<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T15:07:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்வுகளில் மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளை பயன்படுத்துவது குறித்து முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/resolution-on-the-use-of-flashlights-and-fireworks-1787667110"></link>
            <id>https://ibctamil.com/article/resolution-on-the-use-of-flashlights-and-fireworks-1787667110</id>
            <summary type="text">திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக
உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம்
மற்றும் தேசிய மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று
(25.08.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக்
கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.</p><p></p><h2>முக்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>
கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன்
கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும்
வானவேடிக்கைகளின் தாக்கத்தால் 500 இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான
சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில்
முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல்
இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfbe8eed-e095-4861-a5b5-009d1bdd66ca/26-6a8da2a8214fe.webp' /></p><p>

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம்
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும்
மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில்
உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச்
சுட்டிக்காட்டினார். </p><p>பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள்
இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக
அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய், தந்தையை இழந்த 18 குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான காசோலைகள் வழங்கி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/housing-project-for-18-families-in-kilinochchi-1787666404"></link>
            <id>https://ibctamil.com/article/housing-project-for-18-families-in-kilinochchi-1787666404</id>
            <summary type="text">தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தாய் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு, கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில் வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கிளிநொச்சி பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், நீதி அமைச்சர் ஹார்சன நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.</p><p></p><h2>முக்கிய திட்டங்கள்&nbsp;</h2><p>
</p><p>
நீண்டகாலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்களுக்கு சொந்த வீடு அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe44a1b-b3af-4791-83c5-dc74c6efb71b/26-6a8d9fe64e167.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் மற்றும் ஆதவ் அர்ஜீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-will-imposed-tamil-nadu-chief-minister-vijay-1787657158"></link>
            <id>https://ibctamil.com/article/fine-will-imposed-tamil-nadu-chief-minister-vijay-1787657158</id>
            <summary type="text">தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 27ஆம் திகதி வரை சென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 27ஆம் திகதி வரை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மேலும் அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால், தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.</p><p>

தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.</p><p></p><h2>உயர்நீதிமன்றம் எச்சரிக்கை&nbsp;</h2><p>இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad4fe628-8b94-4989-bf49-2be9e4c61b6a/26-6a8d85690c129.webp' /></p><p>
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25.08.2026) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதல்வர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நிறைவுபடுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T14:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/info-about-politicians-on-padme-s-mobile-phones-1787664995"></link>
            <id>https://ibctamil.com/article/info-about-politicians-on-padme-s-mobile-phones-1787664995</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சந்தேக நபரான கெஹல்பத்தாரா பத்மேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சந்தேக நபரான கெஹல்பத்தாரா பத்மேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளில் இருந்து, ஏழு நடிகைகள், மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

சந்தேக நபரின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, ​​ஒன்பது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் புகைப்படங்களும் பதிவுகளும் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் ஏழு நடிகைகள் மற்றும் மாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.</p><p>
கண்டறியப்பட்டவை குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அடையாளம் காணப்பட்ட நபர்கள்</h2><p>இந்த வெளிப்படுத்தல் மட்டுமே, அடையாளம் காணப்பட்ட நபர்கள் ஏதேனும் குற்றம் செய்தார்கள் என்பதைக் குறிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072c65b9-c4bc-4b31-8405-08aec57235c3/26-6a8d9c387224a.webp' /></p><p>
குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகளை மீட்டிருந்தன.</p><p>அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும், புலனாய்வாளர்களால் அவற்றை மீட்டெடுக்க முடிந்தது.
</p><p>
மீட்கப்பட்ட பொருட்களில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 காணொளிகள் அடங்கியிருந்ததாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், அத்தகவல்கள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p></p><h2>13 சிறை அதிகாரிகள்</h2><p>
</p><p>
அந்தக் கருவிகளில் 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி எண்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதுடன், சிறைச்சாலைகள் தலைமை ஆணையருக்கு இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வாளர்கள் 17 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, கெஹல்பத்தாரா பத்மே 2021 மே மாதம் இலங்கையை சட்டப்பூர்வமாக விட்டு வெளியேறியதிலிருந்து, சுமார் 15 முறை 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். </p><p>அந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் படுகை பெட்ரோலிய ஆய்வு! உள்நுளைகிறது சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mannar-basin-petroleum-exploration-license-1787662345"></link>
            <id>https://ibctamil.com/article/mannar-basin-petroleum-exploration-license-1787662345</id>
            <summary type="text">மன்னார் படுகையில் இந்த ஆண்டுக்கான பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்றை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (25) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் இந்த ஆண்டுக்கான பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்றை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.</p><p> இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (25) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
</p><p>
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><h2>நான்கு ஆய்வுத் தொகுதிகள்</h2><p>
</p><p>
புதிய உரிமம் வழங்கும் சுற்றின் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வுத் தொகுதிகள், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளுக்காக வழங்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50bc719-80eb-42cc-af17-626db17ea79e/26-6a8d92cc7fab8.webp' /></p><p>
</p><p>
மன்னார் படுகையில் முன்னெடுக்கப்பட்ட முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோகார்பன்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், அப்பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவிக்கையில், இதுவரை ஒப்பீட்டளவில் பெருமளவு ஆய்வு செய்யப்படாத மன்னார் படுகைப் பகுதி, நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், அதிகாரசபையிடம் தற்போது உள்ள மன்னார் படுகை தொடர்பான புவியியல் தரவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
</p><p>
நீல் டி சில்வாவின் கூற்றுப்படி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியமும், 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை துளையிடுதல் மூலம் பிரித்தெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெருசலேமின் ஐ.நா. நிவாரணப் பணி தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-attack-on-un-relief-site-1787661576"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-attack-on-un-relief-site-1787661576</id>
            <summary type="text">ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
</p><p>
அங்குள்ள தொழிற்பயிற்சி மையங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை குறித்தும் ஹமாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
</p><p>
இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பின் திட்டம் எனவும் ஹமாஸ் கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>ஐ.நா. தீர்மானங்கள்</h2><p>

ஹமாஸின் டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
“இந்தத் தாக்குதல் ஐ.நா. தீர்மானங்களுக்கும் சர்வதேச மரபுகளுக்கும் ஒரு அப்பட்டமான சவால்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78015873-97c7-4498-a70a-e739f57c4246/26-6a8d8d0bcd150.webp' /></p><p>
</p><p>
இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். 

மேலும், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தவும், சியோனிச அமைப்புக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கைகளை விதிக்கவும், ஐ.நா. நிவாரணப் பணி முகமையைப் (UNRWA) பாதுகாப்பதிலும் அது தனது பங்கை ஆற்றுவதற்கு வழிவகுப்பதிலும் தமது பொறுப்புகளை நிறைவேற்றவும் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:05:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபாத் ஜெயசூரியவின் ஐ.சி.சி பதிவேட்டில் பதிவாகிய புள்ளிக்குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deduction-point-recorded-in-prabath-icc-record-1787660211"></link>
            <id>https://ibctamil.com/article/deduction-point-recorded-in-prabath-icc-record-1787660211</id>
            <summary type="text">ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் வீரர்&amp;nbsp; பிரபாத் ஜெயசூரியவுக்கு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் வீரர்&nbsp; பிரபாத் ஜெயசூரியவுக்கு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்திய அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ஆட்டமிழந்த பிறகு, தனது மட்டையால் எல்லை கோட்டு அடையாளங்களை தாக்கியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A third player has been sanctioned by the ICC for an incident during the second <a href="https://x.com/hashtag/WTC27?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WTC27</a> contest between Sri Lanka and India in Colombo.<a href="https://t.co/WzZVABH8uT">https://t.co/WzZVABH8uT</a></p>&mdash; ICC (@ICC) <a href="https://x.com/ICC/status/2092179406471278827?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>மூன்றாவது வீரர்</h2><p>“இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை பெற்றதையடுத்து, தண்டனைக்கு உள்ளான மூன்றாவது வீரராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de4572c-b1b4-4253-a49f-f75bce597ae1/26-6a8d87b5ce244.webp' /></p><p>
</p><p>
ஜெயசூரிய, சர்வதேச போட்டியின்போது “கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதான உபகரணங்கள் அல்லது பொருத்தப்பட்ட சாதனங்களை தவறாகப் பயன்படுத்துதல்” தொடர்பான ஐசிசி வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறையின் 2.2ஆம் பிரிவை மீறியதாகக் கண்டறியப்பட்டார்.
</p><p>
இதனையடுத்து அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த 24 மாத காலப்பகுதியில் இது அவரது முதல் குற்றமாகும்.

திங்கட்கிழமை அன்றைய ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பின்னர், மீண்டும் ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியில் ஜெயசூரிய தனது துடுப்பினால் எல்லைக் கயிற்றின் தடுப்புப் பகுதிகளைத் தாக்கிய சம்பவமே இதற்குக் காரணமாகும்.
</p><p>
ஜெயசூரிய தனது தவறை ஒப்புக்கொண்டு, எமிரேட்ஸ் ஐசிசி எலைட் நடுவர் குழுவைச் சேர்ந்த போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதனால் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T12:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூஆர் முறை எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/when-will-qr-based-fuel-distribution-be-cancelled-1787653948"></link>
            <id>https://ibctamil.com/article/when-will-qr-based-fuel-distribution-be-cancelled-1787653948</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (25.08.2026) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
எரிபொருள் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாததால், எதிர்காலத்திலும் QR முறையின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கியூஆர் முறை எப்போது ரத்து</h2><p>

எனினும், QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் நுகர்வு ஓரளவு குறைந்துள்ளதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இந்த முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ee924d-a3e7-4e90-8a78-18bda1e54027/26-6a8d79fe3f703.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-announcement-of-provincial-council-elections-1787656360"></link>
            <id>https://ibctamil.com/article/govt-announcement-of-provincial-council-elections-1787656360</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.</p><p></p><h2>நாடாளுமன்றில் நியமிக்கப்பட்டுள்ள&nbsp;குழு</h2><p> </p><p>இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c582a65-897e-456c-8789-4d648d0e9b48/26-6a8d7be5d0522.webp' /></p><p> </p><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். </p><p>தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்“​ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:26:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[OMPயின் ஏமாற்று நாடகம்! யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : காவல்துறையினர் அராஜகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-front-of-jaffna-district-secretariat-1787654147"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-front-of-jaffna-district-secretariat-1787654147</id>
            <summary type="text">ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. </p><p>இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் காவல்துறையினர் கடுமையாக முரண்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வயோதிப தாய்மாரையும் போராட்ட களத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர்.</p><p></p><h2>முரண்பட்ட காவல்துறையினர்</h2><p>வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (25) குறித்த போராட்டம் நடைபெற்றது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (omp) ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரணச் சான்றிதழும் வேண்டாம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f720dc-4ecb-454c-b5da-9af3e2330cad/26-6a8d741f948b9.webp' /></p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம்
திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/f8AxIh972JU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-bottles-sold-at-inflated-prices-in-nallur-1787648933"></link>
            <id>https://ibctamil.com/article/water-bottles-sold-at-inflated-prices-in-nallur-1787648933</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p> இது குறித்து மேற்கொள்ளப்பட்ட&nbsp; விசாரணையில் குடிநீர் போத்தலானது அதிக விலைக்கு விற்பனை
செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>லட்சங்களில் அபராதம்</h2><p>
</p><p>
</p><p>அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கானது, இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77685613-8a17-4686-8d02-044bb4bab6d0/26-6a8d6a542c61d.webp' /></p><p> 

இதன்போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.</p><p>இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற
குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே
குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413"></link>
            <id>https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கெஹல்பத்தாரா பத்மே'வை, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.</p><p></p><h2>கனேமுல்ல சஞ்சீவ படுகொலை</h2><p>இதன்போது இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bb27ed-64ac-45b8-b1ed-35dba4c35440/26-6a8d6a60524b8.webp' /></p><p>பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக கெஹெல்பத்தர பத்மே (பத்மசிறி பெரேரா) செயல்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் இடம்பெற்ற விசாரணைகளில் 'கெஹெல்பத்தர பத்மே' சர்வதேச காவல்துறை (Interpol) மற்றும் இந்தோனேசிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Lstyt6kDUJU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது சகாக்கள் கடந்த 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.</p><p></p><h2>CID அதிகாரிகள் விசாரணை</h2><p>இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பத்மே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6259c9b9-598c-402c-81fc-b86e8071ce7b/26-6a8d6a615e97a.webp' /></p><p>இவர் மீது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பாரிய பணமோசடி, கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இதன்படி இந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து CID அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையில் டி-56 ரக துப்பாக்கிகள், மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa982bc-c9de-4da6-8e4d-ff5e20158dcd/26-6a8d6a62c23b6.webp' /></p><p>நுவரெலியா பகுதியில் பத்மேவின் நிதியுதவியுடன் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>மேலும், சட்டவிரோத சொத்துக்கள் ஒழிப்பு பிரிவினரால் இவருக்குச் சொந்தமான 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் முடக்கப்பட்டன.</p><p>இதன்படி தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பத்மேவின் தாயார் தாக்கல் செய்த மனுவை அடுத்து, அவரை CID custody-லேயே வைத்திருக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி பத்மே செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728"></link>
            <id>https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728</id>
            <summary type="text">வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
</p><p>
குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன்
சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன்
மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது.</p><p></p><h2>இறுதித் தமிழ் குறுநில மன்னன்</h2><p>


இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள்,&nbsp;அரச உயர் அதிகாரிகள்&nbsp;பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/776d35c3-90df-483a-8026-a470a47d0448/26-6a8d6e6233cd1.webp' /></p><p>இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆங்கிலேயர் கைப்பற்றுவதற்கு முன், அதனை சுதந்திரமாக ஆட்சி செய்த இறுதித் தமிழ் குறுநில மன்னன் பண்டாரவன்னியனின் ஆவார்.</p><p>வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்த ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் ஆதிக்கத்தையும், அவர்களின் வரி வசூலிப்பையும் இவர் கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை&nbsp;பண்டாரவன்னியனின் கொண்டுள்ளார்.</p><p>1803 ஆகஸ்ட் 25 அன்று முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயக் கோட்டையை&nbsp; தாக்கி, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி இந்த மன்னனுக்கு சொந்தமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def6159c-b115-4cb0-a7e6-0164bf74a741/26-6a8d6e62dde92.webp' /></p><p>மேலும், பிரித்தானியத் தளபதி வொன் டிறிபேர்க் தலைமையிலான பெரும் படையுடன் கச்சிலமடு என்ற இடத்தில் நடந்த இறுதிப் போரில் இவர் தீரத்துடன் போரிட்டார்.</p><p>ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு எதிராகத் தன் தாயக விடுதலைக்காகப் போராடி, 1803 அக்டோபர் 31 அன்று தனது உயிரைத் தியாகம் செய்தார்.</p><p>வன்னி மக்களின் சுதந்திரத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவரை, இலங்கை அரசு 1982 ஆம் ஆண்டு 'தேசிய வீரன்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கௌரவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c4e6b2-3845-40bb-8c72-5cc24fc739e3/26-6a8d6e63967e7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த தெல்லிப்பழை துர்க்கை அம்பாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414"></link>
            <id>https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தெல்லிப்பழை துர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.</p><p>தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;மகோற்சவ பெருவிழா கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில்10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று&nbsp;11 ஆம் நாளான இன்று (25) இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;சிறப்பு பூசைகள்</h2><p>இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb33005-e9af-4c2e-9fa6-cd1a8780c320/26-6a8d6cfa7d7f9.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி, தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க இரதோற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p>அத்துடன் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 12ஆம் நாள் திருவிழாவான
நாளை (26) தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865"></link>
            <id>https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865</id>
            <summary type="text">அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. </p><p>

இந்த நிலையில் அவருக்கான தடுப்புக் காவலை&nbsp;மேலும் 90 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்</h2><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db6e488a-c5d4-486a-a076-6f9626ba4693/26-6a8d63d7ea42f.webp' /></p><p> </p><p>

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடைமையாக்கப்படவுள்ள மில்லியன் கணக்கான சொத்துக்கள் : காவல்துறை அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-mn-1787641117"></link>
            <id>https://ibctamil.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-mn-1787641117</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில்&amp;nbsp;காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில்&nbsp;காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வுட்லர்&nbsp;இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><h2>நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித் என்பவரும் பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவரின் சொத்துகள் தொடர்பில் முன்னதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d2a827-b7f6-4b03-848b-6b35f363f53f/26-6a8d5ad54f14b.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், ஆபரணங்கள், பணம், வாகனங்கள், சொகுசு வீடுகள் மற்றும் காணிகள் போன்ற சட்டவிரோத சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிலும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற வழக்கு விசாரணை</h2><p>
</p><p>
அதன்படி, குறித்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a67888-3a48-42b5-8b0d-40b1ff4b7d29/26-6a8d58d3c4a47.webp' /></p><p>இதனிடையே, கடந்த 2025 ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின்கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
</p><p>
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது, வெளிநாடுகளில் தப்பியோடி வாழும் அனைத்து சந்தேகநபர்களையும் குற்றவாளிகளையும் தொடர்ந்தும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் உறுதியாகச் செயற்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:16:03+00:00</updated>
        </entry>
    </feed>
