<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-02T07:12:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர் - தவறான மருந்து கொடுத்தாக சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-suddenly-dies-after-discharge-from-hospital-1788329863"></link>
            <id>https://ibctamil.com/article/boy-suddenly-dies-after-discharge-from-hospital-1788329863</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் மருந்துச் சீட்டைச் சரியாக வாசித்துச் செயற்படாததே இத்தவறுக்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/015e1de1-367a-48c0-84fa-d65a29272744/26-6a97c64fbc900.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களின்படி, இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும் அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
</p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:53:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு ஈரான் கடும் பதிலடி - 96 டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/global-oil-prices-jump-after-us-iran-trade-attacks-1788328869"></link>
            <id>https://ibctamil.com/article/global-oil-prices-jump-after-us-iran-trade-attacks-1788328869</id>
            <summary type="text">2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அமெரிக்காவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நிலைமை மோசமடைந்ததன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>மசகு எண்ணெய்யின் விலை&nbsp;&nbsp;</h2><p>இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/041f5f99-c306-4a94-9407-af4e5c7503cb/26-6a97be0525ace.webp' /></p><p>அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91 அமெரிக்க டொலராகக்கும் மேல் அதிகரித்துள்ளது.
</p><p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>விமானப்படைத் தளத்தின் மீது&nbsp;தாக்குதல்</h2><p>இதேவேளை ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e6b24f-021d-426a-9994-512279cd15d6/26-6a97be05d1f89.webp' /></p><p>ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-cabinet-has-granted-approval-1788328176"></link>
            <id>https://ibctamil.com/article/the-cabinet-has-granted-approval-1788328176</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுகுடியமர்வு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலங்களை விடுவிக்கும் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
</p><p>
இலங்கையில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகள் 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஊடாக ஆரம்பிக்கப்பட்டன. </p><p>பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவும் இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p></p><h2>அமைச்சரவை அனுமதி</h2><p>

2026 ஜனவரி 1ஆம் திகதி நிலவரப்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் 21.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7141515-9963-42fa-a5b3-164d8aae65eb/26-6a97c0838eb16.webp' /></p><p>
</p><p>
தற்போது Mines Advisory Group (MAG), The HALO Trust, Delvon Assistance for Social Harmony (DASH) மற்றும் Skavita Humanitarian Assistance and Relief Project (SHARP) ஆகிய நான்கு நிறுவனங்கள் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், 2026 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறித்த நான்கு நிறுவனங்களுடனும் தலா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பாக விடுவித்து, மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தேவையான நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T06:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1788329742"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1788329742</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (02-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (02-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,337,158 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்க விலை</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 377,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,240 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49521dbe-5395-44f1-80c7-8337b929ab6f/26-6a97c03fba9a7.webp' /></p><p>22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 345,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 330,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:21:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-insurance-for-fruit-farmers-1788326524"></link>
            <id>https://ibctamil.com/article/government-insurance-for-fruit-farmers-1788326524</id>
            <summary type="text">பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பழச் செய்கையின் போது ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>பழச் செய்கையின் போது ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>விவசாய, கால்நடை வளர்ப்பு, காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><h2>முதன்மை நோக்கம்</h2><p>இதனடிப்படையில் விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 7 சதவீதத்தை பிரீமியம் தொகையாகச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4ef51f-8bc1-4a35-82d8-f7fa2d9dc3bc/26-6a97bcd7ee15b.webp' /></p><p>இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சித் தாக்குதல்கள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.</p><p>பயிர்ச்சேதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை இழப்பீடு பெறத் தகுதி உரித்தாகும் என விவசாயக் காப்புறுதிச் சபை தெரிவித்தது.
</p><p>விவசாய அபாயங்களை நிர்வகிக்க விவசாயிகளுக்கு உதவுவதும் பழச் செய்கையில் தொடர்ந்து ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீலரத்ன தேரர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-seelarathna-thero-1788328620"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-seelarathna-thero-1788328620</id>
            <summary type="text">ஜன சேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது&amp;nbsp; அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்&amp;nbsp;மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன சேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது&nbsp; அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்&nbsp;மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில் அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>காயமடைந்த சீலரத்ன தேரர்&nbsp;</h2><p> </p><p>இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bea5e7d-6f54-4fc8-8da5-714635ae7998/26-6a97be377825b.webp' /></p><p>
</p><p>
தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக பல விசேட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது</p><p>தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T05:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/advisory-issued-for-strong-winds-and-rough-seas-1788321718"></link>
            <id>https://ibctamil.com/article/advisory-issued-for-strong-winds-and-rough-seas-1788321718</id>
            <summary type="text">யாழ். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>காற்றின் வேகம்</h2><p>ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8a27fc-e423-4a09-9847-d5a809a2f0d1/26-6a97b9ebe6bb8.webp' /></p><p>அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனால், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T05:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sharp-weapon-in-anuradhapura-suspect-arrested-1788325335"></link>
            <id>https://ibctamil.com/article/sharp-weapon-in-anuradhapura-suspect-arrested-1788325335</id>
            <summary type="text">அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில்&amp;nbsp; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில்&nbsp; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>காவல்துறை விசாரணை</h2><p>
</p><p>மேலும் உயிரிழந்தவர் அநுராதபுரம், யாய 05 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894fc063-86fd-45f7-b430-aaead2ccbda6/26-6a97b7e312575.webp' /></p><p>உயிரிழந்த நபருக்கும் வேறு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவர் கோடாரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T05:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-denies-rs-190-billion-govt-debt-surge-1788323345"></link>
            <id>https://ibctamil.com/article/minister-denies-rs-190-billion-govt-debt-surge-1788323345</id>
            <summary type="text">அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது. நிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) இதனை முற்றாக நிராகரித்துள்ளார்.</p><p>

உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் வெளியிடப்படுவது கவலையளிப்பதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>வெளிநாட்டுக் கடன்கள்</h2><p>மத்திய வங்கியின் தகவல்களை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகச் சமீபத்திய ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.</p><p>எனினும் இந்த அதிகரிப்பிற்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும் மற்றும் குறிப்பிடப்பட்ட சில தரவுகள் பிழையானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b868884a-4f83-4004-8e45-43f49cfaee77/26-6a97b0d46e7cd.webp' /></p><p>அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகவும், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக ஆதாரங்களில் பெறப்பட்ட கடன் விவரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அரசாங்கத்தின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் மற்றும் ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்கக் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சற்றுலாப்பயணிகள்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourists-visiting-the-country-in-august-1788322086"></link>
            <id>https://ibctamil.com/article/tourists-visiting-the-country-in-august-1788322086</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 3.3 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 3.3 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
</p><p>
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 191,704 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். </p><p>இது கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.3 சதவீதம் குறைவாகும்.</p><p></p><h2>இந்திய சுற்றுலா பயணிகளே அதிகம்&nbsp;</h2><p>மேலும்&nbsp;ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed649cd-88a9-4b19-8eda-a900a7127835/26-6a97ab2d81698.webp' /></p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து வருகை தந்தோர்&nbsp;47,253 ஆக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இதற்கு மேலதிகமாக பிரித்தானியாவிலிருந்து 19,588 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 12,321 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 11,405 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.</p><p>

இதற்கமைய, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,535,122 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/final-rites-of-singer-priyankara-perera-tomorrow-1788323776"></link>
            <id>https://ibctamil.com/article/final-rites-of-singer-priyankara-perera-tomorrow-1788323776</id>
            <summary type="text">சிங்கள மொழி, பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64 ஆவது வயதில் காலமானார்.மறைந்த பிரியங்கர பெரேரா, பாடகர் மில்டன் பெரேராவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கள மொழி, பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64 ஆவது வயதில் காலமானார்.</p><p>மறைந்த பிரியங்கர பெரேரா, பாடகர் மில்டன் பெரேராவின் மகனாவார்.&nbsp;&nbsp;</p><p>இதன்படி பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை (03) நடைபெறும் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அஞ்சலி</h2><p> </p><p>

அவரது பூதஉடல் இன்று (02) பிற்பகல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef3bdd1-dc88-48df-aeb5-98fe7e0b26a4/26-6a97a9c643b6a.webp' /></p><p>நீண்டகாலமாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார்.</p><p>பிரியங்கர பெரேரா, பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளதுடன் ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பிரபல பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
</p><p>


பாடகராக மட்டுமன்றி நடிகராகவும் கலைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டநடவடிக்கை...! அரசாங்கத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-on-to-extradite-ex-cb-chief-arjun-mahendran-1788321840"></link>
            <id>https://ibctamil.com/article/steps-on-to-extradite-ex-cb-chief-arjun-mahendran-1788321840</id>
            <summary type="text">மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்ட அமைப்புகள்&nbsp;</h2><p>அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு கொண்டு வருவதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளதா என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது.
</p><p>அதற்குப் பதிலளித்த அமைச்சர், எந்தவொரு குற்றவாளியையும் நாட்டிற்கு அழைத்து வரும்போது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள சட்ட அமைப்புகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3b2570-64f0-4331-a601-72d271efd4b6/26-6a97a493bcecb.webp' /></p><p>அத்தோடு நாங்கள் கேட்ட உடனேயே எந்தவொரு நாடும் சந்தேகநபர்களை ஒப்படைப்பதில்லை எனவும் அதற்கு நீண்ட இராஜதந்திர மற்றும் சட்டப் பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p> அனைத்துக் குற்றவாளிகளையும் நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலும் அந்த நடைமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், அதனை வெற்றிகரமாக முடிப்பற்குத் தேவையான அதிகபட்ச தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-lecturers-to-protest-today-1788320830"></link>
            <id>https://ibctamil.com/article/university-lecturers-to-protest-today-1788320830</id>
            <summary type="text">அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பல்கலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக&nbsp;இன்று (02) இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த விடயத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் செயலாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீவிரப்படுத்த நடவடிக்கை</h2><p>இதற்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b240b8-010a-45e7-87c3-2226f6d1b8dd/26-6a979eeac0929.webp' /></p><p> 

அண்மை காலத்தில் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து கிட்டத்தட்ட 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும்&nbsp;அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> அதேவேளையில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை 2015 இல் சுமார் 25,000 ஆக இருந்ததில் இருந்து இன்று சுமார் 45,000 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T03:58:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917"></link>
            <id>https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917</id>
            <summary type="text">தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின்
நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின்
நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி
அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்
கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில் இந்த விடயம் குறித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.</p><p>ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது செய்ய நடவடிக்கை</span></p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.&nbsp; தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f869bf7a-89e7-415b-ada0-bbf61c9c3617/26-6a978730db372.webp' /></p><p>அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p>அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.
</p><p>
எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T03:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-65-million-gold-stolen-travel-agency-robbery-1788315727"></link>
            <id>https://ibctamil.com/article/rs-65-million-gold-stolen-travel-agency-robbery-1788315727</id>
            <summary type="text">பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த சம்பவம்&nbsp;நேற்று (01) பிற்பகல் கொழும்பு தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e47a9f-d006-4519-b09b-d635dd010c96/26-6a97917924cea.webp' /></p><p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T03:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589</id>
            <summary type="text">ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.
</p><p>
ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி</h2><p>

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரில் நடந்த திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d220cc1-5412-4422-b7af-827a47a5e1b8/26-6a9765ff20b5e.webp' /></p><p> </p><p>

அந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக IRGC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

தற்போதைய மோதலின் போது ஈரான் இந்த இராணுவத் தளத்தை பலமுறை குறிவைத்துத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T02:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.</p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
உடனடியாக உறவினர்கள் குழந்தை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a796199e-e206-4f77-8d24-32ad8e2ffa47/26-6a9775fa04832.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>உறவினர்களிடமும் விசாரணை</h2><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30cbd17a-ae0c-49cd-b674-198dec802589/26-6a9778220a7cb.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று(01) மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T01:26:43+00:00</updated>
        </entry>
    </feed>
