<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-30T05:18:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934"></link>
            <id>https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934</id>
            <summary type="text">சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&amp;nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களில் இருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் எனவும், மற்றையவர் குறித்த காணியின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீர் வழங்கல் சபையின் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவர் கைது</h2><p> </p><p>விசாரணையின்போது சந்தேகநபர்கள் தாம் அருகிலுள்ள வீடொன்றுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்காக நிலத்தைத் தோண்டியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6c2552-db00-4b88-ab74-64efb4a76b59/26-6a93b5827d82b.webp' /></p><p>

எனினும், நள்ளிரவு வேளையில் அதி உணர்திறன் கொண்ட பகுதியில் இவ்வாறு அகழ்வுப் பணியில் ஈடுபட்டமை தொடர்பில் திருப்திகரமான விளக்கம் வழங்கப்படாததால், அவர்களிடமிருந்த அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஹேமர் இயந்திரமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மூவரையும், முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் - திரவப் பால் விலைகளில் மாற்றம்: வெளியான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dairy-product-price-increase-announcement-1788056893"></link>
            <id>https://ibctamil.com/article/dairy-product-price-increase-announcement-1788056893</id>
            <summary type="text">பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>BREAKING NEWS என்ற பெயரில் பால் மா, செறிவூட்டப்பட்ட பால் மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலிப் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.</p><p>
</p><p></p><h2>உண்மைத் தன்மை</h2><p>இந்தநிலையில் பால் பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் இதுபோன்ற வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2baef1-6d0a-4748-9337-9895b0d78c66/26-6a939f336e6bb.webp' /></p><p>தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதுடன் சந்தையிலும் குழப்ப நிலையை உருவாக்கும் என அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் சந்தையில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் நிலவினால் 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-0...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் மன்னார் , பெரியமடு, புளியங்குளம், வெலிஓய மற்றும் புல்மோட்டை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c80e4-1f78-4f4a-8416-8d7a887bee25/26-6a938edbc81ab.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&amp;nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சீமெந்து குழைக்கும்
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சீமெந்து குழைக்கும்
கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த&nbsp;மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24)&nbsp;தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்
எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம்
திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92046001-75d9-4ba3-80e6-5594a878f809/26-6a93767204cd8.webp' /></p><p>
</p><p>இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம
பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலரை பறிக்கச் சென்ற தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834"></link>
            <id>https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834</id>
            <summary type="text">கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp; கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் இருந்து மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலை தாக்கியதற்கான காயங்கள்</h2><p>தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக்
கால்வாயில் இறங்கியபோதே ஹொரணை, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1f20e-ed2a-482e-a920-97ca0d90cc88/26-6a9385647678a.webp' /></p><p>
</p><p>
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும்
தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து
சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை
அடுத்துப் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான
காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை
மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-credit-rating-sri-lanka-1788051262"></link>
            <id>https://ibctamil.com/article/international-credit-rating-sri-lanka-1788051262</id>
            <summary type="text">சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை &#039;CCC&#039; நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை 'CCC' நிலையிலிருந்து 'B' அல்லது 'B+' நிலைக்கு உயர்த்த வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை 4 பில்லியன் டொலர்களாகவும், 2029 - 2031 காலப்பகுதியில் 5 முதல் 6 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இது குறித்து&nbsp; மேலும் கருத்துத் தெரிவித்த&nbsp; அவர்,&nbsp;</p><p></p><h2>நாட்டின் கடன் செலுத்தும் திறன்</h2><p>“நாட்டின் கடன் செலுத்தும் திறனை வெறும் மொத்த வெளிநாட்டு கையிருப்பை வைத்து மட்டும் கணக்கிட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c621c7-313d-4d46-a7a1-45fd468749c8/26-6a937fd05e0b8.webp' /></p><p> சர்வதேச நாணய நிதியத்தின் 'கையிருப்பு போதுமான அளவு மதிப்பீடு' அளவுகோலின் படி, கடன் செலுத்தும் திறனில் பாதுகாப்பான நிலையை அடைய நாட்டின் கையிருப்பு 12 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும்.</p><p>ஆனால் தற்போது 6.5 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்குள் அதனை 12 பில்லியனாக உயர்த்துவது சாத்தியமற்ற ஒன்றாகும்.&nbsp;&nbsp;</p><p>தற்போது நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத ஒரு வளர்ச்சியாகவே காணப்படுகிறது.</p><p>விவசாயம், கணக்காய்வு மற்றும் மென்பொருள் பொறியியல் போன்ற முக்கிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. </p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப மக்களின் உண்மையான ஊதியம் உயரவில்லை என்பதால், நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தேயிலைத் தொழிலை நெருக்கடிக்குள் தள்ளும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-puts-sri-lankan-tea-industry-in-crisis-1788047398"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-puts-sri-lankan-tea-industry-in-crisis-1788047398</id>
            <summary type="text">உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், கடுமையான ஏற்றுமதி சரிவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இலங்கையின் தேயிலைத் தொழிலைக் கடுமையான அழுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், கடுமையான ஏற்றுமதி சரிவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இலங்கையின் தேயிலைத் தொழிலைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.</p><p>இந்த மோதல், நிறுவனங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதாக சில சர்வதேச ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இலங்கை மக்கள் தொகையில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை&nbsp;ஏறத்தாழ 10% ஆகும்.</p><p></p><h2>உலக வங்கியின் வறுமைக் கோடு</h2><p>குறிப்பாக தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 இலங்கை ரூபாய் சம்பளத்தை பெறுகிறார்கள். இது தோராயமாக 4.50டொலர் / 3.90யூரோவுக்கு சமமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2288740-8814-4262-b72f-6cb8b1103b17/26-6a93728029ffd.webp' /></p><p>
தோட்டத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நாள் ஒன்றுக்கு 3.65 டொலருக்கும் குறைவான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.</p><p>இது அவர்களை உலக வங்கியின் வறுமைக் கோட்டிற்குக் கீழே வைக்கிறது. இது தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளைச் சந்தித்து வருவதினை வெளிப்படுத்துகிறது.</p><p>சமீப காலம் வரை மிக முக்கியமான இலக்குச் சந்தையாக இருந்த ஈராக்கிற்கான ஏற்றுமதி கடுமையாகக் குறைந்ததால், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 17.3% சரிந்து 114.75 டொலர் மில்லியனாகக் குறைந்தது.</p><p></p><h2>மத்திய கிழக்கு ஏற்றுமதி</h2><p> </p><p>மற்றொரு முக்கிய சந்தையான ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 93% சரிந்தது. இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குபவர்களில் ஒன்றான ஈரானுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ab792e-2ff4-4ab4-9ce9-3ffa2eaee255/26-6a93728241bd1.webp' /></p><p>அதிகரித்து வரும் உலகளாவிய விலைகளும் தேவையைப் பாதிக்கின்றன.

தேயிலைத் தொழில் நெருக்கடியானது, ஏற்கனவே பலவீனமாக உள்ள இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஈரான் போரைத் தொடர்ந்து, எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்காக அரசாங்கம் எரிபொருள் விலையை 40% உயர்த்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:01:17+00:00</updated>
        </entry>
    </feed>
