<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-06T22:20:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! பொதுமக்கள் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-attack-on-civilians-in-ukraine-1786050333"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-attack-on-civilians-in-ukraine-1786050333</id>
            <summary type="text">உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்போது ஏற்பட்ட தீய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது ஏற்பட்ட தீயை அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதேவேளை, வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், சுமார் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஏனைய தாக்குதல்கள்</h2><p>
</p><p>
அத்தோடு, சுமி நகரிலேயே வான்வழி குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945e6f4-8e33-441b-b23c-6b9bfb6a0720/26-6a74fa2dccfa3.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p>

தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் ஒரு வான் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p> 
எவ்வாறாயினும், 2022-ல் தொடங்கிய இந்தப் போரில், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T21:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கேட்ட வெடிப்பு சத்தங்கள்! ஹோர்முஸ் நுழைவாயிலில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-explosions-heard-in-southern-iran-overnight-1786047483"></link>
            <id>https://ibctamil.com/article/two-explosions-heard-in-southern-iran-overnight-1786047483</id>
            <summary type="text">தெற்கு ஈரானில் வியாழக்கிழமை இரவு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த சத்தங்கள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஈரானில் வியாழக்கிழமை இரவு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அதன்படி, குறித்த சத்தங்கள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த எதிரி இலக்குகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையவை என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
உள்நாட்டு நேரப்படி இரவு சுமார் 9.40 மணியளவில் கெஷ்ம் பகுதியில் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.</p><p></p><h2>தீவிர விசாரணை&nbsp;</h2><p> </p><p>

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் ஈரானிய கடற்படையினர் மேற்கொண்ட இந்நடவடிக்கையின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7647bbe8-f3c5-4d6d-8c3e-a2253283bb28/26-6a74eed5a8819.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Al Jazeera</i></p><p>
</p><p>
இதேவேளை, கெஷ்மிலோ அல்லது அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரத்திலோ எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். </p><p>

எவ்வாறாயினும், இந்த வெடிப்புகளுக்கான பின்னணி மற்றும் காரணத்தை கண்டறிய ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T20:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நகர்வில் ஈரான்! ஹோர்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர புதிய சட்டமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irant-reviews-bill-to-restrict-hormuz-transit-1786043998"></link>
            <id>https://ibctamil.com/article/irant-reviews-bill-to-restrict-hormuz-transit-1786043998</id>
            <summary type="text">
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தின் மீதான அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டை கணிசமாகக் கடுமையாக்கும் ஒரு புதிய வரைவு சட்டமூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தின் மீதான அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டை கணிசமாகக் கடுமையாக்கும் ஒரு புதிய வரைவு சட்டமூலத்தை ஈரானிய நாடாளுமன்றம் ஆய்வு செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

“ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மூலோபாய நடவடிக்கை” எனும் இந்த சட்டமூலம், தற்போது ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்த வரைவு சட்டமூலத்தின்படி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் விரோத நாடுகளாகக் கருதும் பிற நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படும்.</p><p></p><h2>கப்பல்களுக்கு அபராதம் </h2><p>

மேலும், இஸ்ரேலுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் பொதுமக்கள் சரக்குகள் செல்வதற்கும், ஈரான் “எதிர்ப்பின் அச்சு” என்று அழைக்கும் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் கப்பல்கள் அல்லது சரக்குகளுக்கும் தடை முன்மொழியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1f6528-093d-43af-a6c4-de25fb8fcf0e/26-6a74e3475f8ad.webp' /></p><p>ஈரானுக்குச் சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகளும் தனிநபர்களும் உரிய இழப்பீடு வழங்கும் வரை இந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்நிலையில், விதிமீறல்களில் ஈடுபடும் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பில் 20 வீதம் வரை அபராதம் விதிக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-08-06T19:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279"></link>
            <id>https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலையில் இன்று இரவு (06) பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் இன்று இரவு (06) பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழு ஒன்று, இரவு சுமார் 10.20 மணியளவில் திடீரென வார்டிலிருந்து வெளியே வந்து ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p> 

போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்தப் பதற்றமான சூழலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.</p><p></p><h2>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல்துறை, காவல்துறை கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படை (STF) உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1716597379640602%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
பதற்றமான சூழல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளிலும் மாற்றம் இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/laugfs-gas-prices-unchanged-1786039345"></link>
            <id>https://ibctamil.com/article/laugfs-gas-prices-unchanged-1786039345</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்யப்படாது என லாக்ஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்யப்படாது என லாக்ஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, தற்போதைய விலைகளில் எந்த மாற்றமும் இன்றி, லாக்ஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போதுள்ள விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>லிட்ரோ எரிவாயு </h2><p>
</p><p>
இதேவேளை, ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be41c55a-a335-4c1b-b82f-5b0850447e0c/26-6a74d15a1001d.webp' /></p><p>
</p><p>
உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி : மூவரின் நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-50-students-hospitalised-after-wasp-attack-1786039399"></link>
            <id>https://ibctamil.com/article/over-50-students-hospitalised-after-wasp-attack-1786039399</id>
            <summary type="text">திருகோணமலையில் உள்ள திவுல்வேவ மகா வித்தியாலயப் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததில், குளவிகள் கொட்டியதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் உள்ள திவுல்வேவ மகா வித்தியாலயப் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததில், குளவிகள் கொட்டியதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;கவலைக்கிடமான நிலையில் மூன்று மாணவிகள்&nbsp;</h2><p>
</p><p>
பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சைக்காக மகாதிவுல்வேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருந்த மூன்று மாணவிகள் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05b5a95-bf55-47ca-acf1-9e399872b3f2/26-6a74cc685a89f.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை படுகொலை செய்த கணவன்! தொடங்கப்பட்டது விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-was-murdered-by-her-husband-1786037921"></link>
            <id>https://ibctamil.com/article/woman-was-murdered-by-her-husband-1786037921</id>
            <summary type="text">


வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த பெண் ஒருவர், இன்று (06) மாவதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவ்வாறு கொலை செய்யப்பட்டவர், அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குடும்பத் தகராறைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் என நம்பப்படும் சந்தேக நபர், அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649e385d-1ab9-4ac1-8da3-58cc6eeb39d2/26-6a74c9666ef30.webp' /></p><p>
</p><p>
அதன்படி, 50 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வெலகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T17:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடை செய்யப்படும் 146 சூதாட்ட இணையதளங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/146-online-gambling-websites-to-be-banned-1786036389"></link>
            <id>https://ibctamil.com/article/146-online-gambling-websites-to-be-banned-1786036389</id>
            <summary type="text">


இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையிலிருந்து அந்த இணையதளங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹெரத் தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>சட்டவிரோதக் குற்றம்</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, 2025-ஆம் ஆண்டின் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் சட்டம், இலக்கம் 17-இன் விதிகள் மற்றும் அதிகாரங்களுக்கு இணங்க வெளியிட்ட ஓர் அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5acefa-2a77-4d2f-9b21-616e0a63b4db/26-6a74c46273042.webp' /></p><p>
</p><p>
மேற்கூறிய சட்டத்தின் 15, 16 மற்றும் 18-ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இலங்கையில் இணையவழி சூதாட்ட சேவைகளை இயக்குவது அல்லது ஊக்குவிப்பது, அச்சட்டத்தின் 44-ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு சட்டவிரோதக் குற்றமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T17:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய காவல் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-oic-suspended-for-using-drugs-1786034481"></link>
            <id>https://ibctamil.com/article/police-oic-suspended-for-using-drugs-1786034481</id>
            <summary type="text">பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp; &nbsp;பணியின் போது போதைப்பொருள் பயன்படுத்திய தகவலை உறுதி செய்வதற்காக, அவர் 2ஆம் திகதி தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதாக ஒரு சிரேஷ்ட காவல் அதிகாரி தெரிவித்தார்.</p><h2>&nbsp;மருத்துவ பரிசோதனையில் உறுதி</h2><p> </p><p>அந்தப் பரிசோதனையின் போது, ​​சிறுநீர் மாதிரிகளில் போதைப்பொருள் கண்டறியப்பட்டது. பதுளை போதனா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவர் தனது அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2288a652-44ff-4ccf-ab2e-669d8eb010ca/26-6a74bd4ad140e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:58:57+00:00</updated>
        </entry>
    </feed>
