<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-04T09:27:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!(LIVE)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140</id>
            <summary type="text">பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04-09-2026) காலை முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>அரசாங்கம் அச்சமடைந்து அடக்குமுறையின் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வதாகவும், இத்தகைய தடைகளால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் இன்று கைது செய்யப்படுவார்: பட்டாசுக்களுடன் தயாராகும் ஜே.வி.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788507925"></link>
            <id>https://ibctamil.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788507925</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாரிய மக்கள் பேரணி எவ்வித தடங்களுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் என அந்த கட்சியின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நாமல் இன்று (04) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போது, அந்த வளாகத்திற்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமலைகைது செய்தால், நாங்கள் இன்னும் இருமடங்கு மக்களை அனுராதபுரத்திற்கு அழைத்து வருவோம்.</p><p></p><h2>கைது முயற்சி</h2><p> </p><p>

இந்த கைது முயற்சியின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. </p><p>

இந்த வார இறுதியில் ஜனாதிபதிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் அவருக்கு மக்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb60c83-bb26-4b50-873a-278d41696df7/26-6a9a7cc1e317b.webp' /></p><p>துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் கூறவா? அல்லது கோதுமை மா, பால் மாவின் விலையைக் குறைத்ததாகக் கூறவா? 

சொல்வதற்கு எதுவும் இல்லாததால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என்று கூறி அன்றைய தினம் கைதட்ட வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
</p><p>
நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் கிராம மட்டத்தில் பட்டாசுகளை கொளுத்தி, பதாகைகள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்தி கொண்டாடுமாறு ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தனது கட்சியினருக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் போதும், கட்சி பலமடையும் போதும் இவ்வாறான அழைப்புகளும் அடக்குமுறைகளும் சாதாரணமானவை.

இவற்றில் எதனாலும் தங்களது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது" என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-04T08:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788509761"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788509761</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,317,667 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 387,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d56c227-fb7d-4251-bc41-bba234378510/26-6a9a804eda1e3.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 354,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,340 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 338,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவும் கடும் வறட்சி : பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-96-000-people-affected-by-dry-weather-dmc-1788507124"></link>
            <id>https://ibctamil.com/article/over-96-000-people-affected-by-dry-weather-dmc-1788507124</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2> குடிநீர் விநியோகப் பணிகள்</h2><p>

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4978c5-82a7-4532-9a90-3c28070ac4a1/26-6a9a78c28c428.webp' /></p><p> 

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவை 2 மாதங்கள் முன்பே கணித்த நபர்...! வைரலான யூடியூப் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/christian-priest-predicted-nepal-flood-viral-video-1788489298"></link>
            <id>https://ibctamil.com/article/christian-priest-predicted-nepal-flood-viral-video-1788489298</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த நிலையில், யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.</p><p></p><h2>தண்ணீரைப் பார்க்கிறேன்</h2><p>



இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256b022f-deed-473d-93a6-a56357eb4d89/26-6a9a739d5cd55.webp' /></p><p> நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். </p><p>இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p>இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-04T07:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் பகிரப்பட்ட பெண்ணின் தவறான புகைப்படங்கள்: முன்னாள் கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-ginigathena-over-obscene-photos-1788504425"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-ginigathena-over-obscene-photos-1788504425</id>
            <summary type="text">பெண்ணொருவரின் தவறான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில்&amp;nbsp;கினிகத்தேன பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் தவறான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவத்தில்&nbsp;கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று (03-09-2026) பிற்பகல் கினிகத்தேன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71da3386-cca3-4194-887e-c688bbcde87c/26-6a9a6f5124bec.webp' /></p><p>சந்தேகநபர் முன்னர் முறைப்பாட்டாளரான பெண்ணைத் திருமணம் செய்திருந்தவர் என்பதும், பின்னர் அவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பின்னரே இக்குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலதிக விசாரணை: இச்சம்பவம் தொடர்பாகக் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cpc-reduction-in-furnace-oil-and-naphtha-prices-1788503165"></link>
            <id>https://ibctamil.com/article/cpc-reduction-in-furnace-oil-and-naphtha-prices-1788503165</id>
            <summary type="text">இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.</p><p>ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாயாலும் ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 35 ரூபாயாலும் குறைக்கப்படும் என&nbsp;பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர்&nbsp;மயூர நெத்திகுமரா தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி, இதுவரை 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாயால் குறைக்கப்பட்டு 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.</p><p></p><h2>விலை குறைப்புகளின் பலன்</h2><p>அத்துடன்&nbsp; 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35f968a-c047-4076-8859-3355a227cbe1/26-6a9a697c8cece.webp' /></p><p>இதேவேளை, இந்த விலை குறைப்புகளின் பலனைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
</p><p>மேலும் வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த நிவாரணம் பிரதிபலிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் அதிசயம் - 9 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு - வைரல் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-rescued-from-tunnel-9-days-after-nepal-flood-1788502820"></link>
            <id>https://ibctamil.com/article/2-rescued-from-tunnel-9-days-after-nepal-flood-1788502820</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>திரிசூல் 3A சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், மேலும் பல குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p></p><h2>தோளில் சுமந்து வரப்படும் காணொளி</h2><p>இவ்வாறான பின்னணியில், உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள், திரிசூலி 3A நீர்மின் திட்டத்திலிருந்து சேறு படிந்த தொழிலாளர்கள் மீட்பாளரின் தோளில் சுமந்து வரப்படும் காணொளிகளையும் படங்களையும் ஒளிபரப்பின. மீட்பாளர்கள் இதை ஒரு "அதிசயம்" என்று வர்ணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45e83f8-e91f-4c36-82d2-28e68376ae0a/26-6a9a67d011a72.webp' /></p><p>மீட்கப்பட்ட இருவர் கபீர் மகர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தெரிவித்தார்.
</p><p>
30 வயதான ஷா, நேபாள மின்சார ஆணையத்தில் (NEA) இயந்திரப் பணி மேற்பார்வையாளராகவும், 45 வயதான மகர்ஜன், திரிசூலி-3 'ஏ' நீர்மின் திட்டத்தில் மேற்பார்வையாளராகவும் உள்ளனர்.</p><p>வெள்ளம் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை மூடிய பிறகு, அதனுள் தவழ்ந்து சென்றதால் இருவருக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் மனம் இலகுவாகிவிட்டது," என மீட்கப்பட்ட பணியாளர் கபீர் மஹர்ஜனின் சகோதரர் அமீர் மஹர்ஜன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p></p><h2>புதிய நம்பிக்கை</h2><p>சீனா - நேபாள எல்லையில் உள்ள மலையில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து, அப்பகுதியில் மண் மற்றும் இடிபாடுகளின் சுவர் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான நீர்மின்சக்தித் தொழிலாளர்களில் அந்த இருவரும் அடங்குவர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l8mUJeh0yXc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T06:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-arundika-grilled-over-drug-kingpin-links-1788498735"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-arundika-grilled-over-drug-kingpin-links-1788498735</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.</p><p>நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் என்பவருடன் தொடர்புகளைப் பேணி பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்தநிலையில், நேற்றைய தினம் (03-09-2026) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அருந்திக பெர்னாண்டோ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தெஹிவளை - கல்கிஸ்ஸ கடலோரப் பகுதியில் சட்டவிரோத விடுதிகளை நிர்மாணிப்பதற்கு ஷிரான் பாசிக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3445ef8d-2cf9-42b5-9486-6c39aabacb15/26-6a9a62864afde.webp' /></p><p>இச்சம்பவம் மற்றும் மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சரிடம் தொடர்ந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்பகுதியில் ஷிரான் பாசிக்கு சொந்தமான சுமார் 20 உணவகங்கள் மற்றும் விடுதிகள் அமைந்துள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதக் கட்டுமானங்கள் என்பதுடன் வேறு நபர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பல்வேறு சலுகை</h2><p>இந்தச் சட்டவிரோத விடுதிகளைக் கட்டுவதற்கு அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவு போதைப்பொருள் கடத்தல்காரருக்குக் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>ஷிரான் பாசிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பில் தனியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d3ad63-22fe-49cc-84ce-18ac182b8795/26-6a9a628720158.webp' /></p><p>ஷிரான் பாசிக்குடன் தொடர்பைப் பேணி பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் மேலும் பல அரசியல்வாதிகளை வரும் நாட்களில் விசாரணைக்கு அழைக்க மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் திட்டமிட்டுள்ளது.</p><p>டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crop-compensation-for-drought-affected-farmers-1788498834"></link>
            <id>https://ibctamil.com/article/crop-compensation-for-drought-affected-farmers-1788498834</id>
            <summary type="text">நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் பயிர்ச்சேதம் அடைந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து அறிவிப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் பயிர்ச்சேதம் அடைந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை இன்றைய தினம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு</h2><p>அத்துடன், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடுகளை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97da26bb-00c8-41fb-9d5f-0e9ee5652f8c/26-6a9a63ceaab5b.webp' />&nbsp;</p><p>

வறட்சியினால் நெல், சோளம் உள்ளிட்ட ஏனைய பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளமை குறித்து விவசாயிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக, அதிகாரிகள் நேரில் சென்று சேதங்களை மதிப்பீடு செய்த பின்னரே இந் நிதி விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும் பயிர் இழப்பீடுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் சுமார் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>சேதமடைந்த நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சொயா மற்றும் மிளகாய் ஆகிய 06 வகையான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இழப்பீடு வழங்கப்படும் என அச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-04T06:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.</p><p>ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் அவரை அழைத்திருந்தது. </p><p>

அறிக்கைகளின்படி, இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h5><u><b>குவிந்துள்ள&nbsp;ஆதரவாளர்கள்</b></u></h5><p> 

அதன்படி, அவர் சற்று நேரத்திற்கு முன்பு ஆணையத்தில் அவர் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d9c7ad-a232-47d6-96e8-76952cf3aedf/26-6a9a5d94a2616.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் சிலர்&nbsp; கூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதன்போது எமது ஐ.பி.சி ஊடகவியலாளர் நாமலிடம், ''வழமையை போல உங்களுக்கான ஆதரவாளர்கள் ஏன் வரவில்லை" என கேள்வி எழுப்பினார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய அவர், '' அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தின் காரணமாக, ஆதரவாளர்களை வரவேண்டாம் என கூறினேன்" என தெரிவித்தார் </p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CNsEHMvWGiQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81058ac8-614b-4ebb-945a-fc706377a876/26-6a9a37db30a00.webp' /></p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;முன்னெடுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>&nbsp;ஊழல் குற்றச்சாட்டு</h2><p>பொல்கொல்லயில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச அரங்கத்திற்கு கதிரைகளைக் கொன்வனவு செய்யும் போது உரிய கொள்முதல் நடைமுறைகளை&nbsp; மீறி செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு&nbsp;7,973,114 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f4e87d-cdf7-432b-80a4-09d270683907/26-6a9a5c900b4cc.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில்&nbsp;ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (04) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T05:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-in-mattakkuliya-colombo-1788498122"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-in-mattakkuliya-colombo-1788498122</id>
            <summary type="text">மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது</p><p>
</p><p>


35 வயதுடைய குறித்த பெண் சமிட்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அவரிடம் இருந்து 1,000 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூ.2 இலட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a1c9d1a-6725-4594-8317-c8c79079439e/26-6a9a52c0399b5.webp' /></p><p>கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஐந்தாம் இலக்கப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>



இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



சந்தேகநபரான பெண் இன்று (4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-country-s-total-fuel-import-expenditure-1788495067"></link>
            <id>https://ibctamil.com/article/the-country-s-total-fuel-import-expenditure-1788495067</id>
            <summary type="text">நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் இறக்குமதி</h2><p>இதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac9839b-9558-422d-9d44-8b66c187aa38/26-6a9a4e90674ff.webp' /></p><p>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p>


2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த வாரம் இலங்கைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/imf-team-visit-sri-lanka-next-week-for-eff-review-1788494314"></link>
            <id>https://ibctamil.com/article/imf-team-visit-sri-lanka-next-week-for-eff-review-1788494314</id>
            <summary type="text">நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், சர்வதேச நாணய நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்.</p><p></p><h2>&nbsp;வெளியிடப்படவுள்ள அறிவிப்பு&nbsp;&nbsp;</h2><p>இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளது.</p><p>

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை எதிர்வரும் விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b345c335-e17c-4099-ae05-8221468c0762/26-6a9a49823e150.webp' /></p><p>நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.</p><p> 

பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறவுள்ளது. </p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நெகிழ்ச்சி சம்பவம் - பேருந்தில் தவறவிட்ட நகை..! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-million-rs-1788493247"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-million-rs-1788493247</id>
            <summary type="text">கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை
கண்டெடுக்கப்பட்டு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை
கண்டெடுக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
பேருந்தில் நகை இருப்பதை அவதானித்த சாரதி மற்றும் நடத்துனர், அதனை பாதுகாப்பாக
வைத்திருந்து உரிய முறையில் நகையின் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
</p><p>
அவர்களின் நேர்மையான செயற்பாட்டைப் பாராட்டும் வகையில், வடக்கு மாகாண வீதிப்
பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டது.</p><p></p><h2>நேர்மையான செயற்பாடு</h2><p>

இந்நிகழ்வு 2026 செப்டெம்பர் 3ஆம் திகதி யாழ் வீதிப் பயணிகள் அதிகாரசபை
அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884c4e5d-5db2-4e17-9fcc-5edbaa319ed9/26-6a9a3f8c018d0.webp' /></p><p>இதன்போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையின் தலைவர் சூ. விமலேஸ்வரனால் சாரதி மற்றும் நடத்துனர்
கௌரவிக்கப்பட்டனர்.
</p><p>
பொதுமக்களின் உடமைகளைப் பாதுகாத்து, உரியவரிடம் மீளக் கையளித்த இவர்களின்
நேர்மையான செயற்பாடு, பொதுப் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின்
பொறுப்புணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/200-000-school-students-dropped-out-in-5-years-1788491969"></link>
            <id>https://ibctamil.com/article/200-000-school-students-dropped-out-in-5-years-1788491969</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி, குறித்த காலப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அந்த பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>துரிதமான நடவடிக்கைகள்</h2><p>இந்த நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதைப்பொருள் பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் மேவும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec20b273-1c78-4cb9-8a39-37ca91a710ba/26-6a9a4015870c5.webp' /></p><p>
எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T03:54:00+00:00</updated>
        </entry>
    </feed>
