<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T04:29:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்...! வெளிப்படையான விசாரணை கோரும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-demands-probe-into-presidential-secretary-1787457513"></link>
            <id>https://ibctamil.com/article/namal-demands-probe-into-presidential-secretary-1787457513</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
</p><p>
குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முறையான விசாரணைகள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8b0862-7ae3-4a46-ad5e-78fac4979076/26-6a8a76a379950.webp' /></p><p>
விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் மோதல்களைத் தவிர்த்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thousands-of-professionals-leaving-sri-lanka-1787452773"></link>
            <id>https://ibctamil.com/article/thousands-of-professionals-leaving-sri-lanka-1787452773</id>
            <summary type="text">மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரிச்சுமை மற்றும் தொழில்சார் சிக்கல்கள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு 2000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>மருத்துவ அதிகாரிகள்</h2><p>அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487a4b5-74d5-422e-a49a-73ca75efa84a/26-6a8a6f584128c.webp' /></p><p>மேற்படி தரவுகளின் படி,&nbsp; 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 1489 நிபுணத்துவ மருத்துவர்கள் (Specialists) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்தமாக சுமார் 2,500 மருத்துவர்கள் அரசுச் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் இதனால் அரசுக்கு ரூபாய் 1200 கோடிக்கும் அதிகமான (12 பில்லியன் ரூபாய்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>அவசர சிகிச்சை</h2><p>குறிப்பாக மயக்கவியல், அவசர சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் இதய நோயியல் ஆகிய பிரிவுகளின் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற மற்றும் பிராந்திய அரசு மருத்துவமனைகளின் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91402c13-4cbf-4e06-aad1-8e3e0935d0aa/26-6a8a6f56df09d.webp' /></p><p>இதனுடன் உயர் கல்வி மற்றும் ஆய்வுக் விடுப்பு பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தப்படி மீண்டும் இலங்கை திரும்பாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளதாகப் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.</p><p>ஒப்பந்தத்தை மீறி வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்த பேராசிரியர்களிடமிருந்து அரசுக்கும் பல்கலைக்கழக அமைப்பிற்கும் சேர வேண்டிய தொகை ரூபாய் 340 கோடி (3.4 பில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>முக்கியக் காரணங்கள்</h2><p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மற்றும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 3,10,915 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff607ccf-9f11-44df-8a0a-4b951ef5f0fb/26-6a8a6f578f6c7.webp' /></p><p>இதில் 76 வீதத்திற்கும் அதிகமானோர் (2,36,900 க்கும் மேற்பட்டோர்) திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் (Skilled Professionals) என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உயர் வாழ்வாதாரச் செலவு, அதிக வருமான வரி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, பிள்ளைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை (PR) பெறுவது ஆகியவை இந்த மூளைச் சலவைக்கு (Brain Drain) முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temperatures-are-rising-in-sl-polonnaruwa-is-top-1787455480"></link>
            <id>https://ibctamil.com/article/temperatures-are-rising-in-sl-polonnaruwa-is-top-1787455480</id>
            <summary type="text">இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>குறைந்தபட்ச வெப்பநிலை</h2><p>
</p><p>
நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6a06a4-419f-49db-814e-0494d2844571/26-6a8a6f3327d5d.webp' /></p><p>அத்துடன் பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.</p><p>நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிசக்தி வாய்ந்த மின்னொளியால் 400 பேர் பாதிப்பு - நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eye-injuries-for-400-people-in-jaffna-1787450304"></link>
            <id>https://ibctamil.com/article/eye-injuries-for-400-people-in-jaffna-1787450304</id>
            <summary type="text">யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலய வருடாந்த
திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலய வருடாந்த
திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ள நிலையில், </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக மின்குமிழ்களைத் தம்வசம்
வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின் போது, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில்
அதிக ஒளியை வெளியிடக்கூடிய மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">விசாரணை&nbsp;</span></p><p>இதனால்
திருவிழாவிக்கு வருகை தந்திருந்த 400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் கடுமையான
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளவாலைப் காவல்துறையினர், தீவிர விசாரணைகளை
முன்னெடுத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834f69d6-6422-49a5-93ba-5da175ccdd8f/26-6a8a55b6c5167.webp' /></p><p>விசாரணைகளின் அடிப்படையில், அதிக ஒளியை ஏற்படுத்திய
மின்குமிழ்களை விற்பனைக்காகவோ அல்லது பயன்பாட்டுக்காகவோ தம்வசம் வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக் கைது செய்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலத்த பாதுகாபுக்கு மத்தியில் நேற்று மல்லாகம்
நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p> வழக்கை விசாரித்த நீதிவான்,
சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பித்தார்.
</p><p>
பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும்
இவ்வாறான முறையற்ற ஒளிப் பயன்பாடுகள் குறித்துப் காவல்துறையினர் தொடர்ந்தும்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் சிக்கல் - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218"></link>
            <id>https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218</id>
            <summary type="text">கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு&amp;nbsp; தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&amp;nbsp;நாடாளுமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு&nbsp; தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&nbsp;நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்தபோதே&nbsp;அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>மோசமான நிலையில்&nbsp;இயந்திரங்கள்</h2><p> தற்போது சேவையில் உள்ள பெரும்பாலான தொடருந்து இயந்திரங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32b9aac-0059-42c6-9d06-aa1d17c107a4/26-6a8a62b3518db.webp' /></p><p>“இயந்திரங்கள் மற்றும் தொடருந்து பெட்டிகள் இரண்டையும் பழுதுபார்ப்பதே எமது நோக்கம்” எனவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-people-including-woman-arrested-in-jaffna-1787448199"></link>
            <id>https://ibctamil.com/article/three-people-including-woman-arrested-in-jaffna-1787448199</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p></p><h2>விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c34f0b-9806-42f4-9a4f-3f4244dd53bb/26-6a8a4d3e9da29.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T02:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் ரணில்...! தண்டனைக்கு பயந்து புதிய அரசியல் தஞ்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-behind-opposition-schemes-allegations-1787450459"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-behind-opposition-schemes-allegations-1787450459</id>
            <summary type="text">நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருப்பதாக சுட்டிக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார இதனை தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரிய குற்றச்சாட்டுக்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
</p><p>
நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39510d36-a33d-49aa-978c-09e1578342ea/26-6a8a5c04dcc04.webp' /></p><p>அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும்&nbsp;எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கரவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T02:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-1787447193"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-1787447193</id>
            <summary type="text">

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e5e4561-952c-4658-a0b0-dccc4149fbdd/26-6a8a491e011db.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கோர விபத்து! காவல்துறை அதிகாரிகள் உட்பட எழுவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875"></link>
            <id>https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் பாசாட் கார் ஒன்றை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர். </p><p>அப்போது, பணியில் இருந்த காவல்துறை வாகனம் மீது அந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>
</p><p>
அதிகாலை 3.40 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து அவசர உதவிப் படையினர் விரைந்தபோதிலும், இரு வாகனங்களிலும் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6815491-45d8-45cb-a399-ac5a36774295/26-6a8a271d77795.webp' /></p><p><i>Image Credit: aol.co.uk</i></p><p>

உயிரிழந்த காவலர்துறை அதிகாரிகள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் தெரிவித்துள்ளார். </p><p>

அதன்போது, காவல்துறை வாகனம் சரியான திசையிலேயே பயணித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>தற்காலிகமாக மூடப்பட்ட வீதி</h2><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் விபத்தைத் தொடர்ந்து, நார்மன்பி வீதிக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட A66 வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326d9de0-e232-45ad-813d-bceac29e0268/26-6a8a271e346bf.webp' /></p><p><i>Image Credit:&nbsp;irishexaminer</i></p><p>
</p><p>
இந்நிலையில், இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைவதாகப் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:04:15+00:00</updated>
        </entry>
    </feed>
