<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-18T19:44:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை...! ட்ரம்பின் திடீர் பின்னடைவு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-iran-says-trump-1787077841"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-iran-says-trump-1787077841</id>
            <summary type="text">
ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையுடன் (IRGC) பின்னணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நேற்றுத் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு மாறாக இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசோடு எந்தவிதப் பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடலோ நடைபெறவில்லை.</p><p></p><h2>ஈரானியத் துறைமுகங்கள்&nbsp;</h2><p>

எதிர்காலத்திலும் திட்டமிடப்படவில்லை அத்தோடு ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது.</p><p>

ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுச் சீராக இயங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a558bde7-10e4-485f-8d90-b349360ffdc8/26-6a84ae0882f05.webp' /></p><p> 

அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துக் கடலடி வெடிமருந்துகளும் அகற்றப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, அமெரிக்காவுடன் எந்தவிதப் பின்னணிப் பேச்சுவார்த்தையிலும் தங்கள் அமைப்பு ஈடுபடவில்லை என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையும் (IRGC) மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-fires-two-missiles-toward-uae-1787073295"></link>
            <id>https://ibctamil.com/article/iran-fires-two-missiles-toward-uae-1787073295</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக அமீரகப் பகுதியில் ஏவுகணை அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்தநிலையில், தற்போது இத்தாக்குதல் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>தீவிரக் கண்காணிப்பு</h2><p>இதனடிப்படையில் முதல் ஏவுகணை, நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்கு வெளியே போய் விழுந்துள்ளது.
</p><p>
இரண்டாவது ஏவுகணை, அமீரகத்தின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்குள்ளேயே வந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32cbafe6-3e64-4915-a711-fb543cd4a922/26-6a84a2e4cb83c.webp' /></p><p>

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் நோக்கம் கொண்ட எதுவாக இருந்தாலும் அதை உறுதியோடு எதிர்கொள்ளவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் கையாளவும் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரக் கண்காணிப்புடனும் முழுத் தயார்நிலையுடனும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. </p><p>

இதன் மூலம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பது உறுதி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-national-found-dead-in-matara-temple-1787068863"></link>
            <id>https://ibctamil.com/article/uk-national-found-dead-in-matara-temple-1787068863</id>
            <summary type="text">தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்தநிலையில் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>தலைக்கவசம்&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b769404-3403-4375-8162-33408f51d34e/26-6a849c2218b82.webp' /></p><p>இது குறித்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
சடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999a6bac-1be9-4dce-b412-e9152a1b00cb/26-6a849c22be79c.webp' /></p><p>வாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு அவர் விகாரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எப்போதும் கெட்ட செய்திகளையே வெளிப்படுத்தும் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-warns-about-the-countrys-economy-1787068916"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-warns-about-the-countrys-economy-1787068916</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-க்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028-க்குப் பிறகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-க்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028-க்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், நாட்டில் 15 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.</p><p>இந்த ஆண்டு இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் கையிருப்பை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், அது நிறைவேறினால், மேலும் 6 பில்லியன் டொலர் திரட்டப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>&nbsp;பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை</h2><p>அதன்படி, அந்த 6 பில்லியன் டொலரைத் திரட்டுவதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/759ef0a4-0f5f-4b16-bb1a-d83fcd5a12e0/26-6a84887387dd0.webp' /></p><p>&nbsp;முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய எழுதிய&nbsp; புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,</p><p>"நாங்கள் வெளியேறியபோது, ​​பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 6 பில்லியன் டொலரைச் சேமித்தோம்.</p><p> இந்தப் பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 2028-க்குப் பிறகு நாம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 2028-க்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த, நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 15 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது, ​​​​6 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது. இன்றிலிருந்து நாம் 8 பில்லியன் டொலரைக் கண்டுபிடிக்க வேண்டும்.</p><h2>மத்திய வங்கியின் அறிவிப்பு</h2><p> </p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் இருக்கும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. நாம் மேலும் 6 பில்லியன் டொலரைக் கண்டுபிடிக்க வேண்டும், அதுதான் இந்த நாட்டின் பிரதான பிரச்சினை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b044878-cc32-4127-a038-00ef7f9b4276/26-6a848872be00d.webp' /></p><p>
</p><p>
3 பில்லியன் டொலர் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிடுவது என்ற மற்றொரு நிபந்தனைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-இன் இறுதியில் முடிவடையும்.</p><p></p><p> </p><h2>நாட்டின் பிரதான பிரச்சினை</h2><p>நாம் சர்வதேச நாணய நிதியத்தில் சேருவோமா இல்லையா? அரசாங்கத்தின் திட்டம் என்ன?

மீண்டும் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்பதுதான் இந்த நாட்டின் பிரதான பிரச்சினை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035425a2-4f67-461a-963e-e155b15043ce/26-6a848a9c9ee68.webp' /></p><p> </p><p>அரசியலமைப்பைத் திருத்தி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதா வேண்டாமா? இல்லை, நமது கவனம் இங்கேதான் இருக்க வேண்டும். இது விவாதிக்கப்படவில்லை." நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ வெளியேயோ இன்னும் முடியவில்லை. பிரச்சனை வரும்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? </p><p>நம்மால் பணம் செலுத்த முடியாவிட்டால், நாம் மீண்டும் திவாலாகிவிடுவோம். இந்தப் புத்தகத்தில் இரண்டு போர்கள் மட்டுமே உள்ளன, நாம் மூன்றாவது போரைப் பற்றி எழுத வேண்டும். அதை உங்களாலும் முடியாது, எங்களாலும் முடியாது. நினைவில் கொள்ளுங்கள், இந்த இரண்டு போர்கள் முடிந்த பிறகும், இன்னொரு போர் வரும். அந்தப் போரிலிருந்து நம்மால் வெளியேற முடியாவிட்டால், நாம் உண்மையான சிக்கலில் இருக்கிறோம் என்று சொல்ல வேண்டியிருக்கும். </p><p>அதனால் நான் கொண்டு வந்தது நல்ல செய்தி அல்ல. எப்படியிருந்தாலும், நான் எப்போதும் கெட்ட செய்திகளையே கொண்டு வருகிறேன்." என்றார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T18:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான பேச்சு குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-no-talks-with-iran-1787077619"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-no-talks-with-iran-1787077619</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை அல்லது திட்டமிடப்படவில்லை என்றும், வோஷிங்டனின் கடற்படை முற்றுகையின் கீழ் ஹோர்முஸ் நீரிணை திறந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை அல்லது திட்டமிடப்படவில்லை என்றும், வோஷிங்டனின் கடற்படை முற்றுகையின் கீழ் ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.</p><p>

"ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடலோ நடைபெறவில்லை, அல்லது திட்டமிடப்படவில்லை," என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை திறந்தும், இயங்கியும் வருகிறது</h2><p>
</p><p>
"கடற்படை முற்றுகை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறந்தும், இயங்கியும் வருகிறது. அனைத்து நீர் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன," என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72f76e7-2a1c-47b6-aa16-5b586e90a1ee/26-6a84a3f5764ae.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T18:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய மாகாணம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announces-new-strait-of-hormuz-province-1787066860"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announces-new-strait-of-hormuz-province-1787066860</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை பகுதியை அமெரிக்காவின் புதிய மாகாணமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன் அதற்கான வரைபடத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.ஈரான் தொலைக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை பகுதியை அமெரிக்காவின் புதிய மாகாணமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன் அதற்கான வரைபடத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.</p><p>ஈரான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் , “புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் உறுதி மொழிகள் மற்றும் ஈரானை கடல்வழியாக தடை செய்வதாக கூறப்படுவதை நீக்குவது உள்ளிட்ட ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது”, என தெரிவித்திருந்தார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை வரைபடம்</h2><p>காலிபாபின் இக்கருத்து வந்த சிறிது நேரத்திலேயே ஹோர்முஸ் நீரிணைபகுதி அமெரிக்காவின் புதிய மாகாணம் என்று அதிகாரபூர்வமாக ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார். தமது பதிவில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு அடையாளப்படுத்தி காட்டியும் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13c3f30c-0da0-46ff-ad31-70f8db357e0e/26-6a8479eea58f7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T15:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1787064612"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1787064612</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18)
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18)
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம்
செவ்வாய்க்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு
பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eea0a01-4d52-4a7e-965d-de1f4310fced/26-6a8473cf10cfb.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T15:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-member-dies-after-falling-from-tree-1787062479"></link>
            <id>https://ibctamil.com/article/family-member-dies-after-falling-from-tree-1787062479</id>
            <summary type="text">வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றது.</p><p> சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்</p><p>
மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் இன்றையதினம் நொச்சிமோட்டை
பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே
வீழ்ந்துள்ளார்.</p><h2>ஓமந்தை காவல்துறையினர் விசாரணை</h2><p>படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6baff2-33ff-45a8-8e9d-13fe681bed7d/26-6a846ac7665f5.webp' /></p><p>

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே
மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை பணியிலிருந்து விலகியவரின் போதை கடத்தல் அம்பலம் : மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-transporting-drugs-expressway-1787059456"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-transporting-drugs-expressway-1787059456</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த நுழைவாயில் வழியாக போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த நுழைவாயில் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடவத்த காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (17) கடவத்த வெளியேறும் வழியில், ஒரு காரில் 'குஷ்' மற்றும் 'காளான்' போதைப்பொருட்களைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>காவல்துறை அடையாள அட்டை</h2><p>மேற்கொண்டு விசாரணை செய்தபோது, ​​காரின் ஓட்டுநர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறி, தான் ஒரு காவல் ஆய்வாளர் என்பதைக் குறிக்கும் வகையில் காவல்துறை அடையாள அட்டையைக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48546cd2-3f96-4b71-adb9-b617818a0c80/26-6a8464c0976b6.webp' /></p><p>எனினும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பயகலா, நாகஹா துவாவைச் சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் என்பதும், தங்க மோசடியில் ஈடுபட்டு 2024-ல் காவல் பணியிலிருந்து விலகியவர் என்பதும் தெரியவந்தது.</p><p></p><h2>வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பொருட்கள்</h2><p>&nbsp;அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஒரு டசின் காவல் சீருடைகள், அறுபத்தெட்டு 9மிமீ தோட்டாக்கள், பன்னிரண்டு T56 தோட்டாக்கள், ஆறு இதர தோட்டாக்கள், அறுநூறு வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐந்து கைவிலங்குப் பொட்டலங்கள், இரண்டு காவல் பைக்கெட்நோட்டுப் புத்தகங்கள், இரண்டு தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள், எட்டு கைபேசிகள், இரண்டு போதைப்பொருள் எடை போடும் தராசுகள், ஐந்து கைவிலங்குகள், ஒரு பெரிய சுத்தியல், நான்கு கைத்துப்பாக்கி உறைகள் மற்றும் ஒரு ஏர் ரிவோல்வர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fda57e0-e0b7-466e-ab33-3ee71c1f39a1/26-6a8464c148ba7.webp' /></p><p>சந்தேக நபர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 30 வயதுடைய நபர் ஆவார். அவர் இன்டர்போல் அடையாள அட்டையையும் வைத்துள்ளார். போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்குள்ள தொடர்பை வெளிப்படுத்துவதற்கான தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதற்காக, அவர் இன்று (18) மகர நீதவான் முன் முற்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:57:31+00:00</updated>
        </entry>
    </feed>
