<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-26T16:19:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜூலை போராட்டம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-protest-in-london-1785080676"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-protest-in-london-1785080676</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இனவெறி
வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இனவெறி
வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு
போராட்டம் வெள்ளிக்கிழமை (23) லண்டனில் நடைபெற்றது.
</p><p>
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (
TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி
முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ராலயத்திற்கு முன்பாக (13 Hyde
Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.</p><h2>&nbsp;தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறை</h2><p>1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர்
மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86eebb7e-63fa-49fb-9c47-cd439992af5d/26-6a662e64e25d3.webp' /></p><p>இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்
பங்கேற்றிருந்ததுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை
ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T15:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகவும் சிறப்புற நடைபெற்ற விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/victoria-colleges-150th-anniversary-celebration-1785078214"></link>
            <id>https://ibctamil.com/article/victoria-colleges-150th-anniversary-celebration-1785078214</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்று (25.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்று (25.07.2026)
சனிக்கிழமை நடைபெற்றது.
</p><p>
பாடசாலை முதல்வர் க.சுலபாமதியின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம
விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.</p><h2>&nbsp;'விக்ரோறிய வித்தகம்' எனும் சிறப்பு மலர்</h2><p>&nbsp;இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்ரோறியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப்
பறைசாற்றும் 'விக்ரோறிய வித்தகம்' எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக
வெளியிட்டு வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04152f71-c420-4a6a-8915-d1c7d9679d29/26-6a66264b7b91f.webp' /></p><p> இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின்
தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்
 ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு</h2><p>மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு
நடனம், குழு இசை, 'பதம்' நடனம், சிங்களப் பாடல், 'காலிங்க நர்த்தனம்' நாட்டிய
நாடகம் மற்றும் 'துப்பல் பரிசு' நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள்
அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfe5905-5442-48b4-a164-78ca03ce6a45/26-6a66264c452bc.webp' /></p><p> </p><p>அத்துடன், மாணவர்களுக்கும்,
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T15:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கெதிராக வீதியில் இறங்கப்போகும் பழனி திகாம்பரம் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palani-digambaram-to-the-streets-against-the-gover-1785076282"></link>
            <id>https://ibctamil.com/article/palani-digambaram-to-the-streets-against-the-gover-1785076282</id>
            <summary type="text">தோட்டத் துறை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போதைய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தோட்டத் துறை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போதைய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதிகளில் இருந்து நிறைவேற்றப்பட்ட ஒரே விஷயம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவது மட்டுமே என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகம்பரம் எம்.பி.கூறினார்.</p><p>தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் அவர் தலைமை தாங்கும் தேசிய தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட,கூட்டம் நேற்று(25) ஹட்டனில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>தமிழ்,முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டணி</h2><p>&nbsp;இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த எம்.பி. பழனி திகம்பரம், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் வரை, தன்னை உள்ளடக்கிய இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் மௌனம் காத்தன என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19385b91-e885-4616-867f-724ec1c0dc72/26-6a661f753da17.webp' /></p><p>ஆட்சிக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அந்த வாக்குறுதிகளைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளன என்றும், அந்தக் கூட்டணி தன்னை ஜனாதிபதியைசந்தித்துப் பேச அழைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்திய விடயம்</h2><p>&nbsp; தமிழ் முற்போக்குக் கூட்டணி பலமுறை ஜனாதிபதியைச் சந்தித்து, தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. அப்போது, ​​தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலங்கள் எங்கே வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி எமது கூட்டணியிடம் கேட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059dd728-2bf9-447a-b91d-b2247bf7cb62/26-6a661f75e4e6e.webp' /></p><p>
</p><p>
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவர நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் ஒன்று திரண்டதாகவும், ஆனால் தற்போதைய அரசின் ஆட்சியைக் கண்டு அந்த மக்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிவிட்டதாகவும் பழனி திகம்பரம் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிளம்பருக்கு அடித்த அதிஷ்டம் : தங்கப்புதையலால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plumber-lucky-in-austria-gold-treasure-1785069613"></link>
            <id>https://ibctamil.com/article/plumber-lucky-in-austria-gold-treasure-1785069613</id>
            <summary type="text">ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, &#039;பிளம்பர்&#039; ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, 'பிளம்பர்' ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் தெரியவருவதாவது,
</p><p>

ஐரோப்பிய நாடான ஒஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள ஒரு பழமையான சொகுசு பங்களாவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.</p><h2>அடித்தளத்திலிருந்து நீட்டிக்கொண்டிருந்த கயிறு</h2><p>அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் ஒருவர், அடித்தளத்தின் சிமெந்து தரையில், அடியில் இருந்து ஒரு கயிறு வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கவனித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c1cb01-418e-4be6-9a6f-81207b9431e6/26-6a6602fd3e369.webp' /></p><p>
</p><p>



அந்தக் கயிற்றை அலட்சியம் செய்யாமல் அது எங்கே இருந்து வருகிறது என்பதை அறியும் ஆர்வத்துடன், சிமெந்து தரையை தோண்டத் தொடங்கினார். அப்போது கயிற்றுடன் துருப்பிடித்த ஒரு பழைய இரும்புப் பெட்டி புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.</p><p></p><p>
</p><p>

</p><h2>30 கிலோ தங்கக் காசுகள்</h2><p>அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பளபளக்கும், 30 கிலோ தங்கக் காசுகள் இருந்தன.&nbsp; அவை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d37ee2-e91d-4576-b358-e8ff99c4caab/26-6a6602fc8d947.webp' /></p><p>
</p><p>

அவருக்கு முன் மற்றொரு தொழிலாளி; அந்த கயிற்றை பார்த்துள்ளார். ஆனால், அசட்டையாக விட்டுவிட்டார்.
</p><p>

ஒஸ்திரிய நாட்டின் சட்டப்படி புதையல் கண்டெடுக்கப்பட்டால், அதில் கிடைக்கும் மதிப்பை கண்டெடுத்த நபரும், அந்த நிலத்தின் உரிமையாளரும் பாதியாக பிரித்துக் கொள்ளலாம். இதன் மூலம், அந்த பிளம்பர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது எண்ணெய் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று வெடித்ததாக ஈரானிய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.</p><p>அரசு சாரா மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் கண்ணிவெடியில் மோதுவதற்கு முன்பு, ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து அந்த எண்ணெய் கப்பல் விலகிச் சென்றதாக, நம்பகமான ஒரு வட்டாரம் டெஃபாபிரஸ் செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளது.</p><h2>தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதி</h2><p>

உயிரிழப்புகள், கப்பலின் அடையாளம் அல்லது சேதத்தின் அளவு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/899d3033-07df-4baf-9006-68644ae9277c/26-6a660af68f609.webp' /></p><p>
</p><p>
ஜூன் 26 அன்று, ஹோரர்முஸ் நீரிணை வழியாகச் செல்வது தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
</p><p>

வோஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தெஹ்ரான் தனது கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கால்வாய் வழியாக, ஈரானால் நிர்வகிக்கப்படும் வழிசெலுத்தல் பொறிமுறையின் கீழ் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை விலை உயர்வுக்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/egg-production-decreased-due-to-high-temperatures-1785073908"></link>
            <id>https://ibctamil.com/article/egg-production-decreased-due-to-high-temperatures-1785073908</id>
            <summary type="text">தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில இலங்கை முட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

வாராந்திர முட்டை விலையை நிர்ணயிப்பதற்காக இன்று (26) நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அதிக தேவை உள்ள ஒரு பொருளாக மாறியுள்ள&nbsp;முட்டை</h2><p>"முட்டைகள் இன்று அதிக தேவை உள்ள ஒரு பொருளாக மாறியுள்ளன. நாங்கள் ஒரு முட்டையின் விலையை முப்பத்தெட்டு ரூபாய் என நிர்ணயிக்கும்போது, ​​வியாபாரிகள் வந்து நாற்பது ரூபாய்க்கு கூட முட்டைகளைக் கேட்கிறார்கள். அதன்படி, சந்தையில் முட்டைகளுக்கு அதிக தேவை உள்ளது என்று நாங்கள் முடிவு செய்கிறோம். அதே நேரத்தில், இந்த நாட்களில் நிலவும் கடுமையான வெப்பம், முட்டை உற்பத்தி வேகமாக குறைவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f121e1-5ae8-4497-bf43-38e96ce2b113/26-6a661530cd20e.webp' /></p><p>அதே சமயம், நாங்கள் அரசிடம் பலமுறை கோரிய மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கான எங்கள் கோரிக்கையை எந்த அதிகார அமைப்பும் செவிமடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வளர்ந்த கோழி முட்டையிடுவதற்கு, முட்டைக் குவியல் தேவையான அளவில் இருக்க வேண்டும். துறையின் மருத்துவர்கள் கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள்.</p><p></p><h2>கோழிக்குத் தேவையான ஊட்டச்சத்து</h2><p> </p><p>ஒரு கோழிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதபோது, ​​முட்டைக் குவியல் எனப்படும் உறுப்பு மெலிந்து போகத் தொடங்குகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முட்டை உற்பத்தி வேகமாக குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554cb2b2-b969-4674-aaa2-942ff2e8c8b7/26-6a6615302720a.webp' /></p><p>அந்த நிலையைத் தவிர்க்க மக்காச்சோளம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.</p><p>அதனால்தான், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் வளங்கள் துறைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இன்றும் கூட, எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.</p><p></p><h2>முட்டைகளுக்கு மிகப்பெரிய தேவை</h2><p>முட்டைகள் விரைவில் கெட்டுப்போகக்கூடிய ஒரு பண்டம். முட்டைகளின் விலை, அதன் அளிப்பு மற்றும் தேவையால் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், முட்டைகளுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. அதனால்தான், நாங்கள் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு முட்டைகள் விற்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44b5402-a9cf-4158-b187-6bcf124a7479/26-6a66152f72fe6.webp' /></p><p>&nbsp;எனவே, ஜனாதிபதி அவர்களையும், இப்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் லால் காந்தா அவர்களையும், பிரதி அமைச்சர் அவர்களையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். "கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தின் விலங்கு உற்பத்தித் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும், எங்கள் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கருணாரத்ன அவர்களுடனும் எங்களுக்கு ஒரு நேரடிக் கலந்துரையாடலை அமைச்சர் வழங்க வேண்டும். </p><p>அப்போதுதான் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வைக் காண முடியும். ஏனென்றால், இவை அனைத்திற்கும் மத்தியில், முட்டைகளை உட்கொள்ளும் நுகர்வோரைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை: ஈரான், ஓமான் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-says-progress-made-in-talks-with-oman-on-hormuz-1785047769"></link>
            <id>https://ibctamil.com/article/an-says-progress-made-in-talks-with-oman-on-hormuz-1785047769</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>விவகாரம் சாதகமான திசையில் சென்றாலும், ஒப்பந்தம் எட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் தேவை என வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>பேச்சுவார்த்தைக்காக ஓமான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈரான் சென்றதாகவும், இந்த இராஜதந்திர முயற்சி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை நிறுத்திய முடிவுடன் ஒத்துப்போனதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b028ed0d-185a-40a9-ac6e-2dd795bd9eec/26-6a65fe7c4d0a1.webp' /></p><p>அமெரிக்க மத்திய படைத் தளபதி தலைமையகம் தொடர்ச்சியாக 13 இரவுகளாக இந்த தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>எனினும் வெள்ளை மாளிகையும் சென்ட்கம்மும் கருத்து கோரியதற்கு பதிலளிக்கவில்லை எனவும் அது மேலும் தெறிவிக்கப்படுகிறது.</p><p>ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தையை வாஷிங்டன் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் மேலும் தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரபிட்டியா இல்லத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-discovered-body-at-a-house-in-karapitiya-1785069438"></link>
            <id>https://ibctamil.com/article/police-discovered-body-at-a-house-in-karapitiya-1785069438</id>
            <summary type="text">காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இறந்த நபர் திருமணமாகாத ஆண் என்றும், அவர் அந்த இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று, அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகக் கரபிட்டிய&nbsp; காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அழுகிய சடலம் மீட்பு</h2><p>காவல்துறையினர் அந்த இல்லத்திற்குச் சென்று குளியலறைக்குள் சடலத்தைக் மீட்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282e6498-b7db-4a97-9b60-892ea4c6b52a/26-6a66027c7e889.webp' /></p><p>மேலும் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மீதங்கள் காலி தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்பொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-1million-selling-water-bottles-inflated-price-1785058150"></link>
            <id>https://ibctamil.com/article/fine-1million-selling-water-bottles-inflated-price-1785058150</id>
            <summary type="text">குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதை தொடர்ந்து நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p></p><h2>10 லட்சம் அபராதம்</h2><p>
</p><p>
இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d231e88-421c-4fe3-affe-e384e54586fc/26-6a65ef641d608.webp' /></p><p>
</p><p>
எனவே நீதிமன்றத்தால் குறித்த நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகவிலைக்கு அரிசி விற்ற கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shop-selling-keeri-ponni-rice-overpriced-fined-1785065004"></link>
            <id>https://ibctamil.com/article/shop-selling-keeri-ponni-rice-overpriced-fined-1785065004</id>
            <summary type="text">காலி, அக்மீமான பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற ஒரு கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, அக்மீமான பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற ஒரு கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-ஐ விட அதிகமாக, ரூ. 270 என்ற விலையில் விற்றதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், காலி நீதவான் நீதிமன்றத்தில் அந்தக் கடைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தனர்.</p><h2>நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம்&nbsp;</h2><p>கடந்த 17-ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த சட்டவிரோத விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb8ec578-da34-40e8-995f-85c228b694f7/26-6a65f236c7ab3.webp' /></p><p>
</p><p>
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, காலி நீதவான் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/138-730-tourists-visited-sri-lanka-21-days-in-july-1785064321"></link>
            <id>https://ibctamil.com/article/138-730-tourists-visited-sri-lanka-21-days-in-july-1785064321</id>
            <summary type="text">இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 22&amp;nbsp; நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள்&amp;nbsp;இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை சுற்றுல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 22&nbsp; நாட்களில்<a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_22nd_July_2026.pdf" target="_blank"> 138,730 சுற்றுலாப் பயணிகள்</a>&nbsp;இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23 சதவீதம் ஆகும்.</p><p></p><h2>அதிக சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p> 

அத்துடன், சீனாவிலிருந்து 8,484 பேரும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3731f5-a272-4b65-84ad-906cf2f6a307/26-6a65eea827c49.webp' /></p><p> </p><p>

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 22 வரை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,285,303 ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>

அவர்களில் இந்தியாவிலிருந்து 325,417 பேரும், பிரித்தானியாவில் இருந்து 123,526 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 475.6 பில்லியன் ரூபாயாகும்.</p><p>கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானமாக 50.5 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேணுகா விடுதி பிளட்போம்காரருக்கு அநுரவின் ஓகஸ்ட் 3 சந்திப்பு டீல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-tamil-political-parties-meet-with-anura-kumara-1785063886"></link>
            <id>https://ibctamil.com/article/6-tamil-political-parties-meet-with-anura-kumara-1785063886</id>
            <summary type="text">ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் (24) சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, சிறிலங்கா அரசதலைவர் அநுரவுடன் ஒரு சந்திப்பை நடத்த முடிவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் (24) சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, சிறிலங்கா அரசதலைவர் அநுரவுடன் ஒரு சந்திப்பை நடத்த முடிவு செய்து ஒரு கடிதத்தை அனுப்பிய நிலையில் என்ன ஆச்சரியம் நேற்று அநுர தரப்பில் மளமளவென சில நகர்வுகள் நடந்தன.</p><p>
இந்த மளமள நகர்வுகளால் எதிர்வரும் ஓகஸ்ட் 3 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்தும் முகூர்த்தம் ரேணுகா டீல் பிளட்போம்காரருக்கு கிட்டிவிட்டது.</p><p>சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசு கட்சி மற்றும் எதிரணியிலுள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பதை தவிர்த்த பின்னர் அந்த நன்றிக்கு கடப்பாடோ என்னவோ உடனடியாக சந்திப்புக்கு பதில் வழங்கப்பட்டது. </p><p>அநுரவுக்கு ஒரு கடிதம் பறந்த ஒரிரு மணிநேரங்களில் இந்த சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டமை அசாதாரணம் தான் 
அதிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் நகர்வுக்கு அரசாங்கம் உறுதியாக உள்ள நிலையில் ஆகக்குறைந்தது இந்த விடயத்தில் 6 தமிழபேசும் கட்சிகளை சமரம் செய்வது தனக்கு ஆதாயமாக கூடும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்புக்கு அநுர விரைவாக முகூர்த்தம் குறித்திருக்காலாம்.</p><p>இந்த நிலையில் என்ன மாயமோ மந்திரமோ கடந்த சில மாதங்களாகக் கணிசமாகக் குறைந்திருந்த பாதளா டுமீல்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு.........</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sepKKHv_eQ4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>

</p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை மாற்ற நடவடிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-to-increase-the-retirement-age-of-judges-1785061261"></link>
            <id>https://ibctamil.com/article/steps-to-increase-the-retirement-age-of-judges-1785061261</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தெளிவுபடுத்தியபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அதற்கமைய, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும், அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அமைச்சரவையில் முன்வைக்கப்படும்&nbsp;யோசனை</h2><p>
</p><p>
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பட்சத்தில், அது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9710c5dd-cf40-463a-9823-0c7ae23cb8a2/26-6a65e2ede4d8a.webp' /></p><p>அத்துடன் பொதுவாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் கணிசமான காலம் தாமதிக்கப்படுகின்றது எனவும் இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, நமது நீதிமன்றக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p>சில நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தும் சமூகத்தில் நிலவுகின்றதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய் பலி : பிள்ளைகள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-of-four-dies-after-being-crushed-by-tipper-1785062142"></link>
            <id>https://ibctamil.com/article/mother-of-four-dies-after-being-crushed-by-tipper-1785062142</id>
            <summary type="text">குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர் அண்மையில் நாடுதிரும்பிய இளம் குடும்பபெண் டிப்பர் மோதி உயிரிழந்ததுடன் அவரின் இரண்டு பிள்ளைகள் படுகாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர் அண்மையில் நாடுதிரும்பிய இளம் குடும்பபெண் டிப்பர் மோதி உயிரிழந்ததுடன் அவரின் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
நேற்று (25) மதியம் நடந்த இந்த விபத்தில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்ற டிப்பர், ​​வீதியோரம் நின்றுகொண்டிருந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் மீது மோதியது.</p><p>
உயிரிழந்தவர், தம்புள்ள கப்புவத்த பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம். திலானி அரோஷா என்ற 46 வயதுப் பெண் ஆவார்.</p><h2>பிள்ளைகள் தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதி</h2><p>காயமடைந்த இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், மற்றையவர் தற்போது மருத்துவமனையின் பொது விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb490ee-ba1d-427b-ba38-4e0fcabba731/26-6a65e7947bce8.webp' /></p><p>
</p><p>
படுகாயமடைந்த மூத்த பிள்ளை, தம்புள்ளையில் உள்ள வீர மோகன் ஜெயமஹா கல்லூரியில் பயின்று வருகிறார், மேலும் இந்த ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தயாராகி வருகிறார்.

காயமடைந்த மற்றைய பிள்ளை அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>

</p><h2>வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்</h2><p>உயிரிழந்தவர் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்ததாகவும்,கடந்த 8 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7db0046-176f-4431-9e8d-fc5a9def2973/26-6a65e793c421a.webp' /></p><p>

விசாரணையின் போது, ​​மூவரும் ஒரு சிறப்பு இரவு உணவைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகக் கடைக்குச் செல்ல வீதியோரத்தில் காத்திருந்தபோது, ​​மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கி அதிவேகமாக வந்த ஒரு டிப்பர் சாலையிலிருந்து விலகி அவர்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த விபத்து தொடர்பாக டிப்பர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தம்புள்ளை காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்! அநுரவிடம் கரம் கூப்பி கோரிக்கை விடுத்த ரவிகரன் எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-raviharan-urges-release-of-tamil-prisoners-1785057791"></link>
            <id>https://ibctamil.com/article/mp-raviharan-urges-release-of-tamil-prisoners-1785057791</id>
            <summary type="text">சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது என தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் சிறைக் கைதிள்
படுகொலை பொது நாள் நினைவேந்தல் நேற்று (25-07-2026) இடம்பெற்றது.
</p><p>
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தமிழ் தேசியம்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு
பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e5ee61-90bd-414f-8c2b-3b58b7c6952b/26-6a65e25a7f7aa.webp' /></p><p>குறித்த கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம்
கூப்பி கேட்டோம் தமிழரசியல் கைதிகளை விடுவியுங்கள் அதிலும் இலங்கையர்
தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.
</p><p>
வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.</p><p>
</p><p></p><h2>தமிழ் அரசியல் கைதி</h2><p>அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி
இருக்கிறோம் ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edede7bf-1645-48d9-9a9a-4ffb8e1e80f8/26-6a65e25b2d4f5.webp' /></p><p>
தற்போது சிறையில் 10 தமிழரசிகள் கைதிகள் இருக்கிறார்கள் அவர்களின் விபரம்
அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள்
என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி
இருக்கிறேன்.
</p><p>
அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம்
கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு
தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:36:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது அரசாங்கம் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-had-lost-the-people-s-trust-namal-1785060186"></link>
            <id>https://ibctamil.com/article/government-had-lost-the-people-s-trust-namal-1785060186</id>
            <summary type="text">&amp;nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
</p><p>
ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும், நியாயமற்ற வரிச்சுமையை விதித்ததாலும் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.</p><h2>வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு</h2><p>உரத் தட்டுப்பாடு, அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை, உயர் வரிகள் மற்றும் அதிகரித்து வரும் பயன்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவற்றால் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிரமப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f883de2e-7d5d-4bd5-a183-11854173cb34/26-6a65deb03604a.webp' /></p><p>அதிகாரிகளிடமிருந்து பலமுறை உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்வதாகக் கூறி, குற்றங்களைக் கையாளும் அரசாங்கத்தின் விதத்தையும் ராஜபக்ச விமர்சித்தார். தடயவியல் அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களால் சிறைச்சாலைகள் நெரிசலாகி வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>&nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு</h2><p>&nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்துக் குறிப்பிடுகையில், சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வருவதாக நாமல் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861e9e2e-73f2-45d3-bc08-4bc405b776a5/26-6a65deb0de658.webp' /></p><p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதை அரசாங்கம் ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதினால், அது பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் இளைய தலைமுறையினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நவீன அரசியல் இயக்கத்தை உருவாக்குவதே கட்சியின் நோக்கம் என்று கூறிய ராஜபக்ச, அடிமட்ட அளவில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) வலுப்படுத்துமாறு ஆதரவாளர்களை வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:17:29+00:00</updated>
        </entry>
    </feed>
