<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-19T23:31:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: தமிழரசுக்கட்சிக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sambanthan-was-a-curse-to-trinco-anushan-1784502924"></link>
            <id>https://ibctamil.com/article/sambanthan-was-a-curse-to-trinco-anushan-1784502924</id>
            <summary type="text">தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராகச் சம்பந்தனைத் தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்தோடு, தமிழர்களின் காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நடப்பு அரசியல் குறித்து அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356"></link>
            <id>https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. </p><p>அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 நாட்கள்) சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் (தலைகீழ் இயக்கம்) பயணிக்கவுள்ளார்.</p><p>

நீதி மற்றும் கர்மாவின் அதிபதியான சனி வக்ரமடையும் போது, கடந்த காலப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்.</p><p> இந்த 138 நாட்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குச் சவாலாக அமையவுள்ளதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.</p><p>அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசிக்காரர்கள் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் பணியிடத்தில் கூடுதல் அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். </li><li>இதனால் பணிச்சுமை அதிகரிக்கலாம்.</li><li> இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும். </li><li>இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக முடிக்க எச்சரிக்கை மற்றும் கவனமாக திட்டமிடல் அவசியம்.
</li><li>
அலுவலகத்தில் சக ஊழியர்களால் அவர்கள் சில சூழ்ச்சிகளில் சிக்க நேரிடலாம் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம். </li><li>வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும் லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும் இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.</li></ol></td></tr><tr><td>சிம்மம் </td><td><ol><li>சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடலாம். </li><li>வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். </li><li>உங்கள் தொழில் வாழ்க்கையிலும் பல சவால்கள் இருக்கும்.</li><li>மேலும் மக்கள் உங்களிடமிருந்து அதிக வேலையை எதிர்பார்ப்பார்கள் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.</li><li>உங்கள் மேலதிகாரிகளுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம் இதனால் நீங்கள் விரக்தியடைய நேரிடலாம்.</li><li> உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.</li><li> உங்களின் அனைத்து முயற்சிகளிலும் சில தடைகளை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக அடியெடுத்து வைக்கவும்.

</li></ol></td></tr><tr><td>தனுசு</td><td><ol><li>தனுசு ராசிக்காரர்கள் சனிபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் குடும்பப் பொறுப்புகள், தொழில் விஷயங்கள் மற்றும் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளில் அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். </li><li>குடும்பத் தேவைகள் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகள் முக்கியமான தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம். </li><li>அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். </li><li>அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது.</li><li>அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.</li><li> இல்லையெனில் அது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். </li><li>வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:59:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மகுடம் சூடிய ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087"></link>
            <id>https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087</id>
            <summary type="text">23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p> அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. </p><p>

இதில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p></p><h2>நான்காவது முறை</h2><p>

நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. 

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. </p><p>

இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/356eb2a5-4f67-43a5-88bb-4434d3f61e94/26-6a5d56cc61c1f.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் அவற்றை கோலாக மாற்றத் தவறின.</p><p>

இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.</p><p> </p><p></p><h2>உலகக் கோப்பை&nbsp;</h2><p>இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.
</p><p>
கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c03ec0b0-18d4-404d-a34c-88793e23ec33/26-6a5d56cd1787a.webp' /></p><p>அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும் ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.
</p><p>
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வெடித்தது அமெரிக்கா - ஈரான் போர்! உடன்படிக்கை முறிந்து உள்கட்டமைப்புகள் மீது பரஸ்பர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-attacks-iran-nuclear-plant-as-war-escalates-1784489806"></link>
            <id>https://ibctamil.com/article/us-attacks-iran-nuclear-plant-as-war-escalates-1784489806</id>
            <summary type="text">ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும் ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டும் ஒருவர் காணாமல் போயுமுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.</p><p> 

ஈரானின் தென்மேற்கு நகரான தர்கோவைனில் கட்டுமானப் பணியில் இருந்த அணுமின் நிலையம் மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றின் மீது அமெரிக்கா, இரவு நேரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
அதேவேளை குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையம் மீதும் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>அப்பட்டமான தாக்குதல்கள்</h2><p>இதற்கிடையில், இன்று ஈரானால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை ஜோர்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன் நான்காவது ஏவுகணை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் விழுந்ததாக ஜோர்தான் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், ஜோர்தானின் அகபா துறைமுகம் இலக்கு வைக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/680305df-58da-4c9c-9a8b-4b4caa8dd417/26-6a5d3d7c93e3e.webp' /></p><p>இந்த நியாயமற்ற மற்றும் அப்பட்டமான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ள ஜோர்தான் வெளிவிவகார அமைச்சு, நாட்டின் பாதுகாப்பு என்பது மீற முடியாத ஒரு சிவப்புக் கோடு என எச்சரித்து அம்மானில் உள்ள ஈரானிய தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டுள்ளது.</p><p>

கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன் ஆரம்பகட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே அது முறிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-s-most-expensive-melon-1784488699"></link>
            <id>https://ibctamil.com/article/world-s-most-expensive-melon-1784488699</id>
            <summary type="text">பழங்களின் சந்தையில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் யுபாரி கிங் எனும் அரிய வகை முலாம்பழம் பயிரிடப்படுகின்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்களின் சந்தையில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் யுபாரி கிங் எனும் அரிய வகை முலாம்பழம் பயிரிடப்படுகின்றது.
</p><p>
முலாம்பழங்களின் அரசன் என இது அழைக்கப்படுகிறது.
</p><p>
சாதாரணப் பழங்களைப் போலன்றி, இந்த அரிய வகை முலாம்பழங்களின் ஒரு ஜோடி இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய் (25,000 அமெரிக்க டாலர்கள்) வரை ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>அபாரமான சுவை</h2><p>இதன் அபாரமான இனிப்புச் சுவை, தனித்துவமான நறுமணம் மற்றும் சாறு நிறைந்த சதைப்பகுதிக்காக சர்வதேச அளவில் இப்பழம் பெரும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.</p><p>

உயர்தரம் மற்றும் மிகக் கடுமையான, பிரத்யேகமான பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றிப் பயிரிடப்படுவதால் இதன் அரிதான தன்மையும் சந்தை மதிப்பும் பல மடங்கு உயர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e12830e-a54e-4d41-a75b-4af1a7da3a56/26-6a5d257dd141e.webp' /></p><p>

சாதாரண மக்கள் வாங்க முடியாத விண்முட்டும் விலையைக் கொண்ட இந்த முலாம்பழங்கள், ஜப்பானிய கலாச்சாரத்தில் பெரும்பாலும் மிக உயர்தரமான ஆடம்பரப் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன.</p><p>

சுவைக்காக மட்டுமின்றி கற்பனை செய்ய முடியாத அதன் வியக்கத்தக்க விலையின் காரணமாக, உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் விந்தையான பழங்களின் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகைக்குப் புறப்படும் லெபனான் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lebanon-president-aoun-meet-trump-at-white-house-1784476394"></link>
            <id>https://ibctamil.com/article/lebanon-president-aoun-meet-trump-at-white-house-1784476394</id>
            <summary type="text">லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.</p><p>

இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p>

கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p></p><h2>தொடர் தாக்குதல்</h2><p>

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ee90af-14aa-43cf-b7d8-d2338300e491/26-6a5d018f965cb.webp' /></p><p>ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ட்ரம்ப்பிடம் அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார்.
</p><p>
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.</p><p></p><h2>லெபனானின் இறையாண்மை</h2><p>

லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்கத் ட்ரம்ப்பின் தலையீடே ஒரே தீர்வு என்று லெபனான் அரசு நம்புகிறது.
</p><p>
முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி, கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன், ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69cefc4-d993-4aab-842e-4909bf9ac9a5/26-6a5d018ecf457.webp' /></p><p>இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால், ஹிஸ்புல்லா ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், நாட்டின் பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.</p><p>

இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-fire-sparks-traffic-jam-on-southern-highway-1784480462"></link>
            <id>https://ibctamil.com/article/bus-fire-sparks-traffic-jam-on-southern-highway-1784480462</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்துப் பேருந்தில் இன்று (19-07-2026) மாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>இயந்திர கோளாறு</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9593c5a0-8157-47f3-baa3-e052fbe86707/26-6a5d0aaa3d61c.webp' /></p><p>பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகக் காலி நோக்கிப் பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடமாற்றல் பகுதியில் வெளியேற்றி, சாதாரண வீதியூடாகப் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T19:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-warns-iran-of-direct-retaliation-over-quake-1784483808"></link>
            <id>https://ibctamil.com/article/israel-warns-iran-of-direct-retaliation-over-quake-1784483808</id>
            <summary type="text">ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இஸ்ரேல் எந்தவொரு சார்போ அல்லது நிபந்தனையோ இன்றி பதிலடி கொடுத்துத் தாக்கும் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோல், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) தலைமைப் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் காமிர் (Lt. Gen Eyal Kamir), நாட்டின் இராணுவம் போரை உடனடியாக மீண்டும் தொடங்குவதற்குத் தயாராக உள்ளது மற்றும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் எவருக்கும் எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மூன்று ஏவுகணைகள்</h2><p>

இன்று அதிகாலையில் ஜோர்டானிய நகரமான அகபாவைக் (Aqaba) குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்த தாக்குதல் இஸ்ரேலின் எல்லைக்கு மிக அருகில் நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3177b3a-92b5-47ac-b7c5-2bd7c4e6d8fc/26-6a5d1fb8ad5f5.webp' /></p><p>

ஜோர்டான் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், நான்காவது ஏவுகணை ஒரு தொலைதூரப் பகுதியில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது. </p><p>

சில ஏவுகணைகளை இடைமறிப்பதில் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளும் பங்கேற்றதை ஐடிஎஃப் (IDF) பின்னர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-19T19:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு கனடா விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-to-temporarily-bar-entry-for-foreigners-1784484035"></link>
            <id>https://ibctamil.com/article/canada-to-temporarily-bar-entry-for-foreigners-1784484035</id>
            <summary type="text">&amp;nbsp;எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய, தற்காலிக எல்லை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 21 நாட்களுக்குள் காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய, தற்காலிக எல்லை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 21 நாட்களுக்குள் காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டினருக்கும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று கனடா அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
</p><p>
இந்தத் தடை, உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுரைக்கு முரணானது. காங்கோவுடனான பயண அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று அந்த அமைப்பு அறிவுறுத்துகிறது.</p><h2>&nbsp;ஐ.நா. சுகாதார அமைப்பின் அறிவிப்பு</h2><p> </p><p>அங்கு அதிகாரிகள் தற்போது ஒரு பெரிய எபோலா பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். பயணக் கட்டுப்பாடுகள் களங்கத்தை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதையும் கடினமாக்கும் என்று சுகாதார அமைப்பு கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9029f48-c90a-4981-a321-3abb75c2ba13/26-6a5d1576bb928.webp' /></p><p>&nbsp;"பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஆபிரிக்க சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நியாயமற்ற சந்தேகத்தை எதிர்கொண்டுள்ளனர்," என்று கடந்த மாதம் ஒரு அறிக்கையில் WHO கூறியது. "எபோலாவின் பரவல் தேசியம் அல்லது இனத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை." காங்கோவின் எபோலா பரவல் சர்வதேச அளவில் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்று WHO மதிப்பிடுகிறது.</p><p></p><h2>கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயத்தை குறைக்கும்</h2><p>&nbsp;ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், கனடாவின் பொது சுகாதார நிறுவனம், "கடந்த 21 நாட்களில் (காங்கோவிற்கு) சென்றிருந்த வெளிநாட்டினரின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்" என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dfebd30-a168-426a-ae4f-0a48a43043ac/26-6a5d15776af0b.webp' /></p><p>இந்த நடவடிக்கைகள் ஜூலை 20, திங்கட்கிழமை, கிழக்கு பகல் நேரப்படி (EDT) இரவு 11:59 மணிக்கு அமலுக்கு வரும் என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T18:20:42+00:00</updated>
        </entry>
    </feed>
