<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-07T02:34:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள்! ஒப்பந்தத்துடன் வருகிறார் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-air-defense-guns-rajnath-singh-arrives-1788715371"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-air-defense-guns-rajnath-singh-arrives-1788715371</id>
            <summary type="text">இலங்கை - இந்தியா இடையே&amp;nbsp;மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த&amp;nbsp;ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.இந்திய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை - இந்தியா இடையே&nbsp;மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த&nbsp;ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>இந்நிலையில் அவரின் விஜயத்தின் முக்கிய நோக்கங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு ஒப்பந்தம்</h2><p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய மூன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனுடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும் இருதரப்பினரும் மீளாய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று இந்தியாவிடமிருந்து வான் பாதுகாப்புத் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மற்றொரு ஒப்பந்தம் இரு நாடுகளின் மாணவர் படைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூன்றாவது ஒப்பந்தம் இலங்கை பாதுகாப்புக் கல்லூரிக்கும் இந்தியாவின் பாதுகாப்புக் கல்லூரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><h2>
ஜனாதிபதி மற்றும் பிரதமர் சந்திப்பு
</h2><p>புதன்கிழமை பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார்.
</p><p>
மேலும், நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்திக்கவுள்ளதுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளார்.
</p><p>
அன்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் குழுவின் (OCDS) அலுவலகத்தை ஒழிப்பது தொடர்பான சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தனது விஜயத்தின்போது, இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்யவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சீதை அம்மன் ஆலயம்</h2><p>குறிப்பாக, கடந்த ஆண்டு தித்வா புயலினால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.</p><p>

தித்வா புயலினால் சேதமடைந்த நிலையில், இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட மூன்று பாலங்களையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கவுள்ளார். </p><p>அவற்றில் இரண்டு பாலங்கள் குருநாகல் மாவட்டத்திலும், மற்றைய பாலம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
</p><p>மேலும், வியாழக்கிழமை தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்னர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் ராஜ்நாத் சிங் விஜயம் செய்யவுள்ளார்.</p><p>

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T01:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672"></link>
            <id>https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672</id>
            <summary type="text">கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. </p><p>1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 18 வயதான கிருஷாந்தி, பின்னர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர். </p><p>இந்த வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இலங்கையின் கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முக்கியத்துவமாகியது.</p><p></p><h2>கிருஷாந்தி வழக்கின் நீதி</h2><p>ஆனால், கிருஷாந்தி வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு செம்மணியின் முழு உண்மையை வெளிக்கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.&nbsp;</p><p>1998ஆம் ஆண்டு கிருஷாந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கை ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய மனித உரிமை விவகாரமாக மாற்றியது. </p><p>அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>ஆனால், அந்த அகழ்வுகளால் எழுந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையான நீதிசார் விசாரணை நடைபெறவில்லை. </p><p>குறிப்பாக, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, புதைகுழிகளின் முழுமையான பரப்பு, அவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான கேள்விகள் நீடித்தன.</p><p></p><h2>செம்மணி&nbsp;உண்மைகள்</h2><p>இதனால் கிருஷாந்தி குமாரசாமி வழக்கு என்பது ஒரு தனிமனித படுகொலைக்கான நீதி என்ற எல்லையைத் தாண்டி, செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய உயிர்களின் உண்மையையும் வெளிக்கொணரும் திறவுகோலாக மாறியுள்ளது.</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டமை, மூன்று தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உண்மைகள் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தன.</p><p> 2025 செப்டெம்பர் நினைவேந்தலின் போது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் நீதிமன்றப் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்திருந்தன.</p><p>மேலும், இந்த ஆண்டு கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் மற்றொரு முக்கியமான சர்வதேச நிகழ்வுடன் இணைகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான அமர்வு இன்று, செப்டெம்பர் 7ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. </p><p>இந்த அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்து அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இதனால், கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் ஒரு குறியீட்டு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.</p><p></p><h2>ஜெனீவாவில் இலங்கை</h2><p>ஒருபுறம், செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மையைத் தேடும் குடும்பங்கள்.

மறுபுறம், ஜெனீவாவில் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விவாதம்.
</p><p>
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் சந்திப்பது, இலங்கையின் கடந்தகால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்தகால அரசியல் கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது. </p><p>ஆனால், தற்போதைய நிலைமையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு&nbsp; தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>குறிப்பாக, கடந்தகால கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசியல் விருப்பம் போதுமானதாக இல்லாதிருப்பதும் முக்கிய கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-07T01:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக ஆரம்பமாகிறது CID-யின் அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-investigation-against-shiranthi-rajapaksa-1788706568"></link>
            <id>https://ibctamil.com/article/cid-investigation-against-shiranthi-rajapaksa-1788706568</id>
            <summary type="text">அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>நாட்டில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, ஷிராந்தி ராஜபக்சவால் நடத்தப்படுவதாக அறியப்படும் சிரிலிய சவ்வா அமைப்பானது பல மில்லியன் ரூபாயை அறவிடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>PET ஸ்கேனர் வாங்கும் திட்டத்திற்காக, சிறிலியசவியா அமைப்பு அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கி ஒரு மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>சட்டமா அதிபர் உத்தரவு</h2><p>

இது தொடர்பாக, அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் கரியவசத்திடம் இருந்து வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b278fa88-4676-467c-94ab-d204ef399aeb/26-6a9d802906d9c.webp' /></p><p>

இருப்பினும், மகாரகம அபேக்ஷா மருத்துவமனை, சீன அரசாங்கத்திடமிருந்து PET ஸ்கேனரை நன்கொடையாகப் பெற்றது.</p><p>இந்நிலையில் நன்கொடையாகப் பெறப்பட்ட PET ஸ்கேனரில் பணம் சேர்க்கப்பட்டதன் மூலம் மோசடி நடந்ததா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பொறிக்குள் சிக்காமல் லாவகமாக தப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஒரு வித்தியாசமான அரசியல் வியூகத்தில் ஈடுபட்டது.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை இந்த நிகழ்விற்கு வரவழைத்து, இதை நாட்டின் முன் ஒரு பெரிய அரசியல் ஒற்றுமையின் தொடக்கமாக சித்தரிப்பதே ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. குறிப்பாக, சஜித் பிரேமதாசவை எப்படியாவது இந்த நிகழ்வில் பங்கேற்க வைப்பதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.</p><h2>ஹரினிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு </h2><p>

ரணில் விக்ரமசிங்க இந்த அமைப்புப் பணியை ஹரின் பெர்னாண்டோவிடம் ஒப்படைத்தார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb228dbd-7663-4222-add4-b9f18f69959c/26-6a9ddf75b6e2c.webp' /></p><p> </p><p>அவர் நிகழ்வின் அமைப்புப் பணிகளைப் பொறுப்பேற்றார்.

 பொதுவாக எந்தவொரு அமைப்புச் செயல்பாட்டிற்கும் பகிரங்கமாக முன்வரும் ஹரின், இவ்விதமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுவிழா நடவடிக்கைகளைத் திரைமறைவிலிருந்து ஏற்பாடு செய்வதை உறுதிசெய்தார். தற்போதைய அரசியல் சூழலில் சில கட்சிகளால் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் இவ்வாறு பகிரங்கப்படுத்தலைத் தவிர்த்தார்.</p><p></p><h2>சஜித் பிரேமதாசவின் பதில்</h2><p>

 நிகழ்ச்சிக்கு சஜித்தை அழைத்து ஹரின் பெர்னாண்டோ அனுப்பிய பல செய்திகளுக்கு சஜித் பதிலளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88473460-336e-487a-97c8-6876aeeca032/26-6a9ddf76894d6.webp' /></p><p>
</p><p>
 பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க சஜித்தை அழைத்தார். அதற்குப் பதிலளித்த சஜித், கொழும்புக்கு வெளியே பல முக்கியப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று கூறினார். அதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.</p><h2>ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு</h2><p> பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் சஜித்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், சஜித் அந்த அழைப்பை மறுத்து, சகாலாவுக்கு அளித்த அதே பதிலை ரணிலுக்கும் அளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:54:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/idf-says-it-killed-a-hamas-commande-1788738189"></link>
            <id>https://ibctamil.com/article/idf-says-it-killed-a-hamas-commande-1788738189</id>
            <summary type="text">&amp;nbsp;காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.&nbsp;</p><p>&nbsp;பிணைக் கைதிகளை ரக்பா பகுதியில் சிறைபிடித்து வைத்திருந்த இவர், சமீப காலமாக இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளையும் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><h2>இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு</h2><p>போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9d5446-e2d8-462d-97d4-7abce6d9e3af/26-6a9dfce6b1ae7.webp' /></p><p>


இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலின் சின்பெட் சிறப்புப் படையினரால் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் உயிரோடு கைது செய்யப்பட்டார்.</p><p></p><p> </p><h2>அச்சத்தில் ஹமாஸ் தளபதிகள்</h2><p>இஸ்ரேலிய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் அவர், ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் பல உண்மைகளைத் தொடர்ந்து கூறி வருவதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15a3667-015b-4ab3-a506-3376c1d1f92f/26-6a9dfce765332.webp' /></p><p>
</p><p>
இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்த தாக்குதலை வான்வழியாக நடத்துமா அல்லது தரைவழியாக நடத்துமா என்ற அச்சத்தில்
ஹமாஸ் தளபதிகள் தற்போது உறைந்து போயுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை : போர் நினைவிடமாக மாறிய பாடசாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-school-becomes-a-war-memorial-1788735961"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-school-becomes-a-war-memorial-1788735961</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த பள்ளி போர் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது..
</p><p>


சேதமடைந்த பள்ளிக்குள் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்</h2><p>செப்டம்பர் 5ம் திகதி பத்திரிகையாளர்கள் அங்கு சென்றபோது, குடும்பத்தினர் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைதியாக அஞ்சலி செலுத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c3f809-8b07-406d-8daf-558f031f05a0/26-6a9df3a5a6669.webp' /></p><p> </p><p>"பள்ளி இனி இயங்காது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்" என்றும் மாகாண ஆளுநர் முகமது அஷூரி தாசியானி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கி இயங்காதமையால் உயிர் தப்பிய பெண்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-escapes-after-gun-malfunctions-1788732424"></link>
            <id>https://ibctamil.com/article/woman-escapes-after-gun-malfunctions-1788732424</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>
கொழும்பு கொஸ்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>பெண்ணொருவரை இலக்குவைத்தே&nbsp; துப்பாக்கிச் சூட்டு முயற்சி</h2><p>துப்பாக்கி இயங்காத காரணத்தால் ஆயுததாரிகள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/344be223-9233-4e3d-b032-fc50fba9e110/26-6a9def384f1d2.webp' /></p><p>

கொஸ்கொடை, நானோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருமான ‘கொஸ்கொட தாரக்க’வுடன் நெருங்கிய தொடர்புடைய பெண்ணொருவரை இலக்குவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தின் போது வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f886ac8-fed7-489d-bdac-ec95ad3fbfaf/26-6a9def390361f.webp' /></p><p> 9 எம்.எம். ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை குறித்த பெண்ணை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும், துப்பாக்கி இயங்காமையால் அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T22:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது. </p><p>இந்த தாக்குதல்கள் தொடர்பான காணொளியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டு உள்ளது.


இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.</p><p>அவர் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,</p><h2>அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும்</h2><p>
</p><p>
அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது என்றார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… <a href="https://t.co/UGGcSGsUtd">pic.twitter.com/UGGcSGsUtd</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096247889366290840?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>


அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T21:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051"></link>
            <id>https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை
வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.</p><h2>குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது&nbsp;</h2><p>&nbsp;காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da989345-4575-4733-b2f2-412d89b56560/26-6a9da218dcaaf.webp' /></p><p>
</p><p>
காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T21:46:21+00:00</updated>
        </entry>
    </feed>
