<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T18:40:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-change-foreign-students-journalists-visa-rules-1784220504"></link>
            <id>https://ibctamil.com/article/us-change-foreign-students-journalists-visa-rules-1784220504</id>
            <summary type="text">புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கியிருப்பதற்கான நிலையான கால அவகாசங்களை விதிக்கும் புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கால அளவு (Duration of status) முறைமை மாற்றியமைக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>உள்நாட்டுப் பாதுகாப்பு</h2><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், பரிமாற்ற வருகையாளர்களுக்கான J விசாக்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசாக்கள் இனி ஒரு கல்வித் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு காலம் முழுவதும் செல்லுபடியாகாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb5a0b4-8903-4334-83d0-7a4d892cdc9f/26-6a59155a593f6.webp' /></p><p>அதற்குப் பதிலாக பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர் விசாக்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கும்.</p><p>

அதே சமயம் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பொதுவாக 240 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
</p><p>
ஊடகவியலாளர் விசா வைத்திருக்கும் சீனப் பிரஜைகளுக்கு இக்காலம் 90 நாட்களாகக் குறைக்கப்படும்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத குடியேற்றங்கள்</h2><p>அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பும் விசா வைத்திருப்பவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் (DHS) கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.</p><p>

இந்த விதியானது காங்கிரஸின் (நாடாளுமன்றம்) மறுஆய்வுக்கு உட்பட்டு ஃபெடரல் பதிவேட்டில் (Federal Register) வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608da296-6880-4e7d-a8d1-940e440c4c3d/26-6a59155b091db.webp' /></p><p>அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், குடியேற்றமற்ற விசா வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

2025 ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகிய இரண்டின் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், நிர்வாகத்தின் பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:35:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் சவப்பெட்டிக்குள் கிடக்கும் ட்ரம்ப் :சர்வதேச அளவில் கவனம் பெற்ற பதாகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603"></link>
            <id>https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.



அமெரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><h2>கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம்</h2><p>&nbsp;ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும்ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e327d2d-b30b-4844-bf97-0faa64eea7a0/26-6a59107eef0fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை</h2><p>இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cde5262-26b3-4698-8f5b-97bf999ff20a/26-6a59107e4c39e.webp' /></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T17:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428</id>
            <summary type="text">கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cf514-54e4-426d-876b-8568e1c9204b/26-6a590951f3595.webp' /></p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wigneswaran-says-tamils-get-nothing-n-p-p-gover-1784215282"></link>
            <id>https://ibctamil.com/article/wigneswaran-says-tamils-get-nothing-n-p-p-gover-1784215282</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் இணைப்பு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.&nbsp;</p><h2>ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டு</h2><p>தங்கள் பிரதிநிதிகளான மக்களுக்கு சிங்களம் பேசும் கட்சிகளிடமிருந்து எந்த நிவாரணமும் கிடைக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf5595f-2b87-48e7-9174-6416288a7191/26-6a58fa7b7a36a.webp' /></p><p>

இந்த நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.</p><p>

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் திருப்தி அடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

அதற்குக் காரணம், அந்த மக்களின் நிலங்கள் இராணுவத்தால் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

</p><h2>மக்களின் நிலங்களில் பயிர் செய்து வருமானம் ஈட்டும் இராணுவம்</h2><p>சில நிலங்களில் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இராணுவம் வருமானம் ஈட்டி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ac0f94-1067-4419-aae8-6ce7c94c6923/26-6a58fa7c55609.webp' /></p><p>
</p><p>
இத்தகைய உண்மைகளின் காரணமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கங்களின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.</p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதாகவும், சம உரிமைகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 400 ஐ கடந்தன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்
நடைபெற்றது.
</p><p>
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416
எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு
அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்</h2><p>இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளன. அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876b9d13-46a2-4136-9992-7c56a64dbc4d/26-6a58f1ebb9ef2.webp' /></p><p>
</p><p>
130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட
வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,
சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212</id>
            <summary type="text">நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய்
விட்டது என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை&nbsp;விடுவித்திருந்தோம்</h2><p>
</p><p>
யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு
வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி
விடுவித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6471e7a9-3bf0-4660-a47b-0507b16431bd/26-6a58e96135c9a.webp' /></p><p>
</p><p>
கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்திலும் பெருமளவான காணிகளை
விடுவித்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை
முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல்
போய்விட்டது.</p><p>

ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த
காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனை</h2><p>
</p><p>
அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நாமே முதலில்
தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும்
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95b559e-2e0f-4fa8-9b41-4b35aa9c3278/26-6a58e961e5f89.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப்
பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அவ்வேளை காணாமல் போனோர்
விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி
போராட்டங்களை முன்னெடுத்தோம்.</p><p> அக்கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார்
600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை
தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு
அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.</p><p></p><p>
</p><p>
</p><h2>விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு</h2><p>இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள்
பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள்
மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fd4e4-f658-49d7-ac41-887aba67fd46/26-6a58e962a6702.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள்
ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த
காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு
அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146"></link>
            <id>https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146</id>
            <summary type="text">
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர் -மணற்சேனை இந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
மூதூர் -மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.</p><p>

இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை
இடம்பெற்றது.</p><p></p><h2>மலர்தூவி அஞ்சலி</h2><p>இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி
அஞ்சலியும் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d395206-da5b-4ead-b94e-994b3d20a134/26-6a58e66ba1fc3.webp' /></p><p>
</p><p>
1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல்
சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T14:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030"></link>
            <id>https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030</id>
            <summary type="text">


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றுமுன்தினம்(14), வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கொலன்னாவாவைச் சேர்ந்த 38 வயதான ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாண நபர்கள்</h2><p>

விசாரணைகளின்படி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, சந்தேக நபர் சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாக பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56c1c4b-3b14-4233-b3e0-9d5795af5e2a/26-6a58b64550796.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு 100,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மேலும், மல்லாகம் காவல்நிலையத்திலும் சந்தேக நபருக்கு எதிராகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களின் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965"></link>
            <id>https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965</id>
            <summary type="text">ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவொர்க் சர்க்சியன் அண்மையில் தெரிவித்தார்.</p><p>

பொருளாதார நிலைத்தன்மையும் பொருளாதார மீட்சியும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்றும், பல இலங்கையர்கள் ஒவ்வொரு நாளும் அந்த வேறுபாட்டை உணர்ந்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>இன்னமும் நெருக்கடியில் சம்பளம்</h2><p>&nbsp; ஊதியங்கள் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்று உலக வங்கியின் முகாமையாளர் கூறினார். வேலைவாய்ப்புச் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றும், குறிப்பாகப் பெண்கள் பெரும் சிரமத்தை உணர்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e227eb-24ed-46a5-84af-5a42aa1a11b1/26-6a58dde21f0f5.webp' /></p><p>இலங்கை நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவிட்டது, ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறினார்.</p><p></p><h2>பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு காரணங்கள்</h2><p> டித்வா புயலும் மத்திய கிழக்கு நெருக்கடியும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தைக் கடினமாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். அதனால்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d16f939-eccf-428e-bd3c-b9c377d42899/26-6a58dde1707bf.webp' /></p><p>நாட்டில் அடையப்பட்ட பொருளாதார முன்னேற்றம் மக்களின் அன்றாட வாழ்வில் உணரப்படுவதை உறுதி செய்துகொண்டு, இலங்கை தனது சீர்திருத்த செயல்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>இதற்காக, தனியார் துறையால் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு உருவாக்கம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவா தலையீடு கோரும் ராஜபச்ச AND CO! ஏன்... ஏதற்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-co-demand-geneva-intervention-1784207359"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-co-demand-geneva-intervention-1784207359</id>
            <summary type="text">இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்னிக்கவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், போன்ற அன்ட கோக்கள் நிலா நிலா ஓடிவா பாணியில் ஐ.நாவின் ஜெனிவா அரங்கமே ஓடி வா வா நில்லாமல் ஓடிவா என வருந்தி அழைக்கும் நிலைமை வந்துவிட்டது.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அனுர தரப்பின் நகர்வுகளை தமது எதிர்ப்பு துருப்புசீட்டு அரசியலாக பிடித்துளள்மை இந்த அன்ட் கோ முகம் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட பணியகத்துக்கு நேற்று ஓடோடிசென்று அனுர அரசாங்கத்துக்கு ஜெனிவா அழுத்தத்தை உருவாக்கவேண்டும்! </p><p>

அரசாங்கத்திடம் விளக்கம் கோரவேண்டும் அடுத்த ஜெனிவா அமர்வில்; இந்த விடயம் சேர்க்கப்படவேண்டும் என டம் டும் என விடாப்பிடியாய் நிற்கின்றன.
</p><p>
தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளை ஜெனிவா அரங்கில் இருந்து எடுக்கவேண்டும் என பலவருடங்களாக கத்தித்குளறும் அன்ட் கோ முகங்கள் இப்படி ஒரு நிலைப்பாட்;டை எடுத்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KT5r6bvanLw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான காற்று தரம் கொண்ட நகரங்கள் : முதலிடம் பிடித்தது கனடாவின் ரொரண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/toronto-wildfire-smoke-blanket-1784204676"></link>
            <id>https://ibctamil.com/article/toronto-wildfire-smoke-blanket-1784204676</id>
            <summary type="text">கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான &#039;I...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான 'IQAir' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட பெரிய நகரங்களின் பட்டியலில் டொரண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.&nbsp;</p><p>கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. அங்கிருந்து வீசும் பலத்த காற்று மற்றும் அடர்ந்த புகை மூட்டம் தெற்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த டொரண்டோ நகரத்தையும் சூழ்ந்துள்ளது.</p><h2>டொரண்டோவின் வான்பகுதியில் ஏற்பட்ட மாற்றம்</h2><p>


புகை மூட்டம் காரணமாக டொரண்டோவின் வானம் ஒளிரும் ஒரேஞ் மற்றும் மங்கிப்போன மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் நகரின் முக்கிய அடையாளமான 'சிஎன் டவர்' கூட தெளிவாகத் தெரியாத அளவுக்குப் புகை சூழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c002da8c-1e48-486e-ba87-a4b04f781c17/26-6a58d766a4add.webp' /></p><p>
</p><p>

காற்று மாசுபாட்டுடன் இணைந்து டொரண்டோவில் கடும் வெப்ப அலையும் வீசி வருகிறது. நகரின் மையப்பகுதியில் வெப்பநிலை சுமார் 37.3 டிகிரி செல்சிஸ் ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை</h2><p>சுற்றுச்சூழல் அமைப்பான 'என்விரான்மென்ட் கனடா' டொரண்டோவிற்கு மிக உயர்ந்த அபாய அளவைக் குறிக்கும் "10+" காற்றுத் தர குறியீட்டுடன் ஒரேஞ் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe528700-2218-4594-82b0-3b4b95e34e32/26-6a58d76754f55.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவசியமாக வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>


காற்று மாசுபாடு காரணமாக நகரின் பல பொது நீச்சல் குளங்கள், கோடைகால முகாம்கள் மற்றும் புகழ்பெற்ற 'ஃபிஃபா உலகக்கோப்பை ரசிகர் திருவிழா' நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:06:55+00:00</updated>
        </entry>
    </feed>
