<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-15T03:24:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் - கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-beat-france-qualified-for-fifa-world-cup-1784083417"></link>
            <id>https://ibctamil.com/article/spain-beat-france-qualified-for-fifa-world-cup-1784083417</id>
            <summary type="text">உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. </p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.</p><p>
இந்த போட்டி இன்று (இலங்கைநேரப்படி நள்ளிரவு 12.30 மணி) டெக்சாஸின் ஆர்லிங்டனிலுள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>இறுதிப்போட்டிக்குத் தகுதி&nbsp;</h2><p>இந்தப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
</p><p>
ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3acec0a-7505-4af7-a5fe-3574298fe639/26-6a56f78c7853a.webp' /></p><p>தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன், பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.
</p><p>வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பிரான்ஸின் தாக்குதல்களை முறியடித்த ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.</p><p></p><h2>தோல்வியடைந்த பிரான்ஸ்</h2><p>தோல்வியடைந்த பிரான்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72697149-cbdb-4ee5-abbf-76f01632a289/26-6a56f78d2e845.webp' /></p><p> இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T03:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளுக்கு இலக்கு - சிக்கிய நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-connection-with-theft-in-jaffna-1784085268"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-connection-with-theft-in-jaffna-1784085268</id>
            <summary type="text">யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்&amp;nbsp;கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த நபர்கள் நேற்று(14) யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும்
கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை
மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை
துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d942f02-f27b-4891-8e31-3078dca17143/26-6a56fc5fd1494.webp' /></p><p>
விசாரணைக்கமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால்
மீட்கப்பட்டுள்ளது.</p><p>
சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர்நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T03:21:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீட்க்கப்பட்ட 271 used தோட்டாக்கள் - நீர்கொழும்பு சிறைக்கு நடந்தது இதுதான்! திக்திக் நிமிடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-reveals-sparked-negombo-prison-unrest-1784080988"></link>
            <id>https://ibctamil.com/article/cid-reveals-sparked-negombo-prison-unrest-1784080988</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.
</p><p>

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>
 வன்முறை பரவக் காரணம்</h2><p>
இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d972cea-cc84-40c6-8870-47e2bc4d4afe/26-6a56f1d3b2459.webp' /></p><p>

மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
</p><p>
கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். </p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

 CCTV பதிவுகள்
</h2><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1101acef-812e-4fc3-87c9-9b4221a8feed/26-6a56f1d571930.webp' /></p><p>


அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர்.
</p><p>
சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.</p><h2>தடயவியல் சோதனை</h2><p> </p><p>அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47b3332-eff8-46ef-bf97-8743db2bb6dc/26-6a56f1d488196.webp' /></p><p>இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. </p><h2>கைதிகள் பற்றிய அறிக்கை</h2><p>கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06949c3c-ecb8-4907-b477-81b12ec33206/26-6a56f1d62d42e.webp' /></p><p>இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T02:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் வெடித்த போர்: நிறுத்த சொல்லும் வரை ஈரானை தாக்குங்கள் - டிரம்பின் உத்தரவால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-strikes-continue-until-i-say-enough-1784079785"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-strikes-continue-until-i-say-enough-1784079785</id>
            <summary type="text">நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களே தமது இலக்குகள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p>செவ்வாயன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>"அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரை, நாங்கள் அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களைச் செயலிழக்கச் செய்வதுடன் அவர்களின் எல்லாப் பாலங்களையும் தகர்ப்போம் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195a60f3-09ad-46cd-a2b8-534b5a805834/26-6a56e7e1a16d7.webp' /></p><p>இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரான் படைகள் ஏழு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், அண்டை வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளையும் ஆளில்லா ட்ரோன்களையும் ஏவியுள்ளதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவின் குற்றங்கள்</h2><p>இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8828f6c-c1b7-4a41-9224-ca7e54a6d539/26-6a56e8d2227b2.webp' /></p><p>இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் எனவும்&nbsp;புரட்சிகர காவல் படை&nbsp;தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T02:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784077226"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784077226</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் காரணமாக பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d43e66b-4f72-4bbd-a939-578b472ce1f3/26-6a56dbab64b8c.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் தலைமைகளுக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vip-security-provided-based-on-intel-reports-govt-1784076324"></link>
            <id>https://ibctamil.com/article/vip-security-provided-based-on-intel-reports-govt-1784076324</id>
            <summary type="text">இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, அது தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>விசேட பாதுகாப்புகள்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும் எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட பாதுகாப்புப் பிரிவு, காவல்துறை மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5fef11-7f72-4fec-b815-024a1a2fa3d1/26-6a56d9c2981bf.webp' /></p><p>

அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
</p><p>
தற்போது நடைமுறையில் உள்ள 2020 ஆம் ஆண்டின் 2398/26 இலக்க காவல்துறைச் சுற்றறிக்கைக்கு அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்புத் தேவை&nbsp;</h2><p>பாதுகாப்புத் தேவை எனக் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை கோரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a011c07-91b6-4590-bca4-1518418c8617/26-6a56d9c3455b9.webp' /></p><p>

அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி: இன்று மீண்டும் ஆரம்பமாகும் அகழ்வுப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-chemmani-mass-grave-excavation-resumes-1784074781"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-chemmani-mass-grave-excavation-resumes-1784074781</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.</p><p>

கடந்த 32 நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.</p><p></p><h2>அகழ்வுப் பணி</h2><p>

இந்நிலையில், இன்று&nbsp;(15-07-2026) பணிகள் மீண்டும் தொடரவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0ead51-7e6f-423f-b3fe-5fac456b7c84/26-6a56d21e9188f.webp' /></p><p>முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.</p><p>

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை 45 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில், முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட மொத்தம் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p>
</p><p></p><h2>எலும்புக்கூடுகள் அடையாளம்&nbsp;</h2><p>மூன்றாம் கட்ட (முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி) அகழ்வுப் பணிகளானது கடந்த ஏப்ரல் 27 முதல் மே 9 வரை 12 நாள்களும், ஜூன் 1 முதல் ஜூன் 23 வரை 22 நாள்களும் பணிகள் இடம்பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb25c867-a154-4609-8db2-2461308513ee/26-6a56d21f40cbe.webp' /></p><p>இதில் மே மாதம் மட்டும் 21 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
</p><p>
இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 409 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றிற்குள் புதையல் வேட்டை...! மூவர் கைது - தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-for-treasure-hunting-1784073976"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-for-treasure-hunting-1784073976</id>
            <summary type="text">வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இவ்வாறு கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>புலனாய்வு விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தம்புத்தேகம, பிலிபேவ பகுதியில் உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள வீட்டிலேயே இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அந்த வீட்டின் சமையலறையினுள் 4.5 x 5.5 அடி அளவிலும் சுமார் 20 அடி ஆழத்திலும் சுரங்கம் போன்ற குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da99e97-f9c8-4c24-9341-56935f42878d/26-6a56d056cd0f1.webp' /></p><p>அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், வீட்டின் அறை ஒன்றிற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறையின் புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பெண்ணும் மற்றைய ஆணும் இந்த புதையல் தோண்டும் பணிக்காகப் பணம் செலவிட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து நீர் மோட்டார், நீர் குழாய், கம்பி சுருள், மண்வெட்டி மற்றும் மண் தோண்டுவதற்கும் மண்ணை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>இந்த புதையல் தோண்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி அதனை வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் கல்கமுவ, எஹெட்டுவெவ காவல் அதிகாரப் பிரிவில் வசிக்கும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c07fd9-4dc3-4481-9818-9f041109ed2b/26-6a56d0577dc13.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புத்தேகம தீர்க்கப்படாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு: அப்பட்டமான அரசியல் தேவை - ஹர்ஷ டி சில்வா காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harsha-opposes-move-to-extend-judges-retirement-1784071570"></link>
            <id>https://ibctamil.com/article/harsha-opposes-move-to-extend-judges-retirement-1784071570</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு
முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு
முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசியல் தேவை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துத்
துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை
ரீதியிலான விவாதம் அவசியம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d93a20ca-ea3e-4c9d-a0b1-9853d49fac1a/26-6a56c8843ca46.webp' /></p><p>அதை விடுத்து திடீரென ஒரு சட்டமூலத்தைக்
கொண்டுவந்து குறிப்பிட்ட சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்க
முற்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
</p><p>
அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது வெறும் 8 அல்லது 16 நபர்களின்
பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இருக்குமாயின் அது ஓர் அப்பட்டமான அரசியல்
தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.</p><p> </p><p></p><h2>தவறான நடவடிக்கை</h2><p>இத்தகைய போக்கு நாட்டின் மிக
உயர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும்.
</p><p>
முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின்
பதவிக்காலத்தை நீடிக்க முற்பட்டபோதும் பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து
நீக்கியபோதும் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc1e9b48-227b-4beb-9cf5-e7960d3a4fd7/26-6a56c8836aa72.webp' /></p><p>அந்த மோசமான விளைவுகளை
நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
</p><p>
எனவே அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை மட்டுமன்றி நாட்டின் கல்விமான்கள்,
சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின்
கருத்துகளுக்கும் மதிப்பளித்து இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட
வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் கட்சிகளின் புதிய சங்கமம்: அரசுக்குத் தொடர்பில்லை என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-denies-role-in-tamil-speaking-parties-union-1784067676"></link>
            <id>https://ibctamil.com/article/govt-denies-role-in-tamil-speaking-parties-union-1784067676</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின்
பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த
ஜயதிஸ்ஸ த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின்
பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த
ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல்
திணைக்களத்தில் நேற்று (14-07-2026) நடைபெற்றது.</p><p> 

இதன்போது, நேற்றுமுன்தினம் கொழும்பில்
உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றியத்தின் பின்னணியில் அரசின்
தலையீடு ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p></p><h2>புதிய கூட்டணிகள்</h2><p>

அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எதிரணிகளின் ஒன்றிணைவு குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம்தான் நீங்கள் கேள்வி
எழுப்ப வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ae3002-bca5-4982-87c7-d11c63eb752f/26-6a56bf8411d37.webp' /></p><p> 

ஆளுங்கட்சிக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என்னிடம்
கேளுங்கள். </p><p>

எதிரணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது எதிர்க்கட்சித்
தலைவரின் பொறுப்பாகும்.</p><p> 

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் எமக்கு 159
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது.
</p><p>
 அவர்களுடன் நாம் எமது பயணத்தை
முன்னெடுத்து வருகின்றோம் எனவே புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய
தேவைப்பாடு எமது அரசுக்குக் கிடையாது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் விஜயம் குறித்த சர்ச்சை: வதந்திகளுக்கு அரசு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-denies-reports-on-akd-s-france-visit-1784063568"></link>
            <id>https://ibctamil.com/article/govt-denies-reports-on-akd-s-france-visit-1784063568</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயமானது தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயமானது தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. </p><p>

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இராஜதந்திர பேச்சுவார்த்தை</h2><p>


மேலும் தெரிவித்த அவர், இந்த விஜயத்திற்கான திகதிகள் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/549e756d-f88c-4b4f-af47-f80378b443f0/26-6a56b53a89bd5.webp' /></p><p>சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் எப்போதும் நம்பகமானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் யார் என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இரு தரப்பினருக்கும் வசதியான கால அட்டவணை குறித்து இராஜதந்திர மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:16:57+00:00</updated>
        </entry>
    </feed>
