<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-13T06:21:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wildlife-dept-staff-stage-trade-union-action-1783921429"></link>
            <id>https://ibctamil.com/article/wildlife-dept-staff-stage-trade-union-action-1783921429</id>
            <summary type="text">வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உள்வாங்குவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்</h2><p>இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ், 

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மிகவும் தன்னிச்சையான முறையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் தற்போது கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதகமான முறையில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் திணைக்களத்திற்குள் உள்வாங்க முயற்சிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b2f826-b573-4f12-a39f-30a97017567e/26-6a5482034d5b1.webp' /></p><p> 

நாங்கள் பணிப்பாளர் நாயகத்திடம், இந்த நியமனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த நியமன முறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் எனக் கூறினோம்.</p><p> 

ஆயினும் அவரது தன்னிச்சையான முடிவுகள் காரணமாக, எங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி, தவறான முறையில் இந்த நியமனங்களை மேற்கொள்கிறார்.</p><p></p><h2>பாரிய கண்டனப் போராட்டம்</h2><p> 

எமது கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள் மாத்திரமன்றி, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள், பிராந்திய உதவியாளர்கள், பிராந்திய காப்பாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47ea2ca-abcf-4a25-8846-5e136cb47618/26-6a548274a2853.webp' /></p><p> 

13 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு ஒரு கலந்துரையாடலை வழங்குங்கள் எனக் கோரியிருந்தோம். 

இதுவரை பணிப்பாளர் நாயகம் எமக்குக் கலந்துரையாடலை வழங்கவில்லை. இந்த நிலைமையை அவரே உருவாக்கினார். </p><p>அதனால், இன்று பத்தரமுல்லையிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கண்டனப் போராட்டமொன்றை நாம் முன்னெடுக்கிறோம்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்றிணைந்த தமிழ் பேசும் கட்சிகள் - இன்று முக்கிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-tamil-speaking-parties-announce-joint-agreement-1783920244"></link>
            <id>https://ibctamil.com/article/6-tamil-speaking-parties-announce-joint-agreement-1783920244</id>
            <summary type="text">தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு ஒப்பந்தத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன.</p><p>இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்கு வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று சந்தித்து, முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று பிற்பகல் இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.</p><p></p><h2>கூட்டு அரசியல் முயற்சி</h2><p>
</p><p>
அரசாங்கத்தின் குறைகளையும் நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் கூட்டாகவும் முன்வைப்பதற்கான பொதுவான மேடையொன்றை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a244db-2a38-49a2-a1bc-fb35993b5e7d/26-6a547a3ecd0bc.webp' /></p><p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானது என்றார்.
</p><p>தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைந்து கண்டறிவதே இந்த சந்திப்பின் அடிப்படை என வலியுறுத்தினார்.
</p><p>
தமிழ் பேசும் கட்சிகளின் இந்த ஒற்றுமை முயற்சி காலத்தின் கட்டாயத் தேவை என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இத்தகைய அரசியல் முனைப்பானது சமூகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
</p><p>
முன்னதாக பல கட்டங்களால் தமிழ் பேசும் கட்சிகளிடையே, பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் இன்று முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/changing-the-retirement-age-of-professionals-1783912447"></link>
            <id>https://ibctamil.com/article/changing-the-retirement-age-of-professionals-1783912447</id>
            <summary type="text">இலங்கையின் அரச துறையின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது கோரிக்கைகள் கிடைத்து வருவதாக&amp;nbsp;சுகாதாரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச துறையின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது கோரிக்கைகள் கிடைத்து வருவதாக&nbsp;சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>மீரிகம வைத்தியசாலையில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><h2>சுகாதார சேவையில் உள்ளவர்கள்</h2><p>அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன. </p><p>மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac10467a-e786-40c5-92f9-2c5f91f5957f/26-6a545d3379d9b.webp' /></p><p> </p><p>ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். </p><p>

சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகிறோம்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783918349"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783918349</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 இன்று (13) காலை 8.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் குறித்த கட்டமைப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை&nbsp;</h2><p>இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03edb5dd-93c8-4e7b-a9cd-fb88aa154ef2/26-6a5471560c04f.webp' /></p><p>இந்தநிலையில், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><p>குறித்த சம்பவத்தின் பின்னர் களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T05:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் : பஹ்ரைனில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-says-iran-attacks-bahrain-kuwait-and-jordan-1783915126"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-says-iran-attacks-bahrain-kuwait-and-jordan-1783915126</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. </p><p>ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த தாக்குதல் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>அபாய எச்சரிக்கை&nbsp;</h2><p>அதேநேரம் பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. </p><p>

எனினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The siren has been sounded . Citizens and residents are urged to remain calm and head to the nearest safe place.</p>&mdash; Ministry of Interior (@moi_bahrain) <a href="https://x.com/moi_bahrain/status/2076504001495896434?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T04:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராபத்தில் இலங்கை! 40 நிமிடங்களுக்குள் சுனாமி அலை தாக்கும் - அரசை எச்சரிக்கும் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-increasing-disaster-risks-due-to-climate-change-1783911282"></link>
            <id>https://ibctamil.com/article/sl-increasing-disaster-risks-due-to-climate-change-1783911282</id>
            <summary type="text">வெறும் 40 நிமிடங்களுக்குள் சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரங்களை தாக்கும்&amp;nbsp;என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், ஓய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெறும் 40 நிமிடங்களுக்குள் சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரங்களை தாக்கும்&nbsp;என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட எச்சரித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தமான் தீவுப் பகுதியில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி உருவானால், வெறும் 40 நிமிடங்களுக்குள் சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரங்களை வந்தடையும்.</p><p></p><h2>அவசர கால நடவடிக்கை</h2><p> இவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள் கரையோரப் பகுதிகளில் வாழும் 3.8 மில்லியன் (38 லட்சம்) மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினமான காரியம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83fc3297-3914-41e8-a205-199c178e715e/26-6a54694e97e10.webp' /></p><p>



அத்துடன், தற்போது நாட்டில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்வதற்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயலாமைகள் குறித்து அவர் மேலும் விளக்குகையில்,&nbsp; &nbsp; அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி போன்ற அனர்த்தங்களின் போது, அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பணியாளர் திறன் தமது நிறுவனத்திடம் இல்லை.</p><p> 24 மணிநேரமும் இயங்கும் அவசர கால நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்கு இரவு நேரப் பணிக்கான அடிப்படை தங்குமிட வசதிகள் கூட இல்லை.</p><p></p><p>
</p><h2>பணியாளர் பற்றாக்குறை</h2><p>


மாவட்ட ரீதியான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுகள் மாலை 4.30 மணிக்கே மூடப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது, தொலைதூரத்திலுள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அதிக நேரம் வீணாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41932d1-8b28-4b4a-8b55-71867376b8d3/26-6a5466c5410e1.webp' /></p><p>



பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையும் (DMC) தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தையும் (NDRSC) இணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். </p><p>எனினும், அந்தச் செயல்முறைக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் நாடு கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும்.
</p><p>


உலக நாடுகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தையும் வளங்களையும் பயன்படுத்தி தங்களது அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் வேளையில், இலங்கையில் இந்தச் செயல்முறை மிகவும் மெதுவாகவே முன்னேறி வருவதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட கவலை வெளியிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T04:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/global-gold-and-silver-prices-decline-today-1783913333"></link>
            <id>https://ibctamil.com/article/global-gold-and-silver-prices-decline-today-1783913333</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p>

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
</p><p>
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.97 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.</p><p></p><p>
</p><h2>மசகு எண்ணெய் விலை&nbsp;</h2><p>ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd5e262-8d66-4b74-9ff5-cbbd3a632e0f/26-6a545e1f32902.webp' /></p><p>இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. 

இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். </p><p>

அதேநேரம், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3 சதவீத அதிகரிப்பை எட்டியுள்ளது.</p><p>

மேர்பன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 73.25 அமெரிக்க டொலராகவும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய்களை போல சூழ்ந்த கைதிகள்! கலைந்த உயிர் மீதான நம்பிக்கை - அதிகாரியின் திகில் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940"></link>
            <id>https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்னையும் அவருடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து தாக்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி காயமடைந்த அதிகாரி ஒருவரே தனது திகில் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.</p><p></p><h2>பயங்கரமான சம்பவம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91bd30ce-3827-460c-ab62-ba4c9c06aaa3/26-6a5452126afd9.webp' /></p><p>
அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும்.</p><h2>டெங்கு காய்ச்சல்</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான்.
</p><p>
அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a854ac3-5f1f-4004-a99b-0bf5d0aea655/26-6a5452135464e.webp' /></p><p>
இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.</p><p> கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது.

டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை&nbsp; போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது. இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர்.&nbsp; நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.</p><p></p><h2>பிணைக் கைதி</h2><p>

முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர்.
</p><p>
அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது. </p><p>சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன.

அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள்.</p><p>

மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். </p><p>அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>பேய்களைப் போல&nbsp;</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e169dfe1-7044-4a86-aae2-b03bcc3034af/26-6a54521403a17.webp' /></p><p>

உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. </p><p>அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள்.

என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள்.</p><h2>சேர் நீங்கள் வராதீர்கள்</h2><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb5d42e-f88c-469d-97ae-bd907d9d6ca7/26-6a545214a8b0b.webp' /></p><p> "சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர்.</p><p>
இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.</p><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p>எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட மற்றைய கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் எனது தலையில் ஒரு பேட்டன் தடியால் அடி விழுந்தது.</p><h2>கழுத்தில் அமுக்கினர்</h2><p>
அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள்.

எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a6b873-08e8-410f-b2e8-0fa383c6787c/26-6a5452155a266.webp' /></p><p>அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது.
</p><p>
அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள்.</p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர்.
</p><p>
எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை. இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:29:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.பந்தர் அப்பாஸ், சிரிக் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.</p><p>பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும், கெஷ்ம் தீவிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .</p><p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.</p><p></p><h2>எட்டு இடங்களில் தாக்குதல்</h2><p>கிழக்கு நேரப்படி மாலை 5 மணி (ET) முதல் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கட்டளைப் பிரிவு ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f947dda6-2079-4d4a-8155-d516794b5d79/26-6a5446d35b826.webp' /></p><p>ஈரானிய படைகளை இந்த செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற உயர்மட்ட உத்தரவின் பேரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்கப் படைகள் குசெஸ்தான் முழுவதும் குறைந்தது எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகவும், அஹ்வாஸ் விமான நிலையம் தாக்கப்பட்டதை&nbsp;அந்த அதிகாரி மறுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:13:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வெப்பச் சுட்டெண் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e35a67-c256-4505-a2d2-ec610a029e1a/26-6a543b50130d1.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868"></link>
            <id>https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868</id>
            <summary type="text">கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மேற்படி கைது நடவடிக்கை நேற்று (13-07-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே மேற்படி மாணவன் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed02a88b-7fd9-45f2-8e58-822054ca4408/26-6a543a6584ae3.webp' /></p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் தம்பதியினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949</id>
            <summary type="text">இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாள அட்டை</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில் குறித்த இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af81fc56-d642-49b1-b404-e5ddf2d4478c/26-6a54358594e3c.webp' /></p><p>தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
விசாரணையின் முடிவில் குறித்த இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், குறித்த இருவரும் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Bj9K1jivsZY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:47:05+00:00</updated>
        </entry>
    </feed>
