<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T06:24:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்து : காரின் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610"></link>
            <id>https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610</id>
            <summary type="text">மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>அதன்படி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சாரதி கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் வேகமாக பயணித்த காரொன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f81d25b-c635-4396-813c-9484bdd91587/26-6aab869ae4d09.webp' /></p><p> 

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். </p><p>

இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T06:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலாங்கொட பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650"></link>
            <id>https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650</id>
            <summary type="text">அம்பலாங்கொட பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&amp;nbsp; காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொட பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&nbsp; காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வீடுகளை உடைத்து திருடியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட&nbsp; 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (16.09.2026) காலை அம்பலாங்கொட, தலுக்கந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சந்தேகநபரிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் வீடொன்றில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ef223a-6091-47e4-a5e5-cdf7de6d17c7/26-6aab7d7d94ede.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள சந்தேகநபர், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
அம்பலாங்கொட மற்றும் மேலும் சில காவல் நிலையங்களுக்கு சந்தேகநபருக்கு எதிராக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட - யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&amp;nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக்கர நாற்காலியிலாவது மகிந்தவை மேடைக்குக் கொண்டு வருவோம்! முன்னாள் எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு.</p><p> </p><p></p><h2>சக்கர நாற்காலி</h2><p>எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f817850-6528-4885-a11a-a0c0f85249cf/26-6aab765e2b32e.webp' /></p><p>



சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>மக்கள் முன்னிலை</h2><p>அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர் ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p>

மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523a540d-bb89-4ab6-bb38-54bb87953ecf/26-6aab773047853.webp' /></p><p>ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது.</p><p>

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspicious-death-in-a-secluded-area-1789619748"></link>
            <id>https://ibctamil.com/article/suspicious-death-in-a-secluded-area-1789619748</id>
            <summary type="text">ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த விடயம் பற்றி ஹொரண காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்தவர் பொகுணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என காவல்துறை விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>இதை தொடர்ந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c251c874-5c12-42c0-ae1f-1bd037de13ab/26-6aab745bb4942.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investments-in-sl-affected-by-the-22nd-amendment-1789618933"></link>
            <id>https://ibctamil.com/article/investments-in-sl-affected-by-the-22nd-amendment-1789618933</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நேற்று (16) கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 22வது திருத்தம் என்பது அரசாங்கத்தைத் தவிர இந்நாட்டிலுள்ள அனைவரும் கடுமையாக விமர்சித்த ஒரு திருத்தமாகும்.</p><p></p><h2>22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு</h2><p> </p><p>கடந்த காலத்தில் இத்தகையதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அரசியலமைப்பு திருத்தப்படுவது இது முதன்முறையல்ல, 21 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் 22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ad8e47-6572-432a-aea8-b633424f896b/26-6aab6f83500a3.webp' /></p><p> </p><p>அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டு லாே ஏசியா அமைப்பு மிகவும் கடுமையான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.</p><p>என்றாலும் இவை எதனையும் பொருட்படுத்தாமல், மிகவும் பிடிவாதமாகவும் அகந்தையுடனும் யார் எதிர்த்தாலும் இதனைச் செய்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.</p><p>

இதுவரை எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்த, நான் உட்பட, அனைவரும் ஜெனீவா மற்றும் நியூயோர்க் என அனைத்து இடங்களிலும் "எமது நாட்டில் தலையிடாதீர்கள்" என்றே கூறி வந்தோம்.</p><p>ஏனெனில் எமது நாட்டில் மிகவும் வலுவான சுயாதீன நிறுவனங்கள் உள்ளன. எமது உயர்நீதிமன்றம் சர்வதேச ரீதியில் புகழும் நம்பிக்கையும் பெற்ற நிறுவனமாகும்.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை</h2><p>எனவே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு எமது நாட்டிலேயே உள்ளது. எனவே உங்களின் தலையீடு தேவையில்லை எனக் கூறினோம்.</p><p> இப்போது அந்த வாதத்தை நம்மால் முன்வைக்க முடியுமா? நேர்மையாக முன்வைக்க முடியுமா? இலங்கை நீதித்துறை முன்னெப்போதுமில்லாதவாறு மிகப்பெரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8541f9f9-f4df-4cf3-ba55-84a05c7e47f3/26-6aab6f840b4c7.webp' /></p><p> </p><p>முதலீடுகள் தொடர்பில் இது மிகவும் முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. </p><p>ஆனால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முதலீடுகள் அவசியம். இந்நாட்டிற்கு முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள், வெளிநாடுகள், சர்வதேச வங்கிகள் கவனிக்கும் மிக முக்கிய காரணி நீதித்துறையின் சுயாதீனத்தன்மையாகும்.</p><p>நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். அதில் சந்தேகம் எழுந்தால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள். நாட்டிற்கு முதலீடுகள் வராது.

முதலீடுகள் வராவிட்டால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.</p><p> எனவே இந்த 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு எமது நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-metro-bus-service-expansion-1789617212"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-metro-bus-service-expansion-1789617212</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திட்டமிடப்பட்ட பேருந்து வழித்தடங்களைக் கொண்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

'Lanka Metro Transit' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழித்தட வரைபடங்களில், கொழும்பின் முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் ஏழு சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><h2>திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்கள்</h2><ul><li>

CM 01 – மாகும்புர முதல் புறக்கோட்டை வரை</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3beabe-fcba-4a0d-b58b-de7744ee9128/26-6aab6bf635073.webp' /></p><p>
</p><ul><li>CM 02 – மில்லேனியம் சிட்டி முதல் கொழும்பு கோட்டை வரை
</li><li>CM 03 – கடவத்தை முதல் மாகும்புர வரை
</li><li>CM 04 – தெமட்டகொடை முதல் பாணந்துறை வரை
</li><li>CM 05 – பத்தரமுல்லை முதல் ஏக்கல வரை
</li><li>CM 06 – கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப் பாதை
</li><li>CM 08 – கஹதுடுவ முதல் புறக்கோட்டை/SLIIT வரை</li></ul><p>இந்த பேருந்து வலையமைப்பு மகரகம, நுகேகொடை, பத்தரமுல்லை, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கும்.
</p><p>
வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களில் ஒவ்வொரு வழித்தடத்தினதும் புவியியல் அமைவிடம், முக்கிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இணைப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
எவ்வாறாயினும், செப்டம்பர் மாத இறுதியில் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான குறிப்பிட்ட ஆரம்ப திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.</p><p>

மேலும், பேருந்துகளின் சேவை frequency, கட்டணங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-summoned-by-fcid-sept-24-1789616162"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-summoned-by-fcid-sept-24-1789616162</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
குறித்த கணக்கு தொடர்பான விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும், அதனடிப்படையில் செப்டெம்பர் 24 அன்று அவரை முன்னிலையாகுமாறு கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>விமான நிலையத்தில் கையளிக்கப்பட்ட அறிவித்தல்</h2><p>
</p><p>
இந்த அறிவித்தல் ஆரம்பத்தில் தங்காலையில் உள்ள அவரது இல்லமான 'கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், அக்காலப்பகுதியில் அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>நேற்று தனது சிகிச்சையை நிறைவு செய்த ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்காக மருத்துவமனையிலிருந்து நேரடியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/635ed906-9840-42c1-b783-0eef5e079b83/26-6aab697c7be3a.webp' /></p><p>
</p><p>
அங்கு வைத்து, செப்டெம்பர் 24 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாகுமாறு தெரிவிக்கும் அறிவித்தலை அதிகாரிகள் அவரிடம் கையளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>அந்த அறிவித்தலை அவரது உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாகப் பெற்றுக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
இதனைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (16) அதிகாலை ஒரு சாதாரணப் பயணியாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810"></link>
            <id>https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810</id>
            <summary type="text">ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>1.454 மில்லியன் யூரோ இலஞ்சம்</h2><p>

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகலமான உடற்பகுதியைக் கொண்ட 16 விமானங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2621e3c5-04d0-4cfd-9d55-a1f27844750b/26-6aab499b07b8d.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தின் கீழும் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர் ஒருவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, தற்போதைய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோ இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் முதலில் வைப்பிலிடப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அந்தக் கணக்கிலிருந்து, வர்த்தகர் நிமல் பெரேரா தலைவராக இருந்த சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நிமல் பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
நிமல் பெரேரா தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும், எனினும் அவர் வழங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரத்தில், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் கணக்கிலிருந்து தமக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13289df2-3145-4d0b-8b29-14e55749a634/26-6aab499bac66d.webp' /></p><p>
</p><p>
இந்தத் தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
மேலும், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து, அப்போதைய அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் 160,400 யூரோ மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணைகளின்போது, நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையில் இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும், விசாரணைகளின்போது கிடைத்த மின்னஞ்சல்கள் மூலம் சந்தேகநபர் செயற்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp; முதலாவது சந்தேகநபர்</h2><p>
</p><p>
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f32e528-da87-4950-b414-59b94bc70e0b/26-6aab499c69672.webp' /></p><p>இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என&nbsp; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T04:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fairly-heavy-rainfall-expected-in-island-parts-1789614331"></link>
            <id>https://ibctamil.com/article/fairly-heavy-rainfall-expected-in-island-parts-1789614331</id>
            <summary type="text">நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (17) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (17) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab837e2-4624-45a4-a3a6-6318369437f6/26-6aab5e6a10c4e.webp' /></p><p> </p><p>

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T03:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daylight-robbery-in-the-bloody-mig-deal-1789608596"></link>
            <id>https://ibctamil.com/article/daylight-robbery-in-the-bloody-mig-deal-1789608596</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதுடன், ஏற்கனவே இருந்த விமானங்களைப் புனரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், உக்ரைனின் அரச நிறுவனமான Ukrinmash உடனான அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில், இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட சுமார் 14.66 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் ஒரு பகுதி, British Virgin Islands-இல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் Bellimissa Holdings என்ற இடைத்தரகர் நிறுவனத்தின் ஊடாக சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>7 மில்லியன் டொலர் முறைகேடு</h2><p> </p><p>Ukrinmash-க்கு முழுத் தொகையும் சென்றிருக்கவில்லை என்றும், சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக FCID நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2785a8ac-e4d5-46ac-9a96-8653a59feba6/26-6aab42973a0d8.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக செப்டம்பர் 10ஆம் திகதி FCID-யில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார். </p><p>தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, செப்டம்பர் 11ஆம் திகதி FCID-க்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்தார். </p><p>முன்னாள் விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேராவும் செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கினார்.</p><p>இந்த ‘பெலிமிஸ்ஸா’ எனப்படும் நிறுவனத்தின் பின்னணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆயுத வர்த்தகர் டி.எஸ். லீ, அவரது மனைவி எங் லீ கிம் மற்றும் அவரது சகோதரர் லீ தியன் போக் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட&nbsp;நிறுவனம்</h2><p> </p><p>2000ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட MiG விமானங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் விபத்துகள் காரணமாக சிங்கப்பூரின் ‘டி.எஸ். அலையன்ஸ்’ நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னணியை மறைப்பதற்காக ‘பெலிமிஸ்ஸா’ என்ற நிறுவனத்தை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ef9590-2a56-4beb-ac1a-158e16c4daf1/26-6aab429681579.webp' /></p><p> இந்த சர்வதேச ஆயுதப் பரிவர்த்தனைக்கு அப்போது ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க இராஜதந்திர ரீதியான ஆதரவை வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>தரகு பணம் உதயங்க வீரதுங்கவின் உறவினரான லெலும் மனம்பெருமவின் இலங்கை வங்கிக் கணக்குகளுக்கும், டுபாயில் உள்ள ‘ஸ்டார் ஜி.எல்.ஜி.ஏ.’ நிறுவனத்தின் கணக்கிற்கும் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பணம் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்ட விதம் தொடர்பான தகவல்களையும் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>இதற்கிடையில், Ukrinmash நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் டிமிட்ரி பெரெகுடோவ் பாரிஸில் இன்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த நிலையிலேயே இந்த விசாரணையில் இடம்பெறும் நிதி பரிமாற்றங்கள், கொள்வனவு நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தத்தில் தொடர்புடைய தரப்புகள் குறித்து அதிகாரிகள் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக MiG ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவால் வெளிப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c15aa2-11c6-4040-99e3-21be733f4392/26-6aab4295cbe4b.webp' /></p><p>
அவர் 2009 ஜனவரி 8 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை MiG ஒப்பந்தத்தை மூடிமறைக்கும் முயற்சியுடன் தொடர்புபடுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்ககு.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T01:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணி நேர வேலைநிறுத்தத்தில் குதித்த தொடருந்து தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-unions-continue-48-hour-strike-1789606879"></link>
            <id>https://ibctamil.com/article/railway-unions-continue-48-hour-strike-1789606879</id>
            <summary type="text">தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 4...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.</p><p>இதன்படி நடைபெற்று வரும் தொழிற்சங்கப் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே நேற்று பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p>

 

தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு இதுபோன்ற பிரச்சினைகளும் காரணங்களில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>தொடருந்துகளை இயக்க முயற்சி</h2><p>
 

தொடருந்து வருவாயை அதிகரிப்பதற்கோ அல்லது பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கோ முறையான திட்டம் எதுவும் தயாரிக்கப்படாத நிலையில், பொது மேலாளரும் நிர்வாக அதிகாரிகளும் தற்போது தொடருந்துகளை இயக்க முயற்சி செய்து வருவதாக சோமரத்னா மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee6d3bcf-9ef3-446d-a316-094355610c1f/26-6aab3be1b51da.webp' /></p><p>

 

பெரும்பாலான தொடருந்து நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும், அதே சமயம் அரசாங்கத்தை ஆதரிக்கும் பல நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கலைக்கவும், தற்போதைய பொது மேலாளரைப் பதவியில் தக்கவைக்கவும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

தொழிற்சங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், தொடருந்து துறையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T01:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்போது விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>உயிரிழந்தவர்களில் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be6001e3-60d7-4b42-9643-37fd7fc11732/26-6aab37855736d.webp' /></p><p> அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய கார், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மட்டக்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lL6u1TvIv1I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><i><b><u>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி நால்வர் படுகாயம்</u></b></i></p><p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய அலுத்மாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p>விபத்து நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட கார் மூன்று மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மட்டக்குளிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்திய சஜித்தின் நாடாளுமன்றக் குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அதனுடன் வெளிப்பட்டிருந்தது.
</p><p>
சுரேஷ் சாலேவை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த சமர்பணங்களில் கோட்டாபய ராஜபக்ச, ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைமைகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
</p><p>
இந்நிலையில் இதனை கடந்து விசாரணைக்காக எதிர்கட்சி தலைவரும் உள்வாங்கப்பட்டவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதான சதித்திட்டக்காரர்</h2><p>
</p><p>
இதன்போது எதிர்கட்சி தலைவரின் பெயரை உள்வாங்க சட்டமா அதிபர் பின்வரும் வாதங்களை முன்வைத்திருந்தார், </p><p>

“தாக்குதலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை மறைப்பதற்காக சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

சுரேஷ் சாலே உள்ளிட்ட சிலர் பிரதான சதித்திட்டக்காரர்களை மறைத்ததாக தாங்கள் மாத்திரம் கூறவில்லை. 
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து முன்னதாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

அவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.” என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

சஜித் அன்று கூறிய கருத்து,</h2><p>
1. புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகள் மற்றும் "சோனிக் சோனிக்" விவகாரம்</p><p>

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாதக் குழுவோடு நெருங்கிய தொடர்பிலிருந்ததாகக் கூறப்படும், "சோனிக் சோனிக்" (Sonic Sonic) என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட சந்தேக நபர் பயன்படுத்திய இணைய நெறிமுறை முகவரி (IP Address) குறித்த தரவுகள் சஜித் பிரேமதாசவால் வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>
குறித்த IP முகவரியானது இலங்கையின் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) உத்தியோகபூர்வ வலையமைப்போடு தொடர்பைக் கொண்டுள்ளமைக்கான பலத்த தொழில்நுட்பச் சந்தேகங்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இது தாக்குதலுக்கு முந்தைய உளவுத்துறைத் தொடர்புகளை மூடிமறைப்பதற்கான சான்றாக அமையலாம் என்பதால், எவ்வித அரசியல் தலையீடுமற்ற வெளிப்படையான கணினிசார் தடயவியல் விசாரணை (Digital Forensic Investigation) நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல் அழுத்தம்</h2><p>
</p><p>
2. உள்நாட்டு விசாரணைகளின் மீதான அரசியல் அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீட்டின் அவசியம்</p><p>உள்நாட்டுப் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் (CID) மீதான தொடர்ச்சியான அரசியல் செல்வாக்குகள், அதிகார அழுத்தங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து சஜித் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இலங்கையின் தற்போதைய கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான எல்லைகளுக்குள் இந்தத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமற்றது என அவர் வாதிட்டார்.</p><p> 

எனவே, உலகளாவிய நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் நடுநிலையான நீதியை நிலைநாட்டுவதற்கும், சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் நேரடி கூட்டு ஒத்துழைப்புடன் கூடிய ஒரு சுயாதீன விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும் என அவர் கோரினார்.</p><p>

3. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் முடக்கப்படுதல் </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் (PCoI) இறுதி அறிக்கைகள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் குறித்து சஜித் கேள்வி எழுப்பியிருந்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கு நீதியை வழங்குவதைக் காட்டிலும், முந்தைய அரசாங்கங்கள் இந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தங்களின் அரசியல் பிரச்சாரங்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்தி, முக்கிய பரிந்துரைகளை ஆவணக் காப்பகங்களுக்குள் (Archives) திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளதாக அவர் சாடினார்.</p><p> 

இந்த மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எவ்விதத் தணிக்கையுமின்றி முழுமையாகப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கையாகும் என்றார்.</p><h2>சோனிக் சோனிக்</h2><p>
</p><p>
 4. 2021 மே மாதமளவில் நாடாளுமன்றக் குழுமங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.</p><p> 

அவரது ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர்) "சோனிக் சோனிக்" மற்றும் சுரேஷ் சாலேவின் உளவுத்துறைத் தொடர்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது அவர் இதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வழங்கினார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களைப் பாதுகாப்பதற்காகவே சுரேஷ் சாலே திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டார் என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். </p><p>குறிப்பாக, தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் மற்றும் உளவுத்துறைத் தொடர்புகள் பொதுவெளியில் வெளிவராமல் தடுப்பதற்கான ஒரு "மூடிமறைப்புச் கருவியாக" அவர் செயற்பட்டுள்ளார் என நாடாளுமன்றத்தில் சாடினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:31:09+00:00</updated>
        </entry>
    </feed>
