<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-08T04:19:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/murder-of-retired-army-soldier-cid-arrests-wife-1788836234"></link>
            <id>https://ibctamil.com/article/murder-of-retired-army-soldier-cid-arrests-wife-1788836234</id>
            <summary type="text">கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக&amp;nbsp; உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக&nbsp; உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய - கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf027e6-5820-422e-b51a-d101c6e754eb/26-6a9f8c2acff94.webp' /></p><p>இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&amp;nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அதற்கமைய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்</h2><p>இந்த நிலையில் பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda01029-62b6-4064-950b-8a96b1ba3a51/26-6a9f7ed50dbfa.webp' /></p><p>இதேவேளை 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற நிலையில்&nbsp;289,867 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.</p><p>இம்மாதம் 02ஆம் திகதி வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T03:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600</id>
            <summary type="text">இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள்
அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.
</p><p>
இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின்
உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய இருதரப்பு விவகாரங்கள்
குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும்
சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.</p><p></p><p>
</p><h2>அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை</h2><p>
இது குறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு,
பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள்
ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edacdbb-214a-4b46-ae02-97755278df96/26-6a9f78873bd5e.webp' /></p><p>
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும்,
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது மீட்புப் பணிகளில்
களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விரு
தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
</p><p>
இது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை மீதான இந்தியாவின்
தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது.
</p><p>
பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா - இலங்கை இடையேயான
இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என
எதிர்பார்க்கப்படுகின்றது என்றுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T02:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி - தொடரும் சலுகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170"></link>
            <id>https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

&nbsp;</p><p></p><h2>பிரேரணை&nbsp;</h2><p>செப்டெம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6791eea8-f556-4da3-a9b3-2f85acee3380/26-6a9f70c4ee542.webp' /></p><p>இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது</p><p>இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p> 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><h2>வீட்டில் இருந்து உணவு</h2><p>இதேவேளை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1bd66e0-4f07-49ad-92a9-fb2d21d8c2ab/26-6a9f70c5b1067.webp' /></p><p>அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T02:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685"></link>
            <id>https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்
</p><p>
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி காவல்துறைக்கு இரகசிய
தகவல் கிடைத்தது.</p><h2>கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம்</h2><p>இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று முன்தினம்(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
காவல்துறை பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான காவல்துறை குழுவினர் மணல் ஏற்றிய
உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd9422c-5d23-4b83-b7fc-bcbe184170af/26-6a9f5826bf8b5.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>

குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் காவல்துறையினர் அவதானம்
செலுத்தியுள்ளதுடன்.விரைவில் அவர்களை கைது செய்யும் பணி
முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shavendra-selva-statement-on-ltt-sniper-squad-1788785226"></link>
            <id>https://ibctamil.com/article/shavendra-selva-statement-on-ltt-sniper-squad-1788785226</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அளவுக்கு வலுவான வலையமைப்பைக் கொண்டிருந்ததாக முன்னாள் இரானுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p>
வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவத் தந்திரோபாயங்கள், ஆயுத பலம், சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் இராணுவம் எதிர்கொண்ட தடைகள் தொடர்பில் சவேந்திர சில்வா இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>அடுத்த கட்டத் தாக்குதல்</h2><p>
இதன்போது விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு மற்றும் ஆதரவுகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f6df5-8e73-4fdc-9e3a-8944e4370075/26-6a9eb6a0399d1.webp' /></p><p>குறிப்பாக கப்பல் போக்குவரத்து, மற்றும் சர்வதேசத்தின் வர்த்தகங்கங்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறாக நிதிகளை திரட்டிக்கொண்டனர். மேலும், வெளிநாடுகளில் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கில், அந்நாடுகளின் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர் என தனது கருத்துக்களை முன்வைத்தார்.</p><p>மேலும், விடுதலைப் புலிகளின் பிரதான அரசியல் இலக்கு இலங்கையில் தனித் தமிழ் அரசை உருவாக்குவதாக இருந்தது எனவும் தெரிவித்தார்.</p><p>
போர் நடைபெற்ற காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து அவர்கள் சிறந்த திட்டமிடலை கொண்டிருந்தனர் எனவும் கூறியுள்ளார்.
</p><p>
அதன்படி, பேச்சுவார்த்தைகளின் இடைவேளைகளைப் பயன்படுத்தி போராளிகளை மீள ஒருங்கிணைத்து, ஆயுத பலத்தை அதிகரித்து அடுத்த கட்டத் தாக்குதல்களுக்கு அவர்கள் தயாராகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் உள்ள பரந்த நெல்வயல் பகுதியான ‘Rice Bowl’ பகுதியில் இராணுவம் எதிர்கொண்ட சவால் குறித்தும் சவேந்திர சில்வா விரிவாக இதில் விளக்கியுள்ளார்.</p><p></p><h2>தாக்குதலுக்கு இலக்காகும் நிலை&nbsp;</h2><p>

மரங்கள் அல்லது இயற்கையான மறைவிடங்கள் இல்லாத அந்தப் பரந்த வயல்வெளியில் விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான குறிசூட்டுப் படையினரை நிலைநிறுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809ef2c0-c820-4a65-bb07-39052c77cbbf/26-6a9eb6a0f1eef.webp' /></p><p>
</p><p>
இராணுவ வீரர்கள் தலைகளை உயர்த்தினால்கூட குறிசூட்டுப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலை காணப்பட்டதாகவும், இதனால் இராணுவத்தினர் இரவு நேரங்களையும் இருள் சூழ்ந்த காலங்களையும் பயன்படுத்தி தரையில் தவழ்ந்தவாறு மெதுவாக முன்னேற வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அந்தப் பகுதியை கடப்பதற்கு இராணுவத்திற்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் எடுத்ததாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தமது படைப்பிரிவு போரின் போது சுமார் 202 கிலோமீற்றர் தூரம் முன்னேறிச் சென்று போரில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விடுதலைப் புலிகள் சிறிய நாட்டில் இயங்கிய அமைப்பாக இருந்தபோதிலும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க இராணுவ பலத்தை உருவாக்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு எறிகணைகள்’, 82 மில்லிமீற்றர் மோட்டார்கள் மற்றும் கிளேமோர் கண்ணிவெடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்தும் திறனை கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

மேலும், போரின் இறுதி கட்டத்தில் தாக்குதல் படைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி இராணுவத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு தடை</h2><p>
</p><p>
இறுதிப் போரின் கடைசி ஏழு நாட்கள் இராணுவத்துக்கு மிகவும் கடுமையான காலகட்டமாக இருந்ததாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்தகைய தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பில் தனது ஒரு காதின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாகவும், தனது உடலில் இன்னமும் 32 வெடிகுண்டுத் துகள்கள் இருப்பதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p>
போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், சர்வதேச அரங்கில் பரப்புரை நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பயணத் தடைகள், விசா மறுப்புகள் மற்றும் நிதி முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இவை போருக்குப் பின்னர் தாம் எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் இடம்பெறும்'யூத பயங்கரவாதம்': முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jewish-terrorism-ex-israeli-premier-1788826771"></link>
            <id>https://ibctamil.com/article/jewish-terrorism-ex-israeli-premier-1788826771</id>
            <summary type="text">அப்பாவி அராபியர்கள் உள்ளே இருக்கும்போது வீடுகளை எரிப்பது &quot;யூத பயங்கரவாதம்&quot; ஆகும் என்று முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பாவி அராபியர்கள் உள்ளே இருக்கும்போது வீடுகளை எரிப்பது "யூத பயங்கரவாதம்" ஆகும் என்று முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
</p><p>
"அப்பாவி அராபியர்களின் வீட்டை, அவர்கள் உள்ளே இருக்கும்போது யாராவது வந்து எரித்தால், நிச்சயமாக அது யூத பயங்கரவாதம்தான்."

"அது தேசியவாதக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டால், அதுதான் அதன் வரையறை," என்று ஞாயிற்றுக்கிழமை பெஷேவா மாநாட்டில் பென்னட் கூறினார்.</p><h2>குடியேற்ற இயக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது&nbsp;</h2><p>&nbsp;இத்தகைய செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், "இது குடியேற்ற இயக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பது எனக்குப் புரியவில்லை," என்றும் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb6fcbb-0d09-4ef1-a6fc-351b95561400/26-6a9f54958625e.webp' /></p><p>

ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள இஸ்ரேலின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பென்னட்டின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.</p><p></p><p> </p><h2>அதிகரித்துள்ள&nbsp;ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள்</h2><p>இந்தத் தேர்தல் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அவரது முக்கிய சவாலர்களான, குறிப்பாக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் மற்றும் பென்னட் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3b3b1ca-943b-4d24-923c-429711f921fe/26-6a9f54963a78b.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய நாட்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T00:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-principal-arrested-for-accepting-bribe-1788819125"></link>
            <id>https://ibctamil.com/article/school-principal-arrested-for-accepting-bribe-1788819125</id>
            <summary type="text">&amp;nbsp;காலி பகுதியில் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக ஒரு பள்ளித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காலி பகுதியில் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக ஒரு பள்ளித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகத்திற்குரிய அந்த பாடசாலை அதிபர், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூ. 3 லட்சமும், இரண்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து ரூ. 6 லட்சமும் கேட்டதாகவும், பின்னர் அந்தத் தொகையை ரூ. 3 லட்சமாகக் குறைத்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>இலஞ்சம் பெற்ற பின்னர் பாடசாலைகளில் இணைப்பு</h2><p>இதில், ரூ. 1.5 லட்சம் லஞ்சமாகப் பெறப்பட்டு, ஒரு பிள்ளையை 2026-ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மீதமுள்ள ரூ. 1.5 லட்சத்தில் இருந்து, மற்றொரு பிள்ளையை எட்டாம் வகுப்பில் சேர்ப்பதற்காக ரூ. 50,000 பெறப்பட்டு, அந்தப் பிள்ளையும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/913c0791-09ef-4962-81ab-8755a7ea9568/26-6a9f414236ca2.webp' /></p><p>
</p><p>
பின்னர், இரண்டு பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கான தேவையான ஏற்பாடுகளுக்காக மேலும் ரூ. 2.5 லட்சம் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

</p><h2>இரண்டரை லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்றபோது கைது</h2><p>இரண்டரை லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்றபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணம் கொடுக்காவிட்டால், இரு பிள்ளைகளும் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74452d4b-8507-4465-887e-27213ff97260/26-6a9f414180d8a.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்ர்படுத்தப்பட உள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T23:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் போத்தல்கள் : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/order-to-destroy-over-8500-water-bottles-1788822298"></link>
            <id>https://ibctamil.com/article/order-to-destroy-over-8500-water-bottles-1788822298</id>
            <summary type="text">&amp;nbsp;போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் விதித்து அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே லேபிள்கள் கொண்ட 8,500 போத்தல்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;ஓகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​19 லிட்டர், 5 லிட்டர், 1500, 1000 மற்றும் 500 மில்லிலிட்டர் அளவுகளில் போலி லேபிள்கள் கொண்ட பெருமளவிலான குடிநீர் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>&nbsp;பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை</h2><p>

அதன்படி, அந்த நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது பிரதிவாதிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0278f673-9c69-4c52-bfcf-7181c022a356/26-6a9f4ae05c368.webp' /></p><p>

நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்ப்பிக்கப்பட்ட 8,500-க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழு இருப்பையும் அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அதன்படி, சம்பந்தப்பட்ட தண்ணீர் போத்தல்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அழிக்கப்பட்டன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T23:38:14+00:00</updated>
        </entry>
    </feed>
