<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-12T09:26:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-tourism-earnings-fall-in-2026-1st-half-1783841615"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-tourism-earnings-fall-in-2026-1st-half-1783841615</id>
            <summary type="text">இலங்கையின் 2026 ஆம் ஆண்டின் சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி, சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 2026 ஆம் ஆண்டின் சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்து 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருமானமாக கிடைத்துள்ளன.</p><p></p><h2>சுற்றுலா வருமானம்</h2><p> </p><p>கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c206cc-1b24-4bc4-a6d6-88092b454230/26-6a535c58d04ae.webp' /></p><p> 

கடந்த மே மாதம் 155.7 மில்லியன் டொலர்களாக இருந்த சுற்றுலா வருமானம், ஜூன் மாதத்தில் 151.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.</p><p> 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈட்டப்பட்ட 169.5 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க சரிவாகும்.</p><p>இதற்கிடையில், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திலும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்</h2><p>

மே மாதம் 847 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், ஜூன் மாதத்தில் 695 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 152 மில்லியன் டொலர் குறைவு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a42e42a-c746-4feb-afe8-014651816c70/26-6a535c57e9e5b.webp' /></p><p> </p><p>எனினும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. </p><p>

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 3,738 மில்லியன் டொலர்களாக இருந்த இந்த வருமானம், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் 4,604.8 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. 

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 866.8 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T09:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல் : கத்தார் விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missiles-qatar-raises-security-threat-level-1783832520"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missiles-qatar-raises-security-threat-level-1783832520</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதாக&amp;nbsp; சர்வதேச ஊடகங்கள் செய்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதாக&nbsp; சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> 

இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அழிக்கப்பட்டதாக ஈரான் மேலும் குறிப்பிட்டுள்ளது. </p><p>

அதேபோல், ஓமானிலுள்ள அமெரிக்க கடற்படை வழங்கல் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை இலக்கு வைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதேவேளை இடைமறிப்பு நடவடிக்கைகளின் போது சிதறிய பாகங்களால் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கத்தாரின் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன்&nbsp;பாதுகாப்பு அதிகாரிகளும் குடிசார் பாதுகாப்புக் குழுக்களும் அங்கீகரிக்கப்பட்ட அவசரகாலத் திட்டங்களின்படி பதில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Statement from the Ministry of Interior regarding operational developments following the Iranian attacks. <a href="https://x.com/hashtag/MOIQatar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MOIQatar</a> <a href="https://t.co/9CZoipLNtc">pic.twitter.com/9CZoipLNtc</a></p>&mdash; Ministry of Interior - Qatar (@MOI_QatarEn) <a href="https://x.com/MOI_QatarEn/status/2076185312594710893?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>எனினும் ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.</p><p>கத்தாரின் உள்துறை அமைச்சகம் இன்று காலை இரண்டாவது முறையாக நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை உயர் நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>அதே நேரத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை நிலைகளை உயர்த்தி, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d5644c-e75b-45a2-8904-9276d1036577/26-6a53258c915f9.webp' /></p><p>அண்டை நாடான கத்தாரில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததுடன், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பிற பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p> மேலும், குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
</p><p>
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T08:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நூறு மில்லியன்கள் செலவிட்டுள்ள சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம்! அம்பலமாகிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-cricket-spent-rs-681-million-legal-fees-1783844851"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-cricket-spent-rs-681-million-legal-fees-1783844851</id>
            <summary type="text">

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகம், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் சட்டக் கட்டணங்கள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகம், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் சட்டக் கட்டணங்கள் மற்றும் அது சார்ந்த செலவினங்களுக்காக 681 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதிகாரப்பூர்வ கொடுப்பனவு ரசீதுகளின்படி, இந்த காலப்பகுதியில் சட்டப் பிரதிநிதித்துவத்திற்காக மொத்தம் 681.17 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சம்பந்தப்பட்ட வழக்குகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், வர்த்தக ரீதியிலான தகராறுகள் மற்றும் வரி விவகாரங்கள் ஆகியவற்றுக்காகவே இத்தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திரும்பப் பெறப்பட்டுள்ள வழக்குகள்</h2><p>
</p><p>
இந்த மூன்றாண்டு காலத்தில், அதிகபட்சமாக 2023ஆம் ஆண்டில் 264.6 மில்லியன் ரூபாய் சட்ட விவகாரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d241b3-1284-4ef6-a4a5-8a0eddb5b8a5/26-6a5353e927259.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் 250.5 மில்லியன் ரூபாயும், 2025ஆம் ஆண்டில் 166 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை, தற்போதைய இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T08:47:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-was-robbed-of-his-money-by-two-men-1783841623"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-was-robbed-of-his-money-by-two-men-1783841623</id>
            <summary type="text">




வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>

குறித்த முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையில் இருந்து நவாலி செல்லும் வீதியால் வியாபாரத்துக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து இடம் கேட்பது போல் பாசாங்கு செய்துள்ளனர்.
</p><p>
பின்னர் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவர் வியாபாரத்துக்காக வைத்திருந்த ஒருதொகை பணத்தினை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இந்த நிலையில், குறித்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகி இருக்ககூடும் என அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75637fa-0e42-4ba4-ab30-4e8106b29772/26-6a53485eab6fa.webp' /></p><p>
</p><p>
இது குறித்து வட்டுக்கோட்டை காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை காவல்நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T08:01:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு கோரி பலாலியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protests-continue-in-palali-demanding-land-release-1783838953"></link>
            <id>https://ibctamil.com/article/protests-continue-in-palali-demanding-land-release-1783838953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்று (12) நான்காவது
தடவையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாங்கள் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>காவல்துறையினர் தடுத்தனர்</h2><p>
</p><p>இந்தநிலையில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e712552-70e8-474d-918f-87653151d70a/26-6a533babdc532.webp' /></p><p>இதனையடுத்து மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மலையக மக்கள்! தீர்வுக்காக முன்வந்தது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-evicted-from-homes-govt-seeks-solution-1783838779"></link>
            <id>https://ibctamil.com/article/people-evicted-from-homes-govt-seeks-solution-1783838779</id>
            <summary type="text">

அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்றை அரசாங்கம் வழங்கும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு இன்றையதினம்(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் பிரதீப், கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பாகவே இது அமைந்திருந்ததாகவும் எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விடயம் என பலர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>நிரந்தரமான தீர்வு</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், இச்சம்பவத்தை பொறுத்தமட்டில் LRC நிறுவனத்தோடு கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான தீர்வை உரிய நகர்வுகளின் பின்னர் விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c1606-ae49-4fb9-97e1-3235fef896ad/26-6a533eb87e46c.webp' /></p><p>
</p><p>
மேலும், அமைச்சர் லால்காந்த குறித்த பகுதிக்கு இன்னும் சில நாட்களில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், அவருடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக தமது அரசாங்கம் முன்நின்று செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-12T07:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100000-rs-fund-for-uni-students-with-special-needs-1783836200"></link>
            <id>https://ibctamil.com/article/100000-rs-fund-for-uni-students-with-special-needs-1783836200</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதற்கமைய, ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ள குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதன் முதற்கட்டமாக, நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்ற 'சரஸ்வி திரியோ அபிமான் 2026' நிகழ்வில், 236 மாணவர்களுக்கு இதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><p></p><h2>விசேட தேவையுடையோர்</h2><p>
</p><p>
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவையுடையோர் என வகைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd9cf5a-6336-407c-9883-cab4b7f84983/26-6a5332e0f41b5.webp' /></p><p>
விசேட தேவையுடைய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T06:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தள விமான நிலையத்தில் முதலீடு! முன்வந்துள்ள 19 நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/19-investors-approved-to-invest-in-mattala-airport-1783836291"></link>
            <id>https://ibctamil.com/article/19-investors-approved-to-invest-in-mattala-airport-1783836291</id>
            <summary type="text">

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேற்படி, செய்தியானது, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ளது.
</p><p>
மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்ப காலக்கெடு 10ஆம் திகதியுடன் முடிவடைந்ததாக பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேம்பாட்டுக்கான திட்டங்கள்&nbsp;</h2><p>

இதன்படி, விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்காலத்தில் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83ba82a-0119-4c52-b602-d38a898a199b/26-6a53322337a0e.webp' /></p><p>

இதற்கிடையில், விருப்பம் தெரிவித்தல் (EOI) கோரிக்கை திறக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முன்மொழிவுக் கூட்டங்களில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றதாக பிரதி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்த நிறையில், குறித்த செயல்முறை இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய பிரதி அமைச்சர், விமான நிலையத்தைப் பராமரிக்க ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T06:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளை மையம்</h2><p>சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் "வெளிப்படையாகத் தாக்குதல்" நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 7:15 p.m. ET today, U.S. Central Command forces began launching the third round of strikes this week against Iran after Islamic Revolutionary Guard Corps forces blatantly attacked M/V GFS Galaxy, a Cyprus-flagged container ship transiting the Strait of Hormuz. A civilian crew…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2076089130857951463?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஈரானின் தவறான முடிவு</h2><p>அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran made a poor choice. Now they pay. <a href="https://t.co/8m4fEfgrXv">https://t.co/8m4fEfgrXv</a></p>&mdash; Pete Hegseth (@PeteHegseth) <a href="https://x.com/PeteHegseth/status/2076091042693071025?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p> 

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்புக்கும்" கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க&nbsp;குறித்த விடயத்தினை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்</h2><p>உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.</p><p> அத்துடன், உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf94eee7-8392-473a-a619-e6989312bd2d/26-6a53193830f2f.webp' /></p><p> 

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் - தேசபந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255"></link>
            <id>https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255</id>
            <summary type="text">சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&amp;nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய அரசாங்கம், கடந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட எம். பிக்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு</h2><p>மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்தா ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152adb0a-1068-45f5-80e6-af9acf7b1ff3/26-6a52efe14e931.webp' /></p><p>
</p><p>
மேலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கூன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
</p><p>
பொதுபல பால சேனா கட்சியின் தேசிய அமைப்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7daf4ed-c78c-47a5-b7ca-78a2540290a1/26-6a52efe206a83.webp' /></p><p>இதற்கிடையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேட்படி விடயங்களை உள்ளடக்கி தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>வி.பி.ஏ பாதுகாப்பு வழங்கப்பட்ட நபர்கள் யார் என்று எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T04:23:56+00:00</updated>
        </entry>
    </feed>
