<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-17T11:50:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய நிதி மோசடிக்கான திட்டம்! பொதுமக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-cert-warned-public-about-fraud-scheme-1786964750"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-cert-warned-public-about-fraud-scheme-1786964750</id>
            <summary type="text">
இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகைகளைக் கொள்ளையடிக்கும் நுட்பமான மோசடித் திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட நபர்களின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் பற்றிய தகவல்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக மோசடிக்காரர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மோசடியாளர்களின் திட்டம்</h2><p>
</p><p>
அதன்போது, வைப்புத்தொகைகள் மோசடியான வழிகளில் பெறப்பட்டதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து FCID விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறி குறித்த சந்தேகபர்கள் மக்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942de0d4-0c5b-4870-9626-4d7cd2d6c89d/26-6a82f2f7800e1.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, தங்களது கூற்றை உண்மை என நம்பவைப்பதற்காகப் போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், போலி அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்பி வைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, FCID அதிகாரியுடையது எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் வைப்புத்தொகையில் பாதியை மாற்றிவிட்டு அதன் ரசீதை ஆதாரமாக அனுப்புமாறும் கோருவதாகவும் தெரியவருகிறது.</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில், சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் முடிந்ததும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe44d98-5590-40d7-ac4c-1545f299c66a/26-6a82f2f8638d6.webp' /></p><p>
இந்த மோசடிக்காரர்கள் காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்துக் கொண்டு மிகவும் நுட்பமாக இயங்கி வருவதாக Sri Lanka CERT தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, இத்தகைய கோரிக்கைகளுக்குப் படிந்து நிதித் தகவல்களை வழங்கவோ அல்லது பணத்தை மாற்றி அனுப்பவோ வேண்டாம் என்றும், குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து குடும்பத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T11:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் : அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-election-to-be-held-in-srilanka-1786965543"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-election-to-be-held-in-srilanka-1786965543</id>
            <summary type="text">இலங்கையில்&amp;nbsp;மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில்
அரசாங்கமே வெற்றிபெறும் எனவும்&amp;nbsp;கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்&nbsp;மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில்
அரசாங்கமே வெற்றிபெறும் எனவும்&nbsp;கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p>நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம்
பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல விடயமாகும்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்</h2><p>



ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியே
மக்கள் எமக்கு ஆணையளித்தார்கள். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு
எதிராகச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள்
தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
இதில் சுமார் 3,000 சாட்சியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில்
ஆராயும் நீதிபதிகள் ஓய்வுபெற்றால், மீண்டும் முதலிலிருந்தே சாட்சி விசாரணைகளை
நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35568667-8233-4eed-bda6-d8d4df02f349/26-6a82f0ac2058c.webp' /></p><p>
</p><p>


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்குத் தற்போதும்
அச்சம் நிலவுகிறது. அதனால் தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி அவர்கள்
பேசி வருகிறார்கள்.
</p><p>


இனவாதம், மதவாதம் மற்றும் சிறைச்சாலைக் கலவரம் எனப் பல வழிகளில் முயன்று
பார்க்கின்றனர். ஆனால், அவை எதுவுமே கைகூடவில்லை. தற்போது விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கியாவது ஏதேனும் செய்ய முடியுமா என்று
பார்க்கிறார்கள்.</p><p></p><h2> தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை </h2><p>
</p><p>


அதேவேளை, கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஓகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர்
மாத முதல் வாரத்திலோ தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
</p><p>எமது மக்கள் 30 ஆண்டுகாலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். உறவுகள்,
உடமைகள் மற்றும் உயிர்கள் என அனைத்தையும் இழந்து, தற்போது தான் மீண்டும்
நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3b6d318-5b18-437d-9f71-50782da039a6/26-6a82f0acccdf4.webp' /></p><p>
</p><p>


எனவே, எமது கடல் வளத்தை அழிப்பதற்குத் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடமளிக்க முடியாது.
தமிழகத்தில் நல்ல கடற்றொழிலாளர்களும் உள்ளனர். ஆனால், கடல் கொள்ளையில் ஈடுபடும் சிலர்
தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இந்நிலை நீடித்தால் எமது கடல் பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது. </p><p>எனவே, இது
குறித்துத் தமிழக அரசிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படும். முதலாவது அதிகாரிகள்
மட்டத்திலான பேச்சும், இரண்டாவது கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சும்
நடத்தப்படும். தேவை ஏற்படின் தமிழக முதலமைச்சருடனும் பேசுவோம்.</p><p>


இங்கிருந்து சென்று போட்டிபோட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமிழக
முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கின்றனர். ஆனால், எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள்
பற்றிப் பேசுவதில்லை. </p><p>மாறாக, மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க
வேண்டுமாம். மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும்; அதில் நாங்களே
வெற்றியும் பெறுவோம்” என்றார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T11:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வு பெறுகிறார் பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cristiano-ronaldo-retirement-at-end-of-season-1786964393"></link>
            <id>https://ibctamil.com/article/cristiano-ronaldo-retirement-at-end-of-season-1786964393</id>
            <summary type="text">போர்த்துக்கல் அணியின் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு சீசனின் முடிவில் தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் அணியின் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு சீசனின் முடிவில் தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
"ஒரு கால்பந்து வீரராக இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், நான் ஒரு அற்புதமான பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன்," என்று அவர் நேற்று(16) வோக் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.</p><h2>குடும்பத்தை மையமாக கொண்ட எதிர்கால திட்டமிடல்</h2><p>41 வயதான அவர், செவ்வாயன்று தனது துணைவியார் ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மணந்தார், மேலும் தற்போது குடும்பத்தை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைத் திட்டமிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e2d27df-df12-481f-b36d-78a7e14c22d5/26-6a82eda303e56.webp' /></p><p>

பாலன் டி'ஓர் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கை ஐந்து முறை வென்ற ரொனால்டோ, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சவுதி அரேபியாவில் லீக் பட்டங்களை வென்றுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச கால்பந்தில் 976 கோல்</h2><p>

சர்வதேச கால்பந்தில் 976 கோல்களுடன், ரொனால்டோ எல்லா காலத்திலும் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bc16dd-e631-47ad-b1ab-a8905f082248/26-6a82eda3a9d83.webp' /></p><p>

“எனது எதிர்காலத்திற்கான திட்டங்களை நான் ஏற்கனவே வகுத்துவிட்டேன். என்னை பிஸியாக வைத்திருக்கும் விஷயங்கள் ஏராளமாக இருப்பதால், ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம். </p><p>கால்பந்திலிருந்து விலகிய பிறகு ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படக்கூடும் என்பதால், உங்கள் நேரத்தைச் செலவிட நீங்கள் வெவ்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும்; ஒரே ஒரு வழி மட்டும் போதாது,” என்று அவர் மேலும் கூறினார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T11:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/varodayanagar-massacre-1786964954"></link>
            <id>https://ibctamil.com/article/varodayanagar-massacre-1786964954</id>
            <summary type="text">திருகோணமலை - வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.வரோதயநகர் பிரதான வீதியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு அருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.</p><p>வரோதயநகர் பிரதான வீதியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு அருகே இன்று (17)&nbsp;நினைவேந்தல் நிகழ்வுகள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.</p><p>இதன்போது 17.08.1985ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 11 பேர் உள்ளிட்ட அதனை அண்மித்த காலங்களில் குறித்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்தசாந்தி வேண்டி மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><h2>ஆயுதம் தாங்கிய குழுவினர்</h2><p>இது குறித்து நிகழ்வில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eecc169f-6fd1-4055-8d0b-6e8ddcd28072/26-6a82ec83b5587.webp' /></p><p>
</p><p>''குறித்த படுகொலைச் சம்பவத்தில் குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டுவயதான மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார்.</p><p>

1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை கன்னியா பகுதியில் இருந்து வரோதயநகர் பகுதிக்குள் டிபென்டன் வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் வீதிவழியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் பாதுகாப்புத் தேடி அயல் வீடுகளிலும் தங்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். </p><p>இதன்போது வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டைத் தட்டி கூப்பிட்டு அங்கு வந்த பிறீமாவில் வேலை செய்யும் வெள்ளையன் திருச்செல்வம் என்பவரை முதலாவதாக சுட்டுக்கொன்றனர்.</p><p> பின்னர் அங்கு ஓடி வந்த அவரது மாமனாரான கந்தன் மாணிக்கம் என்பவரை சுட்டுக் கொன்றனர் பின்னர் கந்தையா வீதிக்கு திரும்பிச் சென்றனர்.</p><p> இதன்போது அங்கு வந்த சீனியன் மாணிக்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பயத்தில் இருந்த மக்கள் தம்பிராசா என்பவருடைய வீட்டில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தனர்.</p><p></p><h2>உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்</h2><p> </p><p>அங்கு பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்க கந்தையா வீதிக்கு திரும்பி அங்கு இரண்டாவதாக இருந்த தம்பிராசாவின் வீட்டை தட்டி எட்டிப்பார்த்து அங்கு நிறைய மக்கள் இருக்கவே அந்த அறைக்குள் கைக்குண்டு ஒன்றை போட்டு வெடிக்கச் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e398fb4a-b6e7-48fb-b12c-13ec7ce2360d/26-6a82ec848d3fd.webp' /></p><p> </p><p>அங்கிருந்து காயங்களுடன் வெளியேறி ஓடியவர்களையும் சுட்டுக் கொன்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர்.&nbsp;</p><p>
இதன்பின்னர் மாலையளவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு அக்கிராம மக்கள் கொண்டு சென்றனர். </p><p>அங்கு காயமுற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய 8 வயதான பெண் குழந்தை காணாமல் போயிருந்தார். </p><p>இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை. அத்துடன் படுகொலை இடம்பெற்று 41 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித நீதியோ, நிவாரணங்களோ கிடைக்கவில்லை"&nbsp;" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T11:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச அதிகாரிகளுக்கு எதிராக வெடித்த போராட்டம் - வட மாகாண ஆளுநரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-province-governor-inquiry-committee-for-do-1786961480"></link>
            <id>https://ibctamil.com/article/north-province-governor-inquiry-committee-for-do-1786961480</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான
விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.</p><p>
வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர்.</p><p>அவர்கள் கையளித்த மனுவில்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>உரிய நடவடிக்கைகள்</h2><p>மற்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3496590-ee99-44da-9e07-1aae45586a01/26-6a82e218c1745.webp' /></p><p>மேலும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நிர்வாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆளுநர் கவனமாகக் கேட்டறிந்து, விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் எந்தவொரு தரப்பினரின் கௌரவமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T11:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grama-niladharies-trade-union-action-end-1786963292"></link>
            <id>https://ibctamil.com/article/grama-niladharies-trade-union-action-end-1786963292</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த​ தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த​ தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

கிராம உத்தியோகத்தர் சங்கங்களுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று (17) இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> 

இப்பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தொலைபேசி வழியே தொடர்புகொண்டதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>வழமை போல் கடமைகளில் ஈடுபடுவார்</h2><p> 

இதற்கமைய, ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தாம் தீர்மானித்ததாக கிராம உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdee8fd0-fe27-4b92-9441-54843c9ab516/26-6a82e96fab476.webp' /></p><p> </p><p>

இன்று தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் வழமை போல் கடமைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்தாலும் அங்கிருந்து அவரை ஜனாதிபதியாக்குவோம் : முன்னாள் அமைச்சர் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-president-even-if-he-is-imprisoned-1786962433"></link>
            <id>https://ibctamil.com/article/namal-president-even-if-he-is-imprisoned-1786962433</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறையிலிருந்தே அவரை நாட்டின் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறையிலிருந்தே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>இது தெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

</p><h2>நாமலை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்</h2><p>தற்போதைய அரசாங்கம் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும், நாட்டின் ஒரே நம்பகமான நிறுவனமான நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கூட ஆட்சியாளர்கள் தகர்க்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4551c2-294b-4d01-a52f-ba699e7526aa/26-6a82e6b32e694.webp' /></p><p>
</p><p>





நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரம் சல்காது மைதானத்தில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளதாகவும், அதில் யாரும் எதிர்பாராத அளவுக்கு பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெருமளவிலான மக்களும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் கிராம மட்ட அமைப்பு நடவடிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>






</p><h2>மகிந்த,கோட்டாபயவை சிறையில் அடைக்க முயற்சி</h2><p>“பலர் மகிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். அது ஒரு பிரச்சனையல்ல. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903f4210-185a-4285-9a04-965a9dab5492/26-6a82e6b26c9fc.webp' /></p><p> </p><p>எஞ்சியிருப்பது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே. அதையும் தகர்க்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும், சிறையிலிருந்தே அவரை ஜனாதிபதியாக்குவோம்.” என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T10:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-plans-to-use-nuclear-weapons-against-iran-1786960534"></link>
            <id>https://ibctamil.com/article/trump-plans-to-use-nuclear-weapons-against-iran-1786960534</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல் ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் கூட்டங்களை அவர் நடத்தி வருவதாக&nbsp;மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p>



இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; 'ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் உண்மையானவை. எந்த யூகமும் இல்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">They are discussing using nuclear weapons on Iran in strategy meetings.<br><br>Yes you read that correctly. It’s real. I’m not speculating, I know.<br><br>And it’s pure evil.<br><br>The last time a nuclear weapon was used was August 6th and 9th of 1945 on two cities in Japan, Hiroshima and…</p>&mdash; Former Congresswoman Marjorie Taylor Greene🇺🇸 (@FmrRepMTG) <a href="https://x.com/FmrRepMTG/status/2089069623706603837?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>ஜப்பான் மீதான அணு ஆயுத தாக்குதலால் ஏற்பட்ட விளைவு</h2><p> </p><p>1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 2,14,000 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், புற்றுநோய், பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d913138f-d9e5-4eeb-8957-1cbe1796e352/26-6a82e5a6c47ff.webp' /></p><p>


ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் சூழலில் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத அமெரிக்க அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவான செயல்களை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. </p><p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் மாபெரும் மோதல்களையும், துயரங்களையும் சந்திக்க நேரிடும்.


தற்போதைய தலைவர்கள் போரை உடனே நிறுத்த வேண்டும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த அரசே முழுப் பொறுப்பு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்பட்ட ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/90-day-detention-order-on-shiran-basik-1786960164"></link>
            <id>https://ibctamil.com/article/90-day-detention-order-on-shiran-basik-1786960164</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த மார்ச் மாதம் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். </p><p>

இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>டுபாய் மீது ஈரான் தாக்குதல்&nbsp;</h2><p> 

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் டுபாயிலுள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்த போது அந்நாட்டு காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p> 

டுபாய் மீது ஈரானால் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த காலப்பகுதியிலேயே இது நடந்ததாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3959e24d-9a6f-4ba3-9693-6442a7adce83/26-6a82e281edd4d.webp' /></p><p> </p><p>

பின்னர் தனது தொலைபேசியை அந்நாட்டு காவல்துறையினர் பரிசோதித்த போது, அதில் ஈரான் டுபாய் மீது நடத்திய தாக்குதல்களின் காணொளிகள் இருந்தமையால் தான் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தும் வரை தினமும் டுபாய் காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் ஈரான் தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>பின்னர் இலங்கைக்குச் செல்வதற்காக தம்மை விமான பயணச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாகவும், அதன் பின்னரே தாம் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p> </p><p>

அவருக்கு எதிராக இருந்த போதைப்பொருள் குற்றச்சாட்டு வழக்கொன்றைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையினரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இலங்கை காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கையைப் பெறத் தயாராகிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1cbfc7-3129-43a2-b02c-e2c3fd74b13b/26-6a82e282b1823.webp' /></p><p>இவர் சட்டப்பூர்வமாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி இலங்கையிலிருந்து டுபாயிற்குச் சென்றுள்ளார். 

அங்கு அவர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதுடன், இரு பெரும் வணிகங்களையும் முன்னெடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p> 

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பொருளாதாரத்தை நசுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப்! தெஹ்ரான் செய்துள்ள சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-vows-to-economically-crush-iran-1786962277"></link>
            <id>https://ibctamil.com/article/trump-vows-to-economically-crush-iran-1786962277</id>
            <summary type="text">பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெளிவுபடுத்தியதை அடுத்து, இது குறித்து ஈரான் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெளிவுபடுத்தியதை அடுத்து, இது குறித்து ஈரான் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இது அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும் என்றும் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில் ஈரானின் அரசியல்வாதியும் முதல் துணை ஜனாதிபதியுமான முகமது ரெசா அரெஃப், சந்தை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>ஈரான் இதுவரை கண்டிராத நடவடிக்கை</h2><p>
கடந்த வாரம், அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் நியூஸ்மேக்ஸ் பேட்டி ஒன்றில், ஈரான் மீது இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தப் போவதாகக் கூறினார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94e7d162-7179-4c46-a3c0-9ef1b2e7cb86/26-6a82e3775b690.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம், அமெரிக்கா ஈரானை தொடர்ந்து பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தி, அதன் துறைமுகங்களை முற்றுகையிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:34:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு! அறிவிக்கப்பட்டது திகதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/payments-to-be-credited-to-bank-accounts-1786960830"></link>
            <id>https://ibctamil.com/article/payments-to-be-credited-to-bank-accounts-1786960830</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>வரவு வைக்கப்படவுள்ள பணம்</h2><p>
அதன்படி, நலன்புரி நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20eb64d6-adc2-42f8-8796-45dcc658508c/26-6a82df832c890.webp' /></p><p>

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு 2,321,735,000 ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிருணிகா உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/date-given-for-calling-hirunika-s-case-1786956071"></link>
            <id>https://ibctamil.com/article/date-given-for-calling-hirunika-s-case-1786956071</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது, கொழும்பு குருந்துவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (17) அழைக்கப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைகள் நிறைவு</h2><p>இதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான கோவைகள் தயாரித்து மேலதிக சட்ட ஆலோசனைகளுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1c7413-88a1-4c72-8f5f-e741db2188fa/26-6a82dacb973e3.webp' /></p><p>இந்நிலையில், வழக்கை நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் வழக்குகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலையான வைப்புத்தொகைகளைக் குறிவைக்கும் புதிய மோசடி: CERT எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268"></link>
            <id>https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தைத் திருடும் ஒரு நுட்பமான நிதி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
</p><p>
இரு நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து, போலியான அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி, தாங்கள் உண்மையானவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்கும் நபர்கள் குறித்துப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLCERT தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த எச்சரிக்கையின்படி, மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள நிதி குறித்து விசாரிக்கின்றனர்.</p><p></p><h2>அச்சுறுத்தப்படுத்தும் விதம் </h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களின் வைப்புத்தொகை குறித்த தகவல்கள் தங்களிடம் ஏற்கனவே இருப்பதாகக் கூறி, அந்தப் பணம் மோசடி வழிகளில் பெறப்பட்டதாகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்களிடம் பொய்யாகத் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180abaab-28a3-4a2e-ac96-d3cffdbda231/26-6a82d8ef93ae6.webp' /></p><p>அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் FCID விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அச்சுறுத்தப்படுகிறார்கள்.
</p><p>
மோசடிக்காரர்கள் பின்னர், போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்புகின்றனர். </p><p>பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மற்றொரு தனியார் வங்கியில் உள்ள குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>
SLCERT-இன் கூற்றுப்படி, மோசடிக்காரர்கள் அந்தக் கணக்கு ஒரு FCID அதிகாரியுடையது என்று கூறி, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வைப்புத்தொகையில் பாதியை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.</p><p></p><h2>நுட்பமான முறையில்&nbsp;மோசடி</h2><p> </p><p>பணப் பரிமாற்றம் செய்த பிறகு, பணம் செலுத்தியதற்கான ஆதாரமாக வங்கி வைப்புச் சீட்டை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad63f473-98de-4eb6-92a9-a9e61a2336fb/26-6a82d8f049bf2.webp' /></p><p>
</p><p>
இந்த மோசடிக்குப் பின்னால் இருப்பவர்கள் மிகவும் நுட்பமான முறையில் செயல்படுவதாகவும், இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானது போல் தோற்றமளிக்க காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது என SLCERT தெரிவித்துள்ளது.</p><p>ஓய்வூதியதாரர்களும் முதியவர்களும் இந்த மோசடிக்கு குறிப்பாக எளிதில் இலக்காகக்கூடும் என்று எச்சரித்த அந்த அமைப்பு, பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை : சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165"></link>
            <id>https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறைக் காலத்தில்&amp;nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறைக் காலத்தில்&nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இக்காலப் பகுதியில் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் அவர் இவ்வாறு கோரியுள்ளார். </p><p>

வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடுவது பிரபலமாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக பட்டம் விடுவதால் பலத்த காயங்கள் மட்டுமன்றி உயிராபத்துகளும் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>உயர் அழுத்த மின்கம்பிகள்</h2><p> </p><p>

குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் போது கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், குழுக்களாக இணைந்து பட்டம் விடும் போது மோதிக் கொள்வதாலும், கீழே விழுவதாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6ba7a7-e290-4542-85fe-c0d41a077955/26-6a82d4c5e2a96.webp' /></p><p> 

அத்துடன், உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் இவ்வாறான மின் அதிர்ச்சிகள் காரணமாக கைகள், தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்துகிறார். </p><p>

மேலும், மின்கடத்தும் தன்மை கொண்ட நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் உரசும் போது உடனடியாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மின்கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தவிர்க்க பெற்றோர்களும், பெரியவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.</p><p> 

சிறுவர்களின் பொழுதுபோக்கு போலவே அவர்களின் உயிர் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பட்டம் விடுகையில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்“ எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுக்கு பரிமாற்றப்பட்டுள்ள பில்லியன் டொலர்கள்! நான்கு வங்கி மேலாளர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698"></link>
            <id>https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698</id>
            <summary type="text">




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>
</p><p>
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c01596-8d32-4b74-b464-0f6901707050/26-6a82c2f463e67.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T09:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.</p><p>யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான&nbsp;பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை
வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றடைந்தது.</p><p>இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர்
தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும்
பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.</p><p>பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம்,
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில்
இன்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f47b3fa-5b35-42bd-a552-5d8e6070e855/26-6a82cee6d1bc5.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - த.பிரதீபன்&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rDb0DACm3OQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் -2 போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

யாழ்ப்பாணம் - பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணி செம்மணி வரை சென்று குறித்த பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p><p>

இந்தப் பேரணியில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>சர்வதேச நீதி வேண்டும்</h2><p>இதன்போது “இலங்கை அரசு தமிழ் குழந்தைகளை அவர்களின் கனவுகளுடன் புதைத்தமைக்கு சர்வதேச நீதி வேண்டும்“, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு நீதி வேண்டும்.” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f461dd23-1ff3-4255-af80-ea995bccee16/26-6a82b77cc4aa9.webp' /></p><p> </p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p> 

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான போராட்டம் இன்று (17) வரை நான்கு நாட்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சென்ற தொடருந்து மோதி 23 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/23-years-youth-dies-after-being-struck-by-a-train-1786955884"></link>
            <id>https://ibctamil.com/article/23-years-youth-dies-after-being-struck-by-a-train-1786955884</id>
            <summary type="text">வவுனியாவில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இன்று (17) காலை தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியந்தன் என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>குறித்த இளைஞர் தாண்டிக்குளம் புகையிரத பாதையைக் கடக்க முயன்றபோதோ அல்லது பாதைக்கு அருகில் நின்றபோதோ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0f13f6-2eba-4149-9e86-43b7fbab3463/26-6a82caaef35d3.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வவுனியா காவல்துறையினர் உடனடியாக விரைந்து உடலை&nbsp;மீட்டுள்ளனர்.</p><p>இதேவேளை விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், இது கவனக்குறைவால் நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை கையூட்டு பெற்ற நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-police-officers-arrested-connection-with-bribery-1786950188"></link>
            <id>https://ibctamil.com/article/4-police-officers-arrested-connection-with-bribery-1786950188</id>
            <summary type="text">தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 500,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மொனராகல பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை பிரிவு குற்றப்பிரிவில் பணியாற்றும் 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் (Police Sergeant) , 39 வயதுடைய பொலிஸ் சாரதி மற்றும் 36 வயதுடைய மற்றொரு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தனமல்வில காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு நிக்கவேவ&nbsp; தெமோதர வேவ பகுதியில் கஞ்சா பயிரிடப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11ஆம் திகதி காவல் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>கஞ்சா செடி</h2><p> </p><p>இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d038c5c7-3c2f-47bf-8f50-74352b9a4dad/26-6a82beb19bf43.webp' /></p><p>
</p><p>தொடர்ந்து அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், குறித்த சந்தேக நபருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் மேலும் மூன்று கஞ்சா பயிரிடப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. </p><p>அத்துடன், ஏற்கனவே வெட்டி எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மற்றொரு கஞ்சா பயிரிடும் இடமும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.</p><p>விசாரணைகளின்போது, மொனராகலை பிரிவு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு காவல் அதிகாரிகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி குறித்த இடத்தில் சோதனை நடத்தியதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக தன்னிடமிருந்து ரூ.500,000 இலஞ்சமாக பெற்றதாகவும் சந்தேக நபர் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>நான்கு காவல் அதிகாரிகள் கைது</h2><p>மேலும், அங்கிருந்த ஐந்து கஞ்சா பயிரிடும் இடங்களில் ஒன்றை மாத்திரம் அதிகாரிகள் தீ வைத்து அழித்ததாகவும், ஏனைய இடங்களில் இருந்த கஞ்சா செடிகளை தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75bff854-3c05-4bac-a1ee-b3deb33d6f62/26-6a82beb250bf6.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, நிக்கவேவ பகுதியைச் சேர்ந்த “கலு” என அழைக்கப்படும் மற்றொரு நபரும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>விசாரணையின்போது, மொனராகலை பிரிவு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் தன்னிடம் கஞ்சாவை உலர்த்துமாறு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இரு சந்தேக நபர்களும் வெல்லவாயா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர்களை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு காவல் அதிகாரிகளும் தனமல்வில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்கமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-govt-to-easier-vehicle-imports-1786952579"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-govt-to-easier-vehicle-imports-1786952579</id>
            <summary type="text">
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.</p><p>

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் பேரணி 2026 வாகனக் கண்காட்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முதன்மை நோக்கம்</h2><p>
</p><p>
இலங்கை சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயன்பாட்டுக் கலாச்சாரத்தையும், ஒழுக்கமான சாரதி நடைமுறைகளையும் ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a681b05-535d-4fe4-9505-2ad3c2e23a1a/26-6a82be734eb38.webp' /></p><p>

பிரதம விருந்தினராகக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித, ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமாக ஒரு வாகனத்தை வைத்திருக்கவும் பயன்படுத்தவும் வாய்ப்புள்ள ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வரி தொடர்பான கட்டுப்பாடுகள்</h2><p>
</p><p>
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இறக்குமதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்ததால், இலங்கையால் எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை என்பதை அவர் நினைவு படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c0d2a6-7d40-4a36-bd33-7ace2030ee4e/26-6a82be740345a.webp' /></p><p>
</p><p>
இதன்படி, மத்திய கிழக்கில் ஏற்பட்ட எதிர்பாராத மோதல் சூழல், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை குறித்த கவலைகளை உருவாக்கியதால், சில வரி தொடர்பான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T07:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்தின் ஆரம்பத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-edged-higher-on-monday-today-1786946287"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-edged-higher-on-monday-today-1786946287</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.</p><p>கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. </p><p>

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>தங்கத்தின் விலை</h2><p> 

அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51aa5f9-81f5-48fd-aff4-cc7e9adc2147/26-6a82b8d73963c.webp' /></p><p> 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரக்குறைவாக பேசிய உயர் அதிகாரிகள் - யாழில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-by-development-officers-reported-in-north-1786950094"></link>
            <id>https://ibctamil.com/article/protest-by-development-officers-reported-in-north-1786950094</id>
            <summary type="text">யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அபிவிருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>விரும்பத்தகாத கருத்து</h2><p>வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6914fa-c32e-40ef-947c-a08e9e735a6d/26-6a82b63294ebd.webp' /></p><p>குறித்த ஒலிப்பதிவில், உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து, அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p><p>இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.</p><p>
மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609fee4b-ad89-4229-b8f8-a2bab12e775e/26-6a82b6334e4a5.webp' /></p><p> அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுதாபத்திற்காக பதவி விலகுவதாக கூறும் ஜனாதிபதி அநுர! மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054</id>
            <summary type="text">


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>

நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 14,000 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>பொதுமக்களின் அனுதாபதம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a56d20-ae23-4dea-9ecb-0941263e4ea3/26-6a82b59041bce.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கணிசமாகக் குறைத்து, பொய் வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்ற முடியாத கனவுகளைக் காட்டி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய காரணங்களால் ஜனாதிபதிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவித அனுதாபமும் கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027</id>
            <summary type="text"> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தக...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப்
பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே இன்று 16.08.2026 மாலை
விபத்துக்குள்ளானது.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

இரண்டு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானமை
தொடர்பில் தகவல் கிடைத்த உடனேயே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு,
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cf0417-714d-4d83-9b4c-010380592bd0/26-6a82b0886a02b.webp' /></p><p>

இதனையடுத்து, இலங்கை கடற்படையினர், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு மக்களின்
ஒத்துழைப்புடன் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 10
பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விபத்துக்குள்ளானமைக்கான காரணம்</h2><p>
இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது
தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f96608-2e5d-4aab-8c5e-fb09c22eb82b/26-6a82b0879a0d2.webp' /></p><p>அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life
Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில்
மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு
அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்</p><p>பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான
பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874</id>
            <summary type="text">
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
அவர் இலங்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டு துபாய்க்குத் தப்பிச் சென்ற போதிலும், அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் அரசின் ஆசி காரணமாக உள்ளூர் உயர் நீதிமன்றங்களில் அவர் மீது பலமான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

அவருக்குச் சொந்தமான சோல் பீச் ஹோட்டலுக்குத் தேவையான மதுபான உரிமங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகளைப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>250 மில்லியன் ரூபாய் லஞ்சம்</h2><p>
</p><p>
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்பி-க்கள் மற்றும் காவல்நிலையப் பொறுப்பதிகாரிகள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருகை தந்து இலவச உணவு மற்றும் உபசரிப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதரவையும் அனுபவித்துள்ளதாக கண்டறியப்ப்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f875004-0a41-4b50-901e-bd7be4056ba4/26-6a82ae46e9155.webp' /></p><p>

இந்நிலையில், தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது பதவியை உறுதிப்படுத்துவதற்காக வேண்டிய கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை இந்த சோல் பீச் ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்தியே நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

மேலும், பதில் காவல்துறை மா அதிபர் பதவியைப் பாதுகாத்துத் தருவதற்காக தேஷபந்து தென்னகோன், ஷிரான் பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாகவும், அந்தப் பணத்தைக் கொடுக்க ஷிரான் பாசிக் மறுத்ததால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சோல் பீச் ஹோட்டல் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>பாசிக் மகன் -&nbsp;விஜயதாச ராஜபக்ச தொடர்பு</h2><p>

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஹேவ்லோக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் ஷிரான் பாசிக்கின் மகன் நதீம் பாசிக் கைது செய்யப்பட்ட சம்பவமும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31226c7-def8-4939-a498-dca564287ab5/26-6a82ae47a3dbd.webp' /></p><p> </p><p>

நதீம் பாசிக் அங்கு குடியேறுவதற்கு முன்னர், இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரபல நடிகை ஒருவர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p> </p><p>

ஷிரான் பாசிக்கின் கறுப்பு பணத்தை சலவை செய்வதற்கு இந்த நடிகை பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், இவ்வாறு காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான பாதுகாப்பும் ஆதரவுமே ஷிரான் பாசிக் போன்ற ஒரு கடத்தல்காரர் சர்வதேச அளவில் உருவெடுக்க முதன்மையான காரணியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T06:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் 770 கோடி பெறுமதியான அரிய ஓவியங்கள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556"></link>
            <id>https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556</id>
            <summary type="text">இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அரிய ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.</p><p>

இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் (15.08.2026) இரவு&nbsp; 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் இருந்தபோதிலும், மர்ம நபர்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலாரம் அமைப்புகளை முறியடித்து அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள்&nbsp;</h2><p>

அதன்பின்னர், ஓவியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாதுகாப்புப் பெட்டியை உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc6d400-8853-46c4-94ae-59c0e8876bdc/26-6a82a76411952.webp' /></p><p>எனினும், தப்பிச் செல்லும் அவசரத்தில் திருடப்பட்ட ஓவியங்களில் இரண்டு ஓவியங்களை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மீதமுள்ள இரண்டு ஓவியங்கள் தற்போது காணாமல் போயுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்காக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p>
கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்குள் எவ்வாறு நுழைந்தனர், பாதுகாப்பு மற்றும் அலாரம் அமைப்புகளை எவ்வாறு செயலிழக்கச் செய்தனர், மேலும் திருடப்பட்ட ஓவியங்களை எங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
வரலாற்று மற்றும் கலைத்துறை ரீதியாக மிகுந்த பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஓவியங்கள் சர்வதேச கலைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Three paintings by Renoir, Cézanne and Matisse worth millions of euros that were stolen earlier this year in a three-minute heist were recovered by Italian police — and five suspects were arrested. <a href="https://t.co/LiHKuJ7Q7a">pic.twitter.com/LiHKuJ7Q7a</a></p>&mdash; CBS Mornings (@CBSMornings) <a href="https://x.com/CBSMornings/status/2088679648586588470?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:47:57+00:00</updated>
        </entry>
    </feed>
