<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T00:34:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் தொடர்பான சர்ச்சையான கருத்து! சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230</id>
            <summary type="text">
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த அழைப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காரியவசம், தான் கூறாத விஷயங்களுக்கு தவறான விளக்கம் அளித்து அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வேலைத்திட்டம்&nbsp;</h2><p>தான் கூறிய கருத்துகளைத் திரித்து காட்டி, எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய மிரட்டல்களுக்குத் தான் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த காலத்தில் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமான முடிவையே சந்தித்ததாகவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அதே பாதையில்தான் பயணிக்க முயற்சிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a10eb2-af34-4d89-8006-3796afa3c715/26-6a791ac4e6969.webp' /></p><p>ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபராக (DIG) நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்பட்டதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், எதிர்காலத்தில் மக்கள் இதற்குச் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது...! சாடும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703"></link>
            <id>https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703</id>
            <summary type="text">அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வரிக் கொள்கைகள்&nbsp;</h2><p>

வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9621712e-b680-43d1-914d-f17d503ba0da/26-6a79135892d9a.webp' /></p><p>

அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும் மற்றும் மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சைபர் திருட்டு&nbsp;</h2><p>அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d873d14-1095-450b-8145-7aab97dfe708/26-6a791359455d3.webp' /></p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகஸ்தர்கள் சந்திக்கும் நெருக்கடி! அரசுக்கு அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/distributors-urge-govt-to-drop-rs-50-tax-1786316653"></link>
            <id>https://ibctamil.com/article/distributors-urge-govt-to-drop-rs-50-tax-1786316653</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கூட்டுத்தாபனத்தின் இழப்புகள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், குறித்த இழப்புகள் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால் இந்த வரியை மேலும் தொடர்வது அவசியமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டதால் விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்கி நுகர்வோருக்கு அந்த நிவாரணத்தை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a801d6c-f6d5-401c-b6b3-1a88fc862dfa/26-6a790b69cad5f.webp' /></p><p>தற்போது நடைமுறையிலுள்ள QR முறையும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.
</p><p>
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% சேர்க்கப்பட்ட மதிப்பு வரி (VAT) மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகை 3 % இலிருந்து 1.6 % ஆகக் குறைக்கப்பட்டமையால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள சினோபெக் (Sinopec), LIOC மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) போன்ற நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி! மொஜ்தாபா காமேனியின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554"></link>
            <id>https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக<a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank"> உயரிய பாதுகாப்புப் </a>பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி (IRGC - இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தலைவரான மொஹ்சென் ரெசாயை (Mohsen Rezaee) நியமித்துள்ளார்.
</p><p>
இந்த முக்கியப் பொறுப்பில் ரெசாய், உச்சத் தலைவர் காமேனியின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
</p><p>
இப்பதவியை வகித்து வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க - இஸ்ரேலிய<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> வான்வழித் தாக்குதலில்</a> கொல்லப்பட்டார்.</p><p></p><h2>அரசியல் ஆலோசகர்</h2><p> 

அவரைத் தொடர்ந்து முகமது பாகர் ஜோல்காதர் (Mohammad Bagher Zolghadr) இப்பதவியைக் கவனித்து வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22991208-4e72-4cde-87de-84ba69e58bb8/26-6a78de7751a22.webp' /></p><p>இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, முகமது பாகர் ஜோல்காதரைத் தனது அரசியல் ஆலோசகராக உச்சத் தலைவர் காமேனி நியமித்துள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட அமைப்பு&nbsp;</h2><p>

இவர், 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக் போரின் போது (ஈரானில் இது புனிதப் பாதுகாப்புப் போர் என்று அழைக்கப்படுகிறது) முக்கிய இராணுவத் தளபதியாகச் செயல்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b767aef7-36c7-46fe-92c0-5d826dd1387e/26-6a78de78021db.webp' /></p><p>

அத்தோடு ஈரானின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.</p><p>

இந்தநிலையில் தற்போது ஈரான் நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சில் அமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் உயர்மட்ட அமைப்பான ஈரானின் நன்மதிப்பு நிருணயக் கவுன்சிலின் (Expediency Discernment Council) உறுப்பினராகவும் ரெசாய் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:59:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1992-mailanthanai-massacre-remembered-1786312968"></link>
            <id>https://ibctamil.com/article/1992-mailanthanai-massacre-remembered-1786312968</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட கொடூரம், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு துயரமான அத்தியாயமாகும்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கன்னிவெடித் தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாகவே, சிறிலங்கா ராணுவத்தினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
ஆனால், அச்சம்பவத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற மயிலந்தனை கிராமத்தின் மீது அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் கோபத்தைத் திருப்பிய சிறிலங்காவின் சிங்களப் பாதுகாப்புத் தரப்பினர், அக்கிராமத்தையே கொடூரமாகச் சூறையாடினர்.
</p><p>
அன்று அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி கிராம மக்கள் மீது துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. 

கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் எனப் பாரபட்சமின்றி 39 பொதுமக்கள் அன்றைய நாளில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
</p><p>
அன்றைய நாளில் சிறிலங்காப் படைகள் ஆடிய மனிதவேட்டையானது தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

உயிருக்குப் பயந்த மக்கள் தங்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே போட்டுவிட்டு, சொந்த ஊரை விட்டு வெளியேற நேரிட்டது. </p><p>

ஒரே நாளில் ஒரு முழு கிராமமும் சுடுகாடாக மாற்றப்பட்டு அம்மக்களின் நிம்மதியான வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
</p><p>
இதேபோன்று கொன்றொழிக்கப்பட்டு, நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துகிறது.</p><p>

வலிகளோடு வாழும் இந்த இனத்தின் மீதான ஒவ்வொரு படுகொலைக்குமான நீதிக்கான பயணத்தில் இதயசுத்தியோடு பயணிப்போம்.</p><p></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிஜமான பாபா வங்காவின் 2 கணிப்புக்கள்...! அடுத்தது புடினின் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baba-vanga-s-terrifying-2026-predictions-came-true-1786307414"></link>
            <id>https://ibctamil.com/article/baba-vanga-s-terrifying-2026-predictions-came-true-1786307414</id>
            <summary type="text">பல்வேறு உலகச் சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டைப் பற்றி கணித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு உலகச் சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டைப் பற்றி கணித்துள்ள செய்திகள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>

அவர் கூறிய கணிப்புகளில் 2 சம்பவங்கள் ஏற்கனவே நடந்துவிட்டதாகவும், இன்னும் 3 அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

2026 இல் உலகம் முழுவதும் பெரும் நிலநடுக்கங்கள், வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் தாக்கும் எனக் கணித்திருந்தார்.</p><p> </p><p></p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம்</h2><p>மார்ச் மாதத்தில் மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஐரோப்பாவில் வீசிய கடும் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீச் சம்பவங்களை இதனுடன் தொடர்படுத்தி கருத்துக்கள் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca25066-744e-4bfc-8e9b-714945c5f60a/26-6a78f48005ce7.webp' /></p><p>

இதையடுத்து தொழில்நுட்பம் மனிதர்களை மீறி வளர்ச்சி அடையும் எனக் கூறியிருந்தார். </p><p>

இதனடிப்படையில் தற்போதைய சூழலில் AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், மனித வேலைவாய்ப்புகளை அது ஆக்கிரமித்து வருவதும் இக்கணிப்பை உறுதிப்படுத்துவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>வல்லரசு நாடுகள்</h2><p>இந்த பிண்ணனியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு இடையே முற்றிவரும் பதற்றம் உலகப் போராக வெடிக்கும் எனக் கணித்துள்ளார். </p><p>

குறிப்பாகத் தைவான் விவகாரத்தில் சீனாவின் தலையீடும், ரஷ்யா-அமெரிக்கா நேரடி மோதலும் இதற்குக் காரணமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8729462c-6633-45fb-b03a-098823d99a37/26-6a78f47f07c38.webp' /></p><p>

இதனுடன் நவம்பர் 2026-க்குள் பூமிக்கு மேல் ஒரு பெரிய விண்கலம் வரும் என்றும், மனிதகுலம் முதன்முறையாக ஏலியன்களுடன் நேரடித் தொடர்புகொள்ளும் என்றும் கணித்துள்ளார்.
</p><p>
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அதிகாரத்தை இழந்து, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய தலைவரிடம் ஆட்சிப் பொறுப்பு மாறும் எனவும் அவர் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T21:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daniel-kinahan-extradited-to-ireland-from-dubai-1786299645"></link>
            <id>https://ibctamil.com/article/daniel-kinahan-extradited-to-ireland-from-dubai-1786299645</id>
            <summary type="text">சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் <a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank">கும்பலின் தலைவர் </a>என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p>

இந்தநிலையில் அயர்லாந்து அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து டப்ளின் நகருக்கு அவர் அழைத்து வரப்படவுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் அமைப்பை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்காக <a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank">அங்குள்ள நீதிமன்றத்தில் </a>அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>முறைப்படி கைது&nbsp;</h2><p>விமானப் போக்குவரத்து தகவல்களின்படி, கினஹானை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:19 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a6509e7-053c-4ace-947c-e37e1caae3f8/26-6a78d3ac4ee8e.webp' /></p><p>

டப்ளின் விமான நிலையம் வந்தடைந்ததும் கினஹான் உடனடியாக காவல்துறையினரால் முறைப்படி கைது செய்யப்பட்டு, நடுவர்கள் இல்லாத (Non-Jury) சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் (Special Criminal Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

கைதியை அழைத்துச் செல்வதற்காக அயர்லாந்து சிறைச்சாலைத் துறை புதிதாக தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத (Bulletproof &amp; Bomb-proof) சிறப்புப் பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்துகிறது.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு வசதிகள்</h2><p>கினஹானின் வருகையையொட்டி அயர்லாந்து காவல்துறையினர் (Gardaí), ஆயுதம் ஏந்திய சிறப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8f37e-34de-445c-8a6b-86106214971b/26-6a78d3ad00611.webp' /></p><p>விசாரணை முடியும் வரை அவர் அடைக்கப்படவுள்ள மிக உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட போர்ட்லாயிஸ் (Portlaoise) சிறைச்சாலையின் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

கினஹான் மற்றும் அவரது குடும்பத்தினர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். </p><p></p><h2>பொருளாதாரத் தடைகள்</h2><p>இந்தநிலையில் பல தசாப்தங்களாக நடைபெறும் பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கும் இவர்களது கும்பலுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p>2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசால் சர்வதேச அளவிலான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இவருக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e61f176-59c9-4572-80ea-a5ac595b5a0e/26-6a78d3ada5ef5.webp' /></p><p>அதேவேளையில், கினஹான் மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில் கினஹான் மீது இதுவரை எந்தக் குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் ஒரு குற்றவியல் கும்பலின் தலைவர் என்று கூறப்படும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமான் - ஈரான் தீவிரம்! அமெரிக்காவின் முட்டுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984"></link>
            <id>https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில்<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> குறிப்பிடத்தக்க முன்னேற்றம்</a> ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றிற்கு <a href="https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003" target="_blank">வழங்கிய நேர்காணல்</a> ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பிராந்தியக் கட்டுப்பாடு&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணையில் பிராந்தியக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஓமானும் ஈரானும், அமெரிக்கா தன் தடைகளை நீக்கி ஒப்பந்தத்தைப் பின்பற்றியவுடன் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என விவரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054ed12c-19ce-49ec-ba86-88b4e0c785f7/26-6a78c10060945.webp' /></p><p>மிகப்பெரிய பிரச்சினை வாஷிங்டனுடன் தான் உள்ளது என ஃபர்மான்ஃபார்மையன் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வெளிநாட்டுச் சொத்துக்கள்&nbsp;</h2><p>ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) குறிப்பிட்டது போல், தற்போது இருநாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இடைத்தரகர்கள் மூலம் குறிப்புகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன (Exchange of notes) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1739c9-2151-46a6-b737-87a25c827306/26-6a78c0ffaf773.webp' /></p><p>அமெரிக்காவினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் நிதியிருப்புகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் வெளிப்பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடையை (US Naval Embargo) முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:17:20+00:00</updated>
        </entry>
    </feed>
