<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-12T17:17:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்கள்! ஜெர்மனியின் பிரம்மாண்ட இராணுவ ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/germany-funds-50-000-drones-for-ukraine-1783872031"></link>
            <id>https://ibctamil.com/article/germany-funds-50-000-drones-for-ukraine-1783872031</id>
            <summary type="text">உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன்
கொள்முதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 90 மில்லியன் யூரோக்கள் (103 மில்லியன்
டொலர்) ஆகும்.</p><p></p><h2>முன்னணி உற்பத்தியாளர்</h2><p> 

இதில் பயன்படுத்தப்படும் ஷ்ரைக் வகை ஃபர்ஸ்ட்-பர்சன்-வியூ (FPV) ட்ரோன்கள் உக்ரைனின் முன்னணி உற்பத்தியாளரான ஸ்கைஃபால் நிறுவனத்தால்
தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdff8dc-8671-4e0e-8c3f-9bfa09fcb3be/26-6a53c5d3ca8df.webp' /></p><p>

இந்த ட்ரோன்களில் அமெரிக்காவின் ஆட்டேரியன் பாதுகாப்பு தொழில்நுட்ப
நிறுவனத்தின் மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.
</p><p>
இது பறக்கும் இறுதி கட்டத்தில் நகரும் இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக்
கண்காணித்துத் தாக்கும் திறன் கொண்டது.</p><p>
</p><p></p><h2>நிர்வாக அதிகாரி&nbsp;</h2><p>ஆட்டேரியன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோரென்ஸ் மேயர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தின்படி சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைன் அரசாங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்டுவிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51372ea7-789d-4981-a0dd-7be3a5b89dc2/26-6a53c5d318dcd.webp' /></p><p> 

மீதமுள்ளவை இந்த ஆண்டிற்குள் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><p>இந்த ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் பங்களிப்பை ஸ்கைஃபால் நிறுவனம் உறுதிப்படுத்திய போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு காரணங்கள்</h2><p>இதேபோல் ஜெர்மனி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகங்களும் இது குறித்து
கருத்து தெரிவிக்கவில்லை.</p><p>

இதுமட்டுமின்றி பல்வேறு மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியுடன் இந்த ஆண்டு
உக்ரைனுக்கு மொத்தம் 1,00,000 ட்ரோன்களை வழங்க ஆட்டேரியன் நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e666b64-12b7-439b-8a1f-ee1d84c1d7ce/26-6a53c5d4822f9.webp' /></p><p>இதில் அமெரிக்க பென்டகனின் 50 மில்லியன் டொலர் ஒப்பந்தமும் அடங்கும்.</p><p>
மேலும், பிரித்தானியாவும் இந்த ஆண்டு உக்ரைனுக்கு 1,50,000 ட்ரோன்களை
வழங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T16:59:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 100 மகப்பேற்று மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100-doctors-suspended-in-turkey-1783872510"></link>
            <id>https://ibctamil.com/article/100-doctors-suspended-in-turkey-1783872510</id>
            <summary type="text">துருக்கியில் சிசேரியன் பிரசவங்கள் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்மந்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கியில் சிசேரியன் பிரசவங்கள் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை பணி இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

2023ஆம் ஆண்டின் கடைசியாகக் கிடைத்த தரவுகளின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 38 நாடுகளிலேயே துருக்கியில்தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது.</p><h2>சிசேரியன் முறையில் 615 பிரசவங்கள்&nbsp;</h2><p>அந்த ஆண்டில் அங்கு நடந்த ஒவ்வொரு 1,000 நேரடி பிரசவங்களிலும் சுமார் 615 பிரசவங்கள் சிசேரியன் முறையில் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1acedcf-f16c-4139-84ff-ddb870f035eb/26-6a53c5cfa92ff.webp' /></p><p>
</p><p>
பெண்கள் இயற்கை முறையில் பிரசவிப்பதை வலியுறுத்தி வரும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன், அந்நாட்டில் அதிகரித்து வரும் விருப்பத் தேர்விலான சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.</p><p>



இதன் ஒரு பகுதியாக, தகுந்த மருத்துவக் காரணம் இன்றி தனியார் மருத்துவமனைகளில் விருப்பத்தின் பேரில் சிசேரியன் பிரசவம் செய்வதற்கு அந்நாட்டு அரசு ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T16:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபரால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/masked-man-at-khamenei-funeral-1783869168"></link>
            <id>https://ibctamil.com/article/masked-man-at-khamenei-funeral-1783869168</id>
            <summary type="text">ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




 இறுதி அஞ்சலி பிரார்த்தனையின்போது, கருப்பு முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,</p><h2>மொஜ்தபா கமேனியின் மகன்&nbsp;</h2><p> அலி கமேனியின் மூத்த மகனான மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என்பவர் தான் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c73144e-a215-4299-aee0-22ddfad295c9/26-6a53b0c78af6c.webp' /></p><p>
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே, அவர் தனது முகத்தை மூடி வந்ததாக தெரிவித்துள்ளன</p><p></p><h2>காயத்திற்கு சிகிச்சை பெறும் மொஜ்தபா கமேனி</h2><p>
</p><p>
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மொஜ்தபா தனது தந்தையுடன், இல்லத்தின் வேறு அறையில் இருந்து உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/373b2c91-a7da-4bdb-a483-f22f64e750f1/26-6a53b4ea8e59a.webp' /></p><p>
</p><p>
அவரின் முகம், கால்கள், கை மற்றும் தோள்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T15:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்றிணையும் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் : நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-tamil-parties-to-announce-joint-agreement-1783865448"></link>
            <id>https://ibctamil.com/article/six-tamil-parties-to-announce-joint-agreement-1783865448</id>
            <summary type="text">ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குள் பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை, நாளை(12)திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குள் பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை, நாளை(12)திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்க உள்ளன.
</p><p>
தற்போதைய சூழலில், பொதுவான விடயங்களில் இணைந்து செயல்பட ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், மேலும் விவரங்களை இந்த நிகழ்வின்போது வெளியிடுவதாகவும் கட்சிகள் தெரிவித்துள்ளன.</p><p>இதில் ஈடுபட்டுள்ள கட்சிகள்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பு.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T14:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுவிக்கப்படவுள்ள கைதிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-release-prisoners-over-the-age-of-70-1783866175"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-release-prisoners-over-the-age-of-70-1783866175</id>
            <summary type="text">நாட்டின் சிறை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும், விசாரணைக் கைதிகளையும் விடுவிப்பது குறித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சிறை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளையும், விசாரணைக் கைதிகளையும் விடுவிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறை நெரிசலைக் குறைக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் நடத்திய உள்ளகக் கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தற்போது நாட்டில் உள்ள சிறைகளில் 70 வயதுக்கு மேற்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கிய காரணம்</h2><p> </p><p>

இதேவேளை, கொலை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாத முதிய கைதிகளை விடுவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fefb2a8-f18a-4dbe-b24e-e251e1e3e4e9/26-6a53a5730f43f.webp' /></p><p>
</p><p>
கூடுதலாக, போதைப்பொருள் வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள நபர்களின் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் கடுமையான தாமதமும் சிறை நெரிசல் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
சிறிய அளவிலான போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக சிலர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணம் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளின் கடுமையான பற்றாக்குறையே என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T14:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-transferred-from-negombo-court-issue-1783862648"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-transferred-from-negombo-court-issue-1783862648</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் விசாரணைகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் நடத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் விசாரணைகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் நடத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி, நாளை (13) முதல் விசாரணைக்கு வரவிருக்கும் கைதிகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என சிறை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><h2>வேறு சிறைகளுக்கு கைதிகள் மாற்றம்</h2><p>நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து, அச்சிறையிலிருந்து ஒரு தொகுதி கைதிகளை பிற சிறைகளுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b32bc14-a270-4d5d-a380-6e368e64587f/26-6a539bac0298f.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு வசதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கைதிகள் காணொளித் தொழில்நுட்பம் மூலம் விசாரணை</h2><p>
</p><p>
எனவே, சம்பந்தப்பட்ட கைதிகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் விசாரணைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e18d8d-7dd8-4fef-830b-3eb6945a4277/26-6a539baca4376.webp' /></p><p>

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறைத்துறை மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் : ஈரான் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-newspaper-publishes-list-of-13-people-1783859134"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-newspaper-publishes-list-of-13-people-1783859134</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை ஈரான் பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளமை பரபரப்பை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை ஈரான் பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

அந்த செய்தித்தாளின் பெயர் ஹம்ஷஹ்ரி என்பதாகும். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா அறிக்கை ஒன்றுடன், 13 உலக நாடுகளின் தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளது.</p><h2>பட்டியலில் இடம்பிடித்த தலைவர்கள்</h2><p>&nbsp;பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc93c2a-252b-4f5b-bb38-c4a213633d19/26-6a539417ee521.webp' /></p><p>


இவர்கள் தவிர, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சேத், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, ஜெர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.</p><p>&nbsp; இதேவேளை தனது தந்தையின் கொலைக்கு பழி வாங்கப்படும் என ஈரான் உச்சதலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியுடன் சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-member-amitha-chathuranga-remanded-1783861120"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-member-amitha-chathuranga-remanded-1783861120</id>
            <summary type="text">
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அம்பலங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் அமித சதுரங்க விளக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அம்பலங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் அமித சதுரங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று(12) முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>கைது நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>சந்தேகநபரிடம் இருந்து உரிமம் இல்லாத ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று(11) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0212d366-ad6e-4d85-84d9-408dbba90084/26-6a5392ba33481.webp' /></p><p>
</p><p>
காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள்! மூன்றாவது நாளாக பதிவு செய்யப்படும் சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/coal-procurement-investigations-1783857963"></link>
            <id>https://ibctamil.com/article/coal-procurement-investigations-1783857963</id>
            <summary type="text">நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, நாளை (13) தொடர்ந்து மூன்றாவது நாளாக சாட்சியங்களைப் பதிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, நாளை (13) தொடர்ந்து மூன்றாவது நாளாக சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது.</p><p>

இதன்படி, நொரோச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரதி மேலாளர் ஏ.பி.எம். துஷன் அபேய்கூன் மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரதி மேலாளர் ஏ.பி.எம். துஷன் அபேய்கூன், இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை, ஜூலை 8 அன்று, சாட்சியம் அளிப்பதற்காக ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>முறைகேடுகள் குறித்த விசாரணை</h2><p>இதுவரை, நான்கு அதிகாரிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சாட்சியம் அளித்த மற்ற அதிகாரிகள், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சோ, அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஷ்யாமா ஹர்ஷனி ஆகியோர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa498356-f3c7-420d-96d7-0233c876dee4/26-6a538855c2c61.webp' /></p><p>

2009-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கரி பரிவர்த்தனைகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளில் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகளை விசாரிக்கும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T12:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது பிறந்தநாளில் தந்தையை அடித்தே கொன்ற மகன் : குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/81-year-old-man-was-killed-in-an-attack-by-his-son-1783857561"></link>
            <id>https://ibctamil.com/article/81-year-old-man-was-killed-in-an-attack-by-his-son-1783857561</id>
            <summary type="text">தனது 45வது பிறந்தநாளில், வயதான தந்தையை அடித்தே கொன்ற மகன் தொடர்பில் தகவலொன்று வெளியாகி உள்ளது.

81 வயதான முதியவர் ஒருவரான தந்தையே இவ்வாறு கொல்லப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது 45வது பிறந்தநாளில், வயதான தந்தையை அடித்தே கொன்ற மகன் தொடர்பில் தகவலொன்று வெளியாகி உள்ளது.
</p><p>
81 வயதான முதியவர் ஒருவரான தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

மதுவுக்கு அடிமையான அந்த மகன், தனது 45வது பிறந்தநாளான முன்தினம் (10) இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை</h2><p>மாத்தறை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி நடத்திய பிரேதப் பரிசோதனையில், மார்பு மற்றும் அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களே மரணத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d105e2e5-b608-4434-aaae-d3d09414c933/26-6a538516cc67a.webp' /></p><p>
</p><p>
கொலையைச் செய்ததாகக் கூறப்படும் சந்தேகத்திற்குரிய மகன் லோக்கு ருவன், அக்குரெஸ்ஸா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மாத்தறை பிரதம நீதிபதி முன் முற்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-paid-to-all-farmers-affected-ditwah-1783854030"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-paid-to-all-farmers-affected-ditwah-1783854030</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதன்படி, பாதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்தவகையில், 59,245 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய 112,442 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.</p><p></p><h2>சிறு போகத்திற்கான உர மானியம்</h2><p>

இழப்பீடு வழங்குவதற்காக மொத்தம் 8.886 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78af2bd2-a35b-400f-a778-22078bbb1806/26-6a53777f7c1b9.webp' /></p><p>
இதற்கிடையில் சிறு போகத்திற்கான உர மானியத்தை 95 சதவீதமான விவசாயிகள் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

அதன்படி, 449,750 ஹெக்டேர் பயிர்ச்செய்கை நிலத்தை உள்ளடக்கிய 667,460 விவசாயிகள் உர மானியத்தைப் பெற்றுள்ள நிலையில் உர மானியத் திட்டத்திற்கான மொத்த செலவினம்13.492 பில்லியன் ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senator-lindsey-graham-dies-1783855558"></link>
            <id>https://ibctamil.com/article/us-senator-lindsey-graham-dies-1783855558</id>
            <summary type="text">அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் காலமானார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அவர் இறந்தபோது அவருக்கு 71 வயது.

திடீர் உடல்நலக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் காலமானார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அவர் இறந்தபோது அவருக்கு 71 வயது.</p><p>

திடீர் உடல்நலக்குறைவே அவரது மரணத்திற்குக் காரணம் என்று லிண்ட்சே கிரஹாமின் அலுவலகம் அறிவித்துள்ளது.
</p><p>
தென் கரோலினா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இவர் 2002-ல் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><h2>ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி</h2><p>&nbsp;வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான இவர், வோஷிங்டனில் வெளியுறவுக் கொள்கை குறித்த ஒரு சக்திவாய்ந்த குரலாக விளங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc46ab5-743f-43d7-8623-3bfb1fb86a4c/26-6a5379c75300e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:26:13+00:00</updated>
        </entry>
    </feed>
