<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-06T15:13:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் அரிய அதி துல்லியப் காட்சி வெளியீடு! மர்மங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scientists-discover-rare-mysteries-of-the-sun-1786027402"></link>
            <id>https://ibctamil.com/article/scientists-discover-rare-mysteries-of-the-sun-1786027402</id>
            <summary type="text">சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கி முதன்முறையாக பதிவு செய்துள்ளது. </p><p>இந்தக் கண்டுபிடிப்பு, சூரியனின் செயல்பாடுகள் குறித்த முக்கிய மர்மங்களுக்கு புதிய விளக்கத்தை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) டேனியல் கே. இனோயே சூரிய தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட புதிய படங்கள், சூரியனின் கண்களுக்கு தெரியும் வெளிப்புற அடுக்கான ஒளிமண்டலத்தில் (Photosphere), இதற்கு முன்பு தெளிவாகப் பதிவாகாத கெல்வின் -&nbsp; ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை (Kelvin–Helmholtz Instability) என்ற இயற்பியல் நிகழ்வை முதன்முறையாக வெளிக்கொணர்ந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The most powerful solar telescope just opened a new window to discovery about the sun.️☀️<br><br>Using the NSF Daniel K. Inouye Solar Telescope, scientists found Kelvin-Helmholtz instability, tiny, whirlpool-like patterns on the sun&#39;s surface.<a href="https://t.co/0V1qENcUR9">https://t.co/0V1qENcUR9</a><br><br>📸:… <a href="https://t.co/agp8V3ayeR">pic.twitter.com/agp8V3ayeR</a></p>&mdash; U.S. National Science Foundation (@NSF) <a href="https://x.com/NSF/status/2085338123358044661?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>தேசிய சூரிய ஆய்வகம்</h2><p>

இந்த ஆய்வில் அமெரிக்க தேசிய சூரிய ஆய்வகம், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட வளிமண்டல ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc8a4b1-c5dd-4db5-b2d0-e8d84dfd4d17/26-6a74a24a648d4.webp' /></p><p>கடந்த ஏப்ரல் 14, 2025 அன்று சூரியக் கறைக்கு அருகிலிருந்த செயலில் உள்ள ஒரு பகுதியை ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கி மூலம் அவதானித்தனர். </p><p>நான்கு மீட்டர் விட்டமுள்ள கண்ணாடி மற்றும் அதிநவீன உயர் தெளிவுத் திறன் கொண்ட ஒளிப்பதிவு அமைப்பின் உதவியால், சிறிய தொலைநோக்கிகளால் இதுவரை காண முடியாத காந்தப்புல எல்லைகள் மிகத் தெளிவாக பதிவாகின.
</p><p>
சூரியனின் ஒளிமண்டலம், 500 முதல் 2,000 கிலோமீட்டர் அகலமுடைய பிரகாசமான பிளாஸ்மா அணுக்களால் (Granules) மூடப்பட்டுள்ளது. இவற்றின் மையப்பகுதியில் சூடான பிளாஸ்மா மேலே எழுந்து, மேற்பரப்பில் குளிர்ந்த பின்னர் விளிம்புகளின் வழியாக மீண்டும் கீழிறங்குகிறது.</p><p>

இந்த பிளாஸ்மா அணுக்கள், அதிக காந்தப்புலம் கொண்ட பகுதிகளைச் சந்திக்கும் இடங்களில், சுமார் 20 கிலோமீட்டர் அளவுள்ள மிகச் சிறிய சுழல்கள் மற்றும் குறுகிய கருமையான கோடுகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.</p><p> </p><p></p><h2>47 சிறிய சுழல் அமைப்புகள்&nbsp;</h2><p>இது தொலைநோக்கியின் கோட்பாட்டு தீர்மானத் திறனின் உச்ச எல்லைக்கு நெருக்கமான அளவாகும்.

இந்த அளவிலான பொருளை சூரியனில் கண்டறிவது, சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நாணயத்தை தெளிவாகப் பார்ப்பதற்கு ஒப்பான சாதனை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/958dfd40-47fe-47d3-920e-f1c86ea25e71/26-6a74a24b1947a.webp' /></p><p>மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மிஷியல் வான் நூர்ட் கூறுகையில், "சூரியனின் மேற்பரப்பில் சுமார் 20 கிலோமீட்டர் அளவிலான அமைப்புகளைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. </p><p>இது உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கிகளாலும், அதிநவீன கணினி மாதிரிகளாலும் மட்டுமே சாத்தியமாகும்" என்றார்.

ஆய்வின்போது மொத்தம் 47 சிறிய சுழல் அமைப்புகள் பதிவாகின. </p><p>அவற்றுக்கிடையேயான சராசரி இடைவெளி 65 கிலோமீட்டராகவும், அவற்றின் அளவு 25 முதல் 170 கிலோமீட்டர் வரையிலும் இருந்தது. அவை வினாடிக்கு 0.67 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p>

கெல்வின்–ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை என்பது, அடுத்தடுத்த திரவங்கள் அல்லது பிளாஸ்மா அடுக்குகள் வெவ்வேறு வேகங்களில் நகரும் போது உருவாகும் இயற்பியல் நிகழ்வாகும். </p><p>வேக வேறுபாடு காரணமாக எல்லைப் பகுதியில் அலைகளும் சுழல்களும் உருவாகின்றன. இந்த நிகழ்வை சூரியனின் ஒளிமண்டலத்தில் முதன்முறையாக நேரடியாகக் கண்டறிந்திருப்பது, சூரியனின் காந்தப்புல இயக்கங்கள் மற்றும் ஆற்றல் பரிமாற்றம் குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது ஈரான் : புதுக்கதை விடுகிறார் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-begged-trump-to-stop-the-attack-1786027426"></link>
            <id>https://ibctamil.com/article/iran-begged-trump-to-stop-the-attack-1786027426</id>
            <summary type="text">ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம் பேசலாம்’ என்று கூறியது. இதையடுத்து தாக்குதலை நிறுத்தி வைத்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
 லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மக்களை கொல்ல விரும்பவில்லை</h2><p>

"ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கி வருகிறோம். ஆனால் நான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் மக்களை கொல்ல விரும்பவில்லை. இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையே விரும்புகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea4bd3f-c97c-4e56-810a-fa5b97e5174d/26-6a74a19c5c6af.webp' /></p><p>



ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.</p><p></p><h2>அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்</h2><p>


இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி கூறுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை, ஈரானின் பாதுகாப்பிற்காக நாங்களும் அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்.

அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிட்டால், நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d969bc8-5607-4ac7-b939-c6d85d51170e/26-6a74a19bab62c.webp' /></p><p>
</p><p>


இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணை கப்பல் அருகே 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்தது.

கப்பலும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T15:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பை பின்வாங்கச் சொல்லுங்கள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-attack-on-gulf-countries-1786024542"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-attack-on-gulf-countries-1786024542</id>
            <summary type="text">அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக்க வைக்காவிட்டால் வளைகுடா நாடுகளை தீவிரமாக தாக்குவேம் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>வளைகுடா நாடுகளுடன் ஒருங்கிணைந்த ராஜதந்திர முன்னெடுப்பை ஈரான், மேற்கொண்டுள்ள பின்னணியில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதில் எண்ணெய், மின்சாரம் மற்றும் நீர் ஆலைகளைத் தாக்கும் என்றும் வெளிப்படையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகள்</h2><p>
அமெரிக்காவின் மிக நெருங்கிய அரபு நட்பு நாடுகளின் எரிசக்தி வசதிகள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்பு, நீர் உள்கட்டமைப்பு, போக்குவரத்து வலைப்பின்னல்கள் மற்றும் பிற மூலோபாய சொத்துக்கள் மீதான தாக்குதல்களை அந்த எச்சரிக்கை உள்ளடக்கியிருந்தது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8171d253-de8b-4f2a-b706-79a802017d87/26-6a74976c61b34.webp' /></p><p>
வளைகுடா முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவு ஏற்படும் வாய்ப்பை எழுப்புவதன் மூலம், மேலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரு பரந்த ஈரானிய முயற்சியின் ஒரு பகுதியான இந்தச் செய்தி, வெளியாகியுள்ளது.</p><p>இந்த விவாதங்கள் குறித்து அறிந்த இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள், இரண்டு வளைகுடா வட்டாரங்கள் மற்றும் ஒரு மூத்த பிராந்திய இராஜதந்திரி ஆகியோர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது சவுதி, துருக்கி மற்றும் கத்தார் நாட்டு சகாக்களுடனும், பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடனும் பேசியதாகக் கூறியுள்ளார்.</p><p>மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதிலிருந்து ட்ரம்பைத் தடுப்பதற்கு, அமெரிக்கா வளைகுடா நட்பு நாடுகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அராக்சி வலியுறுத்தினார் என அந்த மூத்த தூதரக அதிகாரி கூறியுள்ளார்.</p><p>ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும், வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு எதிரான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாடு : இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-man-s-tragic-end-to-conflict-with-his-mother-1786025347"></link>
            <id>https://ibctamil.com/article/young-man-s-tragic-end-to-conflict-with-his-mother-1786025347</id>
            <summary type="text">யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது. </p><p>இதன்போது சுன்னாகம்
பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><h2>சிம் அட்டையால் ஏற்பட்ட முரண்பாடு</h2><p>
</p><p>
தாயாரின் அடையாள அட்டையில் சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞன்
கோரிய நிலையில் அது முரண்பாடாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb36b9cf-0d16-4c9a-91aa-b8b4be8ca2fb/26-6a7499eb275b6.webp' /></p><p>பின்னர் குறித்த இளைஞன் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு வயல் கிணற்றுக்கு
அருகே சென்று தீ மூட்டியுள்ளார். </p><p>அதன்பின்னர் வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள்
பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி பவானி வீதி விவகாரம் :காவல்துறையின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-dismisses-police-case-in-tahiti-bhavani-road-1786023416"></link>
            <id>https://ibctamil.com/article/court-dismisses-police-case-in-tahiti-bhavani-road-1786023416</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி
காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி
காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பிரதேச சபையின் வீதியான பவானி
வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் 59வது
பிரிவின் கீழ் பிரதேச சபையினால் அறிவித்தல் ஒன்று செய்யப்பட்டது.</p><h2>மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு</h2><p>அந்த அறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கடந்த
மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2406a333-428d-4ba8-8504-0ed5a20f36c0/26-6a74938c56f41.webp' /></p><p>

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. அந்த வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்
தவிசாளர் மற்றும் அதே பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டனர்.
</p><p>
குறித்த இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள். ஒரு
பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின்
மூலமே கேள்விக்கு உட்படுத்த முடியும்.</p><p> அதாவது வடக்கு மாகாண மேல்
நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும்.

காவல்துறையினரும் ஒரு அரச திணைக்களத்தை சார்ந்தவர்கள்.</p><p></p><h2>வழக்கிலிருந்து விடுதலை</h2><p> </p><p>ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச
திணைக்களத்துக்கு எதிராக 81வது பிரிவின்கீழ் நியதி சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தொடர்பாக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்ட நிலையில். அது தொடர்பான கட்டளைக்காக வழக்கானது தவணையிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d273932-e31c-4ff6-afc8-ebcbca27707d/26-6a74938d0f9b2.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் அது தொடர்பான கட்டளையானது இன்றைய தினம் நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்டது.</p><p> அதாவது சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு
தொடுநரான பலாலி காவல்துறையினர் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த
வழக்கினை தள்ளுபடி செய்து பிரதிவாதிகள் இருவரையும் நீதிமன்றமானது
வழக்கிலிருந்து விடுவித்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/it-is-unjust-to-seize-peoples-lands-1786020965"></link>
            <id>https://ibctamil.com/article/it-is-unjust-to-seize-peoples-lands-1786020965</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கே ,.. &quot; என சொல்லி வரும் அரசாங்கம்
மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில்
கையகப்படுத்த தீவிரமாக முய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம்
மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில்
கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக தனியார் காணிகளை
சுவீகரித்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் காணி
உரிமையாளர்களுக்கும் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர்களுக்கு
இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச
செயலகத்தில் நடைபெற்றது.</p><p>

அதன் போது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படாது பலாலி விமான
நிலையமாக இருந்த காலப்பகுதியில் குறிப்பாக 1986ஆம் ஆண்டு கால பகுதியில் விமான
நிலைய விஸ்தரிப்புக்கு என 436 காணி உரிமையாளர்களின் 267 ஏக்கர் காணி
சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி</h2><p>

ஆனால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமையால் , அக்கால பகுதியில்,
விமான நிலைய அபிவிருத்திகள் தடைப்பட்டு , காணி சுவீகரிப்பு நடவடிக்கையும்
தடைப்பட்டது.</p><p>
பின்னரான 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள்
இடம்பெயர்ந்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் , கட்டம் கட்டமாக விமான நிலையத்திற்கு
அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட
போதிலும் , விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணம் என அப்பகுதி
மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
</p><p>
விமான நிலையத்திற்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
காணிகளுக்கு மேலதிகமாகவும் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்ட பலாலி மேற்கு , மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும்
குரும்பசிட்டி ஆகிய 4 நான்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 267 ஏக்கர்
காணி தவிர தற்போது மேலதிகமாகவும் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மே மாதம் 26ஆம் திகதி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை
இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் வருகை தந்து நேரில் ஆராய்ந்து
சேர்ந்த பின்னர் கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றும் போது
774.98 ஏக்கர் காணி விமான நிலையத்திற்கு தேவை என தெரிவித்து இருந்தார்.</p><p>
1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையமாக காணப்பட்ட போது , 267 ஏக்கர் காணியே விமான
நிலைய விஸ்தரிப்புக்கு தேவை என சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையமாக தரமுயர்ந்துள்ள நிலையில் , சர்வதேச விமான
நிலையத்திற்காக மேலதிகமாக சுமார் 508 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளன.
</p><p>
இந்நிலையிலேயே, முதல் கட்டமாக, 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்ட காணி உரிமையாளர்களை அழைத்து , அவர்களின் காணிகளுக்கு இழப்பீடு
வழங்குவது தொடர்பில் முதல் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது

1986ஆம் ஆண்டு காணிகளை சுவீகரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
போது , காணிக்குள் இருந்த சொத்துக்களுக்கும் மதிப்பீடு காணப்பட்டது.</p><p></p><h3>&nbsp;நான்கு வருடங்களுக்கான வட்டி</h3><p>
அவற்றுக்கும் பெறுமதி இருந்தது.

தற்போது வெறும் காணிகளுக்கு மட்டுமே மதிப்பீடு நடைபெறவுள்ளது. ஒரு காணியில்
வீடும்,வணிக கட்டடமும் இருந்து இருந்தால் , அந்த காணியில் இருந்த
கட்டங்களுக்கான பெறுமதியினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது.
</p><p>
ஏனெனில் பெரும்பாலான காணிகளுக்குள் கட்டடங்கள் இல்லை. காணிகளுக்குள் கட்டங்கள்
இருந்தாலும் , அந்த கட்டடங்கள் 40 வருடங்களுக்கு முந்தியவை என்பதால்
அவற்றுக்கும் பெறுமதியில்லை.</p><p>

காணி 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டலும் , 2022ஆம்
ஆண்டே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தல்
விடுக்கப்பட்டமையால் , 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியை காணி
மதிப்பீட்டு திணைக்களத்தினர் நிர்ணயித்து , அதற்கான விலையே காணி விலையாக
நிர்ணயித்து அந்த பணம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் , 2022ஆம் ஆண்டு விலை
நிர்ணயிக்கப்பட்டாலும் ,2026ஆம் ஆண்டே இழப்பீட்டு தொகை கிடைக்குமாயின் , அந்த
நான்கு வருடங்களுக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>

காணிகளுக்குள் இருந்த சொத்துக்களுக்கு இழப்பீடு இல்லை என்ற கவலை இருந்தாலும்
, 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியில் இழப்பீடு வழங்கப்படும்
என்ற அதிகாரிகளின் உறுதி மொழியை நம்பி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகளை
வழங்கி , இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள பெருமளவானோர் சம்மதித்தனர்.
</p><p>
அந்நிலையிலையே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் காணி
உரிமையாளர்கள் வந்தனர்

கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு வழங்கிய சத்திய
கடதாசியில் காணப்பட்ட விடயங்களே காணி உரிமையாளர்கள் மத்தியில்
குழப்பத்தை உண்டு பண்ணியது

குறித்த சத்திய கடதாசியில், 04 ஆகஸ்ட் 2026 என திகதியிடப்பட்டு ,

"பிரிக்கப்படாத ஒரே காணி அலகாகக் கொண்டு, தனிப்பட்ட அமைவிடத்தைக்
கருத்திற் கொள்ளாமல்
ஒவ்வொரு ஆளுக்கும் சொந்தமான காணியின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நான்
இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றேன் " என்ற கூற்று காணி
உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்பட்டது.</p><p>

குறித்த பகுதியில் உள்ள காணிகள் அனைத்தையும் "LOT - 1 " ஆக அடையாளப்படுத்தி,
அதனை ஒரு காணியாக விலையை மதிப்பீடு செய்து , அந்த காணியின் பெறுமதியை , காணி
உரிமையாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதா என குழப்பம் அடைந்தனர்.</p><p>

ஒவ்வொருவருடைய காணியும் ஒவ்வொரு பெறுமதியாகும். பிரதான வீதியோரத்தை அண்டிய
காணியும் , பிரதான வீதியில் இருந்து 15ஆவது காணியாக உள்ள காணியும் ஒரே பெறுமதி
அல்ல. </p><p>காணிகள் அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப பெறுமதி மாறுபடும். அதனால்
காணிகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி , இந்த காணிக்கு எவ்வளவு என தனித்தனியாக
இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனர்.
</p><p>
சத்திய கடதாசியில் காணப்பட்ட அடுத்த கூற்றான " காணியின் உரிமையினை உறுதி
செய்வதற்கு காணி உறுதி இல்லாத போது செல்லுபடியான சட்டரீதியான ஆவணங்களை
அடிப்படையாகக் பெற்றுக்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கின்றேன். </p><p>அதனை கொண்டு
தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டினை பெற்றுக்கொள்கிறேன்" என காணப்பட்ட கூற்று.

எங்குமே காணிக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிடப்படவில்லை.</p><p> </p><p></p><h2>இழப்பீட்டுக் கொடுப்பனவு</h2><p>பல இலட்ச ரூபாய்
பெறுமதியான காணிகளுக்கு சில ஆயிரம் ரூபாய் தான் விலை என விலை மதிப்பீடு செய்து
, அதனை இழப்பீடாக தந்தால் , அதொரு நியாமான விடயமாக அமையாது.
</p><p>
எனவே எமது காணிக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை என நாம் அறிந்து கொண்டாலே ,
அதற்க்கான சம்மதத்தை தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.

அத்துடன் சத்திய கடதாசியில் நான்காவது கூற்றாக , " காணிக்கான இழப்பீட்டுக்
கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பமிட நான்
உடன்படுகின்றேன்" என காணப்பட்ட கூற்று , காணிக்கு எவ்வளவு இழப்பீடு என
எமக்கு தெரிவிக்காது , காணிகளுக்கான விலை மதிப்பீட்டை இனி தான் மேற்கொள்ள
போவதாக கூறிக்கொண்டு " இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து
கொண்டதன் பின்னர் " என சத்திய கடதாசியில் குறிப்பிட்டு எம்மை கையொப்பம் இட
கேட்பது எவ்வாறு நியாயம் என கேட்டு , காணி உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட
தொடங்கினர்.
</p><p>
அதனை அடுத்து , கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு பெருமளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். </p><p>அது காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும்
குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து , அதனால் பெருமளவான காணி உரிமையாளர்கள்,
மண்டபத்தை விட்டு , வெளியேறி சென்றனர்.</p><p>
தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தரப்பில் 07 பேர் கொண்டு குழு ஒன்று அமைப்பது
என்றும் , அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக சத்திய கடதாசியில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
தீர்மானித்து கூட்டம் முடிவடைந்தது

பெரும்பாலான மக்கள் இழப்பீடோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்படும் மாற்று
காணிகளையோ ஏற்க மறுத்து, "எங்கள் பூர்வீக நிலமே எங்களுக்கு வேண்டும்" என
உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.
</p><p>
அவ்வாறான நிலையில் 40 வருட காலமாக தாம் போராடி களைத்து விட்டோம் , அரசாங்கம்
தரும் நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொள்வோம் என முன் வந்த போதிலும், காணி
உரிமையாளர்களுக்கு சத்திய கடதாசி அவ நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் , வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும்
யாழ்ப்பாண சர்வதேச விமான விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம்.

பொருளாதார வளர்ச்சிக்காக, தலைமுறைகள் தாண்டியும் தமது பூர்வீக நிலங்களுக்கு
செல்ல வேண்டும் என போராடி வரும் மக்களின் மனப்பூர்வ ஒப்புதலின்றி அவர்களின்
காணிகளைச் சுவீகரிப்பது அநீதியாகும்.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்கியே
அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுவே சமூக நீதியுமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T13:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clashes-report-to-president-1786021528"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clashes-report-to-president-1786021528</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார, இன்று (06) நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p>
கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதலில் இருபத்திரண்டு கைதிகளும் பத்து அதிகாரிகளும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1477fe03-ac0e-4b86-b4f6-6bada2a2cf1b/26-6a748b881f1b5.webp' /></p><p>மேலும், இந்த மோதலில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கை</h2><p>மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ad5a2e-fb6b-4024-af63-93e68674eaf0/26-6a748b88c3b33.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இழப்பீடு, ஓய்வூதியம் மற்றும் அதிகாரிகள் வாங்கிய கடன்கள் தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.</p><p>

மேலும், மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலை மற்றும் அவர்களின் முழுமையான இயலாமை குறித்து சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வெளிநாட்டவர் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-national-arrested-in-colombo-1786018503"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-national-arrested-in-colombo-1786018503</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டி சந்தியில் கைபேசி பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் எடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டி சந்தியில் கைபேசி பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.</p><p>



சந்தேக நபர், அவ்வழியே சென்ற ஒருவரின் கைபேசியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், உள்ளூர்வாசி ஒருவர் அவரைத் துரத்திப் பிடித்து, பின்னர் காவல்துறை வசம் ஒப்படைத்தார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lFSCByLUa4o?start=7" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T12:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே வழக்கில் குறுக்கீட்டு மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intervening-petitions-suresh-sallay-case-1786015202"></link>
            <id>https://ibctamil.com/article/intervening-petitions-suresh-sallay-case-1786015202</id>
            <summary type="text">அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பான இடைமனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பான இடைமனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06-08-2026)) ஒத்திவைத்துள்ளது.</p><p>


உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>குறுக்கீட்டு மனுக்கள்&nbsp;ஒத்திவைப்பு</h2><p>
</p><p>
குறித்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, இம்மனுவுக்கு எதிராக இடைமனு தாக்கல் செய்த கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் உட்பட பல இடைமனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2bcdcb-6664-4235-a0b6-da1175935cf3/26-6a74780349e00.webp' /></p><p>
</p><p>
வாதப் பிரதவாதங்களைச் செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம், குறித்த இடைமனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை ஆகஸ்ட் பத்தாம் ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T12:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-and-al-exam-to-be-held-as-usual-1786015579"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-and-al-exam-to-be-held-as-usual-1786015579</id>
            <summary type="text">பேரிடர் சூழ்நிலை எதுவும் இல்லாததால், உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேரிடர் சூழ்நிலை எதுவும் இல்லாததால், உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்புடன் நேற்று (05) நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>வானிலை மாற்றங்கள் எதுவுமில்லை&nbsp;</h2><p>பரீட்சைகளுக்காக திட்டமிடப்பட்ட திகதிகளில் சிறப்பு வானிலை மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கும் எந்த வானிலை முன்னறிவிப்புகளும் தற்போது இல்லாததே இதற்கான முக்கிய காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94db4a9-42bc-4c7f-b419-dfb1817353eb/26-6a74741d9e15c.webp' /></p><p>
</p><p>

புலமைப்பரிசில் பரீட்சை 09 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை 10 ஆம் திகதியும் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. </p><p>

முப்படையினர் மற்றும் காவல்துறையின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.</p><p> 

"அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் ஊடாக அனைத்து தரப்பினரையும் இணைத்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன்னரும், பரீட்சை முடிவுற்ற பின்னரும் இந்தத் திட்டம் செயற்படும். ஏதேனும் இடர் நிலைமை ஏற்பட்டால், பிள்ளைகளைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வினாத்தாள்களைக் கொண்டு செல்லும் போதும் மற்றும் அதிகாரிகளுக்குக் கடமைகளைச் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் 117 என்ற தொலைபேசி இலக்கமும் செயற்பாட்டில் உள்ளது. தொழில்நுட்ப அறிக்கைகள் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ அல்லது 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ வழங்கப்படவுள்ளன. முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்." என்றார்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் கோரிய விக்ரம் மிஸ்ரியின் கருத்து அநுர ஊடக பிரிவால் அமுக்கப்பட்டது ஏன்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vikram-misri-urges-sl-on-provincial-elections-1786015122"></link>
            <id>https://ibctamil.com/article/vikram-misri-urges-sl-on-provincial-elections-1786015122</id>
            <summary type="text">இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்மிஸ்ரி இலங்கையில் தனது சிலமணிநேர விறுவிறு சுறுசுறு சந்திப்புக்களை தமிழ்பேசும் ஆறு கட்சிகளின் அரசியல் பேரவை உட்பட்ட தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்மிஸ்ரி இலங்கையில் தனது சிலமணிநேர விறுவிறு சுறுசுறு சந்திப்புக்களை தமிழ்பேசும் ஆறு கட்சிகளின் அரசியல் பேரவை உட்பட்ட தரப்புக்களுடன் 
முடித்துக்கொண்டு நேற்று மாலையே டெல்லிக்குப் பறந்துவிட்டார். </p><p> 

மிஸ்ரியின் பயணத்தின் முடிவில் இரண்டு தரப்புக்களில் இருந்து ஊடகங்களுக்குரிய அதிகாரபூர்வ அறிக்கையிடல்கள் வந்திருந்தன.
</p><p>
இரண்டு தரப்புகளின் ஊடக அறிக்கைகளை நோக்கினால் மாகாண சபைத்தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தால் நடத்துங்கள் என்ற செய்தி அனுரவுக்கு டெல்லிசார்பாக சொல்லபட்டதான விடயத்தை இந்தியதரப்பு தனது அறிக்கையிடலில் முன்னிலைப்படுத்திருந்தது.</p><p>

ஆனால் இதற்கு மாற்றாக அநுரகுமார திசாநாயக்காவின் அரசதலைவர் ஊடகப் பிரிவு இந்த விடயத்தை தனது அறிக்கையிடலில் சொல்லவேயில்லை ஆகமொத்தம் இந்த முறையும் கொழும்பின் பழைய கண்ணா மூச்சியின் ஆட்டத்தின் நீட்சிவந்துள்ளது.
</p><p>
மறுபுறத்தே ஜேவிபி உள்ளுடன் அநுர ஆட்சிக்கோ அது என்னதான் சிஸ்ரம் சேஞ் சொன்னாலும் மாகாணசபை பிரச்சனையை அது அரசியல் ரீதியான உள்ளுடன் வெறுப்புடன் கையாள்கிறது.
</p><p>
இதற்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இந்தியா தமது அரசாங்கத்துக்கு வலியுறுத்தியது என்பதை முன்னிலைப்படுத்தினால் அது தமது அரசாங்கத்தின் மீதான வெறுப்புக்கும் எதிர் அரசியல் அணிகளுக்கும் ஒரு முதலீடாகும் என்ற அச்சத்தில் அது தனது அறிக்கையிடலில் அதனை தவிர்த்தாக தெரியும் நிலையில் இந்தவிடயத்தை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dJT5pvgwrZI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T11:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு இறுகும் பிடி: நீதிமன்றம் சென்றது காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-police-chief-issue-1786013855"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-police-chief-issue-1786013855</id>
            <summary type="text">பொது வீதியில் வைத்து காவல்துறை மா அதிபரை (IGP)பொதுமக்கள் படுகொலை செய்வார்கள் என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது வீதியில் வைத்து காவல்துறை மா அதிபரை (IGP)பொதுமக்கள் படுகொலை செய்வார்கள் என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் வெளியிட்ட அறிக்கை குறித்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இன்று (06) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
</p><p>
உண்மைகளை ஆராய்ந்த பின்னர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><h2>காவல்துறை மா அதிபருக்கு நீதிமன்றின் உத்தரவு</h2><p>&nbsp;அதன்படி, காவல்துறை மா அதிபர்(IGP) பொதுச் செயலாளர் சாகர கரியவசம் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது காவல்துறை மா அதிபர்(IGP) குறித்து வெளியிட்ட அச்சுறுத்தும் அறிக்கையின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளை காவல்துறைக்கு வழங்குமாறு கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று (06) உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28af7f0c-d5ff-4f0d-a72e-8a11624fcea9/26-6a746c4f7f096.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவில் கல்வியுடன் வேலை வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/job-opportunities-with-education-in-south-korea-1786012823"></link>
            <id>https://ibctamil.com/article/job-opportunities-with-education-in-south-korea-1786012823</id>
            <summary type="text">தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அதிகார வரம்புகள் தொடர்பான படிப்புகளைப் பயிலும் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அதிகார வரம்புகள் தொடர்பான படிப்புகளைப் பயிலும் மாணவர்களை, உயர்கல்விக்காக தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் திட்டம் ஒன்று அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒரு சிறப்புக் கூட்டம் சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்றது.
</p><p>கடந்த ஆண்டு சாங்ஷின் பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>சாங்ஷிங் பல்கலைக்கழகம்</h2><p>இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தில் (NIOSH) பயிலும் மாணவர்கள், சாங்ஷிங் பல்கலைக்கழகத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு வரை உயர்கல்வியைத் தொடரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a6eab6-84cb-464d-a579-55d43efe5cdc/26-6a746acd85fcf.webp' /></p><p> மேலும், படிக்கும்போதே பகுதிநேர வேலை செய்யும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் பாடக் கட்டணத்தில் 50% மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அதே சமயம் கல்வித் திறமையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% வரை பாடக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தென் கொரியாவில் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.</p><p>
இந்தக் கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், இந்தப் பாடத்திட்டத்தில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆழமாக விவாதித்தனர்.
</p><p>கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிட்டு முழுவீச்சில் செயல்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; &nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா - உக்ரைன் போரில் மீண்டும் பதற்றம்...! இரு பக்கமும் தீரமடையும் தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deadly-strikes-escalates-russia-ukraine-war-1786011411"></link>
            <id>https://ibctamil.com/article/deadly-strikes-escalates-russia-ukraine-war-1786011411</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக இரு நாட்டு அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைத் (Oil Refineries) தங்களது படைகள் வெற்றிகரமாகத் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ள பின்னணியில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் ரஷ்யாவின் யாரோஸ்லாவ் (Yaroslavl) பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்லாவ்நெப்ட்-யானோஸ் (Slavneft-Yanos) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>சுத்திகரிப்பு ஆலை</h2><p>

தாக்குதலுக்குள்ளான இந்த ஆலை ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.</p><p> 

இது ஆண்டிற்கு சுமார் 1.5 கோடி (15 மில்லியன்) மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7d503f-03d5-4fdc-843b-b100b0ece388/26-6a746b9dc6b11.webp' /></p><p>ஆலையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

இருப்பினும், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவற்றின் இடிபாடுகள் விழுந்ததால் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் சேதமடைந்து நகரின் மேல் புகைமூட்டம் சூழ்ந்ததாகவும் யாரோஸ்லாவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அவசர கால சேவை</h2><p>

இதேவேளை, உக்ரைனின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் உக்ரைனிய கோதுமையைச் சுமந்து சென்ற கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6ea269-4685-435e-a08f-31ac85b47814/26-6a746b9d1e647.webp' /></p><p>

கார்கிவ் தொடருந்து நிலையத்தை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
பாலாக்கிலியா பகுதியில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர கால சேவைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வான் துருப்புகளுக்கு அமெரிக்கா இரகசிய இராணுவப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-conduct-secret-training-taiwanese-troops-1786011989"></link>
            <id>https://ibctamil.com/article/us-conduct-secret-training-taiwanese-troops-1786011989</id>
            <summary type="text">அமெரிக்கா நீண்ட காலமாகத் தனது துருப்புகளுக்கு இரகசிய இராணுவப் பயிற்சி அளித்து வருவதை தாய்வான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா நீண்ட காலமாகத் தனது துருப்புகளுக்கு இரகசிய இராணுவப் பயிற்சி அளித்து வருவதை தாய்வான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சில அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா -&nbsp; தாய்வான் இடையிலான வலுவான உறவை உலகிற்கு வெளிக்காட்டும் முயற்சியாக இந்தத் தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>




இது குறித்து கருத்து தெரிவித்த தாய்னின் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு பொதுமக்கள் நினைப்பதை விட மிகவும் ஆழமானது என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>தாய்வானின் பாதுகாப்பு</h2><p>அமெரிக்க சட்டத்தின்படி தாய்வானின் பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கப்பட்டாலும், பொதுமக்கள் அந்த ஆயுத விற்பனையை மட்டுமே பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2bcd61e-1d3b-4783-ba2a-519bd40aba68/26-6a74698d1a7be.webp' /></p><p>இருப்பினும், பல்வேறு இராணுவப் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் தாய்வான் ஏராளமான நடைமுறை இராணுவ அனுபவத்தைப் பெற முடிந்துள்ளது என்றும் சுட்க்காட்டியுள்ளார்.</p><p> எனினும், எதிர்காலத்தில் சீனாவுடன் ஒரு மோதல் ஏற்பட்டால், அமெரிக்கப் படைகளின் நேரடித் தலையீட்டை தைவானின் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளடக்கவில்லை என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><h2>சீனா எச்சரிக்கை</h2><p>தாய்னைத் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, தேவைப்பட்டால் அதை பலவந்தமாகக் கைப்பற்றும் என்று எச்சரித்துள்ள சூழலில், இந்த இரகசியப் பயிற்சிகள் சீனாவைக் கோபப்படுத்தக்கூடும் என்பதால் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864778f4-36ff-4969-bbcf-abaa15f3023e/26-6a74698dc3dd2.webp' /></p><p>இந்நிலையில் பென்டகனும் அமெரிக்க பசிபிக் கட்டளையகமும் இந்த இராணுவப் பயிற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தாலும், தாய்வானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்படும் AIT இரு நாடுகளின் கடலோரக் காவல் கப்பல்கள் ஒன்றாகப் பயணிக்கும் புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T11:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்று மாசுபாடு : இலங்கையில் வருடாந்தம் பறிபோகும்7000 மனித உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/air-pollution-kills-7-000-people-sri-lanka-1786012265"></link>
            <id>https://ibctamil.com/article/air-pollution-kills-7-000-people-sri-lanka-1786012265</id>
            <summary type="text">வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காற்றிலுள்ள பல்வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே இதற்குக் காரணம் என விசேட ய நிபுணர் சாந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் முதல் 8 மில்லியன் மக்கள் வரை உயிரிழப்பதுடன், இலங்கையிலும் இக்காரணத்தால் ஆண்டுக்கு 7,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர்.</p><h2>விறகு எரிப்பதால் மாசடையும் வளிமண்டலம்</h2><p>விறகுகளை எரிப்பதன் மூலமும் பெருமளவிலான நச்சு வாயுக்கள் சுற்றாடலில் வெளிவிடப்பட்டு வளிமண்டலம் மாசடைவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c3ecac-7d9a-4dc7-994c-308228b3668c/26-6a7466439f0e2.webp' /></p><p>
</p><p>
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் சாந்தனி விதான இத்தகவல்களை வெளியிட்டார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/litro-lp-gas-prices-unchanged-for-august-1786011810"></link>
            <id>https://ibctamil.com/article/litro-lp-gas-prices-unchanged-for-august-1786011810</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வருவதோடு, நாணய மாற்று விகிதத்திலும் சவாலான நிலமைகள் காணப்பட்டபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய விற்பனை விலைகள்:
</p><ul><li>
12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 4,465
</li><li>
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 1,792
</li><li>
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 835</li></ul><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-oil-supply-project-targeting-trinco-1786009957"></link>
            <id>https://ibctamil.com/article/international-oil-supply-project-targeting-trinco-1786009957</id>
            <summary type="text">இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறியுள்ளார்.</p><p> திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகளை ஆய்வு செய்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
அனுர கருணாதிலக திருகோணமலை எண்ணெய் தேக்க வளாகத்தைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த நிலையில் இந்த விடயத்தை குறித்து விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>அனுர கருணாதிலக</h2><p>

மேலும் திருகோணமலை எண்ணெய் தேக்கங்களை மேம்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசு முன்னெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4de8d9-a8a4-46bf-a321-9ea2ee76b2b0/26-6a7462c1eaa7b.webp' /></p><p> </p><p>பிரதி அமைச்சர்களான ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்ல யோசித ராஜபக்சவிற்கு அனுமதி மறுத்தது நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-denies-permission-yositha-to-travel-abroad-1786009897"></link>
            <id>https://ibctamil.com/article/court-denies-permission-yositha-to-travel-abroad-1786009897</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ச விடுத்த கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நிராகரித்தார்.
</p><p>



இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த இந்த முறைப்பாடு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><h2>கல்வித்தகுதி இல்லாமல் கடற்படையில் இணைப்பு</h2><p>&nbsp;அதன்படி, உரிய அறிவிப்புகள் கிடைத்ததும் சந்தேகநபர்களை மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடுமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4e8d73-2523-43a6-9606-6a446c9e1a8f/26-6a745c4a53bde.webp' /></p><p>2006 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 2007 ஜூன் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிய கல்வித் தகைமைகள் இல்லாத யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்து, பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியை வழங்குவதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவருக்கு அநியாயமான ஆதாயத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.</p><p></p><h2>வசந்த கரன்னாகொட மற்றும் யோசித ராஜபக்ச பிரதிவாதிகள்</h2><p>&nbsp;கடந்த 31 ஆம் திகதி இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் பிரதிவாதியாக வசந்த குமார ஜயதேவ கரன்னாகொடவும், இரண்டாவது பிரதிவாதியாக யோஷித கனிஷ்க ராஜபக்சவும் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கிற்கு சம்பந்தமாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 சாட்சி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010d3c11-d3d5-45ce-8cb9-090cb1740c8c/26-6a745c4b21769.webp' /></p><p>சந்தேகநபரான யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீன் நுவரபக்ச நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால், விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் சமர்ப்பித்த விசேட மனு மூலம் கோரியதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விசேட மனு நிராகரிப்பு</h2><p> </p><p>இருப்பினும், தற்போது மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதான நீதவான், சம்பந்தப்பட்ட கோரிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e61bde-7e24-40bc-811e-08a239301863/26-6a745c4bcddbd.webp' /></p><p> </p><p>இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவிந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் கலை மூலம் புதிய பாதை! சாதனையாளர்களை உருவாக்கும் றீ(ச்)ஷா பண்ணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-farm-culinary-training-concludes-1786008741"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-farm-culinary-training-concludes-1786008741</id>
            <summary type="text">கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வு (05-08-2026) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>பணப்பரிசுகள்&nbsp;</h2><p>பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஊக்கமளிக்கும் வகையில் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c00d447-d132-4bc6-959d-fd316dc7b3ab/26-6a745550c3b02.webp' /></p><p>

ஆயிரம் கவிதைகள் தொகுப்பின் ஆசிரியரான யோ. புரட்சி, நிகழ்வை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கி, விழாவின் நோக்கத்தையும் சமூகப் பயனையும் அனைவரும் அறியச் செய்தார்.
</p><p>
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.</p><p>
</p><p></p><h2>ஒருங்கிணைந்த பண்ணை</h2><p>தவறான வழிகளில் செல்லக்கூடிய இளைஞர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து, சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்த இத்தகைய தொழில்முனைவுப் பயிற்சிகள் பெரும் பங்காற்றுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01197076-a070-41ef-a1d0-3373eff72356/26-6a745551abdf3.webp' /></p><p>சோம்பலைத் தவிர்த்து உழைப்பை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், உலக அரங்கில் தமிழர்கள் சாதனையாளர்களாகத் திகழ முடியும் என்பதை இந்நிகழ்வு வலியுறுத்துகிறது.</p><p>


இந்நிகழ்வில் கலந்துகொண்ட குமாரு யோகேஸ்வரன், இப்பயிற்சி விழா தனக்கு ஒரு பெரிய வாழ்வியல் பாடமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இளைஞர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-gold-jewelry-stolen-in-urumpirai-jaffna-1786007844"></link>
            <id>https://ibctamil.com/article/28-gold-jewelry-stolen-in-urumpirai-jaffna-1786007844</id>
            <summary type="text">கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க
நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த வீட்டார் கொண்டாட்ட
நிகழ்வு ஒன்றுக்கு மறுநாள் காலை செல்வதற்காக இரவு வேளை தயார் படுத்தலில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் வீட்டில் இருந்த ஒருவர் குளியல் அறைக்கு சென்ற நேரம் கதவின் ஊடாக திருடன் வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>28 பவுன் தங்க நகை களவு</h2><p>மறுநாள் காலை வீட்டார் எழுந்து அறையை பார்வையிட்டபோது அலுமாரிகள் திறந்த
நிலையில் வீட்டில் திருட்டு இடம்பெற்றதை உணர்ந்து தமது தங்க ஆபரணங்கள் இருந்த
இடத்தை தேடி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eab19974-5b64-489b-a217-0a00b2c3054f/26-6a745543a87a3.webp' /></p><p>
மறுநாள் நிகழ்வுக்கு எடுத்து வைத்த ஆபரணங்கள் அனைத்தும் களவாடி செல்லப்பட்டதை
அறிந்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும்
அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடியின் பதிவை நீக்கிய மெட்டா நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meta-company-removes-modi-s-post-1786002939"></link>
            <id>https://ibctamil.com/article/meta-company-removes-modi-s-post-1786002939</id>
            <summary type="text">இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முதன்மை அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan), இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O), புதுப்பிப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு பதிவை ஜூலை&nbsp;23 அன்று மாதம் சிறிது நேரம் கட்டுப்படுத்தியதாக தெரிய வருகிறது.</p><p>இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்தின்&nbsp; தலைவர் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>நீண்ட கலந்துரையாடல்</h2><p>அன்றைய தினம் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி&nbsp; பதிவு ஒன்று, மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1311ae-08e6-4ae5-b5b5-89dd9c00b9d0/26-6a7446cc9d32c.webp' /></p><p>இச்சம்பவம் ஒரு ‘தொழில்நுட்பக் கோளாறு’ (Technical glitch) காரணமாகவே ஏற்பட்டது என்றும், தவறுதலாகவே இப்பதிவு நீக்கப்பட்டதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.</p><p>
மெட்டா உயர் அதிகாரி ஜோயல் கப்லான், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்தித்து 45 நிமிடங்கள் கலந்துரையாடியதுடன், இத்தவறுக்காக முறைப்படி மன்னிப்பும் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>எனினும் மெட்டா அளித்த இந்த விளக்கத்தைப் போதியதாக இல்லை (inadequate) என இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிராகரித்துள்ளது.</p><p></p><h2>3 நாட்களுக்குள் மன்னிப்பு</h2><p>இந்நிலையில் பிரதமரின் காணொளியை நீக்கியமை ஒரு இடைத்தரகர் தளத்தின் செயல் அல்ல, அது ஒரு பதிப்பகத்தின் (Publisher) செயல் எனக் குறிப்பிட்ட இந்திய நாடாளுமன்ற&nbsp; தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே, மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100c779d-dc91-4246-b5d0-8b947c0bdd2b/26-6a7446cbe29bc.webp' /></p><p>ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா கண்டிராத மிகப்பெரிய இளைஞர் தலைமையிலான போராட்ட அலையை மோடி சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் காணொளிகள் பரவின. </p><p>தேசியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததன் காரணமாக அவரது கல்வி அமைச்சர் பதவி விலகல் செய்ததால், அந்தப் போராட்டங்கள் வெடித்தன.
</p><p>பிரதமர் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து மெட்டாவுக்கும் மோடி அரசுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வரும் பதட்டங்களின் ஒரு பகுதியாக இந்தச் சம்பவங்கள் அமைந்துள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:40:20+00:00</updated>
        </entry>
    </feed>
