<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T07:17:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பொதியில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-stock-of-kush-was-left-behind-at-the-airport-1789449602"></link>
            <id>https://ibctamil.com/article/a-stock-of-kush-was-left-behind-at-the-airport-1789449602</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயம் இன்று (15.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>

விமான நிலையத்தின் பயணப் பொதிகள் நகரும் பாதை இலக்கம் 06க்கு அருகில் கைவிடப்பட்டிருந்த இரண்டு பொதிகளை சோதனையிட்டபோதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு கமரா காட்சி</h2><p>

கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் காற்றுப்புகாத வகையில் 60 பொதிகளில் அடைக்கப்பட்டு, இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aad331-9396-4f41-b8b3-0d0e1c148807/26-6aa8e8a869d32.webp' /></p><p>

இந்த போதைப்பொருள் நேற்று (14) தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சிறி லங்கன் எயார்லைன்ஸ் UL-405 விமானத்தில் பயணித்த ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், குறித்த நபர் தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒத்துழைப்புடனும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T06:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித கட்டுப்பாட்டை இழக்கும் AI... தொழில்நுட்ப உலகில் கிளம்பிய புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/experts-warn-ai-systems-may-seize-control-1789452475"></link>
            <id>https://ibctamil.com/article/experts-warn-ai-systems-may-seize-control-1789452475</id>
            <summary type="text">அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும் என தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

OpenAI மற்றும் Anthropic ஆகிய முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் AI ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய ஜேக்கப் கொக்சன் (Jacob Coxon) இது தொடபிள் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், "இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று கூட பொறுப்புடன் செயல்படவில்லை.</p><p>
</p><p></p><h2>அவசரமாக நடைமுறை</h2><p>அவர்கள் தங்களைத்தானே சுய-மேம்படுத்திக் கொள்ளும் அதிநவீன அsuper-intelligent AI அமைப்புகளை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0b9a9e-d830-4fd4-b3e7-5148796aa63f/26-6aa8e74a22da7.webp' /></p><p>அதற்காக நமது உயிர்களையே பணையம் வைத்து விளையாடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, Google DeepMind இன் நிறுவுனரான சர் டெமிஸ் ஹசாபிஸ் (Sir Demis Hassabis), AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் சர்வதேச அளவிலான ஒழுங்குமுறைகள் (International Regulation) அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200"></link>
            <id>https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200</id>
            <summary type="text">யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன் பகை காரணமாக கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில் நேற்றைய தினம் (14-09-2026) அவர் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வாள் வெட்டு தாக்குதல் </h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு
இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன்
ஜெனிதன் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a41e67-5136-423f-8973-5576fd21d54d/26-6aa8d30b59dea.webp' /></p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு
ஜெனிதன் என்பவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். </p><p>

அதில் ஜெனிதன்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த
நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும்
கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e80b233-f8f9-4dcb-ab9c-71ed2caf892c/26-6aa8d30c44e07.webp' /></p><p>இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து
தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து
கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-39th-commemorative-event-in-jaffna-1789450152"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-39th-commemorative-event-in-jaffna-1789450152</id>
            <summary type="text">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
</p><p>
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்
நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45
மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.</p><p>
</p><p>
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை
தொடர்ந்து நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><h2>திலீபனின் கோரிக்கைகள்</h2><ol><li>மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.</li><li> சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
</li><li>
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
</li><li>
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
</li><li>
தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7d29f4-abb1-4b6a-99c6-f7df859c6d57/26-6aa8db4539a72.webp' /></p><p>

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் 12
நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26 ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர்
பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:49:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - அமெரிக்கா கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு தாக்குதல்</h2><p>

இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d0db34-5045-4dd0-9342-e7fcc20d1f56/26-6aa8cbfbc1c7e.webp' /></p><p>அமெரிக்க மத்திய மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பனாமா கொடியுடன் பயணித்த 'எல் கையா' (EI Gaia) என்ற குறிப்பிட்ட எண்ணெய் தாங்கி கப்பல், கடந்த மாதம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்கனவே செயலிழந்திருந்தது.</p><p> அத்துடன், கடந்த வார இறுதியில் ஓமன் கடலோரப் பகுதியில் மீண்டும் ஈரான் நடத்திய மற்றொரு தாக்குதலுக்கு உள்ளானது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>"நீர்வழியில் வர்த்தகக் கப்பல்களைத் தடுக்க முயற்சிக்கும் ஐ.ஆர்.ஜி.சி-யின் இந்த பொய்யான கூற்று, அவர்களின் பொய்கள் மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு மற்றுமொரு உதாரணமாகும்," என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளது.</p><p></p><h2>தேடும் பணிகள்</h2><p>இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8792252-1c76-4965-a4b7-c5b7801ea01f/26-6aa8cbfc7cb8a.webp' /></p><p>கப்பலில் இருந்த 14 இந்தியப் பணியாளர்களில் 13 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:20:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/job-opportunities-10-000-sri-lankans-in-thailand-1789446639"></link>
            <id>https://ibctamil.com/article/job-opportunities-10-000-sri-lankans-in-thailand-1789446639</id>
            <summary type="text">தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல முக்கிய ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
வெளியுறவு அமைச்சர் விஜய்தா ஹெரத்தின் தாய்லாந்து உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, ​​நேற்று (14.09.2026) பாங்காக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்த ஒப்பந்தங்கள் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இரு நாடுகளுக்கும் பாதுகாப்பான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன.</p><p></p><h2>இலங்கைத் தொழிலாளர்களின் உரிமை</h2><p>

தாய்லாந்தில் தற்போதுள்ள தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், முதல் கட்டமாக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு தாய் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc5e7ee1-fd0c-4a5d-b3b6-05361b570fba/26-6aa8d1c7b2644.webp' /></p><p>
</p><p>
மேலும் இது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்கும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - கொட்டாஞ்சேனையில் கொடூரம்..! 18 வயது இளைஞன் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-youth-stabbed-to-death-in-kotahena-1789447365"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-youth-stabbed-to-death-in-kotahena-1789447365</id>
            <summary type="text">கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இந்தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்தக்கொலை சம்பவம் நேற்று (14.09.2026) இரவு கொழும்பு - கொட்டாஞ்சேனை நகரில் இடம்பெற்றுள்ளது&nbsp;</p><p>உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2> விசாரணை&nbsp;&nbsp;</h2><p>கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/945940c6-3551-445a-9204-76b651fd483f/26-6aa8cf1fbf7c2.webp' /></p><p>தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T04:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம்..! தொடரும் அசமந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627"></link>
            <id>https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல்,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20 ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மூச்சு விட சிரமப்படும் நிலை&nbsp;&nbsp;</h2><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a709bc-66eb-4690-9f7d-c9d455ff49fe/26-6aa8abc5680b7.webp' /></p><p>அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p>
அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம். </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும், தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்</p><p></p><p>
</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>
அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் , அதன்
போது, வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2218e67a-7d38-4cdc-9801-d4125b1e0776/26-6aa8abc48ea58.webp' /></p><p>அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள் திருட்டு: இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cable-theft-at-chavakachcheri-two-arrested-1789443681"></link>
            <id>https://ibctamil.com/article/cable-theft-at-chavakachcheri-two-arrested-1789443681</id>
            <summary type="text">நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து&amp;nbsp;கேபிள்கள் திருடப்பட்ட சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து&nbsp;கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>

இந்தத் திருட்டு தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
</p><p>
இதனையடுத்து, நேற்று (14.09.2026) நண்பகல் சாவகச்சேரி காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்</h2><p>விசாரணை அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்கள் 14 இலட்சத்து 2 ஆயிரத்து 997 ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2464105-1868-4e4f-9a8c-6885c79b0a8f/26-6aa8c75decb67.webp' /></p><p>
</p><p>
</p><p>கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவர் எனவும், மற்றையவர் திருட்டுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த நபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்கள் முறையே நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1789438144"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1789438144</id>
            <summary type="text">நாட்டின் பல பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&amp;nbsp;&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>அந்த திணைக்களம் இன்று (15.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>அப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be042f0-3f91-41b0-83cd-83019f380d84/26-6aa8a8c2a131e.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். </p><p>

நேற்று (14) காலை 8.30 மணி முதல் இன்று (15) அதிகாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[222222222V என்ற அடையாள அட்டை எண்ணால் ஷிரந்தி தொடங்கிய வங்கி கணக்கு! தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraudulent-funds-piling-up-shiranthi-bank-ac-num-1789436250"></link>
            <id>https://ibctamil.com/article/fraudulent-funds-piling-up-shiranthi-bank-ac-num-1789436250</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கம் பயன்படுத்தப்பட்டிருந்த விடயம் மீண்டும் விசாரணையை மையப்படுத்தியுள்ளது.</p><p>குறித்த வங்கிக் கணக்கில் ஷிரந்தி ராஜபக்ஷவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக ‘222222222V’ என்ற இலக்கம் குறிப்பிடப்பட்ட விடயம் முன்னதாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.</p><p>இந்நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் மீண்டும் கவணம் பெற்றுள்ளது.</p><p></p><h2>சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனை</h2><p>சுடுவெல்ல பகுதியில் உள்ள அரச வங்கிக் கிளையொன்றில், ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவரின் பெயர்களில் கூட்டுக் கணக்காக ‘சிரிலியா’ கணக்கு திறக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தக் கணக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பான தகவல்கள் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73eb0a3-4f10-4e41-9369-a0306120ce6e/26-6aa8a15c6391c.webp' /></p><p>
</p><p>
அத்துடன், குறித்த வங்கிக் கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் கருவியொன்றை கொள்வனவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ச நிதி திரட்டும் பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்ததாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பெறப்பட்டு ‘சிரிலியா’ கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
எனினும், அதே காலப்பகுதியில் சீனாவிலிருந்து சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான PET ஸ்கேன் கருவியொன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T01:37:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் விவகாரத்தில் இரட்டை வேட அரசியல்! மொட்டுவின் ஆட்டத்திற்கு அநுர பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-org-and-the-politics-of-double-standards-1789435134"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-org-and-the-politics-of-double-standards-1789435134</id>
            <summary type="text">விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் என கூறிவருகின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

தற்போது என்ன நடக்கின்றது என்பதை மக்கள் கண்டிருப்பார்கள். இவ்வளவு காலமும் மேடைகளில் குரல் கொடுத்த எதிர் தரப்பினரின் கருத்துக்கள் எல்லாம் பொய் ஆகிவிட்டது.</p><p></p><h2>இனத்தின் வரலாறு</h2><p>ஒருவர் தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்தவர் என குரல் கொடுக்கிறார். அவரை மேடையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cf6ec1-46d9-4274-af1c-0b8fdbb18e87/26-6aa89d00cc34a.webp' /></p><p>
</p><p>
அந்த நபரை வேறு தரப்பினர் மேடைக்கு ஏற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு, நாட்டை பிரிக்க முயற்சி என கூறியிருப்பார்கள்.
 
இதுதான் இவர்களின் கேடுகெட்ட அரசியல். இவர்கள் எல்லாம் போலி தேசப்பற்றாளர்கள்.</p><p>ஒரு இனத்தின் வரலாற்றை மதிக்காத போக்கையே கொண்டுள்ளனர்.</p><p>

இவர்கள் மக்களை மதத்தைஇ இனத்தை காட்டி ஏமாற்றியிருக்கின்றார்கள். உலகம் மாறியும் இவர்கள் இன்றும் மாறவில்லை” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T01:19:06+00:00</updated>
        </entry>
    </feed>
