<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T20:22:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-intel-speech-iran-slams-us-1784229918"></link>
            <id>https://ibctamil.com/article/trump-intel-speech-iran-slams-us-1784229918</id>
            <summary type="text"> அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.

இந்த உரையின் போது 2020 அமெரிக்கத் தேர்தலில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p> அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
இந்த உரையின் போது 2020 அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட முயன்றது தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை வெளியிடலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
</p><p>
எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறைகள் மற்றும் வாக்குப்பதிவு பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைப் பேசி வரும் சூழலில் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>குற்றச் செயல்கள்</h2><p>இதேவேளை அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e017dea-76b1-4330-b58d-bd4a8af7eaa9/26-6a59354c08c5b.webp' /></p><p>ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T20:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-accuses-us-of-committing-war-crimes-1784223707"></link>
            <id>https://ibctamil.com/article/iran-accuses-us-of-committing-war-crimes-1784223707</id>
            <summary type="text">ஈரான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்களின் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததாகச் சுட்டிக்காட்டி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதே நேரத்தில் பாரசீக வளைகுடாவில் உள்ள அண்டை அரபு நாடுகள் மீது தான் நடத்திய தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கைகள் என்றும் அது நியாயப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் வசதிகள்</h2><p>

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈரானிய அமைச்சகம் அமெரிக்கா மீது, குறிப்பாகப் பொதுமக்களின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததன் மூலம் பல போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c80259d-34e0-42da-b6d8-4b36a81ffc93/26-6a593396d799c.webp' /></p><p>இத்தகைய தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை நியாயப்படுத்திய அந்த அறிக்கை, அவை தற்காப்புக்கானவை என்றும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் ஈரானின் இயல்பான மற்றும் சட்டபூர்வமான தற்காப்பு உரிமைக்கு இணங்க அமைந்தவை என்றும் விவரித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>குடியிருப்பு கட்டிடம்&nbsp;</h2><p>இருப்பினும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், விடுதிகள், சிவில் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி மற்றும் நீர் வசதிகள் மீது ஈரான் இதற்கு முன்னர் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்தோ அல்லது சமீபத்தில் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்தோ அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
</p><p>
குறிப்பாக, ஜூன் 3 அன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தைக் கடுமையாகச் சேதப்படுத்தி ஒருவரைக் கொன்று, 60 இற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்திய தாக்குதல் மற்றும் கடந்த மாத இறுதியில் பஹ்ரைனின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்த தாக்குதல் ஆகியவை குறித்தும் அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efa23d12-8bf0-407f-b1fb-4e9651f980dc/26-6a59339633b50.webp' /></p><p>அமெரிக்கா செய்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்களுக்கு உதாரணமாக ஈராக் எல்லையோர டெஹ்லோரான் பகுதியில் உள்ள கனிம நீர் உற்பத்தி நிலையம் மீது புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களையும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தென்கிழக்கு ஈரானின் சபஹார் (Chabahar) பகுதியில் உள்ள கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இத்தகைய பல ஒத்த தாக்குதல்களும் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T19:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-change-foreign-students-journalists-visa-rules-1784220504"></link>
            <id>https://ibctamil.com/article/us-change-foreign-students-journalists-visa-rules-1784220504</id>
            <summary type="text">புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கியிருப்பதற்கான நிலையான கால அவகாசங்களை விதிக்கும் புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கால அளவு (Duration of status) முறைமை மாற்றியமைக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>உள்நாட்டுப் பாதுகாப்பு</h2><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், பரிமாற்ற வருகையாளர்களுக்கான J விசாக்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசாக்கள் இனி ஒரு கல்வித் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு காலம் முழுவதும் செல்லுபடியாகாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb5a0b4-8903-4334-83d0-7a4d892cdc9f/26-6a59155a593f6.webp' /></p><p>அதற்குப் பதிலாக பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர் விசாக்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கும்.</p><p>

அதே சமயம் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பொதுவாக 240 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
</p><p>
ஊடகவியலாளர் விசா வைத்திருக்கும் சீனப் பிரஜைகளுக்கு இக்காலம் 90 நாட்களாகக் குறைக்கப்படும்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத குடியேற்றங்கள்</h2><p>அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பும் விசா வைத்திருப்பவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் (DHS) கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.</p><p>

இந்த விதியானது காங்கிரஸின் (நாடாளுமன்றம்) மறுஆய்வுக்கு உட்பட்டு ஃபெடரல் பதிவேட்டில் (Federal Register) வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608da296-6880-4e7d-a8d1-940e440c4c3d/26-6a59155b091db.webp' /></p><p>அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், குடியேற்றமற்ற விசா வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

2025 ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகிய இரண்டின் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், நிர்வாகத்தின் பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:51:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428</id>
            <summary type="text">கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cf514-54e4-426d-876b-8568e1c9204b/26-6a590951f3595.webp' /></p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் சவப்பெட்டிக்குள் கிடக்கும் ட்ரம்ப் :சர்வதேச அளவில் கவனம் பெற்ற பதாகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603"></link>
            <id>https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.



அமெரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><h2>கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம்</h2><p>&nbsp;ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும்ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e327d2d-b30b-4844-bf97-0faa64eea7a0/26-6a59107eef0fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை</h2><p>இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cde5262-26b3-4698-8f5b-97bf999ff20a/26-6a59107e4c39e.webp' /></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T17:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wigneswaran-says-tamils-get-nothing-n-p-p-gover-1784215282"></link>
            <id>https://ibctamil.com/article/wigneswaran-says-tamils-get-nothing-n-p-p-gover-1784215282</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் இணைப்பு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.&nbsp;</p><h2>ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டு</h2><p>தங்கள் பிரதிநிதிகளான மக்களுக்கு சிங்களம் பேசும் கட்சிகளிடமிருந்து எந்த நிவாரணமும் கிடைக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf5595f-2b87-48e7-9174-6416288a7191/26-6a58fa7b7a36a.webp' /></p><p>

இந்த நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.</p><p>

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் திருப்தி அடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

அதற்குக் காரணம், அந்த மக்களின் நிலங்கள் இராணுவத்தால் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

</p><h2>மக்களின் நிலங்களில் பயிர் செய்து வருமானம் ஈட்டும் இராணுவம்</h2><p>சில நிலங்களில் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இராணுவம் வருமானம் ஈட்டி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ac0f94-1067-4419-aae8-6ce7c94c6923/26-6a58fa7c55609.webp' /></p><p>
</p><p>
இத்தகைய உண்மைகளின் காரணமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கங்களின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.</p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதாகவும், சம உரிமைகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 400 ஐ கடந்தன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்
நடைபெற்றது.
</p><p>
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416
எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு
அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்</h2><p>இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளன. அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876b9d13-46a2-4136-9992-7c56a64dbc4d/26-6a58f1ebb9ef2.webp' /></p><p>
</p><p>
130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட
வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,
சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212</id>
            <summary type="text">நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய்
விட்டது என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை&nbsp;விடுவித்திருந்தோம்</h2><p>
</p><p>
யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு
வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி
விடுவித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6471e7a9-3bf0-4660-a47b-0507b16431bd/26-6a58e96135c9a.webp' /></p><p>
</p><p>
கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்திலும் பெருமளவான காணிகளை
விடுவித்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை
முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல்
போய்விட்டது.</p><p>

ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த
காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனை</h2><p>
</p><p>
அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நாமே முதலில்
தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும்
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95b559e-2e0f-4fa8-9b41-4b35aa9c3278/26-6a58e961e5f89.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப்
பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அவ்வேளை காணாமல் போனோர்
விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி
போராட்டங்களை முன்னெடுத்தோம்.</p><p> அக்கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார்
600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை
தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு
அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.</p><p></p><p>
</p><p>
</p><h2>விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு</h2><p>இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள்
பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள்
மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fd4e4-f658-49d7-ac41-887aba67fd46/26-6a58e962a6702.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள்
ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த
காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு
அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:24:11+00:00</updated>
        </entry>
    </feed>
