<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-13T11:22:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;இராணுவத் தளபதி உட்பட அனைத்தையும் நியமிக்கும் கர்தினால்&quot; சாமர சம்பத் பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-cardinal-appoints-everything-chamara-says-1783940720"></link>
            <id>https://ibctamil.com/article/the-cardinal-appoints-everything-chamara-says-1783940720</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற்றாலும், திரைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற்றாலும், திரைக்குப் பின்னால் உள்ள உண்மையான முடிவுகளை கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் எடுக்கிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒரு பௌத்த துறவியுடனான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.</p><h2>நியமனங்களுக்குப் பின்னால்&nbsp;கர்தினால்</h2><p>அங்கு, இராணுவத் தளபதி உட்பட உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்குப் பின்னால் கர்தினாலே இருப்பதாக அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66e7818-a463-4919-93b4-3aaa30276a4f/26-6a54c74d56b1c.webp' /></p><p>

"மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அரசாங்க அதிகாரிகள் சென்று நமது வணக்கத்திற்குரிய மகாநாயக்கர்களை சந்திக்கின்றனர். ஆனால், வேலையைச் செய்வது கர்தினால்தான். இராணுவத் தளபதி உட்பட அனைத்தையும் கர்தினாலே நியமிக்கிறார். அடுத்த இராணுவத் தளபதி பெர்னாண்டோ வணக்கத்திற்குரியவராக இருப்பார்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் ''நீதியின் ஓலம் 2&quot; : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-international-justice-for-tamil-genocide-1783938169"></link>
            <id>https://ibctamil.com/article/protest-international-justice-for-tamil-genocide-1783938169</id>
            <summary type="text">தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்
&quot;நீதியின் ஓலம் 2 &quot; எனும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக&amp;nbsp;தாயகச் செயலணி அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்
"நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக&nbsp;தாயகச் செயலணி அறிவித்துள்ளது.</p><p>யாழ்ப்பாணத்தில் வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்</h2><p>இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,&nbsp;தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம்
முன்னெடுக்கப்படது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, 14.08.2026 (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17/08/2026 (திங்கட்கிழமை) வரை
தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ் நகரில் "நீதியின் ஓலம் 2" எனும் போராட்டத்தின்
வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம்
இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாளில் மாபெரும்
பேரணியும் நடை பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a3b505-c2b9-4cae-b968-2e8562698bc5/26-6a54c4cd2fca6.webp' /></p><p>

முன்பதாக தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின்
சாட்சியாக,யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில்
இருந்து 412க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச
பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே.</p><p>

குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பலரால் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை
மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
</p><p>
இப்படுகொலைக்கு முன்னதாக 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும்
அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல
நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை
நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட
இலங்கை அரச படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999
ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.
</p><p>
ஆயினும், பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசியல் இயந்திரங்கள் அவற்றை
முழுமையாக விசாரணை செய்யாமல், மூடி மறைத்து வந்தன. </p><p>கடந்த ஆண்டு, அப்பகுதியில்
கட்டுமான வேலைக்காக நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது மனித எலும்புக்கூடுகள்
மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால், இவ்விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் அரச தரப்பால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே
இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

இதைப் பற்றிய மற்றும் நீதியின் ஓலம் போன்ற கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு
போராட்டங்கள் ஆக எமது மக்களால்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><b>

இதனடிப்படையில் "நீதியின் ஓலம் 2" போராட்டத்தின் கோரிக்கைகளாக&nbsp;</b></p><p>1.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப்
புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.</p><p>

2.எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில்
இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான
நிலைப்பாடு எடுக்க வேண்டும்.</p><p>

3.தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா,
பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
</p><p>
4.தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க
ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.</p><p>

5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை
விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை
நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
</p><p>
6."பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின
அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்
கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.</p><p>

7. கடந்த 77ஆண்டுகளாக ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட தமிழின
சுத்திகரிப்பையும் தொடரும் தமிழர் இனவழிப்பையும் நினைவழிப்பையும் நிறுத்தி,
ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய
அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.</p><p>
8.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும்,
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு,
வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்
இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
</p><p>
9.Unitary State / Ekiya Rajya அடிப்படையிலான போலி தீர்வு திட்டங்கள்
நிராகரிக்கப்பட வேண்டும்; தமிழர் தேச அதிகாரங்கள் மீளப்பெற முடியாத
சுயநிர்ணயத்தின் அடிப்படையிலும் சர்வதேச உத்தரவாதத்துடனும் உறுதி செய்யப்பட
வேண்டும்.</p><p>
10.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு, பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக மீளப்பெறப்பட
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d150da1-4679-42f3-9b5a-da336b3a038d/26-6a54c4cde6ab1.webp' /></p><p>மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, "நீதியின் ஓலம் 2" என்ற போராட்டம் 14.08.2026 அன்று மாலை 4 மணிக்கு செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின்
அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து (17/08/2026)
இறுதி நாள் மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும்.
</p><p>
இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும், குறிப்பாக
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மத
அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து
கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவும்
ஒத்துழைப்பும் கோருகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் : ஈரான் வெளியிட்ட எதிர்மறையான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-memorandum-of-understanding-with-the-us-1783935962"></link>
            <id>https://ibctamil.com/article/iran-memorandum-of-understanding-with-the-us-1783935962</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் &quot;ஒரு நெருக்கடிக் கட்டத்தை&quot; எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அத்துடன் வோஷிங்டன் தனது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் "ஒரு நெருக்கடிக் கட்டத்தை" எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன் வோஷிங்டன் தனது கடமைகளைத் தொடர்ந்து மீறும் வரை, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளை நிறைவேற்றப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்தது.
</p><p>
</p><h2>"கடமைக்கு ஈடாகக் கடமை" என்ற கொள்கை</h2><p>தெஹ்ரானின் நிலைப்பாடு "கடமைக்கு ஈடாகக் கடமை" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12677de6-c90b-4c75-9d8c-6ac5d9e4e238/26-6a54ba6f24ef2.webp' /></p><p>"இது 'கடமைக்கு ஈடாகக் கடமை' என்ற விஷயம் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். மற்ற தரப்பு (அமெரிக்கா) அதன் கடமைகளைக் கடைப்பிடித்தால், நாங்களும் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம்," என்று பாகாயி தனது கருத்துக்களை அரை-அரசு தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் மேற்கோள் காட்டி தெரிவித்தார்.</p><p></p><h2>ஈரான் ஒப்பந்தங்களை மீறியதாக எவரும் குற்றம்சாட்ட முடியாது</h2><p>
</p><p>
"ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஒப்பந்தங்களை மீறியதாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. எல்லா சந்தர்ப்பங்களிலும், எங்கள் கடமைகளும் மற்ற தரப்பினரின் கடமைகளும் தெளிவாக உள்ளன, மேலும் அவற்றை ஆவணப்படுத்தவும் முடியும்," என்று கூறிய அவர், வோஷிங்டன் "பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ்" புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் "பல்வேறு பிரிவுகளை மீறுவதாக" குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af23ada-b56f-43b7-a96a-a625f0bfc5a2/26-6a54ba6e77db8.webp' /></p><p>

"மற்ற தரப்பினர் தங்கள் கடமைகளைத் தொடர்ந்து மீறும் வரை, ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, பதிலுக்கு, தான் ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து விலகிக்கொள்ளும்," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>



ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, தெஹ்ரானுக்கும் வோஷிங்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T10:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்றப்பட்ட வேட்பாளர்களும் - போலிக் கையொப்பங்களும்! தமிழரசுக் கட்சிக்கு எதிராக தொகுதிக்கிளை அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statement-against-the-tamil-nadu-party-1783939832"></link>
            <id>https://ibctamil.com/article/statement-against-the-tamil-nadu-party-1783939832</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனக் கோரி, காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனக் கோரி, காங்கேசன்துறை தொகுதிக்கிளை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது.
</p><p>
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>

அதில், 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது வலிவடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>போலிக் கையொப்பங்கள்</h2><p> </p><p>ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், சில வேட்பாளர்கள் ஏமாற்றப்பட்டதோடு போலிக் கையொப்பங்களும் இடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bef514-7895-4610-8285-384c98286db9/26-6a54c2fc24808.webp' /></p><p>

இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை நேரிலும், எழுத்து மூலமாகவும் கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், எந்தவித விசாரணையோ நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T10:50:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 ஆண்டுகால வெற்றி கூட்டணி முடிவிற்கு வந்தது : சிஎஸ்கேவை விட்டு விலகினார் ஸ்டீபன் பிளெமிங்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stephen-fleming-steps-down-as-chennai-super-kings-1783938930"></link>
            <id>https://ibctamil.com/article/stephen-fleming-steps-down-as-chennai-super-kings-1783938930</id>
            <summary type="text">சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஸ்டீபன் ஃபிளெமிங், 2008 ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
</p><p>
ஸ்டீபன் ஃபிளெமிங், 2008 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக விளையாடினார்.

அதன்பிறகு, 2009 சீசனிலிருந்து சென்னை நிர்வாகம் அவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது.</p><h2>சென்னை அணி படைத்த சாதனை</h2><p>அதிலிருந்து, 2026 போட்டித் தொடர் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4ac5407-88d7-436a-abdf-934bedcf4008/26-6a54c22610d32.webp' /></p><p> </p><p>இந்த காலகட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றது. மேலும், 12 முறை பிளே ஒஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி புதிய சாதனைகளை படைத்தது.</p><p></p><h2>என் இதயத்திற்கு நெருக்கமான அணி</h2><p>
</p><p>
ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே அவரது விலகல் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0fe2441-5715-4877-b29b-565a3105c28d/26-6a54c22560f06.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், "இந்த 17 ஆண்டுகள் என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயம். சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து பணியாற்றியது எனது பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். வெற்றிகளும், சவால்களும், ரசிகர்களின் அன்பும் என்றென்றும் என் நினைவில் இருக்கும். சிஎஸ்கே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான அணியாகவே இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T10:47:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பல்கலை அறிவியல் பீட கல்வி நடவடிக்கை இணையவழியில்! எடுக்கப்பட்டுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-faculty-of-science-moves-online-learning-1783937569"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-faculty-of-science-moves-online-learning-1783937569</id>
            <summary type="text">


கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம், நாளை முதல் ஒரு வாரத்திற்குத் தனது கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளது.

டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம், நாளை முதல் ஒரு வாரத்திற்குத் தனது கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளது.</p><p>

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் துணைவேந்தர், பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பல்கலைக்கழகம் மூடப்படாது என்றும், அனைத்து ஊழியர்களும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>விடுதிகள் திறப்பு</h2><p>
</p><p>
அத்தோடு, அனைத்து விடுதிகளும் திறந்தே வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3b9d89-e113-4ed1-9fc4-8a03499713d3/26-6a54bde9ad8aa.webp' /></p><p>

மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை, சட்டம், கல்வி மற்றும் மேலாண்மை பீடங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T10:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் நிறைவடையாத அரச வீட்டுத் திட்டங்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permanent-houses-for-north-and-east-people-1783934635"></link>
            <id>https://ibctamil.com/article/permanent-houses-for-north-and-east-people-1783934635</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூர்த்தி செய்யப்படாத அரச வீட்டு திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூர்த்தி செய்யப்படாத அரச வீட்டு திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத், முந்தைய திட்டங்களின் கீழ் சுமார் 6,000 வீடுகளின் கட்டுமானம் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p>எனினும், அந்த வீடுகளில் பலவற்றின் கட்டுமானப் பணிகள் ஆரம்பக் கட்டத்திலேயே கைவிடப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>பிரதி அமைச்சர் தெரிவிப்பு</h2><p>இந்த நிலையில் முடங்கியுள்ள இந்தத் திட்டங்களை முடிந்தவரை விரைவாக முடித்து, பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a653d2-067b-4938-b088-5928f4e148b1/26-6a54b7373cb79.webp' /></p><p>அத்துடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T10:10:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர் கட்டணம் செலுத்தாதோருக்கு முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-supply-cut-off-week-1783931537"></link>
            <id>https://ibctamil.com/article/water-supply-cut-off-week-1783931537</id>
            <summary type="text">
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களை வசூலிப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (13) முதல் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களை வசூலிப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (13) முதல் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.</p><p>

அதன்படி, இன்று (13) முதல் 19 ஆம் திகதி வரையிலான காலம் “நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சிறப்பு நடவடிக்கை முக்கியமாகப் பல பகுதிகளைக் குறிவைத்துச் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துண்டிக்கப்படும் பகுதிகள்</h2><p>
</p><p>
அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான அனைத்துப் பகுதிகள், மஹாரகம பிரிவு மற்றும் கோட்டை பிரிவிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eec8c61-05c6-4bc6-9e12-9ff19b6056b1/26-6a54b875209dd.webp' /></p><p> </p><p>

எனவே, தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பேணுவதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களின் நிலுவைக் கட்டணங்களை 2026, ஜூலை 13 ஆம் திகதி முன்னர் செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T10:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தேவைப்பாடு! எடுத்துருக்கும் அரசியல் ஆய்வாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-need-in-sri-lanka-s-economic-development-1783934498"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-need-in-sri-lanka-s-economic-development-1783934498</id>
            <summary type="text">ஒரு சிறிய தீவு நாடான இலங்கை, உலக மற்றும் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒருங்கிணைக்கப்படாமல் தனித்து இயங்க முடியாது என்று இந்தியாவுக்கான இலங்கையின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு சிறிய தீவு நாடான இலங்கை, உலக மற்றும் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒருங்கிணைக்கப்படாமல் தனித்து இயங்க முடியாது என்று இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரொகட சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தென்னிலங்கை தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உலக வங்கி இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மறுவகைப்படுத்தியதன் பின்னணியில் உள்ள உண்மையான பொருளாதார நிலவரம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் கடுமையான சட்ட மற்றும் நிதிச் சவால்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்தில், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடன்களை வங்கிகள் சர்வதேச சந்தையிலிருந்து பெற வேண்டியிருக்கும், மேலும் அக்கடன்களுக்கு அதிக வணிக வட்டி விகிதங்களையும் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.
</p><p></p><h2>இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தை</h2><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

“2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்புத் தேவைகள் 130%-க்கும் மேலாக வேகமாக அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f52d3f35-2c25-433c-8e1a-5a24162acfc8/26-6a54b0d187d63.webp' /></p><p> 

பாதுகாப்புக் காரணங்களால் புது தில்லி முன்பு இலங்கை சுத்திகரிப்பு நிலையங்களில் ஆர்வம் காட்டாமல், எண்ணெய் குழாய்வழித் திட்டம் குறித்து மட்டுமே பேசி வந்தபோதிலும், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இலங்கையில் பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கவும், அந்நாட்டிற்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.</p><p>

உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் முன் தன்னை ஒரு 'ஏழை நாடு' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, உலகின் ஒரு முக்கியப் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் வரை சீனா எவ்வாறு சலுகைகளைப் பெற்றது என்பதை நாம் ஆராய வேண்டும்

நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை இலங்கையும் உணர்ந்து, கட்டமைப்புச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T09:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-further-court-order-1783932542"></link>
            <id>https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-further-court-order-1783932542</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள&amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் &#039;பிள்ளையான்&#039; என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள&nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பொய்க் குற்றச்சாட்டுக்கள்</h2><p>இன்றைய வழக்கு விசாரணையின் போது பிள்ளையான் இணையவழி தொழிநுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a10a221d-812b-4ad6-873c-6f92b82a6547/26-6a54ab36463f8.webp' /></p><p>
</p><p>அத்துடன் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும் அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்று கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் பிள்ளையான் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T09:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-s-life-lost-due-to-extramarital-affair-crime-1783927211"></link>
            <id>https://ibctamil.com/article/woman-s-life-lost-due-to-extramarital-affair-crime-1783927211</id>
            <summary type="text">களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகளில் பல அதிர்ச்சிகர விடயங்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
நதுனி சஹஸ்ரீ குரே என்ற இளம் பெண்னே இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
</p><p>
குறித்த பெண் 27 வயதுடைய ஆணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் அந்த வீட்டில் வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>​​பணம் தொடர்பாக&nbsp;வாக்குவாதம் </h2><p>
பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலறை உதவியாளராகப் பணிபுரிந்த குறித்த நபர், சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0f0981-2d15-488f-bd80-57c6d1702c8a/26-6a5493ae93726.webp' /></p><p>


சம்பவம் நடந்த அன்று இரவு, தனது பணியிடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இரவு சுமார் 11.15 மணியளவில் அவர் அறைக்கு வந்து, நதுனி தயாரித்த தேநீரைக் குடித்த பிறகு ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துள்ளார்.</p><p>

அப்போது, ​​பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாதத்தின் நடுப்பகுதி என்பதால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியபோது, ​​நதுனி தன்னைக் கடுமையாக அவமானப்படுத்தியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
</p><p>
தனது தாய் மற்றும் சகோதரியை அவமதித்து பேசியதால் தனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.


பின்னர், அவர் ஒரு கத்தியை எடுத்து அவளது மார்பில் குத்தி, கழுத்தை அறுத்ததாக வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>உயிரை மாய்க்க முயற்சி</h2><p>
தனது உயிரை மாய்த்துக்கொள்ள அறையில் இருந்த ஆவியாக்கி திரவத்தைக் குடித்ததாகவும், பின்னர் வீட்டிலிருந்து தப்பி சென்றதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து மொரட்டுவ தொடருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் மீது குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e21cb32a-e16f-480e-b5be-31f54fd6d1e4/26-6a5493af80665.webp' /></p><p>
</p><p>
 இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரைச் சுற்றியிருந்தவர்கள் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். </p><p>பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 இரண்டு நாட்களாக சந்தேக நபரைத் தேடி வந்த காவல்துறை, தேசிய மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.</p><p>

கொலை செய்யப்பட்ட நதுனியும் அவரது தாயாரும் சில காலமாக இளைஞர்களை ஏமாற்றி வந்த ஒரு மோசடிக் கும்பலில் ஈடுபட்டு வந்தமை காவல்துறை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பாணந்துரை வடக்கு காவல்துறை</h2><p> 

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவில் வசிக்கும் ஒருவர், பாணந்துரை வடக்கு காவல்துறை பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு, தாயும் மகளும் சேர்ந்து தன்னிடம் இருந்து 1.5 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறியுள்ளார்.</p><p></p><p> 

தாயும் மகளும் சேர்ந்து தனது வங்கிக் கணக்கிலிருந்து 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த இளைஞன் கூறியுள்ளார்.</p><p>

மேலும், அவர் அவளுக்கு மாதந்தோறும் கொடுத்து வந்த 35,000 ரூபாய் உட்பட, மொத்தமாக கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இவ்வாறு இளைஞர்களைப் பொறிவைத்து பணம் பறிக்கும் இந்தத் தந்திரம், நதுனியும் அவள் தாயும் சேர்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்திய ஒன்று என்று காவல்துறை கூறியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:48:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை அரையிறுதி! மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு சவால் விடுக்கும் இங்கிலாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/england-to-challenge-messi-s-argentina-1783932086"></link>
            <id>https://ibctamil.com/article/england-to-challenge-messi-s-argentina-1783932086</id>
            <summary type="text">1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்த்து அரையிறுதியில் மோத தயாராகியுள்ளது.
</p><p>
நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு பயிற்சியாளர் தோமஸ் டுசெல் தலைமையிலான இங்கிலாந்து அணி, காலிறுதியில் நோர்வேயை கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
</p><p>
போட்டியின் போது இரண்டு முறை பின்தங்கிய நிலையிலும் மீண்டு வந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் போராட்ட மனப்பான்மையை டுசெல் பாராட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
கேன் - பெலிங்காம் அசத்தல்
</h2><p>
இந்தத் தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு தலைவர் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெலிங்காம் ஆகியோர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6114cb-920a-4a95-b564-c06a07bf5027/26-6a54a61ab01b1.webp' /></p><p> </p><p>இருவரும் தலா 6 கோல்களைப் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் பெலிங்காம் 4 கோல்களை அடித்துள்ளார்.</p><p>எனினும் நோர்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அணியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், வெற்றியில் அதிர்ஷ்டத்தின் பங்கும் இருந்ததாகவும் தோமஸ் டுசெல் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>அர்ப்பணிப்புடன் விளையாடிய&nbsp;வீரர்கள் </h2><p>
</p><p>
இதற்கு அதிருப்தி தெரிவித்த ஜூட் பெலிங்காம், வீரர்கள் களத்தில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடியதாகவும், அதனை பயிற்சியாளர் உரிய முறையில் மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e5cc62-73cd-4191-b58b-7b2798ca61cb/26-6a54a61b65cc2.webp' /></p><p>அதேவேளை, அணியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது தனது பொறுப்பு என டுசெல் விளக்கமளித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இங்கிலாந்து அணியில் டெக்லன் ரைஸ் உள்ளிட்ட சில வீரர்கள் உடல்நலக் குறைவு மற்றும் தசைப்பிடிப்பு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் அரையிறுதியில் முழு திறனையும் வெளிப்படுத்த அணி தயாராக இருப்பதாக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அர்ஜென்டினா அணி</h2><p>
</p><p>மறுபுறம், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தலைமையிலான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்தை கூடுதல் நேரத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5feec1d3-38bc-4aa6-91a1-b1e7d67ec3a4/26-6a54a619d9b39.webp' /></p><p>

67ஆவது நிமிடத்தில் சமநிலை ஏற்பட்ட போதிலும், கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லவுடாரோ மார்டினஸ் அடித்த கோல்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தன.
</p><p>போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிப்பது தங்கள் அணியின் இயல்பாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
</p><p>
கடினமான போட்டிகளில் பெற்ற அனுபவமே தற்போது அணிக்கு பலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>இந்த வெற்றியின் மூலம், அர்ஜென்டினா அணி பங்கேற்ற கடந்த ஆறு முக்கிய சர்வதேச தொடர்களிலும் தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
இப்போது உலகக் கால்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது, ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தா அல்லது லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவா இறுதிப்போட்டிக்கான பாதையை தக்கவைக்கும் என்பதையே.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783930416"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783930416</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (13.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (13.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.04 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.48 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	441.780 ஆகவும் விற்பனைப் பெறுமதி 456.70 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.44 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.50 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f793c0-94bd-4c3a-ac2d-d5647cc1c585/26-6a54a4787478c.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	227.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.47ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.88 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:44:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயந்திர துப்பாக்கியின் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய வீரர்! உயிர் தப்பிய சக அதிகரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-soldier-loses-control-of-machine-gun-1783923101"></link>
            <id>https://ibctamil.com/article/russian-soldier-loses-control-of-machine-gun-1783923101</id>
            <summary type="text">ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
அந்தக் காணொளியில், துப்பாக்கி கட்டுப்பாடின்றி சுழலத் தொடங்கியதுடன், தோட்டாக்கள் கணிக்க முடியாத வகையில் பல திசைகளிலும் பாய்வது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>இதனால் அருகில் இருந்த வீரர்கள் உடனடியாக பதுங்கி தப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்</h2><p>இந்த விடயம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,&nbsp;&nbsp;இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் யாக் பி-12.7 (YakB-12.7) என்ற நான்கு குழல் சுழல் இயந்திரத் துப்பாக்கி எனக் கூறப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">𝐕𝐢𝐫𝐚𝐥 𝐅𝐨𝐨𝐭𝐚𝐠𝐞: A Russian military training exercise reportedly went awry after troops mounted a YakB-12.7 helicopter machine gun on a fixed stand, with the weapon appearing to spin out of control during the drill.<a href="https://x.com/hashtag/Russia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Russia</a><a href="https://x.com/hashtag/RussianArmy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RussianArmy</a><a href="https://x.com/hashtag/MilitaryTraining?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MilitaryTraining</a><a href="https://x.com/hashtag/YakB127?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#YakB127</a> <a href="https://t.co/rwwpVsx9K0">pic.twitter.com/rwwpVsx9K0</a></p>&mdash; Daily Kishtwar Times (@kishtwartimes1) <a href="https://x.com/kishtwartimes1/status/2076331898272731239?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இந்த ஆயுதம் முதலில் மில் மி-24 (Mi-24 Hind) தாக்குதல் ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியின் பின்னால் நின்றிருந்த சிப்பாய் சுடத் தொடங்கிய சில நொடிகளிலேயே, ஆயுதத்தின் பின்னுதைப்பு காரணமாக பொருத்தும் அமைப்பு செயலிழந்ததுள்ளது.</p><p> இதனைத் தொடர்ந்து துப்பாக்கி தனது தாங்கியைச் சுற்றி வேகமாகச் சுழல, அதை கட்டுப்படுத்த முயன்ற சிப்பாயும் அதனுடன் இழுக்கப்படுகிறார்.</p><p></p><h2>தூக்கி வீசப்பட்ட சிப்பாய்</h2><p>
</p><p>
சில நொடிகளில், அந்த சிப்பாய் அருகிலிருந்த தடுப்பின் மீது பலமாக வீசப்படுவதும், துப்பாக்கி தொடர்ந்து சுழன்றபடியே தோட்டாக்களைப் பாய்ச்சுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22985b4b-87d3-4566-91cb-f61c98886d50/26-6a5484a2b8830.webp' /></p><p> </p><p>இதனால் அருகிலிருந்த மற்ற வீரர்கள் குனிந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு படைவீரர் விரைந்து சென்று சுழன்றுகொண்டிருந்த ஆயுதத்தின் இயக்கத்தை நிறுத்துகிறார்.</p><p>அதன்பின் துப்பாக்கிக் குழலைத் தொட முயன்ற அவர், அது அதிக வெப்பமடைந்திருந்ததை உணர்ந்து உடனடியாக கையைப் பின்வாங்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளது.</p><p>அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T07:57:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞன்! அம்பலமான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-young-man-was-arrested-with-a-gun-1783928140"></link>
            <id>https://ibctamil.com/article/a-young-man-was-arrested-with-a-gun-1783928140</id>
            <summary type="text">


மாஹாரகம தொடருந்துப் பாதைப் பகுதியில் துப்பாக்கியுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மாஹாரகம தொடருந்துப் பாதைப் பகுதியில் துப்பாக்கியுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் மகன் என மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்திய போது மேற்படி துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7e3a92-6213-4e34-9a97-ed0f8c404d75/26-6a5497849b46b.webp' />&nbsp;</p><p>

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தபட உள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T07:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை - மண்கவ்வும் எனும் சீலரத்ன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-against-justice-minister-1783908408"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-against-justice-minister-1783908408</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன
தேரர் தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது.</p><p></p><p> </p><h2>சிறுபிள்ளைத்தனம்</h2><p>ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால்,
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும். எனவே,
இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை என்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a820d4-5fcd-4618-a7bd-9d7318f96276/26-6a54962e9f6f5.webp' /></p><p>நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப்
பக்குவமும், முதிர்ச்சியும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய சீலரத்ன தேரர்,
அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார் என்றும் சாடினார்.</p><p>

"நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது. நீதி
அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல. </p><p>மாறாக,
சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப்
புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்" என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் பின்னணி&nbsp;</h2><p>நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின்
நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c2b3bb-bddc-410e-a4fe-229fa5680d96/26-6a54962f59682.webp' /></p><p> கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின்
மகனாக இருந்தும், அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத்
தேடித் தருகின்றது." - என்றும் சீலரத்ன தேரர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் - தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-special-task-force-stf-missing-in-river-1783925421"></link>
            <id>https://ibctamil.com/article/police-special-task-force-stf-missing-in-river-1783925421</id>
            <summary type="text">மணல் கடத்தலில் ஈடுபடும் குழுவினரை பிடிப்பதற்கு சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மணல் கடத்தலில் ஈடுபடும் குழுவினரை பிடிப்பதற்கு சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் பணிபுரியும் கங்குவல்ல பிரதேசத்தை சேர்ந்த சார்ஜன் திஹான் (வயது 41) என்ற காவல்துறை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>அவரைத் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது</h2><p>
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இன்று (13ஆம் திகதி) அதிகாலை வேளையில், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
கங்கை முடக்குச்செட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக விசேட
அதிரடிப்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a240b40-cbd5-43de-b509-f5580bb8513c/26-6a548d4d1cb8a.webp' /></p><p>
இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடும் குழுவினரை மடக்கிப் பிடிப்பதற்காக
சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து விசேட குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்துள்ளனர்.
</p><p>
இதன்போது, கங்கை ஆற்றைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த அசம்பாவிதம்
நிகழ்ந்துள்ளது.</p><p>ஆற்றின் நீர் ஓட்டம் காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை மீட்பதற்காக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு
தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
இச்சம்பவம் குறித்து கிண்ணியா காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஜுராசிக் பார்க் திரைப்பட நடிகர் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jurassic-park-actor-sam-neill-dies-aged-78-1783926223"></link>
            <id>https://ibctamil.com/article/jurassic-park-actor-sam-neill-dies-aged-78-1783926223</id>
            <summary type="text">நியூசிலாந்தின் பிரபல மூத்த நடிகர் சாம் நெய்ல் (Sam Neill) காலமாகியுள்ளனார்.

உலகப் புகழ்பெற்ற “ஜுராசிக் பார்க்” (Jurassic Park) திரைப்படத் தொடரில் ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் பிரபல மூத்த நடிகர் சாம் நெய்ல் (Sam Neill) காலமாகியுள்ளனார்.
</p><p>
உலகப் புகழ்பெற்ற “ஜுராசிக் பார்க்” (Jurassic Park) திரைப்படத் தொடரில் டாக்டர் ஆலன் கிராண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் சர்வதேச அளவில் பெரும் புகழை பெற்றார்.</p><p></p><h2>இறப்புக்கான காரணம்</h2><p>
இந்த நிலையில், அவர் தனது 78 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f579e3e7-be40-4e7f-835d-70c8ef0df77a/26-6a5491e2dd878.webp' /></p><p>
</p><p>
சாம் நெய்ல் கடந்த 5 ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்று வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T07:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-threat-preschool-children-wear-clothings-1783924436"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-threat-preschool-children-wear-clothings-1783924436</id>
            <summary type="text">தற்போது நிலவிவரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் டெங்கு நுளம்புக்கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவிவரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் டெங்கு நுளம்புக்கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
தேசிய சிறுவர் வாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கல்வி அமைச்சு அனுமதி</h2><p>
டெங்கு நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக, பாடசாலை மாணவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வர கல்வி அமைச்சு சமீபத்தில் அனுமதித்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc5b4d5-75c7-40e2-8bd3-0a07a459d41a/26-6a548edf022fb.webp' /></p><p>
</p><p>
நுளம்புக்கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் நீடிக்க வேண்டும் என்று அமைச்சர்&nbsp;கூறியுள்ளார்.</p><p></p><h2>நுளம்பு விரட்டிகள்</h2><p>அத்துடன் தேவைப்படும் இடங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துமாறும், குழந்தைகளைக் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பெற்றோர்களுக்கு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc7fcb8-dbe0-4fa2-8c9d-afff2f76b0cf/26-6a548edff1ab8.webp' /></p><p>
</p><p>
கல்வி நிறுவனங்களுக்குள் டெங்கு அபாயம் ஒரு கவலையாக நீடிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த இரண்டு வாரங்கள் குறிப்பாக முக்கியமானதாக இருக்கும் என்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு விமான சேவைகளை தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/many-airlines-to-launch-new-flights-to-sri-lanka-1783924626"></link>
            <id>https://ibctamil.com/article/many-airlines-to-launch-new-flights-to-sri-lanka-1783924626</id>
            <summary type="text">
2026-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இலங்கைக்குப் புதிய விமானச் சேவைகளைத் தொடங்கப் பல விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2026-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இலங்கைக்குப் புதிய விமானச் சேவைகளைத் தொடங்கப் பல விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்போது, வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்ஜெட், ஜெட்ஸ்டார், பிரிட்டிஷ் ஏர்வேஸ், பிரெஞ்ச் பீ, எஸ்7 ஏர்லைன்ஸ் (ஜேஎஸ்சி சைபீரியா ஏர்லைன்ஸ்) மற்றும் சூப்பர்நோவா ஆகியவை இலங்கைக்குச் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>விமானச் சேவைகளின் எண்ணிக்கை</h2><p>
</p><p>
மேலும், துருக்கிய ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகியவையும் கொழும்புக்கான தங்களது விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04efe9b5-29b1-4b38-bced-617959fc0fd5/26-6a548ad01f722.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T06:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார் - 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-oldest-living-woman-passes-away-at-114-1783923868"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-oldest-living-woman-passes-away-at-114-1783923868</id>
            <summary type="text">இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராக அறியப்பட்ட பஞ்சகே கலுமெனிகே ன்பவர் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் இன்று தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராக அறியப்பட்ட பஞ்சகே கலுமெனிகே ன்பவர் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அவர் இன்று தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.</p><p>பஞ்சகே கலுமெனிகே அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவர்.</p><p></p><h2> 325 கொள்ளுப்பேரக்குழந்தை&nbsp;&nbsp;</h2><p>


1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50042a61-1acd-4f8a-b7bf-120c067191f6/26-6a548834c8d66.webp' /></p><p>அதன் பின்னர் கீழே விழுந்து காயமடைந்த கலுமெனிகே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்த நிலையில், பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



கலுமெனிகே, 12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளை உள்ளடக்கிய பெரிய குடும்பப் பரம்பரையை விட்டுச் சென்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-s-case-postponed-1783923410"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-s-case-postponed-1783923410</id>
            <summary type="text">
2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்புள்ள சாலையை மறித்து பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்புள்ள சாலையை மறித்து பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 21-ஆம் திகதி அன்று அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.</p><p>

வழக்கு விசாரணையின் போது விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், அவருக்காக முன்னிலையான சட்டத்தரணி, அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வழக்கு பதிவு</h2><p>
</p><p>
அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான், இவ்வழக்கை செப்டம்பர் 21-ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><br></p><p>

அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரான இளவரசர் ஸெய்த் அல் ஹுசைன், கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பும், தும்முல்லா உள்ளிட்ட வீதிகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, 2016 பெப்ரவரி 6 அன்று குருந்துவத்தை காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
</p><p>
மேலும், ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரோஜர் செனவிரத்ன மற்றும் முகமது முஸம்மில் ஆகிய சந்தேக நபர்களும் இவ்வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wildlife-dept-staff-stage-trade-union-action-1783921429"></link>
            <id>https://ibctamil.com/article/wildlife-dept-staff-stage-trade-union-action-1783921429</id>
            <summary type="text">வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உள்வாங்குவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்</h2><p>இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ், 

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மிகவும் தன்னிச்சையான முறையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் தற்போது கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதகமான முறையில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் திணைக்களத்திற்குள் உள்வாங்க முயற்சிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b2f826-b573-4f12-a39f-30a97017567e/26-6a5482034d5b1.webp' /></p><p> 

நாங்கள் பணிப்பாளர் நாயகத்திடம், இந்த நியமனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த நியமன முறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் எனக் கூறினோம்.</p><p> 

ஆயினும் அவரது தன்னிச்சையான முடிவுகள் காரணமாக, எங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி, தவறான முறையில் இந்த நியமனங்களை மேற்கொள்கிறார்.</p><p></p><h2>பாரிய கண்டனப் போராட்டம்</h2><p> 

எமது கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள் மாத்திரமன்றி, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள், பிராந்திய உதவியாளர்கள், பிராந்திய காப்பாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47ea2ca-abcf-4a25-8846-5e136cb47618/26-6a548274a2853.webp' /></p><p> 

13 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு ஒரு கலந்துரையாடலை வழங்குங்கள் எனக் கோரியிருந்தோம். 

இதுவரை பணிப்பாளர் நாயகம் எமக்குக் கலந்துரையாடலை வழங்கவில்லை. இந்த நிலைமையை அவரே உருவாக்கினார். </p><p>அதனால், இன்று பத்தரமுல்லையிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கண்டனப் போராட்டமொன்றை நாம் முன்னெடுக்கிறோம்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்றிணைந்த தமிழ் பேசும் கட்சிகள் - இன்று முக்கிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-tamil-speaking-parties-announce-joint-agreement-1783920244"></link>
            <id>https://ibctamil.com/article/6-tamil-speaking-parties-announce-joint-agreement-1783920244</id>
            <summary type="text">தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு ஒப்பந்தத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன.</p><p>இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்கு வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று சந்தித்து, முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று பிற்பகல் இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.</p><p></p><h2>கூட்டு அரசியல் முயற்சி</h2><p>
</p><p>
அரசாங்கத்தின் குறைகளையும் நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் கூட்டாகவும் முன்வைப்பதற்கான பொதுவான மேடையொன்றை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a244db-2a38-49a2-a1bc-fb35993b5e7d/26-6a547a3ecd0bc.webp' /></p><p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானது என்றார்.
</p><p>தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைந்து கண்டறிவதே இந்த சந்திப்பின் அடிப்படை என வலியுறுத்தினார்.
</p><p>
தமிழ் பேசும் கட்சிகளின் இந்த ஒற்றுமை முயற்சி காலத்தின் கட்டாயத் தேவை என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இத்தகைய அரசியல் முனைப்பானது சமூகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
</p><p>
முன்னதாக பல கட்டங்களால் தமிழ் பேசும் கட்சிகளிடையே, பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் இன்று முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:40:21+00:00</updated>
        </entry>
    </feed>
