<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-29T10:14:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783"></link>
            <id>https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை நோய்
வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் மேலும் 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.</p><p></p><h2>காணொளி பதிவு&nbsp;</h2><p>

அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551c29e6-c671-4f5d-b4ad-20784cc22389/26-6a69a41e73bb9.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகத்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர்
அவரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன், தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f86e570-f4e1-4b09-81a8-30f2074f311c/26-6a69a41da63f5.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் காலத்தில் கூடப் பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடந்தன! அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375"></link>
            <id>https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375</id>
            <summary type="text">விடுதலைப்புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப்புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில், அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் உண்மையான விருப்ப நிலையை அறிந்துகொள்ள விரும்பினால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்துக்கணிப்பு அறிக்கைகளைப் பெறுவதைத் தவிர்த்து உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கருத்துக்கணிப்பு அறிக்கை</h2><p>


அரசாங்கம் பணம் கொடுத்துச் செய்யும் கருத்துக்கணிப்பு அறிக்கைகளிலேயே நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியை எத்தனை சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07364b6-5a79-46a8-b0d3-5c6a70c7e4cf/26-6a69c22287a36.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.</p><p>

இருப்பினும், ஒரு கட்சியாக நாங்கள் எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.</p><p>
</p><p></p><h2>குழுக்களின் அச்சுறுத்தல்&nbsp;</h2><p>வழக்கறிஞர்கள் சங்கம் (BASL), பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்திற்கும் எதிராக அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவந்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைத்தால் அது பெரும் தவறாகும்.</p><p>வரலாற்றில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கு நேர்ந்த கதியைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c721733-246d-48aa-9399-9ed8c1cbffc1/26-6a69c223dbb40.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி கலாச்சாரப் பெரஹராக்களைத் தீர்மானிக்கக் கூடாது. </p><p>

விடுதலைபுலிகள் மற்றும் ஜே.வி.பி அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியிலும் வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டன.</p><p> </p><p></p><h2>எதிர்காலக் கூட்டணிகள்&nbsp;</h2><p>எனவே, ஊர்வலத்தில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமேக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
</p><p>
நாங்கள் மறைமுக அரசியல் செய்யமாட்டோம், எதிர்காலக் கூட்டணிகள் குறித்து யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வெளிப்படையாகவே செய்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67c00890-fbef-4100-b14b-29590184baba/26-6a69c2233ad92.webp' /></p><p>

தனிநபர்களின் தேவைகளுக்காக அன்றி, நாட்டின் மற்றும் மக்களின் நலன்களுக்காக மட்டுமே கூட்டணிகள் அமைக்கப்படும்.
</p><p>
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றவர்களையும், புதிதாக இணைந்தவர்களையும் பாதுகாத்து நாட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலுவானதொரு அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதே எனது முதன்மைப் பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851</id>
            <summary type="text">உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

அடுத்த எரிபொருள் விலை திருத்தம் நாளை மறுநாள் (31) நடைபெற உள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தற்போது, ​​பிரித்தானிய சந்தையில் ஒரு பரல் பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 86.66 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 81.73 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>
கடந்த சில வாரங்களாக உலக சந்தை எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9130b366-d86b-4a57-9e89-0566f14b1e2a/26-6a69c9fdaa7e6.webp' /></p><p>சமீபத்திய வாரங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மிகவும் நிலையற்றதாக இருந்து வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இரண்டிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது. </p><p>இத்தகைய நகர்வுகள் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், நிலவும் உலகளாவிய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாதாந்த அல்லது அவ்வப்போது உள்நாட்டு விலை திருத்தங்கள் அவசியமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785305811"></link>
            <id>https://ibctamil.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785305811</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சிராம்பியடியை&amp;nbsp;சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் மலசல கூடத்தில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;இந்த சம்பவம் நேற்று (28...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சிராம்பியடியை&nbsp;சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் மலசல கூடத்தில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்று (28.072026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த இளைஞன் வீட்டில் இருந்த மலசல கூடத்திற்கு நேற்று சென்ற நிலையில் அதிக நேரமாகியும் வரவில்லை என்ற காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது அவர் அங்கே மயங்கி கிடந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>போதைக்கு அடிமையான இளைஞன்</h2><p>இதன் பின்னர் அந்த இளைஞனை வீட்டில் உள்ளவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaebef6-4e5b-4651-a24a-b1603467cbf2/26-6a69c3e5d164b.webp' /></p><p> இதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றவர்களிடம் கூறி உள்ளனர்.&nbsp;</p><p>
இதனை தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் உடல் பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் குறித்த விசாரணையின் போது குறித்த இளைஞன் 3 ஆண்டுகள் காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-income-tax-inspector-1785310263"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-income-tax-inspector-1785310263</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகர்&amp;nbsp;தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகர்&nbsp;தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>குறித்த வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (28)&nbsp;பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த நிலையில் மிக நீண்ட விவாதத்தை அடுத்து வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு&nbsp; நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த மாதம் சபை அமர்விற்காகச் சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த
போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி
உறுப்பினர்களின் கௌரவத்தை அவமதிக்கும் வகையில்
நடந்து கொண்டமை தொடர்பில் வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e5a3a7-c06c-4f34-a6d2-a29e710dbe68/26-6a69b0a30b960.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையில்
செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
</p><p>இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
உத்தியோகத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும்,
இதனால் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டதுபோது வருமான வரி
பரிசோதகர் கடமையிலிருந்தபோதே குறித்த பரிசோதகருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும்,
இதனால் அவர் சீருடையில் செல்ல முடியும் என்றும், அவரை பிணை எடுப்பதற்கு
சென்றவர்கள் விடுப்பிலேயே சென்றதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை கடற்கரையில் படையெடுக்கும் நீல வண்ண ஜெல்லிமீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449"></link>
            <id>https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449</id>
            <summary type="text">பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.</p><p>

</p><p>இது குறித்து அவதானமான இருக்குமாறு பொதுமக்களுக்கு தேசிய நீர்வள திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p><p></p><h2>நீல வண்ண ஜெல்லிமீன்கள்</h2><p>
நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748f85cd-481b-4bd6-9188-843239e35177/26-6a69a9e8d2485.webp' /></p><p>பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
</p><p>
நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663"></link>
            <id>https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (29.07.2026) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (30.072026) காலை 11.00 மணி வரை அழுலில் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

வானிலை ஆய்வு மையத்தின்படி, குறிப்பிட்ட இடங்களில் சுமார் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வானிலை அறிக்கை</h2><p>
 

இதன் காரணமாக&nbsp;வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007344c7-54c5-4a17-ad27-272665e935cd/26-6a69aa00d22d4.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தை பிடித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.</p><p>இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் 167,401 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 9.7% மற்றும் 16.2% என்ற வலுவான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eec34f6-99d7-4b49-a673-ae26441e9711/26-6a69a76cbce7e.webp' /></p><p>

ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தக் காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 38,785 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் 332,468 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
</p><p>
மாதாந்த செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் மீளெழுச்சி பெற்று வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820"></link>
            <id>https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து, காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>கடும் நெரிசல்</h2><p>


இதையடுத்து, பின்னால் வந்த யாழ் தேவி விரைவு தொடருந்தின் காங்கேசன்துறை தொடருந்தின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c0eca29-acd3-4317-8a54-236494e1749b/26-6a699958d6207.webp' /></p><p>இதனால், இரு தொடருந்துகளின் பயணிகளும் ஒரே தொடருந்தின் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தொடருந்து வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று தொடருந்து சேவை இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T06:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து குறைவு: அதிகரித்த விலைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068"></link>
            <id>https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068</id>
            <summary type="text">தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கடுமையான வறட்சி மற்றும் போதுமான உரம் கிடைக்காததால் தான் இவ்வாறான நிலமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>தினசரி 6 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமாக இருந்த மரக்கறி வரத்து நேற்று (28.07.2026) சுமார் 4 இலட்சம் கிலோகிராமாகக் குறைந்துள்ளதாக கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><h2>மரக்கறிகளின் விநியோகம் குறைவு</h2><p>இதனால், சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818ed74-b0dc-4147-880b-bef8eee67a41/26-6a69a118ecf80.webp' /></p><p>இதன்படி கறி மிளகாயின் ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச மொத்த விலை ரூ.500 முதல் ரூ.550 வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தம்புள்ளை சந்தையில் நேற்றைய மொத்த விற்பனை விலைகளின்படி, கரட் ஒரு கிலோ ரூ.230 - 250, கத்தரிக்காய் ரூ.350, முருங்கைக்காய் ரூ.150 - 200, பூசணிக்காய் ரூ.115, வெண்டைக்காய் ரூ.60 - 70, லீக்ஸ் ரூ.200 மற்றும் பீர்க்கங்காய் ரூ.170 ஆக விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rotest-against-jaffna-thaiyiddi-illegal-vihara-1785302825"></link>
            <id>https://ibctamil.com/article/rotest-against-jaffna-thaiyiddi-illegal-vihara-1785302825</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.</p><p>


அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (28.07.2026) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (29.07.2026 )இரண்டாவது நாளாக தொடர்கின்றது.</p><p>&nbsp;</p><h2>தொடரும் போராட்டம்&nbsp;</h2><p>இந்த நிலையில் போராட்டக்காரர்கள் ”தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்“, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உடனே நிறுத்து“ போன்ற வாசகங்கள் ஏந்திய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593a1232-44d6-477f-849e-4bd211cf68d2/26-6a69958de097a.webp' /></p><p>நேற்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், கனகரட்ணம் சுகாஸ், காணி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-has-been-killed-with-a-sharp-weapon-1785302035"></link>
            <id>https://ibctamil.com/article/man-has-been-killed-with-a-sharp-weapon-1785302035</id>
            <summary type="text">வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28) இரவு கம்பளை - கீரபனை பகுதியில் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் நேற்று (28) இரவு கம்பளை - கீரபனை பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p> </p><p>இவ்வாறு உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.</p><p></p><h2>சந்தேகநபர் கைது&nbsp;</h2><p>இந்த படுகொலை தொடர்பில் கம்பளை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b8c0305-a641-48f4-b8fd-9be907f26439/26-6a698e73e37d9.webp' /></p><p>பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/japan-earthquake-deaths-rise-to-13-1785300765"></link>
            <id>https://ibctamil.com/article/japan-earthquake-deaths-rise-to-13-1785300765</id>
            <summary type="text">ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான குமமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி (S...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான குமமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நேற்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்னும் பலரைக் காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்தநிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், மீட்புக் குழுவினர் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணியைத் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை&nbsp;</h2><p>இதேவேளை உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முடிந்தவரை பலரைக் காப்பாற்றவும் மீட்கவும் அரசாங்கம் தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் எனவும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9391e1c9-ac4f-4ef2-9481-b85b0b32df86/26-6a698c68e22f1.webp' /></p><p>அத்துடன்&nbsp;ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 29 பேர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:20:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-died-shot-himself-1785297121"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-died-shot-himself-1785297121</id>
            <summary type="text">காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த உத்தியோகஸ்தர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&amp;nbsp;
 

உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த உத்தியோகஸ்தர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p>
 

உயிரிழந்தவர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
</p><p>குறித்த சம்பவம் இன்று அதிகாலை (29.07.2026) நடந்துள்ளது. </p><p></p><h2>உயிரை மாய்த்துக்கொண்ட உத்தியோகஸ்தர் </h2><p>இறந்த காவல்துறை கான்ஸ்டபிள் பேராதனையை சேர்ந்த 28 வயதுடையவவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1768111a-1baf-4b2b-9a24-2a15687f88e7/26-6a69818cb29b8.webp' /></p><p>இவர் காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகே தனது T 56 தாக்குதல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காவல்துறை&nbsp; கான்ஸ்டபிள் பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:10:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே FB பதிவால் சிதைந்த இளைஞனின் வாழ்க்கை...! 27 கோடி அபராதம் - 5 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-youth-sentenced-to-5-years-and-fined-1785298713"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-youth-sentenced-to-5-years-and-fined-1785298713</id>
            <summary type="text">சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பல மில்லியன் அபராதமும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்ப்படுத்தி உள்ளது.</p><p>அண்மையில் கதிர்காமத்தை நோக்கி சென்ற சுப்ரமணி எனும் நாயை இளைஞன் தாக்கிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பேசுபொருளானது.</p><p>அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நடந்த கருத்து மோதல்களின் போதே அனோஜன் என்னும் கல்முனையை சேர்ந்த சவூதி அரேபியாவில் தொழில்புரியும் குறித்த இளைஞன் முஸ்லிம்கள் மீதான கோபத்தை காட்டும் வகையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்&nbsp;என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த கருத்து அதிகம் பேசுபொருளான பின்னரே அவர் சவூதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 மில்லியன் (சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KFyBlufwECs?start=325" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T05:00:45+00:00</updated>
        </entry>
    </feed>
