<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T16:16:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்ட பெண்களின் புகைப்படங்கள்! விசாரணையில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/photos-of-women-shared-inappropriately-1787845384"></link>
            <id>https://ibctamil.com/article/photos-of-women-shared-inappropriately-1787845384</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.அவ்வாறான புகைக்கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.</p><p>அவ்வாறான புகைக்கடங்களை வைத்து முகநூல் குழுக்களையும் பக்கங்களையும் இயக்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சந்தேக நபரின் கைபேசி</h2><p>குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தடுப்பு காவல் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் இன்று பெலியத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338e649f-0dae-40a1-8156-ca6dc6ef2ce2/26-6a905b9ede48f.webp' /></p><p>இதன்படி சந்தேக நபரின் கைபேசி காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:44:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-talks-update-whait-house-1787843813"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-talks-update-whait-house-1787843813</id>
            <summary type="text">அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.</p><p>மாறாக, வெள்ளை மாளிகை ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் எனப் பெயரிட்டுள்ள ஒரு முன்னெடுப்பின் மூலம் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>“தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஒருவேளை அவர்கள் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி கருதும் வரை இது தொடரும்” என்று&nbsp;கரோலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்</h2><p>அதுபோன்ற ஒரு நிலையை நாங்கள் இன்னும் காணவில்லை என்றும் லீவிட் தனது கருத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40761ab-4f4d-4b52-9583-d1538e6dbef1/26-6a90565071a27.webp' /></p><p>&nbsp;மேலும், டொனால்ட் ட்ரம்ப் “அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்” என்றும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இதன்படி “ஈரானின் இராணுவத்தை அழிக்க ஒபரேஷன் எபிக் ஃபியூரி'யை நாங்கள் மேற்கொண்டோம். இப்போது அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்'டை மேற்கொள்கிறோம்," என்று லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667"></link>
            <id>https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ​​ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை</h2><p>இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89bbb263-6c65-420f-b29a-1d4e64a31eba/26-6a90327ca6cb9.webp' /></p><p>“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலித்துக்களின் உரிமைக்காக வன்னி அரசு ஆதரவு குரல்! தி.மு.க வுக்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vanni-arasu-s-voice-of-support-for-dalit-rights-1787841151"></link>
            <id>https://ibctamil.com/article/vanni-arasu-s-voice-of-support-for-dalit-rights-1787841151</id>
            <summary type="text">இந்தியாவின் தலித் சமூகத்தினருக்கான உரிமை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.

இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலித் சமூகத்தினருக்கான உரிமை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.
</p><p>
இதில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசுவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தி.மு.க கட்சியை கேள்வி எழுப்பும் விதமாக அமைந்திருந்தது.
</p><p>
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும் தலித் சமூகத்தினரை பார்ப்பது கோடட்பாட்டின் அடிப்படையிலா அல்லது பச்சாபாதத்தின் அடிப்படையிலா என வன்னி அரசுவால் கேள்வி எழுப்பப்பட்டது.</p><p>
</p><p></p><h2>&nbsp;வன்னி அரசின் கருத்து</h2><p>தொடர்ந்து, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசியபோது, “குறிப்பிட்ட தொகுதியில் தலித் இனத்தைச் சேர்ந்தவர்களை தொகுதியில் நிறுத்தினேன் என்று தி.மு.கவினர் பேசுகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cfe803-a9f3-4234-a9b4-54fdbc463051/26-6a904e657812d.webp' /></p><p>இது கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா?

தலித் சமூகத்தினரை பரிதாபத்தின் தோனியில் பார்ப்பதாகத்தான் நான் இதை உணர்கிறேன். </p><p>

கடந்த தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வந்தோம். ஆனால் இந்த தேர்தலில் இரண்டு வி.சி.க. உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்று பேரவைக்கு வந்துள்ளோம். </p><p>

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு அமைச்சரவை பதவி கொடுத்து, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு தந்துள்ளது த.வெ.க. இதுதான் கோட்பாடு. </p><p>

அதன்படி தி.மு.க. கோட்பாட்டின் அடிப்படையில் பேசவில்லை. பரிதாபத்தின் அடிப்படையில் தான் பார்ப்பதாக கருதுகிறேன்.</p><p></p><h2>சாதி கலவரம்</h2><p>நான் தென் மாவட்டத்தில் நடந்த சாதி கலவரத்தில் இருந்து பாதிக்கப்பட்ட ஒருவன். அந்த பாதிப்புகளில இருந்து நான் சென்னைக்கு வந்திருக்கிறேன்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4_-l9ztJTJg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>எங்களுடைய தலைவர் திருமாவளவன் இன்றைக்கு கூட ஒரு குழந்தையை அழைத்து வந்து பள்ளியில் விடுவதை போல என்னை வந்து சட்டப்பேரவையில் உங்கள் முன் விட்டுவிட்டு சென்றார். </p><p>இன்றைக்கு கிராமங்களில் சாதி அணுகுமுறை எப்படி இருக்கிறது என்றால் வெள்ளை சட்டை போட்டு வந்தால் இவனுக்கு வந்த வாழ்வை பார் என்று சொல்வார்கள். புதிய கார் வாங்கி வந்தால் இவனுக்கு வந்த வாழ்வு என்று பார்ப்பர்கள் ” என்று ஆதங்கமாக தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T14:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862"></link>
            <id>https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862</id>
            <summary type="text">காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, பொதுமக்கள் வழமைபோன்று இணையவழியில் காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி பிற்பகல் 12.50 மணியளவில் குறித்த தரவு முறைமை செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் முறைமை மீளமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்</h2><p>

எனினும், ஆகஸ்ட் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தரவு முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தை இணையவழியில் மீண்டும் சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f904e9-253b-430b-b6c6-acf21cc3636e/26-6a90419001a97.webp' /></p><p>புதிய விண்ணப்பத்திற்கான உரிய அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் காவல்துறை அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னைய விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.5,100 கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்த பயன்படுத்திய கடன் அட்டைக்கு மீளச் செலுத்தப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளை சிதைக்கும் கலாசார சீர்கேடு! எழுந்துள்ள கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693"></link>
            <id>https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693</id>
            <summary type="text">சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட பாரம்பரிய நடைமுறைகள் முறையாகப் பேணப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
</p><p>திருமணம், இறப்பு உள்ளிட்ட சடங்குகளில் இடம்பெறும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு முரணான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.</p><p>இது தொடர்பில் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9ODhOhjET4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அரசியல் வாதிகளின் தொடர்பை அம்பலபடுத்திய சிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055"></link>
            <id>https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055</id>
            <summary type="text">தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>
சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>10 அரசியல்வாதிகள்</h2><p>
விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் இருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4238dce6-73dc-4d0c-bab9-9157268ca8da/26-6a902a012aa23.webp' /></p><p>
இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர்,&nbsp; பாசிக்கிற்கு சட்டவிரோதமாக காணிகளை பெற்றுக்கொடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த நடவடிக்கைகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர், பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நீண்ட நேரமாக விசாரணை</h2><p>நீண்ட காலமாகவே சிரான் பாசிக் இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறைமா அதிபர்&nbsp; பிரியந்த வீரசூரிய,சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979"></link>
            <id>https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979</id>
            <summary type="text">இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​ஜூன் 2026 வரையிலான ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​</p><p>ஜூன் 2026 வரையிலான ஒரு ஆண்டில் அகதி உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை 21
சதவீதம் குறைந்து 86,000 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய சாதாரண அளவை விட
அதிகமாகவே உள்ளது.

​</p><p></p><h2>சிறிய படகுகள்&nbsp;</h2><p>அதேபோல், சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்தவர்களின் எண்ணிக்கையும்
23 சதவீதம் குறைந்து 33,000 ஆக பதிவாகியுள்ளது.
</p><p>
இவர்களில் எரித்திரியா, சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய
நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde74349-a7e3-470c-b14c-0ab48220ac9a/26-6a9038aa5bfab.webp' /></p><p>அகதிகளுக்கான விடுதி பயன்பாடும் பாதியாகக் குறைந்துள்ளது, கடந்த ஜூன் மாத
நிலவரப்படி, சுமார் 16,000 அகதிகள் மட்டுமே விடுதிகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

​</p><p>கன்சர்வேடிவ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளின்
காரணமாக வேலை, கல்வி மற்றும் குடும்ப விசாகளின் எண்ணிக்கையும்
சரிவடைந்துள்ளது.

​</p><p>இந்தத் தரவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா
மஹ்மூத், அரசாங்கம் இதில் திருப்தியடைந்து விடவில்லை இன்னும் செய்ய
வேண்டியவை நிறைய உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

​</p><p>அதேவேளை, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் அகதிகள் மேல்முறையீட்டு
வழக்குகளை விரைந்து முடிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக
இருக்கும் என இடம்பெயர்வு கண்காணிப்பகம் (Migration Observatory)
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கிய 350 பேர் மீட்பு...! தொடரும் மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/350-rescued-from-nepal-floods-1787828553"></link>
            <id>https://ibctamil.com/article/350-rescued-from-nepal-floods-1787828553</id>
            <summary type="text">நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பாதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். </p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 50 வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>தரைப்படையினர்&nbsp;</h2><p>மீட்கப்பட்ட 50 வெளிநாட்டவர்களில் 30 இந்தியர்கள், 8 சீனர்கள், 8 கொரியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 2 இத்தாலியர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8278132-0193-4d62-930a-2c2253e0e348/26-6a9028947971e.webp' /></p><p>வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தரைப்படையினர் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் அவசர மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மாதத்திற்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-overcrowding-to-be-reduced-within-a-month-1787829780"></link>
            <id>https://ibctamil.com/article/prison-overcrowding-to-be-reduced-within-a-month-1787829780</id>
            <summary type="text">அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரச பகுப்பாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை இன்று (27) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/804f385d-8226-4e48-a271-e908b4f93601/26-6a901f5e650b2.webp' /></p><p>
</p><p>
இந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு 70 அதிகாரிகள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>மேலும், கைதிகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கூட்டு பொறிமுறை ஒன்றையும் அரசாங்கம் நிறுவியுள்ளது“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை முறைகேடுகளில் சிக்கிய 461 அதிகாரிகளின் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/461-officials-caught-in-examination-irregularities-1787818168"></link>
            <id>https://ibctamil.com/article/461-officials-caught-in-examination-irregularities-1787818168</id>
            <summary type="text">பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை கடமைகளுக்காக அதிகாரிகளை நியமிக்கும் போது கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் கணக்காய்வின்போது கண்டறியப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 461 அதிகாரிகளில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும், 182 அதிகாரிகளின் பரீட்சை பணித் தடையை ஆரம்பித்த திகதியும் குறித்த பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை எனவும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதில்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியுடன் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக, இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280a3ac2-399c-45e8-8036-ca8df0f5323b/26-6a8ff59f9743f.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த பெயர்கள் நீக்கப்பட்டமை, கறுப்புப் பட்டியலை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாக, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை பணிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
போலி பரீட்சை பெறுபேறுகள் தயாரித்ததாக குற்றச்சாட்டு
இதற்கிடையில், 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய ஐந்து பரீட்சார்த்திகள், போலியான பரீட்சை பெறுபேறுகளைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், தொடர்புடைய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், க.பொ.த. சாதாரண தரம் 2024 (2025) பரீட்சையின் நான்கு பரீட்சை நிலையங்களில், பரீட்சை நடைபெறும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய ஆறு மேற்பார்வையாளர்களின் தொலைபேசிகள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T11:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீரர் சோனல் தினுஷவை சச்சினுடன் ஒப்பிட்ட BCCI துணைத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758</id>
            <summary type="text">இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளப் பதிவில் சுக்லா, “இலங்கையின் இந்த சோனல் அற்புதமான வீரர். டெண்டுல்கரைப் போலத் தெரிகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாக முடியும்” எனக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட்டையும் பதிவில் இணைத்துள்ளார்.</p><p>
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினுஷ தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் பின்னணியிலேயே சுக்லாவின் இந்தப் பாராட்டு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>100 ஓட்டங்கள்</h2><p>நான்கு இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை தினுஷ பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d936d7-91e2-47f0-a303-1ff600618ccb/26-6a90069061d4c.webp' /></p><p>
</p><p>இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 100 ஓட்டங்களையும், இரண்டாம் இனிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.</p><p>மேலும், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில்&nbsp; இரண்டாவது இன்னிங்ஸான இன்றைய இறுதி நாளில் மற்றொரு அரைச்சதம் கடந்து தற்போதுவரை 98 ஓட்டங்களை ஆட்டமிக்காது பெற்றுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This Sonal of Srilanka is an amazing player. Looking like Tendulkar. Can be a wonderful test player in international cricket. <a href="https://x.com/OfficialSLC?ref_src=twsrc%5Etfw">@OfficialSLC</a></p>&mdash; Rajeev Shukla (@ShuklaRajiv) <a href="https://x.com/ShuklaRajiv/status/2092835598235304013?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிய நிலையில், தினுஷ கடைநிலை துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் துடுப்படுத்தாடி வருகிறார்.</p><p>இந்தத் தொடரில் தினுஷவின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட விதமும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
</p><p>
25 வயதான சோனல் தினுஷவின் இந்த ஆட்டம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T11:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்ட அனுமதி : அரச தரப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permission-to-build-hous-on-released-lands-jaffna-1787827826"></link>
            <id>https://ibctamil.com/article/permission-to-build-hous-on-released-lands-jaffna-1787827826</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக&nbsp;கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதியில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவு</h2><p>தற்போது ஜனாதிபதியே அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட தனியார் காணிகளில் வீடுகள் தேவையெனின் கட்ட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40de110-a8e0-4352-8695-5dffa32a1e9b/26-6a9018faec7ce.webp' /></p><p>


அரசாங்க வீட்டுத் திட்டம் தேவையானவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியானவர்களுக்கு வீட்டுத் திட்டம் கிடைக்கும்“ என மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saiva-leadership-gap-in-sri-lanka-demands-action-1787824184"></link>
            <id>https://ibctamil.com/article/saiva-leadership-gap-in-sri-lanka-demands-action-1787824184</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்டுப் பாரம்பரியமும் நிலைபெற்றுள்ளது. </p><p>அதாவது உலகளவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்து மதத்தின் முதன்மையான பிரிவான சைவ சமயம், இலங்கையின் பண்பாட்டு அடையாளத்தோடு பிரிக்க முடியாதவாறு வரலாற்று ரீதியாக பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் சைவ சமயம் ஒரு கடுமையான தலைமைத்துவ இடைவெளியையும் மற்றும் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு நிற்கிறது.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>தலைமைத்துவ இடைவெளியும் நடைமுறைச் சவால்களும்...</u></b></h5><p>இலங்கையிலுள்ள ஏனைய முதன்மைச் சமயங்களை உற்றுநோக்கினால் அவற்றின் குரலாகப் பேசுவதற்கும், அரசிடமும் சர்வதேச மட்டத்திலும் அந்தச்சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வமான தலைமைப் பீடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.</p><ul><li>பௌத்த சமயம்:மகாநாயக்க தேரர்கள்</li><li>கிறிஸ்தவ சமயம்: கர்தினால் மற்றும் ஆயர் பேரவை</li><li>இஸ்லாமிய சமயம்: அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை</li></ul><p>ஆனால், சைவ சமயத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான ஆலயங்களும், நூற்றுக்கணக்கான சைவ அமைப்புகளும் இயங்கி வந்தபோதிலும், "சைவ சமயத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி இவர்தான் என்று அரச நிகழ்வுகளிலோ அல்லது தேசிய அளவிலான கொள்கை முடிவுகளின்போதோ முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுவான உச்சக்கட்டத் தலைமை இல்லாத பரிதாப நிலை நீடித்து வருகிறது.</p><p>இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு இல்லாததால் சைவ சமய சமூகத்தின் உரிமைகள், ஆலயப் பாதுகாப்பு மற்றும் சமய வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த குரலாகக் குரல் கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது . </p><p>தென்கயிலை ஆதீனமும் தலைமைத்துவ முன்மொழிவும்
இப்படியான சூழலில்தான், சைவ சமயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அனுபவமிக்க, ஆளுமைமிக்க ஒரு தலைமையின் தேவை தீவிரமாக உணரப்படுகிறது. </p><p>வடக்கு கிழக்கில் இயங்கும் பல சைவ அமைப்புகள், திருகோணமலையை மையமாகக் கொண்டு இயங்கும் தென்கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களை இந்த அமைப்பிற்கான முதன்மைத் தலைமையாக ஏற்றுக் கொள்ளலாம் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.</p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாகத் துறவற வாழ்வை மேற்கொண்டு, சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் தங்களை அர்ப்பணித்துள்ள தவத்திரு அகத்தியர் அடிகளார், தற்போதைய துறவிகளில் நீண்ட அனுபவமும் சமய முதிர்ச்சியும் கொண்டவராக விளங்குகிறார்.</p><p>பாரம்பரியமிக்க நல்லூர் ஆதீனம் போன்ற பிற பீடங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் நீண்டகாலத் துறவு வாழ்க்கையையும், கிழக்கு மற்றும் வடக்கு சமூகங்களுடனான ஆழமான தொடர்பையும் கருத்தில் கொண்டு அகத்தியர் அடிகளாரை முதன்மைப்படுத்துவது பொருத்தமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.</p><p>
</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>எதிர்கால நோக்கும் தீர்வும்</u></b></h5><p>எப்படியாக இருந்தாலும் தனிநபர் ஒருவரைத் தலைவராக நியமிப்பதில் எழும் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கவும், அனைத்துப் பகுதிச் சைவர்களையும் ஒருங்கிணைக்கவும் பின்வரும் வழிமுறைகளைச் நாம் செயல்படுத்தலாம்:</p><ul><li>அகில இலங்கை சைவ சமய பீடம்: தென்கயிலை ஆதீனம், நல்லூர் ஆதீனம், மற்றும் ஏனைய துறவிகள் மற்றும் சைவப் பெரியார்களை உள்ளடக்கிய ஒரு துறவிகள் சபை அல்லது உச்சக்கட்ட சைவ பீடம்&nbsp; உருவாக்கப்பட வேண்டும்.</li><li>ஒருங்கிணைந்த குரல்: இந்தச் சபையின் முதன்மைப் பொறுப்பை அனுபவ முதிர்ச்சி கொண்ட துறவிகளிடம் வழங்கி அரச மட்டத்திலான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.</li></ul><p>தொன்மையான சைவப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்குச் சமய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கவும் இலங்கையில் சைவ சமயத்திற்கென ஒரு வலுவான கட்டமைக்கப்பட்ட தலைமை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.</p><p>இந்த விவகாரத்தில் ஈழத்து சைவசமயிகள் விரைந்து ஒரு முடிவெடுக்காதவிடத்து 
ஆகப்பெரும் விளைவுகளை எதிர்காலங்களில் சந்திக்க நேரிடும் என்பதனை தவிர்க்கமுடியாது.</p><p>
</p><p>
</p><p>
</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிச்சயம் : யாழில் அமைச்சர் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/punishment-for-involved-in-the-chemmani-mass-grave-1787825276"></link>
            <id>https://ibctamil.com/article/punishment-for-involved-in-the-chemmani-mass-grave-1787825276</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் மனிதப் புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்</h2><p>
</p><p>
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bcf8957-fa91-4ffc-8990-2296c2029601/26-6a9011b710336.webp' /></p><p>

இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.</p><p>


அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 585 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது“ என தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:39:06+00:00</updated>
        </entry>
    </feed>
