<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-12T18:30:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T17:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684"></link>
            <id>https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் &quot;குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் "குற்றப் புலனாய்வுத் துறை (CID) அங்கு சென்றால், அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்," என்று ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>சனிக்கிழமையன்று (12) பொலனறுவையில் நடைபெற்ற NPP விவசாயிகளின் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>&nbsp;குடும்ப உறவுகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்று கூறினார்.</p><h2>திருடக்கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டும்</h2><p>"இப்போது அழுது புலம்புவதற்குப் பதிலாக, திருடக்கூடாது என்று தந்தை அவர்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் பொருந்தும். பொதுப் பணத்தைத் திருடிய எவர் மீதும் எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை," என்று ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1946d6e5-7938-45e8-8f84-106c251e7575/26-6aa581ab5d4c2.webp' /></p><p>அனுராதபுரப் பேரணியானது பொது நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், மாறாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் சட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சி என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச விளக்கமறியலில்</h2><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட SLPP-யின் பிரமாண்டமான அரசியல் பேரணி அனுராதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f70aef5a-baf6-4a96-aaf7-39bf48e4efb3/26-6aa581ac13b46.webp' /></p><p>&nbsp; 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines) நிறுவனத்திற்கான பெரிய ரக விமானங்களை கொள்முதல் செய்தது தொடர்பான விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட SLPP-யின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T16:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கவுக்கு எதிரான ஈரானிய நகர்வு! இந்தியாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் பெஷெஷ்கியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-move-against-the-us-talks-with-india-1789230456"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-move-against-the-us-talks-with-india-1789230456</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று&amp;nbsp;புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று&nbsp;புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இருதரப்பு இராஜதந்திரம், மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அமெரிக்காவுக்கு எதிரான போர் ஈரானுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p></p><h2>இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பு</h2><p>புதுடெல்லியில் தனது இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பில், இரு நாடுகளும் தங்களது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு பெஷெஷ்கியன் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e87a1c1-fe1f-4464-8ccc-74e7e9a50208/26-6aa57ef901043.webp' /></p><p>
சமீபத்திய மாதங்களில் ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச் செயல்களுக்குச் சாட்சியாக இருந்தது என்றும், ஆனால் ஈரானிய மக்கள் தங்கள் முழு பலத்துடன் எதிர்த்து நின்று, அவர்களின் மிரட்டல்களை எதிர்த்து நின்றனர் என்றும் பெஷேஷ்கியன் திரௌபதி முர்முவிடம் கூறியுள்ளார்.</p><p>ஈரான் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, மாறாக நாங்கள் எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றோம் என்று அவர் மேலும் அவர் விலக்கியுள்ளார்.</p><p>மேலும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் நீடித்த அமைதியை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை முர்மு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T16:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை வீட்டின் மீதான கைக்குண்டுத்தாக்குதல்: வெளிவரும் முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenade-attacks-by-criminal-gangs-1789226732"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenade-attacks-by-criminal-gangs-1789226732</id>
            <summary type="text">தெஹிவளையில் நேற்று (11) ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் நேற்று (11) ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களில் கைக் குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><p>பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களில் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><h2>படுகாயமடைந்த தந்தையின் கால் துண்டிப்பு</h2><p>
</p><p>
இதற்கிடையில், தெஹிவளை கையெறி குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக வீட்டு உரிமையாளரின் காலைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7989e976-944f-4d69-be0e-c3b720518b52/26-6aa57597dabf6.webp' /></p><p>

தெஹிவளையின் சிறிசங்கபோ மாவத்தாவில் நேற்று அதிகாலை (11) அடையாளம் தெரியாத நபர் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.</p><p></p><p>
</p><p>


</p><h2>இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலே இந்த கையெறி குண்டுத் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de881f3-327a-4784-9e71-786e5bddc41d/26-6aa57598a8fd9.webp' /></p><p>
</p><p>
அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் குழுவைப் பழிவாங்கும் நோக்கில் குடு அவிஷ்காவின் குழு இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், அவர்கள் தவறான வீட்டைக் குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்தத் துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த இருவரும், தாயின் அன்பை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த 17 வயது கசுன் ரஷ்மிகா மற்றும் அவரது சகோதரர், 11 வயது துமிந்தா கிஹான் ஆவர்.
</p><p>




இறந்த குழந்தைகளின் உடல்கள் இன்று இரவு அவர்களது உறவினர்களின் வீடுகளுக்குக் கொண்டுவரப்பட உள்ளன.</p><p></p><p>
</p><p>
</p><h2>பல முக்கிய தகவல்கள்</h2><p>இதற்கிடையில், மேற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவர் (சி.ஐ.ஜி) சஜீவ மெதவத்த அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று காவல்துறை குழுக்கள் நடத்திய விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b428ebb-cfac-4574-84f5-528f906390a2/26-6aa575995f32b.webp' /></p><p>
</p><p>
கடந்த காலத்தில் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட கையெறி குண்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளூர் குற்றக் கும்பல்களால் பெறப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், குளியாபிட்டியாவில் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், வெடிக்காத கையெறி குண்டு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பமானது போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">புதிய இணைப்புஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h5>புதிய இணைப்பு</h5><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5MFc9ATcE18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் : முக்கிய எண்ணெய் குழாய் வழித் தடத்தை மூடியது சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saudi-arabia-shuts-major-oil-pipeline-1789223538"></link>
            <id>https://ibctamil.com/article/saudi-arabia-shuts-major-oil-pipeline-1789223538</id>
            <summary type="text">ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.</p><p>

யேமனின் ஹவுத்தி அமைப்பு சவுதி அரேபியாவின் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மீதான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த தற்காலிகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம்</h2><p>ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலின் போது ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், சவுதி அரேபியா தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இந்தக் 1,200 கிலோமீட்டர் தூரம் கொண்ட 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் முக்கிய பங்காற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd8315c-39c5-48f3-ad25-6cd7a552e280/26-6aa5692e6bb4e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை(செப்.10) ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. </p><p>இந்தத் தாக்குதலைக் கண்டித்த ஈராக் அரசு, இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் ஈரான் எல்லைப் பகுதி மைசான் மாகாண இராணுவத் தளபதியை பணியில் இருந்து நீக்கியது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரகுராம் தொடுத்த வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-the-case-filed-by-professor-raghuram-1789217755"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-the-case-filed-by-professor-raghuram-1789217755</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ்&amp;nbsp;யாழ்ப்பாணப் பல்கலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ்&nbsp;யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும் முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தொடர்ந்த வழக்கு&nbsp;எழுத்துமூல சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 எதிர்மனுதாரர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக வழக்கு தவணையிடப்பட்டது.</p><p></p><h2>அவதூறான பதிவு</h2><p>முன்னதாக 2026 ஜூலை 13 அன்று வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான், எதிர்மனுதாரர்கள் பேராசிரியருக்கு எதிராகப் பதிவிட்ட அவதூறான கருத்துக்களைச் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78342d4-2d58-4726-8107-c2e3bfc873ba/26-6aa54ff53a197.webp' /></p><p>மேலும், இனிவரும் காலங்களில் பேராசிரியர் தொடர்பாக எந்தவொரு அவதூறான பதிவுகளையும் வெளியிடக் கூடாது என எதிர்மனுதாரர்களுக்கு நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</p></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T14:35:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் கோர விபத்து! குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcyclist-died-on-the-spot-in-a-accident-1789216087"></link>
            <id>https://ibctamil.com/article/motorcyclist-died-on-the-spot-in-a-accident-1789216087</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இவ்விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c2060e-0685-41a2-8838-0509f086dfc6/26-6aa54959e53a7.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-12T14:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பாரவூர்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lorry-overturns-onto-house-1789220749"></link>
            <id>https://ibctamil.com/article/lorry-overturns-onto-house-1789220749</id>
            <summary type="text">பதுளை-மஹியங்கனை வீதியில் உள்ள மடித்தளை பகுதியில் ஒரு வீட்டின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இவ்விபத்தில் வீட்டில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை-மஹியங்கனை வீதியில் உள்ள மடித்தளை பகுதியில் ஒரு வீட்டின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தையும் அவரது மகனும், அத்துடன் பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><h2>பிரேக் தொழிற்படாமையால் விபத்து</h2><p>பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற குறித்த பாரவூர்தியின் பிரேக் தொழிற்படாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb01956-a918-4a7b-adf3-5179c400337e/26-6aa55b9ab725c.webp' /></p><p>
</p><p>
 

பாரவூர்தி விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியதுடன், பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது கவிழ்ந்துள்ளது.
</p><p>
 

இவ்விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T14:07:20+00:00</updated>
        </entry>
    </feed>
