<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-05T04:16:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414</id>
            <summary type="text">பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் இன்று அதிகாலை (05) கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில்&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முற்றிலுமாக எரிந்து நாசம்</h2><p>



</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e1bef4-6bd2-4ec4-ad93-86456ea2050f/26-6a72b7a7de023.webp' /></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.</p><p>
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் ஆடம்பர பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p>தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கடுவெல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்தேக வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கடுவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்&amp;nbsp;பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த பரீட்சை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்&nbsp;பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில் இந்தத் தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்கள்</h2><p>
 

இக்காலப்பகுதியில், பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பரப்புரை செய்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43a3877-5ee8-4c22-beb1-8732bb2275dd/26-6a72b4d2722e7.webp' /></p><p>
</p><p>
 

மேலும், பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெறும் வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ குறிப்பிட்டு சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல், அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
</p><p>
 

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390"></link>
            <id>https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&amp;nbsp;பிரதேச வைத்தியசாலையில்&amp;nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&amp;nbsp;இடம்பெறவுள்ளது.இன்று (05) காலை10மணி மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&nbsp;பிரதேச வைத்தியசாலையில்&nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&nbsp;இடம்பெறவுள்ளது.</p><p>இன்று (05) காலை10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி நிகழ்விற்கு அனைவரையும் வருகை தருமாறு சங்கானை - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>வேல்ட் விசன் அனுசரணையுடன் சங்கானை சுகாதார அதிகாரி பணிமனை நடாத்தும் “Enough போசாக்கு“ கண்காட்சியில் தன்னிறைவான சுயசார்பு பொருளாதாரத்துடன் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு உணவுகள் காட்சிப்படுத்தப்படும்.</p><h2>சுகாதார அமைச்சு</h2><p>இதன்போது எமது சுகவாழ்விற்கு ஆரோக்கியமான சிறுதானிய, பனைசார், கடல்சார், மரக்கறி இலைவகைசார், பாற்பொருட்கள்சார் உணவுகளை தயாரிப்பது எவ்வண்ணம் என விளக்கும் செயன்முறை சமையற்கலை கூடங்கள், சுகவாழ்வுத்தோட்டம், சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி, பாடசாலை சிற்றுண்டிச்சாலை விபரணத்துடன் கூடிய போசாக்கு கண்காட்சியைப் பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a603ff-48f5-492f-a830-85a0f258c8bd/26-6a72b3ce52530.webp' /></p><p>சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதம் பரப்புரைக்கு அமைவாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைக் கொள்கையின் கீழ் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நிகழ்சில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T03:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கோவில் வீதியில் போக்குவரத்து தடை - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456"></link>
            <id>https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள <a href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985" target="_blank">நல்லூர் கந்தசுவாமி </a>ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் இன்றைய தினம் (05.08.2026) புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை யாழ் மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, நாளைய தினம் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0961a81-ff77-469d-ab96-f9d35fc7029a/26-6a72a5dfc1a2b.webp' /></p><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய
அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.
</p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929"></link>
            <id>https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929</id>
            <summary type="text">ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் <a href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464" target="_blank">பாடசாலை</a>களையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507" target="_blank">வானிலை </a>காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை,&nbsp;கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விசேட ஆலோசனை</h2><p>

 

நிலவிய பலத்த மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7fc109-3167-4a25-8978-d0a8e2cdae14/26-6a729bfb183d2.webp' /></p><p>இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பவ இடத்தில் போன உயிர்: பயங்கர போதைப்பொருள் பயன்படுத்திய சாரதி: அதிரடி கைதுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-bus-owner-arrested-1785894262"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-bus-owner-arrested-1785894262</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ்&nbsp; பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கை நேற்று (04) புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை&nbsp;</h2><p>
 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e10629f-de04-4405-8305-74d63dc81098/26-6a7299c11db38.webp' /></p><p>

 

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் 'ஐஸ்' எனும் வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
 

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஏற்கனவே காலாவதியாகியிருந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.</p><p></p><h2>உரிமையாளர் கைது</h2><p>

 

இதனையடுத்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ், அப்பேருந்தின் உரிமையாளரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed13414-dedc-4d73-bd26-ef0db989090e/26-6a7299c066e42.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T02:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானை தேடி மலேசியாவில் களமிறங்கிய இன்டர்போல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-joins-forces-to-arrest-kanjipani-imran-1785892935"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-joins-forces-to-arrest-kanjipani-imran-1785892935</id>
            <summary type="text">பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கையின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான விசேட குழுவினர் இணைந்து பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கஞ்சிபானி இம்ரான் சர்வதேச குற்றக்கும்பல் தலைவராக மலேசிய காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து பாதைகளும் மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஆனந்த விஜேபால முழுமையான ஒத்துழைப்பு</h2><p>

கஞ்சிபானி இம்ரானுக்கு மலேசியாவில் உள்ள தொடர்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d91eb835-a8b6-4cf7-95a7-da8d7e1d8a53/26-6a7291f3cbbd3.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மலேசிய காவல்துறைகாவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உதவியாளர் எனக் கூறப்படும் ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் மலேசிய காவல்துறையும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவும் நீண்ட நேர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்த விசாரணைகளின் மூலம் கஞ்சிபானி இம்ரான் தொடர்பிலும் அவரது சர்வதேச தொடர்புகள் குறித்தும் முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழுமையான ஆதரவு உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோல், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பும் இந்த நடவடிக்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நடவடிக்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி, கஞ்சிபானி இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பாக விசேட கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464"></link>
            <id>https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.
</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழையுடனான காலநிலை</h2><p>
</p><p>
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை முன்னிட்டு, பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன நேற்றைய ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78b00860-cc4b-478d-88b7-0cea4175253f/26-6a727aeaddd0d.webp' /></p><p>இதன்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலை காரணமாக நாட்டில் 11,832 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507"></link>
            <id>https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>

 

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், மொத்தம் 3,538 பேர் 51 பாதுகாப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p></p><h2>75 மி.மீ.க்கு மேல் கனமழை</h2><p>
 

மோசமான வானிலையால் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 290 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதில் நுவரெலியா மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9002e661-a4d7-44be-b820-07fd1f2d0fd3/26-6a728df95ac2b.webp' /></p><p>மேலும், மாவட்டத்தில் மட்டும் 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
 

இதற்கிடையில், மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் கணித்துள்ளது.
</p><p>
 

இந்தப் பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும் என்றும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் எம்.பிக்கு எதிராக ச.ஐ.டியில் முறைபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-against-susantha-punchinilame-cid-1785891245"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-against-susantha-punchinilame-cid-1785891245</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே,&amp;nbsp;2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே,&nbsp;2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வாடகை, நீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் எதனையும் செலுத்தவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>அரசியல் நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே குறித்த இந்த குற்றச்சாட்டை நேற்று (04.08.2026) நாடாளுமன்றத்தில் அருண் ஹேமச்சந்திரா முன்வைத்தார்.</p><p>இந்த நிலுவைத் தொகைகளை மீளப் பெறுவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தொகையும் செலுத்தப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>திருட்டு, மோசடி மற்றும் ஊழல்கள்</h2><p>
இதனால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID), அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவிற்கும் (COPE) ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a1569f-0846-4a1f-ba7c-91e60a8a5225/26-6a7289aed991a.webp' /></p><p>மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த பிரியந்த பத்திரண பிரேமகுமார என்பவருக்கும் பேதுருகொட்டுவ பகுதியில் அரச உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான வாடகை எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p>

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் திருட்டு, மோசடி மற்றும் ஊழல்களுக்கு இடமளித்து அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அரசியல் அதிகாரம் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-more-human-skeletons-identified-in-semmani-1785889651"></link>
            <id>https://ibctamil.com/article/4-more-human-skeletons-identified-in-semmani-1785889651</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் 43ஆவது நாளான நேற்று, மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் 43ஆவது நாளான நேற்று, மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>97 நாட்கள் அகழாய்வுப் பணி</h2><p>
</p><p>
செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 97 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f846a71-72bd-402d-8ec7-823a8f06463b/26-6a72837599922.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 481 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-corruption-cases-against-johnston-fernando-1785889101"></link>
            <id>https://ibctamil.com/article/5-corruption-cases-against-johnston-fernando-1785889101</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கூட்டுறவு மொத்த விற்பனைச் சங்கத்தின் (CWE) ஊழியர்களை அரசுப் பணியுடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அரசுப் பணத்தில் வழங்கியதன் மூலம் அரசுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்குகள் தொடர்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

இந்த ஐந்து வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் (High Court) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழு நேற்று (04) உத்தரவிட்டது.</p><p></p><h2>விடுதலை தீர்ப்பும் இரத்து</h2><p>

நீதியரசரகளான பி. குமாரத்னம், தமித் தொட்டவத்த, கே.எம்.எஸ். திஸாநாயக்க, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f2fb46-29f4-4108-834c-4bb3fd22e926/26-6a72814fa0290.webp' /></p><p>
</p><p>
அத்துடன், வழக்குகளில் ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்து வழங்கியிருந்த தீர்ப்பையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
</p><p>
வழக்கின் தொடக்கத்தில் பாதுகாப்புத் தரப்பு முன்வைத்த ஆரம்ப எதிர்ப்பை ஏற்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வழக்குகள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகளும் தாக்கல் செய்திருந்த ஐந்து மேன்முறையீட்டு மனுக்களையும் பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன், ச.தொ.ச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் ஷகீர் ஆகியோருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இனி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கம்: இலங்கையில் 2.5 இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-5-lakh-people-sri-lanka-at-risk-being-affected-1785888180"></link>
            <id>https://ibctamil.com/article/2-5-lakh-people-sri-lanka-at-risk-being-affected-1785888180</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை தாக்கத்துடன் வலுப்பெற்று வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை தாக்கத்துடன் வலுப்பெற்று வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அரசாங்கத்தின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, இந்த பருவமழை நிலைமையால் குறைந்தபட்சம் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், உருவாகி வரும் இந்த அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசோ அல்லது வேறு எந்தத் தரப்போ இதுவரை சர்வதேச உதவியை கோரவில்லை என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>பிராந்திய காலநிலை கணிப்பு</h2><p>
தற்போதைய பருவகால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பிராந்திய காலநிலை கணிப்புகளின்படி, இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டிற்கு வழக்கமான அளவுக்கு நெருக்கமான அல்லது அதைவிட சற்றுக் குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897c9829-b152-464a-a508-f640df20ed9c/26-6a727db7e9433.webp' /></p><p>

இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் அளவும் தீவிரமும் மாறுபடக்கூடும் என்பதால், வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை மீதான அரசியல் ஆதிக்க நகர்வு! மகிந்தவுக்கு இன்றைய பின்னடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/impeachment-resolution-defeats-mahinda-four-seats-1785884566"></link>
            <id>https://ibctamil.com/article/impeachment-resolution-defeats-mahinda-four-seats-1785884566</id>
            <summary type="text">நாட்டின் நீதித்துறையில் தேங்கியுள்ள ஏறத்தாழ 11 லட்சம் வழக்குகளை இறுதி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியடைந்தவர்களால், பல்வேறு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நீதித்துறையில் தேங்கியுள்ள ஏறத்தாழ 11 லட்சம் வழக்குகளை இறுதி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியடைந்தவர்களால், பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
</p><p>
ஆனால், பொதுமக்களில் பெரும்பான்மையானோர் அந்தச் சீர்திருத்தங்களை அங்கீகரிப்பதும், முந்தைய அரசாங்கங்களின் போது நீதித்துறை மீது பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தம் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது.</p><p>இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் வலுக்கட்டாயமாகப் புறக்கணிக்கப்பட்ட விதம், ஷிரானி பண்டாரநாயக்க பிரதம நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட விதம், பசில் ராஜபக்சவின் சார்பாக அரசியலமைப்பின் 20வது திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம், மற்றும் 2023 உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான உயர் நீதிமன்ற உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்த விதம் ஆகியவை அவர்களுக்கான பின்னடவை உருவாக்க காரணம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>&nbsp;நீதிபதிகளின் ஓய்வு வயது</h2><p>குறிப்பாக நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கு எதிராக, எதிர்க்கட்சிகளும் நீதித்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் பல வாரங்களாக நடத்தி வந்த போராட்டங்களைப் புறக்கணித்து வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இறுதியாக அவ்விடயம் குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd1a07d-0265-4252-b3ee-60b36caafba9/26-6a7271c57fbce.webp' /></p><p>
</p><p>
கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இவ்விடயம் குறித்து ஒரு முடிவை எடுத்து நாட்டு மக்களுக்குத் தெரிவித்தது. </p><p>இதன்மூலம், அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும், அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் அது அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் பொருந்துமா அல்லது உயர் நீதிமன்றங்களின் (உயச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம்) நீதியரசர்களுக்கு மட்டுமே பொருந்துமா என்பது குறித்தும் பொதுமக்களிடையே நிலவிய அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
</p><p>
அன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான இந்தத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.</p><p> மேலும், சிரேஷ்ட நீதிபதிகளின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, சுமார் ஒன்றரை மில்லியன் அளவில் தேங்கியுள்ள பெரும் வழக்குகளின் தேக்கத்தை விரைவாக முடிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
சில எதிர்க்கட்சித் தலைவர்களும், அவர்களுடன் இணைந்த ஊடகங்களும், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் ஒரே ஒரு நபரின் பதவிக்காலத்தை மட்டும் நீட்டிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி, சில வாரங்களுக்கு முன்பே இந்த விவாதத்தைத் தொடங்கியிருந்தனர். </p><p>பின்னர், அவர்களுடைய முழுப் போராட்டப் பிரச்சாரமும் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதும், அதை அவர்கள் ஒருபோதும் நிரூபிக்கவில்லை என்பதும் தெளிவாகியது.</p><p></p><h2>அரசாங்கத் தலைவர்களின்&nbsp;மௌனம் </h2><p>
</p><p>
ஆரம்பத்தில், அனைத்து நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மட்டும் நீட்டிப்பதில் அரசு ஏன் ஆர்வம் காட்டுகிறது என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d468b29-5008-4b47-baf6-5ae3a8e22a03/26-6a7271c6338f6.webp' /></p><p> </p><p>இந்தக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாக ஒரு குறிப்பிடத்தக்க பொதுக் கருத்தை உருவாக்கும் வரை, அரசாங்கத் தலைவர்களும் மௌனம் காத்தனர். </p><p>இந்த விவகாரத்தில் அரசின் கடுமையான மௌனம், அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கூட சில சந்தேகங்களை எழுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட சமூகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் கலந்தாலோசித்ததாக எந்த அறிக்கையும் இல்லை. </p><p>அப்படியிருந்தும், அது தொடர்பான திருத்தம் குறித்த அமைச்சரவை முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களையும் கவலைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.</p><p> எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அரசாங்கத்தால் மறுக்க முடியாது.

இருப்பினும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தேங்கியுள்ள வழக்குகளை விரைவாகத் தீர்க்க உதவும் என்று அரசாங்கம் முன்வைக்கும் வாதங்களும், அத்தகைய வயது வரம்பு நீட்டிப்பு நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதங்களும் அவ்வளவு வலுவானவையாகத் தெரியவில்லை.
</p><p>
எந்தவொரு துறையிலும் செயல்திறனுக்கு அனுபவமும் நிபுணத்துவமும் முக்கியமானவை என்றாலும், ஏற்கனவே பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதன் மூலம் அரசாங்கம் நீதித்துறைச் செயல்பாட்டில் புதிதாக எதையும் சேர்க்கவில்லை. </p><p>அவர்களின் அனுபவமும் நிபுணத்துவமும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வழக்குகள் குவிந்து வரும் நிலையில், அந்த அனுபவத்தின் அனுபவமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><h2>முன்மொழிவை எதிர்க்கும் குழுக்கள்</h2><p>
</p><p>
நீதித்துறைக்கு புதிய வளங்களை வழங்கி, புதிய உத்திகள் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே, நீதிபதிகளின், குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவம், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கு உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7157101d-b0b5-4236-bcea-d0f663ab2757/26-6a7271c6e4413.webp' /></p><p> </p><p>தற்போதுள்ள நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டாலும், அந்த நீட்டிப்புக் காலம் முடிந்து அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஒப்பீட்டளவில் குறைந்த அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் அடங்கிய ஒரு புதிய குழு நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் நுழையும். அவர்களும் அனுபவம் பெறுவதோடு, நீண்ட காலத்திற்குப் பணியாற்றுவார்கள்.
</p><p>
மறுபுறம், இந்த முன்மொழிவை எதிர்க்கும் குழுக்கள் கூறுவது போல், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது ஒரு குறிப்பிட்ட தனிநபரை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்றால், அது நீதித்துறையின் சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை. </p><p>இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், ஒரு தனிநபரை தற்போதைய ஓய்வு பெறும் வயதைக் கடந்து மேலும் இரண்டு ஆண்டுகள் பணியில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அரசாங்கத்தை எதிர்க்கும் குழுக்கள் எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றன என்பது தெளிவாக இல்லை. </p><p>அது உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு, இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் பொறுப்பு உள்ளது. அவர்கள் இதுவரை அதைச் செய்யவில்லை.
</p><p>
அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அது அவர்களுக்கே அவமானமாக அமையும். ஏனெனில், இந்த முன்மொழிவைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே, அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீதிபதியை நினைவுகூர்ந்து, அவரது ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படுவதைத் தடுக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகும்.
</p><p>
இருப்பினும், எதிர்க்கட்சி ஏற்கனவே கணிசமான மக்கள் மத்தியில் தனது நிலையை நிலைநிறுத்திக் கொண்டதால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து அவர்களிடையே சில அச்சங்கள் இருந்திருக்கலாம்.</p><p>அந்த அச்சத்தைப் போக்குவதிலும் அரசாங்கம் மெதுவாகவே செயல்பட்டு வருகிறது.

அரசு ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர உத்தேசித்தால், ஓய்வு பெறும் வயதை உயர்த்தாமல், ஏன் திடீரென அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அதைச் செய்யப் போகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. </p><p>அரசுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை, ஆனால் அதில் அவசரம் இல்லை. ஒரு புதிய அரசியலமைப்பு, குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில் அந்த அரசியலமைப்பு இனப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வை வழங்க வேண்டும். </p><p>அரசியல் ரீதியாக, இது அரசுக்கு ஒரு பின்னடைவாக அமையக்கூடும். எனவே, அரசு தனது தற்போதைய பதவிக்காலத்தில் ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றப் பாடுபடுவது சாத்தியமில்லை.
</p><p>
தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, 2017-ல் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு முன்னர் தலையிட்ட, தற்போது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல்வாதிகள், அந்த ஊழல் எதிர்ப்பு வழக்குகளின் காரணமாக இப்போது அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர்.</p><p>
ஓய்வு வயது குறித்த முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வாதிடுகின்றனர்.</p><p> இருப்பினும், பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஒப்புதலை எப்போது பெற வேண்டும் என்பதை அரசியலமைப்பின் 83வது சரத்து தெளிவாகக் குறிப்பிடுகிறது.</p><p></p><h2>பொது வாக்கெடுப்பு</h2><p> </p><p>நாட்டின் பெயர், அரசின் தன்மை, மக்கள் இறையாண்மை, தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய தினம், பௌத்த மதத்தின் இருப்பிடம், மத சுதந்திரம், சித்திரவதையிலிருந்து விடுதலை, நாட்டின் தலைவரின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பான சரத்துகளைத் திருத்துவதற்கு பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.
</p><p>
அதனால்தான், சட்டப்பிரிவு 83-ஐத் திருத்துவதற்கும் ஒரு பொது வாக்கெடுப்பு தேவை என்று அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு மசோதா அல்லது அதன் ஒரு பிரிவை நிறைவேற்றுவதற்கு, பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஒப்புதல் தேவை என்று அமைச்சரவை சான்றளித்தாலோ அல்லது உச்ச நீதிமன்றம் தீர்மானித்தாலோ பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும். </p><p>மாற்றாக, அத்தகைய மசோதாக்கள் அல்லது பிரிவுகள் கைவிடப்படலாம். ஒரு விடயம் பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நாட்டின் தலைவர் கருதினால், அவர் அவ்வாறு செய்யலாம். </p><p>நாடாளுமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு மனுவை நாட்டின் தலைவர் பொது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றலாம்.

எதிர்க்கட்சியின் பார்வையில், நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம் இந்த வகைகளில் எதில் அடங்குகிறது என்பது தெளிவாக இல்லை என கேள்விகள் எழுப்பப்பட்டன.</p><p>இருப்பினும், அரசாங்கம் இந்த விவகாரத்தை "நாட்டின் தலைவரின் கருத்தில் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம்" என்று கருதி, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களிடம் இதை முன்வைத்தால், அது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல.
</p><p>
எதிர்க்கட்சிகளின் கடந்தகாலச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ​​நீதித்துறையின் சுதந்திரம் குறித்த உண்மையான உணர்வு அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p><b>1980-களில் ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்றோர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்கள் மீதான கும்பல் தாக்குதல்களை நியாயப்படுத்தியது.
</b></p><p><b>
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எண்ணெய் விலைகள் குறித்த உயச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து, 2006-ல் அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார். </b></p><p><b>2013-ல், அவர் பிரதம நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கவை பதவிநீக்கத் தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கினார்.
</b></p><p><b>
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்கக் குடிமகனான தனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு வழிவகுக்கும் 20வது திருத்தத்திற்கு வழிவகுத்தார்.</b></p><p><b> ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023-ல் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் புறக்கணித்தார்.</b></p><p>

எனவே, எதிர்க்கட்சிகள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது உண்மையான அர்ப்பணிப்பைக் காட்டுவதில்லை. </p><p>அவர்கள், அரசாங்கத்திற்கு எதிராகப் பொதுமக்களின் கருத்தைக் கட்டமைப்பதற்காக, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் பிரச்சினையைப் பயன்படுத்த மட்டுமே முயற்சிக்கின்றனர்.</p><p> இருப்பினும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் பிரச்சினை, பொதுமக்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தலைப்பு அல்ல. </p><p>இப்போதெல்லாம் கடைகளிலோ, வாகனங்களிலோ, பேருந்துகளிலோ இதுபற்றிச் சிறிதும் விவாதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் இதைப் பிடித்துக்கொண்டிருப்பது, ஒரு வகையில், பயனற்ற ஒரு முயற்சியாகும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T23:12:13+00:00</updated>
        </entry>
    </feed>
