<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T11:28:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமத்திற்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்தை தாக்கிய யானை: 25 பேர் வைத்தியசாலையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wild-elephant-attacks-bus-in-katharagama-10-hurt-1788426742"></link>
            <id>https://ibctamil.com/article/wild-elephant-attacks-bus-in-katharagama-10-hurt-1788426742</id>
            <summary type="text">🛑&amp;nbsp;புதிய இணைப்புகதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>கதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>முதலாம் இணைப்பு</u></b></h5><p>கதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>யானை ஒன்று குறித்த பேருந்தை
தாக்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.</p><p>குறித்த விபத்து சம்பவம் இன்று (03-09-2026) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><h2>நிலைமை கவலைக்கிடம்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கதிர்காமம் காவல் பிரிவுக்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியில் இன்று (03-09-2026) காலை மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல - கதிர்காமம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a5b4a-6ac6-4633-af26-66f39c1842f2/26-6a994c04b699c.webp' /></p><p>யானையின் தாக்குதலால் வீதியை விட்டு விலகி பேருந்து கவிழ்ந்துள்ளதுடன் விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதில் பேருந்தில் இருந்த 10 பேர்
காயமடைந்து&nbsp;கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் குறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-issued-clarification-digital-insurance-card-1788431187"></link>
            <id>https://ibctamil.com/article/police-issued-clarification-digital-insurance-card-1788431187</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காவல் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை தவறலாகும் என போக்குவரத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காவல் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை தவறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று (03.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாவு குறிப்பிட்டுள்ளார்.&nbsp; </p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “பாதுக்க மற்றும் கம்பஹா காவல் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.</p><p></p><h2>காவல்துறைமா அதிபர் விளக்கம்</h2><p>
</p><p>
இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் கீழ் 2026 மே 5ஆம் திகதி வெளியிடப்பட்ட மேலதிக அறிவித்தல் மூலம், காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0940f94-237a-4da4-bca0-504cbeb8d2f7/26-6a9953a6b1a5c.webp' /></p><p>
</p><p>
மேலும், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும், காப்புறுதி நடைமுறையில் உள்ளதா என்பதை காவல் அதிகாரிகளால் இலவசமாக பின்வரும் வழிமுறைகளின் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><ul><li>1338# என்ற இலக்கத்திற்கு அழைத்து, காப்புறுதி இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளிட்டு உடனடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</li><li>
1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</li><li>
1338 என்ற அவசர அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ள முடியும்.</li></ul><p>

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள 607 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.</p><p>ஏதேனும் காவல்துறை அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுத்தால், அது தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின்<b> 070 4755 600</b> என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என” பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய குற்றச்செயல்கள் : வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-deported-from-abu-dhabi-1788431855"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-deported-from-abu-dhabi-1788431855</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதற்கு ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், இலக்குகளைத் தாக்கி வெடிக்கும் காட்சிகள் உள்ளிட்ட காணொளிகளைத் தங்கள் கைபேசிகளில் சேமித்து வைத்திருந்ததை அடுத்து, அந்த இரண்டு சந்தேக நபர்களும் ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.</p><h2>பாரிய குற்றச்செயல்கள்</h2><p>&nbsp;சந்தேக நபர்களில் ஒருவர், அசோகபுர, துங்கன்னாவாவைச் சேர்ந்த 37 வயதான திஸ்ஸநாயக்க முதியான்சலாகே பந்துல திஸ்ஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பாக அவர் இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4140c683-c712-4880-afd0-7388bf66c503/26-6a995594ba3eb.webp' /></p><p>&nbsp;இரண்டாவது சந்தேக நபர், கொழும்பு, பொரெள்ள பகுதியைச் சேர்ந்த 36 வயதான சியம்பலாடுவ பாதிரனலகே ஹர்ஷ குமார ஆவார். இவர் பரேவி சுதாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், பூசா சிறைச்சாலையில் நடந்த கலவரம் தொடர்பாகவும் தேடப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சந்தேக நபர்கள்</h2><p>&nbsp; அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இவ்விரு சந்தேக நபர்களும் செப்டம்பர் இன்று( 3 ) காலை சுமார் 10.15 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY392 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69f7720-054a-4cc7-9655-99a5710a9c6d/26-6a9955956e952.webp' /></p><p>குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் விமான நிலையத்தில் இவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>
பின்னர், பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.&nbsp;</p><p></p><p>images credit daily mirror</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது... கோட்டா - மகிந்த கால குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kota-betrayed-to-imprison-namal-mahinda-1788431343"></link>
            <id>https://ibctamil.com/article/kota-betrayed-to-imprison-namal-mahinda-1788431343</id>
            <summary type="text">12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத்துள்ளன.
</p><p>
ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. 

அவுஸ்திரேலியாவின் ஒரு ஊடக வலையமைப்பு 2022 மே மாத தொடக்கத்தில் நாமல் குறித்த பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தது. </p><p>

அந்த வெளிப்பாடுகளின் போது, ​​கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் இருந்தனர். 

இதற்கிடையில், 2016-ஆம் ஆண்டில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016/195 என்ற வழக்கு எண்ணின் கீழ், நிமல் பெரேராவிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெற்றதாக நாமல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.</p><p></p><h2>பல மில்லியன் டொலர்</h2><p>குறித்த அவுஸ்திரேலிய ஊடக வலையமைப்பால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் நிகழ்ச்சியால் ஒளிபரப்பப்பட்ட காணொளி ஆகியவற்றின் அடிப்படையில், மே 4, 2022 அன்று வெளியிடப்பட்ட முழு அறிக்கை பின்வரும் விடயங்களை கூறுகிறது.</p><p>

ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுற்கும் ஒரு அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனத்திற்கும் இடையே ஊழல் பேரங்கள் நடைபெற்றதாக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஊடக வலையமைப்பு அப்போது அம்பலப்படுத்தியுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அப்போதைய ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.

தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தெரியாத, இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு பரிவர்த்தனையில் தானும் தன் குடும்பத்தினரும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
</p><p>
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தெரியாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தத்தில், நானும் என் குடும்பத்தினரும் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டி, ஒரு ஆவணப்படம் மீண்டும் வெளிவந்துள்ளது. </p><p>

நல்லாட்சி அரசு என் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது, அதற்காக நான் இன்னும் நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறேன்.</p><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளில் எதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத் திட்டம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய நிறுவனமான ஆஸ்பென் மெடிக்கல் விசாரிக்கப்பட்டு வருவதாக, ஏ.பி.சி தொலைக்காட்சியின் 'ஃபோர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி மே 1 அன்று வெளிப்படுத்தியது.</p><p></p><h2>ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டு</h2><p>
'ஃபோர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி என்பது அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஊழல், மோசடி, நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றை விசாரிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.
</p><p>
2012-ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்கும் திட்டப்பணி, ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முறையான ஆதரவுடன், அப்போதைய ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து இந்தத் திட்டத்திற்காக ஆஸ்பென் நிறுவனம் 18.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காப்பீட்டுக் கொள்கையைப் பெற்றிருந்தது என்று அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
</p><p>
அப்போதைய ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டுக் கழகம் (தற்போது அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனம்), ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கட்டுமானத்தின் போது பொருட்கள், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதற்காக ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு ஒரு காப்பீட்டுப் பத்திரத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனம் எப்போதாவது பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கியுள்ளதா என ஃபோர் கார்னர்ஸ் பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர், ஆனால் ஆஸ்பென் மெடிக்கல் பதிலளிக்க மறுத்துவிட்டது.
</p><p>
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்பென் மெடிக்கல் நிறுவனம், இதற்கான துணை ஒப்பந்தம் EN ப்ராஜெக்ட்ஸ் என்ற டச்சு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களது நிறுவனத்திற்கு 20க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், ஆஸ்பென் நிறுவனம் இலங்கையில் தனது முதல் ரொக்கப் பரிவர்த்தனையை, பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி மேற்கொண்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறை&nbsp;விசாரணை </h2><p>

இந்தப் பரிவர்த்தனை இலங்கை காவல்துறை - நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்கு வந்தது.

ஆஸ்பென் செலுத்திய 4.3 மில்லியன் யூரோக்கள் மொத்தத் தொகையின் ஒரு பகுதி இது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புகளைக் கொண்ட நிமல் பெரேரா என்று ஃபோர் கார்னர்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.</p><p> 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்காக நிதி திரட்டியதை நிமல் பெரேரா 2016-ல் ஒப்புக்கொண்டிருந்தார்.
</p><p>
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணம் எப்படி வந்தது என்று காவல்துறையினர் விசாரித்தபோது, ​​அது ஒரு இத்தாலிய தொழிலதிபரிடமிருந்து வந்ததாக அவர் கூறினார், ஆனால் அந்தத் தொழிலதிபரின் அடையாளத்தை அவரால் நிரூபிக்க முடியவில்லை.</p><p>

சேபர் ஹோல்டிங்ஸின் உரிமை குறித்து நிமல் பெரேராவிடம் காவல்துறை விசாரித்தபோது, ​​தனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும், அது ஒரு இத்தாலிய நண்பருக்குச் சொந்தமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
</p><p>
இருப்பினும், நிறுவன ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​அந்நிறுவனத்தின் உரிமையாளர் நிமல் பெரேரா என்பது தெரியவந்தது. </p><p>ஆனாலும், தொழிலதிபராகிய நிமல் பெரேரா, தான் அந்த நிறுவனத்தின் ஊழியராக இருந்ததால் தனக்கு அந்த உரிமைகள் உண்டு என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்குத் தெரிவிக்கிறார்.</p><p>அப்போது அனுர குமார திசாநாயக்க மற்றும் பிறர், ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் மூலம் கூட்டாக வெளியிட்ட தகவலின்படி, வழக்கு எண் 2016-195-இன் படி, நிமல் பெரேரா தனக்கு 60 மில்லியன் ரூபாய் வழங்கியதை நாமல் ராஜபக்ச ஒப்புக்கொண்டிருந்தார்.
</p><p>
ரக்பி போட்டித் தொடருக்காக 60 மில்லியன் கொடுத்ததாக நாமல் ராஜபக்ச கூறினார், ஆனால் அவர் அப்படி ஒரு பணத்தைப் பெறவில்லை என்று ரக்பி கூட்டமைப்பின் அனைத்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின்போது, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மருத்துவமனைத் திட்டங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளியாகின.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/geUWhldUhMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T11:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இறுதி செய்யப்படவுள்ள ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-srilanka-mou-for-jaffna-kks-port-development-1788431375"></link>
            <id>https://ibctamil.com/article/india-srilanka-mou-for-jaffna-kks-port-development-1788431375</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை புரிந்துணர்வு ஒப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்வதை விரைவுபடுத்துவதற்காக ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
</p><p>துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இன்று (03) காலை அமைச்சின் வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழுவினர், பிரதிநிதி ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளி விவகார அமைச்சின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.</p><p></p><h2>போக்குவரத்து சேவை</h2><p>இதன்போது, முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி பல விடயங்களில் உடன்பாடுகளை எட்டினர்.</p><p>காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd51052-dd6b-4a2c-b533-af421a68c347/26-6a99540190885.webp' /></p><p> இத்திட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒரு கூட்டு கண்காணிப்புக் குழுவையும் ஒரு தொழில்நுட்பக் குழுவையும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.</p><p> கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை இந்திய அரசாங்கத்திடம் கூடிய விரைவில் சமர்ப்பித்து, இறுதி முடிவை உடனடியாகப் பெற இந்தியத் தூதுக்குழு ஒப்புக்கொண்டது.</p><p></p><h2>அமைச்சர் அறிவுறுத்தல்&nbsp;</h2><p> </p><p>இத்திட்டம் இந்தியாவுக்கும் இலங்கையின் வட பகுதிக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை வலுப்படுத்தும், வட மாகாணத்தில் துறைமுக உட்கட்டமைப்பை மேம்படுத்தும், மற்றும் பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இத்திட்டத்தால் வட மாகாண மக்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547f458b-85a7-40aa-8396-a96a39a209d6/26-6a995402626a3.webp' /></p><p> </p><p>2026 பெப்ரவரியில், காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இத்திட்டத்தை கூடிய விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்திற்கும் அமைச்சர் அனுர கருணாதிலக அறிவுறுத்தினார். </p><p>இதன்போது, ​​குறுகிய காலத்திற்குள் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தை விட அதிக சொத்து சேர்ப்பு : விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimals-case-postponed-1788430150"></link>
            <id>https://ibctamil.com/article/wimals-case-postponed-1788430150</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமான சொத்துக்களைக் குவித்தது தொடர்பான இந்த வழக்கு, இன்று (03) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது.</p><h2>மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு</h2><p>&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை 22ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சிகளை வரவழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6401561a-f764-41dc-8ccd-f8673be04c77/26-6a994a4c3788b.webp' /></p><p>
</p><p>
முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை அவருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-after-tamarind-seed-gets-stuck-throat-1788425221"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-after-tamarind-seed-gets-stuck-throat-1788425221</id>
            <summary type="text">கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில்&amp;nbsp; புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில்&nbsp; புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த சனுதி லக்ஷானி என்ற சிறுமி எனவும், குடும்பத்தின் இளைய பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (02.09.2026) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த புளியை எடுத்து சாப்பிட முயன்றுள்ளார்.</p><p></p><h2>சிறுமி ஒருவர் பலி</h2><p>
</p><p>
இதன்போது புளியங்கொட்டை ஒன்று அவரது தொண்டையில் சிக்கியதால், சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9c168bd-9083-43a9-a640-3f2b62779024/26-6a9948e531816.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் அறிந்த தாயார் உள்ளிட்ட உறவினர்கள், சிறுமியை காப்பாற்றுவதற்காக லொறி ஒன்றில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
</p><p>
சிறுமியின் சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தர பத்மேவிற்கு தொடரும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kehelbaddara-padme-s-remand-extended-1788427627"></link>
            <id>https://ibctamil.com/article/kehelbaddara-padme-s-remand-extended-1788427627</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>

பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><h2>&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை</h2><p>இந்தநிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d757fd38-d25d-4621-a833-1b17dc8f3773/26-6a9944608ecff.webp' /></p><p>
</p><p>
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் 'கணேமுல்ல சஞ்சீவ' தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்.</p><p>அத்துடன் சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[1.7 பில்லியன் டொலர் கடனில் ராபர்ட் கியோசாகி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rich-dad-poor-dad-in-1-7-billion-doller-debt-1788429472"></link>
            <id>https://ibctamil.com/article/rich-dad-poor-dad-in-1-7-billion-doller-debt-1788429472</id>
            <summary type="text">
உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><p>

செல்வந்தர்கள் வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடனைப் பயன்படுத்துவதாக நீண்டகாலமாக வலியுறுத்தி கியோசாகி வலியுறுத்தி வருகின்றார்.
</p><p>
இந்நிலையில் கடனை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நிதி அறிவு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>1.2 பில்லியன் டொலர்&nbsp;கடன் </h2><p> </p><p>

எனினும், 1.2 பில்லியன் டொலர் முழுவதும் கியோசாகியின் தனிப்பட்ட கடன் அல்ல என அவரது முன்னாள் மனைவியும் வர்த்தகப் பங்காளியுமான கிம் கியோசாகி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/632ecccf-4c4a-4989-aa24-e0071e2cfe78/26-6a99465243d6e.webp' /></p><p> </p><p>

தாங்கள் பங்காளிகளுடன் இணைந்து சுமார் 1,500 அடுக்குமாடி குடியிருப்பு அலகுகளை வைத்திருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய கடனே பெரும்பகுதி எனவும் அவர் விளக்கியுள்ளார். </p><p>

கியோசாகியின் முதலீட்டு உத்தியின்படி, சொத்துகளின் மதிப்பு உயரும்போது அவற்றின் அதிகரித்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் கடன் பெறுகிறார். </p><p>

அந்தப் பணத்தை புதிய முதலீடுகளுக்குப் பயன்படுத்துகிறார். மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதன் மூலம் ஒரு முதலீட்டில் ஏற்படும் பிரச்சினை மற்ற சொத்துகளை பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, கியோசாகியின் தனிப்பட்ட பங்கு கடன் சுமார் 30 முதல் 60 மில்லியன் டொலர் வரை இருக்கலாம் என Vanity Fair மதிப்பிட்டுள்ளது.</p><p>

 ரியல் எஸ்டேட் சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறுவது பொதுவான முதலீட்டு நடைமுறை என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், அதிகளவிலான கடன் சொத்து மதிப்பு அல்லது வருமானம் குறையும் சூழ்நிலையில் மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>

1997ஆம் ஆண்டு வெளியான ‘Rich Dad Poor Dad’ நூல் உலகளவில் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நூலின் மூலம் கியோசாகி, ரியல் எஸ்டேட் மற்றும் பிற வருமானம் ஈட்டும் சொத்துகளில் முதலீடு செய்வதைப் பிரபலப்படுத்தியுள்ளார்.

 கியோசாகியின் கூற்றுப்படி, முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும் “நல்ல கடன்” மற்றும் அன்றாட செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் கடன் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T10:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;ட்ரம்ப் நீரிணை&quot; என மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணையின் பெயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-is-to-become-trump-strait-1788428668"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-is-to-become-trump-strait-1788428668</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய கச்சா எண்ணெய் போக்குவரத்து கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை &quot;ட்ரம்ப் நீரிணை&quot; என மறுபெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய கச்சா எண்ணெய் போக்குவரத்து கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை "ட்ரம்ப் நீரிணை" என மறுபெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>Truth Social சமூக ஊடக வலையமைப்பில் ஒரு பதிவை வெளியிட்ட அவர், இந்த கடல் பகுதி தற்போது அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால், அதன் பெயரை இவ்வாறு மாற்றுவது பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>பின்னர் வெள்ளை மாளிகையின் ஓவல் அறையில் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அது வெறும் ஒரு யோசனை மட்டுமே என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e39a736e-903b-4fc3-8f10-13f31a4d3656/26-6a99440cad9f7.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ X கணக்கு இந்த நீரிணையை "ட்ரம்ப் நீரிணை" என்று குறிக்கும் ஒரு புதிய வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது.&nbsp;</p><p>புவியியல் இடங்களுக்கு மறுபெயரிடுவது ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு அரசியல் சமிக்ஞையாக அடிக்கடி காணப்பட்ட ஒரு போக்காகும்.</p><p></p><h2>முன்னரான ட்ரம்பின் பெயர் மாற்றங்கள்</h2><p> </p><p>இதற்கு முன், மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க வளைகுடா" என்றும், கனடாவுடனான வர்த்தக தகராறின் போது ஒன்டாரியோ ஏரியை "அமெரிக்க ஏரி" என்றும் அவர் மறுபெயரிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d6d959d-c889-45d5-8539-2ae78b94dff8/26-6a99440d72257.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு தனது நாட்டின் அதிகாரபூர்வ வரைபடங்களில் பெயர்களை மாற்ற அதிகாரம் இருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் அல்லது பிற நாடுகளுக்கு அந்த பெயர்கள் சட்டபூர்வமாகப் பொருந்தாது.</p><p> ஈரான் மற்றும் ஓமான் அதன் கடற்கரை நாடுகளாக உள்ளன, மேலும் இந்த கடல் பகுதி எப்போதும் ஈரானுக்கு சொந்தமானது என்று ஈரான் வலியுறுத்துகிறது.</p><p>



 இந்த பெயர் மாற்றும் முன்மொழிவு சர்வதேச வரைபடங்களில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை, மேலும் இது ஒரு போர் வெற்றியை அடையாளப்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசியல் பிரசாரமாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T09:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய் அபாயம் குறையவில்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-risk-persists-despite-low-number-of-cases-1788419013"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-risk-persists-despite-low-number-of-cases-1788419013</id>
            <summary type="text">இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p> 

இதன் காரணமாக, தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானமாகச் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>நுளம்புகளின் பெருக்கம்&nbsp;</h2><p>அத்துடன் சில மாவட்டங்களில் ஆரம்பத்தில் நுளம்புகளின் பெருக்கத்தை அவதானிக்க முடிவதுடன், அதன்பின்னரே நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாகவும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f4795b-c60e-4bc2-9598-c196b6ab2e74/26-6a993fb9a03bc.webp' /></p><p> </p><p>

டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் கவனயீனமாக செயற்பட்டால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எனவே பொதுமக்கள் தமது சுற்றுபுறச் சூழலை மிகவும் தூய்மையாக பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-news-today-update-1788425440"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-news-today-update-1788425440</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,359,128 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 383,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/791eef2f-b5ce-400a-afcc-9163c3877ace/26-6a9936d750dd7.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 351,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 335,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-import-vehicle-government-ann-1788423068"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-import-vehicle-government-ann-1788423068</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வழிமுறைகள் பற்றிய நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வருமானக் செயல்திறன் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>வாகன இறக்குமதி</h2><p>வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட மொத்த வரி வருமானத்தில் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மூலம் அதிகபட்ச பங்காக 386.726 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcd35e5-67e1-4e97-9152-ae00a4ae831e/26-6a9933d671652.webp' /></p><p>அத்தோடு 1,000cc இற்கு குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கார்கள் அதிக வருமானத்தை ஈட்டித் தந்த பிரிவாக உருவெடுத்துள்ளன.</p><p>இதன் மூலம் சுங்கத்திற்கு 137.4 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன் இது மொத்த சுங்க வருமானத்தில் 9.96 வீதம் ஆகும்.</p><p>
</p><p></p><h2>கொள்கலன்களின் பரிசோதனை</h2><p>2026 ஜூன் 30 ஆம் திகதியளவில் இலங்கை சுங்கம் 1.379 டிரில்லியன் ரூபா மொத்த வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. </p><p>இக்காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட 1.061 டிரில்லியன் ரூபா இலக்குடன் ஒப்பிடுகையில் இது 130 வீதம் சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431fa7c7-b6f3-449a-9d5f-08f472313773/26-6a9933d5ac666.webp' /></p><p>சுங்க வருமானம் ஆண்டு முழுவதும் மாதாந்த இலக்குகளை விஞ்சியுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டின் ஒத்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் பரிசோதனை, சுங்கச் செயல்பாடுகளை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருமான நிர்வாகத்தில் உள்ள சவால்கள் மற்றும் திறனை அதிகரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:46:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த செலவில் ஜப்பான் - மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வேலை வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245"></link>
            <id>https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245</id>
            <summary type="text">சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.</p><p> ஏற்கனவே தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்த புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.</p><p>

பணியகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், துபாயில் விமான நிலைய நிர்மாணத் திட்டங்களில் 2,000 வேலைவாய்ப்புகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.</p><p></p><h2>மேற்பார்வையாளர் பணியிடங்கள்</h2><p> அதிகபட்சமாக ரூ.150,000 செலவில் விண்ணப்பதாரர்கள் விரைவாக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ec8f02-c74f-4c7f-8627-d504cbb73c1d/26-6a9931c4dbdbf.webp' /></p><p>
</p><p>
மேலும், 800 மேற்பார்வையாளர் பணியிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதற்கான மொத்த செலவு ரூ.180,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தொகைகள் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இலங்கையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பூஜ்ஜியச் செலவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> அங்குள்ள நலவாழ்வு மையம் இந்த வேலைவாய்ப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜப்பானில் புதிய வேலைவாய்ப்புகள்
ஜப்பானில் மூன்று நிறுவனங்களுடன் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.</p><p>

முன்னோடித் திட்டத்தின் கீழ், ஜப்பானிய நிர்மாண நிறுவனமொன்றுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 23 மாணவர்கள் சபுகஸ்கந்தையில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>ஜப்பானிய மொழித் திறன்</h2><p>
</p><p>
தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சிக்கான செலவுகளை குறித்த ஜப்பானிய நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
மேலும், ஜப்பானிய நிறுவனமான Meta Techno உடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் அடிப்படை ஜப்பானிய மொழித் திறன் கொண்ட ICT பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, மற்றொரு ஜப்பானிய நிறுவனம் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்காக 1,000 லொறி சாரதி பணியிடங்களை வழங்க முன்வந்துள்ளது. </p><p>இதற்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் ஜப்பானிய மொழித் திறனும் அவசியமாகும்.

தேவையான தகுதிகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்ள உதவிகளை நிறுவனம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்(<a href="https://www.slbfe.lk/" target="_blank">https://www.slbfe.lk/</a>) மற்றும் <a href="https://www.facebook.com/slbfeOfficial/" target="_blank">Facebook </a>பக்கம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T08:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிப்பர் வாகனம் பழக்கடைக்குள் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072"></link>
            <id>https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072</id>
            <summary type="text">வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.</p><p>இந்த விபத்து நேற்று (02.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு அருகிலிருந்த பழ விற்பனை நிலையமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒருவர் பலி</h2><p>
</p><p>இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc8e566-d6ce-4491-b919-9bde2b3227be/26-6a992f13d0208.webp' /></p><p>உயிரிழந்தவர் சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1788423326"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1788423326</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (03.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (03.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;323.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.87 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	435.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 450.23 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		374.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 387.28 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf0654c-fad6-43ea-90ca-f0270038e07f/26-6a992ebc16da5.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.72 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			229.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.62 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	253.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 263.74 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T08:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bombuwala-sudda-arrested-over-motorcycle-theft-1788417321"></link>
            <id>https://ibctamil.com/article/bombuwala-sudda-arrested-over-motorcycle-theft-1788417321</id>
            <summary type="text">பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&quot;போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>"போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afde4ca4-50b7-4825-bedf-68d093a7baa1/26-6a9917b4c2eeb.webp' /></p><p>

கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர். </p><p>

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய காவல்துறை பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p> 

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-hears-petitions-against-anti-graft-bill-1788414662"></link>
            <id>https://ibctamil.com/article/sc-hears-petitions-against-anti-graft-bill-1788414662</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> உயர் நீதிமன்றம் இன்று (03-09-2026) இந்த விசாரணயை ஆரம்பித்துள்ளது.
</p><p>
இந்த மனுக்கள், நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><h2>சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் உட்பட மொத்தம் 14 மனுக்கள் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் சில சரத்துக்கள், மக்களின் இறையாண்மை உட்பட அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90fc1845-0252-43ac-879e-739f63f1e0b3/26-6a992ae0675ca.webp' /></p><p>இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூலம் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை கட்டுப்படுத்தப்படும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை ஆதரவு பெறப்படுவதுடன் சர்வசன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-need-for-power-cuts-despite-coal-shortage-1788418227"></link>
            <id>https://ibctamil.com/article/no-need-for-power-cuts-despite-coal-shortage-1788418227</id>
            <summary type="text">மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>


நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் பாதிப்பில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>அச்சம் கொள்ள வேண்டாம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e7bda5f-b63c-43f7-a32a-1628dbd7c9ef/26-6a9929ddb9dd3.webp' /></p><p>
</p><p>


இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (4) வரவுள்ளதாகவும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12 ஆம் திகதி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இரண்டு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>


தற்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்திய அமைச்சர், நிலைமை தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parliament-officers-appear-before-ciaboc-1788420320"></link>
            <id>https://ibctamil.com/article/parliament-officers-appear-before-ciaboc-1788420320</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் இன்று (03) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p>அத்துடன், சமிந்த குலரத்னவின் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்&nbsp;</h2><p>இந்த விவகாரம் குறித்த இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010c767b-b84e-49b0-bf68-fc22e02a353d/26-6a9926c076d7c.webp' /></p><p>இதேவேளை சபாநாயகரால் வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, சமிந்த குலரத்ன மற்றும் பல தரப்பினரால் 2026 பெப்ரவரி 02 அன்று வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலைய கழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-abandon-the-newborn-baby-1788416275"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-abandon-the-newborn-baby-1788416275</id>
            <summary type="text">கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் கடந்த&nbsp;செவ்வாய்க்கிழமை (01.09.2026) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது குறித்த விசாரணைகளில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கழிப்பறை நீர் தொட்டி</h2><p>மேலும் நேற்று முன் தினம் பிரசவித்ததாகக் கருதப்படும் சிசுவைக் கழிப்பறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அதனை அவதானித்த பொதுமக்கள் அப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71843b5d-6244-4f05-88b7-99d001607870/26-6a991ff15c9e3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணும், சிசுவும் உடனடியாகக் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>
வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிசு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை : அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-ex-state-minister-arundika-fernando-1788412876"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-ex-state-minister-arundika-fernando-1788412876</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாக தகவல் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன் அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்</h2><p>இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71b6d1b5-6ccb-4e09-9a79-b86926ab63eb/26-6a9917473182b.webp' /></p><p>இந்தநிலையில் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, கடந்த முதலாம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB)&nbsp; முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ab8ig7VXGH0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-record-40-ships-aided-in-hormuz-in-one-day-1788415873"></link>
            <id>https://ibctamil.com/article/us-record-40-ships-aided-in-hormuz-in-one-day-1788415873</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க 40 வணிக கப்பல்களுக்கு உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க 40 வணிக கப்பல்களுக்கு உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும், அமெரிக்க படைகள் ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள 60 ஈரான் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>18 மில்லியன் Litre எண்ணெய்</h2><p>
</p><p>
இதன்படி அமெரிக்க படைகள் நேற்று, ஈரானின் தாக்குதல்களில் இருந்து மேற்படி கப்பல்களை பாதுகாத்த நிலையில் அந்த கப்பல்களில் மொத்தம் 18 மில்லியன் Litre பேரல் எண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e821e2-7e79-4f88-8a60-dc46a3b01506/26-6a9911fb5b11f.webp' /></p><p>
</p><p>
இந்த பாதுகாப்பு திட்டத்திற்காக அமேரிக்கா, தன்வசம் உள்ள விண்வெளி செயற்கைகோள் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும் ஈரான் துறைமுகங்களின் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக அமெரிக்க இராணுவம் கடல் முற்றுகையிலும் ஈடுபட்டுள்ளதாக கூப்படுகிறது.</p><p>

அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடியாக அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளது. </p><p>

நேற்று ஈரான் வான்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தங்கள் ஏவுகணை அமைப்பு தடுத்து அழித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T06:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்கள் : விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/written-submissions-on-22nd-amendment-petitions-1788410437"></link>
            <id>https://ibctamil.com/article/written-submissions-on-22nd-amendment-petitions-1788410437</id>
            <summary type="text">இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, இன்று (03) பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் அந்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது.</p><p></p><h2>சபாநாயகருக்கு அனுப்பி வைத்தல்&nbsp;</h2><p>மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், அது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c8281c-1621-43c5-b275-9fa06544b268/26-6a990165d7fc3.webp' /></p><p> 

குறித்த சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HGkbG1fzP4k" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் குண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mortar-shells-recovered-in-mankumban-1788412475"></link>
            <id>https://ibctamil.com/article/mortar-shells-recovered-in-mankumban-1788412475</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார்
குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.குறித்த மோட்டார் குண்டுகள்&amp;nbsp; நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார்
குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.</p><p>குறித்த மோட்டார் குண்டுகள்&nbsp; நேற்றையதினம் (02.09.2026) காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி
மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;<br></p><p></p><h2>மோட்டார் குண்டு</h2><p>
</p><p>இதனையடத்து இந்த விடயம் ஊர்காவற்துறை காவல்துறையினரால் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aafacd6-9cfc-42fc-afde-a139f24e9dc8/26-6a990bce81887.webp' /></p><p>அதன்படி அங்கு வந்த காவல்துறை விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக
தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:56:25+00:00</updated>
        </entry>
    </feed>
