<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-07T10:18:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-security-around-batticaloa-prison-1786093657"></link>
            <id>https://ibctamil.com/article/army-security-around-batticaloa-prison-1786093657</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு
சிறைச்சாலை பகுதியை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே&nbsp; ஏற்பட்டு வரும் மோதல் நிலை காரணமாக மட்டக்களப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p></p><h2>மட்டக்களப்பு சிறைச்சாலையில் பரபரப்பு</h2><p>இதனுடன்&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/324482c6-e11c-4359-8371-2465f4145981/26-6a75a9e718417.webp' /></p><p>இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கமாக&nbsp;சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து

பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று மொத்தம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் தெரிவித்தார். </p><p>மேலும் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு
விஜயம் மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை ஆராய்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7114d1c-33cb-46fe-9836-2f32e50c33fa/26-6a75a9e5af6ac.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f2e48d-e012-48dd-bbb4-faca63312a3c/26-6a75a9e6646e7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-ordered-to-testify-in-disappearance-1786093505"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-ordered-to-testify-in-disappearance-1786093505</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
</p><p>
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நீதிமன்றத்திற்குச் சாட்சியம்</h2><p>இதனடிப்படையில் அன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, இணையவழி (Online) மூலமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b090279d-1b2d-4d79-bb9f-f859d0caef32/26-6a75a5ec98465.webp' /></p><p>2011 டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வேளையில், லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவாரங்கல் பகுதியில் வைத்துக் காணாமல்போயினர்.</p><p>
</p><p></p><h2>யாழ்ப்பாணத்தில் விசாரணை&nbsp;</h2><p>2012 இல் இவர்களின் உறவினர்களால் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902ba780-ae4e-4777-a002-0c600f7568c5/26-6a75a5ed49177.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

அதன்படி 2012 செப்டம்பர் 19 அன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை ஆரம்பமானது.</p><p>
</p><p></p><h2>மீண்டும் விசாரணை</h2><p>2017 இல் இவ்வழக்கின் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டது.</p><p>

பாதுகாப்பு காரணங்களினால் தம்மால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக முடியாது எனப் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததுடன், தனது சட்டத்தரணிகள் ஊடாக இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி கோரியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed995e9-96ef-49cf-932b-fab3e3b1b52c/26-6a75a5edef296.webp' /></p><p>அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொருத்தமான ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி அங்கிருந்து இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி அளித்திருந்தது.</p><p> 

அதனடிப்படையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T09:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி மன்னாரில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-mannar-demanding-people-s-lands-release-1786088475"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-mannar-demanding-people-s-lands-release-1786088475</id>
            <summary type="text">தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் மன்னாரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் இன்று&nbsp; (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர
சுற்றுவட்டத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
</p><p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு - கேப்பாப்புலவு
மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை
மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம்&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>போராட்டத்தில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>இந்தப் போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின்
உரிமையாளர்களும், கிராம மக்கள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என வடக்கின் சில பகுதிகளில் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78eff8e-a68b-4113-8750-2ad6dbd32b8a/26-6a75a6d0e7324.webp' /></p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் "நிலம் எங்கள் உரிமை - நீதி எங்கள் இலக்கு!", "எமது காணி – எமது உரிமை!", "காணி உரிமை ஒரு மனித உரிமையாகும்!", "காணியே எமது வாழ்க்கையும் அடையாளமும்!", "எமது காணி – எமது குரல்!", "மக்கள் பசியால் தவிக்கையில் மக்களின் காணிகளில் படைகள் பயிரிடுவதா?", "வலிகாமம் வடக்கு மக்களின் காணி அபகரிப்பிற்கான உயர்பாதுகாப்பு வலயத்தை
எப்போது நீக்குவீர்கள்?", "வலிகாமம் வடக்கு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களின்
ஆதரவு!", "முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு
மன்னார் மக்களின் ஆதரவு!", "மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை மக்களின் நீண்டகால நில உரிமைப்
போராட்டத்திற்கு மன்னார் மக்களின் ஆதரவு!", "இலங்கை அரசே! பூர்வீக காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படையுங்கள்!" என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஈந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b><i>செய்திகள் - நயன், கஜிந்தன்&nbsp;</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-07T09:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் மோதல்கள் - தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் விஜேபால விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/clashes-prisons-minister-wijepala-s-special-annou-1786084889"></link>
            <id>https://ibctamil.com/article/clashes-prisons-minister-wijepala-s-special-annou-1786084889</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன்னர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
பல்வேறு சிறைச்சாலைகளில் சமீபத்தில் பதிவான கலவரங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.</p><p>இச்சம்பவங்கள் திட்டமிட்ட நாசவேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இறுதி முடிவு</h2><p>இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் சீர்குலைக்கும் செயல்பாடு இருக்கலாம் என்ற சந்தேகத்தை கலவரங்களின் போக்கு எழுப்பியுள்ளதாக விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee30f129-0866-422d-b1aa-1d9c9744a34b/26-6a75973590035.webp' /></p><p>இருப்பினும், எந்தவொரு இறுதி முடிவுக்கும் வருவதற்கு முன்பு முழுமையான விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இந்த நிலைமையை அரசு தீவிரமான விஷயமாகக் கருதுவதாகவும், அதன் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்ற கருத்துக்களை நிராகரித்த விஜேபால, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதச் சம்பளம்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனாவின் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-archchuna-shares-salary-sheet-fuel-allowance-1786088771"></link>
            <id>https://ibctamil.com/article/mp-archchuna-shares-salary-sheet-fuel-allowance-1786088771</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அவர் தனது சம்பளப் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் அர்ச்சுனா பகிர்ந்த ஆவணத்தின்படி, அவரது சம்பளத்தில் எரிபொருள்&nbsp; கொடுப்பனவானது 1,79,000லிருந்து 2,44,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>சம்பள அதிகரிப்பு&nbsp;</h2><p>

சம்பளப் பட்டியலுடன் இணைக்கப்பட்ட ஒரு முகநூல் பதிவில், கூறப்படும் இந்த அதிகரிப்பு குறித்து அர்ச்சுனா பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e0642-6906-4fcb-9731-98ad126ddedd/26-6a7592b06194c.webp' /></p><p>அத்துடன் இதே போன்ற தொகை 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெருக்கப்பட்டு பெலவத்தையில் உள்ள வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

"உண்மையைப் பேசுபவர்களைக் கைதட்டி மூச்சுத்திணறச் செய்யுங்கள்," என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையையும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 60,000 உயர்த்தப்பட்டுள்ளதாக நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்த&nbsp;அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதாந்த சம்பளம் 4,84,000 ரூபாய் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GrGdWK2sf7w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்ல சேன சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த STF படையினர்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்பு&amp;nbsp;பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு&nbsp;</u></b></h5><p>பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஆரம்பமாகியுள்ளதுடன், கைதிகள் சிறை அதிகாரிகளை நோக்கிப் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பின்வரும் பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><ul><li>
இலங்கைப் காவல்துறையினர்</li><li>

காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)
</li><li>
கலாபக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Riot Control Unit)
</li><li>
இலங்கை விமானப்படை
</li></ul><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 இரண்டாம் இணைப்பு</u></b></h5><p>பல்ல சேன சிறையில் கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><u><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></u></h5><p>நீர்கொழும்பு - பல்லசேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>சிறையிலும் கலவரம்</h2><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லசேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6584e1-854a-422b-84fd-5f478c1c06ed/26-6a75765ad8d34.webp' /></p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்லாமிய நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-fate-of-the-person-who-exposed-zahran-s-plan-1786089541"></link>
            <id>https://ibctamil.com/article/the-fate-of-the-person-who-exposed-zahran-s-plan-1786089541</id>
            <summary type="text">சஹ்ரானின் சகாக்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்த இஸ்லாமிய நபர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஹ்ரானின் சகாக்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்த இஸ்லாமிய நபர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் திசாநாயக்க கருடத்தொன்றை முன்வைத்துள்ளார்.
</p><p>
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சதியை சிங்கள அடிப்படைவாதிகளே செய்திருக்கிறார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியக்கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.</p><p>


நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,</p><p></p><h2>ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்</h2><p>''ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்டதாவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அதனை சிங்கள் அடிப்படைவாதிகளே செய்திருக்கிறார்கள் எனதெரியக்கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cac883-bf60-45f2-9871-1a14f1b4b96a/26-6a75931a25780.webp' /></p><p> </p><p>ஏனெனில் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இரண்டுபேருமே ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு 300 பேரை கொலை செய்திருக்கிறார்கள். </p><p>

அப்படியானால் மரணித்த பிள்ளைகள் இருவர்களால் இப்ராஹிமுக்கு பிரச்சினை இல்லை. 
சம்பவத்துடன் தொடர்புடைய வேறு யாருக்கும் பிரச்சினை இல்லை.</p><p> 

ஜனாதிபதி கைச்சாத்திட்டால், அவர்கள் இருவரையும் தூக்கிலிட முடியும். ஆனால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர் இன்று அரசாங்கத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருக்கிறார்.</p><p></p><h2>கரம்போடுக்கு பிரேரணை</h2><p> </p><p>

அதேபோன்று இந்த சம்பத்துடன் சம்பந்தப்படும் ஷானி அபேசேகர இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர். ரவி செனவிரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f29d65-8ef8-46bc-a1a2-82fddc56e31a/26-6a7593196d1f9.webp' /></p><p> </p><p>

அதனால் உள்ளே இருக்கவேண்டியவர்கள் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருக்கவேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள். 

கரம்போடுக்கு பிரேரணை கொண்டுவந்தவர் இன்று அமெரிக்காவில் இருக்கிறார். கரம்போட் பகிர்ந்தவர் சிறையில் இருக்கிறார்.</p><p>

அதேபோன்று சஹ்ரானின் ஆட்கள் மானெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்தது, முஸ்லிம் நபர் ஒருவர். ஆனால் அந்த நபருக்கு சஹ்ரானின் குழு துப்பாக்கி பிரயோகம் செய்ததில், அவர் இன்று சுயமாக இயங்க முடியாமல் இருக்கிறார்.
</p><p>
ஆனால் அவருக்கு எந்த நட்டஈடும் வழங்கப்படவில்லை. அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை. என்றாலும் இப்ராஹிமுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T08:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெடித்த தொடர் சிறை மோதல்கள்! முப்படையினருக்கு அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-unrest-reported-at-multiple-prisons-in-sl-1786088683"></link>
            <id>https://ibctamil.com/article/prison-unrest-reported-at-multiple-prisons-in-sl-1786088683</id>
            <summary type="text">அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

முப்படையினர் மற்றும் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் மோதல் நிலை</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae57543b-ab60-4ee4-ac34-03a5236ea904/26-6a7590524d3cd.webp' /></p><p> 

இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். &nbsp;</p><p>மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இது போன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>

மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3hBOfxG878g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-warning-issued-for-strong-winds-in-sl-1786087747"></link>
            <id>https://ibctamil.com/article/amber-warning-issued-for-strong-winds-in-sl-1786087747</id>
            <summary type="text">நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-08-2026) குறித்த எச்சரிக்கையை விடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-08-2026) குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இவ் எச்சரிக்கை அறிவித்தல் இன்று முதல் நாளை (08-08-2026) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>


இதனடிப்படையில் வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ea8338-3707-4a88-81f6-c41539fd8ef0/26-6a758db7a566f.webp' /></p><p>

அத்தோடு தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலமை காரணமாக குறிப்பிடப்பட்ட மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் செங்குத்தான பாறையிலிருந்து வான் கவிழ்ந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-hospitalised-van-down-precipice-bulathsinhala-1786081917"></link>
            <id>https://ibctamil.com/article/14-hospitalised-van-down-precipice-bulathsinhala-1786081917</id>
            <summary type="text">களுத்துறை புலத்சிங்கள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் செங்குத்தான சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.குறித்த சம்வம்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை புலத்சிங்கள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் செங்குத்தான சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.</p><p>குறித்த சம்வம்&nbsp;இன்று காலை (07.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த விபத்தில் பதினான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>14பேர் காயம்</h2><p>

 

விபத்தில் சிக்கிய வான், உடுகலகந்த பகுதியிலிருந்து ஒரு தொழிற்சாலைக்குத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6497174f-3c78-44ba-8ea7-a6e69f8d89e3/26-6a758a2aca341.webp' /></p><p>
 

காயமடைந்தவர்களில் ஆறு பேர் ஹொரணை மாவட்ட மருத்துவமனையிலும், மேலும் எட்டு பேர் புலத்சிங்கள பிரதேச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.&nbsp;</p><p>
 

காயமடைந்தவர்களில் பன்னிரண்டு பேர் பெண்கள் என்றும், வான் ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் காயமடைந்தவர்களில் யாருக்கும் கவலைக்கிடமான நிலை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sixty-two-suspects-were-named-negombo-prison-clash-1786082689"></link>
            <id>https://ibctamil.com/article/sixty-two-suspects-were-named-negombo-prison-clash-1786082689</id>
            <summary type="text">கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் தொடர்பாக அறுபத்திரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் தொடர்பாக அறுபத்திரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இந்த சந்தேக நபர்களில் 38 பேர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக கருதப்பட்ட 'காட்டுவெல்லகம சுரேஷ்' என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>62 சந்தேக நபர்கள்</h2><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில்&nbsp; இடம்பெற்ற பாரிய மோதலில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொதத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6033c851-da54-4d20-a281-dc95a42dda3d/26-6a75864947aa4.webp' /></p><p> </p><p>இது தொடர்பான நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார பல கருத்துக்களை கடந்த 30-ம் திகதி நீதிமன்ற்திற்கு வெளிப்படுத்தி இருந்தார்.&nbsp;</p><p>இந்த விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த 89 சிறைக் காவல்&nbsp; அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் அப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பான அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.</p><p>இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு உடுத்துக்கொள்ளபட்ட போது மேற்படி சந்தேக நபர்கள் குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:16:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holding-the-provincial-council-elections-quickly-1786084927"></link>
            <id>https://ibctamil.com/article/holding-the-provincial-council-elections-quickly-1786084927</id>
            <summary type="text">இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>அனைத்து தேர்தல்களையும் உரிய காலக்கட்டத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என&nbsp; அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் நேற்று (06) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c7ef148-f02e-4168-8b68-b8d2e0c7c6d1/26-6a75841d656ba.webp' /></p><p> </p><p>அதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தவொரு என்னமும் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.</p><p>இதேவேளை மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என நேற்றுமுன்தினம் (05) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் சிறை மோதல் பின்னணியில் உள்ள கரங்கள்! அரசாங்கத்துக்கு கிடைத்த புலனாய்வு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-hands-behind-the-series-of-prison-clashes-1786084134"></link>
            <id>https://ibctamil.com/article/the-hands-behind-the-series-of-prison-clashes-1786084134</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறைமோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறைமோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய நிலையியல் கட்டளை தொடர்பிலான கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>

இதன் பின்னணி குறித்து கிடைத்துள்ள புலனாய்வு தகவல் என்னவென்றால் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள நபர்களின் சதி என்பதே எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p></p><h2>சிறைச்சாலைகளின் பாதுகாப்பு</h2><p>
குறிப்பாக மெகஸின் சிறையில் நேற்று கலவரம் இடம்பெற்றது. அதில் ஒருவர் பலியாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cad365ed-688d-4ce6-871a-2d41130cecb0/26-6a7580bf3a725.webp' /></p><p>குருவிட்ட சிறை மோதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். தற்போது பல்ல சேனயில் மோதல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இதனை மையப்படுத்தி அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஒன்றிணைக்கும் போது திட்டமிட்ட சதி பின்புலம் இருப்பது தெளிவாகியுள்ளது என அமைச்சர் விளக்கமளித்தார்.</p><p></p><h2>தேசிய பாதுகாப்பு</h2><p> </p><p>

இந்நிலையில் இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் தனது கருத்துக்களை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர்,</p><p> 

''இது ஒரு பாரதூரமான நிலை என்பதை அராசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
</p><p>
முன்னதாக இந்த சிறை மோதலை மையப்படுத்தியே நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இது தேசிய பாதுகாப்புக்கு சவால் விடும் செயற்பாடு. </p><p>நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நீங்கள் வெற்றி பெற்றதும் மகர உள்ளிட்ட சிறைகளில் மோதல்கள் வெடிக்க ஆரம்பித்தன.</p><p>

இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T07:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் - நாடாளுமன்றத்தில் சலசலப்பு: அரசுக்கு அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-leader-abt-parliament-on-prison-unrest-1786083131"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-leader-abt-parliament-on-prison-unrest-1786083131</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ள அமைதியின்மை குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ள அமைதியின்மை குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.</p><p>நாடாளுமன்றில் இன்று (07.08.2026) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சிறப்பு அறிக்கை ஒன்றின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>சிறையில் இரண்டு மரணங்கள்</h2><p> நேற்று இரவு மாகசின் சிறையில் ஒரு மரணமும், இன்று காலை குருவிட்ட சிறையில் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f519d5ab-a36f-4060-bee8-2f20dd8583a5/26-6a757cbc8475e.webp' /></p><p> மேலும், தற்போது பல்லஞ்சேனா சிறையிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3hBOfxG878g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திராய்க்கேணி படுகொலையின் 36 வது ஆண்டு நிறைவு! சுடரேற்றி அஞ்சலி செலுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/36th-anniversary-of-thiraykkeni-massacre-held-1786083194"></link>
            <id>https://ibctamil.com/article/36th-anniversary-of-thiraykkeni-massacre-held-1786083194</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்
ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்
ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (06-08-2026) அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.</p><p>

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில்
இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டனர்.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p> 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து
அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p>

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்நினைவேந்தல்
நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666bdd60-382b-4c5d-83cb-a78237a00468/26-6a757a9ce68d1.webp' /></p><p>இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை
மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p><p>

இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான காந்தன், தாமோதரம்
பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T06:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் வெலுத்தும் முறை அறிமுகம் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/paying-bus-fares-with-bank-cards-1786080610"></link>
            <id>https://ibctamil.com/article/paying-bus-fares-with-bank-cards-1786080610</id>
            <summary type="text">பேருந்துக் கட்டணங்களை செலுத்தும் முறை தொடர்பில்&amp;nbsp;போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.அதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்துக் கட்டணங்களை செலுத்தும் முறை தொடர்பில்&nbsp;போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''இலங்கை போக்குவரத்து சபை முன்னெடுத்து வரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள், பேருந்து சேவைகளின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கான அசௌகரியங்களைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தவும், தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளது.</p><h2>கட்டணம் செலுத்தும் முறை</h2><p>பொதுப் போக்குவரத்துச் சேவையை மறுசீரமைக்கவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நவீன கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9530f53d-18f7-4c4e-8e71-fc17f248d6e4/26-6a75796334b39.webp' /></p><p>பொதுப் போக்குவரத்திற்கான தரநிலைகள் இலங்கை போக்குவரத்துச் சபையின் மூலம் நிறுவப்பட வேண்டும். அத்தகைய தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டவுடன் தனியார் நிறுவனங்கள் அதைப் பின்பற்றும்'' என தெரிவித்தார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T06:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி செனவிரத்னவுக்கு எதிரான சாலை விபத்து வழக்கில் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stay-order-traffic-accident-case-ravi-seneviratne-1786078707"></link>
            <id>https://ibctamil.com/article/stay-order-traffic-accident-case-ravi-seneviratne-1786078707</id>
            <summary type="text">பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எதிரான வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைகளை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எதிரான வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைகளை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. </p><p>

</p><p>இந்த இடைக்கால தடை உத்தரவானது இன்று&nbsp;(07.08.2026) பிறப்பித்துள்ளது.</p><p>கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வீதி விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைகளை முன்கொண்டு செல்வதற்கே இவ்வாறு&nbsp; இடைக்கால தடை உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>ரவி செனவிரத்ன</h2><p>

ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த போதே, கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667b86cb-22ee-466b-ad38-29eed9a1b830/26-6a756b2026560.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் செலுத்தும் போது காணொளி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warning-regs-watching-videos-while-driving-1786073979"></link>
            <id>https://ibctamil.com/article/police-warning-regs-watching-videos-while-driving-1786073979</id>
            <summary type="text">பொதுமக்களிடம் வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களிடம் வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும்&nbsp;காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>பொது பாதுகாப்புத் தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள காவல்துறை இதனைக் குறிப்பிட்டுள்ளது.</p><h2>முக்கியமான எதிர்வினை</h2><p>அந்த அறிக்கையில், காணொளிகளைப் பார்ப்பதற்காக வீதியிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலம் எதிரே வாகனம், பாதசாரி அல்லது ஏனைய தடைகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முக்கியமான எதிர்வினை நேரத்தை சாரதிகள் இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb0a749-ebba-4f1c-a88e-7108239c03aa/26-6a756bf968748.webp' /></p><p>

"நீங்கள் பார்க்கும் காணொளியினால் சில வினாடிகள் மட்டுமே வீதியிலிருந்து உங்களது கவனம் திசைதிருப்பப்பட்டாலும், ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான மதிப்புமிக்க நேரத்தை இழக்கிறீர்கள்" என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதையும் நினைவூட்டியுள்ளது.</p><h2>உயிரை மீண்டும் பெற முடியாது</h2><p>
</p><p>
பயணத்தை நிறைவு செய்த பின்னரே காணொளிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை, காணொளிகளைப் பின்னர் பார்க்கலாம்; ஆனால் "இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afdbe794-196c-44b6-a232-40f8e5f17814/26-6a756bfa89dde.webp' /></p><p>எனவே, வீதியைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலைக்கு அவசரமாக விரையும் முக்கிய அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-dead-12-injured-in-kuruwita-prison-riot-1786077866"></link>
            <id>https://ibctamil.com/article/2-dead-12-injured-in-kuruwita-prison-riot-1786077866</id>
            <summary type="text">இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்படுத்த சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று அங்கு புறப்பட்டுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்படுத்த சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று அங்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

இதற்கிடையில், கலவரம் காரணமாக குருவிட்ட சிறைக்குச செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளது.</p><p> 

சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று (07-08-2026) காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>மூத்த அதிகாரிகள்</h2><p>குறித்த சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1166df-5e5b-40a0-92d3-c5379513d0f6/26-6a7569498ff71.webp' /></p><p>இதற்கமைய, சிறைக்கு வெளியே பாதுகாப்பிற்காக காவல்துறை குழுக்கள், காவல்துறை சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று தற்போது குருவிட்ட சிறைக்குப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3hBOfxG878g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T05:24:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்குள் விழுந்த மர்மப் பொதியால் வெடித்த மோதல் - ஒருவர் பலி : பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magazine-prison-unrest-fully-under-control-1786068337"></link>
            <id>https://ibctamil.com/article/magazine-prison-unrest-fully-under-control-1786068337</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>சிறைச்சாலையில் உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதையடுத்து சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பதற்ற நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p> 

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h2> </h2><p>மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில், புதிய மகசின் சிறையில் நேற்று நடந்த கலவரத்தில் காயமடைந்த 11 கைதிகள் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.</p><p>



9 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர் என்று சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு புதிய மெகசின் சி<a href="https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279" target="_blank">றைச்சாலையில்</a> நேற்றிரவு (6) பதற்றமான சூழல்நிலை உருவாகியதுடன் போதைப்பொருள் தொடர்பான தகராறே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ab7037-8b0b-4ef4-8dee-4d9553812f9b/26-6a75591ea47ff.webp' /></p><p>இந்நிலையில், மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p> 

சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விமானப்படை ட்ரோன்</h2><p> 

சிறைச்சாலைச் சுவருக்கு மேல் உள்ளே வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51e8b7b-d2fc-44ed-bb44-1ce9bea8a7a7/26-6a75591dbaedf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அறை ஒன்றின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்திருந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து </p><p>அவர்களை மீண்டும் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். 

இதற்கிடையில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். </p><p>

நிலைமையைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QqamGds3hEI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:19:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-uni-academic-activities-will-resume-1786076545"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-uni-academic-activities-will-resume-1786076545</id>
            <summary type="text">நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பொன்று வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கமைய, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெள்ளப்பெருக்கு அனர்த்தம்&nbsp;</h2><p>இதேவேளை மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b618ca5-d62e-46ef-bbd0-fd595624634b/26-6a75690847046.webp' /></p><p>அத்துடன் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய முக்கிய புள்ளியின் மகன்கள்! சுருட்டப்பட்ட 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-vip-s-sons-accused-of-135-acre-land-grab-1786074801"></link>
            <id>https://ibctamil.com/article/ex-vip-s-sons-accused-of-135-acre-land-grab-1786074801</id>
            <summary type="text">கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் <a href="https://ibctamil.com/article/magazine-prison-unrest-fully-under-control-1786068337" target="_blank">குற்றச்சாட்டுக்கள் </a>முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொலொஸ்பாக பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் அரை ஏக்கர் காணியில் 1918 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் பங்களா ஒன்றும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இது <a href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-kuruwita-prison-1786070913" target="_blank">தொடர்பில் விசாரணை</a> நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதனடிப்படையில் இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி நேற்று (06-08-2026) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d11805-6acf-496a-8dd0-f5aa714833e4/26-6a755bbb7d329.webp' /></p><p>தமது அமைப்புக்கு அநாமதேயமாக கிடைத்த தகவலுக்கமைய, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் இந்த காணிக்கான 1386 இலக்கப் பத்திரம் மற்றும் 876 இலக்கக் காணி வரைபடம், காணி உறுதிக் குறிப்பேடு என்பவற்றையும் மேலதிக விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என முறைப்பாட்டைச் சமர்ப்பித்த குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T04:54:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-women-were-arrested-in-a-property-theft-case-1786074059"></link>
            <id>https://ibctamil.com/article/three-women-were-arrested-in-a-property-theft-case-1786074059</id>
            <summary type="text">சொத்துத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு இரண்டு பெண் சந்தேகநபர்கள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆண் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் சந்தேகநபர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொத்துத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு இரண்டு பெண் சந்தேகநபர்கள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆண் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் சந்தேகநபர் என மொத்தம் நான்கு பேர் மவுண்ட் லவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>ஜூலை 18 ஆம் தேதி ஒரு வீட்டிற்குள் புகுந்து ரூ. 1,41,00,000&nbsp; மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடிய குற்றம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
</p><p>அதன்படி இந்த திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (06.08.2026) தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><p></p><h2>&nbsp;நான்கு பேர் கைது</h2><p>மேலும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபர் ஹட்டன் பதானா பகுதியில் கைது செய்யப்படார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c1fda2-9bf3-4cdb-906a-dfc5025e08b7/26-6a75612ad906c.webp' /></p><p>குறித்த சந்தேக நபர்களால் 8 ஜோடி தங்கக் காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு கைக்காப்பு, 10 தங்க நெக்லஸ்கள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள் திருடபட்டுள்ளது. </p><p>இந்த நகைகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, மவுண்ட் லவினியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேக நபர்களுக்கு 28, 46, மற்றும் 53 வயது என்றும், அவர்களில் ஒருவருக்கு 28 வயது என்றும், அவர்கள் ஹட்டன் பதானா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை விசரணையில் தெரியவந்துள்ளது. </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் லவினியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-kuruwita-prison-1786070913"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-kuruwita-prison-1786070913</id>
            <summary type="text">புதிய இணைப்புகுறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட காவல்துறை அதிரடிப்படையினரும், கலகத்தடுப்பு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7647c8-28d4-4c57-8c6b-1b8a6cf59eca/26-6a755aa075f5a.webp' /></p><p>நேற்றிரவு (06) குறித்த சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>கண்ணீர்புகை பிரயோகம்</h2><p> </p><p>

இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6fef9f6-d682-4774-ad1f-012ea29e2d6e/26-6a754b58a7399.webp' /></p><p> </p><p>

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:27:42+00:00</updated>
        </entry>
    </feed>
