<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-24T19:37:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவிலிருந்து உறவினர் வீடொன்றுக்கு வந்த மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-drunk-chemical-mistaking-it-for-water-1787598051"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-drunk-chemical-mistaking-it-for-water-1787598051</id>
            <summary type="text">கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து திரவமொன்றை குடித்து உயிரிழந்துள்ளார்.</p><p>

குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் மற்றும் மாலையில் வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று அங்கு ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்துள்ளார்.</p><p>

இதனை தொடர்ந்து, குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
பின்னர், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ce647e-3d70-41af-9f02-0e543b4176c7/26-6a8c9689ab44d.webp' /></p><p>இதன்போது, வவுனியாவின் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்கரன் ஹயனிகா என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை கைதி வீட்டிற்கு உயிருடன் வந்ததால் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-who-was-declared-dead-came-back-alive-1787593065"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-who-was-declared-dead-came-back-alive-1787593065</id>
            <summary type="text">கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்கே உயிருடன் திரும்பி வந்த விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொஹோபங்குளத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக நன்னேரியா காவல்துறையினர் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கேட்ட உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக ஒன்றிணைந்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>திகைப்பில் உறவினர்கள்</h2><p>

கிராமம் முழுவதும் இறுதி அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டு, பந்தல்கள் அமைக்கப்பட்டு, தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a70ce782-5e58-45a2-be76-9c48c96d63ae/26-6a8c836506db0.webp' /></p><p>

எனினும், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட கீர்த்திசேன சிறையில் இருந்து இன்றையதினம் விடுவிக்கப்பட்டு, திடீரென உயிருடன் வீட்டிற்குள் நடந்து வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

த</p><p>னக்காகவே நடத்தப்பட்டு வந்த இறுதிச் சடங்கு வீட்டிற்குள் அவர் உயிருடன் நுழைந்ததைக் கண்டு உறவினர்களும் ஊர் மக்களும் பேரதிர்ச்சியும் பெரும் குழப்பமும் அடைந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டண ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கான வழி! வெளியிடப்பட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/way-to-reduce-electricity-price-fluctuations-1787596776"></link>
            <id>https://ibctamil.com/article/way-to-reduce-electricity-price-fluctuations-1787596776</id>
            <summary type="text">இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் மின் கட்டணங்கள் அடிக்கடி மாறுபடுவதற்கு அனல் மின் உற்பத்திக்காகும் அதிக செலவே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே, தொடர்ந்து அனல் மின்சாரத்தையே நம்பியிருக்காமல் சூரிய சக்தி உள்ளிட்ட கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நாடு அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>மின் உற்பத்திச் செலவு</h2><p>
</p><p>
மேலும், அனல் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab512068-2454-4fd4-8c32-e47b73d6ed28/26-6a8c9186de15a.webp' /></p><p> </p><p>

உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இறக்குமதி எரிபொருள் செலவையும், அதன் மூலம் மின் உற்பத்திச் செலவையும் நேரடியாகப் பாதிக்கின்றன.</p><p>

எனவே, நாட்டின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரிப்பது உற்பத்திச் செலவு மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, மின் கட்டணங்களில் ஒரு நிலையான தன்மையை உறுதிசெய்ய உதவும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T18:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை அவதிக்கு உள்ளாக்கிய அரச பேருந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-suffer-due-to-bus-competition-in-jaffna-1787591591"></link>
            <id>https://ibctamil.com/article/students-suffer-due-to-bus-competition-in-jaffna-1787591591</id>
            <summary type="text">

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கேவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
</p><p>
ஆனால் இன்றைய தினம் குறித்த பேருந்தானது வழமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p></p><h2>மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்</h2><p>
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை என்பவற்றால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba7d3b-c90d-43e8-ab56-6199e6fdfc01/26-6a8c7e5d6021f.webp' /></p><p>

இந்நிலையில், இன்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T17:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காரணமாக மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/power-shortage-likely-due-to-el-nino-1787587185"></link>
            <id>https://ibctamil.com/article/power-shortage-likely-due-to-el-nino-1787587185</id>
            <summary type="text">தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது.</p><p>

இத்தகைய சூழ்நிலைகளில், நாடு மின்சாரப் பற்றாக்குறை அபாயத்தை எதிர்கொள்ளும் என்று PUCSL தலைவர் கே.பி.எல். சந்திரலால் கூறயுள்ளார்.</p><p>

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்காக புதிதாக அறிவிக்கப்பட்ட மின் கொள்முதல் கட்டணங்கள் குறித்த இன்றைய ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மின் விநியோக உறுதி&nbsp;</h2><p>

தற்போது நிலவும் சூழ்நிலைகளின் விளைவாக, மின்கல சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் நுகர்வுக் குறைவு ஏற்படக்கூடும் என்றும், இது தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதை மேலும் கடினமாக்கும் என்றும் சந்திரலால் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5d76890-a5df-4371-b701-96220c22c443/26-6a8c6aa158e8c.webp' /></p><p>இதன்படி மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையையும் நம்பகமான மின்சார விநியோகத்தையும் உறுதி செய்வதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், போதுமான சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலமும் இந்த சவால்களுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T16:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779"></link>
            <id>https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779</id>
            <summary type="text">புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.

இந்த காலப்பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.</p><p>

இந்த காலப்பகுதியில் இருதரப்பு மோதல்களால் இடம்பெற்ற படுகொலைகள், மற்றும் கிரானில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவங்களை அந்த காலத்து பத்திரிகைகள் அடிகோடிட்டிருந்தன.
</p><p>
மட்டக்களப்பில் புளொட் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்புக்களிடையே மூண்ட தாக்குதல்களின் திட்டமிடல்கள், இதில் புளொட் அமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் என்பவற்றையும் பத்திரிகைகள் மையப்படுத்தியிருந்தன.</p><p>
இவ்வாறு மட்டக்களப்பில் இந்த மோதல் எங்கிருந்து ஆரம்பித்தது, அதில் கொல்லப்பட்ட முக்கிய தளபதிகள் யார், மேலும் கருணா எந்த இடத்தில் தனது திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள்...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T15:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க H-1B தொழிலாளர் விசாக்களுக்கு 100,000டொலர்க்கும் அதிக கட்டணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-h-1b-worker-visas-cost-more-than-100-000-1787586347"></link>
            <id>https://ibctamil.com/article/us-h-1b-worker-visas-cost-more-than-100-000-1787586347</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் (சுமார் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 3கோடிக்கும் அதிகம்) கட்டணம் விதிக்கும் முன்மொழியப்பட்ட விதிமுறையை வெளியிட்டுள்ளது.</p><p>

இந்தக் கட்டணம் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் தற்காலிக உத்தரவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>ஆனால், அதை அறவிட அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.</p><p>
</p><p></p><h2>கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை</h2><p>தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் H-1B விசாக்களின் செலவை இந்தக் கட்டணம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/964a80d8-bb13-4be1-855f-ede3b34c39bb/26-6a8c6824c9dfc.webp' /></p><p>இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 30 நாட்களுக்கு கருத்துகள் பெறப்படும் என அமெரிக்க தரப்புக்கள் தெரிவிக்கின்றன.</p><p> இந்த விதிமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>

H-1B விசா</h2><p>
H-1B விசா திட்டத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பு திறன் மற்றும் பயிற்சி தேவைப்படும் துறைகளில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க முடியும்.</p><p>

ஒவ்வொரு ஆண்டும்:

65,000 H-1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.
மேம்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன.
</p><p>விசாக்கள் பொதுவாக 3 முதல் 6 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
கட்டணத்தில் மிகப்பெரிய உயர்வு
இதுவரை H-1B விசாவைப் பெறுவதற்கான கட்டணங்கள், பல்வேறு காரணிகளைப் பொறுத்து பொதுவாக சுமார் 2,000 டொலர் முதல் முதல் 5,000 டொலர் வரை இருந்தன.</p><p>

ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட புதிய H-1B விசாக்களுக்கு 103,265 டொலர் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். </p><p>இதனால் வெளிநாட்டு திறமையான பணியாளர்களை அமெரிக்காவில் நியமிக்கும் நிறுவனங்களுக்கு செலவு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T15:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் கைவரிசை காட்டிய சந்தேகநபர்! வெளியாகிய காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/theft-at-pettah-bus-stand-cctv-1787581648"></link>
            <id>https://ibctamil.com/article/theft-at-pettah-bus-stand-cctv-1787581648</id>
            <summary type="text">கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சிசிரிவி கண்காணிப்பின் உதவியுடன் உடனடியாகக் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், சிசிரிவி கண்காணிப்பின் உதவியுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p>
மேம்படுத்தப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயல்பாட்டு அறையில் உள்ள சிசிரிவி கண்காணிப்பு அமைப்பு மூலம், நேற்று (23) இந்தத் திருட்டுச் சம்பவம் கண்டறியப்பட்டது.
</p><p>
பணியில் இருந்த விமானப்படை வீரர்கள் சந்தேக நபரை உடனடியாக அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1103837022210683%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>[HEU3D6F
]</p><h2>சிசிரிவி கண்காணிப்பு</h2><p>

'தூய்மையான இலங்கை' திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிசிரிவி கண்காணிப்பு அமைப்பானது, பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef738dd1-07a6-435d-a4b1-e97271b1c1cd/26-6a8c54d2eae63.webp' /></p><p>
</p><p>
பயணிகள் திடீரென நோய்வாய்ப்படுதல், விபத்துகளில் சிக்குதல் அல்லது பிற அவசர உதவி தேவைப்படும் சூழ்நிலைகள் உள்ளிட்ட அவசர காலங்களில் விரைவான உதவியை வழங்குவதற்கான வசதிகளுடனும் செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T15:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announce-date-for-judgment-easter-sunday-attack-1787580663"></link>
            <id>https://ibctamil.com/article/announce-date-for-judgment-easter-sunday-attack-1787580663</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிரான தீர்ப்பை அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிரான தீர்ப்பை அறிவிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி இது குறித்து விசாரித்துவரும் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>
இந்த வழக்கினை மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய சிறப்பு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகின்றது.</p><p></p><h2>&nbsp;23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்</h2><p>

 இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, கொலை செய்ய உந்துதலாக இருந்தமை, ஆயுதங்களைச் சேகரித்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட பாரிய குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d46db55-a682-4d77-bd31-da0b31b11b84/26-6a8c50f94ac07.webp' /></p><p>
</p><p>
விசாரணையின்போது சந்தேகநபர்களான முகமது நௌபர் (Naufer Maulavi) என்பவரை முதன்மைப் பிரதிவாதியாகக் கொண்டு மொத்தம் 24 முதல் 25 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அண்மையில் (ஆகஸ்ட் 17 அன்று) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான செய்னுல் ஆப்தீன் முகமது ஜாஸ்மி, முகமது முஸ்தபா முகமது ரிஸ்வான் மற்றும் மீரா சாஹிர் முகமது நப்லி ஆகியோர் கூண்டிலிருந்து தங்களது தரப்பு நியாயங்களை விளக்கி வாக்குமூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988"></link>
            <id>https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே அறிவித்துள்ளார்.</p><p>
</p><p>
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, ''5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>தேவையான முன்னேற்பாடுகள்</h2><p>''கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d9128f8-eb29-461d-b740-a95e9ab21c21/26-6a8c4e5616d4b.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L) 2027 டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது"&nbsp;என்றுள்ளது </p><p>
அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சைத் திகதிகளுக்கு அமைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலைகள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T14:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககேளின் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/struggle-of-relatives-of-the-disappeared-jaffna-1787579075"></link>
            <id>https://ibctamil.com/article/struggle-of-relatives-of-the-disappeared-jaffna-1787579075</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் 
தமிழ்த்தேசியப் பேரவை தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் 
தமிழ்த்தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ்
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த
தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம்
காரணமாக ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக சுகாஸ் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம்&nbsp;</h2><p>
</p><p>
அதோடு காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும்
ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச
விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால்
நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2784248c-0125-4e67-b7b1-2f9f23c0d358/26-6a8c4ac60f3e8.webp' /></p><p>

''காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ
காணாமல் ஆக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் மக்களின்
உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்.
</p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட
குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின்
நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.
</p><p>
தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள்
மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல்
கொடுக்க வேண்டும்." எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் .</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஹோர்மோஸில் புதிய நிபந்தனையை விதித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-imposes-new-conditions-on-hormuz-1787577843"></link>
            <id>https://ibctamil.com/article/iran-imposes-new-conditions-on-hormuz-1787577843</id>
            <summary type="text">ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஒரு பொருளாதார பேரழிவு நாளில் அமெரிக்கா அந்நாட்டுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்கும் என்றும், ஈரானுடன் நிதி ரீதியாக கூட்டு சேரும் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
</p><p>
முந்தைய அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பலமுறை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காலக்கெடுவை நீட்டித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ஆட்சிக்கு பெசென்ட் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஈரான் புதிய எச்சரிக்கை</h2><p>
இந்நிலையில் பெசென்ட்டின் கருத்துக்களை ஈரான் நிராகரித்ததோடு, போர் தொடர்ந்தால் அப்பகுதியிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bcae47-2496-4028-9015-833b2608e3d6/26-6a8c4715a135f.webp' /></p><p>
 

மேலும் தனது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லக்கூடாது என ஈரான் அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகஉம கூறப்படுகிறது.
</p><p>
 உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக ஈரானுக்குத் தெற்கே உள்ள நீர்வழியான குறித்த நீரிணை வழியாகச் செல்கிறது, ஆனால் பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து அந்த நாடு இந்த ஓட்டத்தைத் திறம்படத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:47:45+00:00</updated>
        </entry>
    </feed>
