<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-07T05:34:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருள் பரவல்! அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/increased-drug-use-within-schools-1788758553"></link>
            <id>https://ibctamil.com/article/increased-drug-use-within-schools-1788758553</id>
            <summary type="text">போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்படி எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>குருநாகலில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள்</h2><p>அத்தோடு, தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70% பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cd42f3-ba12-4c5b-ae1a-69a6ed77e68f/26-6a9e4b982c909.webp' /></p><p>இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T05:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : திருப்பிவிடப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-volcanic-srilankan-airlines-flights-1788755879"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-volcanic-srilankan-airlines-flights-1788755879</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.</p><p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக குறித்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை நேற்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்&nbsp;&nbsp;</h2><p>இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையம் உட்படப் பல விமான நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f87f62-78c5-4143-af0e-b0069cddf1ff/26-6a9e49c405f9b.webp' /></p><p>
</p><p>
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-car-accident-on-the-southern-expressway-1788756812"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-car-accident-on-the-southern-expressway-1788756812</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>இந்த விபத்து இன்று (07.09.2026) காலை தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நெடுஞ்சாலை சாலை விபத்து</h2><p> </p><p>

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வீதித் தடுப்புகளில் மோதி, தொடர்ந்து முன்னோக்கிச் சென்று வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c13abc4-e5c1-4e03-9cb9-75fd245921a7/26-6a9e469a321bb.webp' /></p><p> </p><p>

விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலிக்கும் வீதித் தடுப்புகளுக்கும் மற்றும் காரிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-resolution-in-geneva-today-1788753254"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-resolution-in-geneva-today-1788753254</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல்&amp;nbsp;எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல்&nbsp;எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.</p><p>இந்தக் கூட்டத்தொடர் ஜெனீவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உரையாற்றவுள்ளா வோல்கர் டேர்க்</h2><p> 

ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ec24bd-7efd-470a-bdc7-4754bf2948a7/26-6a9e3d4421aef.webp' /></p><p> 

ஒரு மாதம் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளை உள்ளடக்கிய 37 ஊடாடும் கலந்துரையாடல்களை பேரவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

அத்துடன், உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.</p><p></p><h2>இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</h2><p> </p><p>மேலும் இந்தக் கூட்டத்தொடரின் போது பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92d0675-7eb5-4996-a28c-e5ddb5bc6155/26-6a9e3d44c8a74.webp' /></p><p> </p><p>மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே வெளியான அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VXVvW1Ng-BY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T04:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[110 லீற்றருக்கு மேல் பெட்ரோல் வாங்குவோருக்கான விலை உயர்வு: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/price-petrol-increase-users-more-than-110-liters-1788752089"></link>
            <id>https://ibctamil.com/article/price-petrol-increase-users-more-than-110-liters-1788752089</id>
            <summary type="text">அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஈரான் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாதாந்தம் 110 லீற்றருக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஈரான் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாதாந்தம் 110 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோலைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான விலை அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி ஈரானில் பெட்ரோல் விலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>ஈரானின் உள்நாட்டு உரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் அதன் தாக்கம் இலங்கை போன்ற இறக்கமதியாளர்களுக்கு விலைமாற்றத்தை ஏற்படுத்தலாம்மென கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.&nbsp;</p><p></p><h3>அரசாங்கப் பேச்சாளர் பாத்திமே மொஹஜெரானி&nbsp;</h3><p>
</p><p>
இந்த தகவலை ஈரான் நாட்டின் தற்போதைய அரசு செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி நேற்று (06.09.2026) தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e6a6e7-261f-4bb3-ad37-68a993bea4ef/26-6a9e3a99cf538.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முதல் மற்றும் இரண்டாவது ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் 110 லீற்றர் வரையிலான பெட்ரோலுக்கான விலையில் மாற்றம் இருக்காது.</p><p>எனினும், மூன்றாவது ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் பெட்ரோலின் விலை ஒரு லீற்றருக்கு 100,000 ஈரானிய ரியால்களாக அதிகரிக்கப்படும்.&nbsp;</p><p> இது சுதந்திர சந்தை மாற்று விகிதத்தின் அடிப்படையில் சுமார் 4 அமெரிக்க சென்ட்களுக்கு சமமானதாகும்.
</p><p>
உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ஈரானில் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் முன்னதாகவே கலந்துரையாடியிருந்த போதிலும், இதனால் புதிய போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h3>ஒரு லீற்றருக்கு 15,000 ரியால்</h3><p>
</p><p>
கடந்த 2019ஆம் ஆண்டில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஈரானில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f1268d7-594c-403f-ad28-f1a717f51ec5/26-6a9e4149bd6a9.webp' /></p><p>
</p><p>
தற்போதைய விலை உயர்வு மாதத்திற்கு 110 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் தேவைப்படும் நுகர்வோருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும்.</p><p>

அதேவேளை, ஏனைய வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஒரு லீற்றருக்கு 15,000 ரியால் என்ற விலையில் 60 லீற்றர் வரையும், ஒரு லீற்றருக்கு 30,000 ரியால் என்ற விலையில் மேலும் 50 லீற்றர் வரையும் பெட்ரோலை கொள்வனவு செய்ய முடியும்.
</p><p>
மேலும், கடந்த டிசம்பர் மாதம் பெரும்பாலான நுகர்வோருக்கான மானிய விலையில் வழங்கப்பட்ட பெட்ரோலின் விலையை ஈரான் ஓரளவு அதிகரித்திருந்தது. </p><p>இதற்காக அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக” பாத்திமா மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T04:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1788751715"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1788751715</id>
            <summary type="text">நாட்டின் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே இடிமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று (07.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.&nbsp;</p><p></p><h2>&nbsp;பலத்த காற்று&nbsp;மற்றும் மின்னல் தாக்கம்</h2><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6448c93d-cfdc-4b6e-9dc0-02bfcb3fad58/26-6a9e323e6ebea.webp' /></p><p> 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். </p><p>

இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே உச்சம் கொடுக்கின்றது.</p><p> 

இன்றைய தினம் (07) நண்பகல் 12:08 மணிக்கு காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை நிறைவு : இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2nd-phase-of-third-term-for-schools-begins-today-1788749730"></link>
            <id>https://ibctamil.com/article/2nd-phase-of-third-term-for-schools-begins-today-1788749730</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றது.

அதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றது.
</p><p>
அதன்படி, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர், நாடு முழுவதும் உள்ள பாடசாலை வளாகங்களில் நேற்று (06) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 ஆம் திகதி வரை தொடரும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>&nbsp;க.பொ.த சாதாரண தரப் பரீட்சை</h2><p> 

இந்தநிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a313b548-831f-405f-a4e8-2603a47be675/26-6a9e2b63a9cd9.webp' /></p><p>

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ்மொழி மாணவர்களுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைந்ததுடன் முஸ்லிம் பாடசாலைகளின் முதல் கட்டம் செப்டம்பர் 02 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
</p><p>
அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற நிலையில் 372,310 பரீட்சாத்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் : 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amazon-cargo-plane-crash-five-dead-1788748298"></link>
            <id>https://ibctamil.com/article/amazon-cargo-plane-crash-five-dead-1788748298</id>
            <summary type="text">அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>

புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து பயணித்த குறித்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி, அருகிலிருந்த களஞ்சியக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்களுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஐவர் பலி</h2><p> </p><p>

இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6c3f89-3d8f-4655-a8c3-7e71e29f1bb5/26-6a9e29c99573d.webp' /></p><p> 

எனினும், உயிரிழந்த 5 பேரும் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>

மேலும் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பொறிக்குள் சிக்காமல் லாவகமாக தப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஒரு வித்தியாசமான அரசியல் வியூகத்தில் ஈடுபட்டது.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை இந்த நிகழ்விற்கு வரவழைத்து, இதை நாட்டின் முன் ஒரு பெரிய அரசியல் ஒற்றுமையின் தொடக்கமாக சித்தரிப்பதே ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. குறிப்பாக, சஜித் பிரேமதாசவை எப்படியாவது இந்த நிகழ்வில் பங்கேற்க வைப்பதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.</p><h2>ஹரினிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு </h2><p>

ரணில் விக்ரமசிங்க இந்த அமைப்புப் பணியை ஹரின் பெர்னாண்டோவிடம் ஒப்படைத்தார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb228dbd-7663-4222-add4-b9f18f69959c/26-6a9ddf75b6e2c.webp' /></p><p> </p><p>அவர் நிகழ்வின் அமைப்புப் பணிகளைப் பொறுப்பேற்றார்.

 பொதுவாக எந்தவொரு அமைப்புச் செயல்பாட்டிற்கும் பகிரங்கமாக முன்வரும் ஹரின், இவ்விதமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுவிழா நடவடிக்கைகளைத் திரைமறைவிலிருந்து ஏற்பாடு செய்வதை உறுதிசெய்தார். தற்போதைய அரசியல் சூழலில் சில கட்சிகளால் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் இவ்வாறு பகிரங்கப்படுத்தலைத் தவிர்த்தார்.</p><p></p><h2>சஜித் பிரேமதாசவின் பதில்</h2><p>

 நிகழ்ச்சிக்கு சஜித்தை அழைத்து ஹரின் பெர்னாண்டோ அனுப்பிய பல செய்திகளுக்கு சஜித் பதிலளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88473460-336e-487a-97c8-6876aeeca032/26-6a9ddf76894d6.webp' /></p><p>
</p><p>
 பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க சஜித்தை அழைத்தார். அதற்குப் பதிலளித்த சஜித், கொழும்புக்கு வெளியே பல முக்கியப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று கூறினார். அதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.</p><h2>ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு</h2><p> பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் சஜித்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், சஜித் அந்த அழைப்பை மறுத்து, சகாலாவுக்கு அளித்த அதே பதிலை ரணிலுக்கும் அளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T01:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள்! ஒப்பந்தத்துடன் வருகிறார் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-air-defense-guns-rajnath-singh-arrives-1788715371"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-air-defense-guns-rajnath-singh-arrives-1788715371</id>
            <summary type="text">இலங்கை - இந்தியா இடையே&amp;nbsp;மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த&amp;nbsp;ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.இந்திய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை - இந்தியா இடையே&nbsp;மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த&nbsp;ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>இந்நிலையில் அவரின் விஜயத்தின் முக்கிய நோக்கங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு ஒப்பந்தம்</h2><p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய மூன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனுடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும் இருதரப்பினரும் மீளாய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று இந்தியாவிடமிருந்து வான் பாதுகாப்புத் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மற்றொரு ஒப்பந்தம் இரு நாடுகளின் மாணவர் படைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூன்றாவது ஒப்பந்தம் இலங்கை பாதுகாப்புக் கல்லூரிக்கும் இந்தியாவின் பாதுகாப்புக் கல்லூரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><h2>
ஜனாதிபதி மற்றும் பிரதமர் சந்திப்பு
</h2><p>புதன்கிழமை பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார்.
</p><p>
மேலும், நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்திக்கவுள்ளதுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளார்.
</p><p>
அன்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் குழுவின் (OCDS) அலுவலகத்தை ஒழிப்பது தொடர்பான சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தனது விஜயத்தின்போது, இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்யவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சீதை அம்மன் ஆலயம்</h2><p>குறிப்பாக, கடந்த ஆண்டு தித்வா புயலினால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.</p><p>

தித்வா புயலினால் சேதமடைந்த நிலையில், இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட மூன்று பாலங்களையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கவுள்ளார். </p><p>அவற்றில் இரண்டு பாலங்கள் குருநாகல் மாவட்டத்திலும், மற்றைய பாலம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
</p><p>மேலும், வியாழக்கிழமை தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்னர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் ராஜ்நாத் சிங் விஜயம் செய்யவுள்ளார்.</p><p>

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T01:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672"></link>
            <id>https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672</id>
            <summary type="text">கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. </p><p>1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 18 வயதான கிருஷாந்தி, பின்னர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர். </p><p>இந்த வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இலங்கையின் கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முக்கியத்துவமாகியது.</p><p></p><h2>கிருஷாந்தி வழக்கின் நீதி</h2><p>ஆனால், கிருஷாந்தி வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு செம்மணியின் முழு உண்மையை வெளிக்கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.&nbsp;</p><p>1998ஆம் ஆண்டு கிருஷாந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கை ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய மனித உரிமை விவகாரமாக மாற்றியது. </p><p>அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>ஆனால், அந்த அகழ்வுகளால் எழுந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையான நீதிசார் விசாரணை நடைபெறவில்லை. </p><p>குறிப்பாக, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, புதைகுழிகளின் முழுமையான பரப்பு, அவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான கேள்விகள் நீடித்தன.</p><p></p><h2>செம்மணி&nbsp;உண்மைகள்</h2><p>இதனால் கிருஷாந்தி குமாரசாமி வழக்கு என்பது ஒரு தனிமனித படுகொலைக்கான நீதி என்ற எல்லையைத் தாண்டி, செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய உயிர்களின் உண்மையையும் வெளிக்கொணரும் திறவுகோலாக மாறியுள்ளது.</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டமை, மூன்று தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உண்மைகள் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தன.</p><p> 2025 செப்டெம்பர் நினைவேந்தலின் போது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் நீதிமன்றப் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்திருந்தன.</p><p>மேலும், இந்த ஆண்டு கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் மற்றொரு முக்கியமான சர்வதேச நிகழ்வுடன் இணைகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான அமர்வு இன்று, செப்டெம்பர் 7ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. </p><p>இந்த அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்து அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இதனால், கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் ஒரு குறியீட்டு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.</p><p></p><h2>ஜெனீவாவில் இலங்கை</h2><p>ஒருபுறம், செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மையைத் தேடும் குடும்பங்கள்.

மறுபுறம், ஜெனீவாவில் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விவாதம்.
</p><p>
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் சந்திப்பது, இலங்கையின் கடந்தகால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்தகால அரசியல் கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது. </p><p>ஆனால், தற்போதைய நிலைமையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு&nbsp; தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>குறிப்பாக, கடந்தகால கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசியல் விருப்பம் போதுமானதாக இல்லாதிருப்பதும் முக்கிய கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-07T01:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக ஆரம்பமாகிறது CID-யின் அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-investigation-against-shiranthi-rajapaksa-1788706568"></link>
            <id>https://ibctamil.com/article/cid-investigation-against-shiranthi-rajapaksa-1788706568</id>
            <summary type="text">அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>நாட்டில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, ஷிராந்தி ராஜபக்சவால் நடத்தப்படுவதாக அறியப்படும் சிரிலிய சவ்வா அமைப்பானது பல மில்லியன் ரூபாயை அறவிடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>PET ஸ்கேனர் வாங்கும் திட்டத்திற்காக, சிறிலியசவியா அமைப்பு அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கி ஒரு மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>சட்டமா அதிபர் உத்தரவு</h2><p>

இது தொடர்பாக, அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் கரியவசத்திடம் இருந்து வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b278fa88-4676-467c-94ab-d204ef399aeb/26-6a9d802906d9c.webp' /></p><p>

இருப்பினும், மகாரகம அபேக்ஷா மருத்துவமனை, சீன அரசாங்கத்திடமிருந்து PET ஸ்கேனரை நன்கொடையாகப் பெற்றது.</p><p>இந்நிலையில் நன்கொடையாகப் பெறப்பட்ட PET ஸ்கேனரில் பணம் சேர்க்கப்பட்டதன் மூலம் மோசடி நடந்ததா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/idf-says-it-killed-a-hamas-commande-1788738189"></link>
            <id>https://ibctamil.com/article/idf-says-it-killed-a-hamas-commande-1788738189</id>
            <summary type="text">&amp;nbsp;காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.&nbsp;</p><p>&nbsp;பிணைக் கைதிகளை ரக்பா பகுதியில் சிறைபிடித்து வைத்திருந்த இவர், சமீப காலமாக இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளையும் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><h2>இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு</h2><p>போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9d5446-e2d8-462d-97d4-7abce6d9e3af/26-6a9dfce6b1ae7.webp' /></p><p>


இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலின் சின்பெட் சிறப்புப் படையினரால் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் உயிரோடு கைது செய்யப்பட்டார்.</p><p></p><p> </p><h2>அச்சத்தில் ஹமாஸ் தளபதிகள்</h2><p>இஸ்ரேலிய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் அவர், ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் பல உண்மைகளைத் தொடர்ந்து கூறி வருவதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15a3667-015b-4ab3-a506-3376c1d1f92f/26-6a9dfce765332.webp' /></p><p>
</p><p>
இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்த தாக்குதலை வான்வழியாக நடத்துமா அல்லது தரைவழியாக நடத்துமா என்ற அச்சத்தில்
ஹமாஸ் தளபதிகள் தற்போது உறைந்து போயுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:53:37+00:00</updated>
        </entry>
    </feed>
