<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-14T03:53:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781</id>
            <summary type="text">அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் நேற்று (13.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>உயிரிழந்த நபர் கஹட்டகஸ்திகிலிய, பேத்கேவ பகுதியில் வசித்து வந்த 41 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ஒரவர் பலி&nbsp;</h2><p>
</p><p>மேலும் விசாரணைகளில் தெரியவந்தது உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c40470e-47c6-4f49-9d0a-5fd70bf39cf7/26-6aa76eeab4900.webp' /></p><p>மின்னல் தாக்குதலில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p> பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789355305"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789355305</id>
            <summary type="text">இலங்கையின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> 

அத்துடன் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f4cd3ca-29a5-45a4-9449-98c316ed4381/26-6aa768839a280.webp' /></p><p>

அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigat-into-financial-irregularities-siriliya-1789351436"></link>
            <id>https://ibctamil.com/article/investigat-into-financial-irregularities-siriliya-1789351436</id>
            <summary type="text">விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கீழ் நடத்தப்படும் கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கியதாகக் கூறப்படும் இந்த&nbsp;ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>100 மில்லியன் ரூபாய் தொகை</h2><p>
</p><p>
இதேவேளை, சிரிலிய சவிய அல்லது சிரிலிய அறக்கட்டளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் அமைப்பு எனக் காட்டி இந்த நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce73a813-0e85-4235-8270-ee45f4fa9ecf/26-6aa7560f66af3.webp' /></p><p>

இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளையால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p>
கொழும்பு ரிஜ்வே ஆதார சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குவதற்காக நிதி தேவைப்படுவதாக சிரிலிய அறக்கட்டளை முன்வைத்த கடிதத்தின் அடிப்படையில், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவரின் வாய்மொழி உத்தரவின் பேரில் அந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், அந்த நிதியில் CT ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் காட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
எனினும், குறித்த CT ஸ்கேன் இயந்திரம் உண்மையில் சீன அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிதியைப் பயன்படுத்தியே பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3753c31-6301-403d-a78d-40761d396b0c/26-6aa7560eb116a.webp' /></p><p>
</p><p>
இதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ள நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவரான ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் காரியவசம் உள்ளிட்டோரிடம் இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அந்த வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T02:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள் தள்ளிய சஜித் பிரேமதாச தரப்பின் ஆட்சிக்காலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-election-in-crisis-1789348855"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-election-in-crisis-1789348855</id>
            <summary type="text">எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த விடயம் குறித்து நேற்று(13.09.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், </p><p>


“பழைய தேர்தல் முறைமை குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
</p><p></p><h2>பழையத் தேர்தல் முறைமை</h2><p>
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d96802ed-7cbd-4104-98d2-b2a3dade03fb/26-6aa74bf9f07fc.webp' /></p><p> </p><p>

அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்தார்கள். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் மகிந்தவை தஞ்சமடைந்துள்ளார்கள்.
</p><p>
இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவே. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவார்கள்.

கடந்த காலங்களில் இவர்கள் தமது சுய நல தேவைகளுக்காகவே அரசியல் செய்தார்கள். </p><p>தற்போது மீண்டும் தமது சுயநல தேவைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
</p><p>
முறையற்ற மற்றும் மோசடியான பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் முறையற்ற அரச நிர்வாகமே தோற்றம் பெறும். தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்படும்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T01:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச - ரணில் இடையே வரலாறு படைக்கும் ஒரு போட்டி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/historic-contest-between-rajapaksa-and-ranil-1789342614"></link>
            <id>https://ibctamil.com/article/historic-contest-between-rajapaksa-and-ranil-1789342614</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் அவரது ஆட்சியின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் பல மில்லியன் டொலர் பெறுமதியான நிதி மோசடிகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதேபோன்று, ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் பதவியேற்று 45 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு ஆட்சிக் காலங்களில், ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டு குறித்த நிதிக் குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>நிதி மோசடி திட்டம்</h2><p>
</p><p>
எனினும், தற்போது இந்த நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad394e0-0f58-484f-a8f2-ce1e31436e62/26-6aa7342c792b0.webp' /></p><p>
மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.</p><p>

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2,300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று 2013ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தது.
</p><p>
அந்தக் கொடுக்கல் வாங்கலின் ஊடாக 1,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி மோசடியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், குறித்த கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கை எனக் கூறி, 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீட்டை செலுத்தியதன் ஊடாக நிதிக் குற்றமொன்று இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>ராஜீவ ஜயவீர கொலை</h2><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ராஜீவ ஜயவீர, டொரிங்டன் சதுக்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dceaf8-8ef7-4390-92dc-02ee502034d5/26-6aa7342bbaa5c.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்த கபில சந்திரசேனவும் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இவ்வாறான பின்னணியில், கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-14T01:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளகப் பொறிமுறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inquiry-into-justice-for-the-tamil-people-1789347817"></link>
            <id>https://ibctamil.com/article/inquiry-into-justice-for-the-tamil-people-1789347817</id>
            <summary type="text">தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த
ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்" என தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின்
இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும்
தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச
விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக்
கூட்டம் நடைபெற்றது.</p><p> அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,</p><p></p><h2>போர் முடிந்து 17 வருடங்கள்</h2><p>

"போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம்
தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159c05e8-3101-4633-8932-2f6f97213e4e/26-6aa747ea74ffc.webp' /></p><p> </p><p>கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர,
ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத்
தவிர்த்து வருகின்றனர்.
</p><p>
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும்
வெளிவர ஆரம்பித்துள்ளன. </p><p>1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள்
புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். </p><p>ஆனால், அப்போதும் கூட
அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல
முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள்
மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T01:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தடகள ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827"></link>
            <id>https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827</id>
            <summary type="text">இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற போட்டியில், மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து முன்னிலை பெற்ற ருமேஷ் பதிரகே, இறுதிச் சுற்றில் தனது சிறந்த முயற்சியாக 91.09 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
</p><p>
இரண்டு முறை உலக சம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றர் தூரத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.</p><p></p><h2>அதிரடியான முன்னேற்றம்</h2><p>
</p><p>
ஐரோப்பிய சம்பியனான ஜூலியன் வெபர், முதல் சுற்றில் முன்னிலை வகித்திருந்த போதிலும், 85.89 மீற்றர் தூரத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eebdf02-f10d-47cb-962e-4e2be81ed60b/26-6aa74025b3960.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் ருமேஷ் பதிரகே தனது அதிரடியான முன்னேற்றம் நிறைந்த பருவத்தை உலகத் தரத்திலான வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T00:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய கோப்பை தொடரை வென்றும் பரிசை பெற மறுத்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-refused-to-accept-the-asia-cup-trophy-1789344624"></link>
            <id>https://ibctamil.com/article/india-refused-to-accept-the-asia-cup-trophy-1789344624</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற மறுத்துள்ளது.
</p><p>
பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்த போதிலும், இந்திய அணியின் வீராங்கனைகள் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வரவில்லை.
</p><p>
எனினும், இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.</p><p></p><h2>சம்பியன் பட்டம்&nbsp;</h2><p>
</p><p>
இந்த சம்பவம், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது. அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af690e5c-7f93-4037-9b30-d5bead9bacef/26-6aa73b722354f.webp' /></p><p>
</p><p>
மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிகளுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இந்திய அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T00:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mystery-surrounding-death-joseph-pararajasingam-1789338488"></link>
            <id>https://ibctamil.com/article/mystery-surrounding-death-joseph-pararajasingam-1789338488</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்குப் பின்னரான புதிய தகவல்களை&nbsp;ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
இந்தத் தாக்குதலில் பரராஜசிங்கத்தின் மனைவி உள்ளிட்ட மேலும் பலரும் காயமடைந்தனர். அவர்களில் ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியும் இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர். இதனால், இந்தத் தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதும் வெளிப்படுகிறது.</p><p>
பரராஜசிங்கம் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில், உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வெளிப்படுகிறது.</p><p>
அவரை வேறு இடங்களிலும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை, எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மத்தியில் தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
</p><p>
இந்தப் படுகொலை பொதுவாக கருணா மற்றும் பிள்ளையான் சார்ந்த குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு,&nbsp; மற்றும் கருணா குழு உள்ளிட்ட பல தரப்புகள் தொடர்புபட்டிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.</p><p>
இந்நிலையில், சம்பவம் தனது கண்முன்னேயே இடம்பெற்றதாகக் கூறும் புலனாய்வு ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் ஜோசப் பரராஜசிங்கத்தை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், தனது கைகளிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியில் இதுவரை வெளிவராத பல கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.</p><p>இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் ‘உண்மைகள்’ நிகழ்ச்சி....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T23:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விலையை லீற்றருக்கு ரூ.170ஆக அதிகரிக்க வேண்டும்! அழுத்தம் தெரிவிக்கும் தனியார் நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/to-increase-the-diesel-price-to-rs-170-per-litre-1789340684"></link>
            <id>https://ibctamil.com/article/to-increase-the-diesel-price-to-rs-170-per-litre-1789340684</id>
            <summary type="text">செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதுடன், கடல் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
</p><p>
தற்போதைய நிலைமையில் ஒரு லீற்றர் டீசலை விநியோகிக்கும் போது சுமார் 170 ரூபாய் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><h2>தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள்&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எரிசக்தி அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நிலைமையை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfa8471-eed6-46e1-a19b-284c1b4e3526/26-6aa72c105f6e9.webp' /></p><p>
</p><p>
முன்னதாக அரசாங்கத்தினால் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த ஜூலை மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இந்தத் தீர்மானத்தையடுத்து, எதிர்கால எரிபொருள் தொகுதிகளுக்கான கொள்வனவு உத்தரவுகளை மேற்கொள்ள தேவையான நிதியை திரட்டுவதில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டம் காரணமாக தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது கடும் ஆபத்துக்குள்ளாகும் எனவும் அந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
</p><p>
இதேவேளை, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள்&nbsp;</h2><p>
மேலும் சில தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் இல்லை என்ற அறிவித்தல் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcf2113-7ea3-4320-a6eb-3d1d792e2042/26-6aa72c0faacf3.webp' /></p><p>

இருப்பினும், இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா, எரிபொருள் கூட்டுத்தாபன (Ceypetco) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முன்னதாக தெரிவித்திருந்தார்.</p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T23:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் விரிவடையும் சபாநாயகர் விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-speaker-issue-expands-internationally-1789339585"></link>
            <id>https://ibctamil.com/article/the-speaker-issue-expands-internationally-1789339585</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,&amp;nbsp;நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.</p><p>அது தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை சபாநாயகர் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டி, இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.</p><p>பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தலைவரான ரெஃபில்வே ட்ஷ்வேனி-ட்ஷிபானே மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஸ்டீவன் ட்விக் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர்,&nbsp;இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை</h2><p> </p><p>இலங்கை நாடாளுமன்றத்தின் நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aba5ac5-9eeb-48f1-9342-c4c43aba5d41/26-6aa727c4838ed.webp' /></p><p>

சபாநாயகரின் உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய விடயமொன்று தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சபாநாயகர் பதவியில் செயற்படுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தான் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அனுப்ப எதிர்பார்த்திருந்த போதிலும், அது தொடர்பில் தாமே ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபரே, தனக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது இயற்கை நீதியின் அடிப்படைகளுக்கு முரணானது எனவும், இது நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை குறித்து பாரிய கேள்விகளை எழுப்புவதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>நாடாளுமன்ற அதிகாரங்கள்</h2><p>
</p><p>
அத்துடன், மற்றுமொரு விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்க முயன்றபோது, சபாநாயகர் தனது உரையை இடைநிறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b41bcb6f-4c04-46a6-8c4c-34a88eb1bc97/26-6aa727c3ce565.webp' /></p><p>

இதன் மூலம் 1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
</p><p>
மேலும், சபாநாயகரின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நடுநிலைத்தன்மைக்கு அமைவானதா என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிடம் சமர்ப்பிக்க இலங்கை நாடாளுமன்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நடுநிலையானதுமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T22:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ஏமன் இராணுவம் அதிரடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemeni-army-launches-swift-attack-targeting-houthi-1789336663"></link>
            <id>https://ibctamil.com/article/yemeni-army-launches-swift-attack-targeting-houthi-1789336663</id>
            <summary type="text">ஏமனின் துபாப் (Dhubab) மற்றும் மோச்சா (Al Mocha) பகுதிகளில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து ஏமன் விமானப்படை அதிரடித் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் துபாப் (Dhubab) மற்றும் மோச்சா (Al Mocha) பகுதிகளில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து ஏமன் விமானப்படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அரசாங்க ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>செங்கடல் கடலோரப் பகுதிகளில் ஹவுதி அமைப்பினர் தங்களின் பலத்தைப் பெருக்கவும், நடமாட்டத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டிருந்த வாகனப் பேரணிகள் மற்றும் இலக்குகளை ஏமன் போர் விமானங்கள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளன.</p><p></p><h2>பெரும் சேதங்கள்&nbsp;</h2><p>இந்தத் தாக்குதலின் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a58a3e3-e87a-4d62-b4a6-91bfcaf8941e/26-6aa71c59252c3.webp' /></p><p> </p><p>செங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் இந்த இராணுவ நடவடிக்கை தொடரும் என ஏமன் இராணுவத் தரப்பு எச்சரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T21:59:19+00:00</updated>
        </entry>
    </feed>
