<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T09:32:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-news-today-update-1788425440"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-news-today-update-1788425440</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (24-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,359,128 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 383,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/791eef2f-b5ce-400a-afcc-9163c3877ace/26-6a9936d750dd7.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 351,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 335,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-import-vehicle-government-ann-1788423068"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-import-vehicle-government-ann-1788423068</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வழிமுறைகள் பற்றிய நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வருமானக் செயல்திறன் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>வாகன இறக்குமதி</h2><p>வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட மொத்த வரி வருமானத்தில் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மூலம் அதிகபட்ச பங்காக 386.726 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcd35e5-67e1-4e97-9152-ae00a4ae831e/26-6a9933d671652.webp' /></p><p>அத்தோடு 1,000cc இற்கு குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கார்கள் அதிக வருமானத்தை ஈட்டித் தந்த பிரிவாக உருவெடுத்துள்ளன.</p><p>இதன் மூலம் சுங்கத்திற்கு 137.4 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன் இது மொத்த சுங்க வருமானத்தில் 9.96 வீதம் ஆகும்.</p><p>
</p><p></p><h2>கொள்கலன்களின் பரிசோதனை</h2><p>2026 ஜூன் 30 ஆம் திகதியளவில் இலங்கை சுங்கம் 1.379 டிரில்லியன் ரூபா மொத்த வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. </p><p>இக்காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட 1.061 டிரில்லியன் ரூபா இலக்குடன் ஒப்பிடுகையில் இது 130 வீதம் சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431fa7c7-b6f3-449a-9d5f-08f472313773/26-6a9933d5ac666.webp' /></p><p>சுங்க வருமானம் ஆண்டு முழுவதும் மாதாந்த இலக்குகளை விஞ்சியுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டின் ஒத்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் பரிசோதனை, சுங்கச் செயல்பாடுகளை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருமான நிர்வாகத்தில் உள்ள சவால்கள் மற்றும் திறனை அதிகரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:46:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த செலவில் ஜப்பான் - மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வேலை வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245"></link>
            <id>https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245</id>
            <summary type="text">சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.</p><p> ஏற்கனவே தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்த புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.</p><p>

பணியகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், துபாயில் விமான நிலைய நிர்மாணத் திட்டங்களில் 2,000 வேலைவாய்ப்புகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.</p><p></p><h2>மேற்பார்வையாளர் பணியிடங்கள்</h2><p> அதிகபட்சமாக ரூ.150,000 செலவில் விண்ணப்பதாரர்கள் விரைவாக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ec8f02-c74f-4c7f-8627-d504cbb73c1d/26-6a9931c4dbdbf.webp' /></p><p>
</p><p>
மேலும், 800 மேற்பார்வையாளர் பணியிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதற்கான மொத்த செலவு ரூ.180,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தொகைகள் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இலங்கையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பூஜ்ஜியச் செலவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> அங்குள்ள நலவாழ்வு மையம் இந்த வேலைவாய்ப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜப்பானில் புதிய வேலைவாய்ப்புகள்
ஜப்பானில் மூன்று நிறுவனங்களுடன் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.</p><p>

முன்னோடித் திட்டத்தின் கீழ், ஜப்பானிய நிர்மாண நிறுவனமொன்றுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 23 மாணவர்கள் சபுகஸ்கந்தையில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>ஜப்பானிய மொழித் திறன்</h2><p>
</p><p>
தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சிக்கான செலவுகளை குறித்த ஜப்பானிய நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
மேலும், ஜப்பானிய நிறுவனமான Meta Techno உடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் அடிப்படை ஜப்பானிய மொழித் திறன் கொண்ட ICT பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, மற்றொரு ஜப்பானிய நிறுவனம் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்காக 1,000 லொறி சாரதி பணியிடங்களை வழங்க முன்வந்துள்ளது. </p><p>இதற்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் ஜப்பானிய மொழித் திறனும் அவசியமாகும்.

தேவையான தகுதிகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்ள உதவிகளை நிறுவனம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்(<a href="https://www.slbfe.lk/" target="_blank">https://www.slbfe.lk/</a>) மற்றும் <a href="https://www.facebook.com/slbfeOfficial/" target="_blank">Facebook </a>பக்கம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T08:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிப்பர் வாகனம் பழக்கடைக்குள் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072"></link>
            <id>https://ibctamil.com/article/person-killed-after-lorry-crashes-into-fruit-shop-1788421072</id>
            <summary type="text">வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.</p><p>இந்த விபத்து நேற்று (02.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு அருகிலிருந்த பழ விற்பனை நிலையமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒருவர் பலி</h2><p>
</p><p>இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc8e566-d6ce-4491-b919-9bde2b3227be/26-6a992f13d0208.webp' /></p><p>உயிரிழந்தவர் சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1788423326"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1788423326</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (03.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (03.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;323.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.87 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	435.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 450.23 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		374.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 387.28 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf0654c-fad6-43ea-90ca-f0270038e07f/26-6a992ebc16da5.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.72 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			229.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.62 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	253.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 263.74 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T08:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bombuwala-sudda-arrested-over-motorcycle-theft-1788417321"></link>
            <id>https://ibctamil.com/article/bombuwala-sudda-arrested-over-motorcycle-theft-1788417321</id>
            <summary type="text">பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&quot;போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>"போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afde4ca4-50b7-4825-bedf-68d093a7baa1/26-6a9917b4c2eeb.webp' /></p><p>

கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர். </p><p>

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய காவல்துறை பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p> 

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-hears-petitions-against-anti-graft-bill-1788414662"></link>
            <id>https://ibctamil.com/article/sc-hears-petitions-against-anti-graft-bill-1788414662</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> உயர் நீதிமன்றம் இன்று (03-09-2026) இந்த விசாரணயை ஆரம்பித்துள்ளது.
</p><p>
இந்த மனுக்கள், நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><h2>சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் உட்பட மொத்தம் 14 மனுக்கள் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் சில சரத்துக்கள், மக்களின் இறையாண்மை உட்பட அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90fc1845-0252-43ac-879e-739f63f1e0b3/26-6a992ae0675ca.webp' /></p><p>இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூலம் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை கட்டுப்படுத்தப்படும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை ஆதரவு பெறப்படுவதுடன் சர்வசன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-need-for-power-cuts-despite-coal-shortage-1788418227"></link>
            <id>https://ibctamil.com/article/no-need-for-power-cuts-despite-coal-shortage-1788418227</id>
            <summary type="text">மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>


நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் பாதிப்பில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>அச்சம் கொள்ள வேண்டாம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e7bda5f-b63c-43f7-a32a-1628dbd7c9ef/26-6a9929ddb9dd3.webp' /></p><p>
</p><p>


இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (4) வரவுள்ளதாகவும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12 ஆம் திகதி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இரண்டு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>


தற்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்திய அமைச்சர், நிலைமை தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T08:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parliament-officers-appear-before-ciaboc-1788420320"></link>
            <id>https://ibctamil.com/article/parliament-officers-appear-before-ciaboc-1788420320</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் இன்று (03) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p>அத்துடன், சமிந்த குலரத்னவின் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்&nbsp;</h2><p>இந்த விவகாரம் குறித்த இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010c767b-b84e-49b0-bf68-fc22e02a353d/26-6a9926c076d7c.webp' /></p><p>இதேவேளை சபாநாயகரால் வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, சமிந்த குலரத்ன மற்றும் பல தரப்பினரால் 2026 பெப்ரவரி 02 அன்று வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலைய கழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-abandon-the-newborn-baby-1788416275"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-abandon-the-newborn-baby-1788416275</id>
            <summary type="text">கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் கடந்த&nbsp;செவ்வாய்க்கிழமை (01.09.2026) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது குறித்த விசாரணைகளில் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கழிப்பறை நீர் தொட்டி</h2><p>மேலும் நேற்று முன் தினம் பிரசவித்ததாகக் கருதப்படும் சிசுவைக் கழிப்பறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அதனை அவதானித்த பொதுமக்கள் அப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71843b5d-6244-4f05-88b7-99d001607870/26-6a991ff15c9e3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணும், சிசுவும் உடனடியாகக் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>
வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிசு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை : அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-ex-state-minister-arundika-fernando-1788412876"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-ex-state-minister-arundika-fernando-1788412876</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாக தகவல் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன் அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்</h2><p>இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71b6d1b5-6ccb-4e09-9a79-b86926ab63eb/26-6a9917473182b.webp' /></p><p>இந்தநிலையில் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, கடந்த முதலாம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB)&nbsp; முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-record-40-ships-aided-in-hormuz-in-one-day-1788415873"></link>
            <id>https://ibctamil.com/article/us-record-40-ships-aided-in-hormuz-in-one-day-1788415873</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க 40 வணிக கப்பல்களுக்கு உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க 40 வணிக கப்பல்களுக்கு உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும், அமெரிக்க படைகள் ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள 60 ஈரான் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>18 மில்லியன் Litre எண்ணெய்</h2><p>
</p><p>
இதன்படி அமெரிக்க படைகள் நேற்று, ஈரானின் தாக்குதல்களில் இருந்து மேற்படி கப்பல்களை பாதுகாத்த நிலையில் அந்த கப்பல்களில் மொத்தம் 18 மில்லியன் Litre பேரல் எண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e821e2-7e79-4f88-8a60-dc46a3b01506/26-6a9911fb5b11f.webp' /></p><p>
</p><p>
இந்த பாதுகாப்பு திட்டத்திற்காக அமேரிக்கா, தன்வசம் உள்ள விண்வெளி செயற்கைகோள் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும் ஈரான் துறைமுகங்களின் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக அமெரிக்க இராணுவம் கடல் முற்றுகையிலும் ஈடுபட்டுள்ளதாக கூப்படுகிறது.</p><p>

அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடியாக அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளது. </p><p>

நேற்று ஈரான் வான்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தங்கள் ஏவுகணை அமைப்பு தடுத்து அழித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T06:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்கள் : விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/written-submissions-on-22nd-amendment-petitions-1788410437"></link>
            <id>https://ibctamil.com/article/written-submissions-on-22nd-amendment-petitions-1788410437</id>
            <summary type="text">இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, இன்று (03) பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் அந்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது.</p><p></p><h2>சபாநாயகருக்கு அனுப்பி வைத்தல்&nbsp;</h2><p>மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், அது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c8281c-1621-43c5-b275-9fa06544b268/26-6a990165d7fc3.webp' /></p><p> 

குறித்த சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HGkbG1fzP4k" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் குண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mortar-shells-recovered-in-mankumban-1788412475"></link>
            <id>https://ibctamil.com/article/mortar-shells-recovered-in-mankumban-1788412475</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார்
குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.குறித்த மோட்டார் குண்டுகள்&amp;nbsp; நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார்
குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.</p><p>குறித்த மோட்டார் குண்டுகள்&nbsp; நேற்றையதினம் (02.09.2026) காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி
மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;<br></p><p></p><h2>மோட்டார் குண்டு</h2><p>
</p><p>இதனையடத்து இந்த விடயம் ஊர்காவற்துறை காவல்துறையினரால் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aafacd6-9cfc-42fc-afde-a139f24e9dc8/26-6a990bce81887.webp' /></p><p>அதன்படி அங்கு வந்த காவல்துறை விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக
தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபிலவின் மரணத்தை போன்றே எராஜின் மரணமும்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/like-kapila-s-death-eraj-s-death-is-also-1788413044"></link>
            <id>https://ibctamil.com/article/like-kapila-s-death-eraj-s-death-is-also-1788413044</id>
            <summary type="text">கொழும்பு 5, திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 5, திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் உடலை, பம்பலப்பிட்டிய காவல் அதிகாரிகள் குழு நேற்று (02) கண்டெடுத்தது.</p><p>

பம்பலப்பிட்டிய, ஹேவ்லாக் டவுனில் உள்ள 6-ஆம் அவென்யூ அடுக்குமாடிக் குடியிருப்பில், 9 அடி உயரமுள்ள கதவில் ரப்பர் பட்டியால் அவர் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்ததைப் போன்றே எராஜ் பெர்னாண்டோவின் மரணமும் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>இருமுறை மேயராக&nbsp;பதவி </h2><p>

அவர் மரணித்த நேரத்தில், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c235dc80-699e-4263-ba32-7d65c7f824f3/26-6a9909f1787d4.webp' /></p><p>

அவரது மனைவியும் இரண்டு மகள்களும் கனடாவில் வசிக்கின்றனர். அவர் நீண்ட காலமாக கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
</p><p>
கொழும்பு, நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவரான எராஜ் பெர்னாண்டோ, 2011 முதல் 2021 வரை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். </p><p>

அவர் ஹம்பாந்தோட்டையின் மேயராக இருமுறை பதவி வகித்ததோடு, 2014-ஆம் ஆண்டில் மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆய்வு செய்ய வந்திருந்த அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை வெளியேற்றிய நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியதற்காகப் பரவலாக அறியப்பட்டார்.</p><p></p><h2>ஐந்தாண்டுகள் சிறை</h2><p>
</p><p>
அப்போது, ​​அவரும் அவரது குழுவினரும் கையில் கைத்துப்பாக்கியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் துரத்திச் சென்று விரட்டியடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a217dfb6-f5b0-4f52-bed4-cc4368fd7e84/26-6a9909f23d34e.webp' /></p><p> </p><p>

நல்லாட்சி அரசாங்கத்தின் போது நடத்தப்பட்ட விசாரணைகளில், அன்று தான் ஒரு பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக அவர் கூறியபோதிலும், அந்தச் சம்பவத்திற்காக அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். </p><p>

இருப்பினும், அதைத் தொடர்ந்த அரசாங்க மாற்றத்தின்போது அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலத்தை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>

இந்த மரணம் குறித்து பம்பலப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T05:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்கள்...! மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-ready-to-re-elect-rajapaksas-indika-1788410304"></link>
            <id>https://ibctamil.com/article/people-ready-to-re-elect-rajapaksas-indika-1788410304</id>
            <summary type="text">மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விடயத்தை நேற்றைய தினம் (03-09-2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மக்கள் முடிவு</h2><p>இதன்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9de3dbd5-e04c-41b9-a90e-4b9713cde17f/26-6a99083309d46.webp' /></p><p>
நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. </p><p>எனினும் மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர் அத்தோடு அரசாங்த்தின் மீதும் ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது.</p><p> </p><p></p><h2>ஜனாதிபதித் தேர்தல்</h2><p>மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7586a2db-edf5-40a5-8a95-9d161e4fd3a7/26-6a99083493797.webp' /></p><p>
2029 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். </p><p>இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-vali-north-land-release-possible-this-month-1788407525"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-vali-north-land-release-possible-this-month-1788407525</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக, பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு
ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம்
ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில்
தொடர்ந்து பயணித்து வருகிறது.</p><p>&nbsp;</p><h2>&nbsp;பாதுகாப்பு உயர் கூட்டம்</h2><p>
</p><p>
அண்மையில் ஜனாதிபதி அநுர தலைமையில இடம்பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி.வடக்கு பகுதியிலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு
பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.
</p><p>
அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை
படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428cdc28-4f9a-41c9-94d2-4b6ab4bf8131/26-6a98f732a55ab.webp' /></p><p> செப்டம்பர் மாத இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி
காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம், போதை ஒழிப்பு
போன்ற விடயங்களை கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.</p><p>நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள்
விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு
எத்தனித்துக் கொண்டிருக்கிறது.</p><p></p><h2>போராட்டங்களை நடத்துகின்றனர்</h2><p>நாட்டை குழப்பும் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில்
செயற்படுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>நாங்காள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை. மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது
தோழர் அநுரகுமார மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக
செயற்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80013dd0-39f6-49af-a6ec-8022a9ecbd06/26-6a98f73394de9.webp' /></p><p>
நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை
மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக
தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல.</p><p>மக்களின் காணி
விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல்
சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p><p></p><h2>ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டம்</h2><p>
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி
விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக
போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.
</p><p>
அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி
விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர்
போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564db419-470b-4571-a669-b867db2ef5f7/26-6a98f7344762e.webp' /></p><p>
</p><p>
இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள்
மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல. மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு
மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்
இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
</p><p>
ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம்
அக்கறையுடன் செயற்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய
முறையில் நிறைவேற்றுவோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! முருகன் ஆலயமொன்றில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-mango-sold-1-million-rupees-auction-in-jaffna-1788413619"></link>
            <id>https://ibctamil.com/article/a-mango-sold-1-million-rupees-auction-in-jaffna-1788413619</id>
            <summary type="text">யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.</p><p>யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழாலேயே மாம்பழம் ஒன்று 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.</p><p></p><h2>போட்டி போட்டு ஏலம்</h2><p> </p><p>வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5754681b-9ce9-4ea9-9a16-aff80c1a7182/26-6a9908296ca4a.webp' /></p><p>கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெல்லம்பிட்டியவில் 130 சட்டவிரோத மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-in-wellampitiya-130-electronic-cigarettes-1788407820"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-in-wellampitiya-130-electronic-cigarettes-1788407820</id>
            <summary type="text">சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் சட்டவிரோத மின்னணு சிகரெட்டுக்களுடன்&nbsp;வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு 26 வயது என்பதுடன் அவர் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மின்னணு சிகரெட்</h2><p>

</p><p>மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS ரங்கலா கடற்படை முகாமின் கடற்படையினரும், மிரிஹான பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3159979-da45-4e09-aa00-8f7f662808af/26-6a98f96f684ba.webp' /></p><p>சந்தேகநபர், மின்னணு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட 130 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:40:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு...! வாள்களுடன் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-open-fire-at-auto-in-borella-5-arrested-1788407614"></link>
            <id>https://ibctamil.com/article/police-open-fire-at-auto-in-borella-5-arrested-1788407614</id>
            <summary type="text">கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.</p><p>காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து குறித்த வண்டியில் பயணித்த 5 சந்தேகநபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80e0c5b-29f2-41c6-84bc-2fc0004deee1/26-6a98f51b810ff.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய யாழிலிருந்து சென்ற கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-on-a9-road-one-injured-1788409250"></link>
            <id>https://ibctamil.com/article/accident-on-a9-road-one-injured-1788409250</id>
            <summary type="text">ஏ9 வீதியில் இடம்பெற்ற&amp;nbsp;வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.



குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏ9 வீதியில் இடம்பெற்ற&nbsp;வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>
</p><p>


குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ9 வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>


விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்ற நபர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b985b2c-d657-4264-97dd-07f96e4d3205/26-6a98f7737fa62.webp' /></p><p>விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். ஊடகவியலாளர் - யாழ். ஊடக அமையத் தலைவர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-journalists-still-face-challenges-1788404344"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-journalists-still-face-challenges-1788404344</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (02.09.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கு.செல்வகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்களின் பிரச்சினை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8f91f1f-42de-4d93-8b4d-3bab6e5911d9/26-6a98e4a96ec9a.webp' /></p><p>தென்னிலங்கை ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். </p><p>அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>போராட்டங்கள் மற்றும் படுகொலை</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f402415-a7ab-4884-9e06-dd73a25173bf/26-6a98e4aa2431e.webp' /></p><p>

நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:12:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்-நினோவினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் : அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relief-for-those-lost-their-jobs-due-to-el-nino-1788405865"></link>
            <id>https://ibctamil.com/article/relief-for-those-lost-their-jobs-due-to-el-nino-1788405865</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வேலையை இழப்போருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வேலையை இழப்போருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
</p><p>
அரசாங்கத்தின் எல்-நினோ தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவின் நான்காவது கூட்டம், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. </p><p>இந்தக் கூட்டத்தின் போது எல் நினோ தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் சமூகங்கள் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><h2>ஆராயப்பட்ட விடயங்கள்</h2><p>

மேலும், நாட்டில் காய்கறிப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கும், காய்கறி மற்றும் பழச் செய்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851ba6fe-4d5d-4fbc-a3c8-d5be42d52955/26-6a98eb1acced1.webp' /></p><p>

இதனிடையே, தற்போது எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தடையில்லா நீர் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
</p><p>
அத்துடன், எதிர்வரும் பெரும்போக செய்கைக்கான ஆயத்தங்கள் குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் இணைய வழியிலான கலந்துரையாடலை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், இந்த விசேட அமைச்சரவை உபகுழுவின் எதிர்வரும்14 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T03:40:06+00:00</updated>
        </entry>
    </feed>
