<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-04T02:18:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437</id>
            <summary type="text">கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 அந்தவகையில் இன்று (04.08...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 </p><p>அந்தவகையில் இன்று (04.08.2026) காலை&nbsp; 6.00 மணிக்கு வீதி திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டது.</p><h2>சீரற்ற வானிலை</h2><p>இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட காவல்துறையினர்&nbsp; நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p> 

அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இன்று காலை 6.00 மணி முதல் அந்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. </p><p>

அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T02:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணிநேரத்தில் புரட்டிப் போட்ட சீரற்ற காலநிலை - 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749"></link>
            <id>https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749</id>
            <summary type="text">சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற<a href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120" target="_blank"> காலநிலை</a> காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மோசமான வானிலை</h2><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c857b673-1eb1-4a85-9469-499b919b3af2/26-6a71473357225.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பாடசாலை&nbsp;விடுமுறை </h2><p>


அத்துடன் நேற்று மாலை வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மகாவலி கங்கையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe18cb40-c9cc-45ba-895a-d502a5231b7e/26-6a71473261ae1.webp' /></p><p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. </p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று
மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T01:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-are-possible-1785803120</id>
            <summary type="text">


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இப் பிராந்தியங்களில் வானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இப் பிராந்தியங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82505724-6a13-4f11-878b-4ff1beee352e/26-6a71328f56e73.webp' /></p><p>

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T00:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவு செயலாளர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-foreign-secretary-to-visit-this-week-1785800329"></link>
            <id>https://ibctamil.com/article/indian-foreign-secretary-to-visit-this-week-1785800329</id>
            <summary type="text">
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விஜயத்தின் போது அவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>தமிழ்பேசும் மக்களின் நலன்</h2><p>

இதேவேளை, தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டாக விக்ரம் மிஸ்ரியை சந்திப்பர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6749ed87-3de4-45e1-966f-b2d86a834444/26-6a7129032ad5d.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, எதிர்வரும் செவ்வாயன்று மேற்படி 6 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின்போது இதுபற்றியும் கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T23:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் பதவி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskiy-dismissed-ukraine-s-ambassador-to-us-1785794355"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskiy-dismissed-ukraine-s-ambassador-to-us-1785794355</id>
            <summary type="text">

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் ஓல்கா ஸ்டெஃபனிஷினாவை அப்பதவியில் இருந்து நீக்கி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அரசாணை வெளியிட்டுள்ளார்.
</p><p>
உக்ரைனில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்பட்டது உட்பட உயர் அதிகாரிகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது குறித்து பதிவொன்றை ஸ்டெஃபனிஷினா, இது தனிப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்பட்ட தனது சொந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சொத்து அறிக்கையில் முறைகேடுகள் </h2><p> </p><p>

அமெரிக்காவின் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இல்லாத தருணத்திலும் அமெரிக்க ஆயுதங்களின் விநியோகத்தை அதிகரித்து ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டது வரை, தனது பதவிக் காலத்தில் பல சாதனைகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3500d08-0725-454b-88ab-4b15942a9e07/26-6a7114ab09bd0.webp' /></p><p>
முன்னதாக, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதவி விலகலை கோரவில்லை என்று ஸ்டெஃபனிஷினா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். </p><p>

இருப்பினும், அவரது சொத்து விவர அறிவிப்பில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கடந்த மாதமே பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை அவர் தெரிவித்திருந்ததாக உக்ரைனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T23:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை சிதைக்க பென்டகன் சமர்ப்பித்த திட்டம்! உறுதிப்படுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pentagon-presented-plan-to-trump-escalate-war-iran-1785790198"></link>
            <id>https://ibctamil.com/article/pentagon-presented-plan-to-trump-escalate-war-iran-1785790198</id>
            <summary type="text">

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பென்டகன் தன்னிடம் சமர்ப்பித்திருந்ததாக வெளியாகியிருந்த செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை விட இது மிகவும் பெரிய அளவிலான தாக்குதலாக இருந்திருக்கும் என்றும், இதனால் மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகே, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய இந்தத் தீவிரத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுக்கான நிபந்தனைகள்</h2><p>
</p><p>
இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac88e6c4-7cce-4a28-bb86-5f3beea48981/26-6a71022a4b07a.webp' /></p><p><i>Image Credit: PRIO</i></p><p> </p><p>

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதும், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை நிறுத்துவதுமே ஈரான் செய்ய வேண்டிய சரியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T23:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு! ட்ரம்பின் புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-declared-that-this-is-iran-s-last-chance-1785784149"></link>
            <id>https://ibctamil.com/article/trump-declared-that-this-is-iran-s-last-chance-1785784149</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
வளைகுடா நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலும் ஒரு வாய்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல நாடுகள் தன்னிடம் தொடர்பு கொண்டு ஈரானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டதுடன், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a892580c-4f7f-40f3-9f47-174416f8c39d/26-6a70e9dfcaf85.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
Al Jazeera</i></p><p>

ஏற்கனவே பலமுறை தாக்குதல்களைத் தள்ளிவைத்த நிலையில் இந்த முறை என்ன வித்தியாசம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இறுதி நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிவிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை திறப்பு</h2><p>

இதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகச் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764d9ed6-b84e-4918-bb59-cd02a1c3f22b/26-6a70e9df1a2ef.webp' /></p><p>

அத்தோடு, பல மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவரது நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், இந்த விவகாரம் அவ்வளவு சிக்கலானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T20:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவுக்கு பேரிடி! உக்ரைனுக்கான ஆதரவை சீரமைக்க தொடங்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/useucom-to-reorganize-security-assistance-ukraine-1785787295"></link>
            <id>https://ibctamil.com/article/useucom-to-reorganize-security-assistance-ukraine-1785787295</id>
            <summary type="text">உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிக் குழுவை (SAG-U) மறுசீரமைத்து, அதன் பொறுப்புகளை நேட்டோவின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் பயிற்சி அமைப்புடன் (NSATU...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிக் குழுவை (SAG-U) மறுசீரமைத்து, அதன் பொறுப்புகளை நேட்டோவின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் பயிற்சி அமைப்புடன் (NSATU) இணைக்கப்போவதாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளைப் பிரிவு (USEUCOM) அறிவித்துள்ளது.</p><p>
இந்த மறுசீரமைப்பு உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பாதுகாப்பு உதவியின் செயல்திறனை அதிகரிப்பது, முக்கியப் பணிகளின் தலைமைப் பொறுப்பை நட்பு நாடுகளிடம் ஒப்படைப்பது மற்றும் பிற உலகளாவிய முன்னுரிமைகளுக்காக அமெரிக்க வளங்களை விடுவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p></p><h2>உக்ரைனில் நீடித்த அமைதி</h2><p>
</p><p>
உக்ரைனின் பாதுகாப்பில் நட்பு நாடுகள் தலைமைத் தாங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த USEUCOM தளபதி ஜெனரல் அலெக்சஸ் ஜி. கிரின்கேவிச், SAG-U எப்போதுமே ஒரு தற்காலிக அமைப்பாகவே திட்டமிடப்பட்டது என்றும், இந்த மாற்றம் உக்ரைனில் நீடித்த அமைதியை ஏற்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce978fa-9df6-4041-a2e9-39770b77976c/26-6a70f8ac7a7d6.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Vox</i></p><p>
</p><p>
ரஷ்யாவின் போருக்கு எதிர்ப்ப தெரிவித்து வரும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் கடந்த ஆண்டில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு கணிசமாக விரிவடைந்துள்ளது. </p><p>

2022 நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்ட SAG-U அமைப்பு, இதுவரை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கி, பயிற்சி மற்றும் இராணுவ உபகரணங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T20:30:35+00:00</updated>
        </entry>
    </feed>
