<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T01:47:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு ரணிலிடம் இருந்து பறந்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-from-ranil-regarding-country-s-economy-1787102108"></link>
            <id>https://ibctamil.com/article/warning-from-ranil-regarding-country-s-economy-1787102108</id>
            <summary type="text">2028 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மீண்டும் ஒரு பொருளாதாரப் போர் வரவிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்கத் தவறினால் இலங்கைக்குப் பெரிய ஆபத்து காத்திருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மீண்டும் ஒரு பொருளாதாரப் போர் வரவிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்கத் தவறினால் இலங்கைக்குப் பெரிய ஆபத்து காத்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.</p><p>வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>வெளிநாட்டு கையிருப்பு</h2><p>

 

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கேற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee9bf15-e15d-429f-a70c-0fc15db9ce3b/26-6a85078465ae2.webp' /></p><p> இதனால், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
</p><p>
 

மத்திய வங்கி இவ்வருட முடிவில் 8 பில்லியன் டொலர்கள் நிலுவையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறானால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>

 

அதன்படி, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T01:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதனின் மனையில் நுழையும் கிரகங்களின் தளபதி! புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mars-transit-in-gemini-on-sept-18-1787086411"></link>
            <id>https://ibctamil.com/article/mars-transit-in-gemini-on-sept-18-1787086411</id>
            <summary type="text">தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாய், செப்டம்பர் 18 ஆம் திகதி சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து புதனின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாய், செப்டம்பர் 18 ஆம் திகதி சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து புதனின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
</p><p>
45 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகப் பெயர்ச்சியின் தாக்கம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களை உருவாக்கும்.
</p><p>
புதனின் ராசிக்குள் தளபதியான செவ்வாய் நுழைவதால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சுப யோகங்களும், சிறப்பான முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும்.</p><p>அவை எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். </li><li>இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும்.</li><li> நீண்ட காலமாக புதிய வேலையை தொடங்க நினைத்திருந்தால் இக்காலம் ஏற்றதாக இருக்கும். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li><li>நீதிமன்ற வழக்குகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். </li><li>மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். </li><li>ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். </li><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.</li><li> தகவல் தொடர்பு திறன் மேம்படும்.</li><li> இதனால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.</li><li> இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li><li> அதோடு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.</li><li> வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</li><li> ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். </li><li>வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>இதன் மூலம் முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி</td><td><ol><li>கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.</li><li> இதனால் செப்டம்பரில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.</li><li> குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். </li><li>புதிய நட்புகள் கிடைக்கும். </li><li>இந்த நட்பால் நல்ல நன்மைகள் கிடைக்கும். </li><li>வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.</li><li>கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள்.</li><li> வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் செப்டம்பரில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>முக்கியமாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-19T01:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787101285"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787101285</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (19-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.




</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29486679-1924-411d-9bf8-393274af7a90/26-6a850075b84e5.webp' />&nbsp;&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T01:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காவல்துறை திணைக்களத்தில் அதிகரிக்கும் வெற்றிடங்கள்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-308-police-officers-leave-service-in-sl-1787100438"></link>
            <id>https://ibctamil.com/article/4-308-police-officers-leave-service-in-sl-1787100438</id>
            <summary type="text">காவல்துறை திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 காவல்துறையினர் சேவையிலிருந்து விலகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 காவல்துறையினர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு 3,936 ஆண் காவல்துறையினரும் 372 பெண் காவல்துறையினரும் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>பெண் அதிகாரிகள்</h2><p> 

இவர்களில் அதிகமானோர் கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே விலகியுள்ளனர்.
</p><p>
அந்த ஆண்டில் மட்டும் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44615ee3-e085-4a8d-a823-1b39ba59d8e8/26-6a84fd18682da.webp' /></p><p> 

இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் விலகியுள்ளனர்.
</p><p>
தமது சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இதில் பங்களித்துள்ளன.
</p><p>
இது தவிர, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் -ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக 658 அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>காவல்துறை அதிகாரிகள்</h2><p>தற்போது இலங்கை காவல்துறை சேவையில் மொத்தம் 30,815 வெற்றிடங்கள் நிலவுகின்றன. </p><p>

இதில் சாதாரண காவல்துறை சேவையில் 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் (STF) 2,651 வெற்றிடங்களும் அடங்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c191d56b-eabe-4842-a7a2-824755bc2d95/26-6a84fd19bc9b7.webp' /></p><p>வழக்கமான ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்தக்வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>
அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான மனவலிமையை உயர்த்துவதற்கும் காவல் திணைக்களம் பல வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
</p><p>
நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், விடுதி வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் மற்றும் தரமான மருந்துகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rameswaram-fishermen-announce-protest-1787096234"></link>
            <id>https://ibctamil.com/article/rameswaram-fishermen-announce-protest-1787096234</id>
            <summary type="text">இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டத்தை ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு
கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
</p><p>
இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால்
சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>கடற்றொழிலாளர்கள்&nbsp;</h2><p>இதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இதே
கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e61bbaed-1a87-4cef-b629-9d21baa18406/26-6a84ecac7b386.webp' /></p><p>

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும்
நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் என்பவையும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை
கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/support-enforced-disappearances-meet-1787094255"></link>
            <id>https://ibctamil.com/article/support-enforced-disappearances-meet-1787094255</id>
            <summary type="text">எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி இந்த அழைப்பு விடுத்தார்.</p><p>

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.</p><p>
</p><p></p><h2>சர்வதேச நீதி</h2><p>மேலும் தெரிவித்த அவர், “இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது
உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது என தெரியாத நிலையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
</p><p>
எமது உறவுகளை தேடிய போராட்டத்தில் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகள் ஐநா வரை எமது நீதிக்கான போராட்டத்தை இடைவிடாது தொடர்ந்து
கொண்டிருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4586ffa-4c74-4f6a-9942-b7b9ea5b7ebf/26-6a84e7446d344.webp' /></p><p>

தமிழ் மக்கள் மீதான கொடூர இன அழிப்பு இடம்பெற்ற பின் எமக்கான நீதியை இலங்கை
அரசிடம் பல தடவைகள் எழுத்து மூலமாக கோரினோம் பதில் கிடைக்கவில்லை.
</p><p>
12 மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்தோம் எந்தப் பயனும் இல்லாத நிலையில் இலங்கை
நீதித்துறை என்பது கொலைகாரர்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற
உண்மையை உணர்ந்தோம்.</p><p>
</p><p></p><h2>சர்வதேச மாநாடு</h2><p>அதன் காரணமாக எமது உறவுகளைத் தேடிய போராட்டம் சர்வதேசத்தை நோக்கியதாக
மாற்றப்பட்டு ஐ.நா 36 ஆவது கூட்டத் தடரில் இருந்து எமது உண்மைக்கும்
நீதிக்குமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
இலங்கையில இடம் பெற்றது இனப்படுகொலை என்ற உண்மையை சர்வதேசத்தின் வாயிலாக மனித
உரிமைகளை மதிக்கின்ற நாடுகளூடாக எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பு.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cec79f6-d2f0-4895-9968-c000500a43cb/26-6a84e4f353abb.webp' /></p><p>எமது உறவுகளைத் தேடிய நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும்
முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் அன்று யாழ் தந்தை
செல்வா அரங்கில் வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
ஒன்றிணைந்து சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
</p><p>
ஆகவே எமது உறவுகளை தேடிய போராட்டத்தின் சர்வதேச மாநாட்டை சிறப்பாக
முன்னெடுப்பதற்கு சகல தரப்பினர்களிடமும் ஆதரவை எதிர்பார்ப்பதோடு உதவிகளையும்
எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T00:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-1-45-million-tourists-visit-sri-lanka-1787097635"></link>
            <id>https://ibctamil.com/article/over-1-45-million-tourists-visit-sri-lanka-1787097635</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் மொத்தம் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் மொத்தம் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதனடிப்படையில்,&nbsp; இக்காலப்பகுதியில் இந்தியா தொடர்ந்து முதன்மையான சுற்றுலா மூல நாடாகத் திகழ்ந்துள்ளது.</p><p> </p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>இந்தியாவிலிருந்து 25,355 இந்தியக் குடிமக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இது மொத்த வருகையில் சுமார் 22 வீதம் ஆகும்.</p><p>
இதற்கிடையில், அதே காலகட்டத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,738 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் பிரான்சிலிருந்து 8,106 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0ddd94-b59c-4c0f-a189-a765bbfb1656/26-6a84f2254b4c8.webp' /></p><p>

இந்தச் சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,456,725 ஆகும்.</p><p>
இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து 363,585 சுற்றுலாப் பயணிகளை வழங்கியுள்ளது.</p><p>அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியம் 143,139 வருகைகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமீரகத்தைக் குறிவைத்த ஈரானிய ஏவுகணைகள்...! ட்ரம்பின் திடீர் தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-holds-phone-talks-with-uae-president-1787083729"></link>
            <id>https://ibctamil.com/article/trump-holds-phone-talks-with-uae-president-1787083729</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>அண்மைக்கால மாற்றங்கள்&nbsp;</h2><p>மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360bf10c-1b12-4de9-998a-11be94d342ef/26-6a84bf86bb4e4.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T21:32:02+00:00</updated>
        </entry>
    </feed>
