<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T03:18:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி - இரு சிறுவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-at-kili-ariviyal-nagar-railway-crossing-1787798756"></link>
            <id>https://ibctamil.com/article/accident-at-kili-ariviyal-nagar-railway-crossing-1787798756</id>
            <summary type="text">கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொழும்பிலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p> கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தொடருந்து, அறிவியல் நகர் தொடருந்துநிலையத்துக்கு அண்மையிலுள்ள கடவையில் சிறிய ரக&nbsp;கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த காரில் தந்தை, தாய், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்துள்ளனர்.</p><p></p><h2>விசாரணை&nbsp;</h2><p> தொடருந்து காருடன் மோதியதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35fd7b6-22a5-4f19-ba43-2eada5b84251/26-6a8fa93c42432.webp' /></p><p> மேலும், 16 வயதுடைய சிறுவனும் 9 வயதுடைய சிறுமியும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><h2>சமிக்ஞை முறையாக இயங்கவில்லை</h2><p>இதேவேளை, குறித்த தொடருந்து கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7de3cad-b90a-4efe-ad62-bd86e6a433ca/26-6a8fa78792d47.webp' /></p><p>
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த தொடருந்து கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
தொடருந்து கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T03:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deadly-flash-flooding-hits-nepal-1787796029"></link>
            <id>https://ibctamil.com/article/deadly-flash-flooding-hits-nepal-1787796029</id>
            <summary type="text">நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் 
157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும்இ அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள காவல்துறை புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது.</p><p>திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும் அவர்களில் 341 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாள சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்</h2><p>இதேவெளை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த குறைந்தது 77 யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A terrible and tragic flash flood has taken place at Gyirong in Tibet - China, and one of our Kailash groups was caught in it. While on their way back, they were at the immigration office when the flood occurred and the building and much of the town seems to have been flooded.… <a href="https://t.co/CqOBxsPlWo">pic.twitter.com/CqOBxsPlWo</a></p>&mdash; Sadhguru (@SadhguruJV) <a href="https://x.com/SadhguruJV/status/2092598413502316574?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவரில் இருந்து திரும்பி வரும் வழியில் அந்தக் குழுவினர் குடிவரவு அலுவலகத்தில் இருந்ததாக அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா்&nbsp; என தெரிவித்துள்ளாா்.</p><p>அவர் வெளியிட்ட காணொளியில் திபெத்தின் கிரியோங் துறைமுகப் பகுதியில் சீறிப்பாயும் ஒரு பிரம்மாண்டமான அலை, குடிவரவு அலுவலகத்தின் மீது சரிந்து, பின்னர் ரசுவாவிற்குள் புகுந்து, போட் கோசி ஆற்றங்கரை நெடுகிலும் பேரழிவை ஏற்படுத்தியதைக் காட்டுகின்றன.</p><p></p><h2>மீட்பு மற்றும் சீரமைப்புப் பணி</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை அறிந்து தாம் ஆழ்ந்த வேதனையடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4dd9130-0d19-4621-a7d1-14ea4655d3a4/26-6a8fa28c4bd2e.webp' /></p><p>ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு மோசமான புயலில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

அரசாங்கம் மற்றும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T02:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் - யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913"></link>
            <id>https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத்
தெரிவித்தார்.</p><p>இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயகம் திரும்புவதற்கு அனுமதி</span></p><p>அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6d52ff-f548-47bc-9f9a-ed5c8581e4da/26-6a8f9786a68ac.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்
மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின்
மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தேவையான காணி</h2><p> அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது
நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம்
திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64eb5bd-b307-4fea-99e4-24450df64670/26-6a8f978760b8d.webp' /></p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான
காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக
செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள்
வழங்கப்படும்&nbsp;என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116"></link>
            <id>https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116</id>
            <summary type="text">ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி மையங்களாகவே விளங்கிவந்துள்ளது.</p><p>
ஆனால், மிக அண்மையக்காலமாக ஈழத்து சைவ ஆலயத் திருவிழாக்களில் மேலோங்கிவரும் கட்டுப்பாடற்ற ஆடம்பரங்களும், வணிகமயமாக்கலும், பண்பாட்டு விலகல்களும் சைவ சமய ஆன்மீகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. </p><p>அதேபோல மரபுசார்ந்த பக்தி நெறிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனியாரின் நிதியாதிக்கத்தைக் காட்டும் போட்டித் தளமாக ஆலயங்கள் மாறிவருவது சைவச் சமூகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான எச்சரிக்கை குறியீடாக மாறியுள்ளது என்பதே இப்போதைய நிதர்சனமாகும் .</p><p></p><h3>
கடந்த காலக் கட்டுப்பாடுகளும் தற்போதைய கள யதார்த்தமும்</h3><p>

ஒரு காலத்தில் யாழ்ப்பாண ஆலயத் திருவிழாக்களில் "சின்னமேளம்" என்ற பெயரில் இடம்பெற்ற சதிராட்டப் போட்டிகளும், உபயக்காரர்களின் போலிப் பெருமைகளும் கலாச்சார ரீதியான சிக்கல்களை உருவாக்கியிருந்தன. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில், சமூக ஒழுக்க நெறிமுறைகளைப் பேணும் பொருட்டு ஆலயங்களில் இத்தகைய ஆடம்பரக் கலைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p>

அதன் பின் ஆலயங்கள் ஆடம்பரங்களின்றியும், பக்தியை மட்டுமே முதன்மைப்படுத்தியும் இயங்கக்கூடிய சூழல் இயல்பாக உருவாக்கப்பட்டது.</p><p>
ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஈழ நிலப்பரப்பின் கேட்பாரற்ற சூழலில், முறையான வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி, பல ஆலயங்களில் கட்டுப்பாடற்ற பண்பாட்டு மீறல்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.</p><h2>புலம்பெயர் பணமும் போலிப் பெருமிதப் போட்டியும்</h2><p>
நமது தயாக நிலப்பரப்பின் தற்போதைய சீரழிவுகளுக்கு முதன்மைக்காரணியாக அமைவது, ஆலய நிர்வாகங்களை அசைக்கும் கட்டுப்பாடற்ற பணப் புழக்கமாகும்./
 
குறிப்பாக, புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் பெருந்தொகைப் பணம், பக்திக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ஊர்ப் பெருமையையும் தனிநபர் செல்வாக்கையும் பறைசாற்றும் ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.</p><p>

பல லட்சக்கணக்கில் பட்டுச் சாத்துதல், மாம்பழ ஏலம் என்ற பெயரில் கோடிகளைக் கரைத்தல், போட்டிபோட்டுக்கொண்டு மாலைகளைச் சாத்துதல் போன்றவை ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் வணிகக் காட்சிகளாக மாறியுள்ளன.</p><p>

அதே போலவே மரபுசார்ந்த தென்னிலங்கை ஆட்டங்கள், கேரளா செண்டை மேளங்கள், திரையிசைப் பிரபலங்களை வரவழைத்துக் கச்சேரிகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகள், ஆலயங்களின் அமைதியையும் சைவ மரபின் புனிதத்தையும் முற்றாகச் சிதைத்து நிற்கிறது.</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போன்ற தளங்களில் இன்றளவும் இறுக்கமாகப் பேணப்படும் வழிபாட்டு ஒழுக்கமும் கட்டுப்பாடும், பிற கிராமிய மற்றும் நகர ஆலயங்களில் இல்லாமல் போவதற்குக் காரணம் தகுதியான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பு இன்மையே ஆகும்.</p><h2>
ஆலயத் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்</h2><p>

ஈழத்து சைவ மரபைக் காப்பாற்றவும், ஆலயங்களை மீளவும் ஆன்மீக மையங்களாக மாற்றவும் உடனடியாகக் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><ul><li>ஆடம்பரக் கலை நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி: சினிமாப் பாடல்கள், வணிகரீதியான குத்தாட்டங்கள், வேற்றுப் பண்பாட்டுக் கலைக் குழுக்களின் ஆடம்பரக் காட்சிகளுக்கு ஆலய வளாகத்திற்குள் முற்றாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.பண்ணிசை, தேவாரம், திருவாசகம் மற்றும் மரபுசார் கலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏன் என்றால் ஆலயம் கேளிக்கை காட்டும் இடம் கிடையாது.</li><li>நிதிக்கட்டுப்பாடும் உச்சவரம்பும்: உபயக்காரர்கள் செய்யும் செலவுகளுக்கு ஆலய நிர்வாகங்கள் நல்லூரைப்போல தெளிவான உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். தனிநபரின் பண பலம் ஆலய மரபுகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.</li><li>சமூகப் பயன்பாட்டிற்கு நிதியைத் திருப்புதல்: திருவிழாக்களில் வீணடிக்கப்படும் ஆடம்பரப் பணத்தைக் கொண்டு, வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மருத்துவ தேவைகள் மற்றும் சைவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும்.</li><li>உயர்மட்டச் சைவ ஆதீனம் அல்லது தலைமைப் பீடத்தின் அவசியம்.</li></ul><p>
ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் தன்னிச்சையாகவும், எவ்விதக் கட்டுப்பாடின்றியும் செயல்படுவதே இத்தகைய கலாச்சார மீறல்களுக்கு அடிநாதமாகும். இதைக் கட்டுப்படுத்த, அனைத்துச் சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஓர் உயர்மட்ட சைவச் சபையோ அல்லது ஈழத்துச் சைவ ஆதீனம் போன்ற ஒரு தலைமைப் பீடமோ உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.</p><p>

உண்மையில் ஆலயங்களின் கோபுர உயரத்திலோ, நாற்பது அடித் தேரின் பிரம்மாண்டத்திலோ சைவ சமயத்தின் பெருமை இல்லை என்பதையும் அங்கு பேணப்படும் ஆன்மீக ஒழுக்கத்திலும் அமைதியிலுமே சைவ சமயத்தின் ஆன்மா வாழ்கிறது என்பதனையும் உணரத்தலைப்பட வேண்டும்.&nbsp;</p><p>
ஊர்மக்களின் சுயவிழிப்புணர்வும், அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட சைவத் தலைமைப் பீடத்தின் எழுச்சியும் மட்டுமே ஈழத்து ஆலயங்களின் கைநழுவிப்போகும் புனிதத்தை மீட்டுத்தரும் என்ற காலத்தின் ஆகப்பெரிய உண்மையை சைவ சமயத்தார் உணரவேண்டும் .</p><p>

கடந்த நாட் களில் கிளிநொச்சி ஆலயங்களில் நடைபெற்ற அரைநிர்வாண ஆட்டங்கள் சைவசமயத்தையும் அதன் பண்பாட்டு ஒழுக்கத்தையும் சவப்பெட்டியில் வைத்து மூடியிருக்கிறது என்ற விடையம் 
புலம்பெயர் பணக்காரர்களுக்கு உணரத்தப்படவேண்டும்.&nbsp;</p><p>
இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி என்ற கேள்வி சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று பெருங்கேள்வியாகி நிற்கிறது.&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழினப்படுகொலைக்கான நீதிக்காக உழைத்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ மறைந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-javier-giraldo-moreno-passes-away-1787789449"></link>
            <id>https://ibctamil.com/article/father-javier-giraldo-moreno-passes-away-1787789449</id>
            <summary type="text">தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத்தமிழினத்திற்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கெதிராக தீர்ப்பாயத்தை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவருமான அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ (1944-2026) செவ்வாய்க்கிழமை (25) அன்று பொகோட்டாவில் காலமானார்.
</p><p>
2013-ல் நடைபெற்ற 'சிறிலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின்' (பிறேமன் அமர்வு) நடுவர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.</p><p></p><h2>கொலம்பியாவில் தமிழினப்படுகொலை&nbsp;நினைவுநாள்</h2><p> 

இவர் அருட்தந்தை பிரான்சுவா கூட்டாவுடன் இணைந்து தென்னமெரிக்கத் தூதுவராக இருந்த சிறிலங்காவின் முன்னைநாள் இராணுவத்தளபதி ஜகத் டயசின் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியவர் என்று பதியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2cf740e-f420-439f-8829-b42f506623d5/26-6a8f836ab932b.webp' /></p><p>
</p><p>
கொலம்பியாவில் தமிழினப்படுகொலை நினைவுநாளை நடாத்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஈழத்தமிழர்கள் சார்பில் உங்களை ஐபிசி தமிழ் உங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவுகூருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374"></link>
            <id>https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

இந்த ஹேக்கிங் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'QScan' மற்றும் 'QTRouter' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் டொமைன்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்க எரிசக்தித் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா - தென் கொரியாவைச் சேர்ந்த 4 தனியார் நிறுவனங்களும் இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பின்னணியில் சீனாவின் உளவு அமைப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்த ஹேக்கிங் தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நான்ஜிங் சின்ஜியுவே நெட்வொர்க் டெக்னாலஜி' (Nanjing Xinjiuwei Network Technology Company) என்ற நிறுவனம் இயக்கி வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8d7b7e-d7cf-45bb-9098-e78a03292b2f/26-6a8f7b74ca430.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக சீனாவின் உளவு அமைப்பான அரசுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகியவை செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796</id>
            <summary type="text">கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். 

கனடாவிடம் இருக்கும் பொருட்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். </p><p>

கனடாவிடம் இருக்கும் பொருட்கள் இல்லாமல் தங்களால் சமாளிக்க முடியும் என்றும், சில பொருட்கள் தற்காலிகச் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அவற்றை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முறிந்ததால், 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50% புதிய வரியை ட்ரம்ப் சனிக்கிழமை விதித்தார்.</p><p></p><h2>வரி விதிப்புகள்</h2><p> </p><p>

அத்துடன் ஜனவரி 1 முதல் கனடிய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீதும் 50% வரி நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c65c3f6-1c87-43cf-9e0d-bdc5c97d6292/26-6a8f76f475a4a.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடியாக கனடா, சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீது அதே அளவு பதில் வரியை விதித்து, வரும் செப்டம்பர் 8 முதல் அது நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், கனடா நிராகரித்த ஒப்பந்தத்தை விட மோசமான ஒரு ஒப்பந்தத்தையே எதிர்காலத்தில் பெற முடியும் என வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:34:45+00:00</updated>
        </entry>
    </feed>
