<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-25T11:54:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தின் உள்நாட்டு உற்பத்தி குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/domestic-production-in-northern-province-is-low-1784976506"></link>
            <id>https://ibctamil.com/article/domestic-production-in-northern-province-is-low-1784976506</id>
            <summary type="text">உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.</p><p>

தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் தனது பொருளாதாரத்தை
மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு
அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கையின் தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பைக் கணிசமான
அளவில் அதிகரிப்பது தொடர்பாகத் துறைசார் வல்லுநர்கள் மற்றும்
பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (23.07.2026) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</h2><p>

இக்கலந்துரையாடலில், 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா
பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால்
பொருளாதாரத் தரவுகளில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.</p><p>வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குக் கூடுதல்
கவனம் செலுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab9a0319-9a79-4ef4-85dc-0f24c8ccb92d/26-6a64980b75d76.webp' /></p><p>இதன்போது பின்வரும் முக்கிய துறைகள் மற்றும் அவற்றுக்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் புதிய காணிகளைத் தேடுவதை விட, நவீன
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தற்போதைய உற்பத்தியின் வினைத்திறனை
அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p>சிறுதானியங்கள், பயறு வகைகள்,
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மேலும், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக, பால் மா
இறக்குமதிக்காகச் செலவிடப்படும் சுமார் 400 மில்லியன் டொலர்களை மீதப்படுத்த
முடியும்.</p><p>அறுவடை செய்யப்படும் விவசாயப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல், அவற்றை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.</p><p></p><h2>கடற்றொழிலின் பங்களிப்பு&nbsp;</h2><p>
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் கடற்றொழில் சுமார் 3.7 சதவீத பங்களிப்பை
வழங்குகின்றது. கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் கடல் அட்டை வளர்ப்பு
போன்றவற்றை மேலும் ஊக்குவிப்பது முக்கிய தேவையாகும்.</p><p>

தகவல் தொழில்நுட்பம் 1.12 சதவீதமும், சுற்றுலாத்துறை 0.3 சதவீதமும் என
இத்துறைகளின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பு மிகக் குறைவாகவே
காணப்படுகின்றது. இத்துறைகளை மேம்படுத்துவதற்குப் உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் அரச-தனியார் துறை பங்குபற்றல் மிகவும் அவசியமாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57da28a-d483-4946-a087-daec075dec17/26-6a64980ab641b.webp' /></p><p>

வடக்கு மாகாணத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி,
அரச கட்டடங்களில் கூரை மேல் சூரிய சக்தித் தகடுகளை பொருத்துதல் மற்றும் மின்கல
சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
</p><p>
அதிக விளைச்சல் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை
என்பதோடு, இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர். இதற்குத் தீர்வாகப் பெறுமதி
சேர் மையங்களை நிறுவுதல் மற்றும் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துதல்
அவசியமாகும் எனத் தீர்மானிக்கப்பட்டது.</p><p> மேலும், சரியான திட்டமிடலுக்குத்
தற்போதைய பொருளாதாரத் தரவுகள், குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்
மிகவும் அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>அத்துடன், நவீன விவசாய
தொழில்நுட்பங்கள் குறித்து சுமார் 800 இளம் விவசாயிகளுக்குப் பயிற்சி
வழங்குவதற்கான திட்டமொன்றும் முன்மொழியப்பட்டது.</p><p>

விவசாயம், கடற்றொழில், கால்நடை மற்றும் சிறு கைத்தொழில் என அடையாளம் காணப்பட்ட
ஒவ்வொரு துறைக்குமான விரிவான திட்ட அறிக்கைகள் மற்றும் முதலீட்டு
முன்மொழிவுகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தயாரித்து நிதி
ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rescues-28-indian-seafarers-1784977052"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rescues-28-indian-seafarers-1784977052</id>
            <summary type="text">ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
</p><p>
ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது "விரோத சக்திகளால்" குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'திஷா' என்ற எண்ணெய் கப்பல் ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.</p><h2>ஈரானிய கடலோர காவல்படைக்கு ஆபத்து அழைப்பு</h2><p>"இந்தச் சம்பவம் நடந்தவுடன், கப்பல் உடனடியாக ஈரானிய கடலோரக் காவல்படைக்கு ஆபத்து அழைப்பை அனுப்பியது," என்று இந்தியாவிற்கான ஈரானின் தூதர் முகமது ஃபத்தாலி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15390699-edbd-4511-9d51-cee47f202916/26-6a649ae5f2d18.webp' /></p><p>"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் தாமதமின்றி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.</p><p></p><h2>அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக&nbsp;மீட்பு</h2><p> </p><p>கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், மேலும் அவர்கள் நலமாக உள்ளனர்."என்று அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a8e3bc-dc9a-49d4-8969-db3768be0319/26-6a649ae6a9191.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் வெளிநாட்டு கடற்படை தலையிடுவதற்கு எதிராக ஃபத்தாலி எச்சரித்தார்.

பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட இராணுவப் படைகளின் இருப்பும் தலையீடும் அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை என்பதையும், மாறாக, அவை பதட்டங்களை அதிகரித்து, மேலும் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளன என்பதையும் அனுபவம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-sri-lankans-wattala-shooting-detained-in-india-1784975608"></link>
            <id>https://ibctamil.com/article/two-sri-lankans-wattala-shooting-detained-in-india-1784975608</id>
            <summary type="text">கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படையிளனரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
வத்தளையைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன்(வயது31) மற்றும் எம். லூசிநாத் (வயது30) என&nbsp;அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கைது</h2><p>&nbsp; அந்த இருவரையும், சாகர் கவச் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரகாவல்துறையினர், வெள்ளிக்கிழமை(234) தனுஷ்கோடி கடற்கரையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கண்டதையடுத்து கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab5fb9b-8441-4a35-8033-ceeca39522c2/26-6a6493a606435.webp' /></p><p>

விசாரணைக்காக இருவரும் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன.</p><p>

மேலும் விசாரணை செய்தபோது,கடந்த ​​வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாக இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவை</h2><p>
</p><p>
மேலும், அந்த இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cfcd3c-6e67-4a31-9224-9cda62267f9d/26-6a6493a552dec.webp' /></p><p>
</p><p>
அவர்களைக் காவலில் வைக்குமாறு இலங்கை அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள வெளிநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3089-outsiders-staying-at-sl-presidential-villas-1784973599"></link>
            <id>https://ibctamil.com/article/3089-outsiders-staying-at-sl-presidential-villas-1784973599</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள பல்வேறு நபர்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள பல்வேறு நபர்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த&nbsp;மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும் குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று மட்டுமே என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட செலவுகள்&nbsp;&nbsp;</h2><p> 

ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd0d14aa-7a70-41a1-a7ba-accf48211d2e/26-6a649116616d6.webp' /></p><p> கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>எனினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அநுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016</id>
            <summary type="text">&quot;2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்,&quot; என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
</p><p>

 நேற்று (24)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மது அருந்திய நீதியமைச்சர்&nbsp;</h2><p>நீர் கொழும்பு சிறையில் மோதல் நடந்த நேரத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்தியிருந்ததால் உறங்கிக் கொண்டிருந்தார்.




"அமைச்சருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23911b7e-6c99-4bbb-a19b-e3b4833a3ae2/26-6a648db11faa8.webp' /></p><p>
</p><p>


</p><h2>அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம் என்றார். "இந்த எம்.பி.க்கள் அமைச்சரின் பானத்தில் சோடாவைக் கலந்தது போல் பேசுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e16a728-8015-428a-a7b3-eda052e2868f/26-6a648db1de0aa.webp' /></p><p> </p><p>மோதலுக்குப் பிறகு அமைச்சர் தனது கடமையைச் செய்தார். மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அனைத்தையும் செய்தார்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகினார் இந்திய கல்வி அமைச்சர் பிரதான்! கொண்டாடத் தொடங்கிய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002"></link>
            <id>https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002</id>
            <summary type="text">


இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சி.ஜே.பி (CJP) அமைப்பிற்கும் இந்திய அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>மாணவர்களின் முக்கியக் கோரிக்கை</h2><p>
</p><p>
ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் முகாமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களின் முக்கியக் கோரிக்கையாக பிரதானின் பதவி விலகல் இருந்து வந்துது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739920f9-472b-47e9-bfe9-0c4e9a699f56/26-6a648aeac3283.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Al Jazeera</i></p><p>
</p><p>
தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் பேச்சுவார்த்தை தொடராது என சனிக்கிழமை காலை சி.ஜே.பி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த பதவி விலகல் மூலம் போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றியுள்ளது.
</p><p>
மாணவப் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுடன், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பனவும் இதர முக்கியக் கோரிக்கைகளாகும்.</p><p> 

இக்கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமையன்று அரசு உடன்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்த முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது.</p><h2>பிரதானின் பதிவு&nbsp;</h2><p>

இந்நிலையில், தனது பதவி விலகலை அறிவித்து பிரதான் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு நான் ஆழ்ந்த மரியாதை அளிக்கிறேன்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/VSArqS98OJ">pic.twitter.com/VSArqS98OJ</a></p>&mdash; Dharmendra Pradhan (@dpradhanbjp) <a href="https://x.com/dpradhanbjp/status/2080938216505667663?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவதே நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வின் தார்மீக உறுதிப்பாடாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்திற்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அந்தவகையில், பதவி விலகல் செய்தி வெளியானதுமே ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக் களம் கொண்டாட்டத்தில் மூழ்கியதுடன், "மாணவர் சக்தி வாழ்க" என சி.ஜே.பியும் பதிவிட்டுள்ளது.</p><p> 

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பல நகரங்களில் தீவிரமடைந்த இந்த மாணவர் போராட்டம், எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மோடி அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T10:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-former-vice-chancellor-of-jaffna-uni-1784971682"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-former-vice-chancellor-of-jaffna-uni-1784971682</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் வறிதாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில்
பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை
பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய
பேரவை அவரை பதவி நீக்கியது.</p><p>தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு எனத்
தீர்பளித்து, மீளவும் 27.08.2022 முதல் செல்லுபடியாகும் வகையில் அப்
பதவியில் நியமிக்கக் கட்டளையிடுமாறு கோரி பேராசிரியர் ஆர்.கபிலன் முறைப்பாடளித்திருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு</h2><p>இந்த வழக்கு மீதான கட்டளை கடந்த ஜூன் 30 ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b19d4af-c2cf-49f5-8239-5b7251610b7a/26-6a648559c8845.webp' /></p><p> முறைப்பாட்டாளரால்
முன்வைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராயும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு
சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜூரிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளை
பிறப்பித்தனர்.
</p><p>
இதேவேளை குறித்த பேராசியர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த
வழக்குகளைக் கடந்த வருடம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவைச் சந்திக்க கோரும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-speaking-political-parties-ask-to-meet-anura-1784968981"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-speaking-political-parties-ask-to-meet-anura-1784968981</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்கு தமிழ் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையில்&nbsp;ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை வழங்குமாறு கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரையும், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி இவ்விடயங்கள் தொடர்பாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றனர்.</p><p></p><h2>தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்</h2><p>இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478e6d8a-5be8-4a9c-8d35-e0536cdf8a8e/26-6a647acc02dd2.webp' /></p><p>ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும் தொடர்ந்து பேணிக்கொண்டே, இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.</p><p>

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டு, நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-commemorated-1784968625"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-commemorated-1784968625</id>
            <summary type="text">வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தப்பட்டுள்ளது.

கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனுடன் இணைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தப்பட்டுள்ளது.
</p><p>
கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனுடன் இணைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் காலை 10 மணிக்கு பிரதான ஈகைச்சுடரேற்றப்பட்டது.</p><p></p><h2>தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி</h2><p>
</p><p>
அதனைத்தொடர்ந்து, உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் சபை உறுப்பினர்களால் வெலிக்கடை சிறையில் படுகொலை குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட அரசியல் கைதிகளின் அடையாளமாக 53 தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f4a8e0-f124-4c5d-9d77-cc973758eee6/26-6a6479d0538e0.webp' /></p><p>பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் அரச சேவையாளருமான செல்வதிசைநாயகம் தவநாயகம் கறுப்பு யூலை தமிழர் வரலாற்றில் மாறாத வடு என்ற தலைப்பில் வரலாற்று உதாணங்களுடன் அஞ்சலியுரையாற்றினார்.</p><p>

பின்னர், சபை வளாகத்தில் கறுப்பு யூலை கோரத்தாண்டவத்தினை நினைவுகூர்ந்து புகைப்பட தொகுதி காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NxqQuQjfNlc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T08:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த தொடருந்து தடம்புரள்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-to-jaffna-night-mail-train-derailed-1784960744"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-to-jaffna-night-mail-train-derailed-1784960744</id>
            <summary type="text">கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த இரவு தபால் தொடருந்து சேனரத்கம தொடருந்து நிலையத்தில் தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த இரவு தபால் தொடருந்து சேனரத்கம தொடருந்து நிலையத்தில் தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நேற்றிரவு (24) இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து வடக்கு வழித்தடத்தில் இயங்கும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தொடருந்தின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் வடக்கிற்கான தொருந்து சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டதாக அந்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவை</h2><p>இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் இரவு தபால் தொடருந்து மறு அறிவிப்பு வரும் வரை அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67459d3c-920c-4515-8336-a77a939e2e47/26-6a645f226aa6d.webp' /></p><p>குறித்த தொடருந்தை மீண்டும் தடத்தில் ஏற்றும் பணிகளுக்கு உதவுவதற்காக, தடம் புரண்ட இடத்திற்கு ஒரு மாற்றுத் தொடருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வெகுவிரைவில் வழமையான தொடர்ருந்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

மீட்புப் பணிகள் தொடரும் வரை, வடக்கு வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் தாமதங்களையும் சேவை மாற்றங்களையும் எதிர்பார்க்குமாறு தொடருந்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T08:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இரண்டாவது முறையாகவும் வோல்கர் டர்க் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-human-rights-high-commissioner-term-extended-1784964526"></link>
            <id>https://ibctamil.com/article/un-human-rights-high-commissioner-term-extended-1784964526</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அதன்படி, இந்த ஆண்டு ஓக்டோபர் 11 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த அவரது பதவிக்காலம், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.
</p><p>
இரண்டாவது பதவிக்காலத்திற்கான இந்த வாக்கெடுப்பில் அவர் 134 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.</p><p></p><h2>எதிர்த்த நாடுகள்</h2><p>
</p><p>
 இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 144 ஐ.நா. உறுப்பு நாடுகள் வாக்களித்த நிலையில், 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. மேலும் 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d39b29-c2c6-4f2f-a22b-db18d8c18afc/26-6a64694e13d6b.webp' /></p><p> </p><p>

அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் வோல்கர் டர்க்கின் மறுதேர்தலை எதிர்த்திருந்தன.</p><h2>இரண்டு பதவிக்காலங்கள்</h2><p>
</p><p>
வோல்கர் டர்க் தனது இரண்டாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தால், 1993 ஆம் ஆண்டு இப்பதவி உருவாக்கப்பட்டதற்குப் பிறகு இரண்டு பதவிக்காலங்களை முழுமையாக நிறைவு செய்யும் முதல் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற பெருமையைப் பெறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d004ba19-fbd0-47c9-aff2-6e5af2e8dc9e/26-6a646afe275dd.webp' /></p><p>

காசா முனை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒருவராக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T07:51:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் பாரிய விபத்து : 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/19-injured-after-bus-hits-motorcycle-in-weerawila-1784963189"></link>
            <id>https://ibctamil.com/article/19-injured-after-bus-hits-motorcycle-in-weerawila-1784963189</id>
            <summary type="text">மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>

திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> </p><p>

விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தீவிர நிலையில் இருந்த நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56913121-f8ca-4df6-ac62-52aa19911b72/26-6a64688cd3a10.webp' /></p><p>

இச்சம்பவம் தொடர்பில் வீரவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T07:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-death-body-recovered-from-mahaweli-river-1784961293"></link>
            <id>https://ibctamil.com/article/men-death-body-recovered-from-mahaweli-river-1784961293</id>
            <summary type="text">மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>குறித்த சடலமானது கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது</p><p>இவ்வாறு மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>

ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/186a0073-2ff7-4ed6-a046-3a2110a3c325/26-6a6462ff22735.webp' /></p><p>அதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T07:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல் குவாரியிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-girl-s-body-is-found-in-a-quarry-1784960472"></link>
            <id>https://ibctamil.com/article/a-girl-s-body-is-found-in-a-quarry-1784960472</id>
            <summary type="text">இரத்தினபுரி - மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

23ஆம் திகதி முதல் அந்தச் சிறுமி காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
23ஆம் திகதி முதல் அந்தச் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தாக தெரியவருகிறது.
</p><p>
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர், பலாங்கொடை மஹாவலதென்னவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவார்.</p><p></p><h2>மரணத்திற்கான காரணம்&nbsp;</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், குறித்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69315643-40f0-458c-bffb-771b5b1cc880/26-6a645a5b32abd.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற உள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T06:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவெளி கடலில் குளித்த வெளிநாட்டு சிறுமிக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/italian-girl-injured-in-boat-collision-at-nilaveli-1784957771"></link>
            <id>https://ibctamil.com/article/italian-girl-injured-in-boat-collision-at-nilaveli-1784957771</id>
            <summary type="text">திருகோணமலை நிலாவெளி கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் அவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்தவர் 11 வயதுடைய இத்தாலி நாட்டுச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை நிலாவெளி கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் அவர் காயமடைந்துள்ளார்.</p><p>காயமடைந்தவர் 11 வயதுடைய இத்தாலி நாட்டுச் சிறுமி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>சம்பவம் தொடர்பில், டிங்கிப் படகின் ஓட்டுநரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக சிகிச்சை&nbsp;</h2><p>
</p><p>
நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகளான இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் நிலாவெளி புறாத் தீவு அருகிலுள்ள கடற்பகுதியில் முழ்கி நீந்தும் சாதனங்களை அணிந்து, மீன்கள் மற்றும் பவளப்பாறைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/424f1b72-9ac7-4784-b4c9-92667220a022/26-6a644f0fe5e34.webp' /></p><p>அப்போது, வேறு சில சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற டிங்கிப் படகு ஒன்று மோதியதில், கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த சிறுமி காயமடைந்துள்ளார்.</p><p>

அச்சம்பவத்தின் போது இடத்தில் கடமையில் இருந்த திருகோணமலை காவல்துறை உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்த சிறுமியை நிலாவெளி மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p> பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அச்சிறுமி திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T06:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக்கலவரம்...1200 கைதிகளிடம் CID வாக்குமூலம் : அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-statement-from-1200-prisoners-1784957178"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-statement-from-1200-prisoners-1784957178</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது. கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல.</p><p></p><h2>அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்</h2><p>போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதியமைச்சர் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளார். சிறைச்சாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554bf44f-7430-46e9-a885-9e6c653eb58a/26-6a645363b1ca5.webp' /></p><p> அந்த துறையுடன் தொடர்புடைய பிரிவுகளில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும். போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.</p><p>போதைப்பொருளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட் பலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்களை நோயாளிகளாக கருதி அவர்களுக்கு நிவாரணமளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்பல்ல</h2><p>


நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. தோற்றம் பெறும் சகல பிரச்சினைகளையும் எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9320cef0-41fb-4ee3-bd48-a7cd457780d7/26-6a645362d12ab.webp' /></p><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுத்துள்ளது. இதுவரையில் 1,200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.</p><p> போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T06:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணச் சான்றிதழ்கள் இனி டிஜிட்டல் முறையில்! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/digital-death-certificates-to-be-issued-1784958359"></link>
            <id>https://ibctamil.com/article/digital-death-certificates-to-be-issued-1784958359</id>
            <summary type="text">



டிஜிட்டல் முறையிலான மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மின்னணு மக்கள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



டிஜிட்டல் முறையிலான மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் (e-Population Register Programme) கீழ், முதல் கட்டமாக இத்திட்டம் தற்போது களுத்துறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்படி, இதுவரை காலமும் கைப்பட எழுதப்பட்டு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, கணினி அடிப்படையிலான தரவுத்தளம் மூலமாகவே இனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>சிறப்பு QR குறியீடு</h2><p>
</p><p>
இந்த டிஜிட்டல் முறையின் மூலம், அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையே திறமையான முறையில் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123b650d-4f84-4266-bc7b-40bc59e93df4/26-6a64525f6d280.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பாதுகாப்பான தரவுச் சேமிப்பு முறைமையின் மூலம் தகவல்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
</p><p>
புதிய அமைப்பின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மரணச் சான்றிதழிலும் ஒரு சிறப்பு QR குறியீடு இடம்பெற்றிருக்கும். இதன் மூலம், டிஜிட்டல் தளம் வழியாகச் சான்றிதழின் நம்பகத்தன்மையை எவரும் விரைவாகச் சரிபார்க்க முடியும். </p><p>

மேலும், இச்சான்றிதழ்கள் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் பொறிக்கப்பட்ட பிரத்யேகத் தாளில் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T06:06:25+00:00</updated>
        </entry>
    </feed>
