<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-01T19:26:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remand-of-ex-akkaraipattu-mayor-extended-1788289592"></link>
            <id>https://ibctamil.com/article/remand-of-ex-akkaraipattu-mayor-extended-1788289592</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p>
கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.</p><p>

 இந்நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக முற்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957a31c2-c580-4955-8aa2-f66545668699/26-6a972447d0ebc.webp' /></p><p>

இந்நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><h2>

வழக்கின் பின்னணி</h2><p>
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப் பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a284d7-3dbd-432d-a658-2fa333791360/26-6a9724488ba07.webp' /></p><p>
குறித்த பெண் சமூக வலைத்தள நேரலையினூடாக இக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனிடையே, வாக்குமூலம் வழங்குவதற்காக காவல்நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>

பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாகச் செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையில் நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/office-assistants-at-university-of-jaffna-issue-1788287696"></link>
            <id>https://ibctamil.com/article/office-assistants-at-university-of-jaffna-issue-1788287696</id>
            <summary type="text">


யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் போட்டிப் பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><h2>பல்கலை நிர்வாகத்திடம் கோரிக்கை</h2><p>
</p><p>
பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர்
நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897899c5-2cae-4d70-aa0f-592dda8811ce/26-6a971f71eaae3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.
</p><p>
தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-01T18:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தொழிலதிபரின் பெயருக்கு வந்த பெரும் போதைப்பொருள் கையிருப்பு! அம்பலமான புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drugs-found-at-colombo-port-new-updates-1788285238"></link>
            <id>https://ibctamil.com/article/drugs-found-at-colombo-port-new-updates-1788285238</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள &#039;ஐஸ்&#039; போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள 'ஐஸ்' போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற “பறவி சுதா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் நாட்டிற்குள் அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அத்தோடு, அதில் அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் என்ற போதைப்பொருள் கடத்தல் காரர்களளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பந்தப்பட்ட கொள்கலன் மொராக்கோவிற்கு மறுஏற்றுமதி செய்யத் தயாராக இருந்ததாக அறிக்கைகள் கூறினாலும், போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவரவே திட்டமிட்டதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.</p><p></p><h2>தொழிலதிபர் கைது&nbsp;</h2><p> </p><p>

வெளிநாட்டிலுள்ள ஒரு தனியார் தகவல் வழங்குநர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இச்சோதனையை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3b8da-7b95-43c3-a6ab-279bf3ce0368/26-6a97130982d6b.webp' /></p><p> 

மேலதிக விசாரணைகளின் போது, இப்போதைப்பொருள் இருப்பு ஒரு உள்ளூர் தொழிலதிபரின் பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சசிதரன் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><h2>பின்னணியில் பாகிஸ்தான் நாட்டவர்கள்</h2><p>
</p><p>
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு பாகிஸ்தானியர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவரவே, ஜம்பாட்டா வீதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த அவ்விரு பாகிஸ்தான் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac04ff8-9f00-4d5e-960b-7bae587386a9/26-6a97130a6b98c.webp' /></p><p> 

அதனைதொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தெமட்டகொட தொழிலதிபரின் நிறுவனம் மூலமாகவே மேற்படி போதைப்பொருளை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T18:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வருடங்களில் மதிப்பை இழக்கப்போகும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252</id>
            <summary type="text">மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவிடும் என்று அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இன்று(01) தெரிவித்துள்ளார்.
</p><p>
"உலகெங்கிலும் நாம் இடர்களைக் குறைக்க வேண்டும். ஈரானியர்கள் ஹோர்முஸ் நீரிணையை ஒரு நெருக்கடிப் புள்ளியாகப் பயன்படுத்த முயற்சிப்பதை நம்மால் காண முடிகிறது," என்று வடக்கு கரோலினாவின் ஆஷ்வில்லில் அளித்த பேட்டி ஒன்றின்போது பெசென்ட் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;இரண்டு வருடங்களில் இழக்கப்போகும் மதிப்பு</h2><p>"இது அமெரிக்காவிற்கு ஒரு நெருக்கடிப் புள்ளி அல்ல, ஆனால் இது பல, பல பிற நாடுகளுக்கு ஒரு நெருக்கடிப் புள்ளியாகும்," என்று ஜி20 நாடுகளின் அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f95b7f-fa07-4192-958b-c395ec757c2f/26-6a96f7c2b7ec7.webp' /></p><p>

"இரண்டு ஆண்டுகளில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி தவிர்க்கப்பட்டுவிடும்" என்று அவர் தெரிவித்தார்.</p><p>

"இரண்டு ஆண்டுகளில், ஹோர்முஸ் நீரிணை ஒரு மதிப்பற்ற நீர்நிலையைப் போல ஆகிவிடும்," என்று அவர் கூறினார்.

"எண்ணெய் தரைவழியாகக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும்," என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T18:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாங்கொடையில் காணாமல் போன மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223"></link>
            <id>https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223</id>
            <summary type="text">







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் இம்மூன்று மாணவிகளும், மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p>
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பலாங்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p></p><h2>திருகோணமலையில் அடையாளம்&nbsp;</h2><p>
 
அதன்போது, காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd9b4bc-1ca1-483f-b9ff-0554889b39ca/26-6a970d8a70891.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த மாணவிகள் மூவரும் திருகோணமலையில் நின்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை நபர் ஒருவர் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T17:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உரிமையாளருக்காக காத்துக்கிடக்கும் நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pet-dog-waits-for-owner-missing-in-nepal-floods-1788280548"></link>
            <id>https://ibctamil.com/article/pet-dog-waits-for-owner-missing-in-nepal-floods-1788280548</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் ஒன்று காத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்கும் காட்சி பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.</p><p>





இந்த வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் இருந்த நான்கு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.</p><h2>நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சி</h2><p>இடிபாடுகளுக்கு மத்தியில் சேற்றில் அமர்ந்திருக்கும் வெள்ளை - கருப்பு நிற நாய் ஒன்று, அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சிகள் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db4bb2e-985f-42f8-9200-8ccf06a9e9d7/26-6a9703926a608.webp' /></p><p>
</p><p>
ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள இடிபாடுகளையும் சேறு, சகதிகளையும் பணியாளர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அமர்ந்திருக்கிறது வளர்ப்பு நாய்.
</p><p>
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் விக்ரம் தாபா என்பவர் “நாங்கள் பிஸ்கட் கொடுத்துப் பார்த்தோம், பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அழைத்தோம், ஆனால் அது தலையைக்கூடத் திருப்பவில்லை.அது இந்த இடத்தை விட்டு நகராமல் உள்ளது” என்றார்.</p><p></p><h2>சாப்பிட மறுக்கும் நாய்</h2><p>
சரியாக சாப்பிட மறுக்கும் நாய், வீடு இருந்த பகுதியையே சுற்றி, உரிமையாளரைத் தேடி வருவது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02cf9ef0-4076-42d2-851a-087f7ff7b03c/26-6a9703931e5e3.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T16:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை நிறைவேற்றாத அனுர அரசு : யாழில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hunger-strike-in-jaffna-against-anura-government-1788274209"></link>
            <id>https://ibctamil.com/article/hunger-strike-in-jaffna-against-anura-government-1788274209</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம்
திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம்
திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் 12ஆம்
திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அடையாள உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது.</p><p>

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(01)செவ்வாய்க்கிழமை மாலை, ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணம் இணுவில்
பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் நடைபெற்றது.</p><h2>தொடந்து ஏமாற்றப்படும் தமிழ் மக்கள்</h2><p>&nbsp;இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d498123b-006c-4b61-ac0c-8740087c9aa7/26-6a96eb0fc1057.webp' /></p><p>
</p><p>
 தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படாமையைக் கண்டித்தும், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு
வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் எதிர்வரும் 12ஆம் திகதி,அடையாள உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்துவதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக
அவர் தெரிவித்தார்.</p><h2>முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை</h2><p>
</p><p>
அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச்
சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை
செய்தல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் புதிய அரசியலமைப்பை
உருவாக்குதல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bdf159a-26b1-4242-be81-359c1f034d6a/26-6a96eb10d357d.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களின் ஆதரவையும் ஆணையையும் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், வழங்கிய
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், தமிழ் மக்கள் தொடர்ந்தும்
ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை மக்களுக்கு
எடுத்துக்காட்டும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போராட்டம் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த அழைப்பாக
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள்
மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்க
வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>

</p><h2>&nbsp;சொந்த நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டம்</h2><p>குறிப்பாக வலிகாமம் வடக்கில் பல பகுதிகளில் தமது சொந்த நிலங்களை
விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற
நிலையில், காணி விடுவிப்பு தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை
எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b629f2f-97e0-44c9-8c0a-12d310f64245/26-6a96eb118463d.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின்
அபிவிருத்திப் பணிகளும் எதிர்பார்த்த அளவில் முன்னெடுக்கப்படாமல் பின்னடைவு
நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்தியா நிதி உதவி வழங்கியுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கைகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகளில்
காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.</p><h2>மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத நிலை</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக வாக்குறுதி
அளித்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத
நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3e0a2c-34c9-4beb-937d-4541bccb3c05/26-6a96eb12398af.webp' /></p><p>
</p><p>
மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் போதிய கரிசனையை
வெளிப்படுத்தவில்லை எனவும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுவதாகக்
கூறப்படும் தொல்லியல் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கண்டித்தும் இந்தப்
போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்படி, எதிர்வரும் *12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் சாவகச்சேரி பேருந்து
நிலையத்தில்*, தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி
தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி பதவியையும் துறக்கிறார் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114"></link>
            <id>https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114</id>
            <summary type="text">பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விரைவில் இடைத்தேர்தல்</h2><p>கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d3c2ed-b848-4160-82d0-fc6964911a35/26-6a96e2e4a7f0b.webp' /></p><p>
</p><p>
கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.</p><p></p><h2>ஸ்டார்மரின் திடீர் அறிவிப்பு</h2><p>
</p><p>

பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியிலிருந்தும் விலகுவதாக ஸ்டார்மர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff37273c-34bf-4bda-b990-0dd866da618c/26-6a96e2e55a797.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5000-us-marines-to-rest-in-pattaya-thailand-1788269355"></link>
            <id>https://ibctamil.com/article/5000-us-marines-to-rest-in-pattaya-thailand-1788269355</id>
            <summary type="text">ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) தாய்லாந்தில் நங்கூரமிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயாவிற்கு இந்தக் கப்பல் வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நங்கூரமிடவுள்ள ஆபிரகாம் லிங்கன்</h2><p>&nbsp;200 நாட்களுக்கும் மேலாக கடலில் கழித்த பிறகு, கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதையும், அமைதியை அனுபவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தக் கப்பல் தாய்லாந்தின் பட்டாயாவிற்கு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f914ec-ed1f-4391-a880-629920198c91/26-6a96d84e503a5.webp' /></p><p> </p><p>மேலும், உலகில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் பட்டாயா கருதப்படுகிறது.</p><p></p><p>

</p><h2>சிறப்பு திட்டத்தை தயாரித்துள்ள தாய்லாந்து</h2><p>இதற்கிடையில், பட்டாயாவிற்கு வரும் இந்தப் படையினருக்கு சேவைகளை வழங்குவதற்காக தாய்லாந்து ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது,மேலும் அவர்களுக்காக ஒரு சிறப்புப் பாதுகாப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b161c7a-878b-4ecf-98da-1efd47d8a6a8/26-6a96d84d9bca3.webp' /></p><p>
இந்தக் கப்பலை தாய்லாந்தில் நங்கூரமிடுவதன் மூலம் அந்த நாடு பெரும் பொருளாதாரப் பலன்களைப் பெற முடியும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி! யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-request-for-explanation-from-a-journalist-1788268434"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-request-for-explanation-from-a-journalist-1788268434</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம்
ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறித்து வடக்கு ஊடவியளாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர்
பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம்
செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி
அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு
வெளிப்படுத்தியமை,ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட
செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை
சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுயாதீனமாக செயற்படும் நிலை</h2><p>இந்த விடயத்தை எமது ஊடகம் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனை தொடர்புகொண்டு கேட்ட நிலையில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் தான் கடிதம் மூலம் விளக்கத்தை வழங்கியுள்ளதாக எமக்கு சுட்டிகாட்டினார்.</p><p>
</p><p>
இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க
முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய
முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை&nbsp; காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி
அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி
அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள
கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது என பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செய்தி அறிக்கையிடலை
மேற்கோள்வதற்கு உரிமையை கொண்டுள்ளபோதும் மாற்றம் என கூறி மார்தட்டி வந்த தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கடந்த அரசாங்க காலங்களை விட மிக மோசமான முறையில்
குறித்த ஊடகவியலாளர் பணி செய்யும் ஊடக நிறுவனத்திற்கு முறையிட்டு
அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதன் மூலம் ஊடக சுதந்திரம்
கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட
விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அது தொடர்பாக பகிரங்கமாக
எச்சரிக்கை விடும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு எல்லை
மீறியுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T13:37:38+00:00</updated>
        </entry>
    </feed>
