<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-13T19:25:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063"></link>
            <id>https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கிற்கு 25 லட்சம் மடங்கு கூடுதல் ஊதியம் வழங்கியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO வெளியிட்ட நிர்வாகிகள் ஊதியக் கண்காணிப்பு (Executive Pay Watch) அறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டில் எலான் மஸ்க்கின் மொத்த ஊதியப் தொகுப்பு 158.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ($158.3bn) இருந்தது.</p><p>
</p><p></p><h2>ஊதிய விகிதம்&nbsp;</h2><p>அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண டெஸ்லா ஊழியர் ஒரு வருடம் முழுமையாக உழைத்து ஈட்டும் சராசரி ஊதியத்தை எலான் மஸ்க் வெறும் 4.23 வினாடிகளில் ஈட்டியுள்ளார்.</p><p>

எலான் மஸ்க்கின் ஊதியத்தையும் சேர்த்து கணக்கிட்டால், டெஸ்லாவின் CEO - ஊழியர் ஊதிய விகிதம் 5,387 : 1 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44358eb5-4213-47a5-b1e7-75c1e67fbf55/26-6a7e16723c335.webp' /></p><p>மஸ்க்கை விலக்கிப் பார்த்தால் S&amp;P 500 முன்னணி நிறுவனங்களின் சராசரி CEO - ஊழியர் ஊதிய விகிதம் 312 : 1 ஆக உள்ளது (இது 2024-இல் 285 : 1 ஆக இருந்தது).</p><p>

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் அமெரிக்க தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு தற்போதைய அளவிற்குக் குறைந்ததே இல்லை என குறித்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மிகப்பெரிய வரிவிலக்கு</h2><p>இவ்வறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமானமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

கிரிப்டோ முதலீடுகள் மூலம் 2025 இல் ட்ரம்ப்பின் வருமானம் $2.2 பில்லியனாக (254% உயர்வு) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0de0656-5165-41a8-ac8a-c7dfeba6d8a6/26-6a7e1672e09d2.webp' /></p><p> 

ஒரு சாதாரண அமெரிக்க ஊழியர் இந்தத் தொகையை ஈட்ட 43,154 ஆண்டுகள் தேவைப்படும்.</p><p>

AFL-CIO கூட்டமைப்பின் செயலாளர் ஃப்ரெட் ரெட்மண்ட் கூறுகையில், "கார்ப்பரேட்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் மிகப்பெரிய வரிவிலக்குகளை வழங்குவதற்காக ஏழை எளிய குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் உணவு உதவிகளை முடக்கி பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டுள்ளனர்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339"></link>
            <id>https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><p></p><h2>பரீட்சை வினாத்தாள்&nbsp;</h2><p>இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில் பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14-08-2026) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ddffd01-e66b-4881-bcc1-e578b82779b8/26-6a7dfc2768bfe.webp' /></p><p>எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார்.</p><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><h2>பரீட்சைகள் திணைக்களம்</h2><p> 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5311e45-2b34-47c1-a854-c6068355a147/26-6a7dfc281c1bc.webp' /></p><p>இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவம் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-involved-in-wattala-shooting-incident-1786641382"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-involved-in-wattala-shooting-incident-1786641382</id>
            <summary type="text">ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.</p><p>அங்கு, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் இவர்களை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தின. வத்தளையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் 30 வயதுடையவர், மற்றவர் 34 வயதுடையவர்.</p><h2>&nbsp; கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது</h2><p> </p><p>

அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புப் படைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df72ee03-6fa9-46d6-87d8-d3642128d2bc/26-6a7e0b130bfd5.webp' /></p><p> அதன்படி, இரண்டு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற விமானம் கட்டுநாயக்க வந்தடைந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக இரு சந்தேக நபர்களையும் பலத்த பாதுகாப்புடன் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T18:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணை மருத்துவ சேவையின் எட்டு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/invited-for-8-courses-in-the-paramedical-service-1786638961"></link>
            <id>https://ibctamil.com/article/invited-for-8-courses-in-the-paramedical-service-1786638961</id>
            <summary type="text">நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறி</h2><p>
</p><p>
அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும் 08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92817a5e-e93c-470a-aec6-c0b71eb8cfc7/26-6a7df770d94dc.webp' /></p><p>

பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)

பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector - PHI)

செயற்கை உறுப்பு மற்றும் பொருத்துறுப்பு நிபுணர் (Prosthetist and Orthotist)

சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)

பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)

மின்விசையலைவரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Cardiographer - ECG)

மருந்து தயாரிப்பாளர் / மருந்தாளர் (Dispenser)

மின்மூளை வரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Encephalographer - EEG)
</p><p>
மேலும், 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதியிடப்பட்ட 2501 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பாடத்துறைகளில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து இப்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
</p><p>
இப்பயிற்சிப் பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026 ஓகஸ்ட் 31 ஆகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T16:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவிகரிப்பது பற்றிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786634754"></link>
            <id>https://ibctamil.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786634754</id>
            <summary type="text">பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று
இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று
இடம்பெற்றது.
</p><p>
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதியில் காணி
உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் இடம் பெற்றது.</p><h2>444 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்</h2><p>இதன்போது கடந்த 04 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நஷ்ட ஈடு
வழங்கும் கூட்டத்தில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என்றும் தேவையான காணிகளை
பெறுவதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe69e6b-7747-4c4c-86e7-34a9ecdb488a/26-6a7dea9289a03.webp' /></p><p>
</p><p>
பலாலி விமான நிலையத்துக்கு என மூன்று கட்ட ஓடுதளங்களுக்கும் தேவையான 444
ஏக்கர் பொதுமக்களின் காணிகள் ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு காலப்
பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த காணிகள் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு போதுமானதாக
காணப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T16:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் வினாத்தாள் பரீட்சை நிலையமொன்றிலிருந்து மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/physics-question-paper-recovered-exam-center-1786626884"></link>
            <id>https://ibctamil.com/article/physics-question-paper-recovered-exam-center-1786626884</id>
            <summary type="text">நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.&nbsp;</p><p>அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், இருந்தே வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பரீட்சை ஆணையாளரின் அறிவிப்பு</h2><p>&nbsp;எனினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20e5e55-6c7f-4ccf-a9e2-d31790534f81/26-6a7dc6069d5be.webp' /></p><p>உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெற்ற பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாயம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T15:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786632653"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786632653</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. 

அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. </p><p>

அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. </p><p>

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது. 

அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.&nbsp;</p><h2>540 எலும்புக் கூடுகள்&nbsp; அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன</h2><p>&nbsp;செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழான அகழ்வு பணிகளின் போது, 552 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0daaf32-0bdf-44d5-ae8e-f90176a907c7/26-6a7ddc2186ce2.webp' /></p><p> </p><p>

அவற்றில் 540 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T15:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்! சர்வதேசத்தை அதிரவைத்த முசப் ஹசன் யூசுப்பின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cracks-in-us-israel-relations-1786630426"></link>
            <id>https://ibctamil.com/article/cracks-in-us-israel-relations-1786630426</id>
            <summary type="text">ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
</p><p>
இஸ்ரேல் வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது அமெரிக்கா தலையிட்டது அந்நாட்டின் இராணுவ உத்திகளைப் பாதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், காசா தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச சமாதானத் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்தது, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பனிப்போரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், அமெரிக்காவின் தலையீடு இஸ்ரேலின் வெற்றியைத் தடுத்துவிட்டதாக அந்நாட்டு மக்கள் கருதுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பெரு விரிசல் தொடர்பிலும் அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJwLWLiY9mM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T14:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சாவுடன் பிரபல பாடசாலை மாணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-student-arrested-with-cannabis-1786629626"></link>
            <id>https://ibctamil.com/article/school-student-arrested-with-cannabis-1786629626</id>
            <summary type="text">பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p>&nbsp; லுணுகலை – 27ஆம் கட்டை, அலகொலகம பகுதியை குறித்த மாணவன் வசிப்பிடமாக கொண்டுள்ளார்.</p><h2>&nbsp;காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்</h2><p>முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e068cf-f65e-4b31-8a95-4f35209500f3/26-6a7dd2799d6ee.webp' /></p><p>

விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T14:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fears-ground-attack-as-us-troops-middle-east-rise-1786626659"></link>
            <id>https://ibctamil.com/article/fears-ground-attack-as-us-troops-middle-east-rise-1786626659</id>
            <summary type="text">எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்க கிழக்கில் பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்த ஆய்வாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதலில் தற்போதைய நிலை தெளிவான வெற்றியோ தோல்வியோ இல்லாமல் முட்டுக்கட்டையாக நீடித்து வரும் நிலையில் அமெரிக்க இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்கட்டி அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>தெளிவில்லா படை குவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இது ஒருவிதமான இராணுவக் குவிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.” என அவர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4677ddf3-c176-49e1-8066-c57463ed60f9/26-6a7dc63ebba6a.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்கா கூடுதல் படைகளை எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குவிக்கிறது என்பது தற்போது தெளிவாகவில்லை எனவும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது உடனடி தரைத் தாக்குதலுக்கான தயாரிப்பா, தற்போதுள்ள அமெரிக்க தளங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையா அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளுக்கு தயாராகும் நடவடிக்கையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா தற்போது ஈரானுக்குள் முழுமையான தரைப்படையெடுப்பை நடத்தி வெற்றியை எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே தனது மதிப்பீடு என்றும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு</h2><p>
</p><p>
அவரது கருத்துப்படி, ''ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு மிகப்பெரிய இராணுவ, அரசியல் மற்றும் பிராந்திய சவால்களை உருவாக்கக்கூடும்.

அமெரிக்கா தனது இராணுவ விருப்பங்களை அதிகரித்துக் கொண்டிருப்பது, உடனடியாக ஈரானை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாகக் கருத முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd440b76-2644-4cfa-900a-bf5fc7027464/26-6a7dc63f7f475.webp' /></p><p>

தற்போது யாரும் வெற்றி பெறுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் முற்றிலும் முட்டுக்கட்டையில் இருக்கிறோம்.
</p><p>
அதாவது, அமெரிக்காவும் ஈரானும் தங்களது முக்கிய இலக்குகளை முழுமையாக அடைய முடியாத நிலையில், மோதல் நீடித்துக் கொண்டிருக்கின்றது" என அவரது மதிப்பீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்! காவல்துறை வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1093-foreign-nationals-arrested-so-far-this-year-1786627317"></link>
            <id>https://ibctamil.com/article/1093-foreign-nationals-arrested-so-far-this-year-1786627317</id>
            <summary type="text">இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
ஒன்றிணைந்த நாடு என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அவரது கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் இரண்டு சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>EQYFWW6&nbsp;</p><h2>சட்ட நடவடிக்கைகள்</h2><p>
எனினும், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc7c587-59bf-4c40-b623-70fc51055e0e/26-6a7dc8e4e8aff.webp' /></p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:46:28+00:00</updated>
        </entry>
    </feed>
