<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T11:27:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262"></link>
            <id>https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதற்கமைய அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b934bb-13f5-4849-8cc6-3c6fbecad528/26-6aabca01b634d.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களைச் சட்டவிரோதமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a21728f-4282-42ca-b9a5-ef282ffb309e/26-6aab9586aef65.webp' /></p><p> 

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/popular-actor-vishwa-kodikara-arrested-1789640147"></link>
            <id>https://ibctamil.com/article/popular-actor-vishwa-kodikara-arrested-1789640147</id>
            <summary type="text">பிரபல நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16.09.2026) இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (16.09.2026) இரவு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (17) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>விஷ்வ கொடிகார&nbsp;</h2><p>

இதன்போது, விஷ்வ கொடிகாரவிடம் இருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd316708-49b7-461e-81df-120a95478b8e/26-6aabc96f5fc03.webp' /></p><p>
</p><p>
கொக்கெய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை விஷ்வ கொடிகார ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-s-39th-year-commemoration-in-batticaloa-1789638594"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-s-39th-year-commemoration-in-batticaloa-1789638594</id>
            <summary type="text">தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று
வருகின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று
வருகின்றன.</p><p>செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ். நல்லூரிலே தியாக தீபம் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்த்தி பவனியானது&nbsp;மக்களின் அஞ்சலிக்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஊடாக நல்லூரைச் சென்றடைவது வழமை.</p><p></p><h2>மலர் தூவி அஞ்சலி</h2><p>அந்த வகையில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி இன்று (17.09.2023) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ள நிலையில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல ககுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdb16ab-a11b-4af0-8e61-9157eea160d3/26-6aabc1486208f.webp' /></p><p>இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p>இந்தநிலையில், 26ஆம் திகதி திலீபன் உயிர்த் தியாகம்
செய்த நல்லூரிலே மிகப் பிரமண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என&nbsp; செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ஒக்டோபர் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் உள்ள பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். </p><p>

இதன்போது, வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில வாக்குமூலங்களின் முழுமையான பிரதிகள் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p>யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் தெளிவற்றதாக இருப்பதால், அவற்றின் தெளிவான பிரதிகளை வழங்குமாறு கோரினார்.</p><h2>குற்றப்பத்திரங்கள் தாக்கல்</h2><p>இதற்கு பதிலளித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க, பிரதிவாதிகள் கோரும் சில ஆவணங்கள் மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது எனவும், ஆணைக்குழுவிடம் உள்ள ஆவணங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a186842-2a87-4a4a-a15d-87109f227667/26-6aabc0b79e775.webp' /></p><p> 

விடயங்களை பரிசீலித்த நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை உரிய கட்டணத்திற்கு உட்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். </p><p>

மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உள்ள ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரிப் பயிற்சிப் கேடட்டாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்கு புறம்பாக பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பயிற்சி நெறிமுறைக்கு அரசாங்கப் பணத்தை செலவிட்டு பங்கேற்கச் செய்தமையின் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை பிரித்தானியாவில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளி பகுதியை உலுக்கிய விபத்து...! கார் சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686"></link>
            <id>https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளி பகுதியில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் சாரதியை&amp;nbsp;செப்டம்பர் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சாரதியை&nbsp;செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குறித்த நபர் இன்று (17-09-2026) கொழும்பு அல்ஃபிட்ஸ்டார்ப் (அளுத்கடை) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தீவிர சிகிச்சை&nbsp;</h2><p>இந்தநிலையில் விபத்து நடந்த சமயத்தில் கார் சாரதி கஞ்சா போதையில் காரைச் செலுத்தியுள்ளது காவல்துறை மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e81dbe2-8e53-428b-b295-6127fe1fd4c8/26-6aabbbae38dea.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவளிவில் (16-09-2026) வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
</p><p>விபத்தில் காயமடைந்த 13 நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இறந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df507453-1319-44a4-93d5-bb23e2f272eb/26-6aabbbad5a648.webp' /></p><p>விபத்தை ஏற்படுத்திய 52 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.</p><p> மட்டக்குளி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் : உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/supreme-court-rules-judges-liable-to-pay-incometax-1789630589"></link>
            <id>https://ibctamil.com/article/supreme-court-rules-judges-liable-to-pay-incometax-1789630589</id>
            <summary type="text">நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து&amp;nbsp; நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து&nbsp; நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி குறித்த தீர்மானம் சட்டபூர்வமானது என&nbsp;உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

குறித்த தீர்மானத்திற்கு சவால் விடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.</p><p></p><h2>உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டம்</h2><p> </p><p>

குறித்த மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04ea294-13db-4918-aca8-14e7f8dbbc01/26-6aabb5b919548.webp' /></p><p> அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்கள் சம்பளத்தின் மீது வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும், அந்த ஊதியத்திலிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி...! மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-dead-one-injured-in-eachilampattu-crash-1789633527"></link>
            <id>https://ibctamil.com/article/one-dead-one-injured-in-eachilampattu-crash-1789633527</id>
            <summary type="text">திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17-09-2026) குறித்து விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம் வயது (33) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த மேற்படி நபரே உயிரிழந்துள்ளார்.</p><p>அத்தோடு அவரோடு மோட்டார்
சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர்
படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f690270-ed33-45a1-a371-24780fe5d93c/26-6aabae24cf819.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான தட்டம்மை நோய் பரவல்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/measles-outbreak-over-1000-children-lose-lives-1789631562"></link>
            <id>https://ibctamil.com/article/measles-outbreak-over-1000-children-lose-lives-1789631562</id>
            <summary type="text">பங்களாதேஷில் வேகமாகப் பரவி வரும் கடுமையான தட்டம்மை தொற்று காரணமாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் மற்றும் உலக சுகாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் வேகமாகப் பரவி வரும் கடுமையான தட்டம்மை தொற்று காரணமாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளன.
</p><p>
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 194,000க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகிய நாடாக பங்களாதேஷ் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாடு முழுவதும் 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாளொன்றுக்கு சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;தடுப்பூசி வழங்கும் திட்டம்</h2><p>
</p><p>
அதிக மக்கள் தொகை, கொவிட்-19 காலப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஷேக் ஹசீனா அரசாங்கம் பதவி விலகிய பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவை இந்த நிலைமை மேலும் மோசமடைய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209b6159-8c5c-423b-908c-c4f8a77aefe5/26-6aaba3d222e70.webp' /></p><p>
</p><p>
பதிவாகியுள்ள நோயாளர்களில் 83 சதவீதமானோர் தடுப்பூசி பெறாத குழந்தைகள் எனவும், குழந்தைகளிடையே நிலவும் அதிகளவான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக நோயின் சிக்கல்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மருத்துவமனைகளின் கொள்ளளவை விட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தரையில் பாய்களை விரித்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தடுப்பூசி பெறாத குழந்தைகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி விசேட தீவிர தடுப்பூசி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
தட்டம்மை ஒழிப்பு பாதையில் முன்னேறி வந்த பங்களாதேஷ் தற்போது இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அண்மைக் காலமாக தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T08:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இல்லை! ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-diplomat-denies-iran-begging-us-for-talks-1789631270"></link>
            <id>https://ibctamil.com/article/ex-diplomat-denies-iran-begging-us-for-talks-1789631270</id>
            <summary type="text">ஈரான் தடம்மாறி அமெரிக்காவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்களை முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தடம்மாறி அமெரிக்காவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்களை முன்னாள் ஈரானிய ராஜதந்திரியான அப்பாஸ் காமெயார் (Abbas Khameyar) முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.</p><p>சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானியர்கள் தங்களை அழைத்து, கெஞ்சி, சந்திப்பைக் கேட்கிறார்கள் என்று ட்ரம்ப் பதிவிடும் ட்வீட்களும் அறிக்கைகளும் ஒரு புனையப்பட்டக் கதை.</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>ஆனால் இதை யாரும் நம்பவில்லை, நிலைமைகள் அவ்வாறு நகரவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83613aa9-3c05-4567-ac5d-7c5d8408f0ac/26-6aaba2ff629bb.webp' /></p><p>சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள கட்டமைப்பிற்கு அப்பால் ஈரான் எந்த புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.</p><p>புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை விட, தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே ஈரான் கவனம் செலுத்துகின்றது.</p><p></p><h2>உத்தரவாதங்கள்</h2><p>சர்வதேச உத்தரவாதங்கள் இல்லாமல் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்பதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333eaae8-6fcc-41d6-bed8-a1252f688c54/26-6aaba30017f67.webp' /></p><p>ஆனால் பாகிஸ்தான், கதார் அல்லது ஓமன் ஆகிய தற்போதைய மத்தியஸ்தர்கள் எவராலும் இத்தகைய உத்தரவாதத்தை வழங்க முடியாது.
</p><p>ட்ரம்பின் பகிரங்க அறிவிப்புகள் பெரும்பாலும் அமெரிக்க உள்நாட்டு வாக்காளர்களைக் கவர்வதற்கும், உலகளாவிய எரிசக்தி சந்தையைக்&nbsp; கட்டுப்படுத்துவதற்குமான அரசியல் உத்தியே தவிர அதில் உண்மை ஏதுமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T08:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி - கிராஞ்சி மக்களின் உயிரை பறிக்கும் வீதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/poonakari-kiranchi-a-road-that-claims-people-lives-1789632447"></link>
            <id>https://ibctamil.com/article/poonakari-kiranchi-a-road-that-claims-people-lives-1789632447</id>
            <summary type="text">உரிய முறையில் சீரமைக்கப்படாத பூநகரி - கிராஞ்சி பிரதான வீதி ஊடாக பயணிக்கின்ற மக்கள் உயிரையும் துறக்கின்ற அளவுக்கு பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உரிய முறையில் சீரமைக்கப்படாத பூநகரி - கிராஞ்சி பிரதான வீதி ஊடாக பயணிக்கின்ற மக்கள் உயிரையும் துறக்கின்ற அளவுக்கு பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டிருக்கின்றனர்.
</p><p>
இந்த பிரதான வீதியினுடைய சிதைவுகள் காரணமாக அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை கடந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். </p><p>

ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த வீதியைத் திருத்தி தருவதாக jங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படுகின்ற நிலையில் 15- 20 தேர்தல்களுக்கு முகங்கொடுத்த போதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் 40 - 50 வருடமாக குன்றும் குழியுமாக இந்த பாதை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மழை காலத்தில் வெள்ளம் வந்த பின்னர் உழவியந்திரத்தில் தான் நோயாளிகளையும், பிள்ளைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் ஏற்றுவதாகவும், இந்த பாதையால ஒரு விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p><b>
இது தொடர்பான மேலும் பல வியடங்களை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் காண்க...</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jNFktZUlFu4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p></p><p></p><p></p><p><b></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T08:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-today-17-09-2026-1789628367"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-today-17-09-2026-1789628367</id>
            <summary type="text">நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (17) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (17) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ள நிலையில், சில வங்கிகளில் மாற்றமின்றி காணப்படுகிறது.
</p><p>
சேலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.</p><p></p><h2>தொடரும் வீழ்ச்சி</h2><p>

NDB வங்கியில் கொள்வனவு விலை 327.50 ரூபாயிலிருந்து 327.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aa8f90a-7a14-471e-bd3f-7b1d4b5caf43/26-6aab94cdd7208.webp' /></p><p>

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 327.91 ரூபாயிலிருந்து 328.15 ரூபாயாகவும், விற்பனை விலை 336.04 ரூபாயிலிருந்து 336.29 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
</p><p>
இதனிடையே, சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.00 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T07:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான விதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australia-imposes-strict-rules-on-foreign-students-1789624757"></link>
            <id>https://ibctamil.com/article/australia-imposes-strict-rules-on-foreign-students-1789624757</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் மற்றும் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பை கடுமையாகக் கட்டுப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் மற்றும் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பை கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய குடிவரவு விதிகளை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய குடிவரவு திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதை நடைமுறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய நடைமுறையில், தகுதியுடைய மாணவர் விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு வர முடியும்.</p><p></p><h2>அவுஸ்திரேலியா&nbsp;அரசாங்கம்</h2><p> </p><p>மாணவர் விசா விண்ணப்பங்களில் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான கல்வி மற்றும் சுகாதார காப்புறுதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் குறிப்பிடப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9cf25f4-a5f8-4ba0-86c7-fd10b103864b/26-6aab87e8292d0.webp' /></p><p>
</p><p>
மேலும், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் ஒரு விசா காலாவதியான பின்னர் மற்றொரு விசாவுக்கு மாறுவதன் மூலம் நாட்டில் தொடர்ந்து தங்குவதை கட்டுப்படுத்தவும் புதிய நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
</p><p>
2028ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவின் வருடாந்த நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 300,000 இலிருந்து 225,000 ஆகக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த இலக்கை அடைவதற்காக தற்காலிக விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T07:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-today-gold-rate-1789624463"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-today-gold-rate-1789624463</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (17-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (17-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,344,607 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 379,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffa9442-4a92-45b6-9710-356a41e68e5f/26-6aab8b7acfdb0.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 347,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 332,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை நற்சான்றிதழ் பெற புதிய இலக்கங்கள்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-hotlines-introduced-for-police-clearance-1789625128"></link>
            <id>https://ibctamil.com/article/new-hotlines-introduced-for-police-clearance-1789625128</id>
            <summary type="text">காவல்துறை நற்சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை நற்சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் 24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவல்துறை தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>அத்தியாவசிய பராமரிப்பு</h2><p>கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இணையவழியில் காவல்துறை நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944caf7f-b159-4024-a1cc-cea0888a014f/26-6aab8967f30e8.webp' /></p><p>கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை பிரதேச காவல்துறை நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 859 59 46, 071 859 59 47 மற்றும் 071 859 59 48 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610"></link>
            <id>https://ibctamil.com/article/mattakkuliya-crash-driver-tested-positive-for-drug-1789623610</id>
            <summary type="text">மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>அதன்படி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சாரதி கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்தின் பின்னர் காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் வேகமாக பயணித்த காரொன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f81d25b-c635-4396-813c-9484bdd91587/26-6aab869ae4d09.webp' /></p><p> 

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். </p><p>

இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T06:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலாங்கொடை பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650"></link>
            <id>https://ibctamil.com/article/theft-at-ambalangoda-school-suspect-arrested-1789622650</id>
            <summary type="text">அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&amp;nbsp; காவல்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்&nbsp; காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வீடுகளை உடைத்து திருடியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட&nbsp; 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (16.09.2026) காலை அம்பலாங்கொட, தலுக்கந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சந்தேக நபரிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் வீடொன்றில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ef223a-6091-47e4-a5e5-cdf7de6d17c7/26-6aab7d7d94ede.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள சந்தேகநபர், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
அம்பலாங்கொடை மற்றும் மேலும் சில காவல் நிலையங்களுக்கு சந்தேகநபருக்கு எதிராக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக்கர நாற்காலியிலாவது மகிந்தவை மேடைக்குக் கொண்டு வருவோம்! முன்னாள் எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-to-bring-mahinda-on-wheelchair-to-stages-1789620507</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு.</p><p> </p><p></p><h2>சக்கர நாற்காலி</h2><p>எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f817850-6528-4885-a11a-a0c0f85249cf/26-6aab765e2b32e.webp' /></p><p>



சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>மக்கள் முன்னிலை</h2><p>அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர் ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p>

மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523a540d-bb89-4ab6-bb38-54bb87953ecf/26-6aab773047853.webp' /></p><p>ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது.</p><p>

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:25:16+00:00</updated>
        </entry>
    </feed>
