<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T06:32:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-for-users-of-solar-panels-in-sl-1787809225"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-for-users-of-solar-panels-in-sl-1787809225</id>
            <summary type="text">இலங்கையில்&amp;nbsp;சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு&amp;nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்&nbsp;சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு&nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இந்த நிலையில் குறித்த நாட்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர்</h2><p>இதேவேளை விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை&nbsp; தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f421b-0640-43f3-b2b8-b85c8e4cb256/26-6a8fd5a8892f8.webp' /></p><p>விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தேசிய மின் அமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டும் இந்தத் தற்காலிக நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-senator-urges-gov-chemmani-mass-grave-1787805549"></link>
            <id>https://ibctamil.com/article/australian-senator-urges-gov-chemmani-mass-grave-1787805549</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில்&amp;nbsp;அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில்&nbsp;அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். </p><p>அதன்படி, மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p> அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்ட அவர்&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும் என்று அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இது.</p><p> முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசு தூண்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0f14fb-3cdf-467c-9392-c2b9e9051728/26-6a8fcab39e934.webp' /></p><p>
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருகின்றது.</p><p>மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தல்</h2><p>இதேவேளை நம்பகமான மற்றும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம், உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் சமூகம் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது என அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72fefedf-65c1-4bfe-acf0-e9b80bffec36/26-6a8fcb65da0ac.webp' /></p><p>
</p><p>
எனவே, உடனடியாகச் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுப்பதோடு, சாட்சியங்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்தப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841"></link>
            <id>https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.</p><p></p><h2>உலகம் முழுவதும் அதிர்ச்சி</h2><p> இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32f1fa4-9f40-4cfe-9d27-0064d86f5c9e/26-6a8fc2b38ef62.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>தற்போது வரை நேபாளைத்தைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 698 பேர் மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், அமெரிக்கர்கள் 54 பேர் மாயமாகியிருப்பதாகவும், 34 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியிருப்பதாகவும், 33 பிரிட்டன் நாட்டவர்கள் மாயமாகியிருப்பதாகவும் நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எவரும் பாதிக்கப்படவில்லை</h2><p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33246c10-efd6-4c56-b9fd-aca7c8d389a5/26-6a8fc2b44ba51.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனினும் இப்பேரழிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>நேபாளத்தில் வசிக்கும் 85 முதல் 100 வரையிலான இலங்கையர்களின் நிலைமையைக் காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன்அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர Hot line +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்&nbsp;என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934"></link>
            <id>https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய அபாயமுள்ள மாவட்டங்களில் அருகாமையில் வசிக்கும் இலங்கையர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதுவரை அனர்த்ததில் சிக்கி&nbsp;500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம்</h2><p> 
</p><p>எனவே அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர ஹாட்லைன் +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364bd7f6-1401-4309-90c9-3387051d9ed8/26-6a8fba964485e.webp' /></p><p>
</p><p>
எனினும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு : தொடருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-employees-social-media-use-duty-hours-1787802422"></link>
            <id>https://ibctamil.com/article/railway-employees-social-media-use-duty-hours-1787802422</id>
            <summary type="text">தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று&amp;nbsp; வெளியிடப்பட்டுள்ளது.கடமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று&nbsp; வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.</p><p>அத்துடன் சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அந்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தல்</h2><p>
</p><p>
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f035d9-e266-49dc-9d61-218ff31fcd39/26-6a8fbd4025947.webp' /></p><p>இந்தநிலையில் இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:28:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்படும் யால தேசியப் பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yala-national-park-temporarily-closed-to-public-1787801734"></link>
            <id>https://ibctamil.com/article/yala-national-park-temporarily-closed-to-public-1787801734</id>
            <summary type="text">யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டியுள்ள அபகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
குறித்த விடயம் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தற்காலிகமாக மூடப்படும்</span></p><p>
</p><p>
அதன் பிரகாரம் யால தேசியப் பூங்காவின் தொகுதி 1 மற்றும் 2 ஆகியவை தற்போதைக்கு எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b246e7d-f9de-484f-820d-f5b0020599d5/26-6a8fbb835fbc0.webp' /></p><p>
அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை யால தேசியப் பூங்கா பொதுமக்களுக்குத் தற்காலிகமாக மூடப்படும் என்று வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
விலங்குகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி சர்வதேச விமான நிலைய விவகாரம் - NPP அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-and-port-development-1787801590"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-and-port-development-1787801590</id>
            <summary type="text">யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி
வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போதும் மேற்கொள்வது என்பது தொடர்பில்
அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி
வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போதும் மேற்கொள்வது என்பது தொடர்பில்
அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
விமல் ராட்நாயக்க தெரிவித்தார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பின் போது காங்கேசன்துறை முகம்
மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை
அபிவிருத்தி செய்ய பின்னிக்கிறது என&nbsp;ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு
பதிலளித்தார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை
பணத்தை வழங்கியிருக்கிறது.</p><p></p><h2>அரசாங்கம் முறையான திட்டமிடல்</h2><p> அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய
தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.

அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம் ஆனால்
எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே
முடிவு செய்யும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff90430a-e4b4-4eeb-94a1-d0bda28e247d/26-6a8fb2c425985.webp' /></p><p>மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று
கட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
</p><p>
அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது அபிவிருத்தி
தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என
தெரிவித்தார்.
</p><p>
குறித்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன்
மற்றும் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-car-festival-1787800125"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-car-festival-1787800125</id>
            <summary type="text">ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.</p><p>அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார்.</p><p>அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp;செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி&nbsp;அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T03:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி பலி - இரு சிறுவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-at-kili-ariviyal-nagar-railway-crossing-1787798756"></link>
            <id>https://ibctamil.com/article/accident-at-kili-ariviyal-nagar-railway-crossing-1787798756</id>
            <summary type="text">கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொழும்பிலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p> கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தொடருந்து, அறிவியல் நகர் தொடருந்துநிலையத்துக்கு அண்மையிலுள்ள கடவையில் சிறிய ரக&nbsp;கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த காரில் தந்தை, தாய், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்துள்ளனர்.</p><p></p><h2>விசாரணை&nbsp;</h2><p> தொடருந்து காருடன் மோதியதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35fd7b6-22a5-4f19-ba43-2eada5b84251/26-6a8fa93c42432.webp' /></p><p> மேலும், 16 வயதுடைய சிறுவனும் 9 வயதுடைய சிறுமியும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><h2>சமிக்ஞை முறையாக இயங்கவில்லை</h2><p>இதேவேளை, குறித்த தொடருந்து கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7de3cad-b90a-4efe-ad62-bd86e6a433ca/26-6a8fa78792d47.webp' /></p><p>
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த தொடருந்து கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
தொடருந்து கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>You may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T03:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deadly-flash-flooding-hits-nepal-1787796029"></link>
            <id>https://ibctamil.com/article/deadly-flash-flooding-hits-nepal-1787796029</id>
            <summary type="text">நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் 
157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும்இ அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள காவல்துறை புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது.</p><p>திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும் அவர்களில் 341 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாள சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்</h2><p>இதேவெளை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த குறைந்தது 77 யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A terrible and tragic flash flood has taken place at Gyirong in Tibet - China, and one of our Kailash groups was caught in it. While on their way back, they were at the immigration office when the flood occurred and the building and much of the town seems to have been flooded.… <a href="https://t.co/CqOBxsPlWo">pic.twitter.com/CqOBxsPlWo</a></p>&mdash; Sadhguru (@SadhguruJV) <a href="https://x.com/SadhguruJV/status/2092598413502316574?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவரில் இருந்து திரும்பி வரும் வழியில் அந்தக் குழுவினர் குடிவரவு அலுவலகத்தில் இருந்ததாக அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா்&nbsp; என தெரிவித்துள்ளாா்.</p><p>அவர் வெளியிட்ட காணொளியில் திபெத்தின் கிரியோங் துறைமுகப் பகுதியில் சீறிப்பாயும் ஒரு பிரம்மாண்டமான அலை, குடிவரவு அலுவலகத்தின் மீது சரிந்து, பின்னர் ரசுவாவிற்குள் புகுந்து, போட் கோசி ஆற்றங்கரை நெடுகிலும் பேரழிவை ஏற்படுத்தியதைக் காட்டுகின்றன.</p><p></p><h2>மீட்பு மற்றும் சீரமைப்புப் பணி</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை அறிந்து தாம் ஆழ்ந்த வேதனையடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4dd9130-0d19-4621-a7d1-14ea4655d3a4/26-6a8fa28c4bd2e.webp' /></p><p>ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு மோசமான புயலில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

அரசாங்கம் மற்றும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p><i><b>You may like this</b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T02:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் - யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913"></link>
            <id>https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத்
தெரிவித்தார்.</p><p>இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயகம் திரும்புவதற்கு அனுமதி</span></p><p>அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6d52ff-f548-47bc-9f9a-ed5c8581e4da/26-6a8f9786a68ac.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்
மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின்
மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தேவையான காணி</h2><p> அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது
நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம்
திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64eb5bd-b307-4fea-99e4-24450df64670/26-6a8f978760b8d.webp' /></p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான
காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக
செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள்
வழங்கப்படும்&nbsp;என்றார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2DMN5qdDLw0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T01:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116"></link>
            <id>https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116</id>
            <summary type="text">ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி மையங்களாகவே விளங்கிவந்துள்ளது.</p><p>
ஆனால், மிக அண்மையக்காலமாக ஈழத்து சைவ ஆலயத் திருவிழாக்களில் மேலோங்கிவரும் கட்டுப்பாடற்ற ஆடம்பரங்களும், வணிகமயமாக்கலும், பண்பாட்டு விலகல்களும் சைவ சமய ஆன்மீகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. </p><p>அதேபோல மரபுசார்ந்த பக்தி நெறிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனியாரின் நிதியாதிக்கத்தைக் காட்டும் போட்டித் தளமாக ஆலயங்கள் மாறிவருவது சைவச் சமூகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான எச்சரிக்கை குறியீடாக மாறியுள்ளது என்பதே இப்போதைய நிதர்சனமாகும் .</p><p></p><h3>
கடந்த காலக் கட்டுப்பாடுகளும் தற்போதைய கள யதார்த்தமும்</h3><p>

ஒரு காலத்தில் யாழ்ப்பாண ஆலயத் திருவிழாக்களில் "சின்னமேளம்" என்ற பெயரில் இடம்பெற்ற சதிராட்டப் போட்டிகளும், உபயக்காரர்களின் போலிப் பெருமைகளும் கலாச்சார ரீதியான சிக்கல்களை உருவாக்கியிருந்தன. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில், சமூக ஒழுக்க நெறிமுறைகளைப் பேணும் பொருட்டு ஆலயங்களில் இத்தகைய ஆடம்பரக் கலைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p>

அதன் பின் ஆலயங்கள் ஆடம்பரங்களின்றியும், பக்தியை மட்டுமே முதன்மைப்படுத்தியும் இயங்கக்கூடிய சூழல் இயல்பாக உருவாக்கப்பட்டது.</p><p>
ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஈழ நிலப்பரப்பின் கேட்பாரற்ற சூழலில், முறையான வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி, பல ஆலயங்களில் கட்டுப்பாடற்ற பண்பாட்டு மீறல்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.</p><h2>புலம்பெயர் பணமும் போலிப் பெருமிதப் போட்டியும்</h2><p>
நமது தயாக நிலப்பரப்பின் தற்போதைய சீரழிவுகளுக்கு முதன்மைக்காரணியாக அமைவது, ஆலய நிர்வாகங்களை அசைக்கும் கட்டுப்பாடற்ற பணப் புழக்கமாகும்./
 
குறிப்பாக, புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் பெருந்தொகைப் பணம், பக்திக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ஊர்ப் பெருமையையும் தனிநபர் செல்வாக்கையும் பறைசாற்றும் ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.</p><p>

பல லட்சக்கணக்கில் பட்டுச் சாத்துதல், மாம்பழ ஏலம் என்ற பெயரில் கோடிகளைக் கரைத்தல், போட்டிபோட்டுக்கொண்டு மாலைகளைச் சாத்துதல் போன்றவை ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் வணிகக் காட்சிகளாக மாறியுள்ளன.</p><p>

அதே போலவே மரபுசார்ந்த தென்னிலங்கை ஆட்டங்கள், கேரளா செண்டை மேளங்கள், திரையிசைப் பிரபலங்களை வரவழைத்துக் கச்சேரிகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகள், ஆலயங்களின் அமைதியையும் சைவ மரபின் புனிதத்தையும் முற்றாகச் சிதைத்து நிற்கிறது.</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போன்ற தளங்களில் இன்றளவும் இறுக்கமாகப் பேணப்படும் வழிபாட்டு ஒழுக்கமும் கட்டுப்பாடும், பிற கிராமிய மற்றும் நகர ஆலயங்களில் இல்லாமல் போவதற்குக் காரணம் தகுதியான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பு இன்மையே ஆகும்.</p><h2>
ஆலயத் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்</h2><p>

ஈழத்து சைவ மரபைக் காப்பாற்றவும், ஆலயங்களை மீளவும் ஆன்மீக மையங்களாக மாற்றவும் உடனடியாகக் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><ul><li>ஆடம்பரக் கலை நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி: சினிமாப் பாடல்கள், வணிகரீதியான குத்தாட்டங்கள், வேற்றுப் பண்பாட்டுக் கலைக் குழுக்களின் ஆடம்பரக் காட்சிகளுக்கு ஆலய வளாகத்திற்குள் முற்றாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.பண்ணிசை, தேவாரம், திருவாசகம் மற்றும் மரபுசார் கலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏன் என்றால் ஆலயம் கேளிக்கை காட்டும் இடம் கிடையாது.</li><li>நிதிக்கட்டுப்பாடும் உச்சவரம்பும்: உபயக்காரர்கள் செய்யும் செலவுகளுக்கு ஆலய நிர்வாகங்கள் நல்லூரைப்போல தெளிவான உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். தனிநபரின் பண பலம் ஆலய மரபுகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.</li><li>சமூகப் பயன்பாட்டிற்கு நிதியைத் திருப்புதல்: திருவிழாக்களில் வீணடிக்கப்படும் ஆடம்பரப் பணத்தைக் கொண்டு, வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மருத்துவ தேவைகள் மற்றும் சைவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும்.</li><li>உயர்மட்டச் சைவ ஆதீனம் அல்லது தலைமைப் பீடத்தின் அவசியம்.</li></ul><p>
ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் தன்னிச்சையாகவும், எவ்விதக் கட்டுப்பாடின்றியும் செயல்படுவதே இத்தகைய கலாச்சார மீறல்களுக்கு அடிநாதமாகும். இதைக் கட்டுப்படுத்த, அனைத்துச் சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஓர் உயர்மட்ட சைவச் சபையோ அல்லது ஈழத்துச் சைவ ஆதீனம் போன்ற ஒரு தலைமைப் பீடமோ உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.</p><p>

உண்மையில் ஆலயங்களின் கோபுர உயரத்திலோ, நாற்பது அடித் தேரின் பிரம்மாண்டத்திலோ சைவ சமயத்தின் பெருமை இல்லை என்பதையும் அங்கு பேணப்படும் ஆன்மீக ஒழுக்கத்திலும் அமைதியிலுமே சைவ சமயத்தின் ஆன்மா வாழ்கிறது என்பதனையும் உணரத்தலைப்பட வேண்டும்.&nbsp;</p><p>
ஊர்மக்களின் சுயவிழிப்புணர்வும், அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட சைவத் தலைமைப் பீடத்தின் எழுச்சியும் மட்டுமே ஈழத்து ஆலயங்களின் கைநழுவிப்போகும் புனிதத்தை மீட்டுத்தரும் என்ற காலத்தின் ஆகப்பெரிய உண்மையை சைவ சமயத்தார் உணரவேண்டும் .</p><p>

கடந்த நாட் களில் கிளிநொச்சி ஆலயங்களில் நடைபெற்ற அரைநிர்வாண ஆட்டங்கள் சைவசமயத்தையும் அதன் பண்பாட்டு ஒழுக்கத்தையும் சவப்பெட்டியில் வைத்து மூடியிருக்கிறது என்ற விடையம் 
புலம்பெயர் பணக்காரர்களுக்கு உணரத்தப்படவேண்டும்.&nbsp;</p><p>
இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி என்ற கேள்வி சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று பெருங்கேள்வியாகி நிற்கிறது.&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:25:22+00:00</updated>
        </entry>
    </feed>
