<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-11T19:33:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்தும் போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோ! புதிய பயிற்சியாளரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ronaldo-continues-portugal-national-team-1783797437"></link>
            <id>https://ibctamil.com/article/ronaldo-continues-portugal-national-team-1783797437</id>
            <summary type="text">போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,&amp;nbsp; மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,&nbsp; மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது போசுபொருளாகியுள்ளது.</p><p>கிறிஸ்டியானோ ரொனால்டோ&nbsp; விளையாடுவதை தொடர்ந்தால் , அவரைத் தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும், அந்த முன்கள வீரரால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
தனது கடைசி உலகக் கோப்பையில் பங்கேற்றுவிட்டதாகக் ரொனால்டோ கூறிய றிலையில், 2026 உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போர்த்துக்கலின் தோல்வியின் பின்னர் இது குறித்த கேள்விகள் வெளிவந்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><h2>போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம்</h2><p>எனினும், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பது குறித்து அவர்&nbsp; இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce50bc3-37a7-440e-b38a-4e06fdc9dd1b/26-6a5296bf870c5.webp' /></p><p>அவர் விளையாடும் வரையிலும், தேர்வு செய்யப்படும் நிலையில் இருக்கும் வரையிலும், சில வரம்புகளுக்கு உட்பட்டும், தேசிய அணிக்குச் சிறந்ததாக நான் கருதும் நிபந்தனைகளின் கீழும் அவரைத் தேர்ந்தெடுப்பேன்,"என்று ஜீசஸ் தனது அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p><p>தான் ரொனால்டோவிடம் இன்னும் பேசவில்லை என்றும், ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் முன்னாள் நட்சத்திர வீரரான அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.<br></p><p>ரொனால்டோ போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம். ரொனால்டோ தேசிய அணியின் சின்னம். அந்த விடயம் என்றென்றும் சரித்திர ஏடுகளில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T19:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்! விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794"></link>
            <id>https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794</id>
            <summary type="text">பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் அவரது மரணம் கொலையாக சந்தேகிக்கப்படும் நிலையில், ஆன் விடெகோம்பின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
இறுதியாக வெளியாகிள ஒரு புதிய தகவலில், விடெகோம்ப் புதன்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p></p><h2>கண்டெடுக்கப்பட்ட&nbsp;உடல் </h2><p>

கடந்த வியாழக்கிழமை(09.07.2026) காலை 11.40 மணிக்கு, டெவோனின் ஹேட்டரில் உள்ள விடெகோம்பின் பங்களாவில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbe1ea0-393c-4a90-ab82-fd2fba02c612/26-6a528c6c6cca2.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞன், தற்போது எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும், அவர் இனி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் இருக்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T18:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : மொட்டுவின் நிலைப்பாடு வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-issues-extending-the-retirement-age-of-judges-1783789658"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-issues-extending-the-retirement-age-of-judges-1783789658</id>
            <summary type="text">உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த அறிக்கை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசம் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கீழ்த்தரமானதும் வெட்கக்கேடானதுமான ஒரு முயற்சி</h2><p>அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்க இந்த அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக்கேடானதுமான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றும், அது எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bd9e94a-ad39-4e5b-ab6c-f5e78cfa1b62/26-6a52872dea34a.webp' /></p><p>
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு:</p><p> அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்க இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக இந்த நாட்டில் மிகப் பெரிய மக்கள் கருத்து நிலவுவதை நாங்கள் காண்கிறோம்.</p><h2>நாட்டின் ஜனநாயகத்திற்கு&nbsp; மரண அடி</h2><p>
</p><p>
ஒரு கட்சியாக நாங்கள் இந்த கீழ்த்தரமான முயற்சியை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், ஏனெனில் இது நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடியாகும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a2cd70-6534-4dc6-b691-c5766bca9320/26-6a52872d4788b.webp' /></p><p>இன்று, நீதிபதிகள் சங்கம் இந்த முடிவை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு, இந்த அரசாங்கத்தின் வஞ்சகமான மற்றும் ஜனநாயக விரோத முயற்சிக்கு எதிராக நாட்டின் நீதிபதிகளே குரல் எழுப்புகிறார்கள் என்ற உண்மையை பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><p></p><h2>ஒன்றிணைந்து குரல் எழுப்ப சஜித்தை அழைக்கும் நாமல்</h2><p>
</p><p>
கடந்த வாரம், தற்போதைய அரசாங்கத்தின், இந்த வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புமாறு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரை எங்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347dd4f5-83ff-4efb-96d5-25e5baeb965a/26-6a52853ab2fc9.webp' /></p><p> உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இந்த விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்று நான் நம்புகிறேன். </p><p>நமது தாய்நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிராக எத்தகைய அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் எழுந்தாலும், நாம் நமது ஜனநாயகத்துடன் உறுதியாக நிற்போம் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் நான் கூற விரும்புகிறேன்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை தவிர்ப்பதற்கான திட்டம்! அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஈராக் - சிரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iraq-syria-join-hands-with-bypass-strait-of-hormuz-1783789931"></link>
            <id>https://ibctamil.com/article/iraq-syria-join-hands-with-bypass-strait-of-hormuz-1783789931</id>
            <summary type="text">ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் திட்டத்தில் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவுடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.</p><p>

இது, ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தாமலேயே ஈராக் எண்ணெயை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பல தசாப்தங்களாக மூடப்பட்டு, கடுமையாக சேதமடைந்துள்ள 500-மைல் (800 கி.மீ.) குழாய்வழியை மீண்டும் அமைப்பதற்கான ஒப்பந்தம், அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதிக்கும் ட்ரம்பிற்கும் இடையே நடைபெறும் சந்திப்பின்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
</p><p></p><h2>குழாய்வழி&nbsp;மாற்றம்</h2><p>மேலும் இந்த குழாய்வழியை முழுவதுமாக மாற்ற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f89d157-23a0-489c-8815-b6cb9c42bbca/26-6a52796c8dadb.webp' /></p><p>
</p><p>
இதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் இந்தத் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்களின் குழு ஒன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T17:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி ஜனாதிபதி அளித்த பரிசால் அதிர்ச்சியில் உறைந்துபோன 'நேட்டோ' தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nato-leaders-shocked-by-turkish-presidents-gift-1783785526"></link>
            <id>https://ibctamil.com/article/nato-leaders-shocked-by-turkish-presidents-gift-1783785526</id>
            <summary type="text">துருக்கியில் நடந்த, &#039;நேட்டோ&#039; அமைப்பின் உச்சி மாநாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வழங்கிய நினைவு பரிசு, நேட்டோ தலைவர்களை அதிர்ச்சியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கியில் நடந்த, 'நேட்டோ' அமைப்பின் உச்சி மாநாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வழங்கிய நினைவு பரிசு, நேட்டோ தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.</p><p>


 இம்மாநாட்டின் முடிவில், நேட்டோ அமைப்பின் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சார்பில் ஒரு மரத்தாலான பெட்டி வழங்கப்பட்டது.</p><h2>இயங்கு நிலையில் துப்பாக்கி</h2><p>அதில், அவர்களின் பெயர் செதுக்கப்பட்ட, 'குமுசே 357 மேக்னம்' ரக கை துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், துப்பாக்கியை சுத்தம் செய்யும் கருவி மற்றும் துருக்கியின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து இந்த துப்பாக்கிக்கு விலக்கு அளிக்கும் சான்றிதழ் உள்ளிட்டவை இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a87dc1-a70c-43e9-8aa5-3149208ca1e2/26-6a526d9ee4273.webp' /></p><p>
</p><p>

துப்பாக்கி இயங்கும் நிலையில் இருந்ததோடு, தோட்டாக்களும் அதனுடன் இருந்ததால், அவற்றை சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும், தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்வதில் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.</p><p></p><h2>துப்பாக்கியை தூதரகங்களில் விட்டுச் சென்ற தலைவர்கள்</h2><p>
</p><p>

பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், தன் நாட்டில் தரையிறங்கிய பின், பரிசு பொருளை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதனை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adcf0d9-6601-4956-9c21-93cc3d80c6ed/26-6a526d9f92b44.webp' /></p><p> </p><p>பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் தங்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாகவே பரிசு பொருளை திறந்து பார்த்தனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை துருக்கியில் உள்ள தங்கள் துாதரகத்திலேயே வைத்து விட்டுச் சென்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T16:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983"></link>
            <id>https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983</id>
            <summary type="text">இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.</p><h2>நான்கு முறை தேசிய விருதுகள்&nbsp;</h2><p>
</p><p>
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a48a97-13c2-4cfd-a3d2-89ea2025be18/26-6a525fd3d59a2.webp' /></p><p>&nbsp;இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை : கைதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-used-by-inmates-in-negombo-found-1783781536"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-used-by-inmates-in-negombo-found-1783781536</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின் இருப்பை காவல்துறையினர் கண்டெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின் இருப்பை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>
அவர்களிடம் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, ​​கைதிகள் சிறை சமையலறையிலிருந்து தேங்காய்களை எடுத்து அதிகாரிகளைத் தாக்கியதும் தெரியவந்துள்ளது.</p><h2>கூர்மையான ஆயுதங்களும், இரும்புக் கம்பிகளின் இருப்பும்&nbsp;கண்டுபிடிப்பு</h2><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தில் 8 அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d74b61-8c8d-4ca3-8dcd-9412820f44b5/26-6a525b1651281.webp' /></p><p> </p><p>சிறையில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகளும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அங்கு பல கூர்மையான ஆயுதங்களும், இரும்புக் கம்பிகளின் இருப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தேங்காய்கள் மூலமும் தாக்குதல்</h2><p>

மோதலின் போது, ​​கைதிகள் சிறை சமையலறைக்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தேங்காய்களைக் கொண்டு வந்த கைதிகள், அவற்றைக் கொண்டு அதிகாரிகளை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0153b79b-96b1-42a9-aea2-c73c4423ee34/26-6a525b16f3053.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு கைதிகள் மாற்றப்படுவதால், அந்தச் சிறைகளில் இடவசதி மேலும் குறைந்து, ஒரு சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.</p><p>

மேலும், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், அந்தச் சிறைகளில் உள்ள மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T15:02:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியுடன் சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-member-arrested-with-firearm-1783777557"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-member-arrested-with-firearm-1783777557</id>
            <summary type="text">
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, சட்டவிரோதமாக ரீப்பீட்டர் வகை துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, சம்பந்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அத்துடன், அது ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காலி மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4b3bbb1-7793-42a5-bfb7-07b75d3d8619/26-6a524f657c52a.webp' /></p><p>

இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-11T14:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துக்கள் தொடர்பில் 500 பேரிடம் விசாரணையை ஆரம்பித்தது இலஞ்ச ஆணைக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-probes-assets-of-500-people-1783778525"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-probes-assets-of-500-people-1783778525</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு, நாடு முழுவதும் பல்வேறு பதவிகளில் உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு, நாடு முழுவதும் பல்வேறு பதவிகளில் உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>
விசாரிக்கப்பட்டவர்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள சுமார் அறுபது அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட நூறு உயர் பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர் என்று ஒரு மூத்த அதிகாரி கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.</p><h2>முதற்தடவையாக ஒரே நேரத்தில் பெரியளவில் விசாரணை</h2><p>ஆணையத்திற்கு கிடைத்த புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய குழுவினருக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்துக்கள் குறித்த விசாரணைகள் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4698cf0-d654-416b-a8d4-f483db201374/26-6a525288778eb.webp' /></p><p>
</p><p>
சொத்துக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளும்போது, ​​இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்புகளும் விசாரிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திடம் தங்கள் சொத்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரிகளின் குழுவில் பத்திரிகையாளர்கள் மற்றும் துறைசார் எழுத்தர்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டனர்.</p><p></p><h2>முடிவடைந்த காலக்கெடு</h2><p>
</p><p>
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. சிக்கல்கள் காரணமாக இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கு 7 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4589ad6d-cd8b-4f01-b11c-56e09486e103/26-6a52528926c4c.webp' /></p><p>
</p><p>
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) அபராதம் விதிக்கும் அல்லது சட்ட நடவடிக்கை (ஓராண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம்) எடுக்கும். இது 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 80 (1) வழங்கிய அதிகாரங்களுக்கு இணங்க உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T14:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்தவர்களை முகநூலில் சரிபார்த்த நீதியமைச்சர் : கிண்டலடிக்கும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-minister-checks-death-toll-on-facebook-1783776057"></link>
            <id>https://ibctamil.com/article/justice-minister-checks-death-toll-on-facebook-1783776057</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இலங்கையின் நீதி அமைச்சர் முகநூலில் சரிபார்த்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இலங்கையின் நீதி அமைச்சர் முகநூலில் சரிபார்த்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p><p>

ஐந்து மணி நேரமாக முகநூலைச் சரிபார்க்க முடியாததால், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தனக்குத் தெரியாது என்று நீதி அமைச்சர் பகிரங்கமாகக் கூறியதாகவும் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.</p><p>&nbsp;கோட்டை பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
</p><p>
</p><h2>சொல்வதை செய்யக்கூடிய ஒரு அரசியல் சக்தி</h2><p>'இன்று, நாங்கள் நகரத்திற்குச் செல்லும்போது, ​​எங்களுடன் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். எங்களுக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் எங்கள் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed07ea7-5ffa-464b-ad6c-d1c13a79e234/26-6a5248e6c8439.webp' /></p><p> </p><p>இந்த நாட்டிற்காக உழைத்த ஒரு அரசியல் சக்தியாக, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் சொல்வதை செய்யக்கூடிய ஒரு அரசியல் சக்தி.'</p><p></p><h2>அரசாங்கம் அளித்த நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன</h2><p>
</p><p>
இந்த அரசாங்கம் முடிவில்லாமல் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது. இப்போது, ​​அரசாங்கம் சொன்ன பொய்களை நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையில், அந்தப் பொய்யை மூடிமறைக்க மற்றொரு பொய்யைச் சொல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc5d4774-161e-48d8-9214-12d97006abac/26-6a5248e7806a3.webp' /></p><p> </p><p>இந்த அரசாங்கம் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் அளித்த நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T13:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தை புரட்டிப்போடப்போகும் எல்நினோ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nino-approaching-the-indian-ocean-1783774507"></link>
            <id>https://ibctamil.com/article/el-nino-approaching-the-indian-ocean-1783774507</id>
            <summary type="text">
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வெப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>

யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள மிலேனியம் தனியார் விடுதியில் எல்நினோ தொடர்பான செயலமர்வொன்றில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.</p><p></p><h2>கடல் வெப்ப ஏற்றம்&nbsp;</h2><p>
</p><p>
இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510b8997-0222-4ddd-a4ab-f4f75f924bf6/26-6a5246c2157db.webp' /></p><p>

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.
</p><p>
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.</p><h2>அதிக வறட்சி</h2><p>
</p><p>
இருந்தாலும் இந்த தாள முக்கங்கள் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed5032f-075e-4dc1-9c43-3768cc9a3e5d/26-6a5246c2bbf2a.webp' /></p><p>
</p><p>
ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-11T13:36:10+00:00</updated>
        </entry>
    </feed>
