<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-20T09:29:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-youth-in-saudi-1789891115"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-youth-in-saudi-1789891115</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பில் தென்கயிலை ஆதீனத்தின் தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஜனாதிபதி அநுரகுமார திச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பில் தென்கயிலை ஆதீனத்தின் தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.</p><p>அதன்படி, ஜனாதிபதி தன்னுடைய முழு பிரயத்தனத்தையும் பயன்படுத்தி அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் சவுதி மன்னர் ஊடாக பொது மன்னிப்பை வழங்க வைத்து நாட்டுக்கு அழைத்து வர வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>அத்துடன் சிவராசா அனோஜனின் உயிரை காப்பதற்கு அனைத்து
தரப்புக்களும் எடுத்து வரும் முயற்சிகள் மனதை ஆறுதல்படுத்துகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தொடர் முயற்சிகளை மேற்கொள்ளுதல்</h2><p>இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வினையாக பதிந்த மத நிந்தனை முகப்புத்தக பதிவு இந்த பாரதூரமான உயிரை
பறிக்கும் தண்டனை வரை வந்து நிற்பது மனதை மிகவும் வருத்துகின்றது</p><p>அவரது உயிரைக் காப்பதிலும் பெற்றோரின் கண்ணீரை துடைப்பதிலும் இலங்கை அரசும் அதேநேரம்
சகோதர எம் நாட்டு இஸ்லாமிய ஆன்மீக அரசியல் பிரதிநிதிகளும் எடுத்து வரும் அதீத
முயற்சிகள் மிகவும் நன்றிக்குரியவை. அதே போல தமிழ் பிரதிநிதிகள் கொடுத்து வரும் உச்சபட்ச அழுத்தமும்
பாராட்டத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc2b663-ae81-42ff-a8d2-a21426b0f8e7/26-6aaf99333c4e6.webp' /></p><p>
நாம் அனைவரும் எம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து சகோதர உணர்வோடு இந்த
இளைஞனின் உயிரை காப்பதற்கு அவர் விடுதலையாகும் வரை எம் தொடர் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் அனைத்து மக்களும் சகோதரத்துவ
உணர்வோடு தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என வினயமாக வேணடுகின்றோம். அனைத்து தரப்பினருடன் இந்த இளைஞனுக்காக அவனது விடுதலைக்காக மனமுருகி நாமும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T08:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மின் தடை - அவதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-power-cut-today-power-cut-schedule-1789889540"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-power-cut-today-power-cut-schedule-1789889540</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்று திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.



மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை காரணமாகப் பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்று திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>


மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். </p><p>



இருப்பினும், தடையை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இன்று மதியம் 12.00 மணியளவில் மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்தடை&nbsp;</h2><p>அதற்கமைய குடாநாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ள நிலையில், சில பகுதிகளில் தற்போது வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29b96f1-f0a8-49ce-8456-6578a8ece611/26-6aaf96b2c2742.webp' /></p><p>இதேவேளை யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்படுவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.</p><p>இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே என தெரிவிக்கப்பட்டது.</p><p>எனினும் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T08:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - நீரில் மூழ்கிய அதிகமான வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/floods-in-nawalapitiya-1789887819"></link>
            <id>https://ibctamil.com/article/floods-in-nawalapitiya-1789887819</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்&amp;nbsp; பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்&nbsp; பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p>இன்று (20.09.2026) அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால், அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.</p><p>இதன் காரணமாக 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் இடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மகாவலி கங்கையின் நீர்மட்டம்</h2><p>
</p><p>
 

குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22c641d6-ffcb-48f5-9914-df173c1fbd9d/26-6aaf8dcd08881.webp' /></p><p>வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
வெள்ள நிலைமை தொடர்பில் பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறுவனிடம் மோசமாக நடந்த இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-man-charged-in-sexual-assault-of-16-boy-1789888462"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-man-charged-in-sexual-assault-of-16-boy-1789888462</id>
            <summary type="text">கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf2c1f9-ce1b-46f2-bf58-a969143bd7be/26-6aaf8b0520237.webp' /></p><p>சந்தேக நபர் மீது தகாத முறையில் செயற்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.</p><p>
இந்நிலையில், குறித்த நபரால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், அவர்கள் முன்வந்து காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789887869"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789887869</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இன்று (20.09.2026) காலை 11.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இன்று (20.09.2026) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் கடும் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0431b37-14a0-4ce2-bea6-da0d37228785/26-6aaf866d1c2e9.webp' />&nbsp;&nbsp;</p><p>


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது</p><p>மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன் : காவல்துறை தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770"></link>
            <id>https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மகன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>வவுனியா காவல்துறை</h2><p>
</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25345b-e0a2-41ac-894b-2cc7bcf5cb02/26-6aaf73adccba1.webp' /></p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7qjRJXkrJF4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள் : ஹட்டனில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-hatton-demanding-anojan-s-release-1789884083"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-hatton-demanding-anojan-s-release-1789884083</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவரது மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவரது மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தொனிப்பொருளில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
மேன்முறையீட்டு விசாரணையிலும் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>மனிதாபிமான வேண்டுகோள்</h2><p>
</p><p>
கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbcb350f-e5f8-48a0-9618-eeb9eeb284ea/26-6aaf8148d7b8a.webp' /></p><p> இதன்போது, சிவராசா அனோஜனின் உருவம் தாங்கிய பதாகைகள் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் மனிதாபிமானக் கோரிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 3 வெளிநாட்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369"></link>
            <id>https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369</id>
            <summary type="text">தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (20.09.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முதலாவது சோதனையின்போது 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc28847b-04d1-432f-ae24-95f994ffe23b/26-6aaf66a2dce61.webp' /></p><p>
</p><p>
அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில்&nbsp; போதைப்பொருள் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-six-districts-1789876070"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-six-districts-1789876070</id>
            <summary type="text">நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, காலி, களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p>இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (20.09.2026) மாலை 7.00 மணி முதல் நாளை (21.09.2026) மாலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்</h2><p>நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தின் நாகொட பிரதேச செயலாளர் பிரிவிலும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6be6c4-4091-433d-a8dd-a1d66e0b8a02/26-6aaf5f4634c49.webp' /></p><p>மேலும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காவல்துறையினருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-people-arrested-attempting-police-officers-1789872575"></link>
            <id>https://ibctamil.com/article/five-people-arrested-attempting-police-officers-1789872575</id>
            <summary type="text">கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களை காவல்துறையினர் பரிசோதித்தபோது, குறித்த வாகனங்களுக்கான மணல் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தில் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43af9413-d65c-4f3c-be1b-cad2267c6bd6/26-6aaf53060433c.webp' /></p><p>
</p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T03:39:04+00:00</updated>
        </entry>
    </feed>
