<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-03T05:37:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை : பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999"></link>
            <id>https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

​</p><p>இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b21ddb32-c1b8-45b3-bd30-c8068ee96574/26-6a702423f02f5.webp' /></p><p>அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

​</p><p>இந்தநிலையில் இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.</p><p>அதன்படி, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க&nbsp; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

​</p><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c749b28f-b4d0-430f-b9db-4806aa5ac20e/26-6a7004aa0ccf6.webp' /></p><p>அந்த நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RpvrbiBloOw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வமில்லை...! நீடிக்கும் கருத்து வேறுபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-distrusts-us-talks-hormuz-with-oman-1785732439"></link>
            <id>https://ibctamil.com/article/iran-distrusts-us-talks-hormuz-with-oman-1785732439</id>
            <summary type="text">அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஆலன் ஐயர் தெரிவித்துள்ளார்.
</p><p>
2015 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி <a href="https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403" target="_blank">ஒப்பந்த பேச்சுவார்த்தை</a> குழுவில் இருந்த அவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஓமான்–ஈரான் இடையே ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓமான் மற்றும் ஈரான் ஒருவரையொருவர் நன்கு <a href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201" target="_blank">புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை</a> நடத்தும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>அணுசக்தி பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை மீது முழு கட்டுப்பாடும் கட்டண வசூலும் வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், கட்டணம் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஓமானின் நிலைப்பாட்டுக்கும் இடையே இன்னும் பெரிய கருத்து வேறுபாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6585ad5-0911-456a-af15-a667cb272dee/26-6a702043c3751.webp' /></p><p>அமெரிக்கா–ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை விரைவில் முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் ஆலன் ஐயர் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/burnt-body-found-in-kilinochchi-1785733423"></link>
            <id>https://ibctamil.com/article/burnt-body-found-in-kilinochchi-1785733423</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/859ca4fc-face-4419-a23b-d9aa0266cc8e/26-6a70230328a55.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-woman-india-airport-withforeign-cigarettes-1785730432"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-woman-india-airport-withforeign-cigarettes-1785730432</id>
            <summary type="text">நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் இன்று (03.08.2026) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற அந்தப் பெண் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p></p><h2>சீனத் தயாரிப்பு சிகரெட்டு</h2><p>இதன்போது அந்த பெண்ணிடம் சட்டவிரோமாக கடத்தி செல்லபட்ட சிகரட்டுகள் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/effcedb2-8d0a-4406-bca1-912148633497/26-6a7021a529766.webp' /></p><p>இதன்போது மேற்க்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயது அழகுக்கலை நிபுணர் என்று&nbsp; தெரியவந்துள்ளது.</p><p>

 

அவர் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, முதலில் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்ததுடன், அங்கிருந்து மலேசியா ஏர்லைன்ஸின் MH179 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>30 இலட்சத்திற்கும் அதிக மதிப்பு</h2><p>

 

அவரது பயணப் பெட்டி மற்றும் முதுகுப்பை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பல்வேறு சீன பிராண்டுகளைச் சேர்ந்த 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 அட்டைப் பெட்டிகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38efb1f1-2029-4a85-bd92-ef12dda419ad/26-6a7021a5d17ee.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார்.&nbsp;</p><p>

 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு&nbsp; மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T05:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி குறித்து பிரதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/insurance-scheme-for-journalists-media-minister-1785729727"></link>
            <id>https://ibctamil.com/article/insurance-scheme-for-journalists-media-minister-1785729727</id>
            <summary type="text">வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம் என வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.</p><p>அத்துடன் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>
வவுனியாவில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து
கொண்ட பின் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>காப்புறுதி திட்டம்</h2><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் கஸ்டங்கள்
தொடர்பில் எமக்கு தெரியும்.</p><p>ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக
நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். ஏனைய ஊடக
நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை
உறுதி செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b841fe-bab0-4c67-80a9-0a9f3e9b4cff/26-6a701dbb757df.webp' /></p><p>ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான
அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டு வரவுள்ளேன். இதனை ஒரு வருடத்திற்கு
மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள
வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம்
பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.</p><p>
கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது
ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எமது
அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க
நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோ ஒரு வகையில்
வீட்டுத்திட்டம் கிடைக்கும்.</p><p></p><h2>&nbsp;ஊடகவியலாளர்களுக்கு நீதி</h2><p>அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
தொடர்பான பிரச்சினைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. நாம் பல வழக்குகளை
தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p> தேங்கியுள்ள
வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை
முன்வைத்துள்ளோம். கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான
பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. அவற்றை திரட்ட
வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039b029a-ff34-4b0d-ac04-b94a8f8aa97f/26-6a701dbc55ae7.webp' /></p><p> </p><p>அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன்
மூலமே நீதியைப் பெற முடியும்.

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல
சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள். </p><p>அந்த
வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன்
தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள்.</p><p>வடக்கில் மட்டுமன்றி
தெற்கிலும் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்.
எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து
ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.</p><p>

எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக
நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற
நடவடிக்கை எடுக்கும்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T04:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985"></link>
            <id>https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&amp;nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தோரண வாசலான "நல்லூரான் வடக்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்படவுள்ளது</p><p>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, எதிர்வரும் 6 ஆம் திகதி தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc589867-d2e1-4297-ad96-2cacf6154bc4/26-6a701edd3da2e.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். </p><p>அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.
</p><p>யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T04:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-probes-mahara-prison-riot-incident-1785730111</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902?itm_source=parsely-top" target="_blank">மஹர சிறைச்சாலையில் </a>ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
</p><p>
குறித்த சிறப்பு விசாரணையானது நேற்றிலிருந்து (03-08-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட <a href="https://ibctamil.com/article/prisoners-transferred-from-mahara-prison-1785665320" target="_blank">விசாரணைக் குழுவொன்று </a>நேற்று முற்பகல் மஹர சிறைச்சால பகுதிக்கு நேரில் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>கோடிக்கணக்கான ரூபாய்</h2><p>

இதற்கு மேலதிகமாக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (International Human Rights Organization) பிரதிநிதிகள் குழுவொன்றும் நேற்று மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்துள்ளது.
</p><p>
சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0014311b-9e80-45ca-a091-b60f7e66fdb9/26-6a701a4bd2036.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் தெரிவித்த அவர், “கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>விரிவான விசாரணைகள்</h2><p>சிறைச்சாலை வளாகம் முழுவதும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதால், அங்கு மனிதர்கள் தங்கியிருக்க முடியாத சூழலே நிலவுகிறது.</p><p> 

இந்த அழிவு கைதிகளின் தேவைகளுக்காக நடந்ததா அல்லது வேறு யாராவது தங்களது தேவைகளுக்காக இதைச் செய்தார்களா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec95d00-58fd-4b66-a770-c0b37e4e0074/26-6a701a4c8569d.webp' /></p><p>ஒரு சில அறைகளுக்குள் இருக்கும் கைதிகளால் மட்டும் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியாது. </p><p>இது யாரோ ஒருவரின் திட்டமிட்ட பின்னணியில் நடந்த சம்பவம் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதம் மற்றும் கலவரத்தின் பின்னணி குறித்த விரிவான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேசிய கட்டிட ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><h2>இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை</h2><p>அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06821a82-1e86-466e-a038-e8f0c8ab74be/26-6a700e87ab3e1.webp' /></p><p> 

​இது தவிர,கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:46:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022"></link>
            <id>https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து கேகாலை - கரடுபன பகுதியில் இன்று (3.06.2026) காலை 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

​</p><p>இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3180f20-2763-4fe8-b837-cc0dfffc9fdf/26-6a700addd292a.webp' /></p><p>விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​</p><p> விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அடிக்கடி மழை&nbsp;</h2><p>​மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc36f9cd-c21c-4166-b9e7-a8d447fa18ae/26-6a70065c42a59.webp' /></p><p>மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். 

​முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

​</p><p>வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

</p><p>இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mp-demands-full-investigation-easter-attack-1785720752"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mp-demands-full-investigation-easter-attack-1785720752</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்றையதினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், அத்தாக்குதலைத் தடுப்பதற்குப் காவல்துறையினரோ அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>பூரண விசாரணை</h2><p>
</p><p>
இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமன்றி, பல அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ed2ab6-42d8-4231-b09f-a4501f168c01/26-6a6fefb2afd23.webp' /></p><p> </p><p>

அந்தவகையில், இருவரை மட்டும் இலக்கு வைத்துத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
</p><p>
குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்ட மௌலவிகள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்திருந்ததாக அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
</p><p>
இதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களமும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது புலனாகின்றது.</p><p> </p><p>எனவே, அக்காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிப் பூரண விசாரணை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சிலரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T01:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலை தடுமாறும் ட்ரம்ப்! மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403</id>
            <summary type="text">ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் மீதான பெரும் தாக்குதலை ரத்து செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “தாக்குதல் உருவாவதை அவர்கள் கண்டதால், அதன் தீவிரத்தை அவர்கள் அறிந்திருந்தனர். இப்போது நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் பேசிக்கொண்டிருக்கிறோம்.அது நாளை மதியம் தொடங்குகிறது, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>மறுத்துள்ள ஈரான்</h2><p>

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நட்பு நாடுகளும் ஈரானும் திட்டமிடப்பட்ட தாக்குதலை ரத்து செய்யுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3184660-5960-4672-9b34-1989cf1d4e27/26-6a6fe0d749aac.webp' /></p><p>
</p><p>
எனினும், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பிடம் தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என ஈரானிய அரசு ஊடகங்கள் மறுத்துள்ளன. </p><p>

ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனம் “முட்டாள் ட்ரம்புக்கு சக்தி தீர்ந்துவிட்டது” என விமர்சித்துப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T00:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி - பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201</id>
            <summary type="text">
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இச்சம்பவத்தை உயர்மட்ட ரஷ்ய அதிகாரி ஒருவர் மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ளார்.

உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள பிரின்ட்செவ்கா கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் இந்த ட்ரோன் தாக்கியதாக கூறப்படுகிறது.
</p><p>
அதில், படுகாயமடைந்த 13 வயது சிறுமியை மருத்துவக் குழுவினரால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், 7 மற்றும் 9 வயதுடைய மேலும் இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>பயங்கரவாதச் செயல்</h2><p>
</p><p>
விளையாட்டு மைதானத்திற்கு அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் "கீவ் ஆட்சியின் மற்றொரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்" என்று ரஷ்ய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d23b2377-0025-417b-980c-58f2ac88b3a6/26-6a6fd296106fc.webp' /></p><p><i>Image Credit:&nbsp;NBC News</i></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-02T23:38:10+00:00</updated>
        </entry>
    </feed>
