<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-11T06:32:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சேதங்களை விசாரிக்க விசேட குழு நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-committee-appoint-investigate-negombo-prison-1783740981"></link>
            <id>https://ibctamil.com/article/new-committee-appoint-investigate-negombo-prison-1783740981</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை போதைபொருள் கடத்தல் வன்முறை சம்பவத்தில்&nbsp;8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p> </p><p>

மேலும் மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதிவி உயர்வும், இழப்பீடுகளை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c50a870a-cecc-48fa-9a77-d47629d4c234/26-6a51c7eeca08d.webp' /></p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் காரணமாக அந்த வளாகம் கைதிகளுக்கு பொருத்தமான இடமில்லை என முடிவு செய்யப்பட்டது. </p><p>

இந்த நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறை - மரணங்கள் குறித்த விசாரணைக்கு அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-says-sri-lanka-answer-prison-deaths-1783739395"></link>
            <id>https://ibctamil.com/article/international-says-sri-lanka-answer-prison-deaths-1783739395</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட
கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட
கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
</p><p>
31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி
மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
</p><p>
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள்
சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை
சிறைக்குள் செல்ல, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி
மறுக்கப்பட்டது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு
அறிவித்துள்ளது.</p><p></p><h2>பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள்&nbsp;</h2><p>

கைதிகள் மாற்றப்பட்ட இடங்களில் பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள்
நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தடுப்புக்காவல்
நிலையங்களுக்குள் தடையின்றி செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு
அனுமதி வழங்கப்பட வேண்டுமென, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து பிற சிறைகளுக்கு
மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என
சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489f2f2e-02c3-43a3-b4ec-a0359284ed63/26-6a51d889efda2.webp' /></p><p>நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கங்கள்
தவறிவருவது, சிறைக்கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களை
ஆபத்தில் தள்ளுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பிரதிப்
பணிப்பாளர் பாபு ராம் பந்த் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள்
நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை
எடுக்க அரசாங்கங்கள் தவறிவருவது, கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின்
உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீண்டகால விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவல், சிறைகளில் நெரிசல், மற்றும்
போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏராளமானோரை
சிகிச்சைக்கு அனுப்பாமல் தடுத்து வைத்தல் ஆகியவை ஐ.நா. அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாகும்.
</p><p>
இலங்கை நீதி அமைச்சு வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்களுக்கு அமைய, சுமார்
10,000 பேரை மாத்திரமே தங்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின்
சிறைகளில் 41,000-ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124"></link>
            <id>https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124</id>
            <summary type="text">தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&amp;nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.</p><p>ஜூலை 9 மற்றும் 10- ஆம் திகதிக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகப் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது இரவாகக் குறைந்திருந்தது.</p><p></p><h2>கொலை செய்ய ஈரான் முயற்சி</h2><p>சில நாட்களுக்கு முன்பு வரை வழக்கமாக 18 முதல் 22 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குள் வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றதாக அது கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e35e7271-2571-4917-bf0c-24057f19f633/26-6a51cb4b543a9.webp' /></p><p>அதே நேரத்தில், கப்பல்கள் தங்கள் பயணம் செய்வதை மறைப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து விடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும்&nbsp; விண்ட்வார்ட்&nbsp;நிறுவனம் கூறுகிறது.</p><p>தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை, படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலை ஈரான் அரசாங்கம் செயல்படுத்தினால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கித் தயார் நிலையில் வைக்கப்பட்டு குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katunayake-istanbul-flight-struck-by-bird-1783745641"></link>
            <id>https://ibctamil.com/article/katunayake-istanbul-flight-struck-by-bird-1783745641</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்த குறித்த விமானம்&nbsp;காலை 10:24 மணிக்கு கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.</p><p>இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dccb4bc-b3da-4565-ad3c-0ab67d983395/26-6a51d840d5005.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி&nbsp;இன்று (11) காலை புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு களப்பு கடற்பரப்பிற்கு மேலாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>பாதுகாப்பான அவசரகால தரையிறக்கத்திற்குத் தயாராகும் வகையில் எரிபொருளை குறைத்தபடி, அந்த விமானம் முன்னதாக சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டது&nbsp;</h2><p>TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f4b491-0a5d-4cc4-a390-7230e44184bc/26-6a51d27dd5214.webp' /></p><p>இந்த விமானம் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருவதுடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான நிலைய அவசர கால நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பிரதி அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pension-scheme-for-migrant-workers-working-in-sl-1783741581"></link>
            <id>https://ibctamil.com/article/pension-scheme-for-migrant-workers-working-in-sl-1783741581</id>
            <summary type="text">இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.</p><p></p><h2>பிரத்தியேக செயலி</h2><p>
</p><p>
அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46891d72-c003-4efc-b38f-7cdb8b170ac1/26-6a51c4adc9dc0.webp' /></p><p>
சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் 2.1 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்க்கின்றோம்.</p><p></p><h2>கூட்டு முயற்சி</h2><p>தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d398af45-61a2-47c5-b73d-ed825bcdabb7/26-6a51c4ae9f242.webp' /></p><p>
</p><p>எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-development-tourism-1783739524"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-development-tourism-1783739524</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அங்கு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, பொருளாதார நிலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற அமர்வின் போது நடைபெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தை சுற்றுலா பிரதேசத்தின் முக்கியமான மைய பிரதேசமாக மாற்றுவதாக இருந்தால் அதற்கான போக்குவரத்து ஸ்தானங்களை உறுதிப்படுத்த வேண்டும். இதில் முதலாவது பலாலி விமான நிலையம் முக்கியமானது.</p><p></p><h2>இந்தியாவின் நிதியுதவி&nbsp;&nbsp;</h2><p> </p><p>இந்தியா இதனை அபிவிருத்தி செய்ய தயாராக இருந்தாலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அந்த உதவியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். மூன்று கட்டமாக அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இணங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caac7fc1-a2ca-4b42-ab00-86d211c62b4c/26-6a51b9580c615.webp' /></p><p> அதில் ஓடுபாதை அபிவிருத்தியை செய்ய வேண்டும். பிராந்திய விமானங்கள் வந்து இறங்கக்கூடியவாறு இருக்க வேண்டும். அப்படியென்றால் சிங்கப்பூர், டுபாய் போன்ற இடங்களில் இருந்து விமானங்களை இறக்கக்கூடியதாக இருக்கும்.</p><p>இந்தியா இலவசமாக அதற்கான உதவியை வழங்க முன்வந்த போதும் அதனை அனுபவிக்காமல் இருப்பது துரதிஸ்டவசமானது. இதன்படி அதனை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p><p></p><h2>இராணுவ பிரசன்னம்</h2><p>
</p><p>
இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் அவர்கள் வர தயாராக இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd3b578-6f05-4168-bf09-90e286f7c274/26-6a51b958e8142.webp' /></p><p> </p><p>இதற்காக முதலாவதாக அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும்.

இராணுவ எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கணிசமான மாற்றம் ஏற்பட்டால் எமது மண்ணை சார்ந்த மக்களே யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலீடுகளை செய்து பொருளாதார இருப்புகளை முன்னேற்றலாம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/31-year-old-man-dies-of-electric-shock-in-palai-1783739791"></link>
            <id>https://ibctamil.com/article/31-year-old-man-dies-of-electric-shock-in-palai-1783739791</id>
            <summary type="text">பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.</p><p></p><h2>மின்சார இணைப்பு வேலை</h2><p>
</p><p>
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,&nbsp; குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம்
தாக்கி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65aacb7f-9f2b-46d0-8a70-43277cf1f687/26-6a51b9b1cd34e.webp' /></p><p>இந்நிலையில், உடனடியாக பளை வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும் போது
இளைஞன் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது விடுமுறையாக ஆடிப்பிறப்பு - நாடாளுமன்றத்தில் எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-pirappu-should-be-declared-public-holiday-1783736457"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-pirappu-should-be-declared-public-holiday-1783736457</id>
            <summary type="text">ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்.

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு பிரேரணையை முன்வைத்தார்.</p><p>அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

 ஆடிப்பிறப்பு தமிழர் மரபு, பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான நாளாகும் </p><p></p><h2>பொது விடுமுறை</h2><p> </p><p>இதனால் அதனை தேசிய ரீதியில் அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறையாக அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/190cadc9-1276-4d69-828a-2f211dc1f555/26-6a51ae1817b54.webp' /></p><p>மேலும், இத்தகைய நடவடிக்கை இலங்கையின் மத மற்றும் கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், குறிப்பாக இந்தியாவிலிருந்து வருகை தரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டிற்கு ஈர்க்க உதவும். </p><p>அதன் மூலம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வருமான உயர்வு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நாட்டிற்கு கிடைக்கும்.</p><p>எனவே, ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பாக அரசு சாதகமான பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T03:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-train-service-for-jaffna-nallur-festival-1783735469"></link>
            <id>https://ibctamil.com/article/special-train-service-for-jaffna-nallur-festival-1783735469</id>
            <summary type="text">எதிர்வரும் நல்லூர் திருவிழாக் காலத்தைக் கருத்திற் கொண்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நல்லூர் திருவிழாக் காலத்தைக் கருத்திற் கொண்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை ஆகிய இடங்கள் பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் என மத வேறுபாடின்றி அனைவரும் வழிபட வேண்டிய மற்றும் பார்வையிட வேண்டிய புனித ஸ்தலங்களாகும்.</p><p></p><h2>சில குறைபாடுகள்</h2><p> </p><p>வடக்கிற்கான தொடருந்து பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடருந்துகள் மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fc17f65-f452-47a5-b225-f0e3bf8fb3e2/26-6a51a6f62bbc5.webp' /></p><p>சில குறைபாடுகள் இருந்தாலும் திருவிழாக் காலத்தில் மக்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>இதேவேளை காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்திருந்தது.</p><p>தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த (07.07.2026) அம் திகதி வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T02:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் உலகம் - ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-demands-iran-to-strait-of-open-strait-of-hormuz-1783734369"></link>
            <id>https://ibctamil.com/article/us-demands-iran-to-strait-of-open-strait-of-hormuz-1783734369</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்வெளியாகி உள்ளது.</p><p>அமெரிக்கா மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளன.</p><p>தெஹ்ரானின் உள்ளே காணப்படும் அதிகாரப் போட்டிகள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையும் அதைக் கடைப்பிடிப்பதையும் கடினமாக்கியுள்ளதாகவும் இவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பைக் கொலை செய்ய சதி</h2><p>ஈரானுடனான தற்போதைய நிலைமையை செய்தியாளர்களிடம் விவரிப்பதற்காக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை சீர்குலைக்க முயன்ற ஈரானிய கடும்போக்காளர்கள் காரணமாகவே இந்த வாரம் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44f36314-4081-40b8-8edf-5d2b58019477/26-6a51a3320af0d.webp' /></p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.</p><p>சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.&nbsp;இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

</p><p>இவ்வாறான பின்னணியில், ஒருவேளை ஈரான் தன்னைபடுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T02:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783731065"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783731065</id>
            <summary type="text">ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7048b490-7876-422c-a19f-865ec5759c1b/26-6a51937bb971a.webp' /></p><p>இது ஒரு எச்சரிக்கை மட்டமாகக் கொள்ளப்படும், இது மனித உடலில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் வெப்பச் சுட்டெண் என அழைக்கப்படும்.</p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>வறட்சியான வானிலை&nbsp;</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b2e7eb3-5a63-4717-838c-90d72edb336e/26-6a51937b128db.webp' /></p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் கடன் விளம்பரங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slcert-warns-public-over-loan-app-scams-1783730559"></link>
            <id>https://ibctamil.com/article/slcert-warns-public-over-loan-app-scams-1783730559</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் பகிரப்படும் உடனடி மற்றும் அவசர கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் பகிரப்படும் உடனடி மற்றும் அவசர கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு (SLCERT) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த குழு, “எவ்வித ஆவணங்களும் இன்றி 5,000 முதல் 500,000 ரூபாய் வரை கடன் தருவதாக விளம்பரங்கள் பகிரப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>தனிப்பட்ட புகைப்படங்கள்</h2><p>இத்தகைய செயலிகளைப் பதிவிறக்கும் போது உங்கள் கைபேசியின் கட்டுப்பாடு மோசடியாளர்களிடம் சென்றுவிடுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52140dc2-7a53-4180-b86e-946b91fa2538/26-6a5191818e706.webp' /></p><p>இதன் மூலம் தனிப்பட்ட புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்புகள் திருடப்படுகின்றன.</p><p>
</p><p>கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கைபேசியில் உள்ள தொடர்புகளுக்கு மோசடியாளர்கள் அழைப்பு விடுத்து அவமானப்படுத்துகின்றனர்.</p><p>
</p><p></p><h2>கடன் விளம்பரங்கள்</h2><p>எனவே சந்தேகத்திற்கிடமான கடன் விளம்பரங்களை அணுகவோ மற்றும் அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கவோ வேண்டாம்.
</p><p>
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை மட்டும் நாடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c83dd4ac-0f25-42f8-bb38-3d8e48c9b9d3/26-6a519180df7f6.webp' /></p><p>

இத்தகைய மோசடிகளை உடனே உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடளியுங்கள்.</p><p>

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க அறியப்படாத நபர்களிடமோ அல்லது செயலிகளிடமோ எவ்வித நிதித் தகவல்களையும் பகிர வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ravi-karunanayake-summoned-by-bribery-comm-1783729276"></link>
            <id>https://ibctamil.com/article/ravi-karunanayake-summoned-by-bribery-comm-1783729276</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஆணைக்குழுவினால் தற்போது மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p> 

ஆணைக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இதனடிப்படையில் இம்மாதம் 17 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாரு கருணாநாயக்கவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>தேசிய லாட்டரி சபைக்கு (National Lotteries Board) விசேட திட்டமொன்றின் கீழ் ஊழியர்களை இணைத்துக்கொண்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே ரவி கருணாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8df8b08-fe39-440e-9647-10a0aa7cd68f/26-6a518c7e19bf2.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பாக தேசிய லாட்டரி சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேராவும் இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:31:06+00:00</updated>
        </entry>
    </feed>
