<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-12T02:18:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக சட்டமா அதிபர் வழங்கிய நடவடிக்கை! விசாரணையை தீவிரப்படுத்தபோகும் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attorney-general-takes-action-against-namal-1789178687"></link>
            <id>https://ibctamil.com/article/attorney-general-takes-action-against-namal-1789178687</id>
            <summary type="text">சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஆலோசனை வழங்கியுள்ளது.&nbsp;</p><p>சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பணத்தில் ஒரு தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக நாமல் ராஜபக்சவை குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
அதன்படி, குறித்த ஆலோசனை தொடர்பில் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து(Motion), வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாமல் ராஜபக்சவை அந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில், 2014–2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் மொத்தம் 100 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் ராஜபக்ச கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-12T02:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p>
அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அந்த உறுப்பினர்கள் சிறைக்குச் சென்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் தானாகவே உயிரை மாய்த்துக்கொள்வார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T01:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்! கைப்பற்றப்பட்ட செங்கடலின் மற்றுமொரு நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-red-sea-city-captured-by-the-houthis-1789176264"></link>
            <id>https://ibctamil.com/article/another-red-sea-city-captured-by-the-houthis-1789176264</id>
            <summary type="text">ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, உலகின் 10 முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
அதன்படி, உலகின் 10 முதல் 12 சதவீத கடல்வழி வர்த்தகம் நடைபெறும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டாப் கடல்வழிப் பாதையின் இருபுறங்களையும் ஹூதிகளால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
உலகளாவிய தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சூழ்நிலையின் காரணமாக, செங்கடலில் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>முன்னதாக செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர்.</p><p>இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T01:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-women-s-team-enters-the-final-1789175541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-women-s-team-enters-the-final-1789175541</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
</p><p>
டுபாயில்&nbsp; நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.</p><h2>வெற்றி இலக்கு</h2><p>
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா&nbsp; ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.</p><p></p><p>

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா&nbsp; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><p>

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
</p><h2>இறுதிப் போட்டி</h2><p>
இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம&nbsp; 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p><p>
</p><p>
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற கையெறி குண்டுகள்! தாக்குதல்கள் குறித்து காவல்துறை சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
 

குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் மூன்று கல்கிசை காவல் பிரிவுக்குள்ளேயே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
 

மேற்கு மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களால் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து காவல்துறை சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.</p><p>
</p><p>
 

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தக் குழுக்கள் பெற்ற கையெறி குண்டுகள் இதுபோன்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. </p><p>அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்கால முயற்சிகளில் முப்படைகளையும் ஈடுபடுத்துவது குறித்து காவல்துறை பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>

 

இதற்கிடையில், நேற்று அதிகாலை (11) தெஹிவளையின் சிறிசங்கபோ மாவத்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது தந்தை காயமடைந்தார். </p><p>

 

உயிரிழந்தவர்கள் 17 வயதான கசுன் ரஷ்மிகா மற்றும் அவரது 11 வயதான சகோதரர் துமிந்தா கிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

அவர்களுடைய 55 வயதான தந்தை நலின் துசந்த பெரேரா, இந்தத் தாக்குதலில் தனது ஒரு காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-12T01:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் திசைக்காட்டிக்கு எதிராக களமிறங்கும் மகிந்தவின் மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-s-bud-party-take-compass-in-anuradhapura-1789174485"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-s-bud-party-take-compass-in-anuradhapura-1789174485</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை
வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான
எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பெரும் பேரணி</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள்
தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். </p><p>அதேபோன்று,
தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட
வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு,
தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை
மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. </p><p>அரச ஊழியர்களுக்கு
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள்
வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக்
குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய
ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று
வருகின்றன.</p><h2>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</h2><p> வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள்
நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323
கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான
சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
</p><p>
துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால
பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித்
திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை
வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.</p><p></p><p> அபிவிருத்தி
பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே
அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.</p><p>

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித்
தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும்
அடக்குமுறையையே செய்கின்றது.
</p><p>
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச்
செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில்
நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல்
கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:54:50+00:00</updated>
        </entry>
    </feed>
