<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-30T11:33:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல்கலைக்கழக தரவரிசை : யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-regains-top-spot-among-sri-lankan-uni-1785409034"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-regains-top-spot-among-sri-lankan-uni-1785409034</id>
            <summary type="text">அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் உலக அளவில் 1,745-வது இடத்தையும் பிடித்துள்ளது.தமிழர் பகுதியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தையே பிடித்துள்ளது.

</p><p>
இதே தரவரிசையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் இலங்கையில் இரண்டாவது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்ரீ ஜெயவர்தனபுரப் பல்கலைக்கழகம் உலக அளவில் 2,125-வது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் 2,258-வது இடத்தையும் பிடித்துள்ளன.</p><h2>யாழ்ப்பாண பல்கலைக்கழகம்</h2><p>இந்தத் தரவரிசையின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ரூஹுனப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தையும், மொரட்டுவப் பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f6f333-c583-4a70-9fd6-b8018a44f37e/26-6a6b33b76bae8.webp' /></p><h2>உலகளவில் முதலிடம்</h2><p>
</p><p>
அத்துடன் ஆறாவது இடத்தை களனி பல்கலைக்கழகமும் ஏழாவது இடத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd85332a-9491-4618-836d-817501589ea0/26-6a6b33b6b5ae1.webp' /></p><p>

சமீபத்திய வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையின்படி, உலகின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான முதல் இடத்தை அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகமும், இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், ஐக்கிய ராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு நிதி உதவி செய்ததால் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-female-journalist-to-12-years-in-prison-1785406488"></link>
            <id>https://ibctamil.com/article/russian-female-journalist-to-12-years-in-prison-1785406488</id>
            <summary type="text">உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு&amp;nbsp; 12 ஆண்டுகள் கடூழிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு&nbsp; 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட பெண்&nbsp;அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா என்பவராவார்.&nbsp;</p><p>இவர்&nbsp;ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>தேசத்துரோக வழக்கு</h2><p> 


இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a393bab-9afe-4f15-8202-75e0efce9eaa/26-6a6b31d0bd7df.webp' /></p><p> </p><p>

உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்படுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது குறித்த பெண் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>இதனை தொடர்ந்து இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.</p><p>ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் புலி முரளியின் பிரகீத் பரபரப்பும்... யூலை 30 ராஜீவ் அடியும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajiv-attack-to-prageeth-case-news-update-1785408048"></link>
            <id>https://ibctamil.com/article/rajiv-attack-to-prageeth-case-news-update-1785408048</id>
            <summary type="text">ரோஹன விஜயவீரா கொல்லப்பட்ட பின்னர் ஜேவிபியின் மறுபிறப்புக்கு உதவியதாகக் கிசுகிசுக்கப்படும் இந்தியாவின் றோ அமைப்பு, இலங்கை தொடர்பான சில விடயங்களை மறக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரோஹன விஜயவீரா கொல்லப்பட்ட பின்னர் ஜேவிபியின் மறுபிறப்புக்கு உதவியதாகக் கிசுகிசுக்கப்படும் இந்தியாவின் றோ அமைப்பு, இலங்கை தொடர்பான சில விடயங்களை மறக்க விரும்புவதான உபரிகிசுகிசுக்களும் உண்டு.</p><p>

அந்தப் பட்டியல்களில் ஒன்றாக, 1987 யூலை 30ஆம் திகதியான இன்றைய நாளில் அன்று கொழும்பில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளது.</p><p> எனினும், இன்றுவரை இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலகின் இராஜதந்திர வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு தாக்குதலாகவே இது உள்ளது.</p><p>

ஏனெனில், அது ஒரு வெளிப்புறத் தாக்குதலாக இல்லாமல், விருந்தினராக அழைத்த நாடு ஒன்றின் இராணுவ அணிவகுப்பில் நடந்த தாக்குதல் இது.
</p><p>
அன்று ஒருவேளை சிறிலங்கா கடற்படை விஜிதரோஹனவின் துப்பாக்கிப்பிடி ராஜீவ் தலையைப் பிளந்திருந்தால், அது இந்தோ - சிறிலங்காவின் வரலாற்றை வேறு திசைக்கு இழுத்த ஒரு நாளாக இந்த யூலை 30 ஐ மாற்றியிருக்கும்.
</p><p>
இவ்வாறான பழைய பரபரப்புக்களின் பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மையப்படுத்திய ஆட்டங்கள் மற்றும் பிரகீத் எக்னலிகொட என்ற ஊடகர் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் ஒரு சாட்சியான முரளி என அறியப்படும் சுரேஷ்குமார் தவேந்திரன் வழங்கும் புதிய புதிய பரபரப்புகளும் வந்துள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KTM6sOleoGg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-cannot-reopen-while-us-threats-1785406649"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-cannot-reopen-while-us-threats-1785406649</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இன்று வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p>

"அமெரிக்க அதிகாரிகளின் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும், பிராந்தியத்தில் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது," என்று IRGC வெளியிட்ட அறிக்கையில் கூறியது.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் கப்பலில் பற்றிய தீ</h2><p>தொடர்ச்சியான "அச்சுறுத்தல்களும் தலையீடுகளும்" நிலைமையை "மேலும் கடினமாகவும் சிக்கலாகவும்" மாற்றும் என்று அது எச்சரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1a0a00-dfdd-4360-86b3-e614919cb185/26-6a6b296840b2e.webp' /></p><p>&nbsp;"அமெரிக்க விமானங்களின் தூண்டுதலின் பேரில்," இரண்டு எண்ணெய் கப்பல்கள், ஹோர்முஸ் eீரிணைக்கு தெற்கே "பாதுகாப்பற்ற பாதை" வழியாக இரவோடு இரவாகச் செல்ல முயன்றதாக IRGC கூறியது.

அவற்றில் ஒரு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கப்பல்களும் உடனடியாகத் திரும்பிச் சென்றதாக புரட்சிகர படை தெரிவித்தது.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் வெளிச்சக்திக்கு இடமே இல்லை</h2><p>

"ஹோர்முஸ் நீரிணை எங்கள் பிரதேசம், அதை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை உறுதியாகக் கட்டுப்படுத்துகிறது," என்று அந்த அறிக்கை கூறியதுடன், "ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரும்" எந்தவொரு வெளி சக்தியும் அதற்குள் தலையிட அனுமதிக்கப்படாது என்றும் அது மேலும் குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130b3f0a-4fa1-439a-8aa3-fd88cd3d4bbd/26-6a6b2968e58c0.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்திருந்தது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/phu-files-graft-complaint-against-speaker-1785404349"></link>
            <id>https://ibctamil.com/article/phu-files-graft-complaint-against-speaker-1785404349</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு கோரி முறைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு கோரி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பிவிதுரு ஹெல உறுமய கட்சி இன்று (30)-07-2026) லஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் (CIABOC) இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
</p><p>
அக்கட்சியின் பொதுச்செயலாளர் உபுல் கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முறைப்பாட்டுடன் சபாநாயகரின் ஊழல் செயற்பாடுகளுக்குச் சான்றாக 10 எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகளும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.</p><p></p><h2>எரிபொருள் ஒதுக்கீடு</h2><p>

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சான்றுகளில் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளாக, “சபாநாயகருக்கு உரித்தான உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மேலதிகமாக பிறிதொரு வீட்டையும் பயன்படுத்தியமை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3118dd6d-cffe-44c7-8b10-a0f0181b2888/26-6a6b20fcb0eeb.webp' /></p><p>

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த தளபாடங்கள் மற்றும் சாதனங்களைத் தனது தனிப்பட்ட வீட்டிற்கு எடுத்துச் சென்றமை மற்றும் அங்குத் தனிப்பட்ட ஊழியர்களைத் தங்க வைத்திருந்தமை.
</p><p>
 நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனக்கு உரித்தான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கும் (Fuel Quota) அதிகமாக மேலதிக எரிபொருளைப் பெற்றுக்கொண்டமை” என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல மாதங்கள்</h2><p>இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பல மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றப் பணியாளர் பிரதானி சாமிந்த குலரத்ன கருத்து வெளியிட்டிருந்த போதிலும், அது குறித்து இதுவரை எவ்வித முறைப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பிவிதுரு ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>


முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுச்செயலாளர் உபுல் கமகே, “லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, இதுவொரு சுயாதீனமான நிறுவனம் என அடிக்கடி கூறி வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9c93772-68f0-4a95-a6b4-d1d6512b7865/26-6a6b20fd79d66.webp' /></p><p>நாட்டின் மூன்றாவது பிரஜையான சபாநாயகருக்கு எதிராக நாங்கள் சமர்ப்பித்துள்ள இந்தச் சான்றுகளின் அடிப்படையில் ஆணைக்குழு எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் சுயாதீனத்தை முழு நாடும் கண்டுகொள்ள முடியும்.</p><p> 

இது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமல்ல மாறாக ஊழலுக்கு எதிராக எமது கட்சி எடுக்கும் பொறுப்புள்ள நடவடிக்கையாகும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா தாக்குதல் குறித்து ஐ.நா உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-attacks-un-calls-for-immediate-talks-1785398415"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-attacks-un-calls-for-immediate-talks-1785398415</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&amp;nbsp;இதன்படி சண்டையை நிறுத்திவிட்டு, ராஜதந்திரப் பேச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இதன்படி சண்டையை நிறுத்திவிட்டு, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>
இதற்கமைய பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லை என்றால், மோதல் மேலும் விரிவடையக்கூடும் என்று பொதுச்செயலாளர்&nbsp; கவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஐ.நா உடனடி பேச்சுவார்த்தை</h2><p>மேலும் கடந்த சில மணிநேரங்களில் அதுவே நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d382f2f1-b1ff-4b5b-a838-9e8dbd68bb2d/26-6a6b0fd519631.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல் சாதகமான முன்னேற்றங்கள் அல்ல, மேலும் இரு தரப்பினரும் சண்டையை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான், கத்தார் மற்றும் பிறரால் முன்னெடுக்கப்படும் மத்தியஸ்த முயற்சிகள் உள்ளிட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மீண்டும் திரும்புவதை அவர் உறுதிசெய்ய விரும்புவதாக ஐ.நா பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ambulance-ஐ அடுத்து மோட்டார் சைக்கிள் சேவையை ஆரம்பிக்கும் சுவசெரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suwa-seriya-motorcycle-emergency-medical-service-1785405361"></link>
            <id>https://ibctamil.com/article/suwa-seriya-motorcycle-emergency-medical-service-1785405361</id>
            <summary type="text">அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகவும் திறமையாகவும் சென்றடையும் நோக்கில், 1990 சுவசெரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகவும் திறமையாகவும் சென்றடையும் நோக்கில், 1990 சுவசெரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.</p><p>கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதித் தடைகள் காரணமாக அம்புலன்ஸ் வந்து சேரும் நேரம் தாமதமாகும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளை இந்த புதிய சேவை ஆரம்பத்தில் இலக்காகக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி&nbsp;</h2><p>அம்புலன்ஸ் வருவதற்கு முன்பே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று சுவசெரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a666cc6-688b-4bfd-adf8-c5e5cb643ec9/26-6a6b25669b1db.webp' /></p><p>
</p><p>
இந்த முயற்சியின் கீழ், சிறப்பாகப் பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள், அதே நேரத்தில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அவசரநிலைகளுக்குப் பயன்படுத்தப்படும்.</p><h2>இந்த ஆண்டு இறுதிக்குள்&nbsp;சேவை ஆரம்பம்</h2><p>
</p><p>
இந்த மோட்டார் சைக்கிள் அவசர சேவையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறப் பகுதிகளில் ஒரு முன்னோட்டத் திட்டமாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29736381-d7ec-46e2-b0a1-64c6a3586df9/26-6a6b22f52548d.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மீதான ஈரானின் திடீர் தாக்குதல்...! தொழிலாளி ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-attacks-kuwait-as-mideast-tensions-rise-1785403335"></link>
            <id>https://ibctamil.com/article/iran-attacks-kuwait-as-mideast-tensions-rise-1785403335</id>
            <summary type="text">குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குவைத் இராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்புப் படை</h2><p>ஈரானில் இருந்து ஏவப்பட்ட 5 ஏவுகணைகளை ஜோர்தானிய வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்திய சில மணி நேரங்களிலேயே குவைத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15e67a46-0bf4-465d-85e0-c99f01f6f08c/26-6a6b1a04dbde6.webp' /></p><p>ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் உட்படப் பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் (Qeshm) தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

அத்தோடு எகிப்தின் டமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு இயற்கை எரிவாயுப் படகுகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77de10a3-32f7-487a-b6e8-225d024f675c/26-6a6b1a041b7d7.webp' /></p><p>இதனுடன் சவுதி அரேபியாவின் அப்கேக் (Abqaiq) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>
ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற குழுக்கள் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதல்களால் பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதாரத்திலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை இலக்குவைத்த மத்தியகிழக்கு நகர்வில் அழிக்கப்பட்ட ஈரானின் இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-secret-destroyed-in-middle-east-move-1785401094"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-secret-destroyed-in-middle-east-move-1785401094</id>
            <summary type="text">பூகோள அரசியலின் எதிர்கால நிலைகளை தீர்மானித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஈரான் யுத்ததின் தாக்கம் இன்றைய உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பிடியை தக்கவைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூகோள அரசியலின் எதிர்கால நிலைகளை தீர்மானித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஈரான் யுத்ததின் தாக்கம் இன்றைய உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பிடியை தக்கவைத்துள்ளது.
</p><p>
இந்த போரில் ஈரானின் யுத்த கோட்பாட்டின் அர்த்தம் அமெரிக்காவின் நிலைகளை அழிப்பதும், அதேபோல இஸ்ரேலை முற்றுமுழுத்தக்க தாக்குவதுமே.
</p><p>
ஆனால் அமேரிக்கா ஈரானை நோக்கி மேற்கொண்ட தாக்குதல் அனைத்தும் கொடிய தாக்குதல்களே. இது குறித்த அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பிரிவு வெளியிட்ட அறிக்கைகள் ஈரானின் 300க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கி அழித்ததாக கூறியுள்ளது.</p><p>

எனினும் மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்காவின் பலவீனங்களை தாக்கி தனது பலத்தை நிரூபித்த ஈரானின் தற்போதைய நகர்வு, மற்றும் இந்த போரில் வெல்லப்போவது யார்? சிக்கப்போவது யார் என்பதை விரிவாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8aslwnVLg9c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T09:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீண்டும் ஒலித்த நீதிக்கான குரல்! ஐ.நாவிடம் அவசரக் கோரிக்கை.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-jaffna-demanding-chemmani-justice-1785401126"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-jaffna-demanding-chemmani-justice-1785401126</id>
            <summary type="text">
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த போராட்டம் இன்று (30-07-2026) செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிசுக்களின் எச்சங்கள்&nbsp;</h2><p>ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதாததேயு திருச்சுரூபம் முன்பாக ஆரம்பமான
பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da25294b-32cf-4485-9079-3b8efc34429a/26-6a6b1655a93ac.webp' /></p><p>பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் டெர்க்கிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை
அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் வாசித்தார்.
</p><p>
அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 21ஆம் திகதி வரையில் சிறுவர்கள் மற்றும்
சிசுக்களின் எச்சங்கள் உட்பட 454 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள
நிலையில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சுயாதீன சர்வதேச
விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p></p><h2>சர்வதேச தரநிலை</h2><p>

மேலும், மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், அடையாளம் காணல் மற்றும் பாதுகாத்தல்
ஆகியவை மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுயாதீன டி.என்.ஏ. பரிசோதனை, குடும்பங்களின்
பங்கேற்பு மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea6fa3bf-f7bd-47b6-ba6f-274182abd3be/26-6a6b16361d4cf.webp' /></p><p>அத்துடன், செம்மணி அகழ்வுப் பணிகளை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து
கண்காணித்து சான்றுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைப்
பொறிமுறையின் பிரசன்னம் அவசியம் என்றும் கோரப்பட்டுள்ளது.
</p><p>
இப்போராட்டத்தில் யாழ்ப்பாண மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்,
யாழ்ப்பாண மாகாண அமல மரித்தியாகிகள் சபையின் முதல்வர் அருட்தந்தை போல்
ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் என
100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738</id>
            <summary type="text">🛑&amp;nbsp;புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>விளக்கமறியல் காலம்</h2><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0334586f-d8e4-4d81-84d8-1a717b4317a4/26-6a6b0e6c490bb.webp' /></p><p>ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். </p><p>

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>முதலாம் இணைப்பு</u></b></h5><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/f68EHX3xyEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050"></link>
            <id>https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( &#039;பிள்ளையன்&#039;) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( 'பிள்ளையன்') தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்&nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் இந்த வழக்கு 2025.10.31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>பிள்ளையான் மனு அடுத்த ஆண்டு விசாரணை</h2><p>அன்றைய வழக்கில்&nbsp;ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ae0e68-c2a0-4c66-a7c1-542cbc3892a3/26-6a6b08022c76e.webp' /></p><p>இந்நிலையில் இந்த மனு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த மனு ஜனவரி 19, 2027 அன்று விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஏவுகணைகளுக்கு எதிராக எதிர் தாக்குதலை ஆரம்பித்த ஜோர்தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088"></link>
            <id>https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&amp;nbsp;ஈரான் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&nbsp;</p><p>ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு ஜோர்தானில் உள்ள இராணுவத்தலங்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் ஜோர்தான் இந்நகர்வை மேற்கொண்டு உள்ளது.&nbsp;</p><p>ஈரானிய ஏவுகணைகளை ஜோர்தான் வீழ்த்தியதுடன், நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளது.</p><p></p><h2>ஈரானிய ஏவுகணை</h2><p>ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளைத் தனது வான்வெளியில் இடைமறித்து அழித்ததாக ஜோர்தானின் ஆயுதப் படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c10b99-4d8c-4552-842c-056b23deeff1/26-6a6b0116400a7.webp' /></p><p>மேலும் அந்த அறிக்கையில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆனாலும் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், நாட்டையும் அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கடந்த புதன்கிழமை காலை ஜோர்டான் மேலும் ஐந்து ஏவுகணைகளை இடைமறித்ததாக உறுதிப்படுத்திய நிலையில் ஈரானின் தற்போதைய இலக்குத் தாக்குதல் நடந்துள்ளது. அவையும் அதன் வான்வெளியில், ஈரானிலிருந்து ஏவப்பட்டவை என்று கூறப்படுகிறது.
</p><p>
தற்போது, ​​ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் கட்டளைத் தலைமையகத்தைத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவே இது செய்யப்பட்டதாக அது கூறுகிறது.</p><h2>ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை</h2><p>அந்த ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

அந்தத் தாக்குதலை புதன்கிழமை அன்று வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb19cd2-8629-4cc4-98c9-51354ef20a1c/26-6a6b011713cd8.webp' /></p><p> </p><p>ஜோர்டான் மீதான இந்தத் தாக்குதல்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது சவூதி அரேபியா பதிலடித் தாக்குதல்களை நடத்திய புதன்கிழமை நிகழ்வுகளும் தற்போது இந்தப் பிராந்தியத்தில் சில கவலைகளை ஏற்படுத்தி வருகின்றன.</p><p>

இந்தப் போர் விரிவடைந்து, மற்ற நாடுகளையும் தனக்குள் இழுத்துவிடும் என்ற கவலை நிலவுகிறது. அதைத்தான் வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் தவிர்க்க விரும்புகின்றன.</p><p> எனவே, அமெரிக்காவும் ஈரானும் ஆகிய இரு தரப்பினரும் தற்சமயம் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த நெருக்கடிக்கு இராஜதந்திரத் தீர்வுகளை முன்னெடுக்க வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்து வருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374"></link>
            <id>https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசுக்குச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினை பொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நுகர்வுப் பரிசோதனை</h2><p>அத்துடன், நாடாளுமன்றத்தின் 41 வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை (Fuel Efficiency Test) சுற்றுநிருப விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42afcb41-6ab4-4703-bc03-862fafd4c23d/26-6a6b0570c5e1b.webp' /></p><p>
2016 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின்படி, ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனைக்குப் பின்னரும் 12 மாதங்கள் கழித்து அல்லது 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு அல்லது எஞ்சின் தொடர்பான முக்கிய பழுதுபார்ப்புக்குப் பிறகு எது முதலில் வருகிறதோ, அதன் பிறகு மீண்டும் எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். </p><p>

ஆனால் இப்பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தீவிர சேவைக்காலம்</h2><p>நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 12 வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 5 அதிகாரிகள் கொண்ட குழுவினால் கடந்த ஆண்டின் மே 28 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99744e38-919d-42cd-8c99-25419a5720ce/26-6a6b056fe5c65.webp' /></p><p>
அத்தோடு நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (Duty-free Vehicle Permits) வழங்குவது தொடர்பான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிரேஷ்ட நிர்வாகப் பதவியொன்றில் 6 ஆண்டுகள் தீவிர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்யாத மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறைப்படியான அனுமதி தொடர்பான ஆவணங்கள் தணிக்கைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R1DeibMI-g4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-ranil-departs-for-bhutan-1785392276"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-ranil-departs-for-bhutan-1785392276</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>முக்கிய நோக்கங்கள்</h2><p>ரணில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8319265-610e-42e7-8817-8125ec2bdcef/26-6a6b002f8126d.webp' /></p><p>பூட்டானிலுள்ள பௌத்த விகாரைகளை வழிப்படுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் அழைப்பு மறைக்க முயற்சிக்கும் மறுபக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-truth-that-gota-s-secret-call-is-trying-hide-1785392625"></link>
            <id>https://ibctamil.com/article/the-truth-that-gota-s-secret-call-is-trying-hide-1785392625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தன்னை சிவில் செயற்பாட்டாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தன்னை சிவில் செயற்பாட்டாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. </p><p>அந்த உரையாடல், முன்னாள் ஜனாதிபதியைப் பற்றிய பொதுமக்களின் அனுதாபத்தை அதிகரிக்கக்கூடும் என சில ஊடகங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஆனால், அந்த உரையாடலின் பின்னணி மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் இராணுவ வாழ்க்கையைப் பற்றிய சில தகவல்கள், அவர் முன்பு வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்படுகின்றன எனக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>சமீபத்திய தொலைபேசி உரையாடல்</h2><p>
அந்த சமீபத்திய தொலைபேசி உரையாடலில், தாம் 20 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றிய பின்னர் சட்டப்படி ஓய்வு பெற்றதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.</p><p> இருப்பினும், 2013 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று The Island பத்திரிகையில் ஊடகவியலாளர் ஷமீந்திர பெர்னாண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறிய தகவல்கள் வேறுபட்டதாகக் குறிப்பிடப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/988082d7-cd0f-4f54-abf1-449e5c98c14d/26-6a6af3eb9a135.webp' /></p><p>
</p><p>
1990 மார்ச் மாதத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் இரண்டாவது ஈழப் போர் தொடங்கியது. </p><p>வடக்கிலிருந்த இராணுவ முகாம்களுக்கு கடல் மற்றும் வான்வழியே மட்டுமே பொருட்கள் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. </p><p>அந்நேரத்தில், லெப்டினன்ட் கர்னலாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் வசித்த பெற்றோருடன் இணைவதற்காக இராணுவத்தை விட்டு வெளியேறுமாறு அவரது மனைவி அயோமா ராஜபக்ச வலியுறுத்தியதாக அந்த நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.</p><p>

ஆரம்பத்தில் அதற்கு சம்மதிக்காத அவர், பின்னர் பிரிகேடியர் விஜய விமலரத்னவின் உதவியுடன் இராணுவப் பணியிலிருந்து விலகும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p> இதற்கிடையில், அவர் ஓய்வு பெற உள்ளதாக தென்னிலங்கையின் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னவை அதிருப்தியடையச் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> பின்னர் கோட்டாபய ராஜபக்ச கொத்தலாவல பாதுகாப்பு அகாடமியின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.</p><p>

1971 ஏப்ரல் 26 அன்று லெப்டினன்டாக இராணுவத்தில் இணைந்த அவர், சிக்னல் படை, சிங்கள ரெஜிமெண்ட், ரஜரட்ட ரைஃபிள்ஸ் மற்றும் கஜபா ரெஜிமெண்ட் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. </p><p>1991 மார்ச் 2 அன்று ரஞ்சன் விஜயரத்ன படுகொலை செய்யப்பட்ட பின்னர், அதே ஆண்டின் நவம்பர் 1 அன்று அவர் முழுமையாக இராணுவத்தை விட்டு அமெரிக்கா சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>

2012 ஆம் ஆண்டின் மற்றொரு சர்ச்சை</h2><p>

இதற்கு மாறாக, 2012 ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, முன்னணி பத்திரிகை ஒன்றில்&nbsp; பத்திரிகையின் ஆசிரியர் ஃப்ரெட்ரிகா ஜான்ஸுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92df3519-fe27-4471-b099-2302b1fd21ae/26-6a6af3ec4d276.webp' /></p><p>
</p><p>
அவரது மனைவியின் செல்லப்பிராணியை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், பொதுச் சொத்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற ஜான்ஸ் தொடர்புகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அந்த உரையாடலின் போது, கோட்டாபய ராஜபக்ச கடுமையான வார்த்தைகளில் திட்டியதுடன், அவரை சிறையில் அடைப்பதாகவும், மக்களால் கொலை செய்யப்படும் நிலை உருவாகும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. </p><p>எனினும், அந்த உரையாடலை சமூக ஊடகங்களில் வெளியிடாமல், "Gota Goes Berserk" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>
சமீபத்திய உரையாடலைச் சுற்றியுள்ள விமர்சனங்கள்</h2><p>

2022 மக்கள் எழுச்சிக்குப் பிறகு அதிகாரத்தை இழந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அவரை ஆவேசப்படுத்தி, அந்த உரையாடலை ரகசியமாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது, பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d05be4f-dcef-4bab-ae67-ad9323572c63/26-6a6af3ed02821.webp' /></p><p>

சில அரசியல் விமர்சகர்கள், குறிப்பாக துலான் சேனாதீர போன்றோர், அதிகாரத்தில் இருந்த காலத்தில் எதிர்கொள்ளத் தயங்கியவர்களே தற்போது முன்னாள் ஜனாதிபதியை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர் என்றும், இதை "Punching Down" எனப்படும், அதிகாரமற்ற நிலையில் உள்ள ஒருவரை குறிவைத்து தாக்கும் செயல் எனவும் விவரித்துள்ளனர்.
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட நபரின் சம்மதமின்றி தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்து வெளியிடுவது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக ஒழுக்க விதிகளுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் முரணானதாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.</p><p></p><p>
</p><h2>
அதிகாரத்தில் இருந்த காலத்தின் சர்ச்சைகள்</h2><p>

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நோயார் மீதான தாக்குதல், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் அவரது பெயர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோல், 2012 வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம், 2013 ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு, MiG-27 விமான கொள்முதல் விவகாரம், டி.ஏ. ராஜபக்ச அருங்காட்சியக நிதி முறைகேடு போன்ற விடயங்களிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிர்வாக அதிகாரங்களை விரிவுபடுத்தியமை, குற்றப்புலனாய்வு அதிகாரி ஷானி அபயசேகரவுக்கு எதிரான நடவடிக்கைகள், சிவில் நிர்வாகத்தை இராணுவமயமாக்கியதாக எழுந்த விமர்சனங்கள், சுனில் ரத்நாயக்க மற்றும் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு, கொவிட் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை பாதித்த கட்டாய தகனம், 2019 வரி குறைப்புகள் மூலம் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆகியவை தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்படாமல் இருக்க அவர் தாக்கல் செய்த மனுக்களின் பின்னணியில், எதிர்காலத்தில் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதி அளிக்க முடியாது என அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T07:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/usd-lkr-forecast-will-usd-lkr-go-up-or-down-1785393678"></link>
            <id>https://ibctamil.com/article/usd-lkr-forecast-will-usd-lkr-go-up-or-down-1785393678</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (30.7.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (30.7.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.48 ரூபாயாகவும், விற்பனை விலை 340.59 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. </p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>நேற்று (24) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி, கொள்வனவு விலை 331.59&nbsp; ரூபாயாகவும், விற்பனை விலை 340.71 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51c2c60-a2f9-444e-830d-9dd348987186/26-6a6af27d197e9.webp' /></p><p>இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.56 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada)&nbsp; டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி&nbsp;243.54 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T07:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-detain-suspect-linked-to-wattala-shooting-1785392246"></link>
            <id>https://ibctamil.com/article/police-detain-suspect-linked-to-wattala-shooting-1785392246</id>
            <summary type="text">வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் ஜூலை 23 அன்று நடைபெற்ற ஒரு விருந்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் ஜூலை 23 அன்று நடைபெற்ற ஒரு விருந்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இந்தக் கைது நடவடிக்கை மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (28.07.2026) மாலை மேற்கொள்ளப்பட்டது.</p><p>கைது செய்யபட்ட நபர்&nbsp;சீதுவ, முகலங்காமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வடக்கு குற்றப் பிரிவு</h2><p>
</p><p>
 

</p><p>கைது செய்யபட்ட சந்தேக நபர்&nbsp;துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள்&nbsp;பயன்படுத்திய வாடகைக் காரைப் பெறுவதற்காக இவர் தனது&nbsp;வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றி, குற்றத்திற்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5de5640-9d81-4d84-9e80-f38972809592/26-6a6af39d9527c.webp' /></p><p>
 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp; மேற்கு மாகாணத்தின் வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monk-remanded-over-assault-in-temple-dispute-1785390170"></link>
            <id>https://ibctamil.com/article/monk-remanded-over-assault-in-temple-dispute-1785390170</id>
            <summary type="text">ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். </p><p>

அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த தேரரை வரும் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல முறைப்பாடுகள்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதி தேரர் காலமானதைத் தொடர்ந்து, விகாராதிபதி பதவிக்காக அளுகெட்டியாவே சீலவம்ச தேரர் மற்றும் கேசல்போத மேதாங்கர தேரர் ஆகிய இருவருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது.
</p><p>
இதற்கு முன்னரும் இவர்களுக்கிடையேயான மோதல்கள் தொடர்பாக மதியங்கனை காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31826035-3d85-4f54-aaf1-d02fa5b70910/26-6a6ae76b4b75f.webp' /></p><p>

அத்தோடு இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனைகளும் (Suspended Sentences) விதிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் கடந்த 24 ஆம் திகதி, தான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் ஒன்றுடன் விகாரைக்கு வருகை தந்த சீலவம்ச தேரர், அங்கு தங்கியிருந்த மேதாங்கர தேரரிடம் விகாரையின் சாவிக்கொத்தைக் கேட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சீலவம்ச தேரர் மேலும் இரு நபர்களுடன் சேர்ந்து மேதாங்கர தேரரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>

இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த மேதாங்கர தேரர் மதியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3560aa09-b3ee-4bd4-b06f-cdc0dd6ac48d/26-6a6ae76a9d1ae.webp' /></p><p>அராவ பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான சீலவம்ச தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

அத்தோடு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏனைய இரு சந்தேகநபர்களும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவு - யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/condolences-for-late-journalist-sabeswaran-family-1785386279"></link>
            <id>https://ibctamil.com/article/condolences-for-late-journalist-sabeswaran-family-1785386279</id>
            <summary type="text">மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதுடன் அவரது குடும்பத்துக்கு யாழ். ஊடக
மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.
</p><p>
நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல்
பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய
பெருமையும் அவரை சாரும்.</p><p></p><p> </p><h2>அர்ப்பணிப்புள்ள பணிகள்&nbsp;</h2><p>அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி
ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு
பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4fa39e-4c00-4346-b9e6-cc85ebd5c007/26-6a6aecc6a0f3b.webp' /></p><p>தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின்
குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த
ஆளுமையுமாவார். </p><p>அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான
செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு
வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.</p><p> அவரது உயிரும் உடலும்
மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக
வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.
</p><p>
அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும்
உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனச் சோதனையில் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-drivers-issue-prohibition-orders-during-vehicle-1785389638"></link>
            <id>https://ibctamil.com/article/24-drivers-issue-prohibition-orders-during-vehicle-1785389638</id>
            <summary type="text">பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்பு வாகனச் சோதனையின்போது மொத்தம் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
 

வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயா காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் மோட்டார் வாகனப் பரிசோதனை அதிகாரிகளுடன் இணைந்து, அங்கீகரிக்கப்படாத கூடுதல் பாகங்கள் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திர நிலையில் பழுதடைந்த வாகனங்கள் மீது ஒரு சிறப்புப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.</p><p>இந்த ஆய்வில்&nbsp; ​​சாலைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் மாற்றங்களுடன் இயக்கப்பட்டு வந்த 24 வாகனங்களை அவர்கள் கண்டறிந்தனர்.&nbsp;</p><p></p><h2>24 வாகனங்களுக்குத் தடை</h2><p>
 

இதனைத் தொடர்ந்து, வாகனங்களின் ஓட்டுநர்கள், அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் சரிசெய்யப்படும் வரை வாகனங்களை இயக்குவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53833561-4e43-4bbb-87ed-a1d6397cdb78/26-6a6ae97d5ab3f.webp' /></p><p>
</p><p>
 

ஓட்டுநர்களுக்குத் தங்களது வாகனங்களில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும், அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை அகற்றவும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பொதுச் சாலைகளில் இயங்கும் வாகனங்கள் சட்ட மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற வாகனச் சோதனை நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா உக்கிர தாக்குதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-killed-2-children-injured-in-us-strike-on-iran-1785390332"></link>
            <id>https://ibctamil.com/article/3-killed-2-children-injured-in-us-strike-on-iran-1785390332</id>
            <summary type="text">அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றது.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p>அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் ஒரு தம்பதியினரும் அவர்களது இரண்டு வயது குழந்தையும் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடுமையான தாக்குதல் அலை</h2><p>குடும்பத்தின் மற்ற இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் ஹோர்மோஸ்கான் துணை ஆளுநர் அஹ்மத் நஃபிசியை மேற்கோள் காட்டி&nbsp;செய்தி வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528b612b-35f6-4553-9c2a-4b08828c117c/26-6a6ae844ea3b6.webp' /></p><p>கிஷ் தீவிலும், புஷேரிலும், ஈரானின் எண்ணெய் தொழிலின் மையமான குசெஸ்தான் மாகாணத்தின் நான்கு இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்திருந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785391252"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785391252</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 1,313,294 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 46,330 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 370,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,470 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332336dd-35e6-49f3-ace1-2271a1c7efdc/26-6a6ae96be79ec.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 339,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,540 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 324,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[A9 பிரதான வீதியில் கோர விபத்து - யாழ் திரும்பிய இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-two-youth-dead-1785388701"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-two-youth-dead-1785388701</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (30.07.2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து இன்று (30.07.2026) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 25 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>


தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a63ea01-d832-4b9d-a078-4267a89fff2c/26-6a6ae126951b1.webp' /></p><p>



விபத்தில் வாகனத்தில் பயணித்த 25 வயதுடைய இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
</p><p>


எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:37:53+00:00</updated>
        </entry>
    </feed>
