<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-13T04:31:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடத்தொலாளர்கள் படகுடன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360</id>
            <summary type="text">தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடத்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடத்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (12.08.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த கடத்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த அவர்கள், தடைசெய்யப்பட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி கடத்தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>9 கடத்தொழிலாளர்கள் கைது</h2><p>கைது செய்யப்பட்ட 9 கடத்தொழிலாளர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடத்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e8cfca-4c19-4314-b7d0-66f5aabcc476/26-6a7d461f40979.webp' /></p><p>
இதனிடையே, மன்னார் தீவு மற்றும் இராமர் பாலத்தைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்காக விசேட கடத்தொழில் முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் ஹிஸ்புல்லா எம்.பி இலஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658"></link>
            <id>https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&amp;nbsp;வருகை தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&nbsp;வருகை தந்துள்ளார். </p><p>அவர் சற்றுமுன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக (CIABOC) வருகை தந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T04:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 21 வயது இலங்கை மாணவன் குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-held-after-sl-student-dies-in-japan-1786589858"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-held-after-sl-student-dies-in-japan-1786589858</id>
            <summary type="text">ஜப்பானில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் சிபா மாகாணத்தின் நாகரேயாமா நகரில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் சிபா மாகாணத்தின் நாகரேயாமா நகரில் உள்ள ஒரு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நடந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 

ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>காவல்துறையினரால் கைது</h2><p> </p><p>

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8933c19-2939-428d-b443-51941c5bc721/26-6a7d351f0ee69.webp' /></p><p>இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயார் நிலையில் தூக்குமேடை - 50 வருடங்களின் பின் மீண்டும் இலங்கையில் மரண தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-gallows-ready-if-death-penalty-imposed-1786588410"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-gallows-ready-if-death-penalty-imposed-1786588410</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வெலிக்கடை சிறைச்சாலை&nbsp;உடன் தற்போது இரு மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஒரே தூக்குமேடை</h2><p> இலங்கையில் தற்போது கட்டமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய ஒரே தூக்குமேடை வெலிக்கடை சிறைச்சாலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deca63c-aa3d-451e-8602-c3d7b36b0808/26-6a7d30f9128e3.webp' /></p><p>கண்டி போகம்பர சிறைச்சாலையில் இருந்த மற்றொரு தூக்கு மேடை தற்போது அந்தச் சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதால் பயன்பாட்டில் இல்லை. </p><p>சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலின்படி தற்போது நாட்டில் 806 கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.</p><p></p><p> </p><h2>மீண்டும்&nbsp;மரண தண்டனை</h2><p>இவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 58 பேர் அடங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26cd16f-b3c7-46b4-8720-b795107f4110/26-6a7d30f9b9031.webp' /></p><p> அவர்களில் 52 ஆண்களும் 6 பெண்களும் உள்ளனர். மேலும் ஒரு வெளிநாட்டவரும் மரண தண்டனை கைதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய செயற்பாட்டு சபை கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-s-official-poverty-line-rises-to-rs-17592-1786591446"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-s-official-poverty-line-rises-to-rs-17592-1786591446</id>
            <summary type="text">ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபாய் உயர்வாகும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொழும்பு மாவட்டத்தின் வறுமைக்கோடு</h2><p>

ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம் அறிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c21750-1704-4163-b693-cf77b1d00ba9/26-6a7d3c807f009.webp' /></p><p> </p><p>

ஜூன் மாத உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் மதிப்பு 18,973 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் அம்மதிப்பு 18,876 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p>

வறுமைக்கோட்டின் மிகக் குறைந்த மதிப்பு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்தத் தொகை 16,821 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T03:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் - இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-session-regs-chemmani-mass-grave-1786586218"></link>
            <id>https://ibctamil.com/article/important-session-regs-chemmani-mass-grave-1786586218</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளது.</p><p> குறித்த விடயத்தை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மனித என்புக் குவியல்</h2><p>

இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1ae1b4-0400-4361-aa96-e111fa56f799/26-6a7d25d324062.webp' /></p><p>அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்ட மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 530 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.
</p><p>
மேலும், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்தப் பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் படம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T02:51:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thondamanaaru-selvasannidhi-temple-annual-festival-1786585276"></link>
            <id>https://ibctamil.com/article/thondamanaaru-selvasannidhi-temple-annual-festival-1786585276</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகியது.சந்நிதியான் கொடியேற்றம் இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகியது.</p><p>சந்நிதியான் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றது.</p><h2>அடியவர்கள் வருகை</h2><p>
செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/887052a2-205d-447c-b51c-9a468b128fff/26-6a7d2318b168d.webp' /></p><p>
</p><p>
திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர்
உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளதுடன் விசேட
போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இவ் வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீர்த்தத் திருவிழாவும் இடம் பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9770459a-9b47-4bab-8fee-0f9c3f7c8863/26-6a7d231804f0e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T01:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு! கீரிமலையில் மக்கள் எடுத்த நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/leaflet-campaign-against-keerimalai-waste-1786582735"></link>
            <id>https://ibctamil.com/article/leaflet-campaign-against-keerimalai-waste-1786582735</id>
            <summary type="text">கீரிமலை புனித பூமியை அண்டிய பிரதேசங்களில் குப்பை கொண்டப்படுவதை
நிறுத்தக்கோரி துண்டுப்பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை புனித பூமியை அண்டிய பிரதேசங்களில் குப்பை கொண்டப்படுவதை
நிறுத்தக்கோரி துண்டுப்பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த நடவடிக்கை நேற்று (12-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கீரிமலையை அண்டிய நல்லிணக்கபுரம் மக்கள் குடியிருப்பை அங்டிய பகுதிகளில் கடந்த
மூன்று மாத காலத்திற்கு மேலாக பிரதேச சபையின் குப்பைகள் மற்றும் ஏனிய கழிவுகள்
கொட்டப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><h2>வளி மாசடைதல்</h2><p>இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் நன்னீர் மாசடைந்தல் மற்றும் வளி
மாசடைதல் என்பன ஏற்படுவதனைச் சுட்டிக்காட்டி குறித்த துண்டுப் பிரசுரம்
வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83780b44-31a2-4060-b7a4-b7abaf70220c/26-6a7d16d142624.webp' /></p><p>

வலி. வடக்கு பிரதேசசபை மற்றும் வலிதெற்குப் பிரதேசசபை குறித்த குப்பைகளை
கொட்டிவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T00:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786582034"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786582034</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.




 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் காரணமாக பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88abe084-ec60-4c84-9158-57659842993b/26-6a7d1414a396f.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T00:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு! முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-talks-on-enforced-disappearances-1786580786"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-talks-on-enforced-disappearances-1786580786</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள
சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள
சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
குறித்த கலந்துரையாடல் நேற்று (12-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள
சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல்கலைக்கழக மாணவர்கள்</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30ebd01-0e6c-4012-a2f9-410899caace9/26-6a7d0f3962c13.webp' /></p><p>இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய
பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க
பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T00:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இம்ரான் கான் மரணம் - வெடித்த சர்ச்சை...! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journalist-claims-imran-khan-dead-in-jail-1786579472"></link>
            <id>https://ibctamil.com/article/journalist-claims-imran-khan-dead-in-jail-1786579472</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என மூன்று இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என மூன்று இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் தெரிவித்துள்ளார்.
</p><p>
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>

அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பல்வேறு தகவல்கள்&nbsp;</h2><p>


இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என மூன்று இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7422a87-7ff6-49e4-9aa0-dec31d25c242/26-6a7d0a138c2cd.webp' /></p><p>

இருப்பினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
</p><p>
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும் PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>ஆதரவாளர்களிடையே கவலை</h2><p>இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/904ad7d4-7ae1-46fb-8190-f049cdbc0fdc/26-6a7d0a12da8fd.webp' /></p><p>இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது.
</p><p>
இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T00:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் சொத்துப் பின்னணி...! வெடித்த புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-declares-assets-since-age-24-1786578956"></link>
            <id>https://ibctamil.com/article/namal-declares-assets-since-age-24-1786578956</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தான் ஒரு காலத்தில் கன்சல்டன்ட் ஃபார்ம் (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும் அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
</p><p>
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jzvh1Ha0Qj8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகள்: வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuruwita-inmates-died-of-gunshots-pm-1786578390"></link>
            <id>https://ibctamil.com/article/kuruwita-inmates-died-of-gunshots-pm-1786578390</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்குக் காரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்குக் காரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களே எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் ஒரு கைதியின் தலையிலும் மற்றைய கைதியின் மார்பிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தமையாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><p></p><h2>கண்ணீர்ப்புகைத் தாக்குதல்&nbsp;</h2><p>

இந்த அமைதியின்மை சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
</p><p>
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகக் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a08ad2-cc0f-4e4f-8358-ede94c899ab4/26-6a7d05d8d42c6.webp' /></p><p>இந்தநிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படை (STF), கலகமடக்கும் பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p>

இதற்கு முன்னரும் நீர்கொழும்பு, மஹர, புதிய மெகசின் மற்றும் பள்ளன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் இதுபோன்ற அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T23:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-240m-spent-on-sl-parliament-food-1786577637"></link>
            <id>https://ibctamil.com/article/rs-240m-spent-on-sl-parliament-food-1786577637</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்றத்தின் புதிய வருடாந்த செயல்திறன் அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே ரூபாய் 247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>பயன்படுத்தப்படும் எரிவாயு</h2><p>இதற்கு மேலதிகமாக, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் 2,278,758.12 செலவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed352b74-e906-4d58-b13f-77c05d794416/26-6a7d02e87c4ef.webp' /></p><p>நாடாளுமன்றத்தில் உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்காக (Gas) ரூபாய் 3,050,850.00 செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
உணவு மற்றும் பானங்களை வழங்கிய சேவைத் தடவைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 7,200 என்ற வரம்பைத் தாண்டி 10,670 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><h2>நாடாளுமன்றப் பணியாளர்கள்</h2><p>இது 148 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
</p><p>
அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்கள் மற்றும் நாடாளுமன்றப் பணியாளர்களுக்காக உணவு, பானங்கள் வழங்கியதில் 361,930 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 119 சதவீத அதிகரிப்பாகும்.
</p><p>
நாடாளுமன்ற வளாகத்திற்குள் தினசரி ஐந்து சிற்றுண்டிச்சாலைகள் இயங்கி வருவதுடன், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களில்கூட ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 நபர்களுக்கு உணவு வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[59 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஹோர்முஸில் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-navy-turns-back-59-ships-near-iran-1786570962"></link>
            <id>https://ibctamil.com/article/us-navy-turns-back-59-ships-near-iran-1786570962</id>
            <summary type="text">ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த முற்றுகை நடவடிக்கைகளை மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை அமைத்துள்ள இந்த முற்றுகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரும்புச் சுவர் என வர்ணித்துள்ளார்.</p><p>

மறுபுறம், அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்கும் வரை கடல் வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">An F/A-18 fighter jet launches from the flight deck of USS George H.W. Bush (CVN 77) while the ship sails in regional waters and supports enforcement of America’s 🇺🇸 steel wall blockade against Iran. As of Aug. 12, U.S. forces have redirected 59 commercial vessels, disabled 3 and… <a href="https://t.co/dH4BBshoTE">pic.twitter.com/dH4BBshoTE</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2087616031758103033?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:16:23+00:00</updated>
        </entry>
    </feed>
