<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T00:08:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894"></link>
            <id>https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894</id>
            <summary type="text">

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு முடிக்க 2029 நிதியாண்டு வரை ஆகும் என்று டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் பென்டகன் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தச் செலவுத் திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>விநியோகக் காலம்</h2><p> 

இருப்பினும், இரு மாதங்கள் கடந்தும் அந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை அல்லது ஒப்பந்தங்கள் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047e9848-1413-4315-bd6b-be11a451a400/26-6a67ecf3ee10c.webp' /></p><p><i>Image Credit: Fortune</i></p><p>

இந்நிலையில், இவ்வளவு மெதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்குக் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த விநியோகக் கால அட்டவணையின்படி, நிதி 2026 நிதியாண்டிற்குள் ஒதுக்கப்பட்டு, அனைத்து உதவிகளும் செப்டம்பர் 30, 2029-க்குள் முழுமையாகச் சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஜெலென்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பு&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b25dd566-632b-42fa-820d-5751543d8c98/26-6a67ecf4a8a37.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
NBC News</i></p><p> </p><p>

இந்தச் சந்திப்பில் வான் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் ட்ரோன் ஒப்பந்தம் குறித்து அவர் வலியுறுத்துவார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு, அமெரிக்க செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T23:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் பெண்களை இலக்கு வைத்து கத்திக்குத்து! சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-france-for-knives-attacking-1785184980"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-france-for-knives-attacking-1785184980</id>
            <summary type="text">பிரான்சின் போர்ட் டி கிளிச்சி (Porte de Clichy) பகுதியில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களை இரண்டு கத்திகளால் தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டு காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் போர்ட் டி கிளிச்சி (Porte de Clichy) பகுதியில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களை இரண்டு கத்திகளால் தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

இத்தாக்குதலில் இரு பெண்கள் பலத்த காயமடைந்துள்ளளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியவர் மீது சூட்கேஸ்களை வீசியும், அவரது கால்களைத் தட்டிவிட்டும் தரையில் தள்ளி அவரை அசையவிடாமல் பிடித்து முடக்கியுள்ளனர்.</p><p></p><h2>சந்தேகநபரின் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>
பின்னர், அங்கு பணி விடுப்பில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி அந்த நபரைத் தடுத்து வைத்துக் கைது செய்ய உதவியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da9add3-987a-4949-961e-017cefe0bf88/26-6a67c4f103f2c.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் முரண்பாடான தகவல்களைக் கூறியதால், அவரின் அடையாளத்தை இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T20:52:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விவகாரத்தில் மூக்கை நுழைத்த நெதன்யாகு! ட்ரம்ப் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-opposes-us-sale-f-35-fighter-jets-turkey-1785181550"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-opposes-us-sale-f-35-fighter-jets-turkey-1785181550</id>
            <summary type="text">அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான அறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்</p><p> 

இந்த விற்பனை குறித்துத் தன்னைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

துருக்கியிடம் ரஷ்ய தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதால், அந்நாட்டிற்குப் போர் விமானங்களை விற்பனை செய்வது தற்போது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானதாகும்.</p><p></p><h2>விற்பனை&nbsp;அனுமதி</h2><p> </p><p>

இருப்பினும், துருக்கிக்கு இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8250329-b1ad-4415-8c1a-547b2d38f5b9/26-6a67b8720abc4.webp' /></p><p>Image Credit:&nbsp;
NPR</p><p>
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் குறித்துப் பேசிய ட்ரம்ப், "அவர் எனது நண்பர்; அவருக்கு நாம் என்ன விற்க வேண்டும் என்று வேறு யாரும் எனக்குச் உத்தரவிட முடியாது" என்றும், துருக்கி ஒரு சிறந்த நட்பு நாடு என்றும் கூறியுள்ளார். </p><p>

மேலும், "துருக்கி இஸ்ரேலின் மீது பெரிய ஆதரவு கொண்ட நாடு அல்ல" என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T20:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கி மற்றும் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் திடீர் சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-meet-with-both-zelensky-and-netanyahu-1785179081"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-meet-with-both-zelensky-and-netanyahu-1785179081</id>
            <summary type="text">

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் செவ்வாய்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தச் சந்திப்புகளில் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஈரான் விவகாரம்</h2><p>
</p><p>
நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது ஈரானில் நடைபெறும் போர், லெபனானுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகளை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து டரம்ப் விவாதிப்பார் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09fe6a84-988f-4515-8d44-c21e11967799/26-6a67b0002502e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p>
</p><p>
ஈரான் விவகாரத்தில் தனக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு தலைவர்களும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டிலேயே நெருக்கமாக இருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>ரஷ்யா-உக்ரைன் போர்</h2><p>
</p><p>
இதேவேளை, ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d902d42-f01c-4a9e-9755-7e206991f23d/26-6a67afff294f6.webp' /></p><p><i>Image Credit:The Straits Times</i></p><p>
</p><p>
முன்னதாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் குறித்த உளவுத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாக ஜெலென்ஸ்கி சுமத்திய குற்றச்சாட்டையும் ட்ரம்ப் மறுத்துள்ளார்.</p><p>

மேலும், வொஷன்டனில் நடைபெறும் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கிலும் நெதன்யாகு மற்றும் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T19:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-details-about-the-body-of-chinese-national-1785175490"></link>
            <id>https://ibctamil.com/article/new-details-about-the-body-of-chinese-national-1785175490</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.</p><p> 

பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் சம்பந்தப்பட்ட அந்த சிக்கலான விவகாரத்தின் விசாரணைகளில் புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>

அந்தவகையில், கொலை செய்யப்பட்ட சீன நாட்டவர், ஏப்ரல் 7 ஆம் திகதி ஒரு குழுவினருடன் கம்போடியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>போலி கடவுச்சீட்டு</h2><p>

அதன்போது, அவர் சுரினாம் குடியரசினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec0eb579-5544-46c9-a333-8e14c676f658/26-6a67a2cbeb445.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இறந்தவருடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பெரும் தொகைகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த நிதிகள் தொடர்பான ஒரு தகராறுடன் இந்தக் கொலை தொடர்புடையதாக கருதப்படுகிறது.</p><h2>ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் </h2><p>

ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட சீன நாட்டவர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிக் குற்றச் செயல்பாட்டின் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பதை இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f788e99f-32d1-490e-81dc-9262b70fa1aa/26-6a67a2cb2fda8.webp' /></p><p>

இதற்கிடையில், கொல்லப்பட்டவரின் சாரதி, சமையல்காரர் மற்றும் காதலி ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் எடுக்கப்பட்டு, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
</p><p>
இதன்படி, குறித்த விவகாரத்தின் பல்வேறு விடயங்களை விசாரிப்பதற்காக ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T18:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நான்கு கோடி பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-40-million-people-warned-1785175728"></link>
            <id>https://ibctamil.com/article/america-40-million-people-warned-1785175728</id>
            <summary type="text">அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் &#039;ஹீட் டோம்&#039; எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் 'ஹீட் டோம்' எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்கு கோடி மக்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களான மின்னசோட்டா முதல் மிசிசிபி வரையிலும், மேற்கில் நெவேடா மற்றும் தெற்கு கலிபோர்னியா வரையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.</p><h2>வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை</h2><p>&nbsp;காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை இணைத்து கணக்கிடப்படும் 'ஹீட் இண்டெக்ஸ்' அளவு பல இடங்களில் 38 டிகிரி செல்ஷியசைத் தாண்டி பதிவாகி மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038e7b37-b475-4121-99c5-c57b1074dc74/26-6a67a15ba1b5f.webp' /></p><p>
</p><p>



ரேபிட் சிட்டியில் வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மின்னசோட்டாவில் வெப்பத்தின் கொடூரம் தாங்க முடியாமல் புகழ்பெற்ற குதிரைப் பந்தயங்கள் உட்பட பல வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்</h2><p>


அமெரிக்க தேசிய வானிலை மையம் அளித்துள்ள எச்சரிக்கையில், வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என, தெரிவித்துள்ளது. திடீரென இந்த அளவுக்கு வெயில் அதிகரிக்க, 'ஹீட் டோம்' எனப்படும் உயர் அழுத்த வெப்ப மண்டலம் தான் காரணம் என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06fd8bf1-3153-4213-8abb-ac7b29c77238/26-6a67a15aec0c6.webp' /></p><p>


இது பூமியின் மேற்பரப்பில் சூடான காற்றை வெளியேற விடாமல் ஒரு கூம்பு போல அடைத்து வைத்துக் கொள்கிறது. இதனால் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் தடுத்து நிறுத்தி, மக்களை புழுக்கத்தில் தவிக்க வைக்கிறது.


இதனால், 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் முடங்கியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T18:20:14+00:00</updated>
        </entry>
    </feed>
