<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T05:09:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
</p><p>
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலதிபரின் வீட்டில் உயிரிழந்த மொடல் நடிகை - இறப்புக்கான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/details-emerge-sudden-death-of-model-chulpadmendra-1788237292"></link>
            <id>https://ibctamil.com/article/details-emerge-sudden-death-of-model-chulpadmendra-1788237292</id>
            <summary type="text">இலங்கை மொடல் நடிகை மற்றும் அழகுக் கலை பயிற்சியாளரான சுல்பத்மேந்திர குமாரபத்திரன திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து காவல்துறை மேலும் சில தகவல்களை வெளியிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மொடல் நடிகை மற்றும் அழகுக் கலை பயிற்சியாளரான சுல்பத்மேந்திர குமாரபத்திரன திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து காவல்துறை மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.</p><p>சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>இறப்புக்கான காரணம்</h2><p>இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b8e44f1-f0ed-45cd-b791-6beb8842fac2/26-6a965d6249487.webp' /></p><p>இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார உத்தியோகத்தர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர். இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>


எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.</p><p>

ஆடை வடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் ஒருவருக்கு எதிராக CCIB விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603</id>
            <summary type="text">மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவரை முன்னிலையாகுமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) அவரை&nbsp;CCIB இல் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடத்தல்காரர்களில் ஒருவர்</h2><p>

இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதாள உலகக் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d7ffe9-8f67-424f-a4b5-74e903ef2b6d/26-6a9656943ca12.webp' /></p><p>இதனடிப்படையில் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவாக்குவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tim-cook-signs-off-on-last-day-as-apple-ceo-1788235146"></link>
            <id>https://ibctamil.com/article/tim-cook-signs-off-on-last-day-as-apple-ceo-1788235146</id>
            <summary type="text">உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகிய பிறகு அந்த பதவியில் டிம் குக் நியமிக்கப்பட்டார்.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் தலைமையிலான 15 வருட காலம் ஆப்பிள் வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>டிம் குக்கின் தலைமைத்துவம்</h2><p>இந்த பதவி விலகல் குறித்து&nbsp;டிம் குக் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,&nbsp;தலைமை நிர்வாக அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்திற்கு என் அன்பை அனுப்புகிறேன். நாளை என் பதவிப் பெயர் மாறுகிறது, ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீது நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sending lots of love to the Apple community on my last day as CEO. My title changes tomorrow, but the love I have for the Apple community never will. Thank you for being a constant source of inspiration. My gratitude is endless, and I’m excited for the next chapter!</p>&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://x.com/tim_cook/status/2094448088199078236?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> எனக்குத் தொடர்ச்சியான உத்வேகத்தின் ஊற்றாக இருந்ததற்கு நன்றி. என் நன்றியுணர்வு எல்லையற்றது, மேலும் அடுத்த அத்தியாயத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆப்பிளின் சந்தை மதிப்பு</h2><p>
</p><p>இதேவேளை டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுப்பேற்றபோது சுமார் 350 பில்லியன் டொலராக இருந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு இன்று 5 டிரில்லியன் டொலரை நெருங்கியுள்ளது. இது உலகளாவிய அளவில் ஆப்பிளின் செல்வாக்கு மற்றும் மதிப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண வளர்சியை காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ef4e2a-ae3c-441f-974c-fb37bbeb90ba/26-6a96548071be5.webp' /></p><p>அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் பாரிய வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்சியான விரிவாக்கத்தை கண்டது.</p><p>
ஐபோன் முதல் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் வரை அனைத்து துறைகளிலும் டிம் குக்கின் தலைமை ஆப்பிளை உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியது.</p><p>
</p><p>இந்தநிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுவதுடன் அவருக்கு பதில் ஜான் டர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.</p><p></p><h2>கை விலங்குடன் தப்பி ஓட்டம்</h2><p>திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b314491-8d47-4c8b-8b46-94b56e3c6959/26-6a9644bac1ae6.webp' /></p><p>இந்நிலையில், 30.08.2026 அன்று 3.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை
விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் நேற்றையதினம்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (01.09.2026) மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ministry-of-defence-notice-to-gun-owners-1788231790"></link>
            <id>https://ibctamil.com/article/ministry-of-defence-notice-to-gun-owners-1788231790</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p> 
</p><p>அதன்படி, இன்று (01) ஆரம்பமாகவுள்ள&nbsp;புதுப்பிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும், துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள் ஆவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை</h2><p>
</p><p>இதேவேளை, 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8abb36bb-1557-42c1-9359-35fd261b36e0/26-6a96437cc6e3e.webp' /></p><p>

அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம்! லக்ஷ்மன் கிரியெல்ல உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kiriella-said-government-is-certain-to-fail-1788225956"></link>
            <id>https://ibctamil.com/article/kiriella-said-government-is-certain-to-fail-1788225956</id>
            <summary type="text">தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேர்தல் தோல்வி பயம்</h2><p>அங்கு மேலும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, “மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சி மன்றத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசாங்கம் அதில் தோல்வியடைவது உறுதியாகும். இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b6782bd-f0a6-45cc-8246-97cf5c812885/26-6a9629a596a63.webp' /></p><p> 

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பாகும்.
</p><p>
எதிர்க்கட்சிகளுக்கு இடையே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் சவால்களும் நிலவிய போதிலும், ஒரு தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கை கோர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்திற்கு வந்துள்ளன.</p><p>
அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள். போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. </p><p>

இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது. எனவே, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரு கட்சிகளும் நிச்சயமாக ஒரே அணியாக இணைந்து செயற்படும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T02:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். </p><p>

நேற்று BASL இல் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் இந்த திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என BASL முன்வைத்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் அரச ஊழியர் சங்கங்கள் பல இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/248b8839-c1f8-4557-8661-d943d1da4537/26-6a962721e39e4.webp' /></p><p>

அறிக்கையின் முக்கிய கருத்துகள்
</p><ol><li>உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதிக்கும்.
</li><li>2022 இல் உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற விசேட தீர்மானத்தை சுட்டிக்காட்டினர். அதில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை மீறுவதாகவும், எனவே அது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.</li></ol><h2>பொது வாக்கெடுப்புக்கு வலியுறுத்து</h2><p>

இதன்படி, 40 அமைப்புகளும் ஒருமனதாக அரசாங்கம் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20eaf32-fcb3-40df-bb23-cf88c68400a7/26-6a9627229bf9a.webp' /></p><p>

மேலும், அரசு இந்த திருத்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அதனை நேரடியாக மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எதிர்பதாகவும், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707"></link>
            <id>https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707</id>
            <summary type="text">அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் காரணமாகவே அவரை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
திருடர்களை கைதுசெய்வதாக தெரிவித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் திங்கட்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார வீழ்ச்சி</h2><p>
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, “திருடர்களை கைதுசெய்யும் அரசாங்கத்தின் வேவைத்திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசியல் நாடகத்துக்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.திருடர்களை கைதுசெய்வதுபோல், நாட்டை வங்குரோத்தாகியவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f58b1e0-7a60-468f-9d5d-1e25488011e0/26-6a9623510fbc8.webp' /></p><p>எமது நாடு விடுதலை புலிகளின் யுத்தத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது ஆனால் 87,88 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.</p><p>அதனைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் 30 வருட யுத்தம் காரணமாக எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498</id>
            <summary type="text">




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சிங்கபுர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
இதன்போது, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p></p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p>
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c69eec9-88db-42f1-aa06-8735226907bc/26-6a961fa3930e0.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி</h2><p>அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான&nbsp; புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a221be4b-6745-44c0-b5fb-b803ae65c386/26-6a95f54cb5184.webp' /></p><p>
</p><p>அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714"></link>
            <id>https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714</id>
            <summary type="text">நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

ஆரம்பத்தில் இந்தத் பேரிடருக்கு நிலநடுக்கமோ அல்லது பனியாற்று ஏரி உடைப்போ (GLOF) காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
</p><p>
எனினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நேபாள விஞ்ஞானிகள் குழு, அங்கு ஏரி உடைப்போ அல்லது நிலநடுக்கமோ நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வு</h2><p>

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் இருந்த பனி மற்றும் பாறைகள் அடங்கிய பெரும் பகுதி திடீரெனச் சரிந்து, சுமார் 2,900 மீற்றர் உயரத்திற்குச் செங்குத்தாகக் கீழே விழுந்துள்ளது. 

இதுவே ரிக்டர் அளவில் 5.2 நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b1e53-49ed-45a2-bc20-b3fb963cebc7/26-6a95f9d40695e.webp' /></p><p>
</p><p>
வெறும் 7 நிமிடங்களுக்குள் மணித்தியாலத்திற்குச் சராசரியாக 167 கிலோமீற்றர் வேகத்தில் பாய்ந்து வந்த இந்த சிதைவுகள் 22 கிலோமீற்றர் தொலைவைக் கடந்து அஸ்வகந்தா பகுதியை அடைந்துள்ளன.</p><h2>3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்</h2><p>
</p><p>
இவ்வாறு சரிந்து விழுந்த பாறைகளும் பனிக்கட்டிகளும் ஆற்றின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தியதால் புதிய தற்காலிக ஏரிகள் உருவாகி ஆற்றின் இயல்பான பாதையே மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db9c90c-6783-493c-9134-14792db6c3fb/26-6a95f9d4b5ea4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:30:22+00:00</updated>
        </entry>
    </feed>
