<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T08:09:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சனையால் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/light-usage-in-jaffna-is-causing-eye-problems-1787298097"></link>
            <id>https://ibctamil.com/article/light-usage-in-jaffna-is-causing-eye-problems-1787298097</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை
நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் லைட்கள் பயன்படுத்தப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக்
குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p> </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e303f7a-565b-424a-8159-e175ff020aeb/26-6a8804eae47af.webp' /></p><p>

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் . சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b>செய்தி - தீபன்</b></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் அதிகளவான ஒளி பயன்படுத்தப்பட்டதால் பலரது கண்கள்
பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில், ''பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது.
</p><p>அந்தவகையில் ஆலயத்தின் வளாகமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.</p><p></p><h2>35 பேருக்கு கண் பார்வை பிரச்சினை</h2><p>
</p><p>
இதில் அலங்கரிக்கப்பட்ட பார்வைக்கு ஆரோக்கியமற்ற மின் விளக்குகளால் இதுவரை
ஏறக்குறைய 35 பேருக்கு கண் பார்வை பிரச்சினை இன்று காலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfba5cd-efbd-4319-8e0b-1ea4fefd1e9b/26-6a880133923e0.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.</p><p>

மேலும், குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்றவர்களை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு சென்று கண் பரிசோதனை செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க
அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.</p><p>செய்தி - கஜி</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T07:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் யானை தந்தத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-elephant-tusk-in-mannar-1787297455"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-elephant-tusk-in-mannar-1787297455</id>
            <summary type="text">மன்னார் காவல் பிரிவின் சாவற்கட்டு பகுதியில் யானை தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(20) மன்னார் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் காவல் பிரிவின் சாவற்கட்டு பகுதியில் யானை தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(20) மன்னார் காவல் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7b16767-0ee7-4179-be05-3d7530a11219/26-6a88027b3a815.webp' /></p><p>

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மன்னார் காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T07:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதத்தை மறக்காதிருக்க வேண்டும் என வலியுறுத்தும் உலக மனிதநேய நாளில் ஈழத்தின் நினைவுகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-humanitarian-day-memories-of-eelam-1787296472"></link>
            <id>https://ibctamil.com/article/world-humanitarian-day-memories-of-eelam-1787296472</id>
            <summary type="text">போர், பேரழிவு, வறுமை, இடப்பெயர்வு, பசி, நோய் என மனித வாழ்வை அச்சுறுத்தும் சூழல்களில், மனிதர்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக தங்களை அர்ப்பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர், பேரழிவு, வறுமை, இடப்பெயர்வு, பசி, நோய் என மனித வாழ்வை அச்சுறுத்தும் சூழல்களில், மனிதர்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக தங்களை அர்ப்பணிக்கும் மனிதநேயப் பணியாளர்களையும், மனிதநேயத்தின் அடிப்படை விழுமியங்களையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனிதநேய நாள் அனுசரிக்கப்படுகிறது. &nbsp;</p><p>மனித உயிர் எந்த அரசியல் எல்லைகளையும், இன வேறுபாடுகளையும், மத அடையாளங்களையும் விட மேலானது என்பதை உலகிற்கு வலியுறுத்துகிற நாளிது.</p><p></p><h2>மனித நேய நாளின் வரலாறு</h2><p>2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐ.நா. மனிதநேயப் பணியாளர் செர்ஜியோ வியேரா டி மெல்லோ உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். </p><p>உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதநேயப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த அந்தச் சம்பவத்தின் நினைவாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாளை உலக மனிதநேய நாளாக அறிவித்தது.
</p><p>
மனிதநேயம் என்பது பேரிடர் நேரத்தில் உணவு வழங்கிற செயல் மாத்திரமல்ல. </p><p>காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பது, அகதிக்கு பாதுகாப்பளிப்பது, பசியால் தவிக்கும் ஒருவருக்கு உணவு வழங்குவது, வீடிழந்தவருக்கு தங்குமிடம் ஏற்படுத்துவது, போரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைப்பது, குழந்தைகளின் கல்வியை பாதுகாப்பது என மனித உயிரின் கண்ணியத்தை காப்பதற்கான ஒவ்வொரு செயலுமே மனிதநேயத்தின் வெளிப்பாடுதான்.</p><p></p><h2>ஈழத்தில் மனிதநேயப் பணி
</h2><p>இந்த நாளை ஈழத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது. பல தசாப்தங்களாகப் போரும் இன வன்முறையும் இடப்பெயர்வும் காணாமல் போதலும் வறுமையும் துயரமும் அனுபவித்த மக்களின் மண்ணாக ஈழம் இருக்கிறது. </p><p>குறிப்பாக வடக்கு, கிழக்கில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்து போர் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்தன.</p><p> முகாம்களில் வாழ்ந்த காலங்களும், பதுங்குகுழிகளில் கழித்த இரவுகளும், குண்டுவீச்சுகளின் நடுவே உயிரைக் காத்த நாட்களும் ஈழத் தமிழர்களின் கூட்டு நினைவிலிருந்து இன்னும் அழியவில்லை.</p><p>

அந்தக் காலங்களில் மனிதநேயப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், மத அமைப்புகள், உள்ளூர் தன்னார்வலர்கள் என பலர் மக்களின் உயிரைக் காப்பதற்காக ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றினர். </p><p>தங்களுடைய பாதுகாப்பை விட மக்களின் உயிரை முன்னிலைப்படுத்திய அவர்கள், ஈழப் போரின் இருண்ட காலங்களில் மனிதநேயத்தின் விளக்குகளாக ஒளிர்ந்தனர்.</p><p></p><h2>மனிதநேயப் பணியாளர்களே படுகொலை
</h2><p>ஈழத்தின் மனிதநேய வரலாற்றில், மனிதநேயப் பணியாளர்களின் தியாகமும் குருதியால் எழுதப்பட்டுள்ளது. 2006 ஆகஸ்ட் 4ஆம் நாள், கிழக்கு மாகாணம், திருகோணமலை மூதூர் பகுதியில், Action Contre la Faim (ACF) எனப்படும் பிரெஞ்சு மனிதநேய அமைப்பில் பணியாற்றிய 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஈழத்தில் மனிதநேயப் பணியாளர்கள் எதிர்கொண்ட பேராபத்தின் கொடூரமான அடையாளமாகும்.</p><p> தண்ணீர், உணவு, வாழ்வாதார உதவி போன்ற அத்தியாவசிய மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவர்கள், தங்களது கடமையைச் செய்து கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர்.
</p><p>
1987 அக்டோபர் 21–22ஆம் நாட்களில் இடம்பெற்ற யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை, ஈழத்தின் மனிதநேய வரலாற்றில் அழிக்க முடியாத குருதிக் கறையாகும். யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர். </p><p>போரில் ஈடுபடாத நோயாளிகளும், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் பணியாற்றியவர்களும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றப்பட்ட அந்தச் சம்பவம், மருத்துவமனை போன்ற மனிதநேயப் பாதுகாப்பிடங்களின் புனிதத்தன்மை எவ்வாறு போரின் வன்முறையால் சிதைக்கப்பட்டது என்பதற்கு கொடூரமான சாட்சியாக நிற்கிறது.</p><p>

மருத்துவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கவில்லை. தாதியர்களின் கைகளில் இருந்தது காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் மருத்துவக் கருவிகளே. ஆனாலும் அவர்கள் போரின் இலக்குகளாகினர். </p><p>மனிதநேய நாளில் யாழ்ப்பாண மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது, போரில் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படை மனிதநேயக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதாகும்.</p><p></p><h2>போருக்குப் பிறகான மனிதநேயப் பணி
</h2><p>ஈழத்தில் போருக்குப் பின்னரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில் வாழ்ந்தன. </p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கின்றன; மாற்றுத்திறனாளிகளாகிய போரால் பாதிக்கப்பட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வறுமையில் சிக்கிய குடும்பங்கள் என போரின் காயங்களைத் தாங்கிக்கொண்டு வாழும் மக்கள் ஏராளம். </p><p>நிலமீட்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதார மீட்பு, மனநல மற்றும் சமூக ஆதரவு, கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற துறைகளில் மனிதநேயப் பணிகள் தொடர வேண்டிய அவசியம் உள்ளது.</p><p>

குறிப்பாக வடக்கு–கிழக்கில் போர் விட்டுச் சென்ற காயங்களை வெறும் பொருளாதார உதவிகளால் மட்டும் ஆற்றிவிட முடியாது; மக்களின் கண்ணியம், உரிமை, நீதி, உண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும். </p><p>போரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்குவது முக்கிய பணியானது. </p><p>ஆகவே, ஈழத்தில் மனிதநேயப் பணி என்பது கடந்த காலப் போரின் காயங்களுக்கு மருந்திடும் பணியாக மட்டுமல்லாமல், அநீதியும் அச்சமும் இல்லாத கண்ணியமான எதிர்காலத்தை மக்களுக்காக உருவாக்கும் தொடர்ச்சியான பொறுப்பாகவும் இருப்பதுதான் அவசியமானது. &nbsp;
</p><p>
சக மனிதர்களின் துயரத்தை – வாழ்வை நாம் எவ்வளவு தொலைவில் இருந்து பார்க்கிறோம்? மற்றொருவரின் கண்ணீரை வெறும் செய்தியாகப் பார்க்கிறோமா? அல்லது அது நம்முடைய மனிதப் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று உணர்கிறோமா? இந்தக் கேள்விதான் இந் நாளின் சாரம். </p><p>ஈழம் மாதிரியான நிலத்தில் எந்தப் பணியிலிருந்தாலும் மனிதநேயத்துடன் செயலாற்ற வேண்டும். போரால் அழிவடைந்த ஒரு தேசத்தின் மீள் கட்டுமானத்திற்கும் எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் அத்தகைய ஒரு பணியே அவசியமானது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T07:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787294811"></link>
            <id>https://ibctamil.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787294811</id>
            <summary type="text">சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர்&amp;nbsp; நீதிமன்றில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர்&nbsp; நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21.08.2026) அவர் முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதன்போது, பல்லேகம ஹேமரதன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, நீதிமன்ற பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><h2>வெளிநாட்டு பயணத்தடை</h2><p>எனினும் இது குறித்து வெளியாகிய தகவலில் பல்லேகம ஹேமரதன தேரர் சட்டத்தரணியின் காரில் ஏறி நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e957bf38-92cb-444e-a2a1-79fdc5c3728c/26-6a87f6a238abe.webp' /></p><p>சிறுமியொருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில்&nbsp;முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு அமைய மே மாதம் 08 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>மேலும் சந்தேகநபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்து அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன அப்போது உத்தரவிட்டார்.
</p><p>
இதேவேளை, சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சிறுமியின் தாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஸின் புதிய ஜனாதிபதியானார் ஆலம்கீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alamgir-becomes-new-president-of-bangladesh-1787293309"></link>
            <id>https://ibctamil.com/article/alamgir-becomes-new-president-of-bangladesh-1787293309</id>
            <summary type="text">பங்களாதேஸின் புதிய&amp;nbsp;ஜனாதிபதியாக&amp;nbsp;மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஸின் புதிய&nbsp;ஜனாதிபதியாக&nbsp;மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 23ஆவது ஜனாதிபதியாக தெரிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உடல்நலக் காரணங்களால் 76 வயதான தற்போதைய ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலகியதை தொடர்ந்து பங்களாதேஸின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது.</p><p></p><h2>பெரும்பான்மை வாக்குகள்</h2><p> </p><p>இதற்கமைய புதிய ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216a3b9a-20a7-4e34-8dce-06c30eed20f4/26-6a87f01061571.webp' /></p><p>2024-ல் இளைஞர்களின் போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பெப்ரவரி 12 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 பாடசாலை தவணைகள்! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2027-school-term-timetable-circular-1787291197"></link>
            <id>https://ibctamil.com/article/2027-school-term-timetable-circular-1787291197</id>
            <summary type="text">கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைக் கால அட்டவணை, பொது விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பரீட்சை திகதிகள் அடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைக் கால அட்டவணை, பொது விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பரீட்சை திகதிகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு, 2027ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கு மொத்தம் 197 பாடசாலை நாட்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><h3>
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை</h3><ul><li><b>
முதல் தவணை</b>: 2027 ஜனவரி 04 (திங்கள்) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளி) வரை நடைபெறும்.
</li><li><b>இரண்டாம் தவணை</b>: 2027 ஏப்ரல் 26 (திங்கள்) முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறும்.
</li><li><b>மூன்றாம் தவணை</b>: 2027 ஓகஸ்ட் 30 (திங்கள்) முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளி) வரை நடைபெறும்.</li></ul><p></p><h2>பரீட்சைகள்</h2><p>அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி ஆண்டு இரண்டு தவணைகளாகப் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e39b113-a6c8-456a-8e47-902a9c5bf748/26-6a87ecbb14c2e.webp' /></p><p>மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2027 டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பாடசாலை நாட்கள் ரத்து செய்யப்பட்டால், அதற்குப் பதிலாக ஈடுசெய்ய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-in-peru-1787289886"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-in-peru-1787289886</id>
            <summary type="text">பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இது கடுமையான அதிர்வாக உணரப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கொராகோராவுக்கு வடக்கே 35 கிலோமீற்றர் தொலைவில், பூமிக்கு அடியில் 108 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்</h2><p>

பூமியின் மிக ஆழமான பகுதியில் இது உருவானதால், தலைநகர் லிமா உட்பட அந்நாட்டின் பல பிராந்தியங்களில் இந்த அதிர்வு உணரப்பட்ட போதிலும், எவ்வித கடுமையான பாதிப்புகளையும் இது ஏற்படுத்தவில்லை என பெருவின் புவிப்பௌதிக நிறுவனத்தின் (IGP) தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9b1acd-ae89-490e-a01c-460d8e44be88/26-6a87e2aca9d2d.webp' /></p><p>

எவ்வாறாயினும், துரிதப் மீட்புக் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுவரை சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரியவருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T05:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335</id>
            <summary type="text">காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.</p><p>நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b16b93-34fa-4e71-a4db-fbc3e65e535e/26-6a87d890e8fa6.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பேருந்து மோதியதில் பலியான வெளிநாட்டுப் பயணி! சாரதி அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-national-died-after-being-hit-by-a-bus-1787286444"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-national-died-after-being-hit-by-a-bus-1787286444</id>
            <summary type="text">கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்று(20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><p>

புறக்கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற அந்த நபர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>பேருந்தின் சாரதி கைது</h2><p> </p><p>

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe58d63c-421f-463f-ae34-a56cd0e8c945/26-6a87d597873bd.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த்தில் குதிக்கும் பொது சுகாதார ஆய்வாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/phi-officers-islandwide-strike-1787285531"></link>
            <id>https://ibctamil.com/article/phi-officers-islandwide-strike-1787285531</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டுநாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் மூத்த சுகாதார மருத்துவ அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 19ஆம் திகதி இரவு கூடிய இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுடா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சுகாதார அமைச்சுக்கு கடிதம்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக, நேற்று (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் பொது சுகாதார ஆய்வாளர்கள் விலகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0bb1562-63c7-416c-8775-b8c934203845/26-6a87d1ff85bb0.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3000-year-old-pottery-shards-discovered-1787277127"></link>
            <id>https://ibctamil.com/article/3000-year-old-pottery-shards-discovered-1787277127</id>
            <summary type="text">நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று (20) மேற்கொண்ட ஆய்வில் இந்த பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.</p><p>மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p></p><h2>பானைமூடியின் உடைந்த துண்டு</h2><p> </p><p>அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3801167-1769-4b5e-b4bb-d49b887e3699/26-6a87c760a8e6c.webp' /></p><p>

வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். </p><p>ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. 

மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை.</p><p> அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும். 

அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். </p><p>

இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T03:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் பாடகி நந்தா மாலனி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-day-national-mourning-declared-for-nanda-malani-1787279392"></link>
            <id>https://ibctamil.com/article/3-day-national-mourning-declared-for-nanda-malani-1787279392</id>
            <summary type="text">இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.</p><p>பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலனியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><h2>இறுதிச் சடங்குகள்&nbsp;</h2><p>இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f521c910-c7a1-4fe7-aea2-ebaf8c29a12c/26-6a87b9bae13e6.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் நந்தா மாலனியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) இடம்பெறவிருக்கின்றதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>தனது கலைப் பயணத்தில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான பாடகிக்கான 12 சரசவிய விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் வென்றுள்ள இவர், புதிய படைப்புகளை ஒலிநாடாக்கள் (Cassettes) மற்றும் குறுந்தகடுகள் (CDs) மூலம் ரசிகர்களுக்கு வழங்கி இசைத்துறையில் பல புதிய பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:37:29+00:00</updated>
        </entry>
    </feed>
