<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-16T03:05:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்திக்கு எதிரான சிரிலிய விசாரணையின் அடுத்த பக்கங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-chapters-siriliya-inquiry-against-shiranthi-1789524165"></link>
            <id>https://ibctamil.com/article/next-chapters-siriliya-inquiry-against-shiranthi-1789524165</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் கவனம் பெற்றுள்ளன.
</p><p>
ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கு தொடர்பான நிதி முறைகேடு மற்றும் மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்தமை தொடர்பான விவகாரங்கள் தற்போதைய விசாரணைகளில் முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
எனினும், இவற்றுக்கு அப்பால், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>குற்றச்சாட்டுக்கள்</h2><p><b>
1. ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி தொடர்பான குற்றச்சாட்டு
</b></p><p>
2012–2013 காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைபெற்ற ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சியுடன் தொடர்பாக பொதுநிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நிகழ்வுகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுநிதி வீணடிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் தகவல்கள் வெளியாகின.
</p><p><b>
2. ‘சிரிலிய சவிய’ நிதி தொடர்பான விவகாரம்</b></p><p>

‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதியைப் பயன்படுத்தி கொழும்பு டொரிங்டன் பகுதியில் வீடொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரமும் கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
</p><p>
இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
</p><p><b>
3. வரிவிலக்கில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுப் பேருந்துகள்
</b></p><p>
விளையாட்டுத்துறை அமைச்சின் பெயரில் வரிவிலக்குடன் இரண்டு சொகுசுப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் ஷிரந்தி ராஜபக்ச நிர்வகித்ததாகக் கூறப்படும் ‘கார்ல்டன்’ முன்பள்ளி வலையமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>வசீம் தாஜுதீன் கொலை</h2><p>
</p><p>
அரச நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்ட வரிவிலக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் அப்போது கேள்விகள் எழுந்தன.
</p><p><b>
4. வசீம் தாஜுதீன் கொலை வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட விவகாரம்</b></p><p>
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் உயிரிழந்த சம்பவத்திலும் ‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிஃபென்டர் வாகனம் தொடர்பில் விசாரணையாளர்களின் கவனம் சென்றிருந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்த வாகனம் சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபட்டது என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் அக்காலகட்டத்தில் வெளியாகின.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் ‘கஜ்ஜா’ என அறியப்பட்ட நபர் தொடர்பான சம்பவமும் ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியிருந்த சர்ச்சைகளில் ஒன்றாகப் பேசப்பட்டது.
</p><p>
அவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் நேர்காணல்களும் அக்காலத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தன.</p><p></p><p>
</p><h2>விசாரணைகளில் முன்னிலையாக முடியாத நிலை </h2><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான தற்போதைய விசாரணைகள் தனிப்பட்ட ஒரு வங்கி கணக்கு அல்லது ஒரு நிதி திரட்டும் நடவடிக்கையுடன் மட்டுப்படுத்தப்படுமா அல்லது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
குறிப்பாக, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் நடத்தப்பட்டன, அவற்றின் முடிவுகள் என்ன, எந்த விவகாரங்கள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளன என்பவை முக்கிய கேள்விகளாக உள்ளன.
</p><p>
ஷிரந்தி ராஜபக்ச தற்போது மருத்துவ காரணங்களால் விசாரணைகளில் நேரடியாக முன்னிலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள பழைய விவகாரங்கள் மீண்டும் கவனத்தில்
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிரான பழைய நிதி மற்றும் நிர்வாக குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற பின்னணியில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான நடவடிக்கையும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
</p><p>
இதுவரை முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன, எவை விசாரணை மட்டத்தில் உள்ளன, எவை ஆதாரமின்மையால் முடிவுக்கு வந்துள்ளன என்பவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது.
</p><p>
தற்போதைய விசாரணைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதையும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றன என்பதையும் பொறுத்தே அடுத்தகட்ட நிலை தெளிவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T02:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rishad-implicated-in-easter-sunday-attacks-case-1789521525"></link>
            <id>https://ibctamil.com/article/rishad-implicated-in-easter-sunday-attacks-case-1789521525</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளதுடன் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
</p><p>
இந்த விடயங்கள் குறித்து மேலும் தனது வாதங்களை திலீப பீரிஸ் பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.</p><p></p><h2>தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்</h2><p>
</p><p>
“சஹ்ரான் ஹாஷிமை பாதுகாப்பதன் ஊடாக தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f070d421-3298-4d36-8962-544a275c7648/26-6aa9f17e91e69.webp' /></p><p>
</p><p>
 
இதன் ஒரு பகுதியாகவே வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளது.

வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டதாக ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 12ஆம் திகதி கிரிதலே புலனாய்வு முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த கர்னல் மத்துமகே, வவுனதீவு சம்பவத்தை சஹ்ரான் மேற்கொண்டதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தகவல்களை மறைத்தவர்கள் அனைவரும் முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயுடன் தொடர்புடையவர்கள்.

தாக்குதலாளிகளுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. </p><p>அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

மற்றையவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்ற வர்த்தகர்.</p><p></p><h2>சந்தேகநபரை விடுவித்த கோட்டாபய</h2><p> </p><p>அலாவுதீன், ஷங்ரி-லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இன்ஷாப் அஹமட்டின் மாமனார். இன்ஷாப் அவரது மகளை திருமணம் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a3c797-8b5f-462a-a617-0d9befe75b5a/26-6aa9f17dd9d89.webp' /></p><p>
</p><p>
அலாவுதீனுக்கு சொந்தமான அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
</p><p>
மேலும், இன்ஷாப் அஹமட்டின் மனைவியான அலாவுதீனின் மகள், தாக்குதலுக்குப் பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவளித்தவர் என்பது இதற்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து அரச புலனாய்வு சேவையின் ஒரு குழுவும் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த போதிலும் அவற்றை மறைத்திருக்கலாம் என விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p></p><h2>தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய 16 தொடர்பாளர்கள்</h2><p>
</p><p>
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27ஆம் திகதி(2019) சாய்ந்தமருதில் தாக்குதல்தாரர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்பட்ட 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a2a4f1-d8a8-49e2-b6fa-9da34c36a2cb/26-6aa9f17d11d67.webp' /></p><p>
</p><p>
அவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழக்கவில்லை.
சிலரையாவது உயிருடன் கைது செய்திருக்க முடிந்திருக்கலாம் . 
அந்தக் காலப்பகுதியில் சாய்ந்தமருது பகுதி இராணுவத்தின் பொறுப்பில் இருந்தது.
</p><p>
இதனால், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் இராணுவத்தின் சில தரப்பினர் திட்டமிட்டு அந்த 16 பேரையும் கொன்றார்களா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது” என்றார்.</p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TQJRICBAAbw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T01:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-set-to-be-arrested-soon-easter-attacks-1789519296"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-set-to-be-arrested-soon-easter-attacks-1789519296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக&amp;nbsp;மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக&nbsp;மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த விடயம்&nbsp;மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸால் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விசாரணையின் போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே,&nbsp;கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்த விடயத்தை&nbsp; திலீப பீரிஸ் வெளிப்படுத்தினார்.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு</h2><p><b>கேள்வி எழுப்பிய கொழும்பு கோட்டை நீதவான் -&nbsp;</b><i>அதிகாரிகள் மீது கடுமையான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களை ஏன் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை?</i></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65607088-b7d2-462a-9c4c-ca3dc1059f35/26-6aa9e5c2c5879.webp' /></p><p>திலீப பீரிஸ் - இந்த வழக்குடன் தொடர்புடைய மூவருக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>
மேலும், கர்னல் மத்துமகே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அந்த சட்ட நடவடிக்கை நிறைவடைந்ததும் சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்த பெர்னாண்டோ, தனது தரப்பை சேர்ந்த நபரின் மருத்துவ அறிக்கைகள் இதுவரை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
</p><p>
மேலும், ‘B’ அறிக்கைகள் மூலம் எந்தவொரு ஆதாரமற்ற விடயத்தையும் முன்வைக்க முடியும் என்பதால், அவற்றுக்கு பதிலளிப்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். </p><p>இதன்போது காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. </p><p>விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xTlZZeEf05U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T00:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-including-sarah-jasmine-sent-ind-easter-case-1789517934"></link>
            <id>https://ibctamil.com/article/team-including-sarah-jasmine-sent-ind-easter-case-1789517934</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியாவில் அமைந்துள்ள முதலாவது புலனாய்வுப் படைப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கிரிதலே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமூன்றாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தொடர்பான விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தம்பியன் என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர்</h2><p>
இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்பியன்’ என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர் ஊடாக, சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகவும், வவுனதீவு காவல்துறை காவலரண் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சஹ்ரானே காரணம் எனவும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb1c8c9-a649-4a39-a1f8-dbb1d7bbd005/26-6aa9e20d00da7.webp' /></p><p>
</p><p>
எனினும், அந்தத் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, வவுனதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கர்னல் ரணவீர மற்றும் கிரிதலே இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவின் தலைவராக இருந்த கர்னல் மத்துமகே ஆகியோர் இந்தத் தகவல்களை புலனாய்வு பணிப்பாளரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னெச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என குற்றச்சாட்டு
2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் ‘ராசிக்’ என்ற உளவாளி வழங்கிய தகவல்கள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் ஏப்ரல் 3ஆம் திகதி வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் ஏப்ரல் 20ஆம் திகதி தேவாலயங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவல்கள் ஆகியவையும் முறையாகப் பரிமாறப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட குழுவொன்று செயற்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்கு&nbsp;&nbsp;</h2><p>
2014ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வு சேவையின் (SIS) பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டார, சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ரில்வான் உள்ளிட்ட 94 பேரைக் கொண்ட பயங்கரவாத பட்டியலைத் தயாரித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7ae6d6-2812-4b7c-80df-bb607c3267d5/26-6aa9e20c3b9fa.webp' /></p><p>
</p><p>
தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு சென்ற அவர், சஹ்ரானின் சகோதரர் ரில்வானை சந்தித்து தேநீர் அருந்தி கலந்துரையாடியதாகவும், எனினும் அவரைக் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த சந்தர்ப்பத்தில் ரில்வான் கைது செய்யப்பட்டிருந்தால், பின்னர் இடம்பெற்ற பேரழிவைத் தடுக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>

தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரானின் உறவினர்கள் 16 பேர் உயிரிழந்தமை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டமை, சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவற்றின் பின்னணியிலும் ஆழமான சதித்திட்டம் இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T00:21:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண்! இலங்கை அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kamzy-gunaratnam-sri-lanka-backround-1789517089"></link>
            <id>https://ibctamil.com/article/kamzy-gunaratnam-sri-lanka-backround-1789517089</id>
            <summary type="text">நோர்வேயின் அமைச்சராக ஈழத்தமிழ் பெண் ஒருவர் பெறுப்பேற்றுள்ள நிலையில்,&amp;nbsp;இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கம்சி குணரத்னம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் அமைச்சராக ஈழத்தமிழ் பெண் ஒருவர் பெறுப்பேற்றுள்ள நிலையில்,&nbsp;இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.</p><p> கம்சி குணரத்னம் என்ற ஈழத்தமிழ் பெண் அந்நாட்டின்&nbsp;புதிய போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளார்.</p><p>இதன்படி வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>வாழ்த்து செய்தி&nbsp;</h2><p>
</p><p>
“<i>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba5cd2f-d956-496a-a82a-bcb20db2b816/26-6aa9dd2518e4e.webp' /></p><p>நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி, யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார். </p><p>19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-09-16T00:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டீசலின் விலை லீற்றருக்கு ரூ.515–530 ஆகு உயரும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/price-of-diesel-in-sri-lanka-rs-515-530-per-litre-1789514254"></link>
            <id>https://ibctamil.com/article/price-of-diesel-in-sri-lanka-rs-515-530-per-litre-1789514254</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான இராணுவ பதற்றம் காரணமாக உலக சந்தையில் டீசல் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய எரிபொருள் விலைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான இராணுவ பதற்றம் காரணமாக உலக சந்தையில் டீசல் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் வரி விகிதங்களின் அடிப்படையில், உள்நாட்டு சந்தையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 515 முதல் 530 ரூபாய் வரை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஹவுதி போராளிகள் பாப் அல்-மந்தப் நீரிணை பகுதியில் தங்களது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதால், கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச டீசல் விலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இலங்கை தனது டீசல் இறக்குமதிக்கான விலையை கணக்கிடுவதில் அடிப்படையாகக் கொள்ளும் சிங்கப்பூர் Platts சந்தையில், ஒரு பீப்பாய் டீசலின் விலை முன்னர் சுமார் 90 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது சுமார் 100 வீதம் அதிகரித்து 180.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
</p><p></p><h2>டீசலின் அடிப்படை விலை சுமார் 375</h2><p>இதனுடன், Brent வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் விலை 103.30 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/929fa184-6bfc-43d0-88da-18883237b110/26-6aa9d211a0fe7.webp' /></p><p>
</p><p>
ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 330 ரூபாய் எனக் கணக்கிட்டால், 180.60 டொலர் பெறுமதியான ஒரு பீப்பாய் டீசலின் (159 லீற்றர்) கொள்வனவு செலவு மட்டும் சுமார் 59,598 ரூபாயாக அமைகிறது.
</p><p>
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் டீசலின் அடிப்படை விலை சுமார் 375 ரூபாய் என கணக்கிடப்படுகிறது.
</p><p>
மத்திய கிழக்கின் அபாயகரமான கடல் வழித்தடங்கள் ஊடாக கப்பல்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதி பிரீமியம் உள்ளிட்ட செலவுகளும் அதிகரித்துள்ளன.
</p><p>
இதற்காக ஒரு கப்பலுக்கு கூடுதலாக 10 முதல் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக டீசலை இலங்கைக்கு கொண்டு வந்து இறக்கும் மொத்த செலவு மேலும் அதிகரிக்கிறது.
</p><p></p><h2>அரசாங்க வரிகள்</h2><p>
இறக்குமதி மற்றும் இறக்குமதி இறக்குமதி தொடர்பான செலவுகளுடன் அரசாங்க வரிகள், செயற்பாட்டு செலவுகள், போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் விநியோகஸ்தர் தரகு ஆகியவை இணைக்கப்படும்போது, செலவுகளை ஈடுகட்ட உள்நாட்டு சந்தையில் ஒரு லீற்றர் டீசலை 515 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64eb8ab-f1c3-4a66-820b-3eb95e3c00eb/26-6aa9d210e8ca8.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்காக 3.62 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 68 வீத அதிகரிப்பாகும்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கும் உள்நாட்டு பணவீக்கத்திற்கும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணியாக மாறியுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T23:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் முறிவு விளிம்பிற்குக் சென்றுள்ள அமெரிக்க இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-under-severe-pressure-middle-east-1789513153"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-under-severe-pressure-middle-east-1789513153</id>
            <summary type="text">மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைத் திறன் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.</p><p>பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து நேரடி அறிவு கொண்டதாகக் கூறப்படும் இரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க இராணுவத்தின் போர்த் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியான அழுத்தம் நீடித்தால், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் அமெரிக்காவின் திறன் எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகளில் ஒருவர் எச்சரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.</p><p></p><h2>இராணுவத் தளவாடங்களில் நெருக்கடி</h2><p>அமெரிக்க இராணுவம் எதிர்கொள்வதாகக் கூறப்படும் முக்கிய சவால்களில், வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருதல், இராணுவ வீரர்கள் உயிரிழத்தல் மற்றும் காயமடைதல்,&nbsp; இராணுவ உபகரணங்களின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்,&nbsp; வீரர்களை நீண்டகாலம் ஓய்வின்றி பணியில் வைத்திருக்க வேண்டிய நிலை,&nbsp; விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள்

ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081a4957-f6f2-41e7-80a4-09234a02a0e2/26-6aa9cdc33e4aa.webp' /></p><p>

இந்த நிலை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரவு-செலவுத் திட்டத்திலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்க இராணுவத்தின் தயார்நிலை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p>
மேலும், ட்ரம்ப் நிர்வாகம் ஈரானின் உண்மையான இராணுவ திறனை போதுமான அளவில் மதிப்பிடத் தவறியதாகவும், இந்த மோதலுக்காக வொஷிங்டனிடம் போதுமான திட்டமிடல் இருக்கவில்லை என்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவின் இடைகால தேர்தலுக்கு முன்னதாக வொஷிங்டனுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மதிப்பிட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">HATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T22:59:24+00:00</updated>
        </entry>
    </feed>
