<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-09T11:17:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சு : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-declares-no-room-for-negotiations-with-the-us-1786271460"></link>
            <id>https://ibctamil.com/article/iran-declares-no-room-for-negotiations-with-the-us-1786271460</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியதாகக் குற்றம் சாட்டிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியாது என்று கூறினார்.&nbsp;</p><h2>&nbsp;பேச்சுக்கு வாய்ப்பில்லை</h2><p>ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழியை மத்தியஸ்தர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அமெரிக்கா செய்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து ஒரு தீர்வு காணப்படும் வரை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியும் என்று தெஹ்ரான் நம்பவில்லை என அராக்சி குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/276ade26-0cdf-4586-84e8-0f8e8536c732/26-6a785d949bb0e.webp' /></p><p>
</p><p>
</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;திறப்பு</h2><p>"பேச்சுவார்த்தைகளுக்கு உகந்த சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று கூறிய அவர், அமெரிக்கா தனது மீறல்களைச் சரிசெய்யும் வரை பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b72f0d-4ae9-48dd-bf10-fb363cad4f8f/26-6a785d954bf8d.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளை மாற்றுவது ஒரு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான விஷயம் என்றும், அது நீரிணையைத் திறந்துவிடுவதாக அர்த்தமல்ல என்றும் அராக்சி குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்


ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
</p><p>

ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில், பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும், நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது. </p><p>

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களை வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.</p><h2>செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியல்</h2><p>
</p><p>
அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு. பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p> 

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும், இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcf8919-d198-4129-bf5a-bf0fdbd1a49a/26-6a78447338a73.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><p> தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. </p><p>

2017இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.</p><p> அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார்.</p><h2>சூழலியல் சுற்றுலா மையம்</h2><p>ஐரோப்பிய பொருளாதாரச் சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும்.</p><p>பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1355657c-3b4f-4115-82f7-080a7d27b1e2/26-6a7844749b3ab.webp' /></p><p>

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p>"முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.</p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், றீச்ஷா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீடு அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்</h2><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. </p><p>

அதுமட்டுமன்றி, 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc5c108-6358-4d22-a7a1-4ff0f83686d7/26-6a784473e150d.webp' /></p><p> </p><p>

ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியான முறையில் சமூகமயமாக்கப்படாமல், ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும், தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார்.</p><p> 

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p> 

வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் பாஸ்கரன் கந்தையா.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டைச் சுத்தம் செய்த போது மீட்கப்பட்ட இராணுவ அங்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-uniform-recovered-in-jaffna-house-1786269999"></link>
            <id>https://ibctamil.com/article/army-uniform-recovered-in-jaffna-house-1786269999</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம்
செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம்
செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் மருதங்கேணி காவல்
நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்பின்னர் அங்கு சென்ற மருதங்கேணி காவல்துறையினர் குறித்த அது தொடர்பில் ஆய்வு
செய்துள்ளனர்.</p><p></p><h2>அழிப்பதற்குரிய நடவடிக்கை</h2><p>இந்தநிலையில் இது இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்திருக்கும் அங்கி
என்றும், அதில் நீண்ட நாள் பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதையும்
கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8135172f-6fd8-4ae7-8486-dc80e741d5ae/26-6a78560b4a9c7.webp' /></p><p>இதனையடுத்து நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று குறித்த பொருளை
அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்பு! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severed-human-head-recovered-1786270191"></link>
            <id>https://ibctamil.com/article/severed-human-head-recovered-1786270191</id>
            <summary type="text">
எல்ல - வெல்லவாய வீதியில் உள்ள வெல்லவாய காவல்துறை பிரிவின் மூன்றாம் கட்டை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எல்ல - வெல்லவாய வீதியில் உள்ள வெல்லவாய காவல்துறை பிரிவின் மூன்றாம் கட்டை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வீதி அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் இந்த மனிதத் தலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், இதுவரை அந்தத் தலை குறித்து எந்தவொரு தகவலும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515c2155-a2ae-41d0-be8a-76f7ef754249/26-6a78564e2e0df.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், குறித்த விடயம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-09T10:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் காட்டுக்குள் வீழ்ந்து தீப்பிடித்த உலங்கு வானூர்தி : பயணித்த சுற்றுலா பயணிகளுக்க நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-killed-in-brazil-helicopter-crash-1786270838"></link>
            <id>https://ibctamil.com/article/four-killed-in-brazil-helicopter-crash-1786270838</id>
            <summary type="text">சுற்றுலாப் பயணிகளுக்கு விமானச் சேவைகளை வழங்கும் பிரேசிலிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாப் பயணிகளுக்கு விமானச் சேவைகளை வழங்கும் பிரேசிலிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>விமானி உட்பட நால்வர் உயிரிழப்பு</h2><p>&nbsp;இந்த விபத்தில் விமானி மற்றும் உடன் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fce521eb-8f19-451b-bb26-21c461036cb6/26-6a7854786b1a2.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனையைத் துன்புறுத்திய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-harassing-a-cat-1786269318"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-harassing-a-cat-1786269318</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) அளித்த புகாரைத் தொடர்ந்து, தலாத்துஓயா காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>முறைப்பாடு கிடைத்த சிறிது நேரத்தில் கைது</h2><p>முறைப்பாடு கிடைக்கப்பெற்ற குறுகிய நேரத்திற்குள் அதுல்கம பகுதியில் வைத்து 18 மற்றும் 19 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bc3d9fe-f66b-4d60-866a-f6819929aee2/26-6a784e88c7fdf.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்களின் தகவலின்படி, இச்சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>காவல்துறையினர்&nbsp;மேலதிக விசாரணை</h2><p>சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவையின் 411 ஆம் பிரிவு, காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 63(a) பிரிவு மற்றும் விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b706079-1b48-4a6e-bdde-ce0af1856b18/26-6a784e8812b0e.webp' /></p><p>
</p><p>
மேலதிக விசாரணைகளைத் தலாத்துஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:55:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இருந்து யாழிற்கு வரவுள்ள அதிசொகுசு பயணிகள் கப்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-cruise-ship-to-arrive-sri-lanka-from-india-1786267856"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-cruise-ship-to-arrive-sri-lanka-from-india-1786267856</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு
வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு
வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள்
காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன்
தெரிவித்துள்ளார்.</p><h2>சுற்றுலாத் தலங்கள்&nbsp;</h2><p>
</p><p>
மேலும் இந்த கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலாத் தலங்கள்
என்பவற்றுக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf86e58-5831-4fd8-b76c-20b24d89de46/26-6a784bae31ae3.webp' /></p><p>பின்னர் மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி
செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்மை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-results-date-1786264835"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-results-date-1786264835</id>
            <summary type="text">


ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.இதில் பரீட்சைக்குத் தோற்ற 294,089 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சை</h2><p>
</p><p>
இந்த நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை தொடங்கி செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a07731-81ab-4051-94bf-765b8e2e2e5b/26-6a78409a42dff.webp' /></p><p>
 இந்த ஆண்டு பரீட்சையில் மொத்தம் 372,310 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
</p><p>
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு வருவதற்கு முன்னதாக, தங்களது அனுமதி அட்டைகளில் கையொப்பங்களைச் சான்றளித்து எடுத்து வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T08:56:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/military-officers-made-jailers-on-prison-duty-1786252668"></link>
            <id>https://ibctamil.com/article/military-officers-made-jailers-on-prison-duty-1786252668</id>
            <summary type="text">
சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச் சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சிறை அமைப்பில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் உள்ள 32 சிறைச்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>சிறப்பு கலந்துரையாடல்</h2><p>

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c94cf25-b152-4851-b558-9415daf59db9/26-6a7812e8c0ae9.webp' /></p><p>

இதேவேளை, ஒரு சிறையில் ஏற்படும் அமைதியின்மை மற்ற சிறைகளுக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு சிறையிலும் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கள் நிறுவப்பட உள்ளதாக, ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>இராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
சிறைச்சாலை திணைக்களம், காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுக்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb024cb-3e97-4ab1-8518-a17b081df897/26-6a7812e98e6ef.webp' /></p><p>
</p><p>
சிறைக் காவலர்களின் கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய கால பயிற்சி அளித்த பிறகு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு நீதி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T08:21:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-person-has-died-in-a-road-accident-1786261567"></link>
            <id>https://ibctamil.com/article/a-person-has-died-in-a-road-accident-1786261567</id>
            <summary type="text">

கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த டிராக்டர் வண்டியின் பின்புறத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0fca2d-3069-4dc8-add7-7449489bebc3/26-6a7834b596744.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் கிரியுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T08:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் கிராம உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grama-niladhari-officers-launch-sick-leave-protest-1786259711"></link>
            <id>https://ibctamil.com/article/grama-niladhari-officers-launch-sick-leave-protest-1786259711</id>
            <summary type="text">பல்வேறு&amp;nbsp;கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு&nbsp;கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.</p><p>அதன்படி, பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். </p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><h2>எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவு</h2><p> </p><p>

கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be5eb8da-cf02-49c4-9aa5-4ffe69f0b6e7/26-6a7830333dad9.webp' /></p><p> 

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. </p><p>

இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p> </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T07:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-people-protest-for-demanding-land-release-1786257235"></link>
            <id>https://ibctamil.com/article/palali-people-protest-for-demanding-land-release-1786257235</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>பலாலி சந்தியில் இன்று (09) நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது நீண்டகாலமாக தமது காணிகள் அரச
படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப
முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.
</p><p>“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற
அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்”
உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>காணிகளை மீட்பதற்காக போராட்டம்</h2><p>பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால்,
குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a3966a-e40b-410c-89f2-75e064c865f8/26-6a7827022048d.webp' /></p><p>
தமது காணிகளை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால்
உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.
</p><p>இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை
முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>
தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே
தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி
அமைதியான முறையில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும்
குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/115878e5-d459-4e91-b900-e188109c929a/26-6a782703014d5.webp' /></p><p>
</p><p>எனவே, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து,
அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BMOREcke41k" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T07:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenade-attack-on-a-house-in-ratmalana-1786254514"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenade-attack-on-a-house-in-ratmalana-1786254514</id>
            <summary type="text">இரத்மலானை - ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை - ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் (8) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த இருமாடி வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டிருந்த நிலையில் அவற்றில் ஒன்று வெடித்துச் சிதறியதுடன், மற்றைய குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.</p><p></p><h2>நான்கு சந்தேகநபர்கள் கைது</h2><p> </p><p>

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கல்கிஸை காவல் நிலையத்தினர், மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1ef317-5427-4d40-80a6-3e4c0ddafe6a/26-6a781a8887c54.webp' /></p><p> 

கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p>

தற்போது வெளிநாட்டில் இருக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையே நிலவும் தகராறே இத்தாக்குதலுக்கு காரணம் என்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கைக்குண்டுத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nT-V1g3hrTc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tunisian-tourist-died-swept-away-while-surfing-1786255211"></link>
            <id>https://ibctamil.com/article/tunisian-tourist-died-swept-away-while-surfing-1786255211</id>
            <summary type="text">இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று சனிக்கிழமை (08) அன்று வெலிகம, பரண கடே கடற்கரைப் பகுதியில் துனிசிய நண்பர்கள் குழுவுடன் இவர் அலைச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் கடலின் வலுவான நீரோட்டத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து காவல்துறை உயிர்காப்பாளர்கள், கடலோரக் காவல் படையினர் மற்றும் தனியார் மூழ்காளர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6a66a8-361f-4b53-a0b9-83067421f862/26-6a781aea50ef2.webp' /></p><p>
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (09) காலை அதே கடற்கரைப் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்து வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T06:27:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><p>2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்ற இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர்.</p><p>சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.</p><p>&nbsp;</p><h2>நுவரெலியா மாவட்டம்</h2><p>முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளதுடன் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.&nbsp;</p><p>இந்த நிலையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d2f53e-f825-4503-a773-351f026bb6fe/26-6a7811c5701f7.webp' /></p><p> </p><p>

மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். </p><p>மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட 'சிசு செரிய' பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p><p></p><h2>மட்டக்களப்பு மாவட்டம்</h2><p>இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி
வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்தி கல்வி
வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், பட்டிருப்பு கல்வி வலயம், கல்குடா கல்வி
வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில்
பரீட்சைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7285c4-ed1d-4995-9062-b8ef98165341/26-6a78116eee5ce.webp' /></p><p>
இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை
நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள்
நடைபெறுகின்றன.</p><p><b><i>செய்தி - கிருஸ்ணகுமார்</i></b></p><h2>யாழ் மாவட்டம்</h2><p>தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை யாழ் மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.</p><p>மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு
சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c210b6-60f4-4534-a3fd-06b114810bfc/26-6a78116fa9bf6.webp' /></p><p>மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
</p><p>பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல
பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்
சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p><b><i style="">செய்தி - த.பிரதீபன்</i></b>&nbsp;</p><h2>அம்பாறை மாவட்டம்&nbsp;</h2><p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும்
வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.</p><p>பரீட்சை காலை 09.30 மணிக்கு
ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை
மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e971d8ba-9f7a-4125-9ba4-87bfb0b4c52d/26-6a78116e0f443.webp' /></p><p>இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை
கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு
சமூகமளித்திருந்தனர்.</p><p>மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக&nbsp;எமது
பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><b><i>செய்தி - பாறுக் ஷிஹான்</i></b></p><p><b><i></i></b></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:42:28+00:00</updated>
        </entry>
    </feed>
