<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-22T06:41:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vihara-construction-work-intensifies-kanyaya-area-1784700833"></link>
            <id>https://ibctamil.com/article/vihara-construction-work-intensifies-kanyaya-area-1784700833</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>

குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் தமிழ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவை மீறி&nbsp; கட்டுமானப் பணிகள்</h2><p>திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் காரியாலயத்தின் ஏற்பாட்டில், கன்னியா
வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் உள்ள தூபி பாதுகாக்கும் நடவடிக்கைக்கான
ஆரம்ப விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் W G M ஹேமந்த குமார,
திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுரங்க பெரேரா
மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர் .</p><p>நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ef5ce8-68c6-43e5-9e6b-3431f26bb5ff/26-6a6061fede286.webp' /></p><p>குறித்த தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருகோணமலை மேல்நீதிமன்றத்தின் HCT/Writ/590/2019 வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், அந்த உத்தரவை மீறி, புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் காணப்படும் பகுதியில் பெளத்த விகாரை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p></p><h2>விகாரைத்தொடர்பில் கேள்விகள்&nbsp;</h2><p>தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகின்ற நிலையில் தற்போது அங்கு எழுப்பப்படவுள்ள பௌத்த விகாரைத்தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/092db941-c9d9-4bdb-9be9-7b80256e3174/26-6a6061fdc97fb.webp' /></p><p>

இந்நிலையில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக, கன்னியா பகுதியின் வரலாற்று மற்றும் தொல்லியல் அடையாளங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன என்றும், தமிழர்களின் பாரம்பரிய மத மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் சில சமூக அமைப்புகளும் உள்ளூர் மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும், முன்னைய அரசுகளின் காலத்திலும் மக்கள் எதிர்ப்பும் சட்ட நடவடிக்கைகளும் காரணமாக தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டுமானம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் முன்னெடுக்கப்படுவது ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T06:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784700392"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784700392</id>
            <summary type="text">
கனடாவின் றொரன்டோவில் உள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலையில் (SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>
கனடாவின் றொரன்டோவில் உள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலையில் (SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான வைத்தியர் திலன் திசநாயக்க என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் என றொரன்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஆதாரங்கள்</h2><p>
</p><p>
மின்னணு சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையின் இணையவழி சிறுவர்கள் சுரண்டல் தடுப்புப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><br></p><p>
</p><p>
இதன் தொடர்ச்சியாக, 2026 பெப்ரவரி மாதத்தில் வைத்தியசாலையிலும் அவரது தனிப்பட்ட இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவரது அலுவலக கணினி உட்பட பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவர் ஆற்றிய மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
இந்த நிலையில், திசநாயக்க செவ்வாய்க்கிழமை டொராண்டோ நீதிமன்றத்தில் முற்படுத்தபடவிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><br></p><p>
</p><p>
இதன்படி, இந்தச் செய்தி குறித்து ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலை நிர்வாகம், காவல்துறையினரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கண்டித்துள்ளது.</p><p> 

இதேவேளை, நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள வைத்தியசாலை, இந்த விசாரணை குறித்துத் தெரிந்தவுடனேயே மருத்துவர் திசநாயக்கவை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து விடுப்பில் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், மருத்துவர் திசநாயக்கவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினர் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கவலைகள் இருந்தால் வைத்தியசாலையின் நோயாளி தொடர்புத் துறையை அணுகலாம் என்றும், இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T06:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற உத்தரவுக்கமையவே செம்மணியின் அடுத்த கட்ட நடவடிக்கை: அரசாங்கம் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/semmani-grave-excavation-next-steps-in-accordance-1784698632"></link>
            <id>https://ibctamil.com/article/semmani-grave-excavation-next-steps-in-accordance-1784698632</id>
            <summary type="text">செம்மணி மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய விசேட தூதுக்குழுவினரின் செம்மணி விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது என்றும் நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சர்வதேசத்தின் கண்காணிப்பு</h2><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், “செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e36c232-0bed-4e10-aeee-75fd144eaed8/26-6a605e9bdff36.webp' /></p><p> நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இதன் அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.</p><p>
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.” என கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T06:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் A9 வீதியில் வெடித்த மக்கள் போராட்டம் - இடையூறு விளைவித்த காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamils-demand-justice-over-chemmani-mass-graves-1784700434"></link>
            <id>https://ibctamil.com/article/tamils-demand-justice-over-chemmani-mass-graves-1784700434</id>
            <summary type="text"> யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செ...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி,
சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுலியை பார்வையிடுவதற்காக
வந்தனர்.
</p><p>
இதன்போது மயானத்துக்கு வெளியே, ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
</p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரது
அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d81ba2d-3fb5-4553-abbe-259813bb7178/26-6a6061959ac98.webp' /></p><p> எனவே எமது
பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.

தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான
கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.
</p><p>
கடந்தகால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினானுமே இந்த கொடூரம்
அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என்று தெரிந்தனர்.
</p><h2>&nbsp;ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு</h2><p>
போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக
மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31dbbe36-13dc-41c0-8a33-a7d8fe6dbbe8/26-6a606196762b3.webp' /></p><p>

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்
காவல்துறையினர்செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
</p><p>
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட
தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.</p><p> ஊடகவியலாளர்கள் அந்த குழுவினரிடம் கேள்வியெழுப்ப
முயற்சித்த வேளை அதற்கு இடமளிக்காது அவர்கள் சென்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T06:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு - முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bail-granted-to-former-navy-commander-1784699300"></link>
            <id>https://ibctamil.com/article/bail-granted-to-former-navy-commander-1784699300</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு இன்று கொழும்பு கோட்டை நீதவான்&nbsp;வசந்த அமரசேன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>இரண்டு சரீரப் பிணை</h2><p>2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல்கள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d96144-eedd-42fa-9586-8780576025b5/26-6a605efdcc628.webp' /></p><p>இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.</p><p>
 

அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன&nbsp;உத்தரவிட்டுள்ளார்.</p><p>
 

அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித மீதான பணமோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-yoshitha-rajapaksa-adjourned-august-7-1784694267"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-yoshitha-rajapaksa-adjourned-august-7-1784694267</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்‌சவின் மகன்&amp;nbsp;யோசித ராஜபக்சவுக்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கானது எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்‌சவின் மகன்&nbsp;யோசித ராஜபக்சவுக்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த உத்தரவானது&nbsp;ஹோமாகம மேல் நீதிமன்றத்தினால்&nbsp;நேற்று (21.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேற்படி வழக்கு நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>விசாரணை நடவெடிக்கை</h2><p>இந்த வழக்கானது பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதன் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db8167f-5d1b-437b-8c5f-7a7ae8cf17ad/26-6a604e6c37ec9.webp' /></p><p> </p><p>வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான யோசித திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.</p><p>மேலும் பிரதிவாதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகியிருந்தார்.
</p><p>இதன்படி&nbsp; யோசித்தவின் தனியார் வங்கிக் கணக்கில் 17 மில்லியன் ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை தொடர்பாக, பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மார்ச் 10 அன்று ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் நீதிமன்றம் அவரை ரூ.2 இலட்சம் மதிப்புள்ள இரண்டு ரொக்கப் பிணைகள் மற்றும் ரூ.50 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்ததுடன் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணி நேர நீர் விநியோகத் தடை - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-supply-disruption-some-areas-4-hours-today-1784697643"></link>
            <id>https://ibctamil.com/article/water-supply-disruption-some-areas-4-hours-today-1784697643</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று (22) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்&nbsp;என வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>நீர் விநியோகத் தடை</h2><p>
</p><p>
அதன்படி, குருணாகல் - கண்டி பகுதிகளுக்குட்பட்ட ராஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல பழைய சேவை நீர்த்தேக்கம், மெதவல புதிய சேவை நீர்த்தேக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f9eb9dd-9f49-44e9-ac96-39121a1a363e/26-6a60547e0fc99.webp' /></p><p> மற்றும் கல்கெதர சேவை நீர்த்தேக்கம், மாவத்தகம சேவைப் பகுதி ஆகிய திட்டங்களின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மட்டுமே நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eu-delegation-visits-chemmani-mass-grave-1784696919"></link>
            <id>https://ibctamil.com/article/eu-delegation-visits-chemmani-mass-grave-1784696919</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.</p><p>



அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.</p><p></p><h2>சர்வதேச விசாரணை</h2><p>இந்நிலையில்&nbsp; செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22.07.2026) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc85b268-f569-4a1a-835c-4c5bba4af6a3/26-6a60515219e20.webp' /></p><p>
காலை 8.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>

மேலும், செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவ்விடயம் தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக இருப்பதாகவும், அதனால் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p></p><p><b>மேலதிக தகவல் கஜி&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T05:08:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-from-central-bank-1784689890"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-from-central-bank-1784689890</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதமாக பேணுவதற்கு இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதமாக பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தீர்மானித்துள்ளது.</p><p>நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>பொதுப் பணவீக்கம்&nbsp;</h2><p>உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f28176a2-c1a2-450f-b1b3-3da118218cab/26-6a603642c512f.webp' /></p><p>2026 ஜூன் மாதத்தில் இலங்கையின் பொதுப் பணவீக்கம் ஆண்டடிப்படையில் 6.8% ஆக அதிகரித்துள்ளது.</p><p> இதற்கு பிரதானமாக உள்நாட்டு எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T04:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் பாய்ந்த முச்சக்கர வண்டி - இருவர் பலி - சிறுவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-dead-after-three-wheeler-plunges-into-falls-1784691269"></link>
            <id>https://ibctamil.com/article/two-dead-after-three-wheeler-plunges-into-falls-1784691269</id>
            <summary type="text">முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

 

</p><p>நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5ca3e93-8bc7-4450-ade6-bc499b6c009d/26-6a603e3ce6422.webp' /></p><p>காயமடைந்த இரு சிறுவர்களும் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்துத் தொடர்பான காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AaL-Kzp2fnU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T04:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் உலகம்: இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் அணு நிலையம் - சூளுரைக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strikes-iran-targets-aircraft-hangars-drone-sites-1784684088"></link>
            <id>https://ibctamil.com/article/strikes-iran-targets-aircraft-hangars-drone-sites-1784684088</id>
            <summary type="text">ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து 11-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், ஈரான்-அமெரிக்க மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதுஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து 11-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், ஈரான்-அமெரிக்க மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது</p><p>ஈரானின் இராணுவ கட்டளை மையங்கள், கடல்சார் கட்டமைப்புகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள்இ வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது.</p><p>ஈரானின் தென்மேற்கே உள்ள குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள பெஹ்பஹான் மற்றும் ஒமிதியே நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகின என்று அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரான் ரகசியமாக இடமாற்றம்&nbsp;</h2><p>ஈரானின் நடான்ஸ் (Natanz) பகுதிக்கு அருகில் மலைக்கு அடியில் மிக ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் அமெரிக்க ராணுவம் பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23fa6b0-cf97-44e4-9a69-632a8765d758/26-6a603260e8f60.webp' /></p><p>ஈரானின் பிற அணு உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்குள்ள ஆயிரக்கணக்கான அதிநவீன யுரேனியம் சுத்திகரிப்பு சென்ட்ரிஃபியூஜ்களை (Centrifuges) இந்த பாதுகாப்பான மலைக் குடைவுப் பகுதிக்கு ஈரான் ரகசியமாக இடமாற்றம் செய்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த பங்கர்-பஸ்டர் (Bunker Buster) குண்டுகளாலும் கூட எளிதில் ஊடுருவ முடியாத அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், தங்களது அணுசக்தி திட்டத்தை பாதுகாக்கும் கடைசி அரணாக ஈரான் இதனைப் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்த மையத்தின் நுழைவாயில்கள் மற்றும் உள்கட்டமைப்பை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>போர் கட்டுக்கடங்காத நிலை</h2><p> </p><p>தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலும் "போரை விரிவுபடுத்தும்" என்று ஈரான் எச்சரித்ததுடன், அப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் நலன்களைக் குறிவைப்பதாகவும் சூளுரைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8a2ef5-8cdd-46e6-b96e-139fdbdbd44d/26-6a603262004a8.webp' /></p><p>ஈரானின் மிக முக்கியமான இந்த நிலத்தடி அணுசக்தி மையத்தைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் கட்டுக்கடங்காத நிலையை எட்டும் என அச்சம் எழுந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T03:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக புதையல் தோண்டிய முன்னாள் அமைச்சரின் மகன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-s-son-arrested-1784686269"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-s-son-arrested-1784686269</id>
            <summary type="text">அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமைச்சரொருவரின் மகன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹபரணை - திருகோணமலை வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமைச்சரொருவரின் மகன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>சந்தேக நபர்கள் கைது&nbsp;</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b08c09-2f9e-43a1-a4d4-3edb486857fa/26-6a602932c4992.webp' /></p><p>ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.</p><p>பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
</p><p>
சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T02:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730"></link>
            <id>https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730</id>
            <summary type="text">மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்த துப்பாக்கி பிரயோகத்தை இன்று (22-07-2026) அதிகாலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>

காரில் வந்த ஆயுதமேந்திய குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு அவர்கள் கைத்துப்பாக்கி (Pistol) ரக ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ec8c9-52c7-4f4c-b0ce-7bc6d257cd0d/26-6a601b00ad734.webp' /></p><p>

தாக்குதலுக்கு இலக்கான வீடு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிவதற்கும் கந்தற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad459c36-9459-4b9e-8a53-cd5407d93933/26-6a60160b07310.webp' /></p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.4 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மோசடி! சிக்கபோகும் மகிந்தவின் புதல்வர்கள் - நாடாளுமன்றில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-sons-named-in-ev-permit-scam-1784673146"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-sons-named-in-ev-permit-scam-1784673146</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அனுமதிப்பத்திரங்கள் </h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி ருவன்திலக ஜயகொடி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7193d97b-c02a-40eb-bf16-a9b6edaf9f97/26-6a5ff37c69a64.webp' /></p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிகக் குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை குறித்த ருவன்திலக ஜயகொடி சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அறிவியல் அடிப்படை</h2><p>எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ருவன்திலக ஜயகொடி குற்றம் சாட்டிள்ளார். </p><p>

இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5107e88-f38d-475a-8788-1c52b6b35972/26-6a5ff37bb6a38.webp' /></p><p>

இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக ருவன்திலக ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமறைப்படுத்தப்பட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாரிய முறைகேடுகள்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290"></link>
            <id>https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290</id>
            <summary type="text">சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறப்பு விசாரணை</h2><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6ca7fd-80c6-4256-b5f7-c419697a414a/26-6a60134bc334b.webp' /></p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, அப்போதைய சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:52:35+00:00</updated>
        </entry>
    </feed>
