<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T20:10:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kudu-salindu-s-case-files-missing-1788463151"></link>
            <id>https://ibctamil.com/article/kudu-salindu-s-case-files-missing-1788463151</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &quot;குடு சலிந்து&quot; என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இது தொடர்பாக ஏழு பெண் அதிகாரிகள் உட்பட பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பானந்துறை பிரிவு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>காணாமல் போன கோப்புகள்</h2><p>

காணாமல் போன கோப்புகளில் ஒன்று பானந்துறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் தூண்டுதலின் பேரில் நடந்ததாகக் கூறப்படும் கொலை வழக்கு தொடர்பானது என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65668b92-be88-42ca-8381-9e4e9654181c/26-6a99ccfcb085c.webp' /></p><p>
</p><p>
மற்றொன்று குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் 28 அன்று மனு மூலமாக நீதிமன்றத்தின் முன் இந்த வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிஐடி அதிகாரிகளால் வழக்கு அறிக்கையைக் கண்டறிய முடியவில்லை.இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே வழக்குக் கோப்புகள் முழுமையாகக் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.</p><h2>சிசிரிவி கமரா ஆய்வு</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 1 அன்று அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, 'பி அறிக்கை' தாக்கல் செய்யப்பட்டு பானந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd70a55-a95f-43e7-af29-91d5b68de42b/26-6a99ccfd66e70.webp' /></p><p>
</p><p>
நகல்களைப் பெறுவதற்காக இந்த ஆவணங்கள் ஓர் அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காப்பகத்தில் வைக்கப்பட்ட போதே காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

 இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிரிவி (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T19:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hearings-on-22nd-amendment-bill-completed-1788460508"></link>
            <id>https://ibctamil.com/article/hearings-on-22nd-amendment-bill-completed-1788460508</id>
            <summary type="text">இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.</p><p> 

இதுகுறித்த எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கடந்த செப்டம்பர் 1 அன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p></p><h2>எழுத்துப்பூர்வ வாதங்கள்</h2><p> </p><p>

அதன்போது, இவ்விவகாரத்தை ஒரு முழு அமர்வின் முன் விசாரிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், அக்க கோரிக்கை எவ்வித காரணமும் குறிப்பிடப்படாமல் நிராகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0aca88-59f4-4a74-82b9-b9a2317236b4/26-6a99c0e5f37fc.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

விசாரணையின் முடிவில், எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிக்க இன்று பிற்பகல் 3.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர், தாம் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்யப் போவதில்லை என மனுக்கள் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.</p><h2>நீதிபதிகள் அமர்வின் தீர்மானம்</h2><p>
</p><p>
அரசாங்க வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து, அதற்கு வாய்மொழி மூலம் பதில் அளிக்க தமக்கு வாய்ப்பு கேட்கப்பட்டும் அது வழங்கப்படவில்லை என்றும், அதனால் அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க இயலாமல் போனதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8c8b5da-0afc-4661-a201-2ef1fe3f8fd4/26-6a99c0e6a9c54.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தும் எதிர்த்தும் மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடி குறித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்மானம், உரிய நேரத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இரகசியமாகத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733"></link>
            <id>https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>


 யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட காணொளியில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.</p><h2>&nbsp;அவர் வெளியிட்டுள்ள காணொளி</h2><p>
</p><p>
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=526&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1523240569471077%2F&show_text=false&width=560&t=0" width="560" height="526" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.



நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் </p><p>நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T18:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601"></link>
            <id>https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601</id>
            <summary type="text"> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, கற்பிட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
காவல்துறையினருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான திலினி தில்ருக்ஷி என்ற கர்ப்பிணித் தாய் என தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1e6b91-99b1-4617-853a-d10b9e6c12e3/26-6a99b5a3c4e77.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/entrance-applications-for-grade-six-1788456333"></link>
            <id>https://ibctamil.com/article/entrance-applications-for-grade-six-1788456333</id>
            <summary type="text">

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிவிப்பானது, இன்று(03) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படவேண்டிய திகதிகள் மற்றும் வழிமுறைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>56,000 மாணவர்கள் சித்தி</h2><p>
</p><p>
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0122a10f-2f34-470f-8308-635cd4f8e06d/26-6a99b0984b66a.webp' /></p><p>
</p><p>
அதன்போது, குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a>WHATSAPP CHANNE</a></b><a>L</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T17:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மிரட்டும் இயற்கை பேரிடர் : வெள்ளப்பெருக்கை அடுத்து நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-hits-tibet-1788452672"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-hits-tibet-1788452672</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>போராடும் மீட்பு படையினர்</h2><p>&nbsp;இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c06af4b-8e2c-485d-9950-94ac84c604d8/26-6a99a68d734fc.webp' /></p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடைப்படும் மின்சாரம் : பட்டம் விடுபவர்களுக்கு மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/avoid-flying-kites-near-high-voltage-transmission-1788449530"></link>
            <id>https://ibctamil.com/article/avoid-flying-kites-near-high-voltage-transmission-1788449530</id>
            <summary type="text">220 kV மற்றும் 132 kV உயர் மின்னழுத்த மின் செலுத்தல் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்பு துணை மின் நிலையங்களுக்குக் கீழேயோ, அருகிலோ அல்லது சுற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>220 kV மற்றும் 132 kV உயர் மின்னழுத்த மின் செலுத்தல் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்பு துணை மின் நிலையங்களுக்குக் கீழேயோ, அருகிலோ அல்லது சுற்றியோ பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின் அமைப்பு இயக்குநரகம் (NSO) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தேசிய மின் அமைப்பு இயக்குநரகத்தின் தகவலின்படி, பட்டங்களும் பட்ட நூல்களும் மின் செலுத்து தடங்களில் சிக்கியதால் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><h2>மின்விநியோகம் தானாகவே துண்டிக்க வாய்ப்பு</h2><p>இத்தகைய சம்பவங்கள் மின்சாரக் கோளாறுகளை ஏற்படுத்தி, மின் செலுத்துத் தடங்கள் தானாகவே துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். சிக்கிய பட்டங்களையும் நூல்களையும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் கைமுறையாக அகற்ற வேண்டும் என்றும் தேசிய மின் அமைப்பு இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9174301e-074f-4e23-9011-6d54cf4e2aef/26-6a999954afefe.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவங்கள் தேசிய மின் அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாகப் பாதிக்கக்கூடும், மேலும் மின் உற்பத்தி அலகுகள் துண்டிக்கப்படுவதற்கும் வழிவகுக்கலாம்.</p><p></p><h2>நுகர்வோரின் மின்சார விநியோகத்தில் தற்காலிகத் தடைகள்&nbsp;</h2><p>

குறிப்பாக, 02 செப்டம்பர் 2026 அன்று, இவ்வகையான சம்பவங்கள் மின் அமைப்பின் நிலைத்தன்மையை மோசமாகப் பாதித்தன. அமைப்பின் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான ஒரு அவசர நடவடிக்கையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோக ஊட்டிகளை அணைக்க வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a7ec09-7611-4e90-9a1a-af27fea25da4/26-6a99995560dfa.webp' /></p><p>

இதனால், அந்த மின்வழங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நுகர்வோரின் மின்சார விநியோகத்தில் தற்காலிகத் தடைகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
</p><p>
எனவே, உயர் மின்னழுத்த மின் செலுத்துத் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்புத் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறும், தேசிய மின்சார அமைப்பின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதில் ஒத்துழைக்குமாறும் தேசிய மின்சார அமைப்பு (NSO) பொதுமக்களை வலியுறுத்தியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள அமெரிக்க தளங்களை அதிகாலைவேளை துவம்சம் செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-army-attacks-target-us-communications-systems-1788446752"></link>
            <id>https://ibctamil.com/article/iran-army-attacks-target-us-communications-systems-1788446752</id>
            <summary type="text">ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விமானக் கொட்டகைகள் குறிவைக்கப்பட்டன என ஈரானின் அரை அரச செய்தி நிறுவமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இந்தத் தாக்குதல்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள், போர் விமானக் கொட்டகைகள், படைவீரர் நிலைகள் மற்றும் ராடர் அமைப்புகளைக் குறிவைத்தன.</p><h2>அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி</h2><p>&nbsp;அமெரிக்காவின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது ஈரானியப் பொதுமக்கள் மற்றும் ஆயுதப் படையினர் வீரமரணம் அடைந்ததற்குப் பதிலடியாக, தனது 'சயேகே' (மின்னல்) நடவடிக்கையின் 31-வது அலையின் ஒரு பகுதியாக, இன்று (03)வியாழக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f9a33e-ae21-4a3b-965a-5c57491289b1/26-6a998b9443a32.webp' /></p><p>
</p><p>
அந்த அறிக்கையின்படி, குவைத்தில் உள்ள அமெரிக்காவால் இயக்கப்படும் அகமது அல்-ஜாபர் விமானத் தளத்தின் மீது ஈரானிய ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும் தாக்குதல் நடத்தின.</p><h2>&nbsp;அமெரிக்க இராணுவத்திற்கு பலத்த சேதம்</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களால் தகவல் தொடர்பு அமைப்புகளும் போர் விமானக் கொட்டகைகளும் சேதமடைந்ததாக இராணுவம் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e57684e-a852-44ed-b263-8f62599a7f5e/26-6a998b94f2924.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமானப்படைத் தளத்தில், ஈரானியப் படைகள், அமெரிக்க துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் ராடர் அமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு அகமது அல்-ஜாபர் ஒரு முக்கிய தளவாட மற்றும் ஆதரவு மையமாக இருப்பதாக இராணுவம் விவரித்தது.</p><p></p><h2>அமெரிக்காவிற்கு முக்கிய தளங்கள்</h2><p>
</p><p>
இப்பகுதியில் அமெரிக்காவின் வான்வழி நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளில் இந்தத் தளம் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக அது கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1d10ea-b2c9-4c80-baff-834b9c6d2e2c/26-6a998b95a6a17.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அல் மின்ஹாத் வெளிநாட்டுப் படைகளின் வான்வழி ஆதரவு மற்றும் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக விவரிக்கப்பட்டது.</p><p>

ஈரானிய சுகாதார அமைச்சகத்தின்படி, தெற்கு ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய அலைத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 142 பேர் காயமடைந்தனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relatives-of-missing-persons-protest-in-vavuniya-1788443761"></link>
            <id>https://ibctamil.com/article/relatives-of-missing-persons-protest-in-vavuniya-1788443761</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியாவில் இன்று(03) தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் 3483 நாட்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியாவில் இன்று(03) தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாகவே அவர்கள் இப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இதன்போது காணாமல் போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்க ஐரோப்பிய
கொடிகளையும் கையில் ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>பேச்சு வேண்டாம் — நடவடிக்கை வேண்டும்</h2><p>இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,
</p><p>

பேச்சு வேண்டாம் — நடவடிக்கை வேண்டும்: காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர்
இறையாண்மையை மீட்டெடுக்க கனடா உதவ வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f7d87e-c1d5-406c-add2-7a72204d176c/26-6a9981b25a6c2.webp' /></p><p>

வவுனியாவில் ஏ9 வீதியோர போராட்டக் கொட்டகையில், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள்
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி இன்று 3,483வது நாளாக நாங்கள்
தொடர்ந்து காத்திருக்கிறோம்.

பல ஆண்டுகளாக வாக்குறுதிகளையும் அரசியல் பேச்சுகளையும் கேட்டுவிட்டோம்.</p><p> ஆனால்
எங்கள் பிள்ளைகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
எங்களுக்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்திடமிருந்து
நடைமுறை நடவடிக்கை வேண்டும்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறிவிட்டன</h2><p>எங்கள் பார்வையில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் அரசியல்
எதிர்காலத்திற்கும் நிலையான தீர்வு, காலனித்துவ நீக்கத்தின் (Decolonization)
அடிப்படையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறையை
முன்னெடுப்பதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3edc7a97-2e6f-41d0-9592-895579a8ad41/26-6a9981b328fd5.webp' /></p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு
ஏற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறிவிட்டன
என்பதைக் கூறி, இந்தப் பிரச்சினையை சர்வதேச சட்டத்தின் கீழ் நீதிமன்ற
வழிமுறைக்கு எடுத்துச் செல்ல பிரித்தானியா தனது வரலாற்றுப் பொறுப்பை ஏற்க
வேண்டும் என்று அண்மையில் லண்டனிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.
</p><p>இப்போது எங்கள் அழைப்பு கனடாவுக்கு
இன்று, செப்டம்பர் 3, 2026 கனடாவின் பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும்
எங்கள் தாய்மார்களின் சார்பில் முறையான கடிதங்களை அனுப்புகிறோம்.</p><p></p><h2>கனடா உதவ வேண்டும்</h2><p>
</p><p>
தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத
பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும்
இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573f45cc-4c4e-4a68-9573-d4ab9da58298/26-6a9981b3ec7d0.webp' /></p><p>
</p><p>
பிரித்தானியாவிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கனடாவும் ஆதரவளித்து, தமிழ்
மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேச
சட்டத்தின் கீழ் ஒரு தீர்வைத் தேடுவதற்கு உதவ வேண்டும்.
</p><p>எங்கள் செய்தி தெளிவானது:
பேச்சு மட்டும் போதாது — நடவடிக்கை வேண்டும்.
எங்கள் பிள்ளைகளுக்கு உண்மை மற்றும் நீதி வேண்டும்.
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் எதிர்காலம் வேண்டும்.
காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச
சட்ட நடவடிக்கை வேண்டும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T14:18:42+00:00</updated>
        </entry>
    </feed>
