<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-18T23:44:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் பசிலை நாடுகடத்தும் நடவடிக்கை! அமெரிக்காவை சென்றடைந்த இரகசிய கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/move-to-deport-basil-secret-letter-reaches-the-us-1789774905"></link>
            <id>https://ibctamil.com/article/move-to-deport-basil-secret-letter-reaches-the-us-1789774905</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் மீது இலங்கை அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் மீது இலங்கை அரசியலின் முழு கவணமும் திரும்பியுள்ளது.
</p><p>
 இந்த விடயத்தை காவல்துறை வட்டாரங்கள் தலைமையக வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன.
</p><p>
இந்நிலையில் இந்த தகவலுக்கு மேலதிகமாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h3>அமெரிக்காவில் வசிக்கும் ராஜபக்ச குடும்பம்</h3><p>

அமெரிக்காவில் வசிக்கும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்டத் துறைக்கும் இடையே முத்திரையிடப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

எந்தவொரு ஒப்படைப்புக்குமான சட்ட அடிப்படை, 1999 செப்டம்பர் 30 அன்று அமெரிக்காவில் கையெழுத்திடப்பட்ட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையாகும். </p><p>

இந்த உடன்படிக்கை இரட்டைக் குற்றத்தன்மை என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகிறது.

அதாவது, ஒருவரின் அடிப்படை நடத்தை இரு நாடுகளிலும் குற்றமாக அமைகிறது என்பதை அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படையாகும்.</p><p>

இதன்படி ராஜபக்ச ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற தகுதி மட்டுமே, அந்த உடன்படிக்கையின் விதிகளின் கீழ், ஒரு முறையான கோரிக்கையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்காது.</p><p>


இரண்டு தனித்தனி குற்றவியல் வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், பல நீதிமன்றங்கள் அவருக்கு எதிரான கைது பிடியாணைகளை மீண்டும் பிறப்பித்துள்ளன.</p><p></p><h2>முறையான சர்வதேச செயல்முறை</h2><p> </p><p>

காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பசில் ராஜபக்ச மற்றும் மனைவி திஸ்ஸ கலப்பத்தியின் சகோதரி என நீதிமன்ற அறிக்கைகளில் அடையாளம் காணப்பட்ட அயோமா கலப்பத்தி, முதிதா ஜெயகோடி உள்ளிட்ட பல சந்தேகநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p>

குறிப்பாக , அமெரிக்க உதவியை நாடுவதானது ஒரு முறையான சர்வதேச செயல்முறையைத் தொடங்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும், அது தானாகவே ராஜபக்சவின் கைதுக்கோ அல்லது இலங்கைக்குத் திரும்புவதற்கோ வழிவகுக்காது என்றும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். </p><p>

இதன்படி இலங்கை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகள், கூறப்படும் குற்றங்களின் விவரங்கள் மற்றும் பிற துணை ஆவணங்களை உரிய தூதரக மற்றும் நீதித்துறை வழிமுறைகள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். </p><p>

அதன்பிறகு, எந்தவொரு கோரிக்கையும் அமெரிக்கச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T23:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256</id>
            <summary type="text">ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைபேசி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம், ஈரானை முற்றிலுமாக அழிப்பதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய அவர், "என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துபார்ப்போம்," என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இருதரப்பு&nbsp;உடன்பாடு</h2><p>அத்தோடு, இருதரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஆர்வமாக உள்ளது என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97609579-c9e6-4986-97b9-4d3590bd5fd3/26-6aad77a9734d3.webp' /></p><p>“ஈரான் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எல்லா வகையிலும் இழந்து வருகிறது. </p><p>அந்த ஒப்பந்தம் சரியானதாக இல்லையென்றால், நான் அதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டேன்.ஆனால் தற்சமயம், அவர்கள் எல்லா வகையிலும் இழந்து கொண்டிருப்பதால், ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T21:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானா விபத்து செய்தி கேட்டு எரிச்சலடைந்த ராணி எலிசபெத்! ஸ்பென்சர் அதிர்ச்சி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elizabeth-upon-hearing-the-news-diana-s-accident-1789765188"></link>
            <id>https://ibctamil.com/article/elizabeth-upon-hearing-the-news-diana-s-accident-1789765188</id>
            <summary type="text">மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> இங்கிலாந்தின் ஊடகம் ஒன்றில், தொடராக வெளியாகி வரும் அவரது நினைவுக்குறிப்புகளின் புதிய பகுதியில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தின் பாரதூரமான தன்மை மற்றும் டயானாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவருவதற்கு முன்பாகவே ராணி இந்த அதிருப்தியை வெளியிட்டதாக ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிச்சலடைந்த தொனியில் பதில்</h2><p>டயானா விபத்தில் சிக்கிய ஆரம்பக்கட்ட செய்தியைக் கேட்டவுடன், ராணி எலிசபெத் மிகவும் எரிச்சலடைந்த தொனியில், "இப்போது அவள் என்ன புதுப் பிரச்சனை செய்கிறாள்?" (What is she up to now?) என்று கேட்டதாக ஏர்ல் ஸ்பென்சர் தனது நூலில் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab65b8ba-ddf7-40d4-acb9-72a0a0b31c2e/26-6aada7319ea4b.webp' /></p><p>இருப்பினும், டயானா மரணமடைந்த பின்னர், அவரது 'HRH' (Her Royal Highness) என்ற அரச கௌரவப் பட்டத்தை மீண்டும் டயானாவிற்கு வழங்குவதற்கு ராணி எலிசபெத் முன்வந்ததாகவும், அதற்கான செய்தியைத் தனது தனிப்பட்ட செயலாளர் மூலம் அனுப்பியதாகவும் ஸ்பென்சர் அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார். </p><p>கடந்த 1997 ஆகஸ்ட் 31 அன்று பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ராணி எலிசபெத் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி டயானாவிற்கு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தியிருந்தார்.</p><p>இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் பிரித்தானிய அரச வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T21:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்! அலி சப்ரி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grant-a-general-amnesty-to-anojan-sivarasa-1789748071"></link>
            <id>https://ibctamil.com/article/grant-a-general-amnesty-to-anojan-sivarasa-1789748071</id>
            <summary type="text">ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>
இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த சப்ரி, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மரண தண்டனையை உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்பு இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><h2>மௌனம் காக்க வேண்டியதில்லை</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சட்ட அமைப்புக்கு மரியாதை அளிப்பதற்கு, நியாயமற்ற தண்டனைகளை எதிர்கொண்டு மௌனம் காக்க வேண்டியதில்லை, என்றும் சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a882e7-d3de-43b5-b55a-5dbc2f5a59f4/26-6aad636947ebc.webp' /></p><p>

புண்படுத்தும் சமூக ஊடகக் கருத்துக்காக ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிப்பது வரம்பு மீறிய செயல் என்று விவரித்த அவர், இதுபோன்ற ஒரு செயலுக்கு மரண தண்டனை விதிப்பது மிகவும் விகிதாச்சாரமற்றது, மனிதாபிமானமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சிவராசா சில நிமிடங்களிலேயே அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, பகிரங்கமான காணொளி மன்னிப்பு ஒன்றை வெளியிட்டதாக வந்த செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் சப்ரி கூறியுள்ளார்.
</p><p>
“ஒரு முஸ்லிமாக, நான் அல்லாஹ்வின் கருணையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நாம் அவனை அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்பாளனாகவும் போற்றுகிறோம். மனிதத் தவறுகளுக்கு நாம் பதிலளிக்கும் விதத்திலும் அந்த விழுமியங்களே வழிகாட்ட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T18:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் சிவராசா குறித்து வெளிவிவகார அமைச்சின் சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-statement-ministry-foreign-affairs-anojan-1789738611"></link>
            <id>https://ibctamil.com/article/special-statement-ministry-foreign-affairs-anojan-1789738611</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவுக்கு, மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவுக்கு, மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயத்தை&nbsp;இலங்கை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.
</p><p>
ராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், சிவராசாவின் நலன்களைப் பாதுகாக்கவும் அவருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>
இருப்பினும், அந்த அறிக்கையானது மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது அவர் மீதான குற்றச்சாட்டுகள், மேல்முறையீட்டின் முடிவு அல்லது அவரது தற்போதைய சட்ட நிலை குறித்த விவரங்களை வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c89032-b4f0-42ea-be45-7f6a347eb44d/26-6aad5dd85b959.webp' /></p><p>
சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது சிவராசா சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் கருத்து ஒன்றிலிருந்தே இவ்வழக்கு தொடரப்பட்டது.</p><p>அக்குறிப்பிட்ட கருத்து இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிப்பதாகக் கருதப்பட்டது.</p><p> இலங்கையிலுள்ள மத சமூகங்களுக்கு இடையிலான இணையவழி விவாதத்தின்போது அவர் அக்குறிப்பை வெளியிட்டதாக தெரியவருகிறது.</p><p>

ஜூலை 15 அன்று, சவூதி நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.</p><p></p><h2>இலங்கை வெளிவிவகார அமைச்சு</h2><p>இந்நிலையில் தண்டனையைக் குறைக்குமாறு கோரி, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் அவரது சட்டத்தரணி பின்னர் மேல்முறையீடு செய்தார்.
</p><p>இதற்கமைய இடம்பெற்ற விசாரணைகளில் தற்போது அத்தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக</p><p>அதிகரிக்கப்பட்ட தண்டனைக்கான சட்ட அடிப்படையை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படும் அதிகாரப்பூர்வ எழுத்துமூலத் தீர்ப்பிற்காக இலங்கைத் தூதரகம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T18:09:24+00:00</updated>
        </entry>
    </feed>
