<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-21T19:17:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அணுமையம் மீது மிக விரைவில் தாக்குதல்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-hit-iran-nuclear-site-soon-trump-1784653839"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-hit-iran-nuclear-site-soon-trump-1784653839</id>
            <summary type="text">ஈரானின் அணுஆயுதச் செறிவூட்டல் இயந்திரங்கள் (Nuclear centrifuges) அமைந்திருப்பதாகக் கருதப்படும் பகுதியின் மீது அமெரிக்கா மிக விரைவில் கடுமையான தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுஆயுதச் செறிவூட்டல் இயந்திரங்கள் (Nuclear centrifuges) அமைந்திருப்பதாகக் கருதப்படும் பகுதியின் மீது அமெரிக்கா மிக விரைவில் கடுமையான தாக்குதலை நடத்தும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அணுஉலைச் செறிவூட்டல்</h2><p>இதன்போது நடான்ஸ் (Natanz) பிராந்தியத்தில் உள்ள பிக்ஏக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதிக்கு ஈரான் தனது அணுஉலைச் செறிவூட்டல் இயந்திரங்களை மாற்றியுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “மிக விரைவில் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4877d59-12e1-43cf-a946-68715d87dfdd/26-6a5fb73e3a567.webp' /></p><p>

அதிலிருந்து தப்பிப்பதற்கு ஈரானால் எதுவுமே செய்ய முடியாது. </p><p>

வழக்கமாக இதுபோன்ற இராணுவத் திட்டங்களை நான் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன்.</p><p></p><h2>கடுமையாகத் தாக்குதல்</h2><p>
</p><p>
ஈரானால் ஏதேனும் செய்ய முடியும் என்று நான் நினைத்திருந்தால் இதை ஒருபோதும் கூறியிருக்க மாட்டேன் ஆனால் நாங்கள் விரைவில் அப்பகுதியைக் இலக்கு வைத்து மிகவும் கடுமையாகத் தாக்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b684a9-fcb2-446a-a7ea-4d5ff0db3758/26-6a5fb73f20ec6.webp' /></p><p>அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் அணு மற்றும் இராணுவ இலக்குகளை இலக்கு வைத்து தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.</p><p>

இந்த நிலையில், நிலத்தடி மற்றும் மலைப் பகுதிகளில் ஈரான் மறைத்து வைத்துள்ளதாகக் கருதப்படும் முக்கிய அணுசெறிவூட்டல் மையங்களை அழிப்பதே அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பதை ட்ரம்பின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவம்பர் தேர்தலைக் குறிவைக்கும் ஈரான்: ட்ரம்பின் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-iran-trying-to-affect-us-midterm-polls-1784649400"></link>
            <id>https://ibctamil.com/article/trump-iran-trying-to-affect-us-midterm-polls-1784649400</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை அச்சுறுத்துவதன் மூலம் வரவிருக்கும் நவம்பர் மாத காங்கிரஸ் இடைத்தேர்தலில் தானும் தனது குடியரசுக் கட்சியும் வெற்றி பெறுவதைப் பாதிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை அச்சுறுத்துவதன் மூலம் வரவிருக்கும் நவம்பர் மாத காங்கிரஸ் இடைத்தேர்தலில் தானும் தனது குடியரசுக் கட்சியும் வெற்றி பெறுவதைப் பாதிப்பதற்கு ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்தத் தேர்தல்களில் ஈரான் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை நிராகரித்துள்ள ட்ரம்ப், நான் சரியானதை மட்டுமே செய்யப் போகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், இந்தத் தேர்தலை ஈரான் மீதான போர் தொடர்பான விவகாரத்துடன் தொடர்புபடுத்தி என்னால் யோசிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>பெரும் அதிருப்தி</h2><p>அத்தோடு மக்கள் எனது நடவடிக்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றே நான் நினைக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4992be84-08bb-4894-b401-c6819d5698b0/26-6a5fa53c41fda.webp' /></p><p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர், அமெரிக்காவிற்குள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து வருவதும் அங்குப் பெரும் அசௌகரியத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது : காவல் நிலையம் விரைந்த சோனியா காந்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/onia-gandhi-visited-the-police-station-1784657477"></link>
            <id>https://ibctamil.com/article/onia-gandhi-visited-the-police-station-1784657477</id>
            <summary type="text">ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார்.
</p><p>
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>&nbsp;முக்கிய தலைவர்கள் கைது&nbsp;</h2><p>&nbsp;தொடர்ந்து பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fad1a06-648b-4bc2-974c-48e44a957636/26-6a5fb9b160477.webp' /></p><p>



பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதின்போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>

தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையறிந்த சோனியா காந்தி, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட பிரியங்கா காந்தியை சென்று பார்த்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போருக்கு மத்தியில் ஈரானுடன் பேச்சு :ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-has-no-interest-in-meeting-with-iran-1784651650"></link>
            <id>https://ibctamil.com/article/us-has-no-interest-in-meeting-with-iran-1784651650</id>
            <summary type="text">&#039;அர்த்தமுள்ள&#039; அணுசக்திப் பேச்சுவார்த்தைகளுக்கு தெஹ்ரான் தயாராகும் வரை, ஈரானுடன் பேசுவதில் வோஷிங்டனுக்கு &#039;ஆர்வமில்லை&#039; என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>'அர்த்தமுள்ள' அணுசக்திப் பேச்சுவார்த்தைகளுக்கு தெஹ்ரான் தயாராகும் வரை, ஈரானுடன் பேசுவதில் வோஷிங்டனுக்கு 'ஆர்வமில்லை' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(21) தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓவல் அலுவலகத்தில் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுடன் நடந்த சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், அமெரிக்காவைச் சந்திக்க ஈரான் 'தீவிரமாக' விரும்புவதாகவும், ஆனால் வோஷிங்டன் விரும்பும் வகையான உரையாடலை அது இன்னும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.</p><h2>அவர்கள் சந்திக்க மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள்</h2><p>&nbsp;"அவர்கள் சந்திக்க மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் அர்த்தமுள்ள வகையில் சந்திக்கத் தயாராகும் வரை, எங்களுக்கு அதில் கூட எந்த ஆர்வமும் இல்லை," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7b488da-8e72-4b11-b2d8-7d7b853dbb5a/26-6a5fa1daa72d7.webp' /></p><p>

</p><h2>மிகக் கடுமையாக அந்தப் பகுதியைத் தாக்குவோம்</h2><p>'ஈரான் பிக்காக்ஸ் மலைக்கு அணுசக்தி சென்ட்ரிஃபியூஜ்களை நகர்த்தியுள்ளதா?' என்று கேட்டதற்கு, ட்ரம்ப், "ஆம், அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது குறித்த எந்த பதிவும் எங்களிடம் இல்லை," என்று பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/585ae53b-33bd-46a9-9e4a-852829ae7038/26-6a5fa1db56893.webp' /></p><p>

</p><p>பொதுவாக, நான் அப்படிச் சொல்ல மாட்டேன். அவர்களால் அதைப் பற்றி ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைத்தால், நான் ஒருபோதும் அப்படிச் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் மிக விரைவில், மிகக் கடுமையாக அந்தப் பகுதியைத் தாக்குவோம்," என்று அவர் மேலும் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T16:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விஷமிகள் கைவரிசையால் பற்றியது தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-in-jaffna-1784649088"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-in-jaffna-1784649088</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை அண்மித்த பகுதியில் இன்றையதினம் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.

மருதங்கேணி
பருத்தித்துறை வீதிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை அண்மித்த பகுதியில் இன்றையதினம் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
மருதங்கேணி
பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால்
வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.</p><p>&nbsp;அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேய்ச்சல் தரைகள், வயல்
நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T16:13:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை செல்ல தாய் மற்றும் சகோதரனுடன் பேருந்தில் ஏறியவேளை சிறுமிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-killed-by-bus-in-dickwella-1784647651"></link>
            <id>https://ibctamil.com/article/girl-killed-by-bus-in-dickwella-1784647651</id>
            <summary type="text">மாத்தறை திக்வெல்ல, கொட உட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்தில் ஏற முயன்ற 6 வயது பள்ளிச் சிறுமி, பேருந்திலிருந்து தவறி விழுந்து பின் சக்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை திக்வெல்ல, கொட உட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்தில் ஏற முயன்ற 6 வயது பள்ளிச் சிறுமி, பேருந்திலிருந்து தவறி விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாக திக்வெல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமி ஆவார்</p><p>அவர் திக்வெல்ல வடக்கு கல்லூரியில் முதலாம் தரத்தில் படித்து வந்தார். காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக, தனது தாய் மற்றும் பாலர் பள்ளி வயதுடைய தனது தம்பியுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.
</p><p>
</p><h2>பேருந்தில் ஏறியவேளை நிகழ்ந்த அனர்த்தம்</h2><p>அதே நேரத்தில், மாத்தறையிலிருந்து மிதெனியாவுக்கு வந்த தனியார் பேருந்தில் முன்பக்கக் கதவு வழியாக ஏற அவர்கள் முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a449de8-5d1f-4e4d-a741-8a660b90585e/26-6a5f9272365ef.webp' /></p><p>
முதலில் தாயும் சகோதரனும்ம் பேருந்தில் ஏற, இரண்டாவதாக அந்தச் சிறுமி ஏறியபோது, ​​பேருந்து முன்னோக்கி நகர்ந்ததாகவும், அப்போது அவள் அதிலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தின் அடியில் நசுங்கிப் போனதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>
இந்த விபத்தில் அந்தச் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909559cb-9428-4aa2-802e-a4bd2aa25e9c/26-6a5f9272dc24d.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T15:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அரச சார்பற்ற அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-ngo-development-projects-in-jaffna-1784645540"></link>
            <id>https://ibctamil.com/article/australian-ngo-development-projects-in-jaffna-1784645540</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற
நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
யாழ் ஊடக அமையத்தில் இன்று(21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத்
தெரிவித்தார்.&nbsp;</p><h2>கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்</h2><p>மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர்
சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு தாம்
நிறைவு செய்துள்ளதாகவும், குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த
உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு
கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள்
கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள
திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e94dbb2-beca-4e10-b685-8339cc448c82/26-6a5f8a21c5584.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும்
தெரிவித்த டேஷ் பாலசுப்பிரமணியம் இதன்மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய
மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத்
திட்டங்களை ஏற்படுத்தும் நீண்டகால இலக்கினைக் கொண்டிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T15:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/my-last-days-in-parliament-mp-archchuna-1784639808"></link>
            <id>https://ibctamil.com/article/my-last-days-in-parliament-mp-archchuna-1784639808</id>
            <summary type="text">தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில் இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில் இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது கடைசி நாட்களைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>

"நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க போவதில்லை. 

இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்.</p><h2>தவறான எண்ணத்தை உருவாக்கும்</h2><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு ஓசல ஹேரத் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0806190-de82-43cc-a34c-b74a684a2df8/26-6a5f77edae741.webp' /></p><p>மேலும் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்தும் விளக்கம் வழங்கியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணை : வலியுறுத்தி நாளை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demanding-international-investigation-chemmani-1784644084"></link>
            <id>https://ibctamil.com/article/demanding-international-investigation-chemmani-1784644084</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி
நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி
நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பாக வடக்கு
கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்</h2><p>போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள்
அகழப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி
விசாரணை வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ad41b-a01b-43ca-9779-e30e059abb81/26-6a5f83d29b52c.webp' /></p><p>&nbsp;தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை
மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள்
அதிருப்தியளிக்கின்றன.</p><p></p><h2>செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்</h2><p> </p><p>நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களுக்கு ஏமாற்றும் அரசின்
கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமாந்து போகக்கூட்டது. அந்த வகையில்
நாளையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட
வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை
ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுக்கவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1008f1b7-2fed-4030-9835-f94716d9651a/26-6a5f841d1c9a3.webp' /></p><p> காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போராட்டத்தில் தமிழ்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக
பிரதிநிதிகள், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் -எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:36:08+00:00</updated>
        </entry>
    </feed>
