<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-22T07:21:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் இலங்கை காவல்துறையினர்: பொதுமக்களின் உதவி நாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-police-searching-3-chinese-nationals-1787377548"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-police-searching-3-chinese-nationals-1787377548</id>
            <summary type="text">கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.</p><p>கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலேயே இந்த நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.&nbsp;</p><p>
சம்பவத்தன்று மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை</h2><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8fd2d9b-de2c-4cf9-bf33-8f8daff036c9/26-6a89435d9287c.webp' /></p><p>மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
காவல்துறை விசாரணைகளன்படி, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் இலங்கையிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் நாட்டிற்குள் நுழைய பயன்படுத்திய சுற்றுலா விசாக்கள் காலாவதியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
இதனால், சந்தேகநபர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் அவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவும் வகையில், மூன்று சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை <b>071 859 1735</b> என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : நீதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811</id>
            <summary type="text">நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> 

பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d06fc3-d5ef-41de-bc04-2864bee14108/26-6a89401e8e1a2.webp' /></p><p> 

ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.“ என தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில், அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்பட்ட சமித்புர சத்துவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை : சிக்கிய மற்றுமொரு துப்பாக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summitpura-chathu-revolver-type-firearm-recovered-1787375514"></link>
            <id>https://ibctamil.com/article/summitpura-chathu-revolver-type-firearm-recovered-1787375514</id>
            <summary type="text">ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ளார்.</p><p>இந்தநிலையில் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்&nbsp;உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை</h2><p> 

28 வயதுடைய சந்தேகநபரான&nbsp;சமித்புர சத்து இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa8bd66-15ae-48d8-b029-ac58d80cc8d2/26-6a8939872ba7f.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பாடசாலையில் வாள்வீச்சுத் தாக்குதல் : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sword-attack-at-a-sweden-school-death-1787372938"></link>
            <id>https://ibctamil.com/article/sword-attack-at-a-sweden-school-death-1787372938</id>
            <summary type="text">மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுவீடன் பாடசாலை</h2><p>
</p><p>
தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca6c662-b0a5-4386-9ffa-5a98f10cfa81/26-6a8933b137e87.webp' /></p><p>தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p>
கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசம் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-not-to-extend-suresh-sallays-detention-order-1787372367"></link>
            <id>https://ibctamil.com/article/anura-not-to-extend-suresh-sallays-detention-order-1787372367</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அத்துடன் சுரேஷ் சலேயை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான விசேட மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு ஓகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சலேயின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேசிய வைத்தியசாலையில் அனுமதி&nbsp;&nbsp;</h2><p>பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ICD எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa96291-3676-4654-9f88-413cb9edaccc/26-6a8928e5eada2.webp' /></p><p>

இந்த சிகிச்சைக்குப் பின்னர் சலேயிற்கு தொடர்ச்சியான விசேட மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய வைத்தியசாலையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>

எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சலேயின் மனைவி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.
</p><p>
அத்துடன், சலே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலய சூழலில் வெற்றிலை மென்ற ஐவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-chewed-betel-leaves-in-temple-premises-1787371683"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-chewed-betel-leaves-in-temple-premises-1787371683</id>
            <summary type="text">தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை
வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது
புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றாக தடை</h2><p>
</p><p>
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும்
பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d2a9b5-fbbf-4d53-87c8-ae177adec256/26-6a8924bc0effc.webp' /></p><p>

இந் நிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில்
காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம்
50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-year-old-child-died-after-being-hit-by-a-tractor-1787368679"></link>
            <id>https://ibctamil.com/article/3-year-old-child-died-after-being-hit-by-a-tractor-1787368679</id>
            <summary type="text">கிளிநொச்சி - முரசுமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்று (21.08.2026) இரவு இந்த சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - முரசுமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (21.08.2026) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.</p><p></p><h2>3 வயது குழந்தை பலி</h2><p>

</p><p>இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e827b8-915c-4a90-9cb8-01bc23a6deb0/26-6a8921df47f6f.webp' /></p><p>இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை, பின் சக்கரத்திற்குள் சிக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>விபத்தில் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.</p><p>இந்த நிலையில் உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் துறை ஊழியர்களுக்கான தொடருந்து பருவச்சீட்டு : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/online-train-season-tickets-for-govt-employees-1787368975"></link>
            <id>https://ibctamil.com/article/online-train-season-tickets-for-govt-employees-1787368975</id>
            <summary type="text">தனியார் துறை ஊழியர்களுக்கான&amp;nbsp;தொடருந்து பருவச்சீட்டு குறித்து&amp;nbsp;போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் துறை ஊழியர்களுக்கான&nbsp;தொடருந்து பருவச்சீட்டு குறித்து&nbsp;போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்காக இணைய வழி ஊடாக தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>

நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரச துறை ஊழியர்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரச துறை ஊழியர்களுக்காக இணையவழி ஊடாக தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33eca-af82-46e1-9730-2b6d7f3c2615/26-6a891e01e1fa0.webp' />&nbsp;</p><p>அதற்கமைய ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவித சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி தொடருந்து பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>அத்துடன், நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><h2>&nbsp;கட்டாயமாக்கப்பட்டுள்ள&nbsp;ஆசனப்பட்டி </h2><p>எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4883bc84-f04a-4c16-99ef-3c9fab5027d2/26-6a891e02d5ba2.webp' /></p><p>

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்குப் பத்து நாட்களுக்கான விசேட பயிற்சி வழங்குவதற்கும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான வாகனங்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதனிடையே, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிளுக்கென்றே தனியான ஒழுங்கு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/final-rites-of-the-late-nanda-malini-on-today-1787365944"></link>
            <id>https://ibctamil.com/article/final-rites-of-the-late-nanda-malini-on-today-1787365944</id>
            <summary type="text">இவ்வுலகை விட்டு மறைந்த தலைசிறந்த இசைக் கலைஞர் நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் இன்று (22) இடம்பெறவுள்ளன.புகழ்பெற்ற இலங்கைப் பாடகி நந்தா மாலினி, தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்வுலகை விட்டு மறைந்த தலைசிறந்த இசைக் கலைஞர் நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் இன்று (22) இடம்பெறவுள்ளன.</p><p>புகழ்பெற்ற இலங்கைப் பாடகி நந்தா மாலினி, தனது 82 ஆவது வயதில், நாவலவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம்&nbsp; (20) காலமானார்.</p><p>அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இறுதி அஞ்சலி&nbsp;</h2><p>அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (22) மாலை 5.00 மணிக்கு பொரளைப் பொது மயானத்தில் நடைபெறும் என பேராசிரியர் சுனில் அரியரத்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/904f3572-e81a-4fe6-ac71-4dacc963df29/26-6a89168ba7a86.webp' /></p><p>நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.</p><p> </p><p>இதேவேளை காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்.</p><p>மேலும் அன்னாரின் பூதவுடலுக்கு பாடகர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பவரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T03:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mass-eye-irritation-jaffna-temple-cause-revealed-1787362439"></link>
            <id>https://ibctamil.com/article/mass-eye-irritation-jaffna-temple-cause-revealed-1787362439</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுக்காக மருத்துவ சிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுக்காக மருத்துவ சிகிச்சை பெறும் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, நேற்று இரவு நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

&nbsp;</p><p></p><h2>லேசர் ஒளிக்கீற்றுகள்</h2><p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு&nbsp;பெரியவளவு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd6a5a7b-8ec0-44d2-bfec-ec10b30c3cb3/26-6a89026bccc0f.webp' /></p><p>
</p><p>இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது.</p><h2>பார்வை தொடர்பான பிரச்சினை</h2><p>பாதிக்கப்பட்டவர்களில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5689b29b-28b6-4b8b-9825-94dcd6df4f18/26-6a89026c81115.webp' /></p><p>“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.</p><p> குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/B5jZlSHL5lU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T02:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆலய திருவிழாவில் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர்...! யாழ் போதனாவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-remanded-over-jaffna-temple-lighting-incident-1787355894"></link>
            <id>https://ibctamil.com/article/man-remanded-over-jaffna-temple-lighting-incident-1787355894</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200 இற்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200 இற்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><p></p><h2>நீதவான் உத்தரவு</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (21-08-2026) மல்லாகம்
நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ca252c-0fca-4758-9b90-b808f598e49a/26-6a88e2f85fbaf.webp' /></p><p>இதையடுத்து, அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T02:22:38+00:00</updated>
        </entry>
    </feed>
