<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T13:44:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா அணு ஆயுதத்தை பிரயோகித்தால் அதே வழியில் பதிலடி கொடுக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tehran-would-respond-if-us-used-nuclear-weapon-1787144493"></link>
            <id>https://ibctamil.com/article/tehran-would-respond-if-us-used-nuclear-weapon-1787144493</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், தெஹ்ரான் அதேபோன்ற பதிலடி கொடுக்கும் என்று ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக,உள்ளூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், தெஹ்ரான் அதேபோன்ற பதிலடி கொடுக்கும் என்று ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக,உள்ளூர் ஊடகங்கள் இன்று(19) புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரான ஃபதா ஹொசைன் மலேகி (Fada Hossein Maleki), ஈரானிய செய்தி நிறுவனமான கபார் ஒன்லைனுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>ட்ரம்ப் இன் நிலைப்பாடு எப்படி அமையும்</h2><p>&nbsp;ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு என்று கேட்டதற்கு, மலேகி இவ்வாறு பதிலளித்தார்: “(அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்) ஒரு தவறான நடவடிக்கையை எடுப்பதை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அவர் அப்படிச் செய்யத் துணிவார் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அத்தகைய நடவடிக்கை உலகை ஒரு ஆபத்தான போருக்குள் தள்ளக்கூடும்.”</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e947a116-1874-4565-8ead-307731933f96/26-6a85aee44555b.webp' /></p><p>“அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும் பதிலடி கொடுக்கும், மேலும் அதன் எதிர்வினை, ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தின் வகைக்கு ஏற்ப விகிதாசாரமாக இருக்கும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><h2>அமெரிக்காவின் அணு ஆயுதத்திற்கு சமாந்தரமாக பதிலடி</h2><p>அமெரிக்கா அணு ஆயுதத்தால் ஈரானைத் தாக்கினால், ஈரானும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துமா என்று கேட்கப்பட்டபோது, ​​மலேகி, “அமெரிக்கா எதைப் பயன்படுத்தினாலும், ஈரான் அதற்குப் பதிலடி கொடுக்கும்” என்று பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6253bb-fb64-478d-af64-ee8b1862613d/26-6a85aee385dcf.webp' /></p><p>&nbsp;ஈரான் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்று மலேகி வெளிப்படையாகக் கூறவில்லை.</p><p>மேலும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக வோஷிங்டனை எச்சரித்த அவர், ஈரானிடம் “பல வழிகள்” இருப்பதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கையும் “அதே அளவில் அல்லது அதற்கும் மேலான” பதிலடியைத் தூண்டக்கூடும் என்றும் கூறினார்.</p><p>“ஈரானின் பல ஆயுதங்களும் இராணுவத் திறன்களும் இன்னும் வெளியிடப்படவில்லை,” என்று கூறிய மலேகி, தெஹ்ரான் தற்காப்பு நிலையில் இருந்து,“செயல்திறன் மிக்க மற்றும் தாக்குதல் சார்ந்த தடுப்பு” நிலைக்கு நகர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட பிரச்சினைகள்</h2><p>முடங்கிப்போன தெஹ்ரான்-வோஷிங்டன் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய மலேகி, இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை ட்ரம்ப் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4057a1-f324-4d4e-b52e-ab892b2ccdb7/26-6a85aee295b54.webp' /></p><p>வோஷிங்டன் தனது முந்தைய கடமைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், ஈரான் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பாது என்றும், இல்லையெனில் ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
ஓமானுடன் ஈரான் நடத்தும் பேச்சுவார்த்தைகள் ஒரு தனிப்பட்ட இருதரப்புப் பாதை என்றும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் பங்கேற்பை தெஹ்ரான் நிராகரித்துவிட்டது என்றும் மலேகி மேலும் தெரிவித்தார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கிசை துப்பாக்கிச் சூடு! அதிரடியாக கைது செய்யப்பட்ட கொலை கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mount-lavinia-murder-gang-arrested-1787144530"></link>
            <id>https://ibctamil.com/article/mount-lavinia-murder-gang-arrested-1787144530</id>
            <summary type="text">

கல்கிசையில் கடந்த 15ஆம் திகதி இரவு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற கூலிப்படை கும்பலுடன் தொடர்புடைய பெண் உட்பட நால்வரை பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கல்கிசையில் கடந்த 15ஆம் திகதி இரவு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற கூலிப்படை கும்பலுடன் தொடர்புடைய பெண் உட்பட நால்வரை பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு (CTID) இன்று கைது செய்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் கூலிப்படை கொலையாளி, அவருக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்தோடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 3.8 கலிபர் கைத்துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>ரகசியத் தகவல்</h2><p>இதன்போது, கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், கொம்பனித்தெரு பகுதியில் பெண் உட்பட இருவரும், வத்தளைப் பகுதியில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5f4161-f9d5-4ba4-86c2-808278701d13/26-6a85ae8828beb.webp' /></p><p>

இந்தக் கொலைக்காக கூலிப்படை கொலையாளிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும், அவர்களுக்கு உதவிய பெண்ணுக்கும் மற்றவருக்கும் ஐஸ் போதைப்பொருளும் வழக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T13:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் பேரம் பேசும் திட்டத்தில் மாட்டிக்கொண்ட செம்மணியின் நீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/politically-negotiated-chemmanis-justice-1787145578"></link>
            <id>https://ibctamil.com/article/politically-negotiated-chemmanis-justice-1787145578</id>
            <summary type="text">செம்மணி நீதிதேடல் விவகாரமானது ஒருமித்த புலமைசார் நிபுணத்துவம் கொண்ட தரப்பினரால் கையாளப்படவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக தொடர்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி நீதிதேடல் விவகாரமானது ஒருமித்த புலமைசார் நிபுணத்துவம் கொண்ட தரப்பினரால் கையாளப்படவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக தொடர்கிறது.
</p><p>
கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் பிளவுபட்டு இதற்கான நீதியை தேடுவது தமிழர் தாயகத்தை பொறுத்தவரை&nbsp; சாத்திய போக்கில்லாத விடயம்.
</p><p>
இது இலகுவாக பேரம் பேசும் தரப்பினரால் அடையாளம் காணப்படும்.&nbsp;மேலும் பலவீன நிலைக்கு தமிழர்&nbsp; தாயக சமூகத்தை தள்ளக்கூடும்.</p><p>

இந்நிலையில் செம்மணி நீதிதேடல் பொறிமுறையில் தற்போது மேகொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் போக்குடன் ஐ.பி.சி ஊடகமானது சமூக செயற்பாட்டாளர் செல்வீனை நேர்காணல் செய்தது.
</p><p>
இவ்வாறு செம்மணி விடயத்தில் எதிர்கால திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பல விடயங்களை தொகுக்கிறது ஐ.பி.சி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pEoRB_Q45q8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச செயலாளரை அச்சுறுத்திய அரச உத்தியோகத்தர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-official-arrested-threat-divisional-secretary-1787142396"></link>
            <id>https://ibctamil.com/article/govt-official-arrested-threat-divisional-secretary-1787142396</id>
            <summary type="text">அம்பாறை - நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் காவல்துறையால் கைது
செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் காவல்துறையால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி
விழுந்த குறித்த உத்தியோகத்தர் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.</p><p></p><h2>நிந்தவூர் காவல்துறை&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர்
காவல்துறை நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc50550-2e7e-4b00-a302-4b1b99f5cea0/26-6a85a1d604c38.webp' /></p><p>அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, நேற்று(18) மாலை வாக்குமூலம் ஒன்றைப்
பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் காவல்
நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p>
விசாரணைகளின் பின்னர் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென
மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு
அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>தற்போது அவருக்குப் பெண்
பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன்,
நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T12:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abolish-the-executive-presidency-1787142029"></link>
            <id>https://ibctamil.com/article/abolish-the-executive-presidency-1787142029</id>
            <summary type="text">நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேற்றையதினம் நாடாளுமன்றில், 22வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. நீதித்துறையைப் பாதிக்கும் வயது வரம்பு உயர்வு குறித்து இந்த நாட்டில் சில விவாதங்கள் நடந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் சில காலமாக வந்துகொண்டிருக்கின்றன.</p><h2>22வது திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு சவால்&nbsp;</h2><p>&nbsp;கடந்த காலத்தில், நீங்கள் ஆட்சிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட கட்சிகளும், அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் இந்தத் திருத்தத்திற்கு எதிராகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eddbb8a9-8777-44ad-9491-0f6ba45caa6c/26-6a859f8f97ce8.webp' /></p><p> </p><p>22வது திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு சவால் விடப்படுவதால், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரப் பாடுபட்டவர்களும் இதை எதிர்த்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஜே.ஆரின் அரசியலமைப்பு சட்டத்துடன் ஜே.வி.பிக்கு நீண்ட வரலாறு&nbsp;</h2><p>ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த இந்த அரசியலமைப்புச் சட்டத்துடன் உங்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. நீங்கள் எப்போதும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு சர்வாதிகார அரசியலமைப்புச் சட்டம் என்று கூறி வந்துள்ளீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/136d93c7-20a3-4c1b-a5d6-f50d867144df/26-6a859f904fdb0.webp' /></p><p> இந்த அரசியலமைப்புச் சட்டத்தைக் கிழித்தெறியக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அரசியலமைப்புச் சட்டத்தால் ஜனநாயகம் சுருங்கிவிட்டது என்று நீங்கள் தொடர்ந்து மக்களிடம் கூறி வந்தீர்கள். </p><p>பெயரளவிலான ஜனாதிபதியையும் நிறைவேற்று பிரதமரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். உங்கள் வாக்குறுதிகளின் காரணமாகவே மக்கள் உங்களுக்கு ஆணை வழங்கினர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவு பெற்றது செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணி! சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-1787140429"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-excavation-1787140429</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
</p><p>
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசேட அறிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அது குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவவால் விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2fc2dc7-72d5-4fec-b1bf-f348fd052bb2/26-6a859f326ab2a.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகத்திக்கிடையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற பிற சான்றுப்பொருட்களை அடிப்படியாக வைத்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T12:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heatwave-warning-for-some-parts-of-the-country-1787139401"></link>
            <id>https://ibctamil.com/article/heatwave-warning-for-some-parts-of-the-country-1787139401</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை (20.08.2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை (20.08.2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
</p><p>
 

அதன்படி, நாளை பகல் நேரத்தில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் திணைக்கள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>
 

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>வெப்ப வானிலை எச்சரிக்கை</h2><p>
</p><p>இதன்படி நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0679abbb-e9fd-44e7-b472-ef7358e2aedc/26-6a859a55a6821.webp' /></p><p>
</p><p>
 

எனவே, பொதுமக்கள் அதிகளவான நீரை பருகுவதோடு, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-makes-wrong-decision-at-eastern-uni-hostel-1787137133"></link>
            <id>https://ibctamil.com/article/student-makes-wrong-decision-at-eastern-uni-hostel-1787137133</id>
            <summary type="text">கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, குறித்த சம்பவத்தை இன்று புதன்கிழமை (19) பிற்பகல் நேரில் கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்போது, திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df71c297-d45a-4e4f-8683-d33ba92e1ab3/26-6a8594b969257.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் சுமார்.12.00மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அதனை கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்த மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.</p><h2>பிரே பரிசோதனை</h2><p>
</p><p>
அதன்போது, தவறான முடிவெடுத்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e7a94e-3bd8-4616-81bd-bdeeee9a5492/26-6a8594b8b5f6d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T11:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளித்தவர் இடமாற்றம் : வேலை நிறுத்தத்தில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-health-inspectors-plans-strike-1787139005"></link>
            <id>https://ibctamil.com/article/public-health-inspectors-plans-strike-1787139005</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

சங்கத்தின் செயற்குழு இன்று பிற்பகல் (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
சங்கத்தின் செயற்குழு இன்று பிற்பகல் (19) கூடி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என அதன் பதில் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
</p><p>
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் குறித்து சுகாதார அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் அளித்த ஒரு பொது சுகாதார பரிசோதகர், நிர்வாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு</h2><p>
</p><p>
இவ்விடயம் தொடர்பாக மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும், நாளை தொடங்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் என்றும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8062afc-a8cf-474c-be1c-21f200925591/26-6a859739375ca.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-petition-filed-challenging-22nd-amendment-1787137774"></link>
            <id>https://ibctamil.com/article/another-petition-filed-challenging-22nd-amendment-1787137774</id>
            <summary type="text">நாடாளுமன்றில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, சிவில் சமூக அமைப்பான 'பஹுஜன பலய' உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் விதிகள் அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளனவா என்பதையும், அதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் மக்களின் அனுமதி பெறப்பட வேண்டுமா என்பதையும் தீர்மானிக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்&nbsp;</h2><p> </p><p>

கொள்கையளவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைத் தமது அமைப்பு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள 'பஹுஜன பலய' அமைப்பு, ஆனால் எந்தவொரு திருத்தமும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டும், மக்களின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனக் கட்டுப்பாடுகளையும் சமநிலையையும் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4b55e8-b45c-4b97-bc24-222d821d493b/26-6a85930475abe.webp' /></p><p>அத்துடன் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பும் சில விதிகள் குறித்து அந்த அமைப்பு தனது பிரத்தியேக கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> 

தனது மனுவில், பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கம், LAWASIA, சர்வதேச நீதிபதிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட்&nbsp; உள்ளிட்ட சர்வதேச சட்ட அமைப்புகளும் நிபுணர்களும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் கவலைகளையும் 'பஹுஜன பலய' சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p> </p><p>

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் சட்டமாக இயற்றப்படுவதற்கு முன்னர் விரிவான மற்றும் சுயாதீனமான அரசியலமைப்பு ரீதியான பரிசீலனை அவசியம் என்பதை இத்தகைய கவலைகள் கோடிட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23333e82-36a7-4a4b-8ae9-7b17605023e4/26-6a8593056deed.webp' /></p><p> 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் சரியான அரசியலமைப்பு நடைமுறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் மக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் 'பஹுஜன பலய' வலியுறுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மில்லியன் கணக்கான குழந்தைகளின் தரவுகளை திரட்டிய மெட்டா: அமெரிக்காவில் வழக்கு தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-state-have-lawsuit-against-meta-200-billion-1787135734"></link>
            <id>https://ibctamil.com/article/us-state-have-lawsuit-against-meta-200-billion-1787135734</id>
            <summary type="text">11 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான குழந்தைகள் மெட்டாவின் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வருவதை அறிந்திருந்தும், அதைத் தடுக்க மெட்டா நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான குழந்தைகள் மெட்டாவின் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வருவதை அறிந்திருந்தும், அதைத் தடுக்க மெட்டா நிறுவனம் எந்தவொரு&nbsp; நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது.</p><p>கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று இந்த வழக்கு முதல் முறையாக நடுவர் குழுவின் முன் விசாரணைக்கு வந்தது. </p><p>கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய நான்கு மாநிலங்கள் கூட்டாக இந்த வழக்கை முன்னெடுத்துள்ளன.</p><p></p><h2>200 பில்லியன் டாலர் இழப்பீடு</h2><p>
</p><p>மேலும் மெட்டா நிறுவனம் மீது 200 பில்லியன் டொலர் அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்குமாறு அவை நீதிமன்றத்தைக் கோரியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4145a03-e687-41b7-b0af-c0bdcca6b97d/26-6a858c9526b32.webp' /></p><p>பெற்றோரின் அனுமதியின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தரவுகளைச் சேகரித்தல், மற்றும் குழந்தைகளிடையே மனநல நெருக்கடியை ஏற்படுத்தும் லைக்குகள், ரியாக்ஷன்கள், கமெண்ட்கள், ஸ்க்ரோலிங் போன்ற அடிமையாக்கும் அம்சங்களை உருவாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு அமைந்துள்ளது.&nbsp;</p><p>மெட்டாவின் வணிக மாதிரியை நான்கு பகுதிகளாக எளிமையாகச் சுருக்கிக் கூறலாம் என நேற்று கலிபோர்னியா தலைமை சட்டத்தைரணிகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

இதில், பயனர்களை வலையில் வீழ்த்தி, அவர்களை முடிந்தவரை நீண்ட நேரம் செயலியில் வைத்திருந்து, அவர்களின் தரவுகளைச் சேகரித்து, பின்னர் உண்மையை பொதுமக்களிடமிருந்து மறைப்பது அடங்கும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும், அடுத்த ஆறு வாரங்களில் நடுவர் மன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பார் என அமெரிக்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடமையாகிறது பசிலின் பிணை பணம் : சிறைக்கு செல்லப்போகும் பிணைதாரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497"></link>
            <id>https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497</id>
            <summary type="text">சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைப்பணத்தை அரசுடமையாக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.</p><p>மாத்தறை, எலியகந்த வீதியில், பிரவுன்ஹில்லில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக காவல்தறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>சிறைக்கு செல்லப்போகும் பசிலின் பிணைதாரர்கள்</h2><p>இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையைக் கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39366ce4-3ac6-4b86-b8f2-65319e98d7b0/26-6a859008422a9.webp' /></p><p> </p><p>மேலும், அவருக்காகப் பிணைதாரர்களாகக் கையெழுத்திட்ட மூன்று பேருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>நீடிக்கப்பட்ட பிடியாணை</h2><p>இது தவிர, பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை 2026 ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501bcbb5-56ad-4665-9ea3-ce1acec28640/26-6a859008e89e1.webp' /></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். அத்துடன், முறைப்பாடு சார்பில் FCID அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகினர்.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UE96BsNqqps" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவியேற்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-province-sdig-of-police-takes-charge-1787136629"></link>
            <id>https://ibctamil.com/article/northern-province-sdig-of-police-takes-charge-1787136629</id>
            <summary type="text">வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க&nbsp;இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p>வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடமைகளை பொறுப்பேற்றார்</h2><p>இந்த நிலையில் விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32c6e8ac-89a1-4070-acf1-0333ab73bcb2/26-6a858c322ff5b.webp' /></p><p>குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-with-drugs-worth-around-rs-12-crore-1787135665"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-with-drugs-worth-around-rs-12-crore-1787135665</id>
            <summary type="text">




சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 18.672 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு கைபேசிகள் மற்றும் ஒரு இலத்திரனியல் தராசு என்பன கவால்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>போதைப்பொருள் களஞ்சியசாலை</h2><p>

விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, பண்டாரகம மஸ்வில வெந்தேசி வத்த பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர், சந்தேக நபரையும் போதைப்பொருள் இருப்பையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc11415-7bd6-47ed-897c-320264e1f853/26-6a8589c54226e.webp' /></p><p>

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பானந்துர கூடு சலிந்து மற்றும் துபாயில் பதுங்கியிருக்கும் ரவிஷ்க ஆகியோரின் போதைப்பொருள் வலையமைப்பில் இயங்கி வந்தவர் என்பதும், அவர்களின் போதைப்பொருள் களஞ்சியசாலையின் பாதுகாப்பாளராகச் செயற்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T10:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பதிலடி: கலிபோர்னியாவை தனது பிரதேசமாக அறிவித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-labels-california-its-new-territory-1787135101"></link>
            <id>https://ibctamil.com/article/iran-labels-california-its-new-territory-1787135101</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டதற்குப் பதிலடியாக ஈரானின் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டதற்குப் பதிலடியாக ஈரானின் அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்கு ஒன்று செவ்வாயன்று கலிபோர்னியாவை ஈரானின் “புதிய பிரதேசம்” எனக் குறிப்பிட்டது.
</p><p>
போர் முடிந்த பிறகு அந்த நீரிணை அமெரிக்கப் பிரதேசமாக மாற்றப்படும் என்று அவர் முன்பு கூறியிருந்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் செவ்வாயன்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் அந்தப் படத்தைப் பகிர்ந்தார்.</p><h2>புதிய அமெரிக்கப் பிரதேசம்</h2><p>அதில், “புதிய அமெரிக்கப் பிரதேசம்” என்ற வார்த்தைகளுக்குக் கீழே அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி வட்டமிடப்பட்டு, ஹோர்முஸ் நீரிணையின் வரைபடம் காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c7138e-c639-40fa-9bff-c6400dd55b4f/26-6a85870e5cc09.webp' /></p><p>

பின்னர் வெள்ளை மாளிகை,சமூக ஊடகத் தளமான X-இல் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் ட்ரம்பின் பதிவை மீண்டும் வெளியிட்டது.</p><p></p><h2>ஈரானின் பதிலடி</h2><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, X தளத்தில் உள்ள 'ஈரான் இன் ஹைதராபாத்' அதிகாரபூர்வ கணக்கு, அமெரிக்காவின் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அதில் கலிபோர்னியா நீல நிறத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டிருந்ததுடன், "ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய பிரதேசம்" என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f8cad6-5dae-47b8-b76b-9b56af4dcba6/26-6a85870f0e9ca.webp' /></p><p>
</p><p>
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடியும் ட்ரம்பின் பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, X தளத்தில் இவ்வாறு எழுதினார்: "ஹோர்முஸ் நீரிணை குறித்த அவரது பிரமை விரைவில் சரிசெய்யப்படும், அல்லது இந்த பிரமை பிடித்த மனிதனின் பிரமைகளை நாங்கள் சரிசெய்வோம்."&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரிகளின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officers-salary-increase-ananda-wijepala-1787134858"></link>
            <id>https://ibctamil.com/article/police-officers-salary-increase-ananda-wijepala-1787134858</id>
            <summary type="text">சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக&amp;nbsp;பொது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக&nbsp;பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஆனந்த விஜேபால இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளது.</p><p></p><h2>சீருடையில் மாற்றம்</h2><p>காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது, இது ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dcb1fe-d5f9-47e7-8798-4ca60a5967a7/26-6a85884f0e1a1.webp' /></p><p>காவல்துறை அதிகாரிகளின் தோற்றத்தை மாற்றுவதுடன் மட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் நின்றுவிடவில்லை.</p><p>சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும் அதனை மக்கள் நட்புறவுடையதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:37:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-gets-caught-up-in-gov-uk-report-1787128754"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-gets-caught-up-in-gov-uk-report-1787128754</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.</p><p>

GOV.UK இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையினை மேற்கோள்கட்டி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடும் ரணிலுக்கு எதிராக திரும்பும் ஒரு சட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.
</p><p>
GOV.UK வெளியிட்ட இந்த அறிக்கையில் இராஜதந்திர முறையில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு வருகைதந்ததாக எந்த விதமான தரவுகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
</p><p></p><h2>குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு</h2><p>
இந்நிலையிலேயே சமூக செயற்பாட்டாளரான ஒஷால ஹேரத்தால் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5ac17e-cc30-4513-bd1f-a1ce85510f14/26-6a857b1f73dc6.webp' /></p><p>

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ரணில் விக்ரமசிங்க பிரேதனியாவுக்கு மேற்கொண்ட விஜயம், ஓர் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல என்பது அந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டானது ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு முன்னதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது 

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து. </p><p>அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. 

எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெறும் வரை இந்த வழக்கை வேண்டுமென்றே காலதாமதம் செய்ய சட்டமா அதிபர் முயல்வதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p> 

இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
</p><p>
இது குறித்து நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையே வழக்குகளின் தாமதத்திற்கு முதன்மைக் காரணம் என்றும், நீதித்துறையின் சுயாதீனமான செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டமாதிபர் திணைக்களம்</h2><p>

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

"ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாட்டின் இந்த பாரிய குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19e6665e-07a5-4a51-87cf-d2cfe69acfff/26-6a857b20485bc.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, 

குற்றப்புலனாய்வு திணைக்களம் பிரித்தானியாவுக்கு சென்று தேவையான தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.
</p><p>
அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள.

எனவே மேல்நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
குறிப்பாக இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
</p><p>
மேலும் இதனை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வை அமைக்க பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இருந்தும் இந்த அணைத்து ஆவணங்களும் சட்டமா அதிபரின் மேசைக்கு சென்று பல மாதங்கள் கடந்த போதும், சட்டமா அதிபர் மௌனம் காப்பது சரியானதா?
</p><p>
சட்டமா அதிபருக்கு இந்த வழக்கை தொடர்வதில் ஏதேனும் குழப்பம் உள்ளதா?</p><p></p><h2>மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை&nbsp;</h2><p> 

ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சட்டமா அதிபருக்கு உள்ள பிரச்சினை என்ன?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c4b73b0-b7f0-46e5-adaa-5a47b10fecef/26-6a857b2102d7d.webp' /></p><p>பிரதம நீடியரசரும், சட்டமா அதிபரும் முறையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஓஓய்வு பெறவுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் வேறு எதனையும் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு திட்டம் உள்ளதா?</p><p>
சட்டமா அதிபரே, உங்களுக்கு முன்னாள் ரணில் குறித்த விடயத்தில் சாய்வு நினை இருக்கின்றது என்ற கருத்து சமூகத்தில் பரவி உள்ளது.
</p><p>
அது என்னவாக இருந்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தன்மைக்கு இது ஏற்றது அல்ல.
</p><p>
தற்போது ரணில், சஜித் மற்றும் கம்பன்பிலவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க திட்டமிடுகிறார். 

இந்த கதாபாத்திரம் மற்றும் தூண்டுதலில் ரணில் இருப்பது தெளிவாகிறது." என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T10:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன அமைச்சர் இஸ்ரேலிய காவல்துறையால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-police-arrest-palestinian-minister-1787133425"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-police-arrest-palestinian-minister-1787133425</id>
            <summary type="text">&amp;nbsp; ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை புதன்கிழமை கைது செய்ததாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, காரணம் ஏதுமின்றி அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை தடுத்து வைத்ததாக ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.&nbsp;</p><h2>கைதுக்கான காரணம்&nbsp;</h2><p>கைதுக்கான காரணம் குறித்து இஸ்ரேலிய காவல்துறை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18df8546-8d24-461b-a00c-f2e0e452a5d2/26-6a8581332e7f3.webp' /></p><p>கடந்த ஆண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்குள் அல்-அவார் நுழைவதற்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதித்து இஸ்ரேலிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர், பின்னர் அந்தத் தடை நீடிக்கப்பட்டது.</p><p>

ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அல்-ராம் நகரில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் பாலஸ்தீன அரசாங்கக் கூட்டங்கள் ரமல்லாவில் நடைபெறுகின்றன.</p><p>

ஒக்டோபர் 7, 2023 முதல், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் விளையாட்டு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேலிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>இடிக்கப்படும் பாலஸ்தீனர்களின் வீடுகள்</h2><p>இஸ்ரேலிய அதிகாரிகள் குடியேற்ற நடவடிக்கைகளையும் பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிப்பதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afe4056-8b0d-48eb-b40c-fabd48d67dcf/26-6a858133da237.webp' /></p><p> </p><p>அதே நேரத்தில், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் குடியேறிகள் ஊடுருவுவதற்கு வழிவகை செய்வதுடன், வழிபாட்டாளர்களையும் மத போதகர்களையும் அவ்விடத்திற்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால நாட்டின் தலைநகரம் என்று பாலஸ்தீனியர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இஸ்ரேல் அந்நகரம் முழுவதையும் தனது தலைநகரம் எனக் கோருகிறது. இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் பரவலாக நிராகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-supermarket-s-business-license-cancel-1787130550"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-supermarket-s-business-license-cancel-1787130550</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு
வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து
செய்யுமாறு நீதிமன்றம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு
வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து
செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p>குறித்த வர்த்தக நிலையத்தில்
காலாவதியான சொக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள்
விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின்
பரிசோதனையின்போது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1977db52-336a-484b-b542-2a59037bf635/26-6a85795fc67ec.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக
நிலையம் இதேபோன்ற குற்றச்செயலில் முன்னரும் ஈடுபட்டிருந்தமை தொடர்பான
முற்குற்றம் ஒன்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
</p><p>இந்தநிலையில் வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன்,
குற்றத்திற்காக 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின்
வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு நீதிமன்ற பதிவாளர்
ஊடாக அறிவித்தல் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றம் உத்தரவு</h2><p>
மேலும், குறித்த தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர்
மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம்
ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும்
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4698d06e-b0b7-4c04-a1c8-5585daebc7a8/26-6a8579607e318.webp' /></p><p>
</p><p>அத்துடன் அதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப்
பொருட்களை விற்பனைக்கு வைப்பது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக இந்த நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்: விசாரணை நடத்த முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/funerals-of-muslims-cremated-during-covid-1787133562"></link>
            <id>https://ibctamil.com/article/funerals-of-muslims-cremated-during-covid-1787133562</id>
            <summary type="text">கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை கடிதம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிய பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. </p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து குறித்த கோரிக்கை கடிதத்தை கையளித்த்துள்ளனர்.</p><p></p><h2>முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கை</h2><p>
</p><p>
அப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறித்த தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe23641b-a22d-4d16-9974-381e728cef46/26-6a857e7c8c934.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்த மனித உரிமை மீறல் மற்றும் அநீதி தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T09:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-india-wins-by-165-runs-1787127285"></link>
            <id>https://ibctamil.com/article/team-india-wins-by-165-runs-1787127285</id>
            <summary type="text">காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
 

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களின் உதவியுடன் 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.
</p><p>
 

 இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.</p><p></p><h2>165 ஓட்டங்களால் வெற்றி&nbsp;</h2><p>இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி, சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களின் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d2ba2c-cf4d-4999-a58f-bb15933bf799/26-6a8570ffa0ed4.webp' /></p><p>

 

இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.</p><p>

 

முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர். </p><p>

 

இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதன்படி, இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.</p><p> 

 

372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.</p><p>

 

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். </p><p>

 

பந்துவீச்சில் இந்திய அணியின் மானவ் சுதார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-minister-s-wife-dies-in-accident-1787128676"></link>
            <id>https://ibctamil.com/article/former-minister-s-wife-dies-in-accident-1787128676</id>
            <summary type="text">


முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>

அவர்களுக்குச் சொந்தமான, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தே அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை (19) அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>இரண்டு பிள்ளைகளின் தாய்</h2><p>

55 வயதுடைய தேஷானி குணரத்ன என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c93aad15-90f3-4920-9e95-ddd8a69aaf9a/26-6a856fe302c2b.webp' /></p><p>அவரது உடல் தனமல்விலவில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 28 வாகனங்கள் : வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493"></link>
            <id>https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493</id>
            <summary type="text">தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
 

நுவரெலியா காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொறிகள் உட்பட 40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டது</h2><p>
</p><p>
 

இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6262f421-72c7-4957-b669-bbe442da73db/26-6a85601805412.webp' /></p><p>
</p><p>வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் (Undial) முறைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த நபர் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று( 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, வேல்ல வீதி காவல்துறை பிரிவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாத ரூ. 10,467,000 பணமும், ஒரு போலி 1000 ரூபா நாணயத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c0aacfa-42e8-4def-a2d5-a97730d84ff7/26-6a855fc9c1591.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், இந்த சந்தேக நபரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:48:36+00:00</updated>
        </entry>
    </feed>
