<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-20T14:31:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சு : 07 நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-sets-7-conditions-for-negotiations-with-us-1789913302"></link>
            <id>https://ibctamil.com/article/iran-sets-7-conditions-for-negotiations-with-us-1789913302</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ளது.
</p><p>

இந்த நிலையில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது</p><h2>எங்களுடைய செய்தி தெளிவானது</h2><p>
எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db9fcba-fb29-4346-a557-cd7711e6b76b/26-6aafeb9436412.webp' /></p><p> அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நாங்கள் நிபந்தனைகள் முன்வைக்கிறோம்.

இவ்வாறு மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா&nbsp;</h2><p>
</p><p>

அதேவேளை7 நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா என்றும் தெரியவில்லை.&nbsp; &nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde56756-4617-4721-94c6-c14a2f2bb93f/26-6aafeb94e2550.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/signature-campaign-demanding-anojans-release-1789911220"></link>
            <id>https://ibctamil.com/article/signature-campaign-demanding-anojans-release-1789911220</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்</h2><p>&nbsp;எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3604d25-5669-4cd1-8e9c-410fd6b3aa73/26-6aafe60054886.webp' /></p><p>இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்”&nbsp;</h2><p>&nbsp;“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3440f33-cf23-4c44-9ea1-0c11192a7aee/26-6aafe60127605.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-09-20T13:56:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் மெழுகுவர்த்தி போராட்டம் : அனைவரையும் அணிதிரள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/candlelight-protest-in-jaffna-anojan-s-release-1789909750"></link>
            <id>https://ibctamil.com/article/candlelight-protest-in-jaffna-anojan-s-release-1789909750</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் பண்ணைப்பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் பண்ணைப்பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நாளை மாலை ஐந்து மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொது அமைப்புகள் விடுத்துள்ள அழைப்பு</h2><p>இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு அனோஜனின் விடுதலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுமாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f7d8b66-f77d-471b-a0f2-acd09df1b1a2/26-6aafdce7dbc70.webp' /></p><p>&nbsp; அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தற்போது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இதேவேளை அரசாங்கமும் அனோஜனின் விடுதலைக்காக தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 கடவுச்சீட்டுகளுடன் 70 வயது முதியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/70-year-old-man-arrested-with-48-passports-1789906948"></link>
            <id>https://ibctamil.com/article/70-year-old-man-arrested-with-48-passports-1789906948</id>
            <summary type="text">நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத் தயாரித்ததாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.</p><p>

சந்தேக நபர், மேல் பொமிரியா பகுதியின் கடுவெல பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆவார்.&nbsp;</p><h2>சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>&nbsp;சந்தேக நபரிடமிருந்து 48 கடவுச்சீட்டுகள், ஒரு போலி கண்டறியும் கருவி மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dde76d-2894-41e9-9537-5dd5a886b58e/26-6aafd005ead7f.webp' /></p><p>
</p><p>
நவகமுவ காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T12:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் பேரழிவு அரசியல்... அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jvp-attempting-to-introduce-a-racist-structure-1789906064"></link>
            <id>https://ibctamil.com/article/jvp-attempting-to-introduce-a-racist-structure-1789906064</id>
            <summary type="text">ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு மறைமுகமாக உதவுகிறது என்று யாழ்ப்பாண பல்கலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு மறைமுகமாக உதவுகிறது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>ஈழத்தமிழர்கள் எல்லா வகையான தளத்திலும் கபளீகரம் செய்யப்படுகிறார்கள் எனவும் ஈழ தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆரோக்கியமான அரசியல் இருப்பு இல்லை என்ற ஒரு தேக்க நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

அநுராதபுர சந்திப்பை பார்க்கின்ற போது தமிழ் மக்களை பொறுத்தவரையில் அச்சப்பட வேண்டிய ஒரு சூழலுக்குள்ளே தான் இருக்கிறார்கள்.
</p><p>
எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவினுடைய வேட்பாளர் யாராவது ஜனாதிபதியாக வருவதற்குரிய வாய்ப்பை அதீதமாக கொண்டிருக்கின்ற ஒரு இருப்பு தென்னிலங்கையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இலங்கை தீவை பொறுத்தவரையில் இந்த மேல்தட்டு வர்க்கத்தினுடைய அரசியல் நலன்களுக்குள்ளால் தான் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.</p><p> 

ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு அது மறைமுகமாக உதவுகிறது. இலங்கையை பொறுத்தவரையில் எதிர் துருவங்கள் ஒன்று என்ற ஒன்று கிடையாது.</p><p> அதுவும் குறிப்பாக இலங்கை தமிழருக்கு எதிரான ஒரு அரசியலை அவர்கள் நகர்த்துகின்ற போது அவர்கள் ஒருபோதும் எதிர் துருவங்களாக தங்களை காட்டிக் கொள்ளவில்லை.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/toUCR-sCchQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T12:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளானில் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-release-of-lands-under-military-control-1789904481"></link>
            <id>https://ibctamil.com/article/protest-release-of-lands-under-military-control-1789904481</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வசாவிளான் மக்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>வசாவிளான் மக்கள் இன்று (20) நான்காவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்கள் யுத்தம்
நிறைவடைந்த பின்னர் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><h2>மக்கள் குற்றச்சாட்டு</h2><p>

புதிய அரசாங்கம் பொது மக்களின் காணிகள் பொதுமக்களுக்கே வழங்கப்படும் என
வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை அவ்வித நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என
மக்கள் குற்றம் சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f6b0b7-1884-43e1-a993-ffe436e1a257/26-6aafca7a9aefe.webp' /></p><p>
</p><p>
தற்போது அனுமதி இன்றி மிகப்பெரிய அளவில் இராணுவத்தின் வைத்தியசாலை
அமைக்கப்பட்டு வருவதாகவும் அது பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர தமைமையில் நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-s-mass-rally-today-under-anura-s-patronage-1789902580"></link>
            <id>https://ibctamil.com/article/npp-s-mass-rally-today-under-anura-s-patronage-1789902580</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&quot;எமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>"எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள். நாட்டிற்கு ஆசிர்வாதம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் பேரணி இன்று (20)&nbsp;மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது.</p><p>தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஆற்றிய சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதையும், எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த மக்கள் பேரணியில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p>
இதற்கு முன்னதாக களுத்துறை மாவட்டம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஜனாதிபதியின் மக்கள் பேரணி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l-ip0cLvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசியல் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-political-figure-from-the-rajapaksa-family-1789900660"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-political-figure-from-the-rajapaksa-family-1789900660</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக்ச குடும்பம் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு புதிய மூலோபாய முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> குடும்பத்தின் பல தலைவர்களும் செயலர்களும் சிறைத்தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ள சூழலில், அரசியல் நடவடிக்கைகளைத் தொடர, எந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபட்ட ஒரு புதிய நபரை முன்னிறுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>அனைத்து ராஜபக்சக்கள் மீதும் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
ராஜபக்ச குடும்பத்தின் பல முக்கிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b601ae-b3ef-4944-8f19-72fb5f0bfce6/26-6aafbf5ceb1c7.webp' /></p><p>
</p><p>
தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து ராஜபக்சக்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதால், மக்களிடையே எவ்வித சர்ச்சையுமற்ற, எந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத ஒரு புதிய முகத்தை குடும்பத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஊழலற்ற புதிய முகம்</h2><p>இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, எதிர்கால அரசியல் செயல்பாடுகளையும் தலைமைத்துவத்தையும் அந்தப் புதிய நபரிடம் ஒப்படைக்க கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5657c2ad-6a28-4819-bf5d-9cfa53b9dc8a/26-6aafbf5da193b.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களின் அதிருப்தியை எதிர்கொண்டு, குடும்பத்தின் பாரம்பரியத் தலைவர்கள் பின்வாங்கி, பின்னணியில் இருந்து வழிநடத்தும் அதே வேளையில், முன்னணியில் இருந்து தூய்மையான பிம்பத்துடன் ஒரு புதிய தலைமையை உருவாக்குவதே இதன் நோக்கம் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-revision-at-the-end-of-september-in-sl-1789900358"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-revision-at-the-end-of-september-in-sl-1789900358</id>
            <summary type="text">இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மத்திய கிழக்கு யுத்தம்</span></h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bec81d6-4327-4eb0-95e5-a865c9048342/26-6aafbbfc3dd64.webp' /></p><p>

மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது. </p><p>

பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.</p><p>

எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.</p><p></p><h2>டீசலை சந்தைக்கு விநியோகித்தல்&nbsp;</h2><p> 

அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். 

ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4642f53e-fbeb-4971-bf1e-ae517d40a212/26-6aafbbfd07edd.webp' /></p><p> 

எனவே, மேலும் ஏற்படும் விலை அதிகரிப்பை எரிபொருள் பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. </p><p>

அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.</p><p> 

ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மழையால் நீரில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-dies-after-falling-into-water-ruwanwella-area-1789899818"></link>
            <id>https://ibctamil.com/article/man-dies-after-falling-into-water-ruwanwella-area-1789899818</id>
            <summary type="text">இன்று (20) காலை பெய்த கடும் மழையால் ரிடிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், அதில் விழுந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (20) காலை பெய்த கடும் மழையால் ரிடிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், அதில் விழுந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 குறித்த நபர், அம்பாகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கபட்டுகின்றது.</p><p>இவர் அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியில் பொல்கட்டுவங்குவ அருகே பாயும் ரிடிகஹ ஓயாவில் தவறி விழுந்ததாக விசாரணைகளின் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.</p><p></p><h2>கரவனெல்லை ஆரம்ப வைத்தியசாலை</h2><p>
</p><p>இதன் பின்னர் பிரதேசவாசிகள் மற்றும் ருவன்வெல்ல காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்துக்கு கீழ்புறமுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc031834-b29b-48d0-afa4-aad4d015f29f/26-6aafb9b926f24.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>மேலும் சடலத்திற்கான பிரேதப் பரிசோதனை கரவனெல்லை ஆரம்ப வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வருடமாக மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் வஜ்ரத்தின் இரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-of-the-vajra-held-by-mahinda-rajapaksa-1789899452"></link>
            <id>https://ibctamil.com/article/secret-of-the-vajra-held-by-mahinda-rajapaksa-1789899452</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பொதுக்கூட்டங்களின் போதும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது வஜ்ரத்தை தன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பொதுக்கூட்டங்களின் போதும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது வஜ்ரத்தை தன்னுடைய கையில் வைத்திருக்கின்றார் என்பது செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2005ஆம் ஆண்டு ஆன்மீக சிகிச்சையாளர் ஒருவர் இந்த வஜ்ரத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த வஜ்ரம் ஆன்மீக பாதுகாப்பு, ஜோதிட நம்பிக்கை, அதிகாரத்தின் அடையாளம் மற்றும் மன உறுதிக்கான ஒரு தூண்டுதல் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் அண்மையில் நடந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பொதுக்கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்சவின் கையில் இந்த வஜ்ரம் இருக்கக்கூடிய புகைப்படங்கள் அதிகளவில சமூக வலைத்தளங்களில பகிரப்பட்டு வந்தது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e7LboISYa4M" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T10:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்தஞாயிறு தாக்குதல் : இன்னும் இரண்டு நாட்களில் வரவுள்ள வரலாற்று தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-days-left-for-final-verdict-easter-attacks-case-1789898175"></link>
            <id>https://ibctamil.com/article/2-days-left-for-final-verdict-easter-attacks-case-1789898175</id>
            <summary type="text">2026 செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான நீதியை நிலைநாட்டுதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான நீதியை நிலைநாட்டுதல் செயல்முறையிலும் ஒரு மிக முக்கியமான மற்றும் தனித்துவமான நாளாகும். </p><p>அன்றைய தினம் நாட்டின் இரண்டு முக்கிய நீதிமன்றங்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அரசியல் ரீதியாகவும்&nbsp; இரண்டு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதித் தீர்ப்புகள் அறிவிக்கப்படவுள்ளதே இதற்குக் காரணமாகும்.&nbsp;</p><h2>இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை</h2><p>அதில் முதல் முக்கிய நிகழ்வு, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புடைய நௌஃபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1200ab00-4fde-4906-9400-a5fcb96f36a7/26-6aafb4b7122f1.webp' /></p><p> </p><p>நாட்டின் நீதித்துறை வரலாற்றில் அதிகபட்சமாக 23,000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 2021 ஓகஸ்ட் 10 அன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. </p><p>முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்த நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 250க்கும் மேற்பட்ட அமர்வுகளில் இந்த விசாரணை நடைபெற்றது. </p><p>முறைப்பாட்டாளரின் 2,309 சாட்சிகளில் 547 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டு, 2,076 ஆவணங்கள் மற்றும் வழக்குப்பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர், முறைப்பாட்டாளரின் வழக்கு 2026 ஓகஸ்ட் 13 அன்று நிறைவடைந்தது.</p><h2>பிரதான பிரதிவாதி நௌஃபர் மௌலவி அறிக்கை</h2><p>பிரதான பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, பிரதிவாதி கூண்டில் இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் தான் சஹ்ரான் ஹஷீம் மற்றும் குழுவினருடன் தொடர்பில் இருந்தபோதிலும், தாக்குதல்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20eeb3d6-45a9-4f5c-8963-a107f340ac98/26-6aafb4b7d7f54.webp' /></p><p> ஏனைய பிரதிவாதிகளான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் மற்றும் மொஹமட் ஹனிஃபா ஸைனுல் ஆப்தீன் ஆகியோர், குடும்பத்தினரை அச்சுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்து பெற்றதாகவும், தாங்கள் மதப் பிரசங்கங்களில் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிவித்தனர்.</p><h2>கட்டுவாப்பிட்டி, கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதல்</h2><p> </p><p>கட்டுவாப்பிட்டி, கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதல்களுக்கு நாட்டில் முதன்முறையாக 'யூரியா நைட்ரேட்' என்ற உயர் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் வெளிப்படுத்தினார், மேலும் ஜமைக்காவில் இருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளித்த முன்னாள் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். டி. சன்ன பெரேரா, ஷங்ரிலா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் குண்டுதாரிகளின் மரண பரிசோதனை அறிக்கைகளை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f91148-9311-4129-bb64-e80051ee954b/26-6aafb4b8a6d3a.webp' /></p><p> </p><p>ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழக்கறிஞர்களான சுரேன் டி பெரேரா, மனுஷிகா குரே, ஹிருணி பெரேரா, சகோதரி சித்திஜா ஜயமான்ன மற்றும் சுமிரி என் பெர்னாண்டோ ஆகியோர் உட்பட ஒரு குழுவினர் ஆஜராகினர், மேலும் நீதிபதிகள் குழாம் ஓகஸ்ட் 24 அன்று செப்டம்பர் 22 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.</p><p>இரண்டாவது, ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரி மற்றும் சதித்திட்டத்தைக் கண்டறிய புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கு அன்றைய தினமே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும். </p><h2>சுரேஷ் சலே பேலியகொடையில் கைது</h2><p>பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களுக்குப் பிறகு, மருதானை சமூக மற்றும் சமய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹான் சில்வா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்த இந்த விசாரணை தொடர்பாக, அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே 2026 பெப்ரவரி 25 அன்று பேலியகொடையில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449aaefe-4b7a-48d0-a498-3ec7dcbaa267/26-6aafb4b961390.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கேணல் மொஹமட் அன்சார் மற்றும் பிரேம் ஆனந்த உடலகம ஆகியோருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.</p><h2>அசாத் மௌலானா அளித்த சாட்சியம்</h2><p>&nbsp; சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களில், சஹ்ரானின் சகோதரர் உட்பட குழுவினருக்கு பிணை வழங்குவதற்காக சலேவின் தலையீட்டில் இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து 250,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், தாக்குதல் நடந்த தினத்தின் காலை சலே, தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் இருந்த ஒருவரை வாகனத்தில் ஏற்றிக்கொள்ள அழைப்பு விடுத்ததாகவும் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45fc17f-f99b-42e8-99a6-d6ce9a56c026/26-6aafb4ba167db.webp' /></p><p> நீர்கொழும்பு மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தைச் சுற்றி அவதானித்த முஸ்லிம் குழுவினருக்கு சலேவின் அறிவுறுத்தலின் பேரில் உதவி வழங்கப்பட்டதாக 'பெத்தா' என்ற உளவாளி கூறியுள்ளதாகவும், அது ஒரு வலுவான சாட்சியம் என்றும் முன்னாள் நீதவான் இசுரு நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்துல் அஸீஸ் ரூமியும் சலேக்கு எதிராக வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;சமீபத்திய தகவல்களின்படி, இந்தியாவின் 'Q' பிரிவுடன் தொடர்பில் இருந்த தம்பையன் என்ற இராணுவ உளவாளி மூலம் சஹ்ரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்ந்து கிடைத்து வந்துள்ளன.</p><p> </p><h2>வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொலை</h2><p>2018 நவம்பர் 30 அன்று வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டமை, காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்பு மற்றும் தாக்குதலுக்கு முந்தைய நாள் தேவாலயங்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தப் போவதாக இந்திய 'Q' பிரிவு வழங்கிய முன் எச்சரிக்கைகளை தம்பையன் உடனடியாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beec555-23e5-4b42-95e0-e2536459e0cc/26-6aafb4babf78a.webp' /></p><p> இருப்பினும், புலனாய்வுப் பணிப்பாளர் வவுணதீவு சம்பவத்தை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை அளித்திருந்தார், மேலும் தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் கல்முனையில் இருப்பதாக வழங்கப்பட்ட தகவல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p> சஹ்ரானின் குழுவை உயிருடன் பிடிக்க வாய்ப்பிருந்தும், அவர்களை மொத்தமாக அழிக்கும் திட்டம் இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><h2>விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும்&nbsp;சுரேஷ் சலே</h2><p>கைது செய்யப்பட்ட பின்னர் உண்ணாவிரதம் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே, உண்ணாவிரதத்தை கைவிட்ட போதிலும் 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் தங்கியிருந்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இதில் மருத்துவ சதித்திட்டம் உள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d037e890-2a29-4c9f-99c4-ac57a22bc32f/26-6aafb4bb76ab2.webp' /></p><p> </p><p>கோட்டை நீதவான் பசன் அமரசேன, சலேவின் மருத்துவ அறிக்கைகளை கோரிய போதிலும், தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அவற்றை சமர்ப்பிக்கவில்லை, மேலும் சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் சட்ட மனநல மருத்துவக் குழு கோரிய அறிக்கைகளும் வழங்கப்படவில்லை. </p><p>நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தாதது தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதவான் வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார், மேலும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கான நீதியை நாடும் அனைவருக்கும் இந்த செப்டம்பர் 22 ஆம் திகதி ஒரு மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-and-silver-price-increase-today-1789893490"></link>
            <id>https://ibctamil.com/article/gold-and-silver-price-increase-today-1789893490</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p>
</p><p>
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது</p><p>அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,377.91 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 66.25 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3713f018-0cdc-4b92-809b-bf6e9529fff1/26-6aafb3319d45d.webp' /></p><p>கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>

மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: நான்கு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-attacks-drug-smuggling-vessel-caribbean-sea-1789898143"></link>
            <id>https://ibctamil.com/article/us-attacks-drug-smuggling-vessel-caribbean-sea-1789898143</id>
            <summary type="text">கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவான SOUTHCOM வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

SOUTHCOM-இன் தகவலின்படி, செப்டம்பர் 19ஆம் திகதி அதன் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு அரைக்கோளத்துக்கான கூட்டுப் பணிக்குழு, கரீபியன் கடலில் வழக்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெறும் பாதையில் பயணித்த அதிவேகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விபரங்கள்</h2><p>

உளவுத்தகவல்களின் அடிப்படையில் குறித்த கப்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் SOUTHCOM தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e671cfc6-e202-46f6-a8c0-9d89fd799569/26-6aafb17514fdc.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதலில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற கரீபியன் கடலின் குறிப்பிட்ட பகுதி உள்ளிட்ட மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என Reuters தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-s-39th-commemoration-in-trincomalee-1789897352"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-s-39th-commemoration-in-trincomalee-1789897352</id>
            <summary type="text">தமிழ் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது
நாள் திருகோணமலையில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது
நாள் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் - உப்பூறல் கிராமத்தில் இன்று (20) காலை இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.</p><p>இதன்போது பிரதான சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை
அணிவிக்கப்பட்ட பின்னர் விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><h2>நினைவஞ்சலி செலுத்தினர்</h2><p>
இந்நிகழ்வை&nbsp;திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி
செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f8713e-3829-4a43-88c6-5b01bb3556df/26-6aafae9396171.webp' /></p><p> தியாக தீபம் திலீபனின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:58:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தில் தங்கியிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20y-sri-lankans-staying-in-kuwait-were-deported-1789890984"></link>
            <id>https://ibctamil.com/article/20y-sri-lankans-staying-in-kuwait-were-deported-1789890984</id>
            <summary type="text">குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள்&nbsp;நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்துள்ளனர். </p><p>குறித்த நாடு கடத்தும் நடவடிக்கை இன்று (20.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>நாடு கடத்தப்பட்டவர்கள் வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக குவைத் சென்றிருந்த நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணியாற்றியபோது கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்</h2><p>
</p><p>
இவர்கள் இன்று அதிகாலை 3.10 மணியளவில் குவைத் நகரிலிருந்து ஜசீரா விமான சேவைக்குச் சொந்தமான J9-551 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d390fd6-86e1-49de-b9e8-17c6710779bc/26-6aaf9c2324ed7.webp' /></p><p>இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கி, அவர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>நாடு கடத்தப்பட்டவர்களில் வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-india-accord-ranil-statement-1789894092"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-india-accord-ranil-statement-1789894092</id>
            <summary type="text">விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று&nbsp;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிய போது தான் ஒரு விடுதலைப் புலி என பகிரங்கமாகக் குறிப்பிட்டமை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, அவர் நாட்டின் முந்தைய அரசியல் வரலாற்றுப் பின்னணியை இவ்வாறு சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.</p><p></p><h2>டக்ளஸ் தேவானந்தவை இணைத்தவர்</h2><p>இது குறித்து மேலும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது, இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. முதன்முதலில் பயங்கரவாத அமைப்பில் இருந்த ஒருவரைத் தம் பக்கம் ஈர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9af1d4-93fb-44a9-a48a-c4a6c80611ad/26-6aafa90120de4.webp' /></p><p>அவர்தான் டக்ளஸ் தேவானந்தவை முதன் முதலில் இணைத்துக் கொண்டார். அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தம் பக்கம் இணைத்தார். அதே வழியையே மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பின்பற்றினார்.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன உட்பட்ட அன்றைய அரசாங்கத்தை இலங்கை - இந்திய ஒப்பந்தம் முற்றாக முடக்கிப்போட்டது. நான் அந்த நிலையை மாற்றி, முடக்கத்தை உடைத்தெறிந்தேன்.</p><p>உண்மையைச் சொன்னால், ஜே.ஆர். இந்திய ஒப்பந்தத்திற்குள் முடக்கப்பட்டிருந்தார்; விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான் தான்.</p><p></p><h2>&nbsp;தேசிய அரசியலில் நேரடியாக இணைத்தமை&nbsp;</h2><p>விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன். ஆனால், கருணாவை தேசிய அரசியலில் நேரடியாக இணைத்துக் கொண்டது மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
எவ்வாறாயினும் பிரேமதாச பயங்கரவாத அமைப்பில் இருந்தவரைத் தம்மிடம் எடுத்தது போல், நான் தான் விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d95d84e3-5fbf-47b0-9604-88b505089d8e/26-6aafa901ca28b.webp' />&nbsp;</p><p> </p><p>மறுபுறம் சந்திரிக்கா, கருணாவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதுடன், இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பை மகிந்த ராஜபக்ச அழித்தார்.</p><p>நாட்டில் கொடூர யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஜே.வி.பி அமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு நிகராக மகா சங்கத்தினரையும் இராணுவத்தினரையும் கொன்றுகுவித்தது. அந்தக் காலத்தில் தான் 'ஜே.ஆரைக் கொல்லுங்கள்' என்ற பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன“ என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-youth-in-saudi-1789891115"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-youth-in-saudi-1789891115</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பில் தென்கயிலை ஆதீனத்தின் தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஜனாதிபதி அநுரகுமார திச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பில் தென்கயிலை ஆதீனத்தின் தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.</p><p>அதன்படி, ஜனாதிபதி தன்னுடைய முழு பிரயத்தனத்தையும் பயன்படுத்தி அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் சவுதி மன்னர் ஊடாக பொது மன்னிப்பை வழங்க வைத்து நாட்டுக்கு அழைத்து வர வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>அத்துடன் சிவராசா அனோஜனின் உயிரை காப்பதற்கு அனைத்து
தரப்புக்களும் எடுத்து வரும் முயற்சிகள் மனதை ஆறுதல்படுத்துகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தொடர் முயற்சிகளை மேற்கொள்ளுதல்</h2><p>இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வினையாக பதிந்த மத நிந்தனை முகப்புத்தக பதிவு இந்த பாரதூரமான உயிரை
பறிக்கும் தண்டனை வரை வந்து நிற்பது மனதை மிகவும் வருத்துகின்றது</p><p>அவரது உயிரைக் காப்பதிலும் பெற்றோரின் கண்ணீரை துடைப்பதிலும் இலங்கை அரசும் அதேநேரம்
சகோதர எம் நாட்டு இஸ்லாமிய ஆன்மீக அரசியல் பிரதிநிதிகளும் எடுத்து வரும் அதீத
முயற்சிகள் மிகவும் நன்றிக்குரியவை. அதே போல தமிழ் பிரதிநிதிகள் கொடுத்து வரும் உச்சபட்ச அழுத்தமும்
பாராட்டத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc2b663-ae81-42ff-a8d2-a21426b0f8e7/26-6aaf99333c4e6.webp' /></p><p>
நாம் அனைவரும் எம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து சகோதர உணர்வோடு இந்த
இளைஞனின் உயிரை காப்பதற்கு அவர் விடுதலையாகும் வரை எம் தொடர் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் அனைத்து மக்களும் சகோதரத்துவ
உணர்வோடு தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என வினயமாக வேணடுகின்றோம். அனைத்து தரப்பினருடன் இந்த இளைஞனுக்காக அவனது விடுதலைக்காக மனமுருகி நாமும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Guj5NDaytBo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T08:35:35+00:00</updated>
        </entry>
    </feed>
