<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-23T04:40:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949"></link>
            <id>https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949</id>
            <summary type="text">இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.</p><p>அந்தவகையில், அடுத்த ஆண்டு முதல் வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மெட்ரோ சேவை அறிமுகம்</h2><p>மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.
</p><p>
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுகின்றது.</p><p> மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.</p><p>இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.</p><p>

வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-debate-on-export-and-import-control-act-1784780534"></link>
            <id>https://ibctamil.com/article/today-debate-on-export-and-import-control-act-1784780534</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(23.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(23.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 02.30 வரை வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் 2493/03 மற்றும் 2493/39 ஆகிய இலக்க வர்த்தமான பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட இரண்டு விதிமுறைகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>மாலை 2.30 மணி முதல் பி.ப. 5.30 மணிவரையில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Nx5ZIIRSS8g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் குறித்து அநுரவின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protect-the-northern-and-eastern-coastal-areas-1784777205"></link>
            <id>https://ibctamil.com/article/protect-the-northern-and-eastern-coastal-areas-1784777205</id>
            <summary type="text">இலங்கையில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p>ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p>அத்துடன் கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>வனப்பாதுகாப்பு திணைக்களம்</h2><p>அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12a53d1-7197-4887-bb88-b0c3d15324e7/26-6a618de1ea1bc.webp' /></p><p>வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு உரிய ஓய்வு விடுதிகளை அபிவிருத்தி செய்து, நவீன மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. </p><p>

மேலும், மலர் வளர்ப்பை ஒரு கைத்தொழிலாக அபிவிருத்தி செய்வதற்கும், உயிர் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T04:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teen-missing-after-drowning-in-mahaweli-river-1784776715"></link>
            <id>https://ibctamil.com/article/teen-missing-after-drowning-in-mahaweli-river-1784776715</id>
            <summary type="text">ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.</p><p> </p><p>கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நேற்று (22) மாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.</p><p>வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த மாணவன்&nbsp;தனது இரு நண்பர்களுடன் இணைந்து மகாவலி கங்கையின் தெனியேகல கடவைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போதே சுழலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e318d191-8f9e-4fe7-a878-327defe3ce53/26-6a618b3652e7c.webp' /></p><p>ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
கம்பளை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அவசரத் தகவலையடுத்து, காணாமல் போன சிறுவனைத் தேடும் விசேட மீட்புப் பணிகளும் மேலதிக விசாரணைகளும் கம்பளை காவல்துறையினரினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இச்சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை - கை விரித்த நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-govt-says-it-has-no-political-prisoners-1784773112"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-govt-says-it-has-no-political-prisoners-1784773112</id>
            <summary type="text">நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான
வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்
பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் 'அரசியல் கைதிகள்'
என எந்தவொரு தனிக் குழுவும் குறிப்பிடப்படவில்லை.</p><p></p><p> </p><h2>அரசியல் கைதிகளை விடுதலை&nbsp;</h2><p>நீதிமன்றங்களின் ஊடாகக்
கைதிகள் சந்தேக நபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்தப்பட்டு
விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ வைக்கப்படுகின்றார்களே தவிர, அரசியல்
கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை. சர்வதேச
மட்டத்திலான பொருள்கோடல்களையே நாம் ஏற்கின்றோம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/443c5b78-5c1f-4c03-b035-c6799bed2f53/26-6a617c255cb79.webp' /></p><p>
நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகையில், தேர்தல் காலத்தில் வடக்கு -
கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாக உறுதியளித்தாரே, அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உள்ளதா என
அஜித் பி. பெரேரா எம்.பி. மேலதிக கேள்வியாக எழுப்பினார்.
</p><p>
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கைதிகளின் பட்டியலைத் தான்
பலமுறை ஆராய்ந்துள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பலர் குற்றவாளிகளாகவும்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>முழு நாடும் உள்ளடக்கப்படும்</h2><p>
"நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அப்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில்
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef25f6f-3616-4d3d-90ca-eb5eee78e196/26-6a617c2475336.webp' /></p><p>முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள
அறிக்கைக்கு அமைய, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும் பொதுமன்னிப்பு
வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் நீதி அமைச்சர் கூறினார்.</p><p>

மேலும், இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாடும்
உள்ளடக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-bus-driver-dies-while-driving-1784764648"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-bus-driver-dies-while-driving-1784764648</id>
            <summary type="text">யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-07-2026) இடம்பெற்றுள்ளது.

இதன்போது புங்குடுதீவு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-07-2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு
ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>தனியார் பேருந்து</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றைய தினம் குறித்த தனியார் பேருந்து புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2483c13-27b4-45d6-ad7d-3f5d9eb0a650/26-6a6158ea2ccdd.webp' /></p><p> 

அந்த பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ள நிலையில் பேருந்தானது வேலணை - அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி
ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார்.</p><p>

இதன்போது பேருந்து அவ்வாறே சுமார்
ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து
விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமுற்ற விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/893250ed-d8bb-4388-b228-62ff00471248/26-6a6158ead78dd.webp' /></p><p>இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். 

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக
உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:01:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தில் உலகம்: செங்கடலில் பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் - சவூதி கப்பல்களை தாக்கிய ஹூதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-strikes-on-2-saudi-oil-tankers-in-red-sea-1784770008"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-strikes-on-2-saudi-oil-tankers-in-red-sea-1784770008</id>
            <summary type="text">செங்கடல் வழியாக&amp;nbsp;பயணித்த இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரான் ஆதரவு யேமன் ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.ஈரான் ஆதரவுப் போரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் வழியாக&nbsp;பயணித்த இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரான் ஆதரவு யேமன் ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.</p><p>ஈரான் ஆதரவுப் போராளிகளான யேமனின் ஹூதிகள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று அறிவித்திருந்தனர்.</p><p>இந்நிலையில் தம்மால் பிறப்பிக்கப்பட்ட முற்றுகை அறிவிப்பை மீறியதற்காக என்செலா மற்றும் லைலியா என்ற இரண்டு சவூதி எண்ணெய் கப்பல்களை நாங்கள் குறிவைத்ததாக ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ புதன்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் விநியோகத்தில் தடை</h2><p>பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதன் விளைவாகக் கப்பல்களில் தீ ஏற்பட்டதாகவும் யஹ்யா சரீ மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78823b6a-781a-4dae-b8f3-a824b027eb4c/26-6a6175d7db5a8.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p>செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு விடுக்கப்பட்ட புதிய அச்சுறுத்தல்களுக்கு முன்பாகவே, ஈரானால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக முற்றுகையிடப்பட்டமை உலகெங்கிலும் பணவீக்கத்தைத் தூண்டியது. இது உலகளாவிய எண்ணெய் விலைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T02:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் ஆட்சியில் மாயமான 715 மில்லியன் டொலர்கள்! கடத்தல் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-network-behind-ranil-s-rule-dollar-smuggling-1784722249"></link>
            <id>https://ibctamil.com/article/drug-network-behind-ranil-s-rule-dollar-smuggling-1784722249</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பலகோடி ரூபா பெறுமதியான டொலர் குறித்து பொது நிதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பலகோடி ரூபா பெறுமதியான டொலர் குறித்து பொது நிதிக்குழுவில் அம்பலமாகியிருந்தது.
</p><p>
இந்த விசாரணையில் கண்டறியப்பட்ட 55 நபர்கள் அவற்றுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்தமை வெளிப்படுத்தப்பட்டது.</p><p>

மேலும் விசாரணைகளின் முன்னேற்றத்தின்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய நபரை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புலனாய்வாளர்களின் கூற்று</h2><p>
இந்த விசாரணையில் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த நபர் 43 நிறுவனங்களுடன் தொடர்புடையவர் என்றும், அந்த நிறுவனங்களின் உரிமையாளராகப் பட்டியலிடப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. </p><p>

ஆய்வுக்குட்பட்ட காலகட்டத்தில், அந்த நிறுவனங்கள் மட்டும் தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் மூலம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/135bcda9-5f33-42f8-9903-6a7a7e3da032/26-6a6168d8d6c21.webp' /></p><p>இலங்கையில் உள்ள தரகர்களிடமிருந்து சந்தேக நபர் நிதி அறவிடப்பட்டு , அந்தப் பணப் பரிமாற்றங்களை உறுதிப்படுத்த அவர்கள் வழங்கிய போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுத் துறை குற்றம் சாட்டுகிறது.</p><p> 

தரகர்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள கணினிகளைப் பயன்படுத்தி மோசடியான ரசீதுகள் உருவாக்கப்பட்டு, பின்னர் அவை வங்கிகளுக்கு ஆதார ஆவணங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
</p><p>
குறிப்பிட்ட வங்கி அதிகாரிகளின் உதவியுடன் சில பரிவர்த்தனைகள் எளிதாக்கப்பட்டதாகக் கூறப்படுவதாக கரவிதா மேலும் தெரிவித்தார்.

இந்த விசாரணையில், ஒரு சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் வெளிவந்துள்ளன.</p><p></p><h2>ஒரு&nbsp; போதைப்பொருள் கடத்தல்</h2><p> </p><p>

குற்றப் புலனாய்வுத் துறையின்படி, துபாயிலிருந்து செயல்படும் ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான நிதி, அதே வழிமுறையைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
</p><p>
துபாயில் உள்ள மூன்று முக்கிய சந்தேக நபர்களில் இருவர், இன்டர்போலின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e43facd-4d0f-4d7b-ac61-6c56f2d893d7/26-6a6168d9a1758.webp' /></p><p>

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய பணம், துபாயில் உள்ள மற்றொரு நபர் மூலம் அனுப்பப்பட்டதாகவும், இலங்கையில் திரட்டப்பட்ட நிதியானது தரகர்கள் வழியாக அனுப்பப்பட்டு இறுதியில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் அளித்த தகவல்கள் குறிப்பிடுவதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நடவடிக்கையின் மையத்தில் உள்ள சந்தேக நபர், பணத்தின் தோற்றம் குறித்து முழுமையாக அறிந்திருந்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், நிதியைத் திரட்டி, தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பணப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p>

அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளில், வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான போலி சுங்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் விவரித்தனர்.</p><p></p><h2>சி.ஐ.டியின்&nbsp;விசாரணை </h2><p> </p><p>

பல சந்தர்ப்பங்களில், வங்கிகள் துணை சுங்க ஆவணங்களைக் கோரியிருந்தபோதிலும், வழங்கப்பட்ட பதிவுகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்று குற்றப் புலனாய்வுத் துறை (CID) கூறியது.
</p><p>
களனிப் பிரிவில் காவல்துறையினரால் சோதனையிடப்பட்ட முச்சக்கர வாகனம் ஒன்றில் ரூ. 30 மில்லியன் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாகத் தொடங்கப்பட்ட மற்றொரு விசாரணை குறித்தும் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b0973ed-6034-4393-918d-0e47b1b85384/26-6a6168da668f9.webp' /></p><p>அதைத் தொடர்ந்த விசாரணையில், அந்தப் பணம், அதுபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள மற்றொரு நிறுவனத்தின் கணக்குகளில் வைப்பு செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுவது தெரியவந்தது.
</p><p>
அந்த வழக்கோடு தொடர்புடைய நபர்கள், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
</p><p>
 அந்நிறுவனம் குறித்து பின்னர் நடத்தப்பட்ட ஒரு தனி விசாரணையில், இதேபோன்ற முறையைப் பயன்படுத்தி ஒரு முன்னணி அரசு வங்கி மற்றும் இரண்டு தனியார் வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.
</p><p>
சி.ஐடியின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றச்செயல் வருமானப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் கீழ், இரு வழக்குகள் குறித்தும் விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T01:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் கைரேகைகள் இல்லை - விசாரணைகளில் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-igp-death-no-fingerprints-on-gun-1784767786"></link>
            <id>https://ibctamil.com/article/ex-igp-death-no-fingerprints-on-gun-1784767786</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டறிவது கடினமாக உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
பெயர் குறிப்பிட விரும்பாத மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
</p><p>
துப்பாக்கி சுடப்படும் போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக அதில் பதிந்துள்ள விரல் அடையாளங்கள் அழிந்துபோகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால் இந்தத் துப்பாக்கியிலும் கைரேகைகள் அழிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>முக்கிய ஆதாரங்கள்&nbsp;</h2><p>ஒரு குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், தோட்டாக்கள் மற்றும் காலம் குறித்து கண்டறிய முடிந்தாலும் இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று மங்கலாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் வெளியாட்கள் எவரும் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8142d3b2-deae-4793-95f2-d81af103cc1f/26-6a61656dab5af.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தவறதலாக நடந்த துப்பாக்கிச் சூடா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கோணத்தில் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பவத்திற்கு முன்னதாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீட்டின் உட்புற சிசிரிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 9 மி.மீ. பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் வழக்கு தொடர்பான ஏனைய பொருட்களை எதிர்வரும் 28 ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T00:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784766870"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784766870</id>
            <summary type="text">மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (2...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372dbb7b-931d-4dd4-8d4c-c571e3f3cae8/26-6a616197622ed.webp' /></p><p>வெப்பச் சுட்டெண்ணின் தாக்கத்தின் காரணமாக இன்று பகல் வேளையில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T00:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடிப்படை வசதிகளற்ற பருத்தித்துறை அஞ்சல் நிலையம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-building-demanded-for-point-pedro-post-1784766171"></link>
            <id>https://ibctamil.com/article/new-building-demanded-for-point-pedro-post-1784766171</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய
கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய
கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
</p><p>
வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>கட்டமைப்பு வசதிகள்</h2><p>இது குறித்து துரைராசா ரவிகரன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் மிகவும்
குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b947a70-17b1-4bd7-bb05-8311d9d3c275/26-6a615edc763b4.webp' /></p><p>வடபகுதி மக்களின்
அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக
முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது.</p><p> 

இருப்பினும், இடவசதி இன்மை
மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான
சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்கள் நீடிக்கின்றன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்புப் படை</h2><p>இந்தத் அஞ்சல் நிலையத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 1 றூட் 24.5 பேர்ச் காணியும்
கட்டடமும் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தன.
</p><p>

பின்னர், 2012 ஆம் ஆண்டளவில் அதன் ஒரு பகுதி (8,695 சதுர அடி) அஞ்சல்
திணைக்களத்திற்கு விடுவிக்கப்பட்ட போதிலும், மீதமுள்ள பகுதி இன்னும் படையினர்
வசமே உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd531919-935a-422a-8adc-bfa1ea03a72e/26-6a6160d2ba645.webp' /></p><p>விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை
நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த காலங்களில்
முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல்
உள்ளன” என தெரிவித்துள்ளார்.
</p><p>

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இப்பிரச்சினையின் தீவிரத்தை
உணர்ந்து பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக வெகுஜன ஊடக பிரதி
அமைச்சருக்கு இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p><p>


வடபிராந்திய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் இந்தத் தபால்
நிலையத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒதுக்கப்பட்ட
காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை விரைவாக நிர்மாணிப்பதற்குத் தேவையான உடனடி
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரை
வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T00:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு! விசாரணையில் ஏற்பட போகும் திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eu-delegates-inspect-chemmani-mass-grave-1784762424"></link>
            <id>https://ibctamil.com/article/eu-delegates-inspect-chemmani-mass-grave-1784762424</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>
கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சான்றுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு முக்கிய களமாக இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த விஜயம், இலங்கையில் நிலுவையில் உள்ள போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் உண்மை கண்டறியும் செயற்பாடுகள் மீது சர்வதேச சமூகம் செலுத்தும் தீவிர கவனத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>

சர்வதேச பிரதிநிதிகளின் நேரடி கண்காணிப்பு, இந்த ஆய்வு நடவடிக்கைகளைத் திசைதிருப்பாமல் வெளிப்படைத்தன்மையுடனும், நடுநிலையாகவும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
பல்லாண்டுகளாகத் தங்களின் உறவுகளைத் தேடி அலையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, சர்வதேசத்தின் இந்த தலையீடு மற்றும் கண்காணிப்பு முறையான நீதியைப் பெற்றுத்தருமா என்ற பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JyFA36TF8eY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை தங்கம் - பணத்துடன் இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-arrested-in-kandy-with-gold-cash-1784761242"></link>
            <id>https://ibctamil.com/article/10-arrested-in-kandy-with-gold-cash-1784761242</id>
            <summary type="text">கண்டியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணத்துடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம காவல்துறையினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணத்துடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வத்தேகம காவல்துறையினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இரு பெண்கள் உட்பட 10 பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சந்தேகநபர்களிடமிருந்து 3.930 கிலோகிராம் தங்கம் மற்றும் 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் (ரூ. 16.9 மில்லியன்) ரொக்கப் பணம் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7472039-067e-44d8-bf10-f3154b3283bd/26-6a614b9b7e537.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்...! ட்ரம்பின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-approves-saudi-uranium-enrichment-1784755588"></link>
            <id>https://ibctamil.com/article/trump-approves-saudi-uranium-enrichment-1784755588</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவின் சிவில் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>

சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
</p><p>
இவ்வொப்பந்தத்தை அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்கு அனுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>அணு உலைகள்&nbsp;</h2><p>வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் மூலம் சவூதியில் அணு உலைகள் கட்டப்படவுள்ளதுடன் இருநாடுகளின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு அங்கு யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9932efa9-edd3-4cbd-b682-6c6346e00141/26-6a6145c7460e2.webp' /></p><p>ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதைத் தடுக்கவே அமெரிக்கா போரில் ஈடுபட்டு வரும் நிலையில் சவூதிக்கு இத்தகைய அனுமதியை வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மேலும், சர்வதேச அணுசக்தி முகாமையின் தீவிர கண்காணிப்பு விதிகள் இதில் சேர்க்கப்படாததால் சவூதி அணு ஆயுதம் தயாரிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T22:42:37+00:00</updated>
        </entry>
    </feed>
