<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-13T09:15:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786612284"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786612284</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (13.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (13.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 338.57 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	443.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	378.21 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.55 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	234.98 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a5843f-8a7b-4212-9c70-0211c084de85/26-6a7d8a3e7eca9.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		230.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.04 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.16 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T09:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை துறக்கவும் தயார்! ஜனாதிபதி அநுர பகிரங்கமாக வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-points-out-ready-to-lose-position-1786610934"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-points-out-ready-to-lose-position-1786610934</id>
            <summary type="text">மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக&amp;nbsp; தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக&nbsp; தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று(12) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.</p><p>

அபாயங்களை எதிர்கொள்ளாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தாம் நம்பவில்லை என்றும், எனவே அந்த அபாயத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈஸ்டர் தாக்குதல் விசாரணை</h2><p>
</p><p>
"மாற்றத்தினால் ஏற்படும் அபாயத்தின் காரணமாக நான் எனது பதவியை இழந்தால், அதை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்.," என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c418db38-cc46-4966-8ca3-6d28b369c9ed/26-6a7d889b03d90.webp' /></p><p>
</p><p>
"நான் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை புலனாய்வுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? ஆனால் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன அல்லவா? அதில் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை நான் அறிவேன்," என்று ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T09:04:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருட இறுதியில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/impact-of-el-nino-will-last-until-april-2027-1786604734"></link>
            <id>https://ibctamil.com/article/impact-of-el-nino-will-last-until-april-2027-1786604734</id>
            <summary type="text">நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதுடன் இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதுடன் இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என&nbsp;வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 
</p><p>அத்துடன தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை</h2><p> </p><p>

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>அதற்கமைய வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல், அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல் ஆகிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43cf8dfd-e4f8-4058-baf7-600994c0388c/26-6a7d86d7047ca.webp' /></p><p> 

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.</p><p></p><h2>எல் நினோ நிலையின் தாக்கம்</h2><p> </p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64127a2c-8577-4347-a5e5-1d70879b6335/26-6a7d86d7b06c1.webp' /></p><p> </p><p>

எல் நினோ நிலையின் தாக்கம் குறித்து தெளிவுபடுத்திய மெரில் மெண்டிஸ் "இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும்.</p><p> எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என தெரிவித்தார்: </p><p>
மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிய மகிந்தவின் சுவாரஸ்யமான அரசியல் முரண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-sends-death-row-convicts-home-1786602798"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-sends-death-row-convicts-home-1786602798</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது மரண தண்டனை சட்டரீதியாக தொடர்ந்தாலும் தூக்குத் தண்டனை நடைமுறையில் நடைமுறைப்படுத்தும் நிலை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

அண்மைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது மரண தண்டனை சட்டரீதியாக தொடர்ந்தாலும் தூக்குத் தண்டனை நடைமுறையில் நடைமுறைப்படுத்தும் நிலை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த முக்கிய தீர்ப்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனையின் பின்னரே இவ்வாறான கேள்விகள் எழுந்துள்ளன.</p><p>

இலங்கையில் மரண தண்டனை தொடர்பான விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ள நிலையில், 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐந்து இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மன்னித்து விடுதலை செய்த சம்பவம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
2011 நவம்பர் 28 அன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பி. எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத் மற்றும் ஜே. லாங்லெட் ஆகிய ஐந்து இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed3c8d8-43a3-4bc5-915d-52a3002b437d/26-6a7d6ce01115e.webp' /></p><p> </p><p>

2014 அக்டோபர் 30 அன்று உயர் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பு இந்தியாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக முயற்சிகளின் பின்னர், 2014 நவம்பர் 19 அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து பேரின் மரண தண்டனையையும் முழுமையாகத் தள்ளுபடி செய்தார். </p><p>

அதன்பின்னர் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக மகிந்தவுக்கு நன்றி தெரிவித்தது.</p><p>

எனவே, மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரை வீட்டிற்கு அனுப்பினார்” என்று பொதுவாகக் கூறுவதைவிட, ஜனாதிபதிக்குரிய மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய கடற்றொழிலாளர்களின் தண்டனையை முழுமையாகத் தள்ளுபடி செய்து, அவர்களை விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பினார் என்பதே துல்லியமான வர்ணனையாகும்.</p><p>இதனை இன்றும் சில அரசியல் அவதானிகள் மேற்கண்டவாறு வர்ணிக்கின்றனர்</p><p></p><h2>மரண தண்டனை உத்தரவு</h2><p>
2019ஆம் ஆண்டு மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவாதம் தீவிரமடைந்தபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த , தான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலங்களில் மரண தண்டனை உத்தரவுகளில் கையெழுத்திடவில்லை என்றும், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8711ed8e-79e1-41f4-8245-aa0992fe487b/26-6a7d6ce0c28ff.webp' /></p><p>
</p><p>
அதனால், 2014ஆம் ஆண்டு ஐந்து இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அவர் மன்னித்த சம்பவம், இலங்கையின் மரண தண்டனை தொடர்பான அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக உள்ளது.
</p><p>
இலங்கையில் மரண தண்டனை சட்டத்தில் இருந்து நீக்கப்படவில்லை. அதாவது, நீதிமன்றங்கள் இன்னும் சில கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். 

ஆனால் 1976ஆம் ஆண்டிலிருந்து தூக்குத் தண்டனை நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை. </p><p>Amnesty International, இலங்கையை “சட்டத்தில் மரண தண்டனையை வைத்திருக்கும் ஆனால் நடைமுறையில் அதை நடைமுறைப்படுத்தாத நாடு” என வகைப்படுத்துகிறது.
</p><p>
இதன் பொருள், ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தாலும், அந்தத் தீர்ப்பு தானாகவே உடனடியாக தூக்கிலிடப்படுவதாக அர்த்தமல்ல. இலங்கையில் நீண்டகாலமாக ஒரு de facto moratorium அதாவது மரண தண்டனை நிறைவேற்றப்படாத நடைமுறைத் தடை நிலவி வருகிறது. </p><p>

ஐக்கிய நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் அளித்த தகவல்களும் 1976 முதல் இந்தத் தடை தொடர்வதை உறுதிப்படுத்துகின்றன.

இருப்பினும், 2026ஆம் ஆண்டில் மரண தண்டனை தொடர்பான இரண்டு முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
முதலாவதாக, ஹெரோயின் கடத்தல் வழக்கில் மரண தண்டனை பெற்ற சமந்த குமார, “வெலே சுதா” தனது தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டை இலங்கை உயர் நீதிமன்றம் 2026 ஜூன் 1 அன்று நிராகரித்தது.</p><p></p><h2>சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்பு</h2><p>
</p><p>
இரண்டாவதாக, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் 2026 ஜூலை 31 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. </p><p>

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. இருவருக்கும் மேல்முறையீடு செய்யும் உரிமை உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b41c543-6b41-4f18-83dd-d9d8caf6e994/26-6a7d6ce177884.webp' /></p><p>
</p><p>
இங்கு மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், மரண தண்டனை விதிக்கப்படுவது மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இரண்டு வெவ்வேறு விடயங்கள்.</p><p>

2026 ஜூலை இறுதி நிலவரப்படி, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும், 1976க்குப் பின்னர் எந்த நீதிமன்ற மரண தண்டனையும் தூக்கிலிட்டு நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
இந்தக் கேள்விக்கு தற்போதைய நிலையில் உறுதியான “ஆம்” என்று கூற முடியாது.

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயன்றபோதும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. </p><p>

பின்னர் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. </p><p>ஐ.நா. ஆவணங்களிலும் இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வந்தபோதிலும், நடைமுறையில் அதை மீண்டும் தொடங்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, 2026 ஜூலை 31 அன்று இரண்டு முன்னாள் உயரதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்தில் மரண தண்டனை இன்னும் உயிருடன் இருப்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. </p><p>

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மரண தண்டனையை நிறைவேற்றும் நீண்டகால இடைக்காலத் தடையைத் தொடர்வதற்கு ஆதரவாக இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
மகிந்த ராஜபக்ச வின் 2014ஆம் ஆண்டு நடவடிக்கையைப் பொறுத்தவரை, நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஐந்து இந்தியர்களின் தண்டனையை ஜனாதிபதி மன்னிப்பு அதிகாரத்தின் மூலம் முழுமையாகத் தள்ளுபடி செய்து அவர்களை விடுதலை செய்தது என்பது உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சம்பவமாகும்.
</p><p>
ஆனால், இதை இலங்கையில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்படுத்த முடியாது. அது இன்னும் சட்டத்தில் உள்ளது. 2026ஆம் ஆண்டில்கூட புதிய மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>எனினும், 1976 முதல் இதுவரை ஒரு மரண தண்டனையும் நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்பதே இலங்கையின் தற்போதைய சட்ட நடைமுறை நிலையின் முக்கிய அம்சமாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T07:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-s-press-secretary-is-stepping-down-1786606343"></link>
            <id>https://ibctamil.com/article/trump-s-press-secretary-is-stepping-down-1786606343</id>
            <summary type="text">வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான 28 வயதான கரோலின் லீவிட், ட்ரம்பின் கொள்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது ஊடகவியலாளர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடும் ஒரு நபராக அறியப்படுகிறார்.
</p><p>இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினாலும், கரோலின் தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முக்கியக் காரணம்</h2><p>

அமெரிக்க வரலாற்றில் மிக இளவயது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், கடந்த மே மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததன் மூலம் தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35175e02-40bd-426a-be72-06c3ee309409/26-6a7d765891f70.webp' /></p><p>இதன்படி, தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாகவும் கரோலின் கூறியுள்ளபோதிலும், ட்ரம்பின் சரிந்து வரும் செல்வாக்கே இந்த பதவி விலகலுக்கு முக்கியக் காரணம் என சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T07:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-chinese-premier-zhu-rongji-dies-aged-97-1786599760"></link>
            <id>https://ibctamil.com/article/former-chinese-premier-zhu-rongji-dies-aged-97-1786599760</id>
            <summary type="text">சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் காலமானார்.&amp;nbsp;ஜூ ரோங்ஜி தனது 98 ஆவது வயதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் காலமானார்.&nbsp;</p><p>ஜூ ரோங்ஜி தனது 98 ஆவது வயதில் நேற்று (12) 11 மணியளவில்&nbsp;பெய்ஜிங்கில் உயிரிழந்தார்.</p><p>ஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், </p><p>“ஜூ ஒரு சிறந்த கட்சி உறுப்பினர், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளி, ஒரு தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், ராஜதந்திரி, கட்சி மற்றும் நாட்டின் சிறந்த தலைவர் ஆவார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை</h2><p>1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கு முக்கியப் பங்காற்றினார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6eb5a5-c4b9-422e-851c-aba51c975a90/26-6a7d72e42277c.webp' /></p><p>


மேலும், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தார்.</p><p>



இதன் மூலம் சீனா சர்வதேச அளவில் பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். </p><p>இந்தியா – சீனா இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், 2002ஆம் ஆண்டு ஜூ ரோங்ஜி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்ஹோ சமனின் தாயார் கொலையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-used-in-murder-of-backhoe-samans-1786602822"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-used-in-murder-of-backhoe-samans-1786602822</id>
            <summary type="text">பாதாள உலக தலைவன் &#039;பெக்ஹோ சமன்&#039; என்பவரின் தாயார் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்&amp;nbsp; கண்டுபிடிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக தலைவன் 'பெக்ஹோ சமன்' என்பவரின் தாயார் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்&nbsp; கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>ஊருபொக்க - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹால பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக&nbsp; காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
 

காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>பெக்ஹோ சமன் தாயார் கொலை</h2><p>மித்தெனிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12.08.2026) துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d8dba0-207e-49cb-924d-9ff226ed3e4c/26-6a7d6cc512793.webp' /></p><p>குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெக்ஹோ சமனின் தாயார் மித்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>

 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>எவ்வாறாயினும், கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை, இதேவேளையில் காவல்துறை விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archaeological-evidence-of-tamil-culture-in-jaffna-1786598980"></link>
            <id>https://ibctamil.com/article/archaeological-evidence-of-tamil-culture-in-jaffna-1786598980</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்
இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்று (13.08.2026) மற்றும் நாளை (14.08.2026) ஆகிய இருதினங்கள் இடம்பெறவுள்ளது.
</p><p>
இக் கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய
பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும்
காட்சிப்படுத்தப்படுகின்றன.</p><p></p><h2>ஈழத்தின் பண்டைய வரலாறு</h2><p>
</p><p>
இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின்
தொன்மைச் சிறப்பையும் நேரில் கண்டுகொள்ள முடிகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df57ab0-1501-4e68-bfe9-35e2a46c0500/26-6a7d5e5838c43.webp' /></p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள்
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ்.
பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன்.</p><p>மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச
செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக
மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல்
சின்னங்களை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a6705d-64a7-4e30-99ab-be9258821a3a/26-6a7d5e5950d77.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d779d6-6c36-4741-9e37-b5ad13a62c9e/26-6a7d5e5a26fd2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3f6c6a-de34-4a25-8b9e-f31cb358dec8/26-6a7d5e5af04ab.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-power-cuts-sri-lanka-secures-boosts-hydropower-1786600614"></link>
            <id>https://ibctamil.com/article/no-power-cuts-sri-lanka-secures-boosts-hydropower-1786600614</id>
            <summary type="text">எதிர்வரும் செப்ட​ம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்ட​ம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என&nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் அடுத்த வருடத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;இதற்கு முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள், விநியோகத்தர்கள் ஊடாக பெறப்பட்டமையால் நிலக்கரியின் தரம் தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது.</p><p></p><h2>நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு&nbsp;</h2><p>
</p><p>
புதிய முறைமையின் கீழ் குறித்த பரிசோதனை அறிக்கைகளை நேரடியாக இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இடைத்தரகர்கள் மூலம் இடம்பெறும் நிதி மற்றும் தர மோசடிகளை முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f862ec0-495d-4023-88b4-d7cd5b09e96a/26-6a7d66183fcb4.webp' /></p><p>ஓகஸ்ட் மாதம் நாடு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்மின் உற்பத்தியைத் தவிர்த்து, மின் உற்பத்திக்குத் தேவையான நீர் இருப்பு நாட்டில் தற்போது போதுமானதாக உள்ளது.</p><p>ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குள், 868 ஜிகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் பெறப்பட்டுள்ளதுடன் தற்போது, ​​நாட்டின் மின்சாரத் தேவையில் 48 சதவீதம் நீர்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
</p><p>
அதன்படி, மின்சார உற்பத்தியில் ஏற்படும் எந்தவொரு பற்றாக்குறையாலும் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்று அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vat-must-be-paid-by-august-20th-1786602703"></link>
            <id>https://ibctamil.com/article/vat-must-be-paid-by-august-20th-1786602703</id>
            <summary type="text">

2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதிசேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதிசேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
வரியைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. </p><p>

காசோலை, வங்கி வரைவோலை அல்லது செலுத்துகை ஆணை (Payment Order) மூலம் செலுத்தப்படும் தொகைகள் உரிய திகதிக்கு பிறகு பெறப்பட்டால், அவையும் தாமதமான செலுத்துகையாகவே கருதப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>வற் அறிக்கை&nbsp;</h2><p>

மேலும், ஜூலை மாதத்திற்கான வற்(VAT) அறிக்கைகள் ஓகஸ்ட் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15e6c8e-41c2-4c75-9cfd-4fbe7a3fe9f7/26-6a7d6aae4535c.webp' /></p><p>

இதேவேளை, பிடித்தம் செய்யப்பட்ட வரியை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னரும், ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னரும் செலுத்துமாறும் வரி செலுத்துவோருக்கு திணைக்களம் நினைவூட்டியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T06:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோய் - எச்சரிக்கும் வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rise-in-intestinal-disorders-among-sl-youth-1786587235"></link>
            <id>https://ibctamil.com/article/rise-in-intestinal-disorders-among-sl-youth-1786587235</id>
            <summary type="text">இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். </p><p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க இதனைத் தெரிவித்தார்</p><p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "நமது குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது.</p><p></p><p> </p><h2>எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி</h2><p>அதை நாம் 'குடல்-மூளை அச்சு' (gut-brain axis) என்று கூறுகிறோம். அதாவது நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது பதற்றத்தில் இருந்தாலோ, அது தானாகவே நமது குடலிலும் உணரப்படும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84311fb8-89e4-42f5-b3df-cc0d85cebdfd/26-6a7d6a8f0ecb3.webp' /></p><p>இந்தச் சிக்கலான செயல்முறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுப் பிரச்சனைகள் ஆகியவற்றின் சேர்க்கையால் IBS (Irritable Bowel Syndrome - எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) நிலை ஏற்படலாம். </p><p>இந்த நிலை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கை முறை இப்போது மாறியுள்ளது; உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. </p><p>காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவு முறையிலிருந்து பல இளைஞர்கள் விலகி, இலகுவாகக் கிடைப்பதால் செயற்கை உணவுகளை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். இதன் காரணமாக, அவர்களிடம் தற்போது IBS நிலை அதிகமாகக் காணப்படுகிறது என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடி! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-defraud-promising-employment-abroad-1786600951"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-defraud-promising-employment-abroad-1786600951</id>
            <summary type="text">

இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு மற்றும் காவல்துறை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

அரசாங்கத் தலையீட்டின் மூலம் வழங்கப்படும் பணி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, இணையதளம் ஊடாகப் பணம் பறிக்கப்படுவதாக வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள்&nbsp;</h2><p> 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் எனவும், மற்றவர் பெலியத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81d6c5d-e7d6-4089-a721-5da6daa6f7f9/26-6a7d647d31fa5.webp' /></p><p>
</p><p>
இவர்களிடமிருந்து 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், போலியான இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஒப்பந்தப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த சந்தேக நபர்கள் பணியகத்தின் அதிகாரிகளைப் போல நடித்து, வேலை தேடுபவர்களைப் பலமுறை பணியகத்திற்கு வரவழைத்து நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>மோசடியின் பின்னணி</h2><p>

முன்னதாக இதே போன்ற இஸ்ரேலிய வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தனி மெனிக்கே என்ற பெண்ணின் வழிகாட்டலிலேயே இவர்கள் செயல்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5d56f1-ae80-4f2d-b341-2face43e9ee0/26-6a7d647c7a51f.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், பணியகத்தின் சேவைகளைப் பெற விரும்புவோர் உரிய அதிகாரிகள் அல்லது வரவேற்பு கவுண்டரில் உள்ளவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும், தரகர்கள் அல்லது அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T06:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் இலஞ்ச ஆணையத்திற்கு வருகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-deputy-secretary-general-of-parliamen-tarrives-1786600764"></link>
            <id>https://ibctamil.com/article/ex-deputy-secretary-general-of-parliamen-tarrives-1786600764</id>
            <summary type="text">நாடாளமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13.08.2026) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சபாநாயகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13.08.2026) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்</h2><p> </p><p>

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a454f33-78b8-4be6-8892-1536c159a788/26-6a7d6190a2164.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:13:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்த விவகாரம்: போர் விளிம்பில் ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-there-has-been-no-progress-in-restoring-1786595662"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-there-has-been-no-progress-in-restoring-1786595662</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே இடம்பெற்று வரும் பேச்சுவார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>ஈரானிய அதிகாரி ஒருவர் மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகமொன்று நேற்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p>
இரு தரப்பினரும், மத்தியஸ்தர்கள் ஊடாக முன்னைய உடன்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு குறித்து கலந்துரையாடி வருகின்றனர் எனவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்</h2><p> </p><p>எனினும், இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1452d8b7-1b1a-4782-96c3-e6a8daffb2fb/26-6a7d5af9ad93a.webp' /></p><p> </p><p>கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.&nbsp;</p><p>எனினும், ஜூலை 7ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த ஏற்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குப் பின்னர், ஈரானும் குறித்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.</p><p>&nbsp;இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் ஈரான் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், குறிப்பாக ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்குவது தொடர்பில் அமெரிக்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுமதியாகும் இலங்கைப் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tax-exemption-for-sri-lankan-goods-in-india-1786595742"></link>
            <id>https://ibctamil.com/article/tax-exemption-for-sri-lankan-goods-in-india-1786595742</id>
            <summary type="text">இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளதாக&nbsp;இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். கடந்தாண்டு சுற்றுலா வந்த 2.5 கோடி பேரில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள். வரும் 2030 க்குள் இலங்கையின் சுற்றுலா பயணிகள் 5 மில்லியனாக அதிகரிக்கும்.</p><p></p><h2>இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகள்&nbsp;</h2><p> 

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு பொருளாதார உதவிகளை செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a59096-729d-4845-96d1-d503f1feeaf1/26-6a7d5887bc191.webp' /></p><p> </p><p>இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம். ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும்,&nbsp;தொழில் வளர்ச்சிக்காக நிலவளத்தையும் இலங்கை அரசு தருகிறது தருகிறது.</p><p> இலங்கையில் ஆண்டுதோறும் 800 மில்லியன் டொலர் பால்மா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

அடுத்து மருந்து வகைகளை ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. அவற்றை அங்கு உற்பத்தி செய்யலாம்.</p><p></p><h2>&nbsp;இந்தியாவில் இறக்குமதி வரி</h2><p> </p><p>வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது. இந்தியாவின் 5,400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a87de7e0-60e3-4655-ae52-21a2f836de11/26-6a7d588893319.webp' />&nbsp;</p><p> இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது. </p><p>அதேசமயம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது“ என தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wsebGh4QNj4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T05:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173"></link>
            <id>https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.</p><p>வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.</p><p></p><h2>வெளியுறவுச் சேவை அதிகாரி</h2><p>

எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு சிரேஸ்ட வெளியுறவுச் சேவை அதிகாரியாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f2dd4c-a91f-4b9d-97aa-5d59a73dcb12/26-6a7d46ca39a1b.webp' /></p><p> 

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஸ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.</p><p> 

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எரிக் மேயரின் பதவிக் காலம்</h2><p> </p><p>

வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97127749-59a1-4b3e-afd1-fbd9864d6d19/26-6a7d46c97d946.webp' /></p><p> </p><p>

பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையிலேயே மேயரின் இந்த நியமனம் அமைந்துள்ளது. </p><p>

புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360</id>
            <summary type="text">தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (12.08.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த அவர்கள், தடைசெய்யப்பட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>9 கடற்றொழிலாளர்கள் கைது</h2><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e8cfca-4c19-4314-b7d0-66f5aabcc476/26-6a7d461f40979.webp' /></p><p>
இதனிடையே, மன்னார் தீவு மற்றும் இராமர் பாலத்தைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்காக விசேட கடற்றொழில் முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் ஹிஸ்புல்லா எம்.பி இலஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658"></link>
            <id>https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&amp;nbsp;வருகை தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&nbsp;வருகை தந்துள்ளார். </p><p>அவர் சற்றுமுன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக (CIABOC) வருகை தந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975654b-d0bb-4fd5-a68a-b9299eca618b/26-6a7d483fc9a94.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T04:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 21 வயது இலங்கை மாணவன் குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-held-after-sl-student-dies-in-japan-1786589858"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-held-after-sl-student-dies-in-japan-1786589858</id>
            <summary type="text">ஜப்பானில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் சிபா மாகாணத்தின் நாகரேயாமா நகரில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் சிபா மாகாணத்தின் நாகரேயாமா நகரில் உள்ள ஒரு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நடந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 

ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>காவல்துறையினரால் கைது</h2><p> </p><p>

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8933c19-2939-428d-b443-51941c5bc721/26-6a7d351f0ee69.webp' /></p><p>இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயார் நிலையில் தூக்குமேடை - 50 வருடங்களின் பின் மீண்டும் இலங்கையில் மரண தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-gallows-ready-if-death-penalty-imposed-1786588410"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-gallows-ready-if-death-penalty-imposed-1786588410</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வெலிக்கடை சிறைச்சாலை&nbsp;உடன் தற்போது இரு மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஒரே தூக்குமேடை</h2><p> இலங்கையில் தற்போது கட்டமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய ஒரே தூக்குமேடை வெலிக்கடை சிறைச்சாலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deca63c-aa3d-451e-8602-c3d7b36b0808/26-6a7d30f9128e3.webp' /></p><p>கண்டி போகம்பர சிறைச்சாலையில் இருந்த மற்றொரு தூக்கு மேடை தற்போது அந்தச் சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதால் பயன்பாட்டில் இல்லை. </p><p>சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலின்படி தற்போது நாட்டில் 806 கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.</p><p></p><p> </p><h2>மீண்டும்&nbsp;மரண தண்டனை</h2><p>இவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 58 பேர் அடங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26cd16f-b3c7-46b4-8720-b795107f4110/26-6a7d30f9b9031.webp' /></p><p> அவர்களில் 52 ஆண்களும் 6 பெண்களும் உள்ளனர். மேலும் ஒரு வெளிநாட்டவரும் மரண தண்டனை கைதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய செயற்பாட்டு சபை கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-s-official-poverty-line-rises-to-rs-17592-1786591446"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-s-official-poverty-line-rises-to-rs-17592-1786591446</id>
            <summary type="text">ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபாய் உயர்வாகும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொழும்பு மாவட்டத்தின் வறுமைக்கோடு</h2><p>

ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம் அறிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c21750-1704-4163-b693-cf77b1d00ba9/26-6a7d3c807f009.webp' /></p><p> </p><p>

ஜூன் மாத உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் மதிப்பு 18,973 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் அம்மதிப்பு 18,876 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p>

வறுமைக்கோட்டின் மிகக் குறைந்த மதிப்பு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்தத் தொகை 16,821 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T03:46:21+00:00</updated>
        </entry>
    </feed>
