<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-03T23:19:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் பதவி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskiy-dismissed-ukraine-s-ambassador-to-us-1785794355"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskiy-dismissed-ukraine-s-ambassador-to-us-1785794355</id>
            <summary type="text">

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்.
</p><p>
உக்ரைனில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்பட்டது உட்பட உயர் அதிகாரிகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது குறித்து பதிவொன்றை ஸ்டெஃபனிஷினா, இது தனிப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்பட்ட தனது சொந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சொத்து அறிக்கையில் முறைகேடுகள் </h2><p> </p><p>

அமெரிக்காவின் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இல்லாத தருணத்திலும் அமெரிக்க ஆயுதங்களின் விநியோகத்தை அதிகரித்து ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டது வரை, தனது பதவிக் காலத்தில் பல சாதனைகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3500d08-0725-454b-88ab-4b15942a9e07/26-6a7114ab09bd0.webp' /></p><p>
முன்னதாக, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதவி விலகலை கோரவில்லை என்று ஸ்டெஃபனிஷினா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். </p><p>

இருப்பினும், அவரது சொத்து விவர அறிவிப்பில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கடந்த மாதமே பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை அவர் தெரிவித்திருந்ததாக உக்ரைனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T22:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pentagon-presented-plan-to-trump-escalate-war-iran-1785790198"></link>
            <id>https://ibctamil.com/article/pentagon-presented-plan-to-trump-escalate-war-iran-1785790198</id>
            <summary type="text">

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை விட இது மிகவும் பெரிய அளவிலான தாக்குதலாக இருந்திருக்கும் என்றும், இதனால் மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகே, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய இந்தத் தீவிரத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுக்கான நிபந்தனைகள்</h2><p>
</p><p>
இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac88e6c4-7cce-4a28-bb86-5f3beea48981/26-6a71022a4b07a.webp' /></p><p><i>Image Credit: PRIO</i></p><p> </p><p>

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதும், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை நிறுத்துவதுமே ஈரான் செய்ய வேண்டிய சரியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T21:24:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு! ட்ரம்பின் புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-declared-that-this-is-iran-s-last-chance-1785784149"></link>
            <id>https://ibctamil.com/article/trump-declared-that-this-is-iran-s-last-chance-1785784149</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
வளைகுடா நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலும் ஒரு வாய்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல நாடுகள் தன்னிடம் தொடர்பு கொண்டு ஈரானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டதுடன், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a892580c-4f7f-40f3-9f47-174416f8c39d/26-6a70e9dfcaf85.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
Al Jazeera</i></p><p>

ஏற்கனவே பலமுறை தாக்குதல்களைத் தள்ளிவைத்த நிலையில் இந்த முறை என்ன வித்தியாசம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இறுதி நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிவிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை திறப்பு</h2><p>

இதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகச் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764d9ed6-b84e-4918-bb59-cd02a1c3f22b/26-6a70e9df1a2ef.webp' /></p><p>

அத்தோடு, பல மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவரது நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், இந்த விவகாரம் அவ்வளவு சிக்கலானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T20:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவுக்கு பேரிடி! உக்ரைனுக்கான ஆதரவை சீரமைக்க தொடங்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/useucom-to-reorganize-security-assistance-ukraine-1785787295"></link>
            <id>https://ibctamil.com/article/useucom-to-reorganize-security-assistance-ukraine-1785787295</id>
            <summary type="text">உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிக் குழுவை (SAG-U) மறுசீரமைத்து, அதன் பொறுப்புகளை நேட்டோவின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் பயிற்சி அமைப்புடன் (NSATU...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிக் குழுவை (SAG-U) மறுசீரமைத்து, அதன் பொறுப்புகளை நேட்டோவின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் பயிற்சி அமைப்புடன் (NSATU) இணைக்கப்போவதாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளைப் பிரிவு (USEUCOM) அறிவித்துள்ளது.</p><p>
இந்த மறுசீரமைப்பு உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பாதுகாப்பு உதவியின் செயல்திறனை அதிகரிப்பது, முக்கியப் பணிகளின் தலைமைப் பொறுப்பை நட்பு நாடுகளிடம் ஒப்படைப்பது மற்றும் பிற உலகளாவிய முன்னுரிமைகளுக்காக அமெரிக்க வளங்களை விடுவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p></p><h2>உக்ரைனில் நீடித்த அமைதி</h2><p>
</p><p>
உக்ரைனின் பாதுகாப்பில் நட்பு நாடுகள் தலைமைத் தாங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த USEUCOM தளபதி ஜெனரல் அலெக்சஸ் ஜி. கிரின்கேவிச், SAG-U எப்போதுமே ஒரு தற்காலிக அமைப்பாகவே திட்டமிடப்பட்டது என்றும், இந்த மாற்றம் உக்ரைனில் நீடித்த அமைதியை ஏற்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce978fa-9df6-4041-a2e9-39770b77976c/26-6a70f8ac7a7d6.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Vox</i></p><p>
</p><p>
ரஷ்யாவின் போருக்கு எதிர்ப்ப தெரிவித்து வரும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் கடந்த ஆண்டில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு கணிசமாக விரிவடைந்துள்ளது. </p><p>

2022 நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்ட SAG-U அமைப்பு, இதுவரை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கி, பயிற்சி மற்றும் இராணுவ உபகரணங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T20:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/office-restructuring-salaries-and-pensions-govt-1785781463"></link>
            <id>https://ibctamil.com/article/office-restructuring-salaries-and-pensions-govt-1785781463</id>
            <summary type="text">அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் நாளை திறக்கப்படவுள்ளது.
</p><p>
இதன்படி, நாளையதினம்(04) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு 07, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p><p>

2026 ஜூன் 22 ஆம் திகதியிடப்பட்ட 2494/ 05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆணைக்குழுவின் முக்கிய நோக்கங்கள்</h2><p>
</p><p>
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரச ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவையில் எவ்வாறான கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e0d9ab-3a9f-4579-9690-9a710bad81fb/26-6a70dff86d5e5.webp' /></p><p>
</p><p>
இந்த நோக்கங்களை அடைவதற்காக தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கோரும் நடவடிக்கையும் செவ்வாய்க்கிழமை (04) உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T18:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து எத்தியோப்பாவில் கடத்தப்பட்ட வடபகுதி இளைஞர்கள் :சூத்திரதாரி வன்னியில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankans-kidnapped-in-ethiopia-fake-canada-job-1785775495"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankans-kidnapped-in-ethiopia-fake-canada-job-1785775495</id>
            <summary type="text">கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.</p><p>

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாய் வழியாக எத்தியோப்பியாவுக்குப் பயணம் செய்த மூன்று நபர்களை, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வெளிநாட்டுக் குற்றக் குழு கடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மே 27 அன்று இந்த வழக்கு பதிவானது.</p><h2>சந்தேக நபருக்கு கொடுக்கப்பட்ட பணம்</h2><p>&nbsp;சிஐடியின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சந்தேக நபருக்கு சுமார் ரூ. 64 லட்சம் செலுத்தியமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc8ee901-c40c-4b6f-8901-2489a931ba48/26-6a70dbcfe554e.webp' /></p><p>மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க பணம் தேவை என்று கூறி, சந்தேக நபர் அவர்களின் உறவினர்களிடமிருந்து சுமார் ரூ. 20 மில்லியன் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சந்தேக நபருக்கும் கடத்தலுக்குப் பொறுப்பான வெளிநாட்டுக் குழுவிற்கும் இடையே உள்ள தொடர்புகளையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது</h2><p>&nbsp;சந்தேக நபர் பின்னர் வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a718f7c4-a02a-4dff-b84c-720e8def83b0/26-6a70dbd0bd47b.webp' /></p><p>&nbsp;பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அடிஸ் அபாபா காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்தது. </p><p>எத்தியோப்பிய அதிகாரிகள் ஜூன் 6 அன்று மூன்று இலங்கையர்களை மீட்டதோடு, இச்சம்பவம் தொடர்பாக நான்கு பாகிஸ்தான் நாட்டவர்களையும் ஒரு எத்தியோப்பிய நாட்டவரையும் கைது செய்தனர்.</p><p></p><h2>யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்</h2><p>26 முதல் 34 வயதுக்குட்பட்ட, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட மூவரும் ஓகஸ்ட் 1 அன்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67857351-6e1d-4b37-af4b-bad293dc37db/26-6a70dbd188978.webp' /></p><p>
</p><p>
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புடன் சந்தேக நபருக்கு உள்ள தொடர்புகளின் முழு அளவையும் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பெறுமதிமிக்க தங்க ஆபரணங்கள் திருட்டு! அதிரடியாக கைது செய்யப்பட்ட யுவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-half-pounds-of-stolen-gold-jewelry-recovered-1785779281"></link>
            <id>https://ibctamil.com/article/24-half-pounds-of-stolen-gold-jewelry-recovered-1785779281</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள்
களவாளப்பட்டுள்ளன.</p><p> இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் சம்பவம் நடத்த நேற்றையதினமே(02)&nbsp; களுவாஞ்சிகுடி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்துள்ளனர்.</p><p></p><h2>யுவதியின் கைது</h2><p>அதனைதொடர்ந்து, உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றையத்தினம் திங்கட்கிழமை(03) களவாடப்பட்ட
பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ccec8-319c-4acd-af10-e6f320c6b09f/26-6a70d757cc6d3.webp' /></p><p>அதன்படி, கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில்
முன்னிலைப் படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>


வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த
யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T18:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409</id>
            <summary type="text">




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளின் போது, ​​முதலில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>மீட்கப்பட்ட உடல்கள்</h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2aac549-ec17-42ea-8de5-a7ac279183ce/26-6a70cf3d7b8f0.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், தற்போதைய மழை நிலைமை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T17:26:27+00:00</updated>
        </entry>
    </feed>
