<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T16:50:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுப் பெருவிழா ; தமிழ்க் கூட்டு உளவியல் ; மாகாண சபைத் தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-1786891993"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-1786891993</id>
            <summary type="text">தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்குசெய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை முதலாவது நாளிலேயே இடைநிறுத்தப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் சிறிய அளவில் உணவு பெரு விழாக்கள் ஆங்காங்கே நடந்திருக்கின்றன.ஆனால் ரீச்சாவின் உணவுப் பெருவிழா ஒப்பீட்டளவில் பிரமாண்டமானது.</p><h2>தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா</h2><p>உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து எழுபதுக்கும் குறையாத சமையல் கலை வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.நூற்றுக்கணக்கான வகை உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.முன்பதிவுகளின் அடிப்படையில் 5000 பேர் வரை வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் முன்பதிவு இல்லாமலேயே மொத்தம் 15000த்துக்கு அதிகமானவர்கள் அந்த இடத்தில் குவிந்திருக்கிறார்கள்.நிலைமையை ரீச்சா நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைத்தான் பின்வந்த செய்திகள் நிரூபித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f362475-1b35-455d-96f3-cd6ba978e6fc/26-6a81dfdace7fe.webp' /></p><p>தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா ஏன் முதலாவது நாளுடன் நிறுத்தப்பட்டது?அதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம்.முதலாவது காரணம்,ரீச்சா நிறுவனத்தின் முகாமைத்துவக் கொள்ளளவில் காணப்பட்ட போதாமைகள்.இரண்டாவது காரணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடமும் அதன் விளைவுகளும்.</p><h2>கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்</h2><p>முதலாவது காரணத்தை சிறிது விரிவாகப் பார்க்கலாம்.எதிர்பார்த்ததைவிட அதிக தொகையினர் வந்தபோது அவர்களைக் கையாள்வதற்கு ரீச்சாவிடம் பொருத்தமான ஏற்பாடுகள் இருக்கவில்லை.அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுப்பதற்காக மூன்று நாள் விழாவை முதலாவது நாளுடன் நிறுத்த வேண்டியதாயிற்று.அங்கே அவ்வளவு தொகை மக்கள் கூடியதை தமிழ் கூட்டு உளவியலின் ஒரு குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17adc42a-6625-4a83-bb60-dd6769a9ddd4/26-6a81deab3ea46.webp' /></p><p>தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள்.கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்கள்.அது உணவு விழாவாக இருக்கட்டும்,ஊர்க் கோவில் திருவிழாவாக இருக்கட்டும்,பெருங்கோவில் திருவிழாக்களாக இருக்கட்டும், அல்லது பெருங் கடைகளின் திறப்பு விழாக்களாக இருக்கட்டும்,எதுவானாலும் அங்கே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள்.</p><p>&nbsp; ஆனால் அதை வைத்துக்கொண்டு ரீச்சாவுக்குப் போன மக்கள் ஏன் தையிட்டிக்கு வரவில்லை ? நோ-லிமிட்டுக்குப் போன மக்கள் ஏன் பலாலிக்கோ மயிலிட்டிக்கோ போராட வரவில்லை? என்று கேட்டு மக்களைக் குறை கூறுவது தோல்வியுறும் ஒரு சமூகத்தின் இயல்புதான்.</p><h2>சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள்&nbsp;</h2><p>மாறாக ரீச்சாவுக்கும் நல்லூருக்கும் திரளும் மக்களை எப்படி தையிட்டிக்குக் கொண்டு வருவது என்று சிந்தித்து உழைப்பதுதான் பெருந்திரள் அரசியலை முன்னெடுக்க விரும்பும் வெற்றிபெற்ற சமூகம் ஒன்றின் இயல்பாக இருக்கவேண்டும்.முதலாளிகள் தங்களுடைய வணிக இலக்குகளை நோக்கி விடாது உழைக்கலாம் என்றால் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளை நோக்கி உழைக்கத்தானே வேண்டும்? சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள் என்று ரீல்ஸ்களின் காலத்திலும் நம்பிக்கொண்டிருக்கலாமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe7769e0-d590-44ad-9aa7-44014f9b87e0/26-6a81deac24b2b.webp' /></p><p>தமிழ்மக்கள் தமது தேசிய அரசியலின் மீது உணர்திறன் குறைந்தவர்களாக மாறி வருகிறார்களா? ஒரு பகுதியினர் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள்.ஒரு தலைமுறையின் கைபேசி செயலிகளுக்குள்,அவர்கள் விரும்பிப் பார்க்கும் ரீல்ஸ்களுக்குள் தமிழ்த்தேசிய உரையாடல் இல்லை.ஒடுக்குமுறையும் ஆக்கிரமிப்பும் நேரடியானதாக இல்லாமல் மறைமுகமானதாக திணைக்களங்களின் வழி முன்னெடுக்கப்படுவதாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில்,தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியலின் மீது தமிழ் மக்களை உணர்திறன் மிக்கவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு யாருடையது? தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் அது தமிழ் அரசியல்வாதிகளின் தோல்விதான்.</p><h2>பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்ட&nbsp; ரீச்சா முதலாளி</h2><p>&nbsp;கொண்டாட்ட மனோநிலையோடு இருக்கும் மக்கள் உணவு விழாவை நோக்கி குவிந்தார்கள்.அவர்களைக் கட்டுப்படுத்த ரீச்சாவால் முடியவில்லை.ஆனாலும் ரீச்சா முதலாளி பாஸ்கரன் அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.முன்பதிவு செய்தும் உணவு கிடைக்காதவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.</p><p><iframe width="538" height="956" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>இரண்டாவது காரணம்,தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்.அதனால் தமிழ்மக்கள் ஒருபுறம் அரசியல்நீக்கம் செய்யப்படுகிறார்கள்.இன்னொருபுறம் ஒரு சமூகமாக,ஒரு தேசமாக,ஒரு கிராமமாக,ஏன் சில சமயங்களில் ஒரு குடும்பமாகக்கூட திரள முடியாத நிலைமைகள் வளர்ந்து வருகின்றன.</p><p>தமிழ் மக்கள் யாரையும் நம்பாத மக்களாக;எல்லோரையும் எல்லாவற்றையும் சந்தேகிக்கும் மக்களாக;மற்றவர்கள் மீது பிழை கண்டுபிடிக்கின்ற எரிச்சலுற்ற குறைகூறிகளாக;வெறுப்பர்களை விடுப்புணர்வோடு ரசிக்கின்ற மக்களாக,சமூக ஊடக வலைத்தளங்களில் நோய்க்கூறான,நஞ்சான விவாதங்களில் ஈடுபடும் மக்களாக மாறிவருகிறார்கள்.ஒருவர் மற்றவரை நம்பாமை என்பது அதன் வளர்ச்சிக் கட்டத்தில் தன்னைத்தானே நம்பாமையில் வந்து முடிகிறது.தமிழ்ச் சமூகம் ஏறக்குறைய அப்படி ஒரு நிலையை நோக்கித்தான் செல்கிறதா?</p><p>சில தினங்களுக்கு முன் ஆளுநர் செயலகத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் 80 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் பேருக்கு 30பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.</p><h2>&nbsp;இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறும்&nbsp;புலம்பெயர்ந்த தமிழர்கள் </h2><p>&nbsp;இந்தப் புள்ளி விபரங்கள் மட்டுமல்ல இதைவிட ஆபத்தான புள்ளி விபரங்கள் உண்டு. மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்களோடும் ஜம்பர்களோடும் வித்தியாசமான காலணிகளோடும் உள்ளூர் வீதிகளில் நடந்து திரியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறுகிறார்கள்.முதலாவது பட்டப்படிப்பை முடித்த பலரும் இரண்டாவது பட்டப்படிப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புலம்பெயர விரும்புகிறார்கள்.மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை இளையவர்களை அள்ளிக்கொண்டு போய்விடுமா?தமிழ்க் கட்சிகளால் அவர்களைத் தமது தாய் நிலத்தில் வேர் கொண்டு பூத்துக் காய்க்குமாறு ஊக்கப்படுத்த முடியுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b95d06-b68d-44d6-8fe8-ccf0321cb302/26-6a81dbe71967f.webp' /></p><p>&nbsp; ஒருபுறம் கோவில்களில் சுவாமி தூக்க இளையோர் இல்லை.இன்னொருபுறம் அதே கோவில்களில் பின்னிரவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் மேடையின் முன் வரிசையில் நின்று ஆடும் இளையவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?</p><p>தேசியவாத அரசியல் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகத் திரட்டுவதுதான்.ஆனால் நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளில் அநேகர் மக்களை மட்டுமல்ல தமது சொந்தக் கட்சிகளையே திரட்ட முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள்.</p><p>தமிழ் மக்களின் அரசியல்,சமூகப் பொருளாதார,பண்பாட்டு விடயங்களில் யார் சொல்வதை தமிழ்மக்கள் கேட்பார்கள்? யாரை தமது முன் உதாரணமாகப் பார்க்கிறார்கள்?இந்தத் தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக தமிழ் மக்களின் அரசியல்,சமூகப்பொருளாதார வாழ்வைத் தீர்மானிக்கும் விவகாரங்களில் தமிழ்மக்கள் முடிவெடுக்க முடியாத மக்களாகவும் சமூக ஊடக வலைத்தளங்களின் பெருமளவுக்கு பொழுதுபோக்கான,நஞ்சான விவாதங்களால் திசைதிருப்பப்படும் மக்களாக,யாரையும் நம்பாத மக்களாக,ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே நம்பாத மக்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம்</h2><p>ரீச்சா ஒரு வணிக வளாகம்.அதற்கென்று வணிக இலக்குகள் உண்டு. வணிகர்கள் வணிக இலக்குகளை முன்வைத்து உழைப்பார்கள்.ஆனால் அரசற்ற தமிழ் மக்கள் தமது தேசிய முதலாளிகளை எப்படி அணுக வேண்டும்? தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்துதான் அணுக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9957698e-0b97-4582-80a9-ddc5741352c7/26-6a81dbe66528c.webp' /></p><p>ரீச்சா முதலாளி மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம் கடந்த சில மாதங்களாக சமூக ஊடக வலைத்தளச் சூழலில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.ரீச்சா முதலாளிக்குச் சொந்தமான ஊடகங்கள் ஒரு பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களை குவிமையப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு.இதனால் ரீச்சாவின் உணவுப் பெரு விழாவின் மீதான விமர்சனங்களில் ஒரு பகுதிக்கு அரசியல் பரிமாணம் உண்டு.</p><p>ரீச்சா முதலாளி ஒரு முகநூல் வாசிதான்.அடிக்கடி நேரலையில் வருபவர்தான்.அடிக்கடி கண்முன் தோன்றி கொண்டேயிருப்பார்.அது அவருடைய பாணி.அவருடைய விருப்பம்.ஆனால் அடிக்கடி கண்முன் தோன்றும்போது,அது அவர் மீது எரிச்சல் கொண்டவர்களை அடிக்கடி கோபப்படுத்தும்;அடிக்கடி சினக்கச் செய்யும்;அவர்கள் அடிக்கடி எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.எனினும் தன் மீது கொட்டப்படும் விமர்சனங்களையும் வெறுப்பையும் செமித்துக்கொண்டு அவர் தொடர்ந்து நேரலையில் வருகிறார்.</p><p>அவர் ஒரு நேரலைவாசி,எதிர்காலத்தில் தேர்தல் அரசியலில் குதிக்கக்கூடும் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால்,முதலாவதாகவும் முக்கியமானதாகவும் தமிழ்த்தேசிய நோக்குநிலையில் அவர் ஒரு தேசிய முதலாளி;தமிழ்த் தேசிய முதலாளி.</p><p>எல்லாத் தேசிய முதலாளிகளும் தேச நிர்மாணத்தின் பிரிக்கப்படவியலாத பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும்தான்.அதை நடைமுறை வார்த்தைகளில் சொன்னால்,தேசிய முதலாளிகளை,நிறுவன உருவாக்கிகளைக் கட்டியெழுப்புவதும்தான்.</p><h2>செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை</h2><p>&nbsp;தமிழ்மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு சிந்திப்பார்களாக இருந்தால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நிறுவனங்களை உருவாக்கும் கெட்டிக்காரர்களை எப்படித் தேச நிர்மானத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிகளாக மாற்றலாம் என்றுதான் சிந்திப்பார்கள்.ஒரு சமூகத்துக்குள் உருவாகும் நிறுவன உருவாக்கிகள் எல்லாருமே தேசியப் பண்பு மிக்கவர்களாக அல்லது தேசிய விழிப்பைக் கொண்டவர்களாக அல்லது தெளிவான விளக்கமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றில்லை.அவர்கள் தங்கள் துறைசார்ந்து கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.அந்தத் தேசிய ஆற்றலை எப்படி ஒரு தேசிய வளமாக மாற்றலாம்? தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளலாம்?என்று சிந்திப்பதுதான் அரசற்ற தமிழ் மக்களுக்குப் புத்திசாலித்தனமானது; நீண்டகால நோக்கு நிலையில் தீர்க்கதரிசனமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/758d2a2c-5157-4dc6-b5ec-921b466d1236/26-6a81dbe554f2f.webp' /></p><p>ஆனால் இதுதொடர்பில் தேசத்தைத் திரட்டும் நோக்குநிலையில் இருந்து முதலாளிகளையும் நிறுவன உருவாக்கிகளையும் அணுகுவதற்கு மையமான ஒரு பொதுவான கட்டமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.இதுதான் பிரச்சினை.தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?</p><p>தேசிய பண்புமிக்க பெரு முதலாளிகளை எப்படித் தேசிய பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கும் தீர்க்கதரிசனம்மிக்க தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில்;சமூகத்தை ஒரு பொதுக் கருத்தை நோக்கி;பொதுவான நியாயங்களை நோக்கி;பொதுவான சமூகப்பொருளாதார,கலை பண்பாட்டு இலட்சியங்களை நோக்கி வழிநடத்தவல்ல தலைவர்களோ அமைப்புக்களும் இல்லாத ஒரு வெற்றிடத்தில்,தமிழ்மக்கள் தங்களுக்குள் தாங்களே மோதிக்கொண்டு;தங்களைத் தாங்களே திட்டிக்கொண்டு;தங்களைத் தாங்களே நம்பாமல்;தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டிருக்கும்போது,செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டி விட்டது.</p><p>நன்றி - நிலாந்தன்</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T16:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவில் பெரும் தாக்குதலை நடத்திய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530</id>
            <summary type="text">&amp;nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

இந்தத் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தாக்குதல் நேற்று இரவு (15) முதல் இன்று காலை (16) 6.30 மணி வரை நடைபெற்றது என்றும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு 201 ஆளில்லா விமானங்களை அழித்தது என்றும் அவர் கூறினார்.</p><h2>மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல்</h2><p>மொஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec543-84ad-41e5-9c6e-ec7495c95b89/26-6a81b5e30aa48.webp' /></p><p> </p><p>ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மூன்று நகரங்கள் மற்றும் ஒன்பது மாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரஷ்ய இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827</id>
            <summary type="text">குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த படகானது இன்று பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகாட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.</p><h2>இடைநடுவில் கவிழ்ந்தது படகு</h2><p>இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef7245b-301e-4f99-832c-17dc4c3c146f/26-6a81ca4d38c15.webp' /></p><p>

இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினர் மற்றும்,
கடற்றொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப்
பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​</p><p>இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் நாட்டப்பட்டது சேவல் கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
</p><h2>பக்தர்களின் கவனத்தை ஈர்த்த&nbsp;நிகழ்வு </h2><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19962acf-edd9-4852-90ad-1e0d5d881ad7/26-6a81c288c90f0.webp' /></p><p>
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-rider-kills-father-and-son-1786886143"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-rider-kills-father-and-son-1786886143</id>
            <summary type="text">&amp;nbsp;மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்பிட்டிய காவல்தறையினர் தெரிவித்தனர்
</p><p>
மகனுடன் தேவையான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பு</h2><p>அவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாததால், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கல்பிட்டிய காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09fddf91-e2a2-4a07-94a6-b6c484061920/26-6a81bd818c3db.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர்கள் மீனவரான துஷ்மந்த ரோஹன மற்றும் அவரது ஆறு வயது பாடசாலை மாணவனான ரவீன் கனிஷ்கா ஆவர். அந்தச் சிறுவன் கந்தகுலியாவில் உள்ள புனித செபாஸ்டியன் பாடசாலையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T13:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கொடியேற்றம் : இன்று கொண்டு வரப்பட்டது நல்லூரான் கொடிச்சீலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kovil-festivel-1786882214"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kovil-festivel-1786882214</id>
            <summary type="text">இன்று(16) காலை 10 மணியளவில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப்
பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று(16) காலை 10 மணியளவில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப்
பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி,
கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து எடுத்துவரப்பட்டது.</p><p>கல்வியன்காட்டில் உள்ள இல்லத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட
பின்னர், கொடிச்சீலை பக்திபூர்வமாக தலையில் சுமந்து சட்டநாதர் வீதியில்
அமைந்துள்ள வேல் முருகன் மடத்திற்கு கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது</p><h2>&nbsp;பாரம்பரியத்தின் அழகிய அடையாளம்</h2><p>
</p><p>அங்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாரம்பரிய முறையில்
சிறிய தேரில் கொடிச்சீலை வைத்து, பக்தர்கள் புடைசூழ நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922b2f8-14b0-4caa-a306-76954197a5e4/26-6a81a8a8eeed8.webp' /></p><p>
தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் இந்த மரபு, நல்லூர் கந்தசுவாமி ஆலய
மகோற்சவத்துடன் இணைந்துள்ள பண்பாட்டு, ஆன்மிக மற்றும் பாரம்பரியத்தின் அழகிய
அடையாளமாக திகழ்கிறது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனானுக்கான ஹிஸ்புல்லா தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-army-killed-senior-hezbollah-commander-1786880385"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-army-killed-senior-hezbollah-commander-1786880385</id>
            <summary type="text">&amp;nbsp;தெற்கு லெபனானின் அன்சார் மாநகராட்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில், லெபனானுக்கான ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான அபு ஹசன் அலாவைக் கொன்றதாக இஸ்ரேலிய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெற்கு லெபனானின் அன்சார் மாநகராட்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில், லெபனானுக்கான ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான அபு ஹசன் அலாவைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
</p><p>
 அலா "ஹிஸ்புல்லாவின் 'பட்டர் யூனிட்'('Badder Unit'" )-இல் ஒரு மூத்த தளபதியாக இருந்தார்" என்றும், ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைமையகத்தை குறிவைத்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்றும், "பாதுகாப்பு வலயத்தில்" இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சமூக ஊடக தளமான X-இல் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
</p><h2>ஹிஸ்புல்லா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை</h2><p>இஸ்ரேலிய அறிக்கை குறித்து ஹிஸ்புல்லா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b869986-13a8-44a6-a4c6-31509212d108/26-6a81a49b86968.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், எல்லையருகே ஹிஸ்புல்லாவால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் படுகாயமடைந்ததாகக் கூறியது.</p><p></p><h2>லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்</h2><p>
</p><p>
லெபனான் நிலப்பரப்பிலிருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறுவதற்கும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கும் வழிவகுக்கும் பெய்ரூட்-டெல் அவிவ் கட்டமைப்பு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல், லெபனானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f9efc6e-eb42-4088-82c1-358cf78d4a2e/26-6a81a49ad1b96.webp' /></p><p>
</p><p>
பல மாதப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், மார்ச் 2 அன்று தொடங்கிய லெபனானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்கிறது. </p><p>லெபனான் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கைகளில் குறைந்தது 4,335 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 12,277 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:53:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761"></link>
            <id>https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்
</p><p>
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளை கொக்குளாய் காவல்துறையின் சோதனை
நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5
பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><h2>கொக்குளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு</h2><p>குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களுடன் கொக்குளாய் காவல்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37430b80-5e69-497a-9f92-a1ce62e33964/26-6a81875d50e49.webp' /></p><p>
</p><p>
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் காவல்துறையினர்
ஈடுபட்டுள்ளார்கள்.
</p><p>
குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக
தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607"></link>
            <id>https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட
பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.</p><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை
உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை
மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி
கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு
மூவரும் சேர்ந்து கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தினர் </p><h2>&nbsp;வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை</h2><p>பின்னர் வீட்டில் மறைத்து
வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15
பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி
மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0287ae47-dde9-4257-990e-b27af8af54f6/26-6a818ed895996.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமை காவல் நிலையத்தின்
குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட
காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
</p><p>
இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35
வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான
களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின்
பேரில் கைது செய்தனர்.</p><p></p><h2>காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு</h2><p> அதனைத்தொடர்ந்து நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப்
புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு
உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன
மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d963580-b6c6-419a-aad8-e2e1804647e8/26-6a818ed969242.webp' /></p><p>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை
வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா 
வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க,
பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் காவல்துறை சார்ஜன்டுகளான சந்தன
(16446), கேரத் (14692), பிரியங்கர(47358) உபாலி(60954)
சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923"></link>
            <id>https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ குறித்த
வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட
இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்காவினால் கையளிக்கப்பட்டது.</p><h2>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ சிப்பாய்க்கே வீடு</h2><p>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லான்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா
என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6dd1c2-1972-4a9b-88c4-d9a77eeef14b/26-6a819bce23dfd.webp' /></p><p>
</p><p>
இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த
வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட
கட்டளைத் தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T11:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632"></link>
            <id>https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632</id>
            <summary type="text">கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல்
துஷ்யந்தன் தலைமையில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்று (16/08/2026) காலை
10:30 மணியளவில் இடம்பெற்றது.
</p><p>
இதில் ஆறுமுகம் சபைஸ்வரன் அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம்
செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>நினைவுரைகள்</h2><p>
தொடர்ந்து நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளரும், யாழ்ப்பாணம் ஊடக மையத்தின்
தொடக்குனருமான தயாபரன், முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பிருந்தாபன்
பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி., சி.த.காண்டீபன். உட்பட ஊடகவியலாளர்
ஆறுமுகம் சபேஸ்வரனின் நண்பர்கள் நிகழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5bcf41f-e37e-44a8-9a49-dfd6df00a61a/26-6a8196c2d0871.webp' /></p><p>
</p><p>
இன்றைய நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள்,
மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,
பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T10:54:02+00:00</updated>
        </entry>
    </feed>
