<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T14:19:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க மோதலுக்கு மத்தியில் உள்நுழையும் இஸ்ரேலின் வார்த்தை போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israels-war-of-words-amid-iran-us-conflict-1788443533"></link>
            <id>https://ibctamil.com/article/israels-war-of-words-amid-iran-us-conflict-1788443533</id>
            <summary type="text">ஈரான் - இஸ்ரேலைத் தாக்கினால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - இஸ்ரேலைத் தாக்கினால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் அமெரிக்க - ஈரான் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானுக்கு இஸ்ரேல் விடுத்த சமீபத்திய அச்சுறுத்தலாக இது அமைந்துள்ளது.
</p><p>
அமெரிக்காவும் - ஈரானும் ஜூலை மாதத்திற்குப் பிறகு தங்களின் மிகப்பெரிய ஆயுதத் தாக்குதலை இந்த வாரம் பரிமாறிக்கொண்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற அச்சம் நிலவியது.</p><p></p><h2>ஈரானின் தெற்குக் கடற்கரை</h2><p> </p><p>

இதில் அமெரிக்கா ஈரானின் தெற்குக் கடற்கரையைத் தாக்கியதுடன், தெஹ்ரான் அப்பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfe6e3c-ad22-4225-bbc3-6c0fe0a39e88/26-6a997d6347006.webp' /></p><p>

இந்நிலையில் இன்று, பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களிடம் பேசிய காட்ஸ், “இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இஸ்ரேலை விடுவிக்கும்.
</p><p>
தாக்குதல் நிகழ்ந்தால், நாங்கள் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு உட்பட அனைத்து தேசிய இராணுவ மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளையும் முடக்கி, ஈரானை மீண்டும் கற்காலத்திற்கும் இருளுக்கும் ஆழமாகத் தள்ளுவோம்.
</p><p>
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கும் யூதர்களின் முக்கியப் பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலியப் படைகள் இப்போதும் தயாராகவே உள்ளது.
</p><p>
தற்போது, தங்களை தவிர இந்தப் பிராந்தியம் முழுவதும் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

எனினும், அவர்கள் நம்மைத் தாக்க வாய்ப்புள்ளது. </p><p>அதற்கு நாங்கள் தற்காப்பு ரீதியாகத் தயாராக இருக்கிறோம்.

ஆறு மாத கால மோதலில், கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதல் நடந்த நிலையில், ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி பற்ற குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்கள்" மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவலர்கள் அறிவித்தனர்.
</p><p>
மீண்டும் நினைவுப்படுத்துகிறோம், ஈரான் தாக்குதல் நடத்தினால், வேறு எவரையும் சாராமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்" என்று காட்ஸ் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T14:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடினைச் சந்திக்க தயாராகும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-ready-to-meet-putin-1788441722"></link>
            <id>https://ibctamil.com/article/trump-ready-to-meet-putin-1788441722</id>
            <summary type="text">உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திருத்தப்பட்ட சமாதானத் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டால், அவரை மீண்டும் நேருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திருத்தப்பட்ட சமாதானத் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டால், அவரை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்து இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.</p><p>&nbsp; ரஷ்ய ஜனாதிபதியும் தன்னைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் அப்போது செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.</p><h2>உக்ரைன் நேட்டோவில் இணைய முயன்றதால் இராணுவ நடவடிக்கை</h2><p>
</p><p>
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கம் நேட்டோ உறுப்புரிமையை நாடுவதால், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33f38a6-ee99-47e6-9c7c-4426b1f8399a/26-6a99793b2496b.webp' /></p><p>
</p><p>
நேட்டோ, அல்லது வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, என்பது ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, கனடா மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவக் கூட்டணியாகும்.</p><p></p><h2>ட்ரம்ப்- புடின் பேச்சு தோல்வி</h2><p>
</p><p>
சோவியத் ஒன்றியத்தின் போது, ​​உக்ரைன், ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இருப்பது ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதற்கேற்ப புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bccef694-4f32-4f98-9347-f216532f6817/26-6a99793a6c411.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய-உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கினார். ஓகஸ்ட் 2025-ல், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அலாஸ்காவில் இருக்கும் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில், ட்ரம்பிற்கும் புஷடினுக்கும் இடையே உக்ரைன் போர் குறித்து நேருக்கு நேர் சந்திப்பு நடைபெற்றது. </p><p>இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. ஏனெனில், ரஷ்யா உக்ரைனின் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை, உக்ரைனும் ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T13:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம்: ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nachikuda-school-name-change-issue-1788440427"></link>
            <id>https://ibctamil.com/article/nachikuda-school-name-change-issue-1788440427</id>
            <summary type="text">நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்னதாக இரு வார கால அவகாசம் வழங்கினார். </p><p>

கிளிநொச்சி, நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03.09.2026) வியாழக்கிழமை முற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. </p><p></p><h2>பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு</h2><p>

இவ்விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைக்கு அமைவாக உரிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவே இக்கலந்துரையாடல் நடத்தப்படுவதாக ஆளுநர் ஆரம்பத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6318fd-4a8b-4e42-bdf7-ccaf104df7d5/26-6a996f6ea6da9.webp' /></p><p> </p><p>

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயரே தொடர்வது பொருத்தமானதாக இருக்கும் என ஆளுநர் தனது ஆரம்பக் கருத்தில் குறிப்பிட்டார். </p><p>

அதேவேளை, இது இரு சமூகங்களைச் சார்ந்த உணர்வுபூர்வமான விடயம் என்பதால், கிடைக்கப்பெறும் அரச ஆவணங்கள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நிதானமாகவும் நியாயமாகவும் அணுகப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். </p><p>

இதன்பின்னர், தொடர்புடைய இரு தரப்புக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T13:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை : மீண்டும் இணைக்கப்பட்ட குமுதினி : நேர அட்டவணையும் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ferry-service-time-table-delft-kurikatuvan-1788439221"></link>
            <id>https://ibctamil.com/article/ferry-service-time-table-delft-kurikatuvan-1788439221</id>
            <summary type="text">&amp;nbsp;நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09)
தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
நெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09)
தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்
</p><p>இதன்படி இந்த படகு சேவையில் குமுதினி, வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளன.</p><p>
அதனடிப்படையில் படகு சேவை விபரம் வருமாறு,</p><p><b>குமுதினி
</b></p><p><b>
6.15 AM -நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</b></p><p><b>8.00 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
</b></p><p><b>2.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</b></p><p><b>3.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு</b></p><p><b>

நெடுந்தாரகை
</b></p><p><b>
7.00 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</b></p><p><b>8.30 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
</b></p><p><b>
வடதாரகை
</b></p><p><b>
3.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</b></p><p><b>4.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு&nbsp; </b></p><p><b>[</b></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><b><br></b>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண கடற்றொழிலாளர்கள் கொந்தளிப்பு! எல்லை தாண்டும் இந்தியப் படகுகளால் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-fishermen-demand-fixes-for-key-issues-1788432270"></link>
            <id>https://ibctamil.com/article/northern-fishermen-demand-fixes-for-key-issues-1788432270</id>
            <summary type="text">வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் வட மாகாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று (03-06-2026) ஊடக சந்திப்பொன்றை
நடத்தியுள்ளனர்.</p><p>இதில் வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய
பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சம்பந்தப்பட்ட அதிகாரிகள்&nbsp;</h2><p>
இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா,
நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f265bcb-56ef-4400-9064-ba15e42e230b/26-6a996888a63a6.webp' /></p><p>

குறிப்பாக கடல் அட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள், இந்திய கடற்ழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் கடற்றொழில் நடவடிக்கைகளால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை
செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது
விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும்
வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை
முன்வைக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T12:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனுக்கு திரும்பும் ஹாரி -மேகன் தம்பதி : மட்டற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-happy-with-harry-meghan-move-to-uk-1788437328"></link>
            <id>https://ibctamil.com/article/trump-happy-with-harry-meghan-move-to-uk-1788437328</id>
            <summary type="text">பிரிட்டனின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கிள் ஆகியோர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குத் திரும்பும் முடிவு குறித்து அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கிள் ஆகியோர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குத் திரும்பும் முடிவு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிள் மீது தனக்கு எந்தவிதமான அபிமானமும் இல்லை என்றும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் குழுவிடம் பேசியபோது ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.</p><h2>எந்தவிதமான அபிமானமும் இல்லை</h2><p>&nbsp;பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தாலும், இளவரசர் ஹாரி அல்லது அவரது அமெரிக்க மனைவி மேகன் மார்க்கிள் மீது தனக்கு எந்தவிதமான அபிமானமும் இல்லை என்று ட்ரம்ப் ஊடகங்களிடம் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a29a25-d637-43c6-9b84-380eaa499a7d/26-6a996943abf1a.webp' /></p><p>
</p><p>
இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் மன்னர் சார்லஸ் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு ஹாரியும் மேகனும் அமெரிக்காவிற்கு வந்தனர். </p><p>மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, இளவரசர் ஹாரியின் பாட்டி ஆவார். மன்னர் சார்லஸ், இளவரசர் ஹாரியின் தந்தை ஆவார்.</p><p></p><h2>ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டனுக்கு திரும்புதல்</h2><p>
</p><p>
இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் சார்லஸ் ஆகியோரை ஹாரி மற்றும் மேகன் அவமதித்து, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார், மேலும் அவர் அதைச் சற்றும் ஏற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/429644fb-5934-4095-9951-a8fe1f04bc19/26-6a9969445c56e.webp' /></p><p>
</p><p>
பிரிட்டனை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரி, கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் மேகனுடன் வசித்து வருகிறார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிட்டனுக்குத் திரும்பியுள்ளனர். </p><p>ஹாரி மற்றும் மேகனை மீண்டும் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ட்ரம்ப் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
</p><p>
6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பிரிட்டனுக்குத் திரும்பியுள்ளனர்.</p><p></p><h2>ஒருபோதும் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்</h2><p> </p><p>தான் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்திருந்தால், அவர்களை ஒருபோதும் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் ட்ரம்ப் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1816e41a-0ac2-42f2-bf35-63b1b84392ab/26-6a9969451136f.webp' /></p><p>
</p><p>
மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றதிலிருந்து, இளவரசர் ஹாரியும் அவரது தந்தையும் நல்லுறவில் இருந்து வருகின்றனர்.</p><p> இருப்பினும், ஹாரி மற்றும் மேகனுக்கும், பிரிட்டனின் பட்டத்து இளவரசரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. இளவரசர் வில்லியம், ஹாரியின் மூத்த சகோதரர் ஆவார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T12:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்தகால கொடூரங்களுக்கான நீதி: இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஜெனீவா அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/human-rights-watch-released-a-report-on-sri-lanka-1788436740"></link>
            <id>https://ibctamil.com/article/human-rights-watch-released-a-report-on-sri-lanka-1788436740</id>
            <summary type="text">கடந்த காலத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே கண்டுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

</p><p>
மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளது </p><p>
கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், கொலைகள் மற்றும் பிற கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது திறம்பட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளன என்று அந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.</p><p></p><h2>இலங்கையின் அரசாங்கம்</h2><p>
</p><p>காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மனித உரிமை ஆர்வலர்களிடம் நடத்திய விரிவான நேர்காணல்கள், அத்துடன் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902ef864-5edd-4ecb-8744-285d55e146f0/26-6a99678399581.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் 1987-1989-ல் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கிளர்ச்சியின் போதும், 2009-ல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போதும், அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசற்ற ஆயுதக் குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்.
</p><p>
1990-களிலிருந்து மனித உரிமை மீறல்களை விசாரிக்க அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் 10-க்கும் மேற்பட்ட ஆணையங்களை நியமித்திருந்தபோதிலும், நாட்டில் கடந்தகாலக் குற்றங்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது.</p><p>
செம்மணி கூட்டுப் புதைகுழியில் இருந்து 580-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, கடந்த காலத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான, சுதந்திரமான விசாரணை ஒன்றின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.</p><h2>செம்மணி கூட்டுப் புதைகுழி</h2><p>
</p><p>
இந்த அறிக்கையில், செம்மணி கூட்டுப் புதைகுழிதான் நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய கூட்டுப் புதைகுழி என்றும், கூட்டுப் புதைகுழிகள் குறித்த உள்ளூர் விசாரணையின் நம்பகத்தன்மை பற்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a282c9-e650-4dc9-be1f-455ec5d65a77/26-6a9967845eecc.webp' /></p><p>
</p><p>
மேலும், 2006-ஆம் ஆண்டு மூதூரில் 'பசிக்கு எதிரான நடவடிக்கை' என்ற மனிதாபிமான உதவி அமைப்பைச் சேர்ந்த 17 தன்னார்வலர்கள் படுகொலை செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
</p><p>
இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது, பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது, பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, மற்றும் கீத் நோயரின் கடத்தல் உள்ளிட்ட பல முக்கிய சம்பவங்களில் தற்போதைய அரசாங்கம் சிறிதளவே முன்னேற்றம் காட்டி வருகிறது.</p><p>

இருப்பினும், பல வழக்குகளில் இன்னும் இறுதி சட்ட முடிவு எட்டப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.
</p><p>பெரும்பாலான சம்பவங்களில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும், அந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.
</p><p>
கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட எண்ணற்ற ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வழக்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T12:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல் அகழ்வு திட்டத்தால் பெரும் இழப்பு : ராஜித சேனாரத்னாவுக்கு வழங்கப்பட்டது குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-served-on-rajitha-senaratne-1788434742"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-served-on-rajitha-senaratne-1788434742</id>
            <summary type="text">கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மணல் அகழ்வுத் திட்டத்தை, உரிய நடைமுறைகளின்றி, தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் ஒரு கொரிய நிறுவனத்திற்கு குத்தகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மணல் அகழ்வுத் திட்டத்தை, உரிய நடைமுறைகளின்றி, தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் ஒரு கொரிய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டு, அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தியதற்காக, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல குற்றப்பத்திரிகையை வழங்கினார். அதனையொட்டி, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு இன்று (03) பிணை வழங்கப்பட்டது.</p><p>தலா ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஜாமீன்தாரர்களின் பிணைப்பத்திரத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுவிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை வழங்கிய பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.</p><h2>ஐந்து "ஊழல்" குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>2012 ஜூன் 12 முதல் ஓகஸ்ட் 6 வரை கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​கிரிந்த மீன்வளத் துறைமுகத்திலிருந்து மணலை அகற்றி உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக ஒரு கொரிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐந்து "ஊழல்" குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9675f146-217d-4a7e-a56e-4f26db3a0060/26-6a9960ce14ec9.webp' /></p><p>இழப்பீட்டுச் சட்டத்தின் 70-வது பிரிவின் கீழ் "ஊழல்" குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.</p><p></p><h2>இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றுக்கு தெரிவித்த விடயம்</h2><p>குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக 13 சாட்சிகளை அழைக்கவும், 25 ஆவணங்களைச் சான்றுகளாகச் சமர்ப்பிக்கவும் உத்தேசித்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c45fe3c5-878a-472a-b6c3-a7da8457f0e3/26-6a9960cec24e2.webp' /></p><p>

முன்னர் ஒருமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையின்படி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><p></p><p>

</p><h2>பிணையில் விட கோரிக்கை</h2><p>அரசுத் தரப்பில் முன்னிலையான இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீதான குற்றப்பத்திரிகை பகிரங்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a3628b-7b3a-4f5b-a75d-d2c01763fda8/26-6a9960cf774a8.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்ட ராஜித சேனாரத்னவுக்காக முன்னிலையான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையின்படி தனது கட்சிக்காரர் முன்னிலையாவதால், அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
</p><p>
வழக்கின் உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அவர் இந்த வழக்கில் விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வை நடத்த முடிவு செய்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:58:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனன்குடா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்திற்கு நெதர்லாந்து தூதுவர் விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netherlands-ambassador-to-sri-lanka-meets-1788435118"></link>
            <id>https://ibctamil.com/article/netherlands-ambassador-to-sri-lanka-meets-1788435118</id>
            <summary type="text">இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer)&amp;nbsp; திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்துக்கு விஜயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer)&nbsp; திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் மூன்றாம் நாளான இன்று(03.09.2026) சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.&nbsp;</p><p>
இதன்போது, பிரதேச மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும்
சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கேட்டறிந்தார்.</p><p></p><h2>லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையம்</h2><p>பின்னர் மட்டக்களப்புக்கு சென்ற தூதுவர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் கலந்துலைரயாடலில் ஈடுபட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b1c8f1-cfe7-4f5e-b724-5683dd5dc49e/26-6a995fbe4a402.webp' /></p><p>தொடர்ந்து மட்டக்களப்பு Burgher Cultural Union பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
</p><p>
மேலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் இலக்காகிய
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கும் அவர் விஜயம் செய்தார்.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:53:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் : சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1788434214"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1788434214</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில்&amp;nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில்&nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்</p><p>அத்துடன் குறித்த சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எனவும்&nbsp; அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் வகையிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1947627-be91-4b9c-b084-3c4f62d67bbe/26-6a9959c6c0b01.webp' /></p><p>சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவைப்படாது என்றே நாம் நம்புகிறோம். இருப்பினும், அது தேவை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாம் அதனை நடத்துவோம்.</p><p>இதற்கான முடிவு மூன்று வாரங்களுக்குள் தெரியவரும்" என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமத்திற்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்தை தாக்கிய யானை: 25 பேர் வைத்தியசாலையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wild-elephant-attacks-bus-in-katharagama-10-hurt-1788426742"></link>
            <id>https://ibctamil.com/article/wild-elephant-attacks-bus-in-katharagama-10-hurt-1788426742</id>
            <summary type="text">🛑&amp;nbsp;புதிய இணைப்புகதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>கதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>முதலாம் இணைப்பு</u></b></h5><p>கதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>யானை ஒன்று குறித்த பேருந்தை
தாக்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.</p><p>குறித்த விபத்து சம்பவம் இன்று (03-09-2026) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><h2>நிலைமை கவலைக்கிடம்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கதிர்காமம் காவல் பிரிவுக்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியில் இன்று (03-09-2026) காலை மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல - கதிர்காமம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a5b4a-6ac6-4633-af26-66f39c1842f2/26-6a994c04b699c.webp' /></p><p>யானையின் தாக்குதலால் வீதியை விட்டு விலகி பேருந்து கவிழ்ந்துள்ளதுடன் விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதில் பேருந்தில் இருந்த 10 பேர்
காயமடைந்து&nbsp;கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D08hKiNHNcY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் குறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-issued-clarification-digital-insurance-card-1788431187"></link>
            <id>https://ibctamil.com/article/police-issued-clarification-digital-insurance-card-1788431187</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காவல் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை தவறலாகும் என போக்குவரத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காவல் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை தவறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று (03.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாவு குறிப்பிட்டுள்ளார்.&nbsp; </p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “பாதுக்க மற்றும் கம்பஹா காவல் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.</p><p></p><h2>காவல்துறைமா அதிபர் விளக்கம்</h2><p>
</p><p>
இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் கீழ் 2026 மே 5ஆம் திகதி வெளியிடப்பட்ட மேலதிக அறிவித்தல் மூலம், காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0940f94-237a-4da4-bca0-504cbeb8d2f7/26-6a9953a6b1a5c.webp' /></p><p>
</p><p>
மேலும், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும், காப்புறுதி நடைமுறையில் உள்ளதா என்பதை காவல் அதிகாரிகளால் இலவசமாக பின்வரும் வழிமுறைகளின் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><ul><li>1338# என்ற இலக்கத்திற்கு அழைத்து, காப்புறுதி இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளிட்டு உடனடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</li><li>
1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</li><li>
1338 என்ற அவசர அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ள முடியும்.</li></ul><p>

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள 607 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.</p><p>ஏதேனும் காவல்துறை அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுத்தால், அது தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின்<b> 070 4755 600</b> என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என” பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய குற்றச்செயல்கள் : வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-deported-from-abu-dhabi-1788431855"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-deported-from-abu-dhabi-1788431855</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதற்கு ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், இலக்குகளைத் தாக்கி வெடிக்கும் காட்சிகள் உள்ளிட்ட காணொளிகளைத் தங்கள் கைபேசிகளில் சேமித்து வைத்திருந்ததை அடுத்து, அந்த இரண்டு சந்தேக நபர்களும் ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.</p><h2>பாரிய குற்றச்செயல்கள்</h2><p>&nbsp;சந்தேக நபர்களில் ஒருவர், அசோகபுர, துங்கன்னாவாவைச் சேர்ந்த 37 வயதான திஸ்ஸநாயக்க முதியான்சலாகே பந்துல திஸ்ஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பாக அவர் இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4140c683-c712-4880-afd0-7388bf66c503/26-6a995594ba3eb.webp' /></p><p>&nbsp;இரண்டாவது சந்தேக நபர், கொழும்பு, பொரெள்ள பகுதியைச் சேர்ந்த 36 வயதான சியம்பலாடுவ பாதிரனலகே ஹர்ஷ குமார ஆவார். இவர் பரேவி சுதாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், பூசா சிறைச்சாலையில் நடந்த கலவரம் தொடர்பாகவும் தேடப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சந்தேக நபர்கள்</h2><p>&nbsp; அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இவ்விரு சந்தேக நபர்களும் செப்டம்பர் இன்று( 3 ) காலை சுமார் 10.15 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY392 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69f7720-054a-4cc7-9655-99a5710a9c6d/26-6a9955956e952.webp' /></p><p>குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் விமான நிலையத்தில் இவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>
பின்னர், பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.&nbsp;</p><p></p><p>images credit daily mirror</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது... கோட்டா - மகிந்த கால குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kota-betrayed-to-imprison-namal-mahinda-1788431343"></link>
            <id>https://ibctamil.com/article/kota-betrayed-to-imprison-namal-mahinda-1788431343</id>
            <summary type="text">12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத்துள்ளன.
</p><p>
ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. 

அவுஸ்திரேலியாவின் ஒரு ஊடக வலையமைப்பு 2022 மே மாத தொடக்கத்தில் நாமல் குறித்த பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தது. </p><p>

அந்த வெளிப்பாடுகளின் போது, ​​கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் இருந்தனர். 

இதற்கிடையில், 2016-ஆம் ஆண்டில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016/195 என்ற வழக்கு எண்ணின் கீழ், நிமல் பெரேராவிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெற்றதாக நாமல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.</p><p></p><h2>பல மில்லியன் டொலர்</h2><p>குறித்த அவுஸ்திரேலிய ஊடக வலையமைப்பால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் நிகழ்ச்சியால் ஒளிபரப்பப்பட்ட காணொளி ஆகியவற்றின் அடிப்படையில், மே 4, 2022 அன்று வெளியிடப்பட்ட முழு அறிக்கை பின்வரும் விடயங்களை கூறுகிறது.</p><p>

ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுற்கும் ஒரு அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனத்திற்கும் இடையே ஊழல் பேரங்கள் நடைபெற்றதாக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஊடக வலையமைப்பு அப்போது அம்பலப்படுத்தியுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அப்போதைய ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.

தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தெரியாத, இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு பரிவர்த்தனையில் தானும் தன் குடும்பத்தினரும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
</p><p>
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தெரியாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தத்தில், நானும் என் குடும்பத்தினரும் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டி, ஒரு ஆவணப்படம் மீண்டும் வெளிவந்துள்ளது. </p><p>

நல்லாட்சி அரசு என் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது, அதற்காக நான் இன்னும் நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறேன்.</p><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளில் எதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத் திட்டம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய நிறுவனமான ஆஸ்பென் மெடிக்கல் விசாரிக்கப்பட்டு வருவதாக, ஏ.பி.சி தொலைக்காட்சியின் 'ஃபோர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி மே 1 அன்று வெளிப்படுத்தியது.</p><p></p><h2>ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டு</h2><p>
'ஃபோர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி என்பது அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஊழல், மோசடி, நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றை விசாரிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.
</p><p>
2012-ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்கும் திட்டப்பணி, ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முறையான ஆதரவுடன், அப்போதைய ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து இந்தத் திட்டத்திற்காக ஆஸ்பென் நிறுவனம் 18.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காப்பீட்டுக் கொள்கையைப் பெற்றிருந்தது என்று அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
</p><p>
அப்போதைய ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டுக் கழகம் (தற்போது அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனம்), ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத்தின் போது பொருட்கள், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதற்காக ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு ஒரு காப்பீட்டுப் பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனம் எப்போதாவது பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கியுள்ளதா என ஃபோர் கார்னர்ஸ் பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர், ஆனால் ஆஸ்பென் மெடிக்கல் பதிலளிக்க மறுத்துவிட்டது.
</p><p>
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனம், இதற்கான துணை ஒப்பந்தம் EN ப்ராஜெக்ட்ஸ் என்ற டச்சு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களது நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், ஆஸ்பென் நிறுவனம் இலங்கையில் தனது முதல் ரொக்கப் பரிவர்த்தனையை, பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி மேற்கொண்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறை&nbsp;விசாரணை </h2><p>

இந்தப் பரிவர்த்தனை இலங்கை காவல்துறை - நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்கு வந்தது.

ஆஸ்பென் செலுத்திய 4.3 மில்லியன் யூரோக்கள் மொத்தத் தொகையின் ஒரு பகுதி இது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புகளைக் கொண்ட நிமல் பெரேரா என்று ஃபோர் கார்னர்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.</p><p> 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்காக நிதி திரட்டியதை நிமல் பெரேரா 2016-ல் ஒப்புக்கொண்டிருந்தார்.
</p><p>
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணம் எப்படி வந்தது என்று காவல்துறையினர் விசாரித்தபோது, ​​அது ஒரு இத்தாலிய தொழிலதிபரிடமிருந்து வந்ததாக அவர் கூறினார், ஆனால் அந்தத் தொழிலதிபரின் அடையாளத்தை அவரால் நிரூபிக்க முடியவில்லை.</p><p>

சேபர் ஹோல்டிங்ஸின் உரிமை குறித்து நிமல் பெரேராவிடம் காவல்துறை விசாரித்தபோது, ​​தனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும், அது ஒரு இத்தாலிய நண்பருக்குச் சொந்தமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
</p><p>
இருப்பினும், நிறுவன ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​அந்நிறுவனத்தின் உரிமையாளர் நிமல் பெரேரா என்பது தெரியவந்தது. </p><p>ஆனாலும், தொழிலதிபராகிய நிமல் பெரேரா, தான் அந்த நிறுவனத்தின் ஊழியராக இருந்ததால் தனக்கு அந்த உரிமைகள் உண்டு என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்குத் தெரிவிக்கிறார்.</p><p>அப்போது அனுர குமார திசாநாயக்க மற்றும் பிறர், ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் மூலம் கூட்டாக வெளியிட்ட தகவலின்படி, வழக்கு எண் 2016-195-இன் படி, நிமல் பெரேரா தனக்கு 60 மில்லியன் ரூபாய் வழங்கியதை நாமல் ராஜபக்ச ஒப்புக்கொண்டிருந்தார்.
</p><p>
ரக்பி போட்டித் தொடருக்காக 60 மில்லியன் கொடுத்ததாக நாமல் ராஜபக்ச கூறினார், ஆனால் அவர் அப்படி ஒரு பணத்தைப் பெறவில்லை என்று ரக்பி கூட்டமைப்பின் அனைத்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின்போது, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மருத்துவமனைத் திட்டங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளியாகின.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/geUWhldUhMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T11:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இறுதி செய்யப்படவுள்ள ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-srilanka-mou-for-jaffna-kks-port-development-1788431375"></link>
            <id>https://ibctamil.com/article/india-srilanka-mou-for-jaffna-kks-port-development-1788431375</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை புரிந்துணர்வு ஒப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்வதை விரைவுபடுத்துவதற்காக ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
</p><p>துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இன்று (03) காலை அமைச்சின் வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழுவினர், பிரதிநிதி ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளி விவகார அமைச்சின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.</p><p></p><h2>போக்குவரத்து சேவை</h2><p>இதன்போது, முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி பல விடயங்களில் உடன்பாடுகளை எட்டினர்.</p><p>காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd51052-dd6b-4a2c-b533-af421a68c347/26-6a99540190885.webp' /></p><p> இத்திட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒரு கூட்டு கண்காணிப்புக் குழுவையும் ஒரு தொழில்நுட்பக் குழுவையும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.</p><p> கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை இந்திய அரசாங்கத்திடம் கூடிய விரைவில் சமர்ப்பித்து, இறுதி முடிவை உடனடியாகப் பெற இந்தியத் தூதுக்குழு ஒப்புக்கொண்டது.</p><p></p><h2>அமைச்சர் அறிவுறுத்தல்&nbsp;</h2><p> </p><p>இத்திட்டம் இந்தியாவுக்கும் இலங்கையின் வட பகுதிக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை வலுப்படுத்தும், வட மாகாணத்தில் துறைமுக உட்கட்டமைப்பை மேம்படுத்தும், மற்றும் பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இத்திட்டத்தால் வட மாகாண மக்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547f458b-85a7-40aa-8396-a96a39a209d6/26-6a995402626a3.webp' /></p><p> </p><p>2026 பெப்ரவரியில், காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இத்திட்டத்தை கூடிய விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்திற்கும் அமைச்சர் அனுர கருணாதிலக அறிவுறுத்தினார். </p><p>இதன்போது, ​​குறுகிய காலத்திற்குள் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தை விட அதிக சொத்து சேர்ப்பு : விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimals-case-postponed-1788430150"></link>
            <id>https://ibctamil.com/article/wimals-case-postponed-1788430150</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமான சொத்துக்களைக் குவித்தது தொடர்பான இந்த வழக்கு, இன்று (03) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது.</p><h2>மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு</h2><p>&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை 22ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சிகளை வரவழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6401561a-f764-41dc-8ccd-f8673be04c77/26-6a994a4c3788b.webp' /></p><p>
</p><p>
முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை அவருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-after-tamarind-seed-gets-stuck-throat-1788425221"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-after-tamarind-seed-gets-stuck-throat-1788425221</id>
            <summary type="text">கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில்&amp;nbsp; புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில்&nbsp; புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த சனுதி லக்ஷானி என்ற சிறுமி எனவும், குடும்பத்தின் இளைய பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (02.09.2026) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த புளியை எடுத்து சாப்பிட முயன்றுள்ளார்.</p><p></p><h2>சிறுமி ஒருவர் பலி</h2><p>
</p><p>
இதன்போது புளியங்கொட்டை ஒன்று அவரது தொண்டையில் சிக்கியதால், சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9c168bd-9083-43a9-a640-3f2b62779024/26-6a9948e531816.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் அறிந்த தாயார் உள்ளிட்ட உறவினர்கள், சிறுமியை காப்பாற்றுவதற்காக லொறி ஒன்றில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
</p><p>
சிறுமியின் சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தர பத்மேவிற்கு தொடரும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kehelbaddara-padme-s-remand-extended-1788427627"></link>
            <id>https://ibctamil.com/article/kehelbaddara-padme-s-remand-extended-1788427627</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>

பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><h2>&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை</h2><p>இந்தநிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d757fd38-d25d-4621-a833-1b17dc8f3773/26-6a9944608ecff.webp' /></p><p>
</p><p>
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் 'கணேமுல்ல சஞ்சீவ' தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்.</p><p>அத்துடன் சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[1.7 பில்லியன் டொலர் கடனில் ராபர்ட் கியோசாகி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rich-dad-poor-dad-in-1-7-billion-doller-debt-1788429472"></link>
            <id>https://ibctamil.com/article/rich-dad-poor-dad-in-1-7-billion-doller-debt-1788429472</id>
            <summary type="text">
உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><p>

செல்வந்தர்கள் வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடனைப் பயன்படுத்துவதாக நீண்டகாலமாக வலியுறுத்தி கியோசாகி வலியுறுத்தி வருகின்றார்.
</p><p>
இந்நிலையில் கடனை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நிதி அறிவு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>1.2 பில்லியன் டொலர்&nbsp;கடன் </h2><p> </p><p>

எனினும், 1.2 பில்லியன் டொலர் முழுவதும் கியோசாகியின் தனிப்பட்ட கடன் அல்ல என அவரது முன்னாள் மனைவியும் வர்த்தகப் பங்காளியுமான கிம் கியோசாகி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/632ecccf-4c4a-4989-aa24-e0071e2cfe78/26-6a99465243d6e.webp' /></p><p> </p><p>

தாங்கள் பங்காளிகளுடன் இணைந்து சுமார் 1,500 அடுக்குமாடி குடியிருப்பு அலகுகளை வைத்திருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய கடனே பெரும்பகுதி எனவும் அவர் விளக்கியுள்ளார். </p><p>

கியோசாகியின் முதலீட்டு உத்தியின்படி, சொத்துகளின் மதிப்பு உயரும்போது அவற்றின் அதிகரித்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் கடன் பெறுகிறார். </p><p>

அந்தப் பணத்தை புதிய முதலீடுகளுக்குப் பயன்படுத்துகிறார். மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதன் மூலம் ஒரு முதலீட்டில் ஏற்படும் பிரச்சினை மற்ற சொத்துகளை பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, கியோசாகியின் தனிப்பட்ட பங்கு கடன் சுமார் 30 முதல் 60 மில்லியன் டொலர் வரை இருக்கலாம் என Vanity Fair மதிப்பிட்டுள்ளது.</p><p>

 ரியல் எஸ்டேட் சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறுவது பொதுவான முதலீட்டு நடைமுறை என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், அதிகளவிலான கடன் சொத்து மதிப்பு அல்லது வருமானம் குறையும் சூழ்நிலையில் மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>

1997ஆம் ஆண்டு வெளியான ‘Rich Dad Poor Dad’ நூல் உலகளவில் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நூலின் மூலம் கியோசாகி, ரியல் எஸ்டேட் மற்றும் பிற வருமானம் ஈட்டும் சொத்துகளில் முதலீடு செய்வதைப் பிரபலப்படுத்தியுள்ளார்.

 கியோசாகியின் கூற்றுப்படி, முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும் “நல்ல கடன்” மற்றும் அன்றாட செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் கடன் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T10:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;ட்ரம்ப் நீரிணை&quot; என மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணையின் பெயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-is-to-become-trump-strait-1788428668"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-is-to-become-trump-strait-1788428668</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய கச்சா எண்ணெய் போக்குவரத்து கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை &quot;ட்ரம்ப் நீரிணை&quot; என மறுபெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய கச்சா எண்ணெய் போக்குவரத்து கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை "ட்ரம்ப் நீரிணை" என மறுபெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>Truth Social சமூக ஊடக வலையமைப்பில் ஒரு பதிவை வெளியிட்ட அவர், இந்த கடல் பகுதி தற்போது அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால், அதன் பெயரை இவ்வாறு மாற்றுவது பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>பின்னர் வெள்ளை மாளிகையின் ஓவல் அறையில் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அது வெறும் ஒரு யோசனை மட்டுமே என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e39a736e-903b-4fc3-8f10-13f31a4d3656/26-6a99440cad9f7.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ X கணக்கு இந்த நீரிணையை "ட்ரம்ப் நீரிணை" என்று குறிக்கும் ஒரு புதிய வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது.&nbsp;</p><p>புவியியல் இடங்களுக்கு மறுபெயரிடுவது ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு அரசியல் சமிக்ஞையாக அடிக்கடி காணப்பட்ட ஒரு போக்காகும்.</p><p></p><h2>முன்னரான ட்ரம்பின் பெயர் மாற்றங்கள்</h2><p> </p><p>இதற்கு முன், மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க வளைகுடா" என்றும், கனடாவுடனான வர்த்தக தகராறின் போது ஒன்டாரியோ ஏரியை "அமெரிக்க ஏரி" என்றும் அவர் மறுபெயரிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d6d959d-c889-45d5-8539-2ae78b94dff8/26-6a99440d72257.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு தனது நாட்டின் அதிகாரபூர்வ வரைபடங்களில் பெயர்களை மாற்ற அதிகாரம் இருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் அல்லது பிற நாடுகளுக்கு அந்த பெயர்கள் சட்டபூர்வமாகப் பொருந்தாது.</p><p> ஈரான் மற்றும் ஓமான் அதன் கடற்கரை நாடுகளாக உள்ளன, மேலும் இந்த கடல் பகுதி எப்போதும் ஈரானுக்கு சொந்தமானது என்று ஈரான் வலியுறுத்துகிறது.</p><p>



 இந்த பெயர் மாற்றும் முன்மொழிவு சர்வதேச வரைபடங்களில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை, மேலும் இது ஒரு போர் வெற்றியை அடையாளப்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசியல் பிரசாரமாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T09:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய் அபாயம் குறையவில்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-risk-persists-despite-low-number-of-cases-1788419013"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-risk-persists-despite-low-number-of-cases-1788419013</id>
            <summary type="text">இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p> 

இதன் காரணமாக, தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானமாகச் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>நுளம்புகளின் பெருக்கம்&nbsp;</h2><p>அத்துடன் சில மாவட்டங்களில் ஆரம்பத்தில் நுளம்புகளின் பெருக்கத்தை அவதானிக்க முடிவதுடன், அதன்பின்னரே நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாகவும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f4795b-c60e-4bc2-9598-c196b6ab2e74/26-6a993fb9a03bc.webp' /></p><p> </p><p>

டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் கவனயீனமாக செயற்பட்டால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எனவே பொதுமக்கள் தமது சுற்றுபுறச் சூழலை மிகவும் தூய்மையாக பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-news-today-update-1788425440"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-news-today-update-1788425440</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,359,128 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 383,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/791eef2f-b5ce-400a-afcc-9163c3877ace/26-6a9936d750dd7.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 351,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 335,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-import-vehicle-government-ann-1788423068"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-import-vehicle-government-ann-1788423068</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வழிமுறைகள் பற்றிய நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வருமானக் செயல்திறன் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>வாகன இறக்குமதி</h2><p>வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட மொத்த வரி வருமானத்தில் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மூலம் அதிகபட்ச பங்காக 386.726 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcd35e5-67e1-4e97-9152-ae00a4ae831e/26-6a9933d671652.webp' /></p><p>அத்தோடு 1,000cc இற்கு குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கார்கள் அதிக வருமானத்தை ஈட்டித் தந்த பிரிவாக உருவெடுத்துள்ளன.</p><p>இதன் மூலம் சுங்கத்திற்கு 137.4 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன் இது மொத்த சுங்க வருமானத்தில் 9.96 வீதம் ஆகும்.</p><p>
</p><p></p><h2>கொள்கலன்களின் பரிசோதனை</h2><p>2026 ஜூன் 30 ஆம் திகதியளவில் இலங்கை சுங்கம் 1.379 டிரில்லியன் ரூபா மொத்த வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. </p><p>இக்காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட 1.061 டிரில்லியன் ரூபா இலக்குடன் ஒப்பிடுகையில் இது 130 வீதம் சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431fa7c7-b6f3-449a-9d5f-08f472313773/26-6a9933d5ac666.webp' /></p><p>சுங்க வருமானம் ஆண்டு முழுவதும் மாதாந்த இலக்குகளை விஞ்சியுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டின் ஒத்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் பரிசோதனை, சுங்கச் செயல்பாடுகளை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருமான நிர்வாகத்தில் உள்ள சவால்கள் மற்றும் திறனை அதிகரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:46:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த செலவில் ஜப்பான் - மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வேலை வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245"></link>
            <id>https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245</id>
            <summary type="text">சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.</p><p> ஏற்கனவே தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்த புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.</p><p>

பணியகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், துபாயில் விமான நிலைய நிர்மாணத் திட்டங்களில் 2,000 வேலைவாய்ப்புகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.</p><p></p><h2>மேற்பார்வையாளர் பணியிடங்கள்</h2><p> அதிகபட்சமாக ரூ.150,000 செலவில் விண்ணப்பதாரர்கள் விரைவாக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ec8f02-c74f-4c7f-8627-d504cbb73c1d/26-6a9931c4dbdbf.webp' /></p><p>
</p><p>
மேலும், 800 மேற்பார்வையாளர் பணியிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதற்கான மொத்த செலவு ரூ.180,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தொகைகள் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இலங்கையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பூஜ்ஜியச் செலவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> அங்குள்ள நலவாழ்வு மையம் இந்த வேலைவாய்ப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜப்பானில் புதிய வேலைவாய்ப்புகள்
ஜப்பானில் மூன்று நிறுவனங்களுடன் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.</p><p>

முன்னோடித் திட்டத்தின் கீழ், ஜப்பானிய நிர்மாண நிறுவனமொன்றுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 23 மாணவர்கள் சபுகஸ்கந்தையில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>ஜப்பானிய மொழித் திறன்</h2><p>
</p><p>
தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சிக்கான செலவுகளை குறித்த ஜப்பானிய நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
மேலும், ஜப்பானிய நிறுவனமான Meta Techno உடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் அடிப்படை ஜப்பானிய மொழித் திறன் கொண்ட ICT பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, மற்றொரு ஜப்பானிய நிறுவனம் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்காக 1,000 லொறி சாரதி பணியிடங்களை வழங்க முன்வந்துள்ளது. </p><p>இதற்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் ஜப்பானிய மொழித் திறனும் அவசியமாகும்.

தேவையான தகுதிகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்ள உதவிகளை நிறுவனம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்(<a href="https://www.slbfe.lk/" target="_blank">https://www.slbfe.lk/</a>) மற்றும் <a href="https://www.facebook.com/slbfeOfficial/" target="_blank">Facebook </a>பக்கம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T08:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிப்பர் வாகனம் பழக்கடைக்குள் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072"></link>
            <id>https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072</id>
            <summary type="text">வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.</p><p>இந்த விபத்து நேற்று (02.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு அருகிலிருந்த பழ விற்பனை நிலையமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒருவர் பலி</h2><p>
</p><p>இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc8e566-d6ce-4491-b919-9bde2b3227be/26-6a992f13d0208.webp' /></p><p>உயிரிழந்தவர் சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:29:22+00:00</updated>
        </entry>
    </feed>
