<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-11T13:10:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள்வெட்டு! நான்கு பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stabbing-at-kilinochchi-town-fuel-station-1789129958"></link>
            <id>https://ibctamil.com/article/stabbing-at-kilinochchi-town-fuel-station-1789129958</id>
            <summary type="text">கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,&nbsp;</p><p>
</p><p>நேற்றிரவு சுமார் 8 மணியளவில் டிப்பர் வாகனமொன்று எரிபொருள் நிரப்புவதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், வாகனத்தை முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் சாரதியிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> </p><p>

இதன்போது பணியாளருக்கும் டிப்பர் வாகன சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f71c1040-967f-4567-b3e5-94a221fd2801/26-6aa3f69ddfb08.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து அங்கிருந்து சென்ற டிப்பர் வாகன சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.</p><p> 

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் அங்கு இருந்த வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியும் விட்டு குறித்த குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T12:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைக்குண்டு வைத்திருந்த வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/manamperi-suspect-in-live-bomb-case-granted-bail-1789128406"></link>
            <id>https://ibctamil.com/article/manamperi-suspect-in-live-bomb-case-granted-bail-1789128406</id>
            <summary type="text">

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான சம்பத் மனம்பேரிக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று (11) பிணை வழங்கியுள்ளது.</p><p>

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 250,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் முதன்முதலில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>பிணை மனு தாக்கல்</h2><p> </p><p>

பின்னர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையப்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு, மித்தெனியவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டை காவல்துறையினர் மீட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7bb2d81-cc97-407f-9db3-3cd1f5f7a9cb/26-6aa3f6436893e.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, கைக்குண்டு தொடர்பான விசாரணை மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த பிணை மனு தங்காலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T12:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இரு பாடசாலைகளில் தீ விபத்து: 26 மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-eastern-congo-kills-least-26-students-schools-1789127818"></link>
            <id>https://ibctamil.com/article/fire-eastern-congo-kills-least-26-students-schools-1789127818</id>
            <summary type="text">கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் அருகருகே அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் அருகருகே அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
தெற்கு கிவு மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 19 சிறுமிகளும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

M23 கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில், முதற்கட்ட தகவலின்படி 24 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தெற்கு கிவு மாகாண அரசாங்கம்&nbsp;</h2><p>
</p><p>
உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, முதலில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ அருகிலிருந்த Furaha உயர்நிலைப் பாடசாலை மற்றும் Ujamaa ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றுக்கும் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce4650e9-cf7e-48f9-bb1d-fa6d7c8c6f94/26-6aa3f174e1e18.webp' /></p><p>

Furaha பாடசாலைக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், சிலர் புகை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தீயிலிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது, வெளியேறும் வாயில் குறுகியதாக இருந்ததால் சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக குதித்ததாகவும், மற்றவர்கள் கதவை நோக்கி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்து மிதிபட்டதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பல்வேறு வயதுகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாடசாலை சீருடையுடன் அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களை துல்லியமாக கணக்கிடுவதில் மருத்துவப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> எனினும், தீ ஆரம்பித்த பகுதி அதிக மக்கள் தொகை கொண்டதாகவும், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> <b>WHATSAPP</b> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனவிலங்கு அதிகாரிகளால் வாகரை மக்களுக்கு தொடரும் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harassment-vaharai-residents-by-wildlife-officials-1789129191"></link>
            <id>https://ibctamil.com/article/harassment-vaharai-residents-by-wildlife-officials-1789129191</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மக்களுக்கு ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன் நிர்வாக எல்லை பிரச்சனை தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் இடையே இன்று குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் , கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p> </p><p></p><h2>வாழ்வாதார நடவடிக்கை</h2><p>இச்சந்திப்பின் போது தோணிதாண்டமடுக் கிராமமானது பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் காவல்துறை அதிகாரப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்திருந்த போதிலும், வன இலாகா திணைக்களத்தின் அதிகார எல்லை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ் உள்ளதால் அப்பகுதி மக்கள் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு மற்றும் சில அதிகாரிகளினால் நெருக்கடிக்குள் உள்ளாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் சுற்றாடல் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d13758f-b00f-4e2b-af0f-e7c939192078/26-6aa3f1e96d0e3.webp' /></p><p> </p><p>

இப்பிரச்சினைகளை கேட்டறிந்த சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, இது தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p> 

மேலும், வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி, குறித்த கிராமத்தின் வன இலாகா பரிபாலன அதிகாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-11T12:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-6-students-schoolbags-weight-will-be-reduced-1789124849"></link>
            <id>https://ibctamil.com/article/grade-6-students-schoolbags-weight-will-be-reduced-1789124849</id>
            <summary type="text">இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ்,பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ்,பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.</p><p></p><h2>&nbsp;தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை</h2><p>
வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.</p><p>
பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a408feb5-d06b-4729-b89c-1a491e3f59ac/26-6aa3e4917a4d1.webp' /></p><p>
</p><p>
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p> இதன் கீழ், தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும்“ என பிரதமர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளையில் இராணுவ வசமிருந்த காணி விடுவிப்பு! உரிமையாளரிடம் கையளிக்கவும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-in-use-by-the-military-released-1789124837"></link>
            <id>https://ibctamil.com/article/land-in-use-by-the-military-released-1789124837</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைச் சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைச் சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்

59 ஆவது படைப்பிரிவினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் திங்கட்கிழமை (10) உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>சட்டபூர்வ உரிமையாளிடம் கையளிப்பு</h2><p>

மேலும், இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தனியார் காணியின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த காணி அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் முறையாகக் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe33c184-5ae2-49cd-96c5-e7033057c375/26-6aa3e3cad0460.webp' /></p><p>
</p><p>
இக்காணி விடுவிப்பு நடவடிக்கையானது, பொதுமக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T11:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் நில மீட்புப் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-reclamation-protest-in-mayiliddy-21st-week-1789123040"></link>
            <id>https://ibctamil.com/article/land-reclamation-protest-in-mayiliddy-21st-week-1789123040</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (11.09.2026) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.</p><p></p><h2>வெளியேறாத பாதுகாப்பு தரப்பினர்&nbsp;</h2><p>இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07add671-f06d-4195-85fc-48d3df8e02ea/26-6aa3dbc544059.webp' /></p><p>தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>
</p><p>
இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், காணி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கிய மன்னிப்பு: தெளிவில்லா நிலையில் மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-concerned-about-the-gnanasara-thero-case-1789121837"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-concerned-about-the-gnanasara-thero-case-1789121837</id>
            <summary type="text">கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தகவலும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பு கங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தாம் எப்போதும் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்ற தீர்ப்பு&nbsp;</h2><p>
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

“அது தொடர்பில் எனக்கு இன்னும் சரியான விபரங்கள் தெரியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaeff31a-c608-48a9-a3c5-dce786ba9637/26-6aa3ddd464722.webp' /></p><p> </p><p>அதனால் அதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.</p><p> ஜனாதிபதி மன்னிப்பு உரிய ஆய்வுகளின் பின்னரே வழங்கப்பட்டது.

எனது காலகட்டத்தில் நான் மிகவும் கருணையுடன் அந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். </p><p>இப்போது எந்த சூழ்நிலையில் இந்த விடயம் உள்ளது என்பது குறித்து என்னால் கூற முடியாது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எனது பதவிக் காலமும் குறைக்கப்பட்டது. எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
</p><p>
அதன் பின்னர் என்னைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அந்த மாற்றங்களை நீக்கி, 19ஆவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்களுக்குப் பதிலாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினர்.
</p><p>
அதன் மூலம் ஜனாதிபதிக்கு பெருமளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது அது தொடர்பில் எங்களால் எதுவும் கூற முடியாது.” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T10:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னை பயிர்ச்செய்கைக்கு மானியம்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/subsidy-to-protect-coconut-crops-1789118455"></link>
            <id>https://ibctamil.com/article/subsidy-to-protect-coconut-crops-1789118455</id>
            <summary type="text">





எல் நினோ காலநிலையின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து தென்னை விவசாயத்தைக் பாதுகாக்கவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கவும் தென்னை பயிர்செய்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>





எல் நினோ காலநிலையின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து தென்னை விவசாயத்தைக் பாதுகாக்கவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கவும் தென்னை பயிர்செய்கை சபை ஒரு சிறப்பு மானியத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

இதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தென்னை உற்பத்தி</h2><p>
</p><p>
அதேவேளை, இதுவரை எல் நினோ நிலையினால் தென்னை பயிர்ச்செய்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a5f5574-5398-4064-ba0d-1a4ae6f75950/26-6aa3d93f5045f.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வரவிருக்கும் மாதங்களில் வறட்சியான வானிலை நீடித்தால், அது தென்னை உற்பத்தியைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T10:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஸ் வரியை நீக்குவதற்கு திட்டம் : அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abolish-cess-tax-and-introduce-a-new-customs-duty-1789119452"></link>
            <id>https://ibctamil.com/article/abolish-cess-tax-and-introduce-a-new-customs-duty-1789119452</id>
            <summary type="text">இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கட்டம் கட்டமாக இந்த செஸ் வரிகளை நீக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதிப் பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டது.</p><p></p><h2>இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள்</h2><p>இருந்த போதிலும், பல உள்நாட்டுத் தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே தங்கியுள்ளதாகவும், அந்த உற்பத்திகளின் செலவும் அதற்கேற்ப உயர் மட்டத்தில் காணப்படுவதால், கட்டம் கட்டமாக செஸ் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2e847d-2911-4360-87b6-d2a6ebade9a5/26-6aa3d565b182c.webp' /></p><p>இதற்கமைய, முதற்கட்டமாக இடைநிலைப் பொருட்களுக்குச் சலுகைக் காலத்துடன் செஸ் வரி படிப்படியாக நீக்கப்படும்.</p><p>இதன் மூலம், உள்நாட்டுத் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் முறையான உற்பத்திச் செயல்பாட்டிற்கு உற்பத்தியாளர்களைப் பழக்கப்படுத்துவதற்கான திறனையும், அவர்களுக்கு அவசியமான மூலப்பொருள் செலவைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கும் அணுகுமுறையையும் அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.</p><p></p><h2>புதிய சுங்கவரி கட்டமைப்பு</h2><p>

இதற்கமைய செஸ் வரியை நீக்குவதுடன் புதிய சுங்கவரி கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கமைய 4 பிரிவுகளின் கீழ் அந்தச் சுங்கவரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deee5a25-e650-4707-a4cc-ac899053ab3a/26-6aa3d5667c7ae.webp' /></p><p> 

குறித்த 4 பிரிவுகளின் கீழ் 0%, 10%, 20% மற்றும் 30% என்ற அடிப்படையில் புதிய சுங்கவரி அறிமுகப்படுத்தப்படும், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 0% வீதமும், முடிவுற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு அதிகபட்சமாக 30% வரை புதிய சுங்கவரி விதிக்கப்படும். </p><p>

இதற்கமைய, உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாப்பதனை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் மேலும் எதிர்பார்க்கிறது“ என&nbsp; அவர்&nbsp; மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-chavakachcheri-over-six-demands-1789118679"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-chavakachcheri-over-six-demands-1789118679</id>
            <summary type="text">தமிழ் மக்களுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டனப் பேரணியும் உண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டனப் பேரணியும் உண்ணாவிரதப் போராட்டமும் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.&nbsp;</p><p>
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபியினால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.</p><p>
இன்று (11.09.2026) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><h2>&nbsp;செம்மணி புதைகுழி விவகாரம்</h2><p>
</p><p>
அபகரிக்கப்பட்ட காணிகளை மீள விடுவித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குதல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்துதல், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13de714c-6d04-427b-a05a-c32430c34182/26-6aa3cf5e50492.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் கட்சி பேதமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜெயகோபி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விசாரணை ஒன்றின் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அறிக்கைகளின்படி, ஷிரான் பாசிக் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில், தனது தந்தையின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டை வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

ஷிரான் பாசிக்கின் தந்தை, சொத்து சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (11) CCIB முன் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><i><u>மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை</u></i></b></p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>முடக்க அதிகாரிகள் நடவடிக்கை</h2><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7718b5-0d31-469c-944c-8e30830bc171/26-6aa3a0d2e5ad1.webp' /></p><p>இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bai-1789115281"></link>
            <id>https://ibctamil.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bai-1789115281</id>
            <summary type="text">
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>பிணை</h2><p>
</p><p>
இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7436461e-8f08-4e98-84e7-74c9a9edcb59/26-6aa3be48b5444.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T09:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் ஒப்பந்தம் குறித்து அறிக்கை அளித்த பின்னர் FCID-யிலிருந்து வெளியேறிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789098887"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789098887</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி FCID-க்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.</p><p>

அதன்படி, அவர் இன்று காலை (11) FCID-ஐயில் முன்னிலையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4335da1d-475e-4aa5-82b6-e8955ec4c1fd/26-6aa3c278379be.webp' /></p><p>

பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் தற்போது வெளியேறியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p><i><b><u>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை</u></b></i></p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். </p><p>

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>கோட்டாபய ராஜபக்சவை இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>முன்னாள் விமானப்படைத் தளபதி</h2><p>இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக நேற்று (10) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/972ea612-8615-4e0e-a3ec-a0e3df7c081d/26-6aa37fdfcb032.webp' /></p><p> </p><p>

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UKzXQ1Zl1M8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலையில் விசேட சோதனை: மீட்கப்பட்ட 25 தொலைபேசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mobile-phones-sim-cards-recovered-galle-prison-1789114352"></link>
            <id>https://ibctamil.com/article/mobile-phones-sim-cards-recovered-galle-prison-1789114352</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கியிருக்கும் அறைக்கட்டிடங்ளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>காலி சிறைச்சலை</h2><p> </p><p>இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை தலைமையக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac083e9-112e-458f-8104-6f3cbd50f594/26-6aa3bc882dbd7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115220"></link>
            <id>https://ibctamil.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115220</id>
            <summary type="text">தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.

உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்.</p><p></p><h2>திரைப்பட துறை</h2><p> </p><p>

தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/231bb28e-9f63-4759-8c3b-37a6fa29f597/26-6aa3c00859cb9.webp' /></p><p> </p><p>இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
</p><p>
தொலைக்காட்சி மட்டுமின்றி திரைப்பட துறையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். </p><p>

அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழுக்கென தனக்கான இடத்தை கொண்டுவந்தவர்.</p><p></p><h2>ஆய்வு நூல்கள்</h2><p>

இவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b847df38-9ad8-4937-96ab-189808866340/26-6aa3c00916a9f.webp' /></p><p>

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். </p><p>

அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/number-of-aswesuma-beneficiaries-drops-1789110527"></link>
            <id>https://ibctamil.com/article/number-of-aswesuma-beneficiaries-drops-1789110527</id>
            <summary type="text">அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குறைந்த வருமானம் பெறும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும நிவாரணத்தை நீக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்குப் பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே அதில் மீள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டத்தின் ஊடாகவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்</h2><p> </p><p>இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதனை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e2b7a18-82e9-4b6b-a292-2bb30f1e3672/26-6aa3bc6e0a98f.webp' /></p><p> 

இந்த வேலைத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், எனினும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது அது 1,761,116 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். </p><p>

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் ஆகும் போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதற்குப் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அஸ்வெசும கொடுப்பனவு</h2><p> </p><p>

அதற்கமைய, அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்கால ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நன்மைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், இடைக்காலப் பிரிவினருக்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e71d591-60c0-4e0e-b2ec-d8d0b5e78867/26-6aa3bc6eb75fb.webp' /></p><p> 

இதற்கமைய, தற்போது அதிக வறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கு மத்தியில் மீள் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2012 கிரேக்க பிணைமுறி வழக்கு! அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabraal-filed-an-appeal-with-supreme-court-1789113898"></link>
            <id>https://ibctamil.com/article/cabraal-filed-an-appeal-with-supreme-court-1789113898</id>
            <summary type="text">



2012 ஆம் ஆண்டின் கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>



2012 ஆம் ஆண்டின் கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
இன்றைய தினம் (11) இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்குப் பதிவு&nbsp;</h2><p>

அதன்போது, மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக இந்த வழக்கை ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7962055-696f-49ec-824a-89aa38001b4e/26-6aa3b9beb5b33.webp' /></p><p>
</p><p>
கிரேக்கப் பொருளாதாரச் சரிவு பற்றித் தெரிந்திருந்தும் அரசு நிதியை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்து அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பல பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் மூன்று நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-days-grand-food-festival-at-reecha-1789112645"></link>
            <id>https://ibctamil.com/article/three-days-grand-food-festival-at-reecha-1789112645</id>
            <summary type="text">வடக்கு கிழக்கின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை “றீச்சா
உணவுத் திருவிழா 2026” ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை “றீச்சா
உணவுத் திருவிழா 2026” எனும் பிரமாண்டமான மூன்று நாள் உணவுத் திருவிழாவை நடத்துவதற்கு
தயாராகியுள்ளது.</p><p>

யாழ் ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட றீச்சா ஒருங்கிணைந்த
பண்ணையின் முகாமைத்துவ குழுவினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
</p><p>இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
2026 ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழா, பாரம்பரிய உணவுகளின் சுவையையும் நவீன உணவு
அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்&nbsp;</h2><p>றீச்சா உணவுத் திருவிழா 2026 இல் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பல்வேறு
பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவு வகைகளை வரையறையற்ற முறையில் சுவைத்து மகிழ
வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.</p><p>
உணவுத் திருவிழாவின் பிரதான வரையறையற்ற உணவு சேவை மாலை 6.00 மணி முதல் இரவு
10.00 மணி வரை நடைபெறும். ஒரே டிக்கெட்டினால் பார்வையாளர்கள் இச்சிறப்பான உணவு
அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4735ab5b-6f46-4e94-952b-af20ef21f5aa/26-6aa3b9308e0a5.webp' /></p><p>
</p><p>
உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள் காலை 8.00
மணிமுதல் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்திற்குள் வருகை தர முடியும்.</p><p>

பகல் நேரத்தில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொழுதுபோக்கு
நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும்
அனுபவிக்க முடியும். விளையாட்டுகளில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான
விளையாட்டு டிக்கெட்டுகளை தனியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>இதன்மூலம், உணவு திருவிழா டிக்கெட் பெற்றவர்கள் காலைமுதல் இரவு வரை றீச்சா
வளாகத்தில் முழுமையான குடும்ப மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்திற்குள் உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட் பெற்றவர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படுவர்.</p><p>எனவே, ஏற்பாட்டாளர்கள், உணவுத் திருவிழா டிக்கெட் இல்லாத ஏனைய பார்வையாளர்கள்
மேற்குறிப்பிட்ட 3 நாட்களிலும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிடுவதைத்
தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p></p><h2>றீச்சா பண்ணை வளாகத்தின் பாதுகாப்பு</h2><p>
</p><p>
பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் ஒழுங்கான நிகழ்வு நிர்வாகத்தையும்
உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 1,500 பார்வையாளர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
</p><p>இதன்படி, 3 நாட்களிலும் மொத்தமாக 4,500 பார்வையாளர்கள் மட்டுமே உணவுத் திருவிழாவில் பங்கேற்க முடியும்.
குறிப்பிட்ட எண்ணிக்கை பூர்த்தியடைந்த பின்னர் மேலதிக டிக்கெட்டுகள்
வழங்கப்படமாட்டாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6938c4-705a-4969-a663-f3038ca98fca/26-6aa3b93181e20.webp' /></p><p>

'றீச்சா உணவுத் திருவிழா 2026'க்கான அனைத்து டிக்கெட்டுகளும் இணைய வழி மூலம்
மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து
பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>

டிக்கெட் வாங்கிய பின்னர் நிகழ்வில் கலந்துகொள்ளாதது அல்லது தனிப்பட்ட
காரணங்களுக்காக வருகை தரமுடியாதது போன்ற சந்தர்ப்பங்களில் டிக்கெட் தொகை
திருப்பிச் செலுத்தப்படமாட்டாது.
</p><p>எனவே, டிக்கெட் வாங்குவதற்கு முன் நிகழ்வின் அனைத்து விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளையும் கவனமாக வாசித்து, அவற்றை புரிந்துகொண்டு டிக்கெட் கொள்வனவு
செய்யுங்கள்.</p><p>
விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பார்வையாளர்களும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் ஏனைய பார்வையாளர்களின் வசதியை
கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eml_jjW69LU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலை அகழ்வாய்வு! மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukondan-massacre-excavation-1789114166"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukondan-massacre-excavation-1789114166</id>
            <summary type="text">சத்துருக்கொண்டான் படுகொலை விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்துருக்கொண்டான் படுகொலை விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>

குறித்த பகுதியில் இருந்த இராணுவம் முகாம் உள்ளிட்ட இடங்கள் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று (11.09.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><h2>பொய்ஸ் கார்டன் படைமுகாம்</h2><p>
</p><p>
இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/775a5677-0ffc-47aa-bec0-752176d73869/26-6aa3b9a38c797.webp' /></p><p>
</p><p>
குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட அடையாளம் காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.</p><p>

இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர்...! பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-searching-balasankar-narayanan-in-london-1789093995"></link>
            <id>https://ibctamil.com/article/police-searching-balasankar-narayanan-in-london-1789093995</id>
            <summary type="text">லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆப...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>46 வயதுடைய பாலசங்கர் நாராயணன் என்பவர் குறித்தே காவல்துறை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>பெண்கள் மற்றும் சிறுமிகள் அவதானம்</h2><p>மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73eed72b-9148-4ba1-a73c-4712989481d8/26-6aa3b4538f331.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p>

பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என காவல்துறையினர் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:57:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-no-plan-to-hike-electricity-tariffs-1789112043"></link>
            <id>https://ibctamil.com/article/govt-no-plan-to-hike-electricity-tariffs-1789112043</id>
            <summary type="text">மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>

நாட்டில் பெய்த கனமழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்து, மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்ததே இதற்குக் முக்கிய காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>தடையற்ற மின் விநியோகம்</h2><p>

இதன் காரணமாக, எதிர்வரும் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், அதற்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39630b78-f37b-48ba-b42d-0823285ab045/26-6aa3b23a9cd22.webp' /></p><p>
</p><p>
 மேலும், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மின்சக்தி அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவினால் விவசாயத்திற்கு ஏற்படப்போகும் சவால்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nino-will-pose-challenges-for-agriculture-1789109264"></link>
            <id>https://ibctamil.com/article/el-nino-will-pose-challenges-for-agriculture-1789109264</id>
            <summary type="text">எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்குக் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும் என்று விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்குக் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும் என்று விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் எல் நினோ நிலைமையினால் விவசாயத்திற்குச் சவால்கள் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையமும் நீர் முகாமைத்துவ செயலகமும் எச்சரித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
</p><p>
2026/27ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பெரும்போக நெற்செய்கை</h2><p>இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நீரை உச்ச அளவில் முகாமைத்துவம் செய்து வெற்றிகரமான அறுவடையைப் பெற ஒக்டோபர் மாதத் தொடக்கத்தில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7c6989-a037-4944-acb4-35202376a530/26-6aa3ada8da7ae.webp' /></p><p>நெற்செய்கைக்குத் தேவையான அளவு உரமும் விதை நெல்லும் போதியளவில் இருப்பதாகவும், இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக தேசிய உரச் செயலகமும் விவசாயத் திணைக்களமும் அறிவித்துள்ளன.</p><p>
</p><p>

விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பரிந்துரைகளைப் பின்பற்றிச் சரியான வேளையில் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாயிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.</p><p></p><h2>வலய வாரியான கால அட்டவணை</h2><p>எதிர்வரும் 2026/27 பெரும்போக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகவும், நிலவும் வானிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்காகவும் வலய வாரியான கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25e1696-45ce-4e7d-8d2f-d444b473e098/26-6aa3ada82b267.webp' /></p><p> </p><p>அதன்படி, முன்கூட்டியே நீரைப் பெறும் முதல் கட்டமாக 'வளவை' வலயத்தில் ஒக்டோபர் 01ஆம் திகதியும், அடுத்த கட்டமாக 'அல்லா' வலயத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதியும் செய்கை தொடங்கப்படுகிறது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, 'கவுடுல்ல 'வலயத்தில் நவம்பர் 01ஆம் திகதியும், 'எலஹெர' வலயத்தில் நவம்பர் 10ஆம் திகதிக்குள் இறுதி கட்டமாகவும் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும்.</p><p>மேலும் இது தொடர்பில் ஏனைய தீர்மானங்களுக்கான முக்கிய ஒன்றுகூடல் எதிர்வரும் 18ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுத்தாக்குதலில் பலியான சிறுவர்கள்! சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-children-killed-in-dehiwala-grenade-attack-1789092407"></link>
            <id>https://ibctamil.com/article/two-children-killed-in-dehiwala-grenade-attack-1789092407</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;தெஹிவளையில் உள்ள சிறிசகபோ சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>தெஹிவளையில் உள்ள சிறிசகபோ சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி , பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று அதிகாலை (11) நடந்த இந்த குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
</p><p>
காயமடைந்த அவர்களது தந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><i><u>தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! காவல்துறை வெளிப்படுத்திய பரபரப்புத் தகவல்&nbsp;</u></i></b></p><p>வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

குறித்த சம்பவம் தெகிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் இன்று (11) அதிகாலை&nbsp; இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>உந்துருளியில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf8259e-b08e-4ca0-bdea-766c6603aeb0/26-6aa3656a73a35.webp' /></p><p> 

அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். </p><p>

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zVOkx2MwpvA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சிம் அட்டைகளை வாங்குவோருக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sim-cards-must-provide-their-own-direct-photo-1789106244"></link>
            <id>https://ibctamil.com/article/sim-cards-must-provide-their-own-direct-photo-1789106244</id>
            <summary type="text">முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><p>

இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், காவல்துறை போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0982c5-56ac-4927-80a4-019ee632e8c4/26-6aa3a164ed87e.webp' /></p><p> 

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.</p><p> 

அந்த நிறுவனங்களுடன் இணைந்து சிம் விதிமுறைகளைப் புதுப்பித்து, குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து (பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள்) புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.</p><p></p><h2>3 கோடி சிம் அட்டைகள்</h2><p> </p><p>

இது தொடங்கப்பட்ட பின்னர், 2027 ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும், அதாவது வாடிக்கையாளரை அடையாளம் காண்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e33adc9-0bfc-4cc7-bc19-397246083924/26-6aa3a165aa2a6.webp' /></p><p> 

இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும். </p><p>நாட்டிலுள்ள சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p> சேவைத் தரம் குறைவாக இருப்பதாக அந்த மக்களிடமிருந்து வரும் ஒரு முறைப்பாடாகும். 

தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நாங்கள் இயங்கி வருகிறோம். அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:24:33+00:00</updated>
        </entry>
    </feed>
