<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-24T08:39:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (23) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 3,000 ரூபாயால் குறைந்து புதிய விலை 374 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
</p><p>&nbsp;22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,800 ரூபாயால் குறைந்து 344 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>இந்தநிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1096e26-12c1-4a54-8e4d-8b10790f9ecf/26-6a632373a05d6.webp' /></p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை காவல் நிலைய காவல்துறை உப பரிசோதகர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784880731"></link>
            <id>https://ibctamil.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784880731</id>
            <summary type="text">திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, களனி குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டவர் வத்தளை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>

இதேவேளை, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5afa4d1-920c-443f-b5bd-822d82838e7c/26-6a63217409151.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களைத் தேடுவதாகக் கூறி, குறித்த உப பரிசோதகர் அடங்கிய குழுவினர் அந்நபரை முறைப்படி கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அச்சுறுத்தி, மிரட்டிப் பணத்தைப் பறித்துள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உப பரிசோதகரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-07-24T08:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-update-on-chinese-nationals-clash-1784876235"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-update-on-chinese-nationals-clash-1784876235</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அந்த வகையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
காவல்துறையினரின் தகவலின்படி, மூன்று சீனக் குடிமக்கள் இரவு சுமார் 11 மணியளவில் வாடகைக் கார் ஒன்றில் வந்து கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p></p><h2>கடத்தல் சம்பவம்</h2><p>

அதன்போது, அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுமார் 20 சீன நாட்டினர் ஒரு கருப்பு வானில் வந்து இறங்கி, அங்கு இருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டி, கண்களைக் கட்டி, இரண்டு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3fcb9d-1761-4bcf-a3ef-834a26061a60/26-6a6310503a2b4.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வானுக்குள் கட்டப்பட்ட நிலையில் விடப்பட்டதாகவும், ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபர் மற்றொரு வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், பாதிக்கப்பட்ட இருவரும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டு, தங்கள் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து. அவர்கள் இந்தச் சம்பவத்தை கொழும்பு துறைமுகக் காவல்துறையினருக்கு கூறியுள்ளனர்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று மாலை, எஹெலியகொட, கரதானாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் சீன நாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.</p><h2>கொலை</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும், அவரது உடல் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ee4966-f4af-49c7-9925-2d36b66f5559/26-6a631050ea8f6.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த இரண்டு சீன நாட்டினரும், சடலமாக மீட்கப்பட்டவர் ஹாவோ சோங் என அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p>
இதன்படி, அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனத்தையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.</p><h2>ஆயுதங்கள் மீட்பு</h2><p>
இதேவேளை, பாதிக்கப்பட்ட இருவரும் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் வானுக்குள், காவல்துயைினர் ஒரு க்ளாக் 44 அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு VVK வாக்கி-டாக்கி ஆகியவற்றை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a887cf53-7e37-4b31-951f-a81c8986b8db/26-6a631051a024a.webp' /></p><p>
</p><p>
மேலும், அந்த வான் அம்பலந்தொட்டாவைச் சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாடகைக் கார் கொழும்பு 5-ஐத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டினர், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை கொடூரர்களின் பின்புலத்தை போதையில் உளறித் தள்ளிய ஒரு தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-tamil-who-exposed-the-background-of-black-july-1784876421"></link>
            <id>https://ibctamil.com/article/the-tamil-who-exposed-the-background-of-black-july-1784876421</id>
            <summary type="text">1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது திடீரென வெகுண்டெழுந்த சிங்களப் பொதுமக்களின் தன்னிச்சையான கோபம் அல்ல.

மாறாக, அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உயர் மட்ட அரசியல் தலைமைகளாலும் அரசு இயந்திரத்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இனவழிப்புப் போராகும்.</p><p>

இது காலத்தால் மறைக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டாலும் நேற்றைய(23.07.2026) நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சிறப்பு விவாதத்தில் அனுர தரப்பு எம்.பி க்களால் இந்த குற்றச்சாட்டு பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>களு ஜூலையே செகவாது துமராய</h2><p>
</p><p>
குறிப்பாக கொழும்பில் தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர், அந்த கொலைகளுக்கான உதவிகள் எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டது, இந்த அரசியல் பின்புலத்தில் இருந்த கொடூரர்கள், அதன் பின் இது எப்படி தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு பரப்பப்பட்டது என்பதெல்லாம் குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ba8b2-8104-4a41-9312-ecf146a53ed1/26-6a63171199b24.webp' /></p><p>

இந்த விடயம் அப்போது இலங்கையின் உள்நாட்டு போரை காரணம் காட்டி வெளிவராமல் சிங்கள மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டாலும், அந்த கொடூரத்தின் மறுபக்கம் 10 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவனால் உலகத்திற்கு வெளிச்சமிடப்பட்டது.
</p><p>
இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் (Victor Ivan), தனது புகழ்பெற்ற ‘ராவய’ (Ravaya) பத்திரிகையில் எழுதிய "களு ஜூலையே செகவாது துமராய" (கறுப்பு ஜூலையின் மறைக்கப்பட்ட மறுபக்கம்) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரையின் வழியே, இதன் பின்னணியில் இருந்த பேரினவாத அரசியலையும், தமிழர்கள் சந்தித்துக் குருதி சிந்திய அவலங்களையும் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.</p><p>இக்கட்டுரையின் மிக முக்கியமான திருப்புமுனை, அன்றைய கொழும்பு மேயரும், ஆளும் UNP கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கே. கணேசலிங்கம் (K. Ganeshalingam) வழங்கிய அதிர்ச்சியூட்டும் சாட்சியமாகும்.
</p><p>
விக்டர் ஐவன் நடத்திய தீவிர தேடலின் போது, "அரசாங்கம் ஏன் இந்த இனக் கலவரத்தை அனுமதித்தது? 
இதன் பின்னணியில் என்ன அரசியல் கணக்கு உள்ளது? என்று கேட்கப்பட்டபோது, கணேசலிங்கம் அந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படையாகப் உடைத்துள்ளார்.
</p><p>
' கறுப்பு ஜூலை என்பது நிறுத்த முடியாத ஒன்று. சிங்கள மக்கள் மத்தியில் உருவான இந்த நிலையை எப்படி மடை மாற்றுவது என்று எமக்கு தெரியவில்லை.
</p><p>
இந்த கலவரத்தில் என் பங்கு மட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினதும் பங்கு அமைந்திருக்கிறது.</p><p>இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.

இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.</p><p>''ஒரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகரின் (High Commissioner) இல்லத்தில் நடந்த உத்தியோகபூர்வ இரவு விருந்து ஒன்றில் விக்டர் ஐவனும், கே. கணேசலிங்கமும் பங்கேற்றுள்ளனர்.

அங்கு மது பரிமாறப்பட்டிருந்த நிலையில், கணேசலிங்கம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு முழுமையான மதுபோதைநிலையில் இருந்துள்ளார்.
</p><p>
அப்போது விக்டர் ஐவன் அவரிடம், 1981 இல் யாழ் நூலகத்தை எரிப்பதற்கு நீங்களும் (அமைச்சர்) சிறில் மத்தியூ போன்றோருடன் உடந்தையாக இருந்தீர்கள் தானே?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p>
மதுபோதையில் இருந்த கே. கணேசலிங்கம் எவ்வித தயக்கமும் இன்றி, "அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் (கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு) போயிருந்தோம் என்பது உண்மை..." என்று உளறி ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசின் உயர்மட்டத்தினரே திட்டமிட்டு கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை ஏவவும் கொழும்பில் இருந்து குண்டர்களையும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தனர் என்ற கசப்பான உண்மையை ஒரு தமிழ் அரசியல்வாதியே போதையில் உறுதிப்படுத்திய நிகழ்வு இதுவாகும்.</p><p></p><h2>யாழ் நூலக எரிப்பு</h2><p>
</p><p>கணேசலிங்கம் போதையில் பேசியது 1981 யாழ் நூலக எரிப்புப் பற்றி என்றாலும், 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் பின்னணியிலும் இதே கே. கணேசலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இணைந்து வன்முறையாளர்களுக்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் விக்டர் ஐவன் தனது பத்தி எழுத்துக்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2789cdc1-8fd3-4cbc-959a-a5b92327eaa2/26-6a6317124ca16.webp' /></p><p>
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.
</p><p>
இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
</p><p>
இதன்போது சூதாகரித்துக்கொண்ட அவர் அமைதியாக இருந்ததாகவும், ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் உளறிக்கொட்டிய சந்தர்ப்பமாக இது அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதுபற்றி எக்காலமும் வாய் தீர்க்க கூடாது என பத்திரிகையாளர் விக்டருக்கு அழுத்தம் மிகு கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த சந்திப்பு நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 10ஆவது கருப்பு ஜூலை நினைவு நாளில் இந்த உண்மைகள் அனைத்தையும் விக்டர் ஐவன் பத்திரிகையில் இந்த விடயங்கள் அனைத்தையும் 'களு ஜூலையே செகவாது துமராய'' என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அன்றைய காலகட்டத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான UNP அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளாலும், அரசியல் அடக்குமுறைகளாலும் சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிருப்தியும் கொந்தளிப்பும் நிலவியது. </p><p>

இந்த மக்கள் கோபம் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய உள்நாட்டுக் கிளர்ச்சியாக வெடிக்கலாம் என UNP தலைமை அஞ்சியது. </p><p>

எனவே, தங்கள் ஆட்சிக்கு வரவிருந்த பேராபத்தைத் தடுப்பதற்காகவும், சிங்கள மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காகவும், தமிழர்களைப் பலிகடாவாக்கி இந்த வன்முறையை UNP அரசாங்கமே திட்டமிட்டுத் தூண்டிவிட்டது.
</p><p>
இந்த வாக்குமூலத்தின் மூலம், 'களு ஜூலை' என்பது ஒரு சமூகக் கலவரம் அல்ல, UNP அரசு தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நடத்திய திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.</p><p></p><p>
</p><h2>தயார் செய்யப்பட்ட படுகொலைச் சதி</h2><p>வன்முறையாளர்கள் வீதிக்கு வருவதற்கு முன்பே, தாக்குதலுக்கான தயாரிப்புகள் அரசிடமிருந்து துல்லியமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதை விக்டர் ஐவன் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார்:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fd2e6c-d9a5-415f-8f88-acf2fe759579/26-6a631712f40ce.webp' /></p><p>
</p><p><b>
1. வாக்காளர் பட்டியல்களின் துஷ்பிரயோகம்</b></p><p>
கலவரக்காரர்கள் கைகளில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல்கள் (Voters' List) இருந்தன. 

எந்த வீடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள், எந்த வர்த்தக நிறுவனங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதை அரச அதிகாரிகளின் உதவியோடு பட்டியலிட்டு, துல்லியமாகத் தாக்கி அழித்தனர்.</p><p><b>

2. அரச பேருந்துகளும் எரிபொருளும்
</b></p><p>தாக்குதல் நடத்தும் கும்பல்கள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைந்து செல்ல அரசப் போக்குவரத்துச் சபையின் (CTB) பேருந்துகள் வழங்கப்பட்டன. 

வீடுகளையும் கடைகளையும் எரிக்கத் தேவையான எரிபொருட்கள் அரசாங்கக் கிடங்குகளில் இருந்தே விநியோகிக்கப்பட்டன.
</p><p><b>
3. தமிழர் பொருளாதாரத்தை வேரறுத்தல்:
</b></p><p>கொழும்பு, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்த தமிழர்களின் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தியகங்கள், மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் எரிக்கப்பட்டு, தமிழர்களின் பல தசாப்த காலப் பொருளாதார பலம் ஒரே வாரத்தில் சாம்பலாக்கப்பட்டது.</p><p></p><h2>எப்படியெல்லாம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்</h2><p>1983 ஜூலை 24 இரவு தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக தென்னிலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள், மனிதநேயத்தின் மீதான மாறாத வடுக்களாகும்:

வீதிகளிலும் சந்திப்புகளிலும் வாகனங்கள் மறிக்கப்பட்டன. உள்ளே இருப்பவர்கள் தமிழர்களா என்பதைக் கண்டறிய வன்முறையாளர்கள் கொடூரமான நுட்பங்களைக் கையாண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/128076e4-0ad9-4a38-a923-2c0aaae5619d/26-6a631713a64ce.webp' /></p><p>

 'சிங்களப் பத்திரிகைகளை வாசிக்கச் சொல்வது', சிங்கள மொழியில் சில கடினமான வார்த்தைகளை (எ.கா: ‘பாளம’ - பாலத்தைக் குறிக்கும் சொல்) உச்சரிக்கச் சொல்வது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
</p><p>
உச்சரிப்பில் தமிழ் அடையாளம் தெரிந்த கணமே, அவர்கள் பயணித்த பேருந்துகள், கார்களோடு சேர்த்தே பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

சொந்த வீடுகளுக்குள் புகுந்த கும்பல்கள், வீடுகளைச் சூறையாடி தீயிட்டன. </p><p>தாய்மார்களின் கண்முன்னே கைக்குழந்தைகள் தீயில் தூக்கி வீசப்பட்ட கொடூரங்களும், பெண்கள் வீதிகளில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

மேலும் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய அதிபாதுகாப்பு வெலிக்கடைச் சிறைச்சாலை, குருதி சிந்தும் கசாப்புக் கடையாக மாறியது. </p><p>

சிறையிலிருந்த சிங்களக் கைதிகள் ஆயுதங்களோடு ஏவிவிடப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தங்கத்துரை, குட்டாமணி, ஜெகநாதன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் இரும்புத் தடிகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் குத்திக் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>

குட்டாமணி சிறையிலும்கூட "தமிழீழம் அமையும் வரை என் கண்களைத் தமிழ் மக்களுக்குத் தானமாகக் கொடுங்கள்" என்று கூறியிருந்தார். 

அதற்காகவே வன்முறையாளர்கள் அவரின் கண்களைத் தோண்டி எடுத்து கொடூரமாக விளையாடியதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.</p><p></p><h2>அரசு இயந்திரத்தின் அமைதி</h2><p> வன்முறை கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையும் இராணுவமும் வேடிக்கை பார்த்தன.

பல இடங்களில் வன்முறையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510095be-a0ed-4df6-bda2-6c5e450ff19e/26-6a63171457f3e.webp' /></p><p>

ஜூலை 28 அன்று, வன்முறை உச்சத்திலிருந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தொலைக்காட்சியில் தோன்றினார். 

ஆனால், அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ, வன்முறையைக் கண்டிக்கவோ இல்லை. </p><p>மாறாக, "சிங்கள மக்களின் தேசிய உணர்வுகளுக்குத் தமிழர்கள் சவால் விட்டதால் வந்த விளைவே இது" என்று கூறி, வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் பேசினார்.</p><p>

 இது வன்முறையாளர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.

3,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். (அரசின் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகள் இதைவிட அதிகம்).
</p><p>
ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

கொழும்புத் துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் தமிழர்கள் கால்நடைகளைப் போல ஏற்றப்பட்டு, வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
</p><p>
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தங்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்க இக்கறுப்பு ஜூலையே பிரதான காரணியாக அமைந்தது.
</p><p>
இந்த பல கொடூரங்களை உள்ளடக்கி விக்டர் ஐவன் தனது "களு ஜூலையே செகவாது துமராய" கட்டுரையின் வழியே வெளிக்கொணர்ந்த உண்மைகளும், UNP தலைவர் கே. கணேசலிங்கத்தின் அதிர்ச்சி வாக்குமூலமும், 'கறுப்பு ஜூலை' என்பது தன்னிச்சையான இனக் கலவரம் அல்ல.</p><p>

மாறாக, அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பேரினவாத இனப்படுகொலை என்பதை நிரூபிக்கின்றன.
</p><p>
தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வரலாற்றுத் துயரமும், அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளும், நீதிக்கான போராட்டத்தில் என்றும் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாற்றுச் சாட்சியங்களாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/penalty-imposed-on-bus-has-route-permit-from-ntc-1784878032"></link>
            <id>https://ibctamil.com/article/penalty-imposed-on-bus-has-route-permit-from-ntc-1784878032</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என
அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p> அத்துடன்,
அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபாய் தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;பயணச்சீட்டு&nbsp;வழங்கப்பட்டிருக்கவில்லை</h2><p>இதற்கமைவாக, மன்னார் - கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட
பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e70e87-b5c5-4771-9318-f167bd2c74e6/26-6a631dbe89fb4.webp' /></p><p>இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக்
கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும்
வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. </p><p>இக்குற்றச்சாட்டுகள்
தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்
அறிவிக்கப்பட்டது. </p><p>இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000
ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து
ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும்
தீவிரப்படுத்தப்படும். </p><p>அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள்
தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக்
கிடைக்கப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36dfc97c-b59d-4641-b9bc-029873fb4f09/26-6a631dbdd068b.webp' /></p><p> </p><p>குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத
நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள்
மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள்
தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது
மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான
தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது
முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும்'' என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p><b><i></i></b></p><p><b><i>செய்தி&nbsp; - பு.கஜிந்தன், த.பிரதீபன்</i></b>&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! நடக்கும் மோசடி: பணத்தை மீளப் பெறுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-central-bank-warns-on-illegal-plantation-1784868838"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-central-bank-warns-on-illegal-plantation-1784868838</id>
            <summary type="text">அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் முறைசாரா தோட்டத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளதுஇலங்கையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் முறைசாரா தோட்டத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது</p><p>இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p></p><h2>நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பணம்&nbsp;</h2><p>பயிர்ச்செய்கை நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அதிகரித்து வருகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வை பிரிவினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c4a9d-4ac6-4122-b2da-3d45dbe57c7a/26-6a630708889ae.webp' /></p><p>

யாராவது ஒருவர் மக்களிடம் பணம் கேட்டு, ஏதாவது பயிர்ச்செய்கைத் திட்டத்தை மேற்கொண்டு மாதாந்தம் ஒரு தொகையையோ அல்லது இறுதியில் ஒரு பெரிய தொகையையோ தருவதாகக் கூறினால், அது வெளிப்படையாக மக்களின் வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதாகும். </p><p>அது சட்டவிரோதமானது.

அது தொடர்பில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்ததும், நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்து, அதற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.</p><p>

பயிர்ச்செய்கைத் திட்டங்களைச் செய்வது நல்லது. அது எவருடைய சொந்தப் பணத்தில் செய்யப்பட்டு வளர்ச்சியடைகிறது என்றால் அதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.</p><p></p><h2>இறுதியில் பெரிய பணம்&nbsp;</h2><p>அந்தத் திட்டங்கள் மூலம் பணம் ஈட்டி, மேலும் பல திட்டங்களை, சுப்பர் மார்க்கெட்கள் போன்றவற்றை ஆரம்பித்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்கள் மக்களிடம் சென்று இவற்றில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் மாதாந்தம் பணம் தருகிறோம், இறுதியில் பெரிய பணம் தருகிறோம் கூறினால் அதில் சிக்கல் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f35fec1-52ca-4e81-ba91-d817b8bb03b2/26-6a63070939918.webp' /></p><p>எனவே, இவ்வாறானவர்கள் மக்களிடம் பணம் கேட்டால், அது ஒருவித அதிகாரப்பூர்வமற்ற முறையில் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
</p><p>
எனவே, குறிப்பாக இவ்வாறான விடயங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

ஏற்கனவே பணம் வழங்கியவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின், முதலீடு செய்த பணத்தை உடனடியாக மீளக் கோருவதே சிறந்த வழியாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் வரித்திட்டம்: மகிந்த சமரசிங்கவின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-samarasinghe-s-post-reduction-customs-1784873999"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-samarasinghe-s-post-reduction-customs-1784873999</id>
            <summary type="text">இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் கூடுதல் சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகள் மகிந்த சமரசிங்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் கூடுதல் சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகள் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இது தொடர்பில் மேலும் விளக்கப்படுத்தி உள்ள அவர்,</p><p></p><h3>சுங்க வரி குறைப்பின் மஹிந்த சமரசிங்க கருத்து</h3><p>'அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள், ஜனாதிபதியின் சரியான நேரத்திலான நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் காரணமாக இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6148d844-e8ee-473f-84b8-c35595a060e1/26-6a630e0f31e9a.webp' /></p><p>இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் கடின உழைப்பு, தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
</p><p>
இந்தக் குழுவில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக செயலாளர் விமலேந்திரராஜா, பிரதம பொருளாதார ஆலோசகரும் முதலீட்டு சபை&nbsp; தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகள் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.&nbsp;</p><p>மேலும், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், தகவல் சேகரிப்பு, ஆலோசனைகள் மற்றும் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகளும் இந்த சாதகமான முடிவுக்கு பங்களித்தன.
</p><p>
தனது நீண்டகால தூதுவர் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், இந்த வெற்றியில் இலங்கை எதிர்காலத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

இந்த சாதகமான நிலையை தொடர்ந்து பேணுவதற்கு மேலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. </p><p>எனவே, நாம் தொடர்ந்தும் விழிப்புடன் செயல்பட வேண்டும்'. என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-s-body-found-in-a-house-in-gampaha-1784875444"></link>
            <id>https://ibctamil.com/article/man-s-body-found-in-a-house-in-gampaha-1784875444</id>
            <summary type="text">வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>கம்பஹா காவல்நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p>

உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfdffa2-754b-4814-984c-ce1e831e674a/26-6a630a673ad12.webp' /></p><p>சடலத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நபரின் மரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillaiyaan-remanded-again-1784874858"></link>
            <id>https://ibctamil.com/article/pillaiyaan-remanded-again-1784874858</id>
            <summary type="text">பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைதக்கப்பட்டுள்ள பிள்ளையானை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைதக்கப்பட்டுள்ள பிள்ளையானை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p>சந்தேகநபர் இன்று (24) இணையவழி ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது நீதவான் ஏ. தர்ஷினி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் அடிப்படையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொலைகள்</h2><p> 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு, கல்லடி முருகன் கோவிலுக்கு அருகில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவரைச் சுட்டுக்கொன்றமை, அதே ஆண்டு மே 22ஆம் திகதி இருவரைக் சுட்டுக்கொன்றமை மற்றும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வவுனியாவில் ஆயுதமேந்திய குழுவினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c033c545-fd21-40c7-a065-84327584e6e1/26-6a6313441cda5.webp' /></p><p>
</p><p>
குறித்த சம்பவங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சான்றுகளைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T07:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாதம் 30, 31ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள் இடைநிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/employees-provident-fund-services-suspended-1784874805"></link>
            <id>https://ibctamil.com/article/employees-provident-fund-services-suspended-1784874805</id>
            <summary type="text">எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் நேற்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவு</h2><p>அந்த அறிக்கையில், இத் தற்காலிக சேவை இடைநிறுத்தமானது தொழிற்திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களுக்கும் பொருந்தும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69dd7924-49b8-4196-97e3-1d18c3e30060/26-6a630e995684b.webp' /></p><p>
இதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படமாட்டாது.</p><p>
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய பிடியாணை - நாடாளுமன்றத்தில் அமளி துமளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warrant-issued-against-jaffna-mp-archchuna-1784876160"></link>
            <id>https://ibctamil.com/article/warrant-issued-against-jaffna-mp-archchuna-1784876160</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.யாழ்ப்பாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.</p><p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்தது.</p><p>கோட்டை காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசமான முன்னுதாரணம்&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85ca4fd-b916-43cb-9502-404e61e2bd88/26-6a630ea2e25d5.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் விவாதமொன்றில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடினார்.</p><p>இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் தவிர அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T07:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட செயலக பழைய கட்டடம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protect-jaffna-old-district-secretariat-building-1784872100"></link>
            <id>https://ibctamil.com/article/protect-jaffna-old-district-secretariat-building-1784872100</id>
            <summary type="text">தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிகளுக்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p>குறித்த புராதனக் கட்டடத்தை பார்வையிட்டதுடன், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலைப் பெறுமதிகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள், புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.</p><p></p><h2>ஆலோசனை வழிகாட்டுதல்</h2><p>
</p><p>
மேலும், குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee821b9-751f-4798-afec-540ad04e6f81/26-6a63055fb4101.webp' /></p><p>
</p><p>
இக் களவிஜயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162"></link>
            <id>https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162</id>
            <summary type="text">புதிய இணைப்புநீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் ஆரம...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்து வருகின்றார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பிலான தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றத் தவறியமை காரணமாகவே நீதியமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07aa2b0-3a6b-4263-9438-0898222c2d07/26-6a6308e149133.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(24.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்&nbsp;</h2><p> </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede2174c-ebb1-4244-9aee-db25a08c3959/26-6a62f8ee67ef7.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று முன்தினம் (22) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையின்போது, தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7w3j8717jt0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-arrest-sparks-international-sensation-1784869729"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-arrest-sparks-international-sensation-1784869729</id>
            <summary type="text">சர்வதேச மன்னிப்பு சபையின்&amp;nbsp; ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மன்னிப்பு சபையின்&nbsp; ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த குற்றங்களை மேற்கோள்காட்டி இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.&nbsp;</p><p>சமீபத்தில் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவைக் கைது செய்து காவலில் வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.</p><p></p><h2>நெதன்யாகு எதிரான பிடியாணை</h2><p>இந்நிலையில் இதனைத்தொடர்ந்து வந்துள்ள எரிக்கா குவேராவின் அறிக்கை, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d36f15-a3e0-4376-bb1b-60a2d74c05b7/26-6a630081ef88f.webp' /></p><p>

2024-ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரின்போது போர்க்குற்றங்களைச் செய்ததாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு பூட்டு - டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் எதிராலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385"></link>
            <id>https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385</id>
            <summary type="text">சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி&nbsp;விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e65934-3c55-416b-b1a9-0486ef5dfc1b/26-6a630264c803e.webp' /></p><p>நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தடியடிக்குப் பின்னர், அங்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற&nbsp;நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் திணறும் டெல்லி - நள்ளிரவில் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129"></link>
            <id>https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129</id>
            <summary type="text">பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>குறித்த காணொளியில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல.</p><p></p><p> </p><h2>பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனை</h2><p>இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! <a href="https://t.co/NRysBukk5U">pic.twitter.com/NRysBukk5U</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080357811662492096?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும். அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம்.</p><p> இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது.</p><h2>கடுமையான தண்டனை</h2><p> எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00bc1f2-4dd2-49aa-9325-70dc452f935f/26-6a62e11cd7147.webp' /></p><p> 

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.</p><p> வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தை கடத்த டக்ளஸ் தேவானந்தா போட்ட திட்டம் : வெலிக்கடை சிறை அனுபவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784869953"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784869953</id>
            <summary type="text"> 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறித்த விமானத்தைக் கடத்துவதற்கு தான் திட்டமிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற கலவரத்தின் போது தமிழ் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட காலத்தில் அங்கிருந்த கைதிகளில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்.</p><p>
இந்தநிலையில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

1983 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
</p><p>
யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பிற்கு தான் எங்களை கொண்டு போவார்கள் என்று தெரியும்.

வெலிக்கடையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு விமானத்தில் ஏற்றிய போது விமானத்தைக் கடத்துவோம் என்ற எண்ணம் வந்தது. </p><p> விமானத்தைக் கடத்தி இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என நினைத்தேன். அந்த நேரம் சக கைதிகள் இதனை விரும்பவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கைவிட்டேன்.</p><p>
</p><p>
பின்னர் விமான நிலையத்தில் இறங்கி சிறைச்சாலைக்கு கொண்டு வரும் நேரத்தில் இடையில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். எனினும் நான் தப்பினால் மற்றவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தேன்.</p><p>

நாங்கள் சிலர் தப்பியோடாமல் பெருமளவானோர் தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிறைச்சாலைக்குள் சென்றோம்.

கூட்டு முயற்சியின் பயனாக ஒன்றரை மாதங்களுக்குள் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டது.” என தெரிவித்தார்.</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_u3PpAPiRaY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><br><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகப் பிடியாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-arrest-warrant-was-issued-against-mp-arjuna-1784868846"></link>
            <id>https://ibctamil.com/article/an-arrest-warrant-was-issued-against-mp-arjuna-1784868846</id>
            <summary type="text">யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;அர்ச்சுனா ராமநாதனுக்கு&amp;nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;அர்ச்சுனா ராமநாதனுக்கு&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கோட்டை காவல் அதிகாரிகளின் கடமையைத் தடுத்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>மேலும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணைத்தாரர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9499b9b8-de91-4654-8f98-5f4d2282482d/26-6a62fb33d7614.webp' /></p><p>

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் அடங்கிய மழலையில் உயிர் - இதுவே தீர்வு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-jaf-uni-students-union-1784868173"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-jaf-uni-students-union-1784868173</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது.
ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண
பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது.
ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன்
தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் இடம்பெற்ற
போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கண்ணதாசன் சுடரோன் இதனை தெரிவித்துள்ளார். </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான
நீதி கிடைக்கவில்லை.</p><p></p><p> </p><h2>அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறை</h2><p>இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம்
சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும்
வகையிலேயே அமைகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92965557-f4ec-4250-a78e-61097d02b32f/26-6a62f2c475ede.webp' /></p><p>அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான
தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. </p><p>ஒரு முறையான சர்வதேச பொறிமுறை
ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.

2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய
ஒன்றகயத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது
நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது.</p><p></p><p> </p><h2>பயங்கரவாத தடைச் சட்டம்</h2><p>ஆனால்
இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள்
நீக்கப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73eda22a-082c-49ec-aaed-3484e77869a2/26-6a62f2c3bd4ae.webp' /></p><p>
இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட
மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே
பார்க்கப்படுகிறது. </p><p>அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில்
இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக்
கேட்காது. </p><p>எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும்
என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-were-not-buried-legally-at-siththupaththi-1784863705"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-were-not-buried-legally-at-siththupaththi-1784863705</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில்&amp;nbsp;வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில்&nbsp;வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை எனவும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 41 ஆவது நாளான நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 

இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்படும்.</p><p></p><h2>சவப்பெட்டிகளோடு காணப்பட்டது</h2><p>

ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது இது ஒரு குற்றம் நடந்தது, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது. 

இது சம்பந்தமாக அறிக்கைகள் வந்த பிற்பாடுதான். அது தொடர்பில் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c4080a-9409-4ad0-b70e-9ad7af3a145d/26-6a62e09eddfea.webp' /></p><p>இங்கு மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு, சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனை சான்றுகளும் காணப்பட்டன. </p><p>ஆனால் அவைகள் இங்கு புதைக்கப்பட்டதற்கு இந்த இந்து மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை.

அதேநேரம் வைத்தியசாலையை அணுகிய போது, அவர்களும் இந்த இந்து மயானத்தில் சடலங்களை புதைக்கவில்லை என்றும், தாங்கள் கோம்பயன்மணல் மயானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள்.</p><p> 

எனவே செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கைகள் வந்த பின்னரே தெளிவாக கூற முடியும் என“ தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கு கொடுப்போம் - யாழில் புத்தசாசன அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/building-viharas-in-the-north-east-area-1784860400"></link>
            <id>https://ibctamil.com/article/building-viharas-in-the-north-east-area-1784860400</id>
            <summary type="text">மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறோம்&nbsp;என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.</p><p>மிக விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச்
செல்வோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தையிட்டி
திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில், அரசாங்கம் தற்போது விரிவான
பேச்சுவார்த்தைகளை நடத்தி பெரிய அளவிலான பணிகளை மேற்கொண்டுள்ளது.&nbsp;அனைத்துத் தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, நீதி அமைச்சர், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நான், ஆளுநர், மாவட்டச்
செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்
பாராளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b99688-308e-4913-8ece-058d1301a90e/26-6a62d9c5b0a45.webp' /></p><p>அத்துடன் அப்பகுதியின் காணி உரிமையாளர்களான
மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம்.</p><p>

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி
அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் தையிட்டி
பகுதிக்குச் சென்றனர். </p><p>ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை
முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.

எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி
உரிமையாளர்களான எமது அன்பிற்குரிய மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்பதே.</p><p>

அதேநேரம், 1972-ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மக்களுக்குச் சொந்தமான காணி</h2><p> </p><p>விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும்
தெளிவான புரிதலோடு இருக்கிறார். அப்பகுதி மக்களோடு இணைந்து, மிகவும்
நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மதக் குருவாக அவர் உள்ளார்.</p><p>

நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. மக்களுக்குச் சொந்தமான
நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக்
கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். </p><p>மிக
விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம். இன்று
காலையும் இது குறித்து எமது அமைச்சின் செயலாளருடன் விவாதித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/225b3e65-7ff8-45ea-8220-2a7abed25cea/26-6a62d9c6820a3.webp' /></p><p>

எனவே, மக்களுக்குச் சொந்தமான காணி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்,
விகாரைக்குரிய காணி விகாரைக்குக் கிடைக்க வேண்டும். இரு தரப்பினரிடையேயும்
உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது.</p><p>அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல
அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம்
சித்தரிக்கப்படுகிறது.
</p><p>
அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும்
விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம்
ஒப்படைப்பதே எமது திட்டமாகும் - என்றார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DeLQMkPynLE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக் - அதிர்ச்சியில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-impose-new-global-tariffs-including-sl-1784856673"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-impose-new-global-tariffs-including-sl-1784856673</id>
            <summary type="text">அமெரிக்கா, இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.</p><p></p><p> </p><h2>ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதி</h2><p>

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befe03c3-1c45-45d6-a724-f9b2e80c59f9/26-6a62d3fe20a36.webp' /></p><p> 

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது. </p><p>

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர" வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. </p><p>

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:03:28+00:00</updated>
        </entry>
    </feed>
