<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-09T10:57:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் முன்னாள் எம்.பி ஒருவரும் விசாரணை வளையத்துள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tissa-kuttiarachchi-summoned-investigation-1788950095"></link>
            <id>https://ibctamil.com/article/tissa-kuttiarachchi-summoned-investigation-1788950095</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் சட்டவிரோதமாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி, பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.</p><h2>விசாரணைக்கு முன்னிலையாகவில்லை</h2><p>நேற்று (08) காவல்துறை நிதிக்குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் முன்பும் அவரை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கும் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d60e9c0-0b35-4047-a992-838e10148b58/26-6aa13b0df162e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்க வர்த்தமானி: தடையுத்தரவை நீடித்த நீதிமன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gazette-on-the-removal-vavuniya-mayor-from-office-1788950752"></link>
            <id>https://ibctamil.com/article/gazette-on-the-removal-vavuniya-mayor-from-office-1788950752</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால
தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால
தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம்
இன்று உத்தரவிட்டது.
</p><p>
எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை
வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>முதல்வர் மீதான இடைக்காலத் தடை</h2><p>
</p><p>குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா
அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம்
இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4696bfab-21c5-456b-aafb-cf051f260d24/26-6aa138e24ebac.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும்
அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க
அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்றையதினம்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத்
தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T10:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-has-died-in-an-accident-kilinochchi-1788948926"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-has-died-in-an-accident-kilinochchi-1788948926</id>
            <summary type="text">கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிள் ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற மகிழுந்தின் சாரதி, கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p></p><h2>பொது வைத்தியசாலை</h2><p>
</p><p>
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/444dbbc8-84d8-413d-afcd-23c52e637488/26-6aa136ee6be49.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்த அரசின் திட்டங்கள் வெற்றிபெறாது : ரோஹித எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rise-cannot-be-stopped-in-prison-1788948693"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rise-cannot-be-stopped-in-prison-1788948693</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். </p><p>எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியை செயலிழக்கச் செய்யும் நோக்கில் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சித்தாலும், அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>&nbsp; அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களுக்கு மத்தியில் மக்கள் மேலும் அணிதிரள்வார்கள் என குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தற்போது கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.</p><h2>மக்கள் வழங்கிய அதிகாரம் பழிவாங்க அல்ல</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியது, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே அன்றி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து பழிவாங்குவதற்காக அல்ல எனவும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d6ea1b-f980-4cae-9ee5-c01db0420d25/26-6aa133e9a9030.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரம்: மண் படிமப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kurukkalmadam-mass-grave-issue-1788948133"></link>
            <id>https://ibctamil.com/article/kurukkalmadam-mass-grave-issue-1788948133</id>
            <summary type="text">1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (08.09.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.</p><p>

கடந்த 24.08.2026 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர், குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோFW38AVதனைகளை மேற்கொள்வதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.</p><p></p><h2>பூர்வாங்க ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
இதனடிப்படையில், எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில், சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9df74754-7273-4317-9076-3a87ec9b5873/26-6aa12ea8962bd.webp' /></p><p>

இதற்கிடையில், குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதன்படி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலையாகி, சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபையினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>

மேலும், வழக்கு எதிர்வரும் 14.09.2026 அன்று மேலதிக நடவடிக்கைகளுக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T10:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங் பயணத்தின் பின்னணியில் கொழும்பை வந்த ஐ.என்.எஸ் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106"></link>
            <id>https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106</id>
            <summary type="text">இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது.</p><p>

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.</p><p></p><h2>விமானந்தாங்கிக் கப்பலுடன்</h2><p>

மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் INS உதயகிரி கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc0216ab-ad29-481c-a1d1-9e5e749a2843/26-6aa1295972b83.webp' /></p><p>
</p><p>
கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முக்கியஸ்தர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றும் INS உதயகிரி கப்பலில் நடத்தப்படவுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இடையில் தொழில்சார் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பில் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் பணியிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.</p><p>

INS உதயகிரி கடந்த 2025 நவம்பர் மாதம் INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலுடன் இணைந்து கொழும்புக்கு விஜயம் செய்திருந்ததுடன், SLN IFR-2025 நிகழ்விலும் பங்கேற்றிருந்தது.</p><p>

மேலும், டித்வா சூறாவளியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளிலும் இந்தப் போர்க்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயங்கள் “பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்” (MAHASAGAR) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், “அயல்நாடுகளுக்கு முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கையையும் உறுதிப்படுத்துகின்றன.</p><p>

இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T09:56:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் இராஜதந்திர ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இலங்கை - இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-ind-defense-agreements-diplomatic-dominance-1788945808"></link>
            <id>https://ibctamil.com/article/sl-ind-defense-agreements-diplomatic-dominance-1788945808</id>
            <summary type="text">இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
</p><p>
கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
</p><p>
இதன் கீழ், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆறு 40 மில்லிமீற்றர் எல்70 ரக வான் பாதுகாப்புப் பீரங்கிகளை நவீனமயப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மானிய உதவி வழங்கவுள்ளது. மேம்படுத்தப்படும் இந்த அமைப்புகள், முக்கிய தேசிய சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்புத் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>இராணுவக் கல்வி - நிறுவன ஒத்துழைப்பு</h2><p>
இலங்கை விமானப்படைக்கு இந்தியா முன்னதாக 24 எல்70 ரக வான் பாதுகாப்பு அமைப்புகளை 2000 முதல் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e4a703-f56d-4f87-871b-ff6e616f3797/26-6aa1298c7eb50.webp' /></p><p> அவற்றில் 18 அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளையும் இந்தியா ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. தற்போது எஞ்சியுள்ள ஆறு அமைப்புகளையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
</p><p>இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
</p><p>
இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம், நிபுணத்துவப் பகிர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு, மூலோபாய விவகாரங்கள் தொடர்பான கல்விசார் கலந்துரையாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l3ew6xEz998" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

பல ஆண்டுகளாக இலங்கையைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிற்சிகளையும் கற்கைநெறிகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில், புதிய ஒப்பந்தம் இந்த நிறுவன ரீதியான உறவை மேலும் விரிவுபடுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>இளைஞர் உறவுகளுக்கு புதிய வாய்ப்பு</h2><p>மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய தேசிய மாணவர் படைக்கும் இலங்கை தேசிய மாணவர் படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது.</p><p>

இதன் மூலம் இரு நாடுகளின் இளைஞர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், கலாசாரப் புரிந்துணர்வு, அறிவுப் பகிர்வு மற்றும் பயிற்சி வாய்ப்புகள் மேலும் விரிவடையும்.
</p><p>
குறிப்பாக, இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்குச் சென்று தேசிய மாணவர் படை நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் இந்த ஒத்துழைப்பின் ஊடாக வலுப்படுத்தப்படவுள்ளன.
</p><p>இந்த மூன்று ஒப்பந்தங்களும் இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தொழில்முறை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் உறவுகள் உள்ளிட்ட பரந்த துறைகளுக்கு விரிவடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
</p><p>
குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் முக்கிய முன்னுரிமையாகத் தொடர்கிறது. </p><p>முக்கிய சர்வதேச கடல்சார் போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகில் இலங்கை அமைந்துள்ளதால், பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை இந்தியாவுக்கு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது.
</p><p>
இதனிடையே, இந்தியாவும் இலங்கையும் 2025 ஏப்ரல் மாதத்தில் ஐந்தாண்டு காலத்துக்கான விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பொன்றை உருவாக்கியிருந்தன. </p><p>கூட்டு இராணுவப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், கடற்படைத் துறைமுகப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் உள்ளடங்குகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் கொள்முதல் மோசடி! ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட விசேட மின்னஞ்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/airbus-scam-special-email-sent-to-apple-1788941030"></link>
            <id>https://ibctamil.com/article/airbus-scam-special-email-sent-to-apple-1788941030</id>
            <summary type="text">ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து&amp;nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து&nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.</p><p>இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேனவின்(காலஞ்சென்ற) கைபேசியிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சி.ஐ.டி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பான நீதித்துறை நடுவர் விசாரணை இன்று (09) மீண்டும் கூடியபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3797040-adc9-48d1-8832-e333950a82f2/26-6aa1151e1f3a5.webp' /></p><p>&nbsp;இந்நிலையில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை ஆகியவை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரிக்கும் அரசுப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை விடுத்தது.
</p><p>
அதன்படி, இந்த வழக்கை ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் அரசியலால் இன்று சிறையில் வாடும் நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-s-case-originated-during-ranil-s-tenure-1788938496"></link>
            <id>https://ibctamil.com/article/namal-s-case-originated-during-ranil-s-tenure-1788938496</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p></p><h2>அமைச்சர் ஹெரத் கருத்து</h2><p>

“இது நாங்கள் தாக்கல் செய்த வழக்கு அல்ல. இது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் முன்னரே தாக்கல் செய்யப்பட்டது. அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a31751-b129-4ef0-88f8-8faa498d2e95/26-6aa10fed867b6.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம், அவர்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம். முந்தைய அரசாங்கம் இந்த வழக்கு தொடர்பில் முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ முன்னெடுக்கத் தவறியது.</p><p>

தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் முறையாக விசாரிப்பதற்குத் தேவையான வசதிகளும் நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு! அர்ச்சுனா எம்.பிக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/speaker-issues-stern-warning-to-mp-arjuna-1788938373"></link>
            <id>https://ibctamil.com/article/speaker-issues-stern-warning-to-mp-arjuna-1788938373</id>
            <summary type="text">யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, நிலையியற் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்தே சபாநாயகர் இந்த விடயத்தை சுட்டிகாகாட்டினார்.</p><p>சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தால் 72, 79 நிலையியற் கட்டலைகளின் படி தண்டனை வழங்க நேரிடும் என சபாநாயகர் கூறியிருந்தார்.</p><p></p><h2>நிலையியற் கட்டளை கருத்து</h2><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d1456b-99e7-4f14-9060-e07c9b5124a1/26-6aa10ebb2d3e3.webp' /></p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சாமர சம்பத் தசனாயக்க வெளிப்படுத்திய கருத்தொன்றை ஹன்சாட் செய்யுமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.</p><p> இதன்போது நிலையியற் கட்டளைகள் குறித்து தனது கருத்தை வெளியிட்ட அர்ச்சுனா, நிலையியற் கட்டளையில் உள்ள விடயங்கள் பற்றி விளக்கம் இல்லாவிட்டால் இணையத்தில் சென்று பார்வையிடுமாறு குறித்த ஆளும் கட்சி எம்.பியின் கருத்துக்கு பதில் வழங்கினார்.</p><p>
இதனை தொடர்ந்தே சபாநாயகர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T08:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறையான நீதியை தள்ளிவைக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம்! ஐ.நா கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prevention-terrorism-act-delays-due-process-of-law-1788933664"></link>
            <id>https://ibctamil.com/article/prevention-terrorism-act-delays-due-process-of-law-1788933664</id>
            <summary type="text">இலங்கையில் முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;ஐக்கிய நாடுகள் சபையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,&nbsp;</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை</h2><p>ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcdf8481-2612-4036-8ac0-49668cd78625/26-6aa0fbc25243e.webp' /></p><p>

 பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதாகவும், இதன் விளைவாக நியாயமான வழக்கு விசாரணை, முறையான நீதிமன்ற மேற்பார்வை என்பன உள்ளடங்கலாக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர், சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது.&nbsp;</p><p>

அதேபோன்று அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கிறது.&nbsp;</p><p>இவ்வாறானதொரு பின்னணியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்தவேண்டும்.</p><p>யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>'2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் வருமானத்தில் 82 சதவீதமானவை ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. </p><p>எனவே சுகாதாரம், கல்வி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும். </p><p>இவ்விடயங்களுக்கும், குறிப்பாக மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்குமான நிதி ஒதுக்கீடு அவசியமாகும். </p><p>மேலும் இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கிறது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-expressways-ways-from-sept-1788929518"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-expressways-ways-from-sept-1788929518</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென&amp;nbsp;அரசாங்கம் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென&nbsp;அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கைகள்&nbsp;</h2><p>


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,



பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமது வாகனத்தின் தரம் தொடர்பில் பரிசீலனைசெய்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf98091-4e39-4fff-91d5-a8c986e789f4/26-6aa0ff17675e1.webp' /></p><p>



கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தரம் தொடர்பில் முறையான பரிசீலனை செய்யாமல் அவற்றைப் பயன்படுத்தியுள்ளமை இவ்வாறான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதென்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>



வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏனைய நாடுகளை விட இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பில் திருப்திகரமான தன்மை கிடையாது. </p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.



வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்பவம்..! இந்திய பாதுகாப்பு அமைச்சர் - அநுர சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-meets-the-president-anura-1788933353"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-meets-the-president-anura-1788933353</id>
            <summary type="text">இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.</p><p>இந்த சந்திப்பு இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">கொழும்பில் இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களுடன், மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தேன். பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களது வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், அவரது அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்தமையையிட்டு அவருக்கு… <a href="https://t.co/ffdck1kFcO">https://t.co/ffdck1kFcO</a></p>&mdash; Rajnath Singh (@rajnathsingh) <a href="https://x.com/rajnathsingh/status/2097568031757181404?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு</span></p><p>இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86911acf-2b0d-423f-9dd3-e5f6b4443c57/26-6aa0f83c3d4fa.webp' /></p><p>

 

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும்.</p><p>மேலும் அவர் நாளை (10) காலை நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை உறவு வரலாற்றை அடிப்படையாக கொண்டது! ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajnath-singhs-special-address-in-sri-lanka-1788934295"></link>
            <id>https://ibctamil.com/article/rajnath-singhs-special-address-in-sri-lanka-1788934295</id>
            <summary type="text">இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகைத்தந்துள்ள அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.</p><p>

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவும் இலங்கையும் மிகவும் நெருக்கமான நட்புநாடுகள். சகல இன்ப துன்பங்களிலும் இலங்கையுடன் இணைந்திருக்கும் நாம், இரு நாடுகளினதும் சமாதானம், செழுமை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம்.
</p><p></p><h2>இந்திய புலம்பெயர் சமூகம்</h2><p>

இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடியமையையிட்டு மகிழ்வடைகின்றேன். 

இந்தியா - இலங்கை இடையிலான நட்புறவை வலுவாக்குவதில் இந்திய புலம்பெயர் சமூகம் மிகவும் முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e15692-1a16-4ff3-b2e5-c0d698ba2e86/26-6aa0f8991d024.webp' /></p><p> 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 'சேதுவாக (பாலமாக)" இந்திய சமூகம் திகழ்கின்றது. இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடியினை எதிர்கொள்கின்றதோ, அப்போதெல்லாம் இந்தியா இலங்கையுடன் தோளோடு தோள் துணை நிற்கும்.
</p><p>
இந்தியாவில் இலத்திரனியல் உற்பத்தித் துறை ஒரு தொழில் புரட்சியாகும். 2014 இல் இந்திய ரூபா 1.9 லட்சம் கோடியாக இருந்த இலத்திரனியல் பொருட்களின் உற்பத்தி, தற்போது இந்திய ரூபா 11 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவும் இலங்கையும் மிகவும் நெருக்கமான நட்புநாடுகள். சகல இன்ப துன்பங்களிலும் இலங்கையுடன் இணைந்திருக்கும் நாம், இரு நாடுகளினதும் சமாதானம், செழுமை மற்றும்… <a href="https://t.co/yMT3v0WlIj">https://t.co/yMT3v0WlIj</a></p>&mdash; India in Sri Lanka (@IndiainSL) <a href="https://x.com/IndiainSL/status/2097496459746934990?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அத்துடன் இலத்திரனியல் பொருட்களின் ஏற்றுமதியும் இந்திய ரூபா 38,000 கோடியிலிருந்து இந்திய ரூபா 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

அதேபோல, கைத்தொலைபேசி உற்பத்தியில், இந்தியா இன்று உலகின் இரண்டாவது பாரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T06:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை விசாரணையை மையப்படுத்திய ஐ.நா அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-report-on-the-murdr-of-professor-ravindranath-1788931917"></link>
            <id>https://ibctamil.com/article/un-report-on-the-murdr-of-professor-ravindranath-1788931917</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் படுகொலை மற்றும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் படுகொலை மற்றும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையின் நடவடிக்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதில் இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>

</p><h2>பொறுப்புக்கூறல் உறுதி</h2><p>



இதன்படி பின்வரும் விடயங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

“ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe4b6b5-b296-4700-a8d6-c954242f4c1b/26-6aa0f29d520ee.webp' /></p><p>
</p><p>
முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கிறது.</p><p>

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை என்பவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு வலுவான மக்களாணை வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><h2>கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு</h2><p>
அவரது விஜயத்தின் பின்னர் சுமார் ஒரு மாதகாலத்துக்குள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59762475-f3b8-4e04-b71d-384d00ef2a39/26-6aa0f29c9ae39.webp' /></p><p>

அதேபோன்று நாட்டில் இனவாதத்துக்கு எவ்வகையிலும் இடமில்லை என்றும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கூற்று தொடர்பில் வரவேற்கத்தக்கது.</p><p>

இருப்பினும் நாட்டில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கின்றது” என்றுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T05:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journey-healing-continues-sri-lanka-human-rights-1788929128"></link>
            <id>https://ibctamil.com/article/journey-healing-continues-sri-lanka-human-rights-1788929128</id>
            <summary type="text">மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிறது என்று&nbsp; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.&nbsp;</p><p>நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய அளவிலான செயல்முறைக்குத் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p>இதன்படி மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியான தூதர் சுமித் தசநாயக்க,</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் சபை</h2><p> </p><p>இலங்கையானது பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் வழிமுறைகளுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அதேவேளையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் நீடித்த முன்னேற்றமானது தேசிய அளவில் முன்னெடுக்கப்படுவதாகவும், உள்நாட்டு யதார்த்தங்களுக்கு ஏற்ப பதிலளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc083d5-640c-456a-93f0-d2ab52a12ad4/26-6aa0ebdeaec79.webp' /></p><p>
</p><p>
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான ஆணையின் பேரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது என்று குறிப்பிட்ட அவர், தித்வா புயலின் தாக்கம் மற்றும் தொடரும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட பல சவால்கள் இருந்தபோதிலும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கூறினார்.
</p><p>
தூதரின் கூற்றுப்படி, இலங்கை 2025-ஆம் ஆண்டில் ஐந்து சதவிகித உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை வலுப்படுத்துதல் மற்றும் 2025-2029-ஆம் ஆண்டுக்கான தேசிய ஊழல் ஒழிப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தனது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வருகிறது.
</p><p>
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 60/1 குறித்துப் பேசிய தூதர் தசநாயக்க, வெளிப்புறச் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் விதிகள் உட்பட, அத்தீர்மானத்தை இலங்கை ஆதரிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>குற்றவியல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்</h2><p> </p><p>அத்தகைய வெளிப்புறப் பொறிமுறைகள் பிளவுகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே நடைபெற்று வரும் தேசிய செயல்முறைகளைச் சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/049ef177-2ed9-403e-b4f9-fa68eb057b90/26-6aa0ed8082c46.webp' /></p><p>
</p><p>
குற்றவியல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்க முன்னெடுப்புகள் மற்றும் நினைவுகூர்தல் முயற்சிகள் உள்ளிட்ட இலங்கையின் நேர்மறையான முன்னேற்றங்களை மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகம் அங்கீகரித்திருப்பதை அவர் வரவேற்றார்.</p><p>

கடந்த ஆண்டில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் முன்னெடுப்புகளைத் தூதர் கோடிட்டுக் காட்டினார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடனான கலந்தாலோசனைகளைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட புதிய சட்டத்தால் மாற்றீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.</p><p> </p><p>முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது, மேலும் இது வரும் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இணையப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான பங்குதாரர் கலந்தாலோசனைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
தூதர் தசநாயக்கவின் கூற்றுப்படி, காணாமல் போனோர் அலுவலகம், இருசீர் வழங்கும் அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட சுதந்திரமான நல்லிணக்க நிறுவனங்கள், வலுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் ஆதரவுடன் தமது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன.</p><h2>மலையாக தமிழ் சமூகத்தினர்</h2><p>
</p><p>
தற்போதுள்ள நல்லிணக்க அமைப்புகளின் அதிகார வரம்புகளுடன் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதைத் தடுப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கான வரைவுக் கட்டமைப்பு தற்போது மதிப்பாய்வில் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c48b473-5cfa-427a-8164-eeb2b8270e59/26-6aa0ed813a970.webp' /></p><p>

ஒரு சுதந்திரமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும், அதேவேளையில், நிலம் விடுவிப்பு, மதிப்பீடு மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சினைகளை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்று மறுஆய்வு செய்து வருவதாகவும் தூதர் தெரிவித்தார்.
</p><p>
மோதலின் போது செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாமாகவே முன்வந்து பாதுகாப்பாகத் திரும்புவதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு குடிவரவு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மலையாக தமிழ் சமூகத்தினரிடையே நிலவி வரும் நீண்டகாலக் குறைகளைக் குறிப்பிட்டு, அரசாங்கம் முதன்முறையாக அவர்களின் கவலைகளை விரிவாகவும் விரைவாகவும் நிவர்த்தி செய்து வருகிறது என்று தூதர் தசநாயக்க தெரிவித்தார்.</p><p>

ஒரு தனிநபரின் சமூக அந்தஸ்து அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு சட்டவிரோதச் செயலையும் சுதந்திரமான தேசிய செயல்முறைகள் மூலம் விசாரித்து, வழக்குத் தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.</p><h3>மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடு</h3><p>

தூதரின் கூற்றுப்படி, பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், விசாரணைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட சமீபத்திய நடவடிக்கைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb182ba7-6be9-44cd-ba20-1486792fa329/26-6aa0ed81e863c.webp' /></p><p>

இனவாதம், மதத் தீவிரவாதம் அல்லது பிளவுபடுத்தும் அரசியல் ஆகியவை மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்; மேலும், இந்த உறுதிமொழியை ஜனாதிபதி திசாநாயக்க பலமுறை வலியுறுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கும் முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட, நீதி அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தூதர் மேலும் எடுத்துரைத்தார். </p><p>இந்த சீர்திருத்தங்கள், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைப்பதற்கும், நீதித்துறை நிபுணத்துவத்தைத் தக்கவைப்பதற்கும், நாடு முழுவதும் நீதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கும் நோக்கம் கொண்டவை என்று அவர் கூறினார்.
</p><p>
சிறைச்சாலைகள் தொடர்பான கவலைகளுக்குப் பதிலளித்த அவர், சிறை நிர்வாகத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும், புனர்வாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்தவும் அரசாங்கம் துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். </p><p>மேலும், நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு விசாரணைக் குழு விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

தமது உரையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றில், இலங்கையின் போருக்குப் பிந்தைய பயணம் ஒரு நீண்டகால செயல்முறையாகக் கருதப்பட வேண்டும் என்று தூதர் தசநாயக்க வலியுறுத்தினார்.
</p><p>
"இலங்கை ஒரு நீண்ட மற்றும் சவாலான பாதையைக் கடந்து வந்துள்ளது. மோதலின் முடிவானது சவால்களின் முடிவைக் குறிக்கவில்லை, மாறாக குணமடைதல், புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகிய நீண்ட செயல்முறையின் தொடக்கத்தைக் குறித்தது," என்று அவர் கூறினார்.</p><p>

தேசிய உரிமையுணர்வைச் சீர்குலைக்கும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக, அத்தகைய செயல்முறைக்கு முன்னேற்றத்தை அங்கீகரித்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை தேவைப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
</p><p>
மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடுகளுக்கு இணங்க, இலங்கையை ஒரு சமச்சீரான, புறநிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் மதிப்பிடுமாறு தூதர் பேரவையை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.</p><p>

அனைத்துக் குடிமக்களுக்கும் அமைதியான, நல்லிணக்கமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான தனது முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடும் அதே வேளையில், தேசிய நிறுவனங்கள் மற்றும் தேசிய செயல்முறைகள் மூலம் நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T05:35:02+00:00</updated>
        </entry>
    </feed>
