<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T02:13:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-people-including-woman-arrested-in-jaffna-1787448199"></link>
            <id>https://ibctamil.com/article/three-people-including-woman-arrested-in-jaffna-1787448199</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p></p><h2>விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c34f0b-9806-42f4-9a4f-3f4244dd53bb/26-6a8a4d3e9da29.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T01:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-1787447193"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-1787447193</id>
            <summary type="text">

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e5e4561-952c-4658-a0b0-dccc4149fbdd/26-6a8a491e011db.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கோர விபத்து! காவல்துறை அதிகாரிகள் உட்பட எழுவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875"></link>
            <id>https://ibctamil.com/article/seven-died-in-a-car-crash-in-uk-1787438875</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் பாசாட் கார் ஒன்றை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர். </p><p>அப்போது, பணியில் இருந்த காவல்துறை வாகனம் மீது அந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>
</p><p>
அதிகாலை 3.40 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து அவசர உதவிப் படையினர் விரைந்தபோதிலும், இரு வாகனங்களிலும் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6815491-45d8-45cb-a399-ac5a36774295/26-6a8a271d77795.webp' /></p><p><i>Image Credit: aol.co.uk</i></p><p>

உயிரிழந்த காவலர்துறை அதிகாரிகள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் தெரிவித்துள்ளார். </p><p>

அதன்போது, காவல்துறை வாகனம் சரியான திசையிலேயே பயணித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>தற்காலிகமாக மூடப்பட்ட வீதி</h2><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் விபத்தைத் தொடர்ந்து, நார்மன்பி வீதிக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட A66 வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326d9de0-e232-45ad-813d-bceac29e0268/26-6a8a271e346bf.webp' /></p><p><i>Image Credit:&nbsp;irishexaminer</i></p><p>
</p><p>
இந்நிலையில், இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைவதாகப் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பொருளாதார தடைகள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-defense-chief-warns-gulf-countries-1787434430"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-defense-chief-warns-gulf-countries-1787434430</id>
            <summary type="text">

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரக் தடைகளை விதிக்க வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ரெசாய் எச்சரிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரக் தடைகளை விதிக்க வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ரெசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

மீறிச் செயல்பட்டால் அவர்களின் நலன்களை இலக்கு வைத்து ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

"ஈரானைச் சுற்றியுள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரப் போரில் இணைந்தால், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது, அத்துடன் பாரசீக வளைகுடாவின் பிற எண்ணெய் ஏற்றுமதி பாதைகளையும் நாங்கள் இலக்கு வைப்போம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவை தூண்டிய&nbsp;நெதன்யாகு</h2><p>
</p><p>
மேலும், ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரப் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவே தூண்டிவிட்டதாகவும் ரெசாய் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5834613c-333a-4056-9ba3-db3eaffdafd5/26-6a8a1b012d08a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Modern Diplomacy</i></p><p> 

இத்திட்டம் குறித்து ட்ரம்ப் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய போதிலும், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இதனைச் சோதித்துப் பார்த்து, பின்னர் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதா என்பதை முடிவு செய்யலாம் என இஸ்ரேலிய பிரதமர் அவரைச் சம்மதிக்க வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T22:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுப் படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-time-world-champion-tete-shot-dead-1787432388"></link>
            <id>https://ibctamil.com/article/two-time-world-champion-tete-shot-dead-1787432388</id>
            <summary type="text">தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான ஜொலானி டெட்டே (37), அவரது வீட்டின் வாசலில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான ஜொலானி டெட்டே (37), அவரது வீட்டின் வாசலில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
2007-2008 ஆம் ஆண்டுகளில் WBF பிளைவெயிட் உலக சாம்பியன் பட்டத்தையும், 2017 முதல் 2019 வரை WBO பேண்டம்வெயிட் உலக சாம்பியன் பட்டத்தையும் ஜொலானி டெட்டே வென்றுள்ளார்.</p><p>

2017-ல் சிபோனிசோ கொன்யா என்பவரை எதிர்கொண்ட போட்டியில், வெறும் 11 வினாடிகளிலேயே அவரை வீழ்த்தி உலக தரத்திலான போட்டிகளில் மிக வேகமான நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்து கின்னஸ் சாதனையும் படைத்திருந்தார்.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து தென்ஆப்பிரிக்க விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவிக்கையில், ஈஸ்டர்ன் கேப் நகரில் உள்ள டான்ட்சேன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு டெட்டே காரில் திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2be43d56-cb0c-4f59-97ad-34d0f19b7c18/26-6a8a0dc66faa4.webp' /></p><p><i>Image Credit: WBO</i></p><p>

 வீட்டு வாயிலின் கதவு திறப்பதற்காகக் காரில் காத்திருந்தபோது, முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த டெட்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>

அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய இளம்பெண்ணும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டிற்குப் பெருமை சேர்த்த சிறந்த விளையாட்டு வீரரை இழந்துவிட்டதாகக் கூறி அமைச்சர் தனது ஆழ்ந்த கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T21:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடியை அறிவித்த கனேடிய பிரதமர்! செப்டம்பர் முதல் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-also-taxes-instead-of-us-taxes-1787430182"></link>
            <id>https://ibctamil.com/article/canada-also-taxes-instead-of-us-taxes-1787430182</id>
            <summary type="text">செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவின் உலோகங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மற்றும் பிற ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குக் கனடா வரி விதிக்கும் என கனேடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவின் உலோகங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மற்றும் பிற ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குக் கனடா வரி விதிக்கும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
கனேடிய பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகளுக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
பல நாட்கள் நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை.</p><p></p><h2>கேள்விக்குறியாகியுள்ள வர்த்த ஒப்பந்தம்</h2><p> 

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மேலும் மோசமடைந்துள்ளதுடன், அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) என அறியப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53a1ed3-2d8d-411a-826a-821e4c86f3da/26-6a8a08051fc44.webp' /></p><p>
</p><p>
கனடா மீதான ட்ரம்பின் புதிய வரிகள் வயின், மரத்தினாலான உபகரணங்கள், பால் பொருட்கள், சீமெந்து, ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளைப் பாதிப்பதுடன், அமெரிக்காவிற்கான கனடாவின் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் கார்னி, "கனேடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு ஈடாகக் கனடாவும் அதே அளவு வரி விதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T20:37:18+00:00</updated>
        </entry>
    </feed>
