<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-19T10:33:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளுடன் காணாமற்போன இலங்கை தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-mother-hides-two-children-1784455310"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-mother-hides-two-children-1784455310</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு நீதிமன்றம் அனுமதித்த பயணத்திற்குப் பிறகு, தனது இரண்டு இளம் மகன்களையும் அவர்களின் அமெரிக்கத் தந்தையிடம் ஒப்படைக்கத் தவறியதாகக் குற்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்துக்கு நீதிமன்றம் அனுமதித்த பயணத்திற்குப் பிறகு, தனது இரண்டு இளம் மகன்களையும் அவர்களின் அமெரிக்கத் தந்தையிடம் ஒப்படைக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் பெண் வெளிநாட்டு ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
தி டெலிகிராஃப் பத்திரிகையின்படி, 34 வயதான நிஷிகா சமரதுங்கா, தனது ஐந்து வயது மகன் பிளெய்ன் மற்றும் மூன்று வயது மகன் நத்தானியேல் ஆகியோருடன் மார்ச் 29 முதல் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தந்தை, லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்</h2><p>நிஷிகா சமரதுங்கா, குழந்தைகளை அவர்களின் தந்தை பென் பேயரிடம் திருப்பிக் கொடுக்கத் தவறிவிட்டார் என்று கொலராடோ நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2170e3-d81b-410b-b7d5-40e0ea643c9a/26-6a5ca455193a2.webp' /></p><p>
</p><p>
குழந்தைகளின் தந்தை, பிள்ளைகளை திரும்பப் பெறுவதற்காக லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு சிறுவர்களும் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்றும், அவர்களுக்கு முறையான பள்ளிப்படிப்போ அல்லது மருத்துவப் பராமரிப்போ கிடைப்பதில்லை என்றும் கூறி, அவர்களின் நலன் குறித்த கவலைகளை எழுப்பி தந்தை இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
குழந்தைகளைக் கண்டுபிடிக்க உதவும் வகையில், இந்த வழக்கின் விவரங்களை வெளியிட லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>நிஷிகா சமரதுங்கா மற்றும் சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி</h2><p>

நிஷிகா சமரதுங்கா மற்றும் சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பல அமைப்புகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93b8024f-3e9f-4549-becd-d5c0a4c4ecef/26-6a5ca45469eed.webp' /></p><p>

பிள்ளைகளை லண்டனுக்குப் பயணிக்க நிஷிகா அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, கொலராடோ நீதிமன்றம் ஒன்று முன்னதாக குழந்தைகளின் முதன்மைப் பாதுகாப்பை அவர்களின் தந்தைக்கு வழங்கியிருந்தது.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு உடனடி ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, பிரிட்டிஷ் சட்ட அமலாக்க முகமைகள் குழந்தைகளின் பாதுகாப்பை எடுத்துக்கொள்ள அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அனுமதித்துள்ளது.
</p><p>
இந்த வழக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் செம்மணியில் புதைக்கப்பட்ட மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-buried-in-a-sitting-position-in-chemmani-1784454551"></link>
            <id>https://ibctamil.com/article/people-buried-in-a-sitting-position-in-chemmani-1784454551</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள்
அகழ்வாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
முன்னெடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள்
அகழ்வாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
முன்னெடுக்கப்பட்டன.</p><p>இன்றைய (19) அகழ்வாய்வின் போது அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு உட்பட 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p>

இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446
மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 434
மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
மேலும், இன்று 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த
நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2697c6-575f-4dac-bac4-794a929d1866/26-6a5ca3d24f822.webp' /></p><p> </p><p>கடந்த ஆண்டு இடம்பெற்ற
2ஆம் கட்ட அகழ்வாய்விலும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித
எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வில் கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில்
புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது
சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flash-floods-in-vietnam-4-people-missing-1784448304"></link>
            <id>https://ibctamil.com/article/flash-floods-in-vietnam-4-people-missing-1784448304</id>
            <summary type="text">வியட்நாமில் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமில் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>

இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். </p><p>

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்த கனமழையினால் இந்த வெள்ளப்பெருக்கு திடீரென நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>நான்கு பேர் மாயம்</h2><p>


வெள்ளிக்கிழமை அதிகாலையில் முவாங் தாம் (Muang Tam) கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏழு பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f6410dc-8217-44f9-a307-84ddb9e730fb/26-6a5c951514e67.webp' /></p><p> </p><p>


ஜூலை முதல் செப்டம்பர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கொடிய புயல்கள் மற்றும் வெள்ளங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கபட்டுள்ளது.</p><p> </p><p>

கடந்த ஆண்டும் இதே போல வெள்ளப்பெருக்கினால் சுமார் 489 பேர் உயிரிழந்தனர்.
</p><p>

புதன்கிழமை தொடக்கம் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் 238 ஹெக்டேர் (Hectare) பயிர்களையும் நாசமாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.</p><p> 

வியட்நாம் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் 250 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் எனவும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-19T10:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஐஜிபி மரணம் விபத்து என திடீர் சுருதிமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sudden-change-of-tone-as-former-igp-s-death-1784453673"></link>
            <id>https://ibctamil.com/article/sudden-change-of-tone-as-former-igp-s-death-1784453673</id>
            <summary type="text">30 மணிநேரத் தாக்குதலின் பின்னர் முல்லைத்தீவு கூட்டுப்படைதளம் புலிகளிடம் வீழச்சியடைந்த ஓயாதஅலைகள் -1 நடவடிக்கையின் 30 ஆம் வருட நினைவு இப்போது கடக்கிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 மணிநேரத் தாக்குதலின் பின்னர் முல்லைத்தீவு கூட்டுப்படைதளம் புலிகளிடம் வீழச்சியடைந்த ஓயாதஅலைகள் -1 நடவடிக்கையின் 30 ஆம் வருட நினைவு இப்போது கடக்கிறது.</p><p>

சிறிலங்காவின் இராணுவ வரலாற்றில் 44 அதிகாரிகள் மற்றும் 1,125 படையினரும் விடுதலைபுலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 பேர் கொல்லப்பட்ட பெரும் சமர்க்களமான இந்த நடவடிக்கை சிறிலங்கா ராணுவ வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளியாக உள்ளது.
</p><p>
இந்த பின்னணியில் சிறிலங்காவின் ராஜபக்ச ஆட்சியுடன் தொடர்புபட்ட சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் விக்ரமரத்னவின் மரணம் ஒரு தற்கொலை என ஆரம்பத்தில் கூறப்பட்டட்டாலும் தற்போது அது ஒரு விபத்து என்ற வகையில் புதிய கதைகள் வருவதும் சில கரும்புள்ளிகளாள தெரியும் நிலையில் ஏன் இந்த திடீர் சுருதிமாற்றம்? இதனையும் உள்ளடக்கிவருகிறது செய்திவீச்சு..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6mufXROTJNg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T09:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/facebook-suffered-a-worldwide-login-outage-1784451891"></link>
            <id>https://ibctamil.com/article/facebook-suffered-a-worldwide-login-outage-1784451891</id>
            <summary type="text">உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான முகநூல் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான முகநூல் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (19) ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் முகநூல் தளத்தின் டெஸ்க்டொப் (Desktop) பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><h2>மெட்டா நிறுவனம்&nbsp;</h2><p>இந்தநிலையில், பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, "தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்கவும்" என்ற அறிவிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ebfafa-553f-46b2-a7a0-e3743e9c4026/26-6a5c98db3ff30.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இன்று முற்பகல் 9.00 மணியளவில் "Facebook Down" தொடர்பான முறைப்பாடுகள் திடீரென அதிகரித்துள்ளதாக சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் DownDetector இணையத்தளம் தெரிவித்துள்ளது.</p><p>குறித்த தொழில்நுட்ப பிரச்சினைக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T09:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-igp-c-d-wickramaratne-died-forensic-reports-1784446594"></link>
            <id>https://ibctamil.com/article/former-igp-c-d-wickramaratne-died-forensic-reports-1784446594</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என்று&nbsp;பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>
</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் தற்போது தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p></p><h2>துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்</h2><p> </p><p>குறிப்பாக, அவரது மெய்ப்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.


அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df7b9391-a609-47a7-a6da-e1dc87d97c47/26-6a5c831c7b1e9.webp' /></p><p> </p><p>அவர் மரணமடைந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன்.

அவ்வாறான நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது கூற முடியாது.</p><p> விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான தீர்மானத்துக்கு வரமுடியும்.
</p><p>
எனினும், முன்னாள் காவல்துறை மா அதிபரின் விடயத்தில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் குறித்த விடயத்தினை வைத்து அரசியல் சுயலாபம் தேடுவதற்கு முயற்சிகின்றன“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T08:55:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்காலத்தில் மேலும் பல உயிர்மாய்ப்புகள்! பிரதி அமைச்சர் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/queue-to-go-to-jail-in-the-opposition-party-1784449620"></link>
            <id>https://ibctamil.com/article/queue-to-go-to-jail-in-the-opposition-party-1784449620</id>
            <summary type="text">

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலருக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தற்கொலைகள் போன்ற சம்பவங்கள் பதிவாகலாம் என விவசாய பிரதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலருக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தற்கொலைகள் போன்ற சம்பவங்கள் பதிவாகலாம் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் தற்கொலை தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><p>

ஒரு குழுவினர் சிறைக்குச் சென்றுள்ளதாகவும், இன்னும் ஒரு வரிசை சிறைக்கு செல்ல காத்திருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ராஜபக்ச குடும்பம்</h2><p>
</p><p>
இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தில் வழக்குகள் இல்லாத எவரேனும் இருந்தால், அதை அறிவிக்கமாறும் அவர் வலியுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b7deda2-c034-4475-baf0-50b54af9351d/26-6a5c8e96958ae.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், எதிர்காலத்தில் மேலும் பலர் சிறைக்குச் செல்லக்கூடும் என்றும், அதற்கு முன்பாக தற்கொலைகள் நிகழலாம் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T08:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டும் அரசாங்கம்! நாமல் ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-alleges-threats-against-who-against-the-govt-1784442513"></link>
            <id>https://ibctamil.com/article/namal-alleges-threats-against-who-against-the-govt-1784442513</id>
            <summary type="text">அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், இதனால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், இதனால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
கேகாலையின் தெடிகம பகுதியில் நேற்று (18) சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் வழங்குபவர்கள் விசாரணைகளின்போது அச்சுறுத்தப்பட்டு, மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விமர்சகர்களை ஒடுக்கும் வழிமுறை</h2><p> </p><p>

தற்கொலைகள் அதிகளவில் நிகழும் ஒரு காலகட்டமாக இது தனக்குத் தோன்றுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராகப் பேசிய சிலர் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதேவேளை, விசாரணையின்போது இன்னும் சிலரிடம் அவர்களும் தற்கொலை செய்துகொள்ள நேரிடலாம் என அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2656ba3a-3578-4306-b2e9-b00737a18af5/26-6a5c740f9a7e0.webp' /></p><p>

இவ்வாறான சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதுடன், அரசாங்கம் தனது விமர்சகர்களை ஒடுக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், இந்த உரையின்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், வரிவிதிப்பு முறைகள், அரசு ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நடத்தும் விதம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்த அவர், பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T08:17:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-injured-after-falling-from-train-1784446460"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-injured-after-falling-from-train-1784446460</id>
            <summary type="text">
அம்பேவெல பகுதியில் ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அம்பேவெல பகுதியில் ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இன்றையதினம்(19) ஞாயிற்றுக்கிழமை காலை நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
தொடருந்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், மலையக தொடருந்து பாதையில் பயணிக்கும் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஓடும் தொடருந்துகளில் இருந்து வெளியே குனிவதையோ அல்லது ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffce03c0-5ed3-4347-b01a-3fbd61bc1b79/26-6a5c83dbb997e.webp' /></p><p>
</p><p>
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் கடுமையான காயங்களுக்கு அல்லது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். </p><p>

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T08:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-anti-cultural-events-at-nallur-temple-1784438912"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-anti-cultural-events-at-nallur-temple-1784438912</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலய&nbsp;வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று (18) யாழ் மாநகர முதல்வர்&nbsp; தலைமையில் யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.</p><p></p><h2>ஐந்து இறுக்கமான தடைகள்</h2><p>இங்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,&nbsp;கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இம்முறை ஐந்து இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f649cb-7e16-4b27-b753-18e03497917a/26-6a5c6a9724de9.webp' /></p><p>
</p><p>

1.உற்சவ காலங்களில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடுதல், ஆடல் பாடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை மீறுவோரின் ஒலி, ஒளி சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
</p><p>
2. உற்சவ காலத்தில் தெய்வீக நிகழ்வுகள் சாராத காட்சிகள், காணொளிகள், விளம்பரங்களை திரையிடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>
3. உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் படப்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் சமய பண்பாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தவிர தனிநபர்களின் புகைப்படங்களை அல்லது காணொளிகளை பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">ட்ரோன் கமரா பறக்கவிடுதல்&nbsp;&nbsp;</span></h2><p>4. ஆலய சுற்றாடலில் ட்ரோன் கமரா பறக்க விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் வர்த்தமானி அறிவித்தலின் மூலமும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd30913c-24bc-4c9a-8eac-ef8ae69372b2/26-6a5c6a97cb6d0.webp' /></p><p>

5. சிவப்பு வெள்ளை நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள உற்சவ பகுதிக்குள் வியாபாரம் செய்தல் மற்றும் யாசகம் பெறுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறுவோரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.” என தெரிவித்தார்.</p><p>
</p><p>இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினர், யாழ் மாநகர சபை ஆணையாளர்,
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T07:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meteorological-department-warns-of-sea-turbulence-1784442698"></link>
            <id>https://ibctamil.com/article/meteorological-department-warns-of-sea-turbulence-1784442698</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
</p><p>
 

அதன்படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2> பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
 

இதேவேளை, வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be77908a-2584-4b70-8346-c53ba4984801/26-6a5c76efb8984.webp' /></p><p>

 

அதன்படி, நாட்டைச் சூழ நிலவும் பலத்த தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T07:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து ஒன்றில் இளைஞர்கள் இருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-two-young-men-death-1784441593"></link>
            <id>https://ibctamil.com/article/accident-two-young-men-death-1784441593</id>
            <summary type="text">ஹொரான - மொரகஹஹேனா வீதியில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.&amp;nbsp;குறித்த விபத்து&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரான - மொரகஹஹேனா வீதியில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த விபத்து&nbsp;இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், ஹொரான - மொரகஹஹேன வீதியில் உள்ள கனன்வில விகாரை அருகே இடம்பெற்றுள்ளது.</p><p>25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசரா செனவிரத்ன மற்றும் உதீஷ சித்மின என்ற இரு இளைஞர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>விபத்தில் இருவர் பலி</h2><p>விபத்து குறித்த விசாரணையில் மேலும் தெரியவருவதாவது, ஹொரான பகுதியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed7470e-be47-4c52-8595-8f05a9f6a657/26-6a5c72b4ad934.webp' /></p><p>அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு இளைஞர்களும், கனன்வில வளைவில் திரும்பவிருந்தபோது, ​​வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் வலதுபுறப் பாதைக்குள் விலகி, எதிர்திசையில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற ஒரு டிப்பருடன் மோதி உள்ளது.</p><p>இதனால் மோட்டார் சைகிளில் பயணித்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.</p><p>விபத்தைத் தொடர்ந்து டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று ஹொரான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T07:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல்! அரசாங்கத்தின் துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-purchases-tons-of-paddy-from-farmers-1784440074"></link>
            <id>https://ibctamil.com/article/govt-purchases-tons-of-paddy-from-farmers-1784440074</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 13 முதல் ஜூலை 17 வரையான நான்கு நாட்களுக்குள் இந்த மொத்த அளவும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். </p><p>

இதில் அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொள்முதல் விலை&nbsp;</h2><p>
</p><p>
இந்த சிறுபோக நெல் கொள்முதல் திட்டமானது கடந்த ஜூலை 13 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாயிகளின் வசதிக்காக பிரதான அறுவடைப் பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை திறந்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34434b7-0991-46aa-9e5b-79ba759ae239/26-6a5c68f5d3157.webp' /></p><p> 

முன்னதாக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவாத விலையின் கீழ், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
</p><p>
அங்கீகரிக்கப்பட்ட இந்த விலை திட்டத்தின் கீழ், தற்போது நாடு முழுவதும் உள்ள 143 நெல் கொள்முதல் மையங்களில் இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-quantity-drugs-in-kiribathgoda-1784434700"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-quantity-drugs-in-kiribathgoda-1784434700</id>
            <summary type="text">கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.கைது செய்யபட்ட நபர்&amp;nbsp; கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யபட்ட நபர்&nbsp; கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர்&nbsp;கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கைது செய்யபட்ட நபர்</h2><p>
சந்தேக நபரிடமிருந்து 6 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 2 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின், 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73757a5a-3ac3-498a-91f3-4eb3486a87c5/26-6a5c5e6b39fd0.webp' /></p><p>
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-s-signature-is-worthless-mojtaba-khamenei-1784436370"></link>
            <id>https://ibctamil.com/article/trump-s-signature-is-worthless-mojtaba-khamenei-1784436370</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>மொஜ்தபா கமேனி நேற்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>போர்நிறுத்த உடன்படிக்கை</h2><p>அத்துடன் ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளிடமிருந்து அமெரிக்கா மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக்கொள்ளும் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6dbcf27-2fba-464b-bedb-f12a563d9311/26-6a5c5cfc1b980.webp' /></p><p>
</p><p>
 

போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததை அடுத்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.</p><p>இந்த நிலையில்&nbsp;பாலங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, அமெரிக்கா இந்த வாரம் ஈரான் மீதான தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. </p><p>இதற்குப் பதிலடியாக, ஈரான் குவைத்தில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-who-promoted-c-d-wickramaratne-1784436696"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-who-promoted-c-d-wickramaratne-1784436696</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>

இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டிலும் அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய மறைகரம் குறித்து ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, சி.டி. விக்ரமரத்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.</p><p></p><h2>விசாரணைகள்</h2><p>

இதனைதொடர்ந்து, அவர் 2020 நவம்பர் 25 அன்று காவல்துறை மா அதிபராக உறுதிப்படுத்தப்பட்டு, 2023 நவம்பர் 25 வரை இலங்கை காவல்துறையின் 35வது காவல்துறை மா அதிபாக பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f36b4c71-cde9-4549-a9d3-9921c8fe2744/26-6a5c5a6c6d056.webp' /></p><p>

இவ்வாறானதொருபின்னணியில், அவர் 2023 மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில், அக்காலத்தில் இருந்த அதிகாரிகள் பலமுறை அவரது சேவையை பல மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இது அக்காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதன்படி, அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய முக்கிய புள்ளிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T05:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி DCC கூட்ட விவகாரம் : ரஜீவன் எம்.பியின் கருத்தால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-chandrasekar-argument-in-kilinochchi-1784433526"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-chandrasekar-argument-in-kilinochchi-1784433526</id>
            <summary type="text">கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் தனக்கும் இடையேயோ, அல்லது தனக்கும் தங்கள்
கட்சிக்குமிடையேயோ எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் தான் கூறிய கருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் தனக்கும் இடையேயோ, அல்லது தனக்கும் தங்கள்
கட்சிக்குமிடையேயோ எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் தான் கூறிய கருத்து
திரிவுபடுத்தப்பட்டு வெளியே செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்தால் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று (18) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>மேலும் அந்த அறிக்கையில்,

என்னால் கூறப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்டு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும்
பரவி வரும் செய்திகள் தொடர்பாக பின்வரும் விளக்கத்தை வழங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p><b>
1. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக
</b></p><p>
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூட்டத்திலிருந்து
வெளியேற்றப்பட்டமை குறித்து நான் எனது வருத்தத்தை பதிவு செய்திருந்தேன்.
</p><p>மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் சார்பில் கேள்விகளை முன்வைக்கும் போது,
அதற்கான உரிய விளக்கங்களையும் பதில்களையும் அரச அதிகாரிகள் வழங்குவது
நல்லாட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையாகும் என்பதே எனது
நிலைப்பாடாகும்.</p><p><b>

2. எனது முகநூல் பதிவு தொடர்பான தவறான விளக்கங்கள்
</b></p><p>
எனது முகநூல் பதிவை அடிப்படையாகக் கொண்டு, எனக்கும் நான்
பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடு
இருப்பதாகவும்,&nbsp; கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரை நான் விமர்சித்ததாகவும் சிலர் பரப்பி வரும் செய்திகள்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.</p><p>

நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறான கருத்தை வெளிடவில்லை. அதேபோல்,
அமைச்சருடனோ அல்லது எனது கட்சியுடனோ எந்தவித கருத்து முரண்பாடோ அல்லது அரசியல்
பிரச்சினையோ இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd636ff-fd6d-4ed4-aabc-944e1b7e80eb/26-6a5c5277c9d29.webp' /></p><p>
</p><p><b>
3. கூட்ட ஒழுங்கும் மக்கள் நலனும்</b></p><p>
பொதுவாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு போன்ற முக்கியமான
கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ கூட்டத்தை இடைநடுவில்
விட்டு வெளியேறுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பதே எனது கருத்தாகும்.
</p><p>
குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் மூத்த அதிகாரிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த நிலையில், மாவட்ட அபிவிருத்தி
தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் அனுமதிகள் அன்றைய தினம்
பரிசீலிக்கப்படாமல் போனமை குறித்து நான் கவலை வெளியிட்டிருந்தேன்.
</p><p><b>
4. ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் அவசியம்
</b></p><p>
மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கேள்விகள் தொடர்பான விடயங்கள் இயன்றவரை
முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டால், தேவையான
தரவுகளுடன் முழுமையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவதற்கு அது உதவியாக
இருக்கும் என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.</p><p> இது கேள்வி கேட்கும்
உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல; மாறாக, பயனுள்ள நிர்வாக கலந்துரையாடலை
உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறை ஆலோசனையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/268c6783-e19f-4bd3-92eb-e5a34915b284/26-6a5c5278948fc.webp' /></p><p>
</p><p><b>
5. சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்</b></p><p>

கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளால் உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான
இடங்களில் சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நான்
கேட்டுக்கொண்டிருந்தேன்.
</p><p><b>
6. DCC கூட்டங்கள் விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற வேண்டு</b>ம்</p><p>

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள், நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு
அமைவாக நடைபெறுவது மிகவும் அவசியமானது. </p><p>மாவட்ட அபிவிருத்தி பணிகள் தடையின்றி
முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரச
அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடனும்
ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
</p><p>
மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்தி,
பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் செயற்படுவது நம் அனைவரின் கடமையாகும்“ என
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f04d59fb-56b7-4a7e-af01-1f88d5327823/26-6a5c52794727c.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T04:41:15+00:00</updated>
        </entry>
    </feed>
