<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T15:21:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி பதவியையும் துறக்கிறார் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114"></link>
            <id>https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114</id>
            <summary type="text">பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விரைவில் இடைத்தேர்தல்</h2><p>கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d3c2ed-b848-4160-82d0-fc6964911a35/26-6a96e2e4a7f0b.webp' /></p><p>
</p><p>
கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.</p><p></p><h2>ஸ்டார்மரின் திடீர் அறிவிப்பு</h2><p>
</p><p>

பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியிலிருந்தும் விலகுவதாக ஸ்டார்மர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff37273c-34bf-4bda-b990-0dd866da618c/26-6a96e2e55a797.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5000-us-marines-to-rest-in-pattaya-thailand-1788269355"></link>
            <id>https://ibctamil.com/article/5000-us-marines-to-rest-in-pattaya-thailand-1788269355</id>
            <summary type="text">ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) தாய்லாந்தில் நங்கூரமிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயாவிற்கு இந்தக் கப்பல் வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நங்கூரமிடவுள்ள ஆபிரகாம் லிங்கன்</h2><p>&nbsp;200 நாட்களுக்கும் மேலாக கடலில் கழித்த பிறகு, கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதையும், அமைதியை அனுபவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தக் கப்பல் தாய்லாந்தின் பட்டாயாவிற்கு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f914ec-ed1f-4391-a880-629920198c91/26-6a96d84e503a5.webp' /></p><p> </p><p>மேலும், உலகில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் பட்டாயா கருதப்படுகிறது.</p><p></p><p>

</p><h2>சிறப்பு திட்டத்தை தயாரித்துள்ள தாய்லாந்து</h2><p>இதற்கிடையில், பட்டாயாவிற்கு வரும் இந்தப் படையினருக்கு சேவைகளை வழங்குவதற்காக தாய்லாந்து ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது,மேலும் அவர்களுக்காக ஒரு சிறப்புப் பாதுகாப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b161c7a-878b-4ecf-98da-1efd47d8a6a8/26-6a96d84d9bca3.webp' /></p><p>
இந்தக் கப்பலை தாய்லாந்தில் நங்கூரமிடுவதன் மூலம் அந்த நாடு பெரும் பொருளாதாரப் பலன்களைப் பெற முடியும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி! யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-request-for-explanation-from-a-journalist-1788268434"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-request-for-explanation-from-a-journalist-1788268434</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம்
ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறித்து வடக்கு ஊடவியளாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர்
பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம்
செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி
அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு
வெளிப்படுத்தியமை,ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட
செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை
சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுயாதீனமாக செயற்படும் நிலை</h2><p>இந்த விடயத்தை எமது ஊடகம் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனை தொடர்புகொண்டு கேட்ட நிலையில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் தான் கடிதம் மூலம் விளக்கத்தை வழங்கியுள்ளதாக எமக்கு சுட்டிகாட்டினார்.</p><p>
</p><p>
இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க
முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய
முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை&nbsp; காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி
அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி
அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள
கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது என பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செய்தி அறிக்கையிடலை
மேற்கோள்வதற்கு உரிமையை கொண்டுள்ளபோதும் மாற்றம் என கூறி மார்தட்டி வந்த தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கடந்த அரசாங்க காலங்களை விட மிக மோசமான முறையில்
குறித்த ஊடகவியலாளர் பணி செய்யும் ஊடக நிறுவனத்திற்கு முறையிட்டு
அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதன் மூலம் ஊடக சுதந்திரம்
கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட
விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அது தொடர்பாக பகிரங்கமாக
எச்சரிக்கை விடும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு எல்லை
மீறியுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T13:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனக் கப்பல்களில் ரகசிய உளவுச் சாதனங்கள்! அமெரிக்கா அம்பலப்படுத்திய திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-accuses-china-of-using-cargo-ships-for-spying-1788261350"></link>
            <id>https://ibctamil.com/article/us-accuses-china-of-using-cargo-ships-for-spying-1788261350</id>
            <summary type="text">சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான கொஸ்கோ (COSCO) கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது சரக்குக் கப்பல்களில் மறைமுக
உளவுச் சாதனங்களைப் பயன்படுத்தி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான கொஸ்கோ (COSCO) கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது சரக்குக் கப்பல்களில் மறைமுக
உளவுச் சாதனங்களைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p>அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் இராணுவத் தொடர்பாடல்களை இடைமறித்துக் கண்காணிப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியப்
பிராந்தியங்களில் இயங்கும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் மற்றும்
விமானங்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுவதாகக்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>பாதுகாப்புத் தரவு</h2><p>குறிப்பாக, அதிநவீன இராணுவத் தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புத்
தரவுகளைப் திரட்டுவதையே இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe0660f-acee-4b26-9368-00ce8881aa94/26-6a96c2814585a.webp' /></p><p>
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை வொஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் முற்றிலும்
நிராகரித்துள்ளதுடன் சீன நிறுவனங்கள் எவையும் இவ்வாறான உளவு நடவடிக்கைகளில்
ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
</p><p>
எவ்வாறெனினும், குறித்த கொஸ்கோ நிறுவனம் சீன இராணுவத்துடன் தொடர்பைக்
கொண்டுள்ளதாகக் கூறி அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டு
ஜனவரி மாதத்தில் அதனைத் தடைப்பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் சட்டத்தரணியின் மோசடி : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lawyer-took-a-loan-from-a-bank-using-a-fake-id-1788267782"></link>
            <id>https://ibctamil.com/article/lawyer-took-a-loan-from-a-bank-using-a-fake-id-1788267782</id>
            <summary type="text">போலி அடையாள அட்டையைத் தயாரித்து, அரச வங்கி கிளையில் கணக்கு தொடங்கி கடன் பெற்றதற்காக, மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞர் ஒருவரை 7ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி அடையாள அட்டையைத் தயாரித்து, அரச வங்கி கிளையில் கணக்கு தொடங்கி கடன் பெற்றதற்காக, மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞர் ஒருவரை 7ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் விரேந்திர கனங்ககே நேற்று (31) உத்தரவிட்டார்.</p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமாரி அபேயரத்ன, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><h2>பிறந்த ஆண்டை மாற்றி கடன்பெற்ற சட்டத்தரணி</h2><p>&nbsp;மேலும், சந்தேகத்திற்குரிய அந்த வழக்கறிஞர் 1970-ல் பிறந்தவர் என்றும், ஆனால் 1972-ல் பிறந்ததாகக் கூறி, போலி தேசிய அடையாள அட்டையைத் தயாரித்து, கடவத்த அரச வங்கி கிளையில் கணக்கு தொடங்கி, பலமுறை லட்சக்கணக்கான கடன்களைப் பெற்று, அவற்றில் சில கடன்களைத் திருப்பிச் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146f7cfd-a839-486d-a2d5-18f48a4f9fbf/26-6a96d14f9bc7d.webp' /></p><p>
</p><p>
இதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (3) உதவி ஆய்வாளர் ஹேமந்தா, இது தொடர்பான புலனாய்வுகள் முழுமையடையவில்லை என்றும், சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டை குறித்த விரிவான அறிக்கையைப் பெறுமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><p></p><p>

</p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கவனத்தில் கொண்ட பதில் நீதிபதி, புலனாய்வு நோக்கங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விரிவான அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவிட்டார் மற்றும் சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1462e8-053d-4547-863b-e164961f5709/26-6a96d14ee9882.webp' /></p><p>

இந்தப் புகாரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (3) உதவி ஆய்வாளர் ஹேமந்தா மற்றும் காவலர் பத்தகல்லே (97529) ஆகியோர் கையாண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-walks-on-the-carpeted-path-laid-by-ranil-1788264495"></link>
            <id>https://ibctamil.com/article/anura-walks-on-the-carpeted-path-laid-by-ranil-1788264495</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்க அமைத்த கம்பளப் பாதையில் நடந்து செல்கிறார் என்றும், அந்தப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்க அமைத்த கம்பளப் பாதையில் நடந்து செல்கிறார் என்றும், அந்தப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
</p><p>
தற்போதைய சில நடவடிக்கைகளுக்கு காம்பஸ் செயற்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று சேனரத்ன கூறினார்.</p><p>கூட்டு எதிர்க்கட்சி மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
</p><h2>ஜே.வி.பி உறுப்பினர்களின் தற்போதைய வாழ்க்கை நிலை</h2><p>முன்பு, ஜேவிபி உறுப்பினர்கள் ரொட்டி, உப்பு, மிளகு சாப்பிட்டு அரசியல் செய்வதாகக் கூறிவந்தாலும், இன்று அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0fb5e1-b634-44ef-b238-cdcb4a675fb5/26-6a96c47d5c504.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, ஒரு உள்ளாடை கூட வாங்க வழியில்லை என்றும், தங்கள் உள்ளாடைகளில் ஓட்டைகள் இருப்பதால் அதைத் தொங்கவிடக்கூட வெட்கப்படுவதாகவும் கூறும் தற்போதைய அமைச்சர்களின் நிலையை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.</p><p></p><h2>இங்கிலாந்தில் கல்விகற்கும் அமைச்சரின் மகள்</h2><p>

அத்தகைய அமைச்சர்களில் ஒருவரின் மகள் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும், அங்கு தனது நான்கு ஆண்டு கால முழு கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்திவிட்டதாகவும் ராஜித சேனாரத்ன வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7721f9dc-19f3-40d5-862b-c28ce6e7d265/26-6a96c47e11006.webp' /></p><p>
</p><p>
மேலும், அவர் வசிக்கும் வீட்டின் மாத வாடகை £1,000, அதாவது சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் என்றும் அவர் கூறினார்.

இது குறித்துக் கேட்டால், அவர்கள், "நான் என் பணத்தில் என் பிள்ளைக்குக் கல்வி கற்பிக்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று பதிலளிப்பார்கள். </p><p>கடந்த காலத்தில் தாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்ததாகக் கூறியவர்கள் எப்படி இவ்வளவு செல்வம் சேர்த்தார்கள் என்பதுதான் பிரச்சினை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-initiative-in-sri-lanka-focusing-on-india-1788263015"></link>
            <id>https://ibctamil.com/article/new-initiative-in-sri-lanka-focusing-on-india-1788263015</id>
            <summary type="text">பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 2008ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற இரண்டாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிலேயே, உறுப்பு நாடுகளுக்கிடையிலான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை உருவாக்குவதற்கான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, 2022 மார்ச் 20ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமிடப்பட்டது.</p><p></p><h2>புரவலர் நாடான இலங்கை</h2><p>
</p><p>
இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், பிம்ஸ்டெக் நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துக்களை நிர்வகித்தல் உள்ளிட்ட துறைகளில் ஆதரவு வழங்கும் கட்டமைப்பாக செயல்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/746547cb-53f6-4f3e-91ef-bb62b5a4e95a/26-6a96bef1c28a8.webp' /></p><p>ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ், புரவலர் நாடான இலங்கை, அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்.</p><p>இந்நிலையில் தேவையான நிறுவன ஒப்புதல்கள் மற்றும் சட்ட அனுமதிகளை உள்ளடக்கி, ஒரு வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
இந்த முன்னெடுப்பின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.
</p><p>
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக இருப்பதுடன், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p></p><h2>நிபுணத்துவப் பரிமாற்றம்</h2><p>

இலங்கையில் இந்த வசதி அமைக்கப்படுவது, இந்தியா உள்ளிட்ட பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77c786d-b493-43ff-9ca9-593f3bc361ad/26-6a96bf17c90f5.webp' /></p><p>

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அணுகுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவக்கூடும்.
</p><p>
இலங்கை புரவலர் நாடாக செயற்படும் நிலையில், அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் தனியான உடன்பாட்டை எட்ட வேண்டியுள்ளது.
</p><p>இந்த முன்னெடுப்பு நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் தொடங்கிய பிம்ஸ்டெக் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முயற்சி, கொழும்பை பிராந்திய தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாற்றும் புதிய கட்டத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T12:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆம் திகதிக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைது : அவரே வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-inside-before-the-12th-1788262543"></link>
            <id>https://ibctamil.com/article/namal-inside-before-the-12th-1788262543</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு மக்கள் கூட்டம் வருவதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் ஒரு பெரும் ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளதாகவும், தன்னைச் சிறையில் அடைக்க அரசாங்கம் தயங்காது என்றும் அவர் கூறினார்.</p><h2>ராஜபக்சக்களின் பாரம்பரிய உடை</h2><p>ஜேவிபி-யின் அரசியல் பாணியை விமர்சித்த அவர், கொலை அல்லது தீவைப்பு மூலம் ஒருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/242c0f51-15ba-40c3-8f4e-c982784aa768/26-6a96bbafd9fd5.webp' /></p><p> </p><p>மேலும், ராஜபக்சக்களின் பாரம்பரிய உடையான 'சால்வை' குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தங்கள் ஆடைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளைப் போலல்லாமல், தனது அடையாளத்தையோ அல்லது பாரம்பரிய உடையையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.</p><p></p><p>

</p><h2>கடுமையான மன அழுத்தத்தில்&nbsp;நீதி அமைச்சர்</h2><p>"சிலர் வெற்றிபெறும்போது ஒரு விதமாகவும், தோல்வியடையும்போது மற்றொரு விதமாகவும் நடந்துகொள்கிறார்கள். மக்கள் எதிர்ப்பு இருக்கும்போது, ​​அவர்கள் வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு நேர்மையாக அரசியல் செய்கிறோம். எனவே, எங்கள் பாணியைக் களைவது எளிதல்ல," என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033ab7d3-4023-4a12-853b-c70a6b7e4fb2/26-6a96bbaf3321e.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் 22வது திருத்தம் அரசாங்கத்தின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதன் காரணமாக நீதி அமைச்சர் கூட கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும், அதனால்தான் அவர் சமீபகாலமாக ஊடகங்களுக்கு முன்னால் தோன்றவில்லை என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைத்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-arrest-instead-of-detention-in-prisons-1788261065"></link>
            <id>https://ibctamil.com/article/house-arrest-instead-of-detention-in-prisons-1788261065</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீடுகளில் தடுத்து வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீடுகளில் தடுத்து வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். </p><p>

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தல்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bd7cbfb-5a37-4c9c-a1d2-f7745364b011/26-6a96b5f714bfd.webp' /></p><p> </p><p>சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. </p><p>இந்தச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களால் விலை உயர்வை சந்திக்கும் கச்சா எண்ணெய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-prices-rise-due-to-iran-us-attacks-1788260487"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-prices-rise-due-to-iran-us-attacks-1788260487</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு 1.18 டொலர் (1.3 சதவீதம்) அதிகரித்து 91.67 டொலராக பதிவாகியுள்ளது.
</p><p>
அதே நேரத்தில் அமெரிக்க டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.27 டொலர் (1.48 சதவீதம்) அதிகரித்து 87.03 91.67 பதிவாகியுள்ளது.
</p><p></p><h2>பதிலடி ஏவுகணைப் தாக்குதல்</h2><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதிலடி ஏவுகணை தாக்குதல் நகர்வுகள் இது ஒரு போர் நிறுத்த நிலையை கடந்து செல்வதாக ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17d07bb-aba1-4057-a45c-02930a2db1e4/26-6a96b5cbc13da.webp' /></p><p>

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த, கட்டார் மற்றும் ஓமான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
</p><p>
எண்ணெய் விலையால் ஏற்படும் பணவீக்கம் குறித்து வர்த்தகர்கள் கவலை கொண்டதால், உலகளாவிய கடன் பத்திர விற்பனை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜப்பானின் முக்கிய 10 ஆண்டு காலப் பத்திர வருவாய், 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக செவ்வாயன்று 3 சதவீத தடையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடி உலகளவில் விலை அழுத்தங்களைத் தூண்டி வருவதால் , மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், டோக்கியோ மற்றும் சிட்னியிலிருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை பத்திர வருவாய்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை வழங்கிய துல்லிய தகவல் : வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dehibales-brother-kalu-malli-arrested-in-dubai-1788260313"></link>
            <id>https://ibctamil.com/article/dehibales-brother-kalu-malli-arrested-in-dubai-1788260313</id>
            <summary type="text">இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேக நபர், “தெஹிபாலே” என அறியப்படும் ஷெஹான் சட்சராவின் சகோதரர் ஆவார். இவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஆவார்.</p><h2>அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்</h2><p>&nbsp; அதிகாரிகளின் முயற்சியை அடுத்து, சந்தேக நபர் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d2a731-fdf2-4101-9b43-d158ce832f66/26-6a96b4a5eff41.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வறட்சியின் பிடியில் விவசாயிகள்...! கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drought-dries-up-puliuuthu-tank-in-trincomalee-1788260740"></link>
            <id>https://ibctamil.com/article/drought-dries-up-puliuuthu-tank-in-trincomalee-1788260740</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும்
தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்
புளிஊத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும்
தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குளம் தற்போது வறண்டு
வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன் குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h2>கடுமையான நீர்ப்பற்றாக்குறை</h2><p> குளம்
முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு
நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478921cb-b0fa-44a8-ada4-7928539c946d/26-6a96b18609cd9.webp' /></p><p>

எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை
ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p>அத்தோடு&nbsp;எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர்
பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன
மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர்
எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம்
இடம் பெற்றன.</p><p>நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள்
வற்றியுள்ளதுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>
</p><p></p><h2>குடிநீர் பற்றாக்குறை</h2><p>இதனையடுத்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அவசர
தேவையாக குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb2f9fa-4e58-4919-963e-fa636b867358/26-6a96b186e236a.webp' /></p><p>

குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைகளுக்குக் கூட நீரைப்
பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை ஓரளவு
நிவாரணமாக அமைந்துள்ளது.
</p><p>
தொடர்ந்து வறட்சி நிலை நீடிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
குடிநீர் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மணற்காடு சவுக்கங்காட்டில் மீண்டும் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-again-in-the-manrkadu-forest-1788259802"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-again-in-the-manrkadu-forest-1788259802</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு
வானூர்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை</h2><p>குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி
உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029c2e1d-4bb8-4ade-a912-7c9a72d806cd/26-6a96b1b129359.webp' /></p><p>அத்துடன் யாழ் மாவட்டத்தின் அனர்த்த
முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திற்கு சமூகமளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல்...! பொதுச்சுகாதார பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pho-remanded-over-school-abuse-claims-in-kalmunai-1788257284"></link>
            <id>https://ibctamil.com/article/pho-remanded-over-school-abuse-claims-in-kalmunai-1788257284</id>
            <summary type="text">கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்&amp;nbsp;பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் 51 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்&nbsp;பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் உள்ள மாணவகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகாரி வாக்குமூலம்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31-08-2026) கல்முனைத் தலைமையக காவல் நிலையத்திற்கு வருகை தந்தபோதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed2b7d8-600d-4712-9939-37b9e64bae88/26-6a96abcfbb120.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.
சாஜித் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>இதன்போது இரு தரப்பு
வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும்
செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
கட்டளையிட்டார்.</p><p>
</p><p></p><h2>சுகாதாரப் பரிசோதனை</h2><p>குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான
வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. </p><p>இதன்போது பரிசோதனையில்
ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை
கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c0247b-c200-4582-9c95-26a7642db8a8/26-6a96abcf10b2e.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக்
கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் காவல் நிலையத்தில்
ஒப்படைத்திருந்தனர். </p><p>அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த கைது நடவடிக்கை
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பகுதியில் ஈரானிய கப்பல்கள் :அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/12-iranian-ships-enter-sri-lankan-waters-1788259128"></link>
            <id>https://ibctamil.com/article/12-iranian-ships-enter-sri-lankan-waters-1788259128</id>
            <summary type="text">அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்காக இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.
</p><p>
அச்சந்திப்பில், கடந்த சில நாட்களில் சுமார் 12 ஈரானியக் கப்பல்கள் நாட்டின் அனுமதியின்றி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.</p><h2>எனக்கு எதுவும் தெரியாது&nbsp;</h2><p>&nbsp; நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் எல்லையான தரைப்பகுதியிலிருந்து 12 கடல் மைல் எல்லையைக் கடந்து, கப்பல்கள் 11.5 கடல் மைல் வரை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d14fa25-161d-4cd2-84bf-7733f11062e3/26-6a96ad942d20c.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இவ்விஷயம் குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இவ்விஷயம் குறித்து தமக்குத் தெரியாது என்றும், இது குறித்து வெளியுறவு அமைச்சு விசாரிக்கும் என்றும் கூறினார்.
</p><p>
மத்திய கிழக்கில் போரின் தீவிரம் அதிகமாக இருந்தபோதும், உயிர்களைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்திற்காக இரு தரப்பினரும் உதவிகரமான முறையில் செயல்பட்டனர் என்றும், அத்தகைய சூழ்நிலையில் போரில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மீண்டும் குற்றமிழைப்போருக்கான சட்டத்தில் திருத்தம் : கிடைத்தது அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amendment-to-the-law-against-repeat-offenders-1788257968"></link>
            <id>https://ibctamil.com/article/amendment-to-the-law-against-repeat-offenders-1788257968</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>&nbsp;சட்ட மாஅதிபரின் அங்கீகாரம்&nbsp;</h2><p>

அதன்படி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்ட மாஅதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f19767-f9e8-4b90-9be5-57e142b00929/26-6a96a956592b4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைச் சீர்திருத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-results-of-the-2005-scholarship-exam-1788257743"></link>
            <id>https://ibctamil.com/article/the-results-of-the-2005-scholarship-exam-1788257743</id>
            <summary type="text">கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டது போல, அனைத்து மதிப்பெண் பட்டியல்களும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளன, அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை மீண்டும் சரிபார்க்கும் இறுதி கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2>பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு</h2><p>&nbsp; நாடு முழுவதும் 2,723 நிலையங்களை உள்ளடக்கி கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa157e4-29bc-4513-9dc6-71689e35b440/26-6a96a7eeee844.webp' /></p><p> </p><p>பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யும் என்று பரீட்சை நடைபெற்ற அதே நாளில் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு செயல்முறை கடந்த 20ஆம் திகதி நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 48 நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமானது. அங்கு 380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ் 6,000க்கும் மேற்பட்ட பரீட்சகர்கள் விடைத்தாள்களைச் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/appointed-the-new-commissioner-general-of-dmt-1788256386"></link>
            <id>https://ibctamil.com/article/appointed-the-new-commissioner-general-of-dmt-1788256386</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) காலை கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p></p><h2>கடமையேற்றல் நிகழ்வு</h2><p>
</p><p>
 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த கடமையேற்றல் நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab3a725-855e-4d74-816e-0c7cadda2276/26-6a96a2359b1a6.webp' /></p><p>

 

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255879"></link>
            <id>https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255879</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் செப்டம்பர் 15 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது.
</p><p>

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) - முன்னிலைப்படுத்தப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலையில் காணப்படும் இணையத்தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழி மற்றும் வட்ஸ்அப் ஊடாக இணைக்கமுடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p> 

 மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc349953-6fba-48c9-a8d2-eb1ac6296f88/26-6a96a6fb7c520.webp' /></p><p>
இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த வழக்கு தொடர்பான தொடர்ச்சியான மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p>
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. </p><p>இவ்வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T09:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-glacier-disaster-death-toll-crosses-1-000-1788255357"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-glacier-disaster-death-toll-crosses-1-000-1788255357</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. </p><p>துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>இந்தநிலையில் 987 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>வெளிநாட்டவர்கள்&nbsp;</h2><p>அத்தோடு 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>இதனுடன் சீனா வெளியிட்டுள்ள தரவுகளின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83467c71-4fbe-4521-9daf-5c11aa207d2a/26-6a96a114b9495.webp' /></p><p>இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 4,460 இற்கும் அதிகமானோர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.
</p><p>வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.</p><p>

அவர்களுள் 500 இற்கும் மேற்பட்டோர் சேறும் சகதியும் நிறைந்த இருண்ட சுரங்கங்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.</p><p> </p><p></p><h2>மீட்புக் குழுக்கள்</h2><p>அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கி மீட்டெடுக்க இராணுவ மீட்புக் குழுக்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.</p><p>இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட பனிப்பாறை முறிவே இப் பேரழிவிற்குக் காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e29ce80-7030-4b1c-80dd-fef1614f05b6/26-6a96a11579644.webp' /></p><p>

இந்த வீழ்ச்சி 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு நிகரான அதிர்வை ஏற்படுத்தியதுடன், பனி, பாறைகள் மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு த்ரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளை அடியோடு அழித்தது.</p><p>இதுவரை 11,814 க்கும் அதிகமானோர் ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
உடல்களைப் பாதுகாப்பதற்காக 1,000 இற்கும் மேற்பட்ட ஃப்ரீஸர் பெட்டிகள் (Freezer units) மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனை உபகரணங்களை நேபாள அரசு சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788246862"></link>
            <id>https://ibctamil.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788246862</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அங...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, அங்கு செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p><p> சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி ஹோட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உலகப் பாரம்பரிய களம்&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, இணையவழி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்யும் முறையின் மூலம், எந்தவொரு நேரத்திலும் பூங்காவிற்குள் இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் துல்லியமாகக் ஒழுங்குபடுத்த முடியும்.</p><p>
</p><p>
அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உயர்தர சுற்றாடல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கவும் புதிய கட்டண மூலோபாயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c6c2e1-ac5c-48e3-a39a-25a28289fb32/26-6a969b008e2d3.webp' /></p><p>
</p><p>

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி, தனது தனித்துவமான உயிர்பல்வகைமை பெருக்கத்திற்கும் நுட்பமான மலைக்காட்டுச் சூழலுக்கும் பெயர் பெற்றதாகும்.</p><p>
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டன் சமவெளி பூங்கா காப்பாளர் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து நிலையான சூழல் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T09:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - சீனா இடையே குடிவரவு கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு: அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/immigration-control-cooperation-srilanka-china-1788253004"></link>
            <id>https://ibctamil.com/article/immigration-control-cooperation-srilanka-china-1788253004</id>
            <summary type="text">இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.</p><p>வாராந்த அமைச்சரவை முடிவுகள்&nbsp; குறித்த அறிக்கையில் இந்த விடயம்&nbsp; வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகள்</h2><p>இந்த திட்டத்தின் அடிப்படை&nbsp; நோக்கங்களாக, இரு நாடுகளின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர விஜயங்களை எளிதாக்குதல்,&nbsp;எல்லை பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான அதிகாரப்பூர்வ மற்றும் உளவுத்துறை தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளுதல்,&nbsp;வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு குடிமக்களின் விசா, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகளை மேலும் விரைவுபடுத்தி சுமுகமாக்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659ce5c0-765e-4e21-ae54-e9af9e8f7679/26-6a969b40b5ee3.webp' /></p><p>மேலும்,&nbsp;&nbsp;சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் ஆள் கடத்தல், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்,&nbsp;குடிவரவுத் துறை அதிகாரிகளின் அறிவு, தொழில்முறை நுணுக்கங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக கூட்டுப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு ஆவணத்திற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை தங்களது சட்டபூர்வ அனுமதியை (Clearance) ஏற்கனவே வழங்கியுள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த விசேட முன்மொழிவுக்கு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 31) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T09:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் கோவில்களில் தொலைபேசிகளுக்கு தடை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tn-bans-mobile-phones-in-52-major-temples-1788250881"></link>
            <id>https://ibctamil.com/article/tn-bans-mobile-phones-in-52-major-temples-1788250881</id>
            <summary type="text">தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><p>
இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப்
பாதுகாக்கவும், ரீல்ஸ் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதால் பிற
பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இந்ந நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கோயில்களின் நுழைவு</h2><p>இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்
பெட்டகங்களில் ரூபாய் ஐந்து கட்டணம் செலுத்தி தொலைபேசிகளை பாதுகாப்பாக
ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4924df-7cfb-44ad-9a93-76d58b05bc09/26-6a9695e63b32a.webp' /></p><p>
அத்துடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தரும் போது
முன்னறிவிப்பு இன்றி காணொளி புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தடை விதிக்கப்பட்டுள்ள சில முக்கிய கோயில்களில் சென்னை மற்றும் அதன்
சுற்றுவட்டாரத்தில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு
தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,
குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன் ஆகிய கோயில்களும்,

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்,
வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருத்தணி முருகன், திருவள்ளூர் வீரராகவர்
போன்ற கோயில்களும்,

மேலும் தென் மத்திய மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன், பழனி முருகன்,
திருப்பரங்குன்றம் முருகன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சமயபுரம்
மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் , ராமேசுவரம் ராமநாதசாமி,
நெல்லையப்பர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கோவை கோணியம்மன், சேலம் கோட்டை
மாரியம்மன் உள்ளிட்ட 52 கோயில்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:22:09+00:00</updated>
        </entry>
    </feed>
