<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T11:15:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் சிறைக்கு செல்வதை எவரும் தடுக்கமுடியாது:எதிரணி எம்.பி உறுதிபட தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944"></link>
            <id>https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944</id>
            <summary type="text">விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p> நாட்டை வங்குரோத்து அடையச் செய்த ராஜபக்சவை 2022ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அமர வைப்பதில் நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலை ஜனாதிபதியாக்கினால் அவர்கள் மக்களே அல்ல</h2><p>2029 ஆம் ஆண்டு நல்ல பிள்ளை என்று கூறி நாமலை ஜனாதிபதியாக்க யாராவது கை ஓங்கினால் அவர்கள் மக்களாக இருக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90770386-92a1-44d6-9f25-8436323fd6b6/26-6aa92753a1ae4.webp' /></p><p>தம்மைப் போல் அல்லாமல் ராஜபக்சாக்களிடம் பணம் இருப்பதால் எந்நேரமும் பேருந்துகளில் மக்களை ஏற்றிக்கொண்டு பேரணிகளை நடத்தலாம் என்றாலும் அதுபற்றி அவ்வளவாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tribute-to-thileepan-39th-event-1789465551"></link>
            <id>https://ibctamil.com/article/tribute-to-thileepan-39th-event-1789465551</id>
            <summary type="text">🛑&amp;nbsp;யாழ் பல்கலைக்கழகம் 
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவே...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑&nbsp;யாழ் பல்கலைக்கழகம் 
</u></b></h5><p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக பிரதான
வளாகத்தில் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>நிகழ்வில் மாணவர்கள் , விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 யாழ் மாநகரசபை</u></b></h5><p>தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின்
மாதாந்த அமர்வில் முதல்வர் வி.மதிவதனி தலைமையில் சபா
மண்டபத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>
முதல்வர் தனது நினைவு கூறல் அஞ்சலி உரையில் அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய
காந்திய வழியில் ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து
தமிழ் இனத்தின் விடுதலைக்காக மன்னுயிறை ஈகம் செய்த லெப்டினன்கேணல் திலீபனின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக
போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர்
நீத்த மாவீரன் இராசையா பார்த்தீபனுக்கு நாம் செய்யும் உணர்வு பூர்வமான
அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

முதலாவது சுடரை முதல்வர் ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பிரதி
முதல்வர், கௌரவ உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.&nbsp;</p><h5><b><u>🛑 பருத்தித்துறை&nbsp;</u></b></h5><p>பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
இன்று காலை 9.55 மணியளவில் ஆரம்பமாகியது.
</p><p>
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான
நினைவுத் தூபியில், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி தலைமையில்
நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிது நேர அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயக
போராளிகள் கட்சியின் தலைவர் ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து
வைத்தார்.
</p><p>
தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போலால் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. </p><p>அதனைத் தொடர்ந்து
பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
</p><p>
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை
உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியை
வெளிப்படுத்தினர்.
</p><p>
நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் துல்லிய தாக்குதலில் புடினின் நம்பிக்கைக்குரிய தளபதி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767"></link>
            <id>https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767</id>
            <summary type="text">ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் (51st Combined Arms Army) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்காகோவ்,உக்ரைன் நடத்திய துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக செப்டம்பர் 14 அன்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p>&nbsp;ஓகஸ்ட் 26 அன்று ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யக் கட்டளை மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்த ஜெனரல் கொல்லப்பட்டார்.
</p><p>
</p><h2>உயிரிழப்பை உறுதிப்படுத்திய உக்ரைன் இராணுவத்தலைமை</h2><p>ஓகஸ்ட் 27 அன்று, உக்ரைனின் இராணுவத் தலைமை (General Staff) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியது. டொனெட்ஸ்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட "கடுமையான இழப்புகள்" குறித்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0427cc8a-347a-45b7-b3f8-2e473269a23c/26-6aa913c66d180.webp' /></p><p>
</p><p>
மில்காகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செய்தியை வெளியிட்ட ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான 'வாஷ்னியே இஸ்டோரி' (Vazhniye Istorii), இது உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட 23-வது ரஷ்ய ஜெனரலாக அவர் இருப்பார் என்று கூறியது.</p><p></p><p>

</p><h2>‘ரஷ்யாவின் வீரன்’</h2><p>ரஷ்ய ஆதரவு பிரச்சாரகரான அனஸ்தேசியா கஷேவரோவா, இந்தத் தாக்குதல் ஒரு துல்லியமான தாக்குதலாகத் தெரிவதாகவும், கட்டளை மையம் இருந்த இடம் குறித்த தகவல் "நமது சொந்த தரப்பிலிருந்தே" கசிந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8290ab9-82a4-4bc5-b692-7d1ea47a5c78/26-6aa913c71e072.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">&amp;nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-saley-s-health-status-report-1789465295"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-saley-s-health-status-report-1789465295</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவிக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதனடிப்படையில் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (15.09.2026) பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>சுரேஷ் சலே&nbsp;</h2><p>
சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளராக சிகிச்சை பெற வேண்டுமா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3888cf6b-4d9a-4711-8a73-310635eedd27/26-6aa917d72eac2.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததுடன், ஐவர் கொண்ட வைத்தியக் குழுவுக்கும் தேவையான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையையும் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-archuuna-probed-by-tid-over-ltte-remarks-1789461286"></link>
            <id>https://ibctamil.com/article/mp-archuuna-probed-by-tid-over-ltte-remarks-1789461286</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அண்மையில் அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் பேரணி ஒன்று இடம்பெற்றது.
</p><p>
அந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமநாதன் அர்ச்சுனா ஒருசில கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.</p><p></p><h2>எதிரான விசாரணை</h2><p>

அதனைத் தொடர்ந்து அர்ச்சுனாவின் கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நேற்று கூட்டு எதிர்க்கட்சி (Joint Opposition) சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f1a6c1-2f1c-4392-abff-ee500951f62e/26-6aa90e74a553a.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்த காவல்துறைமா அதிபர், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணையொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான கொள்முதல்! விமானப்படையின் முன்னாள் தளபதியிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-air-force-commander-appears-before-fcid-1789463335"></link>
            <id>https://ibctamil.com/article/former-air-force-commander-appears-before-fcid-1789463335</id>
            <summary type="text">இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொள்முதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p></p><h2>கோட்டாபயவின் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பல முக்கிய பிரமுகர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afccceee-f513-4aed-b2d4-cb9763171d39/26-6aa90e2b167b6.webp' /></p><p> </p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக ஆகியோரும் இதே விசாரணை தொடர்பாக அண்மையில் FCIDயில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/javelin-thrower-rumesh-s-five-javelins-damaged-1789459689"></link>
            <id>https://ibctamil.com/article/javelin-thrower-rumesh-s-five-javelins-damaged-1789459689</id>
            <summary type="text">உலகளாவிய ஈட்டி எறிதல் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் இலங்கை விளையாட்டு வீரர் ருமேஷ் தரங்கவின் ஐந்து ஈட்டிகளும் சந்தேகத்திற்கு இடமான மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ஈட்டி எறிதல் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் இலங்கை விளையாட்டு வீரர் ருமேஷ் தரங்கவின் ஐந்து ஈட்டிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் உடைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அவர், துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் TK-730 விமானம் மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து இலங்கை திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
உடைக்கப்பட்டுள்ள குறித்த ஈட்டிகளில், அவர் சாதனைகள் படைக்கப் பயன்படுத்திய ஈட்டிகளும் அடங்கும் என தெரியவருகிறது.</p><p>&nbsp;</p><h2>அரசாங்கத்தின் செலவில் புதிய ஈட்டிகள்</h2><p>
</p><p>
குறிப்பாக ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரத்திற்கும், சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 92.07 மீற்றர் தூரத்திற்கும் எறிவதற்காக அவர் பயன்படுத்திய ஈட்டிகள் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed790f15-ae17-4a94-b960-cc3ccdf98735/26-6aa90138c74b3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உலக சாம்பியனான ருமேஷ் தரங்கவிற்கு அரசாங்கத்தின் செலவில் புதிய ஈட்டிகள் வழங்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.</p><h2>அரசாங்கம்&nbsp;உறுதுணை</h2><p>
</p><p>
அதன்படி, வீரர் தரங்கவின் பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சர்வதேச தரத்திலான புதிய ஈட்டிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308d6266-33f0-4637-a149-69bef0e6babf/26-6aa9013985798.webp' /></p><p> 

"எங்கள் தடகள நட்சத்திரத்திற்கும் அவரது ஒலிம்பிக் கனவுக்கும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும்" என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T09:02:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teen-arrested-in-hatton-with-fake-euros-1789456386"></link>
            <id>https://ibctamil.com/article/teen-arrested-in-hatton-with-fake-euros-1789456386</id>
            <summary type="text">போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்றையதினம் (12.9.2026) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அந்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக ஹட்டன் நகருக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>

கொழும்பை சேர்ந்த தனது மைத்துனர் இந்த வெளிநாட்டுப் பணத்தாள்களைத் தன்னிடம் கொடுத்ததாகவும், அவை போலி நாணயத்தாள் என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த சந்தேக நபர் காவல்துறக்கியினரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193c4e49-4413-433e-b1ca-aa452b1e3a8b/26-6aa8ff733be10.webp' /></p><p>இந்த சோதனையின் போது, ​​சந்தேக நபரிடமிருந்து 9 போலி 200 யூரோ பணத்தாள்கள் மற்றும் 7 போலி 100 யூரோ பணத்தாள்கள் உட்பட 16 போலி வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>

போலி பணத்தாள்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று ஹட்டன் காவல்துறை சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-payment-amount-to-be-credited-tomorrow-1789458465"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-payment-amount-to-be-credited-tomorrow-1789458465</id>
            <summary type="text">செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வரவு வைக்கப்படவுள்ள பணம்</h2><p>
</p><p>
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தம் 9,181,696,250 ரூபாய் நாளை (16) வங்கிப் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d32dcc-e2ae-401c-8ef3-192b1927d203/26-6aa8f9805f464.webp' /></p><p>

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாளை மறுதினம்(17) வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று வாகனங்கள் கோர விபத்து: சிறுமி உட்பட 5 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-involving-collision-three-vehicles-1789457321"></link>
            <id>https://ibctamil.com/article/accident-involving-collision-three-vehicles-1789457321</id>
            <summary type="text">பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்துக்குள்ளாகியதில் சிறுமி ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்துக்குள்ளாகியதில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த விபத்து இன்று காலை (15.09.2026) ஏற்பட்டுள்ளது.</p><p>

தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.</p><p></p><h2>கோர விபத்து</h2><p> </p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40539632-afa4-4da2-ad97-09adb1f9b3ad/26-6aa8f7200632a.webp' /></p><p> </p><p>விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> </p><p>

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய காவல்துறை போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T07:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகவுக்கு உயர் நீதிமன்றின் முக்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fundamental-rights-of-ravi-and-shani-violated-1789456812"></link>
            <id>https://ibctamil.com/article/fundamental-rights-of-ravi-and-shani-violated-1789456812</id>
            <summary type="text">
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன், ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன மற்றும் அப்போதைய பிரதம காவல்துறை பரிசோதகர் இந்துக்க டி சில்வா ஆகிய மூவரே இந்த மனித உரிமை மீறலுக்குப் பொறுப்பானவர்கள் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>பொய் முறைப்பாடு</h2><p>
</p><p>
எனினும், இந்த முறைப்பாடு அரசியல் நோக்கத்துடனும் தீய எண்ணத்துடனும் செய்யப்பட்டது என்றும், இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகள் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருந்தன என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f6369c-e126-4040-9fe2-828677215e54/26-6aa8f5edc3aec.webp' /></p><p>

இந்தத் தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மனுதாரர்களான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>முக்கியத் தீர்ப்பு</h2><p> 

அதன்படி, பொய் முறைப்பாடு அளித்த ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன மனுதாரர்கள் இருவருக்கும் தலா 50,000 ரூபாயையும், விசாரணையை மேற்கொண்ட அப்போதைய பிரதம காவல்துறை பரிசோதகர் இந்துக்க டி சில்வா தலா 10,000 ரூபாயையும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84de9d37-6f44-439a-ba7f-175b4b483425/26-6aa8f5ee79e4b.webp' /></p><p>
</p><p>
நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் அச்சல வெங்கப்புளி ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் தங்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-has-been-issued-for-3-districts-1789455295"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-has-been-issued-for-3-districts-1789455295</id>
            <summary type="text">மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்டுள்ளது.
</p><p>
இன்று (15.09.2026) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p></p><h2>வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல </h2><p>

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d2b2394-dd71-488e-8606-aa9e031b92a0/26-6aa8f1f0848dc.webp' /></p><p>மேலும், கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை அடிப்படையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T07:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பொதியில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-stock-of-kush-was-left-behind-at-the-airport-1789449602"></link>
            <id>https://ibctamil.com/article/a-stock-of-kush-was-left-behind-at-the-airport-1789449602</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயம் இன்று (15.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>

விமான நிலையத்தின் பயணப் பொதிகள் நகரும் பாதை இலக்கம் 06க்கு அருகில் கைவிடப்பட்டிருந்த இரண்டு பொதிகளை சோதனையிட்டபோதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு கமரா காட்சி</h2><p>

கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் காற்றுப்புகாத வகையில் 60 பொதிகளில் அடைக்கப்பட்டு, இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aad331-9396-4f41-b8b3-0d0e1c148807/26-6aa8e8a869d32.webp' /></p><p>

இந்த போதைப்பொருள் நேற்று (14) தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சிறி லங்கன் எயார்லைன்ஸ் UL-405 விமானத்தில் பயணித்த ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், குறித்த நபர் தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒத்துழைப்புடனும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T06:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித கட்டுப்பாட்டை இழக்கும் AI... தொழில்நுட்ப உலகில் கிளம்பிய புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/experts-warn-ai-systems-may-seize-control-1789452475"></link>
            <id>https://ibctamil.com/article/experts-warn-ai-systems-may-seize-control-1789452475</id>
            <summary type="text">அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும் என தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

OpenAI மற்றும் Anthropic ஆகிய முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் AI ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய ஜேக்கப் கொக்சன் (Jacob Coxon) இது தொடபிள் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், "இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று கூட பொறுப்புடன் செயல்படவில்லை.</p><p>
</p><p></p><h2>அவசரமாக நடைமுறை</h2><p>அவர்கள் தங்களைத்தானே சுய-மேம்படுத்திக் கொள்ளும் அதிநவீன அsuper-intelligent AI அமைப்புகளை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0b9a9e-d830-4fd4-b3e7-5148796aa63f/26-6aa8e74a22da7.webp' /></p><p>அதற்காக நமது உயிர்களையே பணையம் வைத்து விளையாடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, Google DeepMind இன் நிறுவுனரான சர் டெமிஸ் ஹசாபிஸ் (Sir Demis Hassabis), AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் சர்வதேச அளவிலான ஒழுங்குமுறைகள் (International Regulation) அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200"></link>
            <id>https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200</id>
            <summary type="text">யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன் பகை காரணமாக கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில் நேற்றைய தினம் (14-09-2026) அவர் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வாள் வெட்டு தாக்குதல் </h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு
இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன்
ஜெனிதன் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a41e67-5136-423f-8973-5576fd21d54d/26-6aa8d30b59dea.webp' /></p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு
ஜெனிதன் என்பவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். </p><p>

அதில் ஜெனிதன்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த
நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும்
கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e80b233-f8f9-4dcb-ab9c-71ed2caf892c/26-6aa8d30c44e07.webp' /></p><p>இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து
தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து
கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-39th-commemorative-event-in-jaffna-1789450152"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-39th-commemorative-event-in-jaffna-1789450152</id>
            <summary type="text">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
</p><p>
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்
நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45
மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.</p><p>
</p><p>
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை
தொடர்ந்து நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><h2>திலீபனின் கோரிக்கைகள்</h2><ol><li>மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.</li><li> சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
</li><li>
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
</li><li>
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
</li><li>
தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7d29f4-abb1-4b6a-99c6-f7df859c6d57/26-6aa8db4539a72.webp' /></p><p>

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் 12
நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26 ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர்
பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xPm4hCZVEXA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:49:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - அமெரிக்கா கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு தாக்குதல்</h2><p>

இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d0db34-5045-4dd0-9342-e7fcc20d1f56/26-6aa8cbfbc1c7e.webp' /></p><p>அமெரிக்க மத்திய மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பனாமா கொடியுடன் பயணித்த 'எல் கையா' (EI Gaia) என்ற குறிப்பிட்ட எண்ணெய் தாங்கி கப்பல், கடந்த மாதம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்கனவே செயலிழந்திருந்தது.</p><p> அத்துடன், கடந்த வார இறுதியில் ஓமன் கடலோரப் பகுதியில் மீண்டும் ஈரான் நடத்திய மற்றொரு தாக்குதலுக்கு உள்ளானது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>"நீர்வழியில் வர்த்தகக் கப்பல்களைத் தடுக்க முயற்சிக்கும் ஐ.ஆர்.ஜி.சி-யின் இந்த பொய்யான கூற்று, அவர்களின் பொய்கள் மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு மற்றுமொரு உதாரணமாகும்," என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளது.</p><p></p><h2>தேடும் பணிகள்</h2><p>இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8792252-1c76-4965-a4b7-c5b7801ea01f/26-6aa8cbfc7cb8a.webp' /></p><p>கப்பலில் இருந்த 14 இந்தியப் பணியாளர்களில் 13 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:20:35+00:00</updated>
        </entry>
    </feed>
