<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-15T01:03:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-beaten-to-death-1786754043"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-beaten-to-death-1786754043</id>
            <summary type="text">பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25 ஆம் திகதி இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25 ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவம் குருநாகல் - வெல்லவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்</h2><p> </p><p>

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த அதிகாரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த (13) உயிரிழந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e6e0b7-d74d-4c74-881a-5cf2ba07bb32/26-6a7fb597e0c00.webp' /></p><p>உயிரிழந்தவர் வெல்லவ காவல் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>

சம்பவம் தொடர்பில்&nbsp;காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T00:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786753648"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786753648</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேற்படி பகுதிகளில் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.





</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7657da-2b73-4c71-9f1c-3eb4cc36196d/26-6a7fb3cb83352.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T00:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் புத்துயிர் பெற்ற மைத்திரி மகிந்தவின் சதித்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracy-of-the-revived-maithri-mahinda-1786713234"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracy-of-the-revived-maithri-mahinda-1786713234</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் களத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட மைத்திரி - மகிந்த அரசியலமைப்பு நெருக்கடி மீண்டும் புத்துயிர் பெறுகிறதா என்ற கேள்வியை தற்போதைய சில அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் களத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட மைத்திரி - மகிந்த அரசியலமைப்பு நெருக்கடி மீண்டும் புத்துயிர் பெறுகிறதா என்ற கேள்வியை தற்போதைய சில அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எழுப்பியுள்ளன.
</p><p>
அண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரை பெயரிட்டு விமர்சனக் கருத்துகளை வெளியிட்டமை, இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
</p><p>
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து நாட்டில் கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி உருவானது.</p><p></p><h2>உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள்</h2><p>
</p><p>
அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e59546-7ea5-483f-ac8f-5a1d7d1923d1/26-6a7f16d34a0f7.webp' /></p><p> </p><p>உயர் நீதிமன்றம் இறுதியில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.
</p><p>
அந்த காலகட்டத்தில் நீதித்துறையின் தீர்ப்புகளுக்கு எதிராக அரசியல் தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p> குறிப்பாக அப்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதிபதிகள் அரசியல் ரீதியான தாக்குதல்களுக்கு இலக்கானதாக விமர்சனங்கள் எழுந்தன.</p><p>

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பெயர்களை முன்வைத்து அரசியல் கருத்துகள் வெளியிடப்படுவது, 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
2018 நெருக்கடியின் முக்கியமான அம்சம், நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. அந்த அதிகார மோதலின் இறுதி தீர்வு நீதித்துறையின் தலையீட்டின் ஊடாக இடம்பெற்றதும் முக்கியமானதாகும்.</p><p></p><h2>நீதித்துறையைச் சுற்றி அரசியல் சூழல்</h2><p>

இதனால், அன்றைய அரசியல் அதிகாரப் போட்டியில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு முக்கியமானதாக மாறியிருந்தது.

தற்போதும் உயர் நீதிமன்ற நீதியரசர்களை நேரடியாக பெயரிட்டு விமர்சிக்கும் அரசியல் கருத்துகள் வெளிவருவதால், “2018இல் நீதித்துறையைச் சுற்றி உருவான அரசியல் சூழல் மீண்டும் உருவாக்கப்படுகிறதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7855a9c2-9961-4a86-bf78-d29caca8d6bf/26-6a7f16d436c29.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போதைய நிகழ்வுகள் 2018ஆம் ஆண்டின் சம்பவங்களின் நேரடி தொடர்ச்சி அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சதித்திட்டம் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>எனவே, “மைத்திரி - மகிந்த சதித்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது” என்பது தற்போது ஒரு அரசியல் மதிப்பீடு மற்றும் குற்றச்சாட்டு என்றே பார்க்கப்பட வேண்டும்.</p><p>

ஒரு ஜனநாயக அரசில் நீதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கான உரிமை அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் உள்ளது. </p><p>ஆனால் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் அல்லது அரசியல் நோக்கத்துடன் இலக்காகக் கொள்வது, நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான கவலைகளை உருவாக்கக்கூடும்.</p><p>

2018 அரசியலமைப்பு நெருக்கடியின்போது உயர் நீதிமன்றம் நிறைவேற்று அதிகாரத்தின் வரம்புகளை தெளிவுபடுத்தியிருந்தது. அந்த வரலாற்றுப் பின்னணியிலேயே, இன்றைய நீதிபதிகள் மீதான அரசியல் விமர்சனங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
</p><p>
இதனால், மீண்டும் புத்துயிர் பெற்ற மைத்திரி - மகிந்த சதித்திட்டம்&nbsp; என்ற அரசியல் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நீதித்துறையை அரசியல் அழுத்தத்திற்குள் கொண்டு வர முயற்சி இடம்பெறுகிறதா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை கடுமையாக சாடிய சிறீதரன் எம்.பி...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223"></link>
            <id>https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அவருடைய
கருத்து அமைவது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.</p><p>

சிவஞானம் சிறீதரன் நேற்று (14-08-2026) 
நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.
</p><p>
பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டினுடைய நீதி&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம் ஆனால்,
குழுக்கள் தங்களுக்குள் மோதி யாரையும் கொண்டுவந்து தாட்டதாக நாங்கள் இதுவரை
அறியவில்லை.</p><p>

அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவது
நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a703b455-6836-4d15-a091-040f78fddd53/26-6a7f9571c3797.webp' /></p><p>

 நாட்டினுடைய நீதி அமைச்சர் மக்களை
திசைதிருப்பும் வகையிலே இவ்வாறான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது. </p><p>தமிழர்கள்
எதிர்பார்ப்பது போல இது நூற்றுக்கு 100 சதவீதம் உண்மையானது ஏனெனில், இங்கே
நடந்த பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>போராளிக் குழு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப்
பற்றி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
</p><p>
யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட
காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் காணாமல் போயும்,
கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8740d436-18e9-4f5e-b95b-3594620db306/26-6a7f957275266.webp' /></p><p>

இலங்கையினுடைய
கிரிசாந்தி கொலை வழக்கிலே சாட்சியாக இருக்கிற சோமரத்ன ராஜபக்ச
சொல்லியிருக்கிறார் இப்பொழுதும் சொல்லுகிறார்.
</p><p>
சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற
இடங்களைக் கிண்ட வேண்டும் அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும்.</p><p>அந்த உண்மைகளை
மறைப்பதற்கு எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு
அனாமதேய விடயங்கள் போலவோ அதற்கான ஒரு சோடனைக் கதைகளைச் சொல்ல அமைச்சர்
முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T00:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் அரச அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம்...! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-officers-call-sick-leave-protest-1786748865"></link>
            <id>https://ibctamil.com/article/northern-officers-call-sick-leave-protest-1786748865</id>
            <summary type="text">அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில்
ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>அரச அதிகாரிகள்</h2><p>யாழ் ஊடக அமையத்தில் நேற்று (14-08-2026) 
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00eff3db-6e97-470d-aa9d-537274286593/26-6a7f9fc3b92af.webp' /></p><p>வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T23:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20th-sencholai-massacre-marked-in-vavuniya-1786747656"></link>
            <id>https://ibctamil.com/article/20th-sencholai-massacre-marked-in-vavuniya-1786747656</id>
            <summary type="text">முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
வவுன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியாவில் தனியார் விடுதி ஒன்றில் மிக உணர்வுபூர்வமாக நேற்று (14-08-2026) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் நினைவாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு
அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.</p><p>
</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>அதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உருவப்படத்திற்கு மலர் மாலை
அணிவித்து மலரஞ்சலியினையும் செலுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53a46bb-6f6d-4fa2-b37f-293742d1a93d/26-6a7f9b0e6d04c.webp' /></p><p>

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தினா படுகொலை செய்யப்பட
மாணவிகளின் நினைவாக நினைவு பேருரையினை ஆற்றிய இருந்தார்.</p><p>

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை மேயர்
சு.காண்டீபன், தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், முன்னாள்
போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புகள்
மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T22:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது கனடா அதிரடி நடவடிக்கை! 5 மூத்த அதிகாரிகளுக்குப் பொருளாதாரத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-sanctions-5-iranian-officials-1786742199"></link>
            <id>https://ibctamil.com/article/canada-sanctions-5-iranian-officials-1786742199</id>
            <summary type="text">ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகளை முடக்கியதாகக் குற்றம்சாட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் சீர்குலைக்கும் வகையில் இராணுவ, சட்ட மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்த ஐந்து நபர்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கப்பல் போக்குவரத்து</h2><p>

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஈரானைப் பதற்றத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e959b09-c113-48c5-8b15-8d0fc6a5d87f/26-6a7f86f4e0ed0.webp' /></p><p>மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான சுதந்திரமான கப்பல் போக்குவரத்தானது உலகளாவிய வர்த்தகத்திற்கும் எரிசக்தி பாதுகாப்பிற்கும் மிக அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இன்றைய பொருளாதாரத் தடைகள், இந்தக் கொள்கைகளைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்களை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T21:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-issues-high-risk-wildfire-alert-1786739129"></link>
            <id>https://ibctamil.com/article/uk-issues-high-risk-wildfire-alert-1786739129</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>அவசரகால பணியாளர்கள்</h2><p>

சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bded0f3-e56a-49c4-914f-058c65cebfb9/26-6a7f7b1a247cc.webp' /></p><p>

தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T20:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான முற்றுகை: 62 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-blockade-turns-back-62-ships-in-arabian-sea-1786735710"></link>
            <id>https://ibctamil.com/article/us-blockade-turns-back-62-ships-in-arabian-sea-1786735710</id>
            <summary type="text">ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் இன்று வரையிலான நிலவரப்படி முற்றுகை விதிகளை மீறாமல் பூரணமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக மூன்று கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன் (Disabled), இரண்டு கப்பல்களில் நேரில் சென்று சோதனைகளும் (Boarded) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சர்வதேச சட்டங்கள்</h2><p>வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையேயான மோதல்கள் மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14 முதல் இந்த முற்றுகை நடவடிக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A U.S. Sailor directs an MH-60R Sea Hawk helicopter during nighttime flight operations aboard guided-missile cruiser USS Princeton (CG 59) as the ship sails in the Arabian Sea and enforces the U.S. blockade against Iran. As of Aug. 14, CENTCOM forces have redirected 62 commercial… <a href="https://t.co/HDMlwcGzAq">pic.twitter.com/HDMlwcGzAq</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2088296512933564737?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இருப்பினும், அமெரிக்காவின் இந்த முற்றுகை சட்டவிரோதமானது என்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:37:56+00:00</updated>
        </entry>
    </feed>
