<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-08T10:26:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலனற்ற இராணுவ வழிமுறைகள் : ஈரான் போரிலிருந்து வெளியேறும் வழியைத்தேடும் அமெரிக்க தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trumps-top-general-seeks-path-out-of-iran-war-1786182574"></link>
            <id>https://ibctamil.com/article/trumps-top-general-seeks-path-out-of-iran-war-1786182574</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ வழிமுறைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளிக்கக்கூடும் மற்றும் பரந்த அளவிலான பதிலடியைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளுக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ வழிமுறைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளிக்கக்கூடும் மற்றும் பரந்த அளவிலான பதிலடியைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், ஈரானுடனான போரின் பதற்றத்தைக் குறைப்பதற்கான வழியைத் தேடுமாறு, அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த கலந்துரையாடல்கள் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சிஐஏ இயக்குநர் ஜோன் ராட்க்ளிஃப், வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் கெய்ன் தனது கவலைகளைத் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>வான்வழித்தாக்குதல்கள் ஈரானை கட்டுப்படுத்தாது</h2><p>

தரைவழிப் படையெடுப்பைத் தவிர்ப்பதற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னுரிமை அளித்த போதிலும், வான்வழித் தாக்குதல் மட்டும் தெஹ்ரானை அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க வைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கெய்னும் மற்ற அதிகாரிகளும் நம்புவதாக அந்த அறிக்கை கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c808ffd5-d2f4-492c-95da-f65c55debde6/26-6a76feeb804a7.webp' /></p><p>
</p><p>
ஜூலை மாத இறுதியில் முன்மொழியப்பட்ட பதற்றத்தை அதிகரிப்பது குறித்து கெய்ன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு பகுதி காரணம், அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற கவலைகளே ஆகும்.</p><p></p><h2>ஈரானின் தாக்குதல் குறித்து எச்சரித்த வளைகுடா நாடுகள்</h2><p> </p><p>வளைகுடா கூட்டாளிகள் சாத்தியமான தாக்குதல்கள் குறித்து எச்சரித்த பின்னர், ட்ரம்ப் இறுதியில் அந்த நடவடிக்கையை ஒத்திவைத்தார் என்று அந்த அறிக்கை கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32e186e-0564-4c5d-8c7f-cedf872308c3/26-6a76feec324d2.webp' /></p><p>
</p><p>
வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஆயுதங்கள் மற்றும் பிற துல்லியமான வெடிமருந்துகள் உட்பட, குறைந்து வரும் அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளையும் அது சுட்டிக்காட்டியது.இது ஒரு நீடித்த மோதலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வோஷிங்டனின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும்.
</p><p>
இராணுவ அபாயங்கள் குறித்து கெய்ன், ட்ரம்பை எச்சரித்ததைச் சுட்டிக்காட்டி, பதற்றத்தை அதிகரிக்க உத்தரவிடப்பட்டால், அமெரிக்கப் படைகள் ஈரானுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியதாக சிஎன்என் கூறியது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் உட்பட, இராஜதந்திரத்திற்கு இடமளிக்கும் அதே வேளையில், ட்ரம்ப் ஒரு அரசியல் வெற்றியாகச் சித்தரிக்கக்கூடிய ஒரு முடிவை நிர்வாக அதிகாரிகள் இப்போது தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளே செம்மணி இனப்படுகொலை தினம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/krishanthi-chemmani-massacre-remembered-1786179491"></link>
            <id>https://ibctamil.com/article/krishanthi-chemmani-massacre-remembered-1786179491</id>
            <summary type="text">இனப்படுகொலைக்கான நீதி வேண்டி இன்று உலகின் கவனத்தை கோருகிறது செம்மணி. முப்பது வருடங்களுக்கு முன்னர் நிலத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனப்படுகொலைக்கான நீதி வேண்டி இன்று உலகின் கவனத்தை கோருகிறது செம்மணி. </p><p>முப்பது வருடங்களுக்கு முன்னர் நிலத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி நிலத்திலிருந்து எலும்புக்கூடுகள் எழுந்து போராடுகின்றன. </p><p>அண்மைய சில வருடங்களாக செம்மணியில் அகழ்வு இடம்பெற்று இதுவரையில் சுமார் 480 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் செம்மணிப் படுகொலை ஈழத் தமிழர்களின் நினைவுகளில் ஒரு பெருத்த துயரமாகப் படிந்துள்ளது. இப்படியான செம்மணிப் படுகொலையை நினைவுகூரத்தக்கதொரு நாளே இன்று.&nbsp;</p><p></p><h5><u><b>🛑 யார் இந்தக் கிருஷாந்தி</b></u></h5><p>கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர். &nbsp; 1996, ஓகஸ்ட் 7ஆம் திகதி. &nbsp;இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். </p><p>அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி குமாரசாமியும் ஒருவர். &nbsp;யாழ்ப்பாணத் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.</p><p>
</p><p>கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர். இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59 வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு &nbsp; டியூஷன் &nbsp;போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.</p><h5><b><u>🛑 கொலை செய்யப்பட்ட மாணவி</u></b></h5><p>&nbsp;அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர். கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொருபேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் &nbsp;கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். </p><p>அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர். அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது.</p><p>இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் &nbsp;1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.</p><h5><u><b>🛑 செம்மணிப் புதைகுழி வழக்கு</b></u></h5><p>
</p><p>கிருசாந்தி வன்கொலை மூடுண்டிருந்த யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. இதனால் தொடர் யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. நெருக்கடியை தவிர்க்க சந்திரிக்கா அரசு ஒன்பதுபேரை கைது செய்தது.</p><p> ஏழு இராணுவத்தையும் இரண்டு சிப்பாய்களையும் செய்து செய்தனர். அரசு எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காகியது. &nbsp;1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.&nbsp;</p><p>”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் – 300ல் இருந்து 400 வரை – புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.”&nbsp;</p><h5><b><u>🛑 முடிமறைக்க முற்பட்ட சந்திரிகா அரசு&nbsp;</u></b></h5><p>அப்போதைய அரசு கிருசாந்தி வழக்குடன் இந்த விவகாரத்தை முடிமறைக்க முற்பட்டது. ஆனால் உலகளவில் இந்த விவகாரம் அவதானிக்கப்பட்டது. செம்மணிப் புதைகுழியை தோண்ட வேண்டும் உண்மையை கண்டறிய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன. &nbsp;இதனையடுத்து இலங்கை அரசுக்கு புதைகுழி விவகாரத்தை தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. </p><p>செம்மணியில் வெளிவந்த எலும்புக்கூடுகள் &nbsp;சோமரத்தின ராஜபக்ச வாக்குமூலத்தை மெய்ப்பித்தது. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை கண்ணீருடன் திரண்ட தாய்மாரும் உறவுகளும் அடையாளம் காட்டினர்.</p><p>யாழ்ப்பாணமே கண்ணீர் கோலம் பூண்டது. செம்மணியைவிட 16 புதைகுழிகள் உள்ளன என்றும் அதில் பத்துப் புதைகுழிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஐந்தை உதவி பொலீஸ் அதிகாரி பெரேராவால் காட்ட முடியும். எஞ்சிய ஒன்றை – அது ஒரு கோவில் அருகில் உள்ளது – டி.எம். ஜெயதிலக்காவால் (மரணதண்டனை பெற்ற இன்னொரு சிப்பாய்) அடையாளம் காட்ட முடியும் என்றும் ராஜபக்ச கூறினார்.</p><p>
</p><h5><b><u>🛑 கொலையாளியின் வாக்குமூலம்</u></b></h5><p>அத்துடன் இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்று சிப்பாய் &nbsp;ராஜபக்ச கூறினார். கப்டன் லலித் ஹேவா, லெப்டினன் விஜயசிறிவர்த்தன, லெப்டினன் துடுகல, மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகரா முதலிய இராணு அதிகாரிகளது விபரங்களை பகிரங்கப்படுத்தினான். </p><p>அத்துடன் தனது வாக்குமூலத்தில் பல்வேறு கொலைகளை ராஜபக்ச விபரித்திருந்தார். இதன்போது செல்வரத்தினம் என்ற அரச ஊழியரை &nbsp;இராணுவம் கைது செய்த பின்னர் அவரை தேடி வந்த மனைவிக்கு என்ன நடந்தது என்று கீழ்கண்டவாறு ராஜபக்ச விபரித்தார்.</p><p>ஒருநாள் ஒரு மண்வெட்டியை எடுத்துவருமாறு கப்டன் லலித் ஹேவா என்னிடம் கேட்டார். நான் அங்கு சென்றபோது ஆடையில்லாது நிர்வாண கோலத்தில் இருந்த பெண் ஒருவருடன் கப்டன் ஹேவா நின்றார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அந்த முகாமுக்கு முன்பு கொண்டு வரப்பட்டிருந்தனர். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை கற்பழித்தார். பின்னர் நான் கொண்டுவந்து கொடுத்த மண்வெட்டியினாலும் இன்னும் சில பொல்லுகளாலும் கப்டன் ஹேவா அந்தக் கணவர் மனைவி இருவரையும் தாக்கினார். இருவரும் இறந்து போனார்கள்.</p><h5><b><u>🛑 செம்மணி நினைவுநாள்</u></b></h5><p>
</p><p>கிருசாந்தி கொலையும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் செம்மணிப் புதைகுழிகளும் இலங்கை இராணுவத்தின் இன அழிப்பு சார்ந்த கொடூர முகங்களை உலகிற்கு அம்பலப்படுத்தின. யாழ்ப்பாண மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதாக கூறி யுத்தம் செய்த சந்திரிக்கா அரசாங்கம் எதற்காக யுத்தத்தை மேற்கொண்டது என்பதையும் செம்மணிப் புதைகுழிகள் அம்பலமாக்கின. </p><p>குற்றவாளிகள் இனம் காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டபோதும் இலங்கை அரசினதும் இராணுவப்படைகளினதும் தமிழ் இன அழிப்பு செம்மணியுடன் முடிந்துவிடவில்லை. அவை முள்ளிவாய்க்கால் வரை உச்சம் கண்டன.</p><p>செம்மணி விவகாரத்தில் &nbsp;கால ஓட்டத்தில் அதனை மறக்கடிக்கும் விதமான காரியங்கள் நிகழ்ந்தன. 600க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட செம்மணி இன்று நீதியை கோரி எழுந்து நிற்கிற நிலமாகும். ஒரு அரசின் இனப்படுகொலையிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள செம்மணிப்படுகொலை சிறந்த உதாரணம்.</p><p>தமிழின அழிப்பு வரலாற்றில் செம்மணியை மறக்காமல் அழிக்கப்பட்டவர்களை நினைவுகூர கிருசாந்திகொல்லப்பட்ட இந்த நாளே மிகவும் பொருத்தமானது.செம்மணி வெளி ஒரு இனம் சந்தித்த மிகப் பெரிய இன அழிப்பின் சுவடு. ஒரு இன அழிப்புச் செயல் உலகின் எதிர்காலத்தின் மனித உரிமை, இன உரிமை குறித்த விழிப்புக்கும் சிந்தனைக்கும் உரிய அனுபவம்.</p><p>அதை நினைவுகூர்வதே மனித மாண்பும் மனிதகுலத்தை பாதுகாக்கும் செயலுமாகும். செம்மணி இனப்படுகொலையின் நினைவு நாள் அல்லது கிருஷசாந்தியின் நினைவு நாளகக் கருதப்படக்கூடிய இன்றைய நாள், ஈழ நிலத்தில் நிகழந்த ஒடுக்குமுறைகளுக்கு நீதிகோரும் நாளெனலாம்.</p><p>
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T10:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teacher-recruitment-by-the-end-of-this-year-harini-1786161554"></link>
            <id>https://ibctamil.com/article/teacher-recruitment-by-the-end-of-this-year-harini-1786161554</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p><p>
</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p>இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது குறித்த மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆசிரியர் பற்றாக்குறை</h2><p>
மேலும், அப்பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு நீண்டகால உத்தி அவசியமாகின்றது எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec06382d-1942-43ce-9f2b-1a897725cfe1/26-6a76dd5b14b3a.webp' /></p><p>அத்துடன் குறித்த மூன்று மாகாணங்களிலும் நடைபெற்று வரும் பாடசாலைக் கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.</p><p>இதன்போது, மனிதவள முகாமைத்துவம் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் குழுக்கள் உட்பட, தனது மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட உட்குழுக்களின் முன்னேற்றத்தையும் பிரதமர் ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kidnapped-journalist-prageeth-ekneligoda-case-1786176648"></link>
            <id>https://ibctamil.com/article/kidnapped-journalist-prageeth-ekneligoda-case-1786176648</id>
            <summary type="text">கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>விஜேராம விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் நேற்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நேற்றைய வழக்கு விசாரணையின் போது 115 முதல் 118 வரையிலான சாட்சிகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், 117 ஆம் இலக்கச் சாட்சியிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p></p><h2>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை</h2><p> 

அதேவேளை, ஏனைய சாட்சிகள் இந்த வழக்குடன் நேரடியாகத் தொடர்பற்றவர்கள் எனக் கூறி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e362ae06-7cfb-4cff-ae12-13ee7c183c8e/26-6a76f822ec55b.webp' /></p><p> </p><p>அதற்கமைய, அடுத்த வழக்கு விசாரணையின் போது 117 ஆம் சாட்சியிடம் தொடர்ந்து சாட்சியமளிப்பு இடம்பெறவுள்ளதுடன், 4 ஆம் இலக்கச் சாட்சியையும் அன்றைய தினம் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஹோமாகம பகுதியில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.</p><p>

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் விசேட மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T09:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பெருமளவிலான மோசடித் திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scam-involving-hi-messages-on-facebook-instagram-1786175650"></link>
            <id>https://ibctamil.com/article/scam-involving-hi-messages-on-facebook-instagram-1786175650</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

 

இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
 

மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>அழகான பெண்ணின் புகைப்படம் மூலம் மோசடி</h2><p>
</p><p>
 

இந்த மோசடியின் முதல் கட்டமாக, Instagram மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து 'Hi' எனச் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9af192e-30c5-4a03-bdee-518c3c81a7dc/26-6a76f644d4c16.webp' /></p><p>
</p><p>
 

அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களைக் அவதானித்து, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்குகின்றனர்.
</p><p>
 

புகைப்படத்தில் உள்ள பெண்ணின் அழகைக் கண்டு அவர்கள் மீண்டும் அந்தச் செய்திக்குப் பதிலளிக்கின்றனர்.</p><p>

 

அதன்பின்னர், அப்பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அல்லது WhatsApp வீடியோ அழைப்பு மூலம் காட்சிகளை வழங்குமாறு தூண்டுகின்றனர்.</p><p>

 

பின்னர் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் மற்றும் கப்பம் பெறப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் களைகட்டும் பிரமாண்ட உணவுத் திருவிழா... றீ(ச்)ஷாவில் கொண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-day-grand-food-festival-begins-in-reecha-1786176302"></link>
            <id>https://ibctamil.com/article/4-day-grand-food-festival-begins-in-reecha-1786176302</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வுகள், நேற்று (07-08-2026) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்று (08-08-2026) நாளை (09-08-2026) மற்றும் 10 ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் 10 வரை நடைபெறவுள்ளது.</p><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீ(ச்)ஷாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு QICK FOOD அனுசரணை வழங்குவதுடன் ங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்து கொண்டிருக்கின்றன.
</p><p>
உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.</p><p></p><p> </p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sanjeeva-case-suspect-dies-magazine-prison-clash-1786173443"></link>
            <id>https://ibctamil.com/article/sanjeeva-case-suspect-dies-magazine-prison-clash-1786173443</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கணேமுல்ல சஞ்சீவ மரணம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், ‘ஹோமாகம ஹந்தயா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரின் ஒப்பந்த துப்பாக்கிதாரியாக அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f6de3a-ba93-4f7e-b0c2-bb5541fa040c/26-6a76e1669970e.webp' /></p><p>

இது தொடர்பாக காலி, அம்பாறை, நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது இறுதி சட்ட முடிவுகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயிலை சமாளிக்க நாயிறைச்சி சூப் - விநோத அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nk-urged-to-beat-heat-with-dog-meat-soup-1786168998"></link>
            <id>https://ibctamil.com/article/nk-urged-to-beat-heat-with-dog-meat-soup-1786168998</id>
            <summary type="text">அதிகரித்துவரும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்துவரும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் மற்றும் கோழி இறைச்சிச் சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும் என வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>உணவுகளைத் தயாரிக்கும் போட்டி</h2><p>நாயிறைச்சி சூப் கோடைக்காலத்தின் பாரம்பரிய உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள பழமொழி ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90c7b498-76cf-4b80-b614-0f70a4f594de/26-6a76db8ac5353.webp' /></p><p>



மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>


கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாயிறைச்சி சூப்பை வெயிலை சமாளிப்பதற்கான உணவாக வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடவுச்சீட்டினால் சிக்கல்: பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் முன்னாள் எம்.பி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mp-held-in-uk-over-faulty-sl-passports-1786168387"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mp-held-in-uk-over-faulty-sl-passports-1786168387</id>
            <summary type="text">இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரமற்ற தன்மை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரமற்ற தன்மை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று (07-08-2026) உயைாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
கடவுச்சீட்டை இயந்திரங்களால் சரியாக வாசிக்க முடியாததால், அது போலியானது எனச் சந்தேகித்து பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>புதிய கடவுச்சீட்டு</h2><p>

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “முன்னர் 64 பக்கங்களைக் கொண்டிருந்த கடவுச்சீட்டு தற்போது 48 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. </p><p>

எனினும், அதற்காக வசூலிக்கப்படும் 6,000 ரூபாய் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e765b04-7dc2-484a-a112-b26b72da179a/26-6a76d0f61863f.webp' /></p><p>புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்புப் பக்கங்களோ (Observation pages) அல்லது கால நீடிப்புப் பக்கங்களோ சேர்க்கப்படவில்லை. </p><p>

அத்துடன் அதன் அச்சின் தரம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>குறிப்பாகக் குடிவரவு முத்திரையிடும் போது மை மறுபக்கத்திற்கு ஊடுருவிப் பரவுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், சில நாடுகள் இந்த இலங்கைக் கடவுச்சீட்டுகளை நிராகரிகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடவுச்சீட்டுகளின் தரத்தில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a93db8-e4a1-4ae3-b464-9477107cb9ff/26-6a76d0f6db919.webp' /></p><p>அத்தோடு சர்வதேச தரநிலைகளுக்கு அமையப் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உலகளவில் ஏனைய நாடுகளாலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி (Tender) தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதாகவும், புதிய ஈ-பாஸ்போர்ட் (E-Passport) முறையை அறிமுகப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவலைக்கிடமான நிலையில் ஈரான் உச்ச தலைவர் - விரைவில் மறைவு குறித்த செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-supreme-leader-in-critical-condition-1786171351"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-supreme-leader-in-critical-condition-1786171351</id>
            <summary type="text">ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும்&nbsp;இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p>ஜெருசலேம் போஸ்ட்டால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு வட்டாரம் "அவர் வீரமரணம் அடைந்த செய்தி விரைவில் வந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்" என்று கூறியுள்ளது.</p><p></p><h2>எழுத்துப்பூர்வ அறிக்கை</h2><p>அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் ஈரான் ஆன்மீக தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b1ac5d-344a-41c0-8638-b508e889a762/26-6a76d6df16c26.webp' /></p><p>தந்தையின் மறைவின் பின் ஈரானிய உச்ச தலைவராக பதவியேற்றதிலிருந்து அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை, அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது.</p><p> ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக அவர் பெயரில் எழுதப்பட்ட அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இது சர்வதேச அளவில் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகரிக்கச் செய்தது.&nbsp;&nbsp;</p><p>கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>90% செயலிழந்த&nbsp;கொமெய்னி </h2><p>அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேனி 90 சதவீதம் செயலிழந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387cf06e-9af6-4f55-9c7d-2f431fd83c41/26-6a76d6dfc2a15.webp' /></p><p>தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கொமெய்னி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவில் களை கட்டிய அட்சய பாத்திரம் - உணவுத் திருவிழாவின் முதலாம் நாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-2026-first-day-1786169146"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-2026-first-day-1786169146</id>
            <summary type="text">மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்த றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பிரமாண்டமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்த றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.</p><p>உணவுத் திருவிழாவின் முதலாம் நாளான நேற்று தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவித்ததோடு, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.</p><p>இந்த உணவுத் திருவிழாவில் தமிழர்களின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளான ஒடியல் கூழ், நண்டுப் பிரட்டல், பிட்டு, பனங்காய் பணியாரம் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>கண்கொள்ளாக் காட்சி</h2><p> உணவுத் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களின் முகங்களில் தெரிந்த திருப்தியும் மகிழ்ச்சியும் இந்த விழாவின் வெற்றியை மேலும் மெருகூட்டியது.</p><p>நேற்றைய நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7f91e6-1b7b-4f19-bd2e-b1a60f9f82ee/26-6a76cf30814e3.webp' /></p><p> </p><p>மாலை 5.00 மணிக்கு, நுழைவாயிலிலிருந்து பாரம்பரிய இசை முழங்க மக்களை வரவேற்று அழைத்து வரும் கண்கொள்ளாக் காட்சி அனைவரையும் மெய்மறக்கச் செய்யும். </p><p>தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உலகறியச் செய்யும் இந்த நிகழ்வு, ஒவ்வொருவரும் தவறாமல் காண வேண்டிய சிறப்புமிக்க திருவிழாவாகும்.
</p><p>எனவே, இந்த இனிய நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு, தமிழர் பாரம்பரியத்தின் இனிமையையும் கலை மரபின் அழகையும் நேரில் கண்டு களிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் மாற்றம் - தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-today-in-world-gold-market-1786171021"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-today-in-world-gold-market-1786171021</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>நேற்று ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 98 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து, 4,355 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.</p><p></p><h2>தங்கத்தின் விலை&nbsp;</h2><p>
</p><p>இந்த நிலையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,342 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532c918-da00-4bc4-805a-ad0433e82e20/26-6a76cf6a48614.webp' /></p><p>
இதன்படி, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
</p><p>
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>

அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி 63.58 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் Jaffna Kings - இரசிகர்களுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497"></link>
            <id>https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497</id>
            <summary type="text"> புதிய இணைப்புகொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
</p><p>
 

மைதானத்தின் 'C' Upper மற்றும் Lower, 'D' Upper மற்றும் Lower ஆகிய பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இறுதிப் போட்டிக்கு கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541acb66-b150-474b-a62d-bf40aa31142d/26-6a76cdce79f22.webp' /></p><p> </p><p>தொடரின் இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.</p><p>லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.</p><p></p><p>
</p><h2>ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது</h2><p>
 

இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689e219-1215-44a2-9c28-a8e51bd5cb7a/26-6a76b5af5f54d.webp' /></p><p>இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
</p><p>
 

இதேவேளை, ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.</p><p>அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audit-reveals-ammunition-deficit-in-sl-prisons-1786165500"></link>
            <id>https://ibctamil.com/article/audit-reveals-ammunition-deficit-in-sl-prisons-1786165500</id>
            <summary type="text">நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும், அவை குறித்து முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் அங்குணகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அனுராதபுரம், கொழும்பு மகசின், மொனராகலை, வட்டரக்க மற்றும் வாரியப்பொல ஆகிய 9 சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு உபகரணங்கள்&nbsp;</h2><p>மேற்படி 9 சிறைச்சாலைகளிலும் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் (Unserviceable) உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649028cf-fa35-47de-beeb-65bebf734d5f/26-6a76c19d07826.webp' /></p><p>அத்தோடு 27 சிறைச்சாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 1,038 பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதால், சிறைச்சாலைகளில் அவற்றுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
</p><p>

9 சிறைச்சாலைகளில் இருந்த 62 துப்பாக்கிகள், 50 மெகசின்கள் (Magazines) மற்றும் 1,278 தோட்டாக்கள் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>கடுமையான தடைகள்&nbsp;</h2><p>அவை ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவை முறையான நடைமுறைகளின் கீழ் மீண்டும் சிறைச்சாலை நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6792c9da-6cbf-47f5-9167-507b70d31a56/26-6a76c19db7ad2.webp' /></p><p>இதனடிப்படையில் சிறைச்சாலைகளில் திடீரென வெடிக்கும் கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்வதில் சிறை அதிகாரிகளுக்குப் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
மேலும் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைப் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் பொதுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தடைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட் பொதியுடன் கைதான நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-illicit-cigarettes-1786165668"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-illicit-cigarettes-1786165668</id>
            <summary type="text">சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
</p><p>

கைது செய்யப்பட்ட நபர் மினுவாங்கொட, திவுலபிட்டியவைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.</p><p></p><h2>சிகரெட் பொதியுடன் ஒருவர் கைது</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு நபரை இலங்கையின் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6673c5c-018c-4736-96b4-f943349c2104/26-6a76c5f4666de.webp' /></p><p>குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. </p><p>

அந்த நபர் எடுத்துச் சென்ற இரண்டு பயணப் பைகளில் இருந்து, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 40,000 'டாப் கன்' சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில் தற்போது பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527</id>
            <summary type="text">​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று
வருகின்றார்.</p><p></p><p>
</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adaed6-652d-4133-9fbd-cc40aeb689bb/26-6a76bb56ecd23.webp' /></p><p> இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற
சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-notice-to-candidates-for-the-a-level-exam-1786164747"></link>
            <id>https://ibctamil.com/article/special-notice-to-candidates-for-the-a-level-exam-1786164747</id>
            <summary type="text">2026 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக&amp;nbsp; பரீட்சைகள் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக&nbsp; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.
</p><p>
 

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d240386f-4ae5-4168-bb28-d36af513ef92/26-6a76bdde647dc.webp' /></p><p>

 

பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும்.</p><p>அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.</p><p>
 

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.</p><p></p><h2>முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
 

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும்.
</p><p>
 

பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81965329-5252-4a48-98d2-ddee47969f68/26-6a76bdddb1def.webp' /></p><p>
</p><p>கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயற்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதுடன், கடந்த ஆண்டுகளில் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது.</p><p>ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்ப்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-5th-grade-scholarship-examination-tomorrow-1786162188"></link>
            <id>https://ibctamil.com/article/2026-5th-grade-scholarship-examination-tomorrow-1786162188</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நாளை (09.08.2026) நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நாளை (09.08.2026) நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

இவ்வாண்டு பரீட்சையில் மொத்தம் 294,089 "பரீட்சாத்திகள்" பங்கேற்கின்றனர். </p><p>இவர்களில் 220,366 "பரீட்சாத்திகள்" சிங்கள மொழிவழியிலும், 73,723 "பரீட்சாத்திகள்" தமிழ் மொழிவழியிலும் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><h2>5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்&nbsp;</h2><p>
</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோரை அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e731d7-2aa2-4b5c-9dfb-3891f78f2582/26-6a76b85d87363.webp' /></p><p>மாணவர்கள் தங்கள் மன ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும், பரீட்சையை கவனத்துடன் எதிர்கொள்வதை எளிதாக்குவதற்கும், பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> 

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு முதல் வினாத்தாள் வழங்கப்படும்.</p><p>

பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து, தங்களது பரீட்சை எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டு, வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை அளிக்க வேண்டும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

பரீட்சை ஆணையர் நாயகம், தேர்வர்கள் கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைகளை உலுக்கிய ஒரே நேரக் கலவரங்கள்....! உளவுத்துறை எச்சரித்த பாரிய சதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/joint-security-set-up-over-prison-riots-in-sl-1786161869"></link>
            <id>https://ibctamil.com/article/joint-security-set-up-over-prison-riots-in-sl-1786161869</id>
            <summary type="text">நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம் உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டிலுள்ள ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து சில நாட்களிலேயே, கொழும்பு நியூ மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் இக்கலவரங்கள் வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>முக்கிய கைதிகள்</h2><p>
</p><p>இதனடிப்படையில் கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் மதிலுக்கு மேலிருந்து வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தைச் சிறை அதிகாரிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இரு கைதி குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது.</p><p> 

பாதாள உலகக் குழுத் தலைவரான கொஸ்மல்லி என்பவரின் சகாக்கள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி வெளிவாயில் வழியாகத் தப்பியோட முயன்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff8caa1-058c-4bb3-9716-1b2cbfc388fd/26-6a76b5a53764a.webp' /></p><p>ஏற்பட்ட கடுமையான கலவரத்தில் ஹோமாகம ஹந்தயா என்பவரின் கூலிப்படைத் துப்பாக்கிதாரியான ஹோமாகம - கட்டுவனப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முகமது அஸ்மான் ஷெரிப்டீன் என்ற கைதி உயிரிழந்தார்.</p><p> 

இச்சம்பவத்தில் காயமடைந்த 10 கைதிகள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கலவரத்திற்குத் தலைமை தாங்கிய முக்கிய கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>போதிய வசதிகள்</h2><p>அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் போதிய வசதிகள் இல்லை எனக் கூறித் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது.</p><p>

ஆத்திரமடைந்த கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்திய நிலையில், நிலமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகளும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfd7356-92e4-4ce9-a900-e911fb00cc20/26-6a76b5a3adc92.webp' /></p><p>இதில் காயமடைந்த 15 கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
</p><p>
மேலும், நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் காலை உணவு வழங்குவதற்காகக் கைதிகள் வெளியில் அழைத்துவரப்பட்ட போது, போதைப்பொருள் தகராறு காரணமாக மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கண்ணீர்ப்புகைப் பிரயோகம்</h2><p>

கைதிகள் கூரை மீதேறிப் போராட்டம் நடத்தியதுடன் பிரதான வாயில் அருகே வன்முறையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை (STF), கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை இணைந்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>

காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2381eb0-1323-4bee-b153-eb434f0ac107/26-6a76b5a47a40f.webp' /></p><p>முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 31 பேரும், மஹர சிறைச்சாலை மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தும் 21 பேர் காயமடைந்தும் இருந்தனர். 

தற்போது நிலவும் அசாதாரண நிலமையைக் கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p> 

அத்துடன், ஜனாபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை இணைந்த கூட்டுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை (Joint Security Mechanism) எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய எம்.பிக்களின் சம்பள விவகாரம் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-parliament-members-fuel-allowance-increased-1786162054"></link>
            <id>https://ibctamil.com/article/sl-parliament-members-fuel-allowance-increased-1786162054</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.அதன்படி, நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை எனவும் மாறாக, தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டமையினால், அவர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07) உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26b6a580-3d54-4ca5-b64f-24d65a11b6b5/26-6a76b2786794f.webp' /></p><p>இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு மூலம் இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளது“ என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதேவேளை&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி : அம்பலப்படுத்திய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/major-flaws-in-the-al-biology-exam-question-paper-1786159020"></link>
            <id>https://ibctamil.com/article/major-flaws-in-the-al-biology-exam-question-paper-1786159020</id>
            <summary type="text">க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தர பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த உயர்தர உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தொடர்ச்சியாக, அதாவது கடந்த பல வருடங்களாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகின்ற பரீட்சை வினாத்தாள் தமிழ் மொழிக்கு மாற்றப்படும் போது பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள் இடம்பெறுகின்றன. இதனால் மாணவர்கள் பெருமளவான புள்ளி இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.</p><p></p><h2>பரீட்சை நேர அட்டவணை&nbsp;</h2><p>
</p><p>
என்னிடம் 2025ம் ஆண்டு உயிரியல் பரீட்சை வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. அதில் பலவிடைத்தேர்வு வினா (MCQ) பகுதியில் பல வினாக்களில் மொழிபெயர்ப்பு தவறு உள்ளதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c095aaf8-b196-46e3-a89b-f0915717d5bf/26-6a76a8dc57bfd.webp' /></p><p> </p><p>உதாரணமாக ஒரு கலத்தின் உள்ளடக்கத்தை குறிக்கும் சொல்லிற்காக உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்தை குறிப்பது போன்ற தவறுகள் இங்கு காணப்படுவதால் மாணவர்கள் வினாவிற்குரிய பதிலை தெரிவுசெய்வதில் பாரிய இடர்பாடுகள் ஏற்படும்.</p><p>கேள்வியிலும் மொழிபெயர்ப்பு பிழை, கொடுக்கப்படும் பதிலிலும் பிழை என்றால் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.</p><p>இப்போது சற்றுநேரம் முன்பு சாமர சம்பத் எம்பி என்னிடம் வந்து பேசினார். இந்தமுறை நடக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் பாளி மொழியும் சித்திரமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் போடப்பட்டிருப்பதாக என்னிடம் சொன்னார்.</p><p></p><h2>கல்வி அமைச்சரிடம் கோரிக்கை&nbsp;</h2><p>

</p><p>அப்படியெனில், ஒரு மாணவன் பாளி மொழியையும் சித்திரத்தையும் எவ்வாறு ஒரே நாளில் ஒரே நேரத்தில் பரீட்சை எழுதுவதென்று ஒரு பிரச்சினை உள்ளது.</p><p>ஆகவே, கல்வி அமைச்சர் அவர்களே, நான் ஏற்கனவே உங்களுடன் இது சம்மந்தமாக பேசியிருக்கின்றேன். நான் பேசியபின் ஒரு தடவை பரீட்சை நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac24b3-26e3-4e26-8102-af833d710f83/26-6a76a8dd0f104.webp' /></p><p> </p><p>அடுத்த பரீட்சையும் வரப்போகிறது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இனியாவது இந்த மொழிபெயர்ப்பு தவறு நடக்காமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
</p><p>
க.பொ.த உயர்தர பரீட்சை ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாகும். இந்த தவறினால் பல மாணவர்களின் எதிர்காலம் நாசமடைகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தை கவனியுங்கள்” என தெரிவித்தார்.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5SaPGnCdLtc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் நிகழ்வில் நடந்த பயங்கரம் - சிக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palliyawatta-shooting-3-arrested-including-gunman-1786158786"></link>
            <id>https://ibctamil.com/article/palliyawatta-shooting-3-arrested-including-gunman-1786158786</id>
            <summary type="text">பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த துப்பாக்கிச்&nbsp;சூட்டு சம்பவம் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வத்தளை - கதிரான பகுதியில் இடம்பெற்றது.</p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்டவர்கள்&nbsp; 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fadc4506-94fb-4333-9e05-cf041268d21c/26-6a76af717b78d.webp' /></p><p>
 

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (7) இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியை தவிர, காரை ஓட்டிச் சென்ற சாரதியும், குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க உதவிய நபர் ஒருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினரால் கைது</h2><p>போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே அன்றைய தினம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5003c824-ec25-4902-bfe8-7c870e4f9181/26-6a76b04b326d1.webp' /></p><p>
 

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:28:14+00:00</updated>
        </entry>
    </feed>
