<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-30T11:24:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் அதிகாலைவேளை துப்பாக்கிசூடு : ஒருவர் பலி ஐவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-at-event-in-switzerland-1788087798"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-at-event-in-switzerland-1788087798</id>
            <summary type="text">இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுவிட்சர்லாந்தின் ஆராவு நகரில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுவிட்சர்லாந்தின் ஆராவு நகரில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஆராவு மாகாண காவல்துறை, X-இல் தெரிவித்துள்ளது.</p><h2>பெரிய அளவிலான தேடுதல் வேட்டை</h2><p>&nbsp;காவல்துறை ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதுடன், இதற்குப் பொறுப்பான நபர் அல்லது நபர்களைத் தேடி வருகிறது.

"சம்பவத்தின் சாத்தியமான நோக்கங்களும், அதன் சரியான சூழ்நிலைகளும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை," என்று காவல்துறை கூறியதுடன், சாத்தியமான சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களையும் வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099450be-d627-43bd-af7a-04681867e9ba/26-6a94115873cfe.webp' /></p><p>
</p><p>
சுவிஸ் செய்தித்தாளான 'பிளிக்' வெளியிட்ட மற்றும் சம்பவ இடத்திற்கு அருகில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியில், சுமார் 10 துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியிருப்பது தெரிகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வெளியான அறிவிப்பு</h2><p>
</p><p>
தேடுதல் வேட்டை தொடர்வதால், பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b1ed2-5443-4edb-8374-ec3b7a6d0e09/26-6a94115932759.webp' /></p><p>
</p><p>
சுவிஸ் அவசரகால செய்தி நிறுவனமான BRK நியூஸின்படி, சுவிஸ் இராணுவத்தின் சூப்பர் பூமா உலங்குவானூர்தி ஒன்றும் ஆராவுவின் பரந்த பகுதிக்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
</p><p>
ஆராவு, சூரிச்சிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) மேற்கே அமைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171"></link>
            <id>https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
 வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறினார்.</p><p>


 இலங்கையில் காணாமலாக்கப்பட்டடோருக்கான விவகாரத்தில் பல்வேறு ஆணைக்குழுக்களும் நிறுவனங்களும் உறுவாக்கப்பட்ட போதிலும் எமது உறவுகளின் அடிப்படை கோரிக்கை இதுவரையில் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நம்பிக்கை இழந்த மக்கள்</h2><p>
</p><p>
ஒரு நிறுவனத்தின் சுயாதீனம் செய்தித்திறன் மீதே மக்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அந்த நம்பிக்கையை உறுவாக்குவதற்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பு மிக அவசியம் எனவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9757fe7f-cfe0-4e9f-958a-ce3f2b92443e/26-6a940f6cca1c4.webp' /></p><p>இதன் பொருள் இலங்கைக்கு எதிரான பாதுகாப்பு மிக்க சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே ஆகும் எனவும் கூறியுள்ளார்.</p><p></p><p><b>00.11.00 - கனகரஞ்சனி யோகராசா உரை</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T11:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788086495"></link>
            <id>https://ibctamil.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788086495</id>
            <summary type="text">&amp;nbsp;நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். </p><p>இவ்வாறு கணவனின் தாக்குதலில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சித்ராதேவி என்ற மனைவியாவார்.</p><h2>குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு</h2><p>
</p><p>





குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தான் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி இந்த காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகநபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57809b54-a5de-4fce-8ff6-c0636722f430/26-6a940b420c6a4.webp' /></p><p> </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை பிரதேசவாசிகள் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><p>

</p><h2>நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்&nbsp;பிரேத பரிசோதனை</h2><p>உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரான கணவன் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e6cb0b-43ee-40b7-827e-5c1910074f65/26-6a940b42c0d44.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-the-victims-of-enforce-1788084756"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-the-victims-of-enforce-1788084756</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள் மற்றும் சம்பவங்களுடன் தொடர்புடைய வரலாற்று ஆவணங்கள் என்பன இன்றைய போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன.&nbsp;</p><p>குறித்த வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு - கிழக்கு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இன்று (30.08.2026)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p></p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்</h2><p>இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 

மாநாட்டு அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9419dcbf-574a-4b9d-b9a0-20c0bb566396/26-6a94070a88eca.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.&nbsp;</p><p>இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள்,
மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்,
மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி, உண்மை மற்றும்
பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த சர்வதேச மாநாடு முக்கியத்துவம்
பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிக்கு உரித்துடையவர்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-relatives-of-the-victims-of-enforced-1788086586"></link>
            <id>https://ibctamil.com/article/the-relatives-of-the-victims-of-enforced-1788086586</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார்.</p><p>


வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>

மேலும், அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது எனவும் கூறினார்.
</p><p>

இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வதற்கான வாய்ப்பும், கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><b>ஸ்மிரிதி சிங் உரை - 01.07.00</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது! யாழில் ஐ. நா பணிக்குழு உறுப்பினர் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/comment-from-a-member-united-nations-working-group-1788085959"></link>
            <id>https://ibctamil.com/article/comment-from-a-member-united-nations-working-group-1788085959</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><h2>மீள்நிகழாமைக்கான பயணம்</h2><p>
</p><p>“உண்மை, நீதி, மீள்நிகழாமைக்கான பயணத்தில் பெரும் எண்ணிக்கையான தாய்மார் பதிலை அறியாமலேயே உயிரிழந்துவிட்டனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04358945-9bb0-418b-89d6-ed20105ad234/26-6a940722b5270.webp' /></p><p>இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.


அச்செயன்முறைக்கு அவசியமான தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T10:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச உத்தியோகத்தரின் வீடு மீது தாக்குதல் : தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788084932"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788084932</id>
            <summary type="text">நெல்லியடியில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு ,
அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லியடியில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு ,
அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள்
சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு
காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின்
மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தி , வீட்டு வளாகத்தில்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களையும் குறித்த உள்ளூராட்சி
உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது.</p><p>

</p><h2>அரசியல் அழுத்தம் காரணம்…!</h2><p>இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக
அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி
பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர்
காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3223e8a1-633c-4334-98f5-0d796f121a78/26-6a9402c647e81.webp' /></p><p>

குறித்த நபரை காவல்துறை பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், காவல்துறை உயர்
அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T10:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;நீதிக்கான நீள்பயணம்&quot;யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735"></link>
            <id>https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ஆரம்பமாகியுள்ளது.</p><p>

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
</p><p>
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச ராஜதந்திரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மதத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/human-head-was-found-in-moratumulla-1788079176"></link>
            <id>https://ibctamil.com/article/human-head-was-found-in-moratumulla-1788079176</id>
            <summary type="text">கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக&amp;nbsp; 119 என்ற அவசர இலக்கத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக&nbsp; 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, மொரட்டுமுல்ல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
இன்று (30.08.2026) காலை சுமார் 8 மணியளவில் மரவேலைப் பட்டறையின் உரிமையாளர் ஒருவர் குறித்த மனித தலையை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.</p><p></p><h2>உடலற்ற மனிதத்தலை</h2><p> தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மரவேலைப் பட்டறையின் பின்புறம், ஆற்றங்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22577d2-a4f5-4008-8efd-836ce0f8b91a/26-6a93f38c8e890.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மொரட்டுமுல்ல காவல்துறையினர், காவல் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>மேலும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணியான திருமதி சந்தமாலி வருகை தந்து, சம்பவ இட ஆய்வு ஒன்றை நடத்தினார்.</p><p>ஆய்வின்படி மீட்கப்பட்ட மனித தலை மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அதனை விலங்குகள் தின்று சேதப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வுகளை புறம் தள்ளும் இலங்கை அரசு! வெளியாகிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-report-the-association-of-the-disappeared-1788085219"></link>
            <id>https://ibctamil.com/article/special-report-the-association-of-the-disappeared-1788085219</id>
            <summary type="text">டிசம்பர் 2010 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானம் 65/209 இன் கீழ் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று உலகளாவிய சமூகத்தால் அனுசரிக்கப்படவிருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிசம்பர் 2010 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானம் 65/209 இன் கீழ் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று உலகளாவிய சமூகத்தால் அனுசரிக்கப்படவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தை நோக்கி உலகம் நகரும் வேளையில், ஈழத்தமிழ் மக்கள் இன்னும் நீதி கிடைக்காமல் தொடர்ந்தும் போராடி வருகின்றோம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 
2009 இல் போர் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதில் எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில், அதில் மேலும் சில விடயங்களை பின்வருமாறு மையப்படுத்தியுள்ளது,&nbsp;</p><p>“பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் உள்ளதோடு, அவர்கள் இலங்கை அரசுப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. </p><p>இப்பகுதி முழுவதும் பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசு எவ்வித குறிப்பிடத்தக்க அல்லது நம்பகமான விசாரணைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதுடன், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளும் பயனற்றதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
</p><p>யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வுப் பணி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. </p><p>இன்றுவரை, கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட நபர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் கொடூரமான மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T08:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293"></link>
            <id>https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293</id>
            <summary type="text">துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
ராகம, படுவத்த - வல்பொல வீதியின் வீரரத்ன மாவத்தையில் மரமொன்றின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த துப்பாக்கி, T-56 ரக தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை செலுத்தக்கூடிய வகையில் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு</h2><p>

</p><p>விசாரணைகளில் மேலும் தெரியவருகையில், பாதாள உலகக் குழு உறுப்பினரின் உத்தரவின் பேரில் ஒருவரை கொலை செய்வதற்காக அவரது தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் வருகை தரும் வரை, குறித்த துப்பாக்கி மரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e08f564-22e3-4013-b837-81296cc68594/26-6a93dbaf0736a.webp' /></p><p>மேலும் துப்பாக்கிதாரி வருகை தந்து ஆயுதத்தை எடுத்துச் செல்லவிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக உயர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்&nbsp; மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் முடிவை மாற்றிய நேபாள அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803</id>
            <summary type="text">சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முடிவை மாற்றி உள்ளது.&nbsp;</p><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26.08.2026) ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>லடாக் பகுதியில் இமயமலைத் தொடரில் பனிப்பாறை ஒன்று சரிந்து நதியின் பாதையை அடைத்ததன் பின்னர், நீர்த்தேக்கம் உடைந்து பெருமளவான நீர் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்து நேபாளத்துக்குள் நுழைந்தமையே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முடிவை மாற்றிய நேபாள அரசு</h2><p>
ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b939300-8a8d-4e6a-8560-c10c236a3255/26-6a93e37eb7ff6.webp' /></p><p> </p><p>பெருமளவான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, ஆரம்பத்தில் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாள அரசு, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.</p><p> இதன்படி, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா ஏற்கனவே பெருமளவான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. </p><p>மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF-இன் பயிற்சி பெற்ற குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:03:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166"></link>
            <id>https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166</id>
            <summary type="text">மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது சவாலாக இருந்த நிலையில், அதற்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.</p><p></p><h2>அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்</h2><p>
</p><p>மேலும் அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்காக “இலங்கை மருத்துவ சேவை” என்ற புதிய சேவைப் பிரிவையும் சம்பளக் கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு அப்போது இணக்கம் எட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d70b1-ee4d-436e-b0ae-2fab5dcf39e1/26-6a93d14d6e76d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்குமான தனியான சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.</p><p>

எனினும், விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவர்களிடையே பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
</p><p>
ஒரு பிரிவுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளர்களுக்கான மருத்துவ சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த யோசனைக்கு தமது சங்கம் இணங்கவில்லை.
</p><p>
இந்நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றுள்ளது.</p><p> மேலும், விசேட வைத்தியர்களின் உபகுழுவின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.</p><p>

இந்தக் கூட்டத்தில் மருத்துவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றக்கூடிய “இலங்கை மருத்துவ சேவையை” உருவாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்' என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T06:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475"></link>
            <id>https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>சக கைதியால் தாக்கப்பட்ட கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலையில் பாதிக்கபட்ட கைதிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>காதை வெட்டிய சக கைதி</h2><p>
</p><p>குறித்த கைதி தற்போது காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e095ec9-ed1c-4703-8408-0b596d6d28f8/26-6a93c2d8a49a5.webp' /></p><p>மேலும் காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் கைதிகளுக்கிடையில் இந்த பிரச்சனை வந்ததது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:52:40+00:00</updated>
        </entry>
    </feed>
