<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-07T08:32:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் அகழ்வுக்கு தயாரான சந்தேகநபர்கள் காவல்துறையால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspects-arrest-preparing-dig-treasure-mullaitivu-1788769692"></link>
            <id>https://ibctamil.com/article/suspects-arrest-preparing-dig-treasure-mullaitivu-1788769692</id>
            <summary type="text">முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>விசுவமடு பகுதியில் புதையல் அகழ்வுக்காக ஒருவரின் அழைப்புக்கினங்க வந்த நிலையில் குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>புதையல் அகல்வு</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்


நெலுக்குளம், வவுனியா
உலுகெட்டவெவ வீதி, கித்துல்ஹிட்டியாவ, முல்லைத்தீவு, முல்லிவைக்கால் மேற்கு கலபலுவாவ வீதி, தலங்கம வடக்கு,
கொஸ்வத்த குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96fd9a6-bcc8-4835-b44c-485a5f850134/26-6a9e759e94e32.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகல்வுக்கு பயன்படுத்தப்படும்
ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்தியவாகனம் ஒன்றும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை முல்லத்தீவு நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T08:29:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சந்திக்க விரைந்த முக்கிய அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/key-politicians-who-rushed-to-meet-namal-1788766125"></link>
            <id>https://ibctamil.com/article/key-politicians-who-rushed-to-meet-namal-1788766125</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சிறைச்சாலைக்கு சென்றுள்ளாக தெரிவிவக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இன்று காலை (07.09.2026)&nbsp;நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றிருந்தார்.&nbsp;</p><p>இந்த நிலையில் மேலும் சில அரசியல்வாதிகள் நாமலை சந்திக்க மெகசின்க்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நாமல் ராஜபக்ச</h2><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் மெகசின் சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0929ae6-6e80-4bdc-99ad-3f8aa457c128/26-6a9e6fa5df4b6.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தனவும் மெகசின் சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நேற்று முன் தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-07T08:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-holiday-for-jaffna-district-schools-1788766100"></link>
            <id>https://ibctamil.com/article/special-holiday-for-jaffna-district-schools-1788766100</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை&amp;nbsp;வழங்குவதற்கான நடவடிக்கைகளை&amp;nbsp; மேற்கொள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை&nbsp;வழங்குவதற்கான நடவடிக்கைகளை&nbsp; மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி, யாழ்ப்பாணம்
மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை
மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி
அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை&nbsp;முன்வைக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>பதில் பாடசாலை நடத்த ஏற்பாடு&nbsp;</h2><p>இதனைத் தொடர்ந்து, குறித்த
விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர்
கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு 2026.09.09 அன்று
விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee5521f4-7ae2-4758-8890-2c49fa034d87/26-6a9e6bf0d59ea.webp' /></p><p>

அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை
ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள
வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:58:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664</id>
            <summary type="text">அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இந்நிலையில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4df37b-f81d-4f97-b493-0a8cab872c16/26-6a9e6897ea491.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T07:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்குள் விசா இன்றி நுழைய முடியாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thailand-ends-visa-free-entry-sl-passport-holders-1788763243"></link>
            <id>https://ibctamil.com/article/thailand-ends-visa-free-entry-sl-passport-holders-1788763243</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி நுழைவதற்கு தகுதி பெற மாட்டார்கள் என தாய்லாந்து அரசாங்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி நுழைவதற்கு தகுதி பெற மாட்டார்கள் என தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>கொழும்பில் உள்ள தாய்லாந்து அரச தூதரகம் வெளியிட்டுள்ள புதிய விசா அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பபட்டுள்ளது.</p><p>அந்த அறிவிப்பில், இலங்கை உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 'விசா விலக்கு சலுகை' முற்றிலுமாக இரத்து செய்யப்படுகிறது.</p><p></p><h2>தாய்லாந்து தூதரகம்</h2><p>

இதன்படி, இனி தாய்லாந்திற்குப் பயணம் செய்யும் இலங்கை குடிமக்கள் பயணத்திற்கு முன்னதாகவே தகுந்த விசாவைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7f7aa0d-635c-4f48-a82d-15e1ff694347/26-6a9e64c65caf0.webp' /></p><p>
</p><p>
தாய்லாந்து பயணத்திற்கான விசாவிற்கு இணையவழி (E-Visa) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம், நேரடியாக நேரில் வந்து சமர்ப்பிக்கப்படும் விசா விண்ணப்பங்களை ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் (14 வரை) தாய்லாந்திற்குள் பிரவேசிக்கும் இலங்கை பயணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 60 நாட்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படும்.
</p><p>
தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர விசா நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்து அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார வாகனங்கள் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/green-number-plates-for-electric-vehicles-1788763091"></link>
            <id>https://ibctamil.com/article/green-number-plates-for-electric-vehicles-1788763091</id>
            <summary type="text">நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியுடன் கூடிய சிறப்பு&amp;nbsp; இலக்க பலகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியுடன் கூடிய சிறப்பு&nbsp; இலக்க பலகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.</p><p>

மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டரீதியாக செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்கத் தகடுகளை வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மோட்டார் போக்குவரத்து திணைக்களம்</h2><p>

இதனிடையே, பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345f7b70-bbfa-49d0-a823-4e017357a6b4/26-6a9e626c042cc.webp' /></p><p>
</p><p>
இதன்படி, 2026 ஜூன் 10ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளும் இதில் அடங்குகின்றன.
</p><p>
மேலும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களுக்குரிய புதிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-permission-granted-to-namal-in-prison-1788759646"></link>
            <id>https://ibctamil.com/article/special-permission-granted-to-namal-in-prison-1788759646</id>
            <summary type="text">தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை சிறை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேதென்ன கூறியுள்ளார்.</p><p>
</p><p>மேலும், நாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பிரிவில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நாளொன்றுக்கு மூன்று பேர்</h2><p>அத்தோடு நாளொன்றுக்கு மூன்று பேர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70328116-39a1-41ba-a4e7-6fd403cdaddf/26-6a9e52efeb3ba.webp' /></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p>கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையில் தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஒரு பரிவர்த்தனையில், ரூ. 100 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த விசாரணையின் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T07:02:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/industrial-and-higher-education-universities-in-sl-1788759837"></link>
            <id>https://ibctamil.com/article/industrial-and-higher-education-universities-in-sl-1788759837</id>
            <summary type="text">இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>இப்புதிய கல்வி முறையின் கீழ் கல்வி கற்கும் மாணவர்கள் 2032ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைகளை எழுதி வெளியேறவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>"ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று (06) களுத்துறை மாவட்ட பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டம்</h2><p>அத்துடன் குறித்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 2032ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 50 புதிய தொழிற்துறை மற்றும் உயர் கல்விப் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ba5dea-583e-4b7e-a043-3ea87d0765db/26-6a9e54e464f4e.webp' /></p><p>இந்த நிலையில் களுத்துறை போன்ற மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>இதேவேளை&nbsp;நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக நகர்த்துவதற்காகப் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய பிரதான துறைகளில் பல துரிதமான மற்றும் தொலைநோக்குச் சிந்தனையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளிடம் எத்தகைய கடன்களையும் பெறாமல் உள்நாட்டு நிதி ஆதாரங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-prices-rise-again-in-the-global-market-1788756706"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-prices-rise-again-in-the-global-market-1788756706</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலின் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் அதிகரிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலின் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர் அதிகரிப்பை சந்தித்துள்ளது. </p><p>அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் சென்றுவந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தின் தேக்கம் இந்த நிலையை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இதன்படி, இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><h2>கடந்த வார ஒப்பீடு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ab88c4e-7dd7-4633-8501-a2c52a53fdfb/26-6a9e5157a2c91.webp' /></p><p> </p><p>இது 0.54 சதவீதம் அல்லது 0.52 டொலர் அதிகரிப்பாகும்.

அதேவேளை, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.14 டொலராக உயர்ந்துள்ளதுடன், இது 0.72 சதவீதம் அல்லது 0.66 டொலர் அதிகரிப்பாகும்.</p><p>

கடந்த வாரமும் எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியிருந்தது. </p><p>அதன்படி, பிரென்ட் எண்ணெய் விலை 7.8 சதவீதமும், WTI எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கு அண்மித்த அளவிலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்றார் ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788760625"></link>
            <id>https://ibctamil.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788760625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்ச சற்று முன் வெலிக்கடை சிறைக்கு சென்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்ச சற்று முன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp;</p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>கடந்த 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ச, விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>

நலம் விசாரிப்பு</h2><p> 
</p><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாக 800,000 அமெரிக்க டாலர்கள் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1ce9ed-dbd1-4d74-ae52-4506aca081aa/26-6a9e56e21eb8d.webp' /></p><p>இதனை தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>இதற்கமைய, அவர் மெகசின் சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் காவலில் வைக்கப்பட்டார். </p><p>

இந்நிலையில், நேற்று முன்தினம், தனது மகனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறைச்சாலைக்கு சென்றிருந்த வேளை, இன்று நாமலின் தாயான ஷிரந்தி ராஜபக்ச அவரை சந்தித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xdG52g_uPcc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-07T06:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருள் பரவல்! அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/increased-drug-use-within-schools-1788758553"></link>
            <id>https://ibctamil.com/article/increased-drug-use-within-schools-1788758553</id>
            <summary type="text">போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்படி எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>குருநாகலில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள்</h2><p>அத்தோடு, தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70% பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cd42f3-ba12-4c5b-ae1a-69a6ed77e68f/26-6a9e4b982c909.webp' /></p><p>இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T05:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : திருப்பிவிடப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-volcanic-srilankan-airlines-flights-1788755879"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-volcanic-srilankan-airlines-flights-1788755879</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.</p><p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக குறித்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை நேற்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்&nbsp;&nbsp;</h2><p>இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையம் உட்படப் பல விமான நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f87f62-78c5-4143-af0e-b0069cddf1ff/26-6a9e49c405f9b.webp' /></p><p>
</p><p>
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-car-accident-on-the-southern-expressway-1788756812"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-car-accident-on-the-southern-expressway-1788756812</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>இந்த விபத்து இன்று (07.09.2026) காலை தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நெடுஞ்சாலை சாலை விபத்து</h2><p> </p><p>

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வீதித் தடுப்புகளில் மோதி, தொடர்ந்து முன்னோக்கிச் சென்று வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c13abc4-e5c1-4e03-9cb9-75fd245921a7/26-6a9e469a321bb.webp' /></p><p> </p><p>

விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலிக்கும் வீதித் தடுப்புகளுக்கும் மற்றும் காரிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-resolution-in-geneva-today-1788753254"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-resolution-in-geneva-today-1788753254</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல்&amp;nbsp;எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல்&nbsp;எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.</p><p>இந்தக் கூட்டத்தொடர் ஜெனீவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உரையாற்றவுள்ளா வோல்கர் டேர்க்</h2><p> 

ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ec24bd-7efd-470a-bdc7-4754bf2948a7/26-6a9e3d4421aef.webp' /></p><p> 

ஒரு மாதம் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளை உள்ளடக்கிய 37 ஊடாடும் கலந்துரையாடல்களை பேரவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

அத்துடன், உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.</p><p></p><h2>இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</h2><p> </p><p>மேலும் இந்தக் கூட்டத்தொடரின் போது பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92d0675-7eb5-4996-a28c-e5ddb5bc6155/26-6a9e3d44c8a74.webp' /></p><p> </p><p>மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே வெளியான அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VXVvW1Ng-BY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T04:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[110 லீற்றருக்கு மேல் பெட்ரோல் வாங்குவோருக்கான விலை உயர்வு: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/price-petrol-increase-users-more-than-110-liters-1788752089"></link>
            <id>https://ibctamil.com/article/price-petrol-increase-users-more-than-110-liters-1788752089</id>
            <summary type="text">அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஈரான் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாதாந்தம் 110 லீற்றருக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஈரான் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாதாந்தம் 110 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோலைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான விலை அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இதன்படி ஈரானில் பெட்ரோல் விலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>ஈரானின் உள்நாட்டு உரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் அதன் தாக்கம் இலங்கை போன்ற இறக்கமதியாளர்களுக்கு விலைமாற்றத்தை ஏற்படுத்தலாம்மென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.&nbsp;</p><p></p><h3>அரசாங்கப் பேச்சாளர் பாத்திமே மொஹஜெரானி&nbsp;</h3><p>
</p><p>
இந்த தகவலை ஈரான் நாட்டின் தற்போதைய அரசு செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி நேற்று (06.09.2026) தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e6a6e7-261f-4bb3-ad37-68a993bea4ef/26-6a9e3a99cf538.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முதல் மற்றும் இரண்டாவது ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் 110 லீற்றர் வரையிலான பெட்ரோலுக்கான விலையில் மாற்றம் இருக்காது.</p><p>எனினும், மூன்றாவது ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் பெட்ரோலின் விலை ஒரு லீற்றருக்கு 100,000 ஈரானிய ரியால்களாக அதிகரிக்கப்படும்.&nbsp;</p><p> இது சுதந்திர சந்தை மாற்று விகிதத்தின் அடிப்படையில் சுமார் 4 அமெரிக்க சென்ட்களுக்கு சமமானதாகும்.
</p><p>
உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ஈரானில் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் முன்னதாகவே கலந்துரையாடியிருந்த போதிலும், இதனால் புதிய போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h3>ஒரு லீற்றருக்கு 15,000 ரியால்</h3><p>
</p><p>
கடந்த 2019ஆம் ஆண்டில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஈரானில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f1268d7-594c-403f-ad28-f1a717f51ec5/26-6a9e4149bd6a9.webp' /></p><p>
</p><p>
தற்போதைய விலை உயர்வு மாதத்திற்கு 110 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் தேவைப்படும் நுகர்வோருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும்.</p><p>

அதேவேளை, ஏனைய வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஒரு லீற்றருக்கு 15,000 ரியால் என்ற விலையில் 60 லீற்றர் வரையும், ஒரு லீற்றருக்கு 30,000 ரியால் என்ற விலையில் மேலும் 50 லீற்றர் வரையும் பெட்ரோலை கொள்வனவு செய்ய முடியும்.
</p><p>
மேலும், கடந்த டிசம்பர் மாதம் பெரும்பாலான நுகர்வோருக்கான மானிய விலையில் வழங்கப்பட்ட பெட்ரோலின் விலையை ஈரான் ஓரளவு அதிகரித்திருந்தது. </p><p>இதற்காக அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக” பாத்திமா மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T04:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1788751715"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1788751715</id>
            <summary type="text">நாட்டின் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே இடிமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று (07.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.&nbsp;</p><p></p><h2>&nbsp;பலத்த காற்று&nbsp;மற்றும் மின்னல் தாக்கம்</h2><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6448c93d-cfdc-4b6e-9dc0-02bfcb3fad58/26-6a9e323e6ebea.webp' /></p><p> 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். </p><p>

இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே உச்சம் கொடுக்கின்றது.</p><p> 

இன்றைய தினம் (07) நண்பகல் 12:08 மணிக்கு காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை நிறைவு : இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2nd-phase-of-third-term-for-schools-begins-today-1788749730"></link>
            <id>https://ibctamil.com/article/2nd-phase-of-third-term-for-schools-begins-today-1788749730</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றது.

அதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றது.
</p><p>
அதன்படி, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர், நாடு முழுவதும் உள்ள பாடசாலை வளாகங்களில் நேற்று (06) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 ஆம் திகதி வரை தொடரும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>&nbsp;க.பொ.த சாதாரண தரப் பரீட்சை</h2><p> 

இந்தநிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a313b548-831f-405f-a4e8-2603a47be675/26-6a9e2b63a9cd9.webp' /></p><p>

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ்மொழி மாணவர்களுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைந்ததுடன் முஸ்லிம் பாடசாலைகளின் முதல் கட்டம் செப்டம்பர் 02 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
</p><p>
அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற நிலையில் 372,310 பரீட்சாத்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் : 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amazon-cargo-plane-crash-five-dead-1788748298"></link>
            <id>https://ibctamil.com/article/amazon-cargo-plane-crash-five-dead-1788748298</id>
            <summary type="text">அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>

புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து பயணித்த குறித்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி, அருகிலிருந்த களஞ்சியக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்களுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஐவர் பலி</h2><p> </p><p>

இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6c3f89-3d8f-4655-a8c3-7e71e29f1bb5/26-6a9e29c99573d.webp' /></p><p> 

எனினும், உயிரிழந்த 5 பேரும் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>

மேலும் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:08:15+00:00</updated>
        </entry>
    </feed>
