<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-22T19:10:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navy-seizes-indian-fishing-trawler-nine-fishermen-1784744908"></link>
            <id>https://ibctamil.com/article/navy-seizes-indian-fishing-trawler-nine-fishermen-1784744908</id>
            <summary type="text">இன்று மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டி சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டி சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி இழுவைப் படகு ஒன்றை சிறிலங்கா கடற்படை பறிமுதல் செய்ததுடன், ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்களையும் (9) கைது செய்தது.</p><p>50-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் இணைதீவுக்கு தெற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்தன.</p><h2>இந்திய மீன்பிடி இழுவைப் படகு பறிமுதல்</h2><p>

இந்த நடவடிக்கையின் போது, ​​ஒரு இந்திய மீன்பிடி இழுவைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் அதில் இருந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7008d40-5a81-40a4-a7a0-d81d6345c765/26-6a610bcea01f7.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களும், பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில்&nbsp;நீரியல் வள திணைக்கள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T18:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி! மத்திய கிழக்கின் உள்கட்டமைப்புகளை நெருங்கும் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-us-on-infrastructure-strikes-1784736826"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-us-on-infrastructure-strikes-1784736826</id>
            <summary type="text">ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள சிவில் உள்கட்டமைப்புகள் குறிப்பாகப் பாலங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள சிவில் உள்கட்டமைப்புகள் குறிப்பாகப் பாலங்கள் மற்றும் ஆற்றல் மையங்கள் மீது கடுமையான பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் கடற்போக்குவரத்து மீது இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு முறையும், ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தார் .</p><p>

ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானின் அர அதிகாரப்பூர்வ தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அறிக்யொன்றை வெளியிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c5992f-cc74-42a0-83dd-ad31cd911d4d/26-6a60f6d7e7a3d.webp' /></p><p>குறித்த அறிக்கையில் “ஹோர்முஸ் நீரிணையின் மீதான இறையாண்மையைச் செலுத்துவதில் ஈரான் இரும்பு போன்ற உறுதியைக் கொண்டுள்ளது. </p><p>

அந்த நீரிணை மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தலாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஆற்றல் வளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பிற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவரிடம் பணம் கொள்ளை : 24 மணிநேர விசாரணை வளையத்துள் முன்னாள் அமைச்சரின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-ministers-son-under-24-hour-investigation-1784738732"></link>
            <id>https://ibctamil.com/article/former-ministers-son-under-24-hour-investigation-1784738732</id>
            <summary type="text">சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனதித் பண்டாரபாயவை, 24 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (22) அனுமதி வழங்கினார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (21) கொள்ளுபிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் விசாரணை</h2><p>காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டிய காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9ab297-546c-42a4-b453-e5f91acd779e/26-6a60f7c1d4853.webp' /></p><p>
</p><p>
கொள்ளையைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபர் அனுதா பண்டார என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது</p><p></p><h2>24 மணி நேர காவல் உத்தரவு</h2><p>&nbsp;கொள்ளை நடந்த நேரத்தில் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52c0512-f888-4a22-992f-a683e8020763/26-6a60f7c282243.webp' /></p><p>

அதன்படி, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை காவலில் வைக்க வேண்டும் என புலனாய்வு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, இந்த 24 மணி நேர காவல் உத்தரவை வழங்கினார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T17:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-school-students-deaths-from-a-waterfall-1784735499"></link>
            <id>https://ibctamil.com/article/two-school-students-deaths-from-a-waterfall-1784735499</id>
            <summary type="text">&amp;nbsp;கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர். 

13 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர். </p><p>

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> 

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது.&nbsp;</p><h2>புகைப்படம் எடுக்க முற்பட்ட போது விபத்து&nbsp;</h2><p>அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f7cf03-478b-452e-a145-d295c6672ce1/26-6a60ef2bb5ff9.webp' /></p><p> </p><p>

இந்தசம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T16:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்மாற்றப்பட்ட பாரிய திமிங்கிலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/beluga-whales-relocated-from-canada-1784733156"></link>
            <id>https://ibctamil.com/article/beluga-whales-relocated-from-canada-1784733156</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மீன் காட்சியகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன.
</p><p>

மேலும் இரண்டு திமிங்கிலங்கள் டெக்சாசில் உள்ள சான் ஆன்டோனியோ கடல் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.</p><h2>30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சி</h2><p>&nbsp;மரைன்லேண்ட் கடல் பூங்கா மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த 30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சியின் முதல்கட்டமாக ஆறு திமிங்கிலங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fac695-4402-4459-a979-9fc425807d43/26-6a60dde6409a3.webp' /></p><p>
</p><p>
மீதமுள்ள திமிங்கிலங்கள், ஜோர்ஜியா, சான் டியாகோ, ஸ்பெயின் ஆகிய இடங்களில் உள்ள கடல் அருங்காட்சியகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-22T15:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து மன்னார் வந்த அருட்சகோதரிகளுக்கு அதிகாலைவேனை நிகழ்ந்த அனர்த்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-carrying-nuns-in-mannar-accident-1784730082"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-carrying-nuns-in-mannar-accident-1784730082</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று
புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையனாலங்குளம் இரும்பு பாலத்தில்
விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று
புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையனாலங்குளம் இரும்பு பாலத்தில்
விபத்துக்குள்ளானது.
</p><p>
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்)
காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>&nbsp;யாழ்.போதனாவில் ஒருவர் அனுமதி&nbsp;</h2><p>&nbsp;அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக
சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10d1c132-6c4c-420b-9984-8c61657db11f/26-6a60d9bac84d5.webp' /></p><p>
</p><p>
மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள்
(கன்னியாஸ்திரிகள்) பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளாகியமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோய்வாய்ப்பட்ட சகோதரனை கொன்று விட்டு காவல்துறையில் சரணடைந்த நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-confessed-to-killing-his-brother-arrested-1784729771"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-confessed-to-killing-his-brother-arrested-1784729771</id>
            <summary type="text">
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இன்று (22)...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
</p><p>
இன்று (22) பிற்பகல் கத்தியுடன் ஆரச்சிக்கட்டுவ காவல்நிலையத்திற்கு வந்த நபர், தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
</p><p>
அதன்படி, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறையினர் சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று, சோதனை நடத்திய நிலையில், சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></h2><p>
இந்த நிலையில், அரச்சிக்கட்டுவ - ராஜகதலுவ பகுதியைச் சேர்ந்த துலன் ஹசங்க என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2dfd77f-e35e-4ea7-b722-a7bc18dc0823/26-6a60d2d8698cb.webp' /></p><p>
</p><p>
கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனை, சந்தேக நபரே பகல் நேரத்தில் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-07-22T14:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் அகழப்பட்ட 11 என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784728188"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784728188</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(22) புதன்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(22) புதன்கிழமை நடைபெற்றது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம்
புதன்கிழமை, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>455 என்பு கூடுகள் முழுமையாக அகழ்வு</h2><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ed5545e-a9ee-4790-9558-06129162cddb/26-6a60cd862ec69.webp' /></p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன</p><p>

</p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர்</h2><p>அதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட
குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட
நிபுணர்குழுவினருடன் அகழ்வுபணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என
சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef915583-2693-42a6-8d8c-ca344e9bad85/26-6a60cd8711ce4.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-against-gotabayas-former-secretary-1784726104"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-against-gotabayas-former-secretary-1784726104</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்</p><h2>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்&nbsp;வழக்கு</h2><p>இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (22) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c166c0fd-da40-453b-ae7b-b2b620b42752/26-6a60c710d3dfd.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pottamman-intelligence-division-moves-1784723254"></link>
            <id>https://ibctamil.com/article/pottamman-intelligence-division-moves-1784723254</id>
            <summary type="text">கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்படுத்தித்தான்.
</p><p>
வடக்கு - கிழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில் கிழக்கில் இடம்பெறும் அனைத்தும் தனக்கூடாகவே இடம்பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த கருணா, புலனாய்வு நகர்வுகளுக்கு தன்னூடகத்தான் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் சேர்த்து வைத்திருந்தார்.</p><p>

இந்த திட்டங்களின் முதல் படித்தான் கருணா பிரிவிற்க்கு முன்னதாக றெஜினோல்ட் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு முக்கிய அறிவிப்பு.
</p><p>
இந்த அறிவிப்பின் பின்னணி மற்றும் தாக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் திட்டங்களுக்கு பாரதூரமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.
</p><p>
இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிளவுபட முன்னர் நடந்தது என்ன? றெஜினோல்ட் வெளிப்படுத்திய நிலைப்பாடு என்ன/ இதனால் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? என்பது குறித்து ஆராய்கிறது டொடரும் ஒளியாவனம்...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oK5W5uhPSqM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-healthcare-worker-1784721601"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-healthcare-worker-1784721601</id>
            <summary type="text">கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9c74305-f650-445a-87e6-446f0d96b3f9/26-6a60c07964777.webp' /></p><h2>ஆரம்பக்கட்ட விசாரணை</h2><p>

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த,அரச வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்த டபிள்யூ.டி.தேவாநந்த என்ற சுகாதார உதவி ஊழியராவார்.</p><p>

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரை கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. </p><p>

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா முன்னிலையாகாமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><span style="color: inherit;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a064cc26-0c5b-438b-93b5-aa78cd784393/26-6a60c07a14c06.webp' /></span></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:07:17+00:00</updated>
        </entry>
    </feed>
