<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-13T03:29:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940"></link>
            <id>https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்னையும் அவருடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து தாக்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி காயமடைந்த அதிகாரி ஒருவரே தனது திகில் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.</p><p></p><h2>பயங்கரமான சம்பவம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91bd30ce-3827-460c-ab62-ba4c9c06aaa3/26-6a5452126afd9.webp' /></p><p>
அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும்.</p><h2>டெங்கு காய்ச்சல்</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான்.
</p><p>
அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a854ac3-5f1f-4004-a99b-0bf5d0aea655/26-6a5452135464e.webp' /></p><p>
இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.</p><p> கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது.

டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை&nbsp; போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது. இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர்.&nbsp; நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.</p><p></p><h2>பிணைக் கைதி</h2><p>

முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர்.
</p><p>
அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது. </p><p>சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன.

அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள்.</p><p>

மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். </p><p>அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>பேய்களைப் போல&nbsp;</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e169dfe1-7044-4a86-aae2-b03bcc3034af/26-6a54521403a17.webp' /></p><p>

உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. </p><p>அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள்.

என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள்.</p><h2>சேர் நீங்கள் வராதீர்கள்</h2><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb5d42e-f88c-469d-97ae-bd907d9d6ca7/26-6a545214a8b0b.webp' /></p><p> "சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர்.</p><p>
இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.</p><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p>எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது.</p><h2>கழுத்தில் அமுக்கினர்</h2><p>
அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள்.

எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a6b873-08e8-410f-b2e8-0fa383c6787c/26-6a5452155a266.webp' /></p><p>அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது.
</p><p>
அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள்.</p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர்.
</p><p>
எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை. இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.பந்தர் அப்பாஸ், சிரிக் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.</p><p>பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும், கெஷ்ம் தீவிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .</p><p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.</p><p></p><h2>எட்டு இடங்களில் தாக்குதல்</h2><p>கிழக்கு நேரப்படி மாலை 5 மணி (ET) முதல் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கட்டளைப் பிரிவு ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f947dda6-2079-4d4a-8155-d516794b5d79/26-6a5446d35b826.webp' /></p><p>ஈரானிய படைகளை இந்த செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற உயர்மட்ட உத்தரவின் பேரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்கப் படைகள் குசெஸ்தான் முழுவதும் குறைந்தது எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகவும், அஹ்வாஸ் விமான நிலையம் தாக்கப்பட்டதை&nbsp;அந்த அதிகாரி மறுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:13:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வெப்பச் சுட்டெண் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e35a67-c256-4505-a2d2-ec610a029e1a/26-6a543b50130d1.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868"></link>
            <id>https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868</id>
            <summary type="text">கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மேற்படி கைது நடவடிக்கை நேற்று (13-07-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே மேற்படி மாணவன் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed02a88b-7fd9-45f2-8e58-822054ca4408/26-6a543a6584ae3.webp' /></p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் தம்பதியினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949</id>
            <summary type="text">இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாள அட்டை</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில் குறித்த இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af81fc56-d642-49b1-b404-e5ddf2d4478c/26-6a54358594e3c.webp' /></p><p>தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
விசாரணையின் முடிவில் குறித்த இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், குறித்த இருவரும் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:47:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/viral-woman-in-negombo-prison-roof-protest-1783900921"></link>
            <id>https://ibctamil.com/article/viral-woman-in-negombo-prison-roof-protest-1783900921</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
</p><p>
இந்தநிலையில் குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார். </p><p>

இந்தநிலையில் தற்போது அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ?start=1" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-suspects-identified-police-1783897465"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-suspects-identified-police-1783897465</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும்
சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட
இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.</p><p> </p><p></p><h2>சிறைச்சாலை அதிகாரிகள்</h2><p>துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை
விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc2ff95-dc4c-42ee-8399-9024636cb10d/26-6a5429a919e1c.webp' /></p><p>மோதலுக்குப் பின்னர் சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில்
கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.</p><p> 

இதுவரை அங்கிருந்து
பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் 600 கைதிகளும்
விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>கைதிகளின் சடலங்கள்&nbsp;</h2><p>உயிரிழந்த
கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக
தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e4672d2-57a0-4105-8e55-5a094886184a/26-6a5429a9bee76.webp' /></p><p> 

மேலதிகமாக தலா 20 இலட்சம்
ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல்
காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னாள் மனித உரிமைகள்
ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-statue-for-sambanthan-in-public-1783896338"></link>
            <id>https://ibctamil.com/article/no-statue-for-sambanthan-in-public-1783896338</id>
            <summary type="text">இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது எனவும் கிழக்கு
மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

 ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத செயற்பாடுகள்</h2><p>இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து
செயல்பட்டுக் கொண்ட நிலையில் நான் வெளிநாடு சென்ற நிலையில் எனக்கு
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சுமார் 6 மாதகாலம் கட்சி வேலைகள்
தொடர்ந்து செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.</p><p>

இந்த இடைவெளி ஏற்பட்டது
இருந்த போதும் கட்சி வேலைத்திட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29888dd6-c35b-4145-85f2-3dd873a92b91/26-6a541c46a5e94.webp' /></p><p>

இருந்தபோதும் எங்களின் நிகழ்ச்சி நிரலில் இந்த தமிழரசு கட்சியை கிழக்கு மண்ணில்
இருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்று கருத்துக்கும் இடம் இல்லை
சிலருக்கு இது ஏளனமாக இருக்கும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.</p><p>

கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகள் அதற்கான காரணங்களையும் மிக விரைவில் இந்த அரசாங்கம் கண்டறிய
வேண்டும் என்பதுடன் அந்த குற்றத்தை செய்த குற்ற வாளிகளுக்கான தண்டனையை
வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.</p><p>
</p><p></p><h2>குற்றச் செயல்கள்</h2><p>அதே நேரத்தில் இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காது
இருப்பதற்கான ஒரு நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்றோம்.</p><p>

அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a707cdb0-429f-4fd3-8256-0222d335a543/26-6a541c460324b.webp' /></p><p> 

எனவே
அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும் பொது
இடத்தில் அமைக்க கூடாது.</p><p>

இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை
அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. 

அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும்
பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை
அகற்றுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்வோம்.</p><p>

அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை
நாங்கள் அறிவிக்கின்றோம். </p><p>

இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971"></link>
            <id>https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அமெரிக்காவின் ஹைமார்ஸ் (HIMARS) ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களே இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>குவைத்தின் பாதுகாப்பு&nbsp;</h2><p>சில மணிநேரங்களுக்கு முன்னர் குவைத்தின் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் இது குறித்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec37aab-6d7e-4811-92e4-5efe8026189f/26-6a53e71282da3.webp' /></p><p>அதில் நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் தாக்குதல் காரணமாக மூன்று எல்லை மையங்களும் கடல் கடந்த எண்ணெய் அகழ்வாராய்ச்சி தளம் (Offshore oil drilling platform) ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் ஹர்ஷனவுக்கு எதிரான பிரேரணை வீண்! பத்தரமுல்ல சீலரத்ன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-futile-says-seelarathna-1783889640"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-futile-says-seelarathna-1783889640</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று (12-07-2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது.</p><p> </p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும்.</p><p> எனவே,
இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a769297c-42a6-4484-b4bb-4ef72c23f413/26-6a540a04df840.webp' /></p><p>

நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப்
பக்குவமும் முதிர்ச்சியும் அவசியம்.
</p><p>
அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார்.
</p><p></p><h2>மருத்துவப் புனர்வாழ்வு&nbsp;</h2><p>நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது.&nbsp;&nbsp;</p><p> 

நீதி
அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbbddc2-fc45-4e29-bbf1-23672cc15cf0/26-6a540a05c73b1.webp' /></p><p> </p><p>மாறாக சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப்
புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்.</p><p>
நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின்
நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது.</p><p> 

கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின்
மகனாக இருந்தும் அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத்
தேடித் தருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:44:13+00:00</updated>
        </entry>
    </feed>
