<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-16T20:13:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கடல் எல்லையில் இந்திய கப்பலுடன் மோதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் போர் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pak-warship-involved-collision-indian-ship-1789588462"></link>
            <id>https://ibctamil.com/article/pak-warship-involved-collision-indian-ship-1789588462</id>
            <summary type="text">இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் மீது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்
நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீதே பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. </p><p>
சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இந்தியா கண்டனம்</h2><p>


பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை" காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112159fa-34d8-43ea-8009-1211abb68267/26-6aaaf3efc3fbd.webp' /></p><p> 

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><p>

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T19:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹமாஸின் முக்கிய தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hamas-commander-killed-in-khan-younis-1789581117"></link>
            <id>https://ibctamil.com/article/hamas-commander-killed-in-khan-younis-1789581117</id>
            <summary type="text">2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>கடந்த வாரம் தெற்கு காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ஜிஹாத் சமீஹ் மஹ்மூத் இஸ்மாயில் என்பவரே கொல்லப்பட்டதாக IDF கூறியுள்ளது.</p><p></p><h2>&nbsp;இஸ்ரேல் இராணுவம்&nbsp;</h2><p> </p><p>அவர் ஹமாஸின் நுக்பா (Nukhba) சிறப்புப் படையில் குழுத் தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bdcc93-47cc-4384-afb0-908ddbda1d51/26-6aaaed59ae116.webp' /></p><p>
</p><p>
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய இஸ்மாயில், நிரிம் சமூகத்திற்கு அருகே எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பீரங்கி படைக் குழுவுடன் நடைபெற்ற மோதலில் பங்கேற்றதாக IDF தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த படைக் குழுவில், தளபதி ஓமர் மாக்சிம் நியூட்ரா, (21), தளபதி

சார்ஜென்ட் ஷகெட் டஹான், (19), ஓட்டுநர்

சார்ஜென்ட் நிம்ரோட் கோஹென், (19), துப்பாக்கி இயக்குநர்

சார்ஜென்ட் ஓஸ் டேனியல், ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

நியூட்ரா மற்றும் டேனியலின் உடல்களை கடத்திச் சென்றதிலும், கோஹெனை உயிருடன் காசாவுக்கு கடத்திச் சென்றதிலும் இஸ்மாயில் பங்கேற்றதாக IDF கூறுகிறது.</p><p></p><h2>&nbsp;இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்</h2><p> </p><p>டஹான் அந்த மோதலில் கொல்லப்பட்டதுடன், அவரது உடலும் தனியாக காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி போரின்போது, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதில் இஸ்மாயில் ஈடுபட்டதாக IDF தெரிவித்துள்ளது.</p><p>

சமீபத்தில், போர் நிறுத்தத்தை “முறையாக மீறும் வகையில்” இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் IDF தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T19:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590"></link>
            <id>https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலேயே விபத்துசம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

இதன்போது அதிவேகமாக வரும் காரானது முதலில் ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு வருவதோடு, அந்த திசையில் திரும்பிய மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதவது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&amp;show_text=false&amp;width=560&amp;t=0" width="560" height="316" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><h2>காவல்துறையின் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3ea4751-070a-4ace-b27c-98a22e724ad3/26-6aaae4d08bc3d.webp' /></p><p>
</p><p>
காரணம் கோபத்தில் சிலர் விபத்து ஏற்பட காரணமான வாகனத்தை தாக்கி எரிப்பதற்க்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதனை தடுக்கும் முகமாகவே காவவல்துறை பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T18:49:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா புனிதத் தலத்தின் மீது ஹவுதிக்கள் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-launch-drone-attack-holy-site-of-mecca-1789579794"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-launch-drone-attack-holy-site-of-mecca-1789579794</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> 
புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.
</p><p> இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>யாத்ரீகர்களின் பாதுகாப்பு</h2><p>
</p><p>புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96377a06-35bb-4ca6-b58d-b20690c8b946/26-6aaad38545f44.webp' /></p><p> </p><p>
மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய ராணுவம் அறிவித்திருந்தது.</p><p> 
எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு "அருவருப்பான பொய்" எனவும் விளக்கம் அளித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T17:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : அதிகாலைவேளை அதிநவீன ட்ரோனை அழித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-downs-52nd-us-mq-9-drone-south-of-iran-1789578668"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-downs-52nd-us-mq-9-drone-south-of-iran-1789578668</id>
            <summary type="text">இன்று (16)புதன்கிழமை அதிகாலை கெஷ்ம் (Qeshm) தீவுக்கு மேலே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 52-வது MQ-9 ட்ரோனை (ஆளில்லா விமானம்) இஸ்லாமிய புரட்சிகர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (16)புதன்கிழமை அதிகாலை கெஷ்ம் (Qeshm) தீவுக்கு மேலே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 52-வது MQ-9 ட்ரோனை (ஆளில்லா விமானம்) இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) இடைமறித்து அழித்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
IRGC-யின் மக்கள் தொடர்புத் துறையின் தகவலின்படி, ஈரானின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தபோது, ​​புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:29 மணிக்கு, IRGC-யின் விண்வெளிப் படையின் புதிய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பால் இந்த அமெரிக்க MQ-9 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.</p><h2>52-வது அமெரிக்க MQ-9 ட்ரோன்&nbsp;</h2><p>

மோதலின் போது அழிக்கப்பட்ட 52-வது அமெரிக்க MQ-9 ட்ரோன் இதுவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dde52a1-45ef-41ca-9d12-85e1d367a21d/26-6aaacfa170dbb.webp' /></p><p>
</p><p>
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணித்த போரின் போது, ​​லூகஸ் (Lukas), ஹெர்ம்ஸ் (Hermes), MQ-1 மற்றும் MQ-9 ரகங்கள் உட்பட நூற்றுக்கணக்கான விரோத ட்ரோன்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி ஐவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துளனர்.

இந்த சம்பவம் இன்று (16.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய அலுத்மாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p>விபத்து நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட கார் மூன்று மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மட்டக்குளிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T16:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலையிலிருந்து பாய்ந்து கால்நடை மருத்துவரை பதம் பார்த்தது சிறுத்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/veterinary-surgeon-attacked-by-leopard-1789575721"></link>
            <id>https://ibctamil.com/article/veterinary-surgeon-attacked-by-leopard-1789575721</id>
            <summary type="text">கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது பாய்ந்து தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது பாய்ந்து தாக்கியதால் ஒரு திகிலூட்டும் அனுபவத்தை எதிர்கொண்டார்.</p><p>ரந்தெனிகல கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அகலங்க பினிதெனிய, அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்வதற்காக வலையை நெருங்கியபோது, ​​அது வலையிலிருந்து விடுபட்டு அவர் மீது பாய்ந்து தாக்கியதுடன் காட்டுக்குள் ஓடி மறைந்தது. </p><h2>கால்நடை மருத்துவருக்குச் சிறு காயங்கள்</h2><p>இச்சம்பவத்தில் கால்நடை மருத்துவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd13df6-3afb-4a3d-a095-15030b4c80f6/26-6aaac4ed767e2.webp' /></p><p>
</p><p>
வலையில் சிக்கியிருந்த அந்தச் சிறுத்தை நன்கு வளர்ந்த விலங்கு என்றும், வலையில் சிக்கியபோது அதற்குப் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். </p><p>அது நல்ல உடல்நலத்துடன் இருந்ததோடு, வலையிலிருந்து விடுபட்டுச் செல்லும் அளவுக்கு வலிமையுடனும் இருந்தது.&nbsp;</p><p>images credit daily mirror</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T16:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான போர் : சீனாவிலிருந்து ஈரான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-desire-continue-conflict-with-us-iran-minister-1789572526"></link>
            <id>https://ibctamil.com/article/no-desire-continue-conflict-with-us-iran-minister-1789572526</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானின் போரில், முதன்மையானவராகக் கருதப்படும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு முறைப் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார்.</p><h2>மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை&nbsp;</h2><p>&nbsp;இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை இன்று ( 16) நேரில் சந்தித்த அராக்சி வளைகுடா போர் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c3d004-4267-41df-8922-2bb48c8eacc9/26-6aaab9c66b24f.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஓமான் உடன் ஒப்பந்தம்</h2><p>
</p><p>
அத்துடன், இந்தச் சந்திப்பில் அமெரிக்கா உடனான மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை எனவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமான் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e272bc71-9dc3-497d-95b6-7dc5050bfa34/26-6aaab9c5b1225.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருதரப்பும் இணைந்து மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என சீன அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்குற்றம் : வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டது 25 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321"></link>
            <id>https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321</id>
            <summary type="text">சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொசோவோ போர் குற்றங்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.</p><p>1990-களில் சேர்பியாவிலிருந்து அப்பகுதி வன்முறை வழியில் பிரிந்தபோது, ​​இன ரீதியாக அல்பேனியர்களுக்கான 'கொசோவோ விடுதலைப் படையின்' (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்து கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களை இழைத்ததற்காக, 58 வயதான தாச்சிக்கு இன்று புதன்கிழமை அன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><h2>தாச்சி குற்றவாளி</h2><p>நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள 'கொசோவோ சிறப்பு மன்றம்' (KSC), மோதலின் போது KLA அமைப்பால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் சேர்பியப் பாதுகாப்புப் படைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாச்சி குற்றவாளி என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/588176bd-f46d-49c5-9b94-a7be17809ef5/26-6aaa9dbfb677a.webp' /></p><p>எனினும் தாச்சி தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுதலித்தார்.

சூட் மற்றும் டை அணிந்திருந்த அவர், தலைமை நீதிபதி சார்லஸ் ஸ்மித் தண்டனை விவரங்களை வாசித்தபோது அமைதியாக நின்றிருந்தார்.
</p><p>
KLA அமைப்பின் முன்னாள் மூத்த தளபதிகள் மூவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z8NywXpZrYo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/terror-in-iran-plane-midair-cabin-roof-collapses-1789570538"></link>
            <id>https://ibctamil.com/article/terror-in-iran-plane-midair-cabin-roof-collapses-1789570538</id>
            <summary type="text">ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் பயணித்த செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம்,பறப்பில் ஈடுபட்ட சில நிமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் பயணித்த செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம்,பறப்பில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தீவிர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
</p><p>


 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் சக்கரத்தின் டயர் தடம் கழன்று விழுந்தது. இதனால் விமானத்தின் என்ஜின் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது.&nbsp;</p><h2>கடும் அதிர்வுகளுக்கு உள்ளான&nbsp;விமானம்</h2><p>நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பினர்.


விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உடைந்து சரிந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX</p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2099883286906478737?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் காரணமாக விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரிந்தன. மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் கூரை பாகங்களும் பயணிகள் மீது விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
</p><p>

விமானிகளின் துரிதமான செயல்பாட்டால், விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:21:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/modern-cardiology-complex-for-trincomalee-hospital-1789567720"></link>
            <id>https://ibctamil.com/article/modern-cardiology-complex-for-trincomalee-hospital-1789567720</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவின்
பங்கேற்புடன் இன்று 16ஆம் திகதி நடைபெற்றது.
</p><p>
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில்,
இருதய நோய்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் அவசரகால மருத்துவப்
பராமரிப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><h2>மக்களுக்கான பல்வேறு வசதிகள்</h2><p>&nbsp;மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு, கெத் லேப், ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள்,
நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு
அமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, கிழக்கு
மாகாணத்தின் தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களும் தங்களுக்கு அண்மையிலேயே
உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5017efee-c731-4b57-9e7f-eb3815323d59/26-6aaaa70185a0e.webp' /></p><p>&nbsp;குறிப்பாக, அவசர இருதய சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம்,
நோயாளர்களை தூர மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும்
குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் JICA மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன்
உதவி உள்ளிட்ட நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவை</h2><p>இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஜப்பான் தூதரக
அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58244791-c1c4-4fb7-b7bb-3ef3c5c010ac/26-6aaaa70256136.webp' /></p><p>
</p><p>
திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக
கருதப்படும் இருதய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டம், கிழக்கு
மாகாண சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T14:26:13+00:00</updated>
        </entry>
    </feed>
