<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-14T15:01:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை : துப்பாக்கிசூடு நடத்திய அதிகாரி திடீர் இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/officer-opened-fire-negombo-prison-transferred-1784039295"></link>
            <id>https://ibctamil.com/article/officer-opened-fire-negombo-prison-transferred-1784039295</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை சிறை ஊடகப் பேச்சாளரும், சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
</p><p>
ஜூலை 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தின் போது, ​​கைதிகள் சிறையின் கடைசி மரக் கதவை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றபோது, ​​ஒரு சிறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.</p><h2>நிலைமையைக் கட்டுப்படுத்த&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>இவ்விவகாரம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், சிறைக்குள் இருந்த கைதிகள் குழு ஒன்று சிறை அதிகாரிகளை கொடூரமாகத் தாக்கியதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும் அந்த அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35d250d-456a-4b45-9101-c49c9ca5313c/26-6a564c3a554bd.webp' /></p><p>
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடு சிறை விதிகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா மற்றும் அதிகார வரம்பு மீறப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொடூரமான மோதலில் இதுவரை 10 சிறை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/respect-for-iran-s-rights-reopening-of-hormuz-1784036920"></link>
            <id>https://ibctamil.com/article/respect-for-iran-s-rights-reopening-of-hormuz-1784036920</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்று ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். </p><p>மேலும், அழுத்தம் அல்லது இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் திணிக்கப்படும் எந்தவொரு ஏற்பாடுகளையும் தெஹ்ரான் ஏற்காது என்றும் அவர் எச்சரித்தார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் மாற்று வழி</h2><p>தெஹ்ரானில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா, ஈரானிய ஆயுதப் படைகள் நாட்டின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், இந்த மூலோபாய நீர்வழியில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9598ea01-545a-4708-8bc1-5feec6194b6c/26-6a5644772d1d4.webp' /></p><p>ஈரான்-அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><h2>அழுத்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது&nbsp;</h2><p>மேலும், ஈரான் முன்மொழிந்த ஏற்பாடுகளை முன்னர் ஏற்றுக்கொண்ட போதிலும், வோஷிங்டன் பின்னர் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மாற்று வழியை நிறுவ முயன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e76fd893-db85-4304-9b49-fff6106355f5/26-6a56447678cbb.webp' /></p><p>&nbsp;ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்கு வெளியே ஹோர்முஸ் நீரிணையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈரானிடமிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த இராணுவ செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அல்லது அழுத்தத்தின் மூலம் அந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படாது என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் பூத்துள்ள பிணவாடை வீசும் மலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corpses-flower-have-bloomed-in-california-1784035165"></link>
            <id>https://ibctamil.com/article/corpses-flower-have-bloomed-in-california-1784035165</id>
            <summary type="text">கலிபோர்னியாவின் ஹன்டிங்டான் தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் இரண்டு ஒரே நேரத்தில் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலிபோர்னியாவின் ஹன்டிங்டான் தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் இரண்டு ஒரே நேரத்தில் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.
</p><p>


டைட்டன் ஆரம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இரு மலர்களுக்கும் ஒடோரா - ஒடோரைஸியஸ் என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.</p><p>இந்த மலர்கள் மலர பத்து ஆண்டுகள் வரையில் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மலர் மலர்ந்து புதிதாக இருப்பது வெறும் 24 மணி நேரம்தான்.</p><h2>உலகம் முழுவதும்&nbsp;ஆயிரம் மலர்கள்</h2><p> </p><p>இது அச்சுறுத்தல் கொடுக்காத பூ இனம் என்றும், இதுபோன்ற வெறும் ஆயிரம் மலர்கள் மட்டுமே உலகம் முழுவதும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b82a555-7855-4a1f-affb-7b391113d14e/26-6a5639f571547.webp' /></p><p>
</p><p>
ஒரே நேரத்தில் இரண்டு மலர்கள் ஒன்றாக மலர்ந்திருப்பதால் வாசனையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வரிசையில் நின்று மலரைப் பார்த்து மக்கள் ரசித்துள்ளனர்.</p><p></p><h2>ஆயுள் காலம் சில மணி நேரங்கள்&nbsp;</h2><p>
</p><p>


இதன் ஆயுள் காலம் சில மணி நேரங்கள் என்பதால், இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் தாவரவியல் பூங்காவுக்கு வந்து மலரைக் கண்டும், வாசனையை நுகர்ந்தும் செல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67147a87-dc80-47c0-96c6-0e4564aa6d88/26-6a5639f63600b.webp' /></p><p>
</p><p>


கலிபோர்னியா தாவரவியல் பூங்காவில் இதுவரை நடைபெறாத ஒரு அதிசயம் நடந்துள்ளது. இங்கு வளர்க்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இரண்டு மலர்கள் மலர்ந்துள்ளன. ஒன்று பூத்தாலே அப்பகுதியே நாறும். இரண்டும் ஒன்றாகப் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமன் கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள்! UKMTO அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tankers-attacked-near-oman-coast-1784033794"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tankers-attacked-near-oman-coast-1784033794</id>
            <summary type="text">ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு வழித்தடம் வழியாகக் கடந்து சென்றபோது, ​​இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக , இங்கிலாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு வழித்தடம் வழியாகக் கடந்து சென்றபோது, ​​இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக , இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

நேற்று இந்தத் சம்பவங்களை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு கப்பல்களும், தாக்குதல்கள் நடந்த நேரத்தில் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.</p><p>எனினும் UKMTO மையம்&nbsp; அந்தக் கப்பல்களின் பெயர்களையோ அல்லது அவற்றை யார் குறிவைத்தார்கள் என்பதையோ குறிப்பிடவில்லை.</p><p></p><h2>இரண்டு எண்ணெய்க் கப்பல்கள்</h2><p> </p><p>ஆனால், நீரிணையில் தென்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் நேற்றிரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af53dd9-f3e7-44f3-8501-9c9b16d0507e/26-6a5632040f89a.webp' /></p><p>
இதற்கிடையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனது அறிக்கையில் , “நீர்வழியில் தறிகெட்டு ஓடிய இரண்டு சூப்பர்டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என கூறியுள்ளது.</p><p>

கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்ல, தன்னால் நியமிக்கப்பட்ட வடக்கு வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஈரான் கூறுகிறது. </p><p>ஆனால், பெருகிவரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் ஓமான் கடற்கரைக்கு மிக அருகில் அதைக் கடக்கத் தொடங்கியுள்ளன. இது, அந்த நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T13:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&amp;nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயற்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் அதிக நெரிசல்&nbsp;</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7104383-0891-45fe-84b0-1ac05f32cf67/26-6a560d29529c2.webp' /></p><p> சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன.</p><p> வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை&nbsp;</h2><p>காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67bf3e2-df55-47fe-a714-fa95efcfb06a/26-6a560cf6844a0.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம். சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாபுலவு மக்கள் நிலத்திற்காகப் பத்தாண்டுகளாகவா போராடுகின்றனர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/of-keppapulavu-are-fighting-for-land-1784035433"></link>
            <id>https://ibctamil.com/article/of-keppapulavu-are-fighting-for-land-1784035433</id>
            <summary type="text">ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மிக நீண்டகால மக்கள் போராட்டத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. </p><p>போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்தும், மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாமல் இராணுவ முகாம்களின் வேலிகளுக்கு வெளியே நின்று நீதி கேட்கும் துயரமான காட்சியை ஈழம் இன்னமும் சுமக்கிறது எகன்பதற்கு கேப்பாபுலவு ஒரு சாட்சி. </p><p>அந்தப் போராட்டம் இப்போது பத்தாண்டுகளைத் தாண்டியிருக்கிறது. ஒரு தலைமுறையின் குழந்தைகள் தமது முன்னோரின் நிலங்களை கதைகளில் மட்டுமே கேட்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பது ஈழ நிலத்தின் பெருந்துயரம்.</p><p></p><h2>கேப்பாபுலவின் கதை</h2><p>நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த பின்னர் வன்னி மாவட்ட படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஒருமுறை குறிப்பிட்டார். </p><p>கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். இதுதான் போரை நடத்தியவர்களின் நிலம்மீதான
ஆக்கிரமிப்பு மனநிலை. ஆனால் இந்தச் சொற்கள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை மிகவும் உக்கிரமாக்கியதே தவிர, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடவில்லை. </p><p>பாரிய அரச அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நெடிய போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் நடாத்தி வந்திருக்கிறார்கள். &nbsp;

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் ஆகப்போகின்றன என்றால், கேப்பாபுலவை அந்த மக்கள் இழந்தும் அதற்காகப் போராடியும் பதினேழு ஆண்டுகள்தான். </p><p>எம்மை சுட்டுக்கொன்றாலும் நிலத்திற்கான போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று இந்த மக்கள் தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை பத்தாண்டுகளாக முன்னெடுக்கின்றனர். </p><p>2017இல், கேப்பாபுலவின் பிலக்குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக சுமார் எண்பது ஏக்கர் நிலப் பகுதியை இந்த மக்கள் மீட்டிருந்தனர். 2017ஆம் ஆண்டு தை மாத்தில் இந்த மக்கள் தமது போராட்டத்தை பிலக்குடியிருப்பில் ஆரம்பித்தனர். </p><p>பிலக்குடியிருப்பு விமான படை முகாமின் முன்பாக தகரக் கொட்டில்களில் இருந்து பனியிலும் வெயிலிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த மக்கள் நடத்திய போராட்டம் அவர்களின் பூர்வீக நிலத்தை வெல்ல வைத்தது.</p><p></p><h2>தொடர் போராட்டம்</h2><p>பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அவர்கள் வீதியோரத்தில் அமர்ந்தனர். வெயிலும் மழையும் அவர்களைத் தடுக்கவில்லை. பல அரசுகள் மாறின. பல அமைச்சர்கள் வாக்குறுதிகள் அளித்தனர். </p><p>அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் நிலம் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. அதனால் இந்தப் போராட்டம் மக்களின் வாழ்வுரிமை வரலாறாக மாறியிருக்கிறது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது. </p><p>மாற்றுக் காணி வேண்டாம். நஷ்டஈடு வேண்டாம். எமது முன்னோர்கள் வாழ்ந்த நிலம், தமது குடும்பத்தின் சொத்து, தமது நினைவுகளின் வாழ்நிலம் மட்டுமே வேண்டும் என்பதுதான் அம் மக்களின் பெருங்குரல். &nbsp;
</p><p>
அந் நிலம் மக்களின் நிலம். கிணறுகளில் நீர் எடுத்தும் தம் ஊரின் ஆலயங்களில் வழிபட்டும் தம் உறவினர்கள் வாழ்ந்தும் விதைந்துமான &nbsp;அந் நிலம் அவர்களின் சொந்த நிலம். எனவே அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு எதையும் ஏற்க முடியாது என்பதே மக்களின் உறுதியான குரல்.</p><p> 2017இல் தொடங்கிய இம் மக்களின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. சமீபத்திலும் பாரியபோராட்டம் நடந்தது. கடந்த ஜூன் 05ஆம் நாளன்று கேப்பாபுலவு மக்கள் இராணுவ முகாமின் முன்பாக மீண்டும் ஒன்றுகூடி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். </p><p>பல நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நிலமின்றி வாழும் துயரம்</h2><p>இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களின் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அண்மைய போராட்டத்தில் வலியுறுத்தினர். </p><p>போராட்டத்தில் பெண்களும் முதியவர்களும் அதிகளவில் பங்கேற்று, தமது நிலமின்றி வாழும் வாழ்க்கையின் துயரத்தை மீண்டும் உலகிற்கு எடுத்துரைத்தனர். இந்தப் போராட்டம் சமூக ஊடகங்களிலும் பரவலாகக் கவனம் பெற்றது.
</p><p>
இன்றும் கேப்பாபுலவில் வாழும் குடும்பங்களின் நிலை மிகவும் துயரமாகவே நீள்கிறது. தமது சொந்த விவசாய நிலங்களை இழந்ததால் பல குடும்பங்கள் கூலித்தொழிலையே நம்பியிருக்கின்றன. விவசாயம் செய்து வாழ்ந்த குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.</p><p> இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர். பெண்கள் குடும்பத்தை நடத்த பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வயதான பெற்றோர்கள் தாங்கள் பிறந்த மண்ணைப் பார்த்தே இறக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர். பலர் &nbsp;இறந்தும் போயுள்ளனர். </p><p>பல குழந்தைகள் தமது பெற்றோர் கூறும் கதைகளில்தான் தங்கள் சொந்த நிலத்தை அறிந்திருக்கின்றனர். ஒரு சமூகத்தின் பொருளாதாரமும், பண்பாடும், நினைவுகளும், மரபும் நிலத்துடன் இணைந்திருக்கின்றன என்பதை கேப்பாபுலவு மக்களின் வாழ்க்கை நினைவூட்டுகிறது.</p><p></p><h2>வாய்ச் சொல்லில் நல்லிணக்கம்</h2><p>ஒரு புறம் மக்கள் நிலமின்றி தவிக்கும்போது, மறுபுறம் அந்த நிலங்கள் இராணுவப் பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்கும்போது மக்களின் மனவேதனையை மேலும் பெருகுகிறது.</p><p> போருக்குப் பிறகு நல்லிணக்கம் பற்றி அரசுகள் தொடர்ந்து பேசினாலும், நல்லிணக்கத்தின் அடிப்படை நிபந்தனையான நீதி இன்னும் வழங்கப்படவில்லை என்பதே கேப்பாபுலவு மக்களின் விடயத்தில் தெளிவாகத் தெரிகின்ற செய்தியாகும்.</p><p> நிலம் மீளக் கிடைக்காமல் நல்லிணக்கமும் நம்பிக்கையும் உருவாக முடியாது என்பதை இந்தப் போராட்டம் தெளிவாகச் சுட்டுகிறது.

அத்துடன் கேப்பாபுலவு மாத்திரன்றி, வலி வடக்கு, மயிலிட்டி, வட்டுவாகல் போன்ற பகுதிகளிலும் மக்கள் தமது நிலங்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><p> இந்த எல்லாப் போராட்டங்களும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. நிலம் என்பது வெறும் சொத்தல்ல, அது வாழ்வுரிமை. உண்மையில் நிலமென்பது அடையாளமாக, வரலாறாக நினைவாக, &nbsp;எதிர்காலமாக நம் வாழ்வின் எல்லாமுமாக உயிர்பிணைத்து நிற்கின்றது.</p><p></p><h2>நிலத்தை ஆக்கிரமிப்பது மனித உரிமை மீறல்</h2><p>ஒரு ஜனநாயக அரசின் கடமை, மக்களின் சொத்துரிமையை மதிப்பதும், நீதியை நிலைநிறுத்துவதுமே எனப்படுகிறது. ஆனால் போர் முடிந்து இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னரும் பொதுமக்களின் காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விசயம். </p><p>நில உரிமை என்பது அடிப்படை மனித உரிமை. அதை மறுப்பது, போரின் காயங்களை தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கிற செயல்.

எனவே கேப்பாபுலவு மக்களின் பத்தாண்டு கால அமைதியான போராட்டத்திற்கு இலங்கை அரசு இனியும் தீர்வு வழங்காமல் இருக்க இயலாது. </p><p>மீதமுள்ள அனைத்து காணிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக உரிமையாளர்களாக மக்களிடம் கையளிக்க வேண்டும். தமது மண்ணில் மீண்டும் வீடு கட்டி, விவசாயம் செய்து, தமது குழந்தைகளுடன் வாழும் கனவும் உரிமையும் கேப்பாபுலவு மக்களுக்கு கிடைத்தாக வேண்டும். &nbsp;</p><p>

தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கிய சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டு போராடுகிற கேப்பாபுலவு மக்களுக்கு விரைவில் தீர்வை வழங்க வேண்டும். </p><p>எங்கள் தேசத்தில் இன்னமும் மக்கள் நிலத்திற்காகப் போராடுகிறார்கள். எங்கள் தேசத்தின் உறவுகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். எங்கள் தேசத்தின் உரிமைகளுக்காக இன்னமும் போராடுகிறோம். ஆட்சிகள் பல மாறி, ஜனாதிபதிகள் பலர் மாறிய பின்னரும் ஈழத் தமிழர்களின் நிலைதான் இன்னமும் மாறாமல் இருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p><p>
</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T13:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணெய்க்கும் அப்பால் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலானது உரத்தில் தொடங்கி உணவை அடைந்து, ஃபாரெக்ஸ் வரையில் எவ்வாறு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/how-middle-east-conflict-impacts-food-and-forex-1784034711"></link>
            <id>https://ibctamil.com/article/how-middle-east-conflict-impacts-food-and-forex-1784034711</id>
            <summary type="text">Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f68cd05b-2451-456a-8993-9822273f2652/26-6a5635988f2bf.webp' /><b></b></p><p><b><a href="https://www.exness.com/">Exness</a></b><a>-</a>இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.</p><p>மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில்கொண்டு சந்தைகள் விலைகளை நிர்ணயித்தபோது,
​​எண்ணெய் சார்ந்த விஷயங்கள் பற்றியே அதிக விவாதம் நடந்தது.
</p><p>இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை கச்சா எண்ணெயைவிட மேலும்
அதிகமானவற்றைக் கொண்டு செல்கிறது, மேலும் எரிசக்தி மீதான ஒரு
குறுகிய பார்வை, அந்தக் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சுற்றி உருவாகும்
பரந்த பேரியல் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறுகிறது.
</p><p>நைதரசன் அடிப்படையிலான உரங்களுக்கும் அவற்றை உற்பத்தி
செய்வதற்கான மூலப்பொருளான இயற்கை எரிவாயுவுக்கும்
மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகவும் இந்த
நீரிணை திகழ்கிறது. </p><p>உரச் சரக்குகளிலிருந்து உணவுப்பொருள்
விலையேற்றத்திற்கும், உணவுப்பொருள் விலையேற்றத்திலிருந்து DXY-
க்கும் ஏற்படும் பரிமாற்றத்தில்தான், சில்லறை மற்றும் பேரியல்
கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட வர்த்தகர்களுக்கான
உண்மையான பேரியல் கதை மறைந்திருக்கிறது.</p><h3>கச்சா எண்ணெய்க்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதி</h3><p>உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறத்தாழ 20% முதல் 30% வரை
ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் போக்குவரத்தைச் செய்கிறது.
இதில், உலகளாவிய யூரியா ஏற்றுமதிகளில் சுமார் 35%, நைதரசன்
அடிப்படையிலான உரங்களுக்கான முதன்மை மூலப்பொருளான கடல்
வழியாகச் செல்லும் LNG-இல் சுமார் 20% ஆகியவை அடங்கும்.</p><p>
சந்தையின் கவனத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றாலும், அது

யூரியாவையும் அமோனியாவையும் கச்சா எண்ணெய்க்கு இணையான
அபாயப் பிரிவில் வைக்கிறது.
சவூதி அரேபியா, கத்தார், ஈரான், பஹ்ரைன், ஓமான் ஆகியவை இந்த
நீரிணை வழியாக ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடுகளாகும்.
</p><p>இவற்றில், சவூதி அரேபியா மட்டும் உலகளாவிய அமோனியா
ஏற்றுமதியில் ஏறத்தாழ 16% பங்களிப்பை அளிக்கிறது. ஹோர்முஸைச்
சார்ந்துள்ள ஐந்து வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து, உலகளாவிய உர
ஏற்றுமதியில் 8 முதல் 10 சதவீதம் வரை விநியோகம் செய்கின்றன.
</p><p>இது, இறக்குமதி செய்யும் 43 நாடுகள் வழியாக நடைபெறும் ஏறத்தாழ
13.5 பில்லியன் USD மதிப்பிலான வர்த்தகப் பரிமாற்றத்திற்குச்
சமமாகும்.
ஃபெப்ரவரி மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, நீரிணை
வழியாகச் செல்லும் போக்குவரத்தானது நெருக்கடிக்கு முந்தைய
காலத்தில் இருந்த அளவுகளைக் காட்டிலும் 95%-க்கும் மேலாகக்
குறைந்துள்ளது, மேலும் பிராந்திய யூரியா உற்பத்தி 55%-இலிருந்து 60%-
ஆகச் சரிந்துள்ளது.</p><h2>உரச் சரக்குகளிலிருந்து உணவு விலையேற்றம் வரை</h2><p>அதிக நைதரசன் தேவைப்படும் பயிர்களே முதலில் இந்த
நெருக்கடியால் முதலில் பாதிப்படைகின்றன. கோதுமை,
மக்காச்சோளம், அரிசி ஆகிய அனைத்தும் யூரியா மற்றும் அமோனியா
உள்ளீடுகளைப் பெருமளவில் சார்ந்துள்ளன, மேலும் இவற்றில் ஏற்படும்
எந்தவொரு பற்றாக்குறையும் பாவனையைக் குறைக்கும்படியோ
அல்லது சிறிய பரப்பளவில் பயிரிடும்படியோ விவசாயிகளைத்
தூண்டுகிறது. </p><p>இதன் விளைவாக, அடுத்த அறுவடைச் சுழற்சியில்
விளைச்சலில் ஏற்படும் மாற்றம் தாமதமாகவே வெளிப்படுகிறது; இது
நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பண்டங்களின்
விலைகளில் எதிரொலிக்கிறது.
</p><p>
எண்கள் ஏற்கனவே மாறத் தொடங்கிவிட்டன. ஃபெப்ரவரி மற்றும் மார்ச்
2026-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யூரியாவின் விலை மாதந்தோறும்
சுமார் 46% உயர்ந்துள்ளது என்றும், சில அளவுகோல்கள் ஒரு மெற்றிக்
தொன்னுக்குச் சுமார் 700 USD-ஐ எட்டியது என்றும் உலக வங்கி
தெரிவித்துள்ளது. </p><p>பெஞ்ச்மார்க் எகிப்திய கிரானுலர் யூரியாவும் அதே
காலகட்டத்தில், ஒரு மெற்றிக் தொன்னுக்கு சுமார் 400 USD-இலிருந்து
490 USD-ஆக உயர்ந்தது. கோதுமை விலை 13 சதவீதம் உயர்ந்தது,
மேலும் உலகளாவிய தானிய விலைக் குறியீடு 7 சதவீதம்
அதிகரித்தது.
உலகளவில் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான Yara, நெருக்கடி
தொடங்கியதிலிருந்து யூரியா விலை 60%-இலிருந்து 70% வரை
அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆப்பிரிக்க இறக்குமதியாளர்கள்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> இந்த
அதிர்ச்சிகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள்
முழுவதிலும் உள்ள முக்கிய உணவு இறக்குமதியாளர்களின் பயிரிடும்
கால அட்டவணைகளுடன் நேரடியாகப் பொருந்துகின்றன.</p><h3>உணவு அதிர்ச்சி கடுமையாகத் தாக்கும் இடம்</h3><p>உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு
பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள
முடியாத பிராந்தியங்களே இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளன.
</p><p>தெற்காசியா மிகவும் பாதிப்புக்குள்ளான தொகுதியாகத் திகழ்கிறது.
இதில் இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 20%-ஐ வளைகுடா
நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான் தனது நாட்டில் நைதரசனை
உற்பத்தி செய்யக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் LNG-ஐ
ஏறக்குறைய முழுமையாகச் சார்ந்துள்ளது.</p><p>
சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்காவின்
சில பகுதிகளிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும்
இந்தச் சந்தைகளில் பலவற்றில் 90%-க்கும் அதிகமான உரம் இறக்குமதி
செய்யப்படுகிறது.</p><p> சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, குறைந்த

வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் குடும்பச் செலவினங்களில்
உணவுக்காக ஏறக்குறைய 36% செலவிடப்படுகிறது; வளர்ந்த
பொருளாதாரங்களில் இது சுமார் 9%-ஆக உள்ளது. இதன்
காரணமாகவே, மிதமான உள்ளீட்டு அதிர்ச்சிகள் கூட மிகப் பெரிய
விலையேற்றப் பதிவுகளாக மாறுகின்றன.
இதன் பேரியல் விளைவு நமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான்.
</p><p>உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரிக்கும்போது, ​​மத்திய
வங்கிகள் பலவீனமான வளர்ச்சிக்கு ஏற்ப இறுக்கமான
கொள்கைகளைக் கையாளும் இக்கட்டான நிலையை
எதிர்கொள்கின்றன; இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால் நடப்புக்
கணக்குகள் மோசமடைகின்றன; மேலும், உள்ளூர் நாணயங்களின்
மீதான நம்பிக்கையும் சிதைகிறது. </p><p>அதிக உணவு இறக்குமதி
விகிதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி இருப்புகளின் காரணமாக,
எகிப்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை ஆகியவை
மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளாகத் தனித்து நிற்கின்றன.</p><p>
"சந்தை இதை ஒரு கச்சா எண்ணெய் சார்ந்த விவகாரமாகப் பார்க்கிறது,
ஆனால், இந்தத் தடையினால் ஏற்படும் பாதிப்புகளில் உர விநியோகம்
தொடர்பான அம்சம் தான், பல அறுவடைச் சுழற்சிகளிலும் தொடர்ந்து
தீவிரமடையக்கூடிய ஒன்றாக உள்ளது," என்கிறார்<a href="https://promotion.exness.com/en-as/brand_rdx/?agent=12045628&amp;app_type=trade&amp;partner_id=12045628&amp;utm_campaign=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;utm_source=google&amp;utm_medium=cpc&amp;utm_content=733975180734&amp;utm_term=exness.com&amp;adgroupid=130786932629&amp;c=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;af_c_id=15616414552&amp;gad_source=1&amp;gad_campaignid=15616414552&amp;gbraid=0AAAAADLOwXq5UVo8gnK8J9ok35UcpTKmz&amp;gclid=CjwKCAjwvNfSBhBiEiwAyaGMCY2Nch8zvSFCNHIBJLdNaoJSIZt1yMYTvc_Fr0rZWIynrk2IS39ZlRoCbbUQAvD_BwE" target="_blank"> "http://exness.com/"Exness </a>நிறுவனத்தின் நிதி உள்ளடக்கத் தலைவர்
மைக்கேல் ஸ்டார்க். "இரண்டாம் வரிசை விளைவுகள் வளர்ந்து வரும்
சந்தைத் தரவை அடையும் நேரத்தில், மறுவிலை நிர்ணயம் விரைவாக
நடக்கும் மற்றும் அது அந்த நாணயங்களுக்குச் சார்பாக இருக்காது."</p><h2>வயல்களிலிருந்து DXY-க்கு</h2><p>இங்குதான் பகுப்பாய்வுச் சங்கிலியானது அந்நியச் செலாவணிச்
சந்தையுடன் மீண்டும் இணைகிறது. இறக்குமதி செய்யப்படும் பிரதான
பொருட்களைச் சார்ந்திருக்கும் வளரும் சந்தைகளில் உணவுப்பொருள்
விலையேற்றம் துரிதமையும்போது, ​​டொலரின் மீது மூன்று விதமான
தாக்கங்கள் ஒன்றிணைகின்றன. </p><p>கொள்கை ரீதியான நடவடிக்கைகள்
விலை மாற்றத்திற்குப் பின்னரே செயல்படுவதால், மூலதனம் USD

ஆதிக்கம் செலுத்தும் சொத்துகளை நோக்கிச் சுழல்கிறது, நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை விரிவடைகிறது, மற்றும் மத்திய வங்கியின்
நம்பகத்தன்மை அழுத்தத்திற்கு உள்ளாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f68cd05b-2451-456a-8993-9822273f2652/26-6a5635988f2bf.webp' /></p><p><i><a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>Terminal மூலம் இயக்கப்படும் பிளவு-காட்சி விளக்கப்படம்.</i></p><p>
கடந்தகாலப் போக்கு சீராக உள்ளது. 2007-2008 ஆம் ஆண்டில் கச்சாப்
பொருட்களால் ஏற்பட்ட உணவுப்பொருள் விலை மாற்றத்தின்போது,
​​FAO உணவு விலைக் குறியீடு சுமார் 57% உயர்ந்தது, மேலும்
இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரங்கள் அந்தப் பாதிப்புகளைத்
தாங்கிக்கொண்டதால், டொலர் அவ்வப்போது பாதுகாப்பான
வலிமையைக் கண்டது.</p><p> 2010-2011 காலகட்டச் சுழற்சியும் இது போன்ற
ஒரு போக்கைப் பின்பற்றியது; உணவுப் பொருட்களின் விலையில்
ஏற்பட்ட 40% உயர்வு, MENA முழுவதும் அரசியல் ஸ்திரமற்ற
தன்மையை ஊக்குவித்ததுடன், பாதுகாப்பான முதலீடுகளை நாடி
மக்கள் மீண்டும் USD சொத்துகளுக்குள் செல்லவும் வழிவகுத்தது.
</p><p>தற்போதைய அமைப்பு அந்த வார்ப்புருவைப் பிரதிபலிக்கிறது. ஃபெடரல்
ரிசர்வ் மேலும் வட்டி குறைப்புகளைச் சந்தைகள் விலக்கியதால், ஏப்ரல்
2026-இல் US நுகர்வோர் விலைக் குறியீடு -CPI 3.8%-ஆக உயர்ந்தது
மற்றும் டொலர் குறியீடு 98 மற்றும் 99-க்கு இடையில் நிலைபெற்றது.
FAO எச்சரித்துள்ளபடி, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில்
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரித்தால், குறிப்பாக USDINR,&nbsp;USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.</p><p>
ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><p>USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><p>USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது.</p><p> முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><p>● யூரியா, அமோனியா, DAP ஆகியவற்றின் ஒப்பீட்டு
விலைகளில், எகிப்திய கிரானுலர் யூரியா மிகவும்
கண்காணிக்கப்படும் நைதரசன் ஒப்பீட்டு அளவாக உள்ளது.
</p><p>● நீரிணை வழியாகப் போக்குவரத்தில் உள்ள எண்ணிக்கை
மற்றும் ஏற்றப்பட்ட கப்பல் சரக்கு உட்பட பாரசீக
வளைகுடாவிலிருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் கொள்கலன்
தரவுகள்.
</p><p>● உலக வங்கி மற்றும் FAO உணவுப் பண்டக் குறியீடுகள்,
குறிப்பாகத் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளின் துணைக்
குறியீடுகள்.
</p><p>
● இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளின்
மத்திய வங்கி அறிக்கைகள்; இவற்றில் உணவுப் பொருட்களைச்
சார்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் - CPI பதிவுகள்,
வழக்கத்திற்கு மாறான கொள்கை நகர்வுகளை மேற்கொள்ள
நிர்பந்திக்கக்கூடும்.</p><p>
● EM CPI வெளியீடுகளுக்குப் பிறகு, வளர்ந்து வரும் சந்தை
நாணயங்களுக்கு எதிரான DXY-இன் நடத்தை, இதில் எதிர்வினைச்
செயல்பாடு பெரும்பாலும் அடுத்த கட்டத்திற்கான சமிக்ஞையை
அளிக்கிறது.</p><p>அந்நியச் செலாவணிக்குள்ளேயே, இறக்குமதியை அதிகம்
சார்ந்திருக்கும் வளரும் சந்தை நாணயங்கள், தங்கம் மற்றும் பரந்த DXY
ஆகியவற்றுக்கு எதிரான டொலர் ஜோடிகளில் இந்தக் கோட்பாட்டின்
மிகத் தெளிவான வெளிப்பாடுகளைக் காணலாம். </p><p>கச்சா எண்ணெய்
தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது, ஆனால் பல
பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தின் ஒரு பாதையை மட்டுமே
அது பதிவு செய்கிறது.</p><h3>செயலாக்கம் பல பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தைச் சந்திக்கும்
இடத்தில்</h3><p>குறுகிய கால விநியோகமானது உற்பத்தித் திறனைக் காட்டிலும்
அரசியல் மற்றும் ஏற்பாட்டியல் அணுகலால் வடிவமைக்கப்படும்போது,
​​பாரம்பரிய விநியோக-தேவை மாதிரிகளைச் சார்ந்திருக்கும்
வர்த்தகர்கள் எதிர்பாராத விதமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்
அபாயத்தை எதிர்கொள்கின்றனர். </p><p>அணுகல் நிலைமைகள் விரைவாக
நிலை மாறக்கூடும், மேலும் எண்ணெய் மற்றும் உணவுடன்
தொடர்புடைய நாணய ஜோடிகள் குறுகிய, சீரற்ற ஏற்ற
இறக்கங்களுடன் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யலாம், இதனால் ஒரு
மாற்றத்தைக் கண்டறிவதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்
இடையில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும்.
</p><p>
ஒரு மாற்றத்தை விளங்கிக்கொள்வது ஒரு விஷயம் எனில்,
உண்மையான சந்தை நிலவரங்களின்படி செயல்படுவது முற்றிலும்
வேறொரு விஷயம். புவிசார் அரசியல் சமிக்ஞைகள், கச்சா
எண்ணெய்க்கான அபாயக் கட்டுப்பாட்டில் செயல்பாட்டு
நிலைத்தன்மையை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகின்றன; </p><p>மேலும்
இதே தர்க்கம், அதே தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் தங்கம்,
பண்டங்களுடன் இணைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் வளர்ந்து வரும்
சந்தைக் குறுக்கு நாணய ஜோடிகளுக்கும் பொருந்தும்.
இங்குதான் <a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>இந்த விவாதத்திற்குள் நுழைகிறது. பல பாதைகளைக்
கொண்ட மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ​​CFD வர்த்தகர்கள் கச்சா
எண்ணெயை மட்டும் கண்காணிப்பதில்லை. </p><p>இதே விநியோக நிலைமை
அனைத்துச் சொத்து வகைகளிலும் பரவி வருவதால், அவர்கள் தங்கம்,
DXY, பண்டங்களுடன் தொடர்புடைய நாணயங்கள் மற்றும் வளர்ந்து
வரும் சந்தை ஜோடிகளையும் கண்காணித்து வரலாம். </p><p>ஒரே நேரத்தில்
பல சந்தைகள் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யும்போது, ​​வர்த்தகச்
செயல்பாட்டின் நிலைத்தன்மையும் பரவல் ஸ்திரத்தன்மையும் ஒரு
வர்த்தகர் தனது அபாயத்தைக் கையாளும் முறையின் ஒரு
பகுதியாகின்றன. வர்த்தகச் சூழல், நுழைவு அல்லது வெளியேறும்
புள்ளியில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தினால், ஒரு துல்லியமான
பேரியல் கணிப்பு கூட அதன் மதிப்பை இழக்கக்கூடும்.</p><p>
<a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>Terminal இந்தப் பணிப்பாய்வுக்குப் பங்களிக்கிறது. எண்ணெய்
விலையேற்றத்திலிருந்து உணவு விலையேற்றத்திற்கும், பின்னர்
நாணய மதிப்புகளுக்கும் பரவும் ஒரு மாற்றத்தைப் பின்பற்றி வரும் CFD
வர்த்தகர்களுக்கு, தொடர்பில்லாத கருவிகளுக்கு இடையில் மாறாமல்,
தொடர்புடைய கருவிகளைக் கண்காணிக்கவும், விலை மாற்றங்களை
ஒப்பிடவும், வர்த்தகங்களை மேற்கொள்ளவும் மற்றும் திறந்த வணிக
வாய்ப்புகளை நிர்வகிக்கவும் ஒரு தெளிவான வழி தேவைப்படுகிறது.
</p><p>பதிவு செய்தல், வர்த்தகம் செய்தல், நிலை மேலாண்மை மற்றும்
கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒரே இணைய மற்றும்

மொபைல் சூழலில் இருப்பதால், சந்தை நிலவரங்கள் வேகமாக
மாறும்போது, ​​பகுப்பாய்விலிருந்து செயலுக்குச் செல்வதற்கான
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதையை <a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>Terminal ஆதரிக்கிறது.
</p><p>பரந்த நோக்கில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், விநியோக
மாற்றங்கள் ஒரே ஒரு சந்தைக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை.
அவை பண்டங்கள், விளையேற்ற எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிக்
கொள்கை, FX ஆகியவற்றின் ஊடாகப் பயணிக்கின்றன. </p><p>CFD
வர்த்தகர்களைப் பொறுத்தமட்டில், அந்தத் தொடர் சங்கிலியை
முன்கூட்டியே கண்டறிவது மட்டும் சவாலாக இல்லை. அந்த வர்த்தகச்
சங்கிலி நகரத் தொடங்கும்போது, ​​அவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட
உதவும் ஒரு வர்த்தகச் சூழலை உருவாக்குவதே அந்தச் சவாலாகும்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவார் :வங்கதேச அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-hasina-comes-will-be-imprisoned-immediately-1784031270"></link>
            <id>https://ibctamil.com/article/if-hasina-comes-will-be-imprisoned-immediately-1784031270</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பினால், அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவார் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பினால், அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவார் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம் கூறினார்.
</p><p>
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்காக ஹசீனா சிறையில் அடைக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

மரண பயமின்றி ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><h2>இந்த வருடம் நாட்டிற்கு திரும்ப விருப்பம்</h2><p>&nbsp;முன்னதாக, என்.டி.டி.வி-க்கு அளித்த ஒரு பிரத்யேகப் பேட்டியில், இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கதேசத்திற்குத் திரும்ப விரும்புவதாக ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d763a6f-dbc0-4d0f-8c5b-321b0483ef83/26-6a563140cd042.webp' /></p><p>
</p><p>
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹசீனாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த வங்கதேசத்திற்கான சர்வதேசத் தீர்ப்பாயம், கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது.</p><p>&nbsp;வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பிச்சென்று அங்கு வாழ்ந்து வருகின்றமை கறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை தவிர்த்து புதிய துறைமுகத்தை அமைக்க தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uae-prepares-to-build-new-port-bypassing-hormuz-1784020073"></link>
            <id>https://ibctamil.com/article/uae-prepares-to-build-new-port-bypassing-hormuz-1784020073</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து ஒரு புதிய துறைமுகத்தை அமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து ஒரு புதிய துறைமுகத்தை அமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்படி, துபாயை தளமாக கொண்ட முக்கிய உலகலாவிய நிறுவனங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குக் கடற்கரையில் ஒரு புதிய துறைமுகம் மற்றும் கொள்கலன் முனையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை</h2><p>மேலும், ஃபுஜைரா கடற்கரையில் இந்த புதிய பல்நோக்கு துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fee679-0739-4100-a88a-895718bc6517/26-6a55fc6a9e4fb.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலில் உச்சத்தை எட்டிய எண்ணெய் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/record-high-amid-escalating-middle-east-conflict-1784031145"></link>
            <id>https://ibctamil.com/article/record-high-amid-escalating-middle-east-conflict-1784031145</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், உலகளாவிய எண்ணெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிக வரம்புநிலையை எட்டியுள்ளன.</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தொடங்கிய மோதல்களால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 86 டொலருக்கும் அதிகமாகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 80 டாலருக்கும் அதிகமாகவும் உயர்ந்தன.
</p><p>
ஈரான் மீது மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்து, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குகளுக்கு 20% கட்டணம் விதிக்கும் அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. </p><p></p><h2>&nbsp;போக்குவரத்து வழித்தடங்கள்</h2><p>இது உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576d5972-86a2-47c3-9fc0-0ccc75de7e48/26-6a5627aad478c.webp' /></p><p> </p><p>மேலும், அந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் குறைந்துள்ளதால், விநியோகத் தடைகள் குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.
</p><p>
மீண்டும் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள், எண்ணெய் விலைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடர் பிரீமியத்தைச் சேர்த்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். </p><p>மேலும், மோதல் தொடர்ந்தால் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டால், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 85-90 டாலர் வரம்பில் நீடிக்கக்கூடும் என்று சிலர் கணித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் தாமதமடைய நிதி பிரச்சனை காரணமே அல்ல..! அமைச்சர் நலிந்த விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-delayed-1784029180"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-delayed-1784029180</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்த நிதி சிக்கல்களும் இல்லை என்றும், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்த நிதி சிக்கல்களும் இல்லை என்றும், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒருவேளை திடீர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் திறன் அரசாங்கத்திடம் உள்ளது என்று அமைச்சர் விளக்கினார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினை நிதி சம்பந்தப்பட்டது அல்ல, மாறாக தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை சம்பந்தப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார்</p><h2>ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல்</h2><p>அமைச்சர் ஜெயதிஸ்ஸவின் கூற்றுப்படி, புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0af64d0-ec51-4753-9fdc-e5ee7d50e51c/26-6a5623eceb8a9.webp' /></p><p>&nbsp;முன்னதாக, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, 'டித்வா' பேரிடர் காரணமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியவில்லை என்றும், தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பேரிடர் நிவாரணப் பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.</p><p>இந்தக் கூற்றை நிராகரித்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் பேசுகையில், ‘டித்வா’ பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ரூ. 500 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஒதுக்கீட்டில் சுமார் ரூ. 260 பில்லியன் இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிதி இன்னும் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ரில்வின் கூற்றை மறுத்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ</h2><p>&nbsp;பேரிடர் மீட்புப் பணிகள் தொடர்பான செலவினங்களால் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார். திடீர் பொதுத் தேர்தல் உட்பட, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நிதி ரீதியாகத் திறன் பெற்றுள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b914bdcd-bacb-4b0f-9f0d-0f89b9a38472/26-6a5623ec45f41.webp' /></p><p>“பிரச்சினை நிதி சம்பந்தப்பட்டது அல்ல; நாடாளுமன்றத்தில் தேர்தல் முறைக்கு ஒப்புதல் அளிப்பதே பிரச்சினை. பாரம்பரியமாக, அனைத்து தேர்தல்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் நிதி தேவைப்பட்டாலும், அதை ஒரு துணை மதிப்பீட்டின் மூலம் வழங்க முடியும். எனவே, நிதி ரீதியான தடை எதுவும் இல்லை,” என்று அமைச்சர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;தேர்தல் முறைக்கு ஒப்புதல்&nbsp;அளித்தவுடன் தேர்தல்</h2><p>ஒரு தேர்தலை நடத்துவதற்கான செலவு, அனர்த்த முகாமைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கணிசமாகக் குறைவு என்றும், முந்தைய தேர்தல் ஒதுக்கீடுகள் சுமார் ரூ. 6 பில்லியனாக இருந்து, பின்னர் ரூ. 100 பில்லியனாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.. மதிப்பிடப்பட்ட அதிகபட்ச செலவு சுமார் ரூ. 15 பில்லியன் ஆக இருக்கும் நிலையில், இதன் மொத்த செலவு ரூ. 10 பில்லியன் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fa88cda-64a8-4052-903e-f557355af213/26-6a5623eb6500f.webp' /></p><p>

"'டித்வா' பேரிடருக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 500 பில்லியனில், சுமார் ரூ. 260 பில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் முறைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் 6 கட்சிகளின் கூட்டணிக்கு சவால் விடுத்த கடற்றொழில் அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-tamil-speaking-parties-joint-npp-min-challenge-1784027074"></link>
            <id>https://ibctamil.com/article/6-tamil-speaking-parties-joint-npp-min-challenge-1784027074</id>
            <summary type="text">எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட
கட்டட திறப்பு விழாவிற்கு இன்று (14) வருகை தந்த போது, தமிழ் முஸ்லிம் கட்சிகளின்
புதிய கூட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும்
கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது
மக்களுக்கு தெரிந்த விடயம்.</p><p></p><h2>தேசிய மக்கள் சக்தி</h2><p>

இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக,
திருடர்களைப் பிடிப்பதற்காக, நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது
திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல்
மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும்
நன்றாகத் தெரியும்.
</p><p>
இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்களில
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற
நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c652085d-9c0b-4c29-883e-3b2cf0b00f46/26-6a56197f7e970.webp' /></p><p> </p><p>அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு
நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்,

அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல் எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை
வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற
ஒரு போக்காகவே இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
</p><p>
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற
கூட்டணியாலும் தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது.</p><p>

ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய
செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் இன்று பிற்பகல் கோர விபத்து ஒருவரின் உயிர் பறிபோனது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fatal-accident-one-person-loses-his-life-1784026156"></link>
            <id>https://ibctamil.com/article/fatal-accident-one-person-loses-his-life-1784026156</id>
            <summary type="text">&amp;nbsp;மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
உயிரிழந்தவர், மதவாச்சியாவில் உள்ள வஹமாலு கொல்லேவ பள்ளியைச் சேர்ந்த 32 வயது நபர் ஆவார்.
</p><p>
</p><h2>பாரவூர்தி -மோட்டார் சைக்கிள் மோதி விபத்து</h2><p>ஹட்டனில் உள்ள கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ஒருபாரவூர்தி, மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியபோது இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b3f7d4-5513-4c3d-a239-94906648b160/26-6a56176e65cf7.webp' /></p><p>ஒரு நீதிமன்ற வழக்குக்காக மதவாச்சியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குச் சென்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>
பாரவூர்தியின் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மதவாச்சி காவல்துறைபோக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் சர்ச்சை : இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-airbus-aircraft-deal-ciaboc-1784025154"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-airbus-aircraft-deal-ciaboc-1784025154</id>
            <summary type="text">சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்&amp;nbsp;இலஞ்ச ஊழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அந்த ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.</p><p>

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p></p><h2>&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு</h2><p>

வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/630e6fd3-bf5b-4f6e-85e2-8b7ee64a531b/26-6a56132ff35f7.webp' /></p><p> </p><p>

அத்துடன், இந்த விசாரணைகளின் மேலதிக முன்னேற்றங்களை அறிக்கை செய்வதற்காக மற்றுமொரு திகதியை வழங்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர். </p><p>

இதன்போது, வர்த்தகரான நிமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதார முஹந்திரம்கே, நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரினார்.</p><p></p><h2>கபில சந்திரசேன உயிரிழப்பு&nbsp;</h2><p> </p><p>

இருப்பினும், குறித்த நபர் இதுவரையில் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படாததால், அவர் சார்பில் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதம நீதவான் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4341e2-0566-4a5d-9944-2d056a3d8765/26-6a56132f331ad.webp' /></p><p> </p><p>

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

வழக்கின் இரண்டாவது சந்தேகபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகபரான ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p> 

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு அஞ்சுகிறாராம் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டனின் புதுக்கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-kumara-our-namal-is-very-afraid-johnston-1784025236"></link>
            <id>https://ibctamil.com/article/anura-kumara-our-namal-is-very-afraid-johnston-1784025236</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ்சுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அனுர குமார திசாநாயக்க தற்போது அந்த அச்சத்தை மறைக்க முடியாத வகையில் நடந்துகொள்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்கு பெருகும் ஆதரவு</h2><p>"அந்த அச்சத்தை வைத்துக்கொள்ளுங்கள், கனவான்களே..." என்று கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு நகரக் கடைகளிலும் கிராமப் பேருந்துகளிலும் ஒருமித்த கண்டனத்தை சாமானிய மக்கள் கோரி வருவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d19690-227d-4ad1-b726-17bcd8e861c7/26-6a56133e6e40c.webp' /></p><p> </p><p>இன்றைய சமூகத்தில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக உருவாகி வரும் இந்த மாபெரும் மக்கள் போக்கைக் கண்டு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மிகவும் கவலை கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 பிரமுகர்களுக்கு வி.ஐ.பி பாதுகாப்பு: முற்றாக மறுக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vip-security-minister-nalindas-response-1784027500"></link>
            <id>https://ibctamil.com/article/vip-security-minister-nalindas-response-1784027500</id>
            <summary type="text">11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அளித்தார்.
</p><p>
அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, ​​அமைச்சர் இவ்விஷயம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு&nbsp;</h2><p>&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0107bc85-fee9-42fd-b051-5cf910d5e872/26-6a561c6e07820.webp' /></p><p> 


அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை</h2><p>
</p><p>
 

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரினால் இந்த பிரமுகர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக காவல்துறைமா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a275c6-5e45-4c7b-a882-c0983d0da8ef/26-6a561c6ec2270.webp' /></p><p>
</p><p>
 

அதற்கமைய, குறிப்பிடப்பட்ட நபர்கள் எவருக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என பிரதி காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பிரசன்னவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612"></link>
            <id>https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612</id>
            <summary type="text">&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) முடிவு செய்தது.</p><p>

முன்னாள் அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>சட்டத்தரணி விடுத்த கோரிக்கையும் நீதிமன்றின் அனுமதியும்</h2><p>&nbsp;சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை இன்றிலிருந்து ஓகஸ்ட் 02 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ad96f0-4b29-4a5f-a262-ac70b8af28d5/26-6a560d1dd0ee8.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அவர் மீதான பயணத்தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973"></link>
            <id>https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை 02 சரீரப் பிணைகளில்
விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c656a68-8058-4002-a30a-e79c1a1cc2b4/26-6a5607beeb451.webp' /></p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டார். </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டார்.</p><p>

மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-defers-hearing-on-suresh-sallay-s-petition-1784019981"></link>
            <id>https://ibctamil.com/article/court-defers-hearing-on-suresh-sallay-s-petition-1784019981</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்படி, குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி&nbsp;சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0d96606-8b34-433f-ad67-f8cc2a2f1eb8/26-6a560048cd790.webp' /></p><p>இதனைத் தொடர்ந்தே, மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-gold-price-rate-reduce-in-sri-lanka-1784018944"></link>
            <id>https://ibctamil.com/article/today-gold-price-rate-reduce-in-sri-lanka-1784018944</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><p>அதற்கமைய 24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று (14) 374,000 ரூபாயாக ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>ஒரு கிராமின் விலை</h2><p>மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c15d45f2-2369-4340-ab43-96c56f0d42ab/26-6a55fb009b6d5.webp' /></p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:03:51+00:00</updated>
        </entry>
    </feed>
