<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T00:46:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPTயின் கற்பனைக் கதைகளை வைத்து தாய் - தம்பியை கொலை தமிழ் புலம்பெயர் சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-man-kills-mother-and-brother-over-chatgpt-1786831885"></link>
            <id>https://ibctamil.com/article/american-man-kills-mother-and-brother-over-chatgpt-1786831885</id>
            <summary type="text">அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், தனது தாயையும் தம்பியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், தனது தாயையும் தம்பியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். </p><p>மேலும், தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான "கோட்பாட்டு யோசனைகள் அல்லது கற்பனைக் கதைகளை" ஆராய்வதற்காக அவர் இதற்கு முன்பு ChatGPT-ஐப் பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசுத் தரப்பு சட்டத்தரணி வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஆக்டனில் உள்ள தங்களது வீட்டில், தனது தாயார் சுதா வெங்கடேசன் (45) மற்றும் 14 வயது சகோதரர் சித்தார்த் அரவிந்த் ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து, 17 வயதான அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளும் மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.</p><p></p><h3>அதிகாரப்பூர்வ காரணங்கள்&nbsp;</h3><p>
</p><p>
தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான கற்பனைக் காட்சிகள் அல்லது கற்பனைக் கதைகள் குறித்த தேடல்களுக்காக இணையத்தையும் ChatGPT-யையும் பயன்படுத்தியது உட்பட, அரவிந்த் சமீபகாலமாக கவலைக்குரிய நடத்தையை வெளிப்படுத்தியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8bed92e-5aeb-4e54-9b5e-ecd941f7874f/26-6a80e69d889b8.webp' /></p><p>தனது குடும்பத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையதாகத் தோன்றும் கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கொண்ட கற்பனையான, கோதிக் பாணிக் கதைகளை உருவாக்க அந்தப் பதின்வயது சிறுவன் ChatGPT-ஐப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>

அரவிந்தின் தந்தையால் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அதேவேளையில், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் மருத்துவப் பரிசோதகரின் தீர்மானத்திற்கு உட்பட்டவை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T00:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள்! தேசிய கணக்காய்வு அலுவலகம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/709-prisoners-escaped-from-prisons-1786840243"></link>
            <id>https://ibctamil.com/article/709-prisoners-escaped-from-prisons-1786840243</id>
            <summary type="text">2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில், சிறைச்சாலைகள் தொடர்பான பல சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>ண்டும் கைது செய்யப்படவில்லை</h2><p>

கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab0616c0-37a6-4599-a0e6-9b664a13f86a/26-6a8104b62015a.webp' /></p><p>
</p><p>
மேலும், கணக்காய்வு உட்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 22 சிறைச்சாலைகளில் இருந்து 5,083 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>இவற்றுடன், 2,432 கைப்பேசி மின்கலங்கள், 970 சார்ஜர்கள், 4,149 சிம் அட்டைகள் மற்றும் 3,111 பிற உதிரிப் பாகங்களும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இத்தகைய சாதனங்கள் கைதிகளின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இவை கைதிகளுக்குக் கிடைப்பதனால் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பாதாள உலகச் செயல்பாடுகள் அதிகரித்து, பொதுமக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் அவதானித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T00:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீக்கிரையாவதில் இருந்து தப்பித்த மகிந்த சமரசிங்வின் வீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-samarasingh-s-house-escaped-fire-1786839693"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-samarasingh-s-house-escaped-fire-1786839693</id>
            <summary type="text">தூதுவர் பதவியை வகித்துக் கொண்டு நான் அரசியல் செய்யவில்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்கு அறிவார் என&amp;nbsp; அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூதுவர் பதவியை வகித்துக் கொண்டு நான் அரசியல் செய்யவில்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்கு அறிவார் என&nbsp; அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை என்றும், அரசியலில் அதிருப்தியடைந்த நிலையில் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தேன் எனவும் கூறியுள்ளார்.</p><p>மேலும், “நல்லவேளை தூதுவராக சென்றது. இல்லையேல் எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்” எனவும் கூறியுள்ளார்.</p><p></p><h2>கோட்டபய அரசாங்கத்தில் உறுப்பினர்</h2><p>தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf93e6b3-81b4-4fbc-b20d-f69a555e6b78/26-6a81028f4780c.webp' /></p><p> </p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பின்வரிசை உறுப்பினராகவே இருந்தேன். உரிய மதிப்பளிக்கப்படவில்லை.</p><p> இதனால் அரசியல் அதிருப்தியடைந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகினேன். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன்.</p><p>

தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் அரசியல் செய்யவில்லை. இதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்கு அறிவார்.தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும்வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். </p><p>அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்தேன்.

தூதுவராக நியமிக்கப்பட்டதையிட்டு தற்போது மகிழ்ச்சியடைகிறேன். அரசியல்வாதியாக இருந்து நாட்டுக்கு முடிந்த சேவையாற்றியுள்ளேன். அதேபோல் தூதுவராக வகித்தும் சேவையாற்றியுள்ளேன்”&nbsp; என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T00:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் மாணவன் ஒருவருக்கு கிடைத்த 9 மில்லியன் யூரோ மதிப்பிலான தங்க புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-finds-gold-treasure-worth-9-million-euros-1786821956"></link>
            <id>https://ibctamil.com/article/student-finds-gold-treasure-worth-9-million-euros-1786821956</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 9 மில்லியன் யூரோ (330 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், ஃப்ளாண்டர்ஸ், டெண்டர்மாண்டேவில் உள்ள ஒரு முன்னாள் மதுபான ஆலை இருந்த இடத்தில் 18 வயதான கோபி, என்ற சிறுவனே இதனை முதலில் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிமை கோரும் வாய்ப்பு</h2><p>இந்தக் கண்டுபிடிப்பு, தங்கத்தை யார் உரிமை கோர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16bbd343-045b-4b28-ba73-e692966cafa4/26-6a80bd46d70d7.webp' /></p><p> </p><p>கட்டுமானப் பணியாளர்களுக்கும், அந்தச் சொத்தை வைத்திருக்கும் உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் புதையலைத் தேடி யாரும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.</p><p>அந்த வீடு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தங்கமும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T21:43:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tsunami-that-hit-indonesia-1786829733"></link>
            <id>https://ibctamil.com/article/tsunami-that-hit-indonesia-1786829733</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக&amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக&nbsp;நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் மூன்று மணி நேரம் கழித்து எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படுவதற்கு முன்தாக இந்த குறைவளவான தாக்கத்தை&nbsp;இந்தோனேசியா சந்தித்துள்ளது.</p><p>இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தது 47 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமை பிரிவு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>7.7 ஆகப் பதிவான&nbsp;நிலநடுக்கம்</h2><p>ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, புளோரஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65889f4b-e802-4904-b451-ab0ab0bf72ad/26-6a80dc8ce8102.webp' /></p><p>

ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் (70 கிலோமீட்டர் ஆழம் வரை) மிகவும் ஆபத்தானதாகவும், பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T21:35:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் விண்வெளி மையம் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attack-on-shay-s-space-center-1786819452"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attack-on-shay-s-space-center-1786819452</id>
            <summary type="text">ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ்&amp;nbsp; விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ்&nbsp; விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.</p><p>தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஜெலென்ஸ்கி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>“உக்ரைன் அந்த மையத்தை FP-5 ஃபிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. மேலும், அதனை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று. அது மின்னணு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது” என்றும்&nbsp;ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today, there are new significant results from our deep strikes. In Russia’s Samara region, one of the key enterprises within Roscosmos – the Progress Center, which was involved, among other things, in electronics production – was hit. Flamingo missiles were used. A good… <a href="https://t.co/1BlZpmvKRN">pic.twitter.com/1BlZpmvKRN</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2088547091471614397?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>தாக்குதல்களின் பின்விளைவு</h2><p>மேலும் உக்ரைன் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்கள் வைக்கப்பட்டிருந்ததாக உக்ரைனியத் தலைவர் கூறிய நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள சவாஸ்லேகா விமானத் தளம் மற்றும் எஸ்டோனியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள உஸ்ட்-லுகாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையம் ஆகியவற்றின் மீது கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa27f627-aa0b-4ee8-9c52-ebe9019c4338/26-6a80b5c2e61b5.webp' /></p><p>
</p><p>இதன்படி சில தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில்,தொலைவில் உள்ள இடங்களில் பெரிய கருப்புப் புகைத்தூண்களையும் தீச்சுவாலைகளையும் காண முடிகிறது” என்றும் விவரித்திருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T19:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-irans-response-to-the-united-states-1786817730"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-irans-response-to-the-united-states-1786817730</id>
            <summary type="text">&amp;nbsp;ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு, திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.


அமெரிக்கா, ஈரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு, திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.
</p><p>

அமெரிக்கா, ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச கடல்வழி எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்கா முயற்சித்து வருகிறது. </p><p>இந்நிலையில் ஹோர்முஸ் பகுதியை விரைவில் கைப்பற்றி, அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>தங்களது உத்தரவிற்கே ஹோர்முஸ் கட்டுப்படும்</h2><p>இதன்படி ட்ரம்ப் பேச்சுக்கு ஈரான் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாதி தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9729e0-54e4-46e9-be10-8aa047775768/26-6a80af14dbced.webp' /></p><p>“ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது. அது ஈரானிடமே உள்ளது. ஈரானிடம் தான் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்படும், திறக்கப்படும். உங்கள்(ட்ரம்ப்) தோல்வியை ஒப்புக் கொள்ளாத வரை முடக்கம் தொடரும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T19:33:24+00:00</updated>
        </entry>
    </feed>
