<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-15T05:08:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/powerful-earthquake-off-coast-of-indonesia-2-dead-1786766441"></link>
            <id>https://ibctamil.com/article/powerful-earthquake-off-coast-of-indonesia-2-dead-1786766441</id>
            <summary type="text">கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15.08.2026) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து டஜன் கணக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15.08.2026) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) தெரிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கத்தையடுத்து இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீற்றருக்கும் குறைவான உயரம் கொண்ட சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>இருவர் பலி</h2><p>
</p><p>
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர், அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8792b702-a7f8-47ca-a0c1-7c62b6e8a145/26-6a7febe6b67b7.webp' /></p><p>எனினும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>BNPB வெளியிட்ட அறிக்கையின்படி, நிலநடுக்கத்தால் சிக்கா (Sikka) ரீஜென்சி பகுதியில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>
இந்தோனேசியாவின் புவி இயற்பியல் முகமையான BMKG வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. </p><p>இது கடலுக்கு அடியில் சுமார் 15 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-for-all-drivers-from-police-1786766189"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-for-all-drivers-from-police-1786766189</id>
            <summary type="text">பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு&nbsp;உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள்</h2><p>

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6554e362-c7e2-4233-8843-e92bd700a932/26-6a7fecf353332.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் 80வது சுதந்திர தினம் : தேசியக் கொடியேற்றிய முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-minister-vijay-hoisting-national-flag-today-1786762132"></link>
            <id>https://ibctamil.com/article/chief-minister-vijay-hoisting-national-flag-today-1786762132</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றினா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.</p><p>

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால், அவர் இன்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9933268b-3947-46e7-b702-cf4dbc4c6027/26-6a7fea86bb62a.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று (15) அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.</p><p>சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளார்.
</p><p>
அவர் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p> </p><p>இதேவேளை தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d5fd85-5940-4f5a-b946-07c0e82b5f8c/26-6a7fd628320be.webp' /></p><p> 

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>வளர்ச்சியடைந்த இந்தியா</h2><p>தனது உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய பிரதமர் உரையாற்றினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa45227-dcbb-47a7-bad7-392c3e4b5d1c/26-6a7fd628dc842.webp' /></p><p>ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக துணிச்சலுடன் போராடி, தியாகம் செய்து, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.</p><p> 

அவர்கள் கண்ட கனவுகள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.</p><p>140 கோடி இந்தியர்களின் சக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியா புதிய உச்சங்களை நோக்கி முன்னேறி வருகிறது. வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து முன்னேறட்டும்"என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி : விசாரணையில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-textbooks-worth-rs-8lakh-exported-to-india-1786762927"></link>
            <id>https://ibctamil.com/article/missing-textbooks-worth-rs-8lakh-exported-to-india-1786762927</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் மாயமான சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையில் குறித்த புத்தகங்கள் விநியோக மையங்களுக்குச் சென்றடையாமல் பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்கப்பட்ட சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த புத்தகங்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்காக பியகம, சியம்பலாபே, சம்ருத்தி மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் வேறொரு நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p>பியகம பகுதியில் வைத்து புத்தகங்களை விநியோகத்திற்காகப் பொறுப்பேற்ற பாரவூர்தி சாரதி ஒருவர், அவற்றை விநியோகிக்காமல் தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.</p><p>பின்னர் குறித்த புத்தகங்களை பழைய பேப்பர் சேகரிப்பாளரிடம் 1,600 கிலோகிராம் எடைக்கு 47,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3941f73e-2e7f-40e3-98d8-81174f909cc5/26-6a7fe119ddbf8.webp' /></p><p>
அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்கள் பேலியகொட பகுதியில் உள்ள காகிதங்களை அரைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அரைக்கப்பட்ட பின்னர் சில நாட்களில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, 31 வயதுடைய சந்தேகநபரான பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட பாரவூர்தி சாரதி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்து.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-and-dangerous-heatwave-alert-in-tamil-1786763197"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-and-dangerous-heatwave-alert-in-tamil-1786763197</id>
            <summary type="text">நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a39585-4d21-4c75-802a-5cd264bf7997/26-6a7fd8b9e6016.webp' /></p><p>தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.</p><p>இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா போரின் முக்கிய தாக்குதல் காட்சிகள் - ஷிரான் பாசிக் CCIB யிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914</id>
            <summary type="text"> புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p> 

 கடந்த மே மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச காவல்துறையினரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76dcb751-4b5b-4e93-82a4-5bf96e009a7f/26-6a7fc03f8c963.webp' /></p><p>கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>

அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரும் அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T02:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இலங்கை தொடர்பில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-declares-tsunami-warning-7-7-earthquake-1786757510"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-declares-tsunami-warning-7-7-earthquake-1786757510</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மத்திய தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15.08.2026)&nbsp; அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில நடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p> </p><p>

இதனையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5aab993-047a-4ddc-ba26-87e18fdd2e7a/26-6a7fc6e7c2a4f.webp' /></p><p>சுனாமி எச்சரிக்கை அறிவிப்பின் மூலம், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

இலங்கைக்கு நிலநடுக்க ஆபத்தில்லை 

இதற்கிடையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கைக்கு ஆபத்து இல்லை&nbsp;&nbsp;</h2><p> </p><p>

அதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c88303-60c3-4b8b-a955-250c7874da8f/26-6a7fc6e879352.webp' /></p><p>அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T02:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-beaten-to-death-1786754043"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-beaten-to-death-1786754043</id>
            <summary type="text">பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25 ஆம் திகதி இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25 ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவம் குருநாகல் - வெல்லவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்</h2><p> </p><p>

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த அதிகாரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த (13) உயிரிழந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e6e0b7-d74d-4c74-881a-5cf2ba07bb32/26-6a7fb597e0c00.webp' /></p><p>உயிரிழந்தவர் வெல்லவ காவல் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>

சம்பவம் தொடர்பில்&nbsp;காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T00:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786753648"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786753648</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேற்படி பகுதிகளில் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.





</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7657da-2b73-4c71-9f1c-3eb4cc36196d/26-6a7fb3cb83352.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T00:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் புத்துயிர் பெற்ற மைத்திரி மகிந்தவின் சதித்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracy-of-the-revived-maithri-mahinda-1786713234"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracy-of-the-revived-maithri-mahinda-1786713234</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் களத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட மைத்திரி - மகிந்த அரசியலமைப்பு நெருக்கடி மீண்டும் புத்துயிர் பெறுகிறதா என்ற கேள்வியை தற்போதைய சில அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் களத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட மைத்திரி - மகிந்த அரசியலமைப்பு நெருக்கடி மீண்டும் புத்துயிர் பெறுகிறதா என்ற கேள்வியை தற்போதைய சில அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எழுப்பியுள்ளன.
</p><p>
அண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரை பெயரிட்டு விமர்சனக் கருத்துகளை வெளியிட்டமை, இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
</p><p>
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து நாட்டில் கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி உருவானது.</p><p></p><h2>உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள்</h2><p>
</p><p>
அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e59546-7ea5-483f-ac8f-5a1d7d1923d1/26-6a7f16d34a0f7.webp' /></p><p> </p><p>உயர் நீதிமன்றம் இறுதியில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.
</p><p>
அந்த காலகட்டத்தில் நீதித்துறையின் தீர்ப்புகளுக்கு எதிராக அரசியல் தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p> குறிப்பாக அப்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதிபதிகள் அரசியல் ரீதியான தாக்குதல்களுக்கு இலக்கானதாக விமர்சனங்கள் எழுந்தன.</p><p>

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பெயர்களை முன்வைத்து அரசியல் கருத்துகள் வெளியிடப்படுவது, 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
2018 நெருக்கடியின் முக்கியமான அம்சம், நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. அந்த அதிகார மோதலின் இறுதி தீர்வு நீதித்துறையின் தலையீட்டின் ஊடாக இடம்பெற்றதும் முக்கியமானதாகும்.</p><p></p><h2>நீதித்துறையைச் சுற்றி அரசியல் சூழல்</h2><p>

இதனால், அன்றைய அரசியல் அதிகாரப் போட்டியில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு முக்கியமானதாக மாறியிருந்தது.

தற்போதும் உயர் நீதிமன்ற நீதியரசர்களை நேரடியாக பெயரிட்டு விமர்சிக்கும் அரசியல் கருத்துகள் வெளிவருவதால், “2018இல் நீதித்துறையைச் சுற்றி உருவான அரசியல் சூழல் மீண்டும் உருவாக்கப்படுகிறதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7855a9c2-9961-4a86-bf78-d29caca8d6bf/26-6a7f16d436c29.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போதைய நிகழ்வுகள் 2018ஆம் ஆண்டின் சம்பவங்களின் நேரடி தொடர்ச்சி அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சதித்திட்டம் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>எனவே, “மைத்திரி - மகிந்த சதித்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது” என்பது தற்போது ஒரு அரசியல் மதிப்பீடு மற்றும் குற்றச்சாட்டு என்றே பார்க்கப்பட வேண்டும்.</p><p>

ஒரு ஜனநாயக அரசில் நீதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கான உரிமை அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் உள்ளது. </p><p>ஆனால் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் அல்லது அரசியல் நோக்கத்துடன் இலக்காகக் கொள்வது, நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான கவலைகளை உருவாக்கக்கூடும்.</p><p>

2018 அரசியலமைப்பு நெருக்கடியின்போது உயர் நீதிமன்றம் நிறைவேற்று அதிகாரத்தின் வரம்புகளை தெளிவுபடுத்தியிருந்தது. அந்த வரலாற்றுப் பின்னணியிலேயே, இன்றைய நீதிபதிகள் மீதான அரசியல் விமர்சனங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
</p><p>
இதனால், மீண்டும் புத்துயிர் பெற்ற மைத்திரி - மகிந்த சதித்திட்டம்&nbsp; என்ற அரசியல் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நீதித்துறையை அரசியல் அழுத்தத்திற்குள் கொண்டு வர முயற்சி இடம்பெறுகிறதா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை கடுமையாக சாடிய சிறீதரன் எம்.பி...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223"></link>
            <id>https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அவருடைய
கருத்து அமைவது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.</p><p>

சிவஞானம் சிறீதரன் நேற்று (14-08-2026) 
நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.
</p><p>
பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டினுடைய நீதி&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம் ஆனால்,
குழுக்கள் தங்களுக்குள் மோதி யாரையும் கொண்டுவந்து தாட்டதாக நாங்கள் இதுவரை
அறியவில்லை.</p><p>

அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவது
நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a703b455-6836-4d15-a091-040f78fddd53/26-6a7f9571c3797.webp' /></p><p>

 நாட்டினுடைய நீதி அமைச்சர் மக்களை
திசைதிருப்பும் வகையிலே இவ்வாறான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது. </p><p>தமிழர்கள்
எதிர்பார்ப்பது போல இது நூற்றுக்கு 100 சதவீதம் உண்மையானது ஏனெனில், இங்கே
நடந்த பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>போராளிக் குழு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப்
பற்றி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
</p><p>
யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட
காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் காணாமல் போயும்,
கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8740d436-18e9-4f5e-b95b-3594620db306/26-6a7f957275266.webp' /></p><p>

இலங்கையினுடைய
கிரிசாந்தி கொலை வழக்கிலே சாட்சியாக இருக்கிற சோமரத்ன ராஜபக்ச
சொல்லியிருக்கிறார் இப்பொழுதும் சொல்லுகிறார்.
</p><p>
சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற
இடங்களைக் கிண்ட வேண்டும் அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும்.</p><p>அந்த உண்மைகளை
மறைப்பதற்கு எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு
அனாமதேய விடயங்கள் போலவோ அதற்கான ஒரு சோடனைக் கதைகளைச் சொல்ல அமைச்சர்
முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T00:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் அரச அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம்...! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-officers-call-sick-leave-protest-1786748865"></link>
            <id>https://ibctamil.com/article/northern-officers-call-sick-leave-protest-1786748865</id>
            <summary type="text">அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில்
ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>அரச அதிகாரிகள்</h2><p>யாழ் ஊடக அமையத்தில் நேற்று (14-08-2026) 
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00eff3db-6e97-470d-aa9d-537274286593/26-6a7f9fc3b92af.webp' /></p><p>வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T23:29:11+00:00</updated>
        </entry>
    </feed>
