<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-30T02:31:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-0...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் மன்னார் , பெரியமடு, புளியங்குளம், வெலிஓய மற்றும் புல்மோட்டை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c80e4-1f78-4f4a-8416-8d7a887bee25/26-6a938edbc81ab.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&amp;nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சீமெந்து குழைக்கும்
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சீமெந்து குழைக்கும்
கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த&nbsp;மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24)&nbsp;தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்
எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம்
திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92046001-75d9-4ba3-80e6-5594a878f809/26-6a93767204cd8.webp' /></p><p>
</p><p>இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம
பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலரை பறிக்கச் சென்ற தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834"></link>
            <id>https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834</id>
            <summary type="text">கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp; கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் இருந்து மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலை தாக்கியதற்கான காயங்கள்</h2><p>தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக்
கால்வாயில் இறங்கியபோதே ஹொரணை, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1f20e-ed2a-482e-a920-97ca0d90cc88/26-6a9385647678a.webp' /></p><p>
</p><p>
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும்
தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து
சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை
அடுத்துப் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான
காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை
மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-credit-rating-sri-lanka-1788051262"></link>
            <id>https://ibctamil.com/article/international-credit-rating-sri-lanka-1788051262</id>
            <summary type="text">சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை &#039;CCC&#039; நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை 'CCC' நிலையிலிருந்து 'B' அல்லது 'B+' நிலைக்கு உயர்த்த வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை 4 பில்லியன் டொலர்களாகவும், 2029 - 2031 காலப்பகுதியில் 5 முதல் 6 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இது குறித்து&nbsp; மேலும் கருத்துத் தெரிவித்த&nbsp; அவர்,&nbsp;</p><p></p><h2>நாட்டின் கடன் செலுத்தும் திறன்</h2><p>“நாட்டின் கடன் செலுத்தும் திறனை வெறும் மொத்த வெளிநாட்டு கையிருப்பை வைத்து மட்டும் கணக்கிட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c621c7-313d-4d46-a7a1-45fd468749c8/26-6a937fd05e0b8.webp' /></p><p> சர்வதேச நாணய நிதியத்தின் 'கையிருப்பு போதுமான அளவு மதிப்பீடு' அளவுகோலின் படி, கடன் செலுத்தும் திறனில் பாதுகாப்பான நிலையை அடைய நாட்டின் கையிருப்பு 12 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும்.</p><p>ஆனால் தற்போது 6.5 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்குள் அதனை 12 பில்லியனாக உயர்த்துவது சாத்தியமற்ற ஒன்றாகும்.&nbsp;&nbsp;</p><p>தற்போது நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத ஒரு வளர்ச்சியாகவே காணப்படுகிறது.</p><p>விவசாயம், கணக்காய்வு மற்றும் மென்பொருள் பொறியியல் போன்ற முக்கிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. </p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப மக்களின் உண்மையான ஊதியம் உயரவில்லை என்பதால், நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தேயிலைத் தொழிலை நெருக்கடிக்குள் தள்ளும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-puts-sri-lankan-tea-industry-in-crisis-1788047398"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-puts-sri-lankan-tea-industry-in-crisis-1788047398</id>
            <summary type="text">உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், கடுமையான ஏற்றுமதி சரிவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இலங்கையின் தேயிலைத் தொழிலைக் கடுமையான அழுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், கடுமையான ஏற்றுமதி சரிவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இலங்கையின் தேயிலைத் தொழிலைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.</p><p>இந்த மோதல், நிறுவனங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதாக சில சர்வதேச ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இலங்கை மக்கள் தொகையில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை&nbsp;ஏறத்தாழ 10% ஆகும்.</p><p></p><h2>உலக வங்கியின் வறுமைக் கோடு</h2><p>குறிப்பாக தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 இலங்கை ரூபாய் சம்பளத்தை பெறுகிறார்கள். இது தோராயமாக 4.50டொலர் / 3.90யூரோவுக்கு சமமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2288740-8814-4262-b72f-6cb8b1103b17/26-6a93728029ffd.webp' /></p><p>
தோட்டத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நாள் ஒன்றுக்கு 3.65 டொலருக்கும் குறைவான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.</p><p>இது அவர்களை உலக வங்கியின் வறுமைக் கோட்டிற்குக் கீழே வைக்கிறது. இது தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளைச் சந்தித்து வருவதினை வெளிப்படுத்துகிறது.</p><p>சமீப காலம் வரை மிக முக்கியமான இலக்குச் சந்தையாக இருந்த ஈராக்கிற்கான ஏற்றுமதி கடுமையாகக் குறைந்ததால், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 17.3% சரிந்து 114.75 டொலர் மில்லியனாகக் குறைந்தது.</p><p></p><h2>மத்திய கிழக்கு ஏற்றுமதி</h2><p> </p><p>மற்றொரு முக்கிய சந்தையான ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 93% சரிந்தது. இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குபவர்களில் ஒன்றான ஈரானுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ab792e-2ff4-4ab4-9ce9-3ffa2eaee255/26-6a93728241bd1.webp' /></p><p>அதிகரித்து வரும் உலகளாவிய விலைகளும் தேவையைப் பாதிக்கின்றன.

தேயிலைத் தொழில் நெருக்கடியானது, ஏற்கனவே பலவீனமாக உள்ள இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஈரான் போரைத் தொடர்ந்து, எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்காக அரசாங்கம் எரிபொருள் விலையை 40% உயர்த்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-missing-relatives-in-the-north-1788044765"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-missing-relatives-in-the-north-1788044765</id>
            <summary type="text">தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய
தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும்
கேள்வி எழுப்பினர்.</p><p>
இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும்
கருத்து தெரிவித்த அவர்கள்.</p><p> நாளை சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த 3,478
நாட்களாக, எமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடுவதை கைவிடாமல்
வவுனியாவில் வீதியில் நின்று போராடி வருகிறோம்.</p><p></p><h2>பிரித்தானியவிடம் ஒரு&nbsp; வேண்டுகோள்</h2><p>

இன்று, பிரித்தானிய பிரதமரிடமும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடமும் நாம்
நேரடியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்.</p><p>தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான
சர்வதேச சட்ட வழிமுறைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.
</p><p>
இலங்கையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினையில்
பிரித்தானியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, காலனித்துவ
நீக்கம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறையாண்மை மீட்பு தொடர்பாக சர்வதேச
சட்ட வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியே பின்னர் சுதந்திர சிலோன் பெற்றுக்கொண்ட
மையப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.</p><p>
1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்தபோது, ஒரே மையப்படுத்தப்பட்ட
அரசைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு தொடர்ந்தது.
</p><p>
அந்த அரசியலமைப்பு ஏற்பாடு தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும்
அரசியல் எதிர்காலத்திற்கு நிலையான தீர்வை வழங்கத் தவறிவிட்டது.அதன் விளைவுகளை
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர்.</p><p></p><h2>இன வன்முறைகள், இடம்பெயர்வுகள்</h2><p>
</p><p>
பாகுபாடான அரச கொள்கைகள், இன வன்முறைகள், இடம்பெயர்வுகள், நில இழப்புகள்,
இராணுவமயமாக்கல், போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றை
தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3cc7f4-ca27-455a-938b-11d63ee95c45/26-6a9365df4fb04.webp' /></p><p>இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள்
தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல்
காத்திருக்கின்றன.
</p><p>
அரசாங்கங்கள் மாறியுள்ளன.ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,விசாரணைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன,பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>ஆனால் எமது காணாமல்
ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதில் இன்னும்
எமக்குக் கிடைக்கவில்லை.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளின் முன்னைய தினத்தில்,
பிரித்தானியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் நாம் கேட்கிறோம்,</p><p> எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும்
எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
</p><p>
சிலோனை ஒன்றிணைத்த காலனித்துவ நிர்வாக நடைமுறையிலும், பின்னர் அதன் காலனித்துவ
நீக்கத்திலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும்
சட்ட ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
மேலும், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும்.</p><p></p><h2>சட்ட அதிகாரம்</h2><p>

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரும் முயற்சிக்கு
பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5e3b4f7-f276-49c3-b4b3-a34b932166fd/26-6a9365e009b60.webp' /></p><p>
</p><p>
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்,
அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் தமிழர்
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கவில்லை.
</p><p>
எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது, அமைதியான மற்றும் ஜனநாயக நடைமுறையின்
மூலம் சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உள்ளடக்கி, ஒரு
சர்வதேச அரசியல் தீர்வின் பகுதியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று
பிரித்தானியாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

எனவே, தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தக் கேள்வியை சர்வதேச சட்டத்தின் முன்
கொண்டுசெல்ல பிரித்தானியா உதவ வேண்டும் என்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T23:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/van-crashes-into-high-voltage-power-pole-1788030279"></link>
            <id>https://ibctamil.com/article/van-crashes-into-high-voltage-power-pole-1788030279</id>
            <summary type="text">கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன்று இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>
 இந்நிலையில் வானில் பயணித்த ஏழு பயணிகள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காகக் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439afe7e-4741-4b8f-a869-a247c4a28786/26-6a932d496d8b1.webp' /></p><p>

 சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>

மேலும், மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான சிறப்புத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-project-address-water-shortage-batticaloa-1788043769"></link>
            <id>https://ibctamil.com/article/special-project-address-water-shortage-batticaloa-1788043769</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நிலத்தடி நீரைப் பெறும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நிலத்தடி நீரைப் பெறும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இன்று மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
எல் நினோ வானிலையால் மேலும் மோசமடைந்துள்ள தற்போதைய வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட 75,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஏழு மாவட்டங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுர, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b6091a-3845-4ff0-807e-6ed7cf9b73c5/26-6a9361fad26f4.webp' /></p><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 84,500-ஐத் தாண்டியுள்ளது.
</p><p>
மொனராகலையில், எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 75 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் 15,000 குடும்பங்கள் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

குறிப்பாக சியம்பலாண்டுவ மற்றும் மடகம பிரதேச செயலகப் பிரிவுகள் மாவட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
</p><p>
தற்போது 39 தண்ணீர் டேங்கர்கள் மூலம் குடிநீர் குறித்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே போகும் நேபாள பேரவலத்தின் பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-death-toll-continues-to-rise-by-the-hour-1788026902"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-death-toll-continues-to-rise-by-the-hour-1788026902</id>
            <summary type="text">நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இன்றைய நிலவரப்படி, மேலும் 2,498 பேரைக் காணவில்லை என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>

உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை தொகுத்ததன் படி, கடந்த ஆறு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நிவாரணப் பணிகள்&nbsp;</h2><p> இருப்பினும், முக்கியமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcd45915-6325-40ba-b4ec-4eaac6ceefaf/26-6a9325a732501.webp' /></p><p>மேலும், நேபாளத்தின்&nbsp; மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தொகுத்த விவரங்களின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 900 நேபாள ஊழியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
இதுவரை அந்தத் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 361 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>நேபாள-சீன எல்லை</h2><p>
</p><p>
திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு, நேபாள-சீன எல்லைக்கு அருகே, குறிப்பாக தொலைதூர ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைந்திருந்த பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadbb5d3-f302-4d1e-be48-e336d64dd4c7/26-6a9325a7e64c8.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, பல தொழிலாளர்கள் கட்டுமானப் பகுதிகளிலும் சுரங்கங்களிலும் இன்னும் சிக்கியுள்ளனர்.
</p><p>
அவர்களைத் தொடர்புகொள்ள இயலாத நிலையில், சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க உதவுவதற்காக, சுரங்க மீட்பு நிபுணர்களை இந்தியா மற்றும் சீனாவிடம் நேபாள அரசு கோரியுள்ளது. </p><p>இரு நாடுகளின் குழுக்களும் இன்று நேபாளம் வந்தடைந்த நிலையில், மேலும் பணியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:23:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்கை கடல் எல்லையில் 20 ஈரானிய கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20-iranian-ships-in-sri-lankan-waters-1788039423"></link>
            <id>https://ibctamil.com/article/20-iranian-ships-in-sri-lankan-waters-1788039423</id>
            <summary type="text"> இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்தக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வந்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

இந்தக் கப்பல்கள் தொடர்பாக இலங்கைக்கு எந்தக் கடமையோ பொறுப்போ இல்லை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.</p><p></p><h2>சிறப்பு கண்காணிப்பு</h2><p>
</p><p>
மேலும், இந்தக் கப்பல்கள் தொடர்பான நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293245eb-2a20-4337-b849-d9eaa4043108/26-6a93576373cfa.webp' /></p><p>
</p><p>
ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>

மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியதை தொடர்ந்து குறித்த சர்ச்சை கிளம்பியிருந்தது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக TankerTrackersஇணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/many-more-cricketers-voice-support-for-imran-khan-1788038378"></link>
            <id>https://ibctamil.com/article/many-more-cricketers-voice-support-for-imran-khan-1788038378</id>
            <summary type="text">சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
1992 உலகக் கோப்பையை வென்ற தலைவரின் சிகிச்சை குறித்து சமீபத்தில் உணர்ச்சிப்பூர்வமான பொது வேண்டுகோளை விடுத்திருந்த அவரது மகனான முன்னாள் சக வீரர் ஜாவேத் மியாந்தாத்துடன் இணைந்து, இந்த குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p>இதன்படி பாகிஸ்தானின் முன்னாள் அணி தலைவர் மொயின் கான் தற்போது இம்ரானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><h2>உலகக் கோப்பையை வென்ற&nbsp;தலைவர் </h2><p>

1992-ல் இம்ரானின் தலைமையிலான உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த மொயின், தனது தலைவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததோடு, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d62bcbf-46b8-4de3-a4fa-a44aeac074f3/26-6a934cec77483.webp' /></p><p>

இம்ரானுக்கு என்ன செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பியும், அவரை விடுதலை செய்யக் கோரியும் மியாண்டாத் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இவரது தலையீடு அமைந்துள்ளது.</p><p>சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், இயன் சேப்பல், கிளைவ் லாயிட் மற்றும் இலங்கையின் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் சர்வதேச அணித் தலைவர்கள் குழுவும், இம்ரானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078"></link>
            <id>https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.</p><p>

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு</h2><p>அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c297b2-0c45-400d-895f-73b6631763c4/26-6a9301887510a.webp' /></p><p>
</p><p>
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார்.</p><p>
அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T20:37:27+00:00</updated>
        </entry>
    </feed>
