<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-13T17:29:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339"></link>
            <id>https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><p></p><h2>பரீட்சை வினாத்தாள்&nbsp;</h2><p>இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில் பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14-08-2026) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ddffd01-e66b-4881-bcc1-e578b82779b8/26-6a7dfc2768bfe.webp' /></p><p>எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார்.</p><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><h2>பரீட்சைகள் திணைக்களம்</h2><p> 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5311e45-2b34-47c1-a854-c6068355a147/26-6a7dfc281c1bc.webp' /></p><p>இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவம் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணை மருத்துவ சேவையின் எட்டு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/invited-for-8-courses-in-the-paramedical-service-1786638961"></link>
            <id>https://ibctamil.com/article/invited-for-8-courses-in-the-paramedical-service-1786638961</id>
            <summary type="text">நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறி</h2><p>
</p><p>
அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும் 08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92817a5e-e93c-470a-aec6-c0b71eb8cfc7/26-6a7df770d94dc.webp' /></p><p>

பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)

பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector - PHI)

செயற்கை உறுப்பு மற்றும் பொருத்துறுப்பு நிபுணர் (Prosthetist and Orthotist)

சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)

பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)

மின்விசையலைவரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Cardiographer - ECG)

மருந்து தயாரிப்பாளர் / மருந்தாளர் (Dispenser)

மின்மூளை வரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Encephalographer - EEG)
</p><p>
மேலும், 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதியிடப்பட்ட 2501 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பாடத்துறைகளில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து இப்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
</p><p>
இப்பயிற்சிப் பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026 ஓகஸ்ட் 31 ஆகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T16:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவிகரிப்பது பற்றிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786634754"></link>
            <id>https://ibctamil.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786634754</id>
            <summary type="text">பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று
இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று
இடம்பெற்றது.
</p><p>
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதியில் காணி
உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் இடம் பெற்றது.</p><h2>444 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்</h2><p>இதன்போது கடந்த 04 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நஷ்ட ஈடு
வழங்கும் கூட்டத்தில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என்றும் தேவையான காணிகளை
பெறுவதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe69e6b-7747-4c4c-86e7-34a9ecdb488a/26-6a7dea9289a03.webp' /></p><p>
</p><p>
பலாலி விமான நிலையத்துக்கு என மூன்று கட்ட ஓடுதளங்களுக்கும் தேவையான 444
ஏக்கர் பொதுமக்களின் காணிகள் ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு காலப்
பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த காணிகள் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு போதுமானதாக
காணப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T16:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் வினாத்தாள் பரீட்சை நிலையமொன்றிலிருந்து மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/physics-question-paper-recovered-exam-center-1786626884"></link>
            <id>https://ibctamil.com/article/physics-question-paper-recovered-exam-center-1786626884</id>
            <summary type="text">நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.&nbsp;</p><p>அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், இருந்தே வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பரீட்சை ஆணையாளரின் அறிவிப்பு</h2><p>&nbsp;எனினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20e5e55-6c7f-4ccf-a9e2-d31790534f81/26-6a7dc6069d5be.webp' /></p><p>உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெற்ற பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாயம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T15:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786632653"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786632653</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. 

அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. </p><p>

அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. </p><p>

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது. 

அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.&nbsp;</p><h2>540 எலும்புக் கூடுகள்&nbsp; அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன</h2><p>&nbsp;செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழான அகழ்வு பணிகளின் போது, 552 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0daaf32-0bdf-44d5-ae8e-f90176a907c7/26-6a7ddc2186ce2.webp' /></p><p> </p><p>

அவற்றில் 540 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T15:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்! சர்வதேசத்தை அதிரவைத்த முசப் ஹசன் யூசுப்பின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cracks-in-us-israel-relations-1786630426"></link>
            <id>https://ibctamil.com/article/cracks-in-us-israel-relations-1786630426</id>
            <summary type="text">ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
</p><p>
இஸ்ரேல் வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது அமெரிக்கா தலையிட்டது அந்நாட்டின் இராணுவ உத்திகளைப் பாதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், காசா தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச சமாதானத் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்தது, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பனிப்போரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், அமெரிக்காவின் தலையீடு இஸ்ரேலின் வெற்றியைத் தடுத்துவிட்டதாக அந்நாட்டு மக்கள் கருதுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பெரு விரிசல் தொடர்பிலும் அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJwLWLiY9mM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T14:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சாவுடன் பிரபல பாடசாலை மாணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-student-arrested-with-cannabis-1786629626"></link>
            <id>https://ibctamil.com/article/school-student-arrested-with-cannabis-1786629626</id>
            <summary type="text">பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p>&nbsp; லுணுகலை – 27ஆம் கட்டை, அலகொலகம பகுதியை குறித்த மாணவன் வசிப்பிடமாக கொண்டுள்ளார்.</p><h2>&nbsp;காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்</h2><p>முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e068cf-f65e-4b31-8a95-4f35209500f3/26-6a7dd2799d6ee.webp' /></p><p>

விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T14:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fears-ground-attack-as-us-troops-middle-east-rise-1786626659"></link>
            <id>https://ibctamil.com/article/fears-ground-attack-as-us-troops-middle-east-rise-1786626659</id>
            <summary type="text">எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்க கிழக்கில் பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்த ஆய்வாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதலில் தற்போதைய நிலை தெளிவான வெற்றியோ தோல்வியோ இல்லாமல் முட்டுக்கட்டையாக நீடித்து வரும் நிலையில் அமெரிக்க இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்கட்டி அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>தெளிவில்லா படை குவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இது ஒருவிதமான இராணுவக் குவிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.” என அவர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4677ddf3-c176-49e1-8066-c57463ed60f9/26-6a7dc63ebba6a.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்கா கூடுதல் படைகளை எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குவிக்கிறது என்பது தற்போது தெளிவாகவில்லை எனவும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது உடனடி தரைத் தாக்குதலுக்கான தயாரிப்பா, தற்போதுள்ள அமெரிக்க தளங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையா அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளுக்கு தயாராகும் நடவடிக்கையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா தற்போது ஈரானுக்குள் முழுமையான தரைப்படையெடுப்பை நடத்தி வெற்றியை எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே தனது மதிப்பீடு என்றும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு</h2><p>
</p><p>
அவரது கருத்துப்படி, ''ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு மிகப்பெரிய இராணுவ, அரசியல் மற்றும் பிராந்திய சவால்களை உருவாக்கக்கூடும்.

அமெரிக்கா தனது இராணுவ விருப்பங்களை அதிகரித்துக் கொண்டிருப்பது, உடனடியாக ஈரானை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாகக் கருத முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd440b76-2644-4cfa-900a-bf5fc7027464/26-6a7dc63f7f475.webp' /></p><p>

தற்போது யாரும் வெற்றி பெறுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் முற்றிலும் முட்டுக்கட்டையில் இருக்கிறோம்.
</p><p>
அதாவது, அமெரிக்காவும் ஈரானும் தங்களது முக்கிய இலக்குகளை முழுமையாக அடைய முடியாத நிலையில், மோதல் நீடித்துக் கொண்டிருக்கின்றது" என அவரது மதிப்பீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்! காவல்துறை வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1093-foreign-nationals-arrested-so-far-this-year-1786627317"></link>
            <id>https://ibctamil.com/article/1093-foreign-nationals-arrested-so-far-this-year-1786627317</id>
            <summary type="text">இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
ஒன்றிணைந்த நாடு என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அவரது கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் இரண்டு சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>EQYFWW6&nbsp;</p><h2>சட்ட நடவடிக்கைகள்</h2><p>
எனினும், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc7c587-59bf-4c40-b623-70fc51055e0e/26-6a7dc8e4e8aff.webp' /></p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு ஏற்பட்ட ஆசை : தடைபோடும் சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-sit-in-presidential-chair-for-third-time-1786623834"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-sit-in-presidential-chair-for-third-time-1786623834</id>
            <summary type="text">மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப் அதற்கு அமெரிக்க சட்டம் தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப் அதற்கு அமெரிக்க சட்டம் தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது: </p><p>எனக்கு மிகவும் விருப்பம் தான். 2028ல் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை உள்ளது. மற்றொரு முறை போட்டியிடுவதை வரவேற்கிறேன்; ஆனால் சட்ட வரம்புகள் என்னை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறது.&nbsp;</p><h2>சட்டவரம்புகள் தடுக்கின்றன</h2><p>&nbsp;எனது அரசியல் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட சட்டம் வெளிப்படையாகத் தடுக்கிறது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F2140198103196582%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> எல்லோரும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், மேலும் அந்த விஷயத்தில் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். </p><p>இருந்தாலும், எனக்கு பதவிக்காலத்தைத் தொடர்வதில் ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மூன்றாவது முறையாக ட்ரம்ப் போட்டியிட முடியாத சூழல்</h2><p>அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59af7d91-435c-4346-8493-2d6f251d63c4/26-6a7dc08a1f741.webp' /></p><p> </p><p>இதனால் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட முடியாத சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T13:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூரமாக தாக்கப்பட்டு நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ள சிறுமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-year-old-girl-left-on-a-deserted-road-1786624311"></link>
            <id>https://ibctamil.com/article/4-year-old-girl-left-on-a-deserted-road-1786624311</id>
            <summary type="text">
கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கண்டி - வத்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

கண்டி - வத்தேகமவில் உள்ள யடிராவன வீதியில் இருந்து குறித்த சிறுமி இன்று(13) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
காவல்துறையின் அவசர எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வத்தேகம காவல்துறையின்ர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று சிறுமியை மீட்டெடுத்தாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சிசிரிவி மூலம்&nbsp;விசாரணை</h2><p> </p><p>

காலை 7 மணியளவில் ஒரு முச்சக்கர வண்டியில் அச்சிறுமி அந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e52528-d839-4c32-91c0-7cd9e6a83b11/26-6a7dc0007df5d.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சிறுமியை ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி குறித்து சிசிரிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், தனது குடும்பத்தைப் பற்றியோ அல்லது தான் வசிக்கும் இடத்தைப் பற்றியோ அச்சிறுமிக்கு எந்தத் தகவலும் தெரியாது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p>

இதன்படி, குறித்த சிறுமி கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து வத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அதிவேகமாக கரையில் வந்து மோதிய பாரிய கப்பல்! அலறியடித்து ஓடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mv-nawata-bhum-shipwreck-india-1786616685"></link>
            <id>https://ibctamil.com/article/mv-nawata-bhum-shipwreck-india-1786616685</id>
            <summary type="text">


சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த &#039;MV Nawata Bhum&#039; எனும் பாரிய சரக்குக் கப்பல் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த 'MV Nawata Bhum' எனும் பாரிய சரக்குக் கப்பல் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த விபத்தானது, நேற்றையதினம்(13) காலை சுமார் 11:00 மணி அளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பந்தப்பட்ட கப்பல், மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>எச்சரிக்கை ஒலி&nbsp;</h2><p>
</p><p>
விபத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கப்பலின் திசைக் கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்ட திடீர் கோளாறு மற்றும் ஆற்றின் பலத்த நீரோட்டம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Singapore?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Singapore</a>-flagged Container Ship ‘Nawata Bhum’ Collides with Riverbank Near Diamond Harbour<br><br>Marine Tanks<br><br>Kolkata/Diamond Harbour: A Singapore-flagged container ship, MV Nawata Bhum, has reportedly collided with the riverbank in the Hooghly River near Diamond Harbour in South… <a href="https://t.co/Ph5nw45o8e">pic.twitter.com/Ph5nw45o8e</a></p>&mdash; NewsTanksVoiceofSea (@NewsTanksind) <a href="https://x.com/NewsTanksind/status/2087528969612714442?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்நிலையில், கப்பல் கரைநோக்கிச் செல்லும் போது மாலுமி தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதால், அருகில் இருந்த படகுத்துறையினர் மற்றும் மக்கள் உயிர்தப்பியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
எவ்வாறாயினும், இழுவைப் படகுகள் மூலம் குறித்த கப்பல் மீட்கப்பட்டு தற்போது தனது பயணத்தை தொடர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-13T12:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெறவுள்ள முதலாவது சர்வதேச சைவ மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/first-international-vegetarian-conference-jaffna-1786623749"></link>
            <id>https://ibctamil.com/article/first-international-vegetarian-conference-jaffna-1786623749</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பிரணவம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “முதலாவது சர்வதேச சைவ மாநாடு - 2026” வருகின்ற ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பிரணவம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “முதலாவது சர்வதேச சைவ மாநாடு - 2026” வருகின்ற ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p>

"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்" என்ற உயரிய கோட்பாட்டை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் நகரில் அமையப்பெற்றுள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
</p><p>
இம்மாநாடு "வாழ்வியலில் திருமுறைகள் – திருமுறைகளில் வாழ்வியல்" என்ற முதன்மைத் தலைப்பில் நாள் முழுதும் நடைபெறவுள்ளது. </p><p>சைவ சமயத் திருமுறைகள் மனிதனின் அன்றாட வாழ்வியலோடு எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பதையும், சைவ நெறிமுறைகளின் வழி நின்ற வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் உலகறியச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும் என அறிவித்துள்ளனர்</p><p>

இம்மாநாட்டில் சைவ சமய ஆதீனக் குருமார்கள், ஆன்மீகச் சான்றோர்கள், திருமுறைச் செல்வர்கள் மற்றும் சைவ சித்தாந்த வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். </p><p>

அத்துடன் பல்வேறு ஆன்மீகச் சொற்பொழிவுகள், திருமுறை இசை நிகழ்வுகள் மற்றும் கருத்துரைகளும் இடம்பெறவுள்ளன.
</p><p>
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." எனும் இறை முழக்கத்தோடு நடைபெறும் இந்நிகழ்வில், உலகெங்கிலும் வாழும் சைவ அன்பர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு இறைஅருள் பெறமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T12:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/great-souls-organ-donation-left-enduring-legacy-1786618867"></link>
            <id>https://ibctamil.com/article/great-souls-organ-donation-left-enduring-legacy-1786618867</id>
            <summary type="text">உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
மற்றும் வடமாகாண உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த
விழிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
மற்றும் வடமாகாண உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த
விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
</p><p>
மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் முக்கியத்துவம்
தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம்
ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p>

விபத்து ஒன்றின் காரணமாக ஏற்படும் கடுமையான தலைக்காயம் அல்லது மூளையில்
திடீரென ஏற்படும் இரத்தக்கசிவு, மூளைச் சிதைவு போன்ற காரணங்களால் சில
சந்தர்ப்பங்களில் மூளையின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் நிரந்தரமாகவும் மீள
முடியாத வகையிலும் செயலிழக்கக்கூடும்.</p><p></p><h2>உறுப்பு தானம்</h2><p>

இவ்வாறு மூளையின் செயல்பாடுகள் முழுமையாகவும் நிரந்தரமாகவும்
நிறுத்தப்பட்டிருப்பது மருத்துவ ரீதியான உரிய பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்பட்டால், அந்த நிலை மூளைச்சாவு (Brain Death) என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47c1c401-8d6f-45fa-a0dc-eb4e8ed78d6b/26-6a7dac84881f4.webp' /></p><p>
மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயம் உள்ளிட்ட சில உறுப்புகள், செயற்கை சுவாசம்
மற்றும் தீவிர சிகிச்சை உதவிகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
தொடர்ந்து இயங்கக்கூடும். இதனால் அவர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம்
ஏற்படலாம். </p><p>ஆனால் மூளைச்சாவு என்பது மீள முடியாத நிலையாகும். மூளை மீண்டும்
செயல்படச் செய்வதற்கான சிகிச்சை அந்நிலையில் இல்லை.

எனவே, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழங்கப்படும் தீவிர
சிகிச்சையின் நோக்கம் மூளையை மீண்டும் செயல்படச் செய்வது அல்ல.</p><h2>இதயம் ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச்செய்யும்</h2><p>சட்டரீதியான
நடைமுறைகளுக்கும் குடும்பத்தினரின் சம்மதத்திற்கும் அமைவாக, தானம்
செய்யக்கூடிய உறுப்புகளைப் பாதுகாத்து, அவற்றை உறுப்பு மாற்றுச் சிகிச்சை
தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கிய
நோக்கமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abbcd049-fba0-4159-b36f-504993f584b8/26-6a7dac85366d1.webp' /></p><p>
ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாத துயரமான தருணத்திலும், அவரது உறுப்புகள்
மூலம் பலருக்கு புதிய வாழ்வை வழங்க முடியும்.
</p><p>
ஒருவரின் சிறுநீரகம் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கையை வழங்கலாம். இதயம்
ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச் செய்யலாம். கல்லீரல், நுரையீரல்
உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு நம்பிக்கையாக
அமையலாம்.
</p><p>
“நாம் மறைந்தாலும் நமது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழட்டும்” என்ற உயரிய
எண்ணத்துடன் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
உறுப்பு தானம் என்பது வெறும் தானம் அல்ல; அது ஒரு மனிதன் மறைந்த பின்னரும்
மற்றொரு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்தும் வாழ்வதற்கான உன்னதமான மனிதநேயச்
செயல்.
</p><p>
உறுப்புகளை தானம் செய்வோம் – உயிர்களை காப்போம்!
மரணத்திற்குப் பின்னரும் மனிதநேயத்தால் வாழ்வோம்!</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T11:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருதியால் எழுதப்பட்ட அல்லைப்பிட்டிப் பிலிப்பு நேரியார் தேவாலயப் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/allaipiddy-massacre-st-philip-neri-church-1786620570"></link>
            <id>https://ibctamil.com/article/allaipiddy-massacre-st-philip-neri-church-1786620570</id>
            <summary type="text">ஓகஸ்ட் 13 ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஆறா வடுவாக, கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட மற்றொரு கருப்பு நாளாகும்.

2006ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் 13 ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஆறா வடுவாக, கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட மற்றொரு கருப்பு நாளாகும்.
</p><p>
2006ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிலிப்பு நேரியார் தேவாலயம் கொடூரத் தாக்குதலுக்கு இலக்கானது. </p><p>போர் உச்சமடைந்த வேளையில், "இறைவனின் இல்லத்தில் எமக்கு ஆபத்து வராது" என்ற ஒரே நம்பிக்கையோடு தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் அங்கே அடைக்கலம் புகுந்தனர்.

ஆனால், அந்த நம்பிக்கையும் பொய்த்துப்போனது. </p><p>ஶ்ரீலங்க இராணுவத்தின் செல்தாக்குதல்களினாலும் நேரடித் தாக்குதல்களினாலும் புனித தேவாலயத்திற்குள்ளேயே அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி, கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
</p><p>
பெற்றோரை இழந்து குழந்தைகள் கதறியழுத காட்சியும், காயமடைந்தோரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் முன்வந்து, பின்னர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பங்குத்தந்தை ஜிம் பிறவுண் (Fr. Jim Brown) அவர்களின் தியாகமும் வரலாறெங்கும் என்றும் நீங்காத வடுக்கள்.</p><p>

அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T11:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானியைக் கைது செய்வதற்கான மலேசிய நடவடிக்கை தோல்வி..! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/malaysia-operation-to-arrest-kanjipani-1786620036"></link>
            <id>https://ibctamil.com/article/malaysia-operation-to-arrest-kanjipani-1786620036</id>
            <summary type="text">மலேசியாவில் பாதாள உலக குற்றவாளி &quot;கஞ்சிபானி இம்ரான்&quot; என்பவரைக் கைது செய்வதில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தமது நடவடிக்கை தோல்வி என்ற கருத்துக்களை காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் பாதாள உலக குற்றவாளி "கஞ்சிபானி இம்ரான்" என்பவரைக் கைது செய்வதில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தமது நடவடிக்கை தோல்வி என்ற கருத்துக்களை காவல்துறை நிராகரித்துள்ளது. அந்த நடவடிக்கையானது ஒரு வெளிநாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைக் கையாள்வதை உள்ளடக்கியதாக இருந்தது என்றும் அது கூறியுள்ளது.</p><p>ஊடகங்களிடம் பேசிய உதவி காவல் கண்காணிப்பாளர் ரோகன் ஒலுகல, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் காவல்துறை நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.</p><h2>சொந்த நாட்டில் செயல்படுவது போல் வெளிநாடுகளில் செயற்படமுடியாது</h2><p>

தங்கள் சொந்த அதிகார வரம்பில் செயல்படுவது போலவே இலங்கை அதிகாரிகள் ஒரு வெளிநாட்டில் செயல்பட முடியாது என்று அவர் விளக்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c114fb84-a260-4fb5-84f2-ff43c5c39517/26-6a7dae1a09d6b.webp' /></p><p> இந்தச் சூழ்நிலையை, ஒருவர் தனது சொந்த வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியின் புவியியல் மற்றும் நடைமுறைகளுடன் பரிச்சயமில்லாமல் இருப்பதைப் போன்றது என்று அவர் ஒப்பிட்டார்.</p><p></p><h2>மலேசிய நடவடிக்கையை ஒரு தோல்வியாகக் கருதக்கூடாது</h2><p>

எனவே, மலேசிய நடவடிக்கையை ஒரு தோல்வியாகக் கருதக்கூடாது என்றும், மாறாக வெளிநாட்டு சட்ட மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்க வேண்டும் என்றும் ஒலுகல கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39db9ab4-1df2-44bd-8481-8065f7db7638/26-6a7dae1958a43.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T11:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை வரலாற்றில் புதிய இடத்தில் ஸ்டார்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/starc-sets-new-record-in-test-cricket-1786619480"></link>
            <id>https://ibctamil.com/article/starc-sets-new-record-in-test-cricket-1786619480</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஸுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.</p><p>

பங்களாதேஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் நடைபெற்று வரும் நிலையில், அணியின் தொடக்க வீரர் ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.</p><p>

போட்டி தொடங்குவதற்கு முன்பு, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்துடன் இணைந்த சமப்படுத்தலில் 433 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற நிலையில் ஸ்டார்க் இருந்தார்.
</p><p></p><h2>முதல் 10 இடங்கள்&nbsp;</h2><p>
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 9ஆவது ஓவரில் ஷாட்மான் இஸ்லாமை, நாத்தன் லயனிடம் பிடியெடுப்பு கொடுக்கச் செய்ததன் மூலம் ஸ்டார்க் 434ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் ரங்கன ஹேரத்தின் சாதனையை அவர் முறியடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc74a6c-175a-41e1-a894-0862dec1440f/26-6a7dac0f46bdd.webp' /></p><p>
மிட்செல் ஸ்டார்க் தற்போது 106 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் இணைந்து 11ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
</p><p>
கபில் தேவ் 1978 முதல் 1994 வரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

36 வயதான ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டின் அனைத்து காலங்களிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் முதல் 10 இடங்களுக்குள் நுழைய இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.</p><p>

தற்போது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளார்.

எனவே, அடுத்த சில விக்கெட்டுகளுடன் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி 10 விக்கெட் தக்கவைப்பாளர்களில் ஒருவராக மாற வாய்ப்புள்ளது.
</p><p>
ஸ்டார்க் உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்தார்.</p><p></p><h2>மூன்று முக்கிய உலக பட்டங்கள்</h2><p>

மேலும், ICC-யின் மூன்று முக்கிய உலக பட்டங்களையும் வென்ற அரிய சாதனையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஸ்டார்க்கின் சாதனை முக்கியத்துவமிக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bedcf0-95f2-400f-a8af-ed8f55aa8c7b/26-6a7dac1011e4a.webp' /></p><p>
</p><p>
அவர் 130 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 23.58 ஆகும்.

2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணிகளில் ஸ்டார்க்கும் இடம்பெற்றிருந்தார்.

குறிப்பாக 2015 உலகக் கோப்பையில் தொடரின் சிறந்த வீரர் என்ற விருதையும் அவர் பெற்றார்.
</p><p>
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டார்க் தனது T20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு அளித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துவதுடன், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையையும் இலக்காகக் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

தற்போது 434 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ள ஸ்டார்க், அடுத்ததாக டேல் ஸ்டெய்னின் 439 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 10 விக்கெட் பெறுவோர்கள் பட்டியலில் நுழைவாரா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T11:38:17+00:00</updated>
        </entry>
    </feed>
