<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-29T08:32:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-income-tax-inspector-1785310263"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-income-tax-inspector-1785310263</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகர்&amp;nbsp;தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகர்&nbsp;தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>குறித்த வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (28)&nbsp;பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த நிலையில் மிக நீண்ட விவாதத்தை அடுத்து வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு&nbsp; நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த மாதம் சபை அமர்விற்காகச் சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த
போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி
உறுப்பினர்களின் கௌரவத்தை அவமதிக்கும் வகையில்
நடந்து கொண்டமை தொடர்பில் வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e5a3a7-c06c-4f34-a6d2-a29e710dbe68/26-6a69b0a30b960.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையில்
செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
</p><p>இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
உத்தியோகத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும்,
இதனால் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டதுபோது வருமான வரி
பரிசோதகர் கடமையிலிருந்தபோதே குறித்த பரிசோதகருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும்,
இதனால் அவர் சீருடையில் செல்ல முடியும் என்றும், அவரை பிணை எடுப்பதற்கு
சென்றவர்கள் விடுப்பிலேயே சென்றதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை கடற்கரையில் படையெடுக்கும் நீல வண்ண ஜெல்லிமீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449"></link>
            <id>https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449</id>
            <summary type="text">பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.</p><p>

</p><p>இது குறித்து அவதானமான இருக்குமாறு பொதுமக்களுக்கு தேசிய நீர்வள திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p><p></p><h2>நீல வண்ண ஜெல்லிமீன்கள்</h2><p>
நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748f85cd-481b-4bd6-9188-843239e35177/26-6a69a9e8d2485.webp' /></p><p>பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
</p><p>
நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663"></link>
            <id>https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (29.07.2026) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (30.072026) காலை 11.00 மணி வரை அழுலில் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

வானிலை ஆய்வு மையத்தின்படி, குறிப்பிட்ட இடங்களில் சுமார் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வானிலை அறிக்கை</h2><p>
 

இதன் காரணமாக&nbsp;வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007344c7-54c5-4a17-ad27-272665e935cd/26-6a69aa00d22d4.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தை பிடித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.</p><p>இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் 167,401 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 9.7% மற்றும் 16.2% என்ற வலுவான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eec34f6-99d7-4b49-a673-ae26441e9711/26-6a69a76cbce7e.webp' /></p><p>

ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தக் காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 38,785 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் 332,468 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
</p><p>
மாதாந்த செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் மீளெழுச்சி பெற்று வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783"></link>
            <id>https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை நோய்
வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் மேலும் 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.</p><p></p><h2>காணொளி பதிவு&nbsp;</h2><p>

அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551c29e6-c671-4f5d-b4ad-20784cc22389/26-6a69a41e73bb9.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகத்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர்
அவரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன், தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f86e570-f4e1-4b09-81a8-30f2074f311c/26-6a69a41da63f5.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820"></link>
            <id>https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து, காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>கடும் நெரிசல்</h2><p>


இதையடுத்து, பின்னால் வந்த யாழ் தேவி விரைவு தொடருந்தின் காங்கேசன்துறை தொடருந்தின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c0eca29-acd3-4317-8a54-236494e1749b/26-6a699958d6207.webp' /></p><p>இதனால், இரு தொடருந்துகளின் பயணிகளும் ஒரே தொடருந்தின் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தொடருந்து வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று தொடருந்து சேவை இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T06:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து குறைவு: அதிகரித்த விலைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068"></link>
            <id>https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068</id>
            <summary type="text">தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கடுமையான வறட்சி மற்றும் போதுமான உரம் கிடைக்காததால் தான் இவ்வாறான நிலமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>தினசரி 6 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமாக இருந்த மரக்கறி வரத்து நேற்று (28.07.2026) சுமார் 4 இலட்சம் கிலோகிராமாகக் குறைந்துள்ளதாக கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><h2>மரக்கறிகளின் விநியோகம் குறைவு</h2><p>இதனால், சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818ed74-b0dc-4147-880b-bef8eee67a41/26-6a69a118ecf80.webp' /></p><p>இதன்படி கறி மிளகாயின் ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச மொத்த விலை ரூ.500 முதல் ரூ.550 வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தம்புள்ளை சந்தையில் நேற்றைய மொத்த விற்பனை விலைகளின்படி, கரட் ஒரு கிலோ ரூ.230 - 250, கத்தரிக்காய் ரூ.350, முருங்கைக்காய் ரூ.150 - 200, பூசணிக்காய் ரூ.115, வெண்டைக்காய் ரூ.60 - 70, லீக்ஸ் ரூ.200 மற்றும் பீர்க்கங்காய் ரூ.170 ஆக விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rotest-against-jaffna-thaiyiddi-illegal-vihara-1785302825"></link>
            <id>https://ibctamil.com/article/rotest-against-jaffna-thaiyiddi-illegal-vihara-1785302825</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.</p><p>


அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (28.07.2026) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (29.07.2026 )இரண்டாவது நாளாக தொடர்கின்றது.</p><p>&nbsp;</p><h2>தொடரும் போராட்டம்&nbsp;</h2><p>இந்த நிலையில் போராட்டக்காரர்கள் ”தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்“, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உடனே நிறுத்து“ போன்ற வாசகங்கள் ஏந்திய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593a1232-44d6-477f-849e-4bd211cf68d2/26-6a69958de097a.webp' /></p><p>நேற்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், கனகரட்ணம் சுகாஸ், காணி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-has-been-killed-with-a-sharp-weapon-1785302035"></link>
            <id>https://ibctamil.com/article/man-has-been-killed-with-a-sharp-weapon-1785302035</id>
            <summary type="text">வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28) இரவு கம்பளை - கீரபனை பகுதியில் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் நேற்று (28) இரவு கம்பளை - கீரபனை பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p> </p><p>இவ்வாறு உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.</p><p></p><h2>சந்தேகநபர் கைது&nbsp;</h2><p>இந்த படுகொலை தொடர்பில் கம்பளை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b8c0305-a641-48f4-b8fd-9be907f26439/26-6a698e73e37d9.webp' /></p><p>பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/japan-earthquake-deaths-rise-to-13-1785300765"></link>
            <id>https://ibctamil.com/article/japan-earthquake-deaths-rise-to-13-1785300765</id>
            <summary type="text">ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான குமமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி (S...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான குமமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நேற்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்னும் பலரைக் காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்தநிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், மீட்புக் குழுவினர் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணியைத் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை&nbsp;</h2><p>இதேவேளை உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முடிந்தவரை பலரைக் காப்பாற்றவும் மீட்கவும் அரசாங்கம் தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் எனவும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9391e1c9-ac4f-4ef2-9481-b85b0b32df86/26-6a698c68e22f1.webp' /></p><p>அத்துடன்&nbsp;ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 29 பேர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:20:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-died-shot-himself-1785297121"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-died-shot-himself-1785297121</id>
            <summary type="text">காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த உத்தியோகஸ்தர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&amp;nbsp;
 

உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த உத்தியோகஸ்தர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p>
 

உயிரிழந்தவர் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
</p><p>குறித்த சம்பவம் இன்று அதிகாலை (29.07.2026) நடந்துள்ளது. </p><p></p><h2>உயிரை மாய்த்துக்கொண்ட உத்தியோகஸ்தர் </h2><p>இறந்த காவல்துறை கான்ஸ்டபிள் பேராதனையை சேர்ந்த 28 வயதுடையவவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1768111a-1baf-4b2b-9a24-2a15687f88e7/26-6a69818cb29b8.webp' /></p><p>இவர் காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகே தனது T 56 தாக்குதல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காவல்துறை&nbsp; கான்ஸ்டபிள் பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:10:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே FB பதிவால் சிதைந்த இளைஞனின் வாழ்க்கை...! 27 கோடி அபராதம் - 5 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-youth-sentenced-to-5-years-and-fined-1785298713"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-youth-sentenced-to-5-years-and-fined-1785298713</id>
            <summary type="text">சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பல மில்லியன் அபராதமும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்ப்படுத்தி உள்ளது.</p><p>அண்மையில் கதிர்காமத்தை நோக்கி சென்ற சுப்ரமணி எனும் நாயை இளைஞன் தாக்கிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பேசுபொருளானது.</p><p>அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நடந்த கருத்து மோதல்களின் போதே அனோஜன் என்னும் கல்முனையை சேர்ந்த சவூதி அரேபியாவில் தொழில்புரியும் குறித்த இளைஞன் முஸ்லிம்கள் மீதான கோபத்தை காட்டும் வகையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்&nbsp;என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த கருத்து அதிகம் பேசுபொருளான பின்னரே அவர் சவூதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 மில்லியன் (சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KFyBlufwECs?start=325" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T05:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு : காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/retirement-age-of-judges-extended-justice-minister-1785297179"></link>
            <id>https://ibctamil.com/article/retirement-age-of-judges-extended-justice-minister-1785297179</id>
            <summary type="text">நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் இந்த வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வளர்வடைந்த நாடுகளில் 10 .லட்சம் மக்களுக்கு 47 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 இலட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.</p><p></p><h2>அரச பகுப்பாய்வாளர் திணைக்களம்</h2><p>

1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்கும் போது சட்டக் கட்டமைப்பு மேலும் வளர்ச்சியடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5b0515-75f1-49dc-942e-566849e52222/26-6a697cbe730bd.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு, பணியாளர்கள் நியமனம் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் போன்ற தொடர்புடைய துறைகளின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும்.
</p><p>
இந்த வயது அதிகரிப்பு மேன்முறையீட்டு அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டும் உரியது அல்ல; மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கும் பொதுவானது.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
அத்துடன், இந்த வயதெல்லை நீடிப்பு நடவடிக்கைகளால் நீதித்துறை சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது. குறிப்பிட்ட ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படவில்லை, இது ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் சீரமைப்பதற்கான நடவடிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff19a27-cec1-41cb-8fdf-ed41b89d1894/26-6a697cbf5902c.webp' /></p><p>அரசியலமைப்பின்படி நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. 2020 ஆம் ஆண்டிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது மக்களின் விருப்பம் கேட்கப்படவில்லை” என&nbsp; தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p><br></p><hr><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/feDhf6rATyY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T04:13:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/employment-opportunities-for-sri-lankans-in-israel-1785289151"></link>
            <id>https://ibctamil.com/article/employment-opportunities-for-sri-lankans-in-israel-1785289151</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. குறித்த விடயத்தை வெளிவிவகார மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.</p><p> குறித்த விடயத்தை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு வேலை வாய்ப்பு</h2><p>மேலும் இந்த வேலைத்திட்டம் முறை யான மற்றும் வெளிப்படையான நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3d44bb-6a66-4370-9aee-1ca7f7443bcb/26-6a6963a7d98cf.webp' /></p><p>இவ்வாண்டில் இதுவரை 2500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயார் நிலையில் உள்ளன. </p><p>இவற்றுடன் கூடுதலாக ஒரு புதிய துறையில் மேலும் 1,000 வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இது ஒட்டுமொத்த இலக்கான 10,000 ஐ அடைவதற்கு உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோக பூர்வமாகப் பதிவு செய்வதன் மூலம் இலங்கையர்கள் குறைந்த செலவிலும் அதிக நம்பகத்தன்மையுடனும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்று தங்களின் வெளிநாட்டு வேலைக்கனவை நனவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T03:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - புனித தன்மையை கெடுக்கும் செயலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keerimalai-theerthakkarai-surrounding-areas-issue-1785292519"></link>
            <id>https://ibctamil.com/article/keerimalai-theerthakkarai-surrounding-areas-issue-1785292519</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம் காணப்படுகிறது.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள்
கொட்டப்பட்டு வருகின்றன.
</p><p>
மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில்
சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன

அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால பகுதியில் அப்பகுதியில்
இருந்து சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டமையால் ஏற்பட்ட குழிகள் என
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உயர்பாதுகாப்பு வலயம்</h2><p>
குறித்த பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990 ஆம் ஆண்டு
கால பகுதியில் இடம்பெயர்ந்து சென்றனர். அதனை தொடர்ந்து குறித்த பகுதிகள்
உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தன. அந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் 2014 ஆம் ஆண்டு கால
பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு வந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8581fcdb-a2b7-4494-9d95-b2ff0254020b/26-6a696ad3aa169.webp' /></p><p>அக்கால பகுதியில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து, யாழின் பல்வேறு
பகுதிகளிலும் தற்காலிக முகாம்களில் வசித்தவர்களை, காணிகள் அற்றவர்களை
"நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்" எனும் பெயரில் வீடுகள் அமைத்துக்கொடுத்து,
பாரிய குழிகளை அண்டிய பகுதிகளில் குடியேற்றினார்கள்.
</p><p>
இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு வருடங்களில் அப்பகுதிகள் முற்று
முழுதாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்டதை பாரிய
குழிகளுக்குள் கழிவுகளை கொட்ட தொடங்கினர்.</p><p>

முதலில் உக்காதா கழிவுகளை , பிளாஸ்ரிக் கழிவுகளை கொட்டியவர்கள் , பின்னர்
இறைச்சி கழிவுகள் , மருத்துவ கழிவுகள் என எவ்வித கண்காணிப்புக்களும் ,
கட்டுப்பாடுகளும் இன்றி குழிகளுக்குள் கொட்டப்பட்டன.
</p><h2>விலங்குகளால் சுகாதார சீர்கோடுகள்</h2><p>
அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பகுதியில் அப்பகுதியில் இருக்கும் மக்கள்
கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு கட்ட தொடங்கினர். அதன் போது குறித்த பகுதியில் உள்ள குழிகளை தாம் தென் கொரிய நாட்டின் நிதி
உதவியுடன் " சுகாதார நில நிரவுகை திட்டம்" ஊடாக குழிகளை
நிரவுவதாக தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01212dbb-987b-4d87-92c2-1693ed4586f7/26-6a696ad1caf98.webp' /></p><p>
அதாவது பாரிய குழியின் அடிப்பகுதியில் மிக தடிப்பான பொலிதீன்கள் பரப்பட்டு ,
அதன் மேல் குப்பைகள் கொட்டப்பட்டு , நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லாமல்
குப்பைகள் நிரவப்படும்.</p><p>அதன் பின்னர் ஒரு கட்டத்தில் மண் போட்டு , மீண்டும்
பொலித்தீன்கள் பரவப்பட்டு , குப்பைகள் கொட்டப்படும். இவ்வாறாக ஒவ்வொரு படிமுறை
படிமுறையாக குப்பைகள் கொட்டப்பட்டு குழி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது

அவ்வாறு அந்த குழிகள் நிரவ 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும். </p><p>இந்த
காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால்
ஏற்படப்போகும் சுகாதார சீர்கோடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை
ஏற்படுத்தும் என பலரும் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.</p><p>

அதனை அடுத்து சில வருடங்கள் அக்குழிகளுக்குள் பாரிய அளவில் கழிவுகள்
கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் , மீண்டும் அப்பகுதியில் உள்ள
குழிகளுக்குள், வலி. வடக்கின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் வலி. தெற்கு
பிரதேச சபை மற்றும் கடற்படையினர் கழிவுகளை கொட்ட தொடங்கியுள்ளனர்.
</p><h2>புண்ணிய புனித தன்மையான பூமி</h2><p>
கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மாவிட்டபுரம் கந்தசுவாமி
கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ,போன்ற ஐந்து இந்து ஆலயங்களும் ,
சித்தர்களின் சமாதி கோவில்களும் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில்
தேவாலயமும் காணப்படுவதால் அப்பகுதி புண்ணிய புனித தன்மையான பூமி எனவும்
அப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதனால் , அதன் புனித தன்மைகள் அற்றுப்போகும்
எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c15091-f8e4-4b9a-87dd-bc57b4a01e63/26-6a696ad2a5d8a.webp' /></p><p>

அது மாத்திரமன்றி , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் முதலீட்டு
வலயம் உருவாக உள்ள நிலையிலும் , கீரிமலையில் மஹிந்த ராஜபக்சே காலத்தில்
கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடுகள்
நடைபெறும் நிலையில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதானல் , அதன்
அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படும் அபாயங்கள்
காணப்படுகின்றன.
</p><p>
அவை மாத்திரமின்றி குப்பை கொட்டப்படும் பகுதிக்கு மிக அருகில் கடல் உள்ளது.
மழை காலத்தில் கடல் நீர் உட்புகுமாயின் அது பெரும் சுகாதார
சீர்கேட்டினை ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள்
அறிவித்ததை அடுத்து, உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்று கழிவுகள்
கொட்டப்படுவதனை நேரில் பார்த்துள்ளனர்.
</p><p>
அது தொடர்பில் , கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கின் பிரதேச சபையின்
மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்து அப்பகுதியில் கழிவுகளை
கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரினர்.</p><p>

அந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின்
சுகாதார குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்ற போது டிப்பர் வாகனத்தில்
கடற்படையினர் கழிவுகளை கொட்டுவதற்கு எடுத்து வந்த நிலையில் அதனை
அங்கு கொட்டாது தடுத்து நிறுத்தினர்.</p><p></p><h2>யாரும் கழிவுகளை கொட்ட முடியாது&nbsp;</h2><p>

அதேபோன்று வலி. தெற்கு பிரதேச சபையினரும் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த வேளை
அத்தனையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
</p><p>
அதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு
உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்திய நிலையில் , சம்பவ
இடத்திற்கு வந்த தவிசாளர் , அங்கு அனுமதியின்றி யாரும் கழிவுகளை கொட்ட
முடியாது என கூறி கழிவு ஏற்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய பின்னர்,
குறித்த குழிகளுக்கு செல்லும் பாதை ஒன்றில் காணப்பட்ட "கேற்றினை" பூட்டு
போட்டு பூட்டி சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c15091-f8e4-4b9a-87dd-bc57b4a01e63/26-6a696ad2a5d8a.webp' /></p><p>அதன் போது தவிசாளர் பூட்டி சென்ற "கேற்றுக்கு" அருகினால் , மற்றுமொரு பாதை
காணப்படும் நிலையில் , அதனூடாக கழிவுகளை எடுத்து வரும் வாகனங்கள் உள்ளே செல்ல
முடியும். அதனால் அப்பகுதிக்குள் எவரும் அனுமதியின்றி நுழைய முடியாதவாறு,
நிரந்தர வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை
உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரியுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் , "நல்லிணக்க
புர" மக்கள் மாத்திரமின்றி , முதலீட்டு திட்டங்கள் , பாரிய அபிவிருத்தி
திட்டங்கள் என்பவற்றுடன் , சுற்றுலாத்துறைக்கும் பாரிய
பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நீண்ட கால திட்டமிடல்கள் இன்றி , கழிவுகளை கொட்ட அனுமதிப்பது பாரிய
சிக்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட
துறை சார்ந்தோர் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
எதிர்பார்ப்பாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T03:01:41+00:00</updated>
        </entry>
    </feed>
