<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T00:09:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213"></link>
            <id>https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் குறித்த இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0845e2e-6ca7-4693-af24-6ae16297ad6d/26-6a9caab8370ef.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதேவேளை, மலையக பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136"></link>
            <id>https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136</id>
            <summary type="text">தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஹவாய் தீவுகள்</h2><p>இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6897b1e-85f4-4e8c-a148-15c6aab3c5be/26-6a9ca6834718b.webp' /></p><p> </p><p>அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆபத்தான நீரோட்டங்கள்</h2><p> </p><p>ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை
சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700"></link>
            <id>https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700</id>
            <summary type="text">அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
</p><p>
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
</p><p>
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/VNz7RtIWc54" title="🔴Special LIVE:நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை | Naattu Nadappu" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பாரிய போர்குற்றம்! தக்க பதிலடி விரைவில் என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291"></link>
            <id>https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291</id>
            <summary type="text">ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி என்றும், ஈரான் மீதான ஒரு பரந்த கடல் முற்றுகை மற்றும் பொருளாதாரப் போரின் ஒரு பகுதி என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தகக் கப்பல் போக்குவரத்து</h2><p>இவை ஐ.நா. சாசனத்தின் மீறல் மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f03ca9-8290-41e9-9b89-b8233cfb72b2/26-6a9c783d0114f.webp' /></p><p>இந்நிலையில் ஈரானின் உள்ள வியூக ஆய்வுகளுக்கான மையத்தின் பகுப்பாய்வாளரான அலி அக்பர் தாரேனி, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் ஒரு பெரிய பிரச்சினை என்றும், அதற்கு பதிலளிக்காமல் விட்டுவிட ஈரானால் முடியாது என்றும் கூறியுள்ளார்.</p><p>இது ஈரானைக் கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அவரால் கூறப்பட்டுள்ளது. மேலும் கடுமையாகத் தாக்கிப் பதிலடி கொடுக்க இது ஈரானைத் தூண்டுகிறது எனவும் அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T20:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் கட்டாரின் இராஜதந்திர முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859"></link>
            <id>https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859</id>
            <summary type="text">பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இன்று லெபனான் பிரதமர் நவாஃப் சலாமுடன் தொலைபேசியில் மத்தியக்கிழக்கு பதற்றம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p>இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ததோடு, பிராந்தியம் முழுவதும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>பிராந்திய முன்னேற்றங்கள்</h2><p>சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e40e4cc4-fc16-403a-b9c3-e70d13d027ff/26-6a9c72a5614c2.webp' /></p><p>

கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான ஒரு விரிவான உடன்படிக்கைக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு கட்டார் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என ஷேக் முகமது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>மேலும், லெபனானின் ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கத்தார் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதோடு, லெபனான் மக்களுடன் தனது தொடர்ச்சியான ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணாடியில் தெரிந்த ஏவுகணை! ஈரானிடம் நூலிழையில் தப்பிய அமெரிக்காவின் Super Hornet]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-super-hornet-narrowly-escapes-iran-1788635121"></link>
            <id>https://ibctamil.com/article/us-super-hornet-narrowly-escapes-iran-1788635121</id>
            <summary type="text">ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2026 மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது பரவி வருகிறது. </p><p>தரையில் இருந்து பதிவு செய்யப்பட்டதாகத் தோன்றும் காணொளியில், அமெரிக்க போர் விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கும்போது, கீழ்புறத்திலிருந்து ஏவுகணை ஒன்று பாய்ந்து வருவது காணப்படுகிறது.</p><p></p><h2>வேகமாகப் பரவிய செய்தி</h2><p>
</p><p>
ஏவுகணை விமானத்தை நெருங்கிய நிலையில், விமானி திடீரென இடதுபுறமாகத் திரும்பியதாகவும், சில நொடிகளில் விமானத்தின் பின்புறத்தில் ஏவுகணை வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விமானம் தொடர்ந்து பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360f9472-e675-4b50-a636-72a38bcd7738/26-6a9c67f34b052.webp' /></p><p>சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஊடகம், அமெரிக்க F/A-18 விமானம் புதிய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பால் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகவும் அறிவித்தது.
</p><p>
இந்தத் தகவல் மத்திய கிழக்கு ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
</p><p>
எனினும், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது.</p><p></p><h2>தவறான IRGC-யின் கூற்று&nbsp;</h2><p>மேலும், ஈரானால் எந்த அமெரிக்க போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என CENTCOM தெரிவித்தது.</p><p></p><p>திறந்த மூலத் தகவல் ஆய்வாளர்கள் காணொளியை ஆய்வு செய்து, அது சாபஹார் துறைமுகப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

காணொளியின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏவுகணை விமானத்தை நேரடியாகத் தாக்கவில்லை என்றும், விமானத்தின் பின்புறத்தில் வெடித்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதன் அடிப்படையில், அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான IRGC-யின் கூற்று தவறானது எனக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/even-unp-supporters-will-be-surprised-nalinda-1788626831"></link>
            <id>https://ibctamil.com/article/even-unp-supporters-will-be-surprised-nalinda-1788626831</id>
            <summary type="text">பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அளித்த பதிலை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அளித்த பதிலை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ விமர்சித்துள்ளார். </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தனிநபர்களைப் பாதுகாக்க அக்கட்சி முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டது இது முதல் முறையல்ல என்று கூறிய ஜெயதிஸ்ஸ, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவர் இதற்கு முன்னர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.</p><h2>நாமல் விளக்கமறியலில் வைக்கப்படுவது முதன்முறையல்ல</h2><p>"நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ ஒன்றும் அசாதாரணமானதல்ல. அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவது இது முதல் முறையல்ல," என்று அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573b2c44-342d-4ff6-879e-5d43bdfdff0d/26-6a9c4bfa82bb6.webp' /></p><p>

"சமீபத்திய வழக்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குற்றச்சாட்டு தொடர்பானது என்றும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பிறகு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>இலஞ்ச ஆணைக்குழு விசாரணை</h2><p>சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலானதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஆணைக்குழு விசாரித்துள்ளது என்று ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2abcb1f-80b9-4a7a-8fa7-f0e06aceaae9/26-6a9c4bfb36a1b.webp' /></p><p> </p><p>நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிப்பதற்கு முன்பே, ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான 100 மில்லியன் தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

"விசாரணை நடத்திய பின்னர், ஆணைக்குழு உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p> அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவை எடுத்தது நீதிமன்றம்தான். இதுதான் நடைபெற்ற செயல்முறை," என்று அவர் கூறினார்.</p><p>

ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்த ஜெயதிஸ்ஸ, அக்கட்சி தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டை அது வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.</p><h2>ஆச்சரியப்படும் ஐ.தேக. ஆதரவாளர்கள்</h2><p>

"ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்களும், அக்கட்சிக்காக நீண்டகாலம் பணியாற்றியவர்களும்கூட இத்தகைய அறிக்கையைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3429eee9-737e-4aee-925a-ded26028a00e/26-6a9c4bfbddbf5.webp' /></p><p>

ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாக ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டினார்.</p><p></p><p> </p><h2>நீதிமன்றம் எடுத்த முடிவு</h2><p>மேலும், அக்கட்சியுடன் தொடர்புடைய பல நபர்கள் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இன்று, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25f7f443-cba2-4eac-bc4f-016c14c32134/26-6a9c4bfc93cac.webp' /></p><p> தங்களில் ஒருவர் கைது செய்யப்படும்போது, ​​ஊடக அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குரல் பதிவுகள் மூலமாகவோ அதை எதிர்க்கிறார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>

விசாரணைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடத்தப்பட்டதாகவும், உண்மைகள் முன்வைக்கப்பட்ட பின்னரே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பது குறித்த முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T18:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[GOV PAY போலி இணையதளம் : பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-of-fake-website-similar-to-gov-pay-1788631825"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-of-fake-website-similar-to-gov-pay-1788631825</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் GOV PAY முறையைப் போன்ற ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, மக்களின் பணத்தையும் முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் GOV PAY முறையைப் போன்ற ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, மக்களின் பணத்தையும் முக்கியமான தரவுகளையும் திருடும் ஒரு மோசடி செயல்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

GOV PAY மூலம் பணம் செலுத்த வேறு எந்த இணையதளமும் இல்லை, மேலும் இதுபோன்ற நிதி மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.</p><h2>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களைச் செலுத்தும் முறை</h2><p>GOV PAY முறை மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களைச் செலுத்தும் முறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது மக்களுக்கு விஷயங்களை எளிதாக்குவதையும், நிதி மோசடிகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857a0e39-07a8-4678-a237-36effda89efe/26-6a9c5d811540f.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், GOV PAY போன்ற ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, மக்களின் பணத்தையும் முக்கியமான தரவுகளையும் தந்திரமாகத் திருடும் ஒரு மோசடி செயல்படுவதாக காவல்துறை கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>மக்களின் பணத்தை திருடும் மோசடி</h2><p>போலி இணையதளத்திற்கான இணைப்புகள், கைபேசிகளுக்கு SMS மற்றும் Whatsapp செய்திகளை அனுப்புவதன் மூலம் மக்களின் பணத்தைத் திருடுவதை இந்த மோசடி உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ca3079-62e5-45fa-a67c-bc7dbb1d0d79/26-6a9c5d81be34f.webp' /></p><p>
</p><p>
GOV PAY மூலம் பணம் செலுத்த இணையதளம் எதுவும் இல்லாததால், இதுபோன்ற போலி நிதி மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போக்குவரத்து பிரதி ஆய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. ஜே. சேனதீர அறிவுறுத்தினார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T18:21:25+00:00</updated>
        </entry>
    </feed>
