<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-10T01:27:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893"></link>
            <id>https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று மற்றும் மின்ன்ல தாக்கம்</h2><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9b32ea0-c364-44b2-a259-55057a44403f/26-6aa203f76308b.webp' /></p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T01:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியின் விளிம்பில் ஈரானிய ஆட்சி! நெதன்யாகுவின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
நெதன்யாகு, தெற்கு சிரியாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சென்று பார்வையிட்டபோது இதனை கூறியுள்ளார்.</p><p>

பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உடன், இஸ்ரேல்-சிரிய எல்லையில் அமைந்துள்ள ஹெர்மன் மலையின் சிரியப் பகுதியில் நின்று பேசிய அவர், "இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.

 ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியை வீழ்த்துவதே நமது முக்கிய பணியாகும்.</p><p></p><h2>ஈரான் ஆட்சியின் வீழ்ச்சி&nbsp;</h2><p>நாம் அதை அடைவதற்கு மிக அருகில் இருக்கிறோம். அந்த முழு கூட்டணியும் இறுதியில் வீழும் என்பதை நாம் அறிவோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44ee1b8-b6cf-422d-b266-8c9248a06a05/26-6aa1fad8087ed.webp' /></p><p><i>Image Credit:&nbsp;jewishchronicle</i></p><p>
</p><p>
சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத்தின் ஆட்சி டிசம்பர் 2024-இல் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தெற்கு சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
1974 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் பகுதியில் இஸ்ரேல் மற்றும் சிரியப் படைகளைப் பிரித்து வைத்திருந்த, ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட பழைய இடைப்பட்ட பகுதியையே தற்போது இப்படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T00:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்! இருவர் பலி - 20 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-in-russian-drone-attack-in-ukraine-1788997506"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-in-russian-drone-attack-in-ukraine-1788997506</id>
            <summary type="text">


உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
ஆரம்பத்தில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவித்த ஆளுநர் ஹிரிகோரோவ், பின்னர் டெலிகிராம் தளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று திருத்திப் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தாக்குதலால் அப்பகுதியில் கடும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஆளுநர் வெளியிட்ட புகைப்படங்களில் கட்டிடம் மிக மோசமாகச் சேதமடைந்து, இடிபாடுகள் தரையில் சிதறிக் கிடப்பது காணக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><h2>தொடர்ந்து மீட்புப் பணி</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc4a95a3-2e87-4d2d-9278-9574bbd6fbd4/26-6aa1f4cea5552.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் நீண்டகாலமாக தீவிர தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு பாதுகாப்பு இடைவெளி மண்டலத்தை உருவாக்க விரும்புவதாக ரஷ்யா ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T00:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் முயற்சிகள் படுதோல்வி! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-rejects-irgc-claim-strikes-on-navy-destroyers-1788988757"></link>
            <id>https://ibctamil.com/article/us-rejects-irgc-claim-strikes-on-navy-destroyers-1788988757</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணுவத்தின் மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
</p><p>
அமெரிக்கக் கடற்படையின் எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை எனவும் IRGC மேற்கொண்ட அனைத்துத் தாக்குதல் முயற்சிகளும் தோல்வியடைந்தன எனவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக வளைகுடாப் பகுதியில் இரண்டு அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் எட்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களைத் தங்கள் கடற்படை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், இத்தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் IRGC கூறியிருந்தது.</p><p></p><h2>தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்கள்</h2><p> </p><p>

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36bcaae9-7165-4f5e-98fa-95e879cd9122/26-6aa1f18d0cd2e.webp' /></p><p>
</p><p>
எனினும், கடந்த வாரத்தில் ஈரானின் 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
</p><p>
இக்கப்பல்கள் IRGC-க்கு நிதியளிக்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலைப்பின்னலின் ஒரு பகுதி என்று அமெரிக்க இராணுவம் விவரித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T23:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096"></link>
            <id>https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096</id>
            <summary type="text">நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.</p><p>

மல்டோவிய வான்வெளியில் நுழைந்த இரு ரஷ்ய ட்ரோன்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிஷினாவ் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதனால் அந்நாட்டின் தலைநகருக்கு வரவிருந்த பல விமானங்கள் மல்டோவாவுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதுடன் வான்வெளியிலேயே காத்திருக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஜெலென்ஸ்கியின் விமானம்</h2><p>

இந்நிலையிலேயே, மல்டோவாவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலென்ஸ்கியின் விமானம் ட்ரோன் ஒன்றால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டதாக நோர்வே பிரதமர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1975ecf8-dae2-4737-9ed6-418826162677/26-6aa1ca9e0f363.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivindependent</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், ஜெலென்ஸ்கியின் விமானம் தொடர்பான நார்வே பிரதமரின் இந்தக் கூற்று குறித்து மல்டோவா அதிகாரிகள் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T23:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-forces-continue-to-target-iranian-oil-tankers-1788985261"></link>
            <id>https://ibctamil.com/article/us-forces-continue-to-target-iranian-oil-tankers-1788985261</id>
            <summary type="text">தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தோடு, தெஹ்ரானை பொருளாதார ரீதியாக ஒடுக்குவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"அவர்கள் எங்கள் கடற்படைக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்; அப்படித் தாக்கும்போது, அதற்கான விலையை அவர்கள் தங்கள் எண்ணெய் கப்பல்களை இழப்பதன் மூலம் கொடுக்க வேண்டியுள்ளது.</p><p></p><h2>கப்பல்கள் மீதான தாக்குதல்கள்</h2><p> </p><p>

அவர்கள் எங்கள் கப்பல்களைத் தாக்குவதில் வெற்றிபெறுவதில்லை, மாறாக ஐந்து எண்ணெய் கப்பல்களை இழக்கிறார்கள்" என்று செய்தியாளர்களிடம் ரூபியோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0282351b-69d9-47ed-9b61-4e9ad05b631e/26-6aa1c2e95842a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;maalaimalar</i></p><p>

மேலும் கருத்து வெளியிட்ட அவர், அதற்கான விலையை அவர்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்களைப் பொருளாதார ரீதியாக ஒடுக்கும் நடவடிக்கையையும் தாங்கள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T20:35:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/war-end-immediately-after-the-election-trump-1788983282"></link>
            <id>https://ibctamil.com/article/war-end-immediately-after-the-election-trump-1788983282</id>
            <summary type="text">நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா நாடவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவர்களுக்குத் தேவையானது அணு ஆயுதம் மட்டுமே; அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்துவிட்டால், ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைகள்&nbsp;</h2><p> நாம் அணுசக்தி விவகாரத்தைக் கையாளப் போகிறோம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு பரிசீலனையில் இல்லாத பல விடயங்கள் இப்போது விவாத மேசைக்கு வரவுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18cc34c2-5a69-4b55-8f3e-0f28248692a2/26-6aa1bc52b9d81.webp' /></p><p><i>Image Credit:&nbsp;citynews.ca</i></p><p>
</p><p>
தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, "உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் அதை நாடவில்லை. நிலைமை வெகுதூரம் சென்றுவிட்டது.</p><p>

இப்போது அவர்களிடம் எஞ்சியிருப்பது மிகச் சிறிய அளவிலான நாடே. ஆம், பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. எங்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும்" என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-09T20:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-no-longer-tolerate-rajapaksa-family-politic-1788980328"></link>
            <id>https://ibctamil.com/article/people-no-longer-tolerate-rajapaksa-family-politic-1788980328</id>
            <summary type="text">

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
ராஜபக்‌ஷக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என அவர் அரச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,&nbsp; எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படக்கூடும் என்று நாமல் ராஜபக்‌ஷ தொடர்ச்சியாகக் குறிப்பிட்டது, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும் என்பதால் தான், இருப்பினும் எந்தக் காரணத்திற்காகத் தனது கைது இடம்பெறப்போகிறது என்பதை நாமல் பகிரங்கமாக வெளிப்படுத்த மறுக்கிறார்.</p><p></p><h2>ராஜபக்‌சக்களின் குடும்ப அரசியல்</h2><p>ராஜபக்‌சக்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் கைது பற்றிப் பேசுகிறார்கள். அநுராதபுரத்தில் பேரணிகளையோ அல்லது வேறு எங்கு என்ன கூட்டங்களை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவான தீர்மானத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae7452cb-d5fd-42a4-bdab-f521354557a6/26-6aa1b120752ed.webp' /></p><p>
ராஜபக்‌சக்கள் தங்களது குற்றங்களையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது மீண்டும் மக்கள் கூட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். </p><p>குறிப்பாக, 'ஏயார் பஸ்' விமானக் கொள்வனவு ஒப்பந்த ஊழல் என்பது இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, மாறாக லண்டன் மேல் நீதிமன்றத்தில் ஏயார் பஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழக்காகும்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
உலகளவில் பல்வேறு நபர்களுக்கு ஏயார்பஸ் நிறுவனம் இலஞ்சம் கொடுத்துள்ளமை நீதிமன்றத்தில் உறுதியான நிலையில், அதன் நேரடித் தொடர்புகளே ராஜபக்‌ச குடும்பத்தினரை நோக்கி வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf68fcdd-4a67-496d-8b4f-f4dadaf53e34/26-6aa1b1217ea50.webp' /></p><p> </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவாளர்களை பயன்படுத்தி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது வழமையாகும். அதேபோன்ற ஒரு சமூகக் கருத்தை உருவாக்கித் தங்களது குற்றங்களைக் குறைத்துக்காட்டவே ராஜபக்‌சக்களும் தற்போது முயல்கின்றனர்.</p><p>

இருப்பினும், இவ்வாறான அரசியல் நாடகங்களுக்கும் மேடைக் பேச்சுக்களுக்கும் கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.&nbsp;</p><p>

எனவே, அவர்கள் செப்டம்பர் 12-ஆம் திகதியோ அல்லது 13, 14, 15 ஆகிய திகதிகளிலோ பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தினாலும், அரசாங்கத்திற்கும் சட்ட நடவடிக்கைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T19:30:20+00:00</updated>
        </entry>
    </feed>
