<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-24T21:39:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலருக்குக் கீழ் குறைந்த கச்சா எண்ணெய் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-price-in-the-international-market-1784921098"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-price-in-the-international-market-1784921098</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக இந்த வாரத் தொடக்கத்தில் பேரல் ஒன்றுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக இந்த வாரத் தொடக்கத்தில் பேரல் ஒன்றுக்கு 100 டொலர் என்ற மைல்கல்லை சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை எட்டியிருந்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போது மீண்டும் 100 டொலருக்குக் கீழ் சிறிதளவு சரிவைச் சந்தித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>எண்ணெய் விநியோகம்</h2><p>ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் ஏற்கனவே முடங்கியுள்ள சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு மத்தியிலும், செங்கடலில் பயணித்த சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது ஏமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><p> 

இது உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் மேலதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4510d7d4-4c26-4a28-8447-639dda29a0cc/26-6a63cee2159e9.webp' /></p><p>இந்தநிலையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அமெரிக்காவில் சராசரி எரிபொருள் (Gas) விலை தொடர்ந்து ஒரு கேலனுக்கு நான்கு டொலரை விட அதிகமாக நீடித்து வருகின்றது.
</p><p>
மத்திய கிழக்கில் பரவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் - பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/65-000-people-evacuated-across-spain-france-1784917778"></link>
            <id>https://ibctamil.com/article/65-000-people-evacuated-across-spain-france-1784917778</id>
            <summary type="text">ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியக் கண்டத்தில் பலத்த காட்டுத்தீ த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

ஐரோப்பியக் கண்டத்தில் பலத்த காட்டுத்தீ தொடர்ந்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து ஸ்பெயினின் மாட்ரிட் பிராந்தியத்திற்கான அரசாங்கப் பிரதிநிதி பிரான்சிஸ்கோ மார்ட்டின் (Francisco Martín) ஊடக அறிக்கையொன்றை வௌயிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மக்கள் ஊரடங்கு&nbsp;</h2><p>குறித்த அறிக்கையின்படி, ஸ்பெயினில் சுமார் 25,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கு போன்ற வீடுகளுக்குள்ளேயே இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் (Lockdown) கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, தென்மேற்கு பிரான்ஸின் ஜிரோண்ட் (Gironde) பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 44,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c280f6d7-0e47-4175-bb43-b7acb7edbe4e/26-6a63c16fb2d00.webp' /></p><p>

இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை 12,500 ஹெக்டேர் காடுகள், 53 வீடுகள் மற்றும் ஒரு சுற்றுலா முகாம் (Campsite) முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரெஸ் (Ares), ஆண்டெர்னோஸ் (Andernos), லே டெம்பிள் (Le Temple) மற்றும் சோமோஸ் (Saumos) ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மக்களை அவசரமாக வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T19:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! சீனா - ரஷ்யாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-russia-supply-weapons-to-iran-trump-ann-1784913684"></link>
            <id>https://ibctamil.com/article/china-russia-supply-weapons-to-iran-trump-ann-1784913684</id>
            <summary type="text">சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இரு நாடுகளின் தலைவர்களும் தமக்கு இது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இரு நாடுகளின் தலைவர்களும் தமக்கு இது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
</p><p>

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெய்ஜிங்கில் நடைபெற்ற எங்களது சமீபத்திய சந்திப்பின் போது எக்காரணம் கொண்டும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ மாட்டேன் என ஜனாதிபதி ஷி ஜின்பிங் என்னிடம் உறுதியளித்தார்.</p><p></p><h2>மோசமான விளைவுகள்</h2><p>

அதில் சீன நிறுவனங்களும் அடங்கும்.
</p><p>
எங்களது உறவைக் கருத்தில் கொண்டு அவரது வார்த்தையை நான் நம்புகிறேன்.</p><p> </p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/116975606621428184/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>தவிர, நானும் அவருக்குப் பெரிய உதவிகளைச் செய்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், மோஸ்கோ ஈரானுக்கு ஆயுதங்களை விற்காது எனத் தன்னிடம் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதன் மூலம் ஈரானுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இரு முக்கிய உலக நாடுகளும் போரில் பங்கேற்கவில்லை என்றும் ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்தால் அது அவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-issues-middle-east-travel-warning-1784909698"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-issues-middle-east-travel-warning-1784909698</id>
            <summary type="text">அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

பிராந்தியப் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.</p><p>
</p><p></p><h2>கூடுதல் பாதுகாப்பு</h2><p>இந்தநிலையில் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும் மற்றும் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb634e3d-868b-476c-81e7-94de6d1e8f80/26-6a63aa4e15163.webp' /></p><p>யோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கத் இராஜதந்திர நிலையங்கள் உட்படப் பல இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><h2>ஆதரவான அமைப்புகள்&nbsp;</h2><p>ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நலன்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
</p><p>
போர்ச் சூழல் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89530725-fa31-4156-8409-62cc35331ced/26-6a63aa4d632f5.webp' /></p><p>வான்வெளிகள் மூடப்படலாம் மற்றும் பயணங்களில் கடும் தடங்கல்கள் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன் யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் தூதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தவறாது பின்பற்றுமாறும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் கொண்ட அநுரவுக்கு சுமையாகிய அரசியல் திண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-turmoil-burdens-anurag-1784903727"></link>
            <id>https://ibctamil.com/article/political-turmoil-burdens-anurag-1784903727</id>
            <summary type="text">தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் இலங்கை தொடர்பில் சிறந்த திட்டங்களை தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அதை செயற்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
இவ்வாறு சமகால அரசியல் குறித்தும், தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் டக்ளஸ் மையப்படுத்திய விடயங்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RL2gNI_wZM0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T16:00:49+00:00</updated>
        </entry>
    </feed>
