<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-20T04:46:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களில் டெங்குவை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டல் : கல்வி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/guidelines-to-control-dengue-in-universities-moe-1784520247"></link>
            <id>https://ibctamil.com/article/guidelines-to-control-dengue-in-universities-moe-1784520247</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.</p><p>அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு இன்று (20) காலை 10 மணிக்கு உயர் கல்வி அமைச்சில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம் என&nbsp;உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>மூடப்பட்ட&nbsp;பல்கலைக்கழகங்கள்</h2><p>இதேவேளை அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d133078-f0f7-48da-a7cd-55cb36870b75/26-6a5da421cdb9a.webp' /></p><p>அத்துடன், இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 53 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் சபாநாயகர் கபில கன்னங்கர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் பரபரப்பு - முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்: தி.மு.க. MLA கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmk-mla-arrested-over-threatening-tn-cm-vijay-1784519853"></link>
            <id>https://ibctamil.com/article/dmk-mla-arrested-over-threatening-tn-cm-vijay-1784519853</id>
            <summary type="text">முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் தெரியவருகையில், கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது.</p><h2>முதலமைச்சருக்கு மிரட்டல்</h2><p>அந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது</p><p>திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;இதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். </p><p>ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் வழங்கினர்.</p><p>இந்த நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>ஆதரவாளர்கள் கோஷம்</h2><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்&nbsp;மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.&nbsp;</p><p>விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..</p>]]></content>
            <updated>2026-07-20T04:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் மர்ம மரணங்கள் : சர்வதேச விசாரணை கோரும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mysterious-deaths-continue-under-anura-s-rule-1784518609"></link>
            <id>https://ibctamil.com/article/mysterious-deaths-continue-under-anura-s-rule-1784518609</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p>

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.</p><p></p><h2>சர்வதேச விசாரணை&nbsp;</h2><p>
</p><p>எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
</p><p>
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ச என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d36428b-9776-4a00-be77-c7e06691303a/26-6a5d9a80d455e.webp' /></p><p>
</p><p>
தற்போது, முன்னாள் காவல்துறை மா அதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது. இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது, இவற்றில் சந்தேகம் நிலவுகின்றது.</p><p>
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்தில் நீடிக்கும் மர்மம் - மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி கிரியை இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/final-rites-of-ex-igp-cd-wickramaratne-held-today-1784516197"></link>
            <id>https://ibctamil.com/article/final-rites-of-ex-igp-cd-wickramaratne-held-today-1784516197</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.&nbsp;</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்றும், தமது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியாலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94523e2d-4fe6-4b1b-ab08-b0a39e531933/26-6a5d978f7f2e7.webp' /></p><p>சி.டி. விக்ரமரத்னவின் சடலம் மீதான கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், முன்னாள் காவல்துறை மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியும் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

விசாரணைகளுக்கு அமைவாக, அன்னாரின் மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை</h2><p>இதேவேளை முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c5ca59-acaf-4bb7-9e71-8ddb10128e50/26-6a5d99678c8ce.webp' /></p><p>அவர் மரணமடைந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன். அவ்வாறான நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது கூற முடியாது.
</p><p>
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான தீர்மானத்துக்கு வரமுடியும்.
</p><p>
எனினும், முன்னாள் காவல்துறை மா அதிபரின் விடயத்தில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் குறித்த விடயத்தினை வைத்து அரசியல் சுயலாபம் தேடுவதற்கு முயற்சிகின்றன“ என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T03:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Red card ஆல் கலைந்த அர்ஜென்டினாவின் கனவு - கண்ணீர் சிந்திய மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533"></link>
            <id>https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.</p><p>2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் கூடுதல் நேரத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது.</p><p>போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.</p><h2>அணிக்கு பெரும் பின்னடைவு</h2><p> இதற்கிடையே, போட்டியின் கூடுதல் நேரத்தில் (90+3' நிமிடம்) அர்ஜென்டினா வீரர் பெர்னாண்டஸ் முரட்டு ஆட்டம் விளையாடியதால், ரெட் கார்டு காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🎥 What an emotional moment! 🥹😢<br><br>• The legend Lionel Messi cries after the defeat in his final World Cup match. ❌ <a href="https://t.co/EjkVJq29Mb">pic.twitter.com/EjkVJq29Mb</a></p>&mdash; Tiger eye 👁️ (@Tigereye_ball) <a href="https://x.com/Tigereye_ball/status/2078976496576729225?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தில் மிகுந்த உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது. அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்கள் அடித்துள்ளார். எனினும் பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 22 கோல்களுடன் அவரை முந்தியுள்ளார்.</p><p>அர்ஜென்டினா அணியின் தோல்வியைத் தொடர்ந்து உணர்ச்சிவசத்தால் கண்ணீர் சிந்திய மெஸ்ஸியின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.</p><p>ஸ்பெயின் எங்களை விட சிறந்த அணி. அவர்கள் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்” என&nbsp;அர்ஜென்டினா அணித்தலைவர் Lionel Messi</p>]]></content>
            <updated>2026-07-20T02:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-earthquakes-strike-peru-killing-at-least-five-1784511973"></link>
            <id>https://ibctamil.com/article/twin-earthquakes-strike-peru-killing-at-least-five-1784511973</id>
            <summary type="text">பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெருவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பெருவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, முதல் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. </p><p>அதன் பின்னர் சில மணி நேரங்களில் 3.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.</p><p></p><h2>எளிதில் இடிந்து விழும் தன்மை</h2><p>இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை இரவு 9.24 மணிக்கு ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கு-தென்மேற்கே 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab84097-45c7-4a92-8967-ff7acaf58dbf/26-6a5d7fe217bb9.webp' /></p><p>காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>சூபாக்கா நகரில், வீடுகள் பெரும்பாலும் களிமண் செங்கற்களால் கட்டப்படுவதால், அவை எளிதில் இடிந்து விழும் தன்மை கொண்டவையாக உள்ளன.&nbsp;உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு ரீதியாக சேதமடைந்தன.</p><p>

"நிலநடுக்கம் எங்கள் வீட்டை அழித்துவிட்டது. இங்கு பல களிமண் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன," என்று சோங்கோஸ் பாஜோவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடியிருப்புவாசி N தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T01:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மகுடம் சூடிய ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087"></link>
            <id>https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087</id>
            <summary type="text">23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p> அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. </p><p>

இதில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p></p><h2>நான்காவது முறை</h2><p>

நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. 

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. </p><p>

இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/356eb2a5-4f67-43a5-88bb-4434d3f61e94/26-6a5d56cc61c1f.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் அவற்றை கோலாக மாற்றத் தவறின.</p><p>

இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.</p><p> </p><p></p><h2>உலகக் கோப்பை&nbsp;</h2><p>இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.
</p><p>
கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c03ec0b0-18d4-404d-a34c-88793e23ec33/26-6a5d56cd1787a.webp' /></p><p>அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும் ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.
</p><p>
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்: முதியவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-found-dead-in-anuradhapura-pond-1784509963"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-found-dead-in-anuradhapura-pond-1784509963</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

நொச்சியாகம காவல் பிரிவுக்குட்பட்ட அந்தரக்குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் இருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.</p><p>

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b18938-2d2d-4307-be69-905d0c38f6b5/26-6a5d760d23df0.webp' /></p><p>இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதையடுத்துச் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் சினிமா பாணியில் திருட்டு: மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-motorbike-theft-in-batticaloa-1784508785"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-motorbike-theft-in-batticaloa-1784508785</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த கைது நடவடிக்கை நேற்று (19-07-2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மோட்டார் சைக்கிள்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று, அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதைக் ஓட்டிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளைக் கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05750930-b225-4171-837e-1c0a95baf849/26-6a5d7173e469f.webp' /></p><p>

பின்பு குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துக்கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தியுள்ளார்.</p><p>
</p><p>இதன்பின்பு, இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p></p><h2>வாகரையில் விற்பனை</h2><p>

இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும், அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓட்டிப் பார்ப்பதாகத் திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.
</p><p>
இவ்வாறு 2023ஆம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d087de8b-3176-4fed-8448-54b6830b2081/26-6a5d71733f198.webp' /></p><p>இதனையடுத்துக் குறித்த நபரைத் கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளதாகவும், இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784507428"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784507428</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலையை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b7c9347-55ad-495b-9b39-35a4ab5227a6/26-6a5d6c25b3859.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்! ரணில் - சஜித் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-opposition-to-meet-over-judges-retirement-1784504336"></link>
            <id>https://ibctamil.com/article/sl-opposition-to-meet-over-judges-retirement-1784504336</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p><p>

குறித்த கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>அரசியல் தலைவர்கள்</h2><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14413b1-7363-47bf-9243-cd5de91f4fd6/26-6a5d68334e07b.webp' /></p><p>
சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்திற்கு ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p>
நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றைக் கூட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

அதனைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f2b7a55-5d61-4b41-8243-62aa857511bf/26-6a5d68340c914.webp' /></p><p>

இதற்கிணங்க, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்‌சவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: தமிழரசுக்கட்சிக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sambanthan-was-a-curse-to-trinco-anushan-1784502924"></link>
            <id>https://ibctamil.com/article/sambanthan-was-a-curse-to-trinco-anushan-1784502924</id>
            <summary type="text">தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராகச் சம்பந்தனைத் தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்தோடு, தமிழர்களின் காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நடப்பு அரசியல் குறித்து அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356"></link>
            <id>https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. </p><p>அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 நாட்கள்) சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் (தலைகீழ் இயக்கம்) பயணிக்கவுள்ளார்.</p><p>

நீதி மற்றும் கர்மாவின் அதிபதியான சனி வக்ரமடையும் போது, கடந்த காலப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்.</p><p> இந்த 138 நாட்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குச் சவாலாக அமையவுள்ளதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.</p><p>அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசிக்காரர்கள் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் பணியிடத்தில் கூடுதல் அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். </li><li>இதனால் பணிச்சுமை அதிகரிக்கலாம்.</li><li> இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும். </li><li>இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக முடிக்க எச்சரிக்கை மற்றும் கவனமாக திட்டமிடல் அவசியம்.
</li><li>
அலுவலகத்தில் சக ஊழியர்களால் அவர்கள் சில சூழ்ச்சிகளில் சிக்க நேரிடலாம் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம். </li><li>வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும் லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும் இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.</li></ol></td></tr><tr><td>சிம்மம் </td><td><ol><li>சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடலாம். </li><li>வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். </li><li>உங்கள் தொழில் வாழ்க்கையிலும் பல சவால்கள் இருக்கும்.</li><li>மேலும் மக்கள் உங்களிடமிருந்து அதிக வேலையை எதிர்பார்ப்பார்கள் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.</li><li>உங்கள் மேலதிகாரிகளுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம் இதனால் நீங்கள் விரக்தியடைய நேரிடலாம்.</li><li> உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.</li><li> உங்களின் அனைத்து முயற்சிகளிலும் சில தடைகளை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக அடியெடுத்து வைக்கவும்.

</li></ol></td></tr><tr><td>தனுசு</td><td><ol><li>தனுசு ராசிக்காரர்கள் சனிபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் குடும்பப் பொறுப்புகள், தொழில் விஷயங்கள் மற்றும் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளில் அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். </li><li>குடும்பத் தேவைகள் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகள் முக்கியமான தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம். </li><li>அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். </li><li>அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது.</li><li>அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.</li><li> இல்லையெனில் அது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். </li><li>வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:59:52+00:00</updated>
        </entry>
    </feed>
