<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-20T19:40:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவின் கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-netanyahu-won-t-be-arrested-in-us-1784569453"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-netanyahu-won-t-be-arrested-in-us-1784569453</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும் போது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும் போது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்காவில் இருக்கும் போது எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் கைது செய்யப்பட மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) கலந்துகொள்வதற்காக நெதன்யாகு வருகை தந்தால், அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்து நகர அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) அறிவித்திருந்தார்.
</p><p>
நியூயோர்க் மேயரின் இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு வெளியான நிலையிலேயே, ட்ரம்ப் அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/116953334292806992/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-navy-blockades-iranian-ports-stops-ships-1784567215"></link>
            <id>https://ibctamil.com/article/us-navy-blockades-iranian-ports-stops-ships-1784567215</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான கடற்படை முற்றுகையின் (Blockade) போது ஒரு கப்பலை முடக்கியுள்ளதுடன் 7 கப்பல்களைத் திருப்பி அனுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான கடற்படை முற்றுகையின் (Blockade) போது ஒரு கப்பலை முடக்கியுள்ளதுடன் 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில் ஜூலை 20 நிலவரப்படி, ஈரானிய துறைமுகங்களுக்குள் கப்பல்கள் நுழைவதையோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதையோ தடுப்பதற்காக, அமெரிக்க இராணுவம் 7 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதுடன் 1 கப்பலைச் செயலற்றதாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">U.S. service members aboard amphibious assault ship USS Boxer (LHD 4) support flight operations day and night from the Arabian Sea as CENTCOM enforces the naval blockade against Iran. As of July 20, the U.S. military has redirected 7 commercial vessels and disabled 1 to prevent… <a href="https://t.co/a1gtwipPUf">pic.twitter.com/a1gtwipPUf</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2079235964124147741?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2025-git-examination-results-released-1784562425"></link>
            <id>https://ibctamil.com/article/2025-git-examination-results-released-1784562425</id>
            <summary type="text">இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இம்முறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். </p><p>

அத்தோடு 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர்.</p><p>
</p><p></p><h2>ஆவணங்களைப் பதிவிறக்கம்&nbsp;</h2><p>நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0361e7-359a-4691-9ae3-70836c50322f/26-6a5e4e1f35ed6.webp' /></p><p>விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான <a href="http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk" target="_blank">http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk </a>ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p>

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்</h2><p>அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் Personal Account Login ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.</p><p> 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி<a href="https://onlineexams.gov.lk/eic" target="_blank"> https://onlineexams.gov.lk/eic</a> இன் School Account Login பகுதிக்குள் பிரவேசித்து அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f449c28-e672-4123-ba62-a3edf79244c8/26-6a5e4e20267b4.webp' /></p><p>அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><ul><li>&nbsp;உடனடி அழைப்பு இலக்கம்: 1911</li><li> 

தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922 </li><li>

தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422</li></ul><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:04:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல் : பலர் பலியான துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dozens-feared-dead-in-guyana-1784572047"></link>
            <id>https://ibctamil.com/article/dozens-feared-dead-in-guyana-1784572047</id>
            <summary type="text">தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. அந்நாட்டின் தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று முன் தினம் சிறிய ரக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. அந்நாட்டின் தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று முன் தினம் சிறிய ரக கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 133 பேர் பயணித்தனர்.</p><p>


கப்பல் நடுக்கடலில் பயணித்த போது தீடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர்.</p><p> </p><h2>கடலில் மூழ்கியவர்களின் கதி..!</h2><p>இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 66 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d85da92-5c14-4bc2-83c9-0bc8dbe4511c/26-6a5e689141d99.webp' /></p><p> </p><p>இதனால் கடலில் மூழ்கிய 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T18:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு விநியோக ஓட்டுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/food-delivery-driver-wins-china-s-literary-award-1784563572"></link>
            <id>https://ibctamil.com/article/food-delivery-driver-wins-china-s-literary-award-1784563572</id>
            <summary type="text">உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ ஷுன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் எழுத்தாளர் லூ ஷுனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, உணவு விநியோக ஓட்டுநர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்ட அவரது 'லோ ஃப்ளைட்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது.</p><h2>கவிதைகள்,கட்டுரைகளுக்காக சமுக ஊடகங்களில் பிரபலம்</h2><p>2019-ல் உணவு விநியோக ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கிய 56 வயதான வாங், தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dd6a4c-a75a-402f-a501-4a6541a2c678/26-6a5e4cc181c8c.webp' /></p><p>

பல தசாப்தங்களாகப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்து வந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, வாங் இந்த மதிப்புமிக்க இலக்கிய விருதை வென்றுள்ளார்.

"நான் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தேன்... மிகவும் பதட்டமாகவும் இருந்தேன்... ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, எல்லாம் அமைதியானது," என்று வாங் ஜூலை 15 அன்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஊடக கவனத்தால் மிகுந்த மன அழுத்தம்</h2><p>தனது வெற்றிச் செய்திக்குப் பிறகு தன்னைச் சூழ்ந்திருந்த ஊடகக் கவனம் தனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4f85d8-b42e-4e45-a069-a0e48f4461eb/26-6a5e4cc230df0.webp' /></p><p>
</p><p>
லூ ஷுன் இலக்கிய விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பொதுவில் அறிவிக்கப்படுவதில்லை, ஆனால் 2014-ல் அது 100,000 சீன யுவான் (US$14,800 அல்லது £11,000) ஆக இருந்தது.</p><p>

ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக தனது இளமைப் பருவத்தில் பள்ளியிலிருந்து விலகினார். அவர் உணவு விநியோகப் பணியாளராக மாறுவதற்கு முன்பு, கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-attempts-suicide-in-batti-court-jail-1784557314"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-attempts-suicide-in-batti-court-jail-1784557314</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூண்டுக்குள் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில்
இடம் பெற்றுள்ளது.
</p><p>
கைதியின் இந்த சம்பவம் நீதிமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இது பற்றி மேலும் தெரியவருவதாவது</p><h2>யாழ்ப்பாணத்தில் கைது</h2><p>

 3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37d8081c-830e-45e4-9b28-20bd986afd9a/26-6a5e3551676d9.webp' /></p><p>

இந்த நிலையில் பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில்
முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்றம் பிடியாணை
பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p>
பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15
ம்திகதி முற்படுத்தியதையடுத்து அவரை இன்றையதினம் (20ம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
இன்று திங்கட்கிழமை (20)
காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்
அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்</p><p></p><h2>விபரீத முடிவால் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 3ம்
திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை
நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba18f737-3a9a-4191-9e5c-9e5e4c3acc95/26-6a5e35521a5bf.webp' /></p><p>

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது
பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள்
வைத்து குறித்த கைதி விபரீத முடிவெடுத்த நிலையில் படுகாயமடைந்து
உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில்
திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும்
காவல்துறையினர் தெரிவித்தனர்&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் வர்த்தகக் கப்பலை குறி வைத்தது ரஷ்யா : பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-attack-on-merchant-ship-in-black-sea-1784560154"></link>
            <id>https://ibctamil.com/article/russian-attack-on-merchant-ship-in-black-sea-1784560154</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடெசா கடற்கரைக்கு அப்பால், கினியா-பிசாவ் கொடியை ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடெசா கடற்கரைக்கு அப்பால், கினியா-பிசாவ் கொடியை ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>

இறந்தவர்களில் ஒன்பது கப்பல் ஊழியர்களும் ஒரு விமானியும் அடங்குவதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><h2>தொடர்ச்சியான தாக்குதல்</h2><p>சமீபத்திய வாரங்களில் ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது, ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யத் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939afb56-7dec-49c7-824e-33e8cfa3315c/26-6a5e3d51ba951.webp' /></p><p>கினியா-பிசாவ் கொடியை ஏந்திய கோல்டன் லியோ கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல், இதுவரை நடந்தவற்றிலேயே மிகவும் கொடூரமானதாகும்.
</p><p>

உக்ரைனிய விவசாய ஏற்றுமதிகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானவை கடல்வழி ஏற்றுமதிகளே ஆகும். இதன் மதிப்பு சுமார் $9 பில்லியன் (£6.7 பில்லியன்) ஆகும் - இது கீவ்விற்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T15:23:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030 FIFA உலகக் கோப்பைக்கு ஆறு அணிகள் தகுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qualified-6-teams-for-the-2030-fifa-world-cup-1784549412"></link>
            <id>https://ibctamil.com/article/qualified-6-teams-for-the-2030-fifa-world-cup-1784549412</id>
            <summary type="text">2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாடுகளை உள்ளடக்கிய தனித்துவமான இணை-புரவலர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாடுகளை உள்ளடக்கிய தனித்துவமான இணை-புரவலர் முறையில் நடைபெறவுள்ளது.
</p><p>
இதன் காரணமாக 6 நாடுகள் தற்போது 2030 உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன 

போட்டியின் முக்கிய இணை-புரவலர் நாடுகளாக ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ செயல்படுகின்றன. </p><p>புரவலர் நாடுகள் என்பதனால், இந்த மூன்று நாடுகளின் அணிகளுக்கும் ஃபிஃபா தானாகவே உலகக் கோப்பைக்கான தகுதியை வழங்கியுள்ளது.</p><p></p><h2>நுற்றாண்டு நினைவு போட்டி</h2><p>
</p><p>
மேலும், 1930-ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதல் ஃபிஃபா உலகக் கோப்பையின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் தலா ஒரு நினைவுப் போட்டி நடத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85895a85-078e-4b87-adab-8f8c9a52c577/26-6a5e139cb478c.webp' /></p><p> இதையொட்டி, இந்த மூன்று நாடுகளின் அணிகளும் தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.
</p><p>
தென் அமெரிக்காவில் நடைபெறும் இந்த மூன்று சிறப்பு நினைவுப் போட்டிகளுக்குப் பின்னர், உலகக் கோப்பைத் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறும்.
</p><p>
இதன்மூலம், 2030 ஃபிஃபா உலகக் கோப்பை வரலாறு, பாரம்பரியம் மற்றும் பல கண்டங்களை இணைக்கும் புதிய புரவலர் வடிவமைப்பால் சிறப்புப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T15:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784554935"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784554935</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூடு</h2><p>&nbsp;ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை
சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52100dd-c399-49e1-b4f6-6f9510564d26/26-6a5e2b957be0a.webp' /></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட
நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ் அமைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hamas-names-its-new-leader-1784553639"></link>
            <id>https://ibctamil.com/article/hamas-names-its-new-leader-1784553639</id>
            <summary type="text">
2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, கலீல் அல்-ஹய்யாவை ஹமாஸ் அமைப்பு தனது புதிய தலைவராக அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, கலீல் அல்-ஹய்யாவை ஹமாஸ் அமைப்பு தனது புதிய தலைவராக அறிவித்துள்ளது.
</p><p>
பாலஸ்தீனியக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், அதன் தலைமை மன்றத்தின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவருமான அல்-ஹய்யா, ஹமாஸின் முன்னாள் அரசியல் தலைவர் காலித் மெஷாலுக்கு எதிராக நடத்தப்பட்ட உட்கட்சி வாக்கெடுப்பின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
2024 ஆம் ஆண்டில் காசாவில் ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களான சின்வார், இராணுவத் தளபதி முகமது தெய்ஃப் மற்றும் அதே ஆண்டில் தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து அல்-ஹய்யாவின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>ஐந்து தலைவர்களில் ஒருவர்</h2><p>
</p><p>
இந்த இழப்புகளைத் தொடர்ந்து, போர்க்காலத்தில் குழுவை வழிநடத்துவதற்காக 2024 இன் பிற்பகுதியில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் குழுவான தலைமை மன்றத்தை வழிநடத்தும் ஐந்து தலைவர்களில் ஒருவராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c5d62d-6bb5-4386-8e5c-d182ff67969d/26-6a5e2537433fe.webp' /></p><p><i>Image Credit:&nbsp;JNS.org</i></p><p>
</p><p>
1960 இல் காசா பகுதியில் பிறந்த அல்-ஹய்யா, 1987 இல் ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்டதிலிருந்து அதன் முக்கிய உறுப்பினராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T13:40:11+00:00</updated>
        </entry>
    </feed>
