<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-08T19:31:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-video-of-iranian-supreme-leader-mojtaba-1786216388"></link>
            <id>https://ibctamil.com/article/new-video-of-iranian-supreme-leader-mojtaba-1786216388</id>
            <summary type="text">ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p> கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும் முன்னாள் உச்சத் தலைவருமான அலி கமேனி, ஈரான் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
</p><p>அவர் பதவியேற்ற பின்னர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. </p><p></p><h2>மதப் பாடம் நடத்தும்&nbsp;கமேனி </h2><p>அரசு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் மூலம் மட்டுமே அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed7b31cb-5561-44f5-9be7-70f8698f6ceb/26-6a777fc6dfb51.webp' /></p><p>
</p><p>
தற்போது வெளியாகியுள்ள காணொளியில், மொஜ்தபா கமேனி ஒரு குழுவினருக்கு மதப் பாடம் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்தக் காணொளி போர் தொடங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், அது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து அரசு ஊடகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
</p><p>
இந்த காணொளி தற்போது ஏன் வெளியிடப்பட்டது என்பதும் தெளிவாக இல்லை. இதனால் மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து புதிய ஊகங்கள் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் காணொளியை வெளியிட்ட ஊடகங்களில் ஒன்றான குறித்த செய்தி நிறுவனம், ஈரான் அரசுடன் நெருக்கமானதாகக் கருதப்படும் அரை - அதிகாரப்பூர்வ ஊடகமாகும்.</p><p></p><h2>எலும்பில் முறிவு</h2><p> இருப்பினும், இந்தக் காட்சிகள் இதுவரை ஈரானின் பிற ஊடகங்களில் பரவலாக வெளியாகவில்லை.</p><p>
</p><p>
மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் CNN-க்கு தகவல் வழங்கிய வட்டாரங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலின் முதல் நாளில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன், முகத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
ஆனால் தற்போது வெளியாகியுள்ள காணொளியில் அவரது உடலில், குறிப்பாக முகம் அல்லது காலில், காயம் ஏற்பட்டதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
</p><p>
இதனால், புதிய உச்சத் தலைவரின் உடல்நிலை மற்றும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/LATEST?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LATEST</a> Mojtaba Khamenei, Iran&#39;s supreme leader, appeared in a video recording of a lesson released by Mehr News Agency on August 8. <a href="https://t.co/SjebyaGVm8">pic.twitter.com/SjebyaGVm8</a></p>&mdash; CGTN (@CGTNOfficial) <a href="https://x.com/CGTNOfficial/status/2086082917307199549?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T19:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973"></link>
            <id>https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது பாகர் சுல்காதர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகள் அந்தப் பட்டியலில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனகம்</h2><p>

இதன்படி "களத்திலும் வீதிகளிலும் 160 நாட்கள் உறுதியாகப் போராடி, ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனப்படுத்திய கோரிக்கைகள் இவை," என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef44b78-c4b4-43ad-960e-432e9aad2466/26-6a7777488dc94.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா தனது நடத்தையைத் திருத்திக்கொள்ளும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது," எனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T18:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355</id>
            <summary type="text">மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.

வகை 1 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.
</p><p>
வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின், மணிக்கு 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>இலட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்</h2><p>

கோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் வசிக்கும் சுமார் 260,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad0f64a-1574-434b-b888-2b84e68c7059/26-6a77727e8349f.webp' /></p><p>இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>அடுத்த இலக்கு சீனா</h2><p>

அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96fc254a-0af5-4909-ac86-b87893b42071/26-6a77727f7e934.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய பகுதிகளுக்கும் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T18:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824</id>
            <summary type="text">தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>

"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.</p><h2>ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>
பணம் திருப்பி வழங்கப்படும்
</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T16:50:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட 50 முக்கிய பிரபலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/50-prominent-figures-to-be-arrested-this-year-1786204723"></link>
            <id>https://ibctamil.com/article/50-prominent-figures-to-be-arrested-this-year-1786204723</id>
            <summary type="text">50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்பது முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அவர்களது நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் அடங்கிய 50 பேர், இந்த ஆண்டு இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக உயர் மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையின் பல சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் ஆகியவை இது தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளன.</p><h2>இவர்களால் நாடு இழந்த ரூபா 50 மில்லியன்</h2><p>
</p><p>
இந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளால், நாடு 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20a8102-3666-4ad9-8e38-afc999a12784/26-6a7757efdc676.webp' /></p><p>
</p><p>
முன்னாள் அமைச்சர்கள் உட்பட சுமார் இருபது அரசியல்வாதிகள், கடந்த காலத்தில் செய்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.</p><p></p><h2>வெளிநாடுகளுக்கு செல்ல பயணத்தடை</h2><p>
</p><p>
புதிய விசாரணைகளின் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ள நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிறப்பு உளவாளிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 ​​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/679e24c4-9530-4bc1-9e9e-422fad627e50/26-6a7757ee810df.webp' /></p><p>பொதுச் சொத்துக்களை வீணடித்தவர்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><h2>அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்</h2><p>
</p><p>
மேலும், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதும், அவர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பொது நிதி இழப்பை மீட்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e82a39-8852-4491-9595-b8b6ad6d5b9a/26-6a7757ef323b9.webp' /></p><p>

மேலதிகமாக, முன்னர் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பல அரசியல்வாதிகள் மீதும் மீண்டும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்யவும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யவும் தற்போது திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் : புலனாய்வுப் பிரிவினர் அளித்த அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-allaipiti-gun-shooting-issue-1786200539"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-allaipiti-gun-shooting-issue-1786200539</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப
விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை
வழங்கியுள்ளது.
</p><p>
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்று
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.</p><h2>நீதிமன்றம் விடுத்த உத்தரவு</h2><p>இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப்
பிறப்பித்தது. அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை காவல்துறையினர், யாழ்.
குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை
நீதிமன்றத்துக்கு செப்ரெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை
நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae33ab4-8344-47cb-ac4c-9a2229dab92c/26-6a77493c4f296.webp' /></p><p>முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி
அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹைஏஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும், அந்த
ஹைஏஸ் வாகனம் காவல்துறையினரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச்
செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T15:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகசின் சிறை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட இருவர் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-deliver-drugs-inmates-magazine-prison-1786198620"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-deliver-drugs-inmates-magazine-prison-1786198620</id>
            <summary type="text">மகசின் சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

பேஸ்லைன் சாலை மகசின் சிறையின் பக்கவாட்டுச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகசின் சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>
பேஸ்லைன் சாலை மகசின் சிறையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே இன்று பிற்பகல் (08) நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொதிகளை வீச முயன்றதையடுத்து, அந்த இரு சந்தேக நபர்களையும் காவல்துறை கைது செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b61fc70-031e-4dde-ba21-7ea966bfc64e/26-6a773d43b4b14.webp' /></p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொதிகளை ஆய்வு செய்தபோது, ​​22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் 'ஐஸ்' என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஆஷ்' என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி சாஜர்கள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டன.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc52064-46b5-4cfa-9279-d82f8ff7e629/26-6a773d4465c98.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர். மேலும், பொள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவிற்கு ஈரான் விதிக்கும் நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-condition-to-the-us-open-strait-of-hormuz-1786196300"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-condition-to-the-us-open-strait-of-hormuz-1786196300</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஓமானுடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தைச் சார்ந்தது அல்ல என்றும், மாறாக அமெரிக்கா &quot;ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஓமானுடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தைச் சார்ந்தது அல்ல என்றும், மாறாக அமெரிக்கா "ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதையே" சார்ந்துள்ளது என்றும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் சர்தார் மொஹெப்பி இவ்வாறு கூறியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை புவியியல் மற்றும் மூலோபாய சக்தி</h2><p>"எங்களைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணை என்பது ஒரு பொருளாதார நீர்வழி மட்டுமல்ல, அது புவியியல் மற்றும் மூலோபாய சக்தியின் ஒரு அங்கமும் ஆகும்," என்று மொஹெப்பி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4e685a-075e-4ecb-bfbe-f4d718144af2/26-6a7736aa4ea53.webp' /></p><p>
</p><p>
மேலும், "அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிராந்தியப் பேச்சுவார்த்தைகளில் தலையிடுவதை நிறுத்தினாலேயே" இந்த நீர்வழி திறக்கப்படும் என்றும் அவர் கூறியதாக அந்த ஊடகம் தெரிவித்தது.</p><p>

"ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் பட்சத்தில், ஹோர்முஸ் நீரிணை நிச்சயமாகத் திறக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - குவைத் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-kuwait-srilankan-airlines-resumes-1786194994"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-kuwait-srilankan-airlines-resumes-1786194994</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்புக்கும் குவைத்துக்கும் இடையேயான விமான சேவைகள் இன்று பிற்பகல் (08) முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்புக்கும் குவைத்துக்கும் இடையேயான விமான சேவைகள் இன்று பிற்பகல் (08) முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விமான சேவைகளை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.</p><p>&nbsp;இருப்பினும்,தற்போது பதற்றமான சூழல் ஓரளவு தணிந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T13:32:50+00:00</updated>
        </entry>
    </feed>
