<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-11T17:19:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய ஏவுகணைகளால் அதிரும் உக்ரைன்...! ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskyy-russia-uses-north-korea-missiles-1786464625"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskyy-russia-uses-north-korea-missiles-1786464625</id>
            <summary type="text">ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வடகொரியாவிடமிருந்து கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் படைகளையும் பெற்று உக்ரைன் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வடகொரியாவிடமிருந்து கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் படைகளையும் பெற்று உக்ரைன் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்வைத்துள்ளார்.</p><p>

உக்ரைனின் தென்கிழக்கு நகரான சபோரிஜியா (Zaporizhzhia) மற்றும் பிற பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை, ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணை</h2><p> 

இதில் வடகொரியா வழங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe8fc3-71d5-4cb1-a300-0e4d513461c6/26-6a7b53e4986b7.webp' /></p><p>இந்தநிலையில் ரஷ்யா தனது நிலப்பரப்பில் மேலும் 30,000 முதல் 50,000 வரையிலான வடகொரிய துருப்புக்களை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், பியாங்யாங்கிலிருந்து புதிய தொகுதி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்றுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>பலவீனமான நிலை</h2><p>ரஷ்ய வரலாற்றிலேயே முதன்முறையாக வடகொரியாவின் ராணுவ மற்றும் தளவாட உதவிகள் இன்றி அவர்களால் போரைத் தொடர முடியாத பலவீனமான நிலைக்கு மாஸ்கோ தள்ளப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ef8df7-dfa3-4091-9d38-0fbc13c37818/26-6a7b53e3b461e.webp' /></p><p>உக்ரைன் போர்க்களத்தில் வடகொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படுவது எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p>

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைனுக்குத் தேவையான பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணை தடுப்பு உதவிகளை வழங்குமாறு மேற்கத்திய நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T17:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வருகை தந்தார் : உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-sri-lanka-arrives-1786465555"></link>
            <id>https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-sri-lanka-arrives-1786465555</id>
            <summary type="text">இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங்,(Wei Huaxiang) தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கைக்கு வருகை தந்தார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங்,(Wei Huaxiang) தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கைக்கு வருகை தந்தார்.

நாட்டிற்கு வந்தடைந்த பின்னர் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தப் பாடுபடுவேன் என்று குறிப்பிட்டார்.</p><p>இலங்கையின் வளமான வரலாறு, இயற்கை அழகு மற்றும் அதன் மக்களின் விருந்தோம்பல் ஆகியவற்றின் மீதான தனது பாராட்டுகளை வெளிப்படுத்திய தூதர் வெய் ஹுவாக்சியாங், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் மற்றும் கலாசார உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.</p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள்</h2><p>
</p><p>
ரப்பர், அரிசி ஒப்பந்தம் உள்ளிட்ட வரலாற்று உறவுகளையும், தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறு மேலும் வலுப்பெற்றுள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/264250f3-cfa9-46b6-ba17-de283a52122a/26-6a7b508d8043d.webp' />‘பெல்ட் அண்ட் ரோடு’ முன்முயற்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது என்றும், இது இரு நாட்டு மக்களுக்கும் பல நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது என்றும் தூதர் குறிப்பிட்டார்.</p><p>
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் 2025-ஆம் ஆண்டு தத்தமது சீனப் பயணங்களின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு புதிய உத்திசார் திசையை அளித்துள்ளன என்றும் தூதர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T16:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-activities-fishermen-outside-mullai-seas-1786462480"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-activities-fishermen-outside-mullai-seas-1786462480</id>
            <summary type="text">முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட கடற்றொழிலார்கள்
ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள்
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட கடற்றொழிலார்கள்
ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள்
இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில்
ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர்
நாயகம் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக்
கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.</p><h2>முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்</h2><p>

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இன்று(11.08.2026) இடம்பெற்ற இவ்வாண்டிற்கான
இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1458a153-6b32-47e0-869f-1a5cdebf4263/26-6a7b4981c15db.webp' /></p><p>
</p><p>
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக்
காணப்படுகின்றன.

இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.
</p><h2>புகைப்பட ஆதாரங்கள்</h2><p>அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன்.

இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக்
கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம்
கையளிக்கின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f81c202-4d81-4e22-b2e0-b571f513bad4/26-6a7b498276ea8.webp' /></p><p>

அத்தோடு வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில்
மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர்
நாயகம் வழங்குகின்றார். </p><p>அவ்வாறு மீன்பிடிக்கான அனுமதியைப் பெறுபவர்கள் இங்கு
வந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
</p><p>
குறிப்பாக நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தென்னிலங்கையைச் சேர்ந்த
ஒருவருக்கு முள்ளிவாய்க்காலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை
வழங்கியுள்ளார்.</p><p></p><p> </p><h2>முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடுமையாக பாதிப்பு</h2><p>இந்நிலையில் குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர், சாலைப்
பகுதியில் ஐந்து படகுகளை வைத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில்
ஈடுபட்டுவருவதாக கடற்றொழிலாளர்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee999cbb-a77c-490d-89f8-e870246bbfaa/26-6a7b4983454f7.webp' /></p><p> </p><p>இவ்வாறாகத்தான்
எமது முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்
ஊடுருவுகின்றன.

இவ்வாறு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளிமாவட்ட
கடற்றொழிலாளர்களுக்கு வழங்குகின்ற அனுமதிகளாலேயே, எமது மாவட்ட கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத
கடற்றொழில் செயற்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p>
எனவே எமது மாவட்டத்தில், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான
அனுமதிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை
கட்டுப்படுத்துமாறே நாம் கோருகின்றாம்.</p><p>

இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய
கடற்படையினரும், காவல்துறையிரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படவேண்டுமென
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.</p><p>-</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T16:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-addict-youth-dies-in-jaffna-1786460604"></link>
            <id>https://ibctamil.com/article/drug-addict-youth-dies-in-jaffna-1786460604</id>
            <summary type="text">யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் நேற்றையதினம்(10)
உயிரிழந்துள்ளார். 

 கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம்
கஷ்மன் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் நேற்றையதினம்(10)
உயிரிழந்துள்ளார். </p><p>

 கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம்
கஷ்மன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த நபர் நேற்றிரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத் தோட்டம்
ஒன்றுக்குள் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார்.</p><h2>ஏற்கனவே உயிரிழந்து விட்டார்</h2><p>

இந்நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24909125-4815-48ee-a9c6-65dbb251245a/26-6a7b39be91baa.webp' /></p><p>

அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவான
போதைப்பொருள் பாவனையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் காவல்துறையனர் நெறிப்படுத்தினர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T15:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் மகளை காணவில்லை : பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daughter-missing-in-batticaloa-1786449764"></link>
            <id>https://ibctamil.com/article/daughter-missing-in-batticaloa-1786449764</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>

மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா(வயது 14) என்ற மகளையே கடந்த 02 ஆம் திகதி முதல் காணவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><h2>முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை</h2><p>வழமையாக பாடசாலை சென்று வந்து பிற்பகல் 02 மணிக்கு தனியார்கல்வி நிலையம் சென்றுள்ளார்.மாலை ஆறுமணியாகியும் அவர் வராத காரணத்தால் 119 என்ற காவல்துறையின் அவர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vQPjd9OT0VY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையம் சென்று முறைப்பாடு அளித்த போதிலும் இன்றுவரை காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகசின் சிறைக்கு போதைப்பொருள் வழங்கிய சிறைக்காவலர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-prison-guard-supplied-drugs-to-magazine-prison-1786457800"></link>
            <id>https://ibctamil.com/article/a-prison-guard-supplied-drugs-to-magazine-prison-1786457800</id>
            <summary type="text">பொரள்ள மகசின் சிறைக்கு போதைப்பொருள் வழங்கி வந்ததாகக் கூறப்படும் சிறைக் காவலர் ஒருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரள்ள மகசின் சிறைக்கு போதைப்பொருள் வழங்கி வந்ததாகக் கூறப்படும் சிறைக் காவலர் ஒருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
</p><p>
அதே நேரத்தில், 100 கிராம் ஐஸ் மற்றும் 20 கிராம் ஹெரோயினும் காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் அதன் மதிப்பு சுமார் ரூ. 2 மில்லியன் எனக் கூறப்படுகிறது.</p><h2>போதைப்பொருளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது</h2><p>தெஹிவள மருத்துவ சாலையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், நீர்கொழும்பு பகுதியில் இந்த போதைப்பொருள் கையிருப்புடன் முதலில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e792a11b-5f1a-456c-9ae9-799368e92711/26-6a7b341a4da33.webp' /></p><p> விசாரணையின் போது, ​​மகசின் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் வாட்ஸ்அப் தொலைபேசி அழைப்பு மூலம் ஒரு இடத்தைப் பற்றிய தகவலை அளித்ததன் மூலம், இந்த போதைப்பொருள் பொதி கைமாற இருந்தமை தெரியவந்தது.
</p><p>
பொரள்ள வனத்த வீதியில் மற்றொரு நபரிடம் போதைப்பொருள் பொதி கொடுக்கப்படவிருந்தது. சந்தேக நபர் அளித்த தகவலின் அடிப்படையில்,நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் அந்த நபரைக் கைது செய்ய ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சிக்கிய சிறைகாவலர்</h2><p>அப்போது, ​​சிறை சீருடை அணிந்த ஒருவர் சந்தேக நபரை அணுகி, போதைப்பொருள் அடங்கிய பொதியைபெற முயன்றார். அருகில் காத்திருந்த பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f74a58f-59a3-48a6-9a3b-1062fd111448/26-6a7b341999b22.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட காவலர், கடந்த ஜனவரி மாதம் மகர சிறையில் சேர்ந்தவர் என்றும், இதற்கு முன்பு வெலிக்கடை சிறையில் பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட 53 வயதான காவலர், தங்காலையில் உள்ள பெலியத்த பகுதியைச் சேர்ந்தவர்.

இந்தச் சம்பவம் குறித்து நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:39:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-hidden-truck-secret-plane-iran-threat-1786454323"></link>
            <id>https://ibctamil.com/article/trump-hidden-truck-secret-plane-iran-threat-1786454323</id>
            <summary type="text">ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக விமானம் மாறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஓரே இஸ்லாமிய நாடு துருக்கி. துருக்கியில் கடந்த ஜூலை 7 நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகொண்டார்.</p><h2>சந்தேகங்களை ஏற்படுத்திய&nbsp;விமானம் மாறுதல்</h2><p>இதில் பங்கேற்க, கத்தார் பரிசாக வழங்கிய ஏர் போர்ஸ் ஒன் போயிங் 747-8 விமானத்தில் வருகை புரிந்த ட்ரம்ப் அன்றைய தினம் திரும்பிச் செல்லும்போது அந்த புதிய விமானத்தில் ஏறாமல் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88a2a81-2177-4289-98fb-74bc31e590a3/26-6a7b24577138f.webp' /></p><p>

புதிய விமானத்தில் வந்திறங்கி, புறப்படும் போது திடீரென பழைய விமானத்திற்கு மாறியது சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>

இந்நிலையில் அவர் அன்றைய தினம் அந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதுபோல் ஊடகங்களை ஏமாற்றிவிட்டு வேறொரு சிறிய ரக இராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
</p><p>
ஈரான் போர் உச்சக்கட்டத்தில் இருந்ததும், தான் படுகொலை செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் ட்ரம்ப் இந்த முறையில் ரகசியமாக பயணித்ததாக கூறப்படுகிறது.</p><p>




' வோஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட ட்ரம்ப், கமராக்களுக்கு முன் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போலக் காண்பிக்கப்பட்டது.</p><p></p><h2>ரகசியமாக வெளியேற்றப்பட்ட&nbsp;ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள்</h2><p>

ஆனால், விமானத்திற்குள் சென்ற சில நிமிடங்களில், ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக் மூலம் ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டனர்.

அங்கிருந்து அவர் அமெரிக்க இராணுவத்தின் சிறிய C-32A என்ற மாற்று விமானத்திற்கு மாற்றப்பட்டு, இங்கிலாந்தில் RAF Mildenhall விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/869a80d1-65e5-41d1-be0a-3f70171f1a6e/26-6a7b24582585a.webp' /></p><p> </p><p>அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.

ட்ரம்ப் இன்றி பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம், விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>


ஈரான் எல்லையை ஒட்டிய துருக்கிக்கு ட்ரம்ப் சென்றிருந்த சமயத்தில், ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் குறித்த நம்பகமான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் : சான்று பொருட்களும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786456371"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786456371</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில்
புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்
பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில்
புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்
பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்று நடைபெற்றபோதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்</h2><p>யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில்
தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய
அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு
பணிகளில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf9a1d8-87af-449b-88dc-e8c521374df9/26-6a7b2b51aa3ba.webp' /></p><p>இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524
மனித என்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .

516வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில்
மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய்
நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரத்மலானே சைமா : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ratmalane-saima-granted-48-hour-detention-1786451077"></link>
            <id>https://ibctamil.com/article/ratmalane-saima-granted-48-hour-detention-1786451077</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் இரத்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் இரத்மலானே சைமாவை காவலில் வைத்து விசாரிக்க கண்டி நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணைக்காக அவரை 48 மணி நேரம் காவலில் வைக்க நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மேலதிக விசாரணைக்காக "ரத்மலானே சைமா" நேற்று இரவு (10) பெரதெனிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.</p><h2>இன்டர்போலின் உதவியுடன்&nbsp; கைது&nbsp;</h2><p>
</p><p>
வலானா மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போலின் உதவியுடன் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa23ae6b-4584-4a97-a4c2-6bf76d48f335/26-6a7b1e96d26cb.webp' /></p><p>
</p><p>
அவருடன் இருந்த ரத்மலானா பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த மூன்று சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டனர்.</p><p></p><h2>நிலுவையில் உள்ள குற்றவாளி&nbsp;</h2><p>

ரத்மலான பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரதான சந்தேக நபர், 2014-ஆம் ஆண்டில் பெரதெனிய காவல் பிரிவில் ஒருவரைக் கடத்தி, துப்பாக்கி முனையில் காயப்படுத்தியது மற்றும் 2016-ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக் கொன்றது ஆகிய இரண்டு வழக்குகளில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றவாளி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3575ca-ad7f-4583-bff2-ce38a1c99c1e/26-6a7b1e97838cc.webp' /></p><p>

இதற்கிடையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரணதண்டனை விதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409</id>
            <summary type="text">&amp;nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&amp;nbsp;மூவருக்கு &amp;nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போரின்போதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&nbsp;மூவருக்கு &nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அசாத்&nbsp;&nbsp;இல்லாத நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு</h2><p>பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e08db6-de94-4f99-83ad-ff772666ee89/26-6a7af80e3ba2e.webp' /></p><p>
</p><p>
பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றில் முன்னிலை</h2><p>

மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3b9a2f-0e70-4681-9fe8-c44525230996/26-6a7af80ee27c0.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>

சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய இடைக்கால அரசு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல் : காரணங்கள் கண்டறிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/causes-of-prison-unrest-identified-1786446954"></link>
            <id>https://ibctamil.com/article/causes-of-prison-unrest-identified-1786446954</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களுக்குப் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடரும் அதே வேளையில் அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களுக்குப் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடரும் அதே வேளையில் அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

இன்றைய(11) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இச்சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தினார்.</p><h2>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து, கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13fd2a9-5067-4177-be78-66361a1f7bbd/26-6a7b08d814e4a.webp' /></p><p>
</p><p>
கலவரத்தின் போது நடந்த கொலைகள் தொடர்பாக 61 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், நேற்று (10) ஒருவர் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><p> </p><h2>மகர சிறைச்சாலை சம்பவம்</h2><p>இச்சம்பவம் தொடர்பான உண்மைகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மகர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக 925 நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d49e15-c6e7-459e-aea3-125154e8b7e9/26-6a7b08d761e47.webp' /></p><p> அதே வேளையில் குருவிட்ட சிறைச்சாலை மோதல் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மோதல்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். </p><p>மேலும், இந்தச் சம்பவங்களுக்கு இடையே தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும், வெளித் தரப்பினரின் சாத்தியமான ஈடுபாடு குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு குட் நியூஸ்: அனுமதி வழங்கிய அமைச்சரவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-refugees-returning-homeland-from-india-1786443296"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-refugees-returning-homeland-from-india-1786443296</id>
            <summary type="text">யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக இந்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>அமைச்சரவை அங்கீகாரம்</h2><p>1. 2006-08-01 இற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்கள், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், அரசு புலனாய்வுச் சேவையிடமிருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b27e1d-370c-4aba-8c3c-bdec2dbfbd83/26-6a7b046fe29c2.webp' /></p><p>
</p><p>2. குறித்த நபர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைச் செய்யாதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
</p><p>3. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்குத் தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்கமைய, எந்தவித சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தர வாய்ப்பளித்தல்.
</p><p>4. 2006-08-01 முதல் யுத்தம் முடிவடைந்த 2009-05-19 ஆம் திகதி வரை முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள், தூதரகத்தின் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி, புலனாய்வுச் சேவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுக்கட்டுப்பாட்டாளரின் அதிகாரங்களின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டுக்குத் திரும்ப சந்தர்ப்பம் வழங்குதல்.</p><p>5. இருப்பினும், கொலை, தேசத்துரோகம் போன்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படும் நபர்கள், துறைமுகங்களில் வைத்துத் தடுக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : அரச தரப்பின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-drug-offenders-in-sri-lanka-1786446247"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-drug-offenders-in-sri-lanka-1786446247</id>
            <summary type="text">இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து&amp;nbsp;இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து&nbsp;இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சில தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.</p><p></p><h2>சில தரப்பினரிடமிருந்து வந்த யோசனை</h2><p>இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து கலந்துரையாடும் போது சில தரப்பினரிடமிருந்து வந்த ஒரு யோசனையே இது. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இதுவரை இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54b7a28-55a8-49fe-9bef-3b3dd4229a15/26-6a7b0522afdfc.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து பேசப்படும் போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் ஒரு யோசனை மட்டுமே இது." என தெரிவித்தார்.</p><p>இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று (10) கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நாளையதினம் வெடிக்கவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-keerimalai-area-of-jaffna-tomorrow-1786444759"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-keerimalai-area-of-jaffna-tomorrow-1786444759</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல்
அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான
முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான
கழிவுகளை கொட்டியுள்ளனர்.</p><h2>காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை</h2><p>கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34
உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும்,
இதுவரையில் காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்
சாட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bea087c-55d2-488b-8b62-34a3e2ed8f34/26-6a7b005280297.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட
பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட
குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில்
விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>பிதிர்கடன்களை&nbsp;&nbsp;பலர் ஒன்று கூடுவார்கள்</h2><p>
</p><p>
அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது, முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று
கூடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994b9478-8e85-41a1-a56c-89859e34ad77/26-6a7b00535ffb8.webp' /></p><p>&nbsp;மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை
முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார்
என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:18:17+00:00</updated>
        </entry>
    </feed>
