<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-03T04:31:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - யாழ் மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985"></link>
            <id>https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&amp;nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தோரண வாசலான "நல்லூரான் வடக்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்படவுள்ளது</p><p>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, எதிர்வரும் 6 ஆம் திகதி தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb8eaae2-15af-433f-bf3e-9a50d562cbff/26-6a7015f4b7f19.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். </p><p>அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.
</p><p>யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T04:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேசிய கட்டிட ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><h2>இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை</h2><p>அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06821a82-1e86-466e-a038-e8f0c8ab74be/26-6a700e87ab3e1.webp' /></p><p> 

​இது தவிர,கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:46:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022"></link>
            <id>https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து கேகாலை - கரடுபன பகுதியில் இன்று (3.06.2026) காலை 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

​</p><p>இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3180f20-2763-4fe8-b837-cc0dfffc9fdf/26-6a700addd292a.webp' /></p><p>விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​</p><p> விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அடிக்கடி மழை&nbsp;</h2><p>​மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc36f9cd-c21c-4166-b9e7-a8d447fa18ae/26-6a70065c42a59.webp' /></p><p>மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். 

​முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

​</p><p>வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

</p><p>இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலையால் நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999"></link>
            <id>https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.</p><p>அதன்படி, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க&nbsp; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

​</p><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c749b28f-b4d0-430f-b9db-4806aa5ac20e/26-6a7004aa0ccf6.webp' /></p><p>அந்த நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mp-demands-full-investigation-easter-attack-1785720752"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mp-demands-full-investigation-easter-attack-1785720752</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்றையதினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், அத்தாக்குதலைத் தடுப்பதற்குப் காவல்துறையினரோ அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>பூரண விசாரணை</h2><p>
</p><p>
இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமன்றி, பல அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ed2ab6-42d8-4231-b09f-a4501f168c01/26-6a6fefb2afd23.webp' /></p><p> </p><p>

அந்தவகையில், இருவரை மட்டும் இலக்கு வைத்துத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
</p><p>
குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்ட மௌலவிகள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்திருந்ததாக அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
</p><p>
இதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களமும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது புலனாகின்றது.</p><p> </p><p>எனவே, அக்காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிப் பூரண விசாரணை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சிலரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T01:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலை தடுமாறும் ட்ரம்ப்! மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403</id>
            <summary type="text">ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் மீதான பெரும் தாக்குதலை ரத்து செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “தாக்குதல் உருவாவதை அவர்கள் கண்டதால், அதன் தீவிரத்தை அவர்கள் அறிந்திருந்தனர். இப்போது நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் பேசிக்கொண்டிருக்கிறோம்.அது நாளை மதியம் தொடங்குகிறது, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>மறுத்துள்ள ஈரான்</h2><p>

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நட்பு நாடுகளும் ஈரானும் திட்டமிடப்பட்ட தாக்குதலை ரத்து செய்யுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3184660-5960-4672-9b34-1989cf1d4e27/26-6a6fe0d749aac.webp' /></p><p>
</p><p>
எனினும், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பிடம் தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என ஈரானிய அரசு ஊடகங்கள் மறுத்துள்ளன. </p><p>

ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனம் “முட்டாள் ட்ரம்புக்கு சக்தி தீர்ந்துவிட்டது” என விமர்சித்துப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T00:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி - பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201</id>
            <summary type="text">
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இச்சம்பவத்தை உயர்மட்ட ரஷ்ய அதிகாரி ஒருவர் மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ளார்.

உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள பிரின்ட்செவ்கா கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் இந்த ட்ரோன் தாக்கியதாக கூறப்படுகிறது.
</p><p>
அதில், படுகாயமடைந்த 13 வயது சிறுமியை மருத்துவக் குழுவினரால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், 7 மற்றும் 9 வயதுடைய மேலும் இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>பயங்கரவாதச் செயல்</h2><p>
</p><p>
விளையாட்டு மைதானத்திற்கு அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் "கீவ் ஆட்சியின் மற்றொரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்" என்று ரஷ்ய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d23b2377-0025-417b-980c-58f2ac88b3a6/26-6a6fd296106fc.webp' /></p><p><i>Image Credit:&nbsp;NBC News</i></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-02T23:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876</id>
            <summary type="text">புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி</h2><p> </p><p>

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்து, அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பதிவிலும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec736-e183-4885-94c5-e8a546f0e92c/26-6a6fb4bede358.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியது மற்றொரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளது.</p><h2>எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்</h2><p>
</p><p>
அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98229757-d6d5-4569-afb8-b38c19e924fa/26-6a6fb4bfd1650.webp' /></p><p>

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் வணிகக் கப்பல்கள் இதன் வழியே கடந்து செல்வதற்கு ஈரானிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:56:52+00:00</updated>
        </entry>
    </feed>
