<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-04T21:22:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பாதுகாப்பு கட்டமைப்பு! சீனாவின் முன்மொழிவை வரவேற்றது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-welcomes-china-s-proposal-security-framework-1788551301"></link>
            <id>https://ibctamil.com/article/iran-welcomes-china-s-proposal-security-framework-1788551301</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்றுள்ளார்.
</p><p>
எகிப்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
</p><p>
அதன்போது, வெளித் தலையீடுகளை தவிர்க்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்க பெய்ஜிங் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>சீனா காட்டும் முக்கியத்துவம்</h2><p>
</p><p>
அத்தோடு, அத்தகைய ஏற்பாடு ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">China’s emphasis on fostering common security reflects a principle Iran has long championed. <br>Regional countries must be taking their future into their own hands, and true stability can only come through a new security architecture that is homegrown. Iran stands ready.</p>&mdash; محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) <a href="https://x.com/mb_ghalibaf/status/2095918982494859536?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இது குறித்து 'X' தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காலிபாஃப், பொதுப் பாதுகாப்பை வளர்ப்பதில் சீனா காட்டும் முக்கியத்துவம், ஈரான் நீண்ட காலமாக ஆதரித்து வரும் ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், மத்திய கிழக்கு நாடுகள் இந்த விவகாரங்களை தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T21:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் ஒரு பாரிய தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-us-hit-iran-pickaxe-mountain-soon-1788550290"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-us-hit-iran-pickaxe-mountain-soon-1788550290</id>
            <summary type="text">அமெரிக்கா விரைவில் ஈரானின் &#039;பிக்காக்ஸ் மலை&#039; மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விரைவில் ஈரானின் 'பிக்காக்ஸ் மலை' மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த பிக்காக்ஸ் மலைப் பகுதி, ஏற்கனவே கடுமையாக சேதமடைந்துள்ள ஈரானின் பிரதான 'நடன்ஸ்' யுரேனியம் செறிவூட்டும் மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.</p><p> 

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிக்காக்ஸ் மலை தளத்தை அமெரிக்கப் படைகள் மிக விரைவில் இலக்கு வைத்து தாக்கக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>முழுமையாக அழிப்பது கடினம்</h2><p>குறித்த தளம், ஈரானின் மிகவும் பலப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு ராணுவ மையமாக காணப்படுகிற நிலையில், அது மிகவும் கடினமான கிரனைட் பாறைகளுக்கு அடியில், சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வெட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13da8da1-a930-42cf-ae7e-74365868f173/26-6a9b1c94e218d.webp' /></p><p>
இதன்படி, மிகவும் ஆழமான பாறைப் பகுதியில் அமைந்துள்ளதால், சாதாரண குண்டுகளால் அல்லது நிலத்தடி ஊடுருவல் குண்டுகளால் (Bunker Buster Bombs) கூட இந்த மையத்தை முழுமையாக அழிப்பது கடினம் என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர். </p><p>

இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை நுழைவாயில்கள் அல்லது அதன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T20:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக முக்கிய தீர்மானம்! ஒன்றிணைந்துள்ள பிரபல நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/called-for-iaea-resolution-against-iran-1788549168"></link>
            <id>https://ibctamil.com/article/called-for-iaea-resolution-against-iran-1788549168</id>
            <summary type="text">அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் (IAEA) உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்தத் தீர்மானம், ஈரான் தனது அணுசக்தி தொடர்பான கடமைகளை மீறியதற்காக அதை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் சுட்டிக்காட்டும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் குறித்த விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காததன் மூலம் ஈரான் தனது கடமைகளை மீறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அணு ஆயுத உற்பத்தி</h2><p> 

எவ்வாறாயினும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) ஒரு தரப்பாக இருப்பதால், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது; மேலும் தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று பலமுறை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfb2465-ab9f-4a08-965d-794c48569a28/26-6a9b183265200.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p> 

இருப்பினும், பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் குண்டுவீசப்பட்ட யுரேனியம் வசதிகளை ஆய்வு செய்ய IAEA ஊழியர்களை ஈரான் அனுமதிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T19:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை குற்றச்சாட்டு! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-travel-ban-imposed-on-ex-minister-1788547063"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-travel-ban-imposed-on-ex-minister-1788547063</id>
            <summary type="text">கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இந்த பயணத் தடை குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இதேவேளை, பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>மரண தண்டனை&nbsp;</h2><p>

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்ததற்காக, பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf4a9c33-5803-4a93-8013-63069c3ba810/26-6a9b11ccbb126.webp' /></p><p>
அதனைதொடர்ந்து, மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகர மற்றும் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், அதை ரத்து செய்து தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/904a200d-0c9a-408a-abba-33e0d35f2caa/26-6a9b11cd7046a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில், இந்த மனு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மேற்படி வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T18:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிச் சூடு! 74 வயது முதியவர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-killed-in-boralesgamuwa-shooting-1788544462"></link>
            <id>https://ibctamil.com/article/one-killed-in-boralesgamuwa-shooting-1788544462</id>
            <summary type="text">கொழும்பு - பொரலஸ்கமுவவின் புலத்சிங்கல மாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரலஸ்கமுவவின் புலத்சிங்கல மாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, இன்று இரவு (04) ​மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

இதன்போது, கொல்லப்பட்ட நபர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 74 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இதேவேளை, கொலை செய்யப்பட்டவர், “கொஸ் மல்லி” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் செயற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dedd896-1f33-46a5-96ea-b04ff9882a85/26-6a9b07fbedd77.webp' /></p><p>

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய பொரலஸ்கமுவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-04T18:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் - கட்டுக்காரண் குடியிருப்பு பனந்தோப்பில் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-thalaimannar-police-division-1788543695"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-thalaimannar-police-division-1788543695</id>
            <summary type="text">தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் காணப்படும் பனந்தோப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை (4) மாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் காணப்படும் பனந்தோப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று வெள்ளிக்கிழமை (4) மாலை திடீரென இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>இதன்போது, குறித்த தீயை கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06223e9-57de-4195-b314-e6f4e0b5f382/26-6a9b052464c38.webp' /></p><p>அருகில் மக்களின் குடியிருப்புகள் காணப்படுகின்றமையினால் மக்களின்
குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் கண்டனத்துடன் ஜென் Z தலைமுறையினர்! நாமலின் கைது குறித்து ஐ.தே.க அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200"></link>
            <id>https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200</id>
            <summary type="text">பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIAB...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIABOC) கைது செய்ததை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
 நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டி என ஐக்கிய தேசியக் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>
 பொதுஜனப் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில், தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவைப் போலவே நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><h2>அதிகரித்து வரும் பலவீனம்</h2><p>
</p><p>
 எந்தவொரு நவீன, நாகரிக சமூகமும் ஒரு தனிநபரின் அத்தகைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை அங்கீகரிக்காது என்றும், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் இத்தகைய செயல்களைக் கடும் கண்டனத்துடன் பார்க்கிறார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6036b640-22a7-48ee-b955-ffd5dc679813/26-6a9ae1a3bbb62.webp' /></p><p>
</p><p>
 மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், NPP அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் அதிகரித்து வரும் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XyyVZRZXn0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T17:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 6 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-6-year-old-boy-died-after-falling-into-a-pit-1788542708"></link>
            <id>https://ibctamil.com/article/a-6-year-old-boy-died-after-falling-into-a-pit-1788542708</id>
            <summary type="text">




மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>




மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

இதன்போது, நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
ஆயித்தியமலை காவல்துறை பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123bf0b7-15e0-4cf7-8ed1-6b088a63ffe7/26-6a9b02534dc26.webp' /></p><p>

இந்நிலையில், சம்பவ தினமான இன்று குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்துள்ளார்.</p><p>அதனைதொடர்ந்து, சிறுவன் மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இதன்படி, பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2a831b-15e9-410d-aea7-8eaa7d9957fc/26-6a9b025405625.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது டன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இது தொடர்பாக ஆயித்தியமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p>]]></content>
            <updated>2026-09-04T17:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகிய தந்தைக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-sentenc-40-years-prison-for-sxual-assault-1788530261"></link>
            <id>https://ibctamil.com/article/father-sentenc-40-years-prison-for-sxual-assault-1788530261</id>
            <summary type="text">வவுனியாவில் சிறுமி ஒருவரை(13) பாலியல் அத்துமீறலுக்கு உள்ளக்கிய தந்தைக்கு 40 வருட
கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் சிறுமி ஒருவரை(13) பாலியல் அத்துமீறலுக்கு உள்ளக்கிய தந்தைக்கு 40 வருட
கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த போது 13 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி இருந்துள்ளார்.</p><p></p><h2>சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024ஆம் ஆண்டு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845d8f2a-1e7b-44b2-80a7-74d68427ee39/26-6a9ace56cc12f.webp' /></p><p> 

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு
நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக்
காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து
வந்துள்ள நிலையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்செயல்கள்
இடம்பெற்றுள்ளன.
</p><p>
இரு சந்தர்ப்பங்களிலும் தந்தை போதைப்பொருள் உபயோகித்து விட்டு வீட்டிலே வைத்து
குறித்த குற்றச்செயல்களைப் புரிந்துள்ளார்.

இந்த குற்றசெயயல் குறித்த சிறுமி கருத்தரித்ததுடன், மகப்பேறு மருத்துவர்,
மனநல வைத்தியர், சட்ட வைத்திய அதிகாரி கொண்ட குழாம் சிறுமியைப் பரிசோதித்து
அவருக்கு ஒரு குழந்தையைத் தாங்கக்கூடிய உடல் வலு, மனத்திடம் மற்றும்
முதிர்ச்சி இல்லை என்றதன் அடிப்படையில் சட்ட ரீதியான கருக்கலைப்பை
மேற்கொண்டனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல்
புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல்
பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றம் நடைபெறாமல்
தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்திலே கொண்டு கடுமையான தண்டனையை
வழங்கியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T16:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ போருக்கு பின்னர் தமிழர் அரசியலுக்கு முட்டுக்கட்டையான தென்னிலங்கையின் இரகசிய நிகழ்ச்சி நிரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-secret-agenda-that-is-hindering-tamil-politics-1788519657"></link>
            <id>https://ibctamil.com/article/the-secret-agenda-that-is-hindering-tamil-politics-1788519657</id>
            <summary type="text">தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தத் தன்மையே போருக்குப் பின்னரான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு உருவாக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
</p><p>
குறிப்பாக, தமிழீழப் போரை எதிர்த்த தென்னிலங்கை அரசாங்கம் இன்றும் போருக்குப் பின்னரான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வைத்துள்ளது.</p><p>

இதில் தமிழ் மக்களிடையே ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதைத் தடுத்தல், மீண்டும் ஒரு போராட்டச் சூழலைத் தமிழர் தரப்பு கையில் எடுப்பதைத் தடுத்தல் போன்ற விடயங்களில் தென்னிலங்கைத் தரப்பினர் ஆழமாக ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.
</p><p>
இவ்வாறு தமிழர் அரசியலில் விடைதெரியது எஞ்சி நிற்கும் பல கேள்விக்களுக்கு மத்தியில், தற்போதைய தமிழர் அரசியல் சூழல் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Btk-cgAlJ00" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T15:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவால் வலி. வடக்கை இலக்கு வைத்த வர்த்தமானி! காணி உரிமையார்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahindaval-pain-the-gazette-targeting-the-north-1788530680"></link>
            <id>https://ibctamil.com/article/mahindaval-pain-the-gazette-targeting-the-north-1788530680</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம்
ஆண்டு மகிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம்
ஆண்டு மகிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும்
என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஜான்சன் பிரிடாரோ
கோரியுள்ளார்.
</p><p>
யாழ் வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் 20 ஆவது வெள்ளிக்கிழமையான இன்றைய தினம்
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்க்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p>
மேலும் தெரிவிக்கையில் ''வலி. வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மஹிந்த அரசாங்கம்
கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.</p><p>[SKWOMVV
]</p><h2>வலி. வடக்கு பகுதி</h2><p>
</p><p>இந்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் , மக்களின் காணிகளை
விடுவிப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம் குறித்த
வர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசாங்கங்கள் போல மக்களின் காணிகளை
கையகப்படுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5235a63e-b1a3-4017-aee8-4565fa816932/26-6a9acff98de34.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான நிலையிலையே வலி. வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு
கோரி மயிலிட்டி , பலாலி மற்றும் வசாவிளான் ஆகிய மூன்று இடங்களில் போராட்டங்கள்
இடம் பெற்று வருகிறது.
</p><p>
இந்த அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து
எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது"&nbsp;என்றார்</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T15:25:57+00:00</updated>
        </entry>
    </feed>
