<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-12T07:18:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116</id>
            <summary type="text">புதிய இணைப்புவாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.</p><p> 

அவர் விசாரணைக்காக&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (12.08.2026) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார். </p><p>

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக நேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் அவர் வெளியேறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4760d3-406a-4dc4-8eed-fb3449319dbb/26-6a7c00c11a9d0.webp' /></p><p>இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு இன்று இவர் (12.08.2026) வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><b>தொடர்புடைய செய்திகள்&nbsp;</b></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-salary-increase-calculator-2025-2027-1786515172"></link>
            <id>https://ibctamil.com/article/government-salary-increase-calculator-2025-2027-1786515172</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார மீட்சி</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d9894a-d69f-4601-bc18-a2e4b4ee0ad1/26-6a7c14270861d.webp' /></p><p>2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது.
</p><p>
இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது.</p><p></p><p> </p><h2>கொடுப்பனவுகள்&nbsp;</h2><p>2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ed01cd-3fa4-4c61-9431-c0ac7de64160/26-6a7c14264bbba.webp' /></p><p>மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>

யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கொலம்பியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/western-colombia-earthquake-death-toll-1786514969"></link>
            <id>https://ibctamil.com/article/western-colombia-earthquake-death-toll-1786514969</id>
            <summary type="text">
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்போது, காலி (Cali) நகரில் 95 இறப்புகளும் 997 காயங்களும் பதிவாகியுள்ளதுடன், பெரேரா (Pereira) நகரில் 79 இறப்புகளும் 278 காயங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் 1,575 வீடுகளும், ஆறு விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா முன்னதாக அறிவித்திருந்தார்.</p><p></p><h2>அவசர நிவாரணத் தேவைகள்</h2><p>
கொலம்பிய புவியியல் சேவையின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் மேற்கு கொலம்பியாவில் 96 கி.மீ. ஆழத்தில், சோகோ (Chocó) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே மையப்புள்ளியைக் கொண்டு தாக்கியதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85dfa1bf-9c3b-4400-b4ae-e8cd1f65b8ad/26-6a7c127a5745d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;CNN</i></p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாகாணங்களின் தலைநகரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும், சேதங்களை மதிப்பிட்டு அவசர நிவாரணத் தேவைகளைக் கண்டறிய உள்ளூர் மேயர்கள் மற்றும் அவர்களது குழுக்களுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T06:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382</id>
            <summary type="text">அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தாக்குதல் அச்சுறத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தி உள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தாக்குதல் அச்சுறத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதம் துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தின்போதே இந்த இரகசிய பயணம் இட்ம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 


இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்&nbsp;</p><p></p><h2>இரகசிய பயணத்தில்&nbsp;டொனால்ட் டிரம்ப்</h2><p>'அமெரிக்காவின் இரகசிய சேவை மற்றும் இராணுவம் தான் இந்த முடிவை எடுத்தார்கள். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a7bacc-4392-44fa-8b5e-d00c967d2f11/26-6a7c10d263e0a.webp' /></p><p> </p><p>வெளியே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.</p><p> </p><p>ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அமெரிக்கா பத்திரிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்திகளில்</p><p>“ஊடகங்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய பிறகு, ஜூலை 8 அன்று ட்ரம்ப் ஒரு உணவு வழங்கும் வாகனத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஜெட் விமானத்திற்கு ரகசியமாகச் சென்றார்.</p><p>செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பதாக நம்பியிருந்த வேளையில், அவர் அந்த ஜெட் விமானத்தில் அங்காராவிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு தளத்திற்குப் பறந்தார்” என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-12T06:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[A9 வீதியில் கோர விபத்து - லொறி உதவியாளர் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-on-a9-road-men-dies-on-the-spot-1786511511"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-on-a9-road-men-dies-on-the-spot-1786511511</id>
            <summary type="text">கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

ஏ9 வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து பொருட்கள்
இறக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த
லொறி கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின்
மீது பலமாக மோதியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6bd5aa-3a27-4cf4-9be1-ad0541d40e09/26-6a7c1136bc8ae.webp' /></p><p>குறித்த விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதியின் உதவியாளர் பலத்த காயமடைந்து
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து கிளிநொச்சி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு
விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். </p><p>மேலும்,
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:22:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றத்தில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.சுகீஸ்வர பண்டார சற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>சுகீஸ்வர பண்டார சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666b4e3b-0ef8-4a2c-b4bf-0bc9d2f06dc4/26-6a7c0b721ac95.webp' /></p><p>இந்நிலையில், இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p>கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-narcotics-and-weapons-in-digana-1786512841"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-narcotics-and-weapons-in-digana-1786512841</id>
            <summary type="text">


கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தெல்தெனிய காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று(11) மாலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 5,155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தொடர்ந்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கைக்குண்டு, 1,250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கூர்மையான கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1c1cd2-00ba-4f57-b744-98f0fefca7c6/26-6a7c0a17c49bc.webp' /></p><p>

திகன பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T05:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த தீர்ப்பு விரைவில்: நிறைவடைந்த 245 நாள் சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-verdict-in-easter-case-soon-1786512420"></link>
            <id>https://ibctamil.com/article/next-verdict-in-easter-case-soon-1786512420</id>
            <summary type="text">நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அரசுத் தரப்பின் இறுதி சாட்சியங்கள் நேற்று இரவு (11) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் 245 நாட்கள் நீடித்த அரசுத் தரப்பு வழக்கு நேற்று முடிவடைந்தது. </p><p>

இவ்வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மராசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட பிற மேல் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படும்.</p><p></p><h2>எதிர் தரப்பின் சாட்சியங்கள்</h2><p>

அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்த பிறகு, எதிர் தரப்பின் சாட்சியங்கள் விசாரிக்கப்படும். 

பின்னர், இரு தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பித்த பிறகு, தீர்ப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337846f4-e5bc-4e81-9c87-0dde34e32f5c/26-6a7c09385140c.webp' /></p><p> </p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இவற்றில், 5 வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
 இந்த வழக்குகளில் 3 வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

முறையான உளவுத் தகவல் கிடைத்திருந்தும் கடமையில் இருந்து தவறியது உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர், தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், மாவநெல்ல பகுதியில் 7 புத்தர் சிலைகளையும் ஒரு கடவுள் சிலையையும் சேதப்படுத்திய வழக்கில் சபரகமுவ மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 11 பிரதிவாதிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட உள்ளன.</p><p></p><h2>&nbsp;​​ஷஹ்ரானின் தாக்குதல் படை</h2><p>

புத்தளத்தில் உள்ள லாக்டோஸ் வத்த பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் மற்றும் வெடிபொருட்கள் கிடங்கு ஆகியவற்றை நடத்திய சம்பவம் தொடர்பாக, புத்தளம் மேல் நீதிமன்றத்தில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் பிரதான வழக்கும் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b474aad-52c9-4607-9323-95b7cb9dc12d/26-6a7c0939144f4.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்குகளைத் திறம்பட விசாரிக்கும் பொருட்டு, புத்தளம் மூன்றாண்டு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு, கடந்த 2 மாதங்களாக கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், அலுத்கமவில் உள்ள பழைய நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், ஈஸ்டர் தாக்குதல் குறித்த நீதிமன்ற வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

கடந்த காலங்களில், இந்த வழக்கு தினமும் இரவு சுமார் 10 மணி வரை விசாரிக்கப்பட்டு வந்தது.

அரசுத் தரப்பு சாட்சியத்தின் போது பிரதிவாதிகள் அளித்த பல வாக்குமூலங்கள் தாமாக முன்வந்து அளிக்கப்பட்டவை என்பது உண்மை கண்டறியும் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. </p><p>

விசாரணையின் போது, ​​ஷஹ்ரானின் தாக்குதல் படையைச் சேர்ந்த ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாகி பல உண்மைகளை வெளிப்படுத்தினார். 

இந்த வழக்கு ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு முறை விசாரிக்கப்பட்டது.
</p><p>
 பின்னர், வாரத்திற்கு 2-3 நாட்கள் விசாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 இதுவரை, அரசுத் தரப்பு சாட்சியங்கள் கிட்டத்தட்ட 245 நாட்களாகக் கேட்கப்பட்டுள்ளன.</p><p> 

விசாரணையை மேலும் திறம்படச் செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, வழக்கமான நடைமுறைகளின்படி 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக விசாரிக்கப்படவிருந்த இந்த வழக்கு, அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்ததால் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. </p><p>

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா மற்றும் சட்டத்தரணிகளான சஜித்த பண்டார, சக்தி ஜாகொடஆராச்சி மற்றும் அகிலா தல்படடு ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T05:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunfire-targeting-a-house-1786510775"></link>
            <id>https://ibctamil.com/article/gunfire-targeting-a-house-1786510775</id>
            <summary type="text">
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p>

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
காவல்துறை தகவல்படி, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு குறித்த சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டினால் எந்தவொரு காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d35112-3d1d-431e-80a4-149b494c4690/26-6a7c00022c433.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்காலை காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T04:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வானியல் நிகழ்வு: 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866"></link>
            <id>https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.</p><p>2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி இரவு 9.04 முதல் 13 ஆம் திகதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு மறைப்பு இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03 க்குள் நிகழும்.&nbsp;</p><p>இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இலங்கை மற்றும் இந்தியாவின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்</h2><p>இலங்கையில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாததற்கு முக்கிய காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதுதான். இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு இது நிகழ்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f003fb-7368-445f-a345-cee8553270e0/26-6a7bdd3669c3c.webp' /></p><p>121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.</p><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும்..</p><p>முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.</p><p></p><h2>நடத்தை மாற்றங்கள்</h2><p>இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6486cda9-43c0-44c4-8ac8-f2026f8a812a/26-6a7bdd371c203.webp' /></p><p>அத்துடன் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் நடத்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
</p><p>12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது</p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.</p><p></p><h2>இன்று ஆடி அமாவாசை</h2><p>
எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12aa31dc-0e64-4167-8c89-f59afb9c01fb/26-6a7bf470a953f.webp' /></p><p>அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தென்படுவதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன், தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் நாளை (13) கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p>கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பிரதேசத்தில் தென்படும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக தலைவன் 'ககனவின் ' சகா கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accomplice-of-underworld-figure-gagana-arrested-1786505339"></link>
            <id>https://ibctamil.com/article/accomplice-of-underworld-figure-gagana-arrested-1786505339</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான &#039;ககன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான 'ககன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹோமாகம பகுதியிலுள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>ககனவின் உதவியாளர்</h2><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/928584db-d071-4bad-8895-a841c1947e9e/26-6a7beb632348c.webp' /></p><p>வெளிநாட்டில் தங்கியிருக்கும் 'ககன'வின் நேரடி வழிகாட்டலின் கீழ், இச்சந்தேகநபர் நீண்டகாலமாக மிகவும் இரகசியமான முறையில் இலங்கையில் போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பை நடத்தி வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஹோமாகம காவல்&nbsp; நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956"></link>
            <id>https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956</id>
            <summary type="text">செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மோச்சா துறைமுகத்திற்கு தெற்கே கப்பல் மீது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் உட்பட நான்கு மாலுமிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>சவூதி இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><h2>தனித்தனித் தாக்குதல்</h2><p>இந்நிலையில், அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01978962-de4f-4867-a6ae-26cebb08a98b/26-6a7bd2373ef07.webp' /></p><p>
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. </p><p>அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். &nbsp;</p><p>மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T02:57:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,000 தண்டம்! நல்லூரில் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717</id>
            <summary type="text">நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில்
கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து
தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைந்துள்ளது.</p><p></p><h2>கண்காணிப்பு கமராக்கள்</h2><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து
நாசமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7a1eded-7565-4ef1-8df3-5fbc2dd796c2/26-6a7bab78d36db.webp' /></p><p>

இருப்பினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின்
பதிவுகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
</p><p>
இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன்
தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து
நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T02:29:41+00:00</updated>
        </entry>
    </feed>
