<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-14T22:16:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53251a8b-8961-4e3e-9b0a-d686f57765f8/26-6aa837962d7c0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T21:49:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய சமூகத்தை சீர்குலைக்க திட்டமிடும் அமெரிக்க பொருளாதாரத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-us-plans-to-destabilize-iranian-society-1789413759"></link>
            <id>https://ibctamil.com/article/the-us-plans-to-destabilize-iranian-society-1789413759</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>ஈரானில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஊடாக ஈரானில் சமூக வீழ்ச்சியை ஏற்படுத்துவதே அதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈரானியர்கள் நாட்டின் எதிரிகளுடன் இணைந்து செயல்பட்டு, ஈரானுக்குள் உள்ள மக்களிடையே குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க திறைசேரி</h2><p>
அமெரிக்க திறைசேரி கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி “Operation Economic Outcast” என்ற நடவடிக்கையை அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c119c591-02aa-442e-8d92-03601273e1d3/26-6aa8498155fe5.webp' /></p><p>ஈரானின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைத் துண்டிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைகள் மற்றும் கடுமையாக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் வெளிநாட்டு நாணய அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் விளைவாக ஈரானிய பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானிய அரசாங்கம் எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் தொடர்பில் பெசெஷ்கியானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T19:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மறுதினம் வடக்கிற்கு வருகிறார் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868"></link>
            <id>https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868</id>
            <summary type="text">அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.


அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.</p><p>&nbsp; ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p> 

</p><h2>அடிக்கல் நடும் நிகழ்வு</h2><p>இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/536f88d0-aa92-4713-8cdb-8c132c436d08/26-6aa836480f411.webp' /></p><p>
</p><p>
இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wJDK9pWylLI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்த்த தருணம்! கந்தையா பாஸ்கரன் நெகிழ்ச்சிப் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-spine-tingling-moment-from-the-movie-porattam-1789408013"></link>
            <id>https://ibctamil.com/article/a-spine-tingling-moment-from-the-movie-porattam-1789408013</id>
            <summary type="text">ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த மண்ணை நேசித்து வந்திருக்கிறேன் என ஐ.பி.சி ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.</p><p>

ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும், “ஆரம்பத்தில் இத்திரைப்படம் மில்லர் (Miller) என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. </p><p>

கதையைக் கேட்டபோதே இதன் முன்னோட்டக் காட்சியால் நான் மெய்சிலிர்த்துப் போனேன். </p><p>

நான் இதனைத் தயாரிக்கிறேன் என்றவுடன் என் மீது வஞ்சமம் பொறாமையும் கொண்ட சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தனர்.
</p><p>
ஆனால், அந்த விமர்சனங்கள் என்னைச் சோர்வடையச் செய்யாமல் மேலும் ஊக்கப்படுத்தின ” எனவும் கூறினார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/szfvfNdMSGg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சில் இறங்கியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626"></link>
            <id>https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626</id>
            <summary type="text">சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் அந்த அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>


இதன்படி ஹவுத்தி அமைப்பினருடன் அமெரிக்க அரசாங்கம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>முக்கிய தீவை கைப்பற்றிய ஹவுத்திகள்</h2><p>கான்சாஸ் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், பாப்-அல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணையில் உள்ள மாயூன் தீவை ஹவுத்திகள் கைப்பற்றியிருப்பது குறித்துத் தான் கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc7462a-a6cd-488b-b82a-922f0e7c53cc/26-6aa8206ca5235.webp' /></p><p>
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் "இப்பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற தரப்பினர்" ஆகியோருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வான்ஸ் குறிப்பிட்டார்.
</p><p>

இதேவேளை ஏமனில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 93,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T17:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலான ஹவுதிக்களின் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614</id>
            <summary type="text">ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்திய போரின் போது, ​​8.1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பாப் அல்-மண்டேப் வழியாகக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p> எனினும் ஹவுதிக் படைகள் சவூதி கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தியபோது, ​​உலகின் பிற பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடுக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>செங்கடல் வழியாக விநியோகம்</h2><p>எகிப்திய சூயஸ் கால்வாயால் பெரிய எண்ணெய்க் கப்பல்களை உண்மையில் கையாள முடியாது. அதனால் செங்கடல் வழியாக விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0194e49-9c10-4040-86b6-8db735007ae9/26-6aa82d9951aa9.webp' /></p><p> இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எண்ணெய் போக்குவரத்தின் மீது ஒரு தாக்குதலை தற்போது உருவாக்கியுள்ளது.</p><p>இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து இது தவிர்க்க முடியாமல் துண்டிக்க முடியாத ஒரு செயல்முறையாகும் என கூறப்படுகிறது.</p><p>
மிக முக்கியமான சோதனைச் சாவடிகளான ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மண்டேப் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள திருப்பமானது உலகலாவிய பொருளாதாராத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270"></link>
            <id>https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270</id>
            <summary type="text">வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில், அந்த நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>
கார்டிஃப் நகரில் இன்று நடைபெற்ற இந்த முக்கிய மாநாட்டில், பிளைட் சிம்ரு கட்சித் தலைவர் ருன் அப் ஐயோர்வெர்த், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சித் தலைவர் ஜோன் ஸ்வின்னி மற்றும் சின் ஃபெயின் துணைத் தலைவர் மிச்செல் ஓ’நீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
வெஸ்ட்மின்ஸ்டர் அரசு, “வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தயாரித்து, திட்டமிட்டு, அதனை எளிதாக்க வேண்டும்” எனக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>ஐரோப்பா - சர்வதேச ஒத்துழைப்பு</h2><p>
இவர்கள் தங்களது அரசாங்கங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b829c81c-18b7-4195-9c40-27deb6f31948/26-6aa82265949f9.webp' /></p><p>மேலும், ஐரோப்பா, சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளன.</p><p>
மே மாதம் நடைபெற்ற செனட் தேர்தலில் பிளைட் சிம்ரு கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செல்டிக் நாடுகளின் சுதந்திர இயக்கங்களில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. </p><p>இதன் மூலம் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகள் அரசாங்க அதிகாரத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>இங்கிலாந்தின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.</p><p></p><h2>எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு&nbsp;</h2><p> </p><p>எனினும், பெல்ஃபாஸ்ட், கார்டிஃப் மற்றும் எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு அரசாங்கங்களை அவர் எவ்வாறு அணுகப் போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவான நிலைப்பாடு வெளியாகவில்லை என பிரித்தானிய அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2b8733-9d86-4022-99f7-f0c4d59abc1b/26-6aa82264d8545.webp' /></p><p>
ஸ்கொட்லாந்து சுதந்திரம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பைப் போன்ற மற்றொரு வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு தற்போது இல்லை என வலியுறுத்தி, பர்ன்ஹாம் கடந்த வாரம் ஜோன் ஸ்வின்னிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதற்கான சாத்தியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்துக்கான தனது சமீபத்திய பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து ஒன்றிணைவதைத் தான் விரும்புவதாகவும், அது “இப்போது நடந்தாலும் நல்லதே” என்றும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:14:16+00:00</updated>
        </entry>
    </feed>
