<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T01:53:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுகோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது</p><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை காவல் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2c2864-8e98-4635-bcd5-1611eb4da16c/26-6a6803647062c.webp' /></p><p>இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p>

இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது. </p><p>அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:49:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கப்போகும் மழைவீழ்ச்சி! மக்களுக்கு வெளியாகியுள்ள முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612"></link>
            <id>https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fcd839-9e89-45ad-977c-2fd96ff2c408/26-6a67fd30c2c99.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
கடல் பிராந்தியங்கள்
</h2><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2ed0ff-aae8-453d-a159-fdeb670ae362/26-6a67fd31789ec.webp' /></p><p>
</p><p>
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T01:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை - அமைச்சர் பதவி விலக வேண்டும்: கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844"></link>
            <id>https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844</id>
            <summary type="text">நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உடனடியாக பதவி விலகல் செய்ய வேண்டும் என்று அகில
இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>முட்டை விலை உயர்வு</h2><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மூலப்பொருள்களும் மிக வேகமாகக் விலை
உயர்ந்து வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d91922-cff9-41d6-a56b-4d94a773d219/26-6a67fa52b2215.webp' /></p><p>இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான
பெரிய முட்டை ஒன்று தற்போது 46 - 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42
ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>
உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா
என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபா வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல்,
முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை
உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.</p><p></p><h2>சந்தையில் நிலவும் முறைகேடு</h2><p>

கீரி சம்பா அரிசிச் சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின்
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை.
அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489dac68-126f-4fbf-b475-b3d4ae7bd822/26-6a67fa541cf01.webp' /></p><p> அவருக்குப் காவல்துறை பணியைச் செய்ய
விருப்பமாக இருந்தால், காவல்துறை மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.</p><p>
அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது,
விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த
கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே
வழிவகுக்கும். </p><p>மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல்
கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
</p><p>
தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள்
கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட
பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார
சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்." - என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T00:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319"></link>
            <id>https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319</id>
            <summary type="text">ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் பதில் தாக்குதல்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கும் வகையில், "ஏதாவது நல்ல முடிவு எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>ஈரான் மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போர் நிறுத்தத்திற்கு முன் செய்து கொண்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545ed955-b034-4838-986b-28b517b80cdb/26-6a67fa57535aa.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The American Prospect</i></p><p> </p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று ஈரான் அரசு மறுத்துள்ளது.</p><p>

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதால், ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு செய்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-07-28T00:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894"></link>
            <id>https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894</id>
            <summary type="text">

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு முடிக்க 2029 நிதியாண்டு வரை ஆகும் என்று டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் பென்டகன் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தச் செலவுத் திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>விநியோகக் காலம்</h2><p> 

இருப்பினும், இரு மாதங்கள் கடந்தும் அந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை அல்லது ஒப்பந்தங்கள் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047e9848-1413-4315-bd6b-be11a451a400/26-6a67ecf3ee10c.webp' /></p><p><i>Image Credit: Fortune</i></p><p>

இந்நிலையில், இவ்வளவு மெதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்குக் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த விநியோகக் கால அட்டவணையின்படி, நிதி 2026 நிதியாண்டிற்குள் ஒதுக்கப்பட்டு, அனைத்து உதவிகளும் செப்டம்பர் 30, 2029-க்குள் முழுமையாகச் சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஜெலென்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பு&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b25dd566-632b-42fa-820d-5751543d8c98/26-6a67ecf4a8a37.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
NBC News</i></p><p> </p><p>

இந்தச் சந்திப்பில் வான் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் ட்ரோன் ஒப்பந்தம் குறித்து அவர் வலியுறுத்துவார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு, அமெரிக்க செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T23:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விவகாரத்தில் மூக்கை நுழைத்த நெதன்யாகு! ட்ரம்ப் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-opposes-us-sale-f-35-fighter-jets-turkey-1785181550"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-opposes-us-sale-f-35-fighter-jets-turkey-1785181550</id>
            <summary type="text">அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான அறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்</p><p> 

இந்த விற்பனை குறித்துத் தன்னைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

துருக்கியிடம் ரஷ்ய தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதால், அந்நாட்டிற்குப் போர் விமானங்களை விற்பனை செய்வது தற்போது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானதாகும்.</p><p></p><h2>விற்பனை&nbsp;அனுமதி</h2><p> </p><p>

இருப்பினும், துருக்கிக்கு இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8250329-b1ad-4415-8c1a-547b2d38f5b9/26-6a67b8720abc4.webp' /></p><p>Image Credit:&nbsp;
NPR</p><p>
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் குறித்துப் பேசிய ட்ரம்ப், "அவர் எனது நண்பர்; அவருக்கு நாம் என்ன விற்க வேண்டும் என்று வேறு யாரும் எனக்குச் உத்தரவிட முடியாது" என்றும், துருக்கி ஒரு சிறந்த நட்பு நாடு என்றும் கூறியுள்ளார். </p><p>

மேலும், "துருக்கி இஸ்ரேலின் மீது பெரிய ஆதரவு கொண்ட நாடு அல்ல" என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T22:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் பெண்களை இலக்கு வைத்து கத்திக்குத்து! சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-france-for-knives-attacking-1785184980"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-france-for-knives-attacking-1785184980</id>
            <summary type="text">பிரான்சின் போர்ட் டி கிளிச்சி (Porte de Clichy) பகுதியில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களை இரண்டு கத்திகளால் தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டு காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் போர்ட் டி கிளிச்சி (Porte de Clichy) பகுதியில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களை இரண்டு கத்திகளால் தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

இத்தாக்குதலில் இரு பெண்கள் பலத்த காயமடைந்துள்ளளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியவர் மீது சூட்கேஸ்களை வீசியும், அவரது கால்களைத் தட்டிவிட்டும் தரையில் தள்ளி அவரை அசையவிடாமல் பிடித்து முடக்கியுள்ளனர்.</p><p></p><h2>சந்தேகநபரின் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>
பின்னர், அங்கு பணி விடுப்பில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி அந்த நபரைத் தடுத்து வைத்துக் கைது செய்ய உதவியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da9add3-987a-4949-961e-017cefe0bf88/26-6a67c4f103f2c.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் முரண்பாடான தகவல்களைக் கூறியதால், அவரின் அடையாளத்தை இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T20:52:04+00:00</updated>
        </entry>
    </feed>
