<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T02:15:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம்! லக்ஷ்மன் கிரியெல்ல உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kiriella-said-government-is-certain-to-fail-1788225956"></link>
            <id>https://ibctamil.com/article/kiriella-said-government-is-certain-to-fail-1788225956</id>
            <summary type="text">தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேர்தல் தோல்வி பயம்</h2><p>அங்கு மேலும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, “மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சி மன்றத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசாங்கம் அதில் தோல்வியடைவது உறுதியாகும். இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b6782bd-f0a6-45cc-8246-97cf5c812885/26-6a9629a596a63.webp' /></p><p> 

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பாகும்.
</p><p>
எதிர்க்கட்சிகளுக்கு இடையே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் சவால்களும் நிலவிய போதிலும், ஒரு தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கை கோர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்திற்கு வந்துள்ளன.</p><p>
அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள். போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. </p><p>

இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது. எனவே, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரு கட்சிகளும் நிச்சயமாக ஒரே அணியாக இணைந்து செயற்படும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T02:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். </p><p>

நேற்று BASL இல் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் இந்த திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என BASL முன்வைத்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் அரச ஊழியர் சங்கங்கள் பல இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/248b8839-c1f8-4557-8661-d943d1da4537/26-6a962721e39e4.webp' /></p><p>

அறிக்கையின் முக்கிய கருத்துகள்
</p><ol><li>உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதிக்கும்.
</li><li>2022 இல் உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற விசேட தீர்மானத்தை சுட்டிக்காட்டினர். அதில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை மீறுவதாகவும், எனவே அது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.</li></ol><h2>பொது வாக்கெடுப்புக்கு வலியுறுத்து</h2><p>

இதன்படி, 40 அமைப்புகளும் ஒருமனதாக அரசாங்கம் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20eaf32-fcb3-40df-bb23-cf88c68400a7/26-6a9627229bf9a.webp' /></p><p>

மேலும், அரசு இந்த திருத்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அதனை நேரடியாக மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எதிர்பதாகவும், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707"></link>
            <id>https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707</id>
            <summary type="text">அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் காரணமாகவே அவரை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
திருடர்களை கைதுசெய்வதாக தெரிவித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் திங்கட்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார வீழ்ச்சி</h2><p>
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, “திருடர்களை கைதுசெய்யும் அரசாங்கத்தின் வேவைத்திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசியல் நாடகத்துக்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.திருடர்களை கைதுசெய்வதுபோல், நாட்டை வங்குரோத்தாகியவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f58b1e0-7a60-468f-9d5d-1e25488011e0/26-6a9623510fbc8.webp' /></p><p>எமது நாடு விடுதலை புலிகளின் யுத்தத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது ஆனால் 87,88 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.</p><p>அதனைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் 30 வருட யுத்தம் காரணமாக எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498</id>
            <summary type="text">




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சிங்கபுர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
இதன்போது, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p>]</p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p>
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c69eec9-88db-42f1-aa06-8735226907bc/26-6a961fa3930e0.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி</h2><p>அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான&nbsp; புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a221be4b-6745-44c0-b5fb-b803ae65c386/26-6a95f54cb5184.webp' /></p><p>
</p><p>அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714"></link>
            <id>https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714</id>
            <summary type="text">நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

ஆரம்பத்தில் இந்தத் பேரிடருக்கு நிலநடுக்கமோ அல்லது பனியாற்று ஏரி உடைப்போ (GLOF) காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
</p><p>
எனினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நேபாள விஞ்ஞானிகள் குழு, அங்கு ஏரி உடைப்போ அல்லது நிலநடுக்கமோ நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வு</h2><p>

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் இருந்த பனி மற்றும் பாறைகள் அடங்கிய பெரும் பகுதி திடீரெனச் சரிந்து, சுமார் 2,900 மீற்றர் உயரத்திற்குச் செங்குத்தாகக் கீழே விழுந்துள்ளது. 

இதுவே ரிக்டர் அளவில் 5.2 நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b1e53-49ed-45a2-bc20-b3fb963cebc7/26-6a95f9d40695e.webp' /></p><p>
</p><p>
வெறும் 7 நிமிடங்களுக்குள் மணித்தியாலத்திற்குச் சராசரியாக 167 கிலோமீற்றர் வேகத்தில் பாய்ந்து வந்த இந்த சிதைவுகள் 22 கிலோமீற்றர் தொலைவைக் கடந்து அஸ்வகந்தா பகுதியை அடைந்துள்ளன.</p><h2>3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்</h2><p>
</p><p>
இவ்வாறு சரிந்து விழுந்த பாறைகளும் பனிக்கட்டிகளும் ஆற்றின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தியதால் புதிய தற்காலிக ஏரிகள் உருவாகி ஆற்றின் இயல்பான பாதையே மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db9c90c-6783-493c-9134-14792db6c3fb/26-6a95f9d4b5ea4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் மிகப் பெரிய ட்ரோனை சுட்டு வீழத்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784</id>
            <summary type="text">ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. </p><p>

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிய பதிலடி&nbsp;</h2><p> 

முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/777f594b-eac9-4394-95c9-718baabcd19b/26-6a95e52b0de76.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p>இதனைதொடர்ந்து, மேற்படி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதனை ஈரானின் புரட்சிகர காவல் படை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள இரண்டு வான்படை தளங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள ஒரு தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T22:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கண்ணிவெடிகளில் சிக்கிய பாரிய எண்ணெய் தாங்கி கப்பல்! மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
அப்பகுதியில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை என்று CENTCOM தனது X பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><h2>IRGC - இன் முயற்சி</h2><p>
</p><p>“ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை. பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்துவதற்காக IRGC மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சியே இது" என்று CENTCOM பதிவிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) claims that a supertanker passing through the southern route of the Strait of Hormuz struck two mines and was brought to a complete stop. This is FALSE.<br><br>✅ FACT: No ships have hit mines in the Strait of Hormuz. This is… <a href="https://t.co/spkaogBx81">pic.twitter.com/spkaogBx81</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094411076729262413?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>விதிமுறைகளை மீறிச் சென்ற எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக இயக்கமற்று நிறுத்தப்பட்டதாக IRGC திங்களன்று உரிமை கோரியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:14:40+00:00</updated>
        </entry>
    </feed>
