<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-21T06:31:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் தடுத்து வைப்புக் கட்டணம்! துறைமுகத்தில் கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784613792"></link>
            <id>https://ibctamil.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784613792</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது அதிக அளவிலான தடுத்துவைப்புக் கட்டணம் விதிக்கப்படுவதன் காரணமாக, சுமார் ஆயிரம் இறக்குமதி செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது அதிக அளவிலான தடுத்துவைப்புக் கட்டணம் விதிக்கப்படுவதன் காரணமாக, சுமார் ஆயிரம் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும் மறு ஏற்றுமதிக்காக ஹம்பாந்தோட்டாவிற்கு வரும் வாகனங்கள், தடுத்து வைப்புக் கட்டணம் என்ற சிக்கலையும் எதிர்கொள்கின்றன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>7 கோடி&nbsp;கட்டணம்</h2><p>

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சமீபத்தில் விடுவிக்கச் சென்றபோது, ​​இலங்கையைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் தடுப்புக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a268f00-271e-43cf-ab23-b2f6190e9e78/26-6a5f108176f0d.webp' /></p><p>

வாகனத்தை நிறுத்தி வைத்தல் கட்டணத்துடன் வாகனத்தின் விலை 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதன்படி வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்</p><p>
இந்த வரி குறித்து அறிந்த இறக்குமதியாளர் ஆச்சரியமடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் இந்த விடயம் குறித்து சுங்கத்துறைக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

அதிகப்படியான வரி காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் கைவிட்டதாகவும், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T06:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 இல் 1,000 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கடற்படையால் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-navy-seizes-over-1-000-kg-of-heroin-1784612480"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-navy-seizes-over-1-000-kg-of-heroin-1784612480</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையினரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

இதன்போது 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின், 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ், 56 கிலோ 91 கிராம் ஹாஷிஷ் மற்றும் 667 கிலோ 695 கிராம் கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>போதைப்பொருட்களற்ற இலங்கை</h2><p> </p><p>

இந்த பறிமுதல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிற்கு பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்த முடிந்துள்ளதுடன், நாட்டிற்குள் ஆபத்தான போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கும் முடிந்துள்ளதாகக் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35fe5cc-122b-4497-8c79-b53fb1dbb04f/26-6a5f0f7546c5d.webp' /></p><p> </p><p>

நச்சுப் போதைப்பொருட்களற்ற பாதுகாப்பான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக கடல்சார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T06:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gce-o-l-2026-department-notice-for-all-students-1784605967"></link>
            <id>https://ibctamil.com/article/gce-o-l-2026-department-notice-for-all-students-1784605967</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அந்தவகையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அந்தவகையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக&nbsp; திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
விண்ணப்பதாரர்கள் பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70680ce8-211e-483f-9c88-57a83f650003/26-6a5f0dd30879a.webp' /></p><p>எந்த காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T06:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்து சற்றுமுன்னர் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-pta-reject-action-harshana-nanayakkara-1784612707"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-pta-reject-action-harshana-nanayakkara-1784612707</id>
            <summary type="text">பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக நீதியமைச்சர்&amp;nbsp; ஹர்சன நாணயக்கார முக்கிய கருத்தொன்றை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.&amp;nbsp;இந்த சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக நீதியமைச்சர்&nbsp; ஹர்சன நாணயக்கார முக்கிய கருத்தொன்றை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>இந்த சட்டமூலம் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக&nbsp; அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ரத்து செய்யும் சட்டமூலம்</h2><p>இன்றைய தினம்&nbsp; (21.07.2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத் தொடரிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5046ee5-7554-45fd-a7ba-1968ec0117fc/26-6a5f0e84d91a0.webp' /></p><p> 

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் நாடாளுமன்றத்திற்கு&nbsp; சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-21T06:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள் - விலை கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-live-us-launches-10th-night-of-strikes-1784602378"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-live-us-launches-10th-night-of-strikes-1784602378</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p>சிரிக் அருகேயும், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, சபாஹர் மற்றும் கொனாரக் ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அமெரிக்க வீரர்களின் மரணங்களுக்காக ஈரான் "பல மடங்கு" விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>ஹார்முஸ் நீரிணை</h2><p>ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதுடன் கடந்த சில மணிநேரங்களில் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கியதாக வைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f176d233-7cb4-4d63-8b07-d43d5aad1e80/26-6a5eebc4d723c.webp' /></p><p>ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடிகளில் வெடித்து சிதறியுள்ளதாகவும் கப்பல்களில் "பாரிய தீ" ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது.</p><p>அரச செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரண்டு கப்பல்களின் மாலுமிகளை மீட்புக் குழுவினர் வெளியேற்றி வருவதாகதெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதிகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மேலும் சீர்குலைக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T06:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seven-passengers-died-bus-caught-fire-in-vietnam-1784610066"></link>
            <id>https://ibctamil.com/article/seven-passengers-died-bus-caught-fire-in-vietnam-1784610066</id>
            <summary type="text">வியட்நாமின் தெற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் தற்போதுவரை&amp;nbsp; ஏழு பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமின் தெற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் தற்போதுவரை&nbsp; ஏழு பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>அந்த நாட்டின் லாம் டோங் மாகாணத்திலிருந்து அருகிலுள்ள வர்த்தக மையமான ஹோ சி மின் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.&nbsp;</p><p> இந்த விபத்து இன்று அதிகாலை நடந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வியட்நாம் தீ விபத்து</h2><p>24 இருக்கைகள் கொண்ட குறித்த பேருந்தானது இவ்வாறு விபத்துக்கான சந்தர்பத்தில்&nbsp; அதில் இருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர் என்று அந்நாட்டு காவல்துறை தலைமையிலான பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி மேற்படி செய்தி வெளியாகி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc4f90a5-1d6c-432b-a43e-0f5f06b7ecfe/26-6a5f060229e6a.webp' /></p><p>மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வியட்நாம் காவல்துறை விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/revised-pension-for-192-641-government-employees-1784608589"></link>
            <id>https://ibctamil.com/article/revised-pension-for-192-641-government-employees-1784608589</id>
            <summary type="text">2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.</p><p>2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க ஓய்வூதிய திருத்தத் திட்டத்தின் கீழ்&nbsp; ஓய்வூதியங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கை 2026 ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.</p><p>அதன் முக்கிய கட்டமாக, 2026 ஜூலை 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு நாளுக்குள், தகுதி பெற்ற 192,641 ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகைகளை வெற்றிகரமாக வழங்கி முடித்துள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஓய்வூதியத் திணைக்களம்</h2><p> </p><p>இன்னும் திருத்தப்பட்ட பலன்களைப் பெற வேண்டியுள்ள ஏனைய தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கைகளும் தற்போது விரைவாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02b148c-47d6-4e53-a625-53c622e6ecef/26-6a5effba8e11c.webp' /></p><p>
</p><p>
ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் திறமையான, ஒழுங்குமுறைப்பட்ட மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஓய்வூதியதாரர்கள் வெளிப்படுத்தும் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை திணைக்களம் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு - கொன்று புதைக்கப்பட்ட மனிதர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/skeleton-sitting-criss-cross-in-chemmani-graves-1784609933"></link>
            <id>https://ibctamil.com/article/skeleton-sitting-criss-cross-in-chemmani-graves-1784609933</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்&amp;nbsp;முன்னெடுக்கப்படுகின்றது.செம்மணி புதைகுழியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்&nbsp;முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு</h2><p>இந்நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மனித எலும்பு கூடொன்று கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb06a389-962f-4ab2-9405-8f7803c83868/26-6a5f017073c34.webp' /></p><p>இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராஜங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cbsl-imposes-rs-1-46-crore-fine-on-11-companies-1784606140"></link>
            <id>https://ibctamil.com/article/cbsl-imposes-rs-1-46-crore-fine-on-11-companies-1784606140</id>
            <summary type="text">11 அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு மொத்தம் 1.46 கோடி ரூபாய் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு மொத்தம் 1.46 கோடி ரூபாய் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளை மீறியமைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>
பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைக் தடுப்பதற்கான இலங்கையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயற்படும் நிதி உளவறிதல் பிரிவு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலப்பகுதியில் இந்த சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் இந்த அபராதங்களை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய வங்கி உறுதி</h2><p>
குறிப்பிட்ட நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையிலேயே இந்த அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f484fe25-b219-4fe9-bab3-fadc7fcaae9d/26-6a5ef40363eaf.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் அபராதமாக வசூலிக்கப்பட்ட அனைத்துத் தொகையும், திரட்டிய நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
அறிக்கையிடல் நிறுவனங்களிடையே சட்ட இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதியியல் அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xlTVawhuY2M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T04:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/debate-on-committee-on-public-petition-s-work-1784607496"></link>
            <id>https://ibctamil.com/article/debate-on-committee-on-public-petition-s-work-1784607496</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(21.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(21.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 2.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான இரு தீர்மானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>மாலை 2.30 முதல் 5.30 வரை பத்தாவது நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் பணி மற்றும் செயல்திறன் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eeX6KMw54JY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரில் பரவும் போலி தகவல் : அமைச்சு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fake-information-spread-in-min-anil-jayantha-name-1784604195"></link>
            <id>https://ibctamil.com/article/fake-information-spread-in-min-anil-jayantha-name-1784604195</id>
            <summary type="text">தொழில் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக&amp;nbsp; பொய்ப் பிரசாரம் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக&nbsp; பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது</p><p>அதன்படி, பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக பரவும் தகவல் முற்றிலும் போலியான செய்தியாகும் என அந்த அமைச்சு மறுத்துள்ளது.</p><p>

தொழில் அமைச்சினால் நேற்று (20) விடுக்கப்பட் அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பௌத்த மத யாத்திரை</h2><p>மேலும் அந்த அறிக்கையில், அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb7ba09-3c85-4df5-b700-5e20b38d3f1c/26-6a5ee9abb72cb.webp' />&nbsp;</p><p>


இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும்.</p><p></p><h2>வன்மையான கண்டனம்&nbsp;</h2><p> </p><p>பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0982edeb-a060-4a90-be53-ab43eee1085e/26-6a5eec4455d96.webp' /></p><p>அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. </p><p>குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பொருட்களுக்கு 50% வரி - டிரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-impose-50-tariff-on-many-canadian-goods-1784600758"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-impose-50-tariff-on-many-canadian-goods-1784600758</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். 

இந்த வரி விதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.</p><p> 

இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன் காரணமாகவே இந்த புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2>இறையாண்மைக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா வரி விதிக்க எடுத்த தீர்மானத்திற்குப் பதிலடியாகவே அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eba481c-b3a5-415f-8175-4f031f9e57ae/26-6a5edc22f052f.webp' /></p><p>கனடாவினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் உட்பட பலதரப்பட்ட பொருட்களுக்கு இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இந்த கூடுதல் வரி விதிப்பு கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்கள் என்றும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>கனடா காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக சுங்க வரிகளை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-suspends-flights-to-kuwait-1784602750"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-suspends-flights-to-kuwait-1784602750</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 
</p><p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
 

அதன்படி, குவைத்துக்கான விமானச் சேவைகள் நேற்று (20) முதல் ஜூலை 26, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.</p><p></p><h2>உதவி தேவைப்படும் பயணிகள்</h2><p>
</p><p>
 

மேலதிக தகவல் அல்லது உதவி தேவைப்படும் பயணிகள், 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), வாட்ஸ்அப் +94 74 444 1979 (அரட்டை மட்டும்) வழியாக விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு&nbsp;ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70fdf69d-9aea-4585-9427-3e66110f37d3/26-6a5ee290605fd.webp' /></p><p>அல்லது பயணிகள் பயண முகவரைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மைதானத்திற்குப் பெண்ணுடன் வந்த கருணா...! வெடித்த சர்ச்சை - அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-sdig-jayakody-reveals-karuna-incident-1784588779"></link>
            <id>https://ibctamil.com/article/ex-sdig-jayakody-reveals-karuna-incident-1784588779</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
</p><p>
காவல் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தார்.
</p><p>
இதில் மேலும் தெரிவித்திருந்த அவர், “எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் காவல்துறை விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.
</p><p>
அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. </p><p>

அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் காவல்துறை விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என தெரிவித்திருந்தார்.
</p><p>
இதனடிப்படையில் யார் அந்த பெண் என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு ஐபிசி தமிழின் அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் உச்சம் தொட்ட முட்டை விலை...! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/egg-producers-blame-govt-for-price-hike-1784596006"></link>
            <id>https://ibctamil.com/article/egg-producers-blame-govt-for-price-hike-1784596006</id>
            <summary type="text">முட்டை விலை உயர்விற்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடிப் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முட்டை விலை உயர்விற்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடிப் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்று உணவாக அரிசியைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துவதால் கோழிகளுக்கு நோய் ஏற்பட்டு, முட்டை உற்பத்தி 20% முதல் 30% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போலி வியாபாரிகள்</h2><p>விலங்கு உணவுகளில் போலி வியாபாரிகள் டொலமைட் போன்ற இரசாயனங்களைக் கலப்பதால் பெருமளவிலான கோழிகள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecc705b0-2b40-4d18-a1bb-115ff7ef94d6/26-6a5ec627b5531.webp' /></p><p>தீவனத் தட்டுப்பாடு மற்றும் தரமின்மை காரணமாக நாளாந்த முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்து, சந்தையில் அவற்றின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784594189"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784594189</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.
 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1791c596-c0fb-45d1-bdf3-50e92026e1ae/26-6a5ebf0f1c900.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:41:06+00:00</updated>
        </entry>
    </feed>
