<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-05T23:18:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700"></link>
            <id>https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700</id>
            <summary type="text">அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
</p><p>
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
</p><p>
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/VNz7RtIWc54" title="🔴Special LIVE:நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை | Naattu Nadappu" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பாரிய போர்குற்றம்! தக்க பதிலடி விரைவில் என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291"></link>
            <id>https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291</id>
            <summary type="text">ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி என்றும், ஈரான் மீதான ஒரு பரந்த கடல் முற்றுகை மற்றும் பொருளாதாரப் போரின் ஒரு பகுதி என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தகக் கப்பல் போக்குவரத்து</h2><p>இவை ஐ.நா. சாசனத்தின் மீறல் மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f03ca9-8290-41e9-9b89-b8233cfb72b2/26-6a9c783d0114f.webp' /></p><p>இந்நிலையில் ஈரானின் உள்ள வியூக ஆய்வுகளுக்கான மையத்தின் பகுப்பாய்வாளரான அலி அக்பர் தாரேனி, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் ஒரு பெரிய பிரச்சினை என்றும், அதற்கு பதிலளிக்காமல் விட்டுவிட ஈரானால் முடியாது என்றும் கூறியுள்ளார்.</p><p>இது ஈரானைக் கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அவரால் கூறப்பட்டுள்ளது. மேலும் கடுமையாகத் தாக்கிப் பதிலடி கொடுக்க இது ஈரானைத் தூண்டுகிறது எனவும் அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T20:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் கட்டாரின் இராஜதந்திர முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859"></link>
            <id>https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859</id>
            <summary type="text">பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இன்று லெபனான் பிரதமர் நவாஃப் சலாமுடன் தொலைபேசியில் மத்தியக்கிழக்கு பதற்றம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p>இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ததோடு, பிராந்தியம் முழுவதும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>பிராந்திய முன்னேற்றங்கள்</h2><p>சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e40e4cc4-fc16-403a-b9c3-e70d13d027ff/26-6a9c72a5614c2.webp' /></p><p>

கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான ஒரு விரிவான உடன்படிக்கைக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு கட்டார் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என ஷேக் முகமது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>மேலும், லெபனானின் ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கத்தார் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதோடு, லெபனான் மக்களுடன் தனது தொடர்ச்சியான ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணாடியில் தெரிந்த ஏவுகணை! ஈரானிடம் நூலிழையில் தப்பிய அமெரிக்காவின் Super Hornet]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-super-hornet-narrowly-escapes-iran-1788635121"></link>
            <id>https://ibctamil.com/article/us-super-hornet-narrowly-escapes-iran-1788635121</id>
            <summary type="text">ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2026 மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது பரவி வருகிறது. </p><p>தரையில் இருந்து பதிவு செய்யப்பட்டதாகத் தோன்றும் காணொளியில், அமெரிக்க போர் விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கும்போது, கீழ்புறத்திலிருந்து ஏவுகணை ஒன்று பாய்ந்து வருவது காணப்படுகிறது.</p><p></p><h2>வேகமாகப் பரவிய செய்தி</h2><p>
</p><p>
ஏவுகணை விமானத்தை நெருங்கிய நிலையில், விமானி திடீரென இடதுபுறமாகத் திரும்பியதாகவும், சில நொடிகளில் விமானத்தின் பின்புறத்தில் ஏவுகணை வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விமானம் தொடர்ந்து பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360f9472-e675-4b50-a636-72a38bcd7738/26-6a9c67f34b052.webp' /></p><p>சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஊடகம், அமெரிக்க F/A-18 விமானம் புதிய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பால் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகவும் அறிவித்தது.
</p><p>
இந்தத் தகவல் மத்திய கிழக்கு ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
</p><p>
எனினும், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது.</p><p></p><h2>தவறான IRGC-யின் கூற்று&nbsp;</h2><p>மேலும், ஈரானால் எந்த அமெரிக்க போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என CENTCOM தெரிவித்தது.</p><p></p><p>திறந்த மூலத் தகவல் ஆய்வாளர்கள் காணொளியை ஆய்வு செய்து, அது சாபஹார் துறைமுகப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

காணொளியின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏவுகணை விமானத்தை நேரடியாகத் தாக்கவில்லை என்றும், விமானத்தின் பின்புறத்தில் வெடித்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதன் அடிப்படையில், அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான IRGC-யின் கூற்று தவறானது எனக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/even-unp-supporters-will-be-surprised-nalinda-1788626831"></link>
            <id>https://ibctamil.com/article/even-unp-supporters-will-be-surprised-nalinda-1788626831</id>
            <summary type="text">பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அளித்த பதிலை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அளித்த பதிலை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ விமர்சித்துள்ளார். </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தனிநபர்களைப் பாதுகாக்க அக்கட்சி முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டது இது முதல் முறையல்ல என்று கூறிய ஜெயதிஸ்ஸ, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அவர் இதற்கு முன்னர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.</p><h2>நாமல் விளக்கமறியலில் வைக்கப்படுவது முதன்முறையல்ல</h2><p>"நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ ஒன்றும் அசாதாரணமானதல்ல. அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவது இது முதல் முறையல்ல," என்று அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573b2c44-342d-4ff6-879e-5d43bdfdff0d/26-6a9c4bfa82bb6.webp' /></p><p>

"சமீபத்திய வழக்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குற்றச்சாட்டு தொடர்பானது என்றும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பிறகு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>இலஞ்ச ஆணைக்குழு விசாரணை</h2><p>சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலானதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஆணைக்குழு விசாரித்துள்ளது என்று ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2abcb1f-80b9-4a7a-8fa7-f0e06aceaae9/26-6a9c4bfb36a1b.webp' /></p><p> </p><p>நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிப்பதற்கு முன்பே, ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான 100 மில்லியன் தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

"விசாரணை நடத்திய பின்னர், ஆணைக்குழு உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p> அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவை எடுத்தது நீதிமன்றம்தான். இதுதான் நடைபெற்ற செயல்முறை," என்று அவர் கூறினார்.</p><p>

ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை குறித்துப் பதிலளித்த ஜெயதிஸ்ஸ, அக்கட்சி தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டை அது வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.</p><h2>ஆச்சரியப்படும் ஐ.தேக. ஆதரவாளர்கள்</h2><p>

"ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்களும், அக்கட்சிக்காக நீண்டகாலம் பணியாற்றியவர்களும்கூட இத்தகைய அறிக்கையைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3429eee9-737e-4aee-925a-ded26028a00e/26-6a9c4bfbddbf5.webp' /></p><p>

ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாக ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டினார்.</p><p></p><p> </p><h2>நீதிமன்றம் எடுத்த முடிவு</h2><p>மேலும், அக்கட்சியுடன் தொடர்புடைய பல நபர்கள் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இன்று, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25f7f443-cba2-4eac-bc4f-016c14c32134/26-6a9c4bfc93cac.webp' /></p><p> தங்களில் ஒருவர் கைது செய்யப்படும்போது, ​​ஊடக அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குரல் பதிவுகள் மூலமாகவோ அதை எதிர்க்கிறார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>

விசாரணைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடத்தப்பட்டதாகவும், உண்மைகள் முன்வைக்கப்பட்ட பின்னரே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பது குறித்த முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T18:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[GOV PAY போலி இணையதளம் : பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-of-fake-website-similar-to-gov-pay-1788631825"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-of-fake-website-similar-to-gov-pay-1788631825</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் GOV PAY முறையைப் போன்ற ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, மக்களின் பணத்தையும் முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் GOV PAY முறையைப் போன்ற ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, மக்களின் பணத்தையும் முக்கியமான தரவுகளையும் திருடும் ஒரு மோசடி செயல்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

GOV PAY மூலம் பணம் செலுத்த வேறு எந்த இணையதளமும் இல்லை, மேலும் இதுபோன்ற நிதி மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.</p><h2>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களைச் செலுத்தும் முறை</h2><p>GOV PAY முறை மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களைச் செலுத்தும் முறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது மக்களுக்கு விஷயங்களை எளிதாக்குவதையும், நிதி மோசடிகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857a0e39-07a8-4678-a237-36effda89efe/26-6a9c5d811540f.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், GOV PAY போன்ற ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, மக்களின் பணத்தையும் முக்கியமான தரவுகளையும் தந்திரமாகத் திருடும் ஒரு மோசடி செயல்படுவதாக காவல்துறை கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>மக்களின் பணத்தை திருடும் மோசடி</h2><p>போலி இணையதளத்திற்கான இணைப்புகள், கைபேசிகளுக்கு SMS மற்றும் Whatsapp செய்திகளை அனுப்புவதன் மூலம் மக்களின் பணத்தைத் திருடுவதை இந்த மோசடி உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ca3079-62e5-45fa-a67c-bc7dbb1d0d79/26-6a9c5d81be34f.webp' /></p><p>
</p><p>
GOV PAY மூலம் பணம் செலுத்த இணையதளம் எதுவும் இல்லாததால், இதுபோன்ற போலி நிதி மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போக்குவரத்து பிரதி ஆய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. ஜே. சேனதீர அறிவுறுத்தினார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T18:21:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><p></p><h2>சஹ்ரான் பற்றிய தகவல்</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a78213c-7d06-4fe6-af66-88ece08a62bb/26-6a9bcbec560ba.webp' /></p><p>இந்தியாவின் சிறப்புப் காவல்துறை&nbsp; பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக காவல்துறை சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.</p><p></p><h2>ஒரு முக்கிய எச்சரிக்கை</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c093ded-dbfa-41de-9d85-b74d0e8da46e/26-6a9bcbeb86f67.webp' /></p><p>
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.</p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும்,அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்</h2><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).</p><p>[198CKN
]</p><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.</p><p></p><h2>வெளிவந்துள்ள வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a837440f-3fe7-488d-9e82-be4313082781/26-6a9bcbedba4b8.webp' /></p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் காவல்துறையினரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.</p><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T17:35:27+00:00</updated>
        </entry>
    </feed>
