<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-20T00:34:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067"></link>
            <id>https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067</id>
            <summary type="text">அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மோடியிடம் கோரிக்கை</h2><p>

எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b6f523-f80c-40c1-b6c0-4fabfd49786e/26-6aaf2503a9803.webp' /></p><p>

மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-tea-meeting-with-zahran-s-brother-1789861758"></link>
            <id>https://ibctamil.com/article/a-tea-meeting-with-zahran-s-brother-1789861758</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் முக்கிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் சில உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அவை உரிய முறையில் பகிரப்பட்டனவா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். </p><p> 

CID தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, இராணுவப் புலனாய்வுடன் தொடர்புடைய தகவல் அளிப்பவர் ஒருவரிடமிருந்து சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் கிடைத்திருந்ததாகக் கூறப்பட்டது.</p><p></p><h2>தற்போது கவனம் பெற்றுள்ள விடயம்</h2><p>
</p><p>
மேலும், தாக்குதலுக்கு முன்னதாகவே சில எச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தனவா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49505cdc-913e-4fc5-8ed8-b84153fe86e8/26-6aaf223b075f2.webp' /></p><p>


இந்த விசாரணையில் தற்போது கவனம் பெற்றுள்ள மற்றொரு விடயம், அரச புலனாய்வு சேவையுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் காவல்துறை அதிகாரி ரஞ்சன் செனரத் பண்டார.
</p><p>
அதாவது அவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரை சந்தித்ததாகக் கூறப்படும் சம்பவமாகும்.</p><p>

 CID தரப்பில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் கிடைத்த பின்னர் அந்த அதிகாரி கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சஹ்ரானின் சகோதரரை சந்தித்ததாகவும், அங்கு தேநீர் அருந்திய பின்னர் திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதல்களுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினர் தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், அவருடைய நெருங்கிய உறவினரை அதிகாரி ஒருவர் சந்தித்ததன் நோக்கம் என்ன? அந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஏன் உடனடி கைது அல்லது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

 இவ்வாறான கேள்விகள் அன்று முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>குற்றப்புலனாய்வு அறிக்கை</h2><p>
</p><p>
இவை சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளாகும்.
</p><p>
இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரஞ்சன் செனரத் பண்டார விசாரணைக்கு முக்கியமான நபராக இருப்பதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>இங்கு குறிப்பாக பல வழக்குகளில் மையப்படுத்திய விடயம் என்பது உளவுத்தகவலில் பின்னணி.அப்படியானால் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் உளவுத் தகவல்கள் எந்த அளவில் கிடைத்தன?அவை எந்த அதிகாரிகளுக்கு சரியாக அனுப்பப்பட்டன? 

தகவல்கள் கிடைத்த பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சஹ்ரானின் சகோதரரை சந்தித்த அதிகாரி ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை?</p><p>
 இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களே, தற்போதைய விசாரணைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T23:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624"></link>
            <id>https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624</id>
            <summary type="text">ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ எனப்படும் இந்தச் சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்பின் கையெழுத்துடன் சட்டமாகியுள்ளது. </p><p>


இந்தச் சட்டத்தின் கீழ், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beaf7f5b-2823-4e5f-b438-ed060e6ff5f1/26-6aaef0f2c4352.webp' /></p><p>


எனினும், இந்தியா அல்லது சீனா மீது 100 சதவீத வரி தானாகவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக இந்தச் சட்டம் பொருள்படாது. </p><p>

வரி விதிக்க வேண்டிய நாடுகள், வரி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்க நிர்வாகத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>


ரஷ்ய கச்சா எண்ணெயின் முக்கிய கொள்முதல் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.</p><p> </p><p>

இதனால் புதிய அமெரிக்க சட்டத்தின் கீழ் இரு நாடுகளும் கூடுதல் வர்த்தக அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்துவதுடன், ரஷ்யாவுடன் எரிசக்தி வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-19T20:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜின்பிங்கை வரவேற்க தயாராகும் அமெரிக்கா! சீன - அமெரிக்க இராஜதந்திரத்தின் மீது உலகின் கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214</id>
            <summary type="text">ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இந்த விஜயத்தின் போது ட்ரம்ப்,&nbsp;ஷி ஜின்பிங்கை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்</h2><p>வெளிநாட்டு தலைவர்களை பொதுவாக வெள்ளை மாளிகையில் வரவேற்கும் ட்ரம்ப், இந்த முறை விமானத் தளத்திற்கே சென்று ஷி ஜின்பிங்கை வரவேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7d0fa6-ccd6-479d-8272-3f69e93e3cee/26-6aaee2c88d2f3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங், வெள்ளை மாளிகையின் Rose Garden பகுதியில் இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளனர். </p><p>பின்னர் இரு தலைவர்களும் மூடிய அறையில் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
</p><p>எனினும் இந்த சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
</p><p>இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T19:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879</id>
            <summary type="text">100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

2017ஆம் ஆண்டு பொலிவியாவில் பணியாற்றி வந்த உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் என்பவருக்கு, உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வித்தியாசமான பூனை ஒன்று குறித்து தகவல் கிடைத்துள்ளது.</p><p>
காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் பூனைக்குட்டியாக இருந்தபோது உள்ளூர் நபர் ஒருவர் அதனை மீட்டெடுத்து, வீட்டுப் பூனை என நினைத்து வளர்த்து வந்துள்ளார்.</p><p></p><h2>வித்தியாசமான&nbsp;தோற்றம் </h2><p> சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உணர்ந்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b6b5cbb-f472-48c4-98ba-98915f4f3b18/26-6aaeda349e50a.webp' /></p><p>
</p><p>
இந்த விலங்கை பார்வையிட்ட நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அதன் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார்.</p><p>சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் ஆகியவை அந்தப் பூனையின் முக்கிய தனிச்சிறப்புகளாக இருந்துள்ளன.</p><p>

“அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்தேன். நான் மிகவும் வியப்படைந்திருந்தேன்” என நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலில் இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதியுள்ளார்.</p><p></p><h2>மேற்கொள்ளப்பட்ட ஆய்வு</h2><p> இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ce61c6-3927-4f8c-b883-d5801de81a9a/26-6aaeda355796e.webp' /></p><p>
</p><p>
எனினும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விலங்கு ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது.</p><p> இதன் மூலம், 100 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு பூனை குடும்பத்தில் புதிய இனமாக அறிவிக்கப்படும் முக்கியமான கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது.
</p><p>
இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அறிவியலுக்கு முற்றிலும் புதிய ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக வனவிலங்கு ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:53:50+00:00</updated>
        </entry>
    </feed>
