<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-09T14:23:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201"></link>
            <id>https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201</id>
            <summary type="text">ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்குப் போய்விடு சிவாஜி என்ற கருத்தில் எல்லாம் பலருக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதில்லை. </p><p>

எனினும் அவ்வாறான நம்பிக்கையில்லாதவர்களைக் கூட சலிப்படையவும் விரக்தியையும் கொள்ள வைக்கும் வகையில் சமூக வலைத்தள வேட்டையாடிகளின் ஹெய்னாஸ் ரக வடக்கின் ஒரு நிகழ்வை மையப்படுத்திய பதிவுகளாக வருகின்றன.</p><p> அதிலும் விமர்சனங்கள் என்ற பெயரில் கிட்டியதே வாய்ப்பு என திட்டமிட்ட அவதூறுகள் வருகின்றன
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட வடபுலத்தில் தனது மக்களுக்காக ஒரு மனிதன் களத்தில் இறங்கி சில திட்டங்களை வகுத்து தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் போது சமூக ஊடகத்தின் சில பக்கங்கள் அந்த மனிதரை ஹெய்னாஸ்கள் போலத் தாக்கி பிரபலமடைகின்றன
</p><p>
ஒருவருக்கு அவரது திறமைக்கும் உழைப்புக்கும் அவரது சொந்த மண்ணில் மதிப்பு கிடைப்பதற்கு ஒரு சமூகமும் அமைப்பும் வேண்டும். </p><p>ஒருகாலத்தில் அங்கு அந்த சமுகஅமைப்பு சரியாக இருந்தாலும் இப்போது அதற்குள் வேட்டையாடிகள் புகுந்து சிந்தனையோட்ட வறுமையை வெளிப்படுத்தி ....யாரிவர்? இவரால் என்ன செய்ய முடியும்….என ஒரு மனிதரை குறிவைக்கும் வெளிப்படுத்தல்களை செய்கின்றார்கள். </p><p>


இவ்வாறான சமுகத்தள வேட்டையாடிகள் சொற்ப நாட்களில் துண்டைக்காணோம் துணியை காணோம் என அகன்றுவிடக்கூடும். ஆனால் மாற்றங்களை உருவாக்கத்தலைப்படுவர்களில் பலர் கரவொலிகளை எதிர்பார்க்காமல் எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் முகங்களாக தொடரககூடும். </p><p>இந்த முகங்களில் றீச்சா BK யும் ஒருவராக இருக்கவேண்டும்.

ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றிவிடும் சில திட்டங்கள் காயப்படக்கூடாதென்பதால் இயக்கச்சியில் இருப்பதற்கு பதிலாக நெதர்லாந்துக்கு சென்று உங்கள் திறமையைப் பயன்படுத்திக்கொளளுங்கள்; என சிவாஜி பட விவேக் பாணியில் விரக்தி ஆலோசனைக்கு இங்கு பரிந்துரைகள் கூடாது.
</p><p>
பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை மாற்ற முடியவில்லை என்பதால் அந்த நாட்டை விட்டு வெளியேறிய ஏதிலிகளின் அடுத்தகட்டம் இப்போது அதே நாட்டுக்கு திரும்பி அங்கு ஒரு மாற்றத்துக்கு முயற்சி செய்யும் போது அவ்வாறான முயற்சிகளை நோக்கமும் தரமும் அறமும் அற்ற கீழ்நிலையில் விமர்சனங்களால் அடிப்பது அபத்தம் </p><p>

உணவுத்திருவிழாவில் நடந்த சம்பவங்கள் போல இனிமேல் இடம்பெறக்கூடாதென கரிசனை கொள்வது இயல்பானது. திடீர் நெருக்கடிகள் தான் புதிய பாடங்களை தருவது.</p><p> ஆனால் இந்த நெருக்கடிகளுக்குரிய பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவற்றை கேலி செய்வது அவதூறு செய்வது தனிப்பட்ட தாக்குதலை நடத்தும் கலவைகள் தான் இங்கு நாசகாரம்.</p><p> 

ஒரு திட்டத்தை விமர்சிப்பதற்கு உரிமை உள்ளதுபோலவே ஒரு திட்டத்தை உருவாக்கியவருக்கும் அதுகுறித்த சில கனவுகளை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த காணும் உரிமையும் இருக்கிறது. </p><p>ஆனால் கனவுத்திட்டங்களை கொண்டிருப்பவர்களை ஒவ்வொரு முறையும் கல்லால் அடித்துக்கொண்டிருந்தால் நாளை றீச்சா போல கனவு காண முன்வருபவர்கள் குறைந்து விடுவார்கள். </p><p>இது நல்ல முயற்சிகளையும் நிராகரித்து ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தான குழியையும் பறித்துவிடும். </p><p>

BK இன் உணவுத்திருவிழாவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சியை நேர்மையாக மதிப்பிடாமல் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கான பொறுப்பு சமூகவலைத்தள வேட்டையாடிகளுக்கும் உள்ளது&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T13:48:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் காசா அமைதிதிட்டத்தை அடியோடு நிராகரித்தார் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-rejects-trumps-gaza-plan-1786281492"></link>
            <id>https://ibctamil.com/article/israel-rejects-trumps-gaza-plan-1786281492</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ளார்.

காசா பகுதியில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ளார்.</p><p>

காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை "முழுமையாக நிராயுதபாணியாக்க" ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக ட்ரம்பின் அமைதி மன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.</p><h2>ஹமாஸின் அறிவிப்பு</h2><p>இருப்பினும், இஸ்ரேல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து, காசா பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றால் மட்டுமே, தனது கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது நிபந்தனைக்குட்பட்டது என்று ஹமாஸ் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395ab4c7-936c-4fdb-8d9a-013d7eb56486/26-6a7883c42d284.webp' /></p><p>&nbsp;கடந்த ஒக்டோபரில் காசா பகுதியில் ஒரு அடிப்படை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, இஸ்ரேல் அப்பகுதி மீது தொடர்ந்து குண்டுவீசி வருகிறது.</p><h2>15 அம்ச ஆவணத்தை நிராகரிக்கிறோம்</h2><p>

"இந்த 15 அம்ச ஆவணத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று நெதன்யாகு இன்று (09) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b5299a-e902-4a45-87c2-484598fd095c/26-6a7883c378796.webp' /></p><p>

"ஹமாஸ் உண்மையாகவே ஆயுதங்களைக் கைவிடும் வரை இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்காது, மேலும் நமது படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தடுக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>ஒரு முக்கிய நடவடிக்கை</h2><p>
</p><p>
காசா பகுதிக்கான ஆயுதக் களைவுத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, "நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை" என ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34050531-1a25-4ce4-baef-0d031a3caed2/26-6a7883c4d63d7.webp' /></p><p>
</p><p>
ஆனால், காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு ஹமாஸிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், அது வெறும் போலியான ஆயுதக் களைவாக இருக்க முடியாது என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.</p><p>
</p><p>
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-samarasinghe-bids-farewell-to-politics-1786279565"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-samarasinghe-bids-farewell-to-politics-1786279565</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் மஹிந்த சமரசிங்க, தீவிர அரசியலில் மீண்டும் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் மஹிந்த சமரசிங்க, தீவிர அரசியலில் மீண்டும் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக தூதர் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>&nbsp;தூதராக இருந்த காலத்தில் நாட்டுக்கு ஆற்றிய சேவை&nbsp;</h2><p>சமீபத்தில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த சமரசிங்க, இன்று (09) அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வரக்ககொட ஸ்ரீ ஞானரத்ன மகா தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய திப்பட்டவாவவே ஸ்ரீ சுமங்கல மகா தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05ee13-d8a4-45de-962e-14d25abf6915/26-6a787a3396102.webp' /></p><p>&nbsp;தூதராக இருந்த காலத்தில், இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதிய (IMF) ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும், அமெரிக்கா விதித்த 10% வரியைத் தக்கவைக்கவும், மேலும் அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பலையும் பல உலங்கு வானூர்திகளையும் பெறவும் பாடுபட்டதாக சமரசிங்க நினைவு கூர்ந்தார்.</p><p></p><h2>&nbsp;இனி அரசியலில் ஈடுபட வேண்டாம்</h2><p>27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், இனி அரசியலில் ஈடுபட வேண்டாம் எனத் தான் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a60b64-a6f9-4c35-bf60-e94c9b4a08fa/26-6a787a3447c30.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் கோரினால், ஆதரவளிக்கத் தான் இன்னும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
</p><p>
மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டதால், தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கத் தயாராக இல்லை என்றும் முன்னாள் தூதர் தெரிவித்தார்.
</p><p>
மஹிந்த சமரசிங்க தூதரக சேவையில் ஆற்றிய சிறந்த சேவையானது, மல்வத்தை மற்றும் அஸ்கிரி பிரிவுகளின் மகாநாயக்கக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T13:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகவிலைக்கு அரிசி விற்பனை : வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்டது அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-shops-fined-selling-rice-at-higher-prices-1786274445"></link>
            <id>https://ibctamil.com/article/two-shops-fined-selling-rice-at-higher-prices-1786274445</id>
            <summary type="text">அதிகபட்ச சில்லறை விலையை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்றதற்காக, வெல்லவாயா பகுதியில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு வெல்லவாயா நீதவான் நீதிமன்றம் ரூ....</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகபட்ச சில்லறை விலையை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்றதற்காக, வெல்லவாயா பகுதியில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு வெல்லவாயா நீதவான் நீதிமன்றம் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

உள்ளூர் கீரி சம்பா அரிசியின் 5 கிலோ பொதியை ஒரு கிலோ ரூ. 350-க்கு விற்றதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு கிலோ ரூ. 260 ஆகும்.</p><h2>கீரி சம்பா&nbsp;அதிக விலையில் விற்பனை</h2><p>அதன்படி, தொடர்புடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ரூ. 1,50,000 அபராதம் விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ae0ac9a-18d5-40f8-adc4-a0e5eaa243af/26-6a786732cea7f.webp' /></p><p>
</p><p>
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியை அதிகமான விலையில் விற்பனை செய்தது தொடர்பாக வெல்லவாயா, யலபோவாவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொன்னி சம்பா அரிசி</h2><p> </p><p>ஒரு கிலோகிராமின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 240 ஆக இருந்தபோதிலும், அதன் விலை ரூ. 260 ஆக விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d438296-e433-4a37-9993-66122d46b300/26-6a7867337eaac.webp' /></p><p>
</p><p>
குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு வெல்லவாயா நீதவான் நீதிமன்றம் ரூ. 1,50,000 அபராதமும் விதித்ததாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்தது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T11:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[1983 இல் திட்டமிட்டு நடந்த வெலிக்கடைச் சிறைக்கலவரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-prison-massacre-during-1983-black-july-1786274281"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-prison-massacre-during-1983-black-july-1786274281</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலை இடம்பெற்ற காலத்திலே ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் அங்கமாக வெலிக்கடை சிறைப்படுகொலையை அரச இயந்திரத்தின் அனுசரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலை இடம்பெற்ற காலத்திலே ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் அங்கமாக வெலிக்கடை சிறைப்படுகொலையை அரச இயந்திரத்தின் அனுசரணையோடு தென்னிலங்கை சிங்களவர்கள் மேற்கொண்டதாக சமூக செயற்பாட்டாளர் விவேகானந்தனூர் சதீஸ் தெரிவித்துள்ளார்.</p><p>ஆனால் அண்மைக் காலங்களிலே குறிப்பாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அந்த சிறைக் கலவரத்தை நாங்கள் அவ்வாறு பார்க்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>ஆட்சி அதிகாரத்தின் பின்னர் ஒரு ஊழலற்ற போதைப்பொருளை ஒழிக்கின்ற செயற்பாட்டிலே தற்போதைய அரசாங்கம் கடும்போக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்ட அவர் ஒட்டுமொத்த இலங்கையிலும் அதனை விரும்பாத கடந்தகால ஆட்சியாளர்கள் அல்லது போதைப்பொருள் மாபியாக்களின் திட்டமிட்ட செயற்பாடாகவே நீர்கொழும்பு சிறைக்கலவரம் அமைந்தது எனவும் கூறியுள்ளார்.</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jKQvHZ_8ehY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சு : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-declares-no-room-for-negotiations-with-the-us-1786271460"></link>
            <id>https://ibctamil.com/article/iran-declares-no-room-for-negotiations-with-the-us-1786271460</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியதாகக் குற்றம் சாட்டிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியாது என்று கூறினார்.&nbsp;</p><h2>&nbsp;பேச்சுக்கு வாய்ப்பில்லை</h2><p>ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழியை மத்தியஸ்தர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அமெரிக்கா செய்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து ஒரு தீர்வு காணப்படும் வரை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியும் என்று தெஹ்ரான் நம்பவில்லை என அராக்சி குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/276ade26-0cdf-4586-84e8-0f8e8536c732/26-6a785d949bb0e.webp' /></p><p>
</p><p>
</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;திறப்பு</h2><p>"பேச்சுவார்த்தைகளுக்கு உகந்த சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று கூறிய அவர், அமெரிக்கா தனது மீறல்களைச் சரிசெய்யும் வரை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b72f0d-4ae9-48dd-bf10-fb363cad4f8f/26-6a785d954bf8d.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளை மாற்றுவது ஒரு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான விஷயம் என்றும், அது நீரிணையைத் திறந்துவிடுவதாக அர்த்தமல்ல என்றும் அராக்சி குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்


ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
</p><p>

ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில், பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும், நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது. </p><p>

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களை வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.</p><h2>செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியல்</h2><p>
</p><p>
அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு. பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p> 

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும், இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcf8919-d198-4129-bf5a-bf0fdbd1a49a/26-6a78447338a73.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><p> தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. </p><p>

2017இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.</p><p> அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார்.</p><h2>சூழலியல் சுற்றுலா மையம்</h2><p>ஐரோப்பிய பொருளாதாரச் சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும்.</p><p>பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1355657c-3b4f-4115-82f7-080a7d27b1e2/26-6a7844749b3ab.webp' /></p><p>

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p>"முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.</p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், றீச்ஷா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீடு அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்</h2><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. </p><p>

அதுமட்டுமன்றி, 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc5c108-6358-4d22-a7a1-4ff0f83686d7/26-6a784473e150d.webp' /></p><p> </p><p>

ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியான முறையில் சமூகமயமாக்கப்படாமல், ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும், தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார்.</p><p> 

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p> 

வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் பாஸ்கரன் கந்தையா.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டைச் சுத்தம் செய்த போது மீட்கப்பட்ட இராணுவ அங்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-uniform-recovered-in-jaffna-house-1786269999"></link>
            <id>https://ibctamil.com/article/army-uniform-recovered-in-jaffna-house-1786269999</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம்
செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம்
செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் மருதங்கேணி காவல்
நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்பின்னர் அங்கு சென்ற மருதங்கேணி காவல்துறையினர் குறித்த அது தொடர்பில் ஆய்வு
செய்துள்ளனர்.</p><p></p><h2>அழிப்பதற்குரிய நடவடிக்கை</h2><p>இந்தநிலையில் இது இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்திருக்கும் அங்கி
என்றும், அதில் நீண்ட நாள் பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதையும்
கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8135172f-6fd8-4ae7-8486-dc80e741d5ae/26-6a78560b4a9c7.webp' /></p><p>இதனையடுத்து நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று குறித்த பொருளை
அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்பு! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severed-human-head-recovered-1786270191"></link>
            <id>https://ibctamil.com/article/severed-human-head-recovered-1786270191</id>
            <summary type="text">
எல்ல - வெல்லவாய வீதியில் உள்ள வெல்லவாய காவல்துறை பிரிவின் மூன்றாம் கட்டை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எல்ல - வெல்லவாய வீதியில் உள்ள வெல்லவாய காவல்துறை பிரிவின் மூன்றாம் கட்டை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வீதி அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் இந்த மனிதத் தலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், இதுவரை அந்தத் தலை குறித்து எந்தவொரு தகவலும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515c2155-a2ae-41d0-be8a-76f7ef754249/26-6a78564e2e0df.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், குறித்த விடயம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-09T10:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் காட்டுக்குள் வீழ்ந்து தீப்பிடித்த உலங்கு வானூர்தி : பயணித்த சுற்றுலா பயணிகளுக்க நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-killed-in-brazil-helicopter-crash-1786270838"></link>
            <id>https://ibctamil.com/article/four-killed-in-brazil-helicopter-crash-1786270838</id>
            <summary type="text">சுற்றுலாப் பயணிகளுக்கு விமானச் சேவைகளை வழங்கும் பிரேசிலிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாப் பயணிகளுக்கு விமானச் சேவைகளை வழங்கும் பிரேசிலிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>விமானி உட்பட நால்வர் உயிரிழப்பு</h2><p>&nbsp;இந்த விபத்தில் விமானி மற்றும் உடன் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fce521eb-8f19-451b-bb26-21c461036cb6/26-6a7854786b1a2.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனையைத் துன்புறுத்திய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-harassing-a-cat-1786269318"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-harassing-a-cat-1786269318</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) அளித்த புகாரைத் தொடர்ந்து, தலாத்துஓயா காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>முறைப்பாடு கிடைத்த சிறிது நேரத்தில் கைது</h2><p>முறைப்பாடு கிடைக்கப்பெற்ற குறுகிய நேரத்திற்குள் அதுல்கம பகுதியில் வைத்து 18 மற்றும் 19 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bc3d9fe-f66b-4d60-866a-f6819929aee2/26-6a784e88c7fdf.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்களின் தகவலின்படி, இச்சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>காவல்துறையினர்&nbsp;மேலதிக விசாரணை</h2><p>சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவையின் 411 ஆம் பிரிவு, காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 63(a) பிரிவு மற்றும் விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b706079-1b48-4a6e-bdde-ce0af1856b18/26-6a784e8812b0e.webp' /></p><p>
</p><p>
மேலதிக விசாரணைகளைத் தலாத்துஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:55:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இருந்து யாழிற்கு வரவுள்ள அதிசொகுசு பயணிகள் கப்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-cruise-ship-to-arrive-sri-lanka-from-india-1786267856"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-cruise-ship-to-arrive-sri-lanka-from-india-1786267856</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு
வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு
வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள்
காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன்
தெரிவித்துள்ளார்.</p><h2>சுற்றுலாத் தலங்கள்&nbsp;</h2><p>
</p><p>
மேலும் இந்த கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலாத் தலங்கள்
என்பவற்றுக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf86e58-5831-4fd8-b76c-20b24d89de46/26-6a784bae31ae3.webp' /></p><p>பின்னர் மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி
செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்மை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-results-date-1786264835"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-results-date-1786264835</id>
            <summary type="text">


ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.இதில் பரீட்சைக்குத் தோற்ற 294,089 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சை</h2><p>
</p><p>
இந்த நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை தொடங்கி செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a07731-81ab-4051-94bf-765b8e2e2e5b/26-6a78409a42dff.webp' /></p><p>
 இந்த ஆண்டு பரீட்சையில் மொத்தம் 372,310 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
</p><p>
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு வருவதற்கு முன்னதாக, தங்களது அனுமதி அட்டைகளில் கையொப்பங்களைச் சான்றளித்து எடுத்து வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T08:56:06+00:00</updated>
        </entry>
    </feed>
