<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T21:11:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு கனடா பதிலடி! உள்நாட்டு வணிகர்களுக்கு நிவாரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-announces-tariffs-against-the-us-1787688576"></link>
            <id>https://ibctamil.com/article/canada-announces-tariffs-against-the-us-1787688576</id>
            <summary type="text">அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு கனடா பதில் வரிகளை விதித்துள்ளதுடன், உள்நாட்டு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் தொகுப்பையும் அறிவித்துள்ளது.
</p><p>
செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் இந்த பதில் வரிகள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 வகையான பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% என்ற அளவில் விதிக்கப்படவுள்ளன. </p><p>

எஃகு(உலோகம்), அலுமினியம், மரத்தாலான பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு 50% வரியும், சீஸ், வீட்டு உபகரணங்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% வரியும், மின்னணுப் பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு 15% வரியும் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>கனடாவின் பதிலடி&nbsp;</h2><p>
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகள் கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f3de2aa-2e7e-49bf-a66d-f87a7ee4fb1d/26-6a8df92158c44.webp' /></p><p><i>Image Credit: Aljazeera</i></p><p>
</p><p>
இதற்குக் கனடாவின் பதிலடி நடவடிக்கையாக இந்த பதில் வரிகள் அமைந்துள்ளன. </p><p>

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதையும், கனடிய வணிகங்களைப் பாதுகாப்பதையும் இந்த வரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.</p><h2>வட்டியில்லா கடன்கள்&nbsp;</h2><p>

அத்துடன், பாதிப்புக்குள்ளாகும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தையும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f22302b8-8d73-4594-b775-1063fd884e1c/26-6a8df922528bd.webp' /><br></p><p><i>Image Credit: Remitly</i></p><p> </p><p>

இதன் கீழ் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு C$2.5 மில்லியன் முதல் C$5 மில்லியன் வரை 36 மாத கால அவகாசத்துடன் வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T20:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் இருந்த கண்ணிவெடிகள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mines-in-international-waters-of-strait-of-hormuz-1787686488"></link>
            <id>https://ibctamil.com/article/mines-in-international-waters-of-strait-of-hormuz-1787686488</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன என்று அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
 ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பூஜ்ய சகிப்புத்தன்மை</h2><p>
</p><p>
இந்நிலையில், புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் துல்லியமாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்கு எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனறு அவர் அதில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89a73d4-47e9-4104-90dd-5f8f1f77646b/26-6a8df0f120a9d.webp' /></p><p><i>Image Credit: PBS</i></p><p>
</p><p>
மேலும், நீரிணைியில் கண்ணிவெடிகள் வைப்பதற்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) கொள்கை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவு பெற்றது மகிந்தானந்தவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை! குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-investigation-against-mahindananda-1787684089"></link>
            <id>https://ibctamil.com/article/another-investigation-against-mahindananda-1787684089</id>
            <summary type="text">நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன் கடிதங்களை (LC) திறந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் மகேஷ் லசந்த கம்மன்பில ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதை, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இலஞ்ச ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
</p><p>
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகிந்தானந்த அலுத்கமகே சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் உள்ள இரண்டாவது சந்தேகநபரான மகேஷ் லசந்த கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிகை தாக்கல்</h2><p>

இந்நிலையில், விசாரணைகள் நிறைவடைந்து, சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் இலஞ்ச ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c044ea4-7a4f-4ca4-93d8-c5c4d8a2ff9d/26-6a8de6e20b878.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்காக டிசம்பர் 4 ஆம் திகதியை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-final-decision-on-age-limit-3-wheeler-drivers-1787682392"></link>
            <id>https://ibctamil.com/article/no-final-decision-on-age-limit-3-wheeler-drivers-1787682392</id>
            <summary type="text">முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே வெளியிட்ட கருத்து குறித்து பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜெயதிஸ்ஸ இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தொழிற்கல்வி&nbsp;&nbsp;</h2><p>
பாடசாலையிலிருந்து விலகியவர்கள் அல்லது க.பொ.த (உயர் தர) பரீட்சைக்குப் பிறகு கல்வியைத் தொடராத இளைஞர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/432ce6a2-807c-4aac-89d7-d657354b6454/26-6a8de150469df.webp' /></p><p>
</p><p>
அந்த யோசனைகளில் சில திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T18:41:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614"></link>
            <id>https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அதன் முதலாவது விமானம் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, இன்று (25) மாலை 6:24 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வந்திறங்கிய JQ005 என்ற இந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்திற்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நீர் வணக்கம் செலுத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இயக்கப்படும் நாட்கள்</h2><p>
</p><p>
இந்த புதிய விமான சேவையானது மெல்போர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27320184-684a-49ca-8b10-2fa7dc307c6b/26-6a8dd1546d4c8.webp' /></p><p>

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T18:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வில் கலந்து கொண்ட நீதி அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-attended-an-event-for-the-disappeared-1787677584"></link>
            <id>https://ibctamil.com/article/minister-attended-an-event-for-the-disappeared-1787677584</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day
of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day
of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2
மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்கார , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற
உறுப்பினர்களான க. இளங்குமரன், ச பவானந்தராசா மற்றும் ரஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>பயனாளிகளுக்கு&nbsp; மூக்கு கண்ணாடிகள்</h2><p>
நிகழ்வின் ஒரு அங்கமாக பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8890e3e-9a2c-4c27-83f0-04df3a6e2a28/26-6a8dcd062f81c.webp' /></p><p>
கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும் கொம்பனித்தெரு ஞாபகார்த்த
மண்டபத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு -
கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும், கண்காட்சியும் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T17:12:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அதிகரிக்கும் மரண தண்டனைகள்! ட்ரம்ப் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-sentences-in-iran-1787673122"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-sentences-in-iran-1787673122</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்து வரும் மரணதண்டனைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்&nbsp; கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தோல்வியடைந்து வரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது இராணுவத்தின் பெரும்பகுதிக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதுடன், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களைக் கொன்று வருகிறது என்றும் அவர் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>இது ஒரு மாபெரும் மனிதாபிமான நெருக்கடி, என்றும் இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும், எனவும் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><h2>அதிகரித்து வருகின்ற&nbsp;மரணதண்டனை</h2><p>பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து மரணதண்டனைகள் சீராக அதிகரித்து வருகின்றன எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af4e085-65b0-47ab-a335-b365108b598e/26-6a8dba244b013.webp' /></p><p>
ஈரானில் மாபெரும் போராட்டங்கள் வன்முறையாக அடக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, போரைத் துவங்கிய அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதில் இருந்து இன்றும் நிறைவடைய போர் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T15:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-at-ratmalana-airport-1787668741"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-at-ratmalana-airport-1787668741</id>
            <summary type="text">கொழும்பு -&amp;nbsp; ரத்மலானையில்&amp;nbsp;செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு -&nbsp; ரத்மலானையில்&nbsp;செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக&nbsp;ரத்மலானை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன.</p><p>ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இகு ஒரு பயிற்சி விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரத்மலானை விமான நிலையம்</h2><p>குறித்த விமானம் ரத்மலானை விமான நிலையத்தில் இயங்கும் விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824e520e-29e5-41d5-ba1a-10cb6f0610fa/26-6a8da907b79ea.webp' /></p><p>இந்நிலையில் இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T15:39:09+00:00</updated>
        </entry>
    </feed>
