<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-02T08:30:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645"></link>
            <id>https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645</id>
            <summary type="text">நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு கடற்தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">இரண்டு கடற்தொழிலாளர்களில் </a>ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த நபர்கள் நேற்று (01.08.2026) மீன்பிடிக்க சென்ற இடத்தில் தான்&nbsp; கடலில் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p>படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.</p><p></p><h2>படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி</h2><p> </p><p>ஆரம்பத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e871b547-9703-4d27-a876-063aae5270c4/26-6a6efc68e8e0a.webp' /></p><p>பின்னர் மற்றுமொருவரும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக <a href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369" target="_blank">சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில்</a> அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>&nbsp;மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக இலங்கை விமானப்படையின் Bell 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மேலும் பல மீன்பிடிப் படகுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>எனவே அவற்றுக்கு உதவுவதற்கான மீட்பு நடவடிக்கைகளும் கடற்படை மூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோதல் வேறு - மஹர சம்பவம் வேற...! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிறைச்சாலை நிர்வாகத்திற்கு </a>எதிராக முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமுமே இந்த அமைதியற்ற சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர், “அனைத்துச் சிறைச்சாலைகளுக்குள்ளும் போதைப்பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c6ca5-6633-43fd-9528-f8a585890718/26-6a6ee843c24f9.webp' /></p><p> 

அதன்பேரில் உள்ள வெறுப்பும் கோபமுமே இத்தகைய நிலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். </p><p>முதற்கட்ட அறிக்கை கிடைத்த பின்னரே இது குறித்துத் துல்லியமாகக் கூற முடியும்.</p><p></p><h2>மேலதிக விவரங்கள்&nbsp;</h2><p>

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் (STF) தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மோதலின் போது சேதமடைந்த சொத்துக்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
 <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46506665-9ca7-4d0a-8b3c-23510579fe2f/26-6a6ee7e7e6ef2.webp' /></p><p>கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டுச் சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்து முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இக்கலவரத்தின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p><a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</a></p>]]></content>
            <updated>2026-08-02T08:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-installs-barrier-on-ceuta-border-with-morocc-1785652108"></link>
            <id>https://ibctamil.com/article/spain-installs-barrier-on-ceuta-border-with-morocc-1785652108</id>
            <summary type="text">பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எல்லையை மீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் சியூட்டாவிற்கும் அண்டை நாடான மொராக்கோவிற்கும் இடையிலான கடல் எல்லையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எல்லையை மீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் சியூட்டாவிற்கும் அண்டை நாடான மொராக்கோவிற்கும் இடையிலான கடல் எல்லையில் 500 மீற்றர் நீளமுள்ள தடுப்பணையை அமைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 67 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக&nbsp;தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அவர்களில் சிலர் நீரில் மூழ்கியும், அலைத்தடுப்புச் சுவரைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்தது.</p><p></p><h2>நெருக்கடியைத் தூண்டியது</h2><p>வியாழனுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் அப்பகுதிக்குள் 50,000 முதல் 60,000 புலம்பெயர்ந்தோர் திடீரென வந்தடைந்தமை ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியதுடன் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் குடியேற்றம் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்திய நிலையில் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் விரைவில் திரும்பிச் சென்றுவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b7d210-9677-4d8d-ac8e-28a5556688ea/26-6a6efc9ce21fd.webp' /></p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஊக்குவிக்கப்படும் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் நாடு கடத்தலை ஆதரிக்கும் கொள்கைகளுக்கு மாறாக, ஸ்பெயினின் குடியேற்றக் கொள்கையானது, தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>சியூட்டாவில் நடந்த நிகழ்வுகள் குறித்த சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் எதிர்வினையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><h2>ஸ்பானிய உள்துறை அமைச்சர்</h2><p>சியூட்டா நெருக்கடி இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் கிரீஸை விட ஸ்பெயினில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c76a20-fdea-4c8d-b3bc-c44dda4c0bbd/26-6a6efc9d98c21.webp' /></p><p>சியூட்டாவிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பானிய உள்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ கிராண்டே மார்லாஸ்கா,&nbsp;24 மணி நேரத்திற்குள் ஸ்பெயின் பெருமளவில் ஒழுங்கை மீட்டெடுத்துவிட்டதாகக் கூறினார்.&nbsp;</p><p>ஆனால், நெருக்கடி இன்னும் முறையாக முடிவடையவில்லை என்றும், இரவு நேரக் கடல் கடப்புகள் ஏறக்குறைய பூச்சியமாகக் குறைந்திருந்தாலும், தேவைப்படும் வரை பலப்படுத்தப்பட்ட காவல்துறை மற்றும் இராணுவப் பாதுகாப்பு தொடரும் என்றும் அவர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் இடைநிறுத்தம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்குவதற்கு வோஷிங்டனும் இஸ்ரேலும் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை இரவு தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் இந்த முடிவை அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் சக்தியின் அளவுகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா ஆயத்த நிலையில் உள்ளது.</p><p></p><h2>ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு</h2><p> </p><p>எனினும் நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியுள்ளன.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117023461141824050/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை இரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன்.</p><p> இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைகிறது” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரான் வெளிவிவகார அமைச்சர்</h2><p>இதேவேளை ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ef1c72-0551-462a-a52a-27683724e6eb/26-6a6ede27ea4f5.webp' /></p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. </p><p>

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு <a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">கைது செய்யப்பட்டுள்ளார்.</a>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (01-02-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோதமான முறை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிகரெட்டுக்களுடன் அவர் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e797a537-ec4a-4fdc-bd68-4a1a810a3994/26-6a6ed92c2d457.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><h2>சுங்க அதிகாரிகள்&nbsp;</h2><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425c7afb-2213-4746-99d6-cbaf150ba236/26-6a6ed92a8ec5b.webp' /></p><p>சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA['இந்த முறை எத்தனை உயிர்கள்': மஹர சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566"></link>
            <id>https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566</id>
            <summary type="text">சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு சிறைக் கலவரமா? இம்முறை எத்தனை உயிர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ச்சியாக இடம்பெறும் கலவரங்கள் சிறை அமைப்பில் ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் இருப்பதை வெளிப்படுத்கின்றது.&nbsp;</p><p>மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் கடும் அழுத்தத்தில் இயங்கும் சிறைச்சாலை அமைப்பே இந்த நிலைக்கு காரணம்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச அறிக்கை&nbsp;</h2><p> </p><p>அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல மாறாக, நிறுவன ரீதியான தோல்வியின் வெளிப்பாடாகும்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படாதது ஏன்?</p><p> "இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?" என்று வினவிய அவர், வலுவான தலைமைத்துவம் அவசியம் என வலியுறுள்ளார்.&nbsp;</p><p>கூடுதல் பாதுகாப்புப் படையினரை நியமிப்பது தற்காலிகமாக பதற்றத்தை கட்டுப்படுத்த உதவலாம் என்றாலும், அதனால் அடிப்படைப் பிரச்சினைகள் தீராது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p>நீண்டகால சீர்திருத்தங்களே நிலையான தீர்வாகும் என்றும், சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் அவர்களின் கண்ணியத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தற்காலிக நடவடிக்கைகளைத் தாண்டி, சிறை அமைப்பில் நிலவும் நிறுவன ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்! ஊரடங்கு குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319" target="_blank">மஹர சிறைச்சாலையில்</a> ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துறை <a href="https://ibctamil.com/article/to-control-the-situation-in-mahara-prison-1785627754" target="_blank">ஊரடங்கு உத்தரவு</a> தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காவல்துறை ஊடகப்பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியாட்சகர் வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறை அதிகாரி</h2><p>இதனடிப்படையில், மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba61d5b-56cb-48ff-a48f-ca0922dec55b/26-6a6eca9d57486.webp' /></p><p>மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785645566</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (02.08.2026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய செல்வராசா
கசிவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில்,&nbsp;நேற்று (01) மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்ட வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன.&nbsp;</p><p></p><h2>வெடிக்காமல் இருந்த பட்டாசு</h2><p>அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல்
இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக உயிரிழந்த நபர் அருகில் சென்று ஊதியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7004090c-18be-4862-a321-375e63493da1/26-6a6ed1ad399e5.webp' /></p><p>அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QV6usIoWF6Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக் கலவரத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து&amp;nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி,&nbsp;சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><h2>விசாரணைகள் முன்னெடுக்கப்படும்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e9bf14-40c6-47c4-9292-3210d20800bb/26-6a6ec654e1dcb.webp' /></p><p>கவலரத்தினால் சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளது.</p><p>குறித்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்“ என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T04:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது</h2><p> </p><p>

இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது என வலியுறுத்தகப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30859b2-213a-4e3a-8a2c-bf9f83392b6f/26-6a6ebebdd8d29.webp' /></p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை 2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T03:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37fc67d3-43bc-4212-ad13-3513039b9689/26-6a6ebd33bf2bc.webp' /></p><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T03:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-is-the-biggest-extortionist-1785625028"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-is-the-biggest-extortionist-1785625028</id>
            <summary type="text">அரசுக்கு சொந்தமான ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருவாயில் 80 சதவீதத்தை அவன்ட் கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு சொந்தமான ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருவாயில் 80 சதவீதத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கும் வகையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தலையிட்டதாக கோப் (COPE) குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் தொடர்பாக கோப் குழுவில் நடைபெற்ற விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.</p><p>மேலும், அந்த அரச நிறுவனத்துக்குச் சொந்தமான 219 துப்பாக்கிகள் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 139 துப்பாக்கிகள் தற்போது எங்கு உள்ளன என்பது கூட கண்டறிய முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p></p><h2>ராஜபக்சவின் தீவிர ஆதரவு</h2><p>
கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கியவராகக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு சொந்தமான அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மாதந்தோறும் சுமார் 3,20,000 அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் வகையில், அமைச்சரவை அனுமதி இன்றியே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் மாதாந்திர வருவாய் இழக்கப்பட்டதாகவும் கோப் குழு விசாரணையில் விளக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான விரிவான கோப் குழு விசாரணை காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய பாதுகாப்பு, பில்லியன் கணக்கான ரூபாய் ஊழல் மற்றும் ஆட்சி மாற்றங்களின் திசையை தீர்மானித்த மிக முக்கியமான விவகாரமாக 'அவன்கார்ட்' (Avant-Garde) கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்தின் சர்ச்சை விளங்குகிறது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவோடு கட்டியெழுப்பப்பட்ட இந்த வணிகக் பேரரசு, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழலுக்கு எதிரான அரசியல் கொள்கையினால் ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் (2015க்கு முன்னர்) கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த போதே, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் அசுர வளர்ச்சி ஆரம்பமானது.
</p><p>
அதுவரை இலங்கை கடற்படைக்கு நேரடியாகக் கிடைத்து வந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்புச் சேவைகள் மற்றும் ஆயுதக் களஞ்சிய பராமரிப்பு மூலமான பெரும் வருமானம், திடீரென அவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு தாராளமாக கைமாற்றப்பட்டது.</p><p>

மேலும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய 'ரக்ச லங்கா' (Rakna Lanka) நிறுவனத்துடன் அவன்கார்ட் நிறுவனம் ஒரு சர்சைக்குரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

இதன் மூலம் கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான நவீன ஆயுதங்களை ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல அனுமதித்தார் என்ற பலத்த குற்றச்சாட்டு எழுந்தது.</p><p></p><h2>வெளிச்சத்திற்கு வந்த&nbsp;முறைகேடு </h2><p>
</p><p>
2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 'நல்லாட்சி' அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையில் நடந்த இந்த மாபெரும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.
</p><p>அதனை தொடர்ந்து காலி கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த 'MV Avant-Garde' கப்பலை சோதனையிட்ட போது, அதில் 816 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கான தோட்டாக்கள் கண்டறியப்பட்டன.
</p><p>
இது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை அரசுக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியது.

இந்த முறைகேடான ஒப்பந்தம் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
</p><p>
இதில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிசங்க சேனாதிபதி உள்ளிட்டோர் பிரதான பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், அவன்கார்ட் மீதான சட்டப் பிடிகள் அனைத்தும் அரசியல் செல்வாக்கின் மூலம் தளர்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
</p><p>
2021 மே மாதத்தில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் ஆயுதக் கடத்தல் வழக்கில் இருந்து நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளையும் முற்றாக விடுதலை செய்தனர்.</p><p>

தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் சித்தாந்தப் பிரிவான 'வியாத்மக' (Viyathmaga) அமைப்பில் நிசங்க சேனாதிபதி மிக முக்கிய நிதியுதவியாளராகவும், செல்வாக்கு மிக்க நபராகவும் வலம் வந்தார்.</p><p></p><h2>ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி&nbsp;</h2><p> </p><p>

இதன் காரணமாகவே நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் ஜே.வி.பி நடத்திய அரசியல் கூட்டங்களில் அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராகப் பேசும் போது கடுமையான அரசியல் மோதல்கள் வெடித்தன.
</p><p>
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அநுர குமார திஸாநாயக்க மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சுத் தாக்குதலுக்கு பின்னணியில், நிசங்க சேனாதிபதியின் ஆட்களே இருந்ததாக ஜே.வி.பி (JVP) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது.
</p><p>
அதன் பின் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் முற்றிலும் மாறியது.
</p><p>
 ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அநுர அரசு, அவன்கார்ட் நிறுவனத்தின் ஏகபோக உரிமையை ஒடுக்கத் தொடங்கியது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 2025 ஆகஸ்ட் மாதம் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். </p><p>

இதன் மூலம், அவன்கார்ட் வசம் இருந்த கடல்சார் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆயுதங்களைச் சேமிக்கும் அதிகாரம் அனைத்தும் மீண்டும் முழுமையாக இலங்கை கடற்படையிடம் (Sri Lanka Navy) ஒப்படைக்கப்பட்டது.&nbsp; </p><p>இதன் விளைவாக, தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்ற பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு வருமானம், தற்போது நேரடியாக திறைசேரிக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>

கடந்த ஜூன் 2025 இல், பழைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நிசங்க சேனாதிபதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

மேலும், 2026 பெப்ரவரியில் அவன்கார்ட் நிறுவனத்தால் தங்களுக்குச் சாதகமாக தாக்கல் செய்யப்பட்ட சில மேன்முறையீட்டு பேராணை மனுக்கள் (Writ Cases) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T02:47:24+00:00</updated>
        </entry>
    </feed>
