<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-05T08:19:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><p></p><h2>சஹ்ரான் பற்றிய தகவல்</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a78213c-7d06-4fe6-af66-88ece08a62bb/26-6a9bcbec560ba.webp' /></p><p>இந்தியாவின் சிறப்புப் காவல்துறை&nbsp; பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக காவல்துறை சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.</p><p></p><h2>ஒரு முக்கிய எச்சரிக்கை</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c093ded-dbfa-41de-9d85-b74d0e8da46e/26-6a9bcbeb86f67.webp' /></p><p>
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.</p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும்,அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்</h2><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).</p><p>[198CKN
]</p><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.</p><p></p><h2>வெளிவந்துள்ள வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a837440f-3fe7-488d-9e82-be4313082781/26-6a9bcbedba4b8.webp' /></p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் காவல்துறையினரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.</p><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை ஐந்து ரூபாயால் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/milk-tea-and-plain-tea-prices-reduced-by-rs-5-1788592140"></link>
            <id>https://ibctamil.com/article/milk-tea-and-plain-tea-prices-reduced-by-rs-5-1788592140</id>
            <summary type="text">இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> சமையல் எரிவாயு விலைகள்</h2><p>இதேவேளை&nbsp;லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1236bc-607d-46b4-a004-60d8f3ce4fd9/26-6a9bc40b50e3a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயாலும், 5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 42 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 20 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p>
இதுவரை மொழித் தடைகள் காரணமாக குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்ட இலங்கை வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களுக்கு இந்தத் தீர்மானம் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள், தமது தாய்மொழியிலேயே பரீட்சைக்குத் தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6aeb04-7e18-46b5-bf2c-bddac2c867fb/26-6a9bc5bb8f6b4.webp' /></p><p>இந்த நடவடிக்கை, தகுதியான இலங்கை தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் நாமல்! கவனம் பெறும் பிரித்தானிய நீதிமன்ற அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-in-the-world-s-largest-bribery-scandal-1788592106"></link>
            <id>https://ibctamil.com/article/namal-in-the-world-s-largest-bribery-scandal-1788592106</id>
            <summary type="text">சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p> ஏர்பஸ் நிறுவனம் சிறிலங்கா ஏர்லைன்ஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக முறைகேடான முறையில் பணம் வழங்க முயன்றதாக பிரித்தானிய Serious Fraud Office (SFO) மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.</p><p>இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியிலேயே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதும் இடம்பெற்றது.</p><p></p><h2>ஏர்பஸ் - Business Partner</h2><p>
2011 ஜூலை முதல் 2015 ஜூன் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில், சிறிலங்கா ஏர்லைன்ஸின் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவரின் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தை ஏர்பஸ் தனது Business Partner ஆக நியமித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்பாட்டின் மூலம், சிறிலங்கா ஏர்லைன்ஸுக்காக 10 ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் மேலும் 4 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கும் சாதகமான முடிவைப் பெறும் நோக்கில், அந்த Business Partner-க்கு மொத்தமாக 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்க ஏர்பஸ் ஊழியர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், அந்த தொகையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே உண்மையில் செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>2012ஆம் ஆண்டு புருனேயில் பதிவு செய்யப்பட்ட Biz Solutions Inc. என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கி கணக்கிற்கு இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

Biz Solutions Inc. நிறுவனம் அப்போது சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜேநாயக்கவுடன் தொடர்புடையதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>UKEF கேள்வி&nbsp;</h2><p>

மேலும், Business Partner-ன் உண்மையான பயனாளியை மறைப்பதற்காக ஏர்பஸ் ஊழியர்கள் UK Export Finance (UKEF) நிறுவனத்திற்கு தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. </p><p>குறித்த Business Partner-க்கு விமானத் துறையில் போதிய அனுபவம் இல்லாத நிலையிலும், அவரை ஏன் நியமித்தனர் என்பது தொடர்பாக UKEF கேள்வி எழுப்பியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இலங்கை தொடர்பான இந்த விவகாரம், ஏர்பஸ் நிறுவனத்துக்கு எதிராக பிரித்தானியாவின் Serious Fraud Office மேற்கொண்ட பரந்த அளவிலான ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாகும். </p><p>பல நாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக, ஏர்பஸ் நிறுவனம் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் மொத்தமாக சுமார் 3.6 பில்லியன் யூரோ தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> 2020 பெப்ரவரி மாதத்தில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கை அரச நிறுவனங்களின் கொள்முதல் நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.</p><p>மேலும், இந்த வழக்கு சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப்பெரிய corporate bribery விசாரணைகளில் ஒன்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ciaboc-arrested-namal-rajapaksa-after-namal-x-post-1788588827"></link>
            <id>https://ibctamil.com/article/ciaboc-arrested-namal-rajapaksa-after-namal-x-post-1788588827</id>
            <summary type="text">என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் எக்ஸ் (X) தளத்தில் அவர் சார்பில் வெளியிட்ட பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>மேலும் அந்த பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p></p><h2>மக்களுக்கு உரையாற்றவுள்ள ஜனாதிபதி</h2><p>
</p><p>
என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489fdb00-7ffe-4423-8317-bbe97ae0d45a/26-6a9bbbc64734c.webp' /></p><p>
</p><p>
சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன். இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.</p><p>

இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><p></p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For years, before this Government came to power, public statements were made alleging that significant sums of public money had been misappropriated, with promises that any unlawfully obtained funds would be recovered and returned to Sri Lanka.<br><br>The Government has now been in…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2095909591619952867?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.
</p><p>
எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது. </p><p>அரசியல் அதிகாரம் தற்காலிகமானது. 

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.

இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-including-t-56-rifle-recovered-mihintale-1788586907"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-including-t-56-rifle-recovered-mihintale-1788586907</id>
            <summary type="text">அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை (04.09.2026) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>இதை தொடர்ந்து மிஹிந்தலை காவல் நிலைய உத்தியோகத்தர் குழுவொன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைவிடப்பட்ட பொதி</h2><p>
</p><p>கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து, T56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825deb9a-7009-4da1-a29f-5c2c2c65f958/26-6a9bb1da2088f.webp' /></p><p>
</p><p>இத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அப் பகுதிக்குக் கொண்டு வந்து போட்ட நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katchatheevu-belongs-to-sri-lanka-min-chandrasekar-1788585209"></link>
            <id>https://ibctamil.com/article/katchatheevu-belongs-to-sri-lanka-min-chandrasekar-1788585209</id>
            <summary type="text">கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>கிளிநொச்சியில் அண்மையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தமிழக அரசியல்வாதிகள்&nbsp;</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.</p><p>சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dd900f-ad25-45f0-a01a-ce9efb7bc265/26-6a9badbf4db42.webp' />&nbsp;</p><p>தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை.</p><p>
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினைகள்</h2><p> </p><p>மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553e1068-a816-4a39-919a-31b0c8b1def3/26-6a9badbe55dad.webp' /></p><p>குறிப்பாக, இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. </p><p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கே இருதரப்பு கலந்துரையாடல்களில் முன்னுரிமை வழங்கப்படும்.” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-distribution-continue-under-qr-code-system-1788584141"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-distribution-continue-under-qr-code-system-1788584141</id>
            <summary type="text">QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடைமுறை தொடர்வதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தவோ அல்லது அதில் மாற்றங்களை மேற்கொள்ளவோ அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>QR குறியீட்டு முறை</h2><p>
</p><p>
எனவே, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விநியோக முறைமையை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58be8a58-3c28-48d8-8e1c-84d8a4c256c3/26-6a9ba637efd4f.webp' /></p><p>
</p><p>
QR முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் சில கவலைகளுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வை மிகவும் முறையானதும் திறமையானதுமான முறையில் நிர்வகிப்பதே QR எரிபொருள் விநியோகத் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள் நிர்ணயம் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maximum-retail-prices-local-produced-canned-fish-1788582874"></link>
            <id>https://ibctamil.com/article/maximum-retail-prices-local-produced-canned-fish-1788582874</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p>

155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நுகர்வோர் விவகார அதிகாரசபை</h2><p> அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை 510 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73ffceeb-28e0-46ee-b0be-005778b31d22/26-6a9ba10227e1c.webp' /></p><p>155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை&nbsp; 260 ரூபாயாகவும், 425 கிராம் டின் மீனின் விலை 600 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T05:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pig-kidney-functions-in-human-body-for-271-days-1788582255"></link>
            <id>https://ibctamil.com/article/pig-kidney-functions-in-human-body-for-271-days-1788582255</id>
            <summary type="text">பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க நோயாளி ஒருவரின் உடலில், அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க நோயாளி ஒருவரின் உடலில், அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இது பன்றியின் உறுப்பொன்று மனித உடலில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மிக நீண்ட காலமாகும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

நீண்டகாலமாக இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையான டயாலிசிஸ் மூலம் வாழ்ந்து வந்த குறித்த நோயாளிக்கு, மனித சிறுநீரகம் கிடைக்கும் வரையிலான தற்காலிக மாற்று ஏற்பாடாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.</p><p></p><h2>271 நாட்கள் சாதனை</h2><p>
இந்த உறுப்பு மாற்று சிகிச்சை தனக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நோயாளி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905760c5-21bf-46d2-92e1-2a597dd4e895/26-6a9b9e0ac4bed.webp' /></p><p>

எனினும், இறுதியில் பன்றியின் சிறுநீரகத்தின் செயற்பாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குறித்த நோயாளிக்கு மனித சிறுநீரகம் மாற்றுப் பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 25,000 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.</p><p> அதேவேளை, சுமார் ஒரு இலட்சம் பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மனித உறுப்புகளுக்கான பற்றாக்குறையை சமாளிப்பதற்கான மாற்று வழியாக, விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் Xenotransplantation துறையில் இந்தச் சாதனை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-military-controlled-lands-in-north-east-un-1788579681"></link>
            <id>https://ibctamil.com/article/release-military-controlled-lands-in-north-east-un-1788579681</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்குமாறும் மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும்&amp;nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்குமாறும் மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும்&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.</p><p>எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பாரிய மாற்றங்களைச் செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம்</h2><p>


எனினும், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்தியமையினால் தன்னிச்சையான கைதுகளும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதும் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f7995bd-c7b1-4fda-8bdf-695b62b4c76c/26-6a9b9ad3ec71a.webp' /></p><p>


2025 ஆம் ஆண்டில் அவ்வாறு காவலின் போதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதோ இடம்பெற்ற 18 மரணங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 3 சம்பவங்களும், அதேபோன்று 2025 ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமாக தாக்குதல் நடாத்துதல் தொடர்பான 602 சம்பவங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சில வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை நிலையான பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலை வன்முறைகள்</h2><p>
</p><p>

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளடங்கலாக இராணுவ மற்றும் சிவிலியன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மட்டத்திலான உளவு பார்த்தல், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்குதல்கள் இடம்பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eed66ef-bfdf-4d96-9923-4af4ec0674bd/26-6a9b9ad4a418f.webp' /></p><p>
</p><p>

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து அதனை விரைவாக இரத்து செய்து புதிய சட்டமொன்றை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரை செய்கிறது.</p><p>இதற்கு மேலதிகமாக, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் வரைவு செய்யப்பட்டுள்ள NGO சட்டத்தைச் திருத்துதல் அல்லது இரத்து செய்தலும் பரிந்துரைகளில் அடங்கும்.</p><p>


சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையிலடைக்காது சுகாதார ரீதியிலான மறுவாழ்விற்கு உட்படுத்துமாறும் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_z1y1H5Pe1I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T04:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/galle-prisoner-dies-1788579455"></link>
            <id>https://ibctamil.com/article/galle-prisoner-dies-1788579455</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் ஹபராதுவ, மெலேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p>குறித்த நபர் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கைதி உயிரிழப்பு</h2><p>உயிரிழந்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37a924d6-d0e7-4ba5-a75a-27e3783458a0/26-6a9b93455b8ed.webp' /></p><p>
உயிரிழந்த சந்தேகநபர் தொடர்பான நீதவான் விசாரணையும், பிரேதப் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடியாக குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/litro-gas-prices-reduced-in-sri-lanka-1788577791"></link>
            <id>https://ibctamil.com/article/litro-gas-prices-reduced-in-sri-lanka-1788577791</id>
            <summary type="text">இலங்கையில் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>

இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய விலைகள்</h2><p> </p><p>இந்தநிலையில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74dfc5b-d09e-46ce-a44d-9961d9144ba0/26-6a9b8c6d5dccf.webp' /></p><p>

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாயினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பரவும் பொய்யான தகவல்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/false-information-being-spread-about-power-cuts-1788572483"></link>
            <id>https://ibctamil.com/article/false-information-being-spread-about-power-cuts-1788572483</id>
            <summary type="text">நாட்டின் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித சிக்கலும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

லக்விஜய மின் உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித சிக்கலும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது பேசிய அவர், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தலாம் எனப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெளிவுபடுத்தினார்.</p><p>

மேலும், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கான நிலக்கரியைக் கொள்முதல் செய்து கொண்டுவருவதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9b3379a-9d07-4752-b926-0dbe3d7c2a5e/26-6a9b7345b8c8d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T02:30:53+00:00</updated>
        </entry>
    </feed>
