<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-07T17:28:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786122174"></link>
            <id>https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786122174</id>
            <summary type="text">நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை (AAT) கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகர, பிரதி காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை (AAT) கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
</p><p>
சபையின் உத்தரவின்படி, குறித்த பதவி உயர்வானது 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் பின்னோக்கிச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த பின்னரே, அவருக்கு இந்தப் பதவி உயர்வை வழங்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>CID பணிப்பாளர் பதவி</h2><p>
</p><p>
நியாய சபையின் கட்டளைக்கு அமைய, காவல்துறை மா அதிபர் இன்றையதினம்(07) வெள்ளிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ காவல்துறை அறிவித்தலை வெளியிட்டு, அவரது பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6271ffd8-d631-438e-945f-e13be24130d2/26-6a76113a6b1a3.webp' /></p><p> 

இந்தப் பதவி உயர்வு காரணமாக, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி உதவி காவல்துறை பரிசோதகராக இலங்கை காவல்துறை சேவையில் இணைந்த ஷானி அபேசேகர, தனது பணிக்காலத்தில் காவல்துறை பரிசோதகர், தலைமை காவல்துறை பரிசோதகர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) உள்ளிட்ட பல நிலைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T17:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை! ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-saudi-arabia-over-pakistan-turkey-deal-1786108495"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-saudi-arabia-over-pakistan-turkey-deal-1786108495</id>
            <summary type="text">பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் சவூதி அரேபியா புதிதாகக் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டில் ஈரான் தனது முதல் எதிர்வினையை இவ்வாறு வெளியிட்டுள்ளது.
</p><p>

இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு ஒருபோதும் உத்தரவாதம் அளிக்காது என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
</p><p>
</p><p></p><h2>அமெரிக்கர்களை&nbsp;சார்ந்திருந்த&nbsp;பாதுகாப்பு </h2><p>விடயம் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e3ba00-067b-4d43-829f-84f573b384da/26-6a75daa1e0ac1.webp' /></p><p>
</p><p>"பல தசாப்தங்களாக அமெரிக்கர்களை ஒருதலைப்பட்சமாகச் சார்ந்திருந்தது பாதுகாப்பைத் தரத் தவறியதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான ஒரு காகித ஒப்பந்தம் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவூதியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
</p><p>
 ஈராக் மற்றும் யேமனில் உள்ள, ஈரான் ஆதரவு பெற்ற தாக்குதல் குழுக்கள், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் ஒரு பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதலை சவூதி அரேபியா மீது நடத்துவதற்கு தயாராகி வருவதாக வெளியாகிய தகவலை அடுத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, சவூதி அரேபியா மீதான ஒரு பெரிய தாக்குதலின் விளைவுகள் குறித்து தெஹ்ரானுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும்.</p><p>

ஏனெனில் அந்தத் தாக்குதல் இப்போது பாகிஸ்தான் மற்றும் துருக்கியையும் உள்ளிழுத்து, போரை வியத்தகு முறையில் விரிவுபடுத்தும் என நம்பப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகள் 500 - ஐ தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786112388"></link>
            <id>https://ibctamil.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786112388</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய இன்றைய தினம்(07.08.2026) 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>56ஆவது நாளாக முன்னெடுப்பு</h2><p> </p><p>

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900e59b6-e580-4f61-adbd-5009c1b8f379/26-6a75e985ab0d9.webp' /></p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதில், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புனரமைக்கப்படாத பாலம்! உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523"></link>
            <id>https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523</id>
            <summary type="text">கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி
தரும்படி&nbsp;இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பாலத்தின் அடித்தளங்கள்</h2><p>

1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக
பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின்
ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல
போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம்
ஆண்டு மீட்டேடுத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9dccaef-f9a5-43d6-bc7a-e90bbfaf75a6/26-6a75e624a7afc.webp' /></p><p>அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள்
வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின்
வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.</p><p>தற்போது பாலத்தின்
அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்
உள்ளது.</p><p> இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள்
இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்
பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955"></link>
            <id>https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955</id>
            <summary type="text">2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் முதுகலைப் படிப்பைத் தொடர வெளிநாடுகளுக்குச் சென்றிருந்ததாகவும், மற்றவர்கள் வேலைவாய்ப்புக்காகவோ, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிநாடு சென்றிருந்ததாகவும், கூறியுள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊதியமில்லா விடுப்பு&nbsp;</h2><p>

2020-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டுக்குள் 1,429 மருத்துவர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>


அதே காலகட்டத்தில், 140 சிறப்பு மருத்துவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்திற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.</p><p>

வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு பதவி விலகும் அல்லது பணியிலிருந்து விலகும் மருத்துவர்கள் குறித்த தரவுகளை சுகாதார அமைச்சகம் பராமரிப்பதில்லை என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636"></link>
            <id>https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. </p><p>

முன்மொழியப்பட்ட இந்த செயல்முறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>33 சிறைச்சாலைகள் </h2><p>இந்த செயல்முறையானது அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை காவல்துறை, சிறப்பு பணிப்படை (STF) மற்றும் தேவைப்படுமிடங்களில் ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821d0f98-6baf-45d3-a3e7-af4a2371e6d2/26-6a75ee65de6cb.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டம் அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T14:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறை கலவரம்! 28 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்பு&amp;nbsp;பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு&nbsp;</u></b></h5><p>பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 இன்று காலை (07) குறித்த சிறையில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் , காவல்துறையினர் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை என்பன வரவழைக்கப்பட்டன.
</p><p>
 இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aeb4c60-5885-4c3d-9cc0-4c8869c33923/26-6a75dd9dd39db.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர் பாதுகாப்புப் படைகள் சிறையின் கட்டுப்பாட்டை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வசம் ஒப்படத்துள்ளனர்.</p><h4><b>🛑 மூன்றாம் இணைப்பு</b></h4><p>பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஆரம்பமாகியுள்ளதுடன், கைதிகள் சிறை அதிகாரிகளை நோக்கிப் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பின்வரும் பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><ul><li>
இலங்கைப் காவல்துறையினர்</li><li>

காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)
</li><li>
கலாபக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Riot Control Unit)
</li><li>
இலங்கை விமானப்படை
</li></ul><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 இரண்டாம் இணைப்பு</u></b></h5><p>பல்ல சேன சிறையில் கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><u><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></u></h5><p>நீர்கொழும்பு - பல்லசேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>சிறையிலும் கலவரம்</h2><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லசேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6584e1-854a-422b-84fd-5f478c1c06ed/26-6a75765ad8d34.webp' /></p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலுக்கு எதிராக சவூதியுடன் பாகிஸ்தான் - துருக்கி ஒன்றிணைந்தன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saudi-mobilize-powerful-arms-forces-against-iran-1786106366"></link>
            <id>https://ibctamil.com/article/saudi-mobilize-powerful-arms-forces-against-iran-1786106366</id>
            <summary type="text">ஈரான் போர் சவூதி அரேபியாவை நெருங்கி வருவதால், இஸ்லாமிய உலகின் மிகவும் வலிமைமிக்க இரண்டு இராணுவ சக்திகளை தனது பாதுகாப்பிற்காக தற்போது அணிதிரட்டியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் சவூதி அரேபியாவை நெருங்கி வருவதால், இஸ்லாமிய உலகின் மிகவும் வலிமைமிக்க இரண்டு இராணுவ சக்திகளை தனது பாதுகாப்பிற்காக தற்போது அணிதிரட்டியுள்ளது.</p><p>
பாகிஸ்தானும் துருக்கியும் வெள்ளிக்கிழமை மெக்காவில் சவூதி அரேபியாவுடன் நேட்டோ பாணியிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இதன் மூலம், தங்களின் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் ஒரு கூட்டுப் பாதுகாப்பு கூட்டணியாக உருமாறியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க பாதுகாப்பில் சந்தேகம்&nbsp;</h2><p>
ஒரு நாட்டின் மீதான தாக்குதலை மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதுவதால், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானையும் துருக்கியையும், அவை இதுவரை கவனமாகத் தள்ளி வைத்திருந்த ஒரு போருக்குள் இழுத்துச் செல்லக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857dc7d5-0135-428a-b3d0-d7fccf9e846e/26-6a75d59b12c65.webp' /></p><p>
</p><p>
எண்ணெய் வளம் நிறைந்த தனது வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்காவை இன்னும் நம்ப முடியுமா என்பது குறித்த பிராந்திய சந்தேகங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்காவுடனான அதன் நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மைக்கு அப்பால் ஒரு சக்திவாய்ந்த புதிய பாதுகாப்பு அடுக்கை வழங்கியுள்ளது.
</p><p>
இது சவூதியின் தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதோடு, அதிகரித்து வரும் ஈரானிய அச்சுறுத்தலுக்கு எதிராக இஸ்லாமிய தலைமையிலான ஒரு ஒன்றுபட்ட இராணுவ முன்னணியையும் முன்வைக்கிறது.</p><p> 

மேலும், இஸ்ரேல் இப்பிராந்தியம் முழுவதும் தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்தி வரும் வேளையிலும், அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்துடனான ரியாத்தின் உறவுகள் சீர்குலைந்து வரும் வேளையிலும் இந்த ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவமாய் மாறியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கல்சியம் நீக்கியை குடித்த குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-in-jaffna-dies-after-consuming-descaler-1786103597"></link>
            <id>https://ibctamil.com/article/person-in-jaffna-dies-after-consuming-descaler-1786103597</id>
            <summary type="text">யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்
உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;யாழ்ப்பாணம்&amp;nbsp;அத்தியடி பகுதியைச் சேர்ந்த
துரைராசா புஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்
உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணம்&nbsp;அத்தியடி பகுதியைச் சேர்ந்த
துரைராசா புஸ்பநாதன் (வயது 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக
கல்சியம் நீக்கியை குடித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கல்சியம் நீக்கி குடித்து உயிர்மாய்ப்பு</h2><p> </p><p>இதன்&nbsp; பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bafe5dea-0ba5-4585-b6dc-174c2544c165/26-6a75ca86bc216.webp' /></p><p> எனினும்&nbsp; இருப்பினும் சிகிச்சை
பலனின்றி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:16:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏககால சிறையுடைப்பு சதி... அவசர மிசனில் அநுர!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-calls-urgent-meet-over-prison-conspiracy-1786103916"></link>
            <id>https://ibctamil.com/article/anura-calls-urgent-meet-over-prison-conspiracy-1786103916</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளைச் சீர்குலைத்து ஏககால சிறையுடைப்புகளை செய்ய பெரும் சதித்திட்டம் போடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் கிட்டிய நிலையில் ஜனாதிபதி அநுர கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளைச் சீர்குலைத்து ஏககால சிறையுடைப்புகளை செய்ய பெரும் சதித்திட்டம் போடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் கிட்டிய நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஒரு அவசரகால நெருக்கடிக்கூட்டத்தை நடத்தியுள்ளார். </p><p>

இதனால் சிறைகளின் பாதுகாப்பு குறித்த திடீர் முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கடந்த இரவு முதல் கொழும்பு மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு, பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த மையங்களில் நடத்தப்பட்ட சப்பவங்கள் போதை மாபியாவால் திட்டமிட்டப்பட்ட ரைம்-லைன் குழப்பங்களாக தெரிகின்றன. </p><p>

யாழ்பாணத்தில் உள்ள சிறையிலும் மேலதிக படையினர் காவலுக்கு போடப்பட்டுள்ள நிலையில் அநுரவின் ஒரு அவசர மிசன் வரத்தலைப்படுகிறது. </p><p> 

குறித்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tm-hVr2kJf0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T12:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைச்சாலைகளில் 27 இந்தியர்கள்! அச்சநிலையை மையப்படுத்தி ஜெயசங்கர் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/s-jaishankar-focuses-srilankan-prison-situation-1786104385"></link>
            <id>https://ibctamil.com/article/s-jaishankar-focuses-srilankan-prison-situation-1786104385</id>
            <summary type="text">இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்தியா விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்தியா விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
2026 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று இந்திய நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p></p><h2>தாக்குதலுக்கு உள்ளான&nbsp;கடற்றொழிலாளர்கள்</h2><p>மேலும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 249 கடற்றொழில் படகுகள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91350ad1-1e80-47fc-b8de-ebcfba6c5a4f/26-6a75cb306e21b.webp' /></p><p>
</p><p>
இதன்படி இந்திய கடற்றொழிலார்களில் பாதுகாப்பும் நலனும் மத்திய அரசின் உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக இது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விரைவாக விடுவித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக, இலங்கை அரசுடன் இருதரப்பு செயல்முறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ, உயர்மட்ட சந்திப்புகள் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,554 ஆக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அவர்களில் சுமார் 10 பேர் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானதாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T12:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரின் இல்லங்களை படம்பிடித்த சந்தேக நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-filming-official-residences-igp-cj-1786100498"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-filming-official-residences-igp-cj-1786100498</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள காவல்துறைமா அதிபர் (IGP) மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள வீதிகளையும் படம்பிடித்ததா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள காவல்துறைமா அதிபர் (IGP) மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள வீதிகளையும் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கறுவாத் தோட்டம் காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

காணொளிகளை படம்பிடிக்க பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைபேசியும் அவரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவம்&nbsp;நேற்று இரவு (06.08.2026) நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>STF அதிகாரியின் நடவடிக்கை</h2><p>

 

காவல்துறைமா அதிபர் இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப் படையைச் (STF) சேர்ந்த அதிகாரி ஒருவர், சொகுசு வாகனத்தில் வந்த நபர் ஒருவர் இல்லத்தின் வீதியருகே இருந்து காணொளிகளை பதிவு செய்வதைக் கவனித்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dca6342-d860-4314-a29c-450c9909bfb7/26-6a75c176e0a06.webp' /></p><p>இதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரி அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலருக்குத் தகவல் அளித்துள்ளார்.&nbsp;</p><p>அதனை தொடர்ந்து அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பின்னர்&nbsp; கறுவாத் தோட்டம் காவல் நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்தனர்.</p><h2>சந்தேக நபர் 40 வயதுடையவர்</h2><p>
</p><p>
 

சந்தேக நபர் பயன்படுத்திய கைபேசியும் கைப்பற்றி அக்கருவியை ஆய்வு செய்ததில் காவல்துறைத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம், அதைச் சுற்றியுள்ள சாலை, பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் ஆகியவற்றின் காணொளிக் காட்சிகள் வெளிப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9aa599-2a8a-42d9-ab71-c7cddace8296/26-6a75c3bbc3ac4.webp' /></p><p>

 

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் அந்த காணொளிகளை ஒரு பொழுதுபோக்கிற்காகப் பதிவு செய்ததாகக் கூறியிருந்தார். </p><p>

 

இருப்பினும், மேலதிக விசாரணையின்போது சந்தேக நபர் தனது வசிப்பிடம் மற்றும் பிற விவரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்களை அளித்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அலுபொம்மைலாவில் உள்ள அருகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>மேலும் இச்சம்பவம் குறித்து கறுவாத் தோட்டம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து 19 வயது இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/19-year-old-youth-dies-in-jaffna-1786101968"></link>
            <id>https://ibctamil.com/article/19-year-old-youth-dies-in-jaffna-1786101968</id>
            <summary type="text">யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாரந்தனை பகுதியில் இன்று (07-08-2026) குறித்த இளைஞர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நாரந்தனை பகுதியில் இன்று (07-08-2026) குறித்த இளைஞர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த
19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.</p><p>
சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும்
நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824948e3-c867-4248-ae9b-3095e19c6331/26-6a75c0d19eca1.webp' /></p><p>வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து
செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில்
குறித்த இளைஞன் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பின்னர் இது
குறித்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p>

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:26:36+00:00</updated>
        </entry>
    </feed>
