<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-28T20:29:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275"></link>
            <id>https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் மீதான போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதையும் நாட்டின் இராணுவ நிலையைப் பலவீனப்படுத்துவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த நடவடிக்கை ஒரு பேரழிவு மற்றும் தோல்வி எனக் குறிப்பிட்ட அவர், அதை "டிரம்பின் போர்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க இடைக்காலத் தேர்தல்</h2><p>
</p><p>
ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைக் கையிருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் பிரத்யேகச் செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">6 months in, Trump’s disastrous war in Iran has accomplished nothing but the depletion of American stockpiles and the weakening of our military standing.<br><br>That’s what I call an abject failure. <a href="https://t.co/egyUeP6bia">pic.twitter.com/egyUeP6bia</a></p>&mdash; Chuck Schumer (@SenSchumer) <a href="https://x.com/SenSchumer/status/2093362871333802081?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்த ஈரான் போர் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நௌஃபர் ஜேசுதாசனின் 7 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815"></link>
            <id>https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815</id>
            <summary type="text">நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, மாத்தளை மீகஸ்தென்ன மற்றும் ஓவிலிகந்த பகுதிகளில் அமைந்துள்ள பல சொத்துக்கள் இவ்வாறு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தொடர் விசாரணை</h2><p>
</p><p>
இடைநிறுத்தப்பட்ட சொத்துக்களில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 பேர்ச் நிலம், 4.14 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடி வீடு அடங்கிய 10 பேர்ச் நிலம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.5 பேர்ச் நிலம் ஆகியவை அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c333198-42e4-4714-a03a-c9638fff2ce4/26-6a91d9af4d397.webp' /></p><p>

சமீபத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபருக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பரிவுக்கு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817"></link>
            <id>https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817</id>
            <summary type="text">பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றிடம் அனுமதி கோரியுள்ளது.
</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் கொழும்பு குற்றப்பிரிவு தெரியப்படுத்தியுள்ளது.</p><p>
இந்த சம்பவத்தை நீதிமன்றத்திற்கு மேலும் விளக்கிய விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு மேலும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d4475d-f677-488f-ac16-4d3fac96463a/26-6a91d5c437926.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இது தொடர்பில் சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கோரியுள்ளது.
</p><p>
அதன்படி, நீதிபதி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், அந்தக் கோரிக்கைக்கு இணங்க ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-28T18:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T18:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கங்காட்டிற்கு தீ வைத்த விஷமிகள்! கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616"></link>
            <id>https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி தீயில் ஏரிந்து நாசமாகியுள்ளது.</p><p>

குறித்த பகுதிக்கு இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால் தீவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், காவல்துறை, இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்திருந்தார்.</p><p></p><h2>இராணுவத்தினரின் வருகை&nbsp;</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே மருதங்கணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் நடவடிக்கைகளை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6e3d40-005e-4008-95dc-cdde0184e6d8/26-6a91c739ec9e7.webp' /></p><p>

சம்பவத்தின் போது, குறித்த இடத்திற்கு மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரியும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429"></link>
            <id>https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
</p><p>
 நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.</p><p></p><h2>முழுமையான ஆதரவு</h2><p> </p><p>

இதன் பின்னராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது NPP கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f981175-1a38-40ca-aeab-1ac16675a333/26-6a91c46492db0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள்/இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ளது.
</p><p>
பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றென்.” என்றார்.
</p><p>
இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gulf-states-seek-new-security-partners-1787933345"></link>
            <id>https://ibctamil.com/article/gulf-states-seek-new-security-partners-1787933345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மாதிரிகளையும் முயன்று வருகின்றன என்று மத்திய கிழக்கு உலக விவகாரங்கள் மன்றத்தின் மூத்த ஆய்வாளர் முஹனத் செலூம் கூறியுள்ளார்.</p><p>பாதுகாப்பிற்கு ஈடாக இப்பகுதியில் அமெரிக்கத் தளங்களை அமைக்கும் தற்போதைய நிலைகள், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொண்ட பலன்களை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த நிலையில், சில நாடுகள், “கட்டார் நேட்டோவுடனும், துருக்கியுடனும், குவைத் பாகிஸ்தானுடனும் செய்தது போன்ற இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒப்பந்தங்களை செய்து விவகாரத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p></p><h2>புதிய வகை ஒப்பந்தங்கள்&nbsp;</h2><p>மேலும், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போது ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b012e42-3a14-4042-962b-ae57d5f3fc8b/26-6a91b2f3a9e45.webp' /></p><p>இருப்பினும், இந்த புதிய வகை ஒப்பந்தங்கள் இன்னும் சோதிக்கப்பட வேண்டும் என்றும், போரினால் வளைகுடா நாடுகளும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p>ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதேசமயம் ஓமான், சவூதி அரேபியா அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை, என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T16:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-signs-deal-to-buy-massive-us-missile-1787928177"></link>
            <id>https://ibctamil.com/article/india-signs-deal-to-buy-massive-us-missile-1787928177</id>
            <summary type="text">அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது 

இந்த ஏவுகணையை 2009ஆம் ஆண்டு முதல்வாங்குவதற்கு இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கொள்முதல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் Foreign Military Sales (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான Letter of Offer and Acceptance ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தத் தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் Sergio Gor தனது X தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>Javelin ஏவுகணை</h2><p>''போரில் பரிசோதிக்கப்பட்ட Javelin பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca0752b-8a4d-47c6-8504-5311a30c0705/26-6a919e744b94a.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தக் கொள்முதல் எதிர்காலத்தில் Javelin ஏவுகணைகளை இந்தியாவிலேயே இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு தசாப்தமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இந்தக் கொள்முதல் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தின் (Emergency Procurement Powers) கீழ் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>இந்த அதிகாரத்தின் மூலம், அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சம் ரூ.300 கோடி வரையிலான நிதி வரம்பிற்குள் இராணுவம் நேரடியாக கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
</p><p>
எனினும், தற்போது கொள்முதல் செய்யப்படும் Javelin ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:50:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 5.7% வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/value-of-the-srilankan-rupee-is-falling-day-by-day-1787925239"></link>
            <id>https://ibctamil.com/article/value-of-the-srilankan-rupee-is-falling-day-by-day-1787925239</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 5.7% சரிவை சந்தித்துள்ளது.</p><p>ஆகஸ்ட் 28 நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கிடையில், இந்த வாரத்தில் கடன் வழங்கும் விகிதங்கள் சற்றே உயர்ந்தததாக&nbsp;அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவு</h2><p>
எடையிடப்பட்ட சராசரி முதன்மை கடன் விகிதம்( WPLR / WALR)ஒன்பது அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 10.95% ஆகா மாறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6b98261-e2ba-4011-af2f-c5826115548e/26-6a9192fae059e.webp' /></p><p>அத்தோடு&nbsp; எடையிடப்பட்ட சராசரி அழைப்பு பண விகிதம், முந்தைய வார இறுதியில் இருந்த 8.81%-இலிருந்து 8.84%-ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி உள்நாட்டு சந்தையில் பணப்புழக்கம் உபரியாகவே நீடிப்பதாக கூறப்படுகிறது.</p><p>

முந்தைய வார இறுதியில் ரூ. 278.51 பில்லியனாக இருந்த மொத்த சந்தைப் பணப்புழக்கம், ஆகஸ்ட் 28 நிலவரப்படி ரூ. 318.13 பில்லியனாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவும் சரிவு நிலையை எட்டியுள்ளது.

மேலும், அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 0.47% சரிந்து 21,315.91 புள்ளிகளாகவும், கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள 20 முன்னணி மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய பங்குச் சந்தைக் குறியீடும்(SPSL 20) குறியீடு 0.38% சரிந்து 6,005.34 புள்ளிகளாகவும் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211"></link>
            <id>https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211</id>
            <summary type="text">கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மை இன நபர்கள்</h2><p>கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை
திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2b6bdf-a1c3-4358-8d03-2f5d1168ed45/26-6a917dc98e515.webp' /></p><p>அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p>
இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில்&nbsp;காவல்துறையினர் உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் இடத்துக்கு வரவில்லை.
</p><p>
இந்நிலையில் ஊர் மக்கள் பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
</p><p>
அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.</p><p></p><h2>மக்களின் எதிர்ப்பு</h2><p>குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ccfafe-dab8-41e1-8a18-3a98028bf699/26-6a917dca48a60.webp' /></p><p>&nbsp;காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட
உள்ளது.
</p><p>
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிலும் தீர்வின்றி தொடரும் வனவள - தொல்பொருள் திணைக்களங்களின் காணி அபகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187"></link>
            <id>https://ibctamil.com/article/land-grabbing-continues-unabated-in-the-anura-govt-1787923187</id>
            <summary type="text">வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு - கிழக்கு காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p>

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட, 
தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் காணி உரிமையாளர்கள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.</p><p>

இந்த கலந்துரையாடலிலேயே காணி உரிமையாளர்கள் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறை</h2><p>
</p><p>
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக
மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து
வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை
எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5331c5d8-6d0c-4359-bf9a-c9def4b4a41e/26-6a918b2fc8c14.webp' /></p><p>''ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய
அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
</p><p>கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள்
மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த
அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள்
குற்றஞ்சாட்டினர்.
</p><p>'கடந்த அரசாங்கங்களின் குறைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் அதே
அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்தால், காணிகளை இழந்த மக்களுக்கு நம்பிக்கை
எவ்வாறு ஏற்படும்?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T15:10:03+00:00</updated>
        </entry>
    </feed>
