<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T14:27:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701540"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701540</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். </p><p>இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>இந்திய வம்சாவளியினர்</h2><p>அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய
புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76ceb90-1004-4a6b-8505-2f753b6fda32/26-6a9d7643b2f58.webp' /></p><p>விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை
தாங்கவுள்ளார்.
</p><p>
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக்
கொண்டுள்ளதுடன் பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம்,
வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363</id>
            <summary type="text">ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&amp;nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலீபாஃப் (Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி இனி விகிதாசாரமாக (Proportionate) இருக்காது என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.</p><p></p><h2>சமமான பதிலடி</h2><p>அத்தோடு சமமான பதிலடிகளைக் கொடுக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கர்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் தெரிவித்த அவர், “ஆக்கிரமிப்பாளர்களின் தளங்களுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நடத்திய நடவடிக்கைகள் ஒரு தொடக்கமே.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbee5041-8b25-4e96-a027-d60974518f2a/26-6a9d4ce742ca7.webp' /></p><p>அவர்கள் இன்னும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டன என்பதை காலம் கடப்பதற்குள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவை ஈரான் எதிர்கொண்டது போல அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சாரத்தையும் ஈரான் முறியடித்து வெற்றிபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தினசரி மின்சாரத் தேவை சரிவு: மின் உற்பத்தியில் அதிகரிப்பு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-power-demand-drops-while-generation-rises-1788699192"></link>
            <id>https://ibctamil.com/article/sl-power-demand-drops-while-generation-rises-1788699192</id>
            <summary type="text">இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந்தும் அதிகரிப்புப் போக்கைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.</p><p>இதனடிப்படையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவாட் (MW) ஆக இருந்த தினசரி மின்சாரத் தேவை, செப்டம்பர் 1 ஆம் திகதி 2,936 மெகாவாட் ஆகக் குறைந்துள்ளது.</p><p> </p><p></p><h2>மின்சாரத் தேவை&nbsp;</h2><p>இது செப்டம்பர் 2 ஆம் திகதி 2,934 மெகாவாட் ஆகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி மேலும் சரிவடைந்து 2,920 மெகாவாட் ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>மின்சாரத் தேவை குறைந்த போதிலும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரமாக (GWh) இருந்த தினசரி மின் உற்பத்தி, செப்டம்பர் 1 ஆம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5129d033-4fe3-4a37-bbbc-72e5627d480e/26-6a9d6883d1d1f.webp' /></p><p>அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளது. </p><p>அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T13:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய - பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794"></link>
            <id>https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794</id>
            <summary type="text">ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்தச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யாவிலுள்ள 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை இயக்‌க அசூர் எயர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p></p><h2>நேரடி விமான சேவை</h2><p>அசூர் எயர் தவிர, ரஷ்யாவின் பிரபல ஏரோஃப்ளோட்&nbsp; (Aeroflot) மற்றும் எஸ்7 எயர்லைன்ஸ் (S7 Airlines) ஆகிய நிறுவனங்களும் ரஷ்யா - இலங்கை இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff2ea13-746e-47f0-b5ad-c8fb6db513e2/26-6a9d550e58ca7.webp' /></p><p>இதனிடையே, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways) நிறுவனம் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனுக்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
</p><p>பிரித்தானியாவின் லண்டன் கெட்விக் (London Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/third-term-of-school-begins-tomorrow-education-min-1788690004"></link>
            <id>https://ibctamil.com/article/third-term-of-school-begins-tomorrow-education-min-1788690004</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.இந்தநிலையில் அனைத்துப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக பேருந்து சேவை&nbsp;</h2><p>அத்துடன், மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை (07) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0153bee-7af6-4ca2-85a1-21299fe3f941/26-6a9d46bd9b76e.webp' /></p><p>இதேவேளை&nbsp;அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி&nbsp;டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர பங்கேற்கும் மக்கள் பேரணி ஆரம்பம் - நேரலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791"></link>
            <id>https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791</id>
            <summary type="text">புதிய இணைப்பு“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்“ எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்“ எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் மக்கள் பேரணி ஆரம்பமாகியுள்ளது.</p><p>இதற்கமைய, முதலாவது மக்கள் பேரணிகள் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது பேரணி பிற்பகல் 03.30 மணிக்கு பேருவளையிலலும் நடைபெறுகின்றன.</p><p>இந்த மக்கள் பேரணியில் மதத் தலைவர்கள், அரசியல் வாதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><h4>அநுர தலைமையிலான மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!</h4><p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் (06.09.2026) ஆரம்பமாகவுள்ளது.</p><p>

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.</p><p></p><h2>&nbsp;நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>

பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் ஆரம்பமாகவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2adf0262-2356-4878-80e4-d393393b5089/26-6a9cf40267893.webp' /></p><p>மேலும், பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி எதிர்கால பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இதேவேளை&nbsp;அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7rnlu1KswuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு ஐ.நா எச்சரிக்கை! ஜெனீவாவில் வெடிக்கும் இலங்கை விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-warns-anura-sri-lanka-issue-erupts-in-geneva-1788689306"></link>
            <id>https://ibctamil.com/article/un-warns-anura-sri-lanka-issue-erupts-in-geneva-1788689306</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் 
மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் 2026 செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒரு கசப்பான நியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்கின்றது.</p><p>இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுவதும் தொடர்கின்றது.</p><p>
 
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சியில் காண்க....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3sJQMbscMNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-condemns-namal-rajapaksas-arrest-1788685689"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-condemns-namal-rajapaksas-arrest-1788685689</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தது
ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல்
தடுப்பதே தற்போதைய அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தது
ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல்
தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என&nbsp; குற்றச்சாட்டப்பட்டுள்ளது.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06-09-2026) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இளைய சமுதாயம்</h2><p>
</p><p>குறித்த அறிக்கையில், “இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று
சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.</p><p> இந்த நிலையில் நாடு அழிவு
பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு
உண்மையான சுதந்திரம் 2009 ஆம் ஆண்டு கிடைத்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d7efa20-e2b8-4ba1-8b82-32797727750c/26-6a9d39d793eaa.webp' /></p><p>அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை
அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர்.</p><p> அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.</p><p></p><h2>பொருட்களின் விலை</h2><p>
நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின்
மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.
</p><p>
அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம்
முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069edf12-8288-408a-be9e-6c553923b886/26-6a9d39d849a8f.webp' /></p><p> இதனால்
மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனர். இன்று நாடே போர்களமாக மாறியுள்ளதுடன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே
வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். </p><p>எனவே இந்த தவறான செயலை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
</p><p>
எமது இளைய தளபதி நாமல் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட
மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CWIGW7iZQtY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T10:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 12ஆவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-palali-demand-vali-north-land-release-1788685759"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-palali-demand-vali-north-land-release-1788685759</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 36 வருடங்களாக காணிகளை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.</p><p> 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்றைய
தினம் (06) 12ஆவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க வேண்டும்</h2><p>இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b9d434-06a6-44b1-a4b4-a246c511f72e/26-6a9d3737496a8.webp' /></p><p>
</p><p>இதேவேளை யாழில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை செப்டெம்பர் மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை
எடுத்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:54:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.</p><p></p><h2>&nbsp;583 மனித எச்சங்கள் மீட்பு&nbsp;</h2><p>இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d077f-45c1-44a3-b0fa-9698dc5c207c/26-6a9d09f5a5506.webp' /></p><p> கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
</p><p>செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p></p><h2>டி.என்.ஏ பரிசோதனை</h2><p>
</p><p>
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எச்சங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச பங்களிப்பு அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b0ae09-f56f-47cb-9c50-d274a9d14281/26-6a9d09f660ea7.webp' /></p><p>எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உண்மையும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்“ என&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/garbage-piled-up-at-the-entrance-to-jaffna-city-1788683602"></link>
            <id>https://ibctamil.com/article/garbage-piled-up-at-the-entrance-to-jaffna-city-1788683602</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்றும் துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>நல்லூர் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட யாழ் நகரத்தினுடைய நுழைவு பகுதியாக காணப்படுகின்ற செம்மணியினுடைய வளைவு பகுதியை அண்மித்திருக்கக்கூடிய அரியாலை பிரதேசத்தை நோக்கி நகர்வதற்கான வீதியினுடைய
இருமருங்கிலும் தொடர்ச்சியாக அதிகளவிலான குப்பை கூளங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது.</p><p>

யாழ் நகருக்குள் ஒருவர் வருகை தருகின்ற போது இவற்றை அவதானித்த பின்பு நகருக்குள் பிரவேசிக்கிறார்கள். இதனை நகரத்தினுடைய பரிபாலனத்தை மேற்கொள்கின்ற உள்ளூராட்சி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்த பிரதேசத்தினுடைய பராமரிப்புக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு உலகின் பல பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு மக்கள் வருகை தரும் நிலையில், நகரின் மத்தியில் காணப்படும் இந்த அசுத்தமான சூழலினால் துர்நாற்றத்தை சகிக்க முடியாத மக்கள் மூக்கை முடிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.</p><p>

ஐபிசி தமிழ் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

குறிப்பாக யாழ்ப்பாண நகரின் நுழைவுப் பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றி துர்நாற்றம் வீசுவதை தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p><b>
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qLHT3OyKhD0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p></p><p></p><p></p><p><b></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-06T08:49:55+00:00</updated>
        </entry>
    </feed>
