<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-26T23:29:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த கடுமையான எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572</id>
            <summary type="text">இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரானை எச்சரித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் ஆட்சி வீழ வேண்டும் அல்லது சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் கொடுக்க வேண்டிய விலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நெதன்யாகு, ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் முன்மொழிவு&nbsp;</h2><p>

முறையான உறவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சவூதி-இஸ்ரேல் உறவை சீராக்குவதற்கு ட்ரம்ப் முன்மொழிந்த நிபந்தனையான ரியாத்துக்கு ராணுவ அணுசக்தி திட்டம் இல்லாமல், சிவில் அணுசக்தித் திட்டத்தை வழங்கும் முன்மொழிவை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afda122-a8bf-4802-98a9-6d3640e68ee2/26-6a66714e223b5.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
லெபனான் குறித்துப் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலியப் படைகள் ஹெஸ்பொல்லாவை இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து 5 முதல் 8 மைல்கள் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகவும், அதன் தோராயமாக 150,000 ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளில் சுமார் 94 வீதத்தை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமாஸ் அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-army-killed-hamas-drone-commander-1785097074"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-army-killed-hamas-drone-commander-1785097074</id>
            <summary type="text">மத்திய காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர் ஹமாம் ஈத் என அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
கொல்லப்பட்டவர் ஹமாம் ஈத் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் தயாரிப்பிற்கு அவரே பொறுப்பாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் அமைப்பின் வான்வழிப் படையை மீண்டும் கட்டியெழுப்ப ஈத் சமீபத்தில் முயன்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><h2>போர்நிறுத்த ஒப்பந்தம்</h2><p>
</p><p>
ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🔴ELIMINATED: Hamam Eid, the Commander of the Hamas’ UAV Cell in the central camps.<br><br>Previously, he had served as the Head of the Drone Unit in the central camps. As part of his current role, he was responsible for the production of UAVs for Hamas, and intended to harm Israeli… <a href="https://t.co/f967TXmw0T">pic.twitter.com/f967TXmw0T</a></p>&mdash; Israel Defense Forces (@IDF) <a href="https://x.com/IDF/status/2081398317494206902?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இந்த ஒப்பந்தம் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வதையும், ஹமாஸை சரிபார்க்கப்பட்ட முறையில் ஆயுதங்களைக் களையச் செய்வதையும் வலியுறுத்தியது.
</p><p>
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பெரும்பாலும் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை சீண்டி விட்ட உக்ரைன்! பதிலடி நிச்சயம் - அராக்ச்சி வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-s-caspian-sea-attack-iran-warn-1785095860"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-s-caspian-sea-attack-iran-warn-1785095860</id>
            <summary type="text">கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
 ஒரு மாலுமி உயிரிழந்த இந்தச் சம்பவத்தை பதிலடி கொடுக்காமல் விட முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>அராக்ச்சியின் பதிவு</h2><p>
</p><p>
தனது எக்ஸ் சமுக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஐரோப்பாவை போருக்குள் இழுப்பதற்காக இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்று விமர்சித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Zelenskyy has attacked an Iranian commercial vessel, killing a sailor. A blatant UN Charter violation done at Israel&#39;s behest to drag Europe into its war. <br><br>In calls with EU High Rep Kallas and FM Lavrov, made clear that what the freeloader in Kyiv did CANNOT GO UNANSWERED.</p>&mdash; Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2081406217486778612?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியபோது, “கீவ் நிர்வாகம் செய்த இந்தச் செயலுக்குக் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கப்படும்” என்பதைத் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>உக்ரைனின் உளவுத்துறை</h2><p>
</p><p>
ஈரானுடன் தொடர்புடைய இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு எதிராக கஸ்பியன் கடலில் உக்ரைன் நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்தியதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e7f4ff-4f03-46f7-bb75-1aa0ad890c18/26-6a6668ba90dea.webp' /></p><p> </p><p>

எவ்வாறாயினும், ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இராணுவ உபகரணங்களைக் கொண்டு செல்லும் தடைகளுக்குட்பட்ட சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்ததாக உக்ரைனின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கதேசத்தில் மீட்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-taken-to-bring-back-two-fishermen-1785092567"></link>
            <id>https://ibctamil.com/article/steps-taken-to-bring-back-two-fishermen-1785092567</id>
            <summary type="text">
கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களையும் தந்தையையும் மகனையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களையும் தந்தையையும் மகனையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மீன்பிடி, நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடியாக தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கடந்த ஜூன் 19 ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த 'சோமிரச' படகிலிருந்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகனான எஸ். எச். சமிந்த ஆகியோரே இவ்வாறு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு வழிமாறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் வேறு படகொன்றின் மூலம் கரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>தூதரகங்களுக்கு அறிவிப்பு</h2><p>

எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefad98e-3001-4359-b1cc-a700b47b7783/26-6a66606429809.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Vecteezy</i></p><p>
படகில் படகு கண்காணிப்பு அமைப்போ (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி இயந்திரமோ இல்லாதிருந்தமையால், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவது கடினமாகியிருந்தது.&nbsp;</p><p>
அவர்களைக் கண்டறிவதற்காகக் கடற்படையும் விமானப்படையும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை.&nbsp;</p><p>

இருப்பினும், நிலவும் கடல் நீரோட்டங்களுக்கு ஏற்பப் படகு தொலைதூரப் பகுதிக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததன் அடிப்படையில், வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் அறியத்தரப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பங்களாதேஷில் மீட்பு&nbsp;</h2><p>
அதற்கமைய, குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு அடித்துச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பங்களாதேஷ் மீனவர்கள் குழுவொன்றினால் அதிலிருந்த தந்தையும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76063f1b-cde3-42e0-8189-daea9a31633e/26-6a66606370adf.webp' /></p><p>
சுமார் ஒரு நாள் வரை பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>

இச்செய்தி கிடைத்தவுடன் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T19:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஆறு கப்பல்களை தடுத்து நிறுத்திய ஈரானின் புரட்சிகர படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-it-stopped-6-vessels-hormuz-1785081837"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-it-stopped-6-vessels-hormuz-1785081837</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில், &quot;அனுமதியின்றி மற்றும் நியமிக்கப்பட்ட கப்பல் வழித்தடத்திற்கு வெளியே&quot; ஹோர்முஸ் நீரிணையை் கடக்க முயன்ற ஆறு கப்பல்களை ஈரானின் இஸ்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில், "அனுமதியின்றி மற்றும் நியமிக்கப்பட்ட கப்பல் வழித்தடத்திற்கு வெளியே" ஹோர்முஸ் நீரிணையை் கடக்க முயன்ற ஆறு கப்பல்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை தடுத்து நிறுத்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை(26) செய்தி வெளியிட்டது.</p><p>அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில் "அனுமதியின்றி கடக்க" முயன்றதால், ஈரானிய அதிகாரிகள் அந்தக் கப்பல்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கவில்லை.</p><h2>&nbsp;IRGC கடற்படையினர் எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
அந்த ஆறு கப்பல்களையும் இடைமறிப்பதற்கு முன்பு, IRGC கடற்படையினர் எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இது அவற்றின் பாதையை மாற்றத் தூண்டியதாகவும் அந்த அறிக்கை கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d827b6d-2372-4314-8b73-fe47e14d7c05/26-6a6639178dd73.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமையன்று, "அனுமதியின்றி கடக்கும்" முயற்சிகளைக் கண்டறிந்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் நான்கு கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாக IRGC கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T18:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிலடிக்கு பதிலடி: ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irans-temporary-halt-to-attacks-on-the-us-1785085209"></link>
            <id>https://ibctamil.com/article/irans-temporary-halt-to-attacks-on-the-us-1785085209</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மீதான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரான்மீது அமெரிக்கப்படைகள் எந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மீதான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரான்மீது அமெரிக்கப்படைகள் எந்தத் தாக்குதலையும் தொடுக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா மீதான பதில் தாக்குதலையும் நிறுத்தவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா தாக்குதலை நிறுத்தி வைத்திருக்கும் வரையே ஈரானின் இந்த அமைதி என்றும், அதேசமயம் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது குறித்து நம்பிக்கையை விட சந்தேகமே அதிகமாக உள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><h2>பரஸ்பரம் தாக்குதல்</h2><p>&nbsp; &nbsp;ஈரான் - அமெரிக்கா இரண்டு நாடுகளும் மாறி மாறி கடந்த 13 நாட்களாக தாக்குதல்களை தொடுத்து வந்தநிலையில், இந்த வார இறுதியில் ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba82b23e-7b2c-4282-8c5a-24d3a0767627/26-6a664bd640039.webp' /></p><p> </p><p>இதனைத்தொடர்ந்து தற்போது ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
</p><p>


போரை தீவிரப்படுத்த ட்ரம்ப் பரிசீலித்து வந்ததாகவும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் இதுகுறித்து கவலை தெரிவித்தாகவும், அதன்பேரிலேயே இஸ்லாமிய குடியரசின் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை குறித்து பேச்சு</h2><p> </p><p>அதேசமயம் அமெரிக்காவின் போர்ச்செலவும் அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ba3ae3-74c5-4237-a751-6f21126f5f58/26-6a664bd58965e.webp' /></p><p>
</p><p>
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்யவே அமெரிக்கா இந்த அவகாசத்தை வழங்கியுள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரானும், ஓமானும் தெஹ்ரானில் ஹோர்முஸ் நீரிணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T18:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-martyrs-commemoration-1785088121"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-martyrs-commemoration-1785088121</id>
            <summary type="text">
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு இன்று (26) மாலை 5.30 மணியளவில் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிர்நீத்தோருக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.</p><p></p><h2>மௌன அஞ்சலி</h2><p>
</p><p>
நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997fd261-97cc-461c-8859-44c28fe8d4b2/26-6a664a9f8c6b1.webp' /></p><p> </p><p>

பின்னர் தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T17:58:01+00:00</updated>
        </entry>
    </feed>
