<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T10:24:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865"></link>
            <id>https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&amp;nbsp; 200க்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&nbsp; 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று (26) 10 தொன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.</p><p>
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“நேபாளத்துக்காக 37.5 தொன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவு பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜெய்சங்கரின் பதிவு&nbsp;</h2><p> இந்தியா - நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A second flight has just taken off, carrying 37.5 tonnes of HADR material, medicines &amp; food packets for Nepal.<br><br>India remains in close and continuous touch with the Nepalese authorities. We will continue to strongly support the ongoing relief efforts.<br><br>🇮🇳🇳🇵 <a href="https://t.co/4m46leqfkC">pic.twitter.com/4m46leqfkC</a></p>&mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href="https://x.com/DrSJaishankar/status/2092849615360114978?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>இதேவேளை முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம். </p><p>உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி&nbsp; நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.</p><p>அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355"></link>
            <id>https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இரு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள விசேட தீர்மான மனுவை நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
BASL பொருளாளர் T.M.S. பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் முன்னதாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து விசேட தீர்மான மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் BASL மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.</p><p></p><h2>மனு மீதான விசாரணை</h2><p>இந்நிலையில் நிபுண ஆரச்சி தனது மனுவில், இந்த வழக்கில் இடையீட்டாளராக இணைந்து, சட்டத்தரணி ஊடாக BASL மனு மீதான விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e4c1ef-5fd8-4d39-93fb-ed04368b1721/26-6a900ccd71995.webp' /></p><p>மேலும், BASL மனுதாரர்கள் முன்வைத்துள்ள பல முக்கிய வாதங்களை அவர் நிராகரித்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை, சட்ட அடிப்படையற்றவை அல்லது சட்டரீதியாக நிலைக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T10:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்...! சஜித் தரப்பு எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/take-control-to-protect-democracy-harshana-1787820618"></link>
            <id>https://ibctamil.com/article/take-control-to-protect-democracy-harshana-1787820618</id>
            <summary type="text">இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>

கம்பஹாவில் நேற்று (26-08-2026) மக்கள் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மையான மக்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும் அதனை
யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச்
சாத்தியமற்றது. </p><p>ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be4fd669-e286-40f1-9c52-c366347efe66/26-6a9004fa68cef.webp' /></p><p>தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசு
நிறைவேற்றவில்லை.</p><p> மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல்,
நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் எச்கரிக்கப்படவில்லை.</p><p> </p><p></p><h2>மக்கள் விடுதலை&nbsp;</h2><p>இதனால்
இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன்
மூலம் வடகொரியாவைப் போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகாரப்
போக்கை நோக்கி அரசு நகர முற்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998edbaf-a06c-4f95-88a0-f3f4376a602c/26-6a9004f9b3c83.webp' /></p><p>மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட
முடியாமல் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின்
உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
</p><p>
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும் மற்றும் சர்வாதிகார
ஆட்சியை வீழ்த்தவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட
வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீரர் சோனல் தினுஷவை சச்சினுடன் ஒப்பிட்ட BCCI துணைத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758</id>
            <summary type="text">இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளப் பதிவில் சுக்லா, “இலங்கையின் இந்த சோனல் அற்புதமான வீரர். டெண்டுல்கரைப் போலத் தெரிகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாக முடியும்” எனக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட்டையும் பதிவில் இணைத்துள்ளார்.</p><p>
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினுஷ தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் பின்னணியிலேயே சுக்லாவின் இந்தப் பாராட்டு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>100 ஓட்டங்கள்</h2><p>நான்கு இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை தினுஷ பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d936d7-91e2-47f0-a303-1ff600618ccb/26-6a90069061d4c.webp' /></p><p>
</p><p>இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 100 ஓட்டங்களையும், இரண்டாம் இனிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.</p><p>மேலும், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில்&nbsp; இரண்டாவது இன்னிங்ஸான இன்றைய இறுதி நாளில் மற்றொரு அரைச்சதம் கடந்து தற்போதுவரை 98 ஓட்டங்களை ஆட்டமிக்காது பெற்றுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This Sonal of Srilanka is an amazing player. Looking like Tendulkar. Can be a wonderful test player in international cricket. <a href="https://x.com/OfficialSLC?ref_src=twsrc%5Etfw">@OfficialSLC</a></p>&mdash; Rajeev Shukla (@ShuklaRajiv) <a href="https://x.com/ShuklaRajiv/status/2092835598235304013?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிய நிலையில், தினுஷ கடைநிலை துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் துடுப்படுத்தாடி வருகிறார்.</p><p>இந்தத் தொடரில் தினுஷவின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட விதமும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
</p><p>
25 வயதான சோனல் தினுஷவின் இந்த ஆட்டம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701"></link>
            <id>https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701</id>
            <summary type="text">தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரர்களிடம் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.</p><p>

மரணப்படுக்கையில் இருந்த சிவகுமாரனைப் பார்த்து கவலையடைந்த சகோதரியிடம், ”ஏன் அழுகிறாய், நான் மீண்டும் உன் வயிற்றில் பிறப்பேன், இந்த மண்ணின் விடுதலைக்காக போராடுவேன்”என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழின விடுதலைக்காக போராடிய பொன் சிவகுமாரன் 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - உரும்பிராயில் பிறந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்டு 1974 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி உயிரிழந்தார்.</p><p>

ஈழப்போராட்ட வராற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த வீரரான பொன் சிவகுமாரன் உயர்தரத்தில் கல்வி கற்ற போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைக்கு எதிராக போராடி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சேவையாற்றியுள்ளார்.
</p><p>
மேலும் தியாகி பொன் சிவகுாரனின் மறைவின் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தியமை அக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AHIq_O-T3Ho" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை முறைகேடுகளில் சிக்கிய 461 அதிகாரிகளின் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/461-officials-caught-in-examination-irregularities-1787818168"></link>
            <id>https://ibctamil.com/article/461-officials-caught-in-examination-irregularities-1787818168</id>
            <summary type="text">பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை கடமைகளுக்காக அதிகாரிகளை நியமிக்கும் போது கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் கணக்காய்வின்போது கண்டறியப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 461 அதிகாரிகளில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும், 182 அதிகாரிகளின் பரீட்சை பணித் தடையை ஆரம்பித்த திகதியும் குறித்த பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை எனவும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதில்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியுடன் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக, இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280a3ac2-399c-45e8-8036-ca8df0f5323b/26-6a8ff59f9743f.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த பெயர்கள் நீக்கப்பட்டமை, கறுப்புப் பட்டியலை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாக, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை பணிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
போலி பரீட்சை பெறுபேறுகள் தயாரித்ததாக குற்றச்சாட்டு
இதற்கிடையில், 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய ஐந்து பரீட்சார்த்திகள், போலியான பரீட்சை பெறுபேறுகளைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், தொடர்புடைய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், க.பொ.த. சாதாரண தரம் 2024 (2025) பரீட்சையின் நான்கு பரீட்சை நிலையங்களில், பரீட்சை நடைபெறும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய ஆறு மேற்பார்வையாளர்களின் தொலைபேசிகள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T08:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bursting-firecrackers-two-women-admitted-hospital-1787817829"></link>
            <id>https://ibctamil.com/article/bursting-firecrackers-two-women-admitted-hospital-1787817829</id>
            <summary type="text">புத்தளம் மீ ஓயா வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குண்டு வெடித்ததில் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மீ ஓயா வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குண்டு வெடித்ததில் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p>குறித்த வேட்டைக்காக வைக்கப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் வெடிபொருள் ஒன்றை , வீட்டில் வளர்க்கப்படும் நாய் தனது வாயில் எடுத்துக்கொண்டு வந்த நிலையில், அதனை நிறப்பூச்சு பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் தூரிகையால் தட்டிப் பார்க்க முயன்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இதன் பின்னர் காயமடைந்த இரு பெண்களும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p></p><h2>இரு பெண்கள் காயம்</h2><p>அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4333e1fa-6d99-4a20-8684-cf21de656eff/26-6a8ff291a8c0b.webp' /></p><p>&nbsp;மற்றைய பெண் சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
சம்பவம் தொடர்பில்புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் : நீதி அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pta-will-be-completely-repealed-by-this-year-in-sl-1787813486"></link>
            <id>https://ibctamil.com/article/pta-will-be-completely-repealed-by-this-year-in-sl-1787813486</id>
            <summary type="text">பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன் தேசிய பாதுகாப்பையும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p> பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வினவியபோது அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தளவுக்கு மோசமானது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்த நாட்டில் வரலாற்று ரீதியில் பல முரண்பாடுகள் ஏற்படுவதற்கு அந்த சட்டம் பிரதான காரணியாக அமைந்துள்ளது.</p><p>1979 ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்றளவில் நடைமுறையில் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளுக்கும், ஜனநாயக கொள்கைக்கும் எதிரானது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1686f6b-00d2-4caa-9b71-0877779ad4e8/26-6a8fefa489555.webp' /></p><p> </p><p>தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இந்த குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு, பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வோம் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.</p><p> இருப்பினும் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு இந்த சட்டத்துக்கு அமையவே செயற்படவேண்டிய நிலைமை காணப்படுகிறது.
</p><p>
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும்&nbsp;</h2><p>

இதற்கமைய 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்கு உரிய அடிப்படை எண்ணக்கருவை தயாரிப்பதற்காக விசேட நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தொழில்நுட்ப விசேட நிபுணத்துவக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள முதனிலை சட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்' எனும் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3279d26-cd64-4fad-b629-244e3cc7d3f8/26-6a8fefa53e399.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபர் அனுமதி அளித்துள்ளார். இந்த சட்டமூலம் வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
</p><p>
பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.</p><p> தேசிய பாதுகாப்பையும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.

புதிய சட்ட உருவாக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p> பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் தரப்பினர் நடைமுறை நெருக்கடிகள் மற்றும் பூகோள பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள்: காத்மண்டு தூதரகத்தின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934"></link>
            <id>https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளத்தில் நிலவும் தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்கும் மற்றும் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளத்தில் நிலவும் தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்கும் மற்றும் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த புள்ளிவிபரத் தகவல்களைக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.</p><p>தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் மொத்தம் 83 இலங்கையர்கள் உள்ளனர்.</p><p>பிரிவு வாரியான விபரங்கள்</p><p>
மாணவர்கள்: 23
</p><p>
பணியாளர்கள் (வேலை செய்பவர்கள்): 28
</p><p>
சுற்றுலாப் பயணிகள்: (குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவாகவில்லை)
</p><p>
நேபாளப் பிரஜைகளைத் திருமணம் செய்தவர்கள் : 5
</p><p>

ஏனையோர்: 27
</p><p>
மொத்த எண்ணிக்கை : 83</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய அபாயமுள்ள மாவட்டங்களில் அருகாமையில் வசிக்கும் இலங்கையர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதுவரை அனர்த்ததில் சிக்கி&nbsp;500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம்</h2><p> 
</p><p>எனவே அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர ஹாட்லைன் +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364bd7f6-1401-4309-90c9-3387051d9ed8/26-6a8fba964485e.webp' /></p><p>
</p><p>
எனினும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:43:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தின் எல்லை தாண்டிய பேரழிவு! காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/latest-update-on-nepal-floods-1787813698"></link>
            <id>https://ibctamil.com/article/latest-update-on-nepal-floods-1787813698</id>
            <summary type="text">நேபாளத்திலும் சீனாவிலும் காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.இது இமயமலைப் பகுதியில் அரங்கேறிய எல்லை தாண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்திலும் சீனாவிலும் காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.</p><p>இது இமயமலைப் பகுதியில் அரங்கேறிய எல்லை தாண்டிய பேரழிவின் அளவை எடுத்துக்காட்டுகிறது.
</p><p>இதன்படி நேபாளத்தில் 826 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1784502835906575%2F&amp;show_text=false&amp;width=560&amp;t=0" width="560" height="314" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><h2>அதிகாரப்பூர்வ அறிக்கை</h2><p>எனினும் எதிர்வு கூறல் தகவல்களின் அடிப்படையில்,&nbsp; காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37496ddb-b21d-4247-80c3-3e7851a22486/26-6a8fe66942835.webp' /></p><p>அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி காணாமல் போன 590 சுற்றுலாப் பயணிகளில், 476 பேர் வெளிநாட்டினர் என்றும், மற்றும் 114 பேர் நேபாள நாட்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p>
இந்தப் பட்டியலில் 177 இந்தியர்கள், 63 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 34 அவுஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள், 25 கனடியர்கள், 8 ஜெர்மானியர்கள், 6 சிங்கப்பூரர்கள் மற்றும் 6 தென்னாப்பிரிக்கர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>ஆரம்பகட்டப் பேரழிவு ஏற்பட்டு சுமார் 22 மணி நேரத்திற்குப் பிறகு, சீனா-நேபாள வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கையாளும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைமுகமான கியிராங் துறைமுகத்தை சீன அவசரகால மீட்புக் குழுவினர் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும்,&nbsp; எல்லைப் பிராந்தியத்தில் உள்ள மற்ற முக்கிய வர்த்தக உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகள் நீண்டகாலம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T07:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI தொழில்நுட்பத்தால் மூளைக்கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/london-neurosurgeons-ai-operation-brain-tumour-1787814129"></link>
            <id>https://ibctamil.com/article/london-neurosurgeons-ai-operation-brain-tumour-1787814129</id>
            <summary type="text">நேரடி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளைக் கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.&amp;nbsp;பிரித்தானியாவின் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேரடி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளைக் கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.&nbsp;</p><p>பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷயரை சேர்ந்த 48 வயதுடைய ரைஸ் ஹிபர்ட் என்பவரின் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்த கட்டியை இவ்வாறு அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.</p><p>லண்டனில் உள்ள தேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவமனையின் (NHNN) மருத்துவர்களால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மூளைக் கட்டி&nbsp;அறுவை சிகிச்சை</h2><p>

</p><p>அறுவை சிகிச்சையின் போது, AI தொழில்நுட்பம் மூளையின் நேரலைக் காட்சிகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து, முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகள் உள்ளிட்ட பகுதிகளைத் தனித்தனியாக அடையாளம் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42674f4d-6152-47f3-8186-71c84bc9b468/26-6a8fe5c15ffd6.webp' /></p><p>இதன் மூலம், கட்டியை அகற்றும்போது தவிர்க்கவேண்டிய பகுதிகளை துல்லியமாக கண்டறிய முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பிட்யூட்டரி சுரப்பி, இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளதால், அறுவை சிகிச்சையின் போது சிறிய அளவிலான தவறுகூட பார்வையைப் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>

2024ஆம் ஆண்டு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட ஹிபர்ட், அறுவை சிகிச்சை மூலம் தனது பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீண்டும் தனது பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த AI தொழில்நுட்பம் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் (UCL) ஆராய்ச்சியாளர்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மூளை அறுவை சிகிச்சைக் காணொளிகளைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/old-men-death-in-road-accident-1787815337"></link>
            <id>https://ibctamil.com/article/old-men-death-in-road-accident-1787815337</id>
            <summary type="text">அனுராதபுரம் - திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து திறப்பனை காவல்துறை பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
குறித்த விபத்து திறப்பனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் ஞானிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது </p><p>





திறப்பனையிலிருந்து கல்குளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சாரதி கைது</h2><p>






 விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4ca328-538d-4a65-8632-9e4415415fd8/26-6a8fe5abdcf0f.webp' /></p><p>





உயிரிழந்தவர் 66 வயதுடைய கல்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>





வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திறப்பனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் பெயரை மாற்றி சுற்றும் அர்ஜுன மகேந்திரன் - நாடு கடத்துவதில் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/legal-issues-to-extraditing-arjuna-mahendran-1787809562"></link>
            <id>https://ibctamil.com/article/legal-issues-to-extraditing-arjuna-mahendran-1787809562</id>
            <summary type="text">சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p>சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>சட்ட பூர்வமான தடைகள்&nbsp;</h2><p>அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்ட பூர்வமான தடைகள் உள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1668789e-f4b9-4de1-be97-ba57d6e6c26d/26-6a8fd2154ef5c.webp' /></p><p>ஆனால், சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.</p><p>அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது.</p><p></p><h2>மத்திய வங்கி பிணைமுறி</h2><p>மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a533f32f-64a7-4cdb-87cd-d34c8a6f6cfc/26-6a8fd2160c39a.webp' /></p><p>இந்நிலையில் சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p>

அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8HxS1ykoobE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-people-including-a-10-day-old-infant-died-1787808491"></link>
            <id>https://ibctamil.com/article/3-people-including-a-10-day-old-infant-died-1787808491</id>
            <summary type="text">அநுராதபுரம் கெபிதிகொல்லேவ, கோனமரிவ கோயில் அருகே வாகன விபத்தில் 10 நாள் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து&amp;nbsp;இன்று காலை (...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் கெபிதிகொல்லேவ, கோனமரிவ கோயில் அருகே வாகன விபத்தில் 10 நாள் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து&nbsp;இன்று காலை (27.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>

பதவி ஸ்ரீபுர பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், அனுராதபுரத்திலிருந்து கெபிதிகொல்லேவ நோக்கிச் சென்ற வாடகைக் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மூவர் பலி&nbsp;</h2><p>

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, அவரது தாயார் மற்றும் 10 நாள் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0be7a3b-536e-4e80-a6da-6696fbeef24d/26-6a8fdaa3bb265.webp' /></p><p>இதன்படி அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கெபிதிகொல்லேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேரிலே எழுந்தருளிய செல்வச்சந்நிதியான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-car-festival-1787800125"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-car-festival-1787800125</id>
            <summary type="text">புதிய இணைப்புவரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு - செல்வச்சந்நிதி முருகன் ஆலய முருகப்பெருமான் பல்லாயிரக்காணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் சித்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு - செல்வச்சந்நிதி முருகன் ஆலய முருகப்பெருமான் பல்லாயிரக்காணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் சித்திரத்தேரிலேறி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
</p><p>
இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து உள்வீதி வலம் வந்த முருகப்பெருமான் காலை 9.40 மணியளவில் சித்திரத்தேரில் எழுந்தருளினார்.
</p><p>
விநாயகப் பெருமான் முன்னேயுள்ள தேரிலும், வள்ளி தெய்வானை சமேதரராய் முருகப்பெருமான் சித்திரத் தேரிலும் அமர்ந்து வெளிவீதியுலா வலம் வந்து அருட்காட்சியளிக்கின்றார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!</h4><p>ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.</p><p>அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார்.</p><p>அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp;செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி&nbsp;அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/customs-duty-reduction-for-vehicle-imports-1787810808"></link>
            <id>https://ibctamil.com/article/customs-duty-reduction-for-vehicle-imports-1787810808</id>
            <summary type="text">இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து&amp;nbsp;கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து&nbsp;கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.</p><p>இதன்படி அந்த நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டு செலாவணி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலேயே கட்டணம் நீக்கம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் வாகன விலைகள் மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு செலாவணி கையிருப்பு</h2><p>
நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய முன்னுரிமை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் பின்னரே இத்தகைய வரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de9baac-b591-4d4e-a25e-d4b6eb26c638/26-6a8fd9c46e891.webp' /></p><p>மேலும், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதி தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அத்தோடு, அரசாங்கம் ஆரம்பத்தில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகன இறக்குமதியை எதிர்பார்த்திருந்த நிலையில், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்கள் உள்ளிட்ட மொத்த மதிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதி சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T06:33:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-for-users-of-solar-panels-in-sl-1787809225"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-for-users-of-solar-panels-in-sl-1787809225</id>
            <summary type="text">இலங்கையில்&amp;nbsp;சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு&amp;nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்&nbsp;சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு&nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இந்த நிலையில் குறித்த நாட்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர்</h2><p>இதேவேளை விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை&nbsp; தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f421b-0640-43f3-b2b8-b85c8e4cb256/26-6a8fd5a8892f8.webp' /></p><p>விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தேசிய மின் அமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டும் இந்தத் தற்காலிக நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-senator-urges-gov-chemmani-mass-grave-1787805549"></link>
            <id>https://ibctamil.com/article/australian-senator-urges-gov-chemmani-mass-grave-1787805549</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில்&amp;nbsp;அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில்&nbsp;அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். </p><p>அதன்படி, மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p> அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்ட அவர்&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும் என்று அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இது.</p><p> முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசு தூண்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0f14fb-3cdf-467c-9392-c2b9e9051728/26-6a8fcab39e934.webp' /></p><p>
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருகின்றது.</p><p>மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தல்</h2><p>இதேவேளை நம்பகமான மற்றும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம், உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் சமூகம் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது என அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72fefedf-65c1-4bfe-acf0-e9b80bffec36/26-6a8fcb65da0ac.webp' /></p><p>
</p><p>
எனவே, உடனடியாகச் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுப்பதோடு, சாட்சியங்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்தப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841"></link>
            <id>https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.</p><p></p><h2>உலகம் முழுவதும் அதிர்ச்சி</h2><p> இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32f1fa4-9f40-4cfe-9d27-0064d86f5c9e/26-6a8fc2b38ef62.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>தற்போது வரை நேபாளைத்தைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 698 பேர் மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், அமெரிக்கர்கள் 54 பேர் மாயமாகியிருப்பதாகவும், 34 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியிருப்பதாகவும், 33 பிரிட்டன் நாட்டவர்கள் மாயமாகியிருப்பதாகவும் நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எவரும் பாதிக்கப்படவில்லை</h2><p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33246c10-efd6-4c56-b9fd-aca7c8d389a5/26-6a8fc2b44ba51.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனினும் இப்பேரழிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>நேபாளத்தில் வசிக்கும் 85 முதல் 100 வரையிலான இலங்கையர்களின் நிலைமையைக் காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன்அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர Hot line +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்&nbsp;என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு : தொடருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-employees-social-media-use-duty-hours-1787802422"></link>
            <id>https://ibctamil.com/article/railway-employees-social-media-use-duty-hours-1787802422</id>
            <summary type="text">தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று&amp;nbsp; வெளியிடப்பட்டுள்ளது.கடமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று&nbsp; வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.</p><p>அத்துடன் சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அந்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தல்</h2><p>
</p><p>
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f035d9-e266-49dc-9d61-218ff31fcd39/26-6a8fbd4025947.webp' /></p><p>இந்தநிலையில் இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:28:48+00:00</updated>
        </entry>
    </feed>
