<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T14:29:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212</id>
            <summary type="text">நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய்
விட்டது என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை&nbsp;விடுவித்திருந்தோம்</h2><p>
</p><p>
யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு
வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி
விடுவித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6471e7a9-3bf0-4660-a47b-0507b16431bd/26-6a58e96135c9a.webp' /></p><p>
</p><p>
கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்திலும் பெருமளவான காணிகளை
விடுவித்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை
முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல்
போய்விட்டது.</p><p>

ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த
காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனை</h2><p>
</p><p>
அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நாமே முதலில்
தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும்
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95b559e-2e0f-4fa8-9b41-4b35aa9c3278/26-6a58e961e5f89.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப்
பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அவ்வேளை காணாமல் போனோர்
விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி
போராட்டங்களை முன்னெடுத்தோம்.</p><p> அக்கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார்
600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை
தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு
அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.</p><p></p><p>
</p><p>
</p><h2>விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு</h2><p>இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள்
பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள்
மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fd4e4-f658-49d7-ac41-887aba67fd46/26-6a58e962a6702.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள்
ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த
காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு
அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146"></link>
            <id>https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146</id>
            <summary type="text">
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர் -மணற்சேனை இந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
மூதூர் -மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.</p><p>

இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை
இடம்பெற்றது.</p><p></p><h2>மலர்தூவி அஞ்சலி</h2><p>இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி
அஞ்சலியும் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d395206-da5b-4ead-b94e-994b3d20a134/26-6a58e66ba1fc3.webp' /></p><p>
</p><p>
1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல்
சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T14:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030"></link>
            <id>https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030</id>
            <summary type="text">


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றுமுன்தினம்(14), வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கொலன்னாவாவைச் சேர்ந்த 38 வயதான ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாண நபர்கள்</h2><p>

விசாரணைகளின்படி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, சந்தேக நபர் சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாக பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56c1c4b-3b14-4233-b3e0-9d5795af5e2a/26-6a58b64550796.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு 100,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மேலும், மல்லாகம் காவல்நிலையத்திலும் சந்தேக நபருக்கு எதிராகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களின் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965"></link>
            <id>https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965</id>
            <summary type="text">ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவொர்க் சர்க்சியன் அண்மையில் தெரிவித்தார்.</p><p>

பொருளாதார நிலைத்தன்மையும் பொருளாதார மீட்சியும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்றும், பல இலங்கையர்கள் ஒவ்வொரு நாளும் அந்த வேறுபாட்டை உணர்ந்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>இன்னமும் நெருக்கடியில் சம்பளம்</h2><p>&nbsp; ஊதியங்கள் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்று உலக வங்கியின் முகாமையாளர் கூறினார். வேலைவாய்ப்புச் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றும், குறிப்பாகப் பெண்கள் பெரும் சிரமத்தை உணர்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e227eb-24ed-46a5-84af-5a42aa1a11b1/26-6a58dde21f0f5.webp' /></p><p>இலங்கை நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவிட்டது, ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறினார்.</p><p></p><h2>பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு காரணங்கள்</h2><p> டித்வா புயலும் மத்திய கிழக்கு நெருக்கடியும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தைக் கடினமாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். அதனால்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d16f939-eccf-428e-bd3c-b9c377d42899/26-6a58dde1707bf.webp' /></p><p>நாட்டில் அடையப்பட்ட பொருளாதார முன்னேற்றம் மக்களின் அன்றாட வாழ்வில் உணரப்படுவதை உறுதி செய்துகொண்டு, இலங்கை தனது சீர்திருத்த செயல்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>இதற்காக, தனியார் துறையால் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு உருவாக்கம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவா தலையீடு கோரும் ராஜபச்ச AND CO! ஏன்... ஏதற்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-co-demand-geneva-intervention-1784207359"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-co-demand-geneva-intervention-1784207359</id>
            <summary type="text">இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்னிக்கவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், போன்ற அன்ட கோக்கள் நிலா நிலா ஓடிவா பாணியில் ஐ.நாவின் ஜெனிவா அரங்கமே ஓடி வா வா நில்லாமல் ஓடிவா என வருந்தி அழைக்கும் நிலைமை வந்துவிட்டது.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அனுர தரப்பின் நகர்வுகளை தமது எதிர்ப்பு துருப்புசீட்டு அரசியலாக பிடித்துளள்மை இந்த அன்ட் கோ முகம் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட பணியகத்துக்கு நேற்று ஓடோடிசென்று அனுர அரசாங்கத்துக்கு ஜெனிவா அழுத்தத்தை உருவாக்கவேண்டும்! </p><p>

அரசாங்கத்திடம் விளக்கம் கோரவேண்டும் அடுத்த ஜெனிவா அமர்வில்; இந்த விடயம் சேர்க்கப்படவேண்டும் என டம் டும் என விடாப்பிடியாய் நிற்கின்றன.
</p><p>
தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளை ஜெனிவா அரங்கில் இருந்து எடுக்கவேண்டும் என பலவருடங்களாக கத்தித்குளறும் அன்ட் கோ முகங்கள் இப்படி ஒரு நிலைப்பாட்;டை எடுத்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KT5r6bvanLw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான காற்று தரம் கொண்ட நகரங்கள் : முதலிடம் பிடித்தது கனடாவின் ரொரண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/toronto-wildfire-smoke-blanket-1784204676"></link>
            <id>https://ibctamil.com/article/toronto-wildfire-smoke-blanket-1784204676</id>
            <summary type="text">கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான &#039;I...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான 'IQAir' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட பெரிய நகரங்களின் பட்டியலில் டொரண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.&nbsp;</p><p>கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. அங்கிருந்து வீசும் பலத்த காற்று மற்றும் அடர்ந்த புகை மூட்டம் தெற்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த டொரண்டோ நகரத்தையும் சூழ்ந்துள்ளது.</p><h2>டொரண்டோவின் வான்பகுதியில் ஏற்பட்ட மாற்றம்</h2><p>


புகை மூட்டம் காரணமாக டொரண்டோவின் வானம் ஒளிரும் ஒரேஞ் மற்றும் மங்கிப்போன மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் நகரின் முக்கிய அடையாளமான 'சிஎன் டவர்' கூட தெளிவாகத் தெரியாத அளவுக்குப் புகை சூழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c002da8c-1e48-486e-ba87-a4b04f781c17/26-6a58d766a4add.webp' /></p><p>
</p><p>

காற்று மாசுபாட்டுடன் இணைந்து டொரண்டோவில் கடும் வெப்ப அலையும் வீசி வருகிறது. நகரின் மையப்பகுதியில் வெப்பநிலை சுமார் 37.3 டிகிரி செல்சிஸ் ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை</h2><p>சுற்றுச்சூழல் அமைப்பான 'என்விரான்மென்ட் கனடா' டொரண்டோவிற்கு மிக உயர்ந்த அபாய அளவைக் குறிக்கும் "10+" காற்றுத் தர குறியீட்டுடன் ஒரேஞ் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe528700-2218-4594-82b0-3b4b95e34e32/26-6a58d76754f55.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவசியமாக வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>


காற்று மாசுபாடு காரணமாக நகரின் பல பொது நீச்சல் குளங்கள், கோடைகால முகாம்கள் மற்றும் புகழ்பெற்ற 'ஃபிஃபா உலகக்கோப்பை ரசிகர் திருவிழா' நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி அமைப்புக்கு ஈரான் பகிர்ந்த செய்தியால் பதற்றம்! உலக நாடுகளுக்கு பேரிடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-asked-houthi-to-be-ready-to-close-red-sea-1784203899"></link>
            <id>https://ibctamil.com/article/iran-asked-houthi-to-be-ready-to-close-red-sea-1784203899</id>
            <summary type="text">
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹவுதி இயக்கத்தை ஈரான் கேட்டுக்கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹவுதி இயக்கத்தை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறித்த விடயமானது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்தத் திட்டம் குறித்து ஈரானின் தலைமைக்குள் விவாதிக்கப்பட்டு, பின்னர் அந்தச் செய்தி ஈரானின் கூட்டாளிகளான ஹவுதி அமைப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>ட்ரம்பின் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
தெஹ்ரானின் இந்தக் கோரிக்கை குறித்து ஹவுதிகளுக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது எவ்வாறு பகிரப்பட்டது என்பது குறித்தோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்குவதாக அச்சுறுத்தியதற்குப் பிறகுதான் இந்த செய்தி அனுப்பப்பட்டதா என்பது குறித்தோ மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b11fe3f-2b87-4b28-a403-21413d5fea0c/26-6a58ce569f60c.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள யேமனின் மலைப்பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்தி, கப்பல் போக்குவரத்தைத் தாக்குவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் ஹவுதி அமைப்பினர் ஆயத்தப்படுத்தியுள்ளதாக தாக்குதலைத் தொடங்குவதற்கான இறுதி உத்தரவுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஏற்கனவே ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செங்கடல் பாதையும் மூடப்பட்டால் அது உலகளவில் பெரும் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-16T12:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவம் தமிழர் நிலத்தில் நிலைகொண்டிருப்பது பாதுகாக்கவா... பயிர் செய்யவா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/is-the-military-presence-on-tamil-land-to-protect-1784205090"></link>
            <id>https://ibctamil.com/article/is-the-military-presence-on-tamil-land-to-protect-1784205090</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கில் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில்தான் போர் இன்னும் முடியவில்லை. துப்பாக்கிச் சத்தங்கள் மௌன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கில் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில்தான் போர் இன்னும் முடியவில்லை.</p><p> துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகியபோதும் ஆக்கிரமிப்பின் சுமை இன்னமும் தமிழர்களின் தோள்களை அழுத்திக் கொண்டே இருக்கிறது.</p><p> அந்த ஆக்கிரமிப்பின் மிகக் கொடூரமான வடிவமாகவே தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.</p><p> அதனால் ஈழ மக்களின் வாழ்வு, பொருளாதாரம், பண்பாடு என அத்தனையும் ஒடுக்கப்படுகிறது.</p><p></p><h2>பயிர் செய்யும் இராணுவம்</h2><p>இராணுவத்தால் தமிழர் நிலம் எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதற்கு மிக அண்மைய உதாரணமாக யாழ்ப்பாணம் வலி.வடக்கின் நிலைமையைச் சுட்டிக்காட்டலாம்.</p><p></p><p> நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர், வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திற்காக 1661 ஏக்கர் காணி இராணுவத்திற்குத் தேவைப்படுவதாகவும், அதற்குரிய இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், இராணுவம் மேற்கொள்ளும் விவசாய நடவடிக்கைகள் தமது தேவைக்காக மட்டுமே நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வலி.வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வேறுபட்ட கதையைக் கூறுகிறது.</p><p> பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மக்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றிய அரசு, அந்த நிலங்களை இன்று இராணுவத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக மாற்றியுள்ளது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். </p><p>தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நிலையில், தமது காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து அதிலிருந்து வருமானம் ஈட்டுவதை அவர்கள் கடும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>மரக்கறி விற்கும் இராணுவம்</h2><p>இதனை உறுதிப்படுத்தும் வகையில், வலி.வடக்கிலுள்ள இராணுவப் பண்ணைகளில் உற்பத்தியாகும் மரக்கறிகள் யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் பகுதியில் இயங்கும் தனியார் மரக்கறி கொள்வனவு நிலையத்திற்கு பெருமளவில் கொண்டு செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் காணொளிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எனவே, இது சுய தேவைக்கான உற்பத்தி என்ற அரசின் விளக்கத்தை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். </p><p>உண்மையில் இது வணிக நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் உற்பத்தி நடவடிக்கையாகவே அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலைமை வலி.வடக்குடன் மாத்திரம் முடிவடைவதில்லை என்பதுதான் மற்றொரு அதிர்ச்சி. </p><p>வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர்களின் நிலங்களில் இராணுவம் விவசாயப் பண்ணைகள் அமைத்து செய்கை மேற்கொள்கிறது. அதோடு, பால் உற்பத்தி, கோழிப்பண்ணைகள், கால்நடை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. </p><p>பல இடங்களில் சலூன்கள், தையலகங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களையும் இராணுவம் நடத்தி வருகிறது. கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் தேனீரகம், சலூன், தையலகம் என்பவற்றை இராணுவத்தினர் நடாத்தி வருகின்றனர்.</p><p></p><h2>இராணுவத்தின் பிடியில் வளமான இடங்கள்</h2><p>&nbsp;அதெப்படி இராணுவம் இப்பிடி வணிகக் கடைகளை நடாத்துவதும் &nbsp;பயிர் செய்வதும் பாதுகாப்பு ஆகும்? அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தைப் போட்டியில் இறங்கியுள்ள ஒரு நிறுவனத்தின் செயல்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.</p><p></p><p> இதன் விளைவாக, போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.</p><p>

தமிழர்களின் நிலங்கள் மட்டுமல்ல, அவர்களது இயற்கை வளங்களும் நீண்டகாலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>காடுகள், மேய்ச்சல் நிலங்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் விவசாய வளங்கள் பலவற்றின் மீது இன்னும் இராணுவத்தின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதனால் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் குறித்து பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. காணிகள் விடுவிக்கப்படும் என்றும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் மாறி மாறி வந்த பல அரசுகள் உறுதியளித்தன. </p><p>ஆனால் நடைமுறையில் முழுமையான மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக, நிலங்களை நிரந்தரமாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதும், காணிகளுக்குப் பதிலாக இழப்பீடு வழங்கும் அணுகுமுறையும் மக்களின் காணிகளை நிரந்தரமாக பறிக்க முயல்கின்றன.</p><p></p><h2>மரபுரிமை நிலத்தை இழக்க முடியுமா?</h2><p>ஒரு குடும்பத்திற்கு நிலம் என்பது வெறும் சொத்து மாத்திரமல்ல, அது அவர்களின் தலைமுறைகளின் அடையாளம். அது அவர்களின் வாழ்வாதாரம்.</p><p></p><p> </p><p>அது அவர்களின் நினைவுகள். எல்லாவற்றையும் தாண்டி அது அவர்களின் மரபுரிமை. எனவே, பணம் வழங்கி நில உரிமையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை இன்றைய அரசு உணர வேண்டும். </p><p>உரிமையாளர்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கையளிக்கப்பட வேண்டும். அதுவே மக்களின் கோரிக்கை.

வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். </p><p>தனியார் காணிகளில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். விவசாயம், வணிகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து இராணுவம் விலக வேண்டும். கடல், காடு, குளம், விவசாய நிலங்கள் உள்ளிட்ட மக்களின் பொருளாதார வளங்கள் அனைத்தும் மீண்டும் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
</p><p>
தமிழர்களின் நிலங்களை தமிழர்களிடமே மீள ஒப்படைப்பதும், இராணுவத்தின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுவதும், வடக்கு–கிழக்கின் சமூக மற்றும் பொருளாதார மீட்சிக்கான முதல் படியாகும்.</p><p> இராணுவத்தை பாதுகாப்பு தரப்பு என்கிறது இலங்கை அரசு. ஆனால் இலங்கை இராணுவமோ தமிழர் பகுதியில் பயிரச்செய்து கொண்டு உழைப்பில் ஈடுபடுவதைப் பார்க்கையில் அந்நிய இராணுவம் ஒன்று ஒரு தேசத்தை ஆக்கிரமித்துச் சுறண்டுவதைப் போல இருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-16T12:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-strikes-south-island-new-zealand-1784202530"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-strikes-south-island-new-zealand-1784202530</id>
            <summary type="text">நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.</p><p>



டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.</p><h2>இரவுநேரம் ஏற்பட்ட நிலநடுக்கம்</h2><p>நியூசிலாந்தின் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு(NEMA) உள்ளூர் நேரப்படி இரவு 9.14 மணிக்கு (0914 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை,ஆரம்பத்தில் 6.3 ரிக்டர் அளவில் மதிப்பிட்டது, பின்னர் அதை 5.9 ஆகக் குறைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff15953-9c39-43b7-b385-8465db9a1635/26-6a58c7e4bc774.webp' /></p><h2>சுனாமி எச்சரிக்கை இரத்து&nbsp;</h2><p>
</p><p>

தற்போது சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்ட போதிலும், கடலோரப் பகுதிகளில் "வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டங்கள் மற்றும் கரையோரத்தில் கணிக்க முடியாத கடல் அலைகள்" ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக NEMA கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb428dc0-35fe-4cb9-9ebe-d3ca1660beee/26-6a58c7e56c8b6.webp' /></p><p>
</p><p>
மக்கள் தண்ணீரை விட்டும், கடற்கரைகளில் இருந்தும் வெளியேற வேண்டும் என்றும், துறைமுகங்கள், படகுத் தளங்கள் மற்றும் ஆறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டுக்குள் இலங்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-within-the-indian-ocean-century-1784203000"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-within-the-indian-ocean-century-1784203000</id>
            <summary type="text">இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டு என்று அழைக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் உலகம் நுழையும் வேளையில், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டு என்று அழைக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் உலகம் நுழையும் வேளையில், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய இணைப்பாக இலங்கை திகழ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிங்கப்பூரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியுமான கர்டிஸ் எஸ். சின்னுடன் நடைபெற்ற ஒரு குழு விவாதத்தில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, 
அங்கு நடைபெற்ற உலகளாவிய கிழக்கு பொருளாதார ஒத்துழைப்பு (GEC) உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில்,
</p><p>''இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் தற்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தசாப்தத்தை நோக்கி மட்டுமல்லாமல், அப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கால் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நூற்றாண்டை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வலுவான உறவுகள்&nbsp;</span></p><p>
வலுவான உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் உலகின் முக்கியப் பிராந்தியங்களுக்கு இடையே இலங்கையை ஒரு நம்பகமான பாலமாக மாற்றுவதே தனது தொலைநோக்குப் பார்வை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254e7d78-9017-4e09-9246-3b8aef5163ae/26-6a58c6f9c593a.webp' /></p><p>

புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். 

அதேவேளையில் அடுத்த தலைமுறையினரை உலகப் பொருளாதாரத்தில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கத் தயார்படுத்த வேண்டியதும் முக்கியத்துவமானது.
</p><p>
இந்தியப் பெருங்கடல் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி, அது எதிர்காலத்தை இணைக்க வேண்டும்,” என நாமல் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T11:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைக்கு செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-says-welikada-prison-denied-access-officials-1784199520"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-says-welikada-prison-denied-access-officials-1784199520</id>
            <summary type="text">முன் அறிவிப்பின்றி தடுப்புக்காவல் இடங்களுக்குள் செல்வதற்கு தனக்குள்ள சட்டபூர்வ அதிகாரங்களை இருந்தபோதிலும் இந்தமாத தொடக்கத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன் அறிவிப்பின்றி தடுப்புக்காவல் இடங்களுக்குள் செல்வதற்கு தனக்குள்ள சட்டபூர்வ அதிகாரங்களை இருந்தபோதிலும் இந்தமாத தொடக்கத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தனது அதிகாரிகளுக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கடும் கவலை தெரிவித்துள்ளது.
</p><p>
ஜூலை 7 அன்று ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிறைக்குள் நுழைய மறுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, HRCSL தலைவர் நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனியா தலைமையில் ஜூலை 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.</p><h2>&nbsp;சிறை அதிகாரிகள் வழங்கிய விளக்கத்தில் திருப்தியில்லை </h2><p> HRCSL-இன் படி, சிறைக்குள் நிலவும் நிலையற்ற பாதுகாப்புச் சூழல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலைகள் குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காதது குறித்து அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததோடு, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாது என்றும் உறுதியளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475f06b1-08a7-488e-a26f-7ecfb0e86eb0/26-6a58bfb87f89d.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வழங்கப்பட்ட விளக்கத்தில் தங்களுக்குத் திருப்தியில்லை என்று ஆணைக்குழு கூறியதுடன், 1996-ஆம் ஆண்டின் 21-ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம், முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் தடுப்புக்காவல் இடங்களுக்குள் நுழைய தனக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியது.</p><p></p><h2>&nbsp;மாற்றப்பட்ட கைதிகள் மீது
 பழிவாங்கும் நடவடிக்கை</h2><p>
</p><p>
கூட்டத்தின் போது, ​​நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணையம் கவலைகளை எழுப்பியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b0af97-71b3-4c5a-b74e-14900e7637ab/26-6a58bfb937d7d.webp' /></p><p> </p><p>சித்திரவதை, மருத்துவ சிகிச்சை மறுப்பு, கைதிகளின் இருப்பிடம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதில் தாமதம், மற்றும் தண்டனைக் காலத்தை ஏற்கனவே முடித்த கைதிகளைத் தொடர்ந்து காவலில் வைத்தல் ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.</p><p></p><p>

</p><h2>வெலிக்கடை சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தவு</h2><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, காவலில் சித்திரவதை, கொடுமை மற்றும் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த தனது தற்போதைய விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு வெலிக்கடை சிறை அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b11f19f-ec6d-49a9-89ee-d7b45adf2587/26-6a58bfb9de70b.webp' /></p><p>
</p><p>
மேலும், சிறைச்சாலை அதிகாரிகள், தடுப்புக்காவல் இடங்களை அணுகுவதற்கான ஆணையத்தின் சட்டபூர்வ உரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்யவும், மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தடுக்கவும், கைதிகளின் இருப்பிடம் குறித்து குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்கவும், மற்றும் தண்டனைக் காலத்தை முடித்த கைதிகளை உடனடியாக விடுவிக்கவும் அது பரிந்துரைத்தது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-dengue-patients-number-is-increasing-day-by-day-1784198507"></link>
            <id>https://ibctamil.com/article/sl-dengue-patients-number-is-increasing-day-by-day-1784198507</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 72,430 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 72,430 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

இதன்படி, நேற்றைய தினம் (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>அத்துடன் ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;49 பேர் உயிரிழப்பு&nbsp;</h2><p>குறித்த நோயாளர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,160 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7ba82c-30cd-42e4-b9e7-2183ad9342b9/26-6a58b873dfc69.webp' /></p><p>

அத்துடன், தென் மாகாணத்தில் 11,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,026 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. </p><p>

ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,082 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

டெங்கு தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ற்கான பாடசாலை சீருடை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-to-donate-school-uniform-fabric-for-2027-1784198804"></link>
            <id>https://ibctamil.com/article/china-to-donate-school-uniform-fabric-for-2027-1784198804</id>
            <summary type="text">&amp;nbsp;சீன மக்கள் குடியரசு, 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சீன மக்கள் குடியரசு, 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் வகையில் ஒப்பந்த நகல்கள் பரிமாறப்பட்டன.
</p><p>
அரசாங்கப் பாடசாலைகள், அரசாங்க உதவி பெறும் பாடசாலை மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் துறவிகளுக்குப் பாடசாலை சீருடைகளை வழங்குவதற்காக, கொழும்பு, இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சக வளாகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி இந்த ஒப்பந்த நகல் பரிமாற்ற விழா நடைபெற்றது.</p><h2>10.82 மில்லியன் மீட்டர் துணி நன்கொடை</h2><p>இந்தத் திட்டத்தின் கீழ், 2027 ஆம் ஆண்டில் சுமார் 4.18 மில்லியன் மாணவர்களின் சீருடைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சீன அரசாங்கம் இலங்கைக்கு 10.82 மில்லியன் மீட்டர் துணியை நன்கொடையாக வழங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb4b1ea-fc4c-41ec-8a5c-fca532440885/26-6a58b69638595.webp' /></p><p></p><p>

</p><h2>கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு</h2><p>இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சகத்தின் செயலாளர் நாலக கலுவேவா ஆகியோருக்கு இடையேயான ஒப்பந்த நகல் பரிமாற்றத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f8ea63-4120-4243-a1da-33098b7554bc/26-6a58b69588908.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர், கல்வி அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்நிகழ்வில் பங்கேற்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு எதிரான நகர்வு! மற்றுமொரு சர்வதேச நீரிணையை மூட ஈரான் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-is-trying-to-close-the-bab-al-mandeb-strait-1784191111"></link>
            <id>https://ibctamil.com/article/iran-is-trying-to-close-the-bab-al-mandeb-strait-1784191111</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் மூலம் உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான், செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் மூலம் உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான், செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை மூட முயற்சிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

தனது சகாக்களான யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை இதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள், செங்கடல் வழியாக ஆசியப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.</p><p></p><h2>ஈரான் மேற்கொள்ளும் முயற்சி&nbsp;</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பாக, அமெரிக்காவும் ஈரானும் தற்போது கடுமையான தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றன.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1cb2c0-972b-4a1a-ac7b-51ad73c9eb72/26-6a5899dae5397.webp' />
</p><p>

அதன்படி, அமெரிக்கா நேற்று (15) தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரானுக்கு அருகே விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை மீறி, ஈரானிய துறைமுகம் ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சுட்டு வீழ்த்தி நிறுத்தியது.
</p><p>
அத்தோடு ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. </p><p>இதற்கிடையில், குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் செம்னான் விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் இலக்குகளை அமெரிக்கா தாக்கியதாக ஈரான் சுமத்தியுள்ளது.
</p><p>
இந்தச் சூழலில், ஈரான் ஒரு தீர்வை எட்டுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T10:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குறிய கருணைக்கொலை சட்டத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/french-parliament-approves-euthanasia-law-1784198048"></link>
            <id>https://ibctamil.com/article/french-parliament-approves-euthanasia-law-1784198048</id>
            <summary type="text">பிரான்ஸ் குடிமக்கள் தேவையேற்படின் உயிரை மாய்த்துக்கொள்ள(கருணைக்கொலை)சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கும் சட்டமூலம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் குடிமக்கள் தேவையேற்படின் உயிரை மாய்த்துக்கொள்ள(கருணைக்கொலை)சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கும் சட்டமூலம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

பல ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலம் பிரான்ஸ்&nbsp; நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>இந்த சட்டமூலத்துக்கு 291 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 241 பேர் எதிராகவும் வாக்களித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>&nbsp;முறையான கோரிக்கை</h2><p>மேலும், இந்த சட்டமூலம் இறுதியாகச் சட்டமாவதற்கு முன்பு, அதன் விதிகள் பிரான்ஸ் அரசியலமைப்பிற்கு இணக்கமாக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக அரசியலமைப்பு மன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25ab1ac2-8713-4037-b2f0-c43f9630164b/26-6a58b3a1bcc21.webp' /></p><p>பிரான்ஸ்&nbsp; நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டால் முன்னர் பலமுறை நிராகரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, புதிய சட்டமூலத்தின்படி, பிரான்ஸில் குணப்படுத்த முடியாத நோயின் இறுதிக் கட்டத்தில் உள்ள முதிய நோயாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் நபர், சிகிச்சையால் தணிக்க முடியாத கடுமையான உடல் அல்லது மன வேதனையால் அவதிப்படும் நோயாளியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான முறையான கோரிக்கை மருத்துவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் அந்தக் கோரிக்கையின் மீது 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T10:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/national-school-teachers-transfer-applications-moe-1784196436"></link>
            <id>https://ibctamil.com/article/national-school-teachers-transfer-applications-moe-1784196436</id>
            <summary type="text">தேசிய பாடசாலை ஆசிரியர்களின் 2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய பாடசாலை ஆசிரியர்களின் 2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதி முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை <a href="https://nstt.moe.gov.lk/" target="_blank">http://nstt.moe.gov.lk</a> என்ற இணையத்தளத்தின் ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாடசாலை அதிபரிடம் ஒப்படைத்தல்</h2><p>மேலும் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை 2026 ஜூலை 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d89e109b-11b2-4543-a695-abf0772d968b/26-6a58b39df2489.webp' /></p><p>

அத்துடன், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடரீதியான ஆசிரியர் நியமன முறை அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/subject-based-teacher-recruitment-to-begin-1784196869"></link>
            <id>https://ibctamil.com/article/subject-based-teacher-recruitment-to-begin-1784196869</id>
            <summary type="text">நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பாடரீதியான ஆசிரியர் நியமன முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பாடரீதியான ஆசிரியர் நியமன முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
</p><p>
ஆனமடுவவில் உள்ள கருக்குமடுவ இளையோர் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர், இந்த புதிய நியமனச் செயல்முறையானது, குறிப்பாக கணிதம் போன்ற கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் என்று கூறினார்.</p><h2>இந்த ஆண்டு இறுதிக்குள் 30,000 ஆசிரியர்கள் நியமனம்</h2><p>&nbsp; 2021-ஆம் ஆண்டிலிருந்து முறையான ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 30,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af289585-08e7-4514-a6ec-cb3504725ebf/26-6a58b22d62f59.webp' /></p><p>
</p><p>
அமைச்சரின் கூற்றுப்படி, இந்த நியமனத்திற்கான நிதியும் ஒப்புதல்களும் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டன.</p><p></p><h2>போட்டிப்பரீட்சையில் தோற்றிய பட்டதாரிகள்&nbsp;</h2><p> </p><p>அதே நேரத்தில், பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 விண்ணப்பதாரர்கள் மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பங்கேற்றனர். விடைத்தாள்களைத் திருத்தும் பணி தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0645c26-b864-465b-b1f5-2124c5a55528/26-6a58b22e18cf1.webp' /></p><p>
</p><p>
இந்த புதிய முறையானது, எந்தெந்தப் பாடங்களில் ஆசிரியர்கள் மிகவும் தேவைப்படுகிறார்களோ, அந்தப் பாடங்களில் பள்ளிகளுக்குத் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய உதவும் என்று பேராசிரியர் அபயரத்ன கூறினார்.
</p><p>
அதிபர் சேவையைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:28:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவுக்கு எதிராக கர்தினால் எடுத்த நடவடிக்கை! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interlocutory-petition-by-cardinal-against-sallay-1784192447"></link>
            <id>https://ibctamil.com/article/interlocutory-petition-by-cardinal-against-sallay-1784192447</id>
            <summary type="text">

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பெறப்பட்ட தடுப்புக் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். </p><p>

இந்த மனுவுக்கு எதிராக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தினால் இடைபுகு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சலேவின் குறித்த மனுவால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மனு மீதான&nbsp;பரிசீலனை</h2><p>
</p><p>
இந்த மனுவானது, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec39f1c0-7d4e-4ba3-86e4-ea169d07d01d/26-6a58ae90e583c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T10:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதிகள் படகு கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/500-people-missing-after-refugee-boat-capsizes-1784194759"></link>
            <id>https://ibctamil.com/article/500-people-missing-after-refugee-boat-capsizes-1784194759</id>
            <summary type="text">மியான்மர் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ரோஹிங்கியா ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மர் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ரோஹிங்கியா ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தபடி, இந்த விபத்தில் மியான்மரிலிருந்து தப்பி வந்த ரோஹிங்கியா ஏதிலிகள் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
நிலவிய மோசமான வானிலை மற்றும் கடலின் கொந்தளிப்பான தன்மை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல், கப்பல் அதிக சுமையுடன் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p></p><h2>மனிதாபிமான நெருக்கடி</h2><p>
ரோஹிங்கியர்கள் என்பவர்கள், பங்களாதேஷ் எல்லையை ஒட்டியுள்ள மியான்மரின் ரகைன் மாநிலத்தில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சிறுபான்மையினர் ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20ae346c-accf-44fe-acb2-af4d6d3741c9/26-6a58a79915d1c.webp' /></p><p>
</p><p>
மியான்மரில் அவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான இன மற்றும் மத ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி காரணமாக, அவர்கள் பல ஆண்டுகளாக அகதிகளாகப் படகுகள் மூலம் ஆபத்தான முறையில் பிற நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர்.
</p><p>
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, மேலும் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என வெளிநாட்டு அறிக்கைகள் சந்தேகிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T09:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-increases-in-sl-usd-to-lkr-1784194316"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-increases-in-sl-usd-to-lkr-1784194316</id>
            <summary type="text">நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய நாளுக்கான (16.07.2026) நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>இன்றைய நாளுக்கான (16.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.67 ஆகவும் விற்பனைப் பெறுமதி 341.08 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 446.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 462.56 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.75 ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.54 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfb18a6-c48c-4ff9-9446-a237c48f585f/26-6a58a611596dd.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.50 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	227.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.47ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.88 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T09:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை தொடர்பான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-seeking-to-postpone-gce-a-level-exam-2026-1784188907"></link>
            <id>https://ibctamil.com/article/petition-seeking-to-postpone-gce-a-level-exam-2026-1784188907</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டமா அதிபர்</h2><p> </p><p>

இதன்போது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42ca60a-9d47-4eb4-ac2b-54e7e4ffff09/26-6a58a0bf1bcdc.webp' />&nbsp;</p><p>இதேவேளை இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lcnfdrSnexI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T09:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன் விற்பனை! ஆர்வத்தில் துருக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/turkey-ready-to-sell-drones-to-sri-lankan-military-1784189560"></link>
            <id>https://ibctamil.com/article/turkey-ready-to-sell-drones-to-sri-lankan-military-1784189560</id>
            <summary type="text">
இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதில் துருக்கி ஆர்வம் காட்டி வருவதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதில் துருக்கி ஆர்வம் காட்டி வருவதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக துருக்கியின் தொழில்நுட்பக் குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>

பண்டாரநாயக்க சர்வதேச இராஜாங்கக் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய தூதுவர், அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தமது நாடு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன்களின் முக்கிய பணி&nbsp;</h2><p>
</p><p>
துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் குறித்த விளக்கங்களை வழங்குவதற்காக இந்தத் தொழில்நுட்பக் குழு இலங்கைக்கு வருகை தந்த பின்னர், மேலதிக அவதானிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று துருக்கிக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04e5c771-b8d1-4445-afca-0bc8ba842527/26-6a5897219bce8.webp' /></p><p>
</p><p>
 இந்த ட்ரோன்களின் முக்கிய பணி பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T08:32:47+00:00</updated>
        </entry>
    </feed>
