<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-06T18:26:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி : மூவரின் நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-50-students-hospitalised-after-wasp-attack-1786039399"></link>
            <id>https://ibctamil.com/article/over-50-students-hospitalised-after-wasp-attack-1786039399</id>
            <summary type="text">திருகோணமலையில் உள்ள திவுல்வேவ மகா வித்தியாலயப் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததில், குளவிகள் கொட்டியதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் உள்ள திவுல்வேவ மகா வித்தியாலயப் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததில், குளவிகள் கொட்டியதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;கவலைக்கிடமான நிலையில் மூன்று மாணவிகள்&nbsp;</h2><p>
</p><p>
பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சைக்காக மகாதிவுல்வேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருந்த மூன்று மாணவிகள் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05b5a95-bf55-47ca-acf1-9e399872b3f2/26-6a74cc685a89f.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை படுகொலை செய்த கணவன்! தொடங்கப்பட்டது விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-was-murdered-by-her-husband-1786037921"></link>
            <id>https://ibctamil.com/article/woman-was-murdered-by-her-husband-1786037921</id>
            <summary type="text">


வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த பெண் ஒருவர், இன்று (06) மாவதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவ்வாறு கொலை செய்யப்பட்டவர், அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குடும்பத் தகராறைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் என நம்பப்படும் சந்தேக நபர், அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649e385d-1ab9-4ac1-8da3-58cc6eeb39d2/26-6a74c9666ef30.webp' /></p><p>
</p><p>
அதன்படி, 50 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வெலகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T17:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடை செய்யப்படும் 146 சூதாட்ட இணையதளங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/146-online-gambling-websites-to-be-banned-1786036389"></link>
            <id>https://ibctamil.com/article/146-online-gambling-websites-to-be-banned-1786036389</id>
            <summary type="text">


இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையிலிருந்து அந்த இணையதளங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹெரத் தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>சட்டவிரோதக் குற்றம்</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, 2025-ஆம் ஆண்டின் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் சட்டம், இலக்கம் 17-இன் விதிகள் மற்றும் அதிகாரங்களுக்கு இணங்க வெளியிட்ட ஓர் அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5acefa-2a77-4d2f-9b21-616e0a63b4db/26-6a74c46273042.webp' /></p><p>
</p><p>
மேற்கூறிய சட்டத்தின் 15, 16 மற்றும் 18-ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இலங்கையில் இணையவழி சூதாட்ட சேவைகளை இயக்குவது அல்லது ஊக்குவிப்பது, அச்சட்டத்தின் 44-ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு சட்டவிரோதக் குற்றமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T17:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய காவல் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-oic-suspended-for-using-drugs-1786034481"></link>
            <id>https://ibctamil.com/article/police-oic-suspended-for-using-drugs-1786034481</id>
            <summary type="text">பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp; &nbsp;பணியின் போது போதைப்பொருள் பயன்படுத்திய தகவலை உறுதி செய்வதற்காக, அவர் 2ஆம் திகதி தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதாக ஒரு சிரேஷ்ட காவல் அதிகாரி தெரிவித்தார்.</p><h2>&nbsp;மருத்துவ பரிசோதனையில் உறுதி</h2><p> </p><p>அந்தப் பரிசோதனையின் போது, ​​சிறுநீர் மாதிரிகளில் போதைப்பொருள் கண்டறியப்பட்டது. பதுளை போதனா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவர் தனது அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2288a652-44ff-4ccf-ab2e-669d8eb010ca/26-6a74bd4ad140e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attacks-two-russian-oil-refineries-1786032042"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attacks-two-russian-oil-refineries-1786032042</id>
            <summary type="text">&amp;nbsp;ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டை தாம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடகப் பதிவில், உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டை தாம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடகப் பதிவில், உக்ரைனியப் பாதுகாப்புப் படைகள் யாரோஸ்லாவ்லில் உள்ள ஸ்லாவ்நெஃப்ட்-யானோஸ் சுத்திகரிப்பு நிலையத்தையும், பாஷ்கோர்டோஸ்தானில் உள்ள பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாக அவர் கூறினார்.</p><p>&nbsp;இப்பகுதியைத் தாக்கிய ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், ஆனால் கீழே விழுந்த சிதைவுகள் தீப்பொறிகளை ஏற்படுத்தி சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்புக் கிடங்குகளை சேதப்படுத்தியதாகவும் யாரோஸ்லாவ் ஆளுநர் கூறினார்.
</p><p>

</p><h2>பலமுறை குறிவைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம்</h2><p>ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இது, மொஸ்கோவின் போர் முயற்சிகளை சீர்குலைக்கும் முயற்சியில் உக்ரைனால் சமீப மாதங்களில் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c2bd257-bffc-4738-b717-ff99cc5ba414/26-6a74b43f378e3.webp' /></p><p>இதற்கிடையில், உக்ரைன் முழுவதும் உள்ள அதிகாரிகள், ஒரு பொதுப் பேருந்து மற்றும் உக்ரைனிய கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு ரஷ்யத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தனர்.

உக்ரைனில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மன் விமான நிலையத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ட்ரோன்! தப்பியது உக்ரைன் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempted-attack-on-ukrainian-plane-in-germany-1786032314"></link>
            <id>https://ibctamil.com/article/attempted-attack-on-ukrainian-plane-in-germany-1786032314</id>
            <summary type="text">ஜெர்மனியின் விமான நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த உக்ரைன் சரக்கு விமானத்தின் அருகே வெடிப்பொருட்கள் பொருத்திய ட்ரோன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் விமான நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த உக்ரைன் சரக்கு விமானத்தின் அருகே வெடிப்பொருட்கள் பொருத்திய ட்ரோன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
இதன்படி குறித்த விமானத்தில் இராணுவப் பயன்பாட்டுக்கான வெடிமருந்துகள் ஏற்றப்பட்டிருந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p></p><h2> பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை </h2><p>
இது குறித்து அந்நாட்டு காவல்துறை அறிக்கையை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்ட தகவலில், கண்டுப்பிடிக்கப்பட்ட ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் உயர்தர இராணுவ பயன்பாட்டுடையது என தடவியல் நிர்ணர்கள் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52cb7068-f38f-4800-b9dc-169dba2eaf1f/26-6a74b3cb8324e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த ட்ரோனில் தொழினுட்ப கோளாறு ஏற்றட்டதன் காரணமாகவே அது வெடிக்காமல் போனதாக சில ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>


இந்த சம்பவம் தொடர்பான பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெர்மனி பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.</p><p>


லைப்சிக்/ஹாலே விமான நிலையம் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல், நேட்டோ (NATO) இராணுவ தளவாட நடவடிக்கைகளுக்கும் முக்கிய மையமாக விளங்குகிறது.

 இதனை ஜெர்மன் அரசு முக்கிய தேசிய உள்கட்டமைப்பாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T16:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றையதினம் கண்டெடுக்கப்பட்ட சான்றுப்பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786029374"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786029374</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம்
வியாழக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம்
வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் நாணய குற்றி ஒன்றும், சிறுவர்களுடைய ஆடைகளின் பொத்தான்களும் சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><h2>இதுவரை 494என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுப்பு</h2><p>&nbsp;அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 99 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
499 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 494என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdfd43bd-0247-4269-b82e-bd4e1f7253a6/26-6a74a9d4688e0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T15:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது ஈரான் : புதுக்கதை விடுகிறார் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-begged-trump-to-stop-the-attack-1786027426"></link>
            <id>https://ibctamil.com/article/iran-begged-trump-to-stop-the-attack-1786027426</id>
            <summary type="text">ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம் பேசலாம்’ என்று கூறியது. இதையடுத்து தாக்குதலை நிறுத்தி வைத்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
 லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மக்களை கொல்ல விரும்பவில்லை</h2><p>

"ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கி வருகிறோம். ஆனால் நான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் மக்களை கொல்ல விரும்பவில்லை. இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையே விரும்புகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea4bd3f-c97c-4e56-810a-fa5b97e5174d/26-6a74a19c5c6af.webp' /></p><p>



ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.</p><p></p><h2>அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்</h2><p>


இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி கூறுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை, ஈரானின் பாதுகாப்பிற்காக நாங்களும் அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்.

அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிட்டால், நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d969bc8-5607-4ac7-b939-c6d85d51170e/26-6a74a19bab62c.webp' /></p><p>
</p><p>


இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணை கப்பல் அருகே 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்தது.

கப்பலும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T15:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம்: ஓகஸ்ட் 19 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1786029828"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1786029828</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நேற்று (05.08.2026) வடக்கு மாகாண மேல்
நீதிமன்றத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.</p><p> எனினும்,
நீதிமன்றம் தீர்ப்பை எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த
ஞானப்பிரகாசம் கிஷோரை ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து
நீக்கியிருந்தார்.</p><p></p><h2>மனுத் தாக்கல் பின்னணி</h2><p>

இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை
இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e11abd7e-42f8-44f0-a2bf-739bb0a4b6d7/26-6a74a863d2210.webp' /></p><p>குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண
அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன. </p><p>மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள்
சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின்
தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர் வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி
வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வ மானதா? அல்லது
இல்லையா? என்பது தொடர் பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு
வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் அரிய அதி துல்லியப் காட்சி வெளியீடு! மர்மங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scientists-discover-rare-mysteries-of-the-sun-1786027402"></link>
            <id>https://ibctamil.com/article/scientists-discover-rare-mysteries-of-the-sun-1786027402</id>
            <summary type="text">சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கி முதன்முறையாக பதிவு செய்துள்ளது. </p><p>இந்தக் கண்டுபிடிப்பு, சூரியனின் செயல்பாடுகள் குறித்த முக்கிய மர்மங்களுக்கு புதிய விளக்கத்தை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) டேனியல் கே. இனோயே சூரிய தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட புதிய படங்கள், சூரியனின் கண்களுக்கு தெரியும் வெளிப்புற அடுக்கான ஒளிமண்டலத்தில் (Photosphere), இதற்கு முன்பு தெளிவாகப் பதிவாகாத கெல்வின் -&nbsp; ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை (Kelvin–Helmholtz Instability) என்ற இயற்பியல் நிகழ்வை முதன்முறையாக வெளிக்கொணர்ந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The most powerful solar telescope just opened a new window to discovery about the sun.️☀️<br><br>Using the NSF Daniel K. Inouye Solar Telescope, scientists found Kelvin-Helmholtz instability, tiny, whirlpool-like patterns on the sun&#39;s surface.<a href="https://t.co/0V1qENcUR9">https://t.co/0V1qENcUR9</a><br><br>📸:… <a href="https://t.co/agp8V3ayeR">pic.twitter.com/agp8V3ayeR</a></p>&mdash; U.S. National Science Foundation (@NSF) <a href="https://x.com/NSF/status/2085338123358044661?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>தேசிய சூரிய ஆய்வகம்</h2><p>

இந்த ஆய்வில் அமெரிக்க தேசிய சூரிய ஆய்வகம், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட வளிமண்டல ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc8a4b1-c5dd-4db5-b2d0-e8d84dfd4d17/26-6a74a24a648d4.webp' /></p><p>கடந்த ஏப்ரல் 14, 2025 அன்று சூரியக் கறைக்கு அருகிலிருந்த செயலில் உள்ள ஒரு பகுதியை ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கி மூலம் அவதானித்தனர். </p><p>நான்கு மீட்டர் விட்டமுள்ள கண்ணாடி மற்றும் அதிநவீன உயர் தெளிவுத் திறன் கொண்ட ஒளிப்பதிவு அமைப்பின் உதவியால், சிறிய தொலைநோக்கிகளால் இதுவரை காண முடியாத காந்தப்புல எல்லைகள் மிகத் தெளிவாக பதிவாகின.
</p><p>
சூரியனின் ஒளிமண்டலம், 500 முதல் 2,000 கிலோமீட்டர் அகலமுடைய பிரகாசமான பிளாஸ்மா அணுக்களால் (Granules) மூடப்பட்டுள்ளது. இவற்றின் மையப்பகுதியில் சூடான பிளாஸ்மா மேலே எழுந்து, மேற்பரப்பில் குளிர்ந்த பின்னர் விளிம்புகளின் வழியாக மீண்டும் கீழிறங்குகிறது.</p><p>

இந்த பிளாஸ்மா அணுக்கள், அதிக காந்தப்புலம் கொண்ட பகுதிகளைச் சந்திக்கும் இடங்களில், சுமார் 20 கிலோமீட்டர் அளவுள்ள மிகச் சிறிய சுழல்கள் மற்றும் குறுகிய கருமையான கோடுகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.</p><p> </p><p></p><h2>47 சிறிய சுழல் அமைப்புகள்&nbsp;</h2><p>இது தொலைநோக்கியின் கோட்பாட்டு தீர்மானத் திறனின் உச்ச எல்லைக்கு நெருக்கமான அளவாகும்.

இந்த அளவிலான பொருளை சூரியனில் கண்டறிவது, சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நாணயத்தை தெளிவாகப் பார்ப்பதற்கு ஒப்பான சாதனை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/958dfd40-47fe-47d3-920e-f1c86ea25e71/26-6a74a24b1947a.webp' /></p><p>மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மிஷியல் வான் நூர்ட் கூறுகையில், "சூரியனின் மேற்பரப்பில் சுமார் 20 கிலோமீட்டர் அளவிலான அமைப்புகளைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. </p><p>இது உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கிகளாலும், அதிநவீன கணினி மாதிரிகளாலும் மட்டுமே சாத்தியமாகும்" என்றார்.

ஆய்வின்போது மொத்தம் 47 சிறிய சுழல் அமைப்புகள் பதிவாகின. </p><p>அவற்றுக்கிடையேயான சராசரி இடைவெளி 65 கிலோமீட்டராகவும், அவற்றின் அளவு 25 முதல் 170 கிலோமீட்டர் வரையிலும் இருந்தது. அவை வினாடிக்கு 0.67 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p>

கெல்வின்–ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை என்பது, அடுத்தடுத்த திரவங்கள் அல்லது பிளாஸ்மா அடுக்குகள் வெவ்வேறு வேகங்களில் நகரும் போது உருவாகும் இயற்பியல் நிகழ்வாகும். </p><p>வேக வேறுபாடு காரணமாக எல்லைப் பகுதியில் அலைகளும் சுழல்களும் உருவாகின்றன. இந்த நிகழ்வை சூரியனின் ஒளிமண்டலத்தில் முதன்முறையாக நேரடியாகக் கண்டறிந்திருப்பது, சூரியனின் காந்தப்புல இயக்கங்கள் மற்றும் ஆற்றல் பரிமாற்றம் குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பை பின்வாங்கச் சொல்லுங்கள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-attack-on-gulf-countries-1786024542"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-attack-on-gulf-countries-1786024542</id>
            <summary type="text">அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அதற்குப் பதிலாகப் போரைப் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலையை கொண்டுவர டொனால்ட் ட்ரம்பை அவர்கள் சம்மதிக்க வைக்காவிட்டால் வளைகுடா நாடுகளை தீவிரமாக தாக்குவேம் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>வளைகுடா நாடுகளுடன் ஒருங்கிணைந்த ராஜதந்திர முன்னெடுப்பை ஈரான், மேற்கொண்டுள்ள பின்னணியில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதில் எண்ணெய், மின்சாரம் மற்றும் நீர் ஆலைகளைத் தாக்கும் என்றும் வெளிப்படையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகள்</h2><p>
அமெரிக்காவின் மிக நெருங்கிய அரபு நட்பு நாடுகளின் எரிசக்தி வசதிகள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்பு, நீர் உள்கட்டமைப்பு, போக்குவரத்து வலைப்பின்னல்கள் மற்றும் பிற மூலோபாய சொத்துக்கள் மீதான தாக்குதல்களை அந்த எச்சரிக்கை உள்ளடக்கியிருந்தது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8171d253-de8b-4f2a-b706-79a802017d87/26-6a74976c61b34.webp' /></p><p>
வளைகுடா முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவு ஏற்படும் வாய்ப்பை எழுப்புவதன் மூலம், மேலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரு பரந்த ஈரானிய முயற்சியின் ஒரு பகுதியான இந்தச் செய்தி, வெளியாகியுள்ளது.</p><p>இந்த விவாதங்கள் குறித்து அறிந்த இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள், இரண்டு வளைகுடா வட்டாரங்கள் மற்றும் ஒரு மூத்த பிராந்திய இராஜதந்திரி ஆகியோர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது சவுதி, துருக்கி மற்றும் கத்தார் நாட்டு சகாக்களுடனும், பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடனும் பேசியதாகக் கூறியுள்ளார்.</p><p>மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவதிலிருந்து ட்ரம்பைத் தடுப்பதற்கு, அமெரிக்கா வளைகுடா நட்பு நாடுகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அராக்சி வலியுறுத்தினார் என அந்த மூத்த தூதரக அதிகாரி கூறியுள்ளார்.</p><p>ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும், வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு எதிரான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாடு : இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-man-s-tragic-end-to-conflict-with-his-mother-1786025347"></link>
            <id>https://ibctamil.com/article/young-man-s-tragic-end-to-conflict-with-his-mother-1786025347</id>
            <summary type="text">யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து
உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம்(06) இடம்பெற்றுள்ளது. </p><p>இதன்போது சுன்னாகம்
பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><h2>சிம் அட்டையால் ஏற்பட்ட முரண்பாடு</h2><p>
</p><p>
தாயாரின் அடையாள அட்டையில் சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞன்
கோரிய நிலையில் அது முரண்பாடாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb36b9cf-0d16-4c9a-91aa-b8b4be8ca2fb/26-6a7499eb275b6.webp' /></p><p>பின்னர் குறித்த இளைஞன் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு வயல் கிணற்றுக்கு
அருகே சென்று தீ மூட்டியுள்ளார். </p><p>அதன்பின்னர் வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள்
பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி பவானி வீதி விவகாரம் :காவல்துறையின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-dismisses-police-case-in-tahiti-bhavani-road-1786023416"></link>
            <id>https://ibctamil.com/article/court-dismisses-police-case-in-tahiti-bhavani-road-1786023416</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி
காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி
காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பிரதேச சபையின் வீதியான பவானி
வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் 59வது
பிரிவின் கீழ் பிரதேச சபையினால் அறிவித்தல் ஒன்று செய்யப்பட்டது.</p><h2>மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு</h2><p>அந்த அறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கடந்த
மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2406a333-428d-4ba8-8504-0ed5a20f36c0/26-6a74938c56f41.webp' /></p><p>

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. அந்த வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்
தவிசாளர் மற்றும் அதே பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டனர்.
</p><p>
குறித்த இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள். ஒரு
பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின்
மூலமே கேள்விக்கு உட்படுத்த முடியும்.</p><p> அதாவது வடக்கு மாகாண மேல்
நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும்.

காவல்துறையினரும் ஒரு அரச திணைக்களத்தை சார்ந்தவர்கள்.</p><p></p><h2>வழக்கிலிருந்து விடுதலை</h2><p> </p><p>ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச
திணைக்களத்துக்கு எதிராக 81வது பிரிவின்கீழ் நியதி சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தொடர்பாக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்ட நிலையில். அது தொடர்பான கட்டளைக்காக வழக்கானது தவணையிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d273932-e31c-4ff6-afc8-ebcbca27707d/26-6a74938d0f9b2.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் அது தொடர்பான கட்டளையானது இன்றைய தினம் நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்டது.</p><p> அதாவது சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு
தொடுநரான பலாலி காவல்துறையினர் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த
வழக்கினை தள்ளுபடி செய்து பிரதிவாதிகள் இருவரையும் நீதிமன்றமானது
வழக்கிலிருந்து விடுவித்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலைய இழப்பீடு விவகாரத்தில் அமளி! சத்திய கடதாசியில் குளறுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/it-is-unjust-to-seize-peoples-lands-1786020965"></link>
            <id>https://ibctamil.com/article/it-is-unjust-to-seize-peoples-lands-1786020965</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கே ,.. &quot; என சொல்லி வரும் அரசாங்கம்
மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில்
கையகப்படுத்த தீவிரமாக முய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம்
மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில்
கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக தனியார் காணிகளை
சுவீகரித்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் காணி
உரிமையாளர்களுக்கும் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர்களுக்கு
இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச
செயலகத்தில் நடைபெற்றது.</p><p>

அதன் போது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படாது பலாலி விமான
நிலையமாக இருந்த காலப்பகுதியில் குறிப்பாக 1986ஆம் ஆண்டு கால பகுதியில் விமான
நிலைய விஸ்தரிப்புக்கு என 436 காணி உரிமையாளர்களின் 267 ஏக்கர் காணி
சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதி</h2><p>

ஆனால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமையால் , அக்கால பகுதியில்,
விமான நிலைய அபிவிருத்திகள் தடைப்பட்டு , காணி சுவீகரிப்பு நடவடிக்கையும்
தடைப்பட்டது.</p><p>
பின்னரான 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள்
இடம்பெயர்ந்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் , கட்டம் கட்டமாக விமான நிலையத்திற்கு
அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட
போதிலும் , விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணம் என அப்பகுதி
மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
</p><p>
விமான நிலையத்திற்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
காணிகளுக்கு மேலதிகமாகவும் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்ட பலாலி மேற்கு , மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும்
குரும்பசிட்டி ஆகிய 4 நான்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 267 ஏக்கர்
காணி தவிர தற்போது மேலதிகமாகவும் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மே மாதம் 26ஆம் திகதி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை
இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் வருகை தந்து நேரில் ஆராய்ந்து
சேர்ந்த பின்னர் கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றும் போது
774.98 ஏக்கர் காணி விமான நிலையத்திற்கு தேவை என தெரிவித்து இருந்தார்.</p><p>
1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையமாக காணப்பட்ட போது , 267 ஏக்கர் காணியே விமான
நிலைய விஸ்தரிப்புக்கு தேவை என சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையமாக தரமுயர்ந்துள்ள நிலையில் , சர்வதேச விமான
நிலையத்திற்காக மேலதிகமாக சுமார் 508 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளன.
</p><p>
இந்நிலையிலேயே, முதல் கட்டமாக, 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்ட காணி உரிமையாளர்களை அழைத்து , அவர்களின் காணிகளுக்கு இழப்பீடு
வழங்குவது தொடர்பில் முதல் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது

1986ஆம் ஆண்டு காணிகளை சுவீகரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
போது , காணிக்குள் இருந்த சொத்துக்களுக்கும் மதிப்பீடு காணப்பட்டது.</p><p></p><h3>&nbsp;நான்கு வருடங்களுக்கான வட்டி</h3><p>
அவற்றுக்கும் பெறுமதி இருந்தது.

தற்போது வெறும் காணிகளுக்கு மட்டுமே மதிப்பீடு நடைபெறவுள்ளது. ஒரு காணியில்
வீடும்,வணிக கட்டடமும் இருந்து இருந்தால் , அந்த காணியில் இருந்த
கட்டங்களுக்கான பெறுமதியினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது.
</p><p>
ஏனெனில் பெரும்பாலான காணிகளுக்குள் கட்டடங்கள் இல்லை. காணிகளுக்குள் கட்டங்கள்
இருந்தாலும் , அந்த கட்டடங்கள் 40 வருடங்களுக்கு முந்தியவை என்பதால்
அவற்றுக்கும் பெறுமதியில்லை.</p><p>

காணி 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டலும் , 2022ஆம்
ஆண்டே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தல்
விடுக்கப்பட்டமையால் , 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியை காணி
மதிப்பீட்டு திணைக்களத்தினர் நிர்ணயித்து , அதற்கான விலையே காணி விலையாக
நிர்ணயித்து அந்த பணம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் , 2022ஆம் ஆண்டு விலை
நிர்ணயிக்கப்பட்டாலும் ,2026ஆம் ஆண்டே இழப்பீட்டு தொகை கிடைக்குமாயின் , அந்த
நான்கு வருடங்களுக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>

காணிகளுக்குள் இருந்த சொத்துக்களுக்கு இழப்பீடு இல்லை என்ற கவலை இருந்தாலும்
, 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியில் இழப்பீடு வழங்கப்படும்
என்ற அதிகாரிகளின் உறுதி மொழியை நம்பி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகளை
வழங்கி , இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள பெருமளவானோர் சம்மதித்தனர்.
</p><p>
அந்நிலையிலையே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் காணி
உரிமையாளர்கள் வந்தனர்

கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு வழங்கிய சத்திய
கடதாசியில் காணப்பட்ட விடயங்களே காணி உரிமையாளர்கள் மத்தியில்
குழப்பத்தை உண்டு பண்ணியது

குறித்த சத்திய கடதாசியில், 04 ஆகஸ்ட் 2026 என திகதியிடப்பட்டு ,

"பிரிக்கப்படாத ஒரே காணி அலகாகக் கொண்டு, தனிப்பட்ட அமைவிடத்தைக்
கருத்திற் கொள்ளாமல்
ஒவ்வொரு ஆளுக்கும் சொந்தமான காணியின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நான்
இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றேன் " என்ற கூற்று காணி
உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்பட்டது.</p><p>

குறித்த பகுதியில் உள்ள காணிகள் அனைத்தையும் "LOT - 1 " ஆக அடையாளப்படுத்தி,
அதனை ஒரு காணியாக விலையை மதிப்பீடு செய்து , அந்த காணியின் பெறுமதியை , காணி
உரிமையாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதா என குழப்பம் அடைந்தனர்.</p><p>

ஒவ்வொருவருடைய காணியும் ஒவ்வொரு பெறுமதியாகும். பிரதான வீதியோரத்தை அண்டிய
காணியும் , பிரதான வீதியில் இருந்து 15ஆவது காணியாக உள்ள காணியும் ஒரே பெறுமதி
அல்ல. </p><p>காணிகள் அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப பெறுமதி மாறுபடும். அதனால்
காணிகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி , இந்த காணிக்கு எவ்வளவு என தனித்தனியாக
இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனர்.
</p><p>
சத்திய கடதாசியில் காணப்பட்ட அடுத்த கூற்றான " காணியின் உரிமையினை உறுதி
செய்வதற்கு காணி உறுதி இல்லாத போது செல்லுபடியான சட்டரீதியான ஆவணங்களை
அடிப்படையாகக் பெற்றுக்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கின்றேன். </p><p>அதனை கொண்டு
தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டினை பெற்றுக்கொள்கிறேன்" என காணப்பட்ட கூற்று.

எங்குமே காணிக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிடப்படவில்லை.</p><p> </p><p></p><h2>இழப்பீட்டுக் கொடுப்பனவு</h2><p>பல இலட்ச ரூபாய்
பெறுமதியான காணிகளுக்கு சில ஆயிரம் ரூபாய் தான் விலை என விலை மதிப்பீடு செய்து
, அதனை இழப்பீடாக தந்தால் , அதொரு நியாமான விடயமாக அமையாது.
</p><p>
எனவே எமது காணிக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை என நாம் அறிந்து கொண்டாலே ,
அதற்க்கான சம்மதத்தை தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.

அத்துடன் சத்திய கடதாசியில் நான்காவது கூற்றாக , " காணிக்கான இழப்பீட்டுக்
கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பமிட நான்
உடன்படுகின்றேன்" என காணப்பட்ட கூற்று , காணிக்கு எவ்வளவு இழப்பீடு என
எமக்கு தெரிவிக்காது , காணிகளுக்கான விலை மதிப்பீட்டை இனி தான் மேற்கொள்ள
போவதாக கூறிக்கொண்டு " இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து
கொண்டதன் பின்னர் " என சத்திய கடதாசியில் குறிப்பிட்டு எம்மை கையொப்பம் இட
கேட்பது எவ்வாறு நியாயம் என கேட்டு , காணி உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட
தொடங்கினர்.
</p><p>
அதனை அடுத்து , கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு பெருமளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். </p><p>அது காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும்
குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து , அதனால் பெருமளவான காணி உரிமையாளர்கள்,
மண்டபத்தை விட்டு , வெளியேறி சென்றனர்.</p><p>
தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தரப்பில் 07 பேர் கொண்டு குழு ஒன்று அமைப்பது
என்றும் , அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக சத்திய கடதாசியில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
தீர்மானித்து கூட்டம் முடிவடைந்தது

பெரும்பாலான மக்கள் இழப்பீடோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்படும் மாற்று
காணிகளையோ ஏற்க மறுத்து, "எங்கள் பூர்வீக நிலமே எங்களுக்கு வேண்டும்" என
உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.
</p><p>
அவ்வாறான நிலையில் 40 வருட காலமாக தாம் போராடி களைத்து விட்டோம் , அரசாங்கம்
தரும் நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொள்வோம் என முன் வந்த போதிலும், காணி
உரிமையாளர்களுக்கு சத்திய கடதாசி அவ நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் , வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும்
யாழ்ப்பாண சர்வதேச விமான விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம்.

பொருளாதார வளர்ச்சிக்காக, தலைமுறைகள் தாண்டியும் தமது பூர்வீக நிலங்களுக்கு
செல்ல வேண்டும் என போராடி வரும் மக்களின் மனப்பூர்வ ஒப்புதலின்றி அவர்களின்
காணிகளைச் சுவீகரிப்பது அநீதியாகும்.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்கியே
அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுவே சமூக நீதியுமாகும்.</p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RNXeYLWIOV8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T13:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clashes-report-to-president-1786021528"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clashes-report-to-president-1786021528</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார, இன்று (06) நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p>
கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதலில் இருபத்திரண்டு கைதிகளும் பத்து அதிகாரிகளும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1477fe03-ac0e-4b86-b4f6-6bada2a2cf1b/26-6a748b881f1b5.webp' /></p><p>மேலும், இந்த மோதலில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கை</h2><p>மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ad5a2e-fb6b-4024-af63-93e68674eaf0/26-6a748b88c3b33.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இழப்பீடு, ஓய்வூதியம் மற்றும் அதிகாரிகள் வாங்கிய கடன்கள் தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.</p><p>

மேலும், மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலை மற்றும் அவர்களின் முழுமையான இயலாமை குறித்து சம்பந்தப்பட்ட குழு விசாரித்து, தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் கோரிய விக்ரம் மிஸ்ரியின் கருத்து அநுர ஊடக பிரிவால் அமுக்கப்பட்டது ஏன்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vikram-misri-urges-sl-on-provincial-elections-1786015122"></link>
            <id>https://ibctamil.com/article/vikram-misri-urges-sl-on-provincial-elections-1786015122</id>
            <summary type="text">இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்மிஸ்ரி இலங்கையில் தனது சிலமணிநேர விறுவிறு சுறுசுறு சந்திப்புக்களை தமிழ்பேசும் ஆறு கட்சிகளின் அரசியல் பேரவை உட்பட்ட தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்மிஸ்ரி இலங்கையில் தனது சிலமணிநேர விறுவிறு சுறுசுறு சந்திப்புக்களை தமிழ்பேசும் ஆறு கட்சிகளின் அரசியல் பேரவை உட்பட்ட தரப்புக்களுடன் 
முடித்துக்கொண்டு நேற்று மாலையே டெல்லிக்குப் பறந்துவிட்டார். </p><p> 

மிஸ்ரியின் பயணத்தின் முடிவில் இரண்டு தரப்புக்களில் இருந்து ஊடகங்களுக்குரிய அதிகாரபூர்வ அறிக்கையிடல்கள் வந்திருந்தன.
</p><p>
இரண்டு தரப்புகளின் ஊடக அறிக்கைகளை நோக்கினால் மாகாண சபைத்தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தால் நடத்துங்கள் என்ற செய்தி அனுரவுக்கு டெல்லிசார்பாக சொல்லபட்டதான விடயத்தை இந்தியதரப்பு தனது அறிக்கையிடலில் முன்னிலைப்படுத்திருந்தது.</p><p>

ஆனால் இதற்கு மாற்றாக அநுரகுமார திசாநாயக்காவின் அரசதலைவர் ஊடகப் பிரிவு இந்த விடயத்தை தனது அறிக்கையிடலில் சொல்லவேயில்லை ஆகமொத்தம் இந்த முறையும் கொழும்பின் பழைய கண்ணா மூச்சியின் ஆட்டத்தின் நீட்சிவந்துள்ளது.
</p><p>
மறுபுறத்தே ஜேவிபி உள்ளுடன் அநுர ஆட்சிக்கோ அது என்னதான் சிஸ்ரம் சேஞ் சொன்னாலும் மாகாணசபை பிரச்சனையை அது அரசியல் ரீதியான உள்ளுடன் வெறுப்புடன் கையாள்கிறது.
</p><p>
இதற்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இந்தியா தமது அரசாங்கத்துக்கு வலியுறுத்தியது என்பதை முன்னிலைப்படுத்தினால் அது தமது அரசாங்கத்தின் மீதான வெறுப்புக்கும் எதிர் அரசியல் அணிகளுக்கும் ஒரு முதலீடாகும் என்ற அச்சத்தில் அது தனது அறிக்கையிடலில் அதனை தவிர்த்தாக தெரியும் நிலையில் இந்தவிடயத்தை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dJT5pvgwrZI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T13:19:59+00:00</updated>
        </entry>
    </feed>
