<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-20T11:49:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-in-china-8-dead-34-people-missing-1784542552"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-in-china-8-dead-34-people-missing-1784542552</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>கடந்த 17-ம் திகதி சீனாவின் தென்மேற்கில் சொங்சிங் (Chongqing) பெங்ஷி நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.&nbsp;</p><p>கனமழையின் போது ஏற்பட்ட இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து மூன்று நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 34 பேரை தேடும் பணிக்கு தடையாக இருந்த பெரிய பாறைகளை அகற்ற, மீட்புக் குழுவினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தகர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p> </p><h2>சீனாவின் பயங்கர நிலச்சரிவு</h2><p> இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவ இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரை குடிநீர், மின்சாரம், எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலச்சரிவில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ளதுடன் மக்களும் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509515ec-8713-4d72-9246-11acaa923d74/26-6a5e01ae5a8b0.webp' /></p><p>நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளுக்காக 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-heat-warning-in-five-districts-in-sri-lanka-1784545336"></link>
            <id>https://ibctamil.com/article/severe-heat-warning-in-five-districts-in-sri-lanka-1784545336</id>
            <summary type="text">நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் "கவனம் செலுத்த வேண்டிய"மட்டத்திற்கு அதிகரிக்கும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdeebf61-e7a9-4975-8099-a188c6100abe/26-6a5e021ade002.webp' /></p><p>அதற்கமைய போதுமான அளவு தண்ணீர் குடித்தல், நாளின் வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கவனத்தின் மையமாக சி.டி. விக்ரமரத்னவில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-investigation-c-t-wickramaratne-1784543553"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-investigation-c-t-wickramaratne-1784543553</id>
            <summary type="text">2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்ல என்று அப்போதைய காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன ஒகஸ்ட் 25 2021அன்று தெரிவித்திருந்தார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சிறப்பு அறிக்கை வெளியிட்டபோது, ​​காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
</p><p>
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு நடந்த பல நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி இது நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயலாகத் தெரிகிறது என்றும் அவர் அப்போதைய விசாரணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கியிருந்தார்.</p><p>

இந்தக் குற்றவியல் விசாரணை முழுமையான இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன என்றும், இதுகுறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்&nbsp;</p><p></p><h2>அனுர கருணாதிலக&nbsp;</h2><p>இந்நிலையிலேயே இதனை மையப்படுத்தி&nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஏராளமான தகவல்கள் தெரிந்திருக்க கூடும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266991bd-b166-435a-90c6-ac0788a25d17/26-6a5e036c28d55.webp' /></p><p> முன்னாள் காவல்துறைமா அதிபரின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ''இந்த மரணம் தொடர்பாக காவல்துறை தற்போது விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு திரு. சி.டி. விக்ரமரத்ன காவல்துறைமா அதிபராகப் பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்க வேண்டும்.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்</h2><p> </p><p>தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a78dcb-8db9-4cad-b862-8dc0ab132a3f/26-6a5e036ccf9b7.webp' /></p><p> </p><p>இந்நிலையில் அவர் காவல்துறை விசாரணைகளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த விடயம் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வாக்குமூலம் வழங்கியதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்த்துக்கு 11.03.2026 தெரியவந்தது.
</p><p>
தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது.</p><p></p><h2>விசாரணை&nbsp;தலையீடு</h2><p>
</p><p>
விசாரணைகளின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தலையீடுகள் தொடர்பில், முன்னாள் CID பணிப்பாளர் நிஷாந்த சோய்சாவுடன் இணைந்து முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்னவும் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக CID அதிகாரிகள் அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ead96b7-0bda-47a8-9fd4-ef5970cc9eca/26-6a5e036d83d0c.webp' /></p><p>
</p><p>
தேசிய பாதுகாப்புச் சபை (National Security Council) ஊடாக விசாரணை அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் CID நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.</p><p>

எனினும், இந்த நீதிமன்ற நடவடிக்கையில் முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்ன மீது எவ்வித நேரடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

அவர் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்கிய அதிகாரியாக மட்டுமே குறிப்பிடப்பட்டார்.</p><p>ஏப்ரல் 2019 இல் நடந்த குண்டுவெடிப்புகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிர்வாகத்தை ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளின.</p><p> 

தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், புலனாய்வுத் தகவல்களைப் புறக்கணித்ததற்காகவும் அப்போதைய காவல்துறை மா அதிபர் ஜெனரல் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பின்னர், சீர்குலைந்த காவல்துறை திணைக்களத்தை வழிநடத்தும் பொறுப்பு, பதில் காவல்துறை மா அதிபர் ஜெனரல் சி.டி. விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><h2>கடுமையான குறைபாடுகள்</h2><p>11.03.2026 நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை புலனாய்வாளர்களுக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் (குறிப்பாக அரச புலனாய்வு சேவை - SIS) இடையேயான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பில் இருந்த கடுமையான குறைபாடுகள் மற்றும் விடுபடல்கள் குறித்து இந்த அறிக்கைகள் விசாரிக்கப்பட்டு வந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10fd51bb-5760-47bf-a160-bc0155804ef4/26-6a5e036e3bb32.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்குக் கோப்புகளில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளும் அடங்கியிருந்தன. </p><p>

ஆனால், சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் மூலம், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி அவற்றை மறுத்திருந்தார்.

இந்த முழு சட்ட நடவடிக்கையும் இறுதித் தீர்ப்பு இன்றி நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>

37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய 35-வது காவல்துறைத் தலைவரின் இந்த திடீர் மறைவுடன், இலங்கை காவல்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான காலகட்டத்தை வழிநடத்திய ஒரு அதிகாரியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. </p><p>

மேலும், அவரது மரணம் குறித்த விசாரணைகளும், உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நீதிமன்றங்களில் தனித்தனியாகத் தொடர்ந்து நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-20T11:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சடுதியாக குறைவடைந்த திருமண பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/marriage-registrations-in-sri-lanka-have-declined-1784544469"></link>
            <id>https://ibctamil.com/article/marriage-registrations-in-sri-lanka-have-declined-1784544469</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics)தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 சதவீத வீழ்ச்சியாகும்.</p><h2>கோவிட் பெருந்தொற்றில் குறைவடைந்த திருமண பதிவு</h2><p>2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808 ஆகக் குறைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abbf9c0-2e03-4d79-8035-d9c5d55ebb89/26-6a5e01486cf87.webp' /></p><p>

பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் அதிகரித்திருந்தன.</p><p> இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vietjet-launches-direct-flights-to-colombo-1784544401"></link>
            <id>https://ibctamil.com/article/vietjet-launches-direct-flights-to-colombo-1784544401</id>
            <summary type="text">

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர் (VietJet Air), கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இடையே தனது நேரடி விமான சேவைகளை இன்று(20) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இந்த புதிய விமான வழித்தடமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>விமான சேவைகள்</h2><p> </p><p>

இதன்படி, வியட்ஜெட் ஏர் நிறுவனம் இவ்விரு நகரங்களுக்கும் இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2934ad46-b0a9-42da-9476-8a22fbbf51d1/26-6a5e006da711d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
Airline Ratings</i></p><p> 

அத்துடன், இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், இரு நாடுகளும் இணைந்து கூட்டு சுற்றுலா தொகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T11:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-hospitalized-consuming-poisonous-seeds-1784543462"></link>
            <id>https://ibctamil.com/article/students-hospitalized-consuming-poisonous-seeds-1784543462</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
</p><p>குறித்த மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விசாரணைகள் ஆரம்பம்</h2><p>

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ff11a9-221a-4130-8b37-514e12edda60/26-6a5dfc8fb35bc.webp' /></p><p>

கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T10:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய இரண்டு எண்ணெய் கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-oil-tankers-in-strait-of-hormuz-exploded-1784542349"></link>
            <id>https://ibctamil.com/article/two-oil-tankers-in-strait-of-hormuz-exploded-1784542349</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்ததாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்ததாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், அமெரிக்கப் படைகள் திங்களன்று தொடர்ந்து ஒன்பதாவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தின.</p><p>&nbsp;ஓமான் கடற்கரைக்கு அருகில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்தது, இருப்பினும் அதற்கான காரணத்தை அது இன்னும் சரிபார்க்கவில்லை.</p><h2>ஈரான் புரட்சிகர காவல் படையின் அறிவிப்பு</h2><p>
</p><p>
ஹோர்முஸ் வழியாக பாதுகாப்பற்ற தெற்குப் பாதையில் பயணிக்க முயன்றபோது இரண்டு எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறி செயலிழந்ததாக புரட்சிகர காவலர்கள் திங்களன்று தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2af5035-4cf9-41d7-ac0b-ab597798242d/26-6a5df7917cbb2.webp' /></p><p> </p><p>மேலும், அந்தப் பாதையைப் பயன்படுத்துமாறு அமெரிக்க இராணுவம் அந்தக் கப்பல்களை ஊக்குவித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><p></p><h2>பாதுகாப்பற்றதாக மாறியுள்ள ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>

அந்த அறிக்கையில் கப்பல்களின் பெயர்கள், கொடிகள், பணியாளர்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த விவரங்களும் அளிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/286701d3-d625-4e74-a970-0d8fcf0b8f85/26-6a5df7922e0cc.webp' /></p><p>

பிராந்தியத்தில் அமெரிக்காவின் "ஆக்கிரமிப்பு" தொடரும் வரை இந்த நீர்வழி பாதுகாப்பற்றதாகவே இருக்கும் என்று காவலர்கள் கூறினர். மேலும், "இந்தப் பாதை பெட்ரோலிய வேதிப் பொருட்களின் போக்குவரத்திற்கோ, அல்லது ஒரு துளி எண்ணெய் மற்றும் எரிவாயுவின் போக்குவரத்திற்கோ கூட பாதுகாப்பானதாக இருக்காது" என்றும் அவர்கள் எச்சரித்தனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T10:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி - தங்கத்துரைக்கான உருவச்சிலை திறப்பு விவகாரம்! விசாரணையை ஆரம்பித்த காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784539013"></link>
            <id>https://ibctamil.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784539013</id>
            <summary type="text">வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை
செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை காவல்துறையினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை
செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை
எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>வல்வெட்டித்துறை காவல்துறை</h2><p>
</p><p>
இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின்
முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9adcd5-3419-41e1-8a29-8872d39dffbe/26-6a5ded62bbf05.webp' /></p><p>1983ஆம் ஆண்டு&nbsp;கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு ஆட்சேர்ப்பு! விண்ணப்பம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/applications-national-police-commission-membership-1784541602"></link>
            <id>https://ibctamil.com/article/applications-national-police-commission-membership-1784541602</id>
            <summary type="text">தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் வெற்றிடமாகவுள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக, அரசியலமைப்புச் சபை விண்ணப்பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் வெற்றிடமாகவுள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக, அரசியலமைப்புச் சபை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
</p><p>
இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் “தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை” (Recommendation for Membership of the National Police Commission) என்ற தலைப்பிலான இணைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.</p><p>

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஜூலை 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>விண்ணப்பிக்க வேண்டிய முகவரி</h2><p>

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை "பதில் பொதுச்செயலாளர், அரசியலமைப்புச் சபை - அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டை" என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00e7c2cc-8e95-4d99-a7e7-c055a1bd456b/26-6a5df656890bc.webp' /></p><p>
</p><p>
மேலும், விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் இடது மூலையிலோ அல்லது மின்னஞ்சலின் பொருள் (Subject) வரியிலோ “Recommendation for Membership of the National Police Commission” என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p>

காவல்துறை நிர்வாகத்தைக் கண்காணிப்பதிலும், அதன் பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த ஆணைக்குழுவிற்கு, தகுதியான வேட்பாளர்கள் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்தச் செயல்முறையின் நோக்கம் என்று அரசியலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T10:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டுக்குள் 30,000 ஆசிரியர் நியமனங்கள் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/30-000-teacher-appointments-in-this-year-in-sl-1784540187"></link>
            <id>https://ibctamil.com/article/30-000-teacher-appointments-in-this-year-in-sl-1784540187</id>
            <summary type="text">இந்த ஆண்டு பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 120,000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 120,000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த நியமனங்களில் 30,000 நியமனங்கள் ஆசிரியர் சேவையில் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகின்றது. பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் வெற்றிடங்கள் தாமதமின்றி நிரப்பப்படும்.&nbsp;</p><p></p><h2>பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்கள்&nbsp;</h2><p>
</p><p>நாட்டில் தற்போது பொதுச் சேவையில் சுமார் 350,000 வெற்றிடங்கள் உள்ள நிலையில் 120,000க்கும் மேற்பட்ட பதவிகளுக்கான நியமனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab0064d-d7e9-42c8-9036-754ad8dcdaec/26-6a5df29080183.webp' /></p><p>
அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள அனைத்து பொதுச் சேவை வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக, தகுதியான விண்ணப்பதாரர்களை படிப்படியாக நியமிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்“ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T10:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flag-hoisting-ceremony-at-the-kathirgamam-temple-1784538468"></link>
            <id>https://ibctamil.com/article/flag-hoisting-ceremony-at-the-kathirgamam-temple-1784538468</id>
            <summary type="text">முருகன் ஆலயங்களில் புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் திருவிழாவின் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.&amp;nbsp;&amp;nbsp;ஆடிவேல் விழாவின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முருகன் ஆலயங்களில் புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் திருவிழாவின் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.&nbsp;</p><p>&nbsp;ஆடிவேல் விழாவின் மிக முக்கியமான,
முதன்மையான ஆன்மீக நிகழ்வாக பாரம்பரிய முறைப்படி இந்த கொடியேற்ற விழா நடைபெற்றது.</p><p></p><h2>தெய்வானை அம்மன்&nbsp;கொடியேற்றம்</h2><p>
</p><p>14-15 நாட்கள் கொண்ட இந்த ஆடிப் பெருவிழா, தெய்வானை
அம்மன் கோயில் கொடியேற்றத்துடன்தான் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5e2599a-ced6-4851-b29f-2ada79e94f4b/26-6a5def65e2acf.webp' /></p><p>தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால்,
அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இக்கொடியேற்றம் நடத்தப்படுகின்றது.
</p><p>
இதில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் கலந்து
கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95bb2a5-3b19-4011-9f21-792692d299e1/26-6a5def66aaee3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/023b2e37-7e7d-47de-a8a4-86ecfd58829e/26-6a5def676ba28.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28fef7d9-01eb-4294-b696-db1ae41d1712/26-6a5def6822556.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலை கடற்றொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-fishermen-complaint-human-rights-commission-1784536523"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-fishermen-complaint-human-rights-commission-1784536523</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு
நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு
நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p>மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில்
இன்று (20) காலை குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

திருகோணமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை ஒடுக்குவதற்கு
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த மனு
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்</h2><p>மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவித்த அவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திருகோணமலை
 கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காகக் ரத்ன கமகே குரல் கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a1deab-d248-4e7d-93d6-5d1797a3bbc3/26-6a5de4f281f13.webp' /></p><p>தற்போது அவர் இந்த
அரசாங்கத்தின் மீன்பிடி பிரதி
அமைச்சராகப் பதவியேற்றுள்ள போதிலும், அவர் திருகோணமலைப் பக்கமே தலைவைத்துப்
பார்ப்பதில்லை.

</p><p>பல வருட காலமாகத் நாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து
திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும், அவை தொடர்பாக
எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்&nbsp;</h2><p>
</p><p>மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகள்
மற்றும் குறைபாடுகள் குறித்துப் பேசுவதற்குத் நாம் முற்படும் போதெல்லாம்,
'உங்களது பிரச்சினைகள் பற்றி எமக்கு நன்கு தெரியும்' எனக் கூறி அரசியல்
தலைமைகள் எங்களை அமரச்செய்து விடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca520c5b-2484-4768-b921-1cbcd849e850/26-6a5de4f16b591.webp' /></p><p> </p><p>எமது குரல் அங்கே
ஒடுக்கப்படுகிறது. அரசியல் தலைமைகளின் இத்தகைய அணுகுமுறையினால் எங்களது நியாயமான கோரிக்கைகள்
தொடர்ச்சியாகப் பாராமுகமாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே மாற்று வழியாக
மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி இன்று முறைப்பாடு செய்துள்ளோம்.</p><p> இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, எமக்கான நீதியையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பெற்றுத்தருமாறு கோருகின்றோம்“ என தெரிவித்தனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விடுதி: சுற்றிவளைப்பில் 4 பெண்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brothel-operating-massage-parlor-in-seeduwa-raided-1784531787"></link>
            <id>https://ibctamil.com/article/brothel-operating-massage-parlor-in-seeduwa-raided-1784531787</id>
            <summary type="text">மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது.சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது.</p><p>சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் இந்த மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது.&nbsp;</p><p>காவல்துறையினரால் நேற்று (19.07.2026)முன்கெடுக்கபட்ட சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>விபச்சார விடுதி</h2><p>காவல்துறை நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2695c2d8-23a6-42bb-91ef-0d40c7a57534/26-6a5dd1b6441ec.webp' /></p><p> </p><p>இதில் குறித்த சமூக பிறழ்வான விடுதியை நிர்வகித்து வந்த முகாமையாளர் (ஆண்) மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகாமையாளர் மற்றும் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 பெண்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வியாபாரிகளை குறிவைத்து பல மில்லியன் மோசடி! முக்கிய கட்சி பெண் உறுப்பினர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-defrauding-businessmen-of-millions-1784536557"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-defrauding-businessmen-of-millions-1784536557</id>
            <summary type="text">

புறக்கோட்டையில் உள்ள ஆறு துணிக்கடை வியாபாரிகளிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் ஹொரான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>

புறக்கோட்டையில் உள்ள ஆறு துணிக்கடை வியாபாரிகளிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் ஹொரான நகர சபை உறுப்பினர் ரேணுகா தமயந்தி வத்தளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சந்தேக நபர் வியாபாரிகளை ஏமாற்றி, போலி காசோலைகளை வழங்கி சுமார் 160 மில்லியன் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

பாதிக்கப்பட்ட வியாபாரிகளை அவர் சில காலமாக தவிர்த்து வந்த நிலையில், அவர் சிறிகொத்தாவிற்கு வருகை தந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி வியாபாரிகள் காவல்துறையினருடன் அங்கு சென்றுள்ளனர்.</p><p></p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>
அங்கு காவல்துறையினருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, மிரிஹான காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6018ec6-2f96-4183-bf88-de5b868ac0d9/26-6a5de0e12ee03.webp' /></p><p>

பின்னர் மிரிஹான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த முன்னாள் நகர சபை உறுப்பினர் குறித்த உண்மை விவரங்கள் தெரியவந்துள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை காவல்துறையினரிடம் ஒப்படைக்க மிரிஹான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

 அதன்படி, நேற்று (19) வத்தளை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணை, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T08:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-in-some-parts-of-colombo-district-1784536393"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-in-some-parts-of-colombo-district-1784536393</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் சீறற்ற காலநிலையால் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.&amp;nbsp;
கொழும்பு கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, மட்டக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் சீறற்ற காலநிலையால் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>
கொழும்பு கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, மட்டக்குளிய, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பலத்த மழை பெய்து வருகிறது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி , ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca79a4e-8dce-43fd-9a91-a93fefe1b089/26-6a5ddd4a88cf4.webp' /></p><p>
</p><p>இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T08:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிக் கொண்டாட்டத்தில் FIFA தலைவரால் விலக்கி வைக்கப்பட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-s-behavior-at-fifa-world-cup-award-function-1784530071"></link>
            <id>https://ibctamil.com/article/trump-s-behavior-at-fifa-world-cup-award-function-1784530071</id>
            <summary type="text">202 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்த காட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>202 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்த காட்சி சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரிக்கு கோப்பை வழங்கப்பட்ட பின்னரும், ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்தமை தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்சிகளில் பதிவாகியுள்ளது.
</p><p>
அதன்பின், ஸ்பெயின் வீரர்கள் உலகக் கோப்பையை ஏந்தி வெற்றியைக் கொண்டாடிய வேளையிலும் ட்ரம்ப் மேடையை விட்டு உடனடியாக விலகவில்லை என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்பின் நடத்தை</h2><p> </p><p>மேலும் அந்தக் காட்சிகளில், ரோட்ரி ட்ரம்புக்கு சற்றுப் பின்வாங்குமாறு சைகை செய்வது போன்ற தருணமும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">President Donald J. Trump presents the World Cup Trophy to Spain, the 2026 <a href="https://x.com/FIFAWorldCup?ref_src=twsrc%5Etfw">@FIFAWorldCup</a> Champions! 🏆 <a href="https://t.co/SHsoBhYm1b">pic.twitter.com/SHsoBhYm1b</a></p>&mdash; The White House (@WhiteHouse) <a href="https://x.com/WhiteHouse/status/2078976201188606160?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதற்கிடையில், FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோ ட்ரம்பிடம் சென்று, அவரை மேடையிலிருந்து அழைத்துச் செல்ல முயற்சிப்பது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><p>குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில் ட்ரம்பின் நடத்தை குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் மாறுபட்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல்கள்! அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-igp-may-have-information-about-easter-attacks-1784532002"></link>
            <id>https://ibctamil.com/article/ex-igp-may-have-information-about-easter-attacks-1784532002</id>
            <summary type="text">


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>

சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், காவல்துறை தற்போது மரணம் குறித்து விரிவான விசாரணையை நடத்தி வருவதாகக் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு .சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சாட்சியம் வழங்கிய விக்ரமரத்ன&nbsp;</h2><p>
</p><p>
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்ததை அமைச்சர் அதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e684f1-6ac2-422f-bcc9-f5a616304d7f/26-6a5dcf45c9ba9.webp' /></p><p>

இந்நிலையில், காவல்துறை விசாரணைகளிலிருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிவராததால், விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nWRSBysjxaQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-20T07:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cbsl-usd-daily-buy-and-sell-exchange-rates-1784530423"></link>
            <id>https://ibctamil.com/article/cbsl-usd-daily-buy-and-sell-exchange-rates-1784530423</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் இன்று (20) வெளியிடப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியினால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.</p><p>அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 340.90 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.78 ஆக காணப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாணயமாற்று விகிதங்கள்</span></p><p>ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 460.24 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d84d260-c64d-4a6e-a4ee-d94d7af279e5/26-6a5dc6a9984e9.webp' /></p><p>
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.39 ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி&nbsp;243.96 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புது டெல்லியில் பதற்றம்! மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் கரப்பான் பூச்சி ஆர்பாட்டத்தில் தடியடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cockroach-janata-org-that-laid-siege-to-delhi-1784531310"></link>
            <id>https://ibctamil.com/article/cockroach-janata-org-that-laid-siege-to-delhi-1784531310</id>
            <summary type="text">சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்தியாவின் &quot;கொக்ரோச்&quot; (Cockroach) அமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்தியாவின் "கொக்ரோச்" (Cockroach) அமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி அந்நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் பாரிய போராட்டம் ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
</p><p>
இதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று(20.07.2026) அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக திரண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.</p><p></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">All of India and all of the world is watching this cruel and authoritarian regime trying to crush a peaceful and democratic protest.<br><br>Why is the government so scared of a peaceful protest? All this to save Dharmendra Pradhan? <a href="https://t.co/UeP16iLFoM">pic.twitter.com/UeP16iLFoM</a></p>&mdash; Cockroach is Back (@Cockroachisback) <a href="https://x.com/Cockroachisback/status/2079100591079395522?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>அனுமதி மறுத்த&nbsp;காவல்துறை </h2><p>

போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும், திட்டமிட்டபடி பேரணியை கொக்ரோச் அமைப்பின் குழுவினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5b63b2-e9d1-4bcb-8d94-7adfc2362042/26-6a5dccefeb07e.webp' /></p><p>
</p><p>
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராக எழுந்துள்ள மிகப் பெரிய மக்கள் சவாலாக இந்த போராட்டம் கருதப்படுகிறது. </p><p>

சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றுள்ள இந்த அமைப்பு , இந்திய மக்களிடத்திலும் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று வருகிறது.</p><p> 

கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை காவல்துறை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. </p><p>

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இரவு முழுவதும் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p></p><h2>கசிந்த வினாத்தாள்கள் </h2><p>அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ஏராளமான காவல்துறையினரும் துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f30222c5-a87c-45d3-af14-409c386c8e1c/26-6a5dccf0a252e.webp' /></p><p>போராட்டக்காரர்கள் "தர்மேந்திர பிரதான் பதவி விலகு", "நரேந்திர மோடி பதவி விலகு" எனக் கோஷமிட்டடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
தேசிய வைத்தியத்துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கடந்த மே மாதம் கசிந்ததைத் தொடர்ந்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

இதையடுத்து "Cockroach Janta Party (CJP)" என்ற இயக்கம் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது. 

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். </p><p>

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கும் வினாத்தாள் கசிவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் அல்லது போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்ற உறுதியை அரசாங்கம் வழங்கினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T07:23:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! முக்கிய சந்தேநபர்களை தேடி அவுஸ்திரேலியா பறக்கும் சிஐடி குழுவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-to-australia-investigate-airbus-deal-case-1784529693"></link>
            <id>https://ibctamil.com/article/team-to-australia-investigate-airbus-deal-case-1784529693</id>
            <summary type="text">

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களைக் கொண்ட ஒரு விமானக் குழுமத்தை வாங்குவதற்காக, 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களைக் கொண்ட ஒரு விமானக் குழுமத்தை வாங்குவதற்காக, 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய விசேட காவல்துறை குழுவொன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளது.</p><p>
குறித்த வழக்கு தொடர்பான சந்தேக நபர்களையும் சாட்சிகளையும் தேடுவதற்காக, லஞ்ச விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒரு கூட்டு காவல்துறை குழுவே இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

ஏர்பஸ் லஞ்சப் பரிவர்த்தனையில் பணம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும், ஆதாரங்களைக் கண்டறிவதற்கும் இந்தக் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கிய சந்தேகநபர்கள்</h2><p>

லஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் என்று கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா, அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக லஞ்ச ஆணைக்குழு முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e8cbaa-299a-42dd-8031-e32ef60cb472/26-6a5dc7bcb853c.webp' /></p><p>
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களான, உயிரிழந்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸின் முன்னாள் பணிப்பாளர் சி.டி.ஏ. கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர்.</p><p>
அவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு</h2><p>

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் லஞ்ச ஆணைக்குழுவும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யும் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019d6389-a6d4-4452-a509-56bc5dcc208b/26-6a5dc7bc06d5a.webp' /></p><p>

புருனேயில் ஒரு போலி நிறுவனத்தை நிறுவியது மற்றும் ஒரு புகழ்பெற்ற ஐரோப்பிய சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் (இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்) லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T07:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ள இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-1784527555"></link>
            <id>https://ibctamil.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-1784527555</id>
            <summary type="text">இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்த வரி ஒப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, இந்த வரி ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ள நிலையில் இந்த புதிய கொள்கை நேற்று (19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p>

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய முதலீட்டு கட்டமைப்புகளை வரி அதிகாரிகள் இனி வித்தியாசமாக மதிப்பீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p></p><h2>&nbsp;இந்திய நிதியமைச்சு</h2><p>

முக்கியமாக, வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே சில கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து, அத்தகைய வரி ஏய்ப்பைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. </p><p>

இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்க இந்திய நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஈட்டப்படும் வருமானத்திற்கே இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60b63b6-63d7-44c4-a654-3b9dcf4dde44/26-6a5dc6686e7ae.webp' /></p><p> </p><p>

இந்த புதிய PPT விதிமுறையின் கீழ், வெறும் சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதாக கருதப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நிறுவனங்கள், தாங்கள் அமைத்துள்ள ஹோல்டிங் கம்பெனிகள் அல்லது விசேட நோக்கத்திற்குரிய வாகனங்கள் (SPVs) உண்மையான வணிகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய நேரடி வரிகள் அதிகார சபை</h2><p>

வரிச் சலுகையைப் பெறுவது ஒரு முக்கிய நோக்கமாக இருந்தால், ஒப்பந்தத்தின் பலன்களை மறுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

எனவே, முதலீட்டாளர்கள் இனி தங்கள் குறுக்கு-எல்லை ஏற்பாடுகளுக்குத் தெளிவான வணிகக் காரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb21ea7-aa49-4369-9941-2929c1446b1d/26-6a5dc66929e37.webp' /></p><p>இது நிறுவனங்களுக்கு தங்கள் வரி மற்றும் முதலீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தியா மற்றும் இலங்கை இடையே செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், தங்கள் வணிகத்தின் உண்மையான நோக்கத்திற்கான ஆவணங்களைச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும். </p><p>

வரிக் கணக்குத் திட்டமிடலுக்கு மேலும் தெளிவைத்தரும் வகையில், 'முக்கிய நோக்கம்' என்பதை நிரூபிப்பதற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் குறித்த மத்திய நேரடி வரிகள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recent-earthquake-in-iran-1784523493"></link>
            <id>https://ibctamil.com/article/recent-earthquake-in-iran-1784523493</id>
            <summary type="text">புதிய இணைப்புஈரானின் மேற்குப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில்&amp;nbsp;&amp;nbsp;5.7 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஈரானின் மேற்குப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில்&nbsp;&nbsp;5.7 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:18 மணிக்கு (03:43 GMT) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதுவரையில் வெளியாகவில்லை.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலைமைகளை மதிப்பிடுவதற்காக, மதிப்பீட்டுக் குழுக்களும் அவசரகால மீட்புப் பிரிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><h4><b>ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்&nbsp;</b></h4><p>ஈரானின் மேற்குப்பகுதியான&nbsp;கெர்மன்ஷா மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள குசரான் அருகே 8 கி.மீ (5 மைல்) ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து&nbsp; தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஈரானிய நிலநடுக்கவியல் மையத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><h2>நிலநடுக்கத்தின் தாக்கம்</h2><p>உள்ளூர் நேரப்படி காலை 7:13 மணிக்கு (03:43 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb4ada7-dea6-4eb7-9d1f-0392c5e2b0d7/26-6a5dc1d7539e0.webp' /></p><p>இதன் மையப்புள்ளி குசாரானிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், மாகாணத் தலைநகரான கெர்மன்ஷாவிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/collision-jeep-lorry-on-the-accident-matara-road-1784522191"></link>
            <id>https://ibctamil.com/article/collision-jeep-lorry-on-the-accident-matara-road-1784522191</id>
            <summary type="text">மாத்தறை - தங்காலை&amp;nbsp; பிரதான வீதியில்&amp;nbsp; இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - தங்காலை&nbsp; பிரதான வீதியில்&nbsp; இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து&nbsp;நேற்று (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>பிற்பகல் 3.50 மணியளவில் மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும், தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p> </p><h2>இருவர் பலி</h2><p>சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இரு வண்டியிலும் மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5353f52-eb80-4410-a4ec-3b43562648de/26-6a5dc38051189.webp' /></p><p> </p><p>விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி ஜீப் வாகனத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை - ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37,36 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
காயமடைந்தவர்களில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-recovered-from-asp-residence-1784528521"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-recovered-from-asp-residence-1784528521</id>
            <summary type="text">
கண்டியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கையெறி குண்டுகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கண்டியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கையெறி குண்டுகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

கண்டி, நத்தரம்பொத்தவில் அமைந்துள்ள குறித்த வீட்டில், சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளரின் மனைவி வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டி காவல்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இந்த அதிகாரி, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.எனினும், தம்பதியினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு நிலவி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

 இந்த ஆயுதங்கள் உதவி காவல் கண்காணிப்பாளரின் ஆடை அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக பல்லேகெலே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6e895b-0b64-43ef-8fb1-9e0fc368cb03/26-6a5dc13298a42.webp' /></p><p>இதேவேளை,&nbsp;இது குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக சந்தேநபரான காவல்துறை அதிகாரி கண்டி மாவட்ட
குற்றத்தடுப்பு காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகெலே காவல்துறையினரும், கண்டி மாவட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ROhc60xgJDo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T06:39:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம முடிச்சுக்களுடன் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் - களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-inquiry-launched-into-death-of-former-igp-1784527436"></link>
            <id>https://ibctamil.com/article/special-inquiry-launched-into-death-of-former-igp-1784527436</id>
            <summary type="text">தனது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேற்கு தெற்கு குற்றப்பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேற்கு தெற்கு குற்றப்பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகரவை விசாரணையை மேற்பார்வையிடுமாறு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>துப்பாக்கிச் சூட்டினால் மரணம் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அது தற்கொலையா அல்லது தற்செயலாக வெடித்ததா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை.</p><p></p><h2>பிரேதப் பரிசோதனை</h2><p> </p><p>வரவிருக்கும் தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளிலிருந்து இதுபற்றித் தெளிவு கிடைக்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93292a96-fdc9-4afb-ba85-0bcc2af39be8/26-6a5dbc9c18573.webp' /></p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, விக்ரமரத்னவின் மார்பில் குண்டு பாய்ந்ததில், அது அவரது முதுகு வழியாக வெளியேறியது. சம்பந்தப்பட்ட துப்பாக்கி, அவரது பாதுகாப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த சார்ஜென்ட்டுக்குச் சொந்தமானது.</p><p> உடற் பயிற்சிக்குக் கிளம்புவதற்கு முன்பு, சி.டி. விக்ரமரத்ன அந்தத் துப்பாக்கியைச் சோதிக்கக் கோரியதாக அந்த சார்ஜென்ட் புலனாய்வாளர்களிடம் கூறினார். சில கணங்களுக்குப் பிறகு, தண்ணீர் போத்தல்களை எடுப்பதற்காக அந்த சார்ஜென்ட் உள்ளே சென்றபோது, ​​துப்பாக்கிச் சத்தம் கேட்டது.</p><p></p><h2>இறுதிச் சடங்கு&nbsp;</h2><p>

அப்போது, ​​விக்கிரமரத்னவின் மனைவியும் இளம் மகனும் வீட்டிற்குள் இருந்தனர். அவர்கள் வெளியே விரைந்து வந்து பார்த்தபோது, ​​அவர் சரிந்து விழுந்து கிடப்பதையும், துப்பாக்கி அருகில் கிடப்பதையும் கண்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3c7f34-c516-47be-889e-f3271e7955f1/26-6a5dbc9b5f6b3.webp' /></p><p>மறைந்த முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு இன்று (20) முழு மரியாதையுடனும் சம்பிரதாய மரியாதையுடனும் நடைபெறும் என காவல்துறை அறிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:14:20+00:00</updated>
        </entry>
    </feed>
