<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-07T20:22:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயன்படுத்திய நாணய பரிமாற்ற நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-cut-off-iran-backed-financial-support-1786132083"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-cut-off-iran-backed-financial-support-1786132083</id>
            <summary type="text">
தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் சட்டவிரோத வலையமைப்பைக் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>

பிராந்திய ஸ்திரமின்மையை உருவாக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், இராணுவத் திறன்களை மேம்படுத்தவும் ஈரான் பயன்படுத்தும் நிதியாதாரங்களைத் துண்டிக்கும் நோக்கில், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகபட்ச அழுத்தக் கொள்கையின் கீழ் அமெரிக்க திறைசேரி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அரச அமைப்புகளுக்குப் பயனளிக்கும் வகையில் நிதியைச் சட்டவிரோதமாகப் பணமாக்கிய குற்றச்சாட்டில், துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஷெல்பிட் (Shelbit) கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனம் மற்றும் அதன் நிறுவனரான ஈரானிய வெளிநாட்டவர் சியாவாஷ் கைவன்பூர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க திறைசேரியின் அறிவிப்பு&nbsp;</h2><p>மேலும், முன்னர் தடைசெய்யப்பட்ட ஈரானிய டிஜிட்டல் சொத்து பரிமாற்றகங்கள் சார்ந்த மில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாண்ட குற்றச்சாட்டில், ஈரானைத் தளமாகக் கொண்ட அபான் டெதர் (Aban Tether) என்ற டிஜிட்டல் சொத்து பரிமாற்ற நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a75373-0b4e-4cc9-b090-c33737c8f61b/26-6a763a92b1b95.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Americas Quarterly</i></p><p>
இவற்றுடன், ஈரானிய வங்கிகள் சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற உதவிய துபாயைச் சேர்ந்த மேலும் பல நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மீதும் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

ஈரானிய ஆட்சியைத் தொடர்ந்து இயங்க வைக்கும் இத்தகைய சட்டவிரோத நிதி வலையமைப்புகளை அமெரிக்க திறைசேரி தொடர்ந்து வேட்டையாடி அழிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T20:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா விசாவில் வேலை! 94 வெளிநாட்டவர்களுக்கு 7 மில்லியன் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-nationals-worked-tourist-visa-fined-1786128232"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-nationals-worked-tourist-visa-fined-1786128232</id>
            <summary type="text">
இலங்கையில் சுற்றுலா விசாக்களில் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 சீன நாட்டினருக்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய 7 மில்லியன் ரூபா அபரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கையில் சுற்றுலா விசாக்களில் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 சீன நாட்டினருக்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய 7 மில்லியன் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைக்கப்பட்ட நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>

சுற்றுலா விசாக்களில் இலங்கையில் பணியாற்றுவதும், விசா நிபந்தனைகளை மீறுவதும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p><h2>ஒப்பு கொள்ளப்பட்ட குற்றம்&nbsp;</h2><p>

அதன்படி, ராஜகிரிய பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு, விசா நிபந்தனைகளை மீறிப் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 94 சீன நாட்டவர்களும் தங்கள் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd46ef5-4e24-48fa-8515-d0f56a734d44/26-6a762ba22c301.webp' /></p><p>

இந்த நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு சீன நாட்டவருக்கு தலா ரூ. 75,000/- அபராதம் வீதம் 94 சீன நாட்டவர்களுக்கும் ரூ. 70,50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T19:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையெறி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அறுவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-arrested-with-weapons-1786125761"></link>
            <id>https://ibctamil.com/article/six-arrested-with-weapons-1786125761</id>
            <summary type="text">ரத்மலான கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரத்மலான கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, கல்கிசை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் என சந்தேகிக்கப்படும் ரூ. 3 லட்சம் மற்றும் 8 கைபேசிகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரத்மலான ஆர்தர் பகுதியில், கல்கிசை காவல்துறை சிறப்பு மோட்டார் சைக்கிள் படை அதிகாரி ஒருவர் 1,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c18dae82-310d-48e1-ad07-4f1467f0c830/26-6a762048d3909.webp' /></p><p>
</p><p>
பின்னர், போதைப்பொருள் பெறப்பட்ட இடம் குறித்து விசாரணை செய்தபோது, ​​போதைப்பொருள் விற்கப்பட்ட வீடு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.</p><p>

அதன்படி, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​காவல்துறையினரால் இந்த ஆயுதங்களையும் பணத்தையும் மீட்க முடிந்தாக கூறப்படுகிறது.</p><h2>தடுப்பு காவல் உத்தரவு</h2><p>
</p><p>
அங்கு கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 29 வயதுடையவர் என்றும் மற்ற சந்தேக நபர்கள் 33, 22, 24, 51 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82101e9e-9eae-4d56-9da1-e1e7945433d2/26-6a762049cb639.webp' /></p><p>

சந்தேகநபர்கள், ரத்மலான, நாவலப்பிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி, சந்தேகபர்களை நீதிபதி முன் முற்படுத்தி தடுப்பு காவல் உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T18:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-bodies-recovered-in-mannar-1786123741"></link>
            <id>https://ibctamil.com/article/two-bodies-recovered-in-mannar-1786123741</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக பேசாலை காவல்துறை தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டு பிள்ளைகளின் தந்தை&nbsp;</h2><p>

இதையடுத்து பேசாலை காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cea69e-38a7-4cd3-91f8-5ae40f35b2f0/26-6a76178d15487.webp' /></p><p>
</p><p>
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் ( வயது-41 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும், மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>அடையாளம் தெரியாத சடலம்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, மன்னார் வங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (7) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7836849d-25f3-42da-9da2-2485697589dd/26-6a76178dc4760.webp' /></p><p>
</p><p>
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் இதுவரை அதனை அடையாளம் காணமுடியவில்லை என கூறப்படுகிறது.</p><p>

இதன்படி, குறித்த சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவரா? என்பது குறித்து இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T17:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786122174"></link>
            <id>https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786122174</id>
            <summary type="text">நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை (AAT) கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகர, பிரதி காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை (AAT) கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
</p><p>
சபையின் உத்தரவின்படி, குறித்த பதவி உயர்வானது 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் பின்னோக்கிச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த பின்னரே, அவருக்கு இந்தப் பதவி உயர்வை வழங்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>CID பணிப்பாளர் பதவி</h2><p>
</p><p>
நியாய சபையின் கட்டளைக்கு அமைய, காவல்துறை மா அதிபர் இன்றையதினம்(07) வெள்ளிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ காவல்துறை அறிவித்தலை வெளியிட்டு, அவரது பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6271ffd8-d631-438e-945f-e13be24130d2/26-6a76113a6b1a3.webp' /></p><p> 

இந்தப் பதவி உயர்வு காரணமாக, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி உதவி காவல்துறை பரிசோதகராக இலங்கை காவல்துறை சேவையில் இணைந்த ஷானி அபேசேகர, தனது பணிக்காலத்தில் காவல்துறை பரிசோதகர், தலைமை காவல்துறை பரிசோதகர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) உள்ளிட்ட பல நிலைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T17:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை! ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-saudi-arabia-over-pakistan-turkey-deal-1786108495"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-saudi-arabia-over-pakistan-turkey-deal-1786108495</id>
            <summary type="text">பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் சவூதி அரேபியா புதிதாகக் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டில் ஈரான் தனது முதல் எதிர்வினையை இவ்வாறு வெளியிட்டுள்ளது.
</p><p>

இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு ஒருபோதும் உத்தரவாதம் அளிக்காது என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
</p><p>
</p><p></p><h2>அமெரிக்கர்களை&nbsp;சார்ந்திருந்த&nbsp;பாதுகாப்பு </h2><p>விடயம் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e3ba00-067b-4d43-829f-84f573b384da/26-6a75daa1e0ac1.webp' /></p><p>
</p><p>"பல தசாப்தங்களாக அமெரிக்கர்களை ஒருதலைப்பட்சமாகச் சார்ந்திருந்தது பாதுகாப்பைத் தரத் தவறியதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான ஒரு காகித ஒப்பந்தம் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவூதியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
</p><p>
 ஈராக் மற்றும் யேமனில் உள்ள, ஈரான் ஆதரவு பெற்ற தாக்குதல் குழுக்கள், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் ஒரு பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதலை சவூதி அரேபியா மீது நடத்துவதற்கு தயாராகி வருவதாக வெளியாகிய தகவலை அடுத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, சவூதி அரேபியா மீதான ஒரு பெரிய தாக்குதலின் விளைவுகள் குறித்து தெஹ்ரானுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும்.</p><p>

ஏனெனில் அந்தத் தாக்குதல் இப்போது பாகிஸ்தான் மற்றும் துருக்கியையும் உள்ளிழுத்து, போரை வியத்தகு முறையில் விரிவுபடுத்தும் என நம்பப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகள் 500 - ஐ தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786112388"></link>
            <id>https://ibctamil.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786112388</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய இன்றைய தினம்(07.08.2026) 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>56ஆவது நாளாக முன்னெடுப்பு</h2><p> </p><p>

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900e59b6-e580-4f61-adbd-5009c1b8f379/26-6a75e985ab0d9.webp' /></p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதில், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புனரமைக்கப்படாத பாலம்! உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523"></link>
            <id>https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523</id>
            <summary type="text">கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி
தரும்படி&nbsp;இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பாலத்தின் அடித்தளங்கள்</h2><p>

1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக
பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின்
ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல
போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம்
ஆண்டு மீட்டேடுத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9dccaef-f9a5-43d6-bc7a-e90bbfaf75a6/26-6a75e624a7afc.webp' /></p><p>அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள்
வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின்
வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.</p><p>தற்போது பாலத்தின்
அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்
உள்ளது.</p><p> இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள்
இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்
பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955"></link>
            <id>https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955</id>
            <summary type="text">2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் முதுகலைப் படிப்பைத் தொடர வெளிநாடுகளுக்குச் சென்றிருந்ததாகவும், மற்றவர்கள் வேலைவாய்ப்புக்காகவோ, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிநாடு சென்றிருந்ததாகவும், கூறியுள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊதியமில்லா விடுப்பு&nbsp;</h2><p>

2020-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டுக்குள் 1,429 மருத்துவர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>


அதே காலகட்டத்தில், 140 சிறப்பு மருத்துவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்திற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.</p><p>

வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு பதவி விலகும் அல்லது பணியிலிருந்து விலகும் மருத்துவர்கள் குறித்த தரவுகளை சுகாதார அமைச்சகம் பராமரிப்பதில்லை என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636"></link>
            <id>https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. </p><p>

முன்மொழியப்பட்ட இந்த செயல்முறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>33 சிறைச்சாலைகள் </h2><p>இந்த செயல்முறையானது அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை காவல்துறை, சிறப்பு பணிப்படை (STF) மற்றும் தேவைப்படுமிடங்களில் ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821d0f98-6baf-45d3-a3e7-af4a2371e6d2/26-6a75ee65de6cb.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டம் அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T14:40:49+00:00</updated>
        </entry>
    </feed>
