<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T23:10:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் முறிவு விளிம்பிற்குக் சென்றுள்ள அமெரிக்க இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-under-severe-pressure-middle-east-1789513153"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-under-severe-pressure-middle-east-1789513153</id>
            <summary type="text">மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைத் திறன் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.</p><p>பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து நேரடி அறிவு கொண்டதாகக் கூறப்படும் இரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க இராணுவத்தின் போர்த் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியான அழுத்தம் நீடித்தால், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் அமெரிக்காவின் திறன் எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகளில் ஒருவர் எச்சரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.</p><p></p><h2>இராணுவத் தளவாடங்களில் நெருக்கடி</h2><p>அமெரிக்க இராணுவம் எதிர்கொள்வதாகக் கூறப்படும் முக்கிய சவால்களில், வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருதல், இராணுவ வீரர்கள் உயிரிழத்தல் மற்றும் காயமடைதல்,&nbsp; இராணுவ உபகரணங்களின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்,&nbsp; வீரர்களை நீண்டகாலம் ஓய்வின்றி பணியில் வைத்திருக்க வேண்டிய நிலை,&nbsp; விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள்

ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081a4957-f6f2-41e7-80a4-09234a02a0e2/26-6aa9cdc33e4aa.webp' /></p><p>

இந்த நிலை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரவு-செலவுத் திட்டத்திலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்க இராணுவத்தின் தயார்நிலை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p>
மேலும், ட்ரம்ப் நிர்வாகம் ஈரானின் உண்மையான இராணுவ திறனை போதுமான அளவில் மதிப்பிடத் தவறியதாகவும், இந்த மோதலுக்காக வொஷிங்டனிடம் போதுமான திட்டமிடல் இருக்கவில்லை என்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவின் இடைகால தேர்தலுக்கு முன்னதாக வொஷிங்டனுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மதிப்பிட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">HATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T22:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பாரிய சரிவை ஏற்படுத்திய சர்வதேச மாணவர்களுக்கான CAS வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/restriction-on-cas-for-international-students-uk-1789504636"></link>
            <id>https://ibctamil.com/article/restriction-on-cas-for-international-students-uk-1789504636</id>
            <summary type="text">பிரித்தானியாவில் 2026 செப்டம்பர் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான Confirmation of Acceptance for Studies (CAS) வழங்கல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் 2026 செப்டம்பர் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான Confirmation of Acceptance for Studies (CAS) வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 வீதம் குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
பிரித்தானிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் மாணவர் இணக்கத் தளமான Enroly வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது CAS வழங்கல் 26.9 வீதமும், சர்வதேச மாணவர் சேர்க்கை ஏற்றுக்கொள்ளல்கள் 22.1 வீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கடுமையான வீழ்ச்சி</h2><p>

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் நாடு, பிராந்தியம் மற்றும் கல்வித்துறை அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக Enroly தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b9251db-48e9-47a5-a666-3aa926b5b7ee/26-6aa9ac7e22728.webp' /></p><p> </p><p>சில நாடுகளில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், ஏனைய சில முக்கிய சந்தைகளில் கடுமையான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
</p><p>
2026 செப்டம்பர் கல்வியாண்டுக்கான முழுமையான CAS வழங்கல் கடந்த ஆண்டை விட சுமார் 28 வீதம் குறையும் என Enroly கணித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
இலங்கை மாணவர்களுக்கான CAS வழங்கல்</h2><p>பிரிட்டனின் முக்கிய சர்வதேச மாணவர் சந்தைகளில், பாகிஸ்தான் மாணவர்களுக்கான CAS வழங்கலில் மிகப் பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது 57.9 வீதம் குறைந்துள்ளது.</p><p></p><p>அதனைத் தொடர்ந்து நைஜீரியா – 37.8% சரிவு,&nbsp; கானா – 36.4% சரிவு,&nbsp; இலங்கை – 36.3% சரிவு,&nbsp; பங்களாதேஷ் – 30.2% சரிவு,&nbsp; இந்தியா – 24.9% சரிவு

என தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) அறிமுகப்படுத்திய கடுமையான இணக்க விதிமுறைகள் காரணமாக இருப்பதாக Enroly தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், சில பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இந்த நாடுகளில் இருந்து மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

சர்வதேச மாணவர்களுக்கான விசா நிராகரிப்பு விகிதம் முக்கிய மாணவர் அனுப்பும் நாடுகளில் அதிகரித்துள்ள சூழலிலேயே இந்த CAS சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T20:37:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boris-johnson-escapes-russian-drone-attack-1789502959"></link>
            <id>https://ibctamil.com/article/boris-johnson-escapes-russian-drone-attack-1789502959</id>
            <summary type="text">முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.

கடந்த ஞாயிற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கீவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு போரிஸ் ஜான்சன் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

போலந்து எல்லைக்கு அருகிலுள்ள யஹொடின் பகுதியில், ஜான்சன் பயணித்த தொடருந்துக்கு பின்னால் சென்ற மற்றொரு பயணிகள் தொடருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கிரெம்ளின் பேச்சாளர்</h2><p>
</p><p>இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேசிய கிரெம்ளின் பேச்சாளர், “இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பல்ல என்று மறுக்கவில்லை. அதேவேளை, ரஷ்யப் படைகள் உக்ரைன் முழுவதும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4e314c-aeda-4654-81ba-9b2c22000402/26-6aa9a5f1233a0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக சமூக வலைத்தளமான X இல் போரிஸ் ஜான்சன், “போலந்து எல்லையில் நின்றுகொண்டிருந்த உக்ரைனிய தொடருந்து இன்ஜினை தகர்க்க புடினைத் தூண்டிய அந்த சிந்தனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கீவிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் திரும்பிச் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்படும் தொடருந்து பாதையே இது என தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், இந்தச் சம்பவத்தால் போரிஸ் ஜான்சன் வெளியேற்றப்படவோ அல்லது அவரது பயணம் தாமதமடையவோ இல்லை.
</p><p>
ஐரோப்பிய அதிகாரிகள் பயணித்ததாகக் கூறப்படும் எந்தவொரு தொடருந்தும் இந்தத் தாக்குதலில் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T20:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885</id>
            <summary type="text">கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அதிகாரிகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து குறித்த தரப்பினர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p> </p><p>அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கட்டார், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள்</h2><p>மேலும், ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியிருந்தாலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறாது என்று பங்கேற்பாளர்களிடம் CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3bdce3-03a9-450e-9089-fe2e398504dd/26-6aa999ef9f12f.webp' /></p><p>மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்தும் அவர் மாநாட்டில் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T19:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244bf37d-9f61-4e36-ab67-efaec71b7d9d/26-6aa981e9360b7.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T18:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் சைபர் தாக்குதல்! உளவுத்திட்ட நகர்வு குறித்து அமெரிக்கா - பிரித்தானியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804"></link>
            <id>https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804</id>
            <summary type="text">ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து உளவு பார்க்க 'ஸ்பைவேர்' (Spyware) எனப்படும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p>பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையின்படி, </p><p>“ஈரான் அரசு ஆதரவு பெற்ற சைபர் தாக்குதல்தாரர்கள் "CHOSEN BRICK" எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>திருடப்பட்ட&nbsp;மின்னஞ்சல்கள்</h2><p>WhatsApp மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறிப்பிட்ட நபர்களை ஏமாற்றித் தாக்கும் 'ஸ்பியர்-ஃபிஷிங்' (Spear-phishing) பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களின் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் இதர முக்கியமான இரகசியத் தகவல்களை இக்குழுவினர் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32310355-c360-43ee-863d-e8f5853a4c01/26-6aa97bfdd906e.webp' /></p><p>பிரித்தானியா உட்பட உலகம் முழுவதும் வாழும், ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதிருப்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே இந்த உளவுத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.</p><p>ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகத் கருதப்படும் தனிநபர்களை ஒடுக்குவதற்கும், அவர்களைக் கண்காணிப்பதற்கும் ஈரான் இத்தகைய சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை உறுதியாகப் பயன்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T17:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
