<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-10T06:19:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரைச் சுற்றியுள்ள கடலில் எரிபொருள் ஆய்வு : கத்தோலிக்க பேரவை வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-exploration-in-the-sea-surrounding-mannar-1789012028"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-exploration-in-the-sea-surrounding-mannar-1789012028</id>
            <summary type="text">இலங்கையின் - மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் - மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், சுற்றுச்சூழலுக்குப் பாதகமான இந்தச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;கடற்றொழில் சமூகம்</h2><p>இந்தச் செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான முன்னெடுப்புகளாக இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு அல்லது வெளிப்படைத்தன்மையுடன் இத்தகைய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி முன்னெடுப்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43be72c-1249-4b01-9a72-b0ae9ce7b869/26-6aa23e177862a.webp' /></p><p> 

இதுபோன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்காக முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும்.</p><p> 

மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தகைய செயற்பாடுகளால் மன்னார் தீவின் கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.</p><p>

ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு அமர்வின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் விமானப் படை தளபதி FCIDயில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-air-force-chief-to-appear-before-fcid-today-1789013594"></link>
            <id>https://ibctamil.com/article/ex-air-force-chief-to-appear-before-fcid-today-1789013594</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (10) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

மிக் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (10) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></h2><h5>அநுர அரசின் அதிரடி : முன்னாள் விமானப்படை தளபதிக்கு FCID அழைப்பு!</h5><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலகவை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.</p><p>அதன்படி, இன்று (10) காலை 9.30 மணிக்கு அந்த&nbsp;விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><h2>வாக்குமூலம் பதிவு செய்தல்</h2><p>

குறித்த கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/794e2837-c090-4c53-898e-7b824e6f06a9/26-6aa231e91c7bf.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288</id>
            <summary type="text">தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd9c355-5b72-47c5-a1da-c6506c3e1b65/26-6aa23be55b403.webp' /></p><p>குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-to-seetha-amman-temple-1789016053"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-to-seetha-amman-temple-1789016053</id>
            <summary type="text">இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர்&nbsp; புறப்படுவதற்கு முன்னர், இன்று காலை நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு செல்லவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளை, குறிப்பாக இராமாயணம் போன்ற பண்டைய புராணங்களுடன் உள்ள பொதுவான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று வெளியுறவு அமைச்சின் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொது இராஜதந்திர பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.</p><p></p><h2>இந்திய வம்சாவளி தோட்ட சமூகம்</h2><p>

நுவரெலியா பயணத்தின் போது, ​​இலங்கையின் இந்திய வம்சாவளி தோட்ட சமூகத்தினரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a53f37e5-565f-4fac-a0cf-55d4eb46effd/26-6aa237f78f1fd.webp' /></p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக கடந்த 08 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தார். </p><p>இந்தப் பயணத்தின்போது, ​​இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவால் (ஓய்வு) வரவேற்கப்பட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T04:54:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1789015102"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1789015102</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(10.09.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(10.09.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை&nbsp;பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத்தின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XOUxhefK0aw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-10T04:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் சுற்றுலா கப்பலில் தீ விபத்து - 5 பேர் பலி - 80க்கும் மேற்பட்டோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-on-tourist-ship-in-the-philippines-5-dead-1789012762"></link>
            <id>https://ibctamil.com/article/fire-on-tourist-ship-in-the-philippines-5-dead-1789012762</id>
            <summary type="text">மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அப்பால்&amp;nbsp; படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன்&amp;nbsp; 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அப்பால்&nbsp; படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன்&nbsp; 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று (10.09.2026) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
பலவான் அருகிலுள்ள கொரோன் கடற்பகுதியில் MV June Astrea என்ற படகில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பிலிப்பைன்ஸ்</h2><p>
</p><p>
படகில் 117 பயணிகளும் 17 பணியாளர்களும் இருந்ததாக கடலோர காவல்படை பேச்சாளர் கொமடோர் நோமி கயாபியாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764c87e8-6041-40b9-beb6-94bae89bada8/26-6aa2346e0bb09.webp' /></p><p>

எனினும், மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T04:39:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுக் கடன் திட்டம் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/housing-loan-scheme-sri-lankans-working-abroad-1789011439"></link>
            <id>https://ibctamil.com/article/housing-loan-scheme-sri-lankans-working-abroad-1789011439</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.&#039;எதெர திரிய&#039; என்ற இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>'எதெர திரிய' என்ற இந்த புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்</h2><p>
அத்துடன், கடன்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச் செலுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f85b504-b3ca-4e7b-94b0-96a439491d14/26-6aa22c50375a1.webp' /></p><p>

இதன் மூலம், வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
இந்தக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பான மற்றும் இலகுவான வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T04:07:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : 22 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22-hospitalised-after-bus-overturns-in-minneriya-1789010053"></link>
            <id>https://ibctamil.com/article/22-hospitalised-after-bus-overturns-in-minneriya-1789010053</id>
            <summary type="text">பொலன்னறுவையில்&amp;nbsp;இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவையில்&nbsp;இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில்&nbsp;இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p> மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><h2>வைத்தியசாலைகளில் அனுமதி</h2><p>பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28202196-c9f5-4e09-b5fa-1267d2cddbac/26-6aa224897aed6.webp' /></p><p>விபத்து இடம்பெற்ற குறித்த பகுதி அடிக்கடி விபத்துக்கள் நிகழும் ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DLl04BUC7Mw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T03:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-theerththa-thiruvila-1789008645"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-theerththa-thiruvila-1789008645</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்&amp;nbsp;தீர்த்தோற்சவம் இன்றாகும்.இன்றைய (10) இருபத்தைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்&nbsp;தீர்த்தோற்சவம் இன்றாகும்.</p><p>இன்றைய (10) இருபத்தைந்தாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் ஆரம்பமாகிய நிலையில்&nbsp;முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தனின் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றவண்ணம் உள்ளது.</p><p>அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் இன்று (22) காலை தீர்த்தத் திருவிழா நடைபெறுவதுடன் மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d68MluZQ5ZU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T03:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenade-attack-targeting-a-house-in-colombo-1789003654"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenade-attack-targeting-a-house-in-colombo-1789003654</id>
            <summary type="text">கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9918985f-1300-4cc1-8ccf-523013382e66/26-6aa20788e8c3f.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T02:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893"></link>
            <id>https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று மற்றும் மின்ன்ல தாக்கம்</h2><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9b32ea0-c364-44b2-a259-55057a44403f/26-6aa203f76308b.webp' /></p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T01:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096"></link>
            <id>https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096</id>
            <summary type="text">நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.</p><p>

மல்டோவிய வான்வெளியில் நுழைந்த இரு ரஷ்ய ட்ரோன்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிஷினாவ் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதனால் அந்நாட்டின் தலைநகருக்கு வரவிருந்த பல விமானங்கள் மல்டோவாவுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதுடன் வான்வெளியிலேயே காத்திருக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஜெலென்ஸ்கியின் விமானம்</h2><p>

இந்நிலையிலேயே, மல்டோவாவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலென்ஸ்கியின் விமானம் ட்ரோன் ஒன்றால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டதாக நோர்வே பிரதமர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1975ecf8-dae2-4737-9ed6-418826162677/26-6aa1ca9e0f363.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivindependent</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், ஜெலென்ஸ்கியின் விமானம் தொடர்பான நார்வே பிரதமரின் இந்தக் கூற்று குறித்து மல்டோவா அதிகாரிகள் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T00:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியின் விளிம்பில் ஈரானிய ஆட்சி! நெதன்யாகுவின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
நெதன்யாகு, தெற்கு சிரியாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சென்று பார்வையிட்டபோது இதனை கூறியுள்ளார்.</p><p>

பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உடன், இஸ்ரேல்-சிரிய எல்லையில் அமைந்துள்ள ஹெர்மன் மலையின் சிரியப் பகுதியில் நின்று பேசிய அவர், "இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.

 ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியை வீழ்த்துவதே நமது முக்கிய பணியாகும்.</p><p></p><h2>ஈரான் ஆட்சியின் வீழ்ச்சி&nbsp;</h2><p>நாம் அதை அடைவதற்கு மிக அருகில் இருக்கிறோம். அந்த முழு கூட்டணியும் இறுதியில் வீழும் என்பதை நாம் அறிவோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44ee1b8-b6cf-422d-b266-8c9248a06a05/26-6aa1fad8087ed.webp' /></p><p><i>Image Credit:&nbsp;jewishchronicle</i></p><p>
</p><p>
சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத்தின் ஆட்சி டிசம்பர் 2024-இல் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தெற்கு சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
1974 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் பகுதியில் இஸ்ரேல் மற்றும் சிரியப் படைகளைப் பிரித்து வைத்திருந்த, ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட பழைய இடைப்பட்ட பகுதியையே தற்போது இப்படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T00:33:51+00:00</updated>
        </entry>
    </feed>
