<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-17T07:48:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்தின் ஆரம்பத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-edged-higher-on-monday-today-1786946287"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-edged-higher-on-monday-today-1786946287</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.</p><p>கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. </p><p>

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>தங்கத்தின் விலை</h2><p> 

அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51aa5f9-81f5-48fd-aff4-cc7e9adc2147/26-6a82b8d73963c.webp' /></p><p> 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் -2 போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் -2 போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

யாழ்ப்பாணம் - பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணி செம்மணி வரை சென்று குறித்த பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p><p>

இந்தப் பேரணியில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>சர்வதேச நீதி வேண்டும்</h2><p>இதன்போது “இலங்கை அரசு தமிழ் குழந்தைகளை அவர்களின் கனவுகளுடன் புதைத்தமைக்கு சர்வதேச நீதி வேண்டும்“, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு நீதி வேண்டும்.” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f461dd23-1ff3-4255-af80-ea995bccee16/26-6a82b77cc4aa9.webp' /></p><p> </p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p> 

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான போராட்டம் இன்று (17) வரை நான்கு நாட்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரக்குறைவாக பேசிய உயர் அதிகாரிகள் - யாழில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-by-development-officers-reported-in-north-1786950094"></link>
            <id>https://ibctamil.com/article/protest-by-development-officers-reported-in-north-1786950094</id>
            <summary type="text">யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அபிவிருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>விரும்பத்தகாத கருத்து</h2><p>வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6914fa-c32e-40ef-947c-a08e9e735a6d/26-6a82b63294ebd.webp' /></p><p>குறித்த ஒலிப்பதிவில், உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து, அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p><p>இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.</p><p>
மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609fee4b-ad89-4229-b8f8-a2bab12e775e/26-6a82b6334e4a5.webp' /></p><p> அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுதாபத்திற்காக பதவி விலகுவதாக கூறும் ஜனாதிபதி அநுர! மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054</id>
            <summary type="text">


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>

நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 14,000 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>பொதுமக்களின் அனுதாபதம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a56d20-ae23-4dea-9ecb-0941263e4ea3/26-6a82b59041bce.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கணிசமாகக் குறைத்து, பொய் வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்ற முடியாத கனவுகளைக் காட்டி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய காரணங்களால் ஜனாதிபதிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவித அனுதாபமும் கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027</id>
            <summary type="text"> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தக...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப்
பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே இன்று 16.08.2026 மாலை
விபத்துக்குள்ளானது.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

இரண்டு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானமை
தொடர்பில் தகவல் கிடைத்த உடனேயே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு,
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cf0417-714d-4d83-9b4c-010380592bd0/26-6a82b0886a02b.webp' /></p><p>

இதனையடுத்து, இலங்கை கடற்படையினர், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு மக்களின்
ஒத்துழைப்புடன் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 10
பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விபத்துக்குள்ளானமைக்கான காரணம்</h2><p>
இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது
தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f96608-2e5d-4aab-8c5e-fb09c22eb82b/26-6a82b0879a0d2.webp' /></p><p>அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life
Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில்
மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு
அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்</p><p>பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான
பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874</id>
            <summary type="text">
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
அவர் இலங்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டு துபாய்க்குத் தப்பிச் சென்ற போதிலும், அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் அரசின் ஆசி காரணமாக உள்ளூர் உயர் நீதிமன்றங்களில் அவர் மீது பலமான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

அவருக்குச் சொந்தமான சோல் பீச் ஹோட்டலுக்குத் தேவையான மதுபான உரிமங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகளைப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>250 மில்லியன் ரூபாய் லஞ்சம்</h2><p>
</p><p>
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்பி-க்கள் மற்றும் காவல்நிலையப் பொறுப்பதிகாரிகள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருகை தந்து இலவச உணவு மற்றும் உபசரிப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதரவையும் அனுபவித்துள்ளதாக கண்டறியப்ப்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f875004-0a41-4b50-901e-bd7be4056ba4/26-6a82ae46e9155.webp' /></p><p>

இந்நிலையில், தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது பதவியை உறுதிப்படுத்துவதற்காக வேண்டிய கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை இந்த சோல் பீச் ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்தியே நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

மேலும், பதில் காவல்துறை மா அதிபர் பதவியைப் பாதுகாத்துத் தருவதற்காக தேஷபந்து தென்னகோன், ஷிரான் பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாகவும், அந்தப் பணத்தைக் கொடுக்க ஷிரான் பாசிக் மறுத்ததால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சோல் பீச் ஹோட்டல் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>பாசிக் மகன் -&nbsp;விஜயதாச ராஜபக்ச தொடர்பு</h2><p>

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஹேவ்லோக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் ஷிரான் பாசிக்கின் மகன் நதீம் பாசிக் கைது செய்யப்பட்ட சம்பவமும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31226c7-def8-4939-a498-dca564287ab5/26-6a82ae47a3dbd.webp' /></p><p> </p><p>

நதீம் பாசிக் அங்கு குடியேறுவதற்கு முன்னர், இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரபல நடிகை ஒருவர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p> </p><p>

ஷிரான் பாசிக்கின் கறுப்பு பணத்தை சலவை செய்வதற்கு இந்த நடிகை பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், இவ்வாறு காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான பாதுகாப்பும் ஆதரவுமே ஷிரான் பாசிக் போன்ற ஒரு கடத்தல்காரர் சர்வதேச அளவில் உருவெடுக்க முதன்மையான காரணியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T06:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் 770 கோடி பெறுமதியான அரிய ஓவியங்கள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556"></link>
            <id>https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556</id>
            <summary type="text">இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அரிய ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.</p><p>

இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் (15.08.2026) இரவு&nbsp; 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் இருந்தபோதிலும், மர்ம நபர்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலாரம் அமைப்புகளை முறியடித்து அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள்&nbsp;</h2><p>

அதன்பின்னர், ஓவியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாதுகாப்புப் பெட்டியை உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc6d400-8853-46c4-94ae-59c0e8876bdc/26-6a82a76411952.webp' /></p><p>எனினும், தப்பிச் செல்லும் அவசரத்தில் திருடப்பட்ட ஓவியங்களில் இரண்டு ஓவியங்களை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மீதமுள்ள இரண்டு ஓவியங்கள் தற்போது காணாமல் போயுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்காக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p>
கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்குள் எவ்வாறு நுழைந்தனர், பாதுகாப்பு மற்றும் அலாரம் அமைப்புகளை எவ்வாறு செயலிழக்கச் செய்தனர், மேலும் திருடப்பட்ட ஓவியங்களை எங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
வரலாற்று மற்றும் கலைத்துறை ரீதியாக மிகுந்த பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஓவியங்கள் சர்வதேச கலைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Three paintings by Renoir, Cézanne and Matisse worth millions of euros that were stolen earlier this year in a three-minute heist were recovered by Italian police — and five suspects were arrested. <a href="https://t.co/LiHKuJ7Q7a">pic.twitter.com/LiHKuJ7Q7a</a></p>&mdash; CBS Mornings (@CBSMornings) <a href="https://x.com/CBSMornings/status/2088679648586588470?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/direct-flights-launch-between-vietnam-and-srilanka-1786943452"></link>
            <id>https://ibctamil.com/article/direct-flights-launch-between-vietnam-and-srilanka-1786943452</id>
            <summary type="text">இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ்&amp;nbsp;உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ்&nbsp;உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.</p><p> வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.</p><p> 

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானத்திற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;விமானப் பயணங்கள்</h2><p>இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad34760-4547-4ddf-8cf5-74230cc876e5/26-6a82ad4d77a44.webp' /></p><p>

இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>அத்துடன் இந்த விமானப் பயணத்திற்காக 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

புதிய விமான சேவையை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் பிரதம அதிதியாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை - பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ag-files-indictments-against-pillayan-and-3-others-1786946881"></link>
            <id>https://ibctamil.com/article/ag-files-indictments-against-pillayan-and-3-others-1786946881</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கானது சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-flag-hoisting-today-1786943984"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-flag-hoisting-today-1786943984</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை 8.1...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p>இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10
மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.</p><p>இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை
வழிபட்டு அருளாசி பெற்றனர்.</p><p></p><h2>கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு&nbsp;கொடியேற்றத்திற்கான புனித கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப் பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி, கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து நேற்று (16) எடுத்துவரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d648c4-3360-4642-9824-d1a5dc30582f/26-6a829dd20dfa5.webp' /></p><p>அத்துடன்&nbsp;வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு நேற்று (16) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>அதற்கமைய நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டதைத் தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-0N-aH2Tuhc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-will-be-brought-to-sri-lanka-soon-1786940561"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-will-be-brought-to-sri-lanka-soon-1786940561</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருதல்&nbsp;</h2><p>
</p><p>''நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6420cc6-ce8c-4a69-adc3-b1f8190c57c5/26-6a829640865d5.webp' /></p><p> இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.
</p><p>

இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர்.

இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.
</p><p>
இவரையும் நாளை மறுநாள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
</p><p>
மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, வெளிநாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Zz2aE_rJfLo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கோவில் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 7பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909"></link>
            <id>https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909</id>
            <summary type="text">இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை&nbsp;6.45 மணியளவில் (17.08.08.2026) நடைபெற்றுள்ளது.</p><p>புனிதமான ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவபெருமானை வழிபடுவதற்காக பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.</p><p></p><h2>7 பேர் பலி</h2><p>
</p><p>
இதன்போது, அசோக் தாம் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள இந்திரமனேஷ்வர் ஆலயத்திற்குள் நுழைவதற்காக பக்தர்கள் பெருமளவில் திரண்ட நிலையில், கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து கடும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba7c5e0-34b9-40b0-8654-01bead4eacfd/26-6a829611bdbd5.webp' /></p><p>இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பக்தர்கள் என இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

குறித்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல்களின்படி, ஆலய வளாகத்தில் மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்தமை பக்தர்களிடையே திடீர் பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து ஏற்பட்ட பதற்றம் மற்றும் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற அல்லது பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முற்பட்டதன் காரணமாக நெரிசல் மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக, 2019 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஷ்ராவண மாதத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்ததுடன், சுமார் 15 பேர் காயமடைந்திருந்தனர்.
</p><p>
இந்நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹமாஸுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-holds-talks-with-hamas-amid-israeli-opposition-1786942464"></link>
            <id>https://ibctamil.com/article/us-holds-talks-with-hamas-amid-israeli-opposition-1786942464</id>
            <summary type="text">அமெரிக்க ஆதரவு காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஜாரெட் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஆதரவு காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஜாரெட் குஷ்னர் ஹமாஸுடன் நடத்திய பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக ஈரான் மாறியுள்ள நிலையில் இந்த நகர்வு ட்ரம்ப் தரப்புக்கு முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.</p><p>

இதன்படி ஜாரெட் குஷ்னர் நேற்றைய தினம் எகிப்தில் ஹமாஸின் புதிய தலைவர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான தூதுக்குழுவை சந்தித்தார்.</p><p></p><h2>முழுமையான ஆயுதக் களைவு</h2><p>

கடந்த மாதம், காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவு குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக ட்ரம்பின் அமைதி வாரியம் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4cd2c97-a518-4d28-a4c3-302a189a0039/26-6a82963e284a3.webp' /></p><p> </p><p>

கடந்த வாரம், இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும், ஒரு புதிய பாலஸ்தீனிய குடிமை நிர்வாகத்தின் கீழ் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அழைப்பு விடுக்கும் ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. </p><p>

இந்நிலையில் இஸ்ரேலின் நிராகரிப்பைக் கண்டித்து எட்டு இஸ்லாமிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டன.
</p><p>
இதன்படி காசாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஒரு சர்வதேச அமைப்பாக உருவாக்கப்பட்டு, பின்னர் உலகளாவிய மோதல்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட அமைதி வாரியத்திற்கு ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். </p><p>

காசா பகுதிக்கு கடந்த ஆண்டு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, இந்த மட்டத்தில் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்று குஷ்னர் ஹய்யாவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T05:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-9-magnitude-quake-hits-flores-region-indonesia-1786938859"></link>
            <id>https://ibctamil.com/article/5-9-magnitude-quake-hits-flores-region-indonesia-1786938859</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5.9 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>

நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.</p><p></p><h2>சேத விபரங்கள்</h2><p>எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feca331-6f12-4e5f-ac2b-0570f25664d7/26-6a828a6900672.webp' /></p><p> </p><p>

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.&nbsp;</p><p>நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-with-ice-drug-1786935190"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-with-ice-drug-1786935190</id>
            <summary type="text">அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்&nbsp; 204 கிராம் 660 மில்லிகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
அஹுங்கல்ல காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப்பின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>19 வயது இளைஞர்</h2><p>
</p><p>இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11011b3-3b12-42d4-a93e-05a585285884/26-6a827e555234b.webp' /></p><p>

சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
குறித்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது மற்றும் சந்தேகநபருக்கு பின்னால் உள்ள போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-case-court-order-to-submit-evidences-1786936843"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-case-court-order-to-submit-evidences-1786936843</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>224 பேர் கொல்லப்பட்டனர்&nbsp;</h2><p>
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.
</p><p>
அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207de084-919f-4068-8f9f-ea995d0f3eaf/26-6a82835494e39.webp' /></p><p>
</p><p>
இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.</p><p>

ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.</p><p>2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.</p><p>இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றப் பொருட்கள்&nbsp;</h2><p>
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரச தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2abdbbfa-4125-4394-bc61-e22d32af7866/26-6a8282d218793.webp' /></p><p>இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.</p><p>
எனினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது. ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரச தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.</p><p>

இந்த நிலையில் வழக்கில் அரச தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T03:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-vehicle-import-lc-rates-drop-1786926363"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-vehicle-import-lc-rates-drop-1786926363</id>
            <summary type="text">ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> </p><p></p><h2>அணிவகுப்பும் ஏற்பாடு&nbsp;</h2><p>சிறிய கார்கள் முதல் சூப்பர்கார்கள் வரையிலான பல்வேறு வகையான வாகனங்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa62be2-7f63-4f0a-81af-c24a21c6c30a/26-6a82551d218a8.webp' /></p><p>இது துறைமுக நகர வளாகத்திலிருந்து வாட்டர்ஸ் எட்ஜ் வரை சென்றது.
</p><p>
சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயணக் கலாசாரத்தையும், சுய ஒழுக்கத்துடன் கூடிய ஓட்டுதலையும் உருவாக்கும் நோக்கத்தில் இந்த வாகனக் கண்காட்சியும் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>[TP2IRXB
]</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:13:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் குடியிருப்பொன்றில் இருந்து தவறி வழுந்த 12 வயது சிறுவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-after-falling-from-an-apartment-complex-1786932568"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-after-falling-from-an-apartment-complex-1786932568</id>
            <summary type="text">கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவர்&amp;nbsp;தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவர்&nbsp;தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>

முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளப் பகுதியில் இருந்துள்ளார்.</p><p></p><h2>12 வயது சிறுவன் பலி</h2><p>
</p><p>
இதன்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்து கீழே விழுந்ததாக காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95da3308-ebec-41c5-b905-d51c2919761e/26-6a827406336be.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். </p><p>சிறுவன் கீழே விழுந்தமைக்கான காரணம் மற்றும் சம்பவத்துக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகளும் தற்போது&nbsp; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T02:43:41+00:00</updated>
        </entry>
    </feed>
