<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-22T11:35:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றங்களாக மாற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/presidential-palaces-converted-into-court-houses-1784717163"></link>
            <id>https://ibctamil.com/article/presidential-palaces-converted-into-court-houses-1784717163</id>
            <summary type="text">சில ஜனாதிபதி மாளிகைகள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன, மற்றவை பொருளாதார ரீதியாக சாத்தியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரினி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில ஜனாதிபதி மாளிகைகள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன, மற்றவை பொருளாதார ரீதியாக சாத்தியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று(22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்கான செலவு</h2><p>
</p><p>
2025 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக ரூ. 13.9 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dae4835-6926-42ed-824a-08a185a09883/26-6a60a56875a9e.webp' /></p><p>&nbsp;"ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார ரீதியாக சாத்தியமான பயன்பாட்டிற்கு வரும் வரை அவற்றைப் பராமரிக்க அரசாங்கம் நிதி செலவிட வேண்டியுள்ளது," என்றும் பிரதமர் மேலும் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியாவில் அசோகர் மகன் மஹிந்த நீராடினாராம்! புதிய கதைகளுடன் இன்று புதிய கட்டுமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanniya-hot-water-springs-new-issue-1784717720"></link>
            <id>https://ibctamil.com/article/kanniya-hot-water-springs-new-issue-1784717720</id>
            <summary type="text">வெள்ளையாக உள்ளவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல தெற்கின் சில பத்தி எழுத்தாளர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று நடைபெறும் பௌத்த சமய நடவடிக்கைகளால் நல்லிணக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளையாக உள்ளவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல தெற்கின் சில பத்தி எழுத்தாளர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று நடைபெறும் பௌத்த சமய நடவடிக்கைகளால் நல்லிணக்கத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாதென மாய்ந்து.. மாய்ந்து பாய்ந்து பாய்ந்து சொல்லிவைக்கும் பின்னணியில் இன்று அங்கு சில நகர்வுகள் நடந்தன.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் செய்ய முடியாதென திருகோணமலை நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை பிறப்பித்த நிலையில் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வு இது ஒன்றும் புதிய கட்டுமானங்களுக்குரிய நகர்வு அல்ல அகழ்வு பணிகளுக்குரிய நகர்வு என அரசாங்கம் சமாளிக்கிறது. </p><p>

ஆனால் இந்த சமாளிப்பு கண்டு அடடே அப்படியா? என எண்ணத்தோன்றுகிறர். ஒருவேளை இந்த அகழ்வில் ஒரு புத்தர் முளைக்க வைக்பட்டால் அவர் அங்கு குந்த வைக்கப்பட்டால் அது ஒரு புதிய கட்டுமானம் என்பது புரிதல்.</p><p> 

தமிழர்களுடன் தொடர்புடைய இராவணன் சார்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று இடத்தை ஒரு புராத பௌத்த தலமாகவும் அனுராதபுர காலத்தில் அங்கு பௌத்தம் இருந்தமைக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் எல்லாம் இருப்பதான கதைகளும் இலங்கைக்கு பௌத்தத்கொண்டு கொண்டு சென்ற மஹிந்த தேரர் கன்னியா வெந்நீருற்றில் குளித்து நோயிலிருந்து குணமடைந்தார் என்ற திடீர் கதைகளும் வரும் நிலையில் இந்த விடயம் மற்றும் செம்மணி புதைகுழிபகுதியை ஐரோப்பிய ராஜதந்திரிகள் பார்விட்ட விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CxSG2Y1weYI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T11:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-installation-kuttimani-thangathurai-statue-1784715418"></link>
            <id>https://ibctamil.com/article/court-installation-kuttimani-thangathurai-statue-1784715418</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்று நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்று நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் 43-வது நினைவு நாளை ஒட்டி எதிர்வரும் 25.7.2026 அன்று உருவச்சிலை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் முக்னெடுக்கப்பட்டு இருந்தன.&nbsp;</p><p>எனினும் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் அதன் சிலை நிறுஉனர்களில் ஒருவரான சதீஷ் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றத்தின் தற்காலிக தடை</h2><p>இதற்கமைய அவர் நேற்று
முன்தினம் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fc0cb85-58d1-40c2-8916-c76abf8ac759/26-6a60a28828179.webp' /></p><p>இந்திலையில் குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா,
விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட பலர் பிரதிவாதி சார்பில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p>இதன்போது முன்வைக்கபட்ட கருத்துக்களை பரிசீலித்த பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 04.08.2026 வரை குறித்த சிலை நிறுவுவதை
தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளையை பிறப்பித்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் ஆட்சியில் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 715 மில்லியன் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/715million-dollars-were-smuggled-during-ranil-govt-1784712460"></link>
            <id>https://ibctamil.com/article/715million-dollars-were-smuggled-during-ranil-govt-1784712460</id>
            <summary type="text">2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகத் இலங்கை நாடாளுமன்ற பொது நிதி மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகத் இலங்கை நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவில் 
(COPF) தெரியவந்துள்ளது.
</p><p>பிரதிப் காவல்துறை மா அதிபர் அசங்க குருவிட்டவினால் இந்த விசாரணை குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
2023 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாக ஜனாதிபதி அனுரகுமார குமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார். </p><p></p><h2>அமைச்சர் ஆனந்த விஜேபால</h2><p>

மேலும், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f56bc2-29a7-4029-abf2-1e10a1069ea6/26-6a60981621ce7.webp' /></p><p> </p><p>

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி உட்பட பல கட்சிகள், இவ்விவகாரம் குறித்து ஒரு விரிவான விசாரணை தேவை என்று தெரிவித்தன.</p><p> 

கேள்விக்குட்பட்ட இந்த மோசடி நிகழ்ந்த காலகட்டமானது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தையும் உள்ளடக்கியிருந்தது என்பதாகும்.
</p><p>
மேற்கூறிய கோரிக்கைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகளை அசங்க குருவிட்ட வழங்கியுள்ளார்.
</p><p></p><h2>வெளியே கொண்டு செல்லப்பட்ட பணம்</h2><p>
நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பணம், பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b65d2d4-df24-4d2a-ab16-e0d750e3a4ca/26-6a609816d51c8.webp' /></p><p> </p><p>

பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் போல் பொய்யாகக் கூறி கடத்தல்காரர்கள் இந்தப் பணத்தை நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் சென்றுள்ளதாகவும், மேலும், பொருட்கள் இறக்குமதிக்காக என்று கூறி அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் பணம் நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. </p><p>

தவறான தகவல்களின் அடிப்படையில் இவ்வளவு பெரிய தொகை நாட்டை விட்டு வெளியேறியிருந்தால், அதற்குக் காரணம் வங்கி அமைப்பு, சுங்கத்துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் உள்ள பலவீனங்களே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று அரசாங்க நிதிக் குழுவின் கவனத்திற்கு இந்த அனைத்துப் பிரச்சினைகளும் கொண்டுவரப்பட்டதோடு, கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விவாதம் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>105 நிறுவனங்கள்&nbsp;அடையாளம் &nbsp;</h2><p>இந்த அறிக்கையின்படி&nbsp; ஜனவரி 20 அன்று ஆரம்பத்தில் 89 நிறுவனங்களும், அதனைத் தொடர்ந்து பெப்ரவரி அறிக்கையில் மேலும் நான்கு நிறுவனங்களும், மார்ச் அறிக்கையில் கூடுதலாக 12 நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டன. </p><p>

மொத்தத்தில், 105 நிறுவனங்கள் இந்தப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
</p><p>
ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 2026 வரை, நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் (TTs) மூலம் ஏறத்தாழ ரூ. 214.7 பில்லியன், அதாவது சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

அந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு இணையான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>சுங்கத்துறையின் கண்டுபிடிப்பு</h2><p>
</p><p>
சுங்கத்துறையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அந்தப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

105 நிறுவனங்களுடன் தொடர்புடைய இயக்குநர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்ததில், 55 நபர்கள் மட்டுமே அவற்றுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்ததாக இதில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188a2912-b441-4d08-881c-ea121cc54480/26-6a609d6c1cbc6.webp' /></p><p>

மேலும், இந்த பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக 227 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும், தொடர்புடைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 24,300 தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த விசாரணையில் கண்டறியப்பட்டது.
</p><p>
தற்போது விசாரணையில் உள்ள பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதில், இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 13 முக்கிய வங்கிகள் ஈடுபட்டிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணைகளின் முன்னேற்றத்தின்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய நபரை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டனர் என்றும் 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இந்த விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T10:58:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் 50 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத கைத்தொலைபேசிகள் காவல்துறையால் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/smartphones-worth-50-million-recovered-1784711492"></link>
            <id>https://ibctamil.com/article/smartphones-worth-50-million-recovered-1784711492</id>
            <summary type="text">கொழும்பு கொல்லுபிட்டி லிபர்டி பிளாஸாவில் 5 கோடிக்கம் அதிகமான பெறுமதியுள்ள சட்டவிரோத கையடக்க தொலைபேசிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.&amp;nbsp;கைப்பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொல்லுபிட்டி லிபர்டி பிளாஸாவில் 5 கோடிக்கம் அதிகமான பெறுமதியுள்ள சட்டவிரோத கையடக்க தொலைபேசிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.&nbsp;</p><p>கைப்பற்றபட்ட கையடக்க தொலைபேசிகளில் புதிய ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான தொலைபேசிகள் இருந்ததாக வலானா காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில்&nbsp;வலனா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>300-க்கும் மேற்பட்ட நவீன கைபேசிகள்&nbsp;</h2><p>மேலும் இந்த விசாரணையில் கைபேசிகளை வைத்திருந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79f078f-275a-4f98-a5cf-56e1422c7ecb/26-6a60964f7eb36.webp' /></p><p>சந்தேகத்திற்கிடமாக கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளின் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது. </p><p>

இந்த நடவடிக்கை, காவல் உதவி கண்காணிப்பாளர் ரோகன் ஒலுகலாவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரருக்கு கிடைக்கப்போகும் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/david-warner-pleads-guilty-to-drink-driving-1784715952"></link>
            <id>https://ibctamil.com/article/david-warner-pleads-guilty-to-drink-driving-1784715952</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நடத்தப்பட்ட திடீர் சுவாசப் பரிசோதனையைத் தொடர்ந்து, மது அரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நடத்தப்பட்ட திடீர் சுவாசப் பரிசோதனையைத் தொடர்ந்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p>

கடந்த மே மாதம் நடந்த நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அந்த கிரிக்கெட் வீரர் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தனது நடத்தை "முட்டாள்தனமானது" மற்றும் "பொறுப்பற்றது" என்பதை அவர் அறிந்திருந்தார்&nbsp;
என்றும் அவரது வழக்கறிஞர் பாபி ஹில் கூறியதால், இந்த ஒப்புதல் வாக்குமூலம் எதிர்பார்க்கப்பட்டது.</p><h2>உயிர்த்த ஞாயிறு அன்று சம்பவம்</h2><p>ஈஸ்டர் ஞாயிறன்று தனது காரில் ஏறுவதற்கு முன்பு, வோர்னர் ஒரு நண்பரின் குடியிருப்பில் மூன்று கிளாஸ் வைன் அருந்தியதாக முந்தைய விசாரணையில் ஹில் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439bdd4b-9479-4b51-971c-cec320cd84d5/26-6a609d53cc545.webp' /></p><h2>ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை</h2><p>

ஓகஸ்ட் 18 அன்று தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்று வோர்னருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை, A$2,200 ($1,500; £1,150) வரை அபராதம் மற்றும் ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd22e95-c8d6-4e35-bf21-e45bd162f8fe/26-6a609d5318102.webp' /></p><p>

2024-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வோர்னர், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளின் தலைவராக உள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-s-position-on-chemmani-mass-grave-1784704881"></link>
            <id>https://ibctamil.com/article/un-s-position-on-chemmani-mass-grave-1784704881</id>
            <summary type="text">



செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்குழு இணக்கம் தெரிவித்தாலும் அவர்கள் வழங்கிய வார்த்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>



செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்குழு இணக்கம் தெரிவித்தாலும் அவர்கள் வழங்கிய வார்த்தைகளில் போதுமான திருப்திநிலை இல்லை என காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யுவராச கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
</p><p>
தூதுக்குழுவை செம்மணியில் வைத்து சந்தித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல உதவுவதாக தூதுக்குழு தெரிவித்திருந்தாலும் அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கான அதிகாரம் இல்லை என தங்களிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>போராட்டம்</h2><p>இந்த நிலையில்,&nbsp;ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், செம்மணி மனித புதைக்குழியை பார்வையிடுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574582b2-b255-4b71-a14f-1592c6b90f2d/26-6a6072fb3bff6.webp' /></p><p>இதன்போது, செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி&nbsp; ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T10:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா. பொதுச்செயலாளராக பிஃபா தலைவர் : ட்ரம்ப் தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-chief-for-un-secretary-general-1784714446"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-chief-for-un-secretary-general-1784714446</id>
            <summary type="text">ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக நியூயோர்க் போஸ்ட் செவ்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக நியூயோர்க் போஸ்ட் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.</p><p>

ட்ரம்ப்பிற்கு நெருக்கமான ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி, இன்ஃபான்டினோ "உலகெங்கிலும் உள்ள அனைவராலும் மதிக்கப்படுகிறார், மேலும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறப்புத் திறன் அவரிடம் உள்ளது என்பதை ட்ரம்ப் உணர்ந்துள்ளார்" என்று போஸ்ட் செய்தி வெளியிட்டது.</p><h2>ட்ரம்புடன் நெருங்கிய உறவு</h2><p>56 வயதான இன்ஃபான்டினோ, இந்த ஆண்டு உலகக் கோப்பையின் போது ட்ரம்புடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டார். சுவிட்சர்லாந்தில் பிறந்த ஃபிஃபா தலைவர், அமெரிக்கத் தலைவரைத் தன் பக்கம் ஈர்க்க பலமுறை முயற்சி செய்தார். டிசம்பரில் ஃபிஃபாவின் முதல் அமைதிப் பரிசை அவருக்கு வழங்கியதும் இதில் அடங்கும் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0210d168-311e-477d-bedc-578cd2a7dfc8/26-6a60977234559.webp' /></p><p>

தற்போதைய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸின் ஐந்து ஆண்டுகால பதவிக்காலம் ஜனவரி 1, 2027 உடன் முடிவடைகிறது.
</p><p>
ஐ.நா. சாசனத்தின் 97வது பிரிவின் கீழ், பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச்செயலாளர் பொதுச் சபையால் நியமிக்கப்படுகிறார்.
</p><p>
இந்தப் பதவியைப் பெறுவதற்கு, இன்ஃபான்டினோ முதலில் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபையின் ஆதரவைப் பெற வேண்டும். அங்கு, ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் எவரும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு, பொதுச் சபையின் ஒப்புதலையும் பெற வேண்டும்.</p><p></p><p>

</p><h2>ஐ.நா தொடர்பில் ட்ரம்ப் கடும் விமர்சனம்</h2><p>முக்கிய உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் ஐ.நா. மேலும் தீவிரமான பங்கை வகிக்கத் தவறிவிட்டதாகத் தாம் கருதுவதை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ecb3c5-bfa4-485e-a35c-26867fb9e51c/26-6a60977309f2b.webp' /></p><p> </p><p>கடந்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் தலைமையில் ஒரு அமைதி சபையை நிறுவினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய குழுவான ஹமாஸுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் உட்பட, அவரது நிர்வாகம் அமைதி ஒப்பந்தங்களைத் தொடர்ந்தபோது, ​​அவர் ஐ.நா.வுக்கு ஒரு மாற்றீட்டை உருவாக்குகிறார் என்ற ஊகங்களுக்கு இது வழிவகுத்தது. ட்ரம்ப் அந்தக் கூற்றுகளை மறுத்தார்.
</p><p>
கடந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் ஐ.நா.வுக்கான அமெரிக்க நிதியுதவியைக் கடுமையாகக் குறைத்துள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பு உட்பட ஐ.நா.வுடன் இணைந்த பல அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் இராணுவத் தளபதியை அதிரடியாக பதவி நீக்கிய ஜெலென்ஸ்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelensky-dismisses-ukrainian-army-commander-1784713074"></link>
            <id>https://ibctamil.com/article/zelensky-dismisses-ukrainian-army-commander-1784713074</id>
            <summary type="text">


உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியைப் (Oleksandr Syrskyi) பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியைப் (Oleksandr Syrskyi) பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரைனின் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய மாற்றங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.</p><p></p><h2>காரணம்</h2><p>
</p><p>
முன்னதாக, அந்நாட்டின் பிரபல பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c296591-cf8b-4782-97c7-00c491dc44d4/26-6a60916c7948c.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Stars and Stripes</i></p><p> 

இந்த நீக்கத்தைக் கண்டித்து உக்ரைனில் பல்வேறு கண்டனப் போராட்டங்கள் வெடித்தன. </p><p>

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவுடன் தளபதி சிர்ஸ்கிக்கு நிலவி வந்த கருத்து வேறுபாடுகளே இந்த அதிரடி நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-22T09:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதில் இருந்து விடுவிக்கப்பட்ட ராகுல்காந்தி! மோடி அரசுக்கு புதிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rahul-gandhi-new-crisis-for-modi-government-1784712219"></link>
            <id>https://ibctamil.com/article/rahul-gandhi-new-crisis-for-modi-government-1784712219</id>
            <summary type="text">இந்தியாவின் புதுடெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கல்வி முறை எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே தடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் புதுடெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கல்வி முறை எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சமூக ஊடகங்களால் இயக்கப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள், 2024-ல் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரது அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளன. </p><p>

இதில் போராட்டக்காரர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p></p><h2>போராட்டத்தில் ராகுல் காந்தி</h2><p>
மாணவர்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டியும், புதுடெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறையைக் கண்டித்தும் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d83ccee-fbe4-4100-979c-12157c82b639/26-6a608c1ca0040.webp' /></p><p>
</p><p>
இந்தியாவில் தேர்வு சர்ச்சைகளைக் கையாள்வது தொடர்பாக அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள அந்நாட்டு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சீர்திருத்தங்களைச் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
</p><p>
கடந்த திங்கள்கிழமை நடந்த தெருப் போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் கருத்துக்களில் அவர், 'அதை வழங்குவதில்தான் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>பாதுகாப்புப் படையினர்&nbsp;</h2><p>

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய போராட்டமான இந்த போராட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியபோது, ​​அவர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eb65938-235d-4a71-b921-3615f9afc0fd/26-6a608c1d54427.webp' /></p><p>
</p><p>
60 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், மேலும் 118 காவல்துறைப் பணியாளர்கள் காயமடைந்ததாகவும் இந்திய பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூருவிலும் போராட்டங்கள் நடைபெற்தாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
</p><p>
மே மாதம் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்துள்ள நிலையில், 2024-ல் மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பிறகு அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக விளங்குகிறது.
</p><p>
இந்தியாவின் தேர்வு முறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைத்த தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. </p><p>

அவற்றுள், இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களை மீண்டும் தேர்வு எழுத நிர்பந்தித்த மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T09:23:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக தவறிய ஐ.தே.கவின் முக்கிய புள்ளி! வெளியிடப்பட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akila-not-appeared-before-the-bribery-commission-1784707492"></link>
            <id>https://ibctamil.com/article/akila-not-appeared-before-the-bribery-commission-1784707492</id>
            <summary type="text">
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் லஞ்ச ஆணைக்குழுவால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும் முன்னிலையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் லஞ்ச ஆணைக்குழுவால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும் முன்னிலையாக தவறியதாக வெளியான செய்திகளை முற்றாக மறுத்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது குறித்து விசாரிப்பதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்த நிலையில், லஞ்ச ஆணைக்குழுவிடமிருந்து தனது வீட்டிற்கு எந்த அழைப்பாணைக் கடிதமோ அல்லது தொலைபேசி அழைப்போ வரவில்லை என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தூய்மையான அரசியல்</h2><p>

ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை வரும்போதெல்லாம் அங்கு செல்லத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், சட்டத்திடமிருந்து ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a2b3e8-bd5b-4dde-a0bb-327412c1c4c9/26-6a607ba7b1f1c.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, வரலாறு நெடுகிலும் தான் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டிற்குச் சேவை செய்துள்ளதாகவும், தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T08:16:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகழ்வாராய்ச்சிக்குச் செங்கல்லும் கலவையுமா? பிரதியமைச்சர் அருண் என்ன சொல்கிறார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/issue-regarding-new-vihara-kanniya-hot-springs-1784705304"></link>
            <id>https://ibctamil.com/article/issue-regarding-new-vihara-kanniya-hot-springs-1784705304</id>
            <summary type="text">வழமைபோல கண்டபாட்டுக்கு அடிச்சிவிடும் அரசியலும், நீதிமன்றத்தை மிதித்த அடிக்கல்லும்
ஒரு செய்தியை சொல்கிறது 

“இங்கு புதிய கட்டுமானங்கள் எதுவும் இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வழமைபோல கண்டபாட்டுக்கு அடிச்சிவிடும் அரசியலும், நீதிமன்றத்தை மிதித்த அடிக்கல்லும்
ஒரு செய்தியை சொல்கிறது</p><p> 

“இங்கு புதிய கட்டுமானங்கள் எதுவும் இடம்பெறாது, அகழ்வுப் பணி மாத்திரமே இடம்பெறும்” - முகநூலில் அறிக்கை விட்டுத் திருகோணமலையாரை அடக்கிவைக்கப் பார்க்கிறாரா பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா?</p><p>
இன்று காலையிலேயே புத்த பிக்குகள் சகிதமாக, செங்கற்களையும் சிமெந்து கலவையையும் வைத்துப் பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது

பிரதி அமைச்சரே ஒரு கேள்வி

உலகத்தில் எந்த ஊரிலாவது அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் பூமிக்குக் கீழே தோண்டி, செங்கற்களை அடுக்கி அடிக்கல் நாட்டுவார்களா?</p><p> இது மக்களை முட்டாளாக்கும் அப்பட்டமான பொய்யா இல்லை உங்கள் JVP பாணி அடிச்சிவிடும் அரசியலா?
</p><p>
சமத்துவம் பேசும் தோழர்களே உங்கள் சட்டம், நீதி
எல்லாம் சாமான்யர்களுக்கு மட்டும்தானா?</p><p>

கன்னியாவில் கட்டுமானங்களை மேற்கொள்ளத் தடை விதித்து நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் போது, அதை வெளிப்படையாக மீறி அடிக்கல் நாட்டியது குற்றமில்லையா?
</p><p>
பசிக்குத் தேங்காய் களவெடுத்த சிறுமிக்கு உடனடி சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கும் இந்த நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பையே காலின்கீழ் போட்டு மிதித்து, மக்களின் பாரம்பரிய நிலத்தைக் களவாட அடிக்கல் நாட்டியவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த பிக்குகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி கைது செய்ய இந்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?
</p><p> 
தவிசாளர் பற்றியும், புஞ்சி நிலமே பற்றியும் பேசும் பிரதி அமைச்சரே அவர்கள் செய்தது தவறு என்றால், இப்போது உங்கள் ஆட்சியில் நடப்பதற்கு யார் பொறுப்பு? </p><p>அன்றைய பழைய கதைகளைப் பேசி இப்போது நடக்கும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தப் பார்க்கிறீர்களா?
</p><p>
இப்படித்தான் முத்து நகர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க, மக்கள் இன்று வீதியில் நிற்கிறார்கள். </p><p>அதே கதைதானா கன்னியாவுக்கும்? 

திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரத்தில் என்ன நடந்ததோ, அதே நாடகம்தானே இங்கும் அரங்கேறுகிறது?
</p><p>
நீதிமன்றத் தீர்ப்புகளை உங்கள் சுயநல அரசியல் தேவைகளுக்காகவும், பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்காகவும் மீறலாம் என்றால்.
நீதிமன்றங்கள் எதற்கு? </p><p>

ஏழை எளிய சாமான்யர்களை மட்டும் ஒடுக்கி வைக்கத்தானா?</p><p>

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி இன்று நாட்டப்பட்ட அந்த அடிக்கல்... இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி்செத்துவிட்டது என்பதற்கும், மாற்றம் என்று வந்தவர்களின் நிலைபாட்டையும் மிகச் சிறந்த உதாரணம் 

பிரதி அமைச்சரே</p><p> இப்படி ஒரு ஆட்சியில், யாருக்காக, எதற்காக இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பதிலை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் தன்னார்வளர்கள்.&nbsp;</p><br><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-in-sri-lanka-increase-by-rs-3000-today-1784704600"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-in-sri-lanka-increase-by-rs-3000-today-1784704600</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>அந்தவகையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>தங்கத்தின் விலை&nbsp;</h2><p>
</p><p>
நேற்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 அதிகரித்து ரூ.380,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6da8ff0-c4e0-4e18-9325-96da014d8b09/26-6a606e5a0a997.webp' /></p><p>தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.349,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கொழும்பில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-arrested-with-27-million-rupees-1784701989"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-arrested-with-27-million-rupees-1784701989</id>
            <summary type="text">கொழும்பு கொம்பனித்தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிக்கு அண்மையில், ரூ. 270 இலட்சம் பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொம்பனித்தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிக்கு அண்மையில், ரூ. 270 இலட்சம் பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>கொழும்பு மத்திய பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த இரு சந்தேக நபர்கள் அவர்கள் பயணித்த வாகனத்துடன் கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>270 லட்சங்களுடன் சந்தேக நபர்கள் கைது</h2><p>சந்தேகநபர்களிடமிருந்து கைப்பெற்றபட்ட பணத்திற்கு அவர்கள் சரியான காரணத்தை கூற தவறி உள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc597150-3a40-4054-ad6a-bb2b9ba76901/26-6a606d57bc5a5.webp' /></p><p>
இதனால், இந்தப் பணம் திட்டமிடப்பட்ட குற்றச்செயல், போதைப்பொருள் கடத்தல், ஆயுத வர்த்தகம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

கைது செய்யப்பட்ட நபர்கள், 59 மற்றும் 54 வயதுடையவர்கள் என்றும் சங்கமித்தா மாவத்தை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்&nbsp; என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;இதன்படி கைது செய்யபட்ட நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:17:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784700392"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784700392</id>
            <summary type="text">
கனடாவின் டொராண்டோவில் உள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலையில் (SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>
கனடாவின் டொராண்டோவில் உள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலையில் (SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சிறுவர்கள் பாலியல் சுரண்டல் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும், அவற்றை உபயோகிக்க முற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான வைத்தியர் திலான் திசாநாயக்க என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஆதாரங்கள்</h2><p>
</p><p>
மின்னணு சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் சுரண்டல் பொருட்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்நாட்டு காவல்துறையின் இணையவழி சிறுவர்கள் சுரண்டல் தடுப்புப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91410aa3-9ff8-4e28-a85d-2d40c066e55e/26-6a6069de30c35.webp' /></p><p>
</p><p>
இதன் தொடர்ச்சியாக, 2026 பெப்ரவரி மாதத்தில் வைத்தியசாலையிலும் அவரது தனிப்பட்ட இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவரது அலுவலக கணினி உட்பட பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவர் ஆற்றிய மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
இந்த நிலையில், திசாநாயக்க செவ்வாய்க்கிழமை டொராண்டோ நீதிமன்றத்தில் முற்படுத்தபடவிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e27bd86-78be-42b7-8133-346496f156ba/26-6a6069df16f57.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இந்தச் செய்தி குறித்து ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலை நிர்வாகம், காவல்துறையினரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கண்டித்துள்ளது.</p><p> 

இதேவேளை, நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள வைத்தியசாலை, இந்த விசாரணை குறித்துத் தெரிந்தவுடனேயே மருத்துவர் திசாநாயக்கவை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து விடுப்பில் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், மருத்துவர் திசாநாயக்கவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினர் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கவலைகள் இருந்தால் வைத்தியசாலையின் நோயாளி தொடர்புத் துறையை அணுகலாம் என்றும், இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T06:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை செலுத்த தயாரான அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-pay-off-1-billion-us-dollars-foreign-debt-1784702719"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-pay-off-1-billion-us-dollars-foreign-debt-1784702719</id>
            <summary type="text">இந்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் 1 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஆண்டும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தவணைகள் செலுத்தப்பட்டதாக அமைச்சு கூறியுள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில், இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் வரித் திணைக்களம் ஆகியவை தங்களின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை விட அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.</p><p></p><h2>பொருளாதார நிலைத்தன்மை</h2><p>
</p><p>
இது பொருளாதார நிலைத்தன்மைக்கு ஒரு வலுவான ஆதரவாக கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da030727-cf44-4f85-8a32-6815715c89e6/26-6a6068e3c9a10.webp' /></p><p>

இந்த நிலையில், ஆண்டின் இறுதிக் காலாண்டுகளிலும் வருவாய் இலக்குகளைத் தாண்டி அரசாங்க வருவாயை வலுப்படுத்த அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T06:53:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crop-insurance-of-potatoes-and-vegetables-1784695096"></link>
            <id>https://ibctamil.com/article/crop-insurance-of-potatoes-and-vegetables-1784695096</id>
            <summary type="text">பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை இந்த புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>ஆரம்பக் காப்பீட்டுத் தொகையில் 7% கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக்காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம் என்று சபை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள் </h2><p>இத்திட்டமானது, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கிரிஅல, பீட்ரூட்,முட்டைகோஸ், கரட், லீக்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பயறு/பீன்ஸ், மிளகாய் (கேப்சிகம்), தக்காளி, பாகற்காய், பூசணி உள்ளிட்ட விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்களை உள்ளடக்கும் எனச் சபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4165a809-cae4-4e25-a566-8fa14156b579/26-6a606877c539a.webp' /></p><p>இயற்கைப் பேரழிவுகள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள், பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T06:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vihara-construction-work-intensifies-kanyaya-area-1784700833"></link>
            <id>https://ibctamil.com/article/vihara-construction-work-intensifies-kanyaya-area-1784700833</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>

குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் தமிழ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவை மீறி&nbsp; கட்டுமானப் பணிகள்</h2><p>திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் காரியாலயத்தின் ஏற்பாட்டில், கன்னியா
வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் உள்ள தூபி பாதுகாக்கும் நடவடிக்கைக்கான
ஆரம்ப விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் W G M ஹேமந்த குமார,
திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுரங்க பெரேரா
மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர் .</p><p>நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ef5ce8-68c6-43e5-9e6b-3431f26bb5ff/26-6a6061fede286.webp' /></p><p>குறித்த தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருகோணமலை மேல்நீதிமன்றத்தின் HCT/Writ/590/2019 வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், அந்த உத்தரவை மீறி, புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் காணப்படும் பகுதியில் பெளத்த விகாரை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p></p><h2>விகாரைத்தொடர்பில் கேள்விகள்&nbsp;</h2><p>தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகின்ற நிலையில் தற்போது அங்கு எழுப்பப்படவுள்ள பௌத்த விகாரைத்தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/092db941-c9d9-4bdb-9be9-7b80256e3174/26-6a6061fdc97fb.webp' /></p><p>

இந்நிலையில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக, கன்னியா பகுதியின் வரலாற்று மற்றும் தொல்லியல் அடையாளங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன என்றும், தமிழர்களின் பாரம்பரிய மத மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் சில சமூக அமைப்புகளும் உள்ளூர் மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும், முன்னைய அரசுகளின் காலத்திலும் மக்கள் எதிர்ப்பும் சட்ட நடவடிக்கைகளும் காரணமாக தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டுமானம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் முன்னெடுக்கப்படுவது ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T06:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற உத்தரவுக்கமையவே செம்மணியின் அடுத்த கட்ட நடவடிக்கை: அரசாங்கம் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/semmani-grave-excavation-next-steps-in-accordance-1784698632"></link>
            <id>https://ibctamil.com/article/semmani-grave-excavation-next-steps-in-accordance-1784698632</id>
            <summary type="text">செம்மணி மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைக்குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய விசேட தூதுக்குழுவினரின் செம்மணி விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது என்றும் நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சர்வதேசத்தின் கண்காணிப்பு</h2><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், “செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e36c232-0bed-4e10-aeee-75fd144eaed8/26-6a605e9bdff36.webp' /></p><p> நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இதன் அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.</p><p>
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.” என கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T06:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் A9 வீதியில் வெடித்த மக்கள் போராட்டம் - இடையூறு விளைவித்த காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamils-demand-justice-over-chemmani-mass-graves-1784700434"></link>
            <id>https://ibctamil.com/article/tamils-demand-justice-over-chemmani-mass-graves-1784700434</id>
            <summary type="text"> யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செ...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி,
சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுலியை பார்வையிடுவதற்காக
வந்தனர்.
</p><p>
இதன்போது மயானத்துக்கு வெளியே, ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரது
அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d81ba2d-3fb5-4553-abbe-259813bb7178/26-6a6061959ac98.webp' /></p><p> எனவே எமது
பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.

தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான
கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.
</p><p>
கடந்தகால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினானுமே இந்த கொடூரம்
அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என்று தெரிந்தனர்.
</p><h2>&nbsp;ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு</h2><p>
போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக
மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31dbbe36-13dc-41c0-8a33-a7d8fe6dbbe8/26-6a606196762b3.webp' /></p><p>

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்
காவல்துறையினர்செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
</p><p>
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட
தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.</p><p> ஊடகவியலாளர்கள் அந்த குழுவினரிடம் கேள்வியெழுப்ப
முயற்சித்த வேளை அதற்கு இடமளிக்காது அவர்கள் சென்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T06:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு - முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bail-granted-to-former-navy-commander-1784699300"></link>
            <id>https://ibctamil.com/article/bail-granted-to-former-navy-commander-1784699300</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளார்.</p><p>இதன்படி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு&nbsp; இன்று கொழும்பு கோட்டை நீதவான்&nbsp;வசந்த அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>இரண்டு சரீரப் பிணை</h2><p>2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல்கள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d96144-eedd-42fa-9586-8780576025b5/26-6a605efdcc628.webp' /></p><p>இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><p>
 

அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்ந்து இடம்பெற்ற வழக்க விசாரணை தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை&nbsp; செல்ல கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன&nbsp;உத்தரவிட்டுள்ளார்.</p><p>
 

அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:58:02+00:00</updated>
        </entry>
    </feed>
