<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-02T10:50:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953"></link>
            <id>https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். </p><p>சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர்
மாய்த்துள்ளனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சகோதரிகள் நேற்றையதினம் (01) வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர்.</p><p></p><h2>சுன்னாகம் காவல்துறையினர் விசாரணை</h2><p>
இந்நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக&nbsp; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccafc711-4952-4981-abd8-1c6f7a924e4a/26-6a6f1ce7df59b.webp' /></p><p>எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள்
உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்...! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-orders-use-of-ex-ministers-official-quarters-1785665091"></link>
            <id>https://ibctamil.com/article/anura-orders-use-of-ex-ministers-official-quarters-1785665091</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுருத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு இந்த அறுவுருத்தலை வழங்கியுள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்தில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இடம்பெற்றது.</p><p>
</p><p></p><h2>உள்ளூராட்சி அமைச்சு</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இச்சந்திப்பில், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு உட்பட்ட அரச நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவினம் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபாய் மீளாவெழும் செலவினங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5ef826-1919-4b4b-a3a3-06034ad8a4c7/26-6a6f1da07191f.webp' /></p><p>அத்தோடு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
பிராந்திய ரீதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக (Development Units) மாற்றுவதற்கான திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி மேலதிக வழிகாட்டல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையிலிருந்து இடம்மாற்றப்படும் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-transferred-from-mahara-prison-1785665320"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-transferred-from-mahara-prison-1785665320</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று (01) வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, அந்த சிறையிலிருந்து பல கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக சிறைத்துறை வட்டாரம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று (01) வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, அந்த சிறையிலிருந்து பல கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
</p><p>
தற்போது நடைபெற்று வரும் இடமாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மஹர சிறையிலிருந்து 20 கைதிகள் ஏற்கனவே பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>சிறை வசதிகள் சேதமடைந்ததால் கைதிகள் இடமாற்றம்</h2><p>இந்தக் கலவரத்தின் போது பல சிறை வசதிகள் சேதமடைந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59aa01ad-7742-415f-86c7-08c9a24e3fa4/26-6a6f1a0a34af9.webp' /></p><p> தேவைக்கேற்ப மேலும் பல கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
நேற்றைய கலவரத்தினபோது கைதியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் அறுவர் காயமடைந்து ராகம போனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-army-controlled-land-release-in-jaffna-1785662984"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-army-controlled-land-release-in-jaffna-1785662984</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி வயாவிளான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வயாவிளான் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி வயாவிளான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>வயாவிளான் சந்தியில் இன்று (02) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜரும் கையளித்துள்ளனர்.</p><p>வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட மக்கள் 36
வருடங்கள் கடந்தும், அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள திரும்ப
அனுமதிக்கப்படவில்லை.</p><p></p><h2>மகஜர் கையளிப்பு&nbsp;</h2><p>
</p><p>
குறித்த பகுதிகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
நிலையில் அப்பகுதி மக்கள் தமது சொந்த காணிகளுக்கு திரும்ப முடியாத நிலையில்,
வாடகை வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4089d02c-93ef-4ad0-99f7-5addcbfd66ed/26-6a6f107de56c0.webp' /></p><p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்களாக தம்மை தமது சொந்த இடங்களுக்கு செல்ல
அனுமதிக்குமாறு கோரி போராடி வரும் நிலையில் வலி. வடக்கை சேர்ந்த மூன்று கிராம மக்கள் தமது காணிகளை விடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
அந்த வகையில், மயிலிட்டி கிராம மக்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் பலாலி
மக்கள் பிரதி ஞாயிற்றுகிழமைகளிலும் போராடி வரும் நிலையில் இன்றைய தினம்
ஞாயிற்றுக்கிழமை முதல் வயாவிளான் மக்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p>போராட்டத்தின் முடிவில், வயாவிளான் பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடாக யாழ்.
மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜர்
கையளித்துள்ளனர்.</p><p></p><h2>ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம்&nbsp;</h2><p>அத்துடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e69793-3729-4ffa-91af-a02b2f1dd6e1/26-6a6f107eb9f82.webp' />&nbsp;</p><p> </p><p>ஏற்கனவே மயிலிட்டி பகுதி மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இதுவரையிலான காலப்பகுதியில்
யாழ்.மாவட்டத்தில் சுமார் 60 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p><b><i>செய்திகள் - த.பிரதீபன், பு.கஜிந்தன்</i></b>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Pe88NdFheBM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மடு திருத்தல கொடியேற்றத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-madu-thiruthala-area-youth-dies-1785663865"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-madu-thiruthala-area-youth-dies-1785663865</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் மடு காவல்துறை பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (01...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் மடு காவல்துறை பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று சனிக்கிழமை (01) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
எதிர்வரும் 06 ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடி ஏற்றத்துடன்
ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்தில்
வந்து தங்கியுள்ளனர்.</p><h2>மடு திருத்தலத்திற்கு வந்த இளைஞனே உயிரிழப்பு</h2><p>அந்த வகையில் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த
முத்தரிப்புத்துறை யை சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்ற இளைஞனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ca5687-b72a-4f75-a3d5-d734613c666c/26-6a6f1457d8a2e.webp' /></p><p>
</p><p>
</p><h2>தலைக்கவசம் அணியாமல் சென்றதால் விபரீதம்</h2><p>மடு ரோட் சந்தி - பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார்
சைக்கிளை தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது வீதி தடையை
கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி
எறிந்ததில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55171a69-4391-4708-8884-faa632ae322a/26-6a6f1458a1f3e.webp' /></p><p>சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடிகுண்டுடன் வந்த மர்மப்பெண்: ரஷ்ய மொஸ்கோ குண்டுவெடிப்பில் மூவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bomb-blast-near-a-restaurant-in-moscow-1785660566"></link>
            <id>https://ibctamil.com/article/bomb-blast-near-a-restaurant-in-moscow-1785660566</id>
            <summary type="text">ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் மையப்பகுதியில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றிற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த சம்பவம் நேற்று (01.08.2026) இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் மையப்பகுதியில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றிற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த குண்டுவெடிப்பில்&nbsp; 03 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்ய நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மொஸ்கோவில்&nbsp; குண்டுவெடிப்பு</h2><p>மொஸ்கோவின் குட்ரின்க்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள ஸ்டாலின் காலத்து உயரமான கட்டடத்தில் இயங்கும் இத்தாலிய உணவகத்திற்கு வெளியே, அந்நாட்டு நேரப்படி இரவு 8.00 மணிக்கு முன்னதாக இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ecdf7f-05f8-4072-9795-6b7465719b3d/26-6a6f12774b579.webp' /></p><p>அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து அங்கே ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்தப் பெண் உட்பட பாதுகாப்புப் பணியாளர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.</p><p>வெடிவிபத்தில் காயமடைந்த 21 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>வெடிகுண்டு சுமந்து வந்த பெண்</h2><p>இது குறித்த விசாரணைகளில்&nbsp;அந்தப் பெண் சுமந்து வந்த வெடிகுண்டு தொலைவிலிருந்து வேறொருவரால் இயக்கப்பட்டிருக்கலாம் என்றும், தான் எடுத்துச் சென்றது வெடிபொருள் என்பது அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4ff4f3-4338-4e25-a5a1-50ff0611606b/26-6a6f127803595.webp' /></p><p>மேலும் உணவகத்தின் வெளிப்பகுதியில் அமர்ந்திருந்த விருந்தினர்களை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நாளில் அந்த உணவகம் தனியார் நிகழ்வொன்றிற்காக முன்பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>சம்பவ நடந்த தற்போது ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-at-mahara-prison-police-curfew-lifted-now-1785659376"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-at-mahara-prison-police-curfew-lifted-now-1785659376</id>
            <summary type="text">ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நேற்று (1) பிறப்பிக்கப்பட்டது.</p><p>அதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு காவல்துறை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.</p><p></p><h2>சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை</h2><p> </p><p>

இந்தநிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0214253a-5de8-46ad-894b-84f4646cc34c/26-6a6f060c61099.webp' /></p><p>இதேவேளை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு தீவிர அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/all-sl-jails-security-up-after-mahara-riot-1785654936"></link>
            <id>https://ibctamil.com/article/all-sl-jails-security-up-after-mahara-riot-1785654936</id>
            <summary type="text">நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) சஜீவ மேடவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) சஜீவ மேடவத்த இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மஹர சிறைச்சாலையை இன்று (02-08-2026) நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முக்கிய சிறைச்சாலை</h2><p>மேலும் தெரிவித்த அவர், வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று ஏற்பட்ட இந்தச் சம்பவம் காரணமாகச் சிறைச்சாலைக்குள் எழுந்த பதற்ற நிலை, இன்றுகாலைப் பொழுது வரை தொடர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46aeb4e-1bec-47f8-a1a4-4df8bfc8f34c/26-6a6f035db5ac3.webp' /></p><p>இக்கலவரத்தின் போது பெருமளவிலான கைதிகள் ஒன்றிணைந்து சிறைச்சாலையின் சொத்துக்களுக்குப் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இருப்பினும் சிறைச்சாலைத் திணைக்களம், இலங்கை காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப் படை (STF), இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய கூட்டுப் பாதுகாப்புப் படையினரின் தீவிர முயற்சியால் இன்றுகாலை நிலைமை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சஜீவ மேடவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
அடுத்த சில மணிநேரங்களுக்குள் சிறைச்சாலையின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வளாகத்தின் அன்றாட இயல்பு நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப அதிகாரிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T08:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645"></link>
            <id>https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645</id>
            <summary type="text">நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு கடற்தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">இரண்டு கடற்தொழிலாளர்களில் </a>ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த நபர்கள் நேற்று (01.08.2026) மீன்பிடிக்க சென்ற இடத்தில் தான்&nbsp; கடலில் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p>படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.</p><p></p><h2>படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி</h2><p> </p><p>ஆரம்பத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e871b547-9703-4d27-a876-063aae5270c4/26-6a6efc68e8e0a.webp' /></p><p>பின்னர் மற்றுமொருவரும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக <a href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369" target="_blank">சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில்</a> அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>&nbsp;மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக இலங்கை விமானப்படையின் Bell 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மேலும் பல மீன்பிடிப் படகுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>எனவே அவற்றுக்கு உதவுவதற்கான மீட்பு நடவடிக்கைகளும் கடற்படை மூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோதல் வேறு - மஹர சம்பவம் வேறு...! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிறைச்சாலை நிர்வாகத்திற்கு </a>எதிராக முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமுமே இந்த அமைதியற்ற சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர், “அனைத்துச் சிறைச்சாலைகளுக்குள்ளும் போதைப்பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c6ca5-6633-43fd-9528-f8a585890718/26-6a6ee843c24f9.webp' /></p><p> 

அதன்பேரில் உள்ள வெறுப்பும் கோபமுமே இத்தகைய நிலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். </p><p>முதற்கட்ட அறிக்கை கிடைத்த பின்னரே இது குறித்துத் துல்லியமாகக் கூற முடியும்.</p><p></p><h2>மேலதிக விவரங்கள்&nbsp;</h2><p>

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் (STF) தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மோதலின் போது சேதமடைந்த சொத்துக்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
 <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46506665-9ca7-4d0a-8b3c-23510579fe2f/26-6a6ee7e7e6ef2.webp' /></p><p>கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டுச் சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்து முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இக்கலவரத்தின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p><a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</a></p>]]></content>
            <updated>2026-08-02T08:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-installs-barrier-on-ceuta-border-with-morocc-1785652108"></link>
            <id>https://ibctamil.com/article/spain-installs-barrier-on-ceuta-border-with-morocc-1785652108</id>
            <summary type="text">பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எல்லையை மீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் சியூட்டாவிற்கும் அண்டை நாடான மொராக்கோவிற்கும் இடையிலான கடல் எல்லையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எல்லையை மீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் சியூட்டாவிற்கும் அண்டை நாடான மொராக்கோவிற்கும் இடையிலான கடல் எல்லையில் 500 மீற்றர் நீளமுள்ள தடுப்பணையை அமைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 67 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக&nbsp;தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அவர்களில் சிலர் நீரில் மூழ்கியும், அலைத்தடுப்புச் சுவரைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்தது.</p><p></p><h2>நெருக்கடியைத் தூண்டியது</h2><p>வியாழனுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் அப்பகுதிக்குள் 50,000 முதல் 60,000 புலம்பெயர்ந்தோர் திடீரென வந்தடைந்தமை ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியதுடன் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் குடியேற்றம் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்திய நிலையில் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் விரைவில் திரும்பிச் சென்றுவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b7d210-9677-4d8d-ac8e-28a5556688ea/26-6a6efc9ce21fd.webp' /></p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஊக்குவிக்கப்படும் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் நாடு கடத்தலை ஆதரிக்கும் கொள்கைகளுக்கு மாறாக, ஸ்பெயினின் குடியேற்றக் கொள்கையானது, தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>சியூட்டாவில் நடந்த நிகழ்வுகள் குறித்த சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் எதிர்வினையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><h2>ஸ்பானிய உள்துறை அமைச்சர்</h2><p>சியூட்டா நெருக்கடி இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் கிரீஸை விட ஸ்பெயினில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c76a20-fdea-4c8d-b3bc-c44dda4c0bbd/26-6a6efc9d98c21.webp' /></p><p>சியூட்டாவிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பானிய உள்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ கிராண்டே மார்லாஸ்கா,&nbsp;24 மணி நேரத்திற்குள் ஸ்பெயின் பெருமளவில் ஒழுங்கை மீட்டெடுத்துவிட்டதாகக் கூறினார்.&nbsp;</p><p>ஆனால், நெருக்கடி இன்னும் முறையாக முடிவடையவில்லை என்றும், இரவு நேரக் கடல் கடப்புகள் ஏறக்குறைய பூச்சியமாகக் குறைந்திருந்தாலும், தேவைப்படும் வரை பலப்படுத்தப்பட்ட காவல்துறை மற்றும் இராணுவப் பாதுகாப்பு தொடரும் என்றும் அவர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் இடைநிறுத்தம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்குவதற்கு வோஷிங்டனும் இஸ்ரேலும் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை இரவு தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் இந்த முடிவை அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் சக்தியின் அளவுகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா ஆயத்த நிலையில் உள்ளது.</p><p></p><h2>ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு</h2><p> </p><p>எனினும் நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியுள்ளன.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117023461141824050/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை இரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன்.</p><p> இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைகிறது” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரான் வெளிவிவகார அமைச்சர்</h2><p>இதேவேளை ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ef1c72-0551-462a-a52a-27683724e6eb/26-6a6ede27ea4f5.webp' /></p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. </p><p>

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு <a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">கைது செய்யப்பட்டுள்ளார்.</a>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (01-02-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோதமான முறை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிகரெட்டுக்களுடன் அவர் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e797a537-ec4a-4fdc-bd68-4a1a810a3994/26-6a6ed92c2d457.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><h2>சுங்க அதிகாரிகள்&nbsp;</h2><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425c7afb-2213-4746-99d6-cbaf150ba236/26-6a6ed92a8ec5b.webp' /></p><p>சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA['இந்த முறை எத்தனை உயிர்கள்': மஹர சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566"></link>
            <id>https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566</id>
            <summary type="text">சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு சிறைக் கலவரமா? இம்முறை எத்தனை உயிர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ச்சியாக இடம்பெறும் கலவரங்கள் சிறை அமைப்பில் ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் இருப்பதை வெளிப்படுத்கின்றது.&nbsp;</p><p>மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் கடும் அழுத்தத்தில் இயங்கும் சிறைச்சாலை அமைப்பே இந்த நிலைக்கு காரணம்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச அறிக்கை&nbsp;</h2><p> </p><p>அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல மாறாக, நிறுவன ரீதியான தோல்வியின் வெளிப்பாடாகும்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படாதது ஏன்?</p><p> "இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?" என்று வினவிய அவர், வலுவான தலைமைத்துவம் அவசியம் என வலியுறுள்ளார்.&nbsp;</p><p>கூடுதல் பாதுகாப்புப் படையினரை நியமிப்பது தற்காலிகமாக பதற்றத்தை கட்டுப்படுத்த உதவலாம் என்றாலும், அதனால் அடிப்படைப் பிரச்சினைகள் தீராது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p>நீண்டகால சீர்திருத்தங்களே நிலையான தீர்வாகும் என்றும், சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் அவர்களின் கண்ணியத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தற்காலிக நடவடிக்கைகளைத் தாண்டி, சிறை அமைப்பில் நிலவும் நிறுவன ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்! ஊரடங்கு குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319" target="_blank">மஹர சிறைச்சாலையில்</a> ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துறை <a href="https://ibctamil.com/article/to-control-the-situation-in-mahara-prison-1785627754" target="_blank">ஊரடங்கு உத்தரவு</a> தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காவல்துறை ஊடகப்பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியாட்சகர் வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறை அதிகாரி</h2><p>இதனடிப்படையில், மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba61d5b-56cb-48ff-a48f-ca0922dec55b/26-6a6eca9d57486.webp' /></p><p>மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (02.08.2026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய செல்வராசா
கசிவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில்,&nbsp;நேற்று (01) மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்ட வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன.&nbsp;</p><p></p><h2>வெடிக்காமல் இருந்த பட்டாசு</h2><p>அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல்
இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக உயிரிழந்த நபர் அருகில் சென்று ஊதியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7004090c-18be-4862-a321-375e63493da1/26-6a6ed1ad399e5.webp' /></p><p>அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QV6usIoWF6Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:12:26+00:00</updated>
        </entry>
    </feed>
