<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-14T13:10:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம்! ரணில் தரப்பு அநுரவுக்கு அனுப்பிய அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-s-request-22nd-amendment-constitution-1786710138"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-s-request-22nd-amendment-constitution-1786710138</id>
            <summary type="text">
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரைக்கான திருத்தங்கள் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இறையாண்மை&nbsp;</h2><p>
</p><p>
மேலும், இலங்கைக் குடியரசில் இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அதனை பிரிக்க முடியாது என்ற அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையே இதன் அடிப்படையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20bcde8-0421-49ea-a0e3-6af72bf20576/26-6a7f0f667e098.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p> 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்யும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையை மீறும் செயலாகும் என்றும், இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் தேவை என்றும் 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>சர்வதேச நீதித்துறை தரநிலைகள்</h2><p>

சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி, வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள், நீதித்துறை சார்ந்த இந்த விடயத்தில் சார்புத்தன்மை அல்லது பாரபட்சம் ஏற்படுவதைத் தவிர்க்க சர்வதேச நீதித்துறை தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c19a309-5e4b-4e3a-b2cd-4d636a52b4fb/26-6a7f0f6744985.webp' /></p><p>

எனவே, மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரே சட்டப்பூர்வமான வழிமுறையாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், அரசியலமைப்பின் 85(1) உறுப்புரைக்கு அமைவாக இந்தச் சட்டமூலத்தைச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை ஊடாக எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T12:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் இதுவரை அனுபவித்திராத நடவடிக்கை! மத்தியகிழக்கை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்க நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/operation-unexpected-us-action-on-iran-1786711947"></link>
            <id>https://ibctamil.com/article/operation-unexpected-us-action-on-iran-1786711947</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

உலகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.</p><p>

உலகம் இதுவரை அனுபவித்திராத வகையிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை ஈரான் எதிர்கொள்ளும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், </p><p></p><h2>மேலும் பல அறிவிப்புகள்</h2><p>

ஹோர்முஸ் நீரினை முற்றுகை தொடர்வதால், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதோ வெளியேறுவதோ முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ceadd00-5b72-4061-b50a-f5f78bca6a98/26-6a7f0f8e38231.webp' /></p><p>
</p><p>
அடுத்த வாரம் மேலும் பல அறிவிப்புகள் வெளிவரும்.காத்திருங்கள். 
ஏனெனில், ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தனிமைப்படுத்தலை விதிக்கும் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.
</p><p>
உலகம் இதுவரை கண்டிராத பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை ஆகியவற்றின் கலவையானது, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்" என்று பெசென்ட் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T12:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் கேள்விகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பெஷெஷ்கியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-major-move-with-iran-amid-hormuz-tensions-1786708637"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-major-move-with-iran-amid-hormuz-tensions-1786708637</id>
            <summary type="text">எதிர்வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு வட்டாரங்கள் வட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு வட்டாரங்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் பெஷேஷ்கியன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

2026-ஆம் ஆண்டுக்கான தனது தலைமைப் பொறுப்பின் கீழ் இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துவதால், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. </p><p></p><h2>இருதரப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினை</h2><p>இந்த உச்சிமாநாடு, "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற இந்தியாவின் கருப்பொருளின் கீழ் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5968bbab-c216-4a1f-895b-7a46dbdb8cd2/26-6a7f0740ecfe3.webp' /></p><p>
</p><p>
இதன்படி 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலிடமிருந்து பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

2024 அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, பெஷெஷ்கியன் -&nbsp; நரேந்திர மோடியைச் சந்தித்தார். </p><p>

அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

2024-ல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினரானது.
</p><p>
2025-ல் இந்தோனேசியா இந்த அமைப்பில் இணைந்ததன் மூலம், முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.

முன்னதாக ஜூன் மாதம், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வந்தடைந்தார்.
</p><p>
கூட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அராக்சி, உலகளாவிய சமாதானத்தை நிலைநாட்டும் சக்தியாக இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எடுத்துரைத்தார். </p><p></p><h2>நிலவும் பதற்றமான சூழ்நிலை</h2><p>

மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதில் இந்தியா ஒரு பெரிய பங்கை ஆற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0911e2-6ed1-41da-aae1-3c902bc8d83d/26-6a7f0740427ab.webp' /></p><p> 

ஆயுத மோதலில் தெஹ்ரான் எதிர்காலத்தைக் காணவில்லை என்பதையும் அராக்சி தெளிவுபடுத்தினார்.

 

தற்போதைய நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு இல்லை என்றும், 'பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே' முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்றும் அவர் கூறினார்.
</p><p>
 இந்திய மத்தியஸ்தத்திற்கு தெஹ்ரான் தயாராக இருப்பதை வலியுறுத்தும் வகையில், இந்தியாவின் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய அரக்சி, வர்த்தகப் பாதுகாப்பிற்காக நட்பு நாடுகள் ஈரானை நம்பியிருக்கலாம் என்று உறுதிப்படுத்தினார்.
</p><p>
 மேலும், ஹோர்முஸில் பாதுகாப்பைப் பேணும் தனது வரலாற்றுப் கடமையை ஈரான் எப்போதும் நிறைவேற்றும் என்று அராக்சி தெளிவுபடுத்தினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T12:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோராவெளி - ஈச்சையடித்தீவுப் படுகொலை நினைவுதினம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/koraveli-and-eechaiyaditheevu-massacres-1786707700"></link>
            <id>https://ibctamil.com/article/koraveli-and-eechaiyaditheevu-massacres-1786707700</id>
            <summary type="text">கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. </p><p>இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது கிராமத்திற்குரிய தனித்துவமான கலைகளையும் வளர்த்து வந்தார்கள். </p><p>கோராவெளிக் கிராமத்தில் இந்து மதத்தவர்களின் பிரசித்திபெற்ற கோராவெளி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.</p><p><span style="color: inherit;">இங்கு கடந்த 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.</span></p><p><span style="color: inherit;"> இராணுவத்தினரும் சிங்கள-முஸ்லிம் குழுக்களும் மக்கள் மீதான தாக்குலை நடத்திவந்தனர் என குற்றச்சாட்டுக்கள் இன்றளவும் பரந்து காணப்படுகின்றன.&nbsp;</span></p><p>இந்த கோரத்தில் 1990.08.14 நண்பகல் செங்கலடி, கல்லடி இராணுவ முகாம்களிலிருந்து வந்த இராணுவத்தினர் கோராவெளி, பச்சையடித்தீவு கிராமங்களைச் சுற்றிவளைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். </p><p>இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீடுகளிலிருந்தவர்கள், வீதிகளிற் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனப் பதினைந்து பேர் உயிரிழந்தார்கள். மேலும் இருபத்தைந்து பேர் காயமடைந்தார்கள்.</p><p>&nbsp;அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பமாகும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evaluation-of-answer-sheets-5-grd-scholarship-1786707291"></link>
            <id>https://ibctamil.com/article/evaluation-of-answer-sheets-5-grd-scholarship-1786707291</id>
            <summary type="text">

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
மதிப்பீட்டு செயல்முறை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் நிறைவடையும் என்றும், இதன்மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புலமைப்பரிசில் பரீட்சை</h2><p>

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82d001a-081e-4e9b-b738-8783e4f47c38/26-6a7f0115ea4af.webp' /></p><p>

அதன்போது, சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-14T11:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அவர்களது எதிர்வாத நிலைப்பாடுகள் நேற்று (13) நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து இன்று (14) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒவ்வொரு பிரதிவாதியும் எதிர்வரும் விசாரணைகளில் கடைப்பிடிக்கவுள்ள தமது எதிர்வாத நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><h2>பிரதிவாதிகளின் நிலைப்பாடு</h2><p>

அதன்படி, சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து தமது வாக்குமூலத்தை வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23247fe4-025f-46ec-99c7-ad94a1c00b43/26-6a7ef2d3c0bd1.webp' /></p><p> </p><p>மேலும் சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், ஆனால் தமது தரப்பில் வேறு சாட்சிகளை அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><ol><li>

முதலாம் பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இரண்டாம் பிரதிவாதியான மொஹமட் சரீபுத் ஆதம் லெப்பை (ஹஜ்ஜி மாமா) குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
மூன்றாம் பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

நான்காம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் ஐந்தாம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</li><li>

ஆறாம் பிரதிவாதியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் அமைதியாக இருப்பதாகவும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
ஏழாம் பிரதிவாதியான மொஹமட் மன்சூர் மொஹமட் சனூஸ்தீன் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
எட்டாம் பிரதிவாதியான அப்துல் மனாஃப் மொஹமட் ஃபர்தௌஸ் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளார்.
</li><li>
ஒன்பதாம் பிரதிவாதியான மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் மற்றும் 10ஆம் பிரதிவாதியான அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். </li><li>எனினும், 10ஆம் பிரதிவாதி சார்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
11ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
12ஆம் பிரதிவாதியான மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் மற்றும் 13ஆம் பிரதிவாதியான மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

14ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

15ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளும் அழைக்கப்படவுள்ளனர்.
</li><li>
16ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இதற்கிடையில், 18ஆம் பிரதிவாதி உயிரிழந்துள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
19ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li> 20ஆம் பிரதிவாதி வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
21 மற்றும் 22ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

23ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
24 மற்றும் 25ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்களது தரப்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</li></ol><p></p><h2>எதிர்வாத நிலைப்பாடு </h2><p>
இவ்வாறு ஒவ்வொரு பிரதிவாதியும் தமது எதிர்வாத நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையில், சிலர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன் மேலதிக சாட்சிகளையும் முன்வைக்கவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa1ded2-9de4-4d11-b0e0-da6e35fbd033/26-6a7ef2e9b3a63.webp' /></p><p> மற்றுமொரு தரப்பினர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பிரதிவாதிகளுக்கும் அவர்களுக்குரிய அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்வாத விசாரணையின்போது கடைப்பிடிக்கவுள்ள நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான இந்த விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கின் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினசரி நடைபெறவுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T11:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kandy-esala-perahera-special-traffic-and-security-1786704099"></link>
            <id>https://ibctamil.com/article/kandy-esala-perahera-special-traffic-and-security-1786704099</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைபடுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>எசல பெரஹரவின் முக்கியத்துவமிக்க நிகழ்வுகளான கும்பல் பெரஹேரா ஆகஸ்ட் 18 முதல் 22 வரையிலும், ரந்தோலி பெரஹேரா ஆகஸ்ட் 23 முதல் 27 வரையிலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன.</p><p>இந்தப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சாலைத் தடுப்புகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைச் சோதனையிடுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களுக்கான விசேட தரிப்பிடங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>கண்டி எசல பெரஹேரா</h2><p>பெரஹேராவின் போது பாதுகாப்புப் பணிகளுக்காக, மொத்தம் 6,200 காவல்துறைப் பணியாளர்கள், காவல்துறை சிறப்பு அதிரடிப் படையைச் (STF) சேர்ந்த 564 பணியாளர்கள், முப்படைகளைச் சேர்ந்த 1,200 பணியாளர்கள் மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 29 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d528e323-16db-407b-8f83-1eb81e1ea48e/26-6a7efa7490c57.webp' /></p><p>

 

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக காவல்துறை கே9 (K9) பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.</p><p>பெரஹேரா காலப்பகுதியில் கண்டி நகருக்குள் நுழையும் 14 பிரதான நுழைவாயில்களிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>பெரஹேராவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களின் வாகனங்களுக்காக 13 விசேட வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இதில் இலகுரக வாகனங்களுக்காக 6 தரிப்பிடங்களும், கனரக வாகனங்களுக்காக 7 தரிப்பிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>
 

பெரஹேரா காலத்தில் கண்டி நகரைத் தவிர்க்க விரும்பும் வாகன சாரதிகளுக்காக காவல்துறையினரும் மாற்று வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><p>

 

வாகன சாரதிகள் இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பெரஹேராவின் போது நடைமுறையில் உள்ள சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amendment-to-increase-judges-retirement-age-1786705447"></link>
            <id>https://ibctamil.com/article/amendment-to-increase-judges-retirement-age-1786705447</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் அன்றைய தினமே நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஊடகமொன்றுக்கு&nbsp; குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுடன், இதற்கு ஆரம்பக்கட்டத்திலிருந்தே முன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.</p><p></p><h2>வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5598a448-7e77-44f6-926d-2b7b40e7e997/26-6a7efb29dd624.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதும், இந்தத் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருந்தார்.</p><p></p><h2>நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> </p><p>

இத்தகைய பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c0536a-dd1b-4266-9be8-91bab00ceccf/26-6a7efb2add399.webp' /></p><p> </p><p>இலங்கையின் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. </p><p>

அந்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோணேஸ்வரத்தை தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்திலும் அடாவடி : ஆலய வரலாற்றை மறைக்கும் தொல்லியல் திணைக்களம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archaeology-dept-hide-the-thiruketeeswaram-history-1786703120"></link>
            <id>https://ibctamil.com/article/archaeology-dept-hide-the-thiruketeeswaram-history-1786703120</id>
            <summary type="text">மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக 
நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>மேலும், ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என குறிப்பிட்ட அவர் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.
</p><p>
கௌதம புத்தரின் தலையை எடுத்து கொழும்பில் வைத்திருப்பதாக அந்தப் பெயர்ப்பலகையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் மற்றும் நந்தி தொடர்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் குறித்த பெயர்ப்பலகை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/t7jfv7v-bY8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் மேச்சல் தரைக்காக பண்ணையாளர்கள் பாரிய போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mailathamadu-farmers-protest-in-batticaloa-1786700428"></link>
            <id>https://ibctamil.com/article/mailathamadu-farmers-protest-in-batticaloa-1786700428</id>
            <summary type="text">
பல வருடக் கணக்காக தமது மேச்சல் தரைப் பகுதிக்காகப் போராடி வரும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பல வருடக் கணக்காக தமது மேச்சல் தரைப் பகுதிக்காகப் போராடி வரும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தமது நீண்ட கால பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(14) பாரிய அமைதி வழி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.</p><p>

Mannar Social and Economic Development Organization எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>தீர்வு வழங்குவதில் தாமதம்</h2><p>இதேவேளை, போரட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக காணியை இழந்த மன்னார் மக்கள், யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிளவு மக்கள் மற்றும் மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a132898-d090-4036-8a44-66f11238715e/26-6a7ee83fe4572.webp' /></p><p>
</p><p>இதன்போது, பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதால் தீர்வு வழங்குவதில் தாமதமா? பண்ணையாளர்களின் மேச்சல் தரையைப் பதிவு செய்வதில் ஏன் தாமதம், பல ஆண்டுகள் கடந்தும் மக்களின் காணிகளை ஒப்படைக்க காலம் போதாதா என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T10:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20th-commemoration-of-sencholai-massacre-in-batti-1786699635"></link>
            <id>https://ibctamil.com/article/20th-commemoration-of-sencholai-massacre-in-batti-1786699635</id>
            <summary type="text">முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.</p><p> தமிழ் தேசிய
பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (14) மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.</p><p>இதன்போது&nbsp;இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றது.</p><p></p><h2>சுடர் ஏற்றி அஞ்சலி</h2><p> </p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய
அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795c73cb-e09b-4967-8841-270e1c4c21e4/26-6a7ee6bde9c91.webp' /></p><p>நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் உயிரிழந்த சிறுவர்களின் திருவுருவப்படங்களை கொண்டு காட்சிபடுத்தப்பட்ட பதாததைக்கு முன்னால் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி
செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc163ab-3548-48d8-860b-8983f003b455/26-6a7ee6bec4870.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார் சிறிதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-sritharan-visited-the-chemmani-mass-grave-1786698597"></link>
            <id>https://ibctamil.com/article/mp-sritharan-visited-the-chemmani-mass-grave-1786698597</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
</p><p>
செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார்.</p><p></p><h2>51ஆவது நாள் அகழ்வு பணி</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் பணி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8d3aed-5590-4966-a3c6-b45bfd79c2ee/26-6a7ee5e50346c.webp' /></p><p> </p><p>இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 10 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் மொத்தம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.</p><p> இதனடிப்படையில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 552 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 540 எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளும், அவை தொடர்பான சட்ட&nbsp; நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமதமாகும் மாகாண சபைத் தேர்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-committee-on-provincial-council-elections-1786693245"></link>
            <id>https://ibctamil.com/article/special-committee-on-provincial-council-elections-1786693245</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முன் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் முன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முன் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக்கா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>இதன்போது மாகாண சபைத் தேர்தல்களை எந்த நடைமுறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்தும் மேலதிக கலந்துரையாடல்கள் நடைபெறும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>&nbsp;சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல்</h2><p>
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்தத் தேர்தல் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த விசேட குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56942a39-19d9-44c4-9d28-6457bb9a6738/26-6a7ed99f05bc5.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் குறித்த குழு இதுவரை சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவும் இதற்கு முன்னர் இந்தக் குழுவின் முன் முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உளவுத் தகவல்கள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் வெளிப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/how-easter-sunday-attack-intelligence-was-handled-1786697222"></link>
            <id>https://ibctamil.com/article/how-easter-sunday-attack-intelligence-was-handled-1786697222</id>
            <summary type="text">
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பெறப்பட்ட உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டி, முக்கியமான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை &quot;FN...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பெறப்பட்ட உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டி, முக்கியமான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை "FNA" (தேவையான நடவடிக்கைக்காக - For Necessary Action) என்ற குறிப்புடன் வெறுமனே கீழ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
முக்கியமான உளவுத் தகவல்கள் கிடைக்கும்போது, அதிகாரிகள் அதை வெறுமனே மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பை நேரடியாக ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகாரிகளின் கடமை</h2><p>
</p><p>
2019 ஏப்ரல் 9 அன்று அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் தலைவரால் அனுப்பப்பட்ட தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முக்கியத் தகவல், அப்போதைய காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் "FNA" என்ற குறிப்புடன் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உட்பட நான்கு பிரிவுகளுக்கு வெறுமனே அனுப்பி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67992cbe-958b-4b68-85aa-d8cf91f870fb/26-6a7ed95d2a6ef.webp' /></p><p>

இத்தகைய ஆபத்தான தருணங்களில் வெறும் குறிப்பை எழுதி அனுப்புவது மட்டும் போதுமான நடவடிக்கையாகுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p>
முன்கூட்டியே உளவுத் தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர்&nbsp; பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடமை மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகள் வெறும் "FNA" என எழுதி ஆவணங்களை நகர்த்துவது மட்டுமே தமது கடமை என கருதக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T09:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-dies-after-drowning-at-sea-1786693796"></link>
            <id>https://ibctamil.com/article/indian-dies-after-drowning-at-sea-1786693796</id>
            <summary type="text">

பெந்தரை கடற்கரையில் நீரில் மூழ்கி காணாமல் போன இந்தியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது, இன்று(14) காலை மொரகல்லா கடற்கரையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பெந்தரை கடற்கரையில் நீரில் மூழ்கி காணாமல் போன இந்தியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சடலமானது, இன்று(14) காலை மொரகல்லா கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பெந்தரை பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நண்பருடன் தங்கியிருந்த 24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குறித்த நபர் விடுதிக்குப் பின்னாலுள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​கடல் நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec042fd-09d4-4214-b1c7-560efafe8c49/26-6a7ed021ecf27.webp' /></p><p>

இந்நிலையில், அலுத்கம காவல்துறையினர் மற்றும் அலுத்கம சுற்றுலா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-14T08:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேலிடம் CENTCOM வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-iran-again-sentagam-urges-israel-to-act-1786694771"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-iran-again-sentagam-urges-israel-to-act-1786694771</id>
            <summary type="text">ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார வசதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார வசதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவர் அழுத்தம் கொடுத்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 

பெயர் குறிப்பிடப்படாத, தகவலறிந்த அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க சென்ட்காம் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு வருகை தந்தபோது இந்த முன்மொழிவை முன்வைத்தார் என இஸ்ரேலின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இஸ்ரேலிய இராணுவத்தின் உயர்மட்ட செயல்பாட்டுக் குழுவின் கூட்டத்தில், தலைமைத் தளபதி எயால் ஜமீர் மற்றும் பிற மூத்த தளபதிகளுடன் சென்ட்காம் தலைவர் கலந்துகொண்டதாக விளக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சென்ட்காம் தலைவர் நிலைப்பாடு</h2><p>
</p><p>
அந்த சந்திப்பின் போது, ​​ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்கவும், அந்நாட்டின் எரிவாயு, எண்ணெய் மற்றும் மின்சாரத் தொழில்களுடன் தொடர்புடைய வசதிகள் உள்ளிட்ட தேசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவும் அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae234320-2bcb-4b12-abff-0a79b1c1453b/26-6a7ecc75c3899.webp' /></p><p>
</p><p>
"ஈரானில் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது ஆட்டத்தின் விதிகளையே மாற்றிவிடும், ஈரானியர்களைக் கடுமையாகப் பாதிக்கும், மேலும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்," என்று குறிப்பிட்ட சென்ட்காம் தலைவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.</p><p>

சண்டையை மீண்டும் தொடங்குவதே ஒரே வழியாக அமையக்கூடும் என்றும், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்த வேண்டியிருக்கலாம் என்றும் சென்ட்காம் தலைவர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T08:33:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/53-female-students-killed-at-sencholai-1786690356"></link>
            <id>https://ibctamil.com/article/53-female-students-killed-at-sencholai-1786690356</id>
            <summary type="text">எமது மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் தமிழ் மாணவர்கள் மாபெரும் இனப்படுகொலைகளை சந்தித்தமை நெடியதொரு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் தமிழ் மாணவர்கள் மாபெரும் இனப்படுகொலைகளை சந்தித்தமை நெடியதொரு வரலாறு. வாழ்வு பற்றிய கனவு பிசுபிசுக்கும் அவர்களின் குருதி இந்த மண்ணில் கறையாகப் படிந்திருக்கின்றது.</p><p>இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மாணவர்கள் அணிதிரள்வதற்கு மாணவர்கள்மீதான படுகொலைகள் தூண்டுகோலாக இருந்தன.</p><p> பாடசாலைகள் மீதும் பள்ளி மாணவர்கள் மீதும் போரை தொடுக்கிற, குண்டுகளை கொட்டுகிற இனக்கொலை அரசின் இருண்ட பக்கங்களில் எங்கள் பெண் குழந்தைகளின் குருதியால் எழுதப்பட்டது செஞ்சோலை இனப்படுகொலை.</p><p></p><h2>இருண்ட யுகத்தின் கொடுநாள்
</h2><p>
ஒரே நாளில் ஒரு சில நிமிடங்களில் ஒருவரல்ல, இருவரல்ல 53 மாணவிகளை இனப்படுகொலைக்குப் பலிகொடுத்தது தமிழர் தேசம். சிங்களப் பேரினவாத்தின் இனக்கொலைப் பசிக்கு எங்கள் தேசத்தின் இளம் குருத்துக்களை வாரிக்கொடுத்த அந்த துயரத்தை மறக்க முடியாமல் நெஞ்சம் இன்றும் துடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801f8e6f-6561-4094-a815-969486506a01/26-6a7ecfce51aca.webp' /></p><p> </p><p>இனப்படுகொலையாலும் போராட்டத்தாலும் இளையவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் மண்ணுக்காகவும் அதன் மாண்புக்காகவும் வாழ்கின்ற பொறுப்பு இருக்கின்றது.</p><p>ஒகஸ்ட் 14, செஞ்சோலைப் படுகொலையின் நினைநாள். &nbsp;ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடு. 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14 ஆம் திகதி. வழக்கமான ஒரு பொழுதாக புலர்ந்தது. </p><p>நெஞ்சில் கனவுகளை சுமந்த பள்ளி மாணவிகள் முதலுதவிப் பரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குழந்தைகள் கொன்று வீசப்பட்டனர்.</p><p> அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஒகஸ்ட் 11 ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது.</p><p></p><h2>பாடசாலைகள்மீது குண்டு வீச்சு
</h2><p>
யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம் ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன. </p><p>போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன.

எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. </p><p>இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.</p><p></p><h2>இவர்களா பயங்கரவாதிகள்?</h2><p>

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கின்னஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956e1999-0f77-4a87-a2e2-cabda3743e67/26-6a7ecfcf0a208.webp' /></p><p> உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலயக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்துவ அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. </p><p>இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். </p><p>இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர் அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம்.</p><p></p><h2>மகிந்தவின் பதில்
</h2><p>
இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்ச அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4273ba0-2045-41a8-99dc-34692a6d75d9/26-6a7ecfcfb51be.webp' /></p><p> இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது.
</p><p>
நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம் என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. </p><p>போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு.</p><p>நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம் என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று.</p><p> போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு.</p><p></p><h2>வாய்மூடி இருந்த சர்வதேசம்
</h2><p>
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். </p><p>அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். </p><p>காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள்.&nbsp;</p><p>53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள்.</p><p> இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.</p><h2>நீதிக்காக ஏங்கும் நிலம்
</h2><p>
கல்வி உரிமைக்காகப் போராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். </p><p>மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது.</p><p>இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. </p><p>அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா? இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இந்தப் படுகொலைக்கான நீதிக்காக ஏங்குகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு குறித்ததும் ஆகும். </p><p>இவைகளுக்கான நீதி முன்வைக்கப்படுகிற நாளித்தான் &nbsp;இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். நினைவு கூர்தல் என்ற போராட்டத்தின் வழியாக செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு நீதியை அஞ்சலியாக்குவோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T08:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 வயதுடைய மனைவியை படுகொலை செய்த கணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/23-year-old-wife-murdered-husband-arrested-1786692083"></link>
            <id>https://ibctamil.com/article/23-year-old-wife-murdered-husband-arrested-1786692083</id>
            <summary type="text">
கொழும்பு - கெஸ்பேவ காவல்துறை பிரிவில் மடபாத பகுதியில் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று(13) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு - கெஸ்பேவ காவல்துறை பிரிவில் மடபாத பகுதியில் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று(13) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், அந்த நபர் அப்பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்போது, பொல்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் கலுபோவில வைத்தியசாலை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d669356-49fb-43e8-b68a-fb07cf3bcbe1/26-6a7ec72dcbed9.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சந்தேநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-08-14T07:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பெக்கோ சமனின் தாயார் : அம்பலமான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bako-samans-mother-gave-shelter-to-ishara-sewwandi-1786689662"></link>
            <id>https://ibctamil.com/article/bako-samans-mother-gave-shelter-to-ishara-sewwandi-1786689662</id>
            <summary type="text">துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா - உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா - உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு கொலைக்குப் பின்னர் பெக்கோ சமனின் தாயார் தங்குமிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்திற்குப் பயண வசதிகளைச் செய்து கொடுத்தவரும் பெக்கோ சமனே என குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறை சந்தேகம்</h2><p>இந்தநிலையில், கணேமுல்ல சஞ்சீவவுக்கு விசுவாசமான கரந்தெனிய சுத்தா கும்பலால் அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/532922f0-2657-4183-93ec-71c3a14cc21c/26-6a7ec2eb34acf.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர், இஷாரா செவ்வந்தி மாத்தறை மற்றும் வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதேவேளை பெக்கோ சமனின் தாயைக் கொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், நேற்று காலை (13) மாத்தறை ஊருபொக்க பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>
அதன்படி, கைரேகை பதிவு செய்யும் அதிகாரிகளும், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து இவ்விடயம் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
நேற்று முன்தினம் (12) மதியம் மித்தெனியா - உலாஹிதியாவா பகுதியில் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெக்கோ சமனின் தாயாரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லி மீற்றர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a37e6d-cb34-4028-be80-adfd11d16c43/26-6a7ec2ea6ece6.webp' /></p><p>

இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்ர பத்மேவுடன் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அருணா விதானகமகே என்ற மித்தெனியே கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலையிலும் பெக்கோ சமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

மேலும், மித்தெனியாவின் ஜுலம்பிட்டிய பகுதியில், முன்னதாக பெக்கோ சமன் மற்றும் பிறருடன் கைது செய்யப்பட்ட தம்பரி லஹிருவின் வீடு, கடந்த மாதம் 8ஆம் திகதி சிலரால் தீக்கிரையாக்கப்பட்டது.
</p><p>
வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டபோது தம்பரி லஹிருவின் தாயார் அங்கிருந்ததாகவும், தீ விபத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:30:57+00:00</updated>
        </entry>
    </feed>
