<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-05T14:15:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் தரையிறங்கிய ட்ரம்பின் தூதுவர்கள் : முடிவிற்கு வருமா ரஷ்ய - உக்ரைன் போர்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-envoys-arrive-in-moscow-1788614723"></link>
            <id>https://ibctamil.com/article/trump-envoys-arrive-in-moscow-1788614723</id>
            <summary type="text">&amp;nbsp;ஐந்து வருடத்தை தொடும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐந்து வருடத்தை தொடும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யாவின் மொஸ்கோ வந்தடைந்தனர். ஜாரெட் குஷ்னர், ட்ரம்பின் மருமகன் ஆவார்.</p><p>ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சிறப்பு முன்மொழிவையும் கொண்டுவந்த ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யத் தரப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2>உக்ரைனுக்கும் செல்வர்</h2><p> </p><p>அதன்பிறகு, அவர்கள் உக்ரைனியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனியத் தலைநகரான கீவ்விற்குச் செல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a2e835-0a7f-47d9-a519-794ca0ab4c5e/26-6a9c1c2e45c2c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/after-10-days-64-year-old-woman-rescued-nepal-1788613428"></link>
            <id>https://ibctamil.com/article/after-10-days-64-year-old-woman-rescued-nepal-1788613428</id>
            <summary type="text">நேபாள வெள்ளத்தில் சிக்கிய 64 வயது மூதாட்டி மற்றும் சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஆகிய இருவர், 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளத்தில் சிக்கிய 64 வயது மூதாட்டி மற்றும் சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஆகிய இருவர், 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>




நேற்று சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு, சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி</h2><p>&nbsp;நேபாள இராணுவம் மற்றும் தென்கொரியாவின் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மேற்கொண்ட மீட்பு பணியில், அந்த நபர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addcb69c-57c2-4d55-9c37-0c5b047d0663/26-6a9c166ff024c.webp' /></p><p> </p><p>சுரங்கத்திற்கு உள்ளே சுமார் 225 மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்ட நபர்,உலங்கு வானூர்தி மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>64 வயது மூதாட்டி</h2><p>


அதேபோல, நுவாகோட் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து சந்திகா ஸ்ரேஷ்தா என்ற 64 வயது மூதாட்டியை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F3140096452855503%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>போர்வையில் சுற்றியபடி மீட்கப்பட்ட அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளிகள் வைரலான நிலையில், பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேசையில் கிடந்த 08 இலட்சம் டொலர்கள் : கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eight-hundred-thousand-dollars-on-namal-s-table-1788609425"></link>
            <id>https://ibctamil.com/article/eight-hundred-thousand-dollars-on-namal-s-table-1788609425</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டது முற்றிலும் அநியாயமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டது முற்றிலும் அநியாயமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எந்தவித ஆதாரமும் இன்றி, ஒரே ஒரு நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.</p><h2>எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் தரகுப் பணம்</h2><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பரிவர்த்தனையில், நாடாளுமன்ற உறுப்பினர் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் தரகுப் பணம் பெற்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b6905c-6fe4-4f61-b51e-f33644f02cc3/26-6a9c0b23334aa.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை விளக்கிய கம்மன்பில, பிரியங்கா விஜேநாயக்க ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து தரகுப் பணம் பெற்றதற்கும், அந்தப் பணத்தின் ஒரு பகுதியை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேரா என்ற நபருக்குக் கொடுத்ததற்கும் ஆதாரம் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>
இருப்பினும், நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிடம் பணத்தைக் கொடுத்தார் என்ற வாக்குமூலத்தைத் தவிர, புலனாய்வாளர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>

"யாரும் இல்லாதபோது,நாமல் ராஜபக்சவின் மேசையில் 800,000 டொலர்களை வைத்துவிட்டுச் சென்றதாக நிமல் பெரேரா கூறுகிறார். இந்தக் கூற்றைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. இது உகண்டாவில் பணத்தை மறைப்பது, ரொக்கெட்டுகளை அனுப்புவது, தங்கக் குதிரைகளைக் கொண்டு வருவது, லம்போர்கினிகளைக் கொண்டு வருவது மற்றும் கூடுதலாக ஒரு திசைகாட்டியைக் கொண்டு வருவது போன்றதுதான்," என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;ஒட்டுமொத்த பொதுமக்களும் பாதுகாப்பற்றவர்களாகிவிட்டனர்</h2><p>
</p><p>
ஒரு அறிக்கையில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டாலே அவரைக் கைது செய்ய முடியும் என்றால், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் இனி பாதுகாப்பாக இல்லை என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37067f0e-4340-4778-8a42-20aca5b0c2ad/26-6a9c0b23e5e1e.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதன் மூலம், சந்தேக நபர்கள் பிணை பெறுவது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒரு அடக்குமுறை ஆட்சியின் அறிகுறி என்றும் அவர் மேலும் கூறினார்.
</p><p>
இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையால் நாமல் ராஜபக்ச மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களும் பாதுகாப்பற்றவர்களாகிவிட்டனர் என்று உதய கம்மன்பில தனது ஊடக மாநாட்டில் வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பேருந்தை தள்ளித்திரியும் யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-vadamarachchi-east-pushing-a-government-bus-1788608846"></link>
            <id>https://ibctamil.com/article/people-vadamarachchi-east-pushing-a-government-bus-1788608846</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பழுதடைந்த அரச பேருந்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் தள்ளி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பழுதடைந்த அரச பேருந்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் தள்ளி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
</p><p>'நாளாந்தம் காலை 06.00மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்
அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி
இயக்கும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p></p><h2>வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை</h2><p>மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுவது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1df13aa-d5ec-41d1-bf5e-dccbd084e0a7/26-6a9c05aeb9fdb.webp' /></p><p>
இன்று(04.09.2026) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள்
குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை. </p><p>பின்பு
பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க
முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலர் பாதிப்படைந்தனர்.</p><p>&nbsp;வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு
சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>ஆனாலும் மக்களின்
கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை, இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல
தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு' வடமராட்ச்சி கிழக்கு மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக அரசியலில் குதிக்கும் நாமலின் மனைவி : அனுராதபுர பேரணியில் களமிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/limini-to-replace-namal-at-anuradhapura-rally-1788607477"></link>
            <id>https://ibctamil.com/article/limini-to-replace-namal-at-anuradhapura-rally-1788607477</id>
            <summary type="text">பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன நடத்தும் மாபெரும் பேரணியின் மேடையில் கலந்துகொள்ள உள்ளார் என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>
நேற்று (04) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச, 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>மகிந்தவும் பங்கேற்பு</h2><p>கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவும் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், அவர் பிரதான மேடையில் நின்று மக்களிடையே உரையாற்றுவதற்குப் பதிலாக, மேடைக்கு முன்னால் மக்களிடையே நின்றோ அல்லது மற்றொரு மேடையிலோ பேரணியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99af565e-707e-445c-aea7-9f0e73ec09f0/26-6a9bfeab8aa87.webp' /></p><p>
</p><p>
கட்சியின் பிரதான மேடையில் லிமினி வீரசிங்க ராஜபக்ச முதன்முறையாக மக்களிடையே உரையாற்ற உள்ளார் எனத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>லிமினியின் ஜாதகத்தை கணித்த புகழ்பெற்ற சோதிடர்</h2><p>
</p><p>
மேலும், கடந்த காலத்தில் லிமினியின் ஜாதகத்தை ஆய்வு செய்த ஒரு புகழ்பெற்ற ஜோதிடர், அவரது ஜாதகமானது உலகின் முதல் பெண் பிரதமரான சிறிம ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போல வலிமையானது என்று கூறியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953c6e29-5c91-4cdd-94d8-b6b2a9b423ed/26-6a9bfeaabf7d9.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், 'நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பாகின்றேன்.</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ள்ளார்.</p><p>இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல, இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்று' மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14ff446-b2f7-442d-8dd2-179d9f26f456/26-6a9bff411fb46.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.</p><p> </p><p>
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05.09.2026) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p></p><h2>மகனிடம் நலம் விசாரித்த&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92595b85-cd5c-4908-9016-399153410c29/26-6a9bf46c6126a.webp' /></p><p> </p><p>
இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் போதிய வசதிகள் இன்றி தவிக்கும் மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-struggling-due-lack-adequate-facilities-1788605869"></link>
            <id>https://ibctamil.com/article/students-struggling-due-lack-adequate-facilities-1788605869</id>
            <summary type="text">கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே, இப்பாடசாலை மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.</p><p> எனவே, அவர்களுக்கு தேவையான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>பெற்றோர்கள் கோரிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளை உரிய முறையில் பங்கீடு செய்து வழங்குவதுடன், பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e523caf-5691-49f5-961b-73e61cd15c1e/26-6a9bfa97c4494.webp' /></p><p>
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பறிபோன பாடசாலை மாணவன் உயிர் : 13 மாணவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-dies-after-racing-on-motorbike-1788605156"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-dies-after-racing-on-motorbike-1788605156</id>
            <summary type="text">ஹசலகாவிலிருந்து வஸ்கமுவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வஸ்கமுவா சாலையில் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹசலகாவிலிருந்து வஸ்கமுவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வஸ்கமுவா சாலையில் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>

இந்த விபத்து இன்று காலை (05) சுமார் 05.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹசலகாவின் அதீலா பகுதியில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று, வஸ்கமுவா சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p><h2>அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபரீதம்</h2><p>அதிவேகமாகச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வளைவுக்கு அருகில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியபோது, ​​ஓட்டுநரால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/775e2f72-1b0f-45cc-804d-ddc9c6d96b79/26-6a9bf92fe258b.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

இந்த விபத்தில் மேலும் பதின்மூன்று மாணவர்கள் காயமடைந்து, சிகிச்சைக்காக மஹியங்கன தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து ஹசலக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef546792-2626-40f9-84c1-b7ffdc6bc5ec/26-6a9bf930980f8.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி : தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempt-to-construct-an-illegal-building-in-trinco-1788605482"></link>
            <id>https://ibctamil.com/article/attempt-to-construct-an-illegal-building-in-trinco-1788605482</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில்&amp;nbsp;சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில்&nbsp;சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p>கும்புறுபிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரையை அண்டிய தேவிக்கல்
பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒப்பந்தக்காரர்கள் இன்று (05) கட்டிடம் கட்டுவதற்காக துப்பரவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட கிராம இளைஞர்கள்
இடத்திற்குச் சென்று வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;கட்டிடம் அமைக்க முயற்சி</h2><p>
</p><p>
அத்துடன் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரின் அனுமதியில்லாமல்
தொல்லியல் இடமென்று கூறிக் கொண்டு கட்டிடம் அமைக்க முயற்சிப்பதை
எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362dca0b-eb6c-4982-aa45-1de5fae85cba/26-6a9bf8c6a2158.webp' /></p><p>
</p><p>இதேவேளை வார இறுதி நாட்களில் இவ்வாறான வேலைகள் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த பகுதி தொல்லியல் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கே பழைய விகாரை இருந்ததாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்காக இப்பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-recovered-from-inside-a-house-in-jaffna-1788603814"></link>
            <id>https://ibctamil.com/article/body-recovered-from-inside-a-house-in-jaffna-1788603814</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்தநிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23311860-0ed7-4d73-b508-3744bcd40f1a/26-6a9bf10b80e00.webp' />&nbsp;</p><p>
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை
தொடர்பில் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி சிறையில் அடைக்கப்பட்ட நாமல் : நீதிமன்றில் இடம்பெற்ற ஆக்ரோஷமான வாதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-happened-in-court-before-namal-was-arrested-1788602232"></link>
            <id>https://ibctamil.com/article/what-happened-in-court-before-namal-was-arrested-1788602232</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இம்மாதம் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட பின்னர், சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த நீண்ட விசாரணைக்குப் பின், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><h2>சிறப்பு சிறையில் அடைக்கப்பட்ட நாமல்</h2><p>&nbsp;நீதிமன்ற உத்தரவின்படி பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை, கொழும்பு விளக்கமறியல் சிறையில் உள்ள ஒரு சிறப்புச் சிறையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள குறிப்பிட்ட தேவைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட பின்னரே சிறையின் சிரேஷ்ட அதிகாரிகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658d9736-9ed7-4cec-87b6-7687de92156e/26-6a9bef32989b9.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு அறையில் மேலும் சுமார் பத்து கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>சிறிலங்கன் ஏர் லைன்ஸிற்காக பத்து விமானங்கள் கொள்வனவு</h2><p>&nbsp;இந்த மாபெரும் நிதி முறைகேட்டின் அடிப்படை, சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக பத்து புதிய விமானங்களை வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். பதினாறு பெரிய ரக விமானங்களை வாங்கும் நோக்கில் பிரெஞ்சு நிறுவனமான ஏர்பஸ்ஸுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53332ab-5c41-4963-9205-1d30ec07ff2c/26-6a9bef33553eb.webp' /></p><p> </p><p>மேலும், ஒவ்வொரு விமானத்திற்கும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெறுவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.</p><p> அதேவேளையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான மறைந்த கபில சந்திரசேன, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் மற்ற சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;நுணுக்கமான முறையில் இலஞ்சப் பணப் பரிமாற்ற செயல்முறை</h2><p>&nbsp; &nbsp;சர்வதேச வங்கி அமைப்புகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் இந்த இலஞ்சப் பணப் பரிமாற்ற செயல்முறை மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5ee8d4-1ef0-4821-9e63-de85b6601b1f/26-6a9bef340982e.webp' /></p><p> அதன்படி, இலஞ்ச ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இணைந்து நடத்திய விசாரணைகளில், புருணை நாட்டில் நிறுவப்பட்ட ஒரு போலி நிறுவனம் மூலம், "ஐரோப்பிய வானூர்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம்" என்ற நன்கு அறியப்பட்ட ஐரோப்பிய சிவில் விமான நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் என்ற பெரும் இலஞ்சம் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக, சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பராமரிக்கப்படும் "பி இசட் சொல்யூஷன்ஸ் என்சி" என்ற கணக்கில் 1,454,651.24 யூரோக்கள் இலஞ்சமாக வரவு வைக்கப்பட்டது. </p><p>மேலும், இந்தத் தனிநபர் நிறுவனம், இவ்வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>கபில சந்திரசேனவின் வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>&nbsp; இந்த நிதி ஆதாரங்கள் பல்வேறு கணக்குகளுக்கு எவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டன என்பது பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. கபில சந்திரசேனாவுக்குச் சொந்தமான அவுஸ்திரேலியாவில் உள்ள கொமன்வெல்த் வங்கி கணக்குகளுக்கு 400,000 யூரோக்களும், மற்றொரு கணக்கிற்கு 200,000 அமெரிக்க டொலர்களும் மாற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54275d0c-5ccd-48cc-9172-317e85f67679/26-6a9bed9017f51.webp' /></p><p> </p><p>மேலும், பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் நிறுவனம் வழியாக ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 167,400 யூரோக்கள் மாற்றப்பட்டன. நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு, டபிள்யூ. டபிள்யூ. டி. நிமல் ஹேமசிறி பெரேரா 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பலமுறை நூறு மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமமான இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் அமைந்துள்ளது.</p><p> விசாரணையில், அந்தத் தொகையில் பதின்மூன்று மில்லியன் ரூபாய் காசோலைகள் மூலமாகவும், மேலும் ஆறு மில்லியன் ரூபாய் ரொக்கமாகவும் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.</p><h2>இலஞ்ச ஆணைக்குழு சார்பாக முன்வைக்கப்பட்ட வாதம்</h2><p>&nbsp;இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இச்சம்பவத்தில் முக்கிய சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ள நிமல் பெரேரா கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46e8d5a-447c-4f9d-968a-08583edcf0c4/26-6a9bed8f5d348.webp' /></p><p> உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின்படி நீதிபதிக்கு முன்பாக இரகசிய வாக்குமூலம் அளித்த பின்னர், அவர் அத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக, அவர் தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, இதுகுறித்து ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் இலஞ்ச ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> இந்தச் சூழ்நிலையில் சாட்சியிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக இலங்கை காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தினார்.</p><p>&nbsp;இந்தச் சிக்கலான புலனாய்வு இலங்கைக்கு மட்டும் உரியதல்ல, மாறாக இது ஒரு சர்வதேச அளவிலான விரிவான புலனாய்வு என்று அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. </p><p>அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கி மெய்நிகர் சட்ட முறை மூலம் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரெஞ்சு ஏர்பஸ் நிறுவனத்தின் பல பிரதிநிதிகள் ஏற்கனவே இந்த நாட்டிற்கு வந்து சாட்சியம் அளித்துள்ளனர்.&nbsp;</p><p>மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளிடமிருந்து நான்கு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணைக்குத் தங்களின் முழு ஆதரவையும் வழங்க மற்ற வெளிநாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. </p><p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 149-வது பிரிவின் கீழ் பிணை சாத்தியம் என்றாலும், விசாரணை அதன் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் விளக்கமறியலில் வைப்பது அவசியம் என்றும், சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டால் சர்வதேச மற்றும் உள்ளூர் சாட்சிகள் மீது மேலும் கடுமையான அழுத்தம் ஏற்படும் தெளிவான அபாயம் உள்ளது என்றும் அரசுத் தரப்பு வலுவாக வாதிட்டது.</p><p> இலஞ்ச ஆணைக்குழுவின் ஆணையரால் ஒரு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பிணை வழங்குவதற்குச் சிறப்புச் சூழ்நிலைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>பிணையில் விடுவிக்க கோரிக்கை</h2><p>&nbsp;சந்தேக நபரான நாமல் ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரை உரிய பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். விசாரணை முழுமையாக நிறைவடையாத சூழலில், ஒரு சந்தேக நபரை இந்த முறையில் காவலில் வைப்பது சட்டப்படி பொருத்தமற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b3978a-309e-4bf6-b7dc-3106288415e8/26-6a9bed8ea921e.webp' /></p><p> அரசுத் தரப்பின் வாதங்களை வன்மையாகக் கேள்விக்குள்ளாக்கிய ஜனாதிபதி சட்டத்தரணி, இலஞ்ச ஆணைக்குழு தனது வாதங்களை நிமல் பெரேரா என்ற சாட்சி அளித்த வாக்குமூலங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்வைத்துள்ளது என்று கூறினார்.</p><p> இருப்பினும், சம்பந்தப்பட்ட சாட்சி முந்தைய சந்தர்ப்பங்களில் அளித்த சாட்சியங்கள் விசாரணைகளின் போது பொய்யென நிராகரிக்கப்பட்டதாகவும், அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியத்தை தற்போது எவ்வாறு உண்மையானதாகவும் நம்பகமானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது சிக்கலானது என்றும் அவர் வாதிட்டார்.</p><p> அத்தகைய ஒரு நபரின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனது கட்சிக்காரரைக் காவலில் வைப்பது முற்றிலும் தவறு என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். </p><p>மேலும், நாமல் ராஜபக்ச மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் நீதிமன்றத்தை விட்டு ஒருபோதும் தப்பிக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்திய அந்த சட்டத்தரணி, பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் கோரினார்.</p><p></p><h2>நீதிமன்றின் தீர்ப்பு</h2><p>
</p><p>
புகாரையும், பிரதிவாதியால் முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் சட்ட வாதங்களையும் விரிவாகப் பரிசீலித்த நீதிபதி, தனது தீர்ப்பை அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/743d3148-87c8-453a-9558-5ec437c20dbe/26-6a9bed8debbf3.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் குறித்த விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், சட்டப்படி சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் எந்தவொரு விதிவிலக்கான உண்மைகளையோ அல்லது சூழ்நிலைகளையோ பிரதிவாதி நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி முடிவு செய்தார். </p><p>அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், சந்தேக நபரான நாமல் ராஜபக்சவை எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இறுதியாக உத்தரவிட்டது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-missile-attack-on-iranian-oil-tanker-1788601052"></link>
            <id>https://ibctamil.com/article/us-missile-attack-on-iranian-oil-tanker-1788601052</id>
            <summary type="text">ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பலொன்றை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கார்க் தீவு</h2><p> 

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7bb35b-eabc-4dab-a855-0e43d5edb237/26-6a9bec4d2977d.webp' /></p><p> </p><p>

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். </p><p>கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. </p><p>

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இத்தாக்குதல் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு முறை சிறை சென்ற நாமலின் பலரும் அறியாத கறுப்புப் பக்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dark-side-of-namal-who-went-to-prison-four-times-1788602914"></link>
            <id>https://ibctamil.com/article/dark-side-of-namal-who-went-to-prison-four-times-1788602914</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தில் பல்வேறு நிதி குற்றச்சாட்டுகளையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
</p><p>
2016 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அவர் சந்தித்த நான்கு முக்கிய கைது நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வழக்குகள் விசாரணைகளின் தற்போதைய நிலை மிக விரிவாக பேசப்பட வேண்டிய ஒன்றாகும்.</p><p>


இந்தியாவின் கிரிஷ் குழுமத்திடமிருந்து கொழும்பு கோட்டையில் சொகுசு குடியிருப்பு வளாக திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மையமாக கொண்டு பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதி முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>

குறித்த பணம் விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினரால் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதுடன் இந்த வழக்கு தொடர்பான சட்ட போராட்டங்கள் மற்றும் விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>
இரண்டாவது ஹலோ காப் நிறுவன முதலீட்டு வழக்கு, சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட 70 மில்லியன் ரூபாய் பணத்தை ஹலோ காப் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சட்டவிரோத பணத்தை சலவை செய்ததற்காக நாமல் ராஜபக்ச மீது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.</p><p> 

2016 ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

நீண்ட கால நீதிமன்ற விசாரணைகளுக்கு பிறகு குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்பட்டதால் 2023ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அவர் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
</p><p>

மூன்றாவது அம்பாந்தோட்டை துறைமுக போராட்ட வழக்கு, அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு கூட்டு எதிரணியினரால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அப்போது கைது செய்யப்பட்டார்.</p><p>அரசியல் ரீதியாக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.</p><p>நான்காவது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முறை கேடு வழக்கு - தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமுறைகேடுகள் ஒப்பந்த புனரமைப்புகள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

விமான சேவை தொடர்பிலான நிதி நிர்வாக குழறுபடிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் சட்டரீதியான விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் தற்போது தொடர்ந்து வருகின்றன.</p><p>நாமல் ராஜபக்ச மீதான இந்த வழக்குகள் அவர் மீதான அரசியல் விமர்சனங்களுக்கும் சட்டரீதியான சவால்களுக்கும் பிரதானமான காரணங்களாக அமைந்து காணப்படுகிறது. </p><p>ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் ஏனைய வழக்குகள் நிலுவையில் இருப்பது அவரது எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய செல்வாக்கை செலுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p>
இந்த நிலையில் இலங்கை நாட்டில் மிக மோசமான அரசியல் சூழலையும் மக்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளிய இந்த ராஜபக்ச குடும்பம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாகும்.</p><p>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TydCi4jNYVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-massgrave-impartial-criminal-investigatio-1788596445"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-massgrave-impartial-criminal-investigatio-1788596445</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. </p><p>அத்துடன் இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><h2>உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை</h2><p>அதற்கமைய இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் வகையில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>குறித்த அறிக்கையானது 2025 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2026 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c8b56-ea28-4c64-b460-b37aae1317e0/26-6a9be60fa7e3c.webp' /></p><p>அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பத்தி கூட்டுப் புதைகுழியில், 2026 ஜூலை மாத இறுதியில், குழந்தைகள் உட்பட 477க்கும் மேற்பட்ட நபர்களுக்குரிய எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.</p><p> </p><p>2025 செப்டம்பரில், செம்மணி கூட்டுப் புதைகுழி விசாரணை குறித்த தனது உண்மை கண்டறியும் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க, நம்பகமான, வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமாக வழிநடத்தப்படும் செயல்முறையை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது.</p><p></p><h2>யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்</h2><p> </p><p>மழையின் காரணமாக ஏழு மாத காலத்திற்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 2026 ஏப்ரலில் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதுடன், தூதரகப் பிரதிநிதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f8c07a-e6a1-4af8-ad47-fd1fd328d379/26-6a9be61073f34.webp' /></p><p> </p><p>இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணிகள் மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், சாத்தியமான கட்டளைப் பொறுப்பு குறித்த விசாரணைகள் உட்பட பாரபட்சமற்ற குற்றவியல் விசாரணைகள் அவற்றுடன் நடைபெறுவதையும் உறுதிசெய்ய, சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நாடுமாறு இந்த அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.</p><p>மேலும், தற்போதுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் செயற்படுத்துமாறு இந்த அலுவலகம் பரிந்துரைப்பதுடன், அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆட்கொணர்வு வழக்குகளையும், குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளையும் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் தீ வைத்து நபரை கொலை செய்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-murdered-by-dehiwala-prime-suspect-arrested-1788599220"></link>
            <id>https://ibctamil.com/article/man-murdered-by-dehiwala-prime-suspect-arrested-1788599220</id>
            <summary type="text">தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கொலைச் சம்பவத்தின் பின்னர் கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் வாகனமும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போதைப்பொருள் வர்த்தகம்</h2><p>
</p><p>&nbsp;இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், குறித்த நபரை கொலை செய்ததாக சந்தேகநபர் காவல்துறையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66dfe135-7ea0-4f35-8362-709145e0e078/26-6a9be053b588e.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர் ‘கொஸ்மல்லி’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும், கொலை செய்யப்பட்ட நபர் ‘படோவிட்ட அசங்க’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் இவர்கள் இருவருக்கும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் காவலவ்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:31:15+00:00</updated>
        </entry>
    </feed>
