<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-20T06:40:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன்: பலப்படுத்திய காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770"></link>
            <id>https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>காவல்துறையின் விசாரணைப்படி வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மகன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>வவுனியா காவல்துறை</h2><p>
</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25345b-e0a2-41ac-894b-2cc7bcf5cb02/26-6aaf73adccba1.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 3 வெளிநாட்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369"></link>
            <id>https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369</id>
            <summary type="text">தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (20.09.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முதலாவது சோதனையின்போது 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc28847b-04d1-432f-ae24-95f994ffe23b/26-6aaf66a2dce61.webp' /></p><p>
</p><p>
அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில்&nbsp; போதைப்பொருள் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-six-districts-1789876070"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-six-districts-1789876070</id>
            <summary type="text">நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, காலி, களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p>இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (20.09.2026) மாலை 7.00 மணி முதல் நாளை (21.09.2026) மாலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்</h2><p>நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தின் நாகொட பிரதேச செயலாளர் பிரிவிலும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6be6c4-4091-433d-a8dd-a1d66e0b8a02/26-6aaf5f4634c49.webp' /></p><p>மேலும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காவல்துறையினருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-people-arrested-attempting-police-officers-1789872575"></link>
            <id>https://ibctamil.com/article/five-people-arrested-attempting-police-officers-1789872575</id>
            <summary type="text">கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களை காவல்துறையினர் பரிசோதித்தபோது, குறித்த வாகனங்களுக்கான மணல் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தில் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43af9413-d65c-4f3c-be1b-cad2267c6bd6/26-6aaf53060433c.webp' /></p><p>
</p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T03:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067"></link>
            <id>https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067</id>
            <summary type="text">அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மோடியிடம் கோரிக்கை</h2><p>

எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b6f523-f80c-40c1-b6c0-4fabfd49786e/26-6aaf2503a9803.webp' /></p><p>

மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T02:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-for-the-fishing-communities-1789870798"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-for-the-fishing-communities-1789870798</id>
            <summary type="text">வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இதன் தாக்கத்தால் வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறும், எதிர்வரும் வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் கங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

 

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ca5f4b1-12b5-44c8-9a5e-3a24af131994/26-6aaf48cae6eb5.webp' /></p><p>

 

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வரை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
</p><p>
 

மேலும், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:45:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரம் எம்.பி வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின்&nbsp;சிவராசா தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய விசேட கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இது குறித்து கடிதத்தில் பின்வரும் விடயங்களை சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;அனோஜனின் குடும்பப் பின்னணி</h2><p>“இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433f48d-605e-4a71-ae08-8502853e0c8f/26-6aaf2962bb761.webp' /></p><p>அந்த உயரிய அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் குடும்பப் பின்னணி, வயது, சமூக மற்றும் பொருளாதாரச்சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவ்விடயத்துக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்கான இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.</p><p>

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொழில் வாய்ப்புக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு வசித்துவந்த நிலையில், நபிகள் நாயகம் தொடர்பாக சமூக ஊடகத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.</p><p>இதுகுறித்து சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவருக்கு கடந்த மாதம் 3 ஆம் திகதி கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன்.
</p><p>
குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அனோஜன் சவுதி அரேபியாவில் டைனமிக் அன்ட் எக்ஸலன்ஸ் அரேபியா கம்பனி என்ற நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.</p><p></p><h2>குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரம்</h2><p>சவுதி அரேபியா தனது மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை மிக உயர்ந்த முறையில் பேணிவரும் ஒரு நாடாகும் என்பதை நான் முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43b8ca8-3cda-4dd6-b6a6-84092211de86/26-6aaf296374497.webp' /></p><p> </p><p>ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இறைமையுரிமை இருப்பதையும் மதிக்கிறேன்.
</p><p>

அனோஜன் சிவராசா குற்ற நோக்கத்துடன் சவுதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. அவரது தந்தை சிவராசா மற்றும் தாய் யோகேஸ்வரி ஆகியோரின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பை அணுகியுள்ளார். </p><p>அவரது உழைப்பே குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தின் பிரதான ஆதாரமாக இருந்து வருகின்றது.
</p><p>
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை அவரை மாத்திரமன்றி, அவரைச் சார்ந்த முழுக்குடும்பத்தின் வாழ்வையும் முற்றாக முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
</p><p>
அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைக்கும் விளைவையே இது ஏற்படுத்தும்.</p><p> இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T02:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-next-stage-of-the-easter-attack-case-1789866294"></link>
            <id>https://ibctamil.com/article/the-next-stage-of-the-easter-attack-case-1789866294</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவிதுள்ளார்.</p><p>

“சிலரைக் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்படுகின்றனர். இந்த விசாரணைகளில் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என சரத் பொன்சேகா மேலும், கூறியுள்ளார்.</p><p></p><h2>நாட்டைச் சூறையாடிய&nbsp;ராஜபக்‌சர் </h2><p>
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆர்வத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தான் கருதுவதாகவும், இதனை வரவேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6909af-ba88-459b-9150-260ddae6bcd4/26-6aaf32367eae7.webp' /></p><p>அத்தோடு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு உரிமையுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p>ராஜபக்‌சர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் நாட்டைச் சூறையாடியதாக தான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>சட்டரீதியான விசாரணை</h2><p>ஷிரந்தி ராஜபக்‌ச தொடர்பாகவும் சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f10ae28c-8c36-4f52-a3e6-90dd38c87195/26-6aaf323734ebf.webp' /></p><p>2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்‌ச நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயம்.</p><p>அவ்வாறான முடிவு நாட்டுக்கு விரும்பத்தக்கதல்ல. நாமல் அரசியலில் முன்னேறுவதற்கான பாதை திறந்தே இருக்கின்றது. அவர் அந்தப் பாதையில் செல்லலாம்” என கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T01:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sarathweerasekera-furiously-thileepan-memorial-1789865411"></link>
            <id>https://ibctamil.com/article/sarathweerasekera-furiously-thileepan-memorial-1789865411</id>
            <summary type="text">வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என&amp;nbsp;முன்னாள் பொதுமக்கள் பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என&nbsp;முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசு அனுமதியளிக்குமா என&nbsp; சீற்றத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p></p><h2>விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகள்
தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், பௌத்த சின்னங்களும்
மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a37f5a-d783-43f5-b6d2-1ed80d2475fe/26-6aaf2dc672755.webp' /></p><p>
</p><p>
வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகும். </p><p>இவ்வாறான சூழலில்,
எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசு அனுமதியளிக்குமா
என்று நாம் கேட்கின்றோம்.
</p><p>
திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன்
கலந்துகொண்டுள்ளனர். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை
ஏற்றுக்கொள்வாரா?</p><p>

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதம்
விதைக்கப்படுகின்றது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபலமடைய வேண்டும்
என்பதற்காக அரசு பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசும் இதேபோன்று செயற்பட்டதன் இறுதிக் கட்டமாகவே உயிர்த்த
ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. </p><p>மேலும் அரசியல் வெற்றிகளுக்காகப்
பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை எந்தக் காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த
வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.</p><p></p><p><b>you may like this&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/toUCR-sCchQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:50:32+00:00</updated>
        </entry>
    </feed>
