<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-30T13:17:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/is-the-government-suppressing-the-protest-1788094534"></link>
            <id>https://ibctamil.com/article/is-the-government-suppressing-the-protest-1788094534</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே, தமது பிள்ளைகளையும் உறவுகளையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் நீதிகேட்டு நிற்கிறார்கள். </p><p>அவர்களைப் காவல்துறையினர் இழுத்துச் சென்று வெளியேற்றுகின்றனர். </p><p>உள்ளே இருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வெளியே நடைபெறும் அந்தப் போராட்டத்தைத் தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
</p><p>
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையைவிட, இந்தக் காட்சி வேறு எதையும் இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியாது.</p><p></p><h2>நீதிக்காக நின்ற தாய்மார்கள்</h2><p>ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அரசு நிகழ்வு நடத்துகிறது. மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அதே அரச நிறுவனத்தின் முன்பாக நீதிகேட்டு நிற்பதற்கே இடமளிக்கப்படவில்லை. அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்குள் அழைக்கப்படுபவர்கள் ஒருவகை பிரதிநிதிகளாக இருக்கின்றனர். </p><p>வெளியேற்றப்படும் தாய்மார்கள் இன்னொரு உண்மையின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். அந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளியே இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையின் அரசியல் உண்மையாகும்.</p><p>

மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் நிகழ்வில் பங்கேற்பதற்காக பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>நிவாரணம் வழங்குவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான உதவியாக இருக்கலாம். ஆனால் நிவாரணத்தை நீதிக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. காணாமல் போன ஒருவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் பணம், அந்த நபருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலாகாது.</p><h2>தாய்மார்கள் வீதியில் நிற்பது ஏன்?
</h2><p>
இதனால்தான் பல ஆண்டுகளாகத் தாய்மார்கள் வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்திடம் பணம் கேட்டு நிற்கவில்லை. தங்களது உறவினர்களின் பெயரில் இன்னொரு ஆவணம் கேட்டு நிற்கவில்லை. </p><p>தங்கள் பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள், யாருடைய பொறுப்பில் அவர்கள் காணாமல் போனார்கள், அவர்கள் உயிருடன் உள்ளார்களா, இல்லையா என்பதற்கான உண்மையைத் தேடுகின்றனர். அந்த உண்மைக்குப் பின்னால் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்பதையே கோருகின்றனர்.&nbsp;</p><p>இந்தக் கோரிக்கையைப் புரிந்துகொள்ளாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை நிவாரணத் திட்டமாகச் சுருக்குவது, பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினையை நிர்வாக நடவடிக்கையாகக் குறைத்துவிடுவதாகும்.
</p><p>
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடந்த சம்பவம் இதனால்தான் முக்கியம் பெறுகிறது. </p><p>நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையின் இடைவெளி இன்னமும் நிரம்பவில்லை என்பதை அது வெளிப்படுத்துகிறது. அத்துடன் நீதிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்தை வெளியிலிருந்து கண்காணிக்கும் அரசியல் அணுகுமுறையும் எதன் வெளிப்பாடாகிறது?</p><h2>கண்டனத்துக்குள்ளான அரசாங்கம்</h2><p>இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், நடராஜர் காண்டீபன் உள்ளிட்டோர் தாய்மார்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>குறிப்பாக, கடந்த கால மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;ஆகஸ்ட் 30 ஏன் முக்கியமானது?
</h2><p>
ஆகஸ்ட் 30ஆம் நாள் உருவான வரலாறும் இதே கேள்வியையே முன்னிறுத்துகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பல நாடுகளில் அரசியல் அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பின்னணியில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2010 டிசம்பர் 21ஆம் நாள் 65/209 தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 30ஆம் நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளாக அறிவித்தது. 2011ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
</p><p>&nbsp;இந்த நாளின் நோக்கம் காணாமல் போனவர்களை நினைவுகூர்வது மட்டுமல்ல.</p><p> காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் இதன் அடிப்படை நோக்கங்களாகும்.
</p><p>
இலங்கையில் இந்த நாளின் முக்கியத்துவம் அதனால் இன்னும் அதிகமாகிறது. யுத்தத்தின் இறுதிக்காலம் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து குடும்பங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் உள்ளன. தலைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் பல குடும்பங்களில் காத்திருப்பு முடியவில்லை.</p><p>இந்த நீண்டகாலக் காத்திருப்புக்கு இலங்கை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி பதிலளிக்க முயன்றுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டது. சட்டங்களும் இயற்றப்பட்டன. </p><p>சர்வதேச உடன்படிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு நிறுவனம் இருப்பது மட்டும் ஒரு குடும்பத்துக்கு நீதி கிடைத்ததற்கான அடையாளமாகாது. விசாரணையின் முடிவு என்ன? உண்மை என்ன? பொறுப்பானவர்கள் யார்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பவையே முக்கியமான கேள்விகள்.</p><h2>சர்வதேச விசாரணை ஏன்?
</h2><p>
இந்தக் கேள்விகளுக்கு நீண்டகாலமாகத் தெளிவான பதில் இல்லாததே உள்ளகப் பொறிமுறைகள் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

அதனால்தான் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை தொடர்ந்து எழுகிறது. </p><p>இது இலங்கையைத் தண்டிப்பதற்கான கோரிக்கையாக அல்ல; இலங்கையால் இதுவரை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைக்கு சுயாதீனமான விசாரணை தேவை என்பதற்கான கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். </p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை, அதற்கான சூழ்நிலைகள், பொறுப்புடையவர்கள், கட்டளைப் பொறுப்பு, ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு ஆகியவை சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறையால் ஆராயப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 30 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த முரண்பாடு இந்தக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.</p><p> காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நிகழ்வு நடத்தும் அரசாங்கமே, அவர்களுக்காக நீதிகேட்டு நிற்கும் தாய்மார்களை வெளியேற்றும் நிலையில் இருக்குமானால், அந்த அரசாங்கத்திடம் மட்டும் நீதியை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.</p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அரசின் அனுதாபத்தை மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு அரசின் அறிக்கைகளும் மாத்திரம் தேவையில்லை. அவர்களுக்கு முடிவு தேவை. உண்மை எங்கே இருக்கிறது என்பதற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கும் பதில் வேண்டும். </p><p>அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விசாரணை தேவை. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதற்கான நீதியும் தேவை. ஆகஸ்ட் 30 இந்தக் கேள்விகளை மீண்டும் உலகத்தின் முன் கொண்டுவருகிறது.</p><p> யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்ட தாய்மார்கள், இந்தக் கேள்விகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர்.</p><p>

அவர்களின் போராட்டத்தை வெளியேற்றலாம். அவர்களின் குரலைத் தடுக்கலாம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை அதனால் மறைத்துவிட முடியாது. </p><p>இலங்கை அரசு நினைவு நிகழ்வுகளை நடத்துவதைக் காட்டிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த நாளுக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதையாகும்.</p><p> அந்தப் பதில் உள்நாட்டில் கிடைக்காதவரை, சர்வதேச விசாரணை மூலம் நீதியைத் தேடுவது பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான உரிமையாகவே தொடரும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-30T13:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் இடம்பெற்ற 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574"></link>
            <id>https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற&amp;nbsp; குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “&amp;nbsp;1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற&nbsp; குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “&nbsp;1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன்று&nbsp;தட்சனாமருதமடு&nbsp;ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.</p><p>இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>நினைவேந்தல் கால்பந்தாட்ட நிகழ்வு</h2><p>
</p><p>இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில் கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad5629a-c173-4700-93d4-d9fe21031a1a/26-6a9427571e5fe.webp' /></p><p>இந்த கால்பந்தாட்டப் போட்டி இன்று (30.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.</p><p>இதன்படி போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T12:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evidence-for-the-final-war-allegations-1788092813"></link>
            <id>https://ibctamil.com/article/evidence-for-the-final-war-allegations-1788092813</id>
            <summary type="text">சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழில் இன்று இடம்பெற்ற நீதிக்கான நீள் பயணம் மாநாட்டில் கலந்துக்கொண்டு மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து மேலும் பின்வருமாறு கருத்த வெளியிட்டார்.</p><p>

“இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில ஆராய்ந்த மார்சுகி தருஸ்மன்,&nbsp;யாஸ்மின் சூக்கா,&nbsp;ஸ்டீவன் ராட்னர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ”இங்கு நடந்தது மிகப்பெரிய மனித பேரவலம். இங்கு எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டினர்.</p><p>(2010–2011 காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த ஐ.நா. நிபுணர் குழு. அது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவாகும்)</p><p></p><h2>சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்</h2><p>
</p><p>
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை, 2010 அம் ஆண்டு இலங்கையில் வைத்து இவை அனைத்துக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7202a7e-07f5-42e4-a9f9-a5084f8ff9ea/26-6a94218e81c84.webp' /></p><p>
</p><p>
 நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடே எமது தாய்மார்கள் இன்று வரை போராடுகின்றனர்.

இருந்தும் நீதிக்கான இடத்திற்கு எம்மால் இதுவரை போக முடியவில்லை.
</p><p>
இறுதி யுத்தம் நடைபெறும்போது எமது மக்கள் ஐ.நா அலுவலகம் முன்னால் இருந்து கைகூப்பி இங்கிருந்து செல்ல வேண்டாம் என அழுதார்கள்.
</p><p>
ஆனால் அவர்களை நாட்டில் இருப்பதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விடவில்லை. 

அன்று தமது உறவுகளை சர்வதேச சமூகம் கைவிட்டதன் காரணத்தினால் பலரை இழந்துள்ளோம்.
</p><p>
இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்தவரே அன்று ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அவர்கள் எங்கள் இழப்புக்களை நய்யாண்டி போக்கில் கையாண்டனர்.
</p><p>
அதுவே இன்று, எந்த ஒரு உள்ளக விசாரணை அலுவலகங்களையம் வேண்டாம் என்றும் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்” என கூறினார்.&nbsp; &nbsp;</p><p><b>சிறீதரன் உரை - 01.30.00</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T12:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703"></link>
            <id>https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.
</p><p>
“அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… துப்பாக்கிகளுடன் வந்தவர்கள்
அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு என் பிள்ளைகளை நான் பார்க்கவே இல்லை…”</p><h2>தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை</h2><p>20 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால் அந்தத் தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை.

தனது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி, “என் பிள்ளைகள்
எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் இன்றும் பதிலைத் தேடி
வருகிறார் அந்தத் தாய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7328a4c0-867c-498e-b6d1-631afe18b277/26-6a94214d72b7a.webp' /></p><p>
</p><p>
தனது பிள்ளைகளை EPDP மற்றும் இராணுவத்தினரே அழைத்துச் சென்றதாக அவர்
குற்றஞ்சாட்டுகிறார். எனினும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில்
இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>எண்ணற்ற குடும்பங்களின் வலி</h2><p>ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தாயின் நம்பிக்கை மட்டும் மங்கவில்லை.
ஒருநாள் தனது பிள்ளைகள் பற்றிய உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்
தொடர்ந்து காத்திருக்கிறார்.</p><p>
</p><p>
அவரது கைகளில் இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் புகைப்படங்கள், ஒரு
குடும்பத்தின் நினைவுகள் மட்டுமல்ல; பதில் கிடைக்காமல் காத்திருக்கும் எண்ணற்ற
குடும்பங்களின் வலியையும் பிரதிபலிக்கின்றன.
</p><p>
“உண்மை வெளிவரும் வரை எங்கள் தேடல் நிற்காது…”

இது ஒரு தாயின் குரல் மட்டுமல்ல.
பல ஆண்டுகளாக பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களின் மௌனக்
குரலும் கூட.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-government-protects-criminals-1788089094"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-government-protects-criminals-1788089094</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார். </p><p>

யாழில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பேடார் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p> 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p></p><h2>வேலன் சுவாமிகள்</h2><p>'வலிந்து காணாமலாக்கப்படுவது என்பது மிகவும் வேதனையான துன்பியலான விடயம் ஒரு மனிதனுடைய வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. அந்த மனிதனுக்கு நிகழ்த்தப்படவிருந்த சித்திரவதைகளிலிருந்து யார் சித்திரவதை செய்கிறார்களோ அவர்கள் காப்பாற்றப்படுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156d6de4-152c-48c5-b41e-be12e7371afc/26-6a9416039b79b.webp' /></p><p> </p><p>&nbsp;உறவை பிரிந்து அந்த உறவிற்கு என்ன நமந்தது அவர்கள் உயிரோட இருக்கின்றாரா இல்லையா என்கின்ற அந்த வேதனையோடு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தவிக்கின்ற தவிப்பு வேதனை என்பது ஒரு ஆன்மீக பிரதிநிதியாக மிகவும் ஆழமான வலியை கொண்டிருக்க்கூடியது. </p><p>எம்முடைய தாயகத்தித்தில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் நீண்ட பயணமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.</p><p> உலகத்திலேயே வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய இரண்டாவது அதிகமான தொகையை இலங்கை நாடு கொண்டிருக்கிறது. </p><p>2009 ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தயகத்திலே எங்களுடைய தாய்மார்கள் வீதிகளிலே தொடர்ந்து போராடுவதும் சிறிலங்கா அரசினுடைய அராஜகமான கட்டமைப்புக்கள் சிறிலங்கா காவல்துறையினராக இருக்கட்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு துறையினராக இருக்கட்டும் அவர்களுடைய அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் ஏற்கனவே உறவகளை பிரிந்தவர்களின் துன்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.</p><p><b>வேலன் சுவாமிகள் உரை 03.27</b>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-30T11:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச சபையின் அனுமதியின்றி யாழில் அடாத்தாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buddhist-center-established-illegally-in-jaffna-1788088947"></link>
            <id>https://ibctamil.com/article/buddhist-center-established-illegally-in-jaffna-1788088947</id>
            <summary type="text">வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
</p><p>
சுமார் 4 பரப்பு விஸ்தீரணம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு
வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள்
இடம்பெற்றது.</p><h2>அனுமதியின்றி கட்டப்படும் கட்டடம்</h2><p>&nbsp;அக் காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை
நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள்
நிறுத்தப்பட்டிருந்தது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10a17355-bdb6-488a-a21e-be7fc67ae0f1/26-6a941627610ec.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம் வெளியார்
பார்க்காத வகையில் உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு மீண்டும் கட்டுமான
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .</p><p></p><p>

</p><h2>வடக்கு ஆளுநருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>சாதாரண மக்களின் கட்டுமானங்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் போது அதனை
நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள் குறித்த தியான மண்டபம் உரிய
அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்பட்டுவருவதை கண்டும் காணாமல் இருக்கிறதா என்ற
கேள்வியும் எழுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67534eb1-b5eb-4763-a06a-aea61e7e532d/26-6a9416282dfb9.webp' /></p><p>

உள்ளூர் ஆட்சி மன்ற அதிகாரங்களை
சவாலுக்கு உட்படுத்தும் வகையில் குறித்த பௌத்த கட்டுமானம் அமைக்கப்பட்டு
வருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
</p><p>



உள்ளூர் ஆட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு கட்டுமானம் தொடர்பில் உரிய
நடைமுறைகளை பின்பற்றி அனுமதிக்கு சமர்ப்பிக்காமல் கட்டுமானம் தொடருமானால்
நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் அதிகாலைவேளை துப்பாக்கிசூடு : ஒருவர் பலி ஐவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-at-event-in-switzerland-1788087798"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-at-event-in-switzerland-1788087798</id>
            <summary type="text">இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுவிட்சர்லாந்தின் ஆராவு நகரில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுவிட்சர்லாந்தின் ஆராவு நகரில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஆராவு மாகாண காவல்துறை, X-இல் தெரிவித்துள்ளது.</p><h2>பெரிய அளவிலான தேடுதல் வேட்டை</h2><p>&nbsp;காவல்துறை ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதுடன், இதற்குப் பொறுப்பான நபர் அல்லது நபர்களைத் தேடி வருகிறது.

"சம்பவத்தின் சாத்தியமான நோக்கங்களும், அதன் சரியான சூழ்நிலைகளும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை," என்று காவல்துறை கூறியதுடன், சாத்தியமான சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களையும் வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099450be-d627-43bd-af7a-04681867e9ba/26-6a94115873cfe.webp' /></p><p>
</p><p>
சுவிஸ் செய்தித்தாளான 'பிளிக்' வெளியிட்ட மற்றும் சம்பவ இடத்திற்கு அருகில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியில், சுமார் 10 துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியிருப்பது தெரிகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வெளியான அறிவிப்பு</h2><p>
</p><p>
தேடுதல் வேட்டை தொடர்வதால், பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b1ed2-5443-4edb-8374-ec3b7a6d0e09/26-6a94115932759.webp' /></p><p>
</p><p>
சுவிஸ் அவசரகால செய்தி நிறுவனமான BRK நியூஸின்படி, சுவிஸ் இராணுவத்தின் சூப்பர் பூமா உலங்குவானூர்தி ஒன்றும் ஆராவுவின் பரந்த பகுதிக்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
</p><p>
ஆராவு, சூரிச்சிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) மேற்கே அமைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171"></link>
            <id>https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
 வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறினார்.</p><p>


 இலங்கையில் காணாமலாக்கப்பட்டடோருக்கான விவகாரத்தில் பல்வேறு ஆணைக்குழுக்களும் நிறுவனங்களும் உறுவாக்கப்பட்ட போதிலும் எமது உறவுகளின் அடிப்படை கோரிக்கை இதுவரையில் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நம்பிக்கை இழந்த மக்கள்</h2><p>
</p><p>
ஒரு நிறுவனத்தின் சுயாதீனம் செய்தித்திறன் மீதே மக்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அந்த நம்பிக்கையை உறுவாக்குவதற்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பு மிக அவசியம் எனவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9757fe7f-cfe0-4e9f-958a-ce3f2b92443e/26-6a940f6cca1c4.webp' /></p><p>இதன் பொருள் இலங்கைக்கு எதிரான பாதுகாப்பு மிக்க சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே ஆகும் எனவும் கூறியுள்ளார்.</p><p></p><p><b>00.11.00 - கனகரஞ்சனி யோகராசா உரை</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T11:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788086495"></link>
            <id>https://ibctamil.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788086495</id>
            <summary type="text">&amp;nbsp;நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். </p><p>இவ்வாறு கணவனின் தாக்குதலில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சித்ராதேவி என்ற மனைவியாவார்.</p><h2>குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு</h2><p>
</p><p>





குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தான் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி இந்த காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகநபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57809b54-a5de-4fce-8ff6-c0636722f430/26-6a940b420c6a4.webp' /></p><p> </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை பிரதேசவாசிகள் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><p>

</p><h2>நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்&nbsp;பிரேத பரிசோதனை</h2><p>உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரான கணவன் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e6cb0b-43ee-40b7-827e-5c1910074f65/26-6a940b42c0d44.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-the-victims-of-enforce-1788084756"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-the-victims-of-enforce-1788084756</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள் மற்றும் சம்பவங்களுடன் தொடர்புடைய வரலாற்று ஆவணங்கள் என்பன இன்றைய போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன.&nbsp;</p><p>குறித்த வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு - கிழக்கு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இன்று (30.08.2026)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p></p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்</h2><p>இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 

மாநாட்டு அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9419dcbf-574a-4b9d-b9a0-20c0bb566396/26-6a94070a88eca.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.&nbsp;</p><p>இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள்,
மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்,
மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி, உண்மை மற்றும்
பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த சர்வதேச மாநாடு முக்கியத்துவம்
பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிக்கு உரித்துடையவர்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-relatives-of-the-victims-of-enforced-1788086586"></link>
            <id>https://ibctamil.com/article/the-relatives-of-the-victims-of-enforced-1788086586</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார்.</p><p>


வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>

மேலும், அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது எனவும் கூறினார்.
</p><p>

இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வதற்கான வாய்ப்பும், கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><b>ஸ்மிரிதி சிங் உரை - 01.07.00</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது! யாழில் ஐ. நா பணிக்குழு உறுப்பினர் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/comment-from-a-member-united-nations-working-group-1788085959"></link>
            <id>https://ibctamil.com/article/comment-from-a-member-united-nations-working-group-1788085959</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><h2>மீள்நிகழாமைக்கான பயணம்</h2><p>
</p><p>“உண்மை, நீதி, மீள்நிகழாமைக்கான பயணத்தில் பெரும் எண்ணிக்கையான தாய்மார் பதிலை அறியாமலேயே உயிரிழந்துவிட்டனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04358945-9bb0-418b-89d6-ed20105ad234/26-6a940722b5270.webp' /></p><p>இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.


அச்செயன்முறைக்கு அவசியமான தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T10:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச உத்தியோகத்தரின் வீடு மீது தாக்குதல் : தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788084932"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788084932</id>
            <summary type="text">நெல்லியடியில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு ,
அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லியடியில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு ,
அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள்
சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு
காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின்
மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தி , வீட்டு வளாகத்தில்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களையும் குறித்த உள்ளூராட்சி
உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது.</p><p>

</p><h2>அரசியல் அழுத்தம் காரணம்…!</h2><p>இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக
அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி
பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர்
காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3223e8a1-633c-4334-98f5-0d796f121a78/26-6a9402c647e81.webp' /></p><p>

குறித்த நபரை காவல்துறை பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், காவல்துறை உயர்
அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T10:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;நீதிக்கான நீள்பயணம்&quot;யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735"></link>
            <id>https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ஆரம்பமாகியுள்ளது.</p><p>

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
</p><p>
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச ராஜதந்திரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மதத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மனிதத் தலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/human-head-was-found-in-moratumulla-1788079176"></link>
            <id>https://ibctamil.com/article/human-head-was-found-in-moratumulla-1788079176</id>
            <summary type="text">கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக&amp;nbsp; 119 என்ற அவசர இலக்கத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக&nbsp; 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, மொரட்டுமுல்ல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
இன்று (30.08.2026) காலை சுமார் 8 மணியளவில் மரவேலைப் பட்டறையின் உரிமையாளர் ஒருவர் குறித்த மனித தலையை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.</p><p></p><h2>உடலற்ற மனிதத்தலை</h2><p> தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மரவேலைப் பட்டறையின் பின்புறம், ஆற்றங்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22577d2-a4f5-4008-8efd-836ce0f8b91a/26-6a93f38c8e890.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மொரட்டுமுல்ல காவல்துறையினர், காவல் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>மேலும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணியான திருமதி சந்தமாலி வருகை தந்து, சம்பவ இட ஆய்வு ஒன்றை நடத்தினார்.</p><p>ஆய்வின்படி மீட்கப்பட்ட மனித தலை மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அதனை விலங்குகள் தின்று சேதப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வுகளை புறம் தள்ளும் இலங்கை அரசு! வெளியாகிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-report-the-association-of-the-disappeared-1788085219"></link>
            <id>https://ibctamil.com/article/special-report-the-association-of-the-disappeared-1788085219</id>
            <summary type="text">டிசம்பர் 2010 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானம் 65/209 இன் கீழ் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று உலகளாவிய சமூகத்தால் அனுசரிக்கப்படவிருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிசம்பர் 2010 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானம் 65/209 இன் கீழ் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று உலகளாவிய சமூகத்தால் அனுசரிக்கப்படவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தை நோக்கி உலகம் நகரும் வேளையில், ஈழத்தமிழ் மக்கள் இன்னும் நீதி கிடைக்காமல் தொடர்ந்தும் போராடி வருகின்றோம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 
2009 இல் போர் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதில் எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில், அதில் மேலும் சில விடயங்களை பின்வருமாறு மையப்படுத்தியுள்ளது,&nbsp;</p><p>“பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் உள்ளதோடு, அவர்கள் இலங்கை அரசுப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. </p><p>இப்பகுதி முழுவதும் பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசு எவ்வித குறிப்பிடத்தக்க அல்லது நம்பகமான விசாரணைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதுடன், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளும் பயனற்றதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
</p><p>யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வுப் பணி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. </p><p>இன்றுவரை, கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட நபர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் கொடூரமான மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T08:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293"></link>
            <id>https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293</id>
            <summary type="text">துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
ராகம, படுவத்த - வல்பொல வீதியின் வீரரத்ன மாவத்தையில் மரமொன்றின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த துப்பாக்கி, T-56 ரக தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை செலுத்தக்கூடிய வகையில் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு</h2><p>

</p><p>விசாரணைகளில் மேலும் தெரியவருகையில், பாதாள உலகக் குழு உறுப்பினரின் உத்தரவின் பேரில் ஒருவரை கொலை செய்வதற்காக அவரது தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் வருகை தரும் வரை, குறித்த துப்பாக்கி மரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e08f564-22e3-4013-b837-81296cc68594/26-6a93dbaf0736a.webp' /></p><p>மேலும் துப்பாக்கிதாரி வருகை தந்து ஆயுதத்தை எடுத்துச் செல்லவிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக உயர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்&nbsp; மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் முடிவை மாற்றிய நேபாள அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803</id>
            <summary type="text">சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முடிவை மாற்றி உள்ளது.&nbsp;</p><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26.08.2026) ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>லடாக் பகுதியில் இமயமலைத் தொடரில் பனிப்பாறை ஒன்று சரிந்து நதியின் பாதையை அடைத்ததன் பின்னர், நீர்த்தேக்கம் உடைந்து பெருமளவான நீர் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்து நேபாளத்துக்குள் நுழைந்தமையே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முடிவை மாற்றிய நேபாள அரசு</h2><p>
ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b939300-8a8d-4e6a-8560-c10c236a3255/26-6a93e37eb7ff6.webp' /></p><p> </p><p>பெருமளவான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, ஆரம்பத்தில் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாள அரசு, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.</p><p> இதன்படி, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா ஏற்கனவே பெருமளவான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. </p><p>மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF-இன் பயிற்சி பெற்ற குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:03:40+00:00</updated>
        </entry>
    </feed>
