<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-20T11:44:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kompanitheru-temple-jewels-rescued-1787224684"></link>
            <id>https://ibctamil.com/article/kompanitheru-temple-jewels-rescued-1787224684</id>
            <summary type="text">

கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், தர்மகத்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர்.
</p><p>
ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமாரகுருக்கள் என்பவரே நகைப்பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
இவர் திருடிய நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள சி.டி.பி வங்கியில் 5,280,000 ரூபாவுக்கும், விமல் அடகு நிறுவனத்தில் 5,570,000 ரூபாவுக்கும், எஸ்.எம்.பி நிறுவனத்தில் 15,925,950 ரூபாவுக்கும் அடகு வைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f04c308-1b2e-416d-bd11-00b26785063a/26-6a86e6acce26b.webp' /></p><p> </p><p>

கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே இத்திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. 

அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித்தெரு காவல்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.
</p><p>
இதனையடுத்து குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான சதீஸ்குமாரகுருக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிவான், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T11:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத நெருக்கடி : கடனில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-economy-national-debt-hits-40-trillion-1787224066"></link>
            <id>https://ibctamil.com/article/us-economy-national-debt-hits-40-trillion-1787224066</id>
            <summary type="text">அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன், வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது. கடந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன், வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது. </p><p>கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் முதன்முதலில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது இந்த கடன் தொகை $19.95 டிரில்லியனாக இருந்தது. ஆனால், தற்போது அது இரட்டிப்பாகி $40.047 டிரில்லியன் ஆக உயர்வடைந்தள்ளது.</p><p>


</p><h2>அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ள கடன் வளர்ச்சி விகிதம்</h2><p>கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் கடன் வளர்ச்சி விகிதம் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d13fbc2-b89c-42ee-abe2-d378703d47ae/26-6a86e67825cb6.webp' /></p><p>&nbsp;2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $39 டிரில்லியனாக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களுக்குள்ளாகவே மேலும் ஒரு டிரில்லியன் டொலர் உயர்ந்து $40 டிரில்லியன் என்ற ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.</p><p> நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகையில் $32.266 டிரில்லியன் பொதுக் கடனாகவும், $7.782 டிரில்லியன் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் பிரிந்துள்ளது.</p><p></p><h2>வருவாயை விட அதிகரிக்கும் செலவுத்தொகை</h2><p>&nbsp;அமெரிக்க அரசு செலவழிக்கும் தொகை, அதற்கு வரும் வருவாயை விட அதிகமாக இருப்பதால் ஆண்டுதோறும் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53256637-e902-4c88-8495-a7911e621218/26-6a86e678cd4ad.webp' /></p><p> </p><p>இராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சமுக நல பாதுகாப்பு மற்றும் மெடிகேர் திட்டங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.</p><p> வாங்கிய கடனுக்காக அரசு செலுத்தும் வட்டித் தொகையே தற்போது Medicare திட்டத்திற்கான செலவை விட அதிகரித்து, நாட்டின் இரண்டாவது பெரிய செலவினமாக மாறியுள்ளது.</p><h2>கடுமையாக பாதித்துள்ள அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம்&nbsp;</h2><p>இந்த $40 டிரில்லியன் கடன் சுமையானது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக $117,000 கடன் இருப்பதற்கு சமமாகும். தொடர் கடன்கள் காரணமாக அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் வீட்டு வாடகை, கார் கடன்கள் போன்ற அன்றாட செலவுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5774fa9b-81d2-4fae-b423-504333fbc7a7/26-6a86e6797f1ea.webp' /></p><p>அமெரிக்க கடன்களுக்கான உச்சவரம்பு எல்லை $41.1 டிரில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் கடன் அதிகரித்தால் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த வரம்பை எட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் பொருளாதார முட்டுக்கட்டை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reverend-nihal-jim-brown-memorial-1787225160"></link>
            <id>https://ibctamil.com/article/reverend-nihal-jim-brown-memorial-1787225160</id>
            <summary type="text">அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார்
மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20
ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார்
மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20
ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல்
ஆக்கப்பட்ட 22 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில்
இடம்பெற்றது.
</p><p>நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி
ஆரம்பமானது. </p><p>கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை
சென்றடைந்தது.</p><p></p><h2>ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்</h2><p>
</p><p>அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வும் விசேட வழிபாடுகளும்
இடம்பெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி உரைகளும்
நிகழ்த்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000252c3-6a10-4575-bbb5-3401b7577e2a/26-6a86e67b066c1.webp' /></p><p>
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்கு
சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அருட்தந்தை ஜிம் பிறவுண்
அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமல் ஆக்கப்பட்டனர்.</p><p>
அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார், ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்
தீவிரமடைந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களில்
ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டார்.</p><p>
யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் அல்லைப்பிட்டிக்கு சென்றதற்கான
பதிவும், பிற்பகல் 1.50 மணியளவில் அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும்
பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரிடம் இருந்ததாக
அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், அதன்பின்னர் இருவரின் நிலை
தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.</p><p></p><h2>உண்மை வெளிப்படுத்தப்படாத நிலை</h2><p>
</p><p>20 ஆண்டுகள் கடந்தும் அவர்களது நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படாத
நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரையும் நினைவுகூரும் வகையில் இன்றைய
நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ef7069-002d-458c-9d27-70c611c9ba1c/26-6a86e5dce8869.webp' /></p><p>
</p><p>நிகழ்வில் மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்பணி எஸ். றெக்ஸ்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா. இளப்பிறை, சட்டத்தரணி க. சுகாஸ்,
கொழும்பைச் சேர்ந்த அருட்தந்தை செராட் மற்றும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான
ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அ. அகஸ்ரின் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.</p><p>அஞ்சலி நிகழ்வு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை லியோ பாதர் தலைமையில்
இடம்பெற்றது.
நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருக்கள், பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
நினைவாக அஞ்சலி செலுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T11:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி : கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-development-1787223054"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-development-1787223054</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.</p><p>அதன்படி முதற்கட்டமாக விமான நிலைய முனையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அடுத்த கட்டத்தில் ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்
இஷேபிள் மார்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே அளுநர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>வடக்கு மாகாணத்தில் முதலீடு</h2><p>இங்கு ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருகின்றது.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தில்
முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம்
செலுத்தப்பட வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008f508e-e9e2-44a8-b38f-54c967235bc8/26-6a86e2245c564.webp' /></p><p>டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான பணிகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், அவற்றைத் தேவைக்கேற்ப
தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.</p><p>

டித்வா பேரிடர் காரணமாக வடக்கு மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும்,
மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இம்முறை
சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலைப் பெற முடிந்தது.</p><p> அதிகரித்துள்ள நெல் உற்பத்தியை விவசாயிகளுக்கு
பொருளாதாரப் பயனாக மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு
தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி</h2><p>வட மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை
மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட
உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுகின்றது.</p><p>

வடக்கு மாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படவுள்ளன, இவ்வலயங்கள்
மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் பங்களிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a014c9-db02-4794-8715-c85546d4c596/26-6a86e2998eb45.webp' /></p><p>முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம்,
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை
விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச
விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் செயன்முறை தொடர்பில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களுக்கு நேரில் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், அதன்
தொடர்ச்சியாக கொழும்பிலும் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்
இடம்பெற்று வருகின்றது.</p><p>
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தம்
தயாரிக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இரண்டு
கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>கடந்த காலங்களில் விமான நிலைய விரிவாக்கத்துக்காகப்
பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப்
பின்னரும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>கனேடிய முதலீட்டாளர்கள்&nbsp;</h2><p>
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டுக்கு
வருவதற்கான சில தடைகள் நீக்கப்பட்டுள்ளதுடன் புலம்பெயர் தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி நாட்டுக்கு வந்து
செல்லக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.</p><p>தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில நிறுவனங்களிலும் தீர்மானம்
மேற்கொள்ளும் உயர்நிலைப் பதவிகளிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச்
சேர்ந்தவர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7220b24-9ecc-4156-8287-4e3a7506c0c9/26-6a86e223a7476.webp' /></p><p> </p><p>குறிப்பாக நிதி ஆணைக்குழு மற்றும்
பெறுகை நடைமுறைக் குழு போன்ற முக்கிய தேசிய அமைப்புகளில் இவ்வாறான
பிரதிநிதித்துவம் இடம்பெறுகின்றது.</p><p>கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு
மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். </p><p>முதலீடு, தொழில் முயற்சி, அறிவு மற்றும் தொழில்நுட்பப்
பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வடக்கு மாகாணத்தின் பொருளாதார
வளர்ச்சியில் பங்களிக்க முடியும்“ எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச்
செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மதுபானசாலை ஒன்றை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-protest-inuvil-demanding-removal-a-win-shop-1787222970"></link>
            <id>https://ibctamil.com/article/public-protest-inuvil-demanding-removal-a-win-shop-1787222970</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி பிரதேச மக்களால்&amp;nbsp; கண்டனப்
போராட்டம் இன்று (20...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி பிரதேச மக்களால்&nbsp; கண்டனப்
போராட்டம் இன்று (20.08.2026) காலை இடம்பெற்றது.</p><p>இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக
நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து
காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.
</p><p>போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை
உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு
ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>இணுவில் போராட்டம்</h2><p>
</p><p>குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள்
மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த
மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a359472e-878a-4e9b-a99b-deaaede6e37b/26-6a86e08ac53f5.webp' /></p><p>
</p><p>மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில்
கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தப் போராட்டத்தால்
அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4dOHEC7JFQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-appoint-anyone-he-likes-as-the-chief-justice-1787222241"></link>
            <id>https://ibctamil.com/article/anura-appoint-anyone-he-likes-as-the-chief-justice-1787222241</id>
            <summary type="text">தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், அவர் தற்போதைய பிரதம நீதியரசரை மூப்பு அடிப்படையில் நியமித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய பிரதம நீதியரசர் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;முன்னாள் ஜனாதிபதிகள்&nbsp;நியமித்த நீதிபதிகள்</h2><p>தற்போதைய நிர்வாகம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு எந்தவொரு நீதிபதியையும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நியமிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a62547-6e3c-49bd-9a83-485ba84b808f/26-6a86ddd547033.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நீதித்துறையில் தங்களுக்கு விருப்பமான நீதிபதிகளை உயர் பதவிகளுக்கு நியமித்த பல நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.</p><p></p><h2>ஷிரானியின் பதவி நீக்கம்&nbsp;</h2><p>

மேலும், ஷிரானி பண்டாரநாயக்க எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு விருப்பமான ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களையும் அவர் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998110fb-a371-4200-88d8-b584e36944e2/26-6a86dcbf37b45.webp' /></p><p>
</p><p>
இத்தகைய சூழலில், தற்போதைய ஜனாதிபதி தனது விருப்பப்படி ஒருவரை நியமிக்க சட்டப்பூர்வமான வாய்ப்பு இருந்தபோதிலும், அவர் இந்த நியமனத்தை ஜனநாயகப் பண்பாகக் கருதப்படும் மூப்புரிமையின் அடிப்படையில் மட்டுமே செய்துள்ளார் என்று லக்மாலி ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/emgCkDsBd5o" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-admitted-hospital-after-being-bitten-wasp-1787222163"></link>
            <id>https://ibctamil.com/article/students-admitted-hospital-after-being-bitten-wasp-1787222163</id>
            <summary type="text">வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக அங்கு
நின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குளவி கொட்டியதில் பலர் வவுனியா
வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக அங்கு
நின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குளவி கொட்டியதில் பலர் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு
குளவி கொட்டிய நிலையில் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவரும்
மேற்கொள்ளவில்லை என்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
</p><p>
இதன் காரணமாக தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக நின்ற மாணவர்கள் மற்றும்
அவர்களை கற்றறல் நடவடிக்கைகளுக்காக அழைத்து வந்த பெற்றோருக்கும் குளவி
கடுமையாக கொட்டியுள்ளது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
இதன் காரணமாகவே பலர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae32210-67b9-4cc4-9d62-8ea239003b01/26-6a86d8954118d.webp' /></p><p>
</p><p>
இந்நிலைமை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட்ட இது தொடர்பிலான
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்களைப் பெற்றோரை மாத்திரமின்றி
வீதியால் செல்வோரையும் பாதுகாக்குமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் கீரைகளை வளர்த்து அதை சமைத்து நாசா சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-origin-astronaut-harvests-vegetables-space-1787221122"></link>
            <id>https://ibctamil.com/article/indian-origin-astronaut-harvests-vegetables-space-1787221122</id>
            <summary type="text">நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாக தயாரித்த காணொளியை பகிர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாக தயாரித்த காணொளியை பகிர்ந்துள்ளது.&nbsp;</p><p>இந்தக் காய்கறிகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக விண்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பில் வளர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p></p><h2>Veggie தாவர வளர்ப்பு&nbsp;</h2><p>எதிர்காலத்தில் நீண்டகால விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவை அங்கேயே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாகத் தயாரித்துள்ளார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e093d3e9-275a-445e-bc49-a100329f7ab4/26-6a86d7e9f087d.webp' /></p><p>நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது விண்வெளியில் நிலவும் நுண் ஈர்ப்பு சூழலில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதையும், எதிர்கால நீண்டகால விண்வெளிப் பயணங்களுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் ஆராய்வதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.</p><p>மேனன், இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட கீரைகளை அறுவடை செய்து சமைத்ததாகவும், தாங்கள் தயாரித்த உணவுகளில் இதுவே சிறந்ததாக உணவு என்றும் அவர் பகிர்ந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p> மேலும், தாவரங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்கிய நாசாவின் Veggie குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Chez ISS - Cooking on <a href="https://x.com/Space_Station?ref_src=twsrc%5Etfw">@Space_Station</a> with <a href="https://x.com/Astro_Jessica?ref_src=twsrc%5Etfw">@Astro_Jessica</a> and Anil<br><br>On this episode we give you farm to table, simple, and delicious. This Kale and Wasabi Mustard was grown on ISS over one month. We harvested several leaves and put them to the test. It might be the best meal we… <a href="https://t.co/Oq9narSiu9">pic.twitter.com/Oq9narSiu9</a></p>&mdash; Anil Menon (@astro_anil) <a href="https://x.com/astro_anil/status/2089391189015331258?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:44:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-replied-to-namal-1787220425"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-replied-to-namal-1787220425</id>
            <summary type="text">நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும் சிறு வாக்குவாதம் இடம்பெற்றது.
</p><p>
மகிந்த ஜெயசிங்க உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அவர், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>

''நாடாளுமன்றிற்கு வருவார், அவரது சந்தர்ப்பத்தில் உரையாற்றுவார், போலியான கதைகளை கூறுவார், பதில் கூறவரும்போது எழுந்து ஓடிவிடுவார்.இதனையே நாமல் தொடர்ந்து முன்னெடுக்கின்றார்" என மகிந்த ஜெயசிங்க தனது கருத்தை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>மகிந்த ஜெயசிங்க&nbsp;பதில் </h2><p>
</p><p>இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டு அர்ச்சுனா கருத்துக்களை தெரிவிக்க அதற்கு மகிந்த ஜெயசிங்க பின்வருமாறு பதில் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f122184-f2ee-4d71-803e-8358e1c3e4e5/26-6a86d580e186c.webp' /></p><p>
</p><p>''நீங்கள் கதைக்காதீர்கள். நாமலின் நண்பர் அல்லவா நீங்கள். உங்களுக்கு பைத்தியம் இல்லை. நீங்கள் நல்ல வைத்தியர்தான்.</p><p>

உங்கள் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும். விமர்சிப்பவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிடுவேன். எனக்கு முதுகெலும்பு உள்ளது.
 
நாமலுக்காக பதில் சொல்ல உண்மையில் நீங்கள் யார்? </p><p>

உங்களுக்கு பைத்தியம் இல்லை நீங்கள் ஒரு நல்ல வைத்தியர்தான். நீங்கள் முதலில் அமைதியாக இருங்கள்" என கூறினார்.</p><p>இந்நிலையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினை குறித்து அர்ச்சுனா கேள்வி எழுப்பிய நிலையில், மகிந்த ஜெயசிங்க காரசாரமாக பதில் வழங்கியிருந்தார்.
</p><p>''அவரை முதலில் அமர செய்யுங்கள். அரசாங்கத்தின் நேரத்தையே கதைப்பதற்க்காக பெற்றுக்கொண்டேன்.

யார் இவர்? இவருக்கு பைத்தியம். அவரை அமர செய்யுங்கள். என்றார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், நிலையியல் கட்டளை என்னை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்க மகிந்த ஜெயசிங்கவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலாக செய்யப்பட்ட சத்திர சிகிச்சை! நீதி கோரும் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-treated-in-armpit-instead-of-chest-jaffna-1787220291"></link>
            <id>https://ibctamil.com/article/woman-treated-in-armpit-instead-of-chest-jaffna-1787220291</id>
            <summary type="text">



நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>



நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் நெஞ்சுப் பகுதியில் இருந்த கொழுப்புக் கட்டிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p></p><h2>சத்திர சிகிச்சை</h2><p>

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் சத்திரசிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.இவ்வாறு சென்ற இடத்திலேயே அவருக்கு அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7dfb62f-fd85-4fec-952e-a465873684fb/26-6a86d4365a1b9.webp' /></p><p>
இதையடுத்து, குறித்த பெண்ணுக்குத் தவறுதலாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை அவதானித்த மருத்துவ நிபுணர்கள் அது தொடர்பில்
தெரியப்படுத்தியுள்ளனர்.</p><h2>முறைப்பாட்டை ஏற்க காவல்துறை மறுப்பு&nbsp;</h2><p>

இந்த விடயம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு நீதிகோரி தெல் லிப்பழை காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கச் சென்றவிடத்து, அந்த முறைப்பாட்டை ஏற்பதற்கு காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c0f14e-1438-4bcf-b78b-8d2d20742d9c/26-6a86d4372424a.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் நீதியைப் பெறுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மருத்துவ நிபுணர் இதற்கு முன்னரும் இவ்வாறாகத் தவறான முறையில் சத்திர சிகிச்சைகளை செய்திருந்தார் என்பதும், அது பெரியளவில் சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:40:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி ஐ.நா அலுவலகத்தில் மனு கையளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-submitted-to-un-justice-for-suresh-saleh-1787220544"></link>
            <id>https://ibctamil.com/article/petition-submitted-to-un-justice-for-suresh-saleh-1787220544</id>
            <summary type="text">அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு,&amp;nbsp;நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவொன்று&amp;nbsp; கொழும்பிலுள்ள ஐக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு,&nbsp;நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவொன்று&nbsp; கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>சலேவுக்கு ஆதரவளிக்கும் ஓரு குழுவினரால் இந்த மனு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் இன்று (20) கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சுரேஷ் சலே 175 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறித்த மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை</h2><p>இந்த நிலையில் சுரேஷ் சலே நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859d26ee-38ab-4ac3-9373-661e8fbe788e/26-6a86d7745ba98.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த மனு சலேவின் தடுப்புக்காவல் தொடர்பான கவலையை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மனுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hTvMj7rYUFg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு போலி மருத்துவர்கள் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-fake-doctors-arrested-in-aluthgama-1787220846"></link>
            <id>https://ibctamil.com/article/two-fake-doctors-arrested-in-aluthgama-1787220846</id>
            <summary type="text">அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>
இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இவர்கள் இருவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;இவர்கள் இருவரும் தர்கா நகரைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இன்று (20) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
</p><p>
அளுத்கம காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூறு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/central-african-republic-gold-mine-collapse-1787218046"></link>
            <id>https://ibctamil.com/article/central-african-republic-gold-mine-collapse-1787218046</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள ஜாம்போயே (Zamboye) கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் சட்டதரணி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>அரசு தரப்பு வழங்கறிஞரின் முக்கிய அறிவிப்பு</h2><p>பலர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df3a4c9-d2b6-40cd-93cf-3a149bda1c8f/26-6a86d18a7e6e0.webp' /></p><p> </p><p>சுரங்கங்களில் பணியாற்றி தங்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்ற இளம் ஆண்களும் பெண்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, எல்லையைத் தாண்டி வரும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கேமரூன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் இதுகுறித்த விபத்துக்கான காரணம் மற்றும் சுரங்கத்தை நடத்தி வந்தவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார்.</p><p>

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறிய அளவிலான தங்கம் மற்றும் கனிம அகழ்வுத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. </p><p>எனினும், போதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் இதுபோன்ற சுரங்க விபத்துகள் ஏற்பட்டு பெருமளவிலான உயிரிழப்புகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><br><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்மப் பொதி! சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parcel-that-arrived-above-the-magazine-prison-1787215192"></link>
            <id>https://ibctamil.com/article/parcel-that-arrived-above-the-magazine-prison-1787215192</id>
            <summary type="text">

கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த பொதியில் 30 மறு மின்னேற்ற மின்கலங்கள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இந்நிலையில், சிறைச்சாலையின் சுவருக்கு மேல் பொதி வீசப்பட்ட பின்னர், குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ffc6ab2-204e-4d2c-9afa-0be8e68baa4b/26-6a86cebd01a58.webp' /></p><p>
இதன்படி, சம்பவம் தொடர்பாக சஹாஸ்புர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T09:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து பிரதமரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/payments-and-promotion-for-school-principals-1787216142"></link>
            <id>https://ibctamil.com/article/payments-and-promotion-for-school-principals-1787216142</id>
            <summary type="text">இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விபரங்களை பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விபரங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தேசிய பாடசாலைகளில் 133, மாகாண பாடசாலைகளில் 27 என மொத்தம் 160 பணியிடங்கள் காணப்படுகின்றன.</p><p></p><h2>இலங்கை ஆசிரியர் சேவை</h2><p>
தேசிய பாடசாலைகளில் 139, மாகாண பாடசாலைகளில் 7,125 என மொத்தம் 7,264 அதிபர் சேவை பணியிடங்கள் உள்ளதுடன் மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணிபுரிகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27cceb8b-36bb-41a0-adb7-a41cd9ed8911/26-6a86cc97718b9.webp' /></p><p>
பாடசாலை வகைகளின் அடிப்படையில் 1AB பாடசாலைகளின் அதிபர்களுக்கு 8,000 ரூபாயும், 1C பாடசாலைகளின் அதிபர்களுக்கு 5,500 ரூபாயும், வகை 2 பாடசாலைகளின் அதிபர்களுக்கு 4,500 ரூபாயும், வகை 3 பாடசாலைகளுக்கு 4,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றன.</p><p>அத்துடன், கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்குக் கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.</p><p></p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள், போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவுகள் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b99fa2e-d676-48b9-8b6e-989bc5e57da2/26-6a86cc08887ca.webp' /></p><p>
</p><p>
3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெறுவதற்கு தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும்.</p><p>

எனவே 3ஆம் மற்றும் 2ஆம் தரங்களிலிருந்து அடுத்த தரத்திற்குப் பதவி உயர்வு பெறத் தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம், சம்பள ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்தி பயிற்சிகள் என்பன அவசியமாகும்.
</p><p>
மேலும், 1ஆம் தரப் பதவி உயர்வுக்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு மேலும் ஒரு தோல்வி! ட்ரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-defeat-for-america-1787218356"></link>
            <id>https://ibctamil.com/article/another-defeat-for-america-1787218356</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராகப் புதிதாக அறிவித்துள்ள பொருளாதார டி-டே பிரசாரம், அந்நாட்டுக்கு மேலும் ஒரு தோல்வியை கொண்டுவரும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராகப் புதிதாக அறிவித்துள்ள பொருளாதார டி-டே பிரசாரம், அந்நாட்டுக்கு மேலும் ஒரு தோல்வியை கொண்டுவரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
</p><p>
மேலும் இது அமெரிக்கா மீதான ஈரானியர்களின் விரோதப் போக்கை ஆழப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

பொருளாதார நெருக்கடி நாள் என்று அழைக்கப்படுவது, முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் விண்ணை முட்டும் வட்டிச் செலவுகள் ஆகிய அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும் என்று அராக்சி விளக்கியுள்ளார்.</p><p></p><h2>தோல்வியடைந்த கொள்கை</h2><p>
</p><p>
மேலும் தோல்வியடைந்த கொள்கைகளைத் தொடர்வது, தோல்வியையும் ஈரானியர்களின் பகைமையையும் மட்டுமே கொண்டுவரும் என்று கூறிய அவர், அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் என்று அவர் குறிப்பிட்டது உலகப் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290b73c5-8044-4d26-ba20-822223ce96cf/26-6a86cb66819c8.webp' /></p><p> 


இதற்கிடையில், ஈரான் வெளியுறவுத் துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி இராணுவ ரீதியாகத் தனது இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்த பின்னர், எஅமெரிக்கா ஒரு “பொருளாதாரப் போரை” நாடியுள்ளது என்று கூறினார்.</p><p>


ஈரான் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவும், நூலிழையில் தொங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள், ஆனாலும் தங்களின் அனைத்து நட்பு நாடுகளிடமும் தங்களுக்கு உதவுமாறு கெஞ்சுகிறார்கள் என்று கரிபாபாடி தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T09:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் சிக்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/principal-teacher-caught-drunk-on-exam-center-1787212360"></link>
            <id>https://ibctamil.com/article/principal-teacher-caught-drunk-on-exam-center-1787212360</id>
            <summary type="text">

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குறித்த இருவரும் சிக்கியதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பிடிப்பட்ட மேற்பார்வையாளரையும் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரியையும் பரீட்சை மேற்பார்வை பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்ததாக பணிப்பாளர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae79da3-9975-44e7-abff-3cee82b75491/26-6a86b5805681f.webp' /></p><p>

இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T09:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787213669"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787213669</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (20.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (20.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.01 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	442.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.17 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	379.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.71 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	234.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.86 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/817aea47-41f0-47dd-bf2a-41105720adbc/26-6a86b825c241d.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		229.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.61 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.28 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T08:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 ஆண்டுகளில் இல்லாத எல்நினோ அபாயம் - குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-ni-o-impact-new-circular-on-water-supply-1787211402"></link>
            <id>https://ibctamil.com/article/el-ni-o-impact-new-circular-on-water-supply-1787211402</id>
            <summary type="text">இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>இது கடந்த 75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ நிலையாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜயமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இந்த எல்நினோ நிலவரத்தை எதிர்கொள்ள அரசாங்கம் சிறந்த தயார் நிலையில், இருப்பதாக அமைச்சர் தம்மிக பட்டபெதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புதிய சுற்றறிக்கை</h2><p>எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ce1f63-efc6-4e87-997d-9a647c8be4e9/26-6a86b1d2af01c.webp' /></p><p>எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட விதிமுறைகள்</h2><p>வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலகுவாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளும் வகையில், தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd02054-2755-4a4a-8ce7-fd62cee93c57/26-6a86b1d130939.webp' /></p><p>இதேவேளை நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ளன. </p><p>கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த கடும் வறட்சியால் பொலன்னறுவை மாவட்டத்தில் மெடிரிகிரிய கும்குனா குளம், காமிணி குளம் உட்பட பல குளங்கள் வற்றிப்போய் நெற்பயிர்கள் அழிந்து போயுள்ளன.</p><p>நீர்நிலைகள் வற்றியதால் கிராந்துருகோட்டே பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு மற்றும் நீர் தேடி வரத் தொடங்கியுள்ளன. மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக காடுகளிலுள்ள புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் காய்ந்து நாசமாகியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் மற்றுமொரு நெருங்கிய சகா துபாயில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-s-close-aide-arrested-dubai-1787208756"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-s-close-aide-arrested-dubai-1787208756</id>
            <summary type="text">
பாதாள உலக குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற வனாதே ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பாதாள உலக குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற வனாதே சது துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த கைது நடவடிக்கையானது, துபாய் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தற்போது காவல் வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73b473ff-671f-409c-8d67-50ecc7767430/26-6a86b11bb8be8.webp' /></p><p>

இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை அந்நாட்டு சட்டநடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T07:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலில் உள்ள 7,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/30-000-sri-lankan-workers-working-in-israel-1787209802"></link>
            <id>https://ibctamil.com/article/30-000-sri-lankan-workers-working-in-israel-1787209802</id>
            <summary type="text"> இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குச் சென்ற சுமார் 7,000 இலங்கைத் தொழிலாளர்களை அகதிகளாகக் கருதி இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p> இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குச் சென்ற சுமார் 7,000 இலங்கைத் தொழிலாளர்களை அகதிகளாகக் கருதி இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>இஸ்ரேலில் பணியாற்றும் சுமார் 30 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (20) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் செல்வது அதிகரித்துள்ளது, இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உரிய ஒழுங்குமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p></p><h2>பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்</h2><p>இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குச் சென்ற சில இலங்கைத் தொழிலாளர்கள் தமது தொழில்துறைகளை மாற்றியுள்ளதால், சுமார் 7,000 பேரை அகதிகளாகக் கருதி இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc2dec0e-7d48-48a9-834a-afd4edd30251/26-6a86b00ebc9fc.webp' /></p><p>இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொண்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுத்ததைப் போன்று இலங்கை அரசாங்கமும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கு பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் முன்னாள் அரசாங்க காலத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.</p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை அனுப்புவதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முறையாக ஆட்களைச் சேர்த்து, நேர்முகத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய நடைமுறை இருந்தது.</p><p>எனினும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் காலத்தில் அந்த நடைமுறையை மாற்றி, குறிப்பிட்ட நபர்களின் பட்டியலை அனுப்பி அவர்களை நிறுவனங்களுக்கு அனுப்புமாறு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை</h2><p> இதனிடையே, இஸ்ரேலுக்கு விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்ட சில இலங்கைத் தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை முறையாக செய்ய முடியாத நிலையில், வேறு இடங்களில் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
இதனால் அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டதுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மன்னிப்பு காலம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0472a1a-500c-4057-9c99-dfe5d1b47e6f/26-6a86b00f7554f.webp' /></p><p>
</p><p>
எனினும், இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, குறித்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டில் சட்டபூர்வமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு அல்லது மாற்று வழியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.</p><p> எதிர்காலத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தினால் மீண்டும் மன்னிப்பு காலம் வழங்கப்பட்டால், அதனை முழுமையாகப் பயன்படுத்தி இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தலையிடும்.
</p><p>
முன்னைய காலப்பகுதியில் சுமார் 6,000 இலங்கையர்களை மேலதிகமாக இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக இஸ்ரேல் தரப்பில் மன்னிப்பு காலம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டது.</p><p>
எனினும், தற்போது கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தொடர்ந்து தலையிட்டு வருகின்றது“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்ட விசாரணை: சட்டமா அதிபரின் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attorney-file-appeal-against-ruling-harakkata-1787207806"></link>
            <id>https://ibctamil.com/article/attorney-file-appeal-against-ruling-harakkata-1787207806</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக சந்தேக நபரான ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக சந்தேக நபரான ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்த நிலையில் அந்த&nbsp;உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் இன்று (20.8.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>ஹரக் கட்டா</h2><p>இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி, குறித்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4c0d9b-9c14-4937-8b30-3bae07011c13/26-6a86a9ef2c497.webp' /></p><p>
இதனால், ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தைப் பொறுத்து அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fake-propaganda-using-the-name-of-the-ltt-1787207717"></link>
            <id>https://ibctamil.com/article/fake-propaganda-using-the-name-of-the-ltt-1787207717</id>
            <summary type="text">கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அல்லது குண்டு தயாரிக்கும் இடம் நடத்தப்பட்டு வருவதாக சமூகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அல்லது குண்டு தயாரிக்கும் இடம் நடத்தப்பட்டு வருவதாக சமூகத்தில் எழும் விவாதத்தில் எந்த வித உண்மையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றில் இன்று(20.08.2026) உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,</p><p></p><h2>2 அடையாள அட்டைகள்&nbsp;</h2><p> </p><p>''இந்த விடயம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb6b484-7c68-4a1f-81b6-d0010246dab9/26-6a86a43fb9456.webp' /></p><p> </p><p>இதன் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான எந்தவொரு பயிற்சி முகாமும் அங்கு நிறுவப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>
அடையாள அட்டையின் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவரின் பெயர் ரம்புக்வல அதிகராம்கே சங்கீத் ஜயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>விசாரணையில் தொழில் ரீதியான 2 அடையாள அட்டைகளை கொண்டிருந்தார்.

ஒன்றில் வைத்தியர் எனவும், மற்றையதில் மனித உரிமை அமைப்பில் பணிப்பாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>எந்த வித உண்மையும் இல்லை</h2><p> </p><p>இதில் எந்த வித உண்மை தன்மையும் இல்லை.

இவர் சமூகத்தில் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர். இவருக்கு 7 முகவரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637add1b-70c9-4a92-8469-3644a53a027a/26-6a86a4406b56a.webp' /></p><p>

மேலும் இவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலி காணி மோசடி குறித்த குற்றச்சாட்டும் வெலிக்கடை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p> 

மேலும் எந்த வித தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுக்கு நாட்டில் அனுமதி அளிக்கப்படாது." என கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T07:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - கிளிநொச்சி பயணிகளோடு சிவனொளிபாதமலை சென்ற வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-heading-to-sripadha-crashes-into-ditch-1787205044"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-heading-to-sripadha-crashes-into-ditch-1787205044</id>
            <summary type="text">சிவனொளிபாத மலைக்கு பயணித்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற கார், நல்லத்தண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் விழுந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவனொளிபாத மலைக்கு பயணித்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற கார், நல்லத்தண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>இந்த விபத்து சம்பவம் நேற்று(19.08.2026) பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
குறித்த விபத்தில்&nbsp; வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப்பயணிகளே சிக்கியுள்ளனர்.</p><p></p><h2>இரவில் பயணம் செய்ய வேண்டாம்&nbsp;</h2><p>
</p><p>
எனினும் குறித்த விபத்தில் எவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த குழுவினர், நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில் நல்லத்தண்ணி காவல் நிலையத்திற்கு சென்று , சிவனொளிபாத மலைக்கு செல்லும் தங்கள் நோக்கத்தைப் பற்றி தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c2ae91-eae9-4900-83cc-591ff51cb948/26-6a869ad519018.webp' /></p><p>&nbsp;நிலவும் மோசமான வானிலை காரணமாக இரவில் பயணம் செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அந்தக் குழுவினருக்கு அறிவுறுத்தி, காலையில் திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>

இந்நிலையில் அந்தக் குழுவினர் தங்குவதற்கான இடத்தைத் தேடித் தங்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​நள்ளிரவுவில் மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு அருகே அந்த வாகனம் சாலையிலிருந்து விலகி கால்வாயில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
 அப்போது அந்த வாகனத்தில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணம் செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
</p><p>
 வாகனம் பெருமளவில் சேதமடைந்தபோதிலும், அதில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி தப்பித்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் நல்லதண்ணிய காவல்துறையினர் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T07:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் பகுதியில் விபத்துக்குள்ளான மீன்பிடிப் படகு : கடற்றொழிலாளர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fisherman-missing-after-boat-accident-in-chilaw-1787206234"></link>
            <id>https://ibctamil.com/article/fisherman-missing-after-boat-accident-in-chilaw-1787206234</id>
            <summary type="text">சிலாபம் முகத்துவாரத்தில் மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று (20)...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் முகத்துவாரத்தில் மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (20) காலை சுமார் 6.00 மணியளவில், ராஷ்மிகா புத்தா என அடையாளம் காணப்பட்ட படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த படகில் இருந்த கடற்றொழிலாளர்களில் ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் சிலாபம் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை&nbsp;</h2><p>சிலாபம் பகுதியைச் சேர்ந்த 67 வயது நபரே காணாமல் போயுள்ள நிலையில் அவரைக் கண்டுபிடிப்பதற்காக பல மீன்பிடிப் படகுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18c95d4b-b119-458c-b73c-946b2bc9e413/26-6a86a1465e077.webp' /></p><p>குறித்த இரண்டு கடற்றொழிலாளர்களும் நேற்று (19) மதியம் சுமார் 1.00 மணியளவில் சிலாபம் பகுதியிலிருந்து கடலுக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியிருந்த போதிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p>

மோசமான வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும்போது, கடற்றொழிலாள​​ர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:03:25+00:00</updated>
        </entry>
    </feed>
