<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-19T06:26:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்து - ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-jaffna-kantharmadam-one-injured-1789796848"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-jaffna-kantharmadam-one-injured-1789796848</id>
            <summary type="text">யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த விபத்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இன்று (19) சனிக்கிழமை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>


பலாலி வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், ஓட்டுமட வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>



இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c477d93-9ef7-4fbc-9b83-e21d327523a0/26-6aae26012a318.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T06:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789798567"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789798567</id>
            <summary type="text">கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p>இன்று (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07983583-f246-4c5c-a282-507828aab137/26-6aae2a325cbbc.webp' /></p><p>மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T06:23:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-over-online-scam-via-telegram-1789795433"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-over-online-scam-via-telegram-1789795433</id>
            <summary type="text">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படுவத்தை பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த பெண்&nbsp;நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசடி செய்யப்பட்ட பணம்&nbsp;</h2><p>அத்துடன் இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc0246e-47da-4a0a-995d-aa40d11d892d/26-6aae212bb0fe2.webp' /></p><p>இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:42:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை : ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-signs-russia-sanctions-bill-100-pt-tariff-1789791092"></link>
            <id>https://ibctamil.com/article/trump-signs-russia-sanctions-bill-100-pt-tariff-1789791092</id>
            <summary type="text">அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் ட்ரம்ப்&nbsp;நேற்று (18) கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்&nbsp;</h2><p>

மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் 'நிழற்படைக் கப்பல்களை' இலக்கு வைக்கும் இச்சட்டம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை தீர்வை வரிகளை விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290ead18-06b1-429b-8c66-aceeb7d7ae3b/26-6aae18b8158aa.webp' /></p><p>

இது ரஷ்யாவின் போர் வருமானத்தைத் துண்டிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு, சீனா மற்றும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.</p><p> 

குடியரசுத் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை இச்சட்டமூலத்தை 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி</span></h2><p> </p><p>

ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நபர்களை இலக்கு வைப்பதுடன், ஈரானுடன் தொடர்புடைய பொருளாதாரத் தடைகளையும் இச்சட்டம் விரிவுபடுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c62da39-2387-4203-8cfc-106018a1d251/26-6aae174e1047a.webp' /></p><p> </p><p>எனினும், வரிகளை விதிக்கும் வரம்பற்ற அதிகாரம் ட்ரம்பிற்கு வழங்கப்படுவதை எதிர்த்து சில ஜனநாயகக் கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் உக்ரைனை ஆதரித்தாலும், வர்த்தக ரீதியான முழு அதிகாரத்தையும் ட்ரம்பிற்கு வழங்குவதை எதிர்க்கின்றனர்.</p><p> 

அமெரிக்க காங்கிரஸின் இந்நடவடிக்கை ஒரு நல்ல குறியீடு எனக் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, அமெரிக்க சட்டமியற்றுபவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கப்போகும் மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainfall-in-sri-lanka-set-to-increase-from-today-1789791529"></link>
            <id>https://ibctamil.com/article/rainfall-in-sri-lanka-set-to-increase-from-today-1789791529</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று&nbsp; வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மின்னல் தாக்கங்கள்</span></p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><p> </p><p>

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:42:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பத்தில் NPPக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி : விமல் வீரவன்ச பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-initially-acted-in-support-of-the-npp-1789789091"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-initially-acted-in-support-of-the-npp-1789789091</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளதாகவும்&nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்&nbsp; இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள்.</p><p></p><h2>சிறந்த இலங்கையராக செயற்படுகிறார்&nbsp;</h2><p> </p><p>யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இறையான்மையை பாதுகாத்த முப்படையின் தளபதிகளும், அவர்களின் குடும்பத்தாரும், முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரையும் அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf8e183-7939-4c6f-b529-e5db9067faaa/26-6aae08e6ddb43.webp' /></p><p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.

சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டார். தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துமாறு கோரப் போவதில்லை.</p><p>ஆகவே அவர் தற்போது சிறந்த இலங்கையராகவே செயற்படுகிறார் அது எமக்கு பிரச்சினையல்ல“ என்று தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GkPITxDmgG8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-is-in-big-trouble-1789783222"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-is-in-big-trouble-1789783222</id>
            <summary type="text">அநுராதப்புரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில்,&amp;nbsp; விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும், தமிழ் புலம்பெயர் சமூகம் (Tiger Diaspora) பற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதப்புரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில்,&nbsp; விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும், தமிழ் புலம்பெயர் சமூகம் (Tiger Diaspora) பற்றி ஒன்றையும் குறிப்பிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp; இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா புலி என்ற சொல்லை குறித்த மேடையில் பயன்படுத்தியதன் காரணம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்பி கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.</p><p>தன்னை அந்த விலங்குடன் ஒப்பிடுவதில் தவறில்லை என குறிப்பிட்ட அவர், தான் ஒருபோதும்&nbsp;விடுதலைப்புலிகளின் அமைப்பை மையப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சிலருக்கு யானைகளைப் பிடிக்கும், சிலருக்கு பாம்புகளைப் பிடிக்கும். எனக்குப் புலிகளைப் பிடிக்கும் என அர்ச்சுனா இதன்போது பதில் வழங்கியுள்ளார்.</p><p>தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>“ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் தான் அல்ல என அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை.</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது.</p><p> செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார்.</p><p>

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.</p><p>&nbsp;மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xed1HPmRx3w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T02:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-santhabodhi-thero-vedukkunaari-issue-1789776390"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-santhabodhi-thero-vedukkunaari-issue-1789776390</id>
            <summary type="text">கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எதிர்வரும் 26 ஆம் திகதி&amp;nbsp;வெடுக்குநாறிமலையில் பௌர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>எதிர்வரும் 26 ஆம் திகதி&nbsp;வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோதல் ஏற்படக்கூடிய நிலை</h2><p>

1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம்
பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965359a7-e7ca-4161-8a10-085752459ecd/26-6aadd209d434e.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி காவல்துறை வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை
ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.</p><p>இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை
பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில்,
இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத
வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத்
தயாராகி வருவதாலும், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை
காணப்படுவதாலும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள்
ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும்
வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம்
திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T01:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-document-that-sealed-lasantha-s-fate-1789779886"></link>
            <id>https://ibctamil.com/article/a-document-that-sealed-lasantha-s-fate-1789779886</id>
            <summary type="text">ஒரு நாடு போரில் ஈடுபட்டு, தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது, ​​அதன் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு அவசர முடிவும் நியாயமானது என்று நம்புவது எள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாடு போரில் ஈடுபட்டு, தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது, ​​அதன் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு அவசர முடிவும் நியாயமானது என்று நம்புவது எளிது. </p><p>ஆனால், அந்தப் போர்க்கால அவசரமும் "தேசியப் பாதுகாப்பு" என்ற கேடயமும், கோடிக்கணக்கான ரூபாய் பொதுப் பணத்தைப் போலி வெளிநாட்டு நிறுவனங்களுக்குள் செலுத்துவதற்கும், அதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதற்கும் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும்? </p><p>அது நாட்டுப்பற்றா, அல்லது திட்டமிட்ட அரச கொள்ளையா?</p><p></p><h2>சர்வதேச மோசடி</h2><p>இலங்கையை மையப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச மோசடியான மிக்-27 ரகப் போர் விமானங்களை வாங்குவதற்காக இலங்கை 2006-ல் செய்துகொண்ட ஒப்பந்த விவகாரத்துக்கு, அப்போதைய ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரான உதயங்க வீரதுங்க ராஜதந்திரப் பாதுகாப்பு வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b874ba7-8647-489d-aada-c6d4622962cc/26-6aade28276d2c.webp' /></p><p> </p><p>தரகுப் பணத்தின் ஒரு பகுதி, உதயங்கவின் மைத்துனரான லெலும் மனம்பெரிக்குச் சொந்தமான உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றதாகவும், அதே சமயம் 400,000 (மூலத்தில் அலகுகள் குறிப்பிடப்படவில்லை) துபாயில் உள்ள ஸ்டார் GLGA வங்கிக் கணக்கிற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. </p><p>இந்த நிதிகள் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சொத்துக்களில் எவ்வாறு முதலீடு செய்யப்பட்டன என்பதையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். </p><p>இதற்கிடையில், உக்ரின்மாஷ் அமைப்பின் முன்னாள் இயக்குனர் டிமிட்ரி பெரெகுடோவ் பாரிஸில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டார்.</p><p>2005-ல், அப்போதைய விமானப்படைத் தளபதி டோனல்ட் பெரேரா ஒரு பகிரங்க ஒப்பந்தத்தை கோரியபோது, ​​அது இரத்து செய்யப்பட்டதுடன், மோசடியான உக்ரேனிய ஒப்பந்தத்திற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நேரடியாக ஒப்புதல் அளித்தார். </p><p>அதற்குப் பதிலாக, ஒரு வெளிப்படையான டெண்டர் செயல்முறையின் கீழ் இந்தியாவின் HAL நிறுவனம் மூலம் விமானங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற அமைச்சரவைப் பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது.
</p><p>
முன்னணி விமானிகளால் கோரப்பட்ட பல்திறன் போர் விமானங்கள் புறக்கணிக்கப்பட்டன. மேலும், அபாயத்தின் அளவு மிக அதிகம் என்று அமெரிக்க பசிபிக் கட்டளை மையம் எச்சரித்த பின்னரும் கூட, இதே மிக் ஜெட் விமானங்களை வாங்குவதை நியாயப்படுத்தும் வகையில் மூலோபாய அச்சுறுத்தல் மதிப்பீடு வேண்டுமென்றே மாற்றியமைக்கப்பட்டது.</p><p></p><h2>சிக்கலான ஆவணங்கள்</h2><p>
</p><p>
அப்போதைய விமானப்படைத் தளபதி ரொஷான் கூனதிலக்க தலைமையிலான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, கூட்டத்திற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு முன்பு, மொரட்டுவாவிலிருந்து அமைச்சுக்குச் செல்லும் வழியில் ஒரு வானுக்குள் வைத்து, இந்த சிக்கலான ஆவணங்களை மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் வழங்கியதாக தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.</p><p>இத்தகைய கடுமையான நிர்வாக அழுத்தத்தின் மூலமே ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>


இந்த மாபெரும் மோசடி, 2006-ல் இக்பால் அதாஸாலும், 2007-ல் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவாலும் முதன்முதலில் நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. </p><p>லசந்த அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டபோது, ​​கோட்டாபய அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். </p><p>வியக்கத்தக்க வகையில், அசல் ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து காணாமல் போயிருந்தபோதிலும், அதன் ஒரு நகல், கல்கிசை நீதிமன்றத்தில் லசந்த மீது தொடரப்பட்ட அதே அவதூறு வழக்கிலேயே சான்றாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.</p><p>2009 ஜனவரி 8 அன்று கல்கிசை நீதிமன்றத்தில் இது குறித்து அவர் சாட்சியம் அளிக்கவிருந்த சில நாட்களுக்கு முன்பு,&nbsp;பட்டப்பகலில் லசந்த படுகொலை செய்யப்பட்டார்.</p><p> </p><p>மேஜர் பிரபாத் புலத்வத்த தலைமையிலான 'திரிப்போலி படைப்பிரிவு' என்ற இரகசிய இராணுவப் பிரிவினரால், அத்திட்டியவில் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்துக்கு அருகே இந்த கொலை இடம்பெற்றதாக குறித்த செய்தியில் அடிகோடிடப்பட்டுள்ளது.</p><p> இது வெறும் நிதி மோசடி மட்டுமல்ல, அதை மறைப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இரத்தக்களரிப் படுகொலையாகும்.</p><p></p><h2>சிறையில் அடைக்கப்பட்ட&nbsp;ஷானி அபேசேகர </h2><p>

இந்த வழக்கை விசாரித்த சி.ஐ.டி அதிகாரியான ஷானி அபேசேகர சிறையில் அடைக்கப்பட்டார். நிஷாந்த சில்வா நாட்டை விட்டுத் தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b918543f-7690-446d-9d3b-64324c6bea50/26-6aade281be1ce.webp' /></p><p>உதயங்கவை துபாயிலிருந்து மீட்டு வர உதவிய FCID அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.</p><p> 2016-ல் துபாயின் அஜ்மானில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் பதுங்கியிருந்த உதயங்க வீரதுங்க, சி.ஐ.டியின் சைபர் குற்றப் பிரிவினரால் அவரது ஐ.பி முகவரி மூலம் கண்காணிக்கப்பட்டு, ஐ.நா. சுங்க மற்றும் ஒழுங்கு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
ஆயினும், 2020-ல் அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​புதிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், 1982-ஆம் ஆண்டு பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ASP சான்றளித்த ஆவணத்தை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.</p><p> இதன் விளைவாக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. நீதிபதி ரங்க திசாநாயக்க அக்காலத்தில் இந்தத் தோல்வியைக் கடுமையாகக் கண்டித்தார்.</p><p>

புலனாய்வாளர்கள் இனி வங்கிக் கணக்குகளை மட்டும் துரத்தவில்லை, மாறாக முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அதிகார வரிசையையும் துரத்துகின்றனர்.</p><p> அதனால்தான் புலனாய்வாளர்கள் இப்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் கூனதிலக்க ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>இந்த ஒற்றை மூல ஒப்பந்தப்புள்ளிக்கு யார் ஒப்புதல் அளித்தது? இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளிப்பது, பொதுச் சொத்து மோசடிக்கு உதவி செய்வதும் உடந்தையாக இருப்பதும் ஆகுமா என்பது இப்போது சட்டத்தின் முன் சோதிக்கப்படுகிறது. </p><p>இதன்படி புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின்படி, உண்மையான பயனாளியின் உரிமையை வெளிப்படுத்துவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T01:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prime-suspect-in-dehiwala-bomb-attack-arrested-1789778383"></link>
            <id>https://ibctamil.com/article/prime-suspect-in-dehiwala-bomb-attack-arrested-1789778383</id>
            <summary type="text">கடந்த 11ஆம் திகதி அதிகாலை தெஹிவளை, சிறி சங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, 11 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள் இருவரைக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 11ஆம் திகதி அதிகாலை தெஹிவளை, சிறி சங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, 11 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள் இருவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

தாக்குதலுக்கான கைக்குண்டை ஏற்றிச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற 23 வயதுடைய சந்தேகநபரையே மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><p>

பெல்லன்வில நடைபாதை (Walking Path) பகுதிக்கு அருகில் உள்ள பாலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த இரகசிய முற்றுகையின்போது கைது செய்யப்பட்ட நபர், தெஹிவளை போதியவத்தை வீதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு</h2><p>
காவல்துறை விசாரணைகளில் வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்களின்படி, இந்த கொலை ஒப்பந்தம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் 'கொஸ் மல்லி' மற்றும் 'களுபோவில அவிஷ்க' ஆகிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6c78246-c8dd-40c6-bc63-5883e7510d1f/26-6aaddbc2063f7.webp' /></p><p>
இவர்களின் ஆலோசனையின் பேரில், களுபோவில அவிஷ்கவின் மாமா என்பவரால் வெறும் 75,000 ரூபாய் பணத்திற்காக இந்த சந்தேகநபரிடம் குண்டை கடத்தும் மற்றும் முச்சக்கரவண்டியை ஓட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
திட்டத்தின்படி, சந்தேகநபர் 10ஆம் திகதி இரவு அத்திடிய பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு நுகேகொடையில் உள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p> 

பின்னர் கிடைத்த உத்தரவின்படி, பெப்பிலியானவில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டை எடுத்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் கொடுத்துள்ளார்.</p><p>

இந்நிலையில் 11ஆம் திகதி அதிகாலை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் வைத்து, இலக்கு வைக்கப்பட்ட வீட்டை அடையாளம் காட்டுவதற்காக வந்த இடைத்தரகர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாடசாலை மாணவர்கள் இருவர் பலி</h2><p> 

எனினும், குற்றவாளிகளின் இலக்கு தவறியதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0c2a83-70df-4050-b997-511df2737276/26-6aaddbc14d31f.webp' /></p><p>
</p><p>
தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பாதுக்க, பகுதிக்குச் சென்று முச்சக்கரவண்டியை கைவிட்டு, கண்டி, பிபிலை மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளுக்குத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர். </p><p>

இச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் வீட்டை அடையாளம் காட்டியவர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் பெறப்பட்ட இரகசிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த மூன்றாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T00:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hazardous-waste-piling-up-at-keerimalai-1789777968"></link>
            <id>https://ibctamil.com/article/hazardous-waste-piling-up-at-keerimalai-1789777968</id>
            <summary type="text">பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை , குறித்த
பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை , குறித்த
பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ
கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300
டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு
மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
</p><p>
அந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு
தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை
தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பணித்திருந்தார்.</p><p></p><h2>பொதுமக்கள் அதிருப்தி</h2><p>அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்ட கூடாது
என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/847592b3-79bb-4bb3-8254-7aa524d528a8/26-6aadd8377a82c.webp' /></p><p>
அவ்வாறான நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை சபையின் மாதாந்த
கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து , கீரிமலையில்
கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p>
அதேவேளை நேற்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபை
அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள் , வலி.
வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட
இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு , அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச
சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
</p><p>
இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில்
கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை
அடுத்து , சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான
மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு
கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன்
முறையிட்டுள்ளனர்.
</p><p>
கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல்
கொடுத்து வரும் நிலையிலும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட
வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள
உத்தரவிட்டுள்ள நிலையில் , அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர்
ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T00:33:01+00:00</updated>
        </entry>
    </feed>
