<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-29T21:19:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பேரிழப்பு! விழுந்து நொறுங்கியது F-16 போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukrainian-f-16-fighter-jet-crashed-1785359066"></link>
            <id>https://ibctamil.com/article/ukrainian-f-16-fighter-jet-crashed-1785359066</id>
            <summary type="text">போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் F-16 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் F-16 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அவசர கால வெளியேற்றத்தை பயன்படுத்தி விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ள நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p>

ரஷ்யாவின் வான்வழி இலக்குகளை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தீவிர ஆய்வு</h2><p>எவ்வாறாயினும், குறித்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் நிபுணர்கள் தீவிர ஆய்வை நடத்தி வருவதாக உக்ரைனிய வட்டாரங்கள்&nbsp; தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ed93fd-5e67-44ce-878f-58c0a8efaa15/26-6a6a6adbba451.webp' /></p><p><i>Image Credit: Defense News</i></p><p>

இதேவேளை, இச்சம்பவத்தால் தரையில் பொதுமக்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் வான்வழித் தாக்குதல்களின் போது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறிக்கவும், முன்னணிப் பகுதியில் உள்ள ரஷ்ய நிலைகள் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கவும் இந்த F-16 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T21:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஏற்பட்ட பேரிடி! கொல்லப்பட்ட புரட்சிகர காவல் படை வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/igrc-members-killed-in-us-saudi-strikes-1785356708"></link>
            <id>https://ibctamil.com/article/igrc-members-killed-in-us-saudi-strikes-1785356708</id>
            <summary type="text">

ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க-சவுதி வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க-சவுதி வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கிழக்கு ஈராக்கின் தியாலா மாகாணத்தில் அர்பயீன் புனிதப் பயணச் சடங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்தபோதே இந்த நால்வரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதேவேளை, இந்தத் தாக்குதல்களில் ஆறு ஈரானியப் புனிதப் பயணிகள் கொல்லப்பட்டதாக ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகளின் (PMF) ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>20 பேர் கொலை</h2><p>
ஈரானில் அவர்களின் தொழில் எதுவாக இருந்தாலும், அவர்கள் போராளிகளாகவோ அல்லது ஆலோசகர்களாகவோ இல்லாமல், யாத்ரீகர்களாகவே ஈராக்கிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a57f32f-969b-4a63-9d4a-f84b47e9728d/26-6a6a6564825dc.webp' /></p><p>
</p><p>
ஈரானிய ஆதரவுப் படைகளின் கூட்டமைப்பான PMF-இன் தகவல்படி, புதன்கிழமை அதிகாலையில் நடந்த இந்த அமெரிக்க-சவுதி தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T20:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்! ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-to-hit-iran-very-hard-1785353965"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-to-hit-iran-very-hard-1785353965</id>
            <summary type="text">

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>

அண்மைகாலமாக இராஜதந்திரத் தீர்வை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>முதலில் தாக்கிய ஈரான்</h2><p>
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம், ஏனெனில் அவர்களைத் தாக்குவது இப்போது நமது முறை. அது வரப்போகிறது என்பது அவர்களுக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b566e1d-16cd-4cbd-93a1-5738239e7ee7/26-6a6a5d6dcb8c7.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து ஈரான் இரவோடு இரவாக ஏவுகணைகளை ஏவியது.எனினும், அவை அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டன.</p><p>
வழக்கமாக அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகே ஈரான் பதிலடி கொடுத்து வந்த நிலையில், இம்முறை ஈரானே முதலில் தாக்குதலைத் தொடங்கியிருப்பது வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்டுள்ளதுடன், போரை மீண்டும் தொடங்க ஈரான் முற்படுவதையும் காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>மிகக் கடுமையான தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும் பதிலடி குறித்துப் பேசிய ட்ரம்ப், “பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அவர்கள் நம்மிடம் கேட்டுக்கொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டதுடன், ஈரானின் ஏவுகணைகள் அனைத்தும் தரையிலேயே வீழ்த்தப்பட்டுவிட்டதாக விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4766ce91-ea72-4759-8981-23b7148d4d44/26-6a6a5d6ec829c.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் உடன்பாட்டை எட்ட முடிகிறதா என்று பார்க்கவுள்ளதாகவும், ஆனால் அதற்குள் அவர்களை தாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T20:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நகர்வு! விதிக்கப்பட்ட புதிய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-sanctions-against-iranian-companies-1785352397"></link>
            <id>https://ibctamil.com/article/america-sanctions-against-iranian-companies-1785352397</id>
            <summary type="text">
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலுக்கு ஆதரவளித்ததாக குற்றஞ்சாட்டி இந்த தடைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

Persian Gulf Marine Insurance Company மற்றும் HormuzSafe Marine Services Authority ஆகிய இரு நிறுவனங்களும், ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களிடம் இருந்து பணம் அறவிடும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை சார்ந்த மிரட்டிப் பறிக்கும் திட்டத்தின் முக்கிய பிரிவாக செயற்படுவதாக அமெரிக்க திறைசேரி குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><h2>ஈரானால் உருவாக்கப்படும் அபாயங்கள்</h2><p>

ஈரான் இந்த முக்கிய நீர்வழிப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முயல்வதால், இங்கு தடையற்ற மற்றும் திறந்த போக்குவரத்தை மீண்டும் உருவாக்குவது அமெரிக்காவுக்கு ஒரு பாரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d59269dc-1422-4fe9-a29a-97f8d7ea5854/26-6a6a5484d563a.webp' /></p><p>

அமெரிக்க திறைசேரியின் தகவல்படி, இந்த நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு, கப்பல்களைப் பறிமுதல் செய்வது போன்ற பெரும்பாலான ஈரானாலேயே உருவாக்கப்படும் அபாயங்களுக்கு துணைபோவதாக கூறப்படுகிறது.</p><h2>நிழல் கப்பற்படை</h2><p>
</p><p>
இதன் மூலம் கிடைக்கும் வருவாய், அந்நாட்டின் பயங்கரவாதம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/371dec2e-e78d-4f9e-bb4a-4a78baf83bc1/26-6a6a54858e444.webp' /></p><p>
</p><p>
மேலும், தடை செய்யப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குக் கொண்டு செல்ல உதவும் நிழல் கப்பற்படை கப்பல்களை இயக்கும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்க நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T19:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cyberattacks-risk-sl-parliament-s-digital-systems-1785347957"></link>
            <id>https://ibctamil.com/article/cyberattacks-risk-sl-parliament-s-digital-systems-1785347957</id>
            <summary type="text">
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த விடயமானது, நாடாளுளுமன்றத்தின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அறிக்கையின்படி, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), ஆய்வு காலத்தில் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு மதிப்பீட்டை நடத்தியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு குறைபாடுகள்</h2><p>

இந்த மதிப்பீடு, இணையப் பாதுகாப்பு தொடர்பான 56 பகுதிகளை ஆய்வு செய்தது, அவற்றில் 46 பகுதிளுக்கு உயர் மட்ட அபாயம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7852ff-f998-462a-bdd9-2db2a658ad6b/26-6a6a414f09b33.webp' /></p><p> இதன்படி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல், முக்கியத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களைச் சிதைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்நிலையில், குறித்த இணையப் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T18:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - சவுதி தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அவசரமாக ஈரானுக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-saudi-strikes-transferred-to-iran-1785340907"></link>
            <id>https://ibctamil.com/article/us-saudi-strikes-transferred-to-iran-1785340907</id>
            <summary type="text">ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஈரானுக்கு மாற்றப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் இன்று(29)புதன்கிழமை தெரிவித்தன</p><p>ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், காயமடைந்தவர்கள் ஈராக்குடனான கோஸ்ரவி எல்லைக் வழியாக ஈரானுக்குள் நுழைந்ததாகவும், அங்கு அவர்கள் மேற்கு ஈரானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.</p><h2>காயமடைந்தவர்களின் நிலை</h2><p>

காயமடைந்த அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக ஆரம்பகட்ட மருத்துவ மதிப்பீடுகள் சுட்டிக்காட்டின என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2d4f7c-ebff-4bad-bf71-f39beb0b0719/26-6a6a2934e31c5.webp' /></p><p>இந்த சம்பவம் குறித்து ஈராக்கிய அதிகாரிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
</p><h2>அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் அறிவிப்பு</h2><p>ஈராக்கில் ஈரானுடன் இணைந்த குழுக்களுடன் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) புதன்கிழமை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f928fd8-d0b5-4c9d-a777-8ce7588241f5/26-6a6a2935927b1.webp' /></p><p> </p><p>இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது.</p><p>

 ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்களின் கூட்டணியான மக்கள் திரட்டல் படைகள் (PMF), இந்தத் தாக்குதல்களில் தங்களது பல தலைமையகங்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும், மேலும் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-stolen-in-batti-recovered-in-colombo-1785343610"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-stolen-in-batti-recovered-in-colombo-1785343610</id>
            <summary type="text">மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில்
வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில்
வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் இன்று
புதன்கிழமை(29.07.2026) தெரிவித்தனர். </p><p>



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி
கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 2026.07.22 அன்று
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.&nbsp;</p><h2>பாணமை பகுதியில் கண்டுபிடிப்பு</h2><p>களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாட்டைப்
பதிவு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/312829b7-ed1b-47d5-bd37-c6287996ed23/26-6a6a41b0b3f24.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்அனைத்த காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த நிலையில்
செவ்வாய்கிழமை(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச்
சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பாணமை
காவல்தறையினருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளும்
மீட்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மத்திக்கத்தக்கவர் எனவும்,
மோட்டார்சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூறாயிரத்துக்கு மேல்
எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்</p><p></p><h2>கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது</h2><p>2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து குறித்த நபர்
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று
இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abfb18df-9a7b-42ff-98ff-881f0f315687/26-6a6a41b187c82.webp' /></p><p>




சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார்
சைக்கிள் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது
சரியான முறையில் பூட்டி, 
பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதானால்
அவதானத்துடன் செயற்படுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:08:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம்! தம்பியை தொலைத்த சாட்சியின் அவலநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brother-disappeared-by-the-military-jaffna-1785347176"></link>
            <id>https://ibctamil.com/article/brother-disappeared-by-the-military-jaffna-1785347176</id>
            <summary type="text">1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம்பியின் நிலை குறித்து, அவரது சகோதரர் சில உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
“தனது தம்பி அந்த நேரத்தில் சர்வோதய இயக்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து, அவரும் அங்கிருந்த ஒரு முதிய காவலாளியும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். </p><p>

காவலாளி பின்னர் விடுவிக்கப்பட்டாலும், தனது தம்பி கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றுவரை காணாமல் போயுள்ளார்.
</p><p>
தாங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இராணுவம், காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் மூலம் தீவிரமாகத் தேடினோம்.
</p><p>
 பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து காணாமல் போனோர் சங்கம் உருவாக்கப்பட்டது.
</p><p>
 அதன்போது, 1997ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து முறையிட்டும், தங்கள் கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்க்கமான பதிலும் கிடைக்கவில்லை.”
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T17:53:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-low-floor-buses-arrive-for-lanka-1785345280"></link>
            <id>https://ibctamil.com/article/new-low-floor-buses-arrive-for-lanka-1785345280</id>
            <summary type="text">

104 புதிய மெட்ரோ பேருந்துகள் இன்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>

104 புதிய மெட்ரோ பேருந்துகள் இன்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. </p><p>

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த பேருந்துகள், சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோட்டான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>அதிகாரப்பூர்வ ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக, இந்த புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மே மாதம் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2028876a-93b4-405d-b445-ad5eb93e5b10/26-6a6a36b815edb.webp' /></p><p>
</p><p>
மேற்படி, ஒப்பந்தத்தின்படி, இந்த 104 பேருந்துகளையும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T17:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடலில் விழுந்த சிறிய விமானம் : வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-tourist-killed-paramotor-crashes-into-sea-1785337999"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-tourist-killed-paramotor-crashes-into-sea-1785337999</id>
            <summary type="text">பென்தோட்ட சுற்றுலா நகரத்தை வானிலிருந்து சுற்றிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய பாராமோட்டார் விமானம், இன்று மாலை கடலில் விழுந்து விபத்துக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பென்தோட்ட சுற்றுலா நகரத்தை வானிலிருந்து சுற்றிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய பாராமோட்டார் விமானம், இன்று மாலை கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 வயதான பாலஸ்தீனியப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, ஜூலை 29 அன்று பென்தோட்ட காவல் பிரிவுப் பகுதியில், கடற்கரைச் சாலையில் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பாராமோட்டார் சவாரியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>விபத்திற்குக் காரணம்&nbsp;</h2><p>இன்று (29) மாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கொலம்பிய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரான விமானி மனில் இப்ராஹிம், விமானத்திலிருந்து குதித்து நீந்தி கரையை அடைந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A paramotor (motorized paraglider) used for recreational flights crashed into the sea off Bentota, killing a foreign female tourist who was on board : Hiru (File photo internet) <a href="https://t.co/NQ3QIY6tDx">pic.twitter.com/NQ3QIY6tDx</a></p>&mdash; Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) <a href="https://x.com/SriLankaTweet/status/2082474018880540993?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. விமானமும் பெண்ணும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
</p><p>

உயிரிழந்தவரின் உடல் நகோடா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பென்தோட்ட காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:08:48+00:00</updated>
        </entry>
    </feed>
