<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-09T18:16:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு தொடர்ந்தும் சிறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-s-ex-secretary-remanded-again-1788975959"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-s-ex-secretary-remanded-again-1788975959</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(09) இந்த உத்தரவை விடுத்துள்ளார்.</p><p></p><h2>கைதுக்கான காரணம்&nbsp;</h2><p>
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கான ஊதியத்தைப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02afed0-0f65-4660-948e-88949cfdbcf1/26-6aa19cc76fe89.webp' /></p><p>
</p><p>
இன்றைய வழக்கு விசாரணையின் போது, அவருக்கு பிணை வழங்குவதை நியாயப்படுத்தும் வகையிலான எந்தவொரு சிறப்பான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை என்று தீர்மானித்த நீதவான், அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T17:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bond-scam-case-taken-up-again-1788974757"></link>
            <id>https://ibctamil.com/article/bond-scam-case-taken-up-again-1788974757</id>
            <summary type="text">கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு எதிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய நிரந்தர அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.</p><p>

இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு முந்தைய கலந்தாய்வுக்காக இவ்வழக்கை எதிர்வரும் நவம்பர் 24-ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>முன்னிலையாகிய சந்தேகநபர்கள்</h2><p>

இன்றைய வழக்கு விசாரணையின் போது, 'பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட்' நிறுவனம், அதன் பணிப்பாளர்களான ஜெஃப்ரி அலோசியஸ், அர்ஜூன் அலோசியஸ், நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன மற்றும் புஷ்ய மித்ர குணவர்தன, சிட்ட ரஞ்சன் ஹுலுகல்லே, முத்துராஜா சுரேந்திரன், சமன் குமார ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df896c63-feec-42c9-980f-6d6f138221c9/26-6aa1995d3d01b.webp' /></p><p> </p><p>

இருப்பினும், முதன்மைச் சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் ஆறாவது சந்தேகநபர் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
கடந்த 2015-ஆம் ஆண்டு பெப்ரவரி 27-ஆம் திகதி நடைபெற்ற பிணைப்பத்திர ஏலத்தின் மூலம் அரசுக்கு 688 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு உட்பட மொத்தம் 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T17:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து தெற்கில் துப்பாக்கிசூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-wheeler-targeted-in-shooting-1788971165"></link>
            <id>https://ibctamil.com/article/three-wheeler-targeted-in-shooting-1788971165</id>
            <summary type="text">மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பயணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

 இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><h2>முச்சக்கரவண்டியை இலக்குவைத்து துப்பாக்கிசூடு</h2><p>அங்குலானை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் என தகவல் வௌியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7537eaa-64a1-4e92-a4dd-2d8aaddc1558/26-6aa18a08337f6.webp' /></p><p> </p><p>

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை காவல் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இதேவேளை நேற்றையதினம் இரவும் தென்பகுதியில் இருவேறு சூட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T16:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பயங்கரம் : நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sword-attack-in-jaffna-1788965986"></link>
            <id>https://ibctamil.com/article/sword-attack-in-jaffna-1788965986</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த
31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9)
பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த
31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9)
பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக
பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><h2>காவல்துறையின் அறிவிப்பு</h2><p>&nbsp;வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய
தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை
மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335f2ccf-3271-41e5-a7cb-19a2f263385f/26-6aa176f8ed02b.webp' /></p><p>

தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன்
தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து
வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bc726a-ee01-4047-b4eb-30f5ea7ab286/26-6aa176f8429af.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T16:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றுகிறது முறுகல் : கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-bans-dairy-products-motorcycles-from-canada-1788968299"></link>
            <id>https://ibctamil.com/article/us-bans-dairy-products-motorcycles-from-canada-1788968299</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டதால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது.
</p><p>


அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது அமெரிக்க அரசு 50% இறக்குமதி வரியை விதித்துள்ளதுடன், கனடாவின் வர்த்தக முறைகேடுகள் குறித்த அறிக்கையையும் வெளியிட்டது.</p><h2>&nbsp;தடை உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்து</h2><p>&nbsp;அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது எதிர் வரி விதிப்பதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e193f9-7bb8-43e6-a982-00a6cffb9f39/26-6aa185066dcb0.webp' /></p><p>இந்த நிலையில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>கனடா பிரதமரின் அறிவிப்பு</h2><p>இந்த இறக்குமதித் தடைகள் வரும் செப்டம்பர் 29ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. பால் மற்றும் மோட்டார் சைக்கிள் தடைகள் தவிர, கனடாவின் புகழ்பெற்ற சீஸ் வகைகளுக்கு 50% மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739338c8-db5d-4fe0-b437-c9aa60453014/26-6aa18507226bc.webp' /></p><p>&nbsp;இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் (Trade War) காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, கனடா தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படும் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-09T16:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு விவகாரம்! ராஜ்நாத் சிங்கிடம் அநுர வழங்கிய விசேட செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&amp;nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான வரலாற்று உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்காகவும் இலங்கையின் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இச்சந்திப்பின்போது ஒரு கருத்தை வெளியிட்டார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதல்நிலை மீட்பாளர்</h2><p>
தித்வா புயலின்போது 'சாகர் பந்து நடவடிக்கை'யின் கீழ் இந்தியா வழங்கிய மனிதாபிமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36431c58-c5d7-47d4-8e21-215f1530bb00/26-6aa15a8b9f3a1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், மிக நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும் ஒரு முதல்நிலை மீட்பாளராக ஆதரவளிப்பது தனது பொறுப்பு என்று கருதுவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வேன் என்றும் கூறியுள்ளார் என்றும் அறிக்கை கூறியுள்ளது.</p><p>
இரு நாடுகளின் தலைவர்களின் ஆதரவின் கீழ், இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் எல்70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் மற்றும் தேசிய மாணவர் படைக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.</p><p>

மேலும், இந்திய பாதுகாப்புப் படைகளால் கட்டப்பட்ட மூன்று பெய்லி பாலங்களும் அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T15:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோட்டியை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட, தலைமறைவான சந்தேக நபரான செல்வனேசன் ஜீசஸ் தாசன் என்ற பாலசுவை கொழும்பு குற்றப்பிரிவு முற்படுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>ஜிபிஎஸ் கருவியை அழித்த படகோட்டி</h2><p>கொழும்பு குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தபோது, ​​படகோட்டி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் நாற்பத்தேழாவது சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43947cb6-de52-4d62-aa27-b50a0f41ed31/26-6aa163036a96a.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர், படகில் இருந்த நான்கு பேரையும் நன்கு அறிந்து நாடு கடத்த ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இந்தியாவில் இறங்கிய பின்னர், படகில் சாட்சியமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அழித்திருந்தார்.</p><p></p><h2>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவி</h2><p>

சந்தேக நபர் இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவியிருந்தார், மேலும் இந்தியாவுக்குச் செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397f8287-e29b-457f-8a4d-d77c961d4287/26-6aa163041f12d.webp' /></p><p>
</p><p>
உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, சந்தேக நபரை அடுத்த பதினெட்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்தத் திகதிக்குள் விசாரணையின் முன்னேற்றத்தைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T15:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/300000-more-vehicle-number-plates-piled-up-1788963132"></link>
            <id>https://ibctamil.com/article/300000-more-vehicle-number-plates-piled-up-1788963132</id>
            <summary type="text">சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷாரா இடுனில் பெர்னாண்டோ இன்று (9) தெரிவித்தார்.</p><p>

நாரஹேன்பிட்டாவில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் இதைத் தெரிவித்தார்.</p><h2>ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் இலக்கத் தகடுகள்</h2><p>மேலும், இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், இந்த அமைப்பு இரண்டு ஷிப்டுகளாகப் பணியாற்றி, சுமார் ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் இலக்கத் தகடுகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d101e7-b042-41fe-ba06-316eead8d03d/26-6aa16e73b9f0e.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு மார்ச் 10-ஆம் திகதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சுமார் 62,000 வாகனங்களின் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுவிட்டதாகவும், அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><h2>திணைக்களத்திடம் உள்ள&nbsp;&nbsp;32,000 வாகன இலக்கத் தகடுகள்</h2><p>மேலும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சுமார் 32,000 வாகன இலக்கத் தகடுகள் திணைக்களத்திடம் உள்ளன. அதுமட்டுமின்றி, 2025 ஆம் ஆண்டிற்கான வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்கு ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865bbac6-b24d-4e38-9dee-5cde7aa998a4/26-6aa16e730eb2b.webp' /></p><p> </p><p>அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைத்து வாகன இலக்கத்தகடுகள் புதுப்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு பதிவு செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து சுமார் எட்டு நாட்களுக்குள் வாகன இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316"></link>
            <id>https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
வெய் ஹுவாக்சியாங் ஓகஸ்ட் 25 அன்று தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர் இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றார்.&nbsp;</p><h2>வழங்கப்பட்ட அன்பளிப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தூதர் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78ed452-e842-464e-8eed-cf9e7c57c1a5/26-6aa15aa055814.webp' /></p><p>இந்நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசமும் கலந்துகொண்டார்.</p><h2>ஜனாதிபதி அனுர இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு</h2><p>இதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார உட்பட பலரை சந்தித்து வரும் நிலையில் புதிய சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1747a4cf-9496-4c24-806b-a7534736eecb/26-6aa15ba5caa68.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-gives-opportunity-who-submitted-1788955386"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-gives-opportunity-who-submitted-1788955386</id>
            <summary type="text">சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னரும், ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையிலும் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளுக்கு, தாமதமான நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 90ஆம் பிரிவின் கீழ் நிர்வாக அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது.
</p><p>
எனினும், அபராதம் விதிப்பதற்கு முன்னர் தாமதத்திற்கான நியாயமான காரணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிர்வாக அபராதம்</h2><p>
</p><p>
இதன்படி, 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80(1)ஆம் பிரிவின் கீழ் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தும், அதனை உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள், நிர்வாக அபராதம் விதிக்காமல் இருப்பதற்கான காரணங்களை 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598e91cb-6513-4ac1-b51a-1c1192f7814e/26-6aa1510f783a8.webp' /></p><p>மேலும் தாமதத்திற்கான காரணங்களுடன் தொடர்புடைய ஆதார ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
காரணங்களை சமர்ப்பிக்கும்போது, கோரிக்கை விடுக்கும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் தாமதத்திற்கான காரணங்கள் ஆணையத்திடம் கிடைக்காவிட்டால், தாமதத்திற்கான காரணம் எதுவும் இல்லை எனக் கருதி நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
தபால் மூலம் காரணங்களை சமர்ப்பிக்கும்போது, உறையின் இடது பக்க மேல் மூலையில் “தாமதத்திற்கான காரணங்கள்” என குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது, மின்னஞ்சலின் தலைப்புப் பகுதியில் அதே விடயத்தை குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><b>தொடர்புடைய முகவரிகள் மற்றும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
</b></p><ul><li>நிறுவன முகவரி: இயக்குனர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை பிரிவு), எண் 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07.
</li><li>மின்னஞ்சல் முகவரி: ald@ciaboc.gov.lk
</li><li> தொலைபேசி/தொலைநகல் எண்: 0112587287
</li><li>வாட்ஸ்அப் எண்: 0767011954</li></ul><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:29:16+00:00</updated>
        </entry>
    </feed>
