<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-22T13:10:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் வித்தது FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அர்ஜென்டீனா அணியின் முக்கிய வீர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டீனாவின் மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஸ்பெயின் வீரருக்கும் போட்டித்தடையும் அபராதமும்</h2><p>இதே சம்பவத்தில் சிக்கிய ஸ்பெயின் வீரர் கவி 1 போட்டி தடையும், 30,000 டொலர் அபராதமும் பெற்றார்.

AFA மீது பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொத்தம் 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8c36d-83fc-4326-b04d-ae47c59d385d/26-6a899f297febc.webp' /></p><p>
</p><p>
FIFA சுட்டிக்காட்டிய குற்றங்கள்
</p><p>அரசியல் பதாகை: அரையிறுதிக்குப் பின்னர் 'மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே' என்ற பதாகையை காட்சிப்படுத்தியது.</p><p>இனவெறி நடத்தை: அர்ஜென்டீனா ஆதரவாளர்களின் இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்பு.</p><p>ஒழுங்கீனம்: அணியினரின் ஒழுக்க மீறல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள்.</p><p></p><h2>அர்ஜென்டீனா அணிக்கான தண்டனை</h2><p>
</p><p>
தண்டனையாக அர்ஜென்டீனா தனது அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் FIFA உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44cfd3d0-b9db-4b9b-a6cd-88252349926d/26-6a899f2a31d61.webp' /></p><p>
</p><p>
மேலும் தண்டனை பெற்றவர்கள்
</p><p>
நஹுவேல் மோலினா 	அணி வீர்ர்7 போட்டிகள் தடை, $90,000 அபராதம்
</p><p>
ரோபர்ட்டோ அயாலா உதவி பயிற்றுநர்	3 போட்டிகள் தடை, $30,000 அபராதம்
</p><p>
தியாகோ அல்மாடா வீரர்	1 போட்டி தடை, $30,000 அபராதம்</p><p>

உலக் கிண்ண இறுதியில் ஸ்பெயினிடம் 1-0 என அர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
FIFA ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குழு விளையாட்டின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-conference-relatives-disappeared-1787400831"></link>
            <id>https://ibctamil.com/article/international-conference-relatives-disappeared-1787400831</id>
            <summary type="text">அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.</p><p>&nbsp; இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ,முல்லைத்தீவு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் 
றஞ்சினிதேவி சசிக்குமார்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க
உபசெயலாளர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி
குறித்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு
கோரிக்கை விடுத்தனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f874bbf-12e9-4081-85d8-2f5620f39b78/26-6a8994e9da4ef.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு கொலைவழக்கில் தொடபுடைய நபர் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-who-aided-the-killer-arrested-1787398195"></link>
            <id>https://ibctamil.com/article/person-who-aided-the-killer-arrested-1787398195</id>
            <summary type="text">துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை காவல்துறையினர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த நபர் இன்று (22.08.2026) விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/369252fb-21a6-4ab4-8761-e74fb07d2415/26-6a898f5c3a338.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
கொலைச் சம்பவத்தில் சந்தேகநபரின் பங்கு மற்றும் போதைப்பொருள் தொடர்பான விடயங்கள் குறித்து மீனுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வரி விதிக்கும் ட்ரம்ப் : பதிலடியில் இறங்கியது கனடா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-responds-to-new-tariffs-imposed-by-the-us-1787397331"></link>
            <id>https://ibctamil.com/article/canada-responds-to-new-tariffs-imposed-by-the-us-1787397331</id>
            <summary type="text">கனடா பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிவிதிப்புக்கு, கனடா “டொலருக்கு டொலர்” பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிவிதிப்புக்கு, கனடா “டொலருக்கு டொலர்” பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார். இந்நிலையில், ஒட்டாவா வோஷிங்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தி, தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்தது.</p><p>ட்ரம்ப் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் இரு நாடுகளும் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறியதைத் தொடர்ந்து, பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள கனடா பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய 50 சதவீத வரிவிதிப்புகள், கிழக்கு நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><h2>மார்க்கார்னி வெளியிட்ட அறிக்கை</h2><p>வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பிரதமர் மார்க் கார்னி, கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாகவும், தனது பேச்சுவார்த்தைக் குழுவை ஒட்டாவாவிற்குத் திரும்ப அழைப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் நிலைப்பாட்டில் கடைசி நிமிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை, பொருளாதாரமற்றவை மற்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன என்றும் அவர் வாதிட்டார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">My statement on Canada-U.S. trade negotiations: <a href="https://t.co/65OuQH40ra">pic.twitter.com/65OuQH40ra</a></p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2091008744427598021?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>புதிய அமெரிக்க வரிகளுக்கு ஈடாக கனடாவும் அதே அளவு வரி விதிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை வரும் நாட்களில் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>ஒன்டாரியோ முதல்வர் ஆதரவு</h2><p>ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், கார்னியின் அணுகுமுறையை ஆதரித்து, "வரிக்கு வரி, டொலருக்கு டொலர் என்ற வலுவான பதிலடிக்கு பிரதமருக்குத் தனது முழு ஆதரவும் உண்டு" என்று கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Team Canada needs to stand together more united than ever before. <br><br>The prime minister has my full support for a strong response—tariff for tariff, dollar for dollar. As we fight to protect Canadian sovereignty and economic security, everything needs to be on the table. Ontario…</p>&mdash; Doug Ford (@fordnation) <a href="https://x.com/fordnation/status/2091010417560551898?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> கனடாவின் இறையாண்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பாதுகாக்க "எல்லாமே பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும், ஒன்டாரியோ தனது பங்கைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஃபோர்ட் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-sentenced-to-15-years-prison-abuse-daughter-1787390308"></link>
            <id>https://ibctamil.com/article/father-sentenced-to-15-years-prison-abuse-daughter-1787390308</id>
            <summary type="text">வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.
ஆனந்தராஜா நேற்றைய தினம் (21/08/2026) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>அத்துடன்&nbsp;பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.</p><p></p><h2>குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டது</h2><p>
</p><p>
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற
போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்த நிலையில் இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd25bdf9-3546-4310-af6c-9b094b2eb914/26-6a896ed04bc34.webp' /></p><p>எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம்
(21.08.2026) வழங்கப்பட்டது.</p><p>
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும்
பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.</p><p>
குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள்
நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த
குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடுங்காவல் சிறைத்தண்டனை</h2><p>

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல்
புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும்
இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும்
நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை
வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a766033-9322-40e7-9712-0e416a759330/26-6a896ed0f26a1.webp' /></p><p>
</p><p>
இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம்
சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன்
ரூபாய் நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2
வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.</p><p>

தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும்,
சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான
தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-irreversible-federal-solution-for-tamil-people-1787397433"></link>
            <id>https://ibctamil.com/article/an-irreversible-federal-solution-for-tamil-people-1787397433</id>
            <summary type="text">இலங்கையின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத
வகையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடக்கு
கிழக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத
வகையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடக்கு
கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்
குழுவினர் இன்று (22) திருகோணமலையில் ஏற்பாடு
செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போது இவ்வாறு கோரியுள்ளனர்.</p><p>இங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல்
உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூக–பொருளாதார
உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று
ஏற்படுத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p></p><h2>சமஷ்டி அரசியல் தீர்வு</h2><p>

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள்
முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்கின்றது, எனவே எதிர்காலத்தில் மாற்ற முடியாத மற்றும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட
சமஷ்டி அரசியல் தீர்வே அவசியம்.</p><p> மேலும், வடக்கு - கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை
அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல்
தீர்வை உருவாக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8acafc-ee3d-4b5a-9cdd-0cb90dbf96e8/26-6a898761a51e6.webp' /></p><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை
உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தனர்.</p><p>நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனைவின் நான்காவது வருட அணி
திரளல் நிகழ்வான இந்த நிகழ்வில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், சமூக
செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் வழக்கில் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/life-imprisonment-for-youth-involved-heroin-trade-1787396730"></link>
            <id>https://ibctamil.com/article/life-imprisonment-for-youth-involved-heroin-trade-1787396730</id>
            <summary type="text">வவுனியாவில்&amp;nbsp;2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில்&nbsp;2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த இளைஞன் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்படதை தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21.08.2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, மெனிக்பாம் பகுதியில் இக் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>இளைஞனுக்கு ஆயுள் தண்டனை</h2><p>இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/782de96c-190f-4c06-9c93-924879daae9f/26-6a8986c318c6b.webp' /></p><p>வழக்கு விசாரணையின்போது, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.</p><p>நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த வழக்கின் சாட்சியங்களை அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA['மரியாதை செலுத்துவதில்' பிரச்சினை : களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kelani-university-clash-due-to-respect-problem-1787394155"></link>
            <id>https://ibctamil.com/article/kelani-university-clash-due-to-respect-problem-1787394155</id>
            <summary type="text">&amp;nbsp; களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரும் அடங்குவர்.</p><h2>சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை</h2><p>
</p><p>





பல்கலைக்கழக உணவகத்திற்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு சிரேஷ்ட மாணவர்களுக்கு உரிய மரியாதை வழங்காததே இந்த அமைதியற்ற நிலைக்குக் காரணம் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0fbffd4-fd26-41b0-bbf3-ca37a144d833/26-6a8982a4c5a49.webp' /></p><p> </p><p>சம்பவம் தொடர்பில் இரு தரப்பு மாணவர்களும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
மோதலை சமரசம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததால் சந்தேகநபரான மாணவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை காவல்துறை தடுப்புக்காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணை</h2><p> </p><p>இருப்பினும், தடுப்புக்காவலில் இருந்தபோது இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த தகராறை சமரசம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதுடன், அது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட ஏழு மாணவர்களும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439fa007-040a-42d8-9174-96e5d18622d4/26-6a8982a5754fa.webp' /></p><p>
</p><p>





கிரிபத்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கே. ஏ. பி. அபேரத்னவின் பணிப்புரையின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் லியனகே உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவினால் இந்த மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் வறட்சியான காலநிலை : நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-conditions-irrigation-dept-announce-1787395806"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-conditions-irrigation-dept-announce-1787395806</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிக வெப்பநிலை&nbsp;</h2><p>
</p><p>எனினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef222c29-f36a-45fe-acdb-24e99e009555/26-6a8981cd5fcaa.webp' /></p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-suspects-arrested-in-bulathsinhala-1787394534"></link>
            <id>https://ibctamil.com/article/three-suspects-arrested-in-bulathsinhala-1787394534</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.குறிப்பிட்ட நபர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.</p><p>குறிப்பிட்ட நபர்கள் புலத்சிங்கள பகுதியில் நேற்று (21.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
புலத்சிங்கள காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட போதலேகம பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மூவர் கைது</h2><p>

கைது செய்யப்பட்டவர்கள் 37, 52 மற்றும் 67 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd06af6-ae14-4935-a4b6-2fe2b0f8a699/26-6a897fe19b1d6.webp' /></p><p>அகழ்வுப் பணிகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், இந்த சட்டவிரோத அகழ்வுப் பணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fish-harvest-in-sri-lankan-waters-declining-1787392672"></link>
            <id>https://ibctamil.com/article/fish-harvest-in-sri-lankan-waters-declining-1787392672</id>
            <summary type="text">இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது. </p><p>

இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எல் நினோ நிலைமையின் தாக்கம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை, உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c519abdb-08ba-4214-9b15-149e97fccdaf/26-6a8978fa0ad8c.webp' /></p><p> </p><p>

எனினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை, அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.&nbsp;</p><p>

இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் கடற்றொழில் மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழில் வாய்ப்புகளை நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம்&nbsp;</h2><p> </p><p>

இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது.” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef6470b-a070-4e37-845f-c639440e2d4e/26-6a8978fab1d03.webp' /></p><p>

இதேவேளை, கடற்பரப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களின் பயன்பாட்டிற்கு எதிரான சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததே மீன் வளம் குறைவடைவதற்கு முக்கிய காரணம் என தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அழைப்பாளர் ஹெர்மன் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குற்றவாளி வெளிநாட்டில் கைது : பிரதேசவாசிகள் மகிழ்ச்சி ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892"></link>
            <id>https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892</id>
            <summary type="text">துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற &#039;பஸ் லலித்&#039; கைது செய்யப்பட்ட நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற 'பஸ் லலித்' கைது செய்யப்பட்ட நிலையில் ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>கைது செய்யப்பட்ட அவர் நாளைமறுதினம் (24 ஆம் திகதி )இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். சந்தேகநபரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><h2>துபாய் காவல்துறையினரால் கைது</h2><p>இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் பேரில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1652e9a7-c13a-4d5a-bb35-23d608fa6437/26-6a8975d9ba26a.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான இவர் துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. </p><p>பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் உட்பட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugiswara-bandara-was-admitted-prison-hospital-1787392100"></link>
            <id>https://ibctamil.com/article/sugiswara-bandara-was-admitted-prison-hospital-1787392100</id>
            <summary type="text">சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 

அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (21.08.2026) அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>சுகீஸ்வர பண்டார&nbsp;</h2><p>இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8ec3d4-765b-4bb9-a634-6c56be076b5d/26-6a89753043f63.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-for-lottery-ticket-sellers-s-children-1787387834"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-for-lottery-ticket-sellers-s-children-1787387834</id>
            <summary type="text">இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக&amp;nbsp;கல்வி புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக&nbsp;கல்வி புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>நிதிப் பங்களிப்பைப் பாராட்டுதல்&nbsp;</h2><p>முதலாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03fce82-21c2-47a6-aa0f-cc87efd16b62/26-6a8966b6d9cd0.webp' /></p><p>

லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T09:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permission-international-diplomats-visit-chemmani-1787381654"></link>
            <id>https://ibctamil.com/article/permission-international-diplomats-visit-chemmani-1787381654</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப்புதைகுழிக்கு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அனுமதியளித்த அரசாங்கம் கனடா உயர்ஸ்தானிகருக்கும், அவரது குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவுஸ்ரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சோமரத்ன ராஜபக்ச தெரிவிப்பு&nbsp;</h2><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணியை அண்மித்த பகுதியிலும் ஆட்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ee79933-faea-4f5e-81cd-497ed9294a0e/26-6a894ffc22ffd.webp' /></p><p>சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பின்வாங்குகிறது.&nbsp;</p><p>செம்மணியில் மனித பேரவலம் நடந்துள்ளது. பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்கள். கூட்டாக புதைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் எலும்புகூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் என்ன செய்தார்கள். ஆயுதம் ஏந்திப் போராடினார்களா, ஏன் அவர்கள் மோசமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.</p><p></p><h2>அகழ்வுப் பணிகள்</h2><p>செம்மணி மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 110 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காணப்பட்டால் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுடன் நிதி ஒதுக்க வேண்டும். </p><p>அரசாங்கத்திடம் நிதி இல்லையாயின் இந்தியா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன கலந்துரையாடி அரசாங்கம் நிதி கோர வேண்டும். தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று, பணிகளை தொடர்ந்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcab0c2a-4194-407e-b048-fc6e59daa422/26-6a89504f1d017.webp' /></p><p>செம்மணி மனிதப்புதை குழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. </p><p>நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நீதியுடன் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி வாகனப் பதிவு ஆவணங்கள் தயாரித்து விற்பனை: 3 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrest-selling-fake-documents-vehicle-registration-1787382513"></link>
            <id>https://ibctamil.com/article/arrest-selling-fake-documents-vehicle-registration-1787382513</id>
            <summary type="text">நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூன்று நபர்கள் கைது</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை போன்றவை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0588fc82-28cc-4cf8-b7d6-dcc8fc215268/26-6a89567435fbb.webp' /></p><p>

மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:08:07+00:00</updated>
        </entry>
    </feed>
