<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T13:17:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெருசலேமின் ஐ.நா. நிவாரணப் பணி தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-attack-on-un-relief-site-1787661576"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-attack-on-un-relief-site-1787661576</id>
            <summary type="text">ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
</p><p>
அங்குள்ள தொழிற்பயிற்சி மையங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை குறித்தும் ஹமாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
</p><p>
இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பின் திட்டம் எனவும் ஹமாஸ் கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>ஐ.நா. தீர்மானங்கள்</h2><p>

ஹமாஸின் டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
“இந்தத் தாக்குதல் ஐ.நா. தீர்மானங்களுக்கும் சர்வதேச மரபுகளுக்கும் ஒரு அப்பட்டமான சவால்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78015873-97c7-4498-a70a-e739f57c4246/26-6a8d8d0bcd150.webp' /></p><p>
</p><p>
இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். 

மேலும், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தவும், சியோனிச அமைப்புக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கைகளை விதிக்கவும், ஐ.நா. நிவாரணப் பணி முகமையைப் (UNRWA) பாதுகாப்பதிலும் அது தனது பங்கை ஆற்றுவதற்கு வழிவகுப்பதிலும் தமது பொறுப்புகளை நிறைவேற்றவும் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:05:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபாத் ஜெயசூரியவின் ஐ.சி.சி பதிவேட்டில் பதிவாகிய புள்ளிக்குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deduction-point-recorded-in-prabath-icc-record-1787660211"></link>
            <id>https://ibctamil.com/article/deduction-point-recorded-in-prabath-icc-record-1787660211</id>
            <summary type="text">ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் வீரர்&amp;nbsp; பிரபாத் ஜெயசூரியவுக்கு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் வீரர்&nbsp; பிரபாத் ஜெயசூரியவுக்கு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்திய அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ஆட்டமிழந்த பிறகு, தனது மட்டையால் எல்லை கோட்டு அடையாளங்களை தாக்கியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A third player has been sanctioned by the ICC for an incident during the second <a href="https://x.com/hashtag/WTC27?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WTC27</a> contest between Sri Lanka and India in Colombo.<a href="https://t.co/WzZVABH8uT">https://t.co/WzZVABH8uT</a></p>&mdash; ICC (@ICC) <a href="https://x.com/ICC/status/2092179406471278827?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>மூன்றாவது வீரர்</h2><p>“இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை பெற்றதையடுத்து, தண்டனைக்கு உள்ளான மூன்றாவது வீரராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de4572c-b1b4-4253-a49f-f75bce597ae1/26-6a8d87b5ce244.webp' /></p><p>
</p><p>
ஜெயசூரிய, சர்வதேச போட்டியின்போது “கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதான உபகரணங்கள் அல்லது பொருத்தப்பட்ட சாதனங்களை தவறாகப் பயன்படுத்துதல்” தொடர்பான ஐசிசி வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறையின் 2.2ஆம் பிரிவை மீறியதாகக் கண்டறியப்பட்டார்.
</p><p>
இதனையடுத்து அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த 24 மாத காலப்பகுதியில் இது அவரது முதல் குற்றமாகும்.

திங்கட்கிழமை அன்றைய ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பின்னர், மீண்டும் ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியில் ஜெயசூரிய தனது துடுப்பினால் எல்லைக் கயிற்றின் தடுப்புப் பகுதிகளைத் தாக்கிய சம்பவமே இதற்குக் காரணமாகும்.
</p><p>
ஜெயசூரிய தனது தவறை ஒப்புக்கொண்டு, எமிரேட்ஸ் ஐசிசி எலைட் நடுவர் குழுவைச் சேர்ந்த போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதனால் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T12:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் மற்றும் ஆதவ் அர்ஜீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-will-imposed-tamil-nadu-chief-minister-vijay-1787657158"></link>
            <id>https://ibctamil.com/article/fine-will-imposed-tamil-nadu-chief-minister-vijay-1787657158</id>
            <summary type="text">தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 27ஆம் திகதி வரை சென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 27ஆம் திகதி வரை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மேலும் அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால், தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.</p><p>

தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.</p><p></p><h2>உயர்நீதிமன்றம் எச்சரிக்கை&nbsp;</h2><p>இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad4fe628-8b94-4989-bf49-2be9e4c61b6a/26-6a8d85690c129.webp' /></p><p>
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25.08.2026) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதல்வர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நிறைவுபடுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T12:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூஆர் முறை எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/when-will-qr-based-fuel-distribution-be-cancelled-1787653948"></link>
            <id>https://ibctamil.com/article/when-will-qr-based-fuel-distribution-be-cancelled-1787653948</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (25.08.2026) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
எரிபொருள் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாததால், எதிர்காலத்திலும் QR முறையின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கியூஆர் முறை எப்போது ரத்து</h2><p>

எனினும், QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் நுகர்வு ஓரளவு குறைந்துள்ளதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இந்த முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ee924d-a3e7-4e90-8a78-18bda1e54027/26-6a8d79fe3f703.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-announcement-of-provincial-council-elections-1787656360"></link>
            <id>https://ibctamil.com/article/govt-announcement-of-provincial-council-elections-1787656360</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.</p><p></p><h2>நாடாளுமன்றில் நியமிக்கப்பட்டுள்ள&nbsp;குழு</h2><p> </p><p>இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c582a65-897e-456c-8789-4d648d0e9b48/26-6a8d7be5d0522.webp' /></p><p> </p><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். </p><p>தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்“​ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:26:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[OMPயின் ஏமாற்று நாடகம்! யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : காவல்துறையினர் அராஜகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-front-of-jaffna-district-secretariat-1787654147"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-front-of-jaffna-district-secretariat-1787654147</id>
            <summary type="text">ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. </p><p>இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் காவல்துறையினர் கடுமையாக முரண்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வயோதிப தாய்மாரையும் போராட்ட களத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர்.</p><p></p><h2>முரண்பட்ட காவல்துறையினர்</h2><p>வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (25) குறித்த போராட்டம் நடைபெற்றது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (omp) ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரணச் சான்றிதழும் வேண்டாம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f720dc-4ecb-454c-b5da-9af3e2330cad/26-6a8d741f948b9.webp' /></p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம்
திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/f8AxIh972JU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-bottles-sold-at-inflated-prices-in-nallur-1787648933"></link>
            <id>https://ibctamil.com/article/water-bottles-sold-at-inflated-prices-in-nallur-1787648933</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p> இது குறித்து மேற்கொள்ளப்பட்ட&nbsp; விசாரணையில் குடிநீர் போத்தலானது அதிக விலைக்கு விற்பனை
செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>லட்சங்களில் அபராதம்</h2><p>
</p><p>
</p><p>அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கானது, இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77685613-8a17-4686-8d02-044bb4bab6d0/26-6a8d6a542c61d.webp' /></p><p> 

இதன்போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.</p><p>இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற
குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே
குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413"></link>
            <id>https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கெஹல்பத்தாரா பத்மே'வை, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.</p><p></p><h2>கனேமுல்ல சஞ்சீவ படுகொலை</h2><p>இதன்போது இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bb27ed-64ac-45b8-b1ed-35dba4c35440/26-6a8d6a60524b8.webp' /></p><p>பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக கெஹெல்பத்தர பத்மே (பத்மசிறி பெரேரா) செயல்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் இடம்பெற்ற விசாரணைகளில் 'கெஹெல்பத்தர பத்மே' சர்வதேச காவல்துறை (Interpol) மற்றும் இந்தோனேசிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Lstyt6kDUJU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது சகாக்கள் கடந்த 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.</p><p></p><h2>CID அதிகாரிகள் விசாரணை</h2><p>இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பத்மே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6259c9b9-598c-402c-81fc-b86e8071ce7b/26-6a8d6a615e97a.webp' /></p><p>இவர் மீது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பாரிய பணமோசடி, கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இதன்படி இந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து CID அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையில் டி-56 ரக துப்பாக்கிகள், மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa982bc-c9de-4da6-8e4d-ff5e20158dcd/26-6a8d6a62c23b6.webp' /></p><p>நுவரெலியா பகுதியில் பத்மேவின் நிதியுதவியுடன் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>மேலும், சட்டவிரோத சொத்துக்கள் ஒழிப்பு பிரிவினரால் இவருக்குச் சொந்தமான 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் முடக்கப்பட்டன.</p><p>இதன்படி தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பத்மேவின் தாயார் தாக்கல் செய்த மனுவை அடுத்து, அவரை CID custody-லேயே வைத்திருக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி பத்மே செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728"></link>
            <id>https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728</id>
            <summary type="text">வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
</p><p>
குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன்
சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன்
மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது.</p><p></p><h2>இறுதித் தமிழ் குறுநில மன்னன்</h2><p>


இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள்,&nbsp;அரச உயர் அதிகாரிகள்&nbsp;பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/776d35c3-90df-483a-8026-a470a47d0448/26-6a8d6e6233cd1.webp' /></p><p>இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆங்கிலேயர் கைப்பற்றுவதற்கு முன், அதனை சுதந்திரமாக ஆட்சி செய்த இறுதித் தமிழ் குறுநில மன்னன் பண்டாரவன்னியனின் ஆவார்.</p><p>வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்த ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் ஆதிக்கத்தையும், அவர்களின் வரி வசூலிப்பையும் இவர் கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை&nbsp;பண்டாரவன்னியனின் கொண்டுள்ளார்.</p><p>1803 ஆகஸ்ட் 25 அன்று முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயக் கோட்டையை&nbsp; தாக்கி, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி இந்த மன்னனுக்கு சொந்தமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def6159c-b115-4cb0-a7e6-0164bf74a741/26-6a8d6e62dde92.webp' /></p><p>மேலும், பிரித்தானியத் தளபதி வொன் டிறிபேர்க் தலைமையிலான பெரும் படையுடன் கச்சிலமடு என்ற இடத்தில் நடந்த இறுதிப் போரில் இவர் தீரத்துடன் போரிட்டார்.</p><p>ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு எதிராகத் தன் தாயக விடுதலைக்காகப் போராடி, 1803 அக்டோபர் 31 அன்று தனது உயிரைத் தியாகம் செய்தார்.</p><p>வன்னி மக்களின் சுதந்திரத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவரை, இலங்கை அரசு 1982 ஆம் ஆண்டு 'தேசிய வீரன்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கௌரவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c4e6b2-3845-40bb-8c72-5cc24fc739e3/26-6a8d6e63967e7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த தெல்லிப்பழை துர்க்கை அம்பாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414"></link>
            <id>https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தெல்லிப்பழை துர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.</p><p>தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;மகோற்சவ பெருவிழா கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில்10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று&nbsp;11 ஆம் நாளான இன்று (25) இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;சிறப்பு பூசைகள்</h2><p>இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb33005-e9af-4c2e-9fa6-cd1a8780c320/26-6a8d6cfa7d7f9.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி, தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க இரதோற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p>அத்துடன் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 12ஆம் நாள் திருவிழாவான
நாளை (26) தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865"></link>
            <id>https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865</id>
            <summary type="text">அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. </p><p>

இந்த நிலையில் அவருக்கான தடுப்புக் காவலை&nbsp;மேலும் 90 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்</h2><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db6e488a-c5d4-486a-a076-6f9626ba4693/26-6a8d63d7ea42f.webp' /></p><p> </p><p>

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடைமையாக்கப்படவுள்ள மில்லியன் கணக்கான சொத்துக்கள் : காவல்துறை அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-mn-1787641117"></link>
            <id>https://ibctamil.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-mn-1787641117</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில்&amp;nbsp;காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பில்&nbsp;காவல்துறை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வுட்லர்&nbsp;இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><h2>நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பஸ் லலித் என்பவரும் பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவரின் சொத்துகள் தொடர்பில் முன்னதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d2a827-b7f6-4b03-848b-6b35f363f53f/26-6a8d5ad54f14b.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், ஆபரணங்கள், பணம், வாகனங்கள், சொகுசு வீடுகள் மற்றும் காணிகள் போன்ற சட்டவிரோத சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிலும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற வழக்கு விசாரணை</h2><p>
</p><p>
அதன்படி, குறித்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்கத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a67888-3a48-42b5-8b0d-40b1ff4b7d29/26-6a8d58d3c4a47.webp' /></p><p>இதனிடையே, கடந்த 2025 ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின்கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
</p><p>
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது, வெளிநாடுகளில் தப்பியோடி வாழும் அனைத்து சந்தேகநபர்களையும் குற்றவாளிகளையும் தொடர்ந்தும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் உறுதியாகச் செயற்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா பேருந்து விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-accident-in-nuwara-eliya-one-person-dead-1787645807"></link>
            <id>https://ibctamil.com/article/bus-accident-in-nuwara-eliya-one-person-dead-1787645807</id>
            <summary type="text">நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.பேருந்து விபத்துக்குள்ளான ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த காரொன்றில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்ட் CCTV கமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.</p><p>குறித்த விபத்து&nbsp;கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>சாரதி கைது</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fecfc86-8cd5-4d33-b794-781afdce7c27/26-6a8d563e27bb9.webp' /></p><p>கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதியுள்ளது.
</p><p>
இதன்போது, வீதியோரமாக நடந்து சென்ற இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் சிக்கி, பேருந்து அவர் மீது கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி மற்றும் பெண் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சாரதி நேற்று (24.08.2026) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சாரதியை இன்று (25.08.2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் தாபன விதிக் கோவையை மீறுகின்றாரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secretary-of-the-chavakachcheri-urban-council-1787640694"></link>
            <id>https://ibctamil.com/article/secretary-of-the-chavakachcheri-urban-council-1787640694</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்
இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக
பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்
இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக
பயன்படுத்தி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.</p><p>

இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச்
செல்வதற்கு தனிப்பட்ட ரீதியில் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது எனவும்
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து
நாளொன்றுக்கு 50 KM க்கு உட்பட்டு பயன்படுத்தலாம் எனவும் நிர்வாக
அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவையில் சொல்லப்பட்டுள்ளது.</p><p>

இதற்கு முரணாக சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி சபை
அனுமதித்தால் தான் வாகனம் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தி வாகனம் பயன்படுத்த
அனுமதிப்பது என தீர்மானம் நிறைவேற்ற செய்துள்ளார்.</p><p></p><h2>தினமும்&nbsp;80 KM பயணம்</h2><p>
</p><p>
இதன்போது உறுப்பினர்களால் குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி
ஆணையாளருக்கு அறிவித்து அவரது அனுதியின் பின்னரே வாகனத்தை பயன்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e65479b-1906-4967-b35f-61a3f3de37da/26-6a8d448672591.webp' /></p><p>
</p><p>
எனினும் உறுப்பினர்கள் கூறிய விடயங்கள் சபைக்கூட்ட அறிக்கையில்
உள்ளடக்கப்படாத்தோடு உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்காமலும் தினமும் YY 3619
இலக்கமுடைய நகரசபையின் முச்சக்கரவண்டியில் சாவகச்சேரி நகரசபை எல்லை தாண்டி
சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லை தாண்டியும் வலிகாம்ம் கிழக்கு பிரதேச
சபைக்குள் உரும்பிராய் வரையும் தினமும் காலை மாலை என இரண்டு தடவைகள் சுமார் 80
KM கள் வரை பயணித்துள்ளார்என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
கைதடி வரையுமே வாகனத்தை பயன்படுத்த போவதாக சபைக்கு தெரிவித்த நிலையில்
உரும்பிராய் வரையும் சென்று வந்துள்ளார்.
</p><p>
எனினும் வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி
நகராட்சி மன்றத்தில் இருந்து உரும்பிராய் சென்று வருகின்றமை தொடர்பில் பதிவு
செய்யாமல் நகரசபை எல்லைக்குள் பல்வேறு தடவைகள் பயணித்தமை போன்றை பதிவு செய்து
எரிபொருள் நிரப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
</p><p>
இதேவேளை நகரசபையின் தவிசாளர் தனது அலுவலக கடமைகளுக்கு கூட இதுவரை தனது சொந்த
வாகனத்தினையே பயன்படுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. </p><p>இந்நிலையிலேயே
சபையின் செயலாளர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட போக்குவரத்துக்கு
சபை வாகனத்தை பயன்படுத்துகின்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றில் இதுவரை செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் தூர
இடங்களில் இருந்தாலும் தமது சொந்த வாகனங்களிலேயே அலுவலகத்துக்கு வந்த்தோடு
அலுவலக கடமைகளுக்கு மட்டுமே சபையின் வாகனங்களை பயன்படுத்தியமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி ஆற்றின் கரையோரத்தில் கலக்கப்பட்ட இரசாயனப் பொருள்! நீர் விநியோக தடை குறித்து விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemicals-mixed-on-the-banks-of-the-kelani-river-1787646869"></link>
            <id>https://ibctamil.com/article/chemicals-mixed-on-the-banks-of-the-kelani-river-1787646869</id>
            <summary type="text">ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு இன்று அதிகாலையில் (25) நீர் விநியோகம் தடைபட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
</p><p>
தண்ணீரில் ஏதேனும் அசுத்தங்கள் கலந்துள்ளதா என்பது உறுதிசெய்யப்படும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வாரியத் தலைவர் சந்தனா பண்டாரா தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது நீர் விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், எந்த வகையிலும் அசுத்தமான நீர் பொதுமக்களுக்கு வழங்கப்படாது என்றும் தலைவர் உறுதிப்படுத்தினார்.</p><p>[WCILQBU
]</p><h2>பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையம்</h2><p>இது குறித்து கருத்து வெளியிட்ட&nbsp;வாரிய தலைவர்,&nbsp; “இன்று நாங்கள் ஒரு சிறப்புச் சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27dad71b-27f8-4f12-a860-0d84d58b553e/26-6a8d5397ab2da.webp' /></p><p> நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், எமது இரண்டு பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களான அம்பத்தலே மற்றும் களனி தென்கரை அல்லது பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சில கழிவுகள் (இரசாயனம்) சுற்றுச்சூழலில் வெளியிடப்பட்டதை நாங்கள் அறிந்தோம். </p><p>இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை மையமும் எங்களுக்குத் தகவல் அளித்தது. அந்த நேரத்தில், மக்களின் பாதுகாப்பு கருதி அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நாங்கள் தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது. </p><p>அந்தத் தருணத்திலிருந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, அனைத்து வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களுடன் அப்பகுதிக்குச் சென்று அவசரகால விசாரணையை நடத்தியது. </p><p>இதில் பேரிடர் மேலாண்மை மையமும் ஈடுபட்டிருந்தது. களனி ஆற்று நீரின் நிலையும் சரிபார்க்கப்பட்டது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T08:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stolen-jewelry-jaffna-that-was-pawned-is-recovered-1787645741"></link>
            <id>https://ibctamil.com/article/stolen-jewelry-jaffna-that-was-pawned-is-recovered-1787645741</id>
            <summary type="text">யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்க்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் சாவகச்சேரி தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>மீட்க்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒருகோடியே 50 இலட்சம் ரூபா என
சாவகச்சேரிப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>சிசிரிவி காணொளி</h2><p>இது குறித்து தெரிய வருகையில், கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து சிசிரிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4cdf20-fe5f-4a92-bab1-4079d70bd5c0/26-6a8d4f306ab6a.webp' /></p><p>

அதன்போது யாழ். நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று
முன்தினம் (22) கைது செய்யப்பட்டார்.
</p><p>
பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர்,
கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய
இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத் திருடியமை
தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137ad351-0c86-4b2f-bd93-001501f467b5/26-6a8d6f3edad0b.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும்,
நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p><h2>கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்
ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a843c9-d1e0-465e-927e-73d480f07564/26-6a8d4f2fb5fbc.webp' /></p><p>
அதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்</p><p>
இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30f6b5a-708d-48f2-9c7d-c2b9daefc6b7/26-6a8d6f3fc06ed.webp' /></p><p>
</p><p>
மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு
வருவதற்கான உத்தரவையும் காவல்துறையினர் பெற்றனர்.</p><p>

அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண்
தங்க நகைகளையும், யாழ். நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17
பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MpKuPzBhMnk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T08:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pakistan-and-iran-made-in-talks-on-conflict-1787641347"></link>
            <id>https://ibctamil.com/article/pakistan-and-iran-made-in-talks-on-conflict-1787641347</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.</p><p>தெஹ்ரான் பயணத்தின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை இந்த விடயத்தை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளும் கவனம் செலுத்தியதாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் ஈரானியத் ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உள்துறை அமைச்சரின் பதிவு</span></p><p>
பிராந்திய அமைதி மற்றும் இந்த சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழி குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Field Marshal Syed Asim Munir and I had a very positive and productive meeting with the President of Iran. Our discussion focused on the Iran US conflict, tensions in the Middle East and the way forward, as well as the steps needed by both sides for restoration of the Islamabad… <a href="https://t.co/jt1wtlESCa">https://t.co/jt1wtlESCa</a></p>&mdash; Mohsin Naqvi (@MohsinnaqviC42) <a href="https://x.com/MohsinnaqviC42/status/2092023991242494217?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஈரானிய ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதுடன் மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டோம்," என்று முனிருடன் தெஹ்ரானுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் தனது எக்ஸ்&nbsp; (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

அலுவலக நேரத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையும், அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
முனீர் தனது தெஹ்ரான் பயணத்திற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசினார் என்று ரொய்ட்டர்ஸ் திங்களன்று செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்பரப்பில் நடமாடிய இலங்கைப் படகு - காவல்துறையின் கண்ணில் மண் தூவி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160</id>
            <summary type="text">இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் நேற்று (24.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளன.</p><p>
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்திய காவல்துறையினர் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தப்பிச் சென்ற&nbsp;படகு</h2><p>இதன்படி காவல்துறையினர் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும், அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30de446a-cf41-4079-a73d-ac96b936d78b/26-6a8d2986b6ce0.webp' /></p><p>தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் இருந்தனர் என்றும், அதில் பல மூடைகள் இருந்தன எனவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தியில் கூறப்பட்டுள்ளது.</p><p> இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்திய காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extreme-heat-tips-to-keep-kids-safe-temperatures-1787638890"></link>
            <id>https://ibctamil.com/article/extreme-heat-tips-to-keep-kids-safe-temperatures-1787638890</id>
            <summary type="text">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>குறித்த விடயத்தை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.</p><p></p><h2>அதிக வெப்பம்</h2><p>
 

நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a526beea-a84b-4d55-b3f6-3dd6f9af3583/26-6a8d415d80dbc.webp' /></p><p>தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.
</p><p>
 

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p></p><h2>விழிப்புடன் இருக்க வேண்டும்</h2><p>
</p><p>
 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d9105ea-7afb-43e9-b782-1475c612e40f/26-6a8d426c7b5f1.webp' /></p><p>இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-badulla-hospital-specialist-remains-mystery-1787641539"></link>
            <id>https://ibctamil.com/article/death-badulla-hospital-specialist-remains-mystery-1787641539</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;“பிரபாத் அன்றைய தினம் காலை சுமார் 10.00 மணியளவில் ஒரு அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டார் என்றும், அதன் பின்னர் அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும், நடந்த சம்பவத்தை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.</p><p>மேலும், உயிரிழந்த வைத்தியர் தனது கடமையை முறையாக நிறைவேற்றிய ஒருவராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மேற்கொள்ளப்பட்ட விசாரணை</h2><p>வைத்தியர் பிரபாத் அனுராத தயாரத்ன, நேற்று முன்தினம் (23) முதல் காணாமல் போயிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் நேற்று (24) மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca3f6e6-aa5d-458b-bbfb-6d242a7783cf/26-6a8d3fcf4fc94.webp' /></p><p>
</p><p>
மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் குறித்த வைத்தியருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது</p><p>. இதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மர்மமான முறையில் உயிரிழந்திருந்த வைத்தியரின் சடலத்திற்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், வைத்தியர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்களாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>தொடர் மன அழுத்தம்</h2><p>கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற வைத்திய நிபுணர் பிரபாத் அனுராத , இரு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e45743-d836-4372-978b-2c8b40a31c95/26-6a8d3fd00c6ec.webp' /></p><p>மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
வைத்தியர் நேற்று முன்தினம் காலை முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p> அந்தத் தேடுதலின்போது, நேற்று முன்தினம் இரவே அவரது மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில், ஒரு கல்லின் மீது வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T07:18:59+00:00</updated>
        </entry>
    </feed>
