<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T06:23:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் குண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mortar-shells-recovered-in-mankumban-1788412475"></link>
            <id>https://ibctamil.com/article/mortar-shells-recovered-in-mankumban-1788412475</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார்
குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.குறித்த மோட்டார் குண்டுகள்&amp;nbsp; நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார்
குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.</p><p>குறித்த மோட்டார் குண்டுகள்&nbsp; நேற்றையதினம் (02.09.2026) காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி
மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;<br></p><p></p><h2>மோட்டார் குண்டு</h2><p>
</p><p>இதனையடத்து இந்த விடயம் ஊர்காவற்துறை காவல்துறையினரால் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aafacd6-9cfc-42fc-afde-a139f24e9dc8/26-6a990bce81887.webp' /></p><p>அதன்படி அங்கு வந்த காவல்துறை விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக
தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபிலவின் மரணத்தை போன்றே எராஜின் மரணமும்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/like-kapila-s-death-eraj-s-death-is-also-1788413044"></link>
            <id>https://ibctamil.com/article/like-kapila-s-death-eraj-s-death-is-also-1788413044</id>
            <summary type="text">கொழும்பு 5, திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 5, திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் உடலை, பம்பலப்பிட்டிய காவல் அதிகாரிகள் குழு நேற்று (02) கண்டெடுத்தது.</p><p>

பம்பலப்பிட்டிய, ஹேவ்லாக் டவுனில் உள்ள 6-ஆம் அவென்யூ அடுக்குமாடிக் குடியிருப்பில், 9 அடி உயரமுள்ள கதவில் ரப்பர் பட்டியால் அவர் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்ததைப் போன்றே எராஜ் பெர்னாண்டோவின் மரணமும் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>இருமுறை மேயராக&nbsp;பதவி </h2><p>

அவர் மரணித்த நேரத்தில், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c235dc80-699e-4263-ba32-7d65c7f824f3/26-6a9909f1787d4.webp' /></p><p>

அவரது மனைவியும் இரண்டு மகள்களும் கனடாவில் வசிக்கின்றனர். அவர் நீண்ட காலமாக கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
</p><p>
கொழும்பு, நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவரான எராஜ் பெர்னாண்டோ, 2011 முதல் 2021 வரை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். </p><p>

அவர் ஹம்பாந்தோட்டையின் மேயராக இருமுறை பதவி வகித்ததோடு, 2014-ஆம் ஆண்டில் மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆய்வு செய்ய வந்திருந்த அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை வெளியேற்றிய நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியதற்காகப் பரவலாக அறியப்பட்டார்.</p><p></p><h2>ஐந்தாண்டுகள் சிறை</h2><p>
</p><p>
அப்போது, ​​அவரும் அவரது குழுவினரும் கையில் கைத்துப்பாக்கியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் துரத்திச் சென்று விரட்டியடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a217dfb6-f5b0-4f52-bed4-cc4368fd7e84/26-6a9909f23d34e.webp' /></p><p> </p><p>

நல்லாட்சி அரசாங்கத்தின் போது நடத்தப்பட்ட விசாரணைகளில், அன்று தான் ஒரு பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக அவர் கூறியபோதிலும், அந்தச் சம்பவத்திற்காக அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். </p><p>

இருப்பினும், அதைத் தொடர்ந்த அரசாங்க மாற்றத்தின்போது அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலத்தை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>

இந்த மரணம் குறித்து பம்பலப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T05:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்கள்...! மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-ready-to-re-elect-rajapaksas-indika-1788410304"></link>
            <id>https://ibctamil.com/article/people-ready-to-re-elect-rajapaksas-indika-1788410304</id>
            <summary type="text">மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விடயத்தை நேற்றைய தினம் (03-09-2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மக்கள் முடிவு</h2><p>இதன்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9de3dbd5-e04c-41b9-a90e-4b9713cde17f/26-6a99083309d46.webp' /></p><p>
நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. </p><p>எனினும் மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர் அத்தோடு அரசாங்த்தின் மீதும் ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது.</p><p> </p><p></p><h2>ஜனாதிபதித் தேர்தல்</h2><p>மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7586a2db-edf5-40a5-8a95-9d161e4fd3a7/26-6a99083493797.webp' /></p><p>
2029 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். </p><p>இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-vali-north-land-release-possible-this-month-1788407525"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-vali-north-land-release-possible-this-month-1788407525</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக, பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு
ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம்
ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில்
தொடர்ந்து பயணித்து வருகிறது.</p><p>&nbsp;</p><h2>&nbsp;பாதுகாப்பு உயர் கூட்டம்</h2><p>
</p><p>
அண்மையில் ஜனாதிபதி அநுர தலைமையில இடம்பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி.வடக்கு பகுதியிலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு
பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.
</p><p>
அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை
படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428cdc28-4f9a-41c9-94d2-4b6ab4bf8131/26-6a98f732a55ab.webp' /></p><p> செப்டம்பர் மாத இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி
காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம், போதை ஒழிப்பு
போன்ற விடயங்களை கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.</p><p>நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள்
விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு
எத்தனித்துக் கொண்டிருக்கிறது.</p><p></p><h2>போராட்டங்களை நடத்துகின்றனர்</h2><p>நாட்டை குழப்பும் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில்
செயற்படுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>நாங்காள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை. மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது
தோழர் அநுரகுமார மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக
செயற்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80013dd0-39f6-49af-a6ec-8022a9ecbd06/26-6a98f73394de9.webp' /></p><p>
நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை
மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக
தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல.</p><p>மக்களின் காணி
விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல்
சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p><p></p><h2>ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டம்</h2><p>
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி
விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக
போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.
</p><p>
அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி
விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர்
போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564db419-470b-4571-a669-b867db2ef5f7/26-6a98f7344762e.webp' /></p><p>
</p><p>
இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள்
மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல. மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு
மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்
இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
</p><p>
ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம்
அக்கறையுடன் செயற்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய
முறையில் நிறைவேற்றுவோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! முருகன் ஆலயமொன்றில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-mango-sold-1-million-rupees-auction-in-jaffna-1788413619"></link>
            <id>https://ibctamil.com/article/a-mango-sold-1-million-rupees-auction-in-jaffna-1788413619</id>
            <summary type="text">யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.</p><p>யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழாலேயே மாம்பழம் ஒன்று 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.</p><p></p><h2>போட்டி போட்டு ஏலம்</h2><p> </p><p>வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5754681b-9ce9-4ea9-9a16-aff80c1a7182/26-6a9908296ca4a.webp' /></p><p>கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெல்லம்பிட்டியவில் 130 சட்டவிரோத மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-in-wellampitiya-130-electronic-cigarettes-1788407820"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-in-wellampitiya-130-electronic-cigarettes-1788407820</id>
            <summary type="text">சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் சட்டவிரோத மின்னணு சிகரெட்டுக்களுடன்&nbsp;வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு 26 வயது என்பதுடன் அவர் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மின்னணு சிகரெட்</h2><p>

</p><p>மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS ரங்கலா கடற்படை முகாமின் கடற்படையினரும், மிரிஹான பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3159979-da45-4e09-aa00-8f7f662808af/26-6a98f96f684ba.webp' /></p><p>சந்தேகநபர், மின்னணு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட 130 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:40:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு...! வாள்களுடன் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-open-fire-at-auto-in-borella-5-arrested-1788407614"></link>
            <id>https://ibctamil.com/article/police-open-fire-at-auto-in-borella-5-arrested-1788407614</id>
            <summary type="text">கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.</p><p>காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து குறித்த வண்டியில் பயணித்த 5 சந்தேகநபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80e0c5b-29f2-41c6-84bc-2fc0004deee1/26-6a98f51b810ff.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய யாழிலிருந்து சென்ற கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-on-a9-road-one-injured-1788409250"></link>
            <id>https://ibctamil.com/article/accident-on-a9-road-one-injured-1788409250</id>
            <summary type="text">ஏ9 வீதியில் இடம்பெற்ற&amp;nbsp;வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.



குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏ9 வீதியில் இடம்பெற்ற&nbsp;வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>
</p><p>


குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ9 வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>


விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்ற நபர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b985b2c-d657-4264-97dd-07f96e4d3205/26-6a98f7737fa62.webp' /></p><p>விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். ஊடகவியலாளர் - யாழ். ஊடக அமையத் தலைவர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-journalists-still-face-challenges-1788404344"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-journalists-still-face-challenges-1788404344</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (02.09.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கு.செல்வகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்களின் பிரச்சினை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8f91f1f-42de-4d93-8b4d-3bab6e5911d9/26-6a98e4a96ec9a.webp' /></p><p>தென்னிலங்கை ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். </p><p>அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>போராட்டங்கள் மற்றும் படுகொலை</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f402415-a7ab-4884-9e06-dd73a25173bf/26-6a98e4aa2431e.webp' /></p><p>

நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:12:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்-நினோவினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் : அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relief-for-those-lost-their-jobs-due-to-el-nino-1788405865"></link>
            <id>https://ibctamil.com/article/relief-for-those-lost-their-jobs-due-to-el-nino-1788405865</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வேலையை இழப்போருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வேலையை இழப்போருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
</p><p>
அரசாங்கத்தின் எல்-நினோ தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவின் நான்காவது கூட்டம், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. </p><p>இந்தக் கூட்டத்தின் போது எல் நினோ தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் சமூகங்கள் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><h2>ஆராயப்பட்ட விடயங்கள்</h2><p>

மேலும், நாட்டில் காய்கறிப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கும், காய்கறி மற்றும் பழச் செய்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851ba6fe-4d5d-4fbc-a3c8-d5be42d52955/26-6a98eb1acced1.webp' /></p><p>

இதனிடையே, தற்போது எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தடையில்லா நீர் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
</p><p>
அத்துடன், எதிர்வரும் பெரும்போக செய்கைக்கான ஆயத்தங்கள் குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் இணைய வழியிலான கலந்துரையாடலை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், இந்த விசேட அமைச்சரவை உபகுழுவின் எதிர்வரும்14 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T03:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-cut-in-many-areas-of-colombo-today-1788400628"></link>
            <id>https://ibctamil.com/article/water-cut-in-many-areas-of-colombo-today-1788400628</id>
            <summary type="text">கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>இதனால் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>நீர்வெட்டு</h2><p>

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7036650-2528-407a-a175-637a5bddec70/26-6a98d5c3db9ff.webp' /></p><p>அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T02:05:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-credit-bank-accounts-today-1788399572"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-credit-bank-accounts-today-1788399572</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அந்தவகையில்&amp;nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>அந்தவகையில்&nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><h2>அஸ்வெசும வங்கிக் கணக்குகள்&nbsp;</h2><p>இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce13d96-6701-4ece-8e95-bda474cf0ed8/26-6a98d38c5b601.webp' /></p><p>

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p> 

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T01:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழையுடனான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/afternoon-thunderstorms-for-the-next-few-days-1788396969"></link>
            <id>https://ibctamil.com/article/afternoon-thunderstorms-for-the-next-few-days-1788396969</id>
            <summary type="text">

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் மாதம்ப, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a11fb8d-159f-45b5-8ec9-9bb8013cbba3/26-6a98c8cf00217.webp' /></p><p>
</p><p>
மேலும், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T01:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-accident-one-dead-one-seriously-injured-1788394811"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-accident-one-dead-one-seriously-injured-1788394811</id>
            <summary type="text">

வவுனியா பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பிறிதொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வவுனியா பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பிறிதொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, வீதியோரத்தில் அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி
சோளம் வாங்கிய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb297d1-afb5-4e85-b92d-46816912ddbd/26-6a98c0e49aced.webp' /></p><p>

சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே பலியாகியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T00:39:48+00:00</updated>
        </entry>
    </feed>
