<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-05T08:19:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூட்டம் கூட்டமாக நடமாடித் திரியும் மான்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-tourists-visiting-trincomalee-1785914864"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-tourists-visiting-trincomalee-1785914864</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்கா முக்கிய பங்காற்றுகின்றது</p><p></p><h2>சுற்றுலாப்பயணிகள்</h2><p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ac9b2c-cf7b-4630-9762-f0398f76d642/26-6a72ececf150a.webp' />&nbsp;&nbsp;</p><p>
மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும். இந்த மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.</p><p>இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.&nbsp;&nbsp;</p><p>

மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.</p><p> இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:57:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785910521"></link>
            <id>https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785910521</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-08-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><h2>மேலதிக அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c22b00f-b131-4ff4-8674-2a059cdc9655/26-6a72d83b47c92.webp' /></p><p>புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
</p><p>
 

எனவே, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T07:08:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413"></link>
            <id>https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413</id>
            <summary type="text">முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (05) அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தன்னிசை்சையாக திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-spillway-gates-upper-kotmale-reservoir-opened-1785911490"></link>
            <id>https://ibctamil.com/article/3-spillway-gates-upper-kotmale-reservoir-opened-1785911490</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.இதனால் அதன் மூன்று வான் கதவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>இதனால் அதன் மூன்று வான் கதவுகள் இன்று (05.08.2026) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீர்த்தேக்கத்திற்கு பெருமளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த வான் கதவுகள் தானாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>3 வான் கதவுகள் தன்னிச்சையாக திறப்பு</h2><p>அதன்படி, திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வான் கதவிலிருந்தும் வினாடிக்கு சுமார் 30 கன மீற்றர் வீதம் நீர் கொத்மலை ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b590f5-3d32-45c2-89dc-3d7fece8f013/26-6a72ddb664390.webp' /></p><p>மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடித்தால், நீர்த்தேக்கத்தின் எஞ்சியுள்ள வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படக்கூடும் என பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இதையடுத்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் பாயும் கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் ஆற்றை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயரக்கூடிய சாத்தியம் இருப்பதால், ஆற்றைக் கடக்கும் நடவடிக்கைகள், நீராடுதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் வழங்கும் மேலதிக பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது குண்டு வீச்சு : பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-ratmalana-1785905124"></link>
            <id>https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-ratmalana-1785905124</id>
            <summary type="text">புதிய இணைப்புஇரத்மாலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இரத்மாலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
 

இந்தத் தாக்குதலினால் எவருக்கும் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3457b4ac-954b-4796-973b-26102c4f0dbf/26-6a72d9cae9310.webp' /></p><p>தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.</p><p>
 

ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள குறித்த வீட்டின் மீது இன்று (05) அதிகாலை இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> 

 

எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித காயமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e2f2df-16b4-4f7c-b96b-91c76a26aa78/26-6a72c7ed14221.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதேவேளை தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதா... விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/outsiders-cooperation-in-mahara-prison-conflict-1785908008"></link>
            <id>https://ibctamil.com/article/outsiders-cooperation-in-mahara-prison-conflict-1785908008</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 03.45 மணியவில் மூன்று கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.</p><p></p><h2>சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம்&nbsp;</h2><p> </p><p>சிறைச்சாலையின் காவலர் அந்த இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.


இவ்வாறான நிலையில் ஒரே நேரத்தில் அவ்விடத்தில் 1,000 பேர் அளவிலான கைதிகள் ஒன்றுக்கூடி கூச்சலிட்டு கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்கள்.</p><p>

நிலைமையை உணர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள். சிறைச்சாலையில் இருந்த ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏனைய பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைத்ததன் பின்னர் பிரதான இரும்பு கதவுகளை முடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac986e7-6ad3-4a77-93bf-c339404296db/26-6a72d4263723d.webp' /></p><p> இதன் பின்னர் கைதிகள் இரும்பு கதவின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

 சிறைச்சாலையின் சமையல் அறை, உணவு உண்ணும் இடம், வைத்தியசாலை, பதிவு பிரிவு, அலுவலகம் ஆகிய பகுதிகளை கைதிகள் சேதப்படுத்தியுள்ளார்கள். தீ வைத்துள்ளார்கள்.</p><p>இவ்வாறான பின்னணியில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலையும், மஹர சிறைச்சாலை மோதலையும் ஒன்றாக கருத முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை.</p><p></p><h2>போராட்டத்துக்கான காரணம்</h2><p>மூன்று கைதிகள் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன் பின்னர் போராட்டம் தோற்றம் பெற்றது. இந்த போராட்டத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.</p><p>மஹர சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கூண்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை தான் இலக்காக் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee22923-920a-4006-8095-a4e74c7941e7/26-6a72d42705130.webp' /></p><p>ஒரே கட்டத்தில் 1,000 பேர் ஒரு இடத்தில் ஒன்றுகூடியது சந்தேகத்துக்குரியது. திட்டமிட்ட செயற்பாடுகள் ஊடாக மஹர சிறைச்சாலையின் கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சித்துள்ளார்கள்.</p><p>மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் காணப்படுகிறது. அது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைத்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தற்போது உணவு வழங்கப்படுகிறது.

சிறைச்சாலையின் சொத்துகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது</h2><p> </p><p>இது மக்களின் வரிப்பணம் என்பதை கைதிகள் உறவுகள் விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொண்டே மீண்டும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும். தமக்கான வசதிகளையே இவர்கள் இல்லாதொழித்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d5f3329-fbf1-4269-8a17-ae92990e72b7/26-6a72d427a8a20.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு எனது தலைமைத்துவத்தில் அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>சிறைச்சாலை மோதல் ஒரு அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>


மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் சிறைச்சாலை திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.</p><p></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vtSsSfeKoY0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T06:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/level-2-landslide-warnings-extended-four-districts-1785905540"></link>
            <id>https://ibctamil.com/article/level-2-landslide-warnings-extended-four-districts-1785905540</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலை 2 (மஞ்சள்) நிலச்சரிவு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.</p><p>

இந்த எச்சரிக்கை இன்று (05.08.2026) காலை 9.00 மணி முதல் நாளை (06.08.2026) காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கண்டி மாவட்டத்தில் உடதும்பர, கங்கை இஹல கோரளை, தெல்தோட்டை, பஸ்பாகே கோரளை, டோலுவ, மெடதும்பர, பன்வில மற்றும் உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>

அதேபோன்று, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59bb3ee-5665-44ea-a672-30142984d2ba/26-6a72d11adbec2.webp' /></p><p>
</p><p>
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, அம்பகமுவ, நோர்வூட், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் நிலை 2 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) நிலச்சரிவு எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமலில் உள்ளது.</p><p>தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் மலைச்சரிவுகள், பாறை சரிவுகள், மண்சரிவுகள் மற்றும் திடீர் மண் இடிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த விலை - திறக்கும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-prices-fall-on-hopes-strait-of-hormuz-reopen-1785902170"></link>
            <id>https://ibctamil.com/article/oil-prices-fall-on-hopes-strait-of-hormuz-reopen-1785902170</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் <a href="https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388" target="_blank">நீரிணையை</a> மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளன. </p><p>

 

அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலராகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்</h2><p>
</p><p>
 

குறுகிய காலத்தில் ஹோர்முஸ் வழியாக மேலும் பல கப்பல்கள் எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து ஓமான் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15594521-0eb8-4f78-9731-865591ba2090/26-6a72bbc8589d8.webp' /></p><p>பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறையில் செய்தியாளர்களிடம் ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோக அபாயங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-foreign-secretary-vikram-misri-arrives-sl-1785908889"></link>
            <id>https://ibctamil.com/article/indian-foreign-secretary-vikram-misri-arrives-sl-1785908889</id>
            <summary type="text">உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.அவரை விமான நிலையத்தில் வைத்து&amp;nbsp;இன்று (5) புதன்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.</p><p>அவரை விமான நிலையத்தில் வைத்து&nbsp;இன்று (5) புதன்கிழமை காலை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றுள்ளார்.</p><p>
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம் முழுவதும் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட சந்திப்பு</h2><p>இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய ஒத்துழைப்புத் துறைகளையும் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a739793a-1ff6-4d02-ac11-d30f44767167/26-6a72d1c7b9a14.webp' /></p><p> </p><p>மேலும் தனது பயணத்தின் போது, ​​இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜய ஹெரத் உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414</id>
            <summary type="text">பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் இன்று அதிகாலை (05) கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில்&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முற்றிலுமாக எரிந்து நாசம்</h2><p>



</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e1bef4-6bd2-4ec4-ad93-86456ea2050f/26-6a72b7a7de023.webp' /></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.</p><p>
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் ஆடம்பர பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p>தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கடுவெல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்தேக வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கடுவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று - செயலகம் வந்தடைந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/first-budget-of-tvk-government-led-by-cm-vijay-1785904702"></link>
            <id>https://ibctamil.com/article/first-budget-of-tvk-government-led-by-cm-vijay-1785904702</id>
            <summary type="text">2026 - 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.&amp;nbsp;முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.&nbsp;</p><p>முதல்வர் <a href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765" target="_blank">விஜய்</a> தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் <a href="https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693" target="_blank">உதயநிதி ஸ்டாலின்</a>, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வருகை செய்துள்ளனர்</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fcbe8b-4e8d-4720-bc7e-b06236ff1403/26-6a72c19c702ce.webp' /></p><p>மற்றும் அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p>தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், தவெகவின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:41:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவத்தகமவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teenager-dies-in-motorcycle-accident-sri-lanka-1785902995"></link>
            <id>https://ibctamil.com/article/teenager-dies-in-motorcycle-accident-sri-lanka-1785902995</id>
            <summary type="text">மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந்துள்ளது.&nbsp;</p><p>
 

மாவத்தகமவிலிருந்து அகஸ்யனபிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>இளைஞன் பலி&nbsp;</h2><p>
</p><p>விபத்துக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4883c54c-e8fa-4fa5-bd72-95f58e75565a/26-6a72be1145023.webp' /></p><p>
</p><p>இதன் பின்னர் குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த பயணிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p>
 

இச்சம்பவம் குறித்து மாவத்தகம காவல்துறை&nbsp; மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் : கிடைத்த அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-amendments-to-epf-act-1785902912"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-amendments-to-epf-act-1785902912</id>
            <summary type="text">ஊழியர் சேமலாப நிதிய (Employees Provident Fund - EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தனியார் மற்றும் பகுதியளவு அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமலாப நிதிய (Employees Provident Fund - EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இலங்கை மத்திய வங்கி</h2><p>இந்தநிலையில், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, தரமானதும் திறன்மிக்கதுமான சேவைகளை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53894ec-0fb2-4c10-9703-0862673a2d0d/26-6a72be824e18b.webp' /></p><p>
</p><p>
இதற்கான முன்மொழிவுகளை இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவைத் தயாரித்துள்ளது.
</p><p>
அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்&amp;nbsp;பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த பரீட்சை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்&nbsp;பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில் இந்தத் தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்கள்</h2><p>
 

இக்காலப்பகுதியில், பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பரப்புரை செய்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43a3877-5ee8-4c22-beb1-8732bb2275dd/26-6a72b4d2722e7.webp' /></p><p>
</p><p>
 

மேலும், பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெறும் வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ குறிப்பிட்டு சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல், அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
</p><p>
 

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/45B71ZXyg78" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390"></link>
            <id>https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&amp;nbsp;பிரதேச வைத்தியசாலையில்&amp;nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&amp;nbsp;இடம்பெறவுள்ளது.இன்று (05) காலை10மணி மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&nbsp;பிரதேச வைத்தியசாலையில்&nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&nbsp;இடம்பெறவுள்ளது.</p><p>இன்று (05) காலை10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி நிகழ்விற்கு அனைவரையும் வருகை தருமாறு சங்கானை - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>வேல்ட் விசன் அனுசரணையுடன் சங்கானை சுகாதார அதிகாரி பணிமனை நடாத்தும் “Enough போசாக்கு“ கண்காட்சியில் தன்னிறைவான சுயசார்பு பொருளாதாரத்துடன் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு உணவுகள் காட்சிப்படுத்தப்படும்.</p><h2>சுகாதார அமைச்சு</h2><p>இதன்போது எமது சுகவாழ்விற்கு ஆரோக்கியமான சிறுதானிய, பனைசார், கடல்சார், மரக்கறி இலைவகைசார், பாற்பொருட்கள்சார் உணவுகளை தயாரிப்பது எவ்வண்ணம் என விளக்கும் செயன்முறை சமையற்கலை கூடங்கள், சுகவாழ்வுத்தோட்டம், சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி, பாடசாலை சிற்றுண்டிச்சாலை விபரணத்துடன் கூடிய போசாக்கு கண்காட்சியைப் பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a603ff-48f5-492f-a830-85a0f258c8bd/26-6a72b3ce52530.webp' /></p><p>சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதம் பரப்புரைக்கு அமைவாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைக் கொள்கையின் கீழ் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நிகழ்சில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T03:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கோவில் வீதியில் போக்குவரத்து தடை - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456"></link>
            <id>https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள <a href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985" target="_blank">நல்லூர் கந்தசுவாமி </a>ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் இன்றைய தினம் (05.08.2026) புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை யாழ் மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, நாளைய தினம் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0961a81-ff77-469d-ab96-f9d35fc7029a/26-6a72a5dfc1a2b.webp' /></p><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய
அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.
</p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929"></link>
            <id>https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929</id>
            <summary type="text">ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் <a href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464" target="_blank">பாடசாலை</a>களையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507" target="_blank">வானிலை </a>காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை,&nbsp;கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விசேட ஆலோசனை</h2><p>

 

நிலவிய பலத்த மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7fc109-3167-4a25-8978-d0a8e2cdae14/26-6a729bfb183d2.webp' /></p><p>இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:07+00:00</updated>
        </entry>
    </feed>
