<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-08T10:14:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி மீது கோரத்தாண்டவமாடிய ஹவுதிகள் : ஏவுகணை தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthi-attacks-injure-73-civilians-in-saudi-1788860471"></link>
            <id>https://ibctamil.com/article/houthi-attacks-injure-73-civilians-in-saudi-1788860471</id>
            <summary type="text">தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை குறிவைத்து யேமனின் ஹவுதி குழு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 73 பொதுமக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை குறிவைத்து யேமனின் ஹவுதி குழு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்ததாக யேமனில் உள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி செவ்வாயன்று கூறியது.</p><p>வெளியிடப்பட்டஒரு அறிக்கையில், அப்ஹா, கமிஸ் முஷைத், ஜசான் மற்றும் நஜ்ரான் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொருளாதார வசதிகள் மீது யேமனின் ஹூதி குழு நடத்திய தாக்குதல்களை சவூதி வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.&nbsp;</p><h2>சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட தகவல்</h2><p>தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு தீ விபத்துகள் ஏற்பட்டதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Houthis are reportedly firing ballistic missiles and drones at Saudi oil facilities and King Khalid Air Base <a href="https://t.co/sGSdPIZ6lz">pic.twitter.com/sGSdPIZ6lz</a></p>&mdash; Anadolu English (@anadoluagency) <a href="https://x.com/anadoluagency/status/2097124258719674398?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
குறிவைக்கப்பட்ட நிலையங்களில் சில செயல்பாடுகள் இந்தத் தாக்குதல்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.
</p><p>
"சிறப்புக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியையும், பாதிக்கப்பட்ட இடங்களைப் பாதுகாக்கும் பணியையும் தொடங்கியுள்ளன," என்று அது தெரிவித்தது.</p><p></p><h2>தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஹவுதி</h2><p>&nbsp;இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியா மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதை ஏமனின் ஹவுதி குழு செவ்வாயன்று உறுதிப்படுத்தியதுடன், அந்த நாட்டின் உட்பகுதிகளில் தனது நடவடிக்கைகளைத் தொடரப்போவதாகவும் சூளுரைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe266b74-e74d-41fc-ab6f-dacd8f4a3c7a/26-6a9fdf233dbf1.webp' /></p><p>
</p><p>
ஒரு அறிக்கையில், ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தங்கள் குழு ஒரு "பெரிய அளவிலான" இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறினார்.</p><p>



இந்தத் தாக்குதல்கள் "துல்லியமானவை மற்றும் நேரடியானவை" என்றும், குறிவைக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் சரீ குறிப்பிட்டார்.
</p><p>

ஏமனில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T10:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு மிக குறைவு: வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-storage-major-reservoirs-dropped-34-percent-1788854497"></link>
            <id>https://ibctamil.com/article/water-storage-major-reservoirs-dropped-34-percent-1788854497</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் தற்போது காணப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 34 வீதமாகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் தற்போது காணப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 34 வீதமாகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த 24 மற்றும் 48 மணித்தியாலங்களில் மாத்தறை, காலி, மேல் மாகாணம், வடமேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர்4, “சில பகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துள்ளதுடன், நேற்று அதிகபட்சமாக சுமார் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதுளை பகுதியில் பதிவாகியுள்ளது.</p><p></p><p> </p><h2>வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு&nbsp;</h2><p>அத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளில் 25 முதல் 30 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9478bc-df7e-44cf-810e-ff505ae8816c/26-6a9fd3338c18a.webp' /></p><p>
</p><p>
வறண்ட வலயத்தின் சில பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. குறிப்பாக, மாதுரு ஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்துள்ளது.</p><p>

எனினும், இந்த மழைவீழ்ச்சியுடன் பிரதான ஆறுகளின் நீர்மட்டங்களில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் பதிவாகவில்லை எனவும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களிலும் பெரியளவிலான அதிகரிப்பு ஏற்படவில்லை.
</p><p>
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று (08) ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

மேலும், எதிர்வரும் பெரும்போகத்திற்காக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி கிடைக்கும் என” எதிர்பார்ப்பதாகவும் பொறியியலாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய தேரருக்கு 11ஆம் திகதி வரை விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remand-for-ampitiya-thero-until-the-11th-1788857910"></link>
            <id>https://ibctamil.com/article/remand-for-ampitiya-thero-until-the-11th-1788857910</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும்
11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும்
11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள்
பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த உத்தியோகத்தர்களின்
கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால்
நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுமனரத்ன தேரர்
இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32624e05-e7c0-41b9-b922-95cfbd89a689/26-6a9fcecd804d2.webp' /></p><p>இந்நிலையில், நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் அ.தர்சினி முன்னிலையில் இவ்வழக்கு
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்துள்ளார்.
</p><p>
அரச அலுவலகம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச அதிகாரிகளுக்கு
அச்சுறுத்தல் விடுத்தமை,அரச கடமையினை ஆற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தியமை போன்ற
குற்றச்சாட்டுகள் தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T09:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தில் அதிகரித்துள்ள ஆயுத மோதல்களின் ஆபத்தான நிலை! சர்வதேசத்துக்கு ஐ.நா அரைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/armed-conflicts-are-increasing-internationally-1788844872"></link>
            <id>https://ibctamil.com/article/armed-conflicts-are-increasing-internationally-1788844872</id>
            <summary type="text">இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் அண்மையகாலத்தில் உலகம், அரசுகளுடன் தொடர்புடைய மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் அண்மையகாலத்தில் உலகம், அரசுகளுடன் தொடர்புடைய மிக அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்துவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அத்தோடு, தற்போதைய உலகளாவிய நிலைவரம் மிக ஆபத்தானதாகவும், கவலை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஜெனிவாவில் திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்கா - ஈரான்</h2><p>
</p><p>
அண்மைய சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் ஆயுதமோதல்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் செயற்படாமை மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளின் பிரகாரம் செயற்படுவதற்கான கடப்பாட்டில் ஏற்பட்டுள்ள பலவீனம் என்பன முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாகவும் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36738fba-3866-4f0a-9acc-d1e4eafa4eae/26-6a9fcb8604cbd.webp' /></p><p>

உலகளாவிய ரீதியில் தற்போது குறைந்தபட்சம் ஒரு அரசையேனும் உள்ளடக்கிய 60 க்கும் மேற்பட்ட மோதல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், அரசுகளுக்கு இடையிலான நேரடி மோதல்களில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு சர்வதேச சமூகத்தை மிக ஆபத்தாக பாதையை நோக்கி நகர்த்திச் செல்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் தொடர்பில் கவலை வெளியிட்ட அவர், இந்த மோதல்கள் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பாதிப்பதாகவும், அனைத்து உலகநாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூகோள அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளைத் தோற்றுவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் இந்த மோதல்களால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் தவிர்க்கப்படக்கூடியவை என்றும், சம்பந்தப்பட்ட அரசுகள் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நோக்கி உடனடியாகத் திரும்பவேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T08:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-allegations-against-the-govet-in-parliament-1788856454"></link>
            <id>https://ibctamil.com/article/namal-allegations-against-the-govet-in-parliament-1788856454</id>
            <summary type="text">சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து&amp;nbsp;அரசாங்கமம் பாரிய&amp;nbsp;வருமானத்தை ஈட்டிருக்கும்&amp;nbsp;என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து&nbsp;அரசாங்கமம் பாரிய&nbsp;வருமானத்தை ஈட்டிருக்கும்&nbsp;என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இதன்போது மேறும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>அபிவிருத்தி எட்டாத பாதை</h2><p>“இன்றும் கூட தேர்தலுக்கு முன்னர் கூறிய எந்த விடயத்தையும் தற்போதைய அரசாங்கம் சரியாக செயற்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37af1d57-6d4c-41a1-b1b9-0ab07a82a01a/26-6a9fca7b6e8bf.webp' /></p><p>குறிப்பாக அபிவிருத்தி எட்டாத பாதையில் சரிவராத நடைமுறையுடன் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.</p><p>கிராமப்புரங்களில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். விவசாயிகள் பாரியளலவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அத்தோடு எல்நினோவிற்கு முன்னர் நீர் பாவனை குறித்து சரியாக இந்த அரசாங்கம் சிந்திக்கவில்லை. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விவசாயிகளுக்கு சரியான மானியத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை.&nbsp; நெல்லானது குறைந்த விலைக்கே இன்றும் கொள்வனவு செய்யப்படுகிறது.</p><p>மேலும், டிட்வாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து என்னனமோ பேசிய ஜனாதிபதியை நினைவிருக்கின்றதா. அதந்கும் கூட சரியான தீர்வுகளை இந்த அரசாங்கத்தால்&nbsp; வழங்கப்படவில்லை” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T08:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் போர்க் குற்றவாளி இல்லவே இல்லை...! சர்வதேச ஊடகத்திடம் சென்று இப்படி கதறும்சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/im-not-a-war-criminal-shavendra-silva-1788840173"></link>
            <id>https://ibctamil.com/article/im-not-a-war-criminal-shavendra-silva-1788840173</id>
            <summary type="text">இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.</p><p>
</p><p>குறித்த விடயத்தை சவேந்திர சில்வா இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.</p><p>தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொதுமக்கள் உயிரிழப்பு</h2><p>இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba6f1233-64b0-4ec5-a65c-5c490830813f/26-6a9fafbd10660.webp' /></p><p>2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும்&nbsp;சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>சவேந்திர சில்வா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பது உண்மைதான், ஆனால் சர்வதேச ரீதியாக அவர் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>அவர் கூறுவது போல அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பது எந்த வகையில் உண்மையாகும்.</p><p></p><h2>சவேந்திர சில்வா வழிநடத்திய இராணுவப் பிரிவு&nbsp;</h2><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சவேந்திர சில்வா மற்றும் அவர் வழிநடத்திய இராணுவப் பிரிவு (58ஆம் பிரிவு) மீது பல குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக பதிவு செய்துள்ளன. </p><p>அவை இன்றும் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமலாக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய ஆதாரமாகின்றது.</p><p>

நம்பகமான ஆதாரங்கள் 
 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில், சரணடைய வந்தவர்களை சட்டவிரோதமாகக் கொன்றது (Extrajudicial killings), சித்திரவதை செய்தது மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்கியது போன்ற தீவிரமான மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வாவின் படைப்பிரிவுக்குப் பொறுப்பு இருப்பதாக ஐ.நா விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. </p><p>

இந்த குற்றச்சாட்டுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அமெரிக்கா 2020இல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதித்தது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">வல்லரசுகளின் தடை</span></h2><p>

 பிரித்தானிய அரசும் (UK) 2025ஆம் ஆண்டில் அவர் மீது பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்ற தடைகளை விதித்தது.

அவர் சரணடைய முயன்ற தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டார் மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினர் சட்டவிரோதக் கொலைகளைச் செய்தனர் என பிரித்தானியாவின் தடைக்கான காரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c40261-a417-447a-b40e-a2d7ae48450b/26-6a9fc4d2e6574.webp' /></p><p>2020 இல் அமெரிக்காவும், 2025 இல் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான அடிப்படைக் காரணங்களைத் தான் தொடர்ந்து கேட்டு வருவதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். </p><p>ஒரு நாட்டின் இராணுவ தளபதி மீது உலகின் வல்லரசு நாடுகள் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கங்களை விதிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல.</p><p>சர்வதேச சட்டங்களின்படி, நம்பகமான மற்றும் தீவிரமான மனித உரிமை மீறல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இத்தகைய 'மகிந்த்ச்கி பாணி' (Magnitsky-style) தடைகள் விதிக்கப்படுகின்றன. </p><p>சவேந்திர சில்வா தனக்குக் காரணம் தெரியவில்லை என்று கூறுவது, இந்தத் தடைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அழுத்தங்களையும், உலக நாடுகள் இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் (Accountability) செயல்முறையின் மீது வைத்துள்ள அதிருப்தியையும் மறைக்க முயலும் ஒரு அரசியல் உத்தியாகவே தெரிகிறது.</p><p>இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழலில், சவேந்திர சில்வா போன்ற இராணுவத் தலைவர்கள் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்ட 'யுத்த நாயகர்களாகவே' (War Heroes) பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகிறார்கள். </p><p>ஆனால், சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் மனித உரிமைகளை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p><p>இந்த நேர்காணலின் மூலம், உள்நாட்டில் தமக்கிருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சர்வதேசக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும் என்ற ஒரு பிம்பத்தை சவேந்திர சில்வா கட்டமைக்க முயல்கிறாரா என்ற கேள்வி எழுவதாக தோன்றுகிறது.</p><p> ஆனால், அவர் சர்வதேச நீதிமன்றங்களை எதிர்கொள்ளத் தயார் என்று கூறினாலும், இலங்கை அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணைகளுக்கும் இடமளிக்கவில்லை என்பது இங்கு உற்றுநோக்கத்தக்கது.</p><p>
</p><p>
சுருக்கமாகக் கூறின், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என சவேந்திர சில்வா தொடர்ந்து மறுத்து வந்தாலும், சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபை அவர் மீது மிக முக்கியமான போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தடைகளை விதித்துள்ளன என்பதே நிதர்சனம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்பட இசை வெளியீட்டு விழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-tamil-movie-audio-launch-event-jaffna-1788854853"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-tamil-movie-audio-launch-event-jaffna-1788854853</id>
            <summary type="text">ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

யாழ்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
</p><p>
இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் <b>070 341 4565</b> என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் 
தாங்களும் கலந்து கொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.</p><p>இதேவேளை ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 பேர் : பிரதமர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recruitment-of-23-000-teachers-in-sl-pm-harini-1788850553"></link>
            <id>https://ibctamil.com/article/recruitment-of-23-000-teachers-in-sl-pm-harini-1788850553</id>
            <summary type="text">நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;டிஜிட்டல் பொருளாதார அமைச்சு</h2><p>அத்துடன் பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f3e7aa-a49e-4802-8b83-87d3968a1f72/26-6a9fba151ffc4.webp' /></p><p>
</p><p>
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்மானம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chartered-institute-of-media-professionals-bill-1788845762"></link>
            <id>https://ibctamil.com/article/chartered-institute-of-media-professionals-bill-1788845762</id>
            <summary type="text">இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08) அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

எனவே, இதனை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>சபாநாயகரின் உத்தரவு&nbsp;</h2><p>

எனினும், உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளவாறு அந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a07969e-c31c-4053-bc17-91f72e0b05a2/26-6a9fb418f2599.webp' /></p><p>
</p><p>
மேலும், சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி, உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அறிக்கையில் (ஹன்சார்ட்) அச்சிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது.</p><p> இலங்கையின் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உயரிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவதையும் அதனைப் பேணி வருவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் பரிவர்த்தனையில் மகிந்தவுக்கான தொடர்பு! ஐ. நா சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-s-involvement-in-airbus-deal-un-report-1788849269"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-s-involvement-in-airbus-deal-un-report-1788849269</id>
            <summary type="text"> பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அதன் தொடர்பு குறித்து&amp;nbsp;ஐக்கிய நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p> பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அதன் தொடர்பு குறித்து&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சிறப்பு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p>மேலும்,&nbsp;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் குறித்தும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp;</p><p></p><h2>இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை&nbsp;</h2><p>இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை, இன்று (08.09.2026) அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82820b5-1cd2-4ac4-95b4-968e3b7ca309/26-6a9fb20ba88ea.webp' /></p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 63வது அமர்வின் போது இந்தச் சமர்ப்பிப்பு நடைபெறவுள்ளதாக&nbsp;தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் பரந்த மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த மிகச் சமீபத்திய மதிப்பீட்டை இந்த அறிக்கை சபைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகம் வெளியிட்ட ஒரு முன்கூட்டிய அறிக்கை, இலங்கையின் வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியானது, ஊழல் மற்றும் மோசடியால் தூண்டப்பட்ட மனித உரிமைகள் சவால்களுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18db856f-e793-486e-a289-73ecf028994c/26-6a9fb5cf3ff45.webp' /></p><p>

அதன் விளைவாக, நாட்டின் வருவாயில் மிகக் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே சமூக நலச் செலவினங்களுக்காகக் கிடைத்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.</p><p>மேலும், பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான அதன் தொடர்பு குறித்தும், அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T07:08:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/narcotics-worth-5-million-were-seized-at-airport-1788848882"></link>
            <id>https://ibctamil.com/article/narcotics-worth-5-million-were-seized-at-airport-1788848882</id>
            <summary type="text">5 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த வெளிநாட்டு விமானப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த வெளிநாட்டு விமானப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த இருவரும் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள “பசுமைப் பாதை” ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து பிரஜைகள் எனவும், அவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் இறைச்சி வெட்டுபவர்களாக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>“குஷ்” போதைப்பொருள்&nbsp;</h2><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி&nbsp;5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a797ec7b-9c69-4fb1-b2ec-be860f35577e/26-6a9fb35e3370b.webp' /></p><p>

அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, வைட்டமின்கள் அடங்கியதாகக் குறிப்பிடப்பட்ட 16 கொள்கலன்களுக்குள் 4 கிலோ 496 கிராம் “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

மேலும், 641 கிராம் “ஹஷீஷ்” போதைப்பொருள், வெளிப்புறத்தில் திராட்சைப் பாகு போன்று தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, பொலித்தீன் மூலம் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் 31 சதொச நிலையங்களுக்கு பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/31-lanka-sathosa-outlets-closed-between-jan-1788850557"></link>
            <id>https://ibctamil.com/article/31-lanka-sathosa-outlets-closed-between-jan-1788850557</id>
            <summary type="text">2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.</p><p>குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தற்போது நாடு முழுவதும் 424 சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சதொச நிறுவனம் ரூ.24 பில்லியன் நட்டத்திலும், ரூ.11 பில்லியன் கடனிலும் இருந்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e93447d-7c7f-4ca7-991e-f722de47fbe2/26-6a9fb405c636a.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hc-postpones-case-involving-shiran-basik-1788847245"></link>
            <id>https://ibctamil.com/article/hc-postpones-case-involving-shiran-basik-1788847245</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போதைப்பொருள் தொடர்பான இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p></p><h2>மத்திய குற்றவியல் விசாரணை பணியகம்</h2><p> 

இதன்போது, காவல்துறை மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcd9ab4e-5573-4a19-97a7-a3ebe5dfaa21/26-6a9faf9abc11f.webp' /></p><p>இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்த முக்கிய 5 கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படுவதும், சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுமான மொஹமட் ஷிரான் பாசிக், டுபாயில் இருந்து கடந்த 14ஆம் திகதி இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் கடந்த மே 26ஆம் திகதி டுபாய் பாதுகாப்புப் படையினரால் அந்நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:46:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570"></link>
            <id>https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570</id>
            <summary type="text">2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாளை (09) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த விடயத்தை சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான நெருக்கடிகள்</h2><p>அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613e5961-22c0-4051-88ce-7c37746cddc1/26-6a9faba1e4a08.webp' /></p><p> 

அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை என்பன கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது 2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>

ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதாகக் கூறிய போதிலும், புதியவற்றை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதுடன், இதற்கு நிலையான தீர்வு அவசியமானது என்றும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் ஒப்பந்த விவகாரம்: சமல் ராஜபக்சவிடம் ஒரு மணி நேர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086"></link>
            <id>https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (C...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.</p><p>அந்த ஆணைக்குழுவில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இன்று (08) காலை சுமார் 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வளாகத்திற்கு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><u>ராஜபக்சாக்களுக்கு தொடரும் நெருக்கடி : சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை</u></h5><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று (08) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எயார்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;எயார்பஸ் விமானக் கொள்வனவு</h2><p>இதேவேளை எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (04) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200a5598-b108-4736-984d-363c144ac9a9/26-6a9f99772df1f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1788844279"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1788844279</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08.09.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08.09.2026) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தினை அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

</p><p></p><h2>தங்க விலை</h2><p>
</p><p>
நேற்று (07) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 377,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38374ffb-31ad-4da4-aa73-5f16b570cc03/26-6a9fa7666a88d.webp' /></p><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:13:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சிறப்பு விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-north-sub-divisional-secretariat-case-1788847203"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-north-sub-divisional-secretariat-case-1788847203</id>
            <summary type="text">கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே தவிர, அவர் பிரதேச செயலாளர் அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த
நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர்
முன்னிலையில் நேற்று (07) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p>கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல்
செய்யப்பட்ட எழுத்தாணை மனுவுடன் (WRT/645/23), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தவராசா கலையரசனின் மனு (WRT/67/23) மற்றும் ஏ.எம். நஸீரின் மனு ((WRT/300/18)
ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>கலையரசனின் மனு</h2><p>
</p><p>
கலையரசனின் மனுவில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf59367-9db4-42cc-bbe9-240798831ebc/26-6a9fa6c2d8443.webp' /></p><p>

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா முன்னிலையாகிய நிலையில்,
கலையரசனின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுமார் ஒரு
மணி நேரத்திற்கும் மேலாகத் தனது சட்ட வாதங்களை முன்வைத்தார்.
</p><p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி பிரதேச செயலாளர் அல்ல. மாறாக அவர் ஒரு உப பிரதேச செயலாளர் (ADS) மட்டுமே.</p><p>
எனவே, பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையோ அல்லது பதவிக்
குறியீடுகளையோ அவர் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என
மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><h2>சட்டமா அதிபர் திணைக்களம்</h2><p>விசாரணையின் போது, 5ஆவது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம்
நிலைப்பாட்டைக் கேட்டறிந்தபோது, அவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே
என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a53763-a180-4832-92da-4952d6365c60/26-6a9fa6c38df4a.webp' /></p><p> </p><p>இதனைத்
தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணியும், இதுவே அரசின்
நிலைப்பாடும் ஆகும் என உறுதிப்படுத்தினார்.
</p><p>
அரச அதிகாரியாக இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக
முன்னிலையாகுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், அவர் தனக்காகத் தனிப்பட்ட (Private)
சட்டத்தரணி ஒருவரையே நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
வழக்கின் இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026
ஆகிய தினங்களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அரச சீருடையுடன் மது அருந்திய வனப்பரிபாலன சபை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-department-handed-liquor-anti-corruption-1788846267"></link>
            <id>https://ibctamil.com/article/forest-department-handed-liquor-anti-corruption-1788846267</id>
            <summary type="text">அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை&amp;nbsp; வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை&nbsp; வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த இருவரும் திணைக்கள சீருடையில், அரச வாகனத்தில் மாவட்ட புதிய செயலகத்துக்குச் செல்லும் வழியில் பாலமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் வைத்து மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பின்னர் அவர்கள் மதுபோதையில் அரச வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும், இது வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மட்டக்களப்பு ஊழல் மோசடி</h2><p>
</p><p>
எனவே, அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், அதனை மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குறித்த இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f2e318-4bdb-4d38-b4df-4f3686633dd3/26-6a9fa56047297.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைப்பேருந்தில் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்ட நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170"></link>
            <id>https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FYtMH7SJMOY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>மேலும், அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><u><b>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி - தொடரும் சலுகைகள்</b></u></p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்சவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

&nbsp;</p><p></p><h2>பிரேரணை&nbsp;</h2><p>செப்டெம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6791eea8-f556-4da3-a9b3-2f85acee3380/26-6a9f70c4ee542.webp' /></p><p>இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது</p><p>இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p> 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><h2>வீட்டில் இருந்து உணவு</h2><p>இதேவேளை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1bd66e0-4f07-49ad-92a9-fb2d21d8c2ab/26-6a9f70c5b1067.webp' /></p><p>அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kataragama-chief-monk-in-matala-accident-1788842082"></link>
            <id>https://ibctamil.com/article/kataragama-chief-monk-in-matala-accident-1788842082</id>
            <summary type="text">அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>இந்த விபத்து நேற்று (07.09.2026) இரவு&nbsp; 9.00 மணியளவில் மத்தளை மத்தளை பகதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
வீதியில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டுடன் வாகனம் மோதியதையடுத்து, வாகனம் கவிழ்ந்து வீதியை விட்டு விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர்&nbsp;</h2><p>

எனினும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு காற்றுப் பைகள் (Airbags) செயற்பட்டதன் காரணமாக விகாராதிபதி தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d52ccd-9da1-4529-aad2-4eb3044f2828/26-6a9f9ac672420.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/never-share-ur-bank-account-details-with-outsiders-1788838557"></link>
            <id>https://ibctamil.com/article/never-share-ur-bank-account-details-with-outsiders-1788838557</id>
            <summary type="text">பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>

இதன்படி மோசடிக் குழுக்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாடகைக்கு பெறப்பட்ட அல்லது பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பிறருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் ஊடாக பரிமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் மற்றும் தரகு பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>இரகசிய வங்கித் தகவல்கள்</h2><p>
</p><p>இதன் பின்னர், குறித்த கணக்குகளுக்கு ஒரு தொகைப் பணத்தை வரவு வைத்து கணக்கு உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் குழுக்கள், அதன் பின்னர் அவர்களின் PIN இலக்கம் உள்ளிட்ட இரகசிய வங்கித் தகவல்களை தந்திரமாகப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d561d2d-3788-4d6f-aa1a-62ee9cad07c7/26-6a9f8f0c9c5da.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் வங்கிக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பாரிய நிதிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>
மேலும், தங்களது வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைத்து மோசடிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பலர் சட்டத்தின் முன் சிக்கியுள்ளள்ளனர்.&nbsp;</p><p>வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளுமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை வெளியிட்டு, இந்த மோசடிகளுக்காக நபர்களை இணைத்துக்கொள்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை</h2><p>

குறித்த மோசடிக் குழுக்கள், தாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுடன் தொடர்பு கொண்டு செயற்படுவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3421d1c0-d527-452d-84df-4e345672e9b3/26-6a9f8f0bce723.webp' /></p><p>
பின்னர், குறித்த வங்கிக் கணக்கு விபரங்கள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஊடாக வெளிநாடுகளில் உள்ள மோசடிக் குழுக்களின் கைகளுக்குச் செல்வதாகவும், அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு நிதிக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்&nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.&nbsp;</p><p>
இவ்வாறான நடவடிக்கைகளில் உள்நாட்டு வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசடிகளுக்கு உதவி செய்தவர்களாகக் கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>

எனவே, எந்தவொரு காரணத்திற்காகவும் தமக்குச் சொந்தமான வங்கிக் கணக்கை வெளிநபர்கள் அல்லது வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைப்பதன் மூலம் இணையவழி பண மோசடிகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக, எவ்வித தொடர்பும் இல்லாத நபர்களும் சட்டத்தின் முன் தண்டனை பெற நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட போக்குவரத்து திட்டம் : கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-in-colombo-rajnathsingh-visit-1788839389"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-in-colombo-rajnathsingh-visit-1788839389</id>
            <summary type="text">கொழும்பில் இன்று (08) முதல் நாளை மறுதினம் (10) வரை ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இன்று (08) முதல் நாளை மறுதினம் (10) வரை ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முன்னிட்டு இந்த விசேட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் நகரின் வழியாகப் பயணிக்கும் காலங்களில், போக்குவரத்து அவ்வப்போது மற்றும் வழித்தடம் வாரியாகக் கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போக்குவரத்து கட்டுப்பாடுகள்&nbsp;</h2><p>அதன்படி, இன்று பிற்பகல் 1:30 மணி முதல், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை வழியாக, கொழும்பு துறைமுகப் பகுதி வழியாக, மற்றும் அங்கிருந்து என்.எஸ்.ஏ. வட்டச்சந்தி வழியாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1a7ec2-0579-421e-a9db-418e7a9f9944/26-6a9f8ff4aa287.webp' /></p><p>இந்த வீதி கட்டுப்பாடுகளால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கொழும்பு போக்குவரத்து பிரிவு, பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&amp;nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அதற்கமைய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்</h2><p>இந்த நிலையில் பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda01029-62b6-4064-950b-8a96b1ba3a51/26-6a9f7ed50dbfa.webp' /></p><p>இதேவேளை 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற நிலையில்&nbsp;289,867 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.</p><p>இம்மாதம் 02ஆம் திகதி வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1788841062"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1788841062</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(08.09.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(08.09.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை&nbsp;மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளன.</p><p>இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hLCrh4Zh1Hw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/murder-of-retired-army-soldier-cid-arrests-wife-1788836234"></link>
            <id>https://ibctamil.com/article/murder-of-retired-army-soldier-cid-arrests-wife-1788836234</id>
            <summary type="text">கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக&amp;nbsp; உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக&nbsp; உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய - கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf027e6-5820-422e-b51a-d101c6e754eb/26-6a9f8c2acff94.webp' /></p><p>இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:16:48+00:00</updated>
        </entry>
    </feed>
