<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-23T09:23:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-drops-to-rs-340-usd-to-lkr-1784796377"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-drops-to-rs-340-usd-to-lkr-1784796377</id>
            <summary type="text">நேற்றுடன் (22) ஒப்பிடுகையில், இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் குறைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (22) ஒப்பிடுகையில், இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் குறைந்துள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (23.07.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.87 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.59 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66263d81-ac69-4bd3-bf92-a4d2fe110ebd/26-6a61d7736fd65.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.39 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.49 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.46 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.12 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T09:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணை: கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-appears-in-the-court-of-appeal-1784793301"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-appears-in-the-court-of-appeal-1784793301</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு</h2><p>கடந்த 9ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை நான்காவது நாளாகப் பரிசீலித்து, அதை இன்றைய தினத்திற்கு வரை ஒத்திவைத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f7b668-1c73-4adf-9c82-3b063b2069f3/26-6a61cfe094a9d.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7dZ9D2G7bWk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>
</p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-07-23T08:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட யாழ். தனியார் வைத்தியசாலை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-private-hospital-slapped-with-rs-3-mn-fine-1784785148"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-private-hospital-slapped-with-rs-3-mn-fine-1784785148</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. </p><p>

இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தின் உத்தரவு&nbsp;</h2><p> 

எனினும், அந்த வைத்தியசாலை குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் ஜூலை 13 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2732f3-fbfb-41da-a9a5-5179dc3d234b/26-6a61af0e4b725.webp' /></p><p> 

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p>குறித்த வழக்கு ஜூலை 21 அன்று விசாரணைக்கு வந்த போது வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p>மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை</h2><p> </p><p>தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f03df02a-9b0b-44da-840a-a90388c42d41/26-6a61af0f07a7d.webp' /></p><p> 

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. </p><p>

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P0b0XtuX8Gk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை அதிரவைத்த அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்: தகர்க்கப்பட்ட போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-complete-12-consecutive-night-strikes-1784791745"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-complete-12-consecutive-night-strikes-1784791745</id>
            <summary type="text">ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் ஈரானை பலவீனப்படுத்த செய்யபட்டவை என&nbsp;அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவால் தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>ஈரான் தனது கடற்படை முற்றுகையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் முழுவதும்&nbsp; ஈரானிய இராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்</h2><p>
</p><p>இதனால் அமெரிக்கப் படைகள் ஒன்பது வர்த்தகக் கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டதாகவும், ஒன்றைக் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/108f7c7f-fe51-418b-8d89-1fd2d268c98d/26-6a61ce0eb88d6.webp' /></p><p>
</p><p>மேலும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கின் பல நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து ஈரானும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
</p><p>
பெப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஜூன் மாதத்தில் கட்டமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. </p><p>எனினும், அந்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களிடையே மோதல்! துப்பாக்கியொன்றும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/clashes-between-chinese-groups-in-port-city-1784789071"></link>
            <id>https://ibctamil.com/article/clashes-between-chinese-groups-in-port-city-1784789071</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>கொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

</p><p>குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மேற்படி துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>கொழும்பு துறைமுகக் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 குறித்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொரு சீன நாட்டவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
காவல்துறையின் தகவல்படி, இந்த மோதல் இன்று(23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விரிவான விசாரணை</h2><p>

இந்த நிலையில், மோதலின் போது இருவர் காயமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e214f34-0195-4038-a9e3-21fe8c5f3039/26-6a61bb403f579.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, சம்பத்தில் ​​மற்றொரு சீன நாட்டவரும் கடத்தப்பட்டிருபப்தாக கூறப்படும் நிலையில், கொழும்பு துறைமுகப் காவல்துறையினர் இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து : உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-rules-deshabandu-violated-fundamental-rights-1784790477"></link>
            <id>https://ibctamil.com/article/sc-rules-deshabandu-violated-fundamental-rights-1784790477</id>
            <summary type="text">2022 ஆம் ஆண்டு &#039;அரகலய&#039; போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார&amp;nbsp;கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022 ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார&nbsp;கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>இது தொடர்பான வழக்கு இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த உரிமை மீறலுக்கு, அப்போதைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரே பொறுப்பு என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.</p><p></p><h2>அடிப்படை உரிமை மீறல்</h2><p>அநுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d4be290-9321-4c0c-bd72-fc4f1b594bfc/26-6a61c6634960e.webp' /></p><p>நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாகவும், அப்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் மூலம் கடுமையாக விமர்சித்ததாலும், 2022 ஏப்ரலில் சாதாரண உடையில் இருந்த ஒரு குழுவினரால் அனுருத்த பண்டார அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>பல மணிநேரம் அவரது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ எந்தத் தகவலும் வழங்கப்படாததால், அவரை மறைத்துவிடும் நோக்கத்துடன் இது ஒரு கடத்தல் என்ற கருத்து எழுந்தது.</p><p>எனினும், தண்டனைச் சட்டத்தின் 120வது பிரிவின்படி, அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களைக் கலக்கமடையச் செய்யும் செய்திகளைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மொதறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:45:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த பாதியிலேயே நிறுத்திய LRT திட்டம்: இழப்பீடு சுமையை அதிகரித்த ஜப்பானின் நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/84-crore-compensation-for-the-light-rail-project-1784790028"></link>
            <id>https://ibctamil.com/article/84-crore-compensation-for-the-light-rail-project-1784790028</id>
            <summary type="text">முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் போது இரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனத்திற்கு சுமார் ரூ. 840...</summary>
            <content type="html"><![CDATA[<p>முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் போது இரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனத்திற்கு சுமார் ரூ. 840 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்நிறுவனம் தற்போது அதற்கான வட்டியைக் கோரி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள்&nbsp;</h2><p> </p><p>

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

''189 மில்லியன் ஜப்பானிய யென், 1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் கிட்டத்தட்ட 110 மில்லியன் இலங்கை ரூபாய் ஆகியவை ஒரே நேரத்தில் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49016647-3156-47ae-9d19-f530e0c5b58a/26-6a61c52dee19b.webp' /></p><p> </p><p>

சம்பந்தப்பட்ட ஜப்பானிய நிறுவனம் தற்போது கூடுதல் வட்டியைக் கோரி வருகிறது, ஆனால் கோரப்பட்ட தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 

மேலும், இவ்விவகாரத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><p> 

இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மொத்த இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், 2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>கொழும்பின் நகரப் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு இத்திட்டம் பொருத்தமற்றது என அடையாளம் கண்ட பின்னர், அப்போதைய அரசாங்கம் அத்திட்டத்தை இரத்து செய்யத் தீர்மானித்தது.</p><p> 

2020 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இத்திட்டம் செலவுத் திறனற்றது எனச் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>மகிந்த&nbsp;வெளியிட்ட கடிதம்</h2><p> </p><p>

மேலும், அப்போதைய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்திலும் இது செலவுத் திறனற்ற திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சர் மகிந்த ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட ஓர் அமைச்சரவைப் பத்திரத்தில் இத்திட்டம் நட்டத்தை ஏற்படுத்தும் திட்டம் என விவரிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babaa095-bf1f-4a37-b9c7-97e58c618bec/26-6a61c52ee19d4.webp' /></p><p> 

மேலும், இத்திட்டத்தை பாதியிலேயே இரத்து செய்வது ஊழலுக்கோ அல்லது மோசடிக்கோ இடமளிக்காது என்று பிமல் ரத்நாயக்க கூறினார். 

இந்தத் திட்டத்தை நிறுத்திய முடிவை மறுபரிசீலனை செய்வது, அதனை மீண்டும் தொடங்குவது அல்லது அதன் பொருளாதாரமற்ற தன்மையை பொருளாதார ரீதியாக சாத்தியமாக்குவது உள்ளிட்ட ஒன்பது பரிந்துரைகளை கணக்காய்வாளர் நாயகம் வழங்கியுள்ளார்.
</p><p>
 இருப்பினும்,கணக்காய்வாளர் நாயகம் அதனை மீண்டும் தொடங்குமாறு நேரடியாகப் பரிந்துரைக்கவில்லை. </p><p>&nbsp;தற்போதைய அரசாங்கமும் இவ்விடயத்தை இன்னும் மறுபரிசீலனை செய்து புதிய முடிவை எடுக்கவில்லை. 

கொழும்பில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்காக, பேருந்துகள் மற்றும் பாரம்பரிய இரயில் சேவைகளுக்குக் கூடுதலாக ஒரு புதிய பொதுப் போக்குவரத்து அமைப்பின் தேவை 2010-களின் முற்பகுதியில் கண்டறியப்பட்டது.
</p><p>
 மேலும் இந்த இலகுரக இரயில் திட்டம் ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டது. கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், பயண நேரத்தைச் சேமித்தல் மற்றும் மேற்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன. </p><p>

2.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்திற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. </p><p>

40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய இக்கடனில், 12 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் இலங்கை எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. </p><p>

2019 மே 23 அன்று, இலங்கையின் சார்பில் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜப்பானின் சார்பில் அப்போதைய இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகிரா சுகியாம, மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் தலைவர் புசடோ தனகா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமாய் குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T07:39:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டிய 626,755 டொலர்கள்: தீவிர விசாரணையில் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/postal-department-transaction-cid-investigation-1784787904"></link>
            <id>https://ibctamil.com/article/postal-department-transaction-cid-investigation-1784787904</id>
            <summary type="text">தபால் திணைக்களத்திற்கு சொந்தமான&amp;nbsp;626,755&amp;nbsp;அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட விடயம் தொடர்பில்&amp;nbsp;குற்றப் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தபால் திணைக்களத்திற்கு சொந்தமான&nbsp;626,755&nbsp;அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட விடயம் தொடர்பில்&nbsp;குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.&nbsp;</p><p>மேற்படி விடயம் தொடர்பில் தொடர் விசாரணைகள்&nbsp;வெளிவிவகார அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்க சேவைக்காக ஒதுக்கிய குறித்த நிதித்தொகை&nbsp;இலங்கை தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் அமைப்பு மூலம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்பது வெவ்வேறு கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று அறிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>மேலும் உலகளாவிய தபால் பரிவர்த்தனைகளுக்காக ‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்’&nbsp; வழங்கிய அதிகாரப்பூர்வ முகவரிக்கு அப்பாற்பட்ட ஒரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி இந்தப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3671060e-ccb9-4114-b7f0-61ca3c5d8ecb/26-6a61bef29acf5.webp' /></p><p>
வழக்கு தொடர்பான மின்னஞ்சல் தரவுகள், சேவையக அமைப்பு மற்றும் மடிக்கணினிகள் மேலதிக விசாரணைக்காக SLCERT-க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியாவில் அராஜகம்: விநாயகர் ஆலயத்தை அழித்து முளைக்கும் விகாரை - ஆறு.திருமுருகன் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aaru-thirumurugan-vihara-construction-work-kanyaya-1784788373"></link>
            <id>https://ibctamil.com/article/aaru-thirumurugan-vihara-construction-work-kanyaya-1784788373</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் நடைபெற்றநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக&nbsp; ஆறு.திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p>அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.</p><p></p><p>
</p><h2>தொன்மையான வரலாற்றுச் சின்னம்</h2><p>கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf00f99-80ad-48b8-9c30-b4c4915ee73d/26-6a61c09aac438.webp' /></p><p> 
ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவ தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள். </p><p>
கன்னியா வெந்நீரூற்றை பொறுத்த வரை சைவத்தழிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னமெனலாம். இத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.</p><p> 
சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச் சூழலைப் பயன்படுத்தி பௌத்த மயமாக்க முனைவதும் வேதனைதரும் செய்தியாகும்.</p><p></p><p> </p><h2>துரோகமான விடயம்</h2><p>
தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலை நிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம். </p><p>இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் யாம் அன்போடு வேண்டுகின்றோம்.
கன்னியா வெந்நீரூற்றுச் சூழலை சைவ சூழலிலிருந்து சைவ மக்களின் அடையாளங்களை தொடர்ந்து முற்றாக அழிப்பதும் அங்கே இருந்த வரலாற்று தடயங்களை மாற்றி அமைப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390b7fc5-47ff-498f-836d-fa3e42b272fe/26-6a61c09b619be.webp' /></p><p>கன்னியா வெந்நீரூற்றில் வழிபாடு செய்த விநாயகர் ஆலயத்தை முற்றாக அழித்துவிட்டு அந்த விநாயகர் ஆலயம் இருந்தது பௌத்த அடையாளம் உடைய இடம் என்று நீண்ட நாள்களாக ஆலயத்தை கட்ட அனுமதிக்காது காலம் கடத்துவது மிகுந்த வேதனைக்குரியது.</p><p> 
தற்போது கன்னியா வெந்நீரூற்று சூழலையே மாற்றி அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. </p><p>
எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தொல்லியல் திணைக்களத்தை சார்ந்தவர்களும் சகல அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்தால் சைவ மக்களின் சார்பில் நமது வேண்டுதலை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி வீட்டை நோக்கி வெறித்தனமான துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shots-fired-at-police-officer-s-house-1784790115"></link>
            <id>https://ibctamil.com/article/shots-fired-at-police-officer-s-house-1784790115</id>
            <summary type="text">
ஹம்பாந்தோட்டை - பெலியத்தவின் வலவல பகுதியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஹம்பாந்தோட்டை - பெலியத்தவின் வலவல பகுதியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

இதன்போது, குறித்த வீட்டில் உள்ள நுழைவாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி, திக்வெல்ல காவல்துறையில் பணியாற்றும் ஒரு கீழ்நிலை அதிகாரி என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6428fec6-fe86-4f26-ac6e-64710d7a18b0/26-6a61c022e8a0f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T07:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cannabis-and-2-motorcycles-seized-in-kilinochchi-1784788591"></link>
            <id>https://ibctamil.com/article/cannabis-and-2-motorcycles-seized-in-kilinochchi-1784788591</id>
            <summary type="text">கிளிநொச்சி - கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா
மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா
மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நபரொருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற
காவல்துறையினர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு (22) 11:45
மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.</p><p>இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட
நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் காவல்துறையினர் மீட்டனர்.</p><p></p><h2>கைப்பற்றப்பட்ட கஞ்சா</h2><p> அந்த உரப்பையைச்
சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49
கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33b0ba6-e6c0-4f11-9fd3-fc736cd6b13c/26-6a61b9e206c15.webp' /></p><p>
</p><p>மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த
இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p>எனினும்
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தப்பிச் சென்ற நபர்களைக்
கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><b><i>செய்தி - காண்டீபன், லின்ரன்&nbsp;</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-23T07:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/increased-liquor-prices-1784787751"></link>
            <id>https://ibctamil.com/article/increased-liquor-prices-1784787751</id>
            <summary type="text">

எரிபொருள் விலை உயர்வுக்கு இணையாக, நாட்டில் உள்ள சில மதுபான நிறுவனங்களும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

அதன்படி, நாட்டில் அதிகம் விற்பனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

எரிபொருள் விலை உயர்வுக்கு இணையாக, நாட்டில் உள்ள சில மதுபான நிறுவனங்களும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
</p><p>
அதன்படி, நாட்டில் அதிகம் விற்பனையாகும் மதுபானமான அதி விசேஷம் 750 மில்லி லீற்றர் போத்தலின் விலை 20 ரூபாவாலும் அதன் அரை போத்தலின் விலை ரூ. 10-ம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஏனையவற்றின் விலை</h2><p>

மேலும், ஒரு போத்தல் “ஓல்ட்” அரக்கின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06aaffea-f85e-4d63-8b90-2f5fbc5524f1/26-6a61b6158bdc5.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, ஒரு போத்தல் விஸ்கி மற்றும் பிராந்தியின் விலை ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>
இருப்பினும், பீர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T06:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர் போராட்டத்தால் பற்றி எரியும் டெல்லி- கடுமையான தண்டனை: பிரதமர் மோடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-modi-says-fast-track-courts-paper-leak-cases-1784782065"></link>
            <id>https://ibctamil.com/article/pm-modi-says-fast-track-courts-paper-leak-cases-1784782065</id>
            <summary type="text"> இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.வ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.</p><p>இந்தியாவின்&nbsp; நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p></p><h2>அரசின் முதன்மை இலக்கு</h2><p>இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more important than the welfare and future of our youth!<br><br>We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080135258142617785?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை! வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்."</p><p>

"இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p><p> நமது இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-rejects-bid-to-postpone-al-exam-1784785906"></link>
            <id>https://ibctamil.com/article/court-rejects-bid-to-postpone-al-exam-1784785906</id>
            <summary type="text">2026 உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனையின்றி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனையின்றி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.</p><p>மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோகந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>மனு தாக்கல்&nbsp;</h2><p>குறித்த மனு தொடர்பில் விரிவாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84becde1-14c7-48af-88ac-1bccd1ae73c1/26-6a61b134d299a.webp' /></p><p>இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிட்த்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-23T06:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-gets-stern-warning-in-parliament-1784783564"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-gets-stern-warning-in-parliament-1784783564</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள் குறித்த கேள்வியை எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரை நோக்கி, ''வினாவை கேட்ப்பதற்கு முன்னதாக அதற்கு தடை ஏற்படுத்தியுள்ளீர்கள்'' என குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம் என கூறினார்.
</p><p></p><h2>எதிர்க்கட்சி தலைவர்&nbsp;எதிர்ப்பு </h2><p>
மேலும் நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fdce0b-729b-47fe-bffc-3de82772236f/26-6a61a7ee5889d.webp' /></p><p>
இதன்போது சபாநாயகரின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p>

''நிலையியல் கட்டளைகளின்படி எந்த ஒரு உறுப்பினருக்கும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் குற்றம் சாட்ட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

முட்டாள் தனமாக உரையாற்றவேண்டாம் என நீங்கள் கூறிய விடயம் பொருத்தமற்றதாக பார்க்கப்படுகிறது.</p><p>

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நீங்கள் நிலையியல் கட்டளைக்கு ஏற்ப செயற்படுங்கள். கேள்விகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.</p><p>

இந்த உயரிய சபையில் உள்ள ஒருவருக்கு முட்டாள்தனம் என்று கூற வேண்டாம். அது பொருத்தமற்றது" என சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.</p><p></p><h2>பிமல் ரத்னாயக்கவும்&nbsp;கருத்து </h2><p>இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/432d52c5-4325-4f29-a408-2107d9df6b34/26-6a61ac30a16e6.webp' /></p><p>

''சபாநாயகரே இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்படுகின்றனர். இதுவரைகாலமும் நாடாளுமன்றில் மிகவும் மோசமாக அர்ச்சுனவைபோல எவரும் நேரத்தை வீணடித்து செயற்படவில்லை.</p><p>உளநோயாளர்கள் போலவே இவர்கள் நடந்துகொள்கின்றனர்.

ஒலிவாங்கியுளும் காணொளிகளிலும் இவர்களில் செயற்பாட்டை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாட்சியாளர்கள்.</p><p>
இவரின் செயற்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏளனமாக மற்றும் செயற்பாடு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவரின் அருகில் அமரமுடியாது என கடிதம் சமர்ப்பித்துள்ளார்.யாழில் இவரால் ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட நடத்தமுடியவில்லை.</p><p> 

எனவே நாங்கள் ஏன் பொறுமையாக இருக்கின்றோம் என்றால், அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் சிகிச்சை பெற்றால் சரிவரும் என கருதுகின்றோம்.
</p><p>
இங்கு பார்க்கும்போது அவர் ஒரு சபாநாயகரை எப்படி அழைக்கின்றார்?

கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாக முரண்பட்டுக்கொண்டாலும் தனிப்பட்டரீதியில் எவரும் சபாநாயகரை தாக்கி பேசவில்லை." என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T05:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gun-found-in-house-during-dengue-check-1784780997"></link>
            <id>https://ibctamil.com/article/gun-found-in-house-during-dengue-check-1784780997</id>
            <summary type="text">பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை காவல்துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>மீட்கப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>

இதனையடுத்து, காவல்துறையினரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7daa4d-a0a9-49e1-abff-8d194d53af80/26-6a61a1e5c1538.webp' /></p><p> </p><p>

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949"></link>
            <id>https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949</id>
            <summary type="text">இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.</p><p>அந்தவகையில், அடுத்த ஆண்டு முதல் வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விசேட தேவையுடையோர் </h2><p>மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf871de2-d32d-4b76-a2b6-05273cbfc9c6/26-6a619b19b897a.webp' /></p><p>மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுகின்றது.</p><p> மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.</p><p></p><h2>மெட்ரோ சேவை அறிமுகம்</h2><p>இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed59e2c0-cc67-4c51-b40c-2b5826692329/26-6a619b18d2b38.webp' /></p><p>

வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-debate-on-export-and-import-control-act-1784780534"></link>
            <id>https://ibctamil.com/article/today-debate-on-export-and-import-control-act-1784780534</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(23.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(23.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 02.30 வரை வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் 2493/03 மற்றும் 2493/39 ஆகிய இலக்க வர்த்தமான பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட இரண்டு விதிமுறைகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>மாலை 2.30 மணி முதல் பி.ப. 5.30 மணிவரையில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Nx5ZIIRSS8g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் குறித்து அநுரவின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protect-the-northern-and-eastern-coastal-areas-1784777205"></link>
            <id>https://ibctamil.com/article/protect-the-northern-and-eastern-coastal-areas-1784777205</id>
            <summary type="text">இலங்கையில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p>ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p>அத்துடன் கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>வனப்பாதுகாப்பு திணைக்களம்</h2><p>அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12a53d1-7197-4887-bb88-b0c3d15324e7/26-6a618de1ea1bc.webp' /></p><p>வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு உரிய ஓய்வு விடுதிகளை அபிவிருத்தி செய்து, நவீன மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. </p><p>

மேலும், மலர் வளர்ப்பை ஒரு கைத்தொழிலாக அபிவிருத்தி செய்வதற்கும், உயிர் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/r2pn0jT5VH4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T04:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-black-july-genocide-1784719402"></link>
            <id>https://ibctamil.com/article/the-black-july-genocide-1784719402</id>
            <summary type="text">ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் ஆடைகளின்றியும் இனப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் ஆடைகளின்றியும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>அதனை ஶ்ரீலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. ஶ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. </p><p>இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது.</p><p></p><h2>மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம்&nbsp;</h2><p>ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வந்தார்கள். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான சமர் ஒன்று இடம்பெற்றது. </p><p>விடுதலைப் புலிகளை தாக்கும் நோக்கில் வந்த இராணுவ அணியொன்றை இடைமறித்து புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. </p><p>இதனால் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமர் மூண்டது. இதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் இதில் வீர மரணமடைந்தார்.
</p><p>
புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழர்களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று திட்டமிட்டு கதை பரப்பட்டது. </p><p>இதனால் கொழும்புவில் இருந்த தமிழர்களை கொன்று அழிப்போம் என்றும் இனவெறி பரப்பட்டது. இதனால் சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களை தாக்கத் தொடங்கினர்.</p><p> &nbsp;வீதிகளில் சென்ற தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்ட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு தமிழர்கள் போட்டப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள்.</p><p></p><h2>ஆடைகளின்றி நனைந்த இலங்கைத் தீவு</h2><p>ஜூலை 23இல் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். </p><p>கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை கொன்று குவித்தது.</p><p> யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழ் மக்கள் புலிகள் என்ற பெயரில் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். </p><p>குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கை தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் ஆடைகளின்றியும் நனைந்தது. கொழும்பு வீதிகளில் இருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது.</p><p> தமிழர்களைப் பிடித்து ஆடைகளின்றி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள். மிக மிக கோரமான முறையில் மனித குலத்திற்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>ஒரு குறிப்பிட்ட குழுவாலோ, அல்லது ஒரு தரப்பாலே இப்படி பரவலாகவும் நீண்ட நாட்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால்தான் மிக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.</p><p></p><h2>1958இல் நடந்த இனப்படுகொலை&nbsp;</h2><p>கறுப்பு ஜூலை இலங்கையின் முதல் படுகொலையல்ல. அதற்கு முன்னர் 1958களிலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. எழுதுபகளிலும் நிகழ்த்தப்பட்டன.</p><p> அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடாத்தவும் இல்லை. 1956இல் தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்க கொண்டு வந்த வேளையில் அன்று பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள். </p><p>இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறை செயற்பாடுகளாலும் உரிமை மறுப்புக்களாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர்.
</p><p>
அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது.</p><p> தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்த வேளையில்தான் 1958களில் மூந்நூறு ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அறிவுமீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்ட்டது. </p><p>ஆக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களை படுகொலை செய்து அழிக்கவும் திசை திருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடாத்தப்பட்டது.&nbsp;</p><p></p><h2>ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முற்கூட்டிய பேச்சு&nbsp;</h2><p>ஜூலைப் படுகொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. </p><p>இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்...</p><p> உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார்.

இப்பிடி பேசி சில நாட்களிலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து மாபெரும் மகிழ்ச்சி தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்காவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தை கண்டும் வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார்.</p><p> கறுப்பு ஜூலைப் படுகொலையை அன்று ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரச தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின.</p><p></p><h2>தனிநாடு கோரக் கூடாது என்ற நோக்கம்&nbsp;</h2><p>&nbsp;குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணராலாம். ஏற்கனவே இனவழிப்புக்கள் நடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு 83 ஜூலை இனப்படுகொலையை நடாத்தியுள்ளார்கள். </p><p>சிறில் மத்யூ போன்றவர்கள் குறுகிய குழுவில் வன்முறையாக இல்லாமல் சிங்கள பொதுமக்களின் பற்கேற்புடன் நடாத்த நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளை கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுக்க நினைத்தார்கள்.
</p><p>
கொழும்பில் இருந்து ஈழ மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த தமிழ் மக்கள் கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். </p><p>வடக்கு கிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்றால் போல் தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த ஆடைகளின்றியும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்பந்தித்தது.</p><p> கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது.

நாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச் செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல. </p><p>இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகி வருகின்றன. </p><p>ஆனால் சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்கு தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பேரினவாத்தை பேசுகின்றபோதும்கூட எமக்கு ஜூலைப்படுகொலைகளே நினைவுக்கு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T03:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teen-missing-after-drowning-in-mahaweli-river-1784776715"></link>
            <id>https://ibctamil.com/article/teen-missing-after-drowning-in-mahaweli-river-1784776715</id>
            <summary type="text">ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.</p><p> </p><p>கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நேற்று (22) மாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.</p><p>வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த மாணவன்&nbsp;தனது இரு நண்பர்களுடன் இணைந்து மகாவலி கங்கையின் தெனியேகல கடவைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போதே சுழலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e318d191-8f9e-4fe7-a878-327defe3ce53/26-6a618b3652e7c.webp' /></p><p>ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
கம்பளை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அவசரத் தகவலையடுத்து, காணாமல் போன சிறுவனைத் தேடும் விசேட மீட்புப் பணிகளும் மேலதிக விசாரணைகளும் கம்பளை காவல்துறையினரினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இச்சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:32:11+00:00</updated>
        </entry>
    </feed>
