<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-30T04:20:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடிக்குமா உலகப் போர்: ஈரானை பயங்கரமாக தாக்கும் அமெரிக்கா - அச்சத்தில் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-powerful-strikes-on-iran-1785381260"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-powerful-strikes-on-iran-1785381260</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க - சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.</p><p></p><h2>வலுவான பதிலடி&nbsp;</h2><p>அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2a467a-48ee-4bb8-9961-a306c28aac80/26-6a6ac52c781fe.webp' /></p><p>இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான வசதிகள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் நடந்த தாக்குதல்களில் இருவர் காயமடைந்ததாகவும், வடமேற்கில் உள்ள குசெஸ்தான் மாகாணத்திலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.</p><p>இதற்கிடையில், எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் இரண்டு இயற்கை எரிவாயுக் கப்பல்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் தீப்பிடித்ததாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.</p><p> </p><p>பல நாட்கள் நிலவிய அமைதிக்குப் பிறகுஇ பல முனைகளில் ஏற்பட்ட மோதல்கள், ஒரு முழுமையான போர் மீண்டும் தொடங்குவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் சண்டை - மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-ordered-to-pay-ceb-losses-after-protest-1785380254"></link>
            <id>https://ibctamil.com/article/man-ordered-to-pay-ceb-losses-after-protest-1785380254</id>
            <summary type="text">உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p></p><h2>கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்</h2><p>

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8707e409-a0af-498f-b65a-237f0850c094/26-6a6abff13a1c6.webp' /></p><p>பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
</p><p>
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p></p><h2>மின்சார சபைக்கு இழப்பு</h2><p>

நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c79e94-62ab-4923-9d9c-3f87fb1af2c1/26-6a6abff04a69c.webp' /></p><p>விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாக்கு எதிராக திரும்பும் FIFA - மைதானத்தில் உச்சக்கட்ட வன்மம்: சிக்கலில் மெஸ்ஸி அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.</p><p>ஃபாக்லாந்து தீவுகளுக்கு உரிமை கோரும் பதாகையை காட்சிப்படுத்தியது உட்பட பல விதிமீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட உள்ளளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.</p><p>ஃபிஃபா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாகுபாடு காட்டும் கோஷங்கள்&nbsp;</h2><p>இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fec4d9f9-04a1-48c6-ae48-bad9d73b0e95/26-6a6ab2360cfef.webp' /></p><p>அத்துடன் பல அர்ஜென்டினா போட்டிகளின் போது, ​​பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், மீண்டும் மீண்டும் தாமதமாகத் தொடங்கப்பட்ட போட்டிகள், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியது, அணி மற்றும் பார்வையாளர்களால் காட்டப்பட்ட பொருத்தமற்ற செய்திகள், மற்றும் ரசிகர்களால் வீசப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்தும் ஃபிஃபா விசாரணை நடத்துகின்றது.</p><p>அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஈடுபட்ட வீரர்கள் மீது தனி ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் அர்ஜென்டினா வீரர்களான நஹுயல் மோலினா மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ், மற்றும் அர்ஜென்டினா அதிகாரியான ராபர்டோ அயலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T02:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/it-may-rain-frequently-today-1785374618"></link>
            <id>https://ibctamil.com/article/it-may-rain-frequently-today-1785374618</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>

அத்தோடு, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0483695-3741-47bf-b6c1-5bac67302857/26-6a6aa911c3ddc.webp' /></p><p>

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில், காலநிலை மாற்றங்களால ஏற்படக்குகூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T01:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sub-inspector-arrested-for-drug-trafficking-1785370663"></link>
            <id>https://ibctamil.com/article/sub-inspector-arrested-for-drug-trafficking-1785370663</id>
            <summary type="text">தெஹிவளை காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை உதவி பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை உதவி பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி 3 ஆண்டுகள் சேவை பணியாற்றியவர் என்றும், மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தொடங்கியுள்ளதாகக் காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கைது செய்யப்பட்ட உதவி பரிசோதகருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரி, அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/945262c3-7864-42d6-93bc-f47c19ffe4ed/26-6a6a9f3896ec5.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அவர் மீதான மேலதிக விசாரணைகளை தெஹிவளை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T00:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு சீனா வழங்கவுள்ள ஆயுதங்கள்! அதிருப்தியில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-china-sells-weapons-to-iran-trump-disappointed-1785368903"></link>
            <id>https://ibctamil.com/article/if-china-sells-weapons-to-iran-trump-disappointed-1785368903</id>
            <summary type="text">சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால், அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால், அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

சீனாவில் தயாரிக்கப்பட்ட, தோளில் வைத்து ஏவக்கூடிய 300 முதல் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொண்ட சரக்கு சில வாரங்களுக்குள் ஈரானுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 குறித்த ஒப்பந்தத்தின் மதிப்பு 60 மில்லியன் முதல் 70 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.</p><p></p><h2>உளவுத்துறை தகவல்</h2><p>
</p><p>
தெஹ்ரான் முக்கிய வெளிநாட்டு கூட்டாளிகளின் உதவியுடன் தனது ஆயுத இருப்பை மீண்டும் நிரப்ப முயன்று வரும் பின்னணியில், ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00625352-8307-4025-87de-bad2a0660a56/26-6a6a934e257f4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்து வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதாவது, இதுபோன்ற விஷயங்கள் நடப்பதுண்டு, ஆனால் இது ஆச்சரியமாக இருக்கும். அவர் (ஷி ஜின்பிங்) இதில் பங்கேற்க மாட்டேன் என்று என்னிடம் மிகவும் உறுதியாகக் கூறினார்; மேலும் நான் மிகவும் ஏமாற்றமடைவேன் என்பதும் அவருக்குத் தெரியும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T23:57:05+00:00</updated>
        </entry>
    </feed>
