<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-30T18:29:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-dies-after-being-stung-by-a-wasp-1785435670"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-dies-after-being-stung-by-a-wasp-1785435670</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம்(29) பனை வெட்டுவதற்காக சென்றபோது கருங்குளவி கொட்டுக்க இலக்கான நிலையில் அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
</p><p>
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd8b920f-5e08-4395-8bde-63437f1dc59d/26-6a6b97d26f641.webp' /></p><p>
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</b></h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T18:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை அதிகாரி அளித்த சாட்சியம் : நீதிமன்றம் விதித்த இறுக்கமான உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jailor-testifies-court-negombo-prison-incident-1785431346"></link>
            <id>https://ibctamil.com/article/jailor-testifies-court-negombo-prison-incident-1785431346</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக தலைமை சிறை அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்த நிலையில் அவர் தெரிவித்த விடயங்கள் தேசிய பாதுகாப்பிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக தலைமை சிறை அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்த நிலையில் அவர் தெரிவித்த விடயங்கள் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் எனவே அவர் அளித்த சாட்சி விபரங்கள் எந்தவொரு ஊடகத்திலும் வரக்கூடாது எனவும் நீதிபதி ஷிலானி பெரேரா இறுக்கமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் 10 சிறை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக, சம்பவம் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் பணியாற்றி வந்த தலைமை சிறை அதிகாரி, இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

இது நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்றது.</p><h2>நீதிபதியின் உத்தரவு</h2><p>

அப்போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாக இருந்த விக்கிரம ஜயந்த குமார, சாட்சியமளித்தார்.

சாட்சியம் பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் தொடங்கி, பிற்பகல் சுமார் 3.00 மணி வரை தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58a601b-a402-47f3-9e43-68a623b81d61/26-6a6b960e78ba6.webp' /></p><p>
</p><p>
சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசியப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளன என்று நீதிபதி குறிப்பிட்டார்.

தகவல்களை வெளியிடுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சாட்சியத்தின் உள்ளடக்கங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

மேலும், தொடர்புடைய சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> </p><h2>மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் தொடர்பான அறிக்கை</h2><p>இதற்கிடையில், வெலிக்கடை சிறையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்கு வந்த 89 சிறைக் காவல்துறை அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee2e9ce-2de7-4ea8-9933-9b3663028392/26-6a6b960f29cc3.webp' /></p><p>
</p><p>
மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் தொடர்பான அறிக்கையையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T18:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு! பின்னணியில் பிரபல கட்சியொன்றின் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/16-kg-kerala-cannabis-packages-seized-in-jaffna-1785433263"></link>
            <id>https://ibctamil.com/article/16-kg-kerala-cannabis-packages-seized-in-jaffna-1785433263</id>
            <summary type="text">
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டது.
</p><p>
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா நாளைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aaea56-540b-456d-80b8-6cc3244d9838/26-6a6b91a473f00.webp' /></p><p>

இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T18:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து தப்பிய ஹரக் கட்டா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-drops-pta-charges-against-harak-kata-1785431837"></link>
            <id>https://ibctamil.com/article/court-drops-pta-charges-against-harak-kata-1785431837</id>
            <summary type="text">பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது, ​​தப்பிச் செல்ல சதி செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>சட்டத் தடை</h2><p>
</p><p>
இந்நிலையில், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4664b1c-f1cf-474d-9767-2be23ee01650/26-6a6b8a28ada94.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை மட்டுமே பராமரிக்க முடியாது என்றும், குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T17:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தளபதிகளுடன் முரண்பாடு : முகாமைவிட்டே வெளியேறிய இஸ்ரேல் இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-soldiers-leavesde-base-dispute-commanders-1785427887"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-soldiers-leavesde-base-dispute-commanders-1785427887</id>
            <summary type="text">தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்தே தைமான் இராணுவத் தளத்திலிருந்து, மூத்த தளபதிகளுடனான முரண்பாட்டைத் தொடர்ந்து டசின் கணக்கான இஸ்ரேலிய வீரர்கள் இன்று வியாழக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்தே தைமான் இராணுவத் தளத்திலிருந்து, மூத்த தளபதிகளுடனான முரண்பாட்டைத் தொடர்ந்து டசின் கணக்கான இஸ்ரேலிய வீரர்கள் இன்று வியாழக்கிழமை வெளியேறினர் என்று இஸ்ரேலிய செய்தித்தாளான 'தி ஜெருசலேம் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வீரர்கள் கிவாட்டி படைப்பிரிவின் சபர் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.</p><p>"கிவாட்டி படைப்பிரிவில் உள்ள வட்டாரங்களின்படி, பட்டாலியனின் படைப்பிரிவுகளால் காட்சிப்படுத்தப்பட்ட சின்னங்களை அகற்றி அழிக்க கட்டளைத் தளபதிகள் முடிவு செய்தனர்," என்று அந்த செய்தித்தாள் கூறியது.</p><h2>&nbsp;இணக்கப்பாடு ஏற்படாததால் தளத்தைவிட்டு வெளியேறிய வீரர்கள்</h2><p>

வீரர்களின் எதிர்ப்பையும் மீறி, பட்டாலியன் தளபதி அந்த முடிவைச் செயல்படுத்துவதில் பிடிவாதமாக இருந்தார் என்றும் அது தெரிவித்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="iw" dir="rtl">מרד בחטיבת גבעתי: לוחמים מגדוד צבר השאירו את נשקיהם ועזבו את בסיס שדה תימן שבו היו בימים האחרונים אחרי שיצאו מלבנון. מרד החל לאחר שמפקד הגדוד, שניתץ בפטיש סמלים בפלוגה, אותם דרש להסיר.<br><br>תגובת דובר צה״ל: &quot;לפני זמן קצר מספר חיילים בגדוד לוחם החלו לצאת מבסיסם ללא אישור מפקדיהם; זאת… <a href="https://t.co/oUTOSb2yoe">pic.twitter.com/oUTOSb2yoe</a></p>&mdash; איתי בלומנטל 🇮🇱 Itay Blumental (@ItayBlumental) <a href="https://x.com/ItayBlumental/status/2082789279470649407?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
"தளபதிகளில் ஒருவர், சின்னங்களில் ஒன்றை அழிக்க ஐந்து கிலோகிராம் எடையுள்ள சுத்தியலைப் பயன்படுத்தினார்," என்று அந்தப் பிரிவில் பணியாற்றும் ஒரு வீரர் இஸ்ரேலிய செய்தி இணையதளமான 'வல்லா'விடம் கூறினார்.
</p><p>
இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறியதால், வீரர்கள் அந்தப் பிரிவை விட்டு வெளியேறி, தளத்தை விட்டு நடந்து சென்றனர் என்று 'தி ஜெருசலேம் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>கொடூர சித்திரவதைக்கு பேர்போன முகாம்</h2><p>
</p><p>
இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள ஸ்தே தைமான் என்ற இராணுவத் தளம், காசா பகுதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571d2d56-c76f-413b-b857-bf20d27512d5/26-6a6b7d1c43b41.webp' /></p><p>

பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களும், உரிமை அமைப்புகளும், அந்தத் தளத்தில் காவலில் இருக்கும்போது நிகழும் தாக்குதல்கள், நீண்டகாலக் கட்டுப்பாடு, மருத்துவப் புறக்கணிப்பு மற்றும் மரணங்களை ஆவணப்படுத்தியுள்ளன. </p><p>இந்தத் தளம், கியூபாவின் குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தடுப்பு மையத்துடன் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
பாலஸ்தீனிய உரிமை அமைப்புகளின்படி, சித்திரவதை, மருத்துவப் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகள் குறித்த தொடர்ச்சியான அறிக்கைகளுக்கு மத்தியில், சுமார் 350 சிறுவர்கள் மற்றும் 84 பெண்கள் உட்பட 9,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T16:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் வங்கிகணக்கிற்கு வருகிறது பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-july-1785423403"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-july-1785423403</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>

 

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>நாளை முதல்&nbsp;&nbsp;கொடுப்பனவை&nbsp;பெற்றுக்கொள்ள முடியும்</h2><p>&nbsp;மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa33f7f-57f7-4590-9fa7-35adad5c556e/26-6a6b6748d700f.webp' /></p><p>

 

அதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்குக் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,494,810,000 ரூபாவாகும்.</p><p>

 

உரிய பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T15:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிக்கிய கஞ்சிபானி இம்ரானின் நிதிப்பொறுப்பாளர் : வெளிவரும் பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saima-arrested-in-malaysia-reveals-many-secrets-1785425059"></link>
            <id>https://ibctamil.com/article/saima-arrested-in-malaysia-reveals-many-secrets-1785425059</id>
            <summary type="text">‘ரத்மலானே சைமா’என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில்
கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘ரத்மலானே சைமா’என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில்
கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 
மலேசியாவில் தலைமறைவாக இருந்த கெஹல்பத்ர பத்மேவுக்கும் அவர் உதவி செய்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மலேசிய காவல்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற ரத்மலானே சைமா உட்பட மூன்று பேரை இலங்கை காவல்துறை குழு ஒன்று சமீபத்தில் கைது செய்தது.</p><h2>கஞ்சிபானி இம்ரானின் நிதி பொறுப்பாளர்</h2><p>&nbsp;விசாரணையின் போது, ​​குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7057f2-4881-40cf-a0cb-b197f118d22e/26-6a6b6ead04e38.webp' /></p><p>

சந்தேக நபரான சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
கஞ்சிபானி இம்ரானின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தர பத்மே மலேசியாவில் பதுங்கிக்கொள்ள இவர் உதவியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>கொலை அச்சுறுத்தலை அடுத்து மாறிய நட்பு</h2><p>தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியாக இவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c55a6eef-3b67-4765-aa5f-5a00ce9bb3cb/26-6a6b714f1eafb.webp' /></p><p>
</p><p>
சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் இதுகுறித்து சைமாவிடம் தெரிவித்த பிறகு, அவர் கஞ்சிபானியுடன் நட்பு பாராட்டினார்.</p><p>சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T15:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பதிலடி : அழிக்கப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் : பல அமெரிக்க இராணுவத்தினரும் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-troops-killed-f-35-jets-destroyed-irgc-strike-1785417709"></link>
            <id>https://ibctamil.com/article/us-troops-killed-f-35-jets-destroyed-irgc-strike-1785417709</id>
            <summary type="text">ஈரானின் கெஷ்ம் தீவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்ற கொடிய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அல் அஸ்ராக் விமானப்படைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கெஷ்ம் தீவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்ற கொடிய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அல் அஸ்ராக் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூன்று அமெரிக்க எஃப்-35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை இன்று வியாழக்கிழமை அறிவித்தது.&nbsp;</p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,வியாழக்கிழமை அதிகாலை வேளையில், "உதவியற்ற அமெரிக்க எதிரி", ஒரு நியாயமான இராணுவ மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஜோர்டானில் உள்ள "ஆக்கிரமிக்கப்பட்ட தளங்களைப்" பயன்படுத்தி, ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள இரண்டு குடியிருப்பு வீடுகள் மீது பதுங்குகுழி தகர்ப்பு குண்டுகளை வீசியதாக அந்த அறிக்கை கூறியது.</p><h2>மூன்று F-35 போர் விமானங்கள் முற்றிலுமாக அழிப்பு</h2><p>

ஐ.ஆர்.ஜி.சி-யின்படி, இந்தத் தாக்குதலில் ஒரு தந்தை, ஒரு தாய் மற்றும் ஒரு குழந்தை வீரமரணம் அடைந்தனர், மேலும் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87193b4c-41d9-4a3a-a477-d66876332dd5/26-6a6b56a28cd3e.webp' /></p><p>
"இந்தக் குற்றத்திற்குப் பதிலடியாகவும்" மற்றும் "அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் பேரழிவிலிருந்து ஜோர்டானின் இஸ்லாமிய நிலத்தை விடுவிக்க உங்களுக்கு உதவுவதற்காகவும்", ஐ.ஆர்.ஜி.சி விண்வெளிப் படை, அல் அஸ்ராக் விமானத் தளத்தில் அமெரிக்க F-35 போர் விமானங்கள் பயன்படுத்தும் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்புக் கொட்டகை மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு குறிவைத்ததாக கூறியது.</p><p>

இந்தத் தாக்குதலில் மூன்று F-35 போர் விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்று விமானங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்தது.</p><p></p><h2>தாக்குதலில் அமெரிக்க இராணுவத்தினரும் பலி</h2><p>
</p><p>
மேலும், இந்தத் தாக்குதலில் பல எதிரி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப, பராமரிப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக அது தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac6b48e-68f6-455d-968b-99413f08e412/26-6a6b56a346bd7.webp' /></p><p>

"நள்ளிரவில் உறங்கும் அப்பாவி குடும்பங்களை இவ்வளவு கொடூரமாகப் படுகொலை செய்யும் ஒரு குழந்தைக் கொலையாளி இராணுவத்திற்கு எங்கள் பிராந்தியம் ஏற்ற இடமல்ல," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.</p><p>

"இஸ்லாமிய நிலங்களிலிருந்து கடைசி அமெரிக்க ஆக்கிரமிப்பாளர் வெளியேற்றப்படும் வரை, எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான போராட்டம் தொடரும்," என்று அது ஜோர்டான் மக்களிடம் கூறியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T15:12:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை வியாபாரியான அண்ணன் சிறையில் : பார்க்க வந்த தம்பி ஹோட்டலில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brother-arrested-after-visiting-brother-in-prison-1785420269"></link>
            <id>https://ibctamil.com/article/brother-arrested-after-visiting-brother-in-prison-1785420269</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட
போதைப் பொருள் வியாபாரியான சகோதரனை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட
போதைப் பொருள் வியாபாரியான சகோதரனை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து
மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இளைய சகோதரன் உட்பட இருவரை
 நேற்று புதன்கிழமை (29) இரவு
கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><p>இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
</p><p>
கடந்த ஏப்ரல் 7ம் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியான அண்ணன் நீர்கொழும்பு
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்</p><h2>நீர்கொழும்பு சிறை கலவரத்தை அடுத்து மாற்றப்பட்ட கைதிகள்</h2><p>
</p><p>
குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தை
அடுத்து அங்கிருந்து குறித்த போதை வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு
சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a4ad0a-3068-4481-b45d-c53403b9e4e7/26-6a6b5f0484ec0.webp' /></p><p>

இந்த நிலையில் சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் என
இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>
இவர்கள் தொடர்பில் மட்டு தலைமைய காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்
ஒன்றினையடுத்து காவல் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு
பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த
ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.</p><p></p><p>

</p><h2>ஹோட்டலில் தங்கியிருந்த சகோதரன் போதைப்பொருளுடன் கைது</h2><p>இதன்போது அங்கு அறையில் இருந்த தெமட்ட கொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31
வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்
பொருட்களுடன் கைது செய்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eef83c2-b965-4d54-ac08-9cb8550c6f59/26-6a6b5f03d352e.webp' /></p><p>
</p><p>
இதில் போதைப் பொருள் வியாபாரியின் சகோதரன் ஏற்கனவே போதைப் பொருட்களுடன் கைது
செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில்
அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள்
எனவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:28:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுழிபுரம் விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல்...! பழைய மாணவன் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-administration-of-victoria-college-1785416178</id>
            <summary type="text">யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் தகவல்
அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்று
வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.</p><p>&nbsp; குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில்
சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில்
அமைக்கப்பட்டது.</p><h2>பாடசாலை மதில் விவகாரம்</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும்
முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில்
வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb75dcc6-69b2-469b-86e9-654abe27db5e/26-6a6b4d427f4f1.webp' /></p><p>அதாவது வலிகாமம் கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன்
ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.</p><p>அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி
அமைச்சின் செயலாளரால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில்
யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.</p><p>குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளரால்
பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை
ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>150வது ஆண்டு விழாவுக்கான நிதி சேகரிப்பு&nbsp;</h2><p>மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில்
அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை
தொடர்பிலும் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1ea989-589d-42c8-925e-b5cef6c61e50/26-6a6b4d4339c27.webp' /></p><p>எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித்
திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை
முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.</p><p>ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை
மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும்
செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.
</p><p>
இவர்களின் நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய
நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37 வது நாளாக தொடரும் போராட்டம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-continues-for-37th-day-in-keppapilavu-1785416787"></link>
            <id>https://ibctamil.com/article/protest-continues-for-37th-day-in-keppapilavu-1785416787</id>
            <summary type="text">இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 37 வது
நாளை எட்டியுள்ளது.</p><p>

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இன்று (30.07.2026) 37 வது
நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.</p><p></p><h2>&nbsp;பிரதான கோரிக்கை</h2><p>


தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர். 

தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58ddb9c-b0cf-43db-b377-792ab0489e28/26-6a6b4c557756a.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T13:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை விமர்சிப்பது பெரும் அபத்தம்! ஐங்கரநேசன் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thamizh-thaesiya-arasiyal-criticism-speech-1785415698"></link>
            <id>https://ibctamil.com/article/thamizh-thaesiya-arasiyal-criticism-speech-1785415698</id>
            <summary type="text">தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று புதன்கிழமை
(29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
</p><p></p><h2>ஒரு வரலாற்றுத் தவறு</h2><p>
ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும்
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி
அழிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b16bf39-31e6-4629-be48-badcdc9c4a1c/26-6a6b48140f975.webp' /></p><p> </p><p>ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும்
காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.
இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே
அரங்கேற்றியது.</p><p> நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப்
படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம்
பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். </p><p>ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப்
புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப்
பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.

இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி
2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள்
இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. </p><p>முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல்
நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான
உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய
முதலாவது இனப்படுகொலையாகும்.</p><p> இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை
எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும். ஆனால்
இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய
நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத்
தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது."என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-30T12:52:49+00:00</updated>
        </entry>
    </feed>
