<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-18T13:22:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-rajapaksa-set-to-be-deported-1789734914"></link>
            <id>https://ibctamil.com/article/basil-rajapaksa-set-to-be-deported-1789734914</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பல்வேறு குற்றவியல் வழக்குகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட கைது பிடியாணைகள் குறித்து முன்னிலையாப தவறியதன் காரணமாக அவருக்கு சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இந்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்று காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>INTERPOL உதவி</h2><p>லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருவதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரை இலங்கை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த INTERPOL உதவியையும், சிவப்பு அறிவிப்பையும் கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
மாத்தறை பகுதியில் காணி கொள்வனவு தொடர்பாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) தாக்கல் செய்துள்ள வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே இந்தக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவர் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும், குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தின் சட்ட விதிகளின் அடிப்படையிலும், வெளிவிவகார அமைச்சுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய கடிதப் பரிமாற்றங்களின் ஊடாகவும் நாடு கடத்தல் கோரிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சர்வதேச சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>

எவ்வாறாயினும், இந்த சர்வதேச சட்ட நடவடிக்கை தானாகவே கைது செய்வதற்கோ அல்லது அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கோ வழிவகுக்காது. </p><p>சம்பந்தப்பட்ட அமெரிக்க சட்ட நடைமுறைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படும் ஆதார ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
</p><p>
இத்தகைய உயர்மட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சர்வதேச அளவில் சட்ட நடைமுறையாக்க&nbsp; நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்: அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anojan-s-mother-makes-a-tearful-plea-president-1789732954"></link>
            <id>https://ibctamil.com/article/anojan-s-mother-makes-a-tearful-plea-president-1789732954</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர
நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர
நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து
வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன்
கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>

இவ் வழக்கு தொடர்பில் ஆரம்பத்தில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 3
மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன்
சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த சவூதி அரேபிய மேல்முறையீட்டு
நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கை</h2><p>

இத் தீர்ப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அனோஜனின் தாயார்,
"எனது மகன் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302da2c4-539f-487d-925e-833eb03bd3bc/26-6aad2b7ae7d49.webp' /></p><p> </p><p>எனினும் எனது தங்க
மகனை மன்னித்து, உயிருடன் மீட்டுத் தாருங்கள்" எனக் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இதேவேளை, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்காகச்
சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக
மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறிப்பாக சவூதி அரசிடம் கருணை மனுக்கோருவது தொடர்பிலும் உயர்மட்டப்
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T12:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-thiruvalluvar-cultural-center-hand-over-1789731985"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-thiruvalluvar-cultural-center-hand-over-1789731985</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக
உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாக நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக
உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.</p><p>நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (18)&nbsp; யாழ்ப்பாணம்
திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
</p><p>
நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும்
கலந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><p></p><h2>ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை நாடாளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன் நம்பிக்கை நிதியப் பொறுப்பு
சபையிடம் கையளிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a90cc47c-6b9d-48a4-877b-3ed4e0dd0ebe/26-6aad25eb150f2.webp' /></p><p>
</p><p>
மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.
மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல
சூரிய பிறின்ஸ் சேனாதீர, யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி, இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர்
சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.</p><p>
மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
சிறிசற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன்,
எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள்
கையாளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் : நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kumar-jayakumaran-s-request-sri-lankan-anojan-1789730411"></link>
            <id>https://ibctamil.com/article/kumar-jayakumaran-s-request-sri-lankan-anojan-1789730411</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை மறுபரிசீலனை செய்து, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ தேவையான சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை மறுபரிசீலனை செய்து, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ தேவையான சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத்திடம் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடன் இன்று (18.09.2026)காலை தொலைபேசி மூலம்
தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக
தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை
முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.
</p><p>
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த
சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில்
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும்
விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>குமார் ஜெயக்குமாரன்</h2><p> </p><p>இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/291572fd-2c6c-44e8-8427-755cf3d46f50/26-6aad22d6d2521.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான
மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும்
இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
</p><p>
அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின்
அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி
மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளை
மேற்கொண்டு, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், சாத்தியமான சட்ட
நடைமுறைகளின் ஊடாக தண்டனையை இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில்,
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும்
முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
</p><p>
அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி
அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை
விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை
விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதிகளில் நள்ளிரவு முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-for-all-expressway-passengers-1789711821"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-for-all-expressway-passengers-1789711821</id>
            <summary type="text">புதிய இணைப்புஅதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்க தீர்மானி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4535dacf-d319-4cd9-a2ea-e83bafc4e5c3/26-6aad224a70fed.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால சலுகைக் காலம் இன்றுடன் (18) முடிவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். </p><p>அதற்கமைய ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>&nbsp;</p><h2>நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1226a38d-129d-4ef4-94a1-210cef82c056/26-6aacdcfe09eee.webp' /></p><p>

ஆசனப் பட்டிகளை அணியாததால் வீதி விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன, இதன் காரணமாகவே இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p> 

அபராதம் விதிப்பதையோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை, சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p></p><h2>வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை</h2><p> </p><p>

குறிப்பாக வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும், ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம்.” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5ecf35-5c60-4140-b04c-e035e1adf5eb/26-6aacdcfd538dc.webp' /></p><p>

இதேவேளை, ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் தயாரிப்பாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருக்காததால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிது காலம் வழங்க வேண்டியிருந்ததாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். </p><p>

அவ்வாறான வாகனங்களில் ஆசனப் பட்டிகளைப் பொருத்திக் கொள்வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த இறுதிச் சலுகைக் காலமும் இன்றுடன் முடிவடடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்திரமடைந்துள்ள பொருளாதாரம் : இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-economic-progress-imf-praises-1789730318"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-economic-progress-imf-praises-1789730318</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாகவும், அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் இதனை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாகவும், அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் இதனை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயல்பாட்டு பிரிவின் தலைமை அதிகாரி இவான் பபகியோர்ஜியு உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று (17) சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் அதனைக் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நாட்டை மாற்றத்திற்கான புதிய கட்டத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவு</h2><p>
</p><p>
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவையும் வலுவான அடித்தளத்தையும் ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aec5030-2125-4021-8e0a-3d9a1c2eebff/26-6aad1fe1dddc5.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இலங்கை அண்மைக்காலத்தில் பதிவு செய்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தங்களது மதிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
மேலும், அரச வருமானத்தை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் உள்ளிட்ட விடயங்களில் கடந்த காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cK7K5AHP4m0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் சர்ச்சைக்குரிய கருத்து : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-directs-igp-to-probe-wimal-s-statement-1789728461"></link>
            <id>https://ibctamil.com/article/court-directs-igp-to-probe-wimal-s-statement-1789728461</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p> 

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p> </p><p>

இதனிடையே எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abac9af-0527-4e08-97da-1aa08847f8ff/26-6aad19a7112bc.webp' /></p><p> </p><p>

அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seizure-expired-food-items-legal-against-owner-1789727412"></link>
            <id>https://ibctamil.com/article/seizure-expired-food-items-legal-against-owner-1789727412</id>
            <summary type="text">கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும்
காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து
நேற்று முன்தினம் (16.09.2026) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.</p><p>

இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் அவசர உத்தரவிற்கமைய,
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த கடையில் திடீர்ச்
சோதனையை மேற்கொண்டனர்.</p><p></p><h2>அதிகாரிகளால் பறிமுதல் </h2><p>
</p><p>
இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை
ஏற்படுத்தக்கூடிய வகையில் காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு உணவுப் பொருட்கள்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல்
செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59b6fb9-d520-45bc-8b83-08a94efe2b52/26-6aad17fa2fc83.webp' /></p><p>
</p><p>
உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட
வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள
அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recruitment-of-graduates-to-the-slts-exam-results-1789724497"></link>
            <id>https://ibctamil.com/article/recruitment-of-graduates-to-the-slts-exam-results-1789724497</id>
            <summary type="text">பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் 
பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் 
பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் குறித்த பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p><p></p><h2>கல்வி அமைச்சு&nbsp;</h2><p>இவ்வாறு நியமிக்கப்படவுள்ள 23,344 பட்டதாரி ஆசிரியர்களில் சுமார் 15,000 வெற்றிடங்களை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் சுமார் 8,000 வெற்றிடங்கள் திறந்த அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d839b0-ea88-461f-a036-33211e065029/26-6aad1477d0d40.webp' /></p><p>மேலும் இந்த ஆட்சேர்ப்பிற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>அத்துடன் ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-lands-in-mannar-sold-using-forged-documents-1789724864"></link>
            <id>https://ibctamil.com/article/govt-lands-in-mannar-sold-using-forged-documents-1789724864</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை
விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,
காணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை
விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில்,
காணிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு மன்னார் பிரதேச செயலகத்தினால் விசேட அறிவுறுத்தல்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அரச காணி என அறியாமல் போலி ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதைத்
தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>அதற்கமைய காணி கொள்வனவு செய்வதற்கு முன்னர் குறித்த காணி மற்றும்
அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் உண்மையானவையா என்பதை மன்னார் பிரதேச செயலகத்தின்
ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac3e7d9-dab9-4a64-aec9-f42c2d9af733/26-6aad0b413ea65.webp' /></p><p>
</p><p>
காணி கொள்வனவு செய்வோர் உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே கொள்வனவு
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-youth-sentenced-to-death-in-saudiarabia-1789722725"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-youth-sentenced-to-death-in-saudiarabia-1789722725</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையை இரத்துச் செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையை இரத்துச் செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (18) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞன் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p></p><h2>வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை</h2><p> </p><p>

அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18d138c0-eee3-4966-b86f-8fe17414ab0d/26-6aad037389473.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்கும், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T09:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/old-woman-who-had-gone-missing-found-the-body-1789719139"></link>
            <id>https://ibctamil.com/article/old-woman-who-had-gone-missing-found-the-body-1789719139</id>
            <summary type="text">தனமல்வில, 21ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து காணாமல் போன 96 வயதுடைய பெண்ணின் சடலம் 17 நாட்களுக்குப் பின்னர் சாகினிவெவ பகுதியில்&amp;nbsp; கண்டெடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனமல்வில, 21ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து காணாமல் போன 96 வயதுடைய பெண்ணின் சடலம் 17 நாட்களுக்குப் பின்னர் சாகினிவெவ பகுதியில்&nbsp; கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சடலம் சாகினிவெவில் உள்ள குளத்து பாதுகாப்புப் பகுதியில் நேற்று (17.09.2026) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
குறித்த பெண் கடந்த 1ஆம் திகதி வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் அவரது பிள்ளைகள் தனமல்வில தலைமையக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;96 வயதுடைய முதாட்டி</h2><p>
</p><p>
பெண்ணைத் தேடும் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்திருந்த போதிலும், அவரைத் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730e6a4f-05a8-494f-bcf7-c933bff255de/26-6aacfc9e450b6.webp' /></p><p>இந்நிலையில், நேற்று முற்பகல் சாகினிவெவ குளத்து பாதுகாப்புப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற சிலர் பெண்ணொருவரின் சடலத்தைக் கண்டுள்ளனர்.</p><p>பின்னர் அவர்கள் இது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.</p><p>

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தனமல்வில காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போயிருந்த 96 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து குறித்த பெண் வசித்து வந்த வீடு சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>சிறிகல வைத்தியசாலை</h2><p>
</p><p>
பெண் காணாமல் போய் 17 நாட்களுக்குப் பின்னர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a31246-337c-4f1d-9dfc-856e21e3dd67/26-6aacfc9f02276.webp' /></p><p>

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வெல்லவாய நீதவான், நீதவான் விசாரணையை மேற்கொண்டதுடன், சடலத்தை மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து, மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இதையடுத்து மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் மொனராகலை சிறிகல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் மகன் தனது தாயின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> தனது தாயார் குறித்த பகுதிக்குச் செல்வதற்கான எந்தவொரு தேவையும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனினும், பெண்ணின் மரணத்துக்கான காரணம் அல்லது சம்பவத்தில் ஏதேனும் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>இது தொடர்பில் தனமல்வில தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T08:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/np-department-of-local-govt-important-announcement-1789716172"></link>
            <id>https://ibctamil.com/article/np-department-of-local-govt-important-announcement-1789716172</id>
            <summary type="text">உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்கள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்கள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p> 


மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகார எல்லைக்குள், மாநகர முதல்வர்/தவிசாளரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாது எவரேனும் ஆளினால் பகிரங்க இடங்களிலிருந்து பார்க்கும் போது புலப்படக்கூடியதாக எந்தவொரு விளம்பர அறிவித்தல்லையும் காட்சிப்படுத்தவோ காட்சிக்கு வைக்கவோ கூடாது என நியமத்துணைவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

எனினும் உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் நியமத்துணைவிதிகளுக்கு அமைய அனுமதி பெற்றுக்கொள்ளாது விளம்பர அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்</h2><p>
</p><p>
இந்த நிலையில் அதிகார எல்லைக்குள் விளம்பர அறிவித்தல்களையும் காட்சிப்படுத்துவதற்காக தங்களுக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கான உரிமப்பத்திரங்களை நியமத்துணைவிதிகளில் கூறப்பட்ட நிபந்தனைகளை அமைவாக வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d655047f-5051-45ac-8a05-858ec431e54b/26-6aacef4bb4438.webp' /></p><p>
</p><p>
மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட விளம்பரப்பலகையில் காலத்திற்கு காலம் விளம்பரங்கள் மாற்றப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்ற போது அவ்விளம்பரங்கள் தொடர்பில் உரிய முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விளம்பர மாதிரி அமைவிட மாதிரி பெறப்பட்டு உறுதிப்படுத்தி அவற்கான உரிமம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சபையால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரமின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல விளம்பர அறிவித்தல்களையும், உரிமம் வழங்கப்பட்ட காலம் முடிவடைந்த விளம்பரங்களையும் மேற்படி நியமத்துணைவிதிகளுக்கு அமைவாக 30.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையிடுமாறும் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jewelry-and-cash-lost-in-mannar-1789716103"></link>
            <id>https://ibctamil.com/article/jewelry-and-cash-lost-in-mannar-1789716103</id>
            <summary type="text">முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் குறித்த பணப்பையை சாரதி முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துநர் டெனிஸ் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.</p><p>

பணப்பையில் தேசிய அடையாள அட்டை, தங்கச் சங்கிலி மற்றும் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் இருந்த நிலையில், அவை மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி. ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>போக்குவரத்து அதிகார சபை</h2><p>
</p><p>
பின்னர் பணப்பையின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6645b531-8475-4688-b2da-ce23529ddca9/26-6aaceb703c567.webp' /></p><p>

சாரதி மற்றும் நடத்துநரின் இந்த முன்மாதிரியான செயலைப் பாராட்டும் வகையில், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கௌரவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாரதி மற்றும் நடத்துநரை கௌரவித்தனர்.</p><p>

பொதுமக்களின் நம்பிக்கையையும் நேர்மையான சேவையையும் ஊக்குவிக்கும் வகையில், இவ்வாறான முன்மாதிரியான செயல்களில் ஈடுபடுவோர் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:43:37+00:00</updated>
        </entry>
    </feed>
