<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-04T04:15:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/200-000-school-students-dropped-out-in-5-years-1788491969"></link>
            <id>https://ibctamil.com/article/200-000-school-students-dropped-out-in-5-years-1788491969</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி, குறித்த காலப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அந்த பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>துரிதமான நடவடிக்கைகள்</h2><p>இந்த நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதைப்பொருள் பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் மேவும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec20b273-1c78-4cb9-8a39-37ca91a710ba/26-6a9a4015870c5.webp' /></p><p>
எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T03:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நெகிழ்ச்சி சம்பவம் - பேருந்தில் தவறவிட்ட நகை..! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-million-rs-1788493247"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-million-rs-1788493247</id>
            <summary type="text">கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை
கண்டெடுக்கப்பட்டு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை
கண்டெடுக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
பேருந்தில் நகை இருப்பதை அவதானித்த சாரதி மற்றும் நடத்துனர், அதனை பாதுகாப்பாக
வைத்திருந்து உரிய முறையில் நகையின் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
</p><p>
அவர்களின் நேர்மையான செயற்பாட்டைப் பாராட்டும் வகையில், வடக்கு மாகாண வீதிப்
பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டது.</p><p></p><h2>நேர்மையான செயற்பாடு</h2><p>

இந்நிகழ்வு 2026 செப்டெம்பர் 3ஆம் திகதி யாழ் வீதிப் பயணிகள் அதிகாரசபை
அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884c4e5d-5db2-4e17-9fcc-5edbaa319ed9/26-6a9a3f8c018d0.webp' /></p><p>இதன்போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையின் தலைவர் சூ. விமலேஸ்வரனால் சாரதி மற்றும் நடத்துனர்
கௌரவிக்கப்பட்டனர்.
</p><p>
பொதுமக்களின் உடமைகளைப் பாதுகாத்து, உரியவரிடம் மீளக் கையளித்த இவர்களின்
நேர்மையான செயற்பாடு, பொதுப் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின்
பொறுப்புணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T03:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-04T03:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dead-after-a-crash-into-a-palm-tree-1788489810"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dead-after-a-crash-into-a-palm-tree-1788489810</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதின் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதின் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் கிளிநொச்சி - உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e682de2-0670-4741-ad4f-e3e77e630479/26-6a9a33a8bfcfb.webp' /></p><p>
விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T02:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கொழும்பில் பரபரப்பு - கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-injured-in-colombo-kollupitiya-shooting-1788485983"></link>
            <id>https://ibctamil.com/article/two-injured-in-colombo-kollupitiya-shooting-1788485983</id>
            <summary type="text">கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்&amp;nbsp;இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை கொள்ளுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்&nbsp;</p><p>இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில்&nbsp; இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bcfa036-76bc-4ca0-b93a-757d819cad83/26-6a9a28792025d.webp' /></p><p>


</p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி காவல்துறையினர்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-04T01:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை தாண்டிய மீன்பிடி! 09 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-released-on-conditions-1788484670"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-released-on-conditions-1788484670</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p>
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b862d3fb-6dfb-4d2a-ab88-133535d5c2ed/26-6a9a1c4043829.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நேற்றையதினம் வியாழக்கிழமை (03) மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு நபர் ஒருவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமும் செலுத்த உத்தரவிட்டார்.</p><p>
</p><p>
மேலும் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக 25 ஆயிரம் ரூபாய் குற்றப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்! வடக்கு, கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788483489"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788483489</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக, மீககஹிவுல மற்றும் பனங்காடு போன்ற இடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக, மீககஹிவுல மற்றும் பனங்காடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த மழை&nbsp;</h2><p>
இதேவேளை, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3f9cb7-e4f6-49b6-bbcb-5bb7ec2d044e/26-6a9a19099246a.webp' /></p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:04:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-after-eating-snake-poisoned-fruit-1788481513"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-after-eating-snake-poisoned-fruit-1788481513</id>
            <summary type="text">மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல்
பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல்
பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>மட்டு வெல்லாவெளி காவல்துறை&nbsp;பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில்&nbsp;நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி
வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து
நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து
உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை
உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன்
ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9477a83-840d-4d34-9d35-44e465dee214/26-6a9a16922445e.webp' /></p><p>இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால்
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p>
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை
முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஆட்சி விரைவில் சரியும்! இஸ்ரேல் பிரதமர் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-said-iran-will-fall-soon-1788473568"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-said-iran-will-fall-soon-1788473568</id>
            <summary type="text">அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் ஆட்சி முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது என்றும், அது விரைவில் வீழ்ந்துவிடும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் ஆட்சி முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது என்றும், அது விரைவில் வீழ்ந்துவிடும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஈரானிய ஆட்சி தற்போது தள்ளாடிக் கொண்டிருப்பதாகவும், தனது பிழைப்பிற்காகப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், இந்த ஆட்சியை வீழ்த்தி அச்சுறுத்தலை ஒரேயடியாக அகற்றுவது சாத்தியமானது என்றும், அது கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>பதிலடித் தாக்குதல்</h2><p>

ஈரானின் மதகுருமார்களால் நடத்தப்படும் அரசைப் பல தசாப்தங்களாகத் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த நெதன்யாகு, பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கினார்.இருப்பினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதம் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/465df1d2-19a3-436f-94e6-527d658fef37/26-6a9a1136d4586.webp' /></p><p>தற்போது அமெரிக்கா மேலும் பொருளாதார அழுத்தத்தை விதித்து தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதால், ஈரான் வளைகுடா நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதிகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியபோதிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை.</p><h2>இஸ்ரேலின் இராணுவ வலிமை</h2><p>

ஈரான் இஸ்ரேலைத் தாக்காதது தற்செயலானது அல்ல என்றும், இஸ்ரேலின் இராணுவ வலிமையையும் உறுதியையும் அவர்கள் அறிந்துள்ளதாலேயே மற்ற நாடுகளைத் தாக்கும் ஈரான் தம்மைத் தாக்கத் தயங்குவதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e3758f-07d9-4873-acf5-bc005bbe157c/26-6a9a1137ae076.webp' /></p><p><i>Image Credit: AFP</i></p><p>
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 27 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கருத்துக்கணிப்புகளில் நெதன்யாகு பின்தங்கியுள்ளதாகவும், ஈரான் விவகாரத்தில் அவர் தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vance-said-possible-measures-against-iran-1788470211"></link>
            <id>https://ibctamil.com/article/vance-said-possible-measures-against-iran-1788470211</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணைியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தாத வரை, ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த அமெரிக்கா திட்டமிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>போரின் முடிவு</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து ஈரானிடமே கேட்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc87a8e6-e5c7-43ce-afe4-062b3cca89dd/26-6a99e8a1a0eb8.webp' /></p><p><i>Image Credit: BBC</i></p><p>
</p><p>
மேலும், ஈரானியர்கள் நாளுக்கு நாள் தங்களது இராணுவ மற்றும் தற்காப்புத் திறன்களை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போது முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதை அவர்களும் உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
</p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம்</h2><p>
மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரானின் அச்சுறுத்தல்களால் அந்த நீரிணை வழியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த போதிலும், தற்போது அது மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e366f6-d7fb-4a3c-bff8-3b34fabecb8e/26-6a99e8a265791.webp' /></p><p><i>Image Credit:&nbsp;thedailyaus</i></p><p> </p><p>

எனவே, வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் செயல்படுமாறு ஈரானுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:04:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899"></link>
            <id>https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றாக மறுத்துள்ளார்.
</p><p>பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், டோமாஹாக்ஸ், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் 'தாட்' (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் தீர்ந்து வருவதாகச் சமீபத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. </p><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும், அமெரிக்க இராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர் தரத்திலான ஆயுதங்கள் அளவற்ற அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விரைவில் ஆயுத விற்பனை</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தற்போது ஆயுத உற்பத்தியைத் தீவிரப்படுத்தி வருவதாகவும், தனது நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207685733693672/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

ஈரானுக்கு எதிரான போர் பதற்றங்கள் மற்றும் இராணுவத் தேவைகள் காரணமாகச் சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் பல மாதங்களாகத் தாமதமாகியிருந்த நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T22:18:10+00:00</updated>
        </entry>
    </feed>
