<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-11T23:41:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் பதவி விவகாரத்தில் விஜித ஹேரத்தின் பதிலால் கிளம்பிய புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782"></link>
            <id>https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782</id>
            <summary type="text">வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இது குறித்த செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
</p><p>
ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரின் மகளுடைய திருமணம், கடந்த வாரம் காலியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><p> </p><h2>ரணிலின் கருத்து&nbsp;&nbsp;</h2><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் அமைச்சர்கள் தலதா அதுகோரல மற்றும் வஜிர அபேவர்தன மற்றும் மேலும் பலர் அதே மேசையில் அமர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcf1003-9f3d-4ac7-8bce-9ba207b0db09/26-6a52c58f2d3d0.webp' /></p><p>இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கியமை குறித்துப் பேச்சு எழுந்துள்ளது.</p><p>
அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கையில்,

 "அதற்கு நான் பதிலளிக்கிறேன். நான் தலையிடச் செல்லவில்லை. அவர்கள் என்னுடன் விளையாட்டு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.</p><p> அந்தப் பெண்மணிதான் எல்லாவற்றிலும் தலையிட்டார்," என்பதே முன்னாள் ஜனாதிபதியின் பதிலாக இருந்தது என கூறியுள்ளார்.
</p><p></p><h2>சர்வதேசத்தின் பார்வை&nbsp;</h2><p>
இந்த உரையாடலின் போது, ​​வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அங்கு வந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அருகில் அமர்ந்துள்ளார்.
</p><p>
அந்த மேசையில் இருந்த ஒரு பத்திரிகையாளர் வெளியுறவு அமைச்சரிடம், "நீங்கள் அடுத்த ஆண்டு பிரதமராகிவிடுவீர்கள் என்று கேள்விப்படுகிறேன்" என்று கேட்டுள்ளார்.</p><p>

" இந்த வருடமே ஏன் கூடாது?" என்று அமைச்சர் புன்னகையுடன் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

இவ்வாறான பின்னணியில், அமெரிக்கத் தூதரகத்தின் 250வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது, ​​பல தூதரகங்களின் அதிகாரிகளும், ஒரு மேற்கத்திய தூதரகத்தின் அதிகாரிகளும், எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கான போட்டி உருவாகும் என்று ஊகித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:41:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்! விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794"></link>
            <id>https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794</id>
            <summary type="text">பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் அவரது மரணம் கொலையாக சந்தேகிக்கப்படும் நிலையில், ஆன் விடெகோம்பின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
இறுதியாக வெளியாகிள ஒரு புதிய தகவலில், விடெகோம்ப் புதன்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p></p><h2>கண்டெடுக்கப்பட்ட&nbsp;உடல் </h2><p>

கடந்த வியாழக்கிழமை(09.07.2026) காலை 11.40 மணிக்கு, டெவோனின் ஹேட்டரில் உள்ள விடெகோம்பின் பங்களாவில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbe1ea0-393c-4a90-ab82-fd2fba02c612/26-6a528c6c6cca2.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞன், தற்போது எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும், அவர் இனி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் இருக்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/huge-drop-in-remittances-fromlankan-workers-abroad-1783812235"></link>
            <id>https://ibctamil.com/article/huge-drop-in-remittances-fromlankan-workers-abroad-1783812235</id>
            <summary type="text">வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் சதவீதத்தில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இது குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் சதவீதத்தில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக&nbsp;இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>மேலும், கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருமானம் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>வெளிநாட்டு வருவாய்</h2><p>
</p><p>
மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருவாயானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b815f9-7af3-45c8-9f5c-0d51c8e8d1d7/26-6a52d08d64289.webp' /></p><p>
இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
</p><p>&nbsp;எவ்வாறாயினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது. </p><p>அதேநேரம், 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.
</p><p>
இருப்பினும், 2025 ஜூன் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:24:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கை ஆரோக்கிய உணவை ஊக்குவிக்கும் பரப்புரை சாவகச்சேரியில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/campaign-to-promote-natural-health-food-1783810754"></link>
            <id>https://ibctamil.com/article/campaign-to-promote-natural-health-food-1783810754</id>
            <summary type="text">World Vision உலகத்தரிசன நிறுவனத்தின் பரப்புரையான ENOUGH நாடளாவியரீதியில் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்முக்கிய குறிக்கோள் சிறுவர்களின் பசியினைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>World Vision உலகத்தரிசன நிறுவனத்தின் பரப்புரையான ENOUGH நாடளாவியரீதியில் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p> இதன்முக்கிய குறிக்கோள் சிறுவர்களின் பசியினையும் ஊட்டச்சத்துக்குறைபாட்டையும் முடிவுக்கு கொண்டுவருவதாகும்.</p><p>

யாழ் . மாவட்ட பரப்புரை உலகத்தரிசன சாவகச்சேரி அபிவிருத்தித் திட்டத்தின் ஒருங்கிணைப்பில் ஆடி 11 ம் திகதி காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் பாடசாலை மாணவர்கள் கல்வித் திணைக்களம் சுகாதாரத் திணைக்களம் பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சித் அமைப்புக்களின் பங்களிப்போடு உலகத்தரிசன அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p><p>

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இயறகை ஆரோக்கிய உணவுகளை மட்டும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இயற்கை ஆரோக்கிய உணவுகளின் அணிவகுப்பும் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T22:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-killed-in-landslides-in-the-philippines-1783803407"></link>
            <id>https://ibctamil.com/article/15-killed-in-landslides-in-the-philippines-1783803407</id>
            <summary type="text">பசிபிக் பிராந்தியத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியதால், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தாய்வான், ஜப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பிராந்தியத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியதால், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
தாய்வான், ஜப்பான் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் இது வரும் நாட்களில் சீனாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>சீனாவுக்கு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>இதன்படி படிப்படியாக வலுவிழந்து வரும் பாவி புயல், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் கிழக்கு சீன நகரமான வென்சூவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b3629ee-4f99-4126-98be-07081825e95a/26-6a52b2198a8cd.webp' /></p><p> </p><p>

அந்த மக்களுக்கு கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சீனா மற்றும் தாய்வானைப் பாதித்த மேசாக் புயலால் சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T21:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரம்மாண்டமான புதிய டைனோசர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/150-million-year-old-dinosaur-family-discovered-1783799454"></link>
            <id>https://ibctamil.com/article/150-million-year-old-dinosaur-family-discovered-1783799454</id>
            <summary type="text">வடகிழக்கு தாய்லாந்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட டைனோசர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாபெரும் தாவர உண்ணியானது, இதற்கு முன்னர் ஆவணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு தாய்லாந்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட டைனோசர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த மாபெரும் தாவர உண்ணியானது, இதற்கு முன்னர் ஆவணப்படுத்தப்பட்ட எந்த டைனோசரின் உடற்கூறியல் அம்சங்களையும் கொண்டிராதது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
இது தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை குறித்த புதிய பார்வையைத் தொல்லுயிரியலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>15 கோடி ஆண்டுகள்</h2><p>

உரகாசாரஸ் கலாசினென்சிஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த நீண்ட கழுத்துடைய டைனோசர், சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிந்தைய ஜுராசிக் காலத்தில் இப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c551e9-2b40-4af9-8c29-272473ba974a/26-6a52a1f4efcf5.webp' /></p><p>
</p><p>
பாம்பின் செதில்களைப் போன்ற அசாதாரணமான துண்டுகளை அப்பகுதிவாசி ஒருவர் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, கலாசின் மாகாணத்தில் உள்ள புதைபடிவங்கள் நிறைந்த ஒரு தளத்தில் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அன்று முதல், பூ நோய் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஆயிரக்கணக்கான புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மீட்கப்பட்டவற்றில் 90%-க்கும் அதிகமானவை டைனோசர் எச்சங்களாகும்.

இது குறித்த சமீபத்திய ஆய்வு, அந்தப் புதைபடிவங்களில் ஒன்று முற்றிலும் புதிய இனத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.</p><p>
</p><p>
அகழ்வாராய்ச்சி தளத்திலிருந்து மீட்கப்பட்ட, டைனோசரின் முதுகின் நடுப்பகுதியைச் சேர்ந்த எலும்பான முதுகுத் தண்டுவட எலும்பை விஞ்ஞானிகள் உன்னிப்பாக ஆய்வு செய்த பின்னரே இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p></p><h2>மாமென்சிசாரிடே&nbsp;இனம்</h2><p>

CT ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புதைபடிவம், தங்களின் வியக்கத்தக்க நீண்ட கழுத்துகளுக்காகப் புகழ்பெற்ற சௌரோபாட் டைனோசர்களின் ஒரு இனமான மாமென்சிசாரிடே குடும்பத்தைச் சேர்ந்தது என்று கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4a36fa-d324-49b9-8b0c-750f9a916698/26-6a52a1f5a6684.webp' /></p><p> 

இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள், தங்களின் பிரம்மாண்டமான உடல்களை அதிக தூரம் நகர்த்தாமல், பல்வேறு உயரங்களில் உள்ள தாவரங்களை உண்பதற்காகத் தங்களின் நீண்ட கழுத்துகளைப் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
</p><p>
முன்னர் அடையாளம் காணப்பட்ட டைனோசர்களில் காணப்படாத பல தனித்துவமான உடற்கூறியல் அம்சங்களை அந்தப் புதைபடிவம் கொண்டிருந்ததுதான் ஆய்வுக் குழுவை ஆச்சரியப்படுத்தியது.
</p><p>
மகாசரகம் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் வைத்தியர் அபிருத் நீல்பானபன், அந்த டைனோசர் 'லமினா' எனப்படும் தாங்கு எலும்புகளின் தனித்துவமான அமைப்பைக் கொண்டு 'Y' வடிவ கட்டமைப்பை உருவாக்கியிருந்தது” என கூறியுள்ளார்.</p><p></p><h2>கிரிக்கெட் மைதானத்தின் நீளம்</h2><p>
</p><p>
கிடைத்துள்ள புதைபடிவங்களின் அடிப்படையில், உரகாசாரஸ் கலாசினென்சிஸ் 20 மீட்டர் அல்லது சுமார் 66 அடி நீளம் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thailand just named its 15th dinosaur species: Uragasaurus kalasinensis. This 150-million-year-old sauropod was unearthed in Kalasin by researchers from Mahasarakham University. And it&#39;s the first member of the Mamenchisauridae family ever found in Thailand and Southeast Asia. <a href="https://t.co/fpBOTX0Vny">pic.twitter.com/fpBOTX0Vny</a></p>&mdash; PR Thai Government (@prdthailand) <a href="https://x.com/prdthailand/status/2075442060233158658?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இது ஏறக்குறைய ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்திற்குச் சமமாகும். மற்ற சௌரோபாடுகளைப் போலவே, இதுவும் நான்கு தூண் போன்ற கால்களால் தாங்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான உடலைக் கொண்டு இயங்கிய ஒரு தாவர உண்ணியாக இருந்திருக்கும்.
</p><p>

பாம்பின் செதில்களைப் போன்ற அசாதாரணமான துண்டுகளை அப்பகுதிவாசி ஒருவர் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, கலாசின் மாகாணத்தில் உள்ள புதைபடிவங்கள் நிறைந்த ஒரு தளத்தில் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்பட்டது” எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T20:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை தவிர்ப்பதற்கான திட்டம்! அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஈராக் - சிரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iraq-syria-join-hands-with-bypass-strait-of-hormuz-1783789931"></link>
            <id>https://ibctamil.com/article/iraq-syria-join-hands-with-bypass-strait-of-hormuz-1783789931</id>
            <summary type="text">ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் திட்டத்தில் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவுடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.</p><p>

இது, ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தாமலேயே ஈராக் எண்ணெயை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பல தசாப்தங்களாக மூடப்பட்டு, கடுமையாக சேதமடைந்துள்ள 500-மைல் (800 கி.மீ.) குழாய்வழியை மீண்டும் அமைப்பதற்கான ஒப்பந்தம், அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதிக்கும் ட்ரம்பிற்கும் இடையே நடைபெறும் சந்திப்பின்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
</p><p></p><h2>குழாய்வழி&nbsp;மாற்றம்</h2><p>மேலும் இந்த குழாய்வழியை முழுவதுமாக மாற்ற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f89d157-23a0-489c-8815-b6cb9c42bbca/26-6a52796c8dadb.webp' /></p><p>
</p><p>
இதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் இந்தத் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்களின் குழு ஒன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T19:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்தும் போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோ! புதிய பயிற்சியாளரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ronaldo-continues-portugal-national-team-1783797437"></link>
            <id>https://ibctamil.com/article/ronaldo-continues-portugal-national-team-1783797437</id>
            <summary type="text">போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,&amp;nbsp; மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,&nbsp; மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது போசுபொருளாகியுள்ளது.</p><p>கிறிஸ்டியானோ ரொனால்டோ&nbsp; விளையாடுவதை தொடர்ந்தால் , அவரைத் தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும், அந்த முன்கள வீரரால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
தனது கடைசி உலகக் கோப்பையில் பங்கேற்றுவிட்டதாகக் ரொனால்டோ கூறிய றிலையில், 2026 உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போர்த்துக்கலின் தோல்வியின் பின்னர் இது குறித்த கேள்விகள் வெளிவந்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><h2>போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம்</h2><p>எனினும், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பது குறித்து அவர்&nbsp; இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce50bc3-37a7-440e-b38a-4e06fdc9dd1b/26-6a5296bf870c5.webp' /></p><p>அவர் விளையாடும் வரையிலும், தேர்வு செய்யப்படும் நிலையில் இருக்கும் வரையிலும், சில வரம்புகளுக்கு உட்பட்டும், தேசிய அணிக்குச் சிறந்ததாக நான் கருதும் நிபந்தனைகளின் கீழும் அவரைத் தேர்ந்தெடுப்பேன்,"என்று ஜீசஸ் தனது அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p><p>தான் ரொனால்டோவிடம் இன்னும் பேசவில்லை என்றும், ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் முன்னாள் நட்சத்திர வீரரான அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.<br></p><p>ரொனால்டோ போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம். ரொனால்டோ தேசிய அணியின் சின்னம். அந்த விடயம் என்றென்றும் சரித்திர ஏடுகளில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T19:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983"></link>
            <id>https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983</id>
            <summary type="text">இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.</p><h2>நான்கு முறை தேசிய விருதுகள்&nbsp;</h2><p>
</p><p>
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a48a97-13c2-4cfd-a3d2-89ea2025be18/26-6a525fd3d59a2.webp' /></p><p>&nbsp;இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : மொட்டுவின் நிலைப்பாடு வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-issues-extending-the-retirement-age-of-judges-1783789658"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-issues-extending-the-retirement-age-of-judges-1783789658</id>
            <summary type="text">உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த அறிக்கை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசம் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கீழ்த்தரமானதும் வெட்கக்கேடானதுமான ஒரு முயற்சி</h2><p>அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்க இந்த அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக்கேடானதுமான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றும், அது எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bd9e94a-ad39-4e5b-ab6c-f5e78cfa1b62/26-6a52872dea34a.webp' /></p><p>
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு:</p><p> அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்க இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக இந்த நாட்டில் மிகப் பெரிய மக்கள் கருத்து நிலவுவதை நாங்கள் காண்கிறோம்.</p><h2>நாட்டின் ஜனநாயகத்திற்கு&nbsp; மரண அடி</h2><p>
</p><p>
ஒரு கட்சியாக நாங்கள் இந்த கீழ்த்தரமான முயற்சியை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், ஏனெனில் இது நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடியாகும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a2cd70-6534-4dc6-b691-c5766bca9320/26-6a52872d4788b.webp' /></p><p>இன்று, நீதிபதிகள் சங்கம் இந்த முடிவை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு, இந்த அரசாங்கத்தின் வஞ்சகமான மற்றும் ஜனநாயக விரோத முயற்சிக்கு எதிராக நாட்டின் நீதிபதிகளே குரல் எழுப்புகிறார்கள் என்ற உண்மையை பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><p></p><h2>ஒன்றிணைந்து குரல் எழுப்ப சஜித்தை அழைக்கும் நாமல்</h2><p>
</p><p>
கடந்த வாரம், தற்போதைய அரசாங்கத்தின், இந்த வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புமாறு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரை எங்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347dd4f5-83ff-4efb-96d5-25e5baeb965a/26-6a52853ab2fc9.webp' /></p><p> உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இந்த விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்று நான் நம்புகிறேன். </p><p>நமது தாய்நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிராக எத்தகைய அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் எழுந்தாலும், நாம் நமது ஜனநாயகத்துடன் உறுதியாக நிற்போம் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் நான் கூற விரும்புகிறேன்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:10:58+00:00</updated>
        </entry>
    </feed>
