<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-24T13:27:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779"></link>
            <id>https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779</id>
            <summary type="text">புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.

இந்த காலப்பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.</p><p>

இந்த காலப்பகுதியில் இருதரப்பு மோதல்களால் இடம்பெற்ற படுகொலைகள், மற்றும் கிரானில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவங்களை அந்த காலத்து பத்திரிகைகள் அடிகோடிட்டிருந்தன.
</p><p>
மட்டக்களப்பில் புளொட் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்புக்களிடையே மூண்ட தாக்குதல்களின் திட்டமிடல்கள், இதில் புளொட் அமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் என்பவற்றையும் பத்திரிகைகள் மையப்படுத்தியிருந்தன.</p><p>
இவ்வாறு மட்டக்களப்பில் இந்த மோதல் எங்கிருந்து ஆரம்பித்தது, அதில் கொல்லப்பட்ட முக்கிய தளபதிகள் யார், மேலும் கருணா எந்த இடத்தில் தனது திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள்...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:06:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களின் திறமைகளுக்கு உலகளாவிய ரீதியில் விரிந்த வாய்ப்புகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aravind-urges-eelam-tamils-to-go-global-1787573181"></link>
            <id>https://ibctamil.com/article/aravind-urges-eelam-tamils-to-go-global-1787573181</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உலகலாவிய ரீதியில் காணப்படுவதாக தென்னிந்திய திரை தொழிநுட்ப பிரபலம் அரவிந்த் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உலகலாவிய ரீதியில் காணப்படுவதாக தென்னிந்திய திரை தொழிநுட்ப பிரபலம் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திய சினிமா துறையில் திறமையை காட்ட இங்கிருக்கும் இளைஞர்கள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர்.</p><p>

இருப்பினும் இதனை தாண்டி புலம்பெயர் நாடுகளில் அவர்களது திறைமையை காட்டுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது.
</p><p>
இதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும் அவர்களது திறமை மேம்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தொழிநுட்ப வளர்ச்சி, புலம்பெயர் மக்களின் வளர்ச்சி மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது அகளங்கம் நிகழ்ச்சி....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AW0HoiBGzaQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள்களை செலுத்தி மக்களை அச்சுறுத்துவோருக்கு வடக்கு ஆளுநரின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-to-motorcyclists-1787573035"></link>
            <id>https://ibctamil.com/article/warning-to-motorcyclists-1787573035</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மற்றும் அபுதிதாக வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.</p><p> 

இதன் பொது கருத்து வெளியிட்ட அமைச்சர், 

'வடக்கு மாகாணத்தில் காவல்துறையின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம்
காணப்படுகிறது.</p><p></p><h2>போதைப்பொருட்களின் பரவல்</h2><p>

குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab6b0c3-a927-4b19-80ce-1f62f9f44a3f/26-6a8c332d921a3.webp' /></p><p>
</p><p>
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல்
மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு,
பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில்
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது" என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T12:04:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார கொள்வனவிற்கான புதிய கட்டண முறைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-procurement-price-electricity-released-1787569980"></link>
            <id>https://ibctamil.com/article/new-procurement-price-electricity-released-1787569980</id>
            <summary type="text">புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இதற்கமைய, ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, புதிய மின்சார கொள்வனவு கட்டண முறை நாளை (25) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மின் உற்பத்தியின் தன்மையை கருத்திற்கொண்டு, புதிய கட்டண முறை மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய கொள்முதல் விலைகள்</h2><p>அதன்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்களுக்கான கட்டண முறை, மின் நுகர்வோருக்கான கட்டண முறை, மின்கல சேமிப்பு அமைப்புடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்களுக்கான கட்டண முறை போன்றவை இந்த வகைப்படுத்தலில் அடங்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e211ccf-3407-4ac6-b425-b4219004f3b1/26-6a8c2e2a4bc07.webp' /></p><p>இந்தக் கட்டண முறைக்கான நடைமுறைகள் மற்றும் மின்சார கொள்வனவு விலைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-vehicle-imports-ban-lift-govt-revenue-increase-1787568978"></link>
            <id>https://ibctamil.com/article/sl-vehicle-imports-ban-lift-govt-revenue-increase-1787568978</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக&amp;nbsp;நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.பல ஆண்டுகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக&nbsp;நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>பல ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கான வாகன இறக்குமதி தடையை நீக்கியதன் மூலம் இந்த வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>நிதி அமைச்ச வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.</p><p></p><h2>அரசாங்கத்தின் நேரடி வருமானம்</h2><p>
</p><p>
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f575d1d-1b64-40db-b889-1471891e77be/26-6a8c281875003.webp' /></p><p> </p><p>இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><p>

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p> 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் பயன்படுத்த தடை: பிரதமரின் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/social-media-ban-for-under-16s-in-new-zealand-1787566637"></link>
            <id>https://ibctamil.com/article/social-media-ban-for-under-16s-in-new-zealand-1787566637</id>
            <summary type="text">16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த விடயத்தை அவர் இன்று (23.08.2026) வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>மேலும் இச்சட்டத்தை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரையிலான அபராதம் விதிக்கவும் அச் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;சமூக ஊடகத் தடை</h2><p>
</p><p>இந்த புதிய சட்டத்தின்படி, சமூக ஊடநிறுவனங்கள் பயனர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முக அடையாள தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4bc8181-4341-411e-bd5c-a7d68961f787/26-6a8c23eddc8f3.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. </p><p>&nbsp;லக்சனின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி இந்த முன்மொழிவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிராஜா திரைப்படங்களை நினைவூட்டும் போராட்டம் திரைப்பட இசையும் பாடல்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-mv-reminiscent-bharathiraja-film-music-1787569151"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-mv-reminiscent-bharathiraja-film-music-1787569151</id>
            <summary type="text">‘போராட்டம்’&amp;nbsp; திரைப்படத்தின் நாயகன் - நாயகி சந்திக்கும் காட்சிகளில் இடம்பெறும் இசையமைப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்களை நினைவூட்டும் வகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘போராட்டம்’&nbsp; திரைப்படத்தின் நாயகன் - நாயகி சந்திக்கும் காட்சிகளில் இடம்பெறும் இசையமைப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, நாயகன் மற்றும் நாயகி சந்திக்கும் தருணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இசை, காட்சிகளின் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்துவதாகவும், பாரதிராஜா திரைப்படங்களில் காணப்படும் இயல்பான காதல் உணர்வையும் மென்மையான இசை அனுபவத்தையும் நினைவூட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

முக்கிய காட்சிகளுக்கு இசையமைப்பாளர் வழங்கியுள்ள முக்கியத்துவம் திரைப்படத்தின் உணர்வோட்டத்திற்கு வலுசேர்ப்பதாகவும், காட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையில் இசை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இவ்வாறான இசையமைப்பு காட்சிகளை வெறுமனே நகர்த்திச் செல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் பாராட்டியுள்ளனர்,

இலங்கைத் தமிழ் சினிமாவில் உருவாகிவரும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கு ‘போராட்டம்’ திரைப்படம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறக்கூடியதாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குறிப்பாக, காட்சிகளில் இசைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் திரைப்படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக தமக்குத் தோன்றியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5244cbf5-fec2-48c0-aa5e-6209522b2364/26-6a8c242d1c32a.webp' /></p><p>கருத்து -&nbsp; ம.வேல்</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T11:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : கைகொடுக்குமாறு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-disappeared-conference-jaffna-1787566377"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-disappeared-conference-jaffna-1787566377</id>
            <summary type="text">சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என மன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
மன்னாரில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.</p><p></p><h2>சர்வதேச மாநாடு&nbsp;</h2><p>
</p><p>
இந்த தினத்தன்று ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள்
துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ
அரசுகள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு
இருக்கிறோம்.</p><p>
காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது
அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a40c21-6d53-4151-bd00-6d56a4ee4483/26-6a8c1f1ca4e8f.webp' /></p><p>
</p><p>
ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து
பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த சர்வதேச
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த
தீர்மானித்திருக்கிறோம்.</p><p>

எதிர்வரும் 30ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை
செல்வா கலையரங்கத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.</p><p>

உறவுகளைத் தேடித் திரிந்த தாய்மார்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம்
மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு
இருக்கிறோம். காணாமல் போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம்
வெளியிடுவதற்கு இருக்கிறோம்.</p><p></p><h2>17 ஆயிரம் உறவுகள் காணாமல் போயுள்ளனர்&nbsp;&nbsp;</h2><p>

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு
மகஜர் கையளித்தோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார்
யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள்
தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம்
வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ff9755-f903-4bf3-ab87-32081a004e43/26-6a8c1f1d862c1.webp' /></p><p>
</p><p>காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17 ஆயிரம்
உறவுகள் 8 மாவட்டத்திலும் காணாமல் போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும்
மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு
அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
</p><p>ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து
வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த
மாநாட்டை செய்கிறோம்.
</p><p>
இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த
அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை&nbsp; நடத்துகின்றோம் ”என அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் போலி உறுதிமொழிகள்! சைக்கிள் தரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/t-suresh-national-organizer-tamil-national-people-1787557119"></link>
            <id>https://ibctamil.com/article/t-suresh-national-organizer-tamil-national-people-1787557119</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு, துறைநீலாவணை பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்றது.</p><p>இதன்போது உரையாற்றிய த.சுரேஸ், கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் பிரச்சினைகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;76 வருடங்களாக இன அடக்குமுறை</h2><p>&nbsp;மேலும் கருத்து தெரிவித்த அவர் பட்டிருப்பு தொகுதி என்றால் அது தமிழ் தொகுதி இங்கு தேசிய கட்சிகளே மாற்றுக்
கட்சிகளே ஆசனங்களை பெறமுடியாது துறைநீலாவணை, கல்லாறு , பட்டிருப்பு தமிழ்
தேசிய உணர்வுடன் தமிழ் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம் என்ற மக்கள் வாழும்
பகுதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf34917b-432b-48fd-981c-08e6d1b79707/26-6a8c17a969e4b.webp' /></p><p>

அதனடிப்படையில் இந்த சந்தர்ப்பங்களை பாவித்து அந்த வாக்குகளை சூறையாடி
தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன் படுத்தப்படுகின்றது. தேர்தல்
காலங்களில் இங்கு வந்து போரடினோம் மாவீரர்களை இழந்திருக்கிறோம். </p><p>என கூறி
எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம், பிரதேச
சபை பிரதிநிதித்துவத்தை பெற்று அதிகாரங்கள் கைக்கு கிடைத்த பின்னர் அந்த
மக்களின் குறைகளை கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><p>
இந்த மண்ணில் 76 வருடங்களாக ஒரு மிக பெரிய இன அடக்குமுறைக்குள் இருக்கின்றோம்
சிங்கள பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்குகிறது ஒவ்வொரு தலைவர்களும் இந்த
நாட்டை ஆட்சி செய்ய வருகின்றனர் இவர்கள் ஒவ்வொருவரும் உரிமை தருகின்றோம்
பூனையை யானை ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டு மாறாக தமிழர்களுடைய இருப்பை
இல்லாமல் செய்வதற்கான புதிய புதிய சட்டங்களை இயற்றி தமிழர்களை அடக்கி ஒடுக்கி
வந்தது தான் வரலாறு.
</p><p>
இதனைத்தான் இந்த புதிய அரசும் செய்கிறது உலகத்துக்கு சுபீட்சமாக இருப்பதாகக்
காட்டிக் கொண்டு தமிழர்களை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் மிக கட்சிதமாக எம்
இனத்தவர்களையே வாங்கி வெற்றி கண்டுள்ள தோற்றப்பாடு தெரிகிறது

உண்மையில் புது புது சட்டங்கள் என்பது எமது மக்கள் ஜனநாயக ரீதியாக
கருத்துக்களை பேச முடியாத அளவிற்கு ஊடகத்துறை மற்றும் மக்களின் கருத்துக்களை
வெளிப்படுத்தும் நிறுவனங்களை அடக்குவதற்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது
இதன் நோக்கம் இது சிங்கள பௌத்த நாடு என்ற சிங்கள பேரினவாதத்தின் அடிப்படை
சிந்தனையாக இருக்கின்றது.
</p><p>
தமிழர்கள் ஒரு தேசிய இனம் இந்த இனத்தின் தனித்துவம் பேனக்கூடாது என்பதற்காக
புதுபுது திணைக்களங்களை உருவாக்கி தமிழர்களின் காணிகளை அபகரித்து வருகின்றனர்.
</p><p>தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் புத்தவிகாரை என்றால் தமிழர்களை
இனழிப்பு செய்து பௌத்த நாடாக்குவது திட்டம் இதன் உள்நோக்கம் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் தொலைந்த தங்கச் சங்கிலி...! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-rs-1m-1787563052"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-rs-1m-1787563052</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்
சங்கிலி, மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்
சங்கிலி, மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (23-08-2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>பேருந்தின் நடத்துநரும் மற்றும் சாரதியுமே இவ்வாறு நகையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p></p><h2>மரணச் சடங்கு</h2><p>குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை
செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த
பெண் ஒருவர் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு இன்னொரு உறவினர்
வீட்டுக்குச் சென்றுள்ளார். </p><p>அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த
இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை அவர் உணர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/063c36dc-2b72-47ce-ad91-79cf72a44da3/26-6a8c189bab6df.webp' /></p><p>இதையடுத்து அவர் வழிநெடுகிலும் சென்று பார்த்தபோதும் சங்கிலியைக்
கண்டுபிடிக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்பு, இனிச் சங்கிலி கிடைக்காது என்ற கவலையோடு மீண்டும்
வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே அதே பேருந்தில் ஏறியுள்ளார்.</p><p></p><h2>தங்கச்சங்கிலி&nbsp;</h2><p>அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பேருந்தின் நடத்துநருக்கும் மற்றும் சாரதிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.</p><p>இதன்போது அவர்கள், நீங்கள்
அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது எனவும் அதைக் கண்டெடுத்து பத்திரமா
வைத்திருக்கிறோம் எனவும் கூறி அதனை ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3077f9df-f749-4a7d-a384-b86edbe5a084/26-6a8c189ad55df.webp' /></p><p>பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பேருந்தை சுத்தம் செய்தபோது,
அந்தச் சங்கிலியின் எஸ்வடிவிலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும்
உரிய பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர்.</p><p>
இவ்வாறு 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து
உரியவர்களிடம் சேர்ப்பித்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதியான மனோகரன்
சயந்தன் மற்றும் நடந்துநரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப்பண்பை பேருந்தில இருந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த குற்றவாளிகள் : பாதுகாப்பு பிரதி அமைச்சர் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recent-shootings-are-acts-of-witness-suppression-1787562778"></link>
            <id>https://ibctamil.com/article/recent-shootings-are-acts-of-witness-suppression-1787562778</id>
            <summary type="text">வெளிநாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் கடந்த காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களுடனான சந்திப்பு களுத்துறையில் நேற்று (23) நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு மேலும் உரையாற்றிய அவர், "நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அனைத்தும், சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் என்றே கருதத் தோன்றுகின்றது.</p><p></p><h2>இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்</h2><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பெரும் குற்றவாளிகள் கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அந்த நாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94cebc62-b8b1-4f4d-8746-03f756d615b0/26-6a8c122acbd1f.webp' /></p><p>
அந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் அங்கு சென்று அவர்களுடன் அந்தச் சுகபோகங்களைப் பகிர்ந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
</p><p>
இவற்றை எப்போதாவது தொலைக்காட்சிகளில் கண்டதுண்டா, அல்லது இது குறித்து யாராவது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தினார்களா? நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாகவே தற்போது எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பொருளாதார ரீதியாக முன்னேற்றம்</span></p><p>

நமது நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. ஏதோவொரு அரசியல் குழுவை அல்ல, பல குழுக்களையே மக்கள் விரட்டியடித்தனர். அத்துடன் அவர்கள் மிகவும் கொடூரமான திட்டமிட்ட குற்றக் கும்பல் என்று கூறினால் அது மிகையாகாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fa4a7d-4b0d-44bd-bc36-4ddcdb191be2/26-6a8c13126905e.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்த நாடொன்றைப் பொறுப்பேற்று, நிதி ஒழுக்கத்துடன் நாம் முன்னோக்கிச் செல்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நிதியைச் சரியாகத் திரட்டி, பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளோம்.</p><p>

கடந்த 15 மாதங்களுக்குள் நாம் பொருளாதார ரீதியாகப் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், உயர் பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்னிக் காடுகளுக்குள் இருந்த தலைவர் பிரபாகரன்! அன்ரன் பாலசிங்கம் பீரிஸிடம் பகிர்ந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-shared-anton-balasingham-about-vprabhakaran-1787562574"></link>
            <id>https://ibctamil.com/article/secret-shared-anton-balasingham-about-vprabhakaran-1787562574</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகளுக்கு வரவில்லை என்பது குறித்த முக்கியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகளுக்கு வரவில்லை என்பது குறித்த முக்கியத் தகவல்களை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
மேலும் 'ஈழம்' கொள்கையிலிருந்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்வாங்காத காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.</p><p>

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகப் பங்கேற்ற தனது அனுபவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஜி. எல். பீரிஸ்,</p><p></p><h2>தனியாகப் பேசும் வாய்ப்பு</h2><p>
</p><p>
''பேச்சுவார்த்தையின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c235e16-5c11-4fb4-9688-b4fe6ab6bd04/26-6a8c0f68c784b.webp' /></p><p> 

அப்போது, ''இந்தச் சூழல் எங்குப் போய் முடியப்போகிறது என்று நமக்குத் தெரிகிறது. ஒரு வாய்ப்பு இருக்கும்போதே ஏன் இதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது'' என்பதை அன்ரன் பாலசிங்கத்திடம் எடுத்துறைத்தேன்.</p><p>இதற்குப் பதிலளித்த அன்ரன் பாலசிங்கம், "எனது தலைவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு இட்டுச்செல்ல நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன்" என கூறினார்.
</p><p>
அதற்கு மேலதிகமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து அன்ரன் பாலசிங்கம் தெளிவுபடுத்தினார்.</p><p></p><h2>தனிநாட்டுக் கொள்கை</h2><p>
</p><p>
இந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள், அரசாங்கத்தால் ஒரு சில சிறிய போர்களில் மட்டுமே வெல்ல முடியுமே தவிர, ஒட்டுமொத்தப் போரையும் வெல்ல முடியாது என்று கூறி அவரை நம்ப வைத்த்துள்ளனர் என கூறவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11251f41-9dd1-4b0b-87d2-3d9464576810/26-6a8c0f697c9e4.webp' /></p><p>

தான் இராணுவ ரீதியாக எவராலும் வெல்ல முடியாதவர் என்ற நம்பிக்கையில் பிரபாகரன் இருந்துள்ளார்.</p><p> ஈழம் என்ற தனிநாட்டுக் கொள்கைக்குக் குறைவாகக் கிடைக்கும் எந்தவொரு தீர்வையும் அல்லது சமரசத்தையும் ஏற்க அவர் தயாராக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T10:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-arrested-over-vavuniya-gold-robbery-1787561849"></link>
            <id>https://ibctamil.com/article/four-arrested-over-vavuniya-gold-robbery-1787561849</id>
            <summary type="text">வவுனியாவில் வீடொன்றில் 16.750 பவுண்
நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடொன்றில் 16.750 பவுண்
நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் குறித்த நால்வரும் இன்று (24-08-2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினரிடம் முறைப்பாடு&nbsp;</h2><p>குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 16.750 பவுண் தங்கநகை
கொள்ளையிடப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வவுனியா தலைமை காவல் நிலைய குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31986a4c-f0b9-4f28-9070-1ea81350a032/26-6a8c0b8004d6a.webp' /></p><p>இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.</p><p>அத்தோடு&nbsp; அவர்களிடமிருந்து
கொள்ளையிடப்பட்ட 14 பவுண் நகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>பிரதான குற்றவாளி</h2><p>இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி, கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில்
வசிப்பவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இந்தநிலையில் குறித்த நபர் கொள்ளையிட்ட
ஒருபகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து
வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bbe7f7-08df-45f5-a8f7-6bf35c403d88/26-6a8c0b80af6d6.webp' /></p><p>மேலும் ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல
அடகுநிலையத்தில் அடமானம் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் இன்றையதினம் வவுனியா நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787560695"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787560695</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (24.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (24.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.545 ஆகவும் விற்பனைப் பெறுமதி 333.59 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	441.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 456.58 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	377.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.19 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.24 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.00 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57979258-f984-4ed1-928a-2ef5e863f88d/26-6a8c08d0b5cd2.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		230.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.16 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.54 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T09:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகளை அடித்து நொறுக்கியுள்ள விஷமிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/culverts-damaged-near-keerimalai-cemetery-1787554610"></link>
            <id>https://ibctamil.com/article/culverts-damaged-near-keerimalai-cemetery-1787554610</id>
            <summary type="text">பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து
காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில் கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து
காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில் கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த
பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆன மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு விஷமிகள் அடித்து நொறுக்கியுள்னர்.</p><p>குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து
நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள்
காணப்படுவதானால் மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை
ஏற்பட்டுள்ளது. </p><p>அதனால் அவற்றினை அகற்றுமாறும் மேலும் ஏனைய மூடிகளை
உடைக்காது பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.</p><p>அதேவேளை சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் கீரிமலை வட்டார
உறுப்பினர் முரளிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று
பார்வையிட்ட உறுப்பினர், அது தொடர்பில் தவிசாளருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-the-disappeared-in-jaffna-omp-1787555626"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-the-disappeared-in-jaffna-omp-1787555626</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் நாளை (25) நடைபெறவுள்ள
&#039;சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு&#039; காணாமல் போன
ஆட்கள் பற்றிய அலுவலகம்&amp;nbsp;அனைவரதும் ஆதரவைக் கோரியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் நாளை (25) நடைபெறவுள்ள
'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' காணாமல் போன
ஆட்கள் பற்றிய அலுவலகம்&nbsp;அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ளது.</p><p>அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத்
துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்
தின நிகழ்வு குறித்தும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள்
மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு நேற்று (23) வடக்கு ஆளுநர் அலுவலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடு</h2><p>இந்த ஊடக சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ்
கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா, மிராக் ரஹீம்
ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.</p><p>இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள், “வழமையாக ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் இந்த தினம்,
இம்முறை யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
கடைப்பிடிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6603022-050d-4dd7-b4cf-af6d94c47e9f/26-6a8bf39ce925a.webp' /></p><p>கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும்
கொம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்தன. இம்முறை நாங்கள்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கடைப்பிடிக்கவுள்ளோம்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352
விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து
16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>இவற்றில்
இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000 விண்ணப்பங்கள் எமது தலைமை
அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில்
ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக்
கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.</p><p>எமக்குக்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக்
கண்டுபிடித்துள்ளோம்.</p><p></p><h2>விசேட குழு நியமனம்</h2><p>இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு
அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு
இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா
கொடுப்பனவானது இழப்பீடு அல்ல, அது காணாமல் போன ஆட்களில்
தங்கியிருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9248169-2d9a-4fb7-81ae-9f91a267186e/26-6a8c03bfad935.webp' /></p><p> </p><p>உரிய இழப்பீட்டை வழங்குவது
தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி
அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர். அக்குழுவின்
பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும் முறை குறித்துத்
தீர்மானிக்கப்படும்.</p><p>காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக
அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இதற்கான விசாரணைகள் மற்றும் ஏனைய
செலவுகளுக்காக இந்த வருடம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p>அத்துடன், அரசாங்க நியமனங்களுக்குத் தடை உள்ள நிலையிலும், பிரதமரின்
செயலாளரின் விசேட அனுமதியுடன் எமது அலுவலகத்துக்கு 69 புதிய உத்தியோகத்தர்களை
இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. </p><p>இதற்கமைவாக தற்போது 47 பேர்
சேவையில் இணைந்துள்ளதுடன், எஞ்சியோருக்கான நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில்
வழங்கப்படவுள்ளன“ என அவர்கள் குறிப்பிட்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:46:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணர்: சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/badulla-hospital-doctor-death-police-investication-1787558768"></link>
            <id>https://ibctamil.com/article/badulla-hospital-doctor-death-police-investication-1787558768</id>
            <summary type="text">சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் வைத்திய நிபுணர், தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் வைத்திய நிபுணர், தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>
</p><p>மருத்துவர் பிரபாத் அனுராத தயரத்ன நேற்று (23.08.2026) காலை காணாமல் போனதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p><p>இதன் பின்னர் பதுளை - மஹியங்கனை வீதியில், மப்பகடவேவ பகுதியில் உள்ள 17ஆவது மைல் கல் அருகிலுள்ள வனப்பகுதியில், காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><h2>காவல்துறையினரின் விசேட அறிவிப்பு&nbsp;</h2><p>இதன்போது, அவரது கார் நேற்று இரவு குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bf275d-d764-447d-8aa0-45a61f6ad032/26-6a8c023c5500f.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, மருத்துவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவரது சடலம் காரிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் அமைந்திருந்த பாறையொன்றின் அருகிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், சம்பவ இடத்திலிருந்து மூன்று வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனடிப்படையில், மருத்துவர் மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து&nbsp;உயிரை மாய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>மேலும் அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளைப் பயன்படுத்தி வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>
இந்நிலையில் &nbsp;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2023-ஆம் ஆண்டில் வரி ஏய்ப்பு செய்தவர்களின் தகவல்களை வெளியிட விசேட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-order-publish-info-on-tax-evaders-in-2023-1787556938"></link>
            <id>https://ibctamil.com/article/special-order-publish-info-on-tax-evaders-in-2023-1787556938</id>
            <summary type="text">2024ஆம் ஆண்டு கடப்பாடுகளை(Obligations) அறவிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வரி செல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024ஆம் ஆண்டு கடப்பாடுகளை(Obligations) அறவிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வரி செலுத்துநர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை, வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு (RTIC), உத்தரவிட்டுள்ளது.</p><p>

அத்துடன், 2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி மொத்தம் ரூ.84 பில்லியன் வரி மிகுதி வைத்திருந்த செலுத்துநர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகையின் விபரங்களையும் வெளியிடுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த உத்தரவில், RTIC தலைவர் தயா லங்காபுர மற்றும் ஆணையாளர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் டி.என். சமரக்கோன், சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன மற்றும் ஏ.எம். நஹியா ஆகியோர், குறித்த ஊடக அறிக்கையின் அடிப்படையில் ரூ.57 பில்லியன் வரிச்சலுகை பெற்ற தனிநபர்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிடுமாறு உத்தரவிட்ட்டுள்ளனர்.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு வர வேண்டிய தொகை</h2><p>
</p><p>
இந்தத் தொகை தற்போது அரசாங்கத்திற்கு வர வேண்டிய தொகையாக இல்லாமல் போயுள்ளதால், அது தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/225b3f1a-f899-4bc8-95d8-a4d5cd0748a3/26-6a8c02912c698.webp' /></p><p>
</p><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரஜையான ஆர்.பி.ஜே. சுரங்கா கோரிய தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்தபோதே ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
</p><p>
குறித்த தகவல்கள் தனிப்பட்ட தகவல்கள் என்றும், அவற்றை வெளியிடுவதில் பொதுநலன் இல்லை என்றும், மேலும் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 100 மற்றும் 191ஆவது பிரிவுகள் இத்தகவல்களை வெளியிடுவதைத் தடுக்கின்றன என்றும் IRD தனது மறுப்புக்கான காரணமாக தெரிவித்திருந்தது.
</p><p>
எனினும், இந்த நிலைப்பாட்டை ஏற்க மறுத்த RTIC, இங்கிலாந்தின் வரிச் சட்டங்களையும் அந்நாட்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளது.</p><p></p><h2>முழுமையான தடையாக அமையாது</h2><p>
</p><p>
வரலாற்று ரீதியாக நிலவி வரும் வரி ரகசியம் என்ற கட்டுப்பாடு, தகவல்களை வெளியிடுவதற்கு முழுமையான தடையாக அமையாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7ca7fd-4b2b-4a93-8e9a-eb175045b104/26-6a8c0291d4bd9.webp' /></p><p>
</p><p>
இங்கிலாந்தின் HMRC நிறுவனத்திலும் வரி தொடர்பான தகவல்களின் இரகசியத்தன்மை அடிப்படைக் கொள்கையாக இருந்தபோதிலும், திட்டமிட்டு வரி செலுத்தத் தவறும் நபர்களின் பெயர்களை வெளியிடுவது பொருளாதார நலனை வலுப்படுத்துவதற்கு அவசியமானது எனக் கருதப்பட்டுள்ளதாக RTIC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இலங்கையிலும் வரி நிர்வாகத்தின் ஆரம்பக் கொள்கை இரகசியத்தன்மையாக இருந்தாலும், இரகசியத்தன்மை மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என ஆணைக்குழு தீர்மானிதுள்ளது.
</p><p>
குறிப்பாக, பொதுமக்களின் நிதியைப் பாதிக்கும் வரி பாக்கியாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதில் பொதுநலன் காணப்படுவதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(4) பிரிவின் கீழ் பொதுநலன் அடிப்படையில் தகவல் வெளியிடப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
“விகிதாசாரச் சோதனை பயன்படுத்தப்பட வேண்டும். தகவல்களை வெளியிட மறுப்பதற்கு IRD பொதுவான இரகசியத்தன்மையை அல்ல, குறிப்பிட்ட பாதிப்பை நிரூபிக்க வேண்டும்” என RTIC வலியுறுத்தியது.
</p><p>
மேலும், இங்கிலாந்தின் HMRC நடைமுறையில் திட்டமிட்டு குறைவாக வரி செலுத்தியதாக கண்டறியப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விபரங்களை வெளியிடும் ‘Name and Shame’ நடைமுறை அமுலில் இருப்பதையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது .</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T08:38:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-army-continues-in-the-tamil-homeland-1787536049"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-army-continues-in-the-tamil-homeland-1787536049</id>
            <summary type="text">ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார்.
</p><p>
யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இடம்பெறும்
போராட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து அபகரித்துவரும்
நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும்
நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>தொடர்ச்சியான அச்சுறுத்தல்</h2><p>
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும்
இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப்
காவல்துறை நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும்
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de6a456-b8af-40aa-a81a-65581568d941/26-6a8bf44938d18.webp' /></p><p>

மக்கள் சுதந்திரமாகப் போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக் கூட அனுமதி
மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 36 வருடங்களாகத் சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும்
வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களைச்
சந்தித்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>சிங்களக் குடியேற்றங்கள்</h2><p>
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில்
சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d62651e-282d-47b8-889b-51600ce4d3ba/26-6a8bf44a06ac9.webp' /></p><p>இது தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும்
முழுமையான முயற்சியாகும்.</p><p>

இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாகத் தெரிவித்தாலும்,
களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.
</p><p>
எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாகத்
தலையிட வேண்டும்.

தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான்
மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம்
தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:35:52+00:00</updated>
        </entry>
    </feed>
