<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-28T02:18:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1787878698"></link>
            <id>https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1787878698</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் அடிப்படையில் இன்று(28) மதியம் சுமார் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3624e375-6e87-47ff-9b6c-b36cf93214fe/26-6a90dfaba7f48.webp' /></p><p>

இந்த நிலையில், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
அதன்போது, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 
 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
இதேவேளை, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543c48e3-19a8-43b8-a207-b5be47c9281c/26-6a90dfac817f8.webp' /></p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>

அத்தோாடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T01:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787875982"></link>
            <id>https://ibctamil.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787875982</id>
            <summary type="text">




கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>




கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்று வியாழக்கிழமை (27( மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

 கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566f612a-8c6d-4467-a512-71cf4d01e2da/26-6a90d8b5e8fbe.webp' /></p><p>
இந்த நிலையில், கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என
ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
 ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் விளக்கம்</h2><p>
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியின் 18 வயதான இளைய மகன் பெரொன் ட்ரம்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிப்பதிவு தொடர்பாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e943b9d0-aee2-4832-85a7-23e72df359f0/26-6a90a6ac65620.webp' /></p><p> </p><p>

இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஈரானிய தரப்பிலிருந்து இந்த விளக்கமும் மறுப்பும் வெளியாகியுள்ளது.&nbsp; </p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் எந்த நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்! உறுதியாக கூறும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-putin-not-attack-nato-member-country-1787867181"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-putin-not-attack-nato-member-country-1787867181</id>
            <summary type="text">ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

அத்துடன், இந்த வாரத் தொடக்கத்தில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சிஐஏ இயக்குநரின் விஜயம்</h2><p> </p><p>

முன்னதாக ஊடகமொன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலிலும், உளவுத்துறை அதிகாரிகளைச் சந்திப்பதற்காகச் செவ்வாயன்று ரஷ்யா சென்ற சிஐஏ இயக்குநர் ராட்க்ளிஃப், எந்தவொரு குறிப்பிட்ட எச்சரிக்கைச் செய்தியையும் கொண்டு செல்லவில்லை என்றும், வழக்கமான சந்திப்பையே மேற்கொண்டார் என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e785ac-2258-49ae-b8a2-99281f321e19/26-6a90b16116cd6.webp' /></p><p>

இருப்பினும், நேட்டோ உறுப்பு நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கவே ராட்க்ளிஃப் மாஸ்கோ சென்றதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T21:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announced-changed-name-of-lake-ontario-1787859848"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announced-changed-name-of-lake-ontario-1787859848</id>
            <summary type="text">கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை &quot;அமெரிக்கா ஏரி&quot; (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்கா ஏரி எனக் குறிப்பிடப்பட்ட வரைபடத்திற்கு அருகே அமர்ந்து பேசிய ட்ரம்ப், கனடாவுடன் கையாள்வது கடினமாக இருப்பதாகவும், அந்நாடு அமெரிக்காவைச் சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மூன்று நாட்கள் நடந்த தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிய அடுத்த வாரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மௌனம் காக்கும் கனடா</h2><p>
</p><p>
வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான ஒன்ராறியோ ஏரியின் பரப்பளவில் சுமார் 52% கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a319c5a7-8722-4d27-96bb-5ee8af59d686/26-6a909590b9d1e.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கனடிய தரப்பில் இருந்து எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T20:51:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-attacks-ukraine-with-missiles-and-drones-1787861384"></link>
            <id>https://ibctamil.com/article/russia-attacks-ukraine-with-missiles-and-drones-1787861384</id>
            <summary type="text">ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 258 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த இரவுநேரத் தாக்குதல்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் பகுதியளவு முறியடித்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தானியக் கிடங்குகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள்</h2><p>
</p><p>
அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் உதவியுடன், ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15934b5a-26a4-46e8-9376-053ca6742999/26-6a909c4c331cb.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivpost</i></p><p>

 இருப்பினும், இத்தகைய மேம்பட்ட பாதுகாப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை உக்ரைனுக்குப் பெரும் சவாலாகவே உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், “ஸ்டார்ம் ஷேடோ” (Storm Shadow) ரக குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனே சொந்தமாக உற்பத்தி செய்ய தேவையான ரகசிய தொழில்நுட்பங்களை வழங்க பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4477ef80-d20a-4011-a588-2e252fea4445/26-6a909c4cedda2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>
 இதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரித்தானிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T20:30:19+00:00</updated>
        </entry>
    </feed>
