<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-14T20:19:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான முற்றுகை: 62 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-blockade-turns-back-62-ships-in-arabian-sea-1786735710"></link>
            <id>https://ibctamil.com/article/us-blockade-turns-back-62-ships-in-arabian-sea-1786735710</id>
            <summary type="text">ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் இன்று வரையிலான நிலவரப்படி முற்றுகை விதிகளை மீறாமல் பூரணமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக மூன்று கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன் (Disabled), இரண்டு கப்பல்களில் நேரில் சென்று சோதனைகளும் (Boarded) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சர்வதேச சட்டங்கள்</h2><p>வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையேயான மோதல்கள் மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14 முதல் இந்த முற்றுகை நடவடிக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A U.S. Sailor directs an MH-60R Sea Hawk helicopter during nighttime flight operations aboard guided-missile cruiser USS Princeton (CG 59) as the ship sails in the Arabian Sea and enforces the U.S. blockade against Iran. As of Aug. 14, CENTCOM forces have redirected 62 commercial… <a href="https://t.co/HDMlwcGzAq">pic.twitter.com/HDMlwcGzAq</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2088296512933564737?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இருப்பினும், அமெரிக்காவின் இந்த முற்றுகை சட்டவிரோதமானது என்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலஸ்தீன வீடுகளை ஆக்கிரமித்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்: பிரான்ஸ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836"></link>
            <id>https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836</id>
            <summary type="text">குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரான்ஸ் அரசு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>குடியேற்றவாசிகளின் தாக்குதல்</h2><p> 

மேலும், இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது இரு-நாட்டுத் தீர்வுக்கு (Two-state solution) பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Israel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Israel</a>/ <a href="https://x.com/hashtag/Palestine?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Palestine</a> | Situation in the West Bank <a href="https://t.co/DVjssdJ4vw">pic.twitter.com/DVjssdJ4vw</a></p>&mdash; France Diplomacy 🇫🇷🇪🇺 (@francediplo_EN) <a href="https://x.com/francediplo_EN/status/2088277900462084562?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மறுபுறம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா பகுதியில் தீவிரமடைந்துள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
</p><p>
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) கூட, தாக்குதல்களில் ஈடுபட்ட அந்தக் குடியேற்றவாசிகளை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் தொடரும் கப்பல் போக்குவரத்து முடக்கம்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-traffic-plummets-in-strait-of-hormuz-1786723936"></link>
            <id>https://ibctamil.com/article/ship-traffic-plummets-in-strait-of-hormuz-1786723936</id>
            <summary type="text">வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (Kpler) நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் குறித்த இரண்டு கப்பல்களில் ஒன்று ஈரானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த தானியக் கப்பல், மற்றொன்று எதிர் திசையில் சென்ற காலியான உலர் சரக்குக் கப்பல் (Dry bulk ship) என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தினசரி எண்ணிக்கை</h2><p>இதுதவிர, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் செல்லும் காலியான டேங்கர் கப்பல் ஒன்று நீரிணை வழியே பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன. </p><p>

வெள்ளிக்கிழமை அன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எந்தவொரு கப்பல்களின் பயணமும் பதிவாகவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d60677-0ab3-4f08-b900-70249bc48d01/26-6a7f4c571072a.webp' /></p><p>அத்தோடு வியாழக்கிழமையன்று 9 கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன.</p><p>இது புதன்கிழமை பதிவான 5 கப்பல்களை விட அதிகம் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி தினசரி எண்ணிக்கையான 12-ஐ விடக் குறைவானதாகும்.&nbsp;&nbsp;</p><p> </p><p></p><h2>கண்காணிப்புக் கருவி</h2><p>சில கப்பல்கள் தங்களின் கண்காணிப்புக் கருவிகளை (Transponders) அணைத்துவிட்டு இரகசியமாகப் பயணிக்கக்கூடும் என்ற போதிலும், கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்பு வரை தினசரி 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற நிலமையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be043fd8-a9d9-4672-9213-958efcbd5bb6/26-6a7f4c57b5296.webp' /></p><p>
இது குறித்து வெரிஸ்க் மேப்பிள்கிராஃப்ட் (Verisk Maplecroft) அபாய உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு பிராந்திய முதன்மை பகுப்பாய்வாளர் டார்ப்ஜோர்ன் சோல்வெட் கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அதேவேளையில் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனே பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டிற்கான மிக முக்கிய பலமாக (Leverage) விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீயை ஏற்படுத்திய 474 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642"></link>
            <id>https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642</id>
            <summary type="text">பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>பிரான்ஸின் தென்மேற்கு பகுதி</h2><p> </p><p>

பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, ''ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad473ad-c651-4478-834a-846531dc6467/26-6a7f21e533953.webp' /></p><p> </p><p>அந்தத் தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லாண்டெஸ் (Landes) பிராந்தியத்தில் புதிய காட்டுத்தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லுக்லோன் (Luglon) பகுதியில் 525க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633"></link>
            <id>https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.</p><p>

போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
</p><p>இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மலர்
மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.</p><p></p><h2>பல்வேறு படுகொலைச் சம்பவங்கள்</h2><p>

இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2f01077-8210-4b48-8c65-0a4c6ef68569/26-6a7f1b334832f.webp' /></p><p> </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மனு கையளிக்கப்படவுள்ளது.</p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
</p><p>
நீதியைத் தேடும் இந்தப் பயணம் எந்தவொரு தனிப்பட்ட தரப்பினருக்கோ அல்லது
அமைப்புக்கோ மாத்திரம் உரித்தானதல்ல என வலியுறுத்தும் ஏற்பாட்டாளர்கள், தமிழ்
அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள்,
மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து
தரப்பினரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து இந்த நீதிக்கான பயணத்தில்
பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><h2>பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் போராட்டம் </h2><p>நீதிக்கான ஓலம் என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c477f511-ec27-43ed-b19c-a43ba5c86a26/26-6a7f1b33f08eb.webp' /></p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்குள் ஊடுருவிய அமெரிக்க ட்ரோன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123"></link>
            <id>https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123</id>
            <summary type="text">ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஐ.ஆர்.ஜி.சி வான்வெளி படையால் இயக்கப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு குறித்த ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம், தென்மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு மேல் பறந்த மற்றொரு அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை தனது விண்வெளிப் படை சுட்டு வீழ்த்தியதாக ஐ.ஆர்.ஜி.சி. முன்னதாக அறிவித்தது.</p><p></p><h2>ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c5b566-ba3d-4830-b406-98aaf733fb7f/26-6a7f27adbe2d0.webp' /></p><p>

எனினும் இந்த செய்தி குறித்து அமெரிக்கா எந்த வித தகவலையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:36:19+00:00</updated>
        </entry>
    </feed>
