<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-31T06:27:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/adb-extends-usd-200-million-to-help-sri-lanka-1785473252"></link>
            <id>https://ibctamil.com/article/adb-extends-usd-200-million-to-help-sri-lanka-1785473252</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
</p><p>
 

அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல்</h2><p>
</p><p>
 

தொலைதூர மோதல் ஒன்றின் தாக்கம் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மாசாடோ காண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d1d954-4124-478a-977e-e4b2b5be00f4/26-6a6c3245e12a2.webp' /></p><p>இதன் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு,நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொளளப்படவுள்ளன.
</p><p>
 

இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 

இதேவேளை கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monthly-fuel-price-revision-expected-today-1785473587"></link>
            <id>https://ibctamil.com/article/monthly-fuel-price-revision-expected-today-1785473587</id>
            <summary type="text">மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.உலக சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31.07.2026) காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>எரிபொருள் விலை</h2><p>அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfefed1-e2f3-47e1-980a-568bad20a732/26-6a6c2f8c1f7b5.webp' /></p><p>

 

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

 

அத்துடன், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளது.</p><p>அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p>இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:16:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cwma-upholds-cauvery-water-release-to-tamil-nadu-1785472151"></link>
            <id>https://ibctamil.com/article/cwma-upholds-cauvery-water-release-to-tamil-nadu-1785472151</id>
            <summary type="text">தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.காவிரி குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.</p><p>டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நடை​பெற்​றது.</p><p></p><h2>நீர் இருப்பு&nbsp;</h2><p>இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f31279d-935c-4969-b6be-93e79544e68a/26-6a6c26387163b.webp' /></p><p>கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை உடனடி​யாக திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என தமிழக அரசின் தரப்​பில் வலியுறுத்தப்பட்​டது.</p><p>இதன்போது,&nbsp;கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களில் 50% அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளது.</p><p> 

பெங்​களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்​டுமே நீர் இருப்​பில் உள்​ளது. எனவே தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்​து​விட இயலாது என கர்​நாடக அரசின் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.</p><p></p><h2>தமிழகத்​துக்கு நீர்</h2><p>இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்று குழு, “உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf29726-0960-4514-8b4d-47e3e0ed6426/26-6a6c2637c070c.webp' /></p><p> கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும்.</p><p> இதனை ஜூலை 29-ம் திகதி காலை 8 மணி முதல் இருமாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமிழகத்​துக்கு நீர் செல்​வதை உறுதி செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டது.</p><p>எனினும் அவசர ஆலோசனையில் பின், மழை பெய்​யாத​தால் குடிநீருக்கே தட்​டுப்​பாடு ஏற்பட்​டுள்​ளது. இந்த சூழலில் தமிழ்​நாட்​டுக்கு நீரை திறந்​து​விட இயலாது. காவிரி நீர் ஒழுங்​காற்று குழு​வின் உத்​தரவை எதிர்த்து கா​விரி மேலாண்மை ஆணை​யத்​தில்​ முறை​யிட உள்ளோம் என நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையினர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-police-officers-sentenced-to-harsh-imprisonment-1785470571"></link>
            <id>https://ibctamil.com/article/2-police-officers-sentenced-to-harsh-imprisonment-1785470571</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் பொதுமகன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.தகராறு ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் பொதுமகன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

 

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு&nbsp;</h2><p>
 

2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a38da913-c302-49c2-9d78-927435a879ac/26-6a6c21eba88f5.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுமகனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

அத்துடன், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/july-allowance-credit-bank-accounts-today-1785469491"></link>
            <id>https://ibctamil.com/article/july-allowance-credit-bank-accounts-today-1785469491</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><h2>முதியோர் கொடுப்பனவு</h2><p>
</p><p>


அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467c98e7-a115-4d08-82c3-5d303ddb05d2/26-6a6c1cf74bcb5.webp' /></p><p>இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
</p><p>


பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரில்வின் சில்வாவின் கைப்பொம்மையாக செயற்படும் அநுர : உதய கம்மன்பில குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-kumara-acting-on-the-orders-of-tilvin-silva-1785468343"></link>
            <id>https://ibctamil.com/article/anura-kumara-acting-on-the-orders-of-tilvin-silva-1785468343</id>
            <summary type="text">ரில்வின் சில்வாவின் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவதாகவும் மக்கள் ஜனாதிபதியாக அநுரவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரில்வின் சில்வாவின் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவதாகவும் மக்கள் ஜனாதிபதியாக அநுரவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.</p><p>
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p>

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார். மக்களின் கருத்துக்கும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதில்லை.</p><p></p><h2>நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p>

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c5599a-b375-42eb-a485-1fa213f11079/26-6a6c1aa7ba8f4.webp' /></p><p> </p><p>நாட்டு மக்கள் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்கவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
</p><p>

நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் அவற்றை பொருட்படுத்தாமல் தனது தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை</h2><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் பதவியில் இருந்தார். இறுதியில் வீதியில் இறங்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6510989c-d088-47cb-8a1b-7aa4217bbff3/26-6a6c1aa874649.webp' /></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது. இறுதியில் அறிவிக்காமலே நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. </p><p>ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நெருக்கடிக்குள்ளாகின. ஆகவே கடந்த கால சம்பவங்களை ஜனாதிபதி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:54:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-for-vel-festival-colombo-1785467631"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-for-vel-festival-colombo-1785467631</id>
            <summary type="text">கொழும்பில் (Colombo) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.  கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் (Colombo) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p> கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152 ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு,&nbsp;இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bcf8ab-8a8d-4a9e-9d03-7169461be3ba/26-6a6c15dea20ed.webp' /></p><p>
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
</p><p>
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:28:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கசிந்த FIFA கடிதத்தால் வெடித்த சர்ச்சை - போட்டிகளை புறக்கணிப்போம்: பறந்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uefa-threatens-world-cup-boycott-over-fifa-deal-1785462149"></link>
            <id>https://ibctamil.com/article/uefa-threatens-world-cup-boycott-over-fifa-deal-1785462149</id>
            <summary type="text">உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியமான போட்டிகளின் உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியமான போட்டிகளின் உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதன் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிப்போம் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>நேற்று (29.07.2026) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், அதன் 55 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளன.</p><p></p><h2>ஃபிஃபா தரப்பில் விளக்கம்&nbsp;</h2><p>ஃபிபா (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கோப்பைப் போட்டிகளில் கணிசமான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், 'ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ்' (Fifa Forward Enterprise) என்ற பெயரில் புதிய துணை நிறுவனம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df737d0c-88ca-4cd8-bf90-820aa785a3f4/26-6a6c0400128db.webp' /></p><p>கசிந்த கடிதம் ஒன்றின் மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதித்தால் உறுப்பு நாடுகளுக்குக் கிடைக்கும் நிதி ஊக்கத்தொகை குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>இந்தத் திட்டத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டால் 1,000 கோடி டாலர் (சுமார் 750 கோடி பவுண்டு) நிதித் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஏற்காவிட்டால் 270 கோடி டாலர் (சுமார் 200 கோடி பவுண்டு) மட்டுமே வழங்கப்படும் என்றும் இன்பான்டினோ உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில், கால்பந்து அமைப்புகளுடன் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யாமல், இரகசியமாக இந்த முடிவை எடுக்க முயன்றதாக ஃபிஃபா மீது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இருப்பினும், இந்த புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் ஃபிஃபாவிடமே இருக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறுபான்மை பங்குகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஃபிஃபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T02:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு! பின்னணியில் பிரபல கட்சியொன்றின் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/16-kg-kerala-cannabis-packages-seized-in-jaffna-1785433263"></link>
            <id>https://ibctamil.com/article/16-kg-kerala-cannabis-packages-seized-in-jaffna-1785433263</id>
            <summary type="text">
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டது.
</p><p>
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா நாளைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aaea56-540b-456d-80b8-6cc3244d9838/26-6a6b91a473f00.webp' /></p><p>

இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T02:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-inspects-work-on-vattuvagal-bridge-1785464725"></link>
            <id>https://ibctamil.com/article/minister-inspects-work-on-vattuvagal-bridge-1785464725</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின்
நிர்மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின்
நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டுள்ளார்.
</p><p>2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.</p><p>குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள்
எதிர்வரும் 2027.09.12 அன்று முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>புனரமைப்பு செய்யாத நிலை</h2><p>இதேவேளை&nbsp;சுதந்திரபுரம் பிரதான வீதி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி மக்கள் பாவனைக்காக நேற்றயதினம்
(30) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன திறந்து வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66e2e30e-c247-40a2-9d05-8e649cddcc38/26-6a6c09dbd6bfa.webp' /></p><p>குறித்த வீதியானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யாத நிலையில் 2025 ஆம்
ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p> களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp; செ.திலகநாதன்,
மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம
பொறியியலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் என
பலரும் கலந்துகொண்டனர்.</p><p>செய்தி - சண்முகம் தவசீலன்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c965ef0-9690-4176-bcd7-12e3477fe2f9/26-6a6c09d95d3bc.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbccd07-4831-4695-bc6a-6df22b9b5730/26-6a6c09da37f8d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8088ced3-4e5e-4a9c-a8a8-0deaa1bf9b6e/26-6a6c09db0d66d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T02:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் மயப்படுத்தப்படும் நீதித்துறை! அரசாங்கத்தின் மீது நாமல் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-alleges-judiciary-is-being-politicized-1785458352"></link>
            <id>https://ibctamil.com/article/namal-alleges-judiciary-is-being-politicized-1785458352</id>
            <summary type="text">
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.</p><p>
கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் நாமல் கூறியுள்ளார்.</p><p></p><h2>தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசாங்கம்</h2><p>
அதன்போது மேலும் அவர் கூறுகையில், “நிறைவேற்றுத்துறை நீதித்துறையை ஆக்கிரமிப்பதை அலட்சியப்படுத்த முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba609cb3-93ee-4134-a12c-434940f1ea55/26-6a6bf272e46e8.webp' /></p><p>
அதன் விளைவு பாரதூரமானதாக அமைந்தது. கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறையும், செயற்பாடுகளையும் விமர்சித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அதே பாதையில் தான் தற்போது பயணிக்கிறது.</p><p>
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பது தெரியவில்லை.</p><p>

காவல்துறையினர் மக்கள் விடுதலை முன்னணியின் காவல்துறையினர் போன்று செயற்படுகிறார்கள்.தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகிப்பதால் காவல்துறை திணைக்களத்தின் சுயாதீனமும் தற்போது மலினப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. பைத்தியம் தலைக்கேறியதை போன்று செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. பைத்தியம் தலைக்கேறினால் உயரத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அரசாங்கம் தற்போது உயரத்துக்கு சென்று விட்டது. வெகுவிரைவில் கீழே குதித்து விடும்” என்றார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lei5GLhvkAo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T02:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-exceeding-100-mm-in-some-places-1785460723"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-exceeding-100-mm-in-some-places-1785460723</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
அதன்போது, சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4676d8-575c-45be-8e4b-757df1463848/26-6a6bf85bec91d.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

இந்த நிலையில், வானிலை மாற்றங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக செயற்பாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T01:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பத்திரிகையாளருக்கு கோட்டாபய விடுத்த மிரட்டல் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-story-of-gotabaya-s-threat-to-a-journalist-1785418943"></link>
            <id>https://ibctamil.com/article/the-story-of-gotabaya-s-threat-to-a-journalist-1785418943</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் அது குறித்த முறைப்படும் நேற்று குற்றப்புலனாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் அது குறித்த முறைப்படும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.</p><p>

இது அவரது இராணுவ பதவி விலகல் தொடர்பில் சர்ச்சையை கிளப்பும் ஒரு உரையாடலாக காணப்பட்டது.
</p><p>
ஆனால் இதே போல ஒரு உரையாடல் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் மற்றும் ஊடக உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை மையமாகக் கொண்டு உருவானது.</p><p></p><p>
</p><h2>இலங்கைக்கு ஒரு நாய்க்குட்டி</h2><p>இது சூரிச்சிலிருந்து (Zurich) இலங்கைக்கு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக The Sunday Leader நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அந்தச் செய்தியின்படி, முதலில் A340 வகை விமானம் இயக்கப்பட இருந்த நிலையில், A330 விமானமாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது.</p><p> 

A330 விமானத்தை மட்டுமே இயக்கத் தகுதி பெற்றிருந்த விமானி கேப்டன் பிரவீன் விஜேசிங்க பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பரிசீலிக்கப்பட்டதாகவும், இதனால் பல பயணிகளுக்கு இடமின்மை ஏற்பட்டு விமான நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற The Sunday Leader ஆசிரியர் குழு கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்புகொண்டது.</p><p> அப்போது, தனது மனைவிக்காக நாய்க்குட்டி ஒன்று கொண்டு வரப்படுவதை அவர் மறுக்கவில்லை. 

அதற்கான சரக்குக் கட்டணத்தை தாமே செலுத்துவதாகவும், தனிப்பட்ட பொருட்களை விமான சரக்காக கொண்டு வருவதில் தவறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.
</p><p>
ஆனால், விமானம் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை அவர் நிராகரித்தார். இதுதொடர்பான கேள்விகளை செய்தியாளர் தொடர்ந்து எழுப்பியபோது, அவர் கடும் கோபமடைந்து செய்தி வெளியிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும், நாளிதழுக்கும் செய்தியாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்தது.</p><p></p><p>
</p><h2>கடுமையான வாக்குவாதம்</h2><p>செய்தியில் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, உரையாடல் முன்னேறியபோது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர், பொதுநலன் கருதி விளக்கம் பெறுவதற்காகவே தொடர்புகொண்டதாக கூறியபோதும், கோட்டாபய ராஜபக்ச ஊடகத்தின் நோக்கத்தை விமர்சித்ததுடன், செய்தி வெளியிடப்பட்டால் அதற்கு கடுமையான சட்ட மற்றும் தனிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
பின்னர் நடைபெற்ற மற்றொரு தொலைபேசி உரையாடலிலும், விமானத்தை மாற்றுவதற்கான உத்தரவை தாம் வழங்கவில்லை என்றும், அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தமக்குத் தெரியாமலேயே நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறியதாக The Sunday Leader செய்தி வெளியிட்டது. </p><p>

இருப்பினும், செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் மீண்டும் ஆவேசமாக நடந்துகொண்டதாகவும், ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
</p><p>
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, விமான ஒதுக்கீடு மற்றும் விமான வகை மாற்றம் போன்ற முடிவுகள் பயணிகள் எண்ணிக்கை, செயற்பாட்டு தேவைகள் மற்றும் வணிகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். </p><p>

நாய்க்குட்டி தொடர்பான குற்றச்சாட்டில் அவர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

சம்பவத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட கேப்டன் பிரவீன் விஜேசிங்க, பயணத்தின் முதல் கட்டத்தை மட்டுமே இயக்க இருந்ததாகவும், A340 விமானத்தை இயக்கும் தகுதி தமக்கு இல்லை என்றும் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.
</p><p>
 மேலும், நாய்க்குட்டியை கொண்டு வருவது குறித்து முன்கூட்டியே தனக்குத் தகவல் இல்லை என்றும் அவர் கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.</p><p></p><h2>ஊடகங்கள் எதிர்கொள்ளும் அழுத்தம்</h2><p> இந்தச் சம்பவம் அப்போது அரசியல் அதிகாரத்தின் பயன்பாடு, அரச நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கு, அரச வளங்களின் பயன்பாடு மற்றும் ஊடகச் சுதந்திரம் குறித்து இலங்கை முழுவதும் தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தியது. </p><p>

குறிப்பாக, அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டது.
</p><p>
இந்தத் தொலைபேசி உரையாடல் 2012 ஜூலை 5ஆம் திகதி நடைபெற்றது. இதில் சில இடங்களில் ஆபாச சொற்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><b>

FJ</b>: ராஜபக்ச அவர்களே! இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா தெரியாதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த வெள்ளிக்கிழமை சூரிச்சுக்கு செல்லவுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உங்களுக்காக ஒரு நாய்க்குட்டியை கொண்டு வரப் போகிறது என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p><b>
GR</b>: அதில் என்ன தவறு? அந்த நாளுக்குத் திட்டமிடப்பட்ட விமானம்தானே அது. ஆம், அவர்கள் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வருகிறார்கள். அது என் மனைவிக்காக. அதில் எந்தத் தவறும் இல்லை. நாயல்ல, யானையாயிருந்தாலும் அதை கொண்டு வர எனக்கு முழு உரிமை இருக்கிறது. அதற்கான செலவை நானே செலுத்துகிறேன். என்ன வேண்டுமானாலும் கொண்டு வர எனக்கு உரிமை உண்டு. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அவர்கள் எனக்கு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் என்ன தவறு? விமானத்திற்கான செலவை நானே கொடுத்துள்ளேன். எனக்கு முழு உரிமை இருக்கிறது.</p><p>

<b>FJ</b>: உண்மையில், அது பிரச்சினையல்ல. ஆனால், கேப்டன் பிரவீன் விஜேசிங்க தானே சூரிச்சுக்குப் பறந்து அந்த நாய்க்குட்டியை கொண்டு வர முன்வந்துள்ளார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p><b>
GR</b>: ஆம். அதில் என்ன? அவர் என் நண்பர். முன்னாள் விமானப்படை அதிகாரிகள் பலர் இப்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறார்கள். அதில் என்ன தவறு?
</p><p>
<b>FJ</b>: ஆனால், A340 விமானத்தை இயக்குவதற்கு இந்த விமானிக்கு தகுதி இல்லை. அதனால், அவர் இயக்கக்கூடிய A330 விமானத்தை மாற்றிப் பயன்படுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீது ஆரம்பத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p><b>
GR</b>: இல்லை. விமானம் மாற்றப்படவில்லை.</p><p>

<b>FJ</b>: அது மாற்றப்படாததற்குக் காரணம், விமானிகள் சங்கத் தலைவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான்.</p><p></p><h2>மோசமான ஆபாச வார்த்தை</h2><p><b> GR</b>: யாரும் எதிர்க்கவில்லை. இதைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையாவது நீங்கள் எழுதினால், நான் உங்கள்மீது வழக்கு தொடருவேன். எந்த நீதிமன்றத்துக்கும் நான் பயப்பட மாட்டேன். ஏற்கனவே உங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளேன். மீண்டும் தொடருவேன். அது என் உரிமை.
</p><p>
<b>FJ</b>: ஆம். அதேபோல, ஒரு பத்திரிகையாளராக, உங்களைச் சார்ந்த இந்த விவகாரத்தில் உங்கள் தரப்பையும் அறிந்து கொள்ள எனக்கும் உரிமை இருக்கிறது.
</p><p><b>
GR</b>: அதைப் போய் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் கேளுங்கள்.<b>
</b></p><p><b>
FJ</b>: நாங்கள் ஏற்கனவே அவர்களிடம் பேசியுள்ளோம். எப்படியாயினும், விமானத்தின் அழுத்த அமைப்பைப் பற்றி தெரிந்த எந்த விமானியும் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வர முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் பிரச்சினை என்னவென்றால், அந்த விமானத்தை இயக்கத் தகுதியில்லாத கேப்டன் பிரவீன் விஜேசிங்கவே அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p><b>
GR</b>: அதில் என்ன? அவர் இயக்கியிருந்தால் என்ன தவறு? நான் சொல்கிறேன்... இதைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையாவது எழுதியிருந்தால், உங்கள் [ஆபாசச் சொல்] பத்திரிகைக்கு எதிராக நான் வழக்கு தொடருவேன். மிக் (MiG) ஒப்பந்தம் பற்றியும் நீங்கள் இப்படித்தான் எழுதினீர்கள். எதையும் சரிபார்க்காமல், யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதினீர்கள்.</p><p>

<b>FJ</b>: அதனால்தான் நான் உங்களைத் தொடர்புகொண்டேன். யாராவது சொன்னதற்காக நான் எழுத மாட்டேன். உங்கள் தரப்பையும் கேட்கவே உங்களை அழைத்தேன்.
</p><p><b>
GR</b>: நீ எழுதிப் பார். ஒரு அவதூறு வார்த்தையாவது எழுது. நான் வழக்கு தொடருவேன். எழுதியவனுக்கும், உங்கள் [ஆபாசச் சொல்] பத்திரிகைக்கும் எதிராக வழக்கு தொடருவேன்.
</p><p>
<b>FJ</b>: ராஜபக்ச அவர்களே, நீங்கள் என்னை மிரட்டுகிறீர்களா?
</p><p><b>
GR</b>: ஆம், மிரட்டுகிறேன். நான் சொன்னதை ஒரு வார்த்தையாவது எழுது. ஒரு [ஆபாசச் சொல்] வார்த்தையாவது எழுது. பிறகு பார்ப்போம்.

<b>FJ</b>: நான் ஒரு பத்திரிகையாளராக உங்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி கேட்கத்தான் அழைத்தேன். ஆனால், நீங்கள் மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டினீர்கள்.

(பின்னர், ஜூலை 6 அன்று, இந்த விவகாரத்தைப் பற்றிய தகவல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு தெரிவிக்கப்பட்டதால், அது சரிசெய்யப்பட்டிருக்கிறது என்பதால், செய்தியை வெளியிடப் போவதில்லை என்பதை தெரிவிக்க மீண்டும் தொடர்பு கொண்டார்.)
</p><p>
<b>FJ</b>: ராஜபக்ச அவர்களே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஒரு அதிகாரி என்னிடம், கேப்டன் பிரவீன் விஜேசிங்க காரணமாக விமானம் மாற்றப்பட்டிருந்தால் 56 பயணிகள் பயணம் செய்ய முடியாமல் போயிருப்பார்கள் என்றும், அது உங்களுக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.</p><p></p><p>
</p><h2>குப்பைத் தின்னும் பெண் பன்றி</h2><p><b> GR</b>: நேற்று உன்னிடம் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொன்னேனே? இந்த முட்டாள் விமானிகள் இதற்காக விமானங்களை மாற்றப் போகிறார்களானால், அது என் தவறு அல்ல. நான் இதை முறையாகச் செய்ய முயன்றேன். ஆனால், இந்த விமானிகளுக்குள் பிரச்சினை இருக்கிறது. உங்களைப் போன்ற மோசமான பத்திரிகையாளர்கள் அவர்களுக்குச் செவி சாய்க்கிறார்கள். முட்டாள்கள்! அது என் தவறு அல்ல.</p><p>

<b>FJ</b>: உண்மைதான். ஆனால், முதலில் அந்த முடிவு எடுக்கப்பட்டதும், பின்னர் மூத்த விமானிகள் நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுத்ததால் அது மாற்றப்பட்டது என்பதே உண்மை.
</p><p>
GR: அது தவறு. நான் விசாரித்தேன். அப்படிப்பட்ட முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>

<b>FJ</b>: அது உண்மையில் நடந்தது. எப்படியாயினும், நீங்கள் என்னை மிரட்டியதால் அல்ல; நீங்கள் சரியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், இந்த விவகாரத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
</p><p><b>
GR</b>: ஆம், நான் மிரட்டினேன். உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் குப்பைத் தின்னும் பன்றிகள். மிகவும் மோசமானவர்கள்! மிகவும் மோசமானவர்கள்! மிகவும் மோசமானவர்கள்! இந்த நாட்டில் 90% மக்கள் உங்களை வெறுக்கிறார்கள். உங்களை அருவருக்கிறார்கள். நீங்கள் என் நிகழ்ச்சிக்கு வாருங்கள். அங்கே உங்களை எல்லோருக்கும் காட்டி, "இவர் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்" என்று சொல்வேன். அப்போது 90% பேர் உங்களை வெறுப்பார்கள்.
</p><p>
<b>FJ</b>: அப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
</p><p><b>
GR</b>: நீ அப்படி நினைக்கவில்லை. அதுதான் உன் அகந்தை. நீ மிகவும் மோசமான பத்திரிகையாளர். [ஆபாசச் சொல்]. குப்பைத் தின்னும் பெண் பன்றி. நான் நீதிமன்றத்துக்குப் போவேன். மிக் ஒப்பந்தம் பற்றி நீங்கள் எழுதியதற்காக ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை நான் வாபஸ் பெற மாட்டேன்.</p><p>

<b>FJ</b>: அதற்கு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
</p><p><b>
GR</b>: இருந்தாலும் உன்னை சிறையில் போடுவேன். நீ நாட்டைப் பிளக்க முயற்சிப்பவள். உண்மையான பௌத்தர்களை பிரிப்பவள். மிகவும் மோசமான பத்திரிகையாளர். தூதுவர்கள், அரசு சாரா அமைப்புகள், பாக்கியசோதி போன்றவர்கள் உனக்கு பணம் தருகிறார்கள்.</p><p>

<b>FJ</b>: அப்படியானால் அது எவ்வளவு நல்ல விஷயம்!
</p><p><b>
GR</b>: நீ குப்பைத் தின்னும் பெண் பன்றி. [ஆபாசச் சொல்] குப்பைத் தின்னும் பத்திரிகையாளர்.
</p><p>
<b>FJ</b>: ராஜபக்ச அவர்களே, நீங்கள் சொல்வதை நீங்களே தெளிவாகக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
</p><p><b>
GR</b>: மக்கள் உன்னை கொன்று விடுவார்கள். அவர்கள் உன்னை வெறுக்கிறார்கள். அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்.</p><p>

<b>FJ</b>: அது உங்கள் உத்தரவின்படியா?
</p><p><b>
GR</b>: என்ன? இல்லை. என்னுடைய உத்தரவு அல்ல. ஆனால், உன்னைப் போன்ற கெட்டுப்போன [ஆபாசச் சொல்] பத்திரிகையாளரை அவர்கள் கொன்று விடுவார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T00:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
