<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-04T17:26:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் கண்டனத்துடன் ஜென் Z தலைமுறையினர்! நாமலின் கைது குறித்து ஐ.தே.க அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200"></link>
            <id>https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200</id>
            <summary type="text">பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIAB...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIABOC) கைது செய்ததை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
 நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டி என ஐக்கிய தேசியக் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>
 பொதுஜனப் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில், தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவைப் போலவே நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><h2>அதிகரித்து வரும் பலவீனம்</h2><p>
</p><p>
 எந்தவொரு நவீன, நாகரிக சமூகமும் ஒரு தனிநபரின் அத்தகைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை அங்கீகரிக்காது என்றும், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் இத்தகைய செயல்களைக் கடும் கண்டனத்துடன் பார்க்கிறார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6036b640-22a7-48ee-b955-ffd5dc679813/26-6a9ae1a3bbb62.webp' /></p><p>
</p><p>
 மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், NPP அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் அதிகரித்து வரும் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XyyVZRZXn0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T17:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகிய தந்தைக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-sentenc-40-years-prison-for-sxual-assault-1788530261"></link>
            <id>https://ibctamil.com/article/father-sentenc-40-years-prison-for-sxual-assault-1788530261</id>
            <summary type="text">வவுனியாவில் சிறுமி ஒருவரை(13) பாலியல் அத்துமீறலுக்கு உள்ளக்கிய தந்தைக்கு 40 வருட
கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் சிறுமி ஒருவரை(13) பாலியல் அத்துமீறலுக்கு உள்ளக்கிய தந்தைக்கு 40 வருட
கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த போது 13 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி இருந்துள்ளார்.</p><p></p><h2>சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024ஆம் ஆண்டு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845d8f2a-1e7b-44b2-80a7-74d68427ee39/26-6a9ace56cc12f.webp' /></p><p> 

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு
நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக்
காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து
வந்துள்ள நிலையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்செயல்கள்
இடம்பெற்றுள்ளன.
</p><p>
இரு சந்தர்ப்பங்களிலும் தந்தை போதைப்பொருள் உபயோகித்து விட்டு வீட்டிலே வைத்து
குறித்த குற்றச்செயல்களைப் புரிந்துள்ளார்.

இந்த குற்றசெயயல் குறித்த சிறுமி கருத்தரித்ததுடன், மகப்பேறு மருத்துவர்,
மனநல வைத்தியர், சட்ட வைத்திய அதிகாரி கொண்ட குழாம் சிறுமியைப் பரிசோதித்து
அவருக்கு ஒரு குழந்தையைத் தாங்கக்கூடிய உடல் வலு, மனத்திடம் மற்றும்
முதிர்ச்சி இல்லை என்றதன் அடிப்படையில் சட்ட ரீதியான கருக்கலைப்பை
மேற்கொண்டனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல்
புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல்
பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றம் நடைபெறாமல்
தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்திலே கொண்டு கடுமையான தண்டனையை
வழங்கியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T16:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ போருக்கு பின்னர் தமிழர் அரசியலுக்கு முட்டுக்கட்டையான தென்னிலங்கையின் இரகசிய நிகழ்ச்சி நிரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-secret-agenda-that-is-hindering-tamil-politics-1788519657"></link>
            <id>https://ibctamil.com/article/the-secret-agenda-that-is-hindering-tamil-politics-1788519657</id>
            <summary type="text">தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தத் தன்மையே போருக்குப் பின்னரான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு உருவாக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
</p><p>
குறிப்பாக, தமிழீழப் போரை எதிர்த்த தென்னிலங்கை அரசாங்கம் இன்றும் போருக்குப் பின்னரான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வைத்துள்ளது.</p><p>

இதில் தமிழ் மக்களிடையே ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதைத் தடுத்தல், மீண்டும் ஒரு போராட்டச் சூழலைத் தமிழர் தரப்பு கையில் எடுப்பதைத் தடுத்தல் போன்ற விடயங்களில் தென்னிலங்கைத் தரப்பினர் ஆழமாக ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.
</p><p>
இவ்வாறு தமிழர் அரசியலில் விடைதெரியது எஞ்சி நிற்கும் பல கேள்விக்களுக்கு மத்தியில், தற்போதைய தமிழர் அரசியல் சூழல் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Btk-cgAlJ00" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T15:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவால் வலி. வடக்கை இலக்கு வைத்த வர்த்தமானி! காணி உரிமையார்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahindaval-pain-the-gazette-targeting-the-north-1788530680"></link>
            <id>https://ibctamil.com/article/mahindaval-pain-the-gazette-targeting-the-north-1788530680</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம்
ஆண்டு மகிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம்
ஆண்டு மகிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும்
என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஜான்சன் பிரிடாரோ
கோரியுள்ளார்.
</p><p>
யாழ் வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் 20 ஆவது வெள்ளிக்கிழமையான இன்றைய தினம்
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்க்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p>
மேலும் தெரிவிக்கையில் ''வலி. வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மஹிந்த அரசாங்கம்
கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.</p><p>[SKWOMVV
]</p><h2>வலி. வடக்கு பகுதி</h2><p>
</p><p>இந்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் , மக்களின் காணிகளை
விடுவிப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம் குறித்த
வர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசாங்கங்கள் போல மக்களின் காணிகளை
கையகப்படுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5235a63e-b1a3-4017-aee8-4565fa816932/26-6a9acff98de34.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான நிலையிலையே வலி. வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு
கோரி மயிலிட்டி , பலாலி மற்றும் வசாவிளான் ஆகிய மூன்று இடங்களில் போராட்டங்கள்
இடம் பெற்று வருகிறது.
</p><p>
இந்த அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து
எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது"&nbsp;என்றார்</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T15:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சி சரிந்த தருணங்களில் நாமலை நான்கு முறை இறுகப்பற்றிய கைவிலங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-handcuffs-that-bound-us-five-times-1788531912"></link>
            <id>https://ibctamil.com/article/the-handcuffs-that-bound-us-five-times-1788531912</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (செப்டம்பர் 04,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (செப்டம்பர் 04, 2026) கைது செய்யப்பட்டார்.
</p><p>
இது அவரது அரசியல் வரலாற்றில், 4 ஆவது முறை கைவிலங்கிடப்பட்ட சந்தர்ப்பமாகும்.
</p><p>
இதற்கு முன்னர் மூன்று முறை (2016-ல் இருமுறையும், 2017-ல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்ச, தற்போது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>60 மில்லியன் இலஞ்சம்</h2><p>
</p><p>
அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுப்பதோடு, இந்த வழக்குகளை அரசியல் பழிவாங்கல் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
</p><p>
சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் (ஏர்பஸ் ஏ330 மற்றும் ஏ350) விமானங்களைக் கையகப்படுத்துவதற்கான 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ராஜபக்ச இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு எழுத்துப்பூர்வமாக அழைக்கப்பட்டார்.
</p><p>
இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்ச குடும்பம் ரூ. 60 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
எந்தவொரு சுதந்திரமான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பும் முன்னிலையாகியதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 10 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
</p><p>
இதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் 2020 ஆம் ஆண்டில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கூட்டு விசாரணையில், ஏர்பஸ் (Airbus SE) நிறுவனம் உலக நாடுகளில் ஒப்பந்தங்களைப் பெற இலஞ்சம் கொடுத்தது உறுதியானது.</p><p></p><h2>100 மில்லியன் ரூபா</h2><p>

இதில் இலங்கைக்கு மட்டும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்க ஏர்பஸ் ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தின.
</p><p>
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புரூனேயில் 'Biz Solutions Inc' என்ற போலி (Shell) நிறுவனம் தொடங்கப்பட்டது.
</p><p>
இதில் ஏர்பஸ் நிறுவனம் முதற்கட்டமாக இந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கணக்கிற்கு 2 மில்லியன் டொலர்களை அனுப்பியது.

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான சிங்கப்பூர் கணக்கு (Sabre Vision Holdings) வழியாக இந்த நிதியின் ஒரு பகுதி கள்ளப்பணமாக மாற்றப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக புலனாய்வில் தெரியவந்தது.
</p><p>
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட பணத்தில், சுமார் 100 மில்லியன் ரூபாயை (சுமார் 800,000 டொலர்) நாமல் ராஜபக்ச குறிப்பிட்ட தொழிலதிபர் மூலம் பல தவணைகளாகப் பெற்றார் என்று இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான அந்த தொழிலதிபர், ஏர்பஸ் ஒப்பந்தத்தின் ஒரு தொகையை, தான் நாமல் ராஜபக்சவிடம் நேரடியாகக் ஒப்படைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>
மேலும் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு மகனான ஷாமீந்திர ராஜபக்சவின் வங்கிக் கணக்கிற்கு 2013-ல் 160,000 டொலர் மாற்றப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இந்த ஒப்பந்தக் குழுவில் இருந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமும் கடந்த மே மாதம் இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது.</p><p></p><h2>2016 ஜூலை 11&nbsp;</h2><p>
</p><p>
இந்த பின்னணியில் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட எழுத்துப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ச வாக்குமூலம் வழங்கினார். </p><p>

எனினும், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p> 


முன்னதாக நாமல் ராஜபக்ச கடந்த 2016 ஜூலை 11 அன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 ரக்பி விளையாட்டின் மேம்பாட்டிற்காக கிரிஷ் என்ற இந்திய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலத்தில் சுமார் 480,000 டொலர்) கொழும்பு கோட்டையில் கட்டப்படவிருந்த 650 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆடம்பரக் கட்டிடத் திட்டம் தொடர்பாகத் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
</p><p>
பசில் மற்றும் யோஷித ராஜபக்சவிற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட மூன்றாவது முறையாக, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். </p><p>

பின்னர் அவருக்குப் பிணை வழங்கப்பட்டு, சட்டமா அதிபர் 2025இல் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் 2016 ஆகஸ்ட் 15 அன்று FCID-யால் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார்.</p><p>

 நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய கோவர்ஸ் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, ஹெலோகார்ப் நிறுவனத்தில் ரூ. 125 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் பணச்சலவை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p>

அவர் ஆகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டது. 

மேலும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.</p><p></p><h2>2017 அக்டோபர் 10</h2><p>
</p><p>
பின்னர், 2023 நவம்பரில் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். </p><p>

மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​சட்டவிரோதமாகக் கூடியது, கடமைக்கு இடையூறு விளைவித்தது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், 2017 அக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் அவரை மூன்றாவது முறையாகக் கைது செய்தனர்.
</p><p>
இதன்படி ஹம்பாந்தோட்டை காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானகா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஒரு குழுவினருடன் அவர் அக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
அப்போது, ​​அவரது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர். </p><p>

பின்னர், 2017 ஆம் ஆண்டு எதிர்ப்பு வழக்கில் மாலைதீவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டதன் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது;

ஆனால், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையான மறுநாளே அந்தப் பிடியாணை திரும்பப் பெறப்பட்டது. </p><p>

இலங்கை சட்டக் கல்லூரியிலிருந்து சட்டத்தந்தை தகுதியைப் பெறுவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரித்து வருகிறது.</p><p>

மேலும், பணமோசடி தொடர்பான பல முறைகேடுகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மூத்த மகனும், 1986-ல் பிறந்தவருமான நாமல் , முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் (2020–2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நபராவார்.
</p><p>
தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T14:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! 14 நாட்கள் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p_7wdMoCiGk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6a77d19-8eb3-4aaf-8c18-71cde9c8e80d/26-6a9ac88753928.webp' /></p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><p> சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் நாமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை ஐபிசி தமிழ் செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><u>சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!</u></b></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149f0c1-97c9-48df-96fe-4ac0298ed075/26-6a9aa79233c9b.webp' /></p><p>
</p><p>இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04-09-2026) காலை முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில் கைது செய்யப்ட்ட நாமல்&nbsp;ராஜபக்ச, புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>அரசாங்கம் அச்சமடைந்து அடக்குமுறையின் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வதாகவும், இத்தகைய தடைகளால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8JcRUCEXLkY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அரைக்காற்சட்டையுடன் விசாரணைக்கு வந்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrives-questioning-wearing-shorts-1788526721"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrives-questioning-wearing-shorts-1788526721</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றங்கள் என்பது வெறுமனே ஆட்சியாளர்கள் மாறுவதல்ல. 

அதிகாரத்தின் மொழியும், சட்டத்தின் நடைமுறையும், அரசியல் எதிரிகளை அணுகும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றங்கள் என்பது வெறுமனே ஆட்சியாளர்கள் மாறுவதல்ல. 

அதிகாரத்தின் மொழியும், சட்டத்தின் நடைமுறையும், அரசியல் எதிரிகளை அணுகும் விதமும் மாறுகின்றனவா என்ற கேள்வியையும் அது எழுப்புகிறது.
</p><p>
நாமல் ராஜபக்ச தொடர்பான இன்றைய சட்ட நடவடிக்கையும் இத்தகைய பரந்த அரசியல் விவாதத்திற்குள் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகியுள்ளது.
</p><p>
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ச பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோதிலும், அவர் அரசியல் ரீதியாகச் சுதந்திரமாகச் செயல்பட்டார்.</p><p></p><h2>முற்றிலும் மாறிய&nbsp;அரசியல் சூழல்</h2><p> </p><p>விசாரணைகளில் சுதந்திரமாக நேரில் முன்னிலையாகினார். ஏன் அரைக்காற்சட்டையுடனும், தொப்பியுடனும் விசாரணையின் உயரிய சபைகளுக்கு இறுமாப்புடன் ஏறி,இறங்கினார்.</p><p> 

ஆனால் இன்று அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தது.
</p><p>
இதன் உச்சகட்டமாக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, வழக்கின் சட்டப்பூர்வ அம்சங்களைத் தாண்டி ஒரு முக்கியமான அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.</p><p>

 ஆட்சி மாறும்போது சட்டத்தின் அணுகுமுறையும் மாறுகிறதா?</p><p>

இந்தக் கேள்விக்கு உடனடியாக அரசியல் பதிலை வழங்க முடியாது. ஏனெனில் ஒருவரை விளக்கமறியலில் வைப்பது நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ முடிவு.
</p><p>
அதனை அரசியல் பழிவாங்கலாகவோ அல்லது முழுமையான நீதியின் வெற்றியாகவோ அறிவிப்பதற்கு முன்னர் வழக்கின் ஆதாரங்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மை ஆகியவை கவனமாக ஆராயப்பட வேண்டும்.</p><p></p><h2>இலங்கையின் அதிகார அரசியல்</h2><p>
</p><p>
ஆனால் அரசியல் ரீதியாக இந்த விவகாரம் முக்கியமானது.

ராஜபக்ச குடும்பம் நீண்டகாலமாக இலங்கையின் அதிகார அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. </p><p>

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக புதிய ஆட்சியின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, அது அரசியல் மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது இயல்பானதே. </p><p>

குறிப்பாக கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள்மீது விசாரணைகள் நடத்தப்பட்ட விதமும், இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளும் ஒப்பிடப்படத் தொடங்குகின்றன.
</p><p>
இங்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் ஒரு முக்கியமான சோதனை உள்ளது.

முன்னைய ஆட்சிகளின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்ற அரசியல் வாக்குறுதி புதிய ஆட்சியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தது.</p><p> 

எனவே, முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான வழக்குகளில் சட்டம் தனது வேலையைச் செய்ய அனுமதிப்பது மட்டுமல்லாமல், அந்தச் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலாகத் தோன்றாத வகையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது.
</p><p>
மறுபுறம், ராஜபக்ச தரப்பிற்கும் இதே அளவு முக்கியமான பொறுப்பு உள்ளது. “அரசியல் பழிவாங்கல்” என்ற வார்த்தையை மட்டும் முன்வைப்பது போதாது. 

குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியான பதிலளிப்பதும், விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதும், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதும் அவசியம்.
</p><p>
இந்த விவகாரத்தின் மையக் கேள்வி நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கை மட்டுமல்ல.
</p><p>
இலங்கையில் ஆட்சி மாறும்போது சட்டத்தின் நடைமுறை மாறுகிறதா, அல்லது ஆட்சியாளர் யார் என்ற வேறுபாடின்றி சட்டம் ஒரே அளவுகோலில் செயல்படுகிறதா?

இதற்கான பதிலே புதிய அரசாங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.</p><p></p><h2>சட்ட ரீதியான உண்மை</h2><p>
</p><p>
முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டும் ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல. 

அதே சட்டத்தை தனது அரசியல் எதிரிகளுக்கும், தனது ஆதரவாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஒரே அளவில் பயன்படுத்த முடிகிறதா என்பதே உண்மையான சோதனை.
</p><p>
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விளக்கமறியல் நடவடிக்கை இந்தப் பெரிய அரசியல் கேள்வியை மீண்டும் இலங்கை சமூகத்தின் முன் கொண்டுவந்துள்ளது. </p><p>

இது ஒரு தனிப்பட்ட வழக்காக முடிவடையுமா, அல்லது இலங்கையின் “அதிகாரத்திற்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு இன்னொரு சட்டம்” என்ற பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றும் தொடக்கமாக மாறுமா என்பதைக் காலமே தீர்மானிக்கும்.
</p><p>
இறுதியில், நீதிமன்றத்தின் தீர்ப்பே சட்ட ரீதியான உண்மையை நிர்ணயிக்க வேண்டும். 

ஆனால் அந்தத் தீர்ப்பைச் சுற்றியுள்ள அரசியல் விவாதம் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் முன்வைக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு&nbsp;பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><h2> மூன்றாம் இணைப்பு &nbsp;&nbsp;</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கொழும்பு பிரதான நீதவான்&nbsp; நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (04) CIABOC-ஆல் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h3><u>இரண்டாம் இணைப்பு&nbsp;</u></h3><p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h5>ஊழல் குற்றச்சாட்டு</h5><p>பொல்கொல்லயில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச அரங்கத்திற்கு கதிரைகளைக் கொன்வனவு செய்யும் போது உரிய கொள்முதல் நடைமுறைகளை&nbsp; மீறி செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு&nbsp;7,973,114 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f4e87d-cdf7-432b-80a4-09d270683907/26-6a9a5c900b4cc.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில்&nbsp;ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cFbuPdSSLbI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (04) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-mp-in-court-premises-in-support-of-namal-1788526016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-mp-in-court-premises-in-support-of-namal-1788526016</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் அங்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>
எனினும் ஊடகவியலாளர்கள் அவரின் வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் வழங்காது நீதிமன்றுக்குள் நுழைந்திருந்தார்.</p><p>

மேலும் அங்கு நாமலின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூடியுள்ள நிலையில் அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67faa75a-2a52-4b96-8c78-f96b7c5f1f85/26-6a9abea028af0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b359ce96-db5b-452f-9c15-3ba7a6d6e742/26-6a9abea11262d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்கு வங்கி உள்ள இடங்களுக்கு மட்டுமே அபிவிருத்தி: மட்டக்களப்பு எம்.பி.க்கள் மீது கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/epdp-urges-npp-mp-to-focus-on-batticaloa-fishermen-1788517839"></link>
            <id>https://ibctamil.com/article/epdp-urges-npp-mp-to-focus-on-batticaloa-fishermen-1788517839</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்
எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேசுவதில்லை
எனவும் இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> ஈ.பி.டி.பி.கட்சி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>
ஈழ மக்கள் ஜனநாயக ஊடக மாநாடு இன்று (04-09-2026) இடம்பெற்றது.</p><p></p><h2>அதிக கடற்றொழிலாளர்கள்</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்
எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக
பேசுவதில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6a675f-fa3d-4bbd-9e88-589224ad0eea/26-6a9ab352619cd.webp' /></p><p>இதனால் மனவேதனை அடைந்துள்ளோம், கிழக்கு மாகாணத்தில் அதிக கடற்றொழிலாளர்களை கொண்ட கடற்றொழிலாளர் சங்கமான பாலமீன்மடு,
திராய்மடு கட்றாறழிலாளர் சங்கம் இந்த சங்கம் 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதை பெற்ற
பெரிய ஒரு சங்கமாகும்.</p><p>இவ்வாறான நிலையில் பாலமீன்மடு மீன் சந்தையில் அதிகாலை 6.00 மணியிலிருந்து 7.00
மணிக்குள் 300 மீன்பிடி படகுகள் கட்றறொழிலாளர்ளுடன் தரித்து நின்று வியாபாரத்தில்
ஈடுபடும் ஒரு பிரதான தளம்</p><p></p><h2>பல தடவைகள்&nbsp;</h2><p> இந்த மீன் சந்தை கட்டிடம் இன்று இடிந்து விழும்
நிலையில் உள்ளது

இது தொடர்பாக பல தடவைகள் மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடந்த கால ஆட்சியில் அபிவிருத்தி குழு தலைவர்
என்ற போர்வையில் இருந்த இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் உட்பட
அனைவருக்கும் எழுத்து மூலமாக சங்கம் கோரிக்கையை முன்வைத்தது.</p><p>

இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கவில்லை என மன வேதனையுடன்
தெரிவிக்கின்றோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fbf8aa1-da48-421c-8c7d-c089860c39a2/26-6a9ab3533e00e.webp' /></p><p>அதேவேளை இன்று நடந்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு
கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதும் அதை முடித்து வைப்பதும் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தை பரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்.</p><p> இவர் இன்று மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்து
கொண்டிருக்கிறார், இவருக்கு எங்கெல்லாம் வாக்கு வங்கி இருக்கின்றதே அந்த பிரதேசத்தில் அவரது
அதிகாரத்தை பயன்படுத்தி துரிதமாக அபிவிருத்தி செய்து வருகிறார்.</p><p> </p><p></p><h2>குடியேற்றத் திட்டம்</h2><p>அவருக்கு
வாக்கு வங்கி இல்லாத பிரதேசங்களை அக்கறை செலுத்துவதில்லை.

இது மறைமுகமாக அவருக்கு வாக்களித்தால் உங்கள் ஊர்களை அபிவிருத்தி
செய்வார் என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கும் ஒரு திட்டமாக தான் இதை
கருதுகிறேன்.</p><p>எனவே இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற
உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d196c0a-e1cb-4cf1-be9c-52eb54cb5e76/26-6a9ab538bec91.webp' /></p><p>அதேவேளை பாலமீன்மடு 60 கடற்றொழிலாளர் குடியேற்றத் திட்டத்தில் உள்ள மக்கள் குடிநீர்,
மலசல கூடம் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதியின்றி ஓலைக்குடிசையில் நகரை அண்டி
வாழ்ந்து வருகின்றனர்.</p><p> இது தொடர்பாக இதற்கு முதல் ஊடகங்கள் ஊடாக
சுட்டிக்காட்டியிருந்தேன் இன்று வரை அரசாங்க அதிபரோ அல்லது நாடாளுமன்ற
உறுப்பினர்களோ அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>&nbsp;எனவே இந்த பாலமீன்மடு கடற்றொழிலாளர் 60 வீட்டுத்திட்ட மக்கள் பிரச்சனை, பாலமீன்மடு
மீன் சந்தை புனரமைப்பு, இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மட்டக்களப்பு பிரதான
வாவியை கடற்றொழிலாளர்களின் நலனுக்காக அகலப்படுத்தி ஆழப்படுத்தி புனரமைக்க வேண்டியது
தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி குழுவில் பேச
வேண்டியது உங்கள் கடமை” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T12:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-into-pole-at-srinagar-airport-1788522806"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-into-pole-at-srinagar-airport-1788522806</id>
            <summary type="text">இந்தியாவின் ஜம்மு காஷ்மீ - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிவந்த இண்டிகோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜம்மு காஷ்மீ - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிவந்த இண்டிகோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்துமிடத்திற்கு செல்லும் போது கம்பம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது

குறித்த கம்பம் ''Visual Docking Guidance System (VDGS) எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட கம்பமாகும்.</p><p></p><h2>அதிகாரிகள் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
எனினும் விபத்தில் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98f38e4-d69f-4389-b954-758c181a5d8f/26-6a9ab2cc9e8d0.webp' /></p><p>

நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.</p><p>ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் அவரை அழைத்திருந்தது. </p><p>

அறிக்கைகளின்படி, இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h5><u><b>குவிந்துள்ள&nbsp;ஆதரவாளர்கள்</b></u></h5><p> 

அதன்படி, அவர் சற்று நேரத்திற்கு முன்பு ஆணையத்தில் அவர் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d9c7ad-a232-47d6-96e8-76952cf3aedf/26-6a9a5d94a2616.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் சிலர்&nbsp; கூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதன்போது எமது ஐ.பி.சி ஊடகவியலாளர் நாமலிடம், ''வழமையை போல உங்களுக்கான ஆதரவாளர்கள் ஏன் வரவில்லை" என கேள்வி எழுப்பினார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய அவர், '' அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தின் காரணமாக, ஆதரவாளர்களை வரவேண்டாம் என கூறினேன்" என தெரிவித்தார் </p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CNsEHMvWGiQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81058ac8-614b-4ebb-945a-fc706377a876/26-6a9a37db30a00.webp' /></p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-jaffna-vali-north-land-release-1788520412"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-jaffna-vali-north-land-release-1788520412</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p>இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய
தினம் (04) இந்தப் போராட்டம் நடைபெற்றது.</p><p> வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த
மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
காணப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;உயர்பாதுகாப்பு வலயம்</h2><p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7980119c-15f9-405f-9bdf-c69fda3b11e7/26-6a9aa96edb86c.webp' /></p><p>
</p><p>தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள்
போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை
விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி
உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை
20ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:27:11+00:00</updated>
        </entry>
    </feed>
