<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-29T04:18:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு : காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/retirement-age-of-judges-extended-justice-minister-1785297179"></link>
            <id>https://ibctamil.com/article/retirement-age-of-judges-extended-justice-minister-1785297179</id>
            <summary type="text">நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் இந்த வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வளர்வடைந்த நாடுகளில் 10 .லட்சம் மக்களுக்கு 47 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 இலட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.</p><p></p><h2>அரச பகுப்பாய்வாளர் திணைக்களம்</h2><p>

1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்கும் போது சட்டக் கட்டமைப்பு மேலும் வளர்ச்சியடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5b0515-75f1-49dc-942e-566849e52222/26-6a697cbe730bd.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு, பணியாளர்கள் நியமனம் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் போன்ற தொடர்புடைய துறைகளின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும்.
</p><p>
இந்த வயது அதிகரிப்பு மேன்முறையீட்டு அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டும் உரியது அல்ல; மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கும் பொதுவானது.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
அத்துடன், இந்த வயதெல்லை நீடிப்பு நடவடிக்கைகளால் நீதித்துறை சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது. குறிப்பிட்ட ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படவில்லை, இது ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் சீரமைப்பதற்கான நடவடிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff19a27-cec1-41cb-8fdf-ed41b89d1894/26-6a697cbf5902c.webp' /></p><p>அரசியலமைப்பின்படி நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. 2020 ஆம் ஆண்டிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது மக்களின் விருப்பம் கேட்கப்படவில்லை” என&nbsp; தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T04:13:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/employment-opportunities-for-sri-lankans-in-israel-1785289151"></link>
            <id>https://ibctamil.com/article/employment-opportunities-for-sri-lankans-in-israel-1785289151</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. குறித்த விடயத்தை வெளிவிவகார மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.</p><p> குறித்த விடயத்தை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு வேலை வாய்ப்பு</h2><p>மேலும் இந்த வேலைத்திட்டம் முறை யான மற்றும் வெளிப்படையான நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3d44bb-6a66-4370-9aee-1ca7f7443bcb/26-6a6963a7d98cf.webp' /></p><p>இவ்வாண்டில் இதுவரை 2500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயார் நிலையில் உள்ளன. </p><p>இவற்றுடன் கூடுதலாக ஒரு புதிய துறையில் மேலும் 1,000 வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இது ஒட்டுமொத்த இலக்கான 10,000 ஐ அடைவதற்கு உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோக பூர்வமாகப் பதிவு செய்வதன் மூலம் இலங்கையர்கள் குறைந்த செலவிலும் அதிக நம்பகத்தன்மையுடனும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்று தங்களின் வெளிநாட்டு வேலைக்கனவை நனவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T03:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - புனித தன்மையை கெடுக்கும் செயலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keerimalai-theerthakkarai-surrounding-areas-issue-1785292519"></link>
            <id>https://ibctamil.com/article/keerimalai-theerthakkarai-surrounding-areas-issue-1785292519</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம் காணப்படுகிறது.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள்
கொட்டப்பட்டு வருகின்றன.
</p><p>
மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில்
சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன

அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால பகுதியில் அப்பகுதியில்
இருந்து சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டமையால் ஏற்பட்ட குழிகள் என
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உயர்பாதுகாப்பு வலயம்</h2><p>
குறித்த பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990 ஆம் ஆண்டு
கால பகுதியில் இடம்பெயர்ந்து சென்றனர். அதனை தொடர்ந்து குறித்த பகுதிகள்
உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தன. அந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் 2014 ஆம் ஆண்டு கால
பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு வந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8581fcdb-a2b7-4494-9d95-b2ff0254020b/26-6a696ad3aa169.webp' /></p><p>அக்கால பகுதியில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து, யாழின் பல்வேறு
பகுதிகளிலும் தற்காலிக முகாம்களில் வசித்தவர்களை, காணிகள் அற்றவர்களை
"நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்" எனும் பெயரில் வீடுகள் அமைத்துக்கொடுத்து,
பாரிய குழிகளை அண்டிய பகுதிகளில் குடியேற்றினார்கள்.
</p><p>
இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு வருடங்களில் அப்பகுதிகள் முற்று
முழுதாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்டதை பாரிய
குழிகளுக்குள் கழிவுகளை கொட்ட தொடங்கினர்.</p><p>

முதலில் உக்காதா கழிவுகளை , பிளாஸ்ரிக் கழிவுகளை கொட்டியவர்கள் , பின்னர்
இறைச்சி கழிவுகள் , மருத்துவ கழிவுகள் என எவ்வித கண்காணிப்புக்களும் ,
கட்டுப்பாடுகளும் இன்றி குழிகளுக்குள் கொட்டப்பட்டன.
</p><h2>விலங்குகளால் சுகாதார சீர்கோடுகள்</h2><p>
அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பகுதியில் அப்பகுதியில் இருக்கும் மக்கள்
கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு கட்ட தொடங்கினர். அதன் போது குறித்த பகுதியில் உள்ள குழிகளை தாம் தென் கொரிய நாட்டின் நிதி
உதவியுடன் " சுகாதார நில நிரவுகை திட்டம்" ஊடாக குழிகளை
நிரவுவதாக தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01212dbb-987b-4d87-92c2-1693ed4586f7/26-6a696ad1caf98.webp' /></p><p>
அதாவது பாரிய குழியின் அடிப்பகுதியில் மிக தடிப்பான பொலிதீன்கள் பரப்பட்டு ,
அதன் மேல் குப்பைகள் கொட்டப்பட்டு , நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லாமல்
குப்பைகள் நிரவப்படும்.</p><p>அதன் பின்னர் ஒரு கட்டத்தில் மண் போட்டு , மீண்டும்
பொலித்தீன்கள் பரவப்பட்டு , குப்பைகள் கொட்டப்படும். இவ்வாறாக ஒவ்வொரு படிமுறை
படிமுறையாக குப்பைகள் கொட்டப்பட்டு குழி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது

அவ்வாறு அந்த குழிகள் நிரவ 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும். </p><p>இந்த
காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால்
ஏற்படப்போகும் சுகாதார சீர்கோடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை
ஏற்படுத்தும் என பலரும் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.</p><p>

அதனை அடுத்து சில வருடங்கள் அக்குழிகளுக்குள் பாரிய அளவில் கழிவுகள்
கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் , மீண்டும் அப்பகுதியில் உள்ள
குழிகளுக்குள், வலி. வடக்கின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் வலி. தெற்கு
பிரதேச சபை மற்றும் கடற்படையினர் கழிவுகளை கொட்ட தொடங்கியுள்ளனர்.
</p><h2>புண்ணிய புனித தன்மையான பூமி</h2><p>
கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மாவிட்டபுரம் கந்தசுவாமி
கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ,போன்ற ஐந்து இந்து ஆலயங்களும் ,
சித்தர்களின் சமாதி கோவில்களும் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில்
தேவாலயமும் காணப்படுவதால் அப்பகுதி புண்ணிய புனித தன்மையான பூமி எனவும்
அப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதனால் , அதன் புனித தன்மைகள் அற்றுப்போகும்
எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c15091-f8e4-4b9a-87dd-bc57b4a01e63/26-6a696ad2a5d8a.webp' /></p><p>

அது மாத்திரமன்றி , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் முதலீட்டு
வலயம் உருவாக உள்ள நிலையிலும் , கீரிமலையில் மஹிந்த ராஜபக்சே காலத்தில்
கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடுகள்
நடைபெறும் நிலையில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதானல் , அதன்
அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படும் அபாயங்கள்
காணப்படுகின்றன.
</p><p>
அவை மாத்திரமின்றி குப்பை கொட்டப்படும் பகுதிக்கு மிக அருகில் கடல் உள்ளது.
மழை காலத்தில் கடல் நீர் உட்புகுமாயின் அது பெரும் சுகாதார
சீர்கேட்டினை ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள்
அறிவித்ததை அடுத்து, உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்று கழிவுகள்
கொட்டப்படுவதனை நேரில் பார்த்துள்ளனர்.
</p><p>
அது தொடர்பில் , கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கின் பிரதேச சபையின்
மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்து அப்பகுதியில் கழிவுகளை
கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரினர்.</p><p>

அந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின்
சுகாதார குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்ற போது டிப்பர் வாகனத்தில்
கடற்படையினர் கழிவுகளை கொட்டுவதற்கு எடுத்து வந்த நிலையில் அதனை
அங்கு கொட்டாது தடுத்து நிறுத்தினர்.</p><p></p><h2>யாரும் கழிவுகளை கொட்ட முடியாது&nbsp;</h2><p>

அதேபோன்று வலி. தெற்கு பிரதேச சபையினரும் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த வேளை
அத்தனையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
</p><p>
அதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு
உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்திய நிலையில் , சம்பவ
இடத்திற்கு வந்த தவிசாளர் , அங்கு அனுமதியின்றி யாரும் கழிவுகளை கொட்ட
முடியாது என கூறி கழிவு ஏற்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய பின்னர்,
குறித்த குழிகளுக்கு செல்லும் பாதை ஒன்றில் காணப்பட்ட "கேற்றினை" பூட்டு
போட்டு பூட்டி சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c15091-f8e4-4b9a-87dd-bc57b4a01e63/26-6a696ad2a5d8a.webp' /></p><p>அதன் போது தவிசாளர் பூட்டி சென்ற "கேற்றுக்கு" அருகினால் , மற்றுமொரு பாதை
காணப்படும் நிலையில் , அதனூடாக கழிவுகளை எடுத்து வரும் வாகனங்கள் உள்ளே செல்ல
முடியும். அதனால் அப்பகுதிக்குள் எவரும் அனுமதியின்றி நுழைய முடியாதவாறு,
நிரந்தர வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை
உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரியுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் , "நல்லிணக்க
புர" மக்கள் மாத்திரமின்றி , முதலீட்டு திட்டங்கள் , பாரிய அபிவிருத்தி
திட்டங்கள் என்பவற்றுடன் , சுற்றுலாத்துறைக்கும் பாரிய
பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நீண்ட கால திட்டமிடல்கள் இன்றி , கழிவுகளை கொட்ட அனுமதிப்பது பாரிய
சிக்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட
துறை சார்ந்தோர் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
எதிர்பார்ப்பாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T03:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில மாவட்டங்களில் அடிக்கடி மழை! வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-rain-in-some-districts-1785286931"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-rain-in-some-districts-1785286931</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
அத்தோடு, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/560d014e-649a-4ed0-a8ba-fc1221e35649/26-6a69589830404.webp' /></p><p>

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்றும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-29T01:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்திருந்து திடீரென தாக்கிய ஈரான்! முற்றாக முறியடித்த அமெரிக்க படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-thwart-sudden-attack-launched-by-iran-1785284053"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-thwart-sudden-attack-launched-by-iran-1785284053</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. </p><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள&nbsp; CENTCOM, “மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியில், இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினர் (IRGC) ஈரானிலிருந்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர். </p><p>

ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அமெரிக்கப் படைகள் தொடர்ந்து விழிப்புடனும், உயர் தயார் நிலையிலும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணைகள்</h2><p>

 ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, ஏவப்பட்டவை நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மிகாமல் இருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 5:45 p.m. ET today, Islamic Revolutionary Guard Corps forces launched multiple ballistic missiles from Iran in an attempted surprise attack on U.S. forces based in the Middle East. All Iranian missiles were successfully intercepted. U.S. forces remain vigilant and at a high…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2082231500318114110?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்த அந்நாடு விரும்புவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
 எவ்வாறாயினும், ​​ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ட்ரம்பின் கூற்றுக்கு முரணாக, தற்போது தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனக் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T00:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் பலியான உயிர்கள் - பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-on-russia-1785275638"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-attack-on-russia-1785275638</id>
            <summary type="text">ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இத்தாக்குதல்களை மொஸ்கோவில் உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p>
எல்லைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் உள்ள வணிக நிறுவனம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெல்கோரோட் நகருக்கு வெளியே உள்ள பிறிதொரு நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உக்ரைன் போர்முனையில்&nbsp;தோல்வி</h2><p>
</p><p>
இதேவேளை, உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ஷெபெகினோ நகரில் பேருந்து ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதில் காயமடைந்த 19 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8977f1e-4e0e-44f7-b0d1-dcf3926106ca/26-6a6948c39c77c.webp' /></p><p><i>Image Credit: NBC News</i></p><p>
</p><p>
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளைக் குறிவைத்து உக்ரைன் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.</p><p> </p><p>

இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "போர்முனையில் அதிகரித்து வரும் தோல்விகளுக்குப் பழிவாங்கும் வகையில், சாதாரண மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து மீது உக்ரைன் வெறித்தனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-28T23:27:00+00:00</updated>
        </entry>
    </feed>
