<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-18T08:50:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகிலவிராஜ் கரியவசத்துக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803"></link>
            <id>https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(18.08.2026)&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>வெளிநாடு செல்ல தடை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a2de228-aa4f-4444-8472-d26df8b35759/26-6a84180dd097c.webp' /></p><p>மேலும், குறித்த இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p><b>தொடர்புடைய செய்திகள்...</b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T08:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[லலித் - குகன் விவகாரத்தில் புதிய சாட்சியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722"></link>
            <id>https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722</id>
            <summary type="text">இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>கடந்த கால ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் லலித் - குகன் கடத்தல் வழக்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியள்ளார்.</p><p>
 "இவை கடந்த காலத்தில் நடந்தவை, இதற்கும் எனக்கும் தொடர்பில்லை" என தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது எனவும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். </p><p>

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்த முன்னாள் போராளிகள் இன்றும் சந்தித்து வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்துக் கவலை வெளியிட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களின் நீதிக்கான காத்திருப்புக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு முறையில் தீர்க்கமான அரசியல் சித்தாந்தத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்நிலையில் ஐ.பி.சி தொலைக்காட்சியின் சக கரவியூகம் அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prYpfBion5U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-court-order-1787032337"></link>
            <id>https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-court-order-1787032337</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது காணொளி வழியே பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298923ee-663f-4f5f-a3b5-d54e1a96bc1f/26-6a83f923c60ca.webp' /></p><p>

அதில் அவர் 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த விசாரணைக்காக&nbsp;இன்று (18) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை&nbsp;</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427eb487-a1a4-43a7-bb7d-bc716895a77d/26-6a83edf50a2f0.webp' /></p><p>
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் குறித்த விசாரணைக்காக&nbsp; கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p> நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தல்&nbsp;</h2><p>

அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c290fe7-2c83-4765-9817-42b8dd76fd52/26-6a8409eaf2ab9.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>இதேவேளை&nbsp;சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.</p><p></p><h2>சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்</h2><p>அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98b38cc-1939-46aa-8070-ad07263b60c4/26-6a8409ebdd26d.webp' /></p><p> </p><p>

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.&nbsp;</p><p>நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-18T07:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-go-to-prison-in-a-few-days-1787034722"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-go-to-prison-in-a-few-days-1787034722</id>
            <summary type="text">மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கூறிவருவதை அடிக்கடி நாம் கேட்கும் பார்க்கும் விடயமாக மாறியுள்ளது.</p><p>எனினும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவது யார்? என்ற கேள்வியை மொட்டுக்கட்சி தரப்பும் எதிர்கட்சிகளும் பறந்த அளவில் எழுப்பி வருகின்றன.</p><p>இன்றுவரை வழக்குகளை விசாரிப்பது நீதிமன்றம் என்றுதான் மக்களும் சமூகமும் நினைப்பதாகவும், ஆனால் நீதிவிவகாரத்தில் ஆளும்கட்சி தலையிடுவது குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் அந்த தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><h2>ராஜபக்சர்களின் ஊழல்</h2><p>அமைச்சர் ஒருவர் நபர் ஒருவரை சுட்டிக்காட்டி சிறைக்குச் செல்வார் என்று கூறுகிறார் என்றால், வழக்கை எழுதுவது அவர்தானா? என்று நாமல் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abeb8781-bb54-408a-874b-3614db3fc1bd/26-6a840c3842570.webp' /></p><p>ஒருபுறம் இந்த கேள்வி நியாயமானதுதான். ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் கருத்துக்களில் அரசாங்கம் தலையிடமுடியாது.</p><p>இருந்தும் ராஜபக்சர்களின் ஊழல் ஆட்சியை நீதித்துறை கூறிதான் இலங்கை மக்கள் அறியவேண்டும் என்ற அவசியம் இருக்காது. நாளுக்கு நாள் வெளிவரும் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள் எங்கெங்கோ சுற்றி இருதியில் வந்து முடிவதென்னவோ ராஜபக்சர்கள் என்ற புள்ளியில்தான்.</p><p>ஆக அரசாங்கம் நாமல் மிது முன்வைக்கும் சிறை கருத்துக்கள் நீதித்துறை மீதான தலையீடாக இல்லாவிட்டாலும், ஒரு எதிர்வுகூறலாக இருக்கலாம்.</p><p>அது ஒருபுறம் இருக்கநாமல் நடத்தும் உள்ளக் கலந்துரையாடல்களில், கோட்டாபய , பசில் மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில் மகிந்தவையும் விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என சிங்கள நாளிதல் ஒன்று செய்தி வெளியிட்டது.</p><p></p><h2>பை தக்சலாவ&nbsp;பிரசார நடவடிக்கை</h2><p>
சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சிலரைச் சந்தித்த சந்தர்ப்பத்திலும், கோட்டாபய மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9de9786b-9af7-409a-ac37-83266382d8b1/26-6a840c3915d37.webp' /></p><p>

நாமல்&nbsp; முன்னெடுத்து வரும் இந்தப் பிரசார நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ள அரசியல் ஆய்வாளர்கள், “பை தக்சலாவ” (Bai Thaksalawa) என்ற அணுகுமுறையைப் பின்பற்றும் நாமலிடமிருந்து இதைவிட வேறுபட்ட ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

கோட்டாபய&nbsp; தனது அரசியல் பிரசாரத்தின் அடிப்படையாக, 2016 பெப்ரவரி 04ஆம் திகதி “வியத்மக” (Viyathmaga) என்ற அமைப்பை உருவாக்கினார்.</p><p>வைத்தியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் அந்த அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் அல்லது நிறுவனர்களாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>
ஆனால், நாமல் தனது “பை தக்சலாவ” என்ற பிரசார நடவடிக்கையை மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்றவர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதன் மூலம் மேலும் அரசியலை தரக்குறைவான அல்லது கீழ்த்தரமான பிரசாரமாக மாற்றுவதே அவரது உத்தியாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ராஜபக்சர்கள் மீது நாளுக்கு நாள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அதற்கு தனி ஒரு ராஜபக்சராக இருந்து நாமல் வழங்கும் பதில்களும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.</p><p>கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், நாமல் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து மேலதிக விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு அறிவித்தது.</p><p>இந்தப் முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவால்&nbsp; விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் துறை, இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை முடித்து, விசாரணை கோப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தது.</p><p></p><h2>நீதித்துறை நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி சட்டமா அதிபரால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, ​​பான் ஆசியா(Pan Asia) மற்றும் நேஷன் டிரஸ்ட் வங்கிகளிடமிருந்து கணக்குப் பதிவேடுகளைப் பெற்று, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் தங்களுக்கு அறிவுறுத்தியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>இவ்வாறு ராஜபக்சர்கள் மீது முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு மத்தியில் நீதித்துறை நடவடிக்கைகளில் சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>எந்த மேடைகளிலும், நிகழ்வுகளிலும் குற்றமற்றவர்கள் நாங்கள் என கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் நீதித்துறையிடம் ஒரு நாள் பதில் வழங்கவேண்டிய கட்டயத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சன விஜேசேகர நிலக்கரி விசாரணை தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-kanchana-appears-commission-of-coal-1787035612"></link>
            <id>https://ibctamil.com/article/minister-kanchana-appears-commission-of-coal-1787035612</id>
            <summary type="text">முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று&amp;nbsp; (18.08.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று&nbsp; (18.08.2026) முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>முன்னாள் அமைச்சர் காஞ்சன</h2><p>

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbce46e9-0862-40d7-9d77-a209fa6cb5df/26-6a8408e50e65e.webp' /></p><p>இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>&nbsp;இன்றைய விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-alert-issued-for-several-sea-areas-1787036152"></link>
            <id>https://ibctamil.com/article/amber-alert-issued-for-several-sea-areas-1787036152</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலை நிலவுவதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிறத்திலான அவசர எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.</p><p>காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பட்டி வரையிலான மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>கடல் பகுதிகள் கொந்தளிப்பு</h2><p>
</p><p>மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான மற்றும் காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பட்டி வரையிலான கடல் பிராந்தியங்களில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57de87e5-0bbf-4a6a-a00d-9ef608b03195/26-6a8408f7efd9c.webp' /></p><p>நீர்கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajithas-brother-maheel-senaratne-arrested-ciaboc-1787034431"></link>
            <id>https://ibctamil.com/article/rajithas-brother-maheel-senaratne-arrested-ciaboc-1787034431</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹில் சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹில் சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைது செய்யப்பட்ட மஹில் சேனாரத்ன 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு&nbsp;</h2><p>இந்தநிலையில் நாடு பூராகவும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிறுவுவதிலும் பராமரிப்பதிலும் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83533704-b509-41ae-a1f1-2d88dc742112/26-6a8401d6e2db3.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து - கடற்படை அதிகாரியை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/search-continues-for-missing-navy-officer-1787032079"></link>
            <id>https://ibctamil.com/article/search-continues-for-missing-navy-officer-1787032079</id>
            <summary type="text">அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன கடற்படை அதிகாரியைக் தேடும் பணி&amp;nbsp; இன்று (18) நான்காவது நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன கடற்படை அதிகாரியைக் தேடும் பணி&nbsp; இன்று (18) நான்காவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>


அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15 ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>



கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>விசேட நிபுணர் குழு</h2><p>


இதற்கிடையில், காணாமல் போன அதிகாரியைக் கண்டறிதல், கப்பலை மீட்பது மற்றும் சம்பவத்திற்கான துல்லியமான காரணங்களைத் தீர்மானித்தல் போன்றவற்றுக்காகக் கடற்படையினர் விமானப்படையின் உதவியுடன் விசேட வளங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0844d51f-2464-4c82-8d96-ca686d95f224/26-6a84003b8533e.webp' /></p><p>


ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான கப்பலை வெற்றிகரமாக மீட்கப்பட்டது.</p><p>



மீட்கப்பட்ட பணியாளர்கள் வழங்கிய ஆரம்பக் கூற்றுக்களின்படி, அப்பகுதியில் மூழ்கியுள்ள கப்பல் சிதைவுப் பகுதியுடன் (submerged wreck) இக்கப்பல் மோதியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2>விசாரணை</h2><p> இதுவே தற்போது விசாரிக்கப்பட்டு வரும் சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும் எனக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e5ed20-8199-4dfd-b2d9-38633d627c49/26-6a84003c3a4a5.webp' /></p><p>மேலும், இச்சம்பவம் குறித்து ஆரம்ப விசாரணைகளை நடத்துவதற்காக விசேட நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>


மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrest-with-ice-narcotics-worth-8-million-1787031447"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrest-with-ice-narcotics-worth-8-million-1787031447</id>
            <summary type="text">அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் குறித்த போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் (16.08.2026) மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதற்கு தயாரான வேளையிலேயே கைது செய்யப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரிவிக்கபட்டுள்ளது.</p><p></p><h2>80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்</h2><p> </p><p>

சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த&nbsp; 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 204 கிராம் 660 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f29fcb3-d713-48b0-ba19-9dd9f4dcb675/26-6a83fe412adc3.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நேற்று (17.08.2026) பலபிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நகரில் நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்த சந்தேகநபர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-breaking-into-homes-in-jaffna-1787028400"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-breaking-into-homes-in-jaffna-1787028400</id>
            <summary type="text">யாழ் நகரின் - பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள்
இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் நகரின் - பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள்
இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.</p><p>
கடந்த 15ஆம் திகதி பெண்ணொருவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் செய்த
முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
</p><p>இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை காவல்துறையினர் கைது
செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>விசாரணைகளின்போது, முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டு
வளாகத்திற்குள் தான் நுழைந்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dce36629-0aa1-45d4-83fd-4c2c549c80af/26-6a83ed99e8497.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள வேறு வீடுகளின்
வளாகங்களுக்குள் நுழைந்துள்ளாரா என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணம் காவல்துறையினர்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p>இந்தநிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிக அவலட்சணமான நாய்க்கான பட்டத்தை ஜின்னி வென்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-world-s-ugliest-dog-1787028632"></link>
            <id>https://ibctamil.com/article/the-world-s-ugliest-dog-1787028632</id>
            <summary type="text">‘ஜின்னி லூ’ (Ginny Lou) எனப்படும் 6 வயதுடைய பக் (Pug) இன நாய், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில் வெற்றியீட்டி அரிய பட்டத்தைத் தனதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘ஜின்னி லூ’ (Ginny Lou) எனப்படும் 6 வயதுடைய பக் (Pug) இன நாய், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில் வெற்றியீட்டி அரிய பட்டத்தைத் தனதாக்கியுள்ளது.
</p><p>
வித்தியாசமான தோற்றம் கொண்டிருந்தாலும், அன்பான குணம் கொண்ட நாய்கள் ஒன்றுகூடிய இந்தப் போட்டி, இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
</p><p>
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா ரோசாவில் அமைந்துள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில், ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்தப் போட்டி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலகின் அவலட்சணமான நாய்</h2><p>
</p><p>
சோனோமா - மரின் விவசாயச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில், பல்வேறு தனித்துவமான தோற்றங்களைக் கொண்ட நாய்கள் கலந்து கொண்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63976215-d865-4e8d-a5e7-a773d24f5bca/26-6a83e7b293a9d.webp' /></p><p>
</p><p>
இவற்றில் 6 வயதுடைய ஜின்னி லூ தனது வித்தியாசமான தோற்றத்தின் மூலம் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து.</p><p>இதனால் 2026ஆம் ஆண்டின் ‘உலகின் அவலட்சணமான நாய்’ என்ற பட்டத்தை வென்றுள்ளது.</p><p>

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கவனத்தை ஈர்க்கும் இந்தப் போட்டி, நாய்களின் தோற்றத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், அவற்றின் தனித்துவம், வசீகரம் மற்றும் அன்பான குணநலன்களையும் கொண்டாடும் நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ கொலை சதியின் முக்கிய சந்தேகநபர் பலத்த பாதுகாப்புடன் நாட்டுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summitpura-chatu-brought-back-to-sri-lanka-today-1787017806"></link>
            <id>https://ibctamil.com/article/summitpura-chatu-brought-back-to-sri-lanka-today-1787017806</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;இன்டர்போல் பிடியானையின் கீழ் ஓமானில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் சு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>இன்டர்போல் பிடியானையின் கீழ் ஓமானில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் சுமித்புர சதுர், 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இன்று அதிகாலை (18) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கங்கனமகே திமுத்து சதுரங்க பெரேரா, என்றழைக்கப்படும் “சுமித்புர சதுர்”, குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்புக்களில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பிரிவுக்கு (CCD) அளித்துச்செல்லப்பட்டுள்ளார்.

 “மோதர சத்து” அல்லது “சுமித்புர சத்து” என்றும் அறியப்படும் திமுத்து சதுரங்க பெரேரா, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.</p><h5>கணேமுல்ல சஞ்சீவ கொலை</h5><p> 

கொழும்பு 15, மோதர , சுமித்புரவைச் சேர்ந்த 38 வயதான குறித்த சந்தேகநபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025 மார்ச் 22 அன்று ஓமானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeffe5e5-eff4-433a-9251-8ff89f28fc90/26-6a83e56ec0ab2.webp' /></p><p>
</p><p>
 இந்நிலையில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட அவர், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பல குற்றங்கள் தொடர்பாகத் தேடப்படும் ஒரு முக்கிய நபராகவும் கருதப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa61f1a5-2943-4be5-b5a6-2bf6a0ac3732/26-6a83e57054f14.webp' /></p><p>சமித்புர சது இன்று (18.08.2026) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.</p><p>மட்டக்குளி பகுதியை சேர்ந்தவரும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு உள்ளவருமான 28 வயதான நபர் சமீபத்தில் ஓமானில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலியில் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்: வேலணை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 5 பேருக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-summons-issued-palaly-land-release-protest-1787026703"></link>
            <id>https://ibctamil.com/article/court-summons-issued-palaly-land-release-protest-1787026703</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக பலாலி காவல்துறையால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
</p><p>காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை, உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றில் அறிக்கை</h2><p>
இதன்போது, பலாலி பிரதான வீதியின் T சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffcc286-756f-4218-8e3f-4a6980eadd97/26-6a83e3880dbe0.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினரால் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, MA/MC/PC/07381/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, குறித்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ea777e9-38f6-4220-8743-32bfc43aa3b1/26-6a83e388cbd21.webp' /></p><p>மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:46:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் உறவினரை இலக்குவைத்த துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட 5 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/murder-kanjipani-imran-relative-5-people-arrested-1787025916"></link>
            <id>https://ibctamil.com/article/murder-kanjipani-imran-relative-5-people-arrested-1787025916</id>
            <summary type="text">பாதாள உலக சூத்திரதாரியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக சூத்திரதாரியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட ஐந்து சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>கொலை தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த தகவலின்படி, கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் சந்தேக நபர்கள் நேற்று (17.08.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.</p><p></p><h2>கஞ்சிபானி இம்ரான்&nbsp;</h2><p>
</p><p>தற்போது பிரான்சில் வசிப்பதாகக் கருதப்படும் ‘குடு அஞ்சு’ (Kudu Anju) என்ற மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியால் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce1e9d2-672d-414a-9c43-99e94822e237/26-6a83df04b07ac.webp' /></p><p>

அதன்படி, கொழும்பு 15-ஐச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 23 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேக நபர்கள் 25 கிராம் 840 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
19, 25 மற்றும் 28 வயதுடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களும், 12 கிராம் 380 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
சந்தேகத்திற்குரிய மூவரும் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suranjith-wewita-appointed-as-sltda-s-new-chairman-1787025101"></link>
            <id>https://ibctamil.com/article/suranjith-wewita-appointed-as-sltda-s-new-chairman-1787025101</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவித நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதி செயலணியின் உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவித நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில் முனைவோராகவும் மதிப்பீடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.</p><p></p><h2>பதவி விலகிய முன்னாள் தலைவர்&nbsp;</h2><p> 

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவித, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ad297c-7dfe-463d-9342-b454f4c14ee0/26-6a83dfa8ce077.webp' /></p><p> </p><p>

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் நேற்று (17) தனது பதவியிலிருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-import-and-export-control-act-1787026460"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-import-and-export-control-act-1787026460</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(18.08.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(18.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 5.00 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்படவுள்ளன.</p><p>மாலை 5.00க்கு இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.</p><p>மாலை 5.00 முதல் 5.30 வரை எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AjTBAFdq0Rc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-18T04:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - பளையில் பயங்கரவாத பயிற்சி முகாம் - காவல்துறை தரப்பு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/igp-abt-secret-training-camp-in-palai-kilinochchi-1787019133"></link>
            <id>https://ibctamil.com/article/igp-abt-secret-training-camp-in-palai-kilinochchi-1787019133</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட வனப்பகுதியில் பயங்கரவாத முகாமோ அல்லது வெடிபொருள் உற்பத்தி நிலையமோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>போலித் தகவல்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வோர் மீது கடுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான விசாரணை</h2><p>பளைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் விவசாயப் பண்ணை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது. இதில் கற்றாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4137cbdf-1e79-4aa4-8ac2-bc177fce9592/26-6a83d8364ec9c.webp' /></p><p>இந்த விவசாயப் பண்ணை மற்றும் தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பணியாற்றுகின்றனர்.
</p><p>
காணியை முறையற்ற வகையில் பயன்படுத்தி அனுமதி பெறாமல் கட்டடங்களை நிர்மானம் செய்தமை தொடர்பில், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>பயங்கரவாத முகாம் என சர்ச்சை</h2><p>
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அனைத்து கண்டங்களுக்கான மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3548a1ed-a2ee-4623-baa8-0ff7ea70708b/26-6a83d835989e3.webp' /></p><p>விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஓர் இடத்தை பயங்கரவாத முகாம் என சர்ச்சையை கிளப்பும் தரப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-expected-to-visit-sl-1787025854"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-expected-to-visit-sl-1787025854</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடக செய்திகள் வெளியிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளன.</p><p>

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.</p><h2>கூட்டு நடவடிக்கைகள்</h2><p> </p><p>

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ada012ae-7be6-4841-870e-bc05077fda7f/26-6a83dc26a04d7.webp' /></p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. </p><p>

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அவ்விஜயம் பின்னர் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்..</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-has-not-been-arrested-aruna-said-1787022442"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-has-not-been-arrested-aruna-said-1787022442</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுக்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பிரதான நபர்களில் ஒருவரான கஞ்சிப்பானி இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் கைது செய்யப்படவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுக்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பிரதான நபர்களில் ஒருவரான கஞ்சிப்பானி இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் கைது செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
கஞ்சிப்பானி இம்ரான் நேற்று முன்தினம் (16) இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சரிடம் ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>
</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டதாக என்னை மேற்கோள் காண்பித்து வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை. ஆனால் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>போலி கடவுச்சீட்டு</h2><p>
</p><p>

முன்னதாக கடந்த 2019 ஏபரல் 4ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானி இம்ரான் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி போலி கடவுச்சீட்டில் டுபாய் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da4fb8cd-f210-449c-9a24-8fc0a314df07/26-6a83d3655e4b6.webp' /></p><p>
</p><p>
போலி கடவுச்சீட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
2015இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிப்பானி இம்ரான், 2016 ஜனவரி 26 ஆம்திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>பிணையில் விடுதலை</h2><p> </p><p>இவ்வாறான நிலையில் 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியன்று அனைத்து வழக்குகளிலும் கொழும்பு மேலதிக நீதிவானால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ccfedc-78c9-462f-a19b-8d9296e1522d/26-6a83d364abd54.webp' /></p><p>இதனையடுத்து அவர் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கடவுச்சீட்டுக்களின் ஊடாக ஐரோப்பிய நாடொன்றில் தலைமறைவாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lbeiwDi-R-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T03:45:12+00:00</updated>
        </entry>
    </feed>
