<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T21:28:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது. </p><p>இந்த தாக்குதல்கள் தொடர்பான காணொளியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டு உள்ளது.


இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.</p><p>அவர் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,</p><h2>அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும்</h2><p>
</p><p>
அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது என்றார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… <a href="https://t.co/UGGcSGsUtd">pic.twitter.com/UGGcSGsUtd</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096247889366290840?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>


அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T20:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயிகளின் தலைவராக தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meeting-of-heads-of-saiva-organizations-1788722533"></link>
            <id>https://ibctamil.com/article/meeting-of-heads-of-saiva-organizations-1788722533</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை ஏகமனதாக சைவசமயிகளின் தலைவராக முன்மொழிந்து ஏற்றுக்கொண்டதுடன் அதனை சைவசமயிகளிடமும் இந்து கலாசார திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அரச உயர் மட்டத்திற்கும் எடுத்து செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது</p><p>இன்றைய கூட்டம் தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அருளாட்சி வகிக்க அகிலாணடேசுவரர் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா திருக்கோணேசுவர தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன் நயினை நாகபூசணி தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன்
இலண்டன் கனகதுர்க்கை அறங்காவலர் மருத்துவர் பரமநாதன்
அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார் அகில இலங்கைச் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம்
வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன் சிவ சகோதரர்கள் சிவதொண்டர் சிவமங்கயர் மாவட்ப இணைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>


</p><h2>தவத்திரு அகத்தியர் அடிகளார்&nbsp;</h2><p>யாழ்ப்பாணத்தை தலைமையாக் கொண்ட சிவகுரு ஆதீனம் , சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம் மலையகத்தை தலைமையாக கொண்ட சிவசகோதரர் அமைப்பு கொழும்பை தலைமையமாக்
கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் போன்ற நாடாளாவிய அமைப்புக்களும் பிராந்திய மற்றும் நாடாளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் 
அம்பாறை சைவநெறிக்கூடம் மட்டக்களப்பு சிவதொண்டர் கூட்டம் கல்முனை சைவ அறப்பணி நிலையம் ஆகிய மாவட்டநிலை சைவ அமைப்புக்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவசமயிகளின் தலைமையாக ஏற்க தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டு இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab6a8c73-467d-466b-ae0f-4f70e0677e24/26-6a9dc892e8977.webp' /></p><p>
</p><p>
அதே நேரம் கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையமாக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்கும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது

அதே போல வெற்றிடமாகவுள்ள நல்லை குருமகா சந்நிதான அருளாட்சியை ஏற்று வீற்றிருக்க தவத்திரு அக்த்தியர் அடிகளாருக்கு அனேக சைவ சமய அமைப்புக்களும் நல்லை ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபையும் விடுத்த விண்ணப்த்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதனை நல்ல ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபை விரைந்து அதனை செயற்படுத்த வேண்டும் என இணைய அமைப்புக்கள் வலியுறுத்தின.
</p><p>
திருக்கோவில்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் பக்தர்களிற்கும் அயற் பிரதேச குடிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதீத ஒலி ஒளி நிகழ்வு செயற்பாடுகளும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது</p><h2>அனைத்து ஆலயங்களும் அறப்பணி</h2><p>
</p><p>
அனைத்து ஆலயங்களும் அறப்பணிக்களை சைவ சமயக் குடிகளிற்கு ஆற்ற நயினை நாகபூசணி வவுனியா சிவன் இலண்டன் கனதுர்க்கை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்தப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7caf0ff4-d083-4697-96e9-707663279f7d/26-6a9dc8939e421.webp' /></p><p>

22வது அரசியலமைப்பு உட்பட எதிர்வரும் அரசியல் அமைப்பு யாப்பு சீரதிருத்தங்களில் சைவசமயிகளின் அபிலாசைகளை சரிவர சட்ட ரீதியாக சைவசமய தலைமைப்பீடத்தினால் அரசிற்கு வெளிப்படுத்தும் வகையில் திருக்கோணேசுவர ஆலய தலைவர் சட்டத்தரணி துசியந்தன் அவர்களை இணைப்பாளராகக்கொண்டு ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது
</p><p>இதில் ஏற்கனவே மூத்த சட்டதரணிகளான இரட்ணவேல் ஜெயரூபன் தயாபரன் ஆகியோரும் முன்னாள் தமிழ் கூட்டமைப்பு சைவ சமய விவாகாரங்களிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் அவர்களும் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
</p><p>
மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது

வவுனியா சிவன் கோவிலின் மாகேசுவர பூசையுடன் பயனுறுதி வாய்ந்த கலந்துரையாகல்கள் ஏகமனதாக தீர்மானத்துடனும் கொள்கை பிரகடனத்துடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T20:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-sub-inspector-dismissed-sexual-bribe-1788719225"></link>
            <id>https://ibctamil.com/article/police-sub-inspector-dismissed-sexual-bribe-1788719225</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா காவல் நிலையத்தில்
கடமையயாற்றிவரும் ஓட்டமாவடியைச் சோந்த காவல்துறை உப பரிசோதகர் ஒருவரை
நேற்று சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை காவல்
நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை
பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின்
மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><h2>காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக&nbsp;&nbsp;முறைப்பாடு</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தருக்கு
எதிராக திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு
செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c13a08-e132-482b-abfb-ebbe78f437ce/26-6a9db33ac3b60.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும்
கந்தளாய் காவல்துறை பிரிவிலுள்ள காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு
அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா காவல் நிலையத்திற்கு
இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற&nbsp;நிலையில் அவரை உடனடியாக பணி இடைநீக்கம்
செய்வதாக காவல்துறை தலைமையகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T18:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணி உரையை நாடாளுமன்றில் ஆற்றவுள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695"></link>
            <id>https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அவர் ஆற்றவிருந்த சிறப்புரை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்தக் கைது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தின் கீழ்கூட இதுபோன்ற செயல்கள் நடந்திருந்தால், தான் அவற்றை அனுமதித்திருக்க மாட்டேன் என்றும், ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52b9072-4e0a-4520-99c6-6fe054af54d9/26-6a9dab9ad9d37.webp' /></p><p>
</p><p>
அனுராதபுர பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்சவின் மனைவி உரையாற்றுவார் என்று சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் பரவிவரும் வதந்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறினார்.</p><p></p><p>

</p><h2>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் விசேட உரை</h2><p>"நாமல் ராஜபக்ச அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருவார். அன்று, அனுராதபுர மக்களுக்கு அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு வழங்குவார். அதைக் கவனிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன்," என்று ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7f0b34-cb45-4f70-a8a8-ef36e9707008/26-6a9dab9a273db.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T18:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051"></link>
            <id>https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை
வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.</p><h2>குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது&nbsp;</h2><p>&nbsp;காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da989345-4575-4733-b2f2-412d89b56560/26-6a9da218dcaaf.webp' /></p><p>
</p><p>
காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவர் திருடினாலும் சிறை செல்வது உறுதி : ரில்வின் சில்வா ஆணித்தரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-you-stole-you-will-have-to-go-to-prison-tilvin-1788714065"></link>
            <id>https://ibctamil.com/article/if-you-stole-you-will-have-to-go-to-prison-tilvin-1788714065</id>
            <summary type="text">பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
</p><p>
புலத்சிங்கலவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சில்வா, அரசாங்கம் அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதாகவும் அல்லது ஜனநாயகக் கொள்கைகளைச் சீர்குலைப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.</p><h2>திருடியிருந்தால், சிறைக்குச் செல்ல நேரிடும்</h2><p>&nbsp;“நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால், நீங்கள் திருடியிருந்தால், சிறைக்குச் செல்ல நேரிடும். அதைப்பற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அது முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது யாருடைய மகனாக இருந்தாலும் சரி, அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef105b7-c3f7-4e3a-b051-3bfb1c72666b/26-6a9d9e935ac1e.webp' /></p><p> யாராவது குற்றம் செய்திருந்தால், சட்டம் அமல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.</p><p></p><h2>மக்கள் எமது அரசை தேர்ந்தெடுக்க காரணம்</h2><p>

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும், மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்த்து மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சில்வா மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271736db-4081-41b9-aa17-28edd1c59d85/26-6a9d9e940e1f7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பயணத் தடைக்கு முன்னதாக வெளிநாடு பறந்தார் பிரேமலால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/premalal-left-the-country-before-the-travel-ban-1788710937"></link>
            <id>https://ibctamil.com/article/premalal-left-the-country-before-the-travel-ban-1788710937</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. </p><p>குறித்த பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதியே முன்னாள் பிரதி அமைச்சர் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><h2>உச்ச நீதிமன்றின் உத்தரவு</h2><p>&nbsp;பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு எதிராக இந்த வெளிநாட்டு பயணத் தடையை விதித்து, வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eadbfe84-24f0-4c59-8fe8-53d5fd7086f4/26-6a9d99e2763e9.webp' /></p><p> பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p></p><p>

</p><h2>&nbsp;மரண தண்டனை</h2><p>2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்த பிரதேசத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பேரணியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b02b6f-336f-468a-9a56-a1e33cd64c62/26-6a9d99e1c1d5d.webp' /></p><p>






எவ்வாறாயினும், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததுடன், அந்த விடுவிப்புக்கு எதிராக, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவரின் மனைவி சாந்தா தொடங்கொட உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை குறித்த மேன்முறையீட்டை பரிசீலித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுத்துள்ளது&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T16:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரும் தப்ப முடியாது : 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி அனுர திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும் தப்ப மாட்டார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
</p><p>

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><h2>உள்ளே இருந்து பார்க்கும்போது தெரியவந்த ஊழல் செயற்பாடு</h2><p>&nbsp;அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், அரச விவகாரங்களை உள்ளிருந்தே ஆய்வு செய்த பின்னருமே, கூறப்படும் முறைகேடுகளின் அளவைக் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c198a6-b6dd-4603-b487-cbe618c74052/26-6a9d8e6c94fee.webp' /></p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது, ​​ஊழலைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து, நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, ​​இந்த விஷயங்களை ஒவ்வொன்றாக வெளிக்கொணரும்போது, ​​நமது நாடு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளைச் சந்தித்துள்ளது என்பதை நாம் காண்கிறோம்," என்று ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>&nbsp; "நீங்கள் யதார்த்தத்தைப் பார்த்தால், ஒரு நபர் கூட தப்ப மாட்டார் என்ற அளவிற்கு நிலைமை உள்ளது," என்று கடந்தகால ஊழல் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று அவர் குற்றம் சாட்டியவர்களைக் குறிப்பிட்டு மேலும் கூறினார்.</p><p></p><h2>&nbsp;மக்களின் சார்பாக எடுக்கப்படும் முடிவுகள்</h2><p>எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அரசாங்கம் தொடரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், அவர் "கறுப்பு அரசு" என்று வர்ணித்த ஒன்றிலிருந்து பயனடைந்தவர்கள் பெருகிய முறையில் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcb2c4f-8a48-4c1c-b53f-02838db1fefa/26-6a9d8e6be1b97.webp' /></p><p>&nbsp;அரசாங்கத்தின் சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களை அணுகுவதாகவும், சர்வதேச அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
"அவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் எடுக்கும் முடிவுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு மக்களின் சார்பாக எடுக்கப்படுகின்றன. அத்தகைய எந்த முடிவையும் நாங்கள் மாற்ற மாட்டோம்," என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும்</h2><p>அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்துக் குறிப்பிடுகையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியவுடன் அரசாங்கம் விரைவாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c644a7d5-112d-48ee-8c1b-8fb460879b59/26-6a9d8e6d492d0.webp' /></p><p>
</p><p>
"தீர்மானம் வழங்கப்பட்ட உடனேயே, அதை நாங்கள் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களையும் ஜனாதிபதி விமர்சித்தார். சில வழக்குகளில், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் நடந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தீர்ப்புகள் வழங்கப்படுவதால், அந்த வழக்குகள் எதைப் பற்றியவை என்பதைப் பொதுமக்கள் ஏற்கனவே மறந்துவிடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-06T16:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்! நியூசிலாந்தில் நூலிழையில் தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qantas-engine-catches-fire-mid-air-safe-landing-1788707128"></link>
            <id>https://ibctamil.com/article/qantas-engine-catches-fire-mid-air-safe-landing-1788707128</id>
            <summary type="text">நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த குவாண்டாஸ் விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
</p><p>
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக்
கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.
</p><p>
நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான
நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><p>
</p><p></p><h2>பணியாளர்கள்&nbsp;</h2><p>விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63fa5b17-5c47-4dd0-89ab-660bea566e14/26-6a9d87dfe939c.webp' /></p><p>

பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளமை குறிப்படத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:34:10+00:00</updated>
        </entry>
    </feed>
