<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-17T18:47:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் முடங்கும் கப்பல் போக்குவரத்து...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-traffic-drops-in-strait-of-hormuz-1786986984"></link>
            <id>https://ibctamil.com/article/ship-traffic-drops-in-strait-of-hormuz-1786986984</id>
            <summary type="text">கடந்த வாரத்தில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து 19.5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்லர் (Kpler) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரத்தில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து 19.5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கெப்லர் (Kpler) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.</p><p>

ஆகஸ்ட் பத்தாம் திகதியுடன் தொடங்கிய வாரத்தில் மொத்தம் 95 கப்பல்கள் மட்டுமே இந்தக் கடல் வழியைக் கடந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 16 அன்று இந்த எண்ணிக்கை வெறும் மூன்றாகச் சரிந்தது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>கண்காணிப்புக் கருவி</h2><p>

கப்பல்கள் இந்த நீரிணையின் ஈரானியப் பகுதி அல்லது வரைபடத்தில் இல்லாத மாற்று வழிகளைப் பயன்படுத்தியதாகவும் அதேவேளையில் ஹோர்முஸ் TSS அல்லது ஓமன் வழிகள் வழியாக எந்தக் கப்பல்களின் பயணமும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு இப்பராந்தியத்தின் மற்றொரு முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80ee094-0479-42d9-b5ab-62ff011fa2ac/26-6a834e06990f9.webp' /></p><p>

இதனடிப்படையில் அப்பகுதியில் நிலையற்ற பாதுகாப்புச் சூழல் நிலவியபோதிலும் அதைக் கடந்து சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 6.7 வீதம் அதிகரித்து 254 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளையில் கண்காணிப்புக் கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகப் பயணித்த (Dark transits) கப்பல்களின் எண்ணிக்கை 40-லிருந்து 16 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T18:08:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துயரம்: உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் திடீரென உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-writing-a-l-exams-dies-in-jaffna-1786989961"></link>
            <id>https://ibctamil.com/article/student-writing-a-l-exams-dies-in-jaffna-1786989961</id>
            <summary type="text">யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக
உயிரிழந்தார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த
திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக
உயிரிழந்தார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த
திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சைக்கு தோற்றியபோது
மயக்கமடைந்துள்ளார். இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p><h2>&nbsp;வலிப்பு ஏற்பட்டு மரணம்</h2><p>சிகிச்சையின் பின் வீடு திரும்பினார். அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி
உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72068fd3-0264-403e-9bba-cb906d4de8dc/26-6a834d8c0a1ac.webp' /></p><p>
</p><p>
பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p>அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T18:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது நாளாகக் களைகட்டிய யாழ். உணவுத் திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-culture-and-food-fest-2026-held-1786984003"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-culture-and-food-fest-2026-held-1786984003</id>
            <summary type="text">“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p> 

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்று (17-08-2026) வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>
</p><p></p><h2>பாரம்பரிய உணவுகள்&nbsp;</h2><p>இந்தநிலையில், இன்று (17-08-2026) குறித்த திருவிழா நிகழ்விற்கு றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) வருகை தந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23306f6-4817-4826-a11d-0660ca4ee299/26-6a83405c7cdac.webp' /></p><p>
நிகழ்வில் வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய கலை மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லும் முயற்சியாக இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T17:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் : ட்ரம்ப் விதித்துள்ள நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-iran-surrender-under-a-white-flag-1786980276"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-iran-surrender-under-a-white-flag-1786980276</id>
            <summary type="text">வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

 ஈரான் சரணடைவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

 ஈரான் சரணடைவதற்கு காலக்கெடு ஏதும் இல்லை. நான் அவசரப்படவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத்தடை ஈரான் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.</p><h2>ஓமான் - ஈரான் இடையே ஒப்பந்தம்</h2><p>இதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக ஓமான் - ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஈரான் ஒட்டிய கடல் பரப்பு வழியாக கப்பல்கள் உள்ளே நுழையவும், ஓமான் அருகிகேயுள்ள கடல் பரப்பு வழியாக வெளியேறவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97420b3d-6220-425b-bfca-d08599ad5894/26-6a83312944196.webp' /></p><p>
</p><p>

இந்த நிலையில் தங்கள் தரப்பின் பங்களிப்பு இல்லாமல், ஈரான் - ஓமான் ஒப்பந்தம் செய்தது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>ஓமான் மீது தாக்குதல் நடத்துவோம்</h2><p>
</p><p>

 ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தலையிட்டால் ஓமான் மீது தாக்குதல் நடத்துவோம் என&nbsp;அவர் எச்சரித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8addb6c4-3e17-4b2d-80d7-a5f4b126bd31/26-6a833129e96fe.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:41:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்கரையிலும் ஆணின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mans-body-recovered-from-mannar-beach-1786983185"></link>
            <id>https://ibctamil.com/article/mans-body-recovered-from-mannar-beach-1786983185</id>
            <summary type="text">&amp;nbsp;தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய
கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய
கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண்
ஒருவரின் சடலம் மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று
திங்கட்கிழமை (17) காலை கரை ஒதுங்கியுள்ளது.</p><p>&nbsp;கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் சடலத்தை இன்று
திங்கட்கிழமை (17) காலை அவதானித்து தலைமன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய
நிலையில் தலைமன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை
மீட்டுள்ளனர்.</p><h2>&nbsp;மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம்&nbsp;</h2><p>
</p><p>
சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டுள்ளதுடன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c7b14f-533a-4a46-b903-4bdf263c4fae/26-6a83395cbbad9.webp' /></p><p>
</p><p>
 சடலம் தொடர்பாக தலைமன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக அரசியலில் பரபரப்பு : விஜயுடன் நிரந்தரமாக கூட்டணி அமைக்கிறார் திருமாவளவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alliance-with-tavega-visika-1786976762"></link>
            <id>https://ibctamil.com/article/alliance-with-tavega-visika-1786976762</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்</h2><p>மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், "இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம்.

விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aec7766-1035-453e-afb0-26c78257ebf8/26-6a831f2079379.webp' /></p><p> சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என திருமாவளவன் பேசினார்.</p><p></p><h2>திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு</h2><p>

விசிக-தவெக கூட்டணியின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96435867-86b2-4a54-90ec-b06686b0366a/26-6a831f214a241.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T14:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பில்லியன் டொலர்கள் சட்டவிரோத பரிமாற்றம்! கைதான வங்கி மேலாளர்களுக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698"></link>
            <id>https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698</id>
            <summary type="text">




புதிய இணைப்புவெளிநாடுகளுக்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, நான்கு மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><h3>புதிய இணைப்பு</h3><p>வெளிநாடுகளுக்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, நான்கு முக்கிய தனியார் வங்கிகளின் நான்கு மேலாளர்களை, ஓகஸ்ட் 20-ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>
</p><p>
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c01596-8d32-4b74-b464-0f6901707050/26-6a82c2f463e67.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T14:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-of-man-washed-ashore-on-batticaloa-beach-1786974244"></link>
            <id>https://ibctamil.com/article/body-of-man-washed-ashore-on-batticaloa-beach-1786974244</id>
            <summary type="text">மட்டு பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டு பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தம்மை
 நாடுமாறு காவல்துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>சடலத்தை கண்ட கடற்றொழிலாளர்கள்</h2><p>குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற
கடற்றொழிலாளர்கள் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு
காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8975437c-e87f-440a-beab-a617891b1f2d/26-6a83122bb443e.webp' /></p><p>&nbsp;இதனையடுத்து காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை
வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் 
இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு
பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாசிக்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொம்பனித்தெரு முருகன் ஆலய நகைகள் கொள்ளை! தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slave-island-kovil-theft-travel-ban-on-priest-1786972825"></link>
            <id>https://ibctamil.com/article/slave-island-kovil-theft-travel-ban-on-priest-1786972825</id>
            <summary type="text">



கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆலயத்தின் தலைமை அர்ச்சகருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.
</p><p>
சதீஸ்வரன் குருக்கள் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறித்த அர்ச்சகர் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு கொட்டாஞ்சேனையில் உள்ள புதுச் செட்டித்தெரு பகுதியல் சொத்து ஒன்றை வாங்கியுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போன கோயிலின் மதிப்புமிக்க நகைகளைக் கண்டறியவும், பெறப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்து குறித்து ஆய்வு செய்யவும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a5907f-85ed-4b39-92f8-caa2c01e4554/26-6a830dfb3c3d1.webp' /></p><p>
</p><p>
அத்துடன் தலைமறைவாக உள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:34:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்! நிர்வாகப் பிரச்சினையை இனவாத அரசியலாக்க வேண்டாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவை விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட வேண்டிய ஒரு நிர்வாக விடயமாகும்.
</p><p>
குறித்த சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை என்ன, அது எந்தப் பணியாளர்களுக்கு பொருந்துகின்றது, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவற்றை சுகாதார அமைச்சு மட்டத்தில் உரிய முறையில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தெளிவானதும் நியாயமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
</p><p>

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள், கலாசார மரபுகள் மற்றும் அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். எந்தவொரு சமூகமும் தனது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் மதிப்புடன் வாழ்வதற்கும் உரிமையுடையது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.</p><p></p><h2>சட்டபூர்வமான விதிமுறை</h2><p>
</p><p>
அதேவேளை, அரச சேவையில் குறிப்பிட்ட பதவிகளுக்கு சீருடை தொடர்பான சட்டபூர்வமான விதிமுறைகள் இருந்தால், அந்த விதிமுறைகள் மதம் அல்லது இனம் பாராமல் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.</p><p></p><p>
</p><p>
எனவே, இந்த விவகாரத்தை “தமிழர்களுக்கு எதிரானது” அல்லது “முஸ்லிம்களுக்கு எதிரானது” என்ற இன, மத மோதலாக மாற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
</p><p>
அத்தோடு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணனையும், அவரது குடும்பத்தினரையும் இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தனிநபர் அவதூறுகள் மற்றும் சமூகத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
</p><p>
நீண்டகால அனுபவமுள்ள ஒரு அரச வைத்திய அதிகாரியின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை உரிய நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளின் ஊடாக முன்வைக்க வேண்டும். </p><p>அவரது குடும்பத்தினரை இதில் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஷ் குறித்த வைத்திய அதிகாரி ஒரு உளவு அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார் என்ற சந்தேகத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படும் கருத்து மிகவும் பாரதூரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.</p><p> இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவை உரிய சட்ட மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதாரமின்றி ஒரு அரச வைத்திய அதிகாரியை இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்துவது பொறுப்பான அரசியல் அணுகுமுறை அல்ல.</p><p>&nbsp;கல்முனையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களிலும் பல நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சைகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>கல்முனைத் தமிழ் மக்களின் உரிமைகள் </h2><p>
</p><p>
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், கல்முனை உப கல்வி வலய விவகாரம், கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பான விவகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான வர்த்தமானி உள்ளிட்ட பல விடயங்களில் கல்முனை தொடர்பான நிறுவனங்களும் நிர்வாக அமைப்புகளும் தொடர்ச்சியாக அரசியல் விவாதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இந்தப் பின்னணியில், கல்முனையில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான ஒவ்வொரு விவகாரமும் தொடர்ச்சியாக அரசியல் சர்ச்சையாக மாற்றப்படுவதன் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.
</p><p>
குறிப்பாக, இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் கல்முனைத் தமிழ் மக்களின் நிர்வாக, கல்வி, உள்ளூராட்சி மற்றும் நிறுவன ரீதியான உரிமைகள் படிப்படியாக பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் திட்டமிட்ட அணுகுமுறை முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.</p><p>

இந்த சந்தேகங்கள் உண்மையா இல்லையா என்பதை ஆவணங்களும் அரச நிர்வாகத் தீர்மானங்களுமே நிரூபிக்க வேண்டும். எனவே, இதனை உணர்ச்சிப்பூர்வமான இனவாத விவாதமாக மாற்றாமல், ஒவ்வொரு விடயத்திலும் சட்டம், வர்த்தமானி, அரச சுற்றறிக்கை மற்றும் நிர்வாக நடைமுறைகள் என்ன கூறுகின்றன என்பதை வெளிப்படையாக ஆராய வேண்டும்.
</p><p>
கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற அனைத்து சமூகங்களுக்கும் சேவை வழங்கும் முக்கியமான அரச சுகாதார நிறுவனத்தின் பெயரை தொடர்ச்சியாக தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதும், அதன் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் மக்களின் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.</p><p></p><p><b>எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது</b></p><p>அரச சுற்றறிக்கை இருந்தால் – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p></p><p>

விதிமுறையில் தெளிவின்மை இருந்தால் – அமைச்சு மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
நிர்வாகத் தவறு இருந்தால் – உரிய விசாரணை நடத்த வேண்டும்.</p><p>

அநீதி இருந்தால் – தீர்வு வழங்க வேண்டும்.
</p><p>
முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாசார உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

தமிழ் மக்களின் நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான உரிமைகளையும் நாம் பாதுகாப்போம்.
</p><p>
ஒரு சமூகத்தின் உரிமையைப் பாதுகாப்பது மற்றொரு சமூகத்தின் உரிமைக்கு எதிரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, சீருடை விவகாரத்தை இனவாத மோதலாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, அரச விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைய நியாயமான தீர்வை காண வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு தப்பி ஓடும் குற்றவாளிகள் : வடக்கு கடற்பரப்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-northern-sea-border-is-being-tightened-1786971563"></link>
            <id>https://ibctamil.com/article/security-northern-sea-border-is-being-tightened-1786971563</id>
            <summary type="text">இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து&amp;nbsp; தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, வடக்கு கடல் எல்லையில், குறிப்பாக பாகிஸ்தான் நீரிணை நெடுகிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, வடக்கு கடல் எல்லையில், குறிப்பாக பாகிஸ்தான் நீரிணை நெடுகிலும், பாதுகாப்பு வலையை பலப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
பல குற்றவாளிகள் மன்னார் கடல் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் தப்பிச் சென்று, அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>படகில் தப்பிச் சென்ற வத்தளை கொலை சந்தேக நபர்கள்</h2><p>இதற்கிடையில், சமீபத்தில் வத்தளையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள், மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce170711-1336-4010-80d0-2daab36d8c5a/26-6a830a515f249.webp' /></p><p>
</p><p>
நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் அவர்களை மேலதிக விசாரணைக்காக கொழும்பு வடக்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

</p><h2>&nbsp;தப்பித்தல்களை தடுக்க வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு</h2><p>சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் நடைபெறும் இதுபோன்ற தப்பித்தல்களைத் தடுப்பதற்காக, வடக்கு கடற்படை கட்டளையகமும் பாதுகாப்புப் படைகளும் தற்போது சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e3b901-8293-40db-9af5-d2672f409d6a/26-6a830a5212bbe.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:19:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 35 வருடங்களுக்கு அனுரவை அசைக்கவே முடியாது : பாதுகாப்பு பிரதியமைச்சர் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-will-be-no-rival-for-anura-another-35-years-1786968568"></link>
            <id>https://ibctamil.com/article/there-will-be-no-rival-for-anura-another-35-years-1786968568</id>
            <summary type="text">&amp;nbsp;ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>

ஜனாதிபதியின் அறிவையும், நாட்டின் மீதான அவரது எல்லையற்ற அர்ப்பணிப்பையும் பாராட்டிய அமைச்சர், மக்கள் அவரை ஒரு மாபெரும் ஜனாதிபதி என்று அழைப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் ரீதியாக போட்டியிடக்கூடிய தலைவர் எவருமில்லை</h2><p>&nbsp;அடுத்த 25, 30 அல்லது 35 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியுடன் அரசியல் ரீதியாகப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய தலைவர் யாராவது இருக்கிறாரா என்பதைக் காட்டுமாறு எதிர்க்கட்சிக்கு அமைச்சர் சவால் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f6f73b-05d0-47b1-a33c-fbb1ecb79399/26-6a83045315ea7.webp' /></p><p> </p><p>தற்போது அப்படிப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்றும், ஜனாதிபதியின் அரசியல் பயணம் மிகவும் வலிமையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலிமையான மக்கள் தளத்தின் முன் எதிர்க்கட்சி முற்றிலும் பலவீனமடைந்துள்ளது என்று அருண ஜெயசேகர தெரிவித்தார்.</p><p></p><h2>நாடாளுமன்ற இருக்கைக்குள் முடங்கிய எதிர்க்கட்சியினர்</h2><p>

நாம் அமைத்துள்ள இந்த மாபெரும் மக்கள் அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்துவிட்டோம்? அவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் இருக்கைகளுக்குள் முடக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் அவர்களுக்கு இனி அரசியல் என்பதே இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ffd50f-7a78-480f-af5f-915677fdf691/26-6a830453bdedf.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T12:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-lord-basik-s-dubai-gold-business-1786943516"></link>
            <id>https://ibctamil.com/article/drug-lord-basik-s-dubai-gold-business-1786943516</id>
            <summary type="text">துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக அறியப்படும் ஷிரான் பாசிக் செய்த பெரும் குற்றங்கள் மற்றும் உள்நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக அறியப்படும் ஷிரான் பாசிக் செய்த பெரும் குற்றங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும், சட்டவிரோத சொத்துக்கள் பிரிவும் விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
</p><p>
இந்த விசாரணைகள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p> 

இதற்காகப் பல விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையில் மட்டும் அவருடைய சொத்துக்களின் மதிப்பு 100 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.</p><p></p><h2>20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்</h2><p> 

மேலும், அவர் ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நிலங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பல உயர் மதிப்புள்ள சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43732064-6c2c-4212-9281-88dee72e0234/26-6a82a2dcaf643.webp' /></p><p>
</p><p>
 தெஹிவளை மற்றும் கல்கிசை&nbsp; கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர் ஷிரான் பாசிக் என்பது தற்போது தெரியவந்துள்ளது.</p><p>கடற்கரையில் 20 ஹோட்டல்கள், இந்த நாட்டில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களின் பின்னணி, துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கக் கடைகள் என இவரது குற்றப்பட்டியல் நீண்டுள்ளது.</p><p> </p><p>

இருப்பினும், ஷிரான் பாசிக் இந்தச் சொத்துக்கள் அனைத்தையும் மற்றவர்களின் பெயர்களில் வாங்கி, அவர்களின் உதவியுடன் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
 மேலும், இந்தக் கடத்தல்காரர் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல தங்கக் கடைகளையும், வேறு பல வணிகங்களையும் நடத்தி வருகிறார் என்ற தகவல் விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது.</p><p></p><h2>கொக்கைன் கடத்தல்</h2><p> </p><p>

தாய்லாந்தில் நடைபெறும் கொக்கைன் கடத்தல் தொழிலில் ஷிரான் பாசிக் ஒரு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c090c9-d13f-45c6-aa4f-95c24506315e/26-6a82a2dd627fd.webp' /></p><p> 

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்யும்போது, ​​பெரும்பாலும் திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுவது அவனது குணம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
</p><p>
 ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற வணிகங்கள், குற்றச் செயல்கள் என அனைத்திலும், பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் ஒருவராக, போதைப்பொருள் கும்பலிலும் குற்றவாளிகள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். </p><p>

ஷிரான் பாசிக்கின் மகன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பெயரில் பெருமளவு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
 ஷிரன் பாசிக்கிற்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு முன்னதாகவே நடவடிக்கை எடுத்திருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன</p><p>.

தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேரக் தடுப்புகாவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
</p><p>
தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான பிறகு, அவர்கள் விசாரணைக்காக 90 நாட்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p>

தெஹிவளையின் கலுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் தொழிலாளியாக தனது முதல் வேலையைச் செய்தார்.
</p><p>
அவர் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>துபாய் காவல்துறையினரால் இரண்டு முறை கைது</h2><p>
</p><p>
2018-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்ற ஷிரான் பாசிக், அதன் பின்னர் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.</p><p></p><p>
</p><p>
அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் பெரிய அளவிலான வணிகத்தை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இலங்கைக்கு மொத்தமாக போதைப்பொருட்களைக் கடத்தும் ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான இவர், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார்.</p><p>

அவர் துபாய் காவல்துறையினரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். 

ஒருமுறை, அன்டியல் (Undial) சேவை மூலம் 100,000 திர்ஹாம்களை வெளிநாட்டிற்கு அனுப்பியதற்காகவும், மற்றொரு முறை, ஒரு ஹோட்டலில் நடந்த சண்டைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். </p><p>

இருப்பினும், இந்த இரண்டு முறையும், அவர் பெரும் தொகையைச் செலவழித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து, துபாயில் இருந்த பல இலங்கைக் குற்றவாளிகள், ஈரானுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
மே 21 அன்று, துபாய் மீதான ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகளையும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஷிரான் பாசிக் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஷிரான் பாசிக், கிட்டத்தட்ட 3 மாதங்கள் அந்நாட்டு காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 14ஆம் திகதி இரவு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
ஷிரான் பாசிக் அதே இரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 கட்டுநாயக்கவில் அவர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், இலங்கைக்கு வந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
</p><p>
துபாய் நாட்டில் காவலில் இருந்தபோது, ​​அங்குள்ள காவல்துறையினருக்குப் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து, காவலில் இருந்து தப்பிக்க அவர் ஒரு தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:47:55+00:00</updated>
        </entry>
    </feed>
