<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-13T12:01:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லேடன் தொடர்பான மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிட்டது சிஐஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cia-releases-hidden-secrets-regarding-bin-laden-1789297198"></link>
            <id>https://ibctamil.com/article/cia-releases-hidden-secrets-regarding-bin-laden-1789297198</id>
            <summary type="text">&amp;nbsp;நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தொடர்பான 70க்கும் மேற்பட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகளையும், 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சிஐஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
</p><p>
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்பே, பின்லேடனின் இலக்குகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.&nbsp;</p><h2>பின்லேடனின் முதல் இலக்கு இந்தியா</h2><p>&nbsp;ஓகஸ்ட் 28, 1998 திகதியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கை, பின்லேடன் இந்தியா உட்பட பல நாடுகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25e08177-b89e-4a0e-a0d7-f985f99e79a9/26-6aa687936f7a8.webp' /></p><p>

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நாடுகளில் பாகிஸ்தான், எகிப்து, குவைத், சவுதி அரேபியா, யேமன், உகண்டா மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும்.</p><p>

"பின்லேடனின் பயங்கரவாத வலையமைப்பு இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது" என்ற தலைப்பிலான, தகவல்களுக்கான ஆதாரம் எதுவும் குறிப்பிடப்படாத அந்த ஆவணம் வெளியிடப்படாமல் உள்ளது.
</p><p>
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட இடம், திகதி அல்லது செயல்படுத்தும் திட்டம் ஆகியவற்றை அது குறிப்பிடவில்லை.</p><p></p><h2>அமெரிக்கா மீது மேலும் பல தாக்குதல்கள்</h2><p>

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அல்-கொய்தா முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பின்லேடன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராச்சியத்திற்கு எதிராக மேலும் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ba9f2f-5e9c-4cb0-a070-b68ba88946cb/26-6aa687942c63a.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக, அல்-கொய்தா தலைவர் குறைந்தது 60 நாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் கூட்டாளிகளின் வலையமைப்பின் ஆதரவை நாடியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எச்சரிக்கை</h2><p>சிஐஏ வெளியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகள், 1998 மற்றும் 2001-க்கு இடையில் பலமுறை நாட்டின் மீது சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளை அந்த அமைப்பு எச்சரித்ததைக் காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30eedbf5-9d83-4e05-be5a-77c73ad0d8d2/26-6aa68794edc1b.webp' /></p><p>
</p><p>
இந்த அறிக்கைகள் பில் கிளிண்டனின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் தொடங்கி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஜனாதிபதி பதவிக் காலம் வரை நீடித்த ஒரு காலகட்டத்தை உள்ளடக்கியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 13ஆவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-palaly-release-of-land-in-vali-north-1789298209"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-palaly-release-of-land-in-vali-north-1789298209</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
</p><p>
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இன்றைய தினம் 13ஆவது வாரமாக குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினர்.</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137a74a7-7caf-4eb0-8492-12ba31fbbec8/26-6aa687aa634f1.webp' /></p><p>இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில்
உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட
பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு சாதகமான களம் ஜெனீவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/geneva-is-a-favorable-arena-for-eelam-tamils-1789297055"></link>
            <id>https://ibctamil.com/article/geneva-is-a-favorable-arena-for-eelam-tamils-1789297055</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
</p><p>

ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற சர்வதேச களமான ஜெனீவாவில் எங்களுடைய அபிலாஷைகளை எங்களுடைய கவலைகளை அங்கு சொல்லக்கூடியதற்கான ஒரு சூழல் இருக்கின்றது.
</p><p>
அதனை எங்களுடைய ஆட்கள் எவ்வளவு தூரம் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதில் சில விமர்சனங்கள் இருக்கும்.

எங்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச களத்தினை நாங்கள் உண்மையில உச்ச வகையில பயன்படுத்த வேண்டும்.
</p><p>
ஜெனீவா கூட்டத்தொடர் நடக்கின்ற போது சர்வதேச கவனம் முழுவதும் ஜெனிவாவில் குவிந்திருக்கும்.

அந்த நேரத்தில நாங்கள் ஒரு கருத்துக்களை முன் வைக்கின்ற போது போராட்டங்களை நடத்துகின்ற போது அது சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கான சூழல் வலுவாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கும்.</p><p>

அடுத்தது இங்கே இருந்து எங்களுடைய பிரதிநிதிகள் ஜெனிவாவிற்கு சென்று கூட்டங்களை நடாத்தி இந்த கருத்துக்களை சொல்லுகின்ற போது சர்வதேச அரசின் பிரநிதிகள், மனித உரிமை அமைப்புகளுடைய பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் ஆகியோருக்கு எங்களுடைய கவலைகளை சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும்.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5OriHmF5PHE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T11:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் வெடிக்கவுள்ள ஆர்ப்பாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-protests-in-colombo-against-22nd-amendment-1789293344"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-protests-in-colombo-against-22nd-amendment-1789293344</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p> 

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது.</p><p></p><h2>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்</h2><p> 

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம். தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85de0475-6e00-4c10-b96d-651059df5c32/26-6aa67fc6dfb90.webp' /></p><p> </p><p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p> 

மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம்.</p><p>பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்திக்கு அவசர இதய அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/emergency-heart-surgery-for-shiranthi-1789295012"></link>
            <id>https://ibctamil.com/article/emergency-heart-surgery-for-shiranthi-1789295012</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களுக்கு அவர் முழுமையான படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.</p><h2>சி.டி. ஸ்கான் இயந்திர முறைகேடு தொடர்பில் விசாரணை</h2><p>இதனிடையே கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அத்தியாவசியமான சி.டி. ஸ்கான் இயந்திரத்தை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ரூ. 10 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, சீன அரசாங்கத்திடமிருந்து நாட்டிற்குப் பெறப்பட்ட ஒரு இயந்திரத்தை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c9ca81d-58e9-4b63-ab36-66f0d1785c0a/26-6aa67daf3f533.webp' /></p><p>
</p><p>
'சிரிலியா' கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிதி முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் அவர் அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:41:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட அடையாளந்தெரியாத ஆண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-found-dead-in-ampara-1789293961"></link>
            <id>https://ibctamil.com/article/man-found-dead-in-ampara-1789293961</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் கரையொதுங்கியுள்ளது.</p><p>
சடலம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச்
சென்ற காரைதீவு காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணைகள்</span></h2><p>
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எவ்வாறு
உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072361b7-b993-4617-95f8-ffa8b492d722/26-6aa678b5e6dc4.webp' /></p><p>
</p><p>அதன்படி, சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரைதீவு காவல்துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T10:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த இறப்பதற்கு முன் நாமலை ஜனாதிபதியாக்குவோம்: ரோஹித எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-president-mahinda-can-see-him-before-dies-1789293523"></link>
            <id>https://ibctamil.com/article/namal-president-mahinda-can-see-him-before-dies-1789293523</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் &#039;ஜன சடன&#039; பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 'ஜன சடன' பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன்றிணைக்க தலைமை தாங்கிய தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதையாக, அவரது மரணத்திற்கு முன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
</p><p>





முன்னாள் ஜனாதிபதிக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அது என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்த இலக்கை அடைவதற்காக முழு மக்களும் ஒருமித்து ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவுக்காக நாம் ஒரு கடமையை செய்ய வேண்டும்</h2><p>அங்கு ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தவை வருமாறு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f049e614-86e3-4209-a13f-54c84c38ba15/26-6aa6770aafe19.webp' /></p><p>
</p><p>



“நான் கேட்பது ஒரே ஒரு கோரிக்கைதான், அதைச் செய்ய நீங்கள் தயாரா? நீங்கள், ரஜரட்ட மக்கள் தயாரா? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கவேண்டும்</h2><p> </p><p>இந்த நாட்டை ஒன்றிணைத்த தலைவர், நாட்டையே கட்டியெழுப்பிய தலைவர், அந்த தலைவருக்காக நாம் ஒரு கடமையைச் செய்ய வேண்டும். பிறந்த அனைவரும் இறப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b2139c2-7e31-4a65-944b-5825eebcac4b/26-6aa676609d205.webp' /></p><p> </p><p>ஆனால், மகிந்த ராஜபக்சவின் கண்களுக்குத் தெரியும் வகையில், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற நமக்கு ஒரு கடமை உள்ளது. அது மட்டுமே நீங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு செய்யும் மரியாதையாக மாறும்.” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் மீது வாள்வெட்டு : நால்வர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-attacked-with-swords-in-jaffna-four-arrested-1789291455"></link>
            <id>https://ibctamil.com/article/youth-attacked-with-swords-in-jaffna-four-arrested-1789291455</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்
நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் வவுனியாவில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி
விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>
இந்தநிலையில் குறித்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது
வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவான நிலையில் வவுனியா
நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால்
நேற்று கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51a44c8-dbda-49f8-99b5-bd2a0bc6c484/26-6aa6710b096cd.webp' /></p><p>
</p><p>
குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர், குற்றச் செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என
நால்வரே இவ்வாறாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள்&nbsp; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க்
கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

இலங்கை சுற்றுலா <a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_7th_September_2026.pdf" target="_blank">அபிவிருத்தி அதிகாரசபையினால்</a> (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்</h2><p>மேலும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f290bd6a-7ca1-4144-959c-09f3ce26cb10/26-6aa669790e247.webp' /></p><p>

 

இந்த ஆண்டில் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நிறுவனங்களின் எரிபொருள் விலைகள்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/revising-fuel-prices-for-private-fuel-companies-1789286389"></link>
            <id>https://ibctamil.com/article/revising-fuel-prices-for-private-fuel-companies-1789286389</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதல்களால் கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாகத் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள்</h2><p>
</p><p>
அதன்படி, IOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19299843-6648-4fce-8330-d2d92f37163a/26-6aa65b09b138a.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CPC) மூலம் விற்பனை செய்யப்படும் எரிபொருளுக்கான அதிகரித்த செலவை முழுமையாக நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T08:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலுவையில் உள்ள வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/speed-up-vehicle-number-plate-issuance-1789282995"></link>
            <id>https://ibctamil.com/article/speed-up-vehicle-number-plate-issuance-1789282995</id>
            <summary type="text">
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பொறுப்பைக் கொண்ட நிறுவனத்திற்கு, மற்றொரு இடத்திலும் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>அடுத்த மாதத்திற்குள் விநியோகம்</h2><p> </p><p>

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் முதல் ஓகஸ்ட் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அடுத்த மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b86b1a4-5d5e-4075-83cc-66bafadad3f6/26-6aa6540b5fcbc.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடு தயாரிப்புப் பணி வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கும் மற்றொரு இடத்தில் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இந்த வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு அந்த நிறுவனத்திற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T07:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-toll-ways-from-sept-19-1789280151"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-toll-ways-from-sept-19-1789280151</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப்பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டெம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18bafe9a-853a-45f2-9045-df91a0fb592e/26-6aa64e3a9097d.webp' /></p><p>
</p><p>
பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டெம்பர் 19 முதல் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே. சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத்திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rally-in-jaffna-justice-for-the-chemmani-1789280590"></link>
            <id>https://ibctamil.com/article/rally-in-jaffna-justice-for-the-chemmani-1789280590</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி தமிழ் தேசிய பேரவையின்&amp;nbsp; ஏற்பாட்டில் யாழில் பேரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி தமிழ் தேசிய பேரவையின்&nbsp; ஏற்பாட்டில் யாழில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>இன்று (13) காலை நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமான பேரணி கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்ததுடன் அங்கு கூட்டமும் நடைபெற்றது.</p><p>இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுவதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே இப்பேரணி நடைபெற்றது.</p><p></p><h2>சர்வதேச விசாரணைகள்&nbsp;</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5259dc65-2c5a-4060-b479-c416e201798d/26-6aa6462b16eb7.webp' /></p><p>இதன்போது தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், வட கிழக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு, இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z3XU2IuxQas" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T06:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-changed-has-the-political-culture-changed-1789279842"></link>
            <id>https://ibctamil.com/article/govt-changed-has-the-political-culture-changed-1789279842</id>
            <summary type="text">

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று கூறுவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று கூறுவதற்கும், அந்த வளர்ச்சியை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணர்வதற்கும் இடையே இன்னும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.</p><p>
உணவுப் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகள் போன்றவை குடும்பங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து தீர்மானிக்கும் நிலையில், இலங்கை இன்று பொருளாதார மீட்சியையும் அரசியல் மாற்றத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறது. இதனால் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றுதான்: நாடு பொருளாதார ரீதியாக மீண்டு வருகிறதா என்பது மட்டுமல்ல; அரசியல் ரீதியாகவும் உண்மையில் மாறுகிறதா?</p><p>
கடந்த சில ஆண்டுகள் இலங்கை அரசியலில் சாதாரணமான ஆட்சி மாற்றங்களின் காலமாக இருக்கவில்லை. 2022 பொருளாதார நெருக்கடி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சி, பழைய அரசியல் தலைமையின் மீதான கடுமையான அதிருப்தி, பின்னர் இடம்பெற்ற தேர்தல் மாற்றங்கள் என, நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை உருவானது.</p><p>
இந்த மாற்றத்தின் உச்சமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன</p><p>

இந்த முடிவை வெறுமனே ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியாகப் பார்ப்பது போதுமானதல்ல. அது பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் தீர்ப்பாகவும் அமைந்தது. ஊழலற்ற நிர்வாகம், பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி, அரசியல் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் “system change” என அழைக்கப்பட்ட அரசியல் மாற்றம் ஆகியவை மக்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சங்களாகின.</p><p></p><h3>

ஆனால் இப்போது மிகப் பெரிய கேள்வி எழுகிறது:</h3><p><b>
ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் அரசியல் கலாசாரம் உண்மையில் மாறியிருக்கிறதா?</b></p><p>
2024 தேர்தலில் கிடைத்த 159 ஆசனங்கள் எந்தவொரு புதிய அரசாங்கத்திற்கும் அரிதாகக் கிடைக்கும் அளவிலான அரசியல் அதிகாரத்தை வழங்கின. அதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையில் புதிய முகங்களும் இடம்பெற்றன. பழைய அரசியல் தலைமுறையிலிருந்து வேறுபட்ட ஒரு புதிய அரசியல் தலைமுறைக்கு மக்கள் வாய்ப்பளித்தனர்.</p><p>
இதன் அரசியல் முக்கியத்துவம் ஆழமானது. பல ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும், அரசியல் கலாசாரம் பெரிதாக மாறவில்லை என்ற விமர்சனம் நிலவியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e20a4d7-c361-48cf-b848-6f22443528d8/26-6aa641c44ece4.webp' /></p><p>

தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் வேறு வடிவம் பெறுவது, அரசியல் நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரச வளங்களின் அரசியல் பயன்பாடு ஆகியவை மக்கள் மத்தியில் அரசியல் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து சிதைத்தன.</p><p>
இந்தப் பின்னணியில்தான் NPP-யின் எழுச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்கள் ஒரு புதிய கட்சியை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. “இப்படியே இனிமேல் முடியாது” என்ற அரசியல் மனநிலையையும் வெளிப்படுத்தினர். ஆனால் தேர்தல் வெற்றி அரசியல் மாற்றத்தின் முடிவு அல்ல; அது அதன் தொடக்கம் மட்டுமே. அந்த மாற்றத்தை நிறுவனங்களுக்குள் கொண்டு செல்வதே உண்மையான சவால்.</p><p>
புதிய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், ஊழல் தடுப்பு, வெளிப்படைத்தன்மை, அரச நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை முன்னிறுத்தி வருகிறது.</p><p>

இவை காகிதத்தில் நிச்சயமாக வரவேற்கத்தக்கவை. ஆனால் அரசியலில் கொள்கை அறிவிப்புக்கும் அதன் நடைமுறை விளைவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.</p><p>ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது மட்டும் அரசியல் மாற்றத்தின் அடையாளமல்ல. அந்தச் சட்டம் பொதுமக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.</p><h2>ஊழல் எதிர்ப்பு</h2><p>
அதேபோல், ஊழலை எதிர்ப்பதாக அறிவிப்பது மட்டும் போதாது. அரசியல் சார்பின்றி விசாரணைகள் நடைபெறுகிறதா? அதிகாரத்தில் இருப்பவர்களும் அதே சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறுகிறார்களா? அரச நிறுவனங்களில் நியமனங்கள் திறமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றனவா? என்பதுதான் மக்களின் அடுத்த கேள்வியாக இருக்கும்.</p><p>
குறிப்பாக அரச நிறுவனங்களின் நிர்வாக நியமனங்கள் இங்கு முக்கியமான பரீட்சையாகின்றன. பல ஆண்டுகளாக அரச நிறுவனங்கள் அரசியல் நியமனங்களுக்கும் ஆதரவாளர்களுக்கான பதவி வழங்கல்களுக்கும் உட்பட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5936c5-cecc-45ad-bf46-a874ad87cf6b/26-6aa641c52a345.webp' /></p><p> </p><p>இதனை மாற்றுவதாக தற்போதைய அரசாங்கம் கூறுகிறது. அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளுக்கான நியமனங்கள் தொழில்முறைத் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அதன் வாக்குறுதி.</p><p>

ஊழல் எதிர்ப்பு என்பது எதிர்க்கட்சியில் இருந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதால் மட்டும் நிரூபிக்கப்படாது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் அதே அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதா என்பதில்தான் அதன் உண்மையான நம்பகத்தன்மை இருக்கிறது. பொருளாதாரத்திலும் இதே நிலைதான்.</p><p>

பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்வது நிச்சயமாக நல்ல செய்தி. ஆனால் ஒரு குடும்பத்தின் பார்வையில் பொருளாதார மீட்சி என்பது GDP வளர்ச்சி விகிதம் அல்ல. அது சந்தையில் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, வேலைவாய்ப்பு, வீட்டுக் கடன் மற்றும் மாத இறுதியில் கையில் மீதமிருக்கும் பணம் ஆகியவற்றோடு தொடர்புடையது.</p><p>
எனவே எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீது எழப்போகும் முக்கியமான கேள்வி “நாடு மீண்டதா?” என்பதல்ல; “நாடு மீண்டதன் பயன் யாருக்குக் கிடைத்தது?” என்பதாக இருக்கும்.</p><h2>இலங்கையின் அரசியல் மாற்றம்</h2><p>

ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கத்தின் வலிமை மட்டுமே முக்கியமல்ல. எதிர்க்கட்சியின் வலிமையும் அவசியம். NPP-க்கு 159 ஆசனங்கள் இருப்பதால் அரசாங்கம் சட்டமன்ற ரீதியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சியின் பங்கு அரசாங்கத்தை விமர்சிப்பதில் மட்டும் முடிவடையக் கூடாது.</p><p>
“அரசாங்கம் தவறு செய்கிறது” என்று கூறுவது எளிது. அதற்குப் பதிலாக “இதற்கு மாற்றாக நாங்கள் என்ன செய்வோம்?” என்ற கேள்விக்கு தெளிவான பதிலை வழங்குவதே உண்மையான எதிர்க்கட்சியின் அரசியல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657685d9-f00d-4dbb-8030-1c66bd7ff5d4/26-6aa641c5e984a.webp' /></p><p>

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இனப்பிரச்சினை, மாகாண அதிகாரப் பகிர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற துறைகளில் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் குறையக்கூடும்.</p><p>அதேவேளை, இலங்கையின் அரசியல் மாற்றத்தை வடக்கு மற்றும் கிழக்கின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து மதிப்பிட முடியாது.</p><p>

2024 தேர்தலில் NPP வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பெற்ற வாக்குகள் பாரம்பரிய இன அடிப்படையிலான அரசியல் கணக்கீடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கான முக்கிய அறிகுறியாக அமைந்தன. ஆனால் வாக்களித்தல் மட்டும் அரசியல் ஒருங்கிணைப்பின் இறுதி இலக்காக இருக்க முடியாது.</p><p>
நிலம், காணாமல் போனோர் தொடர்பான கேள்விகள், மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, கல்வி, அபிவிருத்தி, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற நீண்டகால பிரச்சினைகளில் அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறு அமைகிறது என்பதே முக்கியம்.</p><p>

இன அரசியலைத் தாண்டி ஒரு புதிய இலங்கை அரசியலை உருவாக்குவதாகக் கூறும் அரசாங்கம், அனைத்து சமூகங்களின் அரசியல் மற்றும் சமூக அச்சங்களுக்கும் நம்பகமான பதிலை வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T06:29:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-carrying-243-passengers-disappeared-1789276799"></link>
            <id>https://ibctamil.com/article/ship-carrying-243-passengers-disappeared-1789276799</id>
            <summary type="text">




புதிய இணைப்புஜாவா கடற்பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><h3>புதிய இணைப்பு</h3><p>ஜாவா கடற்பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
இதுவரை 103 பயணிகளை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதேவேளை, 140 பயணிகள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று இன்று (13) காலை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

திடீரென நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கப்பலின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன கப்பலைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>கடல்வழிப் போக்குவரத்து</h2><p>
</p><p>
சுரபாயா நகரத்திலிருந்து பன்ஜார்மாசின் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643f7b3c-a33f-4e73-b5cf-169404e91518/26-6aa6369b51957.webp' /></p><p><i>Image Credit: firstpost</i></p><p>
</p><p>
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில், கடல்வழிப் போக்குவரத்து முக்கியப் பயண முறையாக விளங்குகிறது.</p><h2>பாதுகாப்பு தரநிலைகள்</h2><p> </p><p>

இந்நிலையில், விமானப் பயணத்திற்கான செலவு அதிகம் என்பதால், பொதுமக்கள் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்திலான கடல்வழிப் பயணங்களையே தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa851124-a1a1-4b66-a4a2-ccbb08394a57/26-6aa6369c05ed0.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததால், இத்தகைய ஆபத்தான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T06:07:40+00:00</updated>
        </entry>
    </feed>
