<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-14T15:12:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464</id>
            <summary type="text">நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார்.
</p><p>
நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத நிலையில், ஜனாதிபதி நாடு முழுவதும் பயணம் செய்து இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது பெரும் பண விரயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பொய் சொல்லி கூட்டத்தை நடத்தும் அரச தலைவர்</h2><p>கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

சாகர கரியவசம் மேலும் கூறியதாவது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e171af-a66c-49a4-b182-a13c128c25ee/26-6aa807d8ce3ec.webp' /></p><p>
</p><p>
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது அபிவிருத்திகளோ இல்லாமல், தேர்தலுக்கு முன்பு செய்வது போல பொய் சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்து, அரசாங்க அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரச தலைவர் கூட்டங்களை நடத்துவதை நாம் காண்கிறோம். </p><p>இது நாட்டின் பணத்தை முழுமையாக வீணடிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:42:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சை பாடங்கள்! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822</id>
            <summary type="text">

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில், சமூக ஒத்திசைவு, சட்டம் மற்றும் அறநெறி தொடர்பான புதிய பாடத் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>2027 கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p>
</p><p>
2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3ab9b8-c533-481f-a1db-2257486808fc/26-6aa80610b04d3.webp' /></p><p>
ஆரம்பக் கட்டமாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான செயல்முறைப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>ஆரம்பகால சிறுவர் கல்வி</h2><p>

இந்த புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களின் தொடர் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fdff91-d1d9-4c7a-bb27-d8aab9231c70/26-6aa8061166216.webp' /></p><p>
</p><p>
இது தவிர, ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகிய அனைத்தும் இதில் அடங்குவதுடன், இவற்றுக்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T14:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோக நெருக்கடி : ஜனாதிபதியை தலையிட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-urged-to-intervene-in-fuel-crisis-1789392619"></link>
            <id>https://ibctamil.com/article/president-urged-to-intervene-in-fuel-crisis-1789392619</id>
            <summary type="text">&amp;nbsp;&quot;நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்&quot; என எரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;"நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்" என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச இன்று (14) தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகார மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p>&nbsp;கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக மாநாட்டில் குமார ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.</p><p>

</p><h2>எரிபொருள் விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு</h2><p>தற்போதைய எரிபொருள் விலையில் விற்பனை செய்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி, ஆர்.எம். பார்க், சினோபெக் மற்றும் எல்.ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும், நஷ்டங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146c6212-dd62-4cf1-8108-0e67cdf19ec1/26-6aa7fc5b9ea3d.webp' /></p><p>தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்து வருவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மட்டுமே இருப்பது பொதுமக்களைப் பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>&nbsp;நாட்டில் காலடி வைத்த சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள்</h2><p>&nbsp;முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறைக்குப் பிறகு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்து இந்த நாட்டிற்கு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7432e0-31c3-4774-9d8d-686cba0e7303/26-6aa7fc5c53b33.webp' /></p><p> </p><p>மேலும், அந்த நிறுவனங்கள் போட்டி விலையில் எரிபொருளை விற்க அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் கூறியது. ஆனால், அந்த நிறுவனங்கள் இந்த நாட்டில் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய பிறகு, அவை அரசாங்கத்தின் விலையில் எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.</p><p>&nbsp; மேலும், தங்கள் எரிபொருள் விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்க நேர்ந்தால், அந்த நஷ்டத்தை அரசாங்கமே ஏற்கும் என்று அந்த நிறுவனங்கள் கூறி வருவதாகவும், இந்த நிலைமை பொதுமக்களை மட்டுமல்லாமல் எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் பாதித்துள்ளதாகவும் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தில் ஐநாவின் தலையீடு! வலியுறுத்தும் கஜேந்திரகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-intervention-deliver-justice-gajendrakumar-1789391795"></link>
            <id>https://ibctamil.com/article/un-intervention-deliver-justice-gajendrakumar-1789391795</id>
            <summary type="text">

செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் 600 வரையானவர்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளக விசாரணையை எதிர்க்கிறோம் செம்மணி புதைகுழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து இடம்பெற்ற மாபெரும் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், “1999 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியான கிருசாந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மணி பகுதியில் கடமையில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் கொலை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2>இராணுவ கோப்ரலின் சாட்சியம்</h2><p>

அந்த இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாததன் காரணமாக இந்தப் பின்னணியில் இருந்தவர்களை வெளிப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் 600 வரையான உடல்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5dd1ffc-761d-4be6-a1d4-7c5d80146fa9/26-6aa7f6ba4d128.webp' /></p><p>

அவர் இந்த உண்மையை கூறாமல் விட்டிருக்கலாம் இருந்தும் செம்மணியில் பாரிய மனித படுகொலைகளின் பின்னால் இராணுவ உயர் அதிகாரிகள் இருந்ததன் காரணமாகவும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் எனத் தெரிந்ததால் உண்மையை உலறிவிட்டார்.</p><p> 
அவர் அன்று கூறிய விடையங்கள் தற்போது உண்மையாகி சுமார் 600 வகையான எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட வருகின்றது./
</p><p>
தற்போது அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் செம்மணி பகுதியில் மயான கட்டுமானம் இடம்பெற்று வந்த நிலையில் அதனை மயானத்தில் எலும்பு கூடுகள் இருப்பது வழமையான விடயம் என சிலர் திசை திருப்ப பார்த்தார்கள்.</p><p>

இருந்தாலும் நமது கட்சியை சேர்ந்த கிருபாகரன் என்னிடம் இந்தப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.</p><p>
யாழ்ப்பாண காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த நிலையில் சட்டத்தரணிகளான காண்டீபன் மற்றும் சுகாசின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அகழ்வு பணிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.</p><p>

செம்மணி மனித புதைதைக்குழி 600 ஐ நெருங்குகின்ற நிலையில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பின் சாட்சியாக செம்மணி இடம் பிடித்துள்ளது.</p><h2>சர்வதேச விசாரணையின் அவசியம்</h2><p>

ஐநா மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்கள் வழங்கியும் சிறிலங்கா அரசு மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b54bc9-1506-44fe-ada5-3ee0b064ea45/26-6aa7f6bb1fd15.webp' /></p><p>
அந்த ஒரு சூழலில் தற்போது செம்மணி விவகாரம் என்பது பேசு பொருளாகவும் சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள விடயமாகவும் பார்க்கக் கடியதாக உள்ளது.</p><p>
2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தமக்கு விளக்கப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உள்ளக விசாரணைகளை புறந்தள்ளி சர்வதேசத்திடம் நீதிக்காக போராட ஆரம்பித்தார்கள்.</p><p>
இந்தப் போராட்டம் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் ஐநா மனித உரிமைகள் பேரவை சிறீலங்கா அரசு மீது தமிழ் மக்கள் சுமத்திய ஆதாரங்கள் சாட்சியங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறது.</p><p>

பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காத்திரமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஏனைய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து போவதையே காண முடிகிறது.</p><p>
முன்னாள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த இளவரசர் செயித் அல்ஹசன் தனது அறிக்கையில் தெளிவாகவும் இறுக்கமாகவும் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.</p><p>

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது என்பது உண்மையான நீதியை தராது என தனது அறிக்கையிலே தெளிவாக குறிப்பிட்டார்.</p><p>

அவரது கருத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாக நோக்க வேண்டும் ஏனெனில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியின் ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசிடம் இருப்பது ஆதாரங்களை அழிப்பதற்கு ஏதுவாக அமையும்.</p><p>அதன் காரணமாகவே தமிழ் மக்கள் உள்ளக விசாரணை நீதியை தராது செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T13:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினியின் அரசியல் பிரவேசம் : கலக்கத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685"></link>
            <id>https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685</id>
            <summary type="text">&amp;nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 வெலிக்கடை சிறைக்குச் சென்றபோது லிமினி ராஜபக்ச இந்தச் செய்தியை நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.</p><h2>அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை&nbsp;</h2><p>&nbsp;இதனால் மிகவும் கலக்கமடைந்த நாமல் ராஜபக்ச, இந்தப் பிரசாரத்தை உடனடியாக அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea62220-2c83-4214-932a-82d510523570/26-6aa7ce908e530.webp' /></p><p>&nbsp;அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் லிமினி ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும் பின்னர் அவரது தந்தையால் அது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலுக்கு இறுகும் பிடி : அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த சிறப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/move-to-deport-basil-rajapaksa-to-sri-lanka-1789383780"></link>
            <id>https://ibctamil.com/article/move-to-deport-basil-rajapaksa-to-sri-lanka-1789383780</id>
            <summary type="text">அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக, இலங்கை சட்ட அதிகாரிகளுக்கும் அமெரிக்க நீதித் துறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக, இலங்கை சட்ட அதிகாரிகளுக்கும் அமெரிக்க நீதித் துறைக்கும் இடையேயான இரகசியத் தகவல் பரிமாற்றம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அந்தத் தகவல் பரிமாற்றத்தின்படி, பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாட்டின் சட்ட அதிகாரிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவின் இந்த வலுவான சட்ட அழுத்தத்தை எதிர்கொண்டு, பசில் ராஜபக்சவின் கட்சியும் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பசில் ராஜபக்ச தனது இலங்கைக்கு குடியுரிமையைத் துறக்க ஒரு சிறப்பு கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>குடியுரிமையை துறக்க முடிவு&nbsp;</h2><p>

வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு இந்தக் கோரிக்கை பெறப்பட்ட போதிலும், உள்ளூர் அதிகாரிகள் இதுவரை அதற்கு எந்த அதிகாரபூர்வ பதிலும் அளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8337b8-9e27-4a52-b31b-00dca16484ce/26-6aa7d946a77e9.webp' /></p><p>



பசில் ராஜபக்சவை நாட்டிற்கு ஒப்படைப்பது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவை பெற இலங்கைக்கு அமெரிக்கா அட்வைஸ்&nbsp;</h2><p>
</p><p>
கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் பசில் ராஜபக்ச மீது நாட்டின் நீதிமன்றங்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவைப் பெறுமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb0a9c2-08fd-44af-8e5c-3a27d2fecfac/26-6aa7d945f18ba.webp' /></p><p>

அந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில், பசிலுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சம்பந்தப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக மீண்டும் ஒரு பிடியாணை பெற்று, அவரை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் எடுக்கப்படும் இந்த சட்ட நடவடிக்கையின் காரணமாக, பசில் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் மற்றும் சட்டரீதியான இருப்பு கடுமையாக சவாலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T-Cj_tS9jhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T13:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வரை விளக்க மறியல் : மீண்டும் 16 ஆம் திகதி நீதிமன்ற படியேறுகிறார் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-remanded-18th-appear-fort-court-on-the-16th-1789388749"></link>
            <id>https://ibctamil.com/article/namal-remanded-18th-appear-fort-court-on-the-16th-1789388749</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு விமானங்களை வாங்கும் செயல்பாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு விமானங்களை வாங்கும் செயல்பாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>&nbsp;சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒரு கூட்டு விசாரணையைத் தொடர்ந்து, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><h2>கோட்டை நீதவானின் உத்தரவு</h2><p>சட்டமா அதிபர் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்படி, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அவரும் ஒரு சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5a3be0-7bc4-47cf-ae87-a910a76ab6fb/26-6aa7eea100c82.webp' /></p><p>
</p><p>
அதன்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, செப்டம்பர் 16 அன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டார்&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கட்டளை மீறிச்சென்ற டிப்பர் வாகனங்கள்: காவல்துறை துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tipper-truck-transporting-illegally-sand-jaffna-1789386717"></link>
            <id>https://ibctamil.com/article/tipper-truck-transporting-illegally-sand-jaffna-1789386717</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 

நேற்று(13.09.2026) இரவு 11.15 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.</p><p></p><h2>சாரதிகள் இருவரும் கைது</h2><p> </p><p>

இருப்பினும், அவர்களின் சமிக்ஞையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfc6853-92a6-4cb6-90b8-9a0f166bbef6/26-6aa7e4df78081.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து, அதிரடிப்படையினர் குறித்த டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இரு டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தி வந்த சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விற்பனையால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் பெரு நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petroleum-corporation-losses-from-diesel-sales-1789386153"></link>
            <id>https://ibctamil.com/article/petroleum-corporation-losses-from-diesel-sales-1789386153</id>
            <summary type="text">டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

இருப்பினும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை என்று தலைவர் குறிப்பிடுகிறார்.</p><h2>நஷ்டத்தை சமாளிக்க முடியும்&nbsp;</h2><p>தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தலைவர், கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c64f1ea5-6b65-4ea5-8dfd-46f59572c4d7/26-6aa7e42695f3e.webp' /></p><p>

இன்று (14) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/further-hearing-in-rajitha-case-set-for-november-1789387089"></link>
            <id>https://ibctamil.com/article/further-hearing-in-rajitha-case-set-for-november-1789387089</id>
            <summary type="text">
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (14) மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. &nbsp;</p><p> 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் தரப்பினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba8fc6a3-ace6-4d9e-94ca-3b532f58e042/26-6aa7e3d1385c6.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, வழக்கு குறித்த மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T12:08:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக் காவலர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/guard-was-arrested-for-attempting-to-smuggle-1789383210"></link>
            <id>https://ibctamil.com/article/guard-was-arrested-for-attempting-to-smuggle-1789383210</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;குறித்த கைது நடவடிக்கை இன்று (14...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த கைது நடவடிக்கை இன்று (14.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>

சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் எஸ்.கே. பள்ளேதென்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த சிறைச்சாலை காவலர் தனது காலணிக்குள் மறைத்து வைத்து 98 கிராம் ஐஸ் போதைப்பொருளையும், 16 கிராம் ஹெரோயினையும் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de05f9b-bd37-4510-a54c-61d14f5af655/26-6aa7dbee8cba2.webp' /></p><p>சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு உட்புற பகுதியில் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, அவரது காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறைச்சாலை காவலரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/40-pt-rainfall-recorded-in-vavuniya-in-2026-1789384590"></link>
            <id>https://ibctamil.com/article/40-pt-rainfall-recorded-in-vavuniya-in-2026-1789384590</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்
தெரிவித்துள்ளார்.
</p><p>வவுனியா மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தினை பொறுத்தவரை வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியானது 1400
மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. எனினும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல்
இன்று வரையான காலப்பகுதியில் 559.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே
பதிவாகியுள்ளது.</p><p></p><h2>அதிகளவான மழை&nbsp;</h2><p>
இதேவேளை நேற்றையதினம் (13)&nbsp; 21.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இம்மாதம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a18bdb-3cff-4b3e-8578-f254eb1aa4d2/26-6aa7d9058c45d.webp' /></p><p>
</p><p>இம்மாதத்தின் இறுதியில்
இருந்து வடகீழ் பருவமழை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர்
மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்தில் அதிகளவான மழை பெய்யக்கூடும்.</p><p>

குறிப்பாக இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில்,
மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவான கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்
உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சகளின் நசனல் லிஸ்ற்றுக்கு சுவிச் பண்ணும் அர்ச்சுனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-switches-to-rajapaksas-national-list-1789383448"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-switches-to-rajapaksas-national-list-1789383448</id>
            <summary type="text">
இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கு எதிரான துட்டகெமுனு மன்னனால் எல்லாளன் வீழ்த்தப்பட்ட நகரம் என்ற விளிப்புக்கு உரிய அனுராதபுரத்தில் யாழ்பாணத்தின் சுய...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கு எதிரான துட்டகெமுனு மன்னனால் எல்லாளன் வீழ்த்தப்பட்ட நகரம் என்ற விளிப்புக்கு உரிய அனுராதபுரத்தில் யாழ்பாணத்தின் சுயேச்சை கிளாடியேற்றர் ராஜபக்சக்களின் கூட்டத்தில் அடித்துவிட்ட கருத்துகள் தமிழர்களை கொதிக்க வைத்துள்ளது.</p><p>
ராஜபக்சக்களின் எதிர்கால தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்காக அல்லது, மாகாணசபை வேட்பாளர் அனுசரணைக்காக இவ்வாறு இந்த கிளாடியேற்றர் கம்பு சுற்றுவது ராஜபக்சக்களால் பெரும் வேதனைகள் மற்றம் அழிவுகளை கண்ட தமிழ் மக்களை எரிச்சல் ஊட்டுகிறது.</p><p>

மறுபுறத்தே கைத்தாங்கலாக இந்த மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மகிந்த கூட இந்த கிளாடியேற்றரின் கம்பு சுற்றலை ரசித்தார்.</p><p>

ராஜபக்சக்களுக்கு பதிலடியாக நேற்று அதே அனுராதபுரத்தில் 2 இடங்களில் மேடை ஏறிய அரச தலைவர் ஏகேடியார் ராஜபகசக்களின் பெயர்களை நேரடியாக சொல்லாமல் ஒரு அடி அடித்தார்.</p><p>
இலங்கையில் இதுவரை இருந்த வம்ச அரசியல் ஆட்சி வி.ஐபி. சிறப்புரிமை ஆட்;சி போன்ற பழைய அக்மார் அரசியல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அடித்தார்.</p><p>

அத்துடன் திருடர்களைப் பிடிப்பதற்கு எல்லையில்லை எனவும் கறார்காட்டிய நிலையில் இலங்கையில் அரசியல் வம்ச் வாரிசு சகாப்தம் முடிந்துவிட்டதாக ஏகேடியார் குறிப்பிட்டாலும் ராஜபக்ஷ தரப்புடன் சமரசம் செய்து தமது சுயலாபங்களை அடைய முயற்சிக்கும் சுயேச்சை எம்.பி போன்றவர்களால் அவர்களின் வாக்குவங்கியை உயர்த்தமுடியுமா? இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qKkgTbRoMhQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T11:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slmc-mp-abdul-wahid-resigns-from-parliament-1789382352"></link>
            <id>https://ibctamil.com/article/slmc-mp-abdul-wahid-resigns-from-parliament-1789382352</id>
            <summary type="text">சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.</p><p>அப்துல் வாஹித், தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f38bc9-b5d2-4020-9554-1d94fdc2895a/26-6aa7d1cd19e5f.webp' /></p><p>இதன்படி, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாக, பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்சன் மண்டேலாவுக்கு நாமல் இழைத்த அநீதி! ஆளுங்கட்சி எம்.பி சிற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/najith-criticized-quote-by-mandela-cited-by-namal-1789377871"></link>
            <id>https://ibctamil.com/article/najith-criticized-quote-by-mandela-cited-by-namal-1789377871</id>
            <summary type="text">

சிறையில் இருந்து முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை சுட்டிக்காட்டி செய்தி அனுப்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறையில் இருந்து முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை சுட்டிக்காட்டி செய்தி அனுப்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக கடுமையாக விமர்சித்துள்ளார். </p><p>

அதன்போது, இருவரின் சிறைவாசப் பின்னணியையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, சனிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் வாசிக்கப்பட்ட செய்தியொன்றில் மண்டேலாவின் கூற்றை குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>தென்னாப்பிரிக்க தலைவருக்கு அநீதி</h2><p>
</p><p>
 அதில், "கஷ்டங்கள் சிலரை உடைக்கின்றன; ஆனால் மற்றவர்களை மேலும் வலுவாக்குகின்றன" என்ற மண்டேலாவின் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03118d03-0b54-466b-b2f6-25c8ba045d3e/26-6aa7d20292088.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், “யார் நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுகிறார்? நாமல் ராஜபக்சவா?” எனக் குறிப்பிட்ட நஜித் இந்திக, ஒடுக்குமுறை மற்றும் இனவெறி முறைமைக்கு எதிரான போராட்டத்துக்காக மண்டேலா சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக நாட்டை வழிநடத்திய வரலாற்றையும், நாமல் ராஜபக்ச தற்சமயம் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளையும் ஒப்பிட்டு ஒருபோதும் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
ராஜபக் குடும்பத்தினரின் ஆட்சியையும் விமர்சித்த அவர், நாமலின் தந்தையும் சித்தப்பாவும் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியைக் குறிப்பிட்டு, தற்போதைய சூழ்நிலையில் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த தென்னாப்பிரிக்க தலைவருக்கு செய்யும் அநீதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-14T10:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விவகாரம் : சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-named-suspect-in-sl-airlines-airbus-probe-1789379554"></link>
            <id>https://ibctamil.com/article/namal-named-suspect-in-sl-airlines-airbus-probe-1789379554</id>
            <summary type="text">சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

குறித்த வானூர்தி கொள்முதல் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p></p><h2>எயார்பஸ் விமானங்கள் கொள்முதல்</h2><p>இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸுக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் நாமல் ராஜபக்ச கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920d7f7d-8ef2-4ced-b5d1-143dde8d9f9c/26-6aa7cc7867f7c.webp' /></p><p>இந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குண்டு போன்ற பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspicious-bomb-like-object-recovered-from-a-house-1789378761"></link>
            <id>https://ibctamil.com/article/suspicious-bomb-like-object-recovered-from-a-house-1789378761</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட சீனவத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட சீனவத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டு போன்ற பொருளொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், வீட்டின் கூரையில் அந்தப் பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.</p><p>

பின்னர் அவர் அதனை வீட்டின் முன்புறத்தில் வைத்து, சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணைகளில் காவல்துறை</h2><p>
</p><p>
</p><p>காவல்துறையினருக்க கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு சென்று பொருளை மீட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/340aac46-59d3-4f24-bce5-7df30eaa2b81/26-6aa7cc0161560.webp' /></p><p>இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் :வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-300-kilogram-fish-caught-mannar-fishermen-1789380637"></link>
            <id>https://ibctamil.com/article/a-300-kilogram-fish-caught-mannar-fishermen-1789380637</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார்
300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது.

உள்ளூர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார்
300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது.
</p><p>
உள்ளூர் கடற்றொழிலாளர்களால் *“கொப்பறா”* என அழைக்கப்படும் இந்த மீன், வழக்கமான
மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படுவதால், கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அதிகளவானவர்கள் பர்வை</h2><p>மீனுடன் கடற்றொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்
கவனம் பெற்றுள்ளன.

குறித்த மீனை தற்போது அதிகளவானவர்கள் பர்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f99f1c-c056-4ef5-adf4-af13716697c2/26-6aa7c81f29566.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T10:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய 'P 4447' அதிவேகத் தாக்குதல் படகு மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fast-attack-craft-p-4447-recovered-in-successful-1789375389"></link>
            <id>https://ibctamil.com/article/fast-attack-craft-p-4447-recovered-in-successful-1789375389</id>
            <summary type="text">கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படைக்குச் சொந்தமான &#039;P 4447&#039; அதிவேகத் தாக்குதல் ரோந்துப் படகு கடற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'P 4447' அதிவேகத் தாக்குதல் ரோந்துப் படகு கடற்படையினரின் விசேட சுழியோடி மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.</p><p>


கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி விபத்துக்குள்ளான இப் படகு, நீண்ட சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த 11 ஆம் திகதி மீட்டெடுக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு கப்பல்துறை வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p>ஓகஸ்ட் 15 ஆம் திகதி விபத்து நடந்த நிலையில் உடனடியாக, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் அங்குலாணை பகுதி கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.</p><p></p><h2>80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகு</h2><p>
</p><p>
இச் சம்பவத்தின் போது படகிலிருந்த 11 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியின் சடலம் கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி கடற்படையினரால் மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64e5d87a-c048-4a90-b4bd-326a91f8d5f3/26-6aa7bbdbe4851.webp' /></p><p>

இறுதி கட்ட நடவடிக்கையாக, சீற்றமான கடல் அலைகள் மற்றும் நீருக்கடியிலான சவால்களுக்கு மத்தியில், சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகு கடற்படைச் சுழியோடிகளால் படிப்படியாக மேற்பரப்பிற்குக் கொண்டுவரப்பட்டது.</p><p>

இச் சிக்கலான மீட்புப் பணியில் கடற்படையின் கடல்சார் பொறியியல், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளுடன் இணைந்து இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு கப்பல்துறை தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப நிபுணத்துவமும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T09:20:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை! சிக்கிய தனியார் வகுப்பு ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teacher-arrested-for-harassing-a-young-girl-1789376631"></link>
            <id>https://ibctamil.com/article/teacher-arrested-for-harassing-a-young-girl-1789376631</id>
            <summary type="text">
15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>

இதன்படி, சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69737c6-bd84-4659-8f67-e3e675705958/26-6aa7bba1edbe9.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை காவல்துறையினர் கைப்பற்றி பரிசோதித்துள்ளதுடன், அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அந்தவகையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிலூகா பாலிபான தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T09:17:25+00:00</updated>
        </entry>
    </feed>
