<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-24T13:32:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் படுதோல்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731"></link>
            <id>https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731</id>
            <summary type="text">

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கம் அமைச்சருக்கான தனது பலத்தை நிரூபித்துள்ளது.
</p><p>
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 152 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 உறுப்பினர்களும் வாக்களித்தனர். </p><p>

இதன்போது எவரும் வாக்களிக்காமல் இருக்கவிலை என தெரியவருகிறது.</p><p></p><h2>பதவியிலிருந்து நீக்கும் முயற்சி</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, நாட்டின் சிறைச்சாலை அமைப்பின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில் குறைபாடுகள் நிலவுவதாகவும், அந்த மோதலைத் தடுக்க நீதி அமைச்சர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளால் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd20a8e7-d53c-4ffb-b0e6-8f6cc1c5307c/26-6a63683cd6b37.webp' /></p><p>
</p><p>
எனினும், எதிர்க்கட்சியின் இந்த முயற்சியை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததன் மூலம், ஹர்ஷன நாணயக்காரவை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் திருமணத்தின் மின்சார கட்டணம்! மனு விசாரணைக்கு திகதி அறிவித்த உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840"></link>
            <id>https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p></p><h2>அடிப்படை உரிமை மீறல்</h2><p>

விஜித்த குமார என்ற சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டியவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,682,246.57 ரூபா மின்சாரக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9231012-32e2-488b-a605-011baf8576f9/26-6a6358ac0e01c.webp' /></p><p>
</p><p>
தான் 7,390 ரூபா மாதாந்த மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காகத் தனது வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபா கட்டண நிலுவையை வைத்துள்ள வீரகெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்காமல் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், நாமல் ராஜபக்சவின் திருமண மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிருடன் இருந்தபோது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T12:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனக் கடலில் பதற்றம்: சீனா - பிலிப்பைன்ஸ் இடையே புதிய மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-philippines-clash-at-south-china-sea-1784894022"></link>
            <id>https://ibctamil.com/article/china-philippines-clash-at-south-china-sea-1784894022</id>
            <summary type="text">தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஒரு புதிய மோதல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&amp;nbsp;இந்த தாக்குதலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஒரு புதிய மோதல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த தாக்குதலில் இரு நாடுகளின் கடலோரக் காவல் கப்பல்களும் நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளன.&nbsp;</p><p> இப்பகுதியின் மீது இரு நாடுகளும் இறையாண்மையை வலியுறுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் கடல்சார் பதட்டங்களில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிப்பதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சீனாவுக்கும் பிலிப்பைன்ஸின் புதிய மோதல்&nbsp;</h2><p>2023-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்குமிடையே இத்தகைய மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04dbcf0-2221-459a-aaa3-c11a1a2e1d38/26-6a6358112eda6.webp' /></p><p> </p><p>இரு தரப்பினரும் வெளிப்படையான கடற்படை மோதலில் ஈடுபடாமல், பல்வேறு கடல்சார் நடைமுறையாக உத்திகளில் ஈடுபட்டு, பதட்டங்களை அதிகரித்து வருகின்றனர். </p><p>பரந்த தென் சீனக் கடல் சர்ச்சையில் ஸ்கார்பரோ ஷோல் ஒரு பதட்டமான பகுதியாக நீடிக்கிறது, இது பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.</p><p>சமீபத்திய மோதல், அதிகரித்துள்ள பிராந்திய பதட்டங்களின் அறிகுறியாகக் கருதப்படுகிறது, மேலும் இது உடனடிப் பகுதிக்கு அப்பாலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p> இப்பிராந்தியத்தில் சீனாவின் நிலைப்பாடு மேலும் உறுதியானதாக இருக்கலாம் எனச் பொருளாதார சந்தைகள் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. </p><p>இந்தச் சம்பவம், சீனா தனது பிராந்திய உரிமைகோரல்களில் மேலும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுடன் ஒத்துப்போவதாகத் தெரிவதாகவும்&nbsp; இது தாய்வான் மீதான சீனாவின் நோக்கங்கள் குறித்த கண்ணோட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T12:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல்நினோ தாக்கம் : பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-nino-approaching-indian-ocean-region-warning-1784891386"></link>
            <id>https://ibctamil.com/article/el-nino-approaching-indian-ocean-region-warning-1784891386</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால்
பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல் து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால்
பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து
பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>யாழ்ப்பாணம் - வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்ற விழிப்புணர்வுச் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய பசுபிக் பிராந்தியக்
கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><p></p><h2>கடுமையான நீர் தட்டுப்பாடு</h2><p>மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து
சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாகப் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c817b284-9bb4-41b4-9ffe-6f0d9fe8a27b/26-6a634a3ca5bf1.webp' /></p><p>அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப
ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.
</p><p>இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.</p><p></p><h2>பாரிய மழைவீழ்ச்சி</h2><p>
</p><p>ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4183d2-90f4-4caf-b7dc-2adc37e4bcfa/26-6a634a3d6b256.webp' /></p><p>
</p><p>ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><p>எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T11:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046"></link>
            <id>https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்) தொடர்புடைய ஒரு குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுத் துறையின் சில பிரிவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அண்மையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார். </p><p> 

சட்டபூர்வமான அரச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் படுகொலைகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலுக்கும் இந்தத் தொடர்பு பயன்படுத்தப்பட்டதாக திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>மௌலானா கூறிய&nbsp;வாக்குமூலம்</h2><p>
மேலும், அப்போது சுமார் ஆறு மாத கால அவகாசத்தில் இருந்த தேர்தலுக்கு முன்பு, இந்தத் தகவலை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc61374b-2404-4827-9ebc-de66cc37fe32/26-6a634befeef74.webp' /></p><p>
</p><p>
ஹன்சிர் ஆசாத் மௌலானா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, தற்போது விசாரணையில் உள்ள குழுவானது கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> 

பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், பத்திரிகையாளர்கள் கீத் நோயர் மற்றும் உபாலி தென்னக்கூன் மீதான தாக்குதல், மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் கொலை ஆகியவை இவற்றில் அடங்கும்.</p><p> 

இருப்பினும், இவை நீதிமன்றத்தின் முன் உள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே, இன்னும் இவற்றின் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றில் தனது உண்மைகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்டோர் இராணுவ உளவுத்துறை மூலம் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>
தகவல்களை மறைக்கும் செயல் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஒரு சந்தேக நபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல்</h2><p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சுரேஷ் சலே, ஆசாத் மௌலானாவின் குடும்பத்தினரை அஹுங்கல்லேவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தூதரகத்தில் ஒரு பதவி வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4233a4c9-d72d-4540-a1d2-3df925a77819/26-6a634bf0cc0e5.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் அந்த ஹோட்டலின் பதிவேடுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இதன்படி தற்போது காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், விசாரணையைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெறுவதாகவும் கூறி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், சலேவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p>

மேலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் தாக்குதல் நடத்தவோ ஆரம்பத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டு இந்தத் தாக்குதல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அப்போது நடைபெறவிருந்த தேர்தல்களை இலக்குவைத்து , சலே அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற முக்கிய பிரமுகர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T11:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கோட்டை - தலைமன்னார் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-talaimannar-train-service-resumes-1784889197"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-talaimannar-train-service-resumes-1784889197</id>
            <summary type="text">

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, இலக்கம் 5003 கொண்ட தொடருந்து தினமும் பிற்பகல் 3:50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10:28 மணிக்கு தலைமன்னாரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, இலக்கம் 5004 கொண்ட தொடருந்து மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு காலை 10:44 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடருந்து முன்பதிவு&nbsp;</h2><p>
</p><p>
இந்த தொடருந்து சேவை கம்பஹா, குருநாகல், மஹோ, அனுராதபுரம், மெதவச்சிய, மன்னார் நகரம் மற்றும் தலைமன்னார் நகரம் உள்ளிட்ட முக்கிய தொடருந்து நிலையங்களில் நின்று செல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d00b9e-6be8-4e8e-9292-25cea77215cd/26-6a6347563932b.webp' /></p><p> </p><p>

இருப்பினும், அனுராதபுரம் புதிய நகர தொடருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை அந்த நிலையத்தில் தொடருத்து நிறுத்தப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
</p><p>
இந்த தொடருந்து முன்பதிவு செய்யக்கூடிய வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட இரண்டு முதல் வகுப்புப் பெட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.பயணிகள் இதற்கான இருக்கைகளை <a href="https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/" target="_blank">seatreservation.railway.gov.lk</a><a> </a>என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது முன்பதிவு வசதிகள் உள்ள தொடருந்து நிலையங்களிலோ முன்பதிவு செய்து கொள்ள முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T11:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/growth-ai-and-global-water-scarcity-new-challenge-1784881009"></link>
            <id>https://ibctamil.com/article/growth-ai-and-global-water-scarcity-new-challenge-1784881009</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) உலகை வேகமாக மாற்றி வரும் நிலையில் , அதற்குப் பின்னால் உள்ள காரணி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி வருவதாக சர்வதேச ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) உலகை வேகமாக மாற்றி வரும் நிலையில் , அதற்குப் பின்னால் உள்ள காரணி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி வருவதாக சர்வதேச ரீதியில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.</p><p>AI பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தரவு சேமிப்பகங்களின் (server) பயன்பாட்டிற்கும் பாதுகாப்பு தேவைக்கும் அதிகளவு நீர் உள்வாங்கப்படுவதால் இந்த எதிர்ப்பை சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>இதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில்&nbsp;2030-க்குள் AI தொடர்பான கட்டமைப்புகள் ஆண்டுதோறும் 9.3 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் நீர்வளமும்</h2><p>அந்த வெப்பத்தைத் தணிக்க, பல டேட்டா சென்டர்கள் தண்ணீரை ஆவியாக்கும் குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன என்றும்&nbsp; அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3a66b4-98a7-429e-b92c-1b9855949d5e/26-6a63457cc0b13.webp' /></p><p>இது 100 கோடிக்கும் அதிகமான மக்களின் ஒரு வருட குடிநீர் தேவைக்கு சமமான அளவவாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட புதிய AI தரவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
</p><p>
இது அதற்கு முந்தைய 3 ஆண்டு காலத்தை விட 70% அதிகமாகும்.

அந்தவகையில் ஒரு நடுத்தர தரவு மையம் ஒரு சிறிய நகரம் பயன்படுத்தும் அளவு தண்ணீரை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வெளியாகிய ஆய்வு அறிக்கை</h2><p> </p><p>

பெரிய தரவு மையங்களுக்கு ஒரு நாளுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான லீட்டர் தண்ணீர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இது சுமார் 50,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் தினசரி நீர் தேவைக்கு சமம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd15017-5882-42f9-9c4a-8599ee8e12e8/26-6a63457c19f33.webp' /></p><p> </p><p>

இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் இலாப நோக்கமற்ற முக்கிய அமைப்பொன்றின் அறிக்கை பின்வருமாறு தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளது. 

அதாவது உள்ளுர் மக்கள் எப்போதும் கிணற்று நீரை நம்பி இருப்பார்கள். </p><p>

இந்த நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவால் பல மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குயை ஏற்படுத்தும்.
</p><p>
இந்த நிலமை சர்வதேச ரீதியில் வெப்பமாதலை தலைத்தோங்க செய்யும். 

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு சில குடியிருப்பாளர்கள் கிணற்று நீர் வற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். </p><p>

இதை தொடர்ந்து 2030-க்குள் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கை விவரித்துள்ளது. </p><p>

எனினும் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆய்வின்படி திட்டம் நீர் விநியோகத்தை பாதிக்கவில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.virakesari.lk/category/local" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T11:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பொது நூலகத்தை தீக்கிரையாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியினரே : அநுர தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-set-fire-to-the-jaffna-public-library-in-1981-1784889569"></link>
            <id>https://ibctamil.com/article/unp-set-fire-to-the-jaffna-public-library-in-1981-1784889569</id>
            <summary type="text">தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p>1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற சபை
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடைச்சட்டம்</h2><p>
</p><p>அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசியக்
கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7555f5e2-c670-4607-a5bf-4a566627ddf1/26-6a63438b2bd27.webp' /></p><p>
</p><p>
பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இராணுவத்தினர் கோடு போட்டனர். அதன்
பின்னரே வந்த ஐ.தே.க காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம்
குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.</p><p>

தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான்.
அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும்
கொண்டுவந்தார்கள்.</p><p></p><h2>வழக்கு தாக்கல் செய்த ரோஹண விஜேவீர&nbsp;</h2><p>
</p><p>
1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர். எங்களின் இதயமாகக்
கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே. 97,000 புத்தகத்தை கொழுத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea005b4-2b4a-4161-bbdb-598efb8e6a13/26-6a63438a4b9ef.webp' /></p><p>
அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின்
விருப்பம் பிரதிபலிக்கவில்லை. அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு
தாக்கல் செய்தார்.</p><p> அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில்
தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள்.</p><p> தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச்
சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின்
அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும்
நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடி அரசுக்கு நெருக்கடியான தொடர் போராட்டம்: பதவி விலகலுக்கு கோரப்பட்ட கால அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dharmendra-pradhan-resignation-demand-1784886973"></link>
            <id>https://ibctamil.com/article/dharmendra-pradhan-resignation-demand-1784886973</id>
            <summary type="text">இந்தியாவின் நீட் (NEET) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களின் முக்கிய கோரிக்கையில் முடிவெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் நீட் (NEET) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களின் முக்கிய கோரிக்கையில் முடிவெடுக்க, சனிக்கிழமை ( 25.07.2026) பிற்பகல் வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தெரிவித்துள்ளது.</p><p>
அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய CJP-இன் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா,'நீட் தேர்வு விவகாரத்தில் அமைப்பு ரீதியான பொறுப்புக்கூறல் அவசியம் என தங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை தொடர்பாக, நாளை பிற்பகல் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது என்றும் இந்திய ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>பிரதான் பதவி விலகல் கோரிக்கை</h2><p>இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e14746f-b234-4b42-b1d5-6f76e6891440/26-6a633d66e3d90.webp' /></p><p>'தர்மேந்திர பிரதானை விரைவில் பதவியிலிருந்து நீக்கும் என நம்புகிறோம்,</p><p>இதற்கிடையில், மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் முன்வைத்த பிற முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p> நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட&nbsp; மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் சட்ட வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது ஆகிய இரு கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;</p><p>உயிரைமாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.</p><p> தேர்வு முறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>

மேலும், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர் ஆர்வலர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்ற அரசின் உறுதிமொழி விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையையும் சி.ஜே.பி வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை : பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doe-announcement-of-2026-gce-al-examination-1784886225"></link>
            <id>https://ibctamil.com/article/doe-announcement-of-2026-gce-al-examination-1784886225</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. உயர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான&nbsp;க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p> உயர்தரப் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், சகல அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக்கல்வி அலுவலகங்களிலுள்ள பரீட்சைக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளரிடம் அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உத்தியோகபூர்வ இணையத்தளம்</h2><p> </p><p>அத்துடன் எந்தவித தாமதமுமின்றி பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளை அவர்களுக்கு உனடியாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும்&nbsp;சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60108d74-8b4d-4fa4-b770-8c1f50e74765/26-6a633bec25440.webp' /></p><p>உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது அனுமதி அட்டைகளை தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது அனுமதி அட்டைகளை தாமே இன்று (24.07.2026) தொடக்கம் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான<a href="https://www.doenets.lk/" target="_blank"> www.doenets.Ik</a> இற்குள் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.</p><p></p><h2>திருத்தம் மேற்கொள்ளல்&nbsp;</h2><p>அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத அல்லது அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பிரதியையும் பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்காக அஞ்சல் அதிபரினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்திய கடிதம் ஆகியவற்றுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதரல் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa673661-9b64-438e-9061-18e8702ebd7f/26-6a633bece0577.webp' /></p><p>
</p><p>அதிபருக்கோ அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரிக்கோ கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி அட்டையிலுள்ள பாடம், மொழிமூலம், பெயர் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பின்,
சகல திருத்தங்களும் நிகழ்நிலையூடாக மேற்கொள்வதுடன் அதற்காக https://onlineexams. gov.lk/eic எனும் இணையத்தளத்தினுள் நுழைய வேண்டும்.
</p><p>ஒரு திருத்தமொன்றை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
இப் பரீட்சைகளுக்குரிய பரீட்சை நிலையங்களை மாற்றம் செய்ய முடியாது.
திருத்தங்களை மேற்கொள்ளுதல் 03.08.2026 நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பரீட்சார்த்திகளின்
ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T10:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிதைந்தது ஈரான் புரட்சிகர காவல் படையின் தலைமையகம்! அமெரிக்காவின் துல்லிய தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-strike-targeted-irgc-headquarters-north-iran-1784882626"></link>
            <id>https://ibctamil.com/article/us-strike-targeted-irgc-headquarters-north-iran-1784882626</id>
            <summary type="text">
வடக்கு ஈரானில் உள்ள புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமையகத்தை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்கு ஈரானில் உள்ள புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமையகத்தை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறித்த வளாகத்தின் சில உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகமான செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
காஸ்பியன் கடற்பகுதியில் அமைந்துள்ள ஜிபகெனார் கிராமத்தில் உள்ள IRGC கடற்படைத் தலைமையகத்தையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் ஏனைய இலக்குகள்</h2><p>

எனினும், இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0546e0f8-5c67-4d1d-8ac0-502fdb007268/26-6a63295d1a6f5.webp' /></p><p><i>Image Credit: Council on Foreign Relations</i></p><p>
</p><p>
இதேவேளை, வியாழக்கிழமை இரவு ஈரான் மீது தொடர்ச்சியாக 13-வது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், "ஈரானிய இராணுவக் கட்டளை மையங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் மற்றும் கடல்சார் திறன்கள்" ஆகியவற்றைக் இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும், தாக்குதல்கள் நடத்தப்பட்ட குறிப்பிட்ட இடங்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-24T10:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-s-case-adjourned-1784887226"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-s-case-adjourned-1784887226</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஓகஸ்ட் 20 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

 குறித்த உத்தரவை இன்று(24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் சுகவீனமுற்றுள்ளதால் வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00452eb8-0861-4d26-8ccd-aea08ec2d42f/26-6a633c035901c.webp' /></p><p>

 முன்வைக்கப்பட்ட காரணங்களைக் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
</p><p>
அத்துடன், இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை, அடுத்த விசாரணைத் திகதியில் முன்னிலையாகுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் 7.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 5 காணித் துண்டுகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி, யோஷித ராஜபக்சவுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T10:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு எதிராக அவரது மருமகனே வாக்குமூலம்! தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-in-law-who-testified-against-gotabaya-1784883864"></link>
            <id>https://ibctamil.com/article/son-in-law-who-testified-against-gotabaya-1784883864</id>
            <summary type="text">கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் வாக்குமூலம் ஒன்றை&amp;nbsp; பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் வாக்குமூலம் ஒன்றை&nbsp; பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
அவரது சகோதரியின் மகனால் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் கோட்டாபயவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ளது.</p><p></p><h2>சுகீஸ்வர பண்டார மீதான குற்றச்சாட்டு&nbsp;</h2><p>
</p><p>
கோட்டாபயவின் முன்னாள் செயலாளரான சுகீஸ்வர பண்டார மீதான நிதிமோசடி குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92930f8b-5071-43bb-939e-33dab61e8f9b/26-6a6331803256e.webp' /></p><p>
</p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றி அதற்காக அவர் சம்பளம் பெற்றுள்ளார்.
</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஒப்பற்ற ஒரு பதவியை உருவாக்கி சம்பளத்தை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்களில் அம்பலமாகியுள்ளது.</p><p>

இதற்கு மேலதிகமாக விசேட திட்டங்கள் என்ற பெயரில் நூற்று முப்பத்து ஏழு பேருக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பணிக்காக 17 கோடிக்கும் அதிகமான அரச பணம் செலவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>24 கோடிரூபாய் அரசப்பணம்</h2><p>
</p><p>
மேலும் அவரது வாகனத்தின் பராமரிப்பு செலவுக்காக 59 இலட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுகள் பெறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a08dc0-02a9-4512-abe0-ba217206efd7/26-6a6331994a8fc.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு மொத்தமாக 24 கோடிரூபாய் அரசப்பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகீஸ்வர மீது குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் தான் சுயாதீனமாக வேலை செய்ததாகவும் சம்பளம் எதையும் பெறவில்லை எனவும் சுகீஸ்வர கூறியதால் கோட்டபாய இது குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.</p><p>

இதன்போது சுகீஸ்வரவுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக முன்னதாக கூறியதாகவும் பின்னர் தாம் வழங்கிய சாட்சியங்களை கோட்டபாய மாற்றி தனது சகோதரியின் மகனுக்கு வழங்கியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையிலேயே கொழும்பு குற்றவிசாரணைப்பிரிவில் முன்னன்னிலையான சகோதரியின் மகன், கோட்டாபய கூறியது முழு பொய் என்றும் தனக்கு ஒரு சதம் கூட வழங்கவில்லை என கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில் குறித்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் வழங்கப்பட வேண்டிய நிலை கோட்டபாயவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T09:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (23) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 3,000 ரூபாயால் குறைந்து புதிய விலை 374 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
</p><p>&nbsp;22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,800 ரூபாயால் குறைந்து 344 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>இந்தநிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1096e26-12c1-4a54-8e4d-8b10790f9ecf/26-6a632373a05d6.webp' /></p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை காவல் நிலைய காவல்துறை உப பரிசோதகர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784880731"></link>
            <id>https://ibctamil.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784880731</id>
            <summary type="text">திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, களனி குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டவர் வத்தளை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>

இதேவேளை, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5afa4d1-920c-443f-b5bd-822d82838e7c/26-6a63217409151.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களைத் தேடுவதாகக் கூறி, குறித்த உப பரிசோதகர் அடங்கிய குழுவினர் அந்நபரை முறைப்படி கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அச்சுறுத்தி, மிரட்டிப் பணத்தைப் பறித்துள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உப பரிசோதகரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-07-24T08:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-update-on-chinese-nationals-clash-1784876235"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-update-on-chinese-nationals-clash-1784876235</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அந்த வகையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
காவல்துறையினரின் தகவலின்படி, மூன்று சீனக் குடிமக்கள் இரவு சுமார் 11 மணியளவில் வாடகைக் கார் ஒன்றில் வந்து கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p></p><h2>கடத்தல் சம்பவம்</h2><p>

அதன்போது, அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுமார் 20 சீன நாட்டினர் ஒரு கருப்பு வானில் வந்து இறங்கி, அங்கு இருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டி, கண்களைக் கட்டி, இரண்டு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3fcb9d-1761-4bcf-a3ef-834a26061a60/26-6a6310503a2b4.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வானுக்குள் கட்டப்பட்ட நிலையில் விடப்பட்டதாகவும், ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபர் மற்றொரு வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், பாதிக்கப்பட்ட இருவரும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டு, தங்கள் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து. அவர்கள் இந்தச் சம்பவத்தை கொழும்பு துறைமுகக் காவல்துறையினருக்கு கூறியுள்ளனர்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று மாலை, எஹெலியகொட, கரதானாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் சீன நாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.</p><h2>கொலை</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும், அவரது உடல் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ee4966-f4af-49c7-9925-2d36b66f5559/26-6a631050ea8f6.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த இரண்டு சீன நாட்டினரும், சடலமாக மீட்கப்பட்டவர் ஹாவோ சோங் என அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p>
இதன்படி, அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனத்தையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.</p><h2>ஆயுதங்கள் மீட்பு</h2><p>
இதேவேளை, பாதிக்கப்பட்ட இருவரும் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் வானுக்குள், காவல்துயைினர் ஒரு க்ளாக் 44 அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு VVK வாக்கி-டாக்கி ஆகியவற்றை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a887cf53-7e37-4b31-951f-a81c8986b8db/26-6a631051a024a.webp' /></p><p>
</p><p>
மேலும், அந்த வான் அம்பலந்தொட்டாவைச் சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாடகைக் கார் கொழும்பு 5-ஐத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டினர், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய பிடியாணை - நாடாளுமன்றத்தில் அமளி துமளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warrant-issued-against-jaffna-mp-archchuna-1784876160"></link>
            <id>https://ibctamil.com/article/warrant-issued-against-jaffna-mp-archchuna-1784876160</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.யாழ்ப்பாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.</p><p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்தது.</p><p>கோட்டை காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசமான முன்னுதாரணம்&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85ca4fd-b916-43cb-9502-404e61e2bd88/26-6a630ea2e25d5.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் விவாதமொன்றில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடினார்.</p><p>இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் தவிர அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/65mQlB9nkGA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை கொடூரர்களின் பின்புலத்தை போதையில் உளறித் தள்ளிய ஒரு தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-tamil-who-exposed-the-background-of-black-july-1784876421"></link>
            <id>https://ibctamil.com/article/the-tamil-who-exposed-the-background-of-black-july-1784876421</id>
            <summary type="text">1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது திடீரென வெகுண்டெழுந்த சிங்களப் பொதுமக்களின் தன்னிச்சையான கோபம் அல்ல.

மாறாக, அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உயர் மட்ட அரசியல் தலைமைகளாலும் அரசு இயந்திரத்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இனவழிப்புப் போராகும்.</p><p>

இது காலத்தால் மறைக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டாலும் நேற்றைய(23.07.2026) நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சிறப்பு விவாதத்தில் அனுர தரப்பு எம்.பி க்களால் இந்த குற்றச்சாட்டு பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>களு ஜூலையே செகவாது துமராய</h2><p>
</p><p>
குறிப்பாக கொழும்பில் தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர், அந்த கொலைகளுக்கான உதவிகள் எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டது, இந்த அரசியல் பின்புலத்தில் இருந்த கொடூரர்கள், அதன் பின் இது எப்படி தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு பரப்பப்பட்டது என்பதெல்லாம் குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ba8b2-8104-4a41-9312-ecf146a53ed1/26-6a63171199b24.webp' /></p><p>

இந்த விடயம் அப்போது இலங்கையின் உள்நாட்டு போரை காரணம் காட்டி வெளிவராமல் சிங்கள மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டாலும், அந்த கொடூரத்தின் மறுபக்கம் 10 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவனால் உலகத்திற்கு வெளிச்சமிடப்பட்டது.
</p><p>
இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் (Victor Ivan), தனது புகழ்பெற்ற ‘ராவய’ (Ravaya) பத்திரிகையில் எழுதிய "களு ஜூலையே செகவாது துமராய" (கறுப்பு ஜூலையின் மறைக்கப்பட்ட மறுபக்கம்) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரையின் வழியே, இதன் பின்னணியில் இருந்த பேரினவாத அரசியலையும், தமிழர்கள் சந்தித்துக் குருதி சிந்திய அவலங்களையும் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.</p><p>இக்கட்டுரையின் மிக முக்கியமான திருப்புமுனை, அன்றைய கொழும்பு மேயரும், ஆளும் UNP கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கே. கணேசலிங்கம் (K. Ganeshalingam) வழங்கிய அதிர்ச்சியூட்டும் சாட்சியமாகும்.
</p><p>
விக்டர் ஐவன் நடத்திய தீவிர தேடலின் போது, "அரசாங்கம் ஏன் இந்த இனக் கலவரத்தை அனுமதித்தது? 
இதன் பின்னணியில் என்ன அரசியல் கணக்கு உள்ளது? என்று கேட்கப்பட்டபோது, கணேசலிங்கம் அந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படையாகப் உடைத்துள்ளார்.
</p><p>
' கறுப்பு ஜூலை என்பது நிறுத்த முடியாத ஒன்று. சிங்கள மக்கள் மத்தியில் உருவான இந்த நிலையை எப்படி மடை மாற்றுவது என்று எமக்கு தெரியவில்லை.
</p><p>
இந்த கலவரத்தில் என் பங்கு மட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினதும் பங்கு அமைந்திருக்கிறது.</p><p>இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.

இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.</p><p>''ஒரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகரின் (High Commissioner) இல்லத்தில் நடந்த உத்தியோகபூர்வ இரவு விருந்து ஒன்றில் விக்டர் ஐவனும், கே. கணேசலிங்கமும் பங்கேற்றுள்ளனர்.

அங்கு மது பரிமாறப்பட்டிருந்த நிலையில், கணேசலிங்கம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு முழுமையான மதுபோதைநிலையில் இருந்துள்ளார்.
</p><p>
அப்போது விக்டர் ஐவன் அவரிடம், 1981 இல் யாழ் நூலகத்தை எரிப்பதற்கு நீங்களும் (அமைச்சர்) சிறில் மத்தியூ போன்றோருடன் உடந்தையாக இருந்தீர்கள் தானே?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p>
மதுபோதையில் இருந்த கே. கணேசலிங்கம் எவ்வித தயக்கமும் இன்றி, "அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் (கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு) போயிருந்தோம் என்பது உண்மை..." என்று உளறி ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசின் உயர்மட்டத்தினரே திட்டமிட்டு கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை ஏவவும் கொழும்பில் இருந்து குண்டர்களையும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தனர் என்ற கசப்பான உண்மையை ஒரு தமிழ் அரசியல்வாதியே போதையில் உறுதிப்படுத்திய நிகழ்வு இதுவாகும்.</p><p></p><h2>யாழ் நூலக எரிப்பு</h2><p>
</p><p>கணேசலிங்கம் போதையில் பேசியது 1981 யாழ் நூலக எரிப்புப் பற்றி என்றாலும், 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் பின்னணியிலும் இதே கே. கணேசலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இணைந்து வன்முறையாளர்களுக்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் விக்டர் ஐவன் தனது பத்தி எழுத்துக்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2789cdc1-8fd3-4cbc-959a-a5b92327eaa2/26-6a6317124ca16.webp' /></p><p>
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.
</p><p>
இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
</p><p>
இதன்போது சூதாகரித்துக்கொண்ட அவர் அமைதியாக இருந்ததாகவும், ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் உளறிக்கொட்டிய சந்தர்ப்பமாக இது அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதுபற்றி எக்காலமும் வாய் தீர்க்க கூடாது என பத்திரிகையாளர் விக்டருக்கு அழுத்தம் மிகு கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த சந்திப்பு நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 10ஆவது கருப்பு ஜூலை நினைவு நாளில் இந்த உண்மைகள் அனைத்தையும் விக்டர் ஐவன் பத்திரிகையில் இந்த விடயங்கள் அனைத்தையும் 'களு ஜூலையே செகவாது துமராய'' என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அன்றைய காலகட்டத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான UNP அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளாலும், அரசியல் அடக்குமுறைகளாலும் சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிருப்தியும் கொந்தளிப்பும் நிலவியது. </p><p>

இந்த மக்கள் கோபம் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய உள்நாட்டுக் கிளர்ச்சியாக வெடிக்கலாம் என UNP தலைமை அஞ்சியது. </p><p>

எனவே, தங்கள் ஆட்சிக்கு வரவிருந்த பேராபத்தைத் தடுப்பதற்காகவும், சிங்கள மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காகவும், தமிழர்களைப் பலிகடாவாக்கி இந்த வன்முறையை UNP அரசாங்கமே திட்டமிட்டுத் தூண்டிவிட்டது.
</p><p>
இந்த வாக்குமூலத்தின் மூலம், 'களு ஜூலை' என்பது ஒரு சமூகக் கலவரம் அல்ல, UNP அரசு தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நடத்திய திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.</p><p></p><p>
</p><h2>தயார் செய்யப்பட்ட படுகொலைச் சதி</h2><p>வன்முறையாளர்கள் வீதிக்கு வருவதற்கு முன்பே, தாக்குதலுக்கான தயாரிப்புகள் அரசிடமிருந்து துல்லியமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதை விக்டர் ஐவன் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார்:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fd2e6c-d9a5-415f-8f88-acf2fe759579/26-6a631712f40ce.webp' /></p><p>
</p><p><b>
1. வாக்காளர் பட்டியல்களின் துஷ்பிரயோகம்</b></p><p>
கலவரக்காரர்கள் கைகளில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல்கள் (Voters' List) இருந்தன. 

எந்த வீடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள், எந்த வர்த்தக நிறுவனங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதை அரச அதிகாரிகளின் உதவியோடு பட்டியலிட்டு, துல்லியமாகத் தாக்கி அழித்தனர்.</p><p><b>

2. அரச பேருந்துகளும் எரிபொருளும்
</b></p><p>தாக்குதல் நடத்தும் கும்பல்கள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைந்து செல்ல அரசப் போக்குவரத்துச் சபையின் (CTB) பேருந்துகள் வழங்கப்பட்டன. 

வீடுகளையும் கடைகளையும் எரிக்கத் தேவையான எரிபொருட்கள் அரசாங்கக் கிடங்குகளில் இருந்தே விநியோகிக்கப்பட்டன.
</p><p><b>
3. தமிழர் பொருளாதாரத்தை வேரறுத்தல்:
</b></p><p>கொழும்பு, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்த தமிழர்களின் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தியகங்கள், மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் எரிக்கப்பட்டு, தமிழர்களின் பல தசாப்த காலப் பொருளாதார பலம் ஒரே வாரத்தில் சாம்பலாக்கப்பட்டது.</p><p></p><h2>எப்படியெல்லாம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்</h2><p>1983 ஜூலை 24 இரவு தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக தென்னிலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள், மனிதநேயத்தின் மீதான மாறாத வடுக்களாகும்:

வீதிகளிலும் சந்திப்புகளிலும் வாகனங்கள் மறிக்கப்பட்டன. உள்ளே இருப்பவர்கள் தமிழர்களா என்பதைக் கண்டறிய வன்முறையாளர்கள் கொடூரமான நுட்பங்களைக் கையாண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/128076e4-0ad9-4a38-a923-2c0aaae5619d/26-6a631713a64ce.webp' /></p><p>

 'சிங்களப் பத்திரிகைகளை வாசிக்கச் சொல்வது', சிங்கள மொழியில் சில கடினமான வார்த்தைகளை (எ.கா: ‘பாளம’ - பாலத்தைக் குறிக்கும் சொல்) உச்சரிக்கச் சொல்வது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
</p><p>
உச்சரிப்பில் தமிழ் அடையாளம் தெரிந்த கணமே, அவர்கள் பயணித்த பேருந்துகள், கார்களோடு சேர்த்தே பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

சொந்த வீடுகளுக்குள் புகுந்த கும்பல்கள், வீடுகளைச் சூறையாடி தீயிட்டன. </p><p>தாய்மார்களின் கண்முன்னே கைக்குழந்தைகள் தீயில் தூக்கி வீசப்பட்ட கொடூரங்களும், பெண்கள் வீதிகளில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

மேலும் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய அதிபாதுகாப்பு வெலிக்கடைச் சிறைச்சாலை, குருதி சிந்தும் கசாப்புக் கடையாக மாறியது. </p><p>

சிறையிலிருந்த சிங்களக் கைதிகள் ஆயுதங்களோடு ஏவிவிடப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தங்கத்துரை, குட்டாமணி, ஜெகநாதன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் இரும்புத் தடிகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் குத்திக் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>

குட்டாமணி சிறையிலும்கூட "தமிழீழம் அமையும் வரை என் கண்களைத் தமிழ் மக்களுக்குத் தானமாகக் கொடுங்கள்" என்று கூறியிருந்தார். 

அதற்காகவே வன்முறையாளர்கள் அவரின் கண்களைத் தோண்டி எடுத்து கொடூரமாக விளையாடியதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.</p><p></p><h2>அரசு இயந்திரத்தின் அமைதி</h2><p> வன்முறை கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையும் இராணுவமும் வேடிக்கை பார்த்தன.

பல இடங்களில் வன்முறையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510095be-a0ed-4df6-bda2-6c5e450ff19e/26-6a63171457f3e.webp' /></p><p>

ஜூலை 28 அன்று, வன்முறை உச்சத்திலிருந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தொலைக்காட்சியில் தோன்றினார். 

ஆனால், அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ, வன்முறையைக் கண்டிக்கவோ இல்லை. </p><p>மாறாக, "சிங்கள மக்களின் தேசிய உணர்வுகளுக்குத் தமிழர்கள் சவால் விட்டதால் வந்த விளைவே இது" என்று கூறி, வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் பேசினார்.</p><p>

 இது வன்முறையாளர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.

3,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். (அரசின் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகள் இதைவிட அதிகம்).
</p><p>
ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

கொழும்புத் துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் தமிழர்கள் கால்நடைகளைப் போல ஏற்றப்பட்டு, வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
</p><p>
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தங்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்க இக்கறுப்பு ஜூலையே பிரதான காரணியாக அமைந்தது.
</p><p>
இந்த பல கொடூரங்களை உள்ளடக்கி விக்டர் ஐவன் தனது "களு ஜூலையே செகவாது துமராய" கட்டுரையின் வழியே வெளிக்கொணர்ந்த உண்மைகளும், UNP தலைவர் கே. கணேசலிங்கத்தின் அதிர்ச்சி வாக்குமூலமும், 'கறுப்பு ஜூலை' என்பது தன்னிச்சையான இனக் கலவரம் அல்ல.</p><p>

மாறாக, அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பேரினவாத இனப்படுகொலை என்பதை நிரூபிக்கின்றன.
</p><p>
தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வரலாற்றுத் துயரமும், அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளும், நீதிக்கான போராட்டத்தில் என்றும் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாற்றுச் சாட்சியங்களாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/penalty-imposed-on-bus-has-route-permit-from-ntc-1784878032"></link>
            <id>https://ibctamil.com/article/penalty-imposed-on-bus-has-route-permit-from-ntc-1784878032</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என
அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p> அத்துடன்,
அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபாய் தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;பயணச்சீட்டு&nbsp;வழங்கப்பட்டிருக்கவில்லை</h2><p>இதற்கமைவாக, மன்னார் - கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட
பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e70e87-b5c5-4771-9318-f167bd2c74e6/26-6a631dbe89fb4.webp' /></p><p>இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக்
கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும்
வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. </p><p>இக்குற்றச்சாட்டுகள்
தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்
அறிவிக்கப்பட்டது. </p><p>இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000
ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து
ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும்
தீவிரப்படுத்தப்படும். </p><p>அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள்
தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக்
கிடைக்கப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36dfc97c-b59d-4641-b9bc-029873fb4f09/26-6a631dbdd068b.webp' /></p><p> </p><p>குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத
நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள்
மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள்
தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது
மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான
தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது
முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும்'' என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p><b><i></i></b></p><p><b><i>செய்தி&nbsp; - பு.கஜிந்தன், த.பிரதீபன்</i></b>&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:09:51+00:00</updated>
        </entry>
    </feed>
