<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T05:41:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய கருத்து - சற்றுமுன் சாகர காரியவசம் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930</id>
            <summary type="text">புதிய இணைப்புஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைத் தலைவர் (IGP) குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறைத் தலைவர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்&nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>&nbsp;காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.</p><p>

வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T05:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தான நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-to-be-deported-from-malaysia-1786339082"></link>
            <id>https://ibctamil.com/article/four-to-be-deported-from-malaysia-1786339082</id>
            <summary type="text">

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.</p><p>
குறித்த சந்தேகநபர்கள், இன்று பிற்பகல் (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழு, சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்துவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள் பதிவு</h2><p>
</p><p>
இந்த சந்தேக நபர்களில் ஒருவர், பிரபல பாதாள உலக குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35496e53-2317-43ad-bee8-bf820eada010/26-6a796266ded5f.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பல கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்தக் குழு மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா : சப்பரத் திருவிழா இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-annual-festival-1786334119"></link>
            <id>https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-annual-festival-1786334119</id>
            <summary type="text">வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகின்றது.</p><p>இந்த 25 நாட்களில் சப்பரத் திருவிழா, தேர் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன வெகு விமர்சையாக நடைபெறுவது வழமை.</p><p>மகோற்சவப் பெருவிழாவின் 23ஆம் நாளான இன்று (10.08.2026) இரவு சப்பரத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>சப்பரத் திருவிழா&nbsp;</h2><p>இன்று காலை 5மணிக்கு உஷத்கால பூசை ஆரம்பமாகி காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaa6448-f900-4a63-8258-053badab579b/26-6a795e23f179d.webp' /></p><p>மாலை நேர பூசைகளைத் தொடர்ந்து இன்று இரவு மாவை கந்தன் (முருகப்பெருமான்) அழகாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.</p><p>24 ஆம் நாளான நாளை (11.08.2026) செவ்வாய்க்கிழமை மாவைக் கந்தனின் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>தேர் திருவிழா&nbsp;</h2><p>இரதோற்சவப் பெருவிழாவான நாளை அதிகாலை 2 மணிக்கு&nbsp;உஷத்கால பூசையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் பவனி ஆரம்பமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d18fc83-48db-4a8f-8fc3-decb8d2312a3/26-6a795e259afa1.webp' /></p><p>25 ஆம் நாளான நாளை மறுதினம் (12.08.2026) புதன்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><h2>தீர்த்தத் திருவிழா&nbsp;</h2><p>ஆடி அமாவாசை நாளான அன்றைய தினத்தில் காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa5b843-7b5d-4a61-a5c7-367dc051da22/26-6a795e24b8089.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து 13.08.2026 (வியாழக்கிழமை) மாலை 04.30 மணிக்கு மாம்பழத் திருவிழாவும், 14.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு காங்கேசன்துறையில் கப்பல் திருவிழாவும், 15.08.2026 (சனிக்கிழமை) மாலை&nbsp;04.30 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்


ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
</p><p>

ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில், பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும், நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது. </p><p>

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களை வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.</p><h2>செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியல்</h2><p>
</p><p>
அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு. பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p> 

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும், இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcf8919-d198-4129-bf5a-bf0fdbd1a49a/26-6a78447338a73.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><p> தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. </p><p>

2017இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.</p><p> அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார்.</p><h2>சூழலியல் சுற்றுலா மையம்</h2><p>ஐரோப்பிய பொருளாதாரச் சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும்.</p><p>பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1355657c-3b4f-4115-82f7-080a7d27b1e2/26-6a7844749b3ab.webp' /></p><p>

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p>"முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.</p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், றீச்ஷா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீடு அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்</h2><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. </p><p>

அதுமட்டுமன்றி, 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc5c108-6358-4d22-a7a1-4ff0f83686d7/26-6a784473e150d.webp' /></p><p> </p><p>

ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியான முறையில் சமூகமயமாக்கப்படாமல், ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும், தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார்.</p><p> 

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p> 

வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் பாஸ்கரன் கந்தையா.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனை மரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் கோர விபத்து - முல்லைத்தீவு இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-people-killed-in-road-accidents-across-country-1786338382"></link>
            <id>https://ibctamil.com/article/4-people-killed-in-road-accidents-across-country-1786338382</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியின் 46 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் பயணித்தவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த சிவநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>வீதி விபத்து</h2><p>போலவத்தை மற்றும் பொரலெஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரதக் கடவையில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் லுணுவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b1924e-f28a-4254-9c9b-6b859ecb7444/26-6a795eae3db38.webp' /></p><p>அதேநேரம் தங்கொட்டுவ, சுமகீ சந்தை - மெட்டிகொட்டுவ கிளை வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார். </p><p>
அத்துடன் நிகவெரட்டிய - குருநாகல் வீதியின் மாகல்லேகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.</p><p> 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 52 வயதுடைய பெண் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத அகழ்வுப்பணியில் ஈடுபட்ட நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-who-dug-up-ancient-artifacts-was-arrested-1786334329"></link>
            <id>https://ibctamil.com/article/person-who-dug-up-ancient-artifacts-was-arrested-1786334329</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>கைது செய்யபட்ட நபர் 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத அகழ்வு பணி&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேயங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b28c1a8-42f0-4cb7-930f-97a44d64af7d/26-6a795a124467c.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் தமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலை : அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/red-alert-issued-for-the-next-24-hours-1786334588"></link>
            <id>https://ibctamil.com/article/red-alert-issued-for-the-next-24-hours-1786334588</id>
            <summary type="text">இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்</h2><p>இந்தநிலையில் அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் கடற்றொழில் சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7345184a-7a6a-4d1f-91ad-d61e407febaf/26-6a7955284d993.webp' /></p><p>

அத்துடன், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோல் காலியிலிருந்து மாத்தறை வரையிலான ககரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்</p><p>குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.</p><p></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்&nbsp;</h2><p>மேலும், கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அதனுடன் சேர்ந்து அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d7c8dc-fc5b-454d-8d0d-0eda6f4ff04f/26-6a79552929e24.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:43:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gov-officers-sick-leave-for-today-and-tomorrow-1786329601"></link>
            <id>https://ibctamil.com/article/gov-officers-sick-leave-for-today-and-tomorrow-1786329601</id>
            <summary type="text">சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) சுகயீன விடுமுறையை பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதன் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தொழிற்சங்க நடவடிக்கை</h2><p>
</p><p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3bb89a-084c-4173-b38c-55322f5e217d/26-6a794acac256f.webp' /></p><p>2024 ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் நடந்த துப்பாக்கிச் சூடு - சிக்கிய பயங்கர நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dehiwala-shooting-gunman-arrested-1786332592"></link>
            <id>https://ibctamil.com/article/dehiwala-shooting-gunman-arrested-1786332592</id>
            <summary type="text">தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

ஜயவர்தனபுர காவல்துறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் அத்துருகிரிய, ஹபரக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சந்தேபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஆவார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை காவல்துறை பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8305670-da3b-4d64-86f2-1f4928673706/26-6a7948ee2e25a.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் சிறைச்சாலை மோதல்கள் : உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-unrest-senior-officers-summon-to-the-hrcsl-1786331885"></link>
            <id>https://ibctamil.com/article/prison-unrest-senior-officers-summon-to-the-hrcsl-1786331885</id>
            <summary type="text">இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அதற்கமைய, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலைகள் திணைக்களம்</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இதுபோன்ற அமைதியின்மைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44f78db8-39cf-4cf8-b31a-26f974890fe5/26-6a7947276f2d6.webp' /></p><p>

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறை மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உரிய பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்த விடயத்தை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களின் மறைகரங்கள் - பின்னணியில் பெரும் சதி - அரசை சாடும் அமுனுகம]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-against-the-backdrop-of-prison-clashes-1786331876"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-against-the-backdrop-of-prison-clashes-1786331876</id>
            <summary type="text">சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p><p>அதுமட்டுமின்றி சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று திலும் அமுனுகம கேள்வி எழுப்பியுள்ளார்
</p><p>
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்தின் தோல்வி</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவ்வாறு தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருக்குமெனின், அது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துவதாக அமையும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2539061a-8d72-45d9-85e0-4d4e7d8fcfd3/26-6a79455365b95.webp' /></p><p>இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. </p><p>விசேடமாக, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், எவருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்காது அரசாங்கம் தனது விருப்பத்தின்படி செயற்படுவது, நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:28:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424"></link>
            <id>https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இருப்பினும், தான் ஈரானுடன் தீவிரமாக தலையிடாமல், அவர்களின் பொருளாதார அழுத்தத்தை கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>சரியாக நிறைவேற்றவில்லை</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a6d7104-3a6e-455f-86b6-0a9e7d82d441/26-6a7938009067c.webp' /></p><p>

குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) . சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீரிணை திறக்கப்பட மாட்டாது</span></p><p>ஓமானுடன் எட்டப்படும் உடன்படிக்கை மூலம் புதிய கடற்பாதை தீர்மானிக்கப்படும் போதிலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை திறக்கப்பட மாட்டாது என&nbsp; ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81570d3-7918-41d1-97c8-ff9d33871f44/26-6a7937ffd9c56.webp' /></p><p>ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதால் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் அவர் கூறினார்.&nbsp;</p><p>இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றிலும் தடை: உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-gce-advanced-level-examination-begins-today-1786327241"></link>
            <id>https://ibctamil.com/article/2026-gce-advanced-level-examination-begins-today-1786327241</id>
            <summary type="text">உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p>2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முற்றிலும் தடை</h2><p>

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083e0e2-4b44-4fd5-8d81-f278e8eaef99/26-6a793283ac67a.webp' /></p><p>கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>

பரீட்சை விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு பரீட்சை மோசடிகளை தவிர்குமாறும், கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.</p><p> 

மேலும்&nbsp; ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T02:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை நெருங்கும் பேராபத்து....! அரசிற்கு வலுக்கும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-under-pressure-over-rajapaksa-probe-1786324607"></link>
            <id>https://ibctamil.com/article/govt-under-pressure-over-rajapaksa-probe-1786324607</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பார்க்கப்படும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கம் தன் அரசியல் முகத்தையும் மக்கள் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என்ற அழுத்தம் அரசுக்கு உள்ளது.</p><p>

இந்த நிலையில் ராஜபக்ச ஆதரவாளர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தரப்பினரும், இந்த நகர்வுகளைத் தங்களின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் அழிப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல் என்றே சித்தரிக்கின்றனர்.
</p><p>
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, முன்னாள் ஆட்சியாளர்களைக் கைது செய்யும் படலத்தை அரசு கையில் எடுக்கிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர் என்ற பிம்பம் கொண்ட மகிந்தவை நேரடியாக நெருங்குவது, தென்னிலங்கையில் அவருக்கு மீண்டும் ஒரு அனுதாப அலையை உருவாக்கக்கூடும் என்ற அரசியல் அச்சமும் இங்கு நிலவுகிறது.</p><p>

இவ்வாறான பின்னணியில் தற்போதைய அரசாங்கம், வெறும் கைதுகளோடு நின்றுவிடாமல், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சட்டப்பூர்வமாக நிரூபித்துத் தண்டனை பெற்றுத் தருமா அல்லது இது வழக்கமான அரசியல் நாடகமாக முடியுமா என்பதே விமர்சகர்களின் முதன்மைக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.</p><p>

இது குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p>[F2H0YZZஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு...! இலங்கைக்கு குவியும் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remittances-to-sl-exceed-5-billion-in-2026-1786323070"></link>
            <id>https://ibctamil.com/article/remittances-to-sl-exceed-5-billion-in-2026-1786323070</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p>
</p><p></p><h2>மில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 947.2 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a582e1c5-d378-4f5e-9092-71e421e4d834/26-6a7920805dfab.webp' /></p><p>இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 777.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளன.</p><p>

ஜூன் மாதத்தில் 697.3 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலையில் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786322275"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786322275</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfbb42d5-216a-48e0-b91b-b2baa0eb795d/26-6a791d650cf5f.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:38:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் தொடர்பான சர்ச்சையான கருத்து! சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230</id>
            <summary type="text">
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த அழைப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காரியவசம், தான் கூறாத விஷயங்களுக்கு தவறான விளக்கம் அளித்து அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வேலைத்திட்டம்&nbsp;</h2><p>தான் கூறிய கருத்துகளைத் திரித்து காட்டி, எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய மிரட்டல்களுக்குத் தான் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த காலத்தில் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமான முடிவையே சந்தித்ததாகவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அதே பாதையில்தான் பயணிக்க முயற்சிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a10eb2-af34-4d89-8006-3796afa3c715/26-6a791ac4e6969.webp' /></p><p>ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபராக (DIG) நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்பட்டதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், எதிர்காலத்தில் மக்கள் இதற்குச் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது...! சாடும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703"></link>
            <id>https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703</id>
            <summary type="text">அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வரிக் கொள்கைகள்&nbsp;</h2><p>

வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9621712e-b680-43d1-914d-f17d503ba0da/26-6a79135892d9a.webp' /></p><p>

அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும் மற்றும் மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சைபர் திருட்டு&nbsp;</h2><p>அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d873d14-1095-450b-8145-7aab97dfe708/26-6a791359455d3.webp' /></p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:03:46+00:00</updated>
        </entry>
    </feed>
