<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-31T20:33:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269"></link>
            <id>https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269</id>
            <summary type="text">

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே நல்ல செய்தி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிரியா, ஜோர்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கான தனது சமீபத்திய பயணங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தால் இனி மற்றொரு போரைத் தாங்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இதன்படி, மத்திய கிழக்கின் அனைத்து முனைகளிலும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை குட்டெரெஸ் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்</h2><p>
</p><p>
மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6f2f9b-b640-4a0c-8dac-cff80c78c3e8/26-6a6d001e58f9f.webp' /></p><p>

இந்த இலக்குகளைச் செயல்படுத்துவதற்கான வழிவரைபடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவித கேள்விகளோ, சந்தேகங்களோ அல்லது அதைச் சீர்குலைக்கும் முயற்சிகளோ இன்றி அந்த வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T20:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349</id>
            <summary type="text">

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்குவோம் என்றும், தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்களே இறங்கி வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோதல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது.</p><p></p><h2>தீவிர&nbsp;தாக்குதல்</h2><p>
</p><p>
இந்நிலையில், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9ca6b2-cd74-47f9-88a1-e0c6ac0922e2/26-6a6cfa048a927.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p> </p><p>

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, புதன்கிழமை இரவு மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமை புதிதாக எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.</p><h2>குறையும் ட்ரம்பின் அமெரிக்க ஆதரவு</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான இந்தப் போர் அமெரிக்க மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வருவதாக சர்வதேச வட்டராங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dddaca8c-480e-4177-81d2-f260861043e6/26-6a6cfa057616f.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Spectrum News</i></p><p>

அந்தவகையில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் குறித்த போர் ஏற்படுத்தியுள்ளதால், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு 28 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T19:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சி! வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773"></link>
            <id>https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773</id>
            <summary type="text">
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி</h2><p>இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f277c650-e4b4-4e18-8f7c-224e8b77df57/26-6a6ced9ddb29e.webp' /></p><p>இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.</p><p>

​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.&nbsp;</p><p>

அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீகச் சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T18:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராறில் படுகொலை செய்யப்பட்ட 11 பொதுமக்கள்! 37 வது நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/37th-commemoration-of-the-peraru-massacre-1785521348"></link>
            <id>https://ibctamil.com/article/37th-commemoration-of-the-peraru-massacre-1785521348</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச்
சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச்
சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.</p><p>

1990.07.31 அன்று இடம்பெற்ற இவ் படுகொலைச் சம்பவத்தில் 11 பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

இப் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.</p><p>

இந்த நிலையில், குறித்த படுகொலையை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால்
விளக்கேற்றி, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, அஞ்சலியும்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T18:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-information-tamil-nadu-manoharan-death-1785519717"></link>
            <id>https://ibctamil.com/article/new-information-tamil-nadu-manoharan-death-1785519717</id>
            <summary type="text">2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
</p><p>
தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பதியைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவர் ஆவார்.
</p><p>
2008 நவம்பர் 13 அன்று, அவரது வீட்டில் புகுந்த ஆயுதக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து, பின்னர் 2009 ஜனவரி 14 அன்று உயிரிழந்தார்.
</p><p>
கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் படுகொலைக்கு பிள்ளையான் தலைமையிலான TMVP அமைப்பே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டது.</p><p>ஆனால், அண்மைய சாட்சியங்களின் அடிப்படையில், இந்தப் படுகொலை காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
</p><p>
இந்த கொலைக்கு ஆரியம்பதி மற்றும் காத்தான்குடி ஆகிய இரு பிரதேசங்களுக்கு இடையே நிலவிய நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் மற்றும் மனோகரன் இதற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்த வகையில் இந்த படுகொலை தொடர்பில் வெளிவரதாக பல மர்மங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UaGkXMiTPO0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T17:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரிஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-mirissa-today-1785517524"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-mirissa-today-1785517524</id>
            <summary type="text">


மாத்தறை - மிரிஸ்ஸவில் இன்று (31) துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மாத்தறை - மிரிஸ்ஸவில் இன்று (31) துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.</p><p>
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d53c1a-c7f1-44b9-8833-1eeac8906540/26-6a6cd876c26cf.webp' /></p><p> 

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T17:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் முதல் கருத்து! காசா மீது திரும்பும் உலகத்தின் கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-s-first-comment-on-the-gaza-deal-1785507589"></link>
            <id>https://ibctamil.com/article/israel-s-first-comment-on-the-gaza-deal-1785507589</id>
            <summary type="text">ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை கைவிடும் வரை, தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள மஞ்சள் கோட்டில் (Yellow Line - கற்பனை எல்லைக் கோடு) இருந்து இஸ்ரேல் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை கைவிடும் வரை, தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள மஞ்சள் கோட்டில் (Yellow Line - கற்பனை எல்லைக் கோடு) இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த உடன்படிக்கை தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட முதலாவது அதிகாரப்பூர்வ கருத்தாக இது அமைந்துள்ளது.</p><p>

“காசா பகுதியில் இராஜதந்திர முன்னேற்றங்கள் தொடர்பாக இன்று காலை வெளியான பல்வேறு தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பு உண்மையான முறையில் ஆயுதங்களை கைவிடும் வரை, தற்போதைய ‘மஞ்சள் கோட்டில்’ இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் விலகாது என்பதை இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்துகிறது” என&nbsp;IDF அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.</p><p></p><h2>போர் நிறுத்த ஒப்பந்தம்</h2><p>இதற்கிடையில், இஸ்ரேல் தனது கடமைகளை நிறைவேற்றி, அக்டோபர் மாத போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தனது படைகளை ‘மஞ்சள் கோடு’ வரை பின்வாங்கினால், அதற்கேற்ப ஹமாஸ் ஆயுதக் களைவை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>‘மஞ்சள் கோடு’ என்பது 2025 ஒக்டோபர் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் படைகள் பின்வாங்கிய பின்னர் உருவாக்கப்பட்ட எல்லைக் கோடாகும்.</p><p> இந்தக் கோடு காசா பகுதியின் சுமார் 53 சதவீதத்தை உள்ளடக்கியதாக இருந்தது.

எனினும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்தி வருவதால், இந்தக் கோடு மத்திய தரைக்கடல் கடலை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் காசா மக்களின் வாழ்விடப் பகுதி மேலும் சுருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் பல கட்ட சமாதானத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதில், ஹமாஸின் ஆயுதக் களைவும், இஸ்ரேல் படைகளின் நிலைமாற்றமும் முக்கியமான அடுத்த கட்டங்களாகக் கருதப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T15:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசாங்கத்திடம் பிரான்ஸ் சட்டத்தரணிகள் சம்மேளனம் விடுத்த முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/french-bar-association-requests-government-1785506230"></link>
            <id>https://ibctamil.com/article/french-bar-association-requests-government-1785506230</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என பிரான்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனம் இதுதொடர்பில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
</p><p>
அந்தத் தீர்மானத்தில், முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம், நீதித்துறையின் மீது தேவையற்ற மற்றும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பொதுமக்களால் பார்க்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதியின் மீதான மக்களின் நம்பிக்கை</h2><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரான்ஸ் சட்டத்தரணிகள் சம்மேளனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, நேர்மையான மற்றும் அதிகாரம் பெற்ற நீதித்துறை அமைப்பு அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9435b460-8982-467f-a60b-421f5b4a10b2/26-6a6ca9b9b3d7c.webp' /></p><p>
</p><p>
எனவே, குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்காமல் இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
மேலும், நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் போதுமான அளவில் பெற்ற பின்னர், முறையான சட்ட நடைமுறைகளுக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T15:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் புதிய மெட்ரோ பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-metro-bus-service-jaffna-and-kandy-districts-1785505588"></link>
            <id>https://ibctamil.com/article/new-metro-bus-service-jaffna-and-kandy-districts-1785505588</id>
            <summary type="text">புதிய மெட்ரோ பேருந்து சேவைப் படை அடுத்த சில வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய மெட்ரோ பேருந்து சேவைப் படை அடுத்த சில வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சீனா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மொத்தம் 121 மெட்ரோ பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது பதிவு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சட்டரீதியான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>தேவையான பதிவு மற்றும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த பேருந்துகளை பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c613f6-7e38-4e8c-a87d-7f31731681ba/26-6a6ca7364f93e.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே மெட்ரோ பேருந்து சேவைக்காக பல புதிய வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஜப்பானில் இருந்து கூடுதலாக 50 பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் கொழும்பைத் தாண்டி நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மெட்ரோ சேவையை விரிவுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>இந்த ஆண்டு முடிவுக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் மெட்ரோ பேருந்து சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக இரு மாவட்டங்களிலும் மெட்ரோ பேருந்து நிலையங்கள் (டிப்போக்கள்) அமைக்கப்பட வேண்டும் என பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.</p><p>
தனியார் வாகனப் பயன்பாட்டை குறைத்து அதிகமான பயணிகளை பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தச் செய்வதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
</p><p>
எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் பயணிகளுக்கான தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கப்படும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்து படையை 500 இற்கும் அதிகமாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலின் முதல் தீர்ப்புக்கு முன்னர் பூஜித் கடத்திய 7 வருடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-first-verdict-of-the-easter-sunday-attack-1785502907"></link>
            <id>https://ibctamil.com/article/the-first-verdict-of-the-easter-sunday-attack-1785502907</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வு எச்சரிக்கைகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், அந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்வி நீண்டகாலமாக விவாதப் பொருளாக இருந்து வந்தது.</p><p>

நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பிரதான பொறுப்பேற்றிருந்த அப்போதைய காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தாக்குதலைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பது இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாகும்.</p><p></p><p>
</p><h2>
பூஜித் ஜயசுந்தர் யார்</h2><p>
பூஜித ஜயசுந்தர 1985 ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆக இலங்கை காவல்துறை இணைந்தார்.
</p><p>
அதன் பின்னர்,

1991 – காவல்துறை அத்தியட்சகர் (SP)
</p><p>1996 – சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்(SSP) </p><p>2005 – பிரதிப் காவல்துறை மா அதிபர் (DIG)</p><p>2010 – சிரேஷ்ட பிரதிப் காவல்துறை அதிபர் (SDIG)

என பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
</p><p>
2016 ஏப்ரல் 20 ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன் பூஜித் ஜயசுந்தரவை காவல்துறைமா அதிபராக நியமித்தார். </p><p>முன்னாள் காவல்துறை அதிபர் என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
</p><p>
அரசியல் பின்னணி

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசின் கீழ் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.</p><p></p><h2>காவல்துறை மா அதிபர் மீது விமர்சனங்கள்</h2><p>
</p><p>
ஆனால் 2018 ஒக்டோபர் 26 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, காவல்துறை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
</p><p>
பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் அந்த நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்தது.</p><p> அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றாலும், காவல்துறை தொடர்ந்து ஜனாதிபதியின் கீழேயே இயங்கியது.</p><p>

இது குறித்து&nbsp; ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, "காவல்துறை அதிபரை மட்டும் பதவியில் இருந்து நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இதற்கு அவரைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.</p><p>

காவல்துறை மா அதிபர் மீது விமர்சனங்கள் இருந்தாலும், முழுப் பொறுப்பையும் அவர் மீது மட்டும் சுமத்துவது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>ஈஸ்டர் தாக்குதலுக்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், 2019 ஏப்ரல் 29 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் உத்தரவின் பேரில் பூஜித ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, தம்மை கட்டாய விடுப்பில் அனுப்ப ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும், அந்த முடிவு சட்டவிரோதமானது என்றும் தெரிவித்து, 2019 மே 29 அன்று அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்.</p><p>2019 ஜூன் 6 அன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பூஜித ஜயசுந்தர சாட்சியம் வழங்கினார்.</p><p>

2018 அக்டோபர் 23 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அந்த தகவலை அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தமக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.</p><p></p><h2>கட்டாய விடுப்பு</h2><p>
</p><p>
மேலும், கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதற்கு முன்பு பதவி விலகுமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் இருந்து தாம் விலக்கப்பட்ட நிலையில், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான முழுப் பொறுப்பையும் தமக்கு மட்டும் சுமத்துவது எவ்வளவு நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஜனாதிபதியின் நிலைப்பாடு

இதற்கிடையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னறிவிப்பு புலனாய்வுத் தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.</p><p>இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹெமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் இருந்த காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் ஜூலை 2, 2019 அன்று கைது செய்யப்பட்டனர்.</p><p>&nbsp;தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் பற்றி அறிந்திருந்ததை இருவரும் ஒப்புக்கொண்டதோடு&nbsp; ஆனால் அவர்கள் பொறுப்பை ஏற்க மறுப்பதை அடுத்து இந்த நடவடிக்கை அப்போது மேற்கொள்ளப்பட்டது.</p><p>2019 ஜூலை 9 ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் இருந்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p> பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p>

இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நீண்டகாலம் நீதிமன்றத்தில் இடம்பெற்றன.

இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி மற்றும் அதனைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (Presidential Commission of Inquiry – PCoI) நியமிக்கப்பட்டது. </p><p>அந்த ஆணைக்குழுவின் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பலர் சாட்சியம் வழங்கினர்.
</p><p>
ஆணைக்குழுவின் விசாரணைகளில், இந்திய புலனாய்வுப் பிரிவிலிருந்து பல கட்டங்களாக தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் இலங்கைக்கு கிடைத்திருந்ததாகவும், அவை பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பரிமாறப்பட்டிருந்த போதிலும், அவற்றை ஒருங்கிணைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும் தெரியவந்தது.</p><p></p><h2>&nbsp;பொதுமக்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு&nbsp;</h2><p>
அதேவேளை, தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் இருந்து தாம் விலக்கப்பட்டிருந்ததாக பூஜித ஜயசுந்தர முன்வைத்த வாதமும் விசாரணைகளின் போது விரிவாக ஆராயப்பட்டது. எனினும், காவல்துறை மா அதிபராக நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு அவரிடமும் தொடர்ந்திருந்ததாக பல தரப்பினர் சுட்டிக்காட்டினர்.</p><p>

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் பல உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது.</p><p> அந்தப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோரின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பாதுகாப்பு தரப்பை அழைக்காமலேயே விடுவித்தது. </p><p>இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என வாதிட்ட சட்டமா அதிபர், உயர நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்தார்.

அந்த மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு தரப்பு சாட்சியங்களை பதிவு செய்யாமல் வழக்கை முடித்தது சட்டப்பிழை எனத் தீர்மானித்தது. </p><p>அதனைத் தொடர்ந்து, வழக்கை மீள விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மறுவிசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டது.</p><p> ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவிருந்ததாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அறிந்திருந்தும், தனது சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகவும், அதனால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமான அலட்சியத்தைக் காட்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
பல ஆண்டுகள் நீடித்த விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் இரு தரப்பினரின் வாய்மொழி மற்றும் எழுத்துமூல வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2026 ஜூலை 31 அன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
</p><p>
அந்தத் தீர்ப்பில், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றவாளி என நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்தனர். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை, தனது அரசுப் பொறுப்பை கடுமையாகப் புறக்கணித்தமை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான சட்டப்பூர்வ பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>இந்தத் தீர்ப்பு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றவியல் வழக்கில் வழங்கப்பட்ட மிக முக்கியமான நீதித் தீர்ப்பாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T14:39:04+00:00</updated>
        </entry>
    </feed>
