<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-09T05:27:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்களின் அரோகரா கோசத்துடன் அலங்கார தேரேரி வந்தான் நல்லையம்பதி கந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-festival-2026-live-1788926979"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-festival-2026-live-1788926979</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (09.09.2026) வெகு விமரிசையாக இடம்பெறுகிறது.

கடந்த மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (09.09.2026) வெகு விமரிசையாக இடம்பெறுகிறது.
</p><p>
கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்த திருவிழா, நாளை (10) நடைபெறும் தீர்த்தத் திருவிழா மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.</p><p>

இந்நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அலங்காரக் கந்தனாக நல்லூர் கந்தசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.</p><p></p><h2>வருடாந்த தேர்த்திருவிழா</h2><p>
</p><p>
நேற்று சப்பரத் திருவிழா நடைபெற்ற நிலையில், இன்று தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e150d72-c4f1-446a-a490-fa1a8a9cad47/26-6aa0dfa6f082c.webp' /></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து நாளை தீர்த்தத் திருவிழாவும் கொடியிறக்க நிகழ்வும் நடைபெறவுள்ளன.
</p><p>
நல்லூர்க் கந்தனை தரிசிப்பதற்காக நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணத்தில் திரண்டுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களும் பெருமளவில் வருகை தந்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6F36aLxtwjU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T04:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பயங்கர நபர் - விமான நிலையத்தில் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/konda-ranji-arrested-by-cid-upon-arrival-at-bia-1788926058"></link>
            <id>https://ibctamil.com/article/konda-ranji-arrested-by-cid-upon-arrival-at-bia-1788926058</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ கைது செய்யப்பட்டுள்ளார்.

 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால், இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>டுபாயில் கைது</h2><p>
</p><p>
 

‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற போதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1f39a5-1b58-4107-afe0-757e0b0c27b3/26-6aa0db6d7c7a3.webp' /></p><p>

 

அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
 

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T04:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் அராலியில் அதிசயம்! பொங்கி வழியும் கிணறுகள்: ஐயனாரின் புதுமை எனும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wells-overflowing-with-water-in-araly-jaffna-1788922562"></link>
            <id>https://ibctamil.com/article/wells-overflowing-with-water-in-araly-jaffna-1788922562</id>
            <summary type="text">அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன.</p><p>குறித்த சம்பவமானது அதிசயம் என அந்த ஊரில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது.
</p><p></p><h2>தண்ணீர் மிதமான சூடு</h2><p>
</p><p>அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72547092-5db5-4c71-ad03-8ba77f56fce4/26-6aa0ccdb4ba39.webp' /></p><p>இது குறித்து அந்த ஊரில் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும்.&nbsp;</p><p>இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றனர்.</p><p>மேலும் நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T03:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் gen-z இளைஞர்கள் கொந்தளிப்பு! முன்னாள் அமைச்சரின் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gen-z-is-not-angry-about-namal-s-arrest-vasudeva-1788921378"></link>
            <id>https://ibctamil.com/article/gen-z-is-not-angry-about-namal-s-arrest-vasudeva-1788921378</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை&amp;nbsp;என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை&nbsp;என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.</p><p>அத்துடன் அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் வாசுதேவ சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற
முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7915330-79b8-48bd-8cd3-302ef8bd73a4/26-6aa0c860bc79d.webp' /></p><p>மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண சட்ட
நடைமுறையாகும்.</p><p> எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.

அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும்
காணவில்லை. </p><p>சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன்
கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும் என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T03:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல்&nbsp; திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்றும் மின்னல் தாக்கம்</h2><p> </p><p>

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702c2a2c-bca4-43b0-bb64-5c8bd270f12e/26-6aa0b400d9795.webp' /></p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T01:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் அட்டகாசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276</id>
            <summary type="text">கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கட்டைக்காட்டிலிருந்து காலை வேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து, வழமையான நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>முறையீட்டுக் கடிதம்</h2><p> </p><p>

இதனால், பணி நிமித்தமாக யாழ்ப்பாணம் செல்லும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் உரிய நேரத்தில் சேவை பெற முடியாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் தாமதமாகவே தங்களது பணிமனைகளைச் சென்றடைவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d10a8a2-6cb6-4832-bee2-fc57c53e4254/26-6aa0adfe09857.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பேருந்து புறப்படும் சரியான நேரத்தை பயணிகளுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்தத் தாமத நிலைமையைத் தவிர்க்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணம் சாலை முகாமையாளருக்குப் பயணிகள் முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் கப்பல்கள்! அமெரிக்க இராணுவம் வெளியிட்ட காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546</id>
            <summary type="text">ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல்படை(IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்த முயன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி இரு தாக்குதல் முயற்சிகளிலிருந்தும் அமெரிக்கப் போர்க்கப்பல் தப்பித்து, பிராந்திய கடற்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தாக்கப்பட்ட கப்பல்கள்</h2><p>

இந்நிலையில் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் 'எம்/டி காவிஸ்' (M/T Kaviz), 'எம்/டி சர்மினார்' (M/T Charminar), 'எம்/டி ஹரைசன் 1' (M/T Horizon 1) மற்றும் 'எம்/டி ரீஸ்கோ' (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கார்க் தீவுக்கு அருகே 'எம்/டி தர்யா' (M/T Derya) ஆகிய கப்பலையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM forces destroyed five Iranian crude oil carriers, Sept. 8, after the Islamic Revolutionary Guard Corps (IRGC) targeted a U.S. Navy warship with ballistic missiles twice over the past two days. The U.S. warship successfully evaded the attempted Iranian attacks and… <a href="https://t.co/Gi8a2tloN1">pic.twitter.com/Gi8a2tloN1</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2097448820099711412?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதேவேளை, IRGC மற்றும் அதன் பிராந்தியப் படைகளுக்கு நிதி வழங்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சென்ட்காம், இந்தக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு ஈரானிடம் எந்த வழியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக, செப்டம்பர் 5 அன்றும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் மீது தாக்குதல் நடத்த IRGC முயன்றது. அந்தத் தாக்குதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை சென்ட்காம் தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா! வெளியிடப்பட்ட புதிய சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576"></link>
            <id>https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.</p><p> 

இச்சட்டம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, ஈரானிய கப்பல்களைக் குறிவைப்பதற்கான அதிகாரங்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.</p><p>

அத்தோடு, ஈரானின் பிரித்தானிய நிதி அமைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கூடுதல் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வகையில் வர்த்தகத் தடைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறப்பு விதிவிலக்குகள் இல்லாத பட்சத்தில் ஈரானிய விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்குவதைத் தடை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>துறைசார் கட்டுப்பாடுகள்</h2><p>

“ஸ்னாப்பேக்” (snapback) எனப்படும் பொறிமுறையின் கீழ் ஈரான் மீது ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07c6ecd-4a88-46cd-a21f-e73f11f96346/26-6aa0725f12873.webp' /></p><p> </p><p>

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல்வேறு துறைசார் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஈரானின் அணுசக்தித் திட்டம்</h2><p>
</p><p>
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிதி திரட்டும் திறன் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களைப் பெறும் திறனையும் மேலும் மட்டுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f861c6c-e737-4acb-9585-55b321373903/26-6aa0725ff1992.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
இந்நிலையில், “ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கைகளை இச்சட்டம் மேலும் வலுப்படுத்துகிறது” என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் டவுட்டி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T23:44:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! சீறிப்பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-resumed-air-strikes-on-ukraine-1788910503"></link>
            <id>https://ibctamil.com/article/russia-resumed-air-strikes-on-ukraine-1788910503</id>
            <summary type="text">


அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.</p><p> 

செவ்வாய்க்கிழமை அன்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தீவிரத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரவு முழுவதும் நீடித்த இந்தத் தாக்குதலால் தலைநகரின் பல மாவட்டங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும் சுமார் 14 உயரடுக்குக் கட்டிடங்கள், ஒரு விடுதி, பாடசாலை, கிளினிக், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில், "கீவ் நகரம் வெடித்துச் சிதறி எரியும் நிலைக்குள்ளானது" என்று உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கதரீனா மாதெர்னோவா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf00c66-f57a-41f6-94c5-6072dd9de4e3/26-6aa09dc49a47e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;intelligenceonline</i></p><p>

இந்தத் தாக்குதல்களில் தலைநகரில் 35 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அவசரக்கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்ததால், நகரம் முழுவதும் வெடிப்புச் சத்தங்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T23:44:13+00:00</updated>
        </entry>
    </feed>
