<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-16T16:26:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான போர் : சீனாவிலிருந்து ஈரான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-desire-continue-conflict-with-us-iran-minister-1789572526"></link>
            <id>https://ibctamil.com/article/no-desire-continue-conflict-with-us-iran-minister-1789572526</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானின் போரில், முதன்மையானவராகக் கருதப்படும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு முறைப் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார்.</p><h2>மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை&nbsp;</h2><p>&nbsp;இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை இன்று ( 16) நேரில் சந்தித்த அராக்சி வளைகுடா போர் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c3d004-4267-41df-8922-2bb48c8eacc9/26-6aaab9c66b24f.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஓமான் உடன் ஒப்பந்தம்</h2><p>
</p><p>
அத்துடன், இந்தச் சந்திப்பில் அமெரிக்கா உடனான மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை எனவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமான் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e272bc71-9dc3-497d-95b6-7dc5050bfa34/26-6aaab9c5b1225.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருதரப்பும் இணைந்து மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என சீன அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/terror-in-iran-plane-midair-cabin-roof-collapses-1789570538"></link>
            <id>https://ibctamil.com/article/terror-in-iran-plane-midair-cabin-roof-collapses-1789570538</id>
            <summary type="text">ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் பயணித்த செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம்,பறப்பில் ஈடுபட்ட சில நிமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் பயணித்த செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம்,பறப்பில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தீவிர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
</p><p>


 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் சக்கரத்தின் டயர் தடம் கழன்று விழுந்தது. இதனால் விமானத்தின் என்ஜின் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது.&nbsp;</p><h2>கடும் அதிர்வுகளுக்கு உள்ளான&nbsp;விமானம்</h2><p>நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பினர்.


விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உடைந்து சரிந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX</p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2099883286906478737?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் காரணமாக விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரிந்தன. மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் கூரை பாகங்களும் பயணிகள் மீது விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
</p><p>

விமானிகளின் துரிதமான செயல்பாட்டால், விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:21:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/modern-cardiology-complex-for-trincomalee-hospital-1789567720"></link>
            <id>https://ibctamil.com/article/modern-cardiology-complex-for-trincomalee-hospital-1789567720</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவின்
பங்கேற்புடன் இன்று 16ஆம் திகதி நடைபெற்றது.
</p><p>
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில்,
இருதய நோய்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் அவசரகால மருத்துவப்
பராமரிப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><h2>மக்களுக்கான பல்வேறு வசதிகள்</h2><p>&nbsp;மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு, கெத் லேப், ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள்,
நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு
அமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, கிழக்கு
மாகாணத்தின் தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களும் தங்களுக்கு அண்மையிலேயே
உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5017efee-c731-4b57-9e7f-eb3815323d59/26-6aaaa70185a0e.webp' /></p><p>&nbsp;குறிப்பாக, அவசர இருதய சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம்,
நோயாளர்களை தூர மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும்
குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் JICA மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன்
உதவி உள்ளிட்ட நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவை</h2><p>இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஜப்பான் தூதரக
அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58244791-c1c4-4fb7-b7bb-3ef3c5c010ac/26-6aaaa70256136.webp' /></p><p>
</p><p>
திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக
கருதப்படும் இருதய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டம், கிழக்கு
மாகாண சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T14:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்குற்றம் : வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டது 25 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321"></link>
            <id>https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321</id>
            <summary type="text">சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொசோவோ போர் குற்றங்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.</p><p>1990-களில் சேர்பியாவிலிருந்து அப்பகுதி வன்முறை வழியில் பிரிந்தபோது, ​​இன ரீதியாக அல்பேனியர்களுக்கான 'கொசோவோ விடுதலைப் படையின்' (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்து கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களை இழைத்ததற்காக, 58 வயதான தாச்சிக்கு இன்று புதன்கிழமை அன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><h2>தாச்சி குற்றவாளி</h2><p>நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள 'கொசோவோ சிறப்பு மன்றம்' (KSC), மோதலின் போது KLA அமைப்பால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் சேர்பியப் பாதுகாப்புப் படைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாச்சி குற்றவாளி என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/588176bd-f46d-49c5-9b94-a7be17809ef5/26-6aaa9dbfb677a.webp' /></p><p>எனினும் தாச்சி தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுதலித்தார்.

சூட் மற்றும் டை அணிந்திருந்த அவர், தலைமை நீதிபதி சார்லஸ் ஸ்மித் தண்டனை விவரங்களை வாசித்தபோது அமைதியாக நின்றிருந்தார்.
</p><p>
KLA அமைப்பின் முன்னாள் மூத்த தளபதிகள் மூவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z8NywXpZrYo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T14:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-service-netball-national-level-tournaments-1789564030"></link>
            <id>https://ibctamil.com/article/public-service-netball-national-level-tournaments-1789564030</id>
            <summary type="text">2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது.

இலங்கை அரச சேவைகளை பிரதிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது</p><p>.

இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள்அணிகள் போட்டிகளில்
பங்கேற்றது

எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டியும் விருது வழங்கும் வைபவமும்
இடம்பெறும்
</p><p>
குறித நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர்
கைலாசப்பிள்ளை சிவகரன் , சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப்
போட்டியின் தலைவர்
 ரிக்ஷி நனயகரா,
மணிக் அமரசேஹரா
ஐக்கிய இராச்சிய இலங்கைப் பள்ளி வலைப்பந்து சங்கம் , சத்தியசோதி
பிரதேச செயலாளர்
சாவகச்சேரி,எஸ். இராஜமல்லிகை
வட மாகாண தொழிலாளர் அலுவலகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p><br><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:07:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கிராமுக்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதானவர்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/high-court-bail-drug-cases-involving-less-100g-1789560904"></link>
            <id>https://ibctamil.com/article/high-court-bail-drug-cases-involving-less-100g-1789560904</id>
            <summary type="text">100 கிராமுக்கும் குறைவான (மொத்த எடை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கு அனுமதிக்கும் வகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 கிராமுக்கும் குறைவான (மொத்த எடை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று(15) தெரிவித்தார்.</p><p>தடயவியல்அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களால் சந்தேக நபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்குத் தீர்வாகவே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தத் திருத்தம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.</p><h2>பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ள&nbsp; தடயவியல் அறிக்கை</h2><p>&nbsp;பத்தரமுல்லையில் உள்ள அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தடயவியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8263ac93-6885-487d-9cfe-5dd42b7d0689/26-6aaa90dcd791e.webp' /></p><p>&nbsp; &nbsp; தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, ​​அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 பணியிடங்கள் வெற்றிடமாக இருந்ததாகவும், இதனால் தடயவியல் அறிக்கைகளைத் திறம்பட வெளியிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>

அதன்பின்னர் சுமார் 70 பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகளைத் தயாரிப்பதை விரைவுபடுத்த அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>உயர் நீதிமன்றத்தில் பிணை கோரும் வசதி</h2><p>போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான தடயவியல் அறிக்கைகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

2022 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், 10 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) பிணை கோர வேண்டியிருந்தது; இதனால் பிணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08e1356-02cd-44ee-bf14-c1407fbea60e/26-6aaa90dc2c757.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்படும் நேரத்தில் போதைப்பொருட்களின் நிகர எடை 100 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்றத்தில் பிணை கோரும் வசதியை இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் மீண்டும் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T12:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-issues-arrest-warrants-for-aravinda-1789553977"></link>
            <id>https://ibctamil.com/article/court-issues-arrest-warrants-for-aravinda-1789553977</id>
            <summary type="text">கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
</p><p>
முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜாமீன்தாரர்களாக முன்னிலையாகியிருந்த அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.</p><h2>தாயாரின் இறுதிச்சடங்கில் பிடியாணை</h2><p>&nbsp; அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெறும் இன்றைய நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6d7c1-92f9-41ab-a195-e84582beebc5/26-6aaa6f7a43956.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T12:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல்களால் போர்க்களம் போல் காட்சியளிக்கும் அமெரிக்க படைத்தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/photos-show-damage-u-s-positions-by-iran-missile-1789557915"></link>
            <id>https://ibctamil.com/article/photos-show-damage-u-s-positions-by-iran-missile-1789557915</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பல அமெரிக்கத் தளங்களில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட பரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பல அமெரிக்கத் தளங்களில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட பரவலான சேதம் மற்றும் அழிவை, CBS News-க்கு பிரத்யேகமாகக் கிடைத்த புதிய புகைப்படங்கள் முதன்முறையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
</p><p>
அமெரிக்க இராணுவத்திற்குள் உள்ள கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கள் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன், பணியில் உள்ள இராணுவ வீரர்கள் இந்தப் புகைப்படங்களை CBS News-க்கு அனுப்பினர்.&nbsp;</p><h2>சவுதி தளத்தில் ஏற்பட்ட அழிவு</h2><p>&nbsp;"இது எங்கள் தளங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதம்; ஆனால் இது அமெரிக்க மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை," என்று பணியில் உள்ள ஒரு வீரர் CBS News-இடம் கூறினார். "நாங்கள் கண்களை மூடிக்கொண்டு முகத்தில் குத்து வாங்குவது போல நிற்கிறோம்."</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe5d38a-4419-463a-afcf-9592f8d8c7bf/26-6aaa82266ea4f.webp' /></p><p>&nbsp;சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், போயிங் E-3 சென்ட்ரி (Boeing E-3 Sentry) என்ற நான்கு என்ஜின் கொண்ட விமானத்தின் பின்பகுதியில் ஏற்பட்ட நேரடித் தாக்குதலைக் காட்டுகிறது; காற்றில் உளவுத் தகவல்களைச் சேகரிக்கத் தேவையான சுழலும் ராடரைத் தாங்கியிருந்த அந்த விமானத்தின் உடல் பகுதி கருகிப்போன நிலையில், அதன் வால் பகுதி துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறது.</p><p></p><h2>&nbsp;சேதமடைந்த கட்டிடங்கள்</h2><p>&nbsp;அதே தளத்தில் எடுக்கப்பட்ட பிற புகைப்படங்கள், சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் தங்குமிடங்களைக் காட்டுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகாத சிமெண்ட் 'T-சுவர்' (T-wall) கட்டமைப்புகளுக்கு அருகிலேயே இக்கட்டிடங்களின் சிதைந்த கூடுகள் நிற்கின்றன; இந்தச் சுவர்கள் ஒரு காலத்தில் கையெறி குண்டு மற்றும் மோட்டார் தாக்குதல்களுக்கு எதிரான முக்கிய அரண்களாகக் கருதப்பட்டன, ஆனால் வான்வழித் தாக்குதலுக்கு எதிராக அவை முற்றிலும் பயனற்றவையாக நிரூபிக்கப்பட்டன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">New photos obtained exclusively by CBS News reveal for the first time the widespread damage and destruction of buildings and vehicles at multiple U.S. positions across the Middle East, as a result of Iranian missile and drone attacks. The images were sent to CBS News by active service members on condition of anonymity.  &quot;This is major damage to our bases that hasn't been communicated to the American public,&quot; one deployed service member said. &quot;We're standing there with our eyes closed getting punched in the face.&quot;  CBS News' @JonahPKaplan has more. https://t.co/dxfBRsgLvM</p>&mdash; CBS News (@CBSNews) <a href="https://x.com/CBSNews/status/2100050062319796509?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>குவைத்தில் உள்ள கேம்ப் புஹ்ரிங்கிலும் (Camp Buehring) இதேபோன்ற மோசமான காட்சிகள் பதிவாகியுள்ளன; இது அமெரிக்க இராணுவத்தின் தரைப்படை வீரர்கள், கவச வாகனங்கள் மற்றும் சில விமானங்களுக்கான முக்கிய தளமாகும். இத்தளம் குவைத் நகரத்திற்கு வடமேற்கே வெகு தொலைவில் உள்ள ஒரு தனிமையான பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது.</p><h2>3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான "உபகரண இழப்புகள்"</h2><p>&nbsp;பாதுகாப்புத் துறையின் ஆய்வாளர் ஜெனரல் (Inspector General) இந்த வாரம் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில், சுமார் 60 விமானங்கள் உட்பட 3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான "உபகரண இழப்புகள்" ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்ட இத்தகைய கட்டாய அறிக்கையில் முதன்முறையாக, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (U.S. Central Command) தெரிவித்ததாக ஆய்வாளர் ஜெனரல் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b8f3932-2386-405a-b05d-35f44166a4a1/26-6aaa82272b5cd.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பென்டகன் பதிலளிக்கவில்லை.</p><p>&nbsp;"இவை ஏதோ தப்பித்து உள்ளே நுழைந்த சிறிய தாக்குதல்கள் ('squirters') அல்ல," என்று அந்த இராணுவ வீரர் மேலும் கூறினார். குவைத்தின் ஷுவைபா துறைமுகத்தில் மார்ச் 1 அன்று நடத்தப்பட்ட கொடிய தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) பயன்படுத்திய வார்த்தைகளை அவர் இதற்குக் குறிப்பிட்டார். "நாங்கள் இந்தத் தளங்களைப் பாதுகாக்கவில்லை. அவை அழிக்கப்படுவதை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்."</p><p>images credit - cbs news</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wWQrTCpKCD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T12:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் எம்.பி திஸ்ஸகுட்டி ஆராச்சியிடம் FCID ஐந்து மணி நேர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mp-thisakutti-arachchi-leaves-fcid-after-5hours-1789557126"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mp-thisakutti-arachchi-leaves-fcid-after-5hours-1789557126</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளித்து விட்டு சற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளித்து விட்டு சற்றுமுன்னர் வௌயேறியுள்ளார். </p><p>

தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் இன்று காலை (16)&nbsp;திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><h2>5 மணி நேர விசாரணை</h2><p>இதற்கமைய அந்த பிரிவில் சுமார் 5 மணி நேரமாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8488ff08-ebdb-40c1-90ef-f52bb2cfb171/26-6aaa7c72cc28d.webp' /></p><p>இதேவேளை சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நேற்று (15)&nbsp; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-beaten-to-death-in-kotmale-1789556707"></link>
            <id>https://ibctamil.com/article/youth-beaten-to-death-in-kotmale-1789556707</id>
            <summary type="text">கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வெத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று (15.09.2026) இரவு சுமார் 11 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த சம்பவத்தை இனம்கண்ட பொதுமக்கள் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p></p><h2>நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை</h2><p>

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389a1a77-4f51-4e46-81e5-b6ef1248094d/26-6aaa7d85dd715.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர் வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ரம்பொட மற்றும் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி - பவானி வீதி தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-spport-in-release-thaiyiddy-bhavani-road-1789555407"></link>
            <id>https://ibctamil.com/article/police-spport-in-release-thaiyiddy-bhavani-road-1789555407</id>
            <summary type="text">தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் பிரதேச
சபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் பிரதேச
சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. </p><p>தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் (15) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற
உறுப்பினர் ச. சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை
உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கை எந்தளவில் தற்போது
காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி
எழுப்பினார்.</p><p></p><h2>எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்&nbsp;</h2><p>
</p><p>
அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட
குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc7ef49-fc29-4422-8cd0-de7dd1e6fa5a/26-6aaa76ba4c38c.webp' /></p><p>
</p><p>
அதன் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச
சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்
என்றும், நீதிமன்றில் குறித்த வீதியை விடுவிக்குமாறு
கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் ஏன் காலதாமதம் என மீண்டும் அர்ச்சுனா&nbsp; கேள்வி எழுப்பினார்.</p><p>

அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், “நீதிமன்ற கட்டளையை
நடைமுறைபப்டுத்த காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பலாலி காவல்துறையினர்
ஒத்துழைக்கவில்லை எனில், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினரை ஒன்றிணைத்து
கூட்டம் ஒன்றினை நடாத்தி, எவ்வாறு வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என
தீர்மானிப்போம்“ என தெரிவித்தார்</p><p>இந்தநிலையில் காவல்துறையினரை அழைத்து கூட்டம் கூடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா
இராமநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.</p><p></p><h2>ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>

பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்குமாறு நீதிமன்றமும்
கட்டளையிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த காவல்துறையினர்
ஒத்துழைக்க வேண்டும். இங்கே வீதியினை விடுவிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க
கூடாது என வழக்கு தொடர்ந்ததே பலாலி காவல்துறையினர் தான். அதனால், அவர்கள் நீதிமன்ற
கட்டளையை நடைமுறைப்படுத்த பின்னடிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/803ba83d-5823-44ae-b82d-f69010a2a54a/26-6aaa76bb03984.webp' /></p><p>
</p><p>
ஆகவே வீதியினை விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய கட்டளையை பிரதேச சபை
நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை காவல்துறை உயர்
அதிகாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள் என
கோரினார்கள்.</p><p>
அதனை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு
அனுப்பி வைக்குமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் துயரம் : தங்கச்சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 60 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sudan-gold-mine-collapse-over-60-workers-killed-1789556525"></link>
            <id>https://ibctamil.com/article/sudan-gold-mine-collapse-over-60-workers-killed-1789556525</id>
            <summary type="text">சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>


இந்தச் சுரங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் தங்கத் தாதுக்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிபாடு ஏற்பட்டது. உள்ளூர் வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இதுவரை 60-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு</h2><p>சூடான் ஆபிரிக்க கண்டத்தில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனினும், நாட்டின் பெரும்பாலான தங்க உற்பத்தி முறையான அனுமதி அல்லது பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாத பாரம்பரிய மற்றும் கைவினைச் சுரங்க முறைகளையே நம்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e012d4-aa61-4cba-84a9-892b868d8407/26-6aaa772fca4d4.webp' /></p><p> இத்தகைய சுரங்கங்களில் எந்தவிதமான கட்டமைப்பு பாதுகாப்போ, அவசர கால பாதுகாப்பு வசதிகளோ இல்லாததால், நிலச்சரிவு மற்றும் சுரங்க இடிபாடுகள் அடிக்கடி நிகழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-with-9-000-sea-cucumbers-in-jaffna-lagoon-1789553653"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-with-9-000-sea-cucumbers-in-jaffna-lagoon-1789553653</id>
            <summary type="text">யாழ்ப்பாணக் களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணக் களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கை&nbsp;நேற்று இரவு (15.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p> </p><p>யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில்&nbsp;கல்முனை கடற்படைப் பிரிவினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>இதனை தொடர்ந்து அப்பகுதியில் பயணித்த இரண்டு சந்தேகத்திற்கிடமான படகுகளை கடற்படையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்ட 9,000 கடல் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a34c5d-0bab-4c14-b0c4-7699ff8e6b3a/26-6aaa743bf262b.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, குறித்த படகுகளில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் இரு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டடுள்ளனர்.</p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>

கைப்பற்றப்பட்ட 9,000 கடல் அட்டைகள், இரு படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:49:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-visit-to-mannar-district-hospital-1789552731"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-visit-to-mannar-district-hospital-1789552731</id>
            <summary type="text">மன்னார்
மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான
புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்
நிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்
மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான
புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்</p><p> நிதியுதவியில்
நிர்மாணிக்கப்படவுள்ளது.இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை நடைபெற்றது.</p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.</p><p></p><h2>சுகாதார அமைச்சு</h2><p>
வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும்
இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு,
கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db024c91-8237-43aa-8c6f-40186bc17d3e/26-6aaa6f6725fa0.webp' /></p><p>
</p><p>
இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும்
வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
</p><p>புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப்
பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி.
ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய
மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p></p><h2>நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் இந்தப் புதிய முதலீடு,
விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கும்
திறனை மேம்படுத்துவதுடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ
சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்பை
ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd17116a-1b4b-4560-bfe0-7799b9db815d/26-6aaa6f67f1965.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க முன்னிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்
ஜா சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்
நாட்டி வைத்தனர். </p><p>இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,
ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண
பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம
செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபைத்
தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண
பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவ மனையின் அத்தியட்சகர்,
மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:34:20+00:00</updated>
        </entry>
    </feed>
