<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-31T22:57:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் மிகப் பெரிய ட்ரோனை சுட்டு வீழத்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784</id>
            <summary type="text">ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. </p><p>

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிய பதிலடி&nbsp;</h2><p> 

முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/777f594b-eac9-4394-95c9-718baabcd19b/26-6a95e52b0de76.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p>இதனைதொடர்ந்து, மேற்படி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதனை ஈரானின் புரட்சிகர காவல் படை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள இரண்டு வான்படை தளங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள ஒரு தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T22:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி</h2><p>அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான&nbsp; புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a221be4b-6745-44c0-b5fb-b803ae65c386/26-6a95f54cb5184.webp' /></p><p>
</p><p>அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கண்ணிவெடிகளில் சிக்கிய பாரிய எண்ணெய் தாங்கி கப்பல்! மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
அப்பகுதியில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை என்று CENTCOM தனது X பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><h2>IRGC - இன் முயற்சி</h2><p>
</p><p>“ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை. பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்துவதற்காக IRGC மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சியே இது" என்று CENTCOM பதிவிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) claims that a supertanker passing through the southern route of the Strait of Hormuz struck two mines and was brought to a complete stop. This is FALSE.<br><br>✅ FACT: No ships have hit mines in the Strait of Hormuz. This is… <a href="https://t.co/spkaogBx81">pic.twitter.com/spkaogBx81</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094411076729262413?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>விதிமுறைகளை மீறிச் சென்ற எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக இயக்கமற்று நிறுத்தப்பட்டதாக IRGC திங்களன்று உரிமை கோரியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082</id>
            <summary type="text">




கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><p>கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த முன்னாள் இராணுவ அதிகாரியிடம் தூதரக அதிகாரி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ராஜதந்திரப் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்போது, சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி முன்னாள் இராணுவ அதிகாரியை எச்சில் உமிழ்ந்து, உடல்ரீதியாகத் தாக்கியதும் அக்காணொளியில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf491d7e-72f7-4423-9051-12dd3c54e670/26-6a95d513a910f.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதாக கூறப்படுவதால் குறித்த முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T19:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621</id>
            <summary type="text">புதிய இணைப்புபாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், குறித்த நபர் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>பாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த நிலையில், குறித்த நபர் தற்போது தடுப்பு காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பிரபல பாதாள உலக குற்றவாளி பானந்துர நிலந்தவின்&nbsp;மைத்துனரான டிலா என்பர் என தெரியவந்தள்ளது.</p><p>அத்தோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டை குடு சலிந்து என்ற பிரபல பாதாள உலக தலைவனின் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் இதன்போது “3எய்ட்“ ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>களுத்துறை மாவட்டம் - பாயாகலவின்&nbsp;நைமுல்ல பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>குறித்த துப்பாக்கிச் சூட்டில்&nbsp;படுகாயமடைந்த ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a64e12-08fc-4587-a8be-a516bcd11aa7/26-6a95b8d9346fa.webp' /></p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oppose-land-allocation-to-indian-company-people-1788201645"></link>
            <id>https://ibctamil.com/article/oppose-land-allocation-to-indian-company-people-1788201645</id>
            <summary type="text">

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு
மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
</p><p>கடந்த 28 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஜீவன் எம்பி தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மசாஜ்
நிலையம்,தியான மண்டபம் அமைப்பதற்காக இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு
வெற்றிலைக்கேணி, ஆழியவளை பகுதியை உள்ளடக்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை
அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
</p><p>
தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என்று மக்கள் குறித்த
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.</p><p></p><h2>சீரழிக்கப்படும் இளைய தலைமுறையினர்</h2><p>
</p><p>
வடமராட்சி கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல்
தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார்
நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.</p><p><br></p><p>
</p><p>
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும்
அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை
அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த
வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலன் ஐஸ் : பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மேலும் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சந்தேகத்திற்கிடமான கொள்கலனை ஆய்வு செய்ததில், 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.</p><p>&nbsp;கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை</h2><p>கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd6eebb-5267-4c3a-8b2d-c4d53b8639fa/26-6a957d43bbad2.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/messi-retires-from-international-football-1788197526"></link>
            <id>https://ibctamil.com/article/messi-retires-from-international-football-1788197526</id>
            <summary type="text">
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். </p><p>

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடனான தனது 21 ஆண்டுகால சர்வதேச விளையாட்டு வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
</p><p>
39 வயதான மெஸ்ஸி, திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்து, வேதனையுடன் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.</p><p></p><h2>2022 ஃபிஃபா&nbsp;உலகக் கோப்பை</h2><p>
</p><p>
2005-ல் அறிமுகமான மெஸ்ஸி, 207 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்து, அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a30a725-dbb2-4cc0-a2e7-ba7c231f61e2/26-6a95bd70763f1.webp' /></p><p>
</p><p>
2022-ல் கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று தந்ததே அவரது மிகப்பெரிய சாதனையாகும். மேலும், 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா பட்டங்களையும் அர்ஜென்டினாவுக்கு அவர் பெற்றுத் தந்துள்ளார்.</p><h2>கடைசி சர்வதேசப் போட்டி</h2><p>
</p><p>
2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்த போட்டியே இவரது கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5eedf3f-7b42-4e05-b79c-8b99575785be/26-6a95bd712e961.webp' /></p><p> 

நாட்டின் புதிய தலைமுறை வீரர்களின் வருகை மற்றும் இதுவரை சாதித்த பெருமிதத்துடன் ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ள எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:00:41+00:00</updated>
        </entry>
    </feed>
