<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T17:09:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் மோதல் தீவிரம்: பின்வாங்கப் போவதில்லை என ஈரான் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-navy-ready-to-guard-strategic-sea-routes-1787329026"></link>
            <id>https://ibctamil.com/article/iran-navy-ready-to-guard-strategic-sea-routes-1787329026</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள கடல்சார் முடக்கங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது நாட்டின் வியூக ரீதியான கடல் வழிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள கடல்சார் முடக்கங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது நாட்டின் வியூக ரீதியான கடல் வழிகளையும் எல்லைகளையும் பாதுகாக்க ஈரான் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானிய கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தெரிவித்த அவர், தங்களது படைகள் எதிரிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் எதிரிப் படைகளை ஒரு அடி கூட பின்வாங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>பிராந்தியப் பதற்றம்</h2><p>அத்தோடு “இன்று நாட்டின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த நீரிணைகளும் கடல் வழிகளும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. </p><p>அப்பகுதிகளில் தனது பலமான பிரசன்னத்தின் மூலம் தேசிய நலன்களையும் நாட்டின் பாதுகாப்பையும் பாதுகாக்கும் பணியை ஈரானிய கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43567612-a663-466c-8728-5e302ba30802/26-6a88853818159.webp' /></p><p> ஈரானிய ஆயுதப் படைகள் முழு பலத்துடன் எதிரிகளுக்கு எதிராக உறுதியுடன் நிற்பதாகவும் எதிரிப் படைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஒரு அடி கூட முன்னெடுத்து வைப்பதையோ அல்லது தங்களை பின்வாங்க வைப்பதையோ அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு பரஸ்பரக் கடற்படை முற்றுகை தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார். </p><p>இந்தச் சூழலில், ஈரானியக் கடற்படையின் இந்த எச்சரிக்கை அறிக்கை பிராந்தியப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்மை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>
தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.
</p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dbb5db-c4df-4024-a092-dfa4013abbe3/26-6a88687298a9d.webp' /></p><p>
விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி திருவிழா வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178"></link>
            <id>https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.பனை மரம் ஒன்றும் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் சம்பவத்தில் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தேவையற்ற&nbsp;பயன்பாடு</h2><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126091cd-6d20-4eab-8919-79f75c92f206/26-6a8855c421567.webp' /></p><p>

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/member-who-came-to-manipay-assembly-with-fire-1787323066"></link>
            <id>https://ibctamil.com/article/member-who-came-to-manipay-assembly-with-fire-1787323066</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா
ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு
சட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா
ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.</p><p> இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு
சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன், ''கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற
மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை
எதிர்கொள்ளுகின்றனர்.</p><p></p><h2>தீர்க்கமான முடிவு இல்லை</h2><p>
</p><p>
நேற்றும்கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற
வகையில் செயற்படுகிறது.

இந்த பிரச்சினையானது எமது பிரதேச சபையிலும், பல திணைக்களங்களிலும்
பேசப்பட்டிருப்பதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொணரபட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f211d4fc-eb3c-4371-9928-737b2d21abf8/26-6a8862bd3cee3.webp' /></p><p> </p><p>ஆனால் இதுவரை
எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.

கல்லூண்டாயில் பொலுத்தீன், பம்பஸ் உள்ளிட்ட கழிவு பொருட்கள் எரிவதன் மூலம்
மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களை எதிர்கொள்கின்றனர். </p><p>இதனை வெளிப்படுத்தும்
முகமாக நான் இன்று பொலுத்தீன் உள்ளிட்ட பொருட்களை எரித்துக்கொண்டு சபைக்குள்
வந்தேன். </p><p>எமது மக்கள் தினம் தினம் படுகின்ற துயரத்தை அடையாள ரீதியாக
வெளிப்படுத்துகிறேன்.

குப்பைமேடு தொடர்பாக மானிப்பாய் தவிசாளர் க.ஜெசீதனின் செயற்பாடுகள் எனக்கு
திருப்தி அளிக்கவில்லை. </p><p>மாநகர சபையின் கண்மூடித்தனமான செயற்பாட்டுக்கு
தவிசாளர் துணை போகின்றார். ஏனெனில் இது சம்பந்தமாக நான் பல தடவைகள்
கோரிக்கைகள் முன்வைத்தும் அது சம்பந்தமான எந்த விதமான நகர்களையும் தவிசாளர்
முன்னெடுக்கவில்லை.
</p><p>
யாழ். மாநகர சபையிலும் மானிப்பாய் பிரதேச சபையிலும் ஆளுங்கட்சி இலங்கை தமிழரசு
கட்சி என்பதால் தவிசாளர் க.ஜெசீதன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு துணை
போகின்றார் போல் தெரிகிறது. </p><p>அவ்வாறு இல்லாமல் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட
வேண்டும். எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற வேளை காட்சிக்காகவோ மேலிடத்திற்காகவோ
அவர் துணை போகின்றது என்பது ஒரு கேவலமான விடயம்" என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக்கு சீனா மீண்டும் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-reiterates-call-for-us-iran-talks-1787322110"></link>
            <id>https://ibctamil.com/article/china-reiterates-call-for-us-iran-talks-1787322110</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா புதிய பொருளாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வரும் நிலையில் சீனா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
</p><p>சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு</h2><p>
</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c336bc28-83c5-45af-aeb8-25244e5439c4/26-6a885f0005895.webp' /></p><p>“சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி விதிக்கப்படும் ஒருதலைப்பட்ச தடைகளை சீனா எதிர்க்கின்றது.</p><p>இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதும் அழுத்தம் கொடுக்கும் உத்திகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">China opposes unilateral sanctions that lack basis in international law and UN Security Council mandate. Military force and pressure tactics will only lead to escalation that serves no one’s interests. We call on parties to act responsibly and solve disputes through dialogue and… <a href="https://t.co/6Z1QfRadsj">pic.twitter.com/6Z1QfRadsj</a></p>&mdash; CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) <a href="https://x.com/MFA_China/status/2090764849047626029?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு தரப்பினருக்கும் நன்மையை ஏற்படுத்தாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவிழா நிகழ்வில் கண் பாதிப்புக்குள்ளான பக்தர்கள்: தென் கயிலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/devotees-affected-by-festival-eye-disease-1787321152"></link>
            <id>https://ibctamil.com/article/devotees-affected-by-festival-eye-disease-1787321152</id>
            <summary type="text">யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது&amp;nbsp; இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது&nbsp; இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்
கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என
தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். </p><p>அதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதே போல கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல்
பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயிகளிடையே பெருமை விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p>[FAFAGWS
]</p><h2>சைவ பரிபாலன சபை</h2><p>சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை
கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது
வரவேற்கத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a6213e-dd9d-4055-8735-2b217fe41b0f/26-6a885b423deb5.webp' /></p><p>
</p><p>
ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய
திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல்
நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.</p><p>

இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள்
குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த
சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். </p><p>அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக
நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்ட்ட தரப்புக்களையும் கோருவதுடன்
அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு
கொள்கின்றோம்.</p><p>

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை
பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568</id>
            <summary type="text">இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் பணியாற்றவுள்ள அவர், மூத்த ஆடவர் அணியின் தேசிய வீரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளார்.</p><p>

முன்னதாக இலங்கைஆடவர் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் ஹஷான் திலகரத்ன பணியாற்றியுள்ளார்.</p><p></p><h2>புதிய நியமனம்&nbsp;</h2><p>
அத்துடன், பங்களாதேஷ் மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3a8bb26-a1ab-4889-a85e-ffca1c4f9775/26-6a8858fb23418.webp' /></p><p>

1989 முதல் 2003ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடிய ஹஷான் திலகரத்ன, 83 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, இரு வடிவங்களிலும் 8,200க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.</p><p>

அவரது புதிய நியமனம் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T13:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/time-to-end-the-war-with-america-1787317463"></link>
            <id>https://ibctamil.com/article/time-to-end-the-war-with-america-1787317463</id>
            <summary type="text">போரை இப்போது முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது. ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் என&amp;nbsp;&amp;nbsp;ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரை இப்போது முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது. ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் என&nbsp;&nbsp;ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p>ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் எனக் குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் ஈரானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>பல தசாப்தங்களாக எதிரிகளாக இருந்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில், இரு தரப்பினரும் போர் நிலைமையில் தேக்கநிலையை எதிர்கொண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில்&nbsp;பெசெஷ்கியன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.</p><p></p><h2>புரிந்துணர்வு உடன்பாடு&nbsp;தோல்வி</h2><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போருக்கு முடிவு காணும் நோக்கில் ஜூன் மாதம் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டியதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4edced-e878-4b31-93fa-a0bff666fafb/26-6a885057efbdd.webp' /></p><p>மேலும், ஜூன் மாதம் அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட போர் முடிவுக்கான புரிந்துணர்வு உடன்பாடு ஈரானின் தோல்வியை பிரதிபலிப்பதாகக் கூறப்படுவதை பெசெஷ்கியான் மீண்டும் நிராகரித்துள்ளார்.</p><p>இந்த உடன்பாட்டில் ஈரான் சரணடைந்ததைக் காட்டும் ஒரு விதியைக் கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியாது. </p><p>அனைத்து பொறுப்புகளும் மறுதரப்பினருக்கே விதிக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்த அவர்,&nbsp; ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும், தமக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T13:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684</id>
            <summary type="text">

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை காவல்துறையினர் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த மின் விளக்குகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34f6294-7e71-4c1c-a132-724473664568/26-6a88418b02d85.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-21T12:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-vehicle-owners-1787314476"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-vehicle-owners-1787314476</id>
            <summary type="text">நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக&amp;nbsp;காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக&nbsp;காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வாகன உரிமையாளர்களின் கவனக்குறைவும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதும் திருட்டுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>
பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகள்</span></p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்காலத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதுடன், உரிமையாளர்களின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06efc53f-d38b-439b-a694-0976e8e51ed0/26-6a8846aa329e5.webp' /></p><p> </p><p>மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் இயக்கத்தில் இருக்கும் போதே அவற்றை விட்டுச் செல்கின்றனர்.</p><p>மேலும், சாவியை திறப்பு துளையிலேயே கவனக்குறைவாக விட்டுவிடுவது மற்றும் தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை இருக்கைகளுக்கு அடியில் கவனமாக விட்டுச் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்களால் இழைக்கப்படுகிறது</p><p>எனவே, பொதுமக்கள் அனைவரும் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்பற்ற மற்றும் தனிமையான இடங்களைத் தவிர்த்து, பகல் அல்லது இரவு நேரங்களிலும் கூட பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
</p><p>
மேலும், பாதுகாப்புப் பணியாளர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவிப்பதுடன், சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
</p><p>
வாகனங்களில் ஒலி அமைப்புகள், ஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பொருத்துவதும், வாகனங்களின் புகைப்படங்களைப் பாதுகாப்பாக நகல் எடுத்து வைத்திருப்பதும் திருட்டுக்களைத் தவிர்க்க உதவும். </p><p>ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டால், உடனடியாக 24 மணிநேரமும் சேவையில் உள்ள காவல்துறையின் அவசர இலக்கங்களான 119 அல்லது 118 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வும் பொறுப்பான நடத்தையுமே குற்றவாளிகளுக்கான வாய்ப்புகளை முற்றிலுமாக அகற்றும்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>குறித்த போராட்டம்,&nbsp; இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய
கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு
கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு,
யாழ் வலி வடக்கு தையிட்டி, மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள்,
கிராஞ்சி மற்றும் ,பொன்னாவெளி அமைப்புக்கள் பங்குற்றி இருந்தன.</p><p></p><h2>பல்வேறு கோரிக்கைகள்&nbsp;</h2><p>

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் "மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு,
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா,
மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று" என கோஷங்களை
எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebade4b-0cea-4a9f-afd7-4f6360faf510/26-6a883ce857238.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள்
தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் நீண்ட கால வதிவிட விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444"></link>
            <id>https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444</id>
            <summary type="text">தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை வழங்க தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p><p>

உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றின்படி, 2022 ஒகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் மஞ்சள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
விபத்து நடந்த உடனேயே அவர்கள் செயல்பட்டு, தாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன், கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.</p><p></p><h2>வேலைவாய்ப்பு அனுமதி</h2><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில், இந்த இலங்கையர்கள் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசாக்களில் தென் கொரியாவில் பணிபுரிந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c452ce3-e2fd-4ee3-b4fa-b9bfd6bf039d/26-6a88387cb9d36.webp' /></p><p> பொதுவாக, அந்த விசா வகையின் கீழ் ஒரு வெளிநாட்டுப் பணியாளர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p>

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும், அவர்களின் மனிதாபிமானப் பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரிய நீதி அமைச்சு, சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கும் இந்த நீண்ட கால விசாக்களை வழங்கியுள்ளது. </p><p>இந்த விசாக்கள், அவர்கள் தங்கள் விசாக்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியமின்றி, நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு உரிமை அளிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்ற இலங்கையரும் ஏற்கனவே நீண்ட கால விசா வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741"></link>
            <id>https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741</id>
            <summary type="text">
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
</p><p>
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.</p><p></p><h2>தமிழ்த் திரையுல அறிமுகம்</h2><p>
</p><p>
1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d057ce-d5cd-4a61-8713-91901241a9ba/26-6a88304fc9bd0.webp' /></p><p> </p><p>

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார். </p><p>

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன. </p><p>

2020-ஆம் ஆண்டில், சௌகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:15:35+00:00</updated>
        </entry>
    </feed>
