<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-18T07:29:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு மீண்டும் சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு&amp;nbsp;நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 2...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதன்படி, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இதேவேளை சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><h5>சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!</h5><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்‌ச சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைப் பேருந்தில் இன்று (18) காலை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54276906-90ca-4b6f-9fbf-463369fbde74/26-6aacbd2f300d9.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் ராஜபக்ச!</h5><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்சகைது செய்யப்பட்டார்.</p><p>

இந்த வழக்கில் இலஞ்சமாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>

பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419789ed-9197-4378-9a7a-d0b38425c933/26-6aacb5612268f.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pilot-fell-into-sea-colombo-port-safely-rescued-1789711363"></link>
            <id>https://ibctamil.com/article/pilot-fell-into-sea-colombo-port-safely-rescued-1789711363</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பலை அழைத்து வருவதற்காக அந்தக் கப்பலில் ஏற முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கடல்சார் வழிகாட்டி (Pilot) ஒருவர் கடலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பலை அழைத்து வருவதற்காக அந்தக் கப்பலில் ஏற முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கடல்சார் வழிகாட்டி (Pilot) ஒருவர் கடலில் தவறி விழுந்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று (17.09.2026) இரவு நடந்துள்ளது.</p><p>

எனினும், குறித்த கடல்சார் வழிகாட்டியை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>P 164 கடலோர ரோந்துப் படகு&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0563b15b-f7cc-44d3-99f1-d4a51671daac/26-6aacdd792e92e.webp' /></p><p>இதன்போது, கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த P 164 கடலோர ரோந்துப் படகு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>
குறித்த படகு மூலம் கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டு கட்டுப்பாட்டு ஜெட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T06:44:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதிகளில் நாளை முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-for-all-expressway-passengers-1789711821"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-for-all-expressway-passengers-1789711821</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால சலுகைக் காலம் இன்றுடன் (18) முடிவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். </p><p>அதற்கமைய ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>&nbsp;</p><h2>நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1226a38d-129d-4ef4-94a1-210cef82c056/26-6aacdcfe09eee.webp' /></p><p>

ஆசனப் பட்டிகளை அணியாததால் வீதி விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன, இதன் காரணமாகவே இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p> 

அபராதம் விதிப்பதையோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை, சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p></p><h2>வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை</h2><p> </p><p>

குறிப்பாக வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும், ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம்.” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5ecf35-5c60-4140-b04c-e035e1adf5eb/26-6aacdcfd538dc.webp' /></p><p>

இதேவேளை, ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் தயாரிப்பாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருக்காததால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிது காலம் வழங்க வேண்டியிருந்ததாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். </p><p>

அவ்வாறான வாகனங்களில் ஆசனப் பட்டிகளைப் பொருத்திக் கொள்வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த இறுதிச் சலுகைக் காலமும் இன்றுடன் முடிவடடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T06:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-prices-drop-significantly-in-sri-lanka-1789708882"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-prices-drop-significantly-in-sri-lanka-1789708882</id>
            <summary type="text">இலங்கையின் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கொழும்பில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;குறிப்பாக சிறிய ரக வாகனங்களின் விலைகள் குறைந்தது 10 இலட்சம் ரூபாயாவது குறைந்துள்ளன.</p><p></p><h2>குறைந்துள்ள விலை&nbsp;</h2><p> டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் போன்ற நாட்டில் பிரபலமான வகைகளின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a206f4e4-d648-477d-86a2-c3f12a144b42/26-6aacd332e1db7.webp' />&nbsp;</p><p>வாகனம் வாங்க விரும்பும் நுகர்வோர் அவற்றை முன்பதிவு செய்வதற்கு இது மிகவும் ஏற்ற தருணம். சந்தையில் உள்ள பல விற்பனையாளர்கள் ஏற்கனவே நட்டத்தில் வாகனங்களை விற்பனை செய்து வருவதால், எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>எனினும், தற்போதைய சந்தை நிலவரங்களால் விலை குறைவு போக்கு தொடரக்கூடும் என்றாலும், சந்தை ஒரு நிலையான நிலையை அடைந்ததும் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><p></p><h2>வாகன இறக்குமதி கட்டுப்பாடு</h2><p>ஐந்து ஆண்டுகால வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வாகனப் பற்றாக்குறை பெருமளவு தணிந்திருந்தாலும், சந்தையில் எஞ்சியிருக்கும் இடைவெளியை நிரப்ப இன்னும் அதிகமான வாகனங்கள் தேவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de629e75-6e01-49a9-b507-950fe5eb4e75/26-6aacd3323943f.webp' /></p><p> இருப்பினும், உண்மையான சந்தை தேவையை விட அதிகமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதே தற்போதைய விலை சரிவுக்கு நேரடியாகக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை குறைவுக்கு அரசாங்கம் விதித்த கூடுதல் கட்டணமும் (surcharge) ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பங்களித்துள்ளது”&nbsp; என அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் நள்ளிரவில் வீடு புகுந்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-jewelry-stolen-from-a-house-in-vattappalai-1789707173"></link>
            <id>https://ibctamil.com/article/gold-jewelry-stolen-from-a-house-in-vattappalai-1789707173</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் திருடிச்சென்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் திருடிச்சென்றுள்ளார்.&nbsp;</p><p>

கடந்த (16.09.2026) ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் மதிலேறி உள்நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணி வரை வீட்டினுள் நுழையப் பலமுறை முயற்சித்துள்ளமைக்கான சான்றுகள் வீட்டிலுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>மேலதிக நடவடிக்கை</h2><p> </p><p>பின்னர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபாய் பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் திருடியுள்ளார்.
</p><p>
இதன்போது வீட்டினுள் நபர் ஒருவரின் நடமாட்டத்தை உணர்ந்த வீட்டார்கள் கூச்சலிடவே, திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68b95e7-8cf7-4013-83dc-f251c52568f0/26-6aaccfe587d19.webp' /></p><p>


சம்பவம் குறித்து 119 என்ற காவல்துறை அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>

சந்தேகநபரை 3 நாட்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.
</p><p>
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதுடன், தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>`</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-arrested-assistant-controller-of-immigration-1789706827"></link>
            <id>https://ibctamil.com/article/cid-arrested-assistant-controller-of-immigration-1789706827</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்புலனாய்வு திணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று (17) குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>இவ்வாறு கைது செயய்ப்பட்ட அதிகார கம்பஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b7b44f9-11e5-49f3-bb3c-2cd309dfbd0e/26-6aacc5056a93d.webp' /></p><p>இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியின் பின்னணி குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-39th-commemoration-in-trincomalee-1789705989"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-39th-commemoration-in-trincomalee-1789705989</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -&amp;nbsp;சிவன் கோயில் மூன்றலில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.குறித்த இடத்தில் கடந்த 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -&nbsp;சிவன் கோயில் மூன்றலில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.</p><p>குறித்த இடத்தில் கடந்த 15.09.2026 தொடக்கம் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி அளவில்
செயற்பாட்டாளர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p>

அந்த வகையில் நேற்று (17.09.2026) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த
ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் மையம் ஆகியோரால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>மலர் தூவி அஞ்சலி&nbsp;</h2><p>இதன்போது&nbsp;தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்பு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, பொதுச் சுடரும் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து
மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5afe4aa4-7984-4571-926d-edecebfefe65/26-6aacc188eb865.webp' /></p><p>இந்த நிலையில் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி மேற்கொள்ள ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:42:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-government-s-key-duty-president-1789703474"></link>
            <id>https://ibctamil.com/article/the-government-s-key-duty-president-1789703474</id>
            <summary type="text">குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘திவியட்ட சவியக்’ வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்திட்டத்தின் கீழ், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளர்ந்து 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சமூகமயமாகும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பற்ற, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க</h2><p>
</p><p>
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688059d3-4b10-4aad-9509-c0eb11069a50/26-6aacbc04f159d.webp' /></p><p>
</p><p>
குழந்தைகள் எந்தச் சூழலில் வளர்ந்தாலும் அவர்கள் நாட்டின் குழந்தைகள் என்பதால், அவர்களின் பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p><p>

எந்தவொரு குழந்தையும் பாதுகாப்பற்ற நிலையில் அல்லது அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரக்கூடாது எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.
</p><p>
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்பாக வைப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.</p><h2>20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு</h2><p>
</p><p>
அத்துடன், 18 வயதை பூர்த்தி செய்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fff4c96-f00b-4460-b7c7-fb501581d93c/26-6aacba4d9bf59.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஆண்டு பாதுகாப்பான வீடொன்றை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு அந்த உதவித் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தொகையும் போதுமானதாக இல்லாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மேலும் நிதி ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.</p><p>

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தால் மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக சமூகமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
</p><p>
எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய ரீதியில் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789704054"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789704054</id>
            <summary type="text">இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94471a97-7b34-4c14-b7ed-c9b1c6508fb9/26-6aacbab0220d6.webp' />&nbsp;</p><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-in-katunayake-airport-women-1789693476"></link>
            <id>https://ibctamil.com/article/missing-in-katunayake-airport-women-1789693476</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய காவல் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய காவல் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1384cd3-9629-4fb2-9c58-184213859dfb/26-6aac8fa630698.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலைய காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4cZ2HnaIcf8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh7" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-09-18T03:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989"></link>
            <id>https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989</id>
            <summary type="text">வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் ஒன்றுக்கான கோரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் ஒன்றுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி லண்டன் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைக் கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் ஒரு மனுவை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;"யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்" என்ற தலைப்பிலான இந்த மனு, திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமய விழாக்கள் மற்றும் குடும்ப சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகிறது.</p><h2>400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம்</h2><p>
</p><p>
ஹாரோ மேற்கு தொகுதியின் பிரதிநிதியான தோமஸ், தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என்றும், இதனால் பயணிகள் கொழும்பு வழியாகப் பயணித்து, கூடுதலாக சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df4cb5bb-4d97-47bd-9b28-ce601f68a772/26-6aac6ef49116a.webp' /></p><p>மனுவின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சாலை அல்லது&nbsp;தொடருந்து வழியாகச் செல்வதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இது வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட சிரமங்களை ஏற்படுத்துகிறது.
</p><p>
முன்மொழியப்பட்ட இந்த நேரடிச் சேவையானது, பயண நேரத்தைக் குறைக்கவும், அணுகலை மேம்படுத்தவும், இங்கிலாந்துக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையே குடும்ப, கலாச்சார மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவை</h2><p>இந்த மனு, வட மாகாணத்தில் சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான சாத்தியமான நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

லண்டனுக்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து ஆதரிப்பதற்காக, ஐக்கிய ராச்சிய அரசாங்கம், இலங்கை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு தோமஸ் அழைப்பு விடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f73ef6-1913-4a17-a979-9db00c279028/26-6aac6ef547557.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட விமான இணைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்த மனுவில் கையொப்பமிடுமாறு இந்தப் பிரசாரம் பொதுமக்களை அழைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T01:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தானாகவே வேகமெடுத்த கார்: மட்டக்குளிய வாகன விபத்து தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakuliya-accident-resond-1789694586"></link>
            <id>https://ibctamil.com/article/mattakuliya-accident-resond-1789694586</id>
            <summary type="text">மட்டக்குளிய பகுதியில்&amp;nbsp; பல வாகனங்கள் மோதிக்கொண்ட கோரமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், தான் ஓட்டிவந்த மின்சாரக் கார் திடீரெனத் தானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளிய பகுதியில்&nbsp; பல வாகனங்கள் மோதிக்கொண்ட கோரமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், தான் ஓட்டிவந்த மின்சாரக் கார் திடீரெனத் தானாகவே வேகமெடுத்ததாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.</p><p>இதன்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை தான் இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>காவல்துறையின் கூற்றுப்படி, தனது தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வாகனம் எதிர்பாராத விதமாக வேகமெடுத்ததாகவும், அதனால் தன்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஓட்டுநர் கூறியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>நிபுணர் குழுவால்&nbsp; தொழில்நுட்பப் பரிசோதனை</h2><p>விபத்துக்கு இயந்திரக் குறைபாடா அல்லது தொழில்நுட்பக் குறைபாடா காரணம் என்பதைத் தீர்மானிப்பதற்காக, மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் தலைமையிலான நிபுணர் குழுவால் வாகனத்தின் தொழில்நுட்பப் பரிசோதனை நடத்தப்படும் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e340df7-d9d9-489c-b2e0-a1c453bf3c90/26-6aac970562517.webp' /></p><p>
காவல்துறையினர் ஒரு மருத்துவக் குழுவின் மூலம் மனநல மதிப்பீட்டைப் பெறவும் உத்தேசித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவரது சட்டத்தரணி மறுத்துள்ளனர்.</p><p>

தங்கள் கட்சிக்காரர் மதுவையோ அல்லது சட்டவிரோத போதைப்பொருட்களையோ ஒருபோதும் உட்கொண்டதில்லை என்றும், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p>மருத்துவப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட பொருளுக்கு அந்த மருந்துகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்று சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
</p><p>இந்நிலையில் சந்தேக நபரை விடுவிப்பது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டு, பிணை&nbsp; வழங்குவதை காவல்துறை எதிர்த்துள்ளது.</p><p>

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், ஓட்டுநரைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T01:38:52+00:00</updated>
        </entry>
    </feed>
