<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-12T02:13:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹூதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956"></link>
            <id>https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956</id>
            <summary type="text">செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மோச்சா துறைமுகத்திற்கு தெற்கே கப்பல் மீது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் உட்பட நான்கு மாலுமிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>சவூதி இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><h2>தனித்தனித் தாக்குதல்</h2><p>இந்நிலையில், அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01978962-de4f-4867-a6ae-26cebb08a98b/26-6a7bd2373ef07.webp' /></p><p>
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. </p><p>அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். &nbsp;</p><p>மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T01:54:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786496357"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786496357</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2251bab9-bf9c-44a1-82a5-aa2fd4f10734/26-6a7bc56787774.webp' />&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி....! சிக்கிய அமைச்சரின் உறவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lalkantha-s-brother-in-law-arrested-1786495528"></link>
            <id>https://ibctamil.com/article/lalkantha-s-brother-in-law-arrested-1786495528</id>
            <summary type="text">கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

கேகாலை குற்றப் புலனாய்வுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.
</p><p>
கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணைக</h2><p>அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c3405f-48fe-4724-9801-b665fda17705/26-6a7bc229dfc54.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று (11-08-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று (12-08-2026) கேகாலை நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
</p><p>
அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T00:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சட்டவிரோதமாக பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crackdown-on-unauthorized-jaffna-buses-1786493691"></link>
            <id>https://ibctamil.com/article/crackdown-on-unauthorized-jaffna-buses-1786493691</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட
அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட
அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார
சபையும் காவல்துறையினரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை
முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பேருந்துச் சேவை</h2><p>இதனுடன் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும்
பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும்
அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச்
சேவைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b45a9559-03fb-4b61-830e-0709a7b0bc12/26-6a7bbafd83631.webp' /></p><p>


இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு
உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த
சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
கோரப்பட்டுள்ளதாக விமலேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம்
பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட
பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன் சட்டபூர்வமாக சேவையாற்றும்
பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தொழிற்சாலைகள்</h2><p>அத்தோடு, வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள்
மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு
செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே
வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை
பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfaf5da-5982-49fe-8505-7ca5e7182110/26-6a7bbafe35e2b.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், “இந்த விசேட நடவடிக்கையின் போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
அதிகாரிகளும் மற்றும் காவல்துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு
செய்வதுடன் அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும்
பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும்,
அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள்
இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
</p><p>
பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின்
ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை
வழங்கப்படமாட்டாது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T00:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/manivannan-calls-for-immediate-pc-polls-1786491171"></link>
            <id>https://ibctamil.com/article/manivannan-calls-for-immediate-pc-polls-1786491171</id>
            <summary type="text">மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. </p><p></p><h2>அரசாங்கங்கள்&nbsp;</h2><p>உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.</p><p>2017 கிழக்கு மாகாண
சபை பதவியை இழந்திருந்தது
கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள்
வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d916b7-4c5c-44be-a680-58cb4d4fa505/26-6a7bb12556aae.webp' /></p><p>அவர்களைப் பொறுத்தவரையில் இந்த
நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும். இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட
பகிரக்கூடாது.</p><p>

அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு
பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை
செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>தீர்வு திட்டம்</h2><p>அந்த
அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா
அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேனா ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. </p><p>

அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த
சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்
நடைபெறாமல் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e532502-4bad-4ec9-8349-6f55a6d7f17f/26-6a7bb126abbbe.webp' /></p><p> ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச்
சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.


13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம்
ஏற்றுக் கொள்கிறேன்.
</p><p>
தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட
வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.</p><p></p><h2>மாகாண சபை தேர்தல்&nbsp;</h2><p>


ஆனால் மாகாண சபை தேர்தலை வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது.
</p><p>

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக
இருக்கிறது. நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205866ac-46bc-42d8-b766-aab73ad5a650/26-6a7bb128121ed.webp' /></p><p> மாகாணசபையோடு
எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப்
போவதில்லை சொல்லவுமில்லை.
</p><p>

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு பொறிமுறையை இயங்க வைக்கப்பட
வேண்டும். அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை.</p><p>
ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக
கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-fisheries-meeting-chaired-1786490381"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-fisheries-meeting-chaired-1786490381</id>
            <summary type="text">கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தலைமையில் நேற்று (11-08.2026) குறித்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில்
இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>அபிவிருத்தி நடவடிக்கைகள்</h2><p>இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.
முரளிதரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை சார்ந்த அதிகாரிகள்,
துறைசார் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89a5a730-b4f5-400f-b3ab-52e2f5b03267/26-6a7bae100be76.webp' /></p><p>மாவட்டத்தின் கடற்றொழில் துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், கடற்றொழில்
சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து
இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,000 தண்டம்! நல்லூரில் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717</id>
            <summary type="text">நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில்
கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து
தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைந்துள்ளது.</p><p></p><h2>கண்காணிப்பு கமராக்கள்</h2><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து
நாசமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7a1eded-7565-4ef1-8df3-5fbc2dd796c2/26-6a7bab78d36db.webp' /></p><p>

இருப்பினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின்
பதிவுகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
</p><p>
இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன்
தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து
நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற சிறந்த செம்பருத்தி எண்ணெய்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1786488644"></link>
            <id>https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1786488644</id>
            <summary type="text">அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
</p><p>
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
</p><p>
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><u>🛑&nbsp;<b>தேவையான பொருட்கள்</b></u></p><ol><li>செம்பருத்தி பூ- 15
</li><li>தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d959fc27-eed3-40bd-a62d-12e991b491b6/26-6a7ba745a48d4.webp' /></p><p><u>🛑&nbsp;<b>பயன்படுத்தும் முறை&nbsp;&nbsp;</b></u></p><ol><li>முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</li><li>
அடுத்து இதில் சுத்தம் செய்த செம்பருத்தி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</li><li>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</li><li>செம்பருத்தி எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</li><li>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
&nbsp; &nbsp;</li></ol><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T22:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-youth-unemployment-govt-announcement-1786474907"></link>
            <id>https://ibctamil.com/article/canada-youth-unemployment-govt-announcement-1786474907</id>
            <summary type="text">கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில் 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>பொருளாதார பயம்</h2><p>அதேபோல கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>

இந்தநிலையில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d769ed-092e-4e53-be41-b4a72bc4c06d/26-6a7b824f982ff.webp' /></p><p>அத்தோடு கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.
</p><p>
மேலும் சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T20:17:57+00:00</updated>
        </entry>
    </feed>
