<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-20T16:35:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு விநியோக ஓட்டுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/food-delivery-driver-wins-china-s-literary-award-1784563572"></link>
            <id>https://ibctamil.com/article/food-delivery-driver-wins-china-s-literary-award-1784563572</id>
            <summary type="text">உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ ஷுன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் எழுத்தாளர் லூ ஷுனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, உணவு விநியோக ஓட்டுநர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்ட அவரது 'லோ ஃப்ளைட்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது.</p><h2>கவிதைகள்,கட்டுரைகளுக்காக சமுக ஊடகங்களில் பிரபலம்</h2><p>2019-ல் உணவு விநியோக ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கிய 56 வயதான வாங், தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dd6a4c-a75a-402f-a501-4a6541a2c678/26-6a5e4cc181c8c.webp' /></p><p>

பல தசாப்தங்களாகப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்து வந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, வாங் இந்த மதிப்புமிக்க இலக்கிய விருதை வென்றுள்ளார்.

"நான் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தேன்... மிகவும் பதட்டமாகவும் இருந்தேன்... ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, எல்லாம் அமைதியானது," என்று வாங் ஜூலை 15 அன்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஊடக கவனத்தால் மிகுந்த மன அழுத்தம்</h2><p>தனது வெற்றிச் செய்திக்குப் பிறகு தன்னைச் சூழ்ந்திருந்த ஊடகக் கவனம் தனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4f85d8-b42e-4e45-a069-a0e48f4461eb/26-6a5e4cc230df0.webp' /></p><p>
</p><p>
லூ ஷுன் இலக்கிய விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பொதுவில் அறிவிக்கப்படுவதில்லை, ஆனால் 2014-ல் அது 100,000 சீன யுவான் (US$14,800 அல்லது £11,000) ஆக இருந்தது.</p><p>

ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக தனது இளமைப் பருவத்தில் பள்ளியிலிருந்து விலகினார். அவர் உணவு விநியோகப் பணியாளராக மாறுவதற்கு முன்பு, கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-attempts-suicide-in-batti-court-jail-1784557314"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-attempts-suicide-in-batti-court-jail-1784557314</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூண்டுக்குள் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில்
இடம் பெற்றுள்ளது.
</p><p>
கைதியின் இந்த சம்பவம் நீதிமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இது பற்றி மேலும் தெரியவருவதாவது</p><h2>யாழ்ப்பாணத்தில் கைது</h2><p>

 3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37d8081c-830e-45e4-9b28-20bd986afd9a/26-6a5e3551676d9.webp' /></p><p>

இந்த நிலையில் பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில்
முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்றம் பிடியாணை
பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p>
பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15
ம்திகதி முற்படுத்தியதையடுத்து அவரை இன்றையதினம் (20ம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
இன்று திங்கட்கிழமை (20)
காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்
அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்</p><p></p><h2>விபரீத முடிவால் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 3ம்
திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை
நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba18f737-3a9a-4191-9e5c-9e5e4c3acc95/26-6a5e35521a5bf.webp' /></p><p>

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது
பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள்
வைத்து குறித்த கைதி விபரீத முடிவெடுத்த நிலையில் படுகாயமடைந்து
உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில்
திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும்
காவல்துறையினர் தெரிவித்தனர்&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் வர்த்தகக் கப்பலை குறி வைத்தது ரஷ்யா : பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-attack-on-merchant-ship-in-black-sea-1784560154"></link>
            <id>https://ibctamil.com/article/russian-attack-on-merchant-ship-in-black-sea-1784560154</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடெசா கடற்கரைக்கு அப்பால், கினியா-பிசாவ் கொடியை ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடெசா கடற்கரைக்கு அப்பால், கினியா-பிசாவ் கொடியை ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>

இறந்தவர்களில் ஒன்பது கப்பல் ஊழியர்களும் ஒரு விமானியும் அடங்குவதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><h2>தொடர்ச்சியான தாக்குதல்</h2><p>சமீபத்திய வாரங்களில் ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது, ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யத் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939afb56-7dec-49c7-824e-33e8cfa3315c/26-6a5e3d51ba951.webp' /></p><p>கினியா-பிசாவ் கொடியை ஏந்திய கோல்டன் லியோ கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல், இதுவரை நடந்தவற்றிலேயே மிகவும் கொடூரமானதாகும்.
</p><p>

உக்ரைனிய விவசாய ஏற்றுமதிகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானவை கடல்வழி ஏற்றுமதிகளே ஆகும். இதன் மதிப்பு சுமார் $9 பில்லியன் (£6.7 பில்லியன்) ஆகும் - இது கீவ்விற்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T15:23:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784554935"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784554935</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூடு</h2><p>&nbsp;ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை
சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52100dd-c399-49e1-b4f6-6f9510564d26/26-6a5e2b957be0a.webp' /></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட
நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ் அமைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hamas-names-its-new-leader-1784553639"></link>
            <id>https://ibctamil.com/article/hamas-names-its-new-leader-1784553639</id>
            <summary type="text">
2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, கலீல் அல்-ஹய்யாவை ஹமாஸ் அமைப்பு தனது புதிய தலைவராக அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, கலீல் அல்-ஹய்யாவை ஹமாஸ் அமைப்பு தனது புதிய தலைவராக அறிவித்துள்ளது.
</p><p>
பாலஸ்தீனியக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், அதன் தலைமை மன்றத்தின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவருமான அல்-ஹய்யா, ஹமாஸின் முன்னாள் அரசியல் தலைவர் காலித் மெஷாலுக்கு எதிராக நடத்தப்பட்ட உட்கட்சி வாக்கெடுப்பின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
2024 ஆம் ஆண்டில் காசாவில் ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களான சின்வார், இராணுவத் தளபதி முகமது தெய்ஃப் மற்றும் அதே ஆண்டில் தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து அல்-ஹய்யாவின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>ஐந்து தலைவர்களில் ஒருவர்</h2><p>
</p><p>
இந்த இழப்புகளைத் தொடர்ந்து, போர்க்காலத்தில் குழுவை வழிநடத்துவதற்காக 2024 இன் பிற்பகுதியில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் குழுவான தலைமை மன்றத்தை வழிநடத்தும் ஐந்து தலைவர்களில் ஒருவராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c5d62d-6bb5-4386-8e5c-d182ff67969d/26-6a5e2537433fe.webp' /></p><p><i>Image Credit:&nbsp;JNS.org</i></p><p>
</p><p>
1960 இல் காசா பகுதியில் பிறந்த அல்-ஹய்யா, 1987 இல் ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்டதிலிருந்து அதன் முக்கிய உறுப்பினராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T13:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தைத் தணிக்க ஈரானுக்கு சென்ற முன்மொழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-it-received-proposals-from-mediators-1784552533"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-it-received-proposals-from-mediators-1784552533</id>
            <summary type="text">வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மத்தியஸ்தர்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மத்தியஸ்தர்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் ஈரான் திங்களன்று கூறியதுடன், ராஜதந்திரத்தில் தனது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தியது.</p><p>&nbsp;மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க மத்தியஸ்தர்கள் பணியாற்றி வருவதாகவும், தெஹ்ரானுக்கு முன்மொழிவுகளைத் தெரிவித்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.</p><h2>தற்போது அதனை பரிசீலிக்கமாட்டோம்</h2><p>"மத்தியஸ்தர்கள் மூலம் நாங்கள் முன்மொழிவுகளைப் பெற்றுள்ளோம், ஆனால் இந்த நிலையில் அவற்றின் விவரங்களைப் பற்றி விவாதிக்க மாட்டோம்," என்று அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட தனது கருத்துக்களில் பாகாயி குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/187cf8dd-abd7-4530-9dd4-b1c85dd392af/26-6a5e20b9f131a.webp' /></p><p>
</p><p>
ஈரானின் ராஜதந்திரப் பிரிவு, நாட்டின் ஆயுதப் படைகளுடன் இணைந்து தனது பொறுப்புகளைத் தொடர்ந்து ஆற்றி வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>&nbsp;"அமெரிக்க ஆக்கிரமிப்பின் மூலத்திற்கு எதிராக நமது ஆயுதப் படைகள் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் தனது கடமைகளை முழுமையாக உணர்ந்து அவற்றை நிறைவேற்றுவதில் எந்த முயற்சியையும் விட்டுவிடுவதில்லை," என்று அவர் தெரிவித்தார்.</p><p>ஈரானிய தூதர்கள் தங்கள் கடமையைக் கைவிட மாட்டார்கள் என்றும், அதேபோல அந்நாட்டின் ஆயுதப் படைகள் "தாய்நாட்டைப் பாதுகாக்கும் தங்கள் கடமையைப் புறக்கணிக்காது" என்றும் பாகாயி மேலும் கூறினார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணையில்&nbsp; இறையாண்மை</h2><p>&nbsp;"ஹோர்முஸ் நீரிணையில் தனது இறையாண்மையை முழுமையாக நிலைநாட்டவும், எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் தடுக்கவும்" ஓமானுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் உறுதியாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/050aebd2-6ef8-49e2-917a-5a46c4bfb3b4/26-6a5e20baa5579.webp' /></p><p>உளவு குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அமெரிக்கக் குடிமகனை ஈரான் விடுவித்துவிட்டது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றை பாகாயி நிராகரித்தார்.</p><p></p><h2>ட்ரம்பின் கருத்திற்கு மறுப்பு</h2><p>ஈரானின் நீதித்துறையின் முந்தைய அறிக்கையை எதிரொலிக்கும் வகையில், ட்ரம்பின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய எந்தவொரு அமெரிக்கக் கைதியும் ஈரானிய சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb157d5a-bc78-41f8-b2cb-d2b7ca62a4b3/26-6a5e223068766.webp' /></p><p>&nbsp;"கேள்விக்குட்பட்ட அந்த நபர் ஒரு கைதி அல்ல, அவர் மீது உளவு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை," என்று பாகாயி தெரிவித்தார்.
</p><p>
கடந்த வாரம், டிசம்பர் 2024-ல் "தவறாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த" ஒரு அமெரிக்கக் குடிமகளை ஈரான் விடுவித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p>

"அவர் இப்போது ஈரானுக்கு வெளியே பாதுகாப்பாகவும், நல்ல நிலையிலும் இருக்கிறார். ஈரானின் இந்த நல்லெண்ணச் செயலை அமெரிக்கா பாராட்டுகிறது," என்று அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T13:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தரைவழி ஊடுருவல் தவிடுபொடியாகும்: ஐ.ஆர்.ஜி.சி கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-irgc-vow-to-repel-any-us-ground-incursion-1784549330"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-irgc-vow-to-repel-any-us-ground-incursion-1784549330</id>
            <summary type="text">ஈரானியப் பகுதிக்குள் அமெரிக்காவின் எந்தவொரு தரைவழி ஊடுருவலையும் &quot;உடனடியாக முறியடிப்போம்&quot; என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐ.ஆர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியப் பகுதிக்குள் அமெரிக்காவின் எந்தவொரு தரைவழி ஊடுருவலையும் "உடனடியாக முறியடிப்போம்" என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐ.ஆர்.ஜி.சி) இன்று(20)திங்களன்று உறுதிபூண்டுள்ளது.</p><p>வடகிழக்கு நகரமான ஷாஹ்ரூத்தில் வான் பாதுகாப்புப் படைகளைக் கௌரவிக்கும் விழாவில் பேசிய ஐ.ஆர்.ஜி.சி தரைப்படைகளின் துணைத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரூஹோல்லா நூரி, அமெரிக்காவின் எந்தவொரு தரைவழித் தாக்குதலையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் பிரிவுகள் மிக உயர்ந்த தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.</p><h2>மிக உயர்ந்த தயார் நிலையில் உள்ளன</h2><p>&nbsp;"ஐ.ஆர்.ஜி.சி தரைப்படைகள், குறிப்பாக பாதுகாப்புப் பிரிவுகள், மிக உயர்ந்த தயார் நிலையில் உள்ளன. மேலும் எந்தவொரு விரோதச் செயலையும் அல்லது எதிரி ஊடுருவலையும் முதல் கணத்திலேயே முறியடித்துவிடும்," என்று அரை-அரசு தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளில் நூரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef68faa7-8d52-4c59-baa8-1b3672150ea1/26-6a5e1a0974c96.webp' /></p><p>"ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் நிரந்தர தயார்நிலையும் ஈரானின் நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கின்றன, மேலும் இந்த அளவிலான தயார்நிலை அனைத்து செயல்பாட்டுத் துறைகளிலும் தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.</p><p></p><h2>அமெரிக்க வான்வழி தாக்குதலுக்கு மத்தியில் வந்த எச்சரிக்கை</h2><p>பல ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbd1229-4ba1-4fc2-9d01-f36bcba0d5cd/26-6a5e22ec93ca6.webp' /></p><p>&nbsp;இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் தெற்கு ஈரானை மையமாகக் கொண்டிருந்தன. இதற்குப் பதிலடியாக, பல பிராந்திய நாடுகளில் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் வசதிகள் மற்றும் தளங்களைக் குறிவைத்து தெஹ்ரான் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
கடந்த வாரம் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது சமீபத்திய தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, வடமேற்கு நகரமான தப்ரிஸில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் உட்பட, திங்கள்கிழமை அதிகாலையில் பல ஈரானிய மாகாணங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல்கள்! அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-igp-may-have-information-about-easter-attacks-1784532002"></link>
            <id>https://ibctamil.com/article/ex-igp-may-have-information-about-easter-attacks-1784532002</id>
            <summary type="text">


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>

சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், காவல்துறை தற்போது மரணம் குறித்து விரிவான விசாரணையை நடத்தி வருவதாகக் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு .சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சாட்சியம் வழங்கிய விக்ரமரத்ன&nbsp;</h2><p>
</p><p>
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்ததை அமைச்சர் அதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e684f1-6ac2-422f-bcc9-f5a616304d7f/26-6a5dcf45c9ba9.webp' /></p><p>

இந்நிலையில், காவல்துறை விசாரணைகளிலிருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிவராததால், விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nWRSBysjxaQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-20T12:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030 FIFA உலகக் கோப்பைக்கு ஆறு அணிகள் தகுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qualified-6-teams-for-the-2030-fifa-world-cup-1784549412"></link>
            <id>https://ibctamil.com/article/qualified-6-teams-for-the-2030-fifa-world-cup-1784549412</id>
            <summary type="text">2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாடுகளை உள்ளடக்கிய தனித்துவமான இணை-புரவலர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆறு நாடுகளை உள்ளடக்கிய தனித்துவமான இணை-புரவலர் முறையில் நடைபெறவுள்ளது.
</p><p>
இதன் காரணமாக 6 நாடுகள் தற்போது 2030 உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன 

போட்டியின் முக்கிய இணை-புரவலர் நாடுகளாக ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ செயல்படுகின்றன. </p><p>புரவலர் நாடுகள் என்பதனால், இந்த மூன்று நாடுகளின் அணிகளுக்கும் ஃபிஃபா தானாகவே உலகக் கோப்பைக்கான தகுதியை வழங்கியுள்ளது.</p><p></p><h2>நுற்றாண்டு நினைவு போட்டி</h2><p>
</p><p>
மேலும், 1930-ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதல் ஃபிஃபா உலகக் கோப்பையின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் தலா ஒரு நினைவுப் போட்டி நடத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85895a85-078e-4b87-adab-8f8c9a52c577/26-6a5e139cb478c.webp' /></p><p> இதையொட்டி, இந்த மூன்று நாடுகளின் அணிகளும் தானாகவே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.
</p><p>
தென் அமெரிக்காவில் நடைபெறும் இந்த மூன்று சிறப்பு நினைவுப் போட்டிகளுக்குப் பின்னர், உலகக் கோப்பைத் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறும்.
</p><p>
இதன்மூலம், 2030 ஃபிஃபா உலகக் கோப்பை வரலாறு, பாரம்பரியம் மற்றும் பல கண்டங்களை இணைக்கும் புதிய புரவலர் வடிவமைப்பால் சிறப்புப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு சுற்றுலா விசாவை ரத்து செய்த வெளிநாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/taiwan-suspended-tourist-visas-for-sri-lankans-1784547563"></link>
            <id>https://ibctamil.com/article/taiwan-suspended-tourist-visas-for-sri-lankans-1784547563</id>
            <summary type="text">

இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்திவைக்க தைவான் வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.&amp;nbsp;
இது தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்திவைக்க தைவான் வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>
இது தொடர்பான அறிவிப்பை தைவான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.</p><p>
இருப்பினும், தைவான் அரசாங்க நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>தடையிலிருந்து விலக்கு</h2><p>

சர்வதேசக் கூட்டம், விளையாட்டுப் போட்டி அல்லது கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களுக்காக தைவானுக்கு வருபவர்களுக்கும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79796920-5258-40a5-97d4-554dbd4d4eca/26-6a5e0ef3e5863.webp' /></p><p><i>Image Credit: Vacations &amp; Travel</i></p><p>மேலும், மருத்துவ சிகிச்சைக்காக தைவானுக்கு வருபவர்கள் அல்லது தைவான் குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களை இந்த முடிவு பாதிக்காது என்றும் தெரியவருகிறது.</p><p>

புதிய விதிமுறைகளின் கீழ் விசா விண்ணப்பதாரர்கள், சிங்கப்பூரில் உள்ள தைவான் பிரதிநிதி அலுவலகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொருளாதார மற்றும் கலாச்சார மையத்திலோ தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தைவான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>புதிய விதிமுறைகள்</h2><p>
இருப்பினும், தைவானுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, தைவான் அடையாள அட்டை வைத்துள்ள அங்கேயே வசிக்கும் ஒரு தைவான் குடிமகன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை உறுதிப்படுத்த காவல் துறை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/496c3baa-1825-4936-9526-c9a1dc1047dc/26-6a5e0ef4a6c48.webp' /></p><p>
அத்துடன், புதிய விதிமுறைகளின்படி தைவானுக்கு வரும் பயணிகள் தங்களிடம் போதுமான நிதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தைவான் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T12:10:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீரும் கழிப்பறையும் குற்றப்பொருளா... பலாலி மக்களின் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-palali-tourist-police-investigation-1784547740"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-palali-tourist-police-investigation-1784547740</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி. வடக்கு பிரதேச சபையினால் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி. வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசலக் கூடத்தை பலாலி காவல்துறை அகற்றிய சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
</p><p>
காவல்துறை தெரிவித்துள்ளபடி, குறித்த வசதிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டம் தனது கடமையைச் செய்வது அவசியமானதே. </p><p>ஆனால், எந்த நடவடிக்கையும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனிதாபிமான அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் அதே அளவு முக்கியமானதாகும்.</p><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p>யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற ,
பொழுது போக்குக்காக வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக
வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும்
தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி காவல்துறை அங்கிருந்து எடுத்து
சென்றுள்ளனர்.
</p><p>
அதேவேளை குறித்த இடத்தில் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம்
என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம்
பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து , சட்ட நடவடிக்கை
எடுக்க உள்ளதாக பலாலி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலா தளங்களில் பொதுச் சுகாதார
வசதிகளைஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து
முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர்
கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.&nbsp;</p><p>இந்நிலையிலேயே பலாலி பொது நோக்கு
மண்டபம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
அதேவேளை , கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள்
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடாத்தினர். </p><p>எதிர்வரும்
ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அப்பகுதியில் கொட்டகை அமைக்க
காவல்துறையினர் தடை விதித்துள்ள நிலையில் , போராட்டக்காரர்கள் , குறித்த பொது நோக்கு
மண்டபத்தில் இளைப்பாறுவதுடன் , மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து
உட்கொள்வதுடன் , அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும் , தற்காலிக மலசல
கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். </p><p>அதனாலேயே பலாலி காவல்துறை அவற்றை
அங்கிருந்து அகற்றியதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.&nbsp;</p><p>
வயோதிப பெண்கள் , முதியவர்கள் என போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில்
,அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி காவல்துறையினர் எடுத்து சென்றமை அப்பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ai-teacher-to-teach-american-children-to-read-1784547521"></link>
            <id>https://ibctamil.com/article/ai-teacher-to-teach-american-children-to-read-1784547521</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித உருவ ரோபோ ஆசிரியர்களை அறிமுகப்படுத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித உருவ ரோபோ ஆசிரியர்களை அறிமுகப்படுத்த நியூயோர்க் பள்ளி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோ ஆசிரியர் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ரோபோ ஆசிரியருக்கு 'சாலி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் சலமன்கா மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில், பல 'சாலி' ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.</p><h2>'சாலி' ரோபோ ஆசிரியர்&nbsp;</h2><p>
</p><p>
பல வெற்றிகரமான முன்னோட்டத் திட்டங்களுக்குப் பிறகு, 'சாலி' ரோபோ ஆசிரியர் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார். இந்த ரோபோ ஆசிரியர், சிறு குழந்தைகளுக்குப் பாடப்புத்தக அறிவை மட்டுமல்லாமல், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்பிக்கும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e2c14b-d335-4ddb-81c4-95a1817393be/26-6a5e0b486240c.webp' /></p><p>
</p><p>
'சாலி ஒரு உதவி ஆசிரியர். வகுப்பறை ஆசிரியருக்கு உதவுவதற்காக சாலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் சாலியை ஒரு உதவி ஆசிரியராகப் பணியமர்த்த நாங்கள் நம்புகிறோம். சாலிக்குத் தெரியாதது எதுவும் இல்லை,' என்று நியூயோர்க் பள்ளி அதிகாரிகள் விளக்குகின்றனர்.</p><p>

57,600 அமெரிக்க டொலர்கள் (சுமார் 10 லட்சம் ரூபாய்) மதிப்புள்ள சாலி ரோபோவை, கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 'ரியல்பாட்டிக்ஸ்' என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சாலி ஒரு நிலையான ரோபோ</h2><p>முதல் பார்வையில், சாலியை ஒரு ரோபோ பெண் என்று அழைக்க முடியாது. அதன் தோல் சிலிக்கனால் ஆனது, மேலும் வடிவமைப்பாளர்கள் அதற்கு ஒரு நீண்ட வாலையும் சேர்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d3dc90-6e9b-43ca-85ad-666e696b134b/26-6a5e0b4911d17.webp' /></p><p> </p><p>சாலிக்கு சைகைகள் செய்யும் திறன் உள்ளது. இருப்பினும், சாலி ஒரு நிலையான ரோபோ. அதனால் நடக்க முடியாது.

அமெரிக்கக் கல்வி அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-in-china-8-dead-34-people-missing-1784542552"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-in-china-8-dead-34-people-missing-1784542552</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>கடந்த 17-ம் திகதி சீனாவின் தென்மேற்கில் சொங்சிங் (Chongqing) பெங்ஷி நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.&nbsp;</p><p>கனமழையின் போது ஏற்பட்ட இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து மூன்று நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 34 பேரை தேடும் பணிக்கு தடையாக இருந்த பெரிய பாறைகளை அகற்ற, மீட்புக் குழுவினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தகர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p> </p><h2>சீனாவின் பயங்கர நிலச்சரிவு</h2><p> இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவ இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரை குடிநீர், மின்சாரம், எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலச்சரிவில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ளதுடன் மக்களும் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509515ec-8713-4d72-9246-11acaa923d74/26-6a5e01ae5a8b0.webp' /></p><p>நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளுக்காக 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-heat-warning-in-five-districts-in-sri-lanka-1784545336"></link>
            <id>https://ibctamil.com/article/severe-heat-warning-in-five-districts-in-sri-lanka-1784545336</id>
            <summary type="text">நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் "கவனம் செலுத்த வேண்டிய"மட்டத்திற்கு அதிகரிக்கும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdeebf61-e7a9-4975-8099-a188c6100abe/26-6a5e021ade002.webp' /></p><p>அதற்கமைய போதுமான அளவு தண்ணீர் குடித்தல், நாளின் வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கவனத்தின் மையமாக சி.டி. விக்ரமரத்னவில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-investigation-c-t-wickramaratne-1784543553"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-investigation-c-t-wickramaratne-1784543553</id>
            <summary type="text">2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்ல என்று அப்போதைய காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன ஒகஸ்ட் 25 2021அன்று தெரிவித்திருந்தார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சிறப்பு அறிக்கை வெளியிட்டபோது, ​​காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
</p><p>
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு நடந்த பல நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி இது நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயலாகத் தெரிகிறது என்றும் அவர் அப்போதைய விசாரணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கியிருந்தார்.</p><p>

இந்தக் குற்றவியல் விசாரணை முழுமையான இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன என்றும், இதுகுறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்&nbsp;</p><p></p><h2>அனுர கருணாதிலக&nbsp;</h2><p>இந்நிலையிலேயே இதனை மையப்படுத்தி&nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஏராளமான தகவல்கள் தெரிந்திருக்க கூடும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266991bd-b166-435a-90c6-ac0788a25d17/26-6a5e036c28d55.webp' /></p><p> முன்னாள் காவல்துறைமா அதிபரின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ''இந்த மரணம் தொடர்பாக காவல்துறை தற்போது விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு திரு. சி.டி. விக்ரமரத்ன காவல்துறைமா அதிபராகப் பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்க வேண்டும்.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்</h2><p> </p><p>தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a78dcb-8db9-4cad-b862-8dc0ab132a3f/26-6a5e036ccf9b7.webp' /></p><p> </p><p>இந்நிலையில் அவர் காவல்துறை விசாரணைகளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த விடயம் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வாக்குமூலம் வழங்கியதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்த்துக்கு 11.03.2026 தெரியவந்தது.
</p><p>
தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது.</p><p></p><h2>விசாரணை&nbsp;தலையீடு</h2><p>
</p><p>
விசாரணைகளின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தலையீடுகள் தொடர்பில், முன்னாள் CID பணிப்பாளர் நிஷாந்த சோய்சாவுடன் இணைந்து முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்னவும் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக CID அதிகாரிகள் அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ead96b7-0bda-47a8-9fd4-ef5970cc9eca/26-6a5e036d83d0c.webp' /></p><p>
</p><p>
தேசிய பாதுகாப்புச் சபை (National Security Council) ஊடாக விசாரணை அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் CID நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.</p><p>

எனினும், இந்த நீதிமன்ற நடவடிக்கையில் முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்ன மீது எவ்வித நேரடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

அவர் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்கிய அதிகாரியாக மட்டுமே குறிப்பிடப்பட்டார்.</p><p>ஏப்ரல் 2019 இல் நடந்த குண்டுவெடிப்புகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிர்வாகத்தை ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளின.</p><p> 

தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், புலனாய்வுத் தகவல்களைப் புறக்கணித்ததற்காகவும் அப்போதைய காவல்துறை மா அதிபர் ஜெனரல் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பின்னர், சீர்குலைந்த காவல்துறை திணைக்களத்தை வழிநடத்தும் பொறுப்பு, பதில் காவல்துறை மா அதிபர் ஜெனரல் சி.டி. விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><h2>கடுமையான குறைபாடுகள்</h2><p>11.03.2026 நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை புலனாய்வாளர்களுக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் (குறிப்பாக அரச புலனாய்வு சேவை - SIS) இடையேயான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பில் இருந்த கடுமையான குறைபாடுகள் மற்றும் விடுபடல்கள் குறித்து இந்த அறிக்கைகள் விசாரிக்கப்பட்டு வந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10fd51bb-5760-47bf-a160-bc0155804ef4/26-6a5e036e3bb32.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்குக் கோப்புகளில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளும் அடங்கியிருந்தன. </p><p>

ஆனால், சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் மூலம், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி அவற்றை மறுத்திருந்தார்.

இந்த முழு சட்ட நடவடிக்கையும் இறுதித் தீர்ப்பு இன்றி நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>

37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய 35-வது காவல்துறைத் தலைவரின் இந்த திடீர் மறைவுடன், இலங்கை காவல்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான காலகட்டத்தை வழிநடத்திய ஒரு அதிகாரியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. </p><p>

மேலும், அவரது மரணம் குறித்த விசாரணைகளும், உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நீதிமன்றங்களில் தனித்தனியாகத் தொடர்ந்து நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-20T11:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சடுதியாக குறைவடைந்த திருமண பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/marriage-registrations-in-sri-lanka-have-declined-1784544469"></link>
            <id>https://ibctamil.com/article/marriage-registrations-in-sri-lanka-have-declined-1784544469</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics)தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 சதவீத வீழ்ச்சியாகும்.</p><h2>கோவிட் பெருந்தொற்றில் குறைவடைந்த திருமண பதிவு</h2><p>2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808 ஆகக் குறைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abbf9c0-2e03-4d79-8035-d9c5d55ebb89/26-6a5e01486cf87.webp' /></p><p>

பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் அதிகரித்திருந்தன.</p><p> இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vietjet-launches-direct-flights-to-colombo-1784544401"></link>
            <id>https://ibctamil.com/article/vietjet-launches-direct-flights-to-colombo-1784544401</id>
            <summary type="text">

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர் (VietJet Air), கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இடையே தனது நேரடி விமான சேவைகளை இன்று(20) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இந்த புதிய விமான வழித்தடமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>விமான சேவைகள்</h2><p> </p><p>

இதன்படி, வியட்ஜெட் ஏர் நிறுவனம் இவ்விரு நகரங்களுக்கும் இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2934ad46-b0a9-42da-9476-8a22fbbf51d1/26-6a5e006da711d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
Airline Ratings</i></p><p> 

அத்துடன், இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், இரு நாடுகளும் இணைந்து கூட்டு சுற்றுலா தொகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T11:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-hospitalized-consuming-poisonous-seeds-1784543462"></link>
            <id>https://ibctamil.com/article/students-hospitalized-consuming-poisonous-seeds-1784543462</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
</p><p>குறித்த மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விசாரணைகள் ஆரம்பம்</h2><p>

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ff11a9-221a-4130-8b37-514e12edda60/26-6a5dfc8fb35bc.webp' /></p><p>

கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T10:52:34+00:00</updated>
        </entry>
    </feed>
