<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-25T03:43:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-child-skeleton-excavation-postponed-1784937575"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-child-skeleton-excavation-postponed-1784937575</id>
            <summary type="text">செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.


அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.
</p><p>

அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்
தெரிந்திருந்தால் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தரணி
வி.எஸ் நிரஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>செம்மணி புதைகுழிக்கு</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்படவில்லை.</p><p> 

அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற
பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339d5562-3593-4a68-95ac-f5a953f2a963/26-6a63fc6865c20.webp' /></p><p>குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள், நீதிமன்ற பதிவாளருக்கோ, சட்டத்தரணி
ஊடாக நீதிமன்றுக்கோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள்
சில வெளிப்படும்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் - 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vaviniya-court-order-20-yr-jail-for-54-yrs-men-1784945626"></link>
            <id>https://ibctamil.com/article/vaviniya-court-order-20-yr-jail-for-54-yrs-men-1784945626</id>
            <summary type="text">14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>வவுனியா, பூவரசன்குளம் பகுதியில், பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறை புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த பிரதிவாதிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>தலைமறைவாகிய&nbsp; எதிரி </h2><p>அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றபகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79799be2-9464-4e41-90c6-81ddcc85bc28/26-6a6424b4d1ef9.webp' /></p><p>குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பிரதிவாதிக்கு தலைமறைவாகியிருந்தார்.</p><p>

அதனை தொடர்ந்து பிரதிவாதிக்கு இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.</p><p></p><h2>கடூழிய சிறைத்தண்டனை</h2><p>குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக&nbsp;குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f93a10-4060-4b24-bbcc-f4a748ff8ed9/26-6a6424b5829a2.webp' /></p><p> அதன் பிரகாரம் பிரதிவாதிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.</p><p>குறித்த குற்ற செயலின் போது பிரதிவாதியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை.</p><p> மற்றும் சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T03:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahapola-scholarship-eligible-list-2024-2025-batch-1784942838"></link>
            <id>https://ibctamil.com/article/mahapola-scholarship-eligible-list-2024-2025-batch-1784942838</id>
            <summary type="text">2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.</p><p>அத்துடன், மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.</p><p></p><h2>இணையவழிப் பதிவு&nbsp;</h2><p>இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக மஹாபொல இணையதளத்தில் (https://mahapola.lk/BankApp2025/) பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39d03bc5-4fd2-4792-814c-de31c287188f/26-6a6416b64a586.webp' /></p><p>

இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு</h2><p>
இதற்கிடையில், 2024-2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7795ebfc-71da-4988-bafd-c030d8a24771/26-6a6416b70d657.webp' /></p><p>பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T02:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784940438"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784940438</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eb0aa6c-7ebe-4cc2-99d6-a2955790a1c0/26-6a640797b6fd7.webp' /></p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T00:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-bonds-that-united-the-losers-have-been-broken-1784898525"></link>
            <id>https://ibctamil.com/article/the-bonds-that-united-the-losers-have-been-broken-1784898525</id>
            <summary type="text">நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் கடந்த 23 ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் கடந்த 23 ஆம் திகதி அமர்ந்த காட்சி அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. </p><p>

ஆனால் அந்தப் புகைப்படத்தை அரசியல் நினைவுகளின் கண்ணாடியில் பார்த்த பலருக்கு அது ஜனநாயகத்தைக் காப்பதற்கான புதிய தொடக்கமாக அல்ல, கடந்த கால அரசியல் கூட்டணிகளின் மீள்வருகையாகவே தோன்றியது.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக ஒருங்கிணைந்த பதிலை உருவாக்கும் நோக்கில், மொட்டுக்கட்சியின் நாமல் ராஜபக்ச எழுத்துப்பூர்வமாக விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த உயர்மட்டக் கூட்டத்தை கூட்டினார்.</p><p></p><h2>நீதித்துறையைப் பற்றிய ஆலோசனை</h2><p> </p><p>

இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன,பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச , மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இக்கூட்டத்தில் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f8fb67-b60b-4409-8a97-8bcae4c1cfbe/26-6a637525bc917.webp' /></p><p>
</p><p>அதிகாரப்பூர்வமாக இது நீதித்துறையைப் பற்றிய ஆலோசனையாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அந்த அறையில் அமர்ந்திருந்த முகங்கள்தான் அதிக கவனத்தை ஈர்த்தன.
</p><p>
ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தவர்களும், தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கப் போராடியவர்களும், இப்போது "நீதித்துறை சுதந்திரம்" என்ற பொதுவான கருப்பொருளின் கீழ் ஒன்றிணைந்திருந்தனர். </p><p>

சஜித் பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கான மிகத் தெளிவான எடுத்துக்காட்டாக இருந்தனர். </p><p>

ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பிளவுகள், திறைசேரிப் பத்திர விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மோதல்கள், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி உருவான வரலாறு ஆகியவற்றின் பின்னணியில், இவர்கள் இருவரும் ஒரே மேசையில் அமர்ந்திருப்பது இலங்கை அரசியலின் புதிய சமன்பாடுகளை வெளிப்படுத்தியது.
</p><p>
அந்த மேசையில் ரணில் விக்கிரமசிங்க மட்டும் அல்ல. முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, பாட்டளி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, திரான் அலஸ், திலித் ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
</p><p>
இது ஒரு சாதாரண எதிர்க்கட்சிக் கூட்டமாக இல்லாமல், கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின் ஆட்சியிலும் அதிகார மையங்களிலும் முக்கிய பங்கு வகித்த அரசியல் தலைமைகளின் மறுசேர்க்கையை நினைவூட்டும் நிகழ்வாக அமைந்தது.</p><p></p><h2>பொது நிர்வாகம் தொடர்பான சர்ச்சை</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தின் மிகப் பெரிய முரண்பாடு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பல அரசியல் தலைவர்களே தங்களது அரசியல் வாழ்க்கையின் பல கட்டங்களில் நீதித்துறை, அரசியலமைப்பு அல்லது பொது நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியவர்களாக இருந்ததுதான். </p><p>

நாமல் ராஜபக்ச தற்போது மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பிணையில் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff0047c-3245-453d-8368-ab2c674ee022/26-6a6375250c7e4.webp' /></p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொது நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். </p><p>

மேலும், ரவி கருணாநாயக்க, உதய கம்மன்பில, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலரும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களின் முன் நிற்கும் அரசியல் முகங்களாக உள்ளனர்.</p><p>

இவ்வாறான பின்னணியில், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் உரிமையை அவர்கள் முன்வைப்பதை சட்டரீதியாக மறுப்பதற்கு அடிப்படை இல்லாவிட்டாலும், அதன் அரசியல் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானதே. </p><p>

இன்று நீதித்துறையின் மீது அரசாங்கம் தலையிடுகிறது என்று குற்றம்சாட்டும் அரசியல் தலைமைகள், தாங்கள் ஆட்சியில் இருந்த காலங்களில் நீதித்துறை சுதந்திரம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளித்தனர் என்பதையும் மக்கள் நினைவுகூர்கிறார்கள்.</p><p>

கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, "அரசாங்கம் நீதித்துறையின் மீது கை வைத்துள்ளது" என்று குற்றம்சாட்டினார். அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நீதித்துறையை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது என்றும் அவர் வாதிட்டார்.</p><p> 

மறுபுறம், ரணில் , நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம் என வலியுறுத்தினார். நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.</p><p></p><h3>ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம்&nbsp;</h3><p>

நாமல் ராஜபக்ச, "நீதித்துறை மற்றும் காவல்துறையை அரசியல் கருவிகளாக மாற்ற அரசாங்கம் முயன்றால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு" என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfde039d-adc7-426f-bb51-0adabbeb7518/26-6a637523a6430.webp' /></p><p> </p><p>

விமல் வீரவன்ச, "அரசாங்கத்தின் செயல்களே பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளன" என்று கூறினார்.
</p><p>
ரவூப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் தொடர்பான அச்சங்களை முன்வைத்தனர்.</p><p>ஆனால் இந்தக் கூட்டத்தின் உண்மையான அரசியல் செய்தி, நீதிபதிகளின் ஓய்வுவயது விவகாரத்தைத் தாண்டி இருந்தது.</p><p>

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் சக்திகளை ஒரே மேடையில் நிறுத்தும் முயற்சி இது என்ற வாசிப்பும் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5dff61-26f1-4977-8a95-049541ba87bf/26-6a63752459044.webp' /></p><p> </p><p>

ஒருகாலத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை ஒருவர்மீது ஒருவர் முன்வைத்த தலைவர்கள், இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற ஒரே முழக்கத்தின் கீழ் தோன்றியிருப்பது அரசியல் தேவையா அல்லது கொள்கை மாற்றமா என்ற கேள்வி இன்னும் விடைபெறவில்லை.</p><p>

இந்த அணிதிரட்டல் தேர்தல் அரசியலை முன்னிட்டு பழைய அதிகார மையங்கள் மீண்டும் ஒருங்கிணையும் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம்.
</p><p>
இந்தக் கேள்விகளுக்கு உடனடி பதில் அளிக்க முடியாது. ஆனால் ஒரு விடயம் தெளிவாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே அறையில் கூட அமர முடியாத அரசியல் தலைவர்கள், இன்று ஒரே புகைப்படத்தில் தோன்றியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T00:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பொறியியலாளர்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spanish-man-arrested-with-cocaine-in-sri-lanka-1784939324"></link>
            <id>https://ibctamil.com/article/spanish-man-arrested-with-cocaine-in-sri-lanka-1784939324</id>
            <summary type="text">பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>முதன்மைப் பயணப்பெட்டி</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி அன்று சியெரா லியோனிலிருந்து புறப்பட்டு அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் (QR654) வானூர்தியில் இலங்கையை வந்தடைந்தார்.</p><p>

அவர் வந்தபோது அவரது கைப்பை சோதனையிடப்பட்டு விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccf5167-1a73-47f7-b25b-a8d69ef20269/26-6a64033edf365.webp' /></p><p> 

இருப்பினும் அவரது முதன்மைப் பயணப்பெட்டி (Checked Luggage) அதே வானூர்தியில் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் தாமதமாக வந்த தனது பயணப்பெட்டியைப் பெற அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது சுங்க அதிகாரிகள் பயணப்பெட்டியை எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனைக்கு உட்படுத்தினர்.</p><p>
</p><p></p><h2>பயணப்பெட்டி&nbsp;</h2><p>இதன்போது பயணப்பெட்டிக்குள் இருந்த 2 கோப்பு வைத்திருப்புகளில் (File Holders) மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அவை சுமார் 109.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள , 2,198 கிராம் (2.198 கிலோகிராம்) கொக்கெய்ன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d550b3-bf64-4454-b849-1385c5f07624/26-6a64033d8c3be.webp' /></p><p>

தனிப்பட்ட முறையில் பயணி இல்லாமல் தாமதமாக வந்த பெட்டியாக இருந்த போதிலும் சுங்க அதிகாரிகளினால் இந்த துல்லியமான கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T00:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் ஆட்சிக்கு பின் அதிகரித்த இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்! சுட்டு வீழ்த்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-fishermen-urge-navy-to-stop-indian-boats-1784934717"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-fishermen-urge-navy-to-stop-indian-boats-1784934717</id>
            <summary type="text">எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
</p><p>
யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக
அழித்துவிட்டு செல்கின்றனர்.</p><p></p><h2>பெறுமதியான வலை</h2><p>
</p><p>இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483f4cd1-82e4-445f-b878-b7de7970ee8a/26-6a63f6c70848f.webp' /></p><p>
இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய
கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட
இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி
பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.</p><p>
</p><p></p><h2>தொடர்ச்சியான வருகை&nbsp;</h2><p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக
பாதிப்பது மட்டுமல்லாது கடற்தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும்
நிர்ப்பந்தித்துள்ளது.</p><p>

இலங்கை கடற்படையிடம் வினையமாக கேட்கிறோம் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை
கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின்
வருகையை கட்டுப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f8e322-9442-47ba-abe8-9a94cbc181ce/26-6a63f6c650d59.webp' /></p><p>

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார்
அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
</p><p>
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே இறையுள்ள எமது கடற்
பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை
தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் அதிரும் டெல்லி....! மத்திய கல்விச் செயலாளர் பணியிட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/delhi-neet-exam-protest-cockroach-janata-party-1784930996"></link>
            <id>https://ibctamil.com/article/delhi-neet-exam-protest-cockroach-janata-party-1784930996</id>
            <summary type="text">மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில், குறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>வினாத்தாள் முறைகேடு</h2><p>இதையடுத்து புதிய கல்வி செயலராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் மற்றும் கல்வி முறையில் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd72af5-8f41-4351-a9ca-ff2f000d629d/26-6a63e78e46752.webp' /></p><p>

மத்திய கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு நேற்றிரவு திடீரென மத்திய உயர் கல்வித்துறை செயலாளரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
அதே போல் பிரதமர் மோடியின் வாக்குறுதியின்படி வினாத்தாள் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விரைவு சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. </p><p>

இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பலிகா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:31:10+00:00</updated>
        </entry>
    </feed>
