<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-06T07:19:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாழிறங்கும் அபாயத்தில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hatton-colombo-road-restricted-after-heavy-rains-1785999238"></link>
            <id>https://ibctamil.com/article/hatton-colombo-road-restricted-after-heavy-rains-1785999238</id>
            <summary type="text">கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வாகனச் சாரதிகளுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த விடயத்தை நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வீதி தாழிறங்கும் அபாயம்</h2><p>வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add73f4b-4e88-40db-8d86-e48d5c2fc82c/26-6a743374d9478.webp' /></p><p>

இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு நிறைவேற்றுப் பொறியியலாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>சீரற்ற வானிலை&nbsp;</h2><p>இதேவேளை, தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493e1acb-ce3a-4add-a42d-c533bb628375/26-6a74337596380.webp' /></p><p> </p><p>

மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். </p><p>

தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-udaya-dilith-others-named-in-contempt-case-1785993942"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-udaya-dilith-others-named-in-contempt-case-1785993942</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பதிரண ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இதனடிப்படையில் குறித்த ஆறு பேருக்கும் எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (05.08.2026) உத்தரவிட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டு முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, மேற்படி நபர்கள் பகிரங்கமாக வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</h2><p>நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர்கள் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a4746b-7dd4-400e-857a-6ca00af68a47/26-6a7426575ed20.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்த உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நே்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அறிக்கையிட்டது.</p><p>சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம், மேற்படி நபர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், முதற்பார்வையில் நீதித்துறை நடைமுறையை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தது.&nbsp;</p><p>அதன்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785995726"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785995726</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (06-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (06-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,353,918 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 382,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cae7546-eb82-42e5-9f77-2bcfc84ed56c/26-6a7424c886d29.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 350,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 334,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கதுரை சிலை விவகாரம் - ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statues-for-kuttimani-thangathurai-case-issus-1785995445"></link>
            <id>https://ibctamil.com/article/statues-for-kuttimani-thangathurai-case-issus-1785995445</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை
நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை
நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சிறையில் படுகொலை</h2><p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8052baa3-9cb6-4b13-95ec-2523664efefc/26-6a742e3c9ea16.webp' /></p><p>எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் நேற்று பிற்பகல்
வல்வெட்டித்துறை police ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு
விசாரணைக்காக இன்று அழைப்பதற்க்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-navy-rescues-indian-fishermen-off-delft-1785991809"></link>
            <id>https://ibctamil.com/article/sl-navy-rescues-indian-fishermen-off-delft-1785991809</id>
            <summary type="text">யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p>

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக நுழைந்து கடற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>விசேட தேடுதல்</h2><p>


விபத்தையடுத்து இலங்கை கடற்படை விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.</p><p>


இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சாமிந்த வலக்குளுகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbb929c-26ea-41e5-a0c5-03a768c80d0c/26-6a741cc4e8aa4.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 பேரைக் கொண்ட இந்திய மீன்பிடிப் படகொன்று நேற்று இரவு (05-08-2026) விபத்துக்குள்ளானது என உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்களை மீட்கும் பொருட்டு இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T05:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக அனுமதி: மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/registrations-for-uni-admissions-to-begin-1785993607"></link>
            <id>https://ibctamil.com/article/registrations-for-uni-admissions-to-begin-1785993607</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.மாணவர்களைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><h2>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு&nbsp;</h2><p>

இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70e1f381-41b7-476b-b16f-d401d41fe180/26-6a741aba50550.webp' /></p><p>

மேலதிக விபரங்களுக்கு https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.</p><p>இதேவேளை கடந்த வாரம் 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
</p><p>
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கும் டெங்கு நோய் தொற்று: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-death-toll-reaches-63-as-sri-lanka-records-1785989525"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-death-toll-reaches-63-as-sri-lanka-records-1785989525</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் சமீபத்திய புள்ளி விபரங்களின்படி இதுவரை 88,088 டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் சமீபத்திய புள்ளி விபரங்களின்படி இதுவரை 88,088 டெங்கு நோய்த்தொற்றுக்களும் 63 உயிரிழப்புக்களும் பதிவாகி உள்ளது.&nbsp;</p><p>இந்த விபரத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி, இந்த ஆண்டுக்கான டெங்கு இறப்பு விகிதம் 0.07 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>டெங்கு நோய்கள்</h2><p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே 2,739 புதிய டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் மட்டும் நாடு முழுவதும் 29,975 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97364ce3-22c1-44e3-b15d-7bb1843024ca/26-6a7414f5c6412.webp' /></p><p> </p><p>இது 2026 ஆம் ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு நோய் பாதிப்பு என வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் மாவட்ட வாரியான தரவுகளின்படி, கம்பஹா மாவட்டம் அதிகளவு பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளதுடன், அங்கு 18,739 டெங்கு நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 17,490 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p>இந்த நிலையில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:10:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மன உளைச்சலில் மைத்திரி: கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்: மகன் கொழும்பில்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daham-sirisena-tax-fraud-news-troubles-maithri-1785988778"></link>
            <id>https://ibctamil.com/article/daham-sirisena-tax-fraud-news-troubles-maithri-1785988778</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஹாம் சிறிசேன மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரத்தில் மற்றொரு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>குண்டுத்தாக்குதல்&nbsp;</h2><p>தஹாம் சிறிசேனவும் நாட்டை விட்டுத் தப்பியதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தற்போது கொழும்பிலேயே இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இச்செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்துடன் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d81a337f-aaf1-4634-94a4-eef4356adef2/26-6a740d078b8f1.webp' /></p><p>2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.</p><p>இவ்வழக்கில் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><h2>மரண தண்டனை&nbsp;</h2><p>இந்தத் தீர்ப்பினால் மைத்திரிபால சிறிசேன பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>
பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன, மிகவும் மன உளைச்சலுடனும் கவலையுடனும் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd68ac30-45bc-461b-abb6-c931e3991b31/26-6a740d06db5fa.webp' /></p><p>
அங்கு வருகை தந்த நெருங்கிய நண்பர்கள் அவரை ஒரு பாடல் பாடுமாறு வற்புறுத்தியதை அடுத்து, அவர் தந்தை - மகனைப் பற்றிய உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
</p><p>
மகன் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் உயிர்த்த தாக்குதல் வழக்கின் தீவிரமான நீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது கடும் மனக்குழப்பத்திலும் நெருக்கடியிலும் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T05:02:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு திறப்பு - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785989109"></link>
            <id>https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785989109</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&amp;nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் வடக்கு வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “நல்லூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி&nbsp; ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் வடக்கு வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.</p><p>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, இன்று (06.08.2026) வியாழக்கிழமை ஆடிக் கார்த்திகை நன்னாளை முன்னிட்டு தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><p>இதனை முன்னிட்டு, முற்பகல் 10.30 மணிக்கு சட்ட நாதர் சிவன் ஆலயத்திலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டு வண்டி மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்படவுள்ளது.</p><p></p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>சட்டநாதர் வீதியுடாக பயணிக்கும் இந்த ஊர்வலம் முடமாவடிச் சந்தியை அடை ந்து அங்கிருந்து புதிய வடக்கு வாசல் வளைவை நோக்கிச் செல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b21ce3a8-9a7f-4775-b3a5-f2ad0c92d73b/26-6a7408ee60759.webp' /></p><p>இந்த விசேட நிகழ்வில் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்படும் நெல் பெட்டகத்தில் பக்தர்கள் தங்களது நெல்லையும் சமர்ப்பிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். </p><p>தொடர்ந்து, நண்பகல் 12.00 மணியளவில் தெய்வேந்திர முகூர்த்த நேரத்தில், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டி முதன்முறையாக புதிய “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” ஊடாகப் பிரவேசிக்கவுள்ளது. </p><p>பின்னர் அந்த நெல் பெட்டகம் நல்லூர் கந்தசுவாமி திருவடிகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆடிக் கார்த்திகை நன்னாளில் நடைபெறும் இந்த மங்களகரமான நிகழ்வில் பக்தர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T04:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/notice-to-public-on-prohibited-pyramid-companies-1785982873"></link>
            <id>https://ibctamil.com/article/notice-to-public-on-prohibited-pyramid-companies-1785982873</id>
            <summary type="text">இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

இந்த நிறுவனங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.</p><p> </p><p>

இந்த நிறுவனங்களில் எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p>இந்த விடயம் மத்திய வங்கி நேற்று (5) வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டபூர்வமான தன்மை</h2><p>1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/017bf8b2-cb91-406e-8321-ba2614ae0a25/26-6a73f134348e4.webp' /></p><p> 

ஆட்களைச் சேர்க்கும் அடிப்படையிலான திட்டங்கள் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அதீத இலாபத்தை வழங்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. </p><p>

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் குறித்த முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத நிறுவனங்கள்&nbsp;</h2><p> 

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு, 

Tiens Lanka Health Care (Pvt) Ltd 

Best Life International (Pvt) Ltd 

Mark – Wo International (Pvt) Ltd 

V M L International (Pvt) Ltd</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ab5df0-0553-4ad3-912e-03dc5ee241e4/26-6a73f134e16c7.webp' /></p><p>Global Lifestyle Lanka (Pvt) Ltd 

Fast3Cycle International (Pvt) Ltd 

Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka 

OnmaxDT 

MTFE App, MTFE SL Group, </p><p>MTFE Success Lanka and MTFE DSCC Group 

Fastwin (Pvt) Ltd 

Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd 

Ride to Three Freedom (Pvt) Ltd 

Qnet / Questnet 

Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 

Ledger Block 

Isimaga International (Pvt) Ltd</p><p> 

Beecoin App and Sunbird Foundation 

Windex Trading 

The Enrich Life (Pvt) Ltd 

Smart Win Entrepreneur (Pvt) Ltd </p><p>

Net Fore International (Pvt) Ltd / Netrrix 

Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd 

SGO / sgomine.com 

I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms 

Infinity Rover (Pvt) Ltd 

 

TM App&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T03:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பகுதிகளில் 100 மி.மீ பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100-mm-expected-today-1785980192"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100-mm-expected-today-1785980192</id>
            <summary type="text">தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில நாட்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3628c6f8-455e-415c-8c68-b42dc27ec14a/26-6a73edbf05342.webp' /></p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
அதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T02:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-2026-1785982223"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-2026-1785982223</id>
            <summary type="text">கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது.</p><p> ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையும் உலகிற்குப் பறைசாற்றும் நோக்குடன் "	றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" இயக்கச்சி 	றீ(ச்)ஷா வளாகத்தில் லங்காசிறி , IBC தமிழ் , Quick Food ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கோலாகலமாக அரங்கேறுகிறது.</p><p>இன்று முதல் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு 2026 ஆகஸ்ட்&nbsp; 8, 9, 10 மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கடந்த கால நினைவுகளையும், நம் மூதாதையரின் "உணவே மருந்து என்ற தத்துவத்தையும் புதுப்பிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3df4d1-6488-4610-86e7-dd597c8ccd11/26-6a73ed1145156.webp' /></p><p>லண்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா என உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள், தங்கள் மண்ணின் சுவையைத் தேடி ஒன்றிணையும் ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா இது கடந்த ஆண்டு காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதனை விடவும் சிறப்பான ஏற்பாடுகளை றீ(ச்)ஷா வடிவமைத்துள்ளது.</p><p>உள்நாட்டு சமையல் ஜாம்பவான்களுடன், சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து சமையல் கலைகளில் புதிய உத்திகளைப் புகுத்தவுள்ளனர்.</p><p>ஒடியல் கூழ், காரசாரமான நண்டுப் பிரட்டல், சுடச்சுட பிட்டு-சொதி, மற்றும் பாரம்பரிய பனங்கிழங்கு பணியாரம் என அள்ள அள்ளக் குறையாத சுவை வகைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.</p><p>உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் உங்கள் கண்முன்னே சமைக்கும் நேரடி செய்முறை விளக்கங்கள்.</p><p>எமது வாழ்வாதாரமான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான சிற்றுண்டிகளுக்கான பிரத்தியேக பகுதி.</p><p>அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் சிற்றுண்டிப் போட்டிகள்.</p><p>சுவையோடு சேர்ந்து விழாவை இரசிக்க வைக்கும் எமது மண்ணின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் என்பன அரங்கேற காத்திருக்கின்றன.</p><p>இந்த மாபெரும் சுவைப்பாலத்தில் இணைந்து கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் இன்றே வருகை தாருங்கள்</p><p><b> தொடர்புகளுக்கு: 077 777 2353 | 077 777 2354</b></p>]]></content>
            <updated>2026-08-06T02:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vegetable-sculpture-training-at-ree-ch-sha-farm-1785981175"></link>
            <id>https://ibctamil.com/article/vegetable-sculpture-training-at-ree-ch-sha-farm-1785981175</id>
            <summary type="text">இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி நெறியின் நிறைவு விழா அண்மையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி நெறியின் நிறைவு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு தொழில்திறன், படைப்பாற்றல் மற்றும் சுயதொழில் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
</p><p>
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1420590246617090%2F&amp;show_text=false&amp;width=267&amp;t=0" width="267" height="476" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>நிகழ்வின் பிரதம அதிதியாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர்&nbsp; கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.</p><p>

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றும், உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றியின் அடித்தளமாக அமையும் என்றும் வலியுறுத்தினார்.</p><p> சமூக முன்னேற்றத்திற்காக இளைஞர்களை சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்தும் இத்தகைய பயிற்சி நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
நிகழ்ச்சியை ஆயிரம் கவிதைகள் நூலின் ஆசிரியர்&nbsp; யோ. புரட்சி தொகுத்து வழங்கினார். </p><p>பயிற்சியின் நோக்கம், தொழில்திறன் மேம்பாட்டின் அவசியம் மற்றும் இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றம் குறித்து அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p> இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாடு, சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலை இலங்கைக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாட அரசாங்கம் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-seeks-us-court-help-extradite-basil-sri-lanka-1785980582"></link>
            <id>https://ibctamil.com/article/govt-seeks-us-court-help-extradite-basil-sri-lanka-1785980582</id>
            <summary type="text">மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலையாக தவறியதையடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு நாடு கடத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலையாக தவறியதையடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அமெரிக்க நீதிமன்றங்களின் உதவியை நாடவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பான இன்டர்போல் (Interpol) மற்றும் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறை நடைமுறை</h2><p>

இலங்கையில் விசாரணைக்காக தேவைப்படும் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டில் தங்கியிருந்தால், அவர் எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும், அந்த நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை நடைமுறைகளின் ஊடாகவே அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd120e0d-9c0e-4393-980f-b039ab678a24/26-6a73e6a97edba.webp' /></p><p>
சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/series-of-explosions-in-dubai-1785968777"></link>
            <id>https://ibctamil.com/article/series-of-explosions-in-dubai-1785968777</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரானின்&nbsp; ஊடகங்கள் மற்றும் பிராந்திய தகவல் ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஜெபல் அலி துறைமுகம் அருகே இருந்து அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி எழுந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇦🇪 Multiple explosions and a large fire erupted overnight in Dubai’s Jebel Ali industrial area. Reports have fueled speculation of a possible Houthi missile strike after Iraqi media claimed the blasts coincided with a rocket launch from Yemen. UAE authorities have not confirmed… <a href="https://t.co/yTqTflJbjX">pic.twitter.com/yTqTflJbjX</a></p>&mdash; Mossad Commentary (@MOSSADil) <a href="https://x.com/MOSSADil/status/2084987790052282610?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இருவர்&nbsp;கைது </h2><p>இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63334b1d-54d2-4d5e-8097-1170e9582980/26-6a73b88bdcf23.webp' /></p><p> </p><p>அதேவேளை, தீ விபத்தை படம் பிடித்ததாகக் கூறி இருவரை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-political-arena-is-heating-up-around-maithri-1785975097"></link>
            <id>https://ibctamil.com/article/the-political-arena-is-heating-up-around-maithri-1785975097</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஏன் சேர்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் இந்த விடயம் குறித்து உரையாற்றிய அவர், சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது என்றும் தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp;</h2><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ac58cf-f48e-4319-8bee-614a9656dc47/26-6a73d13bc28eb.webp' /></p><p>
</p><p>

2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.

அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர்.
</p><p>
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-the-gurukkalmadam-human-grave-1785979774"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-the-gurukkalmadam-human-grave-1785979774</id>
            <summary type="text">1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக
காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு
குருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக
காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு
குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று (05.08.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வழக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகத்திற்கிடமான குருக்கள்மடம்&nbsp; மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று
களுவாஞ்சிகுடி நீதவான் நீதி மன்றில் மேலதிக விசாரணைகளுக்காகவும், வழக்கு
மாநாட்டுக்காகவும் அழைக்கப்பட்டிருந்தது. நேற்று அறிவித்தல தினமாக இருந்தது.</p><p></p><h2>மேலதிக நடவடிக்கை</h2><p>


கடந்த விசாரணை தவணையிலே, பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி
பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், அதேபோன்று
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeae0aa-cbd7-4be6-9d63-ea6f4d640878/26-6a73e3809b560.webp' /></p><p> </p><p>ஆனால்
நேற்றைய , காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக அவர்களது சட்டத்தரணி
பிரசன்னமாகியிருந்தார். ஏனையவர்கள் மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.</p><p>


அந்தவகையிலே இந்த வழக்கு எதிர்வருகின்ற 2026.08.24 ஆம் திகதி மேலதிக
நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு,தவணையிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு சென்ற சாரா ஜஸ்மின்! கட்டுநாயக்கவில் பரிசோதிக்கப்பட்ட CCTVவில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sara-jasmine-body-missing-sainthamaruthu-blast-1785976269"></link>
            <id>https://ibctamil.com/article/sara-jasmine-body-missing-sainthamaruthu-blast-1785976269</id>
            <summary type="text">சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் இருக்கவில்லை என்று மேல் மாகாண தெற்கு பிராந்திய பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் இருக்கவில்லை என்று மேல் மாகாண தெற்கு பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அவர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் இன்சாப் அகமட் வெளிநாட்டில் இருப்பதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று அவர் வெளிநாடு சென்றதாகவும் சாரா ஜஸ்மின் கூறியிருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது என்றும்&nbsp;விஜேசேகர நீதிமன்றில் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>9ஆவது பிரதிவாதி</h2><p>இந்த வழக்கின் 9ஆவது பிரதிவாதியான சாஜித் ரம்சீன் குறித்து முன்வைத்த குறுக்கு விசாரணைக் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c2b51c-e926-4aad-9043-6c166579de43/26-6a73e15f1c9ad.webp' /></p><p>

2019ஆம் ஆண்டு கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.</p><p>

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வில், நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க , சுஜீவ நிஷ்ஷங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இது குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் பின்வரும் விடங்களை அம்பலப்படுத்தியுள்ளன.</p><p>
குறித்த காலப்பகுதியில் அம்பாறை பிராந்தியத்தின் மூத்த காவல்துறை அத்தியட்சகராக பணியாற்றிய தற்போதைய பிரதி காவல்துறைமா அதிபர் சமந்த விஜேசேகர, அரச புலனாய்வு சேவையின் கிழக்கு மாகாண அதிகாரியிடமிருந்து கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு சந்தேகத்திற்கிடமான இடங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தது.</p><p>மேலும் அந்த தகவலின் அடிப்படையில், அம்பாறை தலைமையக காவல்துறை பரிசோதகர் லசந்த தடல்லகே மற்றும் விசேட அதிரடிப்படையின் அதிகாரி அதுல ரத்நாயக்க ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டது.</p><p></p><h2>சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவங்கள்&nbsp;</h2><p>
அதன்படி, 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சம்மாந்துறை பவுஸ் மாவத்தையில் உள்ள இஸ்மாயில் லெப்பை அப்துல் ரஹீம் என்பவரின் வீட்டில், ஈஸ்டர் தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிறக் கொடி கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc5b9cd-b88b-4be0-bbd2-e411fe479d55/26-6a73e15fc5520.webp' /></p><p>அந்த இடத்தை சோதனை செய்த பின்னர், நிந்தவூரில் பழைய தியேட்டர் வீதியில் உள்ள மற்றொரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல 'பேக்-பேக்' வகை பயணப் பைகள், தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பதிவு செய்யப்படாத 'படி' வகை வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

இதன்போது, கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடமிருந்து சாய்ந்தமருது பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தானும் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகேவும் சம்பவ இடத்துக்கு சென்றோம்.</p><p>யக்கட பாலம் அருகே சென்றபோது பல துப்பாக்கிச் சூடுகளும், மிகப் பெரிய வெடிப்புச் சத்தங்களும் கேட்டுள்ளது, அந்த துப்பாக்கிச் சூடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது.</p><p>
சாய்ந்தமருது கிராமத்தின் எல்லையில் உள்ள வீட்டை அடைந்தபோது, அங்கு வெடிப்பு ஏற்பட்டிருந்தது. பிரதான வாயிலுக்கு முன்பாக T-56 துப்பாக்கியுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததார்.</p><p>அவர் 'நிஸாப்' என அடையாளம் காணப்பட்டார். மேலும், தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், வீட்டின் முன்பாக ஷஹ்ரானின் சகோதரரான 'செய்னி'யின் உடலும் காணப்பட்டது.</p><p> இதனுடன் சஹ்ரானின் தாய், மகன் மற்றும் சகோதரியின் உடல்களும் மீட்கப்பட்டன. சஹ்ரானின் தாயின் உடல் இருந்த இடத்தின் மேலுள்ள கான்கிரீட் தளத்தில் T-56 துப்பாக்கி, 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 56 ஜெலிக்னைட் குச்சிகள் மீட்கப்பட்டன.</p><p>வீட்டின் கூரையில் ஒரு காலை இழந்த நிலையில் கிடந்த உடல், ஷஹ்ரானின் மற்றொரு சகோதரரான ரில்வானுடையது என அடையாளம் காணப்பட்டது.</p><p></p><h2>&nbsp;சாரா ஜஸ்மின் விசாரணை</h2><p>அதேவேளை, சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் இன்சாப் அகமட் வெளிநாட்டில் இருப்பதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று அவர் வெளிநாடு சென்றதாகவும் சாரா ஜஸ்மின் கூறியிருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/620259cb-5890-4c55-80a2-ffbc1f0241db/26-6a73e15e65c71.webp' /></p><p>அந்த பரிசோதனையில், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றது தெரியவந்தது.</p><p>இருவரும் ஒன்றாக விமான நிலையத்துக்குச் சென்று பின்னர் தனித்தனி வாகனங்களில் வெளியேறியிருப்பது CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது” என்றார்.</p><p> இதற்கிடையில், ஷாங்க்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்சாப் ஆகியோரின் உடற்கூறு பரிசோதனையை மேற்கொண்ட நீதிமருத்துவ நிபுணர் வைத்தியர் எஸ்.டி. சன்ன பெரேராவும் சாட்சியமளித்தார். </p><p>சினமன் கிராண்ட் தாக்குதலாளியின் உடலில் ஒரு கால் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், மற்ற தாக்குதலாளியின் தலை உடலிலிருந்து முழுமையாக பிரிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், அவரது உடல் பல சிறிய துண்டுகளாக சிதறியிருந்ததுடன், இது தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் பொதுவாகக் காணப்படும் சேதம் என விளக்கினார்.</p><p> தாக்குதலாளியின் தாடை எலும்பு நடுப்பகுதியில் இரண்டாகப் பிளந்திருந்தது என்றும், இவ்வாறான அபூர்வமான எலும்பு முறிவு தற்கொலை குண்டு வெடிப்புகளில் மட்டுமே ஏற்படும் என்றும் நீதிமருத்துவ நிபுணர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T01:20:49+00:00</updated>
        </entry>
    </feed>
