<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T08:05:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-15mn-weligama-house-frozen-over-drug-racket-1788679703"></link>
            <id>https://ibctamil.com/article/rs-15mn-weligama-house-frozen-over-drug-racket-1788679703</id>
            <summary type="text">EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெலிகம, பாதேகம ...</summary>
            <content type="html"><![CDATA[<p>EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெலிகம, பாதேகம பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத சொத்துக்கள்</h2><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் இணையவழி மோசடி விசாரணைப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட சொத்து, முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/892ca34b-8cf0-4c0c-bf25-035e26caa19f/26-6a9d1d6817b2c.webp' /></p><p>இதனடிப்படையில் வெஹேன, பாதேகம பகுதியில் அமைந்துள்ள 150 இலட்சம் ரூபாவிற்கும் (15 மில்லியன்) அதிக பெறுமதியுடைய வீடு ஒன்று இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த வீட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடக்க உத்தரவைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் அமெரிக்க உயர் மட்டக் குழு : இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-federal-maritime-commission-chiefs-to-arrive-sl-1788677758"></link>
            <id>https://ibctamil.com/article/us-federal-maritime-commission-chiefs-to-arrive-sl-1788677758</id>
            <summary type="text">அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பல் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (06) வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விஜயத்தின் போது, இரு தலைவர்களும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் கடல்சார் துறை தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;எரிக் மேயர் தெரிவிப்பு&nbsp;</h2><p> மேலும், கொழும்பில் நடைபெறவுள்ள 8வது சர்வதேச கடல்சார் மற்றும் மூலோபாய மாநாட்டில் அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் டிபெல்லா சிறப்புரையாற்றவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45686d60-39d2-48ae-be0d-c9d81a6f805a/26-6a9d164257a37.webp' /></p><p>
</p><p>
 கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்லும் கொள்கலன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தொடர்ந்து பயணிக்கின்றன என்றும், இது இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்தில் இலங்கையின் முக்கிய பங்கை மிகத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பாதுகாப்பான மற்றும் திறமையான கப்பல் போக்குவரத்து அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பிராந்திய மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் இவ்விஜயத்தை சுட்டிக்காட்டி அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;அமெரிக்க கடல்சார் ஆணைக்குழு</h2><p>1961-இல் நிறுவப்பட்ட அமெரிக்க கடல்சார் ஆணைக்குழு, அமெரிக்காவின் சர்வதேச கடல்சார் போக்குவரத்து அமைப்பைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b9b6f1-70de-4e62-a418-c6436b34e8c6/26-6a9d164339501.webp' /></p><p> </p><p>ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டு, செனட் சபையின் ஒப்புதலுடன் கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராகப் பொறுப்பேற்ற லாரா டிபெல்லா, முன்னர் புளோரிடா மாநிலத்தின் முதல் பெண் வர்த்தகச் செயலாளராகவும் பெர்னாண்டினா துறைமுக இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
</p><p>
அவருடன் வருகை தரும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி, அமெரிக்க கடற்படையின் முன்னாள் சட்ட ஆலோசகராகவும், சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும் திகழ்கிறார்.</p><p>

அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும் இந்த விஜயம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.</p><p></p><h2>&nbsp;583 மனித எச்சங்கள் மீட்பு&nbsp;</h2><p>இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d077f-45c1-44a3-b0fa-9698dc5c207c/26-6a9d09f5a5506.webp' /></p><p> கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
</p><p>செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p></p><h2>டி.என்.ஏ பரிசோதனை</h2><p>
</p><p>
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எச்சங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச பங்களிப்பு அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b0ae09-f56f-47cb-9c50-d274a9d14281/26-6a9d09f660ea7.webp' /></p><p>எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உண்மையும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்“ என&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T06:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680"></link>
            <id>https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680</id>
            <summary type="text">2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71bc350-7634-44bc-8002-5b919c758757/26-6a9cdd93aac50.webp' /></p><p>அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p>

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் ஜெனீவா கூட்டத்தொடர் : இறுதி நேரத்தில் விஜிதவின் பயணம் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/min-vijitha-visit-cancelled-geneva-63rd-session-1788671559"></link>
            <id>https://ibctamil.com/article/min-vijitha-visit-cancelled-geneva-63rd-session-1788671559</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள இந்த அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p> </p><p>இந்த நிலையில் அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் இம்முறை பங்கேற்க மாட்டார் எனவும், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர இராஜதந்திரத் தூதுக்குழுவே இந்த அமர்வை முழுமையாகக் கையாளும் எனவும்&nbsp;வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>எழுத்துமூலமான அறிக்கை</h2><p>எனினும் குறித்த பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பில் அவர் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbbdad19-d796-469a-bc90-ba3774d78eab/26-6a9cfc4398d3c.webp' /></p><p>மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p>


இந்த அறிக்கையை மையப்படுத்தி உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் கூடிய பொது விவாதமும் நடைபெறவுள்ளது.</p><p>சர்வதேசத்தின் கடுமையான கவனத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையிலான மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791"></link>
            <id>https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் (06.09.2026) ஆரம்பமாகவுள்ளது. </p><p>

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.</p><p></p><h2>&nbsp;நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>

பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் ஆரம்பமாகவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2adf0262-2356-4878-80e4-d393393b5089/26-6a9cf40267893.webp' /></p><p>மேலும், பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி எதிர்கால பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இதேவேளை&nbsp;அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7rnlu1KswuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தமிழ்தேசியக் கட்சிகள் பகிரங்க கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470"></link>
            <id>https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&amp;nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&amp;nbsp; ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&nbsp; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.</p><p>அதன்படி, கடந்த கால கடத்தல்கள், காணாமல் போனோர் விவகாரம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் இலங்கை அரசின் மீது ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் காட்டும் அலட்சியப் போக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் அரசு தொடர்ந்தும் தாமதம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9273b056-9d6b-4116-85fc-4180393edd52/26-6a9ceac28d367.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக காத்திருப்பதாகவும் தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
</p><p>
ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷ ராசி</h2><p>பணவரவுக்கு குறை இருக்காது. ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழப்பங்களின் காரணமாக சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1663140d-0c24-4b69-9631-4775e39ed975/26-6a9ced0ca640c.webp' /></p><p>பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
</p><p>
அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவிஉயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.</p><p></p><h2>கடக ராசி</h2><p>பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad8ea48-3ade-40d9-bd92-e980dc453eb9/26-6a9cecbe0e7ed.webp' /></p><p>அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வந்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.</p><p> சிலருக்கு நண்பர்களுடன் வெளியூர்ச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். </p><p>அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
</p><p>
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும்.</p><h2>சிம்ம ராசி </h2><p>வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a151149f-8c7d-4793-9079-8e0bebe9e28b/26-6a9cecbebf1cc.webp' /></p><p>அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். செலவுகளைச் சமாளிப்பதற்கேற்ப பணவரவும் இருக்கும் என்பதால் உற்சாகமாக இருப் பீர்கள். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். </p><p>பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்ப வர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான அழைப்புக் கடிதம் வரும்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் கல்வி அமைச்சு விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958"></link>
            <id>https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958</id>
            <summary type="text">பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&amp;nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, பாடசாலை சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.</p><p>
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம்&nbsp;</h2><p> </p><p>இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c756cbf3-f736-4d1d-be51-0e7f81efb3cf/26-6a9ce32d990ba.webp' /></p><p>

‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
</p><p>
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சகதிக்குள் அதிசயம் - 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727"></link>
            <id>https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>திரிஷூலி நீர்மின் திட்டத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>நேபாளத்தில் மற்றொரு நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்து இரண்டு பேர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த மீட்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மீண்டும் மீண்டும் கத்திய</span></p><p>225 மீட்டர் ஆழமுள்ள சுரங்கப்பாதையில் இருந்து நேபாள இராணுவத்தினர் மற்றும் தென் கொரிய பேரிடர் நிபுணர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழு அந்த நபரை மீட்டதாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e703f11-b164-467c-a587-e404a3bdb9fb/26-6a9cd27841741.webp' /></p><p>உலங்கு வானூர்தி மூலம் அவர் மீட்கப்படுவதும், பயணத்தின் போது இராணுவ மருத்துவ உதவியாளர் ஒருவர் அவரைப் பரிசோதிப்பதும் புகைப்படங்களில் காணப்பட்டன.</p><p>மீட்புக் குழுவினரின் விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் கத்தியதாகவும், ஆனால் அவர்களால் தன் குரலைக் கேட்க முடியவில்லை என்றும் லூ ஒரு அதிகாரியிடம் பேசும் ஓடியோவை சிசிடிவி பகிர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனினும் இன்று அவர்கள் என்னைக் காப்பாற்றிய போது, ​​என் கண்களுக்கு முன்பாக அந்த ஒளியைப் பாய்ச்சிய போது ​​என்னால் அதை நம்பவே முடியவில்லை என அவர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது</p><p></p><h2>தேடும் பணிகள்&nbsp;</h2><p>ஒகஸ்ட் 26 அன்று நேபாள - திபெத் பிராந்தியத்தைத் தாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, 5,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73e2df1-58e0-443c-8040-3575c2e2ecb8/26-6a9cd2778840e.webp' /></p><p>காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் மீட்புக் குழுக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.&nbsp;</p><p>நேபாள மற்றும் சீன அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சிஎன்என் ஊடக தரவுகளின் படி, கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350-ஐத் தாண்டியுள்ளது .&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் உச்சக்கட்ட சோகம் - தாத்தா இயக்கிய வாகனத்தில் நசியுண்டு பெண் குழந்தை பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-month-old-girl-killed-in-kilinochchi-1788659056"></link>
            <id>https://ibctamil.com/article/18-month-old-girl-killed-in-kilinochchi-1788659056</id>
            <summary type="text">வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கிய போது பெண் குழந்தை ஒன்று சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.இந்த துயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கிய போது பெண் குழந்தை ஒன்று சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.</p><p>இந்த துயர சம்பவம் நேற்று (05.09.2026) முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி - உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது&nbsp;&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கப் ரக வாகனத்தின் சாரதியான குழந்தையின் தாத்தா அதனை இயக்கியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>குழந்தையின் சடலம்</h2><p>
அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை அதன்
சக்கரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7dcc529-928e-41c3-bd92-318665e1ca0a/26-6a9ccac25ee6e.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே
பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p>

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றப் பதில் நீதிவான்
எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788660781"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788660781</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்&amp;nbsp; தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp; தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a96366-8681-463b-836e-12e97f5799e9/26-6a9ccc304877a.webp' /></p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும். </p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p>

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>

அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:14:38+00:00</updated>
        </entry>
    </feed>
