<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-10T10:24:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி! மீண்டும் சந்தேகநபரானார் துமிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-named-suspect-in-gold-plated-firearm-case-1783673544"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-named-suspect-in-gold-plated-firearm-case-1783673544</id>
            <summary type="text">தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிணையில் அனுப்பப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிணையில் அனுப்பப்பட்டுள்ளார்.</p><p>

கல்கிசை பதில் நீதிபதி ரவி மத்துகம இன்று (10) தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் செல்லுமாறு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>

வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் வீட்டுவசதி வளாகத்தில் ஒரு மூதாட்டியின் பையில் பாதுகாப்பு அதிகாரிகளால் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0959cca4-017b-486d-b835-eca6b097c3f5/26-6a50c728aabda.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, அவர் மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T10:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரம் : நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-against-justice-min-harshana-1783676846"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-against-justice-min-harshana-1783676846</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு&amp;nbsp; தீர்மானித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு&nbsp; தீர்மானித்துள்ளது.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.</p><p> 

அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) நாடாளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>28 பேர் உயிரிழப்பு</h2><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் உட்பட 28 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b5f800-dcd0-427f-9523-23f5a6d70f6b/26-6a50c3dcf1e1a.webp' /></p><p>இந்தநிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்போது ஒரு "குற்றப் பிரதேசம்" என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783675157"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783675157</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (10.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (10.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.70 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		443.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.22 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	377.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.69 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.99 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7fb50ba-829a-4c13-a064-7c75c219fb1c/26-6a50bee5ce3da.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.04 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.47 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.81ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T09:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-land-cannot-be-released-jaffna-army-1783669806"></link>
            <id>https://ibctamil.com/article/palali-land-cannot-be-released-jaffna-army-1783669806</id>
            <summary type="text">பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பலாலி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
</p><p>
பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுன்னதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட அவர், </p><p></p><h2>இழப்பீடு வழங்க நடவடிக்கை</h2><p>


“இந்த வலயத்துக்குள் உள்ள 1661 ஏக்கர் காணியை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்துக்கு உரித்தாக்குவதற்கும், காணி உரிமையாளர்களுக்கு காணி அமைச்சின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a5fd2-1c86-4a58-831e-8836fe01dfa0/26-6a50b598a8a65.webp' /></p><p>
</p><p>

பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன.

2009 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். எதிர்வரும் ஓரிரு மாத காலப்பகுதியில் 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தத்தவில்லை. 

அத்தியாவசிய தேவை மற்றும் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இந்த காணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பலாலி விமான நிலையம் 774.98 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பயிர்ச்செய்கையில் இராணுவத்தினர்</h2><p> 

எதிர்காலத்தில் விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக மேலதிகமாக காணிகள் தேவைப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையானது விமான படை ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், முப்படை மற்றும் பிரதேச செயலக பிரிவுகளை ஒன்றிணைந்து பொது கொள்கை அடிப்படையில் முரண்பாடற்ற வகையில் இந்த கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f02621-a585-444c-a027-38552f6de67a/26-6a50b5995ecb3.webp' /></p><p>
</p><p>

இந்த பகுதியில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

தமது சுய தேவைக்காகவே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.</p><p>இது வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல,

பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டடத்தை புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.</p><p> இந்த வைத்தியசாலை 27.9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலை புனரமைப்புக்கு 99.3 மில்லியன் ரூபா மதிப்படப்பட்டு 55 மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஆண்டு 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முப்படையின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை தற்போது விடுவிப்பதற்கான இயலுமை கிடையாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T09:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னணு விசா! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-review-process-of-issuing-electronic-visas-1783670001"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-review-process-of-issuing-electronic-visas-1783670001</id>
            <summary type="text">மின்னணு விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக முந்தைய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை இந்த அரசாங்கம் மறுபரிசீலனை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னணு விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக முந்தைய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை இந்த அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.
</p><p>
அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் இன்று(10) மேல்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் விவேக சிறிவர்தனவுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மனு விசாரணை</h2><p>
</p><p>
மேல் நீதிமன்ற நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன், பிரதம நீதிபதி பிரித்திபத்மன் சுரசேன இந்த மனுவை விசாரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f25f425-0879-4931-bea2-88e3204feecc/26-6a50aac5e6ec1.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நீதிமன்றத்தில் முன்மொழிவுகளை முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மின்னணு விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை விசாரிக்க தற்போதைய அமைச்சரவை ஒரு துணைக்குழுவை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், மேற்படி குழு தற்போது சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஒரு திகதியை கோரியுள்ளார்.</p><h2>மனுதாரர்கள்</h2><p>

இதேவேளை, தற்போதைய அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், செப்டம்பர் 29 அன்று இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2987e45-0992-4a6e-b2cd-2c8f60837fe3/26-6a50aac69d83e.webp' />&nbsp;</p><p>
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பட்டாலி சம்பிக ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T08:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charith-abeyasinghehanded-1-crore-sajith-premadasa-1783668290"></link>
            <id>https://ibctamil.com/article/charith-abeyasinghehanded-1-crore-sajith-premadasa-1783668290</id>
            <summary type="text">பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>ஊழல் மோசடியில் இதுவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனதான் முன்னிலையில் இருந்தது என்றும் தற்போது&nbsp; ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பின்தள்ளியுள்ளது என்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன முன்வைத்த கருத்துக்களில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
நாடளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>
</p><h2>கோபமடைந்த&nbsp;ஹர்ஷ டி சில்வா</h2><p>இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p>“கடந்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வத்தளை பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிட்ட யோஹான் விக்ரமசிங்க தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9e7375-1b1a-461a-9614-5b9bea6a70e6/26-6a50a2e8ad8ed.webp' /></p><p> </p><p>இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யபட்டுள்ளார்.

இதுவரை காலமும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் நபர்களுடன் தொடர்புக் கொண்டு முன்னிலையில் இருந்தது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது அந்த கட்சியை பின்தள்ளியுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்த போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, எனவே நான் இப்போது கூறியதைக் கேட்டு நாடளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏமாற்றமடைவதும் கோபமடைவதும் நியாயமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. </p><p>நான் எந்தவொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடவில்லை.

எனது கூற்றைக் கேட்டு கோபமடைந்த ஹர்ஷ டி சில்வா போன்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள், குற்றம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
</p><p>

நாட்டில் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான போராட்டத்தை, எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் எமது அரசாங்கம் பின்வாங்காது.'' என கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் மாயம் : நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட COPF குழுவின் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/usd-2-5-million-missing-copf-report-in-parliament-1783668877"></link>
            <id>https://ibctamil.com/article/usd-2-5-million-missing-copf-report-in-parliament-1783668877</id>
            <summary type="text">இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்புக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான, அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்புக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான, அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா இன்று (10) இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்ட சம்பவம், ஒரு சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என அரச நிதி பற்றிய குழு கண்டறிந்துள்ளது.</p><p></p><h2>தேசிய கணக்காய்வு அலுவலகம்</h2><p>குறித்த அறிக்கையில், ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள் செலுத்தல் செயல்முறை குறித்து, தேசிய கணக்காய்வு அலுவலகம் உடனடியாக கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab14c37-3fc9-43c9-9332-f47d137c2d1f/26-6a50a70dcc438.webp' />&nbsp;</p><p>இந்த மோசடி விவகாரத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்ட மா அதிபரின் பொறுப்பாகும்.” என தெரிவித்தார்.</p><p>இதேவேளை, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம், ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>கட்சித் தலைவர்களின் கூட்டம்</h2><p>
</p><p>
இதனிடையே, குறித்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரம் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க கோரிக்கை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779bb8fb-d28a-4223-8c57-9ccc8a820b58/26-6a50a70ce2d52.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T08:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உட்பட மாவட்டங்களில் 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heat-advisory-issued-for-eight-districts-1783664072"></link>
            <id>https://ibctamil.com/article/heat-advisory-issued-for-eight-districts-1783664072</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் கடுமையான வானிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் கடுமையான வானிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘வெப்ப எச்சரிக்கை’ (Heat Advisory) விடுத்துள்ளது.
</p><p>


பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (Heat Index) வழக்கத்தை விட அதிகரித்து, 'எச்சரிக்கை' நிலையை எட்டக்கூடும்.



வட, கிழக்கு மற்றும் தென்னகத்தின் குறிப்பிட்ட 8 மாவட்டங்களின் சில பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக காணப்படுகின்றது.</p><p>



உடலின் நீர்ச்சத்தைப் பேண அடிக்கடி போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். பகல் நேரங்களில் நேரடியாக வெயில் படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.



வேலைகளைக் குறைத்தல்: பகலின் கடுமையான வெப்பம் நிலவும் நேரங்களில், கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>


இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94456c89-7bc9-4888-babe-a9c2ac010a7f/26-6a508fa13a0de.webp' /></p><p>முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>



இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T07:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-road-opened-for-kataragama-pilgrims-1783666313"></link>
            <id>https://ibctamil.com/article/forest-road-opened-for-kataragama-pilgrims-1783666313</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்
உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி
உகந்தை மலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்
உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி
உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p> இன்று (10) காலை 5.30 மணியளவில் 'அரோகரா' கோஷத்துடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இந்தப் பாதை&nbsp;வருகின்ற 24 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை
முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை
வழிபாடுகள் இடம்பெற்றன.</p><p></p><h2>குமண தேசிய பூங்கா</h2><p> அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட முக்கிய
அதிதிகளால் உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை பக்தர்களின்
பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40cf20eb-a15b-42d6-883c-9e05ef98ce1d/26-6a509d53a5932.webp' /></p><p> </p><p>இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டுப்
பயணிகள் எனப் பலரும் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>ஆடிவேல் உற்சவம்</h2><p>சுமார் 80 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அடர்ந்த காடு, மேடு, சேறு மற்றும்
முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான பக்கர்கள் கதிர்காமம்
நோக்கித் தங்களது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5e959c-417d-4a10-a257-b018564c867c/26-6a509d5484976.webp' /></p><p>


இவ்ஆண்டிற்கான கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் 15ஆம்
திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க
கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன்
நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா கனவை தொலைத்த மொராக்கோ! பிரித்தானிய தலைநகரில் பெரும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/morocco-loses-to-france-clashes-erupt-in-london-1783667031"></link>
            <id>https://ibctamil.com/article/morocco-loses-to-france-clashes-erupt-in-london-1783667031</id>
            <summary type="text">

 மொராக்கோ பிரான்சிடம் மீண்டும் தோல்வியடைந்ததால் அந்நாட்டின் ஃபிஃபா உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்த நிலையில் லண்டனில் ரசிகர்களுக்கும் காவல்துறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

 மொராக்கோ பிரான்சிடம் மீண்டும் தோல்வியடைந்ததால் அந்நாட்டின் ஃபிஃபா உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்த நிலையில் லண்டனில் ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
</p><p>
பரவலான அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சம் இருந்தபோதிலும் பாரிஸ் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்த நிலையில், லண்டனில் இவ்வாறு மோதல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>குழப்பமான மோதல்கள்</h2><p>

இந்த நிலையில், லண்டனின் எட்ஜ்வேர் வீதி குழப்பமான மோதல்களின் களமாக மாறியதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb40d524-6a08-4a76-a57e-385f741fc368/26-6a509df057cf9.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Latest News in Cyprus - Philenews</i></p><p>
</p><p>
அதன்போது, அப்பகுதியில் உருவான பெருங்கூட்டங்களைக் கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் காவல்துறை களமிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், கலவரத் தடுப்பு உடைகள் அணிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை நோக்கி ஒளிவிளக்குகள், பட்டாசுகள் மற்றும் போத்தல்களை வீசுகின்றமை பதிவாகியுள்ளது.</p><h2>அரசியல் எதிர்வினை</h2><p>

அறிக்கைகளின்படி, கலவரங்களின்போது காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0926a9e6-5ac6-4441-a28e-95c31b031d6e/26-6a509df109051.webp' /></p><p>இதேவேளை, இந்தக் காட்சிகள் அரசியல் ரீதியான எதிர்வினைகளையும் தூண்டியதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p>
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கும் வகையில், பாரிஸில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ கொடிகளை ஏந்திய கார்கள் ஒலிப்பான்களை எழுப்பி ஒன்றாகக் கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T07:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-investigations-handed-cid-1783659692"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-investigations-handed-cid-1783659692</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்ற வேண்டும் என நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்ற வேண்டும் என நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p> 
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக பார்க்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef1a4adb-81de-407f-9e81-27b33e651b46/26-6a5083095c169.webp' /></p><p>
</p><p>

எனவே தற்போதைக்கு சிறைச்சாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அனுமதியின்றி எந்தவொரு மாற்றத்திற்கும் அனுமதி்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

சிறைச்சாலை மோதல் காரணமாக&nbsp; அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்&nbsp; சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T06:53:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/support-of-the-writ-petition-filed-suresh-sallay-1783665058"></link>
            <id>https://ibctamil.com/article/support-of-the-writ-petition-filed-suresh-sallay-1783665058</id>
            <summary type="text">

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

பெங்கமுவே நலக்க தேரர், தேசபக்தி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர மற்றும் பல தரப்பினர் இந்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரியவருகிறது.</p><p></p><h2>நீதிமன்ற அறிவிப்பு<span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></h2><p>

இந்த நிலையில், குறித்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்களான நீதிபதிகள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84633ad2-446a-4bf3-ae83-65175c3b47f9/26-6a5095013dc0c.webp' /></p><p>
</p><p>
இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், இடைக்கால மனு தொடர்பாக நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பினால் மட்டுமே இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அந்த வகையில், வாதங்கள் முடிவடைந்த பின்னர் இந்த இடைக்காலக் மனுக்குள் பரிசீலிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோகந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T06:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின் காணாமல் போன துப்பாக்கி மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gun-missing-after-negombo-prison-clash-recovered-1783663671"></link>
            <id>https://ibctamil.com/article/gun-missing-after-negombo-prison-clash-recovered-1783663671</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலை அடுத்து காணாமல்போன ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலை அடுத்து காணாமல்போன ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

குறித்த துப்பாக்கி சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 6ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த துப்பாக்கி காணாமல்போயிருந்தது.</p><p></p><h2>போகம்பரை சிறைச்சாலை</h2><p>அத்துடன்&nbsp;விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான 22 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளையும் 10 ரி58 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af450852-6d8e-4e00-9ad6-56db303eaf2a/26-6a509297dd77d.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, கண்டி - பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளை அடைப்பதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:43:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவை தகர்த்த பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-crushes-africa-s-world-cup-dream-fifa-1783664407"></link>
            <id>https://ibctamil.com/article/france-crushes-africa-s-world-cup-dream-fifa-1783664407</id>
            <summary type="text">2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி பிரான்ஸ் கால்பந்து அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து,&amp;nbsp; உலகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி பிரான்ஸ் கால்பந்து அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து,&nbsp; உலகக் கோப்பை மீதான ஆப்பிரிக்காவின் ஆர்வம் முடிவுக்கு வந்துள்ளது.</p><p>கனடாவை உறுதியான வெற்றியில் வீழ்த்தி 16 வது சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ, இப்போட்டியில் எஞ்சியிருந்த கடைசி ஆப்பிரிக்க நாடாக இருந்தது.</p><p> அவர்கள் வெளியேற்றப்பட்டதால், 48 அணிகள் பங்கேற்க உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகளில் எந்தவொரு ஆப்பிரிக்க அணியும் இடம்பெறாது.</p><p>
பிரான்சின் இந்த ஆட்டம் தீர்க்கமானதாக அமைகிறது.
ஆட்டத்தின் தொடக்கக் கட்டங்களில் மொராக்கோ சிறப்பாக விளையாடி, சிறப்பான தடுப்பாட்டத்தால் பிரான்சுக்கு சாவால் விடுத்தது.</p><p></p><h2>கிலியன் எம்பாப்பே</h2><p>&nbsp;இறுதியாக 60-வது நிமிடத்தில், கிலியன் எம்பாப்பே கோல் வலைக்குள் பந்தை அனுப்ப, பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/183d52a5-20de-4694-9746-6a339cbd93dc/26-6a5092cebb004.webp' /></p><p>
</p><p>வெறும் ஆறு நிமிடங்கள் கழித்து, உஸ்மான் டெம்பலே பிரான்சின் முன்னிலையை இரட்டிப்பாக்கி, அந்த அணியை ஆட்டத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறச் செய்தார்.</p><p> பதிலடி கொடுக்கும் நோக்கில் மொராக்கோ அணி முன்னேறிச் சென்றது, ஆனால் பிரான்சின் தற்காப்பை அவர்களால் உடைக்க முடியவில்லை. </p><p>இதனால், ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.
முக்கியமான தருணங்களில் பிரான்ஸ் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்தியது, அதே சமயம், நம்பிக்கையளித்த ஆட்டப்பகுதிகளை மொராக்கோவால் கோல்களாக மாற்ற முடியவில்லை.</p><p>அவர்களின் உலகக் கோப்பைப் பயணம் காலிறுதியுடன் முடிவடைந்தபோதிலும், ஆப்பிரிக்காவின் வலிமையான கால்பந்து நாடுகளில் ஒன்றாகத் திகழ மொராக்கோ மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளது.</p><p></p><h2>சிறப்புமிக்க அரையிறுதி</h2><p>
2022 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிப் போட்டியில் பங்கேற்று பெற்ற உத்வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டது.</p><p><b>FIFA-வின் அதிகாரப்பூர்வ அட்டவணைப்படி, மீதமுள்ள போட்டிகள் பின்வருமாறு</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528ab5da-dc9a-49bc-858f-b7aa1e55207d/26-6a5092ce1319a.webp' /></p><p>வெள்ளிக்கிழமை, ஜூலை 10: பெல்ஜியம் vs ஸ்பெயின்</p><p>சனிக்கிழமை, 11 ஜூலை: நோர்வே vs இங்கிலாந்து </p><p>சனிக்கிழமை, 11 ஜூலை: அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து</p><p> உலகக் கோப்பைக்கான போட்டி அதன் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெற்றியாளர்கள் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T06:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-neared-1-2-million-1783663452"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-neared-1-2-million-1783663452</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதுகொழும்பில் நடைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளது</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>வெளிநாட்டுச் செலாவணி </h2><p>
 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை இலங்கையினால் ஈட்ட முடிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3791561-dee4-4067-ba2d-efcea5aa1e5f/26-6a508cbbdd9b5.webp' /></p><p>இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான வளர்ச்சியை அடுத்து, 2026 ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்படும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்றும் இணை அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்: இலங்கை வைத்தியர்கள் வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conjoined-twins-successfully-separated-at-peradeni-1783655687"></link>
            <id>https://ibctamil.com/article/conjoined-twins-successfully-separated-at-peradeni-1783655687</id>
            <summary type="text">ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனையில் மேற்கொள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட குழந்தைகள் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இந்த அறுவை சிகிச்சையின்போது, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான லினுலி தருல்யா மற்றும் லித்துலி மனுல்யாவை தனித்தனியாக வெற்றிகரமாக பிரித்தனர்.</p><p></p><h2>&nbsp;சிக்கலான குழந்தை மருத்துவ நடைமுறை</h2><p>மாவனெல்ல, அரநாயக்கவில் 2021ஆம் ஆண்டு பிறந்த இந்த இரட்டையர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிபுணர்களின் நெருங்கிய கண்காணிப்பில் இருந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a6ad0b4-215d-47e1-811b-ed5340ae78c3/26-6a50828a034d2.webp' /></p><p>
</p><p>
இந்தக் காலகட்டத்தில், மருத்துவக் குழுக்கள் இறுதிப் பிரிப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, விரிவான ஆய்வுகள், திட்டமிடல் மற்றும் பல நடைமுறைகளை மேற்கொண்டனர்.</p><p>
</p><p>
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான குழந்தை மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த அறுவை சிகிச்சையின் விளைவாக, அந்த இரட்டையர்கள் இரண்டு தனித்தனி குழந்தைகளாக வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படும் இந்தச் சம்பவம் இலங்கை மருத்துவ நிபுணர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T05:37:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உற்று நோக்கும் தமிழகம் - உச்சக்கட்ட பாதுகாப்பு: கரூர் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-minister-vijay-to-visit-karur-today-1783658631"></link>
            <id>https://ibctamil.com/article/chief-minister-vijay-to-visit-karur-today-1783658631</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.
</p><p>முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் செல்லும் வழிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தீவிர மோப்ப நாய் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>முதன்முறையாக கரூர்</h2><p>
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8188632-5437-4f66-9059-66c633dc9a33/26-6a50897776eae.webp' /></p><p>
</p><p>
குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் இன்று கரூர் செல்கிறார்.
</p><p>
இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விதித்துள்ளார்.</p><p></p><h2>5,000 பேருக்கு மட்டுமே அனுமதி&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையைத் தாண்டி யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4578e8-eb54-435b-82f1-a26f9b4525e6/26-6a508aa0744c4.webp' /></p><p>

தகுதியுள்ளவர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டுவைத்திருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்குள் நுழைய முடியும். </p><p>இந்தச் சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரூரில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரச பணி வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T05:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-man-dies-jumping-infront-of-train-in-jaffna-1783657496"></link>
            <id>https://ibctamil.com/article/family-man-dies-jumping-infront-of-train-in-jaffna-1783657496</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.யாழ் மாவட்ட செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.</p><p>யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று (09) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>கொழும்புத்துறையை
சேர்ந்த 42 வயதான தங்கவடிவேலு பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;யாழ் தொடருந்து நிலையம்</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புற்றுநோய் வியாதியால் பாதிக்கப்பட்டு நீண்டகால சிகிச்சை பெற்று
வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d57a357-1904-4aa5-bb15-ff5f5f3ce97a/26-6a507c04893c2.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவைக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
</p><p>
பின்னர் அவரது சடலமானது யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு தொடருந்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T05:07:21+00:00</updated>
        </entry>
    </feed>
