<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-02T16:40:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இன்றுமாலை கோரவிபத்து : இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-tamil-youths-killed-in-accident-in-trincomalee-1785687102"></link>
            <id>https://ibctamil.com/article/two-tamil-youths-killed-in-accident-in-trincomalee-1785687102</id>
            <summary type="text">திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர்
வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர்
வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை
இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>&nbsp;இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு</h2><p>விபத்தில் மூதூர் -கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் வயது
(21), அருணவன் செல்வரெத்தினம் வயது (19)ஆகிய இரண்டு இளைஞர்களே
உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28eb3b3c-3c85-4155-a896-3ec50ff9564a/26-6a6f6eae7a34f.webp' /></p><p>

ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T16:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம் : அலட்சியத்துடன் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-building-in-a-state-of-collapse-1785683553"></link>
            <id>https://ibctamil.com/article/school-building-in-a-state-of-collapse-1785683553</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டம் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டம் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p> இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே
குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு
அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>இடிந்து விழும் நிலையில்&nbsp;கட்டிடம்</h2><p>இக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே
அருகாமையில் உள்ள வகுப்பறை மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27359268-7c25-4747-b07b-aab1dcec5f0c/26-6a6f663f9b6f8.webp' /></p><p>
குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம்
1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.</p><p>

எனவேமாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு
குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு
பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T15:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் விசாரணைக்கு அழைப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/call-for-investigation-into-author-of-book-1785681987"></link>
            <id>https://ibctamil.com/article/call-for-investigation-into-author-of-book-1785681987</id>
            <summary type="text">பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 04.08.2026 அன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். </p><p>எதிர்வரும் 04.08.2026 அன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>இனப்படுகொலை தொடர்பாக&nbsp; உரை</h2><p> </p><p>கடந்த 2025ஆம் ஆண்டு நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இனப்படுகொலை தொடர்பாக அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31909c65-5b10-4eb5-a231-e158fea8d0a7/26-6a6f5a0f9b10c.webp' /></p><p> </p><p>இந்நிகழ்வு மற்றும் உரை தொடர்பாக ஏற்கனவே கத்தோலிக்க குரு வண. செராட் மற்றும் அருட்சகோதரி ரசீக்கா ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/helicopter-crash-in-greece-1785680000"></link>
            <id>https://ibctamil.com/article/helicopter-crash-in-greece-1785680000</id>
            <summary type="text">&amp;nbsp;கிரீஸ் நாட்டில் ஏதென்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புத் துறை தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிரீஸ் நாட்டில் ஏதென்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் அட்டிகாவின் சத்தா பகுதியின் பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது</p><h2>வாடகைக்கு அமர்த்தப்பட்ட உலங்கு வானூர்திகள்</h2><p>&nbsp;இந்த உலங்குவானூர்திகள் தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும், ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர் என்றும், அவை எலெப்சினா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e55ac89-7e35-4433-87c4-91121f66e01b/26-6a6f5617ea265.webp' /></p><p>
</p><p>
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><h2>&nbsp;வேகமாக பரவிவரும் காட்டுதீயால் வெளியேற்றப்படும் மக்கள்</h2><p>&nbsp; இதேவேளை கிரீஸின் பிரதான நிலப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உட்பட பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5081ac0c-09dd-4afe-9a56-7586751e8c2f/26-6a6f561745aed.webp' /></p><p>
</p><p>
கிரீட் தீவில், தீ ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தை எரித்து, 8,000 மக்களைத் தற்காலிகமாக வெளியேற்றத் தூண்டியுள்ளது.
</p><p>
வெள்ளிக்கிழமையன்று மத்திய கிரீஸில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான சுமார் 500 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

பாரோஸ், ஆண்ட்ரோஸ் மற்றும் கலிம்னோஸ் தீவுகளிலும் தீ பரவியுள்ளது.</p><p>

தொடர்ச்சியான வெப்ப அலைகள் காட்டுத்தீ பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியதைத் தொடர்ந்து, பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பல ஐரோப்பிய நாடுகளில் கிரீஸும் ஒன்றாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-verdict-1785676715"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-verdict-1785676715</id>
            <summary type="text">ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம்
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
தண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம்
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
தண்டப்பணம் செலுத்திய தமக்கு அந்த தண்டனை கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக
இருக்கின்றது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நினைத்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பில் சனிக்கிழமை(01.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில்
கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை&nbsp;</h2><p>
</p><p>




முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. நினைத்தால் வேதனை தான். இதனை நினைத்து அவரது குடும்பம்
மிகவும் வேதனைப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a82b366-3ee6-4ba2-999f-02afdf83b6a9/26-6a6f49888e5cc.webp' /></p><p> </p><p>ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவி பக்தர்கள்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுக்கவில்லை
என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. </p><p>ஆகவே ஒரு பக்கம்
அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து சற்று வேதனைப்பட்டாலும் 269 அப்பாவி
மக்கள் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது
கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் கடமையை சரிவர செய்யவில்லை அதன் காரணமாக அவருக்கு
மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p></p><h2>இன்னும் சிலருக்கு கலக்கம்&nbsp;</h2><p>



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு
இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் காவல்துறை மா அதிபர் ஏழரைக்
கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி
ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தண்டப் பணம்
செலுத்தியவர் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768e6f72-3a18-46f1-9d28-2473f5a0ff87/26-6a6f49896c77b.webp' /></p><p> </p><p>அவர் இப்போது
சிந்திப்பார் ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது
என சிந்திப்பார்.</p><p>



அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக
இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம்.
தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான
வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p>இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான
முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல்
பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க
கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T13:53:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை வன்முறை திட்டமிட்ட சதி: சர்வதேச மனித உரிமை அமைப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/incident-mahara-prison-planned-by-a-certain-party-1785673210"></link>
            <id>https://ibctamil.com/article/incident-mahara-prison-planned-by-a-certain-party-1785673210</id>
            <summary type="text">&amp;nbsp;நேற்று (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்டது என்று தாம் உறுதியாக நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேற்று (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்டது என்று தாம் உறுதியாக நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுபாசனா சுபாவிக்ரம, கூறியுள்ளார்.
</p><p>
இன்று பிற்பகல் (02) மஹர சிறையின் நிலவரத்தைப் பார்வையிட்ட பின்னர் ​​அவர் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>கலவரத்தின் நோக்கம் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவது</h2><p>இதன் நோக்கம் அரசாங்கத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்துவதே என்ற சந்தேகம் இருப்பதாகஅவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5814ea31-de89-454d-b713-d83146a3e412/26-6a6f3fa1332bd.webp' /></p><p>

அதன்படி, இது ஏதோவொரு நபர் அல்லது குழுவின் திட்டத்தின்படி நடக்கும் ஒரு விஷயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கைதிகளை தங்க வைக்க பொருத்தமான சூழல் இல்லை</h2><p>

இதற்கிடையில், சிறையின் நிலையை ஆய்வு செய்த பின்னர் வந்த நிர்வாக பணிப்பாளர், சிறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், கைதிகளை தங்க வைக்க பொருத்தமான சூழல் இல்லை என்றும், இதன் விளைவாக, கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e714ad-f9eb-4a87-ba64-fa9272bf5a64/26-6a6f3fa1d845a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T13:01:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inmates-hospitalized-in-mahara-prison-rises-1785671269"></link>
            <id>https://ibctamil.com/article/inmates-hospitalized-in-mahara-prison-rises-1785671269</id>
            <summary type="text">மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், இந்த மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், இந்த மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மஹர சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று (01) சிறையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் சொத்து சேதம் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றம்</h2><p>இதற்கிடையில்,மஹர சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் பட்டியல் சிறைக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d194ca27-2ea5-4e3f-adfe-91288a03cd2a/26-6a6f33b3eff85.webp' /></p><p>
</p><p>
கலவரத்தால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப் பட்டியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
</p><p>
அதன்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-1983-commemoration-in-britain-1785671332"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-1983-commemoration-in-britain-1785671332</id>
            <summary type="text">1983 கறுப்பு யூலை இனவழிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 கறுப்பு யூலை இனவழிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவின் (TGTE) லிவர்பூல் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 24) <a href="https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953" target="_blank">லிவர்பூல் லைட்ஹவுஸ்</a> மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.</p><p>

நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்ப நலத்துறை அமைச்சர் வீரன், பிரதி அமைச்சர் யோகன் ரெட்ணம், உலகத் தமிழர் வரலாற்று வளாகம் மற்றும் லிவர்பூல் தமிழ் சமூகம் சார்பில் சிவகுமார், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தைச் சேர்ந்த தயா மற்றும் நா.க.த.அ. லிவர்பூல் கிளை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அஜந்தன், நா.க.த.அ லிவர்பூல் வெளிக்கள இணைப்புணர் ஹில்மி லிவர்பூல் தமிழ் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்</h2><p>நிகழ்வினை ஐதுசன் தொகுத்து வழங்க வீரன், யோகன் ரெட்ணம், சிவகுமார், தயா, அஜந்தன், ஹில்மி மற்றும் வளர்மதி ஆகியோர் பொதுவிளக்கேற்றல் நிகழ்வில் பங்கேற்றனர்.

அத்தோடு யோகன் ரெட்ணம் பிரித்தானியக் கொடியையும் மற்றும் தயா தமிழீழக் கொடியையும் ஏற்றிவைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b509925-89c9-4b68-9184-62193cef2c18/26-6a6f2ffd353f9.webp' /></p><p> 

வீரன் நினைவேந்தல் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து <a href="https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591" target="_blank">பிரியதர்ஷினி அஜந்தன்</a> அக வணக்கம் நிகழ்த்தினார். 

அஜந்தன் அறிமுக உரையை வழங்க, சிவகுமார் நினைவேந்தல் மலர் வணக்க நிகழ்வையும் எழுச்சி உரையும் வழங்கினார்.
</p><p>
ரோய் மெர்வின் மரியதாஸ் மற்றும் மோகனா ஆகியோர் நினைவேந்தல் கவிதைகளையும் மற்றும் தருணிக்கா ஆங்கில உரையும் நிகழ்த்தினர்.

 இறுதியில் தனுஷ்காந்த் மற்றும் நிதுர்ஜன் கொடியிறக்க நிகழ்வை மேற்கொண்டதுடன் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953"></link>
            <id>https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். </p><p>சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர்
மாய்த்துள்ளனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சகோதரிகள் நேற்றையதினம் (01) வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர்.</p><p></p><h2>சுன்னாகம் காவல்துறையினர் விசாரணை</h2><p>
இந்நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக&nbsp; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccafc711-4952-4981-abd8-1c6f7a924e4a/26-6a6f1ce7df59b.webp' /></p><p>எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள்
உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பதில் உடன்பாடு இல்லை: ஈரான் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591"></link>
            <id>https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் <a href="https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645" target="_blank">ஹோர்முஸ் நீரிணை</a>யை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கட்டார் முன்வைத்த யோசனைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.&nbsp;</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>இருப்பினும் குறித்த செய்திகள்&nbsp; உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94aae65c-2944-45f0-ac6d-6b191060cbc7/26-6a6f2ae5800fa.webp' /></p><p>இதற்கிடையில், ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டு்ள்ளது.</p><p>அதன்படி<a href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566?itm_source=article" target="_blank"> ஈரானின் புரட்சிகர காவல்படை</a>யுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளாத எந்தவொரு கப்பலுக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று காலைவரை நீடித்த மஹர சிறை கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-prison-riot-continues-until-morning-today-1785668968"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-prison-riot-continues-until-morning-today-1785668968</id>
            <summary type="text">நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, அங்கு நிலைமை அமைதியாக உள்ளது எனவும் மேற்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை (02) ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் தற்போது பாதுகாப்பாக தங்கள் விடுதிகளுக்கு திரும்பிவிட்டனர் என்று கூறினார்.</p><h2>​​மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள்</h2><p>நேற்று (01) பிற்பகல் கலவரம் வெடித்தபோது, ​​மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaecf51-36bd-42ee-96d3-2c2c3cbe91b3/26-6a6f2a65cc5b4.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமையால் கைதிகள் சிறையின் சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஏராளமான சொத்துக்கள் சேதம்</h2><p>அடுத்த சில மணிநேரங்களில் சிறையின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு, மஹர சிறையின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed0290a-37c4-4840-8749-94f02346544e/26-6a6f2a64ee00e.webp' /></p><p>


இவர்கள் சிறையில் இருந்த ஏராளமான சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சம்பவத்தின் அனுபவத்தைக் கொண்டு,பாதுகாப்புப் படையினர் அனைவரும் ஒன்றிணைந்து,எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இன்றி இந்தச் சூழ்நிலையைக் கையாண்டுள்ளனர். </p><p>அனைத்துக் கைதிகளும் பாதுகாப்பாகத் தங்களது விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் விழுந்த 17 கொள்கலன்களில் ஒன்று கரையொதுங்கியது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-container-that-fell-into-the-sea-washed-ashore-1785668366"></link>
            <id>https://ibctamil.com/article/a-container-that-fell-into-the-sea-washed-ashore-1785668366</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> பெந்தோட்டை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துருவை - அதுருவெல்ல கடற்கரையில் இன்று (2) காலை குறித்த கொள்கலன் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள கொள்கலன் அருகே பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>கடற்படையினர் வேண்டுகோள்&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் விழுந்த இந்தக் கொள்கலன்கள், வீசும் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் திசைக்கு ஏற்ப சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை வழியாகக் காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac5fdc7-0b36-4b5a-aff5-49b2ac5efa77/26-6a6f27adacfa8.webp' /></p><p>

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து காலி வரையிலான தெற்கு கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் படகுகளும் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கடற்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்கள் படகுகளுடன் மோதினால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், படகுகளை இயக்கும் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கடலில் மிதக்கும் கொள்கலன்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அது குறித்துக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பாடல் மையங்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நடுகடலில் பற்றி எரிந்த பயணிகள் படகு...! 5 பேர் பலி - 41 மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-dead-41-missing-indonesia-ferry-catches-fire-1785667296"></link>
            <id>https://ibctamil.com/article/five-dead-41-missing-indonesia-ferry-catches-fire-1785667296</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணியர் படகு திடீரென தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த படகு 271 பயணிகளுடன் பயணித்ததாக சர்வதேச ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணியர் படகு திடீரென தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த படகு 271 பயணிகளுடன் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தநிலையில், விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>மீட்புக் குழுவினர்&nbsp;</h2><p>மேலும் தெரியவருகையில், இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவிலுள்ள சுராபாயாவிலிருந்து (Surabaya), தெற்கு சுலாவெசியிலுள்ள மக்காசர் (Makassar) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே, மடுராத் தீவுக்கு (Madura island) அருகே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Breaking?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Breaking</a> - At least five people have died and 41 remain missing after the passenger ship KM Mutiara Sentosa 2 caught fire this morning off Madura Island in the Java Sea, near Sumenep Regency, Indonesia. Inaccurate passenger manifests continue to hamper search and rescue… <a href="https://t.co/2D7PzNH0Ij">pic.twitter.com/2D7PzNH0Ij</a></p>&mdash; NEWS WALA (@NEWSWALApy) <a href="https://x.com/NEWSWALApy/status/2083863160243859751?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இத்தீ விபத்து குறித்துக் கப்பலின் மாலுமி உடனடி தகவலை வழங்கியதாக இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) தெரிவித்துள்ளது.</p><p>

காணாமல் போன 41 பேரைக் கண்டறியும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறையிலிருந்து டசின்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dozens-of-inmates-escape-from-dr-congo-prison-1785666681"></link>
            <id>https://ibctamil.com/article/dozens-of-inmates-escape-from-dr-congo-prison-1785666681</id>
            <summary type="text">&amp;nbsp;கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கசாய் மாகாணத்தில் உள்ள ஒரு சிறையிலிருந்து குறைந்தது 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை(01) இரவு தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கசாய் மாகாணத்தில் உள்ள ஒரு சிறையிலிருந்து குறைந்தது 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை(01) இரவு தெரிவித்தனர்.</p><p>
நாட்டின் தெற்கு-மத்திய பகுதியில் உள்ள லூபோ சிறையிலிருந்து கைதிகள் வியாழன் இரவு முதல் வெள்ளி அதிகாலை வரை வலுக்கட்டாயமாக வெளியேறினர் என்று பிராந்திய நிர்வாகி ஜீன் ஷியாவுகே வா ஷியாவுகே கூறினார்.</p><h2>&nbsp;திட்டமிடப்பட்ட தப்பித்தல்</h2><p>"சிறை முழுவதும் காலியாகவே இருந்தது. கைதிகள் பூட்டுகளைத் திறக்காததால், இது நன்கு திட்டமிடப்பட்ட தப்பித்தல் ஆகும்," என்று ஷியாவுகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d9d329-e27c-4ef8-99a3-6e8a95645725/26-6a6f21892edd5.webp' /></p><p>
</p><p>
அனைத்து கைதிகளும் சிறையை விட்டு வெளியேற அனுமதித்த இந்தத் தப்பித்தலில் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>தேடுதல் வேட்டை ஆரம்பம்</h2><p>தப்பித்தவர்களில் பொதுமக்களுக்கு ஆபத்தானவர்களாகக் கருதப்படும் கைதிகளும் அடங்குவதாகக் கூறி, இந்தச் சம்பவத்தின் பாதுகாப்பு விளைவுகள் குறித்து அந்த அதிகாரி கவலை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421705b0-8916-47b8-a371-dcd73d54bba1/26-6a6f21887dbae.webp' /></p><p>
</p><p>
தப்பித்தலின் போது தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் ஷியாவுகே கூறினார்.
</p><p>
அப்பகுதியில் தப்பியோடிய கைதிகள் யாரேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறும், அவர்களை மீண்டும் பிடிக்க அதிகாரிகளுக்கு உதவுமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:53:14+00:00</updated>
        </entry>
    </feed>
