<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T17:32:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் சவப்பெட்டிக்குள் கிடக்கும் ட்ரம்ப் :சர்வதேச அளவில் கவனம் பெற்ற பதாகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603"></link>
            <id>https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.



அமெரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><h2>கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம்</h2><p>&nbsp;ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும்ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e327d2d-b30b-4844-bf97-0faa64eea7a0/26-6a59107eef0fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை</h2><p>இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cde5262-26b3-4698-8f5b-97bf999ff20a/26-6a59107e4c39e.webp' /></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T17:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428</id>
            <summary type="text">கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cf514-54e4-426d-876b-8568e1c9204b/26-6a590951f3595.webp' /></p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wigneswaran-says-tamils-get-nothing-n-p-p-gover-1784215282"></link>
            <id>https://ibctamil.com/article/wigneswaran-says-tamils-get-nothing-n-p-p-gover-1784215282</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் இணைப்பு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.&nbsp;</p><h2>ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டு</h2><p>தங்கள் பிரதிநிதிகளான மக்களுக்கு சிங்களம் பேசும் கட்சிகளிடமிருந்து எந்த நிவாரணமும் கிடைக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf5595f-2b87-48e7-9174-6416288a7191/26-6a58fa7b7a36a.webp' /></p><p>

இந்த நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.</p><p>

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் திருப்தி அடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

அதற்குக் காரணம், அந்த மக்களின் நிலங்கள் இராணுவத்தால் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

</p><h2>மக்களின் நிலங்களில் பயிர் செய்து வருமானம் ஈட்டும் இராணுவம்</h2><p>சில நிலங்களில் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இராணுவம் வருமானம் ஈட்டி வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ac0f94-1067-4419-aae8-6ce7c94c6923/26-6a58fa7c55609.webp' /></p><p>
</p><p>
இத்தகைய உண்மைகளின் காரணமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கங்களின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.</p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதாகவும், சம உரிமைகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 400 ஐ கடந்தன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்
நடைபெற்றது.
</p><p>
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416
எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு
அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்</h2><p>இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளன. அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876b9d13-46a2-4136-9992-7c56a64dbc4d/26-6a58f1ebb9ef2.webp' /></p><p>
</p><p>
130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட
வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,
சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212</id>
            <summary type="text">நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய்
விட்டது என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை&nbsp;விடுவித்திருந்தோம்</h2><p>
</p><p>
யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு
வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி
விடுவித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6471e7a9-3bf0-4660-a47b-0507b16431bd/26-6a58e96135c9a.webp' /></p><p>
</p><p>
கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்திலும் பெருமளவான காணிகளை
விடுவித்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை
முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல்
போய்விட்டது.</p><p>

ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த
காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனை</h2><p>
</p><p>
அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நாமே முதலில்
தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும்
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95b559e-2e0f-4fa8-9b41-4b35aa9c3278/26-6a58e961e5f89.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப்
பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அவ்வேளை காணாமல் போனோர்
விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி
போராட்டங்களை முன்னெடுத்தோம்.</p><p> அக்கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார்
600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை
தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு
அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.</p><p></p><p>
</p><p>
</p><h2>விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு</h2><p>இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள்
பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள்
மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fd4e4-f658-49d7-ac41-887aba67fd46/26-6a58e962a6702.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள்
ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த
காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு
அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146"></link>
            <id>https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146</id>
            <summary type="text">
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர் -மணற்சேனை இந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
மூதூர் -மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.</p><p>

இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை
இடம்பெற்றது.</p><p></p><h2>மலர்தூவி அஞ்சலி</h2><p>இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி
அஞ்சலியும் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d395206-da5b-4ead-b94e-994b3d20a134/26-6a58e66ba1fc3.webp' /></p><p>
</p><p>
1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல்
சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T14:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030"></link>
            <id>https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030</id>
            <summary type="text">


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றுமுன்தினம்(14), வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கொலன்னாவாவைச் சேர்ந்த 38 வயதான ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாண நபர்கள்</h2><p>

விசாரணைகளின்படி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, சந்தேக நபர் சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாக பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56c1c4b-3b14-4233-b3e0-9d5795af5e2a/26-6a58b64550796.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு 100,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மேலும், மல்லாகம் காவல்நிலையத்திலும் சந்தேக நபருக்கு எதிராகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களின் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965"></link>
            <id>https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965</id>
            <summary type="text">ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவொர்க் சர்க்சியன் அண்மையில் தெரிவித்தார்.</p><p>

பொருளாதார நிலைத்தன்மையும் பொருளாதார மீட்சியும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்றும், பல இலங்கையர்கள் ஒவ்வொரு நாளும் அந்த வேறுபாட்டை உணர்ந்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>இன்னமும் நெருக்கடியில் சம்பளம்</h2><p>&nbsp; ஊதியங்கள் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்று உலக வங்கியின் முகாமையாளர் கூறினார். வேலைவாய்ப்புச் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றும், குறிப்பாகப் பெண்கள் பெரும் சிரமத்தை உணர்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e227eb-24ed-46a5-84af-5a42aa1a11b1/26-6a58dde21f0f5.webp' /></p><p>இலங்கை நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவிட்டது, ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறினார்.</p><p></p><h2>பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு காரணங்கள்</h2><p> டித்வா புயலும் மத்திய கிழக்கு நெருக்கடியும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தைக் கடினமாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். அதனால்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d16f939-eccf-428e-bd3c-b9c377d42899/26-6a58dde1707bf.webp' /></p><p>நாட்டில் அடையப்பட்ட பொருளாதார முன்னேற்றம் மக்களின் அன்றாட வாழ்வில் உணரப்படுவதை உறுதி செய்துகொண்டு, இலங்கை தனது சீர்திருத்த செயல்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>இதற்காக, தனியார் துறையால் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு உருவாக்கம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவா தலையீடு கோரும் ராஜபச்ச AND CO! ஏன்... ஏதற்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-co-demand-geneva-intervention-1784207359"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-co-demand-geneva-intervention-1784207359</id>
            <summary type="text">இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்னிக்கவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், போன்ற அன்ட கோக்கள் நிலா நிலா ஓடிவா பாணியில் ஐ.நாவின் ஜெனிவா அரங்கமே ஓடி வா வா நில்லாமல் ஓடிவா என வருந்தி அழைக்கும் நிலைமை வந்துவிட்டது.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அனுர தரப்பின் நகர்வுகளை தமது எதிர்ப்பு துருப்புசீட்டு அரசியலாக பிடித்துளள்மை இந்த அன்ட் கோ முகம் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட பணியகத்துக்கு நேற்று ஓடோடிசென்று அனுர அரசாங்கத்துக்கு ஜெனிவா அழுத்தத்தை உருவாக்கவேண்டும்! </p><p>

அரசாங்கத்திடம் விளக்கம் கோரவேண்டும் அடுத்த ஜெனிவா அமர்வில்; இந்த விடயம் சேர்க்கப்படவேண்டும் என டம் டும் என விடாப்பிடியாய் நிற்கின்றன.
</p><p>
தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளை ஜெனிவா அரங்கில் இருந்து எடுக்கவேண்டும் என பலவருடங்களாக கத்தித்குளறும் அன்ட் கோ முகங்கள் இப்படி ஒரு நிலைப்பாட்;டை எடுத்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KT5r6bvanLw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான காற்று தரம் கொண்ட நகரங்கள் : முதலிடம் பிடித்தது கனடாவின் ரொரண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/toronto-wildfire-smoke-blanket-1784204676"></link>
            <id>https://ibctamil.com/article/toronto-wildfire-smoke-blanket-1784204676</id>
            <summary type="text">கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான &#039;I...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான 'IQAir' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட பெரிய நகரங்களின் பட்டியலில் டொரண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.&nbsp;</p><p>கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. அங்கிருந்து வீசும் பலத்த காற்று மற்றும் அடர்ந்த புகை மூட்டம் தெற்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த டொரண்டோ நகரத்தையும் சூழ்ந்துள்ளது.</p><h2>டொரண்டோவின் வான்பகுதியில் ஏற்பட்ட மாற்றம்</h2><p>


புகை மூட்டம் காரணமாக டொரண்டோவின் வானம் ஒளிரும் ஒரேஞ் மற்றும் மங்கிப்போன மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் நகரின் முக்கிய அடையாளமான 'சிஎன் டவர்' கூட தெளிவாகத் தெரியாத அளவுக்குப் புகை சூழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c002da8c-1e48-486e-ba87-a4b04f781c17/26-6a58d766a4add.webp' /></p><p>
</p><p>

காற்று மாசுபாட்டுடன் இணைந்து டொரண்டோவில் கடும் வெப்ப அலையும் வீசி வருகிறது. நகரின் மையப்பகுதியில் வெப்பநிலை சுமார் 37.3 டிகிரி செல்சிஸ் ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை</h2><p>சுற்றுச்சூழல் அமைப்பான 'என்விரான்மென்ட் கனடா' டொரண்டோவிற்கு மிக உயர்ந்த அபாய அளவைக் குறிக்கும் "10+" காற்றுத் தர குறியீட்டுடன் ஒரேஞ் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe528700-2218-4594-82b0-3b4b95e34e32/26-6a58d76754f55.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவசியமாக வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>


காற்று மாசுபாடு காரணமாக நகரின் பல பொது நீச்சல் குளங்கள், கோடைகால முகாம்கள் மற்றும் புகழ்பெற்ற 'ஃபிஃபா உலகக்கோப்பை ரசிகர் திருவிழா' நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி அமைப்புக்கு ஈரான் பகிர்ந்த செய்தியால் பதற்றம்! உலக நாடுகளுக்கு பேரிடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-asked-houthi-to-be-ready-to-close-red-sea-1784203899"></link>
            <id>https://ibctamil.com/article/iran-asked-houthi-to-be-ready-to-close-red-sea-1784203899</id>
            <summary type="text">
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹவுதி இயக்கத்தை ஈரான் கேட்டுக்கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹவுதி இயக்கத்தை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறித்த விடயமானது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்தத் திட்டம் குறித்து ஈரானின் தலைமைக்குள் விவாதிக்கப்பட்டு, பின்னர் அந்தச் செய்தி ஈரானின் கூட்டாளிகளான ஹவுதி அமைப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>ட்ரம்பின் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
தெஹ்ரானின் இந்தக் கோரிக்கை குறித்து ஹவுதிகளுக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது எவ்வாறு பகிரப்பட்டது என்பது குறித்தோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தாக்குவதாக அச்சுறுத்தியதற்குப் பிறகுதான் இந்த செய்தி அனுப்பப்பட்டதா என்பது குறித்தோ மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b11fe3f-2b87-4b28-a403-21413d5fea0c/26-6a58ce569f60c.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள யேமனின் மலைப்பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்தி, கப்பல் போக்குவரத்தைத் தாக்குவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் ஹவுதி அமைப்பினர் ஆயத்தப்படுத்தியுள்ளதாக தாக்குதலைத் தொடங்குவதற்கான இறுதி உத்தரவுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஏற்கனவே ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செங்கடல் பாதையும் மூடப்பட்டால் அது உலகளவில் பெரும் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-16T12:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவம் தமிழர் நிலத்தில் நிலைகொண்டிருப்பது பாதுகாக்கவா... பயிர் செய்யவா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/is-the-military-presence-on-tamil-land-to-protect-1784205090"></link>
            <id>https://ibctamil.com/article/is-the-military-presence-on-tamil-land-to-protect-1784205090</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கில் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில்தான் போர் இன்னும் முடியவில்லை. துப்பாக்கிச் சத்தங்கள் மௌன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கில் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில்தான் போர் இன்னும் முடியவில்லை.</p><p> துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகியபோதும் ஆக்கிரமிப்பின் சுமை இன்னமும் தமிழர்களின் தோள்களை அழுத்திக் கொண்டே இருக்கிறது.</p><p> அந்த ஆக்கிரமிப்பின் மிகக் கொடூரமான வடிவமாகவே தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.</p><p> அதனால் ஈழ மக்களின் வாழ்வு, பொருளாதாரம், பண்பாடு என அத்தனையும் ஒடுக்கப்படுகிறது.</p><p></p><h2>பயிர் செய்யும் இராணுவம்</h2><p>இராணுவத்தால் தமிழர் நிலம் எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதற்கு மிக அண்மைய உதாரணமாக யாழ்ப்பாணம் வலி.வடக்கின் நிலைமையைச் சுட்டிக்காட்டலாம்.</p><p></p><p> நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர், வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திற்காக 1661 ஏக்கர் காணி இராணுவத்திற்குத் தேவைப்படுவதாகவும், அதற்குரிய இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், இராணுவம் மேற்கொள்ளும் விவசாய நடவடிக்கைகள் தமது தேவைக்காக மட்டுமே நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வலி.வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வேறுபட்ட கதையைக் கூறுகிறது.</p><p> பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மக்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றிய அரசு, அந்த நிலங்களை இன்று இராணுவத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக மாற்றியுள்ளது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். </p><p>தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நிலையில், தமது காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து அதிலிருந்து வருமானம் ஈட்டுவதை அவர்கள் கடும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>மரக்கறி விற்கும் இராணுவம்</h2><p>இதனை உறுதிப்படுத்தும் வகையில், வலி.வடக்கிலுள்ள இராணுவப் பண்ணைகளில் உற்பத்தியாகும் மரக்கறிகள் யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் பகுதியில் இயங்கும் தனியார் மரக்கறி கொள்வனவு நிலையத்திற்கு பெருமளவில் கொண்டு செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் காணொளிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எனவே, இது சுய தேவைக்கான உற்பத்தி என்ற அரசின் விளக்கத்தை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். </p><p>உண்மையில் இது வணிக நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் உற்பத்தி நடவடிக்கையாகவே அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலைமை வலி.வடக்குடன் மாத்திரம் முடிவடைவதில்லை என்பதுதான் மற்றொரு அதிர்ச்சி. </p><p>வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர்களின் நிலங்களில் இராணுவம் விவசாயப் பண்ணைகள் அமைத்து செய்கை மேற்கொள்கிறது. அதோடு, பால் உற்பத்தி, கோழிப்பண்ணைகள், கால்நடை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. </p><p>பல இடங்களில் சலூன்கள், தையலகங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களையும் இராணுவம் நடத்தி வருகிறது. கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் தேனீரகம், சலூன், தையலகம் என்பவற்றை இராணுவத்தினர் நடாத்தி வருகின்றனர்.</p><p></p><h2>இராணுவத்தின் பிடியில் வளமான இடங்கள்</h2><p>&nbsp;அதெப்படி இராணுவம் இப்பிடி வணிகக் கடைகளை நடாத்துவதும் &nbsp;பயிர் செய்வதும் பாதுகாப்பு ஆகும்? அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தைப் போட்டியில் இறங்கியுள்ள ஒரு நிறுவனத்தின் செயல்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.</p><p></p><p> இதன் விளைவாக, போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.</p><p>

தமிழர்களின் நிலங்கள் மட்டுமல்ல, அவர்களது இயற்கை வளங்களும் நீண்டகாலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>காடுகள், மேய்ச்சல் நிலங்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் விவசாய வளங்கள் பலவற்றின் மீது இன்னும் இராணுவத்தின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதனால் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் குறித்து பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. காணிகள் விடுவிக்கப்படும் என்றும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் மாறி மாறி வந்த பல அரசுகள் உறுதியளித்தன. </p><p>ஆனால் நடைமுறையில் முழுமையான மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக, நிலங்களை நிரந்தரமாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதும், காணிகளுக்குப் பதிலாக இழப்பீடு வழங்கும் அணுகுமுறையும் மக்களின் காணிகளை நிரந்தரமாக பறிக்க முயல்கின்றன.</p><p></p><h2>மரபுரிமை நிலத்தை இழக்க முடியுமா?</h2><p>ஒரு குடும்பத்திற்கு நிலம் என்பது வெறும் சொத்து மாத்திரமல்ல, அது அவர்களின் தலைமுறைகளின் அடையாளம். அது அவர்களின் வாழ்வாதாரம்.</p><p></p><p> </p><p>அது அவர்களின் நினைவுகள். எல்லாவற்றையும் தாண்டி அது அவர்களின் மரபுரிமை. எனவே, பணம் வழங்கி நில உரிமையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை இன்றைய அரசு உணர வேண்டும். </p><p>உரிமையாளர்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கையளிக்கப்பட வேண்டும். அதுவே மக்களின் கோரிக்கை.

வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். </p><p>தனியார் காணிகளில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். விவசாயம், வணிகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து இராணுவம் விலக வேண்டும். கடல், காடு, குளம், விவசாய நிலங்கள் உள்ளிட்ட மக்களின் பொருளாதார வளங்கள் அனைத்தும் மீண்டும் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
</p><p>
தமிழர்களின் நிலங்களை தமிழர்களிடமே மீள ஒப்படைப்பதும், இராணுவத்தின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுவதும், வடக்கு–கிழக்கின் சமூக மற்றும் பொருளாதார மீட்சிக்கான முதல் படியாகும்.</p><p> இராணுவத்தை பாதுகாப்பு தரப்பு என்கிறது இலங்கை அரசு. ஆனால் இலங்கை இராணுவமோ தமிழர் பகுதியில் பயிரச்செய்து கொண்டு உழைப்பில் ஈடுபடுவதைப் பார்க்கையில் அந்நிய இராணுவம் ஒன்று ஒரு தேசத்தை ஆக்கிரமித்துச் சுறண்டுவதைப் போல இருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-16T12:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-strikes-south-island-new-zealand-1784202530"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-strikes-south-island-new-zealand-1784202530</id>
            <summary type="text">நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.</p><p>



டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.</p><h2>இரவுநேரம் ஏற்பட்ட நிலநடுக்கம்</h2><p>நியூசிலாந்தின் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு(NEMA) உள்ளூர் நேரப்படி இரவு 9.14 மணிக்கு (0914 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை,ஆரம்பத்தில் 6.3 ரிக்டர் அளவில் மதிப்பிட்டது, பின்னர் அதை 5.9 ஆகக் குறைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff15953-9c39-43b7-b385-8465db9a1635/26-6a58c7e4bc774.webp' /></p><h2>சுனாமி எச்சரிக்கை இரத்து&nbsp;</h2><p>
</p><p>

தற்போது சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்ட போதிலும், கடலோரப் பகுதிகளில் "வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டங்கள் மற்றும் கரையோரத்தில் கணிக்க முடியாத கடல் அலைகள்" ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக NEMA கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb428dc0-35fe-4cb9-9ebe-d3ca1660beee/26-6a58c7e56c8b6.webp' /></p><p>
</p><p>
மக்கள் தண்ணீரை விட்டும், கடற்கரைகளில் இருந்தும் வெளியேற வேண்டும் என்றும், துறைமுகங்கள், படகுத் தளங்கள் மற்றும் ஆறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டுக்குள் இலங்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-within-the-indian-ocean-century-1784203000"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-within-the-indian-ocean-century-1784203000</id>
            <summary type="text">இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டு என்று அழைக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் உலகம் நுழையும் வேளையில், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டு என்று அழைக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் உலகம் நுழையும் வேளையில், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய இணைப்பாக இலங்கை திகழ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிங்கப்பூரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியுமான கர்டிஸ் எஸ். சின்னுடன் நடைபெற்ற ஒரு குழு விவாதத்தில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, 
அங்கு நடைபெற்ற உலகளாவிய கிழக்கு பொருளாதார ஒத்துழைப்பு (GEC) உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில்,
</p><p>''இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் தற்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தசாப்தத்தை நோக்கி மட்டுமல்லாமல், அப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கால் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நூற்றாண்டை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வலுவான உறவுகள்&nbsp;</span></p><p>
வலுவான உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் உலகின் முக்கியப் பிராந்தியங்களுக்கு இடையே இலங்கையை ஒரு நம்பகமான பாலமாக மாற்றுவதே தனது தொலைநோக்குப் பார்வை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254e7d78-9017-4e09-9246-3b8aef5163ae/26-6a58c6f9c593a.webp' /></p><p>

புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். 

அதேவேளையில் அடுத்த தலைமுறையினரை உலகப் பொருளாதாரத்தில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கத் தயார்படுத்த வேண்டியதும் முக்கியத்துவமானது.
</p><p>
இந்தியப் பெருங்கடல் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி, அது எதிர்காலத்தை இணைக்க வேண்டும்,” என நாமல் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T11:56:45+00:00</updated>
        </entry>
    </feed>
