<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T22:45:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-regarding-389-healthcare-workers-1785623911"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-regarding-389-healthcare-workers-1785623911</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை
தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதாரப் பணியாளர்களுக்கு வடக்கு மாகாணத்தால்
நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப்
பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல்
நடைமுறைக்கு வரும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
</p><p>
அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில்
கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>திறைசேரியின் சுற்றறிக்கை</h2><p>
</p><p>
நியமனத்தைப் பெற்ற 389 சுகாதாரப் பணியாளர்களும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு
அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும்,
அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக
அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10906777-5f41-409a-9830-3ddc488410f6/26-6a6e756984995.webp' /></p><p>
</p><p>
இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் குறித்த சுற்றறிக்கையானது மீளவும்
திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி யன்று
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் ரத்துச் செய்யப்பட்டது.
</p><p>
இதையடுத்து தமக்கு நீதிகோரி குறித்த சுகாதாரப் பணியாளர்கள் வழக்குத்
தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதாரப் பணி
உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை
முகத்தோற்றளவில் மன்று ஏற்றுக்கொண்டது. </p><p>இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா
அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று
விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான
ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ்
இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி
தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகினார்கள்.
</p><p>பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட
முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் வடக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர்
சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார். </p><p>இதன்போதே, வடக்கு மாகாண சுகாதரப்பணி
உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் ரத்துச்
செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>அத்துடன் எதிர்வரும் 24ஆம்
திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T22:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் இந்திய அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-team-prepares-for-test-series-against-sl-1785620380"></link>
            <id>https://ibctamil.com/article/indian-team-prepares-for-test-series-against-sl-1785620380</id>
            <summary type="text">இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஒகஸ்ட் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

முன்னதாக திட்டமிடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஒகஸ்ட் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
</p><p>
முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நான்கு நாள் பயிற்சி ஆட்டத்திற்கு பதிலாக, தற்போது மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தப் போட்டி ஒகஸ்ட் 7ஆம் திகதி கொழும்பில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் தொடங்குகிறது.</p><p>&nbsp;</p><h2>முதல் டெஸ்ட் போட்டி&nbsp;</h2><p>
</p><p>இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஒகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08dfb25d-de75-4e1a-a892-025dcbd025e2/26-6a6e679f32bb1.webp' /></p><p>
</p><p>
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஒகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T21:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-rally-demanding-an-apology-from-modi-1785617572"></link>
            <id>https://ibctamil.com/article/india-rally-demanding-an-apology-from-modi-1785617572</id>
            <summary type="text">கடந்த ஜூலை 20 அன்று இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜூலை 20 அன்று இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி காணொளி ஒன்றை வெளியிட்டார்.
</p><p>
அதில், "எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்," என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>தாக்கப்பட்ட பெண்</h2><p>
இந்நிலையில் தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி காணொளியை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49749ebf-4553-44dd-bc5d-7956d565810c/26-6a6e5ca78d84a.webp' /></p><p>

அதில் கருத்து தெரிவித்த அவர், "நேற்று மோடி ஜி ஒரு காணொளியில் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.</p><p>

12 வயது சிறுமிகளின் தலையில் காவல்துறை தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன. 
எனவே மோடி, காவல்துறையால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
</p><p>அதனை தொடர்ந்து மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>

அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது” என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T20:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-backtracks-security-promise-rus-ukraine-war-1785612172"></link>
            <id>https://ibctamil.com/article/trump-backtracks-security-promise-rus-ukraine-war-1785612172</id>
            <summary type="text">உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் விடுத்துள்ளார்.
</p><p>
இந்நிலையில் இந்த தாக்குதலில் ரஷ்யா 27 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் ஒன்று மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய தரப்புப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>

உக்ரைன் பேட்ரியாட் இடைமறிப்பு விமானங்களைத் தயாரிக்க அனுமதிப்பதாகஅளித்திருந்த பகிரங்க வாக்குறுதியிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரஷ்யா நடத்திய&nbsp; பெரிய வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4bae439-bff3-4644-8f43-e62dd2aee546/26-6a6e478e8dd13.webp' /></p><p> </p><p>

பரந்த போர்முனையில் முன்னேறுவதற்கு உக்ரைன் போராடி வரும் நிலையில், அங்குள்ள முக்கிய பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறையை அம்பலப்படுத்தவே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்துவதாக இராணுவ தரப்புகள் அறிவித்துள்ளன.
</p><p>
உக்ரைன் மீதான சமீபத்திய தாக்குதலில், தலைநகர் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர மேயரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T20:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடி! அவசரப் பேச்சுவார்த்தை நடத்த 22 EU தலைவர்கள் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ceuta-migrant-crisis-1785614285"></link>
            <id>https://ibctamil.com/article/ceuta-migrant-crisis-1785614285</id>
            <summary type="text">ஸ்பெயினின் சுயாட்சி பிராந்தியமான சியூட்டா (Ceuta) பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து, நிலைமையை விவாதிக்க ஐரோப்பிய ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினின் சுயாட்சி பிராந்தியமான சியூட்டா (Ceuta) பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து, நிலைமையை விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை நடத்துமாறு 22 உறுப்புநாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் முன்முயற்சியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், இந்த விவகாரம் மிகுந்த அவசரத்திற்குரியது என்பதால், உள்துறை அமைச்சர்களின் விசேட காணொளி மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த வியாழக்கிழமை மொரோக்கோவிலிருந்து சுமார் 50,000 குடியேற்றவாசிகள் சியூட்டாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p></p><h2>மொரோக்கோவுக்கு திருப்பி அனுப்பல்</h2><p>இவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் மொரோக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தாலும், தற்போதைய நிலைமை குறித்து 22 நாடுகளின் தலைவர்கள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7d98047-5fed-4638-8341-1ecfe1b9352f/26-6a6e4fcfa357a.webp' /></p><p>
</p><p>
தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சி தலைமைப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய நீதி மற்றும் உள்துறை அமைச்சர்களின் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.</p><p>

அயர்லாந்து பிரதமர் மைகேல் மார்ட்டின், சமூக வலைத்தளமான X-இல் வெளியிட்ட பதிவில், சியூட்டா நிலைமையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன், இந்த நடவடிக்கையை வரவேற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனை மேம்படுத்தும் பாடங்களைப் பெறுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.</p><p> மேலும், இந்த பெருமளவிலான குடியேற்ற அலைக்குப் பிறகும், ஒருவர்கூட ஸ்பெயின் பிரதான நிலப்பரப்பிற்கோ அல்லது பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கோ செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
</p><p>
எனினும், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், போர்த்துகல் பிரதமர் லூயிஸ் மொன்டேநெக்ரோ, மற்றும் லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரீடன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை என தெரிவிக்கப்படவுள்ளது.</p><p>இதன்படி சியூட்டா நிலைமையைப் பற்றிய பொதுவான மதிப்பீட்டை உருவாக்கி, ஒருங்கிணைந்த ஐரோப்பிய பதிலடி நடவடிக்கையில் உடன்பாட்டை எட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று 22 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T19:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனானின் 770 சதுர மைல்கள் நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-occupied-770-square-miles-of-lebanon-1785610561"></link>
            <id>https://ibctamil.com/article/israel-occupied-770-square-miles-of-lebanon-1785610561</id>
            <summary type="text">தெற்கு லெபனானின் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் (770 சதுர மைல்கள்) நிலப்பரப்பை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானின் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் (770 சதுர மைல்கள்) நிலப்பரப்பை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என லெபனான் இராணுவத் தளபதி ஜெனரல் ரொடால்ப் ஹைகல் வலியுறுத்தியுள்ளார்.</p><p>"எங்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள் உரிமை என்று நாங்கள் நம்புகிறோம்” என்ற தனது ஆணித்தனமான கருத்தையும் முன்வைத்துள்ளார்.</p><p>மேலும் எங்கள் பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பதை நாங்கள் நிராகரிக்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் சபையின்&nbsp;எச்சரிக்கை</h2><p>தமது தியாகிகள் மற்றும் காயமடைந்தவர்களின் தியாகங்கள் வீணாகாது என்றும்&nbsp; அனைத்து சவால்களையும் மீறி, நாங்கள் தொடர்ந்து நமது மக்களுக்குத் துணை நிற்போம், அவர்கள் திரும்புவதற்கு ஆதரவளிப்போம், எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2c94115-17c1-41eb-88dc-6135633a1137/26-6a6e41e8343cb.webp' /></p><p>இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல் பணிகள், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் சமூக மக்களின் கூட்டு நினைவுகள் ஆகியவற்றில் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையான கவலையை உண்டாக்குகின்றன என்று லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (UNSCOL) எச்சரித்துள்ளது.</p><p>இதன்படி நிலுவையில் உள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இராஜதந்திர வழிமுறைகள் தொடர்ந்து செயல்படுவதால், அழிவின் வேகத்தில் ஏற்படும் இந்த அதிகரிப்புக்கு ஒரு வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கடற்படைப் பேரவை கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T18:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடமிருந்து குவைத்தை பாதுகாக்க முடியாமல் திணறும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-struggles-to-protect-kuwait-from-iran-1785607903"></link>
            <id>https://ibctamil.com/article/us-struggles-to-protect-kuwait-from-iran-1785607903</id>
            <summary type="text">&amp;nbsp;குவைத்தில் நீண்டகாலமாக அமெரிக்க இராணுவப் பிரசன்னம் இருந்தபோதிலும், ஈரானியத் தாக்குதல்களிலிருந்து குவைத்தைப் பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டது என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குவைத்தில் நீண்டகாலமாக அமெரிக்க இராணுவப் பிரசன்னம் இருந்தபோதிலும், ஈரானியத் தாக்குதல்களிலிருந்து குவைத்தைப் பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டது என்று 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் போர், அமெரிக்கப் படைகள் குவைத்திற்கு அளித்திருந்த பாதுகாப்பு உணர்வை உலுக்கியுள்ளது என்று அந்த அறிக்கை வியாழக்கிழமை கூறியது. வோஷிங்டன் தனது இராணுவப் பிரசன்னத்தின் அளவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் குவைத் உறுதியான அமெரிக்கப் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தொடர்ந்து நாடி வருவதாகவும் அது கூறியது.</p><h2>குவைத்தின் முக்கிய உள்கட்டமைப்புக்களை தாக்கும் ஈரான்</h2><p>ஈரான், குவைத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளான மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையம், அதன் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5915da-4e6c-4a30-b984-c07b436a7c4f/26-6a6e39736aef6.webp' /></p><p> </p><p>பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்தன, ஆனால் அமெரிக்கத் தளங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன; மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>குவைத், தனது படைகள் மற்றும் அவசரகாலப் பழுதுபார்ப்புகள் மூலம் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தபோதிலும், இந்தத் தாக்குதல்கள் அதன் உள்கட்டமைப்பின் பலவீனத்தையும், வோஷிங்டனுடனான அதன் நீண்டகாலப் பாதுகாப்பு கூட்டாண்மையையும் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>அமெரிக்கா தொடர்பில் குவைத் மக்களின் நிலைப்பாடு</h2><p>
</p><p>
"இந்தத் தாக்குதல்கள், குவைத்தில் உள்ள மக்களை அமெரிக்காவின் இருப்பை ஒரு சுமையாகக் கருதவும், அதே சமயம் குவைத்தைப் பாதுகாக்க அது முற்றிலும் அவசியம் என்றும் நினைக்கவும் வைத்துள்ளது," என்று அரபு வளைகுடா நாடுகள் நிறுவனத்தின் தலைவரும், குவைத்திற்கான முன்னாள் அமெரிக்கத் தூதருமான டக்ளஸ் சில்லிமன் கூறினார். "பாதுகாப்பு விஷயத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழி எது என்பதை அவர்கள் கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்."</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a73bef9f-6e32-4d6c-970e-ec76178351ae/26-6a6e397422181.webp' /></p><p>
</p><p>
குவைத் பாகிஸ்தானுடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, ஆனால் அது அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, அது வலுவான வான் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஆயுதங்களைத் தேடக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியது.</p><p>

"சமீபத்திய தாக்குதல்கள், நமது பிராந்தியத்தில் பெருகிவரும் சிக்கலான பாதுகாப்புச் சூழலையும், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சமச்சீரற்ற திறன்கள் உள்ளிட்ட நவீன அச்சுறுத்தல்களின் மாறிவரும் தன்மையையும் எடுத்துக்காட்டியுள்ளன," என்று குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். </p><p>மேலும், குவைத் "அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T18:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404"></link>
            <id>https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட்டு மரண்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இவ்வாறு (01) வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபரை அவரது வழக்கறிஞர் றொசான் தெகிவள சந்தித்துள்ளார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp;</h2><p>இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்காக முன்னிலையான வழக்கறிஞர் றொசான் தெகிவள, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.</p><p>
</p><p>


</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9656df21-9f89-4d43-aaf6-8943addff404/26-6a6e0b7670fec.webp' /></p><p>அதன்படி, அடுத்த வாரம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p></p><h2>பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை&nbsp;</h2><p>

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d20657-50dc-429e-ab69-ed9e33ce5b62/26-6a6e0b77284c6.webp' /></p><p>
</p><p>
பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T17:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி அழைப்புகள்! பிரதி அமைச்சரின் பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraud-in-the-name-of-deputy-minister-1785605500"></link>
            <id>https://ibctamil.com/article/fraud-in-the-name-of-deputy-minister-1785605500</id>
            <summary type="text">தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கே அவர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கே அவர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவரது அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பிரதி அமைச்சராக தங்களை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு, பணம் கோருவதோடு பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p></p><h2>எந்தவித பணமும் வழங்க வேண்டாம்</h2><p>
</p><p>
இதனால், இவ்வாறான நபர்களுக்கு எந்தவித பணமும் வழங்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a0c54d-4265-416b-945b-a751301f0b96/26-6a6e2eb8eed1c.webp' /></p><p>

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T17:37:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-1785602420"></link>
            <id>https://ibctamil.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-1785602420</id>
            <summary type="text">&amp;nbsp;மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று மதியம் (01) மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ஒருவர் உயிரிழந்தார்.</p><h2>நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை பணியில்</h2><p>நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை விசேடஅதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f986780-9501-4afc-b0bf-fddf5001b5b4/26-6a6e258670846.webp' /></p><p>

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றி கூடியுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>விமானப்படை கண்காணிப்பு</h2><p>

தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது, மேலும் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1799e90e-3255-43a5-bbef-8c232adc6231/26-6a6e258725968.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T17:03:36+00:00</updated>
        </entry>
    </feed>
