<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T18:17:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணி உரையை நாடாளுமன்றில் ஆற்றவுள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695"></link>
            <id>https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அவர் ஆற்றவிருந்த சிறப்புரை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்தக் கைது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தின் கீழ்கூட இதுபோன்ற செயல்கள் நடந்திருந்தால், தான் அவற்றை அனுமதித்திருக்க மாட்டேன் என்றும், ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52b9072-4e0a-4520-99c6-6fe054af54d9/26-6a9dab9ad9d37.webp' /></p><p>
</p><p>
அனுராதபுர பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்சவின் மனைவி உரையாற்றுவார் என்று சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் பரவிவரும் வதந்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறினார்.</p><p></p><p>

</p><h2>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் விசேட உரை</h2><p>"நாமல் ராஜபக்ச அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருவார். அன்று, அனுராதபுர மக்களுக்கு அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு வழங்குவார். அதைக் கவனிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன்," என்று ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7f0b34-cb45-4f70-a8a8-ef36e9707008/26-6a9dab9a273db.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T18:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051"></link>
            <id>https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை
வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.</p><h2>குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது&nbsp;</h2><p>&nbsp;காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da989345-4575-4733-b2f2-412d89b56560/26-6a9da218dcaaf.webp' /></p><p>
</p><p>
காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவர் திருடினாலும் சிறை செல்வது உறுதி : ரில்வின் சில்வா ஆணித்தரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-you-stole-you-will-have-to-go-to-prison-tilvin-1788714065"></link>
            <id>https://ibctamil.com/article/if-you-stole-you-will-have-to-go-to-prison-tilvin-1788714065</id>
            <summary type="text">பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
</p><p>
புலத்சிங்கலவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சில்வா, அரசாங்கம் அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதாகவும் அல்லது ஜனநாயகக் கொள்கைகளைச் சீர்குலைப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.</p><h2>திருடியிருந்தால், சிறைக்குச் செல்ல நேரிடும்</h2><p>&nbsp;“நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால், நீங்கள் திருடியிருந்தால், சிறைக்குச் செல்ல நேரிடும். அதைப்பற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அது முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது யாருடைய மகனாக இருந்தாலும் சரி, அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef105b7-c3f7-4e3a-b051-3bfb1c72666b/26-6a9d9e935ac1e.webp' /></p><p> யாராவது குற்றம் செய்திருந்தால், சட்டம் அமல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.</p><p></p><h2>மக்கள் எமது அரசை தேர்ந்தெடுக்க காரணம்</h2><p>

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும், மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்த்து மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சில்வா மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271736db-4081-41b9-aa17-28edd1c59d85/26-6a9d9e940e1f7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பயணத் தடைக்கு முன்னதாக வெளிநாடு பறந்தார் பிரேமலால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/premalal-left-the-country-before-the-travel-ban-1788710937"></link>
            <id>https://ibctamil.com/article/premalal-left-the-country-before-the-travel-ban-1788710937</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. </p><p>குறித்த பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதியே முன்னாள் பிரதி அமைச்சர் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><h2>உச்ச நீதிமன்றின் உத்தரவு</h2><p>&nbsp;பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு எதிராக இந்த வெளிநாட்டு பயணத் தடையை விதித்து, வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eadbfe84-24f0-4c59-8fe8-53d5fd7086f4/26-6a9d99e2763e9.webp' /></p><p> பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p></p><p>

</p><h2>&nbsp;மரண தண்டனை</h2><p>2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்த பிரதேசத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பேரணியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b02b6f-336f-468a-9a56-a1e33cd64c62/26-6a9d99e1c1d5d.webp' /></p><p>






எவ்வாறாயினும், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததுடன், அந்த விடுவிப்புக்கு எதிராக, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவரின் மனைவி சாந்தா தொடங்கொட உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை குறித்த மேன்முறையீட்டை பரிசீலித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுத்துள்ளது&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T16:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரும் தப்ப முடியாது : 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி அனுர திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும் தப்ப மாட்டார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
</p><p>

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><h2>உள்ளே இருந்து பார்க்கும்போது தெரியவந்த ஊழல் செயற்பாடு</h2><p>&nbsp;அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், அரச விவகாரங்களை உள்ளிருந்தே ஆய்வு செய்த பின்னருமே, கூறப்படும் முறைகேடுகளின் அளவைக் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c198a6-b6dd-4603-b487-cbe618c74052/26-6a9d8e6c94fee.webp' /></p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது, ​​ஊழலைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து, நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, ​​இந்த விஷயங்களை ஒவ்வொன்றாக வெளிக்கொணரும்போது, ​​நமது நாடு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளைச் சந்தித்துள்ளது என்பதை நாம் காண்கிறோம்," என்று ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>&nbsp; "நீங்கள் யதார்த்தத்தைப் பார்த்தால், ஒரு நபர் கூட தப்ப மாட்டார் என்ற அளவிற்கு நிலைமை உள்ளது," என்று கடந்தகால ஊழல் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று அவர் குற்றம் சாட்டியவர்களைக் குறிப்பிட்டு மேலும் கூறினார்.</p><p></p><h2>&nbsp;மக்களின் சார்பாக எடுக்கப்படும் முடிவுகள்</h2><p>எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அரசாங்கம் தொடரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், அவர் "கறுப்பு அரசு" என்று வர்ணித்த ஒன்றிலிருந்து பயனடைந்தவர்கள் பெருகிய முறையில் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcb2c4f-8a48-4c1c-b53f-02838db1fefa/26-6a9d8e6be1b97.webp' /></p><p>&nbsp;அரசாங்கத்தின் சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களை அணுகுவதாகவும், சர்வதேச அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
"அவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் எடுக்கும் முடிவுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு மக்களின் சார்பாக எடுக்கப்படுகின்றன. அத்தகைய எந்த முடிவையும் நாங்கள் மாற்ற மாட்டோம்," என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும்</h2><p>அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்துக் குறிப்பிடுகையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியவுடன் அரசாங்கம் விரைவாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c644a7d5-112d-48ee-8c1b-8fb460879b59/26-6a9d8e6d492d0.webp' /></p><p>
</p><p>
"தீர்மானம் வழங்கப்பட்ட உடனேயே, அதை நாங்கள் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களையும் ஜனாதிபதி விமர்சித்தார். சில வழக்குகளில், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் நடந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தீர்ப்புகள் வழங்கப்படுவதால், அந்த வழக்குகள் எதைப் பற்றியவை என்பதைப் பொதுமக்கள் ஏற்கனவே மறந்துவிடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-06T16:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்! நியூசிலாந்தில் நூலிழையில் தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qantas-engine-catches-fire-mid-air-safe-landing-1788707128"></link>
            <id>https://ibctamil.com/article/qantas-engine-catches-fire-mid-air-safe-landing-1788707128</id>
            <summary type="text">நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
</p><p>
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக்
கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.
</p><p>
நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான
நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><p>
</p><p></p><h2>பணியாளர்கள்&nbsp;</h2><p>விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63fa5b17-5c47-4dd0-89ab-660bea566e14/26-6a9d87dfe939c.webp' /></p><p>

பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளமை குறிப்படத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-boats-poach-off-talaimannar-nets-damaged-1788704795"></link>
            <id>https://ibctamil.com/article/indian-boats-poach-off-talaimannar-nets-damaged-1788704795</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> உள்ளூர் கடற்றொழலாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.</p><p>
இச்சம்பவம் நேற்று (06-08-2026) சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>&nbsp;உடனடி நடவடிக்கை&nbsp;</h2><p>இதனால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சுமார் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான வலைகள்
சேதப்படுத்தப்பட்டு அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29bcc7ca-1d87-4519-b7b3-bab6d8b625bb/26-6a9d8031d47e3.webp' /></p><p>விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர கூட்டத்தில் லிமினி ராஜபக்ச! நாமலின் ஊடகம் வெளிபடுத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-s-wife-enters-politics-1788705415"></link>
            <id>https://ibctamil.com/article/namal-s-wife-enters-politics-1788705415</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக ஊடகங்களில் போலியான செய்தி ஒன்று பரவிவரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாமலின் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவரது மனைவி தயாராகி வருதாக சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் முகநூல் கணக்கொன்றில், நாமல் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>போலிச்செய்திகள்</h2><p>
அதேவேளை, மற்றுமொரு முகநூல் பக்கத்தில்&nbsp; &nbsp;பரப்பப்பட்ட மற்றொரு பதிவில், நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் பொதுஜன பெரமுன அரசியல் மேடையில் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c927fd1-5026-471d-bf91-c7b7830842e0/26-6a9d7a8a02c56.webp' /></p><p>

மேலும், மற்றொரு செய்தி இணையத்தளம் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவொன்றில், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போன்று மிகவும் சக்திவாய்ந்தது எனவும், அவரது அரசியல் பிரவேசம் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்நிலையில் இந்த கருத்துக்களை போலிச்செய்திகள் என நாமல் ராஜபக்சவின் ஊடகம் நிராகரித்துள்ளது</p><p>மேலும்,இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என அடையாளம் இட்டு அவரது ஊடகம் பகிர்ந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய - பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794"></link>
            <id>https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794</id>
            <summary type="text">ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்தச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யாவிலுள்ள 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை இயக்‌க அசூர் எயர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p></p><h2>நேரடி விமான சேவை</h2><p>அசூர் எயர் தவிர, ரஷ்யாவின் பிரபல ஏரோஃப்ளோட்&nbsp; (Aeroflot) மற்றும் எஸ்7 எயர்லைன்ஸ் (S7 Airlines) ஆகிய நிறுவனங்களும் ரஷ்யா - இலங்கை இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff2ea13-746e-47f0-b5ad-c8fb6db513e2/26-6a9d550e58ca7.webp' /></p><p>இதனிடையே, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways) நிறுவனம் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனுக்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
</p><p>பிரித்தானியாவின் லண்டன் கெட்விக் (London Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701540"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701540</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். </p><p>இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>இந்திய வம்சாவளியினர்</h2><p>அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய
புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76ceb90-1004-4a6b-8505-2f753b6fda32/26-6a9d7643b2f58.webp' /></p><p>விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை
தாங்கவுள்ளார்.
</p><p>
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக்
கொண்டுள்ளதுடன் பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம்,
வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363</id>
            <summary type="text">ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&amp;nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலீபாஃப் (Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி இனி விகிதாசாரமாக (Proportionate) இருக்காது என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.</p><p></p><h2>சமமான பதிலடி</h2><p>அத்தோடு சமமான பதிலடிகளைக் கொடுக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கர்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் தெரிவித்த அவர், “ஆக்கிரமிப்பாளர்களின் தளங்களுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நடத்திய நடவடிக்கைகள் ஒரு தொடக்கமே.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbee5041-8b25-4e96-a027-d60974518f2a/26-6a9d4ce742ca7.webp' /></p><p>அவர்கள் இன்னும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டன என்பதை காலம் கடப்பதற்குள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவை ஈரான் எதிர்கொண்டது போல அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சாரத்தையும் ஈரான் முறியடித்து வெற்றிபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தினசரி மின்சாரத் தேவை சரிவு: மின் உற்பத்தியில் அதிகரிப்பு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-power-demand-drops-while-generation-rises-1788699192"></link>
            <id>https://ibctamil.com/article/sl-power-demand-drops-while-generation-rises-1788699192</id>
            <summary type="text">இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந்தும் அதிகரிப்புப் போக்கைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.</p><p>இதனடிப்படையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவாட் (MW) ஆக இருந்த தினசரி மின்சாரத் தேவை, செப்டம்பர் 1 ஆம் திகதி 2,936 மெகாவாட் ஆகக் குறைந்துள்ளது.</p><p> </p><p></p><h2>மின்சாரத் தேவை&nbsp;</h2><p>இது செப்டம்பர் 2 ஆம் திகதி 2,934 மெகாவாட் ஆகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி மேலும் சரிவடைந்து 2,920 மெகாவாட் ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>மின்சாரத் தேவை குறைந்த போதிலும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரமாக (GWh) இருந்த தினசரி மின் உற்பத்தி, செப்டம்பர் 1 ஆம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5129d033-4fe3-4a37-bbbc-72e5627d480e/26-6a9d6883d1d1f.webp' /></p><p>அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளது. </p><p>அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T13:27:18+00:00</updated>
        </entry>
    </feed>
