<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-22T11:13:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA['மரியாதை செலுத்துவதில்' பிரச்சினை : களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kelani-university-clash-due-to-respect-problem-1787394155"></link>
            <id>https://ibctamil.com/article/kelani-university-clash-due-to-respect-problem-1787394155</id>
            <summary type="text">&amp;nbsp; களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரும் அடங்குவர்.</p><h2>சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை</h2><p>
</p><p>





பல்கலைக்கழக உணவகத்திற்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு சிரேஷ்ட மாணவர்களுக்கு உரிய மரியாதை வழங்காததே இந்த அமைதியற்ற நிலைக்குக் காரணம் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0fbffd4-fd26-41b0-bbf3-ca37a144d833/26-6a8982a4c5a49.webp' /></p><p> </p><p>சம்பவம் தொடர்பில் இரு தரப்பு மாணவர்களும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
மோதலை சமரசம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததால் சந்தேகநபரான மாணவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை காவல்துறை தடுப்புக்காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணை</h2><p> </p><p>இருப்பினும், தடுப்புக்காவலில் இருந்தபோது இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த தகராறை சமரசம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதுடன், அது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட ஏழு மாணவர்களும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439fa007-040a-42d8-9174-96e5d18622d4/26-6a8982a5754fa.webp' /></p><p>
</p><p>





கிரிபத்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கே. ஏ. பி. அபேரத்னவின் பணிப்புரையின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் லியனகே உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவினால் இந்த மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் வறட்சியான காலநிலை : நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-conditions-irrigation-dept-announce-1787395806"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-conditions-irrigation-dept-announce-1787395806</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிக வெப்பநிலை&nbsp;</h2><p>
</p><p>எனினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef222c29-f36a-45fe-acdb-24e99e009555/26-6a8981cd5fcaa.webp' /></p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-suspects-arrested-in-bulathsinhala-1787394534"></link>
            <id>https://ibctamil.com/article/three-suspects-arrested-in-bulathsinhala-1787394534</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.குறிப்பிட்ட நபர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.</p><p>குறிப்பிட்ட நபர்கள் புலத்சிங்கள பகுதியில் நேற்று (21.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
புலத்சிங்கள காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட போதலேகம பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மூவர் கைது</h2><p>

கைது செய்யப்பட்டவர்கள் 37, 52 மற்றும் 67 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd06af6-ae14-4935-a4b6-2fe2b0f8a699/26-6a897fe19b1d6.webp' /></p><p>அகழ்வுப் பணிகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், இந்த சட்டவிரோத அகழ்வுப் பணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fish-harvest-in-sri-lankan-waters-declining-1787392672"></link>
            <id>https://ibctamil.com/article/fish-harvest-in-sri-lankan-waters-declining-1787392672</id>
            <summary type="text">இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது. </p><p>

இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எல் நினோ நிலைமையின் தாக்கம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை, உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c519abdb-08ba-4214-9b15-149e97fccdaf/26-6a8978fa0ad8c.webp' /></p><p> </p><p>

எனினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை, அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.&nbsp;</p><p>

இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் கடற்றொழில் மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழில் வாய்ப்புகளை நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம்&nbsp;</h2><p> </p><p>

இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது.” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef6470b-a070-4e37-845f-c639440e2d4e/26-6a8978fab1d03.webp' /></p><p>

இதேவேளை, கடற்பரப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களின் பயன்பாட்டிற்கு எதிரான சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததே மீன் வளம் குறைவடைவதற்கு முக்கிய காரணம் என தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அழைப்பாளர் ஹெர்மன் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குற்றவாளி வெளிநாட்டில் கைது : பிரதேசவாசிகள் மகிழ்ச்சி ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892"></link>
            <id>https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892</id>
            <summary type="text">துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற &#039;பஸ் லலித்&#039; கைது செய்யப்பட்ட நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற 'பஸ் லலித்' கைது செய்யப்பட்ட நிலையில் ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>கைது செய்யப்பட்ட அவர் நாளைமறுதினம் (24 ஆம் திகதி )இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். சந்தேகநபரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><h2>துபாய் காவல்துறையினரால் கைது</h2><p>இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் பேரில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1652e9a7-c13a-4d5a-bb35-23d608fa6437/26-6a8975d9ba26a.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான இவர் துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. </p><p>பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் உட்பட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugiswara-bandara-was-admitted-prison-hospital-1787392100"></link>
            <id>https://ibctamil.com/article/sugiswara-bandara-was-admitted-prison-hospital-1787392100</id>
            <summary type="text">சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 

அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (21.08.2026) அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>சுகீஸ்வர பண்டார&nbsp;</h2><p>இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8ec3d4-765b-4bb9-a634-6c56be076b5d/26-6a89753043f63.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-sentenced-to-15-years-prison-abuse-daughter-1787390308"></link>
            <id>https://ibctamil.com/article/father-sentenced-to-15-years-prison-abuse-daughter-1787390308</id>
            <summary type="text">வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.
ஆனந்தராஜா நேற்றைய தினம் (21/08/2026) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>அத்துடன்&nbsp;பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.</p><p></p><h2>குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டது</h2><p>
</p><p>
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற
போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்த நிலையில் இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd25bdf9-3546-4310-af6c-9b094b2eb914/26-6a896ed04bc34.webp' /></p><p>எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம்
(21.08.2026) வழங்கப்பட்டது.</p><p>
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும்
பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.</p><p>
குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள்
நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த
குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடுங்காவல் சிறைத்தண்டனை</h2><p>

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல்
புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும்
இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும்
நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை
வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a766033-9322-40e7-9712-0e416a759330/26-6a896ed0f26a1.webp' /></p><p>
</p><p>
இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம்
சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன்
ரூபாய் நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2
வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.</p><p>

தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும்,
சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான
தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T09:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-for-lottery-ticket-sellers-s-children-1787387834"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-for-lottery-ticket-sellers-s-children-1787387834</id>
            <summary type="text">இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக&amp;nbsp;கல்வி புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக&nbsp;கல்வி புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>நிதிப் பங்களிப்பைப் பாராட்டுதல்&nbsp;</h2><p>முதலாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03fce82-21c2-47a6-aa0f-cc87efd16b62/26-6a8966b6d9cd0.webp' /></p><p>

லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T09:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permission-international-diplomats-visit-chemmani-1787381654"></link>
            <id>https://ibctamil.com/article/permission-international-diplomats-visit-chemmani-1787381654</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப்புதைகுழிக்கு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அனுமதியளித்த அரசாங்கம் கனடா உயர்ஸ்தானிகருக்கும், அவரது குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவுஸ்ரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சோமரத்ன ராஜபக்ச தெரிவிப்பு&nbsp;</h2><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணியை அண்மித்த பகுதியிலும் ஆட்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ee79933-faea-4f5e-81cd-497ed9294a0e/26-6a894ffc22ffd.webp' /></p><p>சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பின்வாங்குகிறது.&nbsp;</p><p>செம்மணியில் மனித பேரவலம் நடந்துள்ளது. பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்கள். கூட்டாக புதைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் எலும்புகூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் என்ன செய்தார்கள். ஆயுதம் ஏந்திப் போராடினார்களா, ஏன் அவர்கள் மோசமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.</p><p></p><h2>அகழ்வுப் பணிகள்</h2><p>செம்மணி மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 110 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காணப்பட்டால் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுடன் நிதி ஒதுக்க வேண்டும். </p><p>அரசாங்கத்திடம் நிதி இல்லையாயின் இந்தியா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன கலந்துரையாடி அரசாங்கம் நிதி கோர வேண்டும். தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று, பணிகளை தொடர்ந்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcab0c2a-4194-407e-b048-fc6e59daa422/26-6a89504f1d017.webp' /></p><p>செம்மணி மனிதப்புதை குழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. </p><p>நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நீதியுடன் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி வாகனப் பதிவு ஆவணங்கள் தயாரித்து விற்பனை: 3 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrest-selling-fake-documents-vehicle-registration-1787382513"></link>
            <id>https://ibctamil.com/article/arrest-selling-fake-documents-vehicle-registration-1787382513</id>
            <summary type="text">நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூன்று நபர்கள் கைது</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை போன்றவை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0588fc82-28cc-4cf8-b7d6-dcc8fc215268/26-6a89567435fbb.webp' /></p><p>

மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் இலங்கை காவல்துறையினர்: பொதுமக்களின் உதவி நாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-police-searching-3-chinese-nationals-1787377548"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-police-searching-3-chinese-nationals-1787377548</id>
            <summary type="text">கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.</p><p>கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலேயே இந்த நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.&nbsp;</p><p>
சம்பவத்தன்று மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை</h2><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8fd2d9b-de2c-4cf9-bf33-8f8daff036c9/26-6a89435d9287c.webp' /></p><p>மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
காவல்துறை விசாரணைகளன்படி, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் இலங்கையிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் நாட்டிற்குள் நுழைய பயன்படுத்திய சுற்றுலா விசாக்கள் காலாவதியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
இதனால், சந்தேகநபர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் அவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவும் வகையில், மூன்று சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை <b>071 859 1735</b> என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : நீதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811</id>
            <summary type="text">நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> 

பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d06fc3-d5ef-41de-bc04-2864bee14108/26-6a89401e8e1a2.webp' /></p><p> 

ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.“ என தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில், அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்பட்ட சமித்புர சத்துவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை : சிக்கிய மற்றுமொரு துப்பாக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summitpura-chathu-revolver-type-firearm-recovered-1787375514"></link>
            <id>https://ibctamil.com/article/summitpura-chathu-revolver-type-firearm-recovered-1787375514</id>
            <summary type="text">ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ளார்.</p><p>இந்தநிலையில் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்&nbsp;உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை</h2><p> 

28 வயதுடைய சந்தேகநபரான&nbsp;சமித்புர சத்து இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa8bd66-15ae-48d8-b029-ac58d80cc8d2/26-6a8939872ba7f.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலய சூழலில் வெற்றிலை மென்ற ஐவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-chewed-betel-leaves-in-temple-premises-1787371683"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-chewed-betel-leaves-in-temple-premises-1787371683</id>
            <summary type="text">தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை
வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது
புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றாக தடை</h2><p>
</p><p>
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும்
பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d2a9b5-fbbf-4d53-87c8-ae177adec256/26-6a8924bc0effc.webp' /></p><p>

இந் நிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில்
காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம்
50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பாடசாலையில் வாள்வீச்சுத் தாக்குதல் : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sword-attack-at-a-sweden-school-death-1787372938"></link>
            <id>https://ibctamil.com/article/sword-attack-at-a-sweden-school-death-1787372938</id>
            <summary type="text">மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுவீடன் பாடசாலை</h2><p>
</p><p>
தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca6c662-b0a5-4386-9ffa-5a98f10cfa81/26-6a8933b137e87.webp' /></p><p>தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p>
கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:33:41+00:00</updated>
        </entry>
    </feed>
