<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-31T12:29:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><h2>லராக்தீவு மீது அமெரிக்கா தாக்குதல்</h2><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹோர்முஸ் நீரிணையின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867aaf0b-2f99-4b9c-b06d-cc5c43dc0048/26-6a95724c48b91.webp' /></p><p>


கெஷ்ம் ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகமான IRNA, லராக் தீவில் இரவு நேரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்த ஈரான்</h2><p>



இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b641b03d-66fc-45fd-bda5-660f623fc437/26-6a95724b95cc3.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகிழக்குக் கோயில்களில் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தக் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/call-to-protect-north-east-temple-traditions-1788177838"></link>
            <id>https://ibctamil.com/article/call-to-protect-north-east-temple-traditions-1788177838</id>
            <summary type="text">வடகிழக்கு ஆலயங்களில் இடம்பெறும் கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து மரபுவழிப் பண்பாடுகளையும் ஆகம நெறிகளையும் பாதுகாத்தல் தொடர்பான கண்டனம் வெளியிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு ஆலயங்களில் இடம்பெறும் கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து மரபுவழிப் பண்பாடுகளையும் ஆகம நெறிகளையும் பாதுகாத்தல் தொடர்பான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;&nbsp;வடகிழக்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள பல ஆலயங்களில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் சில விரும்பத்தகாத செயற்பாடுகளும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு முரணான கலாசாரச் சீர்கேடுகளும் ஒட்டுமொத்த ஆன்மீக சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளன.</p><p>எமது தொன்மையான சைவ, தமிழ் மரபுகளையும் ஆகம விதிகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய ஆலயங்கள், பக்தி, ஒழுக்கம், பண்பாடு மற்றும் ஆன்மீகத் தூய்மையின் மையங்களாகத் திகழ வேண்டியவை. ஆனால், சில ஆலயங்களில் அண்மைக்காலமாக பின்வரும் விரும்பத்தகாத நடைமுறைகள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியதாகும்.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b>ஆலயங்களில் காணப்படும் பிரதான கலாசாரச் சீர்கேடுகள்</b></h5><p>
</p><p>
</p><p>1. களியாட்டங்களும் தேவையற்ற ஆடற் பாடல்களும்
ஆன்மீகத் தூய்மையுடன் பேணப்பட வேண்டிய ஆலய வளாகங்களில், பக்தி உணர்வுக்கு முரணான களியாட்டங்களையும் தேவையற்ற ஆடற் பாடல்களையும் இடம்பெறச் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>2. நவீன DJ இசை மரபுகளைப் புகுத்துதல்
ஆலயத் திருவிழாக்களில் நவீன DJ போன்ற இசை முறைகளைப் புகுத்துவதன் மூலம், எமது பாரம்பரிய இசை, கலை மற்றும் பக்திச் சூழல் சிதைக்கப்படுவது கவலைக்குரியது.</p><p>3. அதிக ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவு
அளவுக்கு அதிகமான ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதும், அதிகப்படியான வானவேடிக்கைகளை நிகழ்த்துவதும் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இவை பொறுப்புடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.</p><p>4. மரபுக்கும் பாதுகாப்புக்கும் முரணான செயற்பாடுகள்
மரபுவழிப் பண்பாட்டுக்கு முரணானதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதுமான வெடிகொளுத்துதல் போன்ற செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>5. பாரம்பரியக் கலைகளுக்குப் பதிலாக DJ இசை நிகழ்வுகள்
தேவாரம், திருவாசகம், திருமுறைப் பாடல்கள், கூத்து, வில்லிசை போன்ற எமது ஆன்மீக மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கு உரிய கலைவடிவங்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை புறக்கணித்து ‘DJ இசை விருந்து’ போன்ற நிகழ்வுகளைத் திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு சில ஆலயப் பரிபாலன சபையினர் உடந்தையாக இருப்பதும் வருந்தத்தக்கது.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b>ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை</b></h5><p>&nbsp;வடகிழக்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், பரிபாலன சபையினர், உபகாரர்கள், கிராம மக்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சமய மன்றங்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய கலாசாரச் சீர்கேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>
</p><p>ஆலயங்கள் வெறுமனே திருவிழாக்கள் நடைபெறும் இடங்களல்ல. அவை எமது சமயம், பண்பாடு, கலை, ஒழுக்கம் மற்றும் தலைமுறைகளின் ஆன்மீக வாழ்வை வழிநடத்தும் புனித நிறுவனங்களாகும். எனவே, அவற்றின் தனித்துவத்தையும் மரபையும் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b>ஆக்கபூர்வமான மாற்று வழிகள்
</b></h5><p>ஆலயத் திருவிழாக்களில் வெடிகள், ஆடம்பரமான DJ நிகழ்வுகள் மற்றும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் பெருந்தொகையான நிதியை, சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் பின்வரும் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்:</p><ul><li>அறநெறிப் பாடசாலைகளின் பௌதீக மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்துதல்.</li><li>இந்து பண்பாட்டு நிதிக்கு பங்களிப்பு செய்தல்.</li><li>பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.</li><li>பாரம்பரிய சைவக் கலைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை ஊக்குவித்தல்.
</li><li>ஆலயங்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளை வலுப்படுத்துதல்.</li></ul><p>இத்தகைய ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களின் மூலமே எமது ஆலயங்களின் புனிதத்தையும், பக்திபூர்வமான வழிபாட்டு முறைகளையும், சைவத் தமிழ் மரபுகளையும் எதிர்கால சந்ததியினரிடம் பாதுகாப்பாகக் கையளிக்க முடியும்.</p><p>எனவே, ஆலயங்களின் புனிதத்தையும் மரபையும் காப்போம்; கலாசாரச் சீர்கேடுகளைத் தவிர்ப்போம்; எமது எதிர்காலத் தலைமுறைக்கு பண்பாட்டு மரபுச் செல்வத்தைப் பாதுகாத்து வழங்குவோம்.
</p><p></p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோதுமை மா விலை உயர்விற்கான காரணத்தை வெளியிட்டார் பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/price-of-flour-increased-due-to-war-situation-1788175475"></link>
            <id>https://ibctamil.com/article/price-of-flour-increased-due-to-war-situation-1788175475</id>
            <summary type="text">உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்தார்.</p><p>

“உலகைப் பாதித்துள்ள போர்ச் சூழலுக்குள், பொருட்களின் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் மூலம் சிறப்பு விலை உயர்வு அல்லது கட்டண உயர்வு ஏற்பட்டுள்ள ஒரு சூழல் உருவாகியுள்ளது.</p><h2>ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள்</h2><p>அவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. பொதுமக்களின் துன்பத்தைக் குறைப்பதற்காக, அரசாங்கம் என்ற முறையில், அமைச்சகங்கள், திணைக்களங்கள் மீது ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b368fba1-04c4-4b92-909f-ec3087a68cf7/26-6a956859a246a.webp' /></p><p>
</p><p>
மொனராகல பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குவதற்காக நடைபெற்ற விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன இவ்வாறு கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிச்சிறையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ishara-sevvanthi-s-situation-in-prison-1788173078"></link>
            <id>https://ibctamil.com/article/ishara-sevvanthi-s-situation-in-prison-1788173078</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அவர் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p></p><h2>தீவிர கண்காணிப்பின் கீழ் இஷாரா</h2><p>வழமையாக கைதிகள் காலை 6 மணியளவில் சிறைக் கூண்டுகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 4 மணியளவில் மீண்டும் அறைகளுக்குள் அனுப்பப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8bfb27-8aa0-4d1b-b701-460bae144d7e/26-6a9569481342a.webp' /></p><p>
</p><p>
எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு இந்த வழமையான நடைமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இஷாரா காலை 6 மணியளவில் அவர் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங்களில் மீண்டும் தனிச் சிறையில் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மதிய உணவு வழங்குவதற்காகவும் சுமார் 15 நிமிடங்களுக்கு மாத்திரம் அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் மாலை 4 மணியளவில் இரவு உணவுக்காக மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், அந்த நேரத்திலும் சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட கண்காணிப்பின் கீழ் ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் எந்தவொரு விசேட சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபயவின் உறக்கத்தை கூட திட்டமிட்ட ஞானாக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144"></link>
            <id>https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்ததாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார்.</p><p> </p><p></p><h2>உரிமைச் சொத்து&nbsp;</h2><p>அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது.</p><p>

அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். 

எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e191e992-6025-434d-bf78-008d3e493596/26-6a955ef62f825.webp' /></p><p>நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ஞானக்கா.

அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா ? </p><p>ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள். இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>பெரும்பாலான கட்டிடங்கள்&nbsp;</h2><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.</p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22ed006-4b38-4e19-b085-d289d14f3532/26-6a955ef6e0159.webp' /></p><p>

ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது. நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.</p><p>மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது.</p><p> இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது.</p><p></p><h2>கோடிக்கணக்கான சொத்து</h2><p>கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது.</p><p> அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608f8d6c-c38a-4bf6-b11e-e444cc71bf64/26-6a955ef792aec.webp' /></p><p>அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது.</p><p> அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IT-v1W9Laic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[170 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த அரிய தாவரம் இலங்கையில் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-rare-lankan-plant-that-been-miss-for-170years-1788168120"></link>
            <id>https://ibctamil.com/article/a-rare-lankan-plant-that-been-miss-for-170years-1788168120</id>
            <summary type="text">இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பகுதியில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
</p><p>
சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்தக் கண்டுபிடிப்பை ஆவணப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் , இண்டியன்தஸ் விர்கேட்டஸ் (Indianthus virgatus) என்ற அந்தத் தாவரம் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக மிக அருகிவரும் இனமாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் காடுகளில் அது அநேகமாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டதாக எழுதியுள்ளனர்.
</p><p>
சிறிய வெள்ளைப் பூக்களைக் கொண்ட ஐ. விர்கேட்டஸ், ஈரமான வெப்பமண்டலக் காடுகளின் அடர்வனப்பகுதியில் வளர்கிறது.</p><p></p><h2>சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு</h2><p> </p><p>இது இந்தியாவில் சுமார் 150 இடங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது, ஆனால் இலங்கையில் இந்தத் தாவரம் இருப்பதற்கான சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு, 1855-ல் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே கிடைக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b693e9e-143c-4435-b6c4-f5f476a6eb5a/26-6a95646ad0e5d.webp' /></p><p>

இந்தியா மற்றும் இலங்கை முழுவதிலுமுள்ள வரலாற்றுப் பதிவுகளையும், சாத்தியமான வாழ்விடங்களைக் கண்டறிவதற்கான முன்கணிப்பு வாழ்விட மாதிரியாக்கத்தையும் ஒருங்கிணைத்து, ஆராய்ச்சியாளர்கள் தென்மேற்கு இலங்கையின் சபரகமுவ மாகாணத்தில் அந்தத் தாவரத்தைத் தேடினர்.</p><p>

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆய்வுக் குழு 70 முதல் 100 வரையிலான ஐ. விர்கேட்டஸ் (I. virgatus) உயிரினங்களின் ஒரு சிறிய கூட்டத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்தது. </p><p>இந்த உயிரினம் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானது என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த ஒரு பகுதியில் இந்தக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

இண்டியன்தஸ் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமான ஐ. விர்கேட்டஸ் , தனித்துவமான பரிணாம மற்றும் உயிர் புவியியல் சூழலைக் கொண்டுள்ளது என்று, இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், இந்தியாவின் மணிப்பால் உயர் கல்வி அகாடமியின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் உதவிப் பேராசிரியருமான விவேக் பாண்டி கூறினார்.
</p><p>
இந்தியத் துணைக்கண்டம் மற்றும் இலங்கை முழுவதும் இந்த இனம் துண்டிக்கப்பட்டுக் காணப்படுகிறது, அதாவது இதன் இனக்கூட்டங்கள் ஒரு பெரிய புவியியல் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளன என்று பாண்டி&nbsp; தெரிவித்தார்.</p><p></p><h2>சுவாரஸ்யமான கேள்வி</h2><p> </p><p>இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறது என்றும் அவர் மேலும் கூறினார்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a75f9035-304e-42ee-ba33-cea57bcae8de/26-6a95646bc3d82.webp' /></p><p> </p><p>அதாவது, ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இருந்த இந்தத் தாவரத்தின் இனக்கூட்டத்தை ஏதேனும் ஒரு பண்டைய புவியியல் நிகழ்வு இரண்டு தனித்தனி குழுக்களாகப் பிரித்ததா; அல்லது இந்த இனம் பின்னர் நீண்ட தூரப் பரவல் மூலம் இலங்கையை அடைந்ததா?
</p><p>
இலங்கையின் காடுகளில் 170 ஆண்டுகளாக ஐ. விர்கேட்டஸ் இனம் பதிவு செய்யப்படாமல் இருந்தபோதிலும் , பல தசாப்தங்களாக வனப்பகுதிகளின் பாதுகாப்பான இடங்களில் இந்த இனம் கண்டறியப்படாமல் உயிர் பிழைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதாக பாண்டி கூறினார்.
</p><p>
பாண்டியின் கூற்றுப்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டபோதிலும், நிலையான நுண் தட்பவெப்ப நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய, ஈரமான, நிழலான காடுகளின் சிறிய எச்சங்கள், பொதுவாக நீரோடைகள் மற்றும் பாதுகாப்பான சரிவுகளைச் சுற்றி, இந்தப் பகுதிகளில் அடங்கியுள்ளன.</p><p>

" ஐ. விர்கேட்டஸின் மறு கண்டுபிடிப்பு, சிறியதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றும் இந்தக் காட்டு எச்சங்கள், அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது," என்று பாண்டி கூறினார்.</p><p></p><h2>நுண் புகலிடங்களைப் பாதுகாத்தல்</h2><p>இலங்கையில் இத்தாவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான வாழ்விடங்கள் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களால் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த நுண் புகலிடங்களைப் பாதுகாப்பது அவசரமானது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.</p><p> மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இத்தாவரக் கூட்டங்களும் வாழ்விடம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்று பாண்டி கூறினார்.</p><p>

இலங்கையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இந்தத் தாவரக் கூட்டத்தைத் திறம்படப் பாதுகாப்பதற்கு, உடனடி உள்ளூர் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்களில் இத்தாவரத்தின் சேகரிப்புகளை நிறுவுவதற்கான முயற்சிகள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும் என அந்த ஆய்வின் ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.
</p><p>
ஐ. விர்கேட்டஸின் பாதுகாப்பு நிலையை ஐயூசிஎன் செம்பட்டியலுக்காகவும் மதிப்பிட வேண்டும் என்றும், அப்போதுதான் அதன் பாதுகாப்பை தேசிய மற்றும் பிராந்திய பல்லுயிர் செயல் திட்டங்களில் ஒருங்கிணைக்க முடியும் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-non-govt-organizations-register-1788172841"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-non-govt-organizations-register-1788172841</id>
            <summary type="text">அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு
எதிராக&amp;nbsp;கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு
எதிராக&nbsp;கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இன்றைய தினம் (31) காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.</p><p>அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>மகஜர்கள் கையளிப்பு</h2><p>இதன்போது&nbsp;அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6651e3-f55b-4824-91ca-ef9f342f1366/26-6a9561f71c242.webp' /></p><p>போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரவி கருணாநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>காவல்துறையின் விசேட நடவடிக்கை&nbsp;</h2><p>மன்னார், இலுப்பைக்கடவை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572323e-f157-4cd1-ae2a-0b987e9efc1c/26-6a9557d8da86f.webp' /></p><p>
</p><p>


 இஷாரா செவ்வந்தி துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசம்பர் முதல் இலங்கைக்கு வரும் புதிய விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372"></link>
            <id>https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372</id>
            <summary type="text">எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனமான S7 ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்படும் இந்த விமானங்கள் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப்போகும் வசதி</h2><p>&nbsp; இந்த புதிய விமான இணைப்பு மூலம் இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவ, பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களை எளிதாக அடைய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd68c353-e207-4a7a-a982-97cbd6df5c78/26-6a955fee9eff8.webp' /></p><p> இந்த விமானங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோவோசிபிர்ஸ்கில் உள்ள டோல்மாச்சேவோ விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கும் புறப்படும் விமானங்கள், அதே நாளில் பிற்பகல் 1.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.</p><p></p><p> </p><h2>பயணத்திற்கான மொத்த நேரம்</h2><p>கொழும்பிலிருந்து மீண்டும் விமானம் புறப்படுவது அதே நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும், மேலும் அந்த விமானங்கள் அடுத்த நாள் அதிகாலை 2.15 மணியளவில் நோவோசிபிர்ஸ்கை செ்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801b7609-a733-4250-8885-6f515128b0df/26-6a955fedec304.webp' /></p><p>
</p><p>





இந்த பயணத்தின் போது இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் தொழில்நுட்ப எரிபொருள் நிரப்புதல் நடைபெறும், இதற்காக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க வேண்டிய அவசியமில்லை. இந்த பயணத்திற்கான மொத்த நேரம் சுமார் 10 மணிநேரம் ஆகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-vehicles-collided-in-a-horrific-accident-1788172793"></link>
            <id>https://ibctamil.com/article/two-vehicles-collided-in-a-horrific-accident-1788172793</id>
            <summary type="text">மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.&amp;nbsp;குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது. இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>இந்த வாகன விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இரு வாகனங்களின் கோர விபத்து</h2><p>அரநாயக்க பகுதியில் இருந்து மாவனெல்லை நகரை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்லை நகரிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f3963e-d1f8-417b-bc0e-c6be12ebcc4d/26-6a955de793bb0.webp' /></p><p>
விபத்தில் தொடர்புடைய டிப்பர் லொறி, உரிய அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

விபத்தில் வேனில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371"></link>
            <id>https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371</id>
            <summary type="text">அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த வியடத்தினை தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாயால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>&nbsp;நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்</h2><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையைத் திருத்தியமைத்து ஒக்டேன் 92 ரக பெட்ரோலை மேலும் 15 ரூபாயால் குறைத்துள்ளது. </p><p>உண்மையில் இந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் தந்திரமான முறையிலேயே இந்த வேலையைச் செய்கிறது. ஏனெனில் ஒரு புறம் பால் மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்திக்கொண்டு, மறுபுறம் எரிபொருள் விலையில் 15 ரூபாயைக் குறைக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c0278d7-c68c-446f-9856-676b570cc683/26-6a955742714e2.webp' /></p><p>ஆனால் முச்சக்கர வண்டி சேவைக்கான கட்டணங்கள் குறித்துக் கூறுவதானால், இந்த முறைப்படுத்தலுக்குரிய அனைத்து விலைகளையும் குறிப்பிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.</p><p> தற்போது அமைச்சு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பியுள்ளது.</p><p> எனவே சட்டமா அதிபரே இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு அனுமதி பெறப்பட்டு கையொப்பமிட்ட பின்னரே இது சட்டமாக மாறும்.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு</h2><p>

இப்போது எம்மால் வழக்கம்போல மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியாது.</p><p>ஏனெனில் கடந்த காலத்தில் நாங்கள் கோரிக்கை விடுத்தபோது, அதன் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டார், இனி இந்த விலை குறித்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனேயே இது பற்றிப் பேசுமாறு கூறினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39590ecd-1f20-4228-bd70-2171c4c4c9fc/26-6a95574321ffe.webp' /></p><p>தற்போது நாங்கள் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p><p> 

எனவே, சட்டபூர்வமான விலை வரும் வரை பழைய விலையையே நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற வரம்பிற்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது.</p><p> ஆனால் பொது வீதிகளில் சாதாரண முச்சக்கர வண்டி பயன்பாட்டில் 110, 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணம் அறவிடப்படுகிறது. </p><p>இன்னும் இது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைமையின் கீழ் மிக விரைவில் புதிய விலைகள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786"></link>
            <id>https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், அங்கு பறந்துகொண்டிருந்த ட்ரோன் கேமராவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், அங்கு பறந்துகொண்டிருந்த ட்ரோன் கேமராவில் தற்செயலாக பதிவாகியுள்ளது.
</p><p>
சீன புகைப்படக் கலைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளில், கடல் மட்டத்திலிருந்து 7,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலைச் சிகரத்திற்கு அருகில், பாரிய பாறைகள் மற்றும் பனிப்பாறைத் துண்டுகள் மலையின் சரிவிலிருந்து இடிந்து விழும் காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பெரும் தூசிப் படலம் மலைப் பகுதி முழுவதும் பரவுவதையும் அந்த ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன.&nbsp;</p><p></p><h2>நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பனி, பாறைகள், சேறு மற்றும் பெருமளவான குப்பைகள் சுமார் 1,200 மீற்றர் கீழே அமைந்துள்ள பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdbcb9fd-edc9-472c-a056-f7d34486f077/26-6a95570b36872.webp' /></p><p> இதன் காரணமாக தான் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்தப் பேரழிவில் நேபாளத்தில் 903 பேரும் திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நேபாளத்தில் மாத்திரம் மேலும் 4,500க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நேபாளத்தை உலுக்கிய பாரிய இயற்கைப் பேரழிவு

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரழிவை” எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://youtu.be/qEic2ZU6taM" target="_blank"><b>காணொளியை காண இங்கே க்ளிக் செய்யவும்</b></a></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா விகாரை கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645"></link>
            <id>https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645</id>
            <summary type="text">கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியா காணி உரிமையாளர் கோகிலரமணியால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவின் அடிப்படையில் இன்றைய தினம் (31-08-2026) வழக்கு
விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><h2>எட்டப்பட்ட உடன்படிக்கை</h2><p>இதன் போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் முன்னிலையாகி இருந்தனர்.
</p><p>
அதே சமயம் அரச சட்டத்தரணி, திருக்கோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் W. W. சுரங்க பெரேராவும் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c41f26-4465-434f-9fb5-71289449c2af/26-6a954ef35a343.webp' /></p><p>வழக்கின் போது 2019 ஆம் ஆண்டு இரு தரப்புக்கு இடையில் எட்டப்பட்ட
உடன்படிக்கையின் அடிப்படையில் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான உரிமை
மாத்திரமே கன்னியா விடயத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் புனர்நிர்மாணம்
செய்வதற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கு வாதம்
வைக்கப்பட்டது.
</p><p>
மேலும் அரச சட்டத்தரணியால் குறித்த இடத்தை பார்வையிட்டு வாதங்களை முன்வைக்க
காலம் கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை
வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மேலும் அதுவரையான காலப்பகுதியில் எந்த புதிய
கட்டுமானப் பணிகளையோ, மாற்றங்களையோ செய்யக்கூடாது என்ற உத்தரவும்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738"></link>
            <id>https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738</id>
            <summary type="text">இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&amp;nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நாட்டில் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அந்தவகையில், இதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சட்டமூலத்தை தயாரித்தல்</h2><p>
</p><p>குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c87d60d-7238-4566-9f0d-4615fd4c2caa/26-6a954e5832957.webp' /></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கிறங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/development-officers-in-mannar-stage-a-protest-1788165672"></link>
            <id>https://ibctamil.com/article/development-officers-in-mannar-stage-a-protest-1788165672</id>
            <summary type="text">மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட செய்லகத்திற்கு முன்பாக குறித்த இன்று இன்று (31.08.2026) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.&nbsp;</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துதல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab60aaa-0195-4bef-9881-b93cdd15142f/26-6a954502c78ac.webp' /></p><p>
</p><p>
குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல
நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p>போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் -ஐ சந்தித்து ஜனாதிபதிக்கு
கையளிக்க வேண்டிய மனுவை ரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச
திணைக்களங்களில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம்
அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942"></link>
            <id>https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.</p><p>
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த குழாமின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h5>22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : இன்றுடன் நிறைவடையும் காலக்கெடு!</h5><p>இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது. </p><p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p> 

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p></p><h2>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf20ee1-6ed3-4def-a238-6fae29b67117/26-6a95042d33294.webp' /></p><p> </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.</p><p> </p><p>இந்தநிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dog-meat-sale-in-the-sainthamaruthu-area-1788164993"></link>
            <id>https://ibctamil.com/article/dog-meat-sale-in-the-sainthamaruthu-area-1788164993</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்தன்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இந்த தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளது.</p><p>

கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ்
உள்ள பிரதான வீதிப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.</p><p>
</p><p></p><h2>ஆட்டிறைச்சிக் கடை</h2><p>இதன்போது அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a4c036-4e79-4742-a258-58e9a9d74ae4/26-6a954140f1af6.webp' /></p><p>குறித்த
இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அங்கீகரிக்கப்பட்ட
கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை
கண்டறியப்பட்டது.
</p><p>
இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக்
கையகப்படுத்தப்பட்டு கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>வைத்திய அதிகாரி&nbsp;</h2><p>எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து சாய்ந்தமருது பகுதியில்
நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல்
செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்
நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக
வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும் இது தொடர்பில் எவ்வித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015"></link>
            <id>https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015</id>
            <summary type="text">புதிய இணைப்புஇன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.</p><p> கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் உயர்த்தியதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். </p><p>

இதனிடையே, ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>
அந்தவகையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.</p><p>குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கோதுமை மாவின் விலை</h2><p>


பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65045cd1-f63a-45cc-8b13-f6d1c9a80588/26-6a951b5dac3fa.webp' /></p><p>



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - டெய்ஸி ஃபாரஸ்ட் மீதான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-and-daisy-forest-case-adjourned-1788166438"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-and-daisy-forest-case-adjourned-1788166438</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி வழக்கனது எதிர்வரும் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்கு இன்று (31.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>உயர் நீதிமன்ற விசாரணை</h2><p>
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விடயம் குறித்து பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மேல்முறையீடு செப்டம்பர் 04 ஆம் திகதி விசாரணைக்கு வரவிருப்பதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad9bfed-abe9-4bc7-8979-74b5a8721472/26-6a9543733cff3.webp' /></p><p>
</p><p>
அதன்படி, உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு ஒரு திகதியில் வழக்கை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது. </p><p>

இதன்படி சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை செப்டம்பர் 28 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.</p><p>

 சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஏறத்தாழ 57 மில்லியன் ரூபாயை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக யோஷிதா மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T09:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு : நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/invalidate-the-parliamentary-seat-of-mp-archchuna-1788165482"></link>
            <id>https://ibctamil.com/article/invalidate-the-parliamentary-seat-of-mp-archchuna-1788165482</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இந்த மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவிப்பு&nbsp;</h2><p>இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/500961d8-2a58-4ce4-aba8-d040fc2435e4/26-6a954368d349b.webp' /></p><p>

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cVovd8D_zRA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24th-tamil-catholic-pilgrimage-in-netherlands-1788164012"></link>
            <id>https://ibctamil.com/article/24th-tamil-catholic-pilgrimage-in-netherlands-1788164012</id>
            <summary type="text">நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றது.
</p><p>
நெதர்லாந்தில் அமைந்துள்ள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தில் எதிர்வரும் (06.09.2026) திருயாத்திரை இடம்பெறவுள்ளது.
</p><p>
இத்திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்ட இறை அருளைப் பெற்று, விழாவைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைவரித் திணைக்களத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tax-collection-from-slc-players-is-prohibited-1788159000"></link>
            <id>https://ibctamil.com/article/tax-collection-from-slc-players-is-prohibited-1788159000</id>
            <summary type="text">இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தனிநபர் முன்கூட்டிய வருமான வரியை (Personal Advance Income Tax) அரவிடுவது குறித்து நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தனிநபர் முன்கூட்டிய வருமான வரியை (Personal Advance Income Tax) அரவிடுவது குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.</p><p>

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எடுத்திருந்த தீர்மானத்தை இரத்து செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் சான்றாணை (Certiorari) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் முன்வைக்கபட்ட குற்றச்சட்டுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ள ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள், தத்தமது அணித் தலைவர்கள் ஊடாக நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.</p><p></p><h2>ஊழியர்களுக்கான வரி விதிமுறை</h2><p>
</p><p>தாங்கள் இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் அல்ல என்றும், பல ஆண்டுகளாக சுயாதீன சேவை வழங்குநர்களாகவே அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் வீரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eef41b8-241c-443b-8fb2-1a5e9e4de422/26-6a9537f4b1397.webp' /></p><p>
</p><p>
எனவே, தங்களிடம் அறவிடப்படும் வரியானது ஊழியர்களுக்கான வரி விதிமுறைகளின் கீழ் அல்லாமல், சுயாதீன சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும் சட்ட விதிகளின் அடிப்படையில் அறவிடப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.</p><p>
</p><p>
இதன்படி&nbsp; இலங்கையின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>
</p><p>
எனினும், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்தத் தீர்ப்பு தடையாக அமையாது என நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T08:14:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-protest-demands-safe-railway-gates-1788154939"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-protest-demands-safe-railway-gates-1788154939</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று (31-08-2026) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார்
35 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பற்ற கடவைகள் காணப்படுகின்றன.</p><p></p><h2>பாதுகாப்பு கடவைகள்</h2><p>
இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு கோரி குறித்த போராட்டம்
இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623d71f-104e-476f-abd0-0c7bfcae0492/26-6a95314c27417.webp' /></p><p>குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மத்த
தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள்
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த
மாணவியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> தொடர்ந்து கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சரிடம் தொடருந்து திணைக்களம்
ஆகியவற்றிற்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் - மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dry-spell-affects-81k-in-7-districts-1788159032"></link>
            <id>https://ibctamil.com/article/dry-spell-affects-81k-in-7-districts-1788159032</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த&amp;nbsp; பிரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த&nbsp; பிரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இதன்படி 25,647 குடும்பங்களின் 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு</h2><p> </p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த வறட்சியான காலநிலையால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d6d36f-2d69-4f00-9244-e3d1b985f8b6/26-6a952e653ded9.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக பாதித்துள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் பவுசர் வாகனங்கள் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
எதிர்வரும் காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு, குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என&nbsp;சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:42:34+00:00</updated>
        </entry>
    </feed>
