<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T12:16:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684</id>
            <summary type="text">

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை காவல்துறையினர் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த மின் விளக்குகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34f6294-7e71-4c1c-a132-724473664568/26-6a88418b02d85.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-21T12:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>குறித்த போராட்டம்,&nbsp; இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய
கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு
கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு,
யாழ் வலி வடக்கு தையிட்டி, மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள்,
கிராஞ்சி மற்றும் ,பொன்னாவெளி அமைப்புக்கள் பங்குற்றி இருந்தன.</p><p></p><h2>பல்வேறு கோரிக்கைகள்&nbsp;</h2><p>

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் "மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு,
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா,
மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று" என கோஷங்களை
எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebade4b-0cea-4a9f-afd7-4f6360faf510/26-6a883ce857238.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள்
தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் நீண்ட கால வதிவிட விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444"></link>
            <id>https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444</id>
            <summary type="text">தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை வழங்க தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p><p>

உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றின்படி, 2022 ஒகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் மஞ்சள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
விபத்து நடந்த உடனேயே அவர்கள் செயல்பட்டு, தாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன், கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.</p><p></p><h2>வேலைவாய்ப்பு அனுமதி</h2><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில், இந்த இலங்கையர்கள் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசாக்களில் தென் கொரியாவில் பணிபுரிந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c452ce3-e2fd-4ee3-b4fa-b9bfd6bf039d/26-6a88387cb9d36.webp' /></p><p> பொதுவாக, அந்த விசா வகையின் கீழ் ஒரு வெளிநாட்டுப் பணியாளர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p>

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும், அவர்களின் மனிதாபிமானப் பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரிய நீதி அமைச்சு, சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கும் இந்த நீண்ட கால விசாக்களை வழங்கியுள்ளது. </p><p>இந்த விசாக்கள், அவர்கள் தங்கள் விசாக்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியமின்றி, நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு உரிமை அளிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்ற இலங்கையரும் ஏற்கனவே நீண்ட கால விசா வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741"></link>
            <id>https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741</id>
            <summary type="text">
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
</p><p>
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.</p><p></p><h2>தமிழ்த் திரையுல அறிமுகம்</h2><p>
</p><p>
1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d057ce-d5cd-4a61-8713-91901241a9ba/26-6a88304fc9bd0.webp' /></p><p> </p><p>

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார். </p><p>

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன. </p><p>

2020-ஆம் ஆண்டில், சௌகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா! நீதிமன்றில் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407"></link>
            <id>https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் ஹரக் கட்டாவும் கருத்துக்களை முன்வைக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h3>முழங்கால் பாதிப்பு</h3><p>இந்த வழக்கிற்காக பிரதிவாதியான ஹரக் கட்டா ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7741ba3d-fa22-4533-acc7-ae7c1c36533d/26-6a88256246955.webp' /></p><p> </p><p>அவர் தொலைக்காட்சித் திரை ஊடாக கையை உயர்த்தி, தாம் எதிர்நோக்கும் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.</p><p>&nbsp;தமக்கு பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போது தாம் கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் பாதிப்புக்காக ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> </p><p>இதன்போது ஹரக் கட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாலிய சமரசிங்க, தமது சேவை பெறுநரை பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர் தற்போது கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9590a-175f-44f4-bd27-edbdee915d5a/26-6a882562efa22.webp' /></p><p> </p><p>இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இதன்போது அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதிநாளாக வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587"></link>
            <id>https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், விசாரணைக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு
உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும்
அதிகளவில் கலந்து கொண்டனர்.</p><p></p><h2>உரிய விசாரணைகள்</h2><p>
</p><p>வாக்குமூலம் பெறும் நடவடிக்கையின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்,
வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் மற்றும் அது
தொடர்பான ஏனைய முக்கிய தகவல்கள் குறித்து உறவினர்களிடம் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb2053f-699b-453e-801b-6ae6a2c33213/26-6a882fff487e5.webp' /></p><p>
</p><p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும்,
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம்
வாய்ந்ததாக அமைந்துள்ளது.</p><p>இதன்போது நீண்டகாலமாக தமது உறவுகளின் நிலை தொடர்பில் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை
அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை பயங்கரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901</id>
            <summary type="text">
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் பயங்கரவாதியாக காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் பயங்கரவாதியாக காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டமொன்றின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சில முக்கிய வரலாற்று உண்மைகளை நினைவூட்ட விரும்புகிறேன். 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் 4,000 முதல் 5,000 பேர் வரையிலும், 1987-89 காலப்பகுதியில் 40,000 முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.</p><p></p><h2>சஹ்ரான் குழுவுக்கும் ஜனநாயக உரிமை?</h2><p>
</p><p>
அன்று தவறான பாதையில் சென்று கொலைகளைச் செய்தவர்கள் பின்னர் ஜனநாயகத்துக்கு வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேச முடிந்தது என்றால், ஏன் அந்த உரிமையைச் சஹ்ரான் குழுவுக்கும், சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும், நாட்டைக் காப்பாற்றப் போராடிவிட்டு இன்று சிறையிலிருக்கும் போர் வீரர்களுக்கும் வழங்க முடியாது?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37843fad-c130-45c4-8bd6-1aa44d8c9b1d/26-6a882708a116c.webp' /></p><p>
1983 முதல் 2009 வரை வடக்கில் நிலவிய பயங்கரவாதத்தினால் 27,000 போர் வீரர்களை நாம் இழந்தோம்.
</p><p>
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க எமது பாதுகாப்புப் படைகள் செயல்பட்டபோது, அவர்களுக்குத் தேவையான புலனாய்வு ஆதரவை அதிகளவில் வழங்கியவர்கள் முஸ்லிம் சகோதரர்களே.</p><p>

ஆனால், 1990களில் உருவான ஆயுதக் குழுக்கள் அல் கொய்தா, போகோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கினால் வஹாபி தீவிரவாதத்துக்கு இரையானார்கள்.
</p><p>
சுரேஷ் சலே போன்ற புலனாய்வு அதிகாரிகள் இந்த வஹாபி பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் பாடுபட்டவர்கள்.
</p><p>
அத்தகைய போர் வீரர்களைத் பயங்கரவாதிகளாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சிறையில் அடைத்தாலும் நாம் எமது தேசியப் பொறுப்பையும், சாசனப் பொறுப்பையும் கைவிடப் போவதில்லை.” என்றார்.</p><p></p><p>[IIXB9PG</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு மணிநேர வாக்குமூலம்! நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>
விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் அந்த வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.</p><p>நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b16b93-34fa-4e71-a4db-fbc3e65e535e/26-6a87d890e8fa6.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் திரையரங்குகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-movie-october-2nd-1787305005"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-movie-october-2nd-1787305005</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஈழத்து கலைஞர்களை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><p>

 திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p>

திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) புகைப்படத்தில் அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியுள்ளமை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியின் விமான நிலையம் - எண்ணெய் ஆலை மீது கடுமையான தாக்குதல்! மீண்டும் கொந்தளிப்பில் மத்திய கிழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saudi-airport-severe-attack-on-oil-plant-houthi-1787302611"></link>
            <id>https://ibctamil.com/article/saudi-airport-severe-attack-on-oil-plant-houthi-1787302611</id>
            <summary type="text">ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் தெற்கு நகரமான நஜ்ரானில் உள்ள ஒரு விமான நிலையம் மற்றும் அரசுக்குச் சொந்தமான அராம்கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் தெற்கு நகரமான நஜ்ரானில் உள்ள ஒரு விமான நிலையம் மற்றும் அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு வளாகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p>

யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த இலக்குகளுக்கு எதிராக, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்தி இரண்டு இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

நஜ்ரான் விமான நிலையத்தில் உள்ள ஒரு முக்கியப் பகுதியும், அராம்கோ எண்ணெய் ஆலையுமே இந்தத் தாக்குதல்களின் முக்கிய இலக்குகளாக இருந்தன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><h2>ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்</h2><p>
தொடர் தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க இயலாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை சவூதி அரேபியாவை எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebac9505-99ca-4360-8c3d-03d28bc06e57/26-6a8817fea1d55.webp' /></p><p>
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் ஏமனில், 2022-ல் எட்டப்பட்ட போர் நிறுத்தம் கடந்த ஜூலை மாதம் முறிந்ததை அடுத்து, பிராந்திய அமைதியின்மை மீண்டும் வெடித்தது.
</p><p>
ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவூதி ஆதரவு யேமன் அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதோடு, சவூதி அரேபியா மீது கடல்வழி முற்றுகையை விதிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான பாப் அல்-மண்டாப் ஜலசந்திக்கு அருகிலுள்ள பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக யேமன் அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சவூதி கப்பல்கள்</h2><p>
</p><p>
கிளர்ச்சியாளர்கள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி விரிவடைய முயற்சிப்பதாகவும், இது சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1264c34c-69a2-455b-891d-0ac0dafd18de/26-6a8817ff551b3.webp' /></p><p>
</p><p>
கடந்த மாதம் யேமனின் தலைநகரான சனாவில் ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ​​இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை மீண்டும் தீவிரமடைந்தது.</p><p> அன்று முதல், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி கப்பல்கள், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் PHFO பதவியில் ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-health-field-officer-job-issues-1787300607"></link>
            <id>https://ibctamil.com/article/public-health-field-officer-job-issues-1787300607</id>
            <summary type="text">மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் Public Health Field Officer (PHFO) பதவியில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களின் கடமை நிறைவேற்றல், மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் Public Health Field Officer (PHFO) பதவியில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களின் கடமை நிறைவேற்றல், மேலதிக நேரக் கொடுப்பனவுகள், பயணக் கொடுப்பனவுகள் மற்றும் அரச வளங்களின் பயன்பாடு தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்பட்டவை எனக் கருதாமல், சம்பந்தப்பட்ட அரச ஆவணங்கள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் உரிய அதிகாரிகள் சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

PHFO பதவி களப்பணியை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரப் பதவியாகும். நோய்க்காவி கட்டுப்பாடு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளில் இப்பதவியினரின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட களப்பணிகளை உரிய முறையில் மேற்கொண்டார்களா என்பது தொடர்பில் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், PHFO உத்தியோகத்தர்களுக்கான சீருடை தொடர்பில் அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் அல்லது கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தால், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட Uniform Allowance, அதற்கான தகுதி, வழங்கப்பட்ட தொகைகள் மற்றும் சீருடை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் ஆகியவை தொடர்பான பதிவுகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மேலும், சில உத்தியோகத்தர்கள் Overtime claims செய்திருந்தால், அவை Attendance Register, Duty Roster, Overtime Approval, Overtime Claim Forms, மேலதிக நேரப் பணிக்கான பணிப்புகள் மற்றும் Field/Duty Records ஆகியவற்றுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. </p><p>உண்மையில் மேலதிக நேரப் பணி மேற்கொள்ளப்பட்டதா, claim செய்யப்பட்ட நேரம் உண்மையான பணியுடன் பொருந்துகிறதா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
அதேபோன்று Travelling மற்றும் Combined Allowance தொடர்பான சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. Official Duty Orders, Field Visit Records, Vehicle Log Books, Attendance Records, Travelling Claim Forms மற்றும் Payment Vouchers ஆகியவற்றை ஒப்பிட்டு, மேற்கொள்ளப்படாத பயணங்களுக்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p>
இதனிடையே, சில உத்தியோகத்தர்கள் அரசுப் பணிநேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமல் தனிப்பட்ட சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை உண்மையா என்பதை Attendance Records, Duty Rosters, Field Visit Records மற்றும் Supervisory Reports மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், சில PHFO உத்தியோகத்தர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பாற்பட்டு மேலதிகாரிகளின் தனிப்பட்ட தேவைகளுக்காக சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அவ்வாறு நடந்திருந்தால், அது உத்தியோகபூர்வ பணிப்பின் அடிப்படையிலானதா, அரசுப் பணிநேரம் அல்லது அரச வாகனம் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் ஆராய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p>
குறித்த இரு உத்தியோகத்தர்களும் தங்களது தொழில்சார் புலமைப்பரிசில்களைப் பெற்று தாய்லாந்து சென்று பயிற்சி பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் நோக்கம், அதனுடன் தொடர்புடைய அரச செலவுகள் மற்றும் பயிற்சிக்குப் பின்னர் அவர்கள் மேற்கொண்டதாகப் பதிவுசெய்யப்பட்ட பொது சுகாதாரப் பணிகள் ஆகியவையும், தேவையான பட்சத்தில், உரிய ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்க்காவி தொடர்பான நோய்கள் பொதுமக்களின் சுகாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால், களப்பணிக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுகின்றனரா என்பது நிர்வாக ரீதியான விடயம் மட்டுமல்லாது பொதுநலனுடன் தொடர்புடைய முக்கியமான விடயமாகவும் பார்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
இதன்படி, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் கடந்த கால பணிப்பதிவுகள், Attendance Registers, Duty Rosters, Field Registers, Overtime Claims, Travelling Claims, Duty Orders, Vehicle Log Books, Payment Vouchers, Uniform Allowance Records, Monthly Work Reports மற்றும் Supervisory Reports உள்ளிட்ட ஆவணங்களைப் பரிசோதிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.</p><p>

முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தால், பொருந்தக்கூடிய அரச சேவை ஒழுக்காற்று நடைமுறைகளின் கீழ் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அரச நிதி விதிமுறைகளுக்கு முரணாக செலுத்தப்பட்ட தொகைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டால் அவற்றை உரிய சட்ட மற்றும் நிதி நடைமுறைகளின் கீழ் மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>
அதேவேளை, இவ்விடயம் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட Attendance Registers, Overtime Claims, Travelling Claims, Duty Orders, Field Registers, Vehicle Log Books, Payment Vouchers, Uniform Allowance Records மற்றும் பிற பணிப்பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இக்குற்றச்சாட்டுகள் உண்மையானவை என முன்கூட்டியே தீர்மானிப்பது நோக்கமல்ல எனவும், அரச நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா, பொது சுகாதாரப் பணியாளர்கள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுகின்றனரா, பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆவணங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்துவதே இக்கோரிக்கையின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விசாரணையின் முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், சட்டத்தால் அனுமதிக்கப்படும் வரம்பிற்குள், உரிய அதிகாரிகள் வெளிப்படையான முறையில் தகவல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T08:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/light-usage-in-jaffna-is-causing-eye-problems-1787298097"></link>
            <id>https://ibctamil.com/article/light-usage-in-jaffna-is-causing-eye-problems-1787298097</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை
நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் லைட்கள் பயன்படுத்தப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக்
குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p> </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e303f7a-565b-424a-8159-e175ff020aeb/26-6a8804eae47af.webp' /></p><p>

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் . சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b>செய்தி - தீபன்</b></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் அதிகளவான ஒளி பயன்படுத்தப்பட்டதால் பலரது கண்கள்
பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில், ''பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது.
</p><p>அந்தவகையில் ஆலயத்தின் வளாகமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.</p><p></p><h2>35 பேருக்கு கண் பார்வை பிரச்சினை</h2><p>
</p><p>
இதில் அலங்கரிக்கப்பட்ட பார்வைக்கு ஆரோக்கியமற்ற மின் விளக்குகளால் இதுவரை
ஏறக்குறைய 35 பேருக்கு கண் பார்வை பிரச்சினை இன்று காலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfba5cd-efbd-4319-8e0b-1ea4fefd1e9b/26-6a880133923e0.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.</p><p>

மேலும், குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்றவர்களை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு சென்று கண் பரிசோதனை செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க
அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.</p><p>செய்தி - கஜி</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kzU12S71dds" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T07:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் யானை தந்தத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-elephant-tusk-in-mannar-1787297455"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-elephant-tusk-in-mannar-1787297455</id>
            <summary type="text">மன்னார் காவல் பிரிவின் சாவற்கட்டு பகுதியில் யானை தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(20) மன்னார் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் காவல் பிரிவின் சாவற்கட்டு பகுதியில் யானை தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(20) மன்னார் காவல் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7b16767-0ee7-4179-be05-3d7530a11219/26-6a88027b3a815.webp' /></p><p>

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மன்னார் காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T07:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதத்தை மறக்காதிருக்க வேண்டும் என வலியுறுத்தும் உலக மனிதநேய நாளில் ஈழத்தின் நினைவுகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-humanitarian-day-memories-of-eelam-1787296472"></link>
            <id>https://ibctamil.com/article/world-humanitarian-day-memories-of-eelam-1787296472</id>
            <summary type="text">போர், பேரழிவு, வறுமை, இடப்பெயர்வு, பசி, நோய் என மனித வாழ்வை அச்சுறுத்தும் சூழல்களில், மனிதர்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக தங்களை அர்ப்பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர், பேரழிவு, வறுமை, இடப்பெயர்வு, பசி, நோய் என மனித வாழ்வை அச்சுறுத்தும் சூழல்களில், மனிதர்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக தங்களை அர்ப்பணிக்கும் மனிதநேயப் பணியாளர்களையும், மனிதநேயத்தின் அடிப்படை விழுமியங்களையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனிதநேய நாள் அனுசரிக்கப்படுகிறது. &nbsp;</p><p>மனித உயிர் எந்த அரசியல் எல்லைகளையும், இன வேறுபாடுகளையும், மத அடையாளங்களையும் விட மேலானது என்பதை உலகிற்கு வலியுறுத்துகிற நாளிது.</p><p></p><h2>மனித நேய நாளின் வரலாறு</h2><p>2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐ.நா. மனிதநேயப் பணியாளர் செர்ஜியோ வியேரா டி மெல்லோ உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். </p><p>உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதநேயப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த அந்தச் சம்பவத்தின் நினைவாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாளை உலக மனிதநேய நாளாக அறிவித்தது.
</p><p>
மனிதநேயம் என்பது பேரிடர் நேரத்தில் உணவு வழங்கிற செயல் மாத்திரமல்ல. </p><p>காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பது, அகதிக்கு பாதுகாப்பளிப்பது, பசியால் தவிக்கும் ஒருவருக்கு உணவு வழங்குவது, வீடிழந்தவருக்கு தங்குமிடம் ஏற்படுத்துவது, போரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைப்பது, குழந்தைகளின் கல்வியை பாதுகாப்பது என மனித உயிரின் கண்ணியத்தை காப்பதற்கான ஒவ்வொரு செயலுமே மனிதநேயத்தின் வெளிப்பாடுதான்.</p><p></p><h2>ஈழத்தில் மனிதநேயப் பணி
</h2><p>இந்த நாளை ஈழத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது. பல தசாப்தங்களாகப் போரும் இன வன்முறையும் இடப்பெயர்வும் காணாமல் போதலும் வறுமையும் துயரமும் அனுபவித்த மக்களின் மண்ணாக ஈழம் இருக்கிறது. </p><p>குறிப்பாக வடக்கு, கிழக்கில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்து போர் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்தன.</p><p> முகாம்களில் வாழ்ந்த காலங்களும், பதுங்குகுழிகளில் கழித்த இரவுகளும், குண்டுவீச்சுகளின் நடுவே உயிரைக் காத்த நாட்களும் ஈழத் தமிழர்களின் கூட்டு நினைவிலிருந்து இன்னும் அழியவில்லை.</p><p>

அந்தக் காலங்களில் மனிதநேயப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், மத அமைப்புகள், உள்ளூர் தன்னார்வலர்கள் என பலர் மக்களின் உயிரைக் காப்பதற்காக ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றினர். </p><p>தங்களுடைய பாதுகாப்பை விட மக்களின் உயிரை முன்னிலைப்படுத்திய அவர்கள், ஈழப் போரின் இருண்ட காலங்களில் மனிதநேயத்தின் விளக்குகளாக ஒளிர்ந்தனர்.</p><p></p><h2>மனிதநேயப் பணியாளர்களே படுகொலை
</h2><p>ஈழத்தின் மனிதநேய வரலாற்றில், மனிதநேயப் பணியாளர்களின் தியாகமும் குருதியால் எழுதப்பட்டுள்ளது. 2006 ஆகஸ்ட் 4ஆம் நாள், கிழக்கு மாகாணம், திருகோணமலை மூதூர் பகுதியில், Action Contre la Faim (ACF) எனப்படும் பிரெஞ்சு மனிதநேய அமைப்பில் பணியாற்றிய 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஈழத்தில் மனிதநேயப் பணியாளர்கள் எதிர்கொண்ட பேராபத்தின் கொடூரமான அடையாளமாகும்.</p><p> தண்ணீர், உணவு, வாழ்வாதார உதவி போன்ற அத்தியாவசிய மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவர்கள், தங்களது கடமையைச் செய்து கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர்.
</p><p>
1987 அக்டோபர் 21–22ஆம் நாட்களில் இடம்பெற்ற யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை, ஈழத்தின் மனிதநேய வரலாற்றில் அழிக்க முடியாத குருதிக் கறையாகும். யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர். </p><p>போரில் ஈடுபடாத நோயாளிகளும், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் பணியாற்றியவர்களும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றப்பட்ட அந்தச் சம்பவம், மருத்துவமனை போன்ற மனிதநேயப் பாதுகாப்பிடங்களின் புனிதத்தன்மை எவ்வாறு போரின் வன்முறையால் சிதைக்கப்பட்டது என்பதற்கு கொடூரமான சாட்சியாக நிற்கிறது.</p><p>

மருத்துவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கவில்லை. தாதியர்களின் கைகளில் இருந்தது காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் மருத்துவக் கருவிகளே. ஆனாலும் அவர்கள் போரின் இலக்குகளாகினர். </p><p>மனிதநேய நாளில் யாழ்ப்பாண மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது, போரில் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படை மனிதநேயக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதாகும்.</p><p></p><h2>போருக்குப் பிறகான மனிதநேயப் பணி
</h2><p>ஈழத்தில் போருக்குப் பின்னரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில் வாழ்ந்தன. </p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கின்றன; மாற்றுத்திறனாளிகளாகிய போரால் பாதிக்கப்பட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வறுமையில் சிக்கிய குடும்பங்கள் என போரின் காயங்களைத் தாங்கிக்கொண்டு வாழும் மக்கள் ஏராளம். </p><p>நிலமீட்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதார மீட்பு, மனநல மற்றும் சமூக ஆதரவு, கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற துறைகளில் மனிதநேயப் பணிகள் தொடர வேண்டிய அவசியம் உள்ளது.</p><p>

குறிப்பாக வடக்கு–கிழக்கில் போர் விட்டுச் சென்ற காயங்களை வெறும் பொருளாதார உதவிகளால் மட்டும் ஆற்றிவிட முடியாது; மக்களின் கண்ணியம், உரிமை, நீதி, உண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும். </p><p>போரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்குவது முக்கிய பணியானது. </p><p>ஆகவே, ஈழத்தில் மனிதநேயப் பணி என்பது கடந்த காலப் போரின் காயங்களுக்கு மருந்திடும் பணியாக மட்டுமல்லாமல், அநீதியும் அச்சமும் இல்லாத கண்ணியமான எதிர்காலத்தை மக்களுக்காக உருவாக்கும் தொடர்ச்சியான பொறுப்பாகவும் இருப்பதுதான் அவசியமானது. &nbsp;
</p><p>
சக மனிதர்களின் துயரத்தை – வாழ்வை நாம் எவ்வளவு தொலைவில் இருந்து பார்க்கிறோம்? மற்றொருவரின் கண்ணீரை வெறும் செய்தியாகப் பார்க்கிறோமா? அல்லது அது நம்முடைய மனிதப் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று உணர்கிறோமா? இந்தக் கேள்விதான் இந் நாளின் சாரம். </p><p>ஈழம் மாதிரியான நிலத்தில் எந்தப் பணியிலிருந்தாலும் மனிதநேயத்துடன் செயலாற்ற வேண்டும். போரால் அழிவடைந்த ஒரு தேசத்தின் மீள் கட்டுமானத்திற்கும் எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் அத்தகைய ஒரு பணியே அவசியமானது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T07:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787294811"></link>
            <id>https://ibctamil.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787294811</id>
            <summary type="text">சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர்&amp;nbsp; நீதிமன்றில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர்&nbsp; நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21.08.2026) அவர் முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதன்போது, பல்லேகம ஹேமரதன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த விதம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, நீதிமன்ற பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><h2>வெளிநாட்டு பயணத்தடை</h2><p>எனினும் இது குறித்து வெளியாகிய தகவலில் பல்லேகம ஹேமரதன தேரர் சட்டத்தரணியின் காரில் ஏறி நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e957bf38-92cb-444e-a2a1-79fdc5c3728c/26-6a87f6a238abe.webp' /></p><p>சிறுமியொருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில்&nbsp;முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு அமைய மே மாதம் 08 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>மேலும் சந்தேகநபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதித்து அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன அப்போது உத்தரவிட்டார்.
</p><p>
இதேவேளை, சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சிறுமியின் தாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஸின் புதிய ஜனாதிபதியானார் ஆலம்கீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alamgir-becomes-new-president-of-bangladesh-1787293309"></link>
            <id>https://ibctamil.com/article/alamgir-becomes-new-president-of-bangladesh-1787293309</id>
            <summary type="text">பங்களாதேஸின் புதிய&amp;nbsp;ஜனாதிபதியாக&amp;nbsp;மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஸின் புதிய&nbsp;ஜனாதிபதியாக&nbsp;மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 23ஆவது ஜனாதிபதியாக தெரிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உடல்நலக் காரணங்களால் 76 வயதான தற்போதைய ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலகியதை தொடர்ந்து பங்களாதேஸின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது.</p><p></p><h2>பெரும்பான்மை வாக்குகள்</h2><p> </p><p>இதற்கமைய புதிய ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216a3b9a-20a7-4e34-8dce-06c30eed20f4/26-6a87f01061571.webp' /></p><p>2024-ல் இளைஞர்களின் போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பெப்ரவரி 12 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:28:41+00:00</updated>
        </entry>
    </feed>
