<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-11T09:14:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விசாரணை ஒன்றின் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அறிக்கைகளின்படி, ஷிரான் பாசிக் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில், தனது தந்தையின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டை வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

ஷிரான் பாசிக்கின் தந்தை, சொத்து சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (11) CCIB முன் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><i><u>மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை</u></i></b></p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>முடக்க அதிகாரிகள் நடவடிக்கை</h2><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7718b5-0d31-469c-944c-8e30830bc171/26-6aa3a0d2e5ad1.webp' /></p><p>இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bai-1789115281"></link>
            <id>https://ibctamil.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bai-1789115281</id>
            <summary type="text">
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>பிணை</h2><p>
</p><p>
இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7436461e-8f08-4e98-84e7-74c9a9edcb59/26-6aa3be48b5444.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T09:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் ஒப்பந்தம் குறித்து அறிக்கை அளித்த பின்னர் FCID-யிலிருந்து வெளியேறிய கோட்டபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789098887"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789098887</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி FCID-க்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.</p><p>

அதன்படி, அவர் இன்று காலை (11) FCID-ஐயில் முன்னிலையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4335da1d-475e-4aa5-82b6-e8955ec4c1fd/26-6aa3c278379be.webp' /></p><p>

பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் தற்போது வெளியேறியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p><i><b><u>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை</u></b></i></p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். </p><p>

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>கோட்டாபய ராஜபக்சவை இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>முன்னாள் விமானப்படைத் தளபதி</h2><p>இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக நேற்று (10) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/972ea612-8615-4e0e-a3ec-a0e3df7c081d/26-6aa37fdfcb032.webp' /></p><p> </p><p>

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UKzXQ1Zl1M8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலையில் விசேட சோதனை: மீட்கப்பட்ட 25 தொலைபேசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mobile-phones-sim-cards-recovered-galle-prison-1789114352"></link>
            <id>https://ibctamil.com/article/mobile-phones-sim-cards-recovered-galle-prison-1789114352</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கியிருக்கும் அறைக்கட்டிடங்ளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>காலி சிறைச்சலை</h2><p> </p><p>இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை தலைமையக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac083e9-112e-458f-8104-6f3cbd50f594/26-6aa3bc882dbd7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115220"></link>
            <id>https://ibctamil.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115220</id>
            <summary type="text">தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.

உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்.</p><p></p><h2>திரைப்பட துறை</h2><p> </p><p>

தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/231bb28e-9f63-4759-8c3b-37a6fa29f597/26-6aa3c00859cb9.webp' /></p><p> </p><p>இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
</p><p>
தொலைக்காட்சி மட்டுமின்றி திரைப்பட துறையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். </p><p>

அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழுக்கென தனக்கான இடத்தை கொண்டுவந்தவர்.</p><p></p><h2>ஆய்வு நூல்கள்</h2><p>

இவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b847df38-9ad8-4937-96ab-189808866340/26-6aa3c00916a9f.webp' /></p><p>

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். </p><p>

அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/number-of-aswesuma-beneficiaries-drops-1789110527"></link>
            <id>https://ibctamil.com/article/number-of-aswesuma-beneficiaries-drops-1789110527</id>
            <summary type="text">அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குறைந்த வருமானம் பெறும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும நிவாரணத்தை நீக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்குப் பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே அதில் மீள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டத்தின் ஊடாகவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்</h2><p> </p><p>இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதனை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e2b7a18-82e9-4b6b-a292-2bb30f1e3672/26-6aa3bc6e0a98f.webp' /></p><p> 

இந்த வேலைத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், எனினும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது அது 1,761,116 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். </p><p>

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் ஆகும் போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதற்குப் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அஸ்வெசும கொடுப்பனவு</h2><p> </p><p>

அதற்கமைய, அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்கால ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நன்மைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், இடைக்காலப் பிரிவினருக்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e71d591-60c0-4e0e-b2ec-d8d0b5e78867/26-6aa3bc6eb75fb.webp' /></p><p> 

இதற்கமைய, தற்போது அதிக வறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கு மத்தியில் மீள் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2012 கிரேக்க பிணைமுறி வழக்கு! அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabraal-filed-an-appeal-with-supreme-court-1789113898"></link>
            <id>https://ibctamil.com/article/cabraal-filed-an-appeal-with-supreme-court-1789113898</id>
            <summary type="text">



2012 ஆம் ஆண்டின் கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>



2012 ஆம் ஆண்டின் கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
இன்றைய தினம் (11) இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்குப் பதிவு&nbsp;</h2><p>

அதன்போது, மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக இந்த வழக்கை ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7962055-696f-49ec-824a-89aa38001b4e/26-6aa3b9beb5b33.webp' /></p><p>
</p><p>
கிரேக்கப் பொருளாதாரச் சரிவு பற்றித் தெரிந்திருந்தும் அரசு நிதியை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்து அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பல பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் மூன்று நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-days-grand-food-festival-at-reecha-1789112645"></link>
            <id>https://ibctamil.com/article/three-days-grand-food-festival-at-reecha-1789112645</id>
            <summary type="text">வடக்கு கிழக்கின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை “றீச்சா
உணவுத் திருவிழா 2026” ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை “றீச்சா
உணவுத் திருவிழா 2026” எனும் பிரமாண்டமான மூன்று நாள் உணவுத் திருவிழாவை நடத்துவதற்கு
தயாராகியுள்ளது.</p><p>

யாழ் ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட றீச்சா ஒருங்கிணைந்த
பண்ணையின் முகாமைத்துவ குழுவினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
</p><p>இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
2026 ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழா, பாரம்பரிய உணவுகளின் சுவையையும் நவீன உணவு
அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்&nbsp;</h2><p>றீச்சா உணவுத் திருவிழா 2026 இல் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பல்வேறு
பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவு வகைகளை வரையறையற்ற முறையில் சுவைத்து மகிழ
வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.</p><p>
உணவுத் திருவிழாவின் பிரதான வரையறையற்ற உணவு சேவை மாலை 6.00 மணி முதல் இரவு
10.00 மணி வரை நடைபெறும். ஒரே டிக்கெட்டினால் பார்வையாளர்கள் இச்சிறப்பான உணவு
அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4735ab5b-6f46-4e94-952b-af20ef21f5aa/26-6aa3b9308e0a5.webp' /></p><p>
</p><p>
உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள் காலை 8.00
மணிமுதல் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்திற்குள் வருகை தர முடியும்.</p><p>

பகல் நேரத்தில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொழுதுபோக்கு
நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும்
அனுபவிக்க முடியும். விளையாட்டுகளில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான
விளையாட்டு டிக்கெட்டுகளை தனியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>இதன்மூலம், உணவு திருவிழா டிக்கெட் பெற்றவர்கள் காலைமுதல் இரவு வரை றீச்சா
வளாகத்தில் முழுமையான குடும்ப மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்திற்குள் உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட் பெற்றவர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படுவர்.</p><p>எனவே, ஏற்பாட்டாளர்கள், உணவுத் திருவிழா டிக்கெட் இல்லாத ஏனைய பார்வையாளர்கள்
மேற்குறிப்பிட்ட 3 நாட்களிலும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிடுவதைத்
தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p></p><h2>றீச்சா பண்ணை வளாகத்தின் பாதுகாப்பு</h2><p>
</p><p>
பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் ஒழுங்கான நிகழ்வு நிர்வாகத்தையும்
உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 1,500 பார்வையாளர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
</p><p>இதன்படி, 3 நாட்களிலும் மொத்தமாக 4,500 பார்வையாளர்கள் மட்டுமே உணவுத் திருவிழாவில் பங்கேற்க முடியும்.
குறிப்பிட்ட எண்ணிக்கை பூர்த்தியடைந்த பின்னர் மேலதிக டிக்கெட்டுகள்
வழங்கப்படமாட்டாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6938c4-705a-4969-a663-f3038ca98fca/26-6aa3b93181e20.webp' /></p><p>

'றீச்சா உணவுத் திருவிழா 2026'க்கான அனைத்து டிக்கெட்டுகளும் இணைய வழி மூலம்
மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து
பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>

டிக்கெட் வாங்கிய பின்னர் நிகழ்வில் கலந்துகொள்ளாதது அல்லது தனிப்பட்ட
காரணங்களுக்காக வருகை தரமுடியாதது போன்ற சந்தர்ப்பங்களில் டிக்கெட் தொகை
திருப்பிச் செலுத்தப்படமாட்டாது.
</p><p>எனவே, டிக்கெட் வாங்குவதற்கு முன் நிகழ்வின் அனைத்து விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளையும் கவனமாக வாசித்து, அவற்றை புரிந்துகொண்டு டிக்கெட் கொள்வனவு
செய்யுங்கள்.</p><p>
விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பார்வையாளர்களும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் ஏனைய பார்வையாளர்களின் வசதியை
கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eml_jjW69LU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலை அகழ்வாய்வு! மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukondan-massacre-excavation-1789114166"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukondan-massacre-excavation-1789114166</id>
            <summary type="text">சத்துருக்கொண்டான் படுகொலை விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்துருக்கொண்டான் படுகொலை விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>

குறித்த பகுதியில் இருந்த இராணுவம் முகாம் உள்ளிட்ட இடங்கள் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று (11.09.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><h2>பொய்ஸ் கார்டன் படைமுகாம்</h2><p>
</p><p>
இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/775a5677-0ffc-47aa-bec0-752176d73869/26-6aa3b9a38c797.webp' /></p><p>
</p><p>
குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட அடையாளம் காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.</p><p>

இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர்...! பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-searching-balasankar-narayanan-in-london-1789093995"></link>
            <id>https://ibctamil.com/article/police-searching-balasankar-narayanan-in-london-1789093995</id>
            <summary type="text">லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆப...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>46 வயதுடைய பாலசங்கர் நாராயணன் என்பவர் குறித்தே காவல்துறை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>பெண்கள் மற்றும் சிறுமிகள் அவதானம்</h2><p>மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73eed72b-9148-4ba1-a73c-4712989481d8/26-6aa3b4538f331.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p>

பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என காவல்துறையினர் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:57:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-no-plan-to-hike-electricity-tariffs-1789112043"></link>
            <id>https://ibctamil.com/article/govt-no-plan-to-hike-electricity-tariffs-1789112043</id>
            <summary type="text">மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>

நாட்டில் பெய்த கனமழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்து, மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்ததே இதற்குக் முக்கிய காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>தடையற்ற மின் விநியோகம்</h2><p>

இதன் காரணமாக, எதிர்வரும் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், அதற்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39630b78-f37b-48ba-b42d-0823285ab045/26-6aa3b23a9cd22.webp' /></p><p>
</p><p>
 மேலும், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மின்சக்தி அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவினால் விவசாயத்திற்கு ஏற்படப்போகும் சவால்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nino-will-pose-challenges-for-agriculture-1789109264"></link>
            <id>https://ibctamil.com/article/el-nino-will-pose-challenges-for-agriculture-1789109264</id>
            <summary type="text">எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்குக் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும் என்று விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்குக் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும் என்று விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் எல் நினோ நிலைமையினால் விவசாயத்திற்குச் சவால்கள் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையமும் நீர் முகாமைத்துவ செயலகமும் எச்சரித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
</p><p>
2026/27ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பெரும்போக நெற்செய்கை</h2><p>இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நீரை உச்ச அளவில் முகாமைத்துவம் செய்து வெற்றிகரமான அறுவடையைப் பெற ஒக்டோபர் மாதத் தொடக்கத்தில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7c6989-a037-4944-acb4-35202376a530/26-6aa3ada8da7ae.webp' /></p><p>நெற்செய்கைக்குத் தேவையான அளவு உரமும் விதை நெல்லும் போதியளவில் இருப்பதாகவும், இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக தேசிய உரச் செயலகமும் விவசாயத் திணைக்களமும் அறிவித்துள்ளன.</p><p>
</p><p>

விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பரிந்துரைகளைப் பின்பற்றிச் சரியான வேளையில் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாயிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.</p><p></p><h2>வலய வாரியான கால அட்டவணை</h2><p>எதிர்வரும் 2026/27 பெரும்போக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகவும், நிலவும் வானிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்காகவும் வலய வாரியான கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25e1696-45ce-4e7d-8d2f-d444b473e098/26-6aa3ada82b267.webp' /></p><p> </p><p>அதன்படி, முன்கூட்டியே நீரைப் பெறும் முதல் கட்டமாக 'வளவை' வலயத்தில் ஒக்டோபர் 01ஆம் திகதியும், அடுத்த கட்டமாக 'அல்லா' வலயத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதியும் செய்கை தொடங்கப்படுகிறது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, 'கவுடுல்ல 'வலயத்தில் நவம்பர் 01ஆம் திகதியும், 'எலஹெர' வலயத்தில் நவம்பர் 10ஆம் திகதிக்குள் இறுதி கட்டமாகவும் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும்.</p><p>மேலும் இது தொடர்பில் ஏனைய தீர்மானங்களுக்கான முக்கிய ஒன்றுகூடல் எதிர்வரும் 18ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சிம் அட்டைகளை வாங்குவோருக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sim-cards-must-provide-their-own-direct-photo-1789106244"></link>
            <id>https://ibctamil.com/article/sim-cards-must-provide-their-own-direct-photo-1789106244</id>
            <summary type="text">முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><p>

இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், காவல்துறை போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0982c5-56ac-4927-80a4-019ee632e8c4/26-6aa3a164ed87e.webp' /></p><p> 

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.</p><p> 

அந்த நிறுவனங்களுடன் இணைந்து சிம் விதிமுறைகளைப் புதுப்பித்து, குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து (பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள்) புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.</p><p></p><h2>3 கோடி சிம் அட்டைகள்</h2><p> </p><p>

இது தொடங்கப்பட்ட பின்னர், 2027 ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும், அதாவது வாடிக்கையாளரை அடையாளம் காண்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e33adc9-0bfc-4cc7-bc19-397246083924/26-6aa3a165aa2a6.webp' /></p><p> 

இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும். </p><p>நாட்டிலுள்ள சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p> சேவைத் தரம் குறைவாக இருப்பதாக அந்த மக்களிடமிருந்து வரும் ஒரு முறைப்பாடாகும். 

தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நாங்கள் இயங்கி வருகிறோம். அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரின் மதிப்பு அதிகரிப்பு: இன்று முக்கிய வங்கிகளால் மாற்றப்பட்ட சமீபத்திய வட்டி விகிதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/decline-value-dollar-interest-rates-banks-today-1789108012"></link>
            <id>https://ibctamil.com/article/decline-value-dollar-interest-rates-banks-today-1789108012</id>
            <summary type="text">நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.

என...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.
</p><p>
எனினும், சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 332 ரூபாயை அண்மித்த மட்டத்தில் பெரிய மாற்றமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 324.35 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 333.60 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.</p><p></p><h2>டொலரின் மதிப்பு அதிகரிப்பு</h2><p>

NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 324.00 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 333.00 ரூபாயாகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b645c22-85f1-4448-b5c4-4037c7cafe16/26-6aa3a326eb505.webp' /></p><p>
</p><p>
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 324.55 ரூபாயிலிருந்து 324.45 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.60 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் சிறிதளவு குறைந்துள்ளது.</p><p>

கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 322.85 ரூபாயிலிருந்து 322.60 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.75 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
</p><p>
இதனிடையே, சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 324.50 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.50 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:22:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! காவல்துறை வெளிப்படுத்திய பரபரப்புத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wrong-house-targeted-in-dehiwala-grenade-attack-1789108788"></link>
            <id>https://ibctamil.com/article/wrong-house-targeted-in-dehiwala-grenade-attack-1789108788</id>
            <summary type="text">தெஹிவளையில் உண்மையாக இலக்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு பதிலாக தவறுதலாக மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளிப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் உண்மையாக இலக்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு பதிலாக தவறுதலாக மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

இன்று அதிகாலை தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களது 55 வயதுடைய தந்தை பலத்த காயமடைந்தார்.
</p><p>
காயமடைந்த தந்தை தற்போது கலுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><h2>இலக்கு வைக்கப்பட்டிருந்த வீடு</h2><p>
</p><p>
இந்நிலையில், காவல்துறைப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் வெளியிட்ட தகவலின்படி, ஆரம்பகட்ட விசாரணைகளில் இத்தாக்குதல் தவறுதலாக வேறொரு வீட்டின் மீது நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3630760a-1467-4aa2-bbce-39b655292686/26-6aa3a928da8f9.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள “படோவிட்ட அசங்க” என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்புடைய ஒருவரின் வீடே உண்மையான இலக்காக இருந்திருக்க வேண்டும் என்றும், தாக்குதலாளிகள் தவறுதலாக அதன் அருகிலிருந்த வீட்டின் மீது கைக்குண்டை வீசியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>தாக்குதலுக்கான காரணம்&nbsp;</h2><p>

படோவிட்ட அசங்க தரப்பினருக்கும் அவருக்குப் போட்டியான கொஸ் மல்லி என்ற பாதாள உலகக் குழுவினருக்கும் இடையே நிலவும் மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f1bf35-0b31-49c0-9ed0-ba3b70f96d4f/26-6aa3a72e27854.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மூன்று காவல் குழுக்கள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1789108689"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1789108689</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

</p><p>சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4,000 ரூபா குறைந்துள்ளது.</p><p></p><h2>தங்க விலை</h2><p>
</p><p>
</p><p>இதன்படி, இன்று (11) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29979f7c-c49d-4f0c-9f1a-6c6dbd55e981/26-6aa3a31f7edb3.webp' /></p><p>
இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.</p><p>அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை - சீனிபுர பகுதியில் கடும் வறட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-in-the-kantalai-seenipura-area-1789106169"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-in-the-kantalai-seenipura-area-1789106169</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய், சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய், சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.</p><p>

இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் தற்போதைய தேவைக்கு அந்தளவு நீர் போதுமானதாக இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், வறட்சி காரணமாக காடுகளிலும் நீராதாரங்கள் வற்றியுள்ளதால், குடிநீரைத் தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மக்களின் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
எனவே, சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cabda1dc-b3d7-44c4-a8b4-4a51e5724b81/26-6aa39c6565179.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T06:35:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போருக்கு பின்னர் முதல் முறையாக பிரிக்ஸ்ஸை இலக்கு வைத்து இந்தியாவுக்கு வருகைதந்த புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-visits-india-with-brics-in-mind-1789108439"></link>
            <id>https://ibctamil.com/article/putin-visits-india-with-brics-in-mind-1789108439</id>
            <summary type="text">புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்பதற்காக இந்தியாவை சென்றடைந்துள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்பதற்காக இந்தியாவை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
புடின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை டெல்லியை சென்றடைந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில் இந்த விசயத்துக்கு மத்தியில் புடினுடன் உயர்மட்ட இராஜதந்திர குழுவும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மூலோபாயக் கூட்டாண்மை</h2><p>
</p><p>
இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையின் அடிப்படையில் பல பரிமாண மற்றும் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள நிலையில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டையும் தாண்டி இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38524804-2916-4421-b78f-36b37a1c8461/26-6aa3a0d98adc0.webp' /></p><p>
</p><p>
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் போர் ஆரம்பித்த பின்னர், ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புடின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் சனிக்கிழமை (12) ஆரம்பிக்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்கு 04 ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T06:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் மீது இலஞ்ச - ஊழல் விசாரணை: சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை எழுப்பிய தயாசிறி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-and-corruption-probe-against-the-speaker-1789107077"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-and-corruption-probe-against-the-speaker-1789107077</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை ஐக்கிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இதன்படி அவர் நாடாளுமன்றுக்கு தலைமை
தாங்கவோ அல்லது அரசமைப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கவோ 
சட்டப்படியோ
ஒழுக்கவியல் பிரகாரமோ உரிமையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை அவர்
முன்வைத்தார்.
</p><p></p><h2>சட்டபூர்வ நடைமுறை</h2><p>
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், 

"சபாநாயகர் பதவியை வகித்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்
மற்றும் அரசமைப்புச் சபையின் தலைவராகச் செயற்படுதல் தொடர்பில் எழுந்துள்ள
சட்ட, ஒழுக்கவியல் மற்றும் நிறுவன நம்பகத்தன்மை சார்ந்த சிறப்புரிமைப்
பிரச்சினையாக இது அமைகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b425db-102e-4a76-bcfb-43183058804f/26-6aa39b87f1c0d.webp' /></p><p> </p><p>

1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற
(அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும்
நிலையியல் கட்டளை 29 இன் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சபாநாயகர் பதவிக் காலத்தில் அரச வளங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தியதில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே ஆணைக்குழு
விசாரித்து வருகின்றது.</p><p> 

ஆணைக்குழு விசாரணை நடத்துவதனால் மாத்திரம் ஒருவர்
குற்றவாளியாக மாட்டார் என்பதையும், சட்டபூர்வ நடைமுறைகள் முடியும் வரை
அவருக்குக் குற்றமற்றவர் என்ற அனுமானம் உண்டு என்பதையும் ஆரம்பத்திலேயே
தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
</p><p></p><h2>நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி</h2><p>
சுதந்திரமான ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புச்
சபையின் தலைவராகவும், விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களை வழங்கும்
நாடாளுமன்றத்தின் தலைவராகவும் அவர் தொடர்வது நம்பகத்தன்மை தொடர்பில் பல
கேள்விகளை எழுப்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f1973b-58fb-40fb-ad8c-ee3350f3690d/26-6aa39b88a888b.webp' /></p><p>
</p><p>
 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்
சட்டத்தின் 162 ஆம் பிரிவின் கீழ் சபாநாயகரும் 'அரசு ஊழியர்' என்ற
வரையறைக்குள் அடங்குவதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்படி
விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட
முடியாது.
</p><p>
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல்
எதிர்ப்புச் சட்டத் திருத்தத்துக்கு அரசமைப்பின் 79 ஆம் உறுப்புரையின்படி
சபாநாயகர் தனது கையொப்பத்துடன் சான்றளிக்க வேண்டும். </p><p>

எனினும், தற்போதைய சட்ட
ஏற்பாடுகளின்படி சபாநாயகரால் அந்தச் சான்றிழைப் பதிவு செய்ய முடியாது.</p><p>

மேலும், ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட
மதிப்பீடுகளைச் சபையில் சமர்ப்பித்தமை போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட
முடியாது.
</p><p>
இது வெறுமனே அரசமைப்புச் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது, நலன் முரண்பாடு
தொடர்பான கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினையாகும்." என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T06:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் தனிப்பட்ட ஜோதிடர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statement-recorded-from-mahinda-s-astrologer-1789105853"></link>
            <id>https://ibctamil.com/article/statement-recorded-from-mahinda-s-astrologer-1789105853</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.</p><p>அதன்போது, ஆணைக்குழு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>விசாரணை காரணம்&nbsp;</h2><p>

ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, அவர் நேற்று(10)முற்பகல் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c83ed3e-1041-4fea-ac5d-22f331b38279/26-6aa39a6034acd.webp' /></p><p>

“சிரிலிய சவிய” அமைப்பு தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
அந்தக் காலகட்டத்தில், அவர் தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் ஒருவராகவும் பணியாற்றியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T06:06:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்தல் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weighted-average-marks-method-instead-gpa-system-1789102323"></link>
            <id>https://ibctamil.com/article/weighted-average-marks-method-instead-gpa-system-1789102323</id>
            <summary type="text">புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.</p><p>தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர், முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மாணவர்களுக்கான&nbsp;வாய்ப்புகள்</h2><p>அத்துடன் தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da7a382e-e4ee-4f13-86db-2e3688074572/26-6aa38f43f3aa4.webp' /></p><p>மேலும் இதன்போது, தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளது</h2><p>புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f8b779-bb81-48f5-9bad-a424c88794bf/26-6aa38f4501d8a.webp' /></p><p>

இதனிடையே, இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கருத்தியல் ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கலுக்கான கட்டமைப்பு ஆகிய கொள்கை ஆவணங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:39:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல்: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-attack-shopping-mallukraine-5-killed-1789100296"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-attack-shopping-mallukraine-5-killed-1789100296</id>
            <summary type="text">உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் வணிக வளாகமொன்றின் மீது ரஷ்ய ட்ரோன் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் வணிக வளாகமொன்றின் மீது ரஷ்ய ட்ரோன் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
மக்கள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருந்த பகுதியொன்றில் பகல் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

தாக்குதலில் வணிக வளாகம் மட்டுமன்றி, பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p></p><h2>உக்ரைன் உள்துறை அமைச்சர்&nbsp;</h2><p> தாக்குதல் இடம்பெற்றபோது பாவ்லோஹ்ராட் நகரின் பிரதான வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb2a656-5972-4436-ad42-495bf1bb3969/26-6aa393d466803.webp' /></p><p>
</p><p>
காயமடைந்த 67 பேரில் 8 சிறுவர்களும் அடங்குவதாக பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.</p><p>

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p> வணிக வளாகங்களுக்கு அருகில் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>வணிக வளாகங்கள்</h2><p>இந்தத் தாக்குதலை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரி சிபிஹா, உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் ரஷ்யாவின் உத்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc3f406-c653-4e01-883e-0d7b13ceee03/26-6aa393d3a8efc.webp' /></p><p>மேலும் அவர் குறிப்பிடுகையில் “பொதுமக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதன் மூலம் உக்ரைன் மக்களை சோர்வடையச் செய்து, சலுகைகளை வழங்குவதற்கு உக்ரைனை கட்டாயப்படுத்தலாம் என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>
டினிப்ரோ நகருக்கு அருகிலுள்ள முக்கிய விநியோக மையமாக விளங்கும் பாவ்லோஹ்ராட், இதற்கு முன்னரும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கடந்த மாதம் அங்குள்ள களஞ்சியத் தொகுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
</p><p>
இதேவேளை, இந்த வாரத்தில் சபோரிஷியா மற்றும் சுமி நகரங்களில் உள்ள இரு வணிக வளாகங்களும் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. </p><p>திங்கட்கிழமை சபோரிஷியாவில் உள்ள வணிக வளாகமொன்று கடுமையாக சேதமடைந்த போதிலும், அது மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை காணிகளை விடுவிக்கக் கோரி பாரிய போராட்டம்! ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-release-of-lands-jaffna-1789104034"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-release-of-lands-jaffna-1789104034</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்போது, தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை
சென்றுடைந்துள்ளது.</p><p></p><h2>கோரிக்கை மனு</h2><p>

அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மனு கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9ce9a9-8f27-4543-8d1e-6efb87f42066/26-6aa391aff14b3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T05:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற உணவகத்திற்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selling-bottled-water-at-high-prices-fine-1789098189"></link>
            <id>https://ibctamil.com/article/selling-bottled-water-at-high-prices-fine-1789098189</id>
            <summary type="text">உணவகம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு - வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு, அதிகபட்ச சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவகம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
மட்டக்களப்பு - வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு, அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வாழைச்சேனை நீதவான் நீதிமன்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c160fa73-0bda-47f2-bff2-9ffe4e367dbb/26-6aa38da3b47dd.webp' /></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.
</p><p>
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாக குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-session-private-members-motions-1789100895"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-session-private-members-motions-1789100895</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(11.09.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(11.09.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.</p><p>(i) பெட்ரோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (நலீன் பண்டார ஜயமஹ).</p><p> 

(ii) இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல் (அஜித் பி. பெரேரா). </p><p>

(iii) தியகம வனத்தைப் பாதுகாத்தல் (ஹர்ஷ த சில்வா)</p><p>

(iv) பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல் (சுஜீவ திசாநாயக்க). </p><p>

(v) மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல் (நந்த பண்டார).</p><p> 

(vi) கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல் (ரீ.கே. ஜயசுந்தர). </p><p>

(vii) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல் (எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்).&nbsp;</p><p>இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vWP9O-E8wGo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:28:43+00:00</updated>
        </entry>
    </feed>
