<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-11T04:20:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் : வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780"></link>
            <id>https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (11) காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை குடிவரவு குடியகல்வு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (11) காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சரிசெய்ய நடவடிக்கை</h2><p>இந்த நிலையில் கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35d2a59-131b-4beb-a18f-aca579f8aabc/26-6a7a9a9241004.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: புதைந்துள்ள மக்கள் - அவசர நிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombias-largest-earthquake-in-years-1786416575"></link>
            <id>https://ibctamil.com/article/colombias-largest-earthquake-in-years-1786416575</id>
            <summary type="text">கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் அவசர நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ஏற்பட்ட <a href="https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514" target="_blank">சக்திவாய்ந்த நிலநடுக்கம் </a>காரணமாக அந்நாட்டு ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.</p><p>தேசிய அவசரநிலையை அறிவித்த பின்னர், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1 மணியளவில் ஆற்றிய நாட்டு மக்களுக்கான உரையில் அவர் “உயிர்களைப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும் தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கவும் தேசிய அரசாங்கம் தனது அனைத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை</h2><p>இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8049b2d3-026b-4462-848c-f95a3feb4cbc/26-6a7a949d4d9f6.webp' /></p><p>கொலம்பியாவின் கோபி உற்பத்தி பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரெய்ரா (Pereira) நகரத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுற்றியுள்ள நகரங்களும், 'வேலே டெல் கௌகா' (Valle del Cauca) பிராந்தியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.&nbsp;</p><p>அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.&nbsp;</p><p>&nbsp;பாதுகாப்பு கருதி பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T03:18:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/72000-government-job-vacancies-in-2026-1786415854"></link>
            <id>https://ibctamil.com/article/72000-government-job-vacancies-in-2026-1786415854</id>
            <summary type="text">அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக&amp;nbsp;பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.&amp;nbsp;கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக&nbsp;பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.&nbsp;</p><p>கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் முறையான தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படாததால் அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்..</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய ஊழியர்களை அரச சேவை</span></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான நிர்வாக இயந்திரமாக விளங்கும் அரச சேவையை மீண்டும் வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் அரச ஊழியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766eb489-d790-4e0f-b10d-ee89883420da/26-6a7a8c9250675.webp' /></p><p>மேலும் சுமார் 76,000 புதிய ஊழியர்களை அரச சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். </p><p>இனிவரும் காலங்களில் அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி உள்ளிட்ட விடயங்கள் அரசியல் தலையீடுகளின்றி முறையான பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் நலின் ஹேவகே உறுதியளித்தார்.</p><p> தவறான நடைமுறைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே அரசாங்கம் தலையிடும் எனக் குறிப்பிட்ட அவர் அரச ஊழியர்கள் தங்களது திறமை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T02:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து - 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-killed-in-motorcycle-accidents-1786413973"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-killed-in-motorcycle-accidents-1786413973</id>
            <summary type="text">தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன&#039; உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தம்புள்ளை - வெலிஹேன புல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன' உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து தம்புள்ளை - வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

 

புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33269b8e-31a0-4705-80c6-692aec5e7925/26-6a7a86f52adae.webp' /></p><p>
 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>

 

தம்புள்ளை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>இதேவேளை, காலி - உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்தியருகே இடம்பெற்ற விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T02:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786409585"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786409585</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d90a34-6359-4587-820b-57b177317017/26-6a7a7273e4461.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவில் உண்மையில் நடந்தது என்ன...! விரைவில் அம்பலமாகும் CCTV காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reesha-food-fest-clash-owner-responses-1786408463"></link>
            <id>https://ibctamil.com/article/reesha-food-fest-clash-owner-responses-1786408463</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
</p><p>
றீ(ச்)ஷாவில் நடைபெற்ற அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இதன்போது குறிப்பிட்ட பெண்ணொருவர் நிறுவனத்தின் உரிமையாளரை அழைக்குமாறும் உணவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தும் கோபமான வார்த்தைகளை வெளிப்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட காணொளி ஒன்று பெரிதும் பகிரப்பட்டது.
</p><p>
இந்தநிலையில் குறித்த பெண்ணின் கருத்துக்கு முக்கிய சிசிரிவி காணொளிகளுடன் விரைவில் பதிலளிக்கப்படும் என றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தனது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T00:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலை மோதலில் சேதமடைந்த கூரைகள்...! சீரமைக்க நடவடிக்கை எடுத்த கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuruwita-prison-clash-roofs-damaged-1786406983"></link>
            <id>https://ibctamil.com/article/kuruwita-prison-clash-roofs-damaged-1786406983</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதலின்போது சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதலின்போது சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>சிறைச்சாலை அதிகாரிகள்</h2><p>இருப்பினும், கூரைகள் சேதமடைந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் பெய்த கடும் மழையால் கைதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p>

சிறை அறைகளுக்குள்ளேயே மழையில் நனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/136d8949-53a7-4389-a5a8-44d115522d82/26-6a7a684a7f2f5.webp' /></p><p>

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் தலையீட்டில் கூரைகளை சீரமைப்பதற்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்பின்னர் கூரைகளை சேதப்படுத்திய கைதிகளே முன்வந்து கடந்த எட்டாம் திகதி சேதமடைந்த கூரைகளை மீண்டும் சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T00:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-arrested-with-heroin-in-ampara-1786405608"></link>
            <id>https://ibctamil.com/article/2-arrested-with-heroin-in-ampara-1786405608</id>
            <summary type="text">அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (10-08-2026) முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (10-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய
இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>புலனாய்வு உத்தியோகத்தர்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின்
போதைப்பொருட்களுடன் போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக
நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca192de-13ca-40dd-b929-3ae7d38d89c4/26-6a7a62ea6208c.webp' /></p><p>அத்துடன் இக்கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால்
திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும்
கைதாகியுள்ளார்.</p><p>

சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப்
பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக
விசாரணைகளை சாய்ந்தமருது காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T23:52:54+00:00</updated>
        </entry>
    </feed>
