<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-22T19:04:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு அனுப்புவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண்! அம்பலமான அதிச்சிகர பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-defrauding-millions-1787423030"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-defrauding-millions-1787423030</id>
            <summary type="text">தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, சந்தேகநபரான பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட பேருந்து உரிமையாளர்</h2><p> </p><p>

அனுராதபுரம் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த இவர், ரத்மலான விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறி பேருந்து உரிமையாளர் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c6ad18-5418-4150-8d9e-72b383446804/26-6a89eb15126c0.webp' /></p><p>

பிலியந்தலையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் தனது பேருந்தை விற்று 6 மில்லியன் ரூபாய் வழங்கியது உட்பட, பல தடவைகளில் மொத்தம் 13.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்தப் பெண்ணிடம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொள்ள போலி விமானப்படை சீருடையில் வந்த அப்பெண், பின்னர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பேருந்து உரிமையாளர் கடந்த மே மாதம் காவல்துறையில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>15 காவல்நிலையங்களில் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>
அதன்படி, குருநாகல் பகுதியில் வைத்து அந்தப் பெண்ணும் அவரது கணவர் எனக் கூறிக்கொண்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5e8ca3-3921-49b8-ab5d-362011872275/26-6a89eb1460791.webp' /></p><p>

இதற்கு முன்னரும் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி இவர் 2.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இதேவேளை, கொல்லுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட 15 காவல் நிலையங்களில் இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பண மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T18:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றாக முடக்கப்படும் ஷிரான் பாசிக்கின் வலையமைப்பு! சொத்துக்களை நிர்வகித்த ஆசிரியர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-drug-and-business-network-revealed-1787421278"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-drug-and-business-network-revealed-1787421278</id>
            <summary type="text">



கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப்பொருள் மற்றும் வணிக வலையமைப்புகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்த சட்டவிரோத கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 சந்தேகநபர்களை வரும் நாட்களில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>

பாசிக்கின் சட்டவிரோத சொத்துக்கள் ஒரு பிரபல மேலதிகவகுப்பு ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள இந்தச் சந்தேகநபரைக் கைது செய்ய இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>தப்பியோடியுள்ள முக்கிய புள்ளிகள் </h2><p>
அத்துடன், இந்த வலையமைப்பின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரும் பாசிக்கின் நெருங்கிய தோழியுமான பெண் ஒருவர் தற்போது துபாயில் உள்ளார். அவரைக் கைது செய்ய கொழும்பு மத்திய குற்றப்பிரிவு துபாய் காவல்துறை சிறப்பு அறிவித்தல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9ad99-81e7-492d-a58b-22364f38f4ee/26-6a89e5b371269.webp' /></p><p>
</p><p>
மேலும், ஷிரான் பாசிக் பயன்படுத்திய கைபேசிகளின் மின்னணுத் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், சொத்துக்களைக் கட்டுப்படுத்திய குழு உட்பட இந்த வலையமைப்பின் முக்கிய புள்ளிகள் தப்பியோடியுள்ள போதிலும், பெறப்பட்ட மின்னணுத் தரவுகளின் அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களையும் விரைவில் கைது செய்ய முடியும் என காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T18:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தடி ஏவுகணை உற்பத்தி தளத்தை பார்வையிட்டார் ஈரான் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-general-visits-missile-production-site-1787417792"></link>
            <id>https://ibctamil.com/article/iran-general-visits-missile-production-site-1787417792</id>
            <summary type="text">ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு நிலத்தடி தளத்தைப் பார்வையிட்டார் என அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டது.</p><p>ஈரானின் பாதுகாப்புத் தொழில் தினத்துடன் ஒத்துப்போகும் வகையில், ஓகஸ்ட் 22 அன்று மேஜர் ஜெனரல் அப்தொல்லாஹி அந்த நிலத்தடி உற்பத்தி ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.</p><h2>பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி</h2><p> </p><p>மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும் அவர் ஆய்வு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cec0778b-e084-4cb4-889a-e22ccb34f320/26-6a89e56b2ee3b.webp' /></p><p>

இந்த ஆய்வின்போது, ​​ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மஜித் இப்னு அல்-ரெஸா, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுடன் சென்றிருந்தார்ம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T18:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காவல்துறையிடமிருந்து சான்றிதழ் பெறக் காத்திருப்போருக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-clearance-data-system-back-to-normal-1787419829"></link>
            <id>https://ibctamil.com/article/police-clearance-data-system-back-to-normal-1787419829</id>
            <summary type="text">

இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, காவல்துறை சான்றிதழ் அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை வழக்கமான நிகழ்நிலை முறைமையின் மூலம் மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நிகழ்நிலை முறைமை</h2><p>

குறித்த தரவுத் தொகுதியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27c8360-4d77-421f-ae23-457032c07f1a/26-6a89de876e952.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், தற்காலிக மின்னஞ்சல் முறையைப் பயன்படுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களும் நிகழ்நிலை முறைமை மூலம் மீண்டும் விண்ணப்பித்து, தேவையான கட்டணங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T17:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>இளைஞனை கைது செய்த காவல்துறை</h2><p>முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த காவல்துறையினர் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b2b2eb-7917-4865-89f0-2d50940e0ae8/26-6a89d1b3d514f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு : ஹிஸ்புல்லா எம்.பிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-against-hezbollah-mp-links-zahran-1787412380"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-against-hezbollah-mp-links-zahran-1787412380</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில்
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில்
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான
சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை
சூறையாடியுள்ளார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி
மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு
செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
</p><p>
ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு
தலைமையக காவல் நிலையத்தில் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முறைப்பாடு செய்த
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><h2>ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்திற்கு செய்த அநீதிகள்&nbsp;</h2><p>கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இந்த கிழக்கு
மாகாணத்திற்கு செய்த அநீதிகள் இரு சமூகங்களையும் பிரித்ததுடன் மட்டுமல்ல
ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள்
இன துவேசம் மூலம் பிளைவை ஏற்படுத்தி வரும் செயல்பாடு இன்று
முற்றுப்பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa16d7d-a9d0-4523-9fe9-67e00a1334f5/26-6a89c642732f9.webp' /></p><p>இவர் தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண
புகைப்படங்களை மட்டு தலைமையக காவல் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p>இதில் மட்டக்களப்பு நீதவான் மாற்றி தனக்கு சாதகமான நீதவானை கொண்டுவந்து
உத்தரவு பிறப்பித்தது. மற்றது ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து அதில்
மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைத்துள்ளதாக அவரது வாயால் தெரிவித்துள்ளது
தொடர்பாகவும் மற்றும் சஹ்ரானுடன் கைகோர்த்து ஒன்றாக இருந்து உறவு கொண்டாடி ஒரு
மாதத்தின் பின்னர் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இவருக்கும்
சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும்</p><p></p><h2>இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல</h2><p>மாவட்டத்தில் அவர் அதிகாரத்தை வைத்து பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை
சூறையாடியுள்ளது தொடர்பாக தீர்வை பெற்றுத் தருமாறு அந்த முறைப்பாட்டில் பதிவு
செய்துள்ளேன் அதன்போது காவல்துறையினர் அதனை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை
செய்வார்கள் என தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0740ebd0-643e-4a20-a8d9-d4211b85ec00/26-6a89c64346a2c.webp' /></p><p>அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய
மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும் நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர்
அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த
ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய
மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டாம். என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T16:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பிரதேசம் : ஈரானை மீண்டும் சீண்டும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-as-part-of-the-u-states-trump-1787410321"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-as-part-of-the-u-states-trump-1787410321</id>
            <summary type="text">&amp;nbsp;ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற ஒரு பேரணியில் அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஈரான் குறித்து அந்தப் பேரணியில் ட்ரம்ப் பேசியதாவது:</p><h2>அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது</h2><p>
அவர்கள் (ஈரான்) அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும். இனி அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7fdeef6-47da-4c57-a58c-d2903c1e97c8/26-6a89bb7568d5b.webp' /></p><p>ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஈரானியர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவைப்படுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். அது ஒரு அமெரிக்கப் பிரதேசம்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;எங்கள் முழு கட்டுப்பாட்டில்</h2><p>

என்ன நடக்கப்போகிறது என்று நாம் பார்ப்போம். ஈரான் எல்லைகளையும் ஹோர்முஸ் நீரிணையையும் நாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f4ad4-7a1e-49cb-a9dd-ff6137a8eba5/26-6a89bb761d66e.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள் பிரதமரிடம் யாழில் மகஐர் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-lands-held-by-soldiers-magair-hands-harini-1787407651"></link>
            <id>https://ibctamil.com/article/release-lands-held-by-soldiers-magair-hands-harini-1787407651</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த
மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதமர்
கலாநிதி ஹரிணி அமர சூரியவிடம் காணி விடுவிப்பு தொடர்பான மஜகரை இன்று
சனிக்கிழமை கையளித்தனர்.</p><p>அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள்
அமைப்பின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ, யாழ் மாவட்ட செயலகத்தில்
இலங்கையின் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான
கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரை, நிகழ்வு
நிறைவடைந்த பின்னர் சந்தித்து பேசினோம்.</p><h2>வீதி வீதியாக போராடுகிறார்கள்</h2><p>வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீகக் காணிகளை இழந்து, நீண்டகாலமாக
அவற்றை மீட்டெடுப்பதற்காக வீதி வீதியாக போராடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2c4fe5-a577-4564-9e57-3d0afa02fb87/26-6a89afa26b570.webp' /></p><p>



யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி ,வசாவிளான் , மயிலிட்டி பாதுகாப்பு தரப்பினரின்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு கேப்பாப்புலவு ,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு ,மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு
பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடிவருகிறார்கள்.
</p><p>

கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக காலதாமதத்திற்கும்
புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை
மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>முழுமையானதும் நீதியானதுமான தீர்வு</h2><p>
</p><p>


புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த
மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு
முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348aa7dc-78f3-4a83-83a2-570fd5f188b0/26-6a89afa336573.webp' /></p><p>
</p><p>
அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும்
கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க
வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப்
போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜர் பிரதமரிடம்
கையளிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/financial-assistance-uni-students-special-needs-1787405436"></link>
            <id>https://ibctamil.com/article/financial-assistance-uni-students-special-needs-1787405436</id>
            <summary type="text">ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக
மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக
மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
</p><p>
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கு காசோலைகளை
வழங்கி வைத்தார்.</p><h2>76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு&nbsp;&nbsp;நிதியுதவி</h2><p>இதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும்
பெரதெனியாபல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட
தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி
வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/becb8184-1c16-4415-9797-426d2196ba91/26-6a89aae42f123.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு
காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால
முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp; </p><p> </p><h2>நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர்
வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்
சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான
க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப்
நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற
உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7de3869f-cf1c-4dc1-9d53-97b98aae457b/26-6a89aae50448b.webp' /></p><p>
</p><p>
அத்துடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், வவுனியா
மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வடக்கு மாகாண மாவட்டச்
செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி நிதியத்தின் பதவிநிலை
உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குற்றவாளி வெளிநாட்டில் கைது : பிரதேசவாசிகள் மகிழ்ச்சி ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892"></link>
            <id>https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892</id>
            <summary type="text">துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற &#039;பஸ் லலித்&#039; கைது செய்யப்பட்ட நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற 'பஸ் லலித்' கைது செய்யப்பட்ட நிலையில் ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>கைது செய்யப்பட்ட அவர் நாளைமறுதினம் (24 ஆம் திகதி )இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். சந்தேகநபரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><h2>துபாய் காவல்துறையினரால் கைது</h2><p>இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் பேரில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1652e9a7-c13a-4d5a-bb35-23d608fa6437/26-6a8975d9ba26a.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான இவர் துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. </p><p>பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் உட்பட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் விதித்தது FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அர்ஜென்டீனா அணியின் முக்கிய வீர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டீனாவின் மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஸ்பெயின் வீரருக்கும் போட்டித்தடையும் அபராதமும்</h2><p>இதே சம்பவத்தில் சிக்கிய ஸ்பெயின் வீரர் கவி 1 போட்டி தடையும், 30,000 டொலர் அபராதமும் பெற்றார்.

AFA மீது பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொத்தம் 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8c36d-83fc-4326-b04d-ae47c59d385d/26-6a899f297febc.webp' /></p><p>
</p><p>
FIFA சுட்டிக்காட்டிய குற்றங்கள்
</p><p>அரசியல் பதாகை: அரையிறுதிக்குப் பின்னர் 'மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே' என்ற பதாகையை காட்சிப்படுத்தியது.</p><p>இனவெறி நடத்தை: அர்ஜென்டீனா ஆதரவாளர்களின் இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்பு.</p><p>ஒழுங்கீனம்: அணியினரின் ஒழுக்க மீறல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள்.</p><p></p><h2>அர்ஜென்டீனா அணிக்கான தண்டனை</h2><p>
</p><p>
தண்டனையாக அர்ஜென்டீனா தனது அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் FIFA உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44cfd3d0-b9db-4b9b-a6cd-88252349926d/26-6a899f2a31d61.webp' /></p><p>
</p><p>
மேலும் தண்டனை பெற்றவர்கள்
</p><p>
நஹுவேல் மோலினா 	அணி வீர்ர்7 போட்டிகள் தடை, $90,000 அபராதம்
</p><p>
ரோபர்ட்டோ அயாலா உதவி பயிற்றுநர்	3 போட்டிகள் தடை, $30,000 அபராதம்
</p><p>
தியாகோ அல்மாடா வீரர்	1 போட்டி தடை, $30,000 அபராதம்</p><p>

உலக் கிண்ண இறுதியில் ஸ்பெயினிடம் 1-0 என அர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
FIFA ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குழு விளையாட்டின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:59+00:00</updated>
        </entry>
    </feed>
