<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-18T15:43:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய மாகாணம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announces-new-strait-of-hormuz-province-1787066860"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announces-new-strait-of-hormuz-province-1787066860</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை பகுதியை அமெரிக்காவின் புதிய மாகாணமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன் அதற்கான வரைபடத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.ஈரான் தொலைக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை பகுதியை அமெரிக்காவின் புதிய மாகாணமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன் அதற்கான வரைபடத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.</p><p>ஈரான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் , “புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் உறுதி மொழிகள் மற்றும் ஈரானை கடல்வழியாக தடை செய்வதாக கூறப்படுவதை நீக்குவது உள்ளிட்ட ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது”, என தெரிவித்திருந்தார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை வரைபடம்</h2><p>காலிபாபின் இக்கருத்து வந்த சிறிது நேரத்திலேயே ஹோர்முஸ் நீரிணைபகுதி அமெரிக்காவின் புதிய மாகாணம் என்று அதிகாரபூர்வமாக ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார். தமது பதிவில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு அடையாளப்படுத்தி காட்டியும் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13c3f30c-0da0-46ff-ad31-70f8db357e0e/26-6a8479eea58f7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T15:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1787064612"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1787064612</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18)
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18)
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம்
செவ்வாய்க்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு
பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eea0a01-4d52-4a7e-965d-de1f4310fced/26-6a8473cf10cfb.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T15:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-member-dies-after-falling-from-tree-1787062479"></link>
            <id>https://ibctamil.com/article/family-member-dies-after-falling-from-tree-1787062479</id>
            <summary type="text">வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றது.</p><p> சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்</p><p>
மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் இன்றையதினம் நொச்சிமோட்டை
பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே
வீழ்ந்துள்ளார்.</p><h2>ஓமந்தை காவல்துறையினர் விசாரணை</h2><p>படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6baff2-33ff-45a8-8e9d-13fe681bed7d/26-6a846ac7665f5.webp' /></p><p>

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே
மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை பணியிலிருந்து விலகியவரின் போதை கடத்தல் அம்பலம் : மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-transporting-drugs-expressway-1787059456"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-transporting-drugs-expressway-1787059456</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த நுழைவாயில் வழியாக போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த நுழைவாயில் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடவத்த காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (17) கடவத்த வெளியேறும் வழியில், ஒரு காரில் 'குஷ்' மற்றும் 'காளான்' போதைப்பொருட்களைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>காவல்துறை அடையாள அட்டை</h2><p>மேற்கொண்டு விசாரணை செய்தபோது, ​​காரின் ஓட்டுநர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறி, தான் ஒரு காவல் ஆய்வாளர் என்பதைக் குறிக்கும் வகையில் காவல்துறை அடையாள அட்டையைக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48546cd2-3f96-4b71-adb9-b617818a0c80/26-6a8464c0976b6.webp' /></p><p>எனினும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பயகலா, நாகஹா துவாவைச் சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் என்பதும், தங்க மோசடியில் ஈடுபட்டு 2024-ல் காவல் பணியிலிருந்து விலகியவர் என்பதும் தெரியவந்தது.</p><p></p><h2>வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பொருட்கள்</h2><p>&nbsp;அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஒரு டசின் காவல் சீருடைகள், அறுபத்தெட்டு 9மிமீ தோட்டாக்கள், பன்னிரண்டு T56 தோட்டாக்கள், ஆறு இதர தோட்டாக்கள், அறுநூறு வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐந்து கைவிலங்குப் பொட்டலங்கள், இரண்டு காவல் பைக்கெட்நோட்டுப் புத்தகங்கள், இரண்டு தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள், எட்டு கைபேசிகள், இரண்டு போதைப்பொருள் எடை போடும் தராசுகள், ஐந்து கைவிலங்குகள், ஒரு பெரிய சுத்தியல், நான்கு கைத்துப்பாக்கி உறைகள் மற்றும் ஒரு ஏர் ரிவோல்வர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fda57e0-e0b7-466e-ab33-3ee71c1f39a1/26-6a8464c148ba7.webp' /></p><p>சந்தேக நபர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 30 வயதுடைய நபர் ஆவார். அவர் இன்டர்போல் அடையாள அட்டையையும் வைத்துள்ளார். போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்குள்ள தொடர்பை வெளிப்படுத்துவதற்கான தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதற்காக, அவர் இன்று (18) மகர நீதவான் முன் முற்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் எட்டு விபத்துக்களை ஏற்படுத்திய பிரதான வீதி.. அச்சுறுத்தலை அதிகரிக்கும் தொடர் மௌனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/main-road-causing-eight-accidents-in-jaffna-1787060016"></link>
            <id>https://ibctamil.com/article/main-road-causing-eight-accidents-in-jaffna-1787060016</id>
            <summary type="text">யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள்
மத்தியில் விசனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள்
மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

782 வழித்தட யாழ் - காரைநகர் வீதியானது மானிப்பாய் - எழுமுள்ளி பகுதியில்
சேதமடைந்துள்ளது. </p><p>வீதியின் முழு அகலமும் சுமார் 15 அடிகள் நீளத்திற்கு
சேதமடைந்துள்ளது.</p><p>

வீதியில் நிலத்தின் கீழுள்ள குடிநீர் வழங்கல் குழாயானது சேதமடைந்ததால் தண்ணீர்
வீதியை பிரித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாய்ந்தது.
</p><p>இந்நிலையில் அந்த தண்ணீர் குழாயானது சீர் செய்யப்பட்டது இருப்பினும் அந்த
வீதியானது சீர் செய்யப்பட்டாமல் காப்பெற் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

குறித்த வீதியால் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகள் பயணிக்கின்றன
அத்துடன் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.</p><p>

அத்துடன் அந்த இடத்தில் இதுவரை எட்டு விபத்துகள் ஏற்பட்டதாகவும், அந்த எட்டு
விபத்துக்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக
காணப்படுகிறது. அந்த வீதியானது திருத்தம் செய்யப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறே
காணப்பட்டால் மரணங்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. </p><p>அவ்வாறு இடம்பெறும்
உயிரிழப்புகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு கூறவேண்டிய தேவை
காணப்படுகிறது.

எனவே மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் எவையும் ஏற்பட முன்னர் அந்த
வீதியை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T13:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்: காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-relatives-association-request-1787059305"></link>
            <id>https://ibctamil.com/article/missing-relatives-association-request-1787059305</id>
            <summary type="text">பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம்
முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம்
முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>

இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும்
கருத்து தெரிவித்த அவர்கள்,&nbsp;</p><p>''காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons – OMP),
காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குடும்பங்களை
அழைத்து, ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு
வருமாறு கோருவது குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள் ஆழ்ந்த
கவலை கொண்டுள்ளோம்.</p><p></p><h2>OMP நடவடிக்கை</h2><p>
மேலும், கிராம சேவகர் (GS) அதிகாரிகள் மூலம் குடும்பங்களைத் தொடர்புகொண்டு OMP
நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில குடும்பங்கள்
அச்சுறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக தாய்மார்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2571193-4885-4be2-8573-89093986bff3/26-6a845c6adefd0.webp' /></p><p>

எந்த கிராம சேவகர் அதிகாரியோ அல்லது வேறு அரச அதிகாரியோ காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை OMP கூட்டத்திற்குச் செல்லவோ, மரணச்
சான்றிதழை ஏற்றுக்கொள்ளவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ அச்சுறுத்தவோ,
அழுத்தம் கொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே உள்ளனர் என்பவை
நம்பகமான சுயாதீன விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களின்
குடும்பங்கள் மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள அழுத்தப்படக்கூடாது" என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T13:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலைக்குள் மொசாட்டாம்... வைத்தியர் சுகுணன் உளவாளியாம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mossad-agent-inside-kalmunai-hospital-1787058743"></link>
            <id>https://ibctamil.com/article/mossad-agent-inside-kalmunai-hospital-1787058743</id>
            <summary type="text">றூம் போட்டு யோசிப்பாங்களோ என்ற வகையில் 
கல்முனை வைத்தியசாலையை மையப்படுத்திய புதிய திடுக் விடயங்கள் வருகின்றன. 

இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>றூம் போட்டு யோசிப்பாங்களோ என்ற வகையில் 
கல்முனை வைத்தியசாலையை மையப்படுத்திய புதிய திடுக் விடயங்கள் வருகின்றன.</p><p> 

இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் பணிநேர ஆடைகள் தொடர்பான மருத்துவமனையில் எழுப்படும் குரல்களுக்கு பின்னால் மொசாட் சதி இருப்பதான அடித்து விடல்கள் கூட வந்துவிட்டன.</p><p>

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இன்னும் ஒரு படிமேலேபோய் கல்முனை மருத்துவமனையின் பொறுப்பாளரான தமிழ் மருத்துவர் சுகுணன் மொசாட்டின் வலையில் விழுந்துவிட்டாரா? என சந்தேகம் எழுப்புகிறார். </p><p> அரசாங்கம் இந்த விடயத்தில் வேண்டுமானால் இலங்கை அரச மருத்துவ சேவையில் உள்ள சீருடை தொடர்பான தமது முன்னைய சுற்றறிக்கைகள், தாபனவிதிக்கோவைகள் சுகாதார அமைச்சின் நடைமுறைகள் என ஏற்கனவே உள்ள விதிகளை மாற்றி முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் விருப்பத்துக்கு இணங்கலாம்;. அதில் பிரச்சனை ஏதும் இல்லை. </p><p>ஆனால் ஏற்கனவே உள்ள சீருடை தொடர்பான அரசாங்க சுற்றறிக்கை விதியை நினைவுபடுத்தும் மருத்துவர் ஒருவருக்கு ஏன் இந்த திடீர் உளவாளி பட்டம் என்பது தெரியவில்லை . ஆயினும் அரசியல்வாதிகள் அடித்து விடுகிறார்கள்.</p><p>இப்போது கூட போலியான இறக்குமதிகளை காட்டி 
நாட்டை விட்டு ஒரு பில்லியன் டொலர் அன்னிய செலாவணியை அதாவது 340 பில்லியன் ரூபாவை சட்டவிரோத உண்டியல் மூலம் வெளியேற்றிய ஒரு மோசடி வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரியாக ஜெப்ரி முகமட் என்பவர் இருக்கிறார் அதேபோல பாதாள உலகின் சுத்திரதாரியாக கஞ்சிபானி இம்ரான் இருக்கிறார். </p><p>அதேபோல டுபாயில் தூக்கப்பட்டு தற்போது சிஐடியின் உயர்மட்ட பாதுகாப்பில் உள்ள அமெரிக்காவும் கோரும் இன்னொரு பிரபல பாதாள முகமான ஷிரான் பாசிக்கும் உள்ளார். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் தான். </p><p> இவ்வாறான மாபியாக்களுடன் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களை யாராவது தொடர்புபடுத்த முடியுமா? அது அபத்தத்திலும் அபத்தமாகும்.</p><p> அதுபோல இன்னொரு அபத்தம்தான் சுகாதார ஊழியர்களின் சீருடைகள ; தொடர்பாக ஏற்கனவே உள்ள விதிகளை கூறும் கல்முனை மருத்துவமனையின் பொறுப்பாளரான சுகுணனையும் இஸ்ரேலிய மொசாட் உளவாளி என சொல்வது. இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nlrOS-5G3cA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">&nbsp;IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</p></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T13:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைப்பாட்டை விசாரிப்பதில் காவல்துறை தாமதம் : தென்னைமரத்தில் ஏறிய குடும்பஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-climbs-coconut-tree-over-delay-in-complaint-1787057554"></link>
            <id>https://ibctamil.com/article/man-climbs-coconut-tree-over-delay-in-complaint-1787057554</id>
            <summary type="text">&amp;nbsp;தான் அளித்த முறைப்பாட்டை விசாரிப்பதில் காவல்துறை தாமதம் செய்வதாகக் கூறி, ஒருவர் நேற்று (18) காலை 70 அடி உயர தென்னை மரம் ஒன்றில் ஏறிப் போராட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தான் அளித்த முறைப்பாட்டை விசாரிப்பதில் காவல்துறை தாமதம் செய்வதாகக் கூறி, ஒருவர் நேற்று (18) காலை 70 அடி உயர தென்னை மரம் ஒன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
</p><p>
பயங்கல, மடினகந்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவராவார்.
</p><p>
</p><h2>தென்னைமரத்தில் ஏறி போராட்டம்</h2><p>போராட்டத்தைத் தொடங்கிய அந்த நபருக்கு, முந்தைய நாள் (17) இரவு மற்றொரு நபருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அது குறித்து அவர் பயங்கல காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e8cf06-978c-41e6-8a27-06d343ccf935/26-6a845a3da3d49.webp' /></p><p>&nbsp;அதன்படி, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், நேற்று (18) காலை அருகிலுள்ள ஒரு வீட்டில் உள்ள தென்னை மரம் ஒன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p></p><h2>போராட்டக்காரரை கைது செய்த காவல்துறை</h2><p> பின்னர், சந்தேக நபரை காவல்துறை கைது செய்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவரின் மனைவி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c26a769-b924-42b0-a802-4038eff9697f/26-6a845a3eb4fd6.webp' /></p><p>
</p><p>
போராட்டக்காரரின் மனைவியும் சகோதரியும் மரத்தின் அடியில் நின்று, கீழே இறங்குமாறு அவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தனர்.

விசாரித்தபோது, ​​போராட்டக்காரரைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், புகாரை விசாரிப்பதற்காக போராட்டக்காரர் மரத்திலிருந்து கீழே இறங்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
</p><p>
தற்கொலைக்கு முயன்றதற்காக போராட்டக்காரர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை கூறியது.</p><p>

பொறுப்பு தலைமை ஆய்வாளர் துஷாரா ஜெயசேகர மற்றும் பொறுப்பு தலைமை ஆய்வாளர் தினேஷ் குமார ஆகியோரின் தலைமையில் பல்வேறு புகார் பிரிவுகள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழப் போரில் புகைப்படங்கள்... பாடங்களை புகட்டும்  புலிகளின் புகைப்படங்கள்... உலகப் புகைப்பட நாள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/photos-of-tigers-teaching-lessons-1787057318"></link>
            <id>https://ibctamil.com/article/photos-of-tigers-teaching-lessons-1787057318</id>
            <summary type="text">ஈழத் தமிழர்களின் வாழ்வில் புகைப்படங்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இன்று நாம் பார்க்கும் விடுதலைப் புலிப் போராளிகளின் சில படங்கள், நாம் திரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர்களின் வாழ்வில் புகைப்படங்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இன்று நாம் பார்க்கும் விடுதலைப் புலிப் போராளிகளின் சில படங்கள், நாம் திரும்பிச் செல்ல முடியாத ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. </p><p>அவைகள் அந்தப் போராளிகளின் உயரிய இலட்சியத் தாகத்தை, ஒழுக்கம் மிகுந்த பயணத்தை, மக்களுக்கான விசுவாத்தை இன்னும் ஏராளமானவற்றை எமக்குச் சொல்கின்றன.</p><p> ஒரு வகையில் பெரும் காவியங்கள் சொல்லுகிற பாடங்களை அப் புகைப்படங்கள் எமக்குக் கற்பிக்கின்றன. இதுவே புகைப்படங்களின் மிக முக்கிய சக்தி. உலகில் புகைப்படங்கள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் திருப்புமுனைகளை நிகழ்த்தியுள்ளன.</p><p></p><h2>புகைப்பட தினம்</h2><p>நேப்பாம் சிறுமி’ என்று உலகம் அறிந்த வியட்நாம் போரின் புகைப்படம், 1972ஆம் ஆண்டு நிக் உட் பிடித்த படம். நேப்பாம் குண்டுவீச்சுக்குப் பின்னர் உடலில் தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடிவரும் ஒன்பது வயது சிறுமி கிம் ஃபுக் இடம்பெறும் புகைப்படம், போரின் கொடூரத்தை உலகின் கண்முன் கொண்டுவந்தது. </p><p>அதேபோன்று, 1993ஆம் ஆண்டு கெவின் கார்ட்டர் எடுத்த “The Vulture and the Little Girl” என்ற சோமாலியா பஞ்சப் புகைப்படம், பட்டினியால் சோர்ந்து விழுந்து கிடக்கும் ஒரு குழந்தையின் அருகே காத்திருக்கும் கழுகை பதிவு செய்தது. </p><p>இந்தப் படம் ஆப்பிரிக்கப் பஞ்சத்தின் மனித அவலத்தை உலக மனச்சாட்சிக்கு முன்வைத்ததோடு, புகைப்படக் கலைஞரின் பொறுப்பு, ஊடகத்தின் நெறிமுறை, ஒரு துயரத்தைப் பதிவு செய்வதற்கும் அதற்கு உதவுவதற்கும் இடையிலான எல்லை ஆகியவற்றைப் பற்றிய தீவிரமான விவாதத்தையும் உருவாக்கியது. </p><p>இந்த ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களைவிட வலிமையானதாக இருப்பதுடன் ஒரு முழு உலகத்தையே கேள்விக்கு உள்ளாக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

ஆண்டுதோரும் ஆகஸ்ட் 19ஆம் நாளன்று உலக புகைப்பட நாள் கொண்டாப்படுகிறது. </p><p>உண்மையில் இந்த நாளை மனிதன் ஒரு தருணத்தைத் தனது நினைவிலிருந்து பிரித்து, ஒரு காட்சியாக நிரந்தரப்படுத்திய தினமெனலாம். 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் பிரான்ஸ் அரசு லூயி டாகேரால் உருவாக்கப்பட்ட டாகேரியோடைப் (Daguerreotype) எனும் புகைப்பட முறையை உலகிற்கு அறிவித்தது. </p><p>அந்த அறிவிப்பே நவீன புகைப்பட வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது. &nbsp;

ஆனால் புகைப்படத்தின் உண்மையான முக்கியத்துவம் என்பது ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் மாத்திரம் இல்லை. </p><p>அது காலத்தை நிறுத்தி வைக்கும் மனிதனின் கலை முயற்சியில்தான் மகத்துவம் பெறுகிறது. வாழுகின்ற ஒரு கணம் அடுத்த கணத்திலேயே கடந்த காலமாகிவிடுகிறது. </p><p>ஆனால் அந்தக் கணத்தை ஒரு புகைப்படமாகப் பிடித்துவிட்டால், அது ஆண்டுகள் கடந்தும் நம்மிடம் திரும்பி வருகிறது. அதனால்தான் புகைப்படம் ஒரு காட்சியாக மாத்திரமன்றி நினைவாகவும் &nbsp;சாட்சியாகவும் வரலாற்றின் நிழலாகவும் நிலைக்கிறது.</p><p></p><h2>ஒரு குடும்பத்தில் ஒரு புகைப்படம்</h2><p>ஒரு பழைய வீட்டில் கிடக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் இருப்பவர்கள் இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். அந்த வீட்டே இல்லாமல் போயிருக்கலாம்.</p><p> அந்தக் காலத்தின் உடைகள், முகங்கள், வீதிகள், வீடுகள், வாகனங்கள், திருமண முறைகள், பள்ளி வாழ்க்கை என அனைத்தும் மாறியிருக்கலாம். ஆனால் அந்தப் புகைப்படம் மட்டும் கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது.
</p><p>
ஒரு தந்தையின் இளமைப் படம், ஒரு தாயின் திருமணப் படம், பள்ளி மாணவர்களின் குழுப்படம், குழந்தையின் முதல் பிறந்தநாள், குடும்பம் ஒன்றாகச் சேர்ந்த ஒரு விழா—இவை அனைத்தும் தனிப்பட்ட நினைவுகள் போலத் தோன்றினாலும், அவை சமூக வரலாற்றின் சிறு ஆவணங்களாகவும் மாறுகின்றன.</p><h2>ஈழத் தமிழர் வாழ்வில் புகைப்படம்</h2><p>ஈழத் தமிழர் குடும்பங்களில் புகைப்படத்தின் அர்த்தம் இன்னமும் உணர்வுபூர்வமானது. பண்பாட்டையும் போராட்டத்தையும் வரலாற்றையும் வெளிப்படுத்துகிற மிகப் பெரிய கருவி. போர், இடப்பெயர்வு, காணாமலாக்கம், மரணம், அகதி வாழ்க்கை என ஒரு தலைமுறையின் வாழ்க்கை சிதறியபோது, பல குடும்பங்களிடம் உறவினர்களை நினைவுகூர வைத்திருப்பது புகைப்படங்கள்தான். </p><p>ஈழத்தில் சில வீடுகளில் ஒரு புகைப்படம் ஒரு மனிதரின் முழு வரலாற்றையும் சொல்லியபடி இருக்கிறது.

காணாமல் போனவரின் புகைப்படம் இன்று ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும் ஒரே அடையாளம். </p><p>போரில் இறந்த ஒருவரின் புகைப்படம் அவரது இருப்புக்கான நினைவுச் சின்னம். எனவே ஈழத்தில் புகைப்படம் என்பது அழகிய நினைவுகளை மட்டும் பதிவு செய்த ஊடகமாக மாத்திரமின்றி அது இழந்தவர்களின் இருப்பைத் தொடர்ந்து காக்கும் ஒரு கருவியாகவும் மாறியிருக்கிறது. </p><p>முள்ளிவாய்க்கால் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போரின் சாட்சியாகவும் நீதிக்கான கருவியாகவும் உள்ளன. குடும்பப் புகைப்படங்கள், இடம் மற்றும் காலத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் பொருட்களாகக் கருதப்பட்டுள்ளன.</p><p></p><h2>போரில் புகைப்படங்கள்
</h2><p>ஈழத்தின் நவீன வரலாற்றை எழுத்துக்களால் மட்டும் எழுத முடியாது. அந்த வரலாற்றின் ஒரு பகுதி புகைப்படங்களில் உறைந்திருக்கிறது. </p><p>கிராமங்களின் பழைய தோற்றங்கள், யாழ்ப்பாணத்தின் நகர வாழ்க்கை, வடக்கு கிழக்கின் விவசாயப் பண்பாடு, பாடசாலைகள், கோயில்கள், சந்தைகள், திருமணங்கள், கலை நிகழ்வுகள், போராட்டங்கள், இடப்பெயர்வுகள், அகதி முகாம்கள் - இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் புகைப்படங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
போர் தீவிரமடைந்தபோது புகைப்படத்தின் பணி இன்னும் கடினமாகிற்று. சாதாரண வாழ்க்கையின் காட்சிகளைப் பதிவு செய்த கமரா, பின்னர் குண்டுவீச்சின் பின்னணியையும், இடிந்த வீடுகளையும், அகதிகளின் முகங்களையும், காயமடைந்தவர்களையும், அழிக்கப்பட்ட நிலங்களையும் பதிவு செய்யதிற்று.</p><p></p><p>
</p><h2>புலிகளின் புகைப்படங்கள்
</h2><p>ஈழப் போராட்டத்தின் காலப்பகுதியில் புகைப்படம் ஒரு தனிப்பட்ட கலைச் செயற்பாடாக மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகக் கட்டமைப்புக்குள் புகைப்படத்துறையும் ஒரு ஆவணப் பணியாக வளர்க்கப்பட்டது. </p><p>கிடைக்கக்கூடிய போர்க்கால வெளியீடுகள், அத்துடன் அந்தப் புகைப்படப்பிரிவு வெறும் இராணுவக் காட்சிகளை மட்டும் பதிவு செய்யவில்லை.</p><p>2004ஆம் ஆண்டு வெளியான போராளிக் கவிஞர் அம்புலியின் ‘மீண்டும் துளிர்க்கும் வசந்தம்’ என்ற கவிதைத் தொகுப்பில், அதன் புகைப்படங்களை புலிகளின் புகைப்படப்பிரிவை சேர்ந்த போராளி கஜானி உள்ளிட்டோர் &nbsp;பதிவாக்கினர்.
</p><p>
போராட்டத்தின் அரசியல், சமூக, கலை, கலாசார, அபிவிருத்தி நிகழ்வுகளையும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. அதாவது, ஒரு போராட்டத்தின் ஆயுதக் களத்தை மட்டும் அல்லாமல், அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சமூக வாழ்வையும் ஆவணப்படுத்தும் முயற்சியாக புகைப்படத்துறை இயங்கியிருந்தது.</p><p>

இதன் முக்கியத்துவத்தை இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு காலத்தைப் பற்றி அரசியல் உரைகள் பலவிதமாகச் சொல்லலாம்.</p><p> ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் முகங்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள், நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்கள், போராளிகளின் வாழ்க்கை, மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் ஆகியவற்றை பதிவு செய்த புகைப்படங்கள் அந்தக் காலத்தின் காட்சி ஆவணங்களாக ஈழ வரலாற்றில் தங்குகின்றன. </p><p>இன்று ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த பல &nbsp;ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள சில புகைப்படங்களே அரிய வரலாற்றின் ஆவணங்களாக உள்ளன.</p><p></p><h2>இறுதிப் போரில் புகைப்படத்தின் சாட்சியம்
</h2><p>2009ஆம் ஆண்டின் இறுதிப் போருக்காலத்தில் புகைப்படமும் காணொளியும் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றன. </p><p>சர்வதேச ஊடகங்களின் நேரடி அணுகல் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவான காட்சிகள் பின்னர் உலகின் கவனத்துக்குச் சென்றன.</p><p>

சனல் 4 வெளியிட்ட Sri Lanka's Killing Fields மற்றும் அதன் தொடர்ச்சியான War Crimes Unpunished ஆகிய ஆவணப்படங்கள் புகைப்படங்கள், காணொளிகள், நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை இணைத்துப் போரின் இறுதிக்கட்டத்தைப் பேசின. </p><p>புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்குகளிலும் காட்டப்பட்டன.

இறுதிப் போரின் காட்சிகள் தொடர்பான விசாரணைகளில் புகைப்படங்களும் காணொளிகளும் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. </p><p>இன்று முள்ளிவாய்க்கால் குறித்து பேசும்போது, புகைப்படங்கள் வெறும் கடந்த காலத்தின் காட்சிகளாகவன்றி, அவை இனப்படுகொலை குறித்து பதில் கேட்கும் சாட்சிகளாக உள்ளன. </p><p>இறுதிப் போரில் மனிதர்களுடன் புகைப்படங்களும் அழிக்கப்பட்டன. பல லட்சம் பேரின் புகைப்படங்களும் ஆல்பங்களும் அழிக்கப்பட்டதும் இந்த நாளின் முக்கியமான விசயமாகும்.</p><p></p><h2>புகைப்படங்களை பாதுகாப்பது
</h2><p>ஈழத் தமிழர்களிடம் இன்று பல ஆயிரக்கணக்கான தனிப்பட்ட புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் எத்தனை பாதுகாப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன? எத்தனை புகைப்படங்களின் பின்னணி, திகதி, இடம், பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? &nbsp;</p><p>புகைப்படத்தை எடுப்பது மட்டும் போதாது. அதை பாதுகாக்க வேண்டும்.</p><p> அதன் பின்னணியை எழுத வேண்டும். அதில் இருப்பவர்களின் பெயர்களைச் சேமிக்க வேண்டும். </p><p>&nbsp;பழைய புகைப்படங்களை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். குடும்பங்களின் தனிப்பட்ட புகைப்படத் தொகுப்புகள் நாளைய சமூக வரலாற்றின் அரிய ஆவணங்கள்.
</p><p>
போருக்குள் மிகச் &nbsp;சிறிய வயதில் இருந்தே புகைப்படங்களை தேடுகிறவனாகவும் பிறகு அதனை முள்ளிவாய்க்காலில் அழிவுக்குப் பறிகொடுத்தவனாகவும் அது பற்றி நடுகல் நாவலின் வழியாக பேசி ஆவணப்படுத்திய வகையிலும் இந்த நாள் என்பது எங்கள் ஈழ மண்ணுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஒரு மிக முக்கிய நாளாகவும் உணர முடிகிறது.</p><p> ஒரு புகைப்படத்தை அழிப்பது என்பது ஒரு காட்சியை அழிப்பதாக மாத்திரம் முடிவதில்லை. ஒரு குடும்பத்தின், ஒரு தலைமுறையின் ஒரு இனத்தின் நினைவையே அழிப்பது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-18T13:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிற்கு உயிர் அச்சுறுத்தல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provide-necessary-security-to-shiran-basic-1787054819"></link>
            <id>https://ibctamil.com/article/provide-necessary-security-to-shiran-basic-1787054819</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபரான "ஷிரான் பாசிக்கிற்கு" தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
</p><p>
நாரஹேன்பிட்ட காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபருக்கு முறையான பாதுகாப்பு இல்லை என்று அவரது சட்டத்தரணி வசந்த பிட்டிகல தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>கால்நடையாக அழைத்துச் செல்லப்படும் சந்தேக நபர்</h2><p>ஒவ்வொரு நாள் காலையிலும் சந்தேக நபர் நாரஹேன்பிட்ட காவல் நிலையத்திலிருந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கால்நடையாகவே அழைத்துச் செல்லப்படுகிறார் என்று சந்தேக நபரின் சட்டத்தரணி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2ce115a-9cfa-4762-8e6f-13b09295d977/26-6a844d6b520e8.webp' /></p><p>
</p><p>
அதன்படி, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
இதனைக் கருத்தில் கொண்ட நீதிபதி, நாரஹேன்பிட்ட காவல்தறை மற்றும் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் இயக்குநரகம் சந்தேக நபருக்கு முறையான பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf601b3-13c5-4599-909f-10081bf1868f/26-6a844d6c026e0.webp' /></p><p></p><p><b>you may like this&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/13htWTWSkcU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் முக்கிய நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-negotiator-demands-lift-blockade-open-hormuz-1787053514"></link>
            <id>https://ibctamil.com/article/iran-negotiator-demands-lift-blockade-open-hormuz-1787053514</id>
            <summary type="text">ஈரானின் கடற்படை முற்றுகையை நீக்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என அந்நாட்டின்&amp;nbsp; உயர்மட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடற்படை முற்றுகையை நீக்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என அந்நாட்டின்&nbsp; உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான&nbsp; முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>அமெரிக்காவிற்கு இன்று அவர் வழங்கிய முக்கிய செய்தியில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை நீரிணை திறக்கப்படாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> 

 

</p><p>ஈரான் - அமெரிக்க போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்டு, பின்னர் முறிந்துபோன நிலையில் அதில் சேர்க்கப்பட்டிருந்த கோரிக்கைகளில், முற்றுகையை நீக்குதல், எண்ணெய் மீதான தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துக்களை முடக்குவதை விடுவித்தல் ஆகியவற்றை மீண்டும் காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd784a9e-f0e4-4e39-93bd-bb2879b8ba7f/26-6a844b9b6e819.webp' /></p><p>ஈரானின் மீது அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெப்ரவரி 28 அன்று போர் மூண்டது, இது பிராந்தியம் முழுவதும் ஒரு மோதலைத் தூண்டியது.</p><p> </p><p>

 

ஏப்ரல் 8 முதல் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் கடுமையான குண்டுவீச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதிலும், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகின்றன. </p><p>

 

போர் தொடங்கியதிலிருந்து, உலகளாவிய முக்கிய எரிசக்திப் போக்குவரத்து வழித்தடமான அந்த நீர்வழிப்பாதையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், கப்பல்கள் அனுமதி பெறவும், போக்குவரத்துச் சேவைக் கட்டணங்களைச் செலுத்தவும் வேண்டியுள்ளது.</p><p>இந்த நடவடிக்கையை அமெரிக்காவுடன் பல பிராந்திய நாடுகளும் எதிர்த்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் முக்கியப் பிரச்சினை கடன் திருப்பிச் செலுத்துவதே! ரணில் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-s-advice-to-anuradha-s-government-1787054430"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-s-advice-to-anuradha-s-government-1787054430</id>
            <summary type="text">அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதா என்பது இந்த நாட்டின் பிரதான பிரச்சினை அல்ல, மாறாக சர்வதேச மூலங்களிலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதா என்பது இந்த நாட்டின் பிரதான பிரச்சினை அல்ல, மாறாக சர்வதேச மூலங்களிலிருந்து பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதே ஆகும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.</p><p>முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய எழுதிய 'யுத கியாகய உர தி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று(18.08.2026)&nbsp;கொழும்பில் இடம்பெற்றது.</p><p>இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;நாடு மீண்டும் திவாலாகிவிடும்</h2><p>கடன்களைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்த விவாதங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e72647-2b55-465a-85bf-561e3a57c033/26-6a844adced63d.webp' /></p><p>
அதன்படி,&nbsp; ஜனாதிபதி&nbsp; இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் நாடு மீண்டும் திவாலாகிவிடும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி, 2028-ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் ரூபாயைத் திரட்ட வேண்டியிருக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T12:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருக்கும் இம்ரான் கான் :பாகிஸ்தான் உச்ச நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-imran-khan-moved-hospital-from-jail-1787052263"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-imran-khan-moved-hospital-from-jail-1787052263</id>
            <summary type="text">முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்திருந்த அவரது கட்சி மற்றும் குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சிறையிலுள்ள அவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்திருந்த அவரது கட்சி மற்றும் குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சிறையிலுள்ள அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய 73 வயதான கான், 2022-ல் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறும் தொடர்ச்சியான வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, ஓகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><h2>மோசமடைந்த அவரது உடல் நிலை குறித்து மகன்கள் கவலை&nbsp;</h2><p>

கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து அவரது மகன்கள் மீண்டும் மீண்டும் கவலை தெரிவித்த நிலையில், சிறையில் இருந்தபோது அவரது வலது கண்ணில் கணிசமான பார்வை இழப்பு ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431af8ed-9989-4d94-9bad-df5754f50df0/26-6a8446276f673.webp' /></p><p>
</p><p>
"இது மிகவும் வரவேற்கத்தக்க உத்தரவு. இது முன்னதாகவே பிறப்பிக்கப்பட்டிருந்தால், அவரது கண் மற்றும் பொது உடல்நிலை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது என நாங்கள் நம்புகிறோம்," என்று பிடிஐ செய்தித் தொடர்பாளர் சுல்பிகார் புகாரி கூறினார்.
</p><p>
"அனைத்து மருத்துவர்களும் திருப்தி அடையும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>48 மணி நேரத்திற்குள்&nbsp;மாற்றுமாறு உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
கானை 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி, செப்டம்பர் 16 வரை அங்கேயே இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கானின் செய்தித் தொடர்பாளர் நயீம் ஹைதர் பஞ்சுதா எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3c2fb97-50ac-4d6d-bde9-ed93c1732fad/26-6a8446282168a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/passenger-drone-service-to-boost-sri-lanka-tourism-1787051887"></link>
            <id>https://ibctamil.com/article/passenger-drone-service-to-boost-sri-lanka-tourism-1787051887</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய்ந்து வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த சேவை குறித்த ஒரு விசேட கலந்துரையாடல், அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. </p><p>சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சி சிரேஷ்ட அதிகாரிகளும், சீனாவைச் சேர்ந்த ஈஹாங் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p></p><h2>அவசரகால பேரிடர் மீட்பு&nbsp;</h2><p>​​இதன்போது, ஈஹாங் பிரதிநிதிகள் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கும் விமானங்களின் விபரங்களை வழங்கினர்.</p><p> இந்த விமானங்கள் 16 உந்துவிசை விசிறிகளுடன் பொருத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னாட்சி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9464a05-a043-419c-af7b-8d2a1151948c/26-6a844102d762d.webp' /></p><p>முன்மொழியப்பட்ட இந்த சேவையானது, சுற்றுலாவைத் தாண்டி, அவசரகால பேரிடர் மீட்பு மற்றும் கடல்சார் செயல்பாடுகள் உள்ளிட்ட பயன்பாடுகளையும் கொண்டிருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.</p><p>எனினும், விமானப் பாதுகாப்பு, ஒழுங்குமுறைத் தேவைகள், வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, அவசரகால நடைமுறைகள், இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளங்கள் தொடர்பான அனைத்துத் தேவையான அனுமதிகளையும் பெற்ற பின்னரே வணிகச் செயல்பாடுகளைத் தொடங்க முடியும் என்று அமைச்சர் கருணாதிலக்க தெரிவித்தார்.</p><p></p><h2>முக்கிய சுற்றுலாத் தலங்கள்</h2><p>
</p><p>
சிகிரியா, பிதுரங்கல, கொழும்பு மற்றும் துறைமுக நகரம் கொழும்பு போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்தச் சேவையை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250df2b8-1abf-4e76-a0e1-18f49fe86e12/26-6a844103910db.webp' /></p><p>
பயணிகள் விமானத்தைச் சோதித்துக் காட்சிப்படுத்துவதற்காக, துறைமுக நகரம் கொழும்புக்குள் ஒரு செயல்விளக்க வலயத்தை நிறுவுவது குறித்தும் பங்கேற்பாளர்கள் மேலும் பரிசீலித்தனர்.
</p><p>
முன்மொழியப்பட்ட இந்த முயற்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய வகை வான்வழிப் போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதோடு, இலங்கையில் அவசரகால மற்றும் கடல்சார் சேவைகளுக்கான சாத்தியமான பயன்பாடுகளுக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க முன்மொழிந்தவர்களே அச்சத்தால் எதிர்க்கின்றனர்: பிரபு எம் பி சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-age-limit-for-judges-should-be-raised-1787049278"></link>
            <id>https://ibctamil.com/article/the-age-limit-for-judges-should-be-raised-1787049278</id>
            <summary type="text">2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர்.</p><p>


மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக
அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விலேயே இந்த விடயத்தை ட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>
</p><p>இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><h2>பாதாள உலக செயற்பாடு</h2><p>“எமது அரசாங்கத்திற்கு பழி சுமத்துகின்ற அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதை காணமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae887468-3c0b-452f-affc-1a30a0983c6b/26-6a843b42a93e1.webp' /></p><p> </p><p>ஆனாலும் அவர்களது இந்த குழப்புகின்ற செயற்பாடுகள் மக்கள்
மத்தியில் எடுபடவில்லை.



தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிபதிகளின் வயதில்லைகளை அதிகரிப்பது தொடர்பான
விடயங்களை வைத்துக்கொண்டு அதனையும் அரசுக்கு எதிரான பிரசாரங்களாக எடுத்துக்
கொண்டு சிலர் வருகின்றார்கள்.</p><p>இந்த காலங்களிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>அது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் நீதிமன்றத்தில் ஊடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a78075cc-827b-4847-81c9-2f7d5c6b48f1/26-6a843b4363fee.webp' /></p><p>
</p><p>அதேபோன்று பாதாள உலக செயற்பாடுகளிலும், போதை விற்பனையில் ஈடுபட்டவர்களும்,
அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அவர்கள் இங்கு
கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றன.</p><p>



இவை அனைத்தும் சுயாதீனமாக நீதித்துறை கட்டமைப்புகளின் ஊடாக விடயங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. </p><p>ஆனால் இதனை ஓர் அரசியலாக உருவாக்கிக் கொண்டு அதற்கு
எதிராக ஒரு சில கூட்டணிகளை அமைத்துக் கொண்டும் சிலர் எதிர்த்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
</p><p>


2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இருக்கிறார்கள்.</p><p>



வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதியரசர் சி.வி
விக்னேஸ்வரன்கூட நீதிபதிகளின் வயதிலேயே 70 வயதுகளாக நிர்ணயித்தால்கூட
சிறப்பாக இருக்கும் என அண்மையில் தெரிவித்து இருக்கின்றார்” என அவர் இதன்போது
தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய நில நடுக்கத்தை அடுத்து இந்தோனேஷியாவில் தொடரும் நில அதிர்வுகள் : பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-records-over-2100-aftershocks-1787046766"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-records-over-2100-aftershocks-1787046766</id>
            <summary type="text">கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தொடர்ச்சியான தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தொடர்ச்சியான தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 2,119 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்த அதிர்வுகள் மேலும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குத் தொடரக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை எச்சரித்துள்ளதாக ஜகார்த்தா குளோப் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>70 அதிர்வுகளை உணர்ந்த மக்கள்</h2><p>இந்தப் பின் அதிர்வுகள் 1.3 முதல் 6.2 ரிக்டர் அளவு வரை இருந்தன, அவற்றில் 24 அதிர்வுகள் 5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகின. மேலும், அவற்றில் 70 அதிர்வுகளைப் அப்பகுதி மக்கள் உணர்ந்ததாக அந்த முகமையின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பணிப்பாளர் விஜயந்தோ கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724010b6-cf74-4f7b-939c-3df46cfeb953/26-6a842e00aa249.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமை, கிழக்கு நுசா தெங்காராவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குதான் பிரபலமான சுற்றுலா மையமான லபுவான் பாஜோ அமைந்துள்ளது. இதனால் பரவலான சேதம் ஏற்பட்டது.</p><p></p><h2>68 பேர் உயிரிழந்தது உறுதி</h2><p>அரசு நடத்தும் அந்தரா செய்தி நிறுவனத்தின்படி, இதுவரை 68 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fbff7c0-8993-4d2c-abe8-a6454235054c/26-6a842e0003b39.webp' /></p><p>

இதற்கிடையில், பாதுகாப்பு ஆய்வுகளுக்காக, மேற்கு மங்காராயில் உள்ள ரங்கோ குகை, மங்காராயில் உள்ள வே ரேபோ பாரம்பரிய கிராமம் மற்றும் எண்டேயில் உள்ள கெலிமுட்டு தேசியப் பூங்கா உள்ளிட்ட புளோரஸ் தீவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.</p><p>

12,000-க்கும் மேற்பட்ட மக்கள் "நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளுக்கு அஞ்சி", வளாகங்களிலும் கிராமங்களிலும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை திங்களன்று தெரிவித்தது.</p><h2>ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதம்</h2><p>

குறைந்தது 914 வீடுகள் கடுமையாகவும், 126 வீடுகள் மிதமாகவும், 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக கூட்டுக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மேலும், 93 கல்வி நிறுவனங்கள், 36 சுகாதார நிலையங்கள் மற்றும் 38 அரசு அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8f77d8-bfc0-4c91-b9a6-f9869f029234/26-6a842dff52bfd.webp' /></p><p>

இதற்கிடையில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள பத்து தீவுகள் பகுதியில் செவ்வாயன்று 5.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக யூரோ-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.6 ரிக்டர் அளவாகப் பதிவு செய்திருந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கான நீதிமன்ற தீர்ப்பை NPP அமைச்சர்கள் எப்படி கணிக்கிறார்கள்..! நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-ministers-predict-verdict-before-court-namal-1787049422"></link>
            <id>https://ibctamil.com/article/npp-ministers-predict-verdict-before-court-namal-1787049422</id>
            <summary type="text">நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், தனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று NPP அமைச்சர்கள் எப்படி கணிக்க முடியும் என SLPP நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், தனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று NPP அமைச்சர்கள் எப்படி கணிக்க முடியும் என SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
“நான் NPP அமைச்சர்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், இன்னும் சில நாட்களில் நான் சிறைக்குச் செல்லப் போகிறேன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.</p><h2>&nbsp;நீதிமன்றத்தின் மீது&nbsp; நம்பிக்கை&nbsp;</h2><p>&nbsp;நீதிமன்றத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், நீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் மதிப்பதாகவும் ராஜபக்ச கூறினார்.

“ நீதிபதி வழக்கை விசாரித்து, ஆதாரங்களைப் பார்த்து, தீர்ப்பை வழங்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee6c77ec-10b7-409f-91bc-64068d52a1b7/26-6a843ea313bb3.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத் தீர்ப்பை அமைச்சர்கள் கணிப்பது பொதுமக்களிடையே இயல்பாகவே கேள்விகளை எழுப்பும் என்று அவர் தெரிவித்தார்..

“நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே, நான் சிறைக்குச் செல்லப் போகிறேன் என்று அமைச்சர்கள் கூறும்போது, ​​மக்கள் இயல்பாகவே கேள்விகளைக் கேட்கத் தொடங்குவார்கள்.நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவர் கேட்டார்.</p><p></p><p>
</p><h2>நீதிமன்றத் தீர்ப்புகளை&nbsp;அரசியல் தலைவர்கள் கணிக்கக் கூடாது</h2><p>இந்தப் பிரச்சினை தன்னைப் பற்றியது மட்டுமல்ல, நீதித்துறையின் சுதந்திரம் பற்றியதுமாகும் என்று ராஜபக்ச கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab7f8c0-965c-4c9a-b88c-050e5bfb896d/26-6a843ea3b8b1d.webp' /></p><p>
</p><p>
“அரசியல் தலைவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கணிக்கக் கூடாது. எந்தவித அழுத்தமோ தலையீடோ இன்றி நீதிமன்றங்கள் தங்கள் பணியைச் செய்ய அவர்கள் அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.</p><p>ஒரு வழக்கின் முடிவு அமைச்சர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், அத்தகைய தகவலின் மூலத்தைக் கேள்வி கேட்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் மேலும் கூறினார்.

“தீர்ப்பு நீதிமன்றத்திடமிருந்து வர வேண்டுமே தவிர, ஓர் அமைச்சரிடமிருந்து அல்ல,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-new-anti-terrorism-bill-1787047111"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-new-anti-terrorism-bill-1787047111</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.</p><p>

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்ட வரைவு, 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பூர்வாங்க வரைவு</h2><p>

தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஒரு பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக, தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று முன்னதாக நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5186f7-e8be-4d74-9619-341f7ae204cd/26-6a84305be1568.webp' /></p><p>

அந்த வரைவின் அடிப்படையில், புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கை ஒப்புதலை அமைச்சரவை தனது ஆகஸ்ட் 10, 2026 கூட்டத்தில் வழங்கியது.
</p><p>
அதனைத் தொடர்ந்து சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், அதனை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என அமைச்சர் ஜெயதிதசா தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T11:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பில்&amp;nbsp; கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை&amp;nbsp;கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில்&nbsp; கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை&nbsp;கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள்ளது.&nbsp;</p><p>
குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரை பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்&nbsp;கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யபட்டிருந்தார்.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த விசாரணைக்காக&nbsp;இன்று (18) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை&nbsp;</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427eb487-a1a4-43a7-bb7d-bc716895a77d/26-6a83edf50a2f0.webp' /></p><p>
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் குறித்த விசாரணைக்காக&nbsp; கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:13:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கத்தால் இன்று (18) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கத்தால் இன்று (18) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>அதற்கமைய, SC/SD/31/2026 எனும் இலக்கத்தின் கீழ் இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
 

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும், அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53f4a258-e534-4851-8c65-16d164de82e4/26-6a843b3a4d257.webp' /></p><p>
</p><p>
 

அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில், அதிகாரப் பகிர்வில் மற்றும் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழமாகக் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக் காட்டுகிறது.</p><p>இதேவேளை&nbsp;அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இன்று (18) இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c586c888-859b-4989-a442-115c3c6c1775/26-6a8427468aeca.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்!&nbsp;</h4><p>அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p> நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தல்&nbsp;</h2><p>

அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c290fe7-2c83-4765-9817-42b8dd76fd52/26-6a8409eaf2ab9.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>இதேவேளை&nbsp;சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.</p><p></p><h2>சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்</h2><p>அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98b38cc-1939-46aa-8070-ad07263b60c4/26-6a8409ebdd26d.webp' /></p><p> </p><p>

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.&nbsp;</p><p>நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Sjen6oDZeZY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-18T10:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலையான நீல்திய பொக்குண ஆரம்பமாகவுள்ள சுற்றுலா நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilthiya-pokuna-sri-lankas-new-tourist-destination-1787049857"></link>
            <id>https://ibctamil.com/article/nilthiya-pokuna-sri-lankas-new-tourist-destination-1787049857</id>
            <summary type="text">இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலை வளமாகக் கருதப்படும் நீல்திய பொக்குண (Nil Diya Pokuna) பகுதியை பாதுகாப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, வனஜீவராசிகள் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலை வளமாகக் கருதப்படும் நீல்திய பொக்குண (Nil Diya Pokuna) பகுதியை பாதுகாப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
பதுளை மாவட்டம், எல்ல பிரதேச செயலகப் பிரிவின் கரந்தகொல்ல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராவணா எல்ல சரணாலயத்தின் நிலத்தடி குகைத் தொகுதிக்குள் நீல்திய பொக்குண அமைந்துள்ளது. இது அரிய இயற்கை நீரூற்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
அதன் தனித்துவமான புவியியல் அமைப்புகள் காரணமாக, இந்த இடம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.</p><p></p><h2>நீல்திய பொக்குண</h2><p>

இந்த இடத்தை ஆய்வு செய்து, அதன் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/536ce366-99c6-4f6f-96c0-c4373068117e/26-6a843a15405a0.webp' /></p><p>

அந்தக் குழுவின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், நீல்திய பொக்குண பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன. </p><p>அந்த விதிமுறைகள் சட்டவரைவு வரைவாளரால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ், இந்த விதிமுறைகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இதன் மூலம், நீல்திய பொக்குண பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையின் கீழ் மேற்கொள்ள முடியும். அதேவேளை, இந்த இயற்கைச் சூழலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T10:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-to-issue-the-first-digital-identity-card-1787048599"></link>
            <id>https://ibctamil.com/article/steps-to-issue-the-first-digital-identity-card-1787048599</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
 

டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள சில மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>புதிய டிஜிட்டல் முறைமை</h2><p>
</p><p>
 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

"டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த வருடத்திற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடும் கட்டத்தை எட்டுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef4a281-c9f2-43b3-a3c8-363bf67bfadc/26-6a84374178e98.webp' /></p><p> </p><p>அதேபோன்று, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். </p><p>அங்கிருந்து சுமார் 2 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் 17 மில்லியன் மக்களையும் பழைய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் முறைமைக்குக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்." என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகர் ஜஸ்ரின் பரிஸில் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journalist-jasrin-passes-away-in-paris-1787053518"></link>
            <id>https://ibctamil.com/article/journalist-jasrin-passes-away-in-paris-1787053518</id>
            <summary type="text">புலம்பெயர் தமிழ் மக்களின் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனித்துவ குரலை கொண்டிருந்த ஜஸ்ரின் அருள்ராஜா தம்பிராஜா பிரான்சில் நேற்று சுகயீனம்காரணமாக காலமானார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர் தமிழ் மக்களின் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனித்துவ குரலை கொண்டிருந்த ஜஸ்ரின் அருள்ராஜா தம்பிராஜா பிரான்சில் நேற்று சுகயீனம்காரணமாக காலமானார்.
</p><p>
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியை பிறப்பிடமாக கொண்ட இவர் புலம்பெயர்ந்து வந்த பின்னர் பல ஒலி- ஒளி ஊடகங்கள் மற்றும் தமிழ்தேசிய நிகழ்வுகள் உட்பட்ட மேடைகளில் பங்களிப்பை வழங்கியவர். </p><p>ஐ.பி.சி தமிழ் வானொலியிலும் சிறிது காலம் அவர் தனது பங்களிப்பை வழங்கியவர்.
</p><p>
பன்முக ஆற்றல் கொண்ட இவர் கடந்த 3 வருடங்களாக புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளான நிலையில் நேற்று மாலை பரிஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
</p><p>
அவரது இழப்பை அடுத்து சக ஊடக நண்பர்கள் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் கலைபண்பாட்டுக் கழகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-couple-honeymoon-killed-helicopter-crash-1787047785"></link>
            <id>https://ibctamil.com/article/british-couple-honeymoon-killed-helicopter-crash-1787047785</id>
            <summary type="text">&amp;nbsp;கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர்கள் அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தத் தம்பதியினர் தேனிலவுக்கு சென்றிருந்ததாக கதிமெரினி செய்தித்தாள் கூறியுள்ளது.</p><h2>தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்து</h2><p>அந்தத் தனியார் உலங்கு வானூர்தி, தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அந்தத் தம்பதியினரும், கிரேக்க நாட்டவரான அவர்களது விமானியும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffeb508d-3e66-4489-8ceb-f04e8b2e4485/26-6a84330cb1faf.webp' /></p><p>
</p><p>
ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து அந்தப் பிரபலமான விடுமுறை தீவுக்கு அந்தத் தம்பதியினர் உலங்கு வானூர்தியில் சென்றதாகக் கூறப்படுகிறது என கதிமெரினி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை</h2><p>விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98456c1-0196-4461-b89b-604345aada87/26-6a84330d64a9c.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-housing-allowance-payment-jaffna-1787046115"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-housing-allowance-payment-jaffna-1787046115</id>
            <summary type="text">வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி நிதியை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - அராலி மத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று (18) சங்கானை பல நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி நிதியை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - அராலி மத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இன்று (18) சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு
காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்&nbsp;</h2><p>குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று
கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த
போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e06a32-474a-4aad-be6b-048f24a14187/26-6a842fde18c04.webp' /></p><p>
</p><p>இந்த போராட்டத்தின் போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோசமிட்டவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>

அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித்
திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.</p><p></p><h2>கையளிக்கப்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p> </p><p>குறித்த மனுக்கள் பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/351d586d-83e5-4597-a8b6-430e29c5eb42/26-6a842fdf1dc29.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா
இலங்கேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:18:10+00:00</updated>
        </entry>
    </feed>
