<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-27T02:26:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-tomorrow-1785118378"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-expected-islandwide-from-tomorrow-1785118378</id>
            <summary type="text">நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p> </p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27-07-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c87ba4-9e5d-4270-b3e5-f6863996c08b/26-6a66bfb6a3580.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p> 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T02:17:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசு - கடுமையாக விமர்சிக்கும் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/private-bus-owners-slam-govt-plan-to-add-600-buses-1785117018"></link>
            <id>https://ibctamil.com/article/private-bus-owners-slam-govt-plan-to-add-600-buses-1785117018</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆட்சேபனையும் இல்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகளைப் பெறுவதில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4104e6d8-49c0-42a7-a4f7-1fae4003967e/26-6a66bcf697a19.webp' /></p><p>ஆனால், வெறுமனே பேருந்துகளைச் சேர்ப்பது அரசால் நடத்தப்படும் போக்குவரத்து சேவையின் நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களைத் தீர்க்குமா என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
தனியார் பேருந்துகள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன.</p><p></p><h2>கடுமையாகப் பாதிக்கும்</h2><p>

இந்த நிலையில், முறையான சாத்தியக்கூறு மதிப்பீடு இல்லாமல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5b05d9-99c9-44af-b773-cc899fefceee/26-6a66bcf5e4c2c.webp' /></p><p>
இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக, மேலதிகமாகப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து, அரச போக்குவரத்தில் உள்ள செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T02:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/curse-that-has-ruled-sri-lanka-for-half-a-century-1785114215"></link>
            <id>https://ibctamil.com/article/curse-that-has-ruled-sri-lanka-for-half-a-century-1785114215</id>
            <summary type="text">1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு சாதாரணத் தீர்ப்புக்கான நாளாகவே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அன்று சாட்சிக் கூண்டில் நின்றிருந்த இரு மனிதர்கள் பேசத் தொடங்கியபோது, அந்த நீதிமன்ற அறை இலங்கைத் தீவின் கடந்த காலப் பாவங்களையும், எதிர்காலச் சீரழிவையும் பதிவுசெய்யும் வரலாற்று அரங்கமாக மாறி நின்றது.&nbsp;</p><p>
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அமைப்பின் தலைவர்களான குட்டிமணியும் தங்கத்துரையும் மரண தண்டனைத் தீர்ப்புக்கு முன் ஆற்றிய அந்த உரைகள், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தைப் பேசியவை மட்டுமல்ல அது இலங்கை எனும் பேரினவாதக் கட்டமைப்பு தன் சொந்தக் கையால் தன் கண்ணைக் குத்திக்கொள்ளப் போகும் வரலாற்றுத் துயரத்தைப் பதிவு செய்த அரசியல் திறனாய்வு ஆகும்.</p><h3>
தென்னிலங்கையின் முகத்தில் அறைந்த வதைமுகாம்களின் இடப்பெயர்வு</h3><p>
அன்று குட்டிமணி பேசுகின்றபோது சுட்டிக்காட்டிய ஶ்ரீலங்கா தேசத்திற்கான மிக ஆபத்தான எச்சரிக்கை என்னவென்றால் "இன்று தமிழ் இளைஞர்கள் மீது பிரயோகிக்கப்படும் அதே சித்திரவதைகளும் வதைமுகாம்களும், நாளை ஹம்பாந்தோட்டைக்கும் குருநாகலுக்கும் கொண்டு செல்லப்படலாம்."</p><p>

அன்று கொழும்பிலும் தென்னிலங்கையிலும் வாழ்ந்த பேரினவாத மேட்டிமைவாதிகள் இந்த வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடியிருக்கக் கூடும். ஆனால், அரசு எனும் அதிகார இயந்திரத்திற்கு இனம், மொழி, மதம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது . எப்போதும் அதற்குத் தேவை அடக்குமுறைக்கான ஒரு நியாயப்பாடு மட்டுமே என்பதை குட்டிமணி அன்றே அம்பலப்படுத்தினார்.</p><p>

அவர் சொன்னபடியே நடந்தது. தமிழ் இளைஞர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA), அவசரகாலச் சட்டங்களும், சித்திரவதைக் கூடங்களும் 1980 களின் பிற்பகுதியில் ஶ்ரீலங்காவின் தென்னிலங்கைச் சிங்கள இளைஞர்களையே காவு வாங்கியது.&nbsp;</p><p>
ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் ஆறுகளில் மிதந்தபோதுதான், குட்டிமணி எச்சரித்த அந்த ‘வதைமுகாம்களின் இடப்பெயர்வு’ தென்னிலங்கைக்குப் புரிந்தது.</p><p>

இருபத்தோராம் நூற்றாண்டிலும், அதாவது 2022 ‘அரகலய’ போராட்டத்தின் போது அரச அடக்குமுறைக்கு எதிராக வீதிக்கு வந்த சிங்கள இளைஞர்கள் மீது அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்தபோது, அரசுசார் வன்முறை என்பது சிங்களச் சமூகத்தையும் விட்டுவைக்காது என்ற குட்டிமணியின் தீர்க்கதரிசனம் மீண்டும் ஒருமுறை இரத்தக்கறையுடன் அதே கொழும்பில் நிரூபணமானது.</p><h3>
ஶ்ரீலங்காவின் இனவாதப் போதையும், நடுத்தெருவில் நின்ற பொருளாதாரமும்</h3><p>
அதேபோலவே அன்றைய நீதிமன்ற கூண்டில் தங்கத்துரையின் அரசியல் விமர்சனம் இன்னும் ஆழமானது. அதாவது சிங்கள அதிகார வர்க்கத்தின் வர்க்க நலன்களையும், அவர்கள் மக்களை ஏமாற்றும் நுட்பத்தையும் அவர் தோலுரித்துக் காட்டினார் .&nbsp;</p><p>
அதாவது"இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்துவது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாத ஒரு காலம் வரும். அன்றுதான் சிங்கள மக்கள் தாம் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை உணர்வார்கள்."</p><p>
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதலே, நாட்டின் உண்மையான பொருளாதாரச் சீரழிவு, ஊழல், மேட்டிமை வர்க்கத்தின் சுரண்டல் ஆகியவற்றை மறைக்க ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரே அரசியல் மூலதனம் , தமிழர் எதிர்ப்பு மற்றும் ‘சிங்கள-பௌத்த ஆபத்து’ என்ற பூச்சாண்டிதான்.</p><p>

அன்றுமுதல் இன்றுவரை அரசியல்வாதிகள் ஊட்டிய இனவாத போதையில் திளைத்திருந்த தென்னிலங்கைச் சமூகம், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாகக் கட்டமைப்பு ரீதியாகச் சிதைக்கப்படுவதைக் கவனிக்கத் தவறியது.&nbsp;</p><p>

கடந்த 2022 இல் ஶ்ரீலங்க தேசம் முற்றாகத் திவாலாகி, எரிபொருளுக்கும் உணவுக்குமாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தபோதுதான் அன்றைய தங்கத்துரையின் வார்த்தைகள் உண்மையான வலிமையைப் பெற்றன.&nbsp;</p><p>
"இனவாதப் பகையை ஊட்டி எம்மை ஏமாற்றிவிட்டார்கள்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர்கள் உரக்கப் பேசியபோது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்துரை சொன்ன அந்த வரலாற்றுச் சக்கரம் சுழன்று முடித்திருந்தது.</p><h3>
 அபிவிருத்தி எனும் பொய் பிம்பமும், தமிழரின் சுயமரியாதையும்</h3><p>
இன்று வரை கொழும்பை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலும் சரி, இடதுசாரி வேஷம் போட்டவர்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் "பொருளாதாரப் பிரச்சினை" என்றும் "அபிவிருத்தி சார்ந்த குறைபாடு" என்றும் சுருக்கவே முயல்கிறார்கள்.</p><p>
ஆனால், தங்கத்துரை அன்றே கேட்ட கேள்வி இதற்கு மிகப்பொருத்தமான ஒன்றாகும் அதாவது "உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல . இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களால் வழங்க முடியும்?"</p><p>

இன்றைய சூழலிலும் வடக்கு-கிழக்கில் தொடரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் துறை என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியவை தங்கத்துரையின் அன்றைய அந்தக் கேள்விக்கு இன்றளவும் கொழும்பு பதில் வைத்திருக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.&nbsp;</p><p>
உண்மையில் உரிமையற்ற அபிவிருத்தி என்பது ஒரு அடிமைக்கு வழங்கப்படும் வசதியான கூடு மட்டுமே தவிர, அது சுதந்திரமல்ல என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.</p><h3>
தோண்டப்பட்ட கண்களும், சிங்கள தேசத்தில் கழன்று விழுந்த பௌத்த விழுமியங்களும்</h3><p>
"நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்" என்ற குட்டிமணியின் இறுதி ஆசை, ஒரு தனிநபரின் உணர்ச்சிப் பெருக்கு அல்ல அது ஒரு தேசத்தின் விடுதலையை நோக்கிய ஆகச்சிறந்த அரசியல் அர்ப்பணிப்பு ஆகும் .</p><p>

அன்று நீதிமன்றம் அளித்த மரண தண்டனையைக் காட்டிலும், குட்டிமணியின் அந்த வார்த்தைகளின் அரசியல் பலத்தைக் கண்டு கலங்கிந ஶ்ரீலங்க அரச இயந்திரம், 1983 கறுப்பு ஜூலை வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் போது சிறைக்குள்ளேயே அவர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்த அந்த அரச வன்முறையானது , ஶ்ரீலங்க அரசு தன் சொந்தச் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் கொண்டிருந்த அஞ்சாமையைக் காட்டவில்லை அதற்கு மாறாக அது அவர்களின் பயத்தையும், நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தையுமே உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.</p><p>

குட்டிமணியும் தங்கத்துரையும் அன்று அங்கு பேசியது வெறும் அரியல் ஆர்வமுடைய விடுதலை வேட்கை கொண்ட இரண்டு இளைஞர்களின் எழுந்தமானமான உணர்வுந்திய வெறும் வார்த்தைகள் அல்ல அது இலங்கைத் தீவு தனக்குத் தானே தோண்டிக் கொண்ட அரசியல் குழியைப் பற்றிய முன் அறிவிப்பு ஆகும்.</p><p>
இன்று இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டும், அரசியல் மறுசீரமைப்புப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தாலும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், கடந்த காலப் போர்க்குற்றங்களுக்கான நீதியையும் அங்கீகரிக்காத வரை இந்தத் தீவுக்கு விமோசனம் இல்லை.</p><p>
"அடுத்தவனின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு சமூகமும், தனது சொந்தச் சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது" என்ற குட்டிமணி-தங்கத்துரையின் எச்சரிக்கையை தென்னிலங்கை சமூகம் என்றைக்கு முழுமையாக உணர்கிறதோ, அன்றைக்குத்தான் இந்தத் தீவில் உண்மையான அரசியலும் விடுதலையும் சாத்தியமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><b>பொறுப்பு துறப்பு!
</b><br>இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 27 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T01:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்திற்கு லஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-summoned-before-ciaboc-1785111551"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-summoned-before-ciaboc-1785111551</id>
            <summary type="text">லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில், ஆணைக்குழுவின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>குறித்த அழைப்பாணையில், ஆணைக்குழுவின் முன் இன்று(27) முன்னிலையாகுமாறே தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><h2>மாற்றப்பட்ட திகதி</h2><p> </p><p>எவ்வாறாயினும், தான் ஒகஸ்ட் 03 ஆம் திகதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகவுள்ளதாக தனது சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c139ea40-6e5a-4722-9e16-c27f63d780f2/26-6a66ac2327f4e.webp' /></p><p> அந்த வகையில், சமிந்த குலரத்ன தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக கடந்த சில மாதங்ளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்ந்து வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-dismisses-reports-of-weapons-shortages-1785107857"></link>
            <id>https://ibctamil.com/article/trump-dismisses-reports-of-weapons-shortages-1785107857</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
</p><p>
இது குறித்த பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிகமான ஆயுதங்கள் உள்ளன, மேலும் எங்களுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.</p><p>

அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டொன் கெய்ன், வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவது குறித்து வெள்ளை மாளிகைக்குத் அறிவித்துள்ளதாக அந்த அமெரிக்க நாளிதழ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.</p><p></p><h2>ட்ரம்பின் புதிய பதிவுகள்</h2><p>

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ட்ரம்ப், மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ead10d-3b22-4d6b-bf8d-1d17256d9065/26-6a669accbe256.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைக் கைப்பற்றுவது போலவும், ஈரானின் கார்க் தீவு எண்ணெய் ஏற்றுமதி முனையத்தின் மீது தாக்குதல் நடத்துவது போலவும் சித்தரிக்கும் பல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
அதில் ஒரு படத்தில், அமெரிக்கக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலில் ட்ரம்ப் இருப்பது போலவும், மற்றொரு படத்தில் கார்க் முனையத்தின் மீது போர் விமானங்கள் குண்டு வீசுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T23:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த கடுமையான எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572</id>
            <summary type="text">இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரானை எச்சரித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் ஆட்சி வீழ வேண்டும் அல்லது சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் கொடுக்க வேண்டிய விலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நெதன்யாகு, ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் முன்மொழிவு&nbsp;</h2><p>

முறையான உறவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சவூதி-இஸ்ரேல் உறவை சீராக்குவதற்கு ட்ரம்ப் முன்மொழிந்த நிபந்தனையான ரியாத்துக்கு ராணுவ அணுசக்தி திட்டம் இல்லாமல், சிவில் அணுசக்தித் திட்டத்தை வழங்கும் முன்மொழிவை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afda122-a8bf-4802-98a9-6d3640e68ee2/26-6a66714e223b5.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
லெபனான் குறித்துப் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலியப் படைகள் ஹெஸ்பொல்லாவை இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து 5 முதல் 8 மைல்கள் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகவும், அதன் தோராயமாக 150,000 ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளில் சுமார் 94 வீதத்தை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T23:23:04+00:00</updated>
        </entry>
    </feed>
