<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-12T15:18:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இன்றுமாலை விபத்து : ஒருவர் பலி : மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-tipper-and-three-wheeler-collision-1786545405"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-tipper-and-three-wheeler-collision-1786545405</id>
            <summary type="text">வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சென்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
வவுனியாவில் இருந்து சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு
பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கர
வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.</p><h2>டிப்பர் -முச்சக்கரவண்டி மோதி விபத்து</h2><p>விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்தநிலையில் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2344b2d6-f466-4f61-ae6d-1dacd206cf9f/26-6a7c8b48b0873.webp' /></p><p>

விபத்து தொடர்பாக உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T15:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இதுவரை 530 என்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786543354"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786543354</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது. 

இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது.</p><p> 

இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுப்பு</h2><p> </p><p>

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbf6f9c-b345-4f34-b68f-91465474a7eb/26-6a7c82dd61f57.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:27:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயகத்தின் மண்வாசனையை உலகுக்கு எடுத்துச் சென்ற IBC தமிழின் அம்மான் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ibc-tamil-amman-s-golden-iswaran-passed-away-1786544171"></link>
            <id>https://ibctamil.com/article/ibc-tamil-amman-s-golden-iswaran-passed-away-1786544171</id>
            <summary type="text">IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...

தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...
</p><p>
தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், கிராமிய மொழிநடையையும், மண்ணின் மண்வாசனையையும் உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன் காலமானார்.</p><p>

‘அம்மான்’ என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல. 

தாயகத்தின் கிராமிய சமூகத்தில், பெரும் விவசாயிகளாகவும், வயது முதிர்ந்த பின்னரும் சமூகத்தில் ஆளுமையுடன் மதிப்புடன் திகழ்ந்தவர்களையும் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்த பாரம்பரியப் பெயராக ‘அம்மான்’ விளங்கியது.</p><p></p><h2>தனித்த அடையாளம்</h2><p>
அந்தப் பெயருக்கே ஐரோப்பியத் தமிழர் மத்தியில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியவர் பொன். ஈஸ்வரன்.

கலையோடு பிறந்த அற்புதமான கலைஞராகத் திகழ்ந்த அம்மான், தனது இளமைக்காலங்களில் பெண்வேடம் ஏற்று மேடைகளில் சிறப்பாக நடித்ததுடன், வில்லிசை, குறும்படங்கள், மேடை நாடகங்கள் என பல்வேறு கலைத் தளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1105e-8a0d-4839-989f-71d802f4ad9b/26-6a7c802f269af.webp' /></p><p>
</p><p>
தாயகத்தின் மீதும், தாயக மக்களின் மீதும், தலைவன் மீதும் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த அவர், தனது கலைப் படைப்புகளிலும் பேச்சிலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.
</p><p>
குறிப்பாக IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியில் அவரது இயல்பான நடைமுறைப் பேச்சும், கிராமிய நகைச்சுவையும், தாயகத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலித்த உரையாடல்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.</p><p>

அவரது பேச்சு நடையை ரசித்த இளைய தலைமுறையினர், வீட்டில் தமது பெற்றோருடன்கூட அம்மானின் பாணியில் பேசும் அளவுக்கு அவரது பாத்திரமும் பேச்சுவழக்கும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

காலப்போக்கில் மறைந்து வரும் பழம்பெரும் கிராமியச் சொற்களைத் தேடிப்பிடித்து, அவற்றை தனது நிகழ்ச்சிகளில் இயல்பாகப் பயன்படுத்தியதில் அம்மான் பொன். ஈஸ்வரன் தனித்துவமானவர்.</p><p></p><p> </p><h2>‘அம்மான்’ பொன். ஈஸ்வரன்</h2><p>

தாயகத்தின் குச்சுக்கிராமங்களின் பேச்சுமொழி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மண்ணின் மண்வாசனையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
</p><p>
வில்லிசை முதல் மேடை நாடகங்கள் வரை நீண்ட அவரது கலைப்பயணம், இறுதியில் IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் ஊடாக புதிய தலைமுறையினரிடமும் சென்றடைந்தது.</p><p>

IBC தமிழை இறுதிவரை ஆத்மார்த்தமாக நேசித்த அம்மான் பொன். ஈஸ்வரனின் மறைவு, தாயகக் கலைத்துறைக்கும், கிராமியக் கலை மரபுக்கும், அவரை நேசித்த தமிழர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
</p><p>
தனது பேச்சால் சிரிக்க வைத்தும், தனது கலை மூலம் தாயகத்தை நினைவூட்டியும், மறைந்து வரும் கிராமியச் சொற்களையும் வாழ்வியலையும் தனது குரலால் பதிவு செய்தும் சென்ற ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன், இனி நினைவுகளில் மட்டுமே வாழும் ஒரு அழியாத கலைக் குரலாக இருப்பார்.
</p><p>
அவரது மறைவுக்கு IBC தமிழ் குடும்பமும், உலகத் தமிழர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானம் மாற்றப்பட்ட விவகாரம் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல்கள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

"நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன்.
 அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்க வைக்க விரும்பினர்,""அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும்." என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>"உண்மையில் நான் பயணித்த விமானம் அதிக ஆபத்தில் இருந்தது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். "அது அதிக ஆபத்தில் இருந்தது, ஏனென்றால் அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."

 "எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன." எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.</p><h2>விமானம் மாற்றப்பட்ட தகவல்</h2><p>&nbsp;ஜூலை 8 அன்று, தொலைக்காட்சி கமராக்களைப் பார்த்தபடி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறியதாகவும், பின்னர் ஒரு இராணுவ விமானத்தில் ஏறுவதற்காக உணவு வண்டியில் ஒளிந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df74dffb-14c5-4c9b-aff4-3a38bb0439dd/26-6a7c7b8fd41ec.webp' /></p><p>

விமானத்தின் மீது ஏவுகணை வீசப்போவதாக ஈரான் விடுத்த நம்பகமான அச்சுறுத்தலை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
</p><p>
ஈரானிய அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் ஒரு விரிவான தந்திரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக வெளியேற்றப்பட்டார் என்பது, விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் தெரியாமல் இருந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-12T13:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-iran-agree-to-extend-60-day-ceasefire-1786538899"></link>
            <id>https://ibctamil.com/article/us-iran-agree-to-extend-60-day-ceasefire-1786538899</id>
            <summary type="text">இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 17 அன்று காலாவதியாக உள்ள நிலையில், அதன் கீழ் 60 நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்காவும் ஈரானும் &quot;ஒப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 17 அன்று காலாவதியாக உள்ள நிலையில், அதன் கீழ் 60 நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்காவும் ஈரானும் "ஒப்புக்கொண்டுள்ளன" என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதன்கிழமை சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தன.
</p><p>
"காலக்கெடுவை நீடிப்பதற்கு இரு தரப்பினரும் மத்தியஸ்தர்களிடம் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர்," என மத்தியஸ்த செயல்முறைக்கு நெருக்கமான ஓர் வட்டாரம் கூறியது.</p><h2>&nbsp;போர் நிறுத்தத்தை நீடிக்க செய்தி பரிமாற்றம்</h2><p>"இருப்பினும், போர் நிறுத்த நீடிப்புக் காலம் குறித்து முடிவு செய்ய இரு தரப்பினரும் செய்திகளைப் பரிமாறி வருகின்றனர்," என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30781d6f-42bc-4b41-a60f-b57cf561f375/26-6a7c6f1947f9f.webp' /></p><p>
</p><p>
ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பின்னர், ஜூன் 17 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இறுதி ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.</p><p></p><h2>பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட பேச்சு</h2><p> இருப்பினும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பின்னர் தடைப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731a8fa3-6b46-43c8-85f0-76b7497aa894/26-6a7c6f1a09f26.webp' /></p><p>

ஜூலை 8 முதல் ஜூலை 24 வரை, அமெரிக்காவும் ஈரானும் இராணுவத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன. இதில், வோஷிங்டன் ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. </p><p>இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் உபகரணங்கள் எனத் தான் கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458"></link>
            <id>https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மித்தெனிய - உல்ஹிடியாவ பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb841c5b-7491-4bd3-93c3-185d574457f9/26-6a7c744e4265e.webp' /></p><p>
</p><p>அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T13:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/36-years-of-the-veeramuna-massacre-1786541548"></link>
            <id>https://ibctamil.com/article/36-years-of-the-veeramuna-massacre-1786541548</id>
            <summary type="text">அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.வரலாற்றுக்கு முந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.</p><p>வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.</p><p>

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டதன் நினைவே வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினமாகும்.&nbsp;</p><p></p><h2>வீரமுனை எனும் தமிழ் கிராமம்&nbsp;</h2><p>வரலாற்றுப் பாரம்பரியமிக்க வீரமுனை எனும் தமிழ் கிராமமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1945 முதல் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டு வந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு ஆனி முதல் ஆவணி வரையிலான காலத்தில் மிகக்கொடூரமான இன அழிப்பைச் சந்தித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cabbf9d-5eb5-4e6a-b47e-cdccf4b90f3c/26-6a7c75ede8964.webp' /></p><p> </p><p>கொண்டவெட்டுவான் இராணுவ முகாம் படையினரும் ஆயுதமேந்திய முஸ்லீம் குழுக்களும் இணைந்து வீரமுனை கோயிலில் தஞ்சமடைந்த மக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களைப் பிரித்தெடுத்து, சுட்டும் உயிருடனும் தீயிலிட்டுக் கொன்றனர். </p><p>இதிலிருந்து தப்பியோடி காரைத்தீவு பாடசாலை அகதி முகாமில் தஞ்சம் புகுந்த தமிழர்களையும் விசேட அதிரடிப் படையினர் விட்டுவைக்காமல், அங்கு புகுந்து இரு கட்டங்களாக 23 இளைஞர்களைக் கைது செய்து கொன்றொழித்தனர்.
</p><p>அகதி முகாமிலிருந்து விரக்தியுடன் சொந்த ஊர் திரும்பிய பெண்கள் மீது மல்வத்தை பகுதியில் மிருகத்தனமான பாலியல் வல்லுறவுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.</p><p></p><h2>ஊர்காவற்படையினரின் தாக்குதல்</h2><p> ஆவணி மாதத்தில் சிங்கள மற்றும் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் தாக்குதல்கள் உச்சமடைந்து, தமிழ் மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு கிணறுகளிலும், சவளைக்கடை இராணுவ முகாமிற்கு முன்னாலும் வீசப்பட்டனர்.</p><p></p><p> </p><p>மேலும், கிராமங்கள் முழுமையாக தீயிடப்பட்டு 25 பேர் எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டதோடு, அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 30 காயமடைந்த தமிழர்களும் தூக்கிச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். </p><p>நீதியற்ற முறையில் தொடர்ச்சியாக நடந்த இத்தகைய இன அழிப்புச் சம்பவங்கள் மனித மனங்களை ரணங்களாக்கின.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T13:33:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும் வரை ஈரான் போரை நீட்டிக்க கூடும்: IRGC எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-prolong-war-until-trump-leaves-irgc-warns-1786539104"></link>
            <id>https://ibctamil.com/article/iran-prolong-war-until-trump-leaves-irgc-warns-1786539104</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும் வரை அமெரிக்காவுடனான போரை ஈரான் நீட்டிக்கக்கூடும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும் வரை அமெரிக்காவுடனான போரை ஈரான் நீட்டிக்கக்கூடும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> எதிரி நம்மைத் தாக்கத் துணியாத அளவுக்கு நாம் தடுப்பாற்றலை அடைய வேண்டும் என்றும் அப்போதுதான் நாம் பாதுகாப்பாக வாழ முடியும் எனவும் குறித்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>அப்போதுதான் ​​வேறு யாராவது ஈரானைத் தாக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள் எனவும் பகிரங்கமாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>ஈரானின் கட்டுப்பாட்டில்&nbsp;போர் </h2><p> </p><p>மேலும், தற்போது போர் ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் அமேரிக்கா வியூகம் இல்லாத போரை நடத்தி வருகிறது எனவும் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b79f08-a6fe-4bbb-9941-bfbb53dc27fc/26-6a7c7057709c6.webp' /></p><p> இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு அனுபவத்தை நாங்கள் பெறுகிறோம். அமெரிக்காவுடன் எப்படிப் போரிடுவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கான உண்மையான அனுபவத்தைப் பெற, நாங்கள் ஒரு உண்மையான போரை இதற்கு முன் சந்தித்ததில்லை. </p><p>இந்த ஐந்து மாதங்களில், நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம்,என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T13:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏறாவூர் வைத்தியசாலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eravur-12-august-1990-massacre-1786538303"></link>
            <id>https://ibctamil.com/article/eravur-12-august-1990-massacre-1786538303</id>
            <summary type="text">ஏறாவூர் பிரதேசத்தில் 1990 ஓகஸ்ட் 12 இல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

11.08.1990...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏறாவூர் பிரதேசத்தில் 1990 ஓகஸ்ட் 12 இல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
</p><p>
11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றி வளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். </p><p>

இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள். </p><p> 

12.08.1990 அன்று இரவு 11.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பொதுமக்கள் பத்துப் பேரையும் வைத்தியசாலையினுள் வைத்தே வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தார்கள்.</p><p>&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T12:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு துறைநீலாவணை படுகொலையின் 36வது நினைவுநாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thuraineelavanai-massacre-1786535311"></link>
            <id>https://ibctamil.com/article/thuraineelavanai-massacre-1786535311</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவுதினம்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவுதினம்&nbsp; இன்றாகும்.</p><p>கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, நீலாவணை மற்றும் கல்லாறு ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினர், விவசாயத்தையும் கடற்றொழிலிலையும் பிரதான தொழிலாகக் கொண்ட அமைதிப் பூமியான துறைநீலாவணைக் கிராமத்தைச் சுற்றிவளைத்துக் கொடூரமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
</p><p>
அன்றைய தினம் காலை வேளையில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வீடுகளுக்குள் புகுந்தும், வீதிகளால் சென்றவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், வயது வேறுபாடின்றி அறுபதிற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.</p><p></p><h2>36 ஆண்டுகள் நிறைவுதினம்</h2><p> </p><p>

மேலும், பலர் படுகாயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a1f1a02-86eb-47b2-b1f8-39fd51997ec1/26-6a7c652e89670.webp' /></p><p>

சொந்த மண்ணில் உழைத்து வாழ்ந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (12.08.2026) சரியாக 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T12:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு :அரசாங்கத்தை கடுமையாக சாடுகிறார் பீரிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peiris-strongly-criticizes-government-1786536245"></link>
            <id>https://ibctamil.com/article/peiris-strongly-criticizes-government-1786536245</id>
            <summary type="text">&amp;nbsp; நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்த முடிவை அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்காக, மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இன்று கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்த முடிவை அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்காக, மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இன்று காலை (12) கொழும்பில் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கைச் சந்தித்தனர்.
</p><p>
பிரிட்டிஷ் உயர் ஆணையரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் ஒரு சட்டம் அல்லது மசோதா கொண்டுவரப்படும்போது, ​​ஒரு பெரிய கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும், ஆனால் இலங்கையில் அதுபோன்ற ஒன்று நடக்கவில்லை என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,தெரிவித்துள்ளார்.</p><h2>பல்வேறுதரப்பின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்</h2><p>
</p><p>

இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், இந்த கலந்துரையாடலுக்காக சட்ட வல்லுநர்கள் சங்கம், பல்கலைக்கழகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, அவற்றின் கருத்துக்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் . ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8873f038-818b-4805-a7a6-e58e11375e2a/26-6a7c639f68dc9.webp' /></p><p>

நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிரி ஜயசேகர, முன்னாள் அமைச்சர் திலான் பெரேரா, சட்டத்தரணி பிரேம்நாத் சி. டோலவத்த, மற்றும் புதிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T12:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-on-indonesian-boat-1786531363"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-on-indonesian-boat-1786531363</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே ஒரு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&amp;nbsp;குறித்த சம்பவத் இ்ன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே ஒரு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>குறித்த சம்பவத் இ்ன்று (12.08.2026) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், 170-க்கும் மேற்பட்டோர் படகில் இருந்து மீட்கப்பட்டதாக இந்தோனேசியாவின் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><h2>ஒருவர் பலி</h2><p>

பாதிக்கப்பட்ட பயணிகள் படகிலிருந்து, இரண்டு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 172 பேர் ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் மூலம் வெளியேற்றப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71c4125-b8e2-4cdb-b89d-71591d15b398/26-6a7c567a336c0.webp' /></p><p>எனினும் காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் அந்நாட்டு அரசாங்கம் இதுவரையில் வெளியிடவில்லை.&nbsp;</p><p>முன்னதாக கடந்த வாரம் ஜாவா தீவுப் பகுதியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
</p><p>
தினசரி போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்காகப் படகுப் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும், 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கடல்சார் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T11:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரில்வின் சில்வாவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tilvin-indian-high-commissioner-meets-1786533728"></link>
            <id>https://ibctamil.com/article/tilvin-indian-high-commissioner-meets-1786533728</id>
            <summary type="text">ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, பெலவத்தையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, பெலவத்தையில் உள்ள ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான தூதரக மற்றும் கலாசார உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், இந்தியாவில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.</p><h2>சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்</h2><p>
</p><p>
இந்திய உயர் ஆணையத்தின் அரசியல் திணைக்களத்தின் முதல் செயலாளர் ராம்பாபு செல்லப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் திணைக்களத்தின் இணைத் துணைத் தலைவர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c583fe87-304f-4e7d-9c4a-d451b05b78bc/26-6a7c5b72787a3.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T11:39:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cyber-warning-the-department-of-examinations-1786532974"></link>
            <id>https://ibctamil.com/article/cyber-warning-the-department-of-examinations-1786532974</id>
            <summary type="text">பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல் வளங்களைப் பாதுகாப்பதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல் வளங்களைப் பாதுகாப்பதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, திணைக்களத்தின் மின்னஞ்சல் ஊடாக முக்கியமான தகவல்களைப் பரிமாறும்போது தரவு மறையாக்க (Encryption) முறைகள் பயன்படுத்தப்படவில்லை எனவும், மின்னஞ்சல் வடிகட்டுதல் செயற்படுத்தப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>வைரஸ் அச்சுறுத்தல்</h2><p>

மேலும், சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள், வைரஸ் அச்சுறுத்தல்கள், அனுமதியற்ற அணுகல்கள், கோப்புகள் மாற்றியமைக்கப்படுதல் அல்லது சைபர் பாதுகாப்புக் கொள்கை மீறல்கள் தொடர்பில் தகவல் அதிகாரிக்கு அறிவிக்குமாறு ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/087a8ff8-418a-43d3-b123-bf1772e8dd77/26-6a7c5a2623a33.webp' /></p><p>
</p><p>
தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகள் குறித்தும் திணைக்கள அதிகாரிகளுக்கு முறையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T11:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோணி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brother-and-sister-from-the-same-family-drowned-1786532482"></link>
            <id>https://ibctamil.com/article/brother-and-sister-from-the-same-family-drowned-1786532482</id>
            <summary type="text">புத்தளம் - கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள களப்பு ஒன்றில் பயணித்த தோணி கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நீரில் மூழ்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள களப்பு ஒன்றில் பயணித்த தோணி கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுமி மற்றும் அவரது 15 வயது சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
மீன்பிடி வலைகளை மீள எடுப்பதற்றாக குறித்த சிறுவர்கள் தங்கள் தந்தையுடன் தோணியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
நீரில் மூழ்கிய நிலையிலிருந்த அவர்களின் தந்தை மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2582b0e-7d01-4039-8217-5f4c1c6d8897/26-6a7c54d2259b2.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T11:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் : இப்படி கூறுகிறார் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-control-of-the-strait-of-hormuz-trump-1786531234"></link>
            <id>https://ibctamil.com/article/us-control-of-the-strait-of-hormuz-trump-1786531234</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேரிலாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ட்ரம்ப் மேற்கண்டாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்</h2><p>
</p><p>
"ஈரானுடனான விடயங்கள் மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; வேறு யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fed8b369-e3f9-4cb0-806f-4eaa14ba09d9/26-6a7c52b7a9067.webp' /></p><p> </p><p>எங்கள் கடற்படை சிறந்தது, மேலும் எங்கள் நாட்டிற்கு எல்லாம் மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது," என்று ட்ரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ஈரானை நம்புவதற்கு நான் கடைசி ஆள்</h2><p>
</p><p>
"நான் ஈரானை நம்பவில்லை. ஈரானை நம்புவதற்கு நான் கடைசி ஆள்; அவர்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்கள். இப்போது, ​​ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; அவர்களிடம் இல்லை," என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec3a38a3-64c2-434e-9de9-a88c5aeb825e/26-6a7c52b85bd42.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T11:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-amavasya-theerthotsavam-the-north-and-east-1786531073"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-amavasya-theerthotsavam-the-north-and-east-1786531073</id>
            <summary type="text">அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்&amp;nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்&nbsp;</b></p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10 ஆம்
நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.
</p><p>ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த
மண்டபப் பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க,
பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்
கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97eaa9f-a833-46b0-b01e-0bf87270fb3e/26-6a7c4e8864168.webp' /></p><p>
</p><p>
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு
செய்தனர்.
</p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம
பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய
தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்கடன் செலுத்தி
ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.</p><p></p><p></p><p><b>செய்தி -&nbsp;பவன்&nbsp;&nbsp;</b></p><p><b>மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்</b></p><p>மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (12) காலை ஆடி
அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த
குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a432a559-6143-46ad-b6db-378bb08cf17a/26-6a7c4e8944815.webp' /></p><p>

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில்
கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
</p><p>
அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட
சென்றார்.</p><p>பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா
வந்தார்.

அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து
எள்ளும்,தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><p><b></b></p><p></p><p></p><p></p><p><b>செய்தி - Nayan</b></p><p><b>வெருகல் -ஸ்ரீ சித்திரவேதாயுதர் சுவாமி</b></p><p>தமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை தீர்த்தமானது
திருகோணமலை, வெருகல் -ஸ்ரீ சித்திரவேதாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில் இன்று
புதன்கிழமை (12) காலை இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/052fcda0-6141-45bd-93ba-ddb0eec9cd77/26-6a7c4e8a0022a.webp' /></p><p>
</p><p>
இதில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டு வெருகல் -மஹாவலி கங்கை
புனித நீரில் தீர்த்தமாடி தமது நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
</p><p>
பூஜை வழிபாடுகளை இந்து குருமார் சங்க அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரர் சர்மா
குருக்கள் நிகழ்த்தினார்.

இதன்போது முதலில் பூஜை வழிபாடுகள் பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று
சாமி வெளி வீதி உலாவந்தது.</p><p>பின்னர் சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்று
இறுதியாக தீர்த்தக் கரைக்குச் சென்று தீர்த்தம் இடம்பெற்றது.

இந்து மக்கள் ஆடி அமாவசை நாளில் , புனித நீரில் நீராடி முன்னோர்களின் ஆன்மா
அமைதிக்காகவும் ,குடும்ப நலனுக்காகவும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p></p><p><b>செய்தி - Buharys Mohamed</b></p><p><b>கீரிமலை</b></p><p>ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி
தீர்த்த கரையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a9a9fa-7463-402f-822a-56b98c1e48f1/26-6a7c4e168538f.webp' /></p><p>
</p><p>
தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை
முன்னிட்டு, தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
</p><p>
அதேவேளை மாவிட்டபுர கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்த கரையில்
இடம்பெற்றது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T10:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உலக சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெயின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/global-crude-oil-prices-on-the-rise-again-1786529661"></link>
            <id>https://ibctamil.com/article/global-crude-oil-prices-on-the-rise-again-1786529661</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $89.63 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விநியோக வழிகள் சீரின்மை</h2><p>
</p><p>
அதேபோல், அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலையும் $83.91 ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a8743de-ded6-4346-88b3-ff9e70af482b/26-6a7c499d56bb8.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணை திறப்பில் உள்ள இழுபறி, மற்றும் செங்கடல் பகுதியில் சவுதியின் எண்ணெய் கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக எரிபொருள் விநியோக வழிகள் சீரின்மை காரணமாகவே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T10:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரணமும் சோசல் மீடியா கிரக கணங்களும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-gallows-are-ready-in-welikada-1786529308"></link>
            <id>https://ibctamil.com/article/the-gallows-are-ready-in-welikada-1786529308</id>
            <summary type="text">இந்த ஆண்டின் ஒரேயொரு முழு சூரிய கிரகணம் இன்று கடக்கின்றது இவ்வாறான நேரங்களில் சூரியனோ அல்லது சந்திரனோ சிறிது நேரமே கிரகணப்படுத்தப்படும் பின்னர் அதுமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் ஒரேயொரு முழு சூரிய கிரகணம் இன்று கடக்கின்றது இவ்வாறான நேரங்களில் சூரியனோ அல்லது சந்திரனோ சிறிது நேரமே கிரகணப்படுத்தப்படும் பின்னர் அதுமாறிவிடும். </p><p>

ஆனால் வடக்கின் ஒரு சுயசார்பு பொருளாதார குறியீடாக கருதப்படும் பண்ணையை விட்டேனா பார் என கிரகணப்படுத்தும் வகையில் இன்னமும்; தமிழ் சமுகவலைத்தளப்பரப்பில் உள்ள சிலரின் மேனியா தொடர்கிறது.</p><p>தமிழர் தாயகத்தை பொருளாதாரரீதியில் மேம்படுத்த ஒரு துரும்பை கிள்ளிப்போடாத திரள்நிதிவசூல் கிளாடியேற்றர் ரகங்களின் தூண்டுதல்கள் வக்கிர வக்கணை கதைகள் இன்னமும் தொடர்கின்றன.</p><p>

சில பிரபல முகங்களை மையப்படுத்திய எதிர்மறை பதிவுகளைபோட்டு தமது தனிப்பட்ட சோசல் மீடியா பக்கங்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறான விமர்சனங்களால் தாமும் ஒரு அதிகாரம்சார்ந்த உள்ளேன் ஐயாக்களாக இருக்கிறோம் என போலியாக காட்ட முனையும் நிலையில் தெற்கில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக வரவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தை மையப்படுத்தி இலங்கை சட்டவாளர் சங்கம் அநுரவுடன் இன்று பேசிய நிலையில் இலங்கையில் மரணதண்டனைகளை மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்தால் அதற்காக வெலிக்கடை சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் என்ற செய்திகள் வந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HMvmoMGOnY0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T10:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/respects-arumugam-sabeswaran-jaffna-media-centre-1786526084"></link>
            <id>https://ibctamil.com/article/respects-arumugam-sabeswaran-jaffna-media-centre-1786526084</id>
            <summary type="text">மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில்
கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில்
கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>

யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும்
செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக
கனடாவில் , தனது 46 ஆவது வயதில் கடந்த 29 ஆம் திகதி காலமானார்.
</p><p>இவரின் புகழுடல் நேற்று (11.08.2026) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில்
நேற்று இரவு யாழ் ஊடக அமையத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><h2>சபேஸ்வரனின் புகழுடல்</h2><p>
</p><p>
இதன்போது ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், விரிவுரையாளர்கள் சிவில் சமூக
பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4780e8ce-188a-4e06-8970-eff53a3a646a/26-6a7c441a565ef.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T10:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார் ரொனால்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cristiano-ronaldo-gets-married-1786528800"></link>
            <id>https://ibctamil.com/article/cristiano-ronaldo-gets-married-1786528800</id>
            <summary type="text">உலகின் மிகவும் பிரபலமான வீரராகக் கருதப்படும் போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் நிச்சயதார்த்தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகவும் பிரபலமான வீரராகக் கருதப்படும் போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
</p><p>
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, நேற்று (11) போர்த்துகலின் கஸ்காய்ஸ் நகரில் திருமணம் செய்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>எளிமையாக நடைபெற்ற&nbsp;திருமண விழா</h2><p>&nbsp;இந்தத் திருமண விழா மிகவும் தனிப்பட்ட முறையிலும் எளிமையாகவும் நடைபெற்றது. இதில் சில நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824b4188-04cc-4af3-b5d5-474d3e1184cf/26-6a7c4422e91c8.webp' /></p><p>
</p><p>
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தற்போது 41 வயதும், ஜார்ஜினா ரோட்ரிக்ஸுக்கு 32 வயதும் ஆகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T10:00:10+00:00</updated>
        </entry>
    </feed>
