<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-31T16:18:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-respond-to-iranian-attacks-trump-1788189556"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-respond-to-iranian-attacks-trump-1788189556</id>
            <summary type="text">ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(31) தெரிவித்துள்ளார்.
</p><p>
"நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். பதிலடி கொடுக்கப்படும்," என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறினார்.</p><h2>&nbsp;தாக்குதல்களை முறியடித்த அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்பு</h2><p>ஈரானிலிருந்து வந்த பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு ஏவுகணை "குறிப்பிடத்தக்க எதையும் தாக்காது" என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அமெரிக்கப் படைகள் அதை வான்வெளியைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694fa969-580b-4383-b456-24bc3f0c4e40/26-6a95a030eda06.webp' /></p><p>

ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அஸ்ராக் விமானத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகவும், அதே நேரத்தில் யுஏஇ-யில் உள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகவும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
</p><p>
முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமான ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் வைப்பதைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை லராக் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறியது.</p><h2>ஈரான் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்</h2><p>
</p><p>
ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, தெஹ்ரானுக்கு எதிரான இரண்டு வார கால குண்டுவீச்சுத் தாக்குதலை அமெரிக்கா ஜூலை மாத இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்தது.அதன்பிறகு ஈரானியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda3e033-4823-48d5-b75e-4921b345460a/26-6a95a031d868f.webp' /></p><p>
மேலும், தெஹ்ரான் ஒரு சந்திப்பை விரும்புவதாகக் கூறி, ஒரு இராஜதந்திர முன்னேற்றம் குறித்து ட்ரம்ப் தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார். ஈரானியர்கள் "சந்திக்க மிகவும் விரும்புகிறார்கள்" என்று கூறிய அவர், "அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள் என்று நம்ப முடியுமா" என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;"பொருளாதாரப் பயங்கரவாதம்"&nbsp;</h2><p>தற்போதைய அமெரிக்கத் தடைகள் "கடுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன" என்றும் அவர் கூறினார். கடந்த வாரம், அமெரிக்கா 'ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d30141e-80b6-4ad8-80c9-a3ba8b5d9cd2/26-6a95a1734e032.webp' /></p><p> </p><p>இது, ஈரானின் முக்கிய பொருளாதார உயிர்நாடிகள் என்று வோஷிங்டன் விவரித்த அதன் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தங்கம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சொத்துத் துறைகளை இலக்காகக் கொண்டது. </p><p>தெஹ்ரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகவும், சமீபத்திய இந்தத் தடைகள் நடவடிக்கையை "பொருளாதாரப் பயங்கரவாதம்" என்றும் ஈரான் தெரிவித்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T15:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பிரதேசமொன்றில் கடும் வறட்சி : 778 குளங்கள் முற்றாக வற்றின]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-in-rajarata-778-tanks-dry-up-1788187422"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-in-rajarata-778-tanks-dry-up-1788187422</id>
            <summary type="text">ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருவதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (31) ஊடகங்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டுகளை விட கடுமையாகி வரும் இந்த வறட்சி, ரஜரட்ட மக்களின் வாழ்க்கையையும், சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது என்றார்.</p><h2>788 நீர்த்தேக்கங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன</h2><p>மாவட்டத்தில் உள்ள 2,410 சிறு நீர்ப்பாசன அமைப்புகளில், 788 நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக வறண்டுவிட்டன, அதே நேரத்தில் மற்ற 612 குளங்களில் நீர்மட்டம் 5% க்கும் அதிகமாக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/331271bd-f0d0-4a2c-b771-0cfa9b88912d/26-6a9597f426e95.webp' /></p><p>

இதற்கிடையில், மொத்த நீர் விநியோகத்தில் 75% க்கும் அதிகமானவை வெறும் 7 பெரிய குளங்களையே சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.</p><p></p><p>

</p><h2>குடிநீருக்கும் பெரும் திண்டாட்டம்&nbsp;</h2><p>நீர் ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துவிட்டதால், குடிநீர் கிடைப்பது கடினமாகியுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் வனவிலங்குகளின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601567cc-b580-43c9-b041-94ac8ea53dc7/26-6a9597f4cf6cb.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T15:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460</id>
            <summary type="text">நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.


 அந்த வகையில் சிட்னியில் வச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.
</p><p>

 அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவுகள்</h2><p>அவுஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. 



எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961fbdbe-6a40-4a49-9f71-fce8285d5ebb/26-6a9589733447e.webp' /></p><p> </p><p>அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.</p><p>


இதேவேளை நோபாள வெள்ள பேரழிவில் சிக்கி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய கைதி பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/escaped-prisoner-in-jaffna-arrested-1788182901"></link>
            <id>https://ibctamil.com/article/escaped-prisoner-in-jaffna-arrested-1788182901</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
</p><p>
</p><h2>யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி</h2><p>அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி, சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b5e4c63-114d-4b41-b5fd-394b70cf96da/26-6a9584cdce75d.webp' /></p><p>
</p><p>
கைதி தப்பிச் சென்ற நிலையில் ,சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த நிலையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள்
மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>பிறிதொரு வழக்கு தாக்கல்</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், சிறைக்
காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு
வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe290ef-5b54-4b8d-ae66-1905f960f19c/26-6a9584ce8120a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் யாழ் - கண்டி அணிகள் சிறப்பு ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-tennis-premier-league-series-1788183101"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-tennis-premier-league-series-1788183101</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்னிஸ் வளாகத்தில் நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.</p><p>

இந்த நகரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முறை பிராஞ்சைஸ் டென்னிஸ் தொடரில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வெலிகம, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. </p><p>இலங்கையின் முன்னணி உள்ளூர் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் இந்த தொடரில் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>நிலையான வர்த்தக தளம்</h2><p>

இலங்கையில் போட்டித் தரமிக்க டென்னிஸின் தரத்தை உயர்த்துவதோடு, விளையாட்டின் நீண்டகால வளர்ச்சிக்காக அடிமட்ட மற்றும் உயர்திறன் பயிற்சி திட்டங்களில் மீள்முதலீடு செய்யக்கூடிய நிலையான வர்த்தக தளத்தை உருவாக்கும் நோக்கத்திலேயே SLTPL அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d091bbe4-cfd9-4034-b29d-58d16156966f/26-6a9582aa48237.webp' /></p><p>
</p><p>
வீரர்கள் போட்டித்தன்மை வாய்ந்த ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் தத்தமது பிராஞ்சைஸ் அணிகளில் இணைக்கப்பட்டனர். எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுநிலைப் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் முதல் இடம் முதல் எட்டாவது இடம் வரை வகைப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. </p><p>குழு A-யில் கண்டி கிங்ஸ் 122 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது. குழு B-யில் யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. </p><p>இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடக்க SLTPL தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், கண்டி கிங்ஸ், யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸை வீழ்த்தி, இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் முதல் சாம்பியன் அணியாக மகுடம் சூடியது.</p><p></p><h2>யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ்</h2><p> யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணி, போட்டியின் ஐந்து தனிநபர் விருதுகளில் மூன்றை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc63eda4-eebe-4352-88d0-35ff4fd5e1d9/26-6a95823ed48f7.webp' /></p><p> </p><p>வில்சன் நியாயமான விளையாட்டு (Fair Play) விருது, ஆண்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர்&nbsp; விருது, சிறுவர்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர்&nbsp; விருது&nbsp;என்பவற்றை பெற்றுக்கொண்டது.</p><p> இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 6.5 மில்லியன் இலங்கை ரூபாய் ஆகும். </p><p>சாம்பியன் பட்டம் வென்ற கண்டி கிங்ஸ் அணிக்கு 2.5 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. </p><p>இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
</p><p>
முதன்முறையாக நடைபெற்ற SLTPL தொடரின் வெற்றிகரமான நிறைவு, இலங்கை டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p> இந்த தொடர் நாட்டின் வளர்ந்து வரும் திறமையான வீரர்களை வெளிக்கொணர்ந்ததுடன், சர்வதேச பங்கேற்பையும் ஈர்த்து, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான நிலையான பிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டி அமைப்பிற்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T13:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானிலிருந்து வந்த போதைப்பொருள் : சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779</id>
            <summary type="text">கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெமட்டகொட பிரதேசத்தைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.</p><p>&nbsp;கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை</h2><p>கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd6eebb-5267-4c3a-8b2d-c4d53b8639fa/26-6a957d43bbad2.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபயவின் உறக்கத்தை கூட திட்டமிட்ட ஞானாக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144"></link>
            <id>https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்ததாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார்.</p><p> </p><p></p><h2>உரிமைச் சொத்து&nbsp;</h2><p>அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது.</p><p>

அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். 

எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e191e992-6025-434d-bf78-008d3e493596/26-6a955ef62f825.webp' /></p><p>நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ஞானக்கா.

அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா ? </p><p>ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள். இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>பெரும்பாலான கட்டிடங்கள்&nbsp;</h2><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.</p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22ed006-4b38-4e19-b085-d289d14f3532/26-6a955ef6e0159.webp' /></p><p>

ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது. நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.</p><p>மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது.</p><p> இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது.</p><p></p><h2>கோடிக்கணக்கான சொத்து</h2><p>கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது.</p><p> அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608f8d6c-c38a-4bf6-b11e-e444cc71bf64/26-6a955ef792aec.webp' /></p><p>அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது.</p><p> அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IT-v1W9Laic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><h2>லராக்தீவு மீது அமெரிக்கா தாக்குதல்</h2><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹோர்முஸ் நீரிணையின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867aaf0b-2f99-4b9c-b06d-cc5c43dc0048/26-6a95724c48b91.webp' /></p><p>


கெஷ்ம் ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகமான IRNA, லராக் தீவில் இரவு நேரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்த ஈரான்</h2><p>



இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b641b03d-66fc-45fd-bda5-660f623fc437/26-6a95724b95cc3.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்: என்.பி.பி நடத்திய உறுப்பினர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-house-in-jaffna-national-people-power-1788179974"></link>
            <id>https://ibctamil.com/article/attack-house-in-jaffna-national-people-power-1788179974</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு&nbsp;கருவிகளையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் நேற்று முன்தினம் சேதப்படுத்தியது. </p><p>

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.</p><p></p><h2>பதவி விலகல் </h2><p>கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதித்தனர்&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0134901c-6b7a-4fdc-b3e7-74c2e5de2d53/26-6a9578382b2ec.webp' /></p><p>இந்நிலையில் தற்போது&nbsp; குறித்த உறுப்பினர் தனது உள்ளூராட்சி உறுப்பினர் பதவி விலகல் செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க பிணையில் செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் வி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


இன்று (31) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
 

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டம் ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 

அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><h2>&nbsp;மூன்றாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-hot-weather-conditions-1788176879"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-hot-weather-conditions-1788176879</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் நாளை (01.08.2026) முதல் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் நாளை (01.08.2026) முதல் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், பகலின் வெப்பமான நேரத்தில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் நாளைய வானிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,</p><p></p><h2>வெப்பம் குறித்த வானிலை</h2><p>01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9a4749-9a28-4b83-b05b-30e60e8ccd26/26-6a9572165906c.webp' /></p><p>ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>அதற்கிணங்க நாளை (01ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் கல்பிட்டி, தலாவ, சிங்காரகம, கல்கடவல, நாச்சதுவ, படிகாரமடுவ, கோமரன்கல்ல மற்றும் வெருகல் ஆகிய வெப்பம் அதிகமாக இருக்கும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகிழக்குக் கோயில்களில் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தக் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/call-to-protect-north-east-temple-traditions-1788177838"></link>
            <id>https://ibctamil.com/article/call-to-protect-north-east-temple-traditions-1788177838</id>
            <summary type="text">வடகிழக்கு ஆலயங்களில் இடம்பெறும் கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து மரபுவழிப் பண்பாடுகளையும் ஆகம நெறிகளையும் பாதுகாத்தல் தொடர்பான கண்டனம் வெளியிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு ஆலயங்களில் இடம்பெறும் கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து மரபுவழிப் பண்பாடுகளையும் ஆகம நெறிகளையும் பாதுகாத்தல் தொடர்பான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;&nbsp;வடகிழக்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள பல ஆலயங்களில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் சில விரும்பத்தகாத செயற்பாடுகளும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு முரணான கலாசாரச் சீர்கேடுகளும் ஒட்டுமொத்த ஆன்மீக சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளன.</p><p>எமது தொன்மையான சைவ, தமிழ் மரபுகளையும் ஆகம விதிகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய ஆலயங்கள், பக்தி, ஒழுக்கம், பண்பாடு மற்றும் ஆன்மீகத் தூய்மையின் மையங்களாகத் திகழ வேண்டியவை. ஆனால், சில ஆலயங்களில் அண்மைக்காலமாக பின்வரும் விரும்பத்தகாத நடைமுறைகள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியதாகும்.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b>ஆலயங்களில் காணப்படும் பிரதான கலாசாரச் சீர்கேடுகள்</b></h5><p>
</p><p>
</p><p>1. களியாட்டங்களும் தேவையற்ற ஆடற் பாடல்களும்
ஆன்மீகத் தூய்மையுடன் பேணப்பட வேண்டிய ஆலய வளாகங்களில், பக்தி உணர்வுக்கு முரணான களியாட்டங்களையும் தேவையற்ற ஆடற் பாடல்களையும் இடம்பெறச் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>2. நவீன DJ இசை மரபுகளைப் புகுத்துதல்
ஆலயத் திருவிழாக்களில் நவீன DJ போன்ற இசை முறைகளைப் புகுத்துவதன் மூலம், எமது பாரம்பரிய இசை, கலை மற்றும் பக்திச் சூழல் சிதைக்கப்படுவது கவலைக்குரியது.</p><p>3. அதிக ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவு
அளவுக்கு அதிகமான ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதும், அதிகப்படியான வானவேடிக்கைகளை நிகழ்த்துவதும் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இவை பொறுப்புடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.</p><p>4. மரபுக்கும் பாதுகாப்புக்கும் முரணான செயற்பாடுகள்
மரபுவழிப் பண்பாட்டுக்கு முரணானதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதுமான வெடிகொளுத்துதல் போன்ற செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>5. பாரம்பரியக் கலைகளுக்குப் பதிலாக DJ இசை நிகழ்வுகள்
தேவாரம், திருவாசகம், திருமுறைப் பாடல்கள், கூத்து, வில்லிசை போன்ற எமது ஆன்மீக மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கு உரிய கலைவடிவங்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை புறக்கணித்து ‘DJ இசை விருந்து’ போன்ற நிகழ்வுகளைத் திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு சில ஆலயப் பரிபாலன சபையினர் உடந்தையாக இருப்பதும் வருந்தத்தக்கது.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b>ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை</b></h5><p>&nbsp;வடகிழக்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், பரிபாலன சபையினர், உபகாரர்கள், கிராம மக்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சமய மன்றங்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய கலாசாரச் சீர்கேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>
</p><p>ஆலயங்கள் வெறுமனே திருவிழாக்கள் நடைபெறும் இடங்களல்ல. அவை எமது சமயம், பண்பாடு, கலை, ஒழுக்கம் மற்றும் தலைமுறைகளின் ஆன்மீக வாழ்வை வழிநடத்தும் புனித நிறுவனங்களாகும். எனவே, அவற்றின் தனித்துவத்தையும் மரபையும் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b>ஆக்கபூர்வமான மாற்று வழிகள்
</b></h5><p>ஆலயத் திருவிழாக்களில் வெடிகள், ஆடம்பரமான DJ நிகழ்வுகள் மற்றும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் பெருந்தொகையான நிதியை, சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் பின்வரும் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்:</p><ul><li>அறநெறிப் பாடசாலைகளின் பௌதீக மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்துதல்.</li><li>இந்து பண்பாட்டு நிதிக்கு பங்களிப்பு செய்தல்.</li><li>பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.</li><li>பாரம்பரிய சைவக் கலைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை ஊக்குவித்தல்.
</li><li>ஆலயங்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளை வலுப்படுத்துதல்.</li></ul><p>இத்தகைய ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களின் மூலமே எமது ஆலயங்களின் புனிதத்தையும், பக்திபூர்வமான வழிபாட்டு முறைகளையும், சைவத் தமிழ் மரபுகளையும் எதிர்கால சந்ததியினரிடம் பாதுகாப்பாகக் கையளிக்க முடியும்.</p><p>எனவே, ஆலயங்களின் புனிதத்தையும் மரபையும் காப்போம்; கலாசாரச் சீர்கேடுகளைத் தவிர்ப்போம்; எமது எதிர்காலத் தலைமுறைக்கு பண்பாட்டு மரபுச் செல்வத்தைப் பாதுகாத்து வழங்குவோம்.
</p><p></p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோதுமை மா விலை உயர்விற்கான காரணத்தை வெளியிட்டார் பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/price-of-flour-increased-due-to-war-situation-1788175475"></link>
            <id>https://ibctamil.com/article/price-of-flour-increased-due-to-war-situation-1788175475</id>
            <summary type="text">உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்தார்.</p><p>

“உலகைப் பாதித்துள்ள போர்ச் சூழலுக்குள், பொருட்களின் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் மூலம் சிறப்பு விலை உயர்வு அல்லது கட்டண உயர்வு ஏற்பட்டுள்ள ஒரு சூழல் உருவாகியுள்ளது.</p><h2>ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள்</h2><p>அவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. பொதுமக்களின் துன்பத்தைக் குறைப்பதற்காக, அரசாங்கம் என்ற முறையில், அமைச்சகங்கள், திணைக்களங்கள் மீது ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b368fba1-04c4-4b92-909f-ec3087a68cf7/26-6a956859a246a.webp' /></p><p>
</p><p>
மொனராகல பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குவதற்காக நடைபெற்ற விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன இவ்வாறு கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிச்சிறையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ishara-sevvanthi-s-situation-in-prison-1788173078"></link>
            <id>https://ibctamil.com/article/ishara-sevvanthi-s-situation-in-prison-1788173078</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அவர் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p></p><h2>தீவிர கண்காணிப்பின் கீழ் இஷாரா</h2><p>வழமையாக கைதிகள் காலை 6 மணியளவில் சிறைக் கூண்டுகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 4 மணியளவில் மீண்டும் அறைகளுக்குள் அனுப்பப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8bfb27-8aa0-4d1b-b701-460bae144d7e/26-6a9569481342a.webp' /></p><p>
</p><p>
எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு இந்த வழமையான நடைமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இஷாரா காலை 6 மணியளவில் அவர் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங்களில் மீண்டும் தனிச் சிறையில் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மதிய உணவு வழங்குவதற்காகவும் சுமார் 15 நிமிடங்களுக்கு மாத்திரம் அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் மாலை 4 மணியளவில் இரவு உணவுக்காக மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், அந்த நேரத்திலும் சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட கண்காணிப்பின் கீழ் ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் எந்தவொரு விசேட சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[170 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த அரிய தாவரம் இலங்கையில் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-rare-lankan-plant-that-been-miss-for-170years-1788168120"></link>
            <id>https://ibctamil.com/article/a-rare-lankan-plant-that-been-miss-for-170years-1788168120</id>
            <summary type="text">இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பகுதியில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
</p><p>
சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்தக் கண்டுபிடிப்பை ஆவணப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் , இண்டியன்தஸ் விர்கேட்டஸ் (Indianthus virgatus) என்ற அந்தத் தாவரம் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக மிக அருகிவரும் இனமாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் காடுகளில் அது அநேகமாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டதாக எழுதியுள்ளனர்.
</p><p>
சிறிய வெள்ளைப் பூக்களைக் கொண்ட ஐ. விர்கேட்டஸ், ஈரமான வெப்பமண்டலக் காடுகளின் அடர்வனப்பகுதியில் வளர்கிறது.</p><p></p><h2>சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு</h2><p> </p><p>இது இந்தியாவில் சுமார் 150 இடங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது, ஆனால் இலங்கையில் இந்தத் தாவரம் இருப்பதற்கான சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு, 1855-ல் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே கிடைக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b693e9e-143c-4435-b6c4-f5f476a6eb5a/26-6a95646ad0e5d.webp' /></p><p>

இந்தியா மற்றும் இலங்கை முழுவதிலுமுள்ள வரலாற்றுப் பதிவுகளையும், சாத்தியமான வாழ்விடங்களைக் கண்டறிவதற்கான முன்கணிப்பு வாழ்விட மாதிரியாக்கத்தையும் ஒருங்கிணைத்து, ஆராய்ச்சியாளர்கள் தென்மேற்கு இலங்கையின் சபரகமுவ மாகாணத்தில் அந்தத் தாவரத்தைத் தேடினர்.</p><p>

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆய்வுக் குழு 70 முதல் 100 வரையிலான ஐ. விர்கேட்டஸ் (I. virgatus) உயிரினங்களின் ஒரு சிறிய கூட்டத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்தது. </p><p>இந்த உயிரினம் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானது என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த ஒரு பகுதியில் இந்தக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

இண்டியன்தஸ் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமான ஐ. விர்கேட்டஸ் , தனித்துவமான பரிணாம மற்றும் உயிர் புவியியல் சூழலைக் கொண்டுள்ளது என்று, இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், இந்தியாவின் மணிப்பால் உயர் கல்வி அகாடமியின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் உதவிப் பேராசிரியருமான விவேக் பாண்டி கூறினார்.
</p><p>
இந்தியத் துணைக்கண்டம் மற்றும் இலங்கை முழுவதும் இந்த இனம் துண்டிக்கப்பட்டுக் காணப்படுகிறது, அதாவது இதன் இனக்கூட்டங்கள் ஒரு பெரிய புவியியல் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளன என்று பாண்டி&nbsp; தெரிவித்தார்.</p><p></p><h2>சுவாரஸ்யமான கேள்வி</h2><p> </p><p>இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறது என்றும் அவர் மேலும் கூறினார்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a75f9035-304e-42ee-ba33-cea57bcae8de/26-6a95646bc3d82.webp' /></p><p> </p><p>அதாவது, ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இருந்த இந்தத் தாவரத்தின் இனக்கூட்டத்தை ஏதேனும் ஒரு பண்டைய புவியியல் நிகழ்வு இரண்டு தனித்தனி குழுக்களாகப் பிரித்ததா; அல்லது இந்த இனம் பின்னர் நீண்ட தூரப் பரவல் மூலம் இலங்கையை அடைந்ததா?
</p><p>
இலங்கையின் காடுகளில் 170 ஆண்டுகளாக ஐ. விர்கேட்டஸ் இனம் பதிவு செய்யப்படாமல் இருந்தபோதிலும் , பல தசாப்தங்களாக வனப்பகுதிகளின் பாதுகாப்பான இடங்களில் இந்த இனம் கண்டறியப்படாமல் உயிர் பிழைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதாக பாண்டி கூறினார்.
</p><p>
பாண்டியின் கூற்றுப்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டபோதிலும், நிலையான நுண் தட்பவெப்ப நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய, ஈரமான, நிழலான காடுகளின் சிறிய எச்சங்கள், பொதுவாக நீரோடைகள் மற்றும் பாதுகாப்பான சரிவுகளைச் சுற்றி, இந்தப் பகுதிகளில் அடங்கியுள்ளன.</p><p>

" ஐ. விர்கேட்டஸின் மறு கண்டுபிடிப்பு, சிறியதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றும் இந்தக் காட்டு எச்சங்கள், அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது," என்று பாண்டி கூறினார்.</p><p></p><h2>நுண் புகலிடங்களைப் பாதுகாத்தல்</h2><p>இலங்கையில் இத்தாவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான வாழ்விடங்கள் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களால் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த நுண் புகலிடங்களைப் பாதுகாப்பது அவசரமானது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.</p><p> மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இத்தாவரக் கூட்டங்களும் வாழ்விடம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்று பாண்டி கூறினார்.</p><p>

இலங்கையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இந்தத் தாவரக் கூட்டத்தைத் திறம்படப் பாதுகாப்பதற்கு, உடனடி உள்ளூர் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்களில் இத்தாவரத்தின் சேகரிப்புகளை நிறுவுவதற்கான முயற்சிகள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும் என அந்த ஆய்வின் ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.
</p><p>
ஐ. விர்கேட்டஸின் பாதுகாப்பு நிலையை ஐயூசிஎன் செம்பட்டியலுக்காகவும் மதிப்பிட வேண்டும் என்றும், அப்போதுதான் அதன் பாதுகாப்பை தேசிய மற்றும் பிராந்திய பல்லுயிர் செயல் திட்டங்களில் ஒருங்கிணைக்க முடியும் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-non-govt-organizations-register-1788172841"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-non-govt-organizations-register-1788172841</id>
            <summary type="text">அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு
எதிராக&amp;nbsp;கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு
எதிராக&nbsp;கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இன்றைய தினம் (31) காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.</p><p>அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>மகஜர்கள் கையளிப்பு</h2><p>இதன்போது&nbsp;அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6651e3-f55b-4824-91ca-ef9f342f1366/26-6a9561f71c242.webp' /></p><p>போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>காவல்துறையின் விசேட நடவடிக்கை&nbsp;</h2><p>மன்னார், இலுப்பைக்கடவை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572323e-f157-4cd1-ae2a-0b987e9efc1c/26-6a9557d8da86f.webp' /></p><p>
</p><p>


 இஷாரா செவ்வந்தி துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசம்பர் முதல் இலங்கைக்கு வரும் புதிய விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372"></link>
            <id>https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372</id>
            <summary type="text">எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனமான S7 ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்படும் இந்த விமானங்கள் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப்போகும் வசதி</h2><p>&nbsp; இந்த புதிய விமான இணைப்பு மூலம் இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவ, பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களை எளிதாக அடைய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd68c353-e207-4a7a-a982-97cbd6df5c78/26-6a955fee9eff8.webp' /></p><p> இந்த விமானங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோவோசிபிர்ஸ்கில் உள்ள டோல்மாச்சேவோ விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கும் புறப்படும் விமானங்கள், அதே நாளில் பிற்பகல் 1.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.</p><p></p><p> </p><h2>பயணத்திற்கான மொத்த நேரம்</h2><p>கொழும்பிலிருந்து மீண்டும் விமானம் புறப்படுவது அதே நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும், மேலும் அந்த விமானங்கள் அடுத்த நாள் அதிகாலை 2.15 மணியளவில் நோவோசிபிர்ஸ்கை செ்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801b7609-a733-4250-8885-6f515128b0df/26-6a955fedec304.webp' /></p><p>
</p><p>





இந்த பயணத்தின் போது இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் தொழில்நுட்ப எரிபொருள் நிரப்புதல் நடைபெறும், இதற்காக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க வேண்டிய அவசியமில்லை. இந்த பயணத்திற்கான மொத்த நேரம் சுமார் 10 மணிநேரம் ஆகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-vehicles-collided-in-a-horrific-accident-1788172793"></link>
            <id>https://ibctamil.com/article/two-vehicles-collided-in-a-horrific-accident-1788172793</id>
            <summary type="text">மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.&amp;nbsp;குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது. இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>இந்த வாகன விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இரு வாகனங்களின் கோர விபத்து</h2><p>அரநாயக்க பகுதியில் இருந்து மாவனெல்லை நகரை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்லை நகரிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f3963e-d1f8-417b-bc0e-c6be12ebcc4d/26-6a955de793bb0.webp' /></p><p>
விபத்தில் தொடர்புடைய டிப்பர் லொறி, உரிய அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

விபத்தில் வேனில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371"></link>
            <id>https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371</id>
            <summary type="text">அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த வியடத்தினை தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாயால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>&nbsp;நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்</h2><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையைத் திருத்தியமைத்து ஒக்டேன் 92 ரக பெட்ரோலை மேலும் 15 ரூபாயால் குறைத்துள்ளது. </p><p>உண்மையில் இந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் தந்திரமான முறையிலேயே இந்த வேலையைச் செய்கிறது. ஏனெனில் ஒரு புறம் பால் மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்திக்கொண்டு, மறுபுறம் எரிபொருள் விலையில் 15 ரூபாயைக் குறைக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c0278d7-c68c-446f-9856-676b570cc683/26-6a955742714e2.webp' /></p><p>ஆனால் முச்சக்கர வண்டி சேவைக்கான கட்டணங்கள் குறித்துக் கூறுவதானால், இந்த முறைப்படுத்தலுக்குரிய அனைத்து விலைகளையும் குறிப்பிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.</p><p> தற்போது அமைச்சு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பியுள்ளது.</p><p> எனவே சட்டமா அதிபரே இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு அனுமதி பெறப்பட்டு கையொப்பமிட்ட பின்னரே இது சட்டமாக மாறும்.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு</h2><p>

இப்போது எம்மால் வழக்கம்போல மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியாது.</p><p>ஏனெனில் கடந்த காலத்தில் நாங்கள் கோரிக்கை விடுத்தபோது, அதன் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டார், இனி இந்த விலை குறித்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனேயே இது பற்றிப் பேசுமாறு கூறினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39590ecd-1f20-4228-bd70-2171c4c4c9fc/26-6a95574321ffe.webp' /></p><p>தற்போது நாங்கள் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p><p> 

எனவே, சட்டபூர்வமான விலை வரும் வரை பழைய விலையையே நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற வரம்பிற்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது.</p><p> ஆனால் பொது வீதிகளில் சாதாரண முச்சக்கர வண்டி பயன்பாட்டில் 110, 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணம் அறவிடப்படுகிறது. </p><p>இன்னும் இது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைமையின் கீழ் மிக விரைவில் புதிய விலைகள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786"></link>
            <id>https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், அங்கு பறந்துகொண்டிருந்த ட்ரோன் கேமராவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், அங்கு பறந்துகொண்டிருந்த ட்ரோன் கேமராவில் தற்செயலாக பதிவாகியுள்ளது.
</p><p>
சீன புகைப்படக் கலைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளில், கடல் மட்டத்திலிருந்து 7,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலைச் சிகரத்திற்கு அருகில், பாரிய பாறைகள் மற்றும் பனிப்பாறைத் துண்டுகள் மலையின் சரிவிலிருந்து இடிந்து விழும் காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பெரும் தூசிப் படலம் மலைப் பகுதி முழுவதும் பரவுவதையும் அந்த ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன.&nbsp;</p><p></p><h2>நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பனி, பாறைகள், சேறு மற்றும் பெருமளவான குப்பைகள் சுமார் 1,200 மீற்றர் கீழே அமைந்துள்ள பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdbcb9fd-edc9-472c-a056-f7d34486f077/26-6a95570b36872.webp' /></p><p> இதன் காரணமாக தான் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்தப் பேரழிவில் நேபாளத்தில் 903 பேரும் திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நேபாளத்தில் மாத்திரம் மேலும் 4,500க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நேபாளத்தை உலுக்கிய பாரிய இயற்கைப் பேரழிவு

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரழிவை” எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://youtu.be/qEic2ZU6taM" target="_blank"><b>காணொளியை காண இங்கே க்ளிக் செய்யவும்</b></a></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:10+00:00</updated>
        </entry>
    </feed>
