<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-22T16:37:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-school-students-deaths-from-a-waterfall-1784735499"></link>
            <id>https://ibctamil.com/article/two-school-students-deaths-from-a-waterfall-1784735499</id>
            <summary type="text">&amp;nbsp;கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர். 

13 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர். </p><p>

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> 

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது.&nbsp;</p><h2>புகைப்படம் எடுக்க முற்பட்ட போது விபத்து&nbsp;</h2><p>அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f7cf03-478b-452e-a145-d295c6672ce1/26-6a60ef2bb5ff9.webp' /></p><p> </p><p>

இந்தசம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T16:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்மாற்றப்பட்ட பாரிய திமிங்கிலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/beluga-whales-relocated-from-canada-1784733156"></link>
            <id>https://ibctamil.com/article/beluga-whales-relocated-from-canada-1784733156</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மீன் காட்சியகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன.
</p><p>

மேலும் இரண்டு திமிங்கிலங்கள் டெக்சாசில் உள்ள சான் ஆன்டோனியோ கடல் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.</p><h2>30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சி</h2><p>&nbsp;மரைன்லேண்ட் கடல் பூங்கா மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த 30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சியின் முதல்கட்டமாக ஆறு திமிங்கிலங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fac695-4402-4459-a979-9fc425807d43/26-6a60dde6409a3.webp' /></p><p>
</p><p>
மீதமுள்ள திமிங்கிலங்கள், ஜோர்ஜியா, சான் டியாகோ, ஸ்பெயின் ஆகிய இடங்களில் உள்ள கடல் அருங்காட்சியகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-22T15:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து மன்னார் வந்த அருட்சகோதரிகளுக்கு அதிகாலைவேனை நிகழ்ந்த அனர்த்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-carrying-nuns-in-mannar-accident-1784730082"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-carrying-nuns-in-mannar-accident-1784730082</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று
புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையனாலங்குளம் இரும்பு பாலத்தில்
விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று
புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையனாலங்குளம் இரும்பு பாலத்தில்
விபத்துக்குள்ளானது.
</p><p>
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்)
காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>&nbsp;யாழ்.போதனாவில் ஒருவர் அனுமதி&nbsp;</h2><p>&nbsp;அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக
சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10d1c132-6c4c-420b-9984-8c61657db11f/26-6a60d9bac84d5.webp' /></p><p>
</p><p>
மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள்
(கன்னியாஸ்திரிகள்) பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளாகியமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோய்வாய்ப்பட்ட சகோதரனை கொன்று விட்டு காவல்துறையில் சரணடைந்த நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-confessed-to-killing-his-brother-arrested-1784729771"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-confessed-to-killing-his-brother-arrested-1784729771</id>
            <summary type="text">
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இன்று (22)...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
</p><p>
இன்று (22) பிற்பகல் கத்தியுடன் ஆரச்சிக்கட்டுவ காவல்நிலையத்திற்கு வந்த நபர், தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
</p><p>
அதன்படி, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறையினர் சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று, சோதனை நடத்திய நிலையில், சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></h2><p>
இந்த நிலையில், அரச்சிக்கட்டுவ - ராஜகதலுவ பகுதியைச் சேர்ந்த துலன் ஹசங்க என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2dfd77f-e35e-4ea7-b722-a7bc18dc0823/26-6a60d2d8698cb.webp' /></p><p>
</p><p>
கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனை, சந்தேக நபரே பகல் நேரத்தில் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-07-22T14:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் அகழப்பட்ட 11 என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784728188"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784728188</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(22) புதன்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(22) புதன்கிழமை நடைபெற்றது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம்
புதன்கிழமை, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>455 என்பு கூடுகள் முழுமையாக அகழ்வு</h2><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ed5545e-a9ee-4790-9558-06129162cddb/26-6a60cd862ec69.webp' /></p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன</p><p>

</p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர்</h2><p>அதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட
குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட
நிபுணர்குழுவினருடன் அகழ்வுபணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என
சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef915583-2693-42a6-8d8c-ca344e9bad85/26-6a60cd8711ce4.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-against-gotabayas-former-secretary-1784726104"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-against-gotabayas-former-secretary-1784726104</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்</p><h2>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்&nbsp;வழக்கு</h2><p>இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (22) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c166c0fd-da40-453b-ae7b-b2b620b42752/26-6a60c710d3dfd.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pottamman-intelligence-division-moves-1784723254"></link>
            <id>https://ibctamil.com/article/pottamman-intelligence-division-moves-1784723254</id>
            <summary type="text">கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்படுத்தித்தான்.
</p><p>
வடக்கு - கிழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில் கிழக்கில் இடம்பெறும் அனைத்தும் தனக்கூடாகவே இடம்பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த கருணா, புலனாய்வு நகர்வுகளுக்கு தன்னூடகத்தான் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் சேர்த்து வைத்திருந்தார்.</p><p>

இந்த திட்டங்களின் முதல் படித்தான் கருணா பிரிவிற்க்கு முன்னதாக றெஜினோல்ட் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு முக்கிய அறிவிப்பு.
</p><p>
இந்த அறிவிப்பின் பின்னணி மற்றும் தாக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் திட்டங்களுக்கு பாரதூரமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.
</p><p>
இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிளவுபட முன்னர் நடந்தது என்ன? றெஜினோல்ட் வெளிப்படுத்திய நிலைப்பாடு என்ன/ இதனால் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? என்பது குறித்து ஆராய்கிறது டொடரும் ஒளியாவனம்...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oK5W5uhPSqM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-healthcare-worker-1784721601"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-healthcare-worker-1784721601</id>
            <summary type="text">கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9c74305-f650-445a-87e6-446f0d96b3f9/26-6a60c07964777.webp' /></p><h2>ஆரம்பக்கட்ட விசாரணை</h2><p>

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த,அரச வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்த டபிள்யூ.டி.தேவாநந்த என்ற சுகாதார உதவி ஊழியராவார்.</p><p>

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரை கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. </p><p>

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா முன்னிலையாகாமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><span style="color: inherit;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a064cc26-0c5b-438b-93b5-aa78cd784393/26-6a60c07a14c06.webp' /></span></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச ரீதியில் முன்னேறியுள்ள இலங்கையின் கடவுச்சீட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-passport-ranked-94-place-henley-passport-1784722453"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-passport-ranked-94-place-henley-passport-1784722453</id>
            <summary type="text">
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94-வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94-வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது.</p><p>

சமீபத்திய தரவரிசையின்படி, 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் 96-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. </p><p>

இதற்கு முன்னர் இலங்கையின் கடவுச்சீட்டு 2021-ல் 107-வது இடத்திலும், 2022-ல் 102-வது இடத்திலும், 2023-ல் 100-வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது.</p><p></p><h2>மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு</h2><p>
</p><p> 
கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்-விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு தரவரிசையை நிர்ணயிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca465a7-cea0-45af-be75-90b92aa165f1/26-6a60c012a362c.webp' /></p><p>
</p><p>
2026-ஆம் ஆண்டின் இப்பட்டியலில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.</p><p> 

இதேவேளையில், ஆப்கானிஸ்தான் 104-வது இடத்தைப் பிடித்துப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.</p><p>

இந்தக் குறியீடு மொத்தம் 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் 227 பயண இடங்களையும் உள்ளடக்கி, விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய ஒப்பீட்டை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த AI நிறுவனம்: சாதனை படைத்த சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-year-old-boy-owns-an-ai-company-in-burj-khalifa-1784722418"></link>
            <id>https://ibctamil.com/article/14-year-old-boy-owns-an-ai-company-in-burj-khalifa-1784722418</id>
            <summary type="text">துபாயை சேர்ந்த 14 வயதான ஜெயினம் என்ற சிறுவன்&amp;nbsp; உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயை சேர்ந்த 14 வயதான ஜெயினம் என்ற சிறுவன்&nbsp; உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார்.</p><p>'மெங்கோ என்ஜின்' என்ற இவரின் AI நிறுவனம் வணிக நிறுவனங்களின் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு, உள்ளடக்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தானியங்கி முறையில் செய்ய உதவுகிறது.</p><p>உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் இவரது நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது.</p><p></p><h2>14 வயது சிறுவனின் சாதனை</h2><p>இதன் காரணமாக துபாயின் மிக இளைய AI நிறுவனர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e05bcd-9b85-468d-8175-21eadf0ddf15/26-6a60b7e43fb52.webp' /></p><p>இந்த சிறுவனுக்கு 6-வது வயதில் தந்தை அழைத்துச் சென்ற ஒரு வர்தக குழு கூட்டம் மூலம் , தொழில்முனைவோர் ஆக வேண்டுமென்ற ஆர்வம் அவருக்குள் வந்ததாக அவர் கூறி இருக்கிறார்.</p><p>தனது சொந்த முயற்சியின் மூலம் எந்ந வகுப்பிற்கும் செல்லாமல் Generative AI தொழில்நுட்பத்தைக் தானாக கற்றுக் கொண்டுள்ளார்.</p><p>மேலும் பொது தளத்தில் கிடைக்கும் காணொளி மற்றும் சொந்தமாகப் புதிய திட்டங்களை உருவாக்கியும் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 

</p><p> 
</p><p>

</p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-22T12:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போர் : அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பில்லியன் கணக்கான செலவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-has-spent-375b-on-iran-war-so-far-1784721183"></link>
            <id>https://ibctamil.com/article/us-has-spent-375b-on-iran-war-so-far-1784721183</id>
            <summary type="text">&amp;nbsp; சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரான் மீதான போருக்காக அமெரிக்கா சுமார் 37.5 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது என்று, பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரான் மீதான போருக்காக அமெரிக்கா சுமார் 37.5 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது என்று, பென்டகனின் மேலதிக நிதி கோரிக்கை மீதான செனட் விசாரணையின் போது, ​​அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் செவ்வாயன்று சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்தார்.
</p><p>
போரின் செலவு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​"இன்றைய நிலவரப்படி எங்களிடம் உள்ள மதிப்பீடு 37.5 பில்லியன் டொலர் ஆகும்," என்று ஹெக்ஸெத் கூறினார்.</p><h2>47 ஆண்டுகளில் இராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ள ஈரான்</h2><p>செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் முன் நடந்த இந்த விசாரணை, ஈரானுக்கு எதிரான போருடன் தொடர்புடைய 67 பில்லியன் டொலர் மேலதிக நிதிக்கான பாதுகாப்புத் துறையின் கோரிக்கையை மையமாகக் கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f44e3b-ddd4-4946-8225-a5d19bc18f5a/26-6a60b5896ac1f.webp' /></p><p>
</p><p>
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒருவேளை 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஈரான் இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்று ஹெக்ஸெத் தனது உரையின் போது தெரிவித்தார்.</p><p> </p><h2>&nbsp;ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து</h2><p>மேலும், ஆயிரக்கணக்கான ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் இன்னும் எப்படி சுருக்க முடிந்தது என்று கேட்கப்பட்டபோது, ​​அமெரிக்கா 200 முதல் 500 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை "ஈரானின் கண்முன்னேயே" கொண்டு சென்றதாக ஹெக்ஸெத் கூறினார்.

"நாங்கள் அதை இரகசியமாகச் செய்தோம், ஏனெனில் பகிரங்கமாகச் செய்வதை விட அமைதியாகச் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருந்தது...</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c2d2c-657b-4da1-9bce-672fb2601714/26-6a60b58a31a22.webp' /></p><p> </p><p>நாங்கள் நீண்ட காலமாக அந்தப் பகுதி வழியாகச் செல்லும் போக்குவரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

"நாங்கள் ஒரு போர்நிறுத்தம் செய்திருந்தோம், பின்னர் அவர்கள் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று அவர் கூறினார்.</p><p></p><p>

</p><h2>ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு உதவி</h2><p>ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு உதவுகின்றனவா என்ற கேள்விக்கு, ஈரானுக்கும் அந்த இரு நாடுகளுக்கும் இடையே "நிச்சயமாக ஒரு கூட்டணியும், அவ்வாறு செய்வதற்கான முயற்சிகளும்" உள்ளன என்றும், அதைத் தடுப்பதற்கு வோஷிங்டனிடம் "பல வழிகள்" உள்ளன என்றும், அவற்றில் சில "இரகசியமாக வைக்கப்பட வேண்டும்" என்றும் ஹெக்ஸெத் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bceae63-6e4c-4562-b280-5304fccf3af7/26-6a60b58adc547.webp' /></p><p>

ஈரான் செய்யும் சில செயல்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் வெவ்வேறு மட்டங்களில் துணை நிற்கின்றன என்றும் அவர் கூறினார்.
</p><p>
வான் சக்தியால் மட்டும் ஈரானைத் தோற்கடிக்க முடியுமா என்று கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னிடம் கேட்கப்பட்டது.

"வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வான் சக்திக்கு வரம்புகள் உண்டு, அவற்றை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹோர்மோஸ் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rubio-claims-us-still-open-to-iran-negotiations-1784715786"></link>
            <id>https://ibctamil.com/article/rubio-claims-us-still-open-to-iran-negotiations-1784715786</id>
            <summary type="text">பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.</p><p>இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதல் உலகளாவிய எரிசக்தி வழித்தடங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஈரான் காலதாமதம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.</p><p>ஈரான் ஆதரவு யேமன் ஹவுதிகளின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ரூபியோ இந்த கருத்தை வெளியிட்டு்ள்ளார்.&nbsp;</p><p></p><h2>மார்கோ ரூபியோ கருத்து</h2><p>ஆசியாவிற்கு சவூதி கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் தங்கள் பாதையை மாற்றிக்கொண்ட ஒரு நாள் கழித்து, வெளிவந்த மார்க்கோ ரூபியோவின் இந்த கருத்து மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் மோதலுக்கு முக்கிய மாற்றீடாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467bdcc3-4836-47d2-9dcb-9e7bced7f914/26-6a60aed54277c.webp' /></p><p>செங்கடலில் உள்ள கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதிகள், திங்களன்று சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை அறிவித்தனர்.</p><p>இதன் மூலம் , பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கி, வளைகுடா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற போரில், ஒரு புதிய முனையை உருவாக்கும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முடங்கியுள்ள கப்பல் போக்குவரத்து</span></p><p>
</p><p>
வளைகுடாவிலிருந்து வெளியே செல்லும் ஹோர்முஸ் நிரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்து வருவதால், தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் சவூதி எண்ணெய் வெளியேறுவதற்கான முக்கிய மாற்றுப் பாதையாக செங்கடல் விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec643fb-52b3-43bf-b709-44c36ffb5949/26-6a60aed610ee0.webp' /></p><p>

முன்னதாக ஏப்ரல் மாதம் கையெழுத்தான போர் நிறுத்தத்திற்குப் பதிலாக, ஜூன் மாதம் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்ட இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 10 நாள் போர் நிறுத்தத்திற்கான ஒரு முன்மொழிவை மத்தியஸ்தர்களிடமிருந்து ஈரான் பெற்றுள்ளதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>மேலும் ராஜதந்திரம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானின் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி, மத்தியஸ்த நாடான பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து, தனது முயற்சிகளைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>இவ்வாறான பின்னணியில் தற்போது மார்க்கோ ரூபியோவின் கருத்துக்கள் மத்தியகிழக்கு மோதலுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசா விண்ணப்பதாரர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-in-colombo-has-warned-visa-applicants-1784719075"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-in-colombo-has-warned-visa-applicants-1784719075</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், குற்றப் பதிவுகள் மற்றும் விண்ணப்பச் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தவறான தகவல்கள் ஆகியவை அமெரிக்காவிற்குள் நுழைவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், குற்றப் பதிவுகள் மற்றும் விண்ணப்பச் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தவறான தகவல்கள் ஆகியவை அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடைகளுக்கு வழிவகுக்கும் என விசா விண்ணப்பதாரர்களை எச்சரித்துள்ளது.</p><p>

குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சிறிய குற்றச் செயல்கள் கூட விசா மறுப்புக்கு வழிவகுக்கும் என்றும், தூதரக அதிகாரிகளுக்கு விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணித் தகவல்களை அணுகும் வசதி இருப்பதால், முந்தைய மீறல்கள் அல்லது கைதுகளை அவர்கள் கண்டறியக்கூடும் என்றும் தூதரகம் கூறியுள்ளது.
</p><p>
விசா விண்ணப்பங்களிலும் நேர்காணல்களின் போதும் உண்மையான தகவல்களை வழங்குமாறு விண்ணப்பதாரர்களைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.</p><p></p><h2>நேர்மை அவசியம்&nbsp;</h2><p>

இந்நிலையில், தவறான தகவல்கள் அல்லது பொய்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254276c5-fd48-4ffe-94da-231f977567ac/26-6a60b208b98a1.webp' /></p><p>
</p><p>
இதன்படி, விசா செயல்முறை முழுவதும் நேர்மையாக இருப்பது அவசியம் என அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T12:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-black-july-genocide-1784719402"></link>
            <id>https://ibctamil.com/article/the-black-july-genocide-1784719402</id>
            <summary type="text">ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் ஆடைகளின்றியும் இனப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் ஆடைகளின்றியும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>அதனை ஶ்ரீலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. ஶ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. </p><p>இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது.</p><p></p><h2>மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம்&nbsp;</h2><p>ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வந்தார்கள். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான சமர் ஒன்று இடம்பெற்றது. </p><p>விடுதலைப் புலிகளை தாக்கும் நோக்கில் வந்த இராணுவ அணியொன்றை இடைமறித்து புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. </p><p>இதனால் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமர் மூண்டது. இதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் இதில் வீர மரணமடைந்தார்.
</p><p>
புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழர்களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று திட்டமிட்டு கதை பரப்பட்டது. </p><p>இதனால் கொழும்புவில் இருந்த தமிழர்களை கொன்று அழிப்போம் என்றும் இனவெறி பரப்பட்டது. இதனால் சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களை தாக்கத் தொடங்கினர்.</p><p> &nbsp;வீதிகளில் சென்ற தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்ட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு தமிழர்கள் போட்டப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள்.</p><p></p><h2>ஆடைகளின்றி நனைந்த இலங்கைத் தீவு</h2><p>ஜூலை 23இல் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். </p><p>கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை கொன்று குவித்தது.</p><p> யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழ் மக்கள் புலிகள் என்ற பெயரில் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். </p><p>குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கை தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் ஆடைகளின்றியும் நனைந்தது. கொழும்பு வீதிகளில் இருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது.</p><p> தமிழர்களைப் பிடித்து ஆடைகளின்றி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள். மிக மிக கோரமான முறையில் மனித குலத்திற்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>ஒரு குறிப்பிட்ட குழுவாலோ, அல்லது ஒரு தரப்பாலே இப்படி பரவலாகவும் நீண்ட நாட்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால்தான் மிக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.</p><p></p><h2>1958இல் நடந்த இனப்படுகொலை&nbsp;</h2><p>கறுப்பு ஜூலை இலங்கையின் முதல் படுகொலையல்ல. அதற்கு முன்னர் 1958களிலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. எழுதுபகளிலும் நிகழ்த்தப்பட்டன.</p><p> அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடாத்தவும் இல்லை. 1956இல் தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்க கொண்டு வந்த வேளையில் அன்று பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள். </p><p>இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறை செயற்பாடுகளாலும் உரிமை மறுப்புக்களாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர்.
</p><p>
அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது.</p><p> தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்த வேளையில்தான் 1958களில் மூந்நூறு ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அறிவுமீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்ட்டது. </p><p>ஆக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களை படுகொலை செய்து அழிக்கவும் திசை திருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடாத்தப்பட்டது.&nbsp;</p><p></p><h2>ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முற்கூட்டிய பேச்சு&nbsp;</h2><p>ஜூலைப் படுகொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. </p><p>இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்...</p><p> உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார்.

இப்பிடி பேசி சில நாட்களிலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து மாபெரும் மகிழ்ச்சி தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்காவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தை கண்டும் வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார்.</p><p> கறுப்பு ஜூலைப் படுகொலையை அன்று ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரச தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின.</p><p></p><h2>தனிநாடு கோரக் கூடாது என்ற நோக்கம்&nbsp;</h2><p>&nbsp;குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணராலாம். ஏற்கனவே இனவழிப்புக்கள் நடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு 83 ஜூலை இனப்படுகொலையை நடாத்தியுள்ளார்கள். </p><p>சிறில் மத்யூ போன்றவர்கள் குறுகிய குழுவில் வன்முறையாக இல்லாமல் சிங்கள பொதுமக்களின் பற்கேற்புடன் நடாத்த நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளை கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுக்க நினைத்தார்கள்.
</p><p>
கொழும்பில் இருந்து ஈழ மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த தமிழ் மக்கள் கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். </p><p>வடக்கு கிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்றால் போல் தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த ஆடைகளின்றியும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்பந்தித்தது.</p><p> கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது.

நாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச் செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல. </p><p>இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகி வருகின்றன. </p><p>ஆனால் சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்கு தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பேரினவாத்தை பேசுகின்றபோதும்கூட எமக்கு ஜூலைப்படுகொலைகளே நினைவுக்கு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T11:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வருடங்களுக்குள் ஐந்து கோடி சம்பாதித்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-filed-against-former-minister-1784719483"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-filed-against-former-minister-1784719483</id>
            <summary type="text">இரண்டு வருட காலப்பகுதியில் ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு வருட காலப்பகுதியில் ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
</p><p>
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று (21) விடயங்களை சமர்ப்பித்த ஆணைக்குழு, 2023 ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறும் எனத் தெரிவித்தது.</p><h2>நீதிமன்றிடம் அனுமதி கோரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு</h2><p>தற்போது பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, இலஞ்ச ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரிகள், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முழுமையாக முடிவடைந்து, ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b973dda9-e163-4d0e-8ed7-09d32dbfe71f/26-6a60ac4b50aa4.webp' /></p><p> </p><p>எதிர்காலத்தில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதால், விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பொருத்தமான ஒரு திகதியை வழங்குமாறும் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது.</p><p></p><h2>பெருமளவு தொகையை எவ்வாறு சம்பாதித்தார்</h2><p>&nbsp; 2011 மார்ச் 31 முதல் 2013 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் 57,347,956.98 ரூபாய்க்கு அண்மித்த தொகையை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்த முடியாத செலவுகளைச் செய்து சொத்துக்களை வாங்கியது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு இந்த விசாரணையை ஆரம்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3cefe3c-303a-41fd-b896-765c116ce2a4/26-6a60ac4c0e3a5.webp' /></p><p>&nbsp;ராகல பிரதேசத்தில் கோடிக்கணக்கான பெறுமதியான காணியை வாங்குதல், 'என்.பி.ஆர். சன்' என்ற கூட்டு வர்த்தகத்தை ஆரம்பித்தல் மற்றும் சுங்க வரி இல்லாத வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>அத்துடன், தனது நண்பர்களுக்காக துபாய் பயணங்களை ஏற்பாடு செய்து அதற்குப் பணம் செலவழித்தல், ஒரு நண்பரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுதல் மற்றும் தனது காலஞ்சென்ற சகோதரர் எஸ்.பி. ரத்நாயக்கவிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறுதல் உள்ளிட்ட பல சட்டவிரோத சொத்துச் சம்பாதிப்பு சம்பவங்கள் தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5695e2-582b-4590-bf14-f3c637b4f176/26-6a60ac4ccacb3.webp' /></p><p>
</p><p>
2015 மார்ச் மாதம் கிடைத்த அநாமதேய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் தொடர்பில், 2025 டிசம்பர் 02 ஆம் திகதி சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். </p><p>பின்னர் 2025 டிசம்பர் 06 ஆம் திகதி அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கைகளை பரிசீலித்த பிரதான நீதவான், குறித்த வழக்கின் விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றங்களாக மாற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/presidential-palaces-converted-into-court-houses-1784717163"></link>
            <id>https://ibctamil.com/article/presidential-palaces-converted-into-court-houses-1784717163</id>
            <summary type="text">சில ஜனாதிபதி மாளிகைகள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன, மற்றவை பொருளாதார ரீதியாக சாத்தியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரினி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில ஜனாதிபதி மாளிகைகள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன, மற்றவை பொருளாதார ரீதியாக சாத்தியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று(22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்கான செலவு</h2><p>
</p><p>
2025 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக ரூ. 13.9 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dae4835-6926-42ed-824a-08a185a09883/26-6a60a56875a9e.webp' /></p><p>&nbsp;"ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார ரீதியாக சாத்தியமான பயன்பாட்டிற்கு வரும் வரை அவற்றைப் பராமரிக்க அரசாங்கம் நிதி செலவிட வேண்டியுள்ளது," என்றும் பிரதமர் மேலும் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியாவில் அசோகர் மகன் மஹிந்த நீராடினாராம்! புதிய கதைகளுடன் இன்று புதிய கட்டுமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanniya-hot-water-springs-new-issue-1784717720"></link>
            <id>https://ibctamil.com/article/kanniya-hot-water-springs-new-issue-1784717720</id>
            <summary type="text">வெள்ளையாக உள்ளவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல தெற்கின் சில பத்தி எழுத்தாளர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று நடைபெறும் பௌத்த சமய நடவடிக்கைகளால் நல்லிணக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளையாக உள்ளவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல தெற்கின் சில பத்தி எழுத்தாளர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று நடைபெறும் பௌத்த சமய நடவடிக்கைகளால் நல்லிணக்கத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாதென மாய்ந்து.. மாய்ந்து பாய்ந்து பாய்ந்து சொல்லிவைக்கும் பின்னணியில் இன்று அங்கு சில நகர்வுகள் நடந்தன.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் செய்ய முடியாதென திருகோணமலை நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை பிறப்பித்த நிலையில் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வு இது ஒன்றும் புதிய கட்டுமானங்களுக்குரிய நகர்வு அல்ல அகழ்வு பணிகளுக்குரிய நகர்வு என அரசாங்கம் சமாளிக்கிறது. </p><p>

ஆனால் இந்த சமாளிப்பு கண்டு அடடே அப்படியா? என எண்ணத்தோன்றுகிறர். ஒருவேளை இந்த அகழ்வில் ஒரு புத்தர் முளைக்க வைக்பட்டால் அவர் அங்கு குந்த வைக்கப்பட்டால் அது ஒரு புதிய கட்டுமானம் என்பது புரிதல்.</p><p> 

தமிழர்களுடன் தொடர்புடைய இராவணன் சார்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று இடத்தை ஒரு புராத பௌத்த தலமாகவும் அனுராதபுர காலத்தில் அங்கு பௌத்தம் இருந்தமைக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் எல்லாம் இருப்பதான கதைகளும் இலங்கைக்கு பௌத்தத்கொண்டு கொண்டு சென்ற மஹிந்த தேரர் கன்னியா வெந்நீருற்றில் குளித்து நோயிலிருந்து குணமடைந்தார் என்ற திடீர் கதைகளும் வரும் நிலையில் இந்த விடயம் மற்றும் செம்மணி புதைகுழிபகுதியை ஐரோப்பிய ராஜதந்திரிகள் பார்விட்ட விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CxSG2Y1weYI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T11:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-installation-kuttimani-thangathurai-statue-1784715418"></link>
            <id>https://ibctamil.com/article/court-installation-kuttimani-thangathurai-statue-1784715418</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்று நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்று நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் 43-வது நினைவு நாளை ஒட்டி எதிர்வரும் 25.7.2026 அன்று உருவச்சிலை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் முக்னெடுக்கப்பட்டு இருந்தன.&nbsp;</p><p>எனினும் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் அதன் சிலை நிறுஉனர்களில் ஒருவரான சதீஷ் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றத்தின் தற்காலிக தடை</h2><p>இதற்கமைய அவர் நேற்று
முன்தினம் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fc0cb85-58d1-40c2-8916-c76abf8ac759/26-6a60a28828179.webp' /></p><p>இந்திலையில் குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா,
விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட பலர் பிரதிவாதி சார்பில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p>இதன்போது முன்வைக்கபட்ட கருத்துக்களை பரிசீலித்த பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 04.08.2026 வரை குறித்த சிலை நிறுவுவதை
தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளையை பிறப்பித்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் ஆட்சியில் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 715 மில்லியன் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/715million-dollars-were-smuggled-during-ranil-govt-1784712460"></link>
            <id>https://ibctamil.com/article/715million-dollars-were-smuggled-during-ranil-govt-1784712460</id>
            <summary type="text">2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகத் இலங்கை நாடாளுமன்ற பொது நிதி மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகத் இலங்கை நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவில் 
(COPF) தெரியவந்துள்ளது.
</p><p>பிரதிப் காவல்துறை மா அதிபர் அசங்க குருவிட்டவினால் இந்த விசாரணை குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
2023 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாக ஜனாதிபதி அனுரகுமார குமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார். </p><p></p><h2>அமைச்சர் ஆனந்த விஜேபால</h2><p>

மேலும், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f56bc2-29a7-4029-abf2-1e10a1069ea6/26-6a60981621ce7.webp' /></p><p> </p><p>

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி உட்பட பல கட்சிகள், இவ்விவகாரம் குறித்து ஒரு விரிவான விசாரணை தேவை என்று தெரிவித்தன.</p><p> 

கேள்விக்குட்பட்ட இந்த மோசடி நிகழ்ந்த காலகட்டமானது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தையும் உள்ளடக்கியிருந்தது என்பதாகும்.
</p><p>
மேற்கூறிய கோரிக்கைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகளை அசங்க குருவிட்ட வழங்கியுள்ளார்.
</p><p></p><h2>வெளியே கொண்டு செல்லப்பட்ட பணம்</h2><p>
நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பணம், பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b65d2d4-df24-4d2a-ab16-e0d750e3a4ca/26-6a609816d51c8.webp' /></p><p> </p><p>

பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் போல் பொய்யாகக் கூறி கடத்தல்காரர்கள் இந்தப் பணத்தை நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் சென்றுள்ளதாகவும், மேலும், பொருட்கள் இறக்குமதிக்காக என்று கூறி அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் பணம் நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. </p><p>

தவறான தகவல்களின் அடிப்படையில் இவ்வளவு பெரிய தொகை நாட்டை விட்டு வெளியேறியிருந்தால், அதற்குக் காரணம் வங்கி அமைப்பு, சுங்கத்துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் உள்ள பலவீனங்களே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று அரசாங்க நிதிக் குழுவின் கவனத்திற்கு இந்த அனைத்துப் பிரச்சினைகளும் கொண்டுவரப்பட்டதோடு, கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விவாதம் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>105 நிறுவனங்கள்&nbsp;அடையாளம் &nbsp;</h2><p>இந்த அறிக்கையின்படி&nbsp; ஜனவரி 20 அன்று ஆரம்பத்தில் 89 நிறுவனங்களும், அதனைத் தொடர்ந்து பெப்ரவரி அறிக்கையில் மேலும் நான்கு நிறுவனங்களும், மார்ச் அறிக்கையில் கூடுதலாக 12 நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டன. </p><p>

மொத்தத்தில், 105 நிறுவனங்கள் இந்தப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
</p><p>
ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 2026 வரை, நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் (TTs) மூலம் ஏறத்தாழ ரூ. 214.7 பில்லியன், அதாவது சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

அந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு இணையான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>சுங்கத்துறையின் கண்டுபிடிப்பு</h2><p>
</p><p>
சுங்கத்துறையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அந்தப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

105 நிறுவனங்களுடன் தொடர்புடைய இயக்குநர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்ததில், 55 நபர்கள் மட்டுமே அவற்றுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்ததாக இதில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188a2912-b441-4d08-881c-ea121cc54480/26-6a609d6c1cbc6.webp' /></p><p>

மேலும், இந்த பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக 227 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும், தொடர்புடைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 24,300 தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த விசாரணையில் கண்டறியப்பட்டது.
</p><p>
தற்போது விசாரணையில் உள்ள பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதில், இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 13 முக்கிய வங்கிகள் ஈடுபட்டிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணைகளின் முன்னேற்றத்தின்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய நபரை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டனர் என்றும் 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இந்த விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T10:58:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் 50 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத கைத்தொலைபேசிகள் காவல்துறையால் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/smartphones-worth-50-million-recovered-1784711492"></link>
            <id>https://ibctamil.com/article/smartphones-worth-50-million-recovered-1784711492</id>
            <summary type="text">கொழும்பு கொல்லுபிட்டி லிபர்டி பிளாஸாவில் 5 கோடிக்கம் அதிகமான பெறுமதியுள்ள சட்டவிரோத கையடக்க தொலைபேசிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.&amp;nbsp;கைப்பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொல்லுபிட்டி லிபர்டி பிளாஸாவில் 5 கோடிக்கம் அதிகமான பெறுமதியுள்ள சட்டவிரோத கையடக்க தொலைபேசிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.&nbsp;</p><p>கைப்பற்றபட்ட கையடக்க தொலைபேசிகளில் புதிய ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான தொலைபேசிகள் இருந்ததாக வலானா காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில்&nbsp;வலனா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>300-க்கும் மேற்பட்ட நவீன கைபேசிகள்&nbsp;</h2><p>மேலும் இந்த விசாரணையில் கைபேசிகளை வைத்திருந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79f078f-275a-4f98-a5cf-56e1422c7ecb/26-6a60964f7eb36.webp' /></p><p>சந்தேகத்திற்கிடமாக கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளின் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது. </p><p>

இந்த நடவடிக்கை, காவல் உதவி கண்காணிப்பாளர் ரோகன் ஒலுகலாவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரருக்கு கிடைக்கப்போகும் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/david-warner-pleads-guilty-to-drink-driving-1784715952"></link>
            <id>https://ibctamil.com/article/david-warner-pleads-guilty-to-drink-driving-1784715952</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நடத்தப்பட்ட திடீர் சுவாசப் பரிசோதனையைத் தொடர்ந்து, மது அரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நடத்தப்பட்ட திடீர் சுவாசப் பரிசோதனையைத் தொடர்ந்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p>

கடந்த மே மாதம் நடந்த நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அந்த கிரிக்கெட் வீரர் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தனது நடத்தை "முட்டாள்தனமானது" மற்றும் "பொறுப்பற்றது" என்பதை அவர் அறிந்திருந்தார்&nbsp;
என்றும் அவரது வழக்கறிஞர் பாபி ஹில் கூறியதால், இந்த ஒப்புதல் வாக்குமூலம் எதிர்பார்க்கப்பட்டது.</p><h2>உயிர்த்த ஞாயிறு அன்று சம்பவம்</h2><p>ஈஸ்டர் ஞாயிறன்று தனது காரில் ஏறுவதற்கு முன்பு, வோர்னர் ஒரு நண்பரின் குடியிருப்பில் மூன்று கிளாஸ் வைன் அருந்தியதாக முந்தைய விசாரணையில் ஹில் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439bdd4b-9479-4b51-971c-cec320cd84d5/26-6a609d53cc545.webp' /></p><p>

ஓகஸ்ட் 18 அன்று தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்று வோர்னருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை, A$2,200 ($1,500; £1,150) வரை அபராதம் மற்றும் ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd22e95-c8d6-4e35-bf21-e45bd162f8fe/26-6a609d5318102.webp' /></p><p>

2024-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வோர்னர், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளின் தலைவராக உள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:37:17+00:00</updated>
        </entry>
    </feed>
