<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T23:26:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11th-world-tamil-conference-in-jaffna-1786398282"></link>
            <id>https://ibctamil.com/article/11th-world-tamil-conference-in-jaffna-1786398282</id>
            <summary type="text">11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் மற்றும் தமிழ் அமைப்பும் இணைந்து தனிநாயகம் நினைவரங்க நிகழ்வை யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடத்தியது.</p><p>
</p><p></p><h2>தொடக்க வுரை</h2><p>இதில் கலந்து கொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில்
கோலாலம்பூரிலும் நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d248416-36d6-4b73-b6b8-de99cbf31a1d/26-6a7a4991db957.webp' /></p><p> 

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான
தனிநாயகம் அடிகளார் இம் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
 அவர் பங்குபற்றிய இறுதி
மாநாடாகவும் இதுவே அமைந்தது.</p><p>
</p><p></p><h2>துயரச் சம்பவம்</h2><p>யாழ். குடா நாடே விழாக் கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். </p><p>

இம் மாநாட்டின் இறுதி
நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும்
வரலாற்றில் பதிவாகியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c905e566-8000-4961-953a-6727524403f8/26-6a7a49928a02a.webp' /></p><p>பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின்
சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. </p><p>

இந்நிலையிலேயே 11 ஆவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-call-for-int-l-probe-1786397192"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-call-for-int-l-probe-1786397192</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.</p><p>
</p><p></p><h2>அகழ்வு பணிகள்&nbsp;</h2><p>100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p>முக்கியமாக இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebaed771-01c4-42bb-af5f-c4984565c2dd/26-6a7a44880fa5d.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.</p><p>அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும் அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>தொழில்நுட்ப வசதிகள்</h2><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.</p><p>இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில் அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80690261-43c3-4bff-9e62-dca025eaecfb/26-6a7a4488f1bb2.webp' /></p><p>
</p><p>ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில் ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் ஹஸ்த நட்சத்திரப் பெயர்ச்சி! நிதி நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385"></link>
            <id>https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
</p><p>இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன், சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். </p><p>சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியையும் பிரச்சனைகளையும் தரக்கூடும்.
</p><p>
எனவே, நிதி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீரென்று நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். </li><li>அதுவும் தேவையற்ற விஷயங்களுக்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அதிகமாக செலவுகளை செய்யலாம். </li><li>இதனால் பட்ஜெட் பாழாகி, எதிர்பாராத அளவில் பண பிரச்சனையை சந்திக்கக்கூடும். </li><li>எனவே இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். </li><li>எந்த ஒரு முதலீடுகளையும் யோசிக்காமல் செய்யாதீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>ரிஷபம் </td><td><ol><li>ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். </li><li>இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வராமல் சிரமப்படக்கூடும்.</li><li>வியாபாரிகள் இக்காலத்தில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். </li><li>முக்கியமாக இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். </li><li>இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப பெறுவது கடினமாகிவிடும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களையோ அல்லது பண பற்றாக்குறையையோ சந்திக்க நேரிடலாம். </li><li>கைக்கு வரவேண்டிய பணத்தை பெறுவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம். </li><li>இது மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். </li><li>எதிர்பாராத நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். </li><li>இந்த செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நகரொன்றிற்கு குண்டு மிரட்டல்! வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416"></link>
            <id>https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதையடுத்து பாதுகாப்பு கருதி வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>முறையான சோதனை</h2><p>அசம்பாவிதங்களைத் தவிர்க்க முக்கியச் சாலைகள் மூடப்பட்டு, பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd346a2d-3259-470c-8d86-7c08ab98717e/26-6a7a29ed8cf9f.webp' /></p><p>

இதையடுத்து, கிளேட்டன் பூங்கா பகுதியில் வைத்து அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
முறையான சோதனைக்குப் பின் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிசெய்யப்பட்டு அப்பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்...! 111 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514"></link>
            <id>https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்புகொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p><b><u>🛑 புதிய இணைப்பு</u></b></p><p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo De La Espriella) அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்நிலநடுக்கத்தில் காயமடைந்த குறைந்தது 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><u><b>🛑 முதலாம் இணைப்பு</b></u></p><p>கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்தோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த அதிநவீன நிலநடுக்கம் காரணமாக காளி (Cali), பெரேரா (Pereira) மற்றும் மணிசாலேஸ் (Manizales) ஆகிய முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>பெரிய சேதங்கள்</h2><p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, கொலம்பியத் தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சொகோ (Chocó) பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose Del Palmar) பகுதியில் 107 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0ca725-84be-47a6-a3fb-d8211a3f1d2d/26-6a7a13c876b0b.webp' /></p><p>

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஈக்வடார், வெனிசுலா மற்றும் பனாமா ஆகிய அண்டை நாடுகளிலும் உணரப்பட்டபோதிலும், அங்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
</p><p>
ரிசாரால்டா (Risaralda) மாகாணத்தில் 40 பேரும், வாலே டெல் காவுக்கா (Valle del Cauca) மாகாணத்தில் 27 பேரும், மணிசாலேஸ் நகரில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.</p><p> </p><p></p><h2>அவசரகால நிவாரணம்&nbsp;</h2><p>பலியானவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மணிசாலேஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோஸ்ட்ரா செனோரா டெல் ரொசாரியோ (Nuestra Senora del Rosario) பேராலயத்தின் ஒரு கோபுரம் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிசாலேஸ், பெரேரா, குய்ப்டோ, அர்மேனியா, கார்டாகோ மற்றும் புவேனவென்டுரா ஆகிய 6 முக்கிய நகரங்களின் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95f60d0-da03-4633-9e5b-c7f70071a77a/26-6a7a13c929fd8.webp' /></p><p>

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், உள்ளூர் மக்களும் அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

புதிதாகப் பதவியேற்ற கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவசரகால நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-demands-reparations-from-iran-1786381157"></link>
            <id>https://ibctamil.com/article/trump-demands-reparations-from-iran-1786381157</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால்<a href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112" target="_blank"> ஏற்பட்ட சேதங்களுக்கு </a>ஈரான் இழப்பீடு கோரியிருந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் தற்போது இழப்பீடு கோருவதாகவும் ஆனால் இதற்கு முந்தைய <a href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325" target="_blank">எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலோ</a> அல்லது கூட்டங்களிலோ ஈரான் இதனைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>வெடிகுண்டுகள்&nbsp;</h2><p>

ஈரானின் சாலைப்பக்க வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைத்து நபர்களுக்காகவும், குறிப்பாக யூ.எஸ்.எஸ் கோல் (USS Cole) தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்காகவும் ஈரானிடம் இருந்து தானும் இழப்பீடு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d834bdf-e7a7-404e-ba19-25acbf09ed21/26-6a7a0fe8580b1.webp' /></p><p> 

அத்துடன், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் ட்ரம்ப், எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தக் கோரிக்கையைச் சேர்க்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325"></link>
            <id>https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325</id>
            <summary type="text">ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த <a href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094" target="_blank">இராணுவத் தளபதிகள்</a> நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஈரானின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான மொஜ்தாபா ஹொசைனி காமேனி இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதன்படி, நாட்டின் <a href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929" target="_blank">ஆயுதப் படைகளின்</a> தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைதரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>அதேபோல, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அஹ்மத் வாஹிதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாகவும், மொஸ்டாஃபா இசாதி அதன் துணைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b005d-601f-424f-9ffe-731bb0fee888/26-6a79fc7aa6c39.webp' /></p><p>மேலும், ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் அலி ஒஸ்மையும், பசீஜ் அமைப்பின் தலைவராக ஹொசைன் தாயெப்பும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:09+00:00</updated>
        </entry>
    </feed>
