<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-11T03:18:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[​கொழும்பு - தெகிவளையில் பயங்கரம்.! வீடொன்றின் மீது தாக்குதல் - 2 சிறுவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-children-killed-in-dehiwala-grenade-attack-1789092407"></link>
            <id>https://ibctamil.com/article/two-children-killed-in-dehiwala-grenade-attack-1789092407</id>
            <summary type="text">வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

குறித்த சம்பவம் தெகிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

குறித்த சம்பவம் தெகிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் இன்று (11) அதிகாலை&nbsp; இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>உந்துருளியில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf8259e-b08e-4ca0-bdea-766c6603aeb0/26-6aa3656a73a35.webp' /></p><p> 

அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். </p><p>

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T02:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1789088786"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1789088786</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-09-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 








</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8aa20da-dac2-42df-be4e-6e16195f35c3/26-6aa35413e1a98.webp' />&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T01:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஐந்து இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-temple-mango-sold-for-over-rs-5-lakhs-1789088423"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-temple-mango-sold-for-over-rs-5-lakhs-1789088423</id>
            <summary type="text">வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக்கு ஏலம் போயிருந்தது.
</p><p>
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா நேற்று (11-09-2026) இடம்பெற்றது.
</p><p>இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக
ஏலத்தில் விடப்பட்டது.</p><p>
</p><p></p><h2>மகோற்சவ திருவிழா</h2><p>அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02ee8038-a42a-404c-8d0d-e9b523b4a28e/26-6aa352a8a5b71.webp' /></p><p>

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ்
குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T01:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/s-m-kanthawala-takes-charge-as-kks-oic-1789087271"></link>
            <id>https://ibctamil.com/article/s-m-kanthawala-takes-charge-as-kks-oic-1789087271</id>
            <summary type="text">காங்கேசன்துறை காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரியாக பிரதான காவல்துறை பரிசோதகர் S.M காந்தவல&amp;nbsp;பொறுப்பேற்றுள்ளார்.இந்தநிலையில் நேற்று (10-09-2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரியாக பிரதான காவல்துறை பரிசோதகர் S.M காந்தவல&nbsp;பொறுப்பேற்றுள்ளார்.</p><p>இந்தநிலையில் நேற்று (10-09-2026) அவர் கடமையினை பொறுப்பேற்றார்.
</p><p>
இதற்கு முன்னர் வெள்ளவத்தை காவல் நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகராக அவர் கடமையாற்றியுள்ளார்.</p><p>இந்தநிலையிலேயே அவர் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-demands-handover-of-batticaloa-council-1789086819"></link>
            <id>https://ibctamil.com/article/npp-demands-handover-of-batticaloa-council-1789086819</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம்
ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மாநகரசபையின் 17 வது சபை அமர்வு நேற்று (10-09-2026) மாநகரசபை முதல்வர்
சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.</p><p>

 இதன் பின்னர் மாநகரசபையின்
எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம்
துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ் மற்றும் லதீப் ஆகியோர்
ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><h2>கடும் விசனங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், </p><p>“இன்று மாநகர சபையின் 17 வது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது, இந்த மாநகர சபை
ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன்
எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4ad2a4-b7d9-4683-8cba-ed19f886e686/26-6aa34c653f82d.webp' /></p><p>இருந்தபோதும் கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகரசபையின்
செயற்பாடுகள் எதவுமே செயல்படுத்தப்படவில்லை.
</p><p>
நீங்களும் சபையில்
இருக்கின்றீர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள்
தெரிவித்து வருகின்றனர்.</p><p>

மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு,
வடிகான் பிரச்சினை உட்பட பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் ஆனால் எதுவும் நடை முறைப்படுத்தப்படவில்லை.</p><p></p><h2>பல தீர்மானங்கள்</h2><p>இன்று எமது மாநகரசபை எல்லையான திருகோணமலை வீதியிலுள்ள லங்காமாதா ஆலையத்தில்
இருந்து காத்தான்குடி வரைக்கும் எந்தவொரு மின்விளக்கும் ஒளிர்வதில்லை இதற்கான
காரணத்தை கேட்டால் தினம் தினம் ஒவ்வொரு காரணங்களை சொல்கின்றார்.</p><p>

இந்த வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல
அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது கட்டாகாலி மாடுகள் தொல்லை தொடர்பாக
எதுவும் நடைபெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef79072-cd44-418e-8c9f-89759ff38347/26-6aa34c66305e5.webp' /></p><p>

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப்
பெறவில்லை கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில்
மூழ்கியது காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை இது தொடர்பாக கடந்த
காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தோம் பயனில்லை.
</p><p>
இந்த வருடம் மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப்
போகிறது எனவே அதற்கான முழு பொறுப்பும் முதல்வர்
எடுக்க வேண்டும்.
</p><p>
மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி
நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக
தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை.</p><p></p><h2>சிறந்த சேவை</h2><p>
</p><p>
அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர் ஏழைகள்
துன்பப்படுகின்றனர். </p><p>

குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு
செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர் இதனால் அந்த
வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு
ஆக்கிரமித்துள்ளனர்.</p><p> மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர் ?

காந்தி பூங்கா அதனை அண்டிய நீதிமன்ற பகுதி வாகன தரிப்பிடத்தில் மோட்டார்
சைக்கிளுக்கு 100 ரூபாவும் தலைகவசம் வைப்பதற்கு 100 ரூபாவுமாக 200 ரூபா
அளவிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd646d76-c3cb-4d80-b77d-0e12ec66d196/26-6aa34c670ec6f.webp' /></p><p> 

இந்த வாகன தரிப்பிடம் தனிப்பட்ட ரீதியில் குத்தகைக்கு
வழங்கப்பட்டுள்ளதா ? இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை இதை
வன்மையாக கண்டிக்கின்றோம்.</p><p>&nbsp;எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம்
ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைகட்டியொழுப்பிய
மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம். </p><p>

இது மக்கள் அரசாங்கம் மக்கள்
ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/41-arrested-over-temple-firewalk-firewood-1789085102"></link>
            <id>https://ibctamil.com/article/41-arrested-over-temple-firewalk-firewood-1789085102</id>
            <summary type="text">திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு
நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக்
கூறப்படும் 41 இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு
நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக்
கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள செய்தி கவலையையும் பல முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது
என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் நேற்று (10-11-2026) ஊடக அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>வழிபாட்டு நடைமுறை</h2><p>
“கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, குறித்த இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குச்
செல்வதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி, அனுமதி
நடைமுறைகள் மற்றும் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்பன தொடர்பில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை வழங்குவது அவசியமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20ff05e-b784-4c00-8268-d0beefc5aeeb/26-6aa34743aeb97.webp' /></p><p>தம்பலகாமம் மாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய
வழிபாட்டு நடைமுறைகளும் அப்பகுதி மக்களின் நீண்டகால சமய மற்றும் கலாசார
பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. </p><p>

எனவே, சட்டத்தை மதிப்பதுடன்
மக்களின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாப்பதும்
அரசின் முக்கிய பொறுப்பாகும்.</p><p></p><h2>எதிரான நிலைப்பாடு</h2><p>அதேவேளை, எந்தவொரு மதத்தினருக்கும் எதிரான நிலைப்பாடு எமக்கில்லை.&nbsp; &nbsp;</p><p>இலங்கையில்
அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு
வழங்கப்பட வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடு.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f258df-dd0f-4774-ae94-7bea5fc8bca7/26-6aa347449e6ee.webp' /></p><p>ஒரு மதத்தின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக மட்டும் தேவையற்ற
தடைகள் அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றனவா என்ற சந்தேகம்
மக்களிடையே உருவாகாத வகையில், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைத்து
மதங்களையும் சமமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.
</p><p>

கைது செய்யப்பட்டுள்ள 41 இளைஞர்கள் தொடர்பான சம்பவத்தின் முழுமையான உண்மை
நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
</p><p>
ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள்
சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட
வேண்டும்.

வனவளப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, மத மற்றும்
கலாசார நிகழ்வுகளின் தன்மையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு நடைமுறை</h2><p>எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில், ஆலய நிர்வாகம், பிரதேச
அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில்
தெளிவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப்
பாதுகாப்பு நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

நாம் சட்டத்தை மதிக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1daba662-3e4a-416e-85e0-d1231952ccf1/26-6aa34745542ac.webp' /></p><p>அதே நேரத்தில், நியாயம், சமத்துவம் மற்றும் மத
உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>

தம்பலகாமம் மாரியம்மன் ஆலய திருவிழா போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மக்களின் சமய
உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், அவர்களின் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையவை.
</p><p>
எனவே, இந்த விடயத்தை உணர்வுபூர்வமாகவும் நியாயமான முறையிலும் அணுகி,
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி
செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-summoned-by-fcid-over-mig-deal-1789073665"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-summoned-by-fcid-over-mig-deal-1789073665</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>
குறிப்பிட்ட கொள்முதல் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>நிதி முறைகேடு&nbsp;</h2><p>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>இதே மிக் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதியும், மார்ஷல் ஒஃப் தி எயார்போர்ஸ் கௌரவம் பெற்றவருமான ரொஷான் குணதிலக்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2cf498-ba6f-46a1-bad4-b532cc0db0f0/26-6aa33f930694b.webp' /></p><p>FCID வளாகத்திற்குள் நுழையும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் விமானப்படைத் தளபதி, தன்னிடம் விசாரிக்கப்படவுள்ள குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மிக்-27 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்த போது கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விரிவான மற்றும் தீவிரமான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கல்லூரியின் மன்றம்&nbsp;</h2><p>இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரியின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
</p><p>
குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.</p><p> 

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5caa8f2-5402-41c2-998d-394678758e71/26-6aa2f75176c26.webp' /></p><p>அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்வித பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:24:02+00:00</updated>
        </entry>
    </feed>
