<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-23T10:47:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் எல் நினோ... நவம்பரில் உச்சத் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strong-el-ni-o-conditions-could-hit-sri-lanka-1784801527"></link>
            <id>https://ibctamil.com/article/strong-el-ni-o-conditions-could-hit-sri-lanka-1784801527</id>
            <summary type="text">உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான &#039;எல் நினோ&#039; காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான 'எல் நினோ' காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சகட்ட நிலையை அடையக்கூடும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.</p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்யைில்,

ஜூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் நாடளாவிய ரீதியில் மிகக் கடுமையான வறட்சியான வானிலை நிலவும்.</p><p></p><h2>&nbsp;வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு&nbsp;</h2><p> </p><p>ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வறட்சியைத் தொடர்ந்து, கடும் மழை பெய்யும். இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் உருவாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224fb8f5-d16c-401b-8337-c0393016a712/26-6a61eec16b9d6.webp' /></p><p>
</p><p>
எல் நினோ என்பது இலங்கைக்கு மட்டும் உரியது அல்லாமல், ஒரு உலகளாவிய காலநிலை சவாலாகும். இதன் தாக்கங்களை எதிர்கொள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளுடன் இணைந்து விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

விவசாயம், குடிநீர் விநியோகம், மின்சாரம், வேலைவாய்ப்பு மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க அரசாங்கம் ஏற்கனவே குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>கடும் வறட்சி</h2><p>நாட்டில் ஏற்படவுள்ள கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் மின்சாரம் மற்றும் குடிநீரை மிகவும் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fe99bcd-261f-4832-ab0c-9bb328a05e65/26-6a61eec093f42.webp' /></p><p> 

தீவிர வெப்பம் மற்றும் வறட்சியினால் விவசாயம், மீன்பிடி போன்ற உணர்திறன் வாய்ந்த துறைகளில் வேலை இழப்புகள் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protests-mannar-demanding-transfer-principal-1784801295"></link>
            <id>https://ibctamil.com/article/protests-mannar-demanding-transfer-principal-1784801295</id>
            <summary type="text">&amp;nbsp; அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இராண்டாவது
நாளாக போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இராண்டாவது
நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முறையான தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என
பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>மன்னார் அல்-அஸ்ஹர்
பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்
போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்றைய தினம் (23)
பெற்றோர்கள் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.</p><h2>10 மாணவர்களே பாடசாலைக்கு வருகை</h2><p>&nbsp;அதிபர் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில்,
இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee87b12f-0bfa-4612-9df1-67e029eff27a/26-6a61eb559fa2f.webp' /></p><p>தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு
அனுப்பப் போவதில்லை எனப் பெற்றோர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த போராட்டம் தொடர்பில் மன்னார் வலய கல்விப் பணிப்பாளரிடம் எமது செய்தியாளர்
வினவியபோது</p><p></p><p>
</p><p>
</p><h2>தொடர்ச்சியாகப் போராட்டங்கள்&nbsp;</h2><p>குறித்த பாடசாலை அதிபர் விவகாரம் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள்
இடம்பெற்று வருவது எமது கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு
கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/170b6acf-bdb0-4ba7-bfa6-2ef801d88568/26-6a61ef2629155.webp' /></p><p> அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான முழுமையான
அறிக்கையை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு
விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்
</p><p>
இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்
புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருச்சி முகாமில் வருடக்கணக்கில் தனது மகளை பார்க்காமல் தவிக்கும் இலங்கை தாய்! விஜய்யிடம் விசேட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-mother-at-the-trichy-camp-request-vijay-1784801637"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-mother-at-the-trichy-camp-request-vijay-1784801637</id>
            <summary type="text">திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 7 பேருக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தொடரும் விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமக்கான நீதியை பெற்றுத்தர கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

இதில் சுகந்தினி என்பவரும், அவரது மகனும் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்படி குறித்த அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த விடயம் குறித்து திருச்சி சிறப்பு முகாமிற்கு விஜயம் செய்திருந்த தமிழ்நாட்டு சட்டத்தரணி கருத்து தெரிவிக்கையில்,&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uEa2iTcxXu8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T10:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slbfe-aims-to-send-250-000-workers-abroad-in-2026-1784798806"></link>
            <id>https://ibctamil.com/article/slbfe-aims-to-send-250-000-workers-abroad-in-2026-1784798806</id>
            <summary type="text">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை இலக்காக நிர்ணய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் எளிதாக்கப்படும் என்று அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களில் உள்ள அதிக சம்பளம் தரும் வேலைகளுக்கு வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><h2>இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டம்&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையில் 143,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் எனவும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33674c9c-21eb-40f8-b86a-c04e25e86172/26-6a61e633818d7.webp' /></p><p>
இதற்கிடையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களிடையே மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான இஸ்ரேலுக்கு 14,000 இலங்கைத் தொழிலாளர்களை அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. </p><p>இதுவரை, 7,873 தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ள நிலையில் மேலும், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்ப பணியகம் எதிர்பார்ப்பதுடன் அங்கு ஏற்கனவே 4,794 தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>4.6 பில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>அந்தப் பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 73,623 இலங்கையர்கள் திறன்சார்ந்த வேலைவாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்துள்ளதுடன் 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a28429-d7db-4f38-a952-fa2265d80e58/26-6a61e6345eb6e.webp' /></p><p>

இதற்கிடையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதாவது ஜனவரி முதல் ஜூன் வரை, 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/x-v82jTPnIY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-warning-to-americans-around-the-world-1784795375"></link>
            <id>https://ibctamil.com/article/a-warning-to-americans-around-the-world-1784795375</id>
            <summary type="text">
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச் சூழல், எதிர்பாராத விதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், ஈரான் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுக்கள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், வணிகங்கள் அல்லது அமெரிக்கக் குடிமக்கள் இருக்கும் இடங்களைத் தாக்கும் அபாயத்தில் உள்ளன என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விமான ரத்துகள்</h2><p>

மேலும், தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான ரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26e5a2fe-c0a7-43eb-b96d-2c193d2b3a5d/26-6a61e2d84a620.webp' /></p><p>

இதேவேளை, மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T09:46:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை அதிரவைத்த அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்: தகர்க்கப்பட்ட போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-complete-12-consecutive-night-strikes-1784791745"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-complete-12-consecutive-night-strikes-1784791745</id>
            <summary type="text">ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் ஈரானை பலவீனப்படுத்த செய்யபட்டவை என&nbsp;அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவால் தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>ஈரான் தனது கடற்படை முற்றுகையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் முழுவதும்&nbsp; ஈரானிய இராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்</h2><p>
</p><p>இதனால் அமெரிக்கப் படைகள் ஒன்பது வர்த்தகக் கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டதாகவும், ஒன்றைக் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/108f7c7f-fe51-418b-8d89-1fd2d268c98d/26-6a61ce0eb88d6.webp' /></p><p>
</p><p>மேலும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கின் பல நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து ஈரானும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
</p><p>
பெப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஜூன் மாதத்தில் கட்டமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. </p><p>எனினும், அந்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:34:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்கள்: தழிழர் தரப்பின் ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-remember-day-1784797405"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-remember-day-1784797405</id>
            <summary type="text">கறுப்பு ஜீலை இனக்கலவரம் அரங்கேறி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1983 ஜீலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான
நினைவுச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜீலை இனக்கலவரம் அரங்கேறி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1983 ஜீலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான
நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு என&nbsp; தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை நினைவு நாளான இன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, 'இது
இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல இது ஆக்கிரமிப்புக்கு எதிரான
எதிர்காலப் போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும்.</p><p></p><h2>இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்கள்</h2><p> </p><p>அந்த வகையில் 2027 ஜீலைக்கு
முன்னதாகவாவது 1983 இனக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ்
மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல்
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249d5612-c1d3-4403-bea5-63e28a9ef842/26-6a61ddd3478d9.webp' /></p><p>1983 ஜீலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம்
அல்ல.</p><p>அது, அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும்,
அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித்
தமிழ் மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர்
இனப்படுகொலை ஆகும்.</p><h2>வரலாற்று துயரங்கள்</h2><p> </p><p>கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின்
பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில்
வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜீலை இனக்கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cbc7c16-9072-4220-adc2-3dce721f01d5/26-6a61ddd294464.webp' /></p><p>
</p><p>அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து
விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக்
கட்டமைப்புகள் ஒரே வாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. </p><p>தமிழ் மக்கள்
வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம்
என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது.
</p><p>
எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின்
பின்னணியையும், அதன் மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது
அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும்.</p><p> இந்த
வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும், நினைவுச் சின்னங்களும் அவசியமானவை
ஆகும். எனவே, கறுப்பு ஜீலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும்,
எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில்
1983 கறுப்பு ஜீலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும்' என்றும்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T09:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-drops-to-rs-340-usd-to-lkr-1784796377"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-drops-to-rs-340-usd-to-lkr-1784796377</id>
            <summary type="text">நேற்றுடன் (22) ஒப்பிடுகையில், இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் குறைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (22) ஒப்பிடுகையில், இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் குறைந்துள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (23.07.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.87 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.59 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66263d81-ac69-4bd3-bf92-a4d2fe110ebd/26-6a61d7736fd65.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.39 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.49 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.46 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.12 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T09:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணை: கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-appears-in-the-court-of-appeal-1784793301"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-appears-in-the-court-of-appeal-1784793301</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு</h2><p>கடந்த 9ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை நான்காவது நாளாகப் பரிசீலித்து, அதை இன்றைய தினத்திற்கு வரை ஒத்திவைத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f7b668-1c73-4adf-9c82-3b063b2069f3/26-6a61cfe094a9d.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7dZ9D2G7bWk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>
</p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-07-23T08:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட யாழ். தனியார் வைத்தியசாலை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-private-hospital-slapped-with-rs-3-mn-fine-1784785148"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-private-hospital-slapped-with-rs-3-mn-fine-1784785148</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. </p><p>

இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தின் உத்தரவு&nbsp;</h2><p> 

எனினும், அந்த வைத்தியசாலை குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் ஜூலை 13 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2732f3-fbfb-41da-a9a5-5179dc3d234b/26-6a61af0e4b725.webp' /></p><p> 

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p>குறித்த வழக்கு ஜூலை 21 அன்று விசாரணைக்கு வந்த போது வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p>மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை</h2><p> </p><p>தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f03df02a-9b0b-44da-840a-a90388c42d41/26-6a61af0f07a7d.webp' /></p><p> 

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. </p><p>

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P0b0XtuX8Gk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களிடையே மோதல்! துப்பாக்கியொன்றும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/clashes-between-chinese-groups-in-port-city-1784789071"></link>
            <id>https://ibctamil.com/article/clashes-between-chinese-groups-in-port-city-1784789071</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>கொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

</p><p>குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மேற்படி துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>கொழும்பு துறைமுகக் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 குறித்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொரு சீன நாட்டவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
காவல்துறையின் தகவல்படி, இந்த மோதல் இன்று(23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விரிவான விசாரணை</h2><p>

இந்த நிலையில், மோதலின் போது இருவர் காயமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e214f34-0195-4038-a9e3-21fe8c5f3039/26-6a61bb403f579.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, சம்பத்தில் ​​மற்றொரு சீன நாட்டவரும் கடத்தப்பட்டிருபப்தாக கூறப்படும் நிலையில், கொழும்பு துறைமுகப் காவல்துறையினர் இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து : உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-rules-deshabandu-violated-fundamental-rights-1784790477"></link>
            <id>https://ibctamil.com/article/sc-rules-deshabandu-violated-fundamental-rights-1784790477</id>
            <summary type="text">2022 ஆம் ஆண்டு &#039;அரகலய&#039; போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார&amp;nbsp;கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022 ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார&nbsp;கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>இது தொடர்பான வழக்கு இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த உரிமை மீறலுக்கு, அப்போதைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரே பொறுப்பு என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.</p><p></p><h2>அடிப்படை உரிமை மீறல்</h2><p>அநுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d4be290-9321-4c0c-bd72-fc4f1b594bfc/26-6a61c6634960e.webp' /></p><p>நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாகவும், அப்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் மூலம் கடுமையாக விமர்சித்ததாலும், 2022 ஏப்ரலில் சாதாரண உடையில் இருந்த ஒரு குழுவினரால் அனுருத்த பண்டார அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>பல மணிநேரம் அவரது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ எந்தத் தகவலும் வழங்கப்படாததால், அவரை மறைத்துவிடும் நோக்கத்துடன் இது ஒரு கடத்தல் என்ற கருத்து எழுந்தது.</p><p>எனினும், தண்டனைச் சட்டத்தின் 120வது பிரிவின்படி, அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களைக் கலக்கமடையச் செய்யும் செய்திகளைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மொதறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:45:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த பாதியிலேயே நிறுத்திய LRT திட்டம்: இழப்பீடு சுமையை அதிகரித்த ஜப்பானின் நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/84-crore-compensation-for-the-light-rail-project-1784790028"></link>
            <id>https://ibctamil.com/article/84-crore-compensation-for-the-light-rail-project-1784790028</id>
            <summary type="text">முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் போது இரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனத்திற்கு சுமார் ரூ. 840...</summary>
            <content type="html"><![CDATA[<p>முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் போது இரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனத்திற்கு சுமார் ரூ. 840 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்நிறுவனம் தற்போது அதற்கான வட்டியைக் கோரி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள்&nbsp;</h2><p> </p><p>

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

''189 மில்லியன் ஜப்பானிய யென், 1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் கிட்டத்தட்ட 110 மில்லியன் இலங்கை ரூபாய் ஆகியவை ஒரே நேரத்தில் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49016647-3156-47ae-9d19-f530e0c5b58a/26-6a61c52dee19b.webp' /></p><p> </p><p>

சம்பந்தப்பட்ட ஜப்பானிய நிறுவனம் தற்போது கூடுதல் வட்டியைக் கோரி வருகிறது, ஆனால் கோரப்பட்ட தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 

மேலும், இவ்விவகாரத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><p> 

இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மொத்த இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், 2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>கொழும்பின் நகரப் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு இத்திட்டம் பொருத்தமற்றது என அடையாளம் கண்ட பின்னர், அப்போதைய அரசாங்கம் அத்திட்டத்தை இரத்து செய்யத் தீர்மானித்தது.</p><p> 

2020 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இத்திட்டம் செலவுத் திறனற்றது எனச் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>மகிந்த&nbsp;வெளியிட்ட கடிதம்</h2><p> </p><p>

மேலும், அப்போதைய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்திலும் இது செலவுத் திறனற்ற திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சர் மகிந்த ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட ஓர் அமைச்சரவைப் பத்திரத்தில் இத்திட்டம் நட்டத்தை ஏற்படுத்தும் திட்டம் என விவரிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babaa095-bf1f-4a37-b9c7-97e58c618bec/26-6a61c52ee19d4.webp' /></p><p> 

மேலும், இத்திட்டத்தை பாதியிலேயே இரத்து செய்வது ஊழலுக்கோ அல்லது மோசடிக்கோ இடமளிக்காது என்று பிமல் ரத்நாயக்க கூறினார். 

இந்தத் திட்டத்தை நிறுத்திய முடிவை மறுபரிசீலனை செய்வது, அதனை மீண்டும் தொடங்குவது அல்லது அதன் பொருளாதாரமற்ற தன்மையை பொருளாதார ரீதியாக சாத்தியமாக்குவது உள்ளிட்ட ஒன்பது பரிந்துரைகளை கணக்காய்வாளர் நாயகம் வழங்கியுள்ளார்.
</p><p>
 இருப்பினும்,கணக்காய்வாளர் நாயகம் அதனை மீண்டும் தொடங்குமாறு நேரடியாகப் பரிந்துரைக்கவில்லை. </p><p>&nbsp;தற்போதைய அரசாங்கமும் இவ்விடயத்தை இன்னும் மறுபரிசீலனை செய்து புதிய முடிவை எடுக்கவில்லை. 

கொழும்பில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்காக, பேருந்துகள் மற்றும் பாரம்பரிய இரயில் சேவைகளுக்குக் கூடுதலாக ஒரு புதிய பொதுப் போக்குவரத்து அமைப்பின் தேவை 2010-களின் முற்பகுதியில் கண்டறியப்பட்டது.
</p><p>
 மேலும் இந்த இலகுரக இரயில் திட்டம் ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டது. கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், பயண நேரத்தைச் சேமித்தல் மற்றும் மேற்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன. </p><p>

2.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்திற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. </p><p>

40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய இக்கடனில், 12 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் இலங்கை எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. </p><p>

2019 மே 23 அன்று, இலங்கையின் சார்பில் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜப்பானின் சார்பில் அப்போதைய இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகிரா சுகியாம, மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் தலைவர் புசடோ தனகா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமாய் குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T07:39:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டிய 626,755 டொலர்கள்: தீவிர விசாரணையில் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/postal-department-transaction-cid-investigation-1784787904"></link>
            <id>https://ibctamil.com/article/postal-department-transaction-cid-investigation-1784787904</id>
            <summary type="text">தபால் திணைக்களத்திற்கு சொந்தமான&amp;nbsp;626,755&amp;nbsp;அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட விடயம் தொடர்பில்&amp;nbsp;குற்றப் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தபால் திணைக்களத்திற்கு சொந்தமான&nbsp;626,755&nbsp;அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட விடயம் தொடர்பில்&nbsp;குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.&nbsp;</p><p>மேற்படி விடயம் தொடர்பில் தொடர் விசாரணைகள்&nbsp;வெளிவிவகார அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்க சேவைக்காக ஒதுக்கிய குறித்த நிதித்தொகை&nbsp;இலங்கை தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் அமைப்பு மூலம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்பது வெவ்வேறு கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று அறிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>மேலும் உலகளாவிய தபால் பரிவர்த்தனைகளுக்காக ‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்’&nbsp; வழங்கிய அதிகாரப்பூர்வ முகவரிக்கு அப்பாற்பட்ட ஒரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி இந்தப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3671060e-ccb9-4114-b7f0-61ca3c5d8ecb/26-6a61bef29acf5.webp' /></p><p>
வழக்கு தொடர்பான மின்னஞ்சல் தரவுகள், சேவையக அமைப்பு மற்றும் மடிக்கணினிகள் மேலதிக விசாரணைக்காக SLCERT-க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியாவில் அராஜகம்: விநாயகர் ஆலயத்தை அழித்து முளைக்கும் விகாரை - ஆறு.திருமுருகன் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aaru-thirumurugan-vihara-construction-work-kanyaya-1784788373"></link>
            <id>https://ibctamil.com/article/aaru-thirumurugan-vihara-construction-work-kanyaya-1784788373</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் நடைபெற்றநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக&nbsp; ஆறு.திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p>அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.</p><p></p><p>
</p><h2>தொன்மையான வரலாற்றுச் சின்னம்</h2><p>கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf00f99-80ad-48b8-9c30-b4c4915ee73d/26-6a61c09aac438.webp' /></p><p> 
ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவ தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள். </p><p>
கன்னியா வெந்நீரூற்றை பொறுத்த வரை சைவத்தழிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னமெனலாம். இத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.</p><p> 
சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச் சூழலைப் பயன்படுத்தி பௌத்த மயமாக்க முனைவதும் வேதனைதரும் செய்தியாகும்.</p><p></p><p> </p><h2>துரோகமான விடயம்</h2><p>
தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலை நிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம். </p><p>இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் யாம் அன்போடு வேண்டுகின்றோம்.
கன்னியா வெந்நீரூற்றுச் சூழலை சைவ சூழலிலிருந்து சைவ மக்களின் அடையாளங்களை தொடர்ந்து முற்றாக அழிப்பதும் அங்கே இருந்த வரலாற்று தடயங்களை மாற்றி அமைப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390b7fc5-47ff-498f-836d-fa3e42b272fe/26-6a61c09b619be.webp' /></p><p>கன்னியா வெந்நீரூற்றில் வழிபாடு செய்த விநாயகர் ஆலயத்தை முற்றாக அழித்துவிட்டு அந்த விநாயகர் ஆலயம் இருந்தது பௌத்த அடையாளம் உடைய இடம் என்று நீண்ட நாள்களாக ஆலயத்தை கட்ட அனுமதிக்காது காலம் கடத்துவது மிகுந்த வேதனைக்குரியது.</p><p> 
தற்போது கன்னியா வெந்நீரூற்று சூழலையே மாற்றி அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. </p><p>
எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தொல்லியல் திணைக்களத்தை சார்ந்தவர்களும் சகல அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்தால் சைவ மக்களின் சார்பில் நமது வேண்டுதலை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி வீட்டை நோக்கி வெறித்தனமான துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shots-fired-at-police-officer-s-house-1784790115"></link>
            <id>https://ibctamil.com/article/shots-fired-at-police-officer-s-house-1784790115</id>
            <summary type="text">
ஹம்பாந்தோட்டை - பெலியத்தவின் வலவல பகுதியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஹம்பாந்தோட்டை - பெலியத்தவின் வலவல பகுதியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

இதன்போது, குறித்த வீட்டில் உள்ள நுழைவாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி, திக்வெல்ல காவல்துறையில் பணியாற்றும் ஒரு கீழ்நிலை அதிகாரி என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6428fec6-fe86-4f26-ac6e-64710d7a18b0/26-6a61c022e8a0f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T07:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cannabis-and-2-motorcycles-seized-in-kilinochchi-1784788591"></link>
            <id>https://ibctamil.com/article/cannabis-and-2-motorcycles-seized-in-kilinochchi-1784788591</id>
            <summary type="text">கிளிநொச்சி - கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா
மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா
மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நபரொருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற
காவல்துறையினர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு (22) 11:45
மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.</p><p>இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட
நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் காவல்துறையினர் மீட்டனர்.</p><p></p><h2>கைப்பற்றப்பட்ட கஞ்சா</h2><p> அந்த உரப்பையைச்
சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49
கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33b0ba6-e6c0-4f11-9fd3-fc736cd6b13c/26-6a61b9e206c15.webp' /></p><p>
</p><p>மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த
இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p>எனினும்
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தப்பிச் சென்ற நபர்களைக்
கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><b><i>செய்தி - காண்டீபன், லின்ரன்&nbsp;</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-23T07:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/increased-liquor-prices-1784787751"></link>
            <id>https://ibctamil.com/article/increased-liquor-prices-1784787751</id>
            <summary type="text">

எரிபொருள் விலை உயர்வுக்கு இணையாக, நாட்டில் உள்ள சில மதுபான நிறுவனங்களும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

அதன்படி, நாட்டில் அதிகம் விற்பனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

எரிபொருள் விலை உயர்வுக்கு இணையாக, நாட்டில் உள்ள சில மதுபான நிறுவனங்களும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
</p><p>
அதன்படி, நாட்டில் அதிகம் விற்பனையாகும் மதுபானமான அதி விசேஷம் 750 மில்லி லீற்றர் போத்தலின் விலை 20 ரூபாவாலும் அதன் அரை போத்தலின் விலை ரூ. 10-ம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஏனையவற்றின் விலை</h2><p>

மேலும், ஒரு போத்தல் “ஓல்ட்” அரக்கின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06aaffea-f85e-4d63-8b90-2f5fbc5524f1/26-6a61b6158bdc5.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, ஒரு போத்தல் விஸ்கி மற்றும் பிராந்தியின் விலை ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>
இருப்பினும், பீர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T06:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர் போராட்டத்தால் பற்றி எரியும் டெல்லி- கடுமையான தண்டனை: பிரதமர் மோடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-modi-says-fast-track-courts-paper-leak-cases-1784782065"></link>
            <id>https://ibctamil.com/article/pm-modi-says-fast-track-courts-paper-leak-cases-1784782065</id>
            <summary type="text"> இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.வ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.</p><p>இந்தியாவின்&nbsp; நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p></p><h2>அரசின் முதன்மை இலக்கு</h2><p>இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more important than the welfare and future of our youth!<br><br>We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080135258142617785?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை! வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்."</p><p>

"இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p><p> நமது இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-rejects-bid-to-postpone-al-exam-1784785906"></link>
            <id>https://ibctamil.com/article/court-rejects-bid-to-postpone-al-exam-1784785906</id>
            <summary type="text">2026 உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனையின்றி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனையின்றி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.</p><p>மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோகந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>மனு தாக்கல்&nbsp;</h2><p>குறித்த மனு தொடர்பில் விரிவாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84becde1-14c7-48af-88ac-1bccd1ae73c1/26-6a61b134d299a.webp' /></p><p>இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிட்த்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-23T06:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-gets-stern-warning-in-parliament-1784783564"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-gets-stern-warning-in-parliament-1784783564</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள் குறித்த கேள்வியை எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரை நோக்கி, ''வினாவை கேட்ப்பதற்கு முன்னதாக அதற்கு தடை ஏற்படுத்தியுள்ளீர்கள்'' என குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம் என கூறினார்.
</p><p></p><h2>எதிர்க்கட்சி தலைவர்&nbsp;எதிர்ப்பு </h2><p>
மேலும் நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fdce0b-729b-47fe-bffc-3de82772236f/26-6a61a7ee5889d.webp' /></p><p>
இதன்போது சபாநாயகரின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p>

''நிலையியல் கட்டளைகளின்படி எந்த ஒரு உறுப்பினருக்கும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் குற்றம் சாட்ட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

முட்டாள் தனமாக உரையாற்றவேண்டாம் என நீங்கள் கூறிய விடயம் பொருத்தமற்றதாக பார்க்கப்படுகிறது.</p><p>

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நீங்கள் நிலையியல் கட்டளைக்கு ஏற்ப செயற்படுங்கள். கேள்விகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.</p><p>

இந்த உயரிய சபையில் உள்ள ஒருவருக்கு முட்டாள்தனம் என்று கூற வேண்டாம். அது பொருத்தமற்றது" என சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.</p><p></p><h2>பிமல் ரத்னாயக்கவும்&nbsp;கருத்து </h2><p>இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/432d52c5-4325-4f29-a408-2107d9df6b34/26-6a61ac30a16e6.webp' /></p><p>

''சபாநாயகரே இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்படுகின்றனர். இதுவரைகாலமும் நாடாளுமன்றில் மிகவும் மோசமாக அர்ச்சுனவைபோல எவரும் நேரத்தை வீணடித்து செயற்படவில்லை.</p><p>உளநோயாளர்கள் போலவே இவர்கள் நடந்துகொள்கின்றனர்.

ஒலிவாங்கியுளும் காணொளிகளிலும் இவர்களில் செயற்பாட்டை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாட்சியாளர்கள்.</p><p>
இவரின் செயற்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏளனமாக மற்றும் செயற்பாடு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவரின் அருகில் அமரமுடியாது என கடிதம் சமர்ப்பித்துள்ளார்.யாழில் இவரால் ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட நடத்தமுடியவில்லை.</p><p> 

எனவே நாங்கள் ஏன் பொறுமையாக இருக்கின்றோம் என்றால், அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் சிகிச்சை பெற்றால் சரிவரும் என கருதுகின்றோம்.
</p><p>
இங்கு பார்க்கும்போது அவர் ஒரு சபாநாயகரை எப்படி அழைக்கின்றார்?

கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாக முரண்பட்டுக்கொண்டாலும் தனிப்பட்டரீதியில் எவரும் சபாநாயகரை தாக்கி பேசவில்லை." என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T05:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gun-found-in-house-during-dengue-check-1784780997"></link>
            <id>https://ibctamil.com/article/gun-found-in-house-during-dengue-check-1784780997</id>
            <summary type="text">பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை காவல்துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>மீட்கப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>

இதனையடுத்து, காவல்துறையினரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7daa4d-a0a9-49e1-abff-8d194d53af80/26-6a61a1e5c1538.webp' /></p><p> </p><p>

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949"></link>
            <id>https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949</id>
            <summary type="text">இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.</p><p>அந்தவகையில், அடுத்த ஆண்டு முதல் வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விசேட தேவையுடையோர் </h2><p>மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf871de2-d32d-4b76-a2b6-05273cbfc9c6/26-6a619b19b897a.webp' /></p><p>மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுகின்றது.</p><p> மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.</p><p></p><h2>மெட்ரோ சேவை அறிமுகம்</h2><p>இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed59e2c0-cc67-4c51-b40c-2b5826692329/26-6a619b18d2b38.webp' /></p><p>

வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T05:07:58+00:00</updated>
        </entry>
    </feed>
