<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T01:22:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழினப்படுகொலைக்கான நீதிக்காக உழைத்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ மறைந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-javier-giraldo-moreno-passes-away-1787789449"></link>
            <id>https://ibctamil.com/article/father-javier-giraldo-moreno-passes-away-1787789449</id>
            <summary type="text">தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத்தமிழினத்திற்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கெதிராக தீர்ப்பாயத்தை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவருமான அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ (1944-2026) செவ்வாய்க்கிழமை (25) அன்று பொகோட்டாவில் காலமானார்.
</p><p>
2013-ல் நடைபெற்ற 'சிறிலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின்' (பிறேமன் அமர்வு) நடுவர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.</p><p></p><h2>கொலம்பியாவில் தமிழினப்படுகொலை&nbsp;நினைவுநாள்</h2><p> 

இவர் அருட்தந்தை பிரான்சுவா கூட்டாவுடன் இணைந்து தென்னமெரிக்கத் தூதுவராக இருந்த சிறிலங்காவின் முன்னைநாள் இராணுவத்தளபதி ஜகத் டயசின் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியவர் என்று பதியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2cf740e-f420-439f-8829-b42f506623d5/26-6a8f836ab932b.webp' /></p><p>
</p><p>
கொலம்பியாவில் தமிழினப்படுகொலை நினைவுநாளை நடாத்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஈழத்தமிழர்கள் சார்பில் உங்களை ஐபிசி தமிழ் உங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவுகூருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374"></link>
            <id>https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

இந்த ஹேக்கிங் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'QScan' மற்றும் 'QTRouter' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் டொமைன்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்க எரிசக்தித் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா - தென் கொரியாவைச் சேர்ந்த 4 தனியார் நிறுவனங்களும் இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பின்னணியில் சீனாவின் உளவு அமைப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்த ஹேக்கிங் தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நான்ஜிங் சின்ஜியுவே நெட்வொர்க் டெக்னாலஜி' (Nanjing Xinjiuwei Network Technology Company) என்ற நிறுவனம் இயக்கி வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8d7b7e-d7cf-45bb-9098-e78a03292b2f/26-6a8f7b74ca430.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக சீனாவின் உளவு அமைப்பான அரசுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகியவை செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796</id>
            <summary type="text">கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். 

கனடாவிடம் இருக்கும் பொருட்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். </p><p>

கனடாவிடம் இருக்கும் பொருட்கள் இல்லாமல் தங்களால் சமாளிக்க முடியும் என்றும், சில பொருட்கள் தற்காலிகச் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அவற்றை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முறிந்ததால், 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50% புதிய வரியை ட்ரம்ப் சனிக்கிழமை விதித்தார்.</p><p></p><h2>வரி விதிப்புகள்</h2><p> </p><p>

அத்துடன் ஜனவரி 1 முதல் கனடிய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீதும் 50% வரி நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c65c3f6-1c87-43cf-9e0d-bdc5c97d6292/26-6a8f76f475a4a.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடியாக கனடா, சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீது அதே அளவு பதில் வரியை விதித்து, வரும் செப்டம்பர் 8 முதல் அது நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், கனடா நிராகரித்த ஒப்பந்தத்தை விட மோசமான ஒரு ஒப்பந்தத்தையே எதிர்காலத்தில் பெற முடியும் என வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் வழிமறிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-oil-tanker-blocked-in-strait-of-hormuz-1787775562"></link>
            <id>https://ibctamil.com/article/indian-oil-tanker-blocked-in-strait-of-hormuz-1787775562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன்போது, ஹானா (HAANA) என்ற இந்திய எண்ணெய் கப்பலை, ஈரானின் பாரிய போர்க்கப்பல் ஒன்று வழிமறித்து எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அந்நாட்டின் போர்க்கப்பல் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த இந்திய எண்ணெய் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>கப்பல்களின் நகர்வு</h2><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதை வழியிலான கப்பல் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b8b5ff-7bd6-496b-9b5d-f5a185601828/26-6a8f4ccd56930.webp' /></p><p><i>Image Credit:&nbsp;gCaptain</i></p><p>
</p><p>
அத்தோடு, அங்கு எந்தவொரு கப்பல்களின் நகர்வுகளும் பதிவாகவில்லை என்றும் ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821"></link>
            <id>https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் (ARED) வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p>
இது குறித்து தொடர்புடைய சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்பிற்குரியவர்களுக்காக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரி பல ஆண்டுகளாக அமைதியான முறையில் போராடி வரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அவர்களின் தொடர்ச்சியான இப்போராட்டம், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகிய அவர்களின் அடிப்படை உரிமைகளின் வெளிப்பாடாகும்.</p><p>&nbsp;</p><h2>பெண்களுக்கு எதிரான வன்முறை&nbsp;</h2><p>

தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதை உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, உண்மை மற்றும் நீதியைப் பெறுவதற்கான தேடலில் 2 வருடங்களாகத் துன்பங்களையும் உளவியல் ரீதியான வடுக்களையும் தாங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898074b8-4373-4a7a-baa5-f3bf25f63dd6/26-6a8f45b6a6038.webp' /></p><p>
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உடலியல் ரீதியான வன்முறை மேற்கொள்ளப்பட்டமை குறித்து பெரும் கவலையடைகின்றோம். சூழ்நிலை எதுவாக இருப்பினும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கும், மனித கண்ணியத்தைப் பேணுவதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உள்ளது.</p><h2>

அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயம்</h2><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் நீதியைத் தேடுவதில் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் போராட்டங்கள் பொது அமைதிக்கோ அல்லது தேசிய பாது காப்பிற்கோ அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது.</p><p>

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) உட்பட அரசாங்க நிறுவனங்களை அமைதியான முறையில் கேள்விக்குட்படுத்துவதும், பயனுள்ள உண்மை கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைக் கோருவதும் ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத கூறுகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f669cdf8-6917-4bf4-b073-c9f262fb5a6b/26-6a8f45b79a9a5.webp' /></p><p>

நீதி கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் பின்னணியில் இன்றைய சம்பவம் நடந்துள்ளது என்பது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் நீண்டகாலமாக உள்ள நியாயமான கேள்விகள் இவைதான்: </p><p>அவர்களின் அன்பிற்குரியவர்கள் எங்கே? அரசாங்கத்தின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு என்ன நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்?</p><p>
இக்கேள்விகளுக்கு அச்சுறுத்தல், வன்முறை அல்லது அடக்குமுறைகள் மூலம் பதிலளிக்க முடியாது.</p><h3>
சிறீலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் கோருவது:</h3><ol><li>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.</li><li>இன்று காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வன்முறை குறித்து சுயாதீனமான, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
</li><li>சட்டவிரோதமான அல்லது அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அமைதியாக ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
</li><li>அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து பாது காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வன்முறை அல்லது அடக்குமுறை மூலம் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் கலந்துரையாட வேண்டும்.
</li><li>உள்நாட்டு பொறிமுறையை நாம் நம்பிக்கை பெறும் வகையில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும், இதன் அர்த்தம் நாம் உள்நாட்டு பொறிமுறையை வலுபடுத்துமாறு கோருகின்றோம்.</li></ol><h2>
சர்வதேச சமூகத்திற்கு</h2><p>
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைமையை கூர்ந்து கவனிக்குமாறு சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.</p><p>
உண்மை மற்றும் நீதியை அமைதியான முறையில் தொடர்ந்து கோரி வரும் பாதிக்கப்பட்ட மக்களை நடத்தும் விதமே, இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3750ede7-f2d1-4543-a19a-d432e7cef41c/26-6a8f45b85207c.webp' /></p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று அறியக் கோரும் ஒரு அமைதியான தாயை ஒருபோதும் வன்முறையோடு எதிர்கொள்ளக் கூடாது. நீதியைக் கோரும் ஒரு பாதிக்கப்பட்ட நபரை ஒருபோதும் குற்றவாளியாக நடத்தக் கூடாது.</p><p>
இக்குடும்பங்களின் தொடர்ச்சியான துயரங்கள் இயல்புநிலையாக மாற அனுமதிக்கப்பட முடியாது.</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இலங்கையின் முன்னேற்றம், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ” எனக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ! 14 பச்சிளங்குழந்தைகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173"></link>
            <id>https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173</id>
            <summary type="text">பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&amp;nbsp; ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&nbsp; ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.</p><p>இன்றையதினம்(26) புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பவத்தின்போது வார்டில் இருந்த 15 குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவரால் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீ விபத்துக்குக் காரணம்</h2><p> </p><p>

இந்த விபத்து நடந்தபோது பிரசவித்த தாய்மார்கள் ஜன்னல்கள், ஏணிகள் மற்றும் படிகள் வழியாகச் சென்று உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcc44b8-2c9c-4bb7-9085-464bb1c25575/26-6a8f3ef0c1b6a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;japantimes</i></p><p>
</p><p>
மகப்பேறு வார்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாக பணிப்பாளர், குழந்தைகள் திருடப்படுவதைத் தடுப்பதற்காகவே பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், பழுதடைந்த குளிரூட்டும் கருவி (A/C) வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் சிலிண்டர்கள் தீயின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:41:14+00:00</updated>
        </entry>
    </feed>
