<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-14T06:24:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கைது செய்யப்பட்ட பெண்! முடக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-in-colombo-arrested-drug-linked-assets-1786687184"></link>
            <id>https://ibctamil.com/article/woman-in-colombo-arrested-drug-linked-assets-1786687184</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பெருமளவிலான சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14, பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பெருமளவிலான சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு 14, பெர்குசன் வீதியில் வசிக்கும் 53 வயதான பெண்ணொருவரே சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு (IGP) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>

இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பணக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac41e0e-9c2d-462c-98ba-f7dbb44f233e/26-6a7eb146df1ed.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், குறித்த முடக்க உத்தரவுகளை கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உயர் நீதிமன்றங்கள் நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சொத்துக்கள்</h2><p>
</p><p>
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் ஜா-எல பகுதியில் உள்ள ரூ. 1.4 மில்லியன் மதிப்புள்ள 8.66 பேர்ச் நிலம், 6 வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள ரூ. 5.9 மில்லியன் பணம், கொழும்பு 14 பகுதியில் உள்ள ரூ. 22.5 மில்லியன் மதிப்புடைய 3 கடை அறைகள், அதே பகுதியில் உள்ள ரூ. 7.5 மில்லியன் மதிப்புள்ள மற்றொரு கடை அறை மற்றும் ரூ. 20 மில்லியன் மதிப்புடைய மூன்றடுக்கு வீடு மற்றும் நிலமும் அடங்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6636bad0-df03-4de6-8edc-1ade1b007dac/26-6a7eb147a4fd1.webp' /></p><p>
</p><p>
இந்த சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் வியாபாரம் மூலமே திரட்டப்பட்டவை என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சந்தேகநபரான பெண் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T06:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archaeology-dept-encroachment-at-thiruketheeswaram-1786682366"></link>
            <id>https://ibctamil.com/article/archaeology-dept-encroachment-at-thiruketheeswaram-1786682366</id>
            <summary type="text">மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற
தொல்பொருள் திணைக்களம் அத்துமீறல் முயற்சி மேற்கொண்டதாக தொடர்பில் நாடாளுமன்ற
உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற
தொல்பொருள் திணைக்களம் அத்துமீறல் முயற்சி மேற்கொண்டதாக தொடர்பில் நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட போதே ப.சத்தியலிங்கம் இந்த விடயத்தினைக் ஒருங்கிணைப்பு குழுவிற்கு தெரியப்படுத்தினார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய
நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருள் திணைக்களத்திற்குரிய
இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்</span></p><p> அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு
அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இரவு
நேரத்தில் இவ்வாறு செய்ய முடியும். இந்த ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஆலயச்சூழல் தொல்பொருளுடன்
தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeea99ec-3f9a-4554-835a-a0504976c198/26-6a7ea2f854ce8.webp' /></p><p>
ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது
மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த
ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளது.</p><p> குறித்த ஆலய வளாகத்தில்
கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும்
குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன்.</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள்
தொல்பொருள் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாகவே இவை
தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936e026e-a008-4144-a805-571c3002717c/26-6a7ea1ff3af94.webp' /></p><p>
</p><p>
ஆகவே, இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T05:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-dissemination-woman-nude-photos-1786682689"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-dissemination-woman-nude-photos-1786682689</id>
            <summary type="text">பெண்ணொருவரின் ஆடையற்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் ஆடையற்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கைது செய்யப்பட்ட நபர்&nbsp;ஆனமடுவ காவல்துறை பிரிவுக்குட்பட்டவர் என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>
குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கமைய, வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நேற்று (13.08.2026) காலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cec85c09-b3d4-4ebb-8b90-4bbb7939fa07/26-6a7ea5b21130a.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் மாம்புரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் எவ்வாறு பெறப்பட்டன, அவை எந்த நோக்கத்திற்காகவும் எவ்வாறு பரப்பப்பட்டன என்பது உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T05:21:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆபிரகாம் லிங்கன் கப்பலின் இராணுவ வீரர்களின் பரிதாப நிலை: வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/information-regarding-abraham-lincoln-ship-1786680079"></link>
            <id>https://ibctamil.com/article/information-regarding-abraham-lincoln-ship-1786680079</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.&amp;nbsp;அந்த கப்பலில் தங்கியிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.&nbsp;</p><p>அந்த கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மேலும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உள்ள சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகவும், கப்பலில் உள்ளவர்களின் மனநலம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>ஆபிரகாம் லிங்கன் கப்பல்</h2><p> </p><p>

</p><p>தகவல் இப்படி இருக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத் நேற்று (14.08.2026) கூறுகையில், கப்பலின் நிலைமை குறித்த செய்திகள் முழுமையாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45c2dbc0-3742-4eb2-850c-b85e5b6fc3be/26-6a7e9cbf4dfdb.webp' /></p><p>கிட்டதட்ட 250 நாட்களுக்கும் மேலாக பயணிக்கும் இந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவிலிருந்து தென் சீனக் கடலுக்குப் புறப்பட்டது.</p><p> </p><p>

பின்னர் பெப்ரவரியில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக இது மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. </p><p>

ஆரம்பத்தில் மே மாதத்துடன் முடிவடைய வேண்டிய இவர்களின் சேவைக்காலம், பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p> 

நீண்ட காலம் பணிக்கமர்த்தல் மற்றும் ஏனைய விடயங்களால் அதன் பணியாளர்கள் பாரிய மன அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். </p><p>

சூழ்நிலை இப்படி இருக்க கப்பலில் உள்ளவர்கள் திரும்பும் திகதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இருப்பினும், முன் திட்டமிடப்பட்ட சுழற்சி முறையின்படி, இக்கப்பலுக்குப் பதிலாக 'யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் கப்பலை அனுப்ப அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gov-institutions-to-be-established-in-battaramulla-1786680239"></link>
            <id>https://ibctamil.com/article/gov-institutions-to-be-established-in-battaramulla-1786680239</id>
            <summary type="text">கொழும்பு - கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக&nbsp;நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பத்தரமுல்லை செத்சிறிபாய நிர்வாக வளாகத்தின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அரச நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் நேற்று (13) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம்&nbsp;</h2><p>பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம் 25 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed09b8e2-88a0-4221-a09d-dadd1cf39b07/26-6a7e980182062.webp' /></p><p>சுமார் 1,359,439 சதுர அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அலுவலக வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.</p><p>
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 16.7 பில்லியன் ரூபாய் ஆகும்.</p><p>&nbsp;</p><h2>அரச அலுவலகங்களை மாற்றும் திட்டம்</h2><p>கொழும்பு கோட்டை உள்ளிட்ட கொழும்பு நகரப் பகுதிகளில் தற்போது இயங்கி வரும் அரச அலுவலகங்களை படிப்படியாக பத்தரமுல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர நிர்வாகப் பகுதிக்கு மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக செத்சிறிபாய 3ஆம் கட்டம் உருவாக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8001eed3-f5b1-4477-bdd9-7717d7591cd5/26-6a7e9800cc1ba.webp' /></p><p>
இந்தக் கட்டடம் நிறைவடைந்த பின்னர் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>நிர்மாணத் திட்டங்கள் பல்வேறு தரப்பினருக்கும் அதிகபட்ச பயன்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் தனித்தனியாக செயற்படாமல் ஒட்டுமொத்த அரச சேவை என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.</p><p>அரச ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் சேவைகளைப் பெறுவதற்கு இலகுவான சூழலை ஏற்படுத்துதல், புதிய வழிகாட்டல் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitioner-evidence-in-easter-attack-case-complete-1786677793"></link>
            <id>https://ibctamil.com/article/petitioner-evidence-in-easter-attack-case-complete-1786677793</id>
            <summary type="text">இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் (13) நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்த்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் (13) நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு அங்கமான முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (13) பிற்பகல் நிறைவடைந்தன.</p><p>

நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.</p><p></p><h2>24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b60aeb-9c91-49e3-a491-cafe61021fd5/26-6a7e8ec28e934.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p> இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தொடர் குண்டுத் தாக்குதல்</h2><p>

2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை அனுராதபுரம், மாவனெல்ல, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி, கொழும்பு, தெஹிவளை போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனையவர்ளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி, ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42377aa5-661d-4858-bfce-6363a8a16e6e/26-6a7e8ec33fccb.webp' /></p><p>

அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.
</p><p>
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முதல் வெடிக்கவுள்ள போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-justice-for-the-tamil-genocide-1786676210"></link>
            <id>https://ibctamil.com/article/international-justice-for-the-tamil-genocide-1786676210</id>
            <summary type="text">இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.&amp;nbsp;தாயகச் செயலணி அமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் இன்று முதல் (14) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.</p><p> செம்மணி மனிதப்புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகள் கடந்த சனிக்கிழமையுடன் (8) 100 நாட்களை எட்டியிருப்பதுடன், அந்த மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>
</p><p>
இந்தநிலையில் குறிப்பாக படுகொலை செய்யப்பட்டு, செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுமே 'நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6dc8835-add7-413d-b28e-bdd81f6e88e2/26-6a7e872b65ff3.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதல் (14) எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செம்மணி மனிதப்புதைகுழி அவலம் குறித்தும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>அதனைத்தொடர்ந்து 17 ஆம் திகதி (திங்கட்கிழமை) செம்மணி மனிதப்புதைகுழிக்கு அண்மையில் கவனயீர்ப்புப் பேராட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hyc5uYg9TdM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339"></link>
            <id>https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><p></p><h2>பரீட்சை வினாத்தாள்&nbsp;</h2><p>இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில் பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14-08-2026) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ddffd01-e66b-4881-bcc1-e578b82779b8/26-6a7dfc2768bfe.webp' /></p><p>எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார்.</p><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><h2>பரீட்சைகள் திணைக்களம்</h2><p> 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5311e45-2b34-47c1-a854-c6068355a147/26-6a7dfc281c1bc.webp' /></p><p>இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவம் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:39:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786665550"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786665550</id>
            <summary type="text">மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a383ac-6ec2-4ea0-9b44-6f00af636c71/26-6a7e5a5050e92.webp' />&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:39:09+00:00</updated>
        </entry>
    </feed>
