<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T07:48:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/viral-videos-of-grade-5-scholarship-students-1786864266"></link>
            <id>https://ibctamil.com/article/viral-videos-of-grade-5-scholarship-students-1786864266</id>
            <summary type="text">பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ எதிராக ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ எதிராக ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்த ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பல மாணவர்கள், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் இணையத்தில் பரவப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

பரீட்சைக்கு பின் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்கள், அவர்களை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>அமைச்சின் எச்சரிக்கை&nbsp;</h2><p>

இந்நிலையில், பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதி பெறாமல் மாணர்வகளின் கருத்துக்களைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ea00912-a62a-4d69-a659-ad02cf489500/26-6a81659cc0e79.webp' /></p><p>
மேலும், இதுபோன்ற காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக, சிறுவர்கள் உரிமை மீறல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T07:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relatives-of-disappeared-international-conference-1786861089"></link>
            <id>https://ibctamil.com/article/relatives-of-disappeared-international-conference-1786861089</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>உயிரிழந்துள்ள தாய் - தந்தையர்&nbsp;</h2><p> </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefca70-294f-484b-b3c3-f7c1a6f766b3/26-6a815ad8296d3.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை அளித்துள்ளனர்.”
</p><p>
அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-16T06:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recommendation-on-upcoming-changes-in-fuel-prices-1786858549"></link>
            <id>https://ibctamil.com/article/recommendation-on-upcoming-changes-in-fuel-prices-1786858549</id>
            <summary type="text">
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது, அவர் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உலகச் சந்தை விலைகள் இறக்குமதிச் செலவுகளைப் பாதிப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் விலை திருத்தம்</h2><p>
</p><p>
இந்த ஆய்வுக்குப் பிறகு, அரசாங்கம் முன்னர் வழங்கிப் பின்னர் நிறுத்திவைத்த 15 பில்லியன் ரூபாய் மானியத்தை மீண்டும் கோரவோ அல்லது ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்ய எரிபொருள் விலை திருத்தம் போன்ற மாற்று வழிகளைக் கையாளவோ அமைச்சு முனையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477a293a-0c13-4a1a-a0a7-ec7093f6e2d4/26-6a81504aef2e1.webp' /></p><p>
</p><p>
கடைசியாக ஜூன் மாதத்தில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்ததாகவும், இந்த மாதம் விலைகள் சரிசெய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2>விலை உயர்வு&nbsp;</h2><p>இதேவேளை, மத்திய கிழக்கு போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்தை விட எரிபொருள் விலைகள் 48 வீதம் உயர்ந்துள்ளதாகவும், தற்போது டீசல் விலைகள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5906d1d1-f3d3-4b46-bd49-6e01b83a3920/26-6a81504bb7997.webp' /></p><p> 

காப்பீட்டுக் கட்டணங்களும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் பெறப்பட்டாலும், இந்த விலை உயர்வு கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T05:53:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-navy-boat-accident-sailor-missing-1786853779"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-navy-boat-accident-sailor-missing-1786853779</id>
            <summary type="text">மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

</p><p>வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

அத்தோடு, காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ வரும் வரை காத்திருக்காமல், அங்குலானை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாகத் தங்களின் படகுகளில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்த கடற்படை வீரர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7788527d-8697-445e-9df6-de17e309319c/26-6a813c38007f4.webp' /></p><p>
</p><p>
தகவல் அறிந்ததும் அங்குலானை காவல்துறையினர், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.</p><h2>காணாமல் போன மாலுமி</h2><p>

கடற்றொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பேராதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணியின் மூலம் படகில் இருந்த 12 மாலுமிகளில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e385ab9-0904-4a96-b604-14076f50eaf2/26-6a813c38a7501.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போன ஒரு மாலுமியைத் தேடும் தீவிர நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் MI-17 உலங்குவானூர்தி மற்றும் பெல் 412 ரக உலங்குவானூர்திகள் மூலம் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2PWgEExkBKc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T04:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகரில் அதிபயங்கர தாக்குதல்களை தொடுக்கும் ரஷ்ய படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-launch-missile-attack-on-ukrainian-capital-1786855656"></link>
            <id>https://ibctamil.com/article/russia-launch-missile-attack-on-ukrainian-capital-1786855656</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிகிக்கின்றன. </p><p>

இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் நகரத்தின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
</p><p>
வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீவிர வான்வழித் தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கே உள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21dd346e-da4d-407c-9483-6c7722cbb631/26-6a81421aa4b9e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;NBC News</i></p><p>
</p><p>
மேலும், புறநகர்ப் பகுதியில் உள்ள சந்தைக் கடைகள் தீப்பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சமீபத்திய வாரங்களாகவே கீவ் மற்றும் உக்ரைனின் பிற நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T04:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் வலியுறுத்தும் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-urges-referendum-on-government-s-decision-1786850820"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-urges-referendum-on-government-s-decision-1786850820</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><p> 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி நடத்திய அவரச செயற்குழு கூட்டங்களின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பெரிய அளவிலான மாற்றங்கள்</h2><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் தேங்கிப்போயுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10ddcc18-0099-4640-a985-26767fc6f0a0/26-6a813198a354e.webp' /></p><p>
</p><p>
மேல் நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே அதிகப்படியான வழக்குகள் தேங்கியுள்ளன. நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதாக இருந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வழக்குகளையாவது விசாரித்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறான பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்குப் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மக்கள் தீர்ப்பு</h2><p>
</p><p>
தொடர்ந்து பேசிய அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்காக மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63bc3ea2-e195-4f1c-8c42-7d53605627c5/26-6a8131995563e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் தங்களால் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்த ரணில், மேலும் தமக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களது போராட்டம் கொள்கை ரீதியானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p>
நாட்டு மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைகளை யாராவது திருட முற்பட்டால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T03:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-in-the-kaduwela-area-today-1786850195"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-in-the-kaduwela-area-today-1786850195</id>
            <summary type="text">கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெரா காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
 

குறித்த தேவாலயத்தின் ஊர்வலம் இன்று (16.08.2026) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>பொதுமக்களுக்கு வேண்டுகோள்</h2><p>
 

இந்த ஊர்வலம் தேவாலயத்திற்கு அருகில் தொடங்கி 143 அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தின் மீது பயணித்து பண்டாரவத்தை, பியகம பகுதிக்கு சென்று தீர்த்த உற்சவ சடங்கு நிறைவடைந்த பின்னர், மீண்டும் அதே வீதி வழியாக கடுவெல சந்தியைக் கடந்து தேவாலயத்தை சென்றடைய உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b390c6ce-ed6e-4e91-b7ca-41fb543c3aa5/26-6a812e8236d77.webp' /></p><p>அதற்கமைய, ஊர்வலம் செல்லும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அப்பகுதி வழியாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>

 

மாற்று வழிகள்:


143 - அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்தியிலிருந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் வேளையில், மாற்று வழிகளாக 697 பேருந்து வீதியில் பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவெல - கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, மாலபே திசையை நோக்கி உள்ள ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் வறட்சி - நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intensifying-drought-under-warming-wetting-climate-1786846770"></link>
            <id>https://ibctamil.com/article/intensifying-drought-under-warming-wetting-climate-1786846770</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. </p><p>இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p></p><h2>கடும் பாதிப்பு</h2><p>
</p><p>
 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a36233-aafd-40cf-8523-572073d25984/26-6a812aeca375a.webp' /></p><p>
 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

இதன் காரணமாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் மரண தண்டனை...! அரசுக்கு அதிகரிக்கும் அழுந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/senior-lawyer-abt-re-introduce-the-death-penalty-1786839772"></link>
            <id>https://ibctamil.com/article/senior-lawyer-abt-re-introduce-the-death-penalty-1786839772</id>
            <summary type="text">கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்&amp;nbsp;அவசியம் என&amp;nbsp;என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்&nbsp;அவசியம் என&nbsp;என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.</p><p>குறித்த விடயங்களை அவர் தனது சமூகவலைத்தள பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தவறான சிறைத்தண்டனை</h2><p>அந்த பதிவில் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8d5140-111d-4a44-b708-ee8bd52a014d/26-6a811bb765a9d.webp' /></p><p>தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
</p><p>
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்:</p><p></p><p>
</p><h2>வழக்கு விசாரணை</h2><p>
கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.

வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6457c740-ed55-4159-8c2c-09d3d6d6d89a/26-6a811bb81d34f.webp' /></p><p>வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.

போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.</p><p>

விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகா ஓயாவில் மூழ்கி இளைஞன் பலி! மற்றுமொருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-in-drowning-one-missing-1786848278"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-in-drowning-one-missing-1786848278</id>
            <summary type="text">

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயியுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.</p><p></p><h2>தீவிர தேடுதல் நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்போது, அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு இருவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6660b9-2984-43ce-9e69-9ea7c57d7e24/26-6a8126f26b491.webp' /></p><p>இருப்பினும், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மீரிகம பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்நிலையில், நீரில் மூழ்கிக் காணாமல் போன மூன்றாவது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக மீரிகம காவல்துறையினர், காவல் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T02:56:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு! அம்பலப்படுத்தும் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-links-to-terrorist-organizations-1786846292"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-links-to-terrorist-organizations-1786846292</id>
            <summary type="text">துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததுள்ளது தற்போது கண்டறியப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப். யு. வூட்லர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஷிரான் பாசிக்கை 72 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.</p><p></p><h2>துபாய் கைது நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
ஷிரான் பாசிக் நேற்று இரவு அபுதாபியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

48 வயதான இவர் தெஹிவளைவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79084ac7-a77f-44c3-bb1c-5cb5d754c484/26-6a81207a493e1.webp' /></p><p>
</p><p>
இந்த நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகிக்கும் ஐந்து பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், மே 26 அன்று துபாயில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><p>
இன்டர்போல் அவருக்கு சிவப்பு பிடியாணை அனுப்பியிருந்த பின்னணியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
மேலும், ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளையில் உள்ள ஒரு ஹோட்டலை 2024 ஜனவரி 1 அன்று இடிப்பதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T02:29:20+00:00</updated>
        </entry>
    </feed>
