<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-15T00:17:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றிற்குள் புதையல் வேட்டை...! மூவர் கைது - தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-for-treasure-hunting-1784073976"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-for-treasure-hunting-1784073976</id>
            <summary type="text">வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இவ்வாறு கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>புலனாய்வு விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தம்புத்தேகம, பிலிபேவ பகுதியில் உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள வீட்டிலேயே இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அந்த வீட்டின் சமையலறையினுள் 4.5 x 5.5 அடி அளவிலும் சுமார் 20 அடி ஆழத்திலும் சுரங்கம் போன்ற குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da99e97-f9c8-4c24-9341-56935f42878d/26-6a56d056cd0f1.webp' /></p><p>அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், வீட்டின் அறை ஒன்றிற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறையின் புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பெண்ணும் மற்றைய ஆணும் இந்த புதையல் தோண்டும் பணிக்காகப் பணம் செலவிட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து நீர் மோட்டார், நீர் குழாய், கம்பி சுருள், மண்வெட்டி மற்றும் மண் தோண்டுவதற்கும் மண்ணை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>இந்த புதையல் தோண்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி அதனை வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் கல்கமுவ, எஹெட்டுவெவ காவல் அதிகாரப் பிரிவில் வசிக்கும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c07fd9-4dc3-4481-9818-9f041109ed2b/26-6a56d0577dc13.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புத்தேகம தீர்க்கப்படாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு: அப்பட்டமான அரசியல் தேவை - ஹர்ஷ டி சில்வா காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harsha-opposes-move-to-extend-judges-retirement-1784071570"></link>
            <id>https://ibctamil.com/article/harsha-opposes-move-to-extend-judges-retirement-1784071570</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு
முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு
முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசியல் தேவை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துத்
துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை
ரீதியிலான விவாதம் அவசியம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d93a20ca-ea3e-4c9d-a0b1-9853d49fac1a/26-6a56c8843ca46.webp' /></p><p>அதை விடுத்து திடீரென ஒரு சட்டமூலத்தைக்
கொண்டுவந்து குறிப்பிட்ட சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்க
முற்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
</p><p>
அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது வெறும் 8 அல்லது 16 நபர்களின்
பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இருக்குமாயின் அது ஓர் அப்பட்டமான அரசியல்
தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.</p><p> </p><p></p><h2>தவறான நடவடிக்கை</h2><p>இத்தகைய போக்கு நாட்டின் மிக
உயர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும்.
</p><p>
முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின்
பதவிக்காலத்தை நீடிக்க முற்பட்டபோதும் பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து
நீக்கியபோதும் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc1e9b48-227b-4beb-9cf5-e7960d3a4fd7/26-6a56c8836aa72.webp' /></p><p>அந்த மோசமான விளைவுகளை
நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
</p><p>
எனவே அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை மட்டுமன்றி நாட்டின் கல்விமான்கள்,
சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின்
கருத்துகளுக்கும் மதிப்பளித்து இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட
வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் கட்சிகளின் புதிய சங்கமம்: அரசுக்குத் தொடர்பில்லை என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-denies-role-in-tamil-speaking-parties-union-1784067676"></link>
            <id>https://ibctamil.com/article/govt-denies-role-in-tamil-speaking-parties-union-1784067676</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின்
பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த
ஜயதிஸ்ஸ த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின்
பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த
ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல்
திணைக்களத்தில் நேற்று (14-07-2026) நடைபெற்றது.</p><p> 

இதன்போது, நேற்றுமுன்தினம் கொழும்பில்
உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றியத்தின் பின்னணியில் அரசின்
தலையீடு ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p></p><h2>புதிய கூட்டணிகள்</h2><p>

அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எதிரணிகளின் ஒன்றிணைவு குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம்தான் நீங்கள் கேள்வி
எழுப்ப வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ae3002-bca5-4982-87c7-d11c63eb752f/26-6a56bf8411d37.webp' /></p><p> 

ஆளுங்கட்சிக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என்னிடம்
கேளுங்கள். </p><p>

எதிரணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது எதிர்க்கட்சித்
தலைவரின் பொறுப்பாகும்.</p><p> 

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் எமக்கு 159
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது.
</p><p>
 அவர்களுடன் நாம் எமது பயணத்தை
முன்னெடுத்து வருகின்றோம் எனவே புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய
தேவைப்பாடு எமது அரசுக்குக் கிடையாது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் விஜயம் குறித்த சர்ச்சை: வதந்திகளுக்கு அரசு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-denies-reports-on-akd-s-france-visit-1784063568"></link>
            <id>https://ibctamil.com/article/govt-denies-reports-on-akd-s-france-visit-1784063568</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயமானது தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயமானது தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. </p><p>

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இராஜதந்திர பேச்சுவார்த்தை</h2><p>


மேலும் தெரிவித்த அவர், இந்த விஜயத்திற்கான திகதிகள் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/549e756d-f88c-4b4f-af47-f80378b443f0/26-6a56b53a89bd5.webp' /></p><p>சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் எப்போதும் நம்பகமானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் யார் என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இரு தரப்பினருக்கும் வசதியான கால அட்டவணை குறித்து இராஜதந்திர மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராகப் பாரிய கடற்படை முற்றுகையை ஆரம்பித்த அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-resumes-naval-blockade-on-iranian-ports-1784060931"></link>
            <id>https://ibctamil.com/article/us-resumes-naval-blockade-on-iranian-ports-1784060931</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த பதிவில், “ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இராணுவ விமானங்கள்</h2><p> 

தற்போதைய நிலையில், இப்பிராந்தியத்தின் கடல் மற்றும் வான் பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில் 20 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களும் நூற்றுக்கணக்கான நவீன இராணுவ விமானங்களும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff0472b-8d28-4455-8f47-36be2c1db692/26-6a56a2da3ad26.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த கடுமையான நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்! பல ட்ரோன்கள் அழிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claims-it-destroyed-us-weapons-in-gulf-1784056092"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claims-it-destroyed-us-weapons-in-gulf-1784056092</id>
            <summary type="text">பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அத்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்தோடு இதன் போது பல அமெரிக்க ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) செய்தி இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7802de1f-6709-4592-9e2d-3b0ea0c9584b/26-6a569adf55c88.webp' /></p><p>இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது விரோதப் போக்கைத் தொடரும் வரை இப்பிராந்தியத்திலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் மேலும் தாமதப்படுத்த மட்டுமே வழிவகுக்கும் எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதலால் உலகளாவிய மனிதாபிமானப் பேரழிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562"></link>
            <id>https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் பின்னடைவு என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன் நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மனித உரிமைகள்</h2><p>

இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d480c24d-812c-4a05-9865-99bbafd96873/26-6a56885522d67.webp' /></p><p>உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>உணவுப் பொருட்கள்</h2><p>இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1e8175-59c2-4c74-a90f-78c8bbac0931/26-6a56885470e73.webp' /></p><p>தற்போதைய இக்கட்டான சூழலில் இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14-07-2026) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>அதிகாரப்பூர்வ இணையத்தளம்</h2><p>இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd59717-f686-412e-ac40-7d4eb6a1728b/26-6a56808acc016.webp' /></p><p>மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப் பொருளாதாரத்தை முடக்க ஈரானின் ஆபத்தான வியூகம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

ஏமனில் உள்ள தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.</p><p>

ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடப்போவதாக ஈரான்
மறைமுகமாக எச்சரித்துள்ளது.
</p><p>
வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம் உலகின் மிக
முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்க ஈரான் முயன்று வருகிறது.</p><p></p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹூதி
அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் இது குறித்து எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67281cf2-92f6-4399-9221-c80c994ca873/26-6a566d4bac8e4.webp' /></p><p>குறித்த எச்சரிக்கையில், “நிலைமை மேலும் மோசமடைந்தால் பாப் எல்-மண்டேப் நீரிணையும்
ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.
</p><p>
இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப்
பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல்
போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது.</p><p>

ஈரானின் இந்த நகர்வு, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என்று அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4931d9c7-1f11-4540-b80c-241fd532684d/26-6a566c668b819.webp' /></p><p>அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால் ஈரான் தனது இறுதி ஆயுதமாக
இதைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
அதே நேரத்தில் ஹூதிகள் இந்த எல்லையைத் தாண்டினால் அமெரிக்கா மற்றும் அதன்
நட்பு நாடுகள் அவர்கள் மீது இன்னும் கடுமையான கூட்டு இராணுவத் தாக்குதலை
நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:05+00:00</updated>
        </entry>
    </feed>
