<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-28T15:36:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 5.7% வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/value-of-the-srilankan-rupee-is-falling-day-by-day-1787925239"></link>
            <id>https://ibctamil.com/article/value-of-the-srilankan-rupee-is-falling-day-by-day-1787925239</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 5.7% சரிவை சந்தித்துள்ளது.</p><p>ஆகஸ்ட் 28 நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கிடையில், இந்த வாரத்தில் கடன் வழங்கும் விகிதங்கள் சற்றே உயர்ந்தததாக&nbsp;அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவு</h2><p>
எடையிடப்பட்ட சராசரி முதன்மை கடன் விகிதம்( WPLR / WALR)ஒன்பது அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 10.95% ஆகா மாறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6b98261-e2ba-4011-af2f-c5826115548e/26-6a9192fae059e.webp' /></p><p>அத்தோடு&nbsp; எடையிடப்பட்ட சராசரி அழைப்பு பண விகிதம், முந்தைய வார இறுதியில் இருந்த 8.81%-இலிருந்து 8.84%-ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி உள்நாட்டு சந்தையில் பணப்புழக்கம் உபரியாகவே நீடிப்பதாக கூறப்படுகிறது.</p><p>

முந்தைய வார இறுதியில் ரூ. 278.51 பில்லியனாக இருந்த மொத்த சந்தைப் பணப்புழக்கம், ஆகஸ்ட் 28 நிலவரப்படி ரூ. 318.13 பில்லியனாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவும் சரிவு நிலையை எட்டியுள்ளது.

மேலும், அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 0.47% சரிந்து 21,315.91 புள்ளிகளாகவும், கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள 20 முன்னணி மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய பங்குச் சந்தைக் குறியீடும்(SPSL 20) குறியீடு 0.38% சரிந்து 6,005.34 புள்ளிகளாகவும் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிலும் தீர்வின்றி தொடரும் வனவள - தொல்பொருள் திணைக்களங்களின் காணி அபகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187"></link>
            <id>https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187</id>
            <summary type="text">வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு - கிழக்கு காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p>

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட, 
தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் காணி உரிமையாளர்கள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.</p><p>

இந்த கலந்துரையாடலிலேயே காணி உரிமையாளர்கள் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறை</h2><p>
</p><p>
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக
மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து
வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை
எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5331c5d8-6d0c-4359-bf9a-c9def4b4a41e/26-6a918b2fc8c14.webp' /></p><p>''ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய
அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
</p><p>கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள்
மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த
அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள்
குற்றஞ்சாட்டினர்.
</p><p>'கடந்த அரசாங்கங்களின் குறைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் அதே
அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்தால், காணிகளை இழந்த மக்களுக்கு நம்பிக்கை
எவ்வாறு ஏற்படும்?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T14:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கலவரம்! 20 அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-court-orders-20-officers-1787926066"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-court-orders-20-officers-1787926066</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை சிறை அதிகாரி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 20 பேரை அடையாள அணிவகுப்பில் முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை சிறை அதிகாரி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 20 பேரை அடையாள அணிவகுப்பில் முன்னிலையாகுமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை கலவரம் தொடர்பான வழக்கு, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த 20 நபர்களும் அடையாள அணிவகுப்பிற்காக செப்டம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்</h2><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முந்தைய விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக 70 சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a805d3de-4f0e-4d90-a37e-9340428d6b81/26-6a91963495e71.webp' /></p><p> 

இந்த சம்பவத்தின் முதல் 6 சந்தேகநபர்களுக்கு, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருந்தனர்.
</p><p>
இருப்பினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் மற்றொரு நீதிமன்ற நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்களில் இருவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை.</p><p>

இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அடையாள அணிவகுப்பிற்காக நான்கு சந்தேக நபர்களையும் நான்கு சாட்சிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்கள கூற்றின்படி, அணிவகுப்பின்போது நான்கு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2sp7vTGkXf4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T14:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்: 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flash-floods-death-toll-reaches-543-1787921478"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flash-floods-death-toll-reaches-543-1787921478</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>

பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின.</p><p> </p><p></p><h2>திடீர் வெள்ளம்&nbsp;</h2><p>இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும் திபெத் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த மேலாண்மை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இந்தநிலையில் ராசுவா மாவட்டத்தில் உருவான செயற்கை ஏரி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ள அபாயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்ட்டு வேகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8a4598-80f7-4f4e-9e99-7a0e05fc8f63/26-6a9184483fc68.webp' /></p><p>அத்தோடு இதுவரை 117 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், 320 இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்கள் இன்னமும் மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் தொடர்கின்றன.
</p><p>மேலும் நுவாகோட் மற்றும் பிதுர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் மற்றும் சேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraud-in-fueling-government-department-vehicles-1787920002"></link>
            <id>https://ibctamil.com/article/fraud-in-fueling-government-department-vehicles-1787920002</id>
            <summary type="text">மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>

மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (28.08.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பணத்தை அந்தந்த அரச திணைக்களங்கள் மாதாந்தம் வழங்குகிறது.</p><p></p><h2>எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி</h2><p>உதாரணமாக ஒரு திணைக்களத்தின் அரச வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 100 லீற்றர் டீசலுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டு 50 லீற்றர் டீசலை மட்டும் வாகனத்தில் நிரப்பிவிட்டு, மிகுதி 50 லீற்றர் எரிபொருளை, எரிபொருள் உரிமையாளரிடம் 1 லீற்றருக்கு 300 அல்லது 310 ரூபா வீதம் விற்று பணம் பெறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/becc90ed-8188-49c7-b3cf-087f9eec96af/26-6a91830f69192.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.</p><p>சுகாதாரதுறைக்கு பெரும் தொகை பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தும் இவ்வாறான சில அரச அதிகாரிகளின் மோசடிகளால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றது.
</p><p>
அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் போது குறித்த திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி எரிபொருளை நிரப்பினால் இவ்வாறான மோசடியை தடுக்க முடியும்.</p><p>இந்த மோசடி தொடர்பாக காவல்துறையினரோ, குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்தால் எங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
</p><p>
எனவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும்.</p><p>மேலும் இலங்கை தொடர்ந்தும் கடன் பெறுகின்ற நாடாகத்தான் இருக்கும்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் - 24 மணி நேர சிகிச்சை தேவை...! ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-official-mocks-trump-over-hormuz-claim-1787919108"></link>
            <id>https://ibctamil.com/article/iran-official-mocks-trump-over-hormuz-claim-1787919108</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதி எனக் கூறி ட்ரம்ப் பதிவிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>
சமீபத்தில் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க எல்லைப் பகுதியாகக் காட்டும் வரைபடப் பதிவொன்று வெளியிடப்பட்டது.</p><p></p><h2>கடல்சார் எண்ணெய்&nbsp;</h2><p> </p><p>அதில் உலகின் மிக முக்கியமான கடல்சார் எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பகுதி (NEW US Territory) எனக் குறிப்பிட்டு ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ளஅமைச்சர், ட்ரம்பிற்கு மன மாயத்தோற்றங்களும் பிரமைகளும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4cca9e5-1073-44ab-8978-460ce3dd54ce/26-6a9180a525080.webp' /></p><p>மனச்சிதைவு நோய் என்பது சிந்தனைக் கோளாறு மற்றும் யதார்த்தத்தை உணர முடியாத மனநலப் பாதிப்பு என்றும் இத்தகைய நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்கா கூறிவரும் வேளையில், ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T12:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211"></link>
            <id>https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211</id>
            <summary type="text">கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மை இன நபர்கள்</h2><p>கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை
திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2b6bdf-a1c3-4358-8d03-2f5d1168ed45/26-6a917dc98e515.webp' /></p><p>அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p>
இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில்&nbsp;காவல்துறையினர் உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் இடத்துக்கு வரவில்லை.
</p><p>
இந்நிலையில் ஊர் மக்கள் பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
</p><p>
அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.</p><p></p><h2>மக்களின் எதிர்ப்பு</h2><p>குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ccfafe-dab8-41e1-8a18-3a98028bf699/26-6a917dca48a60.webp' /></p><p>&nbsp;காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட
உள்ளது.
</p><p>
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T12:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளன மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-took-his-wife-forest-area-and-killed-her-1787917450"></link>
            <id>https://ibctamil.com/article/husband-took-his-wife-forest-area-and-killed-her-1787917450</id>
            <summary type="text">அனுராதபுரம், கொரக்கஹவெவ வனப்பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், கொரக்கஹவெவ வனப்பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>குறித்த சம்பவம் இன்று (28.08.2026) காலை இடம்பெற்றுள்ளதாக&nbsp;கூறப்படுகிறது.</p><p>அனுராதபுரம் - உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>தனிப்பட்ட குடும்பத் தகராறு&nbsp;</h2><p>குறித்த நபர் இன்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2a3e86-1d3b-4a78-86e9-6ca5f94c0140/26-6a917a0eac554.webp' /></p><p>இந்த தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-mannar-fishermen-held-over-dynamite-fishing-1787915713"></link>
            <id>https://ibctamil.com/article/three-mannar-fishermen-held-over-dynamite-fishing-1787915713</id>
            <summary type="text">மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில்
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> டைனமைட்
வெடிபொருளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்
பேரில் குறித்த கடற்றெதழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>மேலதிக பரிசோதனை</h2><p>இதன்போது 500 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம்,
ஒரு படகு மற்றும் கடற்றொழிலில் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc628f0e-5a5f-4dbd-b6b4-fcae72573874/26-6a9174df782e1.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கை தொடர்பில் மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், அவை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனுஷவுக்கு எதிரான சட்டநடவடிக்கை: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigations-against-ex-min-manusha-nanayakkara-1787915149"></link>
            <id>https://ibctamil.com/article/investigations-against-ex-min-manusha-nanayakkara-1787915149</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது இடம்பெற்ற முறைகேடு மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது இடம்பெற்ற முறைகேடு மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு இன்று (28) குறித்த விடயத்தினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><h2>இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு</h2><p> </p><p>

இதன்போது, மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa29a37-5347-401c-900c-9331c4681927/26-6a91708c33840.webp' /></p><p> </p><p>

அவர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக ஒரு நாளை வழங்குமாறும் இதன்போது அந்த அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். </p><p>

சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p><h2>இஸ்ரேலுக்கு ஊழியர்களை அனுப்புதல்&nbsp;</h2><p> </p><p>

அன்றைய தினம் குறித்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் ஆணைக்குழுவிற்குப் பணித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc156d53-f3d4-45b3-ba1f-2364c2ab91a2/26-6a91708b60d36.webp' /></p><p> </p><p>

கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாயப் பணிகளுக்காக ஊழியர்களை அனுப்பும் போது, தனக்கு அரசியல் ரீதியில் அனுதாபமுள்ள ஊழியர்களைத் தெரிவு செய்து அனுப்பியதன் மூலம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, மனுஷ நாணயக்கார ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-port-growth-in-rankings-1787915877"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-port-growth-in-rankings-1787915877</id>
            <summary type="text">சர்வதேச துறைமுக வரிசையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச துறைமுக வரிசையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமீபத்திய Alphaliner புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுக்கு ஆண்டு 11.9 சதவிகித அதிகரிப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுகம் உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் மொத்தம் 4,444,034 TEUs கொள்கலன்களை கையாண்டுள்ளது.</p><p></p><h2>TEUs அதிகரிப்பு&nbsp;</h2><p> </p><p>

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 3,972,053 TEUs ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஓராண்டுக்குள் 471,981 TEUs அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், இது 11.9 சதவீத வளர்ச்சியாகும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1a656b-752a-476d-86f7-5712fbe56eab/26-6a91711809e1e.webp' /></p><p>
இந்த வளர்ச்சியின் காரணமாக, 2025ஆம் ஆண்டு இறுதியில் உலகளவில் 26வது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. </p><p>

உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்த துறைமுகங்களில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.
</p><p>
2025ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகம் சுமார் 8.3 மில்லியன் TEUs கொள்கலன்களை கையாண்டு சாதனை படைத்திருந்தது. </p><p>

அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் துறைமுகத்தின் வளர்ச்சி வேகம் நீடித்து வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மொத்த கொள்கலன் கையாளுதல்</h2><p>
</p><p>
இந்த வளர்ச்சி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கொழும்பு துறைமுகத்தின் முக்கியமான மாற்றுக் கப்பல் போக்குவரத்து மையம் (Transshipment Hub) என்ற நிலையை மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8e3c93-2791-4607-a299-cef7f16dffae/26-6a9171174dcf6.webp' /></p><p>
</p><p>
கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் கையாளுதலில் பெரும்பகுதி மாற்றுக் கப்பல் போக்குவரத்து மூலம் இடம்பெறுகிறது. </p><p>

கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் சர்வதேச பிரதான கப்பல் மற்றும் ஊட்டுக் கப்பல் வலையமைப்புகளுக்கு இடையிலான முக்கிய இணைப்பாக கொழும்பு துறைமுகம் செயல்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இரு சீனப்பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-with-counterfeit-cigarettes-worth-77-lakh-1787914017"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-with-counterfeit-cigarettes-worth-77-lakh-1787914017</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து&amp;nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து&nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இரு சீனப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறத்த பெண்களை சுங்க அதிகாரிகள் இன்று (28.08.2026) காலை கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றபட்ட சட்டவிரோத சிகரட்டுக்கள் சுமார் ரூ.77 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதி என விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>சிகரெட்டுகளுடன் இரு பெண் கைது</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய இரு சீன வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a1a309-65a3-43f3-97fb-7f57b2efdd7a/26-6a916dd2b55e2.webp' /></p><p>
சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட சிகரெட்டுகளை மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
</p><p>
அவர்களின் 4 பயணப் பொதிகளில் 258 அட்டைப்பெட்டிகளில் 51,600 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இரு சந்தேகநபர்களையும் தடுத்து வைத்துள்ள சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகரிக்கும் எலிகளின் பெருக்கம்...! மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-rat-population-threatens-colombo-health-1787912427"></link>
            <id>https://ibctamil.com/article/rising-rat-population-threatens-colombo-health-1787912427</id>
            <summary type="text">இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அன்றாட மக்கள் வாழ்க்கை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதனால் அன்றாட மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எலித் தொல்லைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எலிகள் மூலம் ரேபிஸ் (Rabies) , எலிக்காய்ச்சல் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் கொழும்புக்கு வரும் மக்களின் சுகாதாரத்திற்கும் இது அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>
</p><p></p><h2>எலிகளின் எண்ணிக்கை</h2><p>கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உணவாகக் உட்கொள்ளும் எலிகள், தற்போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அஞ்சப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd46ec2-30bb-4828-8975-7381ed8c67c2/26-6a916c27b6e41.webp' /></p><p>
மேலும், பல்வேறு இடங்களில் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ளும் எலிகளால் கட்டிடங்கள், சொத்துக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் சேதமடைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எலித் தொல்லையை கட்டுப்படுத்த குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தமாகப் பராமரித்தல் அவசியம் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக கொழும்பு நகர அதிகாரிகளுடன், நகரில் வசிக்கும் மக்களும் கொழும்புக்கு வருகை தரும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டியது சமமான பொறுப்பாகும் என வலியுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணம் முதலீடுகள் தொடர்பில் ஆளுநரின் விசேட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/challenges-encountered-during-the-implementation-1787907830"></link>
            <id>https://ibctamil.com/article/challenges-encountered-during-the-implementation-1787907830</id>
            <summary type="text">முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்
செயற்படுத்தப்பட வேண்டும். </p><p>அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள்
மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய
அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும்
வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.</p><p>

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள
ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் முன்னேற்றம், அதன் நடைமுறைப்படுத்தலில்
எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்கான
வழிமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27.08.2026) வியாழக்கிழமை
மாலை யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><h2>வவுனியாப் பல்கலைக்கழகம்</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால நிர்வாகத்
தடைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த மே மாதம் 'வடக்கு முதலீட்டு
உச்சிமாநாடு – 2026' நிகழ்வின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு
ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2274b730-8501-4095-8f84-7971d8670063/26-6a915233d59f6.webp' /></p><p>
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்கு தனித்தனியாகச் சென்று அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்த்து, ஒரே இடத்தின் ஊடாக தேவையான அரச
சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பொறிமுறை உருவாக்கப்பட்டது.
</p><p>
இன்றைய கலந்துரையாடலில், இப்பொறிமுறையின் செயற்பாட்டு முன்னேற்றம், முதலீட்டு
முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், திணைக்களங்களுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவையை
வழங்குவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
</p><p>
அத்துடன், முதலீட்டு வாய்ப்புகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய அரச
நிறுவனங்களின் சேவைகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும் இலகுவாகவும்
முதலீட்டாளர்களைச் சென்றடையும் வகையில் நுழைவாயிலை மேலும்
பயனுள்ளதாக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.</p><p>

முகாமைத்துவக் கழகம் மற்றும் வவுனியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன்
இந்த ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா,
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், வடக்கு மாகாணத்தின் ஐந்து
மாவட்டங்களினதும் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடக்கு முதலீட்டு
மாநாட்டின் திட்டத் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ச, முகாமைத்துவக் கழகத்தின்
நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் மற்றும் முகாமைத்துவக்
கழகத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவர் அநுராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-pharmacists-to-launch-trade-union-action-1787913339"></link>
            <id>https://ibctamil.com/article/govt-pharmacists-to-launch-trade-union-action-1787913339</id>
            <summary type="text">மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து அரச மருந்தாளர் சங்கம் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.எதிர்வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து அரச மருந்தாளர் சங்கம் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.</p><p>எதிர்வரும் 31 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 8.00 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>2026 ஓகஸ்ட் 29 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரச் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் பெயர் "மேலதிக நேர கொடுப்பனவுகள்" எனத் திருத்தப்பட்டிருந்தது.</p><p>&nbsp;</p><h2>சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை</h2><p>

 

அதன்பின்னர், ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல், மருத்துவச் சேவையின் தலையீடு காரணமாக அச்சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53bf08de-865e-400e-b84c-b09f756f7ae0/26-6a916902e8e8e.webp' /></p><p>
</p><p>எனினும், இதுவரை இப்பிரச்சினைகளுக்கு அதிகாரிகளால் திருப்திகரமான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் குறித்த சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியும், அதற்கு அழுத்தம் கொடுத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

மானிதாபிமானக் காரணங்களைக் கருத்திற் கொண்டு அனைத்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்களிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;அரச மருந்தாளர் சங்கம்</h2><p>
</p><p>
 

ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் முதன்மை மருந்தாளர்களைத் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8706271a-68e8-43f9-8819-fb85c6730def/26-6a916903b2a2e.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norway-s-king-harald-v-dies-at-89-1787909863"></link>
            <id>https://ibctamil.com/article/norway-s-king-harald-v-dies-at-89-1787909863</id>
            <summary type="text">நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று (28) காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.</p><p>அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய அரசராக பதவியேற்பு</h2><p>
</p><p>ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa38376-1229-466c-a1cb-aa92d303b807/26-6a915fc8b53c7.webp' /></p><p>
</p><p>அத்துடன் 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருந்தார்.
</p><p>இந்தநிலையில் மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567"></link>
            <id>https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
பண்டாரவளை நவோதயா புரம் வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சில தியாகங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் இந்த புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0a4ce3-a63f-4be7-a2c9-c90e4fa55ac6/26-6a915f7c387bc.webp' /></p><p>இலங்கையின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டின் அழிவுகளைத் தடுக்கவும் சூழலைப் பாதுகாக்கவும் இந்த அதிகாரசபைக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்படும்.
</p><p>
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்திற்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தாலும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது.</p><p></p><h2>குத்தகை ஒப்பந்தங்கள்</h2><p>
தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சரத்துகள் சேர்க்கப்படும்.
</p><p>
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு சென்ற இலங்கை மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக இருந்த தடைகளை அமைச்சரவை நீக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828f38cf-5745-4e0f-9c59-25e6a0cb6529/26-6a915f7ce53cb.webp' /></p><p>வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</p><p>
மலையக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கனவே முதற்கட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் மலையகச் சமூகம் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, கல்வியின் மூலம் அவர்களை முன்னேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை புவியியல் அணு குண்டாக பயன்படுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102"></link>
            <id>https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இது இரு தரப்பையும் கடந்து ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கியபோது அணுசக்தி விவகாரம், ஏவுகணைத் திட்டம், பிராந்தியத்தில் உள்ள ஈரானின் சக்திகள் அல்லது கூட்டாளிகள் எனப் பல விடயங்கள் பேசப்பட்டன.
</p><p></p><h2>மோதல் அடுத்த கட்டத்திற்கு</h2><p>
ஆனால் இப்போது அனைவரும் சுற்றிச் சுற்றி வரும் முக்கிய விடயம் நீரிணையை திறப்பதுதான் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ad38ab-86ad-42f9-b3f4-42c003ecc557/26-6a915fa8d3396.webp' /></p><p>
</p><p>
போருக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, போருக்குப் பிறகு அப்படி இருக்காது என்று கூறிய அவர்கள் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையின் மூலம், ஈரான் ஒரு சாதகமான நிலையைக் கண்டறிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
</p><p>
 மேலும், சில ஆய்வாளர்கள் இதை ஈரானின் புவியியல் அணு குண்டு என்று கூட வர்ணிக்கின்றனர். 

ஏனெனில், அதைச் செயல்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம், அதைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதே காரணமாகவும் எனவும் கூறியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T10:15:22+00:00</updated>
        </entry>
    </feed>
