<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-18T18:52:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப் போட்டி! புயல் காரணமாக இரத்து செய்யப்பட்ட ஸ்பெயினின் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-s-training-cancelled-due-to-storm-1784397687"></link>
            <id>https://ibctamil.com/article/spain-s-training-cancelled-due-to-storm-1784397687</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் சீரற்ற காலநிலையால்&amp;nbsp;ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் சீரற்ற காலநிலையால்&nbsp;ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளின் இறுதி பயிற்சி அமர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு (RFEF) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் புயல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க, நியூ ஜெர்சியில் உள்ள மெலனி லேன் பயிற்சி மைதானத்தில் நடைபெற இருந்த அணியின் வெளிப்புற பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மேலும், வீரர்கள் தற்போது உட்புற அரங்கில் உடற்தகுதி மற்றும் வார்ம்-அப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலகக் கோப்பை இறுதிப்போட்டி</h2><p>

இதேபோல், அர்ஜென்டினா அணியின் பயிற்சியும் திட்டமிட்ட நேரத்தை விட 45 நிமிடங்கள் தாமதமாக, நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3b37faa-67ef-4841-b347-cac84f82b745/26-6a5bbf78d6685.webp' /></p><p>
உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி (அமெரிக்க நேரம்)(7.00 மணி - GMT) (இலங்கை நேரம் 20ஆம் திகதி அதிகாலை) நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T18:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறிய கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz-1784394332"></link>
            <id>https://ibctamil.com/article/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz-1784394332</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக வழிநடத்தப்பட்டதாலேயே அந்த கப்பல்கள் அப்பகுதி வழியாக செல்ல முயன்றதாக ஈரான் தெரிவித்து உள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கை</h2><p>இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கையால், ஹோர்முஸ் நீரிணைக்கு தெற்கே உள்ள கண்ணிவெடிகள் நிறைந்த பகுதி வழியாகச் செல்ல முயன்ற 2 எண்ணை கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6684121f-5f6c-4ad8-86db-2ca3198bce01/26-6a5bc1c05f451.webp' /></p><p>&nbsp;ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மிகவும் பாதுகாப்பற்றதாகவும் முழுமையாக மூடப்பட்டதாகவும் இருக்கும்.

தங்கள் சொத்துகளையும், மிக முக்கியமாகத் தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள கண்ணி வெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்தது.</p><p></p><p> </p><h2>எச்சரிக்கையை புறக்கணித்த கப்பல்கள்</h2><p>அதேபோல் கண்ணிவெடிகள் உள்ள பாதையில் நுழைவதற்கு முன்பு ஈரான் கடற்படையின் எச்சரிக்கைகளை 2 கப்பல்களும் புறக்கணித்ததாகவும், அதனால் வெடிப்புகளும், பெரிய தீ விபத்துகளும் ஏற்பட்டதாகவும் ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82813a95-db70-46c1-ba32-2780300f0599/26-6a5bc1bfb0ff5.webp' /></p><p> </p><p>கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்களின் நிலைமை குறித்து தகவலை ஈரான் வெளியிடவில்லை.
</p><p>

இதேவேளை கண்ணிவெடியில் கப் பல்கள் சிக்கியதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு கூறும்போது, ஈரானின் குற்றச்சாட்டு பொய்யானது. இது சரிபார்க்கப்படாத ஈரான் ராணுவத்தின் வழக்கமான தகவல்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T18:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்படும் ஈரானின் தெற்கு துறைமுகங்கள்! கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ள அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-tightens-naval-blockade-on-irans-southern-ports-1784399292"></link>
            <id>https://ibctamil.com/article/us-tightens-naval-blockade-on-irans-southern-ports-1784399292</id>
            <summary type="text">இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானின் தெற்குத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை வலுப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானின் தெற்குத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக சமீபத்தில் மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

இதுதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட எண்ணெய் மற்றும் வங்கி விலக்குகளை அமெரிக்கா இரத்து செய்ததுடன், ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் மேலும் ஈரானிய எண்ணெயை ஏற்றுவதற்காகத் துறைமுகத்திற்குத் திரும்புவதையும் தடுத்த நிலையில் மோதலின் நிலை தீவிரமடைந்திருந்தது.
</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
சமீபத்திய தாக்குதல்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலிழந்ததால், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஹோர்முஸ் நீரிணையில் இயங்கி வந்த பல கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb35f9f5-8dd4-4460-9872-846331cdf507/26-6a5bc5be6b5dc.webp' /></p><p> 

மேலும், போரின் போது ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்பட்ட, குராசோ கொடியை ஏந்திய பெல்மா என்ற சூப்பர்டேங்கர் கப்பலைச் செயலிழக்கச் செய்வதற்காகவும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டது.
</p><p> 
அமெரிக்க தற்போதைய புதிய முற்றுகையின் காரணமாக, ஈரானின் தினசரி எண்ணெய் ஏற்றுமதியில் குறைந்தது 1.5 மில்லியன் பீப்பாய்கள் சந்தையிலிருந்து நீக்கப்படும் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.</p><p>

இது எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு சுமார் 90 டொலர் வரை உயர்த்தியுள்ளதுடன், நீடித்த மோதல் மேலும் விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T18:28:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உயிமையாளருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-of-fashions-owner-remanded-1784394629"></link>
            <id>https://ibctamil.com/article/house-of-fashions-owner-remanded-1784394629</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள முன்னணி ஆடை விற்பணை நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை சுங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள முன்னணி ஆடை விற்பணை நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> 

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது அவருக்கு இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p> இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை&nbsp;</h2><p>

சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8e899d-4ae2-4aae-ae27-7fcdddc4de2d/26-6a5bb38762819.webp' /></p><p> 

இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T17:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuwait-says-iranian-strikes-hit-key-oil-facility-1784391760"></link>
            <id>https://ibctamil.com/article/kuwait-says-iranian-strikes-hit-key-oil-facility-1784391760</id>
            <summary type="text">குவைத் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் முக்கிய எண்ணெய் ஆலைகளில் ஒன்று ஈரானின் தொடர் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் முக்கிய எண்ணெய் ஆலைகளில் ஒன்று ஈரானின் தொடர் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாகவும், இதனால் "கணிசமான பொருள் சேதமும் சில காயங்களும்" ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
</p><p>
"காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்த இடம் காலி செய்யப்பட்டது. அதே நேரத்தில், இந்தத் தாக்குதலுக்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருகின்றன,"&nbsp; என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான KUNA வெளியிட்ட அறிக்கையில் அக்கழகம் கூறியுள்ளது.</p><h2>முக்கிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து</h2><p>இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக, அன்றைய தினம் முன்னதாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0100ddb-10be-4314-8add-21e62ac3f84a/26-6a5ba85153cf1.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.</p><p></p><h2>அமெரிக்காவிற்கு ஈரானின் பதிலடி</h2><p> </p><p>அங்கு அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது, அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bbc3fa8-7731-460b-90e7-bd74fde4a446/26-6a5ba85202b0b.webp' /></p><p>

போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டவும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே இந்த மோதல் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T16:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு இறுதிச்சடங்கில் காவல்துறை மரியாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-pay-tribute-at-funeral-former-police-chief-1784389128"></link>
            <id>https://ibctamil.com/article/police-pay-tribute-at-funeral-former-police-chief-1784389128</id>
            <summary type="text">தன்னைத்தானே சுட்டு தற்கொலை செயது கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான காவல்துறை மரியாதைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னைத்தானே சுட்டு தற்கொலை செயது கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஓய்வுபெற்ற காவல்துறை மா அதிபர்களுக்குரிய காவல்துறை மரியாதைகளை முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.</p><h2>முழுமையான காவல்துறை மரியாதைகளுடன்&nbsp;இறுதிச் சடங்கு</h2><p>அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் 20ஆம் திகதி முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41416faf-8498-4c21-b5ea-8e35f3af8d04/26-6a5ba2a9e8fc4.webp' /></p><p>
</p><p>
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு நாளை (19) முதல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முடுக்கிவிடப்பட்ட விசாரணை</h2><p>

சி.டி.விக்ரமரத்ன, நாட்டின் 35வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியுள்ளார். இவர் நேற்று (17) காலை தனது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41dc0c94-7d0c-46fe-b85f-3d083402b192/26-6a5ba2aa98d54.webp' /></p><p>


இதற்கிடையில், மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவும், மலாபே காவல்துறையும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன. மேலும், முன்னாள் காவல்துறை மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியை அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:59:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-sumanthiran-school-function-1784375230"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-sumanthiran-school-function-1784375230</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்பு 



சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு </h2><p>



சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை
தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>

பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனை அழைத்திருந்தோம். ஆனால் அவர்
தான் இந்தியா செல்ல உள்ளதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில்
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி
ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் அந்த நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக
கலந்து கொள்ளக் கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள
வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>&nbsp; பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை
நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக
வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377a32d1-210e-4321-8188-f7ba4f556f2c/26-6a5b6b1244272.webp' /></p><p>இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது
பழைய மாணவர்கள் யாரையாவது விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு
தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது.</p><p></p><h2>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம்&nbsp;</h2><p>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு
தெரியும். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும்
பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமுகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள்
முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய
மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமுகத்துடனேயே
நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன்பின்னரே நாங்கள்
போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a5f7ec-85cb-40ff-ba9f-a8241a8060bc/26-6a5b6b12ec009.webp' /></p><p>இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழுவானது தெரிவு
செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால்
அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த
ஏற்பாட்டு குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர்
சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.</p><p></p><h2>தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை</h2><p>நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை. எமது பழைய மாணவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது.
போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே
முன்னெடுக்கப்படுகிறது. எமது போராட்டத்தால் யாருக்காவது மனஉளைச்சல்
ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த
விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c172ca90-5ec1-4671-9ddb-7d4933a77254/26-6a5b6b139c3f6.webp' /></p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற
வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்தப்பட வேண்டும் என்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்போகும் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relief-package-for-the-deceased-prison-officers-1784386490"></link>
            <id>https://ibctamil.com/article/relief-package-for-the-deceased-prison-officers-1784386490</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பத்து சிறை அதிகாரிகளுக்கும் தலா ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு முடிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பத்து சிறை அதிகாரிகளுக்கும் தலா ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
மேலும், இது தொடர்பான அமைச்சரவைக் குறிப்பையும் அமைச்சு தயாரித்துள்ளது. இது வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><h2>&nbsp;சம்பளமும் ஓய்வூதியமும் வழங்க நடவடிக்கை</h2><p>அதன்படி, உயிரிழந்த அதிகாரிகளுக்கு 55 வயது வரை மாதச் சம்பளமும், 55 வயதுக்கு மேல் ஓய்வூதியமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de1252b-4e03-4a12-a5bc-1d076a4011e7/26-6a5b974d204f2.webp' /></p><p> </p><p>இது தொடர்பாக, சிறைத்துறைத் தலைவர்கள், நீதித்துறை அமைச்சர் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (17ஆம் திகதி) ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;நீர்கொழும்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் பத்து சிறை அதிகாரிகளும், இருபத்தொரு கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e29334b-c071-44c8-878d-1eb1a30ae627/26-6a5b974c6fc32.webp' /></p><p> நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 21 சிறை அதிகாரிகளும் அடங்குவர். அவர்களில் மூவர், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானில் பறிக்கப்பட்ட உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-50-killed-in-us-strikes-since-june-27-1784384217"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-50-killed-in-us-strikes-since-june-27-1784384217</id>
            <summary type="text">ஜூன் 27 முதல் அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் 27 முதல் அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று சனிக்கிழமை தெரிவித்தது.
</p><p>
"கொல்லப்பட்டவர்களில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர் அடங்குவர்," என்று சுகாதார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் மையத்தின் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், சமூக ஊடக நிறுவனமான X மூலம் தெரிவித்தார்.</p><h2>கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள்</h2><p>&nbsp;காயமடைந்தவர்களில் 32 பெண்கள், அத்துடன் 18 குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரும் அடங்குவர் என்று கெர்மன்பூர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a27f29e6-aaf5-42dd-a366-ce437df0264e/26-6a5b8fa7ded11.webp' /></p><p>

அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களைப் பரிமாறிக்கொள்வதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டவும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இந்த இராணுவ மோதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T14:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் மரணவீட்டையும் விட்டு வைக்காத இஸ்ரேல் இராணுவம் : பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-drone-strike-on-funeral-gathering-in-gaza-1784377128"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-drone-strike-on-funeral-gathering-in-gaza-1784377128</id>
            <summary type="text">போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், மத்திய காசாவில் உள்ள நுசெராத் அகதிகள் முகாமில், முன்னதாக இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட ஒரு பாலஸ்தீனியரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், மத்திய காசாவில் உள்ள நுசெராத் அகதிகள் முகாமில், முன்னதாக இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட ஒரு பாலஸ்தீனியரின் இறுதிச் சடங்கின் போது, ​​பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்கியதில், குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்தத் தாக்குதலால், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 13 ஆகவும், கடந்த 72 மணி நேரத்தில் 25 ஆகவும் உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>இறுதி ஊர்வலத்திற்கு தயாரானபோது தாக்குதல்</h2><p>&nbsp;நுசெராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை ஒரு அறிக்கையில், அல்-பலதா சந்தைப் பகுதியில் பொதுமக்கள் கூடியிருந்ததை இலக்காகக் கொண்ட இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு, எட்டு பேரின் உடல்களைப் பெற்றதாகவும், காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b374c3-596e-47c0-bfa6-ea1a6eae680d/26-6a5b7b138dc53.webp' /></p><p>
</p><p>
இறுதி ஊர்வலத்தைத் தொடங்குவதற்காகக் காத்திருந்தபோது, ​​அஹ்மத் யாசின் மசூதிக்கு வெளியே கூடியிருந்த பாலஸ்தீனியர்களை அந்த ஆளில்லா விமானம் குறிவைத்ததாக நேரில் கண்ட சாட்சிகள் ஊடகமொன்றிடம் தெரிவித்தன
</p><p>
வெள்ளிக்கிழமை முன்னதாக இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட ஒரு பாலஸ்தீனியருக்கான இறுதிச் சடங்கு இது என்று அந்த சாட்சிகள் கூறின.</p><p></p><p>

</p><h2>72 மணிநேரத்தில் இடம்பெற்ற படுகொலை</h2><p>சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், பல உடல்களும் காயமடைந்தவர்களும் தரையில் கிடப்பதும், அவர்களின் உடைகளிலும் உடல்களிலும் இரத்தம் படிந்திருப்பதும் காணப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd6db04-b1c3-41d1-80c5-b414538d62b6/26-6a5b7c6b7aa3a.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காசா ஊடக அலுவலகம், கடந்த 72 மணி நேரத்தில் சந்தைகள், இறுதிச் சடங்குகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவம் 25க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாகக் கூறியது.
</p><p>

காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, வியாழக்கிழமை நிலவரப்படி, இஸ்ரேலின் போர்நிறுத்த மீறல்களால் 1,127 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும், 3,643 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
</p><p>
ஒக்டோபர் 2023 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளால் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும், 173,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர் என்றும், அப்பகுதியின் குடிமக்கள் உள்கட்டமைப்பில் சுமார் 90% பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T14:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-young-man-died-in-an-accident-in-jaffna-1784381851"></link>
            <id>https://ibctamil.com/article/a-young-man-died-in-an-accident-in-jaffna-1784381851</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட
சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட
சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>


 வடமராட்சி பருத்தித்துறை தும்பளை
பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞனே உயிரிழந்தவனாவான்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மின் கம்பத்துடன் மோதி விபத்து</h2><p>கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85bf955-d294-4556-953b-3f9cd7c53e54/26-6a5b85095e61b.webp' /></p><h2>பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அதி
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12b5e2f-474d-4d51-9f0e-bd5508a623a9/26-6a5b850a17426.webp' /></p><p>
</p><p>&nbsp;தற்போது சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்ற
பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T13:52:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகவிலையில் கீரிசம்பா விற்ற சுப்பர்மார்க்கெட்டுக்கு விதிக்கப்பட்டது ரூபா 01 மில். அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/supermarket-fined-rs-1mn-for-selling-keeri-samba-1784381036"></link>
            <id>https://ibctamil.com/article/supermarket-fined-rs-1mn-for-selling-keeri-samba-1784381036</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்றதற்காக, பேருவளையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்றதற்காக, பேருவளையில் உள்ள ஒரு சுப்பர்மார்க்கெட்டுக்கு ரூ. 1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; &nbsp;நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபையின் (CAA) தகவலின்படி, அந்த சுப்பர்மார்க்கெட், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை ரூ. 355 என்ற விலையில் விற்று வந்துள்ளது. இது, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 260-ஐ விட கணிசமான அதிகரிப்பாகும்.</p><h2>சோதனையில் கண்டுபிடிப்பு</h2><p>
சோதனையின் போது, ​​சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிகமாக, 5 கிலோ அரிசிப் பொதிகள் ரூ. 1,775-க்கு விற்கப்படுவதை CAA அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c4baf8e-7208-4263-8705-f95dcacc3484/26-6a5b8123ea2ac.webp' /></p><p>

CAA-வின் களுத்துறை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த சுப்பர்மார்க்கெட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தனர்.</p><p>

ஜூலை 17 அன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, நீதவான் அவர்களுக்கு ரூ. 1 மில்லியன் அபராதம் விதித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T13:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம்! 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-of-c-d-wickramaratne-statements-recorded-1784373467"></link>
            <id>https://ibctamil.com/article/death-of-c-d-wickramaratne-statements-recorded-1784373467</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>இவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை பலப்படுத்தி உள்ளனர்.&nbsp;</p><p></p><h2>சி.டி. விக்கிரமரத்ன மரணம்</h2><p>அந்த வகையில் தற்போது முதல்கட்ட விசாரணையில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e27de4-7a1c-474f-9993-88acefd3c576/26-6a5b6ef54b6db.webp' /></p><p>இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையின் ஒழுக்கக் கோவைக்கு இணங்க அவருக்கு உத்தியோகபூர்வ மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
குறிப்பிட்ட சம்பவத்தின்போது வீட்டில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் இருந்துள்ளனர். </p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவிட்டுள்ளார்.</p><p> இந்த உத்தரவிற்கமைய மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவும், மாலம்பே காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T13:32:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-1784378799"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-1784378799</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம்
சனிக்கிழமை புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்புக் கூடு உள்ளடங்கலாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>
இதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>428 என்பு கூடுகள்&nbsp;</h2><p>

வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59df2c2e-6b19-4cb6-a545-4390ab8ced97/26-6a5b78e96112a.webp' /></p><p>
ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதன்அடிப்படையில், செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T13:00:56+00:00</updated>
        </entry>
    </feed>
