<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-20T04:44:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்பொருட்கள் தேடி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-while-excavating-artifacts-in-kilinochchi-1787198275"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-while-excavating-artifacts-in-kilinochchi-1787198275</id>
            <summary type="text">கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கிளிநொச்சி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் முந்தலம், உக்குவெல, தும்மலசூரிய, பிலியந்தலை, யாழ்ப்பாணம், மாதம்பே மற்றும் கெசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>எட்டு பேர் கைது</h2><p>

சந்தேக நபர்கள் தொல்பொருள் பெறுமதியுடைய கலைப்பொருட்களைத் தேடி குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41622156-8bae-44d6-b87a-053454c70bf6/26-6a8685f19bc54.webp' /></p><p>
</p><p>குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-child-employment-amendment-bill-1787200478"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-child-employment-amendment-bill-1787200478</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(20.08.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(20.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 5.00 வரை&nbsp;பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.</p><p>மாலை 5.00 முதல் 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணை ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvBKgryxFpE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-20T04:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-police-investigation-1787194739"></link>
            <id>https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-police-investigation-1787194739</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் விசாரணைகளில் தெரியவந்த விடயங்கள் குறித்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். </p><p>

அந்த அறிக்கையில், குறித்த காணொளிக்கு அமைய அந்த இடமானது கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு முக்கொம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்&nbsp;</h2><p> </p><p>

பளை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டை அழித்து 3 மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் முகாம் எனவும், இங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் சந்தேகநபர் காணொளியில் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28861255-18bc-498e-8c2c-872b88069e4d/26-6a8678a5c5925.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். </p><p>

அவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அடிப்படையற்ற மற்றும் போலியானது என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>அந்த இடத்தை மையமாகக் கொண்டு வெடிபொருட்கள் உற்பத்தி, சட்டவிரோத பொருட்கள் உற்பத்தி அல்லது குண்டு தயாரிப்பு இடம்பெறுவதாக விசாரணைகளில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p>மேலும், விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்பு அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி நிலையமாக அந்த இடம் பராமரிக்கப்படவில்லை.</p><p>

எனினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது, அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d84b665-3411-4762-a8a0-249bdb5f1b70/26-6a8678a511fd5.webp' /></p><p> 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர். </p><p>

பின்னர் அவர் நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து - சிறுமி உட்பட மூவர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-including-7-year-old-girl-killed-in-delgoda-road-1787199651"></link>
            <id>https://ibctamil.com/article/3-including-7-year-old-girl-killed-in-delgoda-road-1787199651</id>
            <summary type="text">தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து நேற்று (19.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து நேற்று (19.08.2026) பிற்பகல் மீகஹாவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட புது கண்டி வீதியின் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனம் ஒன்று வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, ​​எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32a89bb8-c574-4967-adc9-cb9d3fe6633b/26-6a86833c2e7a7.webp' /></p><p>உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டி சாரதி 69 வயதுடைய தெல்கொட சேர்ந்தவர் எனவும், 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 07 வயது மகள் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காரில் பயணித்த சிறுமி ராகம வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உதவும் நாட்டுகளுக்கு கடும் தண்டனை - ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-country-who-helping-iran-1787193008"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-country-who-helping-iran-1787193008</id>
            <summary type="text">ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>நவம்பர் மாதத் தேர்தல்கள் மிக வேகமாக நெருங்கி வரும் நிலையில், இந்தப் போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.</p><p>குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரிய பொருளாதார விளைவு</h2><p>ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடியாகச் செயல்படுவதற்குத் தமது நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்கும் என்பதையும் நான் அறிவிக்கிறேன்&nbsp;என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76c0271-e5b2-4d55-8781-12c5f080b2ba/26-6a866973ba3a5.webp' /></p><p>குறித்த நாடுகள் என்ன மாதிரியான தண்டனையை எதிர்கொள்ளும் என்பதை அவர் குறிப்பிடவில்லை, மேலும் ஈரான் தவிர வேறு எந்த நாடும் அவரால் பெயரிடப்படவில்லை. </p><p>

ஈரானின் மீது உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை அமெரிக்கா விதிக்கும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T02:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு அமெரிக்க விசாவில் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148</id>
            <summary type="text">மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.குழந்தைக்கு அமெரிக்கக் குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா விசா விண்ணப்பங்கள்</h2><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff47b590-1833-4afb-8b62-bade95fcec64/26-6a865eab3d672.webp' /></p><p>இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும்&nbsp;தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p>குநித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e28398-e08b-4ddb-8bc4-106c65712d51/26-6a86592e02786.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.&nbsp;இதில் மொத்தம் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.</p><p>

சிங்கள மொழிமூலப் பரீட்சைக்கு 220,366 மாணவர்களும், தமிழ் மொழிமூலப் பரீட்சைக்கு 73,723 மாணவர்களும் தோற்றியுள்ளனர்.</p><p> 

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
</p><p>







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7b1662-4b0e-4921-a1e6-22ad229db481/26-6a86495e9dc6e.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர்: நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-officer-remanded-in-nintavur-1787184292"></link>
            <id>https://ibctamil.com/article/govt-officer-remanded-in-nintavur-1787184292</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25
ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p></p><h2>அரச உத்தியோகத்தர்&nbsp;</h2><p>
குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் காவல்துறையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை
(18) மாலை கைது செய்யப்பட்டார். </p><p>இதன்போது, கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட
அதிர்ச்சியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று
வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff69cb18-7cfd-4f8b-83fd-934db1219c9c/26-6a8644a62559b.webp' /></p><p>இந்நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற சம்மாந்துறை
நீதிவான், நிலைமைகளை நேரில் அவதானித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான
பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான்
பணித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது அலுவலகக் கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69def1a3-e7ca-4ecf-8d21-94e9b0cfb671/26-6a8644a57334b.webp' /></p><p>

அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக்
குறித்த பெண் உத்தியோகத்தர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.</p><p>
விசாரணைகளின் பின்னர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட போதே திடீரென
மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>

தற்போது அவருக்குப் பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத்
தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T00:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-ex-vc-criticizes-governor-1787182901"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-ex-vc-criticizes-governor-1787182901</id>
            <summary type="text">குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் எனவும் ஆளுநர் தவறாக
வழிநடத்தப்படுகின்றார் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் எனவும் ஆளுநர் தவறாக
வழிநடத்தப்படுகின்றார் எனவும் பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உப
தவிசாளரும் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
சாவகச்சேரி நகரசபை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்
தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உள்ளூராட்சி மன்றங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் நேரடியாக அணுகக்கூடிய நிர்வாக அமைப்பாக உள்ளூராட்சி
மன்றங்களே காணப்படுகின்றன என்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின்
பிரச்சினைகளைத் தீர்ப்பது தமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ab22d4-3ad5-4fe2-af50-3f54f21df97d/26-6a8641d9db0a8.webp' /></p><p>குடிபுகு சான்றிதழ் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்படும் எனவும் இந்த விடயத்தை வடமாகாண
ஆளுநர் புரிந்து கொள்ளாமல் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனவும் கிஷோர்
குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

அத்துடன், அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் அவசியம் என ஆளுநர்
கூறுகின்ற நிலையில், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர்
செயலகம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய கட்டிட அனுமதிகளும் குடிபுகு
சான்றிதழ்களும் உள்ளனவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><h2>கட்டிட அனுமதிகள்</h2><p>ஆளுநர் செயலகத்திற்கான கட்டிட அனுமதிகளையும் குடிபுகு சான்றிதழையும் வடமாகாண
மக்களுக்கு பகிரங்கப்படுத்த தயாரா என அவர் சவால் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37685c97-66cb-45db-aed7-754d80d90f94/26-6a8641da8e929.webp' /></p><p> மேலும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட நீண்டகாலத்திற்கு முன்னர்
அமைக்கப்பட்ட அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் உள்ளதா என கேள்வி
எழுப்பிய கிஷோர், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடமாகாணத்தில் குடிபுகு
சான்றிதழ் தொடர்பான நடைமுறை முக்கியத்துவம் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் கட்டப்பட்ட பல பாரிய
கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியோ குடிபுகு சான்றிதழோ இல்லாத நிலையில் அவை
கட்டப்பட்ட காலத்தில் இத்தகைய நடைமுறை நடைமுறையில் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சாவகச்சேரி நகரசபை&nbsp;</h2><p>தமது பதவி பறிக்கப்பட்டமை தனிப்பட்ட விடயம் அல்ல என்றும் வடமாகாணத்தில் உள்ள
அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் குரலையும்
பாதுகாப்பதற்கான போராட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5b5d4e-feda-41a0-97d7-32eb23e3b327/26-6a8641db4469e.webp' /></p><p>பதவிகள் வரலாம் போகலாம் ஆனால் மக்களோடும் இந்த மண்ணோடும் நாங்கள்
தொடர்ந்து நிற்போம் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்கும் எந்த
நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எனவும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, சாவகச்சேரி நகரசபை தொடர்பான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T23:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cannabis-cultivation-busted-in-kalmunai-1787181667"></link>
            <id>https://ibctamil.com/article/cannabis-cultivation-busted-in-kalmunai-1787181667</id>
            <summary type="text">அம்பாறையில்&amp;nbsp;வீடொன்றின் மொட்டை மாடியில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறையில்&nbsp;வீடொன்றின் மொட்டை மாடியில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.</p><p>குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (19-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியிலேயே இவ்வாறு&nbsp;தோட்டபயிர்ச்செய்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில்
கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380) மற்றும் இஸ்மத் (88503)
ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c80c69-3b5e-4862-b714-d4c63853368a/26-6a863cdc00814.webp' /></p><p>
கல்முனை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை
மேற்கொண்டபோதே குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள்
இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.</p><p>
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம் மற்றும் புட்டு போன்ற
சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில் இரகசியமாக இலங்கை நாட்டு
கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>முறைப்படியான பயிர்ச்செய்கை&nbsp;</h2><p>குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக ஒரு
முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b477193-7de5-494d-8f63-1848ffeb3cc0/26-6a863cdcd113c.webp' /></p><p>சம்பவ இடத்திற்குச்
சென்ற காவல்துறையினர் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி கல்முனை
தலைமையக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p>
இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனைத் தலைமையகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T23:32:47+00:00</updated>
        </entry>
    </feed>
