<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-09T06:31:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tunisian-tourist-died-swept-away-while-surfing-1786255211"></link>
            <id>https://ibctamil.com/article/tunisian-tourist-died-swept-away-while-surfing-1786255211</id>
            <summary type="text">இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று சனிக்கிழமை (08) அன்று வெலிகம, பரண கடே கடற்கரைப் பகுதியில் துனிசிய நண்பர்கள் குழுவுடன் இவர் அலைச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் கடலின் வலுவான நீரோட்டத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து காவல்துறை உயிர்காப்பாளர்கள், கடலோரக் காவல் படையினர் மற்றும் தனியார் மூழ்காளர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6a66a8-361f-4b53-a0b9-83067421f862/26-6a781aea50ef2.webp' /></p><p>
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (09) காலை அதே கடற்கரைப் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்து வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T06:27:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/military-officers-made-jailers-on-prison-duty-1786252668"></link>
            <id>https://ibctamil.com/article/military-officers-made-jailers-on-prison-duty-1786252668</id>
            <summary type="text">
சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச் சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சிறை அமைப்பில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் உள்ள 32 சிறைச்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>சிறப்பு கலந்துரையாடல்</h2><p>

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c94cf25-b152-4851-b558-9415daf59db9/26-6a7812e8c0ae9.webp' /></p><p>

இதேவேளை, ஒரு சிறையில் ஏற்படும் அமைதியின்மை மற்ற சிறைகளுக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு சிறையிலும் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கள் நிறுவப்பட உள்ளதாக, ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>இராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
சிறைச்சாலை திணைக்களம், காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுக்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb024cb-3e97-4ab1-8518-a17b081df897/26-6a7812e98e6ef.webp' /></p><p>
</p><p>
சிறைக் காவலர்களின் கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய கால பயிற்சி அளித்த பிறகு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு நீதி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T05:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><p>2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்ற இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர்.</p><p>சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.</p><p>&nbsp;</p><h2>நுவரெலியா மாவட்டம்</h2><p>முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளதுடன் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.&nbsp;</p><p>இந்த நிலையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d2f53e-f825-4503-a773-351f026bb6fe/26-6a7811c5701f7.webp' /></p><p> </p><p>

மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். </p><p>மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட 'சிசு செரிய' பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p><p></p><h2>மட்டக்களப்பு மாவட்டம்</h2><p>இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி
வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்தி கல்வி
வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், பட்டிருப்பு கல்வி வலயம், கல்குடா கல்வி
வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில்
பரீட்சைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7285c4-ed1d-4995-9062-b8ef98165341/26-6a78116eee5ce.webp' /></p><p>
இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை
நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள்
நடைபெறுகின்றன.</p><p><b><i>செய்தி - கிருஸ்ணகுமார்</i></b></p><h2>யாழ் மாவட்டம்</h2><p>தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை யாழ் மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.</p><p>மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு
சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c210b6-60f4-4534-a3fd-06b114810bfc/26-6a78116fa9bf6.webp' /></p><p>மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
</p><p>பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல
பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்
சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p><b><i style="">செய்தி - த.பிரதீபன்</i></b>&nbsp;</p><h2>அம்பாறை மாவட்டம்&nbsp;</h2><p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும்
வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.</p><p>பரீட்சை காலை 09.30 மணிக்கு
ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை
மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e971d8ba-9f7a-4125-9ba4-87bfb0b4c52d/26-6a78116e0f443.webp' /></p><p>இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை
கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு
சமூகமளித்திருந்தனர்.</p><p>மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக&nbsp;எமது
பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><b><i>செய்தி - பாறுக் ஷிஹான்</i></b></p><p><b><i></i></b></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:42:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி நாணய தாள்களை அச்சிட்ட சந்தேகநபர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/who-printed-counterfeit-notes-was-arrested-1786248339"></link>
            <id>https://ibctamil.com/article/who-printed-counterfeit-notes-was-arrested-1786248339</id>
            <summary type="text">

போலி நாணய தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவு அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>

போலி நாணய தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி, மிரிஹானவின் கோட்டை வீதி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>பயன்படுத்தப்பட்ட&nbsp;உபகரணங்கள்</h2><p>

சம்பவ இடத்திலிருந்து ஏழு போலி ரூ. 5,000 நோட்டுகள், ஆறு ரூ. 1,000 நோட்டுகள், ஒரு ரூ. 500 நோட்டு, ஒரு கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbee859-c416-45b7-bb4a-6f5f5d40ec3d/26-6a78057d97f4c.webp' /></p><p>

அந்தவகையில், கைது செய்யப்பட்ட புறக்கோட்டையை சேர்ந்த 53 வயதான சந்தேக நபர், இன்று (09) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T04:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் முதலீடுகளுக்கு வழங்கப்படவுள்ள அரச பங்களாக்கள் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plan-to-govt-bungalows-for-private-investment-1786248665"></link>
            <id>https://ibctamil.com/article/plan-to-govt-bungalows-for-private-investment-1786248665</id>
            <summary type="text">கொழும்பில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 7 பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 7 பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது.</p><p>அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய, 24 பங்களாக்களை பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரேரணைகளை சமர்ப்பிக்க வேண்டும்&nbsp;&nbsp;</h2><p>அதனடிப்படையில் முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a46422d4-70e1-44f4-aaa8-0cc9712a9c25/26-6a7802e8e2316.webp' /></p><p>

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பங்களாக்களே இவ்வாறு உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்படவுள்ளன.
</p><p>இந்த நிலையில் இதற்கான பிரேரணைகளை சமர்ப்பிக்க ஓகஸ்ட் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T04:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல்கள் : நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/report-on-prison-clash-to-be-submitted-tomorrow-1786245759"></link>
            <id>https://ibctamil.com/article/report-on-prison-clash-to-be-submitted-tomorrow-1786245759</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருவிட்ட, பல்லன்சேன மற்றும் புதிய மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.</p><p>இந்நநிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அறிக்கையே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>36 பேர் உயிரிழப்பு</h2><p>இதேவேளை&nbsp;நாட்டில் கடந்த ஐந்து வாரங்களில் நீர்கொழும்பு, மஹர, கொழும்பு மெகசின்,குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பள்ளஞ்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களினால் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7934d5b2-57f4-4a29-9fb2-c6c41105d23d/26-6a77fc5c35ca9.webp' /></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை மதாதம் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினால் 10 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p>இவ்வாறான பின்னணியில் சனிக்கிழமை (1) மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 1 கைதி உயிரிழந்த நிலையில் 09 கைதிகள் காயமடைந்தனர்.</p><p>&nbsp;&nbsp;</p><h2>குருவிட்ட சிறைச்சாலை</h2><p>அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 1 கைதி உயிரிழந்த நிலையில் 11 கைதிகள் காயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b7dc86-df1c-4e91-b373-48de6d9ba543/26-6a77fc5d3146e.webp' /></p><p>நேற்று முன்தினம் (7) காலை குருவிட்ட சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 02 கைதிகள் உயிரிழந்த நிலையில் 15 கைதிகள் காயமடைந்தனர்.</p><p>அன்றைய தினமே நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகாத நிலையில் 28 கைதிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T04:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டு! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-issue-e-passports-within-a-year-1786246842"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-issue-e-passports-within-a-year-1786246842</id>
            <summary type="text">சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப, ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டுகளை (e-Passports) வழங்க அரசாங்கம் திட்டமிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப, ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டுகளை (e-Passports) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>

பொது திறவுகோல் உள்கட்டமைப்பு (PKI) பாதுகாப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சில குறைபாடுகள் காரணமாகவே முந்தைய கொள்முதல் செயல்முறை ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது என்று விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>12 மின்னணு வாயில்கள்</h2><p>

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே நான்கு மின்னணு வாயில்கள் (e-gates) நிறுவப்பட்டுள்ளதாகவும், மின்னணு கடவுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி அடுத்த ஆண்டுக்குள் மேலும் 12 மின்னணு வாயில்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab13c9e-00a6-49b0-bab0-83d910ca12c9/26-6a77fab0d1ff0.webp' /></p><p>
</p><p>
புதிய 'P' தொடர் கடவுச்சீட்டில் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புதிய கடவுச்சீட்டில் பக்கங்களின் எண்ணிக்கை 64-ல் இருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்றும், இலங்கை கடவுச்சீட்டு சர்வதேச தரத்திற்கு இணையாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T03:58:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lionel-messi-s-father-dies-aged-68-1786243528"></link>
            <id>https://ibctamil.com/article/lionel-messi-s-father-dies-aged-68-1786243528</id>
            <summary type="text">அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால பிரதிநிதியுமான ஜார்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி நீண்டகால நோய்க்குப் பிறகு தனது 68-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால பிரதிநிதியுமான ஜார்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி நீண்டகால நோய்க்குப் பிறகு தனது 68-வது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஆரம்பக்கால வளர்ச்சி&nbsp;</h2><p>
</p><p>
ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியதோடு, இதுகுறித்த தகவல்களில் தனியுரிமையையும் மனிதாபிமானத்தையும் பேணுமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a286b9-2153-4125-a20c-4849f4c882a8/26-6a77eb9f123ed.webp' /></p><p>

மெஸ்ஸியின் ரொசாரியோவின் ஆரம்பக்கால வளர்ச்சி முதல் பார்சிலோனா கால்பந்து கழகத்தின் வெற்றிப்பயணம் வரை அவரது தொழில்முறை வாழ்க்கையில் ஜார்ஜ் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றியதாக தெரியவருகிறது.</p><h2>மெஸ்ஸியின் பிரதிநிதி</h2><p>
</p><p>
மெஸ்ஸியின் பிரதிநிதியாக செயல்பட்டு, களத்திற்கு வெளியே நடைபெற்ற பெரும்பாலான பேச்சுவார்த்தைகளையும் விவகாரங்களையும் அவரே கையாண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb6186b9-780d-4a8a-a9ae-e4ededd58f27/26-6a77eb9fc02d3.webp' /></p><p>
</p><p>
மறைந்த ஜார்ஜ் மெஸ்ஸிக்கு அவரது மனைவி செலியா குசிட்டினி மற்றும் லியோனல், ரோட்ரிகோ, மடியாஸ், மரியா சோல் ஆகிய நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T02:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டித் தீர்க்கப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-today-1786242011"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-showers-or-thunderstorms-today-1786242011</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறி்யுள்ளது.</p><p>

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1fe5e6-6abd-4c47-99ad-770b6efa1dbe/26-6a77e6a54b94f.webp' /></p><p>இதன்படி, பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T02:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று! ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade5-scholarship-exam-1786239125"></link>
            <id>https://ibctamil.com/article/grade5-scholarship-exam-1786239125</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.
</p><p>
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
இம்முறை பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 220,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
</p><p></p><h2>294,089 மாணவர்கள்</h2><p>
அதன்படி, மொத்தம் 294,089 மாணவர்கள் இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6699312-5d80-44d5-aa34-3400726bde0b/26-6a77d897108c3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T01:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும மோசடியில் சிக்கிய மேலும் 2 அதிகாரிகள்! ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-s-money-disappeared-in-the-aswesuma-scam-1786237836"></link>
            <id>https://ibctamil.com/article/people-s-money-disappeared-in-the-aswesuma-scam-1786237836</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர்&nbsp;</h2><p>
</p><p>
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9fe033d-0133-4370-94b1-717239220a46/26-6a77d38da20a0.webp' /></p><p>

இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T01:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை! தடுத்து நிறுத்திய கிராம மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buddha-statue-at-amman-temple-in-nuwara-eliya-1786235702"></link>
            <id>https://ibctamil.com/article/buddha-statue-at-amman-temple-in-nuwara-eliya-1786235702</id>
            <summary type="text">வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை நிற வானில் வந்த குழுவினர் சிலர் அப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இதன் போது தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் அவ்விடத்துக்குச் சென்று சம்பவத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளனர். வெள்ளை வானின் உள்ளே புத்தர் சிலையொன்றும் இருந்துள்ளது.</p><p></p><h2>மிரட்டல் விடுத்த&nbsp;குழுவினர் </h2><p>இதனிடையே முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் வந்த குழுவினர் சம்பவத்தை பதிவு செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் நாம் பயமில்லை எனக் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3557af70-18f8-470d-8199-502be7c88e4f/26-6a77ce13d1654.webp' /></p><p> இதையடுத்து மேற்படி பகுதி மக்கள் இராகலை காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று காவல்துறை புத்தர் சிலை நிறுவும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் மேற்படி குழுவினரை விசாரணை செய்துள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். </p><p>குறித்த பகுதியில் நூறு வருடங்களுக்கும் மேல் அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திடீரென எங்கிருந்தோ வந்த சிலர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்படி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T00:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490"></link>
            <id>https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பைப் பெற விரும்பும் நிலையில், ரஷ்யாவுடன் நட்புறவைப் பேணி வரும் செர்பியாவிடமிருந்து ஜெலென்ஸ்கி மேலும் ஆயுத உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சும் கடந்த காலங்களில் பலமுறை சந்தித்துள்ளனர்.</p><p></p><h2>ரஷ்யா தொடர்ந்து போர்&nbsp;</h2><p> </p><p>பெரும்பாலும் பலதரப்பு மாநாடுகளின் இடையே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. மிக அண்மையில், ஜூலை 15ஆம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருவரும் சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97cc2a6-3f10-4d52-ba56-110d4e25a074/26-6a779b845dcca.webp' /></p><p>

இந்நிலையில், நேற்று ஜெலென்ஸ்கி தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக செர்பியாவை வந்தடைந்தார்.</p><p>உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் ஒன்றாக செர்பியா கருதப்படுகிறது.</p><p>

கடந்த 14 ஆண்டுகளாக செர்பியாவை ஆட்சி செய்து வரும் வுசிச்சைப் பொறுத்தவரை, வரவிருக்கும் முக்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பயணம் ஒரு அரசியல் சமநிலைப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>வலுவான அரசியல் சவால்</h2><p>
</p><p>மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கம், தனக்கென ஒரு தேர்தல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், முதல்முறையாக வுசிச்சிற்கு வலுவான அரசியல் சவாலை முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வுசிச் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

கருத்துக்கணிப்புகளின்படி, வுசிச்சின் தீவிர ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதையும் எதிர்க்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T00:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-infiltration-indian-fishermen-continued-south-1786235101"></link>
            <id>https://ibctamil.com/article/the-infiltration-indian-fishermen-continued-south-1786235101</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>

மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>
இச்சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,“ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்துமீறி தொழிலில் ஈடுபடுவது வடபகுதி கடற்றொழிலாளர்களிடையே பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.</p><p></p><h2>தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம்</h2><p> </p><p>கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் மூலம் அவர்களின் வருகையைக் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், இம்முறை தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம் முதல் அவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இலங்கை கடற்பரப்பில் மிக தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953ca88d-365a-4785-88c6-2f93fd91b59c/26-6a77c8dee7814.webp' /></p><p>அண்மையில் தீவக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட கடல்வழிப் போராட்டத்தைக் கூட மத்திய அரசுகளோ அல்லது இலங்கை அரசோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
</p><p>
இந்திய கடற்றொழிலாளர்கள்களின் அழிவுகரமான தொழில் முறைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என எச்சரித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T00:37:00+00:00</updated>
        </entry>
    </feed>
