<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-26T05:15:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் இருந்து அழுகி வீங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-found-dead-under-suspicious-in-hotel-1787713440"></link>
            <id>https://ibctamil.com/article/man-found-dead-under-suspicious-in-hotel-1787713440</id>
            <summary type="text">விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.</p><p></p><h2>அதிக துர்நாற்றம் வீசியது&nbsp;</h2><p>
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192dd370-a142-4e0b-ac09-51fc0edf76d9/26-6a8e6197524af.webp' /></p><p>இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
</p><p>
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-illicit-liquor-in-kiribathgoda-1787716702"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-illicit-liquor-in-kiribathgoda-1787716702</id>
            <summary type="text">கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Cent...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Central Anti-Corruption Unit) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>காவல்துறையினருக்கு நேற்று (25.08.2026) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத மது</h2><p>
</p><p>காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கிரிபத்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78d8c182-b55b-4258-8d70-befca8bf8871/26-6a8e70a76c5dc.webp' /></p><p>காவல்துறை விசாரணையின்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவராவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சம்பவம் தொடர்பாகக் கிரிபத்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். போதனாவிற்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-transporting-medicines-met-accident-1787713147"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-transporting-medicines-met-accident-1787713147</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து நேற்று அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் பழுதடைந்த நிலையில் பாதையை விட்டு விலகி&nbsp;விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>இதையடுத்து&nbsp; வாகனத்தில் இருந்த மருந்துகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மற்றுமொரு வாகனத்தில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac04def3-6a1b-47fe-95a0-f121d227c740/26-6a8e567dd2b7c.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த இரு வைத்தியசாலை ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்</p><p>அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:19:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி - சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-year-old-girl-killed-in-road-accident-1787712418"></link>
            <id>https://ibctamil.com/article/7-year-old-girl-killed-in-road-accident-1787712418</id>
            <summary type="text">அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமியாவார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>வீதி ஒன்றில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41ae466-e83b-4888-83fa-50c454b7b6c1/26-6a8e53a95e58b.webp' /></p><p>32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் அடம்பன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T03:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-surpass-1-5-mn-in-2026-1787710231"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-surpass-1-5-mn-in-2026-1787710231</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அதற்கமைய 2026 ஆம் ஆண்டில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae0a9f6-8792-4a39-a3cc-b9cd44c69115/26-6a8e4c1c7fc7b.webp' /></p><p>2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் ஆகஸ்ட் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,498,749 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. </p><p>இக்காலப்பகுதியில் பதிவான மொத்த வருகையில் இவர்கள் சுமார் 24% பங்கைக் கொண்டுள்ளனர்.</p><p></p><p> </p><h2>முதன்மைச் சந்தை</h2><p>

16,688 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சீனா 10,294 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0afad0-9fa9-4d03-a804-3666c73e60d3/26-6a8e4c1bc5cf8.webp' /></p><p>

ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 23 வரையான காலப்பகுதியில் 374,820 வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முழு ஆண்டுக்கான முதன்மைச் சந்தையாகவும் இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. </p><p>

அதே காலப்பகுதியில், 147,089 வருகைகளுடன் பிரித்தானியா அடுத்த இடத்திலும், 98,801 சுற்றுலாப் பயணிகளுடன் சீனா அடுத்த இடத்திலும் உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T02:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிறைச்சாலைக்கு சென்ற நீதி அமைச்சர் - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-minister-visits-jaffna-prison-1787708505"></link>
            <id>https://ibctamil.com/article/justice-minister-visits-jaffna-prison-1787708505</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம்
சிறைச்சாலையின் செயற்பாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம்
சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள
விஜயமொன்றை மேற்கொண்டார்.
</p><p>
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில்
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட
அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் காவல்துறை அதிகாரிகள்,
துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு
ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.
</p><p>
அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்</h2><p>

தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள
நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார்.&nbsp;இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a51c9d3-072f-43ef-a1c6-9a7bb51f7bb3/26-6a8e4696ec2d8.webp' /></p><p>இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>
அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத்
தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப்
பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T01:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 mm இலும் கூடிய பலத்த மழை! இன்றைய வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/moderate-to-heavy-rain-exceeding-75-mm-1787707046"></link>
            <id>https://ibctamil.com/article/moderate-to-heavy-rain-exceeding-75-mm-1787707046</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>அனுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>இதன்படி, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba8c5f9-a388-489b-8f07-e299a3e8e850/26-6a8e4149b5d5e.webp' /></p><p>

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T01:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை அழைத்து சென்று தாக்கிய காவல்துறை! காவல்நிலையத்திற்கு சென்று மகன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-alleges-ambalangoda-police-assaulted-father-1787703204"></link>
            <id>https://ibctamil.com/article/son-alleges-ambalangoda-police-assaulted-father-1787703204</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அம்பலங்கொட காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அம்பலங்கொட காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஓகஸ்ட் 24 ஆம் திகதி இரவு வீடொன்றிற்கு அருகில் வைத்து தனது தந்தையிடம் தேசிய அடையாள அட்டையைக் கேட்டபோது, அதனை உடனடியாகக் காண்பிக்க முடியாததால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த நபரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>

அடையாள அட்டையை எடுத்துக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீட்டிற்கு அதிகாரிகளை அழைத்துச் செல்லத் தனது தந்தை முன்வந்த போதிலும், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விளக்கம்</h2><p> </p><p>

மேலும், காவல் நிலையத்திலும் தனது தந்தை தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da4a5cc-e77e-4a17-a74b-2ee70536cd44/26-6a8e36479a12c.webp' /></p><p>எனினும், காவல்துறை இச்சம்பவம் குறித்து வேறுவிதமான விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>

அதன்போது, குறிப்பிட்ட நபர் மதுபோதையில் வீதியில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயன்றதால் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறியுள்ளது.</p><h2>தனி விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நேற்றைதியனம்(25) ஓகஸ்ட் அன்று பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலபிட்டிய மேலதிக நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
 
இதன்படி, சம்பவம் தொடர்பாக காவல்துறைத் தலைமை ஆய்வாளரின் (IGP) உத்தரவின் பேரில், காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் (DIG) மேற்பார்வையில் தனி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.</p><p>இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காவல்துறையினருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T00:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-is-renaming-lake-ontario-to-lake-america-1787700440"></link>
            <id>https://ibctamil.com/article/trump-is-renaming-lake-ontario-to-lake-america-1787700440</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒன்டாரியோ ஏரியின் பெயரை &quot;அமெரிக்கா ஏரி&quot; (Lake America) என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒன்டாரியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p> 

ஒன்டாரியோவுடன் இனி அதிக வணிகம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் இந்நடவடிக்கை குறித்து யோசிப்பதாக தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அத்துடன், அமெரிக்கா - கனடா இடையே அண்மையில் முறிந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குக் கனடாவின் பிரெஞ்சு மொழித் தேவைகள் குறித்த சர்ச்சை காரணம் என்பதை ட்ரம்ப் மறுத்துள்ளார்.</p><p></p><h2>தடம் புரண்ட&nbsp;ஒப்பந்தம் </h2><p> </p><p>

கனடியரகள் பிரெஞ்சு பேசுவதில் தான் ஒருபோதும் தலையிட மாட்டேன் என்றும், கியூபெக் மக்களின் அரசியல் ஆதரவைப் பெற கனடாவின் பிரதமர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e695cc-b59d-4de3-9923-6a856f5c1b4e/26-6a8e28a59bf6a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The Atlantic</i></p><p>
</p><p>
எனினும், ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனங்கள் கியூபெக்கில் பிரெஞ்சு மொழி உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கனடாவின் சட்டத்தை மாற்றியமைக்குமாறு அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் வற்புறுத்தியதாலேயே ஒப்பந்தம் தடம் புரண்டதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி சுட்டிக்காட்டியிருந்தார்.</p><h2>தனித்து இயங்கப் போகும்&nbsp;ஒன்டாரியோ </h2><p>மேலும், ட்ரம்பின் கருத்து குறித்துப் பதிலளித்த கனடாவின் அமெரிக்க வர்த்தகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், அமெரிக்க நிர்வாகத்தின் அன்றாட சமூக ஊடகப் பதிவுகளுக்குக் கனடா அரசாங்கம் பதிலளிக்காது எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c4d29fe-bce0-4877-af8b-b8210c5de357/26-6a8e28a651e04.webp' /></p><p> </p><p>

இதேவேளை, இது ஒரு வெறும் பேச்சு மட்டுமே எனவும், ஒன்டாரியோ தனித்து இயங்கினால் உலகின் 3ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் என்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T23:43:39+00:00</updated>
        </entry>
    </feed>
