<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T03:05:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 பரீட்சைகளுக்கான திகதிகள் - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2027-gce-al-ol-scholarship-exam-dates-announced-1787626777"></link>
            <id>https://ibctamil.com/article/2027-gce-al-ol-scholarship-exam-dates-announced-1787626777</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p>
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>பரீட்சைகள்&nbsp;</h2><p>
அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L) ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8037241b-c2c8-4d1e-b72f-4cc5b69d33bd/26-6a8d0647335ae.webp' /></p><p>மேலும், பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
</p><p>
இதனிடையே, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு - வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-cut-in-colombo-and-several-areas-today-1787625372"></link>
            <id>https://ibctamil.com/article/water-cut-in-colombo-and-several-areas-today-1787625372</id>
            <summary type="text">முதலாம் இணைப்பு களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>முதலாம் இணைப்பு </h2><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p>நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அது குறிப்பிட்ட தரநிலைகளுக்கு அமைய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீர் விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், பத்தரமுல்ல, கோட்டே மற்றும் பாமன்கடை ஆகிய பல பகுதிகளில் நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea8cc46-5553-4e06-8d25-d9e3691a81b5/26-6a8d0127da3c1.webp' /></p><p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீர்&nbsp;விநியோகம்&nbsp;தடை</h2><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728a3473-9e15-4e39-a12d-bf294cf3c454/26-6a8d0128934c4.webp' /></p><p>

 

நீர் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T02:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கர நபர் - விசாரணையை ஆரம்பித்த CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547"></link>
            <id>https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற &#039;பஸ் லலித்&#039; இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><p>
</p><p>
 

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e3ccd3d-0f19-4c70-9170-fef762d59fe1/26-6a8cf9f0cd1a1.webp' /></p><p>
'பஸ் லலித்' என அறியப்படும் சந்தேக நபர் சமீபத்தில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். பஸ் லலித்' மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>

 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T02:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் மழையுடனான வானிலை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-amounts-exceeding-75-mm-1787619687"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-amounts-exceeding-75-mm-1787619687</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>அதன்போது, சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b426c4e0-0067-40f3-a40b-513b856690c4/26-6a8cf0ae63e64.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p>இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T01:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை! ரத்து செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767"></link>
            <id>https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767</id>
            <summary type="text">அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ட்ரம்ப்பின் உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், பயிற்சி மீண்டும் தொடங்கப்படுவது குறித்து இரு நாட்டுப் படைகளும் நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11d3017-c397-414d-bccb-83e2d2bef28d/26-6a8ce90a50619.webp' /><br></p><p><i>Image Credit: Mlitarytimes</i></p><p>
</p><p>
இதேவேளை, அண்மையில் முடிந்த மற்றொரு வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரெனக் குறைக்குமாறு உத்தரவிட்டிருந்தாக தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமதி வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 வீதமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், அமெரிக்காவில் வாகனங்களை உற்பத்தி செய்தால் பூஜ்ஜிய வீத வரியே விதிக்கப்படும் என்றும், கனடாவை இனி ஒரு மாநிலத்தைப் போல அமெரிக்கா நடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். &nbsp;</p><p></p><h2>ஒப்பந்த முறிவு</h2><p> 

முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், கனடிய கார்கள் மற்றும் இலகுரக லொரிகள் மீதான வரியை 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கவும், அலுமினியம் மற்றும் எஃகு மீதான வரியை 50 வீதத்திலிருந்து 25% வீதமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bc8f49-7954-423c-827c-b05baae85f6b/26-6a8cba5a3b8c9.webp' /></p><p> </p><p>

இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக லொரிகளுக்கான வரி விலக்குகள் உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை முறிந்தது.</p><p>அதனை தொடர்ந்து ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ், ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைக் கண்டன.</p><h2>கனடாவின் பதிலடி</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, செப்டம்பர் 8 முதல் $20 பில்லியன் மதிப்பிலான சில அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d580cbde-68ab-4f97-b0fd-09a7f40ce384/26-6a8cba5ae6e9e.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அமெரிக்கர்கள் கனடாவின் இறையாண்மையை மதித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T23:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-claim-again-us-is-winning-against-iran-1787609656"></link>
            <id>https://ibctamil.com/article/trump-claim-again-us-is-winning-against-iran-1787609656</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தனது ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், குடியரசுக் கட்சியினரின் மன உறுதியைக் குலைப்பதற்காக ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>போலி கருத்துக்கணிப்புகள்</h2><p>

இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளால் வெறித்தனமாகச் செயல்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d0cbe-be18-4d89-bbf0-0e2c651bcfe6/26-6a8cc7a268ee1.webp' /></p><p> இதற்கு முன் கண்டிராத அளவிற்கு அவர்கள் அவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

குடியரசுக் கட்சியினர் வெளியே வந்து வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் மன உறுதி குலைப்பு நடவடிக்கைகள் இவை. </p><p>ஆனால், உண்மையான கருத்துக்கணிப்புகள் நமக்கு சாதகமாக மிகச் சிறப்பாக உள்ளன. 

நமது நாட்டின் மன உறுதியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.</p><p> பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக வீழ்ச்சியின் விளிம்பில் (Death Spiral) இருக்கும் ஈரான் உட்பட, அனைவருக்கும் எதிராக நாம் வெற்றி பெற்று வருகிறோம்”&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T22:38:25+00:00</updated>
        </entry>
    </feed>
