<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-10T22:45:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களுக்கு அமைச்சரைக் குறைகூறுவதில் நியாயமில்லை! முன்னாள் அமைச்சர் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranjan-defends-minister-over-prison-riot-1783720078"></link>
            <id>https://ibctamil.com/article/ranjan-defends-minister-over-prison-riot-1783720078</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல அது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடு என்பதே உண்மையாகும்.</p><p>

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில் இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றேயாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083b7c85-4eb1-406d-ba9f-82c2ba5bfb08/26-6a516ab581dc0.webp' /></p><p>இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது. 

நானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவேன்.</p><p> 

அதே போலவே நானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்தேன்.

மேலும் சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.</p><p></p><h2>பெரிய பேரழிவு</h2><p> 

சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.</p><p>

இதேவேளை இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8035e9-e3b5-46ec-821a-90360a63e77b/26-6a516ab4b8d39.webp' /></p><p>

இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன் என்று தைரியமாக முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது.</p><p>

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம். </p><p>

அதேபோன்று உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T22:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lankan-woman-attacked-by-italian-husband-1783715443"></link>
            <id>https://ibctamil.com/article/lankan-woman-attacked-by-italian-husband-1783715443</id>
            <summary type="text">இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கை பெண்ணே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரான 41 வயதுடைய இத்தாலிய நபரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்ணாடிப் போத்தல்&nbsp;</h2><p>குறித்த நபர் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதையடுத்து படுகாயமடைந்த பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3919d33a-3a2c-4309-bdd7-4e3d20e47c2e/26-6a5157c02c55c.webp' /></p><p>மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 தாக்குதல் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[TTMN7PP
]</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539"></link>
            <id>https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
</p><p>
இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.
</p><p>
இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், "அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள். </p><p>

அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது" என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_MFgBUULEYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-of-huge-strikes-if-iran-kills-him-1783705504"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-of-huge-strikes-if-iran-kills-him-1783705504</id>
            <summary type="text">ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கின் போதே ட்ரம்பைக் கொல்லுமாறு கோரி காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளைக் (Banners) சுட்டிக்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>இலக்குப் பட்டியல்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். </p><p>

நாம் இத்தகையதொரு சூழலையே எதிர்கொண்டுள்ளோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e59fe2-60f7-480c-b2e1-f9f37e0c4992/26-6a5138fb06d86.webp' /></p><p>ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் இதற்கு முன் பார்த்திராத அளவிலான மட்டங்களில் மிகக் கொடூரமாக அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்துமாறு நான் அறிவுறுத்தல்களை விட்டுச் சென்றுள்ளேன்.
</p><p>
தெஹ்ரான் (ஈரான்) தான் இறக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விரும்புகின்றது.</p><p>

நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ratnapura-5-arrested-for-illegal-gem-mining-1783701913"></link>
            <id>https://ibctamil.com/article/ratnapura-5-arrested-for-illegal-gem-mining-1783701913</id>
            <summary type="text">இரத்தினபுரியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியிலே இவ்வாறு சந்தேகநபர்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a52263-e4d3-4c8a-ab3d-3d5ec7aef160/26-6a512c566dca5.webp' /></p><p>கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T17:36:27+00:00</updated>
        </entry>
    </feed>
