<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-02T04:25:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது</h2><p> </p><p>

இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது என வலியுறுத்தகப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30859b2-213a-4e3a-8a2c-bf9f83392b6f/26-6a6ebebdd8d29.webp' /></p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை 2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T03:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37fc67d3-43bc-4212-ad13-3513039b9689/26-6a6ebd33bf2bc.webp' /></p><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T03:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாஸ்கா கோடுகளுக்கு மேலே பறந்த விமானம் விபத்து! 13 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-over-nazca-lines-1785635317"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-over-nazca-lines-1785635317</id>
            <summary type="text">பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளதாக&nbsp;அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>Cessna Caravan C-208 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு&nbsp; விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதில் 11 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர் என்றும் உயிரிழந்தவர்களில் 2 ஜெர்மனி, 2 ஸ்பெயின் மற்றும் 7 இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விபத்துக்கான காரணம்</h2><p> </p><p>இந்நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/700a2d71-84b8-40f6-b89d-a8eeacdb1b3e/26-6a6ea1f7d310c.webp' /></p><p>இதன்படி விமானம் பெருவின் பிஸ்கோ (Pisco) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில், புவெப்லோ வியெஹோ (Pueblo Viejo) பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T01:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றமான மஹர கலவரத்தின் பின்னரான தற்போதைய நிலை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319"></link>
            <id>https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மஹர சிறையில் நேற்று (01) பிற்பகல் பதற்றம் நிலவியது. இதில் ஏழு கைதிகள் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>படையினர் மீது கல்வீச்சு</h2><p>இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படை, இராணுவம் மற்றும் காவல்துறையை களமிறக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e9b660-1f17-4423-a298-9805662774b2/26-6a6e9e11bc623.webp' /></p><p>இதன்போது கைதிகளைப் பார்க்க வந்திருந்த உறவினர்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினர் மீது பல கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதற்கிடையில், பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோரும்&nbsp; சிறையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக நேற்று இரவு மஹாரா சிறை வளாகத்திற்கு சென்றிருந்தனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை ஆய்வாளருடன் இவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும், சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/curfew-continues-to-be-in-effect-1785633414"></link>
            <id>https://ibctamil.com/article/curfew-continues-to-be-in-effect-1785633414</id>
            <summary type="text">பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட&nbsp;ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி&nbsp;ஊரடங்கு பிரதேசங்களாக 246/கெந்தலியத்த பலோவ - மேற்கு, 246/C கெந்தலியத்த பலோவ - வடக்கு மற்றும் 181/G தம்புவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>[ZHKNHLY
]</p><h2>மஹர சிறை&nbsp;மோதல் </h2><p>

நேற்று பிற்பகல் (01) மஹர சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட றிலையில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு ஒருவர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0fcf607-5279-45ab-b124-e622b22d20d0/26-6a6e9a8823d31.webp' /></p><p> 

மேலும் ஆறு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கைதிகளின் உறவினர்களும் உள்ளூர் மக்களும் சிறையைச் சுற்றித் திரண்டதோடு , இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குறித்த குறித்த சேவகர் பிரிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை&nbsp; பொகாவல்துறை&nbsp; லிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T01:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத் திருத்தம்: ஊழலில் பெற்ற சொத்துக்கு மூன்று மடங்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/triple-fine-property-acquired-through-corruption-1785632110"></link>
            <id>https://ibctamil.com/article/triple-fine-property-acquired-through-corruption-1785632110</id>
            <summary type="text">2023ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தில் (Anti-Corruption Act) திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்தத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தில் (Anti-Corruption Act) திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. </p><p>இந்தத் திருத்தத்தின் மூலம், ஊழல் மூலம் பெற்ற சொத்துகளுக்கு அதன் மதிப்பின் மூன்று மடங்கு வரை கட்டாய அபராதம் விதிக்கும் புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

திருத்தத்தின்படி, ஊழல் மூலம் ஒருவர் சொத்தைப் பெற்றிருந்தாலோ அல்லது அந்தச் சொத்தை மாற்றியிருந்தாலோ, அந்தச் சொத்தின் மதிப்பின் குறைந்தபட்சம் மூன்று மடங்கு தொகையை நீதிமன்றம் கூடுதல் அபராதமாக விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h4>அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் முழுமையாக வசூலிக்கப்படும்</h4><p>2023ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டத்தின்படி, ஊழல் குற்றத்திற்கான தண்டனையாக அதிகபட்சம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும். ஆனால், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கே விடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4b39e2-5467-43ec-9204-b088fd21f580/26-6a6e957111683.webp' /></p><p>புதிய திருத்தத்தின்படி, ஊழல் காரணமாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டால், அந்த இழப்புத் தொகை முழுவதற்கும் சமமான கூடுதல் அபராதத்தை நீதிமன்றம் கட்டாயமாக விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h4>முக்கிய குற்றங்களுக்கு பிணை வழங்குவதில் கட்டுப்பாடு</h4><p>புதிய திருத்தத்தின் கீழ், ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட இலஞ்சம் கோருதல், பெறுதல் அல்லது வழங்குதல், அல்லது ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அரச இழப்பு அல்லது சட்டவிரோத இலாபம் ஏற்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் சான்றளித்தால், அத்தகைய சந்தேகநபர்களுக்கு சாதாரண நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க முடியாது.
</p><p>
இவ்வாறான வழக்குகளில் விசேட மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே உயர்நீதிமன்றம் பிணை வழங்கும் அதிகாரம் பெற்றிருக்கும்.</p><p></p><h4>சொத்துப் பிரகடனத்தின் தவறான பயன்பாடு குற்றமாகும்</h4><p>முதன்மைச் சட்டத்தின்படி, பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் திருத்தப்பட்ட (Redacted) சொத்துப் பிரகடனங்கள் CIABOC இணையதளத்தில் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74bfda4-d40e-41ea-ae31-13fa1e98fa2e/26-6a6e9571b77de.webp' /></p><p>இதில் முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண், வங்கிக் கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் மறைக்கப்படும்.</p><p>

புதிய திருத்தத்தின் கீழ், இவ்வாறு வெளியிடப்படும் திருத்தப்பட்ட சொத்துப் பிரகடனத்தை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அல்லது நிறுவனங்களுக்கு சமர்ப்பிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது குற்றமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விதியை மீறுவோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை அபராதம், ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும்.</p><h4><b>ஒன்றாக வசிப்போரின் சொத்துகளை அறிவிக்க வேண்டிய அவசியம் நீக்கம்</b></h4><p>முதன்மைச் சட்டத்தின்படி, அறிவிப்பு வழங்குபவர் தனது மனைவி அல்லது கணவர், வயதைப் பொருட்படுத்தாமல் சார்ந்திருக்கும் பிள்ளைகள், பிற சார்ந்திருப்போர் மற்றும் குறைந்தது ஆறு மாதங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளையும் அறிவிக்க வேண்டியிருந்தது.
</p><p>
புதிய திருத்தம் 81வது பிரிவின் (e) உட்பிரிவை நீக்குவதன் மூலம், ஒன்றாக வசிக்கும் நபர்களின் சொத்துகளை அறிவிக்கும் கட்டாயத்தை முழுமையாக நீக்கியுள்ளது.</p><p> இது தனிநபர் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h4><b>அரசின் பங்குள்ள நிறுவனங்களுக்கு புதிய வரம்பு</b></h4><p>இந்தத் திருத்தம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் வரம்பையும் குறைத்துள்ளது.</p><p>

2023ஆம் ஆண்டின் சட்டத்தின்படி, 25 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அரசுப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் "திட்டமிடப்பட்ட நிறுவனங்கள்" (Scheduled Institutions) என வகைப்படுத்தப்பட்டிருந்தன.
</p><p>
புதிய திருத்தத்தின் மூலம் இந்த வரம்பு 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அரசுப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் என உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் விளைவாக, 25 முதல் 49.9 சதவீதம் வரை மட்டுமே அரசுப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் இனி இந்தச் சட்டத்தின் கீழ் "திட்டமிடப்பட்ட நிறுவனங்கள்" எனக் கருதப்படமாட்டாது.</p><h5><b>அரசுப் பணியாளர் என்ற வரையறையிலும் மாற்றம்</b></h5><p>முதன்மைச் சட்டத்தின்படி, 25 சதவீதத்திற்கு மேல் அரசுப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்களின் பணிப்பாளர்கள், ஆளுநர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுப் பணியாளர்கள் எனக் கருதப்பட்டனர்.
</p><p>
புதிய திருத்தத்தின் கீழ், இந்த வரம்பு 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அரசுப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
</p><p>
இதனால், அரசின் சிறுபான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அரசுப் பணியாளர்களுக்கு பொருந்தும் கடுமையான ஊழல் மற்றும் இலஞ்சத் தடுப்பு சட்டங்களின் வரம்பிலிருந்து விலக்கப்படுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T00:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-is-the-biggest-extortionist-1785625028"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-is-the-biggest-extortionist-1785625028</id>
            <summary type="text">அரசுக்கு சொந்தமான ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருவாயில் 80 சதவீதத்தை அவன்ட் கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு சொந்தமான ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருவாயில் 80 சதவீதத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கும் வகையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தலையிட்டதாக கோப் (COPE) குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் தொடர்பாக கோப் குழுவில் நடைபெற்ற விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.</p><p>மேலும், அந்த அரச நிறுவனத்துக்குச் சொந்தமான 219 துப்பாக்கிகள் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 139 துப்பாக்கிகள் தற்போது எங்கு உள்ளன என்பது கூட கண்டறிய முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p></p><h2>ராஜபக்சவின் தீவிர ஆதரவு</h2><p>
கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கியவராகக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு சொந்தமான அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மாதந்தோறும் சுமார் 3,20,000 அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் வகையில், அமைச்சரவை அனுமதி இன்றியே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் மாதாந்திர வருவாய் இழக்கப்பட்டதாகவும் கோப் குழு விசாரணையில் விளக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான விரிவான கோப் குழு விசாரணை காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய பாதுகாப்பு, பில்லியன் கணக்கான ரூபாய் ஊழல் மற்றும் ஆட்சி மாற்றங்களின் திசையை தீர்மானித்த மிக முக்கியமான விவகாரமாக 'அவன்கார்ட்' (Avant-Garde) கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்தின் சர்ச்சை விளங்குகிறது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவோடு கட்டியெழுப்பப்பட்ட இந்த வணிகக் பேரரசு, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழலுக்கு எதிரான அரசியல் கொள்கையினால் ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் (2015க்கு முன்னர்) கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த போதே, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் அசுர வளர்ச்சி ஆரம்பமானது.
</p><p>
அதுவரை இலங்கை கடற்படைக்கு நேரடியாகக் கிடைத்து வந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்புச் சேவைகள் மற்றும் ஆயுதக் களஞ்சிய பராமரிப்பு மூலமான பெரும் வருமானம், திடீரென அவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு தாராளமாக கைமாற்றப்பட்டது.</p><p>

மேலும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய 'ரக்ச லங்கா' (Rakna Lanka) நிறுவனத்துடன் அவன்கார்ட் நிறுவனம் ஒரு சர்சைக்குரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

இதன் மூலம் கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான நவீன ஆயுதங்களை ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல அனுமதித்தார் என்ற பலத்த குற்றச்சாட்டு எழுந்தது.</p><p></p><h2>வெளிச்சத்திற்கு வந்த&nbsp;முறைகேடு </h2><p>
</p><p>
2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 'நல்லாட்சி' அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையில் நடந்த இந்த மாபெரும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.
</p><p>அதனை தொடர்ந்து காலி கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த 'MV Avant-Garde' கப்பலை சோதனையிட்ட போது, அதில் 816 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கான தோட்டாக்கள் கண்டறியப்பட்டன.
</p><p>
இது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை அரசுக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியது.

இந்த முறைகேடான ஒப்பந்தம் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
</p><p>
இதில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிசங்க சேனாதிபதி உள்ளிட்டோர் பிரதான பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், அவன்கார்ட் மீதான சட்டப் பிடிகள் அனைத்தும் அரசியல் செல்வாக்கின் மூலம் தளர்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
</p><p>
2021 மே மாதத்தில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் ஆயுதக் கடத்தல் வழக்கில் இருந்து நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளையும் முற்றாக விடுதலை செய்தனர்.</p><p>

தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் சித்தாந்தப் பிரிவான 'வியாத்மக' (Viyathmaga) அமைப்பில் நிசங்க சேனாதிபதி மிக முக்கிய நிதியுதவியாளராகவும், செல்வாக்கு மிக்க நபராகவும் வலம் வந்தார்.</p><p></p><h2>ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி&nbsp;</h2><p> </p><p>

இதன் காரணமாகவே நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் ஜே.வி.பி நடத்திய அரசியல் கூட்டங்களில் அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராகப் பேசும் போது கடுமையான அரசியல் மோதல்கள் வெடித்தன.
</p><p>
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அநுர குமார திஸாநாயக்க மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சுத் தாக்குதலுக்கு பின்னணியில், நிசங்க சேனாதிபதியின் ஆட்களே இருந்ததாக ஜே.வி.பி (JVP) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது.
</p><p>
அதன் பின் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் முற்றிலும் மாறியது.
</p><p>
 ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அநுர அரசு, அவன்கார்ட் நிறுவனத்தின் ஏகபோக உரிமையை ஒடுக்கத் தொடங்கியது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 2025 ஆகஸ்ட் மாதம் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். </p><p>

இதன் மூலம், அவன்கார்ட் வசம் இருந்த கடல்சார் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆயுதங்களைச் சேமிக்கும் அதிகாரம் அனைத்தும் மீண்டும் முழுமையாக இலங்கை கடற்படையிடம் (Sri Lanka Navy) ஒப்படைக்கப்பட்டது.&nbsp; </p><p>இதன் விளைவாக, தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்ற பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு வருமானம், தற்போது நேரடியாக திறைசேரிக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>

கடந்த ஜூன் 2025 இல், பழைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நிசங்க சேனாதிபதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

மேலும், 2026 பெப்ரவரியில் அவன்கார்ட் நிறுவனத்தால் தங்களுக்குச் சாதகமாக தாக்கல் செய்யப்பட்ட சில மேன்முறையீட்டு பேராணை மனுக்கள் (Writ Cases) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T00:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 சீன நாட்டினரின் விசா ஒப்புதல்கள் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-visas-of-60-chinese-nationals-1785629831"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-visas-of-60-chinese-nationals-1785629831</id>
            <summary type="text">விசா முறைகேடுகள் சந்தேகத்தின் பேரில் 60 சீன நாட்டினரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை காவலில் எடுத்த பின்னர், அவர்களுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசா முறைகேடுகள் சந்தேகத்தின் பேரில் 60 சீன நாட்டினரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை காவலில் எடுத்த பின்னர், அவர்களுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகள் திடீரென விடுவிக்கப்பட்டது குறித்து அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>குறித்த பிரஜைகள் ஒரு மாத கால வணிக விசாக்களில் இலங்கைக்குள் நுழைந்திருந்தனர். </p><p>இருப்பினும், அந்த விசாக்களின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் அவை வழங்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு, மேலதிக பரிசோதனைக்காக அவர்களின் கடவுச்சீட்டுகளைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.</p><p></p><h2>கடவுச்சீட்டுகள் பரிசீலனை</h2><p>

பின்னர் அந்தக் கடவுச்சீட்டுகள் பரிசீலனைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து நிலவி வந்த கவலைகள் இருந்தபோதிலும், அந்த நபர்களுக்குப் பின்னர் வசிப்பிட விசாக்கள் வழங்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d346ed4d-ad45-454f-b28a-0a96ad2141cf/26-6a6e8c89631d3.webp' /></p><p> </p><p>இது, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

குடியிருப்பு விசாக்கள் வழங்குவதற்கு முன் தேவைப்படும் வழக்கமான சரிபார்ப்பு செயல்முறை நிறைவடைந்ததா மற்றும் தேவையான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டதா என்பதை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
இவ்விடயம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. </p><p>ஏதேனும் சட்டங்கள், விதிமுறைகள் அல்லது உத்தியோகபூர்வ நடைமுறைகள் மீறப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தனி விசாரணை எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T00:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்மொழியப்பட்ட நீதிமன்ற அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ag-approves-amendment-to-the-court-constitution-1785628974"></link>
            <id>https://ibctamil.com/article/ag-approves-amendment-to-the-court-constitution-1785628974</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கு, அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கு, அரசியலமைப்பின் 77வது பிரிவின் கீழ் சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனுடன், 1983 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நீதித்துறைச் சட்டமும் (Judicature Act) திருத்தப்பட்டு, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் மற்றும் அதற்கு கீழுள்ள நீதித்துறையின் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட உள்ளது.
</p><p>
முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ், அரசியலமைப்பின் 107(5)வது பிரிவு திருத்தப்பட்டு, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் உயர்த்தப்படும்.</p><p></p><h2>நீதித்துறைச் சட்டம்</h2><p>

அதேவேளை, நீதித்துறைச் சட்டத்தின் 6வது பிரிவு திருத்தப்பட்டு, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c5e92d-3664-4c6a-8f84-bd2a6200fc8b/26-6a6e896cdc24f.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் 77வது பிரிவின் கீழ் சட்டமா அதிபரின் கருத்து பெறப்பட்டதைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட சட்டமூலங்கள் உடனடியாக அரச வர்த்தமானியில் வெளியிடப்படும். </p><p>அரசியலமைப்பின் 78வது பிரிவின்படி, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் குறைந்தது ஒரு வார காலம் கடந்த பின்னரே மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்து சமர்ப்பிக்க முடியும்.
</p><p>
மேலும், 121வது பிரிவின்படி, எந்தவொரு குடிமகனும் சட்ட அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.</p><p>

ஆனால், 120வது பிரிவின்படி, அரசியலமைப்பைத் திருத்தும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரம், அந்த சட்டமூலத்துக்கு மக்கள் வாக்கெடுப்பு (Referendum) அவசியமா என்பதைத் தீர்மானிப்பதற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>தாக்கல் செய்யப்படும் மனு</h2><p>
</p><p>
121(3)வது பிரிவின்படி, சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனு தொடர்பான தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும்.</p><p>

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறுகையில், இந்த 22வது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய நோக்கம், அனுபவமிக்க மூத்த நீதிபதிகளின் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி, தற்போது நீதித்துறையில் நிலுவையில் உள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதாகும் என்றார்.</p><p>

மேலும், முன்னேறிய நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 இலட்சம் மக்களுக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அனுபவமிக்க நீதிபதிகளை பணியில் தொடரச் செய்வதுடன், தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல், குறிப்பிட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவை நிலுவை வழக்குகளை குறைக்கும் நடைமுறைகளாக முன்மொழியப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் நீடிப்பதால், சில வழக்குதாரர்கள் தீர்ப்பு கிடைக்கும் முன்பே உயிரிழக்கும் துயர்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கும் மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்றார்.</p><p>

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக நிலவி வரும் நீதித்துறை அதிகாரிகள் பற்றாக்குறைக்கு தீர்வாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மட்டுமின்றி, நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட முழு நீதித்துறையிலும் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த முடிவு நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அவர் முற்றிலும் நிராகரித்திருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T00:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை நிலவரத்தைக் கட்டுப்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/to-control-the-situation-in-mahara-prison-1785627754"></link>
            <id>https://ibctamil.com/article/to-control-the-situation-in-mahara-prison-1785627754</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) மேற்கண்ட அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
</p><p>
கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹர சிறையில் மிகவும் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பல கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
</p><p></p><h2>கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவ மற்ற கைதிகள் வருவதைத் தடுப்பதாலும், நிலைமை மிகவும் கடுமையானதாகவும் மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ede54fb-5f24-499f-a971-5dfb8a33027e/26-6a6e846c7ee91.webp' /></p><p>

நிலைமையைக் கட்டுப்படுத்தவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் வளாகத்திற்குள் நுழைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரு குழுவை எவ்வித தாமதமுமின்றி மஹர சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அக்குழு கோரியுள்ளது.</p><p>
கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு, இது தொடர்பாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
மேலும், சிறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T23:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-regarding-389-healthcare-workers-1785623911"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-regarding-389-healthcare-workers-1785623911</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை
தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதாரப் பணியாளர்களுக்கு வடக்கு மாகாணத்தால்
நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப்
பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல்
நடைமுறைக்கு வரும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
</p><p>
அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில்
கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>திறைசேரியின் சுற்றறிக்கை</h2><p>
</p><p>
நியமனத்தைப் பெற்ற 389 சுகாதாரப் பணியாளர்களும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு
அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும்,
அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக
அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10906777-5f41-409a-9830-3ddc488410f6/26-6a6e756984995.webp' /></p><p>
</p><p>
இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் குறித்த சுற்றறிக்கையானது மீளவும்
திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி யன்று
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் ரத்துச் செய்யப்பட்டது.
</p><p>
இதையடுத்து தமக்கு நீதிகோரி குறித்த சுகாதாரப் பணியாளர்கள் வழக்குத்
தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதாரப் பணி
உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை
முகத்தோற்றளவில் மன்று ஏற்றுக்கொண்டது. </p><p>இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா
அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று
விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான
ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ்
இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி
தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகினார்கள்.
</p><p>பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட
முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் வடக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர்
சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார். </p><p>இதன்போதே, வடக்கு மாகாண சுகாதரப்பணி
உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் ரத்துச்
செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>அத்துடன் எதிர்வரும் 24ஆம்
திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T22:38:43+00:00</updated>
        </entry>
    </feed>
