<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T00:57:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rameswaram-fishermen-announce-protest-1787096234"></link>
            <id>https://ibctamil.com/article/rameswaram-fishermen-announce-protest-1787096234</id>
            <summary type="text">இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டத்தை ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு
கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
</p><p>
இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால்
சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>கடற்றொழிலாளர்கள்&nbsp;</h2><p>இதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இதே
கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e61bbaed-1a87-4cef-b629-9d21baa18406/26-6a84ecac7b386.webp' /></p><p>

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும்
நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் என்பவையும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை
கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/support-enforced-disappearances-meet-1787094255"></link>
            <id>https://ibctamil.com/article/support-enforced-disappearances-meet-1787094255</id>
            <summary type="text">எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி இந்த அழைப்பு விடுத்தார்.</p><p>

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.</p><p>
</p><p></p><h2>சர்வதேச நீதி</h2><p>மேலும் தெரிவித்த அவர், “இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது
உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது என தெரியாத நிலையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
</p><p>
எமது உறவுகளை தேடிய போராட்டத்தில் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகள் ஐநா வரை எமது நீதிக்கான போராட்டத்தை இடைவிடாது தொடர்ந்து
கொண்டிருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4586ffa-4c74-4f6a-9942-b7b9ea5b7ebf/26-6a84e7446d344.webp' /></p><p>

தமிழ் மக்கள் மீதான கொடூர இன அழிப்பு இடம்பெற்ற பின் எமக்கான நீதியை இலங்கை
அரசிடம் பல தடவைகள் எழுத்து மூலமாக கோரினோம் பதில் கிடைக்கவில்லை.
</p><p>
12 மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்தோம் எந்தப் பயனும் இல்லாத நிலையில் இலங்கை
நீதித்துறை என்பது கொலைகாரர்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற
உண்மையை உணர்ந்தோம்.</p><p>
</p><p></p><h2>சர்வதேச மாநாடு</h2><p>அதன் காரணமாக எமது உறவுகளைத் தேடிய போராட்டம் சர்வதேசத்தை நோக்கியதாக
மாற்றப்பட்டு ஐ.நா 36 ஆவது கூட்டத் தடரில் இருந்து எமது உண்மைக்கும்
நீதிக்குமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
இலங்கையில இடம் பெற்றது இனப்படுகொலை என்ற உண்மையை சர்வதேசத்தின் வாயிலாக மனித
உரிமைகளை மதிக்கின்ற நாடுகளூடாக எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பு.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cec79f6-d2f0-4895-9968-c000500a43cb/26-6a84e4f353abb.webp' /></p><p>எமது உறவுகளைத் தேடிய நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும்
முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் அன்று யாழ் தந்தை
செல்வா அரங்கில் வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
ஒன்றிணைந்து சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
</p><p>
ஆகவே எமது உறவுகளை தேடிய போராட்டத்தின் சர்வதேச மாநாட்டை சிறப்பாக
முன்னெடுப்பதற்கு சகல தரப்பினர்களிடமும் ஆதரவை எதிர்பார்ப்பதோடு உதவிகளையும்
எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T00:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-1-45-million-tourists-visit-sri-lanka-1787097635"></link>
            <id>https://ibctamil.com/article/over-1-45-million-tourists-visit-sri-lanka-1787097635</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் மொத்தம் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் மொத்தம் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதனடிப்படையில்,&nbsp; இக்காலப்பகுதியில் இந்தியா தொடர்ந்து முதன்மையான சுற்றுலா மூல நாடாகத் திகழ்ந்துள்ளது.</p><p> </p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>இந்தியாவிலிருந்து 25,355 இந்தியக் குடிமக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இது மொத்த வருகையில் சுமார் 22 வீதம் ஆகும்.</p><p>
இதற்கிடையில், அதே காலகட்டத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,738 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் பிரான்சிலிருந்து 8,106 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0ddd94-b59c-4c0f-a189-a765bbfb1656/26-6a84f2254b4c8.webp' /></p><p>

இந்தச் சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,456,725 ஆகும்.</p><p>
இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து 363,585 சுற்றுலாப் பயணிகளை வழங்கியுள்ளது.</p><p>அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியம் 143,139 வருகைகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமீரகத்தைக் குறிவைத்த ஈரானிய ஏவுகணைகள்...! ட்ரம்பின் திடீர் தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-holds-phone-talks-with-uae-president-1787083729"></link>
            <id>https://ibctamil.com/article/trump-holds-phone-talks-with-uae-president-1787083729</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>அண்மைக்கால மாற்றங்கள்&nbsp;</h2><p>மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360bf10c-1b12-4de9-998a-11be94d342ef/26-6a84bf86bb4e4.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T21:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதனின் மனையில் நுழையும் கிரகங்களின் தளபதி! புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mars-transit-in-gemini-on-sept-18-1787086411"></link>
            <id>https://ibctamil.com/article/mars-transit-in-gemini-on-sept-18-1787086411</id>
            <summary type="text">தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாய், செப்டம்பர் 18 ஆம் திகதி சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து புதனின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாய், செப்டம்பர் 18 ஆம் திகதி சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து புதனின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
</p><p>
45 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகப் பெயர்ச்சியின் தாக்கம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களை உருவாக்கும்.
</p><p>
புதனின் ராசிக்குள் தளபதியான செவ்வாய் நுழைவதால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சுப யோகங்களும், சிறப்பான முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும்.</p><p>அவை எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். </li><li>இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும்.</li><li> நீண்ட காலமாக புதிய வேலையை தொடங்க நினைத்திருந்தால் இக்காலம் ஏற்றதாக இருக்கும். </li><li>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</li><li>நீதிமன்ற வழக்குகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். </li><li>மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். </li><li>ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். </li><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.</li><li> தகவல் தொடர்பு திறன் மேம்படும்.</li><li> இதனால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.</li><li> இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li><li> அதோடு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.</li><li> வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</li><li> ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். </li><li>வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>இதன் மூலம் முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி</td><td><ol><li>கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.</li><li> இதனால் செப்டம்பரில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.</li><li> குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். </li><li>புதிய நட்புகள் கிடைக்கும். </li><li>இந்த நட்பால் நல்ல நன்மைகள் கிடைக்கும். </li><li>வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.</li><li>கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள்.</li><li> வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் செப்டம்பரில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>முக்கியமாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-18T20:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை...! ட்ரம்பின் திடீர் பின்னடைவு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-iran-says-trump-1787077841"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-iran-says-trump-1787077841</id>
            <summary type="text">
ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையுடன் (IRGC) பின்னணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நேற்றுத் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு மாறாக இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசோடு எந்தவிதப் பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடலோ நடைபெறவில்லை.</p><p></p><h2>ஈரானியத் துறைமுகங்கள்&nbsp;</h2><p>

எதிர்காலத்திலும் திட்டமிடப்படவில்லை அத்தோடு ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது.</p><p>

ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுச் சீராக இயங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a558bde7-10e4-485f-8d90-b349360ffdc8/26-6a84ae0882f05.webp' /></p><p> 

அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துக் கடலடி வெடிமருந்துகளும் அகற்றப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, அமெரிக்காவுடன் எந்தவிதப் பின்னணிப் பேச்சுவார்த்தையிலும் தங்கள் அமைப்பு ஈடுபடவில்லை என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையும் (IRGC) மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-fires-two-missiles-toward-uae-1787073295"></link>
            <id>https://ibctamil.com/article/iran-fires-two-missiles-toward-uae-1787073295</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக அமீரகப் பகுதியில் ஏவுகணை அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்தநிலையில், தற்போது இத்தாக்குதல் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>தீவிரக் கண்காணிப்பு</h2><p>இதனடிப்படையில் முதல் ஏவுகணை, நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்கு வெளியே போய் விழுந்துள்ளது.
</p><p>
இரண்டாவது ஏவுகணை, அமீரகத்தின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்குள்ளேயே வந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32cbafe6-3e64-4915-a711-fb543cd4a922/26-6a84a2e4cb83c.webp' /></p><p>

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் நோக்கம் கொண்ட எதுவாக இருந்தாலும் அதை உறுதியோடு எதிர்கொள்ளவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் கையாளவும் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரக் கண்காணிப்புடனும் முழுத் தயார்நிலையுடனும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. </p><p>

இதன் மூலம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பது உறுதி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-national-found-dead-in-matara-temple-1787068863"></link>
            <id>https://ibctamil.com/article/uk-national-found-dead-in-matara-temple-1787068863</id>
            <summary type="text">தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்தநிலையில் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>தலைக்கவசம்&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b769404-3403-4375-8162-33408f51d34e/26-6a849c2218b82.webp' /></p><p>இது குறித்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
சடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999a6bac-1be9-4dce-b412-e9152a1b00cb/26-6a849c22be79c.webp' /></p><p>வாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு அவர் விகாரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:10:52+00:00</updated>
        </entry>
    </feed>
