<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T06:49:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relatives-of-disappeared-international-conference-1786861089"></link>
            <id>https://ibctamil.com/article/relatives-of-disappeared-international-conference-1786861089</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>உயிரிழந்துள்ள தாய் - தந்தையர்&nbsp;</h2><p> </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefca70-294f-484b-b3c3-f7c1a6f766b3/26-6a815ad8296d3.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை அளித்துள்ளனர்.”
</p><p>
அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-16T06:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recommendation-on-upcoming-changes-in-fuel-prices-1786858549"></link>
            <id>https://ibctamil.com/article/recommendation-on-upcoming-changes-in-fuel-prices-1786858549</id>
            <summary type="text">
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது, அவர் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உலகச் சந்தை விலைகள் இறக்குமதிச் செலவுகளைப் பாதிப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் விலை திருத்தம்</h2><p>
</p><p>
இந்த ஆய்வுக்குப் பிறகு, அரசாங்கம் முன்னர் வழங்கிப் பின்னர் நிறுத்திவைத்த 15 பில்லியன் ரூபாய் மானியத்தை மீண்டும் கோரவோ அல்லது ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்ய எரிபொருள் விலை திருத்தம் போன்ற மாற்று வழிகளைக் கையாளவோ அமைச்சு முனையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477a293a-0c13-4a1a-a0a7-ec7093f6e2d4/26-6a81504aef2e1.webp' /></p><p>
</p><p>
கடைசியாக ஜூன் மாதத்தில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்ததாகவும், இந்த மாதம் விலைகள் சரிசெய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2>விலை உயர்வு&nbsp;</h2><p>இதேவேளை, மத்திய கிழக்கு போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்தை விட எரிபொருள் விலைகள் 48 வீதம் உயர்ந்துள்ளதாகவும், தற்போது டீசல் விலைகள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5906d1d1-f3d3-4b46-bd49-6e01b83a3920/26-6a81504bb7997.webp' /></p><p> 

காப்பீட்டுக் கட்டணங்களும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் பெறப்பட்டாலும், இந்த விலை உயர்வு கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T05:53:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-navy-boat-accident-sailor-missing-1786853779"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-navy-boat-accident-sailor-missing-1786853779</id>
            <summary type="text">மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

</p><p>வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

அத்தோடு, காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ வரும் வரை காத்திருக்காமல், அங்குலானை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாகத் தங்களின் படகுகளில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்த கடற்படை வீரர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7788527d-8697-445e-9df6-de17e309319c/26-6a813c38007f4.webp' /></p><p>
</p><p>
தகவல் அறிந்ததும் அங்குலானை காவல்துறையினர், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.</p><h2>காணாமல் போன மாலுமி</h2><p>

கடற்றொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பேராதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணியின் மூலம் படகில் இருந்த 12 மாலுமிகளில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e385ab9-0904-4a96-b604-14076f50eaf2/26-6a813c38a7501.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போன ஒரு மாலுமியைத் தேடும் தீவிர நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் MI-17 உலங்குவானூர்தி மற்றும் பெல் 412 ரக உலங்குவானூர்திகள் மூலம் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2PWgEExkBKc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T04:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகரில் அதிபயங்கர தாக்குதல்களை தொடுக்கும் ரஷ்ய படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-launch-missile-attack-on-ukrainian-capital-1786855656"></link>
            <id>https://ibctamil.com/article/russia-launch-missile-attack-on-ukrainian-capital-1786855656</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிகிக்கின்றன. </p><p>

இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் நகரத்தின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
</p><p>
வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீவிர வான்வழித் தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கே உள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21dd346e-da4d-407c-9483-6c7722cbb631/26-6a81421aa4b9e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;NBC News</i></p><p>
</p><p>
மேலும், புறநகர்ப் பகுதியில் உள்ள சந்தைக் கடைகள் தீப்பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சமீபத்திய வாரங்களாகவே கீவ் மற்றும் உக்ரைனின் பிற நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T04:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் வலியுறுத்தும் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-urges-referendum-on-government-s-decision-1786850820"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-urges-referendum-on-government-s-decision-1786850820</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><p> 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி நடத்திய அவரச செயற்குழு கூட்டங்களின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பெரிய அளவிலான மாற்றங்கள்</h2><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் தேங்கிப்போயுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10ddcc18-0099-4640-a985-26767fc6f0a0/26-6a813198a354e.webp' /></p><p>
</p><p>
மேல் நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே அதிகப்படியான வழக்குகள் தேங்கியுள்ளன. நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதாக இருந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வழக்குகளையாவது விசாரித்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறான பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்குப் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மக்கள் தீர்ப்பு</h2><p>
</p><p>
தொடர்ந்து பேசிய அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்காக மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63bc3ea2-e195-4f1c-8c42-7d53605627c5/26-6a8131995563e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் தங்களால் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்த ரணில், மேலும் தமக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களது போராட்டம் கொள்கை ரீதியானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p>
நாட்டு மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைகளை யாராவது திருட முற்பட்டால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T03:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-in-the-kaduwela-area-today-1786850195"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-in-the-kaduwela-area-today-1786850195</id>
            <summary type="text">கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெரா காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
 

குறித்த தேவாலயத்தின் ஊர்வலம் இன்று (16.08.2026) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>பொதுமக்களுக்கு வேண்டுகோள்</h2><p>
 

இந்த ஊர்வலம் தேவாலயத்திற்கு அருகில் தொடங்கி 143 அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தின் மீது பயணித்து பண்டாரவத்தை, பியகம பகுதிக்கு சென்று தீர்த்த உற்சவ சடங்கு நிறைவடைந்த பின்னர், மீண்டும் அதே வீதி வழியாக கடுவெல சந்தியைக் கடந்து தேவாலயத்தை சென்றடைய உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b390c6ce-ed6e-4e91-b7ca-41fb543c3aa5/26-6a812e8236d77.webp' /></p><p>அதற்கமைய, ஊர்வலம் செல்லும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அப்பகுதி வழியாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>

 

மாற்று வழிகள்:


143 - அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்தியிலிருந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் வேளையில், மாற்று வழிகளாக 697 பேருந்து வீதியில் பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவெல - கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, மாலபே திசையை நோக்கி உள்ள ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் வறட்சி - நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intensifying-drought-under-warming-wetting-climate-1786846770"></link>
            <id>https://ibctamil.com/article/intensifying-drought-under-warming-wetting-climate-1786846770</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. </p><p>இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p></p><h2>கடும் பாதிப்பு</h2><p>
</p><p>
 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a36233-aafd-40cf-8523-572073d25984/26-6a812aeca375a.webp' /></p><p>
 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

இதன் காரணமாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் மரண தண்டனை...! அரசுக்கு அதிகரிக்கும் அழுந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/senior-lawyer-abt-re-introduce-the-death-penalty-1786839772"></link>
            <id>https://ibctamil.com/article/senior-lawyer-abt-re-introduce-the-death-penalty-1786839772</id>
            <summary type="text">கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்&amp;nbsp;அவசியம் என&amp;nbsp;என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்&nbsp;அவசியம் என&nbsp;என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.</p><p>குறித்த விடயங்களை அவர் தனது சமூகவலைத்தள பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தவறான சிறைத்தண்டனை</h2><p>அந்த பதிவில் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8d5140-111d-4a44-b708-ee8bd52a014d/26-6a811bb765a9d.webp' /></p><p>தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
</p><p>
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்:</p><p></p><p>
</p><h2>வழக்கு விசாரணை</h2><p>
கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.

வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6457c740-ed55-4159-8c2c-09d3d6d6d89a/26-6a811bb81d34f.webp' /></p><p>வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.

போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.</p><p>

விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகா ஓயாவில் மூழ்கி இளைஞன் பலி! மற்றுமொருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-in-drowning-one-missing-1786848278"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-in-drowning-one-missing-1786848278</id>
            <summary type="text">

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயியுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.</p><p></p><h2>தீவிர தேடுதல் நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்போது, அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு இருவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6660b9-2984-43ce-9e69-9ea7c57d7e24/26-6a8126f26b491.webp' /></p><p>இருப்பினும், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மீரிகம பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்நிலையில், நீரில் மூழ்கிக் காணாமல் போன மூன்றாவது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக மீரிகம காவல்துறையினர், காவல் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T02:56:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு! அம்பலப்படுத்தும் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-links-to-terrorist-organizations-1786846292"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-links-to-terrorist-organizations-1786846292</id>
            <summary type="text">துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததுள்ளது தற்போது கண்டறியப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப். யு. வூட்லர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஷிரான் பாசிக்கை 72 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.</p><p></p><h2>துபாய் கைது நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
ஷிரான் பாசிக் நேற்று இரவு அபுதாபியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

48 வயதான இவர் தெஹிவளைவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79084ac7-a77f-44c3-bb1c-5cb5d754c484/26-6a81207a493e1.webp' /></p><p>
</p><p>
இந்த நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகிக்கும் ஐந்து பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், மே 26 அன்று துபாயில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><p>
இன்டர்போல் அவருக்கு சிவப்பு பிடியாணை அனுப்பியிருந்த பின்னணியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
மேலும், ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளையில் உள்ள ஒரு ஹோட்டலை 2024 ஜனவரி 1 அன்று இடிப்பதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T02:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில இடங்களில் பல தடவைகள் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100-mm-expected-today-1786843928"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100-mm-expected-today-1786843928</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (16.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27d0ab6f-6c3e-429d-8fea-13e3479533d3/26-6a8113c19b787.webp' /></p><p>வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
</p><p>
 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T01:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவறைக் கருவில் கொல்லப்பட்ட குழந்தை - அப்பட்டமான அரச பயங்கரவாதம்: சாடும் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-mp-abt-chemmani-mass-graves-in-srilanka-1786840732"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-mp-abt-chemmani-mass-graves-in-srilanka-1786840732</id>
            <summary type="text">கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவத்தின் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர்&nbsp;என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாக தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பேரினவாதத்தால் இனவழிப்பு</h2><p>குறித்த அறிக்கையில்,

தமிழர்கள் இலங்கையில் 1956 ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட பேரினவாதத்தால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ae15219-82e4-4c8b-9b7f-4ed32ea11f8a/26-6a810c004b573.webp' /></p><p> இதனைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த உறவுகள், தமிழ்ப் புத்திஜீவிகள் ஆகியோர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உரக்கச் சொல்லி வருகின்றனர்.</p><p>

அதற்கான சாட்சியங்களாக, செம்மணிப் புதைகுழியில் இருந்து கண்கூடான சாட்சியங்களாக எலும்புக்கூடுகள் அகழ அகழ வெளிவந்து கொண்டிருக்கின்றன.</p><p>இதுவரை 539 எலும்புக்கூடுகள் தமிழின அழிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>பேசாமல் பேசுகின்ற எலும்புக்கூடுகள் </h2><p>
கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவத்தின் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32098f9a-515e-4c04-b43b-9290678f0938/26-6a810c0105b9d.webp' /></p><p>அதனை எலும்புக்கூடுகள் பேசாமல் பேசுகின்றன.

பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் கூட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இனவழிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. </p><p>இலங்கையில் 1956 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு, இக்கினியாகலையில் பேரினவாதக் குண்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் 157 அப்பாவித் தமிழர்கள் பேரினவாதக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கறுப்பு ஜூலை</span></p><p>அதற்கான நீதி வழங்கப்படாததால், அடுத்து 1958 ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழின அழிப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ffde65-7963-45b1-97d4-b55001100feb/26-6a810bff9719b.webp' /></p><p>அவற்றை பேரினவாத அரசு கண்டுகொள்ளவில்லை.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை தமிழினப் படுகொலைக்கான ‘கறுப்பு ஜூலை’ என தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அதில் 3,000 முதல் 5,000 வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.&nbsp;&nbsp;</p><p>1983ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பு என்பது தொடர்ச்சியான நிகழ்வாகி, 2009 மே 18ஆம் திகதி வரை தீவிரமாக நடைபெற்றது. அதன் பின்னரும் கலாசார, வரலாற்று மற்றும் உணர்வு ரீதியான அழிப்புகள் தொடர்கின்றன.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய தமிழ் மக்களுக்கு முதற்கட்ட பதிலாக செம்மணி சிந்துபாத்தி புதைகுழி கண்களைத் திறக்க வைத்துள்ளது.
</p><h2>தொல்லியல் அகழ்வுகள்&nbsp;</h2><p>
இதேபோல் பல புதைகுழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் எலும்புக்கூடுகளாக எமது இதயக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர். </p><p>சத்துருக்கொண்டான், வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மைலந்தனை, வீரமுனை, உடும்பன்குளம், மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருகோணமலை போன்ற இடங்களில் பல புதைகுழிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சட்டம் சமமாகச் செயற்படுமாயின், இப்புதைகுழிகளை அறிவியல் பூர்வமாக இலகுவாகக் கண்டறிய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac8c3fb-dcf0-42f0-bda4-5a26f11fa0ba/26-6a810c01abd15.webp' /></p><p>தொல்லியல் அகழ்வுகள் மூலம் கலாசாரத் திரிபுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், மனிதப் புதைகுழிகளைக் கண்டறியும் விடயத்தில் காட்டப்படும் ஆர்வம் மிகமிகக் குறைவாகவே உள்ளது.

இதனை அரசு முறையாக முன்னெடுத்து, சட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.</p><p> இதனைச் செய்தால் இனவழிப்பு, அரச பயங்கரவாதம் என்பவற்றுக்கான கோரமான முகங்கள் வெளியில் தெரிந்துவிடும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, தமது அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பதை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
</p><p>
செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்து, முந்தைய அரசாங்கங்களின் முகத்திரையைக் கிழிக்க முன்வர வேண்டும். அதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். மேலும், கடந்த கால அரசாங்கங்களின் கோரமான முகங்களை வெளிக்காட்டவும் முடியும்.&nbsp;&nbsp;</p><h2>பாரிய தண்டனை</h2><p>ஜே.வி.பி. முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலை தொடர்பாக, அவரது மகன் நீதியைத் தேட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
</p><p>
யூகோஸ்லாவியாவை ஆட்சி செய்த ஸ்லோபோடான் மிலோசவிக் என்ற ஜனாதிபதி, தனது இனத்தைச் சேர்ந்த சேர்பியப் படையினரைக் கொண்டு சிறுபான்மை குரோஷியர்களை இனவழிப்புக்கும், பெண்களைப் துர்நடத்தைக்கும் உள்ளாக்கினார்.</p><p>உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.

பின்னர் சர்வதேசத் தலையீட்டின் மூலம் குரோஷியர்களுக்கு நீதியின் பார்வையில் நியாயம் கிடைத்தது.
</p><p>
குற்றம் செய்த ஜனாதிபதி மற்றும் தளபதிகள் பாரிய தண்டனைகளைப் பெற்றனர். இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய படிப்பினைகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T01:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையின் காவலில் எடுக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/isharai-s-suitcase-taken-from-prison-custody-1786843158"></link>
            <id>https://ibctamil.com/article/isharai-s-suitcase-taken-from-prison-custody-1786843158</id>
            <summary type="text">பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எடுத்துச் சென்ற சூட்கேஸ் சிறைச்சாலையின் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எடுத்துச் சென்ற சூட்கேஸ் சிறைச்சாலையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>அண்மையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில்&nbsp;சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி முன்னிலைப்படுத்தப்பட்ட றிலையில் அவர் ஒரு&nbsp;சூட்கேஸுடன் சென்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருந்தது.</p><p>இந்நிலையில், மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய செய்தித் தொடர்பாளர் மேலும், சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது பெண்களுக்குக் கைவிலங்கு இடப்படுவதில்லை எனவும், கூறியுள்ளார்.</p><p></p><h2>எந்த விசாரணையும் தேவையில்லை</h2><p>மேலும், அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சட்டவிரோதமாக எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2e52ba1-fedb-4f12-a55e-416f56746ce3/26-6a8112669ff9a.webp' /></p><p>
அவர் தற்போது அங்குனுகோலபெலெஸ்ஸ சிறையில் மற்ற சந்தேக நபர்களுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.</p><p>
இதற்கிடையில், அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியைப் பற்றி அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிய வந்துள்ளது என்றும், இருப்பினும், இஷாரா செவ்வந்தி&nbsp; அதிகப் பேருடன் பழகாதவாறு சிறை நிர்வாகம் அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அங்குனுகோலபெலெஸ்ஸ சிறை தரப்பினர் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T01:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் சதி பின்னணியில் 2076 சான்றுப் பொருட்கள்! ஆரம்பமாகிறது அடுத்த கட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nextstage-investigation-into-easter-attack-plot-1786842267"></link>
            <id>https://ibctamil.com/article/nextstage-investigation-into-easter-attack-plot-1786842267</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, 2076 சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, 2076 சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விசாரணையின் போது வெடிகுண்டுகள், வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட&nbsp;சான்றுப் பொருட்களே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>குறித்த விசாரணைகள் நாளை(17.08.2026) முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில்,&nbsp;இங்கு, குற்றம் சாட்டப்பட்டவரின் 10 வாக்குமூலங்கள் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவுள்ளது.</p><p></p><h2>எதிர் தரப்பு சாட்சிய விசாரணை</h2><p>நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc9fa4c1-7295-476c-8742-fe6cca6f3d21/26-6a810e2d4e875.webp' /></p><p> </p><p>இந்நிலையிலேயே&nbsp; எதிர் தரப்பு சாட்சிய விசாரணை நாளை (17) முதல் தொடங்கவுள்ளது.</p><p>இதன்படி ஈஸ்டர் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதே இந்தக் குற்றவாளிகள் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும், மேலும் குற்றவாளிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மராசிங்க உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன.</p><p>வழக்கமான நடைமுறையின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்திருக்க வேண்டிய இந்த வழக்கு விசாரணை, தினசரி விசாரணைகளின் மூலம் குறுகிய காலத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என அரசாங்க தரப்புக்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T01:12:19+00:00</updated>
        </entry>
    </feed>
