<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-20T18:57:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்! திருப்பி அனுப்பப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-diversifies-ships-from-iranian-ports-1787247723"></link>
            <id>https://ibctamil.com/article/us-diversifies-ships-from-iranian-ports-1787247723</id>
            <summary type="text">ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவு (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.</p><p>ஈரான் மீது புதுப்பிக்கப்பட்ட கடற்படை முற்றுகையை (Naval Blockade) பலப்படுத்தும் நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றுகை உத்தரவு</h2><p>
</p><p>
மேலும், முற்றுகை உத்தரவுகளை மீற முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் 2 கப்பல்களில் அமெரிக்கப் படையினர் ஏறி சோதனை நடத்தியதாகவும் மத்தியக் கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
</p><p>மத்திய கிழக்கில் போர் வெடித்ததில் இருந்து ஹோர்முஸ் நீரிணை பகுதி ஒரு இரட்டை முற்றுகை நிலையை எதிர்கொண்டுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">U.S. Marine Corps MV-22B Osprey utility aircraft take off from the flight deck of USS Boxer (LHD 4) while the ship transits the Arabian Sea and continues to enforce the U.S. blockade against Iran. As of Aug. 20, U.S. forces have redirected 67 commercial vessels, disabled 3 and… <a href="https://t.co/UAOmcLWExf">pic.twitter.com/UAOmcLWExf</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2090472446314848321?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தநிலையில் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் முயன்று வருகிறது.
</p><p>
இதற்குப் பதிலாக, சர்வதேச எரிசக்திப் பாதைகளைத் திறந்த நிலையில் வைத்திருக்க அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்கள், கடற்படைப் பாதுகாப்பு மற்றும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
</p><p>இந்த பிண்ணனியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததைத் தொடர்ந்து ஈரான் மீது மேலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய (Crushing) கடுமையான பொருளாதார நடவடிக்கைகளும் தடைகளும் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பா.ஜ.க அமைச்சரவையில் இடம்பெறுகிறது திமுக..! தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/will-the-dmk-join-the-union-cabinet-1787245918"></link>
            <id>https://ibctamil.com/article/will-the-dmk-join-the-union-cabinet-1787245918</id>
            <summary type="text">பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக&nbsp;வடமாநில ஊடகங்கள், செய்திகள் வெளியிட்டு வருகின்றன.</p><h2>சில நிபந்தனைகளுடன் ஆதரவு&nbsp;</h2><p>அதற்கு காரணமாக, தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., தற்போது சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது</p><p>.<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3ffd11-7ed3-4185-b124-9c2f91b9fd59/26-6a87439082f14.webp' /></p><p>
"பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை" என்று தொடர்ந்து தி.மு.க. கூறிவருகிறது. இதுவரை, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு மாற்றத்தால், தேசிய அளவிலான கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ளது.</p><p></p><p>

</p><h2>நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் பலம்</h2><p>நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் பலத்தை பொறுத்தவரை மக்களவையில் 22 ஆகவும், மாநிலங்களவையில் 8 ஆகவும் உள்ளது. எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது, தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தேவையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b56244-fb4a-43bf-bd1d-eaa934f5dd14/26-6a874391354a5.webp' /></p><p>



அதன் அடிப்படையிலேயே, பா.ஜ.க.வும், தி.மு.க.வும் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p> அதை வைத்தே, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப்போவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T18:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை எச்சரிக்கை...! ஈரான் வெளியிட்ட கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-condemns-new-us-sanction-threats-1787242734"></link>
            <id>https://ibctamil.com/article/iran-condemns-new-us-sanction-threats-1787242734</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்றது என்று ஈரான் சாடியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> </p><p></p><h2>கொள்கை வகுப்பாளர்கள்</h2><p>இது தொடர்பில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானியப் பிரதமர் முகமது மொசாதெக்கை (Mohammad Mosaddegh) பதவியிலிருந்து அகற்றிய சதித்திட்டத்தின் ஆண்டு நினைவு நாளுடன் ஒத்துப் போவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be74e1d9-08bf-4e68-908b-296f62ff0edf/26-6a873bcdb3495.webp' /></p><p>இந்த நடவடிக்கை, கடந்த 73 ஆண்டுகளாக ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் காட்டி வரும் பகைமையின் தொடர்ச்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருளாதார விளைவுகள்</h2><p> மேலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மனிதநேயமற்ற, சட்டவிரோதமான மற்றும் அடாவடியான குணத்தையே இது நிரூபிக்கின்றது எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d6b41d7-49af-4990-ab4b-2507ba867d5e/26-6a873bce64953.webp' /></p><p>அமெரிக்காவின் புதிய தடைகள், மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றம் புரிவதை ஒப்புக்கொள்வது போலாகும் என்றும் இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு பழைய கொள்கையின் தொடர்ச்சியே என்றும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.</p><p>ஈரானுக்கு நிதி, வர்த்தகம் அல்லது தளவாட ஆதரவை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் (Economic Warfare) தொடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையிலேயே ஈரானின் இந்த அதிகாரப்பூர்வப் பதில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T17:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான குழந்தை பால் மா வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டது அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fines-imposed-expired-infant-formula-1787242050"></link>
            <id>https://ibctamil.com/article/fines-imposed-expired-infant-formula-1787242050</id>
            <summary type="text">தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களையும், காலாவதியான குழந்தை பால் மாவையும் விற்பனைக்கு வைத்திருந்ததற்காக, கொழும்பில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களையும், காலாவதியான குழந்தை பால் மாவையும் விற்பனைக்கு வைத்திருந்ததற்காக, கொழும்பில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு அளுத்கடே எண். 05 பிரதான நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 300,000 அபராதம் விதித்துள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்ட செயலகத்துடன் இணைக்கப்பட்ட நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையின் (CAA) புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>தரச் சான்றிதழ் சின்னம் இல்லாமல் விற்கப்பட்ட தலைக்கவசங்கள்</h2><p>முதல் வழக்கில், கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள எஸ்.ஆர். அப்பெக்ஸ் மோட்டோகார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சம்பந்தப்பட்டது. அங்கு, தேவையான எஸ்.எல்.எஸ் 517 தரச் சான்றிதழ் சின்னம் இல்லாமல், எல்.எஸ்.எஸ் முத்திரையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்கள் ஒவ்வொன்றும் ரூ. 1,800-க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் ரூ. 200,000 அபராதம் விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9e81767-4652-4f3b-b099-164abe5a7cbd/26-6a872d83af9ed.webp' /></p><h2>காலாவதியாகும் நிலையில் இருந்த&nbsp;குழந்தை பால்மா</h2><p>இரண்டாவது வழக்கில், கொழும்பு 06, தர்மராம சாலையில் உள்ள அலிஃப் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படும் ஏ. லைஃப் பார்மசியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ​​2026 பெப்ரவரி 1 அன்று காலாவதியாகும் நிலையில் இருந்த கேப்ரல் லாக் கோல்ட் குழந்தை பால்மாபொதிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c107cb-54bb-4b6a-a4fb-7c78f2b8cfbd/26-6a872d8480fcf.webp' /></p><p>
</p><p>
அந்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் ரூ. 100,000 அபராதம் விதித்தது.</p><p>மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை வாங்கும்போது எஸ்.எல்.எஸ் 517 சான்றிதழைச் சரிபார்க்குமாறும், உணவுப் பொருட்கள், குறிப்பாக சிசு மற்றும் குழந்தைகளுக்கான உணவை வாங்கும்போது காலாவதி திகதிகளைக் கவனமாகச் சரிபார்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை(CAA) நுகர்வோரை வலியுறுத்தியது.
</p><p>
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான முறையான பற்றுச்சீட்டுகளை பெற்று வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.</p><p>

தரமற்ற, காலாவதியான அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களின் விற்பனையை அலுவலக நேரங்களில் தனது 1977 நுகர்வோர் தகவல் தொடர்பு எண் மூலம் புகாரளிக்குமாறு CAA பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T16:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வயது பேத்தி மீது அத்துமீறல் 81 வயது தாத்தாவிற்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/81-year-old-grandfather-15-years-in-prison-1787239976"></link>
            <id>https://ibctamil.com/article/81-year-old-grandfather-15-years-in-prison-1787239976</id>
            <summary type="text">12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்
நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட
வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின்
குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு
விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><h2>கருணை காட்டுமாறு விண்ணப்பம் - நீதிமன்றின் தெளிவுபடுத்தல்</h2><p>

இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக்
கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a814a05d-cd55-45ef-bc6e-1a7925333404/26-6a8721b091fe9.webp' /></p><p>

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான
பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான
உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம்
சுட்டிக்காட்டியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>எதிரிக்கு விதிக்கப்பட்ட தண்டம்</h2><p>எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல்
சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத்
தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை
செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c39341d7-bc16-4d9b-a1fc-a4d93fe73f5f/26-6a8721b1564da.webp' /></p><p>
</p><p>
அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின்
அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை
அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம்
சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T16:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் மீதான தாக்குதல் : காணொளி வைரலானதை அடுத்து ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-after-video-of-child-assault-1787236159"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-after-video-of-child-assault-1787236159</id>
            <summary type="text">நான்கு வயது சிறுமியையும், ஏழு வயது சிறுவனையும் ஒருவர் தாக்கி, அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான்கு வயது சிறுமியையும், ஏழு வயது சிறுவனையும் ஒருவர் தாக்கி, அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
ஓகஸ்ட் 19 ஆம் திகதி இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் தொடர்பாக, பின்னவல காவல்துறையினர் 26 வயது நபர் ஒருவரைக் கைது செய்தனர்.</p><h2>காணொளி பரவியதை அடுத்து கைது</h2><p>பலாங்கொடவில் உள்ள பின்னவல காவல் பிரிவைச் சேர்ந்த சந்தேக நபர், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c59b11-1efd-44a7-8b4b-73e68ec72705/26-6a871338847d8.webp' /></p><h2>சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு சிறுவர்களும் மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c62c07-c107-45c9-b036-9b554ccc29f9/26-6a87158410f28.webp' /></p><p>

தாக்குதலின் பின்னணி உட்பட, இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் சந்தேக நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையைத் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T15:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804"></link>
            <id>https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804</id>
            <summary type="text">

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகபட்சமாக 1.5 மில்லியன் ரூபாய் வரையிலான கடனை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், பல்கலைக்கழக ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் அல்லது தேசிய அளவிலான பட்டயப் படிப்புக்காக 130 பாடப்பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திட்டத்தின் முதற்கட்டம்</h2><p>

இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3ஆம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்திலிருந்து தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87456f24-eb13-45f6-a522-3bc27cc0a287/26-6a870c8b39a68.webp' /></p><p>

இதற்கிடையில், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்யும் என களுத்துறை மாவட்டச் செயலாளர் சுனந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T14:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் மனைவிக்கு கிடைத்தது பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shashi-weerawansa-released-on-anticipatory-bail-1787233481"></link>
            <id>https://ibctamil.com/article/shashi-weerawansa-released-on-anticipatory-bail-1787233481</id>
            <summary type="text">சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த ரணசிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த ரணசிங்க முதியன்செலகே ஷிர்ஜா உதயந்தி என்ற சசி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.</p><p>

கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வாசிப்பதற்காக, இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>வாசித்து காட்டப்பட்ட தண்டனை தீர்ப்பு</h2><p>பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையான பிறகு, நீதிபதி, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தொடர்புடைய தண்டனைத் தீர்ப்பை பிரதிவாதிக்கு வாசித்துக் காட்டியதுடன், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்ததால், அவரைப் பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4103a3ce-4517-454c-8bdd-3649cdc6453e/26-6a87099f6beb4.webp' /></p><p>
</p><p>
தொடர்புடைய வழக்கை செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் வறண்ட நாட்டில் ஒருவருடத்தில் கிடைக்கவேண்டிய மழை 03 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chile-hit-by-heavy-rain-landslides-1787231034"></link>
            <id>https://ibctamil.com/article/chile-hit-by-heavy-rain-landslides-1787231034</id>
            <summary type="text">உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு முழுவதையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நாடு பெற்றுவிட்டதாக சிலி வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்</p><p>&nbsp;இந்த திடீர் கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.</p><h2>ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழை</h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரம் டோகோபில்லா ஆகும். இந்த நகரம் ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f18f12-fbd1-43d4-b52c-b06afc0cc3fb/26-6a86fe5e7b250.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், நேற்று (19) சில மணி நேரத்தில் இந்த நகரம் 30 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/officer-guarding-gnanasara-temple-opens-fire-1787232104"></link>
            <id>https://ibctamil.com/article/officer-guarding-gnanasara-temple-opens-fire-1787232104</id>
            <summary type="text">ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார்.

குறித்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று&nbsp;ராஜகிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0f07f7-2d51-41b3-ae38-cd6736047a44/26-6a87021298187.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T13:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் பள்ளி அதிபர் படுகொலை! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543</id>
            <summary type="text">இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், ரூபா ரெட்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து அவரது வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
</p><p>
இக்கொலை வழக்கு குறித்து விசாரிக்கக் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்து, சிசிடிவி காட்சிகள், தடயவியல் சான்றுகள் மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்து 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>சந்தேகத்துக்குரிய மாணவர்கள்</h2><p>

அதில், உயிரிழந்த ரெட்டி இறுதியாக தனது அத்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடலில் 'பாபு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தெரியவந்தள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0099c95a-7b9e-431a-b40e-e098d65b992f/26-6a86fc3212beb.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வராத ஐந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களைக் காவல்துறை தீவிரமாகப் பின்தொடர்ந்த நிலையில், அதில் இருவர் சமீபகாலமாக அதிக அளவில் பணம் செலவழித்து விருந்துகளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.</p><p>

முன்னதாக பைகளில் பணமும் கைபேசியும் வைத்திருந்ததற்காக கொலை செய்யப்பட்ட ரெட்டியால் தண்டிக்கப்பட்டு, விடுதியிலிருந்து நீக்கப்பட்டு நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களாக மாற்றப்பட்ட கோபத்தில் அவர்கள் இச்சம்பவத்தைத் திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>கொலை சம்பவம்&nbsp;</h2><p>
</p><p>
கத்தி மற்றும் கையுறைகளுடன் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்த ஒரு மாணவன், அங்கிருந்த ரூ. 2,50,000 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளான். 

அப்போது அவனது முகக்கவசம் விலகியதால் ரெட்டி அவனை அடையாளம் கண்டுகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a5b093-c3d9-4401-9cbf-78f8b3121d07/26-6a86fc32cf243.webp' /></p><p> </p><p>இதனால் அவர் குறித்த மாணவனாலேயே 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், இரத்தக்கறை படிந்த உடைகளை மறைத்துவிட்டு கோவாவுக்குத் தப்பிச் சென்ற அந்த மாணவர்களிடமிருந்து ரூ. 1,54,000 ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ரெட்டியின் தொலைபேசியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
</p><p>
குற்றத்தைச் செய்வதற்கு முன், குறைந்த காலத்தில் விரைவாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்கள் இணையத்தில் தேடியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T13:12:48+00:00</updated>
        </entry>
    </feed>
