<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T06:48:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை - யாழில் மக்களை அணிதிரள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079"></link>
            <id>https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.08.2026) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக்
கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள்
பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு
செய்யப்படவுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிக்கான நீள்பயணம்</h2><p>
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ம் திகதி
அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில்
அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை
9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e758eee5-0dc2-4f0b-9659-496a03035bc0/26-6a854e999cd32.webp' /></p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்
ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில்
தெரிவிக்கப்பட்டது.</p><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ,
நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச
விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக ஊடக
சந்திப்பில் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் அதிகாரி! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936"></link>
            <id>https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936</id>
            <summary type="text">அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று(18) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண், அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்ததுடன், சம்பவம் குறித்து அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43e8f55-1721-4913-9520-c68dbe70f2de/26-6a854d8e634f9.webp' /></p><p>
</p><p>
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>

இந்நிலையில், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியில் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d530f16d-bdae-4fa3-bf75-f07ecdcc6ffa/26-6a854d8f1cd55.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்று ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T06:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு : அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-for-farmers-affected-by-drought-1787114666"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-for-farmers-affected-by-drought-1787114666</id>
            <summary type="text">இலங்கையில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>சேதமடைந்த&nbsp;நெற்பயிர்கள்</h2><p>இதன்படி, நெற்செய்கை தொடர்பில், மொனராகலையில் 1,334 ஏக்கர் பயிர்நிலங்களைச் சேர்ந்த 960 விவசாயிகளும், பொலன்னறுவையில் 1,100 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 560 விவசாயிகளும், அம்பாந்தோட்டையில் 435 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 782 விவசாயிகளும், அம்பாறையில் 1,004 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 505 விவசாயிகளும் மற்றும் அனுராதபுரத்தில் 2,200 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 1,900 விவசாயிகளும் என நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8462ed64-a02e-49fb-8be9-f8da45c7edb1/26-6a854c2e194ac.webp' /></p><p>
 

இதற்கமைய, விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் மேற்படி மாவட்ட அதிகாரிகளினால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நl;டஈட்டுத் தொகை விவசாயிகளுக்கு கூடிய விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
</p><p>
 

இங்கு பாதிக்கப்பட்ட நெல், சோளம் உள்ளிட்ட 06 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 05 ஏக்கர் வரை அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்படும்.</p><p></p><h2>பணத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கை</h2><p>அதன்படி, இந்த சூழ்நிலையில் மேற்படி மாவட்டங்களில் இருந்து இதுவரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்ட 6,073 ஏக்கர் நெற்பயிர்களுக்கு உரித்தான சுமார் 4,707 விவசாயிகளுக்கு விரைவாக நஷ்டஈட்டுப் பணத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94877756-b77a-4da1-a39e-b878c30c9111/26-6a854c2ec043b.webp' /></p><p>

 

இந்த வறட்சி நிலைமை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்திருந்தால், கூடிய விரைவில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் கள அதிகாரிகளைச் சந்தித்துத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். </p><p>அல்லது விவசாய அபிவிருத்தி மையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பயிர்ச் சேதங்கள் குறித்து விவசாயிகள் பதிவிட வேண்டும்.
</p><p>
 

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற வேண்டுமாயின், விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கமான 1918 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:24:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமைய காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-release-for-kilinochchi-media-complex-1787117852"></link>
            <id>https://ibctamil.com/article/land-release-for-kilinochchi-media-complex-1787117852</id>
            <summary type="text">பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.</p><p>
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்
அனுப்பியிருந்தனர்.</p><p></p><h2>பாதுகாப்பு அமைச்சு</h2><p>இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில்
கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b2cbdc-999d-4207-90ec-98846aa257f6/26-6a8546e89134b.webp' /></p><p>

இந்நிலையிலேயே
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.
வீரசிங்கவால் மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும்
கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>
 இந்தகாணிக்கு ஒரு பறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும்
விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே
விடுவிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T06:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் காவல்துறையின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-highways-september-19-1787115860"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-highways-september-19-1787115860</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல்&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல்&nbsp; கட்டாயமாக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>இது குறித்து இன்று (19.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகலவால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதன்படி அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயம் என்றும், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>இருக்கைப் பாதுகாப்புப் பட்டி</h2><p>
</p><p>இந்நிலையில் இருக்கை பட்டி&nbsp; அணியாமல் பயணிப்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் விரைவுப் பேருந்துகளில் இருக்கைப் பட்டி அணியாது பயணிக்கும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் அபராதம் அறவிட சட்டப்பூர்வமான அனுமதி உள்ளது என்றும், இலங்கை மக்கள் இருக்கைப் பட்டி அணிவதன் அவசியத்தை வலுவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52acafcc-aa1b-4626-aba4-6f32ded55dc1/26-6a854006237d3.webp' /></p><p>
</p><p>மேலும் அனைவரின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிகழும் விபத்துக்களில் பாதுகாப்பு பட்டி அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், இருக்கைப் பட்டிகள் இல்லாத வாகனங்களுக்கு அவற்றை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டம்பர் 19 ஆம் திகதியுடன் நிறைவடையுமென&nbsp; தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்திருநடதமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vietjet-to-launch-direct-ho-chi-minh-city-colombo-1787111779"></link>
            <id>https://ibctamil.com/article/vietjet-to-launch-direct-ho-chi-minh-city-colombo-1787111779</id>
            <summary type="text">இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளதுநேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietje...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது</p><p>நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வகையில் அதன் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.</p><p>இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வாரத்திற்கு 3 நாட்கள் வியட்நாமின் ஹோசிமின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே இயக்கப்படவுள்ளது.</p><p></p><h2>வாரத்திற்கு 3 நாட்கள்</h2><p>
 

வியட்ஜெட் விமான சேவையின் VJ-1875 என்ற இலக்கமுடைய முதலாவது கன்னி விமானம், நேற்று (18) இரவு 09.33 மணிக்கு 169 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6cac66-be83-4d23-bec7-196a93e10282/26-6a8534d8b27e6.webp' /></p><p> 

 

பின்னர் அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
</p><p>இவ்விமானத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்த்தாரை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>இருவரும் இலங்கையர்கள்</h2><p>இந்த வருகையின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இதன் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் ஆவர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08371e1-c610-4ec6-bc88-dc7dfc6b97e2/26-6a8534d963507.webp' /></p><p>பாணந்துறையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் மொரட்டுவையைச் சேர்ந்த ரந்தீர் பெரேரா ஆகியோரே அவ்வாறு விமானத்தை இயக்கி வந்தோராவர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:09:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் விடுதலைப் புலிகளின் முகாம்..! சர்ச்சைக்குரிய காணொளிகள்: அடியோடு மறுக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-denies-claims-training-camp-in-pallai-1787102374"></link>
            <id>https://ibctamil.com/article/govt-denies-claims-training-camp-in-pallai-1787102374</id>
            <summary type="text">பளை பகுதிக்குள்&amp;nbsp;விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவை பேச்சாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பளை பகுதிக்குள்&nbsp;விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "பளை வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் குறித்து அதிர்ச்சி தரும் வெளிப்பாடு என்னும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன.</p><p></p><h2>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி</h2><p>இச்சம்பவம் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் அக்ராயன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 'முக்கன்பன்' எனப்படும் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0393d8e3-560a-4b7b-8222-21abb8e43253/26-6a852fbb62e20.webp' /></p><p>இப்பகுதி 1919 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட 70/64 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>2025 ஆம் ஆண்டு முதல் இந்த வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் அழிக்கப்பட்டு நிலம் துப்புரவு செய்யப்படுவதாகத் தகவல்கள் பதிவாகியிருந்தன.</p><p> 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்படுவது தொடர்பில் தகவல்கள் கிடைத்தன. தற்போது அங்கு 4 மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p>இக்காலப்பகுதியில் வன அலுவலகத்தினால் பல சோதனைகள் நடத்தப்பட்டு, இதன் உரிமையாளரான தியாகராசா குணதீபன் என்பவருக்கு எதிராக 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
 

இவர் அப்பகுதியில் முதலில் 10 ஏக்கர் நிலத்தையும், பின்னர் 20 ஏக்கர் நிலத்தையும் சட்டவிரோதமாகத் துப்புரவு செய்து கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2026 பெப்ரவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் அந்த நிலத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. </p><p>பெப்ரவரி 17 ஆம் திகதி அத்தடை உத்தரவை நீக்குமாறு கோரப்பட்ட போதிலும், நீதிமன்றம் தடை உத்தரவை நீக்கவில்லை. அடுத்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. </p><p>இதற்கிடையில், இந்த நபர் உழவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பாகப் காவல்துறையினரால் மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு</h2><p>

 

2026-07-24 அன்று வன அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக இந்த உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

இச்சோதனை நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியும் பெறப்பட்டது. இவ்வாறு அவ்வப்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>மேலும் நீதிமன்றினால் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணைகள் இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ளன.

 

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறானதொரு போலிச் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் போலிச் செய்தியாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bebbfa4f-797d-465d-b9d7-48fe88bafbac/26-6a852fbaae75c.webp' /></p><p>இவ்வனப்பகுதிக்குள் தமக்கு உரிமை இருப்பதாகக் கூறி உரிமையாளரால் நீதிமன்றத்தில் சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.</p><p> எதுஎவ்வாறாயினும், கடந்த ஒன்றரை வருட காலத்தில் இந்தச் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் காடழிப்புக்கு எதிராக அவ்வப்போது கைதுகளும் நீதிமன்ற ஆஜர்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அந்த இடத்தில் பயிர்ச்செய்கை ஒன்று இருப்பதுடன், மூன்று மாடிக் கட்டிடத்திற்குள் சில இயந்திரங்களுடன் கிராம மக்களை இணைத்து ஆடை உற்பத்தி நிறுவனமொன்று நடத்தப்பட்டு வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> மேலும் அது பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அங்குள்ள உண்மை நிலைமை இதுவேயாகும்.

 

இத்தகைய பின்னணியில், அங்கு எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் இருப்பதாகப் பொய் பிரசாரத்தைப் பரப்பியவர்களுக்கு எதிராகவும் தற்போது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KpwiTbheRyQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-resolution-under-the-finance-act-1787114337"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-resolution-under-the-finance-act-1787114337</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(19.08.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(19.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> 

(இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நாடாளுமன்றத்தின் 4 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 4 ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது). </p><p>

இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hpOddAgg0lk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-19T04:39:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-work-end-today-1787111372"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-work-end-today-1787111372</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று (19) இடம்பெறவுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதிதாக 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட 573 என்புக்கூடுகள் </h2><p>அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff18c7c-9e18-41e0-8177-a1167575aa5d/26-6a85313eaa86b.webp' /></p><p>அதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 ஆவது நாள் அகழ்வுப் பணிகளின் போது, 582 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-chinese-nationals-arrested-in-colpetty-1787111021"></link>
            <id>https://ibctamil.com/article/two-chinese-nationals-arrested-in-colpetty-1787111021</id>
            <summary type="text">கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12,000 சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு (18.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த 31 மற்றும் 34 வயதுடைய சீன நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சட்டவிரோத சிகரட்டுக்கள்</h2><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த எண்ணிக்கை 12,000 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b9ce37d-691f-42d7-9f46-19bd179693bd/26-6a852d773576e.webp' /></p><p>
சிகரெட்டுகள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றை யாரிடம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது மற்றும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நபர்கள் உள்ளனரா என்பது தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-fake-news-1-arrested-1787108887"></link>
            <id>https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-fake-news-1-arrested-1787108887</id>
            <summary type="text">கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக&amp;nbsp;பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக&nbsp;பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்</h2><p>
</p><p>
 

சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54eebda-ad11-4982-9e39-fbb44db9dab3/26-6a85238eb25f0.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது.</p><p>இந்த நிலையில் சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:04:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-issue-safety-advice-to-taxi-passengers-1787106392"></link>
            <id>https://ibctamil.com/article/police-issue-safety-advice-to-taxi-passengers-1787106392</id>
            <summary type="text">வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>வடக்கில் மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் நடப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வாகனத்தின் பதிவு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4146fb1a-1b26-499b-8eae-c091b99c898a/26-6a8516eed5f24.webp' /></p><p>
குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
</p><p>இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இரவு நேரப் பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.</p><p></p><h2>காவல்துறையின் அவசர உதவி&nbsp;</h2><p>
பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7620dc-90c4-4902-840c-ad62cc63bf05/26-6a8516ee158f0.webp' /></p><p>
பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</p><p>பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள காவல்துறை, பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தைப் விதிகளைப் பின்பற்றுமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T03:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-credit-bank-accounts-today-1787103722"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-credit-bank-accounts-today-1787103722</id>
            <summary type="text">&amp;nbsp;குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில்&amp;nbsp;நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அகஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில்&nbsp;நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அஸ்வெசும வங்கிக் கணக்கு</h2><p>இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73b30830-713d-4d14-a2fa-f5eb91b3b770/26-6a850a9cd36d8.webp' /></p><p>அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு, 2,321,735,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.</p><p>

அஸ்வெசும கொடுப்பனவுகள் பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T02:18:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு ரணிலிடம் இருந்து பறந்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-from-ranil-regarding-country-s-economy-1787102108"></link>
            <id>https://ibctamil.com/article/warning-from-ranil-regarding-country-s-economy-1787102108</id>
            <summary type="text">2028 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மீண்டும் ஒரு பொருளாதாரப் போர் வரவிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்கத் தவறினால் இலங்கைக்குப் பெரிய ஆபத்து காத்திருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மீண்டும் ஒரு பொருளாதாரப் போர் வரவிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்கத் தவறினால் இலங்கைக்குப் பெரிய ஆபத்து காத்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.</p><p>வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>வெளிநாட்டு கையிருப்பு</h2><p>

 

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கேற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee9bf15-e15d-429f-a70c-0fc15db9ce3b/26-6a85078465ae2.webp' /></p><p> இதனால், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
</p><p>
 

மத்திய வங்கி இவ்வருட முடிவில் 8 பில்லியன் டொலர்கள் நிலுவையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறானால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>

 

அதன்படி, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T01:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதனின் மனையில் நுழையும் கிரகங்களின் தளபதி! புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mars-transit-in-gemini-on-sept-18-1787086411"></link>
            <id>https://ibctamil.com/article/mars-transit-in-gemini-on-sept-18-1787086411</id>
            <summary type="text">தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாய், செப்டம்பர் 18 ஆம் திகதி சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து புதனின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாய், செப்டம்பர் 18 ஆம் திகதி சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து புதனின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
</p><p>
45 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகப் பெயர்ச்சியின் தாக்கம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களை உருவாக்கும்.
</p><p>
புதனின் ராசிக்குள் தளபதியான செவ்வாய் நுழைவதால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சுப யோகங்களும், சிறப்பான முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும்.</p><p>அவை எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். </li><li>இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும்.</li><li> நீண்ட காலமாக புதிய வேலையை தொடங்க நினைத்திருந்தால் இக்காலம் ஏற்றதாக இருக்கும். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li><li>நீதிமன்ற வழக்குகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். </li><li>மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். </li><li>ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். </li><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.</li><li> தகவல் தொடர்பு திறன் மேம்படும்.</li><li> இதனால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.</li><li> இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li><li> அதோடு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.</li><li> வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</li><li> ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். </li><li>வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>இதன் மூலம் முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி</td><td><ol><li>கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.</li><li> இதனால் செப்டம்பரில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.</li><li> குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். </li><li>புதிய நட்புகள் கிடைக்கும். </li><li>இந்த நட்பால் நல்ல நன்மைகள் கிடைக்கும். </li><li>வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.</li><li>கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள்.</li><li> வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் செப்டம்பரில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>முக்கியமாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-19T01:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787101285"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787101285</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (19-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.




</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29486679-1924-411d-9bf8-393274af7a90/26-6a850075b84e5.webp' />&nbsp;&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T01:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காவல்துறை திணைக்களத்தில் அதிகரிக்கும் வெற்றிடங்கள்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-308-police-officers-leave-service-in-sl-1787100438"></link>
            <id>https://ibctamil.com/article/4-308-police-officers-leave-service-in-sl-1787100438</id>
            <summary type="text">காவல்துறை திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 காவல்துறையினர் சேவையிலிருந்து விலகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 காவல்துறையினர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு 3,936 ஆண் காவல்துறையினரும் 372 பெண் காவல்துறையினரும் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>பெண் அதிகாரிகள்</h2><p> 

இவர்களில் அதிகமானோர் கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே விலகியுள்ளனர்.
</p><p>
அந்த ஆண்டில் மட்டும் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44615ee3-e085-4a8d-a823-1b39ba59d8e8/26-6a84fd18682da.webp' /></p><p> 

இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் விலகியுள்ளனர்.
</p><p>
தமது சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இதில் பங்களித்துள்ளன.
</p><p>
இது தவிர, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் -ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக 658 அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>காவல்துறை அதிகாரிகள்</h2><p>தற்போது இலங்கை காவல்துறை சேவையில் மொத்தம் 30,815 வெற்றிடங்கள் நிலவுகின்றன. </p><p>

இதில் சாதாரண காவல்துறை சேவையில் 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் (STF) 2,651 வெற்றிடங்களும் அடங்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c191d56b-eabe-4842-a7a2-824755bc2d95/26-6a84fd19bc9b7.webp' /></p><p>வழக்கமான ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்தக்வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>
அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான மனவலிமையை உயர்த்துவதற்கும் காவல் திணைக்களம் பல வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
</p><p>
நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், விடுதி வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் மற்றும் தரமான மருந்துகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:58:32+00:00</updated>
        </entry>
    </feed>
