<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-14T09:10:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1789376122"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1789376122</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (14.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (14.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;324.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 333.22 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	436.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 451.30 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		373.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 387.15 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d3eead-cf77-4f5c-9f28-94569af1efee/26-6aa7b8170bfcd.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.56 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.20 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			229.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.32 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	253.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.26 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T09:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெகிவளை வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல்: இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-dehiwala-1789373208"></link>
            <id>https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-dehiwala-1789373208</id>
            <summary type="text">தெகிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெகிவளை, சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
கடந்த 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
மேலும், படுகாயமடைந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d00f6b-c471-413f-b8a4-26d569e6b8b4/26-6aa7b150650b7.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T08:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து வயோதிபப் பெண் படுகொலை! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-woman-beaten-to-death-in-jaffna-1789369208"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-woman-beaten-to-death-in-jaffna-1789369208</id>
            <summary type="text">

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, இன்று (14) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அயல் வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளதையடுத்து,&nbsp; சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d7b2ab-e7a8-4daa-8796-57e98a4064e1/26-6aa79f7ad659b.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட வயோதிபப் பெண்ணின் மகனின் மகனால் குறித்த
கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரியவந்துள்ளது.</p><p>அதன்படி,&nbsp;குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T08:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-in-fuel-prices-end-of-september-1789372071"></link>
            <id>https://ibctamil.com/article/change-in-fuel-prices-end-of-september-1789372071</id>
            <summary type="text">



உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>விலை உயர்வுக்கு தீர்வு</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையின் கீழ் வணிக நடவடிக்கைகளைத் தொடர்வது தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eaedddf-f625-40b2-bd1b-d63d9469993e/26-6aa7abb82efa8.webp' /></p><p>
</p><p>
அதன்படி, குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வு காண பல வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதித் தீர்மானம்</h2><p>
</p><p>
இதற்காக அரசாங்கம் தலையிட்டு நிவாரணம் வழங்குவது அல்லது கடந்த காலங்களை போன்று விலை நிர்ணயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075bd257-a7c6-460f-8caa-7a6ce01d4dfe/26-6aa7abb8d7654.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, தனியார் நிறுவனங்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்த போதிலும், நுகர்வோரை கவனத்தில் கொண்டே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்கும் நடைமுறைக்கு அமைய, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T08:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-falling-from-4-story-building-at-a-school-1789368770"></link>
            <id>https://ibctamil.com/article/student-falling-from-4-story-building-at-a-school-1789368770</id>
            <summary type="text">காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.கீழே விழுந்த மாணவி ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p>கீழே விழுந்த மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p>இன்று (14.09.2026) காலை சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மாணவி படுகாயம்</h2><p>இது தொடர்பான விசாரணைகளில் தெரியவருகையில் குறித்த மாணவி அந்தப் பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c17ef8e-1fe4-44b0-8110-7b0dc10ac49e/26-6aa7a3d90fc60.webp' /></p><p>மேலும் சம்பவத்தை அடுத்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>
மாணவியின் தந்தை, தொலைபேசி பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு வீட்டில் அவருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த நிலையில் மாணவி கீழே குதித்தாரா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T07:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-39th-commemoration-1789368884"></link>
            <id>https://ibctamil.com/article/thiyaga-theepam-thileepan-s-39th-commemoration-1789368884</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் எந்தவித இடையூறும் கொடுக்காது அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் எந்தவித இடையூறும் கொடுக்காது அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே
உருவாக்க வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் அண்ணனுடைய 39வது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக்
கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987ஆம் ஆண்டு திலீபன் அண்ணன் மேற்கொண்ட
இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.</p><p>&nbsp;</p><h2>இலங்கை - இந்திய ஒப்பந்தம்</h2><p>எமது விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த
காலத்திலே அமைதிப் படையாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது தாயக
நிலப்பரப்புக்கு இந்திய இராணுவம் வந்தது. அந்தக் காலப்பகுதியிலே தான் எங்களுக்கு ஒரு மிக மோசமான நிலைமை ஏற்பட்டது.</p><p>அமைதி காக்க வந்த அந்த இந்திய இராணுவத்தினர் மாறாக அடக்குமுறைகளை இங்கே எமது
மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டபோதுதான் திலீபன் அண்ணன்&nbsp; ஐந்து அம்ச
கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.</p><p>12 நாட்கள்
உணவின்றி, நீரின்றி அவருடைய போராட்டம் தொடர்ந்தது. திலீபன் அண்ணனுடைய வீர வரலாறுகள் தொடர்ச்சியாக இங்கே
மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1fce1e-8a63-4742-ae17-de458d95d059/26-6aa7a24d342fe.webp' /></p><p>இந்த விடயங்கள் அனைத்துமே நாங்கள் இந்திய அரசாங்கத்துக்கு
எதிராக முன்வைக்கவில்லை. எமது விடுதலைப்
போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றின் ஒரு பகுதி. அந்த பகுதியை எதிர்கால சந்ததியினருக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் இதை
புரிந்து கொள்ள வேண்டும். </p><p>ஏனென்றால் அவர்கள் தான் எதிர்காலத்தில் இந்த மண்ணை
ஆளப்போகின்றார்கள். அவர்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க
வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கருத்துக்களை இந்த இடத்தில் முன்வைக்கின்றோம்.
</p><p>
எதிர்வருகின்ற 39வது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக
இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் நினைவு கூர
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.</p><p>&nbsp;</p><h2>அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்</h2><p>ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு
அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.</p><p>
இன்றைக்கு பார்க்கப்போனால் தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட
அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவது
இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a8a087-13ba-458f-9096-b721a89f46f4/26-6aa7a24c5ad50.webp' /></p><p> </p><p>மாவீரர் துயிலுமில்லங்களாக இருந்தாலும்
சரி, போராளிகளுடைய வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களுடைய நினைவாலயங்கள்
இருந்தாலும் சரி, அந்த நினைவு நாட்கள் என்பது அரசியல் சார்ந்த விடயங்களாகவே
இங்கே நினைவு கூரப்படுவதை அதிகமாக எங்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது.
</p><p>
இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் கூட அப்படித்தான் இங்கே நினைவு
கூரப்படுகின்றது. கிளிநொச்சியில் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அதை
ஆக்கிரமித்து நினைவு கூருகின்றனர். முல்லைத்தீவில் அப்படி செய்கிறார்கள்,
யாழ்ப்பாணத்திலேயும் அப்படிதான்.</p><p>திலீபன் அண்ணனுடைய நினைவு நாளை நினைவு
கூருவது ஒரு அரசியல் கட்சி. நினைவு கூரல்களை கட்சிகள் தங்களுடைய அரசியலுக்காக
பயன்படுத்தி வருகின்றது.</p><p>

குறுகிய மக்கள் கூட்டம் தான் அந்த நினைவேந்தலுக்குச் செல்கின்றார்கள். என்ன
நடந்தது, அவருடைய வரலாறு என்ன, எதற்காக அவர் மரணித்தார், அந்த விடயங்கள்
எதுவுமே இளைய சமூகத்தினருக்கு கடத்தப்படுவதில்லை.</p><p>திலீபன் அண்ணனுடைய வீரமரணம் என்பது ஒரு இலட்சியத்துக்காக, மக்கள் சுதந்திரமடைய
வேண்டும் என்பதற்காகவே அவருடைய வீரமரணம் இங்கே நிகழ்ந்தது.</p><p></p><h2>இராணுவத்தினர் ஆக்கிரமித்த துயிலுமில்லங்கள்&nbsp;</h2><p>அதை வைத்து இந்த கட்சிகள்
அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவர்கள் அந்த தியாகங்களை
பயன்படுத்தி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ அவருடைய வீரமரணம்
இங்கே நிகழவில்லை.
</p><p>
தயவு செய்து அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்காது,
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும் ஒன்றிணைந்து
பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என்பது
அவருடைய நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66124eb3-112b-4de2-a11d-cdc0627fb604/26-6aa7a24ddf0e4.webp' /></p><p> </p><p>அந்த நோக்கத்துக்காகவே நீங்கள் வந்து அவருடைய நினைவு நாட்களை
ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மாவீரர்களுடைய நினைவாலயங்கள், துயிலுமில்லங்களை இராணுவத்தினர் அதை கைப்பற்றி
வைத்திருக்கிறார்கள்.</p><p>சில இடங்களில் அதை இராணுவத்தினர் அதை
உடைத்திருக்கிறார்கள்.
இராணுவத்தினர் ஆக்கிரமித்த இந்த துயிலுமில்லங்களை விடுதலை செய்ய வேண்டும்,
மாவீரருடைய நினைவாலயங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லிக்
கொண்டிருக்கின்ற, நீங்களும் அதை ஆக்கிரமித்து தான் வைத்திருக்கிறீர்கள்.</p><p>
ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கொள்கையோடு இன்றைக்கு இருக்கிறீர்கள். நீங்கள்
அந்த ஒரு கொள்கைக்காக, இந்த நாட்டின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அந்த
மாவீரர்கள் அவர்களும் ஒரு கொள்கைக்காகத்தான் அங்கே வீரமரணம் அடைந்தார்கள்.
</p><p>நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கொள்கையில வைத்துக்கொண்டு ஒவ்வொரு
துயிலுமில்லங்களை உங்களுடைய உங்களுடைய நோக்கங்களுக்காக ஆக்கிரமித்து வைத்து,
அதை பிடித்து வைத்துக்கொண்டு உங்களுடைய அரசியல் வேலை செய்வது மிகவும் ஒரு
கீழ்த்தரமான வேலை.</p><p>அதனை யாரும் செய்யாதீர்கள், அதை சுதந்திரமாக
விடுங்கள். ஏனென்றால் மக்கள் அதை சிறப்பாக செய்வார்கள். அதை வழிநடத்துவதற்கும்
மாவீரர் பணிச்செயலகம் போன்ற கட்டமைப்புகள் இருக்கின்றது. அவர்கள் அதை
செய்வார்கள். </p><p>நீங்கள் அதில் வந்து உங்களுடைய அரசியலை தேவைக்காக அந்த
தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள். அது எதிர்காலத்தில் அது
உங்களுக்கு நல்லது இல்லை. ஒன்றுபட்டு செயற்படுங்கள்” என்றார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EmDN6L43zGg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T07:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11-year-old-monk-drowns-to-death-1789367681"></link>
            <id>https://ibctamil.com/article/11-year-old-monk-drowns-to-death-1789367681</id>
            <summary type="text">உடுதும்பறை, கைகாவல பகுதியில் அமைந்துள்ள ஹீன்கங்கையில் நீராடச் சென்ற 11 வயதுடைய பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடுதும்பறை, கைகாவல பகுதியில் அமைந்துள்ள ஹீன்கங்கையில் நீராடச் சென்ற 11 வயதுடைய பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

நேற்றையதினம் 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, உடுதும்பறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மினுவாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் வசித்து வந்த குறித்த பிக்கு, தானம் வழங்கும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே உடுதும்பறை பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b820c3-19ec-45a4-8c36-9cb7ebf219d5/26-6aa797c0813fc.webp' /></p><p>
</p><p>
அதன்பின்னர், ஏனைய பிக்குகளுடன் சேர்ந்து ஹீன்கங்கையில் நீராடச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உடுதும்பறை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T06:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petrol-station-owners-association-1789364889"></link>
            <id>https://ibctamil.com/article/petrol-station-owners-association-1789364889</id>
            <summary type="text">இலங்கை IOC, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக கட்டுப்படுத்தி வருவதாக எரிபொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை IOC, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக கட்டுப்படுத்தி வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இன்று (14.09.2026) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.</p><p>

குறித்த நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், அதனை சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>மேலும் அவர் குறிப்பிடுகையில் “இதன் காரணமாக தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் தாங்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாக அந்த நிறுவனங்கள் கலந்துரையாடலின்போது தெரிவித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32bbfb07-9364-45b5-b440-03ac1de9ed5c/26-6aa79687294d2.webp' /></p><p>
இந்த நட்டத்தை குறைத்துக்கொள்ளும் நோக்கில், சந்தைக்கு எரிபொருள் விநியோகிப்பதை குறித்த நிறுவனங்கள் மட்டுப்படுத்தியுள்ளது.</p><p>
இதனால் பொதுமக்கள் மாத்திரமன்றி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். </p><p>தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து நடத்திச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>
தங்களது வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதாக குறித்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் உறுதியளித்திருந்தது.
</p><p>
அத்துடன், அரசாங்கம் எரிபொருளுக்கான விலையை நிர்ணயிக்காது, போட்டித்தன்மை கொண்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
</p><p>
எனினும், அந்த நிறுவனங்கள் நாட்டில் செயல்படத் தொடங்கிய பின்னர், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் விலைக்கே எரிபொருளை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>

போட்டித்தன்மை கொண்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T06:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய வனத்தின் 2 வலயங்களுக்கு இன்று முதல் பூட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yala-national-park-s-2-blocks-temporarily-closed-1789363439"></link>
            <id>https://ibctamil.com/article/yala-national-park-s-2-blocks-temporarily-closed-1789363439</id>
            <summary type="text">யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வளாகங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக&amp;nbsp;வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வளாகங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக&nbsp;வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

அதற்கமைய இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக&nbsp;வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>எல் நினோ தாக்கம்&nbsp;</h2><p>யால தேசிய வனம், 44 பாலூட்டி இனங்கள், 215 பறவை இனங்கள், 47 ஊர்வன இனங்கள் மற்றும் 21 மீன் இனங்களின் வாழிடமாக திகழ்கிறது. </p><p>

இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள காலம் ஓகஸ்ட் முதல் மார்ச் வரை என்பதுடன், இம்முறை சுற்றுலாப் பருவத்தை எல் நினோ (El Niño) நிலைமை கடுமையாகப் பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9621a0d5-f259-40d0-b656-55331c84c4cf/26-6aa7922e5e2b8.webp' /></p><p> </p><p>

அதிக வெப்பமான வானிலை காரணமாக யால தேசிய வனத்தின் பல நீர்நிலைகள் வற்றிப் போயுள்ளதுடன், இதனால் பூங்காவில் வாழும் விலங்குகளுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. </p><p>

மேலும், அதிக வறட்சியான வானிலை காரணமாக மரங்கள், செடிகொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து போயுள்ளதால், யால பூங்காவின் விலங்குகள் உணவுப் பற்றாக்குறைக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுதல்&nbsp;</h2><p>இந்தநிலையில், நிலவும் சூழ்நிலையினால் விலங்குகளின் தாகத்தைத் தணிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

அதன்படி, மாணிக்க கங்கையின் 4 இடங்களில் சூரிய மின்தகடு மோட்டார்களைப் பயன்படுத்தி பெறப்படும் நீரை, நிலத்தடி குழாய்கள் மூலம் பூங்காவில் உள்ள குளங்களுக்கு திறந்துவிட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51db0a4-b9ee-4c4c-8186-1e4fc63895c5/26-6aa7922d63cbd.webp' /></p><p> 

இது தவிர, தினமும் சுமார் 2 இலட்சம் லீற்றர் நீர் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பூங்காவின் செயற்கை மற்றும் இயற்கை குளங்களை நிரப்பும் பணியையும் வனஜீவராசிகள் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

எனவே, நிலவும் வறட்சியான வானிலையால் உணவையும் நீரையும் தேடிச் செல்லும்போது விலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, ஒரு மாத காலத்திற்கு யால தேசிய வனத்தின் வலயம் 01 மற்றும் 02 ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T06:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-thanks-to-who-supported-slpp-public-rally-1789364416"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-thanks-to-who-supported-slpp-public-rally-1789364416</id>
            <summary type="text">எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது தனது உறுதியான நம்பிக்கை என்று&amp;nbsp;முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது தனது உறுதியான நம்பிக்கை என்று&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் அநுராதபுரத்தில் சனிக்கிழமை (12) நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு, ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி&nbsp; நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் குறித்த பதிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்திலிருந்து, நமது தாய்நாட்டின் சுயமரியாதைக்கான மக்கள் போராட்டத்தை நாங்கள் தொடங்கினோம். எங்களுக்குப் பெரும் பலமாகத் திகழ்ந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p></p><h2>அபிவிருத்தியடைந்த தேசத்தை உருவாக்குதல்&nbsp;</h2><p>படையெடுப்புகள், எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற அநுராதபுர இராச்சியத்தின் கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a917d35-e3f7-43c8-8880-d2455e10a55e/26-6aa78e6bf0db1.webp' /></p><p>
</p><p>
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தான் பிறந்த மண்ணின் மீது அன்பும் 'நமது நாடு' என்ற உணர்வும் இருக்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.
</p><p>
இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும் தாய்நாட்டைப் பாதுகாத்துக் கட்டியெழுப்பினோம், நாட்டின் கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்து, மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய அபிவிருத்தியடைந்த தேசத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம்.</p><p></p><h2>நன்றி தெரிவிப்பு</h2><p>கடந்த காலத்தைப் போலவே, நமது கலாச்சாரம், அடையாளம் மற்றும் பூர்வீக மரபுகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஒரு வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/810091ec-1342-4f36-b53c-0854cce5d78e/26-6aa78e6cb4a3b.webp' /></p><p>இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தனது நீண்டகால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர் மற்றும் எப்போதும் பலமாக இருக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T06:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று 21 மாவட்டங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lightning-warning-for-21-districts-today-1789362576"></link>
            <id>https://ibctamil.com/article/lightning-warning-for-21-districts-today-1789362576</id>
            <summary type="text">பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p>
இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு காலை 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மின்னல் தாக்கத்துக்கான அதிக அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை</h2><p>
</p><p>
குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26681352-ca0b-4f48-9e78-56402d240884/26-6aa785360787f.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/121000-people-to-be-recruited-into-govt-service-1789359064"></link>
            <id>https://ibctamil.com/article/121000-people-to-be-recruited-into-govt-service-1789359064</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நொச்சியாகமவில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்காக அரசாங்கத்தால் அதிக முதலீடுகளைச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.</p><p></p><h2>வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்</h2><p>இதேவேளை நேற்று (13) கஹட்டகஸ்திகிலியவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கபிதிகொல்லேவ நீர் விநியோகத் திட்டம் மற்றும் 47 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24b5497f-d4f2-4e9d-bca3-7a9b4cc56d58/26-6aa77e8b1cca1.webp' /></p><p>மனித - யானை மோதல் விவகாரத்தைக் கையாளுவதற்காக 3,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 5,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.</p><p>மேலும், சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 5,000 பணியாளர்கள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைக்கப்படவுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/80HHQh4X3Uw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugandan-national-arrested-with-cocaine-1789360351"></link>
            <id>https://ibctamil.com/article/ugandan-national-arrested-with-cocaine-1789360351</id>
            <summary type="text">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைதாகியுள்ளார்.&nbsp;</p><p>

கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>போதைப்பொருள் உருண்டைகள்</h2><p> </p><p>

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13.09.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa6561b-584f-41d2-b476-298a3b8172c6/26-6aa77c6800086.webp' /></p><p> </p><p>

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.</p><p> 

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>

விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T04:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vat-imposed-on-school-books-will-be-removed-anura-1789356711"></link>
            <id>https://ibctamil.com/article/vat-imposed-on-school-books-will-be-removed-anura-1789356711</id>
            <summary type="text">இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நொச்சியாகம பகுதியில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.</p><p></p><h2>வரவு - செலவுத் திட்டம்</h2><p> </p><p>பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை. பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d90915f-47ee-4c28-a4df-aba5f6baf26e/26-6aa76e275cb22.webp' /></p><p>இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.</p><p>பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EmDN6L43zGg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T03:52:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781</id>
            <summary type="text">அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் நேற்று (13.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>உயிரிழந்த நபர் கஹட்டகஸ்திகிலிய, பேத்கேவ பகுதியில் வசித்து வந்த 41 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ஒரவர் பலி&nbsp;</h2><p>
</p><p>மேலும் விசாரணைகளில் தெரியவந்தது உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c40470e-47c6-4f49-9d0a-5fd70bf39cf7/26-6aa76eeab4900.webp' /></p><p>மின்னல் தாக்குதலில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p> பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789355305"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789355305</id>
            <summary type="text">இலங்கையின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> 

அத்துடன் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f4cd3ca-29a5-45a4-9449-98c316ed4381/26-6aa768839a280.webp' /></p><p>

அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:21:09+00:00</updated>
        </entry>
    </feed>
