<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-26T05:25:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-pauses-us-strikes-on-iran-temporarily-1785039367"></link>
            <id>https://ibctamil.com/article/trump-pauses-us-strikes-on-iran-temporarily-1785039367</id>
            <summary type="text">ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
போரை மேலும் தீவிரப்படுத்துவது மத்திய கிழக்கில் அமைந்துள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள் மற்றும் பிற வான் பாதுகாப்பு வெடிமருந்துகளின் இருப்பை ஆபத்தான நிலைக்குக் குறைத்துவிடும்.
</p><p>
இதனாலேயே இந்த முடிவை ட்ரம்ப் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மூத்த ஆலோசகர்கள்</h2><p>

ட்ரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்கள் அத்தோடு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு ஒரு தற்காலிகமானதா அல்லது இந்த அமைதியான சூழல் நீடிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0ab35c-2c0d-4a72-a6f3-86aec93d3e98/26-6a6592ce293bc.webp' /></p><p>இருப்பினும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் வாய்ப்பளிக்கும் ட்ரம்பின் விருப்பத்தையும் மற்றும் தற்போதைய அளவிலான தாக்குதல்கள் அதன் செயல்திறனின் எல்லையை எட்டிவிட்டன என்பதையுமே இத்தீர்மானம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் மிகப்பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சாத்தியமான திட்டங்களை அமெரிக்க இராணுவம் ஏற்கனவே தயார் செய்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-national-arrested-with-over-20kg-drugs-1785039573"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-national-arrested-with-over-20kg-drugs-1785039573</id>
            <summary type="text">கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;குறித்த நபர் இன்று (26.07.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர் இன்று (26.07.2026)&nbsp; நாட்டிற்குள் 'ஹஷிஷ்' என்ற போதைப்பொருளைக் கடத்த முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ் என்ற போதைப்பொருளின் மதிப்பு ரூ. 201.89 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கனடா நாட்டவர் கைது</h2><p>கைது செய்யப்பட்ட நபர் ஓவியராகப் பணிபுரியும் 27 வயதுடையவர் என்று கபவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257937e3-d1dc-482f-8e9c-d4f54df86732/26-6a65945d8f150.webp' /></p><p>இவர் கனடாவின் டொராண்டோவில் போதைப்பொருட்களை வாங்கியதாகவும், பின்னர் கத்தாரின் தோஹாவிற்குப் பயணம் செய்து, அதிகாலை 2:30 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இலங்கை சுங்க அதிகரிகளால் அவரது பயணப் பைகளைச் சோதனையிட்டபோது, ​​சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 80 கட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் மற்றும் 117 கிராம் பழுப்பு நிற ஹஷிஷைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
 

சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு&nbsp; அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெடித்த சர்ச்சை : குற்றச்சாட்டை மறுத்து வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-outsiders-staying-at-the-presidential-palaces-1785038762"></link>
            <id>https://ibctamil.com/article/no-outsiders-staying-at-the-presidential-palaces-1785038762</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகப் செய்தி வெளியானது குறித்தே ஜனாதிபதி ஊடகப் பிரிவு அந்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.</p><p></p><h2>பாதுகாப்புப் படை அதிகாரிகள்</h2><p>
</p><p>
 

அந்த அறிக்கையில், குறித்த ஆண்டின் போது ஜனாதிபதி மாளிகைகளின் வளாகத்தில் உள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரபூர்வ தேவைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f69a0847-db91-4480-98cd-df1f93e97367/26-6a658c0f74e5a.webp' /></p><p>ஆனால் அந்த அதிகாரிகள் யாரும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள் தங்கியிருக்கவில்லை“ என்றும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T04:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி அசித நிரோஷனவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள் சங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basl-condemns-mp-s-attack-on-its-president-1785036400"></link>
            <id>https://ibctamil.com/article/basl-condemns-mp-s-attack-on-its-president-1785036400</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தான முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் துர்நோக்கம் கொண்டவை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று (25-07-2026) நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.</p><p></p><h2>நாடாளுமன்றச் சிறப்புரிமை</h2><p>

இதில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ராஜீவ் அமரசூரிய தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>

அதற்கு பதிலளித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aca2dd8-e8b4-4ab1-ac41-b78b8e360834/26-6a65873f97c6a.webp' /></p><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை பயன்படுத்திப் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தவே இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிரான இத்தகைய அரசியல் ரீதியான தாக்குதல்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.</p><p></p><h2>சட்டத்தரணிகள் சங்கம்</h2><p> 

இலங்கையின் சட்டச் சமூகம் என்றும் ஒற்றுமையுடன் திகழ்கிறது.</p><p> </p><p>சட்டத் துறையின் சுதந்திரம் மற்றும் நேர்மைக்கு எதிராக வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f5134f-bf83-4f85-992a-37199c97d59d/26-6a658741269e0.webp' /></p><p>

அத்துடன், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளின் பாதுகாப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறுமாறு எம்பி அசித நிரோஷனவுக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அவ்வாறு கூறினால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p>

இதேவேளை, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்தும் சட்டத்தரணிகள் சங்கம் தனது நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தற்காலிகச் சூழ்நிலை</h2><p>மேலும், “உயர் நீதிமன்றங்களைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தற்காலிகச் சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ கொண்டு வரப்படக் கூடாது.</p><p>
</p><p>தெளிவான நிறுவனத் தேவை, வெளிப்படையான நியாயப்படுத்துதல் மற்றும் துறைசார் பங்குதாரர்களின் பரந்த கலந்தாலோசனை இருக்கும் இடங்களில் மட்டுமே இத்தகைய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d908d803-e20f-488e-a9d4-aabe177baa26/26-6a658740781b0.webp' /></p><p>
அரசியலமைப்பு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை என்பது கொண்டு வரப்படும் திருத்தத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அது கொண்டு வரப்படும் நடைமுறையிலும் தங்கியுள்ளது.
</p><p>
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம் மற்றும் போராடும் உரிமை உள்ளிட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒன்றிணையும் ரணில் - சஜித் : கடுமையாக விமர்சிக்கும் அநுர தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-sajith-to-reunite-anura-side-is-in-fear-1785036574"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-sajith-to-reunite-anura-side-is-in-fear-1785036574</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்கு எந்தவித சவாலையும் அல்லது தாக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்கு எந்தவித சவாலையும் அல்லது தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என&nbsp;அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p> ரணில் விக்ரமசிங்க தன்னை மீண்டும் தலைவராகவும், சஜித் பிரேமதாசவை தனக்குக் கீழ் செயல்படும் சீடராகவும் மாற்றவே இச்சந்திப்புகள் ஊடாக முயல்கிறார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p> களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சஜித்தை கீழே தள்ளிவிட்டார்</h2><p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோதே எதையும் சாதிக்க முடியாமல் பிரிந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதையும் செய்துவிட முடியாது. இதனை ஒரு சமமான கூட்டிணைவாகப் பார்க்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d40d86a-7daf-4b78-a59e-2cf361d0ee72/26-6a6585a39b7ff.webp' /></p><p>சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க கட்டளைகளைப் பிறப்பிக்க, சஜித் பிரேமதாச அவற்றை அமைதியாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதே தெரிகிறது.</p><p> ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தன்னைத் தலைவராகக் காட்டிக்கொண்டுள்ளார்; சஜித்தை இரண்டாம் இடத்திற்கும் கீழே தள்ளிவிட்டார்.</p><p></p><h2>குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கம்</h2><p>

அத்துடன், இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நபர்களைக் கவனித்தால், அங்கிருந்த அனைவரும் ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடையவர்களாகவோ, பிணையில் உள்ளவர்களாகவோ அல்லது சந்தேகநபர்களாகவோ மட்டுமே இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96cfde54-a842-4ad3-95e9-c644dbbda962/26-6a6585a2eb30e.webp' /></p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
</p><p>
இவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலும், பயத்திலுமே சஜித், ரணில், நாமல் போன்றோர் பதற்றமடைந்து ஒன்றாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்“ என தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uYsKBg_ueGs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T03:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1785033621"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1785033621</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வெப்பச் சுட்டெண்ணின் தாக்கத்தின் காரணமாக இன்று பகல் வேளையில் கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce2a188-1285-49a3-8b67-a24a94921e94/26-6a657953a941e.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் குறித்து விசேட வர்த்தமாணி வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-president-s-counsel-rules-amended-1785030485"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-president-s-counsel-rules-amended-1785030485</id>
            <summary type="text">ஜனாதிபதி சட்டத்தரணிகள் (President’s Counsel) நியமனத்திற்கான வழிகாட்டல்களைத் திருத்தி அமைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி சட்டத்தரணிகள் (President’s Counsel) நியமனத்திற்கான வழிகாட்டல்களைத் திருத்தி அமைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
புதிய திருத்தப்பட்ட வழிகாட்டல்களின்படி, உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக (Attorney-at-Law) குறைந்தது 20 ஆண்டுகள் தொழில்முறை அனுபவத்தைப் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இனி ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதி பெறுவார்கள்.</p><p></p><h2>ஜனாதிபதி சட்டத்தரணி</h2><p>இந்த புதிய திருத்தத்தின் மூலம், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணப்பட்ட சில விசேட விதிவிலக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
முந்தைய வழிகாட்டல்களின் கீழ், உயர் நீதிமன்றச் சட்டத்தரணியாக 20 ஆண்டுகள் அனுபவம் பெற வேண்டும் என்ற பொதுவான விதி இருந்தபோதிலும், அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்யும் 15 ஆண்டுகள் அனுபவமுள்ள சட்டத்தரணிகளுக்குச் சிறப்பு நேர்வுகளில் (Special Cases) விதிவிலக்கு அளிக்கும் சட்ட ஏற்பாடுகள் இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ebdba5-c6a9-4bda-8afd-e6d9769a4ee4/26-6a65734ba235d.webp' /></p><p> தற்போது அந்த ஏற்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடைமுறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.</p><p>

தகுதியுடைய சட்டத்தரணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T02:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் மாயம் : தணிக்கை அலுவல விசாரணையில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/26vehicles-belonging-president-secretariat-missing-1785024971"></link>
            <id>https://ibctamil.com/article/26vehicles-belonging-president-secretariat-missing-1785024971</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் இருந்ததற்கான தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்படவில்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் இருந்ததற்கான தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்படவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த வாகனங்கள் காணாமல் போனதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது நபரிடம் ஒப்படைக்கப்பட்டதா குறித்து தணிக்கைத் துறைக்கு எந்த எழுத்துப்பூர்வ அறிக்கையையும் அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி சம்பந்தப்பட்ட அந்த 26 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை</h2><p>2025 மே 28 அன்று, இந்த வாகனங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தும் என்று ஜனாதிபதி செயலகம் தணிக்கைப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ef6297-d4c2-40e9-977f-8117e57e9b4c/26-6a6551ccd2865.webp' /></p><p>

எனினும் , இந்த ஆண்டு மார்ச் 19 அன்று கூட அந்த வாகனங்கள் இருந்ததற்கான ஆதாரம் சரிபார்க்கப்படவில்லை என்று தணிக்கை அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T02:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து வரி விதிப்பு! IMF - இன் வலியுறுத்தலுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/disagreement-between-the-imf-s-insistence-govt-1785028697"></link>
            <id>https://ibctamil.com/article/disagreement-between-the-imf-s-insistence-govt-1785028697</id>
            <summary type="text">2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஒரு திட்டம் குறித்து, சர்வதேச நாணய நிதியத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஒரு திட்டம் குறித்து, சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில், கூடுதல் அல்லது இரண்டாம் நிலை குடியிருப்புச் சொத்துக்களை இலக்காகக் கொண்ட சொத்து வரியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. </p><p>ஆனால், பிற வருவாய் ஈட்டும் வழிகள் இருப்பதாலும், வருவாய் இலக்குகள் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாலும் இந்த வரி தேவையில்லை என்று அரசாங்கம் கருதுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>வரவுசெலவுத் திட்ட கலந்தாய்வு</h2><p>
தற்போதைய வரும் வரவுசெலவுத் திட்ட கலந்தாய்வுகள் குறித்து அறிந்த வட்டாரங்களின்படி, 2023-ஆம் ஆண்டு முதல் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்திற்கு அடிப்படையாக விளங்கும் பரந்த வருவாய் திரட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டாவது மற்றும் அதற்குப் பிந்தைய வீடுகளுக்கு வரி விதிக்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c502dc9-5125-4c77-adb6-37b039722d51/26-6a65605b25bc2.webp' /></p><p>இதன்படி 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்படவுள்ள வருவாய் நடவடிக்கைகள், தேவையான இலக்குகளை அடைவதற்குப் போதுமானவை என்றும், எனவே வரியை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழாது என்றும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், சொத்துரிமை குறித்த முறையான தரவுத்தளம் தேவைப்படும் என்றும், எனவே அத்தகைய தகவல்களைத் தயாரிக்க நேரம் எடுக்கும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.</p><p>

2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இந்த வரி நடைமுறைக்கு வராவிட்டாலும் கூட, சர்வதேச நாணய நிதியம் (IMF) அதனை அறிமுகப்படுத்த தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வலுவான சாத்தியக்கூறு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p> 2023-ஆம் ஆண்டின் உறுதிமொழியானது, 2025-ஆம் ஆண்டுக்குள் ஒரு வழக்கமான நாடு தழுவிய சொத்து வரியை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. </p><p>பெப்ரவரி 2024-இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொழில்நுட்பக் குழு, அது இரண்டு காரணங்களால் தடுக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T01:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-who-smuggled-700-million-abroad-1785026889"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-who-smuggled-700-million-abroad-1785026889</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு பெரிய அளவிலான மோசடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு பெரிய அளவிலான மோசடியில் இலங்கையின் முன்னணி ஆடை வர்த்தக நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
இந்த மாபெரும் நிதி மோசடி தொடர்பாக நாட்டிலுள்ள 21 முன்னணி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றுள் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவு கொழும்பு பிரதான நீதவானுக்கு தெரிவித்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் A.Y. Investment என்ற நிறுவனத்தின் இயக்குனர் போல் நடித்து இந்த மோசடியை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p></p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>அவரைக் கைது செய்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாட்டு நாணயங்கள் , 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு சொகுசு கார் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46be87a0-7b96-49c6-9661-d0a84d144098/26-6a65594b13458.webp' /></p><p>

இந்த மோசடியில் ஈடுபட்ட 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், 10,156 முறை பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><p> இருப்பினும், அந்தப் பணத்துடன் தொடர்புடைய, நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் சுங்கப் பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
</p><p>
உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் சந்தேக நபரை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p>இந்நிலையில் மேற்குறிப்பிட்ட&nbsp; ஆடை வர்த்தக நிறுவன உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கூறப்படும் சுங்க வரிக் குறைப்பு வழக்கு தொடர்பாக அவரை விளக்கமறியலில் வைத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்..</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தொடர்புடைய வணிகங்கள் குறிவைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு நெருக்கமான வணிகங்களுக்குத் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியும் இருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T01:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெங் செபத: தன்னைத் தானே பார்த்து மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-only-question-mahinda-should-ask-himself-is-1785027322"></link>
            <id>https://ibctamil.com/article/the-only-question-mahinda-should-ask-himself-is-1785027322</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து &#039;&#039;தென் செபத&#039;&#039;(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ''தென் செபத''(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,</p><p>
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் தண்டனைக்காக காத்திருக்கும் மக்கள்&nbsp;</h2><p>
</p><p>



கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/714ea0f4-6946-40d6-875a-acde467599e6/26-6a655b5259480.webp' /></p><p>

எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். </p><p>எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.




ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். </p><p>இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
</p><p>
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.

எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pralhad-joshi-is-india-s-new-education-minister-1785009785"></link>
            <id>https://ibctamil.com/article/pralhad-joshi-is-india-s-new-education-minister-1785009785</id>
            <summary type="text">மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராகக் கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராகக் கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார்.</p><p>

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி
முர்மு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.
</p><p>
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத்
தொடர்ந்து, முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.</p><p></p><h2>காக்ரோச் ஜனதா கட்சி</h2><p> 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையில் 'ஜென் ஜி' (Gen Z) இளைஞர்கள்
நடத்திய தீவிரமான போராட்டங்களின் அழுத்தத்தாலேயே இந்தத் திடீர் முடிவு
எட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffaf8f03-09e7-4c58-8c9a-4fca3f84b87e/26-6a65167aaeb1d.webp' /></p><p>

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களின்
தொடர் எதிர்ப்பால், 36 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு
வந்துள்ளது.
</p><p>
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான பிரல்ஹாத் ஜோஷி, இதற்கு
முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப்
பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
</p><p>
தற்போது உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுடன் சேர்த்து கல்வித்
துறையையும் இவர் கவனித்துக் கொள்வார்.
</p><p>
பரீட்சை முகமைகளின் செயல்பாடுகளைச் சீரமைப்பது, கசிவு விவகாரங்களால்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மற்றும் வரவிருக்கும்
மாநிலத் தேர்தல்களுக்கு முன் இளைஞர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது ஆகியவையே
புதிய கல்வி அமைச்சரின் முதன்மைப் பணிகளாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்கூட்டிய பொதுத் தேர்தலை நிராகரித்தார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/britain-s-new-pm-rules-out-general-election-1785025774"></link>
            <id>https://ibctamil.com/article/britain-s-new-pm-rules-out-general-election-1785025774</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று அறிவித்துள்ளார்.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று அறிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மரிடமிருந்து அதிகாரப் பொறுப்பை ஆண்டி பர்ன்ஹாம் கடந்த திங்கட்கிழமை ஏற்றுக்கொண்டார். </p><p>இதையடுத்து, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.</p><p></p><h2>அணுகுமுறையில் மாற்றங்கள்</h2><p>
</p><p>
இந்த நிலையில், ரீஃபார்ம் யுகே (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ், புதிய பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fd666e-df06-4c44-923d-bd40b4ad43ae/26-6a6554f0515eb.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஆண்டி பர்ன்ஹாம், “நாம் நாடாளுமன்ற ஜனநாயக முறையில் வாழ்கிறோம். 2024 பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே நான் செயல்படுகிறேன். </p><p>அதற்குள் எனது அணுகுமுறையில் மாற்றங்களை கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது நாட்டைச் சீராக இயங்கச் செய்வதே மிக முக்கியமான முன்னுரிமையாகும். </p><p>இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது அந்த முக்கியப் பணிகளை தாமதப்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தது வேறு தலைவரின் தலைமையிலான கட்சிக்காக என்பதால், புதிய பிரதமர் பொதுமக்களிடம் புதிய ஆணையைப் பெறுவதற்காக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கருத்தும் நாட்டில் பரவலாக நிலவி வருவதாக பிரித்தானிய தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தின் அன்றைய வகிப்பகத்தை புறக்கணித்த கும்பலுக்கு வகுப்பெடுக்கவைத்த இன்றைய அச்சப் புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-gatherings-lamenting-the-fear-of-justice-1785022008"></link>
            <id>https://ibctamil.com/article/political-gatherings-lamenting-the-fear-of-justice-1785022008</id>
            <summary type="text">நீதித்துறை சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்டுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்டுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்ப ஆதரவுக் குழுவும், கடந்த காலங்களில் எண்ணற்ற உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதன் மூலம் தங்களது அதிகார வேட்கை மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>
கடந்த காலத்தை மறந்து, தற்போதைய அரசாங்கம் அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்களைப் பரப்பி வருகிறது. </p><p>அன்று இரண்டு குழுக்களாகப் பிரிந்திருந்த இந்தக் குழுக்கள், இப்போது ஒரே குழுவாகச் செயல்படுகின்றன.</p><p></p><h2>6 நிகழ்வுகள்</h2><p> கடந்த காலத்தில் இந்த இரண்டு குழுக்களும் எவ்வாறு செயல்பட்டன என்பதை ஒரு சிங்கள மொழி ஊடகம் ஒகஸ்ட் 22, 2024 அன்று விரிவாக வெளிப்படுத்தியிருந்தது.</p><p><b>இலங்கை அரசாங்கங்கள் உயர்&nbsp; நீதிமன்ற உத்தரவுகளை மீறிய 6 நிகழ்வுகள்</b></p><p>
2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாததன் மூலம், ஜனாதிபதி , நிதி அமைச்சர் என்ற தனது தகுதியில், மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என உயர் நீதிமன்றம் இன்று (ஒகஸ்ட் 22) தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23af8541-232d-49ec-8be2-645560ac4613/26-6a654e880a12a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சம்பந்தப்பட்ட தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இருப்பினும், அந்த உத்தரவின்படி அரசு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமா? இவ்விஷயம் குறித்து அரசு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான பிரதமர் தினேஷ் குணவர்தன, அப்போதைய காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியை வகிப்பதைத் தடுத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.</p><p>

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு அறிவிப்பது இது முதல் முறையல்ல. இந்த நாட்டின் வரலாற்றில் இதுபோன்று 6 நிகழ்வுகள் நடந்துள்ளன.</p><p></p><h2>மேஜர் ஜெனரல் பதவி</h2><p>
</p><p><b>
1. பிரிகேடியர் பாரி லியனேஜை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துவதற்கான ஆணை.</b></p><p>
சர்ச்சைக்குரிய எம்பிலிப்பிட்டிய மாணவர் கொலை வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவ பிரிகேடியர் பாரி லியனகே, தன்னை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு இராணுவத் தளபதி அளித்த பரிந்துரையைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளிக்கக் கோரி, 1999-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475030a9-bf98-4bff-a29b-ca4dd8015b13/26-6a654e896bb2c.webp' /></p><p>
</p><p>
அடிப்படை உரிமைகள் மனுவில், பிரிகேடியர் பாரி லியனகே, தன்னை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துமாறு 1999 மார்ச் 8 அன்று இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளருக்கு ஒரு பரிந்துரையைச் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
அந்தப் பரிந்துரையின்படி தனக்கு மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு அளிக்காததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி, தன்னை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தி உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.</p><p>

மனு மீது நீண்ட விசாரணை நடத்திய மூன்று நீதியரசர் கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பரி லியனகேவை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துமாறு பாதுகாப்பு அமைச்சகச் செயலாளருக்கு இராணுவத் தளபதி அளித்த பரிந்துரையைச் செயல்படுத்தத் தவறியது அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறிய செயல் எனத் தீர்ப்பளித்தது.
</p><p>
அதன்படி, பரி லியனகேவை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துவதற்கான பரிந்துரையைச் செயல்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p>

இருப்பினும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை பாதுகாப்புச் செயலாளர் செயல்படுத்தத் தவறிவிட்டார் என்று பரி லியனகே பின்னர் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார்.</p><p></p><h2>நீதிமன்ற அவமதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது என்று கூறி, பிரிகேடியர் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.</p><p>
</p><p>
இருப்பினும், உயர் நீதிமன்றம், உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் ஜனாதிபதியே தலைவரே சம்பந்தப்பட்ட பதவி உயர்வு குறித்து முடிவெடுப்பதற்கான இறுதி அதிகாரம் கொண்டவர் என்றும், அரசியலமைப்பின்படி மனுதாரர் கோரியது போன்ற ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் கூறியது.
</p><p>
பின்னர், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் சமர்ப்பித்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த அவர் விரும்பாததாலேயே, அந்தப் பிரிகேடியரால் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்த முடியவில்லை என்று அக்கால ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p><b>2. தலைமை&nbsp;</b>நீதியரசர்&nbsp;<b>சரத் என். சில்வாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தல்.</b></p><p>2001-ஆம் ஆண்டில், அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று, அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என். சில்வா தனது பதவிக்குத் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டி, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தை முன்வைத்தது.
</p><p>
பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்ற தெரிவுக் குழுவையும் நியமித்தார்.
</p><p>
தலைமை நீதியரசர்க்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தெரிவுக் குழுவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்று கூறி, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்ய இடைக்காலத் தடை உத்தரவு கோரி, மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
</p><p>
மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​தலைமை சட்டத்தரணிகளான ஆஜரான மூத்த அரசு சட்டத்தரணியும், மனுக்களில் கோரப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பதற்குத் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அதன்படி, தலைமை நீதியரசர் சரத் என். சில்வா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சபாநாயகரால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p></p><h2>சந்திரிகா பண்டாரநாயக்க&nbsp;</h2><p>
இந்த இடைக்காலத் தடை உத்தரவு குறித்து சமூகத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
</p><p>
அரசியலமைப்பில் உள்ள அதிகாரப் பிரிவினைக் கொள்கையின்படி, ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்று அப்போதைய மூத்த சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6693974-45bd-45cf-ab0f-69b66ad8d490/26-6a654e88b7632.webp' /></p><p>

நாடாளுமன்றம் கூடியபோது, ​​எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், பிற கட்சிகளின் உறுப்பினர்களும், இந்த உயர் நீதிமன்ற உத்தரவை நிராகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>

அதன்படி, சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க, தமது முடிவை அறிவிக்கையில், நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் விதிகளையும், முன்னுதாரணங்களையும், முந்தைய வழக்குத் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையாணையை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, நாடாளுமன்றத்தின் உள் விவகாரங்களில் தலையிட நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சபாநாயகரின் முடிவு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடாளுமன்றத்தைக் கலைத்ததால், பதவிநீக்கத் தீர்மானம் காலாவதியானது.
</p><p><b>
3. பெட்ரோல் விலையைக் குறைக்கும் உத்தரவை நிராகரித்தல்</b></p><p>
அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு இடர் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் மூலம் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்து வருவதாகக் குற்றம் சாட்டி, 2008 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு அந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
</p><p>
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சட்டத்தரணிகள் , இடர் தவிர்ப்பு ஒப்பந்தத்தால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நீண்ட வாதங்களை முன்வைத்தனர்.</p><h2>மறுக்கப்பட்ட பெற்றோல் விலை&nbsp;</h2><p>
</p><p>
உண்மை நிலவரங்கள் மீதான விசாரணையின் போது, ​​தலைமை நீதியரசர் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பெட்ரோலியக் கழகத்திற்கு அக்காலத்தில் நிலவிய விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோலை விற்கும் திறன் இருந்தது என்று தீர்ப்பளித்தது.
</p><p>
அப்போதைய நிதி அமைச்சகத்தின் செயலாளராக இருந்த சுமித் அபேசிங்க, இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டார்.

அதன்படி, நீதிமன்றத்தில் முன்னிறையாகி நிதி அமைச்சகத்தின் செயலாளரிடம், பெட்ரோலை விற்கக்கூடிய குறைந்தபட்ச விலை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 100/-க்கு விற்க முடியும் என்று நிதி அமைச்சகத்தின் செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்ட பிறகு, தலைமை நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பெட்ரோல் விலையை ரூ. 100/- ஆகக் குறைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
</p><p>
இருப்பினும், அரசு அந்தத் தீர்ப்பை நடைமுறைபடுத்த மறுத்ததோடு, உயர் நீதிமன்றம் நிர்ணயித்த விலையில் பெட்ரோல் விற்கப்பட்டால் பெட்ரோலியக் கூட்டுதாபனத்துக்கு நட்டம் ஏற்படக்கூடும் என்றும் கூறியது.
</p><p><b>
4. தலைமை&nbsp;</b>நீதியரசர்&nbsp;<b>ஷிரானி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்கக் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையைச் செல்லாததாக்கிய தீர்ப்பை நிராகரித்தல்.
</b></p><p>2012-ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், அப்போதைய பிரதம நீதியரசர் டாக்டர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு பதவிநீக்கத் தீர்மானத்தை முன்வைத்தது.
</p><p>
அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்சவும், பதவி நீக்கக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6354ea1f-8690-4fab-9974-5e388ed0aed9/26-6a654e8a20339.webp' /></p><p>
</p><p>
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.</p><p>

மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக் குழு அளித்த பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைச் செல்லாததாக்கி, 2013 ஜனவரி 7 அன்று தீர்ப்பு வழங்கியது.
</p><p>
இருப்பினும், அப்போதைய அரசாங்கம் அந்த முடிவை நிராகரித்து, தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான தெரிவுக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றி, அவரைத் தலைமை நீதியரசர் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.</p><p><b>

5. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடையாணையை நிராகரித்தல்.
</b></p><p>2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மேலும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ஒரு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.</p><h2>உள்ளூராட்சித் தேர்தல்</h2><p>
</p><p>
உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை அனுமதித்து, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
</p><p>
மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதை விசாரிக்க அனுமதி அளித்ததுடன், உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மேலும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் நிதி அமைச்சகச் செயலாளருக்கு இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பித்தது.</p><p>

ஆனால், அரசாங்கம் அந்த இடைக்கால உத்தரவைச் செயல்படுத்தவில்லை.
</p><p>
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அத்தியாவசியச் செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள 'அத்தியாவசியச் செலவுகள்' என்பதில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் சேர்க்கப்படாததால், தம்மால் அந்த நிதி ஒதுக்கீடுகளை விடுவிக்க இயலவில்லை என்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
</p><p>
நிதி அமைச்சகத்தின் செயலாளர், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க செயல்படாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டி, சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் மத்தும பண்டார மற்றொரு புகாரைத் தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், புகாரை விசாரித்த உயர் நீதிமன்றம் அதை நிராகரிக்க முடிவு செய்தது.</p><p><b>

6. தேசபந்து தென்னக்கோன் காவல்துறைத் தலைவராகச் செயல்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</b></p><p>
கர்தினால் மால்கம் ரஞ்சித் உட்பட ஒன்பது தரப்பினர், தேசபந்து தென்னக்கோனை அரசியலமைப்பு சபை முறையாக நியமிக்காததால், அவரது காவல்துறை தலைமை ஆய்வாளர் நியமனம் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.</p><h2>காவல்துறை தலைமை&nbsp;</h2><p>
</p><p>
உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர், மனுக்களை விசாரிக்க முடிவு செய்த உயர் நீதிமன்றம், தேசபந்து தென்னக்கோன் காவல்துறைத் தலைவர் அலுவலகத்தின் அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஒரு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
</p><p>
இந்த இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக, காவல்துறை தலைமை ஆய்வாளரின் கடமைகளைக் கவனிப்பதற்காக, தகுதிவாய்ந்த ஒரு சிரேஷ்ட துணை காவல்துறை தலைமை ஆய்வாளரை தற்காலிக காவல்துறை தலைமை ஆய்வாளராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றில் அறிக்கை வெளியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்காது என்று தெரிவித்தார்.</p><p>

அரசியலமைப்புச் சபை சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அதற்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:04:53+00:00</updated>
        </entry>
    </feed>
