<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-24T08:19:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-army-continues-in-the-tamil-homeland-1787536049"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-army-continues-in-the-tamil-homeland-1787536049</id>
            <summary type="text">ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார்.
</p><p>
யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இடம்பெறும்
போராட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து அபகரித்துவரும்
நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும்
நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>தொடர்ச்சியான அச்சுறுத்தல்</h2><p>
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும்
இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப்
காவல்துறை நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும்
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de6a456-b8af-40aa-a81a-65581568d941/26-6a8bf44938d18.webp' /></p><p>

மக்கள் சுதந்திரமாகப் போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக் கூட அனுமதி
மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 36 வருடங்களாகத் சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும்
வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களைச்
சந்தித்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>சிங்களக் குடியேற்றங்கள்</h2><p>
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில்
சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d62651e-282d-47b8-889b-51600ce4d3ba/26-6a8bf44a06ac9.webp' /></p><p>இது தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும்
முழுமையான முயற்சியாகும்.</p><p>

இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாகத் தெரிவித்தாலும்,
களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.
</p><p>
எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாகத்
தலையிட வேண்டும்.

தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான்
மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம்
தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defense-seeks-high-court-stay-ekneligoda-case-1787553612"></link>
            <id>https://ibctamil.com/article/defense-seeks-high-court-stay-ekneligoda-case-1787553612</id>
            <summary type="text">ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி பாதுகாப்புத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் (Permanent Trial-at-Bar) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
</p><p>
முன்னதாக நடைபெற்ற விசாரணையொன்றின்போது, வழக்குத் தொடுநர் தரப்பு நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் என்றழைக்கப்படும் முரளியை மீண்டும் சாட்சியமளிக்க அழைக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது.
</p><p></p><h2>பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு&nbsp;</h2><p>
இதற்கு பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், வழக்குத் தொடுநர் தரப்பின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf987af1-bf37-44ed-9ede-deefc924cc18/26-6a8be84924db4.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, குறித்த சாட்சியை மீண்டும் அழைப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு விசேட நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
</p><p>
அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனுவின் பிரதிகளும் விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T07:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peko-saman-s-mother-murder-another-person-arrested-1787553496"></link>
            <id>https://ibctamil.com/article/peko-saman-s-mother-murder-another-person-arrested-1787553496</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p> 

இந்தக் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கடந்த 19ஆம் திகதி மித்தெனிய காவல்துறை பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, மித்தெனிய காவல்துறையினர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்</h2><p> </p><p>

இதன்போது, கடந்த 12ஆம் திகதி மித்தெனிய காவல்துறை பிரிவில் வைத்து 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவி மற்றும் ஒத்தாசை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p> </p><p>

இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d22989-96b1-490d-9c06-82dbaaa448b3/26-6a8beafde0bae.webp' /></p><p>

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர் கண்டுபிடிப்பு : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/23-352-complaints-received-at-the-jaffna-omp-1787547050"></link>
            <id>https://ibctamil.com/article/23-352-complaints-received-at-the-jaffna-omp-1787547050</id>
            <summary type="text">இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp;காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக&nbsp;காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தில் நேற்று (23) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றில் 16,966 விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள்
நிறைவடைந்துள்ளன.</p><p>&nbsp;</p><h2>விசாரணைகள் நிறைவடைந்தன&nbsp;</h2><p>பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
2,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும்
ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97ce9b7-916a-4453-953a-93bfcf026a8e/26-6a8be397cdee7.webp' /></p><p>
</p><p>விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 800
பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 7,726 பேருக்கு
அவர்களது சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்&nbsp;</h2><p>அவர்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 4 பேரும்,
மட்டக்களப்பில் 3 பேரும், கம்பஹாவில் 2 பேரும், திருகோணமலையில் ஒருவரும்,
அனுராதபுரத்தில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7b12cf-8ee3-4890-a77e-c6a956e832df/26-6a8be39886075.webp' /></p><p>
</p><p>மேலும் களுத்துறை, அம்பாந்தோட்டை, வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும்
புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>எனினும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அல்லது இராணுவத்தினரால் அழைத்துச்
செல்லப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களில் இதுவரை எவரும்
கண்டுபிடிக்கப்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jh8Ai2PhXk0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:53:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1787552642"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1787552642</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,405,896 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams)49,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 396,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 45,470 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d51871e-8f17-4740-84a3-ffeb5850da29/26-6a8be5ff208fc.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 363,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 43,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 325,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு வெளிநாடு செல்ல தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-mp-chaminda-wijesiri-granted-bail-1787552490"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-mp-chaminda-wijesiri-granted-bail-1787552490</id>
            <summary type="text">ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.2019 ஆம் ஆண்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>2019 ஆம் ஆண்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் அவர்களைத் தாக்கியதற்காக பதுளை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>அந்தவகையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை உயர் நீதிமன்றம் 2026இ ஜூலை 28 அன்று ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p></p><h2>வெளிநாடு செல்வதற்கும் தடை</h2><p>இந்நிலையில் தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db742e82-1fc8-491c-aedd-e047a0526fec/26-6a8be4be0a673.webp' /></p><p>இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஹட்டன் செல்ல மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hatton-passengers-stranded-at-colombo-bus-stand-1787551247"></link>
            <id>https://ibctamil.com/article/hatton-passengers-stranded-at-colombo-bus-stand-1787551247</id>
            <summary type="text">கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
</p><p>
இன்றைய தினம் (24-08-2026) கொழும்பில் இருந்து ஹட்டன் செல்வதற்காக 300 இற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக அடுத்தடுத்த பேருந்துகள் எதுவும் இயக்கப்படாமல் பயணிகள் நீண்ட வரிசையில் தவித்து வருகின்றனர்.
</p><p>பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நிலைமையைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p></p><h2>கடும் நெரிசல்</h2><p>
</p><p>இன்றைய தினம் மட்டுமன்றி, வழக்கமாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் வேளைகளில் அடுத்தடுத்து பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. </p><p>இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து, கடும் நெரிசலுக்கு மத்தியிலேயே பயணம் செய்ய வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a637a89f-0f51-49bc-876f-8fa8b15f8a46/26-6a8bdfb02c74a.webp' /></p><p>கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் மட்டுமன்றி, ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திலும் கொழும்பு நோக்கி வருவதற்கான பேருந்து சேவைகள் இதேபோன்று போதியளவில் வழங்கப்படுவதில்லை.</p><p>இலங்கை அரசாங்க போக்குவரத்து துறைக்கு அதிக வருமானத்தை&nbsp;ஹட்டன் டிப்போ பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கவனிப்பாறற்ற நிலைமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>இந்தநிலையில் மலையகத்திற்குப் பயணிக்கும் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் இந்த சிரமங்களைக் கருத்திற்கொண்டு, கொழும்பு - ஹட்டன் இரு மார்க்கங்களிலும் உச்ச நேரங்களில் கூடுதல் பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் பொறியியலாளர் பலி! வெளியான மேலதிக தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-jaffna-nallur-engineer-dies-jaffna-th-1787547668"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-jaffna-nallur-engineer-dies-jaffna-th-1787547668</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் சனிக்கிழமை (22) நள்ளிரவில் இடம்பெற்ற வீதி விபத்தில்
படுகாயமடைந்த இளம் பொறியியலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் சனிக்கிழமை (22) நள்ளிரவில் இடம்பெற்ற வீதி விபத்தில்
படுகாயமடைந்த இளம் பொறியியலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த குறித்த&nbsp;பொறியியலாளர் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும் - வவுனிக்குளத்தை வதிவிடமாகவும்
கொண்ட கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்ற 32 வயதான இளம் பொறியியலாளரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p>இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் உயிரிழந்த பொறியியலாளர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நல்லூர்ப் பகுதியில் வைத்து எதிரே வந்த காருடன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abbcb04-a2ea-425c-83fa-deef830e2651/26-6a8bdb2a80c60.webp' /></p><p>இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், காரைச் செலுத்தி வந்தவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p>எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொறியியலாளரான கோகுலதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று (23) உயிரிழந்த நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>உயிரிழந்த பொறியியலாளரின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.</p><p></p><h2>கிளிநொச்சி வைத்தியசாலை</h2><p>இதேவேளை கிளிநொச்சி - பளைப் பகுதியில் நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே&nbsp;பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b448bcdc-3d47-4a55-ac0e-d215c3797bdb/26-6a8bdb2b3d6db.webp' /></p><p> </p><p>குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>இந்த விபத்தில் பளையில் வசித்து வந்த, வடமராட்சி வடக்கு, அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பிரதீபன் சகீன் என்ற இளைஞரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவராவார். </p><p>உயிரிழந்த இளைஞரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-electric-trains-for-colombo-suburbs-to-begin-1787551073"></link>
            <id>https://ibctamil.com/article/new-electric-trains-for-colombo-suburbs-to-begin-1787551073</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p> மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ருவன் செனரத், இப்புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் ஆரம்பகட்ட திட்டமிடல் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>புதிய மின்சார தொடருந்து சேவை&nbsp;</h2><p>
மேலும் அவர் தெரிவிக்கையில்,

புதிய மின்சார தொடருந்து சேவை மருதானையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e6873c-0760-4bb3-a55b-800e2068bec5/26-6a8be1e370870.webp' /></p><p> முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு அமைவாக ருஹுணு குமாரி தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய மின்சார தொடருந்தில் பயணிக்க முடியும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளில் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உரையாற்றிய பிரதி அமைச்சர், அரச போக்குவரத்தை வலுப்படுத்தும் விதமாக “மெட்ரோ பேருந்து சேவை”யை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை சீர்திருத்த விவகாரத்தில் மௌனம் கலைத்த சாலிய - மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saliya-mahinda-broke-the-silence-of-the-judges-1787550693"></link>
            <id>https://ibctamil.com/article/saliya-mahinda-broke-the-silence-of-the-judges-1787550693</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவரான சாலிய பீரிஸும், அரசியலமைப்பின் 22வது திருத்தம் உள்ளிட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவரான சாலிய பீரிஸும், அரசியலமைப்பின் 22வது திருத்தம் உள்ளிட்ட நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இருவரும் இதுவரை பகிரங்கமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்காத நிலையில், அந்த மௌனம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி இக்காலத்தில் அரசியலமைப்பைத் திருத்துவது பொருத்தமானதல்ல என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சேர்க்கப்பட்ட&nbsp;திருத்தங்கள் </h2><p>மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் பலர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12419992-9925-4114-a4b9-0c5c81e851e9/26-6a8be11fe3796.webp' /></p><p>

ஆரம்பத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது மட்டுமே முன்மொழியப்பட்டதாக சாலிய பீரிஸ் கூறியிருந்தார்.</p><p> 

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மற்ற திருத்தங்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

இருப்பினும், உண்மையான நிலைப்பாடானது , சம்பந்தப்பட்ட திருத்தங்கள் பல சந்தர்ப்பங்களில் விவாதிக்கப்பட்டு, பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி வரைவுகள் தயாரிக்கப்பட்டதாக அரசாங்க தரப்புக்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.</p><p></p><h2>நீதித்துறையில் செல்வாக்கு</h2><p>
</p><p>
இருப்பினும், பிரதம நீதியரசரின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதன் மூலம் அரசாங்கம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்தத் தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஆரம்பத்தில் கூட்டாகக் கூறியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b9e9cfb-eaa3-4ae8-8685-d3e50acf6634/26-6a8be1209b790.webp' /></p><p> </p><p>

இதன்படி சாலிய பீரிஸ் தற்போது திரிபுபடுத்தப்பட்ட பிரசாரத்துடன் இதே போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதில் இணைந்துள்ளார் என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
</p><p>
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் முழக்கத்துடன் 2022 பொதுப் போராட்டத்தில் அங்கம் வகித்த சாலிய பீரிஸ் தற்போது இவ்வாறு முன்வைப்பது குறித்து அரசாங்க தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T06:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-dies-after-falling-into-canal-galnewa-1787549074"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-dies-after-falling-into-canal-galnewa-1787549074</id>
            <summary type="text">கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.&amp;nbsp;உயிரிழந்த குழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உயிரிழந்த குழந்தை&nbsp;கல்நேவா பகுதியைச் சேர்ந்த குழந்தை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p></p><h2>கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை </h2><p>
</p><p>
குழந்தை வீட்டிலிருந்து காணாமல் போனதாக தந்தை கல்நேவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900d1795-48ce-4b5f-a00c-023c4f5aee9f/26-6a8bdd40c5887.webp' /></p><p>இதை தொடர்ந்து, குழந்தையைத் தேடும் நடவடிக்கையை நேற்று (23.08.2026) ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>தேடுதல் நடவடிக்கையின்போது, வீட்டிற்கு அருகே செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>இதனையடுத்து உடனடியாக குழந்தை கல்நேவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.</p><p>இந்த நிலையில் சடலம் கல்நேவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாரிய மனிதப் புதைகுழி: 110 நாள் அகழ்வுக்கு 5.79 கோடி செலவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-mass-grave-in-chemmani-near-jaffna-1787548313"></link>
            <id>https://ibctamil.com/article/a-mass-grave-in-chemmani-near-jaffna-1787548313</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110
நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79
இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110
நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79
இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை காணாமல் போனோர் பற்றிய
அலுவலகத்தின் (OMP) தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த
தெரிவித்துள்ளார்.</p><p>
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb5e0fe8-d009-4889-b9ef-8c382dc52adc/26-6a8bdc4f214e1.webp' /></p><p>
மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில்,
அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்து மரபணு பரிசோதனைகளை
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்
எனவும் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:53:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் தாயாரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்....!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-sallay-s-mother-writes-to-president-akd-1787547524"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-sallay-s-mother-writes-to-president-akd-1787547524</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் (Suresh Sallay) தாயார்,&amp;nbsp; ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் (Suresh Sallay) தாயார்,&nbsp; ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.</p><p> சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என கோரி அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த கடிதம் நேற்று (23-08-2026) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கை இராணுவம்</h2><p>அவரின் கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி தனது இளமைக்காலத்தையும் குடும்பத்துடன் செலவழித்திருக்க வேண்டிய பொன்னான நேரத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மகன் மீதான விசாரணைகளை நிறுத்துமாறு தான் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், என் மகன் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அதிகாரிகள் அவற்றை விசாரித்து கிடைக்கப்பெறும் ஆதாரங்களை ஆய்வு செய்து உண்மையைக் கண்டறியட்டும் அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af390ad2-1125-4cb1-9b62-a403b9be9fc3/26-6a8bd9d5de72d.webp' /></p><p>விசாரணைகள் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றும், ஆதாரங்களைத் திரட்டுவதற்குப் பதிலாகத் தடுப்புக் காவலை ஒரு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்காமல், அவர் சட்டத்தை சுதந்திரமாக எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், நியாயமான முறையில் விசாரணையை எதிர்கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும், அநுர குமார திஸாநாயகவைச் நேரடியாகச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு கோரியுள்ள அவர், தான் எந்தவித சிறப்புச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை என்றும் நீதி, மனிதநேயம் மற்றும் நியாயமான வாய்ப்பை மட்டுமே கோருவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:42:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதக் கூடாரமாகிய பசில் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய வீடு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abandoned-matara-building-linked-to-basil-misused-1787544405"></link>
            <id>https://ibctamil.com/article/abandoned-matara-building-linked-to-basil-misused-1787544405</id>
            <summary type="text">மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>

இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.</p><p></p><h2>திமன்றத்தில் முன்னிலை</h2><p>

விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e5e0f2-7c5d-4bfe-bc3a-31b1c99479f6/26-6a8bc9b8409bc.webp' /></p><p>இதன் காரணமாக, பசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும் மற்றும் அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
</p><p>
அத்துடன், பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நிர்மாணப் பணிகள்</h2><p>நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff406f39-98d7-4d39-ab0b-3565fd2ead06/26-6a8bc9b76f6bc.webp' /></p><p>சட்டவிரோத நடவடிக்கை
இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>

ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கட்டடப் பொருட்கள்&nbsp;</h2><p>

பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு பூச்சு பூசப்பட்டு கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>ஒன்பது கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4645a494-9dba-4541-8bd6-e96efa1a7ab6/26-6a8bc9b900543.webp' /></p><p>இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்ததுடன் இதன்போது அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளதுடன் இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650"></link>
            <id>https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் சடலம்&amp;nbsp; மஹி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>அவரின் சடலம்&nbsp; மஹியங்கனையில் உள்ள பகடாவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>

</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வைத்தியர் நேற்று (23.08.2026) வழமை போன்று பணியில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருகையில்,</p><p></p><h2>மருத்துவர் மாயம்</h2><p> </p><p>வைத்தியர் மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அவரது கார், மீகஹகியுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693b1d16-4121-4789-882d-88c8c86fb364/26-6a8bc44aa7ba1.webp' /></p><p>
</p><p>
மேலும், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் 17ஆம் மைல் கல் அருகிலுள்ள மப்பக்கடை வேவப் பகுதியில், வைத்தியரின் கார் நேற்று இரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று (24.08.2026) குறித்த பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சுறுத்தும் எல்நினோ - யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-heat-advisory-issued-for-several-areas-1787539506"></link>
            <id>https://ibctamil.com/article/amber-heat-advisory-issued-for-several-areas-1787539506</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகரித்து, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும்&nbsp;என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான வெயில் </h2><p>இதனால் போதுமான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்துமாரும் கடுமையான வெயில் வேளையில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும்&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5265269-2c08-4dc0-872f-9d3414e7c9d4/26-6a8bcd0469f17.webp' /></p><p>குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p></p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753fc69b-e2e2-4bc9-a837-e419fafdc9a6/26-6a8bcd03b59f7.webp' /></p><p>இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
</p><p>
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-health-inspectors-to-launch-trade-union-1787543556"></link>
            <id>https://ibctamil.com/article/public-health-inspectors-to-launch-trade-union-1787543556</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.</p><p>இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்</h2><p>
இதற்கமைய, இன்று முதல் அனைத்து சுகாதார பரிசோதகர்களும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்தினருக்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கை விநியோகத்தை தவிர்க்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79b3b9-a16f-47d2-a7cd-839fff33242b/26-6a8bc8d54e704.webp' /></p><p>அத்துடன் அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிப்பதை இடைநிறுத்துதல் மற்றும் இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் அந்த சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. 
</p><p>
</p><p>
இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்</h2><p>இதேவேளை கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29712c6f-c539-43e3-b6d0-da580f101277/26-6a8bc8d473eca.webp' /></p><p> 

எனினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-is-responsible-if-anything-happens-to-sallay-1787541910"></link>
            <id>https://ibctamil.com/article/govt-is-responsible-if-anything-happens-to-sallay-1787541910</id>
            <summary type="text">தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.</p><p>"சலேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், சுரேஷ் சலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ab2cc7-bd37-49a4-8e10-75712d7baa09/26-6a8bbe175b42e.webp' />&nbsp;</p><p>

அத்துடன், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>இரண்டாவது தடுப்புக்காவல் உத்தரவு எதிர்வரும் 28ஆம் திகதியன்று முடிவடையும் நிலையில், சுரேஷ் சலேயை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழவுள்ள வானியல் அதிசயம் - இந்த வாரம் இரத்த நிற முழு சந்திர கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938"></link>
            <id>https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938</id>
            <summary type="text">இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.&nbsp;</p><p>இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p>

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p></p><h2>ரத்த நிலவு</h2><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677011b8-874b-44db-9fd0-583c0b73e7db/26-6a8baf051ba49.webp' /></p><p>சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். 

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. </p><p>வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.</p><p> 

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.</p><p></p><h2>நேரடியாக காண வாய்ப்பு</h2><p> </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும். 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f56029-1bd6-4eed-b793-c91792a41c95/26-6a8baf05c6124.webp' /></p><p>ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. </p><p>

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-washed-ashore-at-karainagar-beach-1787542362"></link>
            <id>https://ibctamil.com/article/body-washed-ashore-at-karainagar-beach-1787542362</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில் இன்று (24) காலை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee75baa8-65e2-44bd-a0ce-5c3a8154a3d7/26-6a8bbe293f1a9.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் எவ்வாறு கடலில்
அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p>மேலதிக தகவல்கள் - த. பிரதீபன்</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:45:15+00:00</updated>
        </entry>
    </feed>
