<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-09T01:26:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல்&nbsp; திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்றும் மின்னல் தாக்கம்</h2><p> </p><p>

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702c2a2c-bca4-43b0-bb64-5c8bd270f12e/26-6aa0b400d9795.webp' /></p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T01:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் அட்டகாசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276</id>
            <summary type="text">கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கட்டைக்காட்டிலிருந்து காலை வேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து, வழமையான நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>முறையீட்டுக் கடிதம்</h2><p> </p><p>

இதனால், பணி நிமித்தமாக யாழ்ப்பாணம் செல்லும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் உரிய நேரத்தில் சேவை பெற முடியாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் தாமதமாகவே தங்களது பணிமனைகளைச் சென்றடைவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d10a8a2-6cb6-4832-bee2-fc57c53e4254/26-6aa0adfe09857.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பேருந்து புறப்படும் சரியான நேரத்தை பயணிகளுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்தத் தாமத நிலைமையைத் தவிர்க்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணம் சாலை முகாமையாளருக்குப் பயணிகள் முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் கப்பல்கள்! அமெரிக்க இராணுவம் வெளியிட்ட காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546</id>
            <summary type="text">ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல்படை(IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்த முயன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி இரு தாக்குதல் முயற்சிகளிலிருந்தும் அமெரிக்கப் போர்க்கப்பல் தப்பித்து, பிராந்திய கடற்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தாக்கப்பட்ட கப்பல்கள்</h2><p>

இந்நிலையில் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் 'எம்/டி காவிஸ்' (M/T Kaviz), 'எம்/டி சர்மினார்' (M/T Charminar), 'எம்/டி ஹரைசன் 1' (M/T Horizon 1) மற்றும் 'எம்/டி ரீஸ்கோ' (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கார்க் தீவுக்கு அருகே 'எம்/டி தர்யா' (M/T Derya) ஆகிய கப்பலையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM forces destroyed five Iranian crude oil carriers, Sept. 8, after the Islamic Revolutionary Guard Corps (IRGC) targeted a U.S. Navy warship with ballistic missiles twice over the past two days. The U.S. warship successfully evaded the attempted Iranian attacks and… <a href="https://t.co/Gi8a2tloN1">pic.twitter.com/Gi8a2tloN1</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2097448820099711412?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதேவேளை, IRGC மற்றும் அதன் பிராந்தியப் படைகளுக்கு நிதி வழங்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சென்ட்காம், இந்தக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு ஈரானிடம் எந்த வழியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக, செப்டம்பர் 5 அன்றும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் மீது தாக்குதல் நடத்த IRGC முயன்றது. அந்தத் தாக்குதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை சென்ட்காம் தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா! வெளியிடப்பட்ட புதிய சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576"></link>
            <id>https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.</p><p> 

இச்சட்டம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, ஈரானிய கப்பல்களைக் குறிவைப்பதற்கான அதிகாரங்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.</p><p>

அத்தோடு, ஈரானின் பிரித்தானிய நிதி அமைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கூடுதல் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வகையில் வர்த்தகத் தடைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறப்பு விதிவிலக்குகள் இல்லாத பட்சத்தில் ஈரானிய விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்குவதைத் தடை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>துறைசார் கட்டுப்பாடுகள்</h2><p>

“ஸ்னாப்பேக்” (snapback) எனப்படும் பொறிமுறையின் கீழ் ஈரான் மீது ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07c6ecd-4a88-46cd-a21f-e73f11f96346/26-6aa0725f12873.webp' /></p><p> </p><p>

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல்வேறு துறைசார் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஈரானின் அணுசக்தித் திட்டம்</h2><p>
</p><p>
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிதி திரட்டும் திறன் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களைப் பெறும் திறனையும் மேலும் மட்டுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f861c6c-e737-4acb-9585-55b321373903/26-6aa0725ff1992.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
இந்நிலையில், “ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கைகளை இச்சட்டம் மேலும் வலுப்படுத்துகிறது” என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் டவுட்டி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T23:44:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! சீறிப்பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-resumed-air-strikes-on-ukraine-1788910503"></link>
            <id>https://ibctamil.com/article/russia-resumed-air-strikes-on-ukraine-1788910503</id>
            <summary type="text">


அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.</p><p> 

செவ்வாய்க்கிழமை அன்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தீவிரத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரவு முழுவதும் நீடித்த இந்தத் தாக்குதலால் தலைநகரின் பல மாவட்டங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும் சுமார் 14 உயரடுக்குக் கட்டிடங்கள், ஒரு விடுதி, பாடசாலை, கிளினிக், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில், "கீவ் நகரம் வெடித்துச் சிதறி எரியும் நிலைக்குள்ளானது" என்று உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கதரீனா மாதெர்னோவா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf00c66-f57a-41f6-94c5-6072dd9de4e3/26-6aa09dc49a47e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;intelligenceonline</i></p><p>

இந்தத் தாக்குதல்களில் தலைநகரில் 35 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அவசரக்கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்ததால், நகரம் முழுவதும் வெடிப்புச் சத்தங்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T23:44:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824"></link>
            <id>https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824</id>
            <summary type="text">ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், அவற்றின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
</p><p>
இதன்போது, ஈரானின் கார்க் தீவின் கடற்கரைப் பகுதியில் ஒரு கப்பல் குறிவைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>கப்பல்களை வெளியெற உத்தரவு</h2><p>குறிவைக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d5e6143-b907-4773-839f-153561255a8c/26-6aa075d9e2a77.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களின் அருகில் உள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் (அவை நங்கூரமிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிருந்து வெளியேறுமாறு ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் கார்க் தீவு மிக முக்கியமான இடமாகும். போருக்கு முன்பு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 வீதம் இந்தத் தீவின் மூலமே கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய ஆயுதத்தை தாக்கி அழித்த ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-destroyed-a-us-made-mq-1-drone-1788898304"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-destroyed-a-us-made-mq-1-drone-1788898304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p> ஈரானிய ஒலிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
</p><p>
MQ-1 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு ஆளில்லா விமானமாகும். இது பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் பதில்&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில், ஈரானின் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f491f7e-e298-4755-b6af-838fbeddf5bd/26-6aa0705bdb7eb.webp' /></p><p><i>Image Credit:migflug</i></p><p>

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் நுழைவாயிலில் அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் IRGC-யின் கடற்படைப் பிரிவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-08T20:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382"></link>
            <id>https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382</id>
            <summary type="text">இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை ரத்து செய்ய தாய்லாந்து எடுத்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், தாய்லாந்து அரசாங்கம் உலக நாடுகளுக்கான தனது விசா நடைமுறைகளை மறுஆய்வு செய்து, இலங்கை உட்பட 60 நாடுகளுக்கான விசா விலக்கு வசதியை திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விசா இல்லாத வசதியைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டதை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>சிறப்பு விசா நடைமுறை</h2><p> </p><p>

குறிப்பாக, பௌத்த பிக்குகள் தாய்லாந்திற்குள் குஷ் வகை போதைப்பொருளைக் கொண்டுவர முயன்ற சமீபத்திய சம்பவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dc23fa-6309-482a-9882-cf8daa6f594d/26-6aa05b8582d73.webp' /></p><p>
</p><p>
திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் வருகையின் போது விசா பெறும் வசதி (Visa on Arrival) தொடர்பான அறிவிப்புகள் ஓகஸ்ட் 31 அன்று தாய்லாந்தின் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. </p><p>

இது குறித்து இலங்கை அரசு தாய்லாந்து அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அப்போது, இலங்கைக்கு சிறப்பு விசா நடைமுறையை வழங்குவதற்காக புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள தாய்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு ஒப்பந்தம்</h2><p>இதற்கான வரைவு ஒப்பந்தம் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அடுத்தகட்டமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60899d8-58f8-41d3-bdd7-4de7339b1f8c/26-6aa05b866fd4b.webp' /></p><p>
</p><p>
இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 14 அன்று தாய்லாந்து செல்லவுள்ளார்.</p><p> 

தனது இந்தப் பயணத்தின் போது, முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு விசா நடைமுறை குறித்தும் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எந்த நெருக்கடியிலும் உறுதுணை! இந்திய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajnath-said-india-always-stands-by-sri-lanka-1788894859"></link>
            <id>https://ibctamil.com/article/rajnath-said-india-always-stands-by-sri-lanka-1788894859</id>
            <summary type="text">இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p>

பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்ட அவர், இன்று(08) கொழும்பில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருடனான சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருக்கமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இவை இருதரப்பு உறவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை எடுத்துரைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33be6b3e-381d-4050-a780-b567f2f15829/26-6aa065f9592eb.webp' /></p><p> மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
 மேலும், 2014-ல் சுமார் 2 டிரில்லியன் டொலராக இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது சுமார் 4 டிரில்லியன் டொலராக விரிவடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T19:48:29+00:00</updated>
        </entry>
    </feed>
