<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-17T13:50:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொம்பனித்தெரு முருகன் ஆலய நகைகள் கொள்ளை! தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slave-island-kovil-theft-travel-ban-on-priest-1786972825"></link>
            <id>https://ibctamil.com/article/slave-island-kovil-theft-travel-ban-on-priest-1786972825</id>
            <summary type="text">



கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் உள்ள 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆலயத்தின் தலைமை அர்ச்சகருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.
</p><p>
சதீஸ்வரன் குருக்கள் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறித்த அர்ச்சகர் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு கொட்டாஞ்சேனையில் உள்ள புதுச் செட்டித்தெரு பகுதியல் சொத்து ஒன்றை வாங்கியுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போன கோயிலின் மதிப்புமிக்க நகைகளைக் கண்டறியவும், பெறப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்து குறித்து ஆய்வு செய்யவும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a5907f-85ed-4b39-92f8-caa2c01e4554/26-6a830dfb3c3d1.webp' /></p><p>
</p><p>
அத்துடன் தலைமறைவாக உள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:34:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்! நிர்வாகப் பிரச்சினையை இனவாத அரசியலாக்க வேண்டாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவை விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட வேண்டிய ஒரு நிர்வாக விடயமாகும்.
</p><p>
குறித்த சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை என்ன, அது எந்தப் பணியாளர்களுக்கு பொருந்துகின்றது, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவற்றை சுகாதார அமைச்சு மட்டத்தில் உரிய முறையில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தெளிவானதும் நியாயமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
</p><p>

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள், கலாசார மரபுகள் மற்றும் அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். எந்தவொரு சமூகமும் தனது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் மதிப்புடன் வாழ்வதற்கும் உரிமையுடையது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.</p><p></p><h2>சட்டபூர்வமான விதிமுறை</h2><p>
</p><p>
அதேவேளை, அரச சேவையில் குறிப்பிட்ட பதவிகளுக்கு சீருடை தொடர்பான சட்டபூர்வமான விதிமுறைகள் இருந்தால், அந்த விதிமுறைகள் மதம் அல்லது இனம் பாராமல் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.</p><p></p><p>
</p><p>
எனவே, இந்த விவகாரத்தை “தமிழர்களுக்கு எதிரானது” அல்லது “முஸ்லிம்களுக்கு எதிரானது” என்ற இன, மத மோதலாக மாற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
</p><p>
அத்தோடு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணனையும், அவரது குடும்பத்தினரையும் இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தனிநபர் அவதூறுகள் மற்றும் சமூகத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
</p><p>
நீண்டகால அனுபவமுள்ள ஒரு அரச வைத்திய அதிகாரியின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை உரிய நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளின் ஊடாக முன்வைக்க வேண்டும். </p><p>அவரது குடும்பத்தினரை இதில் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஷ் குறித்த வைத்திய அதிகாரி ஒரு உளவு அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார் என்ற சந்தேகத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படும் கருத்து மிகவும் பாரதூரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.</p><p> இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவை உரிய சட்ட மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதாரமின்றி ஒரு அரச வைத்திய அதிகாரியை இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்துவது பொறுப்பான அரசியல் அணுகுமுறை அல்ல.</p><p>&nbsp;கல்முனையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களிலும் பல நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சைகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>கல்முனைத் தமிழ் மக்களின் உரிமைகள் </h2><p>
</p><p>
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், கல்முனை உப கல்வி வலய விவகாரம், கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பான விவகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான வர்த்தமானி உள்ளிட்ட பல விடயங்களில் கல்முனை தொடர்பான நிறுவனங்களும் நிர்வாக அமைப்புகளும் தொடர்ச்சியாக அரசியல் விவாதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இந்தப் பின்னணியில், கல்முனையில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான ஒவ்வொரு விவகாரமும் தொடர்ச்சியாக அரசியல் சர்ச்சையாக மாற்றப்படுவதன் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.
</p><p>
குறிப்பாக, இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் கல்முனைத் தமிழ் மக்களின் நிர்வாக, கல்வி, உள்ளூராட்சி மற்றும் நிறுவன ரீதியான உரிமைகள் படிப்படியாக பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் திட்டமிட்ட அணுகுமுறை முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.</p><p>

இந்த சந்தேகங்கள் உண்மையா இல்லையா என்பதை ஆவணங்களும் அரச நிர்வாகத் தீர்மானங்களுமே நிரூபிக்க வேண்டும். எனவே, இதனை உணர்ச்சிப்பூர்வமான இனவாத விவாதமாக மாற்றாமல், ஒவ்வொரு விடயத்திலும் சட்டம், வர்த்தமானி, அரச சுற்றறிக்கை மற்றும் நிர்வாக நடைமுறைகள் என்ன கூறுகின்றன என்பதை வெளிப்படையாக ஆராய வேண்டும்.
</p><p>
கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற அனைத்து சமூகங்களுக்கும் சேவை வழங்கும் முக்கியமான அரச சுகாதார நிறுவனத்தின் பெயரை தொடர்ச்சியாக தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதும், அதன் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் மக்களின் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.</p><p></p><p><b>எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது</b></p><p>அரச சுற்றறிக்கை இருந்தால் – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p></p><p>

விதிமுறையில் தெளிவின்மை இருந்தால் – அமைச்சு மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
நிர்வாகத் தவறு இருந்தால் – உரிய விசாரணை நடத்த வேண்டும்.</p><p>

அநீதி இருந்தால் – தீர்வு வழங்க வேண்டும்.
</p><p>
முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாசார உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

தமிழ் மக்களின் நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான உரிமைகளையும் நாம் பாதுகாப்போம்.
</p><p>
ஒரு சமூகத்தின் உரிமையைப் பாதுகாப்பது மற்றொரு சமூகத்தின் உரிமைக்கு எதிரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, சீருடை விவகாரத்தை இனவாத மோதலாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, அரச விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைய நியாயமான தீர்வை காண வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு தப்பி ஓடும் குற்றவாளிகள் : வடக்கு கடற்பரப்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-northern-sea-border-is-being-tightened-1786971563"></link>
            <id>https://ibctamil.com/article/security-northern-sea-border-is-being-tightened-1786971563</id>
            <summary type="text">இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து&amp;nbsp; தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, வடக்கு கடல் எல்லையில், குறிப்பாக பாகிஸ்தான் நீரிணை நெடுகிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, வடக்கு கடல் எல்லையில், குறிப்பாக பாகிஸ்தான் நீரிணை நெடுகிலும், பாதுகாப்பு வலையை பலப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
பல குற்றவாளிகள் மன்னார் கடல் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் தப்பிச் சென்று, அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>படகில் தப்பிச் சென்ற வத்தளை கொலை சந்தேக நபர்கள்</h2><p>இதற்கிடையில், சமீபத்தில் வத்தளையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள், மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce170711-1336-4010-80d0-2daab36d8c5a/26-6a830a515f249.webp' /></p><p>
</p><p>
நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் அவர்களை மேலதிக விசாரணைக்காக கொழும்பு வடக்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

</p><h2>&nbsp;தப்பித்தல்களை தடுக்க வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு</h2><p>சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் நடைபெறும் இதுபோன்ற தப்பித்தல்களைத் தடுப்பதற்காக, வடக்கு கடற்படை கட்டளையகமும் பாதுகாப்புப் படைகளும் தற்போது சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e3b901-8293-40db-9af5-d2672f409d6a/26-6a830a5212bbe.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:19:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 35 வருடங்களுக்கு அனுரவை அசைக்கவே முடியாது : பாதுகாப்பு பிரதியமைச்சர் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-will-be-no-rival-for-anura-another-35-years-1786968568"></link>
            <id>https://ibctamil.com/article/there-will-be-no-rival-for-anura-another-35-years-1786968568</id>
            <summary type="text">&amp;nbsp;ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>

ஜனாதிபதியின் அறிவையும், நாட்டின் மீதான அவரது எல்லையற்ற அர்ப்பணிப்பையும் பாராட்டிய அமைச்சர், மக்கள் அவரை ஒரு மாபெரும் ஜனாதிபதி என்று அழைப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் ரீதியாக போட்டியிடக்கூடிய தலைவர் எவருமில்லை</h2><p>&nbsp;அடுத்த 25, 30 அல்லது 35 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியுடன் அரசியல் ரீதியாகப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய தலைவர் யாராவது இருக்கிறாரா என்பதைக் காட்டுமாறு எதிர்க்கட்சிக்கு அமைச்சர் சவால் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f6f73b-05d0-47b1-a33c-fbb1ecb79399/26-6a83045315ea7.webp' /></p><p> </p><p>தற்போது அப்படிப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்றும், ஜனாதிபதியின் அரசியல் பயணம் மிகவும் வலிமையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலிமையான மக்கள் தளத்தின் முன் எதிர்க்கட்சி முற்றிலும் பலவீனமடைந்துள்ளது என்று அருண ஜெயசேகர தெரிவித்தார்.</p><p></p><h2>நாடாளுமன்ற இருக்கைக்குள் முடங்கிய எதிர்க்கட்சியினர்</h2><p>

நாம் அமைத்துள்ள இந்த மாபெரும் மக்கள் அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்துவிட்டோம்? அவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் இருக்கைகளுக்குள் முடக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் அவர்களுக்கு இனி அரசியல் என்பதே இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ffd50f-7a78-480f-af5f-915677fdf691/26-6a830453bdedf.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T12:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-lord-basik-s-dubai-gold-business-1786943516"></link>
            <id>https://ibctamil.com/article/drug-lord-basik-s-dubai-gold-business-1786943516</id>
            <summary type="text">துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக அறியப்படும் ஷிரான் பாசிக் செய்த பெரும் குற்றங்கள் மற்றும் உள்நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக அறியப்படும் ஷிரான் பாசிக் செய்த பெரும் குற்றங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும், சட்டவிரோத சொத்துக்கள் பிரிவும் விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
</p><p>
இந்த விசாரணைகள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p> 

இதற்காகப் பல விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையில் மட்டும் அவருடைய சொத்துக்களின் மதிப்பு 100 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.</p><p></p><h2>20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்</h2><p> 

மேலும், அவர் ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நிலங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பல உயர் மதிப்புள்ள சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43732064-6c2c-4212-9281-88dee72e0234/26-6a82a2dcaf643.webp' /></p><p>
</p><p>
 தெஹிவளை மற்றும் கல்கிசை&nbsp; கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர் ஷிரான் பாசிக் என்பது தற்போது தெரியவந்துள்ளது.</p><p>கடற்கரையில் 20 ஹோட்டல்கள், இந்த நாட்டில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களின் பின்னணி, துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கக் கடைகள் என இவரது குற்றப்பட்டியல் நீண்டுள்ளது.</p><p> </p><p>

இருப்பினும், ஷிரான் பாசிக் இந்தச் சொத்துக்கள் அனைத்தையும் மற்றவர்களின் பெயர்களில் வாங்கி, அவர்களின் உதவியுடன் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
 மேலும், இந்தக் கடத்தல்காரர் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல தங்கக் கடைகளையும், வேறு பல வணிகங்களையும் நடத்தி வருகிறார் என்ற தகவல் விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது.</p><p></p><h2>கொக்கைன் கடத்தல்</h2><p> </p><p>

தாய்லாந்தில் நடைபெறும் கொக்கைன் கடத்தல் தொழிலில் ஷிரான் பாசிக் ஒரு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c090c9-d13f-45c6-aa4f-95c24506315e/26-6a82a2dd627fd.webp' /></p><p> 

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்யும்போது, ​​பெரும்பாலும் திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுவது அவனது குணம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
</p><p>
 ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற வணிகங்கள், குற்றச் செயல்கள் என அனைத்திலும், பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் ஒருவராக, போதைப்பொருள் கும்பலிலும் குற்றவாளிகள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். </p><p>

ஷிரான் பாசிக்கின் மகன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பெயரில் பெருமளவு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
 ஷிரன் பாசிக்கிற்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு முன்னதாகவே நடவடிக்கை எடுத்திருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன</p><p>.

தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேரக் தடுப்புகாவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
</p><p>
தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான பிறகு, அவர்கள் விசாரணைக்காக 90 நாட்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p>

தெஹிவளையின் கலுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் தொழிலாளியாக தனது முதல் வேலையைச் செய்தார்.
</p><p>
அவர் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>துபாய் காவல்துறையினரால் இரண்டு முறை கைது</h2><p>
</p><p>
2018-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்ற ஷிரான் பாசிக், அதன் பின்னர் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.</p><p></p><p>
</p><p>
அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் பெரிய அளவிலான வணிகத்தை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இலங்கைக்கு மொத்தமாக போதைப்பொருட்களைக் கடத்தும் ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான இவர், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார்.</p><p>

அவர் துபாய் காவல்துறையினரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். 

ஒருமுறை, அன்டியல் (Undial) சேவை மூலம் 100,000 திர்ஹாம்களை வெளிநாட்டிற்கு அனுப்பியதற்காகவும், மற்றொரு முறை, ஒரு ஹோட்டலில் நடந்த சண்டைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். </p><p>

இருப்பினும், இந்த இரண்டு முறையும், அவர் பெரும் தொகையைச் செலவழித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து, துபாயில் இருந்த பல இலங்கைக் குற்றவாளிகள், ஈரானுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
மே 21 அன்று, துபாய் மீதான ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகளையும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஷிரான் பாசிக் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஷிரான் பாசிக், கிட்டத்தட்ட 3 மாதங்கள் அந்நாட்டு காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 14ஆம் திகதி இரவு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
ஷிரான் பாசிக் அதே இரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 கட்டுநாயக்கவில் அவர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், இலங்கைக்கு வந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
</p><p>
துபாய் நாட்டில் காவலில் இருந்தபோது, ​​அங்குள்ள காவல்துறையினருக்குப் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து, காவலில் இருந்து தப்பிக்க அவர் ஒரு தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முப்படையின் ஆராய்ச்சி மையங்களை ஒன்றிணைக்க அநுர முன்வைத்துள்ள திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plan-to-merge-research-centers-sl-armed-forces-1786969184"></link>
            <id>https://ibctamil.com/article/plan-to-merge-research-centers-sl-armed-forces-1786969184</id>
            <summary type="text">தற்போது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைப்பது குறித்து ஜனாதிபதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>

இதன் மூலம் ஒரு தேசிய மையத்தை நிறுவுவதன் மூலம், அந்தச் செயல்பாடுகளின் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்து, விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை (17) பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான முந்தைய கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டார்.</p><p></p><h2>நவீன தொழில்நுட்பம்</h2><p>

 தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக ஒருங்கிணைந்து, நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf4bdab-7878-4ccb-add7-a9dad8367450/26-6a82fe580afc6.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புப் பணியாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தவும், புதிய அறிவைப் பெறவும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. </p><p>

கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனையின் செயல்பாடுகள், நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயல்பாடுகளைத் தொடங்குதல், அதற்கான தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. </p><p>

மேலும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உழைப்புப் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்திற்கும் மேலதிக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சிற்றூழியர்களின் சீருடை அவமதிப்பை எதிர்த்து சிற்றூழியர் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peaceful-protest-by-health-workers-1786967988"></link>
            <id>https://ibctamil.com/article/peaceful-protest-by-health-workers-1786967988</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை 
அவமதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை 
அவமதிப்பை எதிர்த்து சிற்றூழியர்களின் சங்கத்தினால் பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
குறித்த போராட்டமானது, இன்று (17) 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
எதிர்ப்பின் கருப்பொருளாக </p><ol><li>மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை.</li><li>நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள்.</li><li>சட்டம் கலாச்சார உடையை அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள்.</li><li>&nbsp;சகல மதத்தவருக்கும் சீருடை விலக்கை தாருங்கள்.</li><li>எமது வேண்டுதல்களுக்கு உடன் தீர்வு தாருங்கள்.
</li><li>இன்றைய போராட்டம் தீர்வு இல்லையேல் இனி தேசிய ரீதியாக தீவிரமாகலாம் என்ற விடயங்கள் காணப்பட்டுள்ளன.</li></ol><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்பட்ட ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/90-day-detention-order-on-shiran-basik-1786960164"></link>
            <id>https://ibctamil.com/article/90-day-detention-order-on-shiran-basik-1786960164</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த மார்ச் மாதம் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். </p><p>

இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>டுபாய் மீது ஈரான் தாக்குதல்&nbsp;</h2><p> 

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் டுபாயிலுள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்த போது அந்நாட்டு காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p> 

டுபாய் மீது ஈரானால் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த காலப்பகுதியிலேயே இது நடந்ததாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3959e24d-9a6f-4ba3-9693-6442a7adce83/26-6a82e281edd4d.webp' /></p><p> </p><p>

பின்னர் தனது தொலைபேசியை அந்நாட்டு காவல்துறையினர் பரிசோதித்த போது, அதில் ஈரான் டுபாய் மீது நடத்திய தாக்குதல்களின் காணொளிகள் இருந்தமையால் தான் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தும் வரை தினமும் டுபாய் காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் ஈரான் தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>பின்னர் இலங்கைக்குச் செல்வதற்காக தம்மை விமான பயணச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாகவும், அதன் பின்னரே தாம் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p> </p><p>

அவருக்கு எதிராக இருந்த போதைப்பொருள் குற்றச்சாட்டு வழக்கொன்றைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையினரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இலங்கை காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கையைப் பெறத் தயாராகிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1cbfc7-3129-43a2-b02c-e2c3fd74b13b/26-6a82e282b1823.webp' /></p><p>இவர் சட்டப்பூர்வமாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி இலங்கையிலிருந்து டுபாயிற்குச் சென்றுள்ளார். 

அங்கு அவர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதுடன், இரு பெரும் வணிகங்களையும் முன்னெடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p> 

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T12:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-plight-of-vavuniya-general-hospital-1786968211"></link>
            <id>https://ibctamil.com/article/the-plight-of-vavuniya-general-hospital-1786968211</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு
மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் தீவிர
மயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு
மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் தீவிர
மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார
துறைசார்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கு உடனடியாக நிலையான தீர்வை
வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
கடந்த மூன்று மாதங்களாக இம்மருத்துவமனை ஒரேயொரு மயக்கவியல் நிபுணருடன்
(Consultant Anaesthetist) மட்டுமே இயங்கி வருவதாகச் சுகாதார
துறைசார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறித்த ஒரேயொரு நிபுணத்துவ மருத்துவரே அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறுவை
கூடங்கள், பல துறைகளின் வழக்கமான அறுவைக்கூடங்கள், எலும்பியல் அறுவை கூடம்,
தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) சேவைகள், முதன்மை PCI (Primary PCI) உள்ளிட்ட
இதய கதீட்டராக்கம் (Cardiac Catheterisation) மற்றும் பிற சிகிச்சை
முறைகளுக்கான மயக்கவியல் ஆதரவு ஆகிய அனைத்தையும் கவனிக்க வேண்டிய
நிர்ப்பந்தத்தில் உள்ளார்.
</p><p>
இதன் விளைவாக வழக்கமான அறுவை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் (palliative
procedures) மற்றும் அவசர காயங்களுக்கான அறுவை சிகிச்சைகள்
ஒத்திவைக்கப்படுகின்றன.
</p><p>
காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறு
மற்றும் பெண்நோயியல் (Gynaecological), எலும்பியல் (Orthopaedic) மற்றும்
சிறுநீரக மண்டல சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.</p><p>

அவசர நிலைகளில் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா
மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.



இதேவேளை, மருத்துவமனையில் ஒரேயொரு அறுவை சிகிச்சை நிபுணரே (Consultant
Surgeon) விபத்து சேவை, அவசர மற்றும் வழக்கமான அறுவை கூடங்கள், வார்ட்
பராமரிப்பு மற்றும் அழைப்புப் பணி (On-call) ஆகிய பொறுப்புகளை கவனித்து
வருவதால், அறுவை சிகிச்சை பராமரிப்புகளில் கடும் தாமதம் நிலவுகிறது.</p><p>

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும் தற்காலிக
ஏற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வவுனியா மாவட்ட பொது
மருத்துவமனையை நம்பியிருக்கும் மக்களின் நலன் கருதி, நிலவும் மயக்கவியல்
நிபுணர் பற்றாக்குறைக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள்
சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய நிதி மோசடிக்கான திட்டம்! பொதுமக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-cert-warned-public-about-fraud-scheme-1786964750"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-cert-warned-public-about-fraud-scheme-1786964750</id>
            <summary type="text">
இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களின் வங்கி வைப்புத்தொகைகளைக் கொள்ளையடிக்கும் நுட்பமான மோசடித் திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட நபர்களின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் பற்றிய தகவல்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக மோசடிக்காரர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மோசடியாளர்களின் திட்டம்</h2><p>
</p><p>
அதன்போது, வைப்புத்தொகைகள் மோசடியான வழிகளில் பெறப்பட்டதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து FCID விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறி குறித்த சந்தேகபர்கள் மக்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942de0d4-0c5b-4870-9626-4d7cd2d6c89d/26-6a82f2f7800e1.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, தங்களது கூற்றை உண்மை என நம்பவைப்பதற்காகப் போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், போலி அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்பி வைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, FCID அதிகாரியுடையது எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் வைப்புத்தொகையில் பாதியை மாற்றிவிட்டு அதன் ரசீதை ஆதாரமாக அனுப்புமாறும் கோருவதாகவும் தெரியவருகிறது.</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில், சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் முடிந்ததும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe44d98-5590-40d7-ac4c-1545f299c66a/26-6a82f2f8638d6.webp' /></p><p>
இந்த மோசடிக்காரர்கள் காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்துக் கொண்டு மிகவும் நுட்பமாக இயங்கி வருவதாக Sri Lanka CERT தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, இத்தகைய கோரிக்கைகளுக்குப் படிந்து நிதித் தகவல்களை வழங்கவோ அல்லது பணத்தை மாற்றி அனுப்பவோ வேண்டாம் என்றும், குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து குடும்பத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T11:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் : அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-election-to-be-held-in-srilanka-1786965543"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-election-to-be-held-in-srilanka-1786965543</id>
            <summary type="text">இலங்கையில்&amp;nbsp;மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில்
அரசாங்கமே வெற்றிபெறும் எனவும்&amp;nbsp;கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்&nbsp;மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில்
அரசாங்கமே வெற்றிபெறும் எனவும்&nbsp;கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p>நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம்
பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல விடயமாகும்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்</h2><p>



ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியே
மக்கள் எமக்கு ஆணையளித்தார்கள். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு
எதிராகச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள்
தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
இதில் சுமார் 3,000 சாட்சியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில்
ஆராயும் நீதிபதிகள் ஓய்வுபெற்றால், மீண்டும் முதலிலிருந்தே சாட்சி விசாரணைகளை
நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35568667-8233-4eed-bda6-d8d4df02f349/26-6a82f0ac2058c.webp' /></p><p>
</p><p>


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்குத் தற்போதும்
அச்சம் நிலவுகிறது. அதனால் தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி அவர்கள்
பேசி வருகிறார்கள்.
</p><p>


இனவாதம், மதவாதம் மற்றும் சிறைச்சாலைக் கலவரம் எனப் பல வழிகளில் முயன்று
பார்க்கின்றனர். ஆனால், அவை எதுவுமே கைகூடவில்லை. தற்போது விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கியாவது ஏதேனும் செய்ய முடியுமா என்று
பார்க்கிறார்கள்.</p><p></p><h2> தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை </h2><p>
</p><p>


அதேவேளை, கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஓகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர்
மாத முதல் வாரத்திலோ தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
</p><p>எமது மக்கள் 30 ஆண்டுகாலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். உறவுகள்,
உடமைகள் மற்றும் உயிர்கள் என அனைத்தையும் இழந்து, தற்போது தான் மீண்டும்
நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3b6d318-5b18-437d-9f71-50782da039a6/26-6a82f0acccdf4.webp' /></p><p>
</p><p>


எனவே, எமது கடல் வளத்தை அழிப்பதற்குத் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடமளிக்க முடியாது.
தமிழகத்தில் நல்ல கடற்றொழிலாளர்களும் உள்ளனர். ஆனால், கடல் கொள்ளையில் ஈடுபடும் சிலர்
தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இந்நிலை நீடித்தால் எமது கடல் பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது. </p><p>எனவே, இது
குறித்துத் தமிழக அரசிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படும். முதலாவது அதிகாரிகள்
மட்டத்திலான பேச்சும், இரண்டாவது கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சும்
நடத்தப்படும். தேவை ஏற்படின் தமிழக முதலமைச்சருடனும் பேசுவோம்.</p><p>


இங்கிருந்து சென்று போட்டிபோட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமிழக
முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கின்றனர். ஆனால், எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள்
பற்றிப் பேசுவதில்லை. </p><p>மாறாக, மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க
வேண்டுமாம். மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும்; அதில் நாங்களே
வெற்றியும் பெறுவோம்” என்றார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T11:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வு பெறுகிறார் பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cristiano-ronaldo-retirement-at-end-of-season-1786964393"></link>
            <id>https://ibctamil.com/article/cristiano-ronaldo-retirement-at-end-of-season-1786964393</id>
            <summary type="text">போர்த்துக்கல் அணியின் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு சீசனின் முடிவில் தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் அணியின் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு சீசனின் முடிவில் தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
"ஒரு கால்பந்து வீரராக இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், நான் ஒரு அற்புதமான பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன்," என்று அவர் நேற்று(16) வோக் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.</p><h2>குடும்பத்தை மையமாக கொண்ட எதிர்கால திட்டமிடல்</h2><p>41 வயதான அவர், செவ்வாயன்று தனது துணைவியார் ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மணந்தார், மேலும் தற்போது குடும்பத்தை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைத் திட்டமிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e2d27df-df12-481f-b36d-78a7e14c22d5/26-6a82eda303e56.webp' /></p><p>

பாலன் டி'ஓர் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கை ஐந்து முறை வென்ற ரொனால்டோ, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சவுதி அரேபியாவில் லீக் பட்டங்களை வென்றுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச கால்பந்தில் 976 கோல்</h2><p>

சர்வதேச கால்பந்தில் 976 கோல்களுடன், ரொனால்டோ எல்லா காலத்திலும் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bc16dd-e631-47ad-b1ab-a8905f082248/26-6a82eda3a9d83.webp' /></p><p>

“எனது எதிர்காலத்திற்கான திட்டங்களை நான் ஏற்கனவே வகுத்துவிட்டேன். என்னை பிஸியாக வைத்திருக்கும் விஷயங்கள் ஏராளமாக இருப்பதால், ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம். </p><p>கால்பந்திலிருந்து விலகிய பிறகு ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படக்கூடும் என்பதால், உங்கள் நேரத்தைச் செலவிட நீங்கள் வெவ்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும்; ஒரே ஒரு வழி மட்டும் போதாது,” என்று அவர் மேலும் கூறினார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T11:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/varodayanagar-massacre-1786964954"></link>
            <id>https://ibctamil.com/article/varodayanagar-massacre-1786964954</id>
            <summary type="text">திருகோணமலை - வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.வரோதயநகர் பிரதான வீதியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு அருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.</p><p>வரோதயநகர் பிரதான வீதியின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு அருகே இன்று (17)&nbsp;நினைவேந்தல் நிகழ்வுகள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.</p><p>இதன்போது 17.08.1985ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 11 பேர் உள்ளிட்ட அதனை அண்மித்த காலங்களில் குறித்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்தசாந்தி வேண்டி மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><h2>ஆயுதம் தாங்கிய குழுவினர்</h2><p>இது குறித்து நிகழ்வில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eecc169f-6fd1-4055-8d0b-6e8ddcd28072/26-6a82ec83b5587.webp' /></p><p>
</p><p>''குறித்த படுகொலைச் சம்பவத்தில் குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டுவயதான மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார்.</p><p>

1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை கன்னியா பகுதியில் இருந்து வரோதயநகர் பகுதிக்குள் டிபென்டன் வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் வீதிவழியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் பாதுகாப்புத் தேடி அயல் வீடுகளிலும் தங்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். </p><p>இதன்போது வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டைத் தட்டி கூப்பிட்டு அங்கு வந்த பிறீமாவில் வேலை செய்யும் வெள்ளையன் திருச்செல்வம் என்பவரை முதலாவதாக சுட்டுக்கொன்றனர்.</p><p> பின்னர் அங்கு ஓடி வந்த அவரது மாமனாரான கந்தன் மாணிக்கம் என்பவரை சுட்டுக் கொன்றனர் பின்னர் கந்தையா வீதிக்கு திரும்பிச் சென்றனர்.</p><p> இதன்போது அங்கு வந்த சீனியன் மாணிக்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பயத்தில் இருந்த மக்கள் தம்பிராசா என்பவருடைய வீட்டில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தனர்.</p><p></p><h2>உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்</h2><p> </p><p>அங்கு பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்க கந்தையா வீதிக்கு திரும்பி அங்கு இரண்டாவதாக இருந்த தம்பிராசாவின் வீட்டை தட்டி எட்டிப்பார்த்து அங்கு நிறைய மக்கள் இருக்கவே அந்த அறைக்குள் கைக்குண்டு ஒன்றை போட்டு வெடிக்கச் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e398fb4a-b6e7-48fb-b12c-13ec7ce2360d/26-6a82ec848d3fd.webp' /></p><p> </p><p>அங்கிருந்து காயங்களுடன் வெளியேறி ஓடியவர்களையும் சுட்டுக் கொன்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர்.&nbsp;</p><p>
இதன்பின்னர் மாலையளவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு அக்கிராம மக்கள் கொண்டு சென்றனர். </p><p>அங்கு காயமுற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய 8 வயதான பெண் குழந்தை காணாமல் போயிருந்தார். </p><p>இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை. அத்துடன் படுகொலை இடம்பெற்று 41 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித நீதியோ, நிவாரணங்களோ கிடைக்கவில்லை"&nbsp;" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T11:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச அதிகாரிகளுக்கு எதிராக வெடித்த போராட்டம் - வட மாகாண ஆளுநரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-province-governor-inquiry-committee-for-do-1786961480"></link>
            <id>https://ibctamil.com/article/north-province-governor-inquiry-committee-for-do-1786961480</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான
விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.</p><p>
வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர்.</p><p>அவர்கள் கையளித்த மனுவில்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>உரிய நடவடிக்கைகள்</h2><p>மற்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3496590-ee99-44da-9e07-1aae45586a01/26-6a82e218c1745.webp' /></p><p>மேலும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நிர்வாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆளுநர் கவனமாகக் கேட்டறிந்து, விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் எந்தவொரு தரப்பினரின் கௌரவமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T11:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grama-niladharies-trade-union-action-end-1786963292"></link>
            <id>https://ibctamil.com/article/grama-niladharies-trade-union-action-end-1786963292</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த​ தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த​ தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

கிராம உத்தியோகத்தர் சங்கங்களுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று (17) இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> 

இப்பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தொலைபேசி வழியே தொடர்புகொண்டதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>வழமை போல் கடமைகளில் ஈடுபடுவார்</h2><p> 

இதற்கமைய, ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தாம் தீர்மானித்ததாக கிராம உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdee8fd0-fe27-4b92-9441-54843c9ab516/26-6a82e96fab476.webp' /></p><p> </p><p>

இன்று தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் வழமை போல் கடமைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்தாலும் அங்கிருந்து அவரை ஜனாதிபதியாக்குவோம் : முன்னாள் அமைச்சர் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-president-even-if-he-is-imprisoned-1786962433"></link>
            <id>https://ibctamil.com/article/namal-president-even-if-he-is-imprisoned-1786962433</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறையிலிருந்தே அவரை நாட்டின் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறையிலிருந்தே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>இது தெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

</p><h2>நடவடிக்கையின் முதல் கட்டம்</h2><p>தற்போதைய அரசாங்கம் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும், நாட்டின் ஒரே நம்பகமான நிறுவனமான நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கூட ஆட்சியாளர்கள் தகர்க்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4551c2-294b-4d01-a52f-ba699e7526aa/26-6a82e6b32e694.webp' /></p><p>
</p><p>





நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரம் சல்காது மைதானத்தில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளதாகவும், அதில் யாரும் எதிர்பாராத அளவுக்கு பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெருமளவிலான மக்களும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் கிராம மட்ட அமைப்பு நடவடிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>






</p><h2>கோட்டாபயவை சிறையில் அடைக்க முயற்சி</h2><p>“பலர் மகிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். அது ஒரு பிரச்சனையல்ல. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903f4210-185a-4285-9a04-965a9dab5492/26-6a82e6b26c9fc.webp' /></p><p> </p><p>எஞ்சியிருப்பது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே. அதையும் தகர்க்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும், சிறையிலிருந்தே அவரை ஜனாதிபதியாக்குவோம்.” என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T10:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-plans-to-use-nuclear-weapons-against-iran-1786960534"></link>
            <id>https://ibctamil.com/article/trump-plans-to-use-nuclear-weapons-against-iran-1786960534</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல் ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் கூட்டங்களை அவர் நடத்தி வருவதாக&nbsp;மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p>



இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; 'ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் உண்மையானவை. எந்த யூகமும் இல்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">They are discussing using nuclear weapons on Iran in strategy meetings.<br><br>Yes you read that correctly. It’s real. I’m not speculating, I know.<br><br>And it’s pure evil.<br><br>The last time a nuclear weapon was used was August 6th and 9th of 1945 on two cities in Japan, Hiroshima and…</p>&mdash; Former Congresswoman Marjorie Taylor Greene🇺🇸 (@FmrRepMTG) <a href="https://x.com/FmrRepMTG/status/2089069623706603837?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>ஜப்பான் மீதான அணு ஆயுத தாக்குதலால் ஏற்பட்ட விளைவு</h2><p> </p><p>1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 2,14,000 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், புற்றுநோய், பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d913138f-d9e5-4eeb-8957-1cbe1796e352/26-6a82e5a6c47ff.webp' /></p><p>


ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் சூழலில் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத அமெரிக்க அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவான செயல்களை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. </p><p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் மாபெரும் மோதல்களையும், துயரங்களையும் சந்திக்க நேரிடும்.


தற்போதைய தலைவர்கள் போரை உடனே நிறுத்த வேண்டும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த அரசே முழுப் பொறுப்பு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பொருளாதாரத்தை நசுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப்! தெஹ்ரான் செய்துள்ள சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-vows-to-economically-crush-iran-1786962277"></link>
            <id>https://ibctamil.com/article/trump-vows-to-economically-crush-iran-1786962277</id>
            <summary type="text">பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெளிவுபடுத்தியதை அடுத்து, இது குறித்து ஈரான் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெளிவுபடுத்தியதை அடுத்து, இது குறித்து ஈரான் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இது அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும் என்றும் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில் ஈரானின் அரசியல்வாதியும் முதல் துணை ஜனாதிபதியுமான முகமது ரெசா அரெஃப், சந்தை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>ஈரான் இதுவரை கண்டிராத நடவடிக்கை</h2><p>
கடந்த வாரம், அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் நியூஸ்மேக்ஸ் பேட்டி ஒன்றில், ஈரான் மீது இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தப் போவதாகக் கூறினார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94e7d162-7179-4c46-a3c0-9ef1b2e7cb86/26-6a82e3775b690.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம், அமெரிக்கா ஈரானை தொடர்ந்து பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தி, அதன் துறைமுகங்களை முற்றுகையிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:34:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு! அறிவிக்கப்பட்டது திகதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/payments-to-be-credited-to-bank-accounts-1786960830"></link>
            <id>https://ibctamil.com/article/payments-to-be-credited-to-bank-accounts-1786960830</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>வரவு வைக்கப்படவுள்ள பணம்</h2><p>
அதன்படி, நலன்புரி நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20eb64d6-adc2-42f8-8796-45dcc658508c/26-6a82df832c890.webp' /></p><p>

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு 2,321,735,000 ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிருணிகா உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/date-given-for-calling-hirunika-s-case-1786956071"></link>
            <id>https://ibctamil.com/article/date-given-for-calling-hirunika-s-case-1786956071</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது, கொழும்பு குருந்துவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (17) அழைக்கப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைகள் நிறைவு</h2><p>இதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான கோவைகள் தயாரித்து மேலதிக சட்ட ஆலோசனைகளுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1c7413-88a1-4c72-8f5f-e741db2188fa/26-6a82dacb973e3.webp' /></p><p>இந்நிலையில், வழக்கை நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் வழக்குகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலையான வைப்புத்தொகைகளைக் குறிவைக்கும் புதிய மோசடி: CERT எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268"></link>
            <id>https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி மற்றும் காவல்துறை ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தைத் திருடும் ஒரு நுட்பமான நிதி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
</p><p>
இரு நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து, போலியான அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி, தாங்கள் உண்மையானவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்கும் நபர்கள் குறித்துப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLCERT தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த எச்சரிக்கையின்படி, மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள நிதி குறித்து விசாரிக்கின்றனர்.</p><p></p><h2>அச்சுறுத்தப்படுத்தும் விதம் </h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களின் வைப்புத்தொகை குறித்த தகவல்கள் தங்களிடம் ஏற்கனவே இருப்பதாகக் கூறி, அந்தப் பணம் மோசடி வழிகளில் பெறப்பட்டதாகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்களிடம் பொய்யாகத் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180abaab-28a3-4a2e-ac96-d3cffdbda231/26-6a82d8ef93ae6.webp' /></p><p>அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் FCID விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அச்சுறுத்தப்படுகிறார்கள்.
</p><p>
மோசடிக்காரர்கள் பின்னர், போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்புகின்றனர். </p><p>பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மற்றொரு தனியார் வங்கியில் உள்ள குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>
SLCERT-இன் கூற்றுப்படி, மோசடிக்காரர்கள் அந்தக் கணக்கு ஒரு FCID அதிகாரியுடையது என்று கூறி, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வைப்புத்தொகையில் பாதியை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.</p><p></p><h2>நுட்பமான முறையில்&nbsp;மோசடி</h2><p> </p><p>பணப் பரிமாற்றம் செய்த பிறகு, பணம் செலுத்தியதற்கான ஆதாரமாக வங்கி வைப்புச் சீட்டை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad63f473-98de-4eb6-92a9-a9e61a2336fb/26-6a82d8f049bf2.webp' /></p><p>
</p><p>
இந்த மோசடிக்குப் பின்னால் இருப்பவர்கள் மிகவும் நுட்பமான முறையில் செயல்படுவதாகவும், இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானது போல் தோற்றமளிக்க காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது என SLCERT தெரிவித்துள்ளது.</p><p>ஓய்வூதியதாரர்களும் முதியவர்களும் இந்த மோசடிக்கு குறிப்பாக எளிதில் இலக்காகக்கூடும் என்று எச்சரித்த அந்த அமைப்பு, பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை : சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165"></link>
            <id>https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறைக் காலத்தில்&amp;nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறைக் காலத்தில்&nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இக்காலப் பகுதியில் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் அவர் இவ்வாறு கோரியுள்ளார். </p><p>

வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடுவது பிரபலமாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக பட்டம் விடுவதால் பலத்த காயங்கள் மட்டுமன்றி உயிராபத்துகளும் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>உயர் அழுத்த மின்கம்பிகள்</h2><p> </p><p>

குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் போது கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், குழுக்களாக இணைந்து பட்டம் விடும் போது மோதிக் கொள்வதாலும், கீழே விழுவதாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6ba7a7-e290-4542-85fe-c0d41a077955/26-6a82d4c5e2a96.webp' /></p><p> 

அத்துடன், உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் இவ்வாறான மின் அதிர்ச்சிகள் காரணமாக கைகள், தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்துகிறார். </p><p>

மேலும், மின்கடத்தும் தன்மை கொண்ட நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் உரசும் போது உடனடியாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மின்கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தவிர்க்க பெற்றோர்களும், பெரியவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.</p><p> 

சிறுவர்களின் பொழுதுபோக்கு போலவே அவர்களின் உயிர் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பட்டம் விடுகையில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்“ எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுக்கு பரிமாற்றப்பட்டுள்ள பில்லியன் டொலர்கள்! நான்கு வங்கி மேலாளர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698"></link>
            <id>https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698</id>
            <summary type="text">




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>
</p><p>
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c01596-8d32-4b74-b464-0f6901707050/26-6a82c2f463e67.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T09:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.</p><p>யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான&nbsp;பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை
வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றடைந்தது.</p><p>இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர்
தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும்
பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.</p><p>பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம்,
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில்
இன்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f47b3fa-5b35-42bd-a552-5d8e6070e855/26-6a82cee6d1bc5.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - த.பிரதீபன்&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rDb0DACm3OQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் -2 போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

யாழ்ப்பாணம் - பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணி செம்மணி வரை சென்று குறித்த பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p><p>

இந்தப் பேரணியில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>சர்வதேச நீதி வேண்டும்</h2><p>இதன்போது “இலங்கை அரசு தமிழ் குழந்தைகளை அவர்களின் கனவுகளுடன் புதைத்தமைக்கு சர்வதேச நீதி வேண்டும்“, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு நீதி வேண்டும்.” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f461dd23-1ff3-4255-af80-ea995bccee16/26-6a82b77cc4aa9.webp' /></p><p> </p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p> 

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான போராட்டம் இன்று (17) வரை நான்கு நாட்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சென்ற தொடருந்து மோதி 23 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/23-years-youth-dies-after-being-struck-by-a-train-1786955884"></link>
            <id>https://ibctamil.com/article/23-years-youth-dies-after-being-struck-by-a-train-1786955884</id>
            <summary type="text">வவுனியாவில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இன்று (17) காலை தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியந்தன் என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>குறித்த இளைஞர் தாண்டிக்குளம் புகையிரத பாதையைக் கடக்க முயன்றபோதோ அல்லது பாதைக்கு அருகில் நின்றபோதோ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0f13f6-2eba-4149-9e86-43b7fbab3463/26-6a82caaef35d3.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வவுனியா காவல்துறையினர் உடனடியாக விரைந்து உடலை&nbsp;மீட்டுள்ளனர்.</p><p>இதேவேளை விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், இது கவனக்குறைவால் நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:48:00+00:00</updated>
        </entry>
    </feed>
