<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-04T08:28:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் சோகம்: தவறான முடிவெடுத்து இளம் நாதஸ்வர வித்துவான் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-of-nadaswaram-vidwan-death-in-jaffna-1785828505"></link>
            <id>https://ibctamil.com/article/one-of-nadaswaram-vidwan-death-in-jaffna-1785828505</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில், சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில், சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><p>கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>குறித்த பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a120d0-e6d8-4165-a582-fcdadbf94268/26-6a7199d6adaec.webp' /></p><p>
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T08:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் வெடித்த போராட்டம்: உதயநிதி கைதால் கொந்தளித்த மேயர் பிரியா - அரசின் மீது பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765</id>
            <summary type="text">புதிய இணைப்புதி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார். உதயந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p> </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். </p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலை&nbsp;அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.</p><h2>கைதுக்கு கடும் கண்டனம்</h2><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf76288-74e2-4e66-9ef7-1614c94fe32f/26-6a719c639e16d.webp' /></p><p>மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று&nbsp;'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள். </p><p>ஆனால் இன்று காவல்துறையினரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள்&nbsp; இதுதான் ஜனநாயகமா? காவல்துறை&nbsp; உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசிய&nbsp;விவகாரம் தொடர்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p>முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h3>குவிக்கப்பட்ட&nbsp;காவல்துறையினர்</h3><p>சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fcf744-5df0-4ce9-8c88-d8b86d099e49/26-6a71867c8db65.webp' /></p><p>காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p> சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p></p><h2>கடும் வாக்குவாதம்</h2><p>அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba76b4d-b14f-4f2c-a463-c8c8a4f44fbe/26-6a71867d460b1.webp' /></p><p>இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். </p><p>ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
</p><p>
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக இன்று காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T08:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-colombo-hc-1785826166"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-colombo-hc-1785826166</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி,&nbsp;அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு</h2><p> </p><p>இதன்போது, சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df09754b-2374-40ab-aa78-0c458cb654e4/26-6a7193717f39f.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p>மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (03) 8 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>பிரித்தானிய அரச கடற்படை கல்லூரி</h2><p>
</p><p>
வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் யோஷித ராஜபக்ச பிரித்தானியாவில் உள்ள ' பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியில்' பயிற்சி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0b0234-a715-46d8-814b-104ae006ea67/26-6a7194173b165.webp' /></p><p>

குறித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் இல்லாத நிலையிலும் நடைமுறைகளை மீறி யோஷித ராஜபக்ச முறையற்ற விதத்தில் அரச நிதியிலான இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:32:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - ஆளுநருக்கு பறந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1785827662"></link>
            <id>https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1785827662</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.</p><p>

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை சென்ற வலி. வடக்கு
பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து,
மகஜரை கையளித்துள்ளனர்
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த
மகஜரில் கையளித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>அனுமதி வழங்குவதென தீன்மானம்&nbsp;</h2><p>
வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீன்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c4f1ae8-eadb-4ba1-a4c8-683397decad3/26-6a7193335f7cd.webp' /></p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லாது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.
</p><p>
இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><p>
</p><h2>புனித இடங்கள்</h2><p>
அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகினற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa6846d4-ebd7-4857-96c5-54b03a013e27/26-6a719332a1563.webp' /></p><p>எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-million-rupee-fraud-in-aswesuma-payments-1785823704"></link>
            <id>https://ibctamil.com/article/10-million-rupee-fraud-in-aswesuma-payments-1785823704</id>
            <summary type="text">அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளில் ரூ.01 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&amp;nbsp;சம்பவம் தொடர்பாக, அட்மையில் நோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளில் ரூ.01 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p>&nbsp;சம்பவம் தொடர்பாக, அட்மையில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள் ஹற்றன் பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p>

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 25 இலட்சம் என கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.</p><p></p><h2>அஸ்வெசும</h2><p>2024ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.01 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹற்றன் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0205050e-8d9f-4288-a4f1-679507307bec/26-6a718d50ee846.webp' /></p><p>உண்மையான பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அஸ்வெசும நிதியை, தங்களது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி வரவு வைத்ததன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.</p><p> கைது செய்யப்பட்ட இருவரும் கணக்குப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளாவர்.</p><h2>1 கோடி மோசடி</h2><p>அஸ்வெசும கொடுப்பனவு வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3cba6f-3522-4eda-b08d-396a6661517b/26-6a718d51b6653.webp' /></p><p> </p><p>இதைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹற்றன் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். </p><p>இதனுடன், நுவரெலியா மாவட்டச் செயலாளரின் ஆலோசனையின் பேரில் உள்ளக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. </p><p>விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சந்தேக நபர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றையவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்</p><p>கைது செய்யப்பட்ட இரு பெண் அதிகாரிகளும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இந்த மோசடி தொடர்பில் மேலும் சிலரின் தொடர்பு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:58:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி கைதால் வெடித்த போராட்டம் - ஓ.பன்னீர்செல்வம் குண்டுக்கட்டாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693"></link>
            <id>https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693</id>
            <summary type="text">தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழக முதல்வர் விஜய்யை தரக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>தமிழக முதல்வர் <a href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765" target="_blank">விஜய்யை தரக்குறைவாக</a> பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஆனால் காவல்துறையின் கைது நடவடிக்கையை காமெடியாகப் பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.</p><p></p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1063a9a7-6283-442c-a3ac-2ebe4d8674c6/26-6a718ce386b21.webp' /></p><p> 

அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.</p><p> இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில் , அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p></p><h2>குண்டுக்கட்டாக கைது</h2><p>இந்த கைதுக்கு எதிராக உதயநிதி வீட்டின் முன்பு ஏரளமான தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள் சாலையில் அமர்ந்து போராடியவர்களை தற்போது காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர். &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153449b0-9e5b-4d04-af82-cb36046d23d4/26-6a718ce45c0ba.webp' /></p><p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாலை மறியல்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fall-in-the-number-of-foreign-tourists-visit-sl-1785821006"></link>
            <id>https://ibctamil.com/article/fall-in-the-number-of-foreign-tourists-visit-sl-1785821006</id>
            <summary type="text">இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_31st_July_2026.pdf" target="_blank">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ள நிலையில் இது கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7 சதவீத வீழ்ச்சியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>இந்தியாவிலிருந்து அதிக&nbsp;சுற்றுலாப் பயணிகள்</h2><p>

புதிய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 44,547 ஆக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93ccc44-3ba7-4c22-b3e7-62696ab3c954/26-6a71854fbcb76.webp' /></p><p>

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 21,834 பேரும், நெதர்லாந்திலிருந்து 12,493 பேரும், சீனாவிலிருந்து 12,336 பேரும், பிரான்ஸிலிருந்து 10,102 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். </p><p>

இதன்படி, 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரை நாட்டிற்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,343,418 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் கனமழை: பல இடங்களில் நிலச்சரிவு அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nuwara-eliya-districtrisk-landslides-several-areas-1785821525"></link>
            <id>https://ibctamil.com/article/nuwara-eliya-districtrisk-landslides-several-areas-1785821525</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரமாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான மழையால் மலையகத்தின் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரமாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. </p><p>தொடர்ச்சியான மழையால் மலையகத்தின் பிரதான வீதிகள் பல மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>மீண்டும் கனமழை</h2><p> </p><p>குறிப்பாக நோர்வூட், ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038b406f-b56d-430b-8db3-3de927c54567/26-6a717ecc7f404.webp' /></p><p> </p><p>மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்படி, அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதியின் 32 கி.மீ மற்றும் 66 கி.மீ பகுதிகள், நாவலப்பிட்டி - கினிகத்தேன வீதி, தண்டகல - பலம்பிட்டிய - தொலஸ்பாகே வீதி உட்பட 8 பிரதான வீதிகள் நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து விழுந்தமையால் முற்றாக மூடப்பட்டுள்ளன. </p><p>இதனால் நுவரெலியா மாவட்டத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசர உதவி எண்</h2><p>
</p><p>
கனமழை காரணமாக காசல்ரீ, மௌஸ்ஸாகலை, கொத்மலை ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c43a66f-c49e-47af-b46a-d3fbab23016c/26-6a717ecd3b1a9.webp' /></p><p> மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கீழ்ப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவிக்கையில், "அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளன.</p><p> பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். </p><p>

வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 24 மணிநேரத்திற்கும் நுவரெலியா மாவட்டத்தில் 100 மி.மீக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறியுள்ளது. </p><p>இதனால் நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> அவசர உதவிகளுக்கு 117 என்ற அனர்த்த முகாமைத்துவ இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கலவரத்திற்கான காரணம் : நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reason-for-the-mahara-prison-conflict-justce-min-1785821113"></link>
            <id>https://ibctamil.com/article/reason-for-the-mahara-prison-conflict-justce-min-1785821113</id>
            <summary type="text">கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என&amp;nbsp;நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என&nbsp;நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிடப்பட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (4) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் விசேட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒருசில சிறைச்சாலைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09fb4649-0768-4aaf-b805-d7ac87b83285/26-6a717f3c58732.webp' /></p><p> 

மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதா என்ற சந்தேகமும் காணப்படுகிறது“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இதேவேளை&nbsp;மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சரின் வழக்கு - எனக்கு தொடர்பு இல்லை - நடிகை கடும் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sinhala-actress-denies-links-to-mervyn-silva-asset-1785817645"></link>
            <id>https://ibctamil.com/article/sinhala-actress-denies-links-to-mervyn-silva-asset-1785817645</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய வங்கிக் கணக்குடன் தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை சிங்கள நடிகை ரீத்து ஆக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய வங்கிக் கணக்குடன் தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா மறுத்துள்ளார். </p><p>தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என&nbsp; ரீத்து ஆகர்ஷா வலியுறுத்தியுள்ளார்.</p><p>குறித்த விடத்தை சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாடசாலை மாணவி</h2><p>குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b5e706-1e19-4e57-8377-c3b53fdd869e/26-6a716d1bf2e9c.webp' /></p><p>
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.</p><p>

2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக&nbsp; அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a564bcc3-b3b1-43f0-bef8-fc8e8bde70d0/26-6a716d1b4d7b7.webp' /></p><p>இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:47:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பளையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 500 குடும்பங்கள் இடம்பெயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-flooding-gampola-displaces-500-families-1785818357"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-flooding-gampola-displaces-500-families-1785818357</id>
            <summary type="text">கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், கம்பளை பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், கம்பளை பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
</p><p>இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் உடபாலத்த மற்றும் தொலுவ பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த தகவல் நேற்று (03.08.2026) நடைபெற்ற அவசரகால பேரிடர் மேலாண்மைக் குழு கூட்டத்தில் கூறப்பட்டது.&nbsp;</p><p></p><h2>500 குடும்பங்கள் இடம்பெயர்வு</h2><p>
</p><p>
 

கம்பளையில் Babila, Bothalapitiya, Gangawatta Road, Pallewela, Nawalapitiya Road, Leonis, Kudamake, Naranwita, and Inguruwatta உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c97942d-900b-4b63-8b3b-8a2ee595c897/26-6a717f2646d94.webp' /></p><p>

 

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 500 குடும்பங்கள், கம்போலாவில் உள்ள கேட் மஸ்ஜித், கஹதபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் பொத்தலபிட்டிய கங்காதிலக விகாரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>​​காம்பளை பகுதியில் நிலைமை மேலும் மோசமடைந்தால் செயல்படுத்தப்பட வேண்டிய மாற்றுத் திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.&nbsp;</p><p>

 

வெள்ளம் தொடர்பான அவசர காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆறு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:28:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deaths-number-due-to-disasters-has-increased-to-7-1785814727"></link>
            <id>https://ibctamil.com/article/deaths-number-due-to-disasters-has-increased-to-7-1785814727</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக&amp;nbsp;உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மண்சரிவு மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக&nbsp;உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

அதன்படி, ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு&nbsp;</h2><p>
</p><p>
மேலும், வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbc94017-0bd4-4fb5-a050-3d3019bde0b6/26-6a7171d2529a0.webp' /></p><p>
</p><p>
அத்துடன், நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர நேற்று (03) உறுதிப்படுத்தினார்.</p><p></p><h2>காணாமல் போயுள்ளார்</h2><p>
</p><p>
அத்துடன், கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ளவர் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61951c03-9bb7-41e5-a0c4-b70b123638ad/26-6a7171d3143ee.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தநிலையில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZFJFlrYSd7c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/first-parliamentary-week-of-august-begins-today-1785814996"></link>
            <id>https://ibctamil.com/article/first-parliamentary-week-of-august-begins-today-1785814996</id>
            <summary type="text">புதிய இணைப்புஇன்றைய (04.08.2026) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான&amp;nbsp;நாடாளுமன்ற அமர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இன்றைய (04.08.2026) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. </p><p>காலை 09.30க்கு ஆரம்பமான&nbsp;நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கம் 10.00 முதல் 11.00 வரை&nbsp; வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.30 முதல் 5.00 வரை 2026 இன் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு இடம்பெறவுள்ளதுடன் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது. </p><p>5.00 முதல் 5.30 வரை அரசாங்கத்தின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0Fkh0Aj7L_4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மு</span><span style="color: inherit; font-size: 1.75rem;">தலாம் இணைப்பு</span></p><p>ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற வாரம் இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

இன்றைய தினம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைநிரப்பு மதிப்பீட்டு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. </p><p>

நாளை (05) அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.</p><p></p><h2>தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை</h2><p>

வியாழக்கிழமையன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec29dfd-957b-4db2-9915-752d4aacfcff/26-6a7165173fe1c.webp' /></p><p> 

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 7 தனிநபர் உறுப்பினர் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. </p><p>

இதேவேளை, நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றைக் கையளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு&nbsp;</h2><p> </p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவினர் குறித்த முன்மொழிவில் நேற்று (03) கையொப்பமிட்டுள்ளதுடன், அதற்கு எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e1db84-aade-4f76-aaa0-e39c601b2bb2/26-6a71651653450.webp' /></p><p> 

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது, சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காகவே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T03:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-for-low-income-families-1785812483"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-for-low-income-families-1785812483</id>
            <summary type="text">குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது குறித்து முக்கிய அறிவிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை, குடும்பங்களின் சமூக - பொருளாதார பாதிப்பு நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.</p><p></p><h2>சமூக-பொருளாதாரக் காரணிகள்</h2><p>

குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், இருப்பிட வசதி, அடிப்படைச் சேவைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் கடன்பாடுகள் ஆகிய சமூக-பொருளாதாரக் காரணிகள் புதிய தெரிவில் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d6ff086-4fcc-49d5-a5a7-62dee26f3487/26-6a715b91aaaae.webp' /></p><p>

தற்போதைய தெரிவு செயற்பாட்டில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
</p><p>
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த புதிய முறைமையின் பயனுள்ள தன்மையை ஆராய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்த நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
</p><p>
இந்த புதிய சமூக-பொருளாதார கட்டமைப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><b><i>You may like this</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T03:56:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/moe-special-discussion-regs-grade-5-and-al-exams-1785810793"></link>
            <id>https://ibctamil.com/article/moe-special-discussion-regs-grade-5-and-al-exams-1785810793</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.</p><p> 

வளிமண்டலவியல் <a href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749" target="_blank">திணைக்களம்</a>, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952" target="_blank">வளிமண்டலவியல்</a> திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பரீட்சைத் திணைக்களம்&nbsp;</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நிலவும் மழைக்கால <a href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437" target="_blank">வானிலையுடன்</a> பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6219c6-91b0-4564-8637-226539d8435f/26-6a71538fd438a.webp' /></p><p>உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5 ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். </p><p>அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும்.</p><p></p><h2>சூறாவளி நிலைமை</h2><p> </p><p>எனினும் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும். அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dc24360-e25b-4d52-9160-2a9846de5d6d/26-6a71538f28ac1.webp' /></p><p>எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும்." என்றார். </p><p>

எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் சூறாவளி நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையளவில் ஓரளவுக்கு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அஜித் விஜேமான்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><b><i>You may like this</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952"></link>
            <id>https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437" target="_blank">வானிலை </a>காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். </p><p>கண்டிமாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும்<a href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749" target="_blank"> கடும் மழை</a> மற்றும் சீரற்ற வானிலை நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. </p><p>அதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக நுவரெலியா கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>விடுமுறை&nbsp;</h2><p> </p><p>இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c195d7-07ba-4f98-b8ea-be5457219365/26-6a714e86867b4.webp' /></p><p>மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பின்னர் உரிய அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>உயர் தரப் பரீட்சை&nbsp;</h2><p>நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d4f6905-ce04-4710-bae9-b3f8113a866b/26-6a714e87807e4.webp' /></p><p> 

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>மேலும் நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்த்துள்ளார்.</p><p><b>You may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:33:42+00:00</updated>
        </entry>
    </feed>
