<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-04T19:27:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் முன்னேற்றம்! அமெரிக்கா - கட்டார் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388"></link>
            <id>https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388</id>
            <summary type="text">அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதற்குமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் குறைந்தது. </p><p>எனினும், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதுடன், ஓமான் கடற்கரைக்கு அண்மையில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் காணப்படாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து மோதலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd0205e-5626-45ce-b785-1fb221ce27cd/26-6a72344dcc85b.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.</p><p> இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும், ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கவும் கட்டார், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><h2>கச்சா எண்ணெய் போக்குவரத்து </h2><p> உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், இப்பகுதியின் நிலைமை உலக பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b737966-a5b3-4f9a-81f4-b78afd620236/26-6a72344e861ea.webp' /></p><p>
</p><p>
கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் வரைவு முன்மொழிவுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், இராஜதந்திர முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, பேச்சுவார்த்தையின் மையமாக ஓமான் மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக கப்பல் போக்குவரத்து ஏற்பாடு காணப்படுவதாகவும், ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதே தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் பிராந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T18:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் அமெரிக்காவின் துல்லிய ஏவுகணை கையிருப்புக்கு பெரும் அடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-precision-missile-stockpile-major-setback-1785864117"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-precision-missile-stockpile-major-setback-1785864117</id>
            <summary type="text">ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>இதனால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
</p><p>
பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் Army Tactical Missile Systems (ATACMS) மற்றும் Precision Strike Missiles (PrSM) ஆகியவை முக்கியமானவையாகும். </p><p></p><h2>உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ஏவுகணைகள்&nbsp;</h2><p>இவற்றில் பெரும்பாலான கையிருப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஏவுகணையின் பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3cd5fc6-f696-4633-8738-208f771ca2be/26-6a722283aeb3c.webp' /></p><p>
</p><p>
இந்த நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் பாதுகாப்பான தூரத்திலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.</p><p> உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ATACMS ஏவுகணைகள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளன.</p><p> PrSM ஏவுகணைகள் அதைவிட மேம்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
ஏவுகணை கையிருப்பு குறைந்திருப்பது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதிக ஆபத்துள்ள விமானத் தாக்குதல்களை அமெரிக்கா அதிகம் நம்ப வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும் என பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு</h2><p> </p><p>மேலும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் இராணுவத் திறனிலும் இதனால் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f41356-3f07-488c-8f2a-64e2b5ef812e/26-6a72228467044.webp' /></p><p>

எனினும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) உலகின் பல பகுதிகளில் உள்ள இராணுவக் கையிருப்புகளிலிருந்து ஆயுதங்களை மீள்நிரப்பி வருவதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "உலகிலேயே அதிகளவு ஆயுதக் கையிருப்பு அமெரிக்காவிடம் உள்ளது; தேவையைவிட அதிகமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன" என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T17:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் குறித்து அவதூறு : விசாரணை வளையத்துள் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-is-accused-of-misconduct-1785862508"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-is-accused-of-misconduct-1785862508</id>
            <summary type="text">காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்குமாறு காவல்துறை மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று(03) ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டிய பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம், காவல்துறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் காவல்துறை மா அதிபருக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>

</p><h2>அனுர ஆட்சியில் துரதிஷ்டமான நிலையில் காவல்துறை</h2><p>அப்போது, ​​தற்போதைய அரசாங்கம் காவல்துறையை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையில் வைத்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca532b9b-49d7-48d0-81b0-18849ecc460f/26-6a721f346154a.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்று முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் மிகவும் துயரமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும், தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்று சாகர கரியவாசம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 </p><h2>பொதுமக்களால் காவல்துறை மா அதிபர் அடித்தே கொல்லப்படுவார்&nbsp;</h2><p>அவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய காவல்துறை மா அதிபர் நெடுஞ்சாலையில் பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட 37வது காவல்துறை மா அதிபராக வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2204082-74cc-4c67-a30a-459c04b523ff/26-6a721f351af52.webp' /></p><p>

இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், சாகர கரியவசம் தெரிவித்த கருத்து குறித்து மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>
மேலும், சட்டத்தரணி சாகர கரியவசம் வரும் நாட்களில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விசாரணை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-silambam-competition-held-malaysia-1785861691"></link>
            <id>https://ibctamil.com/article/international-silambam-competition-held-malaysia-1785861691</id>
            <summary type="text">சர்வதேச சிலம்பக் கூட்டமைப்பு (ISF) ஏற்பாடு செய்த சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெற்றது.

இப்போட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சிலம்பக் கூட்டமைப்பு (ISF) ஏற்பாடு செய்த சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெற்றது.
</p><p>
இப்போட்டியில் இலங்கையை சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று, தங்களது வீரத்தையும், திறமையையும், ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தி இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.</p><p><b>

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்:
</b></p><p>
ஜெயராஜா கிரஹர்ஷிஹன்
</p><p>ஜெயராஜா அருஷிஹன்
</p><p>சாதனா ஸ்ரீகுமார் </p><p>ஹர்ஷா கரிகாலன்
</p><p>
இம்மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் போட்டியிட்டு, 3 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T16:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு முறிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/targeted-shooting-in-dehiwala-foiled-1785859687"></link>
            <id>https://ibctamil.com/article/targeted-shooting-in-dehiwala-foiled-1785859687</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை, கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க மைதானம் அருகே ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை, கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க மைதானம் அருகே ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (04) இரவு சுமார் 08.10 மணியளவில், முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றார்.</p><h2>பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு&nbsp; துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு பேக்கரியின் உரிமையாளரை இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் துப்பாக்கி வெடிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3831af3a-3935-4aef-95f5-6e3ec9197df4/26-6a7211f6eeeae.webp' /></p><p>

இந்த நிலையில் பேக்கரி உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் போராடியபோது, ​​அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துக்கொண்டார்.
</p><p>
பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், பேக்கரி உரிமையாளருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>காவல்துறை விசாரணை</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5861b4e-d07d-40df-8617-d57a3421dd72/26-6a7211f7a2c1e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T16:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான், ஓமான் விரைவில் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-near-deal-to-reopen-strait-of-hormuz-1785853504"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-near-deal-to-reopen-strait-of-hormuz-1785853504</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானும் ஓமானும் நெருங்கிவிட்டதாக, ஈரான் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானும் ஓமானும் நெருங்கிவிட்டதாக, ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'தி நியூயோர்க் டைம்ஸ்' திங்களன்று செய்தி வெளியிட்டது.</p><p>சாத்தியமான ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் அதன் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கப்பல் வழித்தடத்தின் வழியாகப் பயணிக்கும், அதே நேரத்தில் வெளியே செல்லும் கப்பல்கள் ஓமானுக்கு அருகிலுள்ள ஒரு வழித்தடத்தைப் பயன்படுத்தும் என அந்த அந்த ஊடகம் தெரிவித்தது.</p><p>எந்தவொரு சுங்கக் கட்டணமும் அறவிடப்படாது என்பதை வெளிப்படுத்தியதாக அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சேவைக் கட்டணம்</h2><p>ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், சரக்குக் கப்பல்கள் மற்றும் டேங்கர்களுக்கான பாதுகாப்பு, மற்றும் பணியாளர் செலவுகளை ஈடுகட்டுவதற்கான ஒரு "சேவைக் கட்டணம்" இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இந்த வருவாய் ஈரான் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7387dd-f0f1-4313-a3dc-ace3fed51ced/26-6a71faafc32d3.webp' /></p><p>ஈரானின் கூற்று "துல்லியமானது அல்ல" என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். மேலும், அந்த நீர்வழிப்பாதை வழியாக அமைக்கப்படும் எந்தவொரு "தற்காலிக" கப்பல் வழித்தடங்களுக்கும் ஈரானின் ஒப்புதல் தேவையில்லை என்றும், சுங்கக் கட்டணங்கள் விதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>ஐயத்துடன்&nbsp;பென்டகன் அதிகாரிகள்</h2><p>முன்மொழியப்பட்ட இந்த ஏற்பாடு ஈரானுக்குச் செய்யப்படும் ஒரு சலுகையாக அமைந்துவிடுமோ என்ற கவலையை வெளிப்படுத்திய சில மூத்த பென்டகன் அதிகாரிகள், இது குறித்து ஐயத்துடன் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bde3bba-c265-4ecf-8c2e-7996d639061e/26-6a71fab096c29.webp' /></p><p>

இந்த ஒப்பந்தம் திட்டமிட்டபடி செயல்படுமா மற்றும் அமெரிக்காவின் மற்றொரு சுற்றுத் தாக்குதல்களைத் தடுக்குமா என்று சில ஈரானிய அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T16:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு : தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/private-bus-operator-charged-a-child-a-high-fare-1785858204"></link>
            <id>https://ibctamil.com/article/private-bus-operator-charged-a-child-a-high-fare-1785858204</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு உட்பட்ட நடத்துனர்
ஒருவர் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுக்கு முழு ஆளிற்கான பணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு உட்பட்ட நடத்துனர்
ஒருவர் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுக்கு முழு ஆளிற்கான பணம் அறவீடு
செய்ததற்காக ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
</p><p>
குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு
வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து சங்கத்தினதும் வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபையினதும் கட்டுப்பாட்டை மீறி வயது வந்தோர்களுக்கான
முழுத் தொகை பணம் அறவிட்டதற்காக குறித்த சிறுவனின் தந்தை வடமராட்சி கிழக்கு
தனியார் போக்குவரத்து சங்கத்திடம் முறையிட்டார்.&nbsp;</p><h2>ஒரு வாரம் நடத்துனர் பணியில் ஈடுபடுவதற்கு தடை&nbsp;</h2><p>&nbsp; இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சங்கம் மேற்கொண்ட
விசாரணையின் அடிப்படையில் குறித்த பேருந்து நடத்துனர் சிறுவனுக்கு முழு
கட்டணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஒரு
வாரம்நடத்துனர் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9bd093a-1a97-450a-8781-d63f87f0c78e/26-6a720c6d1ddcf.webp' /></p><p>
</p><p>
இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையினுடைய பேருந்தானது மருதங்கணியிலிருந்து
குடத்தனை செல்வதற்காக முழு ஆளுக்கான தொகையாக 108 ரூபாவும், சிறுவர்களுக்கு 54
ரூபாவும் அறவிட்டிருந்தது. ஆனால் தனியார் போக்குவரத்து சேவை பேருந்துகள்
இருவருக்கும் அதே அளவு தூரத்திற்கு 140 ரூபாய் வீதம் அறவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T15:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு : கலந்துரையாடலில் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-acquisition-for-palali-airport-confusion-1785849387"></link>
            <id>https://ibctamil.com/article/land-acquisition-for-palali-airport-confusion-1785849387</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக
சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான
கலந்துரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக
சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான
கலந்துரையாடல் இன்று வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னர் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட
அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p><h2>கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட&nbsp;காணி உரிமையாளர்கள்</h2><p>வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி
வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர்
பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி
உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7fc676-03dd-40cb-92f9-a0c8265c134a/26-6a71efae7f40a.webp' /></p><p>இதன்போது, வலி வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும்
பிரதேச செயலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள்
அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர்
தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை மக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பினார்கள்.</p><p>1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்
அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து,
இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி
உரிமையாளர்களிடம் கோரப்பட்டது.</p><p></p><h2>சத்தியக்கடதாசியால் வந்த குழப்பம்</h2><p>எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள்
வழங்கப்படாத நிலையில் சத்தியக்கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம்
தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில்
பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cec38c2-d04c-423e-8c4e-c8a2c992ce3a/26-6a71efadb4a37.webp' /></p><p>குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் காவல்துறையினர்
வரவழைக்கப்பட்டனர்.</p><p>பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற
கலந்துரையாடலின் பின்னர் , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட
குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு
அனுப்பப்பட்ட பின்னர் மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என
தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>கூட்டத்திலிருந்து வெளியேறிய காணி உரிமையாளர்கள்</h2><p>எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல்
கூட்டத்திலிருந்து வெளியேறினர். அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும்
வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து
பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19192166-b4fd-4b40-88b5-c7675300b928/26-6a71efacc2b57.webp' /></p><p>
</p><p>மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டதே மக்களிடையே
நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள்
தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:57:13+00:00</updated>
        </entry>
    </feed>
