<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-11T08:32:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-jail-violence-un-concern-1783756422"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-jail-violence-un-concern-1783756422</id>
            <summary type="text">

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தசானி கவலை தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தசானி கவலை தெரிவித்துள்ளார்.</p><p> 

சிறையில் வெடித்த இந்த பயங்கர வன்முறையும், பிற சிறைகளில் கைதிகளுக்கு எதிராகக் காவலர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வெளிவந்துள்ள அறிக்கைகளும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட பல டசின் கணக்கானோரின் குடும்பங்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதைக் காணவும் தகுதியுடையவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சுதந்திரமான விசாரணை</h2><p> </p><p>

இச்சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையானதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18457d6b-d8c8-4e64-9eb5-b090310083e9/26-6a51fd8f459dd.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த வன்முறையானது இலங்கையின் தடுப்புக்காவல் முறையிலுள்ள கட்டமைப்புச் சிக்கல்களைக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைப்பது, சிறைகளில் உள்ள அதிக நெரிசல் மற்றும் போதிய வசதிகள் இல்லாத சூழல் போன்றவையே இந்த முக்கியப் பிரச்சினைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><h2>சீர்திருத்த செயல்முறை&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அதிகளவிலான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பலரைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாகச் சுகாதாரம் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் சீர்திருத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18012a2b-4c10-4b4a-a73e-da06f7a88ca2/26-6a51fd900d5be.webp' /></p><p>

பாதிக்கப்பட்ட கைதிகள் மாற்றப்பட்டு, சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை உட்பட அனைத்து தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் தடையற்ற முறையில் சென்று பார்வையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரிகள் முழு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""> <b>WHATSAPP CHANNEL</b> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T08:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த 695 மில்லியன் அமெரிக்க டொலர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-remittances-usd-695-million-in-june-1783752640"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-remittances-usd-695-million-in-june-1783752640</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவானமாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவானமாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருமானம் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்</h2><p> </p><p>

இதன்படி, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருமானமானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80a20d9-bc1e-425e-b371-cf82721d1b7e/26-6a51f5ed82ade.webp' /></p><p> </p><p>

இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p>

எனினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளுக்கு பின்னர் ஹரி குடும்பத்தினரைச் சந்தித்த மன்னர் சார்லஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charles-hosted-prince-harry-and-family-for-1sttime-1783745528"></link>
            <id>https://ibctamil.com/article/charles-hosted-prince-harry-and-family-for-1sttime-1783745528</id>
            <summary type="text">பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், பல ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், பல ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது இளைய மகனும் மனைவியும் அரச வாழ்க்கையைத் துறந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து நீடித்து வரும் பிளவைச் சரிசெய்ய முயற்சிக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p>
லண்டனுக்கு மேற்கே உள்ள ஹைகிரோவ் இல்லம் என்ற தனிப்பட்ட இல்லத்தில் ஹரி, மேகன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட் ஆகியோர் மன்னரையும் ராணி கமிலாவையும் சந்தித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.</p><p></p><h2>சுய சரிதைப் புத்தகம்</h2><p>அரச குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அரச குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b4e29a-bfb8-4dbb-b54d-f9dee9a91a5b/26-6a51f1b1a9269.webp' /></p><p>இந்தநிலையில் அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் அரச குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.</p><p>ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.</p><p>

ஒருபக்கம் அரச குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.</p><p></p><h2>ஹைக்ரோவ் இல்லம்&nbsp;</h2><p>

இந்தநிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானியாவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p>

அப்படி அவர் பிரித்தானியா வரும்போது ஹரியை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் சார்லஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4269e6-b7b4-408d-a605-acfd55eef29d/26-6a51f1b307632.webp' /></p><p>அதன்படி, நேற்று (10) வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.</p><p>இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில்&nbsp; சந்திப்பு நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>இளவரசி டயானாவின் கல்லறை</h2><p>மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன.

அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd3ff12-25fd-4128-b963-af1495183e4b/26-6a51f1b2575f8.webp' /></p><p> </p><p>அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது.

அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.&nbsp;</p><p>மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.</p><p>

அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது மேலும் சிறப்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-cut-off-marks-to-be-released-next-month-1783748259"></link>
            <id>https://ibctamil.com/article/university-cut-off-marks-to-be-released-next-month-1783748259</id>
            <summary type="text">க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த ஆண்டு பல்கலைக்கழக நுழைவிற்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக&nbsp; வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பல்கலைக்கழக அனுமதி</h2><p>
</p><p>
இந்த விண்ணப்பதாரர்களில் இருந்து, மொத்தம் 42,937 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd94585b-222a-49e8-84db-33b938b5709e/26-6a51ec9345f4f.webp' /></p><p>

அத்துடன், பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பல புதிய பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
</p><p>
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் புதிய கல்வி நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த லியனகே மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி கங்கையில் மூழ்கி 11 வயது சிறுவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11-year-old-boy-drowns-in-the-mahaweli-river-1783751910"></link>
            <id>https://ibctamil.com/article/11-year-old-boy-drowns-in-the-mahaweli-river-1783751910</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயதுடைய ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் மூதூர் காவல்துறைக்கு உட்பட்ட கங்குவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயதுடைய ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் மூதூர் காவல்துறைக்கு உட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று சனிக்கிழமை(11) நடந்துள்ளது.</p><p>இதன்போது, சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு
சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக
நீரில் மூழ்கி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e90203-dab5-48f0-9109-01b041a1deb3/26-6a51eada557e9.webp' /></p><p>
</p><p>
சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு குடும்பத்தினரும்
அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.ஆனால் சிறுவனை
உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.
</p><p>இந்த நிலையில், நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&nbsp;</p><p> இச்சம்பவம் குறித்து
மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் குற்றத்தடுப்பு நடவடிக்கை! கடும் ஆவேசத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-accuses-govt-of-diverting-people-s-attention-1783752534"></link>
            <id>https://ibctamil.com/article/namal-accuses-govt-of-diverting-people-s-attention-1783752534</id>
            <summary type="text">

அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அரசாங்கம் இளைஞர்களைக் கைது செய்வதையும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

அண்மையில் கோட்டையில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் கொள்கைகள் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும், வேலை இழப்புகளுக்கும், வாழ்க்கைச் செலவு உயர்வதற்கும், முதலீட்டாளர் நம்பிக்கை குறைவதற்கும் வழிவகுத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
அத்தோடு, சட்ட நடைமுறையாக்க நடவடிக்கைகள் மூலம் இளைய தலைமுறையினரை அரசாங்கம் குறிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4285bda-e68a-4466-b8d4-a70dbd36864a/26-6a51ec3600245.webp' /></p><p>
</p><p>
தேர்தலுக்கு முன்பு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பட்டதாரிகள், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை தேடியபோது, ​​அதற்கு மாறாக காவல்துறை நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அதிகரித்து வரும் வரிகள், அதிக கடன் வாங்கும் செலவுகள் மற்றும் அதிகரித்த உற்பத்திச் செலவுகள் ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தவிப்பதாகவும், இதனால் பல வணிகங்கள் மூடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>சிறைச்சாலை சம்பவம்</h2><p>

இதேவேளை, இலங்கையின் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாகவும், போதுமான அரசாங்க ஆதரவின்றி சுற்றுலாத் துறை கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eabfbd4e-3e7e-454f-8d6a-4ab38262131c/26-6a51ec36aa8dd.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சமீபத்திய சிறைச்சாலை சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, நீதி அமைச்சர் முகநூல் மூலமாக மட்டுமே இச்சம்பவம் பற்றி அறிந்து கொண்டதாகவும், பல மணி நேரம் அதுபற்றி அறியாமல் இருந்ததாகவும் கூறி, அரசாங்கத்தின் பதிலை விமர்சித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T07:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-family-arrested-in-thailand-airport-1783750515"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-family-arrested-in-thailand-airport-1783750515</id>
            <summary type="text">

பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டத்தை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
அந்நாட்டு ஊடகமொன்றின் தகவலின்படி, இந்த இலங்கை குடும்பம் முதலில் தங்கள் சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்து, பின்னர் தரை வழியாக மலேசியாவிற்குப் பயணம் செய்துள்ளது.
</p><p>
அதன் பிறகு, அவர்கள் மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்திற்குள் நுழைந்து கஜகஸ்தானுக்கு விமானம் மூலம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற ஒரு மலேசியப் பெண், அங்கிருந்த இரண்டு குழந்தைகளுக்கும் தானே உயிரியல் தாய் என்று பொய்யாகக் கூறியுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச கடத்தல் கும்பல்</h2><p>

இருப்பினும், விமான நிறுவன அதிகாரிகள் அவர்களின் பயண ஆவணங்களில் இருந்த முரண்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்காததால், அக்குழுவினர் தங்களின் பயண வழியை மியான்மருக்கு மாற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aa4ee46-f12c-439b-b47f-4411068af6df/26-6a51e3fd7ea49.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Bangkok Post</i></p><p> </p><p>

இந்த விவகாரம் குறித்து குடிவரவுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் ஒரு நாளில், அக்குழுவினர் மியான்மரிலிருந்து டான் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தானுக்குச் செல்ல முயன்றபோது, குடிவரவு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.</p><p>

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கைப் பெண்ணும் அவரது மூத்த பிள்ளையும் மற்றவர்களுக்குச் சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
</p><p>
மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்த குறிப்பிட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து பிரித்தானியா, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஏற்கனவே பிராந்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.</p><h2>மலேசிய கடவுச்சீட்டு</h2><p>
இந்த கும்பல் வெளிநாட்டு குழந்தைகளை மலேசியாவிற்குள் கடத்தி வந்து, போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று, அதன் மூலம் அதிகாரப்பூர்வ மலேசிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322a8b57-8dda-420b-8eb3-1acd3770f073/26-6a51e3fca61c9.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The Straits Times</i></p><p> 

இதன்படி, இந்த கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு விசா இன்றி நுழைய முடியும் என்பதை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>

தற்போது, பயண ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு வயது வந்த பெண்களையும் தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். </p><p>

இதேவேளை, நல அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, அந்த இரு சிறு பிள்ளைகளும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையில், குறித்த பிள்ளைகள் இருவரும் தற்போது பாதுகாப்பான பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தூதரகம் மூலம் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் திருப்புவதற்கான நடவடிக்கைகளைத் தாய்லாந்து அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T06:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-fire-brigade-emergency-hotline-call-117-1783750651"></link>
            <id>https://ibctamil.com/article/new-fire-brigade-emergency-hotline-call-117-1783750651</id>
            <summary type="text">நாட்டு மக்களுக்கு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டு மக்களுக்கு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

எனவே, தீ விபத்துகளைப் புகாரளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3e28b3-a438-4eec-a15c-9166bfff8fe5/26-6a51e28aea394.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சேதங்களை விசாரிக்க விசேட குழு நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-committee-appoint-investigate-negombo-prison-1783740981"></link>
            <id>https://ibctamil.com/article/new-committee-appoint-investigate-negombo-prison-1783740981</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை போதைபொருள் கடத்தல் வன்முறை சம்பவத்தில்&nbsp;8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p> </p><p>

மேலும் மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதிவி உயர்வும், இழப்பீடுகளை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c50a870a-cecc-48fa-9a77-d47629d4c234/26-6a51c7eeca08d.webp' /></p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் காரணமாக அந்த வளாகம் கைதிகளுக்கு பொருத்தமான இடமில்லை என முடிவு செய்யப்பட்டது. </p><p>

இந்த நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறை - மரணங்கள் குறித்த விசாரணைக்கு அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-says-sri-lanka-answer-prison-deaths-1783739395"></link>
            <id>https://ibctamil.com/article/international-says-sri-lanka-answer-prison-deaths-1783739395</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட
கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட
கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
</p><p>
31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி
மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
</p><p>
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள்
சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை
சிறைக்குள் செல்ல, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி
மறுக்கப்பட்டது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு
அறிவித்துள்ளது.</p><p></p><h2>பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள்&nbsp;</h2><p>

கைதிகள் மாற்றப்பட்ட இடங்களில் பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள்
நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தடுப்புக்காவல்
நிலையங்களுக்குள் தடையின்றி செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு
அனுமதி வழங்கப்பட வேண்டுமென, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து பிற சிறைகளுக்கு
மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என
சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489f2f2e-02c3-43a3-b4ec-a0359284ed63/26-6a51d889efda2.webp' /></p><p>நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கங்கள்
தவறிவருவது, சிறைக்கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களை
ஆபத்தில் தள்ளுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பிரதிப்
பணிப்பாளர் பாபு ராம் பந்த் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள்
நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை
எடுக்க அரசாங்கங்கள் தவறிவருவது, கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின்
உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீண்டகால விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவல், சிறைகளில் நெரிசல், மற்றும்
போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏராளமானோரை
சிகிச்சைக்கு அனுப்பாமல் தடுத்து வைத்தல் ஆகியவை ஐ.நா. அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாகும்.
</p><p>
இலங்கை நீதி அமைச்சு வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்களுக்கு அமைய, சுமார்
10,000 பேரை மாத்திரமே தங்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின்
சிறைகளில் 41,000-ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124"></link>
            <id>https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124</id>
            <summary type="text">தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&amp;nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.</p><p>ஜூலை 9 மற்றும் 10- ஆம் திகதிக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகப் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது இரவாகக் குறைந்திருந்தது.</p><p></p><h2>கொலை செய்ய ஈரான் முயற்சி</h2><p>சில நாட்களுக்கு முன்பு வரை வழக்கமாக 18 முதல் 22 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குள் வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றதாக அது கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e35e7271-2571-4917-bf0c-24057f19f633/26-6a51cb4b543a9.webp' /></p><p>அதே நேரத்தில், கப்பல்கள் தங்கள் பயணம் செய்வதை மறைப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து விடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும்&nbsp; விண்ட்வார்ட்&nbsp;நிறுவனம் கூறுகிறது.</p><p>தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை, படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலை ஈரான் அரசாங்கம் செயல்படுத்தினால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கித் தயார் நிலையில் வைக்கப்பட்டு குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katunayake-istanbul-flight-struck-by-bird-1783745641"></link>
            <id>https://ibctamil.com/article/katunayake-istanbul-flight-struck-by-bird-1783745641</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்த குறித்த விமானம்&nbsp;காலை 10:24 மணிக்கு கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.</p><p>இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dccb4bc-b3da-4565-ad3c-0ab67d983395/26-6a51d840d5005.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி&nbsp;இன்று (11) காலை புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு களப்பு கடற்பரப்பிற்கு மேலாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>பாதுகாப்பான அவசரகால தரையிறக்கத்திற்குத் தயாராகும் வகையில் எரிபொருளை குறைத்தபடி, அந்த விமானம் முன்னதாக சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டது&nbsp;</h2><p>TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f4b491-0a5d-4cc4-a390-7230e44184bc/26-6a51d27dd5214.webp' /></p><p>இந்த விமானம் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருவதுடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான நிலைய அவசர கால நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tPMSpBYkjLA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பிரதி அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pension-scheme-for-migrant-workers-working-in-sl-1783741581"></link>
            <id>https://ibctamil.com/article/pension-scheme-for-migrant-workers-working-in-sl-1783741581</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.</p><p></p><h2>பிரத்தியேக செயலி</h2><p>
</p><p>
அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46891d72-c003-4efc-b38f-7cdb8b170ac1/26-6a51c4adc9dc0.webp' /></p><p>
சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் 2.1 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்க்கின்றோம்.</p><p></p><h2>கூட்டு முயற்சி</h2><p>தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d398af45-61a2-47c5-b73d-ed825bcdabb7/26-6a51c4ae9f242.webp' /></p><p>
</p><p>எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-development-tourism-1783739524"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-development-tourism-1783739524</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற அமர்வின் போது நடைபெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தை சுற்றுலா பிரதேசத்தின் முக்கியமான மைய பிரதேசமாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான போக்குவரத்து ஸ்தானங்களை உறுதிப்படுத்த வேண்டும். இதில் முதலாவது பலாலி விமான நிலையம் முக்கியமானது.</p><p></p><h2>இந்தியாவின் நிதியுதவி&nbsp;&nbsp;</h2><p> </p><p>இந்தியா இதனை அபிவிருத்தி செய்ய தயாராக இருந்தாலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அந்த உதவியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். மூன்று கட்டமாக அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இணங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caac7fc1-a2ca-4b42-ab00-86d211c62b4c/26-6a51b9580c615.webp' /></p><p> அதில் ஓடுபாதை அபிவிருத்தியை செய்ய வேண்டும். பிராந்திய விமானங்கள் வந்து இறங்கக்கூடியவாறு இருக்க வேண்டும். அப்படியென்றால் சிங்கப்பூர், டுபாய் போன்ற இடங்களில் இருந்து விமானங்களை இறக்கக்கூடியதாக இருக்கும்.</p><p>இந்தியா இலவசமாக அதற்கான உதவியை வழங்க முன்வந்த போதும் அதனை அனுபவிக்காமல் இருப்பது துரதிஸ்டவசமானது. இதன்படி அதனை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p><p></p><h2>இராணுவ பிரசன்னம்</h2><p>
</p><p>
இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர்கள் வர தயாராக இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd3b578-6f05-4168-bf09-90e286f7c274/26-6a51b958e8142.webp' /></p><p> </p><p>இதற்காக முதலாவதாக அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும்.

இராணுவ எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கணிசமான மாற்றம் ஏற்பட்டால் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலீடுகளை செய்து பொருளாதார இருப்புகளை முன்னேற்றலாம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/31-year-old-man-dies-of-electric-shock-in-palai-1783739791"></link>
            <id>https://ibctamil.com/article/31-year-old-man-dies-of-electric-shock-in-palai-1783739791</id>
            <summary type="text">பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.</p><p></p><h2>மின்சார இணைப்பு வேலை</h2><p>
</p><p>
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,&nbsp; குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம்
தாக்கி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65aacb7f-9f2b-46d0-8a70-43277cf1f687/26-6a51b9b1cd34e.webp' /></p><p>இந்நிலையில், உடனடியாக பளை வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும் போது
இளைஞன் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது விடுமுறையாக ஆடிப்பிறப்பு - நாடாளுமன்றத்தில் எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-pirappu-should-be-declared-public-holiday-1783736457"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-pirappu-should-be-declared-public-holiday-1783736457</id>
            <summary type="text">ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்.

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு பிரேரணையை முன்வைத்தார்.</p><p>அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

 ஆடிப்பிறப்பு தமிழர் மரபு, பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான நாளாகும் </p><p></p><h2>பொது விடுமுறை</h2><p> </p><p>இதனால் அதனை தேசிய ரீதியில் அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறையாக அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/190cadc9-1276-4d69-828a-2f211dc1f555/26-6a51ae1817b54.webp' /></p><p>மேலும், இத்தகைய நடவடிக்கை இலங்கையின் மத மற்றும் கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், குறிப்பாக இந்தியாவிலிருந்து வருகை தரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டிற்கு ஈர்க்க உதவும். </p><p>அதன் மூலம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வருமான உயர்வு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நாட்டிற்கு கிடைக்கும்.</p><p>எனவே, ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பாக அரசு சாதகமான பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:16:56+00:00</updated>
        </entry>
    </feed>
