<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-04T04:11:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற வாரம் இன்று ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/first-parliamentary-week-of-august-begins-today-1785814996"></link>
            <id>https://ibctamil.com/article/first-parliamentary-week-of-august-begins-today-1785814996</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற வாரம் இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற வாரம் இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

இன்றைய தினம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைநிரப்பு மதிப்பீட்டு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. </p><p>

நாளை (05) அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.</p><p></p><h2>தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை</h2><p>

வியாழக்கிழமையன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec29dfd-957b-4db2-9915-752d4aacfcff/26-6a7165173fe1c.webp' /></p><p> 

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 7 தனிநபர் உறுப்பினர் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. </p><p>

இதேவேளை, நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றைக் கையளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு&nbsp;</h2><p> </p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவினர் குறித்த முன்மொழிவில் நேற்று (03) கையொப்பமிட்டுள்ளதுடன், அதற்கு எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e1db84-aade-4f76-aaa0-e39c601b2bb2/26-6a71651653450.webp' /></p><p> 

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது, சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காகவே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T03:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-for-low-income-families-1785812483"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-for-low-income-families-1785812483</id>
            <summary type="text">குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது குறித்து முக்கிய அறிவிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை, குடும்பங்களின் சமூக - பொருளாதார பாதிப்பு நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.</p><p></p><h2>சமூக-பொருளாதாரக் காரணிகள்</h2><p>

குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், இருப்பிட வசதி, அடிப்படைச் சேவைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் கடன்பாடுகள் ஆகிய சமூக-பொருளாதாரக் காரணிகள் புதிய தெரிவில் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d6ff086-4fcc-49d5-a5a7-62dee26f3487/26-6a715b91aaaae.webp' /></p><p>

தற்போதைய தெரிவு செயற்பாட்டில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
</p><p>
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புதிய முறைமையின் பயனுள்ள தன்மையை ஆராய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்த நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
</p><p>
இந்த புதிய சமூக-பொருளாதார கட்டமைப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><b><i>You may like this</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T03:56:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/moe-special-discussion-regs-grade-5-and-al-exams-1785810793"></link>
            <id>https://ibctamil.com/article/moe-special-discussion-regs-grade-5-and-al-exams-1785810793</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.</p><p> 

வளிமண்டலவியல் <a href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749" target="_blank">திணைக்களம்</a>, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952" target="_blank">வளிமண்டலவியல்</a> திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பரீட்சைத் திணைக்களம்&nbsp;</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நிலவும் மழைக்கால <a href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437" target="_blank">வானிலையுடன்</a> பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6219c6-91b0-4564-8637-226539d8435f/26-6a71538fd438a.webp' /></p><p>உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5 ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். </p><p>அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும்.</p><p></p><h2>சூறாவளி நிலைமை</h2><p> </p><p>எனினும் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும். அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dc24360-e25b-4d52-9160-2a9846de5d6d/26-6a71538f28ac1.webp' /></p><p>எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும்." என்றார். </p><p>

எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் சூறாவளி நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையளவில் ஓரளவுக்கு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அஜித் விஜேமான்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><b><i>You may like this</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952"></link>
            <id>https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437" target="_blank">வானிலை </a>காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். </p><p>கண்டிமாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும்<a href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749" target="_blank"> கடும் மழை</a> மற்றும் சீரற்ற வானிலை நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. </p><p>அதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக நுவரெலியா கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>விடுமுறை&nbsp;</h2><p> </p><p>இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c195d7-07ba-4f98-b8ea-be5457219365/26-6a714e86867b4.webp' /></p><p>மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பின்னர் உரிய அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>உயர் தரப் பரீட்சை&nbsp;</h2><p>நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d4f6905-ce04-4710-bae9-b3f8113a866b/26-6a714e87807e4.webp' /></p><p> 

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>மேலும் நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்த்துள்ளார்.</p><p><b>You may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437</id>
            <summary type="text">கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 அந்தவகையில் இன்று (04.08...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 </p><p>அந்தவகையில் இன்று (04.08.2026) காலை&nbsp; 6.00 மணிக்கு வீதி திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டது.</p><h2>சீரற்ற வானிலை</h2><p>இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட காவல்துறையினர்&nbsp; நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p> 

அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இன்று காலை 6.00 மணி முதல் அந்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. </p><p>

அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T02:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணிநேரத்தில் புரட்டிப் போட்ட சீரற்ற காலநிலை - 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749"></link>
            <id>https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749</id>
            <summary type="text">சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற<a href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120" target="_blank"> காலநிலை</a> காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மோசமான வானிலை</h2><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c857b673-1eb1-4a85-9469-499b919b3af2/26-6a71473357225.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பாடசாலை&nbsp;விடுமுறை </h2><p>


அத்துடன் நேற்று மாலை வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மகாவலி கங்கையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe18cb40-c9cc-45ba-895a-d502a5231b7e/26-6a71473261ae1.webp' /></p><p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. </p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று
மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T01:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120</id>
            <summary type="text">


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இப் பிராந்தியங்களில் வானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இப் பிராந்தியங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82505724-6a13-4f11-878b-4ff1beee352e/26-6a71328f56e73.webp' /></p><p>

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T00:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவு செயலாளர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-foreign-secretary-to-visit-this-week-1785800329"></link>
            <id>https://ibctamil.com/article/indian-foreign-secretary-to-visit-this-week-1785800329</id>
            <summary type="text">
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விஜயத்தின் போது அவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>தமிழ்பேசும் மக்களின் நலன்</h2><p>

இதேவேளை, தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டாக விக்ரம் மிஸ்ரியை சந்திப்பர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6749ed87-3de4-45e1-966f-b2d86a834444/26-6a7129032ad5d.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, எதிர்வரும் செவ்வாயன்று மேற்படி 6 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின்போது இதுபற்றியும் கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T23:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் பதவி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskiy-dismissed-ukraine-s-ambassador-to-us-1785794355"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskiy-dismissed-ukraine-s-ambassador-to-us-1785794355</id>
            <summary type="text">

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்.
</p><p>
உக்ரைனில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்பட்டது உட்பட உயர் அதிகாரிகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது குறித்து பதிவொன்றை ஸ்டெஃபனிஷினா, இது தனிப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்பட்ட தனது சொந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சொத்து அறிக்கையில் முறைகேடுகள் </h2><p> </p><p>

அமெரிக்காவின் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இல்லாத தருணத்திலும் அமெரிக்க ஆயுதங்களின் விநியோகத்தை அதிகரித்து ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டது வரை, தனது பதவிக் காலத்தில் பல சாதனைகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3500d08-0725-454b-88ab-4b15942a9e07/26-6a7114ab09bd0.webp' /></p><p>
முன்னதாக, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதவி விலகலை கோரவில்லை என்று ஸ்டெஃபனிஷினா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். </p><p>

இருப்பினும், அவரது சொத்து விவர அறிவிப்பில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கடந்த மாதமே பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை அவர் தெரிவித்திருந்ததாக உக்ரைனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T23:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pentagon-presented-plan-to-trump-escalate-war-iran-1785790198"></link>
            <id>https://ibctamil.com/article/pentagon-presented-plan-to-trump-escalate-war-iran-1785790198</id>
            <summary type="text">

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை விட இது மிகவும் பெரிய அளவிலான தாக்குதலாக இருந்திருக்கும் என்றும், இதனால் மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகே, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய இந்தத் தீவிரத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுக்கான நிபந்தனைகள்</h2><p>
</p><p>
இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac88e6c4-7cce-4a28-bb86-5f3beea48981/26-6a71022a4b07a.webp' /></p><p><i>Image Credit: PRIO</i></p><p> </p><p>

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதும், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை நிறுத்துவதுமே ஈரான் செய்ய வேண்டிய சரியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T23:31:19+00:00</updated>
        </entry>
    </feed>
