<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T19:17:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவு பெற்றது மகிந்தானந்தவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை! குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-investigation-against-mahindananda-1787684089"></link>
            <id>https://ibctamil.com/article/another-investigation-against-mahindananda-1787684089</id>
            <summary type="text">நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன் கடிதங்களை (LC) திறந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் மகேஷ் லசந்த கம்மன்பில ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதை, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இலஞ்ச ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
</p><p>
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகிந்தானந்த அலுத்கமகே சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் உள்ள இரண்டாவது சந்தேகநபரான மகேஷ் லசந்த கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிகை தாக்கல்</h2><p>

இந்நிலையில், விசாரணைகள் நிறைவடைந்து, சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் இலஞ்ச ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c044ea4-7a4f-4ca4-93d8-c5c4d8a2ff9d/26-6a8de6e20b878.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்காக டிசம்பர் 4 ஆம் திகதியை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-final-decision-on-age-limit-3-wheeler-drivers-1787682392"></link>
            <id>https://ibctamil.com/article/no-final-decision-on-age-limit-3-wheeler-drivers-1787682392</id>
            <summary type="text">முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே வெளியிட்ட கருத்து குறித்து பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜெயதிஸ்ஸ இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தொழிற்கல்வி&nbsp;&nbsp;</h2><p>
பாடசாலையிலிருந்து விலகியவர்கள் அல்லது க.பொ.த (உயர் தர) பரீட்சைக்குப் பிறகு கல்வியைத் தொடராத இளைஞர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/432ce6a2-807c-4aac-89d7-d657354b6454/26-6a8de150469df.webp' /></p><p>
</p><p>
அந்த யோசனைகளில் சில திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T18:41:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614"></link>
            <id>https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அதன் முதலாவது விமானம் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, இன்று (25) மாலை 6:24 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வந்திறங்கிய JQ005 என்ற இந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்திற்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நீர் வணக்கம் செலுத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இயக்கப்படும் நாட்கள்</h2><p>
</p><p>
இந்த புதிய விமான சேவையானது மெல்போர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27320184-684a-49ca-8b10-2fa7dc307c6b/26-6a8dd1546d4c8.webp' /></p><p>

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T18:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வில் கலந்து கொண்ட நீதி அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-attended-an-event-for-the-disappeared-1787677584"></link>
            <id>https://ibctamil.com/article/minister-attended-an-event-for-the-disappeared-1787677584</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day
of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day
of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2
மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்கார , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற
உறுப்பினர்களான க. இளங்குமரன், ச பவானந்தராசா மற்றும் ரஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>பயனாளிகளுக்கு&nbsp; மூக்கு கண்ணாடிகள்</h2><p>
நிகழ்வின் ஒரு அங்கமாக பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8890e3e-9a2c-4c27-83f0-04df3a6e2a28/26-6a8dcd062f81c.webp' /></p><p>
கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும் கொம்பனித்தெரு ஞாபகார்த்த
மண்டபத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு -
கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும், கண்காட்சியும் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T17:12:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அதிகரிக்கும் மரண தண்டனைகள்! ட்ரம்ப் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-sentences-in-iran-1787673122"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-sentences-in-iran-1787673122</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்து வரும் மரணதண்டனைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்&nbsp; கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தோல்வியடைந்து வரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது இராணுவத்தின் பெரும்பகுதிக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதுடன், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களைக் கொன்று வருகிறது என்றும் அவர் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>இது ஒரு மாபெரும் மனிதாபிமான நெருக்கடி, என்றும் இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும், எனவும் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><h2>அதிகரித்து வருகின்ற&nbsp;மரணதண்டனை</h2><p>பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து மரணதண்டனைகள் சீராக அதிகரித்து வருகின்றன எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af4e085-65b0-47ab-a335-b365108b598e/26-6a8dba244b013.webp' /></p><p>
ஈரானில் மாபெரும் போராட்டங்கள் வன்முறையாக அடக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, போரைத் துவங்கிய அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதில் இருந்து இன்றும் நிறைவடைய போர் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T15:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-at-ratmalana-airport-1787668741"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-at-ratmalana-airport-1787668741</id>
            <summary type="text">கொழும்பு -&amp;nbsp; ரத்மலானையில்&amp;nbsp;செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு -&nbsp; ரத்மலானையில்&nbsp;செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக&nbsp;ரத்மலானை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன.</p><p>ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இகு ஒரு பயிற்சி விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரத்மலானை விமான நிலையம்</h2><p>குறித்த விமானம் ரத்மலானை விமான நிலையத்தில் இயங்கும் விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824e520e-29e5-41d5-ba1a-10cb6f0610fa/26-6a8da907b79ea.webp' /></p><p>இந்நிலையில் இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T15:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்வுகளில் மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளை பயன்படுத்துவது குறித்து முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/resolution-on-the-use-of-flashlights-and-fireworks-1787667110"></link>
            <id>https://ibctamil.com/article/resolution-on-the-use-of-flashlights-and-fireworks-1787667110</id>
            <summary type="text">திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக
உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம்
மற்றும் தேசிய மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று
(25.08.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக்
கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.</p><p></p><h2>முக்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>
கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன்
கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும்
வானவேடிக்கைகளின் தாக்கத்தால் 500 இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான
சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில்
முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல்
இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfbe8eed-e095-4861-a5b5-009d1bdd66ca/26-6a8da2a8214fe.webp' /></p><p>

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம்
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும்
மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில்
உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச்
சுட்டிக்காட்டினார். </p><p>பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள்
இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக
அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய், தந்தையை இழந்த 18 குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான காசோலைகள் வழங்கி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/housing-project-for-18-families-in-kilinochchi-1787666404"></link>
            <id>https://ibctamil.com/article/housing-project-for-18-families-in-kilinochchi-1787666404</id>
            <summary type="text">தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தாய் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு, கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில் வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கிளிநொச்சி பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், நீதி அமைச்சர் ஹார்சன நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.</p><p></p><h2>முக்கிய திட்டங்கள்&nbsp;</h2><p>
</p><p>
நீண்டகாலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்களுக்கு சொந்த வீடு அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe44a1b-b3af-4791-83c5-dc74c6efb71b/26-6a8d9fe64e167.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் மற்றும் ஆதவ் அர்ஜீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-will-imposed-tamil-nadu-chief-minister-vijay-1787657158"></link>
            <id>https://ibctamil.com/article/fine-will-imposed-tamil-nadu-chief-minister-vijay-1787657158</id>
            <summary type="text">தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 27ஆம் திகதி வரை சென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 27ஆம் திகதி வரை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மேலும் அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால், தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.</p><p>

தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.</p><p></p><h2>உயர்நீதிமன்றம் எச்சரிக்கை&nbsp;</h2><p>இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad4fe628-8b94-4989-bf49-2be9e4c61b6a/26-6a8d85690c129.webp' /></p><p>
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25.08.2026) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதல்வர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நிறைவுபடுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T14:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/info-about-politicians-on-padme-s-mobile-phones-1787664995"></link>
            <id>https://ibctamil.com/article/info-about-politicians-on-padme-s-mobile-phones-1787664995</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சந்தேக நபரான கெஹல்பத்தாரா பத்மேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் சந்தேக நபரான கெஹல்பத்தாரா பத்மேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளில் இருந்து, ஏழு நடிகைகள், மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

சந்தேக நபரின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, ​​ஒன்பது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் புகைப்படங்களும் பதிவுகளும் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் ஏழு நடிகைகள் மற்றும் மாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.</p><p>
கண்டறியப்பட்டவை குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அடையாளம் காணப்பட்ட நபர்கள்</h2><p>இந்த வெளிப்படுத்தல் மட்டுமே, அடையாளம் காணப்பட்ட நபர்கள் ஏதேனும் குற்றம் செய்தார்கள் என்பதைக் குறிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072c65b9-c4bc-4b31-8405-08aec57235c3/26-6a8d9c387224a.webp' /></p><p>
குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகளை மீட்டிருந்தன.</p><p>அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும், புலனாய்வாளர்களால் அவற்றை மீட்டெடுக்க முடிந்தது.
</p><p>
மீட்கப்பட்ட பொருட்களில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 காணொளிகள் அடங்கியிருந்ததாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், அத்தகவல்கள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p></p><h2>13 சிறை அதிகாரிகள்</h2><p>
</p><p>
அந்தக் கருவிகளில் 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி எண்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதுடன், சிறைச்சாலைகள் தலைமை ஆணையருக்கு இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வாளர்கள் 17 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, கெஹல்பத்தாரா பத்மே 2021 மே மாதம் இலங்கையை சட்டப்பூர்வமாக விட்டு வெளியேறியதிலிருந்து, சுமார் 15 முறை 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். </p><p>அந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் படுகை பெட்ரோலிய ஆய்வு! உள்நுளைகிறது சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mannar-basin-petroleum-exploration-license-1787662345"></link>
            <id>https://ibctamil.com/article/mannar-basin-petroleum-exploration-license-1787662345</id>
            <summary type="text">மன்னார் படுகையில் இந்த ஆண்டுக்கான பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்றை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (25) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் இந்த ஆண்டுக்கான பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்றை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.</p><p> இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (25) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
</p><p>
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><h2>நான்கு ஆய்வுத் தொகுதிகள்</h2><p>
</p><p>
புதிய உரிமம் வழங்கும் சுற்றின் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வுத் தொகுதிகள், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளுக்காக வழங்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50bc719-80eb-42cc-af17-626db17ea79e/26-6a8d92cc7fab8.webp' /></p><p>
</p><p>
மன்னார் படுகையில் முன்னெடுக்கப்பட்ட முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோகார்பன்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், அப்பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவிக்கையில், இதுவரை ஒப்பீட்டளவில் பெருமளவு ஆய்வு செய்யப்படாத மன்னார் படுகைப் பகுதி, நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், அதிகாரசபையிடம் தற்போது உள்ள மன்னார் படுகை தொடர்பான புவியியல் தரவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
</p><p>
நீல் டி சில்வாவின் கூற்றுப்படி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியமும், 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை துளையிடுதல் மூலம் பிரித்தெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:30:36+00:00</updated>
        </entry>
    </feed>
