<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T15:46:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்வதற்கு விருப்பமில்லை: யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855"></link>
            <id>https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404"></link>
            <id>https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட்டு மரண்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இவ்வாறு (01) வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபரை அவரது வழக்கறிஞர் றொசான் தெகிவள சந்தித்துள்ளார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp;</h2><p>இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்காக முன்னிலையான வழக்கறிஞர் றொசான் தெகிவள, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.</p><p>
</p><p>


</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9656df21-9f89-4d43-aaf6-8943addff404/26-6a6e0b7670fec.webp' /></p><p>அதன்படி, அடுத்த வாரம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p></p><h2>பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை&nbsp;</h2><p>

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d20657-50dc-429e-ab69-ed9e33ce5b62/26-6a6e0b77284c6.webp' /></p><p>
</p><p>
பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதிக்கு மீண்டும் பூட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-raja-rajeshwari-amman-road-closed-again-1785585781"></link>
            <id>https://ibctamil.com/article/palali-raja-rajeshwari-amman-road-closed-again-1785585781</id>
            <summary type="text">இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மூடப்பட்டது.
</p><p>
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி
மக்களின் காணியூடாக தற்காலிக பாதையூடாகவே செல்லும் வகையில் திறக்கப்பட்டதுடன்
நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது.</p><h2>தற்காலிகமாக திறக்கப்பட்டநிரந்தர பாதை</h2><p>எனினும் சில நாட்களில் அப்பகுதியில் உள்ள
மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்ததால் மக்கள் ஆலயத்துக்கு
செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ca06d8-103e-4f4f-80da-0f32eac39cb4/26-6a6df3052aef3.webp' /></p><p>

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப் பினர்
இளங்குமரனிடமும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து இராணுவத்தினருடன்
கலந்துரையாடியதையடுத்து நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.இதையடுத்து
ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் வீதியால் செல்ல
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p>இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருவிழா முடிந்த நிலையில்
நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.</p><h2>இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு</h2><p>
</p><p>

இதேவேளை பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள்
நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09285bc-dfcd-4139-b558-3aa08f5c416a/26-6a6df304763b6.webp' /></p><p>
</p><p>
ஆலயத் திருவிழாவிற்காக தற்காலிக திறக்கப்பட்ட குறித்த பாதையானது நேற்றையதினம்
மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை எமது செய்தியாளர்
தொடர்புகொண்டு வினவியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><p>

</p><h2>&nbsp;காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை</h2><p>கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக
தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது. குறித்த பாதையானது நிரந்தரமாக
திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/976095dc-e669-404a-8c90-f149877ba043/26-6a6df305d1a31.webp' /></p><p>
</p><p>அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.

மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள
பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என்றார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம் : படையினர் மீது கற்களால் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்பு&amp;nbsp;மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு</h2><p>&nbsp;மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>&nbsp;கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் காவல்துறைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றனர்.
</p><p>
</p><h2>கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் சில அடிகள் முன்னேறி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba6c93d-9603-4ad2-82a8-43a83dce0c0d/26-6a6e03517db52.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>இன்று பிற்பகல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் இன்னும் அப்பகுதியில் தங்கியுள்ளனர்.</p><h2>காவல்துறையின் தீயணைப்பு வாகனம்&nbsp;</h2><p>அப்பகுதிக்கு காவல்துறையின் தீயணைப்பு வாகனம் வருகை தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8a20fe-c497-40f7-881d-3fb24f6bf153/26-6a6e0043ef0d2.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p>

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. </p><p>



நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>கைதிகள் வைத்த தீ</h2><p> </p><p>

 கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b78bead-8a1e-4b5d-a5af-2574a0ccb545/26-6a6df6ae7c9d9.webp' /></p><p> </p><p>

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p>

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரபூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.</p><p>

சிறைக்குள் நிலவும் சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பல சிறப்பு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
</p><p>
சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது; அமைதியைப் பேணுவதற்கும், எந்தவொரு பதற்றமும் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படை (STF) நிறுத்தப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2489e9b8-dd1e-4d19-9ddd-8e6836ef8c45/26-6a6de39380103.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gce-al-tuition-classes-banned-midnight-august-04-1785591879"></link>
            <id>https://ibctamil.com/article/gce-al-tuition-classes-banned-midnight-august-04-1785591879</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நள்ளிரவுக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனத் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும்.</p><h2>யூக கேள்வி வினாத்தாள்களை வெளியிடக்கூடாது</h2><p>அந்தக் காலகட்டத்தில், உயர்தர பரீட்சைக்கான யூகக் கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1eaf953-67b6-45d4-b5e0-5fa3ba4d3109/26-6a6dfe6c536c4.webp' /></p><p>
</p><p>
மேலும், பரீட்சை வினாத் தாள்களுக்குக் கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என்று குறிப்பிடும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சு ஊடகங்களை வெளியிடுவதோ அல்லது அதுபோன்றவற்றை வைத்திருப்பதோ கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை, ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05, 2026 வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-incident-reported-in-rathmalana-1785586948"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-incident-reported-in-rathmalana-1785586948</id>
            <summary type="text">இரத்மலானையில் உள்ள கந்தாவல வீதியில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானையில் உள்ள கந்தாவல வீதியில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>

காவல்துறை தகவலின்படி, 
முச்சக்கரவண்டியில் வந்தவர்மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.</p><h2>களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
காயங்களுடன் ஆரம்பத்தில் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த படுகாயமடைந்தவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7a9242c-3cd2-48d4-a550-38389c57a491/26-6a6de77fbac87.webp' /></p><p>

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளதோடு, சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T12:33:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் - ஹேமசிறி மரணதண்டனை trailer சரி... கோட்டா மெயின் பிக்சர் எப்போது...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-verdict-death-for-ex-officials-1785586486"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-verdict-death-for-ex-officials-1785586486</id>
            <summary type="text">சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு ட்ரையல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு ட்ரையல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியின் அதிர்வுகள், ராஜபக்ச அல்லக்கை முகங்களின் வாய்களை அசைபோட வைக்கின்றன.
</p><p>
2019 ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்தில் நேற்று இந்தத் தீர்ப்பைப் பெற்ற இருவரும், இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவைத் தமது விதியை நொந்தபடி உண்டிருக்கக்கூடும்.
</p><p>
இனி இந்த இருவருக்கும் ரணில் - சுரேஷ் சாலே பாணியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய சடுதி நோய் பீடிப்புகள் வராதிருக்கக் கடவதாக அதுபோல மேன்முறையீட்டில் இவர்களுக்குப் பிணை கிட்டாது என்ற நம்பிக்கையும் அதிகம் இல்லாதிருக்கக் கடவதாக.
</p><p>
ஆனால், முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் சார்ந்த இந்தத் தீர்ப்புகளுக்குப் பின்னர் வரக்கூடிய அடுத்த கட்டத் தீர்ப்புகள், அதிலும் இந்தத் தாக்குதலைத் தந்திரமாக அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி 2019 அரசதலைவர் தேர்தல் வெற்றிக்கான சதித்திட்டத்தைச் செய்தவர்கள் குறித்த தீர்ப்புகள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என ஊகிக்கப்படும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6RhN3uU2aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விசாரணையை புறந்தள்ளும் இலங்கை அரசாங்கம்: அம்பலமாகும் உண்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmanicase-dnatest-british-tamil-forum-ravikumar-1785584517"></link>
            <id>https://ibctamil.com/article/chemmanicase-dnatest-british-tamil-forum-ravikumar-1785584517</id>
            <summary type="text">செம்மணி மனித புதைக்குழி குறித்த விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இலங்கை அரசாங்கம் தயாராகவில்லை என&amp;nbsp;பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநித...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைக்குழி குறித்த விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இலங்கை அரசாங்கம் தயாராகவில்லை என&nbsp;பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த விடயத்தை <a href="https://ibctamil.com/article/high-court-orders-dismissal-sudumalai-temple-case-1785571270" target="_blank">ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சி</a>யில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தெரிவித்த அவர் “<a href="https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378" target="_blank">அகலப்பட்ட என்புத்தொகுதிகளை</a> தமிழர்களால் தமிழர்களால் அடையாளர் காட்ட முடியும் ஆனால் இங்குள்ள நீதித்துறைக்கு அச்சப்பட்டு யாரும் முன்வருவதில்லை.</p><p>அதனால் சர்வதேச தரப்பில் நிபுணத்துவம் பெற்ற விசாரணைக்கு இந்த விவகாரத்தை கையளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்”.&nbsp;</p><p>மேலும் தழிழர் தரப்பு அரசியல் செம்மணி விவகாரம் மற்றும் நடப்பு அரசியல் குறித்து ரவிக்குமார் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது&nbsp;ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JwBZOTPAxxY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T12:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசாவுக்குக் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-government-launch-visa-bond-scheme-1785582841"></link>
            <id>https://ibctamil.com/article/us-government-launch-visa-bond-scheme-1785582841</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்க விசா பெறும்போது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத்தொகையாகச் (Visa Bond) செலுத்த வகை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்க விசா பெறும்போது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத்தொகையாகச் (Visa Bond) செலுத்த வகை செய்யும் விசா பிணைத்தொகைத் திட்டத்தை (Visa Bond Program) அமெரிக்க வெளியுறவுத்துறை நிரந்தரமாக்கியுள்ளது.
</p><p>
இது குறித்து வெளியான கூட்டாட்சிப் பதிவேட்டு (Federal Register) அறிவிப்பின்படி, இந்த விதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.
</p><p>
வியாபாரம் மற்றும் சுற்றுலாவுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும்.</p><p>
</p><p></p><h2>அதிகபட்சப் பிணைத்தொகை</h2><p>விசா வழங்கும் நிபந்தனையாக குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களிடம் 20,000 டொலர் வரை பிணைத்தொகையைக் கோரும் அதிகாரம் விசா தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee39325-a186-463b-a0d0-1e3f38913b1b/26-6a6de15d243e9.webp' /></p><p>

2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தில் (Pilot Program) $5,000, $10,000 மற்றும் $15,000 எனப் பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.</p><p> 

இருப்பினும் புதிய நிரந்தர விதியின்படி, $5,000 தொகைக் கட்டணம் நீக்கப்பட்டு, அதிகபட்சப் பிணைத்தொகை $20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆப்பிரிக்க கண்டம்</h2><p>

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 நாடுகளில் 30 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9736ef8a-fa84-49fd-9427-0bfa9a925f3f/26-6a6de15bc1155.webp' /></p><p>விசா அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை மீறி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதைத் (Visa Overstay) தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

முன்னோடித் திட்டத்தின் மூலம் கிடைத்த தரவுகள், இத்திட்டம் விசா விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யப் பயனுள்ளதாக இருப்பதை உணர்த்துவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பேச்சு சுதந்திரம்&nbsp;</h2><p>

இருப்பினும், இத்திட்டம் சட்டப்பூர்வப் பயணங்களை முடக்கும் எனச் சட்ட மற்றும் குடிவரவு ஆதரவாளர்கள் சாடியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ebf774-c332-49bd-80a7-3a64d2670260/26-6a6de15c73301.webp' /></p><p>ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடிவரவு நடவடிக்கைகள் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதிப்பதுடன் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி இனப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். </p><p>

இருப்பினும், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை என ட்ரம்ப் தரப்பு நியாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கன் விமானத்தில் வந்த பரிசுப்பொதி : சுங்க அதிகாரிகள் வசம் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gift-from-bangkok-comes-with-106-million-surprise-1785584443"></link>
            <id>https://ibctamil.com/article/gift-from-bangkok-comes-with-106-million-surprise-1785584443</id>
            <summary type="text">தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பரிசுப்பொதி என வந்தடைந்த உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பரிசுப்பொதி என வந்தடைந்த உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 கிலோவுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான ஹஷிஸ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.</p><p>

இந்த பொதி,சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL405 மூலம் ஜூலை 24, 2026 அன்று வந்தடைந்ததுடன், ஒரு பரிசுப் பொதி என அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>போதைப்பொருட்கள் அடங்கிய பொலித்தீன் பொட்டலங்கள்</h2><p>சுங்க அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில், ஜூலை 31 அன்று பொதியை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, ​​உலோகக் கொள்கலன்களுக்குள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய பொலித்தீன் பொட்டலங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04ce8a9-0a7f-4e4d-982f-5d54718f7e56/26-6a6ddd082aae5.webp' /></p><p>
</p><p>
இறுதிப் பட்டியலில், கஞ்சா, ஹஷிஷ் மற்றும் ஹஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட 10.608 கிலோ (பொதிகள் உட்பட) கஞ்சா தொடர்பான போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. </p><p>இதன் மதிப்பு ரூ. 106.08 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : ஷானி, ரவி மீதும் சட்டநடவடிக்கை கோருகிறார் உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gammanpila-calls-shani-ravi-over-easter-attacks-1785582027"></link>
            <id>https://ibctamil.com/article/gammanpila-calls-shani-ravi-over-easter-attacks-1785582027</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக புதிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>இன்று (01)ஊடக சந்திப்பில் பேசிய கம்மன்பில,மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜெயசுந்தர&nbsp;</h2><p>&nbsp;உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த பிறகும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டால், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன மீதும் இதேபோன்ற அல்லது இன்னும் வலுவான குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாம் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830524de-3609-44a3-8272-5dbf514dcedd/26-6a6dd4d0455ab.webp' /></p><p>சஹ்ரான் ஹாஷிம் சம்பந்தப்பட்ட விசாரணைகள் குறித்து இரு அதிகாரிகளுக்கும் முன்பே தெரிந்திருந்தது என்றும், தாக்குதல்களுக்கு முன்பே உளவுத்துறை மற்றும் விசாரணைகளைக் கையாள்வதில் பல தோல்விகள் இருந்தன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன</h2><p>அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நடத்தை குறித்த முந்தைய விசாரணை நிறுத்தப்பட்டுவிட்டதாக கம்மன்பில மேலும் குற்றம் சாட்டினார். அத்துடன், அந்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc56246-1b8b-43a8-8a79-cdd9bc6c6ad9/26-6a6dd4d0eb077.webp' /></p><p>&nbsp;மேலும், விசாரணை நடத்தப்படும் வரை, ஷானி அபேசேகரவை அவரது குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் பதவியிலிருந்தும், ரவி செனவிரத்னவை அவரது பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்புபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ction-will-be-taken-buses-are-filled-with-kerosene-1785583189"></link>
            <id>https://ibctamil.com/article/ction-will-be-taken-buses-are-filled-with-kerosene-1785583189</id>
            <summary type="text">இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை காவல்துறை திடீர் சோதனைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை காவல்துறை திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p>


டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும்
பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாடு தழுவிய
அளவில் காவல்துறையினர் இந்த விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.</p><p>

இந்த சோதனை நடவடிக்கையின் போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள்
பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஆய்வகப் பரிசோதனை</h2><p>
</p><p>
மேலும் சந்தேகத்திற்குரிய மேலும் பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள்
சேகரிக்கப்பட்டு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப்
பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d8b0ac-5abd-4b6a-81ca-2aaa38807f7d/26-6a6dd7733802f.webp' /></p><p>


டீசல் லீற்றர்ர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால்
கூடுதல் இலாபத்திற்காகப் பல பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள் டீசலுடன்
மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர்.</p><p> இந்த சட்டவிரோதச் செயலால்
பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று
மாசுபாடும் ஏற்படுவதுடன் இலாப நோக்கம் இருந்தாலும் சுற்று சூழல் மாசடைவதுடன்
வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது.
</p><p>
அத்துடன் கான்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய்
வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன்
இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது
பயன்படுத்தவோ துணை போகக் கூடாது என காவல்துறை போக்குவரத்து பிரிவு
அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்திப் பணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-palali-airport-development-min-chandrasegar-1785580614"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-palali-airport-development-min-chandrasegar-1785580614</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.</p><p>பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (31) விஜயம் செய்த அமைச்சர் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக
துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.</p><p>இந்த விஜயம் குறித்து&nbsp;கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் ஊடக செயலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய
பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும்
நோக்கில் இந்த கட்டுமானப் பணிகளின்&nbsp;முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>அமைச்சர் வலியுறுத்தல்</h2><p>பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும்
திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை
வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்
தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.</p><p>இதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும்,
எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை
கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ec574e-735f-4f24-b7f4-0f414d229b5d/26-6a6dd22c430e3.webp' /></p><p>
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின்
ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p>
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின்
சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும்
பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச
பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து சேவைகள் மீண்டும் முடங்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-station-masters-warn-of-strike-action-1785577026"></link>
            <id>https://ibctamil.com/article/railway-station-masters-warn-of-strike-action-1785577026</id>
            <summary type="text">தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் சமிஞ்சை மற்றும் செயற்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
</p><p>
தொடருந்து திணைக்களத்தின் சமிஞ்சை மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்காவிட்டாலே இந்நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் தீவிர சமிஞ்சை தொழிநுட்பப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் தலைமன்னார் வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை</h2><p>அத்தோடு, மதவாச்சி மற்றும் தலைமன்னார் இடையேயான தொடருந்துகள், சமிஞ்சை பழுதுபார்க்கும் போது தற்காலிக நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படும் பயலட் முறைமையின் கீழ் ஒற்றைப் பாதையில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24257b5-b8e4-4ce2-946b-a1cb4bf5147c/26-6a6dc5ec40d03.webp' /></p><p>அதேவேளை, இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடியவரை ஒருமணிநேரத்தில் பிடித்த விசேட அதிரடிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-stealing-money-from-russian-tourists-1785578768"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-stealing-money-from-russian-tourists-1785578768</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி
நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
</p><p>

வெள்ளிக்கிழமை (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு
மகள்கள் அறுகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில்
தங்கியுள்ளனர்.&nbsp;</p><h2>விசேட அதிரடிப்படைக்கு தகவல்</h2><p>அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில்
குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள்
மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c174f9e-e8e7-4f56-bc53-7725c4b44613/26-6a6dc944c3b92.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர் பணப்பையைத் திருடி தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த
ஒருவர், உடனடியாக அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல்
வழங்கியுள்ளார்.</p><p></p><h2>ஒருமணிநேரத்திற்குள் கைது</h2><p>

அதற்கமையச் செயற்பட்ட அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி
தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி
நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36305721-3ac9-4f9e-afae-6b68835125bf/26-6a6dc9441f297.webp' /></p><p>
</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில்
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T10:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்து சாரதிகளுக்கு ஆட்சேர்ப்பு : தகுதியானவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/applications-calling-for-new-metro-bus-drivers-1785577290"></link>
            <id>https://ibctamil.com/article/applications-calling-for-new-metro-bus-drivers-1785577290</id>
            <summary type="text">இலங்கையில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மெட்ரோ பேருந்து நிறுவனமான “லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம்” (Lanka Metro Transit) தனது மெட்ரோ பேருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மெட்ரோ பேருந்து நிறுவனமான “லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம்” (Lanka Metro Transit) தனது மெட்ரோ பேருந்து சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>அதற்கமைய தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒரு இட்சத்திற்கும் அதிகமான சம்பளம்&nbsp;</h2><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் கோவையை careers@lankametro.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0701886886 என்ற WhatsApp இலக்கத்திற்கும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93688b4-fb92-4d7e-af5e-a2ba84244e29/26-6a6dc4dda9555.webp' /></p><p>
</p><p>தேர்ந்தெடுக்கப்படும் மெட்ரோ பேருந்து சாரதிகளுக்கு மாதாந்தம் 115,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T10:17:35+00:00</updated>
        </entry>
    </feed>
