<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T09:37:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujith-jayasundara-and-hemasiri-sentenced-to-death-1785571012"></link>
            <id>https://ibctamil.com/article/pujith-jayasundara-and-hemasiri-sentenced-to-death-1785571012</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும், அதனால் உண்டான வடுவும் ஆறாத்துயரமும் இலங்கை மக்களின் நெஞ்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும், அதனால் உண்டான வடுவும் ஆறாத்துயரமும் இலங்கை மக்களின் நெஞ்சை விட்டு அகலவில்லை.</p><p>சுமார் 270க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரவலத்தின் தொடர்ச்சியாக, அண்மையில் கொழும்பு மூவரடங்கிய நிரந்தர மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கை அரசியலிலும் நீதித்துறை பரப்பிலும் இப்போது மீண்டும் ஒரு விவாதப் புயலைக் கிளப்பியிருக்கிறது.</p><p>சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c19ccc2-fbf6-410c-8bb7-699dc4c4d605/26-6a6dba3cf35f8.webp' /></p><p> அதாவது வெளிநாட்டு உளவுத்துறை மூலம் துல்லியமான எச்சரிக்கை கிடைத்தும், அதைக் கண்டுகொள்ளாமல் கடமை தவறினார்கள் என்பதே இவர்கள் மீதான பிரதானமான குற்றச்சாட்டு ஆகும். </p><p>

ஒரு நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக மேலோட்டமாகத் தோன்றலாம். </p><p>ஆனால், உண்மையில் சிறிலங்காவின் சட்டக் கட்டமைப்பு, வரலாற்று அனுபவங்கள் மற்றும் அதிகார மையங்களின் நகர்வுகளை உற்றுநோக்கும் எவருக்கும் ஒரு கேள்வி எழாமல் இல்லை.</p><p>அதாவது "இந்த மரண தண்டனை உண்மையில் நிறைவேற்றப்படுமா? அல்லது ஏதோ ஒரு சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புப் படிவத்தில் கையெழுத்தாகி இவர்கள் அமைதியாக வெளியேறுவார்களா?"</p><p></p><p>
</p><h2>
சட்டப் புத்தகத்தில் மரண தண்ட<span style="color: inherit; font-size: 1.75rem;">னை ஆனால் நடைமுறையில் ஆயுள் தண்டனை</span></h2><p>சிறிலங்காவின் குற்றவியல் சட்டப் புத்தகத்தில் மரண தண்டனை இன்றும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் எந்தவொரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09112b62-eb94-4334-b558-c8c16faed60a/26-6a6dba3de23d7.webp' /></p><p> </p><p>சட்டத்தால் அறிவிக்கப்படும் மரண தண்டனைகள் அனைத்துமே நடைமுறையில் ஆயுள் தண்டனையாகவே மாற்றப்படுகின்றன.
அப்படியிருக்க, பூஜிதவிற்கும் ஹேமசிறிக்கும் வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைத் தீர்ப்பு என்பது, பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் மற்றும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தணிப்பதற்காக வீசப்பட்ட ஒரு சட்டரீதியான "தற்காலிக வடிகால்" என்றே கருத வேண்டி இருக்கிறது.</p><h2>
அரசியலமைப்பு பிரிவு 34 - திறந்தே இருக்கும் பின்னடைவுக் கதவுகள் </h2><p>சிறிலங்கா அரசியலமைப்பின் 34ஆம் சரத்து, நாட்டின் ஜனாதிபதிக்கு அபரிமிதமான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு கைதியின் தண்டனையைக் குறைப்பதற்கோ, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது முற்றிலும் இரத்து செய்து "ஜனாதிபதி பொதுமன்னிப்பு" வழங்கி விடுவிப்பதற்கோ ஜனாதிபதிக்கு முழு உரிமை உண்டு.</p><p>

அப்படியாக இலங்கை வரலாற்றில் சுதந்திர தினம் மற்றும் புனித வெசாக் பண்டிகைகளின் போது கைதிகள் விடுவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337a6288-d796-4b86-a659-ba804722d857/26-6a6dbbb3e972d.webp' /></p><p> இங்கும் அரசியல் சூறாவளிகள் தணிந்து, மக்களின் நினைவலைகளில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கொந்தளிப்புகள் மெல்ல மெல்ல மறையும் போது, மேல்முறையீட்டு வழக்குகளின் போக்கிலோ அல்லது பின்னணியில் நடக்கும் அரசியல் காய்நகர்த்தல்களிலோ இவர்களுக்கான மன்னிப்பு வாசல்கள் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. </p><p>உண்மையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் காலத்தைக் கழிப்பதும், பின்னர் அமைதியாக விடுதலையாவதும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்குப் புதிய விடயமல்ல.</p><p></p><h2>

சமாந்தரமற்ற நீதிமுறைமை தமிழ் மக்களுக்கான தராசு வேறுதானா?
</h2><p>
அதிலும் நேற்றைய இந்தத் தீர்ப்பை அணுகும் போது, இலங்கையின் நீதித்துறையில் நீண்டகாலமாகக் காணப்படும் "சமாந்தரமற்ற நீதிமுறைமை" குறித்துப் பேசாமல் கடந்து செல்ல முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d70409-f3ac-4389-b166-fb1d4bf86832/26-6a6dbbb4a6847.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இனமும் அதிகார பலமுமே இங்கு நீதியின் வேகத்தைத் தீர்மானிக்கின்றனவா என்ற ஐயம் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் வலுத்து வருகிறது.</p><p>
</p><h2>
செம்மணி முதல் ஏனைய மனிதப் புதைகுழிகள் வரை </h2><p>
1990களில் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் போர்க்கால மனித உரிமை மீறல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான தண்டனைகளும் வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4ad6c2-1f90-4695-a8d4-ea438814e783/26-6a6dbbb5635df.webp' /></p><p> </p><p>மாறாக, அவர்களில் பலர் பதவி உயர்வுகளையும், தூதரகப் பொறுப்புகளையும், அரசு கௌரவங்களையுமே பரிசாகப் பெற்றனர்.</p><h2>

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சாலே விவகாரம்</h2><p> 
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்ட கையோடு இராஜாங்க அமைச்சராக ஆக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32de08f-4bd8-4da7-b722-23643b6dca7c/26-6a6dbbb615723.webp' /></p><p> அதேபோல ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சர்வதேச ஊடகங்களால் (Channel 4 உட்பட) கைநீட்டப்பட்ட முன்னாள் புலனாய்வுத் துறை பிரதானி சுரேஷ் சாலே மீதான விசாரணைகள் எந்த மட்டத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்பது நாட்டிற்கே வெளிச்சம்.</p><p>
ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களாக இருக்கும் போது தசாப்த கணக்கில் இழுத்தடிக்கப்படும் விசாரணைகளும், மூடிமறைக்கப்படும் குற்றங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையான சமூகம் சார்ந்த மக்களாக இருக்கும் போது விரைந்து அளிக்கப்படும் தீர்ப்புகளும் இலங்கையின் "இரட்டை நீதித் தராசை" தோலுரித்துக் காட்டுகின்றன.</p><h2>

'சூத்திரதாரி' யார்?
</h2><p>உணமையில் பூஜித ஜெயசுந்தரவையும் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தண்டனைக்கூண்டில் ஏற்றுவதுடன் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு முடிந்துவிடப்போவதில்லை. அவர்கள் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய "கடைநிலை பலியாடுகள்" மட்டுமேயாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160ca50d-9c2e-4059-a387-12d05e8380bf/26-6a6dbbb6c4efc.webp' /></p><p>
</p><p>ஆனால், இந்தக் கொடூரத் தாக்குதலைப் பின்னணியில் இருந்து திட்டமிட்டது யார்? இதன் மூலம் அரசியல் இலாபம் அடைந்த "மகா மூளை" யார்? என்ற கேள்விகள் இன்னமும் பலரிடம் இருக்கத்தான் செய்கின்றன.</p><p> சுருக்கமாகச் கூறினால், தற்போதைய மரண தண்டனைத் தீர்ப்பு என்பது அமைதியின்றித் தவிக்கும் மக்களுக்குக் காட்டப்பட்ட ஒரு தற்காலிகச் சமாதானக் கொடிமட்டுமே.</p><p> நாளையே ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது அரசியல் சமரசங்களோ ஏற்படும் போது, "சுதந்திர தினப் பரிசாக" இவர்களது தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை சாத்தியமானால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T09:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட எண்ணெய்ப் தாங்கி கப்பல்...! அமெரிக்க முற்றுகையால் உச்சக்கட்ட பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tanker-hit-by-projectile-off-oman-1785574868"></link>
            <id>https://ibctamil.com/article/tanker-hit-by-projectile-off-oman-1785574868</id>
            <summary type="text">ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரித்தானியக் கடற்படையின் கடல்சார் வர்த்தகச் தொழிற்பாடுகள் பிரிவு (UKMTO) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஓமானின் லிமா பகுதிக்கு வடகிழக்கே சுமார் 12 மைல் (20 கிலோமீற்றர்) தொலைவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>கடுமையாகச் சேதம்</h2><p>தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை (Engine Room) கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
</p><p>
தாக்குதலையடுத்துக் கப்பலைத் தன் கட்டுப்பாட்டில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cac8af2-5bea-4a20-b66d-1fc4d71643f3/26-6a6dba5ecd529.webp' /></p><p>அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் பணியாளர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விவரங்களை UKMTO அமைப்போ அல்லது அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>இதனிடையே, சனிக்கிழமையன்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் மற்றொரு எண்ணெய்ப் தாங்கி கப்பலின் மாலுமி, கப்பலுக்கு அருகே கடலில் பெரிய வெடிப்புச் சத்தத்துடன் நீர் எழும்பியதைக் கண்டுள்ளதாக UKMTO பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

எனினும், இச்சம்பவத்தில் கப்பலுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4a0aae-7677-4aa6-98cb-17cd80e9fa84/26-6a6dba5f7cb7e.webp' /></p><p> 

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்தோடு அமெரிக்கா, ஈரானியத் துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்திற்கு முற்றுமுழுதாகத் தடை மற்றும் முற்றுகை விதித்துள்ளதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முற்றாக முடக்கும் நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் சபையின் செயலாளர் முகமது பாகர் சோல்காத்ர் எச்சரித்திருந்தார்.</p><p>

இந்தநிலையில் உலகின் மிக முக்கிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியே சாதாரண நாட்களில் நாளொன்றுக்குச் சுமார் 130 கப்பல்கள் வரை பயணித்து வந்தன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/why-ranil-exonerated-in-easter-attack-case-1785571426"></link>
            <id>https://ibctamil.com/article/why-ranil-exonerated-in-easter-attack-case-1785571426</id>
            <summary type="text">2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடும் விதிக்கப்பட்டது

ஆனால் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மட்டும் குற்றவியல் நடவடிக்கையில் இருந்து தப்பியது எப்படி ?</p><p>

268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட இந்த தேசிய சோகத்தில் நாட்டின் பிரதமராக இருந்தவர் எப்படி பொறுப்பாக முடியாது ? என்ற பொதுமக்களின் கேள்விக்கு, கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, CID விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியன வழங்கும் விடைகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h5><b><u>1. 2018 அரசியலமைப்பு நெருக்கடி உருவாக்கிய அதிகார வெற்றிடம்</u></b></h5><p>2018 ஒக்டோபர் 26 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். 

52 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்தின் பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவால் டிசம்பர் 16 அன்று ரணில் மீண்டும் பிரதமரானார்.
</p><p>
அரசியலமைப்பு நெருக்கடிக்கு பின்னர் ஜனாதிபதி-பிரதமர் உறவு முற்றாக முறிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a259c20-5540-4373-90c8-a0af9aa612df/26-6a6dac2845176.webp' /></p><p> 

இதன் நேரடி விளைவாக, 2018 ஒக்டோபர் 26 முதல் 2019 ஏப்ரல் 21 தாக்குதல் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்பு சபையின் ஒரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை.
</p><p>
தேசிய பாதுகாப்பு சபைதான் புலனாய்வுத் தகவல்களை ஆராய்ந்து தேசிய பாதுகாப்பு முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பு. 

அதில் இருந்து பிரதமர் முற்றாக விலக்கப்பட்டதால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய 3 எச்சரிக்கைகளும் அவருக்கு சென்றடையவில்லை. </p><p>

இதில் தான் தகவல் வழங்கப்படாத ஒருவர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? என்ற சட்ட வாதம் ரணில் தரப்புக்கு பலமாக அமைந்தது.&nbsp;</p><p></p><h5><b><u>2. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தமை</u></b></h5><p>இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறைமைப்படி, பாதுகாப்பு அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆகியன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழேயே இயங்கின. </p><p>

2015-2019 காலகட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfe0203d-16c4-42ac-81a2-33ae7a4b4dd5/26-6a6dac275c7c8.webp' /></p><p>காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு சேவைகள் அனைத்தும் இவரின் கீழும் அவசரகால உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவரின் கீழே இருந்தது

இதில் பிரதமராக இருந்த ரணிலிடம் பொருளாதாரம், கொள்கை வகுப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஒருபோதும் பாதுகாப்பு விவகாரங்களில் நேரடி நிர்வாக அதிகாரம் வழங்கப்படவில்லை.
</p><p>
இது குறித்த விசாரணையில் உயர் நீதிமன்ற தீர்ப்பில் ( SC FR 163/2019) 7 நீதிபதிகள் கொண்ட ஆயம், பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கே புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் இறுதி பொறுப்பு உள்ளது என தெளிவாக குறிப்பிட்டது. </p><p>

இதனால் கடமை தவறுதல் என்ற குற்றவியல் பிரிவு ரணில் மீது பாயவில்லை.&nbsp;</p><p></p><h5><b><u>3. CID அறிக்கையும் தகவல் பரிமாற்ற துண்டிப்பும்</u></b></h5><p>அப்போதைய அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன CID இடம் வழங்கிய வாக்குமூலத்தில், “(2020 ஜூன்), ஏப்ரல் 9, 11 மற்றும் 20 ஆகிய தினங்களில் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய எச்சரிக்கைகளை ஜனாதிபதிக்கான தினசரி புலனாய்வு அறிக்கையில் சேர்த்தேன். </p><p>

அது ஜனாதிபதி செயலகத்துக்கு மட்டுமே அனுப்பப்படும். 

பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும் நடைமுறை அப்போது இருக்கவில்லை” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fcc3e5a-2538-43d7-be90-c690a8f58593/26-6a6dac28ed62f.webp' /></p><p>அத்தோடு "ஏப்ரல் 20 அன்று தகவல் கிடைத்ததும் நான் ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டுமே வட்ஸ்அப் அனுப்பினேன். </p><p>பிரதமருக்கு அனுப்பவில்லை. காரணம் பாதுகாப்பு விவகாரங்கள் ஜனாதிபதியின் நேரடி பொறுப்பு. 

தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பிரதமர் அழைக்கப்படாததால் அவருக்கு தகவல் தெரிவிக்கும் வழமை இருக்கவில்லை” என ஹேமசிறியும் அப்போது உயர் நீதிமன்றில் வாக்குமூலம் அளித்தார்.</p><p>

இதன்படி தகவல் பரிமாற்ற சங்கிலியில் பிரதமர் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் குற்றவியல் பொறுப்பில் இருந்து ரணில் மீண்டும் தப்பினார்.</p><p></p><p>
</p><h4><b><u>4. உயர் நீதிமன்றத்தின் தெளிவான பிரித்தாளும் தீர்ப்பு
(2023 ஜனவரி 12 - SC FR 163/2019)</u></b></h4><p>இந்த வரலாற்று தீர்ப்பில்தான் உயர் நீதிமன்றம் யார் யார் பொறுப்பு என்பதை தெளிவாக பிரித்தது.</p><p>1. மைத்திரிபால சிறிசேன: ரூ.100 மில்லியன் நட்டஈடு. </p><ul><li>காரணம் - பாதுகாப்பு அமைச்சர், தகவல் கிடைத்தும் நடவடிக்கை இல்லை.</li></ul><p>
</p><p>2. பூஜித் ஜயசுந்தர: ரூ.75 மில்லியன் நட்டஈடு.</p><ul><li>காரணம் - காவல்துறைமா அதிபராக எச்சரிக்கையை செயல்படுத்தவில்லை.</li></ul><p>&nbsp;3. ஹேமசிறி பெர்னாண்டோ: ரூ.50 மில்லியன்.</p><ul><li>காரணம் - பாதுகாப்பு செயலாளராக தடுப்பு நடவடிக்கை தவறியமை.</li></ul><p>&nbsp;4. நிலந்த ஜயவர்தன: ரூ.75 மில்லியன்.</p><p> 
</p><ul><li>காரணம் - புலனாய்வு பணிப்பாளராக தகவலை முறையாக கையாளவில்லை.</li></ul><p>இந்த தீர்ப்பின் முடிவில்தான் ரணில் விடுவிக்கப்பட்டவர்.</p><p></p><h2>புலனாய்வுத் தகவல்கள்</h2><p>
</p><p>ரணில் விக்ரமசிங்க, "பிரதமருக்கு புலனாய்வுத் தகவல்கள் முறையாக வழங்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு சபையில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். எனவே அவரால் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருக்கவில்லை" என நீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கில் இருந்து விடுவித்தது.</p><p>எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க குற்றவியல் பொறுப்பில் இருந்து தப்பியதற்கு சட்ட ரீதியான 4 காரணங்கள் இருந்தாலும் அரசியல் ரீதியான கேள்விகள் இன்னும் எழுப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0378f264-3175-4c6e-9bf6-729a7bdc147c/26-6a6dac29a209c.webp' /></p><p>
</p><p>நாட்டின் பிரதமராக இருந்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டறியவில்லை.தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படாவிட்டாலும் நாடாளுமன்றல் அல்லது அமைச்சரவையில் இதை பிரச்சினையாக எழுப்பியிருக்கவில்லை. ஜனாதிபதியுடன் முரண்பாடு இருந்தாலும் 268 உயிர்கள் தொடர்பான விவகாரத்தில் அரசியல் பாராமல் செயல்பட்டிருக்கவில்லை.</p><p>இவற்றையே அப்போதைய எதிர்க்கட்சிகள் கேள்விகளாக எழுப்பின.</p><p>சட்டப்படி குற்றமில்லை என்பதற்கும், அரசியல் ரீதியாக பொறுப்பு இல்லை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது அவர்களின் வாதம்.&nbsp;</p><p>2019 உயிர்த்த தாக்குதல் வழக்கில், அதிகாரம் இருந்தவர்களுக்கு தகவல் இருந்தது, தகவல் தேவைப்பட்டவருக்கு அதிகாரம் இருக்கவில்லை என்ற அவல நிலையே 268 உயிர்களை காவு கொண்டது என்பதை இந்த விசாரணை ஆவணங்கள் தெளிவாக காட்டுகின்றன.&nbsp;&nbsp;</p><p>இதில் ரணில் விக்ரமசிங்க சட்டத்தின் முன் தப்பியிருந்தாலும் வரலாற்றின் கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.&nbsp;</p><p>
</p><p> 
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:41:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்ததில் வீட்டு உபகரணங்கள் சிதைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lightning-struck-the-house-setting-it-on-fire-1785569214"></link>
            <id>https://ibctamil.com/article/lightning-struck-the-house-setting-it-on-fire-1785569214</id>
            <summary type="text">அம்பாறை இகினியகல&amp;nbsp; காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்&amp;nbsp;கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை இகினியகல&nbsp; காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்&nbsp;கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.</p><p>இந்த விபத்து நேற்று&nbsp; (31.07.2026) நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p>சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மின்னல் தாக்கத்தால் எரிந்த வீடு</h2><p>குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகள் மழை தொடங்கியதும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f750dfe1-e11a-4b85-ad25-5e2515619262/26-6a6daff92d8b7.webp' /></p><p>
மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே தீ வேகமாகப் பரவியுள்ளது.</p><p>இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்</p><p>ஆனாலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது.&nbsp;</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக இகினியகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/high-court-orders-dismissal-sudumalai-temple-case-1785571270"></link>
            <id>https://ibctamil.com/article/high-court-orders-dismissal-sudumalai-temple-case-1785571270</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் கோவிலில் தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் கோவிலில் தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (31.07.2026) இடம்பெற்றது.</p><p>மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாதென இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் கோரியிருந்தனர். </p><p>இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார். நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><h2>சுதுமலை அம்மன் கோவில் வழக்கு</h2><p>விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0eb0ee8-2fa9-4ec9-a3d2-dc977df9a02f/26-6a6daac2a05c0.webp' /></p><p>எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும்கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான நியாயாதிக்கம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.</p><p> மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இவ்வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இவ்விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார்.&nbsp;</p><p>எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு;, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p>மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது விவகாரம்...! எதிர்ப்புகளுக்குப் பின்னால் அரசியல் சதி - ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-on-protests-over-judge-retirement-age-1785565049"></link>
            <id>https://ibctamil.com/article/probe-on-protests-over-judge-retirement-age-1785565049</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து அரசாங்கத்தின் உளவுத்துறையினர் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த எதிர்ப்புகளுக்கு ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து அழுத்தங்களோ அல்லது தூண்டுதல்களோ வழங்கப்படுகிறதா என்பது குறித்துக் கண்டறிந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த விசாரணையின் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதனடிப்படையில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் நபர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து உளவுத்துறையின் பல குழுக்கள் தற்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>சட்டத்தரணிகள் சமூகம்</h2><p>


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் தீர்மானத்தைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் சமூகம் மற்றும் நீதித்துறை அமைப்பினுள் ஒருவித பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e82837-4ac3-4838-aa91-3eea349a7e10/26-6a6da6370f013.webp' /></p><p>இது தொடர்பாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசாங்கத்தின் நடவடிக்கை</h2><p>அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14cec49-26a8-45cc-a0e4-da0709cac520/26-6a6da637b4e82.webp' /></p><p>இதனிடையே, நீதித்துறையில் உருவாகியுள்ள இந்த நெருக்கடி நிலைமை குறித்து எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் பலமாகக் குரலெழுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்த எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வரை சந்திக்கத் திட்டமிடும் இலங்கை எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rauff-hakeem-plan-to-meet-the-tn-chief-minister-1785569544"></link>
            <id>https://ibctamil.com/article/rauff-hakeem-plan-to-meet-the-tn-chief-minister-1785569544</id>
            <summary type="text">தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.</p><p>திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கயில், திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாகச் சந்தித்து, தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள்</h2><p>அத்துடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், இலங்கைக்கு விரைவில் வரவுள்ள இந்திய வெளியுறவு செயலாளரையும் சந்தித்து 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab894b69-dee0-447f-9315-4a0aaaee1d58/26-6a6da449bf2ef.webp' /></p><p>


தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை இரு நாடுகளின் கடற்றொழிலாளர் சமூகங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். </p><p>அத்துடன் இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். </p><p>



மேலும், யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கையையும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-gce-al-exam-and-grade-5-scholarship-exam-doe-1785568138"></link>
            <id>https://ibctamil.com/article/2026-gce-al-exam-and-grade-5-scholarship-exam-doe-1785568138</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும்&amp;nbsp;ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை குறித்து&amp;nbsp;இலங்கை பரீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும்&nbsp;ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை குறித்து&nbsp;இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.&nbsp;</p><p>அதன்படி, தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறும் எனவும்,&nbsp;க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாடசாலை விண்ணப்பதாரர்கள்</h2><p>அத்துடன் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8aef521-f96d-45b6-ad1e-a27fd2e72243/26-6a6d9e6fb5e90.webp' /></p><p>

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலயக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>அனுமதி அட்டைகளில் திருத்தங்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>இதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c09a013-01d7-4936-b34b-88ce7bec48e8/26-6a6d9e6f07230.webp' /></p><p>

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/57-people-die-tens-of-thousands-cross-to-spanish-1785561088"></link>
            <id>https://ibctamil.com/article/57-people-die-tens-of-thousands-cross-to-spanish-1785561088</id>
            <summary type="text">மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்பெயினுக்குள் நுழைய மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போதே இவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சம்பவத்தை அடுத்து, தனது வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவின் ஜனாதிபதி, அங்கு இராணுவத்தையும் காவல்துறையையும் ஸ்பெயின் நிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மனிதக் கடத்தல் கும்பல்கள்</h2><p>மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0aac92-d4cc-4527-8e2f-0bfd6a54f55a/26-6a6d9b0d516d2.webp' /></p><p>செயுட்டா அல்லது மெலில்லாவை அடைய முயலும் போது கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று இந்த மாத தொடக்கத்தில், ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>மனிதக் கடத்தல் வலையமைப்புகள் அந்தத் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, " ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் குறிப்பாக இளைஞர்களின் வருகையை ஊக்குவிப்பதாக நம்புவதாக" ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும்.

முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தீவிர கண்காணிப்பு</span></p><p>இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e5cbe2-2287-4638-b14e-6970a9c6d6c9/26-6a6d9b0c9c3b5.webp' /></p><p>நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், காவல்துறையினரைம் அதிக அளவில் குவித்திருந்தது.</p><p>
</p><p>மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/17-shipping-containers-adrift-in-sea-after-falling-1785564578"></link>
            <id>https://ibctamil.com/article/17-shipping-containers-adrift-in-sea-after-falling-1785564578</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>தற்போதைய கடல் நீரோட்டத்தின் அடிப்படையில், இந்த கொள்கலன்கள் பேருவலை, நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரை உள்ள கடலோரப் பகுதிகளை நோக்கி கரையொதுங்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கடலில் மிதக்கும் 17 சரக்குக் கொள்கலன்கள்</h2><p>இதனால், அந்தக் கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0014ab-7a0b-4260-b31a-fc83589e5863/26-6a6d98eace4dd.webp' /></p><p>மிதக்கும் கொள்கலன்களில் ஏதேனும் ஒன்றைக் காணும் மீனவர்கள் மற்றும் மாலுமிகள், உடனடியாக மீன்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்கள் துறையின் வானொலித் தொடர்பு மையத்திற்குத் தெரிவிக்குமாறு அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், கடலில் மிதந்து வரும் இந்தக் கொள்கலன்கள் எங்காவது தென்பட்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்தொழிலாளர் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களும் கடற்தொழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகுகள் விபத்து : மீட்பு நடவடிக்கையில் விமானப்படையின் ஹெலிகொப்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fishing-vessel-in-distress-off-negombo-1785565033"></link>
            <id>https://ibctamil.com/article/fishing-vessel-in-distress-off-negombo-1785565033</id>
            <summary type="text">நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. </p><p>

மேலும், விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான 'பெல் 412' (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.</p><p> 

நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற டிங்கி படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலமே முதன்முதலில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>ஒருவரின் சடலம் மீட்பு&nbsp;</h2><p> 

இருப்பினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடிக்கச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5921307-3b24-466b-a27d-17305b643445/26-6a6d95f74f1cb.webp' /></p><p> </p><p>

தற்போது வரை, விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில், அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இதற்கமைய, காணாமல் போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காகக் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விசேட மூழ்கிச் செல்லும் அணியினருடன் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், வான் மற்றும் கடற்படைப் பிரிவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mE-f7vAG1S0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T06:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்கள்: பின்கதவால் தப்பி ஓடிய NPP அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-journalists-protest-demanding-justice-1785565445"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-journalists-protest-demanding-justice-1785565445</id>
            <summary type="text">படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக
கோடிட்டு காட்டியுள்ளதாக, யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.
</p><p>
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மாவட்ட செயலகம் முன்பாக
ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது , ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம்.</p><p></p><p>
</p><h2>ஊடகவியலாளர்கள் படுகொலை&nbsp;</h2><p>
எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை
முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ee02c2-0ef6-46cd-9996-6d33c14a85d3/26-6a6d953000e2d.webp' /></p><p>இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39
ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள்
அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம்கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்தோம்.</p><p>

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும்
எங்களோடு பேசுறதுக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். எங்களுடைய பேச்சை கேட்டார்கள்.
</p><p>எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான,
விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.</p><p></p><p> </p><h2>அப்புறப்படுத்த சொன்ன மாவட்ட செயலர்&nbsp;</h2><p>இந்த
அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது
காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில்
முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட
செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a9b692-8e78-4b4c-a1a8-fc786dcffa90/26-6a6d93d21bd9f.webp' /></p><p>
இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த
அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. </p><p>தமது பதவிகளை
தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில்
வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து
வலிகளோடுதான் இருக்கிறோம். </p><p>ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர்
படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி
கூறினார்கள்

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது.
அதன் வெளிப்பாடே இன்று எங்கள் கோரிக்கைகளை, எங்கள் நியாயங்களை கேட்க கூட பிரதி
அமைச்சர் தயாராகவில்லை.</p><h2>அரசாங்கம் தயாராகவில்லை</h2><p>

அநுர அரசாங்கத்தின் ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு
நியாயம் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e9abdac-00c7-405c-97cc-10ef6941b00d/26-6a6d93d2e860e.webp' /></p><p>இந்த அரசு வாய்மொழி மூலம் சொல்ற
அனைத்தும் பொய்களாகவே இருக்கின்றது என்பது புலனாகிறது.

எனவே, யாழ் ஊடக மையம் , யார் வந்தாலும் என்ன செய்தாலும் எமக்கான நீதி
கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும்.</p><p>

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி நாம் மாவட்ட செயலகத்தின் வெளியே
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது, மாவட்ட செயலகம் உள்ளே சில ஊடகவியலாளர்களை
அழைத்து செயலமர்வு நடக்கிறது,

உண்மையிலேயே இந்த செயலமர்வு நடப்பதாக இருந்தால், அங்கே அந்த இடத்தில் முழு
ஊடகவியலாளரும் பங்குபற்றி இருக்க வேண்டும். </p><p>ஆனால் தாம் யாழ்ப்பாணத்தில் ஊடக
செயலமர்வை நடாத்தி விட்டோம் என காட்ட , முனைந்துள்ளார்களே தவிர ,
ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் பிரச்சனைகளை கேட்க இந்த அரசாங்கம்
தயாராகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:42:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-s-son-flees-sl-to-australia-1785557485"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-s-son-flees-sl-to-australia-1785557485</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த இருவரும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> 

குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அரசாங்கம் விசாரணைகள்</h2><p>

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகாலத்திலும் தற்போதைய அரசாங்கமும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa01c4d-28fd-4d17-a776-a34b17c8ec93/26-6a6d7a47b603b.webp' /></p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-case-focus-turns-to-maithripala-1785560900"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-case-focus-turns-to-maithripala-1785560900</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த ஜூலை 31ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து இந்த தேசிய சோகத்தின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. </p><p>

அனைத்து சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கியே திரும்பியுள்ளன.
</p><p>
268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட அந்த தாக்குதல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின், இறுதி பொறுப்பாளி யார் ? என்ற கேள்விக்கு விடை காணும் நிலைக்கு நீதித்துறை வந்துள்ளது.</p><p></p><p> </p><p><u><b>

2019 முதல் 2026 வரை நடந்த விசாரணைகளில் மைத்திரி மீது முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
</b></u></p><p>
2021 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் படி, 2018 ஒக்டோபர் முதல் தாக்குதல் நடந்த 2019 ஏப்ரல் வரை ஜனாதிபதி மைத்திரி தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களை முறையாக கூட்டவில்லை. </p><p>

இதனால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய முக்கிய எச்சரிக்கைகள் கூட்டாக ஆராயப்படவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்த்தமையும் நிர்வாகக் கோளாறு என ஆணைக்குழு கண்டித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3509b6-3dd5-47ef-b577-e7e0bc103567/26-6a6d896944e05.webp' /></p><p>தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 16ஆம் திகதி மைத்திரி தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றார். </p><p>பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த அவர், நாட்டை விட்டு வெளியேறும் போது பதில் அமைச்சரை நியமிக்கவில்லை. 

இது அரசியலமைப்புக்கு விரோதமான தேசிய பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்திய நிர்வாகப் பொறுப்பற்ற செயல் என 2021 ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது.&nbsp;</p><p></p><p><b><u>2023 ஜனவரி 12 உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை வழக்கு தீர்ப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஹேமசிறி பெர்னாண்டோவின் வாக்குமூலம்:
</u></b></p><p>“ஏப்ரல் 20 மாலை 5:30 மணிக்கு நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என தகவல் வழங்கினார்.</p><p> உடனடியாக சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கு வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். பதில் வரவில்லை.
</p><p>இதையடுத்து உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலை தடுக்கத் தவறி மக்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என தீர்ப்பளித்து அவருக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடு விதித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b29d0a60-2744-44e9-8de9-abb9f42c84a3/26-6a6d8967a834d.webp' /></p><p>மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் 2026 ஜூலையில் ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் அளித்த வாக்குமூலம் மைத்திரி மீதான குற்றச்சாட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது. </p><p>

தாக்குதலின் பின்னர் மேலும் சிலரைக் கைது செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது மைத்திரி என்னிடம், பூஜித் ஜயசுந்தரவையும் உன்னையும் மட்டும் கைது செய்தால் போதும். மற்றவர்கள் வேண்டாம் என நேரடியாக உத்தரவிட்டார்.”</p><p>
அதே வாக்குமூலத்தில் நிலந்த ஜயவர்தன உயிர்த்த தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர். அவர் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயல்பட்டவர் எனவும் ஹேமசிறி குற்றம் சாட்டினார்.</p><p>
</p><p></p><h2>புதிய விசாரணை</h2><p>மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் இந்த வாக்குமூலங்கள் புதிய விசாரணைக்கு வழிவகுக்கும் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சட்டத்தரணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "உயர் நீதிமன்றம் ஏற்கனவே சிவில் பொறுப்பை நிரூபித்துள்ளது. கடமை தவறுதல், நிர்வாக முறைகேடு, நீதிக்கு இடையூறு என குற்றவியல் விசாரணைக்கான அனைத்து அடிப்படைகளும் தற்போது தயாராக உள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8688d3fe-3dd9-4922-a2f4-1be6bc5f8e67/26-6a6d89686f546.webp' /></p><p>ஹேமசிறி, நிலந்த, CID என அனைத்து சாட்சியங்களும் ஜனாதிபதியின் முடிவு என்ற ஒரே புள்ளியில் குவிகின்றன" என தெரிவித்துள்ளார்.</p><p>
268 உயிர்களின் இறுதி பொறுப்பாளி யார் என்ற கேள்விக்கு அரசியல் தலைமையின் பங்கு விசாரிக்கப்படாமல் நீதி முழுமையடையாது என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும், சட்ட சமூகத்தினதும் ஒருமித்த குரலாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அடுத்த விசாரணை மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே இருக்கும் என்பது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378</id>
            <summary type="text">இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.&amp;nbsp;தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.&nbsp;</p><p>தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையில் இருந்து இந்த போதைபொருளை கடத்த முற்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>

</p><p>குறித்த சம்பவத்தில் காவல்துறையினர் ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6d2ae5-3be6-4582-9ca9-1c562736ace4/26-6a6d8a7229815.webp' /></p><p>காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுமடம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.</p><p>சோதனையின் போது, 146 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 292 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.&nbsp;</p><p>இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது இது இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-to-case-against-ven-gnanasara-thero-1785561315"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-to-case-against-ven-gnanasara-thero-1785561315</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இவ்வழக்கு நேற்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>நீதிபதியின் உத்தரவு&nbsp;</h2><p>

இதன்போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசோக வீரசூரிய நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியமாக பெயரிடப்பட்டுள்ள இறுவட்டு ஒன்றை முறைப்பாட்டாளர்கள் இதுவரை தமக்கு வழங்வில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3caf15-3d31-4677-820a-3e1d2fc33241/26-6a6d888956d69.webp' /></p><p>

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய சட்டமா அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்குத் திகதியொன்றை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.</p><p>
</p><p>

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்குடன் தொடர்புடைய இறுவட்டை அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பிற்கு நிச்சயமாக வழங்கி வைக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கினை செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/f-35b-stealth-crashed-in-california-pilot-ejected-1785556675"></link>
            <id>https://ibctamil.com/article/f-35b-stealth-crashed-in-california-pilot-ejected-1785556675</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியாகோவில் உள்ள மிராமர் விமானப்படைத் தளத்திற்கு அருகே அமெரிக்க கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியாகோவில் உள்ள மிராமர் விமானப்படைத் தளத்திற்கு அருகே அமெரிக்க கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம் நேற்று (31.07.2026) விபத்துக்குள்ளானது. </p><p>குறித்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு முன்பே விமானி அவசரமாக வெளியே குதித்ததால் உயிர் தப்பியுள்ளார்.</p><p>அமெரிக்க கடற்படை வெளியிட்ட தகவலின்படி, விமானி உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கலிபோர்னியாவில்&nbsp; விபத்துக்குள்ளான போர் விமானம்&nbsp;</h2><p>இந்த நிலையில் நேரில் விபத்தை கண்ட வேட் லாட் என்பவர், இரண்டு போர் விமானங்கள் தரையிறங்க முயன்றபோது, முதலாவது பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், இரண்டாவது திடீரென வேகத்தை இழந்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்தபோது விமானி வெளியேறியதாகவும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2253fa0c-e5bf-4f87-b2bd-46cb28997e67/26-6a6d7b204c540.webp' /></p><p>இதன் பின்னர் அந்த விமானம் ஓடுபாதை அருகே தரையில் மோதி வெடித்துச் சிதறியதாக மேலும் அவர் கூறினார்.&nbsp;</p><p>F-35B என்பது குறுகிய தூரத்தில் புறப்பட்டு செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். ஒரு F-35B விமானத்தின் மதிப்பு சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.</p><h2>உயிர்தப்பிய விமானி</h2><p>பாதுகாப்பு நிபுணர்கள் கூற்றுப்படி, 'F-35 ரக விமானங்கள் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6416731f-59ca-47ca-8948-8406557db4d4/26-6a6d7b210867d.webp' /></p><p>2015ஆம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்டதிலிருந்து இந்த வகை விமானங்களில் ஏற்பட்ட விபத்துகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. </p><p>மேலும், இதற்கு முன் நிகழ்ந்த பெரும்பாலான F-35 விபத்துகளிலும் விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்'. என கூறி உள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கை ஆற்றுப்படுகையின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minor-flood-warning-low-lying-areas-kelani-river-1785559810"></link>
            <id>https://ibctamil.com/article/minor-flood-warning-low-lying-areas-kelani-river-1785559810</id>
            <summary type="text">களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீர்மட்டம் உயர வாய்ப்பு</h2><p> </p><p>மேலும் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fda19b3-6382-43a6-9bbf-f1705809177d/26-6a6d7edde244c.webp' /></p><p> 

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-4-7-quake-strikes-near-italy-s-naples-1785556924"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-4-7-quake-strikes-near-italy-s-naples-1785556924</id>
            <summary type="text">தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> வெள்ளிக்கிழமை (31) மாலை 7:46 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் சுமார் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தினால் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மக்களுக்கு உதவவோ அல்லது அவர்களை மீட்கவோ தங்களது குழுவினருக்கு உடனடியாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை என்று&nbsp;இத்தாலிய தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தொடருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1856c42-423f-4212-a644-566f89d911d9/26-6a6d771f207b1.webp' /></p><p>
அப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்றும், நில அதிர்வுகள் ஏற்பட்டபோது சில பகுதிகளில் மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மேற்கு நேபிள்ஸின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, மக்கள் அடர்த்தியாக வாழும் எரிமலைப் பள்ளமான கம்பி ஃபிளெக்ரேயில், சமீபத்திய ஆண்டுகளில் நில அதிர்வுகள் அதிகரித்து வருவதாகவும் இது அரசாங்கத்தின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-killed-in-motorbike-accident-1785555804"></link>
            <id>https://ibctamil.com/article/men-killed-in-motorbike-accident-1785555804</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0959efb2-7228-4f36-9e79-c5ba72a5f174/26-6a6d7a938ac31.webp' /></p><p>

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p>

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h4>வவுனியா, வைரவப்புளியங்குளம்</h4><p>வவுனியா, வைரவப்புளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100e0bea-d788-44a8-add1-9bfca4c9ff5c/26-6a6d7e93d1de5.webp' /></p><p>வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.</p><p> 

பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-exam-2025-z-score-cut-off-marks-for-university-1785554768"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-exam-2025-z-score-cut-off-marks-for-university-1785554768</id>
            <summary type="text">2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை&amp;nbsp;பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.&amp;nbsp;2025 ஆம் ஆண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை&nbsp;பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு</h2><p>இந்தநிலையில், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் தேவைப்படும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகளை இப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5e4c87-dee2-4e24-a9c1-304a1b22fb4d/26-6a6d6cf9a890f.webp' /></p><p>இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 92,043 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த நிலையில் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதிக்காக 42,937 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p>
 

 <a href="https://www.ugc.ac.lk/downloads/admissions/cutoff_2026/COP_2025_2026-ENGLISH_Final.pdf" target="_blank"><b>வெட்டுப் புள்ளிகள் குறித்த விபரத்தை இங்கே காணலாம்&nbsp;</b></a></p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ECA89xLxSeo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பரபரப்பான போக்குவரத்துப் பாதைக்கு குறி - ஏமனின் ஹூதியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-s-houthis-deny-plans-to-impose-fees-on-ships-1785557429"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-s-houthis-deny-plans-to-impose-fees-on-ships-1785557429</id>
            <summary type="text">செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி இயக்கத்தின் கடல்சார் ஒருங்கிணைப்பு அமைப்பு மறுத்துள்ளது.</p><p>அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் வழியான போக்குவரத்து தொடர்ந்து இலவசமாகவே உள்ளது என்றும் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p>தெற்கு செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிப்பது குறித்து ஈரான் ஆதரவு ஹூதிகள் பரிசீலித்து வருவதாக பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.</p><p></p><h2>கட்டணங்கள் குறித்த முன்மொழிவு</h2><p>ஜூலை மாதம் ஹூத்தி அதிகாரிகள் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ​​கட்டணங்கள் குறித்த முன்மொழிவு ஈரானிய அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது என்றும், இருப்பினும் அதனைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9276c0-6c4e-40ea-a3fd-e66e2ad6f983/26-6a6d788723d5f.webp' /></p><p>ஹூதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் தங்களது "பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை ஒரு தன்னார்வ மற்றும் கட்டணமில்லா சேவையாகும்" என்று தெரிவித்துள்ளது.</p><p>"அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவோ அல்லது எந்தவொரு தகவலையும் வழங்கவோ வேண்டாம்&nbsp; என மையம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346"></link>
            <id>https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346</id>
            <summary type="text">தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>அளவில்லா மகிழ்ச்சி</h2><p>தாக்குதல் நடைபெறக்கூடும் என முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தனது பதவியைப் பயன்படுத்தித் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48b9b9d-8506-4d84-865f-bf7ccd9323a0/26-6a6d637d1914c.webp' /></p><p>இதன்போது அவர், இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.
</p><p>
இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுசுந்தரவிற்கும் அதே நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T03:44:46+00:00</updated>
        </entry>
    </feed>
