<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-17T09:52:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலையான வைப்புத்தொகைகளைக் குறிவைக்கும் புதிய மோசடி: CERT எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268"></link>
            <id>https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தைத் திருடும் ஒரு நுட்பமான நிதி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
</p><p>
இரு நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து, போலியான அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி, தாங்கள் உண்மையானவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்கும் நபர்கள் குறித்துப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLCERT தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த எச்சரிக்கையின்படி, மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள நிதி குறித்து விசாரிக்கின்றனர்.</p><p></p><h2>அச்சுறுத்தப்படுத்தும் விதம் </h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களின் வைப்புத்தொகை குறித்த தகவல்கள் தங்களிடம் ஏற்கனவே இருப்பதாகக் கூறி, அந்தப் பணம் மோசடி வழிகளில் பெறப்பட்டதாகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்களிடம் பொய்யாகத் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180abaab-28a3-4a2e-ac96-d3cffdbda231/26-6a82d8ef93ae6.webp' /></p><p>அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் FCID விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அச்சுறுத்தப்படுகிறார்கள்.
</p><p>
மோசடிக்காரர்கள் பின்னர், போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்புகின்றனர். </p><p>பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மற்றொரு தனியார் வங்கியில் உள்ள குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>
SLCERT-இன் கூற்றுப்படி, மோசடிக்காரர்கள் அந்தக் கணக்கு ஒரு FCID அதிகாரியுடையது என்று கூறி, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வைப்புத்தொகையில் பாதியை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.</p><p></p><h2>நுட்பமான முறையில்&nbsp;மோசடி</h2><p> </p><p>பணப் பரிமாற்றம் செய்த பிறகு, பணம் செலுத்தியதற்கான ஆதாரமாக வங்கி வைப்புச் சீட்டை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad63f473-98de-4eb6-92a9-a9e61a2336fb/26-6a82d8f049bf2.webp' /></p><p>
</p><p>
இந்த மோசடிக்குப் பின்னால் இருப்பவர்கள் மிகவும் நுட்பமான முறையில் செயல்படுவதாகவும், இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானது போல் தோற்றமளிக்க காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது என SLCERT தெரிவித்துள்ளது.</p><p>ஓய்வூதியதாரர்களும் முதியவர்களும் இந்த மோசடிக்கு குறிப்பாக எளிதில் இலக்காகக்கூடும் என்று எச்சரித்த அந்த அமைப்பு, பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை : சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165"></link>
            <id>https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறைக் காலத்தில்&amp;nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறைக் காலத்தில்&nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இக்காலப் பகுதியில் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் அவர் இவ்வாறு கோரியுள்ளார். </p><p>

வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடுவது பிரபலமாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக பட்டம் விடுவதால் பலத்த காயங்கள் மட்டுமன்றி உயிராபத்துகளும் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>உயர் அழுத்த மின்கம்பிகள்</h2><p> </p><p>

குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் போது கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், குழுக்களாக இணைந்து பட்டம் விடும் போது மோதிக் கொள்வதாலும், கீழே விழுவதாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6ba7a7-e290-4542-85fe-c0d41a077955/26-6a82d4c5e2a96.webp' /></p><p> 

அத்துடன், உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் இவ்வாறான மின் அதிர்ச்சிகள் காரணமாக கைகள், தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்துகிறார். </p><p>

மேலும், மின்கடத்தும் தன்மை கொண்ட நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் உரசும் போது உடனடியாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மின்கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தவிர்க்க பெற்றோர்களும், பெரியவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.</p><p> 

சிறுவர்களின் பொழுதுபோக்கு போலவே அவர்களின் உயிர் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பட்டம் விடுகையில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்“ எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுக்கு பரிமாற்றப்பட்டுள்ள பில்லியன் டொலர்கள்! நான்கு வங்கி மேலாளர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698"></link>
            <id>https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698</id>
            <summary type="text">




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>
</p><p>
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c01596-8d32-4b74-b464-0f6901707050/26-6a82c2f463e67.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T09:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-rally-demanding-justice-for-tamil-genocide-1786950003</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்-2 போராட்டத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.</p><p>யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான&nbsp;பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை
வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றடைந்தது.</p><p>இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர்
தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும்
பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.</p><p>பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம்,
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில்
இன்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f47b3fa-5b35-42bd-a552-5d8e6070e855/26-6a82cee6d1bc5.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - த.பிரதீபன்&nbsp;</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் -2 போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

யாழ்ப்பாணம் - பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணி செம்மணி வரை சென்று குறித்த பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p><p>

இந்தப் பேரணியில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>சர்வதேச நீதி வேண்டும்</h2><p>இதன்போது “இலங்கை அரசு தமிழ் குழந்தைகளை அவர்களின் கனவுகளுடன் புதைத்தமைக்கு சர்வதேச நீதி வேண்டும்“, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு நீதி வேண்டும்.” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f461dd23-1ff3-4255-af80-ea995bccee16/26-6a82b77cc4aa9.webp' /></p><p> </p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p> 

தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான போராட்டம் இன்று (17) வரை நான்கு நாட்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சென்ற தொடருந்து மோதி 23 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/23-years-youth-dies-after-being-struck-by-a-train-1786955884"></link>
            <id>https://ibctamil.com/article/23-years-youth-dies-after-being-struck-by-a-train-1786955884</id>
            <summary type="text">வவுனியாவில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து இன்று (17) காலை தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியந்தன் என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>குறித்த இளைஞர் தாண்டிக்குளம் புகையிரத பாதையைக் கடக்க முயன்றபோதோ அல்லது பாதைக்கு அருகில் நின்றபோதோ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0f13f6-2eba-4149-9e86-43b7fbab3463/26-6a82caaef35d3.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வவுனியா காவல்துறையினர் உடனடியாக விரைந்து உடலை&nbsp;மீட்டுள்ளனர்.</p><p>இதேவேளை விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், இது கவனக்குறைவால் நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T08:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை கையூட்டு பெற்ற நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-police-officers-arrested-connection-with-bribery-1786950188"></link>
            <id>https://ibctamil.com/article/4-police-officers-arrested-connection-with-bribery-1786950188</id>
            <summary type="text">தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 500,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மொனராகல பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை பிரிவு குற்றப்பிரிவில் பணியாற்றும் 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் (Police Sergeant) , 39 வயதுடைய பொலிஸ் சாரதி மற்றும் 36 வயதுடைய மற்றொரு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தனமல்வில காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு நிக்கவேவ&nbsp; தெமோதர வேவ பகுதியில் கஞ்சா பயிரிடப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11ஆம் திகதி காவல் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>கஞ்சா செடி</h2><p> </p><p>இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d038c5c7-3c2f-47bf-8f50-74352b9a4dad/26-6a82beb19bf43.webp' /></p><p>
</p><p>தொடர்ந்து அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், குறித்த சந்தேக நபருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் மேலும் மூன்று கஞ்சா பயிரிடப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. </p><p>அத்துடன், ஏற்கனவே வெட்டி எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மற்றொரு கஞ்சா பயிரிடும் இடமும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.</p><p>விசாரணைகளின்போது, மொனராகலை பிரிவு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு காவல் அதிகாரிகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி குறித்த இடத்தில் சோதனை நடத்தியதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக தன்னிடமிருந்து ரூ.500,000 இலஞ்சமாக பெற்றதாகவும் சந்தேக நபர் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>நான்கு காவல் அதிகாரிகள் கைது</h2><p>மேலும், அங்கிருந்த ஐந்து கஞ்சா பயிரிடும் இடங்களில் ஒன்றை மாத்திரம் அதிகாரிகள் தீ வைத்து அழித்ததாகவும், ஏனைய இடங்களில் இருந்த கஞ்சா செடிகளை தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75bff854-3c05-4bac-a1ee-b3deb33d6f62/26-6a82beb250bf6.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, நிக்கவேவ பகுதியைச் சேர்ந்த “கலு” என அழைக்கப்படும் மற்றொரு நபரும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>விசாரணையின்போது, மொனராகலை பிரிவு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் தன்னிடம் கஞ்சாவை உலர்த்துமாறு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இரு சந்தேக நபர்களும் வெல்லவாயா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர்களை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு காவல் அதிகாரிகளும் தனமல்வில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்கமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-govt-to-easier-vehicle-imports-1786952579"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-govt-to-easier-vehicle-imports-1786952579</id>
            <summary type="text">
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.</p><p>

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் பேரணி 2026 வாகனக் கண்காட்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முதன்மை நோக்கம்</h2><p>
</p><p>
இலங்கை சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயன்பாட்டுக் கலாச்சாரத்தையும், ஒழுக்கமான சாரதி நடைமுறைகளையும் ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a681b05-535d-4fe4-9505-2ad3c2e23a1a/26-6a82be734eb38.webp' /></p><p>

பிரதம விருந்தினராகக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித, ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமாக ஒரு வாகனத்தை வைத்திருக்கவும் பயன்படுத்தவும் வாய்ப்புள்ள ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வரி தொடர்பான கட்டுப்பாடுகள்</h2><p>
</p><p>
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இறக்குமதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்ததால், இலங்கையால் எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை என்பதை அவர் நினைவு படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c0d2a6-7d40-4a36-bd33-7ace2030ee4e/26-6a82be740345a.webp' /></p><p>
</p><p>
இதன்படி, மத்திய கிழக்கில் ஏற்பட்ட எதிர்பாராத மோதல் சூழல், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை குறித்த கவலைகளை உருவாக்கியதால், சில வரி தொடர்பான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T07:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்தின் ஆரம்பத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-edged-higher-on-monday-today-1786946287"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-edged-higher-on-monday-today-1786946287</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.</p><p>கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. </p><p>

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>தங்கத்தின் விலை</h2><p> 

அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51aa5f9-81f5-48fd-aff4-cc7e9adc2147/26-6a82b8d73963c.webp' /></p><p> 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரக்குறைவாக பேசிய உயர் அதிகாரிகள் - யாழில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-by-development-officers-reported-in-north-1786950094"></link>
            <id>https://ibctamil.com/article/protest-by-development-officers-reported-in-north-1786950094</id>
            <summary type="text">யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அபிவிருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>விரும்பத்தகாத கருத்து</h2><p>வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6914fa-c32e-40ef-947c-a08e9e735a6d/26-6a82b63294ebd.webp' /></p><p>குறித்த ஒலிப்பதிவில், உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து, அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p><p>இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.</p><p>
மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609fee4b-ad89-4229-b8f8-a2bab12e775e/26-6a82b6334e4a5.webp' /></p><p> அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுதாபத்திற்காக பதவி விலகுவதாக கூறும் ஜனாதிபதி அநுர! மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054</id>
            <summary type="text">


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>

நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 14,000 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>பொதுமக்களின் அனுதாபதம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a56d20-ae23-4dea-9ecb-0941263e4ea3/26-6a82b59041bce.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கணிசமாகக் குறைத்து, பொய் வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்ற முடியாத கனவுகளைக் காட்டி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய காரணங்களால் ஜனாதிபதிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவித அனுதாபமும் கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027</id>
            <summary type="text"> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தக...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப்
பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே இன்று 16.08.2026 மாலை
விபத்துக்குள்ளானது.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

இரண்டு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானமை
தொடர்பில் தகவல் கிடைத்த உடனேயே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு,
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cf0417-714d-4d83-9b4c-010380592bd0/26-6a82b0886a02b.webp' /></p><p>

இதனையடுத்து, இலங்கை கடற்படையினர், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு மக்களின்
ஒத்துழைப்புடன் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 10
பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விபத்துக்குள்ளானமைக்கான காரணம்</h2><p>
இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது
தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f96608-2e5d-4aab-8c5e-fb09c22eb82b/26-6a82b0879a0d2.webp' /></p><p>அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life
Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில்
மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு
அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்</p><p>பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான
பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874</id>
            <summary type="text">
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
அவர் இலங்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டு துபாய்க்குத் தப்பிச் சென்ற போதிலும், அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் அரசின் ஆசி காரணமாக உள்ளூர் உயர் நீதிமன்றங்களில் அவர் மீது பலமான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

அவருக்குச் சொந்தமான சோல் பீச் ஹோட்டலுக்குத் தேவையான மதுபான உரிமங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகளைப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>250 மில்லியன் ரூபாய் லஞ்சம்</h2><p>
</p><p>
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்பி-க்கள் மற்றும் காவல்நிலையப் பொறுப்பதிகாரிகள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருகை தந்து இலவச உணவு மற்றும் உபசரிப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதரவையும் அனுபவித்துள்ளதாக கண்டறியப்ப்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f875004-0a41-4b50-901e-bd7be4056ba4/26-6a82ae46e9155.webp' /></p><p>

இந்நிலையில், தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது பதவியை உறுதிப்படுத்துவதற்காக வேண்டிய கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை இந்த சோல் பீச் ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்தியே நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

மேலும், பதில் காவல்துறை மா அதிபர் பதவியைப் பாதுகாத்துத் தருவதற்காக தேஷபந்து தென்னகோன், ஷிரான் பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாகவும், அந்தப் பணத்தைக் கொடுக்க ஷிரான் பாசிக் மறுத்ததால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சோல் பீச் ஹோட்டல் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>பாசிக் மகன் -&nbsp;விஜயதாச ராஜபக்ச தொடர்பு</h2><p>

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஹேவ்லோக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் ஷிரான் பாசிக்கின் மகன் நதீம் பாசிக் கைது செய்யப்பட்ட சம்பவமும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31226c7-def8-4939-a498-dca564287ab5/26-6a82ae47a3dbd.webp' /></p><p> </p><p>

நதீம் பாசிக் அங்கு குடியேறுவதற்கு முன்னர், இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரபல நடிகை ஒருவர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p> </p><p>

ஷிரான் பாசிக்கின் கறுப்பு பணத்தை சலவை செய்வதற்கு இந்த நடிகை பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், இவ்வாறு காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான பாதுகாப்பும் ஆதரவுமே ஷிரான் பாசிக் போன்ற ஒரு கடத்தல்காரர் சர்வதேச அளவில் உருவெடுக்க முதன்மையான காரணியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T06:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் 770 கோடி பெறுமதியான அரிய ஓவியங்கள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556"></link>
            <id>https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556</id>
            <summary type="text">இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அரிய ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.</p><p>

இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் (15.08.2026) இரவு&nbsp; 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் இருந்தபோதிலும், மர்ம நபர்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலாரம் அமைப்புகளை முறியடித்து அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள்&nbsp;</h2><p>

அதன்பின்னர், ஓவியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாதுகாப்புப் பெட்டியை உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc6d400-8853-46c4-94ae-59c0e8876bdc/26-6a82a76411952.webp' /></p><p>எனினும், தப்பிச் செல்லும் அவசரத்தில் திருடப்பட்ட ஓவியங்களில் இரண்டு ஓவியங்களை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மீதமுள்ள இரண்டு ஓவியங்கள் தற்போது காணாமல் போயுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்காக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p>
கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்குள் எவ்வாறு நுழைந்தனர், பாதுகாப்பு மற்றும் அலாரம் அமைப்புகளை எவ்வாறு செயலிழக்கச் செய்தனர், மேலும் திருடப்பட்ட ஓவியங்களை எங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
வரலாற்று மற்றும் கலைத்துறை ரீதியாக மிகுந்த பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஓவியங்கள் சர்வதேச கலைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Three paintings by Renoir, Cézanne and Matisse worth millions of euros that were stolen earlier this year in a three-minute heist were recovered by Italian police — and five suspects were arrested. <a href="https://t.co/LiHKuJ7Q7a">pic.twitter.com/LiHKuJ7Q7a</a></p>&mdash; CBS Mornings (@CBSMornings) <a href="https://x.com/CBSMornings/status/2088679648586588470?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/direct-flights-launch-between-vietnam-and-srilanka-1786943452"></link>
            <id>https://ibctamil.com/article/direct-flights-launch-between-vietnam-and-srilanka-1786943452</id>
            <summary type="text">இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ்&amp;nbsp;உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ்&nbsp;உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.</p><p> வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.</p><p> 

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானத்திற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;விமானப் பயணங்கள்</h2><p>இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad34760-4547-4ddf-8cf5-74230cc876e5/26-6a82ad4d77a44.webp' /></p><p>

இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>அத்துடன் இந்த விமானப் பயணத்திற்காக 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

புதிய விமான சேவையை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் பிரதம அதிதியாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை - பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ag-files-indictments-against-pillayan-and-3-others-1786946881"></link>
            <id>https://ibctamil.com/article/ag-files-indictments-against-pillayan-and-3-others-1786946881</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கானது சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-flag-hoisting-today-1786943984"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-flag-hoisting-today-1786943984</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை 8.1...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p>இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10
மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.</p><p>இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை
வழிபட்டு அருளாசி பெற்றனர்.</p><p></p><h2>கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு&nbsp;கொடியேற்றத்திற்கான புனித கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப் பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி, கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து நேற்று (16) எடுத்துவரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d648c4-3360-4642-9824-d1a5dc30582f/26-6a829dd20dfa5.webp' /></p><p>அத்துடன்&nbsp;வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு நேற்று (16) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>அதற்கமைய நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டதைத் தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-0N-aH2Tuhc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-will-be-brought-to-sri-lanka-soon-1786940561"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-will-be-brought-to-sri-lanka-soon-1786940561</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருதல்&nbsp;</h2><p>
</p><p>''நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6420cc6-ce8c-4a69-adc3-b1f8190c57c5/26-6a829640865d5.webp' /></p><p> இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.
</p><p>

இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர்.

இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.
</p><p>
இவரையும் நாளை மறுநாள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
</p><p>
மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, வெளிநாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Zz2aE_rJfLo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கோவில் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 7பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909"></link>
            <id>https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909</id>
            <summary type="text">இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை&nbsp;6.45 மணியளவில் (17.08.08.2026) நடைபெற்றுள்ளது.</p><p>புனிதமான ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவபெருமானை வழிபடுவதற்காக பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.</p><p></p><h2>7 பேர் பலி</h2><p>
</p><p>
இதன்போது, அசோக் தாம் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள இந்திரமனேஷ்வர் ஆலயத்திற்குள் நுழைவதற்காக பக்தர்கள் பெருமளவில் திரண்ட நிலையில், கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து கடும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba7c5e0-34b9-40b0-8654-01bead4eacfd/26-6a829611bdbd5.webp' /></p><p>இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பக்தர்கள் என இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

குறித்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல்களின்படி, ஆலய வளாகத்தில் மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்தமை பக்தர்களிடையே திடீர் பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து ஏற்பட்ட பதற்றம் மற்றும் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற அல்லது பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முற்பட்டதன் காரணமாக நெரிசல் மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக, 2019 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஷ்ராவண மாதத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்ததுடன், சுமார் 15 பேர் காயமடைந்திருந்தனர்.
</p><p>
இந்நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹமாஸுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-holds-talks-with-hamas-amid-israeli-opposition-1786942464"></link>
            <id>https://ibctamil.com/article/us-holds-talks-with-hamas-amid-israeli-opposition-1786942464</id>
            <summary type="text">அமெரிக்க ஆதரவு காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஜாரெட் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஆதரவு காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஜாரெட் குஷ்னர் ஹமாஸுடன் நடத்திய பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக ஈரான் மாறியுள்ள நிலையில் இந்த நகர்வு ட்ரம்ப் தரப்புக்கு முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.</p><p>

இதன்படி ஜாரெட் குஷ்னர் நேற்றைய தினம் எகிப்தில் ஹமாஸின் புதிய தலைவர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான தூதுக்குழுவை சந்தித்தார்.</p><p></p><h2>முழுமையான ஆயுதக் களைவு</h2><p>

கடந்த மாதம், காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவு குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக ட்ரம்பின் அமைதி வாரியம் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4cd2c97-a518-4d28-a4c3-302a189a0039/26-6a82963e284a3.webp' /></p><p> </p><p>

கடந்த வாரம், இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும், ஒரு புதிய பாலஸ்தீனிய குடிமை நிர்வாகத்தின் கீழ் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அழைப்பு விடுக்கும் ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. </p><p>

இந்நிலையில் இஸ்ரேலின் நிராகரிப்பைக் கண்டித்து எட்டு இஸ்லாமிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டன.
</p><p>
இதன்படி காசாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஒரு சர்வதேச அமைப்பாக உருவாக்கப்பட்டு, பின்னர் உலகளாவிய மோதல்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட அமைதி வாரியத்திற்கு ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். </p><p>

காசா பகுதிக்கு கடந்த ஆண்டு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, இந்த மட்டத்தில் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்று குஷ்னர் ஹய்யாவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T05:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-9-magnitude-quake-hits-flores-region-indonesia-1786938859"></link>
            <id>https://ibctamil.com/article/5-9-magnitude-quake-hits-flores-region-indonesia-1786938859</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5.9 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>

நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.</p><p></p><h2>சேத விபரங்கள்</h2><p>எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feca331-6f12-4e5f-ac2b-0570f25664d7/26-6a828a6900672.webp' /></p><p> </p><p>

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.&nbsp;</p><p>நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-with-ice-drug-1786935190"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-with-ice-drug-1786935190</id>
            <summary type="text">அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்&nbsp; 204 கிராம் 660 மில்லிகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
அஹுங்கல்ல காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப்பின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>19 வயது இளைஞர்</h2><p>
</p><p>இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11011b3-3b12-42d4-a93e-05a585285884/26-6a827e555234b.webp' /></p><p>

சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
குறித்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது மற்றும் சந்தேகநபருக்கு பின்னால் உள்ள போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:53:01+00:00</updated>
        </entry>
    </feed>
