<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-19T21:35:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624"></link>
            <id>https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624</id>
            <summary type="text">ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ எனப்படும் இந்தச் சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்பின் கையெழுத்துடன் சட்டமாகியுள்ளது. </p><p>


இந்தச் சட்டத்தின் கீழ், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beaf7f5b-2823-4e5f-b438-ed060e6ff5f1/26-6aaef0f2c4352.webp' /></p><p>


எனினும், இந்தியா அல்லது சீனா மீது 100 சதவீத வரி தானாகவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக இந்தச் சட்டம் பொருள்படாது. </p><p>

வரி விதிக்க வேண்டிய நாடுகள், வரி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்க நிர்வாகத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>


ரஷ்ய கச்சா எண்ணெயின் முக்கிய கொள்முதல் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.</p><p> </p><p>

இதனால் புதிய அமெரிக்க சட்டத்தின் கீழ் இரு நாடுகளும் கூடுதல் வர்த்தக அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்துவதுடன், ரஷ்யாவுடன் எரிசக்தி வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-19T20:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜின்பிங்கை வரவேற்க தயாராகும் அமெரிக்கா! சீன - அமெரிக்க இராஜதந்திரத்தின் மீது உலகின் கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214</id>
            <summary type="text">ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இந்த விஜயத்தின் போது ட்ரம்ப்,&nbsp;ஷி ஜின்பிங்கை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்</h2><p>வெளிநாட்டு தலைவர்களை பொதுவாக வெள்ளை மாளிகையில் வரவேற்கும் ட்ரம்ப், இந்த முறை விமானத் தளத்திற்கே சென்று ஷி ஜின்பிங்கை வரவேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7d0fa6-ccd6-479d-8272-3f69e93e3cee/26-6aaee2c88d2f3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங், வெள்ளை மாளிகையின் Rose Garden பகுதியில் இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளனர். </p><p>பின்னர் இரு தலைவர்களும் மூடிய அறையில் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
</p><p>எனினும் இந்த சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
</p><p>இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T19:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879</id>
            <summary type="text">100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

2017ஆம் ஆண்டு பொலிவியாவில் பணியாற்றி வந்த உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் என்பவருக்கு, உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வித்தியாசமான பூனை ஒன்று குறித்து தகவல் கிடைத்துள்ளது.</p><p>
காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் பூனைக்குட்டியாக இருந்தபோது உள்ளூர் நபர் ஒருவர் அதனை மீட்டெடுத்து, வீட்டுப் பூனை என நினைத்து வளர்த்து வந்துள்ளார்.</p><p></p><h2>வித்தியாசமான&nbsp;தோற்றம் </h2><p> சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உணர்ந்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b6b5cbb-f472-48c4-98ba-98915f4f3b18/26-6aaeda349e50a.webp' /></p><p>
</p><p>
இந்த விலங்கை பார்வையிட்ட நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அதன் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார்.</p><p>சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் ஆகியவை அந்தப் பூனையின் முக்கிய தனிச்சிறப்புகளாக இருந்துள்ளன.</p><p>

“அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்தேன். நான் மிகவும் வியப்படைந்திருந்தேன்” என நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலில் இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதியுள்ளார்.</p><p></p><h2>மேற்கொள்ளப்பட்ட ஆய்வு</h2><p> இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ce61c6-3927-4f8c-b883-d5801de81a9a/26-6aaeda355796e.webp' /></p><p>
</p><p>
எனினும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விலங்கு ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது.</p><p> இதன் மூலம், 100 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு பூனை குடும்பத்தில் புதிய இனமாக அறிவிக்கப்படும் முக்கியமான கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது.
</p><p>
இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அறிவியலுக்கு முற்றிலும் புதிய ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக வனவிலங்கு ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானாவின் மரணத்தால் பேரானந்தத்தில் திளைத்த சார்லஸ்! அதிர்ச்சியூட்டும் ஸ்பென்சரின் குறிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601"></link>
            <id>https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601</id>
            <summary type="text">டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், தனது நினைவுக் குறிப்புகளில் கூறிய விடயங்கள் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இங்கிலாந்தின் நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை வெளியான நூல் பகுதியை மேற்கோள்காட்டியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதி ஊர்வலத்தில் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி பங்கேற்கக் கூடாது என தான் கருதியதாக ஸ்பென்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கோபத்தின் வெளிப்பாடு</h2><p> </p><p>இது தொடர்பாக தொலைபேசியில் பேசியபோது சார்லஸ் கோபத்தின் வெளிப்பாடாக தொடர்ந்து பேசினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c6991db-0778-420f-b4f0-603722ffdc19/26-6aaecfb8517ff.webp' /></p><p>
</p><p>
மேலும், டயானா உயிரிழந்த இரவில் சார்லஸ் தன்னிடம் பேசியபோது, லாட்டரி வென்றவர் போல மிகுந்த உற்சாகத்துடன் அவரது குரல் ஒலித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>வேல்ஸ் இளவரசியான டயானா, 1997 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கி, உட்புற காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
</p><p>
அப்போது அவருடைய மகன்களான வில்லியம் மற்றும் ஹரிக்கு முறையே 15 மற்றும் 12 வயது.</p><p></p><h2>ஸ்பென்சரின் குற்றச்சாட்டு</h2><p> </p><p>டயானாவின் இறுதிச்சடங்கிற்கு சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் இருவரும் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095a8115-aaa6-453e-9f02-4b54f6bc77a6/26-6aaecfb90bf7b.webp' /></p><p>
</p><p>இந்நிலையில் ஸ்பென்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.</p><p>
“புத்தகங்கள் தொடர்பாக பொதுவாக கருத்து தெரிவிப்பது எங்கள் நடைமுறை அல்ல. இருப்பினும், சகோதரரை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மங்கச் செய்யலாம். தீர்மானிக்கும் திறனை பாதிக்கலாம்.</p><p> மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகளை பிறர் உணராத வகையில் மாற்றியமைக்கலாம் என்பதை மன்னர் சார்லஸ் கவனத்தில் கொண்டுள்ளார்” என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித்தருவதாக பணமோசடி : இரண்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-women-arrested-for-housing-construction-fraud-1789837811"></link>
            <id>https://ibctamil.com/article/two-women-arrested-for-housing-construction-fraud-1789837811</id>
            <summary type="text">&amp;nbsp;குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
</p><p>
பணம் பெற்ற பின்னரும் வீடுகள் கட்டத் தவறியது தொடர்பாகப் பிரிவிற்கு வந்த 245 புகார்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​அந்தத் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>இரண்டு பெண்கள் கைது&nbsp;</h2><p>&nbsp;இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2afe4fe8-05a0-4986-9248-e5d9ed4c2e8b/26-6aaecefb324cd.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான நான்கு கார்களும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

30 மற்றும் 31 வயதுடைய அந்த இரண்டு பெண்களும் கஹவத்த மற்றும் கடுவெலவைச் சேர்ந்தவர்கள்.

இன்று (19) நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர்கள், 29ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T18:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஹவுதிக்கள் அதிரடி ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-launch-major-missile-attack-target-saudi-1789839432"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-launch-major-missile-attack-target-saudi-1789839432</id>
            <summary type="text">சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,&amp;nbsp; தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,&nbsp; தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விடயத்தை ஹவுதிக்களின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>“இரண்டு சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது நடவடிக்கை ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை குறிவைத்தது.</p><p></p><h2>யேமன் படைகள்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது நடவடிக்கை யன்பு பகுதியில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் வசதியை குறிவைத்தது” என அவர்&nbsp; கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a940be-cdb8-401a-a2e7-c8f32ba6f049/26-6aaec8b5e7f44.webp' /></p><p>
</p><p>
மேலும், “முற்றுகைக்கு முற்றுகை, தீவிரப்படுத்தலுக்கு தீவிரப்படுத்தல் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் யேமன் படைகள் தொடர்ந்து உறுதியாக உள்ளன. </p><p>தங்கள் நாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, யேமன் மீதான முற்றுகை நீக்கப்படும் வரை, எதிரி சவுதி படைகளின் திரள் நிலைகளைத் தாக்குவது தொடரும்” என்றும் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.</p><p>

ஹவுதி தரப்பின் இந்தக் கூற்றுகள் தொடர்பான தாக்கத்தின் அளவு மற்றும் சேத விவரங்கள் குறித்து தனிப்பட்ட சரிபார்ப்பு தேவைப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் சரிந்தது ஈரானின் சாம்ராஜ்ஜியம் : ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1b-barrels-of-oil-shipped-through-strait-of-hormuz-1789833846"></link>
            <id>https://ibctamil.com/article/1b-barrels-of-oil-shipped-through-strait-of-hormuz-1789833846</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு&nbsp;(CENTCOM), &nbsp;சனிக்கிழமையன்று தெரிவித்தது.</p><p>

"வளைகுடாப் பகுதியிலிருந்து 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் வெளியேறுவதற்கு CENTCOM படைகள் ஆதரவளித்துள்ளன" என்று அட்மிரல் பிராட் கூப்பர் கூறினார்.</p><p>&nbsp;இத்தகவலை&nbsp; x சமூக ஊடகத் தளத்தில் அக் கட்டளைப் பிரிவு வெளியிட்டது.</p><h2>நீரிணையை கடந்த 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள்</h2><p>
</p><p>
ஒருங்கிணைந்த பாதுகாப்பை வழங்குவதன் மூலம், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையில் 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் அமெரிக்கப் படைகள் உதவியுள்ளதாக கூப்பர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc05fb52-0af5-41f4-a2b4-28d710f036dd/26-6aaeb8e81b229.webp' /></p><p>
</p><p>
நீரிணையில் உள்ள முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான கப்பல்கள் அந்த நீர்வழிப் பாதை வழியாகக் கடந்து சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஈரான் எண்ணெய் ஏற்றுமதி&nbsp;</h2><p>அதே வேளையில், ஈரான் "பூஜ்ஜியம் பீப்பாய்" அளவிலேயே எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட கூப்பர், இந்தத் தடைக்கு அமெரிக்காவின் "உறுதியான முற்றுகையே" காரணம் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2446baa7-68ad-4f48-8b81-90d00d566d66/26-6aaeb8e8dd70c.webp' /></p><p>
</p><p>
கடந்த இரண்டு வாரங்களில் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய், சரக்கு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் அளவு, முந்தைய ஆறு மாதங்களில் இருந்த எந்தவொரு காலகட்டத்தை விடவும் அதிகமாக இருந்ததாக கூப்பர் தெரிவித்தார்.
</p><p>
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த நீர்வழிப் பாதை வழியாகப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்க, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T16:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் வீடொன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-and-son-dead-from-a-house-in-vavuniya-1789830835"></link>
            <id>https://ibctamil.com/article/mother-and-son-dead-from-a-house-in-vavuniya-1789830835</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
மீட்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.&nbsp; சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்…</p><h2>இரத்தகாயங்களுடன் வீட்டில் வீழ்ந்து கிடந்த&nbsp;தாய் </h2><p>&nbsp; இன்றையதினம் வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில்
உறவினர் இருவர் இன்று மாலை குறித்த வீட்டிற்கு சென்றபோது தாய்
இரத்தகாயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ec7cc-22ff-4d05-afc5-78aadae36f71/26-6aaea8a6ad28c.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தூக்கில் தொங்கிய நிலையில்&nbsp;மகன்</h2><p> </p><p>இதேவேளை குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன்
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d0a809-b5c7-4725-ae0c-39e8a8290570/26-6aaea8a78bf06.webp' /></p><p>சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு
சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் வயது 60 என்ற
பெண்ணும் அவரது பெறாமகனான அயந்தன் வயது 35 என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என
காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தடயவியல் காவல்துறையின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T16:34:12+00:00</updated>
        </entry>
    </feed>
