<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-08T04:14:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி : அம்பலப்படுத்திய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/major-flaws-in-the-al-biology-exam-question-paper-1786159020"></link>
            <id>https://ibctamil.com/article/major-flaws-in-the-al-biology-exam-question-paper-1786159020</id>
            <summary type="text">க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த உயர்தர உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தொடர்ச்சியாக, அதாவது கடந்த பல வருடங்களாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகின்ற பரீட்சை வினாத்தாள் தமிழ் மொழிக்கு மாற்றப்படும் போது பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள் இடம்பெறுகின்றன. இதனால் மாணவர்கள் பெருமளவான புள்ளி இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.</p><p></p><h2>பரீட்சை நேர அட்டவணை&nbsp;</h2><p>
</p><p>
என்னிடம் 2025ம் ஆண்டு உயிரியல் பரீட்சை வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. அதில் பலவிடைத்தேர்வு வினா (MCQ) பகுதியில் பல வினாக்களில் மொழிபெயர்ப்பு தவறு உள்ளதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c095aaf8-b196-46e3-a89b-f0915717d5bf/26-6a76a8dc57bfd.webp' /></p><p> </p><p>உதாரணமாக ஒரு கலத்தின் உள்ளடக்கத்தை குறிக்கும் சொல்லிற்காக உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்தை குறிப்பது போன்ற தவறுகள் இங்கு காணப்படுவதால் மாணவர்கள் வினாவிற்குரிய பதிலை தெரிவுசெய்வதில் பாரிய இடர்பாடுகள் ஏற்படும்.</p><p>கேள்வியிலும் மொழிபெயர்ப்பு பிழை, கொடுக்கப்படும் பதிலிலும் பிழை என்றால் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.</p><p>இப்போது சற்றுநேரம் முன்பு சாமர சம்பத் எம்பி என்னிடம் வந்து பேசினார். இந்தமுறை நடக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் பாளி மொழியும் சித்திரமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் போடப்பட்டிருப்பதாக என்னிடம் சொன்னார்.</p><p></p><h2>கல்வி அமைச்சரிடம் கோரிக்கை&nbsp;</h2><p>

</p><p>அப்படியெனில், ஒரு மாணவன் பாளி மொழியையும் சித்திரத்தையும் எவ்வாறு ஒரே நாளில் ஒரே நேரத்தில் பரீட்சை எழுதுவதென்று ஒரு பிரச்சினை உள்ளது.</p><p>ஆகவே, கல்வி அமைச்சர் அவர்களே, நான் ஏற்கனவே உங்களுடன் இது சம்மந்தமாக பேசியிருக்கின்றேன். நான் பேசியபின் ஒரு தடவை பரீட்சை நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac24b3-26e3-4e26-8102-af833d710f83/26-6a76a8dd0f104.webp' /></p><p> </p><p>அடுத்த பரீட்சையும் வரப்போகிறது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இனியாவது இந்த மொழிபெயர்ப்பு தவறு நடக்காமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
</p><p>
க.பொ.த உயர்தர பரீட்சை ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாகும். இந்த தவறினால் பல மாணவர்களின் எதிர்காலம் நாசமடைகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தை கவனியுங்கள்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T03:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 சிறைச்சாலைகளில் தொடர் வன்முறைகள்: முக்கிய புள்ளியின் உயிருக்கு ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-seeks-protection-for-akila-in-magazine-prison-1786155957"></link>
            <id>https://ibctamil.com/article/unp-seeks-protection-for-akila-in-magazine-prison-1786155957</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.</p><p>பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.</p><p>மெகசின் சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள எழுதியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்</p><p></p><h2>அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p> </p><p>இக்கடிதத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் 18, ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463cc140-3496-4f6d-bc41-843011a92fe2/26-6a76a1bb39d2a.webp' /></p><p>கடந்த வியாழக்கிழமை இரவு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி கவலை தெரிவித்துள்ளது. </p><p>மேலும், சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஒரு அவசரச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>

முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பதவியில் இருந்த காலத்தில் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழே அகில விராஜ் காரியவாசம் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T03:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென பதவி விலகிய ஷானி அபேசேகர - பின்னணியில் உள்ள காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786157007"></link>
            <id>https://ibctamil.com/article/shani-abeysekara-promoted-as-dig-1786157007</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர விலகியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர விலகியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

எனினும், இது ஒழுங்கு நடவடிக்கை அல்லது சர்ச்சை காரணமாக ஏற்பட்ட விலகல் அல்ல என்றும், பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால் CID பணிப்பாளர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்படி , நாளை முதல் அவர் CID பணிப்பாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.</p><p></p><h2>உத்தியோகபூர்வ அறிவிப்பு</h2><p>
</p><p>
ஷானி அபேசேகரவுக்கு 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை வழங்க நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றம்அ னுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fddfc477-8ae4-4649-af73-22a2aca11422/26-6a769d238f3e6.webp' /></p><p>இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
பதவி உயர்வு காரணமாகவே CID பணிப்பாளர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நிர்வாக ரீதியான நடைமுறையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T03:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் சில பொருட்களின் விலை குறைப்பு - மகிழ்ச்சிச் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathosa-reduce-prices-of-10-essential-food-items-1786154278"></link>
            <id>https://ibctamil.com/article/sathosa-reduce-prices-of-10-essential-food-items-1786154278</id>
            <summary type="text">10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. 



குறித்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் நடைமுறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>



குறித்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வர்த்தகஇ வணிகஇ உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உணவுப் பொருட்களின் விலை</span></p><p>
</p><p>


இதன்படி, பூண்டு கிலோ ஒன்றின் விலை ரூ.699 இலிருந்து ரூ.649 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.259 இலிருந்து ரூ.224 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.259 இலிருந்து ரூ.239 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faac71d6-89df-4694-98f2-aea69a82504f/26-6a7691ec275a3.webp' /></p><p>அத்துடன், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.</p><p>இதேவேளை, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது</p><p>பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை ஒரு பேரல் 80 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T02:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/frequent-rain-or-thunderstorms-today-1786151639"></link>
            <id>https://ibctamil.com/article/frequent-rain-or-thunderstorms-today-1786151639</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
இதன்படி, சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>

மேலும், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32353064-d48d-488c-8b43-a79935ccaed5/26-6a7685e7ce772.webp' /></p><p>

இந்த நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T01:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/free-viewing-for-india-tour-matches-1786148450"></link>
            <id>https://ibctamil.com/article/free-viewing-for-india-tour-matches-1786148450</id>
            <summary type="text">சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முதலாவது போட்டி</h2><p>
</p><p>
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3550d9-4e04-4347-9d00-5fa5fc49d60a/26-6a7678c46e63b.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, ரசிகர்கள் முதலாவது போட்டிக்காக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 4 ஆம் இலக்க வாயில் வழியேயும், இரண்டாவது போட்டிக்காக எஸ்.எஸ்.சி மைதானத்தின் 03, 04, 05 மற்றும் 07 ஆம் இலக்க வாயில்கள் வழியேயும் இலவசமாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T00:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-bill-1786141844"></link>
            <id>https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-bill-1786141844</id>
            <summary type="text">
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மறைந்த செனட்டர் லிண்ட்சே ஓ. கிரஹாமின் பெயரிலான ரஷ்யா மீது தடை விதிக்கும் சட்டமூலம் 2026 (H.R. 5334), செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கு எதிராக 10 ஜனநாயகக் கட்சி செனட்டர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராண்ட் போல் என மொத்தம் 11 செனட்டர்கள் வாக்களித்துள்ளதுடன், மூன்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகிறது.</p><p></p><h2>கிரஹாமின் சட்டமூலம் </h2><p>
</p><p>
கடந்த மாதம் காலமான செனட்டர் கிரஹாமின் முதன்மையான சட்ட ஆக்க முன்னுரிமைகளில் ஒன்றாக இந்த சட்டமூலம் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae76184c-3f40-4555-86ac-bfefdf994dc7/26-6a76633514a19.webp' /></p><p>
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல அமெரிக்க செனட்டர்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
</p><p>
இந்தச் சட்டமூலம் முழுமையாகச் சட்டமாக்கப்படும் பட்சத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு ஆதரவளிக்கும் நபர்கள் மீது முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ரஷ்யாவுக்கு எதிராக வரி</h2><p>
</p><p>
இந்தத் தடைகள் ரஷ்ய அதிகாரிகள், தொழிலதிபர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டவர்கள், மற்றும் ரஷ்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் இலக்கு வைக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3be2a64-ae50-4a8a-9819-03d49ba1746b/26-6a766335c5a77.webp' /></p><p>மேலும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட வரிகளை விதிக்க இச்சட்டம் அமெரிக்க ஜனாதிபதிக்கான அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T22:59:06+00:00</updated>
        </entry>
    </feed>
