<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-05T03:11:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பரவும் பொய்யான தகவல்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/false-information-being-spread-about-power-cuts-1788572483"></link>
            <id>https://ibctamil.com/article/false-information-being-spread-about-power-cuts-1788572483</id>
            <summary type="text">நாட்டின் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித சிக்கலும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

லக்விஜய மின் உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித சிக்கலும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது பேசிய அவர், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தலாம் எனப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெளிவுபடுத்தினார்.</p><p>

மேலும், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கான நிலக்கரியைக் கொள்முதல் செய்து கொண்டுவருவதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9b3379a-9d07-4752-b926-0dbe3d7c2a5e/26-6a9b7345b8c8d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T02:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவர் கடத்தி கொலை! அதே நாட்டை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-murder-of-chinese-national-1788571024"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-murder-of-chinese-national-1788571024</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டினர் குழுவினரால் மூன்று சீன நாட்டினர் கடத்தப்பட்டு, ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டினர் குழுவினரால் மூன்று சீன நாட்டினர் கடத்தப்பட்டு, ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கண்ட குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபர் நேற்று (04) கொழும்பு துறைமுக நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1fca37-e66d-410d-b44d-427c91be332d/26-6a9b6f3984f73.webp' /></p><p>

சந்தேக நபர் 54 வயதான ஒரு சீன நாட்டவர் என தெரியவருகிறது.
</p><p>
ஏற்கனவே, இந்த கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு சீன நாட்டவர்கள், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T02:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு! தேசபந்து உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-against-deshabandu-tennakoon-1788566512"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-against-deshabandu-tennakoon-1788566512</id>
            <summary type="text">
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2023 டிசம்பர் 30 அன்று இரவு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசேட நடவடிக்கையொன்றுக்காக வானில் வெலிகம பகுதிக்குச் சென்று இந்தத் துப்பாக்கிச் சூட்டைச் நடத்தினர்.
</p><p>
அதன்போது, இவர்களுடன் சென்ற காவல்துறை சார்ஜன்ட் உபுல் சமிந்த குமார, வெலிகம காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>08 சந்தேகநபர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e20e614-be63-479e-a647-bc5353be7935/26-6a9b61d21c091.webp' /></p><p>

இதன்படி தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி அன்ஸலம் டி சில்வா, காவல்துறை பரிசோதகர்களான மகேஷ் தனுசிங்க, ஜகத் நிஷாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் மதுரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன குமார, காவல்துறை கொன்ஸ்டபிள்களான சுபுன் பிரியஷான் மற்றும் சாரதி கிஹான் பியதிஸ்ஸ ஆகியோர் முதற்கட்டமாகச் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
</p><p>
பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளராகச் செயற்பட்ட உதவி காவல்துறை அத்தியாட்சகர் நெவில் சில்வாவும் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, இவ்வழக்கின் 9 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.</p><h2>காவல்துறை மா அதிபர் பதவி</h2><p>

இந்தத் துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து தலைமறைவாக இருந்தமை மற்றும் 2022 மே 9 வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b186b0c-9d9a-491a-b7c5-688e3bbdef85/26-6a9b61d2c951a.webp' /></p><p>இதில் 19 குற்றச்சாட்டுகளில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 177 ஆதரவு வாக்குகளுடன், 2025 ஓகஸ்ட் 5 அன்று அவர் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
</p><p>
அனுமதியின்றி அதிகாரிகளை வெலிகமவுக்கு அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்ப முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேசபந்து தென்னகோன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு, கிழக்கு மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1788569124"></link>
            <id>https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1788569124</id>
            <summary type="text">
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் மொரட்டுவ, கெஸ்வெவ, பொல்ஹஸ்ஓவிட்ட, ஹந்தபான்கொட, சிறீபலாவத்தல, பொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் மொரட்டுவ, கெஸ்வெவ, பொல்ஹஸ்ஓவிட்ட, ஹந்தபான்கொட, சிறீபலாவத்தல, பொஹவந்தலாவ, இதல்ஹஸ்ஹின்ன, யுத்தகனாவ, கொட்டியாகல மற்றும் பாணமை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மழையுடனான வானிலை</h2><p>
</p><p>
இதேவேளை, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d51f864a-b7d8-4571-86b9-0ec9ed517de1/26-6a9b6993e649a.webp' /></p><p>

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045</id>
            <summary type="text">
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனில் இலக்கு வைக்கப்பட்ட மிக உயர்மட்ட மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தகுந்த பதிலடி &nbsp;</h2><p>
</p><p>
தலைநகரை நோக்கிய ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலை போரின் பாரிய தீவிரமடைதல் என்று கூறியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7782a10-34e4-4e8c-b6be-89f49248cd14/26-6a9b47089533f.webp' /></p><p><i>Image Credit: rollingstone</i></p><p>
</p><p>
அதன்போது, “இதற்கு தகுந்த, உறுதியான மற்றும் சாத்தியமான இடங்களில் இந்தத் தாக்குதலுக்கு நிகரான பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், “ரஷ்ய தாக்குதல்களுக்கு நாம் அளிக்கப்போகும் தீவிர பதிலடிக்கான ஆயத்தங்கள் குறித்து (SBU) தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட் அறிக்கை அளித்துள்ளார்” எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியடையும் ட்ரம்பின் செல்வாக்கு ! ஈரான் போர் தொடர்பில் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089"></link>
            <id>https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ளதால் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அமைதியான சூழலுக்குப் பிறகு இந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு அமைதியை ஏற்படுத்த எவ்வித இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.</p><p></p><h2>ட்ரம்பின் செல்வாக்கு</h2><p>
</p><p>
இந்தப் போர் காரணமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதால் வரும் நவம்பர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88fe2280-08ad-4a69-976f-344a2e85c729/26-6a9b4e478e4a2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை சீராக வைத்திருக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.</p><p> மேலும், அமெரிக்கா தனது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதால் இதை 'போர்' என்று கூற முடியாது என்றும், தற்போது தீவிரமான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோதலின் முடிவு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா 50,000-க்கும் மேற்பட்ட வீரர்களையும், 20 போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90cfff47-7ead-4137-8527-5bb63f49902a/26-6a9b4e4850b49.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p> 

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தும் வரை இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறிய வான்ஸ், இந்த மோதல் எப்போது முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் ஒரு பாரிய தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-us-hit-iran-pickaxe-mountain-soon-1788550290"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-us-hit-iran-pickaxe-mountain-soon-1788550290</id>
            <summary type="text">அமெரிக்கா விரைவில் ஈரானின் &#039;பிக்காக்ஸ் மலை&#039; மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விரைவில் ஈரானின் 'பிக்காக்ஸ் மலை' மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த பிக்காக்ஸ் மலைப் பகுதி, ஏற்கனவே கடுமையாக சேதமடைந்துள்ள ஈரானின் பிரதான 'நடன்ஸ்' யுரேனியம் செறிவூட்டும் மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.</p><p> 

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிக்காக்ஸ் மலை தளத்தை அமெரிக்கப் படைகள் மிக விரைவில் இலக்கு வைத்து தாக்கக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>முழுமையாக அழிப்பது கடினம்</h2><p>குறித்த தளம், ஈரானின் மிகவும் பலப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு ராணுவ மையமாக காணப்படுகிற நிலையில், அது மிகவும் கடினமான கிரனைட் பாறைகளுக்கு அடியில், சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வெட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13da8da1-a930-42cf-ae7e-74365868f173/26-6a9b1c94e218d.webp' /></p><p>
இதன்படி, மிகவும் ஆழமான பாறைப் பகுதியில் அமைந்துள்ளதால், சாதாரண குண்டுகளால் அல்லது நிலத்தடி ஊடுருவல் குண்டுகளால் (Bunker Buster Bombs) கூட இந்த மையத்தை முழுமையாக அழிப்பது கடினம் என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர். </p><p>

இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை நுழைவாயில்கள் அல்லது அதன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T21:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பாதுகாப்பு கட்டமைப்பு! சீனாவின் முன்மொழிவை வரவேற்றது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-welcomes-china-s-proposal-security-framework-1788551301"></link>
            <id>https://ibctamil.com/article/iran-welcomes-china-s-proposal-security-framework-1788551301</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்றுள்ளார்.
</p><p>
எகிப்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
</p><p>
அதன்போது, வெளித் தலையீடுகளை தவிர்க்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்க பெய்ஜிங் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>சீனா காட்டும் முக்கியத்துவம்</h2><p>
</p><p>
அத்தோடு, அத்தகைய ஏற்பாடு ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">China’s emphasis on fostering common security reflects a principle Iran has long championed. <br>Regional countries must be taking their future into their own hands, and true stability can only come through a new security architecture that is homegrown. Iran stands ready.</p>&mdash; محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) <a href="https://x.com/mb_ghalibaf/status/2095918982494859536?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இது குறித்து 'X' தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காலிபாஃப், பொதுப் பாதுகாப்பை வளர்ப்பதில் சீனா காட்டும் முக்கியத்துவம், ஈரான் நீண்ட காலமாக ஆதரித்து வரும் ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், மத்திய கிழக்கு நாடுகள் இந்த விவகாரங்களை தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T21:10:44+00:00</updated>
        </entry>
    </feed>
