<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T04:13:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1789438144"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1789438144</id>
            <summary type="text">நாட்டின் பல பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&amp;nbsp;&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>அந்த திணைக்களம் இன்று (15.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>அப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be042f0-3f91-41b0-83cd-83019f380d84/26-6aa8a8c2a131e.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். </p><p>

நேற்று (14) காலை 8.30 மணி முதல் இன்று (15) அதிகாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம்..! தொடரும் அசமந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627"></link>
            <id>https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல்,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20 ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மூச்சு விட சிரமப்படும் நிலை&nbsp;&nbsp;</h2><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a709bc-66eb-4690-9f7d-c9d455ff49fe/26-6aa8abc5680b7.webp' /></p><p>அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p>
அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம். </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும், தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்</p><p></p><p>
</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>
அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் , அதன்
போது, வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2218e67a-7d38-4cdc-9801-d4125b1e0776/26-6aa8abc48ea58.webp' /></p><p>அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T02:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[222222222V என்ற அடையாள அட்டை எண்ணால் ஷிரந்தி தொடங்கிய வங்கி கணக்கு! தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraudulent-funds-piling-up-shiranthi-bank-ac-num-1789436250"></link>
            <id>https://ibctamil.com/article/fraudulent-funds-piling-up-shiranthi-bank-ac-num-1789436250</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கம் பயன்படுத்தப்பட்டிருந்த விடயம் மீண்டும் விசாரணையை மையப்படுத்தியுள்ளது.</p><p>குறித்த வங்கிக் கணக்கில் ஷிரந்தி ராஜபக்ஷவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக ‘222222222V’ என்ற இலக்கம் குறிப்பிடப்பட்ட விடயம் முன்னதாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.</p><p>இந்நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் மீண்டும் கவணம் பெற்றுள்ளது.</p><p></p><h2>சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனை</h2><p>சுடுவெல்ல பகுதியில் உள்ள அரச வங்கிக் கிளையொன்றில், ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவரின் பெயர்களில் கூட்டுக் கணக்காக ‘சிரிலியா’ கணக்கு திறக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தக் கணக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பான தகவல்கள் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73eb0a3-4f10-4e41-9369-a0306120ce6e/26-6aa8a15c6391c.webp' /></p><p>
</p><p>
அத்துடன், குறித்த வங்கிக் கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் கருவியொன்றை கொள்வனவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ச நிதி திரட்டும் பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்ததாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பெறப்பட்டு ‘சிரிலியா’ கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
எனினும், அதே காலப்பகுதியில் சீனாவிலிருந்து சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான PET ஸ்கேன் கருவியொன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T01:37:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் விவகாரத்தில் இரட்டை வேட அரசியல்! மொட்டுவின் ஆட்டத்திற்கு அநுர பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-org-and-the-politics-of-double-standards-1789435134"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-org-and-the-politics-of-double-standards-1789435134</id>
            <summary type="text">விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் என கூறிவருகின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

தற்போது என்ன நடக்கின்றது என்பதை மக்கள் கண்டிருப்பார்கள். இவ்வளவு காலமும் மேடைகளில் குரல் கொடுத்த எதிர் தரப்பினரின் கருத்துக்கள் எல்லாம் பொய் ஆகிவிட்டது.</p><p></p><h2>இனத்தின் வரலாறு</h2><p>ஒருவர் தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்தவர் என குரல் கொடுக்கிறார். அவரை மேடையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cf6ec1-46d9-4274-af1c-0b8fdbb18e87/26-6aa89d00cc34a.webp' /></p><p>
</p><p>
அந்த நபரை வேறு தரப்பினர் மேடைக்கு ஏற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு, நாட்டை பிரிக்க முயற்சி என கூறியிருப்பார்கள்.
 
இதுதான் இவர்களின் கேடுகெட்ட அரசியல். இவர்கள் எல்லாம் போலி தேசப்பற்றாளர்கள்.</p><p>ஒரு இனத்தின் வரலாற்றை மதிக்காத போக்கையே கொண்டுள்ளனர்.</p><p>

இவர்கள் மக்களை மதத்தைஇ இனத்தை காட்டி ஏமாற்றியிருக்கின்றார்கள். உலகம் மாறியும் இவர்கள் இன்றும் மாறவில்லை” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T01:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதி பத்திர கோரிக்கைக்கு கடற்றொழிலாளர்களிடம் 7 இலட்சம் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-lakh-bribe-demanded-from-fishermen-1789433724"></link>
            <id>https://ibctamil.com/article/7-lakh-bribe-demanded-from-fishermen-1789433724</id>
            <summary type="text">மட்டக்களப்பில் சுருக்கு வலை பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் சுருக்கு வலை பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் சில உத்தியோகத்தர்கள் படகு உரிமையாளர்களிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து தலா 35,000 ரூபாய் வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>கடற்றொழில் அமைச்சர் உடனடியாக இது தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>நீண்டகால கோரிக்கை&nbsp;</h2><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b0ba38-8392-488c-abad-4998d8cf91fe/26-6aa8977f199ec.webp' /></p><p>“மட்டக்களப்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக சுருக்கு வலையைப் பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடித்து வருவதாகவும், இதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதனையடுத்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையமான நாரா (NARA) நிறுவன அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொண்டதாகவும், கடற்றொழிலாளர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கு சுருக்கு வலையைப் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்காக சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
</p><p>
எனினும், 2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், நாரா நிறுவனம் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும், கடற்படை அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் ஜனவரி மாதம் புதுப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப் பத்திரங்கள் சுமார் ஆறு மாதங்கள் வரை புதுப்பிக்கப்படாமல் இருந்துள்ளது.</p><p> பின்னர் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் 50,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டதாகவும், அந்தத் தொகையை வழங்க முடியாது என படகு உரிமையாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, தலா 35,000 ரூபாய் வழங்க முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது” என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T00:55:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பணியாளர்களை கொண்ட எண்ணெய் கப்பல்: ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-completely-gutted-by-fire-strait-of-hormuz-1789431579"></link>
            <id>https://ibctamil.com/article/ship-completely-gutted-by-fire-strait-of-hormuz-1789431579</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் எல் கையா (El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் எல் கையா (El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் மோதி பெரும் விபத்தில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த வெடித்ததில் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது கப்பல் முழுதும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீயணைப்பு முயற்சிகளும் தோல்வியடைந்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>மீட்பு முயற்சி தோல்வி</h2><p>இதன்படி மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் தற்போது முழுமையாக தீயில் எரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebc2104-34e1-4d1a-9042-ecb4f4c8816c/26-6aa890b9df98a.webp' /></p><p> ஈரானிய கடற்படை இதுவரை இந்த கப்பல் விபத்தில் சிக்கியமை தொடர்பான துல்லியமான நேரத்தை வெளியிடவில்லை.
</p><p>
கப்பல் மற்றும் பணியாளர்கள் நிலைமை
தரவுகளின் படி, “எல் கையா” கப்பல் சுமார் 48,000தொன் எடை கொள்ளளவு கொண்டது என்றும் விபத்து ஏற்பட்ட கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

இதுவரை 13 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மாலுமி ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T00:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபத்தின் குரல் ஓய்ந்து 39 ஆண்டுகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/39-years-since-thileepan-s-death-1789428753"></link>
            <id>https://ibctamil.com/article/39-years-since-thileepan-s-death-1789428753</id>
            <summary type="text">மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.
</p><p>
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
</p><p>
இன்று 15 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறவுள்ளன.</p><p></p><h2>5 அம்ச கோரிக்கை</h2><p>

பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இவர் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார்.</p><p>

1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது, 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். 

ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும், அதன் தாக்கத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்திய போர் வீரர் திலீபன்.</p><p>

தன் மக்களுக்காக 12 நாள்கள், அதாவது 265 மணி நேரமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உடலுக்குள் செலுத்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், தன் 23-ம் வயதில், 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார். </p><p>

அவரின் 39-வது நினைவு தினமான இன்று, (இலங்கை) தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
</p><p>

மிகச் சிறந்த அறிவாளியாகவும், கல்வியில் ஆர்வம் மிக்கவராகவும் இருந்த போராளி திலீபன், 1980 காலகட்டத்திலேயே மருத்துவ மாணவனாகத் தேர்வானவர்.</p><p>சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளை நேரில் பார்த்து,
`போராடாமல் இங்கு எதுவும் மாறாது என முடிவெடுத்து, படிப்பை நிறுத்திவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டார்.
</p><p> தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு, கடுமையாக அதற்காக உழைத்தார்.
அகிம்சைப் போராட்டத்தைப் போதித்த காந்தியின் தேசமான இந்தியாவிலிருந்து, 1987-ம் ஆண்டு இலங்கைப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்திய அமைதிப்படை சென்றது.
</p><ol><li>அமைதிப் படையிடம் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்.</li><li>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.</li><li>புணர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
</li><li>இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புணர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
</li><li>மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</li><li>இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
</li></ol><p>
 இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 15, 1987 அன்று, யாழ்ப்பாணத்தின் நல்லூர் வீதியில் முருகன் கோயில் அருகில், எனக்கு என்ன நேர்ந்தாலும், சுய நினைவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாரும் எனக்கு உணவோ, சிகிச்சையோ அளிக்கக் கூடாது என உறுதியாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.</p><p></p><h2>உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்கள்&nbsp;</h2><p>
</p><p>
 பாலஸ்தீனத்தின் போராட்டத்தின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பாலஸ்தீனக் கவிதைகளைப் படித்து அதைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் உடையவர்.
உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்களை வாசிப்பதற்குக் கேட்டு வாங்கிக் கொண்டார். </p><p>பாலஸ்தீன கவிதைத் தொகுப்பு அவருக்கு உண்ணாவிரத மேடையில் வாசிப்பதற்கு வழங்கப்பட்டது.

போராட்டம் தொடங்கி 4-வது நாளில் பேசிய திலீபன், நான் உற்சாகமாக இருக்கிறேன். என்னால் தாராளமாகப் பேச முடிகிறது. எனக்கு விடை கொடுங்கள். போராடுவதற்குத் தயாராகுங்கள். எனப் பேசியது, போராட்டக்களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.</p><p>


போராட்டத்தின் தீவிரத்தால், யாழ் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு தமிழர்கள் மறியல் போராட்டத்தினை தொடங்கினார்கள். </p><p>

யாழ்ப்பாணம் முழுதிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தோர் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்தனர். </p><p>

திலீபனின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் சாலைகள் போராட்டங்களால் நிறைய ஆரம்பித்தன. 

திலீபன் தமிழீழத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாய் மாறியிருந்தார்.</p><p>

முதல் இரண்டு நாள்களில் சில ஆயிரங்களாய் இருந்த மக்கள் கூட்டம், மூன்றாம் நாளிலிருந்து லட்சமாய் மாறியிருந்தார்கள்.

திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில்,
`என் அன்பிற்கினிய மக்களே, என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும், நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது. </p><p>நான் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். </p><p>நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். </p><p>மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.</p><p> இந்த உரையுடன் திலீபன் குரல் ஓய்ந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T23:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shavendra-silva-fears-an-international-inquiry-1789427800"></link>
            <id>https://ibctamil.com/article/shavendra-silva-fears-an-international-inquiry-1789427800</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார். </p><p>இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தான் போர்க்குற்றவாளி அல்ல என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>2020ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகள் குறித்தும் தனது கவலைகளை சவேந்திர சில்வா பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சவேந்திர சில்வாவின் குற்றங்கள்&nbsp;</h2><p>ஒரு இராணுவ அதிகாரி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பது அவரது உரிமை. ஆனால் சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் வெறுமனே தமிழர்களின் அரசியல் குற்றச்சாட்டுகள் அல்ல என்பதையே முதலில் நினைவில் கொள்ள வேண்டும். </p><p>வடக்கு–கிழக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் இன்று வரை நீதியைத் தேடி நிற்கின்றன. </p><p>அவர்களின் சாட்சிகளும், மனித உரிமை அமைப்புகளின் ஆவணங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளும் இணைந்தே இந்தக் குற்றச்சாட்டுகள் உருவாகியுள்ளன.</p><p>

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வா 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அந்தப் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை விசாரணைகள் தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளன. </p><p>பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சட்டவிரோதக் கொலைகள், சரணடைந்தவர்களின் படுகொலை, சித்திரவதை மற்றும் கட்டளைப் பொறுப்பின் கீழ் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போன்றவை அவற்றில் அடங்குகின்றன. </p><p>இவை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அல்ல; ஆனால் நம்பகமான சாட்சிகளும் ஆவணங்களும் அடிப்படையாகக் கொண்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் என்பதே அவற்றின் முக்கியத்துவம்.</p><p></p><h2>மக்னிட்ஸ்கி பாணித் தடை</h2><p>&nbsp;இதனால்தான் அமெரிக்கா 2020ஆம் ஆண்டு சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நுழைவுத் தடையை விதித்தது. இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. </p><p>பின்னர் 2025ஆம் ஆண்டு பிரித்தானிய அரசும் அவருக்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளை விதித்தது. சரணடைய முயன்றவர்களை கொல்ல உத்தரவிட்டதாகவும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்டதாகவும் பிரித்தானியாவின் தடைக் காரணங்களில் குறிப்பிடப்பட்டது.
</p><p>
ஒரு நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி மீது இரண்டு முக்கிய ஜனநாயக நாடுகள் மனித உரிமைத் தடைகளை விதிப்பது சாதாரணமான அரசியல் நிகழ்வல்ல. </p><p>இத்தகைய “மக்னிட்ஸ்கி பாணி” தடைகள் (உலகளவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழல்களில் ஈடுபடும் குறிப்பிட்ட நபர்கள் அல்லது அமைப்புகளை இலக்கு வைத்து விதிக்கப்படும் ஒரு வகையான பொருளாதார மற்றும் பயணத் தடைகள்) பொதுவாக தீவிரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே விதிக்கப்படுகின்றன. </p><p>எனவே, “எனக்குக் காரணம் தெரியவில்லை” என்று கூறுவது மட்டுமே அந்தத் தடைகளின் அரசியல் மற்றும் சட்டப் பின்னணியை அழித்துவிட முடியாது.</p><p></p><h2>நீதிக்கான கதவு திறக்குமா?&nbsp;</h2><p>இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சவேந்திர சில்வா போன்ற இராணுவத் தலைவர்கள் “யுத்த நாயகர்கள்” எனப் போற்றப்படுகின்றனர். நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட இராணுவத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். </p><p>ஆனால் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் வேறு ஒன்றைக் கூறுகிறது. ஒரு போரை வென்றிருப்பது, போரின் போது மனித உரிமைகளை மீறுவதற்கான உரிமையை வழங்காது. </p><p>பொதுமக்கள் இலக்காக்கப்பட்டார்களா, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்களா, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யார், கட்டளைகளின் பொறுப்பு யாருக்கு என்பது அனைத்தும் விசாரணைக்குரிய கேள்விகளே.
&nbsp;
</p><p>சவேந்திர சில்வா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் அவருக்கான மிகப் பெரிய வாய்ப்பும் அதுவே. </p><p>குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை அவரது பெயரைத் தூய்மைப்படுத்தும். குற்றங்கள் இடம்பெற்றிருந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதிக்கான கதவைத் திறக்கும்.&nbsp;</p><p>இலங்கை இதுவரை முழுமையான சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்கத் தயங்கியிருப்பதுதான் உலக நாடுகளின் சந்தேகத்தையும் அதிருப்தியையும் நீடிக்கச் செய்கிறது. </p><p>உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத இடத்தில் மறுப்புகள் மட்டுமே பெருகும். இறுதியில் கேள்வி சவேந்திர சில்வா அவர் உண்மையாகவே போர்க்குற்றவாளி இல்லையெனில், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையை ஏன் அஞ்ச வேண்டும்?</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T23:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53251a8b-8961-4e3e-9b0a-d686f57765f8/26-6aa837962d7c0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T23:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்லாமிய உலகிற்கு ஒரு சமிக்ஞையை அனுப்பிய மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mecca-security-agreement-signal-the-islamic-world-1789425579"></link>
            <id>https://ibctamil.com/article/mecca-security-agreement-signal-the-islamic-world-1789425579</id>
            <summary type="text">புதிய மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பும் விதமாக ஒரு படியை எடுத்துள்ளன என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துளார்.</p><p>துருக்கியின் சம்சுன் மாகாணத்தில் இளைஞர்களுடன் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய எர்டோகன் இதனை கூறியுள்ளார்.</p><p>கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் நேர்மறையான முன்னேற்றங்களுக்கு ​​வழிவகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>நேர்மறையான முன்னேற்றங்கள்</h2><p>சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அடியை எடுத்து வைத்துள்ளன. இந்த அடியின் மூலம், இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/358c8d4d-e832-4184-abcd-3dbc4ecf275b/26-6aa877d5179a3.webp' /></p><p>“நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதில் நாம் வெற்றி பெறுவோம்” என&nbsp;எர்டோகன் விளக்கமளித்துள்ளார்.</p><p> பிரதிநிதித்துவமற்றது மற்றும் நியாயமற்றது என்று அவர் நீண்ட காலமாக விமர்சித்து வரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, உலகம் ஐந்தை விடப் பெரியது என்ற தனது நீண்டகாலக் கூற்று குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்திய அவர், ஒரு நியாயமான உலகத்திற்காக துருக்கி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T22:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வர்த்தகப் போரில் சிக்கியுள்ள கார்னி: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/carney-caught-up-in-us-trade-war-1789424517"></link>
            <id>https://ibctamil.com/article/carney-caught-up-in-us-trade-war-1789424517</id>
            <summary type="text">கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் டொராண்டோவிற்கு வருகை தரும் பல உலகளாவிய முதலீட்டாளர்களை வரவேற்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் டொராண்டோவிற்கு வருகை தரும் பல உலகளாவிய முதலீட்டாளர்களை வரவேற்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p> 
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் ஊடாக கனடாவின் பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு முக்கியம் எனக் கூறும் 160-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில், இந்த நடவடிக்கையில் கார்னி ஈடுபட்டுள்ளார்.
</p><p>
கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் நிர்வாகியும் மத்திய வங்கித் தலைவருமான கார்னி, திங்களன்று பிளாக்ராக் (BLK.N) உள்ளிட்ட பங்கேற்பாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தியதான தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>721 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு</h2><p>
முக்கியமாக இன்று நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், எதிர்கால முதலீடுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24b5c88-8cda-4309-8643-19cf077f133c/26-6aa873b0f31b8.webp' /></p><p>
</p><p>
 இருப்பினும், முக்கிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என கனேடிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.</p><p>

தேவையற்ற நிர்வாகத் தடைகளைக் குறைத்து, சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 டிரில்லியன் கனடிய டாலர் (721 பில்லியன் அமெரிக்க டொலர்) முதலீடுகளை ஈர்ப்பதாக கார்னி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T22:30:59+00:00</updated>
        </entry>
    </feed>
