<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-05T06:14:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த விலை - திறக்கும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-prices-fall-on-hopes-strait-of-hormuz-reopen-1785902170"></link>
            <id>https://ibctamil.com/article/oil-prices-fall-on-hopes-strait-of-hormuz-reopen-1785902170</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் <a href="https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388" target="_blank">நீரிணையை</a> மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளன. </p><p>

 

அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலராகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்</h2><p>
</p><p>
 

குறுகிய காலத்தில் ஹோர்முஸ் வழியாக மேலும் பல கப்பல்கள் எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து ஓமான் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15594521-0eb8-4f78-9731-865591ba2090/26-6a72bbc8589d8.webp' /></p><p>பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறையில் செய்தியாளர்களிடம் ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோக அபாயங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-foreign-secretary-vikram-misri-arrives-sl-1785908889"></link>
            <id>https://ibctamil.com/article/indian-foreign-secretary-vikram-misri-arrives-sl-1785908889</id>
            <summary type="text">உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.அவரை விமான நிலையத்தில் வைத்து&amp;nbsp;இன்று (5) புதன்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.</p><p>அவரை விமான நிலையத்தில் வைத்து&nbsp;இன்று (5) புதன்கிழமை காலை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றுள்ளார்.</p><p>
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம் முழுவதும் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட சந்திப்பு</h2><p>இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய ஒத்துழைப்புத் துறைகளையும் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a739793a-1ff6-4d02-ac11-d30f44767167/26-6a72d1c7b9a14.webp' /></p><p> </p><p>மேலும் தனது பயணத்தின் போது, ​​இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜய ஹெரத் உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414</id>
            <summary type="text">பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் இன்று அதிகாலை (05) கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில்&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முற்றிலுமாக எரிந்து நாசம்</h2><p>



</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e1bef4-6bd2-4ec4-ad93-86456ea2050f/26-6a72b7a7de023.webp' /></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.</p><p>
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் ஆடம்பர பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p>தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கடுவெல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்தேக வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கடுவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று - செயலகம் வந்தடைந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/first-budget-of-tvk-government-led-by-cm-vijay-1785904702"></link>
            <id>https://ibctamil.com/article/first-budget-of-tvk-government-led-by-cm-vijay-1785904702</id>
            <summary type="text">2026 - 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.&amp;nbsp;முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.&nbsp;</p><p>முதல்வர் <a href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765" target="_blank">விஜய்</a> தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் <a href="https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693" target="_blank">உதயநிதி ஸ்டாலின்</a>, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வருகை செய்துள்ளனர்</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fcbe8b-4e8d-4720-bc7e-b06236ff1403/26-6a72c19c702ce.webp' /></p><p>மற்றும் அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p>தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், தவெகவின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:41:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-ratmalana-1785905124"></link>
            <id>https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-ratmalana-1785905124</id>
            <summary type="text">இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> 

 

எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித காயமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e2f2df-16b4-4f7c-b96b-91c76a26aa78/26-6a72c7ed14221.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதேவேளை தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவத்தகமவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teenager-dies-in-motorcycle-accident-sri-lanka-1785902995"></link>
            <id>https://ibctamil.com/article/teenager-dies-in-motorcycle-accident-sri-lanka-1785902995</id>
            <summary type="text">மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந்துள்ளது.&nbsp;</p><p>
 

மாவத்தகமவிலிருந்து அகஸ்யனபிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>இளைஞன் பலி&nbsp;</h2><p>
</p><p>விபத்துக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4883c54c-e8fa-4fa5-bd72-95f58e75565a/26-6a72be1145023.webp' /></p><p>
</p><p>இதன் பின்னர் குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த பயணிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p>
 

இச்சம்பவம் குறித்து மாவத்தகம காவல்துறை&nbsp; மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் : கிடைத்த அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-amendments-to-epf-act-1785902912"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-amendments-to-epf-act-1785902912</id>
            <summary type="text">ஊழியர் சேமலாப நிதிய (Employees Provident Fund - EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தனியார் மற்றும் பகுதியளவு அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமலாப நிதிய (Employees Provident Fund - EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இலங்கை மத்திய வங்கி</h2><p>இந்தநிலையில், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, தரமானதும் திறன்மிக்கதுமான சேவைகளை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53894ec-0fb2-4c10-9703-0862673a2d0d/26-6a72be824e18b.webp' /></p><p>
</p><p>
இதற்கான முன்மொழிவுகளை இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவைத் தயாரித்துள்ளது.
</p><p>
அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்&amp;nbsp;பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த பரீட்சை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்&nbsp;பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில் இந்தத் தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்கள்</h2><p>
 

இக்காலப்பகுதியில், பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பரப்புரை செய்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43a3877-5ee8-4c22-beb1-8732bb2275dd/26-6a72b4d2722e7.webp' /></p><p>
</p><p>
 

மேலும், பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெறும் வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ குறிப்பிட்டு சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல், அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
</p><p>
 

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/45B71ZXyg78" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390"></link>
            <id>https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&amp;nbsp;பிரதேச வைத்தியசாலையில்&amp;nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&amp;nbsp;இடம்பெறவுள்ளது.இன்று (05) காலை10மணி மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&nbsp;பிரதேச வைத்தியசாலையில்&nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&nbsp;இடம்பெறவுள்ளது.</p><p>இன்று (05) காலை10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி நிகழ்விற்கு அனைவரையும் வருகை தருமாறு சங்கானை - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>வேல்ட் விசன் அனுசரணையுடன் சங்கானை சுகாதார அதிகாரி பணிமனை நடாத்தும் “Enough போசாக்கு“ கண்காட்சியில் தன்னிறைவான சுயசார்பு பொருளாதாரத்துடன் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு உணவுகள் காட்சிப்படுத்தப்படும்.</p><h2>சுகாதார அமைச்சு</h2><p>இதன்போது எமது சுகவாழ்விற்கு ஆரோக்கியமான சிறுதானிய, பனைசார், கடல்சார், மரக்கறி இலைவகைசார், பாற்பொருட்கள்சார் உணவுகளை தயாரிப்பது எவ்வண்ணம் என விளக்கும் செயன்முறை சமையற்கலை கூடங்கள், சுகவாழ்வுத்தோட்டம், சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி, பாடசாலை சிற்றுண்டிச்சாலை விபரணத்துடன் கூடிய போசாக்கு கண்காட்சியைப் பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a603ff-48f5-492f-a830-85a0f258c8bd/26-6a72b3ce52530.webp' /></p><p>சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதம் பரப்புரைக்கு அமைவாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைக் கொள்கையின் கீழ் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நிகழ்சில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T03:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கோவில் வீதியில் போக்குவரத்து தடை - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456"></link>
            <id>https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள <a href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985" target="_blank">நல்லூர் கந்தசுவாமி </a>ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் இன்றைய தினம் (05.08.2026) புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை யாழ் மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, நாளைய தினம் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0961a81-ff77-469d-ab96-f9d35fc7029a/26-6a72a5dfc1a2b.webp' /></p><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய
அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.
</p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929"></link>
            <id>https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929</id>
            <summary type="text">ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் <a href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464" target="_blank">பாடசாலை</a>களையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507" target="_blank">வானிலை </a>காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை,&nbsp;கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விசேட ஆலோசனை</h2><p>

 

நிலவிய பலத்த மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7fc109-3167-4a25-8978-d0a8e2cdae14/26-6a729bfb183d2.webp' /></p><p>இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பவ இடத்தில் போன உயிர்: பயங்கர போதைப்பொருள் பயன்படுத்திய சாரதி: அதிரடி கைதுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-bus-owner-arrested-1785894262"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-bus-owner-arrested-1785894262</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ்&nbsp; பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கை நேற்று (04) புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை&nbsp;</h2><p>
 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e10629f-de04-4405-8305-74d63dc81098/26-6a7299c11db38.webp' /></p><p>

 

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் 'ஐஸ்' எனும் வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
 

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஏற்கனவே காலாவதியாகியிருந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.</p><p></p><h2>உரிமையாளர் கைது</h2><p>

 

இதனையடுத்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ், அப்பேருந்தின் உரிமையாளரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed13414-dedc-4d73-bd26-ef0db989090e/26-6a7299c066e42.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T02:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானை தேடி மலேசியாவில் களமிறங்கிய இன்டர்போல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-joins-forces-to-arrest-kanjipani-imran-1785892935"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-joins-forces-to-arrest-kanjipani-imran-1785892935</id>
            <summary type="text">பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கையின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான விசேட குழுவினர் இணைந்து பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கஞ்சிபானி இம்ரான் சர்வதேச குற்றக்கும்பல் தலைவராக மலேசிய காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து பாதைகளும் மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஆனந்த விஜேபால முழுமையான ஒத்துழைப்பு</h2><p>

கஞ்சிபானி இம்ரானுக்கு மலேசியாவில் உள்ள தொடர்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d91eb835-a8b6-4cf7-95a7-da8d7e1d8a53/26-6a7291f3cbbd3.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மலேசிய காவல்துறைகாவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உதவியாளர் எனக் கூறப்படும் ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் மலேசிய காவல்துறையும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவும் நீண்ட நேர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்த விசாரணைகளின் மூலம் கஞ்சிபானி இம்ரான் தொடர்பிலும் அவரது சர்வதேச தொடர்புகள் குறித்தும் முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழுமையான ஆதரவு உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோல், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பும் இந்த நடவடிக்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நடவடிக்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி, கஞ்சிபானி இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பாக விசேட கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464"></link>
            <id>https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.
</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழையுடனான காலநிலை</h2><p>
</p><p>
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை முன்னிட்டு, பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன நேற்றைய ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78b00860-cc4b-478d-88b7-0cea4175253f/26-6a727aeaddd0d.webp' /></p><p>இதன்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலை காரணமாக நாட்டில் 11,832 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507"></link>
            <id>https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>

 

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், மொத்தம் 3,538 பேர் 51 பாதுகாப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p></p><h2>75 மி.மீ.க்கு மேல் கனமழை</h2><p>
 

மோசமான வானிலையால் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 290 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதில் நுவரெலியா மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9002e661-a4d7-44be-b820-07fd1f2d0fd3/26-6a728df95ac2b.webp' /></p><p>மேலும், மாவட்டத்தில் மட்டும் 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
 

இதற்கிடையில், மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் கணித்துள்ளது.
</p><p>
 

இந்தப் பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும் என்றும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-against-susantha-punchinilame-cid-1785891245"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-against-susantha-punchinilame-cid-1785891245</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே,&amp;nbsp;2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே,&nbsp;2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வாடகை, நீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் எதனையும் செலுத்தவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>அரசியல் நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே குறித்த இந்த குற்றச்சாட்டை நேற்று (04.08.2026) நாடாளுமன்றத்தில் அருண் ஹேமச்சந்திரா முன்வைத்தார்.</p><p>இந்த நிலுவைத் தொகைகளை மீளப் பெறுவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தொகையும் செலுத்தப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>திருட்டு, மோசடி மற்றும் ஊழல்கள்</h2><p>
இதனால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID), அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவிற்கும் (COPE) ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a1569f-0846-4a1f-ba7c-91e60a8a5225/26-6a7289aed991a.webp' /></p><p>மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த பிரியந்த பத்திரண பிரேமகுமார என்பவருக்கும் பேதுருகொட்டுவ பகுதியில் அரச உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான வாடகை எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p>

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் திருட்டு, மோசடி மற்றும் ஊழல்களுக்கு இடமளித்து அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அரசியல் அதிகாரம் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-more-human-skeletons-identified-in-semmani-1785889651"></link>
            <id>https://ibctamil.com/article/4-more-human-skeletons-identified-in-semmani-1785889651</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் 43ஆவது நாளான நேற்று, மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் 43ஆவது நாளான நேற்று, மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>97 நாட்கள் அகழாய்வுப் பணி</h2><p>
</p><p>
செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 97 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f846a71-72bd-402d-8ec7-823a8f06463b/26-6a72837599922.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 481 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-corruption-cases-against-johnston-fernando-1785889101"></link>
            <id>https://ibctamil.com/article/5-corruption-cases-against-johnston-fernando-1785889101</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கூட்டுறவு மொத்த விற்பனைச் சங்கத்தின் (CWE) ஊழியர்களை அரசுப் பணியுடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அரசுப் பணத்தில் வழங்கியதன் மூலம் அரசுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்குகள் தொடர்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

இந்த ஐந்து வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் (High Court) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழு நேற்று (04) உத்தரவிட்டது.</p><p></p><h2>விடுதலை தீர்ப்பும் இரத்து</h2><p>

நீதியரசரகளான பி. குமாரத்னம், தமித் தொட்டவத்த, கே.எம்.எஸ். திஸாநாயக்க, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f2fb46-29f4-4108-834c-4bb3fd22e926/26-6a72814fa0290.webp' /></p><p>
</p><p>
அத்துடன், வழக்குகளில் ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்து வழங்கியிருந்த தீர்ப்பையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
</p><p>
வழக்கின் தொடக்கத்தில் பாதுகாப்புத் தரப்பு முன்வைத்த ஆரம்ப எதிர்ப்பை ஏற்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வழக்குகள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகளும் தாக்கல் செய்திருந்த ஐந்து மேன்முறையீட்டு மனுக்களையும் பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன், ச.தொ.ச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் ஷகீர் ஆகியோருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இனி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:19:32+00:00</updated>
        </entry>
    </feed>
