<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-30T08:16:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293"></link>
            <id>https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293</id>
            <summary type="text">துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
ராகம, படுவத்த - வல்பொல வீதியின் வீரரத்ன மாவத்தையில் மரமொன்றின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த துப்பாக்கி, T-56 ரக தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை செலுத்தக்கூடிய வகையில் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு</h2><p>

</p><p>விசாரணைகளில் மேலும் தெரியவருகையில், பாதாள உலகக் குழு உறுப்பினரின் உத்தரவின் பேரில் ஒருவரை கொலை செய்வதற்காக அவரது தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் வருகை தரும் வரை, குறித்த துப்பாக்கி மரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e08f564-22e3-4013-b837-81296cc68594/26-6a93dbaf0736a.webp' /></p><p>மேலும் துப்பாக்கிதாரி வருகை தந்து ஆயுதத்தை எடுத்துச் செல்லவிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக உயர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்&nbsp; மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் முடிவை மாற்றிய நேபாள அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803</id>
            <summary type="text">சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முடிவை மாற்றி உள்ளது.&nbsp;</p><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26.08.2026) ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>லடாக் பகுதியில் இமயமலைத் தொடரில் பனிப்பாறை ஒன்று சரிந்து நதியின் பாதையை அடைத்ததன் பின்னர், நீர்த்தேக்கம் உடைந்து பெருமளவான நீர் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்து நேபாளத்துக்குள் நுழைந்தமையே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முடிவை மாற்றிய நேபாள அரசு</h2><p>
ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b939300-8a8d-4e6a-8560-c10c236a3255/26-6a93e37eb7ff6.webp' /></p><p> </p><p>பெருமளவான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, ஆரம்பத்தில் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாள அரசு, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.</p><p> இதன்படி, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா ஏற்கனவே பெருமளவான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. </p><p>மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF-இன் பயிற்சி பெற்ற குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:03:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166"></link>
            <id>https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166</id>
            <summary type="text">மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது சவாலாக இருந்த நிலையில், அதற்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.</p><p></p><h2>அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்</h2><p>
</p><p>மேலும் அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்காக “இலங்கை மருத்துவ சேவை” என்ற புதிய சேவைப் பிரிவையும் சம்பளக் கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு அப்போது இணக்கம் எட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d70b1-ee4d-436e-b0ae-2fab5dcf39e1/26-6a93d14d6e76d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்குமான தனியான சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.</p><p>

எனினும், விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவர்களிடையே பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
</p><p>
ஒரு பிரிவுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளர்களுக்கான மருத்துவ சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த யோசனைக்கு தமது சங்கம் இணங்கவில்லை.
</p><p>
இந்நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றுள்ளது.</p><p> மேலும், விசேட வைத்தியர்களின் உபகுழுவின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.</p><p>

இந்தக் கூட்டத்தில் மருத்துவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றக்கூடிய “இலங்கை மருத்துவ சேவையை” உருவாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்' என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T06:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475"></link>
            <id>https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>சக கைதியால் தாக்கப்பட்ட கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலையில் பாதிக்கபட்ட கைதிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>காதை வெட்டிய சக கைதி</h2><p>
</p><p>குறித்த கைதி தற்போது காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e095ec9-ed1c-4703-8408-0b596d6d28f8/26-6a93c2d8a49a5.webp' /></p><p>மேலும் காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் கைதிகளுக்கிடையில் இந்த பிரச்சனை வந்ததது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934"></link>
            <id>https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934</id>
            <summary type="text">சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&amp;nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களில் இருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் எனவும், மற்றையவர் குறித்த காணியின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீர் வழங்கல் சபையின் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவர் கைது</h2><p> </p><p>விசாரணையின்போது சந்தேகநபர்கள் தாம் அருகிலுள்ள வீடொன்றுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்காக நிலத்தைத் தோண்டியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6c2552-db00-4b88-ab74-64efb4a76b59/26-6a93b5827d82b.webp' /></p><p>

எனினும், நள்ளிரவு வேளையில் அதி உணர்திறன் கொண்ட பகுதியில் இவ்வாறு அகழ்வுப் பணியில் ஈடுபட்டமை தொடர்பில் திருப்திகரமான விளக்கம் வழங்கப்படாததால், அவர்களிடமிருந்த அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஹேமர் இயந்திரமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மூவரையும், முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&amp;nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சீமெந்து குழைக்கும்
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சீமெந்து குழைக்கும்
கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த&nbsp;மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24)&nbsp;தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்
எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம்
திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92046001-75d9-4ba3-80e6-5594a878f809/26-6a93767204cd8.webp' /></p><p>
</p><p>இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம
பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T04:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் - திரவப் பால் விலைகளில் மாற்றம்: வெளியான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dairy-product-price-increase-announcement-1788056893"></link>
            <id>https://ibctamil.com/article/dairy-product-price-increase-announcement-1788056893</id>
            <summary type="text">பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>BREAKING NEWS என்ற பெயரில் பால் மா, செறிவூட்டப்பட்ட பால் மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலிப் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.</p><p>
</p><p></p><h2>உண்மைத் தன்மை</h2><p>இந்தநிலையில் பால் பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் இதுபோன்ற வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2baef1-6d0a-4748-9337-9895b0d78c66/26-6a939f336e6bb.webp' /></p><p>தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதுடன் சந்தையிலும் குழப்ப நிலையை உருவாக்கும் என அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் சந்தையில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் நிலவினால் 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:15:45+00:00</updated>
        </entry>
    </feed>
