<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-24T18:30:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-issues-middle-east-travel-warning-1784909698"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-issues-middle-east-travel-warning-1784909698</id>
            <summary type="text">அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

பிராந்தியப் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.</p><p>
</p><p></p><h2>கூடுதல் பாதுகாப்பு</h2><p>இந்தநிலையில் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும் மற்றும் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb634e3d-868b-476c-81e7-94de6d1e8f80/26-6a63aa4e15163.webp' /></p><p>யோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கத் இராஜதந்திர நிலையங்கள் உட்படப் பல இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><h2>ஆதரவான அமைப்புகள்&nbsp;</h2><p>ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நலன்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
</p><p>
போர்ச் சூழல் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89530725-fa31-4156-8409-62cc35331ced/26-6a63aa4d632f5.webp' /></p><p>வான்வெளிகள் மூடப்படலாம் மற்றும் பயணங்களில் கடும் தடங்கல்கள் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன் யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் தூதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தவறாது பின்பற்றுமாறும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் கொண்ட அநுரவுக்கு சுமையாகிய அரசியல் திண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-turmoil-burdens-anurag-1784903727"></link>
            <id>https://ibctamil.com/article/political-turmoil-burdens-anurag-1784903727</id>
            <summary type="text">தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் இலங்கை தொடர்பில் சிறந்த திட்டங்களை தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அதை செயற்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
இவ்வாறு சமகால அரசியல் குறித்தும், தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் டக்ளஸ் மையப்படுத்திய விடயங்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RL2gNI_wZM0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T16:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதவி விலகப் போவதில்லை! எதிர்க்கட்சிகளுக்கு ஹர்ஷன பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harshana-s-response-to-the-opposition-parties-1784899936"></link>
            <id>https://ibctamil.com/article/harshana-s-response-to-the-opposition-parties-1784899936</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு நாட்டு மக்கள் கோரி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு நாட்டு மக்கள் கோரி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>அரசாங்கத்தின் மக்கள் ஆணை</h2><p> 


“தன்னை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் குறிப்பிடவில்லை. ஊழல்வாதிகளும், பிணையில் உள்ளவர்களுமே நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69de48dd-e5c1-49c3-8241-b919a33b17f2/26-6a636961baefe.webp' /></p><p> </p><p>

நான் பதவி விலகப் போவதில்லை. அதற்கான எந்தவொரு அவசியமும் கிடையாது.

 நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றேன்.
</p><p>
அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு அமைவாக தனது கடமைகளை நிறைவேற்றுகின்றேன்.
</p><p>
அமைச்சரின் இந்த கருத்து, அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T15:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகர வன்முறை மோதல்! கொலைச் சம்பவ விசாரணையில் அம்பலமாகும் இணைய மோசடி சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/violent-clash-at-colombo-port-city-1784902266"></link>
            <id>https://ibctamil.com/article/violent-clash-at-colombo-port-city-1784902266</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாரிய குற்றவியல் விசாரணையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த மோதலின் போது கடத்தப்பட்டு பின்னர் எஹெலியகோடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை, கணினி மற்றும் இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின் போது, சம்பவத்தில் தொடர்புடைய சீன பிரஜைகள் இலங்கையில் எந்தவொரு சட்டபூர்வமான தொழிலிலும் ஈடுபடவில்லை என்பதும், அவர்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னரே நாட்டிற்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை</h2><p>
</p><p>இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சீன சந்தேக நபர்களிடம் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509afbd9-afc9-4d0e-be8b-d239d229e56f/26-6a63727d568a3.webp' /></p><p>

சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படும் குறித்த இரு சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். </p><p>பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>விசாரணைகளின் படி, கடந்த வியாழக்கிழமை (23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரில் இரண்டு சீன குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை தகவல்களின் படி, சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு சுமார் 11 மணியளவில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுக நகரில் உள்ள தொங்கு பாலம் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது அதிகாலை 2 மணியளவில் சுமார் 20 சீன பிரஜைகள் அடங்கிய மற்றொரு குழு அங்கு வந்து, குறித்த மூவரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்கியதுடன், கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
</p><p>
கடத்தப்பட்டவர்களில் இருவர் பின்னர் துறைமுக நகருக்குள் உள்ள ஒரு வாகனத்தில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.</p><p></p><h2>சடலத்தை மறைக்கும் முயற்சி</h2><p> </p><p>மூன்றாவது நபர் வேறு இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5607a995-cdac-429d-8a25-a1a27282e53b/26-6a63727ca2d8f.webp' /></p><p>
</p><p>
சில மணிநேரங்களின் பின்னர், கடத்தப்பட்ட சீன பிரஜையின் சடலம் எஹெலியகோடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், கைகள், கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> மேலும், சடலத்தை மறைக்கும் முயற்சியாக அதன் மீது கற்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று எஹெலியகோடா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குற்றச் செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு சொகுசு ஜீப் வாகனமும் பண்டாரகம, பஹல போப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விசாரணை தற்போது கொழும்பு குற்றப் பிரிவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>விசாரணை தொடர்பான அறிக்கை</h2><p>

விசாரணை தொடர்பான அறிக்கை காவல்துறை மா அதிபருக்கும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72b8e335-4f7a-4440-9de1-84991ee3ef31/26-6a63727bee22f.webp' /></p><p>சமீப காலங்களில் இலங்கையில் இடம்பெற்றுவரும் இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடி சம்பவங்களின் பின்னணியில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>

இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மோசடி மையங்கள், சீன பிரஜைகளால் ஒருங்கிணைக்கப்பட்டதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p>

சர்வதேச ரீதியில் செயற்படும் சீன ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடைய இணையவழி மோசடி நடவடிக்கைகள் பல நாடுகளில் இடம்பெற்று வருவதாகவும் விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கியதாக கூறப்படும் சில குற்றக் குழுக்கள், முதலீட்டு மற்றும் காதல் மோசடிகளை உள்ளடக்கிய இணைய மோசடி முறையை பயன்படுத்தியதாக சர்வதேச விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அதேபோன்ற மோசடி நடவடிக்கைகள் இலங்கையிலும் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>சீன டிரையாட்ஸ் என அழைக்கப்படும் நாடுகடந்த குற்ற வலையமைப்புகளும் இதுபோன்ற இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றமை, சம்பவத்தின் திட்டமிடப்பட்ட தன்மை மற்றும் சர்வதேச இணைய குற்றச் செயல்களுடன் காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவை, இலங்கை சர்வதேச குற்ற வலையமைப்புகளின் புதிய செயற்பாட்டு தளமாக மாறுகின்றதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T14:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/third-phase-excavation-work-at-chemmani-mass-grave-1784900858"></link>
            <id>https://ibctamil.com/article/third-phase-excavation-work-at-chemmani-mass-grave-1784900858</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தற்காலிக நிறுத்தம்</h2><p> </p><p>மேலும், 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/063e4ba8-365a-4182-8e53-5af5d0014364/26-6a63713b7becc.webp' /></p><p> </p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T14:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரளக் கஞ்சா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kerala-cannabis-burned-with-jaffna-1784900777"></link>
            <id>https://ibctamil.com/article/kerala-cannabis-burned-with-jaffna-1784900777</id>
            <summary type="text">ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது.
</p><p>
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு
திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்
வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த
கஞ்சாப் பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.
</p><p>
இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போதைத்தடுப்பு காவல்துறை , உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார
பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரியூட்டப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-24T13:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046"></link>
            <id>https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்) தொடர்புடைய ஒரு குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுத் துறையின் சில பிரிவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அண்மையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார். </p><p> 

சட்டபூர்வமான அரச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் படுகொலைகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலுக்கும் இந்தத் தொடர்பு பயன்படுத்தப்பட்டதாக திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>மௌலானா கூறிய&nbsp;வாக்குமூலம்</h2><p>
மேலும், அப்போது சுமார் ஆறு மாத கால அவகாசத்தில் இருந்த தேர்தலுக்கு முன்பு, இந்தத் தகவலை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc61374b-2404-4827-9ebc-de66cc37fe32/26-6a634befeef74.webp' /></p><p>
</p><p>
ஹன்சிர் ஆசாத் மௌலானா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, தற்போது விசாரணையில் உள்ள குழுவானது கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> 

பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், பத்திரிகையாளர்கள் கீத் நோயர் மற்றும் உபாலி தென்னக்கூன் மீதான தாக்குதல், மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் கொலை ஆகியவை இவற்றில் அடங்கும்.</p><p> 

இருப்பினும், இவை நீதிமன்றத்தின் முன் உள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே, இன்னும் இவற்றின் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றில் தனது உண்மைகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்டோர் இராணுவ உளவுத்துறை மூலம் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>
தகவல்களை மறைக்கும் செயல் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஒரு சந்தேக நபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல்</h2><p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சுரேஷ் சலே, ஆசாத் மௌலானாவின் குடும்பத்தினரை அஹுங்கல்லேவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தூதரகத்தில் ஒரு பதவி வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4233a4c9-d72d-4540-a1d2-3df925a77819/26-6a634bf0cc0e5.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் அந்த ஹோட்டலின் பதிவேடுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இதன்படி தற்போது காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், விசாரணையைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெறுவதாகவும் கூறி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், சலேவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p>

மேலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் தாக்குதல் நடத்தவோ ஆரம்பத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டு இந்தத் தாக்குதல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அப்போது நடைபெறவிருந்த தேர்தல்களை இலக்குவைத்து , சலே அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற முக்கிய பிரமுகர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் திருமணத்தின் மின்சார கட்டணம்! மனு விசாரணைக்கு திகதி அறிவித்த உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840"></link>
            <id>https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p></p><h2>அடிப்படை உரிமை மீறல்</h2><p>

விஜித்த குமார என்ற சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டியவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,682,246.57 ரூபா மின்சாரக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9231012-32e2-488b-a605-011baf8576f9/26-6a6358ac0e01c.webp' /></p><p>
</p><p>
தான் 7,390 ரூபா மாதாந்த மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காகத் தனது வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபா கட்டண நிலுவையை வைத்துள்ள வீரகெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்காமல் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், நாமல் ராஜபக்சவின் திருமண மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிருடன் இருந்தபோது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் படுதோல்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731"></link>
            <id>https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731</id>
            <summary type="text">

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கம் அமைச்சருக்கான தனது பலத்தை நிரூபித்துள்ளது.
</p><p>
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 152 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 உறுப்பினர்களும் வாக்களித்தனர். </p><p>

இதன்போது எவரும் வாக்களிக்காமல் இருக்கவிலை என தெரியவருகிறது.</p><p></p><h2>பதவியிலிருந்து நீக்கும் முயற்சி</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, நாட்டின் சிறைச்சாலை அமைப்பின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில் குறைபாடுகள் நிலவுவதாகவும், அந்த மோதலைத் தடுக்க நீதி அமைச்சர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளால் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd20a8e7-d53c-4ffb-b0e6-8f6cc1c5307c/26-6a63683cd6b37.webp' /></p><p>
</p><p>
எனினும், எதிர்க்கட்சியின் இந்த முயற்சியை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததன் மூலம், ஹர்ஷன நாணயக்காரவை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:27:29+00:00</updated>
        </entry>
    </feed>
