<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-09T15:37:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பயங்கரம் : நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sword-attack-in-jaffna-1788965986"></link>
            <id>https://ibctamil.com/article/sword-attack-in-jaffna-1788965986</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த
31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9)
பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த
31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9)
பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக
பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><h2>காவல்துறையின் அறிவிப்பு</h2><p>&nbsp;வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய
தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை
மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335f2ccf-3271-41e5-a7cb-19a2f263385f/26-6aa176f8ed02b.webp' /></p><p>

தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன்
தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து
வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bc726a-ee01-4047-b4eb-30f5ea7ab286/26-6aa176f8429af.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T15:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/300000-more-vehicle-number-plates-piled-up-1788963132"></link>
            <id>https://ibctamil.com/article/300000-more-vehicle-number-plates-piled-up-1788963132</id>
            <summary type="text">சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷாரா இடுனில் பெர்னாண்டோ இன்று (9) தெரிவித்தார்.</p><p>

நாரஹேன்பிட்டாவில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் இதைத் தெரிவித்தார்.</p><h2>ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் இலக்கத் தகடுகள்</h2><p>மேலும், இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், இந்த அமைப்பு இரண்டு ஷிப்டுகளாகப் பணியாற்றி, சுமார் ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் இலக்கத் தகடுகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d101e7-b042-41fe-ba06-316eead8d03d/26-6aa16e73b9f0e.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு மார்ச் 10-ஆம் திகதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சுமார் 62,000 வாகனங்களின் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுவிட்டதாகவும், அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><h2>திணைக்களத்திடம் உள்ள&nbsp;&nbsp;32,000 வாகன இலக்கத் தகடுகள்</h2><p>மேலும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சுமார் 32,000 வாகன இலக்கத் தகடுகள் திணைக்களத்திடம் உள்ளன. அதுமட்டுமின்றி, 2025 ஆம் ஆண்டிற்கான வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்கு ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865bbac6-b24d-4e38-9dee-5cde7aa998a4/26-6aa16e730eb2b.webp' /></p><p> </p><p>அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைத்து வாகன இலக்கத்தகடுகள் புதுப்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு பதிவு செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து சுமார் எட்டு நாட்களுக்குள் வாகன இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோட்டியை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட, தலைமறைவான சந்தேக நபரான செல்வனேசன் ஜீசஸ் தாசன் என்ற பாலசுவை கொழும்பு குற்றப்பிரிவு முற்படுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>ஜிபிஎஸ் கருவியை அழித்த படகோட்டி</h2><p>கொழும்பு குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தபோது, ​​படகோட்டி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் நாற்பத்தேழாவது சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43947cb6-de52-4d62-aa27-b50a0f41ed31/26-6aa163036a96a.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர், படகில் இருந்த நான்கு பேரையும் நன்கு அறிந்து நாடு கடத்த ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இந்தியாவில் இறங்கிய பின்னர், படகில் சாட்சியமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அழித்திருந்தார்.</p><p></p><h2>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவி</h2><p>

சந்தேக நபர் இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவியிருந்தார், மேலும் இந்தியாவுக்குச் செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397f8287-e29b-457f-8a4d-d77c961d4287/26-6aa163041f12d.webp' /></p><p>
</p><p>
உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, சந்தேக நபரை அடுத்த பதினெட்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்தத் திகதிக்குள் விசாரணையின் முன்னேற்றத்தைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316"></link>
            <id>https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
வெய் ஹுவாக்சியாங் ஓகஸ்ட் 25 அன்று தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர் இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றார்.&nbsp;</p><h2>வழங்கப்பட்ட அன்பளிப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தூதர் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78ed452-e842-464e-8eed-cf9e7c57c1a5/26-6aa15aa055814.webp' /></p><p>இந்நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசமும் கலந்துகொண்டார்.</p><h2>ஜனாதிபதி அனுர இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு</h2><p>இதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார உட்பட பலரை சந்தித்து வரும் நிலையில் புதிய சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1747a4cf-9496-4c24-806b-a7534736eecb/26-6aa15ba5caa68.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு விவகாரம்! ராஜ்நாத் சிங்கிடம் அநுர வழங்கிய விசேட செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&amp;nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான வரலாற்று உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்காகவும் இலங்கையின் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இச்சந்திப்பின்போது ஒரு கருத்தை வெளியிட்டார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதல்நிலை மீட்பாளர்</h2><p>
தித்வா புயலின்போது 'சாகர் பந்து நடவடிக்கை'யின் கீழ் இந்தியா வழங்கிய மனிதாபிமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36431c58-c5d7-47d4-8e21-215f1530bb00/26-6aa15a8b9f3a1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், மிக நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும் ஒரு முதல்நிலை மீட்பாளராக ஆதரவளிப்பது தனது பொறுப்பு என்று கருதுவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வேன் என்றும் கூறியுள்ளார் என்றும் அறிக்கை கூறியுள்ளது.</p><p>
இரு நாடுகளின் தலைவர்களின் ஆதரவின் கீழ், இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் எல்70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் மற்றும் தேசிய மாணவர் படைக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.</p><p>

மேலும், இந்திய பாதுகாப்புப் படைகளால் கட்டப்பட்ட மூன்று பெய்லி பாலங்களும் அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-gives-opportunity-who-submitted-1788955386"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-gives-opportunity-who-submitted-1788955386</id>
            <summary type="text">சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னரும், ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையிலும் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளுக்கு, தாமதமான நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 90ஆம் பிரிவின் கீழ் நிர்வாக அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது.
</p><p>
எனினும், அபராதம் விதிப்பதற்கு முன்னர் தாமதத்திற்கான நியாயமான காரணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிர்வாக அபராதம்</h2><p>
</p><p>
இதன்படி, 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80(1)ஆம் பிரிவின் கீழ் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தும், அதனை உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள், நிர்வாக அபராதம் விதிக்காமல் இருப்பதற்கான காரணங்களை 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598e91cb-6513-4ac1-b51a-1c1192f7814e/26-6aa1510f783a8.webp' /></p><p>மேலும் தாமதத்திற்கான காரணங்களுடன் தொடர்புடைய ஆதார ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
காரணங்களை சமர்ப்பிக்கும்போது, கோரிக்கை விடுக்கும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் தாமதத்திற்கான காரணங்கள் ஆணையத்திடம் கிடைக்காவிட்டால், தாமதத்திற்கான காரணம் எதுவும் இல்லை எனக் கருதி நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
தபால் மூலம் காரணங்களை சமர்ப்பிக்கும்போது, உறையின் இடது பக்க மேல் மூலையில் “தாமதத்திற்கான காரணங்கள்” என குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது, மின்னஞ்சலின் தலைப்புப் பகுதியில் அதே விடயத்தை குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><b>தொடர்புடைய முகவரிகள் மற்றும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
</b></p><ul><li>நிறுவன முகவரி: இயக்குனர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை பிரிவு), எண் 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07.
</li><li>மின்னஞ்சல் முகவரி: ald@ciaboc.gov.lk
</li><li> தொலைபேசி/தொலைநகல் எண்: 0112587287
</li><li>வாட்ஸ்அப் எண்: 0767011954</li></ul><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-and-son-killed-on-way-to-funeral-1788954993"></link>
            <id>https://ibctamil.com/article/mother-and-son-killed-on-way-to-funeral-1788954993</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் உள்ள மரடன்கடவல காவல்துறை எல்லைக்குட்பட்ட மரடன்கடவல நகரில், இன்று (09)காலை சுமார் 10.35 மணியளவில்&amp;nbsp;பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் உள்ள மரடன்கடவல காவல்துறை எல்லைக்குட்பட்ட மரடன்கடவல நகரில், இன்று (09)காலை சுமார் 10.35 மணியளவில்&nbsp;பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட ஒரு பயங்கர வீதி விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்ததாக மரடன்கடவல காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
உயிரிழந்தவர்கள், திருப்பனை, பித்தல, கொண்டேருமகரம்பே கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சலிந்த கெதேர தில்கி மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகன், 24 வயதான ரத்நாயக்க முதியன்செலகே நிகேஷ் ருவந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>கிழக்கு பல்கலைக்கழக மாணவர்&nbsp;</h2><p>உயிரிழந்தவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஒரு&nbsp; மாணவர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b006de1-d598-4fcc-b7cb-97c49c3965ca/26-6aa14d00d59ee.webp' /></p><p>&nbsp;தம்புள்ளை பகுதியில் நடைபெறவிருந்த உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weather-forecast-for-the-next-36-hours-1788953860"></link>
            <id>https://ibctamil.com/article/weather-forecast-for-the-next-36-hours-1788953860</id>
            <summary type="text">எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 செப்டெம்பர் 9ஆம் திகதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 செப்டெம்பர் 9ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
</p><p>
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வானிலை முன்னறிவிப்பு</h2><p>
</p><p>
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/723c479b-21a1-4761-aa98-b880f1de873e/26-6aa14766857bc.webp' /></p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.</p><p>

எனவே, பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p>

குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-spy-submarine-seized-by-iran-in-hormuz-strait-1788952589"></link>
            <id>https://ibctamil.com/article/us-spy-submarine-seized-by-iran-in-hormuz-strait-1788952589</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியுள்ளது.
</p><p>
இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.</p><h2>‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்</h2><p>இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. <a href="https://t.co/POWlEHHnd5">pic.twitter.com/POWlEHHnd5</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2097390208249389519?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மேலும் ஹோஸ் நீரிணைக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p>


</p><h2>அமெரிக்க இராணுவம் பதில் அறிக்கை</h2><p>ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிராந்திய கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, ஒரு நாளுக்கு முன்பு அமெரிக்க ஆளில்லா விமானங்களில் ஒன்று செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f40069-8885-484f-98fd-37caf4db3d9c/26-6aa144d2b9bd2.webp' /></p><p>

மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் குறித்து கூறுகையில், தரவுகளை சேகரிக்கவோ அல்லது இரகசிய சோனார் மற்றும் ராடர் கருவிகள், அந்த ட்ரோனில் இடம்பெறவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-female-arrested-at-katunayake-with-50-million-1788951308"></link>
            <id>https://ibctamil.com/article/2-female-arrested-at-katunayake-with-50-million-1788951308</id>
            <summary type="text">சட்டவிரோத&amp;nbsp;‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இரு இலங்கை வர்த்தகப் பெண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத&nbsp;‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இரு இலங்கை வர்த்தகப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைபெருளின் மொத்த பெறுமதி 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (09.09.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பல கோடி பெறுமதியான போதைப்பொருள்</h2><p> </p><p>இவர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f08803-136e-48a0-b1b6-e0afdd4e4cc3/26-6aa143a926671.webp' /></p><p>
சந்தேகநபர்கள் இன்று காலை 10.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p>
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, காற்று உட்புகாத வகையில் தயாரிக்கப்பட்ட ஐந்து பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங் பயணத்தின் பின்னணியில் கொழும்பை வந்த ஐ.என்.எஸ் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106"></link>
            <id>https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106</id>
            <summary type="text">இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது.</p><p>

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.</p><p></p><h2>விமானந்தாங்கிக் கப்பலுடன்</h2><p>

மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் INS உதயகிரி கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc0216ab-ad29-481c-a1d1-9e5e749a2843/26-6aa1295972b83.webp' /></p><p>
</p><p>
கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முக்கியஸ்தர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றும் INS உதயகிரி கப்பலில் நடத்தப்படவுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இடையில் தொழில்சார் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பில் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் பணியிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.</p><p>

INS உதயகிரி கடந்த 2025 நவம்பர் மாதம் INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலுடன் இணைந்து கொழும்புக்கு விஜயம் செய்திருந்ததுடன், SLN IFR-2025 நிகழ்விலும் பங்கேற்றிருந்தது.</p><p>

மேலும், டித்வா சூறாவளியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளிலும் இந்தப் போர்க்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயங்கள் “பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்” (MAHASAGAR) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், “அயல்நாடுகளுக்கு முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கையையும் உறுதிப்படுத்துகின்றன.</p><p>

இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-steps-the-contempt-of-court-case-vimal-team-1788951798"></link>
            <id>https://ibctamil.com/article/next-steps-the-contempt-of-court-case-vimal-team-1788951798</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட&amp;nbsp; போராட்டங்களின்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட&nbsp; போராட்டங்களின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>விமல் வீர­வன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை</h2><p>
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த முறைப்பாடு, நேற்று (08) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f49509fe-cffe-4a9f-9c5f-03e3693af83d/26-6aa140a7666d9.webp' /></p><p>

இதன்போது, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
</p><p>
இந்த முறைப்பாட்டில் விமல் வீர­வன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T11:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் முன்னாள் எம்.பி ஒருவரும் விசாரணை வளையத்துக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tissa-kuttiarachchi-summoned-investigation-1788950095"></link>
            <id>https://ibctamil.com/article/tissa-kuttiarachchi-summoned-investigation-1788950095</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் சட்டவிரோதமாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி, பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.</p><h2>விசாரணைக்கு முன்னிலையாகவில்லை</h2><p>நேற்று (08) காவல்துறை நிதிக்குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் முன்பும் அவரை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கும் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d60e9c0-0b35-4047-a992-838e10148b58/26-6aa13b0df162e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்க வர்த்தமானி: தடையுத்தரவை நீடித்த நீதிமன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gazette-on-the-removal-vavuniya-mayor-from-office-1788950752"></link>
            <id>https://ibctamil.com/article/gazette-on-the-removal-vavuniya-mayor-from-office-1788950752</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால
தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால
தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம்
இன்று உத்தரவிட்டது.
</p><p>
எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை
வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>முதல்வர் மீதான இடைக்காலத் தடை</h2><p>
</p><p>குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா
அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம்
இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4696bfab-21c5-456b-aafb-cf051f260d24/26-6aa138e24ebac.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும்
அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க
அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்றையதினம்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத்
தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T10:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-has-died-in-an-accident-kilinochchi-1788948926"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-has-died-in-an-accident-kilinochchi-1788948926</id>
            <summary type="text">கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிள் ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற மகிழுந்தின் சாரதி, கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p></p><h2>பொது வைத்தியசாலை</h2><p>
</p><p>
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/444dbbc8-84d8-413d-afcd-23c52e637488/26-6aa136ee6be49.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்த அரசின் திட்டங்கள் வெற்றிபெறாது : ரோஹித எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rise-cannot-be-stopped-in-prison-1788948693"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rise-cannot-be-stopped-in-prison-1788948693</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். </p><p>எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியை செயலிழக்கச் செய்யும் நோக்கில் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சித்தாலும், அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>&nbsp; அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களுக்கு மத்தியில் மக்கள் மேலும் அணிதிரள்வார்கள் என குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தற்போது கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.</p><h2>மக்கள் வழங்கிய அதிகாரம் பழிவாங்க அல்ல</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியது, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே அன்றி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து பழிவாங்குவதற்காக அல்ல எனவும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d6ea1b-f980-4cae-9ee5-c01db0420d25/26-6aa133e9a9030.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரம்: மண் படிமப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kurukkalmadam-mass-grave-issue-1788948133"></link>
            <id>https://ibctamil.com/article/kurukkalmadam-mass-grave-issue-1788948133</id>
            <summary type="text">1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (08.09.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.</p><p>

கடந்த 24.08.2026 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர், குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோFW38AVதனைகளை மேற்கொள்வதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.</p><p></p><h2>பூர்வாங்க ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
இதனடிப்படையில், எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில், சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9df74754-7273-4317-9076-3a87ec9b5873/26-6aa12ea8962bd.webp' /></p><p>

இதற்கிடையில், குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதன்படி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலையாகி, சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபையினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>

மேலும், வழக்கு எதிர்வரும் 14.09.2026 அன்று மேலதிக நடவடிக்கைகளுக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T10:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் இராஜதந்திர ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இலங்கை - இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-ind-defense-agreements-diplomatic-dominance-1788945808"></link>
            <id>https://ibctamil.com/article/sl-ind-defense-agreements-diplomatic-dominance-1788945808</id>
            <summary type="text">இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
</p><p>
கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
</p><p>
இதன் கீழ், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆறு 40 மில்லிமீற்றர் எல்70 ரக வான் பாதுகாப்புப் பீரங்கிகளை நவீனமயப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மானிய உதவி வழங்கவுள்ளது. மேம்படுத்தப்படும் இந்த அமைப்புகள், முக்கிய தேசிய சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்புத் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>இராணுவக் கல்வி - நிறுவன ஒத்துழைப்பு</h2><p>
இலங்கை விமானப்படைக்கு இந்தியா முன்னதாக 24 எல்70 ரக வான் பாதுகாப்பு அமைப்புகளை 2000 முதல் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e4a703-f56d-4f87-871b-ff6e616f3797/26-6aa1298c7eb50.webp' /></p><p> அவற்றில் 18 அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளையும் இந்தியா ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. தற்போது எஞ்சியுள்ள ஆறு அமைப்புகளையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
</p><p>இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
</p><p>
இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம், நிபுணத்துவப் பகிர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு, மூலோபாய விவகாரங்கள் தொடர்பான கல்விசார் கலந்துரையாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l3ew6xEz998" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

பல ஆண்டுகளாக இலங்கையைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிற்சிகளையும் கற்கைநெறிகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில், புதிய ஒப்பந்தம் இந்த நிறுவன ரீதியான உறவை மேலும் விரிவுபடுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>இளைஞர் உறவுகளுக்கு புதிய வாய்ப்பு</h2><p>மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய தேசிய மாணவர் படைக்கும் இலங்கை தேசிய மாணவர் படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது.</p><p>

இதன் மூலம் இரு நாடுகளின் இளைஞர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், கலாசாரப் புரிந்துணர்வு, அறிவுப் பகிர்வு மற்றும் பயிற்சி வாய்ப்புகள் மேலும் விரிவடையும்.
</p><p>
குறிப்பாக, இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்குச் சென்று தேசிய மாணவர் படை நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் இந்த ஒத்துழைப்பின் ஊடாக வலுப்படுத்தப்படவுள்ளன.
</p><p>இந்த மூன்று ஒப்பந்தங்களும் இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தொழில்முறை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் உறவுகள் உள்ளிட்ட பரந்த துறைகளுக்கு விரிவடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
</p><p>
குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் முக்கிய முன்னுரிமையாகத் தொடர்கிறது. </p><p>முக்கிய சர்வதேச கடல்சார் போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகில் இலங்கை அமைந்துள்ளதால், பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை இந்தியாவுக்கு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது.
</p><p>
இதனிடையே, இந்தியாவும் இலங்கையும் 2025 ஏப்ரல் மாதத்தில் ஐந்தாண்டு காலத்துக்கான விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பொன்றை உருவாக்கியிருந்தன. </p><p>கூட்டு இராணுவப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், கடற்படைத் துறைமுகப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் உள்ளடங்குகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:40:43+00:00</updated>
        </entry>
    </feed>
