<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-03T08:24:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ordered-transferred-security-prison-harak-katta-1785744266"></link>
            <id>https://ibctamil.com/article/ordered-transferred-security-prison-harak-katta-1785744266</id>
            <summary type="text">தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலவால் இன்று(03.08.2026) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் உண்மைகளை முன்வைத்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் அறிவித்துள்ளார்.​</p><p></p><h2>பிணை கோரிக்கை</h2><p>

குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ffa6929-f60c-43d9-a61a-c0267ef4617b/26-6a704b8c9ff63.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பிணை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதுடன், இச்சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.​&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T08:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947</id>
            <summary type="text">புதிய இணைப்புநாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை, கங்க இஹல கோரலே மற்றும் பஸ்பாகே கோரலே பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேபோல், கேகாலை மாவட்டத்தின் யடியந்தோட்ட பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பகுதிகளுக்கும் சிவப்பு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><h2>மண்சரிவுக்கான அறிகுறிகள்</h2><p>கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, டெல்தோட்ட, மெததும்பர மற்றும் பன்வில பகுதிகளுக்கு நிலை 2இன் கீழ் முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொகுபிட்டிய, அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், கேகாலை பகுதிக்கு நிலை 1இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c774663-cdd1-4a47-b748-cafd649f99d1/26-6a704b15449d1.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், ஹங்குரங்கெத்த பகுதிக்கு நிலை 1-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க, இரத்தினபுரி மற்றும் இம்புல்பே பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், குருவிட்ட மற்றும் நிவிதிகல பகுதிகளுக்கு நிலை 1-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அறிவுரைகள் இன்று (03) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (04) நண்பகல் 12:00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது மழை தொடர்ந்தாலோ, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><h4>நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!&nbsp;</h4><p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><h2>இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை</h2><p>அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06821a82-1e86-466e-a038-e8f0c8ab74be/26-6a700e87ab3e1.webp' /></p><p> 

​இது தவிர,கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pilot-reports-mysterious-disc-near-airport-london-1785741032"></link>
            <id>https://ibctamil.com/article/pilot-reports-mysterious-disc-near-airport-london-1785741032</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதாக சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p>அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்அது ஒரு நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால்இ அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது.</p><p></p><h2>நவீன டிரோனாக இருக்க கூடும்&nbsp;</h2><p>இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edc855e-dcfa-4b2b-9632-16c0bdf1f0e5/26-6a704451b4c8a.webp' /></p><p>திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.</p><p>


தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.</p><p></p><h2>தனித்துவமான தட்டு&nbsp;</h2><p>விமானி அந்த விண்கலத்தை, அதன் வெளி விளிம்பில் அடர் நிறக் குறிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தட்டு என்று விபரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ddada92-1239-430a-a741-b77fa4915d27/26-6a7044527147b.webp' /></p><p> எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார். அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p><p> அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T07:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786</id>
            <summary type="text">வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்குப் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தநிலையில் குறித்த எச்சரிக்கை இன்று (03-08-2026) விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

குறித்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04-08-2026) காலை 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டைச் சூழவுள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி (Southwest Monsoon) தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb8cb61-cd34-4e67-9fc1-53085880d931/26-6a70479304c7f.webp' /></p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - கரன்னகோடவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indictments-filed-against-yoshitha-rajapaksa-1785738155"></link>
            <id>https://ibctamil.com/article/indictments-filed-against-yoshitha-rajapaksa-1785738155</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது&amp;nbsp;குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த குற்றப்பத்திரிக்கையானது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது.&nbsp;</p><p>
 

குற்றச்சாட்டுகளின்படி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில், 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானியா அரச கடற்படைக் கல்லூரியில் நடைபெற்ற அரச கடற்படை இளம் அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் யோஷித ராஜபக்ச பங்கேற்பதற்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிகைகள் தாக்கல்</h2><p> </p><p>

 

அதே ஏற்பாட்டின் மூலம் முறையற்ற ஆதாயத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6025e1-bbee-4ab8-a2d4-a1a2eb4d3ec6/26-6a703ed6b0a62.webp' /></p><p>
</p><p>
 

</p><p>இந்த வழக்கில், இருவருக்கும் எதிராக இலஞ்ச ஆணையம் மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை முறைப்படி வழங்குவதற்காக, நீதிமன்றம் உரிய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/powerful-earthquake-strikes-north-of-egypt-s-suez-1785740048"></link>
            <id>https://ibctamil.com/article/powerful-earthquake-strikes-north-of-egypt-s-suez-1785740048</id>
            <summary type="text">எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இன்று (03) அதிகாலை 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த நிலநடுக்கத்தின் மையம் சூயஸ் நகரிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்&nbsp;</h2><p>எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c1de73-5520-42fa-984c-6c2899d11dcc/26-6a70408e248a0.webp' /></p><p>இதேவேளை நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்களில் தனது அவசரகால மீட்புத் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளதாக எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலை விடுதிக்குள் வெள்ளப் பெருக்கு : மாணவர்கள் வெளியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flooding-inside-the-peradeniya-university-hostel-1785737493"></link>
            <id>https://ibctamil.com/article/flooding-inside-the-peradeniya-university-hostel-1785737493</id>
            <summary type="text">தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் &quot;சரசவி மெதுர&quot; விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வெள்ளப் பெருக்கு காரணமாக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீர்மட்டம் உயர்வு&nbsp;&nbsp;</h2><p>இதேவேளை மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
</p><p>இதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தவிர்க்க, மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd44d709-8439-4d75-a16a-c742ca11967e/26-6a7036198eab8.webp' /></p><p>

நேற்றிரவு (02) முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் பேராதனை 'களு பாலம' அருகே உள்ள பாலம் புனரமைப்புத் தளம் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அங்குள்ள பல கனரக இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் சில உபகரணங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை நுட்பமாக பறித்தெடுக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-that-seizes-the-lands-of-the-tamil-people-1785740394"></link>
            <id>https://ibctamil.com/article/govt-that-seizes-the-lands-of-the-tamil-people-1785740394</id>
            <summary type="text">வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார
நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து
வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.</p><p> 

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03.08.2026)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>எதிர்கால குடிநீர் தேவை</h2><p>''மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ்
மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று
ஒன்றரை வருடம் ஆகியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு
நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692be6e-7615-420a-82dd-36144ff6f6ab/26-6a703c6c57c3d.webp' /></p><p>
அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஒரு பூரணப்படுத்தப்படாத தீர்வாக இருக்கின்ற
விடயமாக இருந்தாலும் 13 வது திருத்தச்சட்டம் மூலம் கிடைத்த அந்த மாகாணசபை
தொடராமல் அல்லது அது உறுதிப்படுத்தப்படாமல் இருக்கின்ற நிலைமை இருக்கிறது.</p><p>இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை
மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல்
இருக்கிறது.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர்
பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும்
அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர் தேவைகொண்டு செல்ல
வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம்
பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.
</p><p>
இது மிக மனவருத்தமான விடயம். அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி
இருந்தோம். அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை" என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T07:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[30,000 கோடி அபராதம்! அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக கோப் குழுவின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/30-000-crore-fine-avant-garde-company-1785735689"></link>
            <id>https://ibctamil.com/article/30-000-crore-fine-avant-garde-company-1785735689</id>
            <summary type="text">அரசுக்கு சொந்தமான ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் (Rakna Arakshaka Lanka Ltd.) தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுத் தொழில்முயற்சிகள் தொடர்பான குழுவின் (CO...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு சொந்தமான ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் (Rakna Arakshaka Lanka Ltd.) தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுத் தொழில்முயற்சிகள் தொடர்பான குழுவின் (COPE) உபகுழு விசாரணை நடத்தியபோது பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
</p><p>
இந்த விசாரணையின் போது, அவன்ட் கார்ட் (Avant Garde) நிறுவனத்திடமிருந்து ரக்னா லங்காவுக்கு கிடைக்க வேண்டிய 3 இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை(30,000 கோடி) உடனடியாக அறவிட நடவடிக்கை எடுக்குமாறு COPE உபகுழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் எகொடவித்தான ரக்னா லங்கா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அந்தத் தொகையை அவன்ட் கார்ட் நிறுவனம் செலுத்த மறுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.</p><p></p><h2>விளக்கம் பெறுவதற்கான அழைப்பு
</h2><p>இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரக்னா லங்கா நிறுவன அதிகாரிகள் COPE குழுவிடம் தெரிவித்தனர்.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88169096-a9e1-49b5-a5d8-016709fc207d/26-6a702b5f0a833.webp' />
</p><p>

இந்த விவகாரம், ரக்னா லங்கா நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அவன்ட் கார்டுடன் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தம் (Joint Venture Agreement) குறித்து விளக்கம் பெறுவதற்காக நிறுவன அதிகாரிகள் COPE உபகுழுவிற்கு அழைக்கப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்டது.</p><p>

விசாரணையில், இலங்கை கடற்படை, ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் ஆகியவை கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்க பல்வேறு காலங்களில் ஒப்பந்தங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த ஒப்பந்தங்களின் மூலம் கிடைத்த வருவாயில் 80 சதவீதம் அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கே சென்றதாகவும் ரக்னா லங்கா அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.</p><p>

ரக்னா லங்கா தலைவர், ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ, இந்த ஒப்பந்தத்தை தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும், முன்னாள் நிர்வாகம் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், சர்வதேச கடல் சட்டங்களின்படி இலங்கை கடல் எல்லையை கடக்கும் கப்பல்களில் உள்ள ஆயுதங்களை கரைக்கு கொண்டு வர முடியாததால், அவை காலி துறைமுகம் அருகிலுள்ள மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.
</p><p>
இந்த சேவைக்காக மூன்று ஆயுதங்களை சேமிக்க சுமார் 1,800 அமெரிக்க டொலரும், பின்னர் அவற்றை மீண்டும் கப்பலுக்கு ஒப்படைக்க மேலும் 1,800 டொலரும் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>இலாபத்தில் 80% அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு&nbsp;</h2><p>கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், மொத்த இலாபத்தில் 80% அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கும், 15% இலங்கை கடற்படைக்கும், 5% மட்டுமே ரக்னா லங்கா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb9ca399-08c1-4d4f-ba08-90c551baa903/26-6a702b5fbfec4.webp' /></p><p>
</p><p>
COPE உபகுழுத் தலைவர் அசித நிரோஷன் எகொடவித்தான, ரக்னா லங்கா நிறுவனத்தின் வருவாய் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேள்வி எழுப்பினார்.
</p><p>
அதற்கு பதிலளித்த ரக்னா லங்கா தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ, தற்போது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருமானம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>

ஆனால், கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் அந்த வருமானத்தில் 80 சதவீதம் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கே சென்றதாகவும், இதுவே அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
அரசின் புதிய கொள்கையின் அடிப்படையில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மீண்டும் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் மூலம் தற்போது கிடைக்கும் அனைத்து வருமானமும் அரசின் பொது திறைசேரிக்கே செல்கிறது எனவும், ரக்னா லங்காவுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும், ஏனெனில் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கு கிடைத்தது வெறும் 5 சதவீத வருமானம் மட்டுமே என்றும் அவர் விளக்கியுள்ளார்.</p><p>

முன்னதாக அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்குச் சாதகமாக இந்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டதாகப் நாடாளுமன்ற&nbsp; குழு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவுகளின் விசாரணைகளில் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாகத் தனிநபர் ஒருவருக்குச் சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுதக் கிடங்கு நடத்த அனுமதி வழங்கியதன் மூலம், அரசுக்கு 75 மில்லியன் டொலருக்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவன்கார்ட் தலைவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு...! தடைபட்ட போக்குவரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hatton-to-colombo-road-block-heavy-rain-today-1785738495"></link>
            <id>https://ibctamil.com/article/hatton-to-colombo-road-block-heavy-rain-today-1785738495</id>
            <summary type="text">ஹட்டன் மற்றும் கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக போக்குவரத்து&amp;nbsp; தடைபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் மற்றும் கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக போக்குவரத்து&nbsp; தடைபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில் வீதிகளில் சென்ற வாகனங்களும் குறித்த பகுதியை கடக்க முடியமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அத்தோடு வாகனச் சாரதிகளுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>மண்சரிவு அபாயம்&nbsp;</h2><p>மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7be15ad0-129c-46dc-af63-18abc66b5712/26-6a7035dd18701.webp' /></p><p>இந்த நிலையில், மக்கள் அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தூரப் பயணங்களை மேற்கொள்ளாதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அனர்த்தங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பேச்சுவார்த்தை விவாதத்துக்கு மத்தியில் பாகிஸ்தானுடனான ஈரானின் இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saudi-arabia-pakistan-and-iran-hold-urgent-talks-1785734363"></link>
            <id>https://ibctamil.com/article/saudi-arabia-pakistan-and-iran-hold-urgent-talks-1785734363</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை தொடரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர்களுடனும்&amp;nbsp;பாகிஸ்தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை தொடரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர்களுடனும்&nbsp;பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீருடனும் தனித்தனியாக தொலைபேசி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இதற்கு முன்னதாக, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p></p><h2>எச்சரித்தார் அப்பாஸ் அராக்சி&nbsp;&nbsp;</h2><p>இதில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக எந்தவொரு தாக்குதல் அல்லது விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டால், அதற்கு ஈரான் உறுதியான மற்றும் சமமான பதிலடி வழங்கும் என அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4317c5f0-b1f6-4d54-b403-aabdb09fda84/26-6a702e4b2b62b.webp' /></p><p>
</p><p>முன்னதாக, அமெரிக்கா அல்லது இஸ்ரேல் எந்தவொரு தாக்குதல் அல்லது விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டால், அதற்கு ஈரான் உறுதியான மற்றும் சமமான பதிலடி வழங்கும் என சவுதி வெளியுறவு அமைச்சரிடம் அராக்சி எச்சரித்திருந்தார்.</p><p>
அதேபோல், துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிடான் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீருடனும் தனித்தனியாக பேசிய அவர், அமெரிக்காவின் எந்தவொரு "சாகச நடவடிக்கைக்கும்" ஈரான் தக்க பதிலடி வழங்கும் என்று கூறி இருந்தார்.&nbsp;</p><p>மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் தனது இராஜதந்திர தொடர்புகளை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1785736634"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1785736634</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (03-08-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (03-08-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,307,341 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 46,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்க விலை</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 368,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8f35dc1-18df-4c72-8e03-5a9160cb8593/26-6a702f30174b9.webp' /></p><p>22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 338,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,360 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 322,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களுக்குப் பின்னால் ஒரு மறைகரம்...! அம்பலமாகும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-cop-exposes-secret-deep-state-meeting-1785734550"></link>
            <id>https://ibctamil.com/article/ex-cop-exposes-secret-deep-state-meeting-1785734550</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை காவல்துறையினரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான <a href="https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111" target="_blank">சர்வதேச அமைப்பின்</a> உறுப்பினரும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான அஜித் தர்மபால இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட<a href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902?itm_source=parsely-top" target="_blank"> இரகசியச் சந்திப்பு </a>தொடர்பான புகைப்படம் ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஆதிக்கக் கட்டமைப்பு</h2><p>இந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5572fadd-eb6c-46c2-a633-1124cbc647fe/26-6a702d0e8add6.webp' /></p><p>

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல.</p><p></p><h2>முக்கிய தொழிலதிபர்கள்</h2><p>

தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும்.
</p><p>

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af923946-a972-489c-aa49-5766fd230173/26-6a702d1005b99.webp' /></p><p>மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது.</p><p>

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
 சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக்கு விரையும் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forensic-inspections-underway-mahara-prison-unrest-1785734306"></link>
            <id>https://ibctamil.com/article/forensic-inspections-underway-mahara-prison-unrest-1785734306</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் எனவும்&nbsp;நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

​</p><p> </p><p>மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை (01) ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்&nbsp;</h2><p>அதற்கமைய, அவர்கள் தும்பர, வெலிகடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a19588b-1fce-4183-912e-ed208f3b8c64/26-6a702d33d67e9.webp' /></p><p> 

​சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையினால் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

​</p><p> </p><p>குறித்த சம்பவத்தின் போது கைதிகளினால் சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வமில்லை...! நீடிக்கும் கருத்து வேறுபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-distrusts-us-talks-hormuz-with-oman-1785732439"></link>
            <id>https://ibctamil.com/article/iran-distrusts-us-talks-hormuz-with-oman-1785732439</id>
            <summary type="text">அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஆலன் ஐயர் தெரிவித்துள்ளார்.
</p><p>
2015 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி <a href="https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403" target="_blank">ஒப்பந்த பேச்சுவார்த்தை</a> குழுவில் இருந்த அவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஓமான்–ஈரான் இடையே ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓமான் மற்றும் ஈரான் ஒருவரையொருவர் நன்கு <a href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201" target="_blank">புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை</a> நடத்தும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>அணுசக்தி பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை மீது முழு கட்டுப்பாடும் கட்டண வசூலும் வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், கட்டணம் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஓமானின் நிலைப்பாட்டுக்கும் இடையே இன்னும் பெரிய கருத்து வேறுபாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6585ad5-0911-456a-af15-a667cb272dee/26-6a702043c3751.webp' /></p><p>அமெரிக்கா–ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை விரைவில் முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் ஆலன் ஐயர் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-vehicle-import-expenditure-falls-in-june-1785735590"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-vehicle-import-expenditure-falls-in-june-1785735590</id>
            <summary type="text">இலங்கையின் மோட்டார் வாகன இறக்குமதிக்கான செலவினம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளது.வாகன இறக்குமதிக்கான செலவினம் முந்தைய மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மோட்டார் வாகன இறக்குமதிக்கான செலவினம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளது.</p><p>வாகன இறக்குமதிக்கான செலவினம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 27.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>அந்த அறிக்கையில், ஜூன் மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 182 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b37625-40cb-4b89-b89d-eb3763b3b746/26-6a702c09aa1c5.webp' /></p><p>இந்த வீழ்ச்சியானது தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.
</p><p>
ஜூன் மாதத்தில் இந்தச் சரிவு பதிவாகியிருந்த போதிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வாகன இறக்குமதிக்காக ஒட்டுமொத்தமாக 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
</p><p>
இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வாகன இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட 1.57 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை : பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999"></link>
            <id>https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

​</p><p>இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b21ddb32-c1b8-45b3-bd30-c8068ee96574/26-6a702423f02f5.webp' /></p><p>அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

​</p><p>இந்தநிலையில் இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.</p><p>அதன்படி, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க&nbsp; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

​</p><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c749b28f-b4d0-430f-b9db-4806aa5ac20e/26-6a7004aa0ccf6.webp' /></p><p>அந்த நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RpvrbiBloOw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/burnt-body-found-in-kilinochchi-1785733423"></link>
            <id>https://ibctamil.com/article/burnt-body-found-in-kilinochchi-1785733423</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859ca4fc-face-4419-a23b-d9aa0266cc8e/26-6a70230328a55.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-woman-india-airport-withforeign-cigarettes-1785730432"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-woman-india-airport-withforeign-cigarettes-1785730432</id>
            <summary type="text">நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் இன்று (03.08.2026) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற அந்தப் பெண் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p></p><h2>சீனத் தயாரிப்பு சிகரெட்டு</h2><p>இதன்போது அந்த பெண்ணால் சட்டவிரோமாக கடத்தி செல்லபட்ட சிகரட்டுகள் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/effcedb2-8d0a-4406-bca1-912148633497/26-6a7021a529766.webp' /></p><p>இதன்போது மேற்க்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயது அழகுக்கலை நிபுணர் என்று&nbsp; தெரியவந்துள்ளது.</p><p>

 

அவர் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, முதலில் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்ததுடன், அங்கிருந்து மலேசியா ஏர்லைன்ஸின் MH179 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>30 இலட்சத்திற்கும் அதிக மதிப்பு</h2><p>

 

அவரது பயணப் பெட்டி மற்றும் முதுகுப்பை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பல்வேறு சீன பிராண்டுகளைச் சேர்ந்த 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 அட்டைப் பெட்டிகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38efb1f1-2029-4a85-bd92-ef12dda419ad/26-6a7021a5d17ee.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார்.&nbsp;</p><p>

 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு&nbsp; மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி குறித்து பிரதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/insurance-scheme-for-journalists-media-minister-1785729727"></link>
            <id>https://ibctamil.com/article/insurance-scheme-for-journalists-media-minister-1785729727</id>
            <summary type="text">வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம் என வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.</p><p>அத்துடன் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>
வவுனியாவில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து
கொண்ட பின் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>காப்புறுதி திட்டம்</h2><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் கஸ்டங்கள்
தொடர்பில் எமக்கு தெரியும்.</p><p>ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக
நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். ஏனைய ஊடக
நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை
உறுதி செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b841fe-bab0-4c67-80a9-0a9f3e9b4cff/26-6a701dbb757df.webp' /></p><p>ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான
அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டு வரவுள்ளேன். இதனை ஒரு வருடத்திற்கு
மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள
வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம்
பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.</p><p>
கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது
ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எமது
அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க
நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோ ஒரு வகையில்
வீட்டுத்திட்டம் கிடைக்கும்.</p><p></p><h2>&nbsp;ஊடகவியலாளர்களுக்கு நீதி</h2><p>அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
தொடர்பான பிரச்சினைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. நாம் பல வழக்குகளை
தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p> தேங்கியுள்ள
வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை
முன்வைத்துள்ளோம். கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான
பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. அவற்றை திரட்ட
வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039b029a-ff34-4b0d-ac04-b94a8f8aa97f/26-6a701dbc55ae7.webp' /></p><p> </p><p>அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன்
மூலமே நீதியைப் பெற முடியும்.

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல
சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள். </p><p>அந்த
வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன்
தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள்.</p><p>வடக்கில் மட்டுமன்றி
தெற்கிலும் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்.
எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து
ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.</p><p>

எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக
நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற
நடவடிக்கை எடுக்கும்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T04:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985"></link>
            <id>https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&amp;nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தோரண வாசலான "நல்லூரான் வடக்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்படவுள்ளது</p><p>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, எதிர்வரும் 6 ஆம் திகதி தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc589867-d2e1-4297-ad96-2cacf6154bc4/26-6a701edd3da2e.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். </p><p>அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.
</p><p>யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T04:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902?itm_source=parsely-top" target="_blank">மஹர சிறைச்சாலையில் </a>ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
</p><p>
குறித்த சிறப்பு விசாரணையானது நேற்றிலிருந்து (03-08-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட <a href="https://ibctamil.com/article/prisoners-transferred-from-mahara-prison-1785665320" target="_blank">விசாரணைக் குழுவொன்று </a>நேற்று முற்பகல் மஹர சிறைச்சால பகுதிக்கு நேரில் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>கோடிக்கணக்கான ரூபாய்</h2><p>

இதற்கு மேலதிகமாக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (International Human Rights Organization) பிரதிநிதிகள் குழுவொன்றும் நேற்று மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்துள்ளது.
</p><p>
சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0014311b-9e80-45ca-a091-b60f7e66fdb9/26-6a701a4bd2036.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் தெரிவித்த அவர், “கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>விரிவான விசாரணைகள்</h2><p>சிறைச்சாலை வளாகம் முழுவதும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதால், அங்கு மனிதர்கள் தங்கியிருக்க முடியாத சூழலே நிலவுகிறது.</p><p> 

இந்த அழிவு கைதிகளின் தேவைகளுக்காக நடந்ததா அல்லது வேறு யாராவது தங்களது தேவைகளுக்காக இதைச் செய்தார்களா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec95d00-58fd-4b66-a770-c0b37e4e0074/26-6a701a4c8569d.webp' /></p><p>ஒரு சில அறைகளுக்குள் இருக்கும் கைதிகளால் மட்டும் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியாது. </p><p>இது யாரோ ஒருவரின் திட்டமிட்ட பின்னணியில் நடந்த சம்பவம் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதம் மற்றும் கலவரத்தின் பின்னணி குறித்த விரிவான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022"></link>
            <id>https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து கேகாலை - கரடுபன பகுதியில் இன்று (3.06.2026) காலை 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

​</p><p>இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3180f20-2763-4fe8-b837-cc0dfffc9fdf/26-6a700addd292a.webp' /></p><p>விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​</p><p> விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அடிக்கடி மழை&nbsp;</h2><p>​மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc36f9cd-c21c-4166-b9e7-a8d447fa18ae/26-6a70065c42a59.webp' /></p><p>மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். 

​முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

​</p><p>வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

</p><p>இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:09:41+00:00</updated>
        </entry>
    </feed>
