<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T17:12:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதியின் வருகை நுழைவாயிலின் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981"></link>
            <id>https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு கடந்த 21ஆம் திகதி நீமிமன்றுக்கு வருகைத்தந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹேமரத்தன தேரருக்கு எதிராக&nbsp;&nbsp;வழக்கு </h2><p><span style="color: inherit;">தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13584407-d1c1-4539-902a-b1e3d07813c3/26-6a8b0a1734ded.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T16:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத் தோல்வியை ஒப்புக்கொள்கிறது அமெரிக்கா! IRGC சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-admits-military-defeat-1787496482"></link>
            <id>https://ibctamil.com/article/us-admits-military-defeat-1787496482</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை, தனது இராணுவத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இஸ்லாமியப் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை, தனது இராணுவத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.</p><p>மேலும், அமெரிக்கா பல தசாப்தங்களாக ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>ஈரானில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி,</p><p></p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>“அந்த அறிவிப்பு இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம். பொருளாதாரப் போர் என்பது ஒன்றும் புதிதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5b450d-b88d-4d98-9264-41465d586f56/26-6a8b082404394.webp' /></p><p> அமெரிக்கா 47 ஆண்டுகளாக ஈரானின் பொருளாதாரத் துறைகள் மீது தடைகளை விதித்து வருகிறது. </p><p>தற்போதைய இந்த நடவடிக்கை, முதன்மையாகப் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வடிவமைப்பதையும், அமெரிக்கா&nbsp; மேலோங்கி நிற்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது</p><p>பொருளாதாரப் போர் உட்பட, ஈரானுக்கு எதிரான ஒவ்வொரு விரோத நடவடிக்கைக்குமான செயல்திட்டங்களை ஐ.ஆர்.ஜி.சி தயாரித்துள்ளது.</p><p>எதிரியின் போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. மேலும் நாடுகளுடன் பொருளாதார உறவுகளை எளிதாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T15:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத்தின் விசேட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/port-city-target-government-s-special-report-1787494048"></link>
            <id>https://ibctamil.com/article/port-city-target-government-s-special-report-1787494048</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் திரட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

 

துறைமுக நகரத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த முதலீட்டு இலக்கு ஆதரிக்கப்படும் என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

 

இவற்றில் இரண்டு பெரிய அளவிலான குடியிருப்புத் திட்டங்கள், ஒரு நவீன ஹோட்டல் மற்றும் ஒரு மாநாட்டு மையம் ஆகியவை அடங்கும் என அபேசிங்க விவரித்துள்ளார்.</p><p></p><h2>உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகல்</h2><p>இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2138f7b-95ee-462d-af86-6adde411de7b/26-6a8afea3d3643.webp' /></p><p>“பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக முன்வைக்கப்பட்டது .</p><p>ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகளில் முன்னணி சர்வதேச முதலீட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .</p><p>துறைமுக நகரத்தில் வழங்கப்படும் வரிச் சலுகைகளை சர்வதேச தரத்திற்கு இணையாகக் கொண்டுவரும் நோக்கிலும், அதேவேளையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும், அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-lakh-fine-imposed-on-companies-in-jaffna-1787484925"></link>
            <id>https://ibctamil.com/article/6-lakh-fine-imposed-on-companies-in-jaffna-1787484925</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 668,000 அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் விவகார ஆணையத்தின் (CAA) மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகம் மற்றும் மதுபானக் கடை ஒன்றில், ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 120 ஆக இருந்தபோதிலும், அதை ரூ. 200-க்கு விற்பனை செய்ததற்காக ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>CAA வலியுறுத்து</h2><p>
இதற்கிடையில், மற்றொரு உணவகத்தில், ஒரு குளிர்பான போத்தலை அதன் அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்றதற்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fe1d63-5e85-4160-b7b0-d89f022c9d8f/26-6a8ae176405d8.webp' /></p><p>
</p><p>மேலும், ஒரு கிலோ பொன்னி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-க்கு மேல் விற்றதற்காக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு வியாபாரிக்கு ரூ. 268,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​அந்த அரிசி பால் பொன்னி அரிசி என்று உரிமையாளர் கூறியதாகவும், இருப்பினும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சி.ஏ.ஏ சமர்ப்பித்த ஒரு மாதிரியை அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்ததில், அந்த இருப்பு இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
பொருட்களை வாங்குவதற்கு முன் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், முறைபாடுகளை வழங்கும்போது ஆதாரமாக ரசீதுகளைப் பெற்றுப் பாதுகாத்து வைக்குமாறும் நுகர்வோரை CAA வலியுறுத்தியுள்ளது.
</p><p>மேலும், நுகர்வோர், வர்த்தக விதிமீறல்கள் எனச் சந்தேகப்படுபவற்றை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் 1977 என்ற உதவி எண் மூலம், பணி நேரங்களில் முறைபாடளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு போரில் ஒரு முடிவை தேடும் சர்வதேசம்! நோக்கி தெஹ்ரானுக்கு விரையும் ஆசிம் முனீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677"></link>
            <id>https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இதன்படி நாளை&nbsp;ஆசிம் முனீர் தனது விஜயத்தை மேற்கொள்வார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஈரான்-பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முனீர் ஈரானிய தலைநகருக்கு ஒரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.</p><p></p><h2>பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சி</h2><p>பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இந்த வருகை அமைந்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d2d457-9571-4f7d-8e58-7e1253b7ecc1/26-6a8afad007f83.webp' /></p><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரை நிறுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது.</p><p>குறிப்பாக ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அது மத்தியஸ்தம் செய்தது, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை ஈரானின் செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்காலத் தேர்தல் உக்ரைனை அழித்துவிடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wartime-elections-will-destroy-ukraine-1787495808"></link>
            <id>https://ibctamil.com/article/wartime-elections-will-destroy-ukraine-1787495808</id>
            <summary type="text">ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p>செய்தியாளர்களிடம் இன்று வெளியிடப்பட்ட அவரது கருத்துக்களில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ் ஒரு பரபரப்பான உரையில் போர்க்காலத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து, இந்த விடயம் குறித்து ஜெலென்ஸ்கி தெரிவித்த முதல் கருத்து இதுவாகும்.</p><p></p><h2>பரவலான போராட்டங்கள்</h2><p>கடந்த மாதம் ஃபெடோரோவின் திடீர் பதவி நீக்கம் பரவலான போராட்டங்களைத் தூண்டியது. ஆனால், அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரிய அவரது ஆதரவாளர்கள், பின்னர் அவர் விடுத்த தேர்தல் அழைப்பைக் கண்டு தயங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7fdcb2-f46f-4c14-9eba-e0f8d8c4a59b/26-6a8b058191f65.webp' /></p><p>2022-ல் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ஒரு முக்கிய உக்ரேனிய அரசியல் பிரமுகர் விடுத்த முதல் தேர்தல் கோரிக்கை இதுவாகும்.
</p><p>இதற்கு பதில் வழங்கும் விதமாக"நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இதுபோன்ற போரின்போதே தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்," என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td> செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322"></link>
            <id>https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.
</p><p>பாடசாலை கல்வியை நிறைவு செய்தவுடனேயே அதிக இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதையே இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>

 

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆற்றல்மிக்க இளம் தலைமுறை</h2><p>
 

பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க இளம் தலைமுறையை உருவாக்குவதில் தங்கியுள்ளது. இது நாட்டை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதற்கு இன்றியமையாதது என்றும் அவர் விவரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52d36543-d377-415e-86c2-77499d242eaf/26-6a8b039cbf81d.webp' /></p><p>
 

எனவே, அரசாங்கம் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

மேலும் நமது நாட்டின் எதிர்காலம் நமது பிள்ளைகளின் கைகளில் உள்ளது. மேம்பட்ட மனிதவளமே இறுதியில் இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும். ஓர் அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதனால்தான் நாங்கள் கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கல்வியில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-eastern-japan-1787494728"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-eastern-japan-1787494728</id>
            <summary type="text">ஜப்பானின் கிழக்கு&amp;nbsp;&amp;nbsp; தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில்&amp;nbsp;5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் கிழக்கு&nbsp;&nbsp; தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில்&nbsp;5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>ஜப்பானின் இப்பாராகி பிராந்தியத்தில் சுமார் 70
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுனாமி குறித்த எச்சரிக்கை</h2><p><span style="color: inherit;">எனினும் குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த எச்சரிக்கை இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p><p><span style="color: inherit;">[</span>HY897H<span style="color: inherit;">]</span></p><p>

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான
தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர்
அவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும்,
மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - பொரளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-grenade-attack-on-a-house-1787488607"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-grenade-attack-on-a-house-1787488607</id>
            <summary type="text">கொழும்பு பொரளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் மீது&amp;nbsp;கைக்குண்டுத் வீச்சு நடத்தப்பட்டதாக காவல்துறையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பொரளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் மீது&nbsp;கைக்குண்டுத் வீச்சு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையில் வசிக்கும் ரன்சிலு என்பவரின் வீட்டின் மீதே கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>ரன்சிலு என அழைக்கப்படும் நபர், தற்போது துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான வானாத்தே சத்து என்பவரின் நெருங்கிய சகாவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>வீசப்பட்ட கைக்குண்டு</h2><p>
</p><p>
எனினும், வீட்டின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45710e77-f525-49e6-b7e0-9c9d0f367e9b/26-6a8aed5157869.webp' /></p><p> </p><p>மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தக் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T13:03:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோர விபத்து : இளம் பொறியியலாளர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fatal-accident-in-jaffna-young-engineer-dies-1787484225"></link>
            <id>https://ibctamil.com/article/fatal-accident-in-jaffna-young-engineer-dies-1787484225</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி&amp;nbsp;இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இந்த விபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி&nbsp;இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>விபத்தில்&nbsp;யாழ்ப்பாணம் – கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொறியியலாளரான கந்தசாமி கோகுலதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92747eb-8594-41dd-a63e-060703250596/26-6a8ad92aa548a.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T12:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடையறியா உறவுகளின் வடுக்களை சுமக்கும் கனேடிய புலம்பெயர்ந்தோர்! விஜய் தணிகாசலதின் செம்மணி அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-tamils-carry-the-scars-of-relation-1787478571"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-tamils-carry-the-scars-of-relation-1787478571</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கான கோரிக்கையையும் வலுப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

செம்மணி என்பது தனித்தவொரு மீறல் சம்பவம் அல்ல. மாறாக இது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோத படுகொலைகள் மற்றும் இனவழிப்பு என்பவற்றுக்கான பரந்துபட்ட சான்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் மேலும் தெரிவிக்கையில், 
 

“இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I remain horrified by the continued discoveries of mass graves in Chemmani, and the tragic stories of those murdered at the hands of the Sri Lankan state. As of today, nearly 600 sets of human remains have been exhumed, including the remains of infants and children. <br><br>Chemmani… <a href="https://t.co/GW8OltZJPd">https://t.co/GW8OltZJPd</a> <a href="https://t.co/O3FwLqzVb6">pic.twitter.com/O3FwLqzVb6</a></p>&mdash; Vijay Thanigasalam (@TheThanigasalam) <a href="https://x.com/TheThanigasalam/status/2090862868589666673?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>மரபணு மாதிரிகள்</h2><p> </p><p>எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8be7b0-0af2-4a6a-bd49-611f53e42970/26-6a8ac6ec8ea60.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப்புதைகுழியில் தொடர்ந்து கண்டறியப்படும் மனித எச்சங்கள் மற்றும் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் கதைகள் குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியடைகிறேன்.</p><p> தற்போதுவரை குழந்தைகள் மற்றும் சிறுவர்களது எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக சுமார் 570 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p></p><h2>சுயாதீன சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக எனது தொகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவொரு கடந்தகாலத் துயரம் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01d03ae-22fa-4210-a8db-2e42f8595916/26-6a8ac6ed42c31.webp' /></p><p> பெரும்பாலானோர் தமது காணாமல்போன அன்புக்குரியவர்கள் பற்றிய துயரத்தையும், இன்னமும் விடை கிடைக்காத கேள்விகளையும் சுமந்துகொண்டே கனடாவுக்கு வந்தனர்.

இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது. </p><p>மாறாக சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், இச்செயன்முறைகள் தடயவியல் நிபுணர்கள் ஊடாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T11:14:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை வெனிசுலாவாக மாற்ற திட்டமிடும் அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-wants-iran-to-become-venezuela-1787481176"></link>
            <id>https://ibctamil.com/article/trump-wants-iran-to-become-venezuela-1787481176</id>
            <summary type="text">ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அறிவித்துள்ளார்.
</p><p>பொருளாதாரம், இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான போரை ஈரான் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த விடயம் குறித்து&nbsp;பெஷெஷ்கியனை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,&nbsp;</p><p></p><h2>ஈரானின் தற்காப்பு வியூகம்</h2><p>அமெரிக்கா ஈரானை வெனிசுலாவாக மாற்ற விரும்பினார்கள். அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது. மாறாக, ஈரான் தனது மீள்திறன், ஒற்றுமை மற்றும் உள் ஒருங்கிணைப்பின் மூலம் உலகை வியப்பில் ஆழ்த்தும் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236e32ea-2343-4226-8f53-0141c25e33d3/26-6a8ace8d9ad67.webp' /></p><p>ஈரானிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வெளிவந்துகொண்டிருந்த மேலும் உறுதியான அறிக்கைகள் இவற்றை பிரதிபலித்துள்ளன.</p><p>
மோதலின் போது ஈரானின் தற்காப்பு வியூகம் குறிப்பிடத்தக்க அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.</p><p>இன்றைய ஈரான், போருக்கு முந்தைய ஈரான் அல்ல. இந்த மோதலின் விளைவாக அமெரிக்கா மீதான கண்ணோட்டங்களும் மாறியுள்ளன .</p><p>அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் என்று ஈரான்&nbsp; விவரிக்கும் செயல்களுக்கு, ஈரானிய குடிமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையோ அல்லது வாழ்வாதாரங்களோ இலக்காகுவதை அரசாங்கம் அனுமதிக்காது” என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T11:12:50+00:00</updated>
        </entry>
    </feed>
