<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-16T06:16:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452</id>
            <summary type="text">கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>கோட்டை நீதவான் நீதிமன்றம்</h2><p>இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8914347-9d7c-4b3a-945b-c5bf9b61d736/26-6aaa28e5b7e1c.webp' /></p><p>இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில்,நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T05:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-genuine-tribute-to-the-beacon-of-sacrifice-1789533492"></link>
            <id>https://ibctamil.com/article/a-genuine-tribute-to-the-beacon-of-sacrifice-1789533492</id>
            <summary type="text">மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிகமும் விரும்பினார். </p><p>இன இலட்சத்தியத்திலும் சமூக வாழ்விலும் தமிழச் சமூகம் விழிப்பும் அறிவும் கொண்டு எழுவதே தமிழர் தேசத்திற்கான அடிப்படை என்ற கனவைக் கொண்டிருந்தார் என்பதை அவரது உரைகளில் உணர முடிகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் துவங்கியுள்ளன.</p><p></p><h3>தியாக தீபத்தின் நினைவுநாட்கள்</h3><p>2009இற்கு முந்தைய காலத்தில் தியாக தீபத்தின் நினைவு நாட்கள் என்றால் ஈழம் அவரது நினைவுகளால் மூழ்கியிருக்கும். கடுமையான போர், அலைச்சல், பட்டினி வாழ்வு பிய்ந்துபோன குடிசை என்ற நிலைகளிலும் வீட்டின் முன்னால் திலீபன் அவர்களின் நினைவுப்படம் வைக்கப்பட்டு பூமாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d551f4d2-3cf3-4889-bc41-e82ccb605a9b/26-6aaa25a5124ae.webp' /></p><p> ஈழத் தெருவெங்கும் திலீபனின் முகங்களால், சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிறைந்திருக்கும். 2009இற்குப் பின்னரான காலத்தில் தியாக தீபத்தின் நினைவுநாட்கள் புலம்பெயர் தேசங்களிலும் இணையங்களிலுமே அனுஷ்டிக்கப்படுவதுண்டு. </p><p>இப்போது ஈழ நிலத்தில் திலீபன் அவர்களின் உருவச் சிலை&nbsp;நிமிர்ந்திருக்கிறது. அவர் முன்னால் தீப ஒளிகளை இன்றைய தலைமுறையினர் ஏற்றுகின்றனர்.</p><h2>சிங்களக் கலைஞர்</h2><p>தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபி எழுச்சிக் கோலம் பூணத் தொடங்கியுள்ளது. அங்கே சிங்கள இளைஞர்களும் மக்களும்கூட சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc27a60-d00a-41e3-8cd1-8896b946fa67/26-6aaa25a5bb110.webp' /></p><p> சிங்கள மக்களும் சிங்களக் கலைஞர்களும் தியாக தீபம் திலீபனை பெருமதிப்போடு நினைவு கொள்வதுதான் தியாக தீபத்தின் மகத்துவமாகும். சிங்களத்திலும் தியாக தீபம் பற்றிய பாடல் பெருமையுடன் நினைவுகொண்டு பாடப்படுகிறது.</p><p>நம் எழுத்துக்களால், கவிதைகளால், பாடல்களால் நினைவுகூரப்படும் தியாக தீபத்தின் நினைவுநாளை, அவர் எந்த நிலத்திற்காக, எந்த நிலத்தின் சனங்களுக்காக துளி நீரும் அருந்தால் 12 நாட்கள் நோன்பிருந்து, உயிர் துறந்தாரோ, அந்த நிலத்தில், அந்த நிலத்தின் சனங்களால் அவரது நினைவுநாளைக் கொண்டாட முடியாதிருந்த ஒரு காலத்தை எதிர்கொண்டோம்.</p><p> சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனாலும் &nbsp;எதனாலும் அழிக்க முடியாத &nbsp;திலீபனின் நினைவுகளையும் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.</p><h2>உண்ணா நோன்பு</h2><p>இணையத்தில் தியாக தீபம் போன்றவர்களின் நினைவுநாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, ஈழ விடுதலை மறுப்பாளர்களும் சிங்கள அரசின் கைக்கூலிகளும் அதனை இணையப் போராளிகளின் இயலாமை என கிண்டல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12318e2c-9c7a-45cf-b2ca-47480423b574/26-6aaa25a67775f.webp' /></p><p> </p><p>பலம் மிக்க நவீன ஊடகமான இணையத்தில் நினைகூரப்பட்ட தியாக தீபத்தின் நினைவுநாட்களை, இப்போது ஈழ நிலத்தில் எமது மக்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன் ஒருபடி கடந்து சிங்கள மக்களும் திலீபன் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர்.</p><p> 2009 இனப்படுகொலைப் போரின் பின்னரான இன்றைய காலத்தில், நம்பிக்கையற்ற அரசியல் சூழல் நிலவும் இன்றைய காலத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்வதும் அவரது கனவை நினைகூர்வதும் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது.</p><p>இன்றைய காலத்தில், திலீபன் அவர்களை நினைகூருகின்றபோது இரண்டு விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது, அல்லது பின்பற்ற வேண்டியுள்ளது. ஒன்று, தன்னலமற்ற அரசியல் எமக்கு அவசியமானது.</p><p> மற்றையது, திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மெய்யான மரியாதை. அதுவே அவரை நினைவுகூர்வதற்கு அர்த்தமானதாயிருக்கும்.</p><p> 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையற்ற, சூன்யமான அரசியல் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர், எடுத்துரைத்தனர்.</p><h3>இனத்திற்கான அர்ப்பணிப்பு</h3><p>&nbsp;தனிப்பட்ட இருப்புக்களின் மோதல் களமாகியுள்ள தமிழ் அரசியல் சூழலில் அறம் சாகடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f8edc-030b-4494-a350-c0b55e5df763/26-6aaa25a73cd63.webp' /></p><p> </p><p>ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் போராட்டத்தை தமிழ் தலைமைகள் கையில் எடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் துகள் துகளாய் சிதறி இருக்கிறோம். </p><p>நேர்மையான அணுகுமுறை, உண்மையான பேச்சு, இனத்திற்கான அர்ப்பணிப்பு, ஒற்றுமைப்பட்ட குரல் என்று எதுவும் இல்லாமல் மாறிமாறி ஒருவரை ஒருவர் அழிக்கும் அரசியலில் ஈடுப்பட்டு ஈழத் தமிழ் மக்களை இப்போது தமிழ் அரசியல் சூழலே இனவழிப்பு செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.</p><p>அந்தப் போராட்டத்தை ஒரு அசியல் போராட்டமாக, ஒரு அரசியல் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திலீபன் போன்ற உன்னதமான போராளிகள் சுமந்த கனவை, எடுத்து வந்த ஆயுதத்தை தொடர்ந்து ஏந்திச் செல்வதுதான் இன்றைய காலத்தின் அவசியமாகும். </p><p>தன்னலமற்ற, ஆழமான புரிதல் கொண்ட, தமிழ் ஈழ நிலத்தின் ஆன்மாவை நேசிக்கும் இளைஞர்களும் அரசியல் தலைமைகளுமே எமக்கு அவசியமானவை. </p><p>திலீபன் போன்ற போராளிகளை நினைவுகூரும்போது, நம்மையும் நமது நிலத்தின் இன்றைய சூழலையும் குறித்து ஆழமாக சிந்திப்பது, அதன் நிமர்வுக்காய் நம் பங்களிப்பை செய்வது என்பனவே அவருக்குச் செய்யும் அஞ்சலியும் அவரை நினைவுகூர்வதன் அர்த்தமுமாக இருக்கும்.</p><p>தமிழ் மக்களின் கோரிக்கையை - அபிலாசையை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு, எமது மக்களை தொடர்ந்தும் அழித் தொழிக்கும் ஆயுதம் அல்லது யுத்தமாகும். அதுவே இப்போதும் நிகழ்கிறது. </p><p>எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமையைப் பறிக்காத, அவர்களை அழித்தொழிக்க முடியாத தீர்வொன்றே எமக்கு வேண்டும். அதற்காகவே திலீபன் போன்றவர்கள் கனவையும் பசியையும் சுமந்தார்கள்.</p><p> எமது மக்கள் எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவ ஈழ மண்ணில் வாழ வேண்டும் என்பதுவே திலீபன் அவர்களின் கனவு.</p><p> &nbsp;தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் துவங்கும் இத் தருணத்தில் அவருக்கான மெய்யான அஞ்சலி குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். திலீபன்; எந்தக் காலத்திலும் அணையாத ஒளி. அந்த ஒளியிற்கு நாம் ஏற்றும் தீபம் உண்மையும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p><p>
</p><p>

</p>]]></content>
            <updated>2026-09-16T05:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-leaves-for-singapore-1789532914"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-leaves-for-singapore-1789532914</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான&amp;nbsp;ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான&nbsp;ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு</h2><p>உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (15) கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d825d0d5-d1a2-4ced-bc90-624d74db45f9/26-6aaa1e2eb81da.webp' /></p><p>
</p><p>


பின்னர், இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து அவர் நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்தநிலையில், ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jP3ECwPjlFM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படுகொலை சதித்திட்டம் முறியடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-foil-assassination-plot-linked-to-drug-bust-1789529724"></link>
            <id>https://ibctamil.com/article/police-foil-assassination-plot-linked-to-drug-bust-1789529724</id>
            <summary type="text">சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேகநபர்களை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிரிந்த, அந்தகல்வெல்ல கடற்பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><h2>காவல்துறை அத்தியட்சகரின் வீடு&nbsp;</h2><p>காவல்துறை உளவாளி ஒருவர் வழங்கிய துல்லியமான புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe9956a-ecff-4cad-88c8-e6482ccbdda9/26-6aaa17081595f.webp' /></p><p>
</p><p>இதற்கு பழிவாங்கும் வகையில், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘ரூபன்’ மற்றும் ‘அங்கொட பிரியங்கர’ என அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள், குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

அவரைக் கொலை செய்த பின்னர், தலையை துண்டித்து உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் வீட்டுக்கு முன்பாக விட்டுச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>முதற்கட்ட கொலைத் திட்டம் தோல்வியடைந்த பின்னர், கடந்த 5ஆம் திகதி காவல்துறை ஜீப் வாகனத்தைப் போன்ற போலி ஜீப் ஒன்றில் வந்த குழுவினர், குறித்த உளவாளியை வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.</p><p></p><h2>வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது</h2><p>
குறித்த குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனம், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள ஒரு வாகன திருத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வருகை தந்ததாகக் கூறப்படும் இரண்டு கூலிக் கொலையாளிகள், செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead8ba31-0e9a-45ec-9bd3-4d6d10b7dd06/26-6aaa185bab960.webp' /></p><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 41 வயதான மதுக சாமர எனப்படும் மதுவா மற்றும் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலின்&nbsp; என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
<br></p><p>அத்துடன் குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்து தலையை துண்டிப்பதற்காக தயாராக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு மன்னா கத்திகளும், போதைப்பொருள் தொகையொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:23:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலிப் பத்திரங்களைத் தயாரித்து மோசடி செய்த சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-creating-1789529669"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-creating-1789529669</id>
            <summary type="text">கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (15.09.2026) களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
</p><p>
விசாரணைகளில், குறித்த சொத்து தொடர்பில் சந்தேகநபர் போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளின்போதும் சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7b8ba18-9916-429f-9d4d-a2d9fac0e56e/26-6aaa16afdf08f.webp' /></p><p>

மேலும், குறித்த சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை விலகல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/instability-in-the-lower-atmosphere-near-sri-lanka-1789527889"></link>
            <id>https://ibctamil.com/article/instability-in-the-lower-atmosphere-near-sri-lanka-1789527889</id>
            <summary type="text">இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதனால்&amp;nbsp; இதன் தாக்கமானது பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதனால்&nbsp; இதன் தாக்கமானது படிப்படியாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>
</p><p>
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9798d3-1170-4b3f-9504-0a52d4aedfac/26-6aaa0c7589fb9.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்</h2><p>

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc2dab6-df6e-44bc-a171-f3aacc66fd3f/26-6aaa0c7644023.webp' /></p><p>காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T03:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்திக்கு எதிரான சிரிலிய விசாரணையின் அடுத்த பக்கங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-chapters-siriliya-inquiry-against-shiranthi-1789524165"></link>
            <id>https://ibctamil.com/article/next-chapters-siriliya-inquiry-against-shiranthi-1789524165</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் கவனம் பெற்றுள்ளன.
</p><p>
ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கு தொடர்பான நிதி முறைகேடு மற்றும் மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்தமை தொடர்பான விவகாரங்கள் தற்போதைய விசாரணைகளில் முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
எனினும், இவற்றுக்கு அப்பால், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>குற்றச்சாட்டுக்கள்</h2><p><b>
1. ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி தொடர்பான குற்றச்சாட்டு
</b></p><p>
2012–2013 காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைபெற்ற ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சியுடன் தொடர்பாக பொதுநிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நிகழ்வுகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுநிதி வீணடிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் தகவல்கள் வெளியாகின.
</p><p><b>
2. ‘சிரிலிய சவிய’ நிதி தொடர்பான விவகாரம்</b></p><p>

‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதியைப் பயன்படுத்தி கொழும்பு டொரிங்டன் பகுதியில் வீடொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரமும் கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
</p><p>
இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
</p><p><b>
3. வரிவிலக்கில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுப் பேருந்துகள்
</b></p><p>
விளையாட்டுத்துறை அமைச்சின் பெயரில் வரிவிலக்குடன் இரண்டு சொகுசுப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் ஷிரந்தி ராஜபக்ச நிர்வகித்ததாகக் கூறப்படும் ‘கார்ல்டன்’ முன்பள்ளி வலையமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>வசீம் தாஜுதீன் கொலை</h2><p>
</p><p>
அரச நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்ட வரிவிலக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் அப்போது கேள்விகள் எழுந்தன.
</p><p><b>
4. வசீம் தாஜுதீன் கொலை வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட விவகாரம்</b></p><p>
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் உயிரிழந்த சம்பவத்திலும் ‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிஃபென்டர் வாகனம் தொடர்பில் விசாரணையாளர்களின் கவனம் சென்றிருந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்த வாகனம் சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபட்டது என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் அக்காலகட்டத்தில் வெளியாகின.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் ‘கஜ்ஜா’ என அறியப்பட்ட நபர் தொடர்பான சம்பவமும் ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியிருந்த சர்ச்சைகளில் ஒன்றாகப் பேசப்பட்டது.
</p><p>
அவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் நேர்காணல்களும் அக்காலத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தன.</p><p></p><p>
</p><h2>விசாரணைகளில் முன்னிலையாக முடியாத நிலை </h2><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான தற்போதைய விசாரணைகள் தனிப்பட்ட ஒரு வங்கி கணக்கு அல்லது ஒரு நிதி திரட்டும் நடவடிக்கையுடன் மட்டுப்படுத்தப்படுமா அல்லது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
குறிப்பாக, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் நடத்தப்பட்டன, அவற்றின் முடிவுகள் என்ன, எந்த விவகாரங்கள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளன என்பவை முக்கிய கேள்விகளாக உள்ளன.
</p><p>
ஷிரந்தி ராஜபக்ச தற்போது மருத்துவ காரணங்களால் விசாரணைகளில் நேரடியாக முன்னிலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள பழைய விவகாரங்கள் மீண்டும் கவனத்தில்
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிரான பழைய நிதி மற்றும் நிர்வாக குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற பின்னணியில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான நடவடிக்கையும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
</p><p>
இதுவரை முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன, எவை விசாரணை மட்டத்தில் உள்ளன, எவை ஆதாரமின்மையால் முடிவுக்கு வந்துள்ளன என்பவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது.
</p><p>
தற்போதைய விசாரணைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதையும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றன என்பதையும் பொறுத்தே அடுத்தகட்ட நிலை தெளிவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T02:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-set-to-be-arrested-soon-easter-attacks-1789519296"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-set-to-be-arrested-soon-easter-attacks-1789519296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக&amp;nbsp;மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக&nbsp;மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த விடயம்&nbsp;மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸால் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விசாரணையின் போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே,&nbsp;கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்த விடயத்தை&nbsp; திலீப பீரிஸ் வெளிப்படுத்தினார்.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு</h2><p><b>கேள்வி எழுப்பிய கொழும்பு கோட்டை நீதவான் -&nbsp;</b><i>அதிகாரிகள் மீது கடுமையான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களை ஏன் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை?</i></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65607088-b7d2-462a-9c4c-ca3dc1059f35/26-6aa9e5c2c5879.webp' /></p><p>திலீப பீரிஸ் - இந்த வழக்குடன் தொடர்புடைய மூவருக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>
மேலும், கர்னல் மத்துமகே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அந்த சட்ட நடவடிக்கை நிறைவடைந்ததும் சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்த பெர்னாண்டோ, தனது தரப்பை சேர்ந்த நபரின் மருத்துவ அறிக்கைகள் இதுவரை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
</p><p>
மேலும், ‘B’ அறிக்கைகள் மூலம் எந்தவொரு ஆதாரமற்ற விடயத்தையும் முன்வைக்க முடியும் என்பதால், அவற்றுக்கு பதிலளிப்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். </p><p>இதன்போது காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. </p><p>விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xTlZZeEf05U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T01:58:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rishad-implicated-in-easter-sunday-attacks-case-1789521525"></link>
            <id>https://ibctamil.com/article/rishad-implicated-in-easter-sunday-attacks-case-1789521525</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளதுடன் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
</p><p>
இந்த விடயங்கள் குறித்து மேலும் தனது வாதங்களை திலீப பீரிஸ் பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.</p><p></p><h2>தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்</h2><p>
</p><p>
“சஹ்ரான் ஹாஷிமை பாதுகாப்பதன் ஊடாக தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f070d421-3298-4d36-8962-544a275c7648/26-6aa9f17e91e69.webp' /></p><p>
</p><p>
 
இதன் ஒரு பகுதியாகவே வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளது.

வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டதாக ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 12ஆம் திகதி கிரிதலே புலனாய்வு முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த கர்னல் மத்துமகே, வவுனதீவு சம்பவத்தை சஹ்ரான் மேற்கொண்டதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தகவல்களை மறைத்தவர்கள் அனைவரும் முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயுடன் தொடர்புடையவர்கள்.

தாக்குதலாளிகளுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. </p><p>அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

மற்றையவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்ற வர்த்தகர்.</p><p></p><h2>சந்தேகநபரை விடுவித்த கோட்டாபய</h2><p> </p><p>அலாவுதீன், ஷங்ரி-லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இன்ஷாப் அஹமட்டின் மாமனார். இன்ஷாப் அவரது மகளை திருமணம் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a3c797-8b5f-462a-a617-0d9befe75b5a/26-6aa9f17dd9d89.webp' /></p><p>
</p><p>
அலாவுதீனுக்கு சொந்தமான அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
</p><p>
மேலும், இன்ஷாப் அஹமட்டின் மனைவியான அலாவுதீனின் மகள், தாக்குதலுக்குப் பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவளித்தவர் என்பது இதற்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து அரச புலனாய்வு சேவையின் ஒரு குழுவும் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த போதிலும் அவற்றை மறைத்திருக்கலாம் என விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p></p><h2>தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய 16 தொடர்பாளர்கள்</h2><p>
</p><p>
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27ஆம் திகதி(2019) சாய்ந்தமருதில் தாக்குதல்தாரர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்பட்ட 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a2a4f1-d8a8-49e2-b6fa-9da34c36a2cb/26-6aa9f17d11d67.webp' /></p><p>
</p><p>
அவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழக்கவில்லை.
சிலரையாவது உயிருடன் கைது செய்திருக்க முடிந்திருக்கலாம் . 
அந்தக் காலப்பகுதியில் சாய்ந்தமருது பகுதி இராணுவத்தின் பொறுப்பில் இருந்தது.
</p><p>
இதனால், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் இராணுவத்தின் சில தரப்பினர் திட்டமிட்டு அந்த 16 பேரையும் கொன்றார்களா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது” என்றார்.</p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TQJRICBAAbw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T01:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-including-sarah-jasmine-sent-ind-easter-case-1789517934"></link>
            <id>https://ibctamil.com/article/team-including-sarah-jasmine-sent-ind-easter-case-1789517934</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியாவில் அமைந்துள்ள முதலாவது புலனாய்வுப் படைப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கிரிதலே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமூன்றாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தொடர்பான விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தம்பியன் என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர்</h2><p>
இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்பியன்’ என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர் ஊடாக, சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகவும், வவுனதீவு காவல்துறை காவலரண் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சஹ்ரானே காரணம் எனவும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb1c8c9-a649-4a39-a1f8-dbb1d7bbd005/26-6aa9e20d00da7.webp' /></p><p>
</p><p>
எனினும், அந்தத் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, வவுனதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கர்னல் ரணவீர மற்றும் கிரிதலே இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவின் தலைவராக இருந்த கர்னல் மத்துமகே ஆகியோர் இந்தத் தகவல்களை புலனாய்வு பணிப்பாளரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னெச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என குற்றச்சாட்டு
2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் ‘ராசிக்’ என்ற உளவாளி வழங்கிய தகவல்கள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் ஏப்ரல் 3ஆம் திகதி வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் ஏப்ரல் 20ஆம் திகதி தேவாலயங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவல்கள் ஆகியவையும் முறையாகப் பரிமாறப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட குழுவொன்று செயற்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்கு&nbsp;&nbsp;</h2><p>
2014ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வு சேவையின் (SIS) பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டார, சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ரில்வான் உள்ளிட்ட 94 பேரைக் கொண்ட பயங்கரவாத பட்டியலைத் தயாரித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7ae6d6-2812-4b7c-80df-bb607c3267d5/26-6aa9e20c3b9fa.webp' /></p><p>
</p><p>
தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு சென்ற அவர், சஹ்ரானின் சகோதரர் ரில்வானை சந்தித்து தேநீர் அருந்தி கலந்துரையாடியதாகவும், எனினும் அவரைக் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த சந்தர்ப்பத்தில் ரில்வான் கைது செய்யப்பட்டிருந்தால், பின்னர் இடம்பெற்ற பேரழிவைத் தடுக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>

தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரானின் உறவினர்கள் 16 பேர் உயிரிழந்தமை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டமை, சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவற்றின் பின்னணியிலும் ஆழமான சதித்திட்டம் இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T00:21:16+00:00</updated>
        </entry>
    </feed>
