<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T20:50:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-americans-killed-in-kenya-helicopter-crash-1787169123"></link>
            <id>https://ibctamil.com/article/4-americans-killed-in-kenya-helicopter-crash-1787169123</id>
            <summary type="text">கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில்&nbsp; 4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கென்ய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>உலங்கு வானூர்தி</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்தில் (Loisaba Conservancy) இருந்து எவாசோ நயிரோ (Ewaso Nyiro) பகுதிக்குச் சென்றபோது ஓலோலோக்வே மலையின் அடிவாரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b75706-bc7c-4085-bc24-32276cb90509/26-6a8609662b78f.webp' /></p><p>லேடி லோரி ஹெலிகாப்டர்ஸ் (Lady Lori Helicopters) நிறுவனத்திற்குச் சொந்தமான யூரோகாப்டர் EC130 B4 ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கென்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதுடன் தேவையான தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்துக்கான காரணம்</h2><p> உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74db0de1-077b-48ec-8a48-f097b9fda2ac/26-6a860966de281.webp' /></p><p> விபத்து நடந்த பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டதாக இருப்பதால், கென்ய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து கென்ய சிவில் விமானப் போக்குவரத்து வாரியம் (KCAA) தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T19:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pakistan-appeals-order-on-imran-khan-medical-care-1787166504"></link>
            <id>https://ibctamil.com/article/pakistan-appeals-order-on-imran-khan-medical-care-1787166504</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> பாகிஸ்தான் அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>சிறை நடைமுறைகள்</h2><p>ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4bf982-eb81-4236-944e-70fc613670f5/26-6a86009874202.webp' /></p><p>எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T19:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-hints-at-possible-talks-with-iran-1787165474"></link>
            <id>https://ibctamil.com/article/trump-hints-at-possible-talks-with-iran-1787165474</id>
            <summary type="text">வருங்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வருங்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்குகளுக்கு மத்தியில் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p>சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் கோரிக்கை</h2><p>
</p><p>மேலும் தெரிவித்த அவர், தற்போதைய சூழல் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e18873-dd8c-4033-80b7-82a56d76a65f/26-6a85fb245d697.webp' /></p><p>ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அமெரிக்காவின் கோரிக்கை மிகவும் எளிமையானது என்று கூறியுள்ள ட்ரம்ப், ஈரான் அணுஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதே அந்த முதன்மையான நிபந்தனை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானிடம் அணுஆயுதம் இருக்க முடியாது எனவும் அவர்களிடம் அணுஆயுதம் இருக்கவும் செய்யாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்கள்</h2><p>அத்தோடு அவர்களிடம் அணுஆயுதம் இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்பது தெரியும் எனவும் எனவே அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7435545a-f9e2-4f6a-a7f0-edc82a14d77e/26-6a85fb2510943.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அவ்வப்போது ஈரான் நடத்தும் ட்ரோன் தாக்குதல்கள் போன்ற சிறிய இடையூறுகளைத் தவிர, அந்த முக்கியமான கடல் வழிப் பாதை அமெரிக்காவின் முழு அதிகாரத்தின் கீழ் இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:57:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-pauses-50-tariff-on-canadian-goods-1787159919"></link>
            <id>https://ibctamil.com/article/trump-pauses-50-tariff-on-canadian-goods-1787159919</id>
            <summary type="text">கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கடுமையான வரியை 3 நாட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கடுமையான வரியை 3 நாட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.</p><p>

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் சுமார் 20 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>கணிசமான முன்னேற்றம்&nbsp;</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஆவணங்களை இறுதி செய்யும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில், நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் எண்ணெய் குழாய் திட்டம் (Keystone XL oil pipeline) மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321a31-ce9f-4e2e-b794-ea80ac70c1de/26-6a85f729768ce.webp' /></p><p>

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் சில முக்கியமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என கனடியப் பிரதமர் மார்க் காரணி தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், உள்நாட்டில் வலுவான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கனடா கவனம் செலுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198</id>
            <summary type="text">உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> 

ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு எதிராக இது உக்ரைனிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ரஷ்யாவின் பிணைக்கைதி</h2><p>இது தொடர்பில் மைக்கைலோ ஃபெடோரோவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீடித்த போருக்கு மத்தியிலும் உக்ரைன் தனது முழுமையான ஜனநாயகச் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ, பாதுகாப்பான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான வழியைக் கண்டறிய வேண்டும்.</p><p> 

உக்ரைனின் ஜனநாயகத்தை ரஷ்யாவின் பிணைக்கைதியாக மாற்ற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62dd317d-b15b-42b3-87c5-7cc5c4e54258/26-6a85e2b41c74c.webp' /></p><p>உக்ரைனில் 2022 இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இராணுவச் சட்டம் (Martial Law) நடைமுறையில் உள்ளது. </p><p>

உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது நாட்டில் ஜனாதிபதி, நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடியாது.</p><p></p><h2>பதவி காலம்</h2><p>

ஜெலென்ஸ்கியின் 5 ஆண்டு காலப் பதவி காலம் கடந்த 2024 மே மாதத்துடன் முடிவடைந்தது. </p><p>

இருப்பினும், புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடருவார் என உக்ரைன் அரசியலமைப்பின் 108 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4032cb77-3731-4045-bb41-031d44203af1/26-6a85e2b4dc8ce.webp' /></p><p>போர் தீவிரமாக இருக்கும் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதே ஜெலென்ஸ்கியின் உறுதியான நிலப்பாடாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அரசு நிர்வாகத்தில் நிலவும் பணமோசடி மற்றும் ஊழல் விசாரணைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் இரினா முத்ராவை (Iryna Mudra) ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை மற்றும் ராணுவப் பொறுப்புகளில் ஜெலென்ஸ்கி மேற்கொண்டு வரும் இந்த தொடர் மாற்றங்களும், அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளும் உக்ரைனிய உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missile-threat-uae-halts-all-trade-with-iran-1787157919"></link>
            <id>https://ibctamil.com/article/missile-threat-uae-halts-all-trade-with-iran-1787157919</id>
            <summary type="text">&amp;nbsp;ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.</p><p>இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தெரிவிக்கையில், பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குலைக்கும் வகையில் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஈரானுடனான அனைத்து வர்த்தகம், வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.</p><h2>கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல்</h2><p>&nbsp;ஐக்கிய அரபு எமிரேட்சில் கடைசியாக கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561d1a51-ddbf-4a0b-8419-432bbba9d21f/26-6a85e189a08ee.webp' /></p><h2>குற்றச்சாட்டை&nbsp; மறுத்த&nbsp;ஈரான்</h2><p>
</p><p>

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது.</p><p><br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ee06eb-55ff-427d-b90b-9839e31db4e4/26-6a85e18a5464b.webp' /></p><p>ஐக்கிய அரபு எமிரேட்சை நோக்கி எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் ஈரான் தெரிவித்தது.</p><p>

நல்ல அண்டை உறவுமுறை என்ற கொள்கையின்படி, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T17:03:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் : பொது வாக்கெடுப்பு நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தால், பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக உள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயதிஸ்ஸ, செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உச்ச நீதிமன்றதொடர அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><h2>பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் முற்றிலும் பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், மக்களின் சார்பாகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தப் பணிகளை அரசு தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8362df-7c5c-4548-8c9d-51cec2533af9/26-6a85d6ca6e979.webp' /></p><p>
</p><p>
"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டால், அதற்கேற்ப நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம். பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை அறியாமலேயே உங்கள் போனுக்குள் மொசாட்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mossad-is-in-your-phone-without-you-knowing-1787152495"></link>
            <id>https://ibctamil.com/article/mossad-is-in-your-phone-without-you-knowing-1787152495</id>
            <summary type="text">இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும் பணி இஸ்ரேலில் மட்டும்தான் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க வர்த்தக அமைச்சர்அவார்ட் லுட்னிக் ஒரு அவசர அறிவித்தலை விடுத்திருந்தார்.அப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற மெமரி சிப்ஸை ஐபோன்களில் பாவிக்கக் கூடாதென்று அவர் ஆலாசனை வழங்கியிருந்தார்.
</p><p>
அந்த இரண்டு நிறுவனங்களும் சீன இராணுவத்துடன் தொடர்புபட்டவை என்றும் அந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்க மக்கள் நாள்தோறும் தமது சட்டைப் பைகளில் கொண்டு திரிவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தென்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் கைபேசிகளில் பொருத்தப்படும் கமராக்கள் மூலம் அவற்றை பாவிப்பவருக்கு தெரியாமலேயே அதனை பொருத்திய நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தகவல்கள் சென்றடைவது கண்டு பிடிக்கப்பட்டமை தற்போது உலகை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>

இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T15:15:09+00:00</updated>
        </entry>
    </feed>
