<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-13T23:28:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகன நிறுத்தத்துக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-action-on-mannar-hospital-parking-1786660030"></link>
            <id>https://ibctamil.com/article/police-action-on-mannar-hospital-parking-1786660030</id>
            <summary type="text">மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக வாகனம் நிறுத்தத் தடை (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்கள் முறையற்ற விதத்தில்
நிறுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், அதற்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (13-08-2026)
விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடு</h2><p>வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு
எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890c3eb0-6aa1-4b5b-97f4-3fde114752db/26-6a7e44c7490be.webp' /></p><p>

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும்
நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும்
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து காவல்துறையினரின்
அறிவுறுத்தல்களையும் வீதிப் போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள்
கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T22:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்களுக்கிடையே வாக்குவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heated-clash-over-mannar-power-cuts-1786659507"></link>
            <id>https://ibctamil.com/article/heated-clash-over-mannar-power-cuts-1786659507</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும்
ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும்
ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கூட்டம் நேற்று (13-08-2026) நடைபெற்றபோது, மன்னார்
மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறும் மின்சாரத் தடைகள் தொடர்பாக இடம்பெற்ற
கலந்துரையாடலின் போதே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள்
எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது,
மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா ? என ரிஷாட் பதியுதீன் கேள்வி
எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அபிவிருத்திக் குழு</h2><p>

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும்
அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக
கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
தீவிரமடைந்ததுடன் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a0b3eb-33cf-420b-b910-c4c8d8885cd4/26-6a7e42b852b9f.webp' /></p><p>

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும்
சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத்
தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்
சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T22:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி மீது பாய்ந்தது வழக்கு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848"></link>
            <id>https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும் புதிய சேவைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p>

தி இன்டர்செப்ட் (The Intercept) மற்றும் ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><p></p><h2>அரசியலமைப்புச் சட்டம்</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம் வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebbee50-3ef0-4bc6-b762-0629f574f8f1/26-6a7e30825cd07.webp' /></p><p>

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப் (TMTG), ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T21:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-irgc-strait-of-hormuz-fully-closed-1786653931"></link>
            <id>https://ibctamil.com/article/iran-irgc-strait-of-hormuz-fully-closed-1786653931</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐஆர்ஜிசி கடற்படையின் ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் (Ali Azmaei) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>தீர்க்கமான கட்டுப்பாடு&nbsp;</h2><p>இந்த வழித்தடத்தில் நடைபெறும் அனைத்து நகர்வுகள் மீதும் எங்களுக்கு முழுமையான மற்றும் தீர்க்கமான கட்டுப்பாடு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3047590c-1380-45b3-aef9-ae874ca76d15/26-6a7e2ceeaba7d.webp' /></p><p> 

எங்கள் ஐஆர்ஜிசி கடற்படை வீரர்களின் கவனத்திற்குத் தப்பி எந்தவொரு நகர்வும் இங்கு நடைபெற முடியாது” என தெரிவித்துள்ளார்.
</p><p>

உண்மை நிலை என்ன என்பதைப் போர்க்களத்தில் (On the ground) தான் பார்க்க வேண்டுமே தவிர, அமெரிக்க அதிகாரிகளின் அறிவிப்புகளிலும் அறிக்கைகளிலும் பார்க்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுப் போக்குவரத்து இயல்பாக நடைபெறுவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09aa87b8-2d93-419e-912d-d40b0d4c0f3a/26-6a7e2cee054bb.webp' /></p><p>ஆனால், ஈரானின் நேரடி அனுமதி இன்றி எந்தவொரு வணிக அல்லது போர்க்கப்பலும் இந்த ஜலசந்தியைக் கடக்க முடியாது என ஈரான் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.</p><p>

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் வழித்தடத்தில் இரு நாடுகளும் மாறி மாறி விடுத்து வரும் இத்தகைய முரண்பாடான கருத்துக்கள், சர்வதேச வர்த்தக உலகிலும் எரிசக்தி சந்தையிலும் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கிளம்பிய எதிர்ப்புப் புயல்! அமெரிக்கத் தூதுவருக்குப் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-demands-us-envoy-expulsion-from-canada-1786649595"></link>
            <id>https://ibctamil.com/article/petition-demands-us-envoy-expulsion-from-canada-1786649595</id>
            <summary type="text">70,000 இற்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>70,000 இற்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ட்ரம்பின் நிர்வாகம்&nbsp;</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fef211-be9c-4133-99ff-bddf0d1193f5/26-6a7e21dd9bf37.webp' /></p><p>

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 வீதம் கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த மனு விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063"></link>
            <id>https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கிற்கு 25 லட்சம் மடங்கு கூடுதல் ஊதியம் வழங்கியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO வெளியிட்ட நிர்வாகிகள் ஊதியக் கண்காணிப்பு (Executive Pay Watch) அறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டில் எலான் மஸ்க்கின் மொத்த ஊதியப் தொகுப்பு 158.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ($158.3bn) இருந்தது.</p><p>
</p><p></p><h2>ஊதிய விகிதம்&nbsp;</h2><p>அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண டெஸ்லா ஊழியர் ஒரு வருடம் முழுமையாக உழைத்து ஈட்டும் சராசரி ஊதியத்தை எலான் மஸ்க் வெறும் 4.23 வினாடிகளில் ஈட்டியுள்ளார்.</p><p>

எலான் மஸ்க்கின் ஊதியத்தையும் சேர்த்து கணக்கிட்டால், டெஸ்லாவின் CEO - ஊழியர் ஊதிய விகிதம் 5,387 : 1 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44358eb5-4213-47a5-b1e7-75c1e67fbf55/26-6a7e16723c335.webp' /></p><p>மஸ்க்கை விலக்கிப் பார்த்தால் S&amp;P 500 முன்னணி நிறுவனங்களின் சராசரி CEO - ஊழியர் ஊதிய விகிதம் 312 : 1 ஆக உள்ளது (இது 2024-இல் 285 : 1 ஆக இருந்தது).</p><p>

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் அமெரிக்க தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு தற்போதைய அளவிற்குக் குறைந்ததே இல்லை என குறித்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மிகப்பெரிய வரிவிலக்கு</h2><p>இவ்வறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமானமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

கிரிப்டோ முதலீடுகள் மூலம் 2025 இல் ட்ரம்ப்பின் வருமானம் $2.2 பில்லியனாக (254% உயர்வு) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0de0656-5165-41a8-ac8a-c7dfeba6d8a6/26-6a7e1672e09d2.webp' /></p><p> 

ஒரு சாதாரண அமெரிக்க ஊழியர் இந்தத் தொகையை ஈட்ட 43,154 ஆண்டுகள் தேவைப்படும்.</p><p>

AFL-CIO கூட்டமைப்பின் செயலாளர் ஃப்ரெட் ரெட்மண்ட் கூறுகையில், "கார்ப்பரேட்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் மிகப்பெரிய வரிவிலக்குகளை வழங்குவதற்காக ஏழை எளிய குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் உணவு உதவிகளை முடக்கி பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டுள்ளனர்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339"></link>
            <id>https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><p></p><h2>பரீட்சை வினாத்தாள்&nbsp;</h2><p>இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில் பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14-08-2026) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ddffd01-e66b-4881-bcc1-e578b82779b8/26-6a7dfc2768bfe.webp' /></p><p>எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார்.</p><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><h2>பரீட்சைகள் திணைக்களம்</h2><p> 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5311e45-2b34-47c1-a854-c6068355a147/26-6a7dfc281c1bc.webp' /></p><p>இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவம் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-involved-in-wattala-shooting-incident-1786641382"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-involved-in-wattala-shooting-incident-1786641382</id>
            <summary type="text">ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.</p><p>அங்கு, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் இவர்களை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தின. வத்தளையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் 30 வயதுடையவர், மற்றவர் 34 வயதுடையவர்.</p><h2>&nbsp; கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது</h2><p> </p><p>

அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புப் படைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df72ee03-6fa9-46d6-87d8-d3642128d2bc/26-6a7e0b130bfd5.webp' /></p><p> அதன்படி, இரண்டு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற விமானம் கட்டுநாயக்க வந்தடைந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக இரு சந்தேக நபர்களையும் பலத்த பாதுகாப்புடன் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T18:21:34+00:00</updated>
        </entry>
    </feed>
