<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-31T23:35:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பேரிடி! மீண்டும் பாரிய தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா - இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-israel-preparing-major-strikes-on-iran-1785537738"></link>
            <id>https://ibctamil.com/article/us-israel-preparing-major-strikes-on-iran-1785537738</id>
            <summary type="text">
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயத்தமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயத்தமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் வரும் வார இறுதியில் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
</p><p>
பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த கவலைகள் காரணமாக, திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறப்பதற்குள் இந்த தாக்குதல்களை முடித்துவிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் உறுதியான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.</p><p></p><h2>ட்ரம்பின்&nbsp;இறுதி ஒப்புதல்</h2><p>
</p><p>
இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்பட்டு, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தாலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547a3b60-f0e4-4ad0-8632-c2f603c94181/26-6a6d291c7401d.webp' /></p><p><i>Image Credit: Tablet Magazine</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், முழுவீச்சிலான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஈரான் மீதான தாக்குதலில் இணையுமாறு தங்களிடம் கேட்கப்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T23:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் விமான நிறுவனத்திற்கு முகவராக செயற்பட்ட இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-sanction-indian-company-agent-for-iran-airlines-1785534434"></link>
            <id>https://ibctamil.com/article/us-sanction-indian-company-agent-for-iran-airlines-1785534434</id>
            <summary type="text">ஈரானின் மகான் ஏர் (Mahan Air) விமான நிறுவனத்திற்கு விற்பனை முகவர்களாகப் பணியாற்றி வந்த இந்திய நிறுவனம் உட்பட 6 நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் மகான் ஏர் (Mahan Air) விமான நிறுவனத்திற்கு விற்பனை முகவர்களாகப் பணியாற்றி வந்த இந்திய நிறுவனம் உட்பட 6 நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
</p><p>
ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குத் தேவையான படைவீரர்களை ஏற்றிச் செல்வது மற்றும் ஆயுதங்களைக் கடத்துவது போன்ற செயல்களுக்குத் தனது பயணிகள் விமானங்களை மகான் ஏர் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன் அடிப்படையில், இந்தியாவில் மகான் ஏர் நிறுவனத்தின் முகவராகச் செயல்பட்டு வந்த டெல்லி மற்றும் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ஸ்கீஸ் டிராவல்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64d94a6-2462-4b2f-a671-54c6a91dc191/26-6a6d1dd731d1a.webp' /></p><p><i>Image Credit: Bloomberg.com</i></p><p> </p><p>

இந்நிறுவனம் 2020-ஆம் ஆண்டு முதல் ஈரானிய நிறுவனத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருவதாகத் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் விங்ஸ் மற்றும் ஷாங்காய் எலைட் இன்டர்நேஷனல், ரஷ்யாவின் ஏர் கார்கோ ஆகிய நிறுவனங்கள் மீதும், ஷாங்காய் விங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் டாங் ஷின்னுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
</p><p>
இது தொடர்பாக அமெரிக்க திறைசேரி விடுத்துள்ள அறிக்கையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கோ அல்லது மகான் ஏர் நிறுவனத்திற்கோ நிதி, தளவாடம் மற்றும் வணிக ரீதியாக உதவி செய்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்குத் துணைபுரிபவர்களாகவே கருதப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360f72bc-8238-483c-a4ae-8726d7b4ef4f/26-6a6d1dd8063f3.webp' /></p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T22:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933"></link>
            <id>https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933</id>
            <summary type="text">
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அது குறித்து தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் யாராவது அவற்றை உருவாக்க அனுமதிப்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​​</p><p></p><h2>உக்ரைனுக்கு உரிமம்</h2><p>ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் வகையில் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை தயாரிக்க உக்ரைனுக்கு உரிமம் வழங்கப் போவதாக அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334c5e57-9705-4581-9a20-7df1b1369e0f/26-6a6d0b47ac5e8.webp' /></p><p> 

இந்நிலையில், குறித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பகிர்வது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கடினமான விடயம்</h2><p>

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த வகையான தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுப்பது ஒரு கடினமான விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be29eaf-4451-4b14-827a-b628603a10d7/26-6a6d0b488689e.webp' /></p><p><i>Image Credit: PBS</i></p><p> 

இது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரிடம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருநாள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்," என்று கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T21:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269"></link>
            <id>https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269</id>
            <summary type="text">

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே நல்ல செய்தி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிரியா, ஜோர்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கான தனது சமீபத்திய பயணங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தால் இனி மற்றொரு போரைத் தாங்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இதன்படி, மத்திய கிழக்கின் அனைத்து முனைகளிலும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை குட்டெரெஸ் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்</h2><p>
</p><p>
மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6f2f9b-b640-4a0c-8dac-cff80c78c3e8/26-6a6d001e58f9f.webp' /></p><p>

இந்த இலக்குகளைச் செயல்படுத்துவதற்கான வழிவரைபடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவித கேள்விகளோ, சந்தேகங்களோ அல்லது அதைச் சீர்குலைக்கும் முயற்சிகளோ இன்றி அந்த வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T20:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349</id>
            <summary type="text">

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்குவோம் என்றும், தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்களே இறங்கி வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோதல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது.</p><p></p><h2>தீவிர&nbsp;தாக்குதல்</h2><p>
</p><p>
இந்நிலையில், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9ca6b2-cd74-47f9-88a1-e0c6ac0922e2/26-6a6cfa048a927.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p> </p><p>

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, புதன்கிழமை இரவு மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமை புதிதாக எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.</p><h2>குறையும் ட்ரம்பின் அமெரிக்க ஆதரவு</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான இந்தப் போர் அமெரிக்க மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வருவதாக சர்வதேச வட்டராங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dddaca8c-480e-4177-81d2-f260861043e6/26-6a6cfa057616f.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Spectrum News</i></p><p>

அந்தவகையில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் குறித்த போர் ஏற்படுத்தியுள்ளதால், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு 28 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T19:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சி! வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773"></link>
            <id>https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773</id>
            <summary type="text">
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி</h2><p>இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f277c650-e4b4-4e18-8f7c-224e8b77df57/26-6a6ced9ddb29e.webp' /></p><p>இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.</p><p>

​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.&nbsp;</p><p>

அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீகச் சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T18:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராறில் படுகொலை செய்யப்பட்ட 11 பொதுமக்கள்! 37 வது நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/37th-commemoration-of-the-peraru-massacre-1785521348"></link>
            <id>https://ibctamil.com/article/37th-commemoration-of-the-peraru-massacre-1785521348</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச்
சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச்
சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.</p><p>

1990.07.31 அன்று இடம்பெற்ற இவ் படுகொலைச் சம்பவத்தில் 11 பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

இப் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.</p><p>

இந்த நிலையில், குறித்த படுகொலையை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால்
விளக்கேற்றி, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, அஞ்சலியும்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T18:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-information-tamil-nadu-manoharan-death-1785519717"></link>
            <id>https://ibctamil.com/article/new-information-tamil-nadu-manoharan-death-1785519717</id>
            <summary type="text">2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
</p><p>
தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பதியைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவர் ஆவார்.
</p><p>
2008 நவம்பர் 13 அன்று, அவரது வீட்டில் புகுந்த ஆயுதக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து, பின்னர் 2009 ஜனவரி 14 அன்று உயிரிழந்தார்.
</p><p>
கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் படுகொலைக்கு பிள்ளையான் தலைமையிலான TMVP அமைப்பே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டது.</p><p>ஆனால், அண்மைய சாட்சியங்களின் அடிப்படையில், இந்தப் படுகொலை காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
</p><p>
இந்த கொலைக்கு ஆரியம்பதி மற்றும் காத்தான்குடி ஆகிய இரு பிரதேசங்களுக்கு இடையே நிலவிய நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் மற்றும் மனோகரன் இதற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்த வகையில் இந்த படுகொலை தொடர்பில் வெளிவரதாக பல மர்மங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UaGkXMiTPO0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T17:49:52+00:00</updated>
        </entry>
    </feed>
