<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T11:48:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761"></link>
            <id>https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்
</p><p>
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளை கொக்குளாய் காவல்துறையின் சோதனை
நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5
பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><h2>கொக்குளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு</h2><p>குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களுடன் கொக்குளாய் காவல்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37430b80-5e69-497a-9f92-a1ce62e33964/26-6a81875d50e49.webp' /></p><p>
</p><p>
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் காவல்துறையினர்
ஈடுபட்டுள்ளார்கள்.
</p><p>
குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக
தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607"></link>
            <id>https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட
பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.</p><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை
உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை
மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி
கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு
மூவரும் சேர்ந்து கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தினர் </p><h2>&nbsp;வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை</h2><p>பின்னர் வீட்டில் மறைத்து
வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15
பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி
மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0287ae47-dde9-4257-990e-b27af8af54f6/26-6a818ed895996.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமை காவல் நிலையத்தின்
குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட
காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
</p><p>
இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35
வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான
களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின்
பேரில் கைது செய்தனர்.</p><p></p><h2>காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு</h2><p> அதனைத்தொடர்ந்து நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப்
புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு
உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன
மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d963580-b6c6-419a-aad8-e2e1804647e8/26-6a818ed969242.webp' /></p><p>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை
வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா 
வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க,
பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் காவல்துறை சார்ஜன்டுகளான சந்தன
(16446), கேரத் (14692), பிரியங்கர(47358) உபாலி(60954)
சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923"></link>
            <id>https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ குறித்த
வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட
இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்காவினால் கையளிக்கப்பட்டது.</p><h2>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ சிப்பாய்க்கே வீடு</h2><p>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லான்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா
என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6dd1c2-1972-4a9b-88c4-d9a77eeef14b/26-6a819bce23dfd.webp' /></p><p>
</p><p>
இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த
வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட
கட்டளைத் தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T11:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632"></link>
            <id>https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632</id>
            <summary type="text">கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல்
துஷ்யந்தன் தலைமையில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்று (16/08/2026) காலை
10:30 மணியளவில் இடம்பெற்றது.
</p><p>
இதில் ஆறுமுகம் சபைஸ்வரன் அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம்
செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>நினைவுரைகள்</h2><p>
தொடர்ந்து நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளரும், யாழ்ப்பாணம் ஊடக மையத்தின்
தொடக்குனருமான தயாபரன், முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பிருந்தாபன்
பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி., சி.த.காண்டீபன். உட்பட ஊடகவியலாளர்
ஆறுமுகம் சபேஸ்வரனின் நண்பர்கள் நிகழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5bcf41f-e37e-44a8-9a49-dfd6df00a61a/26-6a8196c2d0871.webp' /></p><p>
</p><p>
இன்றைய நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள்,
மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,
பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T10:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை படகு விபத்துக்கான காரணம்! ஆரம்பமாகும் தீவிர விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inquiry-board-appointed-angulana-naval-accident-1786875328"></link>
            <id>https://ibctamil.com/article/inquiry-board-appointed-angulana-naval-accident-1786875328</id>
            <summary type="text">அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p> </p><p>

இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக இலங்கை விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412ஆகிய இரண்டு உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1098eb0-2ed0-4816-8cc9-63fdab8d8318/26-6a8190dd99ebd.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்பதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T10:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-fraud-legal-action-against-14-officials-1786871624"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-fraud-legal-action-against-14-officials-1786871624</id>
            <summary type="text">

நாடு முழுவதும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 அரசு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நாடு முழுவதும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 அரசு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஸ்வெசும நிதியைத் தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.</p><p>

2023 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி உதவிகளை வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p></p><h2>சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில், பதவி அல்லது தரம் எதுவாக இருப்பினும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெலகெதர வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a31f658-1ad8-478c-8646-4b06699ff413/26-6a81843aa1332.webp' /></p><p>

இந்த அஸ்வசும கொடுப்பனவு மோசடி தொடர்பாக நோர்வுட் பிரதேச செயலகம் மற்றும் பல பிரதேச செயலக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
விசாரணைகளின்படி, நோர்வுட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மோசடியான முறையில் நிதி மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a06e4a2-a4bb-4d41-9728-4238b82b3ae8/26-6a81843b70106.webp' /></p><p> </p><p>

அரசு அதிகாரிகள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தவறிழைக்கும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T09:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-assets-in-sri-lanka-1786866771"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-assets-in-sri-lanka-1786866771</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் தனக்கு ஐந்து ஹோட்டல்கள் சொந்தமாக இருப்பதாக சந்தேக நபர் விசாரணையின் போது கூறியுள்ளார்.
</p><p>
அவரது சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை குழுக்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.</p><p></p><h2>2012 வெலிக்கடை சிறைக் கலவரம்</h2><p>
</p><p>
இந்த நிலையில், சந்தேக நபரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த விசாரணையை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டுவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e51d755-32d9-43cf-a46c-9ee0ff2296a0/26-6a816eff4071d.webp' /></p><p>
</p><p>
நாட்டை விட்டு தப்பிச் சென்று துபாயில் பதுங்கியிருந்த ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டு நேற்று இரவு (15) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.</p><p>
</p><p>
இந்த நிலையில், நாட்டின் சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

இதேதேளை, 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்துடன் அவரை தொடர்புபடுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T08:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/viral-videos-of-grade-5-scholarship-students-1786864266"></link>
            <id>https://ibctamil.com/article/viral-videos-of-grade-5-scholarship-students-1786864266</id>
            <summary type="text">பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ எதிராக ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ எதிராக ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்த ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பல மாணவர்கள், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் இணையத்தில் பரவப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

பரீட்சைக்கு பின் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்கள், அவர்களை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>அமைச்சின் எச்சரிக்கை&nbsp;</h2><p>

இந்நிலையில், பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதி பெறாமல் மாணர்வகளின் கருத்துக்களைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ea00912-a62a-4d69-a659-ad02cf489500/26-6a81659cc0e79.webp' /></p><p>
மேலும், இதுபோன்ற காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக, சிறுவர்கள் உரிமை மீறல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T07:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relatives-of-disappeared-international-conference-1786861089"></link>
            <id>https://ibctamil.com/article/relatives-of-disappeared-international-conference-1786861089</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>உயிரிழந்துள்ள தாய் - தந்தையர்&nbsp;</h2><p> </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefca70-294f-484b-b3c3-f7c1a6f766b3/26-6a815ad8296d3.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை அளித்துள்ளனர்.”
</p><p>
அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-16T06:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recommendation-on-upcoming-changes-in-fuel-prices-1786858549"></link>
            <id>https://ibctamil.com/article/recommendation-on-upcoming-changes-in-fuel-prices-1786858549</id>
            <summary type="text">
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது, அவர் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உலகச் சந்தை விலைகள் இறக்குமதிச் செலவுகளைப் பாதிப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் விலை திருத்தம்</h2><p>
</p><p>
இந்த ஆய்வுக்குப் பிறகு, அரசாங்கம் முன்னர் வழங்கிப் பின்னர் நிறுத்திவைத்த 15 பில்லியன் ரூபாய் மானியத்தை மீண்டும் கோரவோ அல்லது ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்ய எரிபொருள் விலை திருத்தம் போன்ற மாற்று வழிகளைக் கையாளவோ அமைச்சு முனையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477a293a-0c13-4a1a-a0a7-ec7093f6e2d4/26-6a81504aef2e1.webp' /></p><p>
</p><p>
கடைசியாக ஜூன் மாதத்தில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்ததாகவும், இந்த மாதம் விலைகள் சரிசெய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2>விலை உயர்வு&nbsp;</h2><p>இதேவேளை, மத்திய கிழக்கு போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்தை விட எரிபொருள் விலைகள் 48 வீதம் உயர்ந்துள்ளதாகவும், தற்போது டீசல் விலைகள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5906d1d1-f3d3-4b46-bd49-6e01b83a3920/26-6a81504bb7997.webp' /></p><p> 

காப்பீட்டுக் கட்டணங்களும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் பெறப்பட்டாலும், இந்த விலை உயர்வு கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T05:53:21+00:00</updated>
        </entry>
    </feed>
