<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T09:23:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-criminals-arrested-in-dubai-1787467574"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-criminals-arrested-in-dubai-1787467574</id>
            <summary type="text">டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>அதன்படி, குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
 

இந்தநிலையில், பஸ் லலித் என்பவரை நாளை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட காவல்துறை குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>டுபாய் பாதுகாப்புப் படை</h2><p>

 

டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d94109-d2c2-45e1-a096-ce430a974f5d/26-6a8aac813efa5.webp' /></p><p>

 

அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

</p><p>இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்ற குற்றவாளி நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.</p><p></p><h2>காவல்துறை மா அதிபரின் மேற்பார்வை</h2><p>

 

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு ​சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/623a390c-7ad6-448f-abc4-f3ecb487045b/26-6a8aac8064636.webp' /></p><p>
 

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.</p><p>
</p><p>
 

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர்.</p><p>இதேவேளை ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல கொலைகளைச் செய்தமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்வின்றி தொடரும் நிலமிழந்த பலாலி மக்களின் கோரிக்கை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-people-s-protest-1787472994"></link>
            <id>https://ibctamil.com/article/palali-people-s-protest-1787472994</id>
            <summary type="text">பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று
10ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று
10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அனுர அரசே, மக்களின் இயல்பு
வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக்
கையளி”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “இராணுவப் பிடியிலிருந்து எங்கள்
காணிகளை விடுவி” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.</p><p>

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில்
வெளியிட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை
அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பலாலி
செபஸ்ரியார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து,
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்தி வரை சென்று,
பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய
போராட்டக்காரர்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு
கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4426c4bc-d1c0-4a4a-a96a-19af0d900332/26-6a8aaf1a8e6d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், காணி விடுவிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை
உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், ஜனநாயகக் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட
ஐந்து பேருக்கு எதிராக&nbsp; காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் காவல்துறை வாக்குமூலமும்
பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தமது பூர்வீக நிலங்களை மீட்டு, இயல்பு வாழ்க்கையை மீளப்
பெற்றுக்கொள்ளும் வரையில் தமது போராட்டம் தொடரும் என பலாலி நிலமிழந்த மக்கள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T08:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் : அரசின் முயற்சியை வரவேற்கும் ஐ.நா சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-expatriates-in-india-to-return-to-sl-1787464520"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-expatriates-in-india-to-return-to-sl-1787464520</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் நாட்டிற்கு திரும்புவதை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு குடியுரிமை நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் நாட்டிற்கு திரும்புவதை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு குடியுரிமை நடைமுறைகளை தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.</p><p>

1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்தனர்.
</p><p>
இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.</p><p></p><h2>முறையான கடவுச்சீட்டு</h2><p>இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4917c7b9-590c-49ee-b7fe-be700f7c9c24/26-6a8a93fbbe46b.webp' /></p><p>
இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், ஏதிலிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (x) பதிவில் "பல ஆண்டுகால இடம்பெயர்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான திரும்புதலை நோக்கிய ஒரு முக்கிய படியாக, இலங்கை அகதிகளின் தன்னார்வ திரும்புதலுக்கான நடைமுறைகள் குறித்த அமைச்சரவையின் முடிவை நான் வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I welcome the Cabinet&#39;s decision on procedures for the voluntary return of Sri Lankan refugees—a key step towards a safe &amp; dignified return after years of displacement: <a href="https://t.co/zRd8n1l3WN">https://t.co/zRd8n1l3WN</a><br><br>Through UNHCR, <a href="https://x.com/UNSriLanka?ref_src=twsrc%5Etfw">@UNSriLanka</a> stands ready to continue facilitate return &amp; resettlement. <a href="https://t.co/q5VqbqPlos">pic.twitter.com/q5VqbqPlos</a></p>&mdash; Marc-André Franche (@MAFrancheUN) <a href="https://x.com/MAFrancheUN/status/2090806679403143220?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T07:55:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்! மோடியின் திட்டங்களுடன் வருகிறார் முக்கிய இராஜதந்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-first-major-defence-pact-with-sri-lanka-1787469783"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-first-major-defence-pact-with-sri-lanka-1787469783</id>
            <summary type="text">அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) நடைமுறைப்படுத்த வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது முதல் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகோந்த ஆகியோருடன் கலந்துரையாடுவார் என கூறப்படுகிறது.</p><p> மேலும், தனது இரண்டு நாள் பயணத்தின் போது முப்படைகளின் தளபதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><h2>எட்டப்பட்ட ஒப்பந்தங்கள்</h2><p>

இந்த மாதத் தொடக்கத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங்கின் பயணம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224f60d4-1794-48a2-989c-ac659308e9ad/26-6a8aa708820cd.webp' /></p><p> </p><p>இரு நாட்டுத் தலைவர்களின் முந்தைய உயர்மட்டப் பயணங்களின்போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக சஇவரது&nbsp; பயணம் அமைந்துள்ளது.
</p><p>
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில், ஏனையவற்றுடன், மின்சாரக் கட்டமைப்பு இணைப்புத் திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டம் மற்றும் திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட எரிசக்தித் திட்டங்களை "செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள்" குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாளத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர இந்திய தரப்புகள் ஒப்புக்கொண்டனர். </p><p>மேலும், 61.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பேச்சுவார்த்தைகளை முடிந்தவரை விரைவில் தொடங்குமாறும் அவர்கள் உத்தரவிட்டனர்.</p><p></p><h2>இருதரப்பு ஆவணங்கள்</h2><p>
</p><p>
பொதுவான தகவல்களின்படி, இந்த பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது, தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை மேலும் கட்டமைக்கும் ஒரு முதன்மை ஆவணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cb129b-19f8-4a28-bdad-40a650c9b3e2/26-6a8aa70953fb4.webp' /></p><p> இது, அதிகமான கூட்டுப் பயிற்சிகள், பல்வேறு துறைகளில் திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் (HADR) பரிமாற்றங்கள், இரு நாடுகளின் கடற்படைப் பிரிவுகளின் துறைமுக வருகைகளை அதிகரித்தல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையே பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை ஆராய்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.</p><p> இது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், மூன்று மாத முன்னறிவிப்புடன் இதை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடரவோ தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p> எனினும் இந்தியாவினாலோ அல்லது இலங்கையினாலோ முழுமையான புரிந்துணர்வு ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. </p><p>இந்திய அரசாங்கம் இந்த ஆவணத்தை அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டிருந்தாலும், அதன் பொது இருதரப்பு ஆவணங்கள் பக்கத்தில் உண்மையான ஒப்பந்த உரைக்கு பதிலாக தலைப்பு முடிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தபோது பரிமாறிக்கொள்ளப்பட்ட ஏழு இருதரப்பு ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.
</p><p>
இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் பட்டியல், அதனை பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற தலைப்பின் கீழ் அடையாளம் கண்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகோந்தா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td> செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T07:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கி பலியான எட்டு வயது சிறுமி: தாய் - சகோதரர் வைத்தியசாலையில் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-two-injured-in-ragama-lorry-crash-1787469395"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-two-injured-in-ragama-lorry-crash-1787469395</id>
            <summary type="text">ராகம - வல்பொல வீதியில் வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த லொரி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தில் எட்டு வயதுச் சிறுமி உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம - வல்பொல வீதியில் வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த லொரி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>விபத்தில் எட்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயாரும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராகமவில் இருந்து வல்பொல திசையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று, சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் எதிரே வந்த கார் மற்றும் பிறிதொரு லொரியின் மீது மோதியுள்ளது.</p><p>அத்துடன் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் மீதும் குறித்த லொரி மோதி நின்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645555ea-7687-407e-a435-00ee03dca111/26-6a8aa0f30ff1c.webp' /></p><p>விபத்தில் படுகாயமடைந்த இரு பிள்ளைகளும் தாயாரும் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி எட்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> சம்பவம் குறித்து ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T07:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் தியானத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் IGP! வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1787464711"></link>
            <id>https://ibctamil.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1787464711</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குறித்த விடயத்தை வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு</h2><p>
இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bd64c53-b158-4559-88ed-ce8a191fe583/26-6a8a978bd69bb.webp' /></p><p>காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;எனினும் இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T07:28:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய திரைப்படப் பிரச்சார நிகழ்வொன்றில் பார்வையாளர்கள் மீது சரிந்து விழுந்த கம்பம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-injured-at-yash-s-toxic-event-1787466143"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-injured-at-yash-s-toxic-event-1787466143</id>
            <summary type="text">நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த நிகழ்ச்சியில் ஒலிபெருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி மேடை கம்பம் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>விபத்தில் சிக்கி இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>தனியார் கல்லூரி&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் குறித்த&nbsp;திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மேடையில் நடிகர் யாஷ் பேசிக்கொண்டிருந்த போது, அவரைக் காண்பதற்காகச் சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கும் கம்பத்தில் ஏறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5ba0be-f8be-4304-8371-8e93935c5e8f/26-6a8a97de984ef.webp' /></p><p>இதையடுத்து, அதிக பாரம் தாங்காமல் அந்த இரும்புக் கம்பம் திடீரெனச் சரிந்து விழுந்து விபத்து சம்பவித்துள்ளது.</p><p>இந்த விபத்தில் இரு மாணவர்களுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்துக்கு முன்னரே இலங்கையில் தீவிரமடையும் வறட்சி நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drought-in-sri-lanka-to-intensify-ahead-of-el-nino-1787467301"></link>
            <id>https://ibctamil.com/article/drought-in-sri-lanka-to-intensify-ahead-of-el-nino-1787467301</id>
            <summary type="text">எல் நினோ குறித்த எச்சரிக்கை இலங்கையில் தீவிரமடைவதற்கு முன்பே பல கிராமங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மாத்தளை மாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ குறித்த எச்சரிக்கை இலங்கையில் தீவிரமடைவதற்கு முன்பே பல கிராமங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p> 
மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ லடியங்கல பிரதேச மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
குறித்த பிரதேசத்தில் கிணறுகளிலும் ஏரிகளிலும் சிறிதளவும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்னீர் மீன்பிடித்தல் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த மக்களே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>நெடுந்தீவு கடற்படை</h2><p>
</p><p>
இந்நிலையில் அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக சிறிதளவு தண்ணீரைக் கண்டறிய ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து செல்லும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0382b5d-c0b4-45be-bcff-184b3b73d769/26-6a8a986753154.webp' /></p><p>

மேலும் யாழ். நெடுந்தீவு பகுதியிலும் வறட்சி நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கடும் வெப்ப தாகத்தால் வாடும் காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக, நெடுந்தீவு&nbsp; கடற்படை வீரர்கள் ஒரு தொட்டியில் தண்ணீரை இறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>இலங்கை சந்திக்கவுள்ள&nbsp;எல் நினோ</h2><p>சுமார் 75 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் கடுமையான எல் நினோ நிகழ்வை இலங்கை சந்தித்து வருவதாகவும், இது உடனடி தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீடித்த வறண்ட நிலைமைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49dfc412-19bd-4c4e-9fac-9366e719b054/26-6a8a9868100b9.webp' /></p><p>இந்த விடயம் எல் நினோவின் தாக்கங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>பல மாவட்டங்கள் ஏற்கனவே குடிநீர் மற்றும் நீர்பாசன விநியோகத்தில் சிரமங்களைச் சந்தித்து வருகிவதாகவும் இருப்பினும் இதன் பாதிப்புகள் முழு மாவட்டங்களையும் பாதிக்காமல், குறிப்பிட்ட பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>இதில் தற்போது அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் மாத்தளை ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T06:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தில் வீழ்ச்சி..! மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourism-revenue-in-first-seven-months-drops-1787452616"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourism-revenue-in-first-seven-months-drops-1787452616</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

 

இந்த ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p>
 

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான கடந்த 7 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p>இந்த விடயம் மத்திய வங்கி வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா வருமானம்</h2><p>கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானமாக 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c4ca8dd-5375-4a75-ada3-1adedb287ea6/26-6a8a939e27e8c.webp' /></p><p>அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மேலும், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஈட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த 7 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d7f25b4-afb0-4f9f-84c9-32deb0e54fa8/26-6a8a939d51b1f.webp' /></p><p>

 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியைக் காட்டுகிறது. </p><p>கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தது.
</p><p>
 

அத்துடன், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T06:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு கனடாவின் பதிலடி....! வரி விதிப்பை தற்காலிமாக ஒத்திவைத்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-imposes-50-tariffs-after-canada-talks-fail-1787460134"></link>
            <id>https://ibctamil.com/article/trump-imposes-50-tariffs-after-canada-talks-fail-1787460134</id>
            <summary type="text">கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
</p><p>
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உடனான தொலைபேசிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதனடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


</p><h2>
ஏற்றுமதிப் பொருட்கள் </h2><p>
அமெரிக்கா மீது பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிக்க உதவும் 1930 ஆம் ஆண்டின் அரிதான வரிச் சட்டத்தின் பிரிவு 338 ஐப் (Section 338 of Tariff Act of 1930) பயன்படுத்தி இந்த 50 வீதம் வரியை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.
</p><p>
இந்தநிலையில் அமெரிக்காவின் தொடர்ச்சியான வரிக் கொள்கைகளுக்குப் பதிலடியாக கனடாவின் பெரும்பாலான மாகாண அரசுகள் அமெரிக்க மதுபானங்கள் மற்றும் திராட்சை ரசங்களை விற்பனை செய்யத் தடை விதித்தன.
</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdaa229e-8789-4c05-8e84-16a607d4ea9e/26-6a8a8abaef9c0.webp' /></p><p>

இதனால் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஏற்றுமதியாகும் மதுபானங்களின் அளவு 81வீதம் வரை சரிந்தது.
</p><p>
இந்த 50 வீதம் வரி அச்சுறுத்தலானது பால் பொருட்கள் (Dairy), வாகனங்கள் மற்றும் மதுபானங்கள் மட்டுமின்றி ஹாக்கி உபகரணங்கள், மரச்சாமான்கள் போன்ற சுமார் ஐந்து வீத கனடிய ஏற்றுமதிப் பொருட்களை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.</p><p>


</p><h2>
தீவிர பேச்சுவார்த்தை
</h2><p>இந்தநிலையில் மார்க் கார்னி அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களின் நலனைப் பாதுகாப்பதே தங்களது முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

பேச்சுவார்த்தையின் போது கைவிடப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் குழாய் திட்டத்தை (Keystone XL Oil Pipeline) மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்து ட்ரம்ப் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2102355f-187f-4481-b3f7-6c6314452f9b/26-6a8a8abba7136.webp' /></p><p>

அத்தோடு கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது கனடாவிற்குச் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவுடனான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும் ஒருவேளை அமெரிக்கா 50 வீத வரியைச் செயல்படுத்தினால், செப்டம்பர் எட்டாம் திகதி முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு நிகரான டொலருக்கு டொலர் (Dollar for Dollar) பதிலடி வரிகளை விதிக்க கனடா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22-year-old-youth-has-died-after-drowning-in-river-1787464532"></link>
            <id>https://ibctamil.com/article/22-year-old-youth-has-died-after-drowning-in-river-1787464532</id>
            <summary type="text">கல் பொத்தஹேன குளத்தில்&amp;nbsp;குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

குறித்த சம்பவம் இரத்தினபுரி - எஹலியகொட பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல் பொத்தஹேன குளத்தில்&nbsp;குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>
 

குறித்த சம்பவம் இரத்தினபுரி - எஹலியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
 

உயிரிழந்தவர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de179f35-10b5-4bd4-b3ef-369a55b9fbaa/26-6a8a8dab0bf1b.webp' /></p><p>சம்பவம் தொடர்பாக எஹலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T06:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச் செயல் - வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bride-steps-in-as-a-doctor-on-her-wedding-day-1787459710"></link>
            <id>https://ibctamil.com/article/bride-steps-in-as-a-doctor-on-her-wedding-day-1787459710</id>
            <summary type="text">தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
</p><p>
கேரள மாநில திருமண மண்டபத்தில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண் ஊழியர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. </p><p>அதில் ஒருவருக்கு மூக்கில் இரத்தக்கசிவும், மற்றொருவருக்கு மயக்கமும் ஏற்பட்டது.

மணமகள் ஒரு மருத்துவர் என்பதை அறிந்த உறவினர்கள் அவரை உதவிக்கு அழைத்தனர்.</p><p></p><h2>காணொளி&nbsp;</h2><p> </p><p>மணக்கோலத்தில் இருந்தபோதிலும், சடங்குகளைச் சற்று நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட இருவருக்கும் அவர் உடனடியாக முறையான முதலுதவி சிகிச்சையளித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kzXzOoL65Fc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மருத்துவப் பராமரிப்பைத் தொடர்ந்து இரு ஊழியர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், "ஒரு மருத்துவராக என் கடமையை மட்டுமே செய்தேன்.</p><p> அனைவரும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம்" என குறித்த மருத்துவர் எளிமையுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : 17 வயது சிறுவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/17-year-old-boy-dies-in-motorcycle-accident-1787460502"></link>
            <id>https://ibctamil.com/article/17-year-old-boy-dies-in-motorcycle-accident-1787460502</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள்
மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 4 பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள்
மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>களுவாஞ்சிக்குடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன்
கோவிலுக்கு அருகாமையில்&nbsp;நேற்று (22) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக&nbsp;காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பிரயாணித்த மோட்டார்
சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடப்பதற்காக வீதியோரமாக நின்ற
சிறுவர்கள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர்
உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த விபத்தில் கோடைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் சிறுவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f36d52-2f66-42fd-af85-da25806ce034/26-6a8a89f7df702.webp' /></p><p>
</p><p>
குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்த போது வீதியால் வேகமாக வந்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p>மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே
உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3
சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் சிக்கல்: அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218"></link>
            <id>https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218</id>
            <summary type="text">கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&amp;nbsp;நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&nbsp;நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்தபோதே&nbsp;அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>மோசமான நிலையில்&nbsp;இயந்திரங்கள்</h2><p> தற்போது சேவையில் உள்ள பெரும்பாலான தொடருந்து இயந்திரங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32b9aac-0059-42c6-9d06-aa1d17c107a4/26-6a8a62b3518db.webp' /></p><p>மேலும், “இயந்திரங்கள் மற்றும் தொடருந்து பெட்டிகள் இரண்டையும் பழுதுபார்ப்பதே எமது நோக்கம்” எனவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்தில் முடிந்த விருந்து : கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-dies-after-being-attacked-by-a-neighbor-1787457643"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-dies-after-being-attacked-by-a-neighbor-1787457643</id>
            <summary type="text">அநுராதபுரம் - கெகிராவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இந்த தாக்குதல் இன்று (23) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கெகிராவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

இந்த தாக்குதல் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவத்தில் கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>

 

உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a261c675-5fb1-4ab3-a11e-3d31bd08205a/26-6a8a753021eff.webp' /></p><p>
</p><p>
 

இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787458613"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787458613</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுன ராசி</h2><p>இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.</p><p> வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b6bb647-efdc-4bc5-9736-3f5f1fe804b1/26-6a8a77320f58d.webp' /></p><p>தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். </p><p>கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சொல் வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். </p><p>பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள்.
</p><p>
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.</p><p> அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல்&nbsp;</p><p></p><h2>கடக ராசி</h2><p>இந்த வாரம் செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a71268-b451-439e-803b-f8543f78b19b/26-6a8a773156050.webp' /></p><p>காரிய தடைகள் நீங்கும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும்.</p><p> வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.</p><p>பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். </p><p>குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.</p><h2>கன்னி&nbsp;ராசி&nbsp;</h2><p>இந்த வாரம் பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூரியமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0d0add-f5d3-40ef-a812-e210e093887a/26-6a8a7732c01d3.webp' /></p><p>தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு சந்தை லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.
</p><p>
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு சாதூரியமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். </p><p>பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.</p><p> கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்...! வெளிப்படையான விசாரணை கோரும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-demands-probe-into-presidential-secretary-1787457513"></link>
            <id>https://ibctamil.com/article/namal-demands-probe-into-presidential-secretary-1787457513</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
</p><p>
குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முறையான விசாரணைகள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8b0862-7ae3-4a46-ad5e-78fac4979076/26-6a8a76a379950.webp' /></p><p>
விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் மோதல்களைத் தவிர்த்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thousands-of-professionals-leaving-sri-lanka-1787452773"></link>
            <id>https://ibctamil.com/article/thousands-of-professionals-leaving-sri-lanka-1787452773</id>
            <summary type="text">மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரிச்சுமை மற்றும் தொழில்சார் சிக்கல்கள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு 2000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>மருத்துவ அதிகாரிகள்</h2><p>அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487a4b5-74d5-422e-a49a-73ca75efa84a/26-6a8a6f584128c.webp' /></p><p>மேற்படி தரவுகளின் படி,&nbsp; 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 1489 நிபுணத்துவ மருத்துவர்கள் (Specialists) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்தமாக சுமார் 2,500 மருத்துவர்கள் அரசுச் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் இதனால் அரசுக்கு ரூபாய் 1200 கோடிக்கும் அதிகமான (12 பில்லியன் ரூபாய்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>அவசர சிகிச்சை</h2><p>குறிப்பாக மயக்கவியல், அவசர சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் இதய நோயியல் ஆகிய பிரிவுகளின் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற மற்றும் பிராந்திய அரசு மருத்துவமனைகளின் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91402c13-4cbf-4e06-aad1-8e3e0935d0aa/26-6a8a6f56df09d.webp' /></p><p>இதனுடன் உயர் கல்வி மற்றும் ஆய்வுக் விடுப்பு பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தப்படி மீண்டும் இலங்கை திரும்பாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளதாகப் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.</p><p>ஒப்பந்தத்தை மீறி வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்த பேராசிரியர்களிடமிருந்து அரசுக்கும் பல்கலைக்கழக அமைப்பிற்கும் சேர வேண்டிய தொகை ரூபாய் 340 கோடி (3.4 பில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>முக்கியக் காரணங்கள்</h2><p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மற்றும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 3,10,915 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff607ccf-9f11-44df-8a0a-4b951ef5f0fb/26-6a8a6f578f6c7.webp' /></p><p>இதில் 76 வீதத்திற்கும் அதிகமானோர் (2,36,900 க்கும் மேற்பட்டோர்) திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் (Skilled Professionals) என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உயர் வாழ்வாதாரச் செலவு, அதிக வருமான வரி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, பிள்ளைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை (PR) பெறுவது ஆகியவை இந்த மூளைச் சலவைக்கு (Brain Drain) முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_0SOSBmsNPY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temperatures-are-rising-in-sl-polonnaruwa-is-top-1787455480"></link>
            <id>https://ibctamil.com/article/temperatures-are-rising-in-sl-polonnaruwa-is-top-1787455480</id>
            <summary type="text">இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>குறைந்தபட்ச வெப்பநிலை</h2><p>
</p><p>
நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6a06a4-419f-49db-814e-0494d2844571/26-6a8a6f3327d5d.webp' /></p><p>அத்துடன் பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.</p><p>நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:54:38+00:00</updated>
        </entry>
    </feed>
