<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-15T16:49:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் 10 என்புக்கூடுகள் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786809185"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786809185</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15)
சனிக்கிழமை முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15)
சனிக்கிழமை முன்னெடுப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம்
சனிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு</h2><p>அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு
பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0ebfd2-6552-496b-878c-9174caebfdbb/26-6a80928a834ee.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T16:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு ஏற்படப்போகும் ஆபத்து : கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கிறார் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-danger-facing-the-president-namal-1786804126"></link>
            <id>https://ibctamil.com/article/the-danger-facing-the-president-namal-1786804126</id>
            <summary type="text">நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்தால் ஜனாதிபதி எவ்வாறான ஆபத்தை எதிர்கொள்வார் என்பதை தன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்தால் ஜனாதிபதி எவ்வாறான ஆபத்தை எதிர்கொள்வார் என்பதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;ஆலோசனை வழங்கும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிடுங்கள்</h2><p>நீதித்துறை சம்பந்தமாக ஜனாதிபதி யாரிடம் ஆலோசனை கேட்டதாகக் கூறப்படுகிறதோ அந்த சிரேஷ்ட நீதிபதிகளின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7a5987-6263-4bdd-ba0c-1532421dbdb0/26-6a807e047a769.webp' /></p><p>

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட நீதிபதிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.



"தற்போது ஜனாதிபதி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் ஒரு விஷயத்தில் வெளிப்படையாக ஒரு தன்னிச்சையான முடிவை எடுக்கிறார்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு ஏற்படப்போகும் ஆபத்து</h2><p> </p><p>நாட்டின் சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நீதிபதிகளும் இதனை எதிர்த்தால், பொதுச்சபை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை இந்தத் திருத்தத்தை எதிர்த்தால், ஜனாதிபதி என்ன ஆபத்தை ஏற்பார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0acc2fa7-dcbf-4212-b46e-34b3f0904bf1/26-6a807e03c573e.webp' /></p><p>
</p><p>
ஆனால், ஆபத்தைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போராடுவதாகத் தெரிகிறது," என்று நாமல் ராஜபக்ச கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T16:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா வழங்கிய கர்ப்பத்தடை மாத்திரை : பெண் தளபதியின் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/birth-control-pill-provided-by-karuna-1786807213"></link>
            <id>https://ibctamil.com/article/birth-control-pill-provided-by-karuna-1786807213</id>
            <summary type="text">கருணா விவகாரத்தின் முக்கிய கரும்புள்ளி நிலாவினி விவகாரம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா முரண்பட்டவேளை அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருணா விவகாரத்தின் முக்கிய கரும்புள்ளி நிலாவினி விவகாரம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா முரண்பட்டவேளை அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.அவற்றில் முக்கியமாக அந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாண மகளிர் அணி தளபதியாக இருந்து வந்த நிலாவினியுடனான முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருந்தது.
</p><p>
ஆனால் கருணாவிற்கும் நிலாவினிக்குமான உறவு தொடர்பான குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது.அந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருணா ஏதாவது கூறியிருந்தாரா அல்லது இதுவரை அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறாரா. </p><p>அந்த குற்றச்சாட்டு பற்றி நிலாவினி என்ன கூறினார்?
</p><p>
இது தொடர்பாக விரிவான விளக்கத்தை தேடி தருகிறது இந்த உண்மையின் நிகழ்ச்சி</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wuWF75v1fAc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T15:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரியர் சேவை என்ற போர்வையில் ஆபத்தான வியாபாரம் : இருவர் மடக்கிப்பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-for-distributing-drugs-guise-of-couriers-1786802185"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-for-distributing-drugs-guise-of-couriers-1786802185</id>
            <summary type="text">கூரியர் சேவை என்ற போர்வையில் கட்டுநாயக்கவிலிருந்து ​​கலென்பிந்துனுவெவவவிற்கு போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூரியர் சேவை என்ற போர்வையில் கட்டுநாயக்கவிலிருந்து ​​கலென்பிந்துனுவெவவவிற்கு போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நவக்குளம் சந்திப்பில் திடீரென நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனையின் போது ஒரு மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கப்பட்டது.</p><h2>நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கிய மற்றையவர்</h2><p>&nbsp;அப்போது, ​​அதன் ஓட்டுநர் தான் ஒரு கூரியர் சேவைக்காகப் பணிபுரிவதாகவும், கட்டுநாயக்கவிலிருந்து வருவதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து, அவர் கொண்டு வந்த பொருட்கள் மீது சந்தேகம் எழுந்தபோது,நடத்தப்பட்ட சோதனையில் ​​அவை சட்டவிரோத போதைப்பொருட்கள் என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db382281-997d-4e5f-b71b-e4c80b5d004b/26-6a80733748c75.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர் பின்னர் மொரகொட காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலதிக விசாரணையின் போது, ​​அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு சந்தேக நபர் அமுனுகொல பகுதியில் வைத்த கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, ​​அவரிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p></p><h2>&nbsp;இளைஞர்கள், யுவதிகளின் பெயரில் சிறிய பொட்டலங்கள்</h2><p>
</p><p>
அவர் கைது செய்யப்பட்டபோது, ​​கலென்பிந்துனுவெவ, யக்கல்ல, மற்றும் படிகரமடுவ உள்ளிட்ட பல பகுதிகளில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் பெயர்களில் போதைப்பொருட்கள் அடங்கிய தனித்தனி பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d863b918-ac49-45ea-a047-f6a4911d4e6b/26-6a80733698868.webp' /></p><p>
</p><p>
கூரியர் சேவை மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பொட்டலங்களில், விநியோகத்திற்கான போதைப்பொருட்களைத் தவிர வேறு எந்தப் பொருட்களும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சந்தேக நபர்கள், வாரத்திற்கு ஒருமுறை இணையம் மூலம் கவனமாக ஓடர்களைப் பெற்று, கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள கிராமங்களில் கூரியர் சேவைகள் என்ற போர்வையில் இந்த போதைப்பொருட்களை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு விநியோகிக்கும் ஒரு மோசடிக் கும்பலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் மேலும் தெரியவந்துள்ளது.</p><p> இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு 1,570 ஆகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T14:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-powerful-earthquake-in-indonesia-1786798942"></link>
            <id>https://ibctamil.com/article/another-powerful-earthquake-in-indonesia-1786798942</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாட்டு தகவல்களின்படி, இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன்படி, இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாட்டு தகவல்களின்படி, இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
</p><p>
அதன்படி, இன்று காலை நாட்டைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>அதிகரித்த உயிரிழப்பு</h2><p>
</p><p>
ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இன்று அதிகாலை சுமார் 3.28 மணியளவில் இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bfb8f29-76cb-4ec3-b704-e1c06bc3fa72/26-6a8068f704bd9.webp' /></p><p>நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> </p><h2>இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை</h2><p>இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய சுனாமி முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d214dd9-7e0b-44a7-b2c8-90a101b3edd8/26-6a8068f7bb97f.webp' /></p><p>
</p><p>
கடலோரப் பகுதிகளில் மக்களின் வாழ்வு பாதுகாப்பாக உள்ளது என்று அந்த மையம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T13:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் அமெரிக்காவின் பிரதேசமாக மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணை : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-strait-of-hormuz-a-us-territory-1786786645"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-strait-of-hormuz-a-us-territory-1786786645</id>
            <summary type="text">ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது நாட்டின் &quot;பிரதேசமாக&quot; அறிவிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது நாட்டின் "பிரதேசமாக" அறிவிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
வெள்ளிக்கிழமை(14) நியூயோர்க்கில் பேசிய ட்ரம்ப், எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்களின் உலகளாவிய விநியோகத்திற்கு இன்றியமையாத இந்த முக்கிய நீர்வழியை அமெரிக்கா விரைவில் உரிமை கோரும் என்று ஆதரவாளர்களிடம் கூறினார்.</p><h2>ட்ரம்பின் அறிவிப்பு</h2><p>"மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை நாம் தோற்கடித்த பிறகு, மிக விரைவில் நான் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்," என்று ட்ரம்ப் சிரித்துக்கொண்டே கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/496c4017-6fce-495e-9375-7ee1b5f42a70/26-6a803797ea577.webp' /></p><p>

பெப்ரவரி 28 முதல், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நடத்திய பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், முன்னர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கான முக்கிய விநியோக மையமாக செயல்பட்ட அந்த நீர்வழிப்பாதை வழியான போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரான் பதிலளித்தது.</p><p></p><h2>போர்நிறுத்த பேச்சில் முக்கிய இடம்பிடித்த ஹோர்முஸ் நீரிணை</h2><p>

போருக்கு முன்பு அந்த நீர்வழிப்பாதையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் இப்போது அந்த நீர்வழிப்பாதையின் மீதான கட்டுப்பாடு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d28e11f-216c-414b-af18-88210a8d40f7/26-6a8037989bd7a.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய மாதங்களில் மீண்டும் சண்டை மூண்ட இடமாகவும் அது இருந்து வருகிறது. ஜூன் மாதம், போரில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அமெரிக்காவும் ஈரானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்று, "வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்பதாகும்.
</p><p>
பின்னர் இரு தரப்பினரும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறினர், மேலும் மாத இறுதியில் சண்டை மீண்டும் தொடங்கியது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் சிவசேனை அட்டகாசம்! பின்னணியில் தீட்டப்பட்ட ரகசிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-of-relatives-of-the-forcibly-disappeared-1786797375"></link>
            <id>https://ibctamil.com/article/protest-of-relatives-of-the-forcibly-disappeared-1786797375</id>
            <summary type="text">செம்மணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அமைத்திருந்த கொட்டகையை அகற்றுமாறு சிவசேனை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அமைத்திருந்த கொட்டகையை அகற்றுமாறு சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளமை தற்போது வடக்கு கிழக்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>

கொட்டகை அமைக்கப்பட்டுள்ள இடம் ஆலயத்திற்குச் சொந்தமான இடம் எனக் கூறி அவர் குறித்த போராட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் செயற்பட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், ஆலயக் காணியைக் காரணம் காட்டி மக்களை வெளியேற்றும் இந்த அமைப்பினர், வடக்கு-கிழக்கில் உள்ள பல இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படும்போதும் அல்லது சிதைக்கப்படும்போதும் ஏன் மெளனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
</p><p>
வெடுக்குநாறி மலை, திருக்கேதீச்சரம், மற்றும் திருக்கோணேஸ்வரம் போன்ற பகுதிகளில் நடந்த அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து இந்த அமைப்பு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
</p><p>
 தமிழர்களின் உரிமைகளுக்காகவோ அல்லது சமய உரிமைகளுக்காகவோ போராடாத இந்த அமைப்பு ஏன் இவ்வாறு செயற்படுகிறது. இது குறித்து தொடர்ந்தும் எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EsV_uBP_YGM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T12:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதி : வலி கிழக்கு தவிசாளரிடம் காவல்துறை விளக்கம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-s-voice-protest-issue-1786795760"></link>
            <id>https://ibctamil.com/article/justice-s-voice-protest-issue-1786795760</id>
            <summary type="text">யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்
இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு
வழிவகுக்கும் விடயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்
இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு
வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு அவ்வாறான ஒரு போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் காவல்துறை திணைக்களம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று சனிக்கிழமை (15) வலிகாமம் கிழக்கு
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு
அனுமதியளிக்க முடியும் என விளக்கம் கேட்டு யாழ்ப்பாண காவல் நிலைய தலைமையகத்தால் கேள்வி கேட்கப்பட்டு அவரது
அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான காவல்
பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் என்னை
பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.</p><h2>இனத்தவர்களுக்கிடையே அமைதியற்ற சூழ்நிலை&nbsp;</h2><p>அக் கடிதத்தில், செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன்
பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு
கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள்
அனுமதி வழங்கியுள்ளமை காவல்தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறான
போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு
இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் பொது
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என காவல்துறை கருதுவதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba640e4-9e33-4291-840a-5b060cee134e/26-6a8061b4c705c.webp' /></p><p>மேலும் காவல்தறை பொறுப்பதிகாரியின் கடிதத்தில், காவல்துறை தரப்பின் அனுமதியின்றி
இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா
எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான
சட்டபூர்வமான அடிப்படை என்ன? இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால்
எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில்&nbsp;அனுமதி</h2><p>&nbsp;இந் நிலையில் ஜனநாயக ரீதியிலான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நீதிகோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு
கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய
மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில்
கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் காவல்துறை தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e7a550-e2c0-49ad-b002-5463087b21c2/26-6a8061b57ad90.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில அரசியல்வாதிகள் கருத்துக்களுக்கு எந்த பயமும் இல்லை: பிரியந்த வீரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bring-73-major-underworld-criminals-to-the-country-1786794463"></link>
            <id>https://ibctamil.com/article/bring-73-major-underworld-criminals-to-the-country-1786794463</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
 

கண்டியில் இன்று (15.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். </p><p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் நூற்றுக்கு அருகாமையிலான நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பிரியந்த வீரசூரிய </h2><p>

 

அத்துடன், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் தூதரகங்களின் சிறப்பு பாராட்டும், உயர் ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024dc95a-e5b2-4d98-8e08-e57ffc2e533c/26-6a805752838a2.webp' /></p><p>
 

இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு எந்தவொரு வெளி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை, சோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மட்டுமே கோரிக்கைகள் கிடைக்கின்றன.&nbsp;</p><p>

 

இருப்பினும், இந்த கடத்தல்களுக்கு பணம் முதலீடு செய்த மற்றும் உதவிய நபர்கள் தற்போது கடுமையாக கலக்கமடைந்துள்ளதாக அவதானிக்க முடிகிறது.
</p><p>
 

சில அரசியல்வாதிகள் என்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.&nbsp;</p><p>

 

நான் சமூக அநீதியையோ அல்லது அழிவையோ செய்யாததால், சிறப்பு பாதுகாப்பு இல்லாமலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல முடியும்.
</p><p>&nbsp;மக்களுக்கு சென்று பார்க்க முடியாத நிலை எனக்கு ஏற்படவில்லை, சமூகத்திற்கு பொய் கூறி அழிவை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கே அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய,

 

"மேலும் 73 சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை அழைத்து வர வேண்டியுள்ளது. மேலும் 100 பேர் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. </p><p>அதேபோல் எங்களுக்கு நல்ல சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அத்துடன் நாங்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நாடுகள் சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளன." என கூறி இருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலையில் அதிகரிப்பு: வெளியாகியுள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-prices-to-rise-as-surcharge-extended-1786793730"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-prices-to-rise-as-surcharge-extended-1786793730</id>
            <summary type="text">

வாகன இறக்குமதி வரிகள் மீதான 50% மேலதிகக் கட்டணத்தை டிசம்பர் 31 வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் வாகனங்களின் விலைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வாகன இறக்குமதி வரிகள் மீதான 50% மேலதிகக் கட்டணத்தை டிசம்பர் 31 வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இன்றையதினம்(ஓகஸ்ட் 15) முடிவடையவிருந்த இந்த மேலதிக வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R) வாகனத்தின் விலை சுமார் ரூ. 500,000 வரையிலும், டொயோட்டா ரைஸ் (Toyota Raize) ரூ. 1 மில்லியன் வரையிலும், ஹோண்டா வெஸல் (Honda Vezel) ரூ. 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>உயர்த்தப்பட்ட வரி&nbsp;</h2><p> </p><p>

மேலும், டொயோட்டா பிராடோ (Toyota Prado) ரூ. 3 மில்லியனாலும், லேண்ட் குரூசர் (Land Cruiser) ரூ. 5 மில்லியனாலும், டபள் கெப் (Double Cab) வாகனங்கள் ரூ. 2 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரையிலும் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b962beb5-66a9-4318-968f-bf5b5a0f26d1/26-6a80551f5956d.webp' /></p><p>
</p><p>
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தற்போது விற்பனையகங்களில் உள்ள வாகனங்கள் மே 15 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், அவற்றுக்கு இந்த மேலதிக வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், மே 15க்கு பிந்தைய கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T12:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி ஊழலில் ஜனாதிபதிக்குத் தொடர்பு : தன்னிடம் ஆதாரம் உள்ளது என்கிறார் சம்பிக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-is-involved-in-the-coal-scam-champika-1786793100"></link>
            <id>https://ibctamil.com/article/president-is-involved-in-the-coal-scam-champika-1786793100</id>
            <summary type="text">30 நிலக்கரிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய அளவிலான மோசடியில் ஜனாதிபதிக்குத் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கத் தன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 நிலக்கரிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய அளவிலான மோசடியில் ஜனாதிபதிக்குத் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கத் தன்னிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒரு இணையவழித் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><h2>ரில்வின் சில்வாவிற்கு எதிராக முதல் முறைப்பாடு</h2><p>இது தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் இரண்டு புகார்களைத் தாக்கல் செய்துள்ளதாக ரணவக்க தெரிவித்தார்.

முதல் புகார், ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051a48df-35b3-42fb-b3f1-9a0ba8e80cb0/26-6a8051336c406.webp' /></p><p>
</p><p>
"தன்னுடைய ஆட்களை விடுவிக்கவும், பழையவர்களைத் தண்டிக்கவும்" ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்ற ரில்வின் சில்வாவின் கூற்றால், ஆணைக்குழுவின் சுதந்திரம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;நிலக்கரி ஊழல் அனுரவிற்கு எதிராக முறைப்பாடு</h2><p>
</p><p>
இரண்டாவது புகாராக, 30 நிலக்கரிக் கப்பல்களின் மோசடியான கொள்முதல் தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக உண்மைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a619c980-6dbd-4319-b6f6-fcb2a030b0a8/26-6a80513462c04.webp' /></p><p>
</p><p>
இந்தச் செயல்முறையால் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட பெரும் இழப்பு மற்றும் மின்வெட்டுக்கான காரணங்கள் தொடர்பான அறிவியல் மற்றும் பிற ஆதாரங்களை ஆணைக்குழுவின் முன் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

</p><h2>காவல்துறையிடமும் வாக்குமூலம்&nbsp;</h2><p>"இது தொடர்பாக நான் காவல்துறையிடமும் வாக்குமூலம் அளித்துள்ளேன். இது வெறும் வதந்தி அல்ல, அறிவியல் உண்மைகளைக் கொண்ட ஒரு புகாராகும். ஆறு மாத காலம் முடிந்த பிறகு ஆணைக்குழு தனது அறிக்கையை வெளியிடுவதற்காக நான் காத்திருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d825ee79-50fa-41e1-8199-88d01da7fcd6/26-6a80513514e5a.webp' /></p><p> அதன்பிறகு, என் வசமுள்ள அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் பகிரங்கப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்," என்று சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி தேசிய வைத்தியசாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.570 மில்லியன் திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/medical-equipment-worth-570-million-rupees-kandy-1786791624"></link>
            <id>https://ibctamil.com/article/medical-equipment-worth-570-million-rupees-kandy-1786791624</id>
            <summary type="text">கண்டி தேசிய வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அதிநவீன மூன்று மருத்துவ உபகரணத் தொகுதிகள் மக்கள் பயன்பாட்டிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி தேசிய வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அதிநவீன மூன்று மருத்துவ உபகரணத் தொகுதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று வழங்கி வைக்கபட்டன.&nbsp;</p><p>இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15.08.2026)நடத்தப்பட்டதுடன் இவை&nbsp; ரூ.570 மில்லியன் பெறுமதியான ஷவை என தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.</p><p></p><h2>ரூ.570 மில்லியன் திட்டங்கள்</h2><p>இதன்போது புதிதாக நிறுவப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு (ரூ. 200 மில்லியன்), மமோகிராபி பிரிவு (ரூ. 180 மில்லியன்) மற்றும் சி.டி. பரிசோதனைப் பிரிவு (ரூ. 190 மில்லியன்) ஆகியவை இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341613c6-c871-4f64-9aa7-14f4820f8919/26-6a804b515565e.webp' /></p><p>ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் செயற்படுத்தப்படும் சுகாதார முறைமை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
 

கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க சிகிச்சை சேவைகளுக்காக இணைக்கப்பட்ட இரண்டாவது சி.டி. ஸ்கேன் இயந்திரம் இதுவென்பதுடன், இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவும் அவ்வைத்தியசாலைக்கு கிடைத்த இரண்டாவது இருதய வடிகுழாய் ஆய்வகமாகும்.
</p><p>
 

அத்துடன், இலங்கையிலுள்ள மிக உயர்ந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட 5 மமோகிராபி இயந்திரங்களில் ஒன்றும் இன்றைய தினம் வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.</p><p>
</p><p>
 

அதிகளவு காத்திருப்புப் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் தற்போது 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் நிதிப் பங்களிப்பில் புற்றுநோய் பிரிவு, அவசர விபத்துப் பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை அமைப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
 

இருதய வடிகுழாய் பிரிவுகள் 16 இந்த ஆண்டிற்குள் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் நிறுவும் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி : அமைச்சர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-end-to-the-threat-of-piracy-fisheries-minister-1786792554"></link>
            <id>https://ibctamil.com/article/an-end-to-the-threat-of-piracy-fisheries-minister-1786792554</id>
            <summary type="text">அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.</p><p>அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே&nbsp;அமைச்சர் இதனை தெரிவித்தார்.&nbsp;</p><p>மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.</p><p></p><h2>விரிவாக ஆராயப்பட்ட விடயங்கள்</h2><p>

 

அம்பாறை மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துதல், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142512bb-8f22-49d4-92e6-ef716536e814/26-6a804c0eb7dd5.webp' /></p><p>
</p><p>
 

இதன்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், தாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
</p><p>
 

குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அவர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கும் உடனடியானதும் உறுதியானதுமான பொறிமுறையொன்றை அமைச்சு உருவாக்க வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.</p><p>அத்துடன், ஒலுவில் துறைமுகத்தை முழுமையான மீன்பிடித் துறைமுகமாக தரம் உயர்த்துவதுடன், துறைமுக வாயிலில் குவிந்துள்ள மண்ணை அகற்றி, மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p></p><h2>தீர்வுகளை பெற்றுத் தர நடவடிக்கை</h2><p>

 

கடற்றொழிலாளர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுடன் கலந்துரையாடி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் விரைவானதுமான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20284ed3-a416-4b34-afcb-d730b59417fa/26-6a804c0f6fe21.webp' />&nbsp;</p><p>

 

ஒலுவில் துறைமுகத்தைப் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதற்கு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். </p><p>

 

அவர்களின் பங்களிப்புடன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

 

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கடற்றொழில் துறையை மேலும் இலாபகரமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கான பல முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு : சிறப்புற நடந்தேறிய மடு அன்னையின் ஆவணித் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-august-festival-of-mother-madu-was-held-1786790561"></link>
            <id>https://ibctamil.com/article/the-august-festival-of-mother-madu-was-held-1786790561</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித்
திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக்
கொடுக்கப்பட்டது.&amp;nbsp; ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித்
திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக்
கொடுக்கப்பட்டது.</p><p>&nbsp; மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும்
கொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா,மன்னார்
மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,அனுராதபுரம்
மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து
திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.</p><h2>&nbsp;மடு அன்னையின் திருச்சொரூப பவனி</h2><p>
</p><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம் பெற்ற
தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52acd4a-7c8c-44ad-a23d-97a935483704/26-6a80492bacffe.webp' /></p><p>

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர்
அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் , மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்
அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம்
அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி
ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை
தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு
பெர்னாண்டோ,பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல் ஆகியோர் கலந்து
கொண்டனர். </p><p>நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான
பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா சிறப்புற
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-enforced-disappearances-1786790642"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-enforced-disappearances-1786790642</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்கில் சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இம்மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டிற்கான பொதுமக்கள்,
அரசியல் பிரதிநிதிகள், மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஆதரவைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (14) பொதுக்கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு
அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>கலந்துரையாடலின்போது எதிர்வரும் சர்வதேச மாநாடு தொடர்பான முக்கிய விடயங்கள் பகிரப்பட்டதுடன், மாநாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டன. மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் கோரப்பட்டது.</p><p></p><h2>சர்வதேச நீதியே எமது கோரிக்கை </h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தனர்.&nbsp;</p><p>விசாரணைக்காகவும், பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறி அரச
அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில்
இலங்கை அரசு இதுவரை உரிய பொறுப்புக்கூறலை முன்னெடுக்கத் தவறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec97fe2-dc1e-4f5a-9ffd-e65533260986/26-6a8047cc37516.webp' /></p><p> </p><p>இதனாலேயே
தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்தார்.</p><p>

மேலும், தமது உறவுகளைத் தேடி நீண்டகாலமாகப் போராடி வந்தவர்களில் 600க்கும்
மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

அவர்களின் போராட்டங்களும், சாட்சியங்களும் எதிர்கால சந்ததியினருக்கும் சர்வதேச
சமூகத்திற்கும் சென்றடையும் வகையில், உயிரிழந்த உறவுகளின் சாட்சியங்களைப்
பதிவு செய்து நூல் வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், “அழிக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற தலைப்பிலான நூல் ஒன்றையும்,
இதுவரை தமது போராட்டங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட அறிக்கைகளைத் தொகுத்து
மற்றுமொரு நூலாகவும் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.</p><p></p><h2>

பல்வேறு நிகழ்வுகளுடன் சர்வதேச மாநாடு
</h2><p>
எதிர்வரும் சர்வதேச மாநாட்டில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளான சிறப்புரைகள்,
ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை உள்ளடக்கிய கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு
நிகழ்வுகளுடன் பேரணிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும்
வலிகளையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச சமூகத்திற்கு
எடுத்துரைக்கும் முக்கிய தளமாக இம்மாநாடு அமைய வேண்டும் எனவும்
கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fe5512-e032-4f30-a93e-1490f9201065/26-6a8047cb84e78.webp' /></p><p>

இம்மாநாட்டில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள், அரசியல்
பிரதிநிதிகள், மதகுருமார்கள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை
செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்று வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு
ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் “நடைபெற்ற அநீதிக்கு சர்வதேச நீதி வேண்டும்” என்ற கோரிக்கையை வலுப்படுத்தும்
வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச
மாநாட்டில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:04:00+00:00</updated>
        </entry>
    </feed>
