<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-08T12:20:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பால்பண்ணை விவசாயிகளுக்கு நற்செய்தி : இந்தியாவில் வழங்கப்படவுள்ள பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-dairy-farmers-training-in-india-1786189208"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-dairy-farmers-training-in-india-1786189208</id>
            <summary type="text">இலங்கை பால் பண்ணை விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பால் பண்ணை விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p><p>

பால் பண்ணைத் துறையில் பயிற்சி பெறவுள்ள 19 விவசாயிகள் 16ஆம் திகதி இந்தியாவிற்குப் புறப்படவுள்ளனர்.</p><h2>அமைச்சருடன் சந்திப்பு</h2><p>இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் இந்தப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d9f8c66-0676-4168-b9b4-f6641de4d338/26-6a771bd0a9fe8.webp' /></p><p>&nbsp;இந்தியாவில் பயிற்சி பெறவுள்ள பால் பண்ணை விவசாயிகள், விவசாய அமைச்சகத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நமல் கருணாரத்னவைச் சந்தித்தனர். நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமுல் பால்பண்ணையை பார்வையிடும் வாய்ப்பு</h2><p>
</p><p>
இந்தப் பயிற்சித் திட்டம், இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள தேசிய பால் அபிவிருத்தி சபையின்(NDDB) அனுசரணையில் நடத்தப்படுகிறது. உலகின் பால் பதப்படுத்தும் தொழில்துறையில் ஒரு மாபெரும் நிறுவனமான அமுலின் (GCMMF) உற்பத்தி மற்றும் மேலாண்மை செயல்முறைகளை இலங்கை பால் விவசாயிகளும் உற்றுநோக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/517e6074-1f9d-4b02-b253-eacf95390602/26-6a771bd158561.webp' /></p><p>

தொழில்நுட்பத்தின் மூலம் தினசரி பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் பொருட்களின் மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துதல், பால் பண்ணைகளை இயந்திரமயமாக்குதல், பசுக்களை நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் தரமான ஊட்டச்சத்துப் பராமரிப்பை வழங்குதல் போன்ற துறைகளில் நடைமுறை அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:06:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/massacres-in-the-east-1786188789"></link>
            <id>https://ibctamil.com/article/massacres-in-the-east-1786188789</id>
            <summary type="text">இனப்படுகொலை என்பது ஒரு நாளில் நிகழ்ந்து முடிந்துவிடுகிற வன்முறையல்ல. அது ஒரு இனத்தின் நாட்காட்டியையே குருதியால் எழுதிவிடும் வரலாற்றுக் குற்றம். தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனப்படுகொலை என்பது ஒரு நாளில் நிகழ்ந்து முடிந்துவிடுகிற வன்முறையல்ல. அது ஒரு இனத்தின் நாட்காட்டியையே குருதியால் எழுதிவிடும் வரலாற்றுக் குற்றம். </p><p>தமிழ் மக்களின் நாட்காட்டியைத் திறந்துப் பார்த்தால், பெரும்பாலான மாதங்களிலும், பல நாள்களிலும், ஏதோ ஒரு ஊர் குருதியில் மூழ்கியிருப்பதைக் காணலாம். ஒரே நாளில் ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் ஏராளம்.</p><p> </p><p>அதனால்தான், சில ஊர்களின் பெயர்களைக் கேட்டவுடன் அங்கு வாழ்ந்த மக்களை அல்ல, அங்கு நிகழ்ந்த இனப்படுகொலையையே முதலில் நினைவுகூரும் நிலைக்கு நமது கூட்டு நினைவு தள்ளப்படுகிறது.</p><p>இனப்படுகொலை நிகழ்ந்த நாளோடு அதன் கொடுமை முடிவடைவதில்லை. அதன்பின் தொடங்கும் அச்சம், இடப்பெயர்வு, நில இழப்பு, நீதியின்மை, தலைமுறைகளைக் கடக்கும் உளவியல் காயங்கள் என்பவையே அதன் நீண்ட ஆயுளும் துரத்தும் போருமாகும்.</p><p> இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இனவழிப்பின் மிகக் கொடூரமான பரிமாணம் இதுவே. இன்று முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும், திராய்க்கேணி அதற்கான உயிருள்ள சாட்சியாகவே நிற்கிறது.</p><h2>கிழக்கின் &nbsp;இனப்படுகொலைகள்</h2><p>ஈழத்தின் கிழக்கு, இனப்படுகொலைகளின் வரலாற்றை சுமந்து நிற்கும் மண்ணாகும். கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, வீரமுனை, திராய்க்கேணி என்று ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் இன்னும் ஆறாத குருதிக்கறைகள் உள்ளன.</p><p>அந்தக் கறைகளை காலம் அழிக்காமல் தொடர்கிறது. நீதியின் மறுப்பே அவற்றை மேலும் அவற்றை ஆழமாக்கி இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரும்போதெல்லாம் கிழக்கின் பல இனப்படுகொலைகள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன.</p><p>அவற்றில், அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணி கிராமத்தில் 1990 ஆகஸ்ட் 6ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, இன்னமும் முழுமையாக நீதி காணாத ஒரு வரலாற்றுக் குற்றமாகவே தொடர்கிறது. மட்டக்களப்பிலிருந்து தெற்கே சுமார் எழுபது கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தமிழர் கிராமமே திராய்க்கேணி.</p><p>தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும், தொன்மையான சைவ ஆலயங்களும் நிறைந்திருந்த இந்தக் கிராமம், கிழக்கின் பாரம்பரியத் தமிழர் வாழ்விடங்களில் ஒன்றாகும். இந்த மண்ணையும், அதுபோன்ற அம்பாறையின் பல தமிழர் பகுதிகளையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற பேரினவாத அரசியலின் இரத்தமூட்டிய வெளிப்பாடாகவே திராய்க்கேணி இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.</p><h2>தீயில் எரிக்கப்பட்ட முதியவர்கள்</h2><p>1990 ஆகஸ்ட் 6ஆம் நாள், சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கிராமத்திற்குள் நுழைந்த இனவழிப்பாளர்கள், கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்தனர். ஆனால் அதோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை. வீடுகளுக்குள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் பல முதியவர்களை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர்.</p><p>உயிர் தப்ப முடியாமல் அவர்கள் தீயில் கருகி இறந்தனர். அத்துடன் பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அன்றைய நாளின் மனிதாபிமானத்தைச் சிதைத்த அத்தியாயமாகும்.</p><p>கிராமம் முழுவதும் வேட்டையாடப்பட்ட மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடினர். தமிழர்களின் வீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக எரிக்கப்பட்டன. மொத்தம் 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. காலை ஏழு மணியளவில் தொடங்கிய இந்த வன்முறை மதியம் வரை தொடர்ந்தது. அந்த நாளில் திராய்க்கேணி முழுவதும் மரணத்தின் ஓலமே கேட்டது.&nbsp;&nbsp;</p><p>உயிர் தப்பிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப முடிந்தது.&nbsp;&nbsp;</p><h2>நீதிக்கான போராட்டம்</h2><p>திராய்க்கேணி இனப்படுகொலைக்கு நீதி கோரி மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். அந்தக் குரல்களில் முன்னணியில் நின்ற திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி, 1997ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.</p><p>நீதியை வேண்டிய குரல்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலின் இன்னொரு சாட்சியாக அவரது மரணம் அமைந்தது.</p><p> 2003 அக்டோபர் 12ஆம் நாள், திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் வளாகத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், குழி ஒன்றிலிருந்து மனித எச்சங்களைக் கண்டுபிடித்தனர். அவை 1990 படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்று மக்கள் தெரிவித்தனர்.</p><p>முழுமையான நீதித் தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். ஆனால் அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. காலம் கடந்து சென்றதோடு, அந்த எச்சங்களும், அவை சுமந்த சாட்சியங்களும் மறைக்கப்பட்டன. செம்மணியில் இன்று உலகம் காணும் உண்மைகள், திராய்க்கேணியில் அன்றே மண்ணுக்குள் புதைக்கப்பட்டன என்பதும் நினைவில் துருத்துகிறது.</p><h2>இனப்படுகொலையின் பின்னரான போர்&nbsp;&nbsp;</h2><p>இந்தப் படுகொலையின் விளைவாக சுமார் நாற்பது பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். ஒரு நாளில் நிகழ்ந்த வன்முறை, பல குடும்பங்களின் வாழ்நாளையே மாற்றியமைத்தது. இதுவே ஒரு இனப்படுகொலையின் பின்னராக நிகழ்கிற போராகும்.</p><p> அத்துடன் திராய்க்கேணி மக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதாகவும், அவர்களது இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் இன்றும் அங்கு தொடர்கிறது.1990ஆம் ஆண்டில் மக்களை அழித்த அரசியல், இன்று நிலங்களை மாற்றியமைக்கும் அரசியலாக நீள்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.</p><p>திராய்க்கேணி இனப்படுகொலையில் மண்ணில் சிந்தப்பட்ட குருதி இன்னும் உலகின் நீதிமன்றின் கதவுகளை எட்டவில்லை. அந்தக் கிராமத்தின் எரிக்கப்பட்ட வீடுகள் இன்னும் வரலாற்றில் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.</p><p>அந்தக் கிராமத்தின் குழந்தைகள் சுமந்த பயம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. ஒரு இனப்படுகொலைக்கு நினைவஞ்சலியை மக்கள் &nbsp;செலுத்துவது என்பது, அப் படுகொலைக்கு நீதியைக் கோருகின்ற போராட்டமாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-over-500-skeleton-found-1786184575"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-over-500-skeleton-found-1786184575</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் 100 ஆவது நாளை கடந்து 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்படடுள்ளன.

குறித்த அகழ்வு பணிகள் இன்றைய தினம் (08-08-2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் 100 ஆவது நாளை கடந்து 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்படடுள்ளன.
</p><p>
குறித்த அகழ்வு பணிகள் இன்றைய தினம் (08-08-2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மனித புதைகுழி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் (07-08-2026) 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337680b5-48db-44a6-ad95-f278627f5b04/26-6a77129e0cb30.webp' /></p><p>அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து
மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strong-winds-warning-issued-to-fishermen-1786187442"></link>
            <id>https://ibctamil.com/article/strong-winds-warning-issued-to-fishermen-1786187442</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இது குறித்து கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அறிவித்துள்ளது.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாக காணப்படும்</h2><p> </p><p>

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2d946b2-0c21-41ae-bef4-07faa19a781e/26-6a771138e55e0.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[290 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/297-kg-drugs-destined-smuggling-sri-lanka-seized-1786187079"></link>
            <id>https://ibctamil.com/article/297-kg-drugs-destined-smuggling-sri-lanka-seized-1786187079</id>
            <summary type="text">தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p> 

இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று (07.08.2026)அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>297 கிலோ (கஞ்சா) போதைப்பொருள்</h2><p>அப்போது அங்கு வந்த வான் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் (கஞ்சா)&nbsp;போதைப்பொருள் பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d109cbcf-ad65-49cd-bf23-60ddd57c63e3/26-6a77122841bf9.webp' /></p><p>

குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணை வழங்கப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையிலேயே உள்ளனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-tamil-political-prisoners-are-still-in-prison-1786187214"></link>
            <id>https://ibctamil.com/article/two-tamil-political-prisoners-are-still-in-prison-1786187214</id>
            <summary type="text">தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும்
சிறைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும்
சிறைக்குள் தான் இருக்கின்றார்கள் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் தெரிவித்தார்.
</p><p>
 இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு
எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.</p><h2>தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள்</h2><p>அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள்
விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம்
மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02e5b19-1021-44a5-aeb4-45cdf1028c10/26-6a7711ac87ca6.webp' /></p><p> </p><p>எனவே அவர்கள்
இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemoration-17-aid-workers-killed-in-2006-muthur-1786186107"></link>
            <id>https://ibctamil.com/article/commemoration-17-aid-workers-killed-in-2006-muthur-1786186107</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூதூர் பட்டினிக்கு எதிரான சர்வதேச அமைப்பின்
(Action against hunger) தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலைச்
சம்பவத்தின் 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூதூர் பட்டினிக்கு எதிரான சர்வதேச அமைப்பின்
(Action against hunger) தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலைச்
சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் மூதூரில் முன்னெடுக்கப்பட்டது.</p><p> உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (08) காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>இந்நிகழ்வின் போது உயிரிழந்த 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின்
உருவப்படத்திற்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>

அத்தோடு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி
நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72370ca8-f866-4659-8abd-b1367ca71a93/26-6a770d666193f.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும் வேலன் சுவாமிகள், இந்து மத தலைவர்கள் பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:04:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் மோதல் : தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fears-over-the-safety-of-tamil-political-prisoners-1786185959"></link>
            <id>https://ibctamil.com/article/fears-over-the-safety-of-tamil-political-prisoners-1786185959</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல்
கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(08) கொழும்பு
மகசின...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல்
கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(08) கொழும்பு
மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை
பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்
செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும்
உடனிருந்தார்.</p><p>

இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில்,</p><p>

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில்
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது. அங்கே
தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். </p><h2>சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள்</h2><p>அதேபோல வெலிக்கடை
சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த சிறைச்சாலைகளில் தற்போது காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b944e0-a14f-4ce5-95fe-212aaca248e1/26-6a7708e87e34b.webp' /></p><p> </p><p>இருப்பினும் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது. கடந்த
காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை
நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும்
அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.</p><p>&nbsp;இந்த நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல்
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>அரசியல் கைதிககளின் கோரிக்கை</h2><p>
</p><p>
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட
இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து
ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை
உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5e81ff-3780-4605-9b4e-78b3cc75fe84/26-6a7708e930ee1.webp' /></p><p>
எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய
வேண்டும். அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள்
வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும்.</p><p></p><h2>உறவுகளுடன் சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்</h2><p>
</p><p>
அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை கையாள்வதற்காக ஒரு குழுவொன்று
நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கைகள் ஏற்கனவே நீதி அமைச்சுக்கு
வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.

அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதற்கு, அந்த குழு முன்வைத்த விடயங்களை விரைந்து
நடைமுறைப்படுத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த குழுவின் அறிக்கைக்குள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287200ce-336d-4619-ba1c-650852349fde/26-6a7708e9d5fc4.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள
ஏனைய கைதிகளை சிறைச்சாலை கட்டளை சட்டத்தின் ஊடாக புனர்வாழ்வுக்கு
உட்படுத்தியோ, அவர்களது நன்னடத்தை அடிப்படையிலேயோ விடுதலை செய்து, அவர்களும்
அவர்களது உறவுகளுடன் சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்.
</p><p>
அவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து
வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றார்கள். நாங்களும் சிறையில்
வாடியவர்கள் என்ற ரீதியில் எமக்கு அதன் வேதனை தெரியும். எனவே அரசாங்கம் இது
குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:46:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-of-indian-fishermen-in-sri-lankan-prisons-1786182678"></link>
            <id>https://ibctamil.com/article/security-of-indian-fishermen-in-sri-lankan-prisons-1786182678</id>
            <summary type="text">இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய - இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய - இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி இந்திய வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>மின்னஞ்சல் ஊடாக அவர் முன்வைத்த கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதான
குற்றச்சாட்டுகளில் இலங்கையின் பல சிறைகளிலும் தமிழக கடற்றொழிலாளர்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். </p><p>இதில் பலர் இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள். இது இலங்கை
சட்டதிட்டத்திற்கு உள்பட்ட விடயமாகினும் கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்கள் என்பதனை
எவரும் மறுக்க முடியாது.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை</h2><p>
</p><p>
கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற
வன்முறையில் 30 பேர் உயிரிந்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a7d918f-c1bb-4ffe-a985-d5b0c8f4f294/26-6a7703c7b0a9b.webp' /></p><p> </p><p>அதன்
பின்பும் ஒன்றன் பின்பு ஒன்றாக இன்று பல சிறைகளிலும் வன்முறை பரவுவதாகவே
இலங்கை செய்திகள் உள்ளது.

தற்போது கொழும்பு மெகசின் சிறை, குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் இந்த
வன்முறை வெடித்ததுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். </p><p>எனவே இலங்கை
சிறைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

வன்முறை இடம்பெறும் சிறைச்சாலைகளிலும் இந்திய கடற்றொழிலாளர்கள் இருக்கக்கூடும் என்ற
அச்சம் தமிழக கடற்றொழிலாளர் குடும்பங்களில் பரவுகின்றது. </p><p>எனவே இலங்கையில் உள்ள இந்திய
 கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எமது ஐயத்தின் தன்மையை இலங்கை மற்றும்
இந்திய அரசுகள் புரிந்துகொண்டு எமது கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பில் விசேட கவனம்
செலுத்த வேண்டும்.</p><p></p><h2>இந்திய - இலங்கை அரசு</h2><p>
</p><p>
தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கான
முழுப் பொறுப்பையும் இந்திய - இலங்கை அரசுகளே ஏற்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cea1da-0e23-4983-8c81-6073fff1276e/26-6a7703c87739e.webp' /></p><p> </p><p>ஏனெனில் இலங்கையில்
இன்று நாட்டில் உள்ள அனைத்து சிறைகளினதும் பாதுகாப்பை உடன் பலப்படுத்துமாறு
சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில் நேற்று காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கிய தமிழக கடற்றொழிலாளர்கள் 11 பேர்
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இதுபோன்று இலங்கை
உள்ள பல்வேறு சிறைகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
எனவே இந்த விடயத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள
இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்: எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பேரிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-100-tariffs-1786174038"></link>
            <id>https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-100-tariffs-1786174038</id>
            <summary type="text">ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டமூலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டமூலம், அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>
"லிண்ட்சே ஒ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டமூலம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு எதிராக கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு வழிவகை செய்கிறது.
</p><p>இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>100 சதவீதம் வரை வரி&nbsp;</h2><p>
</p><p>மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்தச் சட்டமூலம் குறிவைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ce5f83-085f-4ad5-bb25-164dd9a19582/26-6a770528de1ae.webp' /></p><p>

செனட் சபையில் 86-11 என்ற வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், அடுத்த கட்டமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட உள்ளது. </p><p>எனினும், பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு இதற்கான வாக்கெடுப்பு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதிப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதே இந்த
நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதனிடையே, இந்தச் சட்டமூலத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளதுடன், அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலனற்ற இராணுவ வழிமுறைகள் : ஈரான் போரிலிருந்து வெளியேறும் வழியைத்தேடும் அமெரிக்க தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trumps-top-general-seeks-path-out-of-iran-war-1786182574"></link>
            <id>https://ibctamil.com/article/trumps-top-general-seeks-path-out-of-iran-war-1786182574</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ வழிமுறைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளிக்கக்கூடும் மற்றும் பரந்த அளவிலான பதிலடியைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளுக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ வழிமுறைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளிக்கக்கூடும் மற்றும் பரந்த அளவிலான பதிலடியைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், ஈரானுடனான போரின் பதற்றத்தைக் குறைப்பதற்கான வழியைத் தேடுமாறு, அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த கலந்துரையாடல்கள் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சிஐஏ இயக்குநர் ஜோன் ராட்க்ளிஃப், வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் கெய்ன் தனது கவலைகளைத் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>வான்வழித்தாக்குதல்கள் ஈரானை கட்டுப்படுத்தாது</h2><p>

தரைவழிப் படையெடுப்பைத் தவிர்ப்பதற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னுரிமை அளித்த போதிலும், வான்வழித் தாக்குதல் மட்டும் தெஹ்ரானை அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க வைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கெய்னும் மற்ற அதிகாரிகளும் நம்புவதாக அந்த அறிக்கை கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c808ffd5-d2f4-492c-95da-f65c55debde6/26-6a76feeb804a7.webp' /></p><p>
</p><p>
ஜூலை மாத இறுதியில் முன்மொழியப்பட்ட பதற்றத்தை அதிகரிப்பது குறித்து கெய்ன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு பகுதி காரணம், அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற கவலைகளே ஆகும்.</p><p></p><h2>ஈரானின் தாக்குதல் குறித்து எச்சரித்த வளைகுடா நாடுகள்</h2><p> </p><p>வளைகுடா கூட்டாளிகள் சாத்தியமான தாக்குதல்கள் குறித்து எச்சரித்த பின்னர், ட்ரம்ப் இறுதியில் அந்த நடவடிக்கையை ஒத்திவைத்தார் என்று அந்த அறிக்கை கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32e186e-0564-4c5d-8c7f-cedf872308c3/26-6a76feec324d2.webp' /></p><p>
</p><p>
வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஆயுதங்கள் மற்றும் பிற துல்லியமான வெடிமருந்துகள் உட்பட, குறைந்து வரும் அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளையும் அது சுட்டிக்காட்டியது.இது ஒரு நீடித்த மோதலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வோஷிங்டனின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும்.
</p><p>
இராணுவ அபாயங்கள் குறித்து கெய்ன், ட்ரம்பை எச்சரித்ததைச் சுட்டிக்காட்டி, பதற்றத்தை அதிகரிக்க உத்தரவிடப்பட்டால், அமெரிக்கப் படைகள் ஈரானுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியதாக சிஎன்என் கூறியது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் உட்பட, இராஜதந்திரத்திற்கு இடமளிக்கும் அதே வேளையில், ட்ரம்ப் ஒரு அரசியல் வெற்றியாகச் சித்தரிக்கக்கூடிய ஒரு முடிவை நிர்வாக அதிகாரிகள் இப்போது தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளே செம்மணி இனப்படுகொலை தினம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/krishanthi-chemmani-massacre-remembered-1786179491"></link>
            <id>https://ibctamil.com/article/krishanthi-chemmani-massacre-remembered-1786179491</id>
            <summary type="text">இனப்படுகொலைக்கான நீதி வேண்டி இன்று உலகின் கவனத்தை கோருகிறது செம்மணி. முப்பது வருடங்களுக்கு முன்னர் நிலத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனப்படுகொலைக்கான நீதி வேண்டி இன்று உலகின் கவனத்தை கோருகிறது செம்மணி. </p><p>முப்பது வருடங்களுக்கு முன்னர் நிலத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி நிலத்திலிருந்து எலும்புக்கூடுகள் எழுந்து போராடுகின்றன. </p><p>அண்மைய சில வருடங்களாக செம்மணியில் அகழ்வு இடம்பெற்று இதுவரையில் சுமார் 480 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் செம்மணிப் படுகொலை ஈழத் தமிழர்களின் நினைவுகளில் ஒரு பெருத்த துயரமாகப் படிந்துள்ளது. இப்படியான செம்மணிப் படுகொலையை நினைவுகூரத்தக்கதொரு நாளே இன்று.&nbsp;</p><p></p><h5><u><b>🛑 யார் இந்தக் கிருஷாந்தி</b></u></h5><p>கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர். &nbsp; 1996, ஓகஸ்ட் 7ஆம் திகதி. &nbsp;இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். </p><p>அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி குமாரசாமியும் ஒருவர். &nbsp;யாழ்ப்பாணத் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.</p><p>
</p><p>கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர். இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59 வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு &nbsp; டியூஷன் &nbsp;போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.</p><h5><b><u>🛑 கொலை செய்யப்பட்ட மாணவி</u></b></h5><p>&nbsp;அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர். கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொருபேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் &nbsp;கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். </p><p>அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர். அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது.</p><p>இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் &nbsp;1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.</p><h5><u><b>🛑 செம்மணிப் புதைகுழி வழக்கு</b></u></h5><p>
</p><p>கிருசாந்தி வன்கொலை மூடுண்டிருந்த யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. இதனால் தொடர் யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. நெருக்கடியை தவிர்க்க சந்திரிக்கா அரசு ஒன்பதுபேரை கைது செய்தது.</p><p> ஏழு இராணுவத்தையும் இரண்டு சிப்பாய்களையும் செய்து செய்தனர். அரசு எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காகியது. &nbsp;1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.&nbsp;</p><p>”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் – 300ல் இருந்து 400 வரை – புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.”&nbsp;</p><h5><b><u>🛑 முடிமறைக்க முற்பட்ட சந்திரிகா அரசு&nbsp;</u></b></h5><p>அப்போதைய அரசு கிருசாந்தி வழக்குடன் இந்த விவகாரத்தை முடிமறைக்க முற்பட்டது. ஆனால் உலகளவில் இந்த விவகாரம் அவதானிக்கப்பட்டது. செம்மணிப் புதைகுழியை தோண்ட வேண்டும் உண்மையை கண்டறிய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன. &nbsp;இதனையடுத்து இலங்கை அரசுக்கு புதைகுழி விவகாரத்தை தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. </p><p>செம்மணியில் வெளிவந்த எலும்புக்கூடுகள் &nbsp;சோமரத்தின ராஜபக்ச வாக்குமூலத்தை மெய்ப்பித்தது. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை கண்ணீருடன் திரண்ட தாய்மாரும் உறவுகளும் அடையாளம் காட்டினர்.</p><p>யாழ்ப்பாணமே கண்ணீர் கோலம் பூண்டது. செம்மணியைவிட 16 புதைகுழிகள் உள்ளன என்றும் அதில் பத்துப் புதைகுழிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஐந்தை உதவி பொலீஸ் அதிகாரி பெரேராவால் காட்ட முடியும். எஞ்சிய ஒன்றை – அது ஒரு கோவில் அருகில் உள்ளது – டி.எம். ஜெயதிலக்காவால் (மரணதண்டனை பெற்ற இன்னொரு சிப்பாய்) அடையாளம் காட்ட முடியும் என்றும் ராஜபக்ச கூறினார்.</p><p>
</p><h5><b><u>🛑 கொலையாளியின் வாக்குமூலம்</u></b></h5><p>அத்துடன் இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்று சிப்பாய் &nbsp;ராஜபக்ச கூறினார். கப்டன் லலித் ஹேவா, லெப்டினன் விஜயசிறிவர்த்தன, லெப்டினன் துடுகல, மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகரா முதலிய இராணு அதிகாரிகளது விபரங்களை பகிரங்கப்படுத்தினான். </p><p>அத்துடன் தனது வாக்குமூலத்தில் பல்வேறு கொலைகளை ராஜபக்ச விபரித்திருந்தார். இதன்போது செல்வரத்தினம் என்ற அரச ஊழியரை &nbsp;இராணுவம் கைது செய்த பின்னர் அவரை தேடி வந்த மனைவிக்கு என்ன நடந்தது என்று கீழ்கண்டவாறு ராஜபக்ச விபரித்தார்.</p><p>ஒருநாள் ஒரு மண்வெட்டியை எடுத்துவருமாறு கப்டன் லலித் ஹேவா என்னிடம் கேட்டார். நான் அங்கு சென்றபோது ஆடையில்லாது நிர்வாண கோலத்தில் இருந்த பெண் ஒருவருடன் கப்டன் ஹேவா நின்றார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அந்த முகாமுக்கு முன்பு கொண்டு வரப்பட்டிருந்தனர். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை கற்பழித்தார். பின்னர் நான் கொண்டுவந்து கொடுத்த மண்வெட்டியினாலும் இன்னும் சில பொல்லுகளாலும் கப்டன் ஹேவா அந்தக் கணவர் மனைவி இருவரையும் தாக்கினார். இருவரும் இறந்து போனார்கள்.</p><h5><b><u>🛑 செம்மணி நினைவுநாள்</u></b></h5><p>
</p><p>கிருசாந்தி கொலையும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் செம்மணிப் புதைகுழிகளும் இலங்கை இராணுவத்தின் இன அழிப்பு சார்ந்த கொடூர முகங்களை உலகிற்கு அம்பலப்படுத்தின. யாழ்ப்பாண மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதாக கூறி யுத்தம் செய்த சந்திரிக்கா அரசாங்கம் எதற்காக யுத்தத்தை மேற்கொண்டது என்பதையும் செம்மணிப் புதைகுழிகள் அம்பலமாக்கின. </p><p>குற்றவாளிகள் இனம் காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டபோதும் இலங்கை அரசினதும் இராணுவப்படைகளினதும் தமிழ் இன அழிப்பு செம்மணியுடன் முடிந்துவிடவில்லை. அவை முள்ளிவாய்க்கால் வரை உச்சம் கண்டன.</p><p>செம்மணி விவகாரத்தில் &nbsp;கால ஓட்டத்தில் அதனை மறக்கடிக்கும் விதமான காரியங்கள் நிகழ்ந்தன. 600க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட செம்மணி இன்று நீதியை கோரி எழுந்து நிற்கிற நிலமாகும். ஒரு அரசின் இனப்படுகொலையிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள செம்மணிப்படுகொலை சிறந்த உதாரணம்.</p><p>தமிழின அழிப்பு வரலாற்றில் செம்மணியை மறக்காமல் அழிக்கப்பட்டவர்களை நினைவுகூர கிருசாந்திகொல்லப்பட்ட இந்த நாளே மிகவும் பொருத்தமானது.செம்மணி வெளி ஒரு இனம் சந்தித்த மிகப் பெரிய இன அழிப்பின் சுவடு. ஒரு இன அழிப்புச் செயல் உலகின் எதிர்காலத்தின் மனித உரிமை, இன உரிமை குறித்த விழிப்புக்கும் சிந்தனைக்கும் உரிய அனுபவம்.</p><p>அதை நினைவுகூர்வதே மனித மாண்பும் மனிதகுலத்தை பாதுகாக்கும் செயலுமாகும். செம்மணி இனப்படுகொலையின் நினைவு நாள் அல்லது கிருஷசாந்தியின் நினைவு நாளகக் கருதப்படக்கூடிய இன்றைய நாள், ஈழ நிலத்தில் நிகழந்த ஒடுக்குமுறைகளுக்கு நீதிகோரும் நாளெனலாம்.</p><p>
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T10:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teacher-recruitment-by-the-end-of-this-year-harini-1786161554"></link>
            <id>https://ibctamil.com/article/teacher-recruitment-by-the-end-of-this-year-harini-1786161554</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p><p>
</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p>இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது குறித்த மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆசிரியர் பற்றாக்குறை</h2><p>
மேலும், அப்பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு நீண்டகால உத்தி அவசியமாகின்றது எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec06382d-1942-43ce-9f2b-1a897725cfe1/26-6a76dd5b14b3a.webp' /></p><p>அத்துடன் குறித்த மூன்று மாகாணங்களிலும் நடைபெற்று வரும் பாடசாலைக் கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.</p><p>இதன்போது, மனிதவள முகாமைத்துவம் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் குழுக்கள் உட்பட, தனது மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட உட்குழுக்களின் முன்னேற்றத்தையும் பிரதமர் ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kidnapped-journalist-prageeth-ekneligoda-case-1786176648"></link>
            <id>https://ibctamil.com/article/kidnapped-journalist-prageeth-ekneligoda-case-1786176648</id>
            <summary type="text">கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>விஜேராம விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் நேற்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நேற்றைய வழக்கு விசாரணையின் போது 115 முதல் 118 வரையிலான சாட்சிகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், 117 ஆம் இலக்கச் சாட்சியிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p></p><h2>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை</h2><p> 

அதேவேளை, ஏனைய சாட்சிகள் இந்த வழக்குடன் நேரடியாகத் தொடர்பற்றவர்கள் எனக் கூறி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e362ae06-7cfb-4cff-ae12-13ee7c183c8e/26-6a76f822ec55b.webp' /></p><p> </p><p>அதற்கமைய, அடுத்த வழக்கு விசாரணையின் போது 117 ஆம் சாட்சியிடம் தொடர்ந்து சாட்சியமளிப்பு இடம்பெறவுள்ளதுடன், 4 ஆம் இலக்கச் சாட்சியையும் அன்றைய தினம் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஹோமாகம பகுதியில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.</p><p>

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T09:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பெருமளவிலான மோசடித் திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scam-involving-hi-messages-on-facebook-instagram-1786175650"></link>
            <id>https://ibctamil.com/article/scam-involving-hi-messages-on-facebook-instagram-1786175650</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

 

இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
 

மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>அழகான பெண்ணின் புகைப்படம் மூலம் மோசடி</h2><p>
</p><p>
 

இந்த மோசடியின் முதல் கட்டமாக, Instagram மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து 'Hi' எனச் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9af192e-30c5-4a03-bdee-518c3c81a7dc/26-6a76f644d4c16.webp' /></p><p>
</p><p>
 

அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களைக் அவதானித்து, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்குகின்றனர்.
</p><p>
 

புகைப்படத்தில் உள்ள பெண்ணின் அழகைக் கண்டு அவர்கள் மீண்டும் அந்தச் செய்திக்குப் பதிலளிக்கின்றனர்.</p><p>

 

அதன்பின்னர், அப்பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அல்லது WhatsApp வீடியோ அழைப்பு மூலம் காட்சிகளை வழங்குமாறு தூண்டுகின்றனர்.</p><p>

 

பின்னர் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் மற்றும் கப்பம் பெறப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் களைகட்டும் பிரமாண்ட உணவுத் திருவிழா... றீ(ச்)ஷாவில் கொண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-day-grand-food-festival-begins-in-reecha-1786176302"></link>
            <id>https://ibctamil.com/article/4-day-grand-food-festival-begins-in-reecha-1786176302</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வுகள், நேற்று (07-08-2026) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்று (08-08-2026) நாளை (09-08-2026) மற்றும் 10 ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் 10 வரை நடைபெறவுள்ளது.</p><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீ(ச்)ஷாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு QICK FOOD அனுசரணை வழங்குவதுடன் ங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்து கொண்டிருக்கின்றன.
</p><p>
உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.</p><p></p><p> </p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sanjeeva-case-suspect-dies-magazine-prison-clash-1786173443"></link>
            <id>https://ibctamil.com/article/sanjeeva-case-suspect-dies-magazine-prison-clash-1786173443</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கணேமுல்ல சஞ்சீவ மரணம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், ‘ஹோமாகம ஹந்தயா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரின் ஒப்பந்த துப்பாக்கிதாரியாக அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f6de3a-ba93-4f7e-b0c2-bb5541fa040c/26-6a76e1669970e.webp' /></p><p>

இது தொடர்பாக காலி, அம்பாறை, நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது இறுதி சட்ட முடிவுகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZiTAUZRbgb4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயிலை சமாளிக்க நாயிறைச்சி சூப் - விநோத அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nk-urged-to-beat-heat-with-dog-meat-soup-1786168998"></link>
            <id>https://ibctamil.com/article/nk-urged-to-beat-heat-with-dog-meat-soup-1786168998</id>
            <summary type="text">அதிகரித்துவரும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்துவரும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் மற்றும் கோழி இறைச்சிச் சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும் என வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>உணவுகளைத் தயாரிக்கும் போட்டி</h2><p>நாயிறைச்சி சூப் கோடைக்காலத்தின் பாரம்பரிய உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள பழமொழி ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90c7b498-76cf-4b80-b614-0f70a4f594de/26-6a76db8ac5353.webp' /></p><p>



மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>


கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாயிறைச்சி சூப்பை வெயிலை சமாளிப்பதற்கான உணவாக வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடவுச்சீட்டினால் சிக்கல்: பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் முன்னாள் எம்.பி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mp-held-in-uk-over-faulty-sl-passports-1786168387"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mp-held-in-uk-over-faulty-sl-passports-1786168387</id>
            <summary type="text">இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரமற்ற தன்மை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரமற்ற தன்மை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று (07-08-2026) உயைாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
கடவுச்சீட்டை இயந்திரங்களால் சரியாக வாசிக்க முடியாததால், அது போலியானது எனச் சந்தேகித்து பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>புதிய கடவுச்சீட்டு</h2><p>

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “முன்னர் 64 பக்கங்களைக் கொண்டிருந்த கடவுச்சீட்டு தற்போது 48 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. </p><p>

எனினும், அதற்காக வசூலிக்கப்படும் 6,000 ரூபாய் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e765b04-7dc2-484a-a112-b26b72da179a/26-6a76d0f61863f.webp' /></p><p>புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்புப் பக்கங்களோ (Observation pages) அல்லது கால நீடிப்புப் பக்கங்களோ சேர்க்கப்படவில்லை. </p><p>

அத்துடன் அதன் அச்சின் தரம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>குறிப்பாகக் குடிவரவு முத்திரையிடும் போது மை மறுபக்கத்திற்கு ஊடுருவிப் பரவுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், சில நாடுகள் இந்த இலங்கைக் கடவுச்சீட்டுகளை நிராகரிகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடவுச்சீட்டுகளின் தரத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a93db8-e4a1-4ae3-b464-9477107cb9ff/26-6a76d0f6db919.webp' /></p><p>அத்தோடு சர்வதேச தரநிலைகளுக்கு அமையப் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உலகளவில் ஏனைய நாடுகளாலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி (Tender) தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதாகவும், புதிய ஈ-பாஸ்போர்ட் (E-Passport) முறையை அறிமுகப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவலைக்கிடமான நிலையில் ஈரான் உச்ச தலைவர் - விரைவில் மறைவு குறித்த செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-supreme-leader-in-critical-condition-1786171351"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-supreme-leader-in-critical-condition-1786171351</id>
            <summary type="text">ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும்&nbsp;இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p>ஜெருசலேம் போஸ்ட்டால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு வட்டாரம் "அவர் வீரமரணம் அடைந்த செய்தி விரைவில் வந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்" என்று கூறியுள்ளது.</p><p></p><h2>எழுத்துப்பூர்வ அறிக்கை</h2><p>அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் ஈரான் ஆன்மீக தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b1ac5d-344a-41c0-8638-b508e889a762/26-6a76d6df16c26.webp' /></p><p>தந்தையின் மறைவின் பின் ஈரானிய உச்ச தலைவராக பதவியேற்றதிலிருந்து அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை, அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது.</p><p> ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக அவர் பெயரில் எழுதப்பட்ட அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இது சர்வதேச அளவில் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகரிக்கச் செய்தது.&nbsp;&nbsp;</p><p>கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>90% செயலிழந்த&nbsp;கொமெய்னி </h2><p>அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேனி 90 சதவீதம் செயலிழந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387cf06e-9af6-4f55-9c7d-2f431fd83c41/26-6a76d6dfc2a15.webp' /></p><p>தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கொமெய்னி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவில் களை கட்டிய அட்சய பாத்திரம் - உணவுத் திருவிழாவின் முதலாம் நாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-2026-first-day-1786169146"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-2026-first-day-1786169146</id>
            <summary type="text">மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்த றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பிரமாண்டமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்த றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.</p><p>உணவுத் திருவிழாவின் முதலாம் நாளான நேற்று தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவித்ததோடு, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.</p><p>இந்த உணவுத் திருவிழாவில் தமிழர்களின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளான ஒடியல் கூழ், நண்டுப் பிரட்டல், பிட்டு, பனங்காய் பணியாரம் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>கண்கொள்ளாக் காட்சி</h2><p> உணவுத் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களின் முகங்களில் தெரிந்த திருப்தியும் மகிழ்ச்சியும் இந்த விழாவின் வெற்றியை மேலும் மெருகூட்டியது.</p><p>நேற்றைய நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7f91e6-1b7b-4f19-bd2e-b1a60f9f82ee/26-6a76cf30814e3.webp' /></p><p> </p><p>மாலை 5.00 மணிக்கு, நுழைவாயிலிலிருந்து பாரம்பரிய இசை முழங்க மக்களை வரவேற்று அழைத்து வரும் கண்கொள்ளாக் காட்சி அனைவரையும் மெய்மறக்கச் செய்யும். </p><p>தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உலகறியச் செய்யும் இந்த நிகழ்வு, ஒவ்வொருவரும் தவறாமல் காண வேண்டிய சிறப்புமிக்க திருவிழாவாகும்.
</p><p>எனவே, இந்த இனிய நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு, தமிழர் பாரம்பரியத்தின் இனிமையையும் கலை மரபின் அழகையும் நேரில் கண்டு களிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-jZVh2a6A4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் மாற்றம் - தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-today-in-world-gold-market-1786171021"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-today-in-world-gold-market-1786171021</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>நேற்று ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 98 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து, 4,355 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.</p><p></p><h2>தங்கத்தின் விலை&nbsp;</h2><p>
</p><p>இந்த நிலையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,342 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532c918-da00-4bc4-805a-ad0433e82e20/26-6a76cf6a48614.webp' /></p><p>
இதன்படி, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
</p><p>
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>

அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி 63.58 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் Jaffna Kings - இரசிகர்களுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497"></link>
            <id>https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497</id>
            <summary type="text"> புதிய இணைப்புகொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
</p><p>
 

மைதானத்தின் 'C' Upper மற்றும் Lower, 'D' Upper மற்றும் Lower ஆகிய பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இறுதிப் போட்டிக்கு கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541acb66-b150-474b-a62d-bf40aa31142d/26-6a76cdce79f22.webp' /></p><p> </p><p>தொடரின் இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.</p><p>லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.</p><p></p><p>
</p><h2>ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது</h2><p>
 

இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689e219-1215-44a2-9c28-a8e51bd5cb7a/26-6a76b5af5f54d.webp' /></p><p>இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
</p><p>
 

இதேவேளை, ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.</p><p>அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:34:04+00:00</updated>
        </entry>
    </feed>
