<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T18:55:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-filed-against-rajitha-this-month-1785262292"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-filed-against-rajitha-this-month-1785262292</id>
            <summary type="text">கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இம்மாதம் 31ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரராம முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்தச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த உபாலி லியனகே என்பவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்பதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>விடுவிக்கப்பட்ட&nbsp;முதலாவது சந்தேநபர்</h2><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்ட நீதிவான், முதலாவது சந்தேகநபரை வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதோடு, இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அது குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518de20f-46f6-4f49-b7b8-072363e368b2/26-6a68f46970c2b.webp' /></p><p>

இதன்படி, குறித்த இரு சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான போதே இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T18:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[1983 கறுப்பு யூலை தமிழர் படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் தப்பியவரின் சாட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1983-black-july-tamil-massacre-1785260024"></link>
            <id>https://ibctamil.com/article/1983-black-july-tamil-massacre-1785260024</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவத்தை அங்கிருந்து உயிர்தப்பிய ஒருவர் விவரித்துள்ளார்.</p><p>

சிறையில் உள்ள பிற கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதையும், அதில் குட்டிமணி மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அதன்போது அவர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
இதேவேளை, உயிருக்குப் போராடிய கைதிகள், தங்களுக்கு இருந்த குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்தி எப்படி தற்காப்பு அரண்களை உருவாக்கினார்கள் என்பதையும், தாக்குதல் நடத்தியவர்களின் பயம் தங்களை எப்படி காப்பாற்றியது என்பதையும் அவர் பின்வருமாறு ஐபிசி தமிழுக்கு விளக்கியுள்ளார்,&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_DpkHslAGEM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T17:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-s-main-henchman-arrested-1785258545"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-s-main-henchman-arrested-1785258545</id>
            <summary type="text">


பாதாள உலகத்தின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ரத்மலானே சைமா என்ற போதைப்பொருள் கடத்தல்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>


பாதாள உலகத்தின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ரத்மலானே சைமா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூன்று பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த சந்தேகநபர், இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சிவப்பு அறிவிப்பு</h2><p>
</p><p>
இதேவேளை, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரானை இன்டர்போல் உதவியுடன் நாடுகடத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d2dc75-e86f-4d69-a61f-1d1c2eac18d4/26-6a68e5a104107.webp' /></p><p>
</p><p>
இவர் சர்வதேச பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த நாட்டில் ஏராளமான பாதாள உலகச் செயல்பாடுகளை நடத்தியதோடு, பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களைக் குற்றப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் மூலம் ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து, தனது குற்றச் செயல்களைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a>WHATSAPP CHANNEL</a></b><a> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p>
</p>]]></content>
            <updated>2026-07-28T17:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர திரைப்படக் காட்சி போல பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-issues-heat-warnings-in-wildfire-hit-areas-1785250697"></link>
            <id>https://ibctamil.com/article/france-issues-heat-warnings-in-wildfire-hit-areas-1785250697</id>
            <summary type="text">பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
அந்த இரு நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் அளவுக்குக் காட்டுத் தீ மோசமாகிவிட்டது.
</p><p>
கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலவரத்தால் மேற்கு ஐரோப்பா மற்றொரு வெப்ப அலைக்குத் தயாராகிவரும் நிலையில் அதன் ஒரு பகுதியில் தீ வேகமாகப் பரவிவருகிறது.</p><p></p><h2>இரவு முழுவதும் போராடி</h2><p>
</p><p>பிரான்சின் போர்டோ பகுதியில் மூண்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி, ஒருவழியாகக் கட்டுப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/858d2de2-0e6d-4c66-b381-a965559be2e8/26-6a68c6e26890c.webp' /></p><p>எனினும் போர்டோ நகரின் புறநகர்ப் பகுதியிலிருந்து வெறும் 15 கி.மீ (9.3 மைல்கள்) தொலைவில் காட்டுத்தீ எரிந்து வருவதால், அந்நகர மக்கள் "பதட்டமாகவும் அச்சமாகவும்" உணர்வதாக அங்கு வசிக்கும் ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்துள்ளார்.</p><p>நகரம் முழுவதும் பரவியுள்ள "அடர்த்தியான புகை மூட்டம்" காரணமாக மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதாகவும், சிலர் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பியர் போர்குவரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்</p><p>
நகரம் 'புகையால் சூழப்பட்டிருப்பதைக்' கண்ட பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள மற்றொருவர், "அது ஒரு பயங்கரமான திரைப்படக் காட்சி போல இருந்தது" என்று கூறினார்.</p><p></p><h2>கட்டுக்கடங்காத தீ</h2><p>
</p><p>
அதேவேளை, ஸ்பெயினின் மத்திய டோலிடோ மாகாணத்தில் உள்ள 11 நகரங்களில் ஒன்பதிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c9d3ba-fb88-43ec-aebd-eb6fca68e58b/26-6a68c6e1b09ed.webp' /></p><p>இருப்பினும், மாட்ரிட்டிலும் அருகிலுள்ள மாகாணங்களிலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது.

பொதுமக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தப்பி ஓடியதைக் கண்டதாக, ஸ்பெயினிலிருந்து தீ காரணமாக வெளியேற்றப்பட்ட ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.
</p><p>
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-shakes-southern-japan-1785246802"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-shakes-southern-japan-1785246802</id>
            <summary type="text">நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜப்பானின் தெற்குப் பகுதியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மின்சார விநியோகம்</h2><p>
</p><p>
 

வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், தீப்பற்றியுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab1dcd6-92be-4473-9b9b-25d9023c86ac/26-6a68b7d81751f.webp' /></p><p>இதேவேளை, சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கைபேசி சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

அதிவேக தொடருந்துகள் உட்பட அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளன.
</p><p>
 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TSMC (சிப் தயாரிப்பு நிறுவனம்), Sony மற்றும் Fujifilm போன்ற முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
 

ஆரம்பத்தில் சுமார் ஒரு மீற்றர் உயரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013c5e3b-b848-4a8a-b2e6-276485fb5521/26-6a68b7d74537b.webp' /></p><p>
 

இதனிடையே, எதிர்வரும் வாரத்தில் மேலும் நிலநடுக்க அதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழன்று விடும் நிலையில் Boeing 737 விமான இருக்கைகள் - பறந்த அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100-of-boeing-737-max-jets-may-need-inspections-1785241620"></link>
            <id>https://ibctamil.com/article/100-of-boeing-737-max-jets-may-need-inspections-1785241620</id>
            <summary type="text">அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள்
தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய
வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள்
தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய
வேண்டும் என்றும் அமெரிக்கக் கூட்டாட்சி வான்வெளி நிர்வாகம் (FAA)
எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட 453 போயிங் விமானங்களில் இந்தப் பிரச்சினை
இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>கழன்று விழக் கூடும்</h2><p>
</p><p>
அவசரக் காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் போது இந்த இருக்கைகள் தளர்ந்து
கழன்று விழக் கூடும் என்றும், இதனால் பயணிகள் மற்றும் விமானப்
பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவசர காலங்களில் மக்கள்
வெளியேறும் வழியையும் அடைக்கக்கூடும் என்று FAA தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34effe35-b1fa-471a-92a7-c2422025091b/26-6a68bd01ecc10.webp' /></p><p>

இந்த உத்தரவு அமெரிக்கப் பதிவெண் கொண்ட விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்
என்றாலும், பிற நாட்டு வான்வெளி அமைப்புகளும் அமெரிக்காவின் இந்த
வழிகாட்டுதலைப் பின்பற்றிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
</p><p>
இது குறித்து போயிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் ஏற்கனவே கடந்த
டிசம்பர் 2025-இல் விமான நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை
வழங்கிவிட்டதாகவும், அதைத் தற்போது FAA கட்டாயமாக்குவதை வரவேற்பதாகவும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mandaitivu-mass-grave-case-postponed-1785243691"></link>
            <id>https://ibctamil.com/article/mandaitivu-mass-grave-case-postponed-1785243691</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில்
நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு காவல்துறையினரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p></p><p>
</p><h2>காவல்துறை பாதுகாப்பு</h2><p>
முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d217774b-5f29-4657-9d54-f1116167b9e7/26-6a68aac037f73.webp' /></p><p>பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் குறித்த விடையம் தொடர்பிக்
அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கி
காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,
அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று, கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
</p><p>
அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p></p><p>
</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>
முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966d71fd-8df1-4416-92d5-0d138833efce/26-6a68aac0e28aa.webp' /></p><p>
</p><p>
முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.
</p><p>
இன்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நாவற்குழி பகுதியில் கோர விபத்து - குடும்பஸ்தர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/road-accident-kills-femily-men-in-jaffna-1785242012"></link>
            <id>https://ibctamil.com/article/road-accident-kills-femily-men-in-jaffna-1785242012</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த
வேளை, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.</p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9f6da5-2d5d-4a1d-b651-0a39fb64f2da/26-6a68a47ea3c16.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jba-urges-president-to-drop-judge-age-amendment-1785241672"></link>
            <id>https://ibctamil.com/article/jba-urges-president-to-drop-judge-age-amendment-1785241672</id>
            <summary type="text">உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவும் கொண்டுவரப்பட்டால் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதை ஏற்க முடியும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அவசரத் திருத்தம் நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் சலுகையாகவோ அல்லது தலையீடாகவோ பார்க்கப்பட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் எனச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
</p><p>
 குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய சீர்திருத்தங்கள் ஜனநாயகக் கொள்கைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு மீதான மரியாதையைப் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்த முயற்சியை ஜனாதிபதி உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:58:11+00:00</updated>
        </entry>
    </feed>
