<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-12T11:12:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) &quot;ஜனசதன&quot; (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.இந்தப் பேரணியில் பல முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) "ஜனசதன" (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.</p><p>இந்தப் பேரணியில் பல முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இக்கூட்டத்திற்காக பெருமளவிலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அங்கு கூடியுள்ளதுடன், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b296775-89bc-4ba0-a778-ed4a0acf0602/26-6aa52f411f193.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!</h5><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் </h2><p>
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfaa53d-859c-4238-a57b-19d9bdd2b348/26-6aa4d23f06a79.webp' /></p><p>
</p><p>
முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.</p><p>
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:52:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய வளாகத்துக்குள் மான் வேட்டை! விமானப்படை வீரர்கள் ஐவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-air-force-personnel-arrested-for-hunting-deer-1789201378"></link>
            <id>https://ibctamil.com/article/five-air-force-personnel-arrested-for-hunting-deer-1789201378</id>
            <summary type="text">



மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>



மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த ஐந்து விமானப்படை வீரர்கள் உட்பட ஏழு பேரை மத்தள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

விமான நிலைய வளாகத்திற்குள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, ​​காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்புச் சோதனையின்போது சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதேவேளை, கைது நடவடிக்கையுடன், விமானப்படைக்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டியையும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/880798b0-297d-4827-9868-6d1a231dba65/26-6aa52ce82e0ca.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றத்தளப் புலனாய்வு (SOCO) விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்தோடு, மத்தள காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T10:45:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-father-arrested-court-order-1789206901"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-father-arrested-court-order-1789206901</id>
            <summary type="text">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

சந்தேக நபரான அவர் இன்று (12) கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு&nbsp;</h2><p>சந்தேக நபரான&nbsp;ஷிரான் பாஸிக்கின் தந்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (11) கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b501389-8020-4bcd-8048-f4e80f8c351d/26-6aa52b59bc510.webp' /></p><p>
</p><p>
 

ஷிரான் பாஸிக்கினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பாதுகாப்பு: காவல்துறை உத்தியோகத்தர் மதுபானம் அருந்திய நிலையில் ரகளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-constable-drunk-and-causing-a-ruckus-1789207726"></link>
            <id>https://ibctamil.com/article/police-constable-drunk-and-causing-a-ruckus-1789207726</id>
            <summary type="text">கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது அருந்தி, அந்தக் கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் குருந்துவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றிய ஒரு அதிகாரி ஆவார்.&nbsp;</p><h2>காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்</h2><p>சம்பந்தப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அந்தக் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் கடமைக் காலப்பகுதியில், அதாவது ஓகஸ்ட் 19 ஆம் திகதி, கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மது அருந்தி கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறை விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71065ac-8e18-4075-902f-a66e58a5cae1/26-6aa5283d17f4f.webp' /></p><p>&nbsp; இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தம் நேற்று முன்தினம் (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு உதவி காவல் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூஷன் சூரிய பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b720553-d86c-417a-b137-c1f4071e9fdb/26-6aa5283dc2697.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் இடம்பெற்றது</p><p>இதன்போது துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p><p></p><h2>சரமாரியாக வெட்டிப் படுகொலை&nbsp;</h2><p>

துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a860744-9e64-4643-b387-be4ae9e9ace4/26-6aa503071d0ec.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். </p><p>

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். </p><p>

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ணொருவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057"></link>
            <id>https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில், ஆலயச் சூழலில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர், ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><p></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.அதனையடுத்து குறித்த பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர்
முற்படுத்திய நிலையில் அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682b6660-25a5-48a3-a3fa-b9222f26715b/26-6aa51e26d01fc.webp' /></p><p>இதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில், சில சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களை கைது
செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்துப் படைப்பான போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066"></link>
            <id>https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066</id>
            <summary type="text">


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் உயர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
நல்லாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுமாயின் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கை வெளியாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அறிக்கை வெளியீட்டில்&nbsp;தாமதம் </h2><p>

அதன்படி, இந்த அறிக்கை வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298a3bd3-0c7d-4976-bf44-f395291b4454/26-6aa507cbbab1d.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார செயற்படுகின்றார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது இறுதி அறிக்கையில், கொள்கலன்கள் பெளதீகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe2cfc-9db8-409b-8215-d34a927cdf88/26-6aa507cca7f93.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்து செய்யப்பட்ட பொதுமன்னிப்பு! ஞானசார தேரர் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>சிறையில் அடைக்க உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d284a60f-45ed-4d06-9a25-33acfc8bac57/26-6aa4ea410bed1.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489"></link>
            <id>https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p></p><p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>நாளைய தினம் (12) நல்லூர் பகுதியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்</h2><p> </p><p>அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி
காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94dcbff-cd20-4f35-b9b1-83ca5c7f8eff/26-6aa5009f43cf1.webp' /></p><p>இந்தநிலையில் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என
கோரியே பேரணி நடைபெறவுள்ளது.</p><p>குறித்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் (11) சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து
கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P9Bx7yY4rE8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999"></link>
            <id>https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999</id>
            <summary type="text">களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம்&amp;nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலம்&nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் மீட்கபட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>

ஹங்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை&nbsp;என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd406bd-14aa-4970-b16a-877a818ac9ab/26-6aa5008137b1a.webp' /></p><p>சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளது</p><p>ஹங்வெல்ல காவல்துறையினர்
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957"></link>
            <id>https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆட்சேர்ப்புக்கு அனுமதி </h2><p>
</p><p>
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c60f17c9-3bee-44f0-a426-83138c27f566/26-6aa4faf00b83f.webp' /></p><p>
</p><p>
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகச் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br></p><p>இந்த நிலநடுக்கம் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை 04:23 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகளுக்கு வடகிழக்கே 69 கிலோமீற்றர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்&nbsp;</h2><p> </p><p>இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfc109f0-7e35-4dc1-9d0c-6a4c1f761107/26-6aa4f98ef16b8.webp' /></p><p>இந்தச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.</p><p>


தொடர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள மகனுக்காக களமிறங்கும் மகிந்த - அரசைக் கவிழ்க்கவே முடியாது..! அமைச்சர் பிமல் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-about-option-party-protest-1789195991"></link>
            <id>https://ibctamil.com/article/govt-about-option-party-protest-1789195991</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். </p><p>அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">அரசியல் காழ்ப்புணர்ச்சி</span></p><p> அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51103e49-aacd-4f4d-9e12-dff3ba8343c6/26-6aa4f87365370.webp' /></p><p>மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது. மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க் கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது. </p><p>மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும். தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது. </p><p>மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p></p><h2>அரசாட்சியைக் குலைக்க&nbsp;சதி&nbsp;</h2><p> </p><p>மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541b0026-20e1-4716-827f-b79e5c2882a4/26-6aa4f8741b9aa.webp' /></p><p>நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணையை புறக்கணிக்கும் மொட்டுக் கட்சி முன்னாள் எம்.பி! மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summons-issued-to-tissa-kuttiarachchi-1789195075"></link>
            <id>https://ibctamil.com/article/summons-issued-to-tissa-kuttiarachchi-1789195075</id>
            <summary type="text">சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னதாக, இம்மாதம் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. &nbsp;</p><p></p><h2>மீண்டும் அழைப்பாணை</h2><p> </p><p>

ஊவா கெப்பிட்டல் வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d003fed-0521-4485-b37b-d56d2022c775/26-6aa4f54aab775.webp' /></p><p>அதன்படி, முதல் அழைப்பின் போது குட்டிஆரச்சி முன்னிலையாகாத நிலையில், அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T06:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பற்றி எரிந்த பயணிகள் படகு - பறிபோன 35 உயிர்கள்: தொடரும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-toll-from-philippines-ferry-fire-rises-to-35-1789193043"></link>
            <id>https://ibctamil.com/article/death-toll-from-philippines-ferry-fire-rises-to-35-1789193043</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது.</p><p>கடும் வெப்பம் மற்றும் புகை காரணமாக மீட்புக் குழுவினர் கப்பலுக்குள் நுழைய சிரமப்பட்டதால், உள்ளே சிக்கியிருக்கக்கூடிய பயணிகளைத் தேடும் பணிகள் தாமதமாயின.&nbsp;இதனால் மேலும் சில உடல்கள் படகுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வைத்தியசாலைகளில் சிகிச்சை&nbsp;</h2><p>



சம்பவம் தொடர்பில் தெரியவகையில், மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a326dbd-38f5-43d4-8424-bc3176695a33/26-6aa4ee47e5792.webp' /></p><p> சம்பவத்தின் போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>


</p><p>பெரும்பாலான உடல்கள் பயணிகள் உறங்கும் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் நோயெமி கயாப்யாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efabe8de-44f4-416e-acb9-c08562e7368f/26-6aa4ee489b88a.webp' /></p><p>


உயிர் பிழைத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரக்கு வைக்கும் பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>மேலும், சில பயணிகள் உயிர்காக்கும் கவசங்களை அணியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், படகு விபத்து தொடர்பான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடல்சார் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் : கிளம்பியுள்ள எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-postponed-again-1789192035"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-postponed-again-1789192035</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு நேற்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.</p><p>இத்தெரிவுக்குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் அதன் கால எல்லை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><h2>நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்</h2><p>இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f510e0-4978-4741-a02e-6cc17883b349/26-6aa4edf47c860.webp' /></p><p> 
</p><p>அந்தவகையில், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதுடன் அந்த தெரிவுக்குழுவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.</p><p> </p><p>மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அல்லாமல், அதனைப் பிற்போடுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள ஒரு தெரிவுக்குழு என்றே இதனை வரையறுக்க முடியும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sudden-fuel-price-hike-this-month-in-sl-cpc-1789188255"></link>
            <id>https://ibctamil.com/article/no-sudden-fuel-price-hike-this-month-in-sl-cpc-1789188255</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த போதிலும், இந்த மாதம் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் உயர்வு எதுவும் இருக்காது என்று அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன், உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெட்ரோலின் விலையை குறைத்தல்</h2><p>இதேவேளை கடந்த 31ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b5a0c95-380f-4891-9551-39691e47b733/26-6aa4e4513600a.webp' /></p><p>

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 414 ரூபாயிலிருந்து 15 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 399 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 495 ரூபாயிலிருந்து 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 475 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனை பல்கலையில் ஏற்பட்ட துயரம்! மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-university-student-falls-from-floor-1789190212"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-university-student-falls-from-floor-1789190212</id>
            <summary type="text">
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறித்த சம்பவமானது, இன்று(12) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி</h2><p>
</p><p>
இந்நிலையில், பலத்த காயமடைந்த மாணவர் உடனடியாக பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3df3c8-4f10-4bb4-af8b-c002c7999c9c/26-6aa4e3a0a0a70.webp' /></p><p>

இச்சம்பவம் தொடர்பாக பேராதனைப் காவல்துறையினரும் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T05:31:15+00:00</updated>
        </entry>
    </feed>
