<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-05T20:12:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/multiple-deaths-mass-shooting-in-the-united-states-1785959725"></link>
            <id>https://ibctamil.com/article/multiple-deaths-mass-shooting-in-the-united-states-1785959725</id>
            <summary type="text">அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், காஸ்வெல் (Caswell) கவுண்டியில் உள்ள பிராஸ்பெக்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், காஸ்வெல் (Caswell) கவுண்டியில் உள்ள பிராஸ்பெக்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட கரோலினா மாநில புலனாய்வு அமைப்பு (State Bureau of Investigation – SBI) வெளியிட்ட தகவலின்படி, பிராஸ்பெக்ட் ஹிலில் உள்ள புரூக்ஸ் சாலையில் (Brooks Road) அதிகாலை ஏற்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காஸ்வெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் உதவி கோரியுள்ளது.
</p><p>
பின்னர் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை&nbsp; அதிகாரிகள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.</p><p></p><h2>வட கரோலினா அதிகாரிகள்</h2><p> காயமடைந்த ஒருவரை டியூக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (Duke University Hospital) சிகிச்சைக்காக அனுப்பியதுடன், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e094a9b8-38a9-410c-ac23-8852ac0a1b9d/26-6a73981cd1627.webp' /></p><p>

காஸ்வெல் கவுண்டி ஷெரிஃப் டோனி டர்டன் (Tony Durden) உடனடியாக வட கரோலினா மாநில புலனாய்வு அமைப்பின் உதவியை கோரியதாகவும் SBI தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச்சூடு காலை சுமார் 8.00 மணியளவில் புரூக்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது சம்பவ இடத்தில் SBI-யின் குற்றப்புலனாய்வு நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதுவரை எந்த சந்தேகநபரும் அடையாளம் காணப்படவில்லை.

மேலும், இந்த சம்பவம் குறிப்பிட்ட அந்த முகவரியுடன் மட்டுமே தொடர்புடையதாக இருப்பதால், பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T20:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-missile-attack-shakes-kiev-1785957116"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-missile-attack-shakes-kiev-1785957116</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இரவு நேரத்தில் கீவ் நகரம் முழுவதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. சமீப வாரங்களாக ரஷ்யா தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கீவ் நகரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
</p><p>இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், போதிய ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு இல்லாததே மீண்டும் பல உயிர்களை காவுகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணை</h2><p> </p><p>மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணைகளை விரைவாக வழங்குமாறு உக்ரைனின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளுக்கு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47d26042-69e1-4a88-91d3-bce0bc1abff7/26-6a738afed0946.webp' /></p><p>

உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யா ஏவிய 115 ட்ரோன்களில் சுமார் 90 சதவீதம் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், ஏவப்பட்ட 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நான்கு 'சிர்கான்' (Zircon) அதிவேக குரூஸ் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட இடைமறிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தத் தாக்குதலில் கிடங்குகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. மேலும், ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம், கட்டுமானப் பொருட்கள் கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சரக்கு விநியோக மையங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T19:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியதரைக் கடலில் பழுதான படகு:15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/migrant-boat-adrift-mediterranean-sea-for-15-days-1785955028"></link>
            <id>https://ibctamil.com/article/migrant-boat-adrift-mediterranean-sea-for-15-days-1785955028</id>
            <summary type="text">ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளை நோக்கி படகில் பயணித்தபோது, மத்தியதரைக் கடலில் உணவு, தண்ணீரின்றி 15 நாட்கள் தத்தளித்த நிலையில் இருந்த வட ஆப்பிரிக்காவைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளை நோக்கி படகில் பயணித்தபோது, மத்தியதரைக் கடலில் உணவு, தண்ணீரின்றி 15 நாட்கள் தத்தளித்த நிலையில் இருந்த வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரு புலம்பெயர்ந்தோர் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>அவர்களுடன் பயணம் செய்ததாக கூறப்படும் மேலும் 17 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதி வெளியிட்ட அறிக்கையின்படி, மல்லோர்கா தீவின் தென்மேற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் (0100 GMT) இந்த இருவரும் மீட்கப்பட்டனர்.</p><p></p><h2>கடுமையான&nbsp;நீரிழப்பு </h2><p>

நீரிழப்பு மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b60dfe1-91b0-42d6-ba18-5e29dc7b526c/26-6a738631ca4a4.webp' /></p><p>

மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, அவர்கள் பயணித்த படகு 15 நாட்களாக கடலில் தத்தளித்ததாகவும், தங்களுடன் இருந்த மற்ற 17 பேரும் அந்தக் காலப்பகுதியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிர் தப்பிய இருவரின் வாக்குமூலத்தைத் தவிர, அந்த 17 பேர் குறித்து வேறு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று பாலியாரிக் தீவுகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.</p><p>
இதையடுத்து, ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் ஹெலிகாப்டரை அனுப்பி தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T18:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்ன நேர்ந்தாலும் எதிர்கொள்ளத் தயார் : நாடு திரும்பவுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/i-will-return-to-my-people-sheikh-hasina-1785953388"></link>
            <id>https://ibctamil.com/article/i-will-return-to-my-people-sheikh-hasina-1785953388</id>
            <summary type="text">&amp;nbsp;தான் வங்கதேசத்திற்கு திரும்பவுள்ளதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தான் வங்கதேசத்திற்கு திரும்பவுள்ளதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
</p><p>

தற்போது இந்தியாவில் தங்கியுள்ள அவர் இன்று (05)புதன்கிழமை காணொளி வாயிலாக ஆற்றிய உரையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாடு திரும்புவதற்கான நோக்கம்</h2><p>நாட்டிற்கு மீண்டும் திரும்புதல்அதிகாரத்தை கோருவதற்காக அல்ல என்றும், மாறாக நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e7990e-664c-4aef-bdf5-3a3eafd9c669/26-6a737ee91c0e2.webp' /></p><p>"அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்," என்று மேலும் கூறினார்.
</p><p>
 மக்கள் "மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும்", அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்ததாக தெரிவித்தார்.</p><p></p><h2>வெற்றி மாதத்தில் நாடு திரும்புதல்</h2><p>
</p><p>



"டிசம்பர் எங்கள் வெற்றி மாதம். அதனால், நான் டிசம்பர் மாதத்தில் திரும்பி செல்ல விரும்புகிறேன். நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b49bc31-065e-4f14-b2ae-af3a040cf487/26-6a737ee9c27aa.webp' /></p><p>
</p><p>
தற்போதைய நெருக்கடி குறித்துப் பேசுவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், முக்கிய தேசிய தலைவர்களுக்கும், நமது விடுதலைப் போரின் முப்பது லட்சம் தியாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
</p><p>
மேலும், 1975-ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15-ஆம் திகதி நான் இழந்த எனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூர்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><p>



 இராணுவ புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது, ​​அவர் கண்ணீர் விட்டு அழுதார்.</p><p> தன் நாட்டிலிருந்து தான் "வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோதிலும்", தன் மக்களிடமிருந்து "ஒருபோதும் பிரிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

 ஜனநாயகத்திற்கான தனது நாட்டின் 'போராட்டத்திற்கு' சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T18:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-agreement-centered-hormuz-amidst-1785948271"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-agreement-centered-hormuz-amidst-1785948271</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>இந்தச் செயல்பாட்டில் எந்தவொரு வெளித்தரப்பினரும் தலையிடாத பட்சத்தில், இந்த திட்டம் சாத்திய போக்கை அடையும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இரு கரையோர நாடுகளாக, வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை அமைப்பது குறித்து ஈரானும் - ஓமானும் கடந்த இரண்டு மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.</p><p></p><h2>தொழில்முறை சார்ந்த பேச்சுவார்த்</h2><p>இந்நிலையில் இந்த போச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65096043-6858-4ae4-9f9c-043a27f227c5/26-6a7370c301244.webp' /></p><p>“நமது நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரிகள், இந்த முன்மொழிவை தொழில்நுட்பம், சட்டம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கண்ணோட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர்.</p><p>இந்த பேச்சுவார்த்தைகளை தொழில்முறை சார்ந்தவைமற்றும் பயனுள்ளவை. </p><p>மேலும் முன்மொழியப்பட்ட பாதையின் புவியியல் ஆயக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>முக்கியப் பரிசீலனை</h2><p>முக்கியப் பரிசீலனைகள் மற்றும் உடன்பாட்டு அம்சங்கள் அடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டறிக்கை, அதன் இறுதிக்கட்ட ஆய்வு மற்றும் வரைவுப் பணிகளில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de39be0b-0e33-471a-ba93-a81ad8295482/26-6a7370c3b0225.webp' /></p><p>ஈரான்-ஓமான் இடையேயான உடன்பாடு மட்டுமே அந்த மூலோபாய நீர்வழிப்பாதை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.</p><p>அத்தோடு, பாதுகாப்பு நிலைமையானது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் பிணைந்துள்ளது”&nbsp; என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T18:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகும் ஈரான் ஜனாதிபதி: வெளியானது சர்ச்சையின் உண்மை நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pezeshkian-rejects-resignation-rumors-1785947404"></link>
            <id>https://ibctamil.com/article/pezeshkian-rejects-resignation-rumors-1785947404</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பதற்ற சூழலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நிராகரித்துள்ளார்.மேலும், தனது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பதற்ற சூழலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நிராகரித்துள்ளார்.</p><p>மேலும், தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததோடு, தான் பதவியில் நீடித்து தனது பணிகளைத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.</p><p>அவரது நிர்வாகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு பேட்டியில், தனது நிர்வாகம் நாட்டின் ஆயுதப் படைகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக பெஷெஷ்கியன் வலியுறுத்தினார்.</p><h2>கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் காட்ட முயற்சி</h2><p>&nbsp;தனது பதவி விலகல் குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த பெஷெஷ்கியன், அந்த வதந்திகளை உறுதியாக மறுத்தார்.

"நான் எப்போதாவது பதவி விலக முடிவு செய்தால், அதை நானே அறிவிப்பேன். ஆனால் நான் பதவி விலக மாட்டேன், உறுதியாக நிற்பேன்," என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/132e8afa-6dde-4c25-adf3-c5291da6b712/26-6a736ade10653.webp' /></p><p>

தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா கமெனிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>பதவி விலகல் குறித்த வதந்திகள்</h2><p>
</p><p>
சமீப நாட்களாக பெஷேஷ்கியனின் பதவி விலகல் குறித்த வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cee9514-a13b-41f6-abe0-1b2abfee5a1d/26-6a736adeb75e5.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் மற்றும் தொடர்புத்துறை துணைவரான முகமது மஹ்தி தபதபாயி, அந்தச் செய்திகளை "ஆதாரமற்றவை" மற்றும் "முழுமையான பொய்" என்று நிராகரித்தார். தேசிய ஒற்றுமையைக் குலைக்கவும், ஈரானின் எதிரிகளின் நலன்களுக்குச் சேவை செய்யவும் வதந்திகளைப் பரப்பும் அரசியல் தீவிரவாதிகளை அவர் கடுமையாகச் சாடினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T17:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் தொடர்ந்தும் மீட்கப்படும் என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1785944804"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1785944804</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம்
புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம்
புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 98 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
491 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 489என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கி வங்கி முகாமையாளர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bank-manager-dies-accident-1785942314"></link>
            <id>https://ibctamil.com/article/bank-manager-dies-accident-1785942314</id>
            <summary type="text">அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இன்று(05) காலை ஒரு மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இன்று(05) காலை ஒரு மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட கோரமான விபத்தில், எப்பாவளாவில் உள்ள ஒரு அரச வங்கியின் முகாமையாளர் உயிரிழந்தார்.
</p><p>
உயிரிழந்தவர், 43 வயதான திருமணமாகாத ரோகன் ஜயந்த பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>அரச வங்கியில்&nbsp;முகாமையாளர்&nbsp;</h2><p>அவர் உயிரிழந்த நேரத்தில் எப்பாவளவில் உள்ள ஒரு அரச வங்கியில் முகாமையாளராகப் பணியாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aefdd0e-e50a-4ebc-8de6-c91e63cec85c/26-6a7355ad1550b.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர், அனுராதபுரத்திலிருந்து எப்பாவளவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​காலை சுமார் 7.10 மணியளவில், ஏ-28 சாலையில் இரு கம்பங்களுக்கு இடையே 79-80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில், அலியாகலாவிலிருந்து அனுராதபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணவீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/van-overturns-three-hospitalized-1785940077"></link>
            <id>https://ibctamil.com/article/van-overturns-three-hospitalized-1785940077</id>
            <summary type="text">&amp;nbsp;மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொலன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
பொலன்னறுவ-அரலகன்வில பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.</p><h2>வான் கவிழ்ந்து விபத்து</h2><p>

சிறிபுரவிலிருந்து மெதிரிகிரியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மனம்பிட்டிய 2வது தூண் பகுதியில் சாலையிலிருந்து விலகி ஒரு சிறு பாலத்தில் இந்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c07fedc-cd37-4724-a0de-81898ad69f1c/26-6a73486ec9f1c.webp' /></p><p>&nbsp; காயமடைந்தவர்கள் பொலன்னறுவ மற்றும் மனம்பிட்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>



ஓட்டுநர் உறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:42:08+00:00</updated>
        </entry>
    </feed>
