<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-13T14:57:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை தொடர்ந்து மகிந்த குடும்பத்தின் பகடைக்காயாக மாறியுள்ள அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-gods-for-the-rajapaksa-family-1789309240"></link>
            <id>https://ibctamil.com/article/three-gods-for-the-rajapaksa-family-1789309240</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்று குழுக்களும் இப்போது அக்குடும்பத்தின் மீட்பர்களாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளிகள் அனைவரும் ஒன்று கூடி, நேற்று (12) அனுராதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை அழைத்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>ராஜபக்ச குடும்பத்தின் முன்னைய பகடைக்காய்கள்</h2><p>பிரபாகரன் தனது கடவுள் என்று அவர் அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbd002d-f437-480c-8f55-ac96c1f23fde/26-6aa6b13a3a578.webp' /></p><p>இதற்கு முன்பு, கருணாவும் பிள்ளையானும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர். </p><p>பிரபாகரனைக் கடவுள் என்று பிரகடனம் செய்த அர்ச்சுன ராமநாதனும், மஹிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு, இந்த நாட்டு மக்களுக்கு ஒரு புதிய அரசியல் கண்ணோட்டத்திற்கான சிறந்த சான்றை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்&nbsp; என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் நிறைந்த அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை ஜனாதிபதி திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-corrupt-politics-president-asserts-firmly-1789306935"></link>
            <id>https://ibctamil.com/article/no-corrupt-politics-president-asserts-firmly-1789306935</id>
            <summary type="text">கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

&quot;எமது அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" என்ற கருப்பொருளின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடரில், கஹட்டகஸ்திகிலிய நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும்</h2><p>&nbsp;நாட்டில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f71c47b-23d7-436b-aa5b-b9aae7c6a6f4/26-6aa6ae4294ae5.webp' /></p><p> 



 

ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-issue-kandiah-bhaskaran-1789302296"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-issue-kandiah-bhaskaran-1789302296</id>
            <summary type="text">கட்சி ரீதியாக ஆண்டாண்டு காலமாக கோரி நிற்கின்ற இந்த சர்வதேச விசாரணை எதற்காக என்று சொன்னால் எங்களை கொலை செய்து புதைத்தவர்களிடையே போய் நீதியை கேட்பதில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்சி ரீதியாக ஆண்டாண்டு காலமாக கோரி நிற்கின்ற இந்த சர்வதேச விசாரணை எதற்காக என்று சொன்னால் எங்களை கொலை செய்து புதைத்தவர்களிடையே போய் நீதியை கேட்பதில் எந்தவித அரத்ததமும் இல்லை என தெரிவித்தார் ஐபிசி தமிழ் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன்.</p><p>செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பேரணிக்கு பின்னர் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>செம்மணி என்புக்கூடுகளை பாதுகாக்கவேண்டும்</h2><p>&nbsp;செம்மணியில் 600 ற்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் மீட்கப்பட்டள்ளன. அவற்றை பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது.அதைக்கூட இல்லாமல் செய்வதற்கும் அவற்றை நீர்த்து போகச் செய்வதற்குமான யுக்திகள் இங்கே கையாளப்படும்.எனவே அவை உரிய முறையில் பாதுகாக்கப்படகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgyYbf5yD4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><h2>&nbsp;அனுரவின் தேர்தல் பிரசார வாக்குறுதிகள்&nbsp;</h2><p>&nbsp;இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க, தேர்தலி பிரசாரத்திலே வைத்த கோரிக்கை இந்த நாட்டிலே இனவாதம் மற்றும் மதவாதம் இருக்கக்கூடாது இந்த நாடு ஒருமித்த நாடாக எல்லோருக்குமான நாடாக இந்த நாட்டை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளில் அவருடைய தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c57b6f0-3a4f-43f6-9354-8ddf9591f440/26-6aa6a59e6f945.webp' /></p><p>&nbsp; &nbsp;இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
இந்த நாட்டிலே பாரிய குண்டுத்தாக்குதல் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.அனுர குமார ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்களை அதற்கு துணை நின்றவர்களை அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏராளமானவர்களை விசாரணைக்கு உட்படுத்தி இன்று சிலர் சிறையில் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம்.</p><p></p><h2>செம்மணி போன்ற இடங்களில் உறங்கும் உறவுகள்</h2><p>அதேநேரத்தில் இந்த நாட்டில் வாழக்கூடிய தமிழர்களாகிய நாங்கள் 1958 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தாலும் அதன் இராணுவத்தாலும் கொன்று குவித்தும் காணாமல் ஆக்கப்பட்டும் இன்று செம்மணி போன்ற பல இடங்களில் எச்சங்களாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ac4409-4a28-465a-96f1-0a122d45b66a/26-6aa6a59f2cd6c.webp' /></p><p>&nbsp;இந்த இலங்கைத்தீவிலே எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் எங்களுக்கான நீதி ஒருபோதுமே சாத்தியமில்லை. இதை முதலில் எமது தமிழ் பேசும் மக்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேண்டும்.</p><p>இரண்டு இனங்களுக்கான மோதல் இங்கு நடைபெற்றது.அந்த மோதலில் எங்களை கொன்று குவித்த அவர்களிடமே போய் இதை விசாரித்து நீதி தாருங்கள் என்று கேட்பது ஒரு மடைமைத்தனமான வேலையாகத்தான் இருக்கும்.</p><p></p><h2>சர்வதேச விசாரணையே ஒரே ஒரு பொறிமுறை</h2><p>&nbsp;அதனால்தான் நாங்கள் சர்வதேச ரீதியாக அங்கே கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வேண்டி நிற்கின்றோம்.சர்வதேச ரீதியாக இந்த நீதியை கொண்டுவரவேண்டுமாக இருந்தால் தமிழர் தரப்பிலே முக்கியமான பணி ஒன்று இருக்கிறது.அதுதான் தமிழராகிய நாம் எல்லோரும் ஒன்றுபடவேண்டும்.ஒரு குடையின் கீழ் வரவேண்டும். ஒருமித்த கோரிக்கையாக இந்த புலம்பெயர்ந்த தேசங்களுக்கு எமது கோரிக்கையை வைக்கவேண்டும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74f1bc8-eef3-4834-870a-3537e0dcc83c/26-6aa6a59feb98d.webp' /></p><p>எம்மவர்களில் சிலர் உள்ளக விசாரண போதும் என்ற பொறிமுறைக்குள்ளும் பலகட்சித்தலைவர்கள் இல்லை இதற்கு சர்வதேச விசாரணை தான் தீர்வு என்ற பட்சத்திலும் இங்கே ஒரு மாறுபட்ட கருத்துக்கள் எமது இனத்திற்குள்ளேயே இருக்கின்றது.</p><p>&nbsp;இதை எல்லாம் முற்றாக களைந்து ஒரு ஒன்றுபட்ட இனமாக தமிழருடைய எத்தனை உயிர் இழப்புக்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச விசாரணையே ஒரே ஒரு பொறிமுறை என்ற அந்த கோட்பாட்டின் கீழ் அனைத்து தமிழர்களுகம் ஒன்றாக ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போமாக இருந்தால் நிச்சயமாக ஒருமாற்றம் எட்டும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
</p><p>
வென்றாக வேண்டும் எங்கள் நிலம் ஒன்றாக வேண்டும் தமிழர்கள் எங்களுடைய இலக்கு ஒன்றதான் இனத்தின் விடுதலை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T13:23:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லேடன் தொடர்பான மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிட்டது சிஐஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cia-releases-hidden-secrets-regarding-bin-laden-1789297198"></link>
            <id>https://ibctamil.com/article/cia-releases-hidden-secrets-regarding-bin-laden-1789297198</id>
            <summary type="text">&amp;nbsp;நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தொடர்பான 70க்கும் மேற்பட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகளையும், 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சிஐஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
</p><p>
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்பே, பின்லேடனின் இலக்குகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.&nbsp;</p><h2>பின்லேடனின் முதல் இலக்கு இந்தியா</h2><p>&nbsp;ஓகஸ்ட் 28, 1998 திகதியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கை, பின்லேடன் இந்தியா உட்பட பல நாடுகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25e08177-b89e-4a0e-a0d7-f985f99e79a9/26-6aa687936f7a8.webp' /></p><p>

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நாடுகளில் பாகிஸ்தான், எகிப்து, குவைத், சவுதி அரேபியா, யேமன், உகண்டா மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும்.</p><p>

"பின்லேடனின் பயங்கரவாத வலையமைப்பு இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது" என்ற தலைப்பிலான, தகவல்களுக்கான ஆதாரம் எதுவும் குறிப்பிடப்படாத அந்த ஆவணம் வெளியிடப்படாமல் உள்ளது.
</p><p>
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட இடம், திகதி அல்லது செயல்படுத்தும் திட்டம் ஆகியவற்றை அது குறிப்பிடவில்லை.</p><p></p><h2>அமெரிக்கா மீது மேலும் பல தாக்குதல்கள்</h2><p>

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அல்-கொய்தா முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பின்லேடன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராச்சியத்திற்கு எதிராக மேலும் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ba9f2f-5e9c-4cb0-a070-b68ba88946cb/26-6aa687942c63a.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக, அல்-கொய்தா தலைவர் குறைந்தது 60 நாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் கூட்டாளிகளின் வலையமைப்பின் ஆதரவை நாடியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எச்சரிக்கை</h2><p>சிஐஏ வெளியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகள், 1998 மற்றும் 2001-க்கு இடையில் பலமுறை நாட்டின் மீது சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளை அந்த அமைப்பு எச்சரித்ததைக் காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30eedbf5-9d83-4e05-be5a-77c73ad0d8d2/26-6aa68794edc1b.webp' /></p><p>
</p><p>
இந்த அறிக்கைகள் பில் கிளிண்டனின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் தொடங்கி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஜனாதிபதி பதவிக் காலம் வரை நீடித்த ஒரு காலகட்டத்தை உள்ளடக்கியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T13:00:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும் : வெளியானது பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-human-burial-needs-international-justice-1789300528"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-human-burial-needs-international-justice-1789300528</id>
            <summary type="text">செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி
 நல்லூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி
 நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பேரணியின் முடிவில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை
வேண்டும்: செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.
</p><p>
</p><h2>ஐ.நா மேற்பார்வையின் கீழ் விசாரணை</h2><p>இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா
அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை
நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29f1c77-7f85-423e-b1c2-557955e91698/26-6aa6915661825.webp' /></p><p>&nbsp; எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற
வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்
புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும்
அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான
சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல்
அகழ்ந்தெடுக்கப்படும் தடயங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும்
ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.</p><p>&nbsp;தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக
நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை
உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.</p><p>

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள்
தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச
குற்றவியல் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல்
வேண்டும்.&nbsp;</p><p>&nbsp;வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம்
முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக
உருவாக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>

அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை</h2><p> பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன்
விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம்
உடனடியாக நீக்கப்படவும் வேண்டும்.

அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய
சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23287a42-74b2-4b31-82cf-d763d1b73fcd/26-6aa6915716cc4.webp' /></p><p>
</p><p>வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்
வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.

அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின்
தொன்மையான வரலாறு. கலை. பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>கட்டமைப்புசார் இனவழிப்பு&nbsp;</h2><p>
தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார
திணைக்களம், வனவள, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் ஊடாக
மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார்
இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும்
நிறுத்தப்படவும் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed94ebf-8f09-4f8b-bcf2-b710dc47cf32/26-6aa69157bfaa9.webp' /></p><p>
</p><p>
தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும்
கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் - சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு
முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை
அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம்
உறுதிப்படுத்த வேண்டும் என்குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T12:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 13ஆவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-palaly-release-of-land-in-vali-north-1789298209"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-palaly-release-of-land-in-vali-north-1789298209</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
</p><p>
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இன்றைய தினம் 13ஆவது வாரமாக குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினர்.</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137a74a7-7caf-4eb0-8492-12ba31fbbec8/26-6aa687aa634f1.webp' /></p><p>இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில்
உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட
பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு சாதகமான களம் ஜெனீவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/geneva-is-a-favorable-arena-for-eelam-tamils-1789297055"></link>
            <id>https://ibctamil.com/article/geneva-is-a-favorable-arena-for-eelam-tamils-1789297055</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
</p><p>

ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற சர்வதேச களமான ஜெனீவாவில் எங்களுடைய அபிலாஷைகளை எங்களுடைய கவலைகளை அங்கு சொல்லக்கூடியதற்கான ஒரு சூழல் இருக்கின்றது.
</p><p>
அதனை எங்களுடைய ஆட்கள் எவ்வளவு தூரம் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதில் சில விமர்சனங்கள் இருக்கும்.

எங்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச களத்தினை நாங்கள் உண்மையில உச்ச வகையில பயன்படுத்த வேண்டும்.
</p><p>
ஜெனீவா கூட்டத்தொடர் நடக்கின்ற போது சர்வதேச கவனம் முழுவதும் ஜெனிவாவில் குவிந்திருக்கும்.

அந்த நேரத்தில நாங்கள் ஒரு கருத்துக்களை முன் வைக்கின்ற போது போராட்டங்களை நடத்துகின்ற போது அது சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கான சூழல் வலுவாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கும்.</p><p>

அடுத்தது இங்கே இருந்து எங்களுடைய பிரதிநிதிகள் ஜெனிவாவிற்கு சென்று கூட்டங்களை நடாத்தி இந்த கருத்துக்களை சொல்லுகின்ற போது சர்வதேச அரசின் பிரநிதிகள், மனித உரிமை அமைப்புகளுடைய பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் ஆகியோருக்கு எங்களுடைய கவலைகளை சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும்.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5OriHmF5PHE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T11:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் வெடிக்கவுள்ள ஆர்ப்பாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-protests-in-colombo-against-22nd-amendment-1789293344"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-protests-in-colombo-against-22nd-amendment-1789293344</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p> 

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது.</p><p></p><h2>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்</h2><p> 

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம். தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85de0475-6e00-4c10-b96d-651059df5c32/26-6aa67fc6dfb90.webp' /></p><p> </p><p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p> 

மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம்.</p><p>பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்திக்கு அவசர இதய அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/emergency-heart-surgery-for-shiranthi-1789295012"></link>
            <id>https://ibctamil.com/article/emergency-heart-surgery-for-shiranthi-1789295012</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களுக்கு அவர் முழுமையான படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.</p><h2>சி.டி. ஸ்கான் இயந்திர முறைகேடு தொடர்பில் விசாரணை</h2><p>இதனிடையே கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அத்தியாவசியமான சி.டி. ஸ்கான் இயந்திரத்தை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ரூ. 10 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, சீன அரசாங்கத்திடமிருந்து நாட்டிற்குப் பெறப்பட்ட ஒரு இயந்திரத்தை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c9ca81d-58e9-4b63-ab36-66f0d1785c0a/26-6aa67daf3f533.webp' /></p><p>
</p><p>
'சிரிலியா' கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிதி முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் அவர் அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:41:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட அடையாளந்தெரியாத ஆண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-found-dead-in-ampara-1789293961"></link>
            <id>https://ibctamil.com/article/man-found-dead-in-ampara-1789293961</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் கரையொதுங்கியுள்ளது.</p><p>
சடலம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச்
சென்ற காரைதீவு காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணைகள்</span></h2><p>
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எவ்வாறு
உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072361b7-b993-4617-95f8-ffa8b492d722/26-6aa678b5e6dc4.webp' /></p><p>
</p><p>அதன்படி, சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரைதீவு காவல்துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T10:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த இறப்பதற்கு முன் நாமலை ஜனாதிபதியாக்குவோம்: ரோஹித எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-president-mahinda-can-see-him-before-dies-1789293523"></link>
            <id>https://ibctamil.com/article/namal-president-mahinda-can-see-him-before-dies-1789293523</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் &#039;ஜன சடன&#039; பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 'ஜன சடன' பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன்றிணைக்க தலைமை தாங்கிய தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதையாக, அவரது மரணத்திற்கு முன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
</p><p>





முன்னாள் ஜனாதிபதிக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அது என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்த இலக்கை அடைவதற்காக முழு மக்களும் ஒருமித்து ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவுக்காக நாம் ஒரு கடமையை செய்ய வேண்டும்</h2><p>அங்கு ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தவை வருமாறு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f049e614-86e3-4209-a13f-54c84c38ba15/26-6aa6770aafe19.webp' /></p><p>
</p><p>



“நான் கேட்பது ஒரே ஒரு கோரிக்கைதான், அதைச் செய்ய நீங்கள் தயாரா? நீங்கள், ரஜரட்ட மக்கள் தயாரா? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கவேண்டும்</h2><p> </p><p>இந்த நாட்டை ஒன்றிணைத்த தலைவர், நாட்டையே கட்டியெழுப்பிய தலைவர், அந்த தலைவருக்காக நாம் ஒரு கடமையைச் செய்ய வேண்டும். பிறந்த அனைவரும் இறப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b2139c2-7e31-4a65-944b-5825eebcac4b/26-6aa676609d205.webp' /></p><p> </p><p>ஆனால், மகிந்த ராஜபக்சவின் கண்களுக்குத் தெரியும் வகையில், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற நமக்கு ஒரு கடமை உள்ளது. அது மட்டுமே நீங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு செய்யும் மரியாதையாக மாறும்.” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் மீது வாள்வெட்டு : நால்வர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-attacked-with-swords-in-jaffna-four-arrested-1789291455"></link>
            <id>https://ibctamil.com/article/youth-attacked-with-swords-in-jaffna-four-arrested-1789291455</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்
நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் வவுனியாவில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி
விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>
இந்தநிலையில் குறித்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது
வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவான நிலையில் வவுனியா
நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால்
நேற்று கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51a44c8-dbda-49f8-99b5-bd2a0bc6c484/26-6aa6710b096cd.webp' /></p><p>
</p><p>
குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர், குற்றச் செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என
நால்வரே இவ்வாறாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள்&nbsp; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க்
கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

இலங்கை சுற்றுலா <a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_7th_September_2026.pdf" target="_blank">அபிவிருத்தி அதிகாரசபையினால்</a> (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்</h2><p>மேலும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f290bd6a-7ca1-4144-959c-09f3ce26cb10/26-6aa669790e247.webp' /></p><p>

 

இந்த ஆண்டில் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:12:59+00:00</updated>
        </entry>
    </feed>
