<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-11T06:30:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை : அநுர அரசு அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-drug-crimes-in-sri-lanka-1786426522"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-drug-crimes-in-sri-lanka-1786426522</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளுக்குப் பணிப்புரை&nbsp;</h2><p>
</p><p>மேலும், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c1725e-e01f-4a4c-ab6c-a08f083273ee/26-6a7abab87bd30.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
</p><p>
இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க "மிதுரு பாசல" திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7VGoDMRGOmk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T06:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிஸ்ஸங்க சேனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nissanka-senadhipathi-arrives-bribery-commission-1786424623"></link>
            <id>https://ibctamil.com/article/nissanka-senadhipathi-arrives-bribery-commission-1786424623</id>
            <summary type="text">எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (11.08.2026) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (11.08.2026) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><p>

 

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d9009f-11d3-4e0b-aace-226feb8cd82d/26-6a7ab2770beef.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780"></link>
            <id>https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780</id>
            <summary type="text">புதிய இணைப்புகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.</p><p>
 

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d59e78-7648-4a62-a6b4-76f8370babaf/26-6a7ab0964f022.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் : வெளியான முக்கிய அறிவிப்பு</h4><p>இலங்கையில் இன்று (11) காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சரிசெய்ய நடவடிக்கை</h2><p>இந்த நிலையில் கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35d2a59-131b-4beb-a18f-aca579f8aabc/26-6a7a9a9241004.webp' /></p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7VGoDMRGOmk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பயங்கர நபர்கள் : காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-3-people-including-ratmalana-saima-1786423096"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-3-people-including-ratmalana-saima-1786423096</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து காவல்துறை தலைமையகம் புதிய அறிவிப்பொன்ற வெளியிட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து காவல்துறை தலைமையகம் புதிய அறிவிப்பொன்ற வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த மூன்று நபர்கள் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இரத்மலானை சைமா உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் நேற்று (10) மாலை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.</p><p></p><h2>மலேசியாவில் கைது</h2><p>இலங்கையில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 41 வயதுடைய பிரதான சந்தேகநபரான இரத்மலானை சைமா, மலேசிய காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e5c0b2-5960-48e7-ba59-765b27d7551d/26-6a7aae6142d68.webp' /></p><p>
</p><p> 
2014ஆம் ஆண்டு பேராதனை பகுதியில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி ஒருவரை கடத்தி தாக்கியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்றுமொருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.</p><p>
 
இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், சந்தேகநபருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு</h2><p>
</p><p> 
மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a674667a-9bf4-4f7b-a2bd-ecf69873dcb5/26-6a7aae61f3ff1.webp' /></p><p>
 
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டொன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>
 
இதேவேளை, பிரதான சந்தேகநபரான இரத்மலானை சைமாவுடன் மலேசியாவிலிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
 
அவர்களில் 35 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்சையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் காவல்துறையை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது: நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-expresses-concern-over-government-1786422296"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-expresses-concern-over-government-1786422296</id>
            <summary type="text">நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையின் ஸ்ரீ விஷ்ணு மகா தேவஸ்தானத்தில் நேற்று (10.08.2026) விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,</p><p></p><h2>அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை</h2><p>இன்று நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வீடுகளுக்குக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் அளவுக்குப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda80d85-29db-4e58-9dd7-76c6759f0124/26-6a7aabb5a1150.webp' /></p><p> </p><p>ஆனால், இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் காவல்துறைமா அதிபரோ அல்லது காவல் திணைக்களமோ உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. </p><p>ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் போன்ற பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்ட மாத்திரத்திலேயே மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வாக்குமூலங்களைப் பெற முற்படுகின்றனர்.</p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது தவறானதாகும்.</p><p>காலியிடங்களை நிரப்புவதும் புதிய நீதிமன்றங்களை நிறுவுவதுமே இதற்கான உண்மையான தீர்வாகும்.</p><h2>83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும்</h2><p> </p><p>இந்தச் சட்டத்திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தைப் கடுமையாகப் பாதிக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் என்பன சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c311a9-ef86-42fa-af70-b3f6fc274bbf/26-6a7aabb4eb1d5.webp' /></p><p>அதேபோன்று, சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தித் தப்பியோட முடியாது. சிறைச்சாலைகள் அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எத்தனை சிறைச்சாலைகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்? </p><p>வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைச் சிறைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரிச் சேவைகளுக்கும் எவ்வாறு செலவிட்டார் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.</p><p>அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தத்தில் ஊறிய இயல்பாகும். 83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும் அவர்களின் இந்த அடக்குமுறைப் போக்கையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது.</p><p>ஊடகவியலாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் வைத்தியர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் போது, அவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து அடக்க முயல்கின்றனர். ஆனால், இவ்வாறான அடக்குமுறைகளால் மக்களின் குரலையோ அல்லது எதிர்க்கட்சியின் குரலையோ ஒருபோதும் முடக்கிவிட முடியாது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன் - கனடாவில் இரத்து செய்யப்பட்ட விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/child-refuses-to-wear-seat-belt-flight-cancelled-1786421474"></link>
            <id>https://ibctamil.com/article/child-refuses-to-wear-seat-belt-flight-cancelled-1786421474</id>
            <summary type="text">கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒரு சிறு குழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416" target="_blank">கனடாவில் </a>சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் நின்று கொண்டு&nbsp; ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் முனையத்திற்கே திரும்ப வேண்டியிருந்தது என்று போர்ட்டர் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த 'போர்ட்டர் எயார்லைன்ஸ்' (Porter Airlines) விமானத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>பாதுகாப்பு விதிமுறை</h2><p>
விமானம் புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும் அடம்பிடித்துள்ளான்.

சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் விமானம் ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aa9ec6-3667-4a80-b1bc-72a48b3849f6/26-6a7aa4a2b1cba.webp' /></p><p>பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் விமானத்தை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.</p><p>

இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், விமானத்தை&nbsp; அன்றைய தினம் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் விமான நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T04:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிலையமொன்றில் முறைகேடு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irregularity-at-gr-5-scholarship-exam-center-doe-1786420137"></link>
            <id>https://ibctamil.com/article/irregularity-at-gr-5-scholarship-exam-center-doe-1786420137</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்ற பரீட்சை நிலையமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்ற பரீட்சை நிலையமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய வலயக் கல்வி பணிமனை மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>தாமதமாக வழங்கப்பட்ட&nbsp;வினாத்தாள்</h2><p>கேகாலையில் பரீட்சை நிலையம் ஒன்றில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது, மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டு, உரிய நேரத்துக்குள் மீள சேகரிக்கப்பட்டதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6cf8368-4c91-41b1-9286-c39a613a37af/26-6a7aa3e811dc4.webp' /></p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.</p><p>

இவ்வாறான சம்பவங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், “தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை” தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T04:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: புதைந்துள்ள மக்கள் - அவசர நிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombias-largest-earthquake-in-years-1786416575"></link>
            <id>https://ibctamil.com/article/colombias-largest-earthquake-in-years-1786416575</id>
            <summary type="text">கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் அவசர நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ஏற்பட்ட <a href="https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514" target="_blank">சக்திவாய்ந்த நிலநடுக்கம் </a>காரணமாக அந்நாட்டு ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.</p><p>தேசிய அவசரநிலையை அறிவித்த பின்னர், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1 மணியளவில் ஆற்றிய நாட்டு மக்களுக்கான உரையில் அவர் “உயிர்களைப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும் தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கவும் தேசிய அரசாங்கம் தனது அனைத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை</h2><p>இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8049b2d3-026b-4462-848c-f95a3feb4cbc/26-6a7a949d4d9f6.webp' /></p><p>கொலம்பியாவின் கோபி உற்பத்தி பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரெய்ரா (Pereira) நகரத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுற்றியுள்ள நகரங்களும், 'வேலே டெல் கௌகா' (Valle del Cauca) பிராந்தியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.&nbsp;</p><p>அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.&nbsp;</p><p>&nbsp;பாதுகாப்பு கருதி பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:18:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/72000-government-job-vacancies-in-2026-1786415854"></link>
            <id>https://ibctamil.com/article/72000-government-job-vacancies-in-2026-1786415854</id>
            <summary type="text">அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக&amp;nbsp;பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.&amp;nbsp;கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக&nbsp;பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.&nbsp;</p><p>கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் முறையான தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படாததால் அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்..</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய ஊழியர்களை அரச சேவை</span></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான நிர்வாக இயந்திரமாக விளங்கும் அரச சேவையை மீண்டும் வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் அரச ஊழியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766eb489-d790-4e0f-b10d-ee89883420da/26-6a7a8c9250675.webp' /></p><p>மேலும் சுமார் 76,000 புதிய ஊழியர்களை அரச சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். </p><p>இனிவரும் காலங்களில் அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி உள்ளிட்ட விடயங்கள் அரசியல் தலையீடுகளின்றி முறையான பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் நலின் ஹேவகே உறுதியளித்தார்.</p><p> தவறான நடைமுறைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே அரசாங்கம் தலையிடும் எனக் குறிப்பிட்ட அவர் அரச ஊழியர்கள் தங்களது திறமை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T02:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து - 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-killed-in-motorcycle-accidents-1786413973"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-killed-in-motorcycle-accidents-1786413973</id>
            <summary type="text">தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன&#039; உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தம்புள்ளை - வெலிஹேன புல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன' உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து தம்புள்ளை - வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

 

புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33269b8e-31a0-4705-80c6-692aec5e7925/26-6a7a86f52adae.webp' /></p><p>
 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>

 

தம்புள்ளை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>இதேவேளை, காலி - உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்தியருகே இடம்பெற்ற விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T02:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786409585"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786409585</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d90a34-6359-4587-820b-57b177317017/26-6a7a7273e4461.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவில் உண்மையில் நடந்தது என்ன...! விரைவில் அம்பலமாகும் CCTV காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reesha-food-fest-clash-owner-responses-1786408463"></link>
            <id>https://ibctamil.com/article/reesha-food-fest-clash-owner-responses-1786408463</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
</p><p>
றீ(ச்)ஷாவில் நடைபெற்ற அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இதன்போது குறிப்பிட்ட பெண்ணொருவர் நிறுவனத்தின் உரிமையாளரை அழைக்குமாறும் உணவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தும் கோபமான வார்த்தைகளை வெளிப்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட காணொளி ஒன்று பெரிதும் பகிரப்பட்டது.
</p><p>
இந்தநிலையில் குறித்த பெண்ணின் கருத்துக்கு முக்கிய சிசிரிவி காணொளிகளுடன் விரைவில் பதிலளிக்கப்படும் என றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தனது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T00:45:17+00:00</updated>
        </entry>
    </feed>
