<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-06T02:20:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பகுதிகளில் 100 மி.மீ பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100-mm-expected-today-1785980192"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100-mm-expected-today-1785980192</id>
            <summary type="text">தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில நாட்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3628c6f8-455e-415c-8c68-b42dc27ec14a/26-6a73edbf05342.webp' /></p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
அதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T02:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-2026-1785982223"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-2026-1785982223</id>
            <summary type="text">கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது.</p><p> ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையும் உலகிற்குப் பறைசாற்றும் நோக்குடன் "	றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" இயக்கச்சி 	றீ(ச்)ஷா வளாகத்தில் லங்காசிறி , IBC தமிழ் , Quick Food ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கோலாகலமாக அரங்கேறுகிறது.</p><p>இன்று முதல் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு 2026 ஆகஸ்ட்&nbsp; 8, 9, 10 மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கடந்த கால நினைவுகளையும், நம் மூதாதையரின் "உணவே மருந்து என்ற தத்துவத்தையும் புதுப்பிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3df4d1-6488-4610-86e7-dd597c8ccd11/26-6a73ed1145156.webp' /></p><p>லண்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா என உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள், தங்கள் மண்ணின் சுவையைத் தேடி ஒன்றிணையும் ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா இது கடந்த ஆண்டு காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதனை விடவும் சிறப்பான ஏற்பாடுகளை றீ(ச்)ஷா வடிவமைத்துள்ளது.</p><p>உள்நாட்டு சமையல் ஜாம்பவான்களுடன், சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து சமையல் கலைகளில் புதிய உத்திகளைப் புகுத்தவுள்ளனர்.</p><p>ஒடியல் கூழ், காரசாரமான நண்டுப் பிரட்டல், சுடச்சுட பிட்டு-சொதி, மற்றும் பாரம்பரிய பனங்கிழங்கு பணியாரம் என அள்ள அள்ளக் குறையாத சுவை வகைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.</p><p>உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் உங்கள் கண்முன்னே சமைக்கும் நேரடி செய்முறை விளக்கங்கள்.</p><p>எமது வாழ்வாதாரமான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான சிற்றுண்டிகளுக்கான பிரத்தியேக பகுதி.</p><p>அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் சிற்றுண்டிப் போட்டிகள்.</p><p>சுவையோடு சேர்ந்து விழாவை இரசிக்க வைக்கும் எமது மண்ணின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் என்பன அரங்கேற காத்திருக்கின்றன.</p><p>இந்த மாபெரும் சுவைப்பாலத்தில் இணைந்து கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் இன்றே வருகை தாருங்கள்</p><p><b> தொடர்புகளுக்கு: 077 777 2353 | 077 777 2354</b></p>]]></content>
            <updated>2026-08-06T02:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vegetable-sculpture-training-at-ree-ch-sha-farm-1785981175"></link>
            <id>https://ibctamil.com/article/vegetable-sculpture-training-at-ree-ch-sha-farm-1785981175</id>
            <summary type="text">இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி நெறியின் நிறைவு விழா அண்மையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி நெறியின் நிறைவு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு தொழில்திறன், படைப்பாற்றல் மற்றும் சுயதொழில் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
</p><p>
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1420590246617090%2F&amp;show_text=false&amp;width=267&amp;t=0" width="267" height="476" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>நிகழ்வின் பிரதம அதிதியாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர்&nbsp; கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.</p><p>

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றும், உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றியின் அடித்தளமாக அமையும் என்றும் வலியுறுத்தினார்.</p><p> சமூக முன்னேற்றத்திற்காக இளைஞர்களை சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்தும் இத்தகைய பயிற்சி நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
நிகழ்ச்சியை ஆயிரம் கவிதைகள் நூலின் ஆசிரியர்&nbsp; யோ. புரட்சி தொகுத்து வழங்கினார். </p><p>பயிற்சியின் நோக்கம், தொழில்திறன் மேம்பாட்டின் அவசியம் மற்றும் இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றம் குறித்து அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p> இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாடு, சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலை இலங்கைக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாட அரசாங்கம் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-seeks-us-court-help-extradite-basil-sri-lanka-1785980582"></link>
            <id>https://ibctamil.com/article/govt-seeks-us-court-help-extradite-basil-sri-lanka-1785980582</id>
            <summary type="text">மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலையாக தவறியதையடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு நாடு கடத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலையாக தவறியதையடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அமெரிக்க நீதிமன்றங்களின் உதவியை நாடவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பான இன்டர்போல் (Interpol) மற்றும் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறை நடைமுறை</h2><p>

இலங்கையில் விசாரணைக்காக தேவைப்படும் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டில் தங்கியிருந்தால், அவர் எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும், அந்த நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை நடைமுறைகளின் ஊடாகவே அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd120e0d-9c0e-4393-980f-b039ab678a24/26-6a73e6a97edba.webp' /></p><p>
சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/series-of-explosions-in-dubai-1785968777"></link>
            <id>https://ibctamil.com/article/series-of-explosions-in-dubai-1785968777</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரானின்&nbsp; ஊடகங்கள் மற்றும் பிராந்திய தகவல் ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஜெபல் அலி துறைமுகம் அருகே இருந்து அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி எழுந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇦🇪 Multiple explosions and a large fire erupted overnight in Dubai’s Jebel Ali industrial area. Reports have fueled speculation of a possible Houthi missile strike after Iraqi media claimed the blasts coincided with a rocket launch from Yemen. UAE authorities have not confirmed… <a href="https://t.co/yTqTflJbjX">pic.twitter.com/yTqTflJbjX</a></p>&mdash; Mossad Commentary (@MOSSADil) <a href="https://x.com/MOSSADil/status/2084987790052282610?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இருவர்&nbsp;கைது </h2><p>இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63334b1d-54d2-4d5e-8097-1170e9582980/26-6a73b88bdcf23.webp' /></p><p> </p><p>அதேவேளை, தீ விபத்தை படம் பிடித்ததாகக் கூறி இருவரை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-political-arena-is-heating-up-around-maithri-1785975097"></link>
            <id>https://ibctamil.com/article/the-political-arena-is-heating-up-around-maithri-1785975097</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஏன் சேர்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் இந்த விடயம் குறித்து உரையாற்றிய அவர், சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது என்றும் தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp;</h2><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ac58cf-f48e-4319-8bee-614a9656dc47/26-6a73d13bc28eb.webp' /></p><p>
</p><p>

2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.

அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர்.
</p><p>
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-the-gurukkalmadam-human-grave-1785979774"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-the-gurukkalmadam-human-grave-1785979774</id>
            <summary type="text">1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக
காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு
குருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக
காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு
குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று (05.08.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வழக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகத்திற்கிடமான குருக்கள்மடம்&nbsp; மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று
களுவாஞ்சிகுடி நீதவான் நீதி மன்றில் மேலதிக விசாரணைகளுக்காகவும், வழக்கு
மாநாட்டுக்காகவும் அழைக்கப்பட்டிருந்தது. நேற்று அறிவித்தல தினமாக இருந்தது.</p><p></p><h2>மேலதிக நடவடிக்கை</h2><p>


கடந்த விசாரணை தவணையிலே, பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி
பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், அதேபோன்று
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeae0aa-cbd7-4be6-9d63-ea6f4d640878/26-6a73e3809b560.webp' /></p><p> </p><p>ஆனால்
நேற்றைய , காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக அவர்களது சட்டத்தரணி
பிரசன்னமாகியிருந்தார். ஏனையவர்கள் மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.</p><p>


அந்தவகையிலே இந்த வழக்கு எதிர்வருகின்ற 2026.08.24 ஆம் திகதி மேலதிக
நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு,தவணையிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு சென்ற சாரா ஜஸ்மின்! கட்டுநாயக்கவில் பரிசோதிக்கப்பட்ட CCTVவில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sara-jasmine-body-missing-sainthamaruthu-blast-1785976269"></link>
            <id>https://ibctamil.com/article/sara-jasmine-body-missing-sainthamaruthu-blast-1785976269</id>
            <summary type="text">சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் இருக்கவில்லை என்று மேல் மாகாண தெற்கு பிராந்திய பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் இருக்கவில்லை என்று மேல் மாகாண தெற்கு பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அவர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் இன்சாப் அகமட் வெளிநாட்டில் இருப்பதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று அவர் வெளிநாடு சென்றதாகவும் சாரா ஜஸ்மின் கூறியிருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது என்றும்&nbsp;விஜேசேகர நீதிமன்றில் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>9ஆவது பிரதிவாதி</h2><p>இந்த வழக்கின் 9ஆவது பிரதிவாதியான சாஜித் ரம்சீன் குறித்து முன்வைத்த குறுக்கு விசாரணைக் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c2b51c-e926-4aad-9043-6c166579de43/26-6a73e15f1c9ad.webp' /></p><p>

2019ஆம் ஆண்டு கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.</p><p>

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வில், நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க , சுஜீவ நிஷ்ஷங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இது குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் பின்வரும் விடங்களை அம்பலப்படுத்தியுள்ளன.</p><p>
குறித்த காலப்பகுதியில் அம்பாறை பிராந்தியத்தின் மூத்த காவல்துறை அத்தியட்சகராக பணியாற்றிய தற்போதைய பிரதி காவல்துறைமா அதிபர் சமந்த விஜேசேகர, அரச புலனாய்வு சேவையின் கிழக்கு மாகாண அதிகாரியிடமிருந்து கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு சந்தேகத்திற்கிடமான இடங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தது.</p><p>மேலும் அந்த தகவலின் அடிப்படையில், அம்பாறை தலைமையக காவல்துறை பரிசோதகர் லசந்த தடல்லகே மற்றும் விசேட அதிரடிப்படையின் அதிகாரி அதுல ரத்நாயக்க ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டது.</p><p></p><h2>சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவங்கள்&nbsp;</h2><p>
அதன்படி, 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சம்மாந்துறை பவுஸ் மாவத்தையில் உள்ள இஸ்மாயில் லெப்பை அப்துல் ரஹீம் என்பவரின் வீட்டில், ஈஸ்டர் தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிறக் கொடி கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc5b9cd-b88b-4be0-bbd2-e411fe479d55/26-6a73e15fc5520.webp' /></p><p>அந்த இடத்தை சோதனை செய்த பின்னர், நிந்தவூரில் பழைய தியேட்டர் வீதியில் உள்ள மற்றொரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல 'பேக்-பேக்' வகை பயணப் பைகள், தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பதிவு செய்யப்படாத 'படி' வகை வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

இதன்போது, கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடமிருந்து சாய்ந்தமருது பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தானும் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகேவும் சம்பவ இடத்துக்கு சென்றோம்.</p><p>யக்கட பாலம் அருகே சென்றபோது பல துப்பாக்கிச் சூடுகளும், மிகப் பெரிய வெடிப்புச் சத்தங்களும் கேட்டுள்ளது, அந்த துப்பாக்கிச் சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது.</p><p>
சாய்ந்தமருது கிராமத்தின் எல்லையில் உள்ள வீட்டை அடைந்தபோது, அங்கு வெடிப்பு ஏற்பட்டிருந்தது. பிரதான வாயிலுக்கு முன்பாக T-56 துப்பாக்கியுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததார்.</p><p>அவர் 'நிஸாப்' என அடையாளம் காணப்பட்டார். மேலும், தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், வீட்டின் முன்பாக ஷஹ்ரானின் சகோதரரான 'செய்னி'யின் உடலும் காணப்பட்டது.</p><p> இதனுடன் சஹ்ரானின் தாய், மகன் மற்றும் சகோதரியின் உடல்களும் மீட்கப்பட்டன. சஹ்ரானின் தாயின் உடல் இருந்த இடத்தின் மேலுள்ள கான்கிரீட் தளத்தில் T-56 துப்பாக்கி, 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 56 ஜெலிக்னைட் குச்சிகள் மீட்கப்பட்டன.</p><p>வீட்டின் கூரையில் ஒரு காலை இழந்த நிலையில் கிடந்த உடல், ஷஹ்ரானின் மற்றொரு சகோதரரான ரில்வானுடையது என அடையாளம் காணப்பட்டது.</p><p></p><h2>&nbsp;சாரா ஜஸ்மின் விசாரணை</h2><p>அதேவேளை, சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் இன்சாப் அகமட் வெளிநாட்டில் இருப்பதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று அவர் வெளிநாடு சென்றதாகவும் சாரா ஜஸ்மின் கூறியிருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/620259cb-5890-4c55-80a2-ffbc1f0241db/26-6a73e15e65c71.webp' /></p><p>அந்த பரிசோதனையில், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றது தெரியவந்தது.</p><p>இருவரும் ஒன்றாக விமான நிலையத்துக்குச் சென்று பின்னர் தனித்தனி வாகனங்களில் வெளியேறியிருப்பது CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது” என்றார்.</p><p> இதற்கிடையில், ஷாங்க்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்சாப் ஆகியோரின் உடற்கூறு பரிசோதனையை மேற்கொண்ட நீதிமருத்துவ நிபுணர் வைத்தியர் எஸ்.டி. சன்ன பெரேராவும் சாட்சியமளித்தார். </p><p>சினமன் கிராண்ட் தாக்குதலாளியின் உடலில் ஒரு கால் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், மற்ற தாக்குதலாளியின் தலை உடலிலிருந்து முழுமையாக பிரிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், அவரது உடல் பல சிறிய துண்டுகளாக சிதறியிருந்ததுடன், இது தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் பொதுவாகக் காணப்படும் சேதம் என விளக்கினார்.</p><p> தாக்குதலாளியின் தாடை எலும்பு நடுப்பகுதியில் இரண்டாகப் பிளந்திருந்தது என்றும், இவ்வாறான அபூர்வமான எலும்பு முறிவு தற்கொலை குண்டு வெடிப்புகளில் மட்டுமே ஏற்படும் என்றும் நீதிமருத்துவ நிபுணர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவேற்று அதிகார தொடர்ச்சியில் முழுமையடையா 13 ஆம் சீர்திருத்தத்தின் மாயத்தோற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-illusion-of-an-incomplete-13th-amendment-1785977481"></link>
            <id>https://ibctamil.com/article/the-illusion-of-an-incomplete-13th-amendment-1785977481</id>
            <summary type="text">அரகலய போராட்டத்தின் அரசியல் குதிரையில் ஏறி ஜே.வி.பியை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் “சிஸ்டம் சேஞ்ச்” முன்மொழிந்த விடயத்தை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்தின் அரசியல் குதிரையில் ஏறி ஜே.வி.பியை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் “சிஸ்டம் சேஞ்ச்” முன்மொழிந்த விடயத்தை தற்போது மறந்து நடைபோட்டு வருவதாக அரசியல் ஆர்வளர்கள் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.</p><p>இந்த நடைமுறையை மாற்றுவதற்கும் ஜே.ஆர் முதல் கோட்டாபய வரை இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கும் அநுர வழங்கிய வாக்குறுதிகளில் ஒரு அடி கூட எடுத்துவைக்க ஏன் விரும்பவில்லை என்ற கேள்விகளையும் அவர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.</p><p>1983 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆம் சீர்திருத்த சட்டத்தின் வகிப்பகம் இன்றும் முழுமையாக இல்லாத பின்னணியில்&nbsp;சிஸ்டம் சேஞ்ச் என்பது தமிழ் மக்கள் தோடும் தேவையான அரசியல் நகர்வு எனவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.</p><p>இவ்வாறான நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் இரண்டரை ஆண்டுகள் கடந்தும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அமிர்தநாயகம் நிக்சன் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களை மையப்படுத்தி விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KIblVlbOXRw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T00:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-missile-attack-shakes-kiev-1785957116"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-missile-attack-shakes-kiev-1785957116</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இரவு நேரத்தில் கீவ் நகரம் முழுவதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. சமீப வாரங்களாக ரஷ்யா தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கீவ் நகரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
</p><p>இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், போதிய ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு இல்லாததே மீண்டும் பல உயிர்களை காவுகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணை</h2><p> </p><p>மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணைகளை விரைவாக வழங்குமாறு உக்ரைனின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளுக்கு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47d26042-69e1-4a88-91d3-bce0bc1abff7/26-6a738afed0946.webp' /></p><p>

உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யா ஏவிய 115 ட்ரோன்களில் சுமார் 90 சதவீதம் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், ஏவப்பட்ட 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நான்கு 'சிர்கான்' (Zircon) அதிவேக குரூஸ் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட இடைமறிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தத் தாக்குதலில் கிடங்குகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. மேலும், ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம், கட்டுமானப் பொருட்கள் கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சரக்கு விநியோக மையங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T23:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமான் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-deal-a-warning-to-the-us-1785965294"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-deal-a-warning-to-the-us-1785965294</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் கப்பல்கள் ஈரான் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்து ஓமானுடன் இணைந்து ஒருங...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும் கப்பல்கள் ஈரான் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்து ஓமானுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்படும் என்றும் ஈரானிய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>மேலும், வணிகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர்கள்&nbsp; கூறியுள்ளனர்.</p><p>
இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஈரான் மற்றும் ஓமான் இடையே மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஓமானின் மூலம் மறைமுகமாக ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டாலும், அந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா நேரடி பங்கேற்பை ஈரான் நிராகரித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர்.</p><p></p><h2>கடற்படை முற்றுகை</h2><p>மேலும், இந்த ஒப்பந்தம் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என்பதைக் குறிக்கவில்லை என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் வரை அதை ஈரான் போர் நடவடிக்கையாகவே கருதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf0f8f2-673c-46b8-92be-5e153d2ec024/26-6a73b5ddbb9e0.webp' /></p><p>இந்நிலையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்த பின்னரே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பது ஈரானின் நிலைப்பாடு எனவும் விளக்கப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
அதேவேளை, கட்டார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை மத்தியஸ்தர்களாக பயன்படுத்தி, ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா என்பது குறித்து ஈரான் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T22:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த படைக்கலம் மீது இடைமறிப்பு ஏவுகணை ஏவிய இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-fires-interceptor-missile-own-military-base-1785965159"></link>
            <id>https://ibctamil.com/article/israel-fires-interceptor-missile-own-military-base-1785965159</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தனது இராணுவ நடவடிக்கையின்போது ஏற்பட்ட சொந்த துப்பாக்கிச் சூட்டை தவறாக அடையாளம் கண்டதால், இடைமறிப்பு ஏவுகணை (Intercept...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தனது இராணுவ நடவடிக்கையின்போது ஏற்பட்ட சொந்த துப்பாக்கிச் சூட்டை தவறாக அடையாளம் கண்டதால், இடைமறிப்பு ஏவுகணை (Interceptor Missile) ஒன்றை தவறுதலாக ஏவியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆரம்பத்தில் அந்த துப்பாக்கிச் சூடு எதிரி தாக்குதல் என தவறாக கருதப்பட்டதால், வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் இடைமறிப்பு ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இஸ்ரேல் இராணுவம்</h2><p>
</p><p>
இந்த தவறான அடையாளம் காரணமாக சில நிமிடங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c15ccebe-bd08-4311-8771-c0f6a3bed485/26-6a73aa6a57e99.webp' /></p><p>இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, சம்பவத்தின் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T21:43:19+00:00</updated>
        </entry>
    </feed>
