<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-28T21:42:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275"></link>
            <id>https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் மீதான போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதையும் நாட்டின் இராணுவ நிலையைப் பலவீனப்படுத்துவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த நடவடிக்கை ஒரு பேரழிவு மற்றும் தோல்வி எனக் குறிப்பிட்ட அவர், அதை "டிரம்பின் போர்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க இடைக்காலத் தேர்தல்</h2><p>
</p><p>
ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைக் கையிருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் பிரத்யேகச் செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">6 months in, Trump’s disastrous war in Iran has accomplished nothing but the depletion of American stockpiles and the weakening of our military standing.<br><br>That’s what I call an abject failure. <a href="https://t.co/egyUeP6bia">pic.twitter.com/egyUeP6bia</a></p>&mdash; Chuck Schumer (@SenSchumer) <a href="https://x.com/SenSchumer/status/2093362871333802081?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்த ஈரான் போர் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T21:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-army-kills-senior-hamas-commander-1787948599"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-army-kills-senior-hamas-commander-1787948599</id>
            <summary type="text">பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
தாக்குதல் நடந்த உடனே, இஸ்ரேலியப் படைகள் கூடுதல் படைகளை அனுப்பி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரில் குறிவைக்கப்பட்ட இடத்தைச் சுற்றித் தடுப்புகளை அமைத்ததாக தெரியருகிறது.</p><p>

அதன்போது, தாக்குதல் நடந்த இடத்திற்குத் தங்கள் மருத்துவக் குழுவினர் வந்தபோது, இஸ்ரேலிய இராணுவம் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><h2>இஸ்ரேலிய இராணுவத்தின் உத்தரவு</h2><p>
</p><p>
அத்தோடு, அவர்களின் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45acb2c6-8894-4225-88d0-8e68b99663bd/26-6a91f242f280b.webp' /></p><p><i>Image Credit:&nbsp;aawsat</i></p><p>
</p><p>
மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்காமல், மருத்துவக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T20:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நௌஃபர் ஜேசுதாசனின் 7 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815"></link>
            <id>https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815</id>
            <summary type="text">நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, மாத்தளை மீகஸ்தென்ன மற்றும் ஓவிலிகந்த பகுதிகளில் அமைந்துள்ள பல சொத்துக்கள் இவ்வாறு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தொடர் விசாரணை</h2><p>
</p><p>
இடைநிறுத்தப்பட்ட சொத்துக்களில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 பேர்ச் நிலம், 4.14 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடி வீடு அடங்கிய 10 பேர்ச் நிலம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.5 பேர்ச் நிலம் ஆகியவை அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c333198-42e4-4714-a03a-c9638fff2ce4/26-6a91d9af4d397.webp' /></p><p>

சமீபத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபருக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பரிவுக்கு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817"></link>
            <id>https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817</id>
            <summary type="text">பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றிடம் அனுமதி கோரியுள்ளது.
</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் கொழும்பு குற்றப்பிரிவு தெரியப்படுத்தியுள்ளது.</p><p>
இந்த சம்பவத்தை நீதிமன்றத்திற்கு மேலும் விளக்கிய விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு மேலும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d4475d-f677-488f-ac16-4d3fac96463a/26-6a91d5c437926.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இது தொடர்பில் சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கோரியுள்ளது.
</p><p>
அதன்படி, நீதிபதி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், அந்தக் கோரிக்கைக்கு இணங்க ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-28T18:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T18:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கங்காட்டிற்கு தீ வைத்த விஷமிகள்! கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616"></link>
            <id>https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி தீயில் ஏரிந்து நாசமாகியுள்ளது.</p><p>

குறித்த பகுதிக்கு இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால் தீவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், காவல்துறை, இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்திருந்தார்.</p><p></p><h2>இராணுவத்தினரின் வருகை&nbsp;</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே மருதங்கணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் நடவடிக்கைகளை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6e3d40-005e-4008-95dc-cdde0184e6d8/26-6a91c739ec9e7.webp' /></p><p>

சம்பவத்தின் போது, குறித்த இடத்திற்கு மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரியும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429"></link>
            <id>https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
</p><p>
 நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.</p><p></p><h2>முழுமையான ஆதரவு</h2><p> </p><p>

இதன் பின்னராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது NPP கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f981175-1a38-40ca-aeab-1ac16675a333/26-6a91c46492db0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள்/இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ளது.
</p><p>
பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றென்.” என்றார்.
</p><p>
இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gulf-states-seek-new-security-partners-1787933345"></link>
            <id>https://ibctamil.com/article/gulf-states-seek-new-security-partners-1787933345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மாதிரிகளையும் முயன்று வருகின்றன என்று மத்திய கிழக்கு உலக விவகாரங்கள் மன்றத்தின் மூத்த ஆய்வாளர் முஹனத் செலூம் கூறியுள்ளார்.</p><p>பாதுகாப்பிற்கு ஈடாக இப்பகுதியில் அமெரிக்கத் தளங்களை அமைக்கும் தற்போதைய நிலைகள், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொண்ட பலன்களை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த நிலையில், சில நாடுகள், “கட்டார் நேட்டோவுடனும், துருக்கியுடனும், குவைத் பாகிஸ்தானுடனும் செய்தது போன்ற இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒப்பந்தங்களை செய்து விவகாரத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p></p><h2>புதிய வகை ஒப்பந்தங்கள்&nbsp;</h2><p>மேலும், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போது ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b012e42-3a14-4042-962b-ae57d5f3fc8b/26-6a91b2f3a9e45.webp' /></p><p>இருப்பினும், இந்த புதிய வகை ஒப்பந்தங்கள் இன்னும் சோதிக்கப்பட வேண்டும் என்றும், போரினால் வளைகுடா நாடுகளும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p>ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதேசமயம் ஓமான், சவூதி அரேபியா அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை, என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T16:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-signs-deal-to-buy-massive-us-missile-1787928177"></link>
            <id>https://ibctamil.com/article/india-signs-deal-to-buy-massive-us-missile-1787928177</id>
            <summary type="text">அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது 

இந்த ஏவுகணையை 2009ஆம் ஆண்டு முதல்வாங்குவதற்கு இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கொள்முதல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் Foreign Military Sales (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான Letter of Offer and Acceptance ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தத் தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் Sergio Gor தனது X தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>Javelin ஏவுகணை</h2><p>''போரில் பரிசோதிக்கப்பட்ட Javelin பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca0752b-8a4d-47c6-8504-5311a30c0705/26-6a919e744b94a.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தக் கொள்முதல் எதிர்காலத்தில் Javelin ஏவுகணைகளை இந்தியாவிலேயே இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு தசாப்தமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இந்தக் கொள்முதல் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தின் (Emergency Procurement Powers) கீழ் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>இந்த அதிகாரத்தின் மூலம், அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சம் ரூ.300 கோடி வரையிலான நிதி வரம்பிற்குள் இராணுவம் நேரடியாக கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
</p><p>
எனினும், தற்போது கொள்முதல் செய்யப்படும் Javelin ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:50:21+00:00</updated>
        </entry>
    </feed>
