<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T10:51:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-sallay-s-writ-petition-consider-on-aug-25-1785233598"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-sallay-s-writ-petition-consider-on-aug-25-1785233598</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p>குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இம்மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிபதிகள் குழாம் உத்தரவு</h2><p> </p><p>

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c18273-80c5-40c8-8fdc-5e4ebdfab871/26-6a688708ee9ee.webp' /></p><p>இந்த நிலையில் அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-in-japan-tsunami-warning-1785230398"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-in-japan-tsunami-warning-1785230398</id>
            <summary type="text">ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (28) ச...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (28) செவ்வாய்க்கிழமை பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<br></p><p>நிலநடுக்கத்திற்குப் பிறகு, 1 மீற்றர் (3.28 அடி) உயர அலைக்கான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நிலநடுக்க எச்சரிக்கை</h2><p>ஜப்பானின் தெற்கு கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60999db0-2817-4c0c-9f7a-e54d8114e97a/26-6a687da28377c.webp' /></p><p>நிலநடுக்கம் ஏற்பட்ட குறித்த பகுதியில்&nbsp; (6758.T) மற்றும் டி.எஸ்.எம்.சி (2330.TW) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>நிலநடுக்கத்திற்குப் பிறகு, தனது செண்டாய் மற்றும் கென்காய் அணுமின் நிலையங்களில் எந்தவிதமான முறைகேடுகளும் பதிவாகவில்லை என்று கியூஷு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><br></p>&nbsp;</p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p></p>]]></content>
            <updated>2026-07-28T09:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு குற்றசாட்டில் 25 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-gem-mining-25-people-arrested-1785229608"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-gem-mining-25-people-arrested-1785229608</id>
            <summary type="text">ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான காவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான காவல்துறை பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர்.</p><p>இந்த குற்றச்சாட்டில்&nbsp;மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>இதன்போது சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 படகுகள் மற்றும் ஐந்து மோட்டார்கள் உட்பட, ரூ. 70 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இரத்தினக்கல் அகழ்வு உபகரணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு</h2><p>மேலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a74f4ab-9cae-45a7-88b3-7b0b188835b4/26-6a687cb917fc8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T09:56:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-youth-jailed-for-train-attack-in-australia-1785227744"></link>
            <id>https://ibctamil.com/article/sl-youth-jailed-for-train-attack-in-australia-1785227744</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar - 22) என்ற இளைஞருக்கே இவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar - 22) என்ற இளைஞருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது கண்ணாடிப் போத்தலால் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இச்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்காணிப்பு கேமரா</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரும் அவரது நண்பரான பேட்லி மாவினி ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/096cd039-e363-4ab5-b5b5-faf1deb94556/26-6a68778fb83e8.webp' /></p><p>
இச்சம்பவத்தின் காட்சிகள் தொடருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.
</p><p>
இந்தநிலையில் குறித்த வழக்கில் நண்பரான ஏற்கனவே பேட்லி மாவினிக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சரணீஸ் சிவகுமார் திங்கள்கிழமை கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p></p><h2>மன உளைச்சல்</h2><p>

தனியாகப் பயணித்த நபர் ஒருவரை அணுகிய இவ்விரு இளைஞர்களும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட நபர் தொடருந்தை விட்டு இறங்க முயன்றபோது கதவுகளை மூடி அவரை இழுத்துச் சென்று தடுத்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cffa15-8c10-40a3-9eee-2a4d1ba462dd/26-6a6877906799a.webp' /></p><p>பின்னர் அந்த நபரின் பையை பறிக்க முயன்ற போது, சரணீஸ் சிவகுமார் அவரது மண்டையில் கண்ணாடிப் போத்தலால் அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>
இந்த கொடூர சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தை விட்டே வெளியேறியுள்ளார்.</p><p></p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>

நீதிமன்றத்தில் தனது செயலைத் தற்காப்புக்காக (Self-defence) செய்ததாகச் சரணீஸ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும் அதனை முற்றாக நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்தா தேவைப்படும்போது உங்களைத் தற்காத்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது எனவும் ஆனால் ஒருவரின் தலையில் போத்தலால் அடிப்பது தற்காப்பு ஆகாது எனவும் இது நிரபராதி ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ce39eb-2a91-4c7d-8e84-560ebf52fe69/26-6a68778f06b50.webp' /></p><p>இக்குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் மட்டுமே என்பதால் சரணீஸுக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அவர் ஏற்கனவே 89 நாட்களைக் (சுமார் 3 மாதங்கள்) காவலில் கழித்துள்ளதால் எஞ்சிய காலத்தைக் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனைப் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-28T09:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவரவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/several-members-of-kavadi-dance-groups-arrested-1785224141"></link>
            <id>https://ibctamil.com/article/several-members-of-kavadi-dance-groups-arrested-1785224141</id>
            <summary type="text">தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த ஊர்வலத்தில் பங்கேற்ற காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த ஊர்வலத்தில் பங்கேற்ற காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 

இன்று காலை (28.07.2026) நடத்தப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையில் இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.</p><p>
 

ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹராவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக&nbsp;சுமார் 1,500 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&nbsp;</p><p></p><h2>காவடி நடனக் கலைஞர்கள் கைது</h2><p>
 

வருடாந்த ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்கள் பங்கேற்பது தொடர்பாக இரண்டு பாதாள உலகக் குற்றத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b684e2f0-5cf3-48e6-87fb-dd8f37948dba/26-6a68708ab5ca1.webp' /></p><p>இதன்போது ஆலயத்தின் ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து காவடி நடனக் குழுக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.</p><p>
 

பாதுகாப்பு குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்களின் பங்கேற்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பதில் காவல்துறை மா அதிபர் நேற்று முன்தினம் (26) மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரைத்திருந்தார்.
</p><p>எனினும், நேற்று (27) மாத்தறை மாவட்ட செயலகத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சுச் செயலாளர், பதில் காவல்துறைத் தலைவர் மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்டக் கலந்துரையாடலில், கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து காவடி நடனக் குழுக்களையும் இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
</p><p>
 

வருடாந்த ஊர்வலம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T09:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறி...! முல்லைத்தீவீல் போராட்டத்தில் குதித்த பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parents-protest-teacher-shortage-in-mullaittivu-1785226966"></link>
            <id>https://ibctamil.com/article/parents-protest-teacher-shortage-in-mullaittivu-1785226966</id>
            <summary type="text">முல்லைத்தீவீல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவீல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கடந்த 7 மாதங்களாக தரம் 3
மாணவர்களுக்கான ஆசிரியர் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதற்கு தீர்வு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஆசிரியர் பற்றாக்குறை</h2><p>குறித்த போராட்டத்தை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று (28-07-2026) முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e2b5808-32e9-4fb0-a1b3-9b6c3d47e777/26-6a6866d8398da.webp' /></p><p>முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3
வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும்
நிலையில், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் 
பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

தரம் 3 வகுப்பில் பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர்
இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>அதிகாரிகள் நடவடிக்கை</h2><p>உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் கல்வி
சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2022515-2ed5-4cca-9bd1-2460f5ab2188/26-6a6866d913d9e.webp' /></p><p>

பாடசாலையின் ஆசிரியர் இல்லா பிரச்சினை தொடர்பில் வலயக்கல்லி அலுவலகத்திற்கு
முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் விரைவான
தீர்வினைப் பெற்று தரவேண்டும் எனவும் இவ்வாறான நிலை தொடர்ந்தால்
மாணவர்களின் ஆரம்ப கல்வி பின்நோக்கி செல்லும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீவுகளுக்குப் பயணம்! சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-sign-new-agreement-announcement-1785223640"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-sign-new-agreement-announcement-1785223640</id>
            <summary type="text">சிறிலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம், மாலைத்தீவின் தேசிய விமானச் சேவையான மால்தீவியன் (Maldivian - Q2 / Island Aviation Services) உடன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம், மாலைத்தீவின் தேசிய விமானச் சேவையான மால்தீவியன் (Maldivian - Q2 / Island Aviation Services) உடன் இணைந்து புதிய இன்டர்லைன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.</p><p>
இதன் மூலம் பயணிகள் மாலைத்தீவின் 17 உள்நாட்டுத் தீவு இலக்குகளை ஒரே விமானச் சீட்டின் மூலம் மிக இலகுவாகச் சென்றடையும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இப் புதிய ஏற்பாட்டின் கீழ், மாலைத்தீவின் மாலேவிலுள்ள வெலனா சர்வதேச விமான நிலையம் (Velana International Airport) மற்றும் கான் தீவிலுள்ள கான் சர்வதேச விமான நிலையம் (Gan International Airport) ஆகிய இரு பிரதான முனையங்கள் வாயிலாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகள் தடையற்ற பயண அனுபவத்தைப் பெற முடியும்.</p><p>
</p><p></p><h2>விமான நிறுவனங்கள்</h2><p>பயணிகள் இரு விமான நிறுவனங்களின் சேவைகளையும் உள்ளடக்கிய பயணங்களை ஒரே மின்னணு விமானச் சீட்டில் (E-Ticket) முன்பதிவு செய்ய முடியும்.</p><p>

மாலைத்தீவின் தூரப்பகுதிகளில் உள்ள தீவுகளுக்கான இணைப்பு மேம்படுவதால், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பயண முகவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb74a7d-33b1-448f-bb61-32c47079ee40/26-6a68611aa286a.webp' /></p><p>சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தற்போது மாலே வெலனா விமான நிலையத்திற்கு நாளாந்தம் 3 விமானச் சேவைகளையும் கான் சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு 2 விமானச் சேவைகளையும் இயக்கி வருகின்றது.
</p><p>
இந்தநிலையில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் வணிகப் பிரிவுத் தலைவர் திமுது தென்னகோன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>உள்நாட்டு இணைப்புகள்</h2><p>மேலும் தெரிவித்த அவர், “மால்தீவியன் விமானச் சேவையுடனான எங்களது இந்த கூட்டுமுயற்சி, எங்களது பிராந்திய வலையமைப்பை விரிவாக்குவதிலும் வாடிக்கையாளர்களின் பயண வசதிகளை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
</p><p>
 எமது சர்வதேச விமான வலையமைப்பை மாலைத்தீவின் உள்நாட்டு இணைப்புகளுடன் இணைப்பதன் மூலம், மாலைத்தீவுக்கான பயண அணுகுமுறையை மேலும் விரிவுபடுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6dca46-0312-41c6-8c1b-6b9c041b6934/26-6a686119db1c4.webp' /></p><p>அதேபோன்று, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் மாலைத்தீவுக்கான முகாமையாளர் நயோமி தென்னகோன் குறிப்பிடுகையில், இக்கூட்டுப் பங்களிப்பானது மாலே மற்றும் கான் தீவுகள் வாயிலாக உலகளாவிய பயணிகளை மாலைத்தீவின் பன்முகத்தன்மை கொண்ட தீவுகளுக்கு மிகவும் தடையின்றி அழைத்துச் செல்ல உதவும் என தெரிவித்துள்ளார்.</p><p>

63 நாடுகளிலுள்ள 130 இங்கும் மேற்பட்ட இலக்குகளுக்குச் சேவைகளை வழங்கி வரும் சிறிலங்கன் எயர்லைன்ஸ், அதிநவீன எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொண்டு தெற்காசியப் பிராந்தியத்தில் தனது சேவை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-month-old-baby-dies-after-swing-breaks-and-falls-1785223981"></link>
            <id>https://ibctamil.com/article/5-month-old-baby-dies-after-swing-breaks-and-falls-1785223981</id>
            <summary type="text">வவுனியாவில்&amp;nbsp;ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.கனகராயன்குளம் காவல்துறை பிரிவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில்&nbsp;ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p>கனகராயன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் நேற்று (27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்றையதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது
எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p> இதில் படுகாயமடைந்த ஐந்து
மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f018dd6e-7194-4424-9dd3-7a43de929d3c/26-6a685eb6f0207.webp' /></p><p>உயிரிழந்த குழந்தையின்
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-ranks-as-4th-fastest-improving-country-1785208324"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-ranks-as-4th-fastest-improving-country-1785208324</id>
            <summary type="text">உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2026 ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

குறித்த அறிக்கையின் படி, மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>அந்தவகையில் குறித்த வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3a0e72-bf59-477a-a8c1-73d82a62f4e3/26-6a682360dfa70.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>அதன்படி, கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாகாணங்களுக்கு பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/advisory-issued-for-strong-winds-north-central-1785222516"></link>
            <id>https://ibctamil.com/article/advisory-issued-for-strong-winds-north-central-1785222516</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் 'ஆம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (28.07.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவுரை, நாளை (29.07.2026) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடபட்டுள்ளது.&nbsp;</p><p>
 

தீவிரமான தென்மேற்குப் பருவமழை நிலவுவதால், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>பலத்த காற்று குறித்து எச்சரிக்கை</h2><p>
</p><p>எனவே இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் எதிர்கால அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e60acc0-4d3c-4a91-89d8-996ea7fe1b2f/26-6a6859c4ea54d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T07:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1785222665"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1785222665</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (28.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (28.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.59 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.71 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	439.73 ஆகவும் விற்பனைப் பெறுமதி 454.32 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	375.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.04 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.50 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891f0c99-d019-4ef7-8444-5ca3b1a8b5f5/26-6a6859826737b.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	229.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.50 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.50 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T07:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனை போதனா வைத்தியசாலையில் டெண்டர் விவகாரத்தில் இலஞ்சம்: இருவர் சுற்றிவளைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-arrested-for-rs-2m-bribe-in-food-tender-1785219327"></link>
            <id>https://ibctamil.com/article/2-arrested-for-rs-2m-bribe-in-food-tender-1785219327</id>
            <summary type="text">கம்பளையில் ரூபாய் 20 லட்சம் (2 மில்லியன்) லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 202...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளையில் ரூபாய் 20 லட்சம் (2 மில்லியன்) லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 2027ஆம் ஆண்டிற்காக உணவுகளை விநியோகிக்கும் டெண்டர் (Tender) ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>மேலும் தெரியவருகையில், கம்பளை தபால் நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் வைத்து இச்சந்தேகநபர்கள் இருவரும் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff78a127-d473-4df7-bbb2-643d1960d285/26-6a68576f9a9ef.webp' /></p><p>
கைது செய்யப்பட்டவர்கள் கம்பளையைச் சேர்ந்த அருணகிரி நாடார் லோகேந்திரன் என்ற வர்த்தகர் மற்றும் லோகேந்திரன் சிவராஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>தேவையில்லாத போட்டி</h2><p>குறித்த டெண்டர் போட்டியில் தங்களது தந்தை மற்றும் மாமாவின் பெயர்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து தேவையில்லாத போட்டியை உருவாக்காமல் இருப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் ரூபாய் 30 லட்சம் லஞ்சமாகக் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2696c5cc-8af2-4214-99e2-1a90898719a3/26-6a68576edcd44.webp' /></p><p>

இதையடுத்து, இத்தொகை ரூபாய் 25 லட்சமாகக் குறைக்கப்பட்டு இறுதியில் ரூபாய் 20 லட்சத்திற்குப் பேரம் பேசப்பட்டு லஞ்சப் பணத்தைப் பெற்றபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shangri-la-deal-sajin-vass-gives-statement-1785213031"></link>
            <id>https://ibctamil.com/article/shangri-la-deal-sajin-vass-gives-statement-1785213031</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.

இந்தநிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.</p><p>

இந்தநிலையில் நேற்றைய தினம் (27-07-2026) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>இலஞ்சப் பணம்&nbsp;</h2><p>இது தொடர்பில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
மேலும் தெரியவருகையில், இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1a4f16-29f4-4a73-9159-68094156effd/26-6a6837c91d597.webp' /></p><p>

ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><p>

சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a6c06c-56ca-4e26-b7fe-efad9a7d68c7/26-6a6837c86be68.webp' /></p><p>
மேலும், அந்த பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.
</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[SJB எம்.பி சமிந்த விஜேசிறிக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-mp-chaminda-wijesiri-sentenced-to-prison-1785217986"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-mp-chaminda-wijesiri-sentenced-to-prison-1785217986</id>
            <summary type="text">ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து&amp;nbsp;பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து&nbsp;பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.</p><p>கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.</p><p></p><h2>குற்றவாளிகள் என தீர்ப்பு&nbsp;</h2><p>இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சமிந்த விஜேசிறி, அவரது சாரதி பந்துல ரத்நாயக்க மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு பிரிவில் (MSD) பணியாற்றும் காவல்துறை அதிகாரி ரசிக கருணாதிலக்க ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5235c761-bf5a-424c-972d-bd14819e8e4d/26-6a684ce052be7.webp' /></p><p>இந்தநிலையில் முதல் இரண்டு குற்றவாளிகளான சமிந்த விஜேசிறி மற்றும் பந்துல ரத்நாயக்க ஆகியோர் நான்கு குற்றச்சாட்டுகளிலும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.</p><p>எனினும் குற்றம் சாட்டப்பட்ட சாரதியான பந்துல ரத்நாயக்க உயிரிழந்துவிட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YUWC9YkiH64" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் பற்றாக்குறையால் முடங்கும் வழக்கு விசாரணைகள்..! அநுர மீது BASL குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basl-president-violated-constitution-1785218425"></link>
            <id>https://ibctamil.com/article/basl-president-violated-constitution-1785218425</id>
            <summary type="text">உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் ஜனாதிபதி, நாட்டின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோதமான செயல்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீதித்துறை அமைப்பின் உயர் பதவிகளில் காலியிடங்கள் நிலவும் நிலையில், அவற்றை நிரப்ப முனையாமல் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முயற்சிப்பது ஒரு சட்டவிரோதமான செயல் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், “தற்போது உச்ச நீதிமன்றத்தில் 4 காலியிடங்களும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 காலியிடங்களும் என மொத்தம் 8 உயர் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c55d2959-2e8a-486d-ba6e-f6aa9023787e/26-6a684758336e2.webp' /></p><p>பொதுவாக இத்தகைய காலியிடம் ஏற்பட்ட உடனடியாக அதனை நிரப்புவதே வழக்கமாகும். </p><p>

ஆனால், சுமார் ஒரு வருட காலமாக நியமனங்கள் எதுவும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது தீவிரமான பிரச்சினையாகும்.</p><p>
</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கைகள்</h2><p>அரசியலமைப்பின் படி இந்த நியமனங்களைச் செய்வது ஜனாதிபதியின் கடமையாகும்.</p><p>
ஆனால், அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, மறுபுறம் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்த மசோதாக்களைக் கொண்டுவருவது நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடும் செயலாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dd72684-b395-4b5f-a267-507516d93bbd/26-6a684758f2dc9.webp' /></p><p>இந்த ஆபத்தான நிலைமை குறித்துக் கடந்த மார்ச் மாதம் நீதி அமைச்சருக்கும், மே மாதம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் எழுத்துப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
</p><p>
நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக வழக்கு விசாரணைகள் தாமதமடைந்து, நீதிமன்ற நடவடிக்கைகள் மந்தகதியில் இயங்குவதால் இறுதியில் பொதுமக்களே கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:13:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-earthquakes-strike-china-s-qinghai-province-1785213078"></link>
            <id>https://ibctamil.com/article/two-earthquakes-strike-china-s-qinghai-province-1785213078</id>
            <summary type="text">சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் உள்ள சிங்ஹாய் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.


குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் உள்ள சிங்ஹாய் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>

குறித்த நிலநடுக்கம் இன்று (28.07.2026) காலை 11:16 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன் பின்னர் 18 நிமிடங்கள் கழித்து அந்த மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக சி.இ.என்.சி குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டு நலநடுக்கம்</h2><p> </p><p> 

இந்த இரு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டன என்றும் மேலும் அவை கிங்ஹாயின் தலைநகரான சின்னிங்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் அமைந்திருந்தன என்றும் சீன நிலநடுக்க வலையமைப்பு மையத்திடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b61825-7c4b-4212-9331-f45ed1086baa/26-6a68369247af9.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-dies-in-three-wheeler-accident-1785215632"></link>
            <id>https://ibctamil.com/article/woman-dies-in-three-wheeler-accident-1785215632</id>
            <summary type="text">திருகோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். </p><p>இது நேற்று (27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு</h2><p>விபத்தில் உயிரிழந்த பெண் மட்டக்களப்பு வவுணதீவைச்சேர்ந்த 47 வயதுடையவர் எனப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9ef410-c6a0-42b0-943a-d91dea006ab9/26-6a684292c6d6f.webp' /></p><p>
குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரும் நேற்று காலையில் அம்பாறைக்கு சென்றுள்ள நிலையில் சாரதி வீதியை மாறி பொத்துவில் நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதி பாதுகாப்புக்கு அமைத்த தூணில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.&nbsp;</p><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் காயமடைந்த நால்வரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-gazettes-bill-to-amend-anti-corruption-act-1785213364"></link>
            <id>https://ibctamil.com/article/govt-gazettes-bill-to-amend-anti-corruption-act-1785213364</id>
            <summary type="text">ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது&nbsp;</h2><p>வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917ae26d-d21f-4247-a6c3-956e6fd89445/26-6a68416778ed9.webp' /></p><p>அத்துடன் குறித்த திருத்தச் சட்டமூலம் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-wimal-weerawansa-s-brother-produced-court-1785213507"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-wimal-weerawansa-s-brother-produced-court-1785213507</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பிணை தொடர்பான உத்தரவு ஒன்றுக்காக அவர் இவ்வாறு நீதிமன்றத்தில்&nbsp;முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அண்மையில் கைது செய்யப்பட்டார்</h2><p>அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சரத் வீரவன்ச&nbsp;காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/842b32ac-fea5-46b4-9de8-66f67f70ee68/26-6a683997a34d5.webp' /></p><p>குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harak-katha-bribe-case-rakitha-get-bail-1785215172"></link>
            <id>https://ibctamil.com/article/harak-katha-bribe-case-rakitha-get-bail-1785215172</id>
            <summary type="text">முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹெண்டிகே ஆகிய 3 சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (28-07-2026) பிறப்பித்துள்ளது.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>
</p><p></p><h2>விசாரணைகளில் சலுகை</h2><p>இதன்போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa19afc9-484a-429b-bee7-e33d3a199a0a/26-6a683bb0d3256.webp' /></p><p>

பாதாள உலகக் குழுவின் தலைவரான ஹரக் கட்டா என அறியப்படும் நடூன் சிந்தக்க விக்கிரமரத்னவின் மனைவியிடம் ரூபாய் 12 கோடி (120 மில்லியன்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) இவர்கள் கடந்த ஜூன் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

இந்தநிலையில் ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்குவதற்கும், பூசா அதிஉயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து அவரை வேறு சிறைக்கு மாற்றுவதற்கும், அவருக்கு எதிரான விசாரணைகளில் சலுகைகளை அளிப்பதற்கும் வாக்குறுதி அளித்து இந்த லஞ்சப் பணம் பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:15:35+00:00</updated>
        </entry>
    </feed>
