<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-20T02:03:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p>குநித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e28398-e08b-4ddb-8bc4-106c65712d51/26-6a86592e02786.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.&nbsp;இதில் மொத்தம் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.</p><p>

சிங்கள மொழிமூலப் பரீட்சைக்கு 220,366 மாணவர்களும், தமிழ் மொழிமூலப் பரீட்சைக்கு 73,723 மாணவர்களும் தோற்றியுள்ளனர்.</p><p> 

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு அமெரிக்க விசாவில் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148</id>
            <summary type="text">மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.குழந்தைக்கு அமெரிக்கக் குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா விசா விண்ணப்பங்கள்</h2><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff47b590-1833-4afb-8b62-bade95fcec64/26-6a865eab3d672.webp' /></p><p>இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும்&nbsp;தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
</p><p>







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7b1662-4b0e-4921-a1e6-22ad229db481/26-6a86495e9dc6e.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர்: நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-officer-remanded-in-nintavur-1787184292"></link>
            <id>https://ibctamil.com/article/govt-officer-remanded-in-nintavur-1787184292</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25
ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p></p><h2>அரச உத்தியோகத்தர்&nbsp;</h2><p>
குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் காவல்துறையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை
(18) மாலை கைது செய்யப்பட்டார். </p><p>இதன்போது, கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட
அதிர்ச்சியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று
வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff69cb18-7cfd-4f8b-83fd-934db1219c9c/26-6a8644a62559b.webp' /></p><p>இந்நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற சம்மாந்துறை
நீதிவான், நிலைமைகளை நேரில் அவதானித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளார்.</p><p>மேலும் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான
பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான்
பணித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது அலுவலகக் கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69def1a3-e7ca-4ecf-8d21-94e9b0cfb671/26-6a8644a57334b.webp' /></p><p>

அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக்
குறித்த பெண் உத்தியோகத்தர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.</p><p>
விசாரணைகளின் பின்னர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட போதே திடீரென
மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>

தற்போது அவருக்குப் பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத்
தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T00:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-ex-vc-criticizes-governor-1787182901"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-ex-vc-criticizes-governor-1787182901</id>
            <summary type="text">குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் எனவும் ஆளுநர் தவறாக
வழிநடத்தப்படுகின்றார் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் எனவும் ஆளுநர் தவறாக
வழிநடத்தப்படுகின்றார் எனவும் பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உப
தவிசாளரும் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
சாவகச்சேரி நகரசபை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்
தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உள்ளூராட்சி மன்றங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் நேரடியாக அணுகக்கூடிய நிர்வாக அமைப்பாக உள்ளூராட்சி
மன்றங்களே காணப்படுகின்றன என்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின்
பிரச்சினைகளைத் தீர்ப்பது தமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ab22d4-3ad5-4fe2-af50-3f54f21df97d/26-6a8641d9db0a8.webp' /></p><p>குடிபுகு சான்றிதழ் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்படும் எனவும் இந்த விடயத்தை வடமாகாண
ஆளுநர் புரிந்து கொள்ளாமல் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனவும் கிஷோர்
குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

அத்துடன், அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் அவசியம் என ஆளுநர்
கூறுகின்ற நிலையில், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர்
செயலகம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய கட்டிட அனுமதிகளும் குடிபுகு
சான்றிதழ்களும் உள்ளனவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><h2>கட்டிட அனுமதிகள்</h2><p>ஆளுநர் செயலகத்திற்கான கட்டிட அனுமதிகளையும் குடிபுகு சான்றிதழையும் வடமாகாண
மக்களுக்கு பகிரங்கப்படுத்த தயாரா என அவர் சவால் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37685c97-66cb-45db-aed7-754d80d90f94/26-6a8641da8e929.webp' /></p><p> மேலும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட நீண்டகாலத்திற்கு முன்னர்
அமைக்கப்பட்ட அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் உள்ளதா என கேள்வி
எழுப்பிய கிஷோர், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடமாகாணத்தில் குடிபுகு
சான்றிதழ் தொடர்பான நடைமுறை முக்கியத்துவம் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் கட்டப்பட்ட பல பாரிய
கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியோ குடிபுகு சான்றிதழோ இல்லாத நிலையில் அவை
கட்டப்பட்ட காலத்தில் இத்தகைய நடைமுறை நடைமுறையில் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சாவகச்சேரி நகரசபை&nbsp;</h2><p>தமது பதவி பறிக்கப்பட்டமை தனிப்பட்ட விடயம் அல்ல என்றும் வடமாகாணத்தில் உள்ள
அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் குரலையும்
பாதுகாப்பதற்கான போராட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5b5d4e-feda-41a0-97d7-32eb23e3b327/26-6a8641db4469e.webp' /></p><p>பதவிகள் வரலாம் போகலாம் ஆனால் மக்களோடும் இந்த மண்ணோடும் நாங்கள்
தொடர்ந்து நிற்போம் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்கும் எந்த
நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எனவும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, சாவகச்சேரி நகரசபை தொடர்பான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T23:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cannabis-cultivation-busted-in-kalmunai-1787181667"></link>
            <id>https://ibctamil.com/article/cannabis-cultivation-busted-in-kalmunai-1787181667</id>
            <summary type="text">அம்பாறையில்&amp;nbsp;வீடொன்றின் மொட்டை மாடியில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறையில்&nbsp;வீடொன்றின் மொட்டை மாடியில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.</p><p>குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (19-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியிலேயே இவ்வாறு&nbsp;தோட்டபயிர்ச்செய்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில்
கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380) மற்றும் இஸ்மத் (88503)
ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c80c69-3b5e-4862-b714-d4c63853368a/26-6a863cdc00814.webp' /></p><p>
கல்முனை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை
மேற்கொண்டபோதே குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள்
இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.</p><p>
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம் மற்றும் புட்டு போன்ற
சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில் இரகசியமாக இலங்கை நாட்டு
கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>முறைப்படியான பயிர்ச்செய்கை&nbsp;</h2><p>குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக ஒரு
முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b477193-7de5-494d-8f63-1848ffeb3cc0/26-6a863cdcd113c.webp' /></p><p>சம்பவ இடத்திற்குச்
சென்ற காவல்துறையினர் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி கல்முனை
தலைமையக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p>
இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனைத் தலைமையகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T23:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: இனவாதக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-hospital-dress-code-dispute-clarified-1787177390"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-hospital-dress-code-dispute-clarified-1787177390</id>
            <summary type="text">கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண்
சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்
மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண்
சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்
மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப்
புறம்பானவை என கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகளான தா.பிரதீபன்,
மு.பிரகாஷ், நாகராஜா சனாதனன் மற்றும் சி.திலோஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p>இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>அமைச்சினால் நியமனம்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், “கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார பணி உதவியாளர்கள் தமது கலாச்சார ஆடையுடன் கடமையேற்க
வந்திருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8877a4cd-f098-401a-b419-9f3f713b6c45/26-6a8629b1a7dfd.webp' /></p><p>இதன்போது, அரச நிர்வகிப்பு மற்றும் சுகாதார அமைச்சின்
சுற்றுநிரூபங்களுக்கு அமைவான சீருடையையே அணிய வேண்டும் என வைத்தியசாலை
நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன் ஆரம்பக் கட்டமாக அன்றைய தினம் அதே ஆடையுடன்
கடமையாற்ற அனுமதித்தது.
</p><p>
சுற்றுநிரூபத்தின்படியான சீருடையை அணிந்து வருவதாகக் கூறி அவகாசம் பெற்றிருந்த
போதிலும் கடந்த 10 ஆம் திகதி 5 பேர் மீண்டும் சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன்
வருகை தந்தனர்.</p><p> </p><p></p><h2>அரச சுற்றுநிரூபம்&nbsp;</h2><p>இதனை அனுமதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்த நிலையிலேயே,
வெளியே உள்ள சிலர் இச்சம்பவத்திற்கு இனவாத முத்திரை குத்தி போலிப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288444e9-c446-44b6-8f4f-8451333f8de8/26-6a8629b25eca8.webp' /></p><p>
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் 2019.06.26 திகதிய 13/2019(1) மற்றும்
2022.09.27 திகதிய 05/2022 ஆகிய சுற்றறிக்கைகள் 2022.11.28 ஆம் திகதி
அரசாங்கத்தினால் முற்றாக இரத்துச் செய்யப்பட்டு விட்டன.
</p><p>
தற்போது 1989.02.01 ஆம் திகதிய 8/89 இலக்க அரச சுற்றுநிரூபம் மட்டுமே
நடைமுறையில் உள்ளது.</p><p></p><h2>வைத்தியசாலை நிர்வாகம்&nbsp;</h2><p> அதன் அடிப்படையிலேயே வைத்தியசாலை நிர்வாகம்
சட்டப்பூர்வமாகச் செயற்பட்டுள்ளது.
</p><p>பாதிக்கப்பட்டதாகக் கருதும் தரப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ள
நிலையில், இச்சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சில
அரசியல்வாதிகள் தேவையற்ற இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9cca31-4a5f-45dc-9b66-0a976353da21/26-6a8629b311ea8.webp' /></p><p>பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு கலவரத்தைத் தூண்ட முற்படும் நபர்கள் மீது
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும்.</p><p> இனவாதக்
கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக விரைவில் காவல் நிலையங்களில்
உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T22:41:11+00:00</updated>
        </entry>
    </feed>
