<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-08T06:18:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audit-reveals-ammunition-deficit-in-sl-prisons-1786165500"></link>
            <id>https://ibctamil.com/article/audit-reveals-ammunition-deficit-in-sl-prisons-1786165500</id>
            <summary type="text">நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும், அவை குறித்து முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் அங்குணகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அனுராதபுரம், கொழும்பு மகசின், மொனராகலை, வட்டரக்க மற்றும் வாரியப்பொல ஆகிய 9 சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு உபகரணங்கள்&nbsp;</h2><p>மேற்படி 9 சிறைச்சாலைகளிலும் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் (Unserviceable) உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649028cf-fa35-47de-beeb-65bebf734d5f/26-6a76c19d07826.webp' /></p><p>அத்தோடு 27 சிறைச்சாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 1,038 பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதால், சிறைச்சாலைகளில் அவற்றுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
</p><p>

9 சிறைச்சாலைகளில் இருந்த 62 துப்பாக்கிகள், 50 மெகசின்கள் (Magazines) மற்றும் 1,278 தோட்டாக்கள் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>கடுமையான தடைகள்&nbsp;</h2><p>அவை ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவை முறையான நடைமுறைகளின் கீழ் மீண்டும் சிறைச்சாலை நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6792c9da-6cbf-47f5-9167-507b70d31a56/26-6a76c19db7ad2.webp' /></p><p>இதனடிப்படையில் சிறைச்சாலைகளில் திடீரென வெடிக்கும் கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்வதில் சிறை அதிகாரிகளுக்குப் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
மேலும் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைப் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் பொதுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தடைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட் பொதியுடன் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-illicit-cigarettes-1786165668"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-illicit-cigarettes-1786165668</id>
            <summary type="text">சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு நபரை இலங்கையின் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு நபரை இலங்கையின் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட நபர் மினுவாங்கொட, திவுலபிட்டியவைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.</p><p>
அவர் இன்று (08.08.2026) அதிகாலை 4.00 மணிக்கு ஃப்ளை துபாய் விமானம் FZ-569 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைதுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>சிகரெட் பொதியுடன் ஒருவர் கைது</h2><p>
</p><p>
அந்த நபர் எடுத்துச் சென்ற இரண்டு பயணப் பைகளில் இருந்து, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 40,000 'டாப் கன்' சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6673c5c-018c-4736-96b4-f943349c2104/26-6a76c5f4666de.webp' /></p><p>
</p><p>
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், வரும் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527</id>
            <summary type="text">​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று
வருகின்றார்.</p><p></p><p>
</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adaed6-652d-4133-9fbd-cc40aeb689bb/26-6a76bb56ecd23.webp' /></p><p> இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற
சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-notice-to-candidates-for-the-a-level-exam-1786164747"></link>
            <id>https://ibctamil.com/article/special-notice-to-candidates-for-the-a-level-exam-1786164747</id>
            <summary type="text">2026 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக&amp;nbsp; பரீட்சைகள் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக&nbsp; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.
</p><p>
 

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d240386f-4ae5-4168-bb28-d36af513ef92/26-6a76bdde647dc.webp' /></p><p>

 

பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும்.</p><p>அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.</p><p>
 

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.</p><p></p><h2>முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
 

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும்.
</p><p>
 

பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81965329-5252-4a48-98d2-ddee47969f68/26-6a76bdddb1def.webp' /></p><p>
</p><p>கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயற்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதுடன், கடந்த ஆண்டுகளில் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது.</p><p>ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்ப்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-5th-grade-scholarship-examination-tomorrow-1786162188"></link>
            <id>https://ibctamil.com/article/2026-5th-grade-scholarship-examination-tomorrow-1786162188</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நாளை (09.08.2026) நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நாளை (09.08.2026) நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

இவ்வாண்டு பரீட்சையில் மொத்தம் 294,089 "பரீட்சாத்திகள்" பங்கேற்கின்றனர். </p><p>இவர்களில் 220,366 "பரீட்சாத்திகள்" சிங்கள மொழிவழியிலும், 73,723 "பரீட்சாத்திகள்" தமிழ் மொழிவழியிலும் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><h2>5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்&nbsp;</h2><p>
</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோரை அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e731d7-2aa2-4b5c-9dfb-3891f78f2582/26-6a76b85d87363.webp' /></p><p>மாணவர்கள் தங்கள் மன ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும், பரீட்சையை கவனத்துடன் எதிர்கொள்வதை எளிதாக்குவதற்கும், பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> 

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு முதல் வினாத்தாள் வழங்கப்படும்.</p><p>

பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து, தங்களது பரீட்சை எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டு, வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை அளிக்க வேண்டும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

பரீட்சை ஆணையர் நாயகம், தேர்வர்கள் கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் Jaffna Kings]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497"></link>
            <id>https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497</id>
            <summary type="text">ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.</p><p> </p><p>தொடரின் இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.</p><p>லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.</p><p></p><p>
</p><h2>ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது</h2><p>
 

இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689e219-1215-44a2-9c28-a8e51bd5cb7a/26-6a76b5af5f54d.webp' /></p><p>இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
</p><p>
 

இதேவேளை, ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.</p><p>அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைகளை உலுக்கிய ஒரே நேரக் கலவரங்கள்....! உளவுத்துறை எச்சரித்த பாரிய சதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/joint-security-set-up-over-prison-riots-in-sl-1786161869"></link>
            <id>https://ibctamil.com/article/joint-security-set-up-over-prison-riots-in-sl-1786161869</id>
            <summary type="text">நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம் உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டிலுள்ள ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து சில நாட்களிலேயே, கொழும்பு நியூ மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் இக்கலவரங்கள் வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>முக்கிய கைதிகள்</h2><p>
</p><p>இதனடிப்படையில் கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் மதிலுக்கு மேலிருந்து வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தைச் சிறை அதிகாரிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இரு கைதி குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது.</p><p> 

பாதாள உலகக் குழுத் தலைவரான கொஸ்மல்லி என்பவரின் சகாக்கள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி வெளிவாயில் வழியாகத் தப்பியோட முயன்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff8caa1-058c-4bb3-9716-1b2cbfc388fd/26-6a76b5a53764a.webp' /></p><p>ஏற்பட்ட கடுமையான கலவரத்தில் ஹோமாகம ஹந்தயா என்பவரின் கூலிப்படைத் துப்பாக்கிதாரியான ஹோமாகம - கட்டுவனப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முகமது அஸ்மான் ஷெரிப்டீன் என்ற கைதி உயிரிழந்தார்.</p><p> 

இச்சம்பவத்தில் காயமடைந்த 10 கைதிகள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கலவரத்திற்குத் தலைமை தாங்கிய முக்கிய கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>போதிய வசதிகள்</h2><p>அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் போதிய வசதிகள் இல்லை எனக் கூறித் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது.</p><p>

ஆத்திரமடைந்த கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்திய நிலையில், நிலமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகளும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfd7356-92e4-4ce9-a900-e911fb00cc20/26-6a76b5a3adc92.webp' /></p><p>இதில் காயமடைந்த 15 கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
</p><p>
மேலும், நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் காலை உணவு வழங்குவதற்காகக் கைதிகள் வெளியில் அழைத்துவரப்பட்ட போது, போதைப்பொருள் தகராறு காரணமாக மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கண்ணீர்ப்புகைப் பிரயோகம்</h2><p>

கைதிகள் கூரை மீதேறிப் போராட்டம் நடத்தியதுடன் பிரதான வாயில் அருகே வன்முறையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை (STF), கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை இணைந்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>

காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2381eb0-1323-4bee-b153-eb434f0ac107/26-6a76b5a47a40f.webp' /></p><p>முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 31 பேரும், மஹர சிறைச்சாலை மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தும் 21 பேர் காயமடைந்தும் இருந்தனர். 

தற்போது நிலவும் அசாதாரண நிலமையைக் கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p> 

அத்துடன், ஜனாபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை இணைந்த கூட்டுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை (Joint Security Mechanism) எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய எம்.பிக்களின் சம்பள விவகாரம் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-parliament-members-fuel-allowance-increased-1786162054"></link>
            <id>https://ibctamil.com/article/sl-parliament-members-fuel-allowance-increased-1786162054</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.அதன்படி, நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை எனவும் மாறாக, தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டமையினால், அவர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07) உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26b6a580-3d54-4ca5-b64f-24d65a11b6b5/26-6a76b2786794f.webp' /></p><p>இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு மூலம் இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளது“ என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதேவேளை&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி : அம்பலப்படுத்திய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/major-flaws-in-the-al-biology-exam-question-paper-1786159020"></link>
            <id>https://ibctamil.com/article/major-flaws-in-the-al-biology-exam-question-paper-1786159020</id>
            <summary type="text">க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த உயர்தர உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தொடர்ச்சியாக, அதாவது கடந்த பல வருடங்களாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகின்ற பரீட்சை வினாத்தாள் தமிழ் மொழிக்கு மாற்றப்படும் போது பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள் இடம்பெறுகின்றன. இதனால் மாணவர்கள் பெருமளவான புள்ளி இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.</p><p></p><h2>பரீட்சை நேர அட்டவணை&nbsp;</h2><p>
</p><p>
என்னிடம் 2025ம் ஆண்டு உயிரியல் பரீட்சை வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. அதில் பலவிடைத்தேர்வு வினா (MCQ) பகுதியில் பல வினாக்களில் மொழிபெயர்ப்பு தவறு உள்ளதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c095aaf8-b196-46e3-a89b-f0915717d5bf/26-6a76a8dc57bfd.webp' /></p><p> </p><p>உதாரணமாக ஒரு கலத்தின் உள்ளடக்கத்தை குறிக்கும் சொல்லிற்காக உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்தை குறிப்பது போன்ற தவறுகள் இங்கு காணப்படுவதால் மாணவர்கள் வினாவிற்குரிய பதிலை தெரிவுசெய்வதில் பாரிய இடர்பாடுகள் ஏற்படும்.</p><p>கேள்வியிலும் மொழிபெயர்ப்பு பிழை, கொடுக்கப்படும் பதிலிலும் பிழை என்றால் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.</p><p>இப்போது சற்றுநேரம் முன்பு சாமர சம்பத் எம்பி என்னிடம் வந்து பேசினார். இந்தமுறை நடக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் பாளி மொழியும் சித்திரமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் போடப்பட்டிருப்பதாக என்னிடம் சொன்னார்.</p><p></p><h2>கல்வி அமைச்சரிடம் கோரிக்கை&nbsp;</h2><p>

</p><p>அப்படியெனில், ஒரு மாணவன் பாளி மொழியையும் சித்திரத்தையும் எவ்வாறு ஒரே நாளில் ஒரே நேரத்தில் பரீட்சை எழுதுவதென்று ஒரு பிரச்சினை உள்ளது.</p><p>ஆகவே, கல்வி அமைச்சர் அவர்களே, நான் ஏற்கனவே உங்களுடன் இது சம்மந்தமாக பேசியிருக்கின்றேன். நான் பேசியபின் ஒரு தடவை பரீட்சை நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac24b3-26e3-4e26-8102-af833d710f83/26-6a76a8dd0f104.webp' /></p><p> </p><p>அடுத்த பரீட்சையும் வரப்போகிறது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இனியாவது இந்த மொழிபெயர்ப்பு தவறு நடக்காமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
</p><p>
க.பொ.த உயர்தர பரீட்சை ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாகும். இந்த தவறினால் பல மாணவர்களின் எதிர்காலம் நாசமடைகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தை கவனியுங்கள்” என தெரிவித்தார்.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5SaPGnCdLtc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் நிகழ்வில் நடந்த பயங்கரம் - சிக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palliyawatta-shooting-3-arrested-including-gunman-1786158786"></link>
            <id>https://ibctamil.com/article/palliyawatta-shooting-3-arrested-including-gunman-1786158786</id>
            <summary type="text">பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த துப்பாக்கிச்&nbsp;சூட்டு சம்பவம் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வத்தளை - கதிரான பகுதியில் இடம்பெற்றது.</p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்டவர்கள்&nbsp; 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fadc4506-94fb-4333-9e05-cf041268d21c/26-6a76af717b78d.webp' /></p><p>
 

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (7) இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியை தவிர, காரை ஓட்டிச் சென்ற சாரதியும், குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க உதவிய நபர் ஒருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினரால் கைது</h2><p>போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே அன்றைய தினம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5003c824-ec25-4902-bfe8-7c870e4f9181/26-6a76b04b326d1.webp' /></p><p>
 

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை உயர் அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/several-top-police-officers-sdig-transferred-1786160051"></link>
            <id>https://ibctamil.com/article/several-top-police-officers-sdig-transferred-1786160051</id>
            <summary type="text">சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பலருக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, இடமாற்றங்களை வழங்க காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பலருக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, இடமாற்றங்களை வழங்க காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>குற்றப் புலனாய்வுத் துறையின்&nbsp; (CID) &nbsp;பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளரான (SSP) ஷானி அபேசேகரா, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.</p><p>தென் மாகாண பிரதி காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய கித்சிறி ஜயலத், சபரகமுவ மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இடமாற்றம்</h2><p>
</p><p>
பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சிப் பிரிவுகளின் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9631ae8-98ca-41e9-bbd9-f00d24c4e814/26-6a76ad3088dc8.webp' /></p><p>

மேலும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் கே.பி. கருணாநாயக்க, விசேட பாதுகாப்புப் பணியில் இருந்து வட மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வட மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் எச்.பி. சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 சிறைச்சாலைகளில் தொடர் வன்முறைகள்: முக்கிய புள்ளியின் உயிருக்கு ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-seeks-protection-for-akila-in-magazine-prison-1786155957"></link>
            <id>https://ibctamil.com/article/unp-seeks-protection-for-akila-in-magazine-prison-1786155957</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.</p><p>பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.</p><p>மெகசின் சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள எழுதியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்</p><p></p><h2>அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p> </p><p>இக்கடிதத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் 18, ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463cc140-3496-4f6d-bc41-843011a92fe2/26-6a76a1bb39d2a.webp' /></p><p>கடந்த வியாழக்கிழமை இரவு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி கவலை தெரிவித்துள்ளது. </p><p>மேலும், சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஒரு அவசரச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>

முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பதவியில் இருந்த காலத்தில் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழே அகில விராஜ் காரியவாசம் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T03:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென பதவி விலகிய ஷானி அபேசேகர - பின்னணியில் உள்ள காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786157007"></link>
            <id>https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786157007</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர விலகியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர விலகியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

எனினும், இது ஒழுங்கு நடவடிக்கை அல்லது சர்ச்சை காரணமாக ஏற்பட்ட விலகல் அல்ல என்றும், பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால் CID பணிப்பாளர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்படி , நாளை முதல் அவர் CID பணிப்பாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.</p><p></p><h2>உத்தியோகபூர்வ அறிவிப்பு</h2><p>
</p><p>
ஷானி அபேசேகரவுக்கு 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை வழங்க நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றம்அ னுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fddfc477-8ae4-4649-af73-22a2aca11422/26-6a769d238f3e6.webp' /></p><p>இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
பதவி உயர்வு காரணமாகவே CID பணிப்பாளர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நிர்வாக ரீதியான நடைமுறையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T03:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் சில பொருட்களின் விலை குறைப்பு - மகிழ்ச்சிச் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathosa-reduce-prices-of-10-essential-food-items-1786154278"></link>
            <id>https://ibctamil.com/article/sathosa-reduce-prices-of-10-essential-food-items-1786154278</id>
            <summary type="text">10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. 



குறித்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் நடைமுறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>



குறித்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வர்த்தகஇ வணிகஇ உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உணவுப் பொருட்களின் விலை</span></p><p>
</p><p>


இதன்படி, பூண்டு கிலோ ஒன்றின் விலை ரூ.699 இலிருந்து ரூ.649 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.259 இலிருந்து ரூ.224 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.259 இலிருந்து ரூ.239 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faac71d6-89df-4694-98f2-aea69a82504f/26-6a7691ec275a3.webp' /></p><p>அத்துடன், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.</p><p>இதேவேளை, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது</p><p>பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை ஒரு பேரல் 80 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T02:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-rain-or-thunderstorms-today-1786151639"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-rain-or-thunderstorms-today-1786151639</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
இதன்படி, சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>

மேலும், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32353064-d48d-488c-8b43-a79935ccaed5/26-6a7685e7ce772.webp' /></p><p>

இந்த நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T01:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/free-viewing-for-india-tour-matches-1786148450"></link>
            <id>https://ibctamil.com/article/free-viewing-for-india-tour-matches-1786148450</id>
            <summary type="text">சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முதலாவது போட்டி</h2><p>
</p><p>
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3550d9-4e04-4347-9d00-5fa5fc49d60a/26-6a7678c46e63b.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, ரசிகர்கள் முதலாவது போட்டிக்காக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 4 ஆம் இலக்க வாயில் வழியேயும், இரண்டாவது போட்டிக்காக எஸ்.எஸ்.சி மைதானத்தின் 03, 04, 05 மற்றும் 07 ஆம் இலக்க வாயில்கள் வழியேயும் இலவசமாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T00:31:21+00:00</updated>
        </entry>
    </feed>
