<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T08:48:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 28 வாகனங்கள் : வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493"></link>
            <id>https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493</id>
            <summary type="text">தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
 

நுவரெலியா காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொறிகள் உட்பட 40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டது</h2><p>
</p><p>
 

இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6262f421-72c7-4957-b669-bbe442da73db/26-6a85601805412.webp' /></p><p>
</p><p>வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் (Undial) முறைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த நபர் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று( 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, வேல்ல வீதி காவல்துறை பிரிவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாத ரூ. 10,467,000 பணமும், ஒரு போலி 1000 ரூபா நாணயத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c0aacfa-42e8-4def-a2d5-a97730d84ff7/26-6a855fc9c1591.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், இந்த சந்தேக நபரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலியுடையவர்கள் மட்டுமே போராடுகிறார்கள்; நாம் ஏன் இப்படி மாறினோம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-social-structure-eelam-tamil-community-1787121024"></link>
            <id>https://ibctamil.com/article/political-social-structure-eelam-tamil-community-1787121024</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் சதுரங்கத்தில் ஈழத்தமிழினத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு, தன் வரலாற்றுப் பாதையில் மிக ஆபத்தான ஒரு தேக்கநிலையைச் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் சதுரங்கத்தில் ஈழத்தமிழினத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு, தன் வரலாற்றுப் பாதையில் மிக ஆபத்தான ஒரு தேக்கநிலையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. </p><p>ஒருபுறம், போரின் கொடுமைகளையும் அதனால் ஏற்பட்ட அளப்பரிய இழப்புகளையும் சுமந்த மனிதர்கள் நீதிக்காகவும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் இன்னும் இந்த தேசத்தின் தெருக்களில் நின்று போராடுகிறார்கள். </p><p>அதேநேரம் மறுபுறம், அதே நிலத்தில் பெரும்பான்மையானவர்கள் அதை வெறும் பார்வையாளர்களாகக் கடந்து செல்கிறார்கள் . அவர்கள் நுகர்வுப் பண்பாட்டிலும் அன்றாடக் கொண்டாட்டங்களிலும் மூழ்கியிருக்கிறார்கள். </p><p>ஆனால். "வலியுடையவர்கள் மட்டுமே தொடர்ந்து போராடுகிறார்கள் நாம் ஏன் இப்படி மாறினோம்?" என்ற கேள்வி, வெறும் உணர்ச்சிவசப்பட்ட புலம்பல் கிடையாது . இது ஒரு தேசிய இனத்தின் எதிர்காலக் கூட்டு மனசாட்சியை நோக்கி எழுப்பப்படும் மிக முக்கியமான அரசியல் கேள்வியாகும்.</p><p></p><p> </p><h2>ஈழத்தமிழர்களின் கூட்டுப் பொறுப்பும் இழைக்கப்படும் தவறுகளும்</h2><p>ஒரு தேசிய இனம் தன் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடும் போது, அங்கு சமூகத்தின் கூட்டுப் பங்கேற்பு மிக அவசியமானது. ஆனால், இன்றைய சூழலில் ஈழத்தமிழினம் தன் வரலாற்றுப் பயணத்தில் சில அடிப்படைத் தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdc36f9-aca8-4545-9a11-8c73c33bccab/26-6a855ec73d1f9.webp' /></p><p> </p><p>அதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான எதிர்ப்புகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் "சொந்தப் பிரச்சனை" போலச் சுருக்கப்பட்டுவிட்டது .</p><p> 

ஒரு சமூகம் தனது கூட்டுப் பொறுப்பைத் துறந்து, பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே வீதியில் நிறுத்துவது வரலாற்றுத் தவறாகும். </p><p>நில ஆக்கிரமிப்பு, அடையாளச் சிதைப்பு என எதுவாக இருந்தாலும், அதற்கான நீண்டகால அரசியல் மூலோபாயம் இல்லாமல், அவ்வப்போது எழும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளோடு நமது எதிர்ப்புகளை முடித்துக் கொள்வதும் பெருந்தவறனான ஒன்றாகவே அமைந்துவிடுகிறது .</p><h2>"செயற்கையான திசைதிருப்பல்"&nbsp;</h2><p>
</p><p>குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் அதன் ஏனைய பகுதிகளிலும் கடைகளிலும் திருவிழாக்களிலும் அலைமோதும் கூட்டத்தில் ஒரு சிறிய பகுதியினர் கூட நீதிக்கான போராட்டங்களில் அணிதிரள்வதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b57c2bee-df25-4066-9afe-8566088d2fe4/26-6a855ec8165f6.webp' /></p><p> 
இதில் இருந்தே, நீண்டகாலப் போருக்குப் பிந்தைய சமூகங்களில் நிகழும் "செயற்கையான திசைதிருப்பல்" இங்கு ஆதிக்கம் செலுத்துவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p>ஈழத்தமிழர்களின் கள நிலைமையும் கூட்டு அலட்சியத்தின் ஆபத்தும்
அதாவது பன்னாட்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளின்படி, ஶ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆயிரக்கணக்கான கோரிக்கைகளும் வழக்குகளும் எந்தவிதப் பதிலும் இன்றி கிடப்பிலையே போடப்பட்டுள்ளது .</p><p> 
இது எப்படியென்றால் போருக்குப் பிந்தைய காலத்தில் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பொதுமக்களின் பங்கெடுப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது.</p><h2>தேசிய இனம்</h2><p> </p><p>
இது நீதியை மறுக்கும் தரப்பினருக்குச் சாதகமான சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் வயோதிபர்களும் மட்டுமே நிற்பதால், அது அரசால் கண்டுகொள்ளப்படாமல் நீண்டகாலமாக பாராமுகமாகவே இழுத்தடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6be24e1-78ec-4f71-a7a1-29ec95a8fa2a/26-6a855ec8c4958.webp' /></p><p>அரசியல் கைதிகளின் விடுதலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் சில ஆர்வலர்களும் மட்டுமே குரல் கொடுப்பதால், வலுவான அரசியல் அழுத்தமின்றி சட்ட முட்டுக்கட்டைகள் நீடிக்கின்றன. </p><p>அதேபோல நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பிலும் எல்லைப்புற மக்களே தனியாக நிற்பதால், ஒட்டுமொத்த சமூக ஆதரவு இல்லாத சூழலைப் பயன்படுத்தி நிலப் பறிப்புகள் துரிதமடைகின்றன.
</p><p>
தேசிய இன அரசியலின் மறுவரையறை
உலகளாவிய அரசியல் சிந்தனையாளர்களின் கருத்தியல்படி , ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தன் அடையாளத்தையும் உரிமையையும் தக்கவைத்துக் கொள்ள கூட்டு விழிப்புணர்வு, தெளிவான தலைமைத்துவம் மற்றும் மூலோபாயக் கட்டமைப்பு ஆகிய மூன்றும் மிக முக்கியமான தேவையாகும் .</p><h2>உலகத்தமிழினத்தின் நீதிக்கான போராட்டம்&nbsp;</h2><p>அரசியல் சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்சியின் கருத்துப்படி, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் தன் உரிமைகளுக்காகப் போராட வேண்டுமானால், அதற்கு அறிவுசார் விழிப்புணர்வு மிக அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce89406-92b8-4882-8963-aa30fe9c214e/26-6a855ec9825e2.webp' /></p><p> </p><p>வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே ஒருபோதும் போராட்டத்தைத் தக்கவைக்க முடியாது. 
ஈழத்தமிழினத்தின் தற்போதைய அமைதி என்பது இயல்பான அமைதி அல்ல. அது தொடர் ஏமாற்றங்களால் ஏற்பட்ட ஒருவகை கற்றுக் கொண்ட நம்பிக்கையின்மை ஆகும். </p><p>அரசியல் என்பது தேர்தல் கால வாக்குச் சேகரிப்போ அல்லது நாடாளுமன்றப் பதவிகளோ மட்டும் அல்ல . அது ஒரு சமூகமாகத் திரண்டு தன் நிலத்தையும், வரலாற்று உரிமையையும், நீதியையும் கோரும் போராட்டமே உண்மை அரசியல.</p><p> ஆகும் . சிவில் அமைப்புகளும், இளைஞர்களும், பல்கலைக்கழகச் சமூகமும் மீண்டும் அரசியல் விழிப்புணர்வுடன் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.</p><h2>நீதிக்கான பயணம்</h2><p>காலத்தின் தேவையும் வரலாற்றுப் பொறுப்பும்
அதேபோல "நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?" என்ற கேள்விக்கான பதில், நமது சுயபரிசோதனையில்தான் தங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0b1ba5-3f05-45bb-82bc-85d72937434b/26-6a855eca3c465.webp' /></p><p> </p><p>அதாவது பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரை அவர்களின் தனிப்பட்ட அவலமாகப் பார்க்காமல், அது உலகத்தமிழினத்தின் நீதிக்கான போராட்டம் என்பதை உணர்ந்து இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்.</p><p> </p><p>

அதேபோலவே நம்மில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வறுமையிலும் அனாதரவாகவும் விட்டுவிட்டு நீதி கோர முடியாது என்பதால், அவர்களுக்கு வலுவான பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டும். </p><p>அத்துடன், பழைய போராட்ட வடிவங்களைத் தாண்டி, சர்வதேச சட்டங்களையும் மனித உரிமை அமைப்புகளையும் திறம்படக் கையாளக்கூடிய ஒரு இளம் தலைமுறையினரின் அறிவுசார் பங்களிப்பு போராட்டங்களுக்குள் உட்புகுத்தப்பட வேண்டும். </p><p>அதேபோல நீதிக்கான பயணம் நீண்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தெருவில் விட்டுவிட்டுப் பார்வையாளர்களாகப் படம் பிடிக்கும் சமூகம், வரலாற்றின் முன் தன் தார்மீக உரிமையை இழந்துவிடும். </p><p>எனவே இனியும் மௌனமாக இருப்பது நமது அடையாளத்தையே அழித்துவிடும் என்பதால், கூட்டுப் பொறுப்போடு திரள்வதே ஈழத்தமிழினத்தின் இப்போதைய ஒரே வரலாற்றுத் தேவையாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-19T07:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் வடக்கிற்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sudden-rain-fall-impact-of-recent-super-el-ni-os-1787116531"></link>
            <id>https://ibctamil.com/article/sudden-rain-fall-impact-of-recent-super-el-ni-os-1787116531</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த சில வாரங்களாக அதிகரித்து +0.64 என்ற அளவை எட்டியிருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி, இவ்வாரம் திடீரென +0.18 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்த திடீர் மாற்றம் எதிர்பாராத நிகழ்வாகும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குறைந்த மழைவீழ்ச்சி</h2><p>

இந்து சமுத்திர இருமுனையின் நேர்மறையான பெறுமதி வலுவாக காணப்படும்போது, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு போதுமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad66198-fc3e-4903-b75a-2a99fb3ce8fc/26-6a85592f54636.webp' /></p><p>எனினும், எல்நினோவின் தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி மேலும் வலுவிழந்தால், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தென்மேற்கு இலங்கையில் பருவமழை காலத்தில் குறைந்த மழைவீழ்ச்சி பதிவான பகுதிகளில் இது எதிர்காலத்தில் நீர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதியின் போக்கை உன்னிப்பாக அவதானித்த பின்னரே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>நீருக்கான தேவை</h2><p>
எல்நினோ தொடர்ந்து வலுவாகச் செயற்பட்டு, இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை நிலையில் காணப்பட்டால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிகவும் குறைந்தளவிலான மழைவீழ்ச்சியே கிடைக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0009ffb3-dbd3-45a9-b3dd-80483a5c585b/26-6a85575e9b9ec.webp' /></p><p>இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது இடைப்பருவ மழை மற்றும் வடகீழ் பருவமழையின் நிலைமை இந்து சமுத்திர இருமுனையின் அளவு செப்டெம்பர் நடுப்பகுதி பெறுமதியைப் பொறுத்தே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீர்வளம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு இந்த இரு பருவமழைகளும் மிகவும் முக்கியமானவை. அப்பகுதிகளின் பெரும்பாலான நீர்த்தேவைகள் இந்த மழைப்பொழிவுகளிலேயே தங்கியுள்ளன.
</p><p>
எனவே, எதிர்வரும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற நீர் விரயத்தைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கோவில் திருவிழாக்கள், அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலம் உள்ளிட்ட காரணங்களால் இக்காலப்பகுதியில் நீருக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், தற்போதுள்ள நீர்வளத்தைப் பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் மின் தடை - அவதியில் மக்கள்: வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/work-underway-to-restore-power-supply-in-jaffna-1787122339"></link>
            <id>https://ibctamil.com/article/work-underway-to-restore-power-supply-in-jaffna-1787122339</id>
            <summary type="text">யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். </p><p>குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
</p><p>
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே என
தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>மின்தடை</h2><p>

அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை
மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1f11a8-7d59-43fd-ac48-08eb5ed25753/26-6a8554f17f872.webp' /></p><p>
அந்தவகையில் நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இவ்வாறு சுத்தம் செட்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடைக்கு முடியும் என
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பொருளாதார நெருக்கடி! ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-responds-to-ranil-s-warning-1787122287"></link>
            <id>https://ibctamil.com/article/government-responds-to-ranil-s-warning-1787122287</id>
            <summary type="text">


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.</p><p>

நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறிய அவர், இலங்கையின் கடன் பொறுப்புகள் முழுமையாக நிர்வகிக்கக்கூடிய அளவில் தான் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இலங்கை 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்தியுள்ளதாகவும், ,2026 ஆம் ஆண்டில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>மத்திய வங்கி புள்ளிவிபரங்கள்</h2><p>

அதன்படி, 2027-ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறையும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a43a365-d148-48eb-a83b-12bf48723166/26-6a85576c2d944.webp' /></p><p>

முதலீட்டாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கிய புள்ளிவிபரங்கள், இலங்கை தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பு நிலையை வலுப்படுத்திக் கொண்டே தனது கடனைத் தொடர்ந்து செலுத்த முடியும் என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்தநியைலில், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கடன் செலுத்துவதில் எவ்விதச் சிரமமும் இருக்காது என்று அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><h2> மீண்டும் பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், 2028-க்குப் பிறகு கடன் சுமைகளை எதிர்கொள்ள கையிருப்பை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியது தவறான வழிகாட்டல் என்றும், அவர் நாட்டின் கடன் நிலவரம் குறித்து தவறான சித்திரத்தை அளிக்க முயல்வதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95862d6-6b5f-4fe8-805e-639d5451891d/26-6a85576d0cd99.webp' /></p><p>
</p><p>
வெளிநாட்டவர் அனுப்பும் பணம், ஏற்றுமதி, சுற்றுலா வருவாய் மற்றும் முதலீடுகள் 2026-ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்பதால், இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியையோ அல்லது திவால்நிலையையோ சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை திருடிய கெஹெலிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-who-stole-the-sandakada-pahana-1787121351"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-who-stole-the-sandakada-pahana-1787121351</id>
            <summary type="text">குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றில் நேற்று(18.08.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>மகிழ்ச்சியுடன் பேசும் மகான்கள் </h2><p>
</p><p>
''கெஹெலிய ரம்புக்வெல்ல இப்போது ஒரு வழக்குப் பொருளைப் போல ஆகிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07462fb3-678f-4ad9-8f8c-78542a50b121/26-6a8554d25faa5.webp' /></p><p>
</p><p>
இந்த மகான்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் பாருங்கள். சந்திரக்கல்லைக்கூடதூக்கிச் சென்றிருக்கிறார்கள்.</p><p>
தொலைக்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். இன்றும் வழக்குகள் உள்ளன.
</p><p>
நாமல் யார் என்பதை நாங்கள் அறிவோம். தாஜுதீனை எப்படிக் கொலை செய்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.</p><p> 

பின்னர் பின்வாசல் வழியாகச் சென்று திருகோணமலையில் மறைந்துகொண்ட விதமும் எங்களுக்கு நினைவிருக்கிறது. 

அந்தக் காலத்தில் ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருந்தவர் ரணில். அதனால்தான் அது ரணில் - ராஜபக்ச அரசாங்கமாக இருந்தது" என கடுமையாக சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-petitions-against-22nd-constitutional-amendment-1787120999"></link>
            <id>https://ibctamil.com/article/3-petitions-against-22nd-constitutional-amendment-1787120999</id>
            <summary type="text">இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றைய (19.08.2026) நாடாளுமன்ற அமர்வின் போது, தெரிவித்துள்ளார்.</p><p>
 

அத்துடன், நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.</p><p></p><h2>உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்</h2><p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ffaf56-1a32-43c3-882c-51a55fbf9fb3/26-6a8553ea359cc.webp' /></p><p>இந்தநிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த கோரி ஐக்கிய மக்கள் சக்தியும், 22வது திருத்தச் சட்ட மூல வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரமும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை - யாழில் மக்களை அணிதிரள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079"></link>
            <id>https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.08.2026) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக்
கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள்
பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு
செய்யப்படவுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிக்கான நீள்பயணம்</h2><p>
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ம் திகதி
அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில்
அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை
9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e758eee5-0dc2-4f0b-9659-496a03035bc0/26-6a854e999cd32.webp' /></p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்
ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில்
தெரிவிக்கப்பட்டது.</p><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ,
நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச
விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக ஊடக
சந்திப்பில் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் அதிகாரி! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936"></link>
            <id>https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936</id>
            <summary type="text">அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று(18) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண், அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்ததுடன், சம்பவம் குறித்து அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43e8f55-1721-4913-9520-c68dbe70f2de/26-6a854d8e634f9.webp' /></p><p>
</p><p>
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>

இந்நிலையில், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியில் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d530f16d-bdae-4fa3-bf75-f07ecdcc6ffa/26-6a854d8f1cd55.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்று ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T06:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு : அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-for-farmers-affected-by-drought-1787114666"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-for-farmers-affected-by-drought-1787114666</id>
            <summary type="text">இலங்கையில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>சேதமடைந்த&nbsp;நெற்பயிர்கள்</h2><p>இதன்படி, நெற்செய்கை தொடர்பில், மொனராகலையில் 1,334 ஏக்கர் பயிர்நிலங்களைச் சேர்ந்த 960 விவசாயிகளும், பொலன்னறுவையில் 1,100 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 560 விவசாயிகளும், அம்பாந்தோட்டையில் 435 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 782 விவசாயிகளும், அம்பாறையில் 1,004 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 505 விவசாயிகளும் மற்றும் அனுராதபுரத்தில் 2,200 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 1,900 விவசாயிகளும் என நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8462ed64-a02e-49fb-8be9-f8da45c7edb1/26-6a854c2e194ac.webp' /></p><p>
 

இதற்கமைய, விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் மேற்படி மாவட்ட அதிகாரிகளினால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நl;டஈட்டுத் தொகை விவசாயிகளுக்கு கூடிய விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
</p><p>
 

இங்கு பாதிக்கப்பட்ட நெல், சோளம் உள்ளிட்ட 06 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 05 ஏக்கர் வரை அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்படும்.</p><p></p><h2>பணத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கை</h2><p>அதன்படி, இந்த சூழ்நிலையில் மேற்படி மாவட்டங்களில் இருந்து இதுவரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்ட 6,073 ஏக்கர் நெற்பயிர்களுக்கு உரித்தான சுமார் 4,707 விவசாயிகளுக்கு விரைவாக நஷ்டஈட்டுப் பணத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94877756-b77a-4da1-a39e-b878c30c9111/26-6a854c2ec043b.webp' /></p><p>

 

இந்த வறட்சி நிலைமை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்திருந்தால், கூடிய விரைவில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் கள அதிகாரிகளைச் சந்தித்துத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். </p><p>அல்லது விவசாய அபிவிருத்தி மையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பயிர்ச் சேதங்கள் குறித்து விவசாயிகள் பதிவிட வேண்டும்.
</p><p>
 

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற வேண்டுமாயின், விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கமான 1918 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:24:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமைய காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-release-for-kilinochchi-media-complex-1787117852"></link>
            <id>https://ibctamil.com/article/land-release-for-kilinochchi-media-complex-1787117852</id>
            <summary type="text">பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.</p><p>
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்
அனுப்பியிருந்தனர்.</p><p></p><h2>பாதுகாப்பு அமைச்சு</h2><p>இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில்
கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b2cbdc-999d-4207-90ec-98846aa257f6/26-6a8546e89134b.webp' /></p><p>

இந்நிலையிலேயே
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.
வீரசிங்கவால் மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும்
கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>
 இந்தகாணிக்கு ஒரு பறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும்
விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே
விடுவிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T06:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் காவல்துறையின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-highways-september-19-1787115860"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-highways-september-19-1787115860</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல்&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல்&nbsp; கட்டாயமாக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>இது குறித்து இன்று (19.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகலவால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதன்படி அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயம் என்றும், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>இருக்கைப் பாதுகாப்புப் பட்டி</h2><p>
</p><p>இந்நிலையில் இருக்கை பட்டி&nbsp; அணியாமல் பயணிப்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் விரைவுப் பேருந்துகளில் இருக்கைப் பட்டி அணியாது பயணிக்கும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் அபராதம் அறவிட சட்டப்பூர்வமான அனுமதி உள்ளது என்றும், இலங்கை மக்கள் இருக்கைப் பட்டி அணிவதன் அவசியத்தை வலுவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52acafcc-aa1b-4626-aba4-6f32ded55dc1/26-6a854006237d3.webp' /></p><p>
</p><p>மேலும் அனைவரின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிகழும் விபத்துக்களில் பாதுகாப்பு பட்டி அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், இருக்கைப் பட்டிகள் இல்லாத வாகனங்களுக்கு அவற்றை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டம்பர் 19 ஆம் திகதியுடன் நிறைவடையுமென&nbsp; தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்திருநடதமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vietjet-to-launch-direct-ho-chi-minh-city-colombo-1787111779"></link>
            <id>https://ibctamil.com/article/vietjet-to-launch-direct-ho-chi-minh-city-colombo-1787111779</id>
            <summary type="text">இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளதுநேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietje...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது</p><p>நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வகையில் அதன் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.</p><p>இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வாரத்திற்கு 3 நாட்கள் வியட்நாமின் ஹோசிமின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே இயக்கப்படவுள்ளது.</p><p></p><h2>வாரத்திற்கு 3 நாட்கள்</h2><p>
 

வியட்ஜெட் விமான சேவையின் VJ-1875 என்ற இலக்கமுடைய முதலாவது கன்னி விமானம், நேற்று (18) இரவு 09.33 மணிக்கு 169 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6cac66-be83-4d23-bec7-196a93e10282/26-6a8534d8b27e6.webp' /></p><p> 

 

பின்னர் அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
</p><p>இவ்விமானத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்த்தாரை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>இருவரும் இலங்கையர்கள்</h2><p>இந்த வருகையின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இதன் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் ஆவர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08371e1-c610-4ec6-bc88-dc7dfc6b97e2/26-6a8534d963507.webp' /></p><p>பாணந்துறையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் மொரட்டுவையைச் சேர்ந்த ரந்தீர் பெரேரா ஆகியோரே அவ்வாறு விமானத்தை இயக்கி வந்தோராவர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T05:09:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் விடுதலைப் புலிகளின் முகாம்..! சர்ச்சைக்குரிய காணொளிகள்: அடியோடு மறுக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-denies-claims-training-camp-in-pallai-1787102374"></link>
            <id>https://ibctamil.com/article/govt-denies-claims-training-camp-in-pallai-1787102374</id>
            <summary type="text">பளை பகுதிக்குள்&amp;nbsp;விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவை பேச்சாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பளை பகுதிக்குள்&nbsp;விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "பளை வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் குறித்து அதிர்ச்சி தரும் வெளிப்பாடு என்னும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன.</p><p></p><h2>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி</h2><p>இச்சம்பவம் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் அக்ராயன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 'முக்கன்பன்' எனப்படும் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0393d8e3-560a-4b7b-8222-21abb8e43253/26-6a852fbb62e20.webp' /></p><p>இப்பகுதி 1919 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட 70/64 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>2025 ஆம் ஆண்டு முதல் இந்த வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் அழிக்கப்பட்டு நிலம் துப்புரவு செய்யப்படுவதாகத் தகவல்கள் பதிவாகியிருந்தன.</p><p> 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்படுவது தொடர்பில் தகவல்கள் கிடைத்தன. தற்போது அங்கு 4 மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p>இக்காலப்பகுதியில் வன அலுவலகத்தினால் பல சோதனைகள் நடத்தப்பட்டு, இதன் உரிமையாளரான தியாகராசா குணதீபன் என்பவருக்கு எதிராக 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
 

இவர் அப்பகுதியில் முதலில் 10 ஏக்கர் நிலத்தையும், பின்னர் 20 ஏக்கர் நிலத்தையும் சட்டவிரோதமாகத் துப்புரவு செய்து கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2026 பெப்ரவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் அந்த நிலத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. </p><p>பெப்ரவரி 17 ஆம் திகதி அத்தடை உத்தரவை நீக்குமாறு கோரப்பட்ட போதிலும், நீதிமன்றம் தடை உத்தரவை நீக்கவில்லை. அடுத்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. </p><p>இதற்கிடையில், இந்த நபர் உழவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பாகப் காவல்துறையினரால் மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு</h2><p>

 

2026-07-24 அன்று வன அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக இந்த உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

இச்சோதனை நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியும் பெறப்பட்டது. இவ்வாறு அவ்வப்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>மேலும் நீதிமன்றினால் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணைகள் இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ளன.

 

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறானதொரு போலிச் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் போலிச் செய்தியாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bebbfa4f-797d-465d-b9d7-48fe88bafbac/26-6a852fbaae75c.webp' /></p><p>இவ்வனப்பகுதிக்குள் தமக்கு உரிமை இருப்பதாகக் கூறி உரிமையாளரால் நீதிமன்றத்தில் சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.</p><p> எதுஎவ்வாறாயினும், கடந்த ஒன்றரை வருட காலத்தில் இந்தச் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் காடழிப்புக்கு எதிராக அவ்வப்போது கைதுகளும் நீதிமன்ற ஆஜர்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அந்த இடத்தில் பயிர்ச்செய்கை ஒன்று இருப்பதுடன், மூன்று மாடிக் கட்டிடத்திற்குள் சில இயந்திரங்களுடன் கிராம மக்களை இணைத்து ஆடை உற்பத்தி நிறுவனமொன்று நடத்தப்பட்டு வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> மேலும் அது பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அங்குள்ள உண்மை நிலைமை இதுவேயாகும்.

 

இத்தகைய பின்னணியில், அங்கு எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் இருப்பதாகப் பொய் பிரசாரத்தைப் பரப்பியவர்களுக்கு எதிராகவும் தற்போது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KpwiTbheRyQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-resolution-under-the-finance-act-1787114337"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-resolution-under-the-finance-act-1787114337</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(19.08.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(19.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> 

(இப்பிரேரணை 2026.05.07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நாடாளுமன்றத்தின் 4 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 4 ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது). </p><p>

இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hpOddAgg0lk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-19T04:39:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-work-end-today-1787111372"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-work-end-today-1787111372</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று (19) இடம்பெறவுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதிதாக 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட 573 என்புக்கூடுகள் </h2><p>அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff18c7c-9e18-41e0-8177-a1167575aa5d/26-6a85313eaa86b.webp' /></p><p>அதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 ஆவது நாள் அகழ்வுப் பணிகளின் போது, 582 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-chinese-nationals-arrested-in-colpetty-1787111021"></link>
            <id>https://ibctamil.com/article/two-chinese-nationals-arrested-in-colpetty-1787111021</id>
            <summary type="text">கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12,000 சிகரெட்டுகளுடன் இரு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு (18.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த 31 மற்றும் 34 வயதுடைய சீன நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சட்டவிரோத சிகரட்டுக்கள்</h2><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த எண்ணிக்கை 12,000 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b9ce37d-691f-42d7-9f46-19bd179693bd/26-6a852d773576e.webp' /></p><p>
சிகரெட்டுகள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றை யாரிடம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது மற்றும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நபர்கள் உள்ளனரா என்பது தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-fake-news-1-arrested-1787108887"></link>
            <id>https://ibctamil.com/article/training-camp-in-kilinochchi-fake-news-1-arrested-1787108887</id>
            <summary type="text">கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக&amp;nbsp;பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக&nbsp;பொய்த் தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்</h2><p>
</p><p>
 

சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54eebda-ad11-4982-9e39-fbb44db9dab3/26-6a85238eb25f0.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது.</p><p>இந்த நிலையில் சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T04:04:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-issue-safety-advice-to-taxi-passengers-1787106392"></link>
            <id>https://ibctamil.com/article/police-issue-safety-advice-to-taxi-passengers-1787106392</id>
            <summary type="text">வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>வடக்கில் மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் நடப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வாகனத்தின் பதிவு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4146fb1a-1b26-499b-8eae-c091b99c898a/26-6a8516eed5f24.webp' /></p><p>
குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
</p><p>இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இரவு நேரப் பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.</p><p></p><h2>காவல்துறையின் அவசர உதவி&nbsp;</h2><p>
பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7620dc-90c4-4902-840c-ad62cc63bf05/26-6a8516ee158f0.webp' /></p><p>
பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</p><p>பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள காவல்துறை, பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தைப் விதிகளைப் பின்பற்றுமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T03:57:16+00:00</updated>
        </entry>
    </feed>
