<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-24T05:32:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதக் கூடாரமாகிய பசில் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய வீடு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abandoned-matara-building-linked-to-basil-misused-1787544405"></link>
            <id>https://ibctamil.com/article/abandoned-matara-building-linked-to-basil-misused-1787544405</id>
            <summary type="text">மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>

இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.</p><p></p><h2>திமன்றத்தில் முன்னிலை</h2><p>

விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e5e0f2-7c5d-4bfe-bc3a-31b1c99479f6/26-6a8bc9b8409bc.webp' /></p><p>இதன் காரணமாக, பசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும் மற்றும் அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
</p><p>
அத்துடன், பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நிர்மாணப் பணிகள்</h2><p>நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff406f39-98d7-4d39-ab0b-3565fd2ead06/26-6a8bc9b76f6bc.webp' /></p><p>சட்டவிரோத நடவடிக்கை
இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>

ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கட்டடப் பொருட்கள்&nbsp;</h2><p>

பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு பூச்சு பூசப்பட்டு கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>ஒன்பது கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4645a494-9dba-4541-8bd6-e96efa1a7ab6/26-6a8bc9b900543.webp' /></p><p>இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்ததுடன் இதன்போது அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளதுடன் இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650"></link>
            <id>https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் சடலம்&amp;nbsp; மஹி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>அவரின் சடலம்&nbsp; மஹியங்கனையில் உள்ள பகடாவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>

</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வைத்தியர் நேற்று (23.08.2026) வழமை போன்று பணியில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருகையில்,</p><p></p><h2>மருத்துவர் மாயம்</h2><p> </p><p>வைத்தியர் மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அவரது கார், மீகஹகியுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693b1d16-4121-4789-882d-88c8c86fb364/26-6a8bc44aa7ba1.webp' /></p><p>
</p><p>
மேலும், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் 17ஆம் மைல் கல் அருகிலுள்ள மப்பக்கடை வேவப் பகுதியில், வைத்தியரின் கார் நேற்று இரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று (24.08.2026) குறித்த பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சுறுத்தும் எல்நினோ - யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-heat-advisory-issued-for-several-areas-1787539506"></link>
            <id>https://ibctamil.com/article/amber-heat-advisory-issued-for-several-areas-1787539506</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகரித்து, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும்&nbsp;என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான வெயில் </h2><p>இதனால் போதுமான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்துமாரும் கடுமையான வெயில் வேளையில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும்&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5265269-2c08-4dc0-872f-9d3414e7c9d4/26-6a8bcd0469f17.webp' /></p><p>குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p></p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753fc69b-e2e2-4bc9-a837-e419fafdc9a6/26-6a8bcd03b59f7.webp' /></p><p>இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
</p><p>
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-health-inspectors-to-launch-trade-union-1787543556"></link>
            <id>https://ibctamil.com/article/public-health-inspectors-to-launch-trade-union-1787543556</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.</p><p>இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்</h2><p>
இதற்கமைய, இன்று முதல் அனைத்து சுகாதார பரிசோதகர்களும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்தினருக்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கை விநியோகத்தை தவிர்க்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79b3b9-a16f-47d2-a7cd-839fff33242b/26-6a8bc8d54e704.webp' /></p><p>அத்துடன் அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிப்பதை இடைநிறுத்துதல் மற்றும் இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் அந்த சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. 
</p><p>
</p><p>
இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்</h2><p>இதேவேளை கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29712c6f-c539-43e3-b6d0-da580f101277/26-6a8bc8d473eca.webp' /></p><p> 

எனினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-is-responsible-if-anything-happens-to-sallay-1787541910"></link>
            <id>https://ibctamil.com/article/govt-is-responsible-if-anything-happens-to-sallay-1787541910</id>
            <summary type="text">தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.</p><p>"சலேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், சுரேஷ் சலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ab2cc7-bd37-49a4-8e10-75712d7baa09/26-6a8bbe175b42e.webp' />&nbsp;</p><p>

அத்துடன், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>இரண்டாவது தடுப்புக்காவல் உத்தரவு எதிர்வரும் 28ஆம் திகதியன்று முடிவடையும் நிலையில், சுரேஷ் சலேயை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழவுள்ள வானியல் அதிசயம் - இந்த வாரம் இரத்த நிற முழு சந்திர கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938"></link>
            <id>https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938</id>
            <summary type="text">இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.&nbsp;</p><p>இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p>

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p></p><h2>ரத்த நிலவு</h2><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677011b8-874b-44db-9fd0-583c0b73e7db/26-6a8baf051ba49.webp' /></p><p>சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். 

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. </p><p>வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.</p><p> 

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.</p><p></p><h2>நேரடியாக காண வாய்ப்பு</h2><p> </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும். 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f56029-1bd6-4eed-b793-c91792a41c95/26-6a8baf05c6124.webp' /></p><p>ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. </p><p>

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-washed-ashore-at-karainagar-beach-1787542362"></link>
            <id>https://ibctamil.com/article/body-washed-ashore-at-karainagar-beach-1787542362</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில் இன்று (24) காலை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee75baa8-65e2-44bd-a0ce-5c3a8154a3d7/26-6a8bbe293f1a9.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் எவ்வாறு கடலில்
அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p>மேலதிக தகவல்கள் - த. பிரதீபன்</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 1 கோடி பெறுமதியான நகை கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய நபர் - நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-in-connection-with-theft-jaffna-1787534883"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-in-connection-with-theft-jaffna-1787534883</id>
            <summary type="text">யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை விளக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண்
தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின்
வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி
காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><h2>யாழ் நகரில் வைத்து கைது</h2><p>
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் காவல்துறையினர் முன்னெடுத்த
விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்
ஒருவர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a76a92-73b1-4c32-b4ed-2ae23b82b0c8/26-6a8ba1594b656.webp' /></p><p>
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கோப்பாய்
பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்
தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
</p><p>மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு
வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை
பகுதியைச் சேர்ந்த பெண்ணும் சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07bcd602-069d-46d3-bfb1-2dd9fd4a3f39/26-6a8ba15a02103.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T01:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டித் தீர்க்கப் போகும் மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainy-weather-today-s-weather-forecast-1787532410"></link>
            <id>https://ibctamil.com/article/rainy-weather-today-s-weather-forecast-1787532410</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்தோடு, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6d1d09-acfe-458e-8280-67b9e3a08461/26-6a8b965193459.webp' /></p><p>

இதேவேளை, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T00:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[300,000 இராணுவ வீரர்களை திரட்ட ரஷ்யா திட்டம்! கவலையில் ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-to-mobilize-300-000-more-soldiers-for-war-1787529422"></link>
            <id>https://ibctamil.com/article/russia-to-mobilize-300-000-more-soldiers-for-war-1787529422</id>
            <summary type="text">

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். </p><p>

கிழக்கு உக்ரைனின் தொழில்மயமான டொன்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
</p><p>
மொத்தம் 5,00,000 துருப்புக்களைத் திரட்டும் இலக்கை எட்டுவதற்காக, 2027 ஆம் ஆண்டிலும் ரஷ்யா மேலும் பலரை ராணுவத்தில் சேர்க்கக்கூடும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><h2>ரஷ்யாவின் திட்டம்</h2><p> </p><p>

தலைநகர் அல்லது முக்கிய நகரங்களைத் தவிர்த்து, ரஷ்யாவின் தூரத்திலுள்ள தொலைதூரப் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5121ee78-e4db-4ab0-b549-fffd8cad3f2a/26-6a8b8ca2bbe0f.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், கொஸ்டியான்டினிவ்கா போன்ற மூலோபாய நகரத்தைச் சுற்றி கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், உக்ரைனின் கோட்டை நகரங்களுக்குள் நுழைய முயன்று ரஷ்யா பெரும் எண்ணிக்கையிலான வீரர்களை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-08-24T00:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

ஈரானின் பெர்சியன் வளைகுடா நீரிணை அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஈரான் விதித்துள்ள வழிமுறை கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் மற்றும் சிறைபிடிக்கப்படலாம் என எக்ஸ் தளத்தில் PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிமீறல் பட்டியல்</h2><p> </p><p>

மேலும், இத்தகைய தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய கப்பல்களும் விதிமீறல் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfaef34-62ce-4c8e-babf-f6f3762f5460/26-6a8b65d9ed9ec.webp' /></p><p> </p><p> 

கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமாயின் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க தமது இணையதளத்தில் உள்ள பட்டியலைச் சரிபார்த்து இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T23:32:53+00:00</updated>
        </entry>
    </feed>
