<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-12T08:20:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கதின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066"></link>
            <id>https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066</id>
            <summary type="text">


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் உயர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
நல்லாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுமாயின் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கை வெளியாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அறிக்கை வெளியீட்டில்&nbsp;தாமதம் </h2><p>

அதன்படி, இந்த அறிக்கை வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298a3bd3-0c7d-4976-bf44-f395291b4454/26-6aa507cbbab1d.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார செயற்படுகின்றார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது இறுதி அறிக்கையில், கொள்கலன்கள் பெளதீகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe2cfc-9db8-409b-8215-d34a927cdf88/26-6aa507cca7f93.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் இடம்பெற்றது</p><p>இதன்போது துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p><p></p><h2>சரமாரியாக வெட்டிப் படுகொலை&nbsp;</h2><p>

துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a860744-9e64-4643-b387-be4ae9e9ace4/26-6aa503071d0ec.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். </p><p>

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். </p><p>

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489"></link>
            <id>https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>நாளைய தினம் (12) நல்லூர் பகுதியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்</h2><p> </p><p>அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி
காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94dcbff-cd20-4f35-b9b1-83ca5c7f8eff/26-6aa5009f43cf1.webp' /></p><p>இந்தநிலையில் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என
கோரியே பேரணி நடைபெறவுள்ளது.</p><p>குறித்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் (11) சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து
கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999"></link>
            <id>https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999</id>
            <summary type="text">களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம்&amp;nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலம்&nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் மீட்கபட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>

ஹங்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை&nbsp;என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd406bd-14aa-4970-b16a-877a818ac9ab/26-6aa5008137b1a.webp' /></p><p>சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளது</p><p>ஹங்வெல்ல காவல்துறையினர்
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957"></link>
            <id>https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆட்சேர்ப்புக்கு அனுமதி </h2><p>
</p><p>
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c60f17c9-3bee-44f0-a426-83138c27f566/26-6aa4faf00b83f.webp' /></p><p>
</p><p>
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகச் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br></p><p>இந்த நிலநடுக்கம் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை 04:23 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகளுக்கு வடகிழக்கே 69 கிலோமீற்றர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்&nbsp;</h2><p> </p><p>இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfc109f0-7e35-4dc1-9d0c-6a4c1f761107/26-6aa4f98ef16b8.webp' /></p><p>இந்தச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.</p><p>


தொடர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள மகனுக்காக களமிறங்கும் மகிந்த - அரசைக் கவிழ்க்கவே முடியாது..! அமைச்சர் பிமல் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-about-option-party-protest-1789195991"></link>
            <id>https://ibctamil.com/article/govt-about-option-party-protest-1789195991</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். </p><p>அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">அரசியல் காழ்ப்புணர்ச்சி</span></p><p> அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51103e49-aacd-4f4d-9e12-dff3ba8343c6/26-6aa4f87365370.webp' /></p><p>மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது. மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க் கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது. </p><p>மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும். தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது. </p><p>மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p></p><h2>அரசாட்சியைக் குலைக்க&nbsp;சதி&nbsp;</h2><p> </p><p>மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541b0026-20e1-4716-827f-b79e5c2882a4/26-6aa4f8741b9aa.webp' /></p><p>நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணையை புறக்கணிக்கும் மொட்டுக் கட்சி முன்னாள் எம்.பி! மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summons-issued-to-tissa-kuttiarachchi-1789195075"></link>
            <id>https://ibctamil.com/article/summons-issued-to-tissa-kuttiarachchi-1789195075</id>
            <summary type="text">சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னதாக, இம்மாதம் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. &nbsp;</p><p></p><h2>மீண்டும் அழைப்பாணை</h2><p> </p><p>

ஊவா கெப்பிட்டல் வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d003fed-0521-4485-b37b-d56d2022c775/26-6aa4f54aab775.webp' /></p><p>அதன்படி, முதல் அழைப்பின் போது குட்டிஆரச்சி முன்னிலையாகாத நிலையில், அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T06:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பற்றி எரிந்த பயணிகள் படகு - பறிபோன 35 உயிர்கள்: தொடரும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-toll-from-philippines-ferry-fire-rises-to-35-1789193043"></link>
            <id>https://ibctamil.com/article/death-toll-from-philippines-ferry-fire-rises-to-35-1789193043</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது.</p><p>கடும் வெப்பம் மற்றும் புகை காரணமாக மீட்புக் குழுவினர் கப்பலுக்குள் நுழைய சிரமப்பட்டதால், உள்ளே சிக்கியிருக்கக்கூடிய பயணிகளைத் தேடும் பணிகள் தாமதமாயின.&nbsp;இதனால் மேலும் சில உடல்கள் படகுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வைத்தியசாலைகளில் சிகிச்சை&nbsp;</h2><p>



சம்பவம் தொடர்பில் தெரியவகையில், மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a326dbd-38f5-43d4-8424-bc3176695a33/26-6aa4ee47e5792.webp' /></p><p> சம்பவத்தின் போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>


</p><p>பெரும்பாலான உடல்கள் பயணிகள் உறங்கும் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் நோயெமி கயாப்யாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efabe8de-44f4-416e-acb9-c08562e7368f/26-6aa4ee489b88a.webp' /></p><p>


உயிர் பிழைத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரக்கு வைக்கும் பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>மேலும், சில பயணிகள் உயிர்காக்கும் கவசங்களை அணியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், படகு விபத்து தொடர்பான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடல்சார் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் : கிளம்பியுள்ள எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-postponed-again-1789192035"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-postponed-again-1789192035</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு நேற்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.</p><p>இத்தெரிவுக்குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் அதன் கால எல்லை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><h2>நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்</h2><p>இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f510e0-4978-4741-a02e-6cc17883b349/26-6aa4edf47c860.webp' /></p><p> 
</p><p>அந்தவகையில், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதுடன் அந்த தெரிவுக்குழுவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.</p><p> </p><p>மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அல்லாமல், அதனைப் பிற்போடுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள ஒரு தெரிவுக்குழு என்றே இதனை வரையறுக்க முடியும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்து செய்யப்பட்ட பொதுமன்னிப்பு! ஞானசார தேரர் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>சிறையில் அடைக்க உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d284a60f-45ed-4d06-9a25-33acfc8bac57/26-6aa4ea410bed1.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T05:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sudden-fuel-price-hike-this-month-in-sl-cpc-1789188255"></link>
            <id>https://ibctamil.com/article/no-sudden-fuel-price-hike-this-month-in-sl-cpc-1789188255</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த போதிலும், இந்த மாதம் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் உயர்வு எதுவும் இருக்காது என்று அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன், உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெட்ரோலின் விலையை குறைத்தல்</h2><p>இதேவேளை கடந்த 31ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b5a0c95-380f-4891-9551-39691e47b733/26-6aa4e4513600a.webp' /></p><p>

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 414 ரூபாயிலிருந்து 15 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 399 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 495 ரூபாயிலிருந்து 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 475 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனை பல்கலையில் ஏற்பட்ட துயரம்! மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-university-student-falls-from-floor-1789190212"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-university-student-falls-from-floor-1789190212</id>
            <summary type="text">
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறித்த சம்பவமானது, இன்று(12) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி</h2><p>
</p><p>
இந்நிலையில், பலத்த காயமடைந்த மாணவர் உடனடியாக பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3df3c8-4f10-4bb4-af8b-c002c7999c9c/26-6aa4e3a0a0a70.webp' /></p><p>

இச்சம்பவம் தொடர்பாக பேராதனைப் காவல்துறையினரும் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T05:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணிகள் - நேருக்கு நேர் மோதும் அரசு மற்றும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280"></link>
            <id>https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280</id>
            <summary type="text">பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.“அரசாங்கத்திற்கு இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.</p><p>“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நன்மை” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி தலைமையில் இன்று (12) மற்றுமொரு மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p>
பொலன்னறுவை திம்பிரியங்கடுவ தீப உயன வளாகத்தில் இந்த மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு</h2><p>இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f783b831-e4db-444f-8f38-1db6e2ba00f8/26-6aa4d78766776.webp' /></p><p>



கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>



இந்தப் பேரணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்ற பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் கலந்துகொள்வதுடன், மேடையில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறு வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு பிரதான மாவட்டங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக பேரணிகளை நடத்தவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் </h2><p>
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfaa53d-859c-4238-a57b-19d9bdd2b348/26-6aa4d23f06a79.webp' /></p><p>
</p><p>
முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.</p><p>
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் வெடித்த போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) ஆரம்பமாகியுள்ளது.</p><p>யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொது தரப்பினரால்&nbsp;&nbsp;அழைப்பு </h2><p>இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொது தரப்பினரால் நேற்று (11) அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da762dc0-7bdb-4188-a6eb-24b270f0b582/26-6aa4ccb517364.webp' /></p><p>குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றது.</p><h2>ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி</h2><p>இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த
நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளில் மக்கள் தமது சொந்த நிலத்தை
விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb21a87-88f9-4055-944c-0f90103070f0/26-6aa4de3cbe713.webp' /></p><p> பலாலி விமான நிலையம்
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும்
பின்னடிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எள்ளளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.
</p><p>
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும்
காட்டாது இழுத்தடிக்கின்றனர், அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை
சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறான விடயங்களை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:53:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு கிடைக்கப்போகும் சலுகை : அரச சேவை ஆணைக்குழு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013"></link>
            <id>https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே அரச சேவை ஆணைக்குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள்</h2><p>
</p><p>
எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e29410-d6f3-4539-ab20-2a52fe4ebdc7/26-6aa4ca43b57e6.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.
</p><p>
எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>&nbsp;கல்வி அமைச்சின் சுற்றறிக்கை</h2><p>
</p><p>
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b8ae3d-4929-4ef6-b26b-4f43cec2af1e/26-6aa4ca44b7d92.webp' /></p><p>

அதன்படி, வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-crossed-boundaries-observed-prabhakaran-1789179419"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-crossed-boundaries-observed-prabhakaran-1789179419</id>
            <summary type="text">யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தினர் தனக்கெதிராக செயற்பட்டனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
வளைதள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

“தன்னையும் தமக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் கொடூரமாக வேட்டையாடிப் ராஜபக்சர்கள் பழிவாங்கினர்.</p><p></p><h2>அதிகாரத்திற்கு வந்த&nbsp;ராஜபக்சர்கள் </h2><p>
</p><p>
தங்களைக் காப்பாற்றிய இராணுவத் தளபதியையே சிறையில் அடைத்தவர்கள் ராஜபக்சர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7954cc-f8ef-4b4f-b095-ec750b19937c/26-6aa4b95e29c83.webp' /></p><p>
</p><p>
நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக மூன்று வருடங்கள் கொடூரமான முறையில் யுத்தம் செய்தோம்.

அவர்களின் தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.
</p><p>
ஆனால், அந்தப் போர்க் காலத்தில்கூட பிரபாகரன், தங்களது குடும்பங்களையோ, எங்களது பிள்ளைகளையோ பழிவாங்கவில்லை.
</p><p>
போர் முடிந்த பின்னர், ராஜபக்சர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் தங்களது அரசியல் இலாபத்திற்காகவும், தனிப்பட்ட குரோதத்திற்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையும் கொடூரமாக வேட்டையாடினார்கள். </p><p>

மேலும், ஜனவரி 2008 இல், போரின் வியூகத்தை மாற்றி இராணுவத்தை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக நகரச் சொன்னதன் மூலம், மகிந்த, கோட்டாபய மற்றும் கருணாகொட ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை குழப்பவும், தனது வேகத்தைக் குறைக்கவும் முயன்றனர்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் நீதிபதிக்கு எதிரான அவதூறு சுவரொட்டி: CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defamatory-poster-against-mannar-judge-1789183563"></link>
            <id>https://ibctamil.com/article/defamatory-poster-against-mannar-judge-1789183563</id>
            <summary type="text">மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு காட்சிப்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.</p><p>இதன்படி இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர், கொழும்பு குற்றப்பிரிவினர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
இந்த வழக்கில் மாத்தளையைச் சேர்ந்த இஷான் குணசேகர, அரவ்வலையைச் சேர்ந்த கிரிஷான் நாலக, மடபாத்தையைச் சேர்ந்த மனோஜ் மதுசங்க, பட்டதாரியான லக்மால் விக்ரமசிங்க, எஸ்.பி.எச்.எம். மதுசங்க, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் திலங்க தக்ஷித சுமதிபால, அச்சக உரிமையாளர் தசுன் தரங்க பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e067804-8fba-4259-989a-771d970cfe29/26-6aa4c9b49cdbc.webp' /></p><p>
முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
மூன்றாவது சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொல்லை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அந்த சந்தேகநபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆலய உற்சவத்தில் திடீரென வெடித்த பெரிய வெடி - சிறுவன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-in-temple-festival-firecracker-accident-1789181017"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-in-temple-festival-firecracker-accident-1789181017</id>
            <summary type="text"> ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p> ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

இச்சம்பவம் நேற்று 11) இரவு 11.00 மணியளவில் மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது இடம்பெற்றுள்ளது &nbsp;</p><p>கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71206939-0abb-42ec-861a-8c4c9db47b00/26-6aa4c9a9acd84.webp' /></p><p>எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். 

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p> 

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்! இலங்கை முன்னெடுக்கவுள்ள இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-move-lanka-set-regarding-iranian-ship-1789182700"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-move-lanka-set-regarding-iranian-ship-1789182700</id>
            <summary type="text">திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ரவூப் ஹக்கீம் கேள்வி</h2><p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e120d9d8-75d2-4680-9e70-9e6bc8080f11/26-6aa4c46dcb2bb.webp' /></p><p>முன்னதாக, ஈரானிய கப்பலான IRIS Bushehr கப்பலானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 208 பேரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்திருந்தது. </p><p>அவர்களில் அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களும் அடங்கியிருந்தனர்.
</p><p>
கொழும்பு துறைமுகத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு, குறித்த கப்பலை திருகோணமலைக்கு மாற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.</p><p></p><h2>ஈரான் - அமெரிக்கா&nbsp;பதற்றம்</h2><p> </p><p>பின்னர் கப்பல் திருகோணமலை நோக்கி இழுவை மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db76aa9-9b4a-4422-ac41-2a9c8800fd42/26-6aa4c46e834c6.webp' /></p><p>
</p><p>
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை தனது கடற்பரப்பை எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p><p>இதன்படி மனிதாபிமான அடிப்படையிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற கையெறி குண்டுகள்! தாக்குதல்கள் குறித்து காவல்துறை சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
 

குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் மூன்று கல்கிசை காவல் பிரிவுக்குள்ளேயே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
 

மேற்கு மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களால் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து காவல்துறை சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.</p><p></p><h2>கொல்லப்பட்ட&nbsp;இரண்டு குழந்தைகள் </h2><p>
</p><p>
 

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தக் குழுக்கள் பெற்ற கையெறி குண்டுகள் இதுபோன்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a538b9-c2a4-45c1-94eb-8fea9854e08d/26-6aa4b96f4df73.webp' /></p><p>அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்கால முயற்சிகளில் முப்படைகளையும் ஈடுபடுத்துவது குறித்து காவல்துறை பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>

 

இதற்கிடையில், நேற்று அதிகாலை (11) தெஹிவளையின் சிறிசங்கபோ மாவத்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது தந்தை காயமடைந்தார். </p><p>

 

உயிரிழந்தவர்கள் 17 வயதான கசுன் ரஷ்மிகா மற்றும் அவரது 11 வயதான சகோதரர் துமிந்தா கிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

அவர்களுடைய 55 வயதான தந்தை நலின் துசந்த பெரேரா, இந்தத் தாக்குதலில் தனது ஒரு காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:08:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p>
அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>உயிரை மாய்த்துக்கொள்வார்&nbsp;</h2><p>
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அந்த உறுப்பினர்கள் சிறைக்குச் சென்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/940eb78c-6aaa-4028-bf1b-8abe7a183a3d/26-6aa4bc11ec99c.webp' /></p><p>அவர் தானாகவே உயிரை மாய்த்துக்கொள்வார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T02:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் என்பது மட்டும் போதாது..! நாமல் நிரூபிக்க வேண்டும் - நிரோஷன் பாதுக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-can-never-become-mahinda-1789179453"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-can-never-become-mahinda-1789179453</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது&amp;nbsp; என ஐக்கிய மக்கள் சக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது&nbsp; என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.</p><p>கொழும்பில் வெள்ளிக்கிழமை (11) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.</p><p></p><h2>தத்தமது அரசியல் இலக்கு</h2><p> எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8acddf4-c8f8-47cf-8602-5ed0a09ca31d/26-6aa4bb9aba0aa.webp' /></p><p>
அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.</p><p> எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T02:40:39+00:00</updated>
        </entry>
    </feed>
