<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-31T20:12:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082</id>
            <summary type="text">




கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><p>கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த முன்னாள் இராணுவ அதிகாரியிடம் தூதரக அதிகாரி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ராஜதந்திரப் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்போது, சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி முன்னாள் இராணுவ அதிகாரியை எச்சில் உமிழ்ந்து, உடல்ரீதியாகத் தாக்கியதும் அக்காணொளியில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf491d7e-72f7-4423-9051-12dd3c54e670/26-6a95d513a910f.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதாக கூறப்படுவதால் குறித்த முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T19:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621</id>
            <summary type="text">புதிய இணைப்புபாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், குறித்த நபர் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>பாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த நிலையில், குறித்த நபர் தற்போது தடுப்பு காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பிரபல பாதாள உலக குற்றவாளி பானந்துர நிலந்தவின்&nbsp;மைத்துனரான டிலா என்பர் என தெரியவந்தள்ளது.</p><p>அத்தோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டை குடு சலிந்து என்ற பிரபல பாதாள உலக தலைவனின் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் இதன்போது “3எய்ட்“ ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>களுத்துறை மாவட்டம் - பாயாகலவின்&nbsp;நைமுல்ல பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>குறித்த துப்பாக்கிச் சூட்டில்&nbsp;படுகாயமடைந்த ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a64e12-08fc-4587-a8be-a516bcd11aa7/26-6a95b8d9346fa.webp' /></p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oppose-land-allocation-to-indian-company-people-1788201645"></link>
            <id>https://ibctamil.com/article/oppose-land-allocation-to-indian-company-people-1788201645</id>
            <summary type="text">

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு
மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
</p><p>கடந்த 28 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஜீவன் எம்பி தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மசாஜ்
நிலையம்,தியான மண்டபம் அமைப்பதற்காக இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு
வெற்றிலைக்கேணி, ஆழியவளை பகுதியை உள்ளடக்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை
அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
</p><p>
தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என்று மக்கள் குறித்த
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.</p><p></p><h2>சீரழிக்கப்படும் இளைய தலைமுறையினர்</h2><p>
</p><p>
வடமராட்சி கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல்
தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார்
நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.</p><p><br></p><p>
</p><p>
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும்
அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை
அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த
வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலன் ஐஸ் : பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மேலும் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சந்தேகத்திற்கிடமான கொள்கலனை ஆய்வு செய்ததில், 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.</p><p>&nbsp;கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை</h2><p>கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd6eebb-5267-4c3a-8b2d-c4d53b8639fa/26-6a957d43bbad2.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/messi-retires-from-international-football-1788197526"></link>
            <id>https://ibctamil.com/article/messi-retires-from-international-football-1788197526</id>
            <summary type="text">
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். </p><p>

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடனான தனது 21 ஆண்டுகால சர்வதேச விளையாட்டு வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
</p><p>
39 வயதான மெஸ்ஸி, திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்து, வேதனையுடன் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.</p><p></p><h2>2022 ஃபிஃபா&nbsp;உலகக் கோப்பை</h2><p>
</p><p>
2005-ல் அறிமுகமான மெஸ்ஸி, 207 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்து, அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a30a725-dbb2-4cc0-a2e7-ba7c231f61e2/26-6a95bd70763f1.webp' /></p><p>
</p><p>
2022-ல் கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று தந்ததே அவரது மிகப்பெரிய சாதனையாகும். மேலும், 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா பட்டங்களையும் அர்ஜென்டினாவுக்கு அவர் பெற்றுத் தந்துள்ளார்.</p><h2>கடைசி சர்வதேசப் போட்டி</h2><p>
</p><p>
2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்த போட்டியே இவரது கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5eedf3f-7b42-4e05-b79c-8b99575785be/26-6a95bd712e961.webp' /></p><p> 

நாட்டின் புதிய தலைமுறை வீரர்களின் வருகை மற்றும் இதுவரை சாதித்த பெருமிதத்துடன் ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ள எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தாக்குதல்களுக்கு மத்தியிலும் எண்ணெய் உற்பத்தியை தொடரும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kharg-island-did-not-stop-oil-production-1788193839"></link>
            <id>https://ibctamil.com/article/kharg-island-did-not-stop-oil-production-1788193839</id>
            <summary type="text">ஈரானின் கார்க் தீவு &quot;அமெரிக்க-இஸ்ரேலிய எதிரியால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானது&quot; என்றும், இருப்பினும், அந்தத் தாக்குதல்கள் தீவில் எண்ணெய் உற்பத்தியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கார்க் தீவு "அமெரிக்க-இஸ்ரேலிய எதிரியால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானது" என்றும், இருப்பினும், அந்தத் தாக்குதல்கள் தீவில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவில்லை என்றும் ஒரு ஈரானிய அதிகாரி திங்களன்று (31) தெரிவித்தார்.</p><p>

"கார்க் தீவு துண்டு துண்டாக சிதறடிக்கப்படுகிறது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறிய கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்&nbsp; என ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.</p><h2>ட்ரம்பின் கருத்துக்கள் "சிரிப்புக்குரியவை"</h2><p>&nbsp;ட்ரம்பின் கருத்துக்களை "சிரிப்புக்குரியவை" என்று குறிப்பிட்ட அந்த செய்தி நிறுவனம், அந்த அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டியுள்ளது: "நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல ஒப்பந்தகாரர்கள் சேமிப்புக் கிடங்குகளை மீண்டும் கட்டவும் புதுப்பிக்கவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்."</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebbb4b7d-2fe3-493d-8ecb-9837b4ceb6c5/26-6a95b2201689b.webp' /></p><p>
</p><p>
"கார்க்கில் நடைபெற்று வரும் எந்தப் பணியும் நிறுத்தப்படவில்லை. சில திட்டங்கள் தற்போது 20% முதல் 30% வரை நிறைவடைந்துள்ளன, மேலும் அவற்றில் பணிகள் தொடர்கின்றன." என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>மீண்டும் தொடங்கிய தாக்குதல்</h2><p>

ஞாயிற்றுக்கிழமை, லராக் தீவில் உள்ள இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், ஜூலை மாத இறுதியில் இருந்து ஈரானியப் பிரதேசம் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இது என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd907db-d27f-4436-a5f6-5afe9e50b2f0/26-6a95b220e0def.webp' /></p><p>

இதற்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460</id>
            <summary type="text">நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.


 அந்த வகையில் சிட்னியில் வச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.
</p><p>

 அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவுகள்</h2><p>அவுஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. 



எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961fbdbe-6a40-4a49-9f71-fce8285d5ebb/26-6a9589733447e.webp' /></p><p> </p><p>அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.</p><p>


இதேவேளை நோபாள வெள்ள பேரழிவில் சிக்கி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-respond-to-iranian-attacks-trump-1788189556"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-respond-to-iranian-attacks-trump-1788189556</id>
            <summary type="text">ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(31) தெரிவித்துள்ளார்.
</p><p>
"நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். பதிலடி கொடுக்கப்படும்," என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறினார்.</p><h2>&nbsp;தாக்குதல்களை முறியடித்த அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்பு</h2><p>ஈரானிலிருந்து வந்த பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு ஏவுகணை "குறிப்பிடத்தக்க எதையும் தாக்காது" என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அமெரிக்கப் படைகள் அதை வான்வெளியைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694fa969-580b-4383-b456-24bc3f0c4e40/26-6a95a030eda06.webp' /></p><p>

ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அஸ்ராக் விமானத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகவும், அதே நேரத்தில் யுஏஇ-யில் உள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகவும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
</p><p>
முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமான ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் வைப்பதைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை லராக் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறியது.</p><h2>ஈரான் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்</h2><p>
</p><p>
ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, தெஹ்ரானுக்கு எதிரான இரண்டு வார கால குண்டுவீச்சுத் தாக்குதலை அமெரிக்கா ஜூலை மாத இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்தது.அதன்பிறகு ஈரானியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda3e033-4823-48d5-b75e-4921b345460a/26-6a95a031d868f.webp' /></p><p>
மேலும், தெஹ்ரான் ஒரு சந்திப்பை விரும்புவதாகக் கூறி, ஒரு இராஜதந்திர முன்னேற்றம் குறித்து ட்ரம்ப் தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார். ஈரானியர்கள் "சந்திக்க மிகவும் விரும்புகிறார்கள்" என்று கூறிய அவர், "அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள் என்று நம்ப முடியுமா" என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;"பொருளாதாரப் பயங்கரவாதம்"&nbsp;</h2><p>தற்போதைய அமெரிக்கத் தடைகள் "கடுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன" என்றும் அவர் கூறினார். கடந்த வாரம், அமெரிக்கா 'ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d30141e-80b6-4ad8-80c9-a3ba8b5d9cd2/26-6a95a1734e032.webp' /></p><p> </p><p>இது, ஈரானின் முக்கிய பொருளாதார உயிர்நாடிகள் என்று வோஷிங்டன் விவரித்த அதன் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தங்கம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சொத்துத் துறைகளை இலக்காகக் கொண்டது. </p><p>தெஹ்ரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகவும், சமீபத்திய இந்தத் தடைகள் நடவடிக்கையை "பொருளாதாரப் பயங்கரவாதம்" என்றும் ஈரான் தெரிவித்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பிரதேசமொன்றில் கடும் வறட்சி : 778 குளங்கள் முற்றாக வற்றின]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-in-rajarata-778-tanks-dry-up-1788187422"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-in-rajarata-778-tanks-dry-up-1788187422</id>
            <summary type="text">ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருவதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (31) ஊடகங்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டுகளை விட கடுமையாகி வரும் இந்த வறட்சி, ரஜரட்ட மக்களின் வாழ்க்கையையும், சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது என்றார்.</p><h2>788 நீர்த்தேக்கங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன</h2><p>மாவட்டத்தில் உள்ள 2,410 சிறு நீர்ப்பாசன அமைப்புகளில், 788 நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக வறண்டுவிட்டன, அதே நேரத்தில் மற்ற 612 குளங்களில் நீர்மட்டம் 5% க்கும் அதிகமாக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/331271bd-f0d0-4a2c-b771-0cfa9b88912d/26-6a9597f426e95.webp' /></p><p>

இதற்கிடையில், மொத்த நீர் விநியோகத்தில் 75% க்கும் அதிகமானவை வெறும் 7 பெரிய குளங்களையே சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.</p><p></p><p>

</p><h2>குடிநீருக்கும் பெரும் திண்டாட்டம்&nbsp;</h2><p>நீர் ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துவிட்டதால், குடிநீர் கிடைப்பது கடினமாகியுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் வனவிலங்குகளின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601567cc-b580-43c9-b041-94ac8ea53dc7/26-6a9597f4cf6cb.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T15:04:40+00:00</updated>
        </entry>
    </feed>
