<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-14T19:08:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலஸ்தீன வீடுகளை ஆக்கிரமித்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்: பிரான்ஸ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836"></link>
            <id>https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836</id>
            <summary type="text">குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரான்ஸ் அரசு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>குடியேற்றவாசிகளின் தாக்குதல்</h2><p> 

மேலும், இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது இரு-நாட்டுத் தீர்வுக்கு (Two-state solution) பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Israel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Israel</a>/ <a href="https://x.com/hashtag/Palestine?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Palestine</a> | Situation in the West Bank <a href="https://t.co/DVjssdJ4vw">pic.twitter.com/DVjssdJ4vw</a></p>&mdash; France Diplomacy 🇫🇷🇪🇺 (@francediplo_EN) <a href="https://x.com/francediplo_EN/status/2088277900462084562?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மறுபுறம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா பகுதியில் தீவிரமடைந்துள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
</p><p>
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) கூட, தாக்குதல்களில் ஈடுபட்ட அந்தக் குடியேற்றவாசிகளை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் தொடரும் கப்பல் போக்குவரத்து முடக்கம்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-traffic-plummets-in-strait-of-hormuz-1786723936"></link>
            <id>https://ibctamil.com/article/ship-traffic-plummets-in-strait-of-hormuz-1786723936</id>
            <summary type="text">வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (Kpler) நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் குறித்த இரண்டு கப்பல்களில் ஒன்று ஈரானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த தானியக் கப்பல், மற்றொன்று எதிர் திசையில் சென்ற காலியான உலர் சரக்குக் கப்பல் (Dry bulk ship) என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தினசரி எண்ணிக்கை</h2><p>இதுதவிர, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் செல்லும் காலியான டேங்கர் கப்பல் ஒன்று நீரிணை வழியே பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன. </p><p>

வெள்ளிக்கிழமை அன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எந்தவொரு கப்பல்களின் பயணமும் பதிவாகவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d60677-0ab3-4f08-b900-70249bc48d01/26-6a7f4c571072a.webp' /></p><p>அத்தோடு வியாழக்கிழமையன்று 9 கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன.</p><p>இது புதன்கிழமை பதிவான 5 கப்பல்களை விட அதிகம் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி தினசரி எண்ணிக்கையான 12-ஐ விடக் குறைவானதாகும்.&nbsp;&nbsp;</p><p> </p><p></p><h2>கண்காணிப்புக் கருவி</h2><p>சில கப்பல்கள் தங்களின் கண்காணிப்புக் கருவிகளை (Transponders) அணைத்துவிட்டு இரகசியமாகப் பயணிக்கக்கூடும் என்ற போதிலும், கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்பு வரை தினசரி 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற நிலமையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be043fd8-a9d9-4672-9213-958efcbd5bb6/26-6a7f4c57b5296.webp' /></p><p>
இது குறித்து வெரிஸ்க் மேப்பிள்கிராஃப்ட் (Verisk Maplecroft) அபாய உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு பிராந்திய முதன்மை பகுப்பாய்வாளர் டார்ப்ஜோர்ன் சோல்வெட் கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அதேவேளையில் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனே பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டிற்கான மிக முக்கிய பலமாக (Leverage) விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீயை ஏற்படுத்திய 474 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642"></link>
            <id>https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642</id>
            <summary type="text">பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>பிரான்ஸின் தென்மேற்கு பகுதி</h2><p> </p><p>

பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, ''ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad473ad-c651-4478-834a-846531dc6467/26-6a7f21e533953.webp' /></p><p> </p><p>அந்தத் தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லாண்டெஸ் (Landes) பிராந்தியத்தில் புதிய காட்டுத்தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லுக்லோன் (Luglon) பகுதியில் 525க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633"></link>
            <id>https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.</p><p>

போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
</p><p>இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மலர்
மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.</p><p></p><h2>பல்வேறு படுகொலைச் சம்பவங்கள்</h2><p>

இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2f01077-8210-4b48-8c65-0a4c6ef68569/26-6a7f1b334832f.webp' /></p><p> </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மனு கையளிக்கப்படவுள்ளது.</p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
</p><p>
நீதியைத் தேடும் இந்தப் பயணம் எந்தவொரு தனிப்பட்ட தரப்பினருக்கோ அல்லது
அமைப்புக்கோ மாத்திரம் உரித்தானதல்ல என வலியுறுத்தும் ஏற்பாட்டாளர்கள், தமிழ்
அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள்,
மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து
தரப்பினரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து இந்த நீதிக்கான பயணத்தில்
பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><h2>பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் போராட்டம் </h2><p>நீதிக்கான ஓலம் என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c477f511-ec27-43ed-b19c-a43ba5c86a26/26-6a7f1b33f08eb.webp' /></p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்குள் ஊடுருவிய அமெரிக்க ட்ரோன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123"></link>
            <id>https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123</id>
            <summary type="text">ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஐ.ஆர்.ஜி.சி வான்வெளி படையால் இயக்கப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு குறித்த ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம், தென்மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு மேல் பறந்த மற்றொரு அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை தனது விண்வெளிப் படை சுட்டு வீழ்த்தியதாக ஐ.ஆர்.ஜி.சி. முன்னதாக அறிவித்தது.</p><p></p><h2>ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c5b566-ba3d-4830-b406-98aaf733fb7f/26-6a7f27adbe2d0.webp' /></p><p>

எனினும் இந்த செய்தி குறித்து அமெரிக்கா எந்த வித தகவலையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/106th-day-of-excavation-of-the-chemmani-grave-1786715336"></link>
            <id>https://ibctamil.com/article/106th-day-of-excavation-of-the-chemmani-grave-1786715336</id>
            <summary type="text">

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளன.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளன.
</p><p>
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>நீதிமன்ற அனுமதி</h2><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 52ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/040acd10-853d-42bc-b513-c20a57e834f6/26-6a7f2000a4ee8.webp' /></p><p>
</p><p>
அத்துடன் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364b1fe-fd03-457b-ba4c-a511d8e29b91/26-6a7f200169019.webp' /></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி மீதான 50% கூடுதல் கட்டணம்! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-extended-vehicle-import-surcharge-1786713109"></link>
            <id>https://ibctamil.com/article/govt-extended-vehicle-import-surcharge-1786713109</id>
            <summary type="text">
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைய, இந்த நீட்டிப்பு ஓகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. </p><p>

இதன்படி, தொடர்புடைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு, பொது மற்றும் முன்னுரிமை ஆகிய இரு அடிப்படைகளின் கீழும் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரியின் மீது இந்த 50% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.</p><p></p><h2>விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p>
</p><p>
பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனப் பிரிவுகள் இந்த அட்டவணையில் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799652ae-9463-4016-bfb9-bd840e3da0e9/26-6a7f193dbdf4c.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், 2026 மே 15 அன்று அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு பொதுவாக இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. </p><p>

ஆனால், அத்தகைய கடன் கடிதங்களில் வாகன எண்கள், அடையாள எண்கள், விவரங்கள், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் அல்லது காலாவதியாகும் திகதிகள் போன்ற விவரங்கள் பின்னர் திருத்தப்பட்டிருந்தால், அவற்றுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T13:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அவர்களது எதிர்வாத நிலைப்பாடுகள் நேற்று (13) நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து இன்று (14) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒவ்வொரு பிரதிவாதியும் எதிர்வரும் விசாரணைகளில் கடைப்பிடிக்கவுள்ள தமது எதிர்வாத நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><h2>பிரதிவாதிகளின் நிலைப்பாடு</h2><p>

அதன்படி, சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து தமது வாக்குமூலத்தை வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23247fe4-025f-46ec-99c7-ad94a1c00b43/26-6a7ef2d3c0bd1.webp' /></p><p> </p><p>மேலும் சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், ஆனால் தமது தரப்பில் வேறு சாட்சிகளை அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><ol><li>

முதலாம் பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இரண்டாம் பிரதிவாதியான மொஹமட் சரீபுத் ஆதம் லெப்பை (ஹஜ்ஜி மாமா) குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
மூன்றாம் பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

நான்காம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் ஐந்தாம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</li><li>

ஆறாம் பிரதிவாதியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் அமைதியாக இருப்பதாகவும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
ஏழாம் பிரதிவாதியான மொஹமட் மன்சூர் மொஹமட் சனூஸ்தீன் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
எட்டாம் பிரதிவாதியான அப்துல் மனாஃப் மொஹமட் ஃபர்தௌஸ் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளார்.
</li><li>
ஒன்பதாம் பிரதிவாதியான மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் மற்றும் 10ஆம் பிரதிவாதியான அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். </li><li>எனினும், 10ஆம் பிரதிவாதி சார்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
11ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
12ஆம் பிரதிவாதியான மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் மற்றும் 13ஆம் பிரதிவாதியான மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

14ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

15ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளும் அழைக்கப்படவுள்ளனர்.
</li><li>
16ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இதற்கிடையில், 18ஆம் பிரதிவாதி உயிரிழந்துள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
19ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li> 20ஆம் பிரதிவாதி வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
21 மற்றும் 22ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

23ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
24 மற்றும் 25ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்களது தரப்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</li></ol><p></p><h2>எதிர்வாத நிலைப்பாடு </h2><p>
இவ்வாறு ஒவ்வொரு பிரதிவாதியும் தமது எதிர்வாத நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையில், சிலர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன் மேலதிக சாட்சிகளையும் முன்வைக்கவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa1ded2-9de4-4d11-b0e0-da6e35fbd033/26-6a7ef2e9b3a63.webp' /></p><p> மற்றுமொரு தரப்பினர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பிரதிவாதிகளுக்கும் அவர்களுக்குரிய அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்வாத விசாரணையின்போது கடைப்பிடிக்கவுள்ள நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான இந்த விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கின் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினசரி நடைபெறவுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T13:13:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் இதுவரை அனுபவித்திராத நடவடிக்கை! மத்தியகிழக்கை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்க நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/operation-unexpected-us-action-on-iran-1786711947"></link>
            <id>https://ibctamil.com/article/operation-unexpected-us-action-on-iran-1786711947</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

உலகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.</p><p>

உலகம் இதுவரை அனுபவித்திராத வகையிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை ஈரான் எதிர்கொள்ளும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், </p><p></p><h2>மேலும் பல அறிவிப்புகள்</h2><p>

ஹோர்முஸ் நீரினை முற்றுகை தொடர்வதால், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதோ வெளியேறுவதோ முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ceadd00-5b72-4061-b50a-f5f78bca6a98/26-6a7f0f8e38231.webp' /></p><p>
</p><p>
அடுத்த வாரம் மேலும் பல அறிவிப்புகள் வெளிவரும்.காத்திருங்கள். 
ஏனெனில், ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தனிமைப்படுத்தலை விதிக்கும் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.
</p><p>
உலகம் இதுவரை கண்டிராத பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை ஆகியவற்றின் கலவையானது, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்" என்று பெசென்ட் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T13:12:33+00:00</updated>
        </entry>
    </feed>
