<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-28T06:11:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் கெடுபிடி! ஈரானுக்கு மேலும் பொருளாதார நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-blockade-zeroes-iranian-oil-exports-1787895876"></link>
            <id>https://ibctamil.com/article/us-blockade-zeroes-iranian-oil-exports-1787895876</id>
            <summary type="text">ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கடந்த 14 நாட்களில் பாரசீக வளைகுடா வழியாக 130 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா வழிவகுத்துள்ளதாகவும் ஆனால் ஈரானால் ஒரு பீப்பாய் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஈரானியத் துறைமுகங்கள்</h2><p>ஈரானியத் துறைமுகங்களை நோக்கிய மற்றும் அங்கிருந்து செல்லும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கடற்படை முகாமிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b21a15-b65b-4672-9969-57a972ff7f34/26-6a9123999021d.webp' /></p><p>இந்தநிலையில் ஈரானின் எஞ்சிய பொருளாதார வளங்களையும் சர்வதேச நிதியமைப்பில் இருந்து துண்டித்து அந்நாட்டை முற்றிலும் தனிமைப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p>கடந்த 14 நாட்களில் அமெரிக்கா 130 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைப் பாதுகாப்பாகக் கடத்த உதவியுள்ள வேளையில், ஈரானின் ஏற்றுமதி பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-dies-after-alleged-assault-by-husband-friend-1787889759"></link>
            <id>https://ibctamil.com/article/woman-dies-after-alleged-assault-by-husband-friend-1787889759</id>
            <summary type="text">கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.</p><p>மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த குறித்த மரணமான பெண் தனது வீட்டில் கணவருடன் தங்கி இருந்த நிலையில்
கணவரின் நண்பரான சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கூரிய
ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c414c39e-e2b4-4682-8b51-9c0319d07ba3/26-6a91237b88f3e.webp' /></p><p>குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ எல் முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்&nbsp;&nbsp;</p><p>
சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thaiyitti-landowners-demand-their-property-back-1787893691"></link>
            <id>https://ibctamil.com/article/thaiyitti-landowners-demand-their-property-back-1787893691</id>
            <summary type="text">யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக குறித்த போராட்டத்தை நேற்று (27-08-2026) முன்னெடுத்திருந்தனர்.</p><p>குறித்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எந்தவித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29784e07-4354-4b1d-99b0-203b6a3f728e/26-6a911ce3f08b1.webp' /></p><p>

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நேற்று மாலை வரை இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் தமக்குரிய சொந்தக் காணிகளை முழுமையாக மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் குவிந்த கோடிக்கணக்கான வருமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-124-mn-in-revenue-from-expressway-network-1787892203"></link>
            <id>https://ibctamil.com/article/rs-124-mn-in-revenue-from-expressway-network-1787892203</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் இரண்டு நாட்களில்&amp;nbsp;124,574,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் இரண்டு நாட்களில்&nbsp;124,574,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் குறித்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் குறித்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>163,763 வாகனங்கள் பயணித்துள்ளன</h2><p>
 

இந்தநிலையில் ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17b9e80-1069-415c-820d-7531ef5b0969/26-6a911920a49f5.webp' /></p><p>
</p><p>
 

ஓகஸ்ட் 27 ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய நிலையில் அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலே மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடு: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-ranks-120th-among-130-countries-in-wage-study-1787885576"></link>
            <id>https://ibctamil.com/article/sl-ranks-120th-among-130-countries-in-wage-study-1787885576</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.உலகளாவிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.</p><p>உலகளாவிய ரீதியில் குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120-வது இடத்தில் உள்ளது. இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன.&nbsp;&nbsp;</p><p>சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கையின் குறைந்தபட்ச ஊதியம்</h2><p>

வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில், இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3ab41d-dce6-4782-85b5-4164120007d4/26-6a910c58c5ebc.webp' /></p><p>
</p><p>
சுவிட்சர்லாந்து (3,804 டொலர்) உள்ளிட்ட, ஜெர்மனி (2,928 டொலர்), ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்) மற்றும் நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.
</p><p>
ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11 ஆவது இடத்தையும், ஜப்பான் (1,839 டொலர்) 16 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
</p><p>
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் (68 வது இடம் - 570 டொலர்), நேபாளம் (78 வது இடம் - 490 டொலர்), பங்களாதேஷ் (89 வது இடம் - 379 டொலர்) மற்றும் இந்தியா (111 வது இடம் - 233 டொலர்) ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள்...! சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-red-notices-issued-for-236-sl-criminals-1787890154"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-red-notices-issued-for-236-sl-criminals-1787890154</id>
            <summary type="text">இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சிவப்பு அறிவித்தல்கள்</h2><p>

236 குற்றவாளிகளில் 110 பேருக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்தநிலையில் சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளில் 66 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40ee628b-2b26-4374-8843-2924c1ea0f56/26-6a911135dc0a0.webp' /></p><p>அத்தோடு 97 சந்தேக நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர்களில் 39 பேர் தங்கியுள்ள நாடுகள் மற்றும் இடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளது.</p><p>எதிர்வரும் வாரத்தில் அவர்களில் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T04:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத போதைப்பொருளுடன் பிக்கு உட்பட இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-ascetic-was-caught-with-narcotics-1787889046"></link>
            <id>https://ibctamil.com/article/an-ascetic-was-caught-with-narcotics-1787889046</id>
            <summary type="text">பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் பிக்கு மற்றும் அவருடன் பயணித்த சாரதி ஒருவர்&amp;nbsp; ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் பிக்கு மற்றும் அவருடன் பயணித்த சாரதி ஒருவர்&nbsp; ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>காலி மாவட்டத்தின் ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அலுத்கம முதல் எல்பிட்டிய நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டபோது பிக்குவிடம் இருந்த 1,315 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சாரதியிடம் இருந்த 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.</p><p>கைது செய்யப்பட்ட பிக்கு, களுத்துறை தெற்கு, பொம்புவலா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வசிக்கும் 39 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>பிக்கு கைது</h2><p>
</p><p>குறித்த பிக்கு, கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியும் 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75c38249-8fc5-47bc-b1d0-9be231d7247b/26-6a910f701c4ec.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சாரதி நவதகல ஹிப்பன்கந்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், அவர் சலூன் ஒன்றை நடத்தி வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விடயயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-theertha-thiruvila-1787890546"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-theertha-thiruvila-1787890546</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும்.&nbsp;</p><p>முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து&nbsp;ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள தொண்டைமானாறு கடலேரி முகத்துவாரப் பகுதியில் முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்.</p><p>அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp;செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி&nbsp;அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>இந்தநிலையில் நேற்று (27) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர்திருவிழா இடம்பெற்ற நிலையில் இன்று (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QSOkTS-RsHQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T04:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/train-services-disrupted-northern-railway-line-1787884955"></link>
            <id>https://ibctamil.com/article/train-services-disrupted-northern-railway-line-1787884955</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிற்கான தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடருந்து ஒன்று தடம் புரண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிற்கான தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தாமதமாக பயணிக்கும்</h2><p>

 

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த தொடருந்து பொதுஹெர தொடருந்து நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2a471b8-5b3f-4fda-9c60-68793c1bdbd8/26-6a90f7024d8c0.webp' /></p><p>இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர தொடருந்து நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாகவே பயணிக்கும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sKsC80ViZWE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11-indians-tried-to-smuggle-gold-through-kks-1787887298"></link>
            <id>https://ibctamil.com/article/11-indians-tried-to-smuggle-gold-through-kks-1787887298</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19
பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்க உத்தரவு</h2><p>
இதன்போது, அவர்களில் 11 பேர் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றமை
கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e13c40-5dde-416b-bbfd-3e592c86688f/26-6a9105dbef7ce.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும் நேற்று (27) மாலை மல்லாகம்
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், சந்தேக நபர்கள் 11 பேரையும்
எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T03:56:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/389-killed-in-flash-flood-disaster-in-nepal-1787882732"></link>
            <id>https://ibctamil.com/article/389-killed-in-flash-flood-disaster-in-nepal-1787882732</id>
            <summary type="text">சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் வீடுகளை அழித்து, சாலைகளை மூழ்கடித்து, பாலங்களை அடித்துச் சென்றதை அடுத்து, நேபாளம் மற்றும் திபெத்தில் மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.&nbsp;அதேசமயம் திபெத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 550-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காணாமல் போனவர்களைத் தேடுதல்</h2><p>
</p><p>
 

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் படை மற்றும் தேசிய காவல்துறையை சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d951c8b9-975a-404d-8758-14f11f04a3d0/26-6a90f1882841a.webp' /></p><p>இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிக்கியுள்ள தமிழர்கள்</h2><p>இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00c33c3-fd26-48a4-984b-1330367684fb/26-6a90f1876d6f3.webp' /></p><p>அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம் காரணமில்லை</h2><p>இவ்வாறான நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d565dc-a7db-4c9b-83c5-bdd979be8f6f/26-6a90f18692a86.webp' /></p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் தான் காரணம் என்றும் அது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.</p><p>
</p><p>இந்த நிலையில் "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல, பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் பனிப்பாறை ஏன் உடைந்தது என்பதற்கு காரணம் தெரியவில்லை. </p><p>அந்த பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக் கோள் படங்கள் ஆகியவற்றின் மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது." என்று விளக்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T02:55:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1787878698"></link>
            <id>https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1787878698</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் அடிப்படையில் இன்று(28) மதியம் சுமார் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3624e375-6e87-47ff-9b6c-b36cf93214fe/26-6a90dfaba7f48.webp' /></p><p>

இந்த நிலையில், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
அதன்போது, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 
 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
இதேவேளை, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543c48e3-19a8-43b8-a207-b5be47c9281c/26-6a90dfac817f8.webp' /></p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>

அத்தோாடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3qCsF64XO5M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T01:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787875982"></link>
            <id>https://ibctamil.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787875982</id>
            <summary type="text">




கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>




கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்று வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

 கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566f612a-8c6d-4467-a512-71cf4d01e2da/26-6a90d8b5e8fbe.webp' /></p><p>
இந்த நிலையில், கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என
ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
 ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் விளக்கம்</h2><p>
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியின் 18 வயதான இளைய மகன் பெரொன் ட்ரம்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிப்பதிவு தொடர்பாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e943b9d0-aee2-4832-85a7-23e72df359f0/26-6a90a6ac65620.webp' /></p><p> </p><p>

இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஈரானிய தரப்பிலிருந்து இந்த விளக்கமும் மறுப்பும் வெளியாகியுள்ளது.&nbsp; </p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:30:50+00:00</updated>
        </entry>
    </feed>
