<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T20:11:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boris-johnson-escapes-russian-drone-attack-1789502959"></link>
            <id>https://ibctamil.com/article/boris-johnson-escapes-russian-drone-attack-1789502959</id>
            <summary type="text">முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.

கடந்த ஞாயிற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கீவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு போரிஸ் ஜான்சன் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

போலந்து எல்லைக்கு அருகிலுள்ள யஹொடின் பகுதியில், ஜான்சன் பயணித்த தொடருந்துக்கு பின்னால் சென்ற மற்றொரு பயணிகள் தொடருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கிரெம்ளின் பேச்சாளர்</h2><p>
</p><p>இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேசிய கிரெம்ளின் பேச்சாளர், “இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பல்ல என்று மறுக்கவில்லை. அதேவேளை, ரஷ்யப் படைகள் உக்ரைன் முழுவதும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4e314c-aeda-4654-81ba-9b2c22000402/26-6aa9a5f1233a0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக சமூக வலைத்தளமான X இல் போரிஸ் ஜான்சன், “போலந்து எல்லையில் நின்றுகொண்டிருந்த உக்ரைனிய தொடருந்து இன்ஜினை தகர்க்க புடினைத் தூண்டிய அந்த சிந்தனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கீவிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் திரும்பிச் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்படும் தொடருந்து பாதையே இது என தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், இந்தச் சம்பவத்தால் போரிஸ் ஜான்சன் வெளியேற்றப்படவோ அல்லது அவரது பயணம் தாமதமடையவோ இல்லை.
</p><p>
ஐரோப்பிய அதிகாரிகள் பயணித்ததாகக் கூறப்படும் எந்தவொரு தொடருந்தும் இந்தத் தாக்குதலில் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T20:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885</id>
            <summary type="text">கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அதிகாரிகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து குறித்த தரப்பினர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p> </p><p>அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கட்டார், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள்</h2><p>மேலும், ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியிருந்தாலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறாது என்று பங்கேற்பாளர்களிடம் CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3bdce3-03a9-450e-9089-fe2e398504dd/26-6aa999ef9f12f.webp' /></p><p>மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்தும் அவர் மாநாட்டில் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T19:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244bf37d-9f61-4e36-ab67-efaec71b7d9d/26-6aa981e9360b7.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T18:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் சைபர் தாக்குதல்! உளவுத்திட்ட நகர்வு குறித்து அமெரிக்கா - பிரித்தானியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804"></link>
            <id>https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804</id>
            <summary type="text">ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து உளவு பார்க்க 'ஸ்பைவேர்' (Spyware) எனப்படும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p>பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையின்படி, </p><p>“ஈரான் அரசு ஆதரவு பெற்ற சைபர் தாக்குதல்தாரர்கள் "CHOSEN BRICK" எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>திருடப்பட்ட&nbsp;மின்னஞ்சல்கள்</h2><p>WhatsApp மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறிப்பிட்ட நபர்களை ஏமாற்றித் தாக்கும் 'ஸ்பியர்-ஃபிஷிங்' (Spear-phishing) பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களின் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் இதர முக்கியமான இரகசியத் தகவல்களை இக்குழுவினர் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32310355-c360-43ee-863d-e8f5853a4c01/26-6aa97bfdd906e.webp' /></p><p>பிரித்தானியா உட்பட உலகம் முழுவதும் வாழும், ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதிருப்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே இந்த உளவுத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.</p><p>ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகத் கருதப்படும் தனிநபர்களை ஒடுக்குவதற்கும், அவர்களைக் கண்காணிப்பதற்கும் ஈரான் இத்தகைய சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை உறுதியாகப் பயன்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T17:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அழைப்பை நிராகரித்து பேச்சுவாரத்தைக்கான கதவை மூடியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467</id>
            <summary type="text">ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.</p><p>

ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பதிவில், “இனி பேச்சுவார்த்தை கிடையாது என்பதிலிருந்து நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்பது வரை அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான சமிக்ஞைகளைக் கண்டு யாரும் திசைதிரும்ப வேண்டாம்.</p><h2>ஈரானின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே பேச்சு</h2><p>எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. சேதத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளால் வரப்போகும் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb050ff8-b200-45c6-92ca-ca6dbe9d1ada/26-6aa97a66a6264.webp' /></p><p>போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இது மிகவும் ஆரம்பநிலை என்று பல நாள்களாகக் கூறி வந்த ட்ரம்ப், நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்</h2><p>
</p><p>
அந்தப் பதிவில், "வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe01a6-50e6-47ac-8435-5ae5867af26a/26-6aa97a675c4f8.webp' /></p><p>போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள,போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855"></link>
            <id>https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
</p><p>
சந்தேக எண்கள் 61 முதல் 81 வரை பெயரிடப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பிற்காக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு&nbsp;</h2><p>&nbsp;அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக 25 பெண் சந்தேக நபர்களையும் முற்படுத்துமாறு நீதவான்&nbsp; உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109a8f7e-aef8-4625-92f2-caa60ca29784/26-6aa9493d2650f.webp' /></p><p>

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை கோரியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சந்தேக நபர்களாக 106 பேர்</h2><p>அதன்படி, இதுவரை 106 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,மேலும் 81 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக முற்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb1d520-766a-486f-942f-5ebe3bb0a850/26-6aa9493dd1c09.webp' /></p><p>

நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷீலானி பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், 30 சந்தேக நபர்கள் (சந்தேக எண்கள் 31 முதல் 60 வரை) முற்படுத்தப்பட்டு, சாட்சிகளாக ஆஜரான சிறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><h2>முதலிடத்தில் இந்தியா</h2><p>செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8193ee-f953-403c-94c5-78c5b6ace360/26-6aa96b85727f4.webp' /></p><p>அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இதர நாடுகளில் இருந்து வந்தவர்கள்</h2><p>

 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b0463a-cbaa-4101-9690-00abe878a3d1/26-6aa96b8626d84.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608"></link>
            <id>https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p>
வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5567a31e-b432-43ad-b249-869f2e3487dd/26-6aa957b7a2d59.webp' /></p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>
</p><p>
தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.</p><p>
</p><p>
இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T14:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.</p><h2>விமானங்கள்,ட்ரோன்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அழிப்பு</h2><p>அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன.


சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6b6045-ff59-41f9-b07e-a4d6a45cbda9/26-6aa95483df116.webp' /></p><p> துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p></p><h2>முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை&nbsp;</h2><p>
</p><p>

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b90e7a-1f08-46d4-be87-a5b52271dde0/26-6aa95484972dd.webp' /></p><p> </p><p>இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:22:05+00:00</updated>
        </entry>
    </feed>
