<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T00:34:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்திய சஜித்தின் நாடாளுமன்றக் குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அதனுடன் வெளிப்பட்டிருந்தது.
</p><p>
சுரேஷ் சாலேவை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த சமர்பணங்களில் கோட்டாபய ராஜபக்ச, ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைமைகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
</p><p>
இந்நிலையில் இதனை கடந்து விசாரணைக்காக எதிர்கட்சி தலைவரும் உள்வாங்கப்பட்டவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதான சதித்திட்டக்காரர்</h2><p>
</p><p>
இதன்போது எதிர்கட்சி தலைவரின் பெயரை உள்வாங்க சட்டமா அதிபர் பின்வரும் வாதங்களை முன்வைத்திருந்தார், </p><p>

“தாக்குதலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை மறைப்பதற்காக சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

சுரேஷ் சாலே உள்ளிட்ட சிலர் பிரதான சதித்திட்டக்காரர்களை மறைத்ததாக தாங்கள் மாத்திரம் கூறவில்லை. 
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து முன்னதாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

அவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.” என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

சஜித் அன்று கூறிய கருத்து,</h2><p>
1. புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகள் மற்றும் "சோனிக் சோனிக்" விவகாரம்</p><p>

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாதக் குழுவோடு நெருங்கிய தொடர்பிலிருந்ததாகக் கூறப்படும், "சோனிக் சோனிக்" (Sonic Sonic) என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட சந்தேக நபர் பயன்படுத்திய இணைய நெறிமுறை முகவரி (IP Address) குறித்த தரவுகள் சஜித் பிரேமதாசவால் வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>
குறித்த IP முகவரியானது இலங்கையின் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) உத்தியோகபூர்வ வலையமைப்போடு தொடர்பைக் கொண்டுள்ளமைக்கான பலத்த தொழில்நுட்பச் சந்தேகங்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இது தாக்குதலுக்கு முந்தைய உளவுத்துறைத் தொடர்புகளை மூடிமறைப்பதற்கான சான்றாக அமையலாம் என்பதால், எவ்வித அரசியல் தலையீடுமற்ற வெளிப்படையான கணினிசார் தடயவியல் விசாரணை (Digital Forensic Investigation) நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல் அழுத்தம்</h2><p>
</p><p>
2. உள்நாட்டு விசாரணைகளின் மீதான அரசியல் அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீட்டின் அவசியம்</p><p>உள்நாட்டுப் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் (CID) மீதான தொடர்ச்சியான அரசியல் செல்வாக்குகள், அதிகார அழுத்தங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து சஜித் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இலங்கையின் தற்போதைய கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான எல்லைகளுக்குள் இந்தத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமற்றது என அவர் வாதிட்டார்.</p><p> 

எனவே, உலகளாவிய நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் நடுநிலையான நீதியை நிலைநாட்டுவதற்கும், சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் நேரடி கூட்டு ஒத்துழைப்புடன் கூடிய ஒரு சுயாதீன விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும் என அவர் கோரினார்.</p><p>

3. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் முடக்கப்படுதல் </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் (PCoI) இறுதி அறிக்கைகள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் குறித்து சஜித் கேள்வி எழுப்பியிருந்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கு நீதியை வழங்குவதைக் காட்டிலும், முந்தைய அரசாங்கங்கள் இந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தங்களின் அரசியல் பிரச்சாரங்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்தி, முக்கிய பரிந்துரைகளை ஆவணக் காப்பகங்களுக்குள் (Archives) திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளதாக அவர் சாடினார்.</p><p> 

இந்த மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எவ்விதத் தணிக்கையுமின்றி முழுமையாகப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கையாகும் என்றார்.</p><h2>சோனிக் சோனிக்</h2><p>
</p><p>
 4. 2021 மே மாதமளவில் நாடாளுமன்றக் குழுமங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.</p><p> 

அவரது ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர்) "சோனிக் சோனிக்" மற்றும் சுரேஷ் சாலேவின் உளவுத்துறைத் தொடர்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது அவர் இதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வழங்கினார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களைப் பாதுகாப்பதற்காகவே சுரேஷ் சாலே திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டார் என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். </p><p>குறிப்பாக, தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் மற்றும் உளவுத்துறைத் தொடர்புகள் பொதுவெளியில் வெளிவராமல் தடுப்பதற்கான ஒரு "மூடிமறைப்புச் கருவியாக" அவர் செயற்பட்டுள்ளார் என நாடாளுமன்றத்தில் சாடினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481"></link>
            <id>https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
</p><p>பல தொன் எடையிலான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவ்வழியாக பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
</p><p>தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980"></link>
            <id>https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகளைத் தேடி பல ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் தாய்மார்களின் குரலை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.</p><p>
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்,</p><p></p><h2>துணை ஆயுதக் குழு</h2><p> </p><p>இறுதிப் போரின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் தமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையிலும், இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ce1e0e-4087-4e02-80d4-36d2346b5e8d/26-6aab24d6c7894.webp' /></p><p>

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாள் முதல் அவர்களைத் தேடி வீதிகளில் போராடிய தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தை உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
2017ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>எங்கே தமது பிள்ளைகள்</h2><p>
</p><p>
இந்தப் போராட்டங்களின் மூலம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே உள்ளனர்? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>
மேலும், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p> எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹமாஸின் முக்கிய தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hamas-commander-killed-in-khan-younis-1789581117"></link>
            <id>https://ibctamil.com/article/hamas-commander-killed-in-khan-younis-1789581117</id>
            <summary type="text">2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>கடந்த வாரம் தெற்கு காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ஜிஹாத் சமீஹ் மஹ்மூத் இஸ்மாயில் என்பவரே கொல்லப்பட்டதாக IDF கூறியுள்ளது.</p><p></p><h2>&nbsp;இஸ்ரேல் இராணுவம்&nbsp;</h2><p> </p><p>அவர் ஹமாஸின் நுக்பா (Nukhba) சிறப்புப் படையில் குழுத் தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bdcc93-47cc-4384-afb0-908ddbda1d51/26-6aaaed59ae116.webp' /></p><p>
</p><p>
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய இஸ்மாயில், நிரிம் சமூகத்திற்கு அருகே எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பீரங்கி படைக் குழுவுடன் நடைபெற்ற மோதலில் பங்கேற்றதாக IDF தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த படைக் குழுவில், தளபதி ஓமர் மாக்சிம் நியூட்ரா, (21), தளபதி

சார்ஜென்ட் ஷகெட் டஹான், (19), ஓட்டுநர்

சார்ஜென்ட் நிம்ரோட் கோஹென், (19), துப்பாக்கி இயக்குநர்

சார்ஜென்ட் ஓஸ் டேனியல், ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

நியூட்ரா மற்றும் டேனியலின் உடல்களை கடத்திச் சென்றதிலும், கோஹெனை உயிருடன் காசாவுக்கு கடத்திச் சென்றதிலும் இஸ்மாயில் பங்கேற்றதாக IDF கூறுகிறது.</p><p></p><h2>&nbsp;இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்</h2><p> </p><p>டஹான் அந்த மோதலில் கொல்லப்பட்டதுடன், அவரது உடலும் தனியாக காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி போரின்போது, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதில் இஸ்மாயில் ஈடுபட்டதாக IDF தெரிவித்துள்ளது.</p><p>

சமீபத்தில், போர் நிறுத்தத்தை “முறையாக மீறும் வகையில்” இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் IDF தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T20:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளையர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டு: தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-travel-restrictions-on-south-african-officials-1789590438"></link>
            <id>https://ibctamil.com/article/us-travel-restrictions-on-south-african-officials-1789590438</id>
            <summary type="text">வெள்ளையர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் தென்னாப்பிரிக்க அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளையர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பின்படி, </p><p>''இன அடிப்படையிலான பாகுபாடு, இழப்பீடு வழங்காமல் நிலம் பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கும் கொள்கைகள் அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் பொறுப்பு கொண்டதாகக் கருதப்படும் வெளிநாட்டு நபர்களின் அமெரிக்க விசாக்கள் ரத்து செய்யப்படலாம்.</p><p></p><h2>புதிய விசா விண்ணப்பங்கள்</h2><p> அல்லது அவர்களின் புதிய விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்" என கூறியுள்ளார்.</p><p>

தென்னாப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தலைமையிலான அரசாங்கம் வெள்ளையர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்க நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78183592-d1d5-4603-8025-46bc0dc35cb5/26-6aaafba815ffb.webp' /></p><p> </p><p>குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் ஆஃப்ரிகானர் சிறுபான்மையினர் தொடர்பான கொள்கைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.</p><p>எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்க அரசு நிராகரித்துள்ளது. </p><p>அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்ததுடன், தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு கொள்கைகள் சில தரப்பினரால் தவறாக சித்தரிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
</p><p>
அமெரிக்கா தனது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக, சில சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படாத தனியார் நிலங்களை இழப்பீடு இல்லாமல் அரசால் கையகப்படுத்த அனுமதிக்கும் தென்னாப்பிரிக்க சட்டம், கருப்பின மக்களுக்கான சம வாய்ப்புகளை அதிகரிக்கும் முன்னுரிமைக் கொள்கைகள் மற்றும் வெள்ளை விவசாயிகள் தொடர்பான சில வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
எனினும், பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படவுள்ள அதிகாரிகளின் பெயர்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">ள IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T20:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கடல் எல்லையில் இந்திய கப்பலுடன் மோதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் போர் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pak-warship-involved-collision-indian-ship-1789588462"></link>
            <id>https://ibctamil.com/article/pak-warship-involved-collision-indian-ship-1789588462</id>
            <summary type="text">இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் மீது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்
நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீதே பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. </p><p>
சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இந்தியா கண்டனம்</h2><p>


பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை" காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112159fa-34d8-43ea-8009-1211abb68267/26-6aaaf3efc3fbd.webp' /></p><p> 

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><p>

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T19:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590"></link>
            <id>https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலேயே விபத்துசம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

இதன்போது அதிவேகமாக வரும் காரானது முதலில் ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு வருவதோடு, அந்த திசையில் திரும்பிய மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதவது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&amp;show_text=false&amp;width=560&amp;t=0" width="560" height="316" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><h2>காவல்துறையின் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3ea4751-070a-4ace-b27c-98a22e724ad3/26-6aaae4d08bc3d.webp' /></p><p>
</p><p>
காரணம் கோபத்தில் சிலர் விபத்து ஏற்பட காரணமான வாகனத்தை தாக்கி எரிப்பதற்க்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதனை தடுக்கும் முகமாகவே காவவல்துறை பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T18:49:59+00:00</updated>
        </entry>
    </feed>
