<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T01:27:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313"></link>
            <id>https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் முன் கார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த பாடசாலையின் முன் கார் ஒன்று தீப்பற்றிய சம்பவத்திற்கும் அங்கிருந்த எட்டு வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டு இது குறித்துக் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த சிறுவன் தான் காரைத் தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பிரபல பாடசாலை&nbsp;</h2><p>கடந்த ஜூலை மூன்றாம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b693c6-ffbf-4c76-87b7-9fda9e63b909/26-6a582bf37f612.webp' /></p><p>

இந்தச் சம்பவத்திற்கு அங்கு நின்ற எட்டு வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்துக் குருணாகல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் எட்டு வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்தக் காரின் அருகே நடந்து சென்றதும் காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e6abbd-403a-48c6-8574-c52305f62fd4/26-6a5826fd8ceea.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:34:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/underworld-leader-kempa-and-two-others-arrested-1784161343"></link>
            <id>https://ibctamil.com/article/underworld-leader-kempa-and-two-others-arrested-1784161343</id>
            <summary type="text">திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான கெம்பா உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான கெம்பா உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசேட காவல்துறை அதிரடிப்படையினர் இந்தக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள்&nbsp;</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம் (14.07.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f84b39c-ed16-404c-9c4b-6b6c66a40246/26-6a582441ed512.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது, முக்கிய சந்தேகநபரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும், இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 8 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத செயல்கள்</h2><p>கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd231bf-a215-4909-956c-4ed04ee5ea40/26-6a5824414796e.webp' /></p><p>

அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்திப் பணம் பறித்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சொத்து வரி விதிப்பு...! இறுதி முடிவை நோக்கி நகரும் அரசாங்கம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034"></link>
            <id>https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034</id>
            <summary type="text">நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்த வரியை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தபோதிலும், கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது ஒத்திவைத்து வந்தது.</p><p>
</p><p></p><h2>நாணய நிதியம்</h2><p>எவ்வாறாயினும், இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் அடுத்த கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னர் அரசாங்க வருமானத்தை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் தற்போது வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6616cf11-ae80-431a-a958-6d4469cda38e/26-6a581f24994dc.webp' /></p><p>இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்காதபோதிலும், தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் இது குறித்து எதிர்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692"></link>
            <id>https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.

தன்னம்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.</p><p>இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.
</p><p>
தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியான சூரியன், உணர்வுகளின் ராசியான கடகத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. </p><p>இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. அவர்கள் யார் என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும்.</li><li> வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.</li><li> மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.</li><li> அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.
</li><li>
சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். </li><li>அவர்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் சூழல் மாறும்.</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.</li><li> சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</li><li>பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு அல்லது லாபகரமான வணிக ஒப்பந்தம் என எதுவாக இருந்தாலும் இந்த போக்குவரத்து மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை உறுதியளிக்கிறது. </li><li>நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். </li><li>இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். </li><li>உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</li><li>உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.</li><li>இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும் மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும் இதனால் வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில், ஆரம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்தநிலையில், ஆரம்பத்தில் அதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் குரல் எழுப்பிய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மௌனமாகியுள்ளனர். </p><p>

இந்தத் திடீர் அமைதியானது, வழக்கின் போக்கை பாதிக்காமல் இருப்பதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட தற்காப்பு தந்திரோபாய நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>

மறுபுறம், விசாரணைகளின் தீவிரத்தைக் குறைக்க அதிகார மட்டங்களுடன் எட்டப்பட்ட மறைமுக உடன்பாடுகளின் விளைவா அல்லது அவர்களின் குரலை ஒடுக்க விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களா என்ற பலத்த சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8?start=99" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளுநர்களின் பதவி விலகல் - பிரதமரும் விலகுவாரா...! சீலரத்ன தேரர் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seelaratna-thero-slams-govt-over-resignations-1784157189"></link>
            <id>https://ibctamil.com/article/seelaratna-thero-slams-govt-over-resignations-1784157189</id>
            <summary type="text">மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், தற்போதைய பிரதமரும் பதவி விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், தற்போதைய பிரதமரும் பதவி விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் தனது பதவி விலகியமைக்குச் சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்திப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>நகர அபிவிருத்தி</h2><p>மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b163c63-2764-40ac-a8e1-60f18dcb8b30/26-6a581406d345b.webp' /></p><p>

அத்தோடு, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்துள்ளார்.</p><p>மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது.</p><p>
</p><p></p><h2>போதைப்பொருள்கள்</h2><p>அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும்.
</p><p>
இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0c84e1-b3b9-4791-a799-f043cf6ecf01/26-6a5814078351f.webp' /></p><p>போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது.</p><p>

இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அரச தரப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-support-missing-persons-probes-minister-1784154383"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-support-missing-persons-probes-minister-1784154383</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கு அரச தரப்பிலிருந்து முழுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கு அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p>வரலாற்றில் முதன்முறையாக இந்த அரசுக்கு வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு கிடைத்துள்ளது எனவும், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/743126d1-8391-486d-b3cb-2d4dd1072e8c/26-6a580cc67378e.webp' /></p><p>வடக்கு மற்றும் தெற்கு என இரு தரப்பிலும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது பெற்றோர் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலை நீடிக்கின்றது என்று குறிப்பிட்ட நீதி அமைச்சர், அந்த வேதனையைத் தீர்க்க அரசு முன்னுரிமை அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் போதிய ஆளணி வளம் இருக்கவில்லை.

நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து 60 பேரை அதில் இணைத்துள்ளோம்.</p><p>
</p><p></p><h2>ஆயிரம் முறைப்பாடுகள் </h2><p>இதற்கென வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>

தற்போது தலா மூன்று பேர் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eb0e41a-6056-4a32-a2b4-c76e11b3763d/26-6a580cc776444.webp' /></p><p>

இதன் மூலம் நிலுவையிலுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.</p><p>

உண்மையை வெளிக்கொணரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது, அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்திற்குள் பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்: 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuwait-intercepts-21-iranian-drones-missiles-1784147363"></link>
            <id>https://ibctamil.com/article/kuwait-intercepts-21-iranian-drones-missiles-1784147363</id>
            <summary type="text">குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து 21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. 

நான்கு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து 21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. </p><p>

நான்கு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வான்வழித் தாக்குதல்கள்</h2><p>இத்தாக்குதல்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர் "ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ed1a5a-d85b-4857-88e0-30db23febf7e/26-6a57f0a2eee60.webp' /></p><p>

இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779</id>
            <summary type="text">அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டின் பாதுகாப்பு</h2><p>சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போது எங்களிடம் பேச்சுவார்த்தைக்கான எந்த திட்டமும் இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d278991e-ee41-4e8c-9f7b-c7fa8b83bb3b/26-6a57ce9b0b501.webp' /></p><p>நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
</p><p>
அமெரிக்கா தனது கடமைகளை மீறினால் ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாது.
</p><p>
இது ஒரு கொள்கை, இதனை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்தத்தை அமெரிக்கா உதாசீனப்படுத்தி வருவதாக ஈரான் நம்புகின்றது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை: அதிகரித்த மரணதண்டனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-increases-executions-of-political-prisoners-1784140000"></link>
            <id>https://ibctamil.com/article/iran-increases-executions-of-political-prisoners-1784140000</id>
            <summary type="text">
ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் என்ற தன்னார்வ அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>போராட்டக்காரர்கள்&nbsp;</h2><p>ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0e4e52-b087-46e3-8538-58141f7a7ae7/26-6a57d9817d763.webp' /></p><p>

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில் தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
</p><p></p><h2>அரசியல் மாற்றங்கள்</h2><p>அத்துடன் போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.&nbsp; &nbsp;</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும் அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf1bd4d-c9ff-4f9a-9566-00f3b91d201d/26-6a57d98280fa6.webp' /></p><p>இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. </p><p>

இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:19:27+00:00</updated>
        </entry>
    </feed>
