<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-15T09:52:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/presidential-secretariat-responds-to-basl-request-1786784586"></link>
            <id>https://ibctamil.com/article/presidential-secretariat-responds-to-basl-request-1786784586</id>
            <summary type="text">கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான காணொளி பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்குப் ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான காணொளி பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்குப் ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.</p><p>ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவின் கையொப்பத்துடன் பதில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தக் கடிதத்தில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ உரைகளின் தொகுக்கப்படாத காணொளி பதிவுகள் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்றே அச்சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>எடுக்கப்படவுள்ள நடவடிக்கை</h2><p>

கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய தரப்பினரின் கருத்துரைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அடங்கிய பதிவுகள், உரிய உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4af1da0-3fd8-47cc-9a20-d4bde34ee5ba/26-6a803251d817d.webp' /></p><p> </p><p>

மேலும், குறித்த காணொளி காட்சிகளை முறைப்படியும் சரியான முறையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் அக்கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை&nbsp;ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான காணொளி பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது.</p><p></p><h2>ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை</h2><p> </p><p>குறித்த கலந்துரையாடலின் காணொளி பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23baaa0f-c9c0-4fdf-85a9-9a7d7a539ee1/26-6a8032528cfab.webp' /></p><p>அதன்படி, கலந்துரையாடல் முழுவதும் இடம்பெற்ற அனைத்து உரையாடல்கள், அவதானிப்புகள் மற்றும் பதில்கள் உட்படச் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் இறுதி கருத்துகளும் அடங்கிய முழுமையான, தொகுக்கப்படாத காணொளி பதிவை வழங்குமாறு அச்சங்கம் கோரிய நிலையில் இந்த பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-80th-independence-day-celebrations-in-jaffna-1786782458"></link>
            <id>https://ibctamil.com/article/india-80th-independence-day-celebrations-in-jaffna-1786782458</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.யாழ்ப்பாணம் கச்சேரி - ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.</p><p>யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று (15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.&nbsp;</p><p>அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.&nbsp;</p><p></p><h2>சுதந்திர தின நிகழ்வு</h2><p>இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf95b92-8e44-40eb-ab7a-ff457ff91c14/26-6a8029172b624.webp' /></p><p>இதேவேளை இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.</p><p>இந்தியாவின் சுதந்திர தினமான இன்று (15) சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5352ee0-3008-4849-bfb1-d381fa1ed1b1/26-6a802917ec841.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4383a5d5-a1c4-437d-89d2-53475701a627/26-6a802918ce106.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T08:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/largest-kidney-stone-removed-trincomalee-hospital-1786771872"></link>
            <id>https://ibctamil.com/article/largest-kidney-stone-removed-trincomalee-hospital-1786771872</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்த சத்திர சிகிச்சையானது&nbsp; நேற்று (14.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>இதன்போது&nbsp; 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் திருகோணமலை வைத்தியர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h2>&nbsp;3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல்</h2><p>இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00695b54-ac11-4cd8-a55b-ba60bedd3eab/26-6a80039fb7866.webp' /></p><p>எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் ஆகும்.&nbsp;</p><p>
</p><p>இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p>
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0ab6e6-8ed1-40b4-a238-f402e02c73a6/26-6a8003a06d1c7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T08:19:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்துக்குள்ளான இலங்கை கடற்படை படகு ! மீட்கப்பட்ட 11 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/naval-ship-accident-in-angulana-sea-1786780556"></link>
            <id>https://ibctamil.com/article/naval-ship-accident-in-angulana-sea-1786780556</id>
            <summary type="text">புதிய இணைப்புஅங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கடற்படை படகில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கடற்படை படகில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>அங்குலான அருகே கடலில் டோரா என்ற சிறிலங்கா கடற்படை படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
கிடைத்த தகவலின் அடிப்படையில், படகில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.</p><p></p><h2>மீட்பு பணிகள்&nbsp;</h2><p>

இதன்படி, படகில் உள்ளவர்களை மீட்க இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea60b006-af87-43b2-bec7-044311567432/26-6a801f08c6895.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, விபத்துக்குள்ளான படகை கண்காணிப்பதற்காக விமானப்படையின் MI 17 ரக உலங்குவானூர்தியும் பெல் 412 ரக விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T08:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை வினாத்தாள் தொடர்பான சர்ச்சை! விசாரணையை தொடங்கிய சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-level-question-paper-incident-cid-investigates-1786778188"></link>
            <id>https://ibctamil.com/article/a-level-question-paper-incident-cid-investigates-1786778188</id>
            <summary type="text">

ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வினாத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வினாத்தாள் தொடர்பான ஒரு பிரச்சினை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த விடயத்தை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
சம்பந்தப்பட்ட மையத்தில் வினாத்தாள் பைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், வினாத்தாள்கள் எதுவும் கசிந்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பரீட்சைப் பணிகள்</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களமும் காவல்துறையினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66650ca-3a30-4871-baa1-3f7ba82929a8/26-6a8014f7ed58d.webp' /></p><p>
</p><p>
இந்த ஒரு சம்பவத்தைத் தவிர, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வேறு எந்தச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சைப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T07:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/caa-cuts-polythene-use-by-10-million-units-in-sl-1786776205"></link>
            <id>https://ibctamil.com/article/caa-cuts-polythene-use-by-10-million-units-in-sl-1786776205</id>
            <summary type="text">இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நாடளாவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாடளாவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்த (CAA) தீவிர நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.</p><p></p><h2>சுட்டிக்காட்டிய ஜனாதிபதி </h2><p>மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை மேலும் குறைக்கும் நோக்கில் பொலித்தீனுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டம் தொடரும் எனவும் அந்த அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e934b434-7d85-44f7-ad0b-36306790b7d5/26-6a800ea0d99ba.webp' /></p><p>அத்துடன் உணவுப் பொருட்கள் சார்ந்த தரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தீவிர பங்களிப்பின் தேவையையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும் நெடுந்தூரப் பேருந்துகள் தரிக்கும் உணவகங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் உணவகங்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T07:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914</id>
            <summary type="text"> புதிய இணைப்புமுக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் என்பவருக்கு எதிராக 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் என்பவருக்கு எதிராக 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மூலம் சட்டவிரோத சொத்துக்களைக் குவித்துள்ளதாக காவல்துறை சந்தேகிக்கும் நிலையில் மேலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களின் கீழ் விசாரணைகள் தொடரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8c344c6-7e48-4af6-9b40-a0cec15b31a3/26-6a8009e3c0a8b.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h5>ஈரான் - அமெரிக்கா போரின் முக்கிய தாக்குதல் காட்சிகள் - ஷிரான் பாசிக் CCIB யிடம் ஒப்படைப்பு</h5><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p> 

 கடந்த மே மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச காவல்துறையினரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76dcb751-4b5b-4e93-82a4-5bf96e009a7f/26-6a7fc03f8c963.webp' /></p><p>கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>

அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரும் அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-aGqT2s-z34" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு செல்லும் பெருந்தொகை உர மானியம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fertilizer-subsidy-for-farmers-monsoon-season-1786775177"></link>
            <id>https://ibctamil.com/article/fertilizer-subsidy-for-farmers-monsoon-season-1786775177</id>
            <summary type="text">இந்த ஆண்டு சிறுபோகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக சுமார் ரூபா 1,426 மில்லியன் தொகையை விநியோகிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு சிறுபோகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக சுமார் ரூபா 1,426 மில்லியன் தொகையை விநியோகிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன்படி, சிறுபோகத்தில் 4,74,068 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் அறுவடை செய்த 7,28,185 விவசாயிகளும், நெல் நிலங்களில் 6,440 ஹெக்டேர் பரப்பளவில் இதர களப் பயிர்களைச் அறுவடை செய்த 14,677 விவசாயிகளும் இந்நிதிப் பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p></p><h2>அதிகரிக்கப்பட்ட உர மானியம்</h2><p>

இந்நிலையில், சிறுபோகத்திலன் தொடக்கத்திலேயே உர மானியத் தொகையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/485ee695-1c47-4725-8ff0-558f3ee04a14/26-6a80093b18fdf.webp' /></p><p>
</p><p>
அதனடிப்படையில், நெல் நிலங்களில் இதர பயிர்களைச் அறுவடை செய்வதற்கான மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 15,000-லிருந்து ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறப்புத் திட்டம்</h2><p>
</p><p>
மேலும், சந்தையில் உரத் தட்டுப்பாடு ஏற்படுவததைத் தவிர்க்கவும், விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e085279-8048-4bcf-a658-a8518e3b6328/26-6a80093bc4966.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள 566 விவசாய சேவை மையங்கள் மூலம் 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை ரூ. 10,200 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T06:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பு : படைத்தரப்பு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pointpedro-post-office-land-under-military-control-1786773209"></link>
            <id>https://ibctamil.com/article/pointpedro-post-office-land-under-military-control-1786773209</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக
தமிழ்த் தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக
தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் படையினர் ஏமாற்றும் விதமாக செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>நேற்று (14) இராணுவ
கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக பழைய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>உறுதியளித்த&nbsp;கௌசல்யா ஆரியரத்ன </h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம்
உறுதியளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a10dbe8-b183-4cce-a976-528a23a397f9/26-6a8003098cac8.webp' /></p><p> </p><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து
நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்
விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது
தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடத்தை
விடுவிக்காது தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு அருகாமையில் உள்ள சிறிய
நிலப்பரப்பினை வழங்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இன்றைய களவிஜயத்தின் போது குறித்த ஏமாற்று அம்பலமாகியுள்ளது.</p><p>
குறித்த இடத்தில் அஞ்சல் அலுவலகத்தை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில்
அங்கு அஞ்சல் நிலைய கட்டிடத்தை அமைக்க முடியாது என தொடர்புடைய அஞ்சல் நிலைய
கட்டுமான பொறியியல் துறை தரப்பினரால் கூறப்பட்டிருப்பதாகவும், பெருத்தமற்ற
சிறய இடத்தை விடுவிக்கவே இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை அஞ்சல் நிலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;காணியை விடுவிக்க நடவடிக்கை&nbsp;</h2><p>படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி
விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான
அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83eb0831-7d83-41d3-99da-98fd605e5611/26-6a800308b0a3b.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் மக்களின் காணிகள் மக்களுக்கே என தேசிய
மக்கள் சக்தி தரப்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் செயற்பாட்டில் அதனை
நடைமுறைப்படுத்த இதுவரை எதையும் செய்யவில்லை.</p><p>
மாறாக மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் காணிகள்
மற்றும் அரச காணிகள் என எதனையும் விடுவிக்க இந்த அரசாங்கம் எதுவித
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
</p><p>
காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில்
அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில்
தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-15T06:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஆபத்தான நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-plotting-murder-prison-officials-1786772463"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-plotting-murder-prison-officials-1786772463</id>
            <summary type="text">


சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் அடங்கிய பல குரல் பதிவுகளுடன், பொரளை வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>


சிறைச்சாலை அதிகாரிகளை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் அடங்கிய பல குரல் பதிவுகளுடன், பொரளை வனாத்தமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த பாதாள உலக கும்பல் உறுப்பினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
வெலிக்கடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் சட்டவிரோதப் பொருட்களை எறிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையிலிருக்கும் "போல சுரேஷ்" என்பவரது வீட்டில், சஹாஸ்புர காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சந்தேகநபர் பிடிபட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இந்தச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், 2025 ஜூலை 7 அன்று கல்கிஸ்ஸ காவல் பிரிவிற்குட்பட்ட வட்டலப்பல பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இவரே என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ac0b96-887b-41ed-b059-6714ef127b3a/26-6a7fff510bc63.webp' /></p><p>
</p><p>
மேலும், கடந்த 6 ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T06:03:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-boat-washed-ashore-in-chilaw-1786770942"></link>
            <id>https://ibctamil.com/article/indian-boat-washed-ashore-in-chilaw-1786770942</id>
            <summary type="text">இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15.08.2026) அதிகாலை சிலாபம் - இரணைவில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15.08.2026) அதிகாலை சிலாபம் - இரணைவில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த படகு கடற்கரையை அண்மித்த பகுதியில் பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>படகில் பயணித்தவர்கள் அல்லது வேறு நபர்கள் அதிலிருந்து இறங்கி கரையை அடைந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><h2>கரையொதுங்கிய இந்திய படகு</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த படகை பாதுகாப்பிற்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b35a547-708f-4e73-a7a5-aa03d97f4974/26-6a7ffd4390d6c.webp' /></p><p>படகின் உரிமை, அது எந்தப் பகுதியில் இருந்து வந்தது, அதில் பயணித்தவர்கள் யார், எவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் வந்து கரை ஒதுங்கியது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், படகில் ஏதேனும் பொருட்கள் உள்ளனவா, அதில் பயணித்தவர்கள் தொடர்பான தடயங்கள் காணப்படுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP இ</b></a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் ஓட்டியபடி நேரலையில் வந்த நீதி அமைச்சர்! கிளப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/video-of-harshana-nanayakkara-driving-live-1786770978"></link>
            <id>https://ibctamil.com/article/video-of-harshana-nanayakkara-driving-live-1786770978</id>
            <summary type="text">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஓகஸ்ட் 13, 2026 அன்று வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் காணொளியொன்றை ஒளிபரப்பியதாகக் கூறி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஓகஸ்ட் 13, 2026 அன்று வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் காணொளியொன்றை ஒளிபரப்பியதாகக் கூறி சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
ஃபேக்ட் கிரெசெண்டோ சிறிலங்கா என்ற நிறுவனம் நடத்திய உண்மை சரிபார்ப்பில், இந்தக் காணொளி 2023 ஆண்டு ஓகஸ்ட் 13, அன்று பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p> 

அப்போது அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், தேசிய மக்கள் சக்தியின் (NPP) மொரட்டுவ தொகுதி அமைப்பாளராக மட்டுமே பணியாற்றியிருந்தார்.</p><p></p><h2>தவறான&nbsp;குற்றச்சாட்டு </h2><p>

காணொளியில் அவர் குறிப்பிட்ட ஓகஸ்ட் 13 என்ற திகதியை அடிப்படையாகக் கொண்டு, இது இந்த ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fjvp.moratuwa%2Fvideos%2F112846848551901%2F&show_text=false&width=560&t=0" width="560" height="316" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

ஆனால், ரிவர்ஸ் இமேஜ் (Reverse Image) தேடலின் மூலம் இந்தக் காணொளி 2023-ஆம் ஆண்டிலேயே இணையத்தில் பதிவேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
மேலும், அவரே வாகனத்தை ஓட்டியபடி கமராவைப் பிடித்துப் பதிவு செய்யவில்லை என்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபரே கமராவை இயக்கியுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அவர் அமைச்சரான பிறகு வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T05:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தாய் : இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bako-saman-refuses-to-pay-last-respects-to-mother-1786769131"></link>
            <id>https://ibctamil.com/article/bako-saman-refuses-to-pay-last-respects-to-mother-1786769131</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p>இந்தநிலையில் வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதை மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

இருப்பினும், அதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலை</h2><p>கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீ​வவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e33230fe-fe86-44d4-9397-461a02ce7cc4/26-6a7ff3db3047a.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் பெக்கோ சமனுக்கு அவரது தாயின் கொலை குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அறியப்படுத்திய போது, தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.</p><p> 

பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரின் தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்தமையே இந்தக் கொலைக்கான மற்றொரு காரணம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:15:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/powerful-earthquake-off-coast-of-indonesia-2-dead-1786766441"></link>
            <id>https://ibctamil.com/article/powerful-earthquake-off-coast-of-indonesia-2-dead-1786766441</id>
            <summary type="text">கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15.08.2026) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து டஜன் கணக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15.08.2026) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) தெரிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கத்தையடுத்து இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீற்றருக்கும் குறைவான உயரம் கொண்ட சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>இருவர் பலி</h2><p>
</p><p>
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர், அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8792b702-a7f8-47ca-a0c1-7c62b6e8a145/26-6a7febe6b67b7.webp' /></p><p>எனினும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>BNPB வெளியிட்ட அறிக்கையின்படி, நிலநடுக்கத்தால் சிக்கா (Sikka) ரீஜென்சி பகுதியில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>
இந்தோனேசியாவின் புவி இயற்பியல் முகமையான BMKG வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. </p><p>இது கடலுக்கு அடியில் சுமார் 15 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-for-all-drivers-from-police-1786766189"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-for-all-drivers-from-police-1786766189</id>
            <summary type="text">பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து தரிப்பிடங்களில் தனியார் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு&nbsp;உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள்</h2><p>

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6554e362-c7e2-4233-8843-e92bd700a932/26-6a7fecf353332.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் 80வது சுதந்திர தினம் : தேசியக் கொடியேற்றிய முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-minister-vijay-hoisting-national-flag-today-1786762132"></link>
            <id>https://ibctamil.com/article/chief-minister-vijay-hoisting-national-flag-today-1786762132</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றினா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.</p><p>

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால், அவர் இன்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9933268b-3947-46e7-b702-cf4dbc4c6027/26-6a7fea86bb62a.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று (15) அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.</p><p>சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளார்.
</p><p>
அவர் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p> </p><p>இதேவேளை தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d5fd85-5940-4f5a-b946-07c0e82b5f8c/26-6a7fd628320be.webp' /></p><p> 

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>வளர்ச்சியடைந்த இந்தியா</h2><p>தனது உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய பிரதமர் உரையாற்றினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa45227-dcbb-47a7-bad7-392c3e4b5d1c/26-6a7fd628dc842.webp' /></p><p>ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக துணிச்சலுடன் போராடி, தியாகம் செய்து, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.</p><p> 

அவர்கள் கண்ட கனவுகள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.</p><p>140 கோடி இந்தியர்களின் சக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியா புதிய உச்சங்களை நோக்கி முன்னேறி வருகிறது. வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து முன்னேறட்டும்"என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி : விசாரணையில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-textbooks-worth-rs-8lakh-exported-to-india-1786762927"></link>
            <id>https://ibctamil.com/article/missing-textbooks-worth-rs-8lakh-exported-to-india-1786762927</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் மாயமான சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையில் குறித்த புத்தகங்கள் விநியோக மையங்களுக்குச் சென்றடையாமல் பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்கப்பட்ட சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த புத்தகங்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்காக பியகம, சியம்பலாபே, சம்ருத்தி மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் வேறொரு நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p>பியகம பகுதியில் வைத்து புத்தகங்களை விநியோகத்திற்காகப் பொறுப்பேற்ற பாரவூர்தி சாரதி ஒருவர், அவற்றை விநியோகிக்காமல் தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.</p><p>பின்னர் குறித்த புத்தகங்களை பழைய பேப்பர் சேகரிப்பாளரிடம் 1,600 கிலோகிராம் எடைக்கு 47,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3941f73e-2e7f-40e3-98d8-81174f909cc5/26-6a7fe119ddbf8.webp' /></p><p>
அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்கள் பேலியகொட பகுதியில் உள்ள காகிதங்களை அரைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அரைக்கப்பட்ட பின்னர் சில நாட்களில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, 31 வயதுடைய சந்தேகநபரான பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட பாரவூர்தி சாரதி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்து.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:51:48+00:00</updated>
        </entry>
    </feed>
