<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T06:38:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-s-son-flees-sl-to-australia-1785557485"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-s-son-flees-sl-to-australia-1785557485</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த இருவரும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> 

குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அரசாங்கம் விசாரணைகள்</h2><p>

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகாலத்திலும் தற்போதைய அரசாங்கமும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa01c4d-28fd-4d17-a776-a34b17c8ec93/26-6a6d7a47b603b.webp' /></p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-case-focus-turns-to-maithripala-1785560900"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-case-focus-turns-to-maithripala-1785560900</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த ஜூலை 31ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து இந்த தேசிய சோகத்தின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. </p><p>

அனைத்து சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கியே திரும்பியுள்ளன.
</p><p>
268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட அந்த தாக்குதல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின், இறுதி பொறுப்பாளி யார் ? என்ற கேள்விக்கு விடை காணும் நிலைக்கு நீதித்துறை வந்துள்ளது.</p><p></p><p> </p><p><u><b>

2019 முதல் 2026 வரை நடந்த விசாரணைகளில் மைத்திரி மீது முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
</b></u></p><p>
2021 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் படி, 2018 ஒக்டோபர் முதல் தாக்குதல் நடந்த 2019 ஏப்ரல் வரை ஜனாதிபதி மைத்திரி தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களை முறையாக கூட்டவில்லை. </p><p>

இதனால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய முக்கிய எச்சரிக்கைகள் கூட்டாக ஆராயப்படவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்த்தமையும் நிர்வாகக் கோளாறு என ஆணைக்குழு கண்டித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3509b6-3dd5-47ef-b577-e7e0bc103567/26-6a6d896944e05.webp' /></p><p>தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 16ஆம் திகதி மைத்திரி தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றார். </p><p>பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த அவர், நாட்டை விட்டு வெளியேறும் போது பதில் அமைச்சரை நியமிக்கவில்லை. 

இது அரசியலமைப்புக்கு விரோதமான தேசிய பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்திய நிர்வாகப் பொறுப்பற்ற செயல் என 2021 ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது.&nbsp;</p><p></p><p><b><u>2023 ஜனவரி 12 உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை வழக்கு தீர்ப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஹேமசிறி பெர்னாண்டோவின் வாக்குமூலம்:
</u></b></p><p>“ஏப்ரல் 20 மாலை 5:30 மணிக்கு நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என தகவல் வழங்கினார்.</p><p> உடனடியாக சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கு வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். பதில் வரவில்லை.
</p><p>இதையடுத்து உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலை தடுக்கத் தவறி மக்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என தீர்ப்பளித்து அவருக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடு விதித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b29d0a60-2744-44e9-8de9-abb9f42c84a3/26-6a6d8967a834d.webp' /></p><p>மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் 2026 ஜூலையில் ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் அளித்த வாக்குமூலம் மைத்திரி மீதான குற்றச்சாட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது. </p><p>

தாக்குதலின் பின்னர் மேலும் சிலரைக் கைது செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது மைத்திரி என்னிடம், பூஜித் ஜயசுந்தரவையும் உன்னையும் மட்டும் கைது செய்தால் போதும். மற்றவர்கள் வேண்டாம் என நேரடியாக உத்தரவிட்டார்.”</p><p>
அதே வாக்குமூலத்தில் நிலந்த ஜயவர்தன உயிர்த்த தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர். அவர் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயல்பட்டவர் எனவும் ஹேமசிறி குற்றம் சாட்டினார்.</p><p>
</p><p></p><h2>புதிய விசாரணை</h2><p>மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் இந்த வாக்குமூலங்கள் புதிய விசாரணைக்கு வழிவகுக்கும் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சட்டத்தரணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "உயர் நீதிமன்றம் ஏற்கனவே சிவில் பொறுப்பை நிரூபித்துள்ளது. கடமை தவறுதல், நிர்வாக முறைகேடு, நீதிக்கு இடையூறு என குற்றவியல் விசாரணைக்கான அனைத்து அடிப்படைகளும் தற்போது தயாராக உள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8688d3fe-3dd9-4922-a2f4-1be6bc5f8e67/26-6a6d89686f546.webp' /></p><p>ஹேமசிறி, நிலந்த, CID என அனைத்து சாட்சியங்களும் ஜனாதிபதியின் முடிவு என்ற ஒரே புள்ளியில் குவிகின்றன" என தெரிவித்துள்ளார்.</p><p>
268 உயிர்களின் இறுதி பொறுப்பாளி யார் என்ற கேள்விக்கு அரசியல் தலைமையின் பங்கு விசாரிக்கப்படாமல் நீதி முழுமையடையாது என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும், சட்ட சமூகத்தினதும் ஒருமித்த குரலாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அடுத்த விசாரணை மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே இருக்கும் என்பது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378</id>
            <summary type="text">இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.&amp;nbsp;தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.&nbsp;</p><p>தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையில் இருந்து இந்த போதைபொருளை கடத்த முற்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>

</p><p>குறித்த சம்பவத்தில் காவல்துறையினர் ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6d2ae5-3be6-4582-9ca9-1c562736ace4/26-6a6d8a7229815.webp' /></p><p>காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுமடம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.</p><p>சோதனையின் போது, 146 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 292 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.&nbsp;</p><p>இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது இது இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-to-case-against-ven-gnanasara-thero-1785561315"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-to-case-against-ven-gnanasara-thero-1785561315</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இவ்வழக்கு நேற்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>நீதிபதியின் உத்தரவு&nbsp;</h2><p>

இதன்போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசோக வீரசூரிய நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியமாக பெயரிடப்பட்டுள்ள இறுவட்டு ஒன்றை முறைப்பாட்டாளர்கள் இதுவரை தமக்கு வழங்வில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3caf15-3d31-4677-820a-3e1d2fc33241/26-6a6d888956d69.webp' /></p><p>

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய சட்டமா அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்குத் திகதியொன்றை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.</p><p>
</p><p>

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்குடன் தொடர்புடைய இறுவட்டை அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பிற்கு நிச்சயமாக வழங்கி வைக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கினை செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/f-35b-stealth-crashed-in-california-pilot-ejected-1785556675"></link>
            <id>https://ibctamil.com/article/f-35b-stealth-crashed-in-california-pilot-ejected-1785556675</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியாகோவில் உள்ள மிராமர் விமானப்படைத் தளத்திற்கு அருகே அமெரிக்க கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியாகோவில் உள்ள மிராமர் விமானப்படைத் தளத்திற்கு அருகே அமெரிக்க கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம் நேற்று (31.07.2026) விபத்துக்குள்ளானது. </p><p>குறித்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு முன்பே விமானி அவசரமாக வெளியே குதித்ததால் உயிர் தப்பியுள்ளார்.</p><p>அமெரிக்க கடற்படை வெளியிட்ட தகவலின்படி, விமானி உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கலிபோர்னியாவில்&nbsp; விபத்துக்குள்ளான போர் விமானம்&nbsp;</h2><p>இந்த நிலையில் நேரில் விபத்தை கண்ட வேட் லாட் என்பவர், இரண்டு போர் விமானங்கள் தரையிறங்க முயன்றபோது, முதலாவது பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், இரண்டாவது திடீரென வேகத்தை இழந்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்தபோது விமானி வெளியேறியதாகவும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2253fa0c-e5bf-4f87-b2bd-46cb28997e67/26-6a6d7b204c540.webp' /></p><p>இதன் பின்னர் அந்த விமானம் ஓடுபாதை அருகே தரையில் மோதி வெடித்துச் சிதறியதாக மேலும் அவர் கூறினார்.&nbsp;</p><p>F-35B என்பது குறுகிய தூரத்தில் புறப்பட்டு செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். ஒரு F-35B விமானத்தின் மதிப்பு சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.</p><h2>உயிர்தப்பிய விமானி</h2><p>பாதுகாப்பு நிபுணர்கள் கூற்றுப்படி, 'F-35 ரக விமானங்கள் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6416731f-59ca-47ca-8948-8406557db4d4/26-6a6d7b210867d.webp' /></p><p>2015ஆம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்டதிலிருந்து இந்த வகை விமானங்களில் ஏற்பட்ட விபத்துகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. </p><p>மேலும், இதற்கு முன் நிகழ்ந்த பெரும்பாலான F-35 விபத்துகளிலும் விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்'. என கூறி உள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கை ஆற்றுப்படுகையின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minor-flood-warning-low-lying-areas-kelani-river-1785559810"></link>
            <id>https://ibctamil.com/article/minor-flood-warning-low-lying-areas-kelani-river-1785559810</id>
            <summary type="text">களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீர்மட்டம் உயர வாய்ப்பு</h2><p> </p><p>மேலும் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fda19b3-6382-43a6-9bbf-f1705809177d/26-6a6d7edde244c.webp' /></p><p> 

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-4-7-quake-strikes-near-italy-s-naples-1785556924"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-4-7-quake-strikes-near-italy-s-naples-1785556924</id>
            <summary type="text">தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> வெள்ளிக்கிழமை (31) மாலை 7:46 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் சுமார் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தினால் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மக்களுக்கு உதவவோ அல்லது அவர்களை மீட்கவோ தங்களது குழுவினருக்கு உடனடியாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை என்று&nbsp;இத்தாலிய தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தொடருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1856c42-423f-4212-a644-566f89d911d9/26-6a6d771f207b1.webp' /></p><p>
அப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்றும், நில அதிர்வுகள் ஏற்பட்டபோது சில பகுதிகளில் மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மேற்கு நேபிள்ஸின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, மக்கள் அடர்த்தியாக வாழும் எரிமலைப் பள்ளமான கம்பி ஃபிளெக்ரேயில், சமீபத்திய ஆண்டுகளில் நில அதிர்வுகள் அதிகரித்து வருவதாகவும் இது அரசாங்கத்தின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-killed-in-motorbike-accident-1785555804"></link>
            <id>https://ibctamil.com/article/men-killed-in-motorbike-accident-1785555804</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0959efb2-7228-4f36-9e79-c5ba72a5f174/26-6a6d7a938ac31.webp' /></p><p>

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p>

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h4>வவுனியா, வைரவப்புளியங்குளம்</h4><p>வவுனியா, வைரவப்புளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100e0bea-d788-44a8-add1-9bfca4c9ff5c/26-6a6d7e93d1de5.webp' /></p><p>வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.</p><p> 

பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-exam-2025-z-score-cut-off-marks-for-university-1785554768"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-exam-2025-z-score-cut-off-marks-for-university-1785554768</id>
            <summary type="text">2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை&amp;nbsp;பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.&amp;nbsp;2025 ஆம் ஆண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை&nbsp;பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு</h2><p>இந்தநிலையில், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் தேவைப்படும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகளை இப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5e4c87-dee2-4e24-a9c1-304a1b22fb4d/26-6a6d6cf9a890f.webp' /></p><p>இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 92,043 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த நிலையில் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதிக்காக 42,937 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p>
 

 <a href="https://www.ugc.ac.lk/downloads/admissions/cutoff_2026/COP_2025_2026-ENGLISH_Final.pdf" target="_blank"><b>வெட்டுப் புள்ளிகள் குறித்த விபரத்தை இங்கே காணலாம்&nbsp;</b></a></p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ECA89xLxSeo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பரபரப்பான போக்குவரத்துப் பாதைக்கு குறி - ஏமனின் ஹூதியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-s-houthis-deny-plans-to-impose-fees-on-ships-1785557429"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-s-houthis-deny-plans-to-impose-fees-on-ships-1785557429</id>
            <summary type="text">செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி இயக்கத்தின் கடல்சார் ஒருங்கிணைப்பு அமைப்பு மறுத்துள்ளது.</p><p>அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் வழியான போக்குவரத்து தொடர்ந்து இலவசமாகவே உள்ளது என்றும் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p>தெற்கு செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிப்பது குறித்து ஈரான் ஆதரவு ஹூதிகள் பரிசீலித்து வருவதாக பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.</p><p></p><h2>கட்டணங்கள் குறித்த முன்மொழிவு</h2><p>ஜூலை மாதம் ஹூத்தி அதிகாரிகள் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ​​கட்டணங்கள் குறித்த முன்மொழிவு ஈரானிய அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது என்றும், இருப்பினும் அதனைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9276c0-6c4e-40ea-a3fd-e66e2ad6f983/26-6a6d788723d5f.webp' /></p><p>ஹூதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் தங்களது "பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை ஒரு தன்னார்வ மற்றும் கட்டணமில்லா சேவையாகும்" என்று தெரிவித்துள்ளது.</p><p>"அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவோ அல்லது எந்தவொரு தகவலையும் வழங்கவோ வேண்டாம்&nbsp; என மையம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346"></link>
            <id>https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346</id>
            <summary type="text">தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>அளவில்லா மகிழ்ச்சி</h2><p>தாக்குதல் நடைபெறக்கூடும் என முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தனது பதவியைப் பயன்படுத்தித் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48b9b9d-8506-4d84-865f-bf7ccd9323a0/26-6a6d637d1914c.webp' /></p><p>இதன்போது அவர், இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.
</p><p>
இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுசுந்தரவிற்கும் அதே நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T03:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634"></link>
            <id>https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

நேற்றையதினம் ஜூலை 31ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஹேமசிறி பெர்னாண்டோ இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் பலரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் மட்டுமே கைது செய்யுங்கள்" என உத்தரவிட்டதாகவும் ஹேமசிறி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>

இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1250cbf-e9c5-426b-aeb3-5623f042668b/26-6a6d4a2d51b73.webp' /></p><p>
பிரியந்த லியனகே, திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறுதல் மற்றும் மனிதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர். </p><p>

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 268 பேர் உயிரிழந்தனர், 586 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை நிலந்த ஜயவர்தன தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவலை பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கியிருந்தார் என்பது நீதிமன்றில் நிரூபணமானது.</p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், ஹேமசிறி பெர்னாண்டோவின் இந்த வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T03:35:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-for-strong-winds-and-seas-in-sri-lanka-1785547511"></link>
            <id>https://ibctamil.com/article/warning-for-strong-winds-and-seas-in-sri-lanka-1785547511</id>
            <summary type="text">மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் வடமேல் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.அத்துடன் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணத்தில் இருந்து பேருவளை வரையான கடற்பகுதியில் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.</p><p></p><h2> பலத்த மழை &nbsp;</h2><p>இதேவேளை,&nbsp;அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நடைதுறையாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb0a122-0db2-4ee2-b30e-f31ec1c4f46d/26-6a6d4df6adc11.webp' /></p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.</p><p> 

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T02:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா படுகொலை முயற்சி! 17 வருடங்களின் பின்னர் சந்தேகநபர்களுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-who-bombed-fonseka-get-bail-after-17-years-1785544803"></link>
            <id>https://ibctamil.com/article/two-who-bombed-fonseka-get-bail-after-17-years-1785544803</id>
            <summary type="text">17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ராகல நேற்று முன்தினம்(30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால், இரு பிரதிவாதிகளையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளாார்.</p><p></p><h2>பிணை நிபந்தனைகள்</h2><p>

பிரதிவாதிகளுக்கு தலா ரூ. 200,000 ரொக்கப் பிணையும், தலா ரூ. 500,000 மதிப்பிலான நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன.எனினும், அவர்களால் இந்த தொகையையும் பிணையாளர்களையும் சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/154a2d86-18a1-408e-b7d3-9f23e7d17e18/26-6a6d4591f1327.webp' /></p><p>
பிணை நிபந்தனைகளின்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமை காலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும், அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகிய இருவருக்குமே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>

17 ஆண்டுகள் நீண்ட காலமாக விளக்கமறியலில் இருப்பதை சுட்டிக்காட்டி, பிரதிவாதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததன் அடிப்படையிலேயே மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p>
பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு</h2><p>
கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் திகதி கொழும்பு ராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகே “துர்கா” என்ற விடுதலைப் புலிகள் உறுப்பினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6053d5c-6237-40eb-886a-bb05fa3ed9b1/26-6a6d4592a7c16.webp' /></p><p>
இச்சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக 230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் அன்றைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் அவரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ சார்ஜென்ட், மூன்று கோப்ரல்கள் உட்பட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்திருந்தனர்.</p><p>
இந்த வழக்கிற்கு மேலதிகமாக போரலஸ்கமுவ பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொல்ல முயன்ற வழக்கு மற்றும் வேலிவேரியவில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலைக்கு உடந்தையாக இருந்த வழக்கு ஆகியவற்றிலும் இவர்கள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.&nbsp;</p><p>
இதில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில், பிரதிவாதிகளுடன் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் லக்ஷ்மன் குரேவும் விடுவிக்கப்பட்டார்.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கில் இவர்களுக்கான பிணை உத்தரவு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வராசா கிருபாகரன் என்ற மொரிஸ், வேறொரு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p>
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையாகியுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுரங்க பண்டார மற்றும் சட்டத்தரணி ஆர்னோல்ட் பிரியந்தன் அடங்கிய சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T01:02:30+00:00</updated>
        </entry>
    </feed>
