<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T08:21:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-job-vacancy-applications-opens-1786345296"></link>
            <id>https://ibctamil.com/article/israel-job-vacancy-applications-opens-1786345296</id>
            <summary type="text">

இஸ்ரேலின் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இஸ்ரேலின் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.&nbsp;</p><p>
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk மூலம் இணைய வழியில் பதிவு செய்துகொள்ள முடியும்.</p><p>
உணவகத் துறைக்காக 4,000 விண்ணப்பதாரர்களைப் பதிவு செய்ய இன்று நண்பகல் 12.00 மணிக்கு இணையப் பதிவு திறக்கப்படும். இதற்கு 25 முதல் 40 வயதுக்குட்பட்ட, உணவகச் சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.&nbsp;</p><p></p><h2>புனரமைப்புத் துறை</h2><p>

மேலும், விண்ணப்பதாரர்கள் உடல் மற்றும் மனரீதியாகத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரியாத அல்லது அங்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பணிபுரியாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1182235f-2885-4e5c-806d-6a6f58835bf5/26-6a7985965ebb6.webp' /></p><p>
புனரமைப்புத் துறைக்கான பதிவு நாளை பிற்பகல் 2.00 மணிக்குத் திறக்கப்படும். பூச்சு மற்றும் ஜிப்சம் பலகை வேலை, மின் பெட்டி நிறுவுதல் மற்றும் செங்கல் சுவர் கட்டுதல், தச்சு வேலை, பீங்கான் ஓடு (டைல்) பதித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சுமார் 3,000 பேர் வீதம் மொத்தம் 12,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>இறுதித் தேர்வு</h2><p>
இதற்கு 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, 10 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22456862-640e-4551-b61a-904775b47980/26-6a79859718a73.webp' /></p><p>

முன்னதாகக் கட்டுமானப் பணிகளுக்கான இறுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது எனப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>

விண்ணப்பதாரர்களின் தொழில்முறைத் திறன்களை இஸ்ரேலியப் பிரதிநிதிகள் நேரடியாகப் பரிசோதித்துத் தேர்வு செய்வார்கள் என்பதால், உண்மையான அனுபவமும் தகுதியும் உள்ள துறைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு SLBFE கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-10T08:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தாமதம்: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-results-expected-within-month-1786335775"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-results-expected-within-month-1786335775</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.&amp;nbsp;&amp;nbsp;இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.&nbsp;&nbsp;இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாண வர்கள் தோற்றுவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.</p><p>கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்</h2><p>

புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a839f48-6d79-4fb4-8d71-35ea37f4109d/26-6a7983432325f.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சை&nbsp;</h2><p>இதேவேளை, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d944120-b26b-4852-8b49-b7700ff5f26c/26-6a798343ce8ed.webp' /></p><p>இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அசம்பாவிதம்! கவலையில் பாஸ்கரன் கந்தையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116"></link>
            <id>https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.</p><p>

நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக சுட்டிக்காட்டிய பாஸ்கரன், ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தனது சொந்த சகோதரர்கள் போன்றோரே ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அத்தோடு, சமூக வலைதளங்களில் வன்மத்தைப் பரப்புவதையும், போதை மற்றும் வன்முறையைத் தவிர்த்து, சக மனிதர்களை மதித்து நடக்குமாறும் இளைய தலைமுறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், சமூக வளர்ச்சிக்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T07:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-uni-resumes-academic-activities-today-1786345643"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-uni-resumes-academic-activities-today-1786345643</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான தெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் நேற்று (09) முதல் விடுதி மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விடுதியில் வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
சமீப நாட்களாக நிலவிய கடும் வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64d226a-5e51-4a3b-b483-2950bb16e2dc/26-6a797c34840f8.webp' /></p><p>இதேவேளை மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர் தர பரீட்சை பெறுபெறுகள் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/al-exam-results-by-the-end-of-this-year-1786343691"></link>
            <id>https://ibctamil.com/article/al-exam-results-by-the-end-of-this-year-1786343691</id>
            <summary type="text">
2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில், இன்று காலை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், விடைத்தாள் திருத்தும் பணி செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பரீட்சை ஆரம்பம்</h2><p>

இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை இன்று (10) தொடங்கியது. அதன்படி பரீட்சையான நாடு முழுவதும் உள்ள 2,532 மையங்களில் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a8196a-ed93-4d90-b2cb-5c556d238821/26-6a7975f855443.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், 264,496 பாடசாலை மாணவர்கள் மற்றும் 107,814 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

இந்நிலையில், நாடு முழுவதும் பரீட்சை திட்டமிட்டபடி தொடங்கியதாகவும், இதுவரை எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T07:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணுக்காய் - முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thunukkai-mullaitivu-govt-bus-service-resumes-1786342894"></link>
            <id>https://ibctamil.com/article/thunukkai-mullaitivu-govt-bus-service-resumes-1786342894</id>
            <summary type="text">துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை
ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர்
இடைநிறுத்தப்பட்டிருந்தது. </p><p>பேருந்து சேவை நிறுத்தப்பட்டதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்
நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட கோரிக்கை</h2><p>

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்,
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும்
ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00a1ef3a-41fc-4064-88de-516ad528dfc5/26-6a79750d16337.webp' /></p><p>

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>அதற்கமைய காலை 6.00 மணிக்கு துணுக்காயிலிருந்து புறப்படும் பேருந்து காலை 6.10 மணிக்கு மல்லாவியையும் காலை 7.00 மணிக்கு மாங்குளத்தையும் செ்னறடைந்து காலை 7.10 மணிக்கு மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1882e0d9-4432-49fc-aa95-9f3d0f2a6c5a/26-6a79750c174e1.webp' /></p><p>

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும்
துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான செ.திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அனுமதியில்லாமல் ட்ரோன் பறக்கவிட்தற்காக சிறுவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boyarrested-flying-drone-without-permission-mannar-1786342645"></link>
            <id>https://ibctamil.com/article/boyarrested-flying-drone-without-permission-mannar-1786342645</id>
            <summary type="text">மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (09.08.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

</p><p>காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 16வயது என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன்</h2><p>
</p><p>
</p><p>பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க விட்டதன் குற்றச்சாட்டிலேயே இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f4cb73-c83f-42a6-8c9a-8127ab0eb352/26-6a7974e503c86.webp' /></p><p>

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் காவல் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மன்னார் சௌத்பார் பனங்கட்டுகொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைதுசெய்யப்பட்ட குறித்த சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
குறித்த சிறுவனிடமிருந்து&nbsp; DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காலமான ஊடகவியலாளர் சபேஸ்வரனின் இறுதிகிரியை யாழில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/funeral-rites-for-journalist-sabeswaran-in-jaffna-1786342909"></link>
            <id>https://ibctamil.com/article/funeral-rites-for-journalist-sabeswaran-in-jaffna-1786342909</id>
            <summary type="text">கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.</p><p>ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுதி
கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில்
நடைபெறவுள்ளது.</p><p>குறித்த தகவலை அன்னாரின் குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர்.</p><h2>இறுதி கிரியைகள்</h2><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள்
விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த
ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது
47 ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1b59ea-5082-4445-94cf-7f37f6ec2daa/26-6a796f1d66098.webp' /></p><p>
அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, நாளை மறுதினம் புதன்கிழமை
அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.
</p><p>
மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று , தகன கிரியைகளுக்காக
பூதவுடல் , கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என
குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்காக சிறப்பு போக்குவரத்து சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-transport-services-for-al-exam-candidates-1786341695"></link>
            <id>https://ibctamil.com/article/special-transport-services-for-al-exam-candidates-1786341695</id>
            <summary type="text">
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. 

இதற்காக சுமார் 1,700 “சிசு செர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.</p><p> 

இதற்காக சுமார் 1,700 “சிசு செரிய” பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரந்த தெரிவித்துள்ளார்.</p><p> 

அதன்படி, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை பாடசாலைப் பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.</p><p></p><h2>தொடருந்து சேவை</h2><p> 

அத்தோடு, பரீட்சை நடைபெறும் காலத்தில் பாடசாலைப் பேருந்து சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக இயங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ba2df2f-019b-4eb3-a52a-c3e6ced66011/26-6a796c820dea6.webp' /></p><p> </p><p> 

இதேவேளை, பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் எவ்வித ரத்தும் இன்றி வழக்கமான கால அட்டவணைப்படி இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

 மேலும், பரீட்சைக் காலத்தில் சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொருடருந்து தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T06:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு தொடர்பில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத NPP அரசு : எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-no-action-has-been-taken-to-release-the-lands-1786340155"></link>
            <id>https://ibctamil.com/article/npp-no-action-has-been-taken-to-release-the-lands-1786340155</id>
            <summary type="text">காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
ஊடகப்பேச்சாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும்
ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல்
நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;ஜனாதிபதியை சந்தித்த&nbsp;தமிழ் கட்சிகள்</h2><p>

அதேபோன்றே, காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக காத்திரமான
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியை தமிழ் கட்சிகள் சந்தித்த போதும் காணி விடுவிப்பு தொடர்பில்
முக்கியமாக கூறியிருந்தோம்.</p><p> </p><p>குறிப்பாக வடக்கு - கிழக்கில் முப்படைகளின்
வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், மலையக மக்களுக்கு காணி
பகிர்ந்தளித்து தொடர்பிலும் பேசினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b35cfd-6951-4138-a862-2ba433eb3108/26-6a7967401c19b.webp' /></p><p>யாழ்ப்பாணத்தில், பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும்
முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி
வருகின்றனர். </p><p>அது மாத்திரமின்றி மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின்
பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்கத் தொடர்ந்து
போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்து கூறினோம். </p><p></p><h2>வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர்</h2><p> </p><p>அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என
அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம். அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன்
அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.</p><p>மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என
அரசாங்கம் கூறி வந்தாலும், இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர் இது
ஏற்புடையதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85c20782-21bb-4ca7-ac70-551248a421fb/26-6a796740dcf7c.webp' />&nbsp;</p><p>யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு காணிகள்
விடுவிக்கப்படவில்லை. ஒரு சில வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர். தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை
முன்னெடுத்துள்ளனர்.</p><p>அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை

நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்,
மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை
செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>
நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் இல்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும்,
செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும்“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் சாகர காரியவசம் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930</id>
            <summary type="text">புதிய இணைப்புஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc303d-03b7-41c5-bbaf-94ae5b1e9343/26-6a7964f4be23e.webp' /></p><p>காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.</p><p>

வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p>
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nzjuK0EpImM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தான நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-to-be-deported-from-malaysia-1786339082"></link>
            <id>https://ibctamil.com/article/four-to-be-deported-from-malaysia-1786339082</id>
            <summary type="text">

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.</p><p>
குறித்த சந்தேகநபர்கள், இன்று பிற்பகல் (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழு, சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்துவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள் பதிவு</h2><p>
</p><p>
இந்த சந்தேக நபர்களில் ஒருவர், பிரபல பாதாள உலக குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35496e53-2317-43ad-bee8-bf820eada010/26-6a796266ded5f.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பல கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்தக் குழு மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா : சப்பரத் திருவிழா இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-annual-festival-1786334119"></link>
            <id>https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-annual-festival-1786334119</id>
            <summary type="text">வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகின்றது.</p><p>இந்த 25 நாட்களில் சப்பரத் திருவிழா, தேர் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன வெகு விமர்சையாக நடைபெறுவது வழமை.</p><p>மகோற்சவப் பெருவிழாவின் 23ஆம் நாளான இன்று (10.08.2026) இரவு சப்பரத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>சப்பரத் திருவிழா&nbsp;</h2><p>இன்று காலை 5மணிக்கு உஷத்கால பூசை ஆரம்பமாகி காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaa6448-f900-4a63-8258-053badab579b/26-6a795e23f179d.webp' /></p><p>மாலை நேர பூசைகளைத் தொடர்ந்து இன்று இரவு மாவை கந்தன் (முருகப்பெருமான்) அழகாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.</p><p>24 ஆம் நாளான நாளை (11.08.2026) செவ்வாய்க்கிழமை மாவைக் கந்தனின் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>தேர் திருவிழா&nbsp;</h2><p>இரதோற்சவப் பெருவிழாவான நாளை அதிகாலை 2 மணிக்கு&nbsp;உஷத்கால பூசையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் பவனி ஆரம்பமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d18fc83-48db-4a8f-8fc3-decb8d2312a3/26-6a795e259afa1.webp' /></p><p>25 ஆம் நாளான நாளை மறுதினம் (12.08.2026) புதன்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><h2>தீர்த்தத் திருவிழா&nbsp;</h2><p>ஆடி அமாவாசை நாளான அன்றைய தினத்தில் காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa5b843-7b5d-4a61-a5c7-367dc051da22/26-6a795e24b8089.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து 13.08.2026 (வியாழக்கிழமை) மாலை 04.30 மணிக்கு மாம்பழத் திருவிழாவும், 14.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு காங்கேசன்துறையில் கப்பல் திருவிழாவும், 15.08.2026 (சனிக்கிழமை) மாலை&nbsp;04.30 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்


ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
</p><p>

ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில், பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும், நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது. </p><p>

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களை வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.</p><h2>செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியல்</h2><p>
</p><p>
அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு. பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p> 

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும், இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcf8919-d198-4129-bf5a-bf0fdbd1a49a/26-6a78447338a73.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><p> தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. </p><p>

2017இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.</p><p> அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார்.</p><h2>சூழலியல் சுற்றுலா மையம்</h2><p>ஐரோப்பிய பொருளாதாரச் சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும்.</p><p>பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1355657c-3b4f-4115-82f7-080a7d27b1e2/26-6a7844749b3ab.webp' /></p><p>

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p>"முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.</p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், றீச்ஷா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீடு அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்</h2><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. </p><p>

அதுமட்டுமன்றி, 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc5c108-6358-4d22-a7a1-4ff0f83686d7/26-6a784473e150d.webp' /></p><p> </p><p>

ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியான முறையில் சமூகமயமாக்கப்படாமல், ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும், தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார்.</p><p> 

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p> 

வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் பாஸ்கரன் கந்தையா.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனை மரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் கோர விபத்து - முல்லைத்தீவு இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-people-killed-in-road-accidents-across-country-1786338382"></link>
            <id>https://ibctamil.com/article/4-people-killed-in-road-accidents-across-country-1786338382</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியின் 46 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் பயணித்தவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த சிவநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>வீதி விபத்து</h2><p>போலவத்தை மற்றும் பொரலெஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரதக் கடவையில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் லுணுவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b1924e-f28a-4254-9c9b-6b859ecb7444/26-6a795eae3db38.webp' /></p><p>அதேநேரம் தங்கொட்டுவ, சுமகீ சந்தை - மெட்டிகொட்டுவ கிளை வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார். </p><p>
அத்துடன் நிகவெரட்டிய - குருநாகல் வீதியின் மாகல்லேகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.</p><p> 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 52 வயதுடைய பெண் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத அகழ்வுப்பணியில் ஈடுபட்ட நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-who-dug-up-ancient-artifacts-was-arrested-1786334329"></link>
            <id>https://ibctamil.com/article/person-who-dug-up-ancient-artifacts-was-arrested-1786334329</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>கைது செய்யபட்ட நபர் 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத அகழ்வு பணி&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேயங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b28c1a8-42f0-4cb7-930f-97a44d64af7d/26-6a795a124467c.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் தமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலை : அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/red-alert-issued-for-the-next-24-hours-1786334588"></link>
            <id>https://ibctamil.com/article/red-alert-issued-for-the-next-24-hours-1786334588</id>
            <summary type="text">இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்</h2><p>இந்தநிலையில் அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் கடற்றொழில் சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7345184a-7a6a-4d1f-91ad-d61e407febaf/26-6a7955284d993.webp' /></p><p>

அத்துடன், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோல் காலியிலிருந்து மாத்தறை வரையிலான ககரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்</p><p>குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.</p><p></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்&nbsp;</h2><p>மேலும், கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அதனுடன் சேர்ந்து அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d7c8dc-fc5b-454d-8d0d-0eda6f4ff04f/26-6a79552929e24.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:43:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gov-officers-sick-leave-for-today-and-tomorrow-1786329601"></link>
            <id>https://ibctamil.com/article/gov-officers-sick-leave-for-today-and-tomorrow-1786329601</id>
            <summary type="text">சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) சுகயீன விடுமுறையை பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதன் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தொழிற்சங்க நடவடிக்கை</h2><p>
</p><p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3bb89a-084c-4173-b38c-55322f5e217d/26-6a794acac256f.webp' /></p><p>2024 ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் நடந்த துப்பாக்கிச் சூடு - சிக்கிய பயங்கர நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dehiwala-shooting-gunman-arrested-1786332592"></link>
            <id>https://ibctamil.com/article/dehiwala-shooting-gunman-arrested-1786332592</id>
            <summary type="text">தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

ஜயவர்தனபுர காவல்துறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் அத்துருகிரிய, ஹபரக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சந்தேபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஆவார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை காவல்துறை பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8305670-da3b-4d64-86f2-1f4928673706/26-6a7948ee2e25a.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் சிறைச்சாலை மோதல்கள் : உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-unrest-senior-officers-summon-to-the-hrcsl-1786331885"></link>
            <id>https://ibctamil.com/article/prison-unrest-senior-officers-summon-to-the-hrcsl-1786331885</id>
            <summary type="text">இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அதற்கமைய, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலைகள் திணைக்களம்</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இதுபோன்ற அமைதியின்மைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44f78db8-39cf-4cf8-b31a-26f974890fe5/26-6a7947276f2d6.webp' /></p><p>

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறை மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உரிய பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்த விடயத்தை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களின் மறைகரங்கள் - பின்னணியில் பெரும் சதி - அரசை சாடும் அமுனுகம]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-against-the-backdrop-of-prison-clashes-1786331876"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-against-the-backdrop-of-prison-clashes-1786331876</id>
            <summary type="text">சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p><p>அதுமட்டுமின்றி சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று திலும் அமுனுகம கேள்வி எழுப்பியுள்ளார்
</p><p>
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்தின் தோல்வி</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவ்வாறு தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருக்குமெனின், அது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துவதாக அமையும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2539061a-8d72-45d9-85e0-4d4e7d8fcfd3/26-6a79455365b95.webp' /></p><p>இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. </p><p>விசேடமாக, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், எவருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்காது அரசாங்கம் தனது விருப்பத்தின்படி செயற்படுவது, நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:28:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424"></link>
            <id>https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இருப்பினும், தான் ஈரானுடன் தீவிரமாக தலையிடாமல், அவர்களின் பொருளாதார அழுத்தத்தை கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>சரியாக நிறைவேற்றவில்லை</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a6d7104-3a6e-455f-86b6-0a9e7d82d441/26-6a7938009067c.webp' /></p><p>

குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) . சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீரிணை திறக்கப்பட மாட்டாது</span></p><p>ஓமானுடன் எட்டப்படும் உடன்படிக்கை மூலம் புதிய கடற்பாதை தீர்மானிக்கப்படும் போதிலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை திறக்கப்பட மாட்டாது என&nbsp; ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81570d3-7918-41d1-97c8-ff9d33871f44/26-6a7937ffd9c56.webp' /></p><p>ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதால் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் அவர் கூறினார்.&nbsp;</p><p>இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:05:02+00:00</updated>
        </entry>
    </feed>
