<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-05T18:22:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்ன நேர்ந்தாலும் எதிர்கொள்ளத் தயார் : நாடு திரும்பவுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/i-will-return-to-my-people-sheikh-hasina-1785953388"></link>
            <id>https://ibctamil.com/article/i-will-return-to-my-people-sheikh-hasina-1785953388</id>
            <summary type="text">&amp;nbsp;தான் வங்கதேசத்திற்கு திரும்பவுள்ளதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தான் வங்கதேசத்திற்கு திரும்பவுள்ளதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
</p><p>

தற்போது இந்தியாவில் தங்கியுள்ள அவர் இன்று (05)புதன்கிழமை காணொளி வாயிலாக ஆற்றிய உரையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாடு திரும்புவதற்கான நோக்கம்</h2><p>நாட்டிற்கு மீண்டும் திரும்புதல்அதிகாரத்தை கோருவதற்காக அல்ல என்றும், மாறாக நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e7990e-664c-4aef-bdf5-3a3eafd9c669/26-6a737ee91c0e2.webp' /></p><p>"அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்," என்று மேலும் கூறினார்.
</p><p>
 மக்கள் "மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும்", அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்ததாக தெரிவித்தார்.</p><p></p><h2>வெற்றி மாதத்தில் நாடு திரும்புதல்</h2><p>
</p><p>



"டிசம்பர் எங்கள் வெற்றி மாதம். அதனால், நான் டிசம்பர் மாதத்தில் திரும்பி செல்ல விரும்புகிறேன். நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b49bc31-065e-4f14-b2ae-af3a040cf487/26-6a737ee9c27aa.webp' /></p><p>
</p><p>
தற்போதைய நெருக்கடி குறித்துப் பேசுவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், முக்கிய தேசிய தலைவர்களுக்கும், நமது விடுதலைப் போரின் முப்பது லட்சம் தியாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
</p><p>
மேலும், 1975-ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15-ஆம் திகதி நான் இழந்த எனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூர்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><p>



 இராணுவ புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது, ​​அவர் கண்ணீர் விட்டு அழுதார்.</p><p> தன் நாட்டிலிருந்து தான் "வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோதிலும்", தன் மக்களிடமிருந்து "ஒருபோதும் பிரிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

 ஜனநாயகத்திற்கான தனது நாட்டின் 'போராட்டத்திற்கு' சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T18:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-agreement-centered-hormuz-amidst-1785948271"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-agreement-centered-hormuz-amidst-1785948271</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>இந்தச் செயல்பாட்டில் எந்தவொரு வெளித்தரப்பினரும் தலையிடாத பட்சத்தில், இந்த திட்டம் சாத்திய போக்கை அடையும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இரு கரையோர நாடுகளாக, வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை அமைப்பது குறித்து ஈரானும் - ஓமானும் கடந்த இரண்டு மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.</p><p></p><h2>தொழில்முறை சார்ந்த பேச்சுவார்த்</h2><p>இந்நிலையில் இந்த போச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65096043-6858-4ae4-9f9c-043a27f227c5/26-6a7370c301244.webp' /></p><p>“நமது நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரிகள், இந்த முன்மொழிவை தொழில்நுட்பம், சட்டம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கண்ணோட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர்.</p><p>இந்த பேச்சுவார்த்தைகளை தொழில்முறை சார்ந்தவைமற்றும் பயனுள்ளவை. </p><p>மேலும் முன்மொழியப்பட்ட பாதையின் புவியியல் ஆயக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>முக்கியப் பரிசீலனை</h2><p>முக்கியப் பரிசீலனைகள் மற்றும் உடன்பாட்டு அம்சங்கள் அடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டறிக்கை, அதன் இறுதிக்கட்ட ஆய்வு மற்றும் வரைவுப் பணிகளில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de39be0b-0e33-471a-ba93-a81ad8295482/26-6a7370c3b0225.webp' /></p><p>ஈரான்-ஓமான் இடையேயான உடன்பாடு மட்டுமே அந்த மூலோபாய நீர்வழிப்பாதை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.</p><p>அத்தோடு, பாதுகாப்பு நிலைமையானது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் பிணைந்துள்ளது”&nbsp; என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T18:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகும் ஈரான் ஜனாதிபதி: வெளியானது சர்ச்சையின் உண்மை நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pezeshkian-rejects-resignation-rumors-1785947404"></link>
            <id>https://ibctamil.com/article/pezeshkian-rejects-resignation-rumors-1785947404</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பதற்ற சூழலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நிராகரித்துள்ளார்.மேலும், தனது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பதற்ற சூழலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நிராகரித்துள்ளார்.</p><p>மேலும், தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததோடு, தான் பதவியில் நீடித்து தனது பணிகளைத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.</p><p>அவரது நிர்வாகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு பேட்டியில், தனது நிர்வாகம் நாட்டின் ஆயுதப் படைகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக பெஷெஷ்கியன் வலியுறுத்தினார்.</p><h2>கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் காட்ட முயற்சி</h2><p>&nbsp;தனது பதவி விலகல் குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த பெஷெஷ்கியன், அந்த வதந்திகளை உறுதியாக மறுத்தார்.

"நான் எப்போதாவது பதவி விலக முடிவு செய்தால், அதை நானே அறிவிப்பேன். ஆனால் நான் பதவி விலக மாட்டேன், உறுதியாக நிற்பேன்," என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/132e8afa-6dde-4c25-adf3-c5291da6b712/26-6a736ade10653.webp' /></p><p>

தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா கமெனிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>பதவி விலகல் குறித்த வதந்திகள்</h2><p>
</p><p>
சமீப நாட்களாக பெஷேஷ்கியனின் பதவி விலகல் குறித்த வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cee9514-a13b-41f6-abe0-1b2abfee5a1d/26-6a736adeb75e5.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் மற்றும் தொடர்புத்துறை துணைவரான முகமது மஹ்தி தபதபாயி, அந்தச் செய்திகளை "ஆதாரமற்றவை" மற்றும் "முழுமையான பொய்" என்று நிராகரித்தார். தேசிய ஒற்றுமையைக் குலைக்கவும், ஈரானின் எதிரிகளின் நலன்களுக்குச் சேவை செய்யவும் வதந்திகளைப் பரப்பும் அரசியல் தீவிரவாதிகளை அவர் கடுமையாகச் சாடினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T17:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் தொடர்ந்தும் மீட்கப்படும் என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1785944804"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1785944804</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம்
புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம்
புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 98 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
491 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 489என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கி வங்கி முகாமையாளர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bank-manager-dies-accident-1785942314"></link>
            <id>https://ibctamil.com/article/bank-manager-dies-accident-1785942314</id>
            <summary type="text">அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இன்று(05) காலை ஒரு மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இன்று(05) காலை ஒரு மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட கோரமான விபத்தில், எப்பாவளாவில் உள்ள ஒரு அரச வங்கியின் முகாமையாளர் உயிரிழந்தார்.
</p><p>
உயிரிழந்தவர், 43 வயதான திருமணமாகாத ரோகன் ஜயந்த பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>அரச வங்கியில்&nbsp;முகாமையாளர்&nbsp;</h2><p>அவர் உயிரிழந்த நேரத்தில் எப்பாவளவில் உள்ள ஒரு அரச வங்கியில் முகாமையாளராகப் பணியாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aefdd0e-e50a-4ebc-8de6-c91e63cec85c/26-6a7355ad1550b.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர், அனுராதபுரத்திலிருந்து எப்பாவளவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​காலை சுமார் 7.10 மணியளவில், ஏ-28 சாலையில் இரு கம்பங்களுக்கு இடையே 79-80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில், அலியாகலாவிலிருந்து அனுராதபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணவீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/van-overturns-three-hospitalized-1785940077"></link>
            <id>https://ibctamil.com/article/van-overturns-three-hospitalized-1785940077</id>
            <summary type="text">&amp;nbsp;மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொலன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
பொலன்னறுவ-அரலகன்வில பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.</p><h2>வான் கவிழ்ந்து விபத்து</h2><p>

சிறிபுரவிலிருந்து மெதிரிகிரியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மனம்பிட்டிய 2வது தூண் பகுதியில் சாலையிலிருந்து விலகி ஒரு சிறு பாலத்தில் இந்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c07fedc-cd37-4724-a0de-81898ad69f1c/26-6a73486ec9f1c.webp' /></p><p>&nbsp; காயமடைந்தவர்கள் பொலன்னறுவ மற்றும் மனம்பிட்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>



ஓட்டுநர் உறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/robbery-during-power-outage-in-jaffna-1785930406"></link>
            <id>https://ibctamil.com/article/robbery-during-power-outage-in-jaffna-1785930406</id>
            <summary type="text">அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு
பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது
தாக்குதல் நடாத்தியுள்ளது. </p><p>பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க
ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.</p><h2>முகங்களை மூடி கட்டியவாறு வந்த கும்பல்</h2><p>
</p><p>
குறித்த கும்பலானது முகங்களை மூடி கட்டியவாறு வந்ததால் அடையாளம் காண
முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19139e34-ba6a-44bb-9c83-8100f3e67dea/26-6a732679e95aa.webp' /></p><p>

இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை காவல்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது இறந்த குட்டியின் மீது தாய் டொல்பினின் அளவு கடந்த அன்பு : வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dolphin-mothers-love-for-her-child-1785938142"></link>
            <id>https://ibctamil.com/article/dolphin-mothers-love-for-her-child-1785938142</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது குட்டி இறந்த பிறகு, அதைத் தன் கைகளில் ஏந்தியபடி ஆறு நாட்கள் நீந்தும் ஒரு தாய் டொல்பினின் காணொளி சமூக ஊடகங்களில் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது குட்டி இறந்த பிறகு, அதைத் தன் கைகளில் ஏந்தியபடி ஆறு நாட்கள் நீந்தும் ஒரு தாய் டொல்பினின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.</p><p>

திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள புவியியல் கடல் ஆராய்ச்சி (Geographic Marine Research) அமைப்பு, ஃபிராகிள் (Fraggle) என்ற அந்தத் தாய் டொல்பின், இறந்த தன் குட்டியைத் தன் கைகளில் ஏந்தியபடி நீந்தும் காணொளியை பதிவேற்றியுள்ளது.</p><h2>நான்காவது குட்டியின் இழப்பால் தாளாத துயரம்</h2><p>&nbsp;அதற்கு முன்பு அதன் மூன்று குட்டிகள் இறந்துவிட்டதாகவும், தனது நான்காவது குட்டியின் இழப்பினால் ஏற்பட்ட துக்கத்தை வெளிப்படுத்தவே அது ஆறு நாட்கள் நீந்தியதாகவும் புவியியல் கடல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F2103350090562619%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

இறந்த குட்டிக்கு இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. ஃபிராகிள் இதற்கு முன்பு மூன்று முறை இறந்திருப்பதால், அது மீன் உலகில் நன்கு அறியப்பட்ட ஒரு உருவம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.</p><p> கடும் குளிரின் மத்தியில் பிறந்த டொல்பின் குட்டி, நிமோனியாவால் உயிரிழந்தது. இந்த முறை அந்தக் குட்டி உயிர் பிழைத்திருக்கும் என்று பல விலங்கியல் வல்லுநர்கள் நம்பியதாக புவியியல் கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:06:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளை கல்வியமைச்சு சுவீகரிக்க சட்டமில்லை : கிடைத்தது வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-councils-schools-issue-1785935617"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-councils-schools-issue-1785935617</id>
            <summary type="text">மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் &#039;தேசிய பாடசாலைகள் என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள்
எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் 'தேசிய பாடசாலைகள் என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள்
எதுவும் இல்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர்
ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.
</p><p>
</p><h2>டலஸ் அழகப்பெருமவின் ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டம்</h2><p>அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் 650 பாடசாலைகளைச் சேர்த்து
'ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ், தினேஷ்
குணவர்த்தன ஆகியோரும் இதனைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcdfa1fa-caec-41d3-be99-45eb34839ace/26-6a733930832a2.webp' /></p><p>
</p><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக
கலாநிதி க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><h2>கல்வியமைச்சின் உத்தரவு</h2><p> </p><p>வழக்கின் தொடர்ச்சியாக, 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeaaa332-2b66-46de-8471-fb813258fc86/26-6a73392ef334c.webp' /></p><p>
</p><p>
2025 மே 23 அன்று மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், "குறிப்பிட்ட
அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>
</p><h2>சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டம் வெற்றி&nbsp;</h2><p>ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1064a5-cc93-41e6-8029-27af7ac38dcb/26-6a73392fcf84b.webp' /></p><p> </p><p>அதற்கமைய வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்ததுடன் நாடு தழுவியரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-ballistic-missile-strike-saudi-oil-tanker-1785928121"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-ballistic-missile-strike-saudi-oil-tanker-1785928121</id>
            <summary type="text">யான்பு கடற்கரைக்கு அப்பால் வடக்கு செங்கடலில் சவுதியின் வபா என்ற எண்ணெய் கப்பலை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக யேமனின் ஹவுதி குழு, இன்று(05)புதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யான்பு கடற்கரைக்கு அப்பால் வடக்கு செங்கடலில் சவுதியின் வபா என்ற எண்ணெய் கப்பலை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக யேமனின் ஹவுதி குழு, இன்று(05)புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, X-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஏவுகணைகள் அந்தக் கப்பலை "துல்லியமாகத் தாக்கின" என்று கூறினார்.</p><p>சவுதி அரேபியா மீதான தங்களின் கடல்வழி முற்றுகை மற்றும் "முற்றுகைக்கு முற்றுகை" என்ற உத்தியின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல் என்று சரீ தெரிவித்தார்.</p><h2>&nbsp;எட்டு கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>

ஜூலை 22 அன்று முற்றுகை தொடங்கியதிலிருந்து, தம்மால் குறிவைக்கப்பட்ட சவுதி எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை இந்தத் தாக்குதலுடன் எட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6cda92c-6c9e-4532-ac0a-8a8af0610b7c/26-6a731dc9eec92.webp' /></p><p>
மேலும், 29 சவுதி எண்ணெய் கப்பல்கள் செங்கடல் மற்றும் அரபிக்கடலைக் கடந்து செல்லவிடாமல் தடுக்கப்பட்டன அல்லது திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டன என்றும் சரீ கூறினார்.
</p><p>
பாப் அல்-மண்டாப் நீரிணையிலிருந்து தாங்கள் முற்றுகையிட்டதாகக் கூறியதை வெற்றிகரமாக நிறைவேற்றியபிறகு, சவுதி அரேபியா தனது எண்ணெய் கப்பல்களை வடக்கு செங்கடலுக்குத் திருப்பிவிட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும்</h2><p>
</p><p>
"விளைவுகளைப் பொருட்படுத்தாமல்", கடல்வழி அணுகல் பாதைகளைத் தடுக்கவும், அவை கடந்து செல்வதைத் தடுக்கவும், வடக்கு செங்கடலில் உள்ள சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தங்கள் குழு தொடர்ந்தும் தீவிரப்படுத்தி நடத்தும் என்று சரீ சபதம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e391146f-41ff-43e1-adbb-c04f2ff1a26e/26-6a731dcaae8a9.webp' /></p><p>

இந்த சம்மபவங்கள் தொடர்பாக சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:12:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-in-hatton-education-zone-to-reopen-1785932648"></link>
            <id>https://ibctamil.com/article/schools-in-hatton-education-zone-to-reopen-1785932648</id>
            <summary type="text">நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற கால நிலை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற கால நிலை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06)முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்படி குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை வழமை போல் இடம்பெறும் என ஹட்டன் வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:58:57+00:00</updated>
        </entry>
    </feed>
