<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-15T19:47:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் விண்வெளி மையம் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attack-on-shay-s-space-center-1786819452"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attack-on-shay-s-space-center-1786819452</id>
            <summary type="text">ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ்&amp;nbsp; விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ்&nbsp; விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.</p><p>தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஜெலென்ஸ்கி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>“உக்ரைன் அந்த மையத்தை FP-5 ஃபிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. மேலும், அதனை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று. அது மின்னணு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது” என்றும்&nbsp;ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today, there are new significant results from our deep strikes. In Russia’s Samara region, one of the key enterprises within Roscosmos – the Progress Center, which was involved, among other things, in electronics production – was hit. Flamingo missiles were used. A good… <a href="https://t.co/1BlZpmvKRN">pic.twitter.com/1BlZpmvKRN</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2088547091471614397?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>தாக்குதல்களின் பின்விளைவு</h2><p>மேலும் உக்ரைன் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்கள் வைக்கப்பட்டிருந்ததாக உக்ரைனியத் தலைவர் கூறிய நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள சவாஸ்லேகா விமானத் தளம் மற்றும் எஸ்டோனியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள உஸ்ட்-லுகாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையம் ஆகியவற்றின் மீது கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa27f627-aa0b-4ee8-9c52-ebe9019c4338/26-6a80b5c2e61b5.webp' /></p><p>
</p><p>இதன்படி சில தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில்,தொலைவில் உள்ள இடங்களில் பெரிய கருப்புப் புகைத்தூண்களையும் தீச்சுவாலைகளையும் காண முடிகிறது” என்றும் விவரித்திருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T19:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் மாணவன் ஒருவருக்கு கிடைத்த 9 மில்லியன் யூரோ மதிப்பிலான தங்க புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-finds-gold-treasure-worth-9-million-euros-1786821956"></link>
            <id>https://ibctamil.com/article/student-finds-gold-treasure-worth-9-million-euros-1786821956</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 9 மில்லியன் யூரோ (330 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், ஃப்ளாண்டர்ஸ், டெண்டர்மாண்டேவில் உள்ள ஒரு முன்னாள் மதுபான ஆலை இருந்த இடத்தில் 18 வயதான கோபி, என்ற சிறுவனே இதனை முதலில் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிமை கோரும் வாய்ப்பு</h2><p>இந்தக் கண்டுபிடிப்பு, தங்கத்தை யார் உரிமை கோர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16bbd343-045b-4b28-ba73-e692966cafa4/26-6a80bd46d70d7.webp' /></p><p> </p><p>கட்டுமானப் பணியாளர்களுக்கும், அந்தச் சொத்தை வைத்திருக்கும் உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் புதையலைத் தேடி யாரும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.</p><p>அந்த வீடு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தங்கமும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T19:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-irans-response-to-the-united-states-1786817730"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-irans-response-to-the-united-states-1786817730</id>
            <summary type="text">&amp;nbsp;ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு, திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.


அமெரிக்கா, ஈரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு, திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.
</p><p>

அமெரிக்கா, ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச கடல்வழி எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்கா முயற்சித்து வருகிறது. </p><p>இந்நிலையில் ஹோர்முஸ் பகுதியை விரைவில் கைப்பற்றி, அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>தங்களது உத்தரவிற்கே ஹோர்முஸ் கட்டுப்படும்</h2><p>இதன்படி ட்ரம்ப் பேச்சுக்கு ஈரான் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாதி தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9729e0-54e4-46e9-be10-8aa047775768/26-6a80af14dbced.webp' /></p><p>“ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது. அது ஈரானிடமே உள்ளது. ஈரானிடம் தான் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்படும், திறக்கப்படும். உங்கள்(ட்ரம்ப்) தோல்வியை ஒப்புக் கொள்ளாத வரை முடக்கம் தொடரும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T19:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை கடந்த UAE கப்பல் மீது ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-attacks-uae-ships-passing-strait-of-hormuz-1786815987"></link>
            <id>https://ibctamil.com/article/iran-attacks-uae-ships-passing-strait-of-hormuz-1786815987</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து&nbsp;அமீரகத்தின் அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளது.</p><p>இந்நிலையில் தூண்டப்படாத தாக்குதல்களை நிறுத்தவும், பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், நீர்வழியை முழுமையாக மீண்டும் திறக்கவும் ஈரானை ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம், வலியுறுத்தியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க - இஸ்ரேலியப் போர்&nbsp;</h2><p>எனினும் இந்த தாக்குதல் குறித்து ஈரான் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb94bf83-e46c-43c8-9fbc-7fcd9e73cc0c/26-6a80aea86dde5.webp' /></p><p>முன்னதாக ஈரானின் எதிரிகளுடன் தொடர்பு கொண்டாலோ அல்லது ஈரானிய உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினாலோ, நீர்வழிப்பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என IRGC படையினர் அச்சுறுத்தியிருந்தனர்.</p><p>இதற்கமைய ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ADNOC கப்பல்கள் சம்பந்தப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். </p><p>மேலும், முந்தைய சம்பவங்களுக்குப் பின்னணியில் ஈரான் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியிருந்தது.</p><p>மோதலுக்கு முன்பு , உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு, ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையிலான குறுகிய நீர்வழிப்பாதை வழியாகக் கடந்து சென்றது . </p><p>பெப்ரவரி 28 அன்று ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் வெடித்ததிலிருந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் மீண்டும் தடைபட்டு, சரக்குக் கட்டணங்களை உயர்த்தி, பாதுகாப்பு குறித்த கவலைகளையும் உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T18:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/night-shootings-in-colombo-1786816719"></link>
            <id>https://ibctamil.com/article/night-shootings-in-colombo-1786816719</id>
            <summary type="text">கொழும்பு - கல்கிசையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.கல்கிசை - ஹுலுடகொட வீதியில் இன்று(15.08.2026) குறித்த துப்பாக்கிச்சூட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கல்கிசையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.</p><p>கல்கிசை - ஹுலுடகொட வீதியில் இன்று(15.08.2026) குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>காவல்துறை விசாரணை&nbsp;</h2><p> 

 

முன்னதாக, கல்கிசை, ஹுலுடகொட வீதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a2f371-6b7e-4029-8fde-454d19bfaf48/26-6a80aae1ad97c.webp' /></p><p>இதனை தொடர்ந்து இன்று மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> 

 

ஹுலுடகொட வீதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள், இன்று இரவு சுமார் 9.50 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

பாதிக்கப்பட்டவர் ராகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T17:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் சரமாரி துப்பாக்கிசூடு : பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/virginia-mass-shooting-several-injured-1786811911"></link>
            <id>https://ibctamil.com/article/virginia-mass-shooting-several-injured-1786811911</id>
            <summary type="text">அமெரிக்காவின் வர்ஜீனியாபல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஐவர் காயம் அடைந்துள்ளனர். பல்கலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வர்ஜீனியாபல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஐவர் காயம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.</p><p>சனிக்கிழமை அதிகாலையில் வர்ஜீனியா&nbsp; பல்கலைக்கழகத்தின் குவாட் அனெக்ஸஸ் அருகே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>


</p><h2>&nbsp;இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிசூடு</h2><p>வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் நுழைந்து இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டால் படுகாயம் அடைந்த பலர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae56bba-c01e-45c8-9cfa-e74f97b9cbce/26-6a809be4656ee.webp' /></p><p>அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, வர்ஜீனியா பல்கலைக்கழகம் உடனடியாக பாதுகாப்பு கருதி மூடப்பட்டு இருக்கிறது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T17:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இராஜதந்திரத்தில் பிரான்ஸின் தலையீடு! உளவுத்துறையினரிடம் சிக்கிய தூதர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/french-intervention-in-iranian-diplomacy-1786812063"></link>
            <id>https://ibctamil.com/article/french-intervention-in-iranian-diplomacy-1786812063</id>
            <summary type="text">தேசியப் பாதுகாப்பு விசாரணை ஒன்றின்போது வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியப் பாதுகாப்பு விசாரணை ஒன்றின்போது வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் ஈரானால் தடுத்து வைக்கப்பட்டதாக மத்திய கிழக்கு தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
</p><p>
வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் தலையீடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்போது, ​​உளவுப் பிரிவுகள் அந்த இரண்டு தூதர்களையும் தடுத்து வைத்ததாக அந்நாட்டு தரப்புக்கள் விளக்கியுள்ளன.
</p><p>
பின்னர் பிரான்ஸ் தூதரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.


சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் ஆரம்பகட்ட பரிசோதனையில், “செல்வாக்கைக் கட்டியெழுப்புதல், வெளிநாட்டுத் தலையீடு மற்றும் ஈரானின் சுதந்திரத்தை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கான நிலைமைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய அளவிலான திட்டம்” தெரியவந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது.</p><p></p><h2>இராஜதந்திர அந்தஸ்து</h2><p>

கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில், ஈரானுக்கான பிரான்ஸின் முன்னாள் தூதரின் கையொப்பம் கண்டறியப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd04db9-19ff-4ec4-84b9-9a47ddfc9efa/26-6a809940089a7.webp' /></p><p>

இந்நிலையில் "இராஜதந்திர அந்தஸ்து கொண்ட நபர்கள் சட்டவிரோத மற்றும் தலையீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட்டோம்" என்று அமைச்சகம் வலியுறுத்தியதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T16:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் 10 என்புக்கூடுகள் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786809185"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786809185</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15)
சனிக்கிழமை முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15)
சனிக்கிழமை முன்னெடுப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம்
சனிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு</h2><p>அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு
பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0ebfd2-6552-496b-878c-9174caebfdbb/26-6a80928a834ee.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T16:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு ஏற்படப்போகும் ஆபத்து : கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கிறார் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-danger-facing-the-president-namal-1786804126"></link>
            <id>https://ibctamil.com/article/the-danger-facing-the-president-namal-1786804126</id>
            <summary type="text">நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்தால் ஜனாதிபதி எவ்வாறான ஆபத்தை எதிர்கொள்வார் என்பதை தன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்தால் ஜனாதிபதி எவ்வாறான ஆபத்தை எதிர்கொள்வார் என்பதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;ஆலோசனை வழங்கும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிடுங்கள்</h2><p>நீதித்துறை சம்பந்தமாக ஜனாதிபதி யாரிடம் ஆலோசனை கேட்டதாகக் கூறப்படுகிறதோ அந்த சிரேஷ்ட நீதிபதிகளின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7a5987-6263-4bdd-ba0c-1532421dbdb0/26-6a807e047a769.webp' /></p><p>

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட நீதிபதிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.



"தற்போது ஜனாதிபதி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் ஒரு விஷயத்தில் வெளிப்படையாக ஒரு தன்னிச்சையான முடிவை எடுக்கிறார்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு ஏற்படப்போகும் ஆபத்து</h2><p> </p><p>நாட்டின் சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நீதிபதிகளும் இதனை எதிர்த்தால், பொதுச்சபை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை இந்தத் திருத்தத்தை எதிர்த்தால், ஜனாதிபதி என்ன ஆபத்தை ஏற்பார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0acc2fa7-dcbf-4212-b46e-34b3f0904bf1/26-6a807e03c573e.webp' /></p><p>
</p><p>
ஆனால், ஆபத்தைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போராடுவதாகத் தெரிகிறது," என்று நாமல் ராஜபக்ச கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T16:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா வழங்கிய கர்ப்பத்தடை மாத்திரை : பெண் தளபதியின் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/birth-control-pill-provided-by-karuna-1786807213"></link>
            <id>https://ibctamil.com/article/birth-control-pill-provided-by-karuna-1786807213</id>
            <summary type="text">கருணா விவகாரத்தின் முக்கிய கரும்புள்ளி நிலாவினி விவகாரம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா முரண்பட்டவேளை அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருணா விவகாரத்தின் முக்கிய கரும்புள்ளி நிலாவினி விவகாரம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா முரண்பட்டவேளை அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.அவற்றில் முக்கியமாக அந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாண மகளிர் அணி தளபதியாக இருந்து வந்த நிலாவினியுடனான முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருந்தது.
</p><p>
ஆனால் கருணாவிற்கும் நிலாவினிக்குமான உறவு தொடர்பான குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது.அந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருணா ஏதாவது கூறியிருந்தாரா அல்லது இதுவரை அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறாரா. </p><p>அந்த குற்றச்சாட்டு பற்றி நிலாவினி என்ன கூறினார்?
</p><p>
இது தொடர்பாக விரிவான விளக்கத்தை தேடி தருகிறது இந்த உண்மையின் நிகழ்ச்சி</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wuWF75v1fAc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T15:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரியர் சேவை என்ற போர்வையில் ஆபத்தான வியாபாரம் : இருவர் மடக்கிப்பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-for-distributing-drugs-guise-of-couriers-1786802185"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-for-distributing-drugs-guise-of-couriers-1786802185</id>
            <summary type="text">கூரியர் சேவை என்ற போர்வையில் கட்டுநாயக்கவிலிருந்து ​​கலென்பிந்துனுவெவவவிற்கு போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூரியர் சேவை என்ற போர்வையில் கட்டுநாயக்கவிலிருந்து ​​கலென்பிந்துனுவெவவவிற்கு போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நவக்குளம் சந்திப்பில் திடீரென நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனையின் போது ஒரு மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கப்பட்டது.</p><h2>நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கிய மற்றையவர்</h2><p>&nbsp;அப்போது, ​​அதன் ஓட்டுநர் தான் ஒரு கூரியர் சேவைக்காகப் பணிபுரிவதாகவும், கட்டுநாயக்கவிலிருந்து வருவதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து, அவர் கொண்டு வந்த பொருட்கள் மீது சந்தேகம் எழுந்தபோது,நடத்தப்பட்ட சோதனையில் ​​அவை சட்டவிரோத போதைப்பொருட்கள் என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db382281-997d-4e5f-b71b-e4c80b5d004b/26-6a80733748c75.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர் பின்னர் மொரகொட காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலதிக விசாரணையின் போது, ​​அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு சந்தேக நபர் அமுனுகொல பகுதியில் வைத்த கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, ​​அவரிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p></p><h2>&nbsp;இளைஞர்கள், யுவதிகளின் பெயரில் சிறிய பொட்டலங்கள்</h2><p>
</p><p>
அவர் கைது செய்யப்பட்டபோது, ​​கலென்பிந்துனுவெவ, யக்கல்ல, மற்றும் படிகரமடுவ உள்ளிட்ட பல பகுதிகளில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் பெயர்களில் போதைப்பொருட்கள் அடங்கிய தனித்தனி பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d863b918-ac49-45ea-a047-f6a4911d4e6b/26-6a80733698868.webp' /></p><p>
</p><p>
கூரியர் சேவை மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பொட்டலங்களில், விநியோகத்திற்கான போதைப்பொருட்களைத் தவிர வேறு எந்தப் பொருட்களும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சந்தேக நபர்கள், வாரத்திற்கு ஒருமுறை இணையம் மூலம் கவனமாக ஓடர்களைப் பெற்று, கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள கிராமங்களில் கூரியர் சேவைகள் என்ற போர்வையில் இந்த போதைப்பொருட்களை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு விநியோகிக்கும் ஒரு மோசடிக் கும்பலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் மேலும் தெரியவந்துள்ளது.</p><p> இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு 1,570 ஆகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T14:16:52+00:00</updated>
        </entry>
    </feed>
