<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T10:46:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகையை நிராகரித்தது நேபாள அரசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809</id>
            <summary type="text">இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச நிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. </p><p>இருப்பினும், சர்வதேச நிதி உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிட நேபாள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டு மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சகம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மீட்புக் குழுக்கள்&nbsp;</h2><p>2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் போது 34 நாடுகளைச் சேர்ந்த 76 இற்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்திற்கு வந்தன. </p><p>இதனால் விமான நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வெவ்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய குழப்பமும் முரண்பாடுகளும் உருவாயின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3924154c-454c-4309-acc3-b4080a3b11ac/26-6a92b388b3bc9.webp' /></p><p>அந்த அனுபவத்தை மனதில் கொண்டே இம்முறை உள்நாட்டுப் படைகளை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>வெளிநாட்டு உதவிகள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பிரதமரின் நிவாரண நிதி என்ற ஒற்றைச் சாளர முறைமை மூலமாக மட்டுமே நிதி உதவிகளைப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>சுரங்கப்பாதை மீட்பு, தற்காலிக பாலங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற விசேட தொழில்நுட்ப உதவிகளுக்கு மட்டும் இந்தியாவிடமிருந்து நேபாளம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T10:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-monitoring-iran-oil-tankers-near-srilanka-eez-1787991223"></link>
            <id>https://ibctamil.com/article/govt-monitoring-iran-oil-tankers-near-srilanka-eez-1787991223</id>
            <summary type="text">இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். </p><p>எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். </p><p>

தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடற்படைத் தடை&nbsp;</h2><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba9babec-f3eb-4b97-8133-0b5e008a5167/26-6a92b08baddd3.webp' /></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் கூறுகிறது. </p><p>

எனினும் குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>ஐரிஷ் டேனா கப்பல் மீது தாக்குதல்&nbsp;</h2><p>

கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c69c000b-9cf2-4a82-a83e-b2a1ae158e26/26-6a92b08c5cfa2.webp' /></p><p> </p><p>

எனினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-outside-sl-high-commission-in-london-1787986588"></link>
            <id>https://ibctamil.com/article/protest-outside-sl-high-commission-in-london-1787986588</id>
            <summary type="text">லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த போராட்டமானது சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (28.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பொறுப்புக்கூறல்&nbsp;</h2><p>ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரித்தானிய அரசு இந்த விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10991be-9ac7-43ea-ba7c-a41cd33fa1d6/26-6a92a09676604.webp' /></p><p>இதன்போது சர்வதேச நாடுகளின் கவனம் தேவை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நிற்கின்றோம், உண்மை, நீதி மற்றும் மாண்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/major-change-in-the-weather-in-sept-and-oct-in-sl-1787985307"></link>
            <id>https://ibctamil.com/article/major-change-in-the-weather-in-sept-and-oct-in-sl-1787985307</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி, அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழைக்கு வழிவகுக்கும் என&nbsp;முன்னாள் புவியியல் துறை பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p>ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகளவு வெப்பநிலை</h2><p>அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகின்றது.</p><p>அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்தப் பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b856462-8658-4513-bf34-8ad8ac9b34b7/26-6a929145ef90a.webp' /></p><p>படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளது.
</p><p>
புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகின்றது.</p><p>இதனால் நீர்நிலைகள் வற்றுவதுடன், விலங்குகள் மற்றும் விவசாயத் துறையும் பாதிக்கப்படக்கூடும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.</p><p>நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். </p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தப் பேரிடர் குறித்து நேபாளத்துக்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காததால் தான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் மறுத்துள்ளது.
</p><p>
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சீனத் தூதரகம் இந்தத் தகவல்களைப் போலியானவை என்று கூறி&nbsp; "ஆகஸ்ட் 26-ஆம் திகதி&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவால் நிலச்சரிவு ஏற்பட்டது. </p><p>இதில் பலர் உயிரிழந்ததுடன் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீண்டும் வெள்ளப்பெருக்கு</h2><p>இதேவேளை, வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825bd583-d60e-4f38-8e14-ba7832b0f9db/26-6a928ab956f99.webp' /></p><p>நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய ஏரியில்&nbsp; சுமார் 20 இலட்சம் கனமீற்றர் நீர் காணப்பட்டதாகவும், அடுத்த மூன்று நாட்களில் இது 50 இலட்சம் கனமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தால், நேபாளத்தில் மீண்டும் பாரிய பேரிடர் ஏற்படக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.</p><p></p><h2>காணாமல் போயுள்ளனர்&nbsp;</h2><p>நேபாளத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 579 பேர் உயிரிழந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 2,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இது முந்தைய மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்&nbsp; என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b33180b-73e0-40a6-8561-f29cd46f8eb0/26-6a928aba13106.webp' /></p><p>நேபாளம் மற்றும் சீனாவில் 90 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், நேபாளத்தில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர்</p><p>இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296"></link>
            <id>https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296</id>
            <summary type="text">நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நேற்று (28) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p>மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4438af-c76b-48c7-8c64-564df89f4184/26-6a928c4b76026.webp' /></p><p> தங்காலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தடுத்த இளம் வீரர் - பாராட்டிய கௌதம் கம்பீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gautam-gambhir-special-shoutout-to-sonal-dinusha-1787987434"></link>
            <id>https://ibctamil.com/article/gautam-gambhir-special-shoutout-to-sonal-dinusha-1787987434</id>
            <summary type="text">இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம். </p><p>இவை அனைத்தையும் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார் எனப் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>முழுமையாக வெல்லும் வாய்ப்பு&nbsp;</h2><p>இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d5f835-9ea5-48cf-89de-adad18761d96/26-6a9289087253a.webp' /></p><p>இந்தத் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தது. </p><p>அதனை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார் இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ. </p><p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 100 மற்றும் 84 ஓட்டங்கள் குவித்த சொனல் தினுஷ, இரண்டாவது டெஸ்ட்டில் 103 மற்றும் 133* ஓட்டங்கள் பெற்றிருந்தார்.</p><p>

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதிவரைப் போராடிய இந்திய அணியின் மன வலிமையை பாராட்டுவதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-election-commission-1787986949"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-election-commission-1787986949</id>
            <summary type="text">பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். </p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.</p><p></p><h2>&nbsp;சட்ட மாஅதிபர் திணைக்களம்</h2><p> </p><p>பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1d37af-dbbe-4fda-be74-f78deaab8328/26-6a9287b378c3c.webp' /></p><p>
</p><p>

முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். </p><p>மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.</p><p></p><h2>&nbsp;நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம்&nbsp;</h2><p> </p><p>ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.</p><p>தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a8d2bb-04bb-402e-ad6b-3bb3fe596d17/26-6a9287b4324ef.webp' /></p><p>நாடாளுமன்ற செயற்குழு விரைவான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம்.

பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் செயற்குழு முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு அதற்குரிய யோசனைகளை முன்வைத்துள்ளோம். </p><p>தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் யோசனைகளை முன்வைப்போம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/short-eats-prices-change-from-today-midnight-1787983025"></link>
            <id>https://ibctamil.com/article/short-eats-prices-change-from-today-midnight-1787983025</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. </p><p>அதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>புதிய விலைகள்&nbsp;</h2><p>இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு&nbsp;இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf62e2eb-94a6-434b-accc-b0b4f6283ed3/26-6a92799e2abc2.webp' /></p><p> </p><p>இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sUN9uSd2NNA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க வீட்டிற்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-team-visits-ravi-k-house-1787983969"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-team-visits-ravi-k-house-1787983969</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. 

நாடாளுமன்ற வீதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. </p><p>

நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கே இவ்வாறு அதிகாரிகள் குழு சென்றுள்ளது.</p><p>இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>குழுவின் அதிகாரிகள்</h2><p>இருப்பினும் அவர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a271ac8e-b1fd-4d28-b607-d6539199ab79/26-6a927ddea40b4.webp' /></p><p>
இதனால் இன்று (29-08-2026) அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787983872"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787983872</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>சிம்ம ராசி பலன்</h2><p>பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9320c062-357e-4f26-a7c3-a2c0f5bea96e/26-6a927a462fd23.webp' /></p><p>கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.</p><p>

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். </p><p>கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற் கான முயற்சிகளில் ஈடுபடலாம். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வாடிக்கையாளர் களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
</p><p>
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.</p><p></p><h2>தனுசு ராசி பலன்&nbsp;</h2><p>பண வரவுக்குக் குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e307147-778f-4493-ada5-07a46540efc1/26-6a927a46e3950.webp' /></p><p>சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. நீதிமன்ற வழக்குகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.</p><p>

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும். </p><p>சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். </p><p>புதிய முதலீடுகள் விஷயத்தில் நன்றாக யோசித்து இறங்கவும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குக் குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.</p><h2>மகர ராசி பலன்&nbsp;</h2><p>எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவு கள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து திரு மணம் கூடி வரும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93acc4e5-936d-45d1-9a56-77dc3cc5ee3c/26-6a927a479d163.webp' /></p><p>வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். </p><p>நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். நிர்வாகத்தினரிடம் கேட்ட கடனுதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தி தருவதாக இருக்கும். </p><p>பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சலுகைகளும் கிடைக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை! கடற்றொழிலாளர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-warning-issued-for-rough-seas-in-sri-lanka-1787981993"></link>
            <id>https://ibctamil.com/article/amber-warning-issued-for-rough-seas-in-sri-lanka-1787981993</id>
            <summary type="text">காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-07-2026) காலை விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில்&nbsp;காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அத்தோடு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a36b31-33a0-4205-9e4d-bd1126219179/26-6a92779b6abca.webp' /></p><p>இதனுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடலலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன்காரணமாக, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா.... பொதுமக்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/garbage-piled-up-on-jaffna-hospital-road-jaffna-mc-1787978848"></link>
            <id>https://ibctamil.com/article/garbage-piled-up-on-jaffna-hospital-road-jaffna-mc-1787978848</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் 
யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் 
யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த பகுதி பொறுப்பு வாய்ந்தவர்களால் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதியிலுள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் குப்பைகளைச் சேகரிப்பதற்காக வருவதில்லை எனவும் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கழிவு நீரை வடிகால்களுக்குள் விடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

மாநகர சபைக்கு பல தடவை அறிவித்திருந்தும் சுத்திகரிப்பு பணியாளர்கள் குப்பையகற்றுவதற்காக 3 மாதங்களுக்கு மேல் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
வடிகால்களில் குப்பைகள் தேங்கியிருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இரவில் நுளம்புத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த விடயம் குறித்து ஐபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்கள் இந்த விடயங்களை தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளயில் காண்க...&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PxdiUKygdnw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள்பயணம் மாநாடு : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conference-on-enforced-disappearances-in-jaffna-1787980633"></link>
            <id>https://ibctamil.com/article/conference-on-enforced-disappearances-in-jaffna-1787980633</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; மாநாட்டிற்கு முழுமையான ஆத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்துள்ளார்.</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (30) “நீதிக்கான நீள் பயணம்“ மாநாடும் அதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள&nbsp;பாரிய பேரணிக்கும் ஆதரவு வழங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பல ஆண்டுகளாக போராடும் உறவுகள்&nbsp;</h2><p> </p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல், உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d419fb5-9bc0-4950-b156-38ed96126ac7/26-6a9271d576870.webp' /></p><p>இந்தநிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.</p><p>அந்தவகையில், எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (30)&nbsp; 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும் வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது ஆதரவு தொடரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2926312f-8a67-43b4-a008-e10c87a83d14/26-6a9271d4bd3d3.webp' /></p><p>அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது.</p><p>எனவே பேரன்புமிக்க தமிழ் சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல் ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AUWjiJXjOcM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T05:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அராங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-government-set-for-major-cabinet-reshuffle-1787979955"></link>
            <id>https://ibctamil.com/article/npp-government-set-for-major-cabinet-reshuffle-1787979955</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதனடிப்படையில் அமைச்சர் விஜித ஹேரத் கட்சியின் மூத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கும் முக்கியமான அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>அமைச்சர்களின் பொறுப்பு</h2><p>


அதற்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75176f89-02c4-4599-8340-fb79a4fcd169/26-6a926d48a09d3.webp' /></p><p>
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் தேசியப் பட்டியல் முஸ்லிம் அரசியல்வாதியொருவருக்கும் வடமாகாணத்தின் தமிழ் இளம் அரசியல்வாதியொருவருக்கும் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை அண்மித்ததாக குறித்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T05:30:25+00:00</updated>
        </entry>
    </feed>
