<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-08T22:41:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-video-of-iranian-supreme-leader-mojtaba-1786216388"></link>
            <id>https://ibctamil.com/article/new-video-of-iranian-supreme-leader-mojtaba-1786216388</id>
            <summary type="text">ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p> கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும் முன்னாள் உச்சத் தலைவருமான அலி கமேனி, ஈரான் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
</p><p>அவர் பதவியேற்ற பின்னர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. </p><p></p><h2>மதப் பாடம் நடத்தும்&nbsp;கமேனி </h2><p>அரசு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் மூலம் மட்டுமே அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed7b31cb-5561-44f5-9be7-70f8698f6ceb/26-6a777fc6dfb51.webp' /></p><p>
</p><p>
தற்போது வெளியாகியுள்ள காணொளியில், மொஜ்தபா கமேனி ஒரு குழுவினருக்கு மதப் பாடம் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்தக் காணொளி போர் தொடங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், அது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து அரசு ஊடகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
</p><p>
இந்த காணொளி தற்போது ஏன் வெளியிடப்பட்டது என்பதும் தெளிவாக இல்லை. இதனால் மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து புதிய ஊகங்கள் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் காணொளியை வெளியிட்ட ஊடகங்களில் ஒன்றான குறித்த செய்தி நிறுவனம், ஈரான் அரசுடன் நெருக்கமானதாகக் கருதப்படும் அரை - அதிகாரப்பூர்வ ஊடகமாகும்.</p><p></p><h2>எலும்பில் முறிவு</h2><p> இருப்பினும், இந்தக் காட்சிகள் இதுவரை ஈரானின் பிற ஊடகங்களில் பரவலாக வெளியாகவில்லை.</p><p>
</p><p>
மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் CNN-க்கு தகவல் வழங்கிய வட்டாரங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலின் முதல் நாளில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன், முகத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
ஆனால் தற்போது வெளியாகியுள்ள காணொளியில் அவரது உடலில், குறிப்பாக முகம் அல்லது காலில், காயம் ஏற்பட்டதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
</p><p>
இதனால், புதிய உச்சத் தலைவரின் உடல்நிலை மற்றும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/LATEST?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LATEST</a> Mojtaba Khamenei, Iran&#39;s supreme leader, appeared in a video recording of a lesson released by Mehr News Agency on August 8. <a href="https://t.co/SjebyaGVm8">pic.twitter.com/SjebyaGVm8</a></p>&mdash; CGTN (@CGTNOfficial) <a href="https://x.com/CGTNOfficial/status/2086082917307199549?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T21:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஆதரவு நாட்டுடன் புதிய உக்ரைன் ஆயுதப் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490"></link>
            <id>https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பைப் பெற விரும்பும் நிலையில், ரஷ்யாவுடன் நட்புறவைப் பேணி வரும் செர்பியாவிடமிருந்து ஜெலென்ஸ்கி மேலும் ஆயுத உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சும் கடந்த காலங்களில் பலமுறை சந்தித்துள்ளனர்.</p><p></p><h2>ரஷ்யா தொடர்ந்து போர்&nbsp;</h2><p> </p><p>பெரும்பாலும் பலதரப்பு மாநாடுகளின் இடையே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. மிக அண்மையில், ஜூலை 15ஆம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருவரும் சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97cc2a6-3f10-4d52-ba56-110d4e25a074/26-6a779b845dcca.webp' /></p><p>

இந்நிலையில், நேற்று ஜெலென்ஸ்கி தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக செர்பியாவை வந்தடைந்தார்.</p><p>உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் ஒன்றாக செர்பியா கருதப்படுகிறது.</p><p>

கடந்த 14 ஆண்டுகளாக செர்பியாவை ஆட்சி செய்து வரும் வுசிச்சைப் பொறுத்தவரை, வரவிருக்கும் முக்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பயணம் ஒரு அரசியல் சமநிலைப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>வலுவான அரசியல் சவால்</h2><p>
</p><p>மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கம், தனக்கென ஒரு தேர்தல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், முதல்முறையாக வுசிச்சிற்கு வலுவான அரசியல் சவாலை முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வுசிச் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

கருத்துக்கணிப்புகளின்படி, வுசிச்சின் தீவிர ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதையும் எதிர்க்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T21:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மாறும் களம்! ஈரான் போரால் ஆட்டம் காணும் ட்ரம்ப்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-is-shaken-by-the-iran-war-1786220521"></link>
            <id>https://ibctamil.com/article/trump-is-shaken-by-the-iran-war-1786220521</id>
            <summary type="text">கடந்த ஒரு வாரமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரத்தை கடலோர அலையில் தரித்து நிற்கும் படகு போன்ற நிலையற்ற சூழலுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஒரு வாரமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரத்தை கடலோர அலையில் தரித்து நிற்கும் படகு போன்ற நிலையற்ற சூழலுக்குள் தள்ளியுள்ளன.
</p><p>
குறிப்பாக, அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு யுத்தத் திட்டமும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றில் நாம் பார்த்துள்ளோம்.
</p><p>
ஒரு யுத்தத்தின் உளவியல் தாக்கத்தில் தொடங்கி, ஏற்பட்ட இழப்புகளை மறைத்து, அமெரிக்கப் படைகள் வெற்றி பெற்றுவிட்டதாக ஒரு மாயையை உருவாக்கும் காய் நகர்த்தலில் அமெரிக்க ஊடகங்களும் அதனுடன் இணைந்து கைகோர்ப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
</p><p>
ஆனால், இன்றோ ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில், ஈரானிய ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்களே ட்ரம்பின் நிலையை மேலும் கீழ்நோக்கித் தள்ளியுள்ளன எனலாம்.
</p><p>
வழமைக்கு மாறாக, ட்ரம்புக்கு எதிரான உளவியல் யுத்தத்தை முன்னெடுத்து வரும் அமெரிக்க ஊடகங்களின் திட்டங்கள் என்ன?

அத்துடன், ஈரானை மையப்படுத்தி ட்ரம்ப் அடுத்து என்ன செய்யப் போகிறார்? மத்திய கிழக்கின் தற்போதைய அரசியல் சூழல் எந்தத் திசையில் நகர்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான எதிர்வுகூறல்களையும், தற்போதைய நிலைமையின் பின்னணியையும் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMSf6adhW-4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T20:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grand-bharata-natyam-event-at-the-temple-1786217570"></link>
            <id>https://ibctamil.com/article/grand-bharata-natyam-event-at-the-temple-1786217570</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான&amp;nbsp; திருவிழா இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான&nbsp; திருவிழா இன்று (08) சனிக்கிழமை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

​</p><p>இத்திருவிழாவைச் சிறப்பிக்கும் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு ஆலயத்தின் வெளிவீதி முன்றலில் நடைபெற்றது.</p><p>இன்று மாலை 4.30 மணியளவில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முருகன் வடிவில் மாணவர்களின் நடனம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல பண்பாட்டு நிகழ்வுகளுடன் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் கலாசார ஊர்வலம் ஆரம்பமானது.</p><p></p><h2>மாணவர்களின் கால் சலங்கை ஓசை&nbsp;</h2><p> </p><p>இவ்வூர்வலம் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி வழியாக பிரதான வீதியினூடாக ஆலயத்தைச் சென்றடைந்தது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/161bbe9b-6243-492b-8dcd-2d82a32b4d29/26-6a77847012820.webp' /></p><p>ஊர்வலத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வில், கடல் அலைகளின் ஓசையை விடவும் மாணவர்களின் கால் சலங்கை ஓசை ஓங்கி ஒலித்து, அப்பகுதியையே தமிழ் கலாசாரப் பெருமிதத்தின் அடையாளமாக மாற்றியதை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணர்வுபூர்வமாகக் கண்டுகளித்தனர்.

​</p><p>கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க இவ்வாலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>
​18 நாட்கள் தொடர்ச்சியாக சிறப்பு யாகங்கள், கிரியைகள் மற்றும் கொடித்தம்ப பூஜைகளுடன் நடைபெறும் இவ்வுற்சவம், எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை காலை வங்கக் கடலில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடனும், மறுநாள் (13) நடைபெறும் பூங்காவனத் திருவிழா மற்றும் வைரவர் பூஜையுடனும் நிறைவுபெறவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T19:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973"></link>
            <id>https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது பாகர் சுல்காதர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகள் அந்தப் பட்டியலில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனகம்</h2><p>

இதன்படி "களத்திலும் வீதிகளிலும் 160 நாட்கள் உறுதியாகப் போராடி, ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனப்படுத்திய கோரிக்கைகள் இவை," என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef44b78-c4b4-43ad-960e-432e9aad2466/26-6a7777488dc94.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா தனது நடத்தையைத் திருத்திக்கொள்ளும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது," எனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T18:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355</id>
            <summary type="text">மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.

வகை 1 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.
</p><p>
வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின், மணிக்கு 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>இலட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்</h2><p>

கோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் வசிக்கும் சுமார் 260,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad0f64a-1574-434b-b888-2b84e68c7059/26-6a77727e8349f.webp' /></p><p>இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>அடுத்த இலக்கு சீனா</h2><p>

அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96fc254a-0af5-4909-ac86-b87893b42071/26-6a77727f7e934.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய பகுதிகளுக்கும் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T18:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824</id>
            <summary type="text">தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>

"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.</p><h2>ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>
பணம் திருப்பி வழங்கப்படும்
</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T18:10:39+00:00</updated>
        </entry>
    </feed>
