<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-24T14:33:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகர வன்முறை மோதல்! கொலைச் சம்பவ விசாரணையில் அம்பலமாகும் இணைய மோசடி சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/violent-clash-at-colombo-port-city-1784902266"></link>
            <id>https://ibctamil.com/article/violent-clash-at-colombo-port-city-1784902266</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாரிய குற்றவியல் விசாரணையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த மோதலின் போது கடத்தப்பட்டு பின்னர் எஹெலியகோடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை, கணினி மற்றும் இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின் போது, சம்பவத்தில் தொடர்புடைய சீன பிரஜைகள் இலங்கையில் எந்தவொரு சட்டபூர்வமான தொழிலிலும் ஈடுபடவில்லை என்பதும், அவர்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னரே நாட்டிற்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை</h2><p>
</p><p>இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சீன சந்தேக நபர்களிடம் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509afbd9-afc9-4d0e-be8b-d239d229e56f/26-6a63727d568a3.webp' /></p><p>

சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படும் குறித்த இரு சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். </p><p>பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>விசாரணைகளின் படி, கடந்த வியாழக்கிழமை (23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரில் இரண்டு சீன குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை தகவல்களின் படி, சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு சுமார் 11 மணியளவில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுக நகரில் உள்ள தொங்கு பாலம் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது அதிகாலை 2 மணியளவில் சுமார் 20 சீன பிரஜைகள் அடங்கிய மற்றொரு குழு அங்கு வந்து, குறித்த மூவரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்கியதுடன், கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
</p><p>
கடத்தப்பட்டவர்களில் இருவர் பின்னர் துறைமுக நகருக்குள் உள்ள ஒரு வாகனத்தில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.</p><p></p><h2>சடலத்தை மறைக்கும் முயற்சி</h2><p> </p><p>மூன்றாவது நபர் வேறு இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5607a995-cdac-429d-8a25-a1a27282e53b/26-6a63727ca2d8f.webp' /></p><p>
</p><p>
சில மணிநேரங்களின் பின்னர், கடத்தப்பட்ட சீன பிரஜையின் சடலம் எஹெலியகோடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், கைகள், கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> மேலும், சடலத்தை மறைக்கும் முயற்சியாக அதன் மீது கற்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று எஹெலியகோடா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குற்றச் செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு சொகுசு ஜீப் வாகனமும் பண்டாரகம, பஹல போப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விசாரணை தற்போது கொழும்பு குற்றப் பிரிவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>விசாரணை தொடர்பான அறிக்கை</h2><p>

விசாரணை தொடர்பான அறிக்கை காவல்துறை மா அதிபருக்கும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72b8e335-4f7a-4440-9de1-84991ee3ef31/26-6a63727bee22f.webp' /></p><p>சமீப காலங்களில் இலங்கையில் இடம்பெற்றுவரும் இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடி சம்பவங்களின் பின்னணியில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>

இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மோசடி மையங்கள், சீன பிரஜைகளால் ஒருங்கிணைக்கப்பட்டதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p>

சர்வதேச ரீதியில் செயற்படும் சீன ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடைய இணையவழி மோசடி நடவடிக்கைகள் பல நாடுகளில் இடம்பெற்று வருவதாகவும் விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கியதாக கூறப்படும் சில குற்றக் குழுக்கள், முதலீட்டு மற்றும் காதல் மோசடிகளை உள்ளடக்கிய இணைய மோசடி முறையை பயன்படுத்தியதாக சர்வதேச விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அதேபோன்ற மோசடி நடவடிக்கைகள் இலங்கையிலும் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>சீன டிரையாட்ஸ் என அழைக்கப்படும் நாடுகடந்த குற்ற வலையமைப்புகளும் இதுபோன்ற இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றமை, சம்பவத்தின் திட்டமிடப்பட்ட தன்மை மற்றும் சர்வதேச இணைய குற்றச் செயல்களுடன் காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவை, இலங்கை சர்வதேச குற்ற வலையமைப்புகளின் புதிய செயற்பாட்டு தளமாக மாறுகின்றதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T14:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/third-phase-excavation-work-at-chemmani-mass-grave-1784900858"></link>
            <id>https://ibctamil.com/article/third-phase-excavation-work-at-chemmani-mass-grave-1784900858</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தற்காலிக நிறுத்தம்</h2><p> </p><p>மேலும், 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/063e4ba8-365a-4182-8e53-5af5d0014364/26-6a63713b7becc.webp' /></p><p> </p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T14:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரளக் கஞ்சா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kerala-cannabis-burned-with-jaffna-1784900777"></link>
            <id>https://ibctamil.com/article/kerala-cannabis-burned-with-jaffna-1784900777</id>
            <summary type="text">ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது.
</p><p>
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு
திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்
வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த
கஞ்சாப் பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.
</p><p>
இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போதைத்தடுப்பு காவல்துறை , உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார
பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரியூட்டப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-24T13:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046"></link>
            <id>https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்) தொடர்புடைய ஒரு குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுத் துறையின் சில பிரிவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அண்மையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார். </p><p> 

சட்டபூர்வமான அரச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் படுகொலைகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலுக்கும் இந்தத் தொடர்பு பயன்படுத்தப்பட்டதாக திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>மௌலானா கூறிய&nbsp;வாக்குமூலம்</h2><p>
மேலும், அப்போது சுமார் ஆறு மாத கால அவகாசத்தில் இருந்த தேர்தலுக்கு முன்பு, இந்தத் தகவலை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc61374b-2404-4827-9ebc-de66cc37fe32/26-6a634befeef74.webp' /></p><p>
</p><p>
ஹன்சிர் ஆசாத் மௌலானா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, தற்போது விசாரணையில் உள்ள குழுவானது கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> 

பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், பத்திரிகையாளர்கள் கீத் நோயர் மற்றும் உபாலி தென்னக்கூன் மீதான தாக்குதல், மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் கொலை ஆகியவை இவற்றில் அடங்கும்.</p><p> 

இருப்பினும், இவை நீதிமன்றத்தின் முன் உள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே, இன்னும் இவற்றின் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றில் தனது உண்மைகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்டோர் இராணுவ உளவுத்துறை மூலம் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>
தகவல்களை மறைக்கும் செயல் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஒரு சந்தேக நபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல்</h2><p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சுரேஷ் சலே, ஆசாத் மௌலானாவின் குடும்பத்தினரை அஹுங்கல்லேவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தூதரகத்தில் ஒரு பதவி வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4233a4c9-d72d-4540-a1d2-3df925a77819/26-6a634bf0cc0e5.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் அந்த ஹோட்டலின் பதிவேடுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இதன்படி தற்போது காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், விசாரணையைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெறுவதாகவும் கூறி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், சலேவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p>

மேலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் தாக்குதல் நடத்தவோ ஆரம்பத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டு இந்தத் தாக்குதல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அப்போது நடைபெறவிருந்த தேர்தல்களை இலக்குவைத்து , சலே அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற முக்கிய பிரமுகர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் திருமணத்தின் மின்சார கட்டணம்! மனு விசாரணைக்கு திகதி அறிவித்த உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840"></link>
            <id>https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p></p><h2>அடிப்படை உரிமை மீறல்</h2><p>

விஜித்த குமார என்ற சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டியவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,682,246.57 ரூபா மின்சாரக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9231012-32e2-488b-a605-011baf8576f9/26-6a6358ac0e01c.webp' /></p><p>
</p><p>
தான் 7,390 ரூபா மாதாந்த மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காகத் தனது வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபா கட்டண நிலுவையை வைத்துள்ள வீரகெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்காமல் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், நாமல் ராஜபக்சவின் திருமண மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிருடன் இருந்தபோது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் படுதோல்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731"></link>
            <id>https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731</id>
            <summary type="text">

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கம் அமைச்சருக்கான தனது பலத்தை நிரூபித்துள்ளது.
</p><p>
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 152 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 உறுப்பினர்களும் வாக்களித்தனர். </p><p>

இதன்போது எவரும் வாக்களிக்காமல் இருக்கவிலை என தெரியவருகிறது.</p><p></p><h2>பதவியிலிருந்து நீக்கும் முயற்சி</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, நாட்டின் சிறைச்சாலை அமைப்பின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில் குறைபாடுகள் நிலவுவதாகவும், அந்த மோதலைத் தடுக்க நீதி அமைச்சர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளால் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd20a8e7-d53c-4ffb-b0e6-8f6cc1c5307c/26-6a63683cd6b37.webp' /></p><p>
</p><p>
எனினும், எதிர்க்கட்சியின் இந்த முயற்சியை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததன் மூலம், ஹர்ஷன நாணயக்காரவை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனக் கடலில் பதற்றம்: சீனா - பிலிப்பைன்ஸ் இடையே புதிய மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-philippines-clash-at-south-china-sea-1784894022"></link>
            <id>https://ibctamil.com/article/china-philippines-clash-at-south-china-sea-1784894022</id>
            <summary type="text">தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஒரு புதிய மோதல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&amp;nbsp;இந்த தாக்குதலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஒரு புதிய மோதல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த தாக்குதலில் இரு நாடுகளின் கடலோரக் காவல் கப்பல்களும் நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளன.&nbsp;</p><p> இப்பகுதியின் மீது இரு நாடுகளும் இறையாண்மையை வலியுறுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் கடல்சார் பதட்டங்களில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிப்பதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சீனாவுக்கும் பிலிப்பைன்ஸின் புதிய மோதல்&nbsp;</h2><p>2023-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்குமிடையே இத்தகைய மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04dbcf0-2221-459a-aaa3-c11a1a2e1d38/26-6a6358112eda6.webp' /></p><p> </p><p>இரு தரப்பினரும் வெளிப்படையான கடற்படை மோதலில் ஈடுபடாமல், பல்வேறு கடல்சார் நடைமுறையாக உத்திகளில் ஈடுபட்டு, பதட்டங்களை அதிகரித்து வருகின்றனர். </p><p>பரந்த தென் சீனக் கடல் சர்ச்சையில் ஸ்கார்பரோ ஷோல் ஒரு பதட்டமான பகுதியாக நீடிக்கிறது, இது பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.</p><p>சமீபத்திய மோதல், அதிகரித்துள்ள பிராந்திய பதட்டங்களின் அறிகுறியாகக் கருதப்படுகிறது, மேலும் இது உடனடிப் பகுதிக்கு அப்பாலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p> இப்பிராந்தியத்தில் சீனாவின் நிலைப்பாடு மேலும் உறுதியானதாக இருக்கலாம் எனச் பொருளாதார சந்தைகள் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. </p><p>இந்தச் சம்பவம், சீனா தனது பிராந்திய உரிமைகோரல்களில் மேலும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுடன் ஒத்துப்போவதாகத் தெரிவதாகவும்&nbsp; இது தாய்வான் மீதான சீனாவின் நோக்கங்கள் குறித்த கண்ணோட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T12:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல்நினோ தாக்கம் : பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nino-approaching-indian-ocean-region-warning-1784891386"></link>
            <id>https://ibctamil.com/article/el-nino-approaching-indian-ocean-region-warning-1784891386</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால்
பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல் து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால்
பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து
பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>யாழ்ப்பாணம் - வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்ற விழிப்புணர்வுச் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய பசுபிக் பிராந்தியக்
கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><p></p><h2>கடுமையான நீர் தட்டுப்பாடு</h2><p>மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து
சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாகப் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c817b284-9bb4-41b4-9ffe-6f0d9fe8a27b/26-6a634a3ca5bf1.webp' /></p><p>அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப
ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.
</p><p>இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.</p><p></p><h2>பாரிய மழைவீழ்ச்சி</h2><p>
</p><p>ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4183d2-90f4-4caf-b7dc-2adc37e4bcfa/26-6a634a3d6b256.webp' /></p><p>
</p><p>ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><p>எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T11:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கோட்டை - தலைமன்னார் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-talaimannar-train-service-resumes-1784889197"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-talaimannar-train-service-resumes-1784889197</id>
            <summary type="text">

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, இலக்கம் 5003 கொண்ட தொடருந்து தினமும் பிற்பகல் 3:50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10:28 மணிக்கு தலைமன்னாரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, இலக்கம் 5004 கொண்ட தொடருந்து மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு காலை 10:44 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடருந்து முன்பதிவு&nbsp;</h2><p>
</p><p>
இந்த தொடருந்து சேவை கம்பஹா, குருநாகல், மஹோ, அனுராதபுரம், மெதவச்சிய, மன்னார் நகரம் மற்றும் தலைமன்னார் நகரம் உள்ளிட்ட முக்கிய தொடருந்து நிலையங்களில் நின்று செல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d00b9e-6be8-4e8e-9292-25cea77215cd/26-6a6347563932b.webp' /></p><p> </p><p>

இருப்பினும், அனுராதபுரம் புதிய நகர தொடருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை அந்த நிலையத்தில் தொடருத்து நிறுத்தப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
</p><p>
இந்த தொடருந்து முன்பதிவு செய்யக்கூடிய வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட இரண்டு முதல் வகுப்புப் பெட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.பயணிகள் இதற்கான இருக்கைகளை <a href="https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/" target="_blank">seatreservation.railway.gov.lk</a><a> </a>என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது முன்பதிவு வசதிகள் உள்ள தொடருந்து நிலையங்களிலோ முன்பதிவு செய்து கொள்ள முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T11:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/growth-ai-and-global-water-scarcity-new-challenge-1784881009"></link>
            <id>https://ibctamil.com/article/growth-ai-and-global-water-scarcity-new-challenge-1784881009</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) உலகை வேகமாக மாற்றி வரும் நிலையில் , அதற்குப் பின்னால் உள்ள காரணி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி வருவதாக சர்வதேச ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) உலகை வேகமாக மாற்றி வரும் நிலையில் , அதற்குப் பின்னால் உள்ள காரணி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி வருவதாக சர்வதேச ரீதியில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.</p><p>AI பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தரவு சேமிப்பகங்களின் (server) பயன்பாட்டிற்கும் பாதுகாப்பு தேவைக்கும் அதிகளவு நீர் உள்வாங்கப்படுவதால் இந்த எதிர்ப்பை சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>இதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில்&nbsp;2030-க்குள் AI தொடர்பான கட்டமைப்புகள் ஆண்டுதோறும் 9.3 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் நீர்வளமும்</h2><p>அந்த வெப்பத்தைத் தணிக்க, பல டேட்டா சென்டர்கள் தண்ணீரை ஆவியாக்கும் குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன என்றும்&nbsp; அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3a66b4-98a7-429e-b92c-1b9855949d5e/26-6a63457cc0b13.webp' /></p><p>இது 100 கோடிக்கும் அதிகமான மக்களின் ஒரு வருட குடிநீர் தேவைக்கு சமமான அளவவாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட புதிய AI தரவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
</p><p>
இது அதற்கு முந்தைய 3 ஆண்டு காலத்தை விட 70% அதிகமாகும்.

அந்தவகையில் ஒரு நடுத்தர தரவு மையம் ஒரு சிறிய நகரம் பயன்படுத்தும் அளவு தண்ணீரை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வெளியாகிய ஆய்வு அறிக்கை</h2><p> </p><p>

பெரிய தரவு மையங்களுக்கு ஒரு நாளுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான லீட்டர் தண்ணீர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இது சுமார் 50,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் தினசரி நீர் தேவைக்கு சமம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd15017-5882-42f9-9c4a-8599ee8e12e8/26-6a63457c19f33.webp' /></p><p> </p><p>

இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் இலாப நோக்கமற்ற முக்கிய அமைப்பொன்றின் அறிக்கை பின்வருமாறு தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளது. 

அதாவது உள்ளுர் மக்கள் எப்போதும் கிணற்று நீரை நம்பி இருப்பார்கள். </p><p>

இந்த நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவால் பல மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குயை ஏற்படுத்தும்.
</p><p>
இந்த நிலமை சர்வதேச ரீதியில் வெப்பமாதலை தலைத்தோங்க செய்யும். 

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு சில குடியிருப்பாளர்கள் கிணற்று நீர் வற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். </p><p>

இதை தொடர்ந்து 2030-க்குள் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கை விவரித்துள்ளது. </p><p>

எனினும் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆய்வின்படி திட்டம் நீர் விநியோகத்தை பாதிக்கவில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.virakesari.lk/category/local" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T11:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பொது நூலகத்தை தீக்கிரையாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியினரே : அநுர தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-set-fire-to-the-jaffna-public-library-in-1981-1784889569"></link>
            <id>https://ibctamil.com/article/unp-set-fire-to-the-jaffna-public-library-in-1981-1784889569</id>
            <summary type="text">தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p>1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற சபை
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடைச்சட்டம்</h2><p>
</p><p>அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசியக்
கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7555f5e2-c670-4607-a5bf-4a566627ddf1/26-6a63438b2bd27.webp' /></p><p>
</p><p>
பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இராணுவத்தினர் கோடு போட்டனர். அதன்
பின்னரே வந்த ஐ.தே.க காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம்
குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.</p><p>

தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான்.
அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும்
கொண்டுவந்தார்கள்.</p><p></p><h2>வழக்கு தாக்கல் செய்த ரோஹண விஜேவீர&nbsp;</h2><p>
</p><p>
1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர். எங்களின் இதயமாகக்
கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே. 97,000 புத்தகத்தை கொழுத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea005b4-2b4a-4161-bbdb-598efb8e6a13/26-6a63438a4b9ef.webp' /></p><p>
அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின்
விருப்பம் பிரதிபலிக்கவில்லை. அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு
தாக்கல் செய்தார்.</p><p> அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில்
தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள்.</p><p> தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச்
சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின்
அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும்
நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு எதிராக அவரது மருமகனே வாக்குமூலம்! தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-in-law-who-testified-against-gotabaya-1784883864"></link>
            <id>https://ibctamil.com/article/son-in-law-who-testified-against-gotabaya-1784883864</id>
            <summary type="text">கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் வாக்குமூலம் ஒன்றை&amp;nbsp; பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் வாக்குமூலம் ஒன்றை&nbsp; பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
அவரது சகோதரியின் மகனால் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் கோட்டாபயவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.</p><p></p><h2>சுகீஸ்வர பண்டார மீதான குற்றச்சாட்டு&nbsp;</h2><p>
</p><p>
கோட்டாபயவின் முன்னாள் செயலாளரான சுகீஸ்வர பண்டார மீதான நிதிமோசடி குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92930f8b-5071-43bb-939e-33dab61e8f9b/26-6a6331803256e.webp' /></p><p>
</p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றி அதற்காக அவர் சம்பளம் பெற்றுள்ளார்.
</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஒப்பற்ற ஒரு பதவியை உருவாக்கி சம்பளத்தை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்களில் அம்பலமாகியுள்ளது.</p><p>

இதற்கு மேலதிகமாக விசேட திட்டங்கள் என்ற பெயரில் நூற்று முப்பத்து ஏழு பேருக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பணிக்காக 17 கோடிக்கும் அதிகமான அரச பணம் செலவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>24 கோடிரூபாய் அரசப்பணம்</h2><p>
</p><p>
மேலும் அவரது வாகனத்தின் பராமரிப்பு செலவுக்காக 59 இலட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுகள் பெறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a08dc0-02a9-4512-abe0-ba217206efd7/26-6a6331994a8fc.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு மொத்தமாக 24 கோடிரூபாய் அரசப்பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகீஸ்வர மீது குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் தான் சுயாதீனமாக வேலை செய்ததாகவும் சம்பளம் எதையும் பெறவில்லை எனவும் சுகீஸ்வர கூறியதால் கோட்டபாய இது குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.</p><p>

இதன்போது சுகீஸ்வரவுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக முன்னதாக கூறியதாகவும் பின்னர் தாம் வழங்கிய சாட்சியங்களை கோட்டபாய மாற்றி தனது சகோதரியின் மகனுக்கு வழங்கியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையிலேயே கொழும்பு குற்றவிசாரணைப்பிரிவில் முன்னன்னிலையான சகோதரியின் மகன், கோட்டாபய கூறியது முழு பொய் என்றும் தனக்கு ஒரு சதம் கூட வழங்கவில்லை என கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில் குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் வழங்கப்பட வேண்டிய நிலை கோட்டபாயவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T10:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடி அரசுக்கு நெருக்கடியான தொடர் போராட்டம்: பதவி விலகலுக்கு கோரப்பட்ட கால அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dharmendra-pradhan-resignation-demand-1784886973"></link>
            <id>https://ibctamil.com/article/dharmendra-pradhan-resignation-demand-1784886973</id>
            <summary type="text">இந்தியாவின் நீட் (NEET) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களின் முக்கிய கோரிக்கையில் முடிவெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் நீட் (NEET) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களின் முக்கிய கோரிக்கையில் முடிவெடுக்க, சனிக்கிழமை ( 25.07.2026) பிற்பகல் வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தெரிவித்துள்ளது.</p><p>
அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய CJP-இன் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா,'நீட் தேர்வு விவகாரத்தில் அமைப்பு ரீதியான பொறுப்புக்கூறல் அவசியம் என தங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை தொடர்பாக, நாளை பிற்பகல் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது என்றும் இந்திய ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>பிரதான் பதவி விலகல் கோரிக்கை</h2><p>இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e14746f-b234-4b42-b1d5-6f76e6891440/26-6a633d66e3d90.webp' /></p><p>'தர்மேந்திர பிரதானை விரைவில் பதவியிலிருந்து நீக்கும் என நம்புகிறோம்,</p><p>இதற்கிடையில், மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் முன்வைத்த பிற முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p> நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட&nbsp; மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் சட்ட வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது ஆகிய இரு கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;</p><p>உயிரைமாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.</p><p> தேர்வு முறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>

மேலும், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர் ஆர்வலர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்ற அரசின் உறுதிமொழி விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையையும் சி.ஜே.பி வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doe-announcement-of-2026-gce-al-examination-1784886225"></link>
            <id>https://ibctamil.com/article/doe-announcement-of-2026-gce-al-examination-1784886225</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. உயர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான&nbsp;க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p> உயர்தரப் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், சகல அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக்கல்வி அலுவலகங்களிலுள்ள பரீட்சைக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளரிடம் அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உத்தியோகபூர்வ இணையத்தளம்</h2><p> </p><p>அத்துடன் எந்தவித தாமதமுமின்றி பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளை அவர்களுக்கு உனடியாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும்&nbsp;சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60108d74-8b4d-4fa4-b770-8c1f50e74765/26-6a633bec25440.webp' /></p><p>உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது அனுமதி அட்டைகளை தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது அனுமதி அட்டைகளை தாமே இன்று (24.07.2026) தொடக்கம் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான<a href="https://www.doenets.lk/" target="_blank"> www.doenets.Ik</a> இற்குள் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.</p><p></p><h2>திருத்தம் மேற்கொள்ளல்&nbsp;</h2><p>அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத அல்லது அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பிரதியையும் பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்காக அஞ்சல் அதிபரினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்திய கடிதம் ஆகியவற்றுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதரல் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa673661-9b64-438e-9061-18e8702ebd7f/26-6a633bece0577.webp' /></p><p>
</p><p>அதிபருக்கோ அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரிக்கோ கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி அட்டையிலுள்ள பாடம், மொழிமூலம், பெயர் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பின்,
சகல திருத்தங்களும் நிகழ்நிலையூடாக மேற்கொள்வதுடன் அதற்காக https://onlineexams. gov.lk/eic எனும் இணையத்தளத்தினுள் நுழைய வேண்டும்.
</p><p>ஒரு திருத்தமொன்றை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
இப் பரீட்சைகளுக்குரிய பரீட்சை நிலையங்களை மாற்றம் செய்ய முடியாது.
திருத்தங்களை மேற்கொள்ளுதல் 03.08.2026 நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பரீட்சார்த்திகளின்
ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிதைந்தது ஈரான் புரட்சிகர காவல் படையின் தலைமையகம்! அமெரிக்காவின் துல்லிய தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-strike-targeted-irgc-headquarters-north-iran-1784882626"></link>
            <id>https://ibctamil.com/article/us-strike-targeted-irgc-headquarters-north-iran-1784882626</id>
            <summary type="text">
வடக்கு ஈரானில் உள்ள புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமையகத்தை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்கு ஈரானில் உள்ள புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமையகத்தை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறித்த வளாகத்தின் சில உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகமான செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
காஸ்பியன் கடற்பகுதியில் அமைந்துள்ள ஜிபகெனார் கிராமத்தில் உள்ள IRGC கடற்படைத் தலைமையகத்தையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் ஏனைய இலக்குகள்</h2><p>

எனினும், இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0546e0f8-5c67-4d1d-8ac0-502fdb007268/26-6a63295d1a6f5.webp' /></p><p><i>Image Credit: Council on Foreign Relations</i></p><p>
</p><p>
இதேவேளை, வியாழக்கிழமை இரவு ஈரான் மீது தொடர்ச்சியாக 13-வது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், "ஈரானிய இராணுவக் கட்டளை மையங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் மற்றும் கடல்சார் திறன்கள்" ஆகியவற்றைக் இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும், தாக்குதல்கள் நடத்தப்பட்ட குறிப்பிட்ட இடங்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-24T10:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-s-case-adjourned-1784887226"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-s-case-adjourned-1784887226</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஓகஸ்ட் 20 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

 குறித்த உத்தரவை இன்று(24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் சுகவீனமுற்றுள்ளதால் வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00452eb8-0861-4d26-8ccd-aea08ec2d42f/26-6a633c035901c.webp' /></p><p>

 முன்வைக்கப்பட்ட காரணங்களைக் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
</p><p>
அத்துடன், இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை, அடுத்த விசாரணைத் திகதியில் முன்னிலையாகுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் 7.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 5 காணித் துண்டுகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி, யோஷித ராஜபக்சவுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T10:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (23) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 3,000 ரூபாயால் குறைந்து புதிய விலை 374 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
</p><p>&nbsp;22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,800 ரூபாயால் குறைந்து 344 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>இந்தநிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1096e26-12c1-4a54-8e4d-8b10790f9ecf/26-6a632373a05d6.webp' /></p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:33:41+00:00</updated>
        </entry>
    </feed>
