<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T05:50:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-dies-in-three-wheeler-accident-1785215632"></link>
            <id>https://ibctamil.com/article/woman-dies-in-three-wheeler-accident-1785215632</id>
            <summary type="text">திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். </p><p>இது நேற்று (27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு</h2><p>விபத்தில் உயிரிழந்த பெண் மட்டக்களப்பு வவுணதீவைச்சேர்ந்த 47 வயதுடையவர் எனப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9ef410-c6a0-42b0-943a-d91dea006ab9/26-6a684292c6d6f.webp' /></p><p>
குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரும் நேற்று காலையில் அம்பாறைக்கு சென்றுள்ள நிலையில் சாரதி வீதியை மாறி பொத்துவில் நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதி பாதுகாப்புக்கு அமைத்த தூணில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.&nbsp;</p><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் காயமடைந்த நால்வரும் அதே வைதடதியசாலையில் அனுமதிக்கப்பமடமுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-gazettes-bill-to-amend-anti-corruption-act-1785213364"></link>
            <id>https://ibctamil.com/article/govt-gazettes-bill-to-amend-anti-corruption-act-1785213364</id>
            <summary type="text">ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது&nbsp;</h2><p>வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917ae26d-d21f-4247-a6c3-956e6fd89445/26-6a68416778ed9.webp' /></p><p>அத்துடன் குறித்த திருத்தச் சட்டமூலம் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-min-wimal-weerawansa-s-brother-produced-court-1785213507"></link>
            <id>https://ibctamil.com/article/ex-min-wimal-weerawansa-s-brother-produced-court-1785213507</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பிணை தொடர்பான உத்தரவு ஒன்றுக்காக அவர் இவ்வாறு நீதிமன்றத்தில்&nbsp;முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அண்மையில் கைது செய்யப்பட்டார்</h2><p>அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சரத் வீரவன்ச&nbsp;காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/842b32ac-fea5-46b4-9de8-66f67f70ee68/26-6a683997a34d5.webp' /></p><p>குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T05:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harak-katha-bribe-case-rakitha-get-bail-1785215172"></link>
            <id>https://ibctamil.com/article/harak-katha-bribe-case-rakitha-get-bail-1785215172</id>
            <summary type="text">முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹெண்டிகே ஆகிய 3 சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (28-07-2026) பிறப்பித்துள்ளது.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>
</p><p></p><h2>விசாரணைகளில் சலுகை</h2><p>இதன்போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa19afc9-484a-429b-bee7-e33d3a199a0a/26-6a683bb0d3256.webp' /></p><p>

பாதாள உலகக் குழுவின் தலைவரான ஹரக் கட்டா என அறியப்படும் நடூன் சிந்தக்க விக்கிரமரத்னவின் மனைவியிடம் ரூபாய் 12 கோடி (120 மில்லியன்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) இவர்கள் கடந்த ஜூன் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

இந்தநிலையில் ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்குவதற்கும், பூசா அதிஉயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து அவரை வேறு சிறைக்கு மாற்றுவதற்கும், அவருக்கு எதிரான விசாரணைகளில் சலுகைகளை அளிப்பதற்கும் வாக்குறுதி அளித்து இந்த லஞ்சப் பணம் பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shangri-la-deal-sajin-vass-gives-statement-1785213031"></link>
            <id>https://ibctamil.com/article/shangri-la-deal-sajin-vass-gives-statement-1785213031</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.

இந்தநிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.</p><p>

இந்தநிலையில் நேற்றைய தினம் (27-07-2026) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>இலஞ்சப் பணம்&nbsp;</h2><p>இது தொடர்பில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
மேலும் தெரியவருகையில், இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1a4f16-29f4-4a73-9159-68094156effd/26-6a6837c91d597.webp' /></p><p>

ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><p>

சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a6c06c-56ca-4e26-b7fe-efad9a7d68c7/26-6a6837c86be68.webp' /></p><p>
மேலும், அந்த பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.
</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-earthquakes-strike-china-s-qinghai-province-1785213078"></link>
            <id>https://ibctamil.com/article/two-earthquakes-strike-china-s-qinghai-province-1785213078</id>
            <summary type="text">சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் உள்ள சிங்ஹாய் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.


குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் உள்ள சிங்ஹாய் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>

குறித்த நிலநடுக்கம் இன்று (28.07.2026) காலை 11:16 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>

இதன் பின்னர் 18 நிமிடங்கள் கழித்து அந்த மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக சி.இ.என்.சி குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டு நலநடுக்கம்</h2><p> </p><p> 

இந்த இரு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டன என்றும் மேலும் அவை கிங்ஹாயின் தலைநகரான சின்னிங்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் அமைந்திருந்தன என்றும் சீன நிலநடுக்க வலையமைப்பு மையத்திடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b61825-7c4b-4212-9331-f45ed1086baa/26-6a68369247af9.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதற்கான அநுர அரசின் திட்டம் : அம்பலப்படுத்திய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/judges-terms-extended-to-send-rajapaksas-to-prison-1785210452"></link>
            <id>https://ibctamil.com/article/judges-terms-extended-to-send-rajapaksas-to-prison-1785210452</id>
            <summary type="text">ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர்களை சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர்களை சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.</p><p></p><h2>நீதியரசர்களின் பதவிக்காலம் நீடிப்பு&nbsp;</h2><p> நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு இன்றுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c26234-e9ca-4dc6-a64c-6c6aeda0680c/26-6a682c2263c8d.webp' /></p><p>
ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அவர்ர்களை சிறைக்கு அனுப்புவதற்காகவே க்கப்படுவதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நீதித்துறையில் ஆதிக்கம் கொள்ள முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிக்கப்படுகிறது.
</p><p>
அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் தார்மீக உரிமை அரசாங்கத்துக்கு கிடையாது. நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்“ என தெரவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:17:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-ranks-as-4th-fastest-improving-country-1785208324"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-ranks-as-4th-fastest-improving-country-1785208324</id>
            <summary type="text">உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2026 ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

குறித்த அறிக்கையின் படி, மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>அந்தவகையில் குறித்த வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3a0e72-bf59-477a-a8c1-73d82a62f4e3/26-6a682360dfa70.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>அதன்படி, கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - வெளியான பயங்கர நபர்களின் பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-suspects-named-in-negombo-prison-clash-case-1785205053"></link>
            <id>https://ibctamil.com/article/4-suspects-named-in-negombo-prison-clash-case-1785205053</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 31 பேர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். </p><p>இது இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான சிறை வன்முறைகளில் ஒன்றாக பதிவாகியது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இந்த வழக்கு&nbsp;நேற்று நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு&nbsp; எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d357938-b191-4905-a637-62f53950e367/26-6a6819a096914.webp' /></p><p>அப்போது, ​​இச்சம்பவம் தொடர்பாக நான்கு கைதிகள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>இந்த கொடூர வன்முறை சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்களாக, "ஹீனட்டியன சுபுன்" எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, "களு மல்லி" எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் "பபா" எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சந்தேகநபர்களை நேற்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>கைதிகளிடம் வாக்குமூலம்</h2><p>இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a421d127-02e9-4a89-a670-7c2587cc75cd/26-6a68199fa3fb5.webp' /></p><p> இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-today-1785199922"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-today-1785199922</id>
            <summary type="text">நாட்டின் ஐந்து மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் &quot;எச்சரிக்கை&quot; மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.கிழக்கு மாகாணம் மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஐந்து மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே வெப்பநிலை அதிகரிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28-07-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>இதன்படி பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில பகுதிகளில் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புள்ளது.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7922120d-982f-4914-9bb1-b2222a39faba/26-6a681b63d0367.webp' /></p><p>இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இதேவேளை இன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. </p><p>

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்&nbsp;என்றுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு - குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shots-fired-at-us-consulate-in-toronto-canada-1785201746"></link>
            <id>https://ibctamil.com/article/shots-fired-at-us-consulate-in-toronto-canada-1785201746</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததுள்ளது.</p><p>“அப்பகுதியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாகவும், ஒரு வெள்ளை நிற செடான் கார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது காணப்பட்டதாகவும்” டொராண்டோ காவல்துறை X தள பதிவில் தெரிவித்தது.</p><p></p><h2>அடையாளம் காணப்படவில்லை</h2><p>அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, வெற்றுத் தோட்டா கண்டெடுக்கப்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது.</p><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a137ba1c-f1b6-4dcd-a96a-1801148e137f/26-6a680bde8c041.webp' /></p><p>கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.</p><p>

டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.</p><p></p><h2>பலப்படுத்த பாதுகாப்பு</h2><p> </p><p>

இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bffa08f7-e42d-4aee-9652-93fbeaf80c72/26-6a680bddd46f4.webp' /></p><p> 

டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். </p><p>

மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அந்த நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை - அமைச்சர் பதவி விலக வேண்டும்: கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844"></link>
            <id>https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844</id>
            <summary type="text">நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உடனடியாக பதவி விலகல் செய்ய வேண்டும் என்று அகில
இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>முட்டை விலை உயர்வு</h2><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மூலப்பொருள்களும் மிக வேகமாகக் விலை
உயர்ந்து வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d91922-cff9-41d6-a56b-4d94a773d219/26-6a67fa52b2215.webp' /></p><p>இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான
பெரிய முட்டை ஒன்று தற்போது 46 - 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42
ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>
உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா
என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபா வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல்,
முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை
உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.</p><p></p><h2>சந்தையில் நிலவும் முறைகேடு</h2><p>

கீரி சம்பா அரிசிச் சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின்
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை.
அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489dac68-126f-4fbf-b475-b3d4ae7bd822/26-6a67fa541cf01.webp' /></p><p> அவருக்குப் காவல்துறை பணியைச் செய்ய
விருப்பமாக இருந்தால், காவல்துறை மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.</p><p>
அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது,
விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த
கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே
வழிவகுக்கும். </p><p>மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல்
கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
</p><p>
தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள்
கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட
பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார
சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்." - என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுகோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது</p><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை காவல் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2c2864-8e98-4635-bcd5-1611eb4da16c/26-6a6803647062c.webp' /></p><p>இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p>

இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது. </p><p>அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZXkhjiGdbWw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:49:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கப்போகும் மழைவீழ்ச்சி! மக்களுக்கு வெளியாகியுள்ள முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612"></link>
            <id>https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fcd839-9e89-45ad-977c-2fd96ff2c408/26-6a67fd30c2c99.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
கடல் பிராந்தியங்கள்
</h2><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2ed0ff-aae8-453d-a159-fdeb670ae362/26-6a67fd31789ec.webp' /></p><p>
</p><p>
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T01:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319"></link>
            <id>https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319</id>
            <summary type="text">ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் பதில் தாக்குதல்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கும் வகையில், "ஏதாவது நல்ல முடிவு எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>ஈரான் மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போர் நிறுத்தத்திற்கு முன் செய்து கொண்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545ed955-b034-4838-986b-28b517b80cdb/26-6a67fa57535aa.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The American Prospect</i></p><p> </p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று ஈரான் அரசு மறுத்துள்ளது.</p><p>

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதால், ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு செய்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-07-28T00:39:54+00:00</updated>
        </entry>
    </feed>
