<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-13T06:06:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[243 பயணிகளுடன் மாயமான கப்பல்! தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-carrying-243-passengers-disappeared-1789276799"></link>
            <id>https://ibctamil.com/article/ship-carrying-243-passengers-disappeared-1789276799</id>
            <summary type="text">




இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று இன்று (13) காலை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>




இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று இன்று (13) காலை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

திடீரென நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கப்பலின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன கப்பலைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>கடல்வழிப் போக்குவரத்து</h2><p>
</p><p>
சுரபாயா நகரத்திலிருந்து பன்ஜார்மாசின் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643f7b3c-a33f-4e73-b5cf-169404e91518/26-6aa6369b51957.webp' /></p><p><i>Image Credit: firstpost</i></p><p>
</p><p>
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில், கடல்வழிப் போக்குவரத்து முக்கியப் பயண முறையாக விளங்குகிறது.</p><h2>பாதுகாப்பு தரநிலைகள்</h2><p> </p><p>

இந்நிலையில், விமானப் பயணத்திற்கான செலவு அதிகம் என்பதால், பொதுமக்கள் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்திலான கடல்வழிப் பயணங்களையே தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa851124-a1a1-4b66-a4a2-ccbb08394a57/26-6aa6369c05ed0.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததால், இத்தகைய ஆபத்தான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T05:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-workers-remittances-exceed-usd-6-bn-1789276608"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-workers-remittances-exceed-usd-6-bn-1789276608</id>
            <summary type="text"> கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடடுள்ளது.அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p> கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடடுள்ளது.</p><p>அதன்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்&nbsp;இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைக் காட்டுவதாகக் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>680.8 மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

 

கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f8336d-a4da-4189-a0fc-4247d49ad3e7/26-6aa6376c519ee.webp' /></p><p>

 

இதற்கிடையில், ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், கடந்த 2025 இன் முதல் 8 மாதங்களுக்குக் கிடைத்த மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T05:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-final-decision-regarding-the-death-penalty-1789275434"></link>
            <id>https://ibctamil.com/article/no-final-decision-regarding-the-death-penalty-1789275434</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.</p><p>அத்துடன் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதற்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்&nbsp;இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
பொலன்னறுவையில் நேற்று (12) நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள்&nbsp;</h2><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9a73ed-97cc-4c94-a88e-a0b9e6eb7ed3/26-6aa62fa594ce0.webp' /></p><p> வெளிநாடுகளில் இருந்து கொண்டு, உள்நாட்டில் குற்றக் குழுக்களை இயக்கிய 70க்கும் மேற்பட்டோர் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>அதேவேளை, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சமூகத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இருந்த போதிலும், அது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை“ எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T05:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக் கட்சியின் பேரணிக்கு பதிலடி! அநுராதபுரத்தில் இன்று களமிறங்கும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akd-address-two-npp-rallies-in-anuradhapura-today-1789273967"></link>
            <id>https://ibctamil.com/article/akd-address-two-npp-rallies-in-anuradhapura-today-1789273967</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அனுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ள இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அனுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ள இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் "மக்கள் ஆட்சி – இரு வருட வலிமை, அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற பிரச்சாரப் பேரணித் தொடரின் ஒரு பகுதியாக குறித்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொதுக்கூட்டங்கள்</h2><p>
</p><p>
அதன்படி, முதலாவது பொதுக்கூட்டம் கஹடகஸ்கிலியவில் உள்ள வாராந்தச் சந்தை மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39c07f04-0e17-4ee5-82de-937bd301c42d/26-6aa6299bed2b7.webp' /></p><p>

இரண்டாவது பொதுக்கூட்டம் நொச்சியாகமவில் உள்ள சிங்காரகம மைதானத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
</p><p>
அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது "ஜன சடன" பேரணியை நடத்திய மறுநாளே இந்தப் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T04:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணிப்புறக்கணிப்பில் குதிக்கப்போகும் தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-unions-to-launch-strike-1789271868"></link>
            <id>https://ibctamil.com/article/railway-unions-to-launch-strike-1789271868</id>
            <summary type="text">தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் அந்த திணைக்கள தொழிற்சங்கங்கள்&amp;nbsp;பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் அந்த திணைக்கள தொழிற்சங்கங்கள்<b>&nbsp;</b>பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அந்த திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய தொடருந்து பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

 

அவ்வாறு இல்லாவிட்டால், பல தொடருந்து தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை (17) ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை நிச்சயமாக முன்னெடுப்போம் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைக்கு அழைப்பு</h2><p>
 

இந்தப் பணிப்புறக்கணிப்புக்காக வரலாற்றில் முதன்முறையாக தொடருந்து பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7f5d2c-9498-4cf9-a33f-14ab77e3ff71/26-6aa6269882f01.webp' /></p><p>
</p><p>
 

தொடருந்து தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமையால், தமது சங்கமும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹீந்தெனிய, பட்டிபொட ஐக்கிய தொடருந்து பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.ரணதுங்க தெரிவித்தார்.</p><p>

 

எனினும், தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் தொடருந்து தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதற்கமைய, நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என தொடருந்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T04:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து விற்பனை! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-producing-fake-driving-licenses-1789271212"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-producing-fake-driving-licenses-1789271212</id>
            <summary type="text">போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பொரலஸ்கமுவ, வேரஹெர பகுதியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இந்தச் சட்டவிரோத வலையமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p> 

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அசல் அனுமதிப்பத்திரங்களை போன்றே போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து, அவற்றை ரூ. 40,000 முதல் ரூ. 45,000 வரையிலான தொகைகளுக்கு இவர்கள் விற்பனை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6232008-d1ac-4ce0-9d50-a85cec1d74f3/26-6aa6202bbfcae.webp' /></p><p>
</p><p>
அதன்படி, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
காவல் துறையினரின் கூற்றுப்படி, ஒரு சந்தேக நபர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலும், மற்றொருவர் வேரஹாரவில் உள்ள ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் ஒன்றிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்கள் தும்மலசூரிய, யதம்வெல மற்றும் பொரலஸ்கமுவ, கட்டுவாவல ஆகிய இடங்களைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T04:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அனுராதபுர பேரணியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slfp-ignored-at-the-slpp-s-anuradhapura-rally-1789270267"></link>
            <id>https://ibctamil.com/article/slfp-ignored-at-the-slpp-s-anuradhapura-rally-1789270267</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
பதுளையில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.</p><p></p><h2>துமிந்த திசாநாயக்கவிற்கு அழைப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க அநுராதபுரத்திலேயே உள்ளார். எனவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மாத்திரமே என்னால் அங்கு செல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83fb4ead-adf0-4f3a-a843-0325d5e22d90/26-6aa61c060c462.webp' /></p><p> கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விக்கப்படாத நிலையில், என்னால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது“ என தெரிவித்திருந்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T03:53:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-with-weapons-1789268327"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-with-weapons-1789268327</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் ரக துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு மற்றும் ஆறு BMG ரக தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் ரக துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு மற்றும் ஆறு BMG ரக தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கந்தநெகெதரவின் வலக்கும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf6cb3d-f233-404e-a431-cd9d4c32899f/26-6aa6146bd01c2.webp' /></p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் குளியாபிட்டிய, வலக்கும்புரமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T03:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டளையை மீறிச் சென்ற வான் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-fired-on-van-who-violated-the-order-1789266261"></link>
            <id>https://ibctamil.com/article/police-fired-on-van-who-violated-the-order-1789266261</id>
            <summary type="text">
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற வான் மீது நேற்றிரவு (12) காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கம்பஹா பகுதியில் வான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற வான் மீது நேற்றிரவு (12) காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
கம்பஹா பகுதியில் வான் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், வெலிவேரிய காவல் நிலைய அதிகாரிகள் நேற்று சிறப்பு நடவடிக்கை ஒன்றை செயற்படுத்தியுள்ளனர்.</p><p>

குறித்த வான் வேன் உடுகம்போல நோக்கிச் செல்வதை உறுதிசெய்த காவல்துறையினர், அதை ஜீப்பில் ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.</p><p></p><h2>அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து</h2><p>
</p><p>
தான் பின்தொடரப்படுவதை அறியாத ஓட்டுநர், உடுகம்போல வீதியிலுள்ள மல்வத்தை சந்திப்பில் வாகனத்தை நிறுத்திய நிலையில், அப்போது ஜீப்பிலிருந்து இறங்கிய அதிகாரிகள் வானை சோதனையிட முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40b5ec96-166c-4ab7-a64b-e95a567297ac/26-6aa60d2e406dc.webp' /></p><p>
</p><p>
இதன்போது, ஓட்டுநர் வானை முன்னும் பின்னுமாக வேகமாக இயக்கி, அருகிலிருந்த பிற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், காவல் துறை ஜீப் மீதும் மோதி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
</p><p>
 இதனால் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், காவல்துறையினர் வான்ன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்நிலையில், சந்தேகநபரான காயமடைந்த ஓட்டுநர் காவல் துறை பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8a604f-00a6-4741-9dba-e24254a3ac12/26-6aa60d2eee05e.webp' /></p><p>

அதனை தொடர்ந்து, வானில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T02:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF உடனான புதிய ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plan-to-conclude-transactions-with-imf-srilanka-1789260538"></link>
            <id>https://ibctamil.com/article/plan-to-conclude-transactions-with-imf-srilanka-1789260538</id>
            <summary type="text">தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) முடிவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம் என அரசாங்கம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) முடிவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், நாட்டைப் பொருளாதார ரீதியாகச் சரிவடையாமல் காக்கும் திட்டத்தின் மூலம் தற்போதைய அரசாங்கம் இதுவரை செயல்பட்டு வந்தபோதிலும், அதற்கு அப்பால் சென்று அதுபோன்ற மற்றொரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் நோக்கம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்படி, தற்போதைய ஒப்பந்தம் காலாவதியான பிறகு, கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை, அரசாங்கத்திற்கே உரித்தான ஒரு சுதந்திரமான வழிமுறையின் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.</p><p></p><h2>விவசாய சமூகத்தினருக்கு நிவாரணம்</h2><p>
</p><p>
இந்த விவகாரம் அரசாங்கத்திற்குள் பலமுறை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e54bdb3-7d32-4068-9636-cc090801d2ed/26-6aa5f384f1690.webp' /></p><p>
</p><p>
பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு, குறிப்பாக விவசாய சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் ஒரு கடுமையான தடையாக இருப்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
அந்தக் கலந்துரையாடல்களின் போது, ​​தற்போதைய திட்டம் குறிப்பிட்ட காலத்தின் முடிவில் தானாகவே காலாவதியாக அனுமதிக்கப்படும் என்றும், அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் உயர் மட்ட அரசு தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
ஏழாவது தவணையை விடுவிப்பது தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்கள் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் தற்போது நடைபெற்று வருகின்றன. </p><p>மேலும், மொத்தம் எட்டு தவணைகளைக் கொண்ட இந்த சர்வதேச நாணய நிதியத் திட்டம், மார்ச் 2027-இல் அதிகாரப்பூர்வமாக முடிவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T02:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலின் கைதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் அரசியல் பேரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789263552"></link>
            <id>https://ibctamil.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789263552</id>
            <summary type="text">தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாக, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாக, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு தொழிலதிபருடன் அரசியல் பேரம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு பேரங்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த பேரம் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர்&nbsp;</h2><p>
</p><p>
எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு பேரம் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2345bd14-9e9e-4f66-ad24-ad14d098bb93/26-6aa5fec2e5e50.webp' /></p><p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது.</p><p>ஆனால் இப்போது அந்தப் பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு பேரங்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த பேரம் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T01:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திசைகாட்டியை குற்றம் சாட்டுவதாக நினைத்து திசைமாறும் சுயேட்சையின் திசை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thamilargalai-adamanam-vaitha-suyetchai-mp-1789262755"></link>
            <id>https://ibctamil.com/article/thamilargalai-adamanam-vaitha-suyetchai-mp-1789262755</id>
            <summary type="text">&quot;தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை”&amp;nbsp; தேர்தல் காலத்தில் இவ்வாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதர...</summary>
            <content type="html"><![CDATA[<p>"தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை”&nbsp; தேர்தல் காலத்தில் இவ்வாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு கோரியவர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியத் திசைகாட்டியை எதிர்ப்பதாக திசைமாறியுள்ளது அண்மைகாலமாக.</p><p>தமிழில் தென்னிலங்கையின் முன்னால் எம்.பிக்களை படுகொலையாளிகள் எனவும், சிங்கள மொழியில் “மெத்திதுமா” என்ற புகழாரம் சூட்டுவதும் தமிழ் தேசிய அரசியலை வலுவிலக்க செய்கிறது.</p><p>ஊடக வெளிச்சத்தில் உமிழப்படும் வார்த்தைகள் வேறு, நிஜ அரசியல் களத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வேறு என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.</p><p>நாளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், அவரிடமும் நான் செல்வேன் என்று மிக வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கொள்கை, கோட்பாடு என்பதைத் தாண்டி, ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களின் காலடியில் தஞ்சமடைவதுதான் இவ்வளவுகாலமும் கட்டிக்காத்த தமிழ் தேசிய அரசியலா?</p><p>அரசியலில் நிலைப்பாடுகள் மாறுவது புதிதல்ல. ஆனால், தேர்தலுக்கு முன் மக்களிடம் முன்வைக்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளுக்கும், தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உருவாகும்போது, அது அரசியல்வாதியின் கொள்கை மாற்றமா அல்லது சந்தர்ப்பவாத அரசியலா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
</p><p>அவரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளும் இதே கேள்வியை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
தமிழ் தேசிய அரசியலின் பாரம்பரியக் கட்சிகளையும் தலைமைகளையும் கடுமையாக விமர்சித்து, மாற்று அரசியல் பாதையை உருவாக்குவேன் எனக் கூறிய ஒருவர், இன்று தமிழ் மக்களின் அரசியல் உணர்வுகளுடன் முரண்படக்கூடியதாகக் கருதப்படும் தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தோன்றுவது எந்த வகையான அரசியல் மாற்றம்?</p><p>
</p><p>அத்தனை பலம் வழங்கி அநுர அரசை வெற்றிபெறசெய்த வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு எதிராக இன்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.</p><p>இருந்தும் இந்த குரல் நீதிக்கான, உரிமைக்கான, கண்ணீருக்கான பதில்களை தேடுவதை தாண்டி அதற்கு காரணமானவர்களின் காலடியில் சென்று விழுந்துள்ளது.</p><p>அரசியல் என்பது ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம்.
</p><p>
ஆனால், ஒரு அரசியல்வாதி தனது நிலைப்பாட்டை மாற்றும்போது, அந்த மாற்றத்துக்கான காரணத்தை மக்களுக்கு விளக்குவதும் அரசியல் பொறுப்பாகும்.</p><p>அவரின் அரசியல் பயணம் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. எனவே, அவரது தற்போதைய அரசியல் நகர்வுகளை வைத்து இறுதியான தீர்ப்பொன்றை வழங்குவது அவசரமானதாக இருக்கலாம்.
</p><p>
ஆனால், அவர் தேர்தல் காலத்தில் முன்வைத்த அரசியல் கருத்துகளுக்கும் தற்போது வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான மாற்றம் குறித்து கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.</p><p>

மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியின் மிகப்பெரிய பலம் அவரது பதவியல்ல. அவரைத் தெரிவுசெய்த மக்களின் நம்பிக்கையே.
</p><p>
அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியம்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T01:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-killed-attack-un-strongly-condemns-1789259485"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-killed-attack-un-strongly-condemns-1789259485</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இவ்வாறான வன்முறைக்கு பலியாகக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்கள் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>
</p><p>
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f57a15-0842-419e-8643-1949e9ac95c7/26-6aa5eedf9016a.webp' /></p><p>நேற்று முன்தினம் அதிகாலை முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் CCTV கருவிகளில் பதிவாகியிருந்தது.</p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>

எனினும், தெஹிவளை சாஸ்த்ரானந்த கல்லூரியில் கல்வி கற்று வந்த 11 வயதான துமிந்து கிஹான் மற்றும் 17 வயதான கசுன் ரஷ்மிக ஆகிய இரு மாணவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
</p><p>
அவர்களது 55 வயதான தந்தை கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கான நீதி விசாரணைகளை வலியுறுத்தி இன்றும் யாழில் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/judicial-inquiry-into-chemmani-1789253818"></link>
            <id>https://ibctamil.com/article/judicial-inquiry-into-chemmani-1789253818</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணத்தில் இன்றும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப்
பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள்
குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச
மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே
இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
</p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை
ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா
பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.</p><p></p><h2>பேரணிக்கு ஆதரவு&nbsp;</h2><p>

இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d4c72b0-aae3-4a85-965b-36d7ece53aee/26-6aa5d8bc5cdc2.webp' /></p><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள்
கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை
வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாடை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்! மகிந்தவின் மேடையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-government-shields-rishad-from-allegations-1789258368"></link>
            <id>https://ibctamil.com/article/anura-government-shields-rishad-from-allegations-1789258368</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என&nbsp; தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>நாட்டையும் இனத்தையும் பாதுகாப்பதற்காக போராடிய தரப்பினரை ‘கறுப்பு அரசாங்கம்’ என சித்தரித்துவரும் தற்போதைய அரசாங்கம், தமக்கு ஆதரவளிக்கும் மோசடியாளர்களைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ‘ஜன சத்தன’ மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள்</h2><p>

அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbe960c-91ac-4ee7-be3b-122b7b36914a/26-6aa5ea8281832.webp' /></p><p>
</p><p>
“அனுராதபுரத்தில் இருந்த லால் காந்த வேகமாக மூன்று மாடி வீடுகளை கட்டிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் ‘கறுப்பு அரசாங்கத்தின்’ ஒரு பகுதியல்ல.</p><p> கிரிப்டோ வசந்த போன்றவர்களும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் எவரும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.</p><p> இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
</p><p>
அவ்வாறு பெறப்பட்ட பணத்துக்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

வடக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்துக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புலம்பெயர் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
