<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-21T14:34:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/my-last-days-in-parliament-mp-archchuna-1784639808"></link>
            <id>https://ibctamil.com/article/my-last-days-in-parliament-mp-archchuna-1784639808</id>
            <summary type="text">தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில் இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில் இன்றையதினம் கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது கடைசி நாட்களைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>

"நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க போவதில்லை. 

இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்.</p><h2>தவறான எண்ணத்தை உருவாக்கும்</h2><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு ஓசல ஹேரத் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0806190-de82-43cc-a34c-b74a684a2df8/26-6a5f77edae741.webp' /></p><p>மேலும் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்தும் விளக்கம் வழங்கியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான மட்டத்தில் டெங்கு : அமைச்சர் நலிந்த அபாய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-minister-declares-danger-level-low-1784636755"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-minister-declares-danger-level-low-1784636755</id>
            <summary type="text">அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தற்போது டெங்கு நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஓகஸ்ட் மாதத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தற்போது டெங்கு நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்நிலைமை ஆபத்தான மட்டத்திலேயே இருக்கும் எனவும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>3 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
</p><p>
 

</p><h2>மழைக்கால சூழ்நிலையால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு</h2><p>டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82fcf51-9055-482b-93cb-adef9f77a24d/26-6a5f6e1d00697.webp' /></p><p>
</p><p>
 

"டெங்கு என்பது ஒரே நாளில் அனைவரும் வீதியில் இறங்கித் தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல. நிலவும் மழைக்கால சூழ்நிலையால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். வீடுகளில் நாம் கவனிக்காத இடங்களில் கூட கொசுக்கள் உற்பத்தியாகலாம். 

 

அதனால், சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும்.</p><p></p><h2>புகையூட்டல் நடவடிக்கை</h2><p> </p><p>கொழும்பு மாவட்டம் உட்பட பல பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் நோயாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. 

 

இருப்பினும், விழிப்புணர்வை கைவிடக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f83817-3cec-4aa5-9536-225d41afeb8c/26-6a5f6e1da5bc7.webp' /></p><p> </p><p>அடுத்த 3 வாரங்களுக்கு இந்த அபாயம் நீடிப்பதால், பகுதிகளைச் சுத்தம் செய்து, சுகாதார பரிசோதகர்களின் (PHI / MOH) உதவியுடன் புகையூட்டல் (Fogging) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டையோடு அற்ற நிலையில் செம்மணியில் மீட்டக்கப்பட்ட என்புகூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bones-without-skull-in-chemmani-1784638159"></link>
            <id>https://ibctamil.com/article/bones-without-skull-in-chemmani-1784638159</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 39ஆவது நாளான இன்றைய தினம் அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 39ஆவது நாளான இன்றைய தினம் அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் சில என்புகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
சில என்புகூட்டு தொகுதிகளில் மண்டையோடு குவியல்களாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மண்டையோட்டு குவியல்&nbsp;&nbsp;</h2><p>

இந்நிலையில் அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதனால் ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற முடியும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fdfd1b1-0e77-48d1-93dd-880fd1c01666/26-6a5f6ddead014.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T13:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றில் இடமளிக்க வேண்டும்: டக்ளஸ் வலியுறுத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-ministers-should-provided-space-parliament-1784635278"></link>
            <id>https://ibctamil.com/article/chief-ministers-should-provided-space-parliament-1784635278</id>
            <summary type="text">மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும்
இடமளிக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும்
இடமளிக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தா புதிய திட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய அரச சார்பற்ற நிறுவனத்தின்
(OTI) பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>இதன்போது மேலும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, “மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும்,
இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும்,
சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள்
நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான
களத்தினை ஏற்படுத்தும்.</p><p></p><h2>டக்ளஸ் தேவானந்தாவின் புதிய திட்டம்</h2><p>
அதேபோன்று, யுத்தம் காரணமாக. 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து
சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும்
வாக்குரிமையை வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d66bb903-3624-4e6c-ab47-25a23665de4e/26-6a5f6456bba42.webp' /></p><p>
</p><p>
அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க
வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது,
பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.</p><p>

கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களிற்கான அதிகாரங்களை
மீளக் கையளிப்பதுடன், காவல்துறை மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்
முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறையில் குட்டிமணி - தங்கத்துரைக்கு சிலை: நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statue-of-kuttimani-thangathurai-in-valvettithurai-1784634229"></link>
            <id>https://ibctamil.com/article/statue-of-kuttimani-thangathurai-in-valvettithurai-1784634229</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையான நிலையில் , அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
</p><p>
மேலும் இந்த வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>வல்வெட்டித்துறை காவல்துறை</h2><p>

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8b26ae-eb99-4609-9172-8b5454129731/26-6a5f5b76d5884.webp' /></p><p> </p><p>

இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. </p><p>

கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T12:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறிபோகும் தமிழர் பாரம்பரியம்: கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் எழுப்பும் ஆழமான கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanniya-hot-springs-new-buddhist-temple-1784636398"></link>
            <id>https://ibctamil.com/article/kanniya-hot-springs-new-buddhist-temple-1784636398</id>
            <summary type="text">திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று என்பது வெறும் சுற்றுலாத் தலமோ அல்லது இயற்கை அதிசயமோ அல்ல. 

அது தமிழர்களின் வரலாறு, பண்பாடு, ஆன்மீக மரபு மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று என்பது வெறும் சுற்றுலாத் தலமோ அல்லது இயற்கை அதிசயமோ அல்ல. </p><p>

அது தமிழர்களின் வரலாறு, பண்பாடு, ஆன்மீக மரபு மற்றும் அடையாளத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு பாரம்பரியச் சின்னமாகும். </p><p>

பல தலைமுறைகளாக இந்த இடம் இந்து மக்களின் வழிபாட்டு மரபுகளுடனும், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட புனிதத் தலமாகவும் அறியப்பட்டு வருகிறது.</p><h2>தமிழர் பாரம்பரியம்</h2><p>

இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இடத்தில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழ் மக்களிடையே இயல்பாகவே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d9a61a0-c39a-4999-91ea-06f9cc6e1f89/26-6a5f63efc5dd8.webp' /></p><p> </p><p>

இது வெறும் ஒரு கட்டிட நிர்மாண விவகாரம் அல்ல; தமிழர் பாரம்பரியம், வரலாற்று உரிமை மற்றும் கலாசார அடையாளம் தொடர்பான ஒரு முக்கியமான விவகாரமாக மாறியுள்ளது.
</p><p>
கடந்த பல தசாப்தங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல வரலாற்று மற்றும் மத அடையாளங்கள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. </p><p>

குறிப்பாக, தொல்லியல், மத மற்றும் அரசியல் காரணிகளை முன்னிறுத்தி பல இடங்களின் வரலாற்று அடையாளங்கள் மாற்றப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.</p><p> கன்னியா விவகாரமும் அந்த வரிசையில் இடம்பெறுவதாக பலரும் கருதுகின்றனர்.</p><p>இந்த விவகாரம் குறித்து இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது.</p><p>
இது வெறும் அரசியல் கருத்தாக மட்டும் அல்லாமல், தமிழர் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
</p><p>
அவரது கருத்துப்படி,

 "கன்னியா வெந்நீர் ஊற்று பல தலைமுறைகளாக கன்னியா பகுதி இந்து மக்களின் புனிதத் தலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. </p><p>அங்கு சிவன் ஆலயமும் பிள்ளையார் ஆலயமும் இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறுவதோடு, முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட இடமாகவும் அது அறியப்படுகிறது.</p><h2>சமூகத்தின் வரலாற்று அடையாளங்கள்</h2><p>இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடைய இடத்தில் புதிய மதக் கட்டுமானங்கள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள், தமிழர் பாரம்பரியம் படிப்படியாக மாற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.</p><p>

வரலாற்று மற்றும் மத உணர்வுகளுடன் தொடர்புடைய எந்த இடத்திலும் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்க, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4728414-fb46-404b-a53a-6ba77d792e86/26-6a5f63f0a6feb.webp' /></p><p> 

இவ்வாறான வெளிப்படைத்தன்மையே எதிர்கால முரண்பாடுகளைத் தவிர்க்கும் ஒரே வழியாகும்.
</p><p>
கன்னியா தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் வெளியிடும் கவலைகளை அலட்சியப்படுத்தாமல், உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
அதேபோல், கன்னியாவின் உண்மையான வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள் மற்றும் சட்ட நிலைமை குறித்து அதிகாரப்பூர்வமான, வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் .
</p><p>
இந்தக் கருத்து எந்த மதத்திற்கும் எதிரானதாக அல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகத்தின் பாரம்பரியமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கையை வலியுறுத்துகிறது.
</p><p>
இதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கக் கூடாது.
</p><p>
மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களையும் கேள்விகளையும் புறக்கணிக்காமல், தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.</p><p>

இது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயிலைப் போன்றது அல்ல. இப்போது அவர்கள் அதைக் கட்டப் போகிறார்கள். 

எனவே அரசியல் பிரமுகர்கள் ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை?
</p><p>
 தமிழர் பாரம்பரியம் தொடர்பான விவகாரங்களில் அரசியல் தலைமைகளின் மௌனத்தை நேரடியாகச் இது சுட்டிக்காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
</p><p>
உண்மையில், கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல. அது வரலாறு, தொல்லியல், சட்டம், பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் அரசியல் பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் தொடும் ஒரு தேசிய விவகாரமாக மாறியுள்ளது. </p><p>

ஒரு சமூகத்தின் வரலாற்று அடையாளங்கள் குறித்த சந்தேகங்கள் எழும்போது, அதற்கான பதில் அதிகாரபூர்வ ஆதாரங்களுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்பட வேண்டும். </p><p>இல்லையெனில் அந்த மௌனமே புதிய சர்ச்சைகளுக்கும் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும்.
</p><p>
தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், அவற்றின் வரலாற்று உண்மைகள் அரசியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட வேண்டும். 

கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவுகள், சட்ட நடைமுறைகள், தொல்லியல் ஆதாரங்கள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத உணர்வுகளையும் மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்று பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YQDytkP2uU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T12:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதிக்கு எதிராக கடல்வழி முற்றுகை : ஹூதி அமைப்பு அதிரடி அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthi-announces-a-maritime-blockade-saudi-1784635337"></link>
            <id>https://ibctamil.com/article/houthi-announces-a-maritime-blockade-saudi-1784635337</id>
            <summary type="text">ஈரானின் ஆதரவுபெற்ற ஏமனின் ஹூதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏமன் மக்கள் அனைவரும் போருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஆதரவுபெற்ற ஏமனின் ஹூதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏமன் மக்கள் அனைவரும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்குமாறும், ஆயுதமேந்தி போரிடத் தயாராகுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.</p><p>&nbsp;கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தை சவூதி அரேபியா தாக்கியதாக ஹூதிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலடியாக, சவூதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே இந்த கடல்வழி முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>செங்கடலை தடைசெய்ய ஹூதிகளுக்கு ஈரான் அழைப்பு</h2><p>
</p><p>
இதனிடையே தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலை மறிக்குமாறு ஹூதிகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7f0ef1-a51c-43ee-8a44-86e1a3bff62f/26-6a5f639123fce.webp' /></p><p>&nbsp; ஹூதி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ வெளியிட்ட காணொளியில், பல ஆண்டுகளாக ஏமன் மக்கள் மீது சவூதி விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, "கண்ணுக்குக் கண்" என்ற அடிப்படையில் இந்த முற்றுகை உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பாப் அல்-மண்டேப் நீரிணை</h2><p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் தீவிப் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவுதி அரேபியாவின் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹோர்முஸ் வழியாக செல்லமுடியாத கப்பல்களுக்கு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea3c232b-53c8-4e4c-9ce1-01c4b867d2bd/26-6a5f6391d7dfd.webp' /></p><p>செங்கடலின் தென்முனைக்குள் செல்லும் பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள ஏமன் பகுதியை ஹூதிகள் கட்டுப்படுத்துகின்றனர். இந்த நீரிணையை மூடுவதால் உலகின் எண்ணெய் விநியோகம் 7 ​​சதவீதம் குறையும் என்றும், சவூதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp; ஹோர்மூஸ்க்கு இணையாக இருந்த மற்றொரு வர்த்தகப் பாதையையும் மூடுவது உலகப் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-s-first-heavy-duty-robot-in-china-1784633859"></link>
            <id>https://ibctamil.com/article/world-s-first-heavy-duty-robot-in-china-1784633859</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது உலகின் முதல் செயற்கை நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மற்றும் ஸ்மார்ட் சவாரி செய்யும் நான்கு கால் வாகனம் என்றும் கூறப்படுகிறது. </p><p>இந்த நவீன ரோபோ குதிரை சுமார் 30 கிலோ எடையும், அரை மீட்டர் உயரமும் கொண்டது.</p><p></p><p> </p><h2>உலகின் முதல் கனரக ரோபோ</h2><p>&nbsp;மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் செல்லும் குறித்த ரோபோ குதிரை,&nbsp; 75 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bb5f2bd-ed00-4cb0-bdf5-8efdc5ca2aba/26-6a5f5c452af6e.webp' /></p><p>

ஒருமுறை மின்னேற்றினால் 20 கி.மீ. வரை பயணிக்க முடியுயும் என்றும் இதனால் 25 டிகிரி சரிவுகளிலும் ஏறக்கூடியது எனவும் இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

மேலும், பல்வேறு நிலப்பரப்புகளில் இயங்கி, தடைகளைத் தவிர்த்து, உடல் வடிவத்தை மாற்றி, குரல்வழி தொடர்பும் கொள்ளும் திறனையும் இது கொண்டுள்ளது.&nbsp;</p><p>

முற்றிலும் நான்கு கால் உயிரியக்கவியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த ரோபோ, செங்குத்தான சரிவுகள், சரளை மற்றும் சேறு உள்ளிட்ட சிக்கலான நிலப்பரப்புகளிலும் பயணிக்ககூடியவை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Who needs a horse when you can ride a robot? Kepler Robotics&#39; Mechanical Qilin, a 300 kg heavy-duty quadruped, stole the show as a visitor took it for a spin at the WAIC 2026. Capable of hauling nearly one ton and running for eight hours straight, this rideable beast handles… <a href="https://t.co/Bg0Su5Z89s">pic.twitter.com/Bg0Su5Z89s</a></p>&mdash; Smart Industry in China (@SmartindustryCN) <a href="https://x.com/SmartindustryCN/status/2079184800087191887?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் செல்வந்தர்கள் குறித்த அறிவிப்பை மீளப்பெறுங்கள் : காவல்துறைக்கு ஐ.தே.க அறிவுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-urges-police-withdraw-statement-1784632450"></link>
            <id>https://ibctamil.com/article/unp-urges-police-withdraw-statement-1784632450</id>
            <summary type="text">சட்டபூர்வமான வருமான ஆதாரம் ஏதுமின்றி, திடீரென கணிசமான சொத்துக்களைப் பெற்றவர்கள் அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள்” குறித்துப் பொதுமக்கள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டபூர்வமான வருமான ஆதாரம் ஏதுமின்றி, திடீரென கணிசமான சொத்துக்களைப் பெற்றவர்கள் அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள்” குறித்துப் பொதுமக்கள் தெரிவிக்குமாறு வலியுறுத்தி இலங்கை காவல்துறை வெளியிட்ட ஜூலை 9ஆம் திகதி அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று(21) அழைப்பு விடுத்துள்ளது.</p><p>சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதுமே காவல்துறையின்பணி என வரையறுக்கும் ஐக்கிய ராச்சியத்தின் சுதந்திர விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த உத்தரவு காவல்துறை சேவையின் அடிப்படைக் கடமையை மீறுவதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>இலங்கையில் செல்வ வரி இல்லை</h2><p>“சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும், சட்டத்தை மீறுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதும், மகாராணியின் அமைதியைக் காப்பதுமே காவல்துறை சேவையின் நோக்கமாகும்,” என்று அக்கட்சி குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022cad4a-65f8-4222-b18f-eaa7c41f66a1/26-6a5f588163d39.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் செல்வ வரி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, பல கிராமப்புறக் குடும்பங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உட்பட சட்டபூர்வமான வழிகளில் சொத்துக்களைப் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டது.</p><p></p><h2>வரி நடைமுறைகள் குறித்த குறைந்த விழிப்புணர்வு</h2><p>
</p><p>
மற்றவர்கள், வரி நடைமுறைகள் குறித்த குறைந்த விழிப்புணர்வு காரணமாகத் தங்கள் வருமானத்தை அறிவிக்கத் தவறியிருக்கலாம். தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல், காவல்துறையின் இந்த உத்தரவு "தொந்தரவு மற்றும் அச்சுறுத்தலுக்கான ஒரு கருவியாக" மாறக்கூடும் என்று அக்கட்சி எச்சரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36308a4e-27cf-4e63-90ec-0cbf381c3d33/26-6a5f5a1368ad8.webp' /></p><p>

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்கு முன்பு, இதுபோன்ற விடயங்கள் காவல்துறை போதைப்பொருள் பிரிவு, உள்நாட்டு வருவாய்த் துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது.</p><p>

கிராமப்புற சமூகங்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, காவல்துறை அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக மேலும் குறிப்பிட்ட ஒரு உத்தரவை வெளியிட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு நோய் தீவிரம் : நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-year-old-girl-dies-of-dengue-fever-in-sri-lanka-1784631893"></link>
            <id>https://ibctamil.com/article/4-year-old-girl-dies-of-dengue-fever-in-sri-lanka-1784631893</id>
            <summary type="text">டெங்கு காய்ச்சல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த&amp;nbsp;நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு காய்ச்சல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த&nbsp;நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.</p><p> திக்வெல்ல - நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி&nbsp;நேற்று (20) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கடும் காய்ச்சல் காரணமாக முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் இந்தச் சிறுமிஅனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>காலி தேசிய வைத்தியசாலை</h2><p>இந்தநிலையில் நோய் நிலைமை தீவிரமடைந்தமையினால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றைய தினமே காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கும் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f06ded-797d-4be5-8ba9-691f47b8c3e9/26-6a5f5567704ac.webp' /></p><p>காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் போது, டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலினால் காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை&nbsp;டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. </p><p>இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் : 100 அமெரிக்கப்படையினர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100-us-service-members-injured-in-iran-strikes-1784627893"></link>
            <id>https://ibctamil.com/article/100-us-service-members-injured-in-iran-strikes-1784627893</id>
            <summary type="text">இந்த மாதம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ளஅமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 100 அமெரிக்கப் படை வீரர்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த மாதம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ளஅமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 100 அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் கூறியதாகத் தெரியவருகிறது.

பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், சிபிஎஸ் நியூஸிடம் அளித்த அறிக்கையில் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.</p><h2>காயமடைந்தவர்கள் மீண்டும் பணிக்கு</h2><p>&nbsp; அதில், "ஜூலை 7, 2026 முதல் கிட்டத்தட்ட 100 பேர் ஏதேனும் ஒரு வகையில் காயமடைந்ததாகக் கருதப்படுகிறார்கள்," என்றும், அவர்களில் 96% பேர் பின்னர் பணிக்கு திரும்பிவிட்டனர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0691c400-9e1f-46d5-a146-f1efe30652e6/26-6a5f4603b164d.webp' /></p><p>

"அவர்கள் மீண்டும் போரில் ஈடுபட உறுதியாக உள்ளனர். ஏற்பட்ட காயங்களில் பெரும்பாலானவை லேசான மூளையதிர்ச்சிகளே," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>பதிலடி தாக்குதலை நடத்தும் ஈரான்</h2><p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b89f601-50c1-443a-be00-5ddbc8894e08/26-6a5f460463952.webp' /></p><p> இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் தெற்கு ஈரானைக் குறிவைத்து நடத்தப்பட்டன. அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பல பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்க வசதிகள் மற்றும் தளங்களைக் குறிவைத்து, தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை நடத்திவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பலி! இந்தியாவில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/explosion-in-tunnel-near-power-plant-in-india-1784630607"></link>
            <id>https://ibctamil.com/article/explosion-in-tunnel-near-power-plant-in-india-1784630607</id>
            <summary type="text">இந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றிற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றிற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மேலும் இந்த வெடிவிபத்தில் 15 பேர் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டுள்ளதாக மீட்புகுழு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சுரங்கத்தில் வெடிவிபத்து</h2><p>காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி எரிவாயுக் கசிவின் காரணமாகதான் இந்த வெடிப்பு ஏற்பட்டது என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7805116f-2769-4ff2-91ec-be19b10d6169/26-6a5f53936e544.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-fishermen-s-request-to-the-tamil-nadu-cm-1784629374"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-fishermen-s-request-to-the-tamil-nadu-cm-1784629374</id>
            <summary type="text">தமிழகம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கு இடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கு இடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை, முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p>யாழ். ஊடக அமையத்தில் இன்று (21) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அந்த அமைப்பின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் கூறுகையில்,

சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக
புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய மீன்பிடியாளர்கள் எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான செத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம்</h2><p>
</p><p>
குறிப்பாக புங்குடுதீவின் கரை வரை வந்து அந்த வெறியாட்டத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.
இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c5dde67-1b38-4bdf-98b0-ca9c62965094/26-6a5f4d36e8f46.webp' /></p><p>
</p><p>
இதைவிட கடற்றொழில் அமைச்சரும் கடற்றொழிலாளர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன்
செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.
</p><p>
இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அநுர அரசாங்கத்திடம் கோருகின்றோம். ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இங்கொன்றும் அங்கொன்றும்
பேசித்திரிகின்றாரே தவிர உருப்படியான எதையும் இதுவரை செய்யவில்லை.</p><p></p><h2>வன்முறையாக மாறும் சூழல்</h2><p>

தேர்தல் காலத்தில் கடற்றொழிலாளர்களிடம் வாக்குகள் பெற்றதை இந்த சந்திரசேகர் அமைச்சரும் அவர்சார் தரப்பினரும் மறந்துவிட்டனரென்றே தோன்றுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11013e9a-bb4d-47bc-8a66-bbfd5067f745/26-6a5f4d37bba8e.webp' /></p><p>
</p><p>
அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும்
இழந்து வருகின்றோம்.

இதன் உச்சமாக இனிவரும் நாட்களில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே
முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
</p><p>எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக்
கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளைத்
தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்“ எனவும் தெரிவித்தார்.</p><p></p><p><b><i>செய்தி - பு.கஜிந்தன், த.பிரதீபன்&nbsp;</i></b></p><p><b><i><br></i></b></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZipvY8mCMuQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதட்டம் : உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-issues-worldwide-security-alert-for-americans-1784629386"></link>
            <id>https://ibctamil.com/article/us-issues-worldwide-security-alert-for-americans-1784629386</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள், எதிர்பாராத பாதுகாப்பு நிகழ்வுகள், பயண இடையூறுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு ஏற்படக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள், எதிர்பாராத பாதுகாப்பு நிகழ்வுகள், பயண இடையூறுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து, அமெரிக்க வெளியுறவுச் செயலகம் நேற்று(20)திங்களன்று அமெரிக்க குடிமக்களுக்கு உலகளாவிய எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டது.
</p><p>
"மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளது, மேலும் எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது," என்று அந்தச் செயலகம் தனது ஆலோசனையில் கூறியுள்ளது.&nbsp;</p><h2>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள்&nbsp;</h2><p>தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சாத்தியமான விமான ரத்துகள், தற்காலிக வான்வெளி மூடல்கள் மற்றும் பிற பயண இடையூறுகளுக்குத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e475558-c7f2-4fa8-8fe6-691a1c0bc0c5/26-6a5f4c62cc2db.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களால் வெளியிடப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், செய்தி அறிக்கைகள் மூலம் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் அமெரிக்க குடிமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள்&nbsp;</h2><p>
</p><p>
"மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதிக்கு மற்றும் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

"மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ளவை உட்பட, அமெரிக்க தூதரக வசதிகள் குறிவைக்கப்பட்டுள்ளன."</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b88adbb9-8a0a-47ec-94a9-a8bf86c41fba/26-6a5f4c63815ea.webp' /></p><p> "ஈரானும், ஈரானுக்கு ஆதரவான குழுக்களும், வெளிநாடுகளில் உள்ள மற்ற அமெரிக்க நலன்களையோ அல்லது உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும்," என்று அது மேலும் தெரிவித்துள்ளது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T10:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னம்பிள்ளைகளின் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/whitefly-control-measures-for-coconut-seedlings-1784629526"></link>
            <id>https://ibctamil.com/article/whitefly-control-measures-for-coconut-seedlings-1784629526</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து தெளிக்கும் நடவடிக்கை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
</p><p>

இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
</p><p>

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.</p><p></p><h2>வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்</h2><p>
</p><p>
 தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f0a89b9-e314-42fc-a602-b041b305dca9/26-6a5f4bc192280.webp' /></p><p>
</p><p>

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், தென்னைப் பயிர்ச்செய்கை சபை பணியாளர்கள், கற்பக சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
</p><p>

தென்னைப் பயிர்ச்செய்கையில் வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இந்நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26983540-6cb2-4f04-a6c5-db419572a57e/26-6a5f4bc2576af.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b01ca28-73c6-4f24-a56c-ab6f8c7e9af7/26-6a5f4bc30f043.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3532f3e1-b25b-4744-9639-b944a5b4e766/26-6a5f4bc3baa02.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட தூர பயணங்களுக்கு 600 சொகுசு பேருந்துகள்: அமைச்சரவை அங்கீகாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/600-new-luxury-air-conditioned-buses-for-the-sltb-1784627209"></link>
            <id>https://ibctamil.com/article/600-new-luxury-air-conditioned-buses-for-the-sltb-1784627209</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்துச் சபையின் நீண்ட தூர பயணத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு&amp;nbsp;600 புதிய குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்துச் சபையின் நீண்ட தூர பயணத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு&nbsp;600 புதிய குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி உள்ளது. </p><p>வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>2026 அரச முதலீட்டுத் திட்டத்தில் 600 சாதாரண பேருந்துகளை வாங்க ரூ.14.4 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்</h2><p> </p><p>ஆனால், புதிய சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு உயர்தர வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகளை வாங்குவது சிறந்தது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad7efd1-c462-48af-989f-7b5997132f09/26-6a5f461b4cf4b.webp' /></p><p>
இதனை தொடர்ந்து&nbsp; ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சாதாரண வகைப் பேருந்துகளுக்குப் பதிலாக, தற்போதுள்ள வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் 600 சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:21:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிடியாணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrest-warrant-issued-against-basil-rajapaksa-1784626562"></link>
            <id>https://ibctamil.com/article/arrest-warrant-issued-against-basil-rajapaksa-1784626562</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இந்த வழக்கில் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைக் கருத்தில் கொண்டு இந்த பிடியாணை உத்தரவை நீடித்து மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அத்துடன், அவரது வெளிநாட்டு பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a02ceb0-4b10-4139-9d47-b0c2c6bd98e3/26-6a5f43a39a26b.webp' /></p><p>மேலும், பசில் ராஜபக்சவின் நான்கு பிணையாளர்களுக்கும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு பிரதான நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.</p><p>இந்தநிலையில், குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின்-அர்ஜென்டினா உலகக் கோப்பை இறுதிப் போட்டி மோதல் குறித்து FIFA விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-investigates-spain-argentina-wc-final-brawl-1784625400"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-investigates-spain-argentina-wc-final-brawl-1784625400</id>
            <summary type="text">அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு வெடித்த கைகலப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு வெடித்த கைகலப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
</p><p>
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பான போட்டி அறிக்கைகளை மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, ஃபிஃபா ஒழுங்குமுறை விதிகளின் (FDC) 36வது பிரிவுக்கு இணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
போட்டிக்குப் பிந்தைய சம்பவங்கள் தொடர்பாக FDC-யின் விதி மீறல்களை விசாரிக்க, ஃபிஃபா ஒழுங்குமுறைக் குழு சட்டத்தரணி நியமித்துள்ளது என்று ஃபிஃபா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தாக்குவது போல காட்சிகள்&nbsp;</h2><p>

ஆட்டத்தின் முடிவில், அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயினின் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்து தரையில் தள்ளியது போலவும், நஹுயேல் மோலினா ரோட்ரியைத் தாக்கியது போலவும் காணப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e870fb36-5622-470f-9ddc-81f8100e955e/26-6a5f3a3e26038.webp' /></p><p>அர்ஜென்டினாவின் உதவிப் பயிற்சியாளர் ராபர்டோ அயலாவும், டானி ஓல்மோவைத் தாக்குவது போல காட்சிகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இறுதி விசில் ஒலித்த பிறகு, நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச், பரேடெஸுக்கு சிவப்பு அட்டை காட்டியதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினாவின் நடத்தையையும் ஃபிஃபா ஆராய்ந்து வருகிறது. 

அப்போது, ​​வீரர்கள் “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” (மால்வினாஸ் அர்ஜென்டினாவினுடையது) என்று பிரகடனப்படுத்தும் பதாகையுடன் கொண்டாடினர்.</p><p></p><h2>&nbsp;ஃபாக்லாந்து தீவு</h2><p>

இது பிரித்தானியாவில் நிர்வகிக்கப்படும் தெற்கு அட்லாண்டிக் தீவுக்கூட்டமான ஃபாக்லாந்து தீவுகளுக்கு அர்ஜென்டினா பயன்படுத்தும் ஸ்பானியப் பெயராகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad83bdd-71ea-493b-a061-2da3b0f9de7f/26-6a5f3a3ed3794.webp' /></p><p>
</p><p>
அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, ஆதரவாளர்களால் அட்லாண்டா மைதானத்திற்குள் கொண்டுவரப்பட்ட பதாகையை லிசாண்ட்ரோ மார்டினெஸும் ஜியோவானி லோ செல்சோவும் ஏந்தி நின்றனர்.
</p><p>
இந்த செயல்பாடு பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து விமர்சனத்தைத் தூண்டியது. 

அதிகாரப்பூர்வ போட்டிகளின் போது அரசியல் செய்திகளைத் தடைசெய்யும் விதிகளை வீரர்கள் மீறினார்களா என்பதை விசாரிக்குமாறு அவர்கள் FIFA-வைக் கேட்டுக்கொண்டனர்.
</p><p>
வீரர்களும் அணிகளும் அரசியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவிப்பதை ஃபிஃபா தடை செய்துள்ளது.

இதன் காரணமாக, விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக அபராதங்களோ அல்லது தற்காலிகத் தடைகளோ விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T09:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-rupee-depreciates-slightly-against-us-dollar-1784624268"></link>
            <id>https://ibctamil.com/article/sl-rupee-depreciates-slightly-against-us-dollar-1784624268</id>
            <summary type="text">நேற்றுடன் (20) ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (20) ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் நிலையாக உள்ளது</p><p>இன்றைய நாளுக்கான (21.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.56 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.30 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.59 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e7c6d4-10e7-4dde-af97-4c4d089df0f6/26-6a5f3ad3907c9.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.27 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.34 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	229.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.32 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.92 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T09:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-launches-serious-attack-us-bases-in-bahrain-1784621799"></link>
            <id>https://ibctamil.com/article/iran-launches-serious-attack-us-bases-in-bahrain-1784621799</id>
            <summary type="text">பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஷேக் ஈசா இராணுவத் தளத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது.

இராணுவத்தின் கூற்றுப்படி, இந்தத் தளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஷேக் ஈசா இராணுவத் தளத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது.</p><p>

இராணுவத்தின் கூற்றுப்படி, இந்தத் தளம் அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் முக்கிய மையங்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க நடவடிக்கைகள்</h2><p>

மேலும் இது அமெரிக்க நடவடிக்கைகளின் மையமாகவும் விளங்குகிறது என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/624ee99a-7234-4714-a31d-e9a700e96c24/26-6a5f2ae8cd14e.webp' /></p><p>
</p><p>
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்வதிலிருந்து எதிரி தடுக்கப்படும் வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T08:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து : ஐவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-killed-in-fire-at-factory-in-industrial-zone-1784622403"></link>
            <id>https://ibctamil.com/article/5-killed-in-fire-at-factory-in-industrial-zone-1784622403</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;80க்கும் மேற்பட்ட ஊழியர்கள்&nbsp;</h2><p>இந்த தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ள நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab32fba-93a7-481f-bed8-d3b605afc4b7/26-6a5f313c7aef2.webp' /></p><p>தீ பரவத் தொடங்கிய தருணத்தில் அங்கிருந்த சிலரை ஒருவர் காப்பாற்றியதாகவும் மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இந்தநிலையில், குறித்த தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vYd-KlkmqgQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்வைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை குறியீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stock-exchange-indices-record-gains-lankafinancial-1784623846"></link>
            <id>https://ibctamil.com/article/stock-exchange-indices-record-gains-lankafinancial-1784623846</id>
            <summary type="text">இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று நண்பகல் சிறிய உயர்வை பெற்றுள்ளது.

இதில், முக்கிய குறியீடான அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று நண்பகல் சிறிய உயர்வை பெற்றுள்ளது.
</p><p>
இதில், முக்கிய குறியீடான அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 0.06 சதவீதம் உயர்ந்துள்ளது.
</p><p>
இன்றைய நண்பகல் வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 358.7 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p><h2>மில்லியன் ரூபா வர்த்தகப் பெறுமதி</h2><p>இதில் உணவு, பானங்கள் மற்றும் புகையிலை துறை 201.3 மில்லியன் ரூபா வர்த்தகப் பெறுமதியுடன் முன்னிலை வகித்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f42357c-49da-4c76-ac1d-50960da2c4da/26-6a5f33e0a4162.webp' /></p><p>இதன்படி, All Share Price Index (ASPI) 13.19 புள்ளிகள் (0.06%) அதிகரித்து 21,221.29 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, S&amp;P SL20 குறியீடு 7.90 புள்ளிகள் (0.13%) உயர்ந்து 5,951.12 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
</p><p>
ASPI குறியீட்டின் உயர்வுக்கு John Keells Holdings, Dialog Axiata, Aitken Spence மற்றும் Browns Investments ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தனியார் பங்கு ஒதுக்கீடு </h2><p>
</p><p>
மறுபுறம், Hatton National Bank (HNB), DFCC Bank மற்றும் Ceylon Grain Elevators நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை பதிவு செய்து சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/015e068c-f1e4-47bf-9a05-e04f99693ad0/26-6a5f33e16d19c.webp' /></p><p>

இதனிடையே, Tess Agro PLC நிறுவனத்தின் 125 மில்லியன் சாதாரண வாக்குரிமைப் பங்குகள், தனியார் பங்கு ஒதுக்கீட்டின் (Private Placement) மூலம் 2026 ஜூலை 21 முதல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T08:50:57+00:00</updated>
        </entry>
    </feed>
