<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-29T12:11:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபப் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/muttur-elderly-woman-dies-mysteriously-at-home-1785322992"></link>
            <id>https://ibctamil.com/article/muttur-elderly-woman-dies-mysteriously-at-home-1785322992</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் வயதான பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மூதூர் காவல் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த பெண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் வயதான பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
மூதூர் காவல் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தில் 73 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தடயியல் பிரிவு</h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் வயதான கணவன் மற்றும் மனைவி இருவருமே தனியாக வசித்து
வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d54e64-0c8f-4aa9-bebe-d8d98d45b51a/26-6a69ed5a26c58.webp' /></p><p>

இந்நிலையில் நேற்றிரவு (28-07-2026) குறித்த வீட்டுக்குள் உட்புகுந்த மர்ம
நபர்கள், இருவரையும் தாக்கியதாகவும் இதில் தனது மனைவி உயிரிழந்துள்ளதாகவும்
உயிரிழந்த பெண்ணிண் கணவர் மூதூர் காவல் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
</p><p>
சம்பவ இடத்திற்கு திருகோணமலை தடயியல் பிரிவு காவல்துறையினர், மூதூர் காவல் நிலையப்
காவல்துறையினர் ஆகியோர் இன்று (29-07-2026) காலை வருகை தந்து விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதையடுத்து, உயிரிழந்த பெண்ணிண் கணவரை மூதூர் காவல் நிலையத்திற்கு மேலதிக
விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f725f3d-9bd4-423c-acef-ef8ddcbb5f67/26-6a69ed596544d.webp' /></p><p>
மர்மமாக உயிரிழந்த பெண்ணிண் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T12:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா- சவுதி துல்லிய தாக்குதல் : ஈரான் ஆதரவு அமைப்பிற்கு ஏற்பட்ட பெரும்சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-saudi-attacks-kill-at-least-20-iraqi-fighters-1785324523"></link>
            <id>https://ibctamil.com/article/us-saudi-attacks-kill-at-least-20-iraqi-fighters-1785324523</id>
            <summary type="text">ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான Iraq&#039;s Popular Mobilization Forces (PMF) மீது நாடு முழுவதும் உள்ள பல மாகாணங்களில் உள்ள அதன் தலைமையகங்களைக் குறிவைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான Iraq's Popular Mobilization Forces (PMF) மீது நாடு முழுவதும் உள்ள பல மாகாணங்களில் உள்ள அதன் தலைமையகங்களைக் குறிவைத்து இரவு நேரத்தில் அமெரிக்கா-சவுதி இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு இன்று புதன்கிழமை தெரிவித்தது.</p><p>ஈராக் செய்தி நிறுவனம் (INA) வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாக்தாத், வாசித், நினேவா, பஸ்ரா, கிர்குக், கர்பலா மற்றும் தியாலா ஆகிய மாகாணங்களில் உள்ள அதன் தளங்களை லக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைமையகம், இராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் PMF கூறியுள்ளது.</p><h2>ஆய்வுக் குழுக்கள் கள மதிப்பீடு</h2><p>சேதத்தின் முழு அளவைத் தீர்மானிக்க, சிறப்பு ஆய்வுக் குழுக்கள் கள மதிப்பீடுகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c0c1987-1412-4cdc-ad46-8fb5ecbba239/26-6a69e835d936c.webp' /></p><p>ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்களின் இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியானது.</p><p></p><p> </p><h2>சவுதி விடுத்த எச்சரிக்கை</h2><p>இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59294a5e-ae2f-4720-ab47-06e4530b1db3/26-6a69e83687cc0.webp' /></p><p>சவுதி அரேபியாவோ, ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, ஈராக்கியப் பகுதியிலிருந்து சவுதி அரேபியாவின் பெட்ரோலிய வசதிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியது. </p><p>மேலும், ஈரான் ஆதரவுக் குழுக்கள் சவுதி அரேபியா மீது மேலதிக தாக்குதல்களை நடத்தினால், மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.&nbsp;</p><p></p><p>images credit -.aljazeera</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="http://channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைத்தண்டனைக்கு எதிராக சமிந்த விஜேசிறி எம்.பி மனுத் தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chaminda-wijesiri-petition-against-prison-sentence-1785323573"></link>
            <id>https://ibctamil.com/article/chaminda-wijesiri-petition-against-prison-sentence-1785323573</id>
            <summary type="text">தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனையை இரத்து செய்து, தம்மை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனையை இரத்து செய்து, தம்மை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதுளை மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p> </p><p>

அத்துடன், குறித்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை தமக்கு பிணை வழங்குமாறும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பாக இந்த மேன்முறையீட்டு மனுவைப் பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.</p><p></p><h2>ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை</h2><p>காவல்துறை உத்தியோகத்தர்களை சட்டவிரோதமாக வழிமறித்தல், இரு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbee110b-273c-4938-b499-7ec5addeb6fb/26-6a69e221b5df0.webp' /></p><p>

2019 ஆம் ஆண்டு பண்டாரவளைப் பகுதியில் சமிந்த விஜேசிறியின் வாகனத்தை சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற காவல்துறை ஜீப் வண்டி ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமே இத்தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் அணியின் சமிந்த விஜேசிறிக்கு ஏற்படப்போகும் சிக்கல் : இரத்தாகப்போகும் எம்.பி பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chaminda-wijesiri-is-the-loss-of-his-mp-position-1785323654"></link>
            <id>https://ibctamil.com/article/chaminda-wijesiri-is-the-loss-of-his-mp-position-1785323654</id>
            <summary type="text">குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று சட்டத்தரணி பேராசிரியர் பிரதீபா மகாநமஹேவ தெரிவித்தார்.</p><p>அரசியலமைப்பின் 89 (d) பிரிவின்படி இந்த சட்ட நிலைமை எழுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய தண்டனைக்கு உள்ளான ஒருவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ கூட சட்டபூர்வ உரிமை இல்லை என்று வலியுறுத்தினார்.</p><h2>ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை&nbsp;</h2><p>பதுளை உயர் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த பதுளை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவிக்காலம் தொடர்பான சட்டப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தபோது பேராசிரியர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70cad77b-2e1c-4a6f-b7e8-eebd3c517d1c/26-6a69e087c6a8b.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மேல்முறையீடு செய்தால், அந்த மேல்முறையீட்டு செயல்முறை நிறைவடையும் வரை அவரது பதவிக்காலம் ரத்து செய்யப்படாது என்று மகாநமஹேவ சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையில் சிக்கிய இந்திய மாலுமிகள்: மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-sailors-stranded-ukrainian-port-amidst-war-1785316840"></link>
            <id>https://ibctamil.com/article/indian-sailors-stranded-ukrainian-port-amidst-war-1785316840</id>
            <summary type="text">ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை உடனடியாக பாதுகாப்பாக மீட்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை உடனடியாக பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>ரஷ்யா&nbsp; உக்ரைன் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.
</p><p>இந்த போரில் இருநாடுகளும் பரஸ்பர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><p></p><h2>சிக்கி தவிக்கும் மாலுமிகள்</h2><p>பாதுகாப்பு காரணங்களால் ‘எம்.வி. அமீர் 1’ சரக்குக் கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 13 இந்தியர்கள் உட்பட 15 மாலுமிகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8049906f-2ec3-4f81-82a9-83b25743f463/26-6a69e0788547a.webp' /></p><p>
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் ஊழியர்களின் நலன்களுக்கான அமைப்பான எப்எஸ்யுஐ (FSUI) வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:14:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் அதிக கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-hospital-overcharging-for-fbc-bood-tests-1785321635"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-hospital-overcharging-for-fbc-bood-tests-1785321635</id>
            <summary type="text">வவுனியாவில் முழு இரத்த பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல்
தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் முழு இரத்த பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல்
தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

​</p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம்
இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை
விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

​</p><p>கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட முழு இரத்தப் பரிசோதனைக்கு குறித்த வைத்தியசாலை 550 ரூபாய் கட்டணம் அறவிட்டமை கண்டறியப்பட்டது.</p><p></p><h2>&nbsp;வவுனியா நீதவான் நீதிமன்றம்</h2><p>இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த
நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு 500,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a40e0a-3e11-4c3b-bf64-0533c2daa93e/26-6a69db85ab934.webp' /></p><p>அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும்
தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர்
அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் கைதான அனோஜன்...! இலங்கை அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-interfaith-body-urges-anojan-release-1785319217"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-interfaith-body-urges-anojan-release-1785319217</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு சர்வ மத ஒன்றியம் அமைப்பு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.</p><p>

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எந்தவொரு மதத்தையும் அதன் புனித ஆளுமைகளையும் மத நம்பிக்கைகளையும்
அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக
ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம்,
சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு
வலியுறுத்துகிறோம்.</p><p>
</p><p></p><h2>வாழ்வாதாரப் பாதிப்பு</h2><p>எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது
ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec872d2-3f4a-4e3b-bb86-54316a49c57d/26-6a69d9f9298ef.webp' /></p><p>அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே
நீக்கி தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக
அறியமுடிகின்றது.
</p><p>
இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது
எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு மனிதாபிமான
அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p>
</p><p></p><h2>சமூக வலைத்தளங்கள்&nbsp;</h2><p>எனவே இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய
அரசாங்கத்துடன் கலந்துரையாடி சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள
தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும்
வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன்
கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a707e1-0d51-499a-be3e-cd622870c056/26-6a69d9f9e04a2.webp' /></p><p>
</p><p>அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும்
நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் மத
உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி குறிப்பாக சமூக வலைத்தளங்களை
மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும்
வலியுறுத்துகிறோம்.</p><p>
மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும்
மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனையுமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூளை மங்கவில்லை : தற்போதும் இராணுவத்தளபதியாக பணியாற்றத் தயார் : சரத் பொன்சேகா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ready-to-serve-as-army-commander-sarath-fonseka-1785321722"></link>
            <id>https://ibctamil.com/article/ready-to-serve-as-army-commander-sarath-fonseka-1785321722</id>
            <summary type="text">தலைமை நீதிபதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் பணிக்காலம் நீடிக்கப்படுகிறது என்று சிலர் கூறினாலும், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை தாம் முழுமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமை நீதிபதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் பணிக்காலம் நீடிக்கப்படுகிறது என்று சிலர் கூறினாலும், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>

உலகின் வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, அனைத்துத் தொழில்களின் பணிக்காலமும் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என்றும், வயதானதால் மட்டும் மக்களின் மூளை மழுங்கிப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>இராணுவத் தளபதியாகப் பணியாற்ற முடியும்</h2><p>ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆனபோதிலும், தனது மூளை இன்னும் நன்றாகச் செயல்படுகிறது, தனது கண்களும் காதுகளும் நன்றாகச் செயல்படுகின்றன, மேலும் தன்னால் இன்னும் ஒரு இராணுவத் தளபதியாகப் பணியாற்ற முடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389586f7-387a-4d01-a0e4-b70f8a328df5/26-6a69dc1df0d9f.webp' /></p><p>
</p><p>
சில நாடுகளில், நீதிபதிகளும் இராணுவத் தளபதிகளும் 70 வயது வரை பணியாற்றுகிறார்கள் என்றும், பழைய கலாசாரத்தைச் சார்ந்திருப்பவர்கள் இவை சரிசெய்யப்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : யாழ். கடலில் கறுப்புக் கொடிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-flag-protest-in-jaffna-against-ind-fisherman-1785319289"></link>
            <id>https://ibctamil.com/article/black-flag-protest-in-jaffna-against-ind-fisherman-1785319289</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில்
இற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில்
இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) படகுகளில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர்.</p><p>

இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்பிடி
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனு</h2><p>இந்த நிலையில் குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில்,

நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கடற்றொழிலாளர் சமூகங்களாகிய நாங்கள், எங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீட்டை கோருகின்றோம்.</p><p>

மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன, இது
வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eb108e0-dde1-413d-82f2-fa5126f0fc08/26-6a69d54607419.webp' /></p><p>
மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p>காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன.</p><p>
இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளது.</p><p>இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது வடக்கு
மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும்.</p><p></p><h2>&nbsp;நீதிக்கான அமைதியான குரல்</h2><p>கரையோர கடற்றொழிலாளர் சமூகங்கள் நாட்டின் கடல் எல்லைகள், கடல்வளம் மற்றும்
கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கியமான சமூகமாக இருந்தபோதிலும்
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தங்களுக்கு
மறுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை எங்களது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ
எதிரானதல்ல என்றும், இது கடலை நம்பி வாழும் குடிமக்களின் நீதிக்கான அமைதியான
குரல்.
</p><p>
அத்துடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு இழுவைப் படகுகள் மேற்கொள்ளும்
சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடியைத் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/119315c9-cd34-4d31-9f7a-327ee6689604/26-6a69d546d2c2e.webp' /></p><p>பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடிப்
பகுதிகளை பாதுகாக்க வேண்டும், கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளம் மற்றும் நீலப்
பொருளாதாரத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும், வடக்கு
மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின்
கவனமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>ஒரு நாட்டின் இறைமை இராஜதந்திரத்தாலும் ஆயுதப் படைகளாலும் மட்டும்
பாதுகாக்கப்படுவதில்லை மக்களின் நம்பிக்கை, மனவுறுதி, பங்கேற்பு மற்றும்
நாட்டின் மீதான பற்றுறுதியாலும் அது பாதுகாக்கப்படுகிறது.
</p><p>
வடக்கு இலங்கையின் பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் சமூகங்கள் அரசின் புறக்கணிப்பால் மறைந்து
போக அனுமதிக்காதீர்கள்.

கடலைப் பாதுகாப்போம். கடலை நம்பி வாழும் மக்களைப் பாதுகாப்போம். நாட்டின்
கடல்சார் மரபைப் பாதுகாப்போம்.</p><p>

மௌனத்தைவிட துணிவையும், தற்காலிக வசதியைவிட நீதியையும், குறுகியகால நலன்களைவிட
நாட்டின் நீண்டகால நலன்களையும் தேர்ந்தெடுக்கும் தலைவரை வரலாறு நினைவுகூரும்"
என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><b><i>செய்தி - கஜிந்தன், பிரதீபன்</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-29T10:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcyclist-killed-in-hit-and-run-1785320477"></link>
            <id>https://ibctamil.com/article/motorcyclist-killed-in-hit-and-run-1785320477</id>
            <summary type="text">வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை
ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை
ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது.
</p><p>
கனகராயன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><h2>மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை சம்பவம்&nbsp;</h2><p>மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம்,
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50644e4-ec99-4bcf-a199-cd671107be60/26-6a69d6401137f.webp' /></p><p>
</p><p>
இவ்விபத்தில் கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (வயது 64) என்பவரே
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும்
அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9051fce-45a5-451a-a984-28523f2b08e2/26-6a69d640d7915.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783"></link>
            <id>https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை நோய்
வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் மேலும் 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.</p><p></p><h2>காணொளி பதிவு&nbsp;</h2><p>

அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551c29e6-c671-4f5d-b4ad-20784cc22389/26-6a69a41e73bb9.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகத்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர்
அவரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன், தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f86e570-f4e1-4b09-81a8-30f2074f311c/26-6a69a41da63f5.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் காலத்தில் கூடப் பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடந்தன! அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375"></link>
            <id>https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375</id>
            <summary type="text">விடுதலைப்புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப்புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில், அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் உண்மையான விருப்ப நிலையை அறிந்துகொள்ள விரும்பினால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்துக்கணிப்பு அறிக்கைகளைப் பெறுவதைத் தவிர்த்து உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கருத்துக்கணிப்பு அறிக்கை</h2><p>


அரசாங்கம் பணம் கொடுத்துச் செய்யும் கருத்துக்கணிப்பு அறிக்கைகளிலேயே நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியை எத்தனை சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07364b6-5a79-46a8-b0d3-5c6a70c7e4cf/26-6a69c22287a36.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.</p><p>

இருப்பினும், ஒரு கட்சியாக நாங்கள் எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.</p><p>
</p><p></p><h2>குழுக்களின் அச்சுறுத்தல்&nbsp;</h2><p>வழக்கறிஞர்கள் சங்கம் (BASL), பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்திற்கும் எதிராக அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவந்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைத்தால் அது பெரும் தவறாகும்.</p><p>வரலாற்றில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கு நேர்ந்த கதியைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c721733-246d-48aa-9399-9ed8c1cbffc1/26-6a69c223dbb40.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி கலாச்சாரப் பெரஹராக்களைத் தீர்மானிக்கக் கூடாது. </p><p>

விடுதலைபுலிகள் மற்றும் ஜே.வி.பி அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியிலும் வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டன.</p><p> </p><p></p><h2>எதிர்காலக் கூட்டணிகள்&nbsp;</h2><p>எனவே, ஊர்வலத்தில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமேக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
</p><p>
நாங்கள் மறைமுக அரசியல் செய்யமாட்டோம், எதிர்காலக் கூட்டணிகள் குறித்து யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வெளிப்படையாகவே செய்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67c00890-fbef-4100-b14b-29590184baba/26-6a69c2233ad92.webp' /></p><p>

தனிநபர்களின் தேவைகளுக்காக அன்றி, நாட்டின் மற்றும் மக்களின் நலன்களுக்காக மட்டுமே கூட்டணிகள் அமைக்கப்படும்.
</p><p>
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றவர்களையும், புதிதாக இணைந்தவர்களையும் பாதுகாத்து நாட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலுவானதொரு அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதே எனது முதன்மைப் பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851</id>
            <summary type="text">உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

அடுத்த எரிபொருள் விலை திருத்தம் நாளை மறுநாள் (31) நடைபெற உள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தற்போது, ​​பிரித்தானிய சந்தையில் ஒரு பரல் பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 86.66 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 81.73 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>
கடந்த சில வாரங்களாக உலக சந்தை எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9130b366-d86b-4a57-9e89-0566f14b1e2a/26-6a69c9fdaa7e6.webp' /></p><p>சமீபத்திய வாரங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மிகவும் நிலையற்றதாக இருந்து வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இரண்டிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது. </p><p>இத்தகைய நகர்வுகள் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், நிலவும் உலகளாவிய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாதாந்த அல்லது அவ்வப்போது உள்நாட்டு விலை திருத்தங்கள் அவசியமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785305811"></link>
            <id>https://ibctamil.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785305811</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே நேற்று (28.072026) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வீட்டில் இருந்த மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் அதிக நேரமாகியும் வராத காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது அவர் அங்கே மயங்கிக் கிடந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>போதைக்கு அடிமையான இளைஞன்</h2><p>இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் அந்த இளைஞனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaebef6-4e5b-4651-a24a-b1603467cbf2/26-6a69c3e5d164b.webp' /></p><p> இதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில்&nbsp;சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதிகளவான போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல் - பு.கஜிந்தன்</i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-income-tax-inspector-1785310263"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-income-tax-inspector-1785310263</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகர்&amp;nbsp;தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகர்&nbsp;தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>குறித்த வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (28)&nbsp;பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த நிலையில் மிக நீண்ட விவாதத்தை அடுத்து வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு&nbsp; நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த மாதம் சபை அமர்விற்காகச் சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த
போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி
உறுப்பினர்களின் கௌரவத்தை அவமதிக்கும் வகையில்
நடந்து கொண்டமை தொடர்பில் வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e5a3a7-c06c-4f34-a6d2-a29e710dbe68/26-6a69b0a30b960.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையில்
செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
</p><p>இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
உத்தியோகத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும்,
இதனால் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டதுபோது வருமான வரி
பரிசோதகர் கடமையிலிருந்தபோதே குறித்த பரிசோதகருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும்,
இதனால் அவர் சீருடையில் செல்ல முடியும் என்றும், அவரை பிணை எடுப்பதற்கு
சென்றவர்கள் விடுப்பிலேயே சென்றதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை கடற்கரையில் படையெடுக்கும் நீல வண்ண ஜெல்லிமீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449"></link>
            <id>https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449</id>
            <summary type="text">பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.</p><p>

</p><p>இது குறித்து அவதானமான இருக்குமாறு பொதுமக்களுக்கு தேசிய நீர்வள திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p><p></p><h2>நீல வண்ண ஜெல்லிமீன்கள்</h2><p>
நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748f85cd-481b-4bd6-9188-843239e35177/26-6a69a9e8d2485.webp' /></p><p>பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
</p><p>
நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663"></link>
            <id>https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (29.07.2026) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (30.072026) காலை 11.00 மணி வரை அழுலில் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

வானிலை ஆய்வு மையத்தின்படி, குறிப்பிட்ட இடங்களில் சுமார் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வானிலை அறிக்கை</h2><p>
 

இதன் காரணமாக&nbsp;வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007344c7-54c5-4a17-ad27-272665e935cd/26-6a69aa00d22d4.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தை பிடித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.</p><p>இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் 167,401 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 9.7% மற்றும் 16.2% என்ற வலுவான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eec34f6-99d7-4b49-a673-ae26441e9711/26-6a69a76cbce7e.webp' /></p><p>

ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தக் காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 38,785 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் 332,468 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
</p><p>
மாதாந்த செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் மீளெழுச்சி பெற்று வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820"></link>
            <id>https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து, காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>கடும் நெரிசல்</h2><p>


இதையடுத்து, பின்னால் வந்த யாழ் தேவி விரைவு தொடருந்தின் காங்கேசன்துறை தொடருந்தின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c0eca29-acd3-4317-8a54-236494e1749b/26-6a699958d6207.webp' /></p><p>இதனால், இரு தொடருந்துகளின் பயணிகளும் ஒரே தொடருந்தின் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தொடருந்து வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று தொடருந்து சேவை இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T06:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து குறைவு: அதிகரித்த விலைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068"></link>
            <id>https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068</id>
            <summary type="text">தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கடுமையான வறட்சி மற்றும் போதுமான உரம் கிடைக்காததால் தான் இவ்வாறான நிலமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>தினசரி 6 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமாக இருந்த மரக்கறி வரத்து நேற்று (28.07.2026) சுமார் 4 இலட்சம் கிலோகிராமாகக் குறைந்துள்ளதாக கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><h2>மரக்கறிகளின் விநியோகம் குறைவு</h2><p>இதனால், சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818ed74-b0dc-4147-880b-bef8eee67a41/26-6a69a118ecf80.webp' /></p><p>இதன்படி கறி மிளகாயின் ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச மொத்த விலை ரூ.500 முதல் ரூ.550 வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தம்புள்ளை சந்தையில் நேற்றைய மொத்த விற்பனை விலைகளின்படி, கரட் ஒரு கிலோ ரூ.230 - 250, கத்தரிக்காய் ரூ.350, முருங்கைக்காய் ரூ.150 - 200, பூசணிக்காய் ரூ.115, வெண்டைக்காய் ரூ.60 - 70, லீக்ஸ் ரூ.200 மற்றும் பீர்க்கங்காய் ரூ.170 ஆக விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:48:52+00:00</updated>
        </entry>
    </feed>
