<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-20T14:59:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804"></link>
            <id>https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804</id>
            <summary type="text">

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகபட்சமாக 1.5 மில்லியன் ரூபாய் வரையிலான கடனை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், பல்கலைக்கழக ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் அல்லது தேசிய அளவிலான பட்டயப் படிப்புக்காக 130 பாடப்பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திட்டத்தின் முதற்கட்டம்</h2><p>

இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3ஆம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்திலிருந்து தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87456f24-eb13-45f6-a522-3bc27cc0a287/26-6a870c8b39a68.webp' /></p><p>

இதற்கிடையில், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்யும் என களுத்துறை மாவட்டச் செயலாளர் சுனந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T14:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் மனைவிக்கு கிடைத்தது பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shashi-weerawansa-released-on-anticipatory-bail-1787233481"></link>
            <id>https://ibctamil.com/article/shashi-weerawansa-released-on-anticipatory-bail-1787233481</id>
            <summary type="text">சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த ரணசிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த ரணசிங்க முதியன்செலகே ஷிர்ஜா உதயந்தி என்ற சசி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.</p><p>

கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வாசிப்பதற்காக, இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>வாசித்து காட்டப்பட்ட தண்டனை தீர்ப்பு</h2><p>பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையான பிறகு, நீதிபதி, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தொடர்புடைய தண்டனைத் தீர்ப்பை பிரதிவாதிக்கு வாசித்துக் காட்டியதுடன், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்ததால், அவரைப் பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4103a3ce-4517-454c-8bdd-3649cdc6453e/26-6a87099f6beb4.webp' /></p><p>
</p><p>
தொடர்புடைய வழக்கை செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/officer-guarding-gnanasara-temple-opens-fire-1787232104"></link>
            <id>https://ibctamil.com/article/officer-guarding-gnanasara-temple-opens-fire-1787232104</id>
            <summary type="text">ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார்.

குறித்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று&nbsp;ராஜகிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0f07f7-2d51-41b3-ae38-cd6736047a44/26-6a87021298187.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T13:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் வறண்ட நாட்டில் ஒருவருடத்தில் கிடைக்கவேண்டிய மழை 03 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chile-hit-by-heavy-rain-landslides-1787231034"></link>
            <id>https://ibctamil.com/article/chile-hit-by-heavy-rain-landslides-1787231034</id>
            <summary type="text">உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு முழுவதையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நாடு பெற்றுவிட்டதாக சிலி வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்</p><p>&nbsp;இந்த திடீர் கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.</p><h2>ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழை</h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரம் டோகோபில்லா ஆகும். இந்த நகரம் ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f18f12-fbd1-43d4-b52c-b06afc0cc3fb/26-6a86fe5e7b250.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், நேற்று (19) சில மணி நேரத்தில் இந்த நகரம் 30 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் பள்ளி அதிபர் படுகொலை! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543</id>
            <summary type="text">இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், ரூபா ரெட்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து அவரது வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
</p><p>
இக்கொலை வழக்கு குறித்து விசாரிக்கக் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்து, சிசிடிவி காட்சிகள், தடயவியல் சான்றுகள் மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்து 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>சந்தேகத்துக்குரிய மாணவர்கள்</h2><p>

அதில், உயிரிழந்த ரெட்டி இறுதியாக தனது அத்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடலில் 'பாபு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தெரியவந்தள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0099c95a-7b9e-431a-b40e-e098d65b992f/26-6a86fc3212beb.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வராத ஐந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களைக் காவல்துறை தீவிரமாகப் பின்தொடர்ந்த நிலையில், அதில் இருவர் சமீபகாலமாக அதிக அளவில் பணம் செலவழித்து விருந்துகளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.</p><p>

முன்னதாக பைகளில் பணமும் கைபேசியும் வைத்திருந்ததற்காக கொலை செய்யப்பட்ட ரெட்டியால் தண்டிக்கப்பட்டு, விடுதியிலிருந்து நீக்கப்பட்டு நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களாக மாற்றப்பட்ட கோபத்தில் அவர்கள் இச்சம்பவத்தைத் திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>கொலை சம்பவம்&nbsp;</h2><p>
</p><p>
கத்தி மற்றும் கையுறைகளுடன் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்த ஒரு மாணவன், அங்கிருந்த ரூ. 2,50,000 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளான். 

அப்போது அவனது முகக்கவசம் விலகியதால் ரெட்டி அவனை அடையாளம் கண்டுகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a5b093-c3d9-4401-9cbf-78f8b3121d07/26-6a86fc32cf243.webp' /></p><p> </p><p>இதனால் அவர் குறித்த மாணவனாலேயே 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், இரத்தக்கறை படிந்த உடைகளை மறைத்துவிட்டு கோவாவுக்குத் தப்பிச் சென்ற அந்த மாணவர்களிடமிருந்து ரூ. 1,54,000 ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ரெட்டியின் தொலைபேசியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
</p><p>
குற்றத்தைச் செய்வதற்கு முன், குறைந்த காலத்தில் விரைவாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்கள் இணையத்தில் தேடியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T13:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recording-of-statements-relatives-of-disappeared-1787229996"></link>
            <id>https://ibctamil.com/article/recording-of-statements-relatives-of-disappeared-1787229996</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் பிரதேச
செயலகத்தில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் பிரதேச
செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
இதன்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள்
மற்றும் உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை
மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளைச்
சேர்ந்தவர்களுடன், சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களும் அதிகளவில் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.</p><p></p><h2>தகவல்கள் பதிவு</h2><p>
</p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம்
இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம்
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8503844f-2401-4c96-9fb3-49cf59762d86/26-6a86f72dc822c.webp' /></p><p>
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மையை கண்டறிந்து, அவர்களது
உறவினர்களுக்கு உரிய பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக
இந்த வாக்குமூலம் பதிவு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T12:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர், ஆசிரியர்களுக்கு பிரதமர் ஹரிணியின் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-urges-parents-teachers-children-enjoyl-holidays-1787227428"></link>
            <id>https://ibctamil.com/article/pm-urges-parents-teachers-children-enjoyl-holidays-1787227428</id>
            <summary type="text">குழந்தைகள் ஓய்வெடுக்கவும், தங்களது பாடசாலை விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் போதுமான நேரத்தை வழங்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய பெற்றோர்களையும் ஆசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் ஓய்வெடுக்கவும், தங்களது பாடசாலை விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் போதுமான நேரத்தை வழங்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டக்கொண்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகளின் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, விடுமுறை நாட்களில் அவர்கள் மீது அதிகப்படியான கல்வி சார்ந்த கோரிக்கைகளை வைப்பதற்கு எதிராகவும் எச்சரித்தார்.</p><h2>மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டவரும் நடவடிக்கை</h2><p>&nbsp;குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி சீர்திருத்தங்கள், பள்ளிப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c10bbdf-6322-4816-a528-64c8690490f9/26-6a86f7297029c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dogs-die-after-getting-entangled-in-electric-wires-1787228318"></link>
            <id>https://ibctamil.com/article/dogs-die-after-getting-entangled-in-electric-wires-1787228318</id>
            <summary type="text">களுத்துறை - வாத்துவ, தல்பிட்டிய பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குச் சொந்தமான காணியில், பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - வாத்துவ, தல்பிட்டிய பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குச் சொந்தமான காணியில், பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
குறித்த காணியில் ஒரே இடத்தில் 5 நாய்கள் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் மின்சாரம் தாக்கியதில் நான்கு நாய்கள் உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>ஹோட்டலின் எல்லைக்கு அருகில் மின்சாரம்</h2><p>
</p><p>
குறித்த ஹோட்டலின் எல்லைக்கு அருகில் மின்சாரம் பொருத்தப்பட்டதன் காரணமாக, நேற்று இரவு அந்த வளாகத்திற்குள் நுழைந்த நான்கு நாய்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/746840f3-2878-4a40-9b45-5b95c427ddbe/26-6a86f31c2eb62.webp' /></p><p>
</p><p>
விலங்குகளிடமிருந்து பயிர்கள் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக எனக் கூறி, இவ்வாறு தரை மட்டத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சும் வகையில் கம்பிகளை அமைப்பது முற்றிலும் சட்டவிரோதமானதும், மிகவும் கொடூரமானதும் மனிதாபிமானமற்றதுமான செயற்பாடாகும்.
</p><p>
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாத்துவ காவல்துறை மற்றும் வாத்துவ சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோர் நாய்களின் மரணம் குறித்து சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T12:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-current-political-situation-1787228100"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-current-political-situation-1787228100</id>
            <summary type="text">இத்தால் சகலரும் அறிவது யாதெனில்… சிறிலங்கா அரசியலமைப்பில் 22 ஆம் திருத்தத்தை ஒப்பேற்றத்தலைப்படும் அனுர அரசாங்கத்துக்கும் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தால் சகலரும் அறிவது யாதெனில்… சிறிலங்கா அரசியலமைப்பில் 22 ஆம் திருத்தத்தை ஒப்பேற்றத்தலைப்படும் அனுர அரசாங்கத்துக்கும் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள பிரீதி பத்மன் சூரசேனவை இன்னும் 2 வருடங்களுக்கு பதவியில் இருத்தும் நோக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஐயோ என்கிறது அரசாங்கம்.</p><p>

22 க்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தககூடத் தயார் என கொப்பராண சத்தியம் செய்யாத குறையாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்தோ பரிதாபம் அரசாங்கம் இலங்கையில் மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற்று 12 வருடங்கள் ஆகிவிட்டன. அதனை நடத்தும் சிஸ்ரம் சேஞ் அசுமாத்தியங்கள் ஏதும் இல்லை.</p><p>
இப்போது முஸ்லிம் சுகாதார ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் விடயத்தை ஆட்சித்தரப்பு செய்வது போலத்தெரிகிறது.</p><p>

தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரு ஒன்றுபட்ட அரசியல்தளத்தில் ஆளுங்கட்சியை எதிர்கொள்ள கடந்த மாதம் இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகள் உட்பட தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் அரசியல் பேரவை என்ற ஒரு தளத்தை உருவாக்கியுள்ள நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடுமிப்பிடிகளை செய்யவேண்டும் என நினைக்கும் தரப்புகளுக்கு இப்போது இந்த விடயம் அவலாக மாறவேண்டும் என்பதால் இந்த நுட்பங்கள வருவதாக தெரியும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/to0HOR2KbTQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T12:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலக குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-belonging-to-kosgoda-sujee-to-be-frozen-1787226373"></link>
            <id>https://ibctamil.com/article/land-belonging-to-kosgoda-sujee-to-be-frozen-1787226373</id>
            <summary type="text">வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட சுஜீக்கு சொந்தமான, கொஸ்கொட வேலங்கொடவில் உள்ள சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பன்னிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட சுஜீக்கு சொந்தமான, கொஸ்கொட வேலங்கொடவில் உள்ள சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பன்னிரண்டு ஏக்கர் நிலத்தை, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இன்று (20) முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. </p><p>அந்த நிலம் விவசாயப் பயிர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புடன் வளமாக உள்ளது.</p><h2>சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் முடக்கப்பட்டது</h2><p>வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜகமுனி சுஜித் டி சொய்சா என்ற கொஸ்கொட சுஜீக்கு சொந்தமான இந்த சொத்து, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நிதிக்குற்றங்கள் இயக்குநரகம் நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் முடக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8591c4d-1c31-45a2-84ef-acbf3e64e0fe/26-6a86eb0392f46.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T11:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/97-chance-that-el-ni-o-conditions-next-year-1787225456"></link>
            <id>https://ibctamil.com/article/97-chance-that-el-ni-o-conditions-next-year-1787225456</id>
            <summary type="text">தற்போது நிலவும் எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

எதிர்வரும் மாதத்தில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மழை அற்ற வறட்சியான வானிலை தொடர்ந்து நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்த எல் நினோ நிலைமை அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என்பதில் 97% உலகளாவிய கணிப்புகள் உள்ளன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>எல் நினோ நிலை</h2><p> </p><p>அடுத்த ஆண்டின் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மழை கணிசமாகக் குறையும் என்றும் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3acaeb38-e537-4360-9c61-607a14a0f41b/26-6a86eaa093af5.webp' /></p><p>இதன்படி மனித உடலால் தாங்க முடியாத அளவுக்கு இந்த நிலைமை செல்லக்கூடும் என&nbsp; மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kompanitheru-temple-jewels-rescued-1787224684"></link>
            <id>https://ibctamil.com/article/kompanitheru-temple-jewels-rescued-1787224684</id>
            <summary type="text">

கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், இரு தர்மகர்த்தாக்கள் முறையே 12.4 மில்லியன், 12.4 மில்லியன் ரூபாவை தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர்.
</p><p>
ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமாரகுருக்கள் என்பவரே நகைப்பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
இவர் திருடிய நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள சி.டி.பி வங்கியில் 5,280,000 ரூபாவுக்கும், விமல் அடகு நிறுவனத்தில் 5,570,000 ரூபாவுக்கும், எஸ்.எம்.பி நிறுவனத்தில் 15,925,950 ரூபாவுக்கும் அடகு வைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f04c308-1b2e-416d-bd11-00b26785063a/26-6a86e6acce26b.webp' /></p><p> </p><p>

கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே இத்திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. 

அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித்தெரு காவல்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.
</p><p>
இதனையடுத்து குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான சதீஸ்குமாரகுருக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிவான், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T11:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத நெருக்கடி : கடனில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-economy-national-debt-hits-40-trillion-1787224066"></link>
            <id>https://ibctamil.com/article/us-economy-national-debt-hits-40-trillion-1787224066</id>
            <summary type="text">அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன், வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது. கடந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன், வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டொலர்களைக் கடந்துள்ளது. </p><p>கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் முதன்முதலில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது இந்த கடன் தொகை $19.95 டிரில்லியனாக இருந்தது. ஆனால், தற்போது அது இரட்டிப்பாகி $40.047 டிரில்லியன் ஆக உயர்வடைந்தள்ளது.</p><p>


</p><h2>அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ள கடன் வளர்ச்சி விகிதம்</h2><p>கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் கடன் வளர்ச்சி விகிதம் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d13fbc2-b89c-42ee-abe2-d378703d47ae/26-6a86e67825cb6.webp' /></p><p>&nbsp;2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $39 டிரில்லியனாக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களுக்குள்ளாகவே மேலும் ஒரு டிரில்லியன் டொலர் உயர்ந்து $40 டிரில்லியன் என்ற ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.</p><p> நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகையில் $32.266 டிரில்லியன் பொதுக் கடனாகவும், $7.782 டிரில்லியன் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் பிரிந்துள்ளது.</p><p></p><h2>வருவாயை விட அதிகரிக்கும் செலவுத்தொகை</h2><p>&nbsp;அமெரிக்க அரசு செலவழிக்கும் தொகை, அதற்கு வரும் வருவாயை விட அதிகமாக இருப்பதால் ஆண்டுதோறும் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53256637-e902-4c88-8495-a7911e621218/26-6a86e678cd4ad.webp' /></p><p> </p><p>இராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சமுக நல பாதுகாப்பு மற்றும் மெடிகேர் திட்டங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.</p><p> வாங்கிய கடனுக்காக அரசு செலுத்தும் வட்டித் தொகையே தற்போது Medicare திட்டத்திற்கான செலவை விட அதிகரித்து, நாட்டின் இரண்டாவது பெரிய செலவினமாக மாறியுள்ளது.</p><h2>கடுமையாக பாதித்துள்ள அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம்&nbsp;</h2><p>இந்த $40 டிரில்லியன் கடன் சுமையானது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக $117,000 கடன் இருப்பதற்கு சமமாகும். தொடர் கடன்கள் காரணமாக அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் வீட்டு வாடகை, கார் கடன்கள் போன்ற அன்றாட செலவுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5774fa9b-81d2-4fae-b423-504333fbc7a7/26-6a86e6797f1ea.webp' /></p><p>அமெரிக்க கடன்களுக்கான உச்சவரம்பு எல்லை $41.1 டிரில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் கடன் அதிகரித்தால் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த வரம்பை எட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் பொருளாதார முட்டுக்கட்டை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reverend-nihal-jim-brown-memorial-1787225160"></link>
            <id>https://ibctamil.com/article/reverend-nihal-jim-brown-memorial-1787225160</id>
            <summary type="text">அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார்
மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20
ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார்
மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20
ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல்
ஆக்கப்பட்ட 22 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில்
இடம்பெற்றது.
</p><p>நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி
ஆரம்பமானது. </p><p>கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை
சென்றடைந்தது.</p><p></p><h2>ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்</h2><p>
</p><p>அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வும் விசேட வழிபாடுகளும்
இடம்பெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி உரைகளும்
நிகழ்த்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000252c3-6a10-4575-bbb5-3401b7577e2a/26-6a86e67b066c1.webp' /></p><p>
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்கு
சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அருட்தந்தை ஜிம் பிறவுண்
அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமல் ஆக்கப்பட்டனர்.</p><p>
அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார், ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்
தீவிரமடைந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களில்
ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டார்.</p><p>
யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் அல்லைப்பிட்டிக்கு சென்றதற்கான
பதிவும், பிற்பகல் 1.50 மணியளவில் அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும்
பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரிடம் இருந்ததாக
அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், அதன்பின்னர் இருவரின் நிலை
தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.</p><p></p><h2>உண்மை வெளிப்படுத்தப்படாத நிலை</h2><p>
</p><p>20 ஆண்டுகள் கடந்தும் அவர்களது நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படாத
நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரையும் நினைவுகூரும் வகையில் இன்றைய
நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ef7069-002d-458c-9d27-70c611c9ba1c/26-6a86e5dce8869.webp' /></p><p>
</p><p>நிகழ்வில் மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்பணி எஸ். றெக்ஸ்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா. இளப்பிறை, சட்டத்தரணி க. சுகாஸ்,
கொழும்பைச் சேர்ந்த அருட்தந்தை செராட் மற்றும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான
ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அ. அகஸ்ரின் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.</p><p>அஞ்சலி நிகழ்வு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை லியோ பாதர் தலைமையில்
இடம்பெற்றது.
நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருக்கள், பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
நினைவாக அஞ்சலி செலுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T11:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி : கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-development-1787223054"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-development-1787223054</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.</p><p>அதன்படி முதற்கட்டமாக விமான நிலைய முனையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அடுத்த கட்டத்தில் ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்
இஷேபிள் மார்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே அளுநர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>வடக்கு மாகாணத்தில் முதலீடு</h2><p>இங்கு ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருகின்றது.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தில்
முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம்
செலுத்தப்பட வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008f508e-e9e2-44a8-b38f-54c967235bc8/26-6a86e2245c564.webp' /></p><p>டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான பணிகளுக்கு
அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், அவற்றைத் தேவைக்கேற்ப
தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.</p><p>

டித்வா பேரிடர் காரணமாக வடக்கு மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும்,
மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இம்முறை
சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலைப் பெற முடிந்தது.</p><p> அதிகரித்துள்ள நெல் உற்பத்தியை விவசாயிகளுக்கு
பொருளாதாரப் பயனாக மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு
தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி</h2><p>வட மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை
மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட
உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுகின்றது.</p><p>

வடக்கு மாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படவுள்ளன, இவ்வலயங்கள்
மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் பங்களிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a014c9-db02-4794-8715-c85546d4c596/26-6a86e2998eb45.webp' /></p><p>முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம்,
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை
விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச
விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் செயன்முறை தொடர்பில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களுக்கு நேரில் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், அதன்
தொடர்ச்சியாக கொழும்பிலும் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்
இடம்பெற்று வருகின்றது.</p><p>
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தம்
தயாரிக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இரண்டு
கட்டங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>கடந்த காலங்களில் விமான நிலைய விரிவாக்கத்துக்காகப்
பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப்
பின்னரும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>கனேடிய முதலீட்டாளர்கள்&nbsp;</h2><p>
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டுக்கு
வருவதற்கான சில தடைகள் நீக்கப்பட்டுள்ளதுடன் புலம்பெயர் தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி நாட்டுக்கு வந்து
செல்லக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.</p><p>தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில நிறுவனங்களிலும் தீர்மானம்
மேற்கொள்ளும் உயர்நிலைப் பதவிகளிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச்
சேர்ந்தவர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7220b24-9ecc-4156-8287-4e3a7506c0c9/26-6a86e223a7476.webp' /></p><p> </p><p>குறிப்பாக நிதி ஆணைக்குழு மற்றும்
பெறுகை நடைமுறைக் குழு போன்ற முக்கிய தேசிய அமைப்புகளில் இவ்வாறான
பிரதிநிதித்துவம் இடம்பெறுகின்றது.</p><p>கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு
மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். </p><p>முதலீடு, தொழில் முயற்சி, அறிவு மற்றும் தொழில்நுட்பப்
பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வடக்கு மாகாணத்தின் பொருளாதார
வளர்ச்சியில் பங்களிக்க முடியும்“ எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச்
செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மதுபானசாலை ஒன்றை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-protest-inuvil-demanding-removal-a-win-shop-1787222970"></link>
            <id>https://ibctamil.com/article/public-protest-inuvil-demanding-removal-a-win-shop-1787222970</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி பிரதேச மக்களால்&amp;nbsp; கண்டனப்
போராட்டம் இன்று (20...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி பிரதேச மக்களால்&nbsp; கண்டனப்
போராட்டம் இன்று (20.08.2026) காலை இடம்பெற்றது.</p><p>இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக
நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து
காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.
</p><p>போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை
உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு
ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>இணுவில் போராட்டம்</h2><p>
</p><p>குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள்
மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த
மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a359472e-878a-4e9b-a99b-deaaede6e37b/26-6a86e08ac53f5.webp' /></p><p>
</p><p>மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில்
கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தப் போராட்டத்தால்
அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4dOHEC7JFQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-appoint-anyone-he-likes-as-the-chief-justice-1787222241"></link>
            <id>https://ibctamil.com/article/anura-appoint-anyone-he-likes-as-the-chief-justice-1787222241</id>
            <summary type="text">தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், அவர் தற்போதைய பிரதம நீதியரசரை மூப்பு அடிப்படையில் நியமித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய பிரதம நீதியரசர் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;முன்னாள் ஜனாதிபதிகள்&nbsp;நியமித்த நீதிபதிகள்</h2><p>தற்போதைய நிர்வாகம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு எந்தவொரு நீதிபதியையும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நியமிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a62547-6e3c-49bd-9a83-485ba84b808f/26-6a86ddd547033.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நீதித்துறையில் தங்களுக்கு விருப்பமான நீதிபதிகளை உயர் பதவிகளுக்கு நியமித்த பல நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.</p><p></p><h2>ஷிரானியின் பதவி நீக்கம்&nbsp;</h2><p>

மேலும், ஷிரானி பண்டாரநாயக்க எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு விருப்பமான ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களையும் அவர் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998110fb-a371-4200-88d8-b584e36944e2/26-6a86dcbf37b45.webp' /></p><p>
</p><p>
இத்தகைய சூழலில், தற்போதைய ஜனாதிபதி தனது விருப்பப்படி ஒருவரை நியமிக்க சட்டப்பூர்வமான வாய்ப்பு இருந்தபோதிலும், அவர் இந்த நியமனத்தை ஜனநாயகப் பண்பாகக் கருதப்படும் மூப்புரிமையின் அடிப்படையில் மட்டுமே செய்துள்ளார் என்று லக்மாலி ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/emgCkDsBd5o" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-admitted-hospital-after-being-bitten-wasp-1787222163"></link>
            <id>https://ibctamil.com/article/students-admitted-hospital-after-being-bitten-wasp-1787222163</id>
            <summary type="text">வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக அங்கு
நின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குளவி கொட்டியதில் பலர் வவுனியா
வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக அங்கு
நின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குளவி கொட்டியதில் பலர் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு
குளவி கொட்டிய நிலையில் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவரும்
மேற்கொள்ளவில்லை என்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
</p><p>
இதன் காரணமாக தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக நின்ற மாணவர்கள் மற்றும்
அவர்களை கற்றறல் நடவடிக்கைகளுக்காக அழைத்து வந்த பெற்றோருக்கும் குளவி
கடுமையாக கொட்டியுள்ளது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
இதன் காரணமாகவே பலர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae32210-67b9-4cc4-9d62-8ea239003b01/26-6a86d8954118d.webp' /></p><p>
</p><p>
இந்நிலைமை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட்ட இது தொடர்பிலான
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்களைப் பெற்றோரை மாத்திரமின்றி
வீதியால் செல்வோரையும் பாதுகாக்குமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் கீரைகளை வளர்த்து அதை சமைத்து நாசா சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-origin-astronaut-harvests-vegetables-space-1787221122"></link>
            <id>https://ibctamil.com/article/indian-origin-astronaut-harvests-vegetables-space-1787221122</id>
            <summary type="text">நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாக தயாரித்த காணொளியை பகிர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாக தயாரித்த காணொளியை பகிர்ந்துள்ளது.&nbsp;</p><p>இந்தக் காய்கறிகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக விண்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பில் வளர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p></p><h2>Veggie தாவர வளர்ப்பு&nbsp;</h2><p>எதிர்காலத்தில் நீண்டகால விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவை அங்கேயே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வளர்க்கப்பட்ட புதிய கீரைகளை அறுவடை செய்து உணவாகத் தயாரித்துள்ளார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e093d3e9-275a-445e-bc49-a100329f7ab4/26-6a86d7e9f087d.webp' /></p><p>நாசாவின் Veggie தாவர வளர்ப்பு அமைப்பானது விண்வெளியில் நிலவும் நுண் ஈர்ப்பு சூழலில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதையும், எதிர்கால நீண்டகால விண்வெளிப் பயணங்களுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் ஆராய்வதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.</p><p>மேனன், இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட கீரைகளை அறுவடை செய்து சமைத்ததாகவும், தாங்கள் தயாரித்த உணவுகளில் இதுவே சிறந்ததாக உணவு என்றும் அவர் பகிர்ந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p> மேலும், தாவரங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்கிய நாசாவின் Veggie குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Chez ISS - Cooking on <a href="https://x.com/Space_Station?ref_src=twsrc%5Etfw">@Space_Station</a> with <a href="https://x.com/Astro_Jessica?ref_src=twsrc%5Etfw">@Astro_Jessica</a> and Anil<br><br>On this episode we give you farm to table, simple, and delicious. This Kale and Wasabi Mustard was grown on ISS over one month. We harvested several leaves and put them to the test. It might be the best meal we… <a href="https://t.co/Oq9narSiu9">pic.twitter.com/Oq9narSiu9</a></p>&mdash; Anil Menon (@astro_anil) <a href="https://x.com/astro_anil/status/2089391189015331258?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:44:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-replied-to-namal-1787220425"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-replied-to-namal-1787220425</id>
            <summary type="text">நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும் சிறு வாக்குவாதம் இடம்பெற்றது.
</p><p>
மகிந்த ஜெயசிங்க உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அவர், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>

''நாடாளுமன்றிற்கு வருவார், அவரது சந்தர்ப்பத்தில் உரையாற்றுவார், போலியான கதைகளை கூறுவார், பதில் கூறவரும்போது எழுந்து ஓடிவிடுவார்.இதனையே நாமல் தொடர்ந்து முன்னெடுக்கின்றார்" என மகிந்த ஜெயசிங்க தனது கருத்தை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>மகிந்த ஜெயசிங்க&nbsp;பதில் </h2><p>
</p><p>இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டு அர்ச்சுனா கருத்துக்களை தெரிவிக்க அதற்கு மகிந்த ஜெயசிங்க பின்வருமாறு பதில் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f122184-f2ee-4d71-803e-8358e1c3e4e5/26-6a86d580e186c.webp' /></p><p>
</p><p>''நீங்கள் கதைக்காதீர்கள். நாமலின் நண்பர் அல்லவா நீங்கள். உங்களுக்கு பைத்தியம் இல்லை. நீங்கள் நல்ல வைத்தியர்தான்.</p><p>

உங்கள் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும். விமர்சிப்பவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிடுவேன். எனக்கு முதுகெலும்பு உள்ளது.
 
நாமலுக்காக பதில் சொல்ல உண்மையில் நீங்கள் யார்? </p><p>

உங்களுக்கு பைத்தியம் இல்லை நீங்கள் ஒரு நல்ல வைத்தியர்தான். நீங்கள் முதலில் அமைதியாக இருங்கள்" என கூறினார்.</p><p>இந்நிலையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினை குறித்து அர்ச்சுனா கேள்வி எழுப்பிய நிலையில், மகிந்த ஜெயசிங்க காரசாரமாக பதில் வழங்கியிருந்தார்.
</p><p>''அவரை முதலில் அமர செய்யுங்கள். அரசாங்கத்தின் நேரத்தையே கதைப்பதற்க்காக பெற்றுக்கொண்டேன்.

யார் இவர்? இவருக்கு பைத்தியம். அவரை அமர செய்யுங்கள். என்றார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், நிலையியல் கட்டளை என்னை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்க மகிந்த ஜெயசிங்கவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலாக செய்யப்பட்ட சத்திர சிகிச்சை! நீதி கோரும் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-treated-in-armpit-instead-of-chest-jaffna-1787220291"></link>
            <id>https://ibctamil.com/article/woman-treated-in-armpit-instead-of-chest-jaffna-1787220291</id>
            <summary type="text">



நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>



நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் நெஞ்சுப் பகுதியில் இருந்த கொழுப்புக் கட்டிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p></p><h2>சத்திர சிகிச்சை</h2><p>

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் சத்திரசிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.இவ்வாறு சென்ற இடத்திலேயே அவருக்கு அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7dfb62f-fd85-4fec-952e-a465873684fb/26-6a86d4365a1b9.webp' /></p><p>
இதையடுத்து, குறித்த பெண்ணுக்குத் தவறுதலாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை அவதானித்த மருத்துவ நிபுணர்கள் அது தொடர்பில்
தெரியப்படுத்தியுள்ளனர்.</p><h2>முறைப்பாட்டை ஏற்க காவல்துறை மறுப்பு&nbsp;</h2><p>

இந்த விடயம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு நீதிகோரி தெல் லிப்பழை காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கச் சென்றவிடத்து, அந்த முறைப்பாட்டை ஏற்பதற்கு காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c0f14e-1438-4bcf-b78b-8d2d20742d9c/26-6a86d4372424a.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் நீதியைப் பெறுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மருத்துவ நிபுணர் இதற்கு முன்னரும் இவ்வாறாகத் தவறான முறையில் சத்திர சிகிச்சைகளை செய்திருந்தார் என்பதும், அது பெரியளவில் சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:40:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி ஐ.நா அலுவலகத்தில் மனு கையளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-submitted-to-un-justice-for-suresh-saleh-1787220544"></link>
            <id>https://ibctamil.com/article/petition-submitted-to-un-justice-for-suresh-saleh-1787220544</id>
            <summary type="text">அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு,&amp;nbsp;நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவொன்று&amp;nbsp; கொழும்பிலுள்ள ஐக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு,&nbsp;நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவொன்று&nbsp; கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>சலேவுக்கு ஆதரவளிக்கும் ஓரு குழுவினரால் இந்த மனு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் இன்று (20) கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சுரேஷ் சலே 175 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறித்த மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை</h2><p>இந்த நிலையில் சுரேஷ் சலே நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859d26ee-38ab-4ac3-9373-661e8fbe788e/26-6a86d7745ba98.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த மனு சலேவின் தடுப்புக்காவல் தொடர்பான கவலையை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மனுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hTvMj7rYUFg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு போலி மருத்துவர்கள் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-fake-doctors-arrested-in-aluthgama-1787220846"></link>
            <id>https://ibctamil.com/article/two-fake-doctors-arrested-in-aluthgama-1787220846</id>
            <summary type="text">அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>
இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இவர்கள் இருவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;இவர்கள் இருவரும் தர்கா நகரைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இன்று (20) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
</p><p>
அளுத்கம காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூறு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/central-african-republic-gold-mine-collapse-1787218046"></link>
            <id>https://ibctamil.com/article/central-african-republic-gold-mine-collapse-1787218046</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள ஜாம்போயே (Zamboye) கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் சட்டதரணி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>அரசு தரப்பு வழங்கறிஞரின் முக்கிய அறிவிப்பு</h2><p>பலர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df3a4c9-d2b6-40cd-93cf-3a149bda1c8f/26-6a86d18a7e6e0.webp' /></p><p> </p><p>சுரங்கங்களில் பணியாற்றி தங்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்ற இளம் ஆண்களும் பெண்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, எல்லையைத் தாண்டி வரும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கேமரூன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் இதுகுறித்த விபத்துக்கான காரணம் மற்றும் சுரங்கத்தை நடத்தி வந்தவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார்.</p><p>

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறிய அளவிலான தங்கம் மற்றும் கனிம அகழ்வுத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. </p><p>எனினும், போதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் இதுபோன்ற சுரங்க விபத்துகள் ஏற்பட்டு பெருமளவிலான உயிரிழப்புகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><br><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்மப் பொதி! சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parcel-that-arrived-above-the-magazine-prison-1787215192"></link>
            <id>https://ibctamil.com/article/parcel-that-arrived-above-the-magazine-prison-1787215192</id>
            <summary type="text">

கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த பொதியில் 30 மறு மின்னேற்ற மின்கலங்கள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இந்நிலையில், சிறைச்சாலையின் சுவருக்கு மேல் பொதி வீசப்பட்ட பின்னர், குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ffc6ab2-204e-4d2c-9afa-0be8e68baa4b/26-6a86cebd01a58.webp' /></p><p>
இதன்படி, சம்பவம் தொடர்பாக சஹாஸ்புர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T09:54:12+00:00</updated>
        </entry>
    </feed>
