<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T21:36:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/many-more-cricketers-voice-support-for-imran-khan-1788038378"></link>
            <id>https://ibctamil.com/article/many-more-cricketers-voice-support-for-imran-khan-1788038378</id>
            <summary type="text">சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
1992 உலகக் கோப்பையை வென்ற தலைவரின் சிகிச்சை குறித்து சமீபத்தில் உணர்ச்சிப்பூர்வமான பொது வேண்டுகோளை விடுத்திருந்த அவரது மகனான முன்னாள் சக வீரர் ஜாவேத் மியாந்தாத்துடன் இணைந்து, இந்த குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p>இதன்படி பாகிஸ்தானின் முன்னாள் அணி தலைவர் மொயின் கான் தற்போது இம்ரானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><h2>உலகக் கோப்பையை வென்ற&nbsp;தலைவர் </h2><p>

1992-ல் இம்ரானின் தலைமையிலான உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த மொயின், தனது தலைவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததோடு, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d62bcbf-46b8-4de3-a4fa-a44aeac074f3/26-6a934cec77483.webp' /></p><p>

இம்ரானுக்கு என்ன செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பியும், அவரை விடுதலை செய்யக் கோரியும் மியாண்டாத் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இவரது தலையீடு அமைந்துள்ளது.</p><p>சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், இயன் சேப்பல், கிளைவ் லாயிட் மற்றும் இலங்கையின் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் சர்வதேச அணித் தலைவர்கள் குழுவும், இம்ரானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/van-crashes-into-high-voltage-power-pole-1788030279"></link>
            <id>https://ibctamil.com/article/van-crashes-into-high-voltage-power-pole-1788030279</id>
            <summary type="text">கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன்று இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>
 இந்நிலையில் வானில் பயணித்த ஏழு பயணிகள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காகக் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439afe7e-4741-4b8f-a869-a247c4a28786/26-6a932d496d8b1.webp' /></p><p>

 சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>

மேலும், மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T19:04:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே போகும் நேபாள பேரவலத்தின் பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-death-toll-continues-to-rise-by-the-hour-1788026902"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-death-toll-continues-to-rise-by-the-hour-1788026902</id>
            <summary type="text">நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இன்றைய நிலவரப்படி, மேலும் 2,498 பேரைக் காணவில்லை என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>

உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை தொகுத்ததன் படி, கடந்த ஆறு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நிவாரணப் பணிகள்&nbsp;</h2><p> இருப்பினும், முக்கியமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcd45915-6325-40ba-b4ec-4eaac6ceefaf/26-6a9325a732501.webp' /></p><p>மேலும், நேபாளத்தின்&nbsp; மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தொகுத்த விவரங்களின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 900 நேபாள ஊழியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
இதுவரை அந்தத் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 361 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>நேபாள-சீன எல்லை</h2><p>
</p><p>
திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு, நேபாள-சீன எல்லைக்கு அருகே, குறிப்பாக தொலைதூர ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைந்திருந்த பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadbb5d3-f302-4d1e-be48-e336d64dd4c7/26-6a9325a7e64c8.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, பல தொழிலாளர்கள் கட்டுமானப் பகுதிகளிலும் சுரங்கங்களிலும் இன்னும் சிக்கியுள்ளனர்.
</p><p>
அவர்களைத் தொடர்புகொள்ள இயலாத நிலையில், சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க உதவுவதற்காக, சுரங்க மீட்பு நிபுணர்களை இந்தியா மற்றும் சீனாவிடம் நேபாள அரசு கோரியுள்ளது. </p><p>இரு நாடுகளின் குழுக்களும் இன்று நேபாளம் வந்தடைந்த நிலையில், மேலும் பணியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T18:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078"></link>
            <id>https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.</p><p>

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு</h2><p>அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c297b2-0c45-400d-895f-73b6631763c4/26-6a9301887510a.webp' /></p><p>
</p><p>
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார்.</p><p>
அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T17:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-israeli-liaison-weapons-group-enters-iran-1788024210"></link>
            <id>https://ibctamil.com/article/us-israeli-liaison-weapons-group-enters-iran-1788024210</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோல்வியடையும் ஒரு போரில் சிக்க வைக்கவும்&nbsp; முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p><p>இந்நிலையில் தென்கிழக்கு ஈரானில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ஆயுதக் குழுவை பாதுகாப்புப் படைகள் கலைத்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனியாக அறிவித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><h2>அமெரிக்கக் கடற்படை முற்றுகை</h2><p>
</p><p>
அமெரிக்கக் கடற்படை முற்றுகையையும் மீறி, 7.5 பில்லியன் டொலர் எண்ணெய் வருவாயைத் தனது மத்திய வங்கிக்கு மாற்றியதாக ஈரான் அறிவித்ததுடன், பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களை ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb1cf17-69bc-426f-927b-97d70e7520c7/26-6a931a011d007.webp' /></p><p>இஸ்ரேல் சார்பு சகாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க - இஸ்ரேல் போருக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஈரான் உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாக அராக்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p>அராக்சி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரானிய உளவுத்துறை தகவல்களின்படி உலகளாவிய எரிசக்தி சந்தைகளை கையாளுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்ப் தோல்வியடையும் போர்</h2><p>
</p><p>
அமெரிக்க அரசாங்கத்துக்குள் உள்ள சிலர், நம்பிக்கைக்குரியதாக எளிதில் நம்பும் ஊடகங்களை பயன்படுத்தி எரிசக்தி விலைகளை தங்களது தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09498af3-27dd-415a-a52f-663e701d8fb7/26-6a931a01c7215.webp' /></p><p>
</p><p>
மேலும், இதுபோன்ற முயற்சிகள் ட்ரம்பை தோல்வியடையும் போரில் சிக்கவைத்திருக்க நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இஸ்ரேலுடன் தொடர்புடைய தரப்புகளும் போரை ஆதரிக்கும் வகையில் நம்பிக்கையூட்டும் மதிப்பீடுகளை முன்வைக்கின்றன, என்றும் அராக்சி கூறியுள்ளார்.</p><p>
இதன் பொருளாதாரச் சுமையை அமெரிக்க நுகர்வோர் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T17:38:16+00:00</updated>
        </entry>
    </feed>
