<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-11T11:19:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நாளையதினம் வெடிக்கவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-keerimalai-area-of-jaffna-tomorrow-1786444759"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-keerimalai-area-of-jaffna-tomorrow-1786444759</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல்
அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான
முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான
கழிவுகளை கொட்டியுள்ளனர்.</p><h2>காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை</h2><p>கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34
உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும்,
இதுவரையில் காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்
சாட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bea087c-55d2-488b-8b62-34a3e2ed8f34/26-6a7b005280297.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட
பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட
குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில்
விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>பிதிர்கடன்களை&nbsp;&nbsp;பலர் ஒன்று கூடுவார்கள்</h2><p>
</p><p>
அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது, முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று
கூடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994b9478-8e85-41a1-a56c-89859e34ad77/26-6a7b00535ffb8.webp' /></p><p>&nbsp;மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை
முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார்
என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T10:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/violation-of-rights-of-muslim-female-employees-1786444827"></link>
            <id>https://ibctamil.com/article/violation-of-rights-of-muslim-female-employees-1786444827</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் தொடர்பில்&amp;nbsp;இலங்கை மனித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் தொடர்பில்&nbsp;இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">குறித்த வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, நேற்று (10)
மாலை கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில்
ஐந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">

இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார
அதிகாரியையும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர்
ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""></https:></p><h2><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">அடிப்படை உரிமைகள் மீறல்&nbsp;</https:></h2><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">
</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">எனினும், குறித்த சந்திப்பின் போது நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான
சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e338f1e3-9431-4df7-8e34-0de7280ddbad/26-6a7affb0ca976.webp' /></https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">
</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின்
அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">இன்று அல்லது நாளை, அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான
அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் அனுப்பப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும், விசாரணைகளும்
தீவிரமாக முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்,
இவ்விடயம் தொடர்பாக இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத்
தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில்
தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""></https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""></https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""><br></https:></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""><br></https:></p>]]></content>
            <updated>2026-08-11T10:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் மத்திய கிழக்கு போர்: உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/standoff-between-us-iran-over-the-strait-of-hormuz-1786438034"></link>
            <id>https://ibctamil.com/article/standoff-between-us-iran-over-the-strait-of-hormuz-1786438034</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் மோதல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் மோதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
</p><p>
ட்ரம்பின் இந்தக் கோரிக்கையால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகரித்த எண்ணெய் விலை</h2><p>இதனால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb17352-fdf0-4d21-9224-a06a71e3b52e/26-6a7af39971168.webp' /></p><p>
இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. </p><p>நேற்று மசகு எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, இன்று பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சுமார் 88 டொலரை அண்மித்துள்ளதுடன், WTI ரக மசகு எண்ணெயின் விலையும் 82 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
</p><p>
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளமை, சந்தையில் விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> இதனால் அமெரிக்கா ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் அல்லது பின்னடைவும் சர்வதேச எண்ணெய் விலையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரணதண்டனை விதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409</id>
            <summary type="text">&amp;nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&amp;nbsp;மூவருக்கு &amp;nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போரின்போதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&nbsp;மூவருக்கு &nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அசாத்&nbsp;&nbsp;இல்லாத நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு</h2><p>பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e08db6-de94-4f99-83ad-ff772666ee89/26-6a7af80e3ba2e.webp' /></p><p>
</p><p>
பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றில் முன்னிலை</h2><p>

மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3b9a2f-0e70-4681-9fe8-c44525230996/26-6a7af80ee27c0.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>

சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய இடைக்கால அரசு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்துராஜவெலயில் 3 புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் : கிடைத்தது அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-new-fuel-storage-tanks-at-muthurajawela-1786442569"></link>
            <id>https://ibctamil.com/article/three-new-fuel-storage-tanks-at-muthurajawela-1786442569</id>
            <summary type="text">முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.</p><p>இலங்கை பெட்ரோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.</p><p>

 

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுற்றாடல், சட்ட மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதற்கு கடந்த ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட யோசனை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
 

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b1c1a0-7967-4165-baba-0798b82dcf03/26-6a7af6f63751e.webp' /></p><p>
</p><p>
 

சர்வதேச போட்டித்தன்மை மிக்க விலைமனுக்களைக் கோரும் நடைமுறையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களில், உயர் மட்டக் கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த விலைமனுதாரரான M/s Indo-East Engineering &amp; Construction (Lanka) (Private) Limited மற்றும் Ceylex Engineering (Private) Limited கூட்டுப் பங்காளித்துவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>
 

இவ்வொப்பந்தத்தின் பெறுமதி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாயாகும் என்பதுடன், இத்தொகை பெறப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரியிலிருந்து (VAT) விலக்களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம் : ஈரான் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/proud-of-iran-we-are-invincible-1786441584"></link>
            <id>https://ibctamil.com/article/proud-of-iran-we-are-invincible-1786441584</id>
            <summary type="text">ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

“ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
“ஈரானியர்களாகிய நீங்கள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளீர்கள்; நீங்கள் முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளீர்கள்,” என்று மேலும் கூறிய ஈரானிய வெளியுறவு அமைச்சர், மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து இதை பலமுறை கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.</p><h2>அமெரிக்காவை இப்படி எதிர்ப்போம் என யாரும் நினைக்கவில்லை</h2><p>ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது ஈரானிய வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec699f6-eb1f-4c6f-90b3-b85cb1896f88/26-6a7af2ade782e.webp' /></p><p>
</p><p>
“ஈரான் அமெரிக்காவை இந்த அளவுக்கு எதிர்க்கும் என்று யாரும் நினைக்கவில்லை,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி மேலும் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச இரதமேறி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த மாவைக் கந்தன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-car-festival-1786439283"></link>
            <id>https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-car-festival-1786439283</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.</p><p>
இன்று (11) காலை முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூசை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை
வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன. </p><p>அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.</p><p></p><h2>நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்</h2><p>
</p><p>
இந்த திருக்காட்சியை காண்பதற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து
முருகப் பெருமானை தரிசித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d699590-d2a5-4a9f-969e-49fc9fdcd0c1/26-6a7ae9573e28e.webp' /></p><p>
</p><p>
இன்றைய தினம் பக்தர்கள் காவடிகள், அங்கபிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை
எடுத்துவந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.</p><p>இதேவேளை&nbsp;மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் நடைபெறவுள்ளது.</p><p>ஆடி அமாவாசை தினத்தில், தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன்களை நிறைவேற்றும்
விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது.
</p><p>
கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு,
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனரத்ன மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-charges-filed-against-rajitha-1786438898"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-charges-filed-against-rajitha-1786438898</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
ராஜித சேனாரத்ன கடத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0657bf-3066-4286-8fe2-011044bc1a95/26-6a7aeac9dc70c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-consulate-to-hold-mobile-service-in-bern-1786433266"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-consulate-to-hold-mobile-service-in-bern-1786433266</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் - ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் - ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அந்த நாட்டின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு நடமாடும் சேவை ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இந்த நடமாடும் சேவை இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் 'Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern' என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p></p><h2>வழங்கப்படவுள்ள சேவைகள்&nbsp;</h2><p>
</p><p>
இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3496d4f-3d56-413b-964f-76f25f4406f2/26-6a7adbf18e031.webp' /></p><p>
</p><p>
அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>தேவையான விபரங்கள்</h2><p>

கால அவகாசம் குறைவாக உள்ளமையினால், இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் <a href="https://www.lankamission.org/mcs" target="_blank">www.lankamission.org/mcs</a> என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48abb9d-2dd8-4f14-b4c6-558b3acd1bb9/26-6a7adbf0c632f.webp' /></p><p>
</p><p>மேலும், தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை <a href="https://www.lankamission.org/checklist" target="_blank">www.lankamission.org/checklist</a> என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u9zfHVtj19g" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/42810-tourists-arrived-in-sri-lanka-in-6-days-1786415127"></link>
            <id>https://ibctamil.com/article/42810-tourists-arrived-in-sri-lanka-in-6-days-1786415127</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாக சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp;</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகளில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது மொத்த வருகையில் 18% ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a4d0a3-8ee4-4c65-bcab-f16075189929/26-6a7ad73bdbc8b.webp' /></p><p>அதேபோல், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>
 

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 06 வரையிலான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

அவர்களில் இந்தியாவில் இருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-gets-40-years-in-jail-for-abuse-of-kid-1786429272"></link>
            <id>https://ibctamil.com/article/man-gets-40-years-in-jail-for-abuse-of-kid-1786429272</id>
            <summary type="text">வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.</p><p>கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு, எதிராக வவுனியா காவல்துறையினரால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபருக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e021c1-64b1-449d-beec-e982d76031e6/26-6a7aceb91be8d.webp' />&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில், அவருக்கு எதிராக அரச சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
இதன் அடிப்படையில், வழக்கு தொடுனர் தரப்புகுற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா, குறித்த சந்தேக நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கடுமையான உடல் மற்றும் உள பாதிப்பு</span></p><p>அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba9b8106-9a36-47c5-a72b-79a405763060/26-6a7aceb9c50ba.webp' /></p><p>
இந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டதரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p>
இந்த நிலையில், வழக்கு நடவடிக்கையின் போது சந்தேக நபர், தலைமறைவாகியிருந்தமை,&nbsp; சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே குறித்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தனது, தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலைக்கு 45 பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monaragala-accident-1786425357"></link>
            <id>https://ibctamil.com/article/monaragala-accident-1786425357</id>
            <summary type="text">மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று புத்தல – மஹகொடய பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.&amp;nbsp; இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று புத்தல – மஹகொடய பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.&nbsp;</p><p> இன்று (11.08.2026) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.&nbsp;</p><p>
பேருந்து வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>இ.போ.ச பேருந்து விபத்து&nbsp;</h2><p>
</p><p>
விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d8d473-c522-43a3-bbb8-5a3bed6e8900/26-6a7acf776b08b.webp' /></p><p>

விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </p><p>இந்த சம்பவம் தொடர்பில் புத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd44a916-6798-45d1-9bee-5c46c7c23fbe/26-6a7acf7839632.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a41272-76b2-4701-8a6d-a1aace9b22c0/26-6a7acf794e041.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[﻿கொழும்பிலிருந்து சென்ற பேருந்து மோதி தாயும் மகனும் பலி - குழந்தை பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-after-being-hit-by-a-bus-from-colombo-1786426178"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-after-being-hit-by-a-bus-from-colombo-1786426178</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து சென்ற தனியார் அதிசொகுசு பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து சென்ற தனியார் அதிசொகுசு பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து இன்று (11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு தம்புள்ளை - மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த விபத்தில் 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>சாரதி கைது&nbsp;</h2><p>
மேலும், உயிரிழந்த நபரின் ஒன்றரை வயதுடைய குழந்தையும் பலத்த காயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e370a8-9652-4803-83da-1ca33d3e0166/26-6a7aca2e2c4cb.webp' /></p><p>களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிக் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>
குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததுடன், அதற்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:27:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : அரசாங்கத்திடம் இம்ரான் எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/muslim-women-s-clothing-issue-imran-mp-request-1786431662"></link>
            <id>https://ibctamil.com/article/muslim-women-s-clothing-issue-imran-mp-request-1786431662</id>
            <summary type="text">முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு
வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு
வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தெரிவித்துள்ளார்.
</p><p>
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து
இன்று (11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற
தலையீடுகளுக்கு உள்ளாகின்றது.</p><p></p><h2>அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை</h2><p> </p><p>இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61b06f8-df37-4f63-942b-715e992fdda0/26-6a7acaaa61232.webp' /></p><p>

அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும்
பொறுப்பாகும். இதனை மீறும் அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்
நடைமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>சில அரச உத்தியோகத்தர்களின் இது போன்ற செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும்
முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும்.

இது அரசாங்கத்தின் வளமான நாடு கொள்கையை கேள்விக் குறியாக்கும்.</p><p>

எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் அடிக்கடி தேவையற்ற தலையீடு செய்யப்படுவதால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><i><b>செய்தி - ஹஸ்பர் ஏ.எச் மற்றும் எம்.என்.எம்.புஹாரி</b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YlfWmFH8txY" width="640" height="360" class="note-video-clip"></iframe><i><b><br></b></i></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><i><b><br></b></i></p>]]></content>
            <updated>2026-08-11T07:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதசாரிகள் மீது சொகுசு கார் மோதியதில் மூவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-injured-luxury-car-crashes-into-pedestrians-1786427432"></link>
            <id>https://ibctamil.com/article/three-injured-luxury-car-crashes-into-pedestrians-1786427432</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வஸ்கடுவ-காலி வீதியில் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்துக்கள்ளாகி உள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வஸ்கடுவ-காலி வீதியில் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்துக்கள்ளாகி உள்ளது.&nbsp;</p><p>இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

வஸ்கடுவ-காலி வீதியில் அந்த வாகனம் எதிர்ப்புறப் பாதைக்குள் புகுந்து, மூன்று பாதசாரிகள் மீது மோதி, சாலையோரத்தில் இருந்த இரண்டு எல்லைக் கம்பங்களில் மோதி, பின்னர் சாலையிலிருந்து விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>இருவர் காயம்</h2><p>
</p><p>
 

ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது தூங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342af5f3-4559-4c56-ae96-1ce6c2e29a5c/26-6a7ac3e282b24.webp' /></p><p>

 

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-car-festival-1786428994"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-car-festival-1786428994</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம்&nbsp;வெகுவிமர்சையாக நடைபெற்றது.</p><p>இன்று (11) காலை ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப
பூஜையின் பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்
'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி
மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.</p><p>மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட
இவ்வாலயத்தின் மகோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p></p><h2>கோலாகலமாக நடைபெற்ற தேர் உற்சவம் </h2><p>
</p><p>
இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு,
பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத்
தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c18722-4f65-4c19-8670-9f940d9f3d68/26-6a7abf74a694b.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு
விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள்
வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
</p><p>ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதிர்க்கடன்
தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக
இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.
</p><p>
இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) நண்பகல் வரலாற்றுச்
சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை : அநுர அரசு அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-drug-crimes-in-sri-lanka-1786426522"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-drug-crimes-in-sri-lanka-1786426522</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளுக்குப் பணிப்புரை&nbsp;</h2><p>
</p><p>மேலும், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c1725e-e01f-4a4c-ab6c-a08f083273ee/26-6a7abab87bd30.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
</p><p>
இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க "மிதுரு பாசல" திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7VGoDMRGOmk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T06:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிஸ்ஸங்க சேனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nissanka-senadhipathi-arrives-bribery-commission-1786424623"></link>
            <id>https://ibctamil.com/article/nissanka-senadhipathi-arrives-bribery-commission-1786424623</id>
            <summary type="text">எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி&amp;nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று (11.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி&nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (11.08.2026) காலை அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d9009f-11d3-4e0b-aace-226feb8cd82d/26-6a7ab2770beef.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/N-HK3vlFVUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780"></link>
            <id>https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780</id>
            <summary type="text">புதிய இணைப்புகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.</p><p>
 

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d59e78-7648-4a62-a6b4-76f8370babaf/26-6a7ab0964f022.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் : வெளியான முக்கிய அறிவிப்பு</h4><p>இலங்கையில் இன்று (11) காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சரிசெய்ய நடவடிக்கை</h2><p>இந்த நிலையில் கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35d2a59-131b-4beb-a18f-aca579f8aabc/26-6a7a9a9241004.webp' /></p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7VGoDMRGOmk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:18:02+00:00</updated>
        </entry>
    </feed>
