<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-09T20:34:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி! மொஜ்தாபா காமேனியின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554"></link>
            <id>https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக<a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank"> உயரிய பாதுகாப்புப் </a>பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி (IRGC - இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தலைவரான மொஹ்சென் ரெசாயை (Mohsen Rezaee) நியமித்துள்ளார்.
</p><p>
இந்த முக்கியப் பொறுப்பில் ரெசாய், உச்சத் தலைவர் காமேனியின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
</p><p>
இப்பதவியை வகித்து வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க - இஸ்ரேலிய<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> வான்வழித் தாக்குதலில்</a> கொல்லப்பட்டார்.</p><p></p><h2>அரசியல் ஆலோசகர்</h2><p> 

அவரைத் தொடர்ந்து முகமது பாகர் ஜோல்காதர் (Mohammad Bagher Zolghadr) இப்பதவியைக் கவனித்து வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22991208-4e72-4cde-87de-84ba69e58bb8/26-6a78de7751a22.webp' /></p><p>இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, முகமது பாகர் ஜோல்காதரைத் தனது அரசியல் ஆலோசகராக உச்சத் தலைவர் காமேனி நியமித்துள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட அமைப்பு&nbsp;</h2><p>

இவர், 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக் போரின் போது (ஈரானில் இது புனிதப் பாதுகாப்புப் போர் என்று அழைக்கப்படுகிறது) முக்கிய இராணுவத் தளபதியாகச் செயல்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b767aef7-36c7-46fe-92c0-5d826dd1387e/26-6a78de78021db.webp' /></p><p>

அத்தோடு ஈரானின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.</p><p>

இந்தநிலையில் தற்போது ஈரான் நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சில் அமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் உயர்மட்ட அமைப்பான ஈரானின் நன்மதிப்பு நிருணயக் கவுன்சிலின் (Expediency Discernment Council) உறுப்பினராகவும் ரெசாய் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daniel-kinahan-extradited-to-ireland-from-dubai-1786299645"></link>
            <id>https://ibctamil.com/article/daniel-kinahan-extradited-to-ireland-from-dubai-1786299645</id>
            <summary type="text">சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் <a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank">கும்பலின் தலைவர் </a>என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p>

இந்தநிலையில் அயர்லாந்து அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து டப்ளின் நகருக்கு அவர் அழைத்து வரப்படவுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் அமைப்பை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்காக <a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank">அங்குள்ள நீதிமன்றத்தில் </a>அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>முறைப்படி கைது&nbsp;</h2><p>விமானப் போக்குவரத்து தகவல்களின்படி, கினஹானை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:19 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a6509e7-053c-4ace-947c-e37e1caae3f8/26-6a78d3ac4ee8e.webp' /></p><p>

டப்ளின் விமான நிலையம் வந்தடைந்ததும் கினஹான் உடனடியாக காவல்துறையினரால் முறைப்படி கைது செய்யப்பட்டு, நடுவர்கள் இல்லாத (Non-Jury) சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் (Special Criminal Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

கைதியை அழைத்துச் செல்வதற்காக அயர்லாந்து சிறைச்சாலைத் துறை புதிதாக தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத (Bulletproof &amp; Bomb-proof) சிறப்புப் பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்துகிறது.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு வசதிகள்</h2><p>கினஹானின் வருகையையொட்டி அயர்லாந்து காவல்துறையினர் (Gardaí), ஆயுதம் ஏந்திய சிறப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8f37e-34de-445c-8a6b-86106214971b/26-6a78d3ad00611.webp' /></p><p>விசாரணை முடியும் வரை அவர் அடைக்கப்படவுள்ள மிக உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட போர்ட்லாயிஸ் (Portlaoise) சிறைச்சாலையின் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

கினஹான் மற்றும் அவரது குடும்பத்தினர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். </p><p></p><h2>பொருளாதாரத் தடைகள்</h2><p>இந்தநிலையில் பல தசாப்தங்களாக நடைபெறும் பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கும் இவர்களது கும்பலுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p>2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசால் சர்வதேச அளவிலான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இவருக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e61f176-59c9-4572-80ea-a5ac595b5a0e/26-6a78d3ada5ef5.webp' /></p><p>அதேவேளையில், கினஹான் மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில் கினஹான் மீது இதுவரை எந்தக் குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் ஒரு குற்றவியல் கும்பலின் தலைவர் என்று கூறப்படும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமான் - ஈரான் தீவிரம்! அமெரிக்காவின் முட்டுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984"></link>
            <id>https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில்<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> குறிப்பிடத்தக்க முன்னேற்றம்</a> ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றிற்கு <a href="https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003" target="_blank">வழங்கிய நேர்காணல்</a> ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பிராந்தியக் கட்டுப்பாடு&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணையில் பிராந்தியக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஓமானும் ஈரானும், அமெரிக்கா தன் தடைகளை நீக்கி ஒப்பந்தத்தைப் பின்பற்றியவுடன் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என விவரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054ed12c-19ce-49ec-ba86-88b4e0c785f7/26-6a78c10060945.webp' /></p><p>மிகப்பெரிய பிரச்சினை வாஷிங்டனுடன் தான் உள்ளது என ஃபர்மான்ஃபார்மையன் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வெளிநாட்டுச் சொத்துக்கள்&nbsp;</h2><p>ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) குறிப்பிட்டது போல், தற்போது இருநாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இடைத்தரகர்கள் மூலம் குறிப்புகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன (Exchange of notes) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1739c9-2151-46a6-b737-87a25c827306/26-6a78c0ffaf773.webp' /></p><p>அமெரிக்காவினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் நிதியிருப்புகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் வெளிப்பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடையை (US Naval Embargo) முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! பின்னணியில் அக்டோபர் தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) காசா அமைதித் திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரித்துள்ளமை, நாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) <a href="https://ibctamil.com/article/new-media-spokesperson-prisons-department-1786287045" target="_blank">காசா அமைதித் திட்டத்தைப் </a>பகிரங்கமாக நிராகரித்துள்ளமை, நாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வரவிருக்கும் தேர்தல்களுடனேயே பெரிதும் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நெதன்யாகுவின் முன்னாள் உதவியாளரும் அரசியல் ஆய்வாளருமான மிட்செல் பராக் (Mitchell Barak) இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது நெதன்யாகுவின் இறுதி நிலைப்பாடு அல்ல மாறாக அவருடைய<a href="https://ibctamil.com/article/mahinda-samarasinghe-bids-farewell-to-politics-1786279565" target="_blank"> ஆரம்ப நிலைப்பாடு</a> (Opening Position) மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆதரவுத் தளம்</h2><p>

அத்தோடு நெதன்யாகுவின் தற்போதைய தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நீடிக்கும் ஆயுள் இல்லை என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது வோஷிங்டனை நோக்கியது அல்ல, மாறாகத் தனது வலதுசாரி அரசியல் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00a8628a-23fa-459c-bd93-6340cffd6933/26-6a78affc316dc.webp' /></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விரைவிலோ அல்லது தாமதமாகவோ இஸ்ரேல் ட்ரம்ப் திட்டத்தை ஏற்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகப் பராக் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><h2>ஆயுதக் களைவு&nbsp;</h2><p>இந்த நிராகரிப்பானது ஹமாஸின் ஆயுதக் களைவு தொடர்பான வரிசைமுறை மற்றும் நேரத்தைக் பொறுத்ததே தவிர, அமெரிக்காவுடனான நிரந்தரப் பிரிவு அல்ல என்றும் அவர் விவரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8cf9c7b-4d5f-445c-91dd-9109fd742f27/26-6a78affd11e11.webp' /></p><p>

எதிர்வரும் தேர்தலை நோக்கிச் செல்லும் போது நெதன்யாகுவின் மிகப்பெரிய பலம் ட்ரம்ப்புடனான அவரது உறவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உலகத் தலைவர்களில் எவரையும் விட மிகச் சிறந்த உறவு நெதன்யாகுவுக்கே உள்ளது எனக் குறிப்பிட்ட பராக், அதனை இழக்க நெதன்யாகு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T18:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இராணுவ வீரர் படுகொலை : உறவினருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-a-man-who-killed-a-relative-1786300214"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-a-man-who-killed-a-relative-1786300214</id>
            <summary type="text">தங்கள் உறவினரான, இராணுவ வீரரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் உறவினரான, இராணுவ வீரரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு பாலபிட்டிய உயர் நீதிமன்றம் சமீபத்தில் (07) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொலை தொடர்பாக பாலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் அந்த இரு சகோதரர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. முதல் பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ருசிரா வெலிவத்த, மற்றொரு பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.</p><h2>முன்னாள் இராணுவ வீரர் கொடூரமாகக் கொலை&nbsp;</h2><p>கடந்த ஜனவரி 07, 2016 அன்று, பாலபிட்டிய மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பிட்டிகலாவில், எல்.எச். மகேஷ் நெரஞ்சன் என்ற முன்னாள் இராணுவ வீரர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f0d344-0bbb-4f1c-a0d2-5ff4d07ecd52/26-6a78c738e2411.webp' /></p><p>
</p><p>
இந்தக் கொலை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இறந்தவரின் உறவினர்களான, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை காவல்துறை கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபரும் இக்கொலை தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் 296 ஆம் பிரிவின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;குற்றப்பத்திரிகை&nbsp;தாக்கல்</h2><p>இந்த மரணம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சத்சர சமரத்ன மற்றும் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ஏ.டி. சன்ன பெரேரா ஆகியோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b9e460-6799-4347-91ac-e0fe2053adb3/26-6a78c73991502.webp' /></p><p>
</p><p>
இக்கொலை தொடர்பான சிறுவரல்லாதோருக்கான பூர்வாங்க விசாரணை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மேலும், சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கைப் பாலபிட்டிய மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார்.
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் அரசு வழக்கறிஞர் செனூரி குணதிலக்கவும், பிரதிவாதிகள் சார்பில் வழக்கறிஞர் கயன் மல்லியவடுவும் முன்னிலையானார்கள்

பிட்டிகல காவல்துறையினர் இக்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T18:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/all-set-for-advanced-level-exam-1786293543"></link>
            <id>https://ibctamil.com/article/all-set-for-advanced-level-exam-1786293543</id>
            <summary type="text">&amp;nbsp;உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை செப்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை செப்டம்பர் 05 வரை நடைபெற உள்ளது.
</p><p>
பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வருமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>இந்த முறை 372,310 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற உள்ளனர்.

இதில் 264,496 பாடசாலை மாணவர்களும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a8bba9-b78c-4015-a51d-d055149043b2/26-6a78b1f11c5c0.webp' /></p><p>
</p><p>
இந்தப் பீட்சை நாடு முழுவதும் 2,532 மையங்களில் நடைபெற உள்ளது.

பரீட்சை நிலையங்களில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T16:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரை முடிவிற்கு கொண்டுவர ட்ரம்ப் வகுக்கும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003"></link>
            <id>https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003</id>
            <summary type="text">சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால்,அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால்,அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதால், ஈரான் மீண்டும் அணுஆயுதத் திட்டத்தைத் தொடங்குவது கடினம் என்றும், அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக ஈரான் பின்வாங்கியுள்ளதாகவும் ட்ரம்ப் கருதுகிறார்.</p><h2>ட்ரம்பின் திட்டம்</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீரானால், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடற்படை முற்றுகையை நீக்கி, தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிக்க ட்ரம்ப் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/908c1c63-29cc-4c53-a6c5-badff38e54b2/26-6a78a9352a58d.webp' /></p><p> இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிட ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள் இந்த ஒப்பந்தச் செயல்பாட்டை முடக்கியுள்ளன.</p><h2>ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள்</h2><p>
</p><p>


அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும். ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be430547-d114-4e35-9363-586c74420565/26-6a78a935cf42b.webp' /></p><p> </p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
</p><p>

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p><p></p><h2>உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை&nbsp;</h2><p> </p><p>இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3011e6d-50eb-4897-a87e-2c9792498948/26-6a78a93689ea2.webp' /></p><p>
</p><p>

போரை மேலும் விரிவுபடுத்துவது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், நிலைமையைச் சீராக்கச் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் ட்ரம்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T16:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201"></link>
            <id>https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201</id>
            <summary type="text">ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்குப் போய்விடு சிவாஜி என்ற கருத்தில் எல்லாம் பலருக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதில்லை. </p><p>

எனினும் அவ்வாறான நம்பிக்கையில்லாதவர்களைக் கூட சலிப்படையவும் விரக்தியையும் கொள்ள வைக்கும் வகையில் சமூக வலைத்தள வேட்டையாடிகளின் ஹெய்னாஸ் ரக வடக்கின் ஒரு நிகழ்வை மையப்படுத்திய பதிவுகளாக வருகின்றன.</p><p> அதிலும் விமர்சனங்கள் என்ற பெயரில் கிட்டியதே வாய்ப்பு என திட்டமிட்ட அவதூறுகள் வருகின்றன
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட வடபுலத்தில் தனது மக்களுக்காக ஒரு மனிதன் களத்தில் இறங்கி சில திட்டங்களை வகுத்து தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் போது சமூக ஊடகத்தின் சில பக்கங்கள் அந்த மனிதரை ஹெய்னாஸ்கள் போலத் தாக்கி பிரபலமடைகின்றன
</p><p>
ஒருவருக்கு அவரது திறமைக்கும் உழைப்புக்கும் அவரது சொந்த மண்ணில் மதிப்பு கிடைப்பதற்கு ஒரு சமூகமும் அமைப்பும் வேண்டும். </p><p>ஒருகாலத்தில் அங்கு அந்த சமுகஅமைப்பு சரியாக இருந்தாலும் இப்போது அதற்குள் வேட்டையாடிகள் புகுந்து சிந்தனையோட்ட வறுமையை வெளிப்படுத்தி ....யாரிவர்? இவரால் என்ன செய்ய முடியும்….என ஒரு மனிதரை குறிவைக்கும் வெளிப்படுத்தல்களை செய்கின்றார்கள். </p><p>


இவ்வாறான சமுகத்தள வேட்டையாடிகள் சொற்ப நாட்களில் துண்டைக்காணோம் துணியை காணோம் என அகன்றுவிடக்கூடும். ஆனால் மாற்றங்களை உருவாக்கத்தலைப்படுவர்களில் பலர் கரவொலிகளை எதிர்பார்க்காமல் எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் முகங்களாக தொடரககூடும். </p><p>இந்த முகங்களில் றீச்சா BK யும் ஒருவராக இருக்கவேண்டும்.

ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றிவிடும் சில திட்டங்கள் காயப்படக்கூடாதென்பதால் இயக்கச்சியில் இருப்பதற்கு பதிலாக நெதர்லாந்துக்கு சென்று உங்கள் திறமையைப் பயன்படுத்திக்கொளளுங்கள்; என சிவாஜி பட விவேக் பாணியில் விரக்தி ஆலோசனைக்கு இங்கு பரிந்துரைகள் கூடாது.
</p><p>
பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை மாற்ற முடியவில்லை என்பதால் அந்த நாட்டை விட்டு வெளியேறிய ஏதிலிகளின் அடுத்தகட்டம் இப்போது அதே நாட்டுக்கு திரும்பி அங்கு ஒரு மாற்றத்துக்கு முயற்சி செய்யும் போது அவ்வாறான முயற்சிகளை நோக்கமும் தரமும் அறமும் அற்ற கீழ்நிலையில் விமர்சனங்களால் அடிப்பது அபத்தம் </p><p>

உணவுத்திருவிழாவில் நடந்த சம்பவங்கள் போல இனிமேல் இடம்பெறக்கூடாதென கரிசனை கொள்வது இயல்பானது. திடீர் நெருக்கடிகள் தான் புதிய பாடங்களை தருவது.</p><p> ஆனால் இந்த நெருக்கடிகளுக்குரிய பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவற்றை கேலி செய்வது அவதூறு செய்வது தனிப்பட்ட தாக்குதலை நடத்தும் கலவைகள் தான் இங்கு நாசகாரம்.</p><p> 

ஒரு திட்டத்தை விமர்சிப்பதற்கு உரிமை உள்ளதுபோலவே ஒரு திட்டத்தை உருவாக்கியவருக்கும் அதுகுறித்த சில கனவுகளை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த காணும் உரிமையும் இருக்கிறது. </p><p>ஆனால் கனவுத்திட்டங்களை கொண்டிருப்பவர்களை ஒவ்வொரு முறையும் கல்லால் அடித்துக்கொண்டிருந்தால் நாளை றீச்சா போல கனவு காண முன்வருபவர்கள் குறைந்து விடுவார்கள். </p><p>இது நல்ல முயற்சிகளையும் நிராகரித்து ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தான குழியையும் பறித்துவிடும். </p><p>

BK இன் உணவுத்திருவிழாவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சியை நேர்மையாக மதிப்பிடாமல் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கான பொறுப்பு சமூகவலைத்தள வேட்டையாடிகளுக்கும் உள்ளது&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-media-spokesperson-prisons-department-1786287045"></link>
            <id>https://ibctamil.com/article/new-media-spokesperson-prisons-department-1786287045</id>
            <summary type="text">&amp;nbsp; சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று (09) முதல் நடைமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

இன்று (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலை அத்தியட்சகராகவும், பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.</p><h2>&nbsp;போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய கல்வியியல் டிப்ளோமா</h2><p> </p><p>

சேனக்க பல்லேதென்ன காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய கல்வியியல் டிப்ளோமா படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb56e96-1296-447d-8a7f-d546e139c94b/26-6a7897f16ba3c.webp' /></p><p> </p><p>

மேலும், இந்தியாவின் கேரளாவில் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த முகாமை தொடர்பான டிப்ளோமா படிப்பையும் கற்றுள்ள இவர், போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு, துருக்கி ஆகிய நாடுகளில் பல டிப்ளோமா படிப்புகளையும் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:08:44+00:00</updated>
        </entry>
    </feed>
