<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T22:09:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்! உச்சம் தொடும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-has-no-plans-to-negotiate-with-us-1785267063"></link>
            <id>https://ibctamil.com/article/iran-has-no-plans-to-negotiate-with-us-1785267063</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபா அறிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், ஓமானுடன் படிப் படியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;கண்ணிவெடிகள்</h2><p>
</p><p>
ஈரானிய அரசு தொலைக்காட்சியில், “அமெரிக்கா தான் விரும்பும் போதெல்லாம் சண்டையிடுவதற்கும், விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கும் நாம் அதனை பழக்கப்படுத்திவிடக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/856501c0-2564-4fb7-a99f-87d3202c201f/26-6a69076f50dcc.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தெற்குப் பாதையை ஈரான் அங்கீகரிக்காது என மீண்டும் வலியுறுத்திய அவர், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றிலும் ஈரானின் பொறுப்பிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T21:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளை முதல் முறையாக தொடர்பு கொண்ட சீனா! கசிந்துள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-contacted-houthi-organization-1785273255"></link>
            <id>https://ibctamil.com/article/china-contacted-houthi-organization-1785273255</id>
            <summary type="text">தெற்கு செங்கடல் வழியாகத் தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காகச் சீனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புடன் நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு செங்கடல் வழியாகத் தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காகச் சீனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
சவூதி அரேபியத் துறைமுகங்களுக்கான போக்குவரத்தைத் தடுப்பதாக கடந்த 20 ஆம் திகதி ஹவுதி அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காக சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இதன்போது, சீனா தனது எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணப் பாதையை உறுதி செய்யுமாறு ஹவுதிகளிடம் நேரடியாகக் கோரியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>சீனாவின் முயற்சி&nbsp;</h2><p>

இந்த நிலையில், செங்கடலின் தெற்கு முனையில் ஏமனின் கிழக்குக் கரையை ஒட்டியுள்ள பாப் அல்-மண்டேப் நீர்வழிப்பாதை வழியாகப் பயணிப்பது குறித்து ஹவுதிகளை நேரடியாகத் தொடர்பு கொண்ட முதல் நாடு சீனா என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c7c0c06-c160-43e9-bb90-1f16ab2d9510/26-6a691ef0d0162.webp' /></p><p>
</p><p>
வளைகுடாவிலிருந்து வெளியேறும் வழியிலுள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறையை நிரப்பும் வகையில், சவூதி அரேபியாவின் செங்கடல் முனையங்களிலிருந்து, குறிப்பாய் யான்பு துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து பெறச் செய்ய சீனா முயன்று வருகிறது.
</p><p>
இருப்பினும் இது குறித்துச் சீனப் போக்குவரத்து அமைச்சு, ஹவுதிகளின் ஊடக அலுவலகம் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சு ஆகியவை இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T21:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-warn-against-iranian-support-for-russia-1785269872"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-warn-against-iranian-support-for-russia-1785269872</id>
            <summary type="text">ஈரானியக் கப்பல் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை ஈரான் கண்டித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் அழைத்து உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கப்பல் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை ஈரான் கண்டித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் அழைத்து உரையாடியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார். </p><p>

அதன்போது, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ரஷ்யாவிற்கான அனைத்து ஆதரவுகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல்</h2><p>
</p><p>
அராக்சியுடனான உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஹா, "எந்தவொரு பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன். இந்தப் போர் சட்டவிரோதமானது, இது முடிவுக்கு வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce371e4-57ab-4da9-9c06-a234e97452cd/26-6a69140837414.webp' /></p><p>
இதேவேளை, ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல் தற்செயலானது என்றும், உக்ரைன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் சிபிஹா தனக்கு உறுதியளித்ததாக அராக்சி எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>ஈரானுக்கு உரிய இழப்பீடு</h2><p> </p><p>

மேலும், “ஈரானும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. இருப்பினும் எங்கள் குடிமக்கள் அல்லது நலன்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc46e09e-ad84-496a-bdb6-f3639731d211/26-6a6914093acac.webp' /></p><p>
</p><p>
இந்த இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது என அராக்சி முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு மாற்றியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T20:52:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு! பேசப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/things-trump-and-zelensky-talked-about-1785265830"></link>
            <id>https://ibctamil.com/article/things-trump-and-zelensky-talked-about-1785265830</id>
            <summary type="text">


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.</p><p>

அதன்போது, பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பான்களைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெறுவது குறித்தும், தூதரக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் சுமுகமாக விவாதித்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சந்திப்பிற்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உக்ரேனிய மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அமைதியை முன்னெடுத்துச் செல்லவும் இணைந்து செயல்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போரின் முடிவு</h2><p> </p><p>

மேலும், இந்தச் சந்திப்பின் போது பேட்ரியாட் தடுப்பு அமைப்புகளின் உற்பத்தி உரிமங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A good meeting with President Trump <a href="https://x.com/POTUS?ref_src=twsrc%5Etfw">@POTUS</a> at the Oval Office. Thank you for everything we do together to protect the lives of Ukrainians and advance peace. First and foremost, I offered President Trump our condolences on the passing of Lindsey Graham. He was a true friend of… <a href="https://t.co/56yoaeqb2B">pic.twitter.com/56yoaeqb2B</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2082125765634822619?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அத்துடன், அண்மையில் மறைந்த அமெரிக்க செனட்டர் லின்ட்சே கிரஹாமின் இறுதிச்சடங்கு நடைபெறும் இந்நாளில், உக்ரைனின் உண்மையான நண்பரான அவரை இழந்ததற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜெலென்ஸ்கி தெரிவித்துக் கொண்டுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-07-28T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[1983 கறுப்பு யூலை தமிழர் படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் தப்பியவரின் சாட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1983-black-july-tamil-massacre-1785260024"></link>
            <id>https://ibctamil.com/article/1983-black-july-tamil-massacre-1785260024</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவத்தை அங்கிருந்து உயிர்தப்பிய ஒருவர் விவரித்துள்ளார்.</p><p>

சிறையில் உள்ள பிற கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதையும், அதில் குட்டிமணி மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அதன்போது அவர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
இதேவேளை, உயிருக்குப் போராடிய கைதிகள், தங்களுக்கு இருந்த குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்தி எப்படி தற்காப்பு அரண்களை உருவாக்கினார்கள் என்பதையும், தாக்குதல் நடத்தியவர்களின் பயம் தங்களை எப்படி காப்பாற்றியது என்பதையும் அவர் பின்வருமாறு ஐபிசி தமிழுக்கு விளக்கியுள்ளார்,&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_DpkHslAGEM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T19:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-filed-against-rajitha-this-month-1785262292"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-filed-against-rajitha-this-month-1785262292</id>
            <summary type="text">கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இம்மாதம் 31ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரராம முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்தச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த உபாலி லியனகே என்பவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்பதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>விடுவிக்கப்பட்ட&nbsp;முதலாவது சந்தேநபர்</h2><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்ட நீதிவான், முதலாவது சந்தேகநபரை வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதோடு, இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அது குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518de20f-46f6-4f49-b7b8-072363e368b2/26-6a68f46970c2b.webp' /></p><p>

இதன்படி, குறித்த இரு சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான போதே இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T18:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-s-main-henchman-arrested-1785258545"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-s-main-henchman-arrested-1785258545</id>
            <summary type="text">


பாதாள உலகத்தின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ரத்மலானே சைமா என்ற போதைப்பொருள் கடத்தல்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>


பாதாள உலகத்தின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ரத்மலானே சைமா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூன்று பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த சந்தேகநபர், இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சிவப்பு அறிவிப்பு</h2><p>
</p><p>
இதேவேளை, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரானை இன்டர்போல் உதவியுடன் நாடுகடத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d2dc75-e86f-4d69-a61f-1d1c2eac18d4/26-6a68e5a104107.webp' /></p><p>
</p><p>
இவர் சர்வதேச பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த நாட்டில் ஏராளமான பாதாள உலகச் செயல்பாடுகளை நடத்தியதோடு, பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களைக் குற்றப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் மூலம் ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து, தனது குற்றச் செயல்களைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a>WHATSAPP CHANNEL</a></b><a> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p>
</p>]]></content>
            <updated>2026-07-28T17:23:47+00:00</updated>
        </entry>
    </feed>
