<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-07T14:16:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ள நாமல்! சிறைச்சாலை ஆணையாளரை சென்றடைந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-to-visit-parliament-tomorrow-1788790484"></link>
            <id>https://ibctamil.com/article/namal-to-visit-parliament-tomorrow-1788790484</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதில் வழங்கியுள்ளார்.</p><p>

குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
</p><p>
இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச</h2><p>




இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc2a2e8-92a6-4a78-b684-c81458a73bca/26-6a9ec6d7216b2.webp' /></p><p>இதன்படி நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.
</p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முன்னதாக அனுமதி கோரியிருந்தார்.</p><p></p><h2>எழுத்துபூர்&nbsp;கோரிக்கை</h2><p>இந்த கோரிக்கையானது சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அனுப்பப்பட்டிருந்தது.</p><p>



நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என முன்னதாக கூறப்பட்டது.</p><p>அதன்படி, நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பிக்கள் சிலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-charges-filed-against-former-batti-mps-1788789710"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-charges-filed-against-former-batti-mps-1788789710</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது
ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது
ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>தீவிர&nbsp;விசாரணை</h2><p>“குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb5cdca-c0bc-42de-aa13-bad916f9d5f1/26-6a9ec3d114b7b.webp' /></p><p>சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு,
விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.
</p><p>
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில்
சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p> அதே நேரத்தில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,
கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச
குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் தலைவராக ரணில்</h2><p>
</p><p>
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன்
சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல்
கொடுத்து வருகின்றார்.</p><p>
ரணிலுக்கு அன்று ராஜபக்சர்கள் திருடர்களாக தெரிந்தது. இன்று அவர்கள் நல்லவர்கள்
போல தெரிகின்றது. </p><p>ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்சர்களின்
தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார். </p><p>அவர்களின் செயல்பாடு இன்று
மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது

இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக
இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-tamils-mobilize-for-semmani-awareness-1788783056"></link>
            <id>https://ibctamil.com/article/british-tamils-mobilize-for-semmani-awareness-1788783056</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hill பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
</p><p>
தமிழர் தாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிக்கொண்டு தரையில் படுத்து இறந்த உடல்களைப் போன்று காட்சியளித்தனர்.</p><p>

1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 18 வயதான தமிழ் மாணவி கிருஷாந்தி குமாரசாமியையும் நினைவுகூரும் வகையில், இரத்தக் கறைகளுடன் கூடிய பிரமாண்டமான வெள்ளைச் சீருடையொன்றைச் சுற்றி போராட்டக்காரர்கள் படுத்திருந்தனர்.</p><p></p><h2>நீண்டகால மனித உரிமை மீறல்கள்</h2><p>
</p><p>
போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீதியால் சென்றவர்களுக்கு தகவல் அட்டைகளும் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6033e5-f807-4be9-9ced-d98e589c17b7/26-6a9eaa2c15af6.webp' /></p><p>

சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கை ஒரு கவர்ச்சிகரமான விடுமுறைத் தலமாக முன்னிறுத்தப்படும் நிலையில், நாட்டின் நீண்டகால மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால அட்டூழியங்கள் தொடர்பான வரலாற்றையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் PEARL ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் வரலாற்றுச் சங்கம், Tamil Solidarity, தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
</p><p>
PEARL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி மதுரா ராசரத்தினம், இந்த நடவடிக்கையின் நோக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையில், </p><p>பல தசாப்தங்களுக்குப் பின்னர் செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 600 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c97d6bf-2595-42e6-abc8-d3226331f0f8/26-6a9eaa2cd89b1.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியை தமிழர்கள் மறந்துவிடவில்லை என்பதையும், உண்மையைப் புதைத்துவிட முடியாது என்பதையும் வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி&nbsp;</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், 1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர்களின் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a845befb-a6e5-428f-8099-6edbbb7483b2/26-6a9eaa2d9a73c.webp' /></p><p>

1998ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியத்தின் மூலம் செம்மணியில் நூற்றுக்கணக்கான காணாமல் போன தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
</p><p>
இந்த தகவல் வெளியான போதிலும், செம்மணி தொடர்பான விரிவான விசாரணைகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் பல்வேறு நிர்வாகத் தடைகள் மற்றும் தாமதங்களுக்கு உள்ளாகியதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின்போதே சோமரத்ன ராஜபக்ச செம்மணி புதைகுழிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
</p><p>
1996 செப்டெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி அருகே கிருஷாந்தி குமாரசாமி பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவர் ஆகியோரும் கொல்லப்பட்டு, கிருஷாந்தியின் உடலுக்கு அருகில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலைகள் தொடர்பான வழக்கில் 1998ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f579c49b-37a2-4464-bba6-1a49981cd1fe/26-6a9eaa2e675bd.webp' /></p><p>செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் கோரி வருகின்றன.
</p><p>
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் பின்னணியில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் பங்கேற்ற பிரித்தானியத் தமிழர்கள் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T12:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மயானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-cache-discovered-in-colombo-cemetery-1788782054"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-cache-discovered-in-colombo-cemetery-1788782054</id>
            <summary type="text">கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.இதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.</p><p>இதில் T-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மீட்கப்பட்ட துப்பாக்கிகள்</h2><p>மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69fa1dc-a4cc-482f-8d73-31114306e124/26-6a9ea5e7b558e.webp' /></p><p>கடந்த 25 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் டுபாயில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evidence-in-the-case-against-kumara-jayakody-1788780623"></link>
            <id>https://ibctamil.com/article/evidence-in-the-case-against-kumara-jayakody-1788780623</id>
            <summary type="text">முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.</p><p>இதன்படி எதிர்வரும், ஒக்டோபர் 5ஆம் திகதியில் சாட்சியங்களை அழைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>ஊழல் விசாரணை ஆணைக்குழு</h2><p>
</p><p>
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அசித்த அன்டனி முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் உள்ள வீதிகளுக்கு தார் இடும் பணிக்கான ஒப்பந்ததாரரை தெரிவு செய்வதற்காக 2014ஆம் ஆண்டு கொள்வனவு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef9992-820b-47a3-9296-eeb32f9c4e5a/26-6a9ea050ca23e.webp' /></p><p>
</p><p>
அந்த காலப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார ஜயகொடி, நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றியதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.</p><p>
அதன்படி, உரிய கொள்வனவு நடைமுறையின் ஊடாக வீதி தார் இடும் பணியை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதாகவும், அந்த நிறுவனத்துக்கு முற்பண உத்தரவாதத்தின் அடிப்படையில் ரூ.8,859,708 முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மீளப் பெறப்பட்ட தொகை</h2><p>
</p><p>
கொள்வனவு மற்றும் நிதிப் பிரிவுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த பின்னர், உரிய கொள்வனவு நடைமுறை முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பணம் செலுத்துவதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
எனினும், குறித்த நிறுவனம் வீதிகளுக்கு தார் இடும் பணியை மேற்கொள்ளத் தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

திட்டத்துக்காக கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் நிறுவன வளாகத்திலேயே கைவிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்த முற்பண உத்தரவாதத்தின் கீழ் பின்னர் ரூ.2,214,921 மாத்திரமே மீளப் பெறப்பட்டதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.</p><p>

இதனையடுத்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ள மகிந்த : மொட்டுக்கட்சி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-to-participate-in-slpp-anuradhapura-rally-1788777922"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-to-participate-in-slpp-anuradhapura-rally-1788777922</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று&amp;nbsp;முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று&nbsp;முன்னாள் அமைச்சரும் கட்சியின் செயற்பாட்டுத் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி மேடைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச வருகை தரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மக்கள் பேரணியில் கலந்து கொண்டாலும், அவர் பொது மேடையில் ஏறி மக்களிடையே உரையாற்றுவதைத் தவிர்த்துவிட்டு ,மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியில் அல்லது வேறு அமர்வில் இருந்து கொண்டு பேரணியில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது</h2><p>கடந்த வெள்ளிக்கிழமையன்று (04) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்‌ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf28d3b8-dc5f-4cf7-bb59-5104d49b3eca/26-6a9e9879d042d.webp' /></p><p>இந்த சூழ்நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது” என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:07:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வீடுகளை பரிசளித்த அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-provides-houses-to-low-income-families-1788775296"></link>
            <id>https://ibctamil.com/article/government-provides-houses-to-low-income-families-1788775296</id>
            <summary type="text">ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் பாணம, லாஹுகல மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அண்மையில் கையளிக்கப்பட்டன.</p><p></p><h2>மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்</h2><p>
</p><p>
ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்காகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5bc3b97-9cea-4cd2-8e56-f3fd3ece023d/26-6a9e973200b3f.webp' /></p><p>கையளிக்கபட்ட வீடுகளின் பயனாளர்களின் தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்டவற்றுடன் ஒவ்வொரு வீட்டினதும் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வீடுகளைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p> 

பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p><u><b>அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது</b></u></p><p>மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இந்நிலையில் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4df37b-f81d-4f97-b493-0a8cab872c16/26-6a9e6897ea491.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய வனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yala-national-park-s-temporarily-closed-1788771717"></link>
            <id>https://ibctamil.com/article/yala-national-park-s-temporarily-closed-1788771717</id>
            <summary type="text">யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு&amp;nbsp;வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.நாட்டில் நிலவும் கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு&nbsp;வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>கடும் வெப்பமான வானிலை</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc87b7d-3992-43b3-8f5d-b9ab512f75c8/26-6a9e8beb392fa.webp' /></p><p> 

மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. </p><p>

இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.</p><p> 

தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேசத்துக்கு ஐ.நா. அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/volker-turk-s-latest-report-on-sri-lanka-1788771862"></link>
            <id>https://ibctamil.com/article/volker-turk-s-latest-report-on-sri-lanka-1788771862</id>
            <summary type="text">ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.</p><p>ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டமானது இன்று ஆரம்பமான நிலையில்,&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் <a href="https://www.hrw.org/news/2026/09/07/un-finds-little-progress-on-justice-in-sri-lanka" target="_blank">வோல்கர் டர்க்</a> வெளியிட்ட சமீபத்தய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமை தொடர்பான புதிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>கடந்த கால மனித உரிமை மீறல்</h2><p>

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 2024 செப்டெம்பரில் பதவியேற்றபோது, கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f1b7b2-2167-46e8-b013-19a6117d1558/26-6a9e846ad66d3.webp' /></p><p>அறிக்கையின்படி, “சில முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், 2009ஆம் ஆண்டு முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் தீவிர மீறல்கள் தொடர்பில் இதுவரை போதுமான அங்கீகாரமோ பொறுப்புக்கூறலோ ஏற்படுத்தப்படவில்லை.</p><p>
இதேபோன்ற கவலைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) செப்டெம்பர் 1ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையிலும் பதிவு செய்துள்ளது.
</p><p>
சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீன பொது அலுவலகத்தை நிறுவுவதாக அரசாங்கம் வழங்கிய உறுதியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
</p><p>
அதேபோன்று, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
</p><p>
கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability Project எனப்படும் பொறிமுறையையும் திசாநாயக்க அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.&nbsp;</p><p></p><h2>அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் துன்புறுத்தவும் கைது செய்யவும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9040e5c-d23a-4074-a2c9-5cf1fb80aadc/26-6a9e846b8d299.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரச புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கான தற்காலிகத் தடை விதிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறது.</p><p> நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>
அடக்குமுறை சட்டங்களை நீக்குதல், பாதுகாப்புத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம்.</p><p>
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், குற்றங்களுக்கான தண்டனையின்மை மேலும் வலுப்பெறுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையின்மை மேலும் ஆழமடையும் அபாயம் இருக்கின்றது.</p><p>சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னேற்றங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.</p><p>

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிமல் பெரேராவுக்கு உயிரச்சுறுத்தல்! அவுஸ்திரெலியாவில் பதுங்கியுள்ள மற்றுமொரு முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nimalperera-receives-death-threat-namals-arrest-1788763059"></link>
            <id>https://ibctamil.com/article/nimalperera-receives-death-threat-namals-arrest-1788763059</id>
            <summary type="text">சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தின் முக்கிய சாட்சியாளரான&nbsp;நிமல் பெரேராவின் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p> தொழிலதிபர் நிமல் பெரேரா சமர்ப்பித்துள்ள பிரமான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமர்பனங்களை நீதிமன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த நிலையில் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரான&nbsp;நிமல் பெரேரா தற்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளார்.</p><p></p><h2>புரூணையில் அமைந்துள்ள நிறுவனம்</h2><p>ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் சான்றிதழொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், அதனை நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் சவால் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a14c99a-6cfd-41d9-95d5-2ed18fe3b600/26-6a9e7b0f6da0a.webp' /></p><p>இதனடிப்படையில் உண்மைகளை கருத்தில்கொண்ட நீதவான் அவரை&nbsp; எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p>
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.&nbsp;</p><p>ஏர்பஸ் விமானங்களை கொள்வனவின் நிறுவனத்தின் தாய் நிறுவனம் புரூணையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க&nbsp;</h2><p>
</p><p>
குறித்த ஏர்பஸ் பரிவர்த்தனையில் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோக்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d489fac-acdd-4741-a549-8bd8f0cc3cdd/26-6a9e7b1024656.webp' /></p><p>
</p><p>
‘Biz Solutions’ நிறுவனத்தின் உரிமையாளராகவும் அதன் பணிப்பாளராகவும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனின் மனைவி. பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிலிருந்து ரூ.9 மில்லியன், ரூ.7 மில்லியன், ரூ.2 மில்லியன் மற்றும் ரூ.6 மில்லியன் என நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.25 மில்லியன் ஷமீந்திர ராஜபக்ச என்பவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது</p><p>மேலும், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேராவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கிக் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
</p><p>
பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்சவுக்கு தாம் வழங்கியதாக நிமல் பெரேரா தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>2014ஆம் ஆண்டின் நாணய மாற்று விகிதத்தின்படி அந்தத் தொகையின் பெறுமதி சுமார் ரூ.100 மில்லியன் எனவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவிலிருந்து சத்தியப்பிரமாணம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.</p><p></p><h2>உயிர் அச்சுறுத்தல்கள்</h2><p> </p><p>தமக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகவே தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போதும் இலங்கை வந்தார் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிமல் பெரேராவிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.</p><p>
மற்றொரு சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>நாமல் சார்பில் பிணை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

தமது வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது நிமல் பெரேராவின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>நிமல் தொடர்பான மற்றொரு வழக்கு&nbsp;</h2><p>
</p><p>
நிமல் பெரேரா நாமலுக்கு பணம் வழங்கியதாக உறுதிப்படுத்துவதற்குப் போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e94f58-b76f-494a-87a7-ba822388c535/26-6a9e7b10cf7d6.webp' /></p><p>
</p><p>
நிமல் பெரேரா பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதால், அவரது நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியிருந்தார்.</p><p>

பிரான்ஸ் அதிகாரிகளோ அல்லது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளோ நிமல் பெரேராவுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மேலும், நிமல் பெரேரா தொடர்பான மற்றொரு வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், அது கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

அந்த வழக்கிலும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் கணக்கு தமக்குச் சொந்தமானதல்ல என்றும், அது இத்தாலிய நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் நிமல் பெரேரா முன்னர் தெரிவித்திருந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
</p><p>
இதனால், நிமல் பெரேரா ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விதமான வாக்குமூலத்தையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அதற்கு மாறான வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
2019ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிமல் பெரேரா வழங்கிய வாக்குமூலங்களை நம்பவில்லை என்றும், அவ்வாறிருக்கும்போது 2026ஆம் ஆண்டு அவரது வாக்குமூலங்களை எவ்வாறு நம்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இத்தகைய நிலைமையை “தேவை ஏற்படும் போது கபரகொயாவையும் தலகொயாவாக மாற்றும் கோட்பாடு” என வர்ணிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, இந்த விடயங்களை விசேட காரணிகளாகக் கருதி தமது வாடிக்கையாளருக்கு பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T09:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ongoing-struggle-of-tamils-in-the-north-and-east-1788771558"></link>
            <id>https://ibctamil.com/article/ongoing-struggle-of-tamils-in-the-north-and-east-1788771558</id>
            <summary type="text">இனவழிப்புப் போரும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஈழ மண்ணில் நினைவே இன்னமும் எம்மைத் திருகிக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனவழிப்புப் போரும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஈழ மண்ணில் நினைவே இன்னமும் எம்மைத் திருகிக்கொண்டிருக்கிறது. </p><p>முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வருவார்கள், மீள்வார்கள், அவர்கள் பற்றிய உண்மைகள் கிட்டும் என்றும் இன்னும் பலவாறும் நினைவில் சுமந்துகொண்டு வடக்கு கிழக்கு அன்னையர்களும் மக்களும் மிக நீள் பயணத்தில் தொடர்கையில், போராடுவதும் போராடியே இறப்பதுமாக நிர்பந்திக்கப்பட்டிருப்பது எத்தனை அநீதியானது?</p><p>

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு - கிழக்கு தமிழர் தேசத்தில் இம்முறையும் போராட்டங்கள், ஊடக சந்திப்புகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் மற்றும் “நீதிக்கான நீண்ட பயணம்” என்ற தொனிப்பொருளிலான அனைத்துலக மாநாடு எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. </p><p>பல ஆண்டுகளாகத் தமது உறவுகளின் நிலை என்னவென்பதை அறிந்துகொள்ள முடியாமல் போராடிவரும் குடும்பங்கள், மீண்டும் ஒருமுறை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தமது குரலை எழுப்பியுள்ளனர்.</p><p></p><h2>நீதிக்கான நீண்ட பயணம்</h2><p>யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “நீதிக்கான நீண்ட பயணம்” அனைத்துலக மாநாடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை மீண்டும் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்ற முக்கிய நிகழ்வாக அமைந்தது. </p><p>வடக்கு - கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் தரப்பினர், மதத் தலைவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். </p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலப் போராட்டத்தின் அனுபவங்களையும், இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்தும் தீர்க்கப்படாத கோரிக்கைகளையும் சர்வதேச பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
</p><p>
மாநாட்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியும் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு குடும்பங்கள் வீதியில் இறங்கினர்.</p><p> ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் அந்தப் புகைப்படங்கள் மாறவில்லை; அவற்றை ஏந்திய கைகளில் மட்டும் தலைமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில குடும்பங்களில் போராட்டத்தை ஆரம்பித்த பெற்றோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் பிள்ளைகள் இன்று அதே கோரிக்கையுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.</p><p></p><h2>ஊடக சந்திப்புக் குரல்கள்</h2><p>&nbsp;இதுவே காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் துயரத்தின் நீளத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய முக்கியமான நிலையாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வீதிக்கு வந்த தாய்மார்கள் பலர், தமது பிள்ளைகளைக் கண்டறிய முடியாமலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p> கணவரைத் தேடி போராடிய பெண்கள், தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தப் போராட்டத்திலேயே கழித்துள்ளனர். இன்று அந்தப் போராட்டத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
</p><p>
அனைத்துலக தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கின் பல மாவட்டங்களிலும் ஊடக சந்திப்புகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்டத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தினர்.</p><p> அரசாங்கங்கள் மாறினாலும் தமது பிரச்சினைக்கான தீர்வு மாறவில்லை என்றும், பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் அரச பொறிமுறைகள் உருவாக்கப்பட்டபோதும் தமது உறவுகளின் நிலை தொடர்பாக நம்பகமான பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>அரசின் அநீதியான அணுகுமுறை</h2><p>இதற்கிடையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p> தமக்குப் பதில் வேண்டும், நீதியே வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட செயலகத்துக்கு வெளியே நின்ற அவர்களை பொலிஸார் இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேற்றிய சம்பவமும் விமர்சனத்துக்குள்ளானது.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் கேட்பது தமது உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இல்லையா என்பதற்கான உண்மையான பதிலையே. </p><p>அவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பன தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகால கோரிக்கை. </p><p>இதற்குப் பதிலாக காலத்தை நீட்டிக்கும் விசாரணைகள், ஆணைக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் உருவாக்கப்படுவது குடும்பங்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்துள்ளது.</p><p></p><h2>ஒரு தலைமுறையைத் தாண்டிய போராட்டம்</h2><p>வடக்கு - கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று ஒரு தலைமுறையின் வாழ்க்கையைத் தாண்டியுள்ளது. </p><p>போராட்டத்தில் நின்ற பல தாய்மார்கள் இறந்துவிட்டனர். அவர்களுடன் சில பதில்களும் புதைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவர்களின் பிள்ளைகள் அந்தப் போராட்டத்தை நிறுத்தவில்லை.</p><p> இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை கடந்த காலத்தின் ஒரு விவகாரமாக இல்லாமல், இன்றும் தொடரும் மனித உரிமை மற்றும் நீதிக்கான கேள்வியாகவே உள்ளது. நடந்த இனப்படுகொலை சார்ந்து மறைக்கப்பட்ட பக்கங்களின் ஒருமுகம். </p><p>இதனால் இது சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்கிற நிலையை உணர்த்துகிறது.

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள் இதையே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.</p><p> நீதிக்காகப் போராடுவது மட்டுமல்ல, போராடிப் போராடியே ஒரு தலைமுறை இறந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பின்னால் நிற்கும் அடுத்த தலைமுறையும் அதே புகைப்படங்களையும் அதே கோரிக்கைகளையும் ஏந்த வேண்டிய நிலை தொடர்கிறது.</p><p> இந்த அவலத்தை நினைக்கையில் பேரதிர்ச்சியே எஞ்சுகிறது.

அதனால் ‘நீதிக்கான நீண்ட பயணம்’ என்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக கடந்து வந்த அபாயப் பொறிகள் நிறைந்த பெருந்துயரும் இழப்பும் கண்ணீரும் சுரந்த பாதையின் அடையாளம். </p><p>அந்தப் பயணம் எப்போது முடியும் என்பது இன்னமும் தெரியவில்லை என்பதே பெருந்துயரம். ஆனால் உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதையே வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற அனைத்துலக தின நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-07T09:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவிற்கான விமான சேவைகளை இரத்து செய்த சிறிலங்கன் எயார்லைன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-cancels-colombo-jakarta-flights-1788762922"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-cancels-colombo-jakarta-flights-1788762922</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா இடையிலான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய விமானச் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா இடையிலான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய விமானச் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தோனேசியாவின் 'அனக் கிரக்கடோவா' எரிமலையிலிருந்து பரவும் ஆபத்தான சாம்பல் புகைக் கூட்டங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அதன்படி, கொழும்பில் இருந்து ஜாகர்த்தா செல்லும் UL 364 மற்றும் ஜாகர்த்தாவில் இருந்து கொழும்பு திரும்பும் UL 365 ஆகிய இரு விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
அனக் கிரக்கடோவாவிலிருந்து சிலிக்கா துகள்கள் மற்றும் பாறை இடிபாடுகளுடன் கூடிய அடர்ந்த சாம்பல் புகை பரவியதால், ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயற்பாடுகளை இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28303d10-d023-42bc-bbfe-a98612fee765/26-6a9e841c1fdfa.webp' /></p><p>
</p><p>
காற்றில் மிதக்கும் இந்த சாம்பல் துகள்கள் விமான எஞ்சின்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால், இலங்கை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலும் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை நேற்று (06) இரவு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையே சேவைகளை நடத்தும் பல மேற்காசிய விமான நிறுவனங்களும் தங்களது பயணப் பாதைகளை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவின் மேன்முறையீட்டை மீளப்பெற்றுக்கொள்ள அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-withdraws-appeal-against-1788768971"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-withdraws-appeal-against-1788768971</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மேமுறையீட்டை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&amp;nbsp;நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மேமுறையீட்டை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி,யோசிதவால் இந்த மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில் இன்று (07.09.2026) உயர் நீதிமன்றத்தில் அவர் குறித்த மேன்முறையீட்டை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மீளப்பெற அனுமதி</h2><p>

குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த விடயத்தை எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு மேன்முறையீட்டை மீளப்பெற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5797207a-ee7c-4aa9-837f-3fad2b8cd8d0/26-6a9e7718cd4d8.webp' /></p><p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், மேல் நீதிமன்றம் வழங்கிய குறித்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் கூறிய யோஷித ராஜபக்ச, அதனை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு தனது சீராய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் அகழ்வுக்கு தயாரான சந்தேகநபர்கள் காவல்துறையால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspects-arrest-preparing-dig-treasure-mullaitivu-1788769692"></link>
            <id>https://ibctamil.com/article/suspects-arrest-preparing-dig-treasure-mullaitivu-1788769692</id>
            <summary type="text">முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>விசுவமடு பகுதியில் புதையல் அகழ்வுக்காக ஒருவரின் அழைப்புக்கினங்க வந்த நிலையில் குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>புதையல் அகல்வு</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்


நெலுக்குளம், வவுனியா
உலுகெட்டவெவ வீதி, கித்துல்ஹிட்டியாவ, முல்லைத்தீவு, முல்லிவைக்கால் மேற்கு கலபலுவாவ வீதி, தலங்கம வடக்கு,
கொஸ்வத்த குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96fd9a6-bcc8-4835-b44c-485a5f850134/26-6a9e759e94e32.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகல்வுக்கு பயன்படுத்தப்படும்
ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்தியவாகனம் ஒன்றும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை முல்லத்தீவு நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T08:29:08+00:00</updated>
        </entry>
    </feed>
