<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-10T17:32:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவிலிருந்து ஆபத்தான நபர்களை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-carrying-rathmalane-saima-arrives-katunayake-1786379845"></link>
            <id>https://ibctamil.com/article/plane-carrying-rathmalane-saima-arrives-katunayake-1786379845</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’ உட்பட மூன்று சந்தேக நபர்களை ஏற்றி வந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’ உட்பட மூன்று சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறிலங்கன் விமானம், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ALK315 மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.</p><h2>சிறப்பு காவல்துறை குழுவினரால் நடவடிக்கை</h2><p>காவல் உதவி கண்காணிப்பாளர் றொகன் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15eead94-420c-45c4-8e0d-f367121835e2/26-6a7a057bb5031.webp' /></p><p>
</p><p>
தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் பிரதான அடியாள் என்று கருதப்படுகிறார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325"></link>
            <id>https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325</id>
            <summary type="text">ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த <a href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094" target="_blank">இராணுவத் தளபதிகள்</a> நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஈரானின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான மொஜ்தாபா ஹொசைனி காமேனி இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதன்படி, நாட்டின் <a href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929" target="_blank">ஆயுதப் படைகளின்</a> தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைதரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>அதேபோல, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அஹ்மத் வாஹிதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாகவும், மொஸ்டாஃபா இசாதி அதன் துணைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b005d-601f-424f-9ffe-731bb0fee888/26-6a79fc7aa6c39.webp' /></p><p>மேலும், ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் அலி ஒஸ்மையும், பசீஜ் அமைப்பின் தலைவராக ஹொசைன் தாயெப்பும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-us-president-joe-bidens-cancer-worsens-1786376124"></link>
            <id>https://ibctamil.com/article/former-us-president-joe-bidens-cancer-worsens-1786376124</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.



2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. </p><p>தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார்.</p><h2> கடுமையான வலியால் அவதி</h2><p>&nbsp;பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a4ac83-7c38-400a-a0eb-f3954095e1bb/26-6a79f8e1ab44b.webp' /></p><p>


கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன.</p><p> </p><p>இதுகுறித்து அவரது மகன் ஹண்டர் பைடன் கூறுகையில், "என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு : பிரான்ஸில் உள்ள “குடு அஞ்சு”வின் கை வரிசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-details-of-maligawatta-shooting-emerge-1786373154"></link>
            <id>https://ibctamil.com/article/more-details-of-maligawatta-shooting-emerge-1786373154</id>
            <summary type="text">கொழும்பு கொட்டஹேன காவல் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இன்று பிற்பகல் (10) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை, தற்போது பிரான்சில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொட்டஹேன காவல் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இன்று பிற்பகல் (10) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை, தற்போது பிரான்சில் உள்ள “குடு அஞ்சு” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நடத்தியதாக காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயது நபர் கொல்லப்பட்டார்.</p><h2>மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடப் பொருட்கள் கடையின் உரிமையாளரை குறிவைத்து இன்று பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45972238-9608-472d-bf20-e95c8af4a6ab/26-6a79ea768f57a.webp' /></p><p>
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>“கஞ்சிபானி இம்ரான்”&nbsp;நெருங்கிய உறவினர்</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் “கஞ்சிபானி இம்ரான்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் நெருங்கிய உறவினர் என்று காவல்துறை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e1106d3-3244-42b0-848c-6857bc6e18b3/26-6a79ea75da415.webp' /></p><p>
</p><p>
இரத்மலானை பகுதியில் “குடு அஞ்சு” என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
</p><p>
அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்டப் பொறுப்புடைய பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்திய பிரிவு பொறுப்புடைய காவல்துறை சிரேஷ்ட கண்காணிப்பாளரான மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T15:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு பிணை : வெளிநாட்டு பயணத்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசத்தை பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டார்.
</p><p>
இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டு, தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc303d-03b7-41c5-bbaf-94ae5b1e9343/26-6a7964f4be23e.webp' /></p><p>காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.</p><p>

வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p>
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nzjuK0EpImM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T14:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு பேரிழப்பு : அதிநவீன ட்ரோனை இழந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094"></link>
            <id>https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க விமானப் படையின் அதிநவீன ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க விமானப் படையின் அதிநவீன ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் அமெரிக்க விமானப் படையின் 'MQ-9A ரீப்பர்' ட்ரோன் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள சாபெல்லி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த ட்ரோன் கீழே விழுந்து நொருங்கியதாக நம்பப்படுகிறது.</p><h2>&nbsp;விபத்துக்கான காரணம் வெளிவரவில்லை</h2><p>ரீப்பர் ட்ரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தானாகவே விபத்துக்குள்ளானதா என்ற தகவல் வெளியாகவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Un drone américain s&#39;écrase près du cimetière de Chebelley<a href="https://x.com/hashtag/adi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#adi</a> <a href="https://t.co/SJJjVFxiyK">pic.twitter.com/SJJjVFxiyK</a></p>&mdash; Agence Djiboutienne d&#39;Information (ADI) (@AgenceAdi) <a href="https://x.com/AgenceAdi/status/2086439726999818476?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>



ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமான ஏர் பேஸ், ஆபிரிக்க கண்டத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கியமான மையமாகச் செயல்பட்டு வருகிறது.</p><p></p><h2>கண்காணிப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
தெற்கு செங்கடல் பகுதி உட்படப் பிராந்தியம் முழுவதும் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா இந்த 'MQ-9 ரீப்பர்' ட்ரோன்களை சாபெல்லி தளத்தில் இருந்தே இயக்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03efd6f3-4bcf-4b97-9e17-444c986dd2ae/26-6a79de9d91297.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த ரூ.415 கோடி மதிப்பு கொண்டது இந்த 'MQ-9 ரீப்பர்' ட்ரோன் ஆகும்&nbsp;&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T14:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்</h2><p>
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/962e6ad2-3943-4690-8057-6c67a13478e1/26-6a79d532072df.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T13:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன் : ட்ரோன் தாக்குதலில் பலர்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929</id>
            <summary type="text">மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&amp;nbsp; 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&nbsp; 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. </p><p>

உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம்</h2><p>ரஷ்யாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8085f5-6065-4a84-8efe-336993ed7a89/26-6a79cad84bc0e.webp' /></p><p> </p><p>ரஷ்யாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா</h2><p>
</p><p>
இலங்கை நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலைவரை 456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfebe66b-2560-4068-9899-0c489784517b/26-6a79cad7859c9.webp' /></p><p> இதில் எத்தனை ட்ரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷ்யா 126ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T12:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனையை ஏற்க முடியாது! ஆனால்...கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cardinal-says-death-penalty-unacceptable-1786364349"></link>
            <id>https://ibctamil.com/article/cardinal-says-death-penalty-unacceptable-1786364349</id>
            <summary type="text">
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கடமையில் இருந்து தவறியதற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p>

மரண தண்டனை மனித மாண்பை மீறுவதாகவும், மரண தண்டனை விதிப்பதை திருபீடத்தின் போதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

எவ்வாறாயினும், இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதன் முடிவுகளிலோ அல்லது ஆலோசனைகளிலோ எந்த வகையிலும் தலையிட எண்ணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29123956-1090-41f0-8c10-bf80d9cc8592/26-6a79c9637633c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளையும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் சட்டப்படி நீதி கிடைக்கச் செய்வதற்கும் தொடர்ந்து பாடுபடுவதே கொழும்பு மறைவாட்டத்தின் வலுவான விருப்பம் என்று கர்தினால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-10T12:51:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்களால் வெடித்தது சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/studentl-library-employees-closed-the-door-1786357333"></link>
            <id>https://ibctamil.com/article/studentl-library-employees-closed-the-door-1786357333</id>
            <summary type="text">&amp;nbsp;மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.&nbsp;</p><p>&nbsp;தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த ராசிகா குணசிங்க, 17 வயதுடைய இந்த மாணவி நூலகத்தின் மேல் மாடியில் படித்துக்கொண்டிருந்து கீழே வந்தபோது அதிகாரிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;மாணவியை விட்டு கதவை பூட்டி சென்ற ஊழியர்கள்</h2><p> </p><p>அங்கு யாரும் இல்லாததால் பயந்துபோன மாணவி சத்தமிட்டு அழுதார், வீதியில் சென்ற இரண்டு குழந்தைகளுக்கு அந்த சத்தம் கேட்டு நகர சபை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/656343a0-9897-4835-bc31-abf1c622f111/26-6a79ab22b13f0.webp' /></p><p> </p><p>பின்னர் இரண்டு தொழிலாளர்கள் கூரையின் வழியாக நூலகத்திற்குள் குதித்ததால் மாணவி மேலும் பயந்துபோனார், பின்னர் வேறொருவர் சாவியைக் கொண்டுவந்து கதவைத் திறந்து அவரை வெளியே கொண்டுவந்தார். </p><p>அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு தொழிலாளி மாணவியை காணொளி எடுத்ததால் மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி முகத்தை மூடிக்கொண்டிருந்தார் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளனர் என்றும் உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.</p><p></p><p>

</p><h2>நடைபெற்றுவரும் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நகர சபை தலைவர் சமன் சமரகோன் , இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8d74cc-7399-41a7-8a16-690bd3a58f7d/26-6a79ab236c135.webp' /></p><p> </p><p>அந்த அதிகாரிகள் தவறிழைத்தது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.</p><p> இதற்கிடையில், இந்த சம்பவம் காரணமாக மகரகம நகர சபை நூலகம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டது என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்ப தயங்குவதாகவும்சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நகர சபை உறுப்பினர் காந்தி கோடிக்கார இங்கு குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T12:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைகளிலுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுங்கள் : வடக்கிலிருந்து ஒலித்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-indian-fishermen-in-sri-lankan-prisons-1786362437"></link>
            <id>https://ibctamil.com/article/release-indian-fishermen-in-sri-lankan-prisons-1786362437</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை
சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை
சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ
பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர் இந்த
கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>சிறைச்சாலை கலவரங்கள்</h2><p>38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில்
உள்ளனர். இதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குவர்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல்
கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daa48ae2-7c22-45ed-8291-e67966d3e701/26-6a79c1113b494.webp' /></p><p> நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த
உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.
</p><p>
இந்நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு
மாற்றப்பட்டுள்ளார்கள்.</p><h2>உயிருக்கு அச்சுறுத்தல்</h2><p>

மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு
கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது
தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62e3be9-dda0-4dcc-a775-1deca908e19f/26-6a79c111e2d14.webp' /></p><p>
</p><p>
இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும்
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு
அவர்கள் குடும்பங்களிடம் சேர்க்க வேண்டுமென என கோரிக்கை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T12:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lesson-hiroshima-and-nagasaki-hold-for-eelam-1786359605"></link>
            <id>https://ibctamil.com/article/lesson-hiroshima-and-nagasaki-hold-for-eelam-1786359605</id>
            <summary type="text">உலக வரலாற்றில் சில நாட்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடிவதில்லை. அவை நாட்காட்டியில் ஒரு திகதியாக மாத்திரம் இருப்பதில்லை. மனித குலத்தின் மனச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக வரலாற்றில் சில நாட்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடிவதில்லை. அவை நாட்காட்டியில் ஒரு திகதியாக மாத்திரம் இருப்பதில்லை. </p><p>மனித குலத்தின் மனச்சாட்சியில் அழியாத காயங்களாக நிலைத்திருக்கின்றன. </p><p>அந்தக் காயங்களின் கதை, மீள மீள வாசிக்க வேண்டிய ஒரு பாடமாகவும் இருக்கிறது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் திகதிகளும் அத்தகைய நாட்களே. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டு நகரங்களை மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் மீதான நம்பிக்கையையும் உலுக்கின.</p><p></p><h2>பேரழிவின் நினைவு</h2><p>இரண்டாம் உலகப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த காலமது. அமெரிக்கா, ஜப்பானை சரணடையச் செய்வதற்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது ‘ஃபாட் மேன்’ எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. </p><p>சில நொடிகளில் நகரங்கள் தீப்பந்தங்களாகின. மனிதர்கள் கருகினர். வீடுகள் சிதைந்தன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.</p><p>&nbsp;ஆனால் அணுகுண்டின் அழிவு அந்த நாளுடன் முடிந்துயவில்லை. குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பியவர்கள் பின்னர் கதிர்வீச்சின் கொடூரத்தை அனுபவித்தனர். </p><p>உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள், நோய்கள், புற்றுநோய்கள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த உடல்நலப் பாதிப்புகள் என அந்தப் போரின் நிழல் பல ஆண்டுகள் நீடித்தது. இப்படித்தான் போர் உலகம் முழுவதும் நீள்கிறது. ‘ஹிபாகுஷா’ என்று அழைக்கப்பட்ட அணுகுண்டு உயிர்தப்பிகள் தங்கள் உடல்களில் மட்டுமல்ல, நினைவுகளிலும் அந்த அழிவை சுமக்க நேரிட்டது.</p><h2>அவர்கள் மீண்டெழுந்தனர்</h2><p>ஆனால் இங்கேதான் ஜப்பானின் வரலாறு ஒரு முக்கியமான திருப்பத்தை எடுத்தது. சாம்பலாகிப் போன நகரங்களை பார்த்து ஜப்பானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தையும் சாம்பலாக்கவில்லை.</p><p> அவர்கள் மீண்டும் எழுந்தனர். வீடுகளை கட்டினர். பள்ளிகளைத் திறந்தனர். தொழிற்சாலைகளை நிறுவினர். அறிவியலை வளர்த்தனர். கல்வியை முன்னிறுத்தினர். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக ஜப்பான் மாறியது. </p><p>ஹிரோஷிமா இன்று வெறும் அழிக்கப்பட்ட நகரத்தின் நினைவுச்சின்னமாக மாத்திரமின்றி உயிர்வாழ்வினதும் போராட்டத்தினதும் அடையாளமாகவும் நிற்கிறது. நாகசாகியும் அதேபோல். அழிவை நினைவில் வைத்துக்கொண்டபடியே எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை உலகிற்கு காட்டிய நகரமே.</p><p>&nbsp;இதன் பொருள் அவர்கள் தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டார்கள் என்பதல்ல. மாறாக, அவர்கள் கடந்த காலத்தை நினைவாகப் பாதுகாத்தார்கள். அணு ஆயுதங்களின் ஆபத்தை உலகிற்கு தொடர்ந்து எடுத்துச் சொன்னார்கள்.</p><p> தங்கள் குழந்தைகளுக்கு போரின் விலையை – போரின் முகத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் விழைந்த பேரழிவினை எச்சரிக்கும் நினைவிடங்களை உருவாக்கினர். </p><p>அருங்காட்சியகங்களை அமைத்தனர். உயிர்தப்பியவர்களின் சாட்சிகளைப் பதிவு செய்தனர். இப்படியாக வரலாற்றை அழித்துவிடாமல் அதிலிருந்து எதிர்காலத்தை கட்டியெழுப்பினார்கள்.</p><h2>யப்பானும் ஈழமும்</h2><p>இந்த இடத்தில்தான் ஹிரோஷிமாவும் நாகசாகியும் ஈழ மக்களிடம் ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகின்றன. </p><p>போரால் அழிக்கப்பட்ட ஒரு சமூகமாக நாம் எதைச் செய்கிறோம்? ஈழத் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாகப் போர், படுகொலைகள், இடப்பெயர்வுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறை, சித்திரவதை, நிலப்பறிப்பு, பொருளாதார அழிவு என எண்ணற்ற காயங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றனர்.</p><p> முள்ளிவாய்க்கால் என்பது நமது கூட்டு நினைவில் ஒரு காயமாக இருக்கிறது. செம்மணி, குமரபுரம், நாகர்கோவில், சத்துருக்கொண்டான், திராய்க்கேணி, வல்வெட்டித்துறை என எண்ணற்ற இடங்கள் எமது வரலாற்றின் இரத்தச் சாட்சிகளாக நிற்கின்றன.</p><p>&nbsp;ஆனால் ஜப்பானின் அனுபவம் சொல்லும் பாடம், காயங்களை மறந்துவிடுங்கள் என்பதல்ல. மாறாக, காயங்களை நினைவாக மாற்றுங்கள். நினைவுகளை அறிவாக மாற்றுங்கள். அறிவை எதிர்காலமாக மாற்றுங்கள். </p><p>ஒரு மக்கள் அழிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாக்க முடியும். தங்கள் கல்வியைப் பாதுகாக்க முடியும். தங்கள் பண்பாட்டை மீட்டெடுக்க முடியும். தங்கள் வரலாற்றை எழுத முடியும். தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் கடந்த காலத்தைச் சொல்ல முடியும். அதுவே ஒரு ஒரு இனத்தின் ஒரு தேசத்தின் உயிர்வாழ்வுக்கு அடிப்படையாகிறது.</p><h2>மீள் எழுதல் என்பது</h2><p>&nbsp;ஜப்பான் எப்படி தன் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பியது என்பது ஈழத்திற்கும் உலகிற்கும் ஒரு பெருங்கதை, ஒரு பெரும்பாடம். ஈழத் தமிழர்களும் தங்கள் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.</p><p> ஆனால் கட்டடங்களை மாத்திரமல்ல. கட்டங்கள் கட்டி எழுப்பப்படுவது மாத்திரம் வளர்ச்சியல்ல. கல்வியை. பொருளாதாரத்தை. கலை இலக்கியத்தை. அறிவியலை. சமூக நிறுவனங்களை. </p><p>நினைவகங்களை. வரலாற்றுப் பதிவுகளை. போர் முடிவடைந்துவிட்டதாக அரசுகள் அறிவிக்கலாம். ஆனால் ஒரு மக்களின் மனதில் போர் முடிவடைவதற்கு பல தலைமுறைகள் தேவைப்படலாம். அதனால் மீள் வாழ்வு என்பது வெறும் வீடுகளை அமைப்பதஅல்ல. உடைந்த சமூக நம்பிக்கையை மீண்டும் உயிரூட்டுவதாகும்.</p><p>ஒரு நகரத்தை அழிக்க முடியும்; ஒரு தலைமுறையை காயப்படுத்த முடியும்; ஆனால் ஒரு மக்கள் தங்கள் நினைவையும் அறிவையும் எதிர்காலக் கனவையும் பாதுகாத்துக்கொண்டால் அவர்களை முழுமையாக அழித்துவிட முடியாது என்பது ஹிரோஷிமா நமக்குச் சொல்லும் மிகப் பெரிய பாடம் இதுதான்: &nbsp;நாகசாகியின் சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான், அழிவுக்குப் பின்னரும் மனிதன் மீண்டும் எழ முடியும் என்பதற்கான சாட்சியாக நிற்கிறது.</p><p>ஈழமும் ஒருநாள் தன் காயங்களின் மீது நின்றுகொண்டு எழ வேண்டும். அதற்கு முதலில் நாம் எமது வரலாற்றை மறக்கக் கூடாது. இரண்டாவதாக, அந்த வரலாற்றை வெறும் துயரமாக மாத்திரம் வைத்திருக்கக் கூடாது.</p><p> மூன்றாவதாக, அடுத்த தலைமுறைக்கு அழிவின் கதையை மட்டும் சொல்லாமல், மீண்டெழும் மக்களின் கதையையும் சொல்ல வேண்டும். ஹிரோஷிமாவும் நாகசாகியும் இன்று உலகத்திடம் அணுகுண்டுக்கு எதிராகப் பேசுகின்றன.ஈழத்தின் மண்ணும் ஒருநாள் அதன் புதைகுழிகளிலிருந்து எழுந்து, போர் எதைச் செய்தது என்பதை உலகத்திடம் சொல்ல வேண்டும். </p><p>கலை இலக்கியங்கள், அரசியல், போராட்டம் என எல்லா வழிகளிலும் எமது குரல் மிக நேர்த்தியோடு இதைச் செய்ய வேண்டும். சாம்பலில் இருந்து எழுவது மறப்பதற்கான எத்தணமல்ல. நினைவோடு மீண்டும் வாழத் தொடங்குவதாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="http://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-10T11:49:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[230 புலம்பெயர்ந்தவர்களுடன் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்து சென்ற சிறிய படகு : முறியடிக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/small-boat-carrying-record-230-migrants-to-uk-1786359989"></link>
            <id>https://ibctamil.com/article/small-boat-carrying-record-230-migrants-to-uk-1786359989</id>
            <summary type="text">கடந்த வார இறுதியில், 230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குச் சென்றது. இதன் மூலம், ஒரே படகில் இவ்வளவு அதிகமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வார இறுதியில், 230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குச் சென்றது. இதன் மூலம், ஒரே படகில் இவ்வளவு அதிகமானோர் கடந்து சென்றதற்கான சாதனையை இது படைத்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.
</p><p>
இந்தப் படகு சனிக்கிழமையன்று இங்கிலாந்தை வந்தடைந்தது. இதன் மூலம், ஒரே படகில் 165 பேர் கடந்து சென்ற ஜூலை மாதத்தின் முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>ஒரே நாளில் ஆங்கில கால்வாயை கடந்தவர்கள்</h2><p>&nbsp;சனிக்கிழமையன்று நான்கு படகுகளில் மொத்தம் 258 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குச் சென்றதாக உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7294e7-eab7-4efc-acee-84dd9b8db3c1/26-6a79b6278ab23.webp' /></p><p>
</p><p>
"பயணிக்கத் தகுதியற்ற படகுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் திணிப்பதன் மூலம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் குற்றக் கும்பல்களால் கையாளப்படும் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான தந்திரங்களை" இந்த சமீபத்திய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>குறைவடைந்த ஆங்கில கால்வாயை கடப்பவர்களின் எண்ணிக்கை</h2><p>ஒரே படகில் சாதனை அளவிலான மக்கள் பயணித்த போதிலும், இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf21ee77-aff9-4486-b7d5-2ab7eec55b89/26-6a79b6283d93c.webp' /></p><p>
</p><p>
பிபிசி மேற்கோள் காட்டிய உள்துறை அமைச்சகத்தின் தற்காலிகத் தரவுகளின்படி, இதுவரை சுமார் 14,820 பேர் சிறு படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 43% சரிவையும், 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 16% சரிவையும் குறிக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சில மாவட்டங்களுக்கு நாளை இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strong-winds-40-kmph-expected-several-tomorrow-1786356796"></link>
            <id>https://ibctamil.com/article/strong-winds-40-kmph-expected-several-tomorrow-1786356796</id>
            <summary type="text">&amp;nbsp;நாளை (11.08.2026) மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாளை (11.08.2026) மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என&nbsp; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>அதேவேளை, பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் வடமேற்கு மாகாணத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம்</h2><p>
</p><p>
 

இதற்கிடையில், வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bbdcf2b-339e-4a59-8b70-e44116559a3f/26-6a79a7890d0c7.webp' /></p><p>

 

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:36:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா போபியா மேனியா! போமலின் புரட்டுகள்! பெஸ்ரிவல் குழப்பங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-phobia-mania-1786360783"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-phobia-mania-1786360783</id>
            <summary type="text">றீச்சா பண்ணையில் விளைவிக்கப்படும் பழங்கள் அழுகாமல் ஆக இருப்பதற்காக போர்மலின் என்ற இரசாயனம் தெளிக்கப்படுவதாக தனது இரசாயன வதந்தி வாயால் வடக்கின் சுயேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா பண்ணையில் விளைவிக்கப்படும் பழங்கள் அழுகாமல் ஆக இருப்பதற்காக போர்மலின் என்ற இரசாயனம் தெளிக்கப்படுவதாக தனது இரசாயன வதந்தி வாயால் வடக்கின் சுயேச்சை கிளாடியேற்றர் எம்.பி தனது நாடாளுமன்ற சிறப்புரிமை உரையில் அடித்துவிட்டார். </p><p>

அதுவும் றீச்சாவில் ஒரு உணவுத்திருவிழா நடப்பதற்கு முதல் நாளில்; நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய Parliamentary Privilege and Immunity எனப்படும் உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமையில் சொன்னார். </p><p>அவ்வாறான போமலின் பழங்கள் தெற்கை நோக்கி வருவதாகவும் சிங்களவர்களை பீதியூட்டி சமூக சேதசதிக் கோட்பாடுகளை (Destruction Conspiracy Theory ) எடுத்து விட மறுநாள் வடக்கின் சுற்றுலாத்துறை மற்றும் அதன் பொருளாதார சுயசார்பை அடிக்கும் நோக்குடன் 
றீச்சா நிகழ்வில் சில களமிறக்கிகள் குழப்பங்களை செய்தமை ஒரு ரைம்லைன் நகர்வாகவே தெரிகிறது.</p><p> 

இந்த ரைம்லைன் குழப்பங்களை எய்தவர்களின் உள்நோக்கம் வடக்கின் பொருளாதார சுயசார்பை அடிப்பது மாகாணசபைத்தேர்தலில் எங்கே றீச்சா BK களமிறங்கிவிடுவாரோ என்ற கிலிசார்ந்த இலக்குகள் 
இதன்பின்னர் தான் றீச்சா மற்றும் BK போபியா மேனியாக்கள் சமூக வலைத்தள கூச்சல்களாக வந்த நிலையில் தனிப்பட்ட அரசியல் பகை வைத்துள்ள தரப்புகள் இதனை முதலீடாக்க துடிக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pDRk50aQzVc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T11:33:07+00:00</updated>
        </entry>
    </feed>
