<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-30T08:30:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050"></link>
            <id>https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050</id>
            <summary type="text">தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (என்கிற &#039;பிள்ளையன்&#039;) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (என்கிற 'பிள்ளையன்') தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு&nbsp; உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மனு ஜனவரி 19, 2027 அன்று விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ae0e68-c2a0-4c66-a7c1-542cbc3892a3/26-6a6b08022c76e.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஏவுகணைகளுக்கு எதிராக எதிர் தாக்குதலை ஆரம்பித்த ஜோர்தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088"></link>
            <id>https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&amp;nbsp;ஈரான் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&nbsp;</p><p>ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு ஜோர்தானில் உள்ள இராணுவத்தலங்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் ஜோர்தான் இந்நகர்வை மேற்கொண்டு உள்ளது.&nbsp;</p><p>ஈரானிய ஏவுகணைகளை ஜோர்தான் வீழ்த்தியதுடன், நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளது.</p><p></p><h2>ஈரானிய ஏவுகணை</h2><p>ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளைத் தனது வான்வெளியில் இடைமறித்து அழித்ததாக ஜோர்தானின் ஆயுதப் படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c10b99-4d8c-4552-842c-056b23deeff1/26-6a6b0116400a7.webp' /></p><p>மேலும் அந்த அறிக்கையில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆனாலும் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், நாட்டையும் அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கடந்த புதன்கிழமை காலை ஜோர்டான் மேலும் ஐந்து ஏவுகணைகளை இடைமறித்ததாக உறுதிப்படுத்திய நிலையில் ஈரானின் தற்போதைய இலக்குத் தாக்குதல் நடந்துள்ளது. அவையும் அதன் வான்வெளியில், ஈரானிலிருந்து ஏவப்பட்டவை என்று கூறப்படுகிறது.
</p><p>
தற்போது, ​​ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் கட்டளைத் தலைமையகத்தைத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவே இது செய்யப்பட்டதாக அது கூறுகிறது.</p><h2>ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை</h2><p>அந்த ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

அந்தத் தாக்குதலை புதன்கிழமை அன்று வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb19cd2-8629-4cc4-98c9-51354ef20a1c/26-6a6b011713cd8.webp' /></p><p> </p><p>ஜோர்டான் மீதான இந்தத் தாக்குதல்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது சவூதி அரேபியா பதிலடித் தாக்குதல்களை நடத்திய புதன்கிழமை நிகழ்வுகளும் தற்போது இந்தப் பிராந்தியத்தில் சில கவலைகளை ஏற்படுத்தி வருகின்றன.</p><p>

இந்தப் போர் விரிவடைந்து, மற்ற நாடுகளையும் தனக்குள் இழுத்துவிடும் என்ற கவலை நிலவுகிறது. அதைத்தான் வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் தவிர்க்க விரும்புகின்றன.</p><p> எனவே, அமெரிக்காவும் ஈரானும் ஆகிய இரு தரப்பினரும் தற்சமயம் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த நெருக்கடிக்கு இராஜதந்திரத் தீர்வுகளை முன்னெடுக்க வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்து வருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374"></link>
            <id>https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374</id>
            <summary type="text">அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினைபொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் 

இலங்கைப் நாடாளுமன்றத்திற்குச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினைபொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் 

இலங்கைப் நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினை பொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நுகர்வுப் பரிசோதனை</h2><p>அத்துடன், நாடாளுமன்றத்தின் 41 வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை (Fuel Efficiency Test) சுற்றுநிருப விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42afcb41-6ab4-4703-bc03-862fafd4c23d/26-6a6b0570c5e1b.webp' /></p><p>
2016 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின்படி, ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனைக்குப் பின்னரும் 12 மாதங்கள் கழித்து அல்லது 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு அல்லது எஞ்சின் தொடர்பான முக்கிய பழுதுபார்ப்புக்குப் பிறகு எது முதலில் வருகிறதோ, அதன் பிறகு மீண்டும் எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். </p><p>

ஆனால் இப்பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தீவிர சேவைக்காலம்</h2><p>நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 12 வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 5 அதிகாரிகள் கொண்ட குழுவினால் கடந்த ஆண்டின் மே 28 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99744e38-919d-42cd-8c99-25419a5720ce/26-6a6b056fe5c65.webp' /></p><p>
அத்தோடு நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (Duty-free Vehicle Permits) வழங்குவது தொடர்பான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிரேஷ்ட நிர்வாகப் பதவியொன்றில் 6 ஆண்டுகள் தீவிர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்யாத மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறைப்படியான அனுமதி தொடர்பான ஆவணங்கள் தணிக்கைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் விஜயமாக பூட்டான் சென்றார் ரணில் விக்ரமசிங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-ranil-departs-for-bhutan-1785392276"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-ranil-departs-for-bhutan-1785392276</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>முக்கிய நோக்கங்கள்</h2><p>ரணில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8319265-610e-42e7-8817-8125ec2bdcef/26-6a6b002f8126d.webp' /></p><p>பூட்டானிலுள்ள பௌத்த விகாரைகளை வழிப்படுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் அழைப்பு மறைக்க முயற்சிக்கும் மறுபக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-truth-that-gota-s-secret-call-is-trying-hide-1785392625"></link>
            <id>https://ibctamil.com/article/the-truth-that-gota-s-secret-call-is-trying-hide-1785392625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தன்னை சிவில் செயற்பாட்டாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தன்னை சிவில் செயற்பாட்டாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. </p><p>அந்த உரையாடல், முன்னாள் ஜனாதிபதியைப் பற்றிய பொதுமக்களின் அனுதாபத்தை அதிகரிக்கக்கூடும் என சில ஊடகங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஆனால், அந்த உரையாடலின் பின்னணி மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் இராணுவ வாழ்க்கையைப் பற்றிய சில தகவல்கள், அவர் முன்பு வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்படுகின்றன எனக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>சமீபத்திய தொலைபேசி உரையாடல்</h2><p>
அந்த சமீபத்திய தொலைபேசி உரையாடலில், தாம் 20 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றிய பின்னர் சட்டப்படி ஓய்வு பெற்றதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.</p><p> இருப்பினும், 2013 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று The Island பத்திரிகையில் ஊடகவியலாளர் ஷமீந்திர பெர்னாண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறிய தகவல்கள் வேறுபட்டதாகக் குறிப்பிடப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/988082d7-cd0f-4f54-abf1-449e5c98c14d/26-6a6af3eb9a135.webp' /></p><p>
</p><p>
1990 மார்ச் மாதத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் இரண்டாவது ஈழப் போர் தொடங்கியது. </p><p>வடக்கிலிருந்த இராணுவ முகாம்களுக்கு கடல் மற்றும் வான்வழியே மட்டுமே பொருட்கள் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. </p><p>அந்நேரத்தில், லெப்டினன்ட் கர்னலாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் வசித்த பெற்றோருடன் இணைவதற்காக இராணுவத்தை விட்டு வெளியேறுமாறு அவரது மனைவி அயோமா ராஜபக்ச வலியுறுத்தியதாக அந்த நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.</p><p>

ஆரம்பத்தில் அதற்கு சம்மதிக்காத அவர், பின்னர் பிரிகேடியர் விஜய விமலரத்னவின் உதவியுடன் இராணுவப் பணியிலிருந்து விலகும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p> இதற்கிடையில், அவர் ஓய்வு பெற உள்ளதாக தென்னிலங்கையின் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னவை அதிருப்தியடையச் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> பின்னர் கோட்டாபய ராஜபக்ச கொத்தலாவல பாதுகாப்பு அகாடமியின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.</p><p>

1971 ஏப்ரல் 26 அன்று லெப்டினன்டாக இராணுவத்தில் இணைந்த அவர், சிக்னல் படை, சிங்கள ரெஜிமெண்ட், ரஜரட்ட ரைஃபிள்ஸ் மற்றும் கஜபா ரெஜிமெண்ட் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. </p><p>1991 மார்ச் 2 அன்று ரஞ்சன் விஜயரத்ன படுகொலை செய்யப்பட்ட பின்னர், அதே ஆண்டின் நவம்பர் 1 அன்று அவர் முழுமையாக இராணுவத்தை விட்டு அமெரிக்கா சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>

2012 ஆம் ஆண்டின் மற்றொரு சர்ச்சை</h2><p>

இதற்கு மாறாக, 2012 ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, முன்னணி பத்திரிகை ஒன்றில்&nbsp; பத்திரிகையின் ஆசிரியர் ஃப்ரெட்ரிகா ஜான்ஸுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92df3519-fe27-4471-b099-2302b1fd21ae/26-6a6af3ec4d276.webp' /></p><p>
</p><p>
அவரது மனைவியின் செல்லப்பிராணியை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், பொதுச் சொத்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற ஜான்ஸ் தொடர்புகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அந்த உரையாடலின் போது, கோட்டாபய ராஜபக்ச கடுமையான வார்த்தைகளில் திட்டியதுடன், அவரை சிறையில் அடைப்பதாகவும், மக்களால் கொலை செய்யப்படும் நிலை உருவாகும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. </p><p>எனினும், அந்த உரையாடலை சமூக ஊடகங்களில் வெளியிடாமல், "Gota Goes Berserk" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>
சமீபத்திய உரையாடலைச் சுற்றியுள்ள விமர்சனங்கள்</h2><p>

2022 மக்கள் எழுச்சிக்குப் பிறகு அதிகாரத்தை இழந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அவரை ஆவேசப்படுத்தி, அந்த உரையாடலை ரகசியமாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது, பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d05be4f-dcef-4bab-ae67-ad9323572c63/26-6a6af3ed02821.webp' /></p><p>

சில அரசியல் விமர்சகர்கள், குறிப்பாக துலான் சேனாதீர போன்றோர், அதிகாரத்தில் இருந்த காலத்தில் எதிர்கொள்ளத் தயங்கியவர்களே தற்போது முன்னாள் ஜனாதிபதியை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர் என்றும், இதை "Punching Down" எனப்படும், அதிகாரமற்ற நிலையில் உள்ள ஒருவரை குறிவைத்து தாக்கும் செயல் எனவும் விவரித்துள்ளனர்.
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட நபரின் சம்மதமின்றி தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்து வெளியிடுவது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக ஒழுக்க விதிகளுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் முரணானதாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.</p><p></p><p>
</p><h2>
அதிகாரத்தில் இருந்த காலத்தின் சர்ச்சைகள்</h2><p>

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நோயார் மீதான தாக்குதல், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் அவரது பெயர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோல், 2012 வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம், 2013 ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு, MiG-27 விமான கொள்முதல் விவகாரம், டி.ஏ. ராஜபக்ச அருங்காட்சியக நிதி முறைகேடு போன்ற விடயங்களிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிர்வாக அதிகாரங்களை விரிவுபடுத்தியமை, குற்றப்புலனாய்வு அதிகாரி ஷானி அபயசேகரவுக்கு எதிரான நடவடிக்கைகள், சிவில் நிர்வாகத்தை இராணுவமயமாக்கியதாக எழுந்த விமர்சனங்கள், சுனில் ரத்நாயக்க மற்றும் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு, கொவிட் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை பாதித்த கட்டாய தகனம், 2019 வரி குறைப்புகள் மூலம் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆகியவை தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்படாமல் இருக்க அவர் தாக்கல் செய்த மனுக்களின் பின்னணியில், எதிர்காலத்தில் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதி அளிக்க முடியாது என அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T07:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/usd-lkr-forecast-will-usd-lkr-go-up-or-down-1785393678"></link>
            <id>https://ibctamil.com/article/usd-lkr-forecast-will-usd-lkr-go-up-or-down-1785393678</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (30.7.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (30.7.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.48 ரூபாயாகவும், விற்பனை விலை 340.59 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. </p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>நேற்று (24) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி, கொள்வனவு விலை 331.59&nbsp; ரூபாயாகவும், விற்பனை விலை 340.71 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51c2c60-a2f9-444e-830d-9dd348987186/26-6a6af27d197e9.webp' /></p><p>இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.56 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada)&nbsp; டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி&nbsp;243.54 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T07:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-detain-suspect-linked-to-wattala-shooting-1785392246"></link>
            <id>https://ibctamil.com/article/police-detain-suspect-linked-to-wattala-shooting-1785392246</id>
            <summary type="text">வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் ஜூலை 23 அன்று நடைபெற்ற ஒரு விருந்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் ஜூலை 23 அன்று நடைபெற்ற ஒரு விருந்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இந்தக் கைது நடவடிக்கை மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (28.07.2026) மாலை மேற்கொள்ளப்பட்டது.</p><p>கைது செய்யபட்ட நபர்&nbsp;சீதுவ, முகலங்காமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வடக்கு குற்றப் பிரிவு</h2><p>
</p><p>
 

</p><p>கைது செய்யபட்ட சந்தேக நபர்&nbsp;துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள்&nbsp;பயன்படுத்திய வாடகைக் காரைப் பெறுவதற்காக இவர் தனது&nbsp;வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றி, குற்றத்திற்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5de5640-9d81-4d84-9e80-f38972809592/26-6a6af39d9527c.webp' /></p><p>
 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp; மேற்கு மாகாணத்தின் வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monk-remanded-over-assault-in-temple-dispute-1785390170"></link>
            <id>https://ibctamil.com/article/monk-remanded-over-assault-in-temple-dispute-1785390170</id>
            <summary type="text">ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். </p><p>

அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த தேரரை வரும் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல முறைப்பாடுகள்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதி தேரர் காலமானதைத் தொடர்ந்து, விகாராதிபதி பதவிக்காக அளுகெட்டியாவே சீலவம்ச தேரர் மற்றும் கேசல்போத மேதாங்கர தேரர் ஆகிய இருவருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது.
</p><p>
இதற்கு முன்னரும் இவர்களுக்கிடையேயான மோதல்கள் தொடர்பாக மதியங்கனை காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31826035-3d85-4f54-aaf1-d02fa5b70910/26-6a6ae76b4b75f.webp' /></p><p>

அத்தோடு இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனைகளும் (Suspended Sentences) விதிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் கடந்த 24 ஆம் திகதி, தான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் ஒன்றுடன் விகாரைக்கு வருகை தந்த சீலவம்ச தேரர், அங்கு தங்கியிருந்த மேதாங்கர தேரரிடம் விகாரையின் சாவிக்கொத்தைக் கேட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சீலவம்ச தேரர் மேலும் இரு நபர்களுடன் சேர்ந்து மேதாங்கர தேரரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>

இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த மேதாங்கர தேரர் மதியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3560aa09-b3ee-4bd4-b06f-cdc0dd6ac48d/26-6a6ae76a9d1ae.webp' /></p><p>அராவ பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான சீலவம்ச தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

அத்தோடு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏனைய இரு சந்தேகநபர்களும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவு - யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/condolences-for-late-journalist-sabeswaran-family-1785386279"></link>
            <id>https://ibctamil.com/article/condolences-for-late-journalist-sabeswaran-family-1785386279</id>
            <summary type="text">மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதுடன் அவரது குடும்பத்துக்கு யாழ். ஊடக
மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.
</p><p>
நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல்
பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய
பெருமையும் அவரை சாரும்.</p><p></p><p> </p><h2>அர்ப்பணிப்புள்ள பணிகள்&nbsp;</h2><p>அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி
ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு
பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4fa39e-4c00-4346-b9e6-cc85ebd5c007/26-6a6aecc6a0f3b.webp' /></p><p>தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின்
குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த
ஆளுமையுமாவார். </p><p>அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான
செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு
வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.</p><p> அவரது உயிரும் உடலும்
மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக
வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.
</p><p>
அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும்
உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனச் சோதனையில் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-drivers-issue-prohibition-orders-during-vehicle-1785389638"></link>
            <id>https://ibctamil.com/article/24-drivers-issue-prohibition-orders-during-vehicle-1785389638</id>
            <summary type="text">பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்பு வாகனச் சோதனையின்போது மொத்தம் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
 

வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயா காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் மோட்டார் வாகனப் பரிசோதனை அதிகாரிகளுடன் இணைந்து, அங்கீகரிக்கப்படாத கூடுதல் பாகங்கள் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திர நிலையில் பழுதடைந்த வாகனங்கள் மீது ஒரு சிறப்புப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.</p><p>இந்த ஆய்வில்&nbsp; ​​சாலைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் மாற்றங்களுடன் இயக்கப்பட்டு வந்த 24 வாகனங்களை அவர்கள் கண்டறிந்தனர்.&nbsp;</p><p></p><h2>24 வாகனங்களுக்குத் தடை</h2><p>
 

இதனைத் தொடர்ந்து, வாகனங்களின் ஓட்டுநர்கள், அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் சரிசெய்யப்படும் வரை வாகனங்களை இயக்குவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53833561-4e43-4bbb-87ed-a1d6397cdb78/26-6a6ae97d5ab3f.webp' /></p><p>
</p><p>
 

ஓட்டுநர்களுக்குத் தங்களது வாகனங்களில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும், அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை அகற்றவும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பொதுச் சாலைகளில் இயங்கும் வாகனங்கள் சட்ட மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற வாகனச் சோதனை நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா உக்கிர தாக்குதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-killed-2-children-injured-in-us-strike-on-iran-1785390332"></link>
            <id>https://ibctamil.com/article/3-killed-2-children-injured-in-us-strike-on-iran-1785390332</id>
            <summary type="text">அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றது.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p>அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் ஒரு தம்பதியினரும் அவர்களது இரண்டு வயது குழந்தையும் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடுமையான தாக்குதல் அலை</h2><p>குடும்பத்தின் மற்ற இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் ஹோர்மோஸ்கான் துணை ஆளுநர் அஹ்மத் நஃபிசியை மேற்கோள் காட்டி&nbsp;செய்தி வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528b612b-35f6-4553-9c2a-4b08828c117c/26-6a6ae844ea3b6.webp' /></p><p>கிஷ் தீவிலும், புஷேரிலும், ஈரானின் எண்ணெய் தொழிலின் மையமான குசெஸ்தான் மாகாணத்தின் நான்கு இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்திருந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785391252"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785391252</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 1,313,294 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 46,330 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 370,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,470 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332336dd-35e6-49f3-ace1-2271a1c7efdc/26-6a6ae96be79ec.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 339,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,540 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 324,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T05:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[A9 பிரதான வீதியில் கோர விபத்து - யாழ் திரும்பிய இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-two-youth-dead-1785388701"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-two-youth-dead-1785388701</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (30.07.2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து இன்று (30.07.2026) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 25 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>


தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a63ea01-d832-4b9d-a078-4267a89fff2c/26-6a6ae126951b1.webp' /></p><p>



விபத்தில் வாகனத்தில் பயணித்த 25 வயதுடைய இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
</p><p>


எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிட்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relief-for-people-affected-by-cyclone-dithva-1785385642"></link>
            <id>https://ibctamil.com/article/relief-for-people-affected-by-cyclone-dithva-1785385642</id>
            <summary type="text">கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கும் டித்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கும் டித்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரண காசோலைகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p>இந்த நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி நேற்று (29.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இதில்&nbsp;கிண்ணியா பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான், கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். நியாஸ் மற்றும் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><h2>நிவாரண காசோலைகள்</h2><p>தித்வா புயலினால் வியாபார ரீதியாகப் பாதிப்புகளை எதிர்கொண்ட 100 வர்த்தகர்களுக்காக மொத்தமாக 8 மில்லியன் (80 லட்சம்) ரூபா பெறுமதியான நஷ்டஈட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f171f5-40f2-4330-8464-8f21fd7e4c7c/26-6a6adedeb8831.webp' /></p><p>வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி விக்ரமரத்னவின் மரணம்...! பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரி வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-igp-cd-wickramaratne-inquest-details-out-1785386451"></link>
            <id>https://ibctamil.com/article/ex-igp-cd-wickramaratne-inquest-details-out-1785386451</id>
            <summary type="text">மறைந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான வழக்கில் அவரது பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான வழக்கில் அவரது பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.</p><p>

கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் 28 அம் திகதி நடைபெற்ற விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

காவல்துறை சார்ஜன்ட் (697) சுசந்த இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>உத்தியோகபூர்வ துப்பாக்கி</h2><p>இதனடிப்படையில், சி.டி விக்ரமரத்ன தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி என்னிடம் இருந்து வாங்கிச் சென்றார் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேல் மாகாண தெற்கு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சாட்சியங்களை வழிநடத்தினர்.</p><p>
</p><p></p><p>விசாரணையில் மேலும் தெரிவித்த அவர், “நான் முன்னாள் காவல்துறை மா அதிபரின் பிரத்தியேகப் பாதுகாப்பு அதிகாரியாக 16 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளேன். </p><p>

ஆனால், அவர் ஒருபோதும் எனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பரிசோதிப்பதற்காகக் கேட்டதில்லை.</p><p></p><h2>துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்&nbsp;</h2><p> </p><p>அன்றைய தினம் அவர் எனது துப்பாக்கியைப் பெற்றுக்கொண்ட பின்னர் தோட்டாக்களையும் கேட்டார்.</p><p>
வழக்கமாக உடற்பயிற்சிக்குச் செல்லும்போது அவர் காலணிகளை (Shoes) அணிவார் ஆனால், அந்தத் துரதிர்ஷ்டவசமான நாளில் அவர் காலணிகளை அணியவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11aa9792-bb6e-40bb-9847-c1040e6c33ab/26-6a6adaa9283bf.webp' /></p><p>உடற்பயிற்சிக்குச் செல்லும்போது அவர் ஒருபோதும் தண்ணீர்ப் போத்தல்களை எடுத்துச் செல்வதில்லை.</p><p> 

நான் அவரிடம் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் கொடுத்த பிறகு, ஒரு போத்தல் தண்ணீரைக் கொண்டு வருமாறு என்னிடம் கூறினார்.
</p><p>
நான் அங்கிருந்து வெளியேறிய அடுத்த கணமே, துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது.</p><p></p><h2>பயன்படுத்தப்பட்ட தோட்டா</h2><p> 

நான் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அவர் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். </p><p>

வீட்டிலிருந்த மற்றவர்களின் உதவியுடன் அவரை உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d44979-8f38-4cc1-823f-acafe3c933e4/26-6a6adaa86bf16.webp' /></p><p> 

பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிந்தேன்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதுகாப்பு அதிகாரியின் சாட்சியத்தைப் பதிவு செய்துகொண்ட நீதவான், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகளை (Spent Cartridges) அறிக்கைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் (Government Analyst) சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இதனிடையே, சி.டி விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) திறந்த தீர்ப்பை (Open Verdict) வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T05:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[​நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-namal-rajapaksa-deferred-till-october-1785388020"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-namal-rajapaksa-deferred-till-october-1785388020</id>
            <summary type="text"> நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த உத்தரவானது இன்று (30.7.2026) கொழும்பு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p> நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த உத்தரவானது இன்று (30.7.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ea6f98-3eaf-466e-a86d-464d651eb291/26-6a6add885e09b.webp' /></p><p>இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
</p><p>


இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">HATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:13:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் ஏற்றுமதித் துறையில் புதிய மைல்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-1000-new-exporters-join-sl-export-sector-1785384345"></link>
            <id>https://ibctamil.com/article/over-1000-new-exporters-join-sl-export-sector-1785384345</id>
            <summary type="text">ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனை தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஏற்றுமதியாளர்கள்&nbsp;</h2><p>இதன்போது சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்கள் தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

2025 ஆம் ஆண்டில் 650 வரையான ஏற்றுமதியாளர்களும் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் 350 இற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88358411-a0fd-423f-96c3-3e54ae4bd821/26-6a6ad0495019b.webp' /></p><p>அத்தோடு தகவல் தொழில்நுட்பம், உணவு, குடிபானம், மரக்கறி, பழங்கள், கடல் உணவுகள், தேயிலை மற்றும் பெறுமதி சேர் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளில் அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாக மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான 140 இற்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் வருடாந்தம் 1000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதே தமது இலக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப் போர் பாதையில் மத்தியகிழக்கு: ஈரானை பயங்கரமாக தாக்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-powerful-strikes-on-iran-1785381260"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-powerful-strikes-on-iran-1785381260</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க - சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.</p><p></p><h2>வலுவான பதிலடி&nbsp;</h2><p>அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2a467a-48ee-4bb8-9961-a306c28aac80/26-6a6ac52c781fe.webp' /></p><p>இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான வசதிகள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் நடந்த தாக்குதல்களில் இருவர் காயமடைந்ததாகவும், வடமேற்கில் உள்ள குசெஸ்தான் மாகாணத்திலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.</p><p>இதற்கிடையில், எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் இரண்டு இயற்கை எரிவாயுக் கப்பல்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் தீப்பிடித்ததாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.</p><p> </p><p>பல நாட்கள் நிலவிய அமைதிக்குப் பிறகுஇ பல முனைகளில் ஏற்பட்ட மோதல்கள், ஒரு முழுமையான போர் மீண்டும் தொடங்குவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் சண்டை - மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-ordered-to-pay-ceb-losses-after-protest-1785380254"></link>
            <id>https://ibctamil.com/article/man-ordered-to-pay-ceb-losses-after-protest-1785380254</id>
            <summary type="text">உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p></p><h2>கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்</h2><p>

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8707e409-a0af-498f-b65a-237f0850c094/26-6a6abff13a1c6.webp' /></p><p>பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
</p><p>
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p></p><h2>மின்சார சபைக்கு இழப்பு</h2><p>

நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c79e94-62ab-4923-9d9c-3f87fb1af2c1/26-6a6abff04a69c.webp' /></p><p>விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாக்கு எதிராக திரும்பும் FIFA - மைதானத்தில் உச்சக்கட்ட வன்மம்: சிக்கலில் மெஸ்ஸி அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.</p><p>ஃபாக்லாந்து தீவுகளுக்கு உரிமை கோரும் பதாகையை காட்சிப்படுத்தியது உட்பட பல விதிமீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட உள்ளளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.</p><p>ஃபிஃபா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாகுபாடு காட்டும் கோஷங்கள்&nbsp;</h2><p>இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fec4d9f9-04a1-48c6-ae48-bad9d73b0e95/26-6a6ab2360cfef.webp' /></p><p>அத்துடன் பல அர்ஜென்டினா போட்டிகளின் போது, ​​பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், மீண்டும் மீண்டும் தாமதமாகத் தொடங்கப்பட்ட போட்டிகள், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியது, அணி மற்றும் பார்வையாளர்களால் காட்டப்பட்ட பொருத்தமற்ற செய்திகள், மற்றும் ரசிகர்களால் வீசப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்தும் ஃபிஃபா விசாரணை நடத்துகின்றது.</p><p>அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஈடுபட்ட வீரர்கள் மீது தனி ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் அர்ஜென்டினா வீரர்களான நஹுயல் மோலினா மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ், மற்றும் அர்ஜென்டினா அதிகாரியான ராபர்டோ அயலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T02:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/it-may-rain-frequently-today-1785374618"></link>
            <id>https://ibctamil.com/article/it-may-rain-frequently-today-1785374618</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>

அத்தோடு, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0483695-3741-47bf-b6c1-5bac67302857/26-6a6aa911c3ddc.webp' /></p><p>

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில், காலநிலை மாற்றங்களால ஏற்படக்குகூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T02:41:33+00:00</updated>
        </entry>
    </feed>
