<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T20:40:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-backtracks-security-promise-rus-ukraine-war-1785612172"></link>
            <id>https://ibctamil.com/article/trump-backtracks-security-promise-rus-ukraine-war-1785612172</id>
            <summary type="text">உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் விடுத்துள்ளார்.
</p><p>
இந்நிலையில் இந்த தாக்குதலில் ரஷ்யா 27 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் ஒன்று மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய தரப்புப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>

உக்ரைன் பேட்ரியாட் இடைமறிப்பு விமானங்களைத் தயாரிக்க அனுமதிப்பதாகஅளித்திருந்த பகிரங்க வாக்குறுதியிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரஷ்யா நடத்திய&nbsp; பெரிய வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4bae439-bff3-4644-8f43-e62dd2aee546/26-6a6e478e8dd13.webp' /></p><p> </p><p>

பரந்த போர்முனையில் முன்னேறுவதற்கு உக்ரைன் போராடி வரும் நிலையில், அங்குள்ள முக்கிய பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறையை அம்பலப்படுத்தவே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்துவதாக இராணுவ தரப்புகள் அறிவித்துள்ளன.
</p><p>
உக்ரைன் மீதான சமீபத்திய தாக்குதலில், தலைநகர் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர மேயரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T20:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடி! அவசரப் பேச்சுவார்த்தை நடத்த 22 EU தலைவர்கள் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ceuta-migrant-crisis-1785614285"></link>
            <id>https://ibctamil.com/article/ceuta-migrant-crisis-1785614285</id>
            <summary type="text">ஸ்பெயினின் சுயாட்சி பிராந்தியமான சியூட்டா (Ceuta) பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து, நிலைமையை விவாதிக்க ஐரோப்பிய ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினின் சுயாட்சி பிராந்தியமான சியூட்டா (Ceuta) பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து, நிலைமையை விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை நடத்துமாறு 22 உறுப்புநாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் முன்முயற்சியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், இந்த விவகாரம் மிகுந்த அவசரத்திற்குரியது என்பதால், உள்துறை அமைச்சர்களின் விசேட காணொளி மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த வியாழக்கிழமை மொரோக்கோவிலிருந்து சுமார் 50,000 குடியேற்றவாசிகள் சியூட்டாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p></p><h2>மொரோக்கோவுக்கு திருப்பி அனுப்பல்</h2><p>இவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் மொரோக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தாலும், தற்போதைய நிலைமை குறித்து 22 நாடுகளின் தலைவர்கள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7d98047-5fed-4638-8341-1ecfe1b9352f/26-6a6e4fcfa357a.webp' /></p><p>
</p><p>
தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சி தலைமைப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய நீதி மற்றும் உள்துறை அமைச்சர்களின் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.</p><p>

அயர்லாந்து பிரதமர் மைகேல் மார்ட்டின், சமூக வலைத்தளமான X-இல் வெளியிட்ட பதிவில், சியூட்டா நிலைமையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன், இந்த நடவடிக்கையை வரவேற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனை மேம்படுத்தும் பாடங்களைப் பெறுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.</p><p> மேலும், இந்த பெருமளவிலான குடியேற்ற அலைக்குப் பிறகும், ஒருவர்கூட ஸ்பெயின் பிரதான நிலப்பரப்பிற்கோ அல்லது பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கோ செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
</p><p>
எனினும், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், போர்த்துகல் பிரதமர் லூயிஸ் மொன்டேநெக்ரோ, மற்றும் லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரீடன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை என தெரிவிக்கப்படவுள்ளது.</p><p>இதன்படி சியூட்டா நிலைமையைப் பற்றிய பொதுவான மதிப்பீட்டை உருவாக்கி, ஒருங்கிணைந்த ஐரோப்பிய பதிலடி நடவடிக்கையில் உடன்பாட்டை எட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று 22 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T19:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனானின் 770 சதுர மைல்கள் நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-occupied-770-square-miles-of-lebanon-1785610561"></link>
            <id>https://ibctamil.com/article/israel-occupied-770-square-miles-of-lebanon-1785610561</id>
            <summary type="text">தெற்கு லெபனானின் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் (770 சதுர மைல்கள்) நிலப்பரப்பை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானின் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் (770 சதுர மைல்கள்) நிலப்பரப்பை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என லெபனான் இராணுவத் தளபதி ஜெனரல் ரொடால்ப் ஹைகல் வலியுறுத்தியுள்ளார்.</p><p>"எங்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள் உரிமை என்று நாங்கள் நம்புகிறோம்” என்ற தனது ஆணித்தனமான கருத்தையும் முன்வைத்துள்ளார்.</p><p>மேலும் எங்கள் பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பதை நாங்கள் நிராகரிக்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் சபையின்&nbsp;எச்சரிக்கை</h2><p>தமது தியாகிகள் மற்றும் காயமடைந்தவர்களின் தியாகங்கள் வீணாகாது என்றும்&nbsp; அனைத்து சவால்களையும் மீறி, நாங்கள் தொடர்ந்து நமது மக்களுக்குத் துணை நிற்போம், அவர்கள் திரும்புவதற்கு ஆதரவளிப்போம், எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2c94115-17c1-41eb-88dc-6135633a1137/26-6a6e41e8343cb.webp' /></p><p>இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல் பணிகள், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் சமூக மக்களின் கூட்டு நினைவுகள் ஆகியவற்றில் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையான கவலையை உண்டாக்குகின்றன என்று லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (UNSCOL) எச்சரித்துள்ளது.</p><p>இதன்படி நிலுவையில் உள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இராஜதந்திர வழிமுறைகள் தொடர்ந்து செயல்படுவதால், அழிவின் வேகத்தில் ஏற்படும் இந்த அதிகரிப்புக்கு ஒரு வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கடற்படைப் பேரவை கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T18:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடமிருந்து குவைத்தை பாதுகாக்க முடியாமல் திணறும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-struggles-to-protect-kuwait-from-iran-1785607903"></link>
            <id>https://ibctamil.com/article/us-struggles-to-protect-kuwait-from-iran-1785607903</id>
            <summary type="text">&amp;nbsp;குவைத்தில் நீண்டகாலமாக அமெரிக்க இராணுவப் பிரசன்னம் இருந்தபோதிலும், ஈரானியத் தாக்குதல்களிலிருந்து குவைத்தைப் பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டது என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குவைத்தில் நீண்டகாலமாக அமெரிக்க இராணுவப் பிரசன்னம் இருந்தபோதிலும், ஈரானியத் தாக்குதல்களிலிருந்து குவைத்தைப் பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டது என்று 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் போர், அமெரிக்கப் படைகள் குவைத்திற்கு அளித்திருந்த பாதுகாப்பு உணர்வை உலுக்கியுள்ளது என்று அந்த அறிக்கை வியாழக்கிழமை கூறியது. வோஷிங்டன் தனது இராணுவப் பிரசன்னத்தின் அளவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் குவைத் உறுதியான அமெரிக்கப் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தொடர்ந்து நாடி வருவதாகவும் அது கூறியது.</p><h2>குவைத்தின் முக்கிய உள்கட்டமைப்புக்களை தாக்கும் ஈரான்</h2><p>ஈரான், குவைத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளான மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையம், அதன் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5915da-4e6c-4a30-b984-c07b436a7c4f/26-6a6e39736aef6.webp' /></p><p> </p><p>பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்தன, ஆனால் அமெரிக்கத் தளங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன; மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>குவைத், தனது படைகள் மற்றும் அவசரகாலப் பழுதுபார்ப்புகள் மூலம் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தபோதிலும், இந்தத் தாக்குதல்கள் அதன் உள்கட்டமைப்பின் பலவீனத்தையும், வோஷிங்டனுடனான அதன் நீண்டகாலப் பாதுகாப்பு கூட்டாண்மையையும் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>அமெரிக்கா தொடர்பில் குவைத் மக்களின் நிலைப்பாடு</h2><p>
</p><p>
"இந்தத் தாக்குதல்கள், குவைத்தில் உள்ள மக்களை அமெரிக்காவின் இருப்பை ஒரு சுமையாகக் கருதவும், அதே சமயம் குவைத்தைப் பாதுகாக்க அது முற்றிலும் அவசியம் என்றும் நினைக்கவும் வைத்துள்ளது," என்று அரபு வளைகுடா நாடுகள் நிறுவனத்தின் தலைவரும், குவைத்திற்கான முன்னாள் அமெரிக்கத் தூதருமான டக்ளஸ் சில்லிமன் கூறினார். "பாதுகாப்பு விஷயத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழி எது என்பதை அவர்கள் கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்."</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a73bef9f-6e32-4d6c-970e-ec76178351ae/26-6a6e397422181.webp' /></p><p>
</p><p>
குவைத் பாகிஸ்தானுடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, ஆனால் அது அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, அது வலுவான வான் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஆயுதங்களைத் தேடக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியது.</p><p>

"சமீபத்திய தாக்குதல்கள், நமது பிராந்தியத்தில் பெருகிவரும் சிக்கலான பாதுகாப்புச் சூழலையும், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சமச்சீரற்ற திறன்கள் உள்ளிட்ட நவீன அச்சுறுத்தல்களின் மாறிவரும் தன்மையையும் எடுத்துக்காட்டியுள்ளன," என்று குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். </p><p>மேலும், குவைத் "அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T18:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி அழைப்புகள்! பிரதி அமைச்சரின் பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraud-in-the-name-of-deputy-minister-1785605500"></link>
            <id>https://ibctamil.com/article/fraud-in-the-name-of-deputy-minister-1785605500</id>
            <summary type="text">தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கே அவர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கே அவர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவரது அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பிரதி அமைச்சராக தங்களை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு, பணம் கோருவதோடு பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p></p><h2>எந்தவித பணமும் வழங்க வேண்டாம்</h2><p>
</p><p>
இதனால், இவ்வாறான நபர்களுக்கு எந்தவித பணமும் வழங்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a0c54d-4265-416b-945b-a751301f0b96/26-6a6e2eb8eed1c.webp' /></p><p>

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T17:37:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-1785602420"></link>
            <id>https://ibctamil.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-1785602420</id>
            <summary type="text">&amp;nbsp;மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று மதியம் (01) மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ஒருவர் உயிரிழந்தார்.</p><h2>நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை பணியில்</h2><p>நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை விசேடஅதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f986780-9501-4afc-b0bf-fddf5001b5b4/26-6a6e258670846.webp' /></p><p>

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றி கூடியுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>விமானப்படை கண்காணிப்பு</h2><p>

தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது, மேலும் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1799e90e-3255-43a5-bbef-8c232adc6231/26-6a6e258725968.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T17:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரடங்குச்சட்டம் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மறு அறிவித்தல் வரும் வரையில் ராகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;மறு அறிவித்தல் வரும் வரையில் ராகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
</p><p>
அதன்படி 246/கெண்டலியத்த வீதி - மேற்கு, 246/சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181/ஜி தம்புவ கிராம சேவகர் பிரிவுகள் அடங்கும்.</p><p></p><h2>நான்காம் இணைப்பு</h2><p>&nbsp;மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>&nbsp;கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் காவல்துறைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VbN8OvrU-T4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
</p><h2>கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் சில அடிகள் முன்னேறி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba6c93d-9603-4ad2-82a8-43a83dce0c0d/26-6a6e03517db52.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>இன்று பிற்பகல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் இன்னும் அப்பகுதியில் தங்கியுள்ளனர்.</p><h2>காவல்துறையின் தீயணைப்பு வாகனம்&nbsp;</h2><p>அப்பகுதிக்கு காவல்துறையின் தீயணைப்பு வாகனம் வருகை தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8a20fe-c497-40f7-881d-3fb24f6bf153/26-6a6e0043ef0d2.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p>

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. </p><p>



நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கைதிகள் வைத்த தீ</h2><p> </p><p>

 கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b78bead-8a1e-4b5d-a5af-2574a0ccb545/26-6a6df6ae7c9d9.webp' /></p><p> </p><p>

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p>

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரபூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.</p><p>

சிறைக்குள் நிலவும் சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பல சிறப்பு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
</p><p>
சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது; அமைதியைப் பேணுவதற்கும், எந்தவொரு பதற்றமும் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படை (STF) நிறுத்தப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2489e9b8-dd1e-4d19-9ddd-8e6836ef8c45/26-6a6de39380103.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T16:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journalist-nilaksan-s-19th-death-anniversary-1785599975"></link>
            <id>https://ibctamil.com/article/journalist-nilaksan-s-19th-death-anniversary-1785599975</id>
            <summary type="text">சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு
நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு
நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின்
உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><h2>பெற்றோர் உட்பட பலரும் கலந்து அஞ்சலி</h2><p>இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள்,
நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d683f02-9f27-46d6-bfab-eae1555729b0/26-6a6e1a4f3a4f4.webp' /></p><p>
</p><p>
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை மாணவனும் சாரளம்
சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன்
நிலக்சன், 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p></p><h2>பெற்றோர் முன் சுட்டுபடுகொலை</h2><p>
</p><p>
கொக்குவிலில் உள்ள தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அதிகாலை 5 மணியளவில் ஆயுததாரிகள்
நிலக்சனை வீட்டிற்கு வௌியே அழைத்து, அவரது பெற்றோர் முன்னிலையில் துப்பாக்கிப்
பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d3b99a-5788-4223-a089-1d8aba6ec99d/26-6a6e1a50048a3.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T16:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்வதற்கு விருப்பமில்லை: யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855"></link>
            <id>https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404"></link>
            <id>https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட்டு மரண்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இவ்வாறு (01) வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபரை அவரது வழக்கறிஞர் றொசான் தெகிவள சந்தித்துள்ளார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp;</h2><p>இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்காக முன்னிலையான வழக்கறிஞர் றொசான் தெகிவள, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.</p><p>
</p><p>


</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9656df21-9f89-4d43-aaf6-8943addff404/26-6a6e0b7670fec.webp' /></p><p>அதன்படி, அடுத்த வாரம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p></p><h2>பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை&nbsp;</h2><p>

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d20657-50dc-429e-ab69-ed9e33ce5b62/26-6a6e0b77284c6.webp' /></p><p>
</p><p>
பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:07:51+00:00</updated>
        </entry>
    </feed>
