<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-12T05:17:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணிகள் - நேருக்கு நேர் மோதும் அரசு மற்றும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280"></link>
            <id>https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280</id>
            <summary type="text">பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.“அரசாங்கத்திற்கு இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.</p><p>“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நன்மை” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி தலைமையில் இன்று (12) மற்றுமொரு மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p>
பொலன்னறுவை திம்பிரியங்கடுவ தீப உயன வளாகத்தில் இந்த மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு</h2><p>இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f783b831-e4db-444f-8f38-1db6e2ba00f8/26-6aa4d78766776.webp' /></p><p>



கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>



இந்தப் பேரணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்ற பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் கலந்துகொள்வதுடன், மேடையில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறு வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு பிரதான மாவட்டங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக பேரணிகளை நடத்தவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் </h2><p>
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfaa53d-859c-4238-a57b-19d9bdd2b348/26-6aa4d23f06a79.webp' /></p><p>
</p><p>
முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.</p><p>
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) ஆரம்பமாகியுள்ளது.</p><p>யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொது தரப்பினரால்&nbsp;&nbsp;அழைப்பு </h2><p>இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொது தரப்பினரால் நேற்று (11) அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da762dc0-7bdb-4188-a6eb-24b270f0b582/26-6aa4ccb517364.webp' /></p><p>குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றது.</p><h2>ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி</h2><p>இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த
நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளில் மக்கள் தமது சொந்த நிலத்தை
விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb21a87-88f9-4055-944c-0f90103070f0/26-6aa4de3cbe713.webp' /></p><p> பலாலி விமான நிலையம்
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும்
பின்னடிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எள்ளளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.
</p><p>
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும்
காட்டாது இழுத்தடிக்கின்றனர், அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை
சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறான விடயங்களை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:53:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு கிடைக்கப்போகும் சலுகை : அரச சேவை ஆணைக்குழு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013"></link>
            <id>https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே அரச சேவை ஆணைக்குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள்</h2><p>
</p><p>
எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e29410-d6f3-4539-ab20-2a52fe4ebdc7/26-6aa4ca43b57e6.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.
</p><p>
எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>&nbsp;கல்வி அமைச்சின் சுற்றறிக்கை</h2><p>
</p><p>
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b8ae3d-4929-4ef6-b26b-4f43cec2af1e/26-6aa4ca44b7d92.webp' /></p><p>

அதன்படி, வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-crossed-boundaries-observed-prabhakaran-1789179419"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-crossed-boundaries-observed-prabhakaran-1789179419</id>
            <summary type="text">யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தினர் தனக்கெதிராக செயற்பட்டனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
வளைதள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

“தன்னையும் தமக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் கொடூரமாக வேட்டையாடிப் ராஜபக்சர்கள் பழிவாங்கினர்.</p><p></p><h2>அதிகாரத்திற்கு வந்த&nbsp;ராஜபக்சர்கள் </h2><p>
</p><p>
தங்களைக் காப்பாற்றிய இராணுவத் தளபதியையே சிறையில் அடைத்தவர்கள் ராஜபக்சர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7954cc-f8ef-4b4f-b095-ec750b19937c/26-6aa4b95e29c83.webp' /></p><p>
</p><p>
நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக மூன்று வருடங்கள் கொடூரமான முறையில் யுத்தம் செய்தோம்.

அவர்களின் தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.
</p><p>
ஆனால், அந்தப் போர்க் காலத்தில்கூட பிரபாகரன், தங்களது குடும்பங்களையோ, எங்களது பிள்ளைகளையோ பழிவாங்கவில்லை.
</p><p>
போர் முடிந்த பின்னர், ராஜபக்சர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் தங்களது அரசியல் இலாபத்திற்காகவும், தனிப்பட்ட குரோதத்திற்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையும் கொடூரமாக வேட்டையாடினார்கள். </p><p>

மேலும், ஜனவரி 2008 இல், போரின் வியூகத்தை மாற்றி இராணுவத்தை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக நகரச் சொன்னதன் மூலம், மகிந்த, கோட்டாபய மற்றும் கருணாகொட ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை குழப்பவும், தனது வேகத்தைக் குறைக்கவும் முயன்றனர்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் நீதிபதிக்கு எதிரான அவதூறு சுவரொட்டி: CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defamatory-poster-against-mannar-judge-1789183563"></link>
            <id>https://ibctamil.com/article/defamatory-poster-against-mannar-judge-1789183563</id>
            <summary type="text">மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு காட்சிப்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.</p><p>இதன்படி இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர், கொழும்பு குற்றப்பிரிவினர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
இந்த வழக்கில் மாத்தளையைச் சேர்ந்த இஷான் குணசேகர, அரவ்வலையைச் சேர்ந்த கிரிஷான் நாலக, மடபாத்தையைச் சேர்ந்த மனோஜ் மதுசங்க, பட்டதாரியான லக்மால் விக்ரமசிங்க, எஸ்.பி.எச்.எம். மதுசங்க, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் திலங்க தக்ஷித சுமதிபால, அச்சக உரிமையாளர் தசுன் தரங்க பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e067804-8fba-4259-989a-771d970cfe29/26-6aa4c9b49cdbc.webp' /></p><p>
முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
மூன்றாவது சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொல்லை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அந்த சந்தேகநபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆலய உற்சவத்தில் திடீரென வெடித்த பெரிய வெடி - சிறுவன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-in-temple-festival-firecracker-accident-1789181017"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-in-temple-festival-firecracker-accident-1789181017</id>
            <summary type="text"> ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p> ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

இச்சம்பவம் நேற்று 11) இரவு 11.00 மணியளவில் மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது இடம்பெற்றுள்ளது &nbsp;</p><p>கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71206939-0abb-42ec-861a-8c4c9db47b00/26-6aa4c9a9acd84.webp' /></p><p>எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். 

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p> 

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்! இலங்கை முன்னெடுக்கவுள்ள இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-move-lanka-set-regarding-iranian-ship-1789182700"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-move-lanka-set-regarding-iranian-ship-1789182700</id>
            <summary type="text">திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ரவூப் ஹக்கீம் கேள்வி</h2><p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e120d9d8-75d2-4680-9e70-9e6bc8080f11/26-6aa4c46dcb2bb.webp' /></p><p>முன்னதாக, ஈரானிய கப்பலான IRIS Bushehr கப்பலானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 208 பேரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்திருந்தது. </p><p>அவர்களில் அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களும் அடங்கியிருந்தனர்.
</p><p>
கொழும்பு துறைமுகத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு, குறித்த கப்பலை திருகோணமலைக்கு மாற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.</p><p></p><h2>ஈரான் - அமெரிக்கா&nbsp;பதற்றம்</h2><p> </p><p>பின்னர் கப்பல் திருகோணமலை நோக்கி இழுவை மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db76aa9-9b4a-4422-ac41-2a9c8800fd42/26-6aa4c46e834c6.webp' /></p><p>
</p><p>
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை தனது கடற்பரப்பை எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p><p>இதன்படி மனிதாபிமான அடிப்படையிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற கையெறி குண்டுகள்! தாக்குதல்கள் குறித்து காவல்துறை சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
 

குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் மூன்று கல்கிசை காவல் பிரிவுக்குள்ளேயே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
 

மேற்கு மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களால் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து காவல்துறை சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.</p><p></p><h2>கொல்லப்பட்ட&nbsp;இரண்டு குழந்தைகள் </h2><p>
</p><p>
 

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தக் குழுக்கள் பெற்ற கையெறி குண்டுகள் இதுபோன்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a538b9-c2a4-45c1-94eb-8fea9854e08d/26-6aa4b96f4df73.webp' /></p><p>அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்கால முயற்சிகளில் முப்படைகளையும் ஈடுபடுத்துவது குறித்து காவல்துறை பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>

 

இதற்கிடையில், நேற்று அதிகாலை (11) தெஹிவளையின் சிறிசங்கபோ மாவத்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது தந்தை காயமடைந்தார். </p><p>

 

உயிரிழந்தவர்கள் 17 வயதான கசுன் ரஷ்மிகா மற்றும் அவரது 11 வயதான சகோதரர் துமிந்தா கிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

அவர்களுடைய 55 வயதான தந்தை நலின் துசந்த பெரேரா, இந்தத் தாக்குதலில் தனது ஒரு காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:08:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p>
அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>உயிரை மாய்த்துக்கொள்வார்&nbsp;</h2><p>
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அந்த உறுப்பினர்கள் சிறைக்குச் சென்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/940eb78c-6aaa-4028-bf1b-8abe7a183a3d/26-6aa4bc11ec99c.webp' /></p><p>அவர் தானாகவே உயிரை மாய்த்துக்கொள்வார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T02:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் என்பது மட்டும் போதாது..! நாமல் நிரூபிக்க வேண்டும் - நிரோஷன் பாதுக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-can-never-become-mahinda-1789179453"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-can-never-become-mahinda-1789179453</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது&amp;nbsp; என ஐக்கிய மக்கள் சக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது&nbsp; என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.</p><p>கொழும்பில் வெள்ளிக்கிழமை (11) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.</p><p></p><h2>தத்தமது அரசியல் இலக்கு</h2><p> எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8acddf4-c8f8-47cf-8602-5ed0a09ca31d/26-6aa4bb9aba0aa.webp' /></p><p>
அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.</p><p> எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T02:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக சட்டமா அதிபர் வழங்கிய நடவடிக்கை! விசாரணையை தீவிரப்படுத்தபோகும் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attorney-general-takes-action-against-namal-1789178687"></link>
            <id>https://ibctamil.com/article/attorney-general-takes-action-against-namal-1789178687</id>
            <summary type="text">சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஆலோசனை வழங்கியுள்ளது.&nbsp;</p><p>சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பணத்தில் ஒரு தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன் காரணமாக நாமல் ராஜபக்சவை குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ba5ffe0-e402-4a63-b1c4-137885a429d6/26-6aa4bb1d0d096.webp' /></p><p>
</p><p>
அதன்படி, குறித்த ஆலோசனை தொடர்பில் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து(Motion), வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாமல் ராஜபக்சவை அந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில், 2014–2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் மொத்தம் 100 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் ராஜபக்ச கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T02:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்! கைப்பற்றப்பட்ட செங்கடலின் மற்றுமொரு நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-red-sea-city-captured-by-the-houthis-1789176264"></link>
            <id>https://ibctamil.com/article/another-red-sea-city-captured-by-the-houthis-1789176264</id>
            <summary type="text">ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, உலகின் 10 முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
அதன்படி, உலகின் 10 முதல் 12 சதவீத கடல்வழி வர்த்தகம் நடைபெறும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டாப் கடல்வழிப் பாதையின் இருபுறங்களையும் ஹூதிகளால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
உலகளாவிய தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சூழ்நிலையின் காரணமாக, செங்கடலில் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது.</p><p></p><h2>பாப் அல்-மண்டேப் நீரிணையை நோக்கிய நகர்வு</h2><p>முன்னதாக செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eec350b1-1cce-40ba-9405-680e298f1a66/26-6aa4bdae7def9.webp' /></p><p>இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T01:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-women-s-team-enters-the-final-1789175541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-women-s-team-enters-the-final-1789175541</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
</p><p>
டுபாயில்&nbsp; நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.</p><h2>வெற்றி இலக்கு</h2><p>
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா&nbsp; ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.</p><p></p><p>

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா&nbsp; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><p>

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
</p><h2>இறுதிப் போட்டி</h2><p>
இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம&nbsp; 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p><p>
</p><p>
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் திசைக்காட்டிக்கு எதிராக களமிறங்கும் மகிந்தவின் மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-s-bud-party-take-compass-in-anuradhapura-1789174485"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-s-bud-party-take-compass-in-anuradhapura-1789174485</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை
வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான
எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பெரும் பேரணி</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள்
தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். </p><p>அதேபோன்று,
தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட
வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு,
தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை
மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. </p><p>அரச ஊழியர்களுக்கு
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள்
வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக்
குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய
ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று
வருகின்றன.</p><h2>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</h2><p> வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள்
நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323
கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான
சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
</p><p>
துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால
பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித்
திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை
வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.</p><p></p><p> அபிவிருத்தி
பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே
அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.</p><p>

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித்
தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும்
அடக்குமுறையையே செய்கின்றது.
</p><p>
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச்
செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில்
நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல்
கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:54:50+00:00</updated>
        </entry>
    </feed>
