<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T17:50:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198</id>
            <summary type="text">உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> 

ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு எதிராக இது உக்ரைனிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ரஷ்யாவின் பிணைக்கைதி</h2><p>இது தொடர்பில் மைக்கைலோ ஃபெடோரோவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீடித்த போருக்கு மத்தியிலும் உக்ரைன் தனது முழுமையான ஜனநாயகச் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ, பாதுகாப்பான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான வழியைக் கண்டறிய வேண்டும்.</p><p> 

உக்ரைனின் ஜனநாயகத்தை ரஷ்யாவின் பிணைக்கைதியாக மாற்ற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62dd317d-b15b-42b3-87c5-7cc5c4e54258/26-6a85e2b41c74c.webp' /></p><p>உக்ரைனில் 2022 இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இராணுவச் சட்டம் (Martial Law) நடைமுறையில் உள்ளது. </p><p>

உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது நாட்டில் ஜனாதிபதி, நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடியாது.</p><p></p><h2>பதவி காலம்</h2><p>

ஜெலென்ஸ்கியின் 5 ஆண்டு காலப் பதவி காலம் கடந்த 2024 மே மாதத்துடன் முடிவடைந்தது. </p><p>

இருப்பினும், புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடருவார் என உக்ரைன் அரசியலமைப்பின் 108 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4032cb77-3731-4045-bb41-031d44203af1/26-6a85e2b4dc8ce.webp' /></p><p>போர் தீவிரமாக இருக்கும் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதே ஜெலென்ஸ்கியின் உறுதியான நிலப்பாடாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அரசு நிர்வாகத்தில் நிலவும் பணமோசடி மற்றும் ஊழல் விசாரணைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் இரினா முத்ராவை (Iryna Mudra) ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை மற்றும் ராணுவப் பொறுப்புகளில் ஜெலென்ஸ்கி மேற்கொண்டு வரும் இந்த தொடர் மாற்றங்களும், அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளும் உக்ரைனிய உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missile-threat-uae-halts-all-trade-with-iran-1787157919"></link>
            <id>https://ibctamil.com/article/missile-threat-uae-halts-all-trade-with-iran-1787157919</id>
            <summary type="text">&amp;nbsp;ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.</p><p>இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தெரிவிக்கையில், பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குலைக்கும் வகையில் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஈரானுடனான அனைத்து வர்த்தகம், வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.</p><h2>கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல்</h2><p>&nbsp;ஐக்கிய அரபு எமிரேட்சில் கடைசியாக கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561d1a51-ddbf-4a0b-8419-432bbba9d21f/26-6a85e189a08ee.webp' /></p><h2>குற்றச்சாட்டை&nbsp; மறுத்த&nbsp;ஈரான்</h2><p>
</p><p>

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது.</p><p><br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ee06eb-55ff-427d-b90b-9839e31db4e4/26-6a85e18a5464b.webp' /></p><p>ஐக்கிய அரபு எமிரேட்சை நோக்கி எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் ஈரான் தெரிவித்தது.</p><p>

நல்ல அண்டை உறவுமுறை என்ற கொள்கையின்படி, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T17:03:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் : பொது வாக்கெடுப்பு நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தால், பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக உள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயதிஸ்ஸ, செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உச்ச நீதிமன்றதொடர அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><h2>பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் முற்றிலும் பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், மக்களின் சார்பாகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தப் பணிகளை அரசு தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8362df-7c5c-4548-8c9d-51cec2533af9/26-6a85d6ca6e979.webp' /></p><p>
</p><p>
"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டால், அதற்கேற்ப நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம். பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை அறியாமலேயே உங்கள் போனுக்குள் மொசாட்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mossad-is-in-your-phone-without-you-knowing-1787152495"></link>
            <id>https://ibctamil.com/article/mossad-is-in-your-phone-without-you-knowing-1787152495</id>
            <summary type="text">இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும் பணி இஸ்ரேலில் மட்டும்தான் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க வர்த்தக அமைச்சர்அவார்ட் லுட்னிக் ஒரு அவசர அறிவித்தலை விடுத்திருந்தார்.அப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற மெமரி சிப்ஸை ஐபோன்களில் பாவிக்கக் கூடாதென்று அவர் ஆலாசனை வழங்கியிருந்தார்.
</p><p>
அந்த இரண்டு நிறுவனங்களும் சீன இராணுவத்துடன் தொடர்புபட்டவை என்றும் அந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்க மக்கள் நாள்தோறும் தமது சட்டைப் பைகளில் கொண்டு திரிவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தென்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் கைபேசிகளில் பொருத்தப்படும் கமராக்கள் மூலம் அவற்றை பாவிப்பவருக்கு தெரியாமலேயே அதனை பொருத்திய நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தகவல்கள் சென்றடைவது கண்டு பிடிக்கப்பட்டமை தற்போது உலகை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>

இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T15:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா அணு ஆயுதத்தை பிரயோகித்தால் அதே வழியில் பதிலடி : ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tehran-would-respond-if-us-used-nuclear-weapon-1787144493"></link>
            <id>https://ibctamil.com/article/tehran-would-respond-if-us-used-nuclear-weapon-1787144493</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், தெஹ்ரான் அதேபோன்ற பதிலடி கொடுக்கும் என்று ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக,உள்ளூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், தெஹ்ரான் அதேபோன்ற பதிலடி கொடுக்கும் என்று ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக,உள்ளூர் ஊடகங்கள் இன்று(19) புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரான ஃபதா ஹொசைன் மலேகி (Fada Hossein Maleki), ஈரானிய செய்தி நிறுவனமான கபார் ஒன்லைனுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>ட்ரம்ப் இன் நிலைப்பாடு எப்படி அமையும்</h2><p>&nbsp;ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு என்று கேட்டதற்கு, மலேகி இவ்வாறு பதிலளித்தார்: “(அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்) ஒரு தவறான நடவடிக்கையை எடுப்பதை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அவர் அப்படிச் செய்யத் துணிவார் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அத்தகைய நடவடிக்கை உலகை ஒரு ஆபத்தான போருக்குள் தள்ளக்கூடும்.”</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e947a116-1874-4565-8ead-307731933f96/26-6a85aee44555b.webp' /></p><p>“அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும் பதிலடி கொடுக்கும், மேலும் அதன் எதிர்வினை, ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தின் வகைக்கு ஏற்ப விகிதாசாரமாக இருக்கும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><h2>அமெரிக்காவின் அணு ஆயுதத்திற்கு சமாந்தரமாக பதிலடி</h2><p>அமெரிக்கா அணு ஆயுதத்தால் ஈரானைத் தாக்கினால், ஈரானும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துமா என்று கேட்கப்பட்டபோது, ​​மலேகி, “அமெரிக்கா எதைப் பயன்படுத்தினாலும், ஈரான் அதற்குப் பதிலடி கொடுக்கும்” என்று பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6253bb-fb64-478d-af64-ee8b1862613d/26-6a85aee385dcf.webp' /></p><p>&nbsp;ஈரான் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்று மலேகி வெளிப்படையாகக் கூறவில்லை.</p><p>மேலும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக வோஷிங்டனை எச்சரித்த அவர், ஈரானிடம் “பல வழிகள்” இருப்பதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கையும் “அதே அளவில் அல்லது அதற்கும் மேலான” பதிலடியைத் தூண்டக்கூடும் என்றும் கூறினார்.</p><p>“ஈரானின் பல ஆயுதங்களும் இராணுவத் திறன்களும் இன்னும் வெளியிடப்படவில்லை,” என்று கூறிய மலேகி, தெஹ்ரான் தற்காப்பு நிலையில் இருந்து,“செயல்திறன் மிக்க மற்றும் தாக்குதல் சார்ந்த தடுப்பு” நிலைக்கு நகர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட பிரச்சினைகள்</h2><p>முடங்கிப்போன தெஹ்ரான்-வோஷிங்டன் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய மலேகி, இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை ட்ரம்ப் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4057a1-f324-4d4e-b52e-ab892b2ccdb7/26-6a85aee295b54.webp' /></p><p>வோஷிங்டன் தனது முந்தைய கடமைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், ஈரான் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பாது என்றும், இல்லையெனில் ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
ஓமானுடன் ஈரான் நடத்தும் பேச்சுவார்த்தைகள் ஒரு தனிப்பட்ட இருதரப்புப் பாதை என்றும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் பங்கேற்பை தெஹ்ரான் நிராகரித்துவிட்டது என்றும் மலேகி மேலும் தெரிவித்தார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T14:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடமையாகிறது பசிலின் பிணை பணம் : சிறைக்கு செல்லப்போகும் பிணைதாரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497"></link>
            <id>https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497</id>
            <summary type="text">சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைப்பணத்தை அரசுடமையாக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.</p><p>மாத்தறை, எலியகந்த வீதியில், பிரவுன்ஹில்லில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக காவல்தறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>சிறைக்கு செல்லப்போகும் பசிலின் பிணைதாரர்கள்</h2><p>இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையைக் கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39366ce4-3ac6-4b86-b8f2-65319e98d7b0/26-6a859008422a9.webp' /></p><p> </p><p>மேலும், அவருக்காகப் பிணைதாரர்களாகக் கையெழுத்திட்ட மூன்று பேருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>நீடிக்கப்பட்ட பிடியாணை</h2><p>இது தவிர, பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை 2026 ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501bcbb5-56ad-4665-9ea3-ce1acec28640/26-6a859008e89e1.webp' /></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். அத்துடன், முறைப்பாடு சார்பில் FCID அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகினர்.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UE96BsNqqps" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T14:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/angasettai-to-students-at-kalmunai-school-1787147276"></link>
            <id>https://ibctamil.com/article/angasettai-to-students-at-kalmunai-school-1787147276</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட
மாணவர்களிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட
மாணவர்களிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த
பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

குறித்த பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப்
பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இத்தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>கல்முனை தலைமையக காவல் நிலையத்தில்&nbsp;&nbsp;முறைப்பாடு</h2><p>சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல் ரீதியாகவும் மன
ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம்
தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின்
பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை
அதிபர் ஊடாகக் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc177f76-3e65-4874-9b3a-f3daecbadb14/26-6a85b95ad561f.webp' /></p><p>அம்முறைப்பாட்டிற்கு அமைவாகப் புதன்கிழமை (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக்
கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.அதேவேளை,
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம்
அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு காவல்துறையினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.</p><p></p><h2>தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் தகவல்</h2><p>&nbsp;இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனை தலைமையக
காவல்துறையினர் மற்றும் அம்பாறை மாவட்டச் சிறுவர் பெண்கள் காவல் பிரிவினருக்கு
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a38719-7b63-483e-b7e4-8fe46a96ebce/26-6a85b95a04589.webp' /></p><p>கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின்
வழிகாட்டலில், கல்முனை தலைமையக காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி லசந்த
களுவாராய்ச்சி தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி
எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உள்ளிட்ட காவல்துறை குழுவினர் இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T14:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் முகாம் இருப்பதாக பொய் கூறியவருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-who-lied-about-ltte-camp-remanded-1787146787"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-who-lied-about-ltte-camp-remanded-1787146787</id>
            <summary type="text">பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய் தகவல்களை பரப்பிய குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய் தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சந்தேகபர், இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்</h2><p>

சம்பந்தப்பட்ட நபர், ஊடக சந்திப்பொன்றை நடத்தி விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டதற்காக நேற்று (18) கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9639957-7015-415a-acbf-b80bec707089/26-6a85b6a3c6dc5.webp' /></p><p>
</p><p>
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, பெல்லன்விலவில் உள்ள பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T14:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் அமெரிக்க இலக்குகள் மீதான ஈரானின் தாக்குதல் திட்டம்! களமிறங்குகிறது நேட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-attack-plan-on-us-targets-in-europe-nato-1787146688"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-attack-plan-on-us-targets-in-europe-nato-1787146688</id>
            <summary type="text">ஈரானிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக நேட்டோ அறிவித்துள்ளது.
அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக நேட்டோ அறிவித்துள்ளது.</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போரைத் தீவிரப்படுத்த முடிவு செய்தால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளைத் தாக்க ஈரான் பரிசீலித்து வருவது குறித்த செய்தியை ஐரோப்பிய தப்புகள் கடந்த தினங்களில் வெளியிட்டிருந்தன.
</p><p>
இந்நிலையில் நேட்டோ சிறப்பு பாதுகாப்பு கட்டமைப்பே உருவாக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இராணுவக் கூட்டணி&nbsp;</h2><p>
</p><p>
இது குறித்து நேட்டோ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில், தமது இராணுவக் கூட்டணி எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176a6f30-d3c1-4dba-a8ed-5deb8d0465da/26-6a85b34889ac9.webp' /></p><p>
</p><p>
அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாக்கத் தேவையானதை எப்போதும் செய்யும் என்று கூறிய குறித்த நேட்டோ அதிகாரி, எங்களின் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடு வலுவானதாகவும் திறம்பட்டதாகவும் உள்ளது என்றும் மேலும் விவரித்ததாக அடிகோடிட்டுள்ளது.</p><p>

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரானிலிருந்து துருக்கியை நோக்கி வந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக இடைமறித்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, நமது தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடு வலுவாகவும் திறம்படவும் உள்ளது எனவும் நேட்டோ கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T13:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கிசை துப்பாக்கிச் சூடு! அதிரடியாக கைது செய்யப்பட்ட கொலை கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mount-lavinia-murder-gang-arrested-1787144530"></link>
            <id>https://ibctamil.com/article/mount-lavinia-murder-gang-arrested-1787144530</id>
            <summary type="text">

கல்கிசையில் கடந்த 15ஆம் திகதி இரவு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற கூலிப்படை கும்பலுடன் தொடர்புடைய பெண் உட்பட நால்வரை பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கல்கிசையில் கடந்த 15ஆம் திகதி இரவு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற கூலிப்படை கும்பலுடன் தொடர்புடைய பெண் உட்பட நால்வரை பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு (CTID) இன்று கைது செய்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் கூலிப்படை கொலையாளி, அவருக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்தோடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 3.8 கலிபர் கைத்துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>ரகசியத் தகவல்</h2><p>இதன்போது, கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், கொம்பனித்தெரு பகுதியில் பெண் உட்பட இருவரும், வத்தளைப் பகுதியில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5f4161-f9d5-4ba4-86c2-808278701d13/26-6a85ae8828beb.webp' /></p><p>

இந்தக் கொலைக்காக கூலிப்படை கொலையாளிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும், அவர்களுக்கு உதவிய பெண்ணுக்கும் மற்றவருக்கும் ஐஸ் போதைப்பொருளும் வழக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T13:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் பேரம் பேசும் திட்டத்தில் மாட்டிக்கொண்ட செம்மணியின் நீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/politically-negotiated-chemmanis-justice-1787145578"></link>
            <id>https://ibctamil.com/article/politically-negotiated-chemmanis-justice-1787145578</id>
            <summary type="text">செம்மணி நீதிதேடல் விவகாரமானது ஒருமித்த புலமைசார் நிபுணத்துவம் கொண்ட தரப்பினரால் கையாளப்படவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக தொடர்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி நீதிதேடல் விவகாரமானது ஒருமித்த புலமைசார் நிபுணத்துவம் கொண்ட தரப்பினரால் கையாளப்படவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக தொடர்கிறது.
</p><p>
கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் பிளவுபட்டு இதற்கான நீதியை தேடுவது தமிழர் தாயகத்தை பொறுத்தவரை&nbsp; சாத்திய போக்கில்லாத விடயம்.
</p><p>
இது இலகுவாக பேரம் பேசும் தரப்பினரால் அடையாளம் காணப்படும்.&nbsp;மேலும் பலவீன நிலைக்கு தமிழர்&nbsp; தாயக சமூகத்தை தள்ளக்கூடும்.</p><p>

இந்நிலையில் செம்மணி நீதிதேடல் பொறிமுறையில் தற்போது மேகொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் போக்குடன் ஐ.பி.சி ஊடகமானது சமூக செயற்பாட்டாளர் செல்வீனை நேர்காணல் செய்தது.
</p><p>
இவ்வாறு செம்மணி விடயத்தில் எதிர்கால திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பல விடயங்களை தொகுக்கிறது ஐ.பி.சி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pEoRB_Q45q8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச செயலாளரை அச்சுறுத்திய அரச உத்தியோகத்தர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-official-arrested-threat-divisional-secretary-1787142396"></link>
            <id>https://ibctamil.com/article/govt-official-arrested-threat-divisional-secretary-1787142396</id>
            <summary type="text">அம்பாறை - நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் காவல்துறையால் கைது
செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் காவல்துறையால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி
விழுந்த குறித்த உத்தியோகத்தர் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.</p><p></p><h2>நிந்தவூர் காவல்துறை&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர்
காவல்துறை நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc50550-2e7e-4b00-a302-4b1b99f5cea0/26-6a85a1d604c38.webp' /></p><p>அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, நேற்று(18) மாலை வாக்குமூலம் ஒன்றைப்
பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் காவல்
நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p>
விசாரணைகளின் பின்னர் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென
மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு
அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>தற்போது அவருக்குப் பெண்
பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன்,
நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T12:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abolish-the-executive-presidency-1787142029"></link>
            <id>https://ibctamil.com/article/abolish-the-executive-presidency-1787142029</id>
            <summary type="text">நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேற்றையதினம் நாடாளுமன்றில், 22வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. நீதித்துறையைப் பாதிக்கும் வயது வரம்பு உயர்வு குறித்து இந்த நாட்டில் சில விவாதங்கள் நடந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் சில காலமாக வந்துகொண்டிருக்கின்றன.</p><h2>22வது திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு சவால்&nbsp;</h2><p>&nbsp;கடந்த காலத்தில், நீங்கள் ஆட்சிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட கட்சிகளும், அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் இந்தத் திருத்தத்திற்கு எதிராகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eddbb8a9-8777-44ad-9491-0f6ba45caa6c/26-6a859f8f97ce8.webp' /></p><p> </p><p>22வது திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு சவால் விடப்படுவதால், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரப் பாடுபட்டவர்களும் இதை எதிர்த்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஜே.ஆரின் அரசியலமைப்பு சட்டத்துடன் ஜே.வி.பிக்கு நீண்ட வரலாறு&nbsp;</h2><p>ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த இந்த அரசியலமைப்புச் சட்டத்துடன் உங்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. நீங்கள் எப்போதும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு சர்வாதிகார அரசியலமைப்புச் சட்டம் என்று கூறி வந்துள்ளீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/136d93c7-20a3-4c1b-a5d6-f50d867144df/26-6a859f904fdb0.webp' /></p><p> இந்த அரசியலமைப்புச் சட்டத்தைக் கிழித்தெறியக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அரசியலமைப்புச் சட்டத்தால் ஜனநாயகம் சுருங்கிவிட்டது என்று நீங்கள் தொடர்ந்து மக்களிடம் கூறி வந்தீர்கள். </p><p>பெயரளவிலான ஜனாதிபதியையும் நிறைவேற்று பிரதமரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். உங்கள் வாக்குறுதிகளின் காரணமாகவே மக்கள் உங்களுக்கு ஆணை வழங்கினர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவு பெற்றது செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணி! சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-1787140429"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-1787140429</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
</p><p>
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசேட அறிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அது குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவவால் விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2fc2dc7-72d5-4fec-b1bf-f348fd052bb2/26-6a859f326ab2a.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகத்திக்கிடையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற பிற சான்றுப்பொருட்களை அடிப்படியாக வைத்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T12:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heatwave-warning-for-some-parts-of-the-country-1787139401"></link>
            <id>https://ibctamil.com/article/heatwave-warning-for-some-parts-of-the-country-1787139401</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை (20.08.2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை (20.08.2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
</p><p>
 

அதன்படி, நாளை பகல் நேரத்தில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் திணைக்கள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>
 

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>வெப்ப வானிலை எச்சரிக்கை</h2><p>
</p><p>இதன்படி நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0679abbb-e9fd-44e7-b472-ef7358e2aedc/26-6a859a55a6821.webp' /></p><p>
</p><p>
 

எனவே, பொதுமக்கள் அதிகளவான நீரை பருகுவதோடு, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:07:17+00:00</updated>
        </entry>
    </feed>
