<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-26T18:25:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஆறு கப்பல்களை தடுத்து நிறுத்திய ஈரானின் புரட்சிகர படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-it-stopped-6-vessels-hormuz-1785081837"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-it-stopped-6-vessels-hormuz-1785081837</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில், &quot;அனுமதியின்றி மற்றும் நியமிக்கப்பட்ட கப்பல் வழித்தடத்திற்கு வெளியே&quot; ஹோர்முஸ் நீரிணையை் கடக்க முயன்ற ஆறு கப்பல்களை ஈரானின் இஸ்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில், "அனுமதியின்றி மற்றும் நியமிக்கப்பட்ட கப்பல் வழித்தடத்திற்கு வெளியே" ஹோர்முஸ் நீரிணையை் கடக்க முயன்ற ஆறு கப்பல்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை தடுத்து நிறுத்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை(26) செய்தி வெளியிட்டது.</p><p>அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில் "அனுமதியின்றி கடக்க" முயன்றதால், ஈரானிய அதிகாரிகள் அந்தக் கப்பல்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கவில்லை.</p><h2>&nbsp;IRGC கடற்படையினர் எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
அந்த ஆறு கப்பல்களையும் இடைமறிப்பதற்கு முன்பு, IRGC கடற்படையினர் எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இது அவற்றின் பாதையை மாற்றத் தூண்டியதாகவும் அந்த அறிக்கை கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d827b6d-2372-4314-8b73-fe47e14d7c05/26-6a6639178dd73.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமையன்று, "அனுமதியின்றி கடக்கும்" முயற்சிகளைக் கண்டறிந்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் நான்கு கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாக IRGC கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T18:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிலடிக்கு பதிலடி: ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irans-temporary-halt-to-attacks-on-the-us-1785085209"></link>
            <id>https://ibctamil.com/article/irans-temporary-halt-to-attacks-on-the-us-1785085209</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மீதான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரான்மீது அமெரிக்கப்படைகள் எந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மீதான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரான்மீது அமெரிக்கப்படைகள் எந்தத் தாக்குதலையும் தொடுக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா மீதான பதில் தாக்குதலையும் நிறுத்தவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா தாக்குதலை நிறுத்தி வைத்திருக்கும் வரையே ஈரானின் இந்த அமைதி என்றும், அதேசமயம் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது குறித்து நம்பிக்கையை விட சந்தேகமே அதிகமாக உள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><h2>பரஸ்பரம் தாக்குதல்</h2><p>&nbsp; &nbsp;ஈரான் - அமெரிக்கா இரண்டு நாடுகளும் மாறி மாறி கடந்த 13 நாட்களாக தாக்குதல்களை தொடுத்து வந்தநிலையில், இந்த வார இறுதியில் ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba82b23e-7b2c-4282-8c5a-24d3a0767627/26-6a664bd640039.webp' /></p><p> </p><p>இதனைத்தொடர்ந்து தற்போது ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
</p><p>


போரை தீவிரப்படுத்த ட்ரம்ப் பரிசீலித்து வந்ததாகவும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் இதுகுறித்து கவலை தெரிவித்தாகவும், அதன்பேரிலேயே இஸ்லாமிய குடியரசின் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை குறித்து பேச்சு</h2><p> </p><p>அதேசமயம் அமெரிக்காவின் போர்ச்செலவும் அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ba3ae3-74c5-4237-a751-6f21126f5f58/26-6a664bd58965e.webp' /></p><p>
</p><p>
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்யவே அமெரிக்கா இந்த அவகாசத்தை வழங்கியுள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரானும், ஓமானும் தெஹ்ரானில் ஹோர்முஸ் நீரிணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T18:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-martyrs-commemoration-1785088121"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-martyrs-commemoration-1785088121</id>
            <summary type="text">
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு இன்று (26) மாலை 5.30 மணியளவில் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிர்நீத்தோருக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.</p><p></p><h2>மௌன அஞ்சலி</h2><p>
</p><p>
நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997fd261-97cc-461c-8859-44c28fe8d4b2/26-6a664a9f8c6b1.webp' /></p><p> </p><p>

பின்னர் தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T17:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொகவந்தலாவையில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-in-bogavanthalawa-maked-a-wrong-decision-1785085066"></link>
            <id>https://ibctamil.com/article/student-in-bogavanthalawa-maked-a-wrong-decision-1785085066</id>
            <summary type="text">பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(26) ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று(26) பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து தெரியவருகையில், பொகவந்தலாவை மோரார் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>வைத்தியசாலை&nbsp;சிகிச்சை</h2><p>
</p><p>சம்பந்தப்பட்ட மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15624c96-6d73-4b25-9ef1-e06138a5e32a/26-6a663fc4d82af.webp' /></p><p>

இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><h2>மரணத்தில் சந்தேகம்&nbsp;</h2><p>
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1444eee-e6d6-4256-aee6-c1290cb8abab/26-6a663e9ddf9c4.webp' /></p><p>
</p><p>
இது குறித்து பொகவந்தலாவை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
</p><p>
எனினும் மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T17:11:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜூலை போராட்டம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-protest-in-london-1785080676"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-protest-in-london-1785080676</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இனவெறி
வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இனவெறி
வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு
போராட்டம் வெள்ளிக்கிழமை (23) லண்டனில் நடைபெற்றது.
</p><p>
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (
TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி
முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ராலயத்திற்கு முன்பாக (13 Hyde
Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.</p><h2>&nbsp;தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறை</h2><p>1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர்
மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86eebb7e-63fa-49fb-9c47-cd439992af5d/26-6a662e64e25d3.webp' /></p><p>இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்
பங்கேற்றிருந்ததுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை
ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T15:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகவும் சிறப்புற நடைபெற்ற விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/victoria-colleges-150th-anniversary-celebration-1785078214"></link>
            <id>https://ibctamil.com/article/victoria-colleges-150th-anniversary-celebration-1785078214</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்று (25.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்று (25.07.2026)
சனிக்கிழமை நடைபெற்றது.
</p><p>
பாடசாலை முதல்வர் க.சுலபாமதியின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம
விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.</p><h2>&nbsp;'விக்ரோறிய வித்தகம்' எனும் சிறப்பு மலர்</h2><p>&nbsp;இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்ரோறியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப்
பறைசாற்றும் 'விக்ரோறிய வித்தகம்' எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக
வெளியிட்டு வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04152f71-c420-4a6a-8915-d1c7d9679d29/26-6a66264b7b91f.webp' /></p><p> இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின்
தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்
 ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு</h2><p>மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு
நடனம், குழு இசை, 'பதம்' நடனம், சிங்களப் பாடல், 'காலிங்க நர்த்தனம்' நாட்டிய
நாடகம் மற்றும் 'துப்பல் பரிசு' நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள்
அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfe5905-5442-48b4-a164-78ca03ce6a45/26-6a66264c452bc.webp' /></p><p> </p><p>அத்துடன், மாணவர்களுக்கும்,
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T15:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கெதிராக வீதியில் இறங்கப்போகும் பழனி திகாம்பரம் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palani-digambaram-to-the-streets-against-the-gover-1785076282"></link>
            <id>https://ibctamil.com/article/palani-digambaram-to-the-streets-against-the-gover-1785076282</id>
            <summary type="text">தோட்டத் துறை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போதைய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தோட்டத் துறை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போதைய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதிகளில் இருந்து நிறைவேற்றப்பட்ட ஒரே விஷயம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவது மட்டுமே என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகம்பரம் எம்.பி.கூறினார்.</p><p>தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் அவர் தலைமை தாங்கும் தேசிய தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட,கூட்டம் நேற்று(25) ஹட்டனில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>தமிழ்,முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டணி</h2><p>&nbsp;இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த எம்.பி. பழனி திகம்பரம், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் வரை, தன்னை உள்ளடக்கிய இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் மௌனம் காத்தன என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19385b91-e885-4616-867f-724ec1c0dc72/26-6a661f753da17.webp' /></p><p>ஆட்சிக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அந்த வாக்குறுதிகளைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளன என்றும், அந்தக் கூட்டணி தன்னை ஜனாதிபதியைசந்தித்துப் பேச அழைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்திய விடயம்</h2><p>&nbsp; தமிழ் முற்போக்குக் கூட்டணி பலமுறை ஜனாதிபதியைச் சந்தித்து, தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. அப்போது, ​​தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலங்கள் எங்கே வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி எமது கூட்டணியிடம் கேட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059dd728-2bf9-447a-b91d-b2247bf7cb62/26-6a661f75e4e6e.webp' /></p><p>
</p><p>
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவர நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் ஒன்று திரண்டதாகவும், ஆனால் தற்போதைய அரசின் ஆட்சியைக் கண்டு அந்த மக்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிவிட்டதாகவும் பழனி திகம்பரம் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிளம்பருக்கு அடித்த அதிஷ்டம் : தங்கப்புதையலால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plumber-lucky-in-austria-gold-treasure-1785069613"></link>
            <id>https://ibctamil.com/article/plumber-lucky-in-austria-gold-treasure-1785069613</id>
            <summary type="text">ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, &#039;பிளம்பர்&#039; ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, 'பிளம்பர்' ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் தெரியவருவதாவது,
</p><p>

ஐரோப்பிய நாடான ஒஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள ஒரு பழமையான சொகுசு பங்களாவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.</p><h2>அடித்தளத்திலிருந்து நீட்டிக்கொண்டிருந்த கயிறு</h2><p>அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் ஒருவர், அடித்தளத்தின் சிமெந்து தரையில், அடியில் இருந்து ஒரு கயிறு வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கவனித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c1cb01-418e-4be6-9a6f-81207b9431e6/26-6a6602fd3e369.webp' /></p><p>
</p><p>



அந்தக் கயிற்றை அலட்சியம் செய்யாமல் அது எங்கே இருந்து வருகிறது என்பதை அறியும் ஆர்வத்துடன், சிமெந்து தரையை தோண்டத் தொடங்கினார். அப்போது கயிற்றுடன் துருப்பிடித்த ஒரு பழைய இரும்புப் பெட்டி புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.</p><p></p><p>
</p><p>

</p><h2>30 கிலோ தங்கக் காசுகள்</h2><p>அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பளபளக்கும், 30 கிலோ தங்கக் காசுகள் இருந்தன.&nbsp; அவை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d37ee2-e91d-4576-b358-e8ff99c4caab/26-6a6602fc8d947.webp' /></p><p>
</p><p>

அவருக்கு முன் மற்றொரு தொழிலாளி; அந்த கயிற்றை பார்த்துள்ளார். ஆனால், அசட்டையாக விட்டுவிட்டார்.
</p><p>

ஒஸ்திரிய நாட்டின் சட்டப்படி புதையல் கண்டெடுக்கப்பட்டால், அதில் கிடைக்கும் மதிப்பை கண்டெடுத்த நபரும், அந்த நிலத்தின் உரிமையாளரும் பாதியாக பிரித்துக் கொள்ளலாம். இதன் மூலம், அந்த பிளம்பர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது எண்ணெய் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று வெடித்ததாக ஈரானிய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.</p><p>அரசு சாரா மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் கண்ணிவெடியில் மோதுவதற்கு முன்பு, ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து அந்த எண்ணெய் கப்பல் விலகிச் சென்றதாக, நம்பகமான ஒரு வட்டாரம் டெஃபாபிரஸ் செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளது.</p><h2>தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதி</h2><p>

உயிரிழப்புகள், கப்பலின் அடையாளம் அல்லது சேதத்தின் அளவு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/899d3033-07df-4baf-9006-68644ae9277c/26-6a660af68f609.webp' /></p><p>
</p><p>
ஜூன் 26 அன்று, ஹோரர்முஸ் நீரிணை வழியாகச் செல்வது தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
</p><p>

வோஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தெஹ்ரான் தனது கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கால்வாய் வழியாக, ஈரானால் நிர்வகிக்கப்படும் வழிசெலுத்தல் பொறிமுறையின் கீழ் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை விலை உயர்வுக்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/egg-production-decreased-due-to-high-temperatures-1785073908"></link>
            <id>https://ibctamil.com/article/egg-production-decreased-due-to-high-temperatures-1785073908</id>
            <summary type="text">தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில இலங்கை முட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

வாராந்திர முட்டை விலையை நிர்ணயிப்பதற்காக இன்று (26) நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அதிக தேவை உள்ள ஒரு பொருளாக மாறியுள்ள&nbsp;முட்டை</h2><p>"முட்டைகள் இன்று அதிக தேவை உள்ள ஒரு பொருளாக மாறியுள்ளன. நாங்கள் ஒரு முட்டையின் விலையை முப்பத்தெட்டு ரூபாய் என நிர்ணயிக்கும்போது, ​​வியாபாரிகள் வந்து நாற்பது ரூபாய்க்கு கூட முட்டைகளைக் கேட்கிறார்கள். அதன்படி, சந்தையில் முட்டைகளுக்கு அதிக தேவை உள்ளது என்று நாங்கள் முடிவு செய்கிறோம். அதே நேரத்தில், இந்த நாட்களில் நிலவும் கடுமையான வெப்பம், முட்டை உற்பத்தி வேகமாக குறைவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f121e1-5ae8-4497-bf43-38e96ce2b113/26-6a661530cd20e.webp' /></p><p>அதே சமயம், நாங்கள் அரசிடம் பலமுறை கோரிய மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கான எங்கள் கோரிக்கையை எந்த அதிகார அமைப்பும் செவிமடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வளர்ந்த கோழி முட்டையிடுவதற்கு, முட்டைக் குவியல் தேவையான அளவில் இருக்க வேண்டும். துறையின் மருத்துவர்கள் கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள்.</p><p></p><h2>கோழிக்குத் தேவையான ஊட்டச்சத்து</h2><p> </p><p>ஒரு கோழிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதபோது, ​​முட்டைக் குவியல் எனப்படும் உறுப்பு மெலிந்து போகத் தொடங்குகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முட்டை உற்பத்தி வேகமாக குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554cb2b2-b969-4674-aaa2-942ff2e8c8b7/26-6a6615302720a.webp' /></p><p>அந்த நிலையைத் தவிர்க்க மக்காச்சோளம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.</p><p>அதனால்தான், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் வளங்கள் துறைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இன்றும் கூட, எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.</p><p></p><h2>முட்டைகளுக்கு மிகப்பெரிய தேவை</h2><p>முட்டைகள் விரைவில் கெட்டுப்போகக்கூடிய ஒரு பண்டம். முட்டைகளின் விலை, அதன் அளிப்பு மற்றும் தேவையால் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், முட்டைகளுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. அதனால்தான், நாங்கள் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு முட்டைகள் விற்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44b5402-a9cf-4158-b187-6bcf124a7479/26-6a66152f72fe6.webp' /></p><p>&nbsp;எனவே, ஜனாதிபதி அவர்களையும், இப்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் லால் காந்தா அவர்களையும், பிரதி அமைச்சர் அவர்களையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். "கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தின் விலங்கு உற்பத்தித் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும், எங்கள் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கருணாரத்ன அவர்களுடனும் எங்களுக்கு ஒரு நேரடிக் கலந்துரையாடலை அமைச்சர் வழங்க வேண்டும். </p><p>அப்போதுதான் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வைக் காண முடியும். ஏனென்றால், இவை அனைத்திற்கும் மத்தியில், முட்டைகளை உட்கொள்ளும் நுகர்வோரைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை: ஈரான், ஓமான் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-says-progress-made-in-talks-with-oman-on-hormuz-1785047769"></link>
            <id>https://ibctamil.com/article/an-says-progress-made-in-talks-with-oman-on-hormuz-1785047769</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>விவகாரம் சாதகமான திசையில் சென்றாலும், ஒப்பந்தம் எட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் தேவை என வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>பேச்சுவார்த்தைக்காக ஓமான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈரான் சென்றதாகவும், இந்த இராஜதந்திர முயற்சி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை நிறுத்திய முடிவுடன் ஒத்துப்போனதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b028ed0d-185a-40a9-ac6e-2dd795bd9eec/26-6a65fe7c4d0a1.webp' /></p><p>அமெரிக்க மத்திய படைத் தளபதி தலைமையகம் தொடர்ச்சியாக 13 இரவுகளாக இந்த தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>எனினும் வெள்ளை மாளிகையும் சென்ட்கம்மும் கருத்து கோரியதற்கு பதிலளிக்கவில்லை எனவும் அது மேலும் தெறிவிக்கப்படுகிறது.</p><p>ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தையை வாஷிங்டன் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் மேலும் தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரபிட்டியா இல்லத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-discovered-body-at-a-house-in-karapitiya-1785069438"></link>
            <id>https://ibctamil.com/article/police-discovered-body-at-a-house-in-karapitiya-1785069438</id>
            <summary type="text">காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இறந்த நபர் திருமணமாகாத ஆண் என்றும், அவர் அந்த இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று, அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகக் கரபிட்டிய&nbsp; காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அழுகிய சடலம் மீட்பு</h2><p>காவல்துறையினர் அந்த இல்லத்திற்குச் சென்று குளியலறைக்குள் சடலத்தைக் மீட்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282e6498-b7db-4a97-9b60-892ea4c6b52a/26-6a66027c7e889.webp' /></p><p>மேலும் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மீதங்கள் காலி தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்பொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:53:20+00:00</updated>
        </entry>
    </feed>
