<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T19:18:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல், கம்மன்பில உட்பட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. </p><p>

இந்தப் போராட்டத்தின் போது, நீதித்துறை செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்து கருத்து வெளியிட்டதாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் மகிந்த பத்திரன ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரப்படும் வழக்கு</h2><p>

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் உண்மைகளை அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e7ad2c-820c-46ce-a7f7-7bffc31b56e2/26-6a8b43a64fee4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், குறித்த நபர்களின் கருத்துக்கள் முதல் பார்வையில் நீதித்துறை நடவடிக்கைகளை விமர்சிப்பதாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T19:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981"></link>
            <id>https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு கடந்த 21ஆம் திகதி நீமிமன்றுக்கு வருகைத்தந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹேமரத்தன தேரருக்கு எதிராக&nbsp;&nbsp;வழக்கு </h2><p><span style="color: inherit;">தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13584407-d1c1-4539-902a-b1e3d07813c3/26-6a8b0a1734ded.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றின் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833"></link>
            <id>https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833</id>
            <summary type="text">அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.</p><p></p><h2>

இடமாற்றங்களுக்கான தகுதிகள்
</h2><p>
இதன்படி, ஒரே பணியிடத்தில் 05 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், 02 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்களும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16ce05d5-7e17-4446-bf57-77a83bd129b5/26-6a8b3e38d0a21.webp' /></p><p>
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை பொது நிர்வாகத்திற்கான முகாமைத்துவ தகவல் அமைப்பு (MIS) மூலம் நிகழ்நிலையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், அதிகாரிகள் தமது அடிப்படை தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முந்தைய சேவை நிலையங்களின் தகவல்களை கணினியில் துல்லியமாக புதுப்பிப்பது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
மேல்முறையீடு செய்தல்</h2><p>

இதேவேளை, 2026 ஓகஸ்ட் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில இடமாற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409c957c-d1d4-4a6c-a93a-f076fd9cb892/26-6a8b3e3985d51.webp' /></p><p> </p><p>

அத்தோடு, வருடாந்திர இடமாற்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் அதிகாரிகள், தமக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அதிகாரிகளின் பணிக்காலம், தற்போதைய பணிநிலையம் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579"></link>
            <id>https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579</id>
            <summary type="text">மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p>

அலுத்கம, கணேகம புராண விகாரைக்கு அருகில் உள்ள தொடருந்து குறுக்குப்பாதையில் இன்று(23) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த பயணி சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட&nbsp;பிரதேசவாசிகள் </h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, குறித்த தொடருந்து குறுக்குப்பாதையில் எச்சரிக்கை மணிகளும் சமிக்ஞைகளும் மட்டுமே உள்ளதாகவும், பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும் கூறி பிரதேசவாசிகள் கடலோர தொடருந்து பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3372df-6e65-46fe-bc7e-69a1df62a28c/26-6a8b315fd1d4d.webp' /></p><p>
</p><p>
இதனால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p> 

அதன்படி, ஒரு வாரத்திற்குள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, கடலோர தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவருகிறது.</p><p>&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுத்துள்ள பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p> 

கடந்த ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. இதில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.</p><p>
ஓகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் 27,884 வருகைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 13,980 சுற்றுலாப் பயணிகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தையும், 8,776 வருகைகளுடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><h2>அதிகபட்ச மாதாந்திர வருகை&nbsp;</h2><p>
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாகவும் இந்தியாவே முன்னணியில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து 3,66,114 பயணிகள் வந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82d6fb96-4a1e-46d1-b9f9-38784f481020/26-6a8b2d61eff64.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 1,44,381 பயணிகளும், சீனாவில் இருந்து 97,073 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்திர வருகைகளில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகபட்சமாக 2,79,328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத் தோல்வியை ஒப்புக்கொள்கிறது அமெரிக்கா! IRGC சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-admits-military-defeat-1787496482"></link>
            <id>https://ibctamil.com/article/us-admits-military-defeat-1787496482</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை, தனது இராணுவத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இஸ்லாமியப் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை, தனது இராணுவத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.</p><p>மேலும், அமெரிக்கா பல தசாப்தங்களாக ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>ஈரானில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி,</p><p></p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>“அந்த அறிவிப்பு இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம். பொருளாதாரப் போர் என்பது ஒன்றும் புதிதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5b450d-b88d-4d98-9264-41465d586f56/26-6a8b082404394.webp' /></p><p> அமெரிக்கா 47 ஆண்டுகளாக ஈரானின் பொருளாதாரத் துறைகள் மீது தடைகளை விதித்து வருகிறது. </p><p>தற்போதைய இந்த நடவடிக்கை, முதன்மையாகப் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வடிவமைப்பதையும், அமெரிக்கா&nbsp; மேலோங்கி நிற்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது</p><p>பொருளாதாரப் போர் உட்பட, ஈரானுக்கு எதிரான ஒவ்வொரு விரோத நடவடிக்கைக்குமான செயல்திட்டங்களை ஐ.ஆர்.ஜி.சி தயாரித்துள்ளது.</p><p>எதிரியின் போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. மேலும் நாடுகளுடன் பொருளாதார உறவுகளை எளிதாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T15:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத்தின் விசேட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/port-city-target-government-s-special-report-1787494048"></link>
            <id>https://ibctamil.com/article/port-city-target-government-s-special-report-1787494048</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் திரட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

 

துறைமுக நகரத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த முதலீட்டு இலக்கு ஆதரிக்கப்படும் என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

 

இவற்றில் இரண்டு பெரிய அளவிலான குடியிருப்புத் திட்டங்கள், ஒரு நவீன ஹோட்டல் மற்றும் ஒரு மாநாட்டு மையம் ஆகியவை அடங்கும் என அபேசிங்க விவரித்துள்ளார்.</p><p></p><h2>உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகல்</h2><p>இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2138f7b-95ee-462d-af86-6adde411de7b/26-6a8afea3d3643.webp' /></p><p>“பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக முன்வைக்கப்பட்டது .</p><p>ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகளில் முன்னணி சர்வதேச முதலீட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .</p><p>துறைமுக நகரத்தில் வழங்கப்படும் வரிச் சலுகைகளை சர்வதேச தரத்திற்கு இணையாகக் கொண்டுவரும் நோக்கிலும், அதேவேளையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும், அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-lakh-fine-imposed-on-companies-in-jaffna-1787484925"></link>
            <id>https://ibctamil.com/article/6-lakh-fine-imposed-on-companies-in-jaffna-1787484925</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 668,000 அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் விவகார ஆணையத்தின் (CAA) மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகம் மற்றும் மதுபானக் கடை ஒன்றில், ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 120 ஆக இருந்தபோதிலும், அதை ரூ. 200-க்கு விற்பனை செய்ததற்காக ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>CAA வலியுறுத்து</h2><p>
இதற்கிடையில், மற்றொரு உணவகத்தில், ஒரு குளிர்பான போத்தலை அதன் அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்றதற்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fe1d63-5e85-4160-b7b0-d89f022c9d8f/26-6a8ae176405d8.webp' /></p><p>
</p><p>மேலும், ஒரு கிலோ பொன்னி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-க்கு மேல் விற்றதற்காக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு வியாபாரிக்கு ரூ. 268,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​அந்த அரிசி பால் பொன்னி அரிசி என்று உரிமையாளர் கூறியதாகவும், இருப்பினும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சி.ஏ.ஏ சமர்ப்பித்த ஒரு மாதிரியை அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்ததில், அந்த இருப்பு இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
பொருட்களை வாங்குவதற்கு முன் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், முறைபாடுகளை வழங்கும்போது ஆதாரமாக ரசீதுகளைப் பெற்றுப் பாதுகாத்து வைக்குமாறும் நுகர்வோரை CAA வலியுறுத்தியுள்ளது.
</p><p>மேலும், நுகர்வோர், வர்த்தக விதிமீறல்கள் எனச் சந்தேகப்படுபவற்றை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் 1977 என்ற உதவி எண் மூலம், பணி நேரங்களில் முறைபாடளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு போரில் ஒரு முடிவை தேடும் சர்வதேசம்! நோக்கி தெஹ்ரானுக்கு விரையும் ஆசிம் முனீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677"></link>
            <id>https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இதன்படி நாளை&nbsp;ஆசிம் முனீர் தனது விஜயத்தை மேற்கொள்வார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஈரான்-பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முனீர் ஈரானிய தலைநகருக்கு ஒரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.</p><p></p><h2>பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சி</h2><p>பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இந்த வருகை அமைந்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d2d457-9571-4f7d-8e58-7e1253b7ecc1/26-6a8afad007f83.webp' /></p><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரை நிறுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது.</p><p>குறிப்பாக ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அது மத்தியஸ்தம் செய்தது, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை ஈரானின் செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்காலத் தேர்தல் உக்ரைனை அழித்துவிடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wartime-elections-will-destroy-ukraine-1787495808"></link>
            <id>https://ibctamil.com/article/wartime-elections-will-destroy-ukraine-1787495808</id>
            <summary type="text">ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p>செய்தியாளர்களிடம் இன்று வெளியிடப்பட்ட அவரது கருத்துக்களில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ் ஒரு பரபரப்பான உரையில் போர்க்காலத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து, இந்த விடயம் குறித்து ஜெலென்ஸ்கி தெரிவித்த முதல் கருத்து இதுவாகும்.</p><p></p><h2>பரவலான போராட்டங்கள்</h2><p>கடந்த மாதம் ஃபெடோரோவின் திடீர் பதவி நீக்கம் பரவலான போராட்டங்களைத் தூண்டியது. ஆனால், அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரிய அவரது ஆதரவாளர்கள், பின்னர் அவர் விடுத்த தேர்தல் அழைப்பைக் கண்டு தயங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7fdcb2-f46f-4c14-9eba-e0f8d8c4a59b/26-6a8b058191f65.webp' /></p><p>2022-ல் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ஒரு முக்கிய உக்ரேனிய அரசியல் பிரமுகர் விடுத்த முதல் தேர்தல் கோரிக்கை இதுவாகும்.
</p><p>இதற்கு பதில் வழங்கும் விதமாக"நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இதுபோன்ற போரின்போதே தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்," என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td> செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322"></link>
            <id>https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.
</p><p>பாடசாலை கல்வியை நிறைவு செய்தவுடனேயே அதிக இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதையே இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>

 

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆற்றல்மிக்க இளம் தலைமுறை</h2><p>
 

பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க இளம் தலைமுறையை உருவாக்குவதில் தங்கியுள்ளது. இது நாட்டை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதற்கு இன்றியமையாதது என்றும் அவர் விவரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52d36543-d377-415e-86c2-77499d242eaf/26-6a8b039cbf81d.webp' /></p><p>
 

எனவே, அரசாங்கம் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

மேலும் நமது நாட்டின் எதிர்காலம் நமது பிள்ளைகளின் கைகளில் உள்ளது. மேம்பட்ட மனிதவளமே இறுதியில் இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும். ஓர் அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதனால்தான் நாங்கள் கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கல்வியில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-eastern-japan-1787494728"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-eastern-japan-1787494728</id>
            <summary type="text">ஜப்பானின் கிழக்கு&amp;nbsp;&amp;nbsp; தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில்&amp;nbsp;5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் கிழக்கு&nbsp;&nbsp; தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில்&nbsp;5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>ஜப்பானின் இப்பாராகி பிராந்தியத்தில் சுமார் 70
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுனாமி குறித்த எச்சரிக்கை</h2><p><span style="color: inherit;">எனினும் குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த எச்சரிக்கை இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p><p><span style="color: inherit;">[</span>HY897H<span style="color: inherit;">]</span></p><p>

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான
தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர்
அவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும்,
மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:18:56+00:00</updated>
        </entry>
    </feed>
