<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-13T01:22:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-killed-attack-un-strongly-condemns-1789259485"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-killed-attack-un-strongly-condemns-1789259485</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இவ்வாறான வன்முறைக்கு பலியாகக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்கள் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>
</p><p>
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f57a15-0842-419e-8643-1949e9ac95c7/26-6aa5eedf9016a.webp' /></p><p>நேற்று முன்தினம் அதிகாலை முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் CCTV கருவிகளில் பதிவாகியிருந்தது.</p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>

எனினும், தெஹிவளை சாஸ்த்ரானந்த கல்லூரியில் கல்வி கற்று வந்த 11 வயதான துமிந்து கிஹான் மற்றும் 17 வயதான கசுன் ரஷ்மிக ஆகிய இரு மாணவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
</p><p>
அவர்களது 55 வயதான தந்தை கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கான நீதி விசாரணைகளை வலியுறுத்தி இன்றும் யாழில் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/judicial-inquiry-into-chemmani-1789253818"></link>
            <id>https://ibctamil.com/article/judicial-inquiry-into-chemmani-1789253818</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணத்தில் இன்றும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப்
பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள்
குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச
மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே
இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
</p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை
ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா
பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.</p><p></p><h2>பேரணிக்கு ஆதரவு&nbsp;</h2><p>

இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d4c72b0-aae3-4a85-965b-36d7ece53aee/26-6aa5d8bc5cdc2.webp' /></p><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள்
கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை
வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாடை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்! மகிந்தவின் மேடையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-government-shields-rishad-from-allegations-1789258368"></link>
            <id>https://ibctamil.com/article/anura-government-shields-rishad-from-allegations-1789258368</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரை விசாரணைகளுக்காக அழைக்கக்கூட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என&nbsp; தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>நாட்டையும் இனத்தையும் பாதுகாப்பதற்காக போராடிய தரப்பினரை ‘கறுப்பு அரசாங்கம்’ என சித்தரித்துவரும் தற்போதைய அரசாங்கம், தமக்கு ஆதரவளிக்கும் மோசடியாளர்களைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ‘ஜன சத்தன’ மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள்</h2><p>

அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbe960c-91ac-4ee7-be3b-122b7b36914a/26-6aa5ea8281832.webp' /></p><p>
</p><p>
“அனுராதபுரத்தில் இருந்த லால் காந்த வேகமாக மூன்று மாடி வீடுகளை கட்டிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் ‘கறுப்பு அரசாங்கத்தின்’ ஒரு பகுதியல்ல.</p><p> கிரிப்டோ வசந்த போன்றவர்களும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. தங்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் எவரும் கறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.</p><p> இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
</p><p>
அவ்வாறு பெறப்பட்ட பணத்துக்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

வடக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்துக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புலம்பெயர் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T00:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் பதவி விலகல்! சமூக ஊடகத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/speaker-jagath-wickramaratne-resigns-1789252489"></link>
            <id>https://ibctamil.com/article/speaker-jagath-wickramaratne-resigns-1789252489</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்த உண்மைத்தன்மைகள் குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்த உண்மைத்தன்மைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.</p><p>எனினும் இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் சபாநாயகர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
</p><p>
சபாநாயகருக்கு எதிராகப் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஒரு விசேட விசாரணையைத் தொடங்கியுள்ளதால், அவர் சபாநாயகராகத் தொடர்வது அறநெறிக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் தொடர்ச்சியான கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ஊழல் குற்றச்சாட்டுக</h2><p>
</p><p>
சபாநாயகரின் நிதி முறைகேடுகள் மற்றும் சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை அளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6a7f45-871b-48ad-9d8d-a9ac4cf687e0/26-6aa5d38ab41f8.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்புப் பேரவையின் தலைவரும், சுயாதீனமாகச் செயல்பட வேண்டியவருமான சபாநாயகர், இத்தகைய கடுமையான விசாரணைக்கு உட்பட்டிருக்கும்போது பதவியில் நீடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் அறநெறிக்கும் எதிரானது என எதிர்கட்சி அரசியல்வாதிகள்&nbsp; மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளின் பின்னணியில் சபாநாயகர் தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருகிறார் என்ற தகவல் பரவி வந்தபோதிலும், இது தொடர்பாக சபாநாயகரின் அதிகாரப்பூர்வ அலுவலகமோ அல்லது பொறுப்பான எந்தவொரு அரசாங்கத் துறையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமி<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">ழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T22:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்தில் அவசர எச்சரிக்கை! ஐரோப்பா முழுவதும் விரைந்த நேட்டோ இராணுவ விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900"></link>
            <id>https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900</id>
            <summary type="text">உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>போலந்தின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுக் கட்டளை இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கண்காணித்து போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று வானில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>

இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்படுவதாகவும், குறிப்பாக ரஷ்ய தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு அருகிலுள்ள போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அவசர எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதனிடையே, கிழக்கு போலந்தின் லுப்லின் மற்றும் போட்கார்பாக்கி மாகாண மக்களுக்கு அரசாங்க பாதுகாப்பு மையம் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f07e43-c650-4b0e-ae82-7486c537ebde/26-6aa5a25e86497.webp' /></p><p>

“உக்ரைனில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலந்து வான்பரப்பில் வான்படை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தொடர்ந்து வெளியாகும் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்” என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் தீவிரம் காரணமாக, கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதியும் போலந்து தனது போர் விமானங்களை வானில் களமிறக்கியிருந்தது.</p><p>மேலும், கடந்த மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக அந்நாடு இவ்வாறான வான்பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T22:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் திருடப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் கீ! வெளிச்சத்திற்கு வந்த மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/smart-key-stolen-vehicles-found-at-hambantota-port-1789251508"></link>
            <id>https://ibctamil.com/article/smart-key-stolen-vehicles-found-at-hambantota-port-1789251508</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் &#039;ஸ்மார்ட் கீ&#039; (Smart Key) சாவிகளைத் திருடி விற்பனை செய்த மோசடி சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் 'ஸ்மார்ட் கீ' (Smart Key) சாவிகளைத் திருடி விற்பனை செய்த மோசடி சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சாவிகளைத் திருடிய துறைமுக ஊழியர் ஒருவரும், குறித்த சாவிகளைக் கொள்முதல் செய்த வியாபாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அவர்கள் இருவரும் நேற்று (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஊழியரைப் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்த 'ஸ்மார்ட் கீ' காணாமல் போனமை தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7925fc13-d66b-4134-833d-f6d3ba28576c/26-6aa5cfb5ee500.webp' /></p><p>
</p><p>
அதன்படி, குறித்த ஊழியரைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
துறைமுக ஊழியரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட ஸ்மார்ட் கீ சாவிகளைக் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகன வகைக்கு ஏற்ப 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதன் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 45 'ஸ்மார்ட் கீ' சாவிகளை விற்பனை செய்து, சந்தேக நபரான ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் ஈட்டியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், கைது செய்யப்பட்ட துறைமுக ஊழியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்ததுடன், அவர் அந்த 'ஸ்மார்ட் கீ' சாவிகளைக் கொள்முதல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன் அவரிடமிருந்த 'ஸ்மார்ட் கீ' சாவிகளையும் காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
</p><p>
இந்த மோசடி நடவடிக்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T22:18:39+00:00</updated>
        </entry>
    </feed>
