<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T03:50:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-ranks-as-4th-fastest-improving-country-1785208324"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-ranks-as-4th-fastest-improving-country-1785208324</id>
            <summary type="text">உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2026 ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

குறித்த அறிக்கையின் படி, மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>அந்தவகையில் குறித்த வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3a0e72-bf59-477a-a8c1-73d82a62f4e3/26-6a682360dfa70.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>அதன்படி, கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - வெளியான பயங்கர நபர்களின் பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-suspects-named-in-negombo-prison-clash-case-1785205053"></link>
            <id>https://ibctamil.com/article/4-suspects-named-in-negombo-prison-clash-case-1785205053</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 31 பேர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். </p><p>இது இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான சிறை வன்முறைகளில் ஒன்றாக பதிவாகியது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இந்த வழக்கு&nbsp;நேற்று நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு&nbsp; எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d357938-b191-4905-a637-62f53950e367/26-6a6819a096914.webp' /></p><p>அப்போது, ​​இச்சம்பவம் தொடர்பாக நான்கு கைதிகள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>இந்த கொடூர வன்முறை சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்களாக, "ஹீனட்டியன சுபுன்" எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, "களு மல்லி" எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் "பபா" எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சந்தேகநபர்களை நேற்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>கைதிகளிடம் வாக்குமூலம்</h2><p>இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a421d127-02e9-4a89-a670-7c2587cc75cd/26-6a68199fa3fb5.webp' /></p><p> இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-today-1785199922"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-today-1785199922</id>
            <summary type="text">நாட்டின் ஐந்து மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் &quot;எச்சரிக்கை&quot; மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.கிழக்கு மாகாணம் மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஐந்து மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே வெப்பநிலை அதிகரிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28-07-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>இதன்படி பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில பகுதிகளில் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புள்ளது.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7922120d-982f-4914-9bb1-b2222a39faba/26-6a681b63d0367.webp' /></p><p>இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இதேவேளை இன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. </p><p>

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்&nbsp;என்றுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு - குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shots-fired-at-us-consulate-in-toronto-canada-1785201746"></link>
            <id>https://ibctamil.com/article/shots-fired-at-us-consulate-in-toronto-canada-1785201746</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததுள்ளது.</p><p>“அப்பகுதியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாகவும், ஒரு வெள்ளை நிற செடான் கார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது காணப்பட்டதாகவும்” டொராண்டோ காவல்துறை X தள பதிவில் தெரிவித்தது.</p><p></p><h2>அடையாளம் காணப்படவில்லை</h2><p>அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, வெற்றுத் தோட்டா கண்டெடுக்கப்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது.</p><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a137ba1c-f1b6-4dcd-a96a-1801148e137f/26-6a680bde8c041.webp' /></p><p>கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.</p><p>

டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.</p><p></p><h2>பலப்படுத்த பாதுகாப்பு</h2><p> </p><p>

இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bffa08f7-e42d-4aee-9652-93fbeaf80c72/26-6a680bddd46f4.webp' /></p><p> 

டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். </p><p>

மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அந்த நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை - அமைச்சர் பதவி விலக வேண்டும்: கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844"></link>
            <id>https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844</id>
            <summary type="text">நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உடனடியாக பதவி விலகல் செய்ய வேண்டும் என்று அகில
இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>முட்டை விலை உயர்வு</h2><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மூலப்பொருள்களும் மிக வேகமாகக் விலை
உயர்ந்து வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d91922-cff9-41d6-a56b-4d94a773d219/26-6a67fa52b2215.webp' /></p><p>இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான
பெரிய முட்டை ஒன்று தற்போது 46 - 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42
ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>
உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா
என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபா வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல்,
முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை
உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.</p><p></p><h2>சந்தையில் நிலவும் முறைகேடு</h2><p>

கீரி சம்பா அரிசிச் சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின்
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை.
அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489dac68-126f-4fbf-b475-b3d4ae7bd822/26-6a67fa541cf01.webp' /></p><p> அவருக்குப் காவல்துறை பணியைச் செய்ய
விருப்பமாக இருந்தால், காவல்துறை மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.</p><p>
அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது,
விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த
கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே
வழிவகுக்கும். </p><p>மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல்
கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
</p><p>
தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள்
கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட
பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார
சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்." - என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுகோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது</p><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை காவல் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2c2864-8e98-4635-bcd5-1611eb4da16c/26-6a6803647062c.webp' /></p><p>இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p>

இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது. </p><p>அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:49:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கப்போகும் மழைவீழ்ச்சி! மக்களுக்கு வெளியாகியுள்ள முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612"></link>
            <id>https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fcd839-9e89-45ad-977c-2fd96ff2c408/26-6a67fd30c2c99.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
கடல் பிராந்தியங்கள்
</h2><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2ed0ff-aae8-453d-a159-fdeb670ae362/26-6a67fd31789ec.webp' /></p><p>
</p><p>
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T01:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319"></link>
            <id>https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319</id>
            <summary type="text">ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் பதில் தாக்குதல்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கும் வகையில், "ஏதாவது நல்ல முடிவு எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>ஈரான் மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போர் நிறுத்தத்திற்கு முன் செய்து கொண்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545ed955-b034-4838-986b-28b517b80cdb/26-6a67fa57535aa.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The American Prospect</i></p><p> </p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று ஈரான் அரசு மறுத்துள்ளது.</p><p>

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதால், ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு செய்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-07-28T00:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894"></link>
            <id>https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894</id>
            <summary type="text">

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு முடிக்க 2029 நிதியாண்டு வரை ஆகும் என்று டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் பென்டகன் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தச் செலவுத் திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>விநியோகக் காலம்</h2><p> 

இருப்பினும், இரு மாதங்கள் கடந்தும் அந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை அல்லது ஒப்பந்தங்கள் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047e9848-1413-4315-bd6b-be11a451a400/26-6a67ecf3ee10c.webp' /></p><p><i>Image Credit: Fortune</i></p><p>

இந்நிலையில், இவ்வளவு மெதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்குக் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த விநியோகக் கால அட்டவணையின்படி, நிதி 2026 நிதியாண்டிற்குள் ஒதுக்கப்பட்டு, அனைத்து உதவிகளும் செப்டம்பர் 30, 2029-க்குள் முழுமையாகச் சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஜெலென்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பு&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b25dd566-632b-42fa-820d-5751543d8c98/26-6a67ecf4a8a37.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
NBC News</i></p><p> </p><p>

இந்தச் சந்திப்பில் வான் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் ட்ரோன் ஒப்பந்தம் குறித்து அவர் வலியுறுத்துவார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு, அமெரிக்க செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T23:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விவகாரத்தில் மூக்கை நுழைத்த நெதன்யாகு! ட்ரம்ப் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-opposes-us-sale-f-35-fighter-jets-turkey-1785181550"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-opposes-us-sale-f-35-fighter-jets-turkey-1785181550</id>
            <summary type="text">அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான அறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்</p><p> 

இந்த விற்பனை குறித்துத் தன்னைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

துருக்கியிடம் ரஷ்ய தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதால், அந்நாட்டிற்குப் போர் விமானங்களை விற்பனை செய்வது தற்போது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானதாகும்.</p><p></p><h2>விற்பனை&nbsp;அனுமதி</h2><p> </p><p>

இருப்பினும், துருக்கிக்கு இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8250329-b1ad-4415-8c1a-547b2d38f5b9/26-6a67b8720abc4.webp' /></p><p>Image Credit:&nbsp;
NPR</p><p>
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் குறித்துப் பேசிய ட்ரம்ப், "அவர் எனது நண்பர்; அவருக்கு நாம் என்ன விற்க வேண்டும் என்று வேறு யாரும் எனக்குச் உத்தரவிட முடியாது" என்றும், துருக்கி ஒரு சிறந்த நட்பு நாடு என்றும் கூறியுள்ளார். </p><p>

மேலும், "துருக்கி இஸ்ரேலின் மீது பெரிய ஆதரவு கொண்ட நாடு அல்ல" என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T22:40:40+00:00</updated>
        </entry>
    </feed>
