<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T05:23:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையிலான மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791"></link>
            <id>https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. </p><p>

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.</p><p></p><h2>&nbsp;நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>

பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளைப் பேரணியும் ஆரம்பமாகவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2adf0262-2356-4878-80e4-d393393b5089/26-6a9cf40267893.webp' /></p><p>மேலும், தேசிய மக்கள் சக்தி பொலன்னறுவ, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு எதிர்கால பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இதேவேளை&nbsp;அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தமிழ்தேசியக் கட்சிகள் பகிரங்க கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470"></link>
            <id>https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&amp;nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&amp;nbsp; ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&nbsp; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.</p><p>அதன்படி, கடந்த கால கடத்தல்கள், காணாமல் போனோர் விவகாரம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் இலங்கை அரசின் மீது ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் காட்டும் அலட்சியப் போக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் அரசு தொடர்ந்தும் தாமதம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9273b056-9d6b-4116-85fc-4180393edd52/26-6a9ceac28d367.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக காத்திருப்பதாகவும் தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
</p><p>
ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷ ராசி</h2><p>பணவரவுக்கு குறை இருக்காது. ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழப்பங்களின் காரணமாக சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1663140d-0c24-4b69-9631-4775e39ed975/26-6a9ced0ca640c.webp' /></p><p>பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
</p><p>
அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவிஉயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.</p><p></p><h2>கடக ராசி</h2><p>பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad8ea48-3ade-40d9-bd92-e980dc453eb9/26-6a9cecbe0e7ed.webp' /></p><p>அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வந்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.</p><p> சிலருக்கு நண்பர்களுடன் வெளியூர்ச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். </p><p>அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
</p><p>
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும்.</p><h2>சிம்ம ராசி </h2><p>வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a151149f-8c7d-4793-9079-8e0bebe9e28b/26-6a9cecbebf1cc.webp' /></p><p>அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். செலவுகளைச் சமாளிப்பதற்கேற்ப பணவரவும் இருக்கும் என்பதால் உற்சாகமாக இருப் பீர்கள். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். </p><p>பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்ப வர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான அழைப்புக் கடிதம் வரும்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் கல்வி அமைச்சு விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958"></link>
            <id>https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958</id>
            <summary type="text">பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&amp;nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, பாடசாலை சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.</p><p>
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம்&nbsp;</h2><p> </p><p>இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c756cbf3-f736-4d1d-be51-0e7f81efb3cf/26-6a9ce32d990ba.webp' /></p><p>

‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
</p><p>
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680"></link>
            <id>https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680</id>
            <summary type="text">2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71bc350-7634-44bc-8002-5b919c758757/26-6a9cdd93aac50.webp' /></p><p>அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p>

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சகதிக்குள் அதிசயம் - 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727"></link>
            <id>https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>திரிஷூலி நீர்மின் திட்டத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>நேபாளத்தில் மற்றொரு நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்து இரண்டு பேர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த மீட்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மீண்டும் மீண்டும் கத்திய</span></p><p>225 மீட்டர் ஆழமுள்ள சுரங்கப்பாதையில் இருந்து நேபாள இராணுவத்தினர் மற்றும் தென் கொரிய பேரிடர் நிபுணர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழு அந்த நபரை மீட்டதாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e703f11-b164-467c-a587-e404a3bdb9fb/26-6a9cd27841741.webp' /></p><p>உலங்கு வானூர்தி மூலம் அவர் மீட்கப்படுவதும், பயணத்தின் போது இராணுவ மருத்துவ உதவியாளர் ஒருவர் அவரைப் பரிசோதிப்பதும் புகைப்படங்களில் காணப்பட்டன.</p><p>மீட்புக் குழுவினரின் விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் கத்தியதாகவும், ஆனால் அவர்களால் தன் குரலைக் கேட்க முடியவில்லை என்றும் லூ ஒரு அதிகாரியிடம் பேசும் ஓடியோவை சிசிடிவி பகிர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனினும் இன்று அவர்கள் என்னைக் காப்பாற்றிய போது, ​​என் கண்களுக்கு முன்பாக அந்த ஒளியைப் பாய்ச்சிய போது ​​என்னால் அதை நம்பவே முடியவில்லை என அவர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது</p><p></p><h2>தேடும் பணிகள்&nbsp;</h2><p>ஒகஸ்ட் 26 அன்று நேபாள - திபெத் பிராந்தியத்தைத் தாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, 5,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73e2df1-58e0-443c-8040-3575c2e2ecb8/26-6a9cd2778840e.webp' /></p><p>காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் மீட்புக் குழுக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.&nbsp;</p><p>நேபாள மற்றும் சீன அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சிஎன்என் ஊடக தரவுகளின் படி, கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350-ஐத் தாண்டியுள்ளது .&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் உச்சக்கட்ட சோகம் - தாத்தா இயக்கிய வாகனத்தில் நசியுண்டு பெண் குழந்தை பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-month-old-girl-killed-in-kilinochchi-1788659056"></link>
            <id>https://ibctamil.com/article/18-month-old-girl-killed-in-kilinochchi-1788659056</id>
            <summary type="text">வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கிய போது பெண் குழந்தை ஒன்று சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.இந்த துயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கிய போது பெண் குழந்தை ஒன்று சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.</p><p>இந்த துயர சம்பவம் நேற்று (05.09.2026) முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி - உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது&nbsp;&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கப் ரக வாகனத்தின் சாரதியான குழந்தையின் தாத்தா அதனை இயக்கியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>குழந்தையின் சடலம்</h2><p>
அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை அதன்
சக்கரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7dcc529-928e-41c3-bd92-318665e1ca0a/26-6a9ccac25ee6e.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே
பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p>

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றப் பதில் நீதிவான்
எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788660781"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788660781</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்&amp;nbsp; தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp; தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a96366-8681-463b-836e-12e97f5799e9/26-6a9ccc304877a.webp' /></p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும். </p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p>

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>

அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டக்ளஸ் காலத்தில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்தே இப்போது பயணிகள் சேவையில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944"></link>
            <id>https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p></p><h2>கட்டி இழுக்கப்படும்&nbsp;பேருந்து</h2><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சமநேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p> கடந்த வெள்ளிக் கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p></p><h2>ரஜீவன் எம்.பி</h2><p>
</p><p>பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்
அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.</p><p>
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்.பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535"></link>
            <id>https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535</id>
            <summary type="text">பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&amp;nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத சொத்துகள்</h2><p>“பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவதுடன், அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் மற்றும் பணத்தை மீண்டும் அரசிடம் பெற்றுக்கொள்வதற்கும் அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742c3aeb-e00e-40f7-9073-1fda1a11334f/26-6a9cbb99cc948.webp' /></p><p>திருட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், முறைகேடாகப் பெற்ற சொத்துகளை மீண்டும் அரசிடம் கொண்டுவருவதற்கான சட்ட சீர்திருத்தங்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
இதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை மீளப் பெறுவதற்கான சட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,000 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நீதிபதிகள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>[PGYK7RB
]</p><h2>நீதியரசரின் பணி</h2><p>
குறிப்பாக பிரதம நீதியரசரின் பணியைப் பாராட்டிய அவர், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8555f0a-3899-4347-82d2-750de3658435/26-6a9cbb99207bd.webp' /></p><p>நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம், மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் திறமையானதுமான நீதித்துறை அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600"></link>
            <id>https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக&nbsp;நிமல் பெரேரா குறித்து முன்வைக்கப்பட்ட பிரமாண பத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒன்று: ஏர்பஸ் ஊழல்</h2><p><u><b>நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி</b></u></p><p> நாமல் ராஜபக்சவின் சகாவான, விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் வசிக்கும் சட்டத்தரணி இந்திக கருணாஜீவா, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவின் நீண்டகால நண்பரான நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f352e2f1-f75e-4a01-9029-a6b6e791f1af/26-6a9c564bbc750.webp' /></p><p> ராஜபகசவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
கருணாஜீவா, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 என்ற முகவரியில் இயங்கும் ISK Law நிறுவனத்தின் பிரதான சட்டத்தரணியாக உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தோல்வியடைந்த முயற்சி </h2><p>நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, கருணாஜீவாவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு பெரேரா பதிலளிக்கவில்லை என்றும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f1b1555-5e93-4876-b0c0-dc129ed0ac3c/26-6a9c564b0ee8a.webp' /></p><p>

இதனால் அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்சவை மிகவும் அதிருப்தியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>CID அதிகாரிகள் அவுதிரேலியா பயணம்</h2><p>இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுதிரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடமிருந்து சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டத்தரணி ஒருவரின் கூற்றுப்படி, நிமல் பெரேராவுக்கு சாட்சி பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க அவுதிரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
அவர் அவுதிரேலியாவில் இருந்தபடியே Zoom வழியாக சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சர்வதேச பரஸ்பர சட்ட உதவி</h2><p>அவுதிரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் விசாரணைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c92a64-f88c-4b89-a08d-fa4e768bc4b5/26-6a9c564c72257.webp' /></p><p>

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக Airbus நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அமைந்துள்ளது.
</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தகவல் வட்டாரம் இந்த வழக்கு வலுவான நிலையில் இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மேலும் பல ஆதாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>வழக்கு இரண்டு: கிரிஷ் விவகாரம்
நிதி முறைகேடு</h2><p><b><u>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை</u></b></p><h2> </h2><p>இரண்டாவது வழக்கு, ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் தொடர்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ded7ec-8a2f-4214-8f44-72f7bab52c63/26-6a9c564d2a0bd.webp' /></p><p>
</p><p>
இந்தப் பணம் Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிதி தொடர்பாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பணப் பரிவர்த்தனையின் ஓட்டம் தொடர்பான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக நிமல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் நிதியை திரட்டத் திண்டாடும் அரசியல் கட்சிகள்! பொருளாதார நெருக்கடியில் புதிய சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321"></link>
            <id>https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவது அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சில அரசியல் கட்சிகளுக்கு தங்களது தலைமையகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களைப் பராமரிப்பதுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்குவதும் தற்போது மிகவும் சிரமமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கட்டணங்களை செலுத்த முடியாத நிலை</h2><p>
</p><p>மேலும், சில கட்சி அலுவலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9aa0d-85c8-4f54-8bae-bd244568df9b/26-6a9cb6dbd334e.webp' /></p><p>

அதிகரித்துள்ள செலவினங்கள் காரணமாக, பல அரசியல் கட்சிகளின் நிதி கையிருப்புகள் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனால் எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல கட்சிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, கடந்த தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதியுதவிகளில் சிலவற்றை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
கட்சி நிதியை செலவிடும்போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை உருவாக்க சில கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், எனினும் மற்றொரு தரப்பினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இலங்கையில்&nbsp; தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை 85 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729</id>
            <summary type="text">கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பத்தபெண்டியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>காலிமுகத்திடல் முதல் பொல்கொட ஆறு வரையிலான பகுதி ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணி அதனை உள்ளடக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சட்ட ஆலோசனை</h2><p>இதன்படி இதனை அகற்றும் செயல்முறை குறித்த சட்ட ஆலோசனை சட்டமா அதிபரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d241a0de-f5ec-4dbc-8ded-10e9ead92ef0/26-6a9cb0a3b224e.webp' /></p><p>

கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அகற்றி, அப்பகுதியை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213"></link>
            <id>https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் குறித்த இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0845e2e-6ca7-4693-af24-6ae16297ad6d/26-6a9caab8370ef.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதேவேளை, மலையக பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136"></link>
            <id>https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136</id>
            <summary type="text">தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஹவாய் தீவுகள்</h2><p>இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6897b1e-85f4-4e8c-a148-15c6aab3c5be/26-6a9ca6834718b.webp' /></p><p> </p><p>அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆபத்தான நீரோட்டங்கள்</h2><p> </p><p>ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை
சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:32:25+00:00</updated>
        </entry>
    </feed>
