<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-26T15:12:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி கிழக்கு உள்ளிட்ட உள்ள தனியார் காணிகளை விடுவிக்க அநுர உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-order-release-private-land-under-north-1787755577"></link>
            <id>https://ibctamil.com/article/anura-order-release-private-land-under-north-1787755577</id>
            <summary type="text">வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;கடந்த 20ஆம் திகதி பாதுகாப்புத் தரப்பினருக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், ''வசாவிளான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில், இதுவரை உரிமையாளர்கள் விவசாயம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p></p><h2>மீள்குடியேற அனுமதி</h2><p>தற்போது அந்தக் காணிகளை முழுமையாக விடுவித்து, உரிமையாளர்கள் வீடுகளை அமைத்து மீள்குடியேற அனுமதிக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152f088a-4f10-47c1-871b-f0b99a2c2379/26-6a8f00469ac28.webp' /></p><p>பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.</p><p>மேலும், வடக்கின் பல பகுதிகளில் முப்படையினரின் வசமுள்ள சிறிய அளவிலான தனியார் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>இதன்படி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு உண்மையில் தேவைப்படும் காணிகள் மட்டும் சுவீகரிக்கப்படும்.</p><p> அவற்றின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .</p><p>சில காணிகளை பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களால் விடுவிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு அல்லது இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T15:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF- இன் இலங்கை குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நிர்மலா சீதாராமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071"></link>
            <id>https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பங்காற்றியதாக முன்னாள் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>வலைதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலி சப்ரி, தான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக IMF தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.</p><p>அமெரிக்காவில் IMF-ன் பிராந்திய இயக்குநர்களுடன் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்த அலி சப்ரி, இலங்கை தொடர்பாக அதிகாரிகள் மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>அலி சப்ரிக்கு கிடைத்த வாய்ப்பு</h2><p>அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் ஆகியோரை சந்திக்க அலி சப்ரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53e3b90-1c26-43a4-a23d-1e90fa820d57/26-6a8ee7d436377.webp' /></p><p>
அதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மதிய உணவு அருந்தியதாக அவர் கூறியுள்ளார்</p><p>இது குறித்த மேலும் கருத்து வெளியிட்ட&nbsp;அலி சப்ரி,</p><p>&nbsp;“அவர் என்னிடம் ‘அமைச்சரே, சந்திப்பு எப்படி நடந்தது?’ என்று கேட்டார். நான், ‘அவ்வளவு சிறப்பாக இல்லை என பதில் வழங்கினேன்.</p><p>அவர்கள் தயக்கத்துடன் இருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றேன்.</p><p> அதற்கு நிர்மலா சீதாராமன், “கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு முன்பாக நான் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்திக்கிறேன். நான் இலங்கை குறித்து அவரிடம் பேசுகிறேன்” என்றார்.</p><p></p><h2>IMF தலைமைத்துவம்</h2><p>அதன்பின்னர் IMF தலைமைத்துவத்துடன் நடைபெற்ற சந்திப்பில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.</p><p>IMF நிர்வாக இயக்குநரை சந்திக்கச் சென்றபோது, அது எனக்கு மிகவும் முக்கியமான சந்திப்பாக இருந்தது. </p><p>ஆனால் அப்போது அவர்களின் தொனி, அணுகுமுறை, சூழல் என அனைத்துமே மாறியிருந்தன.</p><p> அப்போது கிறிஸ்டலினா ஜார்ஜீவா, தாம் சிறிது நேரத்திற்கு முன்புதான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை பேச்சு இந்தியாவைப் பற்றியது அல்ல.</p><p>இலங்கையைப் பற்றியே இருந்தது என்றும் தன்னிடம் தெரிவித்தார்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T14:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்க்கரை இல்லா சூயிங்கத்தால் மாரடைப்பு - பக்கவாதம்! ஆய்வில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugar-free-chewinggum-linked-to-heart-attack-1787753785"></link>
            <id>https://ibctamil.com/article/sugar-free-chewinggum-linked-to-heart-attack-1787753785</id>
            <summary type="text">சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி அதிக அளவு சைலிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அதிக அளவு சைலிட்டால் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜெர்மனியின் பெர்லின் சாரிட்டே பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வாளர்கள் 17,710 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.</p><p></p><h2>இதயநோய் பாதிப்பு</h2><p>இரத்தத்தில் சைலிட்டால் அளவு அதிகமாக இருந்தவர்களுக்கு இதய நோய் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்ததாகவும், ஆறு ஆண்டுகள் கண்காணிப்பில், அதிக சைலிட்டால் அளவு கொண்டவர்களுக்கு முக்கிய இதயநோய் பாதிப்பு 57% அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f267382-0d2b-44f1-a7cb-497957036c0c/26-6a8ef86a84d9f.webp' /></p><p>அதிக அளவு சைலிட்டால் இரத்தத்தை அடர்த்தியாக்கி, ஆபத்தான ரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>சைலிட்டால் குறைந்த கலோரியுடன் இனிப்புச் சுவை தருவதால் சூயிங்கம், புதினா இனிப்புக்கள் உள்ளிட்ட பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>பல் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பது போன்ற பல் ஆரோக்கிய நன்மைகளும் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>எனினும், சைலிட்டாலின் நீண்டகால இதய ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், சைலிட்டால் கொண்ட பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SF7gurlvFUA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T14:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச் சந்நிதியானின் சப்பறத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannidhi-sappara-tiruvila-1787752904"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannidhi-sappara-tiruvila-1787752904</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.இதேவேளை சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.</p><p>இதேவேளை சந்நிதி முருகன் ஆலய பெருந் திருவிழாவில் அடியவர்கள் தொடர்ச்சியாக தூக்கு காவடி, பறவை காவடி, பால் காவடி, பால் செம்பு, அங்க பிரதட்டை உட்பட பல்வேறு நேற்றிக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில் தேர் திருவிழா நாளை வியாழக்கிழமை காலை 7:30
மணியளவில் இடம் பெறவுள்ளதுடன் தீர்த திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை
இடம் பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ocsd33zZzaw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் விற்பனை: ஆரம்பமாகிறது விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sale-of-intimate-photos-of-women-and-children-1787751158"></link>
            <id>https://ibctamil.com/article/sale-of-intimate-photos-of-women-and-children-1787751158</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணையவழி வலையமைப்பு தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இயங்கி வரும் சில குழுக்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விற்பனைக்கு வழங்கப்படுவதாகவும், அவற்றை வாங்குவதற்கு சில பயனர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>இது தொடர்பாக அமைச்சகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>உதவி இலக்கங்கள்</h2><p>முதற்கட்ட ஆய்வில், போலியான சமூக வலைதளக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு, அந்தக் கணக்குகளை இயக்குபவர்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197e355a-8316-4f9b-87b7-1599db0061df/26-6a8eef5e6e082.webp' /></p><p>மேலும், சிலர் தங்களது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட உள்ளடக்கங்களைப் பகிர முயன்ற சம்பவங்களும் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் நபர்கள் உதவியை நாடலாம்</p><p>1938 – பெண்கள் தொடர்பான உதவி
</p><p>1929 – குழந்தைகள் தொடர்பான உதவி
</p><p>இரு கட்டணமில்லா உதவி எண்கள் மூலமும் தேவையான உதவியைப் பெறலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரிகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் இணையத்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T13:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[🔴LIVE : நல்லூர் கந்தனது பெருமஞ்ச உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-temple-annual-festival-begins-1787749649"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-temple-annual-festival-begins-1787749649</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் இன்று (17.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் இன்று (17.08.2026) காலை கொடியேற்றத்துடன் மிகக் கோலாகலமாக பெருந்திருவிழ ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
</p><p>
 அரோகரா முழக்கத்துடன் எம்பெருமான் முருகனின் அருள்பெற அடியார்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
</p><p>
அதன் நேரடி ஒளிபரப்பு காட்சிகளை இங்கே காணலாம்...!&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zVHpdi2LynQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T13:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு விசேட மாநாடு...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-first-money-next-ampara-relatives-1787744530"></link>
            <id>https://ibctamil.com/article/justice-first-money-next-ampara-relatives-1787744530</id>
            <summary type="text">எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட
எமக்கு நீதியே மிக முக்கியமானது என&amp;nbsp;அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட
எமக்கு நீதியே மிக முக்கியமானது என&nbsp;அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>இந்தநிலையில் நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு எனவும் நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26-08-2026) விசேட
ஊடகவியலாளர் சந்திபொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பல்வேறு நாடுகள்</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f35b23f-c738-4b20-8b55-388aff7ec1b6/26-6a8ee00cb574a.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும்
நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.</p><p> ஆனால், நீதிக்கு
முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல. இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது
தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி வழக்கை முடிக்கப் பார்க்கிறது.
</p><p>
உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில நாடுகளுக்கு
30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன.</p><p></p><h2>எலும்புக்கூடுகள்&nbsp;</h2><p> நாங்களும் கடந்த 17
வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம். எமது இலக்கை அடைய 15
முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். </p><p>ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்
என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்.

இன்று செம்மணியில் 650 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13884f41-629f-4919-afe9-b3e854075e24/26-6a8ee00c0406f.webp' /></p><p> எமது உறவுகளை காணாமல் ஆக்கியது இந்த இலங்கை அரசுதான்.
தற்போதைய அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு
முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. </p><p>நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வலி
எமக்குத் தெரியும் நீதியைப் பெற்றுத் தருவோம் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு
வந்த பின்னர் எனது இராணுவத்தினரை என்னால் காட்டிக் கொடுக்க முடியாது என்று
ஜனாதிபதி கூறிவிட்டார்” அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து
காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின்
சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட மாநாடு தொடர்பிலும் ஊடகங்களுக்குத்
தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அள்ளுண்டு சென்ற வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/floods-hit-hundreds-of-touristsin-nepal-105indians-1787746390"></link>
            <id>https://ibctamil.com/article/floods-hit-hundreds-of-touristsin-nepal-105indians-1787746390</id>
            <summary type="text">நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள்&amp;nbsp; காணாமல் போயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள்&nbsp; காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><p> இவர்களில் 291 பேர் வெளிநாட்டினர் என்றும் 93 பேர் நேபாள குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்தப் பட்டியல் முதற்கட்டமானது என்றும், காணாமல் போனவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>105 பேர் இந்தியர்கள்</h2><p>காணாமல் போன வெளிநாட்டினரில் 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64e8111e-d2a0-468c-9827-e32b35156386/26-6a8edab13b7c3.webp' /></p><p>மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அஸ்திரேலியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். </p><p>மேலும், 37 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>இன்று காலை சுமார் 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பகட்ட தகவல்கள்&nbsp;</h2><p>வெள்ளநீர் திபெத் பக்கத்திலிருந்து வந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தாலும், வெள்ளத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. </p><p>மேலும், பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இந்த வெள்ளத்தால் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே மற்றும் சியாஃப்ருபேசி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T12:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உர இறக்குமதி மோசடியில் சிக்கிய கோட்டாபய...! நீதிமன்றில் அம்பலமான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483</id>
            <summary type="text">சீனாவிடமிருந்து&amp;nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&amp;nbsp;விசாரணைகள்&amp;nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கையூட்டல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவிடமிருந்து&nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&nbsp;விசாரணைகள்&nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d329b42f-070c-4f76-b17b-cb152d9a2306/26-6a8eb2f9638bc.webp' /></p><p>இந்தநிலையில் கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பரிதாபமாக பலியான பெண்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-stabbed-to-death-by-husband-in-mannar-1787740511"></link>
            <id>https://ibctamil.com/article/woman-stabbed-to-death-by-husband-in-mannar-1787740511</id>
            <summary type="text">தலைமன்னாரில்&amp;nbsp;கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னாரில்&nbsp;கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்று (26-08-2026)&nbsp; காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய அவரது மனைவி தலை மன்னார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0dc3757-c582-4681-8813-7f27453e4060/26-6a8ec5e19217f.webp' /></p><p>தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில்
வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:28:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இப்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2 மில்லியன் ரியால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-us-dollar-is-now-worth-2-million-rials-in-iran-1787740912"></link>
            <id>https://ibctamil.com/article/one-us-dollar-is-now-worth-2-million-rials-in-iran-1787740912</id>
            <summary type="text">பொருளாதாரத்தை நசுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இதுவரை இல்லாத மிகக் கடுமையான தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ரியால் அமெரிக்க டொலருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரத்தை நசுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இதுவரை இல்லாத மிகக் கடுமையான தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ரியால் அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாறு காணாத புதிய சரிவைச் சந்தித்துள்ளது.</p><p> திறந்த உலக சந்தையில் அதன் மதிப்பு ஒரு டொலருக்கு 2 மில்லியன் ரியால்களைக் கடந்து அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
பல தசாப்தங்களாக அமெரிக்கா விதித்துள்ள தடைகளும், குறிப்பாக அதன் அணுசக்தித் திட்டம் தொடர்பான எதிர்ப்புக்களும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது.</p><p></p><h2>ஈரானிய ரியால்</h2><p> இதனால் ஈரானிய ரியால் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பணவீக்கப் பிரச்சினைகளும் மக்களுக்குத் துயரத்தைக் குவித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcdc8ba0-98b3-447f-9947-dd86cfce94e4/26-6a8ec5e5532c3.webp' /></p><p> பெப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர், சுமார் 92 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களை மேலும் மோசமாக்கியுள்ளது.</p><p>போருக்கு முன்பு, 2 மில்லியன் ரியால்களுக்கு சுமார் 4 கிலோ தக்காளி, அரை கிலோ கோழிக்கறி மற்றும் ஒரு லிட்டருக்கும் சற்றுக் குறைவான சமையல் எண்ணெய் ஆகியவற்றை வாங்க முடிந்ததாக மத்திய கிழக்கு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>எனினும், இன்று, அதே தொகைக்கு ஏறக்குறைய பாதி அளவிலான பொருட்களே கிடைப்பதாகவும், தக்காளியின் சராசரி விலை 71 சதவிகிதமும், கோழிக்கறி 74 சதவிகிதமும், சமையல் எண்ணெய் 177 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>இன்சுலினின் விலை 642 சதவீதம் உயர்வு</h2><p>நீரிழிவு நோயாளிகளின் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாக விளங்கும் இன்சுலினின் விலை 642 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8b88f4-3f10-42ae-ac31-804f599374be/26-6a8ec5e631b57.webp' /></p><p>இந்த போர் ஈரானின் பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கவில்லை என்றும் ஆனால் அது அவற்றை பெரிதாக்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p> போரினால் ஏற்பட்ட சேதங்கள், தடைபட்ட உற்பத்தி மற்றும் முற்றுகை ஆகியவை புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ள நிலையில், வேலையின்மை மற்றும் தேக்கமடைந்த வாங்கும் சக்தி ஆகியவை அவற்றைச் சமாளிக்கும் குடும்பங்களின் திறனைக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T10:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவக மக்களுக்கு மின் கட்டணக் குறைப்பு...! அநுர அரசிற்கு ஈ.பி.டி.பி விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/epdp-urges-lower-power-tariffs-for-islands-1787737496"></link>
            <id>https://ibctamil.com/article/epdp-urges-lower-power-tariffs-for-islands-1787737496</id>
            <summary type="text">தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.ஈழ மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இதனை தெரிவித்துள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (26.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,&nbsp; ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இந்திய அரசாங்கத்தின்
உதவியுடன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள்
கடந்த அரசாங்க காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>இணைப்புக் கட்டமைப்பு</h2><p>குறிப்பாக அதற்கான நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தாவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.</p><p>
குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில்
இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த டக்ளஸ் தேவானந்தா, தீவகங்களில்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் இணைப்புக் கட்டமைப்புடன்
இணைக்கவேண்டிய அவசியம் இல்லாமையால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த
தீவுகளின் மக்களுக்கே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3accb7f2-a6e6-40c5-94aa-a9611df3a330/26-6a8ebc3233268.webp' /></p><p>மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவக மக்கள் பொருளாதார
ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதை கருத்தில்
கொண்டு இந்திய உதவியுடன் அமைக்கப்படும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளில்
இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட தீவக மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற
கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.</p><p>

இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய அமைச்சரவையும் சாதகமான இணக்கத்தை
வெளிப்படுத்தியிருந்தார்.</p><p> கடந்த அரசாங்க காலத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T10:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-bishop-of-the-jaffna-diocese-has-taken-charge-1787739491"></link>
            <id>https://ibctamil.com/article/new-bishop-of-the-jaffna-diocese-has-taken-charge-1787739491</id>
            <summary type="text">யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) புனித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.</p><p> 

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்து வரப்பட்டார்.</p><p></p><h2>புனித மரியன்னை பேராலயம்</h2><p> 

தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ebd4ff7-8d26-47cb-80d5-566508d683ca/26-6a8ebd6618e33.webp' /></p><p> </p><p>

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T10:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரனின் கபடத்தனமான அரசியல்! கடுமையாக சாடிய ஆளும் தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sumanthiran-s-hypocritical-politics-1787738046"></link>
            <id>https://ibctamil.com/article/sumanthiran-s-hypocritical-politics-1787738046</id>
            <summary type="text">வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி
சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை
விடயங்களையும் அறிந்த முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி
சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை
விடயங்களையும் அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை
கொழும்பில் போராட அழைப்பது கபடத்தனமான அரசியல் செயற்பாடாகும் என கடத்தொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>
யாழ் மாவட்ட செயலகத்தில். நேற்று இடம்பெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு
அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டு கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம்.</p><p></p><h2>அரசாங்கத்தை குழப்பும் முயற்சி</h2><p>
</p><p>
இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல்
நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad92bbd-fd93-4892-9d88-774b8c8a1aa7/26-6a8eb82887d9c.webp' /></p><p>
</p><p>
அண்மையில் வலிவடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சில
கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.</p><p>

அதாவது வலி. வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை அழைத்துக் கொண்டு கொழும்பு
ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காகன அழைப்பை
விடுத்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி கடந்த வாரம் வலி. வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட
தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன்
கொழும்பில் மக்களை போராட அழைத்திருக்கிறார்.
</p><p>
இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற
நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்கு
ரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடு.</p><p>

யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கம்
மக்களுடைய காணிகளை மக்களுக்கு என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் எமது வேலை
திட்டங்களை மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T09:56:52+00:00</updated>
        </entry>
    </feed>
