<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-14T05:22:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் : எதிர்தரப்பு எம்.பியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extend-supreme-court-judges-retirement-age-1784001996"></link>
            <id>https://ibctamil.com/article/extend-supreme-court-judges-retirement-age-1784001996</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து&amp;nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து&nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்த முன்மொழிவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட போது அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படாத பின்னணியில், அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் கடுமையான பிரச்சினை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>&nbsp;சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில், "இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு பிரதம நீதியரசர் கோரவில்லை. உயர்நீதிமன்ற நீதியரசர்களோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களோ கோரிக்கை விடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6053f2c8-7c69-493b-894a-fa7ef2abb028/26-6a55c29c6c71e.webp' /></p><p> </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரவில்லை. அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. </p><p>அதேபோல், நாடாளுமன்றத்தில் இதுவரை எவரும் இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான அடிப்படை என்ன என்பதை முன்வைக்கவில்லை. நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுவிலும் இந்த யோசனை விவாதிக்கப்படவில்லை.</p><p></p><h2>அரசாங்கத்தின் செயற்பாடு</h2><p> </p><p>அப்படியானால், யார் இவ்வாறானதொரு முன்மொழிவைக் கொண்டு வருகிறார்கள், யாரும் இல்லை. அதாவது இதன் பின்னணியில் மறைமுக நோக்கம் உள்ளது. தனிப்பட்ட மட்டத்திலான குழுவொன்றின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைவு எமக்குக் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04368d6-a338-4e8d-a5b1-7ce19e47dd62/26-6a55c29d6cb90.webp' /></p><p> </p><p>அரசாங்கம் நிச்சயமாக இதனைச் செய்யும். நீதிமன்றத்தின் அதிகார சமநிலையை தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்ற விடயத்தை நாம் இப்போது உறுதியாக அறிவோம்.</p><p> டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. எனவே இதில் பெரும் மர்மம் நிலவுகிறது." என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது பாடசாலை மாணவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966"></link>
            <id>https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966</id>
            <summary type="text">ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p> 

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சிறுவனைத் தேடும் பணி</h2><p> 

காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d34e4c-2d79-4fee-8d27-d6a29c1758ce/26-6a55bd1436a70.webp' /></p><p>காவல்துறை கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:45:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/agrahara-insurance-database-of-govt-employees-1783998965"></link>
            <id>https://ibctamil.com/article/agrahara-insurance-database-of-govt-employees-1783998965</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, அக்ரஹார காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்&nbsp;அனைத்து அரச ஊழியர்களும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் இக்காப்புறுதியின் நேரடிப் பயனாளிகளாக உள்ளதுடன் இவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 30 இலட்சம் பேர் இதன் கீழ் பயன் பெறுகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>6 இலட்சம் அரச ஊழியர்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்ரஹார தரவுத்தளத்தை புதுப்பிக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரையில் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் தங்களது விபரங்களை புதுப்பிப்பு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e9b62-2650-460e-8429-2d9738eca6b6/26-6a55b1bc0ce39.webp' /></p><p> </p><p>

சுமார் 1,900 அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அக்ரஹார காப்புறுதியில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் அக்ரஹார ஒருங்கிணைப்பு அதிகாரிகளைப் பெயரிட்டு அனுப்புமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p> இதுவரை அவ்வாறு அதிகாரிகளைப் பெயரிடாத நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.&nbsp;</p><p></p><h2>காப்புறுதிப் பயன்கள்</h2><p> அரச ஊழியர்கள் இந்த தரவுத்தளத்தில் உள்ளிடும் விபரங்களின் துல்லியத்தன்மையை அந்தந்த நிறுவனத்தின் அக்ரஹார விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும் நிறுவனத் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமே இந்த தரவுத்தள திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673b1359-f5d5-4f25-b727-0d6f6c9a4948/26-6a55b214244bd.webp' /></p><p> 

ஒவ்வொரு அரச நிறுவனமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் இந்த தரவுத்தளத்தின் ஊடாக மட்டுமே காப்புறுதிப் பயன்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-kks-to-colombo-fort-train-time-table-today-1783999452"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-kks-to-colombo-fort-train-time-table-today-1783999452</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>குறித்த தொடருந்து சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு தொடருந்து நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, நாளை (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

தொடருந்து இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தொடருந்து சேவையை நிறுத்துவதற்கு தொடருந்து நிர்வாகம் தீர்மானித்திருந்தது.</p><p></p><h2>நகராந்தர கடுகதி தொடருந்து&nbsp;</h2><p> 

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு தொடருந்து பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcbeb92-6551-42d5-8e05-98f3d2d681e7/26-6a55b480ea80a.webp' /></p><p>விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி தொடருந்து நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தொடருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செக் வைத்த ஹவுதி - எழும்பும் புகை: சவுதி விமான நிலையம் மீது பயங்கரத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-houthis-strikes-abha-airport-in-saudi-1783996468"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-houthis-strikes-abha-airport-in-saudi-1783996468</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.ஹவுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>முன்னதாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p></p><h2> பதிலடி தாக்குதல்கள்</h2><p>ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, திங்களன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b9a52eb-d120-42f9-8c8d-c1e17c7582fa/26-6a55a4fd658c8.webp' /></p><p>சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள், ஒரு ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏமனில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><p>ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>அபா பகுதி சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கலவரம்...! மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-death-toll-rises-to-31-1783990627"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-death-toll-rises-to-31-1783990627</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.மேலும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் தெரியவருகையில் நேற்று (13-07-2026) ஒருவரும் மற்றும் இன்று காலை (14-07-2026) ஒருவரும் உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறை அதிகாரிகள்&nbsp;</h2><p>இதனடிப்படையில், நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c93be5-0d3a-46fa-94bf-dd47f338d518/26-6a5589654be62.webp' /></p><p>ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும் இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/esdq1jvaoDM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/controversy-over-monk-s-comment-on-ltte-leader-1783981587"></link>
            <id>https://ibctamil.com/article/controversy-over-monk-s-comment-on-ltte-leader-1783981587</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். </p><p>

விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா என அவர் கேள்வி எழுப்பி அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. </p><p>

இதன் தொடர்ச்சியாக சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது. </p><p>

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நடப்பு நிகழ்ச்சி...!</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h7yCxCoAiUU" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:43:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1783989724"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1783989724</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்தும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை காணப்படுகின்றது.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6496b3f-8582-4deb-8e14-7ea3fb1de5f4/26-6a5585ddbeaeb.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குழுக்களுடன் தொடர்புபடுத்தி நாமல் மீது அவதூறு: CID-யில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-over-defamation-against-namal-1783988832"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-over-defamation-against-namal-1783988832</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இந்த முறைப்பாட்டைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>

இதையடுத்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>புலிகள் அமைப்பு</h2><p>இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி அரசுக்குச் சார்பான தரப்புகளும் மற்றும் பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்புக் குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட தரப்பினரே இன்று ராஜபக்சக்களுக்குச் சேறுபூச முயற்சிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213d4169-2d4d-4c34-aaa0-0c48de471cd3/26-6a5584bd384de.webp' /></p><p>

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
</p><p>
போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கியுள்ளனர். </p><p>இது குறித்து அரசு பதில் கூற வேண்டும் முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல் தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096"></link>
            <id>https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096</id>
            <summary type="text">இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
</p><p>
ஆண்களிடையே பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்ததே இந்த அபாயம் வேகமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>ஆண்டுதோறும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை பொதுவாக படிப்படியாக அதிகரித்து வந்தாலும் குறிப்பாக 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சமீபத்திய தரவுகளைப் அவதானிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d465a8-7f3c-4683-9635-dcc950d940ec/26-6a5561a71a4d6.webp' /></p><p>குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆண்களிடையே அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாவட்டங்களின் அதிக மக்கள்தொகை மற்றும் அடிக்கடி நிகழும் இடம்பெயர்வு ஆகியவை இதற்குக் காரணங்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் வட்டமிட்ட ட்ரோன்! ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-flying-drone-over-jaffna-prison-1783986709"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-flying-drone-over-jaffna-prison-1783986709</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ட்ரோன் ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில், ட்ரோனை அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்காணிக்க அனுமதி&nbsp;</h2><p>இதேநேரம், இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு சிறைப் பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0bb23b-4ede-47b2-8ea6-e392b5cee61c/26-6a557a16aeb30.webp' /></p><p>இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ட்ரோன் அது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:52:39+00:00</updated>
        </entry>
    </feed>
