<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-08T06:35:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570"></link>
            <id>https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570</id>
            <summary type="text">2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாளை (09) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த விடயத்தை சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான நெருக்கடிகள்</h2><p>அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613e5961-22c0-4051-88ce-7c37746cddc1/26-6a9faba1e4a08.webp' /></p><p> 

அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை என்பன கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது 2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>

ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதாகக் கூறிய போதிலும், புதியவற்றை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதுடன், இதற்கு நிலையான தீர்வு அவசியமானது என்றும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் ஒப்பந்த விவகாரம்: சமல் ராஜபக்சவிடம் ஒரு மணி நேர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086"></link>
            <id>https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (C...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.</p><p>அந்த ஆணைக்குழுவில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இன்று (08) காலை சுமார் 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வளாகத்திற்கு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><u>ராஜபக்சாக்களுக்கு தொடரும் நெருக்கடி : சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை</u></h5><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று (08) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எயார்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;எயார்பஸ் விமானக் கொள்வனவு</h2><p>இதேவேளை எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (04) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200a5598-b108-4736-984d-363c144ac9a9/26-6a9f99772df1f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1788844279"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1788844279</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08.09.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08.09.2026) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தினை அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

</p><p></p><h2>தங்க விலை</h2><p>
</p><p>
நேற்று (07) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 377,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38374ffb-31ad-4da4-aa73-5f16b570cc03/26-6a9fa7666a88d.webp' /></p><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:13:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சிறப்பு விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-north-sub-divisional-secretariat-case-1788847203"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-north-sub-divisional-secretariat-case-1788847203</id>
            <summary type="text">கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே தவிர, அவர் பிரதேச செயலாளர் அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த
நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர்
முன்னிலையில் நேற்று (07) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p>கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல்
செய்யப்பட்ட எழுத்தாணை மனுவுடன் (WRT/645/23), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தவராசா கலையரசனின் மனு (WRT/67/23) மற்றும் ஏ.எம். நஸீரின் மனு ((WRT/300/18)
ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>கலையரசனின் மனு</h2><p>
</p><p>
கலையரசனின் மனுவில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf59367-9db4-42cc-bbe9-240798831ebc/26-6a9fa6c2d8443.webp' /></p><p>

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா முன்னிலையாகிய நிலையில்,
கலையரசனின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுமார் ஒரு
மணி நேரத்திற்கும் மேலாகத் தனது சட்ட வாதங்களை முன்வைத்தார்.
</p><p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி பிரதேச செயலாளர் அல்ல. மாறாக அவர் ஒரு உப பிரதேச செயலாளர் (ADS) மட்டுமே.</p><p>
எனவே, பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையோ அல்லது பதவிக்
குறியீடுகளையோ அவர் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என
மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><h2>சட்டமா அதிபர் திணைக்களம்</h2><p>விசாரணையின் போது, 5ஆவது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம்
நிலைப்பாட்டைக் கேட்டறிந்தபோது, அவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே
என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a53763-a180-4832-92da-4952d6365c60/26-6a9fa6c38df4a.webp' /></p><p> </p><p>இதனைத்
தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணியும், இதுவே அரசின்
நிலைப்பாடும் ஆகும் என உறுதிப்படுத்தினார்.
</p><p>
அரச அதிகாரியாக இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக
முன்னிலையாகுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், அவர் தனக்காகத் தனிப்பட்ட (Private)
சட்டத்தரணி ஒருவரையே நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
வழக்கின் இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026
ஆகிய தினங்களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அரச சீருடையுடன் மது அருந்திய வனப்பரிபாலன சபை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-department-handed-liquor-anti-corruption-1788846267"></link>
            <id>https://ibctamil.com/article/forest-department-handed-liquor-anti-corruption-1788846267</id>
            <summary type="text">அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை&amp;nbsp; வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை&nbsp; வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த இருவரும் திணைக்கள சீருடையில், அரச வாகனத்தில் மாவட்ட புதிய செயலகத்துக்குச் செல்லும் வழியில் பாலமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் வைத்து மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பின்னர் அவர்கள் மதுபோதையில் அரச வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும், இது வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மட்டக்களப்பு ஊழல் மோசடி</h2><p>
</p><p>
எனவே, அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், அதனை மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குறித்த இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f2e318-4bdb-4d38-b4df-4f3686633dd3/26-6a9fa56047297.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kataragama-chief-monk-in-matala-accident-1788842082"></link>
            <id>https://ibctamil.com/article/kataragama-chief-monk-in-matala-accident-1788842082</id>
            <summary type="text">அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>இந்த விபத்து நேற்று (07.09.2026) இரவு&nbsp; 9.00 மணியளவில் மத்தளை மத்தளை பகதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
வீதியில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டுடன் வாகனம் மோதியதையடுத்து, வாகனம் கவிழ்ந்து வீதியை விட்டு விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர்&nbsp;</h2><p>

எனினும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு காற்றுப் பைகள் (Airbags) செயற்பட்டதன் காரணமாக விகாராதிபதி தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d52ccd-9da1-4529-aad2-4eb3044f2828/26-6a9f9ac672420.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/never-share-ur-bank-account-details-with-outsiders-1788838557"></link>
            <id>https://ibctamil.com/article/never-share-ur-bank-account-details-with-outsiders-1788838557</id>
            <summary type="text">பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>

இதன்படி மோசடிக் குழுக்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாடகைக்கு பெறப்பட்ட அல்லது பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பிறருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் ஊடாக பரிமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் மற்றும் தரகு பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>இரகசிய வங்கித் தகவல்கள்</h2><p>
</p><p>இதன் பின்னர், குறித்த கணக்குகளுக்கு ஒரு தொகைப் பணத்தை வரவு வைத்து கணக்கு உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் குழுக்கள், அதன் பின்னர் அவர்களின் PIN இலக்கம் உள்ளிட்ட இரகசிய வங்கித் தகவல்களை தந்திரமாகப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d561d2d-3788-4d6f-aa1a-62ee9cad07c7/26-6a9f8f0c9c5da.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் வங்கிக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பாரிய நிதிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>
மேலும், தங்களது வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைத்து மோசடிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பலர் சட்டத்தின் முன் சிக்கியுள்ளள்ளனர்.&nbsp;</p><p>வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளுமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை வெளியிட்டு, இந்த மோசடிகளுக்காக நபர்களை இணைத்துக்கொள்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை</h2><p>

குறித்த மோசடிக் குழுக்கள், தாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுடன் தொடர்பு கொண்டு செயற்படுவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3421d1c0-d527-452d-84df-4e345672e9b3/26-6a9f8f0bce723.webp' /></p><p>
பின்னர், குறித்த வங்கிக் கணக்கு விபரங்கள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஊடாக வெளிநாடுகளில் உள்ள மோசடிக் குழுக்களின் கைகளுக்குச் செல்வதாகவும், அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு நிதிக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்&nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.&nbsp;</p><p>
இவ்வாறான நடவடிக்கைகளில் உள்நாட்டு வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசடிகளுக்கு உதவி செய்தவர்களாகக் கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>

எனவே, எந்தவொரு காரணத்திற்காகவும் தமக்குச் சொந்தமான வங்கிக் கணக்கை வெளிநபர்கள் அல்லது வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைப்பதன் மூலம் இணையவழி பண மோசடிகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக, எவ்வித தொடர்பும் இல்லாத நபர்களும் சட்டத்தின் முன் தண்டனை பெற நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைப்பேருந்தில் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்ட நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170"></link>
            <id>https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hzIOuv44RZg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>மேலும், அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><u><b>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி - தொடரும் சலுகைகள்</b></u></p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்சவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

&nbsp;</p><p></p><h2>பிரேரணை&nbsp;</h2><p>செப்டெம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6791eea8-f556-4da3-a9b3-2f85acee3380/26-6a9f70c4ee542.webp' /></p><p>இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது</p><p>இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p> 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><h2>வீட்டில் இருந்து உணவு</h2><p>இதேவேளை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1bd66e0-4f07-49ad-92a9-fb2d21d8c2ab/26-6a9f70c5b1067.webp' /></p><p>அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:39:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட போக்குவரத்து திட்டம் : கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-in-colombo-rajnathsingh-visit-1788839389"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-in-colombo-rajnathsingh-visit-1788839389</id>
            <summary type="text">கொழும்பில் இன்று (08) முதல் நாளை மறுதினம் (10) வரை ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இன்று (08) முதல் நாளை மறுதினம் (10) வரை ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முன்னிட்டு இந்த விசேட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் நகரின் வழியாகப் பயணிக்கும் காலங்களில், போக்குவரத்து அவ்வப்போது மற்றும் வழித்தடம் வாரியாகக் கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போக்குவரத்து கட்டுப்பாடுகள்&nbsp;</h2><p>அதன்படி, இன்று பிற்பகல் 1:30 மணி முதல், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை வழியாக, கொழும்பு துறைமுகப் பகுதி வழியாக, மற்றும் அங்கிருந்து என்.எஸ்.ஏ. வட்டச்சந்தி வழியாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1a7ec2-0579-421e-a9db-418e7a9f9944/26-6a9f8ff4aa287.webp' /></p><p>இந்த வீதி கட்டுப்பாடுகளால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கொழும்பு போக்குவரத்து பிரிவு, பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&amp;nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அதற்கமைய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்</h2><p>இந்த நிலையில் பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda01029-62b6-4064-950b-8a96b1ba3a51/26-6a9f7ed50dbfa.webp' /></p><p>இதேவேளை 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற நிலையில்&nbsp;289,867 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.</p><p>இம்மாதம் 02ஆம் திகதி வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1788841062"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1788841062</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(08.09.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(08.09.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை&nbsp;மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hLCrh4Zh1Hw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/murder-of-retired-army-soldier-cid-arrests-wife-1788836234"></link>
            <id>https://ibctamil.com/article/murder-of-retired-army-soldier-cid-arrests-wife-1788836234</id>
            <summary type="text">கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக&amp;nbsp; உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக&nbsp; உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய - கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf027e6-5820-422e-b51a-d101c6e754eb/26-6a9f8c2acff94.webp' /></p><p>இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600</id>
            <summary type="text">இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள்
அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.
</p><p>
இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின்
உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய இருதரப்பு விவகாரங்கள்
குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும்
சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.</p><p></p><p>
</p><h2>அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை</h2><p>
இது குறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு,
பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள்
ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edacdbb-214a-4b46-ae02-97755278df96/26-6a9f78873bd5e.webp' /></p><p>
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும்,
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது மீட்புப் பணிகளில்
களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விரு
தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
</p><p>
இது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை மீதான இந்தியாவின்
தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது.
</p><p>
பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா - இலங்கை இடையேயான
இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என
எதிர்பார்க்கப்படுகின்றது என்றுள்ளது</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tkTqoEzA3tM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T02:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685"></link>
            <id>https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்
</p><p>
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி காவல்துறைக்கு இரகசிய
தகவல் கிடைத்தது.</p><h2>கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம்</h2><p>இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று முன்தினம்(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
காவல்துறை பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான காவல்துறை குழுவினர் மணல் ஏற்றிய
உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd9422c-5d23-4b83-b7fc-bcbe184170af/26-6a9f5826bf8b5.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>

குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் காவல்துறையினர் அவதானம்
செலுத்தியுள்ளதுடன்.விரைவில் அவர்களை கைது செய்யும் பணி
முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shavendra-selva-statement-on-ltt-sniper-squad-1788785226"></link>
            <id>https://ibctamil.com/article/shavendra-selva-statement-on-ltt-sniper-squad-1788785226</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அளவுக்கு வலுவான வலையமைப்பைக் கொண்டிருந்ததாக முன்னாள் இரானுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p>
வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவத் தந்திரோபாயங்கள், ஆயுத பலம், சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் இராணுவம் எதிர்கொண்ட தடைகள் தொடர்பில் சவேந்திர சில்வா இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>அடுத்த கட்டத் தாக்குதல்</h2><p>
இதன்போது விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு மற்றும் ஆதரவுகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f6df5-8e73-4fdc-9e3a-8944e4370075/26-6a9eb6a0399d1.webp' /></p><p>குறிப்பாக கப்பல் போக்குவரத்து, மற்றும் சர்வதேசத்தின் வர்த்தகங்கங்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறாக நிதிகளை திரட்டிக்கொண்டனர். மேலும், வெளிநாடுகளில் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கில், அந்நாடுகளின் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர் என தனது கருத்துக்களை முன்வைத்தார்.</p><p>மேலும், விடுதலைப் புலிகளின் பிரதான அரசியல் இலக்கு இலங்கையில் தனித் தமிழ் அரசை உருவாக்குவதாக இருந்தது எனவும் தெரிவித்தார்.</p><p>
போர் நடைபெற்ற காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து அவர்கள் சிறந்த திட்டமிடலை கொண்டிருந்தனர் எனவும் கூறியுள்ளார்.
</p><p>
அதன்படி, பேச்சுவார்த்தைகளின் இடைவேளைகளைப் பயன்படுத்தி போராளிகளை மீள ஒருங்கிணைத்து, ஆயுத பலத்தை அதிகரித்து அடுத்த கட்டத் தாக்குதல்களுக்கு அவர்கள் தயாராகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் உள்ள பரந்த நெல்வயல் பகுதியான ‘Rice Bowl’ பகுதியில் இராணுவம் எதிர்கொண்ட சவால் குறித்தும் சவேந்திர சில்வா விரிவாக இதில் விளக்கியுள்ளார்.</p><p></p><h2>தாக்குதலுக்கு இலக்காகும் நிலை&nbsp;</h2><p>

மரங்கள் அல்லது இயற்கையான மறைவிடங்கள் இல்லாத அந்தப் பரந்த வயல்வெளியில் விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான குறிசூட்டுப் படையினரை நிலைநிறுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809ef2c0-c820-4a65-bb07-39052c77cbbf/26-6a9eb6a0f1eef.webp' /></p><p>
</p><p>
இராணுவ வீரர்கள் தலைகளை உயர்த்தினால்கூட குறிசூட்டுப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலை காணப்பட்டதாகவும், இதனால் இராணுவத்தினர் இரவு நேரங்களையும் இருள் சூழ்ந்த காலங்களையும் பயன்படுத்தி தரையில் தவழ்ந்தவாறு மெதுவாக முன்னேற வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அந்தப் பகுதியை கடப்பதற்கு இராணுவத்திற்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் எடுத்ததாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தமது படைப்பிரிவு போரின் போது சுமார் 202 கிலோமீற்றர் தூரம் முன்னேறிச் சென்று போரில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விடுதலைப் புலிகள் சிறிய நாட்டில் இயங்கிய அமைப்பாக இருந்தபோதிலும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க இராணுவ பலத்தை உருவாக்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு எறிகணைகள்’, 82 மில்லிமீற்றர் மோட்டார்கள் மற்றும் கிளேமோர் கண்ணிவெடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்தும் திறனை கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

மேலும், போரின் இறுதி கட்டத்தில் தாக்குதல் படைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி இராணுவத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு தடை</h2><p>
</p><p>
இறுதிப் போரின் கடைசி ஏழு நாட்கள் இராணுவத்துக்கு மிகவும் கடுமையான காலகட்டமாக இருந்ததாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்தகைய தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பில் தனது ஒரு காதின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாகவும், தனது உடலில் இன்னமும் 32 வெடிகுண்டுத் துகள்கள் இருப்பதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p>
போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், சர்வதேச அரங்கில் பரப்புரை நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பயணத் தடைகள், விசா மறுப்புகள் மற்றும் நிதி முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இவை போருக்குப் பின்னர் தாம் எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:00:31+00:00</updated>
        </entry>
    </feed>
