<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-10T19:20:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவத்தில்&nbsp;60 வயதுடைய நபர் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcb2f8a-bd9c-4835-965a-ef9838a2a765/26-6aa2d87c1c811.webp' /></p><p>லண்டன் முழுவதும் உள்ள யூத மற்றும் ஈரானிய சமூகங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இவ்வருட தொடக்கத்தில் இடம்பெற்ற எந்தவொரு சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்களுடனோ இந்த விசாரணைக்குத் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>லண்டன் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கல்லூரியின் மன்றம்&nbsp;</h2><p>இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
</p><p>
குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.</p><p> 

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5caa8f2-5402-41c2-998d-394678758e71/26-6aa2f75176c26.webp' /></p><p>அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்விதப் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-refineries-scramble-for-non-iran-crude-1789059908"></link>
            <id>https://ibctamil.com/article/china-refineries-scramble-for-non-iran-crude-1789059908</id>
            <summary type="text">சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன.</p><p>ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
</p><p>
இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6e8625-5b94-4fd8-a70b-d0f4e2eb2654/26-6aa2f16a8b024.webp' /></p><p>இதன் காரணமாக சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன் சந்தையில் மசகு எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின் இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பதிலடியில் சிதைந்துபோன அமெரிக்க கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-us-ships-fighter-jets-damaged-irans-response-1789056935"></link>
            <id>https://ibctamil.com/article/10-us-ships-fighter-jets-damaged-irans-response-1789056935</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது சமீபத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவுகணைகளை வீசி தாக்கியது.&nbsp;</p><p>இதற்குப் பதிலடியாக, கடந்த 8ம் திகதி அமெரிக்க இராணுவம், ஈரானுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அன்று இரவே மேற்காசியாவில் உள்ள ஜோர்டானின் பப்ரக், அஸ்ரக் நகரங்களில் இயங்கி வரும் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>அமெரிக்காவின் புகழ்பெற்ற விமானம் சேதம்</h2><p>


தாக்குதலில், நவீன போர் விமானங்களில் மிகவும் புகழ்பெற்ற எப்-15 ரக 8 விமானங்கள் சேதமடைந்தததாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c68b1c-d073-4496-a754-92e4ca32f91d/26-6aa2dc86bcc45.webp' /></p><p> இதேபோன்று 'வார்ஹாக்' என்று அழைக்கப்படும் ஏ-10 ரக தாக்குதல் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து, அதன் ஒரு சக்கரம், இறக்கை காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>

இந்நிலையில் தங்களுடைய, 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 2 போர்க் கப்பல்கள், 8 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p></p><h2>10 கப்பல்கள் மீதும் தாக்குதல்</h2><p> மேலும், தடையை மீறிச் சென்றதாக மற்ற நாடுகளைச் சேர்ந்த, 10 கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணையை தாண்டி, ஓமான் வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் ஈரான் தன் கட்டுப்பாட்டு மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726ca560-0bdb-403c-881a-eb862e3c25ef/26-6aa2dc8771ffa.webp' /></p><p> அனுமதியின்றி இந்தப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பரல் 100 டொலரைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T16:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு : சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினார் மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-escaped-amnesty-act-regarding-gnanasara-1789053238"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-escaped-amnesty-act-regarding-gnanasara-1789053238</id>
            <summary type="text">பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை அளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.</p><p>காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், நீதிபதிகள் சம்பத் அபேகோன் மற்றும் சோபிதா ராஜகருணா ஆகியோர் உடன்பட்ட 58 பக்கத் தீர்ப்பை, நீதிபதி ஜனக் டி சில்வா இன்று வழங்கினார்.</p><p>இது தொடர்பில் நீதிபதி தெரிவித்தவை வருமாறு,</p><h2>எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்</h2><p>
</p><p>
"முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b8f0ff-85df-4efa-8789-66ba2e873122/26-6aa2ce2e7af1e.webp' /></p><p>
</p><p>
 மகாநாயக்க தேரர்கள், தியவதன நிலமே மற்றும் பிற மதத் தலைவர்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக் கோரியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அரசியலமைப்பின் 34(1) பிரிவின்படி, ஜனாதிபதி தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும். இருப்பினும், இந்த வழக்கில், இந்த பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கியதற்கான காரணங்களை ஜனாதிபதி விளக்கத் தவறிவிட்டார்.</p><p>

எனவே, அரசியலமைப்பின் 12(1) பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது."</p><p></p><p>

</p><h2>மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை&nbsp;</h2><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதி ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினார். வணக்கத்திற்குரியவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு,சட்டத்தின்படி நீதிமன்றத்தின் பார்வையில் செல்லாதது மற்றும் பயனற்றது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407afa52-1a34-4a1a-a3f0-696e5073cb67/26-6aa2ce2f2dfbb.webp' /></p><p>

இருப்பினும், மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த மன்னிப்பை வழங்கியுள்ளதால், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T15:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் விருந்து : காவல்துறை தொடங்கியுள்ள சிறப்பு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intelligence-information-about-facebook-parties-1789051047"></link>
            <id>https://ibctamil.com/article/intelligence-information-about-facebook-parties-1789051047</id>
            <summary type="text">முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக, காவல்துறை மா அதிபர் ஒரு சிறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக, காவல்துறை மா அதிபர் ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் விளைவாக, சில நாட்களுக்கு முன்பு தெல்தெனிய காவல் பிரிவில் நடைபெற்ற முகநூல் விருந்தில் பங்கேற்ற 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.</p><h2>இளைஞர்கள் பலியாகும் அபாயம்</h2><p>இதுபோன்ற இடங்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களைப் பெறும் திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் என்றுகாவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f1bd98-f357-4b19-a6f4-05c25bbbec5c/26-6aa2c56c82cb7.webp' /></p><p>

முகநூல் விருந்துகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இளைஞர்கள் பலியாகும் அபாயம் இருப்பதால், இதுபோன்ற விருந்துகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.</p><p></p><h2>பணத்தை மையமாகக் கொண்ட வணிகங்கள்</h2><p>
</p><p>
சில நேரங்களில் இதுபோன்ற விருந்துகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்றும், அவை இணையவழிக் குற்றங்கள் மற்றும் பணத்தை மையமாகக் கொண்ட வணிகங்கள் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fc0e85-d638-41e5-9c5b-6383622d248e/26-6aa2c56d39880.webp' /></p><p>

பிள்ளைகளின் பேச்சு, நடத்தை மற்றும் நடமாட்டங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்குமாறும் அவர் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.</p><h2>போதைப்பொருள் பாவனையால் பறிபோன உயிர்கள்</h2><p>

இதற்கிடையில், போதைப்பொருள் பரவல் காரணமாக 2025-ஆம் ஆண்டில் 175 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், அவர்களில் 172 பேர் ஆண்கள் மற்றும் மூன்று பேர் பெண்கள் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab1b08f-2531-4230-a612-accabe46d903/26-6aa2c56de6fe5.webp' /></p><p>
</p><p>
மேலும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் இன்று அர்ச்சுனா எம்.பியால் ஏற்பட்ட சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commotion-caused-by-mp-arjuna-in-parliament-today-1789048062"></link>
            <id>https://ibctamil.com/article/commotion-caused-by-mp-arjuna-in-parliament-today-1789048062</id>
            <summary type="text">நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், “ஆடு திருடர்களையும், போன் திருடர்களையும் சபையில் அமர வைத்துள்ள இந்த அரசாங்கம், குற்றவாளிகளை கூண்டிலிடுவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.</p><h2>யாழில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ள அனுர அரசு</h2><p>அத்துடன், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61d7733-2295-4d51-a056-daaec6d203d9/26-6aa2baa48c952.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தமக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

“எனக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதனை தெளிவுபடுத்தவும்.</p><p></p><h2>போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்</h2><p> போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்றைய ஆட்சியாளர்கள் போலியான விடயங்களை சோடித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d569b48-177a-4db2-8e93-433e4d5cb7d3/26-6aa2baa3d3dff.webp' /></p><p> </p><p>எனவே, உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கருத்துக்களை முன்வைக்கவும்” என இளங்குமரன் தெரிவித்தார்.

மேலும், குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
“உங்களது திருட்டுக் கூட்டங்கள் முதலில் அந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்” எனவும் இளங்குமரன் பதிலளித்தார்.
</p><p>
</p><h2>தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்</h2><p>இதன்போது அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, “இவர் இப்படித்தான் தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff7d349-6d1e-48de-9160-1eda34182a9a/26-6aa2baa32725d.webp' /></p><p> அதை நிறுத்துமாறு அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை மீறி நடந்துகொள்கின்றார். இவ்வாறு பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுமாறும், தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>

“நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுங்கள். குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்றேன். அப்படியானால் அனைவரும் பதவி விலகுவீர்களா?” எனவும் அர்ச்சுனா இராமநாதன் சவால் விடுத்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கையருக்கு கிடைக்கப்போகும் பெருந்தொகை இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-who-die-working-abroad-increased-1789046146"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-who-die-working-abroad-increased-1789046146</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களுக்கான மரண இழப்பீட்டை ரூ. 2 மில்லியனாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களுக்கான மரண இழப்பீட்டை ரூ. 2 மில்லியனாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p><p>வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழந்த 50 வெளிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
</p><p>
</p><h2>இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை</h2><p>முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 600,000 வழங்கி வந்தது.

தற்போது இந்தத் தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0916b9-7e7f-48ed-8fba-b0c63f77238d/26-6aa2b2505e3f3.webp' /></p><p>
</p><p>
ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் ஒரு துரதிஷ்டவசமான காரணத்தால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இந்த நிலைமையைக் குறைப்பதற்காக, குழுத் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>ஆண்டுதோறும் 8 பில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

“வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். பணியகம் ஏற்கனவே அவர்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது, மேலும் நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8241f561-704e-4964-b5db-85a008e26919/26-6aa2b24faaf0e.webp' /></p><p> இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும். இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன, மேலும் அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகிறது. </p><p>கூடுதலாக, பணியகம் தற்போது பணியாளர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.”&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி : பாயப்போகும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743"></link>
            <id>https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (10) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி, தான் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணான சாட்சியத்தை அளித்திருந்ததை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.</p><h2>சாட்சி மீது நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பொய்ச் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d6c431-a297-41bc-a4af-6fc7a27ecb78/26-6aa29eba4553e.webp' /></p><p>
</p><p>
பின்னர், அந்த சாட்சியைப் பிணையில் விடுவிக்க செல்ல உத்தரவிட்டது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:31:02+00:00</updated>
        </entry>
    </feed>
