<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-21T02:06:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் உச்சம் தொட்ட முட்டை விலை...! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/egg-producers-blame-govt-for-price-hike-1784596006"></link>
            <id>https://ibctamil.com/article/egg-producers-blame-govt-for-price-hike-1784596006</id>
            <summary type="text">முட்டை விலை உயர்விற்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடிப் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முட்டை விலை உயர்விற்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடிப் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்று உணவாக அரிசியைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துவதால் கோழிகளுக்கு நோய் ஏற்பட்டு, முட்டை உற்பத்தி 20% முதல் 30% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போலி வியாபாரிகள்</h2><p>விலங்கு உணவுகளில் போலி வியாபாரிகள் டொலமைட் போன்ற இரசாயனங்களைக் கலப்பதால் பெருமளவிலான கோழிகள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecc705b0-2b40-4d18-a1bb-115ff7ef94d6/26-6a5ec627b5531.webp' /></p><p>தீவனத் தட்டுப்பாடு மற்றும் தரமின்மை காரணமாக நாளாந்த முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்து, சந்தையில் அவற்றின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784594189"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784594189</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.
 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1791c596-c0fb-45d1-bdf3-50e92026e1ae/26-6a5ebf0f1c900.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eu-team-allowed-to-visit-chemmani-mass-grave-1784591415"></link>
            <id>https://ibctamil.com/article/eu-team-allowed-to-visit-chemmani-mass-grave-1784591415</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு,
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு,
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில்
நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.</p><p> 

இந்த விண்ணப்பத்தை நேற்று (21-07-2026) பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான
அனுமதியை வழங்கியுள்ளது.</p><p></p><h2>மனித புதைகுழி</h2><p>

நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளை (22-07-2026) காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப்
பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb5d5f5-c166-476b-bb75-a6232998b28e/26-6a5eb5c43c2e4.webp' /></p><p>மேலும் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (21-07-2026) நடைபெற்ற நிலையில் சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்கிரமரத்னவின் மரண விசாரணை...! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-on-ex-igp-wickramaratne-s-death-1784590918"></link>
            <id>https://ibctamil.com/article/probe-on-ex-igp-wickramaratne-s-death-1784590918</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>

அத்தோடு அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே அது
குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பக்கச்சார்பற்ற விசாரணைகள்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் (மனைவி,
மகன்) மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உட்பட நெருக்கமானவர்களிடம்
வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p>

அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே
உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe472cf-2cc4-4e23-99d7-671b12c8c1ea/26-6a5eb247824be.webp' /></p><p>

சம்பவம் நடந்த இடத்தில் மீட்கப்பட்ட அனைத்து சான்றுப்பொருள்களும்
பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மரணத்துக்கான காரணத்தை இப்போதே தீர்மானிக்க முடியாது. </p><p>

விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை
கிடைத்த பின்னரே இது கொலையா அல்லது உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பதை உறுதியாகக் கூற முடியும்.</p><p>

இந்த விவகாரத்தில் எவ்வித பக்கச்சார்புமின்றி வெளிப்படையான மற்றும்
பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T23:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மைதானத்திற்குப் பெண்ணுடன் வந்த கருணா...! வெடித்த சர்ச்சை - அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-sdig-jayakody-reveals-karuna-incident-1784588779"></link>
            <id>https://ibctamil.com/article/ex-sdig-jayakody-reveals-karuna-incident-1784588779</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
</p><p>
காவல் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தார்.
</p><p>
இதில் மேலும் தெரிவித்திருந்த அவர், “எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் காவல்துறை விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.
</p><p>
அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. </p><p>

அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் காவல்துறை விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என தெரிவித்திருந்தார்.
</p><p>
இதனடிப்படையில் யார் அந்த பெண் என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு ஐபிசி தமிழின் அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T23:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை அமைப்பில் மாற்றம்: ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-chairs-special-prison-reform-meeting-1784587443"></link>
            <id>https://ibctamil.com/article/anura-chairs-special-prison-reform-meeting-1784587443</id>
            <summary type="text">நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (20-07-2026) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் அதிகாரிகள் பங்கேற்ற இக்கலந்துரையாடலில், சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறைச்சாலைகளின் வசதி</h2><p>அத்துடன், சிறைச்சாலைகளின் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fee5b9e-3446-431f-a945-cc43f0961adf/26-6a5ea4b49ba9a.webp' /></p><p>இக்கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T22:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு நேரடி சவால் விடுத்துள்ள உதய கம்மன்பில!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gammanpila-rejects-poll-on-anura-s-popularity-1784583014"></link>
            <id>https://ibctamil.com/article/gammanpila-rejects-poll-on-anura-s-popularity-1784583014</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம்
உயர்வடைந்துள்ளது என மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள
அறிக்கை முற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம்
உயர்வடைந்துள்ளது என மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள
அறிக்கை முற்றிலும் போலியானது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மாதிரி அளவு</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “22 மில்லியன் மக்கள் தொகையைக்
கொண்ட இலங்கையில் வெறும் 1240 பேரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆய்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b805598-9386-4347-9a45-3761e36058e5/26-6a5ea1aa40c9c.webp' /></p><p>தேசிய அளவில்
பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு விடயத்தை இவ்வளவு சிறிய மாதிரி அளவுடன் மதிப்பீடு
செய்வது ஏற்புடையதல்ல.</p><ul><li>2024 ஜனாதிபதித் தேர்தல்: 42% வாக்குகள்</li><li>பொதுத்தேர்தல்: 62% வாக்குகள்</li><li>2025 மே மாத உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 43% வாக்குகள்</li></ul><p></p><h2>பொருளாதாரப் பாதிப்பு&nbsp;</h2><p>ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே அரசின் வாக்கு வங்கி சடுதியாக
வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>

பொருளாதாரப் பாதிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு
உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில் இத்தகைய சாதகமான
அறிக்கையை வெளியிடுவது நகைப்புக்குரியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b3674d-ba08-43b9-ae8a-29cc4d1be319/26-6a5ea1aae9897.webp' /></p><p>ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்
இந்த அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும்.</p><p> 

அப்போதுதான் உண்மையான மக்கள் தீர்ப்பு வெளியாகும் மற்றும் மக்கள்
சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T22:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு ஒரு முறை வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mustard-oil-and-fenugreek-seeds-for-hair-growth-1784579128"></link>
            <id>https://ibctamil.com/article/mustard-oil-and-fenugreek-seeds-for-hair-growth-1784579128</id>
            <summary type="text">அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
</p><p>
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
</p><p>
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><u>🛑&nbsp;<b>தேவையான பொருட்கள்</b></u></p><ol><li>கடுகு எண்ணெய் - 1&nbsp;கப் </li><li>வெந்தயம் - 2 ஸ்பூன்</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addb11ab-fe78-432b-aec3-5c34ae8cea01/26-6a5e918f3bf44.webp' /></p><p><u>🛑&nbsp;<b>பயன்படுத்தும் முறை&nbsp;&nbsp;</b></u></p><ol><li>முதலில் வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் அதை அரைத்துக் கொள்ள வேண்டும்.</li><li>
பின் அத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</li><li>அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.</li><li>இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி வலுவடைந்து புதிய முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.



</li></ol><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T21:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயர் பிரான்ஸ் அவசர அறிவிப்பு: டுபாய் - ரியாத் மற்றும் பெய்ரூட் விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/air-france-suspends-dubai-riyadh-flights-1784575382"></link>
            <id>https://ibctamil.com/article/air-france-suspends-dubai-riyadh-flights-1784575382</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக டுபாய் மற்றும் சவூதி அரேபிய தலைநகர் ரியாதிற்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக டுபாய் மற்றும் சவூதி அரேபிய தலைநகர் ரியாதிற்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எயர் பிரான்ஸ் (Air France) விமான நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில், சவூதி தலைநகர் ரியாதிற்கான விமான சேவைகள் ஜூலை 24 ஆம் திகதி வரையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரத்திற்கான சேவைகள் ஜூலை 27 ஆம் திகதி வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>விமான சேவைகள்&nbsp;</h2><p>அத்தோடு, லெபனானின் பெய்ரூட் நகருக்கான விமான சேவைகள் எதிர்வரும் ஒகஸ்ட் இரண்டாம் திகதி வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4167136b-bc22-4f6b-9039-99d7fcc775c4/26-6a5e8e4a7abd6.webp' /></p><p>

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எயர் பிரான்ஸ் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:17:46+00:00</updated>
        </entry>
    </feed>
