<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T13:52:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்</h2><p>
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/962e6ad2-3943-4690-8057-6c67a13478e1/26-6a79d532072df.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T13:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன் : ட்ரோன் தாக்குதலில் பலர்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929</id>
            <summary type="text">மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&amp;nbsp; 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&nbsp; 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. </p><p>

உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம்</h2><p>ரஷ்யாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8085f5-6065-4a84-8efe-336993ed7a89/26-6a79cad84bc0e.webp' /></p><p> </p><p>ரஷ்யாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா</h2><p>
</p><p>
இலங்கை நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலைவரை 456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfebe66b-2560-4068-9899-0c489784517b/26-6a79cad7859c9.webp' /></p><p> இதில் எத்தனை ட்ரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷ்யா 126ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T12:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனையை ஏற்க முடியாது! ஆனால்...கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cardinal-says-death-penalty-unacceptable-1786364349"></link>
            <id>https://ibctamil.com/article/cardinal-says-death-penalty-unacceptable-1786364349</id>
            <summary type="text">
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கடமையில் இருந்து தவறியதற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p>

மரண தண்டனை மனித மாண்பை மீறுவதாகவும், மரண தண்டனை விதிப்பதை திருபீடத்தின் போதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

எவ்வாறாயினும், இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதன் முடிவுகளிலோ அல்லது ஆலோசனைகளிலோ எந்த வகையிலும் தலையிட எண்ணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29123956-1090-41f0-8c10-bf80d9cc8592/26-6a79c9637633c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளையும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் சட்டப்படி நீதி கிடைக்கச் செய்வதற்கும் தொடர்ந்து பாடுபடுவதே கொழும்பு மறைவாட்டத்தின் வலுவான விருப்பம் என்று கர்தினால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-10T12:51:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்களால் வெடித்தது சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/studentl-library-employees-closed-the-door-1786357333"></link>
            <id>https://ibctamil.com/article/studentl-library-employees-closed-the-door-1786357333</id>
            <summary type="text">&amp;nbsp;மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.&nbsp;</p><p>&nbsp;தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த ராசிகா குணசிங்க, 17 வயதுடைய இந்த மாணவி நூலகத்தின் மேல் மாடியில் படித்துக்கொண்டிருந்து கீழே வந்தபோது அதிகாரிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;மாணவியை விட்டு கதவை பூட்டி சென்ற ஊழியர்கள்</h2><p> </p><p>அங்கு யாரும் இல்லாததால் பயந்துபோன மாணவி சத்தமிட்டு அழுதார், வீதியில் சென்ற இரண்டு குழந்தைகளுக்கு அந்த சத்தம் கேட்டு நகர சபை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/656343a0-9897-4835-bc31-abf1c622f111/26-6a79ab22b13f0.webp' /></p><p> </p><p>பின்னர் இரண்டு தொழிலாளர்கள் கூரையின் வழியாக நூலகத்திற்குள் குதித்ததால் மாணவி மேலும் பயந்துபோனார், பின்னர் வேறொருவர் சாவியைக் கொண்டுவந்து கதவைத் திறந்து அவரை வெளியே கொண்டுவந்தார். </p><p>அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு தொழிலாளி மாணவியை காணொளி எடுத்ததால் மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி முகத்தை மூடிக்கொண்டிருந்தார் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளனர் என்றும் உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.</p><p></p><p>

</p><h2>நடைபெற்றுவரும் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நகர சபை தலைவர் சமன் சமரகோன் , இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8d74cc-7399-41a7-8a16-690bd3a58f7d/26-6a79ab236c135.webp' /></p><p> </p><p>அந்த அதிகாரிகள் தவறிழைத்தது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.</p><p> இதற்கிடையில், இந்த சம்பவம் காரணமாக மகரகம நகர சபை நூலகம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டது என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்ப தயங்குவதாகவும்சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நகர சபை உறுப்பினர் காந்தி கோடிக்கார இங்கு குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T12:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைகளிலுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுங்கள் : வடக்கிலிருந்து ஒலித்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-indian-fishermen-in-sri-lankan-prisons-1786362437"></link>
            <id>https://ibctamil.com/article/release-indian-fishermen-in-sri-lankan-prisons-1786362437</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை
சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை
சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ
பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர் இந்த
கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>சிறைச்சாலை கலவரங்கள்</h2><p>38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில்
உள்ளனர். இதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குவர்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல்
கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daa48ae2-7c22-45ed-8291-e67966d3e701/26-6a79c1113b494.webp' /></p><p> நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த
உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.
</p><p>
இந்நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு
மாற்றப்பட்டுள்ளார்கள்.</p><h2>உயிருக்கு அச்சுறுத்தல்</h2><p>

மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு
கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது
தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62e3be9-dda0-4dcc-a775-1deca908e19f/26-6a79c111e2d14.webp' /></p><p>
</p><p>
இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும்
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு
அவர்கள் குடும்பங்களிடம் சேர்க்க வேண்டுமென என கோரிக்கை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T12:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lesson-hiroshima-and-nagasaki-hold-for-eelam-1786359605"></link>
            <id>https://ibctamil.com/article/lesson-hiroshima-and-nagasaki-hold-for-eelam-1786359605</id>
            <summary type="text">உலக வரலாற்றில் சில நாட்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடிவதில்லை. அவை நாட்காட்டியில் ஒரு திகதியாக மாத்திரம் இருப்பதில்லை. மனித குலத்தின் மனச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக வரலாற்றில் சில நாட்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடிவதில்லை. அவை நாட்காட்டியில் ஒரு திகதியாக மாத்திரம் இருப்பதில்லை. </p><p>மனித குலத்தின் மனச்சாட்சியில் அழியாத காயங்களாக நிலைத்திருக்கின்றன. </p><p>அந்தக் காயங்களின் கதை, மீள மீள வாசிக்க வேண்டிய ஒரு பாடமாகவும் இருக்கிறது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் திகதிகளும் அத்தகைய நாட்களே. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டு நகரங்களை மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் மீதான நம்பிக்கையையும் உலுக்கின.</p><p></p><h2>பேரழிவின் நினைவு</h2><p>இரண்டாம் உலகப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த காலமது. அமெரிக்கா, ஜப்பானை சரணடையச் செய்வதற்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது ‘ஃபாட் மேன்’ எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. </p><p>சில நொடிகளில் நகரங்கள் தீப்பந்தங்களாகின. மனிதர்கள் கருகினர். வீடுகள் சிதைந்தன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.</p><p>&nbsp;ஆனால் அணுகுண்டின் அழிவு அந்த நாளுடன் முடிந்துயவில்லை. குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பியவர்கள் பின்னர் கதிர்வீச்சின் கொடூரத்தை அனுபவித்தனர். </p><p>உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள், நோய்கள், புற்றுநோய்கள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த உடல்நலப் பாதிப்புகள் என அந்தப் போரின் நிழல் பல ஆண்டுகள் நீடித்தது. இப்படித்தான் போர் உலகம் முழுவதும் நீள்கிறது. ‘ஹிபாகுஷா’ என்று அழைக்கப்பட்ட அணுகுண்டு உயிர்தப்பிகள் தங்கள் உடல்களில் மட்டுமல்ல, நினைவுகளிலும் அந்த அழிவை சுமக்க நேரிட்டது.</p><h2>அவர்கள் மீண்டெழுந்தனர்</h2><p>ஆனால் இங்கேதான் ஜப்பானின் வரலாறு ஒரு முக்கியமான திருப்பத்தை எடுத்தது. சாம்பலாகிப் போன நகரங்களை பார்த்து ஜப்பானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தையும் சாம்பலாக்கவில்லை.</p><p> அவர்கள் மீண்டும் எழுந்தனர். வீடுகளை கட்டினர். பள்ளிகளைத் திறந்தனர். தொழிற்சாலைகளை நிறுவினர். அறிவியலை வளர்த்தனர். கல்வியை முன்னிறுத்தினர். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக ஜப்பான் மாறியது. </p><p>ஹிரோஷிமா இன்று வெறும் அழிக்கப்பட்ட நகரத்தின் நினைவுச்சின்னமாக மாத்திரமின்றி உயிர்வாழ்வினதும் போராட்டத்தினதும் அடையாளமாகவும் நிற்கிறது. நாகசாகியும் அதேபோல். அழிவை நினைவில் வைத்துக்கொண்டபடியே எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை உலகிற்கு காட்டிய நகரமே.</p><p>&nbsp;இதன் பொருள் அவர்கள் தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டார்கள் என்பதல்ல. மாறாக, அவர்கள் கடந்த காலத்தை நினைவாகப் பாதுகாத்தார்கள். அணு ஆயுதங்களின் ஆபத்தை உலகிற்கு தொடர்ந்து எடுத்துச் சொன்னார்கள்.</p><p> தங்கள் குழந்தைகளுக்கு போரின் விலையை – போரின் முகத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் விழைந்த பேரழிவினை எச்சரிக்கும் நினைவிடங்களை உருவாக்கினர். </p><p>அருங்காட்சியகங்களை அமைத்தனர். உயிர்தப்பியவர்களின் சாட்சிகளைப் பதிவு செய்தனர். இப்படியாக வரலாற்றை அழித்துவிடாமல் அதிலிருந்து எதிர்காலத்தை கட்டியெழுப்பினார்கள்.</p><h2>யப்பானும் ஈழமும்</h2><p>இந்த இடத்தில்தான் ஹிரோஷிமாவும் நாகசாகியும் ஈழ மக்களிடம் ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகின்றன. </p><p>போரால் அழிக்கப்பட்ட ஒரு சமூகமாக நாம் எதைச் செய்கிறோம்? ஈழத் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாகப் போர், படுகொலைகள், இடப்பெயர்வுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறை, சித்திரவதை, நிலப்பறிப்பு, பொருளாதார அழிவு என எண்ணற்ற காயங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றனர்.</p><p> முள்ளிவாய்க்கால் என்பது நமது கூட்டு நினைவில் ஒரு காயமாக இருக்கிறது. செம்மணி, குமரபுரம், நாகர்கோவில், சத்துருக்கொண்டான், திராய்க்கேணி, வல்வெட்டித்துறை என எண்ணற்ற இடங்கள் எமது வரலாற்றின் இரத்தச் சாட்சிகளாக நிற்கின்றன.</p><p>&nbsp;ஆனால் ஜப்பானின் அனுபவம் சொல்லும் பாடம், காயங்களை மறந்துவிடுங்கள் என்பதல்ல. மாறாக, காயங்களை நினைவாக மாற்றுங்கள். நினைவுகளை அறிவாக மாற்றுங்கள். அறிவை எதிர்காலமாக மாற்றுங்கள். </p><p>ஒரு மக்கள் அழிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாக்க முடியும். தங்கள் கல்வியைப் பாதுகாக்க முடியும். தங்கள் பண்பாட்டை மீட்டெடுக்க முடியும். தங்கள் வரலாற்றை எழுத முடியும். தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் கடந்த காலத்தைச் சொல்ல முடியும். அதுவே ஒரு ஒரு இனத்தின் ஒரு தேசத்தின் உயிர்வாழ்வுக்கு அடிப்படையாகிறது.</p><h2>மீள் எழுதல் என்பது</h2><p>&nbsp;ஜப்பான் எப்படி தன் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பியது என்பது ஈழத்திற்கும் உலகிற்கும் ஒரு பெருங்கதை, ஒரு பெரும்பாடம். ஈழத் தமிழர்களும் தங்கள் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.</p><p> ஆனால் கட்டடங்களை மாத்திரமல்ல. கட்டங்கள் கட்டி எழுப்பப்படுவது மாத்திரம் வளர்ச்சியல்ல. கல்வியை. பொருளாதாரத்தை. கலை இலக்கியத்தை. அறிவியலை. சமூக நிறுவனங்களை. </p><p>நினைவகங்களை. வரலாற்றுப் பதிவுகளை. போர் முடிவடைந்துவிட்டதாக அரசுகள் அறிவிக்கலாம். ஆனால் ஒரு மக்களின் மனதில் போர் முடிவடைவதற்கு பல தலைமுறைகள் தேவைப்படலாம். அதனால் மீள் வாழ்வு என்பது வெறும் வீடுகளை அமைப்பதஅல்ல. உடைந்த சமூக நம்பிக்கையை மீண்டும் உயிரூட்டுவதாகும்.</p><p>ஒரு நகரத்தை அழிக்க முடியும்; ஒரு தலைமுறையை காயப்படுத்த முடியும்; ஆனால் ஒரு மக்கள் தங்கள் நினைவையும் அறிவையும் எதிர்காலக் கனவையும் பாதுகாத்துக்கொண்டால் அவர்களை முழுமையாக அழித்துவிட முடியாது என்பது ஹிரோஷிமா நமக்குச் சொல்லும் மிகப் பெரிய பாடம் இதுதான்: &nbsp;நாகசாகியின் சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான், அழிவுக்குப் பின்னரும் மனிதன் மீண்டும் எழ முடியும் என்பதற்கான சாட்சியாக நிற்கிறது.</p><p>ஈழமும் ஒருநாள் தன் காயங்களின் மீது நின்றுகொண்டு எழ வேண்டும். அதற்கு முதலில் நாம் எமது வரலாற்றை மறக்கக் கூடாது. இரண்டாவதாக, அந்த வரலாற்றை வெறும் துயரமாக மாத்திரம் வைத்திருக்கக் கூடாது.</p><p> மூன்றாவதாக, அடுத்த தலைமுறைக்கு அழிவின் கதையை மட்டும் சொல்லாமல், மீண்டெழும் மக்களின் கதையையும் சொல்ல வேண்டும். ஹிரோஷிமாவும் நாகசாகியும் இன்று உலகத்திடம் அணுகுண்டுக்கு எதிராகப் பேசுகின்றன.ஈழத்தின் மண்ணும் ஒருநாள் அதன் புதைகுழிகளிலிருந்து எழுந்து, போர் எதைச் செய்தது என்பதை உலகத்திடம் சொல்ல வேண்டும். </p><p>கலை இலக்கியங்கள், அரசியல், போராட்டம் என எல்லா வழிகளிலும் எமது குரல் மிக நேர்த்தியோடு இதைச் செய்ய வேண்டும். சாம்பலில் இருந்து எழுவது மறப்பதற்கான எத்தணமல்ல. நினைவோடு மீண்டும் வாழத் தொடங்குவதாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="http://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-10T11:49:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[230 புலம்பெயர்ந்தவர்களுடன் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்து சென்ற சிறிய படகு : முறியடிக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/small-boat-carrying-record-230-migrants-to-uk-1786359989"></link>
            <id>https://ibctamil.com/article/small-boat-carrying-record-230-migrants-to-uk-1786359989</id>
            <summary type="text">கடந்த வார இறுதியில், 230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குச் சென்றது. இதன் மூலம், ஒரே படகில் இவ்வளவு அதிகமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வார இறுதியில், 230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குச் சென்றது. இதன் மூலம், ஒரே படகில் இவ்வளவு அதிகமானோர் கடந்து சென்றதற்கான சாதனையை இது படைத்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.
</p><p>
இந்தப் படகு சனிக்கிழமையன்று இங்கிலாந்தை வந்தடைந்தது. இதன் மூலம், ஒரே படகில் 165 பேர் கடந்து சென்ற ஜூலை மாதத்தின் முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>ஒரே நாளில் ஆங்கில கால்வாயை கடந்தவர்கள்</h2><p>&nbsp;சனிக்கிழமையன்று நான்கு படகுகளில் மொத்தம் 258 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குச் சென்றதாக உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7294e7-eab7-4efc-acee-84dd9b8db3c1/26-6a79b6278ab23.webp' /></p><p>
</p><p>
"பயணிக்கத் தகுதியற்ற படகுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் திணிப்பதன் மூலம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் குற்றக் கும்பல்களால் கையாளப்படும் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான தந்திரங்களை" இந்த சமீபத்திய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>குறைவடைந்த ஆங்கில கால்வாயை கடப்பவர்களின் எண்ணிக்கை</h2><p>ஒரே படகில் சாதனை அளவிலான மக்கள் பயணித்த போதிலும், இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf21ee77-aff9-4486-b7d5-2ab7eec55b89/26-6a79b6283d93c.webp' /></p><p>
</p><p>
பிபிசி மேற்கோள் காட்டிய உள்துறை அமைச்சகத்தின் தற்காலிகத் தரவுகளின்படி, இதுவரை சுமார் 14,820 பேர் சிறு படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 43% சரிவையும், 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 16% சரிவையும் குறிக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சில மாவட்டங்களுக்கு நாளை இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strong-winds-40-kmph-expected-several-tomorrow-1786356796"></link>
            <id>https://ibctamil.com/article/strong-winds-40-kmph-expected-several-tomorrow-1786356796</id>
            <summary type="text">&amp;nbsp;நாளை (11.08.2026) மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாளை (11.08.2026) மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என&nbsp; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>அதேவேளை, பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் வடமேற்கு மாகாணத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம்</h2><p>
</p><p>
 

இதற்கிடையில், வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bbdcf2b-339e-4a59-8b70-e44116559a3f/26-6a79a7890d0c7.webp' /></p><p>

 

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:36:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா போபியா மேனியா! போமலின் புரட்டுகள்! பெஸ்ரிவல் குழப்பங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-phobia-mania-1786360783"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-phobia-mania-1786360783</id>
            <summary type="text">றீச்சா பண்ணையில் விளைவிக்கப்படும் பழங்கள் அழுகாமல் ஆக இருப்பதற்காக போர்மலின் என்ற இரசாயனம் தெளிக்கப்படுவதாக தனது இரசாயன வதந்தி வாயால் வடக்கின் சுயேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா பண்ணையில் விளைவிக்கப்படும் பழங்கள் அழுகாமல் ஆக இருப்பதற்காக போர்மலின் என்ற இரசாயனம் தெளிக்கப்படுவதாக தனது இரசாயன வதந்தி வாயால் வடக்கின் சுயேச்சை கிளாடியேற்றர் எம்.பி தனது நாடாளுமன்ற சிறப்புரிமை உரையில் அடித்துவிட்டார். </p><p>

அதுவும் றீச்சாவில் ஒரு உணவுத்திருவிழா நடப்பதற்கு முதல் நாளில்; நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய Parliamentary Privilege and Immunity எனப்படும் உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமையில் சொன்னார். </p><p>அவ்வாறான போமலின் பழங்கள் தெற்கை நோக்கி வருவதாகவும் சிங்களவர்களை பீதியூட்டி சமூக சேதசதிக் கோட்பாடுகளை (Destruction Conspiracy Theory ) எடுத்து விட மறுநாள் வடக்கின் சுற்றுலாத்துறை மற்றும் அதன் பொருளாதார சுயசார்பை அடிக்கும் நோக்குடன் 
றீச்சா நிகழ்வில் சில களமிறக்கிகள் குழப்பங்களை செய்தமை ஒரு ரைம்லைன் நகர்வாகவே தெரிகிறது.</p><p> 

இந்த ரைம்லைன் குழப்பங்களை எய்தவர்களின் உள்நோக்கம் வடக்கின் பொருளாதார சுயசார்பை அடிப்பது மாகாணசபைத்தேர்தலில் எங்கே றீச்சா BK களமிறங்கிவிடுவாரோ என்ற கிலிசார்ந்த இலக்குகள் 
இதன்பின்னர் தான் றீச்சா மற்றும் BK போபியா மேனியாக்கள் சமூக வலைத்தள கூச்சல்களாக வந்த நிலையில் தனிப்பட்ட அரசியல் பகை வைத்துள்ள தரப்புகள் இதனை முதலீடாக்க துடிக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pDRk50aQzVc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T11:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்திற்கு புதிய பீடாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/faculty-of-management-studies-and-com-uoj-new-dean-1786359274"></link>
            <id>https://ibctamil.com/article/faculty-of-management-studies-and-com-uoj-new-dean-1786359274</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (10) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக
பீடச்சபைக் கூட்டத்தில் பீடாதிபதி தெரிவு நடாத்தப்பட்டது.</p><p>இந்த தெரிவின் போது 15 வாக்குகளால்
முன்னிலை பெற்று பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>புதிய பீடாதிபதி தெரிவு</h2><p>
</p><p>
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம்
திகதி நிறைவடையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb9e6a1-2979-4f19-a7a8-6f70494925f6/26-6a79b0e4d6cdf.webp' /></p><p>இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க,
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு
செய்வதற்காக இன்று காலை தெரிவுக் கூட்டம் இடம்பெற்றது.</p><p>இதன்போது பேராசிரியர்
பி. பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில்
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ishara-sevvanthi-remanded-in-custody-1786359278"></link>
            <id>https://ibctamil.com/article/ishara-sevvanthi-remanded-in-custody-1786359278</id>
            <summary type="text">கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (10.08.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.</p><p></p><h2>இஷாரா செவ்வந்தி</h2><p>
</p><p>
 

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் . இதன்போது அவரை ஆகஸ்ட் 21-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு&nbsp; நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a23f041-d816-44f7-a968-7fb1d8488f1d/26-6a79b173df1ba.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையினரின் விசேட நடவடிக்கை! கடமையில் ஈடுபடுத்தப்படும் 10,000 அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/operation-to-identify-motorists-driving-recklessly-1786357910"></link>
            <id>https://ibctamil.com/article/operation-to-identify-motorists-driving-recklessly-1786357910</id>
            <summary type="text">



பாடசாலை விடுமுறைக் காலத்தில், கவனயீனமாக அல்லது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>



பாடசாலை விடுமுறைக் காலத்தில், கவனயீனமாக அல்லது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>

இந்நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 போக்குவரத்துப் காவல்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வீதிப் பாதுகாப்பு</h2><p>

அபாயகரமான வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், வீதிப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பொதுமக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aef9136-5388-4d34-bd53-df90a5d038c3/26-6a79afb3222b3.webp' /></p><p>

கவனயீனமாக வாகனம் செலுத்துவதால் சிறுவர்கள் மற்றும் ஏனைய அன்புக்குரியவர்கள் உயிர்களை இழப்பதையோ அல்லது தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிவதையோ தடுப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றும் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-10T11:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் - நவம்பரில் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-in-october-and-november-meteorology-dep-1786355126"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-in-october-and-november-meteorology-dep-1786355126</id>
            <summary type="text">நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் என&amp;nbsp; வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் என&nbsp; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி கசுன் பஸ்க்குவல் தெரிவித்துள்ளார்.</p><p>இக்காலப்பகுதியில் நாட்டின் பல பாகங்களுக்கும் பரவலாக மழை கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.</p><p></p><h2>எல் நினோ காலநிலை</h2><p>எனினும் இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல, குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே வரம்பிற்குட்பட்டதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab02288-2f27-443a-b968-cf48c0f8c5a6/26-6a79aa37150aa.webp' /></p><p>

மேலும், தற்போது நிலவிவரும் வலுவான 'எல் நினோ' காலநிலை நிலைமை காரணமாக, இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சியானது மிகவும் தீவிரமடைந்து, பலத்த மழையாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.</p><p>

இக்காலப்பகுதி நெருங்கும்போது இதுகுறித்த விரிவான மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக வெளியிடப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை : எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/planned-conspiracy-at-the-reecha-food-festival-1786356786"></link>
            <id>https://ibctamil.com/article/planned-conspiracy-at-the-reecha-food-festival-1786356786</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் எழுந்த சர்ச்சைகளும் அதன் பின்னணியில் சில உண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் எழுந்த சர்ச்சைகளும் அதன் பின்னணியில் சில உண்மைகளும் உண்டு.</p><p>

திடீரென மக்கள் திரட்சியாக வந்தமையினால் பிரமாண்டமாக நடைபெற்ற அந்த உணவுத்திருவிழா சிலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
</p><p>
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த அளவை விட பல்லாயிரக் கணக்கான மக்கள் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதனால் உணவு விநியோகத்திலும் தவிர்க்க முடியாத சில தாமதங்களும் அசௌகரியங்களும் ஏற்பட்டன.
</p><p>
பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிய நிலையில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு பொறுப்பேற்று றீச்சாவின் நிறுவனர் உள்ளே வந்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கோரினார்.
</p><p>
அன்றைய நாளில் றீச்சா வளாகத்தில் இருந்த அலங்காரங்கள் சேதமாக்கப்பட்டமை, மரங்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை அதுமாத்திரமின்றி அளவுக்கு அதிகமான உணவுகளை எடுத்து அவற்றை வீண் விரயமாக அந்தப் பகுதிகளில் சிந்தச் செய்தமை போன்ற நடவடிக்கைகளே இந்த விவகாரத்தின் மூலகாரணமாகும். </p><p>

செயற்கையான ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்கும் வகையில், இப்படியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக என்ற கேள்வி அந்த நிறுவனத்தின் உரிமையாளரால் ஆதாரபூர்வமாக எழுப்பப்பட்டுள்ளது.</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyn_c6u3fNU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு ஜீப்பில் கஞ்சா கடத்திய இளம் தம்பதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-couple-arrested-for-smuggling-ganja-1786356204"></link>
            <id>https://ibctamil.com/article/young-couple-arrested-for-smuggling-ganja-1786356204</id>
            <summary type="text">&amp;nbsp;சொகுசு ஜீப்பில் கஞ்சா கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம்-சிலாபம் சாலையில் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சொகுசு ஜீப்பில் கஞ்சா கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
புத்தளம்-சிலாபம் சாலையில் உள்ள பத்துலுயோயா காவல் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><h2>சொகுசு ஜீப்பிலிருந்து மீட்கப்பட்ட 17 கிலோ கஞ்சா</h2><p>
</p><p>
சொகுசு ஜீப்பிலிருந்து 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா காவல்துறை காவலில் எடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2e36a9-3d33-414f-a66b-b807c58198ed/26-6a79a3a51e9bd.webp' /></p><p>&nbsp;கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகல ஹப்பகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர், மற்றொரு சந்தேக நபர் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.</p><h2>விடுதலை செய்ய ஐந்து இலட்சம் கொடுக்க முயற்சி</h2><p>
</p><p>
கஞ்சா கையிருப்பு பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு, தங்களை விடுவிக்குமாறு கோரி, சந்தேக நபர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேக நபர் அந்தத் தொகையை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த முயன்றதும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90084ab6-766c-4afc-bd07-f1e51368f35d/26-6a79a3a5e71df.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்கள் இன்று (10) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அசம்பாவிதம்! கவலையில் பாஸ்கரன் கந்தையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116"></link>
            <id>https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.</p><p>

நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக சுட்டிக்காட்டிய பாஸ்கரன், ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தனது சொந்த சகோதரர்கள் போன்றோரே ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அத்தோடு, சமூக வலைதளங்களில் வன்மத்தைப் பரப்புவதையும், போதை மற்றும் வன்முறையைத் தவிர்த்து, சக மனிதர்களை மதித்து நடக்குமாறும் இளைய தலைமுறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், சமூக வளர்ச்சிக்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் : நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/appeals-court-postpones-suresh-sallay-petition-1786351227"></link>
            <id>https://ibctamil.com/article/appeals-court-postpones-suresh-sallay-petition-1786351227</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள்&nbsp; தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்&nbsp;இன்று (10) திங்கட்கிழமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்றது.</p><p>

இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது விடயங்களை முன்வைத்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/374bbd4f-45cf-4a28-bd58-a8aa7b222bba/26-6a799848e65ee.webp' /></p><p>இதேவேளை&nbsp;சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனக் கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த இடையீட்டு மனு மற்றும் ஒரு சில தரப்பினரால் சலேவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஆகியன இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் கஞ்சிபானியின் மாமா சுட்டுக்காலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanchipani-s-uncle-was-killed-in-a-shooting-1786352908"></link>
            <id>https://ibctamil.com/article/kanchipani-s-uncle-was-killed-in-a-shooting-1786352908</id>
            <summary type="text">மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>கஞ்சிப்பானி&nbsp;</h2><p>சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faed839-c8b6-465a-b407-8567d05a2a9a/26-6a799747e0f4e.webp' /></p><p>உயிரிழந்தவர் கட்டுமானப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் எனவும், திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eocRKQbkL8c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786347951"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786347951</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (10.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (10.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	444.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.74 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	380.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.17 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 244.73 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ad7259-e229-4de2-94a8-ac5ba7d23b4a/26-6a79932d54202.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		231.41 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.36 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	256.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 267.46 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T08:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை குற்றவாளியை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-seek-help-arrest-death-sentence-convict-1786350746"></link>
            <id>https://ibctamil.com/article/police-seek-help-arrest-death-sentence-convict-1786350746</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட றாகமவைச் சேர்ந்த 38 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு காவல்துறை பொதுமக்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட றாகமவைச் சேர்ந்த 38 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
</p><p>
றாகம காவல்துறை பிரிவின் வல்பொல பகுதியில் ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் உதவி</h2><p>

குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ், அவர் இல்லாத நிலையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41115148-803d-4918-aca7-ee3c59033040/26-6a7991e593e57.webp' /></p><p>

இதன்படி, அவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.</p><p> 

தகவல் தெரிந்த பொதுமக்கள் பின்வரும் எண்களில் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

பொறுப்பதிகாரி, றாகம 2 — 0718591604
பொறுப்பதிகாரி, குற்றப்பிரிவு — 0719627561</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T08:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சாகர காரியவசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930</id>
            <summary type="text">புதிய இணைப்புஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டு, தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc303d-03b7-41c5-bbaf-94ae5b1e9343/26-6a7964f4be23e.webp' /></p><p>காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.</p><p>

வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p>
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nzjuK0EpImM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T08:50:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பெருந்தொகை மதிப்பிலான சேதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-property-damage-estimates-1786347627"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-property-damage-estimates-1786347627</id>
            <summary type="text">ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் இரு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், சிறைச்சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.&amp;nbsp;இந்த கலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் இரு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், சிறைச்சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.&nbsp;</p><p>இந்த கலவரத்தினால் ரூ. 10 கோடிக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இச்சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p></p><h2>சிறைச்சாலை கலவரத்தின் சேதம்</h2><p>
</p><p>நீர்கொழும்பு சிறையில் முன்னர் சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு 600 கைதிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f0dfb4-a1c1-4d5d-8257-9c9fc75fadc0/26-6a798b3d34706.webp' /></p><p>நீர்கொழும்பு சிறையில் உள்ள சில கைதிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்படுவதாகவும், மற்றவர்கள் நேரடியாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், குருவிட்ட, பல்லஞ்சேன மற்றும் நியூ மகசின் சிறைகளில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளால் தொடங்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
</p><p>
6ஆம் திகதி இரவு நியூ மாகசின் சிறையிலும், 7ஆம் தேதி குருவிட்ட சிறை மற்றும் பல்லன்சேன சீர்திருத்த மற்றும் புனர்வாழ்வு மையத்திலும் நடந்த கலவரங்களில் மூன்று கைதிகள் உயிரிழந்ததுடன் 77 கைதிகள் காயமடைந்தனர்.&nbsp;</p><p>&nbsp;இந்த நிலையில் குருவிட்ட சிறையில் நடந்த கலவரத்தின்போது உயிரிழந்த இரண்டு கைதிகளுக்கான பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்பட உள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T08:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-job-vacancy-applications-opens-1786345296"></link>
            <id>https://ibctamil.com/article/israel-job-vacancy-applications-opens-1786345296</id>
            <summary type="text">

இஸ்ரேலின் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இஸ்ரேலின் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.&nbsp;</p><p>
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk மூலம் இணைய வழியில் பதிவு செய்துகொள்ள முடியும்.</p><p>
உணவகத் துறைக்காக 4,000 விண்ணப்பதாரர்களைப் பதிவு செய்ய இன்று நண்பகல் 12.00 மணிக்கு இணையப் பதிவு திறக்கப்படும். இதற்கு 25 முதல் 40 வயதுக்குட்பட்ட, உணவகச் சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.&nbsp;</p><p></p><h2>புனரமைப்புத் துறை</h2><p>

மேலும், விண்ணப்பதாரர்கள் உடல் மற்றும் மனரீதியாகத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரியாத அல்லது அங்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பணிபுரியாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1182235f-2885-4e5c-806d-6a6f58835bf5/26-6a7985965ebb6.webp' /></p><p>
புனரமைப்புத் துறைக்கான பதிவு நாளை பிற்பகல் 2.00 மணிக்குத் திறக்கப்படும். பூச்சு மற்றும் ஜிப்சம் பலகை வேலை, மின் பெட்டி நிறுவுதல் மற்றும் செங்கல் சுவர் கட்டுதல், தச்சு வேலை, பீங்கான் ஓடு (டைல்) பதித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சுமார் 3,000 பேர் வீதம் மொத்தம் 12,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>இறுதித் தேர்வு</h2><p>
இதற்கு 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, 10 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22456862-640e-4551-b61a-904775b47980/26-6a79859718a73.webp' /></p><p>

முன்னதாகக் கட்டுமானப் பணிகளுக்கான இறுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது எனப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>

விண்ணப்பதாரர்களின் தொழில்முறைத் திறன்களை இஸ்ரேலியப் பிரதிநிதிகள் நேரடியாகப் பரிசோதித்துத் தேர்வு செய்வார்கள் என்பதால், உண்மையான அனுபவமும் தகுதியும் உள்ள துறைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு SLBFE கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-10T08:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தாமதம்: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-results-expected-within-month-1786335775"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-results-expected-within-month-1786335775</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.&amp;nbsp;&amp;nbsp;இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.&nbsp;&nbsp;இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாண வர்கள் தோற்றுவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.</p><p>கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்</h2><p>

புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a839f48-6d79-4fb4-8d71-35ea37f4109d/26-6a7983432325f.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சை&nbsp;</h2><p>இதேவேளை, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d944120-b26b-4852-8b49-b7700ff5f26c/26-6a798343ce8ed.webp' /></p><p>இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:52:40+00:00</updated>
        </entry>
    </feed>
