<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-11T01:33:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786409585"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1786409585</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d90a34-6359-4587-820b-57b177317017/26-6a7a7273e4461.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவில் உண்மையில் நடந்தது என்ன...! விரைவில் அம்பலமாகும் CCTV காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reesha-food-fest-clash-owner-responses-1786408463"></link>
            <id>https://ibctamil.com/article/reesha-food-fest-clash-owner-responses-1786408463</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
</p><p>
றீ(ச்)ஷாவில் நடைபெற்ற அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இதன்போது குறிப்பிட்ட பெண்ணொருவர் நிறுவனத்தின் உரிமையாளரை அழைக்குமாறும் உணவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தும் கோபமான வார்த்தைகளை வெளிப்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட காணொளி ஒன்னு பெரிதும் பகிரப்பட்டது.
</p><p>
இந்தநிலையில் குறித்த பெண்ணின் கருத்துக்கு முக்கிய சிசிரிவி காணொளிகளுடன் விரைவில் பதிலளிக்கப்படும் என றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தனது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T00:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலை மோதலில் சேதமடைந்த கூரைகள்...! சீரமைக்க நடவடிக்கை எடுத்த கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuruwita-prison-clash-roofs-damaged-1786406983"></link>
            <id>https://ibctamil.com/article/kuruwita-prison-clash-roofs-damaged-1786406983</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதலின்போது சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதலின்போது சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>சிறைச்சாலை அதிகாரிகள்</h2><p>இருப்பினும், கூரைகள் சேதமடைந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் பெய்த கடும் மழையால் கைதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p>

சிறை அறைகளுக்குள்ளேயே மழையில் நனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/136d8949-53a7-4389-a5a8-44d115522d82/26-6a7a684a7f2f5.webp' /></p><p>

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் தலையீட்டில் கூரைகளை சீரமைப்பதற்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்பின்னர் கூரைகளை சேதப்படுத்திய கைதிகளே முன்வந்து கடந்த எட்டாம் திகதி சேதமடைந்த கூரைகளை மீண்டும் சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T00:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-arrested-with-heroin-in-ampara-1786405608"></link>
            <id>https://ibctamil.com/article/2-arrested-with-heroin-in-ampara-1786405608</id>
            <summary type="text">அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (10-08-2026) முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறையில் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (10-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய
இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>புலனாய்வு உத்தியோகத்தர்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின்
போதைப்பொருட்களுடன் போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக
நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca192de-13ca-40dd-b929-3ae7d38d89c4/26-6a7a62ea6208c.webp' /></p><p>அத்துடன் இக்கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால்
திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும்
கைதாகியுள்ளார்.</p><p>

சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப்
பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக
விசாரணைகளை சாய்ந்தமருது காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T23:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11th-world-tamil-conference-in-jaffna-1786398282"></link>
            <id>https://ibctamil.com/article/11th-world-tamil-conference-in-jaffna-1786398282</id>
            <summary type="text">11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் மற்றும் தமிழ் அமைப்பும் இணைந்து தனிநாயகம் நினைவரங்க நிகழ்வை யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடத்தியது.</p><p>
</p><p></p><h2>தொடக்க வுரை</h2><p>இதில் கலந்து கொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில்
கோலாலம்பூரிலும் நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d248416-36d6-4b73-b6b8-de99cbf31a1d/26-6a7a4991db957.webp' /></p><p> 

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான
தனிநாயகம் அடிகளார் இம் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
 அவர் பங்குபற்றிய இறுதி
மாநாடாகவும் இதுவே அமைந்தது.</p><p>
</p><p></p><h2>துயரச் சம்பவம்</h2><p>யாழ். குடா நாடே விழாக் கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். </p><p>

இம் மாநாட்டின் இறுதி
நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும்
வரலாற்றில் பதிவாகியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c905e566-8000-4961-953a-6727524403f8/26-6a7a49928a02a.webp' /></p><p>பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின்
சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. </p><p>

இந்நிலையிலேயே 11 ஆவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-call-for-int-l-probe-1786397192"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-call-for-int-l-probe-1786397192</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.</p><p>
</p><p></p><h2>அகழ்வு பணிகள்&nbsp;</h2><p>100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p>முக்கியமாக இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebaed771-01c4-42bb-af5f-c4984565c2dd/26-6a7a44880fa5d.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.</p><p>அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும் அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>தொழில்நுட்ப வசதிகள்</h2><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.</p><p>இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில் அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80690261-43c3-4bff-9e62-dca025eaecfb/26-6a7a4488f1bb2.webp' /></p><p>
</p><p>ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில் ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் ஹஸ்த நட்சத்திரப் பெயர்ச்சி! நிதி நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385"></link>
            <id>https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
</p><p>இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன், சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். </p><p>சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியையும் பிரச்சனைகளையும் தரக்கூடும்.
</p><p>
எனவே, நிதி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீரென்று நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். </li><li>அதுவும் தேவையற்ற விஷயங்களுக்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அதிகமாக செலவுகளை செய்யலாம். </li><li>இதனால் பட்ஜெட் பாழாகி, எதிர்பாராத அளவில் பண பிரச்சனையை சந்திக்கக்கூடும். </li><li>எனவே இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். </li><li>எந்த ஒரு முதலீடுகளையும் யோசிக்காமல் செய்யாதீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>ரிஷபம் </td><td><ol><li>ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். </li><li>இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வராமல் சிரமப்படக்கூடும்.</li><li>வியாபாரிகள் இக்காலத்தில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். </li><li>முக்கியமாக இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். </li><li>இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப பெறுவது கடினமாகிவிடும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களையோ அல்லது பண பற்றாக்குறையையோ சந்திக்க நேரிடலாம். </li><li>கைக்கு வரவேண்டிய பணத்தை பெறுவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம். </li><li>இது மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். </li><li>எதிர்பாராத நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். </li><li>இந்த செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நகரொன்றிற்கு குண்டு மிரட்டல்! வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416"></link>
            <id>https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதையடுத்து பாதுகாப்பு கருதி வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>முறையான சோதனை</h2><p>அசம்பாவிதங்களைத் தவிர்க்க முக்கியச் சாலைகள் மூடப்பட்டு, பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd346a2d-3259-470c-8d86-7c08ab98717e/26-6a7a29ed8cf9f.webp' /></p><p>

இதையடுத்து, கிளேட்டன் பூங்கா பகுதியில் வைத்து அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
முறையான சோதனைக்குப் பின் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிசெய்யப்பட்டு அப்பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:54:39+00:00</updated>
        </entry>
    </feed>
