<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T22:08:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

ஈரானின் பெர்சியன் வளைகுடா நீரிணை அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஈரான் விதித்துள்ள வழிமுறை கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் மற்றும் சிறைபிடிக்கப்படலாம் என எக்ஸ் தளத்தில் PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிமீறல் பட்டியல்</h2><p> </p><p>

மேலும், இத்தகைய தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய கப்பல்களும் விதிமீறல் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfaef34-62ce-4c8e-babf-f6f3762f5460/26-6a8b65d9ed9ec.webp' /></p><p> </p><p> 

கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமாயின் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க தமது இணையதளத்தில் உள்ள பட்டியலைச் சரிபார்த்து இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை மிரட்டல்! ஈரான் அதிரடியாக வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-foreign-minister-dismissed-new-us-sanctions-1787516819"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-foreign-minister-dismissed-new-us-sanctions-1787516819</id>
            <summary type="text">அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்துள்ளார்.
</p><p>
இத்தகைய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதன் பின்னணியில் அராக்சியின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>புதிய முயற்சியும் தோல்வி</h2><p> </p><p> 

காணொளியொன்றில் பேசிய அராக்சி, அமெரிக்கத் தலைவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகி பழைய திட்டங்களையே மீண்டும் கொண்டு வருவது அவர்களின் விரக்தியையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3faec2-f447-4540-9bb1-2fd20864342e/26-6a8b5ad28356f.webp' /></p><p><i>Image Credit: Britannica</i></p><p>
</p><p>
அமெரிக்காவின் முந்தையத் தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தோல்வியடைந்தது போல இந்த புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T20:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கட்டத்திற்குள் செல்லும் ஈரானுடனான போர்! அமெரிக்க தரப்பு எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/war-with-iran-enters-new-phase-us-says-1787515333"></link>
            <id>https://ibctamil.com/article/war-with-iran-enters-new-phase-us-says-1787515333</id>
            <summary type="text">ஈரானுடனான போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரபல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது, “நாம் மிக விரைவில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையப் போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த கட்டத்தில் நமது நட்பு நாடுகள் உதவும் என்றும், இதை நாம் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.</p><p></p><h3> ஈரானின் அணு ஆயுத முயற்சி</h3><p> </p><p>

இதேவேளை, முந்தைய அனைத்து நிர்வாகங்களின் முக்கிய இலக்காக இருந்த, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளதாகவும் மைக் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675280a9-fc70-46eb-b3af-9c145492c438/26-6a8b54b67ef00.webp' /></p><p>
</p><p>
“நாம் பாம்பின் தலையை வெட்டிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மேசையின் மறுபுறத்தில் இருக்கும் ஈரானியர்களை நம்ப முடியாது என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய சவாலாகும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T20:14:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல், கம்மன்பில உட்பட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. </p><p>

இந்தப் போராட்டத்தின் போது, நீதித்துறை செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்து கருத்து வெளியிட்டதாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் மகிந்த பத்திரன ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரப்படும் வழக்கு</h2><p>

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் உண்மைகளை அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e7ad2c-820c-46ce-a7f7-7bffc31b56e2/26-6a8b43a64fee4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், குறித்த நபர்களின் கருத்துக்கள் முதல் பார்வையில் நீதித்துறை நடவடிக்கைகளை விமர்சிப்பதாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T19:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981"></link>
            <id>https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு கடந்த 21ஆம் திகதி நீமிமன்றுக்கு வருகைத்தந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹேமரத்தன தேரருக்கு எதிராக&nbsp;&nbsp;வழக்கு </h2><p><span style="color: inherit;">தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13584407-d1c1-4539-902a-b1e3d07813c3/26-6a8b0a1734ded.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றின் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833"></link>
            <id>https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833</id>
            <summary type="text">அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.</p><p></p><h2>

இடமாற்றங்களுக்கான தகுதிகள்
</h2><p>
இதன்படி, ஒரே பணியிடத்தில் 05 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், 02 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்களும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16ce05d5-7e17-4446-bf57-77a83bd129b5/26-6a8b3e38d0a21.webp' /></p><p>
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை பொது நிர்வாகத்திற்கான முகாமைத்துவ தகவல் அமைப்பு (MIS) மூலம் நிகழ்நிலையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், அதிகாரிகள் தமது அடிப்படை தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முந்தைய சேவை நிலையங்களின் தகவல்களை கணினியில் துல்லியமாக புதுப்பிப்பது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
மேல்முறையீடு செய்தல்</h2><p>

இதேவேளை, 2026 ஓகஸ்ட் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில இடமாற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409c957c-d1d4-4a6c-a93a-f076fd9cb892/26-6a8b3e3985d51.webp' /></p><p> </p><p>

அத்தோடு, வருடாந்திர இடமாற்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் அதிகாரிகள், தமக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அதிகாரிகளின் பணிக்காலம், தற்போதைய பணிநிலையம் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579"></link>
            <id>https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579</id>
            <summary type="text">மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p>

அலுத்கம, கணேகம புராண விகாரைக்கு அருகில் உள்ள தொடருந்து குறுக்குப்பாதையில் இன்று(23) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த பயணி சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட&nbsp;பிரதேசவாசிகள் </h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, குறித்த தொடருந்து குறுக்குப்பாதையில் எச்சரிக்கை மணிகளும் சமிக்ஞைகளும் மட்டுமே உள்ளதாகவும், பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும் கூறி பிரதேசவாசிகள் கடலோர தொடருந்து பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3372df-6e65-46fe-bc7e-69a1df62a28c/26-6a8b315fd1d4d.webp' /></p><p>
</p><p>
இதனால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p> 

அதன்படி, ஒரு வாரத்திற்குள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, கடலோர தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவருகிறது.</p><p>&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுத்துள்ள பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p> 

கடந்த ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. இதில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.</p><p>
ஓகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் 27,884 வருகைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 13,980 சுற்றுலாப் பயணிகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தையும், 8,776 வருகைகளுடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><h2>அதிகபட்ச மாதாந்திர வருகை&nbsp;</h2><p>
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாகவும் இந்தியாவே முன்னணியில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து 3,66,114 பயணிகள் வந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82d6fb96-4a1e-46d1-b9f9-38784f481020/26-6a8b2d61eff64.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 1,44,381 பயணிகளும், சீனாவில் இருந்து 97,073 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்திர வருகைகளில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகபட்சமாக 2,79,328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:27:04+00:00</updated>
        </entry>
    </feed>
