<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T15:13:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608"></link>
            <id>https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p>
வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5567a31e-b432-43ad-b249-869f2e3487dd/26-6aa957b7a2d59.webp' /></p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>
</p><p>
தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.</p><p>
</p><p>
இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T14:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.</p><h2>விமானங்கள்,ட்ரோன்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அழிப்பு</h2><p>அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன.


சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6b6045-ff59-41f9-b07e-a4d6a45cbda9/26-6aa95483df116.webp' /></p><p> துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p></p><h2>முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை&nbsp;</h2><p>
</p><p>

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b90e7a-1f08-46d4-be87-a5b52271dde0/26-6aa95484972dd.webp' /></p><p> </p><p>இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855"></link>
            <id>https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
</p><p>
சந்தேக எண்கள் 61 முதல் 81 வரை பெயரிடப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பிற்காக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு&nbsp;</h2><p>&nbsp; அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக 25 பெண் சந்தேக நபர்களையும் முற்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109a8f7e-aef8-4625-92f2-caa60ca29784/26-6aa9493d2650f.webp' /></p><p>

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை கோரியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சந்தேக நபர்களாக 106 பேர்</h2><p>அதன்படி, இதுவரை 106 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,மேலும் 81 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக முற்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb1d520-766a-486f-942f-5ebe3bb0a850/26-6aa9493dd1c09.webp' /></p><p>

நீர்கொழும்பு தலைமை நீதிபதி ஷீலானி பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், 30 சந்தேக நபர்கள் (சந்தேக எண்கள் 31 முதல் 60 வரை) முற்படுத்தப்பட்டு, சாட்சிகளாக ஆஜரான சிறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460"></link>
            <id>https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460</id>
            <summary type="text">
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்துள்ளார்.
</p><p>
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா என்பவரே இவ்வாறு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மல்யுத்தப் போட்டிகள்</h2><p>அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டிகள்
பண்டாரவளை கினிஹம உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இதில்
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா, 48 - 50 கிலோ கிராம் நிறைப்பிரிவில் தங்கப்பதக்கத்தைக்
கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T13:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமது அரசில் ஊழல் செய்தவர்களை ஜனாதிபதிக்கு தெரியாதாம் கூறுகிறார் சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-is-unaware-of-those-engaged-in-corruption-1789475008"></link>
            <id>https://ibctamil.com/article/anura-is-unaware-of-those-engaged-in-corruption-1789475008</id>
            <summary type="text">&amp;nbsp;ராஜபக்‌சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ராஜபக்‌சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.</p><p>&nbsp;ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக தனது கண்களை மறைத்து கட்டியுள்ள துணியில் ஓட்டை இருப்பதாக கூறிய அவர் அதன் காரணமாக கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது எனசாகர காரியவசம் தெரிவித்தார்.</p><h2>சாதாரண விடயங்களுக்கே வழக்கு பதிவு</h2><p>
</p><p>

முழு நாட்டையும் கொள்ளையடித்தாக கூறி சேறு பூசிய ஜனாதிபதி தற்போது கெரன் போர்ட் விநியோகித்தமை , சோறு பார்சல் விநியோகித்தமை போன்ற விடயங்களுக்கே வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e8394-cbbc-4f61-8915-1f5b70cb79d7/26-6aa941be46bef.webp' /></p><p>
</p><p>

பில்லியன் கணக்கில் நாட்டை கொள்ளையடித்தாக கூறிய விடயங்கள் தற்போது எங்கே என அவர் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillaiyan-and-two-others-remanded-further-1789476101"></link>
            <id>https://ibctamil.com/article/pillaiyan-and-two-others-remanded-further-1789476101</id>
            <summary type="text">
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (15) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.</p><p>
2008 ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்தமை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொன்றமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிள்ளையானின் கைது</h2><p>
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e56073-9a97-4592-8250-70b19e75d1fa/26-6aa940d9807ee.webp' /></p><p>
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தினர்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
இதன்போது, சிஐடியினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு எதிராக சமர்பணம் முன்வைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e0c4b9-8610-44b0-9cda-1f733659a3ba/26-6aa940da40d6e.webp' /></p><p>

இதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பாக முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம் பிள்ளையானுக்கு சிறையில் வழங்கும் உணவு தொடர்பாகவும் அவரது தாயார் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு கடந்த வழக்கு விசாரணையின் போது அனுமதி கோரியது தொடர்பாக வாதங்களை முன்வைத்தார்.</p><p>
அத்தோடு, நீதவான் சிறைச்சாலை அதிகாரியை அழைத்து பிள்ளையானின் உணவு மற்றும் தாயுடன் தொலைபேசியில் உரையாடுவது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 22 ம் திகதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டதுடன் பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.</p><p>
அதன்படி, லண்டனில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பாயிஸ் என்பவரை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை சர்வதேச காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T12:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கடற்றொழில் சம்மேளனத்தின் அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-fishermen-demand-end-to-illegal-fishing-1789470693"></link>
            <id>https://ibctamil.com/article/north-fishermen-demand-end-to-illegal-fishing-1789470693</id>
            <summary type="text">வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.</p><p>

சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலார்கள் 
சங்கங்களை சேர்ந்தவர்கள் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கடற்தொழிலார்கள்&nbsp;</h2><p>நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலார்கள் தடை செய்யப்பட்ட
வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விருவதாகவும் ஏனைய சிறு தொழில்
கடற்தொழிலார்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் இதன் போது அவர்கள் 
குறிப்பிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409ed240-604b-458c-b509-24e6442f15a1/26-6aa93b3905114.webp' /></p><p>சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும்
சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுவதாலும் அதனை
கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என்றும்
அவர்கள் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:46:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">&amp;nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791"></link>
            <id>https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791</id>
            <summary type="text">
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், நாடு தற்போது ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பையே நம்பியுள்ளது என்றும், இந்த நிலையில் விலைகளை திருத்துவது குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>உலகளாவிய விலை மாற்றங்கள்</h2><p>
</p><p>
தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவர்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மூன்று மாத காலத்திற்குச் சலுகைகளை வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90111092-4335-42e6-b439-ad58c370470b/26-6aa931c3db7c7.webp' /></p><p>
</p><p>
 இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்காக திறைசேரியிலிருந்து மொத்தம் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
</p><p>
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான எதிர்கால முடிவுகள் உலகளாவிய விலை மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறிய அமைச்சர், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கின்றனவா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே அரசாங்கம் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-15T12:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 18 பேரின் உயிரைப்பறித்த 37 துப்பாக்கிசூட்டு சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/37-shooting-incidents-reported-so-far-this-year-1789472637"></link>
            <id>https://ibctamil.com/article/37-shooting-incidents-reported-so-far-this-year-1789472637</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><h2>கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்</h2><p>இந்த ஆண்டு இதுவரை துப்பாக்கிகள் உட்பட 797 ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2025-ஆம் ஆண்டில் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8281288-f8c1-4278-b45b-06e72b9f42c4/26-6aa9338cc454f.webp' /></p><p>

"2026-09-14 நிலவரப்படி, மொத்தம் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 10 வரை, 14 ரி-56 ரக துப்பாக்கிகள், 31 கைத்துப்பாக்கிகள், 25 சுழல் துப்பாக்கிகள் மற்றும் 797 இதர ஆயுதங்கள் உட்பட மொத்தம் 867 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தெஹிவளை சம்பவம்&nbsp;பிரதான சந்தேக நபர் விரைவில் கைது</h2><p> </p><p>2025-ஆம் ஆண்டின் 12 மாதங்களில், மொத்தம் 2,404 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b52efd-7e5e-4ef0-b38e-8ce9775b3fca/26-6aa9338d781ee.webp' /></p><p>
</p><p>
தெஹிவளை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முக்கிய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம்."என மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சாரணர் சங்கத்தின் 11வது தேசிய ஜம்போரி : உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-11th-national-scout-jamboree-1789471995"></link>
            <id>https://ibctamil.com/article/anura-11th-national-scout-jamboree-1789471995</id>
            <summary type="text">இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வின் போது, உத்தியோகபூர்வ இலச்சினையைக் கொண்ட நினைவுச் சின்னம், தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாயக்கக்காரவால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
</p><p>
ஹோமாகம், தியகமவில் 2027ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு</span></p><p>இந்த ஜம்போரியுடன் இணைந்து, இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecdb3c9-753f-47a7-97ad-a79340c5be14/26-6aa931767b1e2.webp' /></p><p> இந்த தேசிய ஜம்போரியில் சுமார் 10,000 உள்ளூர் சாரணர்களும், வெளிநாடுகளிலிருந்து சுமார் 3,000 சாரணர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாதிபதியை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
</p><p>
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொசான கமகே, இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேரா, மன்றக் குழுவின் தலைவர் பொறியியலாளர் கமலநாத் ஜினதாச, ஜம்போரியின் இணை ஏற்பாட்டாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபிசுந்தர மற்றும் பல சிரேஷ்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசங்களில் தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemoration-of-flame-of-sacrifice-vavuniya-1789469565"></link>
            <id>https://ibctamil.com/article/commemoration-of-flame-of-sacrifice-vavuniya-1789469565</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம்
மற்றும்,தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு
தமிழ் தூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம்
மற்றும்,தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு
தமிழ் தூபியில்இன்று அனுஸ்டிக்கபட்டது.
</p><p>
இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவு படத்திற்கு மலர்மாலை
அணிவித்து,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.</p><p>

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,மாநகரசபை முதல்வர்
சு.காண்டீபன்,பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.</p><h4><b>திருகோணமலை</b></h4><p>தியாகத் தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன்
கோயில் முன்றலில் இன்று செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.</p><p>

இதன்போது தீபச்சுடர் ஏற்றப்பட்டு , உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.

இதில் சமுக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கொண்டமை
குறிப்பிடத்தக்கது.</p><h5><b>துயிலுமில்ல வளாகம்</b></h5><p>தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல
வளாகத்தில்

தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல
வளாகத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.</p><p>&nbsp;1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் திகதி முதல் ஜந்து அம்ச கோரிக்கைகளை
முன்வைத்து அகிம்சை வழியில்பன்னிரெண்டு நாட்கள் உண்ணா நேன்பிருந்து உயிர்
நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
இன்று தமிழர்கள்வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p>&nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து
வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட
வேண்டும்.
</p><p>
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள்
அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்படும்
சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் கிராமங்களில் புதிய பொலிஸ் (காவல்) நிலையங்கள் திறக்கப்படுவது
நிறுத்தப்பட வேண்டும்.
</p><p>
போன்ற ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15
ம் திகதி முதல் 26 ம் திகதி வரை நீராகாரம் ஏதுமின்றி தமிழ் மக்களுக்காக உண்ணா
நேன்பிருந்துதனது உயிரை நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன்
ஆரம்பமாகியுள்ளது.</p><p>&nbsp;அந்தவகையில் தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று
தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.</p><p>&nbsp;தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கான சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை
அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள்
சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce75a31a-fc03-42e5-a048-36ca9a4d1a05/26-6aa9297fe3ee2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3965430f-b730-4375-86ef-c84234e094b6/26-6aa92980e9e0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f72b38ef-0353-4973-a6a4-ea1ac3724c48/26-6aa92981a7333.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/karnataka-fridge-blast-fire-four-dead-1789471753"></link>
            <id>https://ibctamil.com/article/karnataka-fridge-blast-fire-four-dead-1789471753</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>

இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.இதனால் மளமளவென வீடு முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. </p><h2>பட்டாசு வெடிப்பதாகவே நினைத்த&nbsp;அயலவர்கள்</h2><p>வீடு ஒரு சிறிய ஷெட் போன்ற அமைப்பில் இருந்ததால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து வெளியே வர வழியின்றி தீ மற்றும் அடர்ந்த புகைக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4aab47-f09d-4f2d-8789-e86ae0f1e8d4/26-6aa92d9b2275b.webp' /></p><p>
</p><p>


விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நகரில் தீவிரமாக நடைபெற்று வந்ததால், குளிர்சாதனப் பெட்டி வெடித்த பெரும் சத்தத்தை அயலவர்கள் முதலில் பட்டாசு வெடிப்பதாகவே நினைத்தனர். </p><p>ஆனால், சில நிமிடங்களிலேயே வீட்டில் இருந்து புகை மூட்டமும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விரைந்து சென்றனர்.



சம்பவ இடத்திலேயே கஜானன் தாமோனே (65), சாரதா தாமோனே (45), பாரதி தாமோனே (50) மற்றும் ரோஷன் தாமோனே (21) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
















</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம்! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-rejects-claims-of-diaspora-funding-to-npp-1789468046"></link>
            <id>https://ibctamil.com/article/govt-rejects-claims-of-diaspora-funding-to-npp-1789468046</id>
            <summary type="text">


தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>


தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது. </p><p>

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, அர்ச்சுனா வெளியிட்ட பொய் அறிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முறையான விசாரணை</h2><p>
</p><p>
அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா சமீபத்தில் உரையாற்றினார் எனக் கூறப்படும் சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இது தொடர்பாகப் காவல்துறையினரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dcbbe27-062f-4a45-8077-bb922fe87aa8/26-6aa92a8109cac.webp' /></p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T11:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் சிறைக்கு செல்வதை எவரும் தடுக்கமுடியாது:எதிரணி எம்.பி உறுதிபட தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944"></link>
            <id>https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944</id>
            <summary type="text">விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p> நாட்டை வங்குரோத்து அடையச் செய்த ராஜபக்சவை 2022ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அமர வைப்பதில் நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலை ஜனாதிபதியாக்கினால் அவர்கள் மக்களே அல்ல</h2><p>2029 ஆம் ஆண்டு நல்ல பிள்ளை என்று கூறி நாமலை ஜனாதிபதியாக்க யாராவது கை ஓங்கினால் அவர்கள் மக்களாக இருக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90770386-92a1-44d6-9f25-8436323fd6b6/26-6aa92753a1ae4.webp' /></p><p>தம்மைப் போல் அல்லாமல் ராஜபக்சாக்களிடம் பணம் இருப்பதால் எந்நேரமும் பேருந்துகளில் மக்களை ஏற்றிக்கொண்டு பேரணிகளை நடத்தலாம் என்றாலும் அதுபற்றி அவ்வளவாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tribute-to-thileepan-39th-event-1789465551"></link>
            <id>https://ibctamil.com/article/tribute-to-thileepan-39th-event-1789465551</id>
            <summary type="text">🛑&amp;nbsp;யாழ் பல்கலைக்கழகம் 
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவே...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑&nbsp;யாழ் பல்கலைக்கழகம் 
</u></b></h5><p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக பிரதான
வளாகத்தில் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>நிகழ்வில் மாணவர்கள் , விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 யாழ் மாநகரசபை</u></b></h5><p>தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின்
மாதாந்த அமர்வில் முதல்வர் வி.மதிவதனி தலைமையில் சபா
மண்டபத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>
முதல்வர் தனது நினைவு கூறல் அஞ்சலி உரையில் அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய
காந்திய வழியில் ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து
தமிழ் இனத்தின் விடுதலைக்காக மன்னுயிறை ஈகம் செய்த லெப்டினன்கேணல் திலீபனின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக
போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர்
நீத்த மாவீரன் இராசையா பார்த்தீபனுக்கு நாம் செய்யும் உணர்வு பூர்வமான
அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

முதலாவது சுடரை முதல்வர் ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பிரதி
முதல்வர், கௌரவ உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.&nbsp;</p><h5><b><u>🛑 பருத்தித்துறை&nbsp;</u></b></h5><p>பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
இன்று காலை 9.55 மணியளவில் ஆரம்பமாகியது.
</p><p>
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான
நினைவுத் தூபியில், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி தலைமையில்
நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிது நேர அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயக
போராளிகள் கட்சியின் தலைவர் ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து
வைத்தார்.
</p><p>
தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போலால் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. </p><p>அதனைத் தொடர்ந்து
பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
</p><p>
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை
உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியை
வெளிப்படுத்தினர்.
</p><p>
நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் துல்லிய தாக்குதலில் புடினின் நம்பிக்கைக்குரிய தளபதி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767"></link>
            <id>https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767</id>
            <summary type="text">ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் (51st Combined Arms Army) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்காகோவ்,உக்ரைன் நடத்திய துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக செப்டம்பர் 14 அன்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p>&nbsp;ஓகஸ்ட் 26 அன்று ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யக் கட்டளை மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்த ஜெனரல் கொல்லப்பட்டார்.
</p><p>
</p><h2>உயிரிழப்பை உறுதிப்படுத்திய உக்ரைன் இராணுவத்தலைமை</h2><p>ஓகஸ்ட் 27 அன்று, உக்ரைனின் இராணுவத் தலைமை (General Staff) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியது. டொனெட்ஸ்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட "கடுமையான இழப்புகள்" குறித்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0427cc8a-347a-45b7-b3f8-2e473269a23c/26-6aa913c66d180.webp' /></p><p>
</p><p>
மில்காகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செய்தியை வெளியிட்ட ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான 'வாஷ்னியே இஸ்டோரி' (Vazhniye Istorii), இது உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட 23-வது ரஷ்ய ஜெனரலாக அவர் இருப்பார் என்று கூறியது.</p><p></p><p>

</p><h2>‘ரஷ்யாவின் வீரன்’</h2><p>ரஷ்ய ஆதரவு பிரச்சாரகரான அனஸ்தேசியா கஷேவரோவா, இந்தத் தாக்குதல் ஒரு துல்லியமான தாக்குதலாகத் தெரிவதாகவும், கட்டளை மையம் இருந்த இடம் குறித்த தகவல் "நமது சொந்த தரப்பிலிருந்தே" கசிந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8290ab9-82a4-4bc5-b692-7d1ea47a5c78/26-6aa913c71e072.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-saley-s-health-status-report-1789465295"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-saley-s-health-status-report-1789465295</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவிக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதனடிப்படையில் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (15.09.2026) பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>சுரேஷ் சலே&nbsp;</h2><p>
சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளராக சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3888cf6b-4d9a-4711-8a73-310635eedd27/26-6aa917d72eac2.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததுடன், ஐவர் கொண்ட வைத்தியக் குழுவுக்கும் தேவையான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையையும் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-archuuna-probed-by-tid-over-ltte-remarks-1789461286"></link>
            <id>https://ibctamil.com/article/mp-archuuna-probed-by-tid-over-ltte-remarks-1789461286</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அண்மையில் அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் பேரணி ஒன்று இடம்பெற்றது.
</p><p>
அந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமநாதன் அர்ச்சுனா ஒருசில கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.</p><p></p><h2>எதிரான விசாரணை</h2><p>

அதனைத் தொடர்ந்து அர்ச்சுனாவின் கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நேற்று கூட்டு எதிர்க்கட்சி (Joint Opposition) சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f1a6c1-2f1c-4392-abff-ee500951f62e/26-6aa90e74a553a.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்த காவல்துறைமா அதிபர், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணையொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான கொள்முதல்! விமானப்படையின் முன்னாள் தளபதியிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-air-force-commander-appears-before-fcid-1789463335"></link>
            <id>https://ibctamil.com/article/former-air-force-commander-appears-before-fcid-1789463335</id>
            <summary type="text">இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொள்முதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p></p><h2>கோட்டாபயவின் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பல முக்கிய பிரமுகர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afccceee-f513-4aed-b2d4-cb9763171d39/26-6aa90e2b167b6.webp' /></p><p> </p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் இதே விசாரணை தொடர்பாக அண்மையில் FCIDயில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:22:03+00:00</updated>
        </entry>
    </feed>
