<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T11:19:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[OMPயின் ஏமாற்று நாடகம்! யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : காவல்துறையினர் அராஜகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-front-of-jaffna-district-secretariat-1787654147"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-front-of-jaffna-district-secretariat-1787654147</id>
            <summary type="text">ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p> வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (25) குறித்த போராட்டம் நடைபெற்றது.</p><p>காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (omp) ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற
காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>முரண்பட்ட காவல்துறையினர்</h2><p>உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரணச் சான்றிதழும் வேண்டாம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f720dc-4ecb-454c-b5da-9af3e2330cad/26-6a8d741f948b9.webp' /></p><p>இந்த நிலையில் களத்தில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடுமையாக முரண்பட்டுள்ளனர்.</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம்
திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-bottles-sold-at-inflated-prices-in-nallur-1787648933"></link>
            <id>https://ibctamil.com/article/water-bottles-sold-at-inflated-prices-in-nallur-1787648933</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p> இது குறித்து மேற்கொள்ளப்பட்ட&nbsp; விசாரணையில் குடிநீர் போத்தலானது அதிக விலைக்கு விற்பனை
செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>லட்சங்களில் அபராதம்</h2><p>
</p><p>
</p><p>அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கானது, இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77685613-8a17-4686-8d02-044bb4bab6d0/26-6a8d6a542c61d.webp' /></p><p> 

இதன்போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.</p><p>இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற
குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே
குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413"></link>
            <id>https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கெஹல்பத்தாரா பத்மே'வை, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.</p><p></p><h2>கனேமுல்ல சஞ்சீவ படுகொலை</h2><p>இதன்போது இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bb27ed-64ac-45b8-b1ed-35dba4c35440/26-6a8d6a60524b8.webp' /></p><p>பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக கெஹெல்பத்தர பத்மே (பத்மசிறி பெரேரா) செயல்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் இடம்பெற்ற விசாரணைகளில் 'கெஹெல்பத்தர பத்மே' சர்வதேச காவல்துறை (Interpol) மற்றும் இந்தோனேசிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a759f5-4a4a-45ed-a248-a8613ff22ccf/26-6a8d6a62182f6.webp' /></p><p>கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது சகாக்கள் கடந்த 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.</p><p></p><h2>CID அதிகாரிகள் விசாரணை</h2><p>இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பத்மே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6259c9b9-598c-402c-81fc-b86e8071ce7b/26-6a8d6a615e97a.webp' /></p><p>இவர் மீது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பாரிய பணமோசடி, கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இதன்படி இந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து CID அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையில் டி-56 ரக துப்பாக்கிகள், மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa982bc-c9de-4da6-8e4d-ff5e20158dcd/26-6a8d6a62c23b6.webp' /></p><p>நுவரெலியா பகுதியில் பத்மேவின் நிதியுதவியுடன் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>மேலும், சட்டவிரோத சொத்துக்கள் ஒழிப்பு பிரிவினரால் இவருக்குச் சொந்தமான 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் முடக்கப்பட்டன.</p><p>இதன்படி தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பத்மேவின் தாயார் தாக்கல் செய்த மனுவை அடுத்து, அவரை CID custody-லேயே வைத்திருக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி பத்மே செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728"></link>
            <id>https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728</id>
            <summary type="text">வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
</p><p>
குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன்
சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன்
மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது.</p><p></p><h2>இறுதித் தமிழ் குறுநில மன்னன்</h2><p>


இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள்,&nbsp;அரச உயர் அதிகாரிகள்&nbsp;பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/776d35c3-90df-483a-8026-a470a47d0448/26-6a8d6e6233cd1.webp' /></p><p>இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆங்கிலேயர் கைப்பற்றுவதற்கு முன், அதனை சுதந்திரமாக ஆட்சி செய்த இறுதித் தமிழ் குறுநில மன்னன் பண்டாரவன்னியனின் ஆவார்.</p><p>வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்த ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் ஆதிக்கத்தையும், அவர்களின் வரி வசூலிப்பையும் இவர் கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை&nbsp;பண்டாரவன்னியனின் கொண்டுள்ளார்.</p><p>1803 ஆகஸ்ட் 25 அன்று முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயக் கோட்டையை&nbsp; தாக்கி, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி இந்த மன்னனுக்கு சொந்தமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def6159c-b115-4cb0-a7e6-0164bf74a741/26-6a8d6e62dde92.webp' /></p><p>மேலும், பிரித்தானியத் தளபதி வொன் டிறிபேர்க் தலைமையிலான பெரும் படையுடன் கச்சிலமடு என்ற இடத்தில் நடந்த இறுதிப் போரில் இவர் தீரத்துடன் போரிட்டார்.</p><p>ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு எதிராகத் தன் தாயக விடுதலைக்காகப் போராடி, 1803 அக்டோபர் 31 அன்று தனது உயிரைத் தியாகம் செய்தார்.</p><p>வன்னி மக்களின் சுதந்திரத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவரை, இலங்கை அரசு 1982 ஆம் ஆண்டு 'தேசிய வீரன்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கௌரவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c4e6b2-3845-40bb-8c72-5cc24fc739e3/26-6a8d6e63967e7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த தெல்லிப்பழை துர்க்கை அம்பாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414"></link>
            <id>https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தெல்லிப்பழை துர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.</p><p>தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;மகோற்சவ பெருவிழா கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில்10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று&nbsp;11 ஆம் நாளான இன்று (25) இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;சிறப்பு பூசைகள்</h2><p>இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb33005-e9af-4c2e-9fa6-cd1a8780c320/26-6a8d6cfa7d7f9.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி, தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க இரதோற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p>அத்துடன் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 12ஆம் நாள் திருவிழாவான
நாளை (26) தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865"></link>
            <id>https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865</id>
            <summary type="text">அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. </p><p>

இந்த நிலையில் அவருக்கான தடுப்புக் காவலை&nbsp;மேலும் 90 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்</h2><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db6e488a-c5d4-486a-a076-6f9626ba4693/26-6a8d63d7ea42f.webp' /></p><p> </p><p>

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடைமையாக்கப்படவுள்ள மில்லியன் கணக்கான சொத்துக்கள் : காவல்துறை அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-mn-1787641117"></link>
            <id>https://ibctamil.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-mn-1787641117</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில்&amp;nbsp;காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில்&nbsp;காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வுட்லர்&nbsp;இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><h2>நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித் என்பவரும் பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவரின் சொத்துகள் தொடர்பில் முன்னதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d2a827-b7f6-4b03-848b-6b35f363f53f/26-6a8d5ad54f14b.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், ஆபரணங்கள், பணம், வாகனங்கள், சொகுசு வீடுகள் மற்றும் காணிகள் போன்ற சட்டவிரோத சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிலும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற வழக்கு விசாரணை</h2><p>
</p><p>
அதன்படி, குறித்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a67888-3a48-42b5-8b0d-40b1ff4b7d29/26-6a8d58d3c4a47.webp' /></p><p>இதனிடையே, கடந்த 2025 ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின்கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
</p><p>
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது, வெளிநாடுகளில் தப்பியோடி வாழும் அனைத்து சந்தேகநபர்களையும் குற்றவாளிகளையும் தொடர்ந்தும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் உறுதியாகச் செயற்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா பேருந்து விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-accident-in-nuwara-eliya-one-person-dead-1787645807"></link>
            <id>https://ibctamil.com/article/bus-accident-in-nuwara-eliya-one-person-dead-1787645807</id>
            <summary type="text">நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.பேருந்து விபத்துக்குள்ளான ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த காரொன்றில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்ட் CCTV கமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.</p><p>குறித்த விபத்து&nbsp;கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>சாரதி கைது</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fecfc86-8cd5-4d33-b794-781afdce7c27/26-6a8d563e27bb9.webp' /></p><p>கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதியுள்ளது.
</p><p>
இதன்போது, வீதியோரமாக நடந்து சென்ற இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் சிக்கி, பேருந்து அவர் மீது கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி மற்றும் பெண் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சாரதி நேற்று (24.08.2026) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சாரதியை இன்று (25.08.2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் தாபன விதிக் கோவையை மீறுகின்றாரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secretary-of-the-chavakachcheri-urban-council-1787640694"></link>
            <id>https://ibctamil.com/article/secretary-of-the-chavakachcheri-urban-council-1787640694</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்
இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக
பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்
இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக
பயன்படுத்தி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.</p><p>

இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச்
செல்வதற்கு தனிப்பட்ட ரீதியில் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது எனவும்
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து
நாளொன்றுக்கு 50 KM க்கு உட்பட்டு பயன்படுத்தலாம் எனவும் நிர்வாக
அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவையில் சொல்லப்பட்டுள்ளது.</p><p>

இதற்கு முரணாக சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி சபை
அனுமதித்தால் தான் வாகனம் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தி வாகனம் பயன்படுத்த
அனுமதிப்பது என தீர்மானம் நிறைவேற்ற செய்துள்ளார்.</p><p></p><h2>தினமும்&nbsp;80 KM பயணம்</h2><p>
</p><p>
இதன்போது உறுப்பினர்களால் குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி
ஆணையாளருக்கு அறிவித்து அவரது அனுதியின் பின்னரே வாகனத்தை பயன்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e65479b-1906-4967-b35f-61a3f3de37da/26-6a8d448672591.webp' /></p><p>
</p><p>
எனினும் உறுப்பினர்கள் கூறிய விடயங்கள் சபைக்கூட்ட அறிக்கையில்
உள்ளடக்கப்படாத்தோடு உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்காமலும் தினமும் YY 3619
இலக்கமுடைய நகரசபையின் முச்சக்கரவண்டியில் சாவகச்சேரி நகரசபை எல்லை தாண்டி
சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லை தாண்டியும் வலிகாம்ம் கிழக்கு பிரதேச
சபைக்குள் உரும்பிராய் வரையும் தினமும் காலை மாலை என இரண்டு தடவைகள் சுமார் 80
KM கள் வரை பயணித்துள்ளார்என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
கைதடி வரையுமே வாகனத்தை பயன்படுத்த போவதாக சபைக்கு தெரிவித்த நிலையில்
உரும்பிராய் வரையும் சென்று வந்துள்ளார்.
</p><p>
எனினும் வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி
நகராட்சி மன்றத்தில் இருந்து உரும்பிராய் சென்று வருகின்றமை தொடர்பில் பதிவு
செய்யாமல் நகரசபை எல்லைக்குள் பல்வேறு தடவைகள் பயணித்தமை போன்றை பதிவு செய்து
எரிபொருள் நிரப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
</p><p>
இதேவேளை நகரசபையின் தவிசாளர் தனது அலுவலக கடமைகளுக்கு கூட இதுவரை தனது சொந்த
வாகனத்தினையே பயன்படுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. </p><p>இந்நிலையிலேயே
சபையின் செயலாளர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட போக்குவரத்துக்கு
சபை வாகனத்தை பயன்படுத்துகின்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றில் இதுவரை செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் தூர
இடங்களில் இருந்தாலும் தமது சொந்த வாகனங்களிலேயே அலுவலகத்துக்கு வந்த்தோடு
அலுவலக கடமைகளுக்கு மட்டுமே சபையின் வாகனங்களை பயன்படுத்தியமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி ஆற்றின் கரையோரத்தில் கலக்கப்பட்ட இரசாயனப் பொருள்! நீர் விநியோக தடை குறித்து விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemicals-mixed-on-the-banks-of-the-kelani-river-1787646869"></link>
            <id>https://ibctamil.com/article/chemicals-mixed-on-the-banks-of-the-kelani-river-1787646869</id>
            <summary type="text">ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு இன்று அதிகாலையில் (25) நீர் விநியோகம் தடைபட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
</p><p>
தண்ணீரில் ஏதேனும் அசுத்தங்கள் கலந்துள்ளதா என்பது உறுதிசெய்யப்படும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வாரியத் தலைவர் சந்தனா பண்டாரா தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது நீர் விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், எந்த வகையிலும் அசுத்தமான நீர் பொதுமக்களுக்கு வழங்கப்படாது என்றும் தலைவர் உறுதிப்படுத்தினார்.</p><p>[WCILQBU
]</p><h2>பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையம்</h2><p>இது குறித்து கருத்து வெளியிட்ட&nbsp;வாரிய தலைவர்,&nbsp; “இன்று நாங்கள் ஒரு சிறப்புச் சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27dad71b-27f8-4f12-a860-0d84d58b553e/26-6a8d5397ab2da.webp' /></p><p> நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், எமது இரண்டு பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களான அம்பத்தலே மற்றும் களனி தென்கரை அல்லது பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சில கழிவுகள் (இரசாயனம்) சுற்றுச்சூழலில் வெளியிடப்பட்டதை நாங்கள் அறிந்தோம். </p><p>இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை மையமும் எங்களுக்குத் தகவல் அளித்தது. அந்த நேரத்தில், மக்களின் பாதுகாப்பு கருதி அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நாங்கள் தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது. </p><p>அந்தத் தருணத்திலிருந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, அனைத்து வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களுடன் அப்பகுதிக்குச் சென்று அவசரகால விசாரணையை நடத்தியது. </p><p>இதில் பேரிடர் மேலாண்மை மையமும் ஈடுபட்டிருந்தது. களனி ஆற்று நீரின் நிலையும் சரிபார்க்கப்பட்டது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T08:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stolen-jewelry-jaffna-that-was-pawned-is-recovered-1787645741"></link>
            <id>https://ibctamil.com/article/stolen-jewelry-jaffna-that-was-pawned-is-recovered-1787645741</id>
            <summary type="text">யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்க்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் சாவகச்சேரி தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>மீட்க்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒருகோடியே 50 இலட்சம் ரூபா என
சாவகச்சேரிப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>சிசிரிவி காணொளி</h2><p>இது குறித்து தெரிய வருகையில், கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து சிசிரிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4cdf20-fe5f-4a92-bab1-4079d70bd5c0/26-6a8d4f306ab6a.webp' /></p><p>

அதன்போது யாழ். நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று
முன்தினம் (22) கைது செய்யப்பட்டார்.
</p><p>
பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர்,
கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய
இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத் திருடியமை
தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137ad351-0c86-4b2f-bd93-001501f467b5/26-6a8d6f3edad0b.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும்,
நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p><h2>கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்
ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a843c9-d1e0-465e-927e-73d480f07564/26-6a8d4f2fb5fbc.webp' /></p><p>
அதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்</p><p>
இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30f6b5a-708d-48f2-9c7d-c2b9daefc6b7/26-6a8d6f3fc06ed.webp' /></p><p>
</p><p>
மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு
வருவதற்கான உத்தரவையும் காவல்துறையினர் பெற்றனர்.</p><p>

அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண்
தங்க நகைகளையும், யாழ். நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17
பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MpKuPzBhMnk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T08:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pakistan-and-iran-made-in-talks-on-conflict-1787641347"></link>
            <id>https://ibctamil.com/article/pakistan-and-iran-made-in-talks-on-conflict-1787641347</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.</p><p>தெஹ்ரான் பயணத்தின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை இந்த விடயத்தை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளும் கவனம் செலுத்தியதாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் ஈரானியத் ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உள்துறை அமைச்சரின் பதிவு</span></p><p>
பிராந்திய அமைதி மற்றும் இந்த சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழி குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Field Marshal Syed Asim Munir and I had a very positive and productive meeting with the President of Iran. Our discussion focused on the Iran US conflict, tensions in the Middle East and the way forward, as well as the steps needed by both sides for restoration of the Islamabad… <a href="https://t.co/jt1wtlESCa">https://t.co/jt1wtlESCa</a></p>&mdash; Mohsin Naqvi (@MohsinnaqviC42) <a href="https://x.com/MohsinnaqviC42/status/2092023991242494217?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஈரானிய ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதுடன் மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டோம்," என்று முனிருடன் தெஹ்ரானுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் தனது எக்ஸ்&nbsp; (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

அலுவலக நேரத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையும், அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
முனீர் தனது தெஹ்ரான் பயணத்திற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசினார் என்று ரொய்ட்டர்ஸ் திங்களன்று செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்பரப்பில் நடமாடிய இலங்கைப் படகு - காவல்துறையின் கண்ணில் மண் தூவி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160</id>
            <summary type="text">இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் நேற்று (24.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளன.</p><p>
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்திய காவல்துறையினர் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தப்பிச் சென்ற&nbsp;படகு</h2><p>இதன்படி காவல்துறையினர் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும், அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30de446a-cf41-4079-a73d-ac96b936d78b/26-6a8d2986b6ce0.webp' /></p><p>தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் இருந்தனர் என்றும், அதில் பல மூடைகள் இருந்தன எனவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தியில் கூறப்பட்டுள்ளது.</p><p> இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்திய காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extreme-heat-tips-to-keep-kids-safe-temperatures-1787638890"></link>
            <id>https://ibctamil.com/article/extreme-heat-tips-to-keep-kids-safe-temperatures-1787638890</id>
            <summary type="text">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>குறித்த விடயத்தை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.</p><p></p><h2>அதிக வெப்பம்</h2><p>
 

நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a526beea-a84b-4d55-b3f6-3dd6f9af3583/26-6a8d415d80dbc.webp' /></p><p>தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.
</p><p>
 

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p></p><h2>விழிப்புடன் இருக்க வேண்டும்</h2><p>
</p><p>
 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d9105ea-7afb-43e9-b782-1475c612e40f/26-6a8d426c7b5f1.webp' /></p><p>இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-badulla-hospital-specialist-remains-mystery-1787641539"></link>
            <id>https://ibctamil.com/article/death-badulla-hospital-specialist-remains-mystery-1787641539</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;“பிரபாத் அன்றைய தினம் காலை சுமார் 10.00 மணியளவில் ஒரு அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டார் என்றும், அதன் பின்னர் அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும், நடந்த சம்பவத்தை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.</p><p>மேலும், உயிரிழந்த வைத்தியர் தனது கடமையை முறையாக நிறைவேற்றிய ஒருவராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மேற்கொள்ளப்பட்ட விசாரணை</h2><p>வைத்தியர் பிரபாத் அனுராத தயாரத்ன, நேற்று முன்தினம் (23) முதல் காணாமல் போயிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் நேற்று (24) மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca3f6e6-aa5d-458b-bbfb-6d242a7783cf/26-6a8d3fcf4fc94.webp' /></p><p>
</p><p>
மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் குறித்த வைத்தியருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது</p><p>. இதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மர்மமான முறையில் உயிரிழந்திருந்த வைத்தியரின் சடலத்திற்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், வைத்தியர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்களாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>தொடர் மன அழுத்தம்</h2><p>கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற வைத்திய நிபுணர் பிரபாத் அனுராத , இரு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e45743-d836-4372-978b-2c8b40a31c95/26-6a8d3fd00c6ec.webp' /></p><p>மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
வைத்தியர் நேற்று முன்தினம் காலை முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p> அந்தத் தேடுதலின்போது, நேற்று முன்தினம் இரவே அவரது மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில், ஒரு கல்லின் மீது வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T07:18:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வருட இறுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/met-dept-warns-heavy-rainfall-flooding-in-oct-nov-1787639953"></link>
            <id>https://ibctamil.com/article/met-dept-warns-heavy-rainfall-flooding-in-oct-nov-1787639953</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>இந்தநிலையில், குறித்த காலப்பகுதியில் சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
 

அடுத்த 6 மாதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
 

</p><p></p><h2>பலத்த மழை பெய்யக்கூடும்</h2><p>நாட்டில் நிலவும் வானிலை நிலைமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

 

"சாதாரண ஆண்டின் 30 சதவீத மழைவீழ்ச்சி இந்த இரண்டு மாதங்களில் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36102c8c-868b-4b7a-8b56-9ddc1591df4e/26-6a8d3b1e26f86.webp' /></p><p> அப்படியிருக்கும் போது இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பலத்த மழை பெய்து குளங்கள் நிரம்பிச் சிலவேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. </p><p>ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இலங்கை முழுவதும் மழை பரவலாகப் பெய்யும், பலத்த மழை பெய்யக்கூடும். வெள்ளப்பெருக்கு நிச்சயமாக வரும் என்று கூற முடியாது, எனினும் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.</p><p>

 

இதேவேளை, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளில் எல் நினோ நிலைமை கடுமையாகப் பாதிக்கும்“ என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:52:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்கள்: 2 பிள்ளைகளின் தந்தை பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-death-in-motorcycle-collision-in-wellawayane-1787639958"></link>
            <id>https://ibctamil.com/article/men-death-in-motorcycle-collision-in-wellawayane-1787639958</id>
            <summary type="text">இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து வெள்ளவாய - மொனராகலை வீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்து வெள்ளவாய - மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது</p><p>
 

விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வெள்ளவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
 

அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர் வெள்ளவாய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a6ce662-a8a6-4a23-bb8e-8eca7c756fe5/26-6a8d3b3549830.webp' /></p><p>காயமடைந்த மற்றைய நபர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த விஜேராம இல்லத்திலிருந்து புறப்பட்டபோது கூறியதும் நாமல் இன்று கூறுவதும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-wijerama-said-when-leaving-his-residence-1787638742"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-wijerama-said-when-leaving-his-residence-1787638742</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி, வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு இன்றளவும் அவர்களுக்கான அடைமொழியாக விமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி, வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு இன்றளவும் அவர்களுக்கான அடைமொழியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
அதனையடுத்து, தற்போதைய அரசாங்கம் அந்தச் சலுகைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.</p><p>

ஆனால் நாமல் ராஜபக்ச அந்தப் பழைய நிலையை மறந்து, பொதுமக்களிடம் பல கூற்றுக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார் என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>கொழும்பை முற்றுகையிடுவோம்&nbsp;</h2><p>
</p><p>
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அகற்றப்பட்டால், கொழும்பை முற்றுகையிடுவோம் என்று அவர்கள் தற்பெருமை பேசினர்.</p><p>

இருப்பினும், சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அரசாங்கம் அகற்றப்பட்டது குறித்து எமது ஊடகம் உள்ளிட்ட உள்நாட்டு ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் அதனை தெளிபடுத்தியிருந்தன.
</p><p>
அதனை மீண்டும் ஒருமுறை இங்கு வழங்கி நாமல் கூறிவரும் கருத்துக்களுடன் ஒப்பிடும் விதத்தை ஆராய்வோம். </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு 07, விஜேராமயவில் அமைந்துள்ள, தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அன்று புறப்பட்டார்.
</p><p>
பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் அந்நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அங்கு கூடியிருந்தனர்.

அங்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் செல்லுமாறு கூறப்பட்டோம், நாங்கள் செல்கிறோம்” என்று தெரிவித்தார்.</p><p></p><h2>மகிழ்ச்சியாக இருக்கும் நாடு </h2><p>
</p><p>
மேலும், தாம் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
ஜனாதிபதியின் உரிமைகள் (நீக்குதல்) குறித்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வரும் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அந்த இல்லங்களைக் காலி செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே, வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க சுமார் ஒரு வாரம் ஆகும் என்று தெரிவித்தார்.</p><p>

ஓராண்டுக்குள் நாங்கள் வீட்டை ஒப்படைத்துவிடுவோம். அனைத்துப் பொருட்களின் விவரப் பட்டியலும் முடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இன்று தங்கல்லைக்கு புறப்படுகிறோம்," என்று கூறியிருந்தார்.</p><p>

மேலும் மனோஜ் கமகே, 

“நாளைய தினத்துக்கு பிறகு இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

நாளைய தினத்துக்கு பிறகு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளைக் குறைக்கும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும், பெட்ரோல் விலையைக் குறைக்கும், தேங்காய் விலையைக் குறைக்கும், அரிசி விலையைக் குறைக்கும்.
</p><p>
நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் இன்றோடு தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன். 

தேர்தல் வாக்குறுதி இந்த நாட்டு மக்களுக்கு அல்ல, விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப்பட்டது.</p><p></p><h2>புலம்பெயர்ந்த அளிக்கப்பட்ட வாக்குறுதி&nbsp;</h2><p> </p><p>புலம்பெயர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டது” என்றார்.

ஜனாதிபதியின் சிறப்புரிமைகள் குறித்த மனு (நீக்குதல்) கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 150 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
இந்த வரைவுக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரே ஒரு வாக்கும் பதிவாகின.

அதன்படி, குழு நிலையில் அந்த மசோதா எந்தத் திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டது.</p><p>

இந்தச் சட்டம் தொடங்கும் திகதியன்று மற்றும் அதற்குப் பிறகு இனி வழங்கப்படாது அல்லது செலுத்தப்படாது எனக் கூறப்படும் கோரிக்கைகள் பின்வருமாறு.</p><p>

1. முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்பட்ட ஏதேனும் மாதாந்த கொடுப்பனவு;</p><p>

2.முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலாளர் கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் ஏனைய அனைத்து வசதிகள்.</p><p>

3. முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T06:37:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் : மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-happened-to-those-handed-over-to-the-sl-army-1787636804"></link>
            <id>https://ibctamil.com/article/what-happened-to-those-handed-over-to-the-sl-army-1787636804</id>
            <summary type="text">காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளைக் கண்டித்தும் இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளைக் கண்டித்தும் இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (25) குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.</p><p>
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் இன்று (25)&nbsp; பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.</p><p>&nbsp;</p><h2>இழப்பீடும் மரண சான்றிதழும் வேண்டாம்&nbsp;</h2><p> </p><p>இந்த நிலையில் குறித்த நிகழ்வைக் கண்டித்து யாழ்.
மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில்
முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ddab914-d641-467a-bd8a-0298f7b08d6b/26-6a8d36a4f05b0.webp' /></p><p>

சர்வதேச நீதியை வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின்
பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத்
தரப்பினரையும் அணிதிரளுமாறு வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>

இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு - கிழக்கு வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம்
திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு விடுவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள் : OMPயிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-persons-released-by-the-government-details-1787634618"></link>
            <id>https://ibctamil.com/article/missing-persons-released-by-the-government-details-1787634618</id>
            <summary type="text">சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என&nbsp;காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் ஒரு சர்வதேச
காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு
செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p>
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று (25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள 'வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்றை
ஏற்பாடு செய்தனர்.</p><p></p><h2>பிரச்சினைகள் எதுவும் இல்லை</h2><p>
</p><p>இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து
தெரிவிக்கையில், ”ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு
அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது?

அவர்களுடைய சட்ட திட்டங்கள், நடைமுறைகள் எமது நாட்டிற்கு தேவைப்படாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89de6a3-f497-4646-a6be-e912c230e2f5/26-6a8d287ac3532.webp' /></p><p>ஆனால்,
நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினான சர்வதேச தினத்தை OMP மற்றும்
அரசாங்கம் இணைந்து கொண்டாடுவது என்பது, சர்வதேசத்திற்கு "நாங்கள்
உள்நாட்டிலேயே தீர்வு பெற்றுக் கொடுத்துவிட்டோம்.

இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம்
தீர்க்கப்பட்டு விட்டது" என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
</p><p>
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில்
விடுவித்திருக்க வேண்டும்.</p><p>

அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக்
கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த
நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.</p><p>

இந்த OMP என்பது எங்களுடைய மக்களிடையே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்
தேடுகின்ற உறவுகளிடையே ஒரு தோல்வி அடைந்த ஒரு நெறிமுறையாக தான் அவர்கள் இங்கே
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>&nbsp;</p><h2>காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்</h2><p>
</p><p>
நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து,
நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து
பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
</p><p>
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை நீங்கள்
எங்களிடம் ஒப்படையுங்கள். அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல்
ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக்
கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f830d95-41cd-4be5-a102-acce1ba6dd3a/26-6a8d287b8fda4.webp' /></p><p>

அதை ஒத்துக் கொள்ளாமல், பிரச்சினையை மூடி மறைக்கப் பார்ப்பதற்கான இப்படிப்பட்ட
ஒரு கண் துடைப்பான விஷயத்தை ஏற்படுத்துவதை நாங்கள் எப்போதும் இந்த காணாமல் போன
சமூகம், அதாவது காணாமல் போன உறவுகளின் குடும்பத்தில் இருக்கும் ஆட்களின்
சார்பில் நாங்கள் அதை நிராகரிக்கிறோம்.
</p><p>
எங்களது உலகளாவிய ரீதியில் இருக்கின்ற எங்களுடைய உறவுகள் புரிந்து கொள்ள
வேண்டும். காணாமல் போனோர் என்ற விடயம் நாங்கள் பத்திரிகைகளில் படிப்பதோடு அல்லது
அம்மாக்களின் போராட்டம் வீதியில் நிற்பதோடு முடிந்துவிடவில்லை.
</p><p>
இங்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில் சமூகங்கள் ஒவ்வொருவராக முயற்சி செய்து,
ஒவ்வொரு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்- அவர்கள் எப்போது, எங்கு,
யாரால், எந்தச் சூழ்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற தரவுகள்
சேகரிக்கப்பட்ட புத்தகம் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் 300-க்கும்
மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் அடங்கியவாறு சிவில் சமூக அமைப்புகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p><p></p><h2> காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்தப் புத்தகத்திற்குள் இருக்கின்ற இந்தப்
பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி, வேதனை.

அவர்களுடைய ரத்தமும் சதையுமாக பெற்றோர்களின் கண்ணீருக்கு மத்தியில் காணாமல்
ஆக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய ஒவ்வொருத்தரின் கதை. </p><p>இது இங்கே
இருக்கத்தக்கதாக, நீங்கள் நஷ்டஈடு கொடுக்கிறீர்கள். நீங்கள் சர்வதேச வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை கொண்டாடுகிறீர்கள்.

எங்களுக்கு தினங்களும் வேண்டாம், நஷ்டஈடும் வேண்டாம்! எங்களுக்கு எங்களுடைய
பிள்ளைகளும், எங்களுடைய உறவுகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்கான
பதில் எங்களுக்கு வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e597212-b8cd-41db-8c8d-3fa4ff5d29a2/26-6a8d287c490f6.webp' /></p><p>சர்வதேச தினத்தை நீங்கள் அனுஷ்டிப்பதாக இருந்தால்,
நாங்கள் கோருகின்ற வெளிநாட்டுப் பொறிமுறையும், அதற்கான தனியான ஒரு
நீதிமன்றமும், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையையும் நாங்கள்
கோருகிறோம்.</p><p>

அப்படி ஒரு கோரிக்கை விடுக்கின்ற நாங்கள், இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய
அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற
விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
</p><p>
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு
மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
வெளிப்படுத்துங்கள். நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.</p><p>
அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள்
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்“என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் கைதான 'பஸ் லலித்' பற்றிய பின்னணி - காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-release-background-details-on-bus-lalith-1787636396"></link>
            <id>https://ibctamil.com/article/police-release-background-details-on-bus-lalith-1787636396</id>
            <summary type="text">சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான "<a href="https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547" target="_blank">பஸ் லலித்</a>" எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் காவல்துறையினர் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
 

அங்கு உரையாற்றிய காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த விசேட தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/375784d2-a5db-4b2b-aff7-13d05dc67411/26-6a8d33a37cd46.webp' /></p><p>
</p><p>
 

போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
 

சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>

 

அத்துடன், அவரது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
 

மேலும், 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சர்வதேச காவல்துறையினரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வரப் காவல்துறையினரால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20dc4cc-6457-4bb3-b201-54de2b31264c/26-6a8d33a433418.webp' /></p><p>

 

அத்துடன், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேகநபர்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T2x3EFM0_no" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-illicit-liquor-worth-1-6million-1787631616"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-illicit-liquor-worth-1-6million-1787631616</id>
            <summary type="text">பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்&amp;nbsp; பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்&nbsp; பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட பெண் 31 வயதுடைய மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரி</h2><p>இவர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f4236-9db2-43e0-bae7-4483cf509621/26-6a8d250341a10.webp' /></p><p>
கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:28:02+00:00</updated>
        </entry>
    </feed>
