<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T19:24:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புபடுத்தி போலி பிரசாரம்! சட்ட நடவடிக்கைக்கு விரைந்த திலகரத்ன டில்ஷான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dilshan-complaint-over-defamatory-posts-1787856354"></link>
            <id>https://ibctamil.com/article/dilshan-complaint-over-defamatory-posts-1787856354</id>
            <summary type="text">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p>

நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றித் தான் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, இந்தத் தவறான தகவல்கள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ள டில்ஷான், தனது பெயரைத் தூய்மைப்படுத்த நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
மேலும், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ பொது நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ae803a-b610-4a93-8e45-30809d3058bd/26-6a908822a05da.webp' /></p><p>
</p><p>
இந்த அவதூறான பதிவுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தனது வழக்கறிஞர்கள் ஆயத்தமாகி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குற்றவாளி, ஷிரான் பாசிக்குடன் டில்ஷானை தொடர்பு படுத்தி சமூக ஊடகங்கள் பரப்பப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T19:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/couple-arrested-with-drugs-1787855126"></link>
            <id>https://ibctamil.com/article/couple-arrested-with-drugs-1787855126</id>
            <summary type="text">மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p> </p><p>

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3501df0b-e2f6-4c9d-8ada-1112f2742440/26-6a9082a995050.webp' /></p><p>
</p><p>
இந்த போதைப்பொருட்கள் பெறப்பட்ட மூலத்தைக் கண்டறியவும், இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T18:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-donates-one-million-dollars-aid-to-nepal-1787851517"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-donates-one-million-dollars-aid-to-nepal-1787851517</id>
            <summary type="text">நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்மூலம், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>நீண்டகால நட்புறவு</h2><p>
</p><p>
வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8496aea-e5d3-4629-b338-64eff1e02877/26-6a9075c3c8d2d.webp' /></p><p>
</p><p>
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்</h2><p>
</p><p>
இதற்கிடையில், இன்று காலை நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கானலுடன் தொலைபேசி உரையாடலில் வெளியுறவு அமைச்சர் விஜய ஹேரத் இலங்கையின் இரங்கலையும், ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be49e5e-db8a-46b8-a811-263c13dff30d/26-6a9075c47d87c.webp' /></p><p>

இதன்படி, நேபாளத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, எதிர்காலத்தில் இலங்கையால் வழங்கக் கூடிய பிற பொருத்தமான ஒத்துழைப்பு வழிமுறைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T17:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்காவின் &quot;Economic D-Day&quot; தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-s-economic-d-day-attack-on-iran-1787850293"></link>
            <id>https://ibctamil.com/article/america-s-economic-d-day-attack-on-iran-1787850293</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பொருளாதார போருக்கு அமெரிக்கா எகனாமிக் டி-டே&quot; (Economic D-Day) என்று பெயர் சூட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பொருளாதார போருக்கு அமெரிக்கா எகனாமிக் டி-டே" (Economic D-Day) என்று பெயர் சூட்டியுள்ளது.
</p><p>
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்தத் தடைகள், அந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை . இது ஈரானின் மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா எடுக்கும் ஒரு உளவியல் ஆயுதம் என்றே கருதப்படுகிறது.
</p><p>
 "டி-டே" என்ற சொல் இரண்டாம் உலகப்போரை நினைவூட்டுவது போல, ஈரானிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பணவீக்கம் குறித்த பதற்றத்தையும் உருவாக்குவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்தத் தடைகளால் ஈரானிய நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது (1 டொலர் = 2 மில்லியன் ரியால்). உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
</p><p>
ஈரான் இந்த நடவடிக்கையை "பொருளாதார பயங்கரவாதம்" என்று சாடியுள்ளது.
</p><p>
இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kuwqKWzBX2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T17:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cyberattack-on-3-uk-airports-1787847447"></link>
            <id>https://ibctamil.com/article/cyberattack-on-3-uk-airports-1787847447</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முக்கிய மூன்று விமான நிலையங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி,மான்செஸ்டர், லண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முக்கிய மூன்று விமான நிலையங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இதன்படி,மான்செஸ்டர், லண்டன் ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களே இவ்வாறு இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதலில் சுமார் 8.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் அம்பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள்</h2><p>
பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையக் குழுமமான மான்செஸ்டர் விமான நிலையக் குழுமம் (MAG), அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் இணையப் பாதுகாப்புச் சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0febaf3c-86f8-4ba9-9baa-3097f202aeb2/26-6a9063a7ba651.webp' /></p><p>மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களில் உள்ள வாகன தரிப்பிடம், ஓய்வறை, முன்பதிவுகள் இடங்கள் மற்றும் விமான நிலையத்திற்குள் wifi பதிவு செய்தல் தொடர்பான வாடிக்கையாளர் தரவுகள் பெருமளவில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள் மற்றும் அஞ்சல் குறியீடுகள் உள்ளிட்ட தரவுகள் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
இருப்பினும், வாடிக்கையாளர்களின் வங்கி அல்லது பணம் செலுத்தும் விவரங்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தச் சம்பவத்தால் விமான நிலையங்களில் எந்தவிதமான செயல்பாட்டு இடையூறும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T16:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-talks-update-whait-house-1787843813"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-talks-update-whait-house-1787843813</id>
            <summary type="text">அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.</p><p>மாறாக, வெள்ளை மாளிகை ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் எனப் பெயரிட்டுள்ள ஒரு முன்னெடுப்பின் மூலம் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>“தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஒருவேளை அவர்கள் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி கருதும் வரை இது தொடரும்” என்று&nbsp;கரோலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்</h2><p>அதுபோன்ற ஒரு நிலையை நாங்கள் இன்னும் காணவில்லை என்றும் லீவிட் தனது கருத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40761ab-4f4d-4b52-9583-d1538e6dbef1/26-6a90565071a27.webp' /></p><p>&nbsp;மேலும், டொனால்ட் ட்ரம்ப் “அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்” என்றும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இதன்படி “ஈரானின் இராணுவத்தை அழிக்க ஒபரேஷன் எபிக் ஃபியூரி'யை நாங்கள் மேற்கொண்டோம். இப்போது அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்'டை மேற்கொள்கிறோம்," என்று லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்ட பெண்களின் புகைப்படங்கள்! விசாரணையில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/photos-of-women-shared-inappropriately-1787845384"></link>
            <id>https://ibctamil.com/article/photos-of-women-shared-inappropriately-1787845384</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.அவ்வாறான புகைக்கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.</p><p>அவ்வாறான புகைக்கடங்களை வைத்து முகநூல் குழுக்களையும் பக்கங்களையும் இயக்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சந்தேக நபரின் கைபேசி</h2><p>குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தடுப்பு காவல் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் இன்று பெலியத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338e649f-0dae-40a1-8156-ca6dc6ef2ce2/26-6a905b9ede48f.webp' /></p><p>இதன்படி சந்தேக நபரின் கைபேசி காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:44:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667"></link>
            <id>https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ​​ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை</h2><p>இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89bbb263-6c65-420f-b29a-1d4e64a31eba/26-6a90327ca6cb9.webp' /></p><p>“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலித்துக்களின் உரிமைக்காக வன்னி அரசு ஆதரவு குரல்! தி.மு.க வுக்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vanni-arasu-s-voice-of-support-for-dalit-rights-1787841151"></link>
            <id>https://ibctamil.com/article/vanni-arasu-s-voice-of-support-for-dalit-rights-1787841151</id>
            <summary type="text">இந்தியாவின் தலித் சமூகத்தினருக்கான உரிமை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.

இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலித் சமூகத்தினருக்கான உரிமை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.
</p><p>
இதில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசுவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தி.மு.க கட்சியை கேள்வி எழுப்பும் விதமாக அமைந்திருந்தது.
</p><p>
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வாழும் தலித் சமூகத்தினரை பார்ப்பது கோடட்பாட்டின் அடிப்படையிலா அல்லது பச்சாபாதத்தின் அடிப்படையிலா என வன்னி அரசுவால் கேள்வி எழுப்பப்பட்டது.</p><p>
</p><p></p><h2>&nbsp;வன்னி அரசின் கருத்து</h2><p>தொடர்ந்து, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசியபோது, “குறிப்பிட்ட தொகுதியில் தலித் இனத்தைச் சேர்ந்தவர்களை தொகுதியில் நிறுத்தினேன் என்று தி.மு.கவினர் பேசுகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cfe803-a9f3-4234-a9b4-54fdbc463051/26-6a904e657812d.webp' /></p><p>இது கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா?

தலித் சமூகத்தினரை பரிதாபத்தின் தோனியில் பார்ப்பதாகத்தான் நான் இதை உணர்கிறேன். </p><p>

கடந்த தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வந்தோம். ஆனால் இந்த தேர்தலில் இரண்டு வி.சி.க. உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்று பேரவைக்கு வந்துள்ளோம். </p><p>

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு அமைச்சரவை பதவி கொடுத்து, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு தந்துள்ளது த.வெ.க. இதுதான் கோட்பாடு. </p><p>

அதன்படி தி.மு.க. கோட்பாட்டின் அடிப்படையில் பேசவில்லை. பரிதாபத்தின் அடிப்படையில் தான் பார்ப்பதாக கருதுகிறேன்.</p><p></p><h2>சாதி கலவரம்</h2><p>நான் தென் மாவட்டத்தில் நடந்த சாதி கலவரத்தில் இருந்து பாதிக்கப்பட்ட ஒருவன். அந்த பாதிப்புகளில இருந்து நான் சென்னைக்கு வந்திருக்கிறேன்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4_-l9ztJTJg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>எங்களுடைய தலைவர் திருமாவளவன் இன்றைக்கு கூட ஒரு குழந்தையை அழைத்து வந்து பள்ளியில் விடுவதை போல என்னை வந்து சட்டப்பேரவையில் உங்கள் முன் விட்டுவிட்டு சென்றார். </p><p>இன்றைக்கு கிராமங்களில் சாதி அணுகுமுறை எப்படி இருக்கிறது என்றால் வெள்ளை சட்டை போட்டு வந்தால் இவனுக்கு வந்த வாழ்வை பார் என்று சொல்வார்கள். புதிய கார் வாங்கி வந்தால் இவனுக்கு வந்த வாழ்வு என்று பார்ப்பர்கள் ” என்று ஆதங்கமாக தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T14:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862"></link>
            <id>https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862</id>
            <summary type="text">காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, பொதுமக்கள் வழமைபோன்று இணையவழியில் காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி பிற்பகல் 12.50 மணியளவில் குறித்த தரவு முறைமை செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் முறைமை மீளமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்</h2><p>

எனினும், ஆகஸ்ட் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தரவு முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தை இணையவழியில் மீண்டும் சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f904e9-253b-430b-b6c6-acf21cc3636e/26-6a90419001a97.webp' /></p><p>புதிய விண்ணப்பத்திற்கான உரிய அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் காவல்துறை அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னைய விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.5,100 கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்த பயன்படுத்திய கடன் அட்டைக்கு மீளச் செலுத்தப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளை சிதைக்கும் கலாசார சீர்கேடு! எழுந்துள்ள கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693"></link>
            <id>https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693</id>
            <summary type="text">சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட பாரம்பரிய நடைமுறைகள் முறையாகப் பேணப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
</p><p>திருமணம், இறப்பு உள்ளிட்ட சடங்குகளில் இடம்பெறும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு முரணான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.</p><p>இது தொடர்பில் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9ODhOhjET4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அரசியல் வாதிகளின் தொடர்பை அம்பலபடுத்திய சிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055"></link>
            <id>https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055</id>
            <summary type="text">தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>
சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>10 அரசியல்வாதிகள்</h2><p>
விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் இருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4238dce6-73dc-4d0c-bab9-9157268ca8da/26-6a902a012aa23.webp' /></p><p>
இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர்,&nbsp; பாசிக்கிற்கு சட்டவிரோதமாக காணிகளை பெற்றுக்கொடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த நடவடிக்கைகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர், பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நீண்ட நேரமாக விசாரணை</h2><p>நீண்ட காலமாகவே சிரான் பாசிக் இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறைமா அதிபர்&nbsp; பிரியந்த வீரசூரிய,சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:24:37+00:00</updated>
        </entry>
    </feed>
