<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-31T13:47:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலின் முதல் தீர்ப்புக்கு முன்னர் பூஜித் கடத்திய 7 வருடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-first-verdict-of-the-easter-sunday-attack-1785502907"></link>
            <id>https://ibctamil.com/article/the-first-verdict-of-the-easter-sunday-attack-1785502907</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வு எச்சரிக்கைகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், அந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்வி நீண்டகாலமாக விவாதப் பொருளாக இருந்து வந்தது.</p><p>

நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பிரதான பொறுப்பேற்றிருந்த அப்போதைய காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தாக்குதலைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பது இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாகும்.</p><p></p><p>
</p><h2>
பூஜித் ஜயசுந்தர் யார்</h2><p>
பூஜித ஜயசுந்தர 1985 ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆக இலங்கை காவல்துறை இணைந்தார்.
</p><p>
அதன் பின்னர்,

1991 – காவல்துறை அத்தியட்சகர் (SP)
</p><p>1996 – சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்(SSP) </p><p>2005 – பிரதிப் காவல்துறை மா அதிபர் (DIG)</p><p>2010 – சிரேஷ்ட பிரதிப் காவல்துறை அதிபர் (SDIG)

என பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
</p><p>
2016 ஏப்ரல் 20 ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன் பூஜித் ஜயசுந்தரவை காவல்துறைமா அதிபராக நியமித்தார். </p><p>முன்னாள் காவல்துறை அதிபர் என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
</p><p>
அரசியல் பின்னணி

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசின் கீழ் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.</p><p></p><h2>காவல்துறை மா அதிபர் மீது விமர்சனங்கள்</h2><p>
</p><p>
ஆனால் 2018 ஒக்டோபர் 26 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, காவல்துறை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
</p><p>
பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் அந்த நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்தது.</p><p> அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றாலும், காவல்துறை தொடர்ந்து ஜனாதிபதியின் கீழேயே இயங்கியது.</p><p>

இது குறித்து&nbsp; ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, "காவல்துறை அதிபரை மட்டும் பதவியில் இருந்து நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இதற்கு அவரைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.</p><p>

காவல்துறை மா அதிபர் மீது விமர்சனங்கள் இருந்தாலும், முழுப் பொறுப்பையும் அவர் மீது மட்டும் சுமத்துவது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>ஈஸ்டர் தாக்குதலுக்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், 2019 ஏப்ரல் 29 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் உத்தரவின் பேரில் பூஜித ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, தம்மை கட்டாய விடுப்பில் அனுப்ப ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும், அந்த முடிவு சட்டவிரோதமானது என்றும் தெரிவித்து, 2019 மே 29 அன்று அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்.</p><p>2019 ஜூன் 6 அன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பூஜித ஜயசுந்தர சாட்சியம் வழங்கினார்.</p><p>

2018 அக்டோபர் 23 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அந்த தகவலை அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தமக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.</p><p></p><h2>கட்டாய விடுப்பு</h2><p>
</p><p>
மேலும், கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதற்கு முன்பு பதவி விலகுமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் இருந்து தாம் விலக்கப்பட்ட நிலையில், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான முழுப் பொறுப்பையும் தமக்கு மட்டும் சுமத்துவது எவ்வளவு நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஜனாதிபதியின் நிலைப்பாடு

இதற்கிடையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னறிவிப்பு புலனாய்வுத் தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.</p><p>இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹெமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் இருந்த காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் ஜூலை 2, 2019 அன்று கைது செய்யப்பட்டனர்.</p><p>&nbsp;தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் பற்றி அறிந்திருந்ததை இருவரும் ஒப்புக்கொண்டதோடு&nbsp; ஆனால் அவர்கள் பொறுப்பை ஏற்க மறுப்பதை அடுத்து இந்த நடவடிக்கை அப்போது மேற்கொள்ளப்பட்டது.</p><p>2019 ஜூலை 9 ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் இருந்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p> பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p>

இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நீண்டகாலம் நீதிமன்றத்தில் இடம்பெற்றன.

இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி மற்றும் அதனைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (Presidential Commission of Inquiry – PCoI) நியமிக்கப்பட்டது. </p><p>அந்த ஆணைக்குழுவின் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பலர் சாட்சியம் வழங்கினர்.
</p><p>
ஆணைக்குழுவின் விசாரணைகளில், இந்திய புலனாய்வுப் பிரிவிலிருந்து பல கட்டங்களாக தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் இலங்கைக்கு கிடைத்திருந்ததாகவும், அவை பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பரிமாறப்பட்டிருந்த போதிலும், அவற்றை ஒருங்கிணைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும் தெரியவந்தது.</p><p></p><h2>&nbsp;பொதுமக்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு&nbsp;</h2><p>
அதேவேளை, தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் இருந்து தாம் விலக்கப்பட்டிருந்ததாக பூஜித ஜயசுந்தர முன்வைத்த வாதமும் விசாரணைகளின் போது விரிவாக ஆராயப்பட்டது. எனினும், காவல்துறை மா அதிபராக நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு அவரிடமும் தொடர்ந்திருந்ததாக பல தரப்பினர் சுட்டிக்காட்டினர்.</p><p>

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் பல உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது.</p><p> அந்தப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோரின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பாதுகாப்பு தரப்பை அழைக்காமலேயே விடுவித்தது. </p><p>இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என வாதிட்ட சட்டமா அதிபர், உயர நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்தார்.

அந்த மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு தரப்பு சாட்சியங்களை பதிவு செய்யாமல் வழக்கை முடித்தது சட்டப்பிழை எனத் தீர்மானித்தது. </p><p>அதனைத் தொடர்ந்து, வழக்கை மீள விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மறுவிசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டது.</p><p> ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவிருந்ததாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அறிந்திருந்தும், தனது சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகவும், அதனால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமான அலட்சியத்தைக் காட்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
பல ஆண்டுகள் நீடித்த விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் இரு தரப்பினரின் வாய்மொழி மற்றும் எழுத்துமூல வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2026 ஜூலை 31 அன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
</p><p>
அந்தத் தீர்ப்பில், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றவாளி என நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்தனர். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை, தனது அரசுப் பொறுப்பை கடுமையாகப் புறக்கணித்தமை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான சட்டப்பூர்வ பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>இந்தத் தீர்ப்பு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றவியல் வழக்கில் வழங்கப்பட்ட மிக முக்கியமான நீதித் தீர்ப்பாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T13:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-pujith-jayasundara-1785499237"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-pujith-jayasundara-1785499237</id>
            <summary type="text">போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தது.</p><p></p><h2>மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம்</h2><p>
</p><p>
எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலைத் தீர்ப்பை இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளை மீண்டும் பதிவு செய்து வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6424f537-1db8-4175-ac84-8fcb7efc47ab/26-6a6c92048fddf.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><p>பெரும்பான்மைத் தீர்ப்பை வாசித்த மூவரடங்கிய நீதிமன்றத் தலைவர் நீதியரசர் பிரியந்த லியனகே (<b>சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 நிறுபிக்கப்பட்டது</b>), 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெளிவான புலனாய்வுத் தகவலை முன்னாள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார்.</p><p>
அவ்வாறான எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் காவல்துறைமா அதிபராக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியதாகவும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அந்தக் கடமையின்மை காரணமாக 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்தனர் என்றும், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதியரசர்கள் அறிவித்தனர்.</p><p>

இதற்கிடையில், சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் விராஜ் வீரசூரிய(<b>855 குற்றச்சாட்டுகளில் ஒன்று மாத்திரம்</b>) , பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அவரை குற்றமற்றவர் என விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
</p><p>
இதேவேளை, இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தீர்ப்பு வாசிப்பின் முடிவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_RZRog2w1D8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><b>தொடர்புடைய செய்திகள்</b></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T12:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-prices-to-remain-unchanged-in-august-cpc-1785496329"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-prices-to-remain-unchanged-in-august-cpc-1785496329</id>
            <summary type="text">இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. </p><p>இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா&nbsp; இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும் என குறிப்பிட்டார்.</p><p></p><h2>பழைய விலையில் தொடரும்&nbsp;</h2><p>

அத்துடன், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் தொடர்கின்றது என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4946cfb4-cbfd-4292-b339-460d7f35d7ae/26-6a6c85a87f7bc.webp' /></p><p>

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p><p></p><p>கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதால், அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்திருந்தார்.</p><p>
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன எனவும் அன்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஊடக அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்: பின் கதவால் சென்ற பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-media-repression-in-jaffna-1785496064"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-media-repression-in-jaffna-1785496064</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர்
சென்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர்
சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார் என பிராந்திய ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p>

ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில் அநுர குமாரதிஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம்&nbsp;</h2><p>
மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி
பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f68cc365-163a-4fda-a579-2ade6d21ab13/26-6a6c8309ac288.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில்
மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G86mFxpeN50" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T11:08:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : பிரதியமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-release-under-the-military-control-in-vanni-1785494235"></link>
            <id>https://ibctamil.com/article/land-release-under-the-military-control-in-vanni-1785494235</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
</p><p>
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச்
செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர்,
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>&nbsp;கிளிநொச்சி மாவட்டச் செயலாளரின் கோரிக்கை&nbsp;&nbsp;</h2><p> நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது காவல்துறையினருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர்.</p><p>போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு
டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர்
காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின்
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்“ என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401e3764-61d4-4a44-867d-658c1aaf5254/26-6a6c7ee2d566a.webp' /></p><p>இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி
விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன்&nbsp; இராணுவ முகாமின் வேலியை 10
மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான
ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டிய நிலையில் இதனைச்
சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர்
தெரிவித்தார்.</p><p>அத்துடன் திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம்
தெரிவித்தார்.</p><p></p><h2>முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்</h2><p>இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17
ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 1,493.2
ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும்
கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும் என&nbsp;முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்
அ.உமாமகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>அதனைத் தொடர்ந்து வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28129e20-9a3d-49e0-8430-5cfbdd1b3831/26-6a6c7f2f847f4.webp' /></p><p> வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப்
பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.</p><p> கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப்
பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின்
சிரேஷட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்,
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆதரவு! பல்கேரியா - சைப்ரஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-bulgaria-cyprus-over-us-support-1785492952"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-bulgaria-cyprus-over-us-support-1785492952</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவ விமானங்களை தற்காலிகமாக நிறுத்த அனுமதி வழங்கியுள்ள பல்கேரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவ விமானங்களை தற்காலிகமாக நிறுத்த அனுமதி வழங்கியுள்ள பல்கேரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.</p><p>

பல்கேரிய வெளிவிவகார அமைச்சர் வெலிஸ்லாவா பெட்ரோவா-சமோவாவுடன் தொலைபேசியில் பேசிய அராக்சி, பெஸ்மர் விமானப்படைத் தளத்தில் அமெரிக்க இராணுவ விமானங்களை நிறுத்த அனுமதிப்பது, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாகும் என்றும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், இத்தகைய நடவடிக்கை ஈரான் மற்றும் பல்கேரியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p></p><h2>பலமுறை எச்சரிக்கை</h2><p>
தனது நாட்டுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் "விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று ஈரான் ஏற்கனவே பலமுறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763cdd5a-8197-4a4c-8f87-35328b0d8332/26-6a6c7e196ed27.webp' /></p><p>

இதேவேளை, சைப்ரஸ் வெளிவிவகார அமைச்சர் கான்ஸ்டான்டினோஸ் கொம்போஸுடனும் அப்பாஸ் அராக்சி தொலைபேசியில் கலந்துரையாடினார். </p><p>அப்போது, சைப்ரஸில் உள்ள வெளிநாட்டு இராணுவத் தளங்கள் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
கடந்த வாரம், பல்கேரியா நாடாளுமன்றம், பெஸ்மர் விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் KC-135வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் எட்டு வரை மற்றும் 250 இராணுவப் பணியாளர்கள் வரை தற்காலிகமாக நிலைநிறுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியது. </p><p>இந்த முடிவு ஈரானின் எதிர்ப்பையும் மீறி எடுக்கப்பட்டது.

எனினும், இந்த நடவடிக்கையின் கீழ் தாக்குதல் நோக்கமுடைய ஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படமாட்டாது என்றும், இதனால் பல்கேரியா எந்த இராணுவ நடவடிக்கையிலும் நேரடியாக பங்கேற்கும் தரப்பாக மாறாது என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
</p><p>
சைப்ரஸில், RAF அக்ரோதிரி உள்ளிட்ட இரண்டு பிரித்தானியா இறையாண்மை கொண்ட இராணுவத் தளங்கள் உள்ளன.</p><p></p><h2>ஆளில்லா விமானம் தாக்குதல்</h2><p> </p><p>இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த சில நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் அக்ரோதிரி விமானப்படைத் தளம் மீது ஈரான் அனுப்பிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05792650-0874-4741-b6aa-5eeb499dea62/26-6a6c7e1a2b408.webp' /></p><p>
</p><p>
போரின் ஆரம்ப கட்டத்தில், ஈரானின் ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் ஏவுதளங்களுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல்களுக்காக பிரித்தானியா இராணுவத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு பிரித்தானியா&nbsp; இணக்கம் தெரிவித்திருந்தது.
</p><p>
ஆனால் பின்னர், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் RAF அக்ரோதிரி விமானப்படைத் தளம் பயன்படுத்தப்படமாட்டாது என்று பிரித்தானியா தெளிவுபடுத்தியது.</p><p>

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற புதிய பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹம், அமெரிக்காவுடனான பரந்தளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்பாட்டை தொடர்ந்தார். </p><p>இதையடுத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடாது என்று பிரித்தானியாவை நோக்கி ஈரானின் புரட்சிகரக் காவல்படை (Revolutionary Guards) எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T10:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/49000-migrants-storm-spanish-border-in-24-hours-1785491405"></link>
            <id>https://ibctamil.com/article/49000-migrants-storm-spanish-border-in-24-hours-1785491405</id>
            <summary type="text">மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (31) காலை வரை மக்கள் அங்கு சென்றுவருவதால் ஏறபட்ட நெருக்கடியை அடுத்து ஸ்பெயினின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இன்று செவுட்டா பகுதிக்கு அவசரமாக சென்றுள்ளனர்.</p><p> 
ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் இல்லாமல் மொராக்கோவின் கடற்கரையில் செவுட்டா இருந்தாலும் பகுதிக்குள் நுழைந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கு நிகர் என்பதால் 24 மணிநேரத்துக்குள் அலை அலையாக 49,000 மொரோக்கர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;18 பேர் பலியாகியுள்ளனர்</h2><p> </p><p>ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் நீந்தியும், காற்றடைக்கப்பட்ட சாதனங்களை பயன்படுத்தியும் நுழைந்துள்ள நிலையில் கடலில் நீந்த முற்பட்டவர்களில் 9 பேர் உட்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc84d191-872f-46c7-b1f5-da9c5e4a4f16/26-6a6c74ac5e1a5.webp' /></p><p>மொராக்கோவில் உள்ள செவுட்டா அல்லது மெலிலாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சாதகமாக கருதி இந்த நெருக்கடி உருவாக்கியுள்ளதாக கருதபபடுகிறது. </p><p>தற்போது அங்கு ஸ்பெயின் இராணுவத்தை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இந்த நெருக்கடியை அடுதத்து ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்க தனது விரைவுத் தலையீட்டு எல்லைப் படையை பிரான்ஸ் களமிறக்கியுள்ளது.</p><p></p><h2>மக்கள் தொகை அதிகரிப்பு&nbsp;</h2><p>ஆயிரக்கணக்கான மொரோக்கர்கள் நுழைந்ததால் 24 மணிநேரத்தில் செவுட்டாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011e75a8-fb56-48be-b4bd-11f6a604fe0a/26-6a6c74ad16b3d.webp' /></p><p>
நேற்று முதல், பலர் செவுட்டாவின் தெருக்களில் அலைந்து திரிந்து வருகின்றனர், அவர்களில் பலர் இரவை திறந்தவெளியில் கழித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>
இந்த நிலையில் ஷெங்கன் வலயத்தில் இருந்து ஸ்பெயின் வெளியேற வேண்டும் என்ற இத்தாலியின் கருத்தை ஸ்பெயின் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T10:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-steady-at-rs-340-usd-to-lkr-1785489777"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-steady-at-rs-340-usd-to-lkr-1785489777</id>
            <summary type="text">நேற்றுடன் (30) ஒப்பிடுகையில், இன்று (31) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.இன்றைய நாளுக்கான (31.07.2026) நாணயமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (30) ஒப்பிடுகையில், இன்று (31) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.</p><p>இன்றைய நாளுக்கான (31.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	331.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.33 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.05 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.23 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cedb3d7-db6a-49c3-9a65-79239e464b58/26-6a6c6b6fed450.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.92 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.34 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	256.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.79 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289</id>
            <summary type="text">நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>
இந்த இழப்பீட்டுத் தொகைகள், தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கிளைகள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி வணிக உரிமம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இழப்பீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகபட்சமாக 11 இலட்சம்</h2><p>

இலங்கை வைப்புத் தொகை காப்புறுதி திட்டத்தின் கீழ் தகுதி பெறும் வைப்பாளர்களுக்கு, அவர்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புத் தொகையின் மொத்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 11 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eaadb3d-fdcd-431e-b045-2b2c3f3125a7/26-6a6c678ba7678.webp' /></p><p>
</p><p>
இழப்பீட்டுத் தொகை, ஏற்கனவே உள்ள மக்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவோ, புதிதாகத் திறக்கப்படும் கணக்குகள் ஊடாகவோ அல்லது வங்கி Counters மூலம் பணமாகவோ வழங்கப்படும்.
</p><p>
2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 66(2) ஆம் பிரிவின் கீழ், 2026 ஜூலை 3 ஆம் தேதி முதல் நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிதி வணிக உரிமத்தை மத்திய வங்கி இரத்து செய்திருந்தது.
</p><p>
மேலும், காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் மற்றும் சட்டபூர்வ உரிமையாளர்கள் 2032 ஜூலை 2 ஆம் தேதி வரை இழப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பதுடன், நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மொத்த வைப்புத் தொகை 5,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் தேவையான ஆவணங்களையும் மின்னணு முறையில் மக்கள் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேவையான ஆவணங்கள்</h2><p>
</p><p>
மற்ற காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அசல் வைப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1623fd0f-a0a3-463c-8d77-ec32181a35d1/26-6a6c678c5d0c0.webp' /></p><p>
</p><p>
கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தனித்தனியாக இழப்பீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர இயலாத வைப்பாளர்கள், சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பத்திர (Power of Attorney) பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இழப்பீட்டு வழங்கும் நடைமுறை தொடர்பான விண்ணப்பப் படிவங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் மத்திய வங்கியின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.</p><p> அதேபோல், மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளிலும் அச்சுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் தகவல்கள் தேவைப்படும் வைப்பாளர்கள், இலங்கை மத்திய வங்கியின் வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் தீர்வுகள் திணைக்களம் (Deposit Insurance and Resolution Department) ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களை செலுத்தும் இளம் வயதினர் குறித்து காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-about-young-drivers-1785488381"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-about-young-drivers-1785488381</id>
            <summary type="text">இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதிவேகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் காரணமாக அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இளைஞர்களை உள்ளடக்கியவையாக இருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் உதவி அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.</p><p>
இளம் வயதினருக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோர், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>பொறுப்பற்ற வாகன ஓட்டம்</h2><p>
</p><p>
அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டத்தை சட்டங்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604bbc2d-50db-4e12-a7eb-ccab4c29a8dd/26-6a6c63ff56051.webp' /></p><p>மேலும், இவ்விடயத்தில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-easter-attack-1785487677"></link>
            <id>https://ibctamil.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-easter-attack-1785487677</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க போதுமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க போதுமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்குகளின் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசாரணை நீதிமன்றம் இன்று (31) பிற்பகல் வழங்க உள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு, மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.</p><p> எனினும், சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.</p><p></p><h2>உளவுத்துறை தகவல்</h2><p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8f0e6d-4eb9-4da5-b69b-4a0eebf0bb0c/26-6a6c61c34fcc2.webp' /></p><p>

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 275 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
</p><p>
இந்த வழக்கின் நீண்டகால விசாரணைக்குப் பின்னர், 2022 பிப்ரவரி 18 ஆம் திகதி நீதிபதிகள் நாமல் பலல்லே, முகம்மது இர்ஷாதீன் மற்றும் ஆதித்ய பதபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, பிரதிவாதிகளிடம் பாதுகாப்பு சாட்சிகளைப் பதிவு செய்யாமலேயே அவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது.
</p><p>அந்தத் தீர்ப்பில், தாக்குதல் தொடர்பாகத் தெளிவான மற்றும் குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களை மாநில புலனாய்வு சேவை (SIS) வழங்கத் தவறியதாகவும், அப்போதைய SIS பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனது கடமைகளை முறையாக நிறைவேற்றவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
</p><p>
மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் மீது சுமத்தப்பட்ட கடமையின்மை குற்றச்சாட்டில் குற்றவியல் நோக்கம் (Criminal Intent) இருந்ததை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.</p><p></p><h2>உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு</h2><p>

இதனை எதிர்த்து சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை விசாரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5119a02-73f0-4865-b98e-1902fe9573da/26-6a6c61c430391.webp' /></p><p>
</p><p>
2024 நவம்பர் 5 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், உயர்நீதிமன்றத்தின் விடுதலைத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளைப் பதிவு செய்து வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
அதன்படி, நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
நீண்டகால விசாரணை நடவடிக்கைகளின் பின்னர், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பை இன்று பிற்பகல் அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

உயிர்த்த&nbsp; ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-arrested-for-criticizing-anura-1785483113"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-arrested-for-criticizing-anura-1785483113</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரான காவல்துறை அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f153f865-ee3c-4b04-ba6b-8aae91ebcce6/26-6a6c564e568a1.webp' /></p><p>குறித்த காவல்துறை அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VDQeYfFlZg4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T08:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுருட்டிய அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/politician-who-seized-thousands-of-acres-land-east-1785484894"></link>
            <id>https://ibctamil.com/article/politician-who-seized-thousands-of-acres-land-east-1785484894</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற பல்வேறு அரச நிறுவனங்களின் ஊடாக ஒரு லட்சத்து இருபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற பல்வேறு அரச நிறுவனங்களின் ஊடாக ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் திட்டமிட்ட முறையில் சுவீகரிக்கப்பட்டு அபகரிக்கப்படுவதாக சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.
</p><p>
அதற்கும் அப்பால் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அரசியல் தலைமைகளும் அவர்களது பினாமிகளும் தங்களது சுய தேவைக்காக பெருமளவு காணிகளை பிடித்து வைத்துள்ளதாக தற்போது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றும் பறந்துள்ளது.
</p><p>
இந்த விவகாரம் திருடர்களின் கைகளில் சாவி கிடைக்க கூடாது என்ற மக்களின் கருத்துப்படி இதிலுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5rE2vDsgHEw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:01:44+00:00</updated>
        </entry>
    </feed>
