<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-04T12:32:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140</id>
            <summary type="text">புதிய இணைப்புநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியல் உத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் நாமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை ஐபிசி தமிழ் செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><u>சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!</u></b></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149f0c1-97c9-48df-96fe-4ac0298ed075/26-6a9aa79233c9b.webp' /></p><p>
</p><p>இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04-09-2026) காலை முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில் கைது செய்யப்ட்ட நாமல்&nbsp;ராஜபக்ச, புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>அரசாங்கம் அச்சமடைந்து அடக்குமுறையின் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வதாகவும், இத்தகைய தடைகளால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8JcRUCEXLkY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T12:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்கு வங்கி உள்ள இடங்களுக்கு மட்டுமே அபிவிருத்தி: மட்டக்களப்பு எம்.பி.க்கள் மீது கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/epdp-urges-npp-mp-to-focus-on-batticaloa-fishermen-1788517839"></link>
            <id>https://ibctamil.com/article/epdp-urges-npp-mp-to-focus-on-batticaloa-fishermen-1788517839</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்
எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேசுவதில்லை
எனவும் இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> ஈ.பி.டி.பி.கட்சி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>
ஈழ மக்கள் ஜனநாயக ஊடக மாநாடு இன்று (04-09-2026) இடம்பெற்றது.</p><p></p><h2>அதிக கடற்றொழிலாளர்கள்</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்
எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக
பேசுவதில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6a675f-fa3d-4bbd-9e88-589224ad0eea/26-6a9ab352619cd.webp' /></p><p>இதனால் மனவேதனை அடைந்துள்ளோம், கிழக்கு மாகாணத்தில் அதிக கடற்றொழிலாளர்களை கொண்ட கடற்றொழிலாளர் சங்கமான பாலமீன்மடு,
திராய்மடு கட்றாறழிலாளர் சங்கம் இந்த சங்கம் 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதை பெற்ற
பெரிய ஒரு சங்கமாகும்.</p><p>இவ்வாறான நிலையில் பாலமீன்மடு மீன் சந்தையில் அதிகாலை 6.00 மணியிலிருந்து 7.00
மணிக்குள் 300 மீன்பிடி படகுகள் கட்றறொழிலாளர்ளுடன் தரித்து நின்று வியாபாரத்தில்
ஈடுபடும் ஒரு பிரதான தளம்</p><p></p><h2>பல தடவைகள்&nbsp;</h2><p> இந்த மீன் சந்தை கட்டிடம் இன்று இடிந்து விழும்
நிலையில் உள்ளது

இது தொடர்பாக பல தடவைகள் மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடந்த கால ஆட்சியில் அபிவிருத்தி குழு தலைவர்
என்ற போர்வையில் இருந்த இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் உட்பட
அனைவருக்கும் எழுத்து மூலமாக சங்கம் கோரிக்கையை முன்வைத்தது.</p><p>

இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கவில்லை என மன வேதனையுடன்
தெரிவிக்கின்றோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fbf8aa1-da48-421c-8c7d-c089860c39a2/26-6a9ab3533e00e.webp' /></p><p>அதேவேளை இன்று நடந்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு
கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதும் அதை முடித்து வைப்பதும் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தை பரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்.</p><p> இவர் இன்று மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்து
கொண்டிருக்கிறார், இவருக்கு எங்கெல்லாம் வாக்கு வங்கி இருக்கின்றதே அந்த பிரதேசத்தில் அவரது
அதிகாரத்தை பயன்படுத்தி துரிதமாக அபிவிருத்தி செய்து வருகிறார்.</p><p> </p><p></p><h2>குடியேற்றத் திட்டம்</h2><p>அவருக்கு
வாக்கு வங்கி இல்லாத பிரதேசங்களை அக்கறை செலுத்துவதில்லை.

இது மறைமுகமாக அவருக்கு வாக்களித்தால் உங்கள் ஊர்களை அபிவிருத்தி
செய்வார் என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கும் ஒரு திட்டமாக தான் இதை
கருதுகிறேன்.</p><p>எனவே இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற
உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d196c0a-e1cb-4cf1-be9c-52eb54cb5e76/26-6a9ab538bec91.webp' /></p><p>அதேவேளை பாலமீன்மடு 60 கடற்றொழிலாளர் குடியேற்றத் திட்டத்தில் உள்ள மக்கள் குடிநீர்,
மலசல கூடம் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதியின்றி ஓலைக்குடிசையில் நகரை அண்டி
வாழ்ந்து வருகின்றனர்.</p><p> இது தொடர்பாக இதற்கு முதல் ஊடகங்கள் ஊடாக
சுட்டிக்காட்டியிருந்தேன் இன்று வரை அரசாங்க அதிபரோ அல்லது நாடாளுமன்ற
உறுப்பினர்களோ அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>&nbsp;எனவே இந்த பாலமீன்மடு கடற்றொழிலாளர் 60 வீட்டுத்திட்ட மக்கள் பிரச்சனை, பாலமீன்மடு
மீன் சந்தை புனரமைப்பு, இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மட்டக்களப்பு பிரதான
வாவியை கடற்றொழிலாளர்களின் நலனுக்காக அகலப்படுத்தி ஆழப்படுத்தி புனரமைக்க வேண்டியது
தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி குழுவில் பேச
வேண்டியது உங்கள் கடமை” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T12:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-into-pole-at-srinagar-airport-1788522806"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-into-pole-at-srinagar-airport-1788522806</id>
            <summary type="text">இந்தியாவின் ஜம்மு காஷ்மீ - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிவந்த இண்டிகோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜம்மு காஷ்மீ - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிவந்த இண்டிகோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்துமிடத்திற்கு செல்லும் போது கம்பம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது

குறித்த கம்பம் ''Visual Docking Guidance System (VDGS) எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட கம்பமாகும்.</p><p></p><h2>அதிகாரிகள் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
எனினும் விபத்தில் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98f38e4-d69f-4389-b954-758c181a5d8f/26-6a9ab2cc9e8d0.webp' /></p><p>

நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-jaffna-vali-north-land-release-1788520412"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-jaffna-vali-north-land-release-1788520412</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p>இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய
தினம் (04) இந்தப் போராட்டம் நடைபெற்றது.</p><p> வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த
மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
காணப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;உயர்பாதுகாப்பு வலயம்</h2><p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7980119c-15f9-405f-9bdf-c69fda3b11e7/26-6a9aa96edb86c.webp' /></p><p>
</p><p>தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள்
போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை
விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி
உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை
20ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மீன்பிடிக்க சென்ற போது தோணி கவிழ்ந்து விபத்து : இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-died-in-boat-capsizing-accident-while-fishing-1788517996"></link>
            <id>https://ibctamil.com/article/2-died-in-boat-capsizing-accident-while-fishing-1788517996</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று (4) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இன்று (4) பிற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்க தலைவர் உட்பட இருவர்
நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரின் சடலம் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விபத்துக்குள்ளான தோணி&nbsp;</h2><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழிலாளர் சங்க தலைவரான துரைராஜா முத்தையா, விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b795fbcd-e18b-4509-8a9c-99cb176b6561/26-6a9aa576eb6e1.webp' /></p><p>இது குறித்து மேலும் தெரிவருகையில், குறித்த கடலில் இன்று காலை 11.00 மணியளவில் மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் சென்ற 3 பேர் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.</p><p>இதில் கடற்றொழிலாளரான 45 வயதுடைய செல்வகுமார் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் கடற்றொழிலாளர் சங்க தலைவரின் சடலம் காணாமல் போயுள்ளது.</p><p></p><h2>மட்டு போதனா வைத்தியசாலை</h2><p>காணாமல் போயுள்ள சடலத்தை தேடும் நடவடிக்கையில் கடற்றொழிலாளர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும்
கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdbdd085-b489-48a1-91e9-28b5f57571f1/26-6a9aa577ad792.webp' /></p><p>உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக
மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mendis-binura-out-of-england-t20i-series-1788511184"></link>
            <id>https://ibctamil.com/article/mendis-binura-out-of-england-t20i-series-1788511184</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை அணியின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்படி இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் ஏற்பட்ட காரணமாக தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.


​</p><p>2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைநார் காயமும் பினுரா பெர்னாண்டோவுக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கிரிக்கெட் சபை</h2><p>இந்த நிலையில் காயமடைந்த இரு வீரர்களும் தொடர் உடற்தகுதி மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போட்டித் தொடருக்குள் அவர்களால் முழுமையாகக் குணமடையாமல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் தொடரில் இருந்து காயமடைந்த இருவரும் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7a9ae7-4d34-498a-a8bf-f19f04c436ba/26-6a9a9c6535b08.webp' /></p><p>அத்துடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அறிவிப்பின்படி​குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும்​பினுரா பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும் ​குசல் மெண்டிஸ் இந்த தொடரில் பங்கேற்காததால், இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.
</p><p>
இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம்: அநுரவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட உயர்நீதிமன்ற தெளிவுரை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-concludes-hearings-on-anti-graft-bill-1788515502"></link>
            <id>https://ibctamil.com/article/sc-concludes-hearings-on-anti-graft-bill-1788515502</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p> 

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. </p><p>

இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன.</p><p> </p><p></p><h2>வாய்மூல சமர்ப்பணங்கள்</h2><p>இந்தநிலையில் இன்று (04-09-2026) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54332da3-77ff-41c7-80d8-1c2a466cf72f/26-6a9a9b58cbec9.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது. </p><p>

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[COPE குழுவில் கவனத்தை ஈர்த்த தணிக்கை அலுவலகத்தின் நிதிநிலை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/financial-statement-assessment-has-attracted-cope-1788507191"></link>
            <id>https://ibctamil.com/article/financial-statement-assessment-has-attracted-cope-1788507191</id>
            <summary type="text">தேசிய தணிக்கை அலுவலகத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள், பொது நிதிக் குழுவின்(COPF) கவனத்தை ஈர்த்துள்ளன.

நவீன தொழில்நுட்பம் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய தணிக்கை அலுவலகத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள், பொது நிதிக் குழுவின்(COPF) கவனத்தை ஈர்த்துள்ளன.
</p><p>
நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி தணிக்கை செயல்முறையை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவது, பணியில் திறமையான மனிதவளத்தைத் தக்கவைப்பது, மற்றும் அரசு நிறுவனங்களில் தணிக்கைப் பணிகளை மிகவும் திறமையாக மேற்கொள்வது ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
</p><p>
பொது நிதிக் குழுவின் தலைவரான ஹர்ஷா டி சில்வா வராததால், நிலை விதிகளின்படி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தணிக்கை செயல்முறை</span></p><p>
</p><p>
பிரதி அமைச்சர்களான சத்துரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க காணொளிக் காட்சி ஊடாக கலந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/962bd2a0-767f-487b-b490-140e8ce19f02/26-6a9a95d5ac0a3.webp' /></p><p>
</p><p>
தேசிய தணிக்கை அலுவலகத்தின் தணிக்கைப் பணிகளை மேலும் திறமையானதாகவும் தரமானதாகவும் மாற்றுவதற்கு, நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை விரிவாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக்குழு வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தணிக்கை செயல்முறையின் தொழில்நுட்ப மாற்றமானது, தணிக்கை நடவடிக்கைகளின் செயல்திறனையும் தரத்தையும் அதிகரிக்கவும், பொது நிதி மேலாண்மையின் மிகவும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், தணிக்கைத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பிறகு மற்ற துறைகளுக்குச் செல்வதால் எழும் மனிதவளத் தக்கவைப்புப் பிரச்சினையும் கவனத்திற்கு வந்துள்ளது.
</p><p>
திறமையான தணிக்கை அதிகாரிகளைப் பணியில் தக்கவைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான ஊதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு விவாதித்தது.</p><p></p><h2>பொறுப்புமிக்க அதிகாரிகளின் கடமை&nbsp;</h2><p>
</p><p>
அரசு நிறுவனங்களின் உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து சரிசெய்வதன் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன், தலைமைத் தணிக்கையாளரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைச் செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ள பொறுப்புமிக்க அதிகாரிகளின் கடமை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

சமுர்த்தி வங்கியின் தணிக்கையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, அச்செயல்பாடுகளை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

தணிக்கை செயல்முறையை நவீனமயமாக்கும்போது, ​​தெளிவான, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தை உருவாக்குவது மற்றும் பணியாளர் தேவைகளையும் வளங்களையும் மிகவும் திறம்பட நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-rate-in-sri-lanka-banks-today-1788514862"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-rate-in-sri-lanka-banks-today-1788514862</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (04.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (04.09.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி&nbsp;323.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	437.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 451.63 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		375.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.47 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c472de59-63ce-42a3-9d20-93a0505f9087/26-6a9a95c0cbb26.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	233.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.45 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 			231.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.08 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 	264.43 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T09:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதிகம சூட்டியின் 15 மில்லியன் பெறுமதியான சொத்து முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/property-linked-to-midigama-chuti-suspended-1788508880"></link>
            <id>https://ibctamil.com/article/property-linked-to-midigama-chuti-suspended-1788508880</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அதற்கமைய வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விதிக்கப்பட்டுள்ள தடை</h2><p>இந்த வீடு, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7f447ea-9e09-40e8-8325-e7094c7fa849/26-6a9a8f4b7b568.webp' /></p><p> 

இதன் காரணமாக, குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.</p><p>மிதிகம சூட்டி&nbsp;தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T09:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் இன்று கைது செய்யப்படுவார்: பட்டாசுக்களுடன் தயாராகும் ஜே.வி.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788507925"></link>
            <id>https://ibctamil.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788507925</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாரிய மக்கள் பேரணி எவ்வித தடங்களுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் என அந்த கட்சியின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நாமல் இன்று (04) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போது, அந்த வளாகத்திற்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமலைகைது செய்தால், நாங்கள் இன்னும் இருமடங்கு மக்களை அனுராதபுரத்திற்கு அழைத்து வருவோம்.</p><p></p><h2>கைது முயற்சி</h2><p> </p><p>

இந்த கைது முயற்சியின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. </p><p>

இந்த வார இறுதியில் ஜனாதிபதிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் அவருக்கு மக்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb60c83-bb26-4b50-873a-278d41696df7/26-6a9a7cc1e317b.webp' /></p><p>துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் கூறவா? அல்லது கோதுமை மா, பால் மாவின் விலையைக் குறைத்ததாகக் கூறவா? 

சொல்வதற்கு எதுவும் இல்லாததால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என்று கூறி அன்றைய தினம் கைதட்ட வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
</p><p>
நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் கிராம மட்டத்தில் பட்டாசுகளை கொளுத்தி, பதாகைகள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்தி கொண்டாடுமாறு ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தனது கட்சியினருக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் போதும், கட்சி பலமடையும் போதும் இவ்வாறான அழைப்புகளும் அடக்குமுறைகளும் சாதாரணமானவை.

இவற்றில் எதனாலும் தங்களது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது" என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-04T08:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788509761"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788509761</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,317,667 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 387,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d56c227-fb7d-4251-bc41-bba234378510/26-6a9a804eda1e3.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 354,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,340 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 338,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவும் கடும் வறட்சி : பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-96-000-people-affected-by-dry-weather-dmc-1788507124"></link>
            <id>https://ibctamil.com/article/over-96-000-people-affected-by-dry-weather-dmc-1788507124</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2> குடிநீர் விநியோகப் பணிகள்</h2><p>

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4978c5-82a7-4532-9a90-3c28070ac4a1/26-6a9a78c28c428.webp' /></p><p> 

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவை 2 மாதங்கள் முன்பே கணித்த நபர்...! வைரலான யூடியூப் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/christian-priest-predicted-nepal-flood-viral-video-1788489298"></link>
            <id>https://ibctamil.com/article/christian-priest-predicted-nepal-flood-viral-video-1788489298</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>இந்த நிலையில், யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.</p><p></p><h2>தண்ணீரைப் பார்க்கிறேன்</h2><p>



இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256b022f-deed-473d-93a6-a56357eb4d89/26-6a9a739d5cd55.webp' /></p><p> நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். </p><p>இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p>இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-04T07:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் பகிரப்பட்ட பெண்ணின் தவறான புகைப்படங்கள்: முன்னாள் கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-ginigathena-over-obscene-photos-1788504425"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-ginigathena-over-obscene-photos-1788504425</id>
            <summary type="text">பெண்ணொருவரின் தவறான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில்&amp;nbsp;கினிகத்தேன பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் தவறான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவத்தில்&nbsp;கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று (03-09-2026) பிற்பகல் கினிகத்தேன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71da3386-cca3-4194-887e-c688bbcde87c/26-6a9a6f5124bec.webp' /></p><p>சந்தேகநபர் முன்னர் முறைப்பாட்டாளரான பெண்ணைத் திருமணம் செய்திருந்தவர் என்பதும், பின்னர் அவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பின்னரே இக்குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலதிக விசாரணை: இச்சம்பவம் தொடர்பாகக் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cpc-reduction-in-furnace-oil-and-naphtha-prices-1788503165"></link>
            <id>https://ibctamil.com/article/cpc-reduction-in-furnace-oil-and-naphtha-prices-1788503165</id>
            <summary type="text">இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.</p><p>ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாயாலும் ஒரு லீற்றர் நெப்தாவின் விலை 35 ரூபாயாலும் குறைக்கப்படும் என&nbsp;பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர்&nbsp;மயூர நெத்திகுமரா தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி, இதுவரை 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாயால் குறைக்கப்பட்டு 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.</p><p></p><h2>விலை குறைப்புகளின் பலன்</h2><p>அத்துடன்&nbsp; 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35f968a-c047-4076-8859-3355a227cbe1/26-6a9a697c8cece.webp' /></p><p>இதேவேளை, இந்த விலை குறைப்புகளின் பலனைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
</p><p>மேலும் வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த நிவாரணம் பிரதிபலிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் அதிசயம் - 9 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு - வைரல் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-rescued-from-tunnel-9-days-after-nepal-flood-1788502820"></link>
            <id>https://ibctamil.com/article/2-rescued-from-tunnel-9-days-after-nepal-flood-1788502820</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>திரிசூல் 3A சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், மேலும் பல குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p></p><h2>தோளில் சுமந்து வரப்படும் காணொளி</h2><p>இவ்வாறான பின்னணியில், உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள், திரிசூலி 3A நீர்மின் திட்டத்திலிருந்து சேறு படிந்த தொழிலாளர்கள் மீட்பாளரின் தோளில் சுமந்து வரப்படும் காணொளிகளையும் படங்களையும் ஒளிபரப்பின. மீட்பாளர்கள் இதை ஒரு "அதிசயம்" என்று வர்ணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45e83f8-e91f-4c36-82d2-28e68376ae0a/26-6a9a67d011a72.webp' /></p><p>மீட்கப்பட்ட இருவர் கபீர் மகர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தெரிவித்தார்.
</p><p>
30 வயதான ஷா, நேபாள மின்சார ஆணையத்தில் (NEA) இயந்திரப் பணி மேற்பார்வையாளராகவும், 45 வயதான மகர்ஜன், திரிசூலி-3 'ஏ' நீர்மின் திட்டத்தில் மேற்பார்வையாளராகவும் உள்ளனர்.</p><p>வெள்ளம் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை மூடிய பிறகு, அதனுள் தவழ்ந்து சென்றதால் இருவருக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் மனம் இலகுவாகிவிட்டது," என மீட்கப்பட்ட பணியாளர் கபீர் மஹர்ஜனின் சகோதரர் அமீர் மஹர்ஜன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p></p><h2>புதிய நம்பிக்கை</h2><p>சீனா - நேபாள எல்லையில் உள்ள மலையில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து, அப்பகுதியில் மண் மற்றும் இடிபாடுகளின் சுவர் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான நீர்மின்சக்தித் தொழிலாளர்களில் அந்த இருவரும் அடங்குவர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l8mUJeh0yXc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T06:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-arundika-grilled-over-drug-kingpin-links-1788498735"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-arundika-grilled-over-drug-kingpin-links-1788498735</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.</p><p>நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் என்பவருடன் தொடர்புகளைப் பேணி பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்தநிலையில், நேற்றைய தினம் (03-09-2026) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அருந்திக பெர்னாண்டோ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தெஹிவளை - கல்கிஸ்ஸ கடலோரப் பகுதியில் சட்டவிரோத விடுதிகளை நிர்மாணிப்பதற்கு ஷிரான் பாசிக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3445ef8d-2cf9-42b5-9486-6c39aabacb15/26-6a9a62864afde.webp' /></p><p>இச்சம்பவம் மற்றும் மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சரிடம் தொடர்ந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்பகுதியில் ஷிரான் பாசிக்கு சொந்தமான சுமார் 20 உணவகங்கள் மற்றும் விடுதிகள் அமைந்துள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதக் கட்டுமானங்கள் என்பதுடன் வேறு நபர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பல்வேறு சலுகை</h2><p>இந்தச் சட்டவிரோத விடுதிகளைக் கட்டுவதற்கு அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவு போதைப்பொருள் கடத்தல்காரருக்குக் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>ஷிரான் பாசிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பில் தனியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d3ad63-22fe-49cc-84ce-18ac182b8795/26-6a9a628720158.webp' /></p><p>ஷிரான் பாசிக்குடன் தொடர்பைப் பேணி பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் மேலும் பல அரசியல்வாதிகளை வரும் நாட்களில் விசாரணைக்கு அழைக்க மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் திட்டமிட்டுள்ளது.</p><p>டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:35:47+00:00</updated>
        </entry>
    </feed>
