<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T03:58:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gov-officers-sick-leave-for-today-and-tomorrow-1786329601"></link>
            <id>https://ibctamil.com/article/gov-officers-sick-leave-for-today-and-tomorrow-1786329601</id>
            <summary type="text">சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) சுகயீன விடுமுறையை பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதன் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தொழிற்சங்க நடவடிக்கை</h2><p>
</p><p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3bb89a-084c-4173-b38c-55322f5e217d/26-6a794acac256f.webp' /></p><p>2024 ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் நடந்த துப்பாக்கிச் சூடு - சிக்கிய பயங்கர நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dehiwala-shooting-gunman-arrested-1786332592"></link>
            <id>https://ibctamil.com/article/dehiwala-shooting-gunman-arrested-1786332592</id>
            <summary type="text">தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

ஜயவர்தனபுர காவல்துறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் அத்துருகிரிய, ஹபரக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சந்தேபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஆவார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை காவல்துறை பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8305670-da3b-4d64-86f2-1f4928673706/26-6a7948ee2e25a.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் சிறைச்சாலை மோதல்கள் : உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-unrest-senior-officers-summon-to-the-hrcsl-1786331885"></link>
            <id>https://ibctamil.com/article/prison-unrest-senior-officers-summon-to-the-hrcsl-1786331885</id>
            <summary type="text">இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அதற்கமைய, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலைகள் திணைக்களம்</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இதுபோன்ற அமைதியின்மைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44f78db8-39cf-4cf8-b31a-26f974890fe5/26-6a7947276f2d6.webp' /></p><p>

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறை மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உரிய பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்த விடயத்தை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களின் மறைகரங்கள் - பின்னணியில் பெரும் சதி - அரசை சாடும் அமுனுகம]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-against-the-backdrop-of-prison-clashes-1786331876"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-against-the-backdrop-of-prison-clashes-1786331876</id>
            <summary type="text">சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p><p>அதுமட்டுமின்றி சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று திலும் அமுனுகம கேள்வி எழுப்பியுள்ளார்
</p><p>
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்தின் தோல்வி</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவ்வாறு தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருக்குமெனின், அது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துவதாக அமையும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2539061a-8d72-45d9-85e0-4d4e7d8fcfd3/26-6a79455365b95.webp' /></p><p>இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. </p><p>விசேடமாக, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், எவருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்காது அரசாங்கம் தனது விருப்பத்தின்படி செயற்படுவது, நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:28:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424"></link>
            <id>https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இருப்பினும், தான் ஈரானுடன் தீவிரமாக தலையிடாமல், அவர்களின் பொருளாதார அழுத்தத்தை கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>சரியாக நிறைவேற்றவில்லை</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a6d7104-3a6e-455f-86b6-0a9e7d82d441/26-6a7938009067c.webp' /></p><p>

குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) . சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீரிணை திறக்கப்பட மாட்டாது</span></p><p>ஓமானுடன் எட்டப்படும் உடன்படிக்கை மூலம் புதிய கடற்பாதை தீர்மானிக்கப்படும் போதிலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை திறக்கப்பட மாட்டாது என&nbsp; ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81570d3-7918-41d1-97c8-ff9d33871f44/26-6a7937ffd9c56.webp' /></p><p>ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதால் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் அவர் கூறினார்.&nbsp;</p><p>இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றிலும் தடை: உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மானவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-gce-advanced-level-examination-begins-today-1786327241"></link>
            <id>https://ibctamil.com/article/2026-gce-advanced-level-examination-begins-today-1786327241</id>
            <summary type="text">உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p>2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முற்றிலும் தடை</h2><p>

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083e0e2-4b44-4fd5-8d81-f278e8eaef99/26-6a793283ac67a.webp' /></p><p>கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>

பரீட்சை விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு பரீட்சை மோசடிகளை தவிர்குமாறும், கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.</p><p> 

மேலும்&nbsp; ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T02:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை நெருங்கும் பேராபத்து....! அரசிற்கு வலுக்கும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-under-pressure-over-rajapaksa-probe-1786324607"></link>
            <id>https://ibctamil.com/article/govt-under-pressure-over-rajapaksa-probe-1786324607</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பார்க்கப்படும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கம் தன் அரசியல் முகத்தையும் மக்கள் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என்ற அழுத்தம் அரசுக்கு உள்ளது.</p><p>

இந்த நிலையில் ராஜபக்ச ஆதரவாளர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தரப்பினரும், இந்த நகர்வுகளைத் தங்களின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் அழிப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல் என்றே சித்தரிக்கின்றனர்.
</p><p>
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, முன்னாள் ஆட்சியாளர்களைக் கைது செய்யும் படலத்தை அரசு கையில் எடுக்கிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர் என்ற பிம்பம் கொண்ட மகிந்தவை நேரடியாக நெருங்குவது, தென்னிலங்கையில் அவருக்கு மீண்டும் ஒரு அனுதாப அலையை உருவாக்கக்கூடும் என்ற அரசியல் அச்சமும் இங்கு நிலவுகிறது.</p><p>

இவ்வாறான பின்னணியில் தற்போதைய அரசாங்கம், வெறும் கைதுகளோடு நின்றுவிடாமல், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சட்டப்பூர்வமாக நிரூபித்துத் தண்டனை பெற்றுத் தருமா அல்லது இது வழக்கமான அரசியல் நாடகமாக முடியுமா என்பதே விமர்சகர்களின் முதன்மைக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.</p><p>

இது குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p>[F2H0YZZஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு...! இலங்கைக்கு குவியும் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remittances-to-sl-exceed-5-billion-in-2026-1786323070"></link>
            <id>https://ibctamil.com/article/remittances-to-sl-exceed-5-billion-in-2026-1786323070</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p>
</p><p></p><h2>மில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 947.2 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a582e1c5-d378-4f5e-9092-71e421e4d834/26-6a7920805dfab.webp' /></p><p>இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 777.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளன.</p><p>

ஜூன் மாதத்தில் 697.3 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலையில் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786322275"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786322275</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfbb42d5-216a-48e0-b91b-b2baa0eb795d/26-6a791d650cf5f.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:38:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் தொடர்பான சர்ச்சையான கருத்து! சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230</id>
            <summary type="text">
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த அழைப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காரியவசம், தான் கூறாத விஷயங்களுக்கு தவறான விளக்கம் அளித்து அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வேலைத்திட்டம்&nbsp;</h2><p>தான் கூறிய கருத்துகளைத் திரித்து காட்டி, எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய மிரட்டல்களுக்குத் தான் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த காலத்தில் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமான முடிவையே சந்தித்ததாகவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அதே பாதையில்தான் பயணிக்க முயற்சிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a10eb2-af34-4d89-8006-3796afa3c715/26-6a791ac4e6969.webp' /></p><p>ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபராக (DIG) நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்பட்டதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், எதிர்காலத்தில் மக்கள் இதற்குச் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது...! சாடும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703"></link>
            <id>https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703</id>
            <summary type="text">அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வரிக் கொள்கைகள்&nbsp;</h2><p>

வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9621712e-b680-43d1-914d-f17d503ba0da/26-6a79135892d9a.webp' /></p><p>

அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும் மற்றும் மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சைபர் திருட்டு&nbsp;</h2><p>அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d873d14-1095-450b-8145-7aab97dfe708/26-6a791359455d3.webp' /></p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகஸ்தர்கள் சந்திக்கும் நெருக்கடி! அரசுக்கு அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/distributors-urge-govt-to-drop-rs-50-tax-1786316653"></link>
            <id>https://ibctamil.com/article/distributors-urge-govt-to-drop-rs-50-tax-1786316653</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கூட்டுத்தாபனத்தின் இழப்புகள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், குறித்த இழப்புகள் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால் இந்த வரியை மேலும் தொடர்வது அவசியமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டதால் விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்கி நுகர்வோருக்கு அந்த நிவாரணத்தை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a801d6c-f6d5-401c-b6b3-1a88fc862dfa/26-6a790b69cad5f.webp' /></p><p>தற்போது நடைமுறையிலுள்ள QR முறையும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.
</p><p>
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% சேர்க்கப்பட்ட மதிப்பு வரி (VAT) மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகை 3 % இலிருந்து 1.6 % ஆகக் குறைக்கப்பட்டமையால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள சினோபெக் (Sinopec), LIOC மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) போன்ற நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி! மொஜ்தாபா காமேனியின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554"></link>
            <id>https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக<a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank"> உயரிய பாதுகாப்புப் </a>பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி (IRGC - இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தலைவரான மொஹ்சென் ரெசாயை (Mohsen Rezaee) நியமித்துள்ளார்.
</p><p>
இந்த முக்கியப் பொறுப்பில் ரெசாய், உச்சத் தலைவர் காமேனியின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
</p><p>
இப்பதவியை வகித்து வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க - இஸ்ரேலிய<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> வான்வழித் தாக்குதலில்</a> கொல்லப்பட்டார்.</p><p></p><h2>அரசியல் ஆலோசகர்</h2><p> 

அவரைத் தொடர்ந்து முகமது பாகர் ஜோல்காதர் (Mohammad Bagher Zolghadr) இப்பதவியைக் கவனித்து வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22991208-4e72-4cde-87de-84ba69e58bb8/26-6a78de7751a22.webp' /></p><p>இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, முகமது பாகர் ஜோல்காதரைத் தனது அரசியல் ஆலோசகராக உச்சத் தலைவர் காமேனி நியமித்துள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட அமைப்பு&nbsp;</h2><p>

இவர், 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக் போரின் போது (ஈரானில் இது புனிதப் பாதுகாப்புப் போர் என்று அழைக்கப்படுகிறது) முக்கிய இராணுவத் தளபதியாகச் செயல்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b767aef7-36c7-46fe-92c0-5d826dd1387e/26-6a78de78021db.webp' /></p><p>

அத்தோடு ஈரானின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.</p><p>

இந்தநிலையில் தற்போது ஈரான் நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சில் அமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் உயர்மட்ட அமைப்பான ஈரானின் நன்மதிப்பு நிருணயக் கவுன்சிலின் (Expediency Discernment Council) உறுப்பினராகவும் ரெசாய் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:59:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1992-mailanthanai-massacre-remembered-1786312968"></link>
            <id>https://ibctamil.com/article/1992-mailanthanai-massacre-remembered-1786312968</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட கொடூரம், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு துயரமான அத்தியாயமாகும்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கன்னிவெடித் தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாகவே, சிறிலங்கா ராணுவத்தினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
ஆனால், அச்சம்பவத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற மயிலந்தனை கிராமத்தின் மீது அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் கோபத்தைத் திருப்பிய சிறிலங்காவின் சிங்களப் பாதுகாப்புத் தரப்பினர், அக்கிராமத்தையே கொடூரமாகச் சூறையாடினர்.
</p><p>
அன்று அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி கிராம மக்கள் மீது துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. 

கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் எனப் பாரபட்சமின்றி 39 பொதுமக்கள் அன்றைய நாளில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
</p><p>
அன்றைய நாளில் சிறிலங்காப் படைகள் ஆடிய மனிதவேட்டையானது தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

உயிருக்குப் பயந்த மக்கள் தங்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே போட்டுவிட்டு, சொந்த ஊரை விட்டு வெளியேற நேரிட்டது. </p><p>

ஒரே நாளில் ஒரு முழு கிராமமும் சுடுகாடாக மாற்றப்பட்டு அம்மக்களின் நிம்மதியான வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
</p><p>
இதேபோன்று கொன்றொழிக்கப்பட்டு, நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துகிறது.</p><p>

வலிகளோடு வாழும் இந்த இனத்தின் மீதான ஒவ்வொரு படுகொலைக்குமான நீதிக்கான பயணத்தில் இதயசுத்தியோடு பயணிப்போம்.</p><p></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:31:16+00:00</updated>
        </entry>
    </feed>
