<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-11T10:06:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம் : ஈரான் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/proud-of-iran-we-are-invincible-1786441584"></link>
            <id>https://ibctamil.com/article/proud-of-iran-we-are-invincible-1786441584</id>
            <summary type="text">ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

“ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
“ஈரானியர்களாகிய நீங்கள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளீர்கள்; நீங்கள் முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளீர்கள்,” என்று மேலும் கூறிய ஈரானிய வெளியுறவு அமைச்சர், மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து இதை பலமுறை கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.</p><h2>அமெரிக்காவை இப்படி எதிர்ப்போம் என யாரும் நினைக்கவில்லை</h2><p>ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது ஈரானிய வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec699f6-eb1f-4c6f-90b3-b85cb1896f88/26-6a7af2ade782e.webp' /></p><p>
</p><p>
“ஈரான் அமெரிக்காவை இந்த அளவுக்கு எதிர்க்கும் என்று யாரும் நினைக்கவில்லை,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி மேலும் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச இரதமேறி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த மாவைக் கந்தன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-car-festival-1786439283"></link>
            <id>https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-car-festival-1786439283</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.</p><p>
இன்று (11) காலை முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூசை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை
வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன. </p><p>அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.</p><p></p><h2>நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்</h2><p>
</p><p>
இந்த திருக்காட்சியை காண்பதற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து
முருகப் பெருமானை தரிசித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d699590-d2a5-4a9f-969e-49fc9fdcd0c1/26-6a7ae9573e28e.webp' /></p><p>
</p><p>
இன்றைய தினம் பக்தர்கள் காவடிகள், அங்கபிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை
எடுத்துவந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.</p><p>இதேவேளை&nbsp;மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் நடைபெறவுள்ளது.</p><p>ஆடி அமாவாசை தினத்தில், தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன்களை நிறைவேற்றும்
விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது.
</p><p>
கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு,
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனரத்ன மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-charges-filed-against-rajitha-1786438898"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-charges-filed-against-rajitha-1786438898</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
ராஜித சேனாரத்ன கடத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0657bf-3066-4286-8fe2-011044bc1a95/26-6a7aeac9dc70c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-consulate-to-hold-mobile-service-in-bern-1786433266"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-consulate-to-hold-mobile-service-in-bern-1786433266</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் - ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் - ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அந்த நாட்டின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு நடமாடும் சேவை ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இந்த நடமாடும் சேவை இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் 'Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern' என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p></p><h2>வழங்கப்படவுள்ள சேவைகள்&nbsp;</h2><p>
</p><p>
இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3496d4f-3d56-413b-964f-76f25f4406f2/26-6a7adbf18e031.webp' /></p><p>
</p><p>
அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>தேவையான விபரங்கள்</h2><p>

கால அவகாசம் குறைவாக உள்ளமையினால், இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் <a href="https://www.lankamission.org/mcs" target="_blank">www.lankamission.org/mcs</a> என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48abb9d-2dd8-4f14-b4c6-558b3acd1bb9/26-6a7adbf0c632f.webp' /></p><p>
</p><p>மேலும், தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை <a href="https://www.lankamission.org/checklist" target="_blank">www.lankamission.org/checklist</a> என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/42810-tourists-arrived-in-sri-lanka-in-6-days-1786415127"></link>
            <id>https://ibctamil.com/article/42810-tourists-arrived-in-sri-lanka-in-6-days-1786415127</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாக சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp;</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகளில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது மொத்த வருகையில் 18% ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a4d0a3-8ee4-4c65-bcab-f16075189929/26-6a7ad73bdbc8b.webp' /></p><p>அதேபோல், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>
 

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 06 வரையிலான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

அவர்களில் இந்தியாவில் இருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-gets-40-years-in-jail-for-abuse-of-kid-1786429272"></link>
            <id>https://ibctamil.com/article/man-gets-40-years-in-jail-for-abuse-of-kid-1786429272</id>
            <summary type="text">வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.</p><p>கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு, எதிராக வவுனியா காவல்துறையினரால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபருக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e021c1-64b1-449d-beec-e982d76031e6/26-6a7aceb91be8d.webp' />&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில், அவருக்கு எதிராக அரச சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
இதன் அடிப்படையில், வழக்கு தொடுனர் தரப்புகுற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா, குறித்த சந்தேக நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கடுமையான உடல் மற்றும் உள பாதிப்பு</span></p><p>அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba9b8106-9a36-47c5-a72b-79a405763060/26-6a7aceb9c50ba.webp' /></p><p>
இந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டதரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p>
இந்த நிலையில், வழக்கு நடவடிக்கையின் போது சந்தேக நபர், தலைமறைவாகியிருந்தமை,&nbsp; சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே குறித்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தனது, தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலைக்கு 45 பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monaragala-accident-1786425357"></link>
            <id>https://ibctamil.com/article/monaragala-accident-1786425357</id>
            <summary type="text">மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று புத்தல – மஹகொடய பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.&amp;nbsp; இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று புத்தல – மஹகொடய பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.&nbsp;</p><p> இன்று (11.08.2026) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.&nbsp;</p><p>
பேருந்து வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>இ.போ.ச பேருந்து விபத்து&nbsp;</h2><p>
</p><p>
விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d8d473-c522-43a3-bbb8-5a3bed6e8900/26-6a7acf776b08b.webp' /></p><p>

விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </p><p>இந்த சம்பவம் தொடர்பில் புத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd44a916-6798-45d1-9bee-5c46c7c23fbe/26-6a7acf7839632.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a41272-76b2-4701-8a6d-a1aace9b22c0/26-6a7acf794e041.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[﻿கொழும்பிலிருந்து சென்ற பேருந்து மோதி தாயும் மகனும் பலி - குழந்தை பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-after-being-hit-by-a-bus-from-colombo-1786426178"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-after-being-hit-by-a-bus-from-colombo-1786426178</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து சென்ற தனியார் அதிசொகுசு பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து சென்ற தனியார் அதிசொகுசு பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து இன்று (11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு தம்புள்ளை - மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த விபத்தில் 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>சாரதி கைது&nbsp;</h2><p>
மேலும், உயிரிழந்த நபரின் ஒன்றரை வயதுடைய குழந்தையும் பலத்த காயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e370a8-9652-4803-83da-1ca33d3e0166/26-6a7aca2e2c4cb.webp' /></p><p>களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிக் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>
குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததுடன், அதற்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:27:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : அரசாங்கத்திடம் இம்ரான் எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/muslim-women-s-clothing-issue-imran-mp-request-1786431662"></link>
            <id>https://ibctamil.com/article/muslim-women-s-clothing-issue-imran-mp-request-1786431662</id>
            <summary type="text">முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு
வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு
வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தெரிவித்துள்ளார்.
</p><p>
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து
இன்று (11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற
தலையீடுகளுக்கு உள்ளாகின்றது.</p><p></p><h2>அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை</h2><p> </p><p>இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61b06f8-df37-4f63-942b-715e992fdda0/26-6a7acaaa61232.webp' /></p><p>

அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும்
பொறுப்பாகும். இதனை மீறும் அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்
நடைமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>சில அரச உத்தியோகத்தர்களின் இது போன்ற செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும்
முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும்.

இது அரசாங்கத்தின் வளமான நாடு கொள்கையை கேள்விக் குறியாக்கும்.</p><p>

எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் அடிக்கடி தேவையற்ற தலையீடு செய்யப்படுவதால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><i><b>செய்தி - ஹஸ்பர் ஏ.எச் மற்றும் எம்.என்.எம்.புஹாரி</b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YlfWmFH8txY" width="640" height="360" class="note-video-clip"></iframe><i><b><br></b></i></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><i><b><br></b></i></p>]]></content>
            <updated>2026-08-11T07:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதசாரிகள் மீது சொகுசு கார் மோதியதில் மூவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-injured-luxury-car-crashes-into-pedestrians-1786427432"></link>
            <id>https://ibctamil.com/article/three-injured-luxury-car-crashes-into-pedestrians-1786427432</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வஸ்கடுவ-காலி வீதியில் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்துக்கள்ளாகி உள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வஸ்கடுவ-காலி வீதியில் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்துக்கள்ளாகி உள்ளது.&nbsp;</p><p>இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

வஸ்கடுவ-காலி வீதியில் அந்த வாகனம் எதிர்ப்புறப் பாதைக்குள் புகுந்து, மூன்று பாதசாரிகள் மீது மோதி, சாலையோரத்தில் இருந்த இரண்டு எல்லைக் கம்பங்களில் மோதி, பின்னர் சாலையிலிருந்து விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>இருவர் காயம்</h2><p>
</p><p>
 

ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது தூங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342af5f3-4559-4c56-ae96-1ce6c2e29a5c/26-6a7ac3e282b24.webp' /></p><p>

 

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-car-festival-1786428994"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-car-festival-1786428994</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம்&nbsp;வெகுவிமர்சையாக நடைபெற்றது.</p><p>இன்று (11) காலை ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப
பூஜையின் பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்
'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி
மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.</p><p>மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட
இவ்வாலயத்தின் மகோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p></p><h2>கோலாகலமாக நடைபெற்ற தேர் உற்சவம் </h2><p>
</p><p>
இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு,
பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத்
தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c18722-4f65-4c19-8670-9f940d9f3d68/26-6a7abf74a694b.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு
விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள்
வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
</p><p>ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதிர்க்கடன்
தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக
இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.
</p><p>
இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) நண்பகல் வரலாற்றுச்
சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T06:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை : அநுர அரசு அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-drug-crimes-in-sri-lanka-1786426522"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-drug-crimes-in-sri-lanka-1786426522</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளுக்குப் பணிப்புரை&nbsp;</h2><p>
</p><p>மேலும், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c1725e-e01f-4a4c-ab6c-a08f083273ee/26-6a7abab87bd30.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
</p><p>
இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க "மிதுரு பாசல" திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7VGoDMRGOmk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T06:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிஸ்ஸங்க சேனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nissanka-senadhipathi-arrives-bribery-commission-1786424623"></link>
            <id>https://ibctamil.com/article/nissanka-senadhipathi-arrives-bribery-commission-1786424623</id>
            <summary type="text">எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி&amp;nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று (11.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி&nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (11.08.2026) காலை அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d9009f-11d3-4e0b-aace-226feb8cd82d/26-6a7ab2770beef.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/N-HK3vlFVUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780"></link>
            <id>https://ibctamil.com/article/disruption-to-passport-distribution-activities-1786417780</id>
            <summary type="text">புதிய இணைப்புகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.</p><p>
 

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d59e78-7648-4a62-a6b4-76f8370babaf/26-6a7ab0964f022.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் : வெளியான முக்கிய அறிவிப்பு</h4><p>இலங்கையில் இன்று (11) காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சரிசெய்ய நடவடிக்கை</h2><p>இந்த நிலையில் கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35d2a59-131b-4beb-a18f-aca579f8aabc/26-6a7a9a9241004.webp' /></p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7VGoDMRGOmk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பயங்கர நபர்கள் : காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-3-people-including-ratmalana-saima-1786423096"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-3-people-including-ratmalana-saima-1786423096</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து காவல்துறை தலைமையகம் புதிய அறிவிப்பொன்ற வெளியிட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து காவல்துறை தலைமையகம் புதிய அறிவிப்பொன்ற வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த மூன்று நபர்கள் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இரத்மலானை சைமா உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் நேற்று (10) மாலை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.</p><p></p><h2>மலேசியாவில் கைது</h2><p>இலங்கையில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 41 வயதுடைய பிரதான சந்தேகநபரான இரத்மலானை சைமா, மலேசிய காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e5c0b2-5960-48e7-ba59-765b27d7551d/26-6a7aae6142d68.webp' /></p><p>
</p><p> 
2014ஆம் ஆண்டு பேராதனை பகுதியில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி ஒருவரை கடத்தி தாக்கியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்றுமொருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.</p><p>
 
இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், சந்தேகநபருக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு</h2><p>
</p><p> 
மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a674667a-9bf4-4f7b-a2bd-ecf69873dcb5/26-6a7aae61f3ff1.webp' /></p><p>
 
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டொன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>
 
இதேவேளை, பிரதான சந்தேகநபரான இரத்மலானை சைமாவுடன் மலேசியாவிலிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
 
அவர்களில் 35 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்சையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் காவல்துறையை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது: நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-expresses-concern-over-government-1786422296"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-expresses-concern-over-government-1786422296</id>
            <summary type="text">நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையின் ஸ்ரீ விஷ்ணு மகா தேவஸ்தானத்தில் நேற்று (10.08.2026) விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,</p><p></p><h2>அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை</h2><p>இன்று நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வீடுகளுக்குக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் அளவுக்குப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda80d85-29db-4e58-9dd7-76c6759f0124/26-6a7aabb5a1150.webp' /></p><p> </p><p>ஆனால், இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் காவல்துறைமா அதிபரோ அல்லது காவல் திணைக்களமோ உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. </p><p>ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் போன்ற பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்ட மாத்திரத்திலேயே மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வாக்குமூலங்களைப் பெற முற்படுகின்றனர்.</p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது தவறானதாகும்.</p><p>காலியிடங்களை நிரப்புவதும் புதிய நீதிமன்றங்களை நிறுவுவதுமே இதற்கான உண்மையான தீர்வாகும்.</p><h2>83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும்</h2><p> </p><p>இந்தச் சட்டத்திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தைப் கடுமையாகப் பாதிக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் என்பன சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c311a9-ef86-42fa-af70-b3f6fc274bbf/26-6a7aabb4eb1d5.webp' /></p><p>அதேபோன்று, சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தித் தப்பியோட முடியாது. சிறைச்சாலைகள் அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எத்தனை சிறைச்சாலைகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்? </p><p>வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைச் சிறைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரிச் சேவைகளுக்கும் எவ்வாறு செலவிட்டார் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.</p><p>அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தத்தில் ஊறிய இயல்பாகும். 83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும் அவர்களின் இந்த அடக்குமுறைப் போக்கையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது.</p><p>ஊடகவியலாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் வைத்தியர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் போது, அவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து அடக்க முயல்கின்றனர். ஆனால், இவ்வாறான அடக்குமுறைகளால் மக்களின் குரலையோ அல்லது எதிர்க்கட்சியின் குரலையோ ஒருபோதும் முடக்கிவிட முடியாது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T05:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன் - கனடாவில் இரத்து செய்யப்பட்ட விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/child-refuses-to-wear-seat-belt-flight-cancelled-1786421474"></link>
            <id>https://ibctamil.com/article/child-refuses-to-wear-seat-belt-flight-cancelled-1786421474</id>
            <summary type="text">கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒரு சிறு குழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416" target="_blank">கனடாவில் </a>சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் நின்று கொண்டு&nbsp; ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் முனையத்திற்கே திரும்ப வேண்டியிருந்தது என்று போர்ட்டர் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த 'போர்ட்டர் எயார்லைன்ஸ்' (Porter Airlines) விமானத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>பாதுகாப்பு விதிமுறை</h2><p>
விமானம் புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும் அடம்பிடித்துள்ளான்.

சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் விமானம் ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aa9ec6-3667-4a80-b1bc-72a48b3849f6/26-6a7aa4a2b1cba.webp' /></p><p>பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் விமானத்தை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.</p><p>

இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், விமானத்தை&nbsp; அன்றைய தினம் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் விமான நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T04:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிலையமொன்றில் முறைகேடு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irregularity-at-gr-5-scholarship-exam-center-doe-1786420137"></link>
            <id>https://ibctamil.com/article/irregularity-at-gr-5-scholarship-exam-center-doe-1786420137</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்ற பரீட்சை நிலையமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்ற பரீட்சை நிலையமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய வலயக் கல்வி பணிமனை மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>தாமதமாக வழங்கப்பட்ட&nbsp;வினாத்தாள்</h2><p>கேகாலையில் பரீட்சை நிலையம் ஒன்றில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது, மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டு, உரிய நேரத்துக்குள் மீள சேகரிக்கப்பட்டதாக மாணவர்களும் பெற்றோரும் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6cf8368-4c91-41b1-9286-c39a613a37af/26-6a7aa3e811dc4.webp' /></p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.</p><p>

இவ்வாறான சம்பவங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், “தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை” தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T04:27:36+00:00</updated>
        </entry>
    </feed>
