<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T04:12:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fairly-heavy-rainfall-expected-in-island-parts-1789614331"></link>
            <id>https://ibctamil.com/article/fairly-heavy-rainfall-expected-in-island-parts-1789614331</id>
            <summary type="text">நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (17) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (17) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab837e2-4624-45a4-a3a6-6318369437f6/26-6aab5e6a10c4e.webp' /></p><p> </p><p>

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T03:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810"></link>
            <id>https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810</id>
            <summary type="text">ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>1.454 மில்லியன் யூரோ இலஞ்சம்</h2><p>

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகலமான உடற்பகுதியைக் கொண்ட 16 விமானங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2621e3c5-04d0-4cfd-9d55-a1f27844750b/26-6aab499b07b8d.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தின் கீழும் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர் ஒருவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, தற்போதைய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோ இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் முதலில் வைப்பிலிடப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அந்தக் கணக்கிலிருந்து, வர்த்தகர் நிமல் பெரேரா தலைவராக இருந்த சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நிமல் பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
நிமல் பெரேரா தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும், எனினும் அவர் வழங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரத்தில், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் கணக்கிலிருந்து தமக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13289df2-3145-4d0b-8b29-14e55749a634/26-6aab499bac66d.webp' /></p><p>
</p><p>
இந்தத் தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
மேலும், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து, அப்போதைய அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் 160,400 யூரோ மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணைகளின்போது, நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையில் இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும், விசாரணைகளின்போது கிடைத்த மின்னஞ்சல்கள் மூலம் சந்தேகநபர் செயற்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp; முதலாவது சந்தேகநபர்</h2><p>
</p><p>
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f32e528-da87-4950-b414-59b94bc70e0b/26-6aab499c69672.webp' /></p><p>இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என&nbsp; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T02:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daylight-robbery-in-the-bloody-mig-deal-1789608596"></link>
            <id>https://ibctamil.com/article/daylight-robbery-in-the-bloody-mig-deal-1789608596</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதுடன், ஏற்கனவே இருந்த விமானங்களைப் புனரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், உக்ரைனின் அரச நிறுவனமான Ukrinmash உடனான அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில், இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட சுமார் 14.66 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் ஒரு பகுதி, British Virgin Islands-இல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் Bellimissa Holdings என்ற இடைத்தரகர் நிறுவனத்தின் ஊடாக சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>7 மில்லியன் டொலர் முறைகேடு</h2><p> </p><p>Ukrinmash-க்கு முழுத் தொகையும் சென்றிருக்கவில்லை என்றும், சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக FCID நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2785a8ac-e4d5-46ac-9a96-8653a59feba6/26-6aab42973a0d8.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக செப்டம்பர் 10ஆம் திகதி FCID-யில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார். </p><p>தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, செப்டம்பர் 11ஆம் திகதி FCID-க்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்தார். </p><p>முன்னாள் விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேராவும் செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கினார்.</p><p>இந்த ‘பெலிமிஸ்ஸா’ எனப்படும் நிறுவனத்தின் பின்னணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆயுத வர்த்தகர் டி.எஸ். லீ, அவரது மனைவி எங் லீ கிம் மற்றும் அவரது சகோதரர் லீ தியன் போக் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட&nbsp;நிறுவனம்</h2><p> </p><p>2000ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட MiG விமானங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் விபத்துகள் காரணமாக சிங்கப்பூரின் ‘டி.எஸ். அலையன்ஸ்’ நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னணியை மறைப்பதற்காக ‘பெலிமிஸ்ஸா’ என்ற நிறுவனத்தை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ef9590-2a56-4beb-ac1a-158e16c4daf1/26-6aab429681579.webp' /></p><p> இந்த சர்வதேச ஆயுதப் பரிவர்த்தனைக்கு அப்போது ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க இராஜதந்திர ரீதியான ஆதரவை வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>தரகு பணம் உதயங்க வீரதுங்கவின் உறவினரான லெலும் மனம்பெருமவின் இலங்கை வங்கிக் கணக்குகளுக்கும், டுபாயில் உள்ள ‘ஸ்டார் ஜி.எல்.ஜி.ஏ.’ நிறுவனத்தின் கணக்கிற்கும் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பணம் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்ட விதம் தொடர்பான தகவல்களையும் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>இதற்கிடையில், Ukrinmash நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் டிமிட்ரி பெரெகுடோவ் பாரிஸில் இன்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த நிலையிலேயே இந்த விசாரணையில் இடம்பெறும் நிதி பரிமாற்றங்கள், கொள்வனவு நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தத்தில் தொடர்புடைய தரப்புகள் குறித்து அதிகாரிகள் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக MiG ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவால் வெளிப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c15aa2-11c6-4040-99e3-21be733f4392/26-6aab4295cbe4b.webp' /></p><p>
அவர் 2009 ஜனவரி 8 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை MiG ஒப்பந்தத்தை மூடிமறைக்கும் முயற்சியுடன் தொடர்புபடுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்ககு.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T01:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணி நேர வேலைநிறுத்தத்தில் குதித்த தொடருந்து தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-unions-continue-48-hour-strike-1789606879"></link>
            <id>https://ibctamil.com/article/railway-unions-continue-48-hour-strike-1789606879</id>
            <summary type="text">தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 4...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.</p><p>இதன்படி நடைபெற்று வரும் தொழிற்சங்கப் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே நேற்று பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p>

 

தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு இதுபோன்ற பிரச்சினைகளும் காரணங்களில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>தொடருந்துகளை இயக்க முயற்சி</h2><p>
 

தொடருந்து வருவாயை அதிகரிப்பதற்கோ அல்லது பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கோ முறையான திட்டம் எதுவும் தயாரிக்கப்படாத நிலையில், பொது மேலாளரும் நிர்வாக அதிகாரிகளும் தற்போது தொடருந்துகளை இயக்க முயற்சி செய்து வருவதாக சோமரத்னா மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee6d3bcf-9ef3-446d-a316-094355610c1f/26-6aab3be1b51da.webp' /></p><p>

 

பெரும்பாலான தொடருந்து நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும், அதே சமயம் அரசாங்கத்தை ஆதரிக்கும் பல நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கலைக்கவும், தற்போதைய பொது மேலாளரைப் பதவியில் தக்கவைக்கவும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

தொழிற்சங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், தொடருந்து துறையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T01:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்போது விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>உயிரிழந்தவர்களில் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be6001e3-60d7-4b42-9643-37fd7fc11732/26-6aab37855736d.webp' /></p><p> அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய கார், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மட்டக்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><i><b><u>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி நால்வர் படுகாயம்</u></b></i></p><p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய அலுத்மாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p>விபத்து நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட கார் மூன்று மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மட்டக்குளிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்திய சஜித்தின் நாடாளுமன்றக் குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அதனுடன் வெளிப்பட்டிருந்தது.
</p><p>
சுரேஷ் சாலேவை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த சமர்பணங்களில் கோட்டாபய ராஜபக்ச, ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைமைகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
</p><p>
இந்நிலையில் இதனை கடந்து விசாரணைக்காக எதிர்கட்சி தலைவரும் உள்வாங்கப்பட்டவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதான சதித்திட்டக்காரர்</h2><p>
</p><p>
இதன்போது எதிர்கட்சி தலைவரின் பெயரை உள்வாங்க சட்டமா அதிபர் பின்வரும் வாதங்களை முன்வைத்திருந்தார், </p><p>

“தாக்குதலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை மறைப்பதற்காக சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

சுரேஷ் சாலே உள்ளிட்ட சிலர் பிரதான சதித்திட்டக்காரர்களை மறைத்ததாக தாங்கள் மாத்திரம் கூறவில்லை. 
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து முன்னதாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

அவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.” என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

சஜித் அன்று கூறிய கருத்து,</h2><p>
1. புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகள் மற்றும் "சோனிக் சோனிக்" விவகாரம்</p><p>

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாதக் குழுவோடு நெருங்கிய தொடர்பிலிருந்ததாகக் கூறப்படும், "சோனிக் சோனிக்" (Sonic Sonic) என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட சந்தேக நபர் பயன்படுத்திய இணைய நெறிமுறை முகவரி (IP Address) குறித்த தரவுகள் சஜித் பிரேமதாசவால் வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>
குறித்த IP முகவரியானது இலங்கையின் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) உத்தியோகபூர்வ வலையமைப்போடு தொடர்பைக் கொண்டுள்ளமைக்கான பலத்த தொழில்நுட்பச் சந்தேகங்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இது தாக்குதலுக்கு முந்தைய உளவுத்துறைத் தொடர்புகளை மூடிமறைப்பதற்கான சான்றாக அமையலாம் என்பதால், எவ்வித அரசியல் தலையீடுமற்ற வெளிப்படையான கணினிசார் தடயவியல் விசாரணை (Digital Forensic Investigation) நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல் அழுத்தம்</h2><p>
</p><p>
2. உள்நாட்டு விசாரணைகளின் மீதான அரசியல் அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீட்டின் அவசியம்</p><p>உள்நாட்டுப் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் (CID) மீதான தொடர்ச்சியான அரசியல் செல்வாக்குகள், அதிகார அழுத்தங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து சஜித் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இலங்கையின் தற்போதைய கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான எல்லைகளுக்குள் இந்தத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமற்றது என அவர் வாதிட்டார்.</p><p> 

எனவே, உலகளாவிய நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் நடுநிலையான நீதியை நிலைநாட்டுவதற்கும், சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் நேரடி கூட்டு ஒத்துழைப்புடன் கூடிய ஒரு சுயாதீன விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும் என அவர் கோரினார்.</p><p>

3. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் முடக்கப்படுதல் </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் (PCoI) இறுதி அறிக்கைகள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் குறித்து சஜித் கேள்வி எழுப்பியிருந்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கு நீதியை வழங்குவதைக் காட்டிலும், முந்தைய அரசாங்கங்கள் இந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தங்களின் அரசியல் பிரச்சாரங்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்தி, முக்கிய பரிந்துரைகளை ஆவணக் காப்பகங்களுக்குள் (Archives) திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளதாக அவர் சாடினார்.</p><p> 

இந்த மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எவ்விதத் தணிக்கையுமின்றி முழுமையாகப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கையாகும் என்றார்.</p><h2>சோனிக் சோனிக்</h2><p>
</p><p>
 4. 2021 மே மாதமளவில் நாடாளுமன்றக் குழுமங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.</p><p> 

அவரது ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர்) "சோனிக் சோனிக்" மற்றும் சுரேஷ் சாலேவின் உளவுத்துறைத் தொடர்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது அவர் இதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வழங்கினார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களைப் பாதுகாப்பதற்காகவே சுரேஷ் சாலே திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டார் என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். </p><p>குறிப்பாக, தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் மற்றும் உளவுத்துறைத் தொடர்புகள் பொதுவெளியில் வெளிவராமல் தடுப்பதற்கான ஒரு "மூடிமறைப்புச் கருவியாக" அவர் செயற்பட்டுள்ளார் என நாடாளுமன்றத்தில் சாடினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481"></link>
            <id>https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
</p><p>பல தொன் எடையிலான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவ்வழியாக பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
</p><p>தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980"></link>
            <id>https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகளைத் தேடி பல ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் தாய்மார்களின் குரலை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.</p><p>
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்,</p><p></p><h2>துணை ஆயுதக் குழு</h2><p> </p><p>இறுதிப் போரின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் தமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையிலும், இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ce1e0e-4087-4e02-80d4-36d2346b5e8d/26-6aab24d6c7894.webp' /></p><p>

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாள் முதல் அவர்களைத் தேடி வீதிகளில் போராடிய தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தை உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
2017ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>எங்கே தமது பிள்ளைகள்</h2><p>
</p><p>
இந்தப் போராட்டங்களின் மூலம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே உள்ளனர்? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>
மேலும், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p> எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z8NywXpZrYo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:23:11+00:00</updated>
        </entry>
    </feed>
