<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-12T00:12:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/manivannan-calls-for-immediate-pc-polls-1786491171"></link>
            <id>https://ibctamil.com/article/manivannan-calls-for-immediate-pc-polls-1786491171</id>
            <summary type="text">மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. </p><p></p><h2>அரசாங்கங்கள்&nbsp;</h2><p>உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.</p><p>2017 கிழக்கு மாகாண
சபை பதவியை இழந்திருந்தது
கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள்
வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d916b7-4c5c-44be-a680-58cb4d4fa505/26-6a7bb12556aae.webp' /></p><p>அவர்களைப் பொறுத்தவரையில் இந்த
நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும். இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட
பகிரக்கூடாது.</p><p>

அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு
பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை
செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>தீர்வு திட்டம்</h2><p>அந்த
அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா
அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேனா ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. </p><p>

அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த
சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்
நடைபெறாமல் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e532502-4bad-4ec9-8349-6f55a6d7f17f/26-6a7bb126abbbe.webp' /></p><p> ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச்
சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.


13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம்
ஏற்றுக் கொள்கிறேன்.
</p><p>
தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட
வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.</p><p></p><h2>மாகாண சபை தேர்தல்&nbsp;</h2><p>


ஆனால் மாகாண சபை தேர்தலை வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது.
</p><p>

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக
இருக்கிறது. நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205866ac-46bc-42d8-b766-aab73ad5a650/26-6a7bb128121ed.webp' /></p><p> மாகாணசபையோடு
எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப்
போவதில்லை சொல்லவுமில்லை.
</p><p>

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு பொறிமுறையை இயங்க வைக்கப்பட
வேண்டும். அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை.</p><p>
ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக
கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-fisheries-meeting-chaired-1786490381"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-fisheries-meeting-chaired-1786490381</id>
            <summary type="text">கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தலைமையில் நேற்று (11-08.2026) குறித்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில்
இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>அபிவிருத்தி நடவடிக்கைகள்</h2><p>இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.
முரளிதரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை சார்ந்த அதிகாரிகள்,
துறைசார் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89a5a730-b4f5-400f-b3ab-52e2f5b03267/26-6a7bae100be76.webp' /></p><p>மாவட்டத்தின் கடற்றொழில் துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், கடற்றொழில்
சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து
இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,000 தண்டம்! நல்லூரில் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717</id>
            <summary type="text">நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில்
கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து
தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைந்துள்ளது.</p><p></p><h2>கண்காணிப்பு கமராக்கள்</h2><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து
நாசமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7a1eded-7565-4ef1-8df3-5fbc2dd796c2/26-6a7bab78d36db.webp' /></p><p>

இருப்பினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின்
பதிவுகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
</p><p>
இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன்
தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து
நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற சிறந்த செம்பருத்தி எண்ணெய்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1786488644"></link>
            <id>https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1786488644</id>
            <summary type="text">அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
</p><p>
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
</p><p>
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><u>🛑&nbsp;<b>தேவையான பொருட்கள்</b></u></p><ol><li>செம்பருத்தி பூ- 15
</li><li>தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d959fc27-eed3-40bd-a62d-12e991b491b6/26-6a7ba745a48d4.webp' /></p><p><u>🛑&nbsp;<b>பயன்படுத்தும் முறை&nbsp;&nbsp;</b></u></p><ol><li>முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</li><li>
அடுத்து இதில் சுத்தம் செய்த செம்பருத்தி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</li><li>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</li><li>செம்பருத்தி எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</li><li>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
&nbsp; &nbsp;</li></ol><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T22:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-youth-unemployment-govt-announcement-1786474907"></link>
            <id>https://ibctamil.com/article/canada-youth-unemployment-govt-announcement-1786474907</id>
            <summary type="text">கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில் 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>பொருளாதார பயம்</h2><p>அதேபோல கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>

இந்தநிலையில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d769ed-092e-4e53-be41-b4a72bc4c06d/26-6a7b824f982ff.webp' /></p><p>அத்தோடு கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.
</p><p>
மேலும் சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T20:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-s-long-march-7a-rocket-explodes-1786472753"></link>
            <id>https://ibctamil.com/article/china-s-long-march-7a-rocket-explodes-1786472753</id>
            <summary type="text">சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wencha...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
</p><p>
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A (Long March 7A) விண்கலமே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விண்கலம் மூலம் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி (Zhongxing-4B / ChinaSat-4B) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்துள்ளது.</p><p></p><h2>தொழில்நுட்பக் கோளாறு</h2><p>

உள்ளூர் நேரப்படி இரவு 8:02 மணிக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம், முதல் நிலை பிரிப்புக்கு (First-stage separation) முன்னரே வானில் ஒரு பெரிய தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d6adbf-044f-4260-ab50-e270b4bd3d9d/26-6a7b6e127e3a9.webp' /></p><p>

விண்கலம் பயணத்தின் போது அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு (flight anomaly) ஏற்பட்டதால் திட்டம் தோல்வியடைந்ததைச் சீனா உறுதி செய்துள்ளது.</p><p> 

விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>விண்வெளிப் பயணங்கள்&nbsp;</h2><p>லாங் மார்ச் 7A விண்கலம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் முதல் பயணமும் தோல்வியில் முடிந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">China&#39;s Long March rocket launching an important military/civilian dual use satellite exploded during its launch from Hainan as curious kids were watching. A bad day for their scientists. Better luck next time. <a href="https://t.co/RTVvcfpzGH">pic.twitter.com/RTVvcfpzGH</a></p>&mdash; Aravind (@aravind) <a href="https://x.com/aravind/status/2086858619967156451?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இயக்கப்பட்டு வந்த நிலையில், 2020-க்குப் பிறகு இந்த விண்கலம் சந்திக்கும் இரண்டாவது பெரிய தோல்வி இதுவாகும்.
</p><p>
சீன விண்வெளி நிலையத்திற்கு (Tiangong) சரக்குகளைக் கொண்டு செல்லும் லாங் மார்ச் விண்கலத்தின் தொழில்நுட்பங்களை இந்த விண்கலமும் பகிர்ந்து கொள்வதால் விபத்தின் காரணத்தைக் கண்டறியும் வரை சீனாவின் பிற விண்வெளிப் பயணங்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mojtaba-khamenei-in-good-health-pezeshkian-1786467806"></link>
            <id>https://ibctamil.com/article/mojtaba-khamenei-in-good-health-pezeshkian-1786467806</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை ஈரான் மறுத்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud P...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை ஈரான் மறுத்துள்ளது.
</p><p>
அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில் மொஜ்தாபா கமேனி, முழுமையான மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதாக மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி</h2><p>

மொஜ்தாபா காமேனியுடன் நடைபெற்ற 7 முதல் 8 மணி நேர நீண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dd1f1b6-f9aa-4756-9366-6b78f82a790e/26-6a7b62598dfe6.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், தொடர்ந்து பல மணிநேரம் அமர்ந்து விரிவாக ஆலோசிக்க முடிகிற ஒருவருக்கு எவ்வித உடல்நலக் குறைபாடும் இருக்க முடியாது என கூறி இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><p></p><h2>முப்படைகளின் தலைமை</h2><p>


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதிகள், புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவில் (SNSC) முக்கிய மூத்த தளபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுப் பாதுகாப்புத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52fce6c5-6a37-486c-9a4c-2f2d47dc97bc/26-6a7b625a4223e.webp' /></p><p>
</p><p>போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் இழப்பீடு கோரி வருகின்றன. 

அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இழப்பீடு வேண்டும் என ஈரான் கோரிய நிலையில், கடந்த காலப் பிராந்திய மோதல்களின் சேதங்களுக்கு ஈரானிடமிருந்து இழப்பீடு பெறப்படும் என வாஷிங்டன் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்தநிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அமெரிக்காவுடனான மோதலில் அடுத்தகட்ட ராணுவ உத்திகள் குறித்து உச்சத் தலைவருடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய ஏவுகணைகளால் அதிரும் உக்ரைன்...! ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskyy-russia-uses-north-korea-missiles-1786464625"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskyy-russia-uses-north-korea-missiles-1786464625</id>
            <summary type="text">ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வடகொரியாவிடமிருந்து கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் படைகளையும் பெற்று உக்ரைன் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வடகொரியாவிடமிருந்து கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் படைகளையும் பெற்று உக்ரைன் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்வைத்துள்ளார்.</p><p>

உக்ரைனின் தென்கிழக்கு நகரான சபோரிஜியா (Zaporizhzhia) மற்றும் பிற பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை, ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணை</h2><p> 

இதில் வடகொரியா வழங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe8fc3-71d5-4cb1-a300-0e4d513461c6/26-6a7b53e4986b7.webp' /></p><p>இந்தநிலையில் ரஷ்யா தனது நிலப்பரப்பில் மேலும் 30,000 முதல் 50,000 வரையிலான வடகொரிய துருப்புக்களை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், பியாங்யாங்கிலிருந்து புதிய தொகுதி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்றுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>பலவீனமான நிலை</h2><p>ரஷ்ய வரலாற்றிலேயே முதன்முறையாக வடகொரியாவின் ராணுவ மற்றும் தளவாட உதவிகள் இன்றி அவர்களால் போரைத் தொடர முடியாத பலவீனமான நிலைக்கு மாஸ்கோ தள்ளப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ef8df7-dfa3-4091-9d38-0fbc13c37818/26-6a7b53e3b461e.webp' /></p><p>உக்ரைன் போர்க்களத்தில் வடகொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படுவது எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p>

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைனுக்குத் தேவையான பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணை தடுப்பு உதவிகளை வழங்குமாறு மேற்கத்திய நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:36:36+00:00</updated>
        </entry>
    </feed>
