<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-25T06:07:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு விடுவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள் : OMPயிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-persons-released-by-the-government-details-1787634618"></link>
            <id>https://ibctamil.com/article/missing-persons-released-by-the-government-details-1787634618</id>
            <summary type="text">சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என&nbsp;காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் ஒரு சர்வதேச
காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு
செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p>
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று (25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள 'வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்றை
ஏற்பாடு செய்தனர்.</p><p></p><h2>பிரச்சினைகள் எதுவும் இல்லை</h2><p>
</p><p>இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து
தெரிவிக்கையில், ”ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு
அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது?

அவர்களுடைய சட்ட திட்டங்கள், நடைமுறைகள் எமது நாட்டிற்கு தேவைப்படாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89de6a3-f497-4646-a6be-e912c230e2f5/26-6a8d287ac3532.webp' /></p><p>ஆனால்,
நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினான சர்வதேச தினத்தை OMP மற்றும்
அரசாங்கம் இணைந்து கொண்டாடுவது என்பது, சர்வதேசத்திற்கு "நாங்கள்
உள்நாட்டிலேயே தீர்வு பெற்றுக் கொடுத்துவிட்டோம்.

இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம்
தீர்க்கப்பட்டு விட்டது" என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
</p><p>
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில்
விடுவித்திருக்க வேண்டும்.</p><p>

அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக்
கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த
நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.</p><p>

இந்த OMP என்பது எங்களுடைய மக்களிடையே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்
தேடுகின்ற உறவுகளிடையே ஒரு தோல்வி அடைந்த ஒரு நெறிமுறையாக தான் அவர்கள் இங்கே
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>&nbsp;</p><h2>காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்</h2><p>
</p><p>
நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து,
நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து
பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
</p><p>
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை நீங்கள்
எங்களிடம் ஒப்படையுங்கள். அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல்
ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக்
கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f830d95-41cd-4be5-a102-acce1ba6dd3a/26-6a8d287b8fda4.webp' /></p><p>

அதை ஒத்துக் கொள்ளாமல், பிரச்சினையை மூடி மறைக்கப் பார்ப்பதற்கான இப்படிப்பட்ட
ஒரு கண் துடைப்பான விஷயத்தை ஏற்படுத்துவதை நாங்கள் எப்போதும் இந்த காணாமல் போன
சமூகம், அதாவது காணாமல் போன உறவுகளின் குடும்பத்தில் இருக்கும் ஆட்களின்
சார்பில் நாங்கள் அதை நிராகரிக்கிறோம்.
</p><p>
எங்களது உலகளாவிய ரீதியில் இருக்கின்ற எங்களுடைய உறவுகள் புரிந்து கொள்ள
வேண்டும். காணாமல் போனோர் என்ற விடயம் நாங்கள் பத்திரிகைகளில் படிப்பதோடு அல்லது
அம்மாக்களின் போராட்டம் வீதியில் நிற்பதோடு முடிந்துவிடவில்லை.
</p><p>
இங்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில் சமூகங்கள் ஒவ்வொருவராக முயற்சி செய்து,
ஒவ்வொரு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்- அவர்கள் எப்போது, எங்கு,
யாரால், எந்தச் சூழ்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற தரவுகள்
சேகரிக்கப்பட்ட புத்தகம் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் 300-க்கும்
மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் அடங்கியவாறு சிவில் சமூக அமைப்புகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p><p></p><h2> காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்தப் புத்தகத்திற்குள் இருக்கின்ற இந்தப்
பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி, வேதனை.

அவர்களுடைய ரத்தமும் சதையுமாக பெற்றோர்களின் கண்ணீருக்கு மத்தியில் காணாமல்
ஆக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய ஒவ்வொருத்தரின் கதை. </p><p>இது இங்கே
இருக்கத்தக்கதாக, நீங்கள் நஷ்டஈடு கொடுக்கிறீர்கள். நீங்கள் சர்வதேச வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை கொண்டாடுகிறீர்கள்.

எங்களுக்கு தினங்களும் வேண்டாம், நஷ்டஈடும் வேண்டாம்! எங்களுக்கு எங்களுடைய
பிள்ளைகளும், எங்களுடைய உறவுகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்கான
பதில் எங்களுக்கு வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e597212-b8cd-41db-8c8d-3fa4ff5d29a2/26-6a8d287c490f6.webp' /></p><p>சர்வதேச தினத்தை நீங்கள் அனுஷ்டிப்பதாக இருந்தால்,
நாங்கள் கோருகின்ற வெளிநாட்டுப் பொறிமுறையும், அதற்கான தனியான ஒரு
நீதிமன்றமும், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையையும் நாங்கள்
கோருகிறோம்.</p><p>

அப்படி ஒரு கோரிக்கை விடுக்கின்ற நாங்கள், இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய
அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற
விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
</p><p>
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு
மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
வெளிப்படுத்துங்கள். நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.</p><p>
அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள்
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்“என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:37:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்பரப்பில் நடமாடிய இலங்கைப் படகு - காவல்துறையின் கண்ணில் மண் தூவி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160</id>
            <summary type="text">இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இடம்பெற்றுள்ளது&nbsp;&nbsp;</p><p>
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்திய காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தப்பிச் சென்ற&nbsp;படகு</h2><p>காவல்துறையினர் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும், அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30de446a-cf41-4079-a73d-ac96b936d78b/26-6a8d2986b6ce0.webp' /></p><p>தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் காணப்பட்டனர் என்றும், அதில் பல மூடைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்திய காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-illicit-liquor-worth-1-6million-1787631616"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-illicit-liquor-worth-1-6million-1787631616</id>
            <summary type="text">பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்&amp;nbsp; பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்&nbsp; பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட பெண் 31 வயதுடைய மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரி</h2><p>இவர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f4236-9db2-43e0-bae7-4483cf509621/26-6a8d250341a10.webp' /></p><p>
கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கர நபர் : CCIBயிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547"></link>
            <id>https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான &quot;பஸ் லலித்&quot; எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான "பஸ் லலித்" எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இன்று (25) காலை சுமார் 5.20 மணியளவில், டுபாயிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) கொண்டுவரப்பட்டார்.</p><p>இந்தநிலையில், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f156ae-b8e7-4c5f-98e9-19684a499b1e/26-6a8d20782ab82.webp' /></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h4>அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கர நபர் : விசாரணையை ஆரம்பித்த CID</h4><p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><p>
</p><p>
 

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e3ccd3d-0f19-4c70-9170-fef762d59fe1/26-6a8cf9f0cd1a1.webp' /></p><p>
'பஸ் லலித்' என அறியப்படும் சந்தேக நபர் சமீபத்தில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். பஸ் லலித்' மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>

 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0O2PR0OoZDw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:53:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3000-mn-rs-allocated-for-crop-compensation-farmers-1787630653"></link>
            <id>https://ibctamil.com/article/3000-mn-rs-allocated-for-crop-compensation-farmers-1787630653</id>
            <summary type="text">இலங்கையின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
 

தற்போது வரை அறிக்கையிடப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைவாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 7,000க்கும் அதிகமான விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.</p><p></p><h2>விவசாய அமைச்சரின் அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
 

இதில் நெற்செய்கைக்குப் பாதிப்பாக அனுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர்களும், மொனராகலையில் 1,401 ஏக்கர்களும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர்களும், அம்பாறையில் 1,055 ஏக்கர்களும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கர்களும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba081c83-de0a-4396-8285-c59c910a3a0a/26-6a8d1a34ceb58.webp' /></p><p>
</p><p>எனினும், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தச் சேதங்களை மதிப்பிடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 

இதற்காகக் விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் கள அதிகாரிகளும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களும் அடங்கிய குழுவினர், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று பரிசீலனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><h2>விவசாய பாதுகாப்பு சபை</h2><p>
</p><p>
 

இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 06 பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 05 ஏக்கர் வரை நட்டஈடு வழங் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4670897-638e-4c1b-9445-cbbc23da1aa7/26-6a8d1a35bd78f.webp' /></p><p>
</p><p>
 

இதுவரை பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள் யாரேனும் இருப்பின், உடனடியாக விவசாய அபிவிருத்தி நிலையங்களில் பேணப்பட்டு வரும் சேத அறிவிப்புப் புத்தகத்தில் பதிவிடுமாறு அல்லது பிரதேச விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கள அதிகாரிகளைச் சந்தித்துத் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>
 

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் 1918 என்ற குறுஞ்செய்தி/அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-amendment-to-the-drug-law-1787629562"></link>
            <id>https://ibctamil.com/article/new-amendment-to-the-drug-law-1787629562</id>
            <summary type="text">விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் நேற்று (24.08.2026) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் குறித்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சில புதிய ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p></p><h2>மெத்தம்பெட்டமைன்</h2><p>
</p><p>
குறிப்பாக, சட்டத்தின் 54ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஹெரோயின், கொக்கேய்ன், மோர்ஃபின் மற்றும் அபின் ஆகியவற்றுடன் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்ற போதைப்பொருளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0139f610-ee8f-42d5-ba82-34c9a7d8f349/26-6a8d1756a6495.webp' /></p><p>
</p><p>
மேலும், அரச பகுப்பாய்வாளரால் வழங்கப்படும் அறிக்கைகள், போதைப்பொருள் குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மற்றும் போதைப்பொருள் சந்தேகநபர்களைக் கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்வதிலும், சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் புதிய சட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்துகளை உள்ளடக்கி இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/park-and-ride-plan-to-include-metrobuses-introduce-1787627444"></link>
            <id>https://ibctamil.com/article/park-and-ride-plan-to-include-metrobuses-introduce-1787627444</id>
            <summary type="text">கொழும்பில் தற்போதுள்ள 121 மெட்ரோ பேருந்துகளையும் உள்ளடக்கி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் தற்போதுள்ள 121 மெட்ரோ பேருந்துகளையும் உள்ளடக்கி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p>
சாதாரண பேருந்து பயணிகளைத் தவிர்த்து, தற்போது சிற்றுந்துகள் மற்றும் உந்துருளிகள் போன்ற சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களைப் பொதுப் போக்குவரத்திற்கு மாற ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>கொழும்பு மெட்ரோ பேருந்து திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 240 பேருந்து நிறுத்தங்களிலும் 'பார்க் அண்ட் ரைட்' முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>&nbsp;நகர அபிவிருத்தி அதிகாரி சபை&nbsp;</h2><p>இதன் பின்னர், பயணிகள் தங்களது வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு மெட்ரோ பேருந்துகளில் பயணத்தைத் தொடரலாம் என கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cc7795-e252-496f-8272-81c59433b6da/26-6a8d1249c38c3.webp' /></p><p>

இதற்கமைய பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளூராட்சி அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p>
பதிவுசெய்யப்பட்ட நிறுத்துமிடங்கள் மற்றும் அங்குள்ள காலியிடங்களின் விபரங்களை நிகழ்நேரத்தில் காட்டும் செயலி ஒன்றை நகர அபிவிருத்தி அதிகாரி சபை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தும் என தெரிவித்தார்.</p><p></p><h2>அமைச்சரவை அனுமதி&nbsp;&nbsp;</h2><p>
இதன் மூலம் பயணிகள் வீட்டிலிருந்தபடியே வாகன நிறுத்துமிட முன்பதிவைச் சரிபார்க்க முடியும்.

வாகன நிறுத்துமிடக் கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானிக்கும் என்றும், இணையவழிச் செலுத்தல் முறைகள் எளிதாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/242a44dc-e8b3-4742-9e7f-c92a21e15fa8/26-6a8d12491b049.webp' /></p><p>
இதேவேளை, அமைச்சரவை ஒப்புதலுடன் அடுத்த ஆண்டில் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T04:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indias-defence-minister-rajnath-singh-to-visit-sl-1787626385"></link>
            <id>https://ibctamil.com/article/indias-defence-minister-rajnath-singh-to-visit-sl-1787626385</id>
            <summary type="text">இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.</p><p>அந்தவகையில் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><p>அவரது பயணத்தின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விடயம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கூட்டு நடவடிக்கைகள்</span></p><p> </p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களின்படி, இந்தப் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7684f03b-25bd-4dcd-865c-dc9c5f79d717/26-6a8d0720604d4.webp' /></p><p>2025 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டபோது கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) முழுமையாகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்துவது குறித்த ஆய்வும் இந்த கலந்துரையாடல்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுடனான நெருங்கிய பாதுகாப்பு கூட்டாண்மைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
</p><p>


இது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பொதுவான பிராந்திய பாதுகாப்பு கவலைகள் குறித்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்..</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 பரீட்சைகளுக்கான திகதிகள் - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2027-gce-al-ol-scholarship-exam-dates-announced-1787626777"></link>
            <id>https://ibctamil.com/article/2027-gce-al-ol-scholarship-exam-dates-announced-1787626777</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p>
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>பரீட்சைகள்&nbsp;</h2><p>
அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L) ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8037241b-c2c8-4d1e-b72f-4cc5b69d33bd/26-6a8d0647335ae.webp' /></p><p>மேலும், பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
</p><p>
இதனிடையே, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு - வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-cut-in-colombo-and-several-areas-today-1787625372"></link>
            <id>https://ibctamil.com/article/water-cut-in-colombo-and-several-areas-today-1787625372</id>
            <summary type="text">புதிய இணைப்பு களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு </h2><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p>நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அது குறிப்பிட்ட தரநிலைகளுக்கு அமைய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீர் விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், பத்தரமுல்ல, கோட்டே மற்றும் பாமன்கடை ஆகிய பல பகுதிகளில் நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea8cc46-5553-4e06-8d25-d9e3691a81b5/26-6a8d0127da3c1.webp' /></p><p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீர்&nbsp;விநியோகம்&nbsp;தடை</h2><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728a3473-9e15-4e39-a12d-bf294cf3c454/26-6a8d0128934c4.webp' /></p><p>

 

நீர் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T02:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் மழையுடனான வானிலை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-amounts-exceeding-75-mm-1787619687"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-amounts-exceeding-75-mm-1787619687</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>அதன்போது, சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b426c4e0-0067-40f3-a40b-513b856690c4/26-6a8cf0ae63e64.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p>இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T01:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை! ரத்து செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767"></link>
            <id>https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767</id>
            <summary type="text">அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ட்ரம்ப்பின் உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், பயிற்சி மீண்டும் தொடங்கப்படுவது குறித்து இரு நாட்டுப் படைகளும் நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11d3017-c397-414d-bccb-83e2d2bef28d/26-6a8ce90a50619.webp' /><br></p><p><i>Image Credit: Mlitarytimes</i></p><p>
</p><p>
இதேவேளை, அண்மையில் முடிந்த மற்றொரு வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரெனக் குறைக்குமாறு உத்தரவிட்டிருந்தாக தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:59:57+00:00</updated>
        </entry>
    </feed>
