<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T09:23:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி...! மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-dead-one-injured-in-eachilampattu-crash-1789633527"></link>
            <id>https://ibctamil.com/article/one-dead-one-injured-in-eachilampattu-crash-1789633527</id>
            <summary type="text">திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17-09-2026) குறித்து விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம் வயது (33) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த மேற்படி நபரே உயிரிழந்துள்ளார்.</p><p>அத்தோடு அவரோடு மோட்டார்
சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர்
படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f690270-ed33-45a1-a371-24780fe5d93c/26-6aabae24cf819.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான தட்டம்மை நோய் பரவல்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/measles-outbreak-over-1000-children-lose-lives-1789631562"></link>
            <id>https://ibctamil.com/article/measles-outbreak-over-1000-children-lose-lives-1789631562</id>
            <summary type="text">பங்களாதேஷில் வேகமாகப் பரவி வரும் கடுமையான தட்டம்மை தொற்று காரணமாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் மற்றும் உலக சுகாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் வேகமாகப் பரவி வரும் கடுமையான தட்டம்மை தொற்று காரணமாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளன.
</p><p>
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 194,000க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகிய நாடாக பங்களாதேஷ் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாடு முழுவதும் 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாளொன்றுக்கு சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;தடுப்பூசி வழங்கும் திட்டம்</h2><p>
</p><p>
அதிக மக்கள் தொகை, கொவிட்-19 காலப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஷேக் ஹசீனா அரசாங்கம் பதவி விலகிய பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவை இந்த நிலைமை மேலும் மோசமடைய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209b6159-8c5c-423b-908c-c4f8a77aefe5/26-6aaba3d222e70.webp' /></p><p>
</p><p>
பதிவாகியுள்ள நோயாளர்களில் 83 சதவீதமானோர் தடுப்பூசி பெறாத குழந்தைகள் எனவும், குழந்தைகளிடையே நிலவும் அதிகளவான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக நோயின் சிக்கல்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மருத்துவமனைகளின் கொள்ளளவை விட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தரையில் பாய்களை விரித்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தடுப்பூசி பெறாத குழந்தைகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி விசேட தீவிர தடுப்பூசி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
தட்டம்மை ஒழிப்பு பாதையில் முன்னேறி வந்த பங்களாதேஷ் தற்போது இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அண்மைக் காலமாக தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T08:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இல்லை! ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-diplomat-denies-iran-begging-us-for-talks-1789631270"></link>
            <id>https://ibctamil.com/article/ex-diplomat-denies-iran-begging-us-for-talks-1789631270</id>
            <summary type="text">ஈரான் தடம்மாறி அமெரிக்காவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்களை முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தடம்மாறி அமெரிக்காவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்களை முன்னாள் ஈரானிய ராஜதந்திரியான அப்பாஸ் காமெயார் (Abbas Khameyar) முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.</p><p>சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானியர்கள் தங்களை அழைத்து, கெஞ்சி, சந்திப்பைக் கேட்கிறார்கள் என்று ட்ரம்ப் பதிவிடும் ட்வீட்களும் அறிக்கைகளும் ஒரு புனையப்பட்டக் கதை.</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>ஆனால் இதை யாரும் நம்பவில்லை, நிலைமைகள் அவ்வாறு நகரவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83613aa9-3c05-4567-ac5d-7c5d8408f0ac/26-6aaba2ff629bb.webp' /></p><p>சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள கட்டமைப்பிற்கு அப்பால் ஈரான் எந்த புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.</p><p>புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை விட, தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே ஈரான் கவனம் செலுத்துகின்றது.</p><p></p><h2>உத்தரவாதங்கள்</h2><p>சர்வதேச உத்தரவாதங்கள் இல்லாமல் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்பதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333eaae8-6fcc-41d6-bed8-a1252f688c54/26-6aaba30017f67.webp' /></p><p>ஆனால் பாகிஸ்தான், கதார் அல்லது ஓமன் ஆகிய தற்போதைய மத்தியஸ்தர்கள் எவராலும் இத்தகைய உத்தரவாதத்தை வழங்க முடியாது.
</p><p>ட்ரம்பின் பகிரங்க அறிவிப்புகள் பெரும்பாலும் அமெரிக்க உள்நாட்டு வாக்காளர்களைக் கவர்வதற்கும், உலகளாவிய எரிசக்தி சந்தையைக்&nbsp; கட்டுப்படுத்துவதற்குமான அரசியல் உத்தியே தவிர அதில் உண்மை ஏதுமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T08:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி - கிராஞ்சி மக்களின் உயிரை பறிக்கும் வீதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/poonakari-kiranchi-a-road-that-claims-people-lives-1789632447"></link>
            <id>https://ibctamil.com/article/poonakari-kiranchi-a-road-that-claims-people-lives-1789632447</id>
            <summary type="text">உரிய முறையில் சீரமைக்கப்படாத பூநகரி - கிராஞ்சி பிரதான வீதி ஊடாக பயணிக்கின்ற மக்கள் உயிரையும் துறக்கின்ற அளவுக்கு பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உரிய முறையில் சீரமைக்கப்படாத பூநகரி - கிராஞ்சி பிரதான வீதி ஊடாக பயணிக்கின்ற மக்கள் உயிரையும் துறக்கின்ற அளவுக்கு பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டிருக்கின்றனர்.
</p><p>
இந்த பிரதான வீதியினுடைய சிதைவுகள் காரணமாக அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை கடந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். </p><p>

ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த வீதியைத் திருத்தி தருவதாக jங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படுகின்ற நிலையில் 15- 20 தேர்தல்களுக்கு முகங்கொடுத்த போதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் 40 - 50 வருடமாக குன்றும் குழியுமாக இந்த பாதை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மழை காலத்தில் வெள்ளம் வந்த பின்னர் உழவியந்திரத்தில் தான் நோயாளிகளையும், பிள்ளைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் ஏற்றுவதாகவும், இந்த பாதையால ஒரு விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p><b>
இது தொடர்பான மேலும் பல வியடங்களை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் காண்க...</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jNFktZUlFu4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p></p><p></p><p></p><p><b></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T08:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-today-17-09-2026-1789628367"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-today-17-09-2026-1789628367</id>
            <summary type="text">நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (17) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (17) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ள நிலையில், சில வங்கிகளில் மாற்றமின்றி காணப்படுகிறது.
</p><p>
சேலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.</p><p></p><h2>தொடரும் வீழ்ச்சி</h2><p>

NDB வங்கியில் கொள்வனவு விலை 327.50 ரூபாயிலிருந்து 327.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aa8f90a-7a14-471e-bd3f-7b1d4b5caf43/26-6aab94cdd7208.webp' /></p><p>

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 327.91 ரூபாயிலிருந்து 328.15 ரூபாயாகவும், விற்பனை விலை 336.04 ரூபாயிலிருந்து 336.29 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
</p><p>
இதனிடையே, சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.00 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T07:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262"></link>
            <id>https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலஞ்சம் அல்லது ஊழல் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களைச் சட்டவிரோதமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a21728f-4282-42ca-b9a5-ef282ffb309e/26-6aab9586aef65.webp' /></p><p> 

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T07:11:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான விதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australia-imposes-strict-rules-on-foreign-students-1789624757"></link>
            <id>https://ibctamil.com/article/australia-imposes-strict-rules-on-foreign-students-1789624757</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் மற்றும் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பை கடுமையாகக் கட்டுப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் மற்றும் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பை கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய குடிவரவு விதிகளை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய குடிவரவு திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதை நடைமுறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய நடைமுறையில், தகுதியுடைய மாணவர் விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு வர முடியும்.</p><p></p><h2>அவுஸ்திரேலியா&nbsp;அரசாங்கம்</h2><p> </p><p>மாணவர் விசா விண்ணப்பங்களில் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான கல்வி மற்றும் சுகாதார காப்புறுதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் குறிப்பிடப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9cf25f4-a5f8-4ba0-86c7-fd10b103864b/26-6aab87e8292d0.webp' /></p><p>
</p><p>
மேலும், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் ஒரு விசா காலாவதியான பின்னர் மற்றொரு விசாவுக்கு மாறுவதன் மூலம் நாட்டில் தொடர்ந்து தங்குவதை கட்டுப்படுத்தவும் புதிய நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
</p><p>
2028ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவின் வருடாந்த நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 300,000 இலிருந்து 225,000 ஆகக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த இலக்கை அடைவதற்காக தற்காலிக விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T07:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-today-gold-rate-1789624463"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-today-gold-rate-1789624463</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (17-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (17-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,344,607 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 379,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffa9442-4a92-45b6-9710-356a41e68e5f/26-6aab8b7acfdb0.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 347,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 332,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை நற்சான்றிதழ் பெற புதிய இலக்கங்கள்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-hotlines-introduced-for-police-clearance-1789625128"></link>
            <id>https://ibctamil.com/article/new-hotlines-introduced-for-police-clearance-1789625128</id>
            <summary type="text">காவல்துறை நற்சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை நற்சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் 24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவல்துறை தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>அத்தியாவசிய பராமரிப்பு</h2><p>கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இணையவழியில் காவல்துறை நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944caf7f-b159-4024-a1cc-cea0888a014f/26-6aab8967f30e8.webp' /></p><p>கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை பிரதேச காவல்துறை நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 859 59 46, 071 859 59 47 மற்றும் 071 859 59 48 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610"></link>
            <id>https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610</id>
            <summary type="text">மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>அதன்படி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சாரதி கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்தின் பின்னர் காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் வேகமாக பயணித்த காரொன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f81d25b-c635-4396-813c-9484bdd91587/26-6aab869ae4d09.webp' /></p><p> 

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். </p><p>

இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T06:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலாங்கொடை பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650"></link>
            <id>https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650</id>
            <summary type="text">அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&amp;nbsp; காவல்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&nbsp; காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வீடுகளை உடைத்து திருடியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட&nbsp; 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (16.09.2026) காலை அம்பலாங்கொட, தலுக்கந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சந்தேக நபரிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் வீடொன்றில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ef223a-6091-47e4-a5e5-cdf7de6d17c7/26-6aab7d7d94ede.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள சந்தேகநபர், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
அம்பலாங்கொடை மற்றும் மேலும் சில காவல் நிலையங்களுக்கு சந்தேகநபருக்கு எதிராக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட - யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&amp;nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக்கர நாற்காலியிலாவது மகிந்தவை மேடைக்குக் கொண்டு வருவோம்! முன்னாள் எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு.</p><p> </p><p></p><h2>சக்கர நாற்காலி</h2><p>எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f817850-6528-4885-a11a-a0c0f85249cf/26-6aab765e2b32e.webp' /></p><p>



சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>மக்கள் முன்னிலை</h2><p>அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர் ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p>

மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523a540d-bb89-4ab6-bb38-54bb87953ecf/26-6aab773047853.webp' /></p><p>ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது.</p><p>

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspicious-death-in-a-secluded-area-1789619748"></link>
            <id>https://ibctamil.com/article/suspicious-death-in-a-secluded-area-1789619748</id>
            <summary type="text">ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த விடயம் பற்றி ஹொரண காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்தவர் பொகுணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என காவல்துறை விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>இதை தொடர்ந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c251c874-5c12-42c0-ae1f-1bd037de13ab/26-6aab745bb4942.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investments-in-sl-affected-by-the-22nd-amendment-1789618933"></link>
            <id>https://ibctamil.com/article/investments-in-sl-affected-by-the-22nd-amendment-1789618933</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நேற்று (16) கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 22வது திருத்தம் என்பது அரசாங்கத்தைத் தவிர இந்நாட்டிலுள்ள அனைவரும் கடுமையாக விமர்சித்த ஒரு திருத்தமாகும்.</p><p></p><h2>22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு</h2><p> </p><p>கடந்த காலத்தில் இத்தகையதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அரசியலமைப்பு திருத்தப்படுவது இது முதன்முறையல்ல, 21 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் 22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ad8e47-6572-432a-aea8-b633424f896b/26-6aab6f83500a3.webp' /></p><p> </p><p>அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டு லாே ஏசியா அமைப்பு மிகவும் கடுமையான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.</p><p>என்றாலும் இவை எதனையும் பொருட்படுத்தாமல், மிகவும் பிடிவாதமாகவும் அகந்தையுடனும் யார் எதிர்த்தாலும் இதனைச் செய்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.</p><p>

இதுவரை எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்த, நான் உட்பட, அனைவரும் ஜெனீவா மற்றும் நியூயோர்க் என அனைத்து இடங்களிலும் "எமது நாட்டில் தலையிடாதீர்கள்" என்றே கூறி வந்தோம்.</p><p>ஏனெனில் எமது நாட்டில் மிகவும் வலுவான சுயாதீன நிறுவனங்கள் உள்ளன. எமது உயர்நீதிமன்றம் சர்வதேச ரீதியில் புகழும் நம்பிக்கையும் பெற்ற நிறுவனமாகும்.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை</h2><p>எனவே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு எமது நாட்டிலேயே உள்ளது. எனவே உங்களின் தலையீடு தேவையில்லை எனக் கூறினோம்.</p><p> இப்போது அந்த வாதத்தை நம்மால் முன்வைக்க முடியுமா? நேர்மையாக முன்வைக்க முடியுமா? இலங்கை நீதித்துறை முன்னெப்போதுமில்லாதவாறு மிகப்பெரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8541f9f9-f4df-4cf3-ba55-84a05c7e47f3/26-6aab6f840b4c7.webp' /></p><p> </p><p>முதலீடுகள் தொடர்பில் இது மிகவும் முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. </p><p>ஆனால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முதலீடுகள் அவசியம். இந்நாட்டிற்கு முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள், வெளிநாடுகள், சர்வதேச வங்கிகள் கவனிக்கும் மிக முக்கிய காரணி நீதித்துறையின் சுயாதீனத்தன்மையாகும்.</p><p>நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். அதில் சந்தேகம் எழுந்தால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள். நாட்டிற்கு முதலீடுகள் வராது.

முதலீடுகள் வராவிட்டால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.</p><p> எனவே இந்த 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு எமது நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-metro-bus-service-expansion-1789617212"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-metro-bus-service-expansion-1789617212</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திட்டமிடப்பட்ட பேருந்து வழித்தடங்களைக் கொண்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

'Lanka Metro Transit' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழித்தட வரைபடங்களில், கொழும்பின் முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் ஏழு சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><h2>திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்கள்</h2><ul><li>

CM 01 – மாகும்புர முதல் புறக்கோட்டை வரை</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3beabe-fcba-4a0d-b58b-de7744ee9128/26-6aab6bf635073.webp' /></p><p>
</p><ul><li>CM 02 – மில்லேனியம் சிட்டி முதல் கொழும்பு கோட்டை வரை
</li><li>CM 03 – கடவத்தை முதல் மாகும்புர வரை
</li><li>CM 04 – தெமட்டகொடை முதல் பாணந்துறை வரை
</li><li>CM 05 – பத்தரமுல்லை முதல் ஏக்கல வரை
</li><li>CM 06 – கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப் பாதை
</li><li>CM 08 – கஹதுடுவ முதல் புறக்கோட்டை/SLIIT வரை</li></ul><p>இந்த பேருந்து வலையமைப்பு மகரகம, நுகேகொடை, பத்தரமுல்லை, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கும்.
</p><p>
வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களில் ஒவ்வொரு வழித்தடத்தினதும் புவியியல் அமைவிடம், முக்கிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இணைப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
எவ்வாறாயினும், செப்டம்பர் மாத இறுதியில் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான குறிப்பிட்ட ஆரம்ப திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.</p><p>

மேலும், பேருந்துகளின் சேவை frequency, கட்டணங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-summoned-by-fcid-sept-24-1789616162"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-summoned-by-fcid-sept-24-1789616162</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
குறித்த கணக்கு தொடர்பான விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும், அதனடிப்படையில் செப்டெம்பர் 24 அன்று அவரை முன்னிலையாகுமாறு கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>விமான நிலையத்தில் கையளிக்கப்பட்ட அறிவித்தல்</h2><p>
</p><p>
இந்த அறிவித்தல் ஆரம்பத்தில் தங்காலையில் உள்ள அவரது இல்லமான 'கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், அக்காலப்பகுதியில் அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>நேற்று தனது சிகிச்சையை நிறைவு செய்த ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்காக மருத்துவமனையிலிருந்து நேரடியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/635ed906-9840-42c1-b783-0eef5e079b83/26-6aab697c7be3a.webp' /></p><p>
</p><p>
அங்கு வைத்து, செப்டெம்பர் 24 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாகுமாறு தெரிவிக்கும் அறிவித்தலை அதிகாரிகள் அவரிடம் கையளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>அந்த அறிவித்தலை அவரது உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாகப் பெற்றுக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
இதனைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (16) அதிகாலை ஒரு சாதாரணப் பயணியாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810"></link>
            <id>https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810</id>
            <summary type="text">ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>1.454 மில்லியன் யூரோ இலஞ்சம்</h2><p>

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகலமான உடற்பகுதியைக் கொண்ட 16 விமானங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2621e3c5-04d0-4cfd-9d55-a1f27844750b/26-6aab499b07b8d.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தின் கீழும் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர் ஒருவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, தற்போதைய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோ இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் முதலில் வைப்பிலிடப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அந்தக் கணக்கிலிருந்து, வர்த்தகர் நிமல் பெரேரா தலைவராக இருந்த சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நிமல் பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
நிமல் பெரேரா தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும், எனினும் அவர் வழங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரத்தில், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் கணக்கிலிருந்து தமக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13289df2-3145-4d0b-8b29-14e55749a634/26-6aab499bac66d.webp' /></p><p>
</p><p>
இந்தத் தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
மேலும், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து, அப்போதைய அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் 160,400 யூரோ மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணைகளின்போது, நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையில் இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும், விசாரணைகளின்போது கிடைத்த மின்னஞ்சல்கள் மூலம் சந்தேகநபர் செயற்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp; முதலாவது சந்தேகநபர்</h2><p>
</p><p>
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f32e528-da87-4950-b414-59b94bc70e0b/26-6aab499c69672.webp' /></p><p>இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என&nbsp; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T04:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fairly-heavy-rainfall-expected-in-island-parts-1789614331"></link>
            <id>https://ibctamil.com/article/fairly-heavy-rainfall-expected-in-island-parts-1789614331</id>
            <summary type="text">நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (17) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (17) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab837e2-4624-45a4-a3a6-6318369437f6/26-6aab5e6a10c4e.webp' /></p><p> </p><p>

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T03:27:00+00:00</updated>
        </entry>
    </feed>
