<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T09:09:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nio-sri-lanka-must-prepare-climate-crisis-un-1788231584"></link>
            <id>https://ibctamil.com/article/el-nio-sri-lanka-must-prepare-climate-crisis-un-1788231584</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக இலங்கைக்கு இந்த நிலை ஏற்படலாம் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.</p><p>எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெள்ளப்பெருக்கு</h2><p>இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3906e41-6871-4ee0-bad7-2c252c66c032/26-6a9691bec58e5.webp' /></p><p>
 

அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>பொருளாதார அழுத்தம்&nbsp;</h2><p>
 

இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e094b771-b4db-493c-a7c9-f707094e77b5/26-6a9691be1970f.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

 

இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
 

எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/little-boy-heartbreaking-visuals-from-nepal-flood-1788239107"></link>
            <id>https://ibctamil.com/article/little-boy-heartbreaking-visuals-from-nepal-flood-1788239107</id>
            <summary type="text">வெள்ளத்தின் கோர தாண்டவதால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளிவரும் காணொளிகள் பல மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.அவற்றில் ஒன்றாக சிறுவன் ஒருவன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளத்தின் கோர தாண்டவதால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளிவரும் காணொளிகள் பல மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>அவற்றில் ஒன்றாக சிறுவன் ஒருவன் தன் தங்கையைத் தன் கைகளில் ஏந்தியபடி தன் பெற்றோரைத் தேடி அந்தப் பேரழிவின் ஊடாக நடந்து செல்கிற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.</p><p>நேபாளம் தனது மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றைச் சந்தித்து வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>இடிபாடுகளுக்குள் தேடி வரும் குழந்தை</h2><p>
மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடி வரும் வேளையில், குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartbreaking Visual from Nepal 💔<br><br>Little boy caring his younger sister 🥹 and finding their parents 😭.<br><br>Look at the pain and scratches on their faces. 💔💔💔 <a href="https://t.co/oREDLzii6g">pic.twitter.com/oREDLzii6g</a></p>&mdash; Jeet (@JeetN25) <a href="https://x.com/JeetN25/status/2094010755343589623?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்த இந்த இரண்டு குழந்தைகளும், காயங்களுடன் தங்களது பெற்றோரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
குழந்தைகளின் முகத்தில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட கீறல்களும் காயங்களும், பயமும் அப்பட்டமாகத் தெரிகின்றன.</p><p>இக்காட்சி ஜப்பானிய அனிமேஷன் படமான 'கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ்' (Grave of the Fireflies) கதையை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் ஆலய சூழலில் ஏலம் விடப்பட்ட கடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shops-auctioned-in-nallur-temple-festival-1788250458"></link>
            <id>https://ibctamil.com/article/shops-auctioned-in-nallur-temple-festival-1788250458</id>
            <summary type="text">நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால்
தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிழமை
நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால்
தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிழமை
நடைபெற்றது.
</p><p>
மாநகர சபை கணக்காளர் செ.காண்டீபன் தலமையிலான மாநகர சபையின் ஏல குழுவினர் யாழ்.
மாநகர சபை பிரதி முதல்வரின் பிரசன்னத்துடன் ஏலம் விடப்பட்டன. </p><p>அதன்போது பலர்
ஆர்வத்துடன் பங்கேற்று தமக்கான கடைகளை பெற்றுக்கொண்டனர்.
</p><p>
திருவிழாவிற்கான தற்காலிக கடைகள் திருவிழாவின் ஆரம்பத்தில் ஏலம் விடப்பட்ட
நிலையில், அதில் பெற்றுக்கொள்ளப்படாத கடைகள் நேரில் இன்று ஏலம் விடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/927720bc-a3f3-43a3-a29b-52753dee8124/26-6a968cb34bd0e.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் வீதியோடு பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-motorbikes-seized-in-sammanthurai-traffic-drive-1788243645"></link>
            <id>https://ibctamil.com/article/10-motorbikes-seized-in-sammanthurai-traffic-drive-1788243645</id>
            <summary type="text">சம்மாந்துறையில் காவல்துறையினரின்&amp;nbsp; திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறையில் காவல்துறையினரின்&nbsp; திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை
மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல்
மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் காவல்துறையினரால் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இதன்போதே குறித்த&nbsp;மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கைகள்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்மாந்துறை காவல் நிலையப் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினரால் நேற்று (01-09-2026) இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>

அம்பாறை மாவட்ட பிரதிப் காவல்துறை அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின்
மேற்பார்வையில், சிரேஷ்ட காவல்துறை அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின்
ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e9ccf6-bdcc-492b-a098-bac8985e7e93/26-6a96888a64292.webp' /></p><p>மேலும் கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி
வழிகாட்டலில் காவல்துறையினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p>
</p><p>இதன்போது, பிரதான வீதிகளில் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச்
செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள்
அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதுடன் 10 மோட்டார் சைக்கிள்களும் காவல் நிலையத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர்
சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி
வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள்
கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-legal-battle-intensifies-around-ranil-1788244504"></link>
            <id>https://ibctamil.com/article/political-legal-battle-intensifies-around-ranil-1788244504</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ளன.</p><p> இந்த சட்டப் போராட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் மற்றும் சட்டரீதியான நிலைப்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.</p><p>

22ஆவது திருத்தம் நீதித்துறையின் ஓய்வுபெறும் வயது மற்றும் உயர் நீதிமன்றத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத் தரப்புகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஐந்து தசாப்த அரசியல் பயணம்</h2><p>
</p><p>
இந்த விவகாரம் வெறும் அரசியலமைப்புச் சட்டத்தின் தொழில்நுட்பப் பிரச்சினையாக மட்டுமன்றி, இலங்கையின் அதிகாரப் பிரிவு, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் எதிர்காலம் தொடர்பான முக்கியமான சோதனையாகவும் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d88978-8d64-4d1d-9b7e-0bf38f31b585/26-6a967a49b49ba.webp' /></p><p>ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களை நெருங்குகிறது. 1970களின் இறுதியில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், பல்வேறு அரசியல் நெருக்கடிகள், தேர்தல் தோல்விகள், கூட்டணி அரசுகள் மற்றும் அதிகார மாற்றங்களைக் கடந்து சென்றுள்ளது.
</p><p>
1988–1989 காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விக்ரமசிங்கவின் பங்கு குறித்து நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>குறிப்பாக, பத்தரமுல்லை பிரதேசத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படும் ‘பட்டலந்த’ தடுப்பு மற்றும் விசாரணை மையம் தொடர்பான விவகாரம் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கும் உட்பட்டது.
</p><p>
இந்தக் காலப்பகுதியை ஆதரவாளர்கள் அரசை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் காலமாகக் கருதினாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இதனை இலங்கையின் இருண்ட அரசியல் அத்தியாயங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.</p><p>மேலும், 2001ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற விக்ரமசிங்க, விடுதலைப் புலிகள் அமைப்புடனான சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கினார். 2002ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
</p><p>
அந்த முயற்சி நாட்டின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தவும் சர்வதேச ஆதரவைப் பெறவும் உதவியதாக அவரது ஆதரவாளர்கள் வாதிட்டனர்.</p><p> அதேவேளை, தேசியவாத அரசியல் தரப்புகள் அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தன. அது விடுதலைப் புலிகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான இடத்தை வழங்கியதாக அவர்கள் விமர்சித்தனர்.</p><p></p><h2>நல்லாட்சியின் பரிசோதனை</h2><p>2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியுடன் விக்ரமசிங்க மீண்டும் அதிகாரத்தின் மையத்துக்கு வந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த இந்தக் காலகட்டம் ‘நல்லாட்சி’ என அடையாளப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdea159c-3824-4ff7-b3a8-3fe3c1be3daf/26-6a967a4aa18fa.webp' /></p><p> </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தம், நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவை முக்கிய இலக்குகளாக முன்வைக்கப்பட்டன.
</p><p>
ஆனால் இந்த ஆட்சி காலம் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளாலும் அரசியல் மோதல்களாலும் பாதிக்கப்பட்டது.</p><p>

2018ஆம் ஆண்டு ஜனாதிபதி சிறிசேன, விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை அந்தப் பதவிக்கு நியமித்தபோது அரசியலமைப்பு நெருக்கடி உருவானது.</p><p> பின்னர் நீதித்துறை தலையீட்டின் மூலம் அந்த நடவடிக்கைகள் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டன. விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்றார்.</p><p>2022ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடி மற்றும் ‘அரகலய’ போராட்டங்களின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>

அப்போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்தார். இதனால், ஒரு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நேரடியாக மக்களின் வாக்கைப் பெறாமல் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து அரசியல் விவாதம் எழுந்தது.
</p><p>
விக்ரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பொருளாதாரத்தை நிலைப்படுத்தியமை அவரது ஆதரவாளர்களால் முக்கிய சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p>எனினும், போராட்ட இயக்கத்தின் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகி, அப்போதைய ஆளும் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டதாக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>புதிய சட்டப் போராட்டம்&nbsp;</h2><p>2024க்குப் பின்னர் விக்ரமசிங்க அரசியலிலிருந்து பின்வாங்கியிருந்தாலும், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான விவாதங்களில் அவரது பெயர் தொடர்ந்து இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41915769-f833-4827-95fb-2ee943f3e80b/26-6a967a4b589bd.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகள் மற்றும் மக்கள் இறையாண்மை தொடர்பான கேள்விகளை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்துள்ளன.
</p><p>
இந்தத் திருத்தம் நீதிபதிகளின் பதவிக்காலம் மற்றும் ஓய்வுபெறும் வயது உள்ளிட்ட விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p><p> இதனால், நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.</p><p>

சில அரசியல் விமர்சகர்கள், இந்தத் திருத்தத்திற்கு எதிரான விக்ரமசிங்கவின் நிலைப்பாடு அரசியலமைப்புக் கொள்கைகளில் மட்டுமே அடிப்படையைக் கொண்டதல்ல என்றும், எதிர்கால சட்ட மற்றும் அரசியல் சூழலில் தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியல் கணக்கீடாகவும் இருக்கலாம் என்றும் வாதிடுகின்றனர். </p><p>ஆனால் இத்தகைய கருத்துகள் அரசியல் விளக்கங்களாகவே பார்க்கப்பட வேண்டும். அவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள் எனக் கருத முடியாது.</p><p>இன்றைய சூழலில் முக்கியமான கேள்வி ஒன்றே: அரசியலமைப்பு தொடர்பான இந்தப் போராட்டத்தில் இறுதி தீர்மானம் அரசியல் சக்திகளின் கைகளிலா அல்லது நீதித்துறையின் சுயாதீனமான பரிசீலனையிலா இருக்கும்?
</p><p>
22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை, நீதித்துறை அரசியலமைப்பின் பாதுகாவலராக எந்த அளவுக்கு சுயாதீனமாக செயல்படுகிறது என்பதற்கான முக்கியமான பரிசோதனையாக அமையக்கூடும்.
</p><p>
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை பலமுறை தோல்விக்குப் பின்னரும் அவர் மீண்டும் அதிகாரத்தின் மையத்துக்கு திரும்பியதற்காக தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. </p><p>அதே நேரத்தில், அவரது நீண்ட அரசியல் பயணம் பல்வேறு சர்ச்சைகளையும் கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
</p><p>
அவரை ஆதரிப்பவர்கள் அவரை நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய அனுபவமிக்க அரசியல்வாதியாக பார்க்கின்றனர். </p><p>விமர்சகர்கள், அவர் நிறுவனங்களை விட அதிகாரத்தின் தொடர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைச் சுற்றியுள்ள தற்போதைய சட்டப் போராட்டம் ரணில் விக்ரமசிங்கைத் தாண்டிய ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-piyankara-jayaratne-sentenced-to-7-years-1788248611"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-piyankara-jayaratne-sentenced-to-7-years-1788248611</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் குறித்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><h2>குற்றப்பத்திரிகை தாக்கல்&nbsp;</h2><p> </p><p>

 

2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின பேரணியில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணம் செலுத்தியமை தொடர்பாக, அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான பியங்கர ஜெயரத்னவிற்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef99d72-61ec-4a32-90fd-798ff799991c/26-6a96875c4b30c.webp' /></p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், அதன் தீர்ப்பை அறிவிப்பதற்காக இன்றைய தினம் (01) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h2>பணம் செலுத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
 

அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து குறித்த உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக மாரவில பகுதியில் அமைந்துள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் ஒன்றுக்கு 3,30,000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e21dfda6-f829-45dc-9154-0f32f960460c/26-6a96875cf2cb6.webp' />&nbsp;</p><p>
</p><p>
 

இதன்போது, குறித்த பணத்தைச் செலுத்துவதற்காக அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜெயரத்ன, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியைத் தூண்டியுள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு நெருக்கடியை தீர்க்க பாரம்பரிய ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும்! சர்வதேசத்திடம் ஹரிணி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prime-minister-harini-reveals-solution-food-crisis-1788248583"></link>
            <id>https://ibctamil.com/article/prime-minister-harini-reveals-solution-food-crisis-1788248583</id>
            <summary type="text">இன்றைய உணவு நெருக்கடிக்கான தீர்வு, காலத்தைப் பின்னோக்கிச் செல்வதிலும் இல்லை, கடந்த காலப் படிப்பினைகளை மறப்பதிலும் இல்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய உணவு நெருக்கடிக்கான தீர்வு, காலத்தைப் பின்னோக்கிச் செல்வதிலும் இல்லை, கடந்த காலப் படிப்பினைகளை மறப்பதிலும் இல்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>பூட்டானில் நடைபெற்ற 2026 உலகளாவிய விழிப்புணர்வு உணவு அமைப்புகள் உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட உணவு அமைப்புகளைக் கட்டமைப்பதற்காக, நவீன தீர்வுகளைத் தழுவிக்கொண்டே பாரம்பரிய ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>இலங்கையின் வறண்ட மண்டலம்</h2><p>
</p><p>
உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், 

“இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுடன் நெருங்கிய உறவைப் பேணிக்கொண்டே, சமூகங்கள் உணவுப் பாதுகாப்பை அடைய உதவும் உணவு தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகளின் வளமான பாரம்பரியத்தை இலங்கை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bd5e59-20ec-4a14-8bd1-d7e3661a0c90/26-6a96862193b7e.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் பண்டைய வேவா-கம அல்லது குள-கிராம அடுக்கு அமைப்பானது, மனித வரலாற்றில் நீடித்த வள மேலாண்மையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.</p><p>

சுமார் 2,000 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்ட, இலங்கையின் வறண்ட மண்டலம் முழுவதும் பரவியுள்ள ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களின் வலையமைப்பு, தண்ணீரைச் சேமிப்பதற்காக மட்டுமல்லாமல், முழுமையான சூழல் அமைப்புகளையும் சமூகங்களையும் நிலைநிறுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.</p><p>

இயற்கைச் சூழலின் ஆரோக்கியத்தையே மனித வளம் சார்ந்துள்ளது என்ற பரந்த புரிதலைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இந்த அமைப்பு விவசாயம், வீட்டுத் தோட்டங்கள், காடுகள், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கிறது.
</p><p>
இலங்கையின் பண்டைய ஆட்சியாளர்கள் வருங்கால சந்ததியினருக்காக வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர்.</p><p></p><h2>ஆக்கப்பூர்வமான பயன்பாடு</h2><p>
</p><p>
ஒரு துளி நீர் கூட ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாமல் கடலில் கலக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று அறிவித்த, மாமன்னர் பராக்கிரமபாகுவுக்குக் கூறப்படும் புகழ்பெற்ற கொள்கையை நினைவுகூறவேண்டும்.</p><p>

இந்தக் கொள்கையானது நீர்ப்பாசனத்திற்கான அர்ப்பணிப்பை விட மிக அதிகமானவற்றைப் பிரதிபலிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/103bbb0f-24ae-4563-82b7-34a6062e1aa6/26-6a9686224f179.webp' /></p><p>
</p><p>
மாறாக, அது மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு குறித்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது.

நீர் ஒரு பகிரப்பட்ட தேசிய வளமாகக் கருதப்பட்டது.</p><p> உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் பயிரிடப்பட்டன. 

வேளாண்மை, காடுகள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மனிதக் குடியிருப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த ஒரே அமைப்பின் பாகங்களாகச் செயல்பட்டன.
</p><p>
இலங்கையின் பண்டைய குள கிராம நாகரிகம், அதன் மீள்திறன், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவசாய பாரம்பரிய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T08:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">புதிய இணைப்பு22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>

 

இன்று (01) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனுக்கள் அழைக்கப்பட்டபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. </p><p>ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்த போதும், சட்டமா அதிபர் சார்பில் முன்னலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின்படி நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என வாதிட்டார்.
</p><p>
 

அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள் விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இன்மையால் 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>இந்தநிலையில் அந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
</p><p>
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IEDdInNGtNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொதுமக்களிடம் காவல்துறை அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-schoolgirls-reported-missing-in-balangoda-1788246936"></link>
            <id>https://ibctamil.com/article/three-schoolgirls-reported-missing-in-balangoda-1788246936</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



பெற்றோரின் தகவலின்படி, குறித்த மாணவிகள் நேற்று (31) மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>


காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d95d21-0bed-49fe-8c85-3d5bf2e6c876/26-6a967df1069b6.webp' /></p><p>



பலாங்கொடை காவல் நிலையம்: 045-2287222



பெற்றோரின் தொலைபேசி இலக்கங்கள்: 076-7070913 / 077-1658788</p><p>



இச்சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:26:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் CCIB இல் விசாரணைக்கு முன்னிலை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்புதெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) ச...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு</u></b></h5><p>தெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 முதலாம் இணைப்பு</u></b></h5><p>மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவரை முன்னிலையாகுமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) அவரை&nbsp;CCIB இல் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடத்தல்காரர்களில் ஒருவர்</h2><p>

இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதாள உலகக் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d7ffe9-8f67-424f-a4b5-74e903ef2b6d/26-6a9656943ca12.webp' /></p><p>இதனடிப்படையில் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவாக்குவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயாகல துப்பாக்கிச்சூடு - தடயங்களை அழிக்க பைக்கிற்குத் தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-the-payagala-koshena-area-1788231324"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-the-payagala-koshena-area-1788231324</id>
            <summary type="text">பயாகலஇ கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயாகலஇ கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.</p><p>மோட்டார் சைக்கிள், இன்று (01) காலை தொடங்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொடங்கொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
 

நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான "பானந்துரே நிலங்க" என்பவரின் மைத்துனரான "டிலா" என அழைக்கப்படுபவர் ஆவார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[CIDயின் புதிய பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ssp-roshan-amarasinghe-appointed-as-cid-director-1788243456"></link>
            <id>https://ibctamil.com/article/ssp-roshan-amarasinghe-appointed-as-cid-director-1788243456</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க இன்று (01) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் - கணவனின் வாள்வெட்டு தாக்குதல் மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wife-dies-in-sword-attack-on-husband-mullaithivu-1788241683"></link>
            <id>https://ibctamil.com/article/wife-dies-in-sword-attack-on-husband-mullaithivu-1788241683</id>
            <summary type="text">கணவன் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில்
படுகாயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவன் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில்
படுகாயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (31.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069d25bd-071f-4649-8c3d-f477524ef40d/26-6a9668b56b509.webp' /></p><p>மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவனும் காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகைள புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:38:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788242777"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788242777</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (01-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (01-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,362,809 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 384,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde1242e-4f25-4623-9128-ea034bccea9b/26-6a966e17010f1.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 352,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 336,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:18:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-alleges-president-secretary-in-customs-coverup-1788239806"></link>
            <id>https://ibctamil.com/article/mp-alleges-president-secretary-in-customs-coverup-1788239806</id>
            <summary type="text">சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பெருமளவிலான முறைகேடு ஒன்றை மறைப்பதற்குத் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பெருமளவிலான முறைகேடு ஒன்றை மறைப்பதற்குத் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.</p><p>ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>2024 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலன் (Container) ஒன்று தொடர்பிலேயே இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>இரண்டாவது பரிசோதனை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “குறித்த கொள்கலனுக்குத் தேவையான இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாததால், அது சுங்கத் திணைக்களத்தின் சிவப்புக் சனல் (Red Channel) ஊடாகப் பரிசோதிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93bb5b22-2e99-4e2c-8256-dea3c03a3a85/26-6a9668e664321.webp' /></p><p>முதலாம் குழு அதில் தவறேதும் இல்லை எனக் கூறிய போதிலும் அன்றைய காலத்தில் சுங்க மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான இரண்டாவது குழு அதனை மீண்டும் பரிசோதித்தது.
</p><p>இரண்டாவது பரிசோதனையின் போது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 7 வாகன ஆசனங்கள் மட்டுமே இருந்ததாகக் கூறி, அவற்றை மட்டும் அரசுடமையாக்கப் பரிந்துரைக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>உள்நாட்டு விசாரணை</h2><p>சுங்கத் திணைக்களத்தின் உள்நாட்டு விசாரணைப் பிரிவினர் நடத்திய மூன்றாவது பரிசோதனையில், சுங்கத்திற்கு அறிவிக்கப்படாத 45 வகையான 600 க்கும் மேற்பட்ட பொருட்கள் அக்கொள்கலனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.</p><p> அதில் 130 வாகன ஆசனங்கள் மற்றும் பெருமளவிலான டயர்கள் இருந்ததாக சானக்க வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a99dcf3-1a5f-42be-932f-38b1bc75da24/26-6a9668e5ae621.webp' /></p><p>இந்த பாரதூரமான ஊழல் தொடர்பான அறிக்கைகள் தற்போது சுங்கத் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சகத்திலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், ஆனால் தன்னிடம் அந்த ஆவணங்களின் பிரதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து எதிர்வரும் புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-than-1-5-mn-tourists-visit-sri-lanka-2026-1788237493"></link>
            <id>https://ibctamil.com/article/more-than-1-5-mn-tourists-visit-sri-lanka-2026-1788237493</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>
 

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>அத்துடன் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p></p><h2>இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p>

 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 18,197 ஆக&nbsp; பதிவாகியுள்ள நிலையில் மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a8ad5d-9244-4a44-b55b-bd59ffa0f44d/26-6a96621019e8e.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 380,011 ஆக பதிவாகியுள்ளது.</p><p>

 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 148,598 பயணிகளும், சீனாவிலிருந்து 99,875 பயணிகளும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T05:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-petitioned-over-a-l-physics-paper-errors-1788237781"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-petitioned-over-a-l-physics-paper-errors-1788237781</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) 4 வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி முறைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) 4 வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>&nbsp;கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.</p><p>இந்தநிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் நீதியை வழங்குமாறு கோரி அவர் முறைப்பாடளித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவிடம் கோரிக்கை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பௌதிகவியல் வினாத்தாள் 1 இல் இடம்பெற்ற 17, 18, 19 மற்றும் 46 ஆகிய வினாக்கள் பிழையானவை (சரியான பதில்களைப் பெற முடியாதவை) என அந்த ஆசிரியர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe7008b-fbc5-4dc1-b4d5-d05a1ce5523e/26-6a965e57c1fcc.webp' /></p><p>இந்த வினாத்தாள் குளறுபடி தொடர்பில் கவனம் செலுத்திய பரீட்சைகள் திணைக்களம், 46 ஆவது வினாவுக்கு மட்டுமே இலவசப் புள்ளியை (1 Mark) வழங்க உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்தநிலையில் 46 ஆவது வினாவுக்கு மட்டும் புள்ளி வழங்குவது மாணவர்களுக்குச் செய்யப்படும் கடுமையான அநீதி என்றும் பிழையான 4 வினாக்களுக்கும் சேர்த்து 4 புள்ளிகளையும் (4 Marks) அனைத்து மாணவர்களுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலதிபரின் வீட்டில் உயிரிழந்த மொடல் நடிகை - இறப்புக்கான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/details-emerge-sudden-death-of-model-chulpadmendra-1788237292"></link>
            <id>https://ibctamil.com/article/details-emerge-sudden-death-of-model-chulpadmendra-1788237292</id>
            <summary type="text">இலங்கை மொடல் நடிகை மற்றும் அழகுக் கலை பயிற்சியாளரான சுல்பத்மேந்திர குமாரபத்திரன திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து காவல்துறை மேலும் சில தகவல்களை வெளியிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மொடல் நடிகை மற்றும் அழகுக் கலை பயிற்சியாளரான சுல்பத்மேந்திர குமாரபத்திரன திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து காவல்துறை மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.</p><p>சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>இறப்புக்கான காரணம்</h2><p>இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b8e44f1-f0ed-45cd-b791-6beb8842fac2/26-6a965d6249487.webp' /></p><p>இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார உத்தியோகத்தர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர். இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>


எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.</p><p>

ஆடை வடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tim-cook-signs-off-on-last-day-as-apple-ceo-1788235146"></link>
            <id>https://ibctamil.com/article/tim-cook-signs-off-on-last-day-as-apple-ceo-1788235146</id>
            <summary type="text">உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகிய பிறகு அந்த பதவியில் டிம் குக் நியமிக்கப்பட்டார்.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் தலைமையிலான 15 வருட காலம் ஆப்பிள் வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>டிம் குக்கின் தலைமைத்துவம்</h2><p>இந்த பதவி விலகல் குறித்து&nbsp;டிம் குக் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,&nbsp;தலைமை நிர்வாக அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்திற்கு என் அன்பை அனுப்புகிறேன். நாளை என் பதவிப் பெயர் மாறுகிறது, ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீது நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sending lots of love to the Apple community on my last day as CEO. My title changes tomorrow, but the love I have for the Apple community never will. Thank you for being a constant source of inspiration. My gratitude is endless, and I’m excited for the next chapter!</p>&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://x.com/tim_cook/status/2094448088199078236?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> எனக்குத் தொடர்ச்சியான உத்வேகத்தின் ஊற்றாக இருந்ததற்கு நன்றி. என் நன்றியுணர்வு எல்லையற்றது, மேலும் அடுத்த அத்தியாயத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆப்பிளின் சந்தை மதிப்பு</h2><p>
</p><p>இதேவேளை டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுப்பேற்றபோது சுமார் 350 பில்லியன் டொலராக இருந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு இன்று 5 டிரில்லியன் டொலரை நெருங்கியுள்ளது. இது உலகளாவிய அளவில் ஆப்பிளின் செல்வாக்கு மற்றும் மதிப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண வளர்சியை காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ef4e2a-ae3c-441f-974c-fb37bbeb90ba/26-6a96548071be5.webp' /></p><p>அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் பாரிய வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்சியான விரிவாக்கத்தை கண்டது.</p><p>
ஐபோன் முதல் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் வரை அனைத்து துறைகளிலும் டிம் குக்கின் தலைமை ஆப்பிளை உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியது.</p><p>
</p><p>இந்தநிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுவதுடன் அவருக்கு பதில் ஜான் டர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.</p><p></p><h2>கை விலங்குடன் தப்பி ஓட்டம்</h2><p>திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b314491-8d47-4c8b-8b46-94b56e3c6959/26-6a9644bac1ae6.webp' /></p><p>இந்நிலையில், 30.08.2026 அன்று 3.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை
விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் நேற்றையதினம்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (01.09.2026) மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ministry-of-defence-notice-to-gun-owners-1788231790"></link>
            <id>https://ibctamil.com/article/ministry-of-defence-notice-to-gun-owners-1788231790</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p> 
</p><p>அதன்படி, இன்று (01) ஆரம்பமாகவுள்ள&nbsp;புதுப்பிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும், துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள் ஆவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை</h2><p>
</p><p>இதேவேளை, 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8abb36bb-1557-42c1-9359-35fd261b36e0/26-6a96437cc6e3e.webp' /></p><p>

அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:22:42+00:00</updated>
        </entry>
    </feed>
