<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-16T06:26:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-schaffter-murder-case-covered-up-1784180351"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-schaffter-murder-case-covered-up-1784180351</id>
            <summary type="text">தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை 
அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன்படி இந்த வழக்கை பிரதி காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும், இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>தினேஷ் ஷாப்டரின் கொலை</h2><p>
</p><p>
இந்நிலையில் தற்போது தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a255d87-bb8a-44d1-a0e2-3d8fe0535f6c/26-6a586e80f3056.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்றும், இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
</p><p>

பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கைத தடுத்த ராஜபக்சர்கள்&nbsp;</h2><p>

“அன்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.
</p><p>
அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T06:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-taken-against-arg-who-qualified-for-final-1784182101"></link>
            <id>https://ibctamil.com/article/action-taken-against-arg-who-qualified-for-final-1784182101</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நட...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>ஃபாக்லாந்து தீவுகள் மீதான தங்கள் நாட்டின் உரிமைகோரலை ஆதரிக்கும் பதாகையுடன் அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>இந்த போட்டியின் இறுதி நிமிடங்களில் ஆர்ஜன்டீனா அணி சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 கோல்களை பெற்று இறுதிப்போட்டிகான பாதையை அமைத்துக்கொண்டது.</p><p></p><h2>ஸ்பெயினுடன் இறுதிப் போட்டி</h2><p>இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயினுடன்&nbsp;அர்ஜென்டினா அணி மோதவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5128b-e45c-41bc-b120-a8a250fcb264/26-6a5875574a61f.webp' /></p><p>இறுதி விசில் ஒலித்த பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.
</p><p>
தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாந்து தீவுகள், பிரித்தானியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான இறையாண்மைத் தகராறின் ஒரு பொருளாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.</p><p></p><h2>வரலாற்று பின்னணி</h2><p>
</p><p>
அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவுக் கூட்டத்திற்காக, இரு நாடுகளும் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை போரிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48d7c792-2ebe-4df1-9ade-4b3b25be1a3b/26-6a587558068d9.webp' /></p><p>
</p><p>
74 நாட்கள் நீடித்த இந்த மோதலில் 655 அர்ஜென்டினா வீரர்களும், 255 பிரித்தானிய வீரர்களும் உயிரிழந்தனர்.</p><p> 2014-ஆம் ஆண்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பு , அர்ஜென்டினா கால்பந்து சங்க வீரர்கள் அதே செய்தி அடங்கிய பதாகையை ஏந்தி நின்றதைத் தொடர்ந்து, ஃபிஃபா அந்தச் சங்கத்திற்கு £20,000 அபராதம் விதித்தது.</p><p></p><p></p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table></p>]]></content>
            <updated>2026-07-16T06:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/information-of-suspect-who-shot-a-police-officer-1784176789"></link>
            <id>https://ibctamil.com/article/information-of-suspect-who-shot-a-police-officer-1784176789</id>
            <summary type="text">கட்டுநாயக்க ​காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க ​காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;சிவில் பாதுகாப்புப் படை</h2><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் இதன்போது அவரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e96d715-7220-4990-832b-918b0a543c9b/26-6a5877f22e241.webp' /></p><p>

அத்துடன், சந்தேகநபரின் வசம் இருந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியும், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>குறித்த சந்தேக நபர் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>நீர்கொழும்பு வைத்தியசாலை</h2><p> </p><p>

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான காவல்துறை அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்குள்ளான மற்றைய காவல்துறை அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a233f7b9-b03e-46c9-8ac1-fdd2dff10609/26-6a586bb88a857.webp' /></p><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய - இலங்கை ஆடைத் துறை வர்த்தகம் குறித்து விசேட பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920"></link>
            <id>https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920</id>
            <summary type="text">இந்திய - இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய - இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.
</p><p>
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் சர்வதேச ஆடை வர்த்தகக் கண்காட்சியில் வைத்து அந்நாட்டு ஆடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையிலும் அக்குழு ஈடுபட்டுள்ளது.
</p><p>
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் பயனுள்ள வகையில் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. </p><p></p><h2>இந்திய ஆடைத்துறை அமைச்சர்&nbsp;</h2><p>

அத்துடன், கைத்தறித் துறையின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு வழங்கப்பட்ட இரண்டு வார கால விசேட பயிற்சித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கைத் தரப்பால் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1115ddde-a1df-4feb-80dd-1d912764647a/26-6a586501b8f3e.webp' /></p><p>
</p><p>
மேலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2027' நிகழ்வில் பங்கேற்குமாறு இந்திய ஆடைத்துறை அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் முன்னணி வர்த்தக முயற்சியாளர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்புகள் மற்றும் திறமையான மனிதவளத்தின் ஆற்றல்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹீஷினி கொலன்னே உட்பட இரு நாடுகளினதும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T04:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-5-mn-usd-fraud-court-order-to-sri-lanka-telecom-1784174422"></link>
            <id>https://ibctamil.com/article/2-5-mn-usd-fraud-court-order-to-sri-lanka-telecom-1784174422</id>
            <summary type="text">திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பாபான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>கொழும்பு பல்கலைக்கழகம்</h2><p>
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்தட்டுக்கள், மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னைய நீதிமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba252415-940f-4b8c-a102-9f491606ca87/26-6a585c1ca2c70.webp' /></p><p>
</p><p>
குறித்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகள் அவசியமெனவும், அதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விசாரணைகளுக்காக குறித்த தரவுகளை தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-jaffnas-3-islands-into-green-energy-islands-1784170280"></link>
            <id>https://ibctamil.com/article/change-jaffnas-3-islands-into-green-energy-islands-1784170280</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி, குறித்த மூன்று தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d06c80e-7b3e-4625-9b76-c44d0cd4cd8d/26-6a58498c484cf.webp' /></p><p>பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இது தவிர, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் - கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T04:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை நிலவரம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unable-to-purchase-fuel-world-market-lowest-price-1784172260"></link>
            <id>https://ibctamil.com/article/unable-to-purchase-fuel-world-market-lowest-price-1784172260</id>
            <summary type="text">இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது.</p><p></p><h2>மத்திய கிழக்கு சூழ்நிலை&nbsp;</h2><p> </p><p>நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராகி வரும் போதிலும், ஏதேனும் ஒரு துறையை முடக்கிவிட்டு எம்மால் முன்னோக்கி நகர முடியாது.


அவ்வாறு முடக்கினால் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b17219-38fe-4a2d-8b1c-b3bfbc2c32d5/26-6a5852536aec5.webp' /></p><p> </p><p>எனவே, எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். </p><p> தற்போது டீசல் நுகர்வு 11 வீதத்தாலும், பெட்ரோல் நுகர்வு 9 வீதத்தாலும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.</p><p></p><h2>மசகு எண்ணெய் விலை</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாகவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af0a9e3-ac38-463c-999e-c8c2992ea3ac/26-6a5852529bc26.webp' /></p><p> சர்வதேச ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.</p><p> இதனால், நாட்டில் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதால், உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எம்மால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T03:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில், ஆரம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்தநிலையில், ஆரம்பத்தில் அதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் குரல் எழுப்பிய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மௌனமாகியுள்ளனர். </p><p>

இந்தத் திடீர் அமைதியானது, வழக்கின் போக்கை பாதிக்காமல் இருப்பதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட தற்காப்பு தந்திரோபாய நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>

மறுபுறம், விசாரணைகளின் தீவிரத்தைக் குறைக்க அதிகார மட்டங்களுடன் எட்டப்பட்ட மறைமுக உடன்பாடுகளின் விளைவா அல்லது அவர்களின் குரலை ஒடுக்க விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களா என்ற பலத்த சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8?start=99" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313"></link>
            <id>https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் முன் கார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த பாடசாலையின் முன் கார் ஒன்று தீப்பற்றிய சம்பவத்திற்கும் அங்கிருந்த எட்டு வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டு இது குறித்துக் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த சிறுவன் தான் காரைத் தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பிரபல பாடசாலை&nbsp;</h2><p>கடந்த ஜூலை மூன்றாம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b693c6-ffbf-4c76-87b7-9fda9e63b909/26-6a582bf37f612.webp' /></p><p>

இந்தச் சம்பவத்திற்கு அங்கு நின்ற எட்டு வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்துக் குருணாகல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் எட்டு வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்தக் காரின் அருகே நடந்து சென்றதும் காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e6abbd-403a-48c6-8574-c52305f62fd4/26-6a5826fd8ceea.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:34:20+00:00</updated>
        </entry>
    </feed>
