<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-27T09:17:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recruit-private-graduates-to-fill-teacher-vacancy-1785138156"></link>
            <id>https://ibctamil.com/article/recruit-private-graduates-to-fill-teacher-vacancy-1785138156</id>
            <summary type="text">இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. </p><p>இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின்&nbsp;பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கல்வித்துறையில் 40000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் 23000 பேரையே சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு</h2><p>தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் முயற்சிக்கு முன்னர் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a73910c-e497-4930-9e2d-1baff6d6174d/26-6a671f80c9102.webp' /></p><p>அப்போது ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களை குறிப்பிட்ட பதவிகளுக்கு இணைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். </p><p>எனினும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு தரப்பு பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கல்வி அமைச்சர் உறுதி</h2><p> </p><p>அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கப் போவதில்லை என்றும் அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd27a4c-9e3e-4e57-808b-9dcc43cc0575/26-6a671f7fed0e0.webp' /></p><p> </p><p>ஆனால் தற்போது அந்த நிலைப்பாடுகள் மாற்றமடைந்துள்ளதுடன் ஆசிரியர் நியமனங்கள் தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T09:08:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deputy-min-questions-basl-integrity-1785132586"></link>
            <id>https://ibctamil.com/article/deputy-min-questions-basl-integrity-1785132586</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு குறிப்பிட்ட விசேட குழுவைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறதா என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கேள்வி எழுப்பியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு குறிப்பிட்ட விசேட குழுவைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறதா என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>

அத்தோடு, முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அல்லது அவரது மகன் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டால் தான் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசியல் அமைப்பு</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே நேர்மையானவையா அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0a3d141-002a-4fb9-b1aa-0bcc7c6a6d5e/26-6a6710bf6f0ca.webp' /></p><p>


அத்தோடு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் அமைப்பு திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளதை பிரதியமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>மேலதிக விவரங்கள்</h2><p>நீதித்துறை தொடர்பான மாற்றங்களுக்கு அரசியல் அமைப்பு திருத்தம் (Constitutional Amendment) அவசியமானது என்றும் மற்றும் ஏனைய மறுசீரமைப்புகளை அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab57572-712b-490c-83f5-33f788bb3cb1/26-6a6710c049fc4.webp' /></p><p>

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலும் பிரதியமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>இது குறித்து தெரிவித்தஅவர், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மட்டுமே அசித நிரோஷன இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என நான் நம்பவில்லை எனவும் இது குறித்த மேலதிக விவரங்களை அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தே கேட்டுப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T09:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துடன், முச்சக்கரவண்டி மோதிய கோர விபத்தில் சாரதி ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-bus-and-a-three-wheeler-one-person-dead-1785136452"></link>
            <id>https://ibctamil.com/article/accident-bus-and-a-three-wheeler-one-person-dead-1785136452</id>
            <summary type="text">கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று&amp;nbsp;பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்உயிரிழந்துள்ளார்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று&nbsp;பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்உயிரிழந்துள்ளார்&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்று (27.07.2026) காலை இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>சாரதி உயிரிழப்பு</h2><p>கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2314ea0a-29ff-4436-9c58-18e5f44310ca/26-6a67117d54739.webp' /></p><p>

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த விபத்து தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை கோமாளி பாண்டமாக்கிய ட்ரம்ப் நாட்டின் மதிப்பு மிக்க citizen]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-citizen-basil-bought-weapons-northkorea-1785135266"></link>
            <id>https://ibctamil.com/article/american-citizen-basil-bought-weapons-northkorea-1785135266</id>
            <summary type="text"> இலங்கை அரசியலில் இன்றும் பசில் ராஜபக்சவைச் சுற்றியுள்ள விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. 

அவர்மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலங்கை அரசியலில் இன்றும் பசில் ராஜபக்சவைச் சுற்றியுள்ள விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. </p><p>

அவர்மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் சவாலுக்குள்ளாகியுள்ளன. சில வழக்குகள் முடிவடைந்துள்ளன. சிலவற்றின் சட்டநிலை காலப்போக்கில் மாறியுள்ளது.
</p><p>
மேலும் சில விவகாரங்கள் இன்னும் விசாரணை அல்லது நீதிமன்ற பரிசீலனையில் இருக்கலாம். எனவே, அவரைச் சார்ந்த எந்தக் குற்றச்சாட்டும் இறுதி நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.</p><p></p><p>
</p><h2>பசிலை சுற்றியுள்ள விவாதங்கள்</h2><p>
இன்றும் பசிலை சுற்றியுள்ள விவாதங்கள் இலங்கை அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவர்மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் சவாலுக்குள்ளாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecfa7d0-463f-4e94-b5f0-fd967c89f10b/26-6a6706fb1c068.webp' /></p><p>

சில வழக்குகள் முடிவடைந்துள்ளன; சிலவற்றின் சட்டநிலை காலப்போக்கில் மாறியுள்ளது. மேலும் சில விவகாரங்கள் இன்னும் விசாரணை அல்லது நீதிமன்ற பரிசீலனையில் இருக்கலாம். 

எனவே, அவரைச் சார்ந்த எந்தக் குற்றச்சாட்டும் இறுதி நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
</p><p>
மாத்தறை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் அவருக்கு பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வர வேண்டுமெனில், அதற்கு அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் என முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>

பசில் ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
பசில் ராஜபக்சவை நாட்டிற்கு அழைத்து வர சட்டரீதியான வாய்ப்பு உள்ளது. ஆனால் அது எளிதான செயல் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கான கோரிக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அங்குள்ள சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பான இன்டர்போலின் முழுமையான ஒத்துழைப்பையும், இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளையும் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார்.
</p><p></p><h2>சட்டவிரோதமாக ஈட்டிய&nbsp;பணம்</h2><p>
மாத்தறை பகுதியில் ஒன்றரை ஏக்கர் காணியை, சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தின் மூலம் வாங்கியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகததை, பசிலுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766f316e-b509-41bb-8d6c-08cca8d7e788/26-6a6706fbe3567.webp' /></p><p>
</p><p>
அவர்மீது அதிகம் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்றாக திவிநெகும நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரம் இருந்தது. 

அரச நிதி சட்டப்படி பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>

இந்த வழக்கு பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் இடம்பெற்றாலும், அதன் சட்டநிலை காலப்போக்கில் மாறி, சில குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது மேல்நீதிமன்றத் தீர்ப்புகளால் மாற்றமடைந்தன.
</p><p>
மேலும் மல்வானை பகுதியில் உள்ள சொத்து தொடர்பாகவும் பசிலில் பெயர் நீண்ட காலம் அரசியல் விவாதங்களில் இடம்பெற்றது. 

அந்தச் சொத்து அவருக்குச் சொந்தமானதா, வேறு ஒருவரின் பெயரில் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. </p><p>

எனினும், அந்த வழக்கிலும் நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை அல்லது வழக்குகள் முடிவுக்கு வந்தன.

இந்நிலையில் அண்மையில் அதிக கவனம் பெற்றுள்ள விவகாரம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள காணி தொடர்பான வழக்காகும்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவரை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச சட்ட நடைமுறைகள் மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு தேவைப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>

அமெரிக்க குடியுரிமை தொடர்பான விவகாரமும் அவரது அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி பேசப்பட்ட சர்ச்சையாகும். 

இரட்டை குடியுரிமை, அரசியல் பதவிக்கான தகுதி, வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட அம்சங்கள் பலமுறை பொதுவிவாதத்திற்கு உள்ளானன.
</p><p>
பின்னர் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை குடியுரிமை தொடர்பான சட்ட நடைமுறைகளை பின்பற்றியதாக அவரது தரப்பு தெரிவித்தது.&nbsp;</p><p></p><h2>வடகொரியாவிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்கள்</h2><p> இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரும், அமெரிக்க-இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான பசில் ராஜபக்ச, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று, வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விதித்த சர்வதேசத் தடைகளை மீறியதாக அதிர்ச்சியூட்டும் தகவலை கடந்த ஆண்டு வெளியாகிய ஒரு கட்டுரையில் சஞ்சய தசநாயக்க என்ற ஊடகவியலாளர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f5f3bda-5e7e-4f63-9674-b1647c9de95b/26-6a6706fc9a701.webp' /></p><p>இந்த ஒப்புதல் ஒரு வரலாற்று அடிக்குறிப்புக்கு அப்பாற்பட்டது. இது ஐ.நா. தடைகள் மற்றும் அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டம் ஆகிய இரண்டையும் மீறுவதாகும்.</p><p>

இந்த வெளிப்பாட்டின் விளைவுகள் உலகளாவிய கண்டனக் குரலைத் தூண்டியுள்ளதுடன், பொறுப்புக்கூறல், சர்வதேசச் சட்டம் மற்றும் ஒரு அமெரிக்கக் குடிமகனால் செய்யப்படும் கடுமையான சட்ட மீறல்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் பங்கு ஆகியவை குறித்து தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
</p><p>&nbsp;இலங்கையின் ராஜபக்ச குடும்பத்தின் சக்திவாய்ந்த உறுப்பினரான பசில் ராஜபக்ச, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி ஆண்டுகளில் நாட்டின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 

அக்காலத்தில் அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மற்றொரு சகோதரரான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தனர். </p><p>அவர்கள் இருவரும் இணைந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு கொடூரமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
</p><p>
ஐ.நா.வின் கடுமையான தடைகளுக்கு உள்ளான நாடான வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை பசில் ஒப்புக்கொண்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதைவிடவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில், அவரது செயல்கள் அமெரிக்கச் சட்டங்களான சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மற்றும் எதிரியுடன் வர்த்தகம் செய்யும் சட்டம் (TWEA) ஆகியவற்றை நேரடியாக மீறுகின்றன.
</p><p>
இந்தச் சட்டங்கள், வடகொரியா உட்பட, தடைசெய்யப்பட்ட நாடுகளுடன் அமெரிக்கக் குடிமக்கள் எந்தவொரு வர்த்தக அல்லது நிதிப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபடுவதைத் தடை செய்கின்றன. </p><p>

இந்தச் சட்டங்களை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள், பெரும் அபராதங்கள் மற்றும் நீண்ட சிறைத் தண்டனைகள் விதிக்கப்படும்.</p><p></p><p>
</p><h2>அமெரிக்கத் தடைகளை அப்பட்டமாக மீறுதல்</h2><p>கொழும்பு கள்ளச் சந்தையில் பெறப்பட்ட அமெரிக்க டாலர்களை, இலங்கை அதிகாரிகள் உட்பட பசில் ராஜபக்ச வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது என, பசில் ராஜபக்ச ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378e9441-d3e9-4dfc-b7fd-1eaf6e19cb80/26-6a6706fd4eebb.webp' /></p><p> </p><p>

இவ்வாறு ஆயுத ஒப்பந்தங்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்த ஒப்புதல் வாக்குமூலம் அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது.
</p><p>
வடகொரியா 2006-ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் ஆதரவுடன் விதிக்கப்பட்ட தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தத் தடைகள், அந்நாட்டிற்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வர்த்தகம் செய்வதை வெளிப்படையாகத் தடை செய்கின்றன. 

வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கையகப்படுத்துவதன் மூலம், ராஜபக்ச இந்த சர்வதேசத் தடைகளை மீறியது மட்டுமல்லாமல், தனது அணு ஆயுதத் திட்டம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகப் பெயர்போன ஓர் ஆட்சியைத் தனிமைப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளையும் சீர்குலைத்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் மௌனமா அல்லது பொறுப்புக்கூறலா</h2><p>ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில், பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகள் கூட்டாட்சிச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9956be77-c16d-4186-b804-bbc1d67eee96/26-6a6706fe068d9.webp' /></p><p> </p><p>

அமெரிக்கக் கூட்டாட்சித் தண்டனைச் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்படாத அமைப்புகளுடன் வர்த்தகம் அல்லது நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எந்தவொரு அமெரிக்கக் குடிமகனும், கடுமையான குற்றங்களுக்குப் பெரும் அபராதங்கள் மற்றும் ஆயுள் தண்டனை உட்படக் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்.
</p><p>
ஆனால், இந்த ஒப்புதல்கள் இருந்தபோதிலும், ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எந்த விசாரணையையும் தொடங்கவில்லை.

பசில் ராஜபக்ச என்ற அமெரிக்கக் குடிமகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியது, அமெரிக்கத் தடைகளின் நம்பகத்தன்மையையும் சர்வதேசச் சட்டத்தை நிலைநிறுத்துவதில் அதன் அர்ப்பணிப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று வாதிடும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட அறிஞர்களால் இந்தச் செயலற்ற தன்மை விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p>


தடைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் அமெரிக்க நீதித்துறை (DOJ) மற்றும் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) ஆகியவை, விசாரணைக்கான கோரிக்கைகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. </p><p>

இந்த மௌனம், சட்டப்பூர்வக் கடமைகளை விட அரசியல் நோக்கங்கள் மேலோங்குகின்றனவா என்ற கேள்வியை பலரிடையே எழுப்பியுள்ளது.

ராஜபக்சவின் ஒப்புதல் வாக்குமூலம், சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளின் ஒரு பரந்த, மர்மமான வலைப்பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p> 

அவரது கூற்றுக்களின்படி, பாதாள உலகப் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக விளங்கும் கொழும்பில் உள்ள கள்ளச் சந்தையிலிருந்து இலங்கை அதிகாரிகள் அமெரிக்க டொலர்களைப் பெற்று, அந்தப் பணத்தை வட கொரிய அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>

இந்த ஒப்பந்தங்களின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உள்நாட்டுப் போரின் போது வடகொரியாவுடன் இலங்கை செய்துகொண்ட ஆயுத ஒப்பந்தங்களின் மதிப்பு பல நூறு மில்லியன் டொலர்களாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.</p><p> 

2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த, அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது.

 அக்காலத்தில் இலங்கை அதிகாரிகள் ஆயுத ஒப்பந்தங்களுக்காக வடகொரியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததை அது வெளிப்படுத்துகிறது.</p><p></p><h2>கேள்விக்குரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்</h2><p>

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? ராஜபக்சவின் பேட்டியானது, கள்ளச் சந்தைப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து கூட உருவாகியிருக்கக்கூடிய சட்டவிரோத ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. </p><p>

இந்த வெளிப்பாடு, மோதல்களைத் தொடரச் செய்வதிலும் சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதிலும் ஒழுங்குபடுத்தப்படாத நிதி வலையமைப்புகளின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

ராஜபக்சவின் நடவடிக்கைகள் அமெரிக்கச் சட்டத்தை மீறியது மட்டுமல்லாமல், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மரபுகளை மீறும் நிலையிலும் வைத்தன. </p><p>

சம்பந்தப்பட்ட காலகட்டத்தில், சுனாமிக்குப் பிந்தைய புனரமைப்பு மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இலங்கைக்கு மில்லியன் கணக்கான டொலர் நிதியுதவிகளை வழங்கி, அபிவிருத்தி உதவிகளை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்கியது.
</p><p>
ராஜபக்சவின் வெளிப்படுத்தல்கள், மனித உரிமை அமைப்புகள், சட்ட அறிஞர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்தினரை, அவரது நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டாட்சிச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கத் தூண்டியுள்ளது.</p><p>

ராஜபக்ச குடும்பத்தின் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது இது முதல் முறையல்ல. 

மகிந்தவின் ஜனாதிபதி பதவிக் காலத்தில், அக்குடும்பம் முக்கிய அரசாங்கத் துறைகளைக் கட்டுப்படுத்தி, பெரும் செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் குவித்தது.

கேள்விக்குரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முதல் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் வரை பல்வேறு ஊழல்களில் ராஜபக்சக்கள் சிக்கியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், பொறுப்புக்கூறல் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அரசியல் அழுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையின்மை குறித்த அச்சங்களைக் காரணம் காட்டி, அக்குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக வழக்குத் தொடரத் தவறிவிட்டன.
</p><p>
அரசியல் அதிகாரமும் நிதி வலையமைப்புகளும் பெரும்பாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்படும் உலகில், சர்வதேசத் தடைகளைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களை பசில் ராஜபக்ச ஊழல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.</p><h2>பின்விளைவுகளுக்கு அஞ்சாத&nbsp;ராஜபக்சர்கள் </h2><p> </p><p>

ராஜபக்சவைப் போன்ற தனிநபர்கள், பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் தடைகளை மீறியதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, ​​அதுபோன்ற செயல்களைச் செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கு அது ஒரு அபாயகரமான செய்தியை அனுப்புகிறது.
</p><p>
தடைகளை நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய தலைவராக விளங்கும் அமெரிக்கா, தனது சட்டங்களின் நேர்மையைக் காக்கவும் நீதிக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும்.
</p><p>
 அவ்வாறு செய்யத் தவறினால், தடைகள் பாதுகாக்க நோக்கமாகக் கொண்ட அடிப்படைக் கொள்கைகளையே சீர்குலைக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T08:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-prices-rise-in-the-world-market-cpc-anura-meet-1785135043"></link>
            <id>https://ibctamil.com/article/oil-prices-rise-in-the-world-market-cpc-anura-meet-1785135043</id>
            <summary type="text">உலக சந்தையின் எண்ணெய் விலை நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையின் எண்ணெய் விலை நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றைக் கோரியுள்ளது.</p><p>அத்துடன் உலகளாவிய எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்குக் கவலையளிப்பதாக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் மோசமடைந்துவரும் இந்த நிலைமையைப் பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் விநியோக நிறுவனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாதத் தொடக்கத்தில் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45 சதவீதமும் பெட்ரோல் விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.</p><p>
</p><p>
மேலும், மசகு எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருக்கும் இலங்கைக்குக் கூடுதல் சவால்கள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4288adf-ba3a-4190-9a22-281bb5b14738/26-6a670a11206c7.webp' /></p><p>

இந்த நிலையில், எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடச் சந்திப்பைக் கோரியுள்ளதுடன், எரிபொருள் நுகர்வைக் குறைப்பதும் அவசியமாகியுள்ளது.</p><p>தற்போதைய உலக சந்தை விலைகளின் பின்னணியில், தற்போதைய உள்நாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் சிரமங்கள் இருப்பதாக, நாட்டில் செயற்படும் ஏனைய சில்லறை எரிபொருள் விநியோக நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்</h2><p>
இதற்கிடையில், ஈரான் மற்றும் உக்ரைன் மோதல்களால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் மசகு எண்ணெய் விலைகள் இந்த வாரம் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயர்வை எட்டியுள்ளது. சில சந்தைகளில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc86f50-c965-4019-9bba-bea99f04b769/26-6a670a105c79e.webp' /></p><p>

அத்துடன், 'எல் நினோ' வானிலை தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதால், மின் உற்பத்திக்காக அதிகளவு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
</p><p>போதுமான நீர்மின் உற்பத்தி இல்லாத காரணத்தால், மின்சார உற்பத்திக்காக இருப்பிலிருந்து அதிகளவு எரிபொருளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது எங்களுக்கு மேலும் ஒரு கடுமையான சவாலாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T07:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1785136080"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1785136080</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,317,667 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 46,480ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 371,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,610 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d52107-c481-459e-b00a-a63ea1844806/26-6a6708b9e6508.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 340,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 325,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-27T07:39:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-rupee-depreciates-slightly-against-us-dollar-1785135272"></link>
            <id>https://ibctamil.com/article/sl-rupee-depreciates-slightly-against-us-dollar-1785135272</id>
            <summary type="text">கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒப்பிடுகையில், இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிந்துள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒப்பிடுகையில், இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிந்துள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் நிலையாக உள்ளது.</p><p>இன்றைய நாளுக்கான (27.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.83 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 456.39 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.17ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467c09df-c9b9-4e0c-938b-223bee3ec2ff/26-6a6704693730d.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.21 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	229.78 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.85 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.02 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T07:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பௌத்த பிக்கு அதிரடியாக கைது - தோளில் தொங்கிய பைக்குள் பயங்கர பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buddhist-monk-arrested-with-illegal-goods-1785132380"></link>
            <id>https://ibctamil.com/article/buddhist-monk-arrested-with-illegal-goods-1785132380</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04 ஆவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04 ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.</p><p></p><h2>தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பை</h2><p>



ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07e8758-dee0-493e-9666-e435faf8a72a/26-6a66f76bc3946.webp' /></p><p>


குறித்த பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று நிறுத்துப் பார்த்தபோது, குறித்த பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>



சந்தேகத்திற்கிடமான பிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T07:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒப்பந்தங்கள் இல்லாமலே ஈரானுக்கு முடிவு வர வேண்டும்! அமெரிக்காவை தூண்டும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-halted-the-attack-that-shook-iran-for-13-nights-1785129877"></link>
            <id>https://ibctamil.com/article/us-halted-the-attack-that-shook-iran-for-13-nights-1785129877</id>
            <summary type="text">ஈரானின் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் என்ற இலக்கின் வெளிப்படையான இடைநிறுத்தம் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட கருத்து சர்வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் என்ற இலக்கின் வெளிப்படையான இடைநிறுத்தம் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட கருத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p> 

இது குறித்து நேற்று (27.07.2026) அமெரிக்கா ஊடகம் ஒன்றிடம் பேசிய நெதன்யாகு, </p><p>

ஈரான் அரசாங்கம் கவிழ்க்கப்படும்போது அல்லது தனது அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை உணரும் அளவுக்குப் போதுமான அளவு பலவீனமடையும்போது ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும்.</p><p></p><h2>பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட கருத்து</h2><p>&nbsp;மேலும் ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமலேயே, ஈரானின் அணுசக்தித் திட்டம் முடிவுக்கு வந்தாக வேண்டும்" என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b6c5a7c-060e-4c14-9ab5-85c5fb7a1c95/26-6a66fe439554b.webp' /></p><p>இதற்கிடையில், அமெரிக்கா இலக்குகள் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ள ஈரான் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ள எந்தவொரு நிலைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் பிராந்திய சூழ்நிலையில் நெதன்யாகுவின் பயணத்தால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து பதிலளித்த ஈரானின் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் முதல் தரைவழி இராணுவ நடவடிக்கை வரையிலான சூழ்நிலைகளை ஈரான் எதிர்கொள்ளக்கூடும் என கூறியுள்ளார்.</p><p>

மேலும் சாத்தியமான அனைத்து எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் நாடு விரிவான தயாரிப்புகளைச் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸை சுடுகாடாக மாற்றும் காட்டுத்தீ: ஜனாதிபதியின் அவசர அமைச்சரவை கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wildfires-emergency-cabinet-meeting-in-france-1785129412"></link>
            <id>https://ibctamil.com/article/wildfires-emergency-cabinet-meeting-in-france-1785129412</id>
            <summary type="text">தென்மேற்கு நகரமான போர்டோவை நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதன் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிருக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு நகரமான போர்டோவை நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதன் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்த கூட்டம் இன்று 27.07.2026&nbsp; நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>போர்டோ நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத்தீ பரவி வருவதாகவும், விரைவில் தாக்கவுள்ள புதிய வெப்ப அலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேலும் சவாலாக மாறக்கூடும் என்றும் அந்நகரின் மேயர் தொமஸ் கசெனேவ் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பிரான்ஸில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ</h2><p>மேலும் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் போர்டோ நகரை காலி செய்யும் திட்டம் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e8a0b29-aa2b-4cfd-8f3e-b82f575d40b8/26-6a66f77a0624f.webp' /></p><p>
</p><p>கடந்த ஒரு வாரமாக&nbsp; பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் அங்கிருந்த 3,30,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் நாளை (28.07.2026) முதல் வெப்பநிலை 40 செல்சியஸ் டிகிரி வரை உயரக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது என அங்குள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த காட்டுதீயால் நாடு முழுவதும் சுமார் 98,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்துள்ளது.</p><p>காட்டுத்தீ காரணமாக பிரான்ஸின் தென்மேற்குப் பகுதிகளில் இருந்து இதுவரை 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-minister-shantha-bandaras-son-granted-bail-1785131653"></link>
            <id>https://ibctamil.com/article/former-minister-shantha-bandaras-son-granted-bail-1785131653</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனாதித் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும்&amp;nbsp;பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனாதித் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும்&nbsp;பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>குறித்த சந்தேகநபர்களை இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்போது, சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>20 மில்லியன் ரூபாய் மோசடி</h2><p> </p><p>சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதி கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் குறித்த 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20eb1f4e-bab0-4e77-ba58-5017ead50a9b/26-6a66fb35f3ffe.webp' /></p><p>சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்த வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vijay-s-jana-nayagan-box-office-collection-day-3-1785131236"></link>
            <id>https://ibctamil.com/article/vijay-s-jana-nayagan-box-office-collection-day-3-1785131236</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் முதல்வரும், நான்கு அமைச்சர்களும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.எச் வினோத் இயக்கத்தில் தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் முதல்வரும், நான்கு அமைச்சர்களும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.</p><p>எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.</p><p>ஆனால், சென்சார் சான்றிதழ் தாமதம் ஆனதால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் மேலும் தாமதமானது.</p><h2>&nbsp;"ஏ" சான்றிதழ்&nbsp;</h2><p>
</p><p>நடிகர் விஜயின் கடைசி படம் என அறிவித்த இப்படம், தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96700965-1a8c-47cd-897c-26b50757319e/26-6a6706a56e678.webp' /></p><p>தேர்தல் முடிந்து, வெற்றிப்பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்ற பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வந்த நிலையில், (ஜூலை 9) சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், ஜனநாயகன் படத்திற்கு "ஏ" சான்றிதழ் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p>படத்தில் ஆட்சேபனையான காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், எந்தெந்த காட்சிகளை நீக்கியது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.</p><p></p><h2>படத்தின் வசூல்</h2><p>பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் ஜனநாயகன்', கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.&nbsp; ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc0f8be-b9be-4cda-8721-b75fe2c8740a/26-6a66f4a087421.webp' /></p><p>இதற்கு முன் விஜயின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.147 கோடியை வசூலித்தது. ‘தி கோட்’ படமும் முதல் நாள் ரூ.100 கோடியை தாண்டிய வசூலித்தது.</p><p>இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.217.48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வார இறுதி விடுமுறை மற்றும் ரசிகர்களின் தொடர் ஆதரவு காரணமாக&nbsp;வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.&nbsp;</p><p></p><h2>கண்ணீர் மல்க ரசிகர்கள் </h2><p>ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் முன்பே படத்தின் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டது. இதனால் வசூல் பாதிக்கப்படும் என்று பலரும் கணித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112c12e9-20fd-4b32-95ec-586b65861743/26-6a66f4a13a309.webp' /></p><p>ஆனால் அந்த கணிப்புகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.</p><p> </p><p>படத்தின் டைட்டில் கார்டில் 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்' நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
</p><p>
கடைசி காட்சியில் ரசிகர்கள் கண்ணீர் மல்க தளபதி தளபதி என்று கத்தும் காணொளிகளையும் அதிகமாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை காணமுடிகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இலவச விசா! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-resumes-free-visas-for-lankan-pilgrims-1785130340"></link>
            <id>https://ibctamil.com/article/india-resumes-free-visas-for-lankan-pilgrims-1785130340</id>
            <summary type="text">இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை ஆன்மீக யாத்ரீகர்களுக்கான இலவச விசா சேவை (Free Visa Scheme) மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை ஆன்மீக யாத்ரீகர்களுக்கான இலவச விசா சேவை (Free Visa Scheme) மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
புதிய விசா சேவை வழங்குநர் நியமிக்கப்பட்டமையால் இந்தச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.</p><p></p><h2>யாத்ரீகக் குழுக்கள்</h2><p>

இந்தநிலையில் ஜூலை ஏழாம் ஆம் திகதி முதல் மீண்டும் இச்சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0313d6e-6572-4d4f-83f7-2937d2c9cbae/26-6a66f3360585f.webp' /></p><p>

இதனடிப்படையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் 10 நபர்களுக்கு அதிகமான யாத்ரீகக் குழுக்களுக்கு விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
</p><p>
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p></p><h2>கண்காணிப்புச் செயல்முறை </h2><p>இதனுடன் 12 முதல் 70 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் தரவுகளைப் (Biometric Data) வழங்குவது கட்டாயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaf50e0f-c318-41b3-a198-058cb273bd60/26-6a66f336a7d86.webp' /></p><p>
வயதான மூத்த குடிமக்களுக்காகச் சிறப்பு வேகக் கண்காணிப்புச் செயல்முறை (Fast-track process) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் கீழ் விசா கட்டணமின்றி இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையத்திற்கு (ICAC) சேவைக்கட்டணமாக (Service Fee) ரூ. 1,855 செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/82000-dengue-cases-in-sl-death-toll-reaches-61-1785129353"></link>
            <id>https://ibctamil.com/article/82000-dengue-cases-in-sl-death-toll-reaches-61-1785129353</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரை 82,011 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரை 82,011 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. </p><p>அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>கம்பஹாவில் அதிகளவு நோயாளர்கள்&nbsp;</h2><p>இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f430e5c4-dacf-4e5f-8815-5d29d28f1b30/26-6a66ee6ff39cd.webp' /></p><p> 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5,639 பேரும், கண்டியில் 5,634 பேரும், களுத்துறையில் 5,355 பேரும் இரத்தினபுரியில் 4,553 பேரும், காலியில் 4,534 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p> 

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு - சிதறி ஓடிய மக்கள்: இருவர் பலி - பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-killed-5-wounded-in-us-food-festival-shooting-1785128211"></link>
            <id>https://ibctamil.com/article/2-killed-5-wounded-in-us-food-festival-shooting-1785128211</id>
            <summary type="text">அமெரிக்காவில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 வயதுக் குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 வயதுக் குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
இத்தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை ( 26) மாலை 6:00 மணியளவில், சீயட்டில் சென்டர் வளாகத்தில் நடைபெற்ற 'பைட் ஒப் சியட்டில்' என்ற பிரசித்தி பெற்ற உணவுத் திருவிழாவின் போது நடத்தப்பட்டுள்ளது.</p><p>சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாகச் சியட்டில் தீயணைப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>தீவிர சிகிச்சை</h2><p>நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த வேளையில், திடீரென 7 முதல் 8 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a84c2474-aa89-418a-ad0f-f54e0ca84553/26-6a66e7748971a.webp' /></p><p>2 வயதுக் குழந்தை, 23 வயது இளைஞர், 03 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p> 

காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p> 

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் குறித்தோ அல்லது இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணம் குறித்தோ உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/924ff77a-6160-48b7-adbf-77b1a7fc2ef0/26-6a66e7753ece7.webp' /></p><p>சியட்டல் காவல்துறை திணைக்களம், எப்.பி.ஐ மற்றும் ஏ.டி.எப்போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
</p><p>
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சியட்டல் சென்டர் மோனோரெயில் தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-fuel-price-revision-to-be-decided-in-month-end-1785122232"></link>
            <id>https://ibctamil.com/article/sl-fuel-price-revision-to-be-decided-in-month-end-1785122232</id>
            <summary type="text">இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>எரிபொருட்களின் மாதாந்த விலை குறித்து சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் இம்மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>இதுதொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>&nbsp;கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>
நாங்கள் வழக்கமாக மாதாந்த சராசரி விலையையே கருத்தில் கொள்கிறோம் என்பதால், இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96c8c16-5add-436c-83c1-7098ac0f889a/26-6a66d201248c7.webp' /></p><p> </p><p>எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன.


எனவே, அந்த எஞ்சிய நாட்களில் உலகச் சந்தையில் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே நாங்கள் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.</p><p>

இதேவேளை, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக பீப்பாயொன்று 100 டொலரை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NSMjbLsxYq0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:22:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கடத்தி கொல்லப்பட்ட சீன பிரஜை...! நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/port-city-murder-2-chinese-men-in-lineup-today-1785127100"></link>
            <id>https://ibctamil.com/article/port-city-murder-2-chinese-men-in-lineup-today-1785127100</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் அடையாள அணிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்பிற்கு (Identification Parade) முன்நிறுத்தப்படவுள்ளனர்.
</p><p>
குறித்த நடவடிக்கை இன்று (27-07-2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இதனடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p> </p><p></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>இச்சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களும் கணினி குற்றங்களில் (Computer Crimes) ஈடுபடும் கும்பலொன்றின் உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5994bf5-e098-4fbd-850c-359ed1e7b7f5/26-6a66e6c14d455.webp' /></p><p>கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு துறைமுக நகரப் பாலத்தின் மீது மூன்று சீன பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ன் ஒன்றில் வந்த மேலும் சில சீனர்கள் அவர்களைத் தாக்கி கால்களைக் கட்டி வைத்து, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
</p><p>
இதையடுத்து கடத்தப்பட்ட சீனரின் சடலம் எஹெலியகொட கரதன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>காவல்துறை விசாரணை</h2><p>ஹாவோ சோங் (Hao Song) என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.</p><p>

 கத்திக்குத்துக்களால் உடலின் உட்புற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பலத்த சேதமே மரணத்திற்குச் முதன்மை காரணம் எனப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecd5ce98-59d3-445e-b419-15d9b0009744/26-6a66e6c209f99.webp' /></p><p>கொல்லப்பட்ட ஹாவோ சோங் என்பவரும் கணினி சார் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p>

இவரது சடலத்தைச் சீனத் தூதரகத்தின் ஊடாகச் சீனாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையனர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dutch-tourist-drowns-and-dies-1785124696"></link>
            <id>https://ibctamil.com/article/dutch-tourist-drowns-and-dies-1785124696</id>
            <summary type="text">குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த நாபர் 49 வயதுடைய டச்சு நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த நாபர் 49 வயதுடைய டச்சு நாட்டை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
</p><p>இந்த சம்பவம் நேற்று (26.07.2026) இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>நீரில் மூழ்கி பலி</h2><p>குறித்த நபர் கடலில் நீராடிக்கொண்டிந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ee0b11-1ca8-496e-8e25-f5c7b9f3c27d/26-6a66e5893eea2.webp' /></p><p>உயிரிழந்த நபர்&nbsp; இலங்கையில் நிலாவெளிப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T05:01:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-vehicle-registrations-increase-in-june-2026-1785125436"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-vehicle-registrations-increase-in-june-2026-1785125436</id>
            <summary type="text">கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி நிலவியபோதிலும், சொகுசு வாகனப் பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி நிலவியபோதிலும், சொகுசு வாகனப் பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், மே மாதத்தில் 62,776 ஆகக் காணப்பட்ட மொத்த வாகனப் பதிவுகள், ஜூன் மாதத்தில் 58,151 ஆகக் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
எனினும், உயர் வருமானம் பெறும் நுகர்வோரின் தேவைகள் காரணமாகச் சொகுசு வாகனப் பிரிவு ஸ்திரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் ஜூன் மாதத்தில், 26 புத்தம் புதிய சொகுசு வாகனங்களும், 121 பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்களும் பதிவு செய்யப்பட்டன.</p><p></p><h2>ஜூன் மாதத்தில் அதிகரிப்பு</h2><p>
மெர்சிடீஸ் பென்ஸ் சந்தையில் முன்னிலையில் உள்ள நிறுவனமாக விளங்குவதுடன், 20 புதிய வாகனங்களும் 39 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அதில் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b55f1b77-f45b-4ed9-a574-b7bc56c4ebf3/26-6a66e0ae17ad0.webp' /></p><p>
</p><p>
மேலும், ரோல்ஸ் ரோய்ஸ் ஃபான்டம் , பென்ட்லி பென்டேகா மற்றும் பெராரி போன்ற அதிநவீன சொகுசு வாகனங்களும் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அதேபோன்று, பயணிகள் வாகனப் பிரிவில் SUV மற்றும் Crossover ரக வாகனங்களின் பதிவு மே மாதத்தில் இருந்த 5,511 இலிருந்து ஜூன் மாதத்தில் 5,933 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T04:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் முக்கிய அமைச்சருக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/farmers-demand-sack-of-agri-minister-lal-kantha-1785123600"></link>
            <id>https://ibctamil.com/article/farmers-demand-sack-of-agri-minister-lal-kantha-1785123600</id>
            <summary type="text">விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவிற்கு (K.D. Lal Kantha) எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரை உடனடியாக அப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவிற்கு (K.D. Lal Kantha) எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அமைச்சரை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுருத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>
இவ்விடயத்தை தேசிய விவசாயிகள் அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அபிவிருத்திச் சட்டம்</h2><p>ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a275a4-91e4-4b6f-97b2-619bf46c141e/26-6a66da8158176.webp' /></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விவசாய அபிவிருத்திச் சட்டத்தை மீறி நெற்பயிரச்செய்கை நிலங்களை (கும்பூர்) ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அனுராதா தென்னகோன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி நெல் நிலங்களை நிரப்புவதோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>உண்மையான பிரச்சினை</h2><p>இவ்வாறான நிலையில் மக்காச்சோள (Maize) விதைகளை இறக்குமதி செய்யும் பெரு அளவிலான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அமைச்சரின் இத்தகைய செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்த அவர், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காணாமல் அவர் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருவதாகவும் ஊடகங்களுக்கு முன்னால் பொய் தகவல்களைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e490db82-a4cf-4215-8178-4fdcae55c09a/26-6a66da807d3b3.webp' /></p><p>

அத்தோடு லால் காந்தவை விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகும் வரை அல்லது அரசாங்கம் அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் வரை நாம் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய வடிவிலான போராட்டத்தைத் தொடங்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விவசாய சமூகத்தின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்படும் இந்த போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிட மாட்டோம் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T04:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-it-will-halt-strikes-as-long-as-us-1785118921"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-it-will-halt-strikes-as-long-as-us-1785118921</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நிறுத்தி வருவதால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குண்டுவீச்சு நடத்திய பதிலடித் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நிறுத்தி வருவதால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குண்டுவீச்சு நடத்திய பதிலடித் தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தியுள்ளது.</p><p>அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல் இலக்குகள் குறைந்து வருவதாகவும், அமெரிக்க ஆயுதக் களஞ்சியம் காலியாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தமது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள்</h2><p>

இதேவேளை, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b6e7e-d47b-46df-9a41-3b0c631c2163/26-6a66d08c4a087.webp' /></p><p>இது குறித்த பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிகமான ஆயுதங்கள் உள்ளன, மேலும் எங்களுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.</p><p>ஈரான் மீது 13 இரவுகள் தீவிரமாக அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் எவ்வித தாக்குதல்களும் பதிவாகவில்லை.</p><p> 

அத்துடன் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீதும் ஈரானும், கடந்த இரண்டு நாட்களாகத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.</p><p>தெஹ்ரானின் நிலைப்பாடு தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதாகவே தொடர்வதாகவும், தாக்குதல்கள் நின்றால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மசகு எண்ணெய் விலை</h2><p> </p><p>அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2881d28-5d43-4073-8bc0-67190b117dc3/26-6a66d08cefe61.webp' /></p><p>இதன்படி, கடந்த வியாழக்கிழமை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய், தற்போது 92 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.
</p><p>
இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T03:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-police-warning-to-tamils-living-in-london-1785119935"></link>
            <id>https://ibctamil.com/article/british-police-warning-to-tamils-living-in-london-1785119935</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர். </p><p>திருட்டுச் சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திருட்டு சம்பவங்கள்</h2><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5ea304-8a89-4f76-a7dd-ee231a4c4084/26-6a66c89beed57.webp' /></p><p>வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. </p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T03:56:05+00:00</updated>
        </entry>
    </feed>
