<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T19:47:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-citizenship-proof-wait-time-hits-2-yrs-1786908611"></link>
            <id>https://ibctamil.com/article/canada-citizenship-proof-wait-time-hits-2-yrs-1786908611</id>
            <summary type="text">கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.

ஆண்டின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.</p><p>

ஆண்டின் இறுதிக்குள் இது 3 ஆண்டுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் பரம்பரை வழியிலான குடியுரிமை வரம்பை நீக்கிய கனடாவின் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றால், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கனடிய வம்சாவளியினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்துள்ளன.</p><p>
</p><p></p><h2>அவசர உதவி</h2><p>இந்தநிலையில் தற்போது சுமார் 1,21,800 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.</p><p> 

அவசர வேலை அனுமதிப் பத்திரம் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், சாதாரண விண்ணப்பங்களின் தாமதம் மேலும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4ba50f1-07fa-413e-ba9f-720d7d6435ce/26-6a82134426f64.webp' /></p><p>

விண்ணப்பங்கள் சட்டப்படி நியாயமாகவும் முன்னதாக வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் பரிசீலிக்கப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட கால அவகாசம் என்பது தோராயமான மதிப்பீடே தவிர உத்தரவாதம் அல்ல என்றும் கனடிய குடிவரவுத் துறை (IRCC) தெரிவித்துள்ளது.
</p><p>
நிலுவையிலுள்ள பெருமளவிலான விண்ணப்பங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என குடிவரவு வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-nations-slam-israel-for-rejecting-peace-plan-1786901365"></link>
            <id>https://ibctamil.com/article/8-nations-slam-israel-for-rejecting-peace-plan-1786901365</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இது குறித்து 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>இஸ்ரேலின் நிலைப்பாடு&nbsp;</h2><p>இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.
</p><p>
இது அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவை பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabec4ae-17bb-4840-bb80-41b0622b14ac/26-6a820dbb5f157.webp' /></p><p>இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
</p><p>
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:21:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-announces-reward-for-killing-us-soldiers-1786904612"></link>
            <id>https://ibctamil.com/article/iran-announces-reward-for-killing-us-soldiers-1786904612</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்து கொண்டே வருகிறது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கப் போவது யார்? என்பது குறித்த அதிகார மோதலும் நீடித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2d4c4e-859a-4160-b2e1-8065e472afc8/26-6a820025f2ff4.webp' /></p><p>





</p><h2>ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b9f3217-c974-4292-8505-492fb3413c97/26-6a820026a70ae.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவ வீரர்களை பெண்கள் பிடித்து கொடுத்தால், இந்தத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>

கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானியை மீட்பதற்கான அவசரகால நடவடிக்கையைத் தவிர, ஈரானில் எந்த அமெரிக்கப்படைகளும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T18:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-eelam-tamil-drowns-in-mullaitivu-1786897615"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-eelam-tamil-drowns-in-mullaitivu-1786897615</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>

முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று (16.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.</p><p>

இந்நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c13f03-a58b-48cc-9abe-a0db5c19c8cd/26-6a81eda78e309.webp' /></p><p>இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>
அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-1-664-murders-in-the-last-three-years-1786897831"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-1-664-murders-in-the-last-three-years-1786897831</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டிற்காக இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட வருடாந்திர செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2023, 2024, 2025) இலங்கையில் 1,6...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்காக இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட வருடாந்திர செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2023, 2024, 2025) இலங்கையில் 1,664 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>
அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் 573 கொலைகளும், 2024 ஆம் ஆண்டில் 555 கொலைகளும், 2025 ஆம் ஆண்டில் 536 கொலைகளும் நாட்டில் நிகழ்ந்துள்ளன. இந்தக் கொலைகளில் சுமார் 93 சதவிகிதம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.</p><h2>&nbsp;உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை</h2><p>&nbsp; கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தக் கொலைகளில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 317 ஆகும். அதன்படி, 2023-ல் 105 பெண்களும், 2024-ல் 104 பெண்களும், 2025-ல் 108 பெண்களும் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cec2bb38-ba77-4ec4-8506-b4223b223d02/26-6a81f7230a898.webp' /></p><p> </p><p>இந்த மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 48 ஆகும். அதன்படி, 2023-ல் 16 குழந்தைகளும், 2024-ல் 20 குழந்தைகளும், 2025-ல் 12 குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T17:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுப் பெருவிழா ; தமிழ்க் கூட்டு உளவியல் ; மாகாண சபைத் தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-1786891993"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-1786891993</id>
            <summary type="text">தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்குசெய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை முதலாவது நாளிலேயே இடைநிறுத்தப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் சிறிய அளவில் உணவு பெரு விழாக்கள் ஆங்காங்கே நடந்திருக்கின்றன.ஆனால் ரீச்சாவின் உணவுப் பெருவிழா ஒப்பீட்டளவில் பிரமாண்டமானது.</p><h2>தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா</h2><p>உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து எழுபதுக்கும் குறையாத சமையல் கலை வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.நூற்றுக்கணக்கான வகை உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.முன்பதிவுகளின் அடிப்படையில் 5000 பேர் வரை வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் முன்பதிவு இல்லாமலேயே மொத்தம் 15000த்துக்கு அதிகமானவர்கள் அந்த இடத்தில் குவிந்திருக்கிறார்கள்.நிலைமையை ரீச்சா நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைத்தான் பின்வந்த செய்திகள் நிரூபித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f362475-1b35-455d-96f3-cd6ba978e6fc/26-6a81dfdace7fe.webp' /></p><p>தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா ஏன் முதலாவது நாளுடன் நிறுத்தப்பட்டது?அதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம்.முதலாவது காரணம்,ரீச்சா நிறுவனத்தின் முகாமைத்துவக் கொள்ளளவில் காணப்பட்ட போதாமைகள்.இரண்டாவது காரணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடமும் அதன் விளைவுகளும்.</p><h2>கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்</h2><p>முதலாவது காரணத்தை சிறிது விரிவாகப் பார்க்கலாம்.எதிர்பார்த்ததைவிட அதிக தொகையினர் வந்தபோது அவர்களைக் கையாள்வதற்கு ரீச்சாவிடம் பொருத்தமான ஏற்பாடுகள் இருக்கவில்லை.அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுப்பதற்காக மூன்று நாள் விழாவை முதலாவது நாளுடன் நிறுத்த வேண்டியதாயிற்று.அங்கே அவ்வளவு தொகை மக்கள் கூடியதை தமிழ் கூட்டு உளவியலின் ஒரு குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17adc42a-6625-4a83-bb60-dd6769a9ddd4/26-6a81deab3ea46.webp' /></p><p>தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள்.கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்கள்.அது உணவு விழாவாக இருக்கட்டும்,ஊர்க் கோவில் திருவிழாவாக இருக்கட்டும்,பெருங்கோவில் திருவிழாக்களாக இருக்கட்டும், அல்லது பெருங் கடைகளின் திறப்பு விழாக்களாக இருக்கட்டும்,எதுவானாலும் அங்கே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள்.</p><p>&nbsp; ஆனால் அதை வைத்துக்கொண்டு ரீச்சாவுக்குப் போன மக்கள் ஏன் தையிட்டிக்கு வரவில்லை ? நோ-லிமிட்டுக்குப் போன மக்கள் ஏன் பலாலிக்கோ மயிலிட்டிக்கோ போராட வரவில்லை? என்று கேட்டு மக்களைக் குறை கூறுவது தோல்வியுறும் ஒரு சமூகத்தின் இயல்புதான்.</p><h2>சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள்&nbsp;</h2><p>மாறாக ரீச்சாவுக்கும் நல்லூருக்கும் திரளும் மக்களை எப்படி தையிட்டிக்குக் கொண்டு வருவது என்று சிந்தித்து உழைப்பதுதான் பெருந்திரள் அரசியலை முன்னெடுக்க விரும்பும் வெற்றிபெற்ற சமூகம் ஒன்றின் இயல்பாக இருக்கவேண்டும்.முதலாளிகள் தங்களுடைய வணிக இலக்குகளை நோக்கி விடாது உழைக்கலாம் என்றால் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளை நோக்கி உழைக்கத்தானே வேண்டும்? சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள் என்று ரீல்ஸ்களின் காலத்திலும் நம்பிக்கொண்டிருக்கலாமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe7769e0-d590-44ad-9aa7-44014f9b87e0/26-6a81deac24b2b.webp' /></p><p>தமிழ்மக்கள் தமது தேசிய அரசியலின் மீது உணர்திறன் குறைந்தவர்களாக மாறி வருகிறார்களா? ஒரு பகுதியினர் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள்.ஒரு தலைமுறையின் கைபேசி செயலிகளுக்குள்,அவர்கள் விரும்பிப் பார்க்கும் ரீல்ஸ்களுக்குள் தமிழ்த்தேசிய உரையாடல் இல்லை.ஒடுக்குமுறையும் ஆக்கிரமிப்பும் நேரடியானதாக இல்லாமல் மறைமுகமானதாக திணைக்களங்களின் வழி முன்னெடுக்கப்படுவதாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில்,தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியலின் மீது தமிழ் மக்களை உணர்திறன் மிக்கவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு யாருடையது? தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் அது தமிழ் அரசியல்வாதிகளின் தோல்விதான்.</p><h2>பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்ட&nbsp; ரீச்சா முதலாளி</h2><p>&nbsp;கொண்டாட்ட மனோநிலையோடு இருக்கும் மக்கள் உணவு விழாவை நோக்கி குவிந்தார்கள்.அவர்களைக் கட்டுப்படுத்த ரீச்சாவால் முடியவில்லை.ஆனாலும் ரீச்சா முதலாளி பாஸ்கரன் அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.முன்பதிவு செய்தும் உணவு கிடைக்காதவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.</p><p><iframe width="538" height="956" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>இரண்டாவது காரணம்,தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்.அதனால் தமிழ்மக்கள் ஒருபுறம் அரசியல்நீக்கம் செய்யப்படுகிறார்கள்.இன்னொருபுறம் ஒரு சமூகமாக,ஒரு தேசமாக,ஒரு கிராமமாக,ஏன் சில சமயங்களில் ஒரு குடும்பமாகக்கூட திரள முடியாத நிலைமைகள் வளர்ந்து வருகின்றன.</p><p>தமிழ் மக்கள் யாரையும் நம்பாத மக்களாக;எல்லோரையும் எல்லாவற்றையும் சந்தேகிக்கும் மக்களாக;மற்றவர்கள் மீது பிழை கண்டுபிடிக்கின்ற எரிச்சலுற்ற குறைகூறிகளாக;வெறுப்பர்களை விடுப்புணர்வோடு ரசிக்கின்ற மக்களாக,சமூக ஊடக வலைத்தளங்களில் நோய்க்கூறான,நஞ்சான விவாதங்களில் ஈடுபடும் மக்களாக மாறிவருகிறார்கள்.ஒருவர் மற்றவரை நம்பாமை என்பது அதன் வளர்ச்சிக் கட்டத்தில் தன்னைத்தானே நம்பாமையில் வந்து முடிகிறது.தமிழ்ச் சமூகம் ஏறக்குறைய அப்படி ஒரு நிலையை நோக்கித்தான் செல்கிறதா?</p><p>சில தினங்களுக்கு முன் ஆளுநர் செயலகத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் 80 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் பேருக்கு 30பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.</p><h2>&nbsp;இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறும்&nbsp;புலம்பெயர்ந்த தமிழர்கள் </h2><p>&nbsp;இந்தப் புள்ளி விபரங்கள் மட்டுமல்ல இதைவிட ஆபத்தான புள்ளி விபரங்கள் உண்டு. மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்களோடும் ஜம்பர்களோடும் வித்தியாசமான காலணிகளோடும் உள்ளூர் வீதிகளில் நடந்து திரியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறுகிறார்கள்.முதலாவது பட்டப்படிப்பை முடித்த பலரும் இரண்டாவது பட்டப்படிப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புலம்பெயர விரும்புகிறார்கள்.மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை இளையவர்களை அள்ளிக்கொண்டு போய்விடுமா?தமிழ்க் கட்சிகளால் அவர்களைத் தமது தாய் நிலத்தில் வேர் கொண்டு பூத்துக் காய்க்குமாறு ஊக்கப்படுத்த முடியுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b95d06-b68d-44d6-8fe8-ccf0321cb302/26-6a81dbe71967f.webp' /></p><p>&nbsp; ஒருபுறம் கோவில்களில் சுவாமி தூக்க இளையோர் இல்லை.இன்னொருபுறம் அதே கோவில்களில் பின்னிரவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் மேடையின் முன் வரிசையில் நின்று ஆடும் இளையவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?</p><p>தேசியவாத அரசியல் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகத் திரட்டுவதுதான்.ஆனால் நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளில் அநேகர் மக்களை மட்டுமல்ல தமது சொந்தக் கட்சிகளையே திரட்ட முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள்.</p><p>தமிழ் மக்களின் அரசியல்,சமூகப் பொருளாதார,பண்பாட்டு விடயங்களில் யார் சொல்வதை தமிழ்மக்கள் கேட்பார்கள்? யாரை தமது முன் உதாரணமாகப் பார்க்கிறார்கள்?இந்தத் தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக தமிழ் மக்களின் அரசியல்,சமூகப்பொருளாதார வாழ்வைத் தீர்மானிக்கும் விவகாரங்களில் தமிழ்மக்கள் முடிவெடுக்க முடியாத மக்களாகவும் சமூக ஊடக வலைத்தளங்களின் பெருமளவுக்கு பொழுதுபோக்கான,நஞ்சான விவாதங்களால் திசைதிருப்பப்படும் மக்களாக,யாரையும் நம்பாத மக்களாக,ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே நம்பாத மக்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம்</h2><p>ரீச்சா ஒரு வணிக வளாகம்.அதற்கென்று வணிக இலக்குகள் உண்டு. வணிகர்கள் வணிக இலக்குகளை முன்வைத்து உழைப்பார்கள்.ஆனால் அரசற்ற தமிழ் மக்கள் தமது தேசிய முதலாளிகளை எப்படி அணுக வேண்டும்? தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்துதான் அணுக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9957698e-0b97-4582-80a9-ddc5741352c7/26-6a81dbe66528c.webp' /></p><p>ரீச்சா முதலாளி மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம் கடந்த சில மாதங்களாக சமூக ஊடக வலைத்தளச் சூழலில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.ரீச்சா முதலாளிக்குச் சொந்தமான ஊடகங்கள் ஒரு பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களை குவிமையப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு.இதனால் ரீச்சாவின் உணவுப் பெரு விழாவின் மீதான விமர்சனங்களில் ஒரு பகுதிக்கு அரசியல் பரிமாணம் உண்டு.</p><p>ரீச்சா முதலாளி ஒரு முகநூல் வாசிதான்.அடிக்கடி நேரலையில் வருபவர்தான்.அடிக்கடி கண்முன் தோன்றி கொண்டேயிருப்பார்.அது அவருடைய பாணி.அவருடைய விருப்பம்.ஆனால் அடிக்கடி கண்முன் தோன்றும்போது,அது அவர் மீது எரிச்சல் கொண்டவர்களை அடிக்கடி கோபப்படுத்தும்;அடிக்கடி சினக்கச் செய்யும்;அவர்கள் அடிக்கடி எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.எனினும் தன் மீது கொட்டப்படும் விமர்சனங்களையும் வெறுப்பையும் செமித்துக்கொண்டு அவர் தொடர்ந்து நேரலையில் வருகிறார்.</p><p>அவர் ஒரு நேரலைவாசி,எதிர்காலத்தில் தேர்தல் அரசியலில் குதிக்கக்கூடும் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால்,முதலாவதாகவும் முக்கியமானதாகவும் தமிழ்த்தேசிய நோக்குநிலையில் அவர் ஒரு தேசிய முதலாளி;தமிழ்த் தேசிய முதலாளி.</p><p>எல்லாத் தேசிய முதலாளிகளும் தேச நிர்மாணத்தின் பிரிக்கப்படவியலாத பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும்தான்.அதை நடைமுறை வார்த்தைகளில் சொன்னால்,தேசிய முதலாளிகளை,நிறுவன உருவாக்கிகளைக் கட்டியெழுப்புவதும்தான்.</p><h2>செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை</h2><p>&nbsp;தமிழ்மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு சிந்திப்பார்களாக இருந்தால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நிறுவனங்களை உருவாக்கும் கெட்டிக்காரர்களை எப்படித் தேச நிர்மானத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிகளாக மாற்றலாம் என்றுதான் சிந்திப்பார்கள்.ஒரு சமூகத்துக்குள் உருவாகும் நிறுவன உருவாக்கிகள் எல்லாருமே தேசியப் பண்பு மிக்கவர்களாக அல்லது தேசிய விழிப்பைக் கொண்டவர்களாக அல்லது தெளிவான விளக்கமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றில்லை.அவர்கள் தங்கள் துறைசார்ந்து கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.அந்தத் தேசிய ஆற்றலை எப்படி ஒரு தேசிய வளமாக மாற்றலாம்? தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளலாம்?என்று சிந்திப்பதுதான் அரசற்ற தமிழ் மக்களுக்குப் புத்திசாலித்தனமானது; நீண்டகால நோக்கு நிலையில் தீர்க்கதரிசனமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/758d2a2c-5157-4dc6-b5ec-921b466d1236/26-6a81dbe554f2f.webp' /></p><p>ஆனால் இதுதொடர்பில் தேசத்தைத் திரட்டும் நோக்குநிலையில் இருந்து முதலாளிகளையும் நிறுவன உருவாக்கிகளையும் அணுகுவதற்கு மையமான ஒரு பொதுவான கட்டமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.இதுதான் பிரச்சினை.தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?</p><p>தேசிய பண்புமிக்க பெரு முதலாளிகளை எப்படித் தேசிய பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கும் தீர்க்கதரிசனம்மிக்க தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில்;சமூகத்தை ஒரு பொதுக் கருத்தை நோக்கி;பொதுவான நியாயங்களை நோக்கி;பொதுவான சமூகப்பொருளாதார,கலை பண்பாட்டு இலட்சியங்களை நோக்கி வழிநடத்தவல்ல தலைவர்களோ அமைப்புக்களும் இல்லாத ஒரு வெற்றிடத்தில்,தமிழ்மக்கள் தங்களுக்குள் தாங்களே மோதிக்கொண்டு;தங்களைத் தாங்களே திட்டிக்கொண்டு;தங்களைத் தாங்களே நம்பாமல்;தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டிருக்கும்போது,செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டி விட்டது.</p><p>நன்றி - நிலாந்தன்</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T16:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவில் பெரும் தாக்குதலை நடத்திய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530</id>
            <summary type="text">&amp;nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

இந்தத் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தாக்குதல் நேற்று இரவு (15) முதல் இன்று காலை (16) 6.30 மணி வரை நடைபெற்றது என்றும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு 201 ஆளில்லா விமானங்களை அழித்தது என்றும் அவர் கூறினார்.</p><h2>மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல்</h2><p>மொஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec543-84ad-41e5-9c6e-ec7495c95b89/26-6a81b5e30aa48.webp' /></p><p> </p><p>ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மூன்று நகரங்கள் மற்றும் ஒன்பது மாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரஷ்ய இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827</id>
            <summary type="text">குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த படகானது இன்று பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகாட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.</p><h2>இடைநடுவில் கவிழ்ந்தது படகு</h2><p>இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef7245b-301e-4f99-832c-17dc4c3c146f/26-6a81ca4d38c15.webp' /></p><p>

இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினர் மற்றும்,
கடற்றொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப்
பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​</p><p>இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் நாட்டப்பட்டது சேவல் கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
</p><h2>பக்தர்களின் கவனத்தை ஈர்த்த&nbsp;நிகழ்வு </h2><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19962acf-edd9-4852-90ad-1e0d5d881ad7/26-6a81c288c90f0.webp' /></p><p>
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:00:46+00:00</updated>
        </entry>
    </feed>
