<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-28T10:47:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norway-s-king-harald-v-dies-at-89-1787909863"></link>
            <id>https://ibctamil.com/article/norway-s-king-harald-v-dies-at-89-1787909863</id>
            <summary type="text">நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று (28) காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.</p><p>அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய அரசராக பதவியேற்பு</h2><p>
</p><p>ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa38376-1229-466c-a1cb-aa92d303b807/26-6a915fc8b53c7.webp' /></p><p>
</p><p>அத்துடன் 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருந்தார்.
</p><p>இந்தநிலையில் மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567"></link>
            <id>https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
பண்டாரவளை நவோதயா புரம் வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சில தியாகங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் இந்த புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0a4ce3-a63f-4be7-a2c9-c90e4fa55ac6/26-6a915f7c387bc.webp' /></p><p>இலங்கையின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டின் அழிவுகளைத் தடுக்கவும் சூழலைப் பாதுகாக்கவும் இந்த அதிகாரசபைக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்படும்.
</p><p>
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்திற்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தாலும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது.</p><p></p><h2>குத்தகை ஒப்பந்தங்கள்</h2><p>
தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சரத்துகள் சேர்க்கப்படும்.
</p><p>
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு சென்ற இலங்கை மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக இருந்த தடைகளை அமைச்சரவை நீக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828f38cf-5745-4e0f-9c59-25e6a0cb6529/26-6a915f7ce53cb.webp' /></p><p>வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</p><p>
மலையக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கனவே முதற்கட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் மலையகச் சமூகம் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, கல்வியின் மூலம் அவர்களை முன்னேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை புவியியல் அணு குண்டாக பயன்படுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102"></link>
            <id>https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இது இரு தரப்பையும் கடந்து ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கியபோது அணுசக்தி விவகாரம், ஏவுகணைத் திட்டம், பிராந்தியத்தில் உள்ள ஈரானின் சக்திகள் அல்லது கூட்டாளிகள் எனப் பல விடயங்கள் பேசப்பட்டன.
</p><p></p><h2>மோதல் அடுத்த கட்டத்திற்கு</h2><p>
ஆனால் இப்போது அனைவரும் சுற்றிச் சுற்றி வரும் முக்கிய விடயம் நீரிணையை திறப்பதுதான் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ad38ab-86ad-42f9-b3f4-42c003ecc557/26-6a915fa8d3396.webp' /></p><p>
</p><p>
போருக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, போருக்குப் பிறகு அப்படி இருக்காது என்று கூறிய அவர்கள் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையின் மூலம், ஈரான் ஒரு சாதகமான நிலையைக் கண்டறிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
</p><p>
 மேலும், சில ஆய்வாளர்கள் இதை ஈரானின் புவியியல் அணு குண்டு என்று கூட வர்ணிக்கின்றனர். 

ஏனெனில், அதைச் செயல்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம், அதைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதே காரணமாகவும் எனவும் கூறியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T10:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணம் முதலீடுகள் தொடர்பில் ஆளுநரின் விசேட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/challenges-encountered-during-the-implementation-1787907830"></link>
            <id>https://ibctamil.com/article/challenges-encountered-during-the-implementation-1787907830</id>
            <summary type="text">முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்
செயற்படுத்தப்பட வேண்டும். </p><p>அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள்
மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய
அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும்
வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.</p><p>

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள
ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் முன்னேற்றம், அதன் நடைமுறைப்படுத்தலில்
எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்கான
வழிமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27.08.2026) வியாழக்கிழமை
மாலை யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><h2>வவுனியாப் பல்கலைக்கழகம்</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால நிர்வாகத்
தடைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த மே மாதம் 'வடக்கு முதலீட்டு
உச்சிமாநாடு – 2026' நிகழ்வின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு
ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2274b730-8501-4095-8f84-7971d8670063/26-6a915233d59f6.webp' /></p><p>
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்கு தனித்தனியாகச் சென்று அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்த்து, ஒரே இடத்தின் ஊடாக தேவையான அரச
சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பொறிமுறை உருவாக்கப்பட்டது.
</p><p>
இன்றைய கலந்துரையாடலில், இப்பொறிமுறையின் செயற்பாட்டு முன்னேற்றம், முதலீட்டு
முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், திணைக்களங்களுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவையை
வழங்குவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
</p><p>
அத்துடன், முதலீட்டு வாய்ப்புகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய அரச
நிறுவனங்களின் சேவைகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும் இலகுவாகவும்
முதலீட்டாளர்களைச் சென்றடையும் வகையில் நுழைவாயிலை மேலும்
பயனுள்ளதாக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.</p><p>

முகாமைத்துவக் கழகம் மற்றும் வவுனியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன்
இந்த ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா,
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், வடக்கு மாகாணத்தின் ஐந்து
மாவட்டங்களினதும் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடக்கு முதலீட்டு
மாநாட்டின் திட்டத் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ச, முகாமைத்துவக் கழகத்தின்
நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் மற்றும் முகாமைத்துவக்
கழகத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவர் அநுராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T09:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787909000"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787909000</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (28.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (28.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.66 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	438.60 ஆகவும் விற்பனைப் பெறுமதி 453.25 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		375.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.20 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a5b39-8925-4f1e-aeee-5d1cde68956c/26-6a915657d3de9.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		231.01 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.64 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	252.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 263.44 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T09:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-yapa-slams-npp-government-1787907248"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-yapa-slams-npp-government-1787907248</id>
            <summary type="text">
வாகனப் பயன்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, வன்மையாக மறுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வாகனப் பயன்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, வன்மையாக மறுத்துள்ளார்.</p><p>

மேலும், தணிக்கை அறிக்கையின் தரவுகள் சில குழுக்களால் அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்ற அதிகாரிகளின் வாகனப் பயன்பாடு குறித்த அவதானிப்புகள் தொடர்பாக பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அபேவர்தன அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்கள்</h2><p> </p><p>

சபாநாயகராகப் பணியாற்றியபோது ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொய்யானவை என நிராகரித்த அவர், நாடாளுமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தாம் பயன்படுத்தியதை தணிக்கை அறிக்கையே உறுதி செய்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ac4666-4186-4107-b9ee-00079b14127e/26-6a9153facea56.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி செயலக சுற்றறிக்கைகள் மற்றும் அரசு விதிமுறைகளுக்கு இணங்க, குறிப்பாக பாதுகாப்புத் தேவைகளுக்காக அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் விளக்கியுள்ளார்.</p><p>

''ஜூலை 2022-க்குப் பிறகு நாட்டில் நிலவிய சிறப்புப் பாதுகாப்புச் சூழ்நிலையைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பிற்காகக் கூடுதல் பணியாளர்களும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன.</p><p></p><h2>அதிக எரிபொருள் நுகர்வு&nbsp;</h2><p> </p><p>

பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில், ஜனாதிபதி செயலகம் அதிக எரிபொருள் நுகர்வு கொண்ட குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியது.</p><p> 

இதுவே எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். நாட்டின் மூன்றாவது குடிமகனான சபாநாயகர் மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ வாகன அணிவகுப்புகள் மற்றும் நாடு தழுவிய சுற்றுப்பயணங்களின் எரிபொருள் நுகர்வை, ஒரு சாதாரண தனிநபரின் சொந்த வாகனப் பயன்பாட்டுடன் ஒப்பிடுவது அறிவியல் பூர்வமற்றது.
</p><p>
சபாநாயகர் என்ற முறையில் நாடு முழுவதும் விரிவாகப் பயணிக்க வேண்டியிருந்தது. அத்தகைய கடமைகளுக்கு இயல்பாகவே அதிக எரிபொருள் தேவைப்படும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T09:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கொடி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தியாகப் பெருந்தீ...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sengodi-the-flame-that-fought-for-justice-1787905456"></link>
            <id>https://ibctamil.com/article/sengodi-the-flame-that-fought-for-justice-1787905456</id>
            <summary type="text">ஒரு சில பெயர்கள் காலத்தால் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவை ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலையும், மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்தை நோக்கி எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு சில பெயர்கள் காலத்தால் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவை ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலையும், மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கூர்மையான கேள்விகளையும் நமக்கு எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். </p><p>அப்படியான ஒரு பெயர் தோழர் செங்கொடி...</p><p>
கடந்த 2011ஆம் ஆண்டு, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகமே கொதித்தெழுந்த காலம். </p><p>அந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 28 அன்று காஞ்சிபுரத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்தார் 21 வயதே நிரம்பிய தோழர் செங்கொடி.
</p><p>
அவர் தீயிட்டுக் கொளுத்தியது தன் தேகத்தை ஆனால் அது அந்த மூவரின் தூக்குக் கயிற்றைத்தான் எரித்தது.
</p><p>
அவரது ஈகம் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கியது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வீதிக்கு வந்தனர். </p><p>அதன் விளைவாகவே சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னாட்களில் மூவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விடுதலையிலும் முடிந்தது.</p><p>

காலங்கள் உருண்டோடினாலும் செங்கொடி என்ற பெயர் நீதிக்கான போராட்டங்களில் ஒரு தணியாத நெருப்பாகச் சுடர்ந்துகொண்டே இருக்கும்.
</p><p>
இன்றைய நாளில் ஒரு இனமான பெரும் நெருப்பாக எரிந்த அந்த உன்னதமான ஆத்மாவை தியாகப் பெருந்தீயினை, ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் IBC தமிழ், கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksas-cannot-talk-about-justice-jayasinghe-1787897761"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksas-cannot-talk-about-justice-jayasinghe-1787897761</id>
            <summary type="text">அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மஹரகம பகுதியில் நேற்று (27-08-2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழல் மோசடி</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். </p><p>இந்தத் திருத்தம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ad1f9c-c701-4a6b-bd2f-68fce06caae7/26-6a91455510572.webp' /></p><p>எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பலர் பிணையில் உள்ளவர்களுமாவர்.</p><p> கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.</p><p></p><h2>தனிப்பட்ட பிரச்சினை</h2><p>

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது மக்களின் பிரச்சினையல்ல.
</p><p>

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்சக்களின் காலத்தில் தான் முழுமையாக இல்லாமல் போனது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76819307-6d87-4146-a8c1-305f7875a7f1/26-6a91455451647.webp' /></p><p>முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர்.
</p><p>
அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை தாக்கப்போகும் இரண்டாவது வெள்ளப்பெருக்கு : சீனா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lake-breaching-causing-second-flood-warns-china-1787901805"></link>
            <id>https://ibctamil.com/article/lake-breaching-causing-second-flood-warns-china-1787901805</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கியுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த வார இறுதி வரை மேலும் சுமார் 30 இலட்சம் கனமீற்றர் நீர் ஏரிக்குள் வரக்கூடும் என்பதால், ஏரி உடையும் அபாயம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உருவான இந்த ஏரி ஏற்கனவே கரைபுரண்டு வழியத் தொடங்கியுள்ளதாக சீன நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சீனா எச்சரிக்கை</h2><p> </p><p>அப்பகுதியில் தொடர்ச்சியாக கடும் மழையும் பெய்து வருவதால்&nbsp; ஏரியின் நீர்மட்டம் மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிப்பதற்காக பொறியியல் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5380e28-ff57-42d6-8ebb-1ae72dc4117b/26-6a91445997f79.webp' /></p><p> புதிய வெள்ளம் அல்லது மண் குப்பைகள் அடங்கிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக, நேபாள - திபெத் எல்லைக்கு அருகிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதனிடையே, நேபாள அதிகாரிகள் Bhote Koshi மற்றும் Trishuli ஆறுகளில் அடைப்புகள் ஏற்பட்டு மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்து, மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் ஆற்றுப் பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுக்கு Langtang Lirung மலைப்பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால் நீர் மற்றும் குப்பைகள் பெரும் வேகத்தில் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். </p><p>திபெத் பகுதியில் மட்டும் 550க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிபேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:48:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/solution-to-the-unsafe-railway-crossing-in-jaffna-1787901386"></link>
            <id>https://ibctamil.com/article/solution-to-the-unsafe-railway-crossing-in-jaffna-1787901386</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவையை மீண்டும் திறக்குமாறு பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவையை மீண்டும் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.</p><p>இந்தநிலையில் குறித்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><p>இதன்போது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள்</h2><p>

வட மாகாணத்தில் தொடருந்து தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத&nbsp;தொடருந்து கடவைகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>இதன் ஒரு பகுதியாகவே கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் நீண்டகாலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த தொடருந்து கடவையும் மூடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9c362eb-72ba-4d3c-8fec-5507f802532d/26-6a914448eb1b8.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த பாதையை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்த பொதுமக்கள், தமது அன்றாடப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, தொடருந்து கடவையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>

குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திற்குள் மாற்றுப் பாதைகளும் சட்டபூர்வமான தொடருந்து கடவைகளும் காணப்படுகின்ற போதிலும், நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதை மூடப்பட்டுள்ளதால் தமக்கு நடைமுறை ரீதியான சிரமங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.</p><p></p><h2>நேரில் சென்று ஆராய்வு&nbsp;</h2><p>

பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் ஊடாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/910098cf-58c4-4c10-b350-a232bcee5803/26-6a914129d3dd8.webp' /></p><p>

இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகிய இரு தரப்பையும் கருத்திற்கொண்டு பொருத்தமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
</p><p>
இந்நிலையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
</p><p>
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 100 தொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-army-trying-to-save-100-trapped-in-tunnel-1787895923"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-army-trying-to-save-100-trapped-in-tunnel-1787895923</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை</span></p><p>
</p><p>
 

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d60f4e6-a7a0-4bd0-be86-b12b12f57045/26-6a9141cd1e215.webp' /></p><p>இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலவருட சுழலில் சிக்கிய நேபாளத்தின் ஒரு நாள் பொருளாதார பேரழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flash-floods-have-caused-significant-damage-1787896200"></link>
            <id>https://ibctamil.com/article/flash-floods-have-caused-significant-damage-1787896200</id>
            <summary type="text">நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால்&amp;nbsp;நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால்&nbsp;நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நேபாளத்தின் பொருளாதார விடயம் தொடர்பில் விளக்கம் வழங்குகையில் அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில் ''பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>பொருளாதார சிக்கல்</h2><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (27) 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04286cc7-a5bb-4d48-a9b7-39b167a22807/26-6a913076a4e42.webp' /></p><p> </p><p>மேலும், 1,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்களுடன் 80 பாலங்கள் மற்றும் பல வீதிகளும் அழிக்கப்பட்டுள்ளன.</p><p>
மின்சார விநியோகம் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளதால், இந்த அனர்த்தம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நேபாளத்திற்கு மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2> சீனாவுடனான முக்கிய எல்லை </h2><p>சமீபத்திய பேரழிவு ரசுவாவைச் சுற்றியுள்ள இமயமலை எல்லைப் பகுதியில் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff5f8b0-f7d3-4242-a2aa-007e2d63f313/26-6a91307765921.webp' /></p><p>
</p><p>
அழிவு வீடுகளோடு நின்றுவிடவில்லை. 19 வாகனங்கள் செல்லும் பாலங்களும், சுமார் 40 கி.மீ. சாலையும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டதோடு, சீனாவுடனான முக்கிய எல்லை வர்த்தகப் பாதையும் தடைபட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட செயற்கைக்கோள் பகுப்பாய்வு, உயரமான இமயமலைப் பகுதியில் ஒரு பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியது. </p><p>இதுவே இந்தப் பேரழிவை மேலும் பேரழிவுமிக்கதாக ஆக்குகிறது. திடீரென உயரமான இடத்தில் ஏற்படும் வெள்ளம்பாறைகளையும் இடிபாடுகளையும் சுமந்து செல்வது, சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை நிமிடங்களிலேயே அழித்துவிடும்.</p><p>

2025 ஜூலை மாதத்தில் இப்பகுதி ஏற்கனவே ஒரு பெரிய பனிப்பாறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பேரழிவு ரசுவாகதி எல்லைக் கடக்கும் இடம், நேபாள-சீன நட்புறவுப் பாலம், சாலைகள், உலர் துறைமுகம் மற்றும் பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.</p><h2>46.7 பில்லியன் நேபாள ரூபாய்</h2><p> சியாஃப்ருபேசிக்கும் ரசுவாகதிக்கும் இடையிலான சுமார் 16 கி.மீ. சாலை பயணிக்க முடியாததாக ஆனது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட திட்டங்களில் 111 மெகாவாட் ரசுவாகதி நீர்மின் திட்டமும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ebab957-8e9a-4a60-9871-aca637cca510/26-6a9130781a7b1.webp' /></p><p>
</p><p>
தற்போது, ​​அதே பரந்த பிராந்தியம் மற்றொரு பேரழிவைச் சந்தித்துள்ளது. இங்குதான் நேபாளத்தின் பேரிடர் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக மாறுகிறது. </p><p>அந்த நாடு பேரிடர்களுக்குப் பிறகு வெறுமனே புனரமைக்கவில்லை. அது, தனது முழுமையான பொருளாதார வருவாயை ஈட்டுவதற்கு முன்பே மீண்டும் சேதமடையக்கூடிய உள்கட்டமைப்பைப் புனரமைத்துக் கொண்டிருக்கிறது.</p><p>2024 செப்டம்பரில் ஏற்பட்ட வெள்ளமும் நிலச்சரிவுகளும் இதற்கு ஒரு தெளிவான உதாரணத்தை அளிக்கின்றன. இந்தப் பேரழிவினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை உலக வங்கி 46.7 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. </p><p>இது, 2025 நிதியாண்டின் நேபாள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.8 சதவீதத்திற்குச் சமமாகும்.

உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 38.9 பில்லியன் நேபாள ரூபாய் ஆகும். சாலைகளில் மட்டும் சுமார் 28 பில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டது.</p><h2>சுமார் 80 சதவிகித நிலம் வெள்ளத்தில் மூழ்கியது</h2><p> </p><p>நீர்மின்சக்தித் துறையில் ஏற்பட்ட சேதம் 3 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறைகளில் 5.9 பில்லியன் நேபாள ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3d209f-e035-4457-b56c-8df09a6469e6/26-6a913078c6824.webp' /></p><p>
</p><p>
விவசாயத் துறைக்கு மேலும் 7.2 பில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 249 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயமடைந்தனர் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. </p><p>ஏறக்குறைய 6,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன, மேலும் 13,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. </p><p>இந்த வெள்ளம் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் 35 மாவட்டங்களைப் பாதித்தது. தெராய் பகுதியின் கணிசமான பகுதிகளில், சுமார் 80 சதவிகித நிலம் வெள்ளத்தில் மூழ்கியது.
</p><p>
நேபாளத்தின் வெள்ளப்பெருக்குக்குப் பிந்தைய மீட்புத் தேவைகள் மதிப்பீடு, மொத்த சேதங்களையும் இழப்புகளையும் 60.7 பில்லியன் நேபாள ரூபாய் (NPR) அல்லது அக்காலத்தில் சுமார் 584.7 மில்லியன் டொலர் என மதிப்பிட்டது. </p><p>இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். மீட்புத் தேவைகள் 73.2 பில்லியன் நேபாள ரூபாய் (NPR) அல்லது தோராயமாக 705 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.</p><p>

வீட்டுவசதித் துறைக்கு 187.9 மில்லியன் டொலர் என்ற மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. நீர்ப்பாசனத் துறை சேதம் 168.1 மில்லியன் டொலராகவும், கால்நடை இழப்பு 102.7 மில்லியன் டொலராகவும், விவசாயத் துறை இழப்பு 69.5 மில்லியன் டொலராகவும் இருந்ததாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-flood-twin-babies-rescued-by-nepal-army-1787898651"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-flood-twin-babies-rescued-by-nepal-army-1787898651</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட் பேரழிவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போது இரட்டை பச்சிளம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட் பேரழிவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போது இரட்டை பச்சிளம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p>வெளியான காணொளியில் ஒரு பெண் இராணுவ வீராங்கனை இரு குழந்தைகளையும் தனது மார்போடு அணைத்தபடி பாதுகாப்பாக வைத்திருப்பது காணப்படுகிறது.</p><p></p><h2>இரட்டைக் குழந்தைகள் மீட்பு</h2><p>வெள்ளப் பேரழிவின் நடுவே குழந்தைகளை மீட்டதுடன், அவர்களை ஆறுதல்படுத்திய அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வெள்ளம் சாதாரண பருவமழை வெள்ளம் மட்டுமல்ல.</p><p> நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை, மலை பாறைச் சரிவு சம்பவம் மிகப்பெரிய நீர்ப்பெருக்கை உருவாக்கியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be65ac05-331c-4ad7-8b16-fdb803944023/26-6a913a36ea8c5.webp' /></p><p> நிலைமை இன்னும் ஆபத்தானதாக உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன வெள்ளத்தால் உருவான ஒரு தடுப்பு ஏரி நிரம்பி வழியும் அபாயம் இருப்பதால், இன்று 28 அன்று சில மீட்பு நடவடிக்கைகள், குறிப்பாக ஹெலிகாப்டர் மீட்புகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்த வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 1,300க்கும் மேற்பட்டோரைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை&nbsp;நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

 

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை செலுத்தும்! நந்தலால் வீரசிங்க உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-to-pay-off-debt-within-10-years-1787898814"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-to-pay-off-debt-within-10-years-1787898814</id>
            <summary type="text">இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை நாடு நிறைவேற்றும் எனவும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டுத் தூதர்கள் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை வெளிப்படுத்தினர். </p><p>

மேலும் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் வெற்றியே இதற்குக் காரணம் என்றும், நாடு கடன் செலுத்தத் தவறுதல் அல்லது முன்னர் சந்தித்ததைப் போன்ற மற்றொரு கடன் நெருக்கடியை எதிர்கொள்ளாது எனவும் அவர் உறுதியளித்தார். </p><p></p><h2>தனிநபர் வருமானம்</h2><p>

நாட்டின் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் ஆண்டு வெளிநாட்டுக் கடன் கடமைகள் 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7858d721-0d3e-4296-b8f8-a87e48b6672b/26-6a912ed11ae79.webp' /></p><p>
</p><p>
அந்தக் கடன் கடமைகளைச் செலுத்துவதற்குத் தேவையான உத்தியோகப்பூர்வ கையிருப்பு வலுவாக அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும் தற்போது 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ள மத்திய வங்கியின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு, இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
வரும் ஆண்டுகளில், சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து வரும் பணப் பரிமாற்றங்கள், மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவி ஆகியவை கணிசமாகப் பங்களிப்பதன் மூலம், இந்தக் கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை வெற்றிகரமாக எட்டியுள்ளதால், நாடு தனது நெருக்கடிக்கு முந்தைய வலிமைக்குத் திரும்பி வருகிறது.</p><p></p><h2>உலகளாவிய எரிபொருள் விலை</h2><p>

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் இலங்கை 4 முதல் 5 சதவிகிதம் வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d72fc8-c6e9-4276-b10e-6d47da049b9a/26-6a912ed1c87de.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 5 சதவிகித வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> </p><p>

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழலுக்கு மத்தியில், உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இந்தப் பொருளாதார இலக்குகளை அடைந்ததற்காக இலங்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளது.
</p><p>
எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் தற்காலிகமாக 7 சதவிகிதம் உயர்ந்தபோதிலும், மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அது 5 சதவிகிதம் என்ற ஒற்றை இலக்க நிலைக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

மேலும், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்புக் கணக்கு உபரியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்யும் பாதையில் இலங்கை உள்ளது.</p><p> 

அரசாங்க வருவாய், 2021-2023-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதமாக இருந்ததிலிருந்து, இன்று 16 சதவிகிதமாக இருமடங்காகியுள்ளது.

மேலும், நாட்டின் முதன்மைக் கணக்கு உபரியானது, சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 2.3 சதவீத இலக்கை விட அதிகமாக உள்ளது. </p><p>

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக நிலவும் நடப்புக் கணக்கு உபரி, அதிகரித்து வரும் சுற்றுலா வருவாய் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கை தனது இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை தற்போதைய 'CCC' நிலையிலிருந்து, நெருக்கடிக்கு முந்தைய 'B' நிலைக்கு உயர்த்துவதற்காக சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T07:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள IMF பிரதிநிதிகள் குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/imf-delegation-to-visit-sri-lanka-next-month-1787896083"></link>
            <id>https://ibctamil.com/article/imf-delegation-to-visit-sri-lanka-next-month-1787896083</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்&amp;nbsp;

விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்&nbsp;</p><p>

விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதியின் கீழ் செயற்படுத்தப்படும் அடுத்த கட்ட மீளாய்வுக்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த விஜயத்தின் போது அவர்கள் ஏழாவது மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதுடன், எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.</p><p></p><h2>330 மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

இந்த மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்தால், சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0562eef9-73d8-4ce2-9344-e6adb12958b8/26-6a91293ba01bb.webp' /></p><p>சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 6வது மற்றும் 7வது கடன் தவணைகள் கடந்த ஜூலை மாதம் நாட்டிற்கு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T06:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1787897295"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1787897295</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (28-08-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (28-08-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,390,975 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 49,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்க விலை</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 392,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47d6ac5-ccd4-4d21-a8a2-9eefb8ef2b43/26-6a91268fa7269.webp' /></p><p>22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 359,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 343,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் கெடுபிடி! ஈரானுக்கு மேலும் பொருளாதார நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-blockade-zeroes-iranian-oil-exports-1787895876"></link>
            <id>https://ibctamil.com/article/us-blockade-zeroes-iranian-oil-exports-1787895876</id>
            <summary type="text">ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கடந்த 14 நாட்களில் பாரசீக வளைகுடா வழியாக 130 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா வழிவகுத்துள்ளதாகவும் ஆனால் ஈரானால் ஒரு பீப்பாய் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஈரானியத் துறைமுகங்கள்</h2><p>ஈரானியத் துறைமுகங்களை நோக்கிய மற்றும் அங்கிருந்து செல்லும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கடற்படை முகாமிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b21a15-b65b-4672-9969-57a972ff7f34/26-6a9123999021d.webp' /></p><p>இந்தநிலையில் ஈரானின் எஞ்சிய பொருளாதார வளங்களையும் சர்வதேச நிதியமைப்பில் இருந்து துண்டித்து அந்நாட்டை முற்றிலும் தனிமைப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p>கடந்த 14 நாட்களில் அமெரிக்கா 130 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைப் பாதுகாப்பாகக் கடத்த உதவியுள்ள வேளையில், ஈரானின் ஏற்றுமதி பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-dies-after-alleged-assault-by-husband-friend-1787889759"></link>
            <id>https://ibctamil.com/article/woman-dies-after-alleged-assault-by-husband-friend-1787889759</id>
            <summary type="text">கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.</p><p>மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த குறித்த மரணமான பெண் தனது வீட்டில் கணவருடன் தங்கி இருந்த நிலையில்
கணவரின் நண்பரான சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கூரிய
ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c414c39e-e2b4-4682-8b51-9c0319d07ba3/26-6a91237b88f3e.webp' /></p><p>குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ எல் முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்&nbsp;&nbsp;</p><p>
சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thaiyitti-landowners-demand-their-property-back-1787893691"></link>
            <id>https://ibctamil.com/article/thaiyitti-landowners-demand-their-property-back-1787893691</id>
            <summary type="text">யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக குறித்த போராட்டத்தை நேற்று (27-08-2026) முன்னெடுத்திருந்தனர்.</p><p>குறித்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எந்தவித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29784e07-4354-4b1d-99b0-203b6a3f728e/26-6a911ce3f08b1.webp' /></p><p>

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நேற்று மாலை வரை இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் தமக்குரிய சொந்தக் காணிகளை முழுமையாக மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் வசூல் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-124-mn-in-revenue-from-expressway-network-1787892203"></link>
            <id>https://ibctamil.com/article/rs-124-mn-in-revenue-from-expressway-network-1787892203</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் இரண்டு நாட்களில்&amp;nbsp;124,574,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் இரண்டு நாட்களில்&nbsp;124,574,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் குறித்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் குறித்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>163,763 வாகனங்கள் பயணித்துள்ளன</h2><p>
 

இந்தநிலையில் ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17b9e80-1069-415c-820d-7531ef5b0969/26-6a911920a49f5.webp' /></p><p>
</p><p>
 

ஓகஸ்ட் 27 ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய நிலையில் அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lIUk0Cw534E" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:19:09+00:00</updated>
        </entry>
    </feed>
