<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-13T20:58:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதல் நிலைக்கு மத்தியில் இந்தியாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bilateral-talks-in-india-regarding-iran-conflict-1789325485"></link>
            <id>https://ibctamil.com/article/bilateral-talks-in-india-regarding-iran-conflict-1789325485</id>
            <summary type="text">இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகிய இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசிய விவகாரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெளிப்படையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p>இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில்,</p><p>''வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்; அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை (I don't care). அது அவர்களுக்கு நல்லதுதான்.</p><p></p><h2>சுமூகமான உடன்படிக்கை</h2><p>ஈரான் நாடு அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான உடன்படிக்கைக்கு வரக் கடுமையாக முயற்சிக்கின்றது. இதற்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/429003d9-3a60-48ae-a254-b3b94064c98c/26-6aa6f0af48730.webp' /></p><p>எனினும், அமெரிக்காவிற்கு முழுச் சாதகமான மற்றும் தகுந்த சரியான ஒப்பந்தத்தை மட்டுமே தனது நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T18:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் வணிககப்பல் மீது அதிகாலைவேளை தாக்குதல் : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-commercial-vessel-in-the-strait-of-hormuz-1789322792"></link>
            <id>https://ibctamil.com/article/attack-commercial-vessel-in-the-strait-of-hormuz-1789322792</id>
            <summary type="text">”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று(13) அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று(13) அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என ஈரானின் கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமானுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணைக்கான மோதல்</h2><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d16e53f-d418-499d-8c80-26d8cf697181/26-6aa6ea2f45378.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2>தொடர்ந்து அதிகரிக்கும் கச்சாய் எண்ணெய் விலை</h2><p>
</p><p>


ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965ffa27-55a4-4628-aa66-2a65109134dd/26-6aa6ea2e93fc6.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T18:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையையும் மீறி ஏற்றுமதி துறையில் ஈரான் படைத்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/achievement-iran-accomplished-despite-us-blockade-1789322420"></link>
            <id>https://ibctamil.com/article/achievement-iran-accomplished-despite-us-blockade-1789322420</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான கடல்சார் பொருளாதார முற்றுகை மற்றும் தடைகளையும் மீறி, ஈரானின் தெற்கு மாகாணமான புஷெஹ்ர் (Bushehr), கடந்த ஐந்து மாதங்களில் 2.3 பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான கடல்சார் பொருளாதார முற்றுகை மற்றும் தடைகளையும் மீறி, ஈரானின் தெற்கு மாகாணமான புஷெஹ்ர் (Bushehr), கடந்த ஐந்து மாதங்களில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது.&nbsp;</p><p>இதுகுறித்து புஷெஹ்ர் மாகாண சுங்க அலுவலகத்தின் தலைவர் அலி சுலைமானி (Ali Soleimani) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், </p><p>"இந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் சுமார் 5.1 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்கள் மாகாணத்தின் சுங்கச்சாவடிகள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பு</h2><p>அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பையும் மீறி அனுப்பப்பட்ட இந்த ஏற்றுமதிப் பொருட்களில், பெட்ரோகெமிக்கல் பொருட்கள், பல்வேறு வகையான திரவமாக்கப்பட்ட வாயுக்கள் (Liquefied Gases), சிமெண்ட், கட்டுமானக் கற்கள் மற்றும் கடல் உணவுகள் (மீன், இறால்) ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a539927-6444-4246-b535-ceebe8487884/26-6aa6e4b66353b.webp' /></p><p> குறிப்பாக, இப்பகுதியில் உள்ள 'பார்ஸ் சிறப்பு பொருளாதார எரிசக்தி மண்டலம்' (PSEEZ) மட்டுமே ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பில் 87 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.</p><p>ஈரான் மீது சர்வதேச அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஆண்டில் புஷெஹ்ர் மாகாணம் உலகின் 32 நாடுகளுக்குத் தன் பொருட்களை விற்பனை செய்துள்ளது. </p><p>இதில் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பாகிஸ்தான், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஈரானிய பொருட்களின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாகத் திகழ்கின்றன என்று அலி சுலைமானி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T18:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலுக்குள்ளாகும் ரஷ்யாவின் எரிபொருள் உள்கட்டமைப்பு! ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் பலத்த அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-fuel-infrastructure-under-attack-1789320934"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-fuel-infrastructure-under-attack-1789320934</id>
            <summary type="text">ரஷ்யாவின் டீசல் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் டீசல் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு, தனது உக்ரேனிய சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p> இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ரஷ்யாவின் வருவாய் ஆதாரத்தையும், அதன் ராணுவப் பயன்பாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தையும் முடக்கும் நோக்கில், உக்ரைன் சமீபகாலமாக நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் ரஷ்யாவின் முக்கிய எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.</p><p></p><h2>அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம்&nbsp;</h2><p> </p><p>இதன் காரணமாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எரிபொருள் சுத்திகரிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவிலும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d7ff98-7f25-464b-bf93-b7821a461e81/26-6aa6df652d4a2.webp' /></p><p>இந்நிலையில் அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் இதுகுறித்துப் கருத்து வெளியிடுகையில், </p><p>“ஜெலென்ஸ்கி உடனடியாக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அவர் ரஷ்யாவில் உள்ள டீசல் எரிபொருள் ஆலைகளை முடக்குவதை நிறுத்த வேண்டும்.</p><p> அவர் பிற இராணுவ இலக்குகளைத் தாக்கட்டும், ஆனால் டீசல் எரிபொருளை அல்ல. ஏனெனில், உலகளவில் அவர் பெரும் டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறார்," என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும், உலகளாவிய இந்த எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு நாடுகள் காரணமல்ல என்றும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் இந்த மோதல்களால்தான் உலக சந்தையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T17:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம் : கொழும்பு - துபாய் விமான சேவை நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katunayake-dubai-flights-temporarily-suspended-1789316755"></link>
            <id>https://ibctamil.com/article/katunayake-dubai-flights-temporarily-suspended-1789316755</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
</p><p>
இந்த இடைநிறுத்தம் 2026 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>மீண்டும் தொடங்கவுள்ள சேவை</h2><p>பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் அதன் தாக்கம் தனது விமானச் செயல்பாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதையும் மதிப்பிட்டு வருவதாகவும் ஃபிட்ஸ் ஏர் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc81666-eb01-46ba-a340-f42da440476b/26-6aa6d2ede6ec4.webp' /></p><p>

தற்போதைய திட்டத்தின்படி, 2026 நவம்பர் 19 முதல் கொழும்பு-துபாய் விமான சேவையை மீண்டும் தொடங்க ஃபிட்ஸ் ஏர் எதிர்பார்க்கிறது. இருப்பினும், இது அக்காலத்தில் நிலவும் சூழ்நிலையையும் எதிர்கால நிகழ்வுகளையும் பொறுத்தே அமையும் என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T16:44:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை தொடர்ந்து மகிந்த குடும்பத்தின் பகடைக்காயாக மாறியுள்ள அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-gods-for-the-rajapaksa-family-1789309240"></link>
            <id>https://ibctamil.com/article/three-gods-for-the-rajapaksa-family-1789309240</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்று குழுக்களும் இப்போது அக்குடும்பத்தின் மீட்பர்களாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளிகள் அனைவரும் ஒன்று கூடி, நேற்று (12) அனுராதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை அழைத்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>ராஜபக்ச குடும்பத்தின் முன்னைய பகடைக்காய்கள்</h2><p>பிரபாகரன் தனது கடவுள் என்று அவர் அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbd002d-f437-480c-8f55-ac96c1f23fde/26-6aa6b13a3a578.webp' /></p><p>இதற்கு முன்பு, கருணாவும் பிள்ளையானும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர். </p><p>பிரபாகரனைக் கடவுள் என்று பிரகடனம் செய்த அர்ச்சுன ராமநாதனும், மஹிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு, இந்த நாட்டு மக்களுக்கு ஒரு புதிய அரசியல் கண்ணோட்டத்திற்கான சிறந்த சான்றை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்&nbsp; என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T16:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் வருகிறது 22 ஆவது திருத்த சட்டமூலம் : எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-to-be-presented-to-parliament-1789313312"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-to-be-presented-to-parliament-1789313312</id>
            <summary type="text">இருபத்திரண்டாவது அரசியலமைப்பு (திருத்த) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையை சபாநாயகர் 22ஆம் திகதி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இருபத்திரண்டாவது அரசியலமைப்பு (திருத்த) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையை சபாநாயகர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பெறப்பட்ட சுமார் 70 மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது.</p><h2>ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு</h2><p>&nbsp; இதற்கிடையில், இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறும் இரண்டு நாட்களிலும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதர பயணங்களைத் தவிர்த்து கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3419a3bf-5e5b-4888-8bc4-2f6a7b4bfa25/26-6aa6c9d7964c7.webp' /></p><p>

மேலும், அந்த நாட்களில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தை 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்த நாடாளுமன்ற விவகாரக் குழு, 10 ஆம் திகதி, வியாழக்கிழமை அன்று முடிவு செய்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T16:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அச்சக பிரிவில் பணியாற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/piyankara-assigned-to-prison-printing-unit-1789311605"></link>
            <id>https://ibctamil.com/article/piyankara-assigned-to-prison-printing-unit-1789311605</id>
            <summary type="text">சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, சிறையின் அச்சுப் பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, சிறையின் அச்சுப் பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
சிறைத்தண்டனை விதிக்கப்படும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதன் அச்சுப் பிரிவிற்கே நியமிக்கப்படுகின்றனர்.</p><h2>14 ஆண்டுகள் சிறைத் தண்டனை&nbsp;</h2><p>கொழும்பு மே தின அணிவகுப்பில் (2014) பங்கேற்ற ஆனமடுவ தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் குழுவினருக்கும், தனது அரசியல் ஆதரவாளர்கள் குழுவினருக்கும் மாரவிலவில் உள்ள ஒரு விடுதியில் விருந்து அளித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவிற்கு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கப்பட வேண்டும்) விதித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6035b9a-6520-4a27-9401-8f5bdc9bff49/26-6aa6ba7832062.webp' /></p><p>
</p><p>
2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபா பணத்தை செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, குறித்த செயலை செய்வதற்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p></p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T15:00:13+00:00</updated>
        </entry>
    </feed>
