<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-11T00:27:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/41-arrested-over-temple-firewalk-firewood-1789085102"></link>
            <id>https://ibctamil.com/article/41-arrested-over-temple-firewalk-firewood-1789085102</id>
            <summary type="text">திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு
நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக்
கூறப்படும் 41 இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு
நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக்
கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள செய்தி கவலையையும் பல முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது
என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் நேற்று (10-11-2026) ஊடக அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>வழிபாட்டு நடைமுறை</h2><p>
“கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, குறித்த இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குச்
செல்வதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி, அனுமதி
நடைமுறைகள் மற்றும் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்பன தொடர்பில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை வழங்குவது அவசியமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20ff05e-b784-4c00-8268-d0beefc5aeeb/26-6aa34743aeb97.webp' /></p><p>தம்பலகாமம் மாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய
வழிபாட்டு நடைமுறைகளும் அப்பகுதி மக்களின் நீண்டகால சமய மற்றும் கலாசார
பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. </p><p>

எனவே, சட்டத்தை மதிப்பதுடன்
மக்களின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாப்பதும்
அரசின் முக்கிய பொறுப்பாகும்.</p><p></p><h2>எதிரான நிலைப்பாடு</h2><p>அதேவேளை, எந்தவொரு மதத்தினருக்கும் எதிரான நிலைப்பாடு எமக்கில்லை.&nbsp; &nbsp;</p><p>இலங்கையில்
அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு
வழங்கப்பட வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடு.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f258df-dd0f-4774-ae94-7bea5fc8bca7/26-6aa347449e6ee.webp' /></p><p>ஒரு மதத்தின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக மட்டும் தேவையற்ற
தடைகள் அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றனவா என்ற சந்தேகம்
மக்களிடையே உருவாகாத வகையில், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைத்து
மதங்களையும் சமமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.
</p><p>

கைது செய்யப்பட்டுள்ள 41 இளைஞர்கள் தொடர்பான சம்பவத்தின் முழுமையான உண்மை
நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
</p><p>
ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள்
சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட
வேண்டும்.

வனவளப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, மத மற்றும்
கலாசார நிகழ்வுகளின் தன்மையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு நடைமுறை</h2><p>எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில், ஆலய நிர்வாகம், பிரதேச
அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில்
தெளிவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப்
பாதுகாப்பு நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

நாம் சட்டத்தை மதிக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1daba662-3e4a-416e-85e0-d1231952ccf1/26-6aa34745542ac.webp' /></p><p>அதே நேரத்தில், நியாயம், சமத்துவம் மற்றும் மத
உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>

தம்பலகாமம் மாரியம்மன் ஆலய திருவிழா போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மக்களின் சமய
உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், அவர்களின் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையவை.
</p><p>
எனவே, இந்த விடயத்தை உணர்வுபூர்வமாகவும் நியாயமான முறையிலும் அணுகி,
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி
செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-summoned-by-fcid-over-mig-deal-1789073665"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-summoned-by-fcid-over-mig-deal-1789073665</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>
குறிப்பிட்ட கொள்முதல் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>நிதி முறைகேடு&nbsp;</h2><p>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>இதே மிக் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதியும், மார்ஷல் ஒஃப் தி எயார்போர்ஸ் கௌரவம் பெற்றவருமான ரொஷான் குணதிலக்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2cf498-ba6f-46a1-bad4-b532cc0db0f0/26-6aa33f930694b.webp' /></p><p>FCID வளாகத்திற்குள் நுழையும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் விமானப்படைத் தளபதி, தன்னிடம் விசாரிக்கப்படவுள்ள குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மிக்-27 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்த போது கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விரிவான மற்றும் தீவிரமான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கல்லூரியின் மன்றம்&nbsp;</h2><p>இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
</p><p>
குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.</p><p> 

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5caa8f2-5402-41c2-998d-394678758e71/26-6aa2f75176c26.webp' /></p><p>அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்விதப் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:24:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-slams-iaea-resolution-as-illegal-political-1789069043"></link>
            <id>https://ibctamil.com/article/iran-slams-iaea-resolution-as-illegal-political-1789069043</id>
            <summary type="text">சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

IAEA ஆளுநர் சபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த ஈரான் எதிர்ப்புத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சீர்குலைக்கும் நடவடிக்கைகள்</h2><p>இந்தநிலையில், IAEA ஆளுநர் சபையின் தீர்மானம் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது, தொழில்நுட்ப ரீதியாக ஆதாரமற்றது, முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f25ef02-a182-4e6f-80bb-436ba786270b/26-6aa317285044f.webp' /></p><p>இந்த தீர்மானத்தில் அமெரிக்கா மற்றும் சீயோனிச அமைப்பின் (இஸ்ரேல்) நேரடி அழுத்தமும் தடம் பதிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>IAEA அமைப்பின் இத்தகைய அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள், உலக நாடுகளை அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகும் நிலைக்குத் தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T20:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவத்தில்&nbsp;60 வயதுடைய நபர் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcb2f8a-bd9c-4835-965a-ef9838a2a765/26-6aa2d87c1c811.webp' /></p><p>லண்டன் முழுவதும் உள்ள யூத மற்றும் ஈரானிய சமூகங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இவ்வருட தொடக்கத்தில் இடம்பெற்ற எந்தவொரு சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்களுடனோ இந்த விசாரணைக்குத் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>லண்டன் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:47:56+00:00</updated>
        </entry>
    </feed>
