<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-17T04:42:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலரின் நாகரீகமற்ற நடத்தையால் நிறுத்தப்பட்ட கூட்டம் - அமைச்சர் சந்திரசேகரன் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/district-development-committee-meeting-suspended-1784255372"></link>
            <id>https://ibctamil.com/article/district-development-committee-meeting-suspended-1784255372</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற
நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற
நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது என
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம்
உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட
நிர்வாக மேடைகள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான அரங்குகளாக மாற்றப்படக்
கூடாது.</p><p></p><p>
</p><h2>திசைதிருப்பும் முயற்சிகள்</h2><p>
கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது வெறுமனே சத்தமிடுவதோ, குழப்பம் விளைவிப்பதோ
அல்ல, ஜனநாயக மரபுகளையும், நிர்வாக நடைமுறைகளையும், அதிகாரிகளின் கௌரவத்தையும்
மதித்து செயல்பட வேண்டிய பொறுப்புணர்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b6af41-0bc2-4979-beb5-6d6afbf6a125/26-6a59b26aeb454.webp' /></p><p>

அதற்கான அரசியல் நாகரிகத்தையும், நிர்வாக பண்பாட்டையும் சிலர் இன்னும்
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
</p><p>தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து,
அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.</p><p></p><p>
</p><h2>அரசியல் நாடகம்</h2><p>
அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தோடு விளையாட அனுமதிக்க
முடியாது.இன்று நடைபெற்ற சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக
உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c93832-010e-42b8-9656-b6aaa25b6732/26-6a59b26a3b898.webp' /></p><p>
சிலர் குழப்பத்தை உருவாக்கலாம், ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம்.
சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம், ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை
மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.</p><p>

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நாங்களும் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
</p><p>கிளிநொச்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

மீண்டும் விரைவில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். மக்களின்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியான தீர்மானங்களும், முன்னேற்றப் பாதையும்
அங்கே உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைத்திட்டம் தயார் : இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-digital-identity-card-project-is-ready-1784260718"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-digital-identity-card-project-is-ready-1784260718</id>
            <summary type="text">இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படத் தயாராக உள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படத் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த திட்டத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் இன்னும் சில சிறிய நடைமுறைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற 'திஷா வழிகாட்டல் திட்டம் 2026' ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>டிஜிட்டல் அரச சேவைகள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு குடிமகனுக்கும் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான டிஜிட்டல் அடையாளம் கிடைக்கும் போது, நாட்டின் அடிப்படை அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சமூக உள்ளடக்கம் என்பது வெறும் கொள்கை இலக்காக மட்டும் நின்றுவிடாமல், அது நடைமுறை யதார்த்தமாக மாறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f34f88e-b4ec-4201-a3f6-dd1ff33b9d26/26-6a59acdad434f.webp' /></p><p> இலங்கையின் புத்தாக்கப் பொருளாதாரத்திற்கு இதுவே அடித்தளமாக அமையப் போகிறது. இதன் மூலமே நிதியியல் தொழில்நுட்பம், மின்-வணிகம் மற்றும் டிஜிட்டல் அரச சேவைகளை சாத்தியமாக்க முடியும்.
</p><p>செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியமாகும். இந்தத் தொழில்நுட்பம் மிக வேகமாக வணிகங்களை மாற்றியமைத்து வருவதோடு சிறிய குழுக்கள் கூட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆற்றலை வழங்குகின்றது.” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:23:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-who-sat-for-the-2025-gce-al-exam-1784258704"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-who-sat-for-the-2025-gce-al-exam-1784258704</id>
            <summary type="text">2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு&amp;nbsp;ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (Employees’ Trust Fund Board) முக்கிய அறிவிப்பொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு&nbsp;ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (Employees’ Trust Fund Board) முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த மாணவர்களுக்கான 'நிபுண சவிய' நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கான காலஅவகாசம் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>50,000 ரூபாய் நிதி உதவி</h2><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் <a href="https://etfb.lk/" target="_blank">www.etfb.lk</a> என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5232fade-93b0-42f4-aa8d-703e7ad1c7be/26-6a59a3ffca024.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய தொழில் மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட, தேசிய தொழில் தகைமை மட்டம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 100 தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளில் ஒன்றைத் தொடர்வதற்கு, அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T03:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-ig-of-police-c-d-wickramaratne-passed-away-1784255654"></link>
            <id>https://ibctamil.com/article/former-ig-of-police-c-d-wickramaratne-passed-away-1784255654</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன&amp;nbsp;மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 

அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன&nbsp;மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். </p><p>

அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><h6>அவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</h6><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf3b05a-fa1b-4d59-be99-97d03df0690e/26-6a5998cf23760.webp' /></p><p>மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை காவல்துறையில் பணியாற்றிய விக்ரமரத்ன, இலங்கையின் 35-வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T02:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-years-of-rigorous-imprisonment-for-men-1784252981"></link>
            <id>https://ibctamil.com/article/45-years-of-rigorous-imprisonment-for-men-1784252981</id>
            <summary type="text">14&amp;nbsp; வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>14&nbsp; வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்</p><p>பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>47 வயது தந்தை</h2><p>வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை தவறான முறைக்கு உட்படுத்தியதாக 47 வயது தந்தை மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/754cfa8b-2765-4a3c-b7fa-64c4119ecdc1/26-6a59926608ab5.webp' /></p><p>குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
</p><p>


வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>



இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p> </p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>



மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், 

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec850c2-87c2-428a-baaf-c3bb489d325c/26-6a5992655735d.webp' /></p><p>இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.</p><p>



தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T02:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-pension-plan-for-foreign-sri-lankan-workers-1784251394"></link>
            <id>https://ibctamil.com/article/govt-pension-plan-for-foreign-sri-lankan-workers-1784251394</id>
            <summary type="text">வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்தோடு மாவட்ட மட்ட சுற்றுலாத் திட்டங்களை விரைவுபடுத்த, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

கிரியா, கலேவெல, திருகோணமலை ஆகிய பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயற்படுத்தப் பணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கொள்முதல் நடைமுறை</h2><p>கொள்முதல் நடைமுறைத் தாமதங்களைத் தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதியமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff576b5-900f-4c62-b190-bbe54bc090db/26-6a5984043c2b6.webp' /></p><p>

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்ய ஹோட்டல் பாடசாலைப் பயிற்சிகளை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ciaboc-warns-of-fake-info-on-asset-declarations-1784249027"></link>
            <id>https://ibctamil.com/article/ciaboc-warns-of-fake-info-on-asset-declarations-1784249027</id>
            <summary type="text">மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவல்கள் குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், அவற்றை அறிவிப்பதற்காக ஆணைக்குழுவால் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது மற்றும் அந்த அமைப்பை அணுகுவது ஆகியவை குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் அல்லாத பிற நபர்களால் பல்வேறு தகவல்கள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்</h2><p>இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும், இந்த மின்னணு அமைப்பின் பயன்பாட்டிலும் சம்பந்தப்பட்ட நபர்களால் தவறான தகவல்களும் தவறான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுவதை ஆணைக்குழு இதுவரை அவதானித்துள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, ஆணைக்குழுவால் அல்லது அதன் அதிகாரிகள் அல்லாத பிற வெளி நபர்களால் நடத்தப்படும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்பதை குறித்த அறிவிப்பின் மூலம் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f68d6e-f0fa-43d8-8648-09cbb3a0faaf/26-6a59806bd7eb4.webp' /></p><p>மேலும்,

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது தொடர்பான எந்தவொரு சிக்கல்களையும், ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவின் 0767011954 மற்றும் 0112587284 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.</p><p>இதனடிப்படையில், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784244584"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784244584</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "வெப்பச் சுட்டெண்" காரணமாக மனித உடலினால் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91674b1b-8b7f-49d4-a463-a24edabc9d5a/26-6a5972d846293.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:37:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளை புதைகுழிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/matale-mass-grave-sparks-row-over-gotabaya-1784246063"></link>
            <id>https://ibctamil.com/article/matale-mass-grave-sparks-row-over-gotabaya-1784246063</id>
            <summary type="text">2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரமாகத் தூண்டியுள்ளது.
</p><p>
இந்த மனிதப் புதைகுழிக்குக் காரணமான சம்பவங்கள் நடந்ததாகக் கருதப்படும் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரையான காலப்பகுதியில், மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்சவே கடமையாற்றியுள்ளார்.
</p><p>
இந்த விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டதன் விளைவாக, தடயவியல் மற்றும் ஆணைக்குழு விசாரணைகள் அனைத்தும் அரசியல் தலையீடுகளால் முடக்கப்பட்டன.
</p><p>
இந்த நிலையில், பல்லாண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று வெளிப்படுத்தப்படாமல் இருப்பது, நீதி கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>

இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NUF5sRazdJY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலி! கைதிகளின் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-steps-to-reduce-prison-overcrowding-1784236242"></link>
            <id>https://ibctamil.com/article/govt-steps-to-reduce-prison-overcrowding-1784236242</id>
            <summary type="text">சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாகச் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாகச் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>இதனடிப்படையில் இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்தல், நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p> ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>உட்கட்டமைப்பு வசதி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திக தலைமையில், நாடாளுமன்றத்தில் கூடிய இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c79917-8581-4ea5-a39a-7c9aeec84f8c/26-6a594cbfdff9f.webp' /></p><p>அதன்போது, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் கைதிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.</p><p></p><h2>சிறைச்சாலை நெரிசல்</h2><p>

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காகக் குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4eb68a-342b-4864-a397-c86a3c636f6b/26-6a594cc091e0a.webp' /></p><p>சிறைச்சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்குழு சுட்டிக்காட்டியது.
</p><p>
அத்துடன், நீதிமன்றம், இலங்கை காவல்துறை, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோமாளிக்கூத்தான கிளிநொச்சி DCC கூட்டம்...! WWE-க்கே சவால் விட்ட அரசியல் தலைமைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-dcc-meeting-mp-minister-clash-viral-1784242897"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-dcc-meeting-mp-minister-clash-viral-1784242897</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்தப் போட்டிக்கும், தமிழ் மெகா சீரியல்களுக்கும் சவால் விடும் வகையில் அரங்கேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்தப் போட்டிக்கும், தமிழ் மெகா சீரியல்களுக்கும் சவால் விடும் வகையில் அரங்கேறிக் கோமாளிக்கூத்தாக முடிந்துள்ளது.</p><p>

நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே, தனக்கு இன்னும் இருக்கை ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திலேயே அதிரடியாக அமர்ந்து விளாசிய பெருமைக்குரிய நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், நேற்றைய கூட்டத்திற்குள் நுழைந்தபோதே பின்னணியில் அதிரடி இசை ஒலிப்பது போன்ற பாவனையில்தான் நுழைந்தார்.
</p><p>
ஊழலை ஒழிப்பேன் என ஆவணங்களைக் காட்டி அவர் பாய்ந்த பாய்ச்சல் இருக்கிறதே... ஐயகோ அதைப்பார்த்து அருகில் இருந்த காவல்துறை அதிகாரியே, அந்த ஆவணங்களுக்குள் ஏதேனும் வெடிபொருள் இருக்கிறதா என்று அஞ்சும் அளவுக்கு இருந்தது அவர் காட்டிய அதிரடி.
</p><p>
ஊழல் விவகாரத்தை ஆதாரத்தோடு நீதிமன்றத்திலோ அல்லது சபையிலோ விவாதிப்பதை விட, கேமரா முன்னால் அதிகாரிகளை ஒருமையில் பேசினால்தான் இணையத்தில் விளம்பரம் தேட முடியும் என்ற தற்கால டிஜிட்டல் அரசியல் தத்துவத்தை அவர் மிகச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்.</p><p>

பேச வேண்டிய நாடாளுமன்றத்தில் சொந்த பிரச்சினை மாத்திரம் பேசிவிட்டு, இங்கு வந்து ஊழலுக்குக் குரல் கொடுப்பது என்ன விதமான அக்கறை என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கின்றது.</p><p>

அடுத்ததாக, நம் கடற்றொழில் அமைச்சர்... நாங்கள் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் மாண்புமிகுக்கள் என்ற லேபிளோடு அமைதியாக அமர்ந்திருந்த அமைச்சருக்கு, இந்தத் தமிழ் எம்.பியின் அலப்பறையைப் பார்த்ததும் பொறி தட்டிவிட்டது.
</p><p>பிறகு என்ன அவரும் சீறி பாய்ந்து நேருக்கு நேர் வாக்குவாதத்தில் இறங்க, நாங்கள் மிகவும் நாகரிகமான அரசாங்கம் என்று இத்தனை நாளாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம், கிளிநொச்சி வெயிலில் அப்படியே உருகிப் போனது.
</p><p>
அமைச்சரே, நீங்களும் அவரோடு சண்டைக்குப் போனால் அப்புறம் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று அதிகாரிகள் தங்களுக்குள் யோசிப்பதற்குள், அமைச்சர் கையை நீட்டி சைகை காட்டி நம் எம்.பியை அடக்க முயன்ற காட்சிகள், திரைப்படங்களின் இறுதி மோதல் காட்சிகளை நினைவுபடுத்தின.</p><p>

இந்த இரண்டு தரப்பினரும் மோதிக்கொள்வதைப் பார்த்த மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், “ஐயா.. நீங்கள் விளம்பரத்திற்காகச் சண்டை போடுகிறீர்கள்.</p><p>

இறுதியில் நாங்கள் ஏன் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் அலைய வேண்டும்” என உஷாராகி, அப்படியே கூட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற, கூட்டமும் எவ்வித முடிவுகளுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.
</p><p>
இவ்வாறு இந்த நிகழ்வு, தற்கால அரசியல்வாதிகளின் டிஜிட்டல் விளம்பர மோகத்தையும் மக்கள் நலன் சார்ந்த பொறுப்பற்ற தன்மையையும் அப்பட்டமாகத் தோல்வியுரித்துக் காட்டியுள்ளது.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் தீவிரமாக விவாதிக்க வேண்டிய ஒரு உத்தியோகபூர்வ தளம், இன்று கேமராக்களுக்கு முன்னால் நாடக மேடையாக மாற்றப்பட்டிருப்பது அப்பட்டமான சீரழிவாகும்.
</p><p>
ஒருபுறம், ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் நாடாளுமன்ற மாண்புகளை மறந்து அதிகாரிகளை ஒருமையில் பேசி இணையத்தில் தங்களை ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் தமிழ் எம்பிக்களின் அரசியல் முதிர்ச்சியின்மை...
</p><p>
மறுபுறம், மாற்றத்தின் மாண்புமிகுக்கள் என்ற பிம்பத்தோடு வந்து ஒரு சலசலப்பைக் கண்டதும் தங்களின் நிதானத்தை இழந்து சண்டைக்கு நிற்கும் ஆளும்தரப்பு அமைச்சரின் பலவீனம் என இருதரப்புமே இங்கு அம்பலப்பட்டுப் போயுள்ளனர்.</p><p>

அரசியல்வாதிகள் தங்களின் சுய விளம்பரத்திற்காக நடத்தும் இந்த மலிவான சண்டைகளுக்குள் பலியாகாமல், அரச அதிகாரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தது தார்மீக ரீதியில் சரியான நகர்வாக இருந்தாலும், இறுதியில் ஒட்டுமொத்தப் பாதிப்பும் ஏதுமறியா கிளிநொச்சி மக்களுக்கே போய் சேருகிறது.</p><p>

சத்தமும், சலசலப்பும், சினிமாத்தனமான மோதல்களும் மட்டுமே தற்கால அரசியலின் இலக்கணமாகிப் போன சூழலில், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் என்பது இத்தகைய கோமாளிக்கூத்துகளுக்குள் நசுக்கப்பட்டு விடுகிறது என்பதே கசப்பான அரசியல் யதார்த்தம்...&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:36:11+00:00</updated>
        </entry>
    </feed>
