<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-12T09:19:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announced-srilanka-test-squad-against-india-1786525290"></link>
            <id>https://ibctamil.com/article/announced-srilanka-test-squad-against-india-1786525290</id>
            <summary type="text">இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை அறிவித்துள்ளது.</p><p>

தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியின் துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காயம் காரணமாக குசல் மெண்டிஸ் இந்த அணியில் இடம்பெறவில்லை, இதன் விளைவாக, முதல் போட்டிக்கான துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p></p><h2>நிரோஷன் திக்வெல்ல அணியில்</h2><p>
இதற்கிடையில், குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

2023 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706b1e68-db15-4aff-b97b-62f124f344a0/26-6a7c38c5bee85.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் திக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.

மேலும், கடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடாத பல வீரர்களும், இரண்டு புதிய வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். </p><p>

அதன்படி, இதுவரை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத துடுப்பாட்ட வீரரான பசிந்து சூரியபண்டா மற்றும் 
சகலதுறை வீரரான கேசர நுவந்த ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை அணியில் அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஒகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.</p><p></p><p>
</p><p><b>
இலங்கை டெஸ்ட் அணி</b></p><p>
தனஞ்சய டி சில்வா c</p><p> 
லஹிரு உதர நிஷான்</p><p>
மதுஷ்க
</p><p>கமிந்து மெண்டிஸ் vc </p><p>
தினேஷ் சந்திமால்
</p><p>பசிந்து சூரியபண்டார
</p><p>சோனால் தினுஷ
</p><p>நிரோஷன் டிக்வெல்ல – wc </p><p>
ரமேஷ் மெண்டிஸ்</p><p>
பிரபாத் ஜெயசூரிய
</p><p>கேஷார நுவந்த</p><p>
மிலன் ரத்நாயக்க&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T09:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracy-to-dismiss-80-officials-in-the-north-1786522445"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracy-to-dismiss-80-officials-in-the-north-1786522445</id>
            <summary type="text">வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு
மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என
சர்ச்சை எழுந்துள்ளது.
</p><p>
வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்
திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு 82 அபிவிருத்தி
உத்தியோகத்தர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
</p><p>
கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகாணசபை இயங்க ஆரம்பித்த நிலையில், 2017ஆம் ஆண்டு
அப்போதைய பிரதம செயலாளர் நா.பத்திநாதனால் 82 பேருக்கு இந்த நியமனங்கள்
வழங்கப்பட்டன.
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
செயற்பாடு தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் இந்த ஆளணியின்
எண்ணிக்கை 20ஆகக் குறைக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நோக்கத்துக்காக நியமனம்
பெற்றனரோ அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன்
இணைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த இணைப்புக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் சிலர்
குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பதுடன்,
பொருத்தமற்ற துறைகளுக்கும், திணைக்களங்களுக் கும் இடமாற்றம் வழங்கி
வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
போதிய ஆளணி உள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் அந்தத்
திணைக்களங்கள் அவர்களை ஏற்காத நிலையும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. </p><p>இதனால்
மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச்
சந்திக்க நேர்ந்துள்ளது.
</p><p>
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் மிக வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி
உத்தியோகத்தர்களை தற்போதைய உயர் அதிகாரிகள் இவ்வாறு அலைக்கழிக்க வைப்பதும்,
அவர்களை மனஉழைச்சலுக்கு உள்ளாக்குவதும் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்டன் இல்லத்தை நாமலின் பெயருக்கு மாற்றிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-transfers-the-colton-house-to-namal-s-name-1786521209"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-transfers-the-colton-house-to-namal-s-name-1786521209</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிலர் 'ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள்' என்கின்றனர் எனவும் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
</p><p>
வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p></p><h2>நேர்த்தியான சொத்து விபரங்கள்</h2><p>
</p><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''நான் நாடாளுமன்றுக்கு வருகை தந்த காலத்தில் இருந்து இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03796f5a-f8ec-4a7e-a49b-aafcbc860243/26-6a7c2cd2571bc.webp' /></p><p>

அதாவது புதிய சட்டங்கள் வருவதற்கு முன்பே இவற்றை சமர்ப்பித்துள்ளேன்.

எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>
நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன.

அதேபோல் நான் ஒரு காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். </p><p>

அதைத் தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p>
மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020 வரை.</p><p></p><h2>தங்காலை வீடு</h2><p> </p><p>

மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன்.</p><p> 

அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.

மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து அவருக்குக் கிடைத்தவை. </p><p>மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.

இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.
</p><p>
ஏனென்றால் அப்பா அதை எனக்குக் கொடுத்து விட்டார் கடந்த வாரமே எழுதப்பட்டது.

அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம் அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். </p><p>ஏனென்றால் ஆயுட்கால உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும் ஒருவன் நான்" என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:21:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம் : மகாநாயக்கர்களை வைத்து சுஜீவ பகிரங்கப்படுத்திய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sujeewa-makes-public-chief-prelates-letter-1786519409"></link>
            <id>https://ibctamil.com/article/sujeewa-makes-public-chief-prelates-letter-1786519409</id>
            <summary type="text">மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற&nbsp; உறுப்பினர் சுஜீவ சேனசிங்க வெளியிட்டுள்ளார். </p><p>இன்று (12.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p>

இந்தக் கடிதத்தின் மூலம் குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் கூறி இருந்தார்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்</h2><p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் “இந்தக் கடிதத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d48389-5584-4e5b-bae1-bf1936434084/26-6a7c285f8549f.webp' /></p><p> 

எப்படியோ இந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தது. </p><p>நாடு எங்கு செல்கிறது என்பதை மகாநாயக்க தேரர்களே புரிந்து கொண்டுள்ளார்கள். </p><p>

தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 63 மற்றும் 65 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அந்த வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை...! பறந்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-rejects-ccd-request-forensic-facial-examin-1786502615"></link>
            <id>https://ibctamil.com/article/court-rejects-ccd-request-forensic-facial-examin-1786502615</id>
            <summary type="text">இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
குறித்த வழக்கு&nbsp; நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான உத்தரவிட்டுள்ளார்.</p><p>
சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>விசாரணை</h2><p>
நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த சந்தேகநபரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea12b39-2fa0-4eb3-ba00-c61cf1333f44/26-6a7c21abc1fa4.webp' /></p><p>மேலும், குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் காவல்துறையினர் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><h2>சிறப்பு முகப் பரிசோதனை</h2><p>மேலும் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்றப் பிரிவு, சந்தேகநபரின் முகத்தை CCTV காட்சிகளுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, அவரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55695de3-5b87-46dd-9088-defccd0f078d/26-6a7c21ab15fb6.webp' /></p><p>
இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கி பலியான இலங்கை இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-man-with-british-citizenship-drowned-1786518640"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-man-with-british-citizenship-drowned-1786518640</id>
            <summary type="text">

பிரித்தானியாவின் - கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரித்தானியாவின் - கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
சம்பவ தினத்தன்று நீரில் சிக்கித் தவித்த மூன்று பேருக்கு உதவுவதற்காக அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் ஒருவர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>

ஆனால், மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகளையும் மீறி, சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc55105-dba2-47a4-933d-cb50fddb6914/26-6a7c21241e021.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அவருடன் வந்த 16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயதுடைய மற்றொரு நபர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

ஒருவருக்கொருவர் அறிமுகமான இந்த மூன்று நபர்களும் லண்டனிலிருந்து இந்த கடற்கரைக்கு வந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மரண விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் அவசர காலப் பணியாளர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb520ac-e90c-46be-a5ac-2fe3771eeee8/26-6a7c2124d8d68.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், இந்த மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்குரிய பின்னணியும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி ஆராய்வார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T07:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382</id>
            <summary type="text">ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானம் மூலம் வெளியேறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானம் மூலம் வெளியேறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதம் துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தின்போதே இந்த இரகசிய பயணம் இடம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 


இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்&nbsp;</p><p></p><h2>இரகசிய பயணத்தில்&nbsp;டொனால்ட் டிரம்ப்</h2><p>'அமெரிக்காவின் இரகசிய சேவை மற்றும் இராணுவம் தான் இந்த முடிவை எடுத்தார்கள். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a7bacc-4392-44fa-8b5e-d00c967d2f11/26-6a7c10d263e0a.webp' /></p><p> </p><p>வெளியே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.</p><p> </p><p>ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அமெரிக்கா பத்திரிக்கைகளில் பின்வருமாறு செய்தி வெளியாகியிருந்தன.</p><p>ஜூலை 8ஆம் திகதி ஊடகங்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் உணவு விநியோக வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத தனியார் ஜெட் விமானத்திற்குச் சென்று, அதில் இரகசியமாகப் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில்&nbsp; செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்பியிருந்த நிலையில், அவர் அந்த ஜெட் விமானத்தில் அங்காராவிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள விமானப்படைத் தளம் ஒன்றுக்குப் பறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-12T07:19:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>
</p><p>
 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>சுகீஸ்வர பண்டார சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666b4e3b-0ef8-4a2c-b4bf-0bc9d2f06dc4/26-6a7c0b721ac95.webp' /></p><p>இந்நிலையில், இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p>கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116</id>
            <summary type="text">புதிய இணைப்புவாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.</p><p> 

அவர் விசாரணைக்காக&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (12.08.2026) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார். </p><p>

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக நேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் அவர் வெளியேறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4760d3-406a-4dc4-8eed-fb3449319dbb/26-6a7c00c11a9d0.webp' /></p><p>இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு இன்று இவர் (12.08.2026) வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><b>தொடர்புடைய செய்திகள்&nbsp;</b></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-salary-increase-calculator-2025-2027-1786515172"></link>
            <id>https://ibctamil.com/article/government-salary-increase-calculator-2025-2027-1786515172</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார மீட்சி</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d9894a-d69f-4601-bc18-a2e4b4ee0ad1/26-6a7c14270861d.webp' /></p><p>2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது.
</p><p>
இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது.</p><p></p><p> </p><h2>கொடுப்பனவுகள்&nbsp;</h2><p>2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ed01cd-3fa4-4c61-9431-c0ac7de64160/26-6a7c14264bbba.webp' /></p><p>மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>

யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கொலம்பியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/western-colombia-earthquake-death-toll-1786514969"></link>
            <id>https://ibctamil.com/article/western-colombia-earthquake-death-toll-1786514969</id>
            <summary type="text">
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்போது, காலி (Cali) நகரில் 95 இறப்புகளும் 997 காயங்களும் பதிவாகியுள்ளதுடன், பெரேரா (Pereira) நகரில் 79 இறப்புகளும் 278 காயங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் 1,575 வீடுகளும், ஆறு விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா முன்னதாக அறிவித்திருந்தார்.</p><p></p><h2>அவசர நிவாரணத் தேவைகள்</h2><p>
கொலம்பிய புவியியல் சேவையின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் மேற்கு கொலம்பியாவில் 96 கி.மீ. ஆழத்தில், சோகோ (Chocó) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே மையப்புள்ளியைக் கொண்டு தாக்கியதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85dfa1bf-9c3b-4400-b4ae-e8cd1f65b8ad/26-6a7c127a5745d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;CNN</i></p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாகாணங்களின் தலைநகரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும், சேதங்களை மதிப்பிட்டு அவசர நிவாரணத் தேவைகளைக் கண்டறிய உள்ளூர் மேயர்கள் மற்றும் அவர்களது குழுக்களுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T06:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[A9 வீதியில் கோர விபத்து - லொறி உதவியாளர் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-on-a9-road-men-dies-on-the-spot-1786511511"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-on-a9-road-men-dies-on-the-spot-1786511511</id>
            <summary type="text">கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

ஏ9 வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து பொருட்கள்
இறக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த
லொறி கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின்
மீது பலமாக மோதியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6bd5aa-3a27-4cf4-9be1-ad0541d40e09/26-6a7c1136bc8ae.webp' /></p><p>குறித்த விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதியின் உதவியாளர் பலத்த காயமடைந்து
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து கிளிநொச்சி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு
விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். </p><p>மேலும்,
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:22:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-narcotics-and-weapons-in-digana-1786512841"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-narcotics-and-weapons-in-digana-1786512841</id>
            <summary type="text">


கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தெல்தெனிய காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று(11) மாலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 5,155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தொடர்ந்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கைக்குண்டு, 1,250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கூர்மையான கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1c1cd2-00ba-4f57-b744-98f0fefca7c6/26-6a7c0a17c49bc.webp' /></p><p>

திகன பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T05:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த தீர்ப்பு விரைவில்: நிறைவடைந்த 245 நாள் சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-verdict-in-easter-case-soon-1786512420"></link>
            <id>https://ibctamil.com/article/next-verdict-in-easter-case-soon-1786512420</id>
            <summary type="text">நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அரசுத் தரப்பின் இறுதி சாட்சியங்கள் நேற்று இரவு (11) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் 245 நாட்கள் நீடித்த அரசுத் தரப்பு வழக்கு நேற்று முடிவடைந்தது. </p><p>

இவ்வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மராசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட பிற மேல் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படும்.</p><p></p><h2>எதிர் தரப்பின் சாட்சியங்கள்</h2><p>

அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்த பிறகு, எதிர் தரப்பின் சாட்சியங்கள் விசாரிக்கப்படும். 

பின்னர், இரு தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பித்த பிறகு, தீர்ப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337846f4-e5bc-4e81-9c87-0dde34e32f5c/26-6a7c09385140c.webp' /></p><p> </p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இவற்றில், 5 வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
 இந்த வழக்குகளில் 3 வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

முறையான உளவுத் தகவல் கிடைத்திருந்தும் கடமையில் இருந்து தவறியது உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர், தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், மாவநெல்ல பகுதியில் 7 புத்தர் சிலைகளையும் ஒரு கடவுள் சிலையையும் சேதப்படுத்திய வழக்கில் சபரகமுவ மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 11 பிரதிவாதிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட உள்ளன.</p><p></p><h2>&nbsp;​​ஷஹ்ரானின் தாக்குதல் படை</h2><p>

புத்தளத்தில் உள்ள லாக்டோஸ் வத்த பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் மற்றும் வெடிபொருட்கள் கிடங்கு ஆகியவற்றை நடத்திய சம்பவம் தொடர்பாக, புத்தளம் மேல் நீதிமன்றத்தில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் பிரதான வழக்கும் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b474aad-52c9-4607-9323-95b7cb9dc12d/26-6a7c0939144f4.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்குகளைத் திறம்பட விசாரிக்கும் பொருட்டு, புத்தளம் மூன்றாண்டு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு, கடந்த 2 மாதங்களாக கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், அலுத்கமவில் உள்ள பழைய நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், ஈஸ்டர் தாக்குதல் குறித்த நீதிமன்ற வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

கடந்த காலங்களில், இந்த வழக்கு தினமும் இரவு சுமார் 10 மணி வரை விசாரிக்கப்பட்டு வந்தது.

அரசுத் தரப்பு சாட்சியத்தின் போது பிரதிவாதிகள் அளித்த பல வாக்குமூலங்கள் தாமாக முன்வந்து அளிக்கப்பட்டவை என்பது உண்மை கண்டறியும் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. </p><p>

விசாரணையின் போது, ​​ஷஹ்ரானின் தாக்குதல் படையைச் சேர்ந்த ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாகி பல உண்மைகளை வெளிப்படுத்தினார். 

இந்த வழக்கு ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு முறை விசாரிக்கப்பட்டது.
</p><p>
 பின்னர், வாரத்திற்கு 2-3 நாட்கள் விசாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 இதுவரை, அரசுத் தரப்பு சாட்சியங்கள் கிட்டத்தட்ட 245 நாட்களாகக் கேட்கப்பட்டுள்ளன.</p><p> 

விசாரணையை மேலும் திறம்படச் செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, வழக்கமான நடைமுறைகளின்படி 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக விசாரிக்கப்படவிருந்த இந்த வழக்கு, அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்ததால் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. </p><p>

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா மற்றும் சட்டத்தரணிகளான சஜித்த பண்டார, சக்தி ஜாகொடஆராச்சி மற்றும் அகிலா தல்படடு ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T05:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunfire-targeting-a-house-1786510775"></link>
            <id>https://ibctamil.com/article/gunfire-targeting-a-house-1786510775</id>
            <summary type="text">
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p>

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
காவல்துறை தகவல்படி, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு குறித்த சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டினால் எந்தவொரு காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d35112-3d1d-431e-80a4-149b494c4690/26-6a7c00022c433.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்காலை காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T04:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வானியல் நிகழ்வு: 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866"></link>
            <id>https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.</p><p>2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி இரவு 9.04 முதல் 13 ஆம் திகதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு மறைப்பு இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03 க்குள் நிகழும்.&nbsp;</p><p>இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இலங்கை மற்றும் இந்தியாவின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்</h2><p>இலங்கையில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாததற்கு முக்கிய காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதுதான். இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு இது நிகழ்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f003fb-7368-445f-a345-cee8553270e0/26-6a7bdd3669c3c.webp' /></p><p>121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.</p><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும்..</p><p>முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.</p><p></p><h2>நடத்தை மாற்றங்கள்</h2><p>இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6486cda9-43c0-44c4-8ac8-f2026f8a812a/26-6a7bdd371c203.webp' /></p><p>அத்துடன் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் நடத்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
</p><p>12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது</p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.</p><p></p><h2>இன்று ஆடி அமாவாசை</h2><p>
எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12aa31dc-0e64-4167-8c89-f59afb9c01fb/26-6a7bf470a953f.webp' /></p><p>அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தென்படுவதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன், தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் நாளை (13) கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p>கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பிரதேசத்தில் தென்படும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக தலைவன் 'ககனவின் ' சகா கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accomplice-of-underworld-figure-gagana-arrested-1786505339"></link>
            <id>https://ibctamil.com/article/accomplice-of-underworld-figure-gagana-arrested-1786505339</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான &#039;ககன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான 'ககன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹோமாகம பகுதியிலுள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>ககனவின் உதவியாளர்</h2><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/928584db-d071-4bad-8895-a841c1947e9e/26-6a7beb632348c.webp' /></p><p>வெளிநாட்டில் தங்கியிருக்கும் 'ககன'வின் நேரடி வழிகாட்டலின் கீழ், இச்சந்தேகநபர் நீண்டகாலமாக மிகவும் இரகசியமான முறையில் இலங்கையில் போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பை நடத்தி வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஹோமாகம காவல்&nbsp; நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:50:40+00:00</updated>
        </entry>
    </feed>
