<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T23:25:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408"></link>
            <id>https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு எச்-4 விசா வழங்கப்பட்டு வருகிறது.</p><p>
ஆரம்பத்தில் எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலமே, நிரந்தரக் குடியுரிமைக்கு (Green Card) விண்ணப்பித்துக் காத்திருக்கும் எச்-1பி பணியாளர்களின் துணைவர்கள் வேலை அனுமதிப் பத்திரம் (EAD) பெற்றுப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>சட்ட நடைமுறைகள்</h2><p>
இச்சலுகையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்; குறிப்பாக எச்-1பி பணியாளர்களின் மனைவிகளே அதிகளவில் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9a4e5b-98f8-4867-890c-c2231a7cb16b/26-6a9742a13332c.webp' /></p><p>
தற்போது இந்த வேலை அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கான முதற்கட்ட சட்ட நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளதுடன், இது தொடர்பான பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>
ஏற்கனவே ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017-ஆம் ஆண்டு இவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டு, பின்னர் 2021-ல் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T22:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு வருந்தத்தக்க பதிலடி! ஈரான் புரட்சிகர காவல் படையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-response-to-america-1788292543"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-response-to-america-1788292543</id>
            <summary type="text">தெற்கு ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வருந்தத்தக்க பதிலடியை ஈரானிய புரட்சிகர காவல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வருந்தத்தக்க பதிலடியை ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடங்கியுள்ளதாக ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.</p><p>

பொதுமக்கள் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்கள் மீது அமெரிக்கா கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக IRGC தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

இதன்போது, சிரிக் மலைப்பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவில் மேற்கொள்ப்பட்டுள்ள அமெரிக்கத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><h2>ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகை</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அங்கு தலையிடும் வெளிநாட்டுப் படைகளை ஒடுக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தியுள்ளதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315a616-cf9e-4824-ba8a-dc9a9e958778/26-6a972dc0c2b28.webp' /></p><p><i>Image Credit:&nbsp;thenewregion</i></p><p>
</p><p>
இதன்படி, இந்த பதிலடி நடவடிக்கையின் முதல் கட்டமாக, புதிய விண்வெளி பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 50-வது மேம்பட்ட MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் IRGC தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T21:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/12-killed-in-russian-attack-in-ukraine-1788294891"></link>
            <id>https://ibctamil.com/article/12-killed-in-russian-attack-in-ukraine-1788294891</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இது கீவ் நகரின் மீது தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நடத்தப்படும் கடுமையான தாக்குதல் என கூறப்படுகிறது.
</p><p>
போர்க்களத்தில் முன்னேற்றம் மந்தமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>ரஷ்யாவின் ட்ரோன்கள்</h2><p>
</p><p>
கடந்த வாரம் முதல் ஒரு புதிய தந்திரமாக, இரவும் பகலும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா ஏராளமான ட்ரோன்களை அனுப்பி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f47d3fe-bd4e-45c3-b4a6-960431d3532f/26-6a97394ff1433.webp' /></p><p><i>Image Credit:&nbsp;abcnews</i></p><p> 

அவற்றில் பல ட்ரோன்கள் இடைமறிப்பதற்கு கடினமான மற்றும் வேகமாகப் பறக்கக் கூடிய புதிய ஜெட்-இயந்திர மாதிரிகளை கொண்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
</p><p>
இரவு நேரத் தாக்குதல்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொடருந்து உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு</h2><p>

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 8 பேரில் பெரும்பாலானோர் தொடருந்து தொழிலாளர்கள் என்றும் தலைநகருக்கு வெளியே உள்ள போரிஸ்பில் நகரில், குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றைய 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dca545-e853-40e8-b8d3-4e66fd0a2250/26-6a973950a7aff.webp' /></p><p><i>Image Credit:&nbsp;nytimes</i></p><p>

உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T20:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை மீண்டும் தாக்கத் தொடங்கிய அமெரிக்கா! தீவிரமடையும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-airstrikes-on-iranian-targets-1788290762"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-airstrikes-on-iranian-targets-1788290762</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில், வணிகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில், வணிகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் மீதும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவு, பண்டார் அப்பாஸ், சபாஹார், ஜாஸ்க் மற்றும் சிரித் ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>ஈரானின் பதிலடி&nbsp;</h2><p>

இதேவேளை, ஈரான் மீண்டும் பதிலடி கொடுத்தால், இதனைக் காட்டிலும் மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99476f86-d703-4d86-84c3-e8ef77a30edb/26-6a9728d8e899c.webp' /></p><p> </p><p>

எவ்வாறாயினும், அமெரிக்கா தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும் என்றும், இராஜதந்திர ரீதியிலோ அல்லது போர்க்களத்திலோ ஈரான் தனது முழுத் திறனையும் பயன்படுத்திப் போராடும் என்றும் ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இப்போரினால் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்பதால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் தீவிர விழிப்புடன் இருக்குமாறு கட்டாரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remand-of-ex-akkaraipattu-mayor-extended-1788289592"></link>
            <id>https://ibctamil.com/article/remand-of-ex-akkaraipattu-mayor-extended-1788289592</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p>
கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.</p><p>

 இந்நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக முற்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957a31c2-c580-4955-8aa2-f66545668699/26-6a972447d0ebc.webp' /></p><p>

இந்நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><h2>

வழக்கின் பின்னணி</h2><p>
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப் பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a284d7-3dbd-432d-a658-2fa333791360/26-6a9724488ba07.webp' /></p><p>
குறித்த பெண் சமூக வலைத்தள நேரலையினூடாக இக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனிடையே, வாக்குமூலம் வழங்குவதற்காக காவல்நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>

பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாகச் செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையில் நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/office-assistants-at-university-of-jaffna-issue-1788287696"></link>
            <id>https://ibctamil.com/article/office-assistants-at-university-of-jaffna-issue-1788287696</id>
            <summary type="text">


யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் போட்டிப் பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><h2>பல்கலை நிர்வாகத்திடம் கோரிக்கை</h2><p>
</p><p>
பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர்
நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897899c5-2cae-4d70-aa0f-592dda8811ce/26-6a971f71eaae3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.
</p><p>
தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-01T18:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தொழிலதிபரின் பெயருக்கு வந்த பெரும் போதைப்பொருள் கையிருப்பு! அம்பலமான புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drugs-found-at-colombo-port-new-updates-1788285238"></link>
            <id>https://ibctamil.com/article/drugs-found-at-colombo-port-new-updates-1788285238</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள &#039;ஐஸ்&#039; போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள 'ஐஸ்' போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற “பறவி சுதா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் நாட்டிற்குள் அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அத்தோடு, அதில் அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் என்ற போதைப்பொருள் கடத்தல் காரர்களளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பந்தப்பட்ட கொள்கலன் மொராக்கோவிற்கு மறுஏற்றுமதி செய்யத் தயாராக இருந்ததாக அறிக்கைகள் கூறினாலும், போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவரவே திட்டமிட்டதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.</p><p></p><h2>தொழிலதிபர் கைது&nbsp;</h2><p> </p><p>

வெளிநாட்டிலுள்ள ஒரு தனியார் தகவல் வழங்குநர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இச்சோதனையை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3b8da-7b95-43c3-a6ab-279bf3ce0368/26-6a97130982d6b.webp' /></p><p> 

மேலதிக விசாரணைகளின் போது, இப்போதைப்பொருள் இருப்பு ஒரு உள்ளூர் தொழிலதிபரின் பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சசிதரன் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><h2>பின்னணியில் பாகிஸ்தான் நாட்டவர்கள்</h2><p>
</p><p>
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு பாகிஸ்தானியர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவரவே, ஜம்பாட்டா வீதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த அவ்விரு பாகிஸ்தான் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac04ff8-9f00-4d5e-960b-7bae587386a9/26-6a97130a6b98c.webp' /></p><p> 

அதனைதொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தெமட்டகொட தொழிலதிபரின் நிறுவனம் மூலமாகவே மேற்படி போதைப்பொருளை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T18:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வருடங்களில் மதிப்பை இழக்கப்போகும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252</id>
            <summary type="text">மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவிடும் என்று அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இன்று(01) தெரிவித்துள்ளார்.
</p><p>
"உலகெங்கிலும் நாம் இடர்களைக் குறைக்க வேண்டும். ஈரானியர்கள் ஹோர்முஸ் நீரிணையை ஒரு நெருக்கடிப் புள்ளியாகப் பயன்படுத்த முயற்சிப்பதை நம்மால் காண முடிகிறது," என்று வடக்கு கரோலினாவின் ஆஷ்வில்லில் அளித்த பேட்டி ஒன்றின்போது பெசென்ட் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;இரண்டு வருடங்களில் இழக்கப்போகும் மதிப்பு</h2><p>"இது அமெரிக்காவிற்கு ஒரு நெருக்கடிப் புள்ளி அல்ல, ஆனால் இது பல, பல பிற நாடுகளுக்கு ஒரு நெருக்கடிப் புள்ளியாகும்," என்று ஜி20 நாடுகளின் அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f95b7f-fa07-4192-958b-c395ec757c2f/26-6a96f7c2b7ec7.webp' /></p><p>

"இரண்டு ஆண்டுகளில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி தவிர்க்கப்பட்டுவிடும்" என்று அவர் தெரிவித்தார்.</p><p>

"இரண்டு ஆண்டுகளில், ஹோர்முஸ் நீரிணை ஒரு மதிப்பற்ற நீர்நிலையைப் போல ஆகிவிடும்," என்று அவர் கூறினார்.

"எண்ணெய் தரைவழியாகக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும்," என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T18:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாங்கொடையில் காணாமல் போன மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223"></link>
            <id>https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223</id>
            <summary type="text">







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் இம்மூன்று மாணவிகளும், மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p>
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பலாங்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p></p><h2>திருகோணமலையில் அடையாளம்&nbsp;</h2><p>
 
அதன்போது, காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd9b4bc-1ca1-483f-b9ff-0554889b39ca/26-6a970d8a70891.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த மாணவிகள் மூவரும் திருகோணமலையில் நின்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை நபர் ஒருவர் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T17:38:22+00:00</updated>
        </entry>
    </feed>
