற்கும் ஆளுங்கட்சி அமைச்சர்களாலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ பதிலளிக்க முடியவில்லை. நேரடிப் பதில்களைத் தவிர்த்து சம்பந்தமில்லாத விடயங்களையே ஆளுங்கட்சியினர் விவாதத்தில் பேசினர்.</p><p>
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அப்போதைய ஆளுங்கட்சியினர் அவரைப் பாதுகாத்து வாக்களித்த போதிலும், இறுதியில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல நேர்ந்தது.</p><p>தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வெளியனுப்புவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கமும் அதே தவறையே மீண்டும் செய்கிறது. இது தமக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T11:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வான் மீது மோதியது யானை : ஐவர் படுகாயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-people-injured-after-elephant-attacks-van-1784978763"></link>
            <id>https://ibctamil.com/article/five-people-injured-after-elephant-attacks-van-1784978763</id>
            <summary type="text">பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் வானில் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.
</p><p>
இந்தத் துயரச் சம்பவம் வானில் பயணித்தவர்கள் சென்றடையும் இடத்தை அடைவதற்குச் சில மீட்டர்களுக்கு முன்பு,யானை மீது வான் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><h2>&nbsp;மனிதன்-யானை மோதல்</h2><p>காவல்துறையின்படி, அந்த வானில் சுமார் ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be15b031-61bf-4615-8195-b458dcfc3d49/26-6a64a4d9418f1.webp' /></p><p>
</p><p>
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள படேனியா கிராமம், கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் மனித-யானை மோதலின் விளைவாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தின் உள்நாட்டு உற்பத்தி குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/domestic-production-in-northern-province-is-low-1784976506"></link>
            <id>https://ibctamil.com/article/domestic-production-in-northern-province-is-low-1784976506</id>
            <summary type="text">உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.</p><p>

தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் தனது பொருளாதாரத்தை
மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு
அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கையின் தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பைக் கணிசமான
அளவில் அதிகரிப்பது தொடர்பாகத் துறைசார் வல்லுநர்கள் மற்றும்
பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (23.07.2026) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</h2><p>

இக்கலந்துரையாடலில், 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா
பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால்
பொருளாதாரத் தரவுகளில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.</p><p>வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குக் கூடுதல்
கவனம் செலுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab9a0319-9a79-4ef4-85dc-0f24c8ccb92d/26-6a64980b75d76.webp' /></p><p>இதன்போது பின்வரும் முக்கிய துறைகள் மற்றும் அவற்றுக்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் புதிய காணிகளைத் தேடுவதை விட, நவீன
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தற்போதைய உற்பத்தியின் வினைத்திறனை
அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p>சிறுதானியங்கள், பயறு வகைகள்,
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மேலும், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக, பால் மா
இறக்குமதிக்காகச் செலவிடப்படும் சுமார் 400 மில்லியன் டொலர்களை மீதப்படுத்த
முடியும்.</p><p>அறுவடை செய்யப்படும் விவசாயப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல், அவற்றை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.</p><p></p><h2>கடற்றொழிலின் பங்களிப்பு&nbsp;</h2><p>
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் கடற்றொழில் சுமார் 3.7 சதவீத பங்களிப்பை
வழங்குகின்றது. கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் கடல் அட்டை வளர்ப்பு
போன்றவற்றை மேலும் ஊக்குவிப்பது முக்கிய தேவையாகும்.</p><p>

தகவல் தொழில்நுட்பம் 1.12 சதவீதமும், சுற்றுலாத்துறை 0.3 சதவீதமும் என
இத்துறைகளின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பு மிகக் குறைவாகவே
காணப்படுகின்றது. இத்துறைகளை மேம்படுத்துவதற்குப் உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் அரச-தனியார் துறை பங்குபற்றல் மிகவும் அவசியமாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57da28a-d483-4946-a087-daec075dec17/26-6a64980ab641b.webp' /></p><p>

வடக்கு மாகாணத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி,
அரச கட்டடங்களில் கூரை மேல் சூரிய சக்தித் தகடுகளை பொருத்துதல் மற்றும் மின்கல
சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
</p><p>
அதிக விளைச்சல் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை
என்பதோடு, இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர். இதற்குத் தீர்வாகப் பெறுமதி
சேர் மையங்களை நிறுவுதல் மற்றும் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துதல்
அவசியமாகும் எனத் தீர்மானிக்கப்பட்டது.</p><p> மேலும், சரியான திட்டமிடலுக்குத்
தற்போதைய பொருளாதாரத் தரவுகள், குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்
மிகவும் அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>அத்துடன், நவீன விவசாய
தொழில்நுட்பங்கள் குறித்து சுமார் 800 இளம் விவசாயிகளுக்குப் பயிற்சி
வழங்குவதற்கான திட்டமொன்றும் முன்மொழியப்பட்டது.</p><p>

விவசாயம், கடற்றொழில், கால்நடை மற்றும் சிறு கைத்தொழில் என அடையாளம் காணப்பட்ட
ஒவ்வொரு துறைக்குமான விரிவான திட்ட அறிக்கைகள் மற்றும் முதலீட்டு
முன்மொழிவுகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தயாரித்து நிதி
ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rescues-28-indian-seafarers-1784977052"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rescues-28-indian-seafarers-1784977052</id>
            <summary type="text">ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
</p><p>
ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது "விரோத சக்திகளால்" குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'திஷா' என்ற எண்ணெய் கப்பல் ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.</p><h2>ஈரானிய கடலோர காவல்படைக்கு ஆபத்து அழைப்பு</h2><p>"இந்தச் சம்பவம் நடந்தவுடன், கப்பல் உடனடியாக ஈரானிய கடலோரக் காவல்படைக்கு ஆபத்து அழைப்பை அனுப்பியது," என்று இந்தியாவிற்கான ஈரானின் தூதர் முகமது ஃபத்தாலி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15390699-edbd-4511-9d51-cee47f202916/26-6a649ae5f2d18.webp' /></p><p>"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் தாமதமின்றி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.</p><p></p><h2>அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக&nbsp;மீட்பு</h2><p> </p><p>கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், மேலும் அவர்கள் நலமாக உள்ளனர்."என்று அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a8e3bc-dc9a-49d4-8969-db3768be0319/26-6a649ae6a9191.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் வெளிநாட்டு கடற்படை தலையிடுவதற்கு எதிராக ஃபத்தாலி எச்சரித்தார்.

பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட இராணுவப் படைகளின் இருப்பும் தலையீடும் அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை என்பதையும், மாறாக, அவை பதட்டங்களை அதிகரித்து, மேலும் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளன என்பதையும் அனுபவம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-sri-lankans-wattala-shooting-detained-in-india-1784975608"></link>
            <id>https://ibctamil.com/article/two-sri-lankans-wattala-shooting-detained-in-india-1784975608</id>
            <summary type="text">கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படையிளனரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
வத்தளையைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன்(வயது31) மற்றும் எம். லூசிநாத் (வயது30) என&nbsp;அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கைது</h2><p>&nbsp; அந்த இருவரையும், சாகர் கவச் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரகாவல்துறையினர், வெள்ளிக்கிழமை(234) தனுஷ்கோடி கடற்கரையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கண்டதையடுத்து கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab5fb9b-8441-4a35-8033-ceeca39522c2/26-6a6493a606435.webp' /></p><p>

விசாரணைக்காக இருவரும் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன.</p><p>

மேலும் விசாரணை செய்தபோது,கடந்த ​​வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாக இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவை</h2><p>
</p><p>
மேலும், அந்த இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cfcd3c-6e67-4a31-9224-9cda62267f9d/26-6a6493a552dec.webp' /></p><p>
</p><p>
அவர்களைக் காவலில் வைக்குமாறு இலங்கை அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள வெளிநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3089-outsiders-staying-at-sl-presidential-villas-1784973599"></link>
            <id>https://ibctamil.com/article/3089-outsiders-staying-at-sl-presidential-villas-1784973599</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள பல்வேறு நபர்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள பல்வேறு நபர்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த&nbsp;மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும் குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று மட்டுமே என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட செலவுகள்&nbsp;&nbsp;</h2><p> 

ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd0d14aa-7a70-41a1-a7ba-accf48211d2e/26-6a649116616d6.webp' /></p><p> கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>எனினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அநுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகினார் இந்திய கல்வி அமைச்சர் பிரதான்! கொண்டாடத் தொடங்கிய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002"></link>
            <id>https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002</id>
            <summary type="text">


இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சி.ஜே.பி (CJP) அமைப்பிற்கும் இந்திய அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>மாணவர்களின் முக்கியக் கோரிக்கை</h2><p>
</p><p>
ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் முகாமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களின் முக்கியக் கோரிக்கையாக பிரதானின் பதவி விலகல் இருந்து வந்துது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739920f9-472b-47e9-bfe9-0c4e9a699f56/26-6a648aeac3283.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Al Jazeera</i></p><p>
</p><p>
தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் பேச்சுவார்த்தை தொடராது என சனிக்கிழமை காலை சி.ஜே.பி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த பதவி விலகல் மூலம் போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றியுள்ளது.
</p><p>
மாணவப் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுடன், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பனவும் இதர முக்கியக் கோரிக்கைகளாகும்.</p><p> 

இக்கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமையன்று அரசு உடன்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்த முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது.</p><h2>பிரதானின் பதிவு&nbsp;</h2><p>

இந்நிலையில், தனது பதவி விலகலை அறிவித்து பிரதான் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு நான் ஆழ்ந்த மரியாதை அளிக்கிறேன்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/VSArqS98OJ">pic.twitter.com/VSArqS98OJ</a></p>&mdash; Dharmendra Pradhan (@dpradhanbjp) <a href="https://x.com/dpradhanbjp/status/2080938216505667663?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவதே நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வின் தார்மீக உறுதிப்பாடாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்திற்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அந்தவகையில், பதவி விலகல் செய்தி வெளியானதுமே ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக் களம் கொண்டாட்டத்தில் மூழ்கியதுடன், "மாணவர் சக்தி வாழ்க" என சி.ஜே.பியும் பதிவிட்டுள்ளது.</p><p> 

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பல நகரங்களில் தீவிரமடைந்த இந்த மாணவர் போராட்டம், எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மோடி அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T10:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-former-vice-chancellor-of-jaffna-uni-1784971682"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-former-vice-chancellor-of-jaffna-uni-1784971682</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் வறிதாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில்
பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை
பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய
பேரவை அவரை பதவி நீக்கியது.</p><p>தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு எனத்
தீர்பளித்து, மீளவும் 27.08.2022 முதல் செல்லுபடியாகும் வகையில் அப்
பதவியில் நியமிக்கக் கட்டளையிடுமாறு கோரி பேராசிரியர் ஆர்.கபிலன் முறைப்பாடளித்திருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு</h2><p>இந்த வழக்கு மீதான கட்டளை கடந்த ஜூன் 30 ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b19d4af-c2cf-49f5-8239-5b7251610b7a/26-6a648559c8845.webp' /></p><p> முறைப்பாட்டாளரால்
முன்வைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராயும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு
சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜூரிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளை
பிறப்பித்தனர்.
</p><p>
இதேவேளை குறித்த பேராசியர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த
வழக்குகளைக் கடந்த வருடம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவைச் சந்திக்க கோரும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-speaking-political-parties-ask-to-meet-anura-1784968981"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-speaking-political-parties-ask-to-meet-anura-1784968981</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்கு தமிழ் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையில்&nbsp;ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை வழங்குமாறு கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரையும், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி இவ்விடயங்கள் தொடர்பாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றனர்.</p><p></p><h2>தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்</h2><p>இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478e6d8a-5be8-4a9c-8d35-e0536cdf8a8e/26-6a647acc02dd2.webp' /></p><p>ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும் தொடர்ந்து பேணிக்கொண்டே, இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.</p><p>

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டு, நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-commemorated-1784968625"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-commemorated-1784968625</id>
            <summary type="text">வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தப்பட்டுள்ளது.

கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனுடன் இணைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தப்பட்டுள்ளது.
</p><p>
கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனுடன் இணைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் காலை 10 மணிக்கு பிரதான ஈகைச்சுடரேற்றப்பட்டது.</p><p></p><h2>தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி</h2><p>
</p><p>
அதனைத்தொடர்ந்து, உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் சபை உறுப்பினர்களால் வெலிக்கடை சிறையில் படுகொலை குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட அரசியல் கைதிகளின் அடையாளமாக 53 தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f4a8e0-f124-4c5d-9d77-cc973758eee6/26-6a6479d0538e0.webp' /></p><p>பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் அரச சேவையாளருமான செல்வதிசைநாயகம் தவநாயகம் கறுப்பு யூலை தமிழர் வரலாற்றில் மாறாத வடு என்ற தலைப்பில் வரலாற்று உதாணங்களுடன் அஞ்சலியுரையாற்றினார்.</p><p>

பின்னர், சபை வளாகத்தில் கறுப்பு யூலை கோரத்தாண்டவத்தினை நினைவுகூர்ந்து புகைப்பட தொகுதி காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NxqQuQjfNlc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T08:55:01+00:00</updated>
        </entry>
    </feed>
