<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-25T23:26:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் உளவு பார்த்த கனேடிய பிரஜை! நேட்டோ பயிற்சி குறித்து முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-citizen-caught-spying-in-belgium-1785007495"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-citizen-caught-spying-in-belgium-1785007495</id>
            <summary type="text">நேட்டோ (NATO) அமைப்பில் பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த கனேடிய பெண் ஒருவர், உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பெல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேட்டோ (NATO) அமைப்பில் பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த கனேடிய பெண் ஒருவர், உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பெல்ஜிய கூட்டாட்சி அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன வம்சாவளியைச் சேர்ந்த அந்தப் பெண், மூன்றாவது ஒரு நாட்டிற்காக உளவு தகவல்களை சேகரித்ததாக சந்தேகிக்கப்படுகிறார்.
</p><p>
மேலும், அவர் குற்றவியல் அமைப்பொன்றின் உறுப்பினராகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட&nbsp;சந்தேகநபர் </h2><p>

கைது செய்யப்பட்ட பயிற்சியாளர், பெல்ஜியத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மோன்ஸ் நகரில் உள்ள நேட்டோவின்ஐரோப்பிய கூட்டுப் படைகளின் மூலோபாயத் தலைமையகத்தில் (Supreme Headquarters Allied Powers Europe – SHAPE) பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/258fb38c-f265-44cc-accb-f1f34bdf0986/26-6a650d8894032.webp' /></p><p>
சந்தேகநபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் கருத்து கோரப்பட்டபோதும், உடனடியாக எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.</p><p>

அதேவேளை, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் பேச்சாளர், “இந்த விவகாரம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T20:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-lanka-cricket-president-upali-passes-away-1785011005"></link>
            <id>https://ibctamil.com/article/former-lanka-cricket-president-upali-passes-away-1785011005</id>
            <summary type="text">சிறிலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.


சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.</p><p>


சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 1996 முதல் 1998 வரைக்கும் பின்னர் 2011 முதல் 2012 வரை இலங்கை கிரிக்கெட் தலைவராக பதவி வகித்தார்.</p><p> அவரது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>சமூக சேவையாளர்</h2><p>கிரிக்கெட் நிர்வாகியாக மட்டுமன்றி, தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் உபாலி தர்மதாச அறியப்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec90217-928e-4a7a-ac02-359c8f388ec7/26-6a651b3ed997b.webp' /></p><p> </p><p>இலங்கை விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
</p><p>
அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சமூகத்தினர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T20:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிவாரண காணொளிகளால் மக்களை ஏமாற்றும் என்.பி.பி! பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-makes-public-accusations-against-npp-1785008342"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-makes-public-accusations-against-npp-1785008342</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் பிழையான நகர்வில் பயணிக்கின்றது எனவும்
எதிர்க்கட்சித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் பிழையான நகர்வில் பயணிக்கின்றது எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
டித்வா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக்
கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக
வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>
ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை
மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்
இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விவசாயிகளுக்கு நட்டம் </h2><p>விவசாயிகளை கடவுள் என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை
தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து கசிப்புக்காரன் என்று
அவமதிக்கின்றனர் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c41805d-8834-4821-ab5d-579adc45305a/26-6a6510d8041a9.webp' /></p><p>மேலும், நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும்,
120 ரூபா விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:39:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-intelligence-network-english-channel-routes-1785005231"></link>
            <id>https://ibctamil.com/article/iran-intelligence-network-english-channel-routes-1785005231</id>
            <summary type="text">ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவின்&nbsp; தேசிய பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட பிரித்தானிய நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியின்படி, ஈரானின் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை பிரித்தானியாவின்&nbsp; அதிகாரிகள் தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

மேலும், சில சட்டவிரோத குடியேற்றப் பாதைகள், இரகசிய செல்வாக்கு மற்றும் தளவாட வலையமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை</h2><p>

அதேவேளை, இந்த நடவடிக்கைகளில் சில, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) அமைப்பின் யூனிட் 700 பிரிவுடன் தொடர்புடையதாகவும், லண்டனில் செயல்படும் சில முகவர்கள் குறித்து பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரான் அதிகாரி தகவல் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643b7de6-c5aa-4bbf-95bd-4ac90468f473/26-6a65064e95481.webp' /></p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது பிரித்தானியாவுக்கு எல்லைப் பாதுகாப்பு மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு, எதிர்-உளவுப் பணிகள் மற்றும் வெளிநாட்டு அரசுகளின் ரகசிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க சவாலாக அமையும்.</p><p>
மேலும், இதுபோன்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், பிரிட்டன் தனது எல்லைக் கண்காணிப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T18:54:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வாரங்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : தாக்கி அழிக்கப்பட்ட விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-destroyed-11-us-fighter-jets-helicopters-1785004116"></link>
            <id>https://ibctamil.com/article/iran-destroyed-11-us-fighter-jets-helicopters-1785004116</id>
            <summary type="text">மீண்டும் போர் தொடங்கிய நிலையில் இந்தமாதத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் தரையிலேயே தாக்கி அழித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் போர் தொடங்கிய நிலையில் இந்தமாதத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் தரையிலேயே தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p><p>ஜூலை 6 முதல் ஜூலை 22 வரையிலான 15 நாள் காலகட்டத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>&nbsp;அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்பு</h2><p> பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் ஈரானிய ஆயுதப் படைகள் தரையிலேயே அழித்ததாக ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/785b7457-73bd-4633-a750-3899858799a7/26-6a6502b679cf3.webp' /></p><p>
</p><p>
ஈரானியத் தாக்குதல்களில், 17 உளவு மற்றும் செயல்பாட்டு ட்ரோன்கள் (அவற்றில் 8 புத்தம் புதிய ட்ரோன்கள்), ஒரு பதுங்குகுழிக்குள் இருந்த F-15 ரக போர் விமானம், ஒரு P8 விமானம், ஒரு C17 போக்குவரத்து விமானம் மற்றும் 8 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T18:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conflict-between-iran-and-its-state-television-1785002232"></link>
            <id>https://ibctamil.com/article/conflict-between-iran-and-its-state-television-1785002232</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஈரான் அரசு மற்றும் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஈரான் அரசு மற்றும் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான IRIB இடையே வெளிப்படையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளையும் மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தை பாதைக்கு கொண்டுவர சர்வதேச நடுநிலை முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.
</p><p>
கடந்த வாரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையின் சில பகுதிகளை ஒளிபரப்பாமல் நீக்கியதாகக் கூறி, அரசு தகவல் கவுன்சில் வெள்ளிக்கிழமை IRIB மீது தணிக்கை செய்ததாக குற்றம்சாட்டியது.&nbsp;</p><p></p><h2>நீக்கப்பட்ட ஒளிபரப்பு</h2><p>இதற்கு பதிலளித்த IRIB, அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், நாட்டின் உயர்மட்ட ஆட்சித் தலைமைகளுக்கிடையே பிளவு இருப்பதாக தவறான எண்ணம் பொதுமக்களிடையே உருவாகாத வகையில் செயல்படுவது தங்களது பொறுப்பு என சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;பெசெஷ்கியான் தனது உரையில், கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போருக்குப் பிறகு, முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய் பொதுவெளியில் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்று அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையைத் தொடங்க அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb25d1f-372a-489f-ae7f-046eb0871827/26-6a64f9709c34d.webp' /></p><p>
</p><p>
“நாங்கள் உச்சத் தலைவரைச் சந்தித்து, ‘போர் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற நிலைமை நாட்டுக்கு பாதகமாக இருப்பதாக விளக்கினோம். </p><p>அதன்பின் அவர் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில்தான் நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம்,” என்று தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்தக் கருத்துகள் இடம்பெற்ற பகுதியை ஒளிபரப்பிலிருந்து நீக்கியது, அரசுத் தலைவர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறைத் தலைவரின் சமீபத்திய கருத்துகள் தொடர்பாக அரசுத் தொலைக்காட்சி மேற்கொண்ட வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகம்மது பாகர் கலிபாஃப் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பகுதியும் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
அதேபோல், நீதித்துறைத் தலைவர் கோலாம்-ஹொசைன் மொஹ்செனி-எஜெய், அதிபருக்கு ஆதரவு தெரிவித்து இந்த வாரம் ஆற்றிய உரையின் ஒரு பகுதியும் ஒளிபரப்பப்படவில்லை என்றும் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T18:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிசூடு : படுகாயமடைந்த தொழிலதிபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bellanwila-holiday-resort-owner-shot-1784995532"></link>
            <id>https://ibctamil.com/article/bellanwila-holiday-resort-owner-shot-1784995532</id>
            <summary type="text">புதிய இணைப்பு 


பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p> 


பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
 

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>&nbsp;கொழும்பு பொரலஸ்கமுவவின் பெல்லன்வில பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொழிலதிபர் ஒருவர் காயமடைந்து, களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.</p><h2>காவல்துறை வெளியிட்ட தகவல்</h2><p>துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​காயமடைந்த நபர் தனது விடுதிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c383cf7-409d-46a4-b2ac-00d6a468168c/26-6a64e0368af52.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T18:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-sudden-attack-warship-from-iran-to-russia-1784998770"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-sudden-attack-warship-from-iran-to-russia-1784998770</id>
            <summary type="text">காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக சமூக வலைத்தளமான X-ல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், “காஸ்பியன் கடலில் மேற்கொள்ளப்பட்ட தொலைதூரத் தாக்குதல்கள் மூலம் உக்ரைன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.</p><p> குறிப்பாக, ஈரானிலிருந்து இராணுவச் சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களும், ஒரு போர்க்கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகின,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ரஷ்ய கடற்படைத் தளங்கள்</h2><p>

காஸ்பியன் கடல், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcf4489-47dd-4fd8-8dc6-b05b61c03cfa/26-6a64ee18da8e3.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. </p><p>மேலும், கடந்த டிசம்பர் மாதம், ஈரான்–ரஷ்யா இடையிலான இராணுவச் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா தடைவிதித்திருந்த இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்திருந்தது.
</p><p>
பகுப்பாய்வாளர்களின் தகவலின்படி, ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல ரஷ்யா, அஸ்ட்ராகான் மற்றும் ஓல்யா துறைமுகங்களை முக்கியமாகப் பயன்படுத்தி வருகிறது. </p><p>மேலும், ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளும் நீண்டகால ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்தக் கூற்றுக்கு ரஷ்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a> </a><a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank">WHATSAPP CHANNE</a><a>L </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T17:39:10+00:00</updated>
        </entry>
    </feed>
