<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-26T07:21:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையும் நீதியும் கோரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க போராட்டம்! விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-relatives-association-protest-1787727705"></link>
            <id>https://ibctamil.com/article/missing-relatives-association-protest-1787727705</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித்துள்ளார்.</p><p> அவர் இன்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக
சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை
செல்வாநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய
ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p></p><h2>யுத்தம் முடிந்து 17 வருடங்கள்&nbsp;</h2><p>
</p><p>அவர்களால் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் நிறுவனங்களுக்கும் கலந்து
கொள்வதற்கான அழைப்பும் ஆதரவுகோரியும் ஊடக சந்திப்பு ஒன்று நடாத்தப்
பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f487113-c7d9-4d11-ba19-de0029964d2c/26-6a8e90233e920.webp' /></p><p> வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக
போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்.
</p><p>யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான
இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். </p><p>அதேபோல்
பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.</p><p>
பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக
பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு
வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்க விருக்கிறார்கள்.
அந்த போராட்டத்தில் அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T07:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் மர்மம் - உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-body-found-in-jaffna-beach-1787726214"></link>
            <id>https://ibctamil.com/article/death-body-found-in-jaffna-beach-1787726214</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
</p><p>
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாளம் காணப்படவில்லை</h2><p>
</p><p>அதன்பின்னர் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee5dc71-dd90-4f3c-8fce-772501bffad9/26-6a8e8b3727ada.webp' /></p><p>சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
</p><p>
குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிவாரணம் வழங்குவது நீதிக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை அல்ல! ஆளுநர் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-to-end-the-fight-for-justice-1787726320"></link>
            <id>https://ibctamil.com/article/action-to-end-the-fight-for-justice-1787726320</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நிவாரணம் வழங்குவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்கள்</h2><p> </p><p>இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee99cdb-b131-43cf-b8c2-aa48a56868b3/26-6a8e8aee12adc.webp' /></p><p>பல ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை முழுமையாக உணர்வதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன் வெளிப்பாடாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கக்கூடிய நிலையில், உண்மையைத் தேடும் விசாரணைகளுடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>உண்மை, நீதி, நிவாரணம், கண்ணியம் மற்றும் மீள்நிகழாமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்விடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T06:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொடூரம்: கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067"></link>
            <id>https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067</id>
            <summary type="text">கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம்&amp;nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>இந்த சம்பவம்&nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.</p><p></p><h2>கணவர் கைது</h2><p>
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a64116-e201-46bb-a64e-399fffc72e93/26-6a8e87f5d3285.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய 15 வயதான இந்திய இளம் சதுரங்க வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020</id>
            <summary type="text">ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
2,288 தரவரிசை புள்ளிகளைக்கொண்ட இந்திய வீரர் வந்தன், 2,823 புள்ளிகளுடன் போட்டியில் பங்கேற்ற கார்ல்சனை இரண்டாவது சுற்றில் இவ்வாறு தோற்கடித்தார்.</p><p>

26ஆவது நகர்வு வரை ஆட்டம் சமநிலையில் இருந்த நிலையில், கார்ல்சன் செய்த முக்கிய தவறை பயன்படுத்திக் கொண்ட வந்தன், தனது சாதகமான நிலையை வெற்றியாக மாற்றினார்.</p><p></p><h2>சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம்</h2><p>
</p><p>
இந்த வெற்றி குறித்து வந்தன் தெரிவிக்கும்போது, கார்ல்சனுக்கு எதிராக விளையாடுகையில் தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வழக்கமான அணுகுமுறையுடன் நிதானமாக விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c618468-af11-4420-9c69-0bd7a8ae0feb/26-6a8e852a153b2.webp' /></p><p>
</p><p>
வந்தனின் பெற்றோருக்குக்கூட அவர் கார்ல்சனுடன் விளையாடியது முதலில் தெரியவில்லை. போட்டி குறித்து குடும்பத்தினர் கேட்டபோதுதான் அவர் கார்ல்சனை தோற்கடித்த செய்தியை அறிந்துள்ளனர்.</p><p>

போட்டியில் வந்தன் மொத்தம் 3 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த நிலையில், நான்காவது சுற்றுக்குப் பின்னர் சோர்வாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
தற்போது தனது முக்கிய இலக்கு சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தை பெறுவதே என வந்தன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> எனினும், எதிர்காலத்தில் சதுரங்கத்தை முழுநேரத் தொழிலாகத் தொடர்வாரா என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
</p><p>
குறிப்பாக, கார்ல்சனின் 2,823 தரவரிசை புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2,288 தரவரிசை புள்ளிகளை கொண்டிருந்த 15 வயது வீரரின் இந்த வெற்றி, அவரது இளம் சதுரங்க வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை கைவிடத் தயார்! விளக்கம் வழங்கிய ஆளும் தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilanthi-kottahachchi-ready-to-resign-1787722943"></link>
            <id>https://ibctamil.com/article/nilanthi-kottahachchi-ready-to-resign-1787722943</id>
            <summary type="text">தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மக்களின் பிரச்சினைகள்</h2><p>
</p><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd5988c-235e-4eb4-9cef-ba62e57be772/26-6a8e7fb098501.webp' /></p><p>“ 2029ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை இலக்காகக் கொண்டு செயற்படும் சிலர் உள்ளனர். அவ்வாறானவர்கள் மிகவும் சிரமப்பட்டு மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் இயக்கங்களை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.</p><p>தற்போதைய ஜனாதிபதி கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கிராமத்திற்கு வந்தவர் அல்ல. தம்புத்தேகம ரம்பண்டாவின் மகனாக, மண்ணில் காலூன்றி, மண்ணின் வாசனையை அறிந்த தலைவராக அவர் இருக்கின்றார்.</p><p>நாங்கள் மீண்டும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து மண்ணுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எப்போதும் மக்களோடு, மண்ணோடுதான் இருக்கிறோம். </p><p>எனவே, 2029ஆம் ஆண்டை கனவு காண்பவர்களிடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், மிகவும் திட்டமிட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து இந்தப் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T05:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் பெற்றோல் மற்றும் எரிவாயு - அமைச்சர் வெளியிட்ட ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-offers-4-blocks-in-mannar-basin-for-oil-and-gas-1787720329"></link>
            <id>https://ibctamil.com/article/sl-offers-4-blocks-in-mannar-basin-for-oil-and-gas-1787720329</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>அதற்காக&nbsp;இலங்கை தனது வடமேற்கு மன்னார் படுகையில் உள்ள நான்கு கடலோரத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்வதற்காக வழங்கியுள்ளது.</p><p>இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fa031f-1d6d-4a64-905d-c02dc9de29a8/26-6a8e79983364e.webp' /></p><p>அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும்.

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது.</p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பிரச்சினைக்கு தீர்வாக அமையும்&nbsp;</h2><p>

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>
மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5377b83c-10c1-423b-9334-70279b464b16/26-6a8e7998df8c7.webp' /></p><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

&nbsp;&nbsp;</p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271</id>
            <summary type="text">இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.</p><p>கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில்&nbsp;முதலில் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 503 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.</p><p>இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.</p><p></p><h2>சொனால் தினுஷ சதம்</h2><p> </p><p>இதையடுத்து நேற்றும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d6fed3-c6a5-4b24-8eee-1380bf207f29/26-6a8e7cbe5a4c9.webp' /></p><p>இந்நிலையில், இந்தியாவுக்கு&nbsp;எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் வீரர் சொனால் தினுஷ சதம் விளாசியுள்ளார்.</p><p> 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இவ்வாறு தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்களாக அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.</p><p>கடந்த 15ம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் இருந்து அழுகி வீங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-found-dead-under-suspicious-in-hotel-1787713440"></link>
            <id>https://ibctamil.com/article/man-found-dead-under-suspicious-in-hotel-1787713440</id>
            <summary type="text">விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.</p><p></p><h2>அதிக துர்நாற்றம் வீசியது&nbsp;</h2><p>
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192dd370-a142-4e0b-ac09-51fc0edf76d9/26-6a8e6197524af.webp' /></p><p>இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
</p><p>
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-illicit-liquor-in-kiribathgoda-1787716702"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-illicit-liquor-in-kiribathgoda-1787716702</id>
            <summary type="text">கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Cent...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Central Anti-Corruption Unit) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>காவல்துறையினருக்கு நேற்று (25.08.2026) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத மது</h2><p>
</p><p>காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கிரிபத்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78d8c182-b55b-4258-8d70-befca8bf8871/26-6a8e70a76c5dc.webp' /></p><p>காவல்துறை விசாரணையின்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவராவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சம்பவம் தொடர்பாகக் கிரிபத்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். போதனாவிற்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-transporting-medicines-met-accident-1787713147"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-transporting-medicines-met-accident-1787713147</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து நேற்று அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் பழுதடைந்த நிலையில் பாதையை விட்டு விலகி&nbsp;விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>இதையடுத்து&nbsp; வாகனத்தில் இருந்த மருந்துகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மற்றுமொரு வாகனத்தில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac04def3-6a1b-47fe-95a0-f121d227c740/26-6a8e567dd2b7c.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த இரு வைத்தியசாலை ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்</p><p>அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:19:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி - சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-year-old-girl-killed-in-road-accident-1787712418"></link>
            <id>https://ibctamil.com/article/7-year-old-girl-killed-in-road-accident-1787712418</id>
            <summary type="text">அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமியாவார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>வீதி ஒன்றில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41ae466-e83b-4888-83fa-50c454b7b6c1/26-6a8e53a95e58b.webp' /></p><p>32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் அடம்பன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T03:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-surpass-1-5-mn-in-2026-1787710231"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-surpass-1-5-mn-in-2026-1787710231</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அதற்கமைய 2026 ஆம் ஆண்டில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae0a9f6-8792-4a39-a3cc-b9cd44c69115/26-6a8e4c1c7fc7b.webp' /></p><p>2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் ஆகஸ்ட் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,498,749 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. </p><p>இக்காலப்பகுதியில் பதிவான மொத்த வருகையில் இவர்கள் சுமார் 24% பங்கைக் கொண்டுள்ளனர்.</p><p></p><p> </p><h2>முதன்மைச் சந்தை</h2><p>

16,688 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சீனா 10,294 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0afad0-9fa9-4d03-a804-3666c73e60d3/26-6a8e4c1bc5cf8.webp' /></p><p>

ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 23 வரையான காலப்பகுதியில் 374,820 வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முழு ஆண்டுக்கான முதன்மைச் சந்தையாகவும் இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. </p><p>

அதே காலப்பகுதியில், 147,089 வருகைகளுடன் பிரித்தானியா அடுத்த இடத்திலும், 98,801 சுற்றுலாப் பயணிகளுடன் சீனா அடுத்த இடத்திலும் உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T02:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிறைச்சாலைக்கு சென்ற நீதி அமைச்சர் - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-minister-visits-jaffna-prison-1787708505"></link>
            <id>https://ibctamil.com/article/justice-minister-visits-jaffna-prison-1787708505</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம்
சிறைச்சாலையின் செயற்பாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம்
சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள
விஜயமொன்றை மேற்கொண்டார்.
</p><p>
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில்
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட
அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் காவல்துறை அதிகாரிகள்,
துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு
ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.
</p><p>
அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்</h2><p>

தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள
நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார்.&nbsp;இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a51c9d3-072f-43ef-a1c6-9a7bb51f7bb3/26-6a8e4696ec2d8.webp' /></p><p>இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>
அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத்
தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப்
பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T01:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 mm இலும் கூடிய பலத்த மழை! இன்றைய வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/moderate-to-heavy-rain-exceeding-75-mm-1787707046"></link>
            <id>https://ibctamil.com/article/moderate-to-heavy-rain-exceeding-75-mm-1787707046</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>அனுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>இதன்படி, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba8c5f9-a388-489b-8f07-e299a3e8e850/26-6a8e4149b5d5e.webp' /></p><p>

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T01:28:53+00:00</updated>
        </entry>
    </feed>
