<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T03:28:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றை மாற்றிய மரண தணடனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346"></link>
            <id>https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346</id>
            <summary type="text">தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>அளவில்லா மகிழ்ச்சி</h2><p>தாக்குதல் நடைபெறக்கூடும் என முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தனது பதவியைப் பயன்படுத்தித் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48b9b9d-8506-4d84-865f-bf7ccd9323a0/26-6a6d637d1914c.webp' /></p><p>இதன்போது அவர், இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.
</p><p>
இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுசுந்தரவிற்கும் அதே நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T03:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-for-strong-winds-and-seas-in-sri-lanka-1785547511"></link>
            <id>https://ibctamil.com/article/warning-for-strong-winds-and-seas-in-sri-lanka-1785547511</id>
            <summary type="text">மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணத்தில் இருந்து பேருவளை வரையான கடற்பகுதியில் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.</p><p></p><h2> பலத்த மழை &nbsp;</h2><p>இதேவேளை,&nbsp;அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நடைதுறையாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb0a122-0db2-4ee2-b30e-f31ec1c4f46d/26-6a6d4df6adc11.webp' /></p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.</p><p> 

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T02:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634"></link>
            <id>https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

நேற்றையதினம் ஜூலை 31ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஹேமசிறி பெர்னாண்டோ இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் பலரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் மட்டுமே கைது செய்யுங்கள்" என உத்தரவிட்டதாகவும் ஹேமசிறி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>

இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1250cbf-e9c5-426b-aeb3-5623f042668b/26-6a6d4a2d51b73.webp' /></p><p>
பிரியந்த லியனகே, திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறுதல் மற்றும் மனிதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர். </p><p>

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 268 பேர் உயிரிழந்தனர், 586 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை நிலந்த ஜயவர்தன தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவலை பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கியிருந்தார் என்பது நீதிமன்றில் நிரூபணமானது.</p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், ஹேமசிறி பெர்னாண்டோவின் இந்த வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T01:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா படுகொலை முயற்சி! 17 வருடங்களின் பின்னர் சந்தேகநபர்களுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-who-bombed-fonseka-get-bail-after-17-years-1785544803"></link>
            <id>https://ibctamil.com/article/two-who-bombed-fonseka-get-bail-after-17-years-1785544803</id>
            <summary type="text">17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ராகல நேற்று முன்தினம்(30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால், இரு பிரதிவாதிகளையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளாார்.</p><p></p><h2>பிணை நிபந்தனைகள்</h2><p>

பிரதிவாதிகளுக்கு தலா ரூ. 200,000 ரொக்கப் பிணையும், தலா ரூ. 500,000 மதிப்பிலான நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன.எனினும், அவர்களால் இந்த தொகையையும் பிணையாளர்களையும் சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/154a2d86-18a1-408e-b7d3-9f23e7d17e18/26-6a6d4591f1327.webp' /></p><p>
பிணை நிபந்தனைகளின்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமை காலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும், அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகிய இருவருக்குமே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>

17 ஆண்டுகள் நீண்ட காலமாக விளக்கமறியலில் இருப்பதை சுட்டிக்காட்டி, பிரதிவாதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததன் அடிப்படையிலேயே மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p>
பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு</h2><p>
கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் திகதி கொழும்பு ராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகே “துர்கா” என்ற விடுதலைப் புலிகள் உறுப்பினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6053d5c-6237-40eb-886a-bb05fa3ed9b1/26-6a6d4592a7c16.webp' /></p><p>
இச்சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக 230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் அன்றைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் அவரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ சார்ஜென்ட், மூன்று கோப்ரல்கள் உட்பட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்திருந்தனர்.</p><p>
இந்த வழக்கிற்கு மேலதிகமாக போரலஸ்கமுவ பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொல்ல முயன்ற வழக்கு மற்றும் வேலிவேரியவில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலைக்கு உடந்தையாக இருந்த வழக்கு ஆகியவற்றிலும் இவர்கள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.&nbsp;</p><p>
இதில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில், பிரதிவாதிகளுடன் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் லக்ஷ்மன் குரேவும் விடுவிக்கப்பட்டார்.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கில் இவர்களுக்கான பிணை உத்தரவு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வராசா கிருபாகரன் என்ற மொரிஸ், வேறொரு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p>
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையாகியுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுரங்க பண்டார மற்றும் சட்டத்தரணி ஆர்னோல்ட் பிரியந்தன் அடங்கிய சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T01:02:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933"></link>
            <id>https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933</id>
            <summary type="text">
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அது குறித்து தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் யாராவது அவற்றை உருவாக்க அனுமதிப்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​​</p><p></p><h2>உக்ரைனுக்கு உரிமம்</h2><p>ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் வகையில் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை தயாரிக்க உக்ரைனுக்கு உரிமம் வழங்கப் போவதாக அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334c5e57-9705-4581-9a20-7df1b1369e0f/26-6a6d0b47ac5e8.webp' /></p><p> 

இந்நிலையில், குறித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பகிர்வது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கடினமான விடயம்</h2><p>

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த வகையான தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுப்பது ஒரு கடினமான விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be29eaf-4451-4b14-827a-b628603a10d7/26-6a6d0b488689e.webp' /></p><p><i>Image Credit: PBS</i></p><p> 

இது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரிடம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருநாள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்," என்று கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T23:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பேரிடி! மீண்டும் பாரிய தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா - இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-israel-preparing-major-strikes-on-iran-1785537738"></link>
            <id>https://ibctamil.com/article/us-israel-preparing-major-strikes-on-iran-1785537738</id>
            <summary type="text">
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயத்தமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயத்தமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் வரும் வார இறுதியில் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
</p><p>
பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த கவலைகள் காரணமாக, திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறப்பதற்குள் இந்த தாக்குதல்களை முடித்துவிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் உறுதியான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.</p><p></p><h2>ட்ரம்பின்&nbsp;இறுதி ஒப்புதல்</h2><p>
</p><p>
இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்பட்டு, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தாலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547a3b60-f0e4-4ad0-8632-c2f603c94181/26-6a6d291c7401d.webp' /></p><p><i>Image Credit: Tablet Magazine</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், முழுவீச்சிலான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஈரான் மீதான தாக்குதலில் இணையுமாறு தங்களிடம் கேட்கப்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T23:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் விமான நிறுவனத்திற்கு முகவராக செயற்பட்ட இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-sanction-indian-company-agent-for-iran-airlines-1785534434"></link>
            <id>https://ibctamil.com/article/us-sanction-indian-company-agent-for-iran-airlines-1785534434</id>
            <summary type="text">ஈரானின் மகான் ஏர் (Mahan Air) விமான நிறுவனத்திற்கு விற்பனை முகவர்களாகப் பணியாற்றி வந்த இந்திய நிறுவனம் உட்பட 6 நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் மகான் ஏர் (Mahan Air) விமான நிறுவனத்திற்கு விற்பனை முகவர்களாகப் பணியாற்றி வந்த இந்திய நிறுவனம் உட்பட 6 நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
</p><p>
ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குத் தேவையான படைவீரர்களை ஏற்றிச் செல்வது மற்றும் ஆயுதங்களைக் கடத்துவது போன்ற செயல்களுக்குத் தனது பயணிகள் விமானங்களை மகான் ஏர் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன் அடிப்படையில், இந்தியாவில் மகான் ஏர் நிறுவனத்தின் முகவராகச் செயல்பட்டு வந்த டெல்லி மற்றும் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ஸ்கீஸ் டிராவல்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64d94a6-2462-4b2f-a671-54c6a91dc191/26-6a6d1dd731d1a.webp' /></p><p><i>Image Credit: Bloomberg.com</i></p><p> </p><p>

இந்நிறுவனம் 2020-ஆம் ஆண்டு முதல் ஈரானிய நிறுவனத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருவதாகத் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் விங்ஸ் மற்றும் ஷாங்காய் எலைட் இன்டர்நேஷனல், ரஷ்யாவின் ஏர் கார்கோ ஆகிய நிறுவனங்கள் மீதும், ஷாங்காய் விங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் டாங் ஷின்னுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
</p><p>
இது தொடர்பாக அமெரிக்க திறைசேரி விடுத்துள்ள அறிக்கையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கோ அல்லது மகான் ஏர் நிறுவனத்திற்கோ நிதி, தளவாடம் மற்றும் வணிக ரீதியாக உதவி செய்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்குத் துணைபுரிபவர்களாகவே கருதப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360f72bc-8238-483c-a4ae-8726d7b4ef4f/26-6a6d1dd8063f3.webp' /></p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T22:22:53+00:00</updated>
        </entry>
    </feed>
