<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T08:20:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-prices-to-decrease-in-domestic-market-1784186042"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-prices-to-decrease-in-domestic-market-1784186042</id>
            <summary type="text">

வாகன இறக்குமதி மீதான கூடுதல் வரி வீதத்தை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நீக்க முடிவு செய்தால், உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலைகள் குறையக...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வாகன இறக்குமதி மீதான கூடுதல் வரி வீதத்தை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நீக்க முடிவு செய்தால், உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலைகள் குறையக்கூடும் என்று இலங்கை வாகன விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

அதற்கு பின்னரும் அரசாங்கம் தற்போதைய வரி வீதத்தை அப்படியே தொடர்ந்தால், வாகன விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பெரும் தேவை காணப்பட்ட போதிலும், தற்போது அந்தத் தேவை சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>வாகன இறக்குமதி தரவுகள்</h2><p> </p><p>

தற்போதைய வாகன இறக்குமதி தரவுகளை கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்றும், துல்லியமான ஒப்பீட்டிற்கு வாகன இறக்குமதி சாதாரணமாக இருந்த 2019 ஆம் ஆண்டின் தரவுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் மானேஜ் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
சுங்க அறிக்கைகளின்படி, வாகனங்களை விடுவிப்பதற்காக ஒரு நாளைக்கு சமர்ப்பிக்கப்படும் சுங்க அறிவிப்புகளின் எண்ணிக்கை, முன்பு 800-850 ஆக இருந்த நிலையில், தற்போது 300-350 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.</p><h2>வாகன இறக்குமதிக்கான செலவு&nbsp;</h2><p>

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1070 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cff5f07-61e6-49cf-9047-b3f6de11fcb6/26-6a58913699571.webp' /></p><p> </p><p>

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்கள் காரணமாக வாகன இறக்குமதிக்கான செலவு சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p> </p>]]></content>
            <updated>2026-07-16T08:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலர்ச் செடிகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-woman-arrested-at-bia-with-flowers-smuggled-1784184139"></link>
            <id>https://ibctamil.com/article/sl-woman-arrested-at-bia-with-flowers-smuggled-1784184139</id>
            <summary type="text">தாய்லாந்து - பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து - பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.</p><p>
விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை செய்தபோது அவரது பைகளிலிருந்து மலர்ச்செடிகள் மீட்கப்பட்டன.</p><p></p><h2>தாவரப் பாதுகாப்புச் சட்டம்</h2><p>

நாட்டின் 1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தாவரங்களையோ அல்லது அவற்றின் பாகங்களையோ நாட்ககுள் இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a893c0e9-ee92-495f-8b4f-6b0caf263e92/26-6a588e662ddf4.webp' /></p><p>அதற்கமைய விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் கட்டாயம் இருக்க வேண்டும்.</p><p>

ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து (தாய்லாந்து), அந்தத் தாவரங்களில் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் 'தாவர தனிமைப்படுத்தல் சான்றிதழ்' சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசுடைமையாக்கப்பட்ட செடிகள்&nbsp;</h2><p>இந்த விதிமுறைகளை மீறிச் செய்யப்படும் எந்தவொரு இறக்குமதியும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a685b1bf-0ab1-4be2-be89-d1e1d5b4d586/26-6a588e66d17f4.webp' /></p><p>சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-creates-chaos-kilinochchi-dcc-meeting-1784184572"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-creates-chaos-kilinochchi-dcc-meeting-1784184572</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பைத் தொடர்ந்து கூட்டம் பாதியிலேயே ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பைத் தொடர்ந்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
 கிளிநொச்சி மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.</p><p>அத்துடன் அந்தத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அர்ச்சுனா குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.</p><p></p><h2>வெளியேறிய&nbsp;சிறீதரன்</h2><p>இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழல் நிலவிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a26019-eb99-4ea0-a2f4-d335f0a83915/26-6a5885e74d53d.webp' /></p><p>அதன் பின்னர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட சில தரப்பினருக்கிடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்தநிலையில் நிலைமை மேலும் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.</p><p></p><h2>அர்ச்சுனாவை வெளியேற்ற வேண்டும்</h2><p> </p><p>அவர்களைத் தொடர்ந்து பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கூட்டத்திலிருந்து வெளியேறியதால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cab402e-83cd-4d85-a68a-426a60ce9bcf/26-6a5885e7f19cb.webp' /></p><p>இதன்போது ஏற்பட்ட குழப்பத்தால் அங்கிருந்த பிரதிநிதிகள் அனைவரும் அர்ச்சுனாவை வெளியேற்ற வேண்டும் என கோசங்களை எழுப்பிய நிலையில் கடற்றொழில் அமைச்சர் அர்ச்சுனாவை வெளியேறுமாரு கோரினார்</p><p>அர்ச்சுனாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு நிலவிய காவல்துறை பாதுகாப்போடு கூட்டத்தின் இறுதியில் அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CZZ1_RfItSU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:08:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duty-free-benefits-proposed-for-migrant-workers-1784184963"></link>
            <id>https://ibctamil.com/article/duty-free-benefits-proposed-for-migrant-workers-1784184963</id>
            <summary type="text">
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சுங்கவரிச் சலுகைகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக அண்மையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சுங்கவரிச் சலுகைகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
இது தொடர்பாக அண்மையில் (14) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், குறிப்பாக உத்தியோகபூர்வ வங்கி வழிகள் ஊடாக பணத்தை நாட்டிற்கு அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிகப் பயன்களை வழங்கும் வகையில் தற்போதைய முறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கவனம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்</h2><p>

அதன்போது, சுங்க நடைமுறைகளை எளிதாக்குதல், சுங்கவரிச் சலுகைகளை வெளிநாட்டுப் பணப் பரிமாற்றப் பதிவுகளுடன் இணைத்தல், கடன் வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம், வர்த்தக வங்கிகள் மற்றும் லங்கா ரெமிட் (Lanka Remit) ஆகியவற்றிற்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202710b1-d6d0-443e-b985-4b43d4322c8c/26-6a588329602cb.webp' /></p><p>
</p><p>
இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பெறுமதிமிக்க பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, சுங்கவரிச் சலுகைகளை மிகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் நடைமுறைக்கு உகந்ததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T07:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-s-case-scheduled-for-pre-trial-conference-1784183188"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-s-case-scheduled-for-pre-trial-conference-1784183188</id>
            <summary type="text">
கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, இந்த வழக்கு தொடர்பான வழக்குக்கு முந்தைய கலந்தாய்வுக்காக திகதி ஒன்றை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>
</p><p>
அத்துடன், இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான டேசி ஃபாரஸ்ட் தொடர்பான வழக்கீட்டுத் தரப்பின் இறுதி நிலைப்பாட்டை அந்தத் திகதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் அன்றைய தினம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f543543-ac04-4147-b97b-84d3ae1e8581/26-6a587c677154c.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலித்த நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வழக்குக்கு முந்தைய கலந்தாய்வுக்காக மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சுமார் 59 மில்லியன் ரூபாய் பணத்தை வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியே இந்த இரு பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T06:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ditwah-fr-petition-against-govt-to-be-considered-1784180824"></link>
            <id>https://ibctamil.com/article/ditwah-fr-petition-against-govt-to-be-considered-1784180824</id>
            <summary type="text">&quot;டித்வா&quot; சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>"டித்வா" சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று&nbsp;தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><h2>சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை</h2><p> </p><p>

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

"டித்வா" சூறாவளி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முறையான பூர்வாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f250240-43fb-4147-94ff-003096daa780/26-6a5877a6ca014.webp' /></p><p> </p><p>

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். </p><p>

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முறையான வழிகாட்டுதல்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அந்த மனுவின் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-schaffter-murder-case-covered-up-1784180351"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-schaffter-murder-case-covered-up-1784180351</id>
            <summary type="text">தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை 
அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன்படி இந்த வழக்கை பிரதி காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும், இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>தினேஷ் ஷாப்டரின் கொலை</h2><p>
</p><p>
இந்நிலையில் தற்போது தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a255d87-bb8a-44d1-a0e2-3d8fe0535f6c/26-6a586e80f3056.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்றும், இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
</p><p>

பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கைத தடுத்த ராஜபக்சர்கள்&nbsp;</h2><p>

“அன்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.
</p><p>
அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T06:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-taken-against-arg-who-qualified-for-final-1784182101"></link>
            <id>https://ibctamil.com/article/action-taken-against-arg-who-qualified-for-final-1784182101</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நட...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>ஃபாக்லாந்து தீவுகள் மீதான தங்கள் நாட்டின் உரிமைகோரலை ஆதரிக்கும் பதாகையுடன் அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>இந்த போட்டியின் இறுதி நிமிடங்களில் ஆர்ஜன்டீனா அணி சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 கோல்களை பெற்று இறுதிப்போட்டிகான பாதையை அமைத்துக்கொண்டது.</p><p></p><h2>ஸ்பெயினுடன் இறுதிப் போட்டி</h2><p>இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயினுடன்&nbsp;அர்ஜென்டினா அணி மோதவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5128b-e45c-41bc-b120-a8a250fcb264/26-6a5875574a61f.webp' /></p><p>இறுதி விசில் ஒலித்த பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.
</p><p>
தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாந்து தீவுகள், பிரித்தானியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான இறையாண்மைத் தகராறின் ஒரு பொருளாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.</p><p></p><h2>வரலாற்று பின்னணி</h2><p>
</p><p>
அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவுக் கூட்டத்திற்காக, இரு நாடுகளும் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை போரிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48d7c792-2ebe-4df1-9ade-4b3b25be1a3b/26-6a587558068d9.webp' /></p><p>
</p><p>
74 நாட்கள் நீடித்த இந்த மோதலில் 655 அர்ஜென்டினா வீரர்களும், 255 பிரித்தானிய வீரர்களும் உயிரிழந்தனர்.</p><p> 2014-ஆம் ஆண்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பு , அர்ஜென்டினா கால்பந்து சங்க வீரர்கள் அதே செய்தி அடங்கிய பதாகையை ஏந்தி நின்றதைத் தொடர்ந்து, ஃபிஃபா அந்தச் சங்கத்திற்கு £20,000 அபராதம் விதித்தது.</p><p></p><p></p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table></p>]]></content>
            <updated>2026-07-16T06:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/information-of-suspect-who-shot-a-police-officer-1784176789"></link>
            <id>https://ibctamil.com/article/information-of-suspect-who-shot-a-police-officer-1784176789</id>
            <summary type="text">கட்டுநாயக்க ​காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க ​காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;சிவில் பாதுகாப்புப் படை</h2><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் இதன்போது அவரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e96d715-7220-4990-832b-918b0a543c9b/26-6a5877f22e241.webp' /></p><p>

அத்துடன், சந்தேகநபரின் வசம் இருந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியும், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>குறித்த சந்தேக நபர் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>நீர்கொழும்பு வைத்தியசாலை</h2><p> </p><p>

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான காவல்துறை அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்குள்ளான மற்றைய காவல்துறை அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a233f7b9-b03e-46c9-8ac1-fdd2dff10609/26-6a586bb88a857.webp' /></p><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய - இலங்கை ஆடைத் துறை வர்த்தகம் குறித்து விசேட பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920"></link>
            <id>https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920</id>
            <summary type="text">இந்திய - இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய - இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.
</p><p>
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் சர்வதேச ஆடை வர்த்தகக் கண்காட்சியில் வைத்து அந்நாட்டு ஆடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையிலும் அக்குழு ஈடுபட்டுள்ளது.
</p><p>
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் பயனுள்ள வகையில் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. </p><p></p><h2>இந்திய ஆடைத்துறை அமைச்சர்&nbsp;</h2><p>

அத்துடன், கைத்தறித் துறையின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு வழங்கப்பட்ட இரண்டு வார கால விசேட பயிற்சித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கைத் தரப்பால் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1115ddde-a1df-4feb-80dd-1d912764647a/26-6a586501b8f3e.webp' /></p><p>
</p><p>
மேலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2027' நிகழ்வில் பங்கேற்குமாறு இந்திய ஆடைத்துறை அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் முன்னணி வர்த்தக முயற்சியாளர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்புகள் மற்றும் திறமையான மனிதவளத்தின் ஆற்றல்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹீஷினி கொலன்னே உட்பட இரு நாடுகளினதும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T04:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-5-mn-usd-fraud-court-order-to-sri-lanka-telecom-1784174422"></link>
            <id>https://ibctamil.com/article/2-5-mn-usd-fraud-court-order-to-sri-lanka-telecom-1784174422</id>
            <summary type="text">திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பாபான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>கொழும்பு பல்கலைக்கழகம்</h2><p>
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்தட்டுக்கள், மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னைய நீதிமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba252415-940f-4b8c-a102-9f491606ca87/26-6a585c1ca2c70.webp' /></p><p>
</p><p>
குறித்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகள் அவசியமெனவும், அதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விசாரணைகளுக்காக குறித்த தரவுகளை தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-jaffnas-3-islands-into-green-energy-islands-1784170280"></link>
            <id>https://ibctamil.com/article/change-jaffnas-3-islands-into-green-energy-islands-1784170280</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி, குறித்த மூன்று தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d06c80e-7b3e-4625-9b76-c44d0cd4cd8d/26-6a58498c484cf.webp' /></p><p>பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இது தவிர, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் - கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0eg9u7gTtx0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை நிலவரம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unable-to-purchase-fuel-world-market-lowest-price-1784172260"></link>
            <id>https://ibctamil.com/article/unable-to-purchase-fuel-world-market-lowest-price-1784172260</id>
            <summary type="text">இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது.</p><p></p><h2>மத்திய கிழக்கு சூழ்நிலை&nbsp;</h2><p> </p><p>நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராகி வரும் போதிலும், ஏதேனும் ஒரு துறையை முடக்கிவிட்டு எம்மால் முன்னோக்கி நகர முடியாது.


அவ்வாறு முடக்கினால் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b17219-38fe-4a2d-8b1c-b3bfbc2c32d5/26-6a5852536aec5.webp' /></p><p> </p><p>எனவே, எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். </p><p> தற்போது டீசல் நுகர்வு 11 வீதத்தாலும், பெட்ரோல் நுகர்வு 9 வீதத்தாலும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.</p><p></p><h2>மசகு எண்ணெய் விலை</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாகவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af0a9e3-ac38-463c-999e-c8c2992ea3ac/26-6a5852529bc26.webp' /></p><p> சர்வதேச ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.</p><p> இதனால், நாட்டில் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதால், உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எம்மால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T03:47:36+00:00</updated>
        </entry>
    </feed>
