<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-10T12:25:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வழங்க்கப்படவுள்ள சிறப்பு உளநல பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-is-world-wrong-decition-prevention-day-1789041641"></link>
            <id>https://ibctamil.com/article/today-is-world-wrong-decition-prevention-day-1789041641</id>
            <summary type="text">தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் எனும் தொனிப்பொருளில் உளநல ஆற்றுதல் பயிற்சி யாழில் வழங்க்கப்படுகின்றது.</p><p>இதன்படி&nbsp;இதன் ஒரு பகுதியாக, நாளை பிற்பகல் 3 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் உளநல மருத்துவர்களால் சிவ சகோதரர்களுக்கு முதற்கட்ட உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.</p><p>இந்தப் பயிற்சியில் சிவ சகோதரர்களுடன் ஆர்வமுள்ள சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையரும் கலந்துகொள்ள முடியுமென ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
மேலதிக தகவல்களுக்கு நிர்வாக உத்தியோகத்தரை 077 694 3179 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி : பாயப்போகும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743"></link>
            <id>https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (10) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி, தான் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணான சாட்சியத்தை அளித்திருந்ததை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.</p><h2>சாட்சி மீது நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பொய்ச் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d6c431-a297-41bc-a4af-6fc7a27ecb78/26-6aa29eba4553e.webp' /></p><p>
</p><p>
பின்னர், அந்த சாட்சியைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:12:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி : ஆறு ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643</id>
            <summary type="text">அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அந்த ஆசிரியர்களை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச செயலகத்தின் பிரிவு பொறுப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.</p><p>






</p><h2>&nbsp;ஷமோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம்</h2><p>ஹட்டன் கோட்ட விசாரணைப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், இந்த நிதி மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர். </p><p>மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையது என்பதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355c0c12-dd85-4e6d-a875-8ddf59567d3a/26-6aa28c3063f66.webp' /></p><p>
</p><p>
நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகத்திற்குரிய இரண்டு அதிகாரிகளும் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் இந்த பணத்தை வரவு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;6 ஆசிரியர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p> சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு அறிக்கைகளையும் பரிசோதிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்ததையடுத்து, இந்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12298c1-0550-4830-a1c8-acbafd64582b/26-6aa28c3119bd8.webp' /></p><p>
</p><p>





இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் சகோதரரின் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் இருந்த அந்த சகோதரரின் சேவையையும் தற்காலிகமாக இடைநிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T12:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 ஆண்டுகளாக காணாமல் போன தனது மகனை தேடும் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-father-searching-for-his-son-for-eight-years-1789036575"></link>
            <id>https://ibctamil.com/article/a-father-searching-for-his-son-for-eight-years-1789036575</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற இவர், அதன் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அவர் காணாமற்போனமை தொடர்பாக 10.03.2018 அன்று பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>குடும்பத்தினர் கவலை</h2><p>

காணாமற்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரையில் அவரது கையடக்கத் தொலைபேசி இயங்கியதாகவும், அந்தக் காலப்பகுதியில் பலர் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0db1d163-fe2d-426d-a084-fbc67009dc80/26-6aa288214278f.webp' /></p><p> </p><p>எனினும், அந்த உரையாடல்களில் காணாமற்போன செல்வராசா அருந்தவச்செல்வன் நேரடியாகப் பேசியதாகத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், தனது கணவர் காணாமற்போனமை தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமது உறவினரின் நிலைமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவர் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் அல்லது அவரது இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு (<b>077 432 3487</b>) குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-cooperates-with-mahinda-and-namal-1789038301"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-cooperates-with-mahinda-and-namal-1789038301</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்திய அவர், இவ்வாறான வித்தியாசமான பதிவுகள் தொடர்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சஜித் அழைத்தால் நான் செல்வேன்</h2><p>நாங்கள் நிற்பது அரசியல் மேடை. சஜித் ஜனாதிபதியாக வந்து தன்னை வருமாறு அழைத்தால் நான் செல்வேன். இதுதான் அரசியல். இது ஒரு பொது எதிர்கட்சி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b67665be-bb9c-45a3-9ad0-dc0bba1bcc50/26-6aa293020d9be.webp' /></p><p>எந்த ஒரு எதிர்கட்சி உறுப்பினருக்கும் நான் ஒத்துழைப்பை வழங்குவேன். நாமலும் எனக்கு அவ்வாறேதான்.
</p><p>

அவர் திருடியிருப்பார் என்றால் அவற்றுக்கு நான் துனைபோக மாட்டேன்.

நான் மேடைகளுக்கு ஏறுவது என மக்கள் சார்பாக.
</p><p>
இனப்படுகொளையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக சிலர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

வடக்கில் தலைவன் இல்லாது இருக்கும் ஒரு சமூகத்திற்காக யாருடன் சென்று அரசியலை கதைக்கலாம்? இது ஒரு அரசியல் மேடை. இது போர் அல்ல.</p><p>
இந்த அரசியல் மேடையில் அநுர அரசாங்கம் வடக்கு மக்களுக்கு நன்மையை செய்யும் என நம்பிக்கை இல்லை.” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:57:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-imposed-for-selling-non-sls-cords-1789038457"></link>
            <id>https://ibctamil.com/article/fine-imposed-for-selling-non-sls-cords-1789038457</id>
            <summary type="text">லங்கை தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய SLS தரச்சான்று இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வயர்களை (Extension Cords) விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ்&amp;nbsp;வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கை தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய SLS தரச்சான்று இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வயர்களை (Extension Cords) விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ்&nbsp;வர்த்தக பண்டாரவளை பகுதியிலுள்ள நிறுவனமொன்றுக்கு ரூ. 400,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கட்டாய SLS தரச்சான்று தேவைப்படும் மின் நீட்டிப்பு வயர்கள் SLS இலச்சினை இன்றி 2,790 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.</p><p></p><h2>4 இலட்சம் ரூபாய் அபராதம்</h2><p>
</p><p>
மேலும், குறித்த பொருட்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காமை மற்றும் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட சட்டபூர்வ பற்றுச்சீட்டுகள் இன்றி பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe659a9c-82af-470d-a38b-d2d2d5c8af2a/26-6aa296075370f.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தில் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>கட்டாய SLS தரச்சான்று பெற வேண்டிய மின் உபகரணங்கள்
</h2><p>
2017 டிசம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்ட 2048/39 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 63ஆம் கட்டளையின் கீழ், 250 வோல்ட்டுக்கு மேற்படாத சில மின் உபகரணங்களுக்கு கட்டாய SLS தரச்சான்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc52ce82-408f-41c3-95e9-8dbf247fda65/26-6aa2960807826.webp' /></p><p>

அதன்படி, Plugs, Socket Outlets, Extension Cords, Adaptors, Fused Connection Units, Conversion Plugs மற்றும் Cable Reels ஆகியவற்றுக்கு SLS தரச்சான்று இருப்பது கட்டாயமாகும்.
</p><p>
மின் விபத்துகள் மற்றும் தீ விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், இவ்வாறான மின் உபகரணங்களை வாங்கும்போது அவற்றில் SLS தரச்சான்று இலச்சினை மற்றும் உத்தரவாதக் காலம் உள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும்போது சட்டபூர்வமான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த, மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/coal-losses-mahinda-and-maithri-tenure-414-crore-1789039139"></link>
            <id>https://ibctamil.com/article/coal-losses-mahinda-and-maithri-tenure-414-crore-1789039139</id>
            <summary type="text">2009 முதல் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் நொரோசொல லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக லங்கா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 முதல் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் நொரோசொல லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக லங்கா நிலக்கரி நிறுவனத்திற்கு ரூ. 414 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு சிறப்புத் தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

எரிசக்தி மீதான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் வேண்டுகோளின் பேரில், 2009 முதல் 2016 வரை லங்கா நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள் குறித்து இந்த சிறப்புத் தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><h2>வருவாய் இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல்&nbsp;</h2><p>ரூ. 414 கோடிக்கும் அதிகமான இழப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்புகள், மேலதிக செலவுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல் செயல்முறை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த சிறப்புத் தணிக்கை அறிக்கையில் தலைமைத் தணிக்கையாளர் முடிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920991ea-515b-4ca6-b2ee-f65be912c23e/26-6aa29436a8579.webp' /></p><p>
</p><p>
போதுமான நிலக்கரியைக் கொள்முதல் செய்ய இயலாமை மற்றும் மின் நிலையத்தைக் குறைக்கப்பட்ட திறனில் இயக்க வேண்டியதன் காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் குறித்து இந்தத் தணிக்கை அறிக்கை அதிக கவனம் செலுத்தியுள்ளது.</p><p></p><h2>கூடுதல் செலவுகள் ரூ. 1,25 கோடி</h2><p>
</p><p>
போதுமான நிலக்கரியைப் பெற இயலாததாலும், மின் உற்பத்தி நிலையத்தைக் குறைக்கப்பட்ட திறனில் இயக்க வேண்டியிருந்ததாலும் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் ரூ. 1,25 கோடி என அமைச்சகச் செயலாளர் கணக்கிட்டிருந்ததாகத் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecee217c-6dcc-41ba-837e-4bc623d1f7bc/26-6aa294375c13a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை : நீதிமன்றம் விதித்த அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-48-000-fine-imposed-on-curd-sellers-in-jaffna-1789037379"></link>
            <id>https://ibctamil.com/article/rs-48-000-fine-imposed-on-curd-sellers-in-jaffna-1789037379</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு&amp;nbsp;48,000 ரூபாய் அபராதம் விதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு&nbsp;48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒருவருக்கு தலா 24,000
ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சந்நிதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் உதயபாலா, சார்ல்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>மல்லாகம் நீதவான் நீதிமன்றம்</h2><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c241b799-8e8e-47a6-a89a-cbf3d4007d43/26-6aa291bd6010a.webp' /></p><p>இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கும் எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலனால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/820-kg-of-fish-caught-using-explosives-1789036390"></link>
            <id>https://ibctamil.com/article/820-kg-of-fish-caught-using-explosives-1789036390</id>
            <summary type="text">திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை&nbsp;இலங்கை கடற்படையினர் நேற்று (09.10.2026) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய பொடுவைக்கட்டு - செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மூதூர் கடற்றொழில் பரிசோதகர்</h2><p>
</p><p>
இலங்கை கடற்படையின் SLNS பராக்கிரம நிறுவனத்துக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், SLNS கோகண்ண நிறுவனத்துடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ae9c00-99b3-4f47-bb36-92d8e51bc24c/26-6aa28c7aca1bb.webp' /></p><p>
</p><p>
இதன்போது சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர், வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 820 கிலோகிராம் மீன்களுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><p>
சந்தேகநபர், லொறி மற்றும் மீன்தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மூதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் டொலர் மோசடிக்கு பின்னால் NPP அமைச்சர்கள் : சபையில் நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/are-ministers-behind-usd-2-5-mn-theft-asks-namal-1789034829"></link>
            <id>https://ibctamil.com/article/are-ministers-behind-usd-2-5-mn-theft-asks-namal-1789034829</id>
            <summary type="text">2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில மூத்த அமைச்சர்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமைச்சர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகையைத் தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>மறுக்கப்பட்ட&nbsp;அனுமதி</h2><p>நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியதுடன், அந்த விநியோகப் பணிகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக நிறைவு செய்யப்பட்டன என்றும் வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc43447-a22c-4a39-958f-b679769602f5/26-6aa287f77ca18.webp' /></p><p>
</p><p>இதேவேளை தங்களுடைய பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானத்தைப் பயன்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில் அடக்குமுறைகளால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/annual-grand-festival-the-vallipura-alwar-temple-1789035490"></link>
            <id>https://ibctamil.com/article/annual-grand-festival-the-vallipura-alwar-temple-1789035490</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இதனை முன்னிட்டு நாளை காலை 7.00 மணியளவில் விசேட யாக பூசைகள் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று, காலை 9.00 மணியளவில் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.
</p><p>
கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் விசேட பூசை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விழா நடவடிக்கைகள்</h2><p> </p><p>பெருந்திருவிழாவின் ஆரம்ப நாட்களில் சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறுவதுடன், ஏழாம் திருவிழாவிலிருந்து வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e7d0e6-7f55-4aa1-959e-e2f0504195b7/26-6aa284f2ae76b.webp' /></p><p>
</p><p>
இம்முறை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, 17.09.2026 அன்று எட்டாம் திருவிழாவில் குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 19.09.2026 அன்று ஒன்பதாம் திருவிழாவான வெண்ணைத் திருவிழாவும், 20.09.2026 அன்று பத்தாம் திருவிழாவான துகிலியுத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
</p><p>
அத்துடன், 21.09.2026 அன்று பதினொன்றாம் திருவிழாவான கம்சன் போர் திருவிழாவும், 23.09.2026 அன்று பதின்மூன்றாம் திருவிழாவான வேட்டைத் திருவிழாவும், 24.09.2026 அன்று பதினான்காம் திருவிழாவான சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
</p><p>
தொடர்ந்து, 25.09.2026 அன்று பதினைந்தாம் திருவிழாவான தேர்த்திருவிழாவும், 26.09.2026 அன்று பதினாறாம் திருவிழாவான சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், 27.09.2026 அன்று பதினேழாம் திருவிழாவான கேணி/பட்டுத் தீர்த்தத் திருவிழாவுடன் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>விசேட ஏற்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை, திருவிழாவுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.</p><p> பக்தர்களின் போக்குவரத்து தேவைகளை கருத்திற்கொண்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொள்ளவுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமதிக்காமல் உடன் வீட்டிற்குச் செல்லுங்கள் : அமெரிக்க இராணுவத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-us-military-1789034842"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-us-military-1789034842</id>
            <summary type="text">ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் கலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><p> அமெரிக்கப் படைகள் தாமதமாகும் முன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 'சம விகித பதிலடி' காலம் முடிந்துவிட்டதாகவும், விளையாட்டின் விதிகள் மாறிவிட்டதாகவும் வோஷிங்டன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><h2>கடுமையான பதிலடி கொடுக்கப்படும்</h2><p>உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையில் அதிகாரத்தை நிலைநிறுத்தும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாள் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43829fac-7011-468f-b285-b5f49889f39b/26-6aa2849769ad0.webp' /></p><p>&nbsp;









நாடாளுமன்றத்தில் உரையாற்றியும், ஒரு டெலிகிராம் செய்தியை வெளியிட்டும், ஈரானின் பாதுகாப்பிற்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கலிபாஃப் கூறினார்.</p><p></p><h2>போர்க்களத்தின் உண்மையான நிலை</h2><p> </p><p>போர்க்களத்தின் உண்மையான நிலையைத் திரிபுபடுத்த அமெரிக்கத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcece6b6-7251-476e-b42b-9c83f2643f4c/26-6aa284981be5a.webp' /></p><p> </p><p>மேலும், விதிக்கப்பட்ட தடைகளை எதிர்கொள்ள உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு மிகவும் கடுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய தரப்பின் தலைவராக செயல்படும் கலிபாஃப் வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parliament-to-debate-22nd-constitutional-amendment-1789032296"></link>
            <id>https://ibctamil.com/article/parliament-to-debate-22nd-constitutional-amendment-1789032296</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அன்றைய தினங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி</h2><p>இதேவேளை&nbsp;உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகக் கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5792fa2-3f35-4747-a873-c5e82f406bbc/26-6aa27f0c3fe44.webp' /></p><p>மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முக்கிய கடற்கரை நகரை கைப்பற்றிய ஹவுதிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789032834"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789032834</id>
            <summary type="text">செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஏமனின் முழு செங்கடல் கடற்கரைப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.</p><p></p><h2>சவூதி ஆதரவுப் படை</h2><p>இதன்மூலம், சவூதி ஆதரவுப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்து, யேமனின் நீண்டகாலப் போரில் ஒரு முக்கிய முனையை மீண்டும் திறக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180d5466-2e1f-47f0-9fd9-24f40988d16a/26-6aa27cc2459a5.webp' /></p><p>இந்நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அவர்கள் நெருங்கியுள்ளனர் என்று யேமன் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த முன்னேற்றம், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றின் மீது ஹவுதிகளுக்கு அதிக செல்வாக்கைக் கொடுக்கும். </p><p>ஏமனை ஜிபூட்டி மற்றும் எரிட்ரியாவிலிருந்து பிரிக்கும் பாப் அல்-மண்டேப், செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. </p><p>மேலும் இது, சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் செல்லும் எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற பொருட்களுக்கான ஒரு முக்கியப் பாதையாகவும் திகழ்கிறது.</p><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆறு மாத கால மோதல், மற்றொரு முக்கியமான எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சீர்குலைப்பதால், இந்த சண்டை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-of-water-from-iranamadu-livestock-drinking-1789028748"></link>
            <id>https://ibctamil.com/article/release-of-water-from-iranamadu-livestock-drinking-1789028748</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு&amp;nbsp;இரணைமடு குளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு&nbsp;இரணைமடு குளத்தின் வாய்க்கால்&nbsp;திறக்கப்பட்டுள்ளது.</p><p>மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வியாழக்கிழமை (10.09.2026) இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.</p><p>
முரசுமோட்டை பகுதியில் நிலவும் வறட்சியால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீர் திறக்கப்படாவிட்டால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து, புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினால் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கு அண்மையில் அவசரக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><h2>இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால்</h2><p>
</p><p>
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு கால்நடைகளின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் நோக்கில் இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1218b11e-6eac-4f04-9d8b-b8d3f3dd3ad6/26-6aa2755370a16.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த நீர் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

எனவே, விவசாயிகள் குறித்த நீரை வயல் நிலங்களுக்குப் பாய்ச்சுவதையோ அல்லது ஏனைய விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-tamil-research-conference-toronto-canada-1789025485"></link>
            <id>https://ibctamil.com/article/world-tamil-research-conference-toronto-canada-1789025485</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.</p><p>எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாடு, “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” (Classical Tamil and Tamils in the Age of Artificial Intelligence) என்ற நவீன கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், செம்மொழித் தமிழின் முக்கியத்துவம் மற்றும் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் மாநாட்டில் முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாநாட்டின் ஏற்பாட்டாளர்களான அனைத்துலகத் தமிழர் பேரவை (Federation of Global Tamils) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-hacked-to-death-in-jaffna-1789026348"></link>
            <id>https://ibctamil.com/article/youth-hacked-to-death-in-jaffna-1789026348</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.</p><p>பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று (09/09/2026) இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட நபர் கடையில் வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே நின்ற மோட்டார்
சைக்கிளில் ஏறி புறப்பட முற்பட்டுள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இதன்போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44d4f3-f2b0-4630-9d2e-68c9339999f7/26-6aa263883d9c4.webp' /></p><p>இந்த நிலையில் பருத்தித்துறை
நீதவான் இன்று (10) காலை 11:00 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன்&nbsp;தடய ஆய்வு காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறை&nbsp;பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-bandarawela-mayor-janaka-nishantha-arrested-1789022832"></link>
            <id>https://ibctamil.com/article/former-bandarawela-mayor-janaka-nishantha-arrested-1789022832</id>
            <summary type="text">பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று (09) இரவு பண்டாரவளை விசேட குற்ற விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நேற்று (09) இரவு பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p>

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே முன்னாள் மேயர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p> </p><p>குறித்த விவகாரம் தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e01c14a-a95b-49ff-97c5-cf9648a79bec/26-6aa25b44d47de.webp' /></p><p> </p><p>இந்தநிலையில் தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இதனையடுத்து சந்தேகநபர் இன்றைய தினம் (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-women-arrested-at-the-airport-1789023050"></link>
            <id>https://ibctamil.com/article/three-women-arrested-at-the-airport-1789023050</id>
            <summary type="text">சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழியாக வெளியே எடுத்துச் செல்ல முயன்ற மூன்று இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த மூவரும் கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும், புத்தளம் - கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும், கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவருமான வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தபெறுமதி&nbsp;80 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இலட்சக்கணக்கான பெறுமதி போதைப்பொருள்</h2><p>
</p><p>
அவர்கள் நேற்று (09) இரவு 10.50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து Thai AirAsia விமான சேவையின் FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d549205-2d1e-49ce-966d-8e4792280774/26-6aa259f4cee42.webp' /></p><p>

இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரிஜுவானா போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் - வந்தாறுமூலை படுகொலை சம்பவங்களில் காயங்களுடன் தப்பிய முக்கிய சாட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukonda-vandarumola-massacre-eyewitnesses-1789024089"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukonda-vandarumola-massacre-eyewitnesses-1789024089</id>
            <summary type="text">மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுன்றில் இது குறித்து நேற்று(09.09.2026) கருத்து வெளியிட்ட அவர், இந்த கொலைகளுக்கான சுயாதீன விசாரணை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ''36 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இந்த படுகொலைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>அயல்நாட்டில் வாழும் சாட்சி&nbsp;</h2><p>

இந்த விடயத்தில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியானது நிலைநாட்டப்படவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca74fe1-7dc0-455b-81c9-15c2ee3cbede/26-6aa25a9cb1d2d.webp' /></p><p>
</p><p>
செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரை மறக்க முடியாத ஒரு கறை படிந்த நாளாகும். </p><p>

90 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமிற்கு கொக்குவில், பிள்ளையாரடி உள்ளிட்ட அப்பகுதியில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அதில் ஒரு வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவர். பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் 40 பேர் பெண்கள் 85 பேர் வயது முதிர்ந்தவர்கள் என மொத்தமாக 186 பேர் போய்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற அந்த முகாமில் வைத்து அன்றைய தினம் அத்தனை பேரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மாத்திரம் கடுமையான காயங்களுடன் தப்பியுள்ளார். அவர்தான் கிருஷ்ணகுமார். அவர் இப்போதும் அயல்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.</p><p></p><h2>பற்றை மறைவிலிருந்து பார்த்தவர்&nbsp;</h2><p> </p><p>

அதேபோன்று இன்னும் ஒருவர் அந்த சம்பவத்தை பற்றை மறைவிலிருந்து பார்த்தவர் என்று அறியப்படுகிறது. அவர் வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர். அவரோடு மேலும் சிலரும் பற்றைகளுக்குள் மறைந்திருந்து இந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e49f11-7284-4535-9241-715464a31409/26-6aa25a9d6c5e8.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் அந்த முகாமில் இருந்த படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி 185 பேரையும் படுகொலை செய்துள்ளார்கள். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்திருந்தார்.</p><p> 

அந்த ஆணைக்குழு மூலம் சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரம் கூட அதன் போது அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அந்த இராணுவ முகாமிற்கு காமினி வர்ணகுல சூரிய என்பவரே பொறுப்பாக இருந்துள்ளார்.

36 ஆண்டுகள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. </p><p>சம்பந்தப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும் அந்த விசாரணை முடிவடைவதற்கு முன்பாக செம்மணியில் மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு தற்போது 584 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T07:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656"></link>
            <id>https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது</p><p>2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
</p><p>குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்</h2><p>
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான பதிவுகளை 2026 செப்டெம்பர் 17ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17601cf9-c1a4-45a8-b2d1-0c848090007b/26-6aa2509e9490e.webp' /></p><p>மேலதிக தகவல்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk-ஐ பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேக நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055"></link>
            <id>https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055</id>
            <summary type="text">கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடையின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10.09.2026) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஐஸ் போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p>
கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியதுடன், கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fdb7ead-01e0-4c22-9c4f-783e5c8f2cc9/26-6aa24ec3c1116.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1000 வாகனங்கள் - பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658"></link>
            <id>https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658</id>
            <summary type="text">துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக,&nbsp;இந்தநிலை ஏற்ப்பட்டுள்ளது.</p><h2>விரைவாக விடுவிக்க நடவடிக்கை</h2><p>
இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ec3a7d-bf1a-41e4-92ef-a6fe3dfa43e2/26-6aa238804c460.webp' /></p><p>இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
</p><p>
இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288</id>
            <summary type="text">புதிய இணைப்புஉரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>உரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) பிணை வழங்கியுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd9c355-5b72-47c5-a1da-c6506c3e1b65/26-6aa23be55b403.webp' /></p><p>குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:29+00:00</updated>
        </entry>
    </feed>
