<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-07T15:25:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955"></link>
            <id>https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955</id>
            <summary type="text">2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் முதுகலைப் படிப்பைத் தொடர வெளிநாடுகளுக்குச் சென்றிருந்ததாகவும், மற்றவர்கள் வேலைவாய்ப்புக்காகவோ, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிநாடு சென்றிருந்ததாகவும், கூறியுள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊதியமில்லா விடுப்பு&nbsp;</h2><p>

2020-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டுக்குள் 1,429 மருத்துவர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>


அதே காலகட்டத்தில், 140 சிறப்பு மருத்துவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்திற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.</p><p>

வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு பதவி விலகும் அல்லது பணியிலிருந்து விலகும் மருத்துவர்கள் குறித்த தரவுகளை சுகாதார அமைச்சகம் பராமரிப்பதில்லை என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636"></link>
            <id>https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. </p><p>

முன்மொழியப்பட்ட இந்த செயல்முறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>33 சிறைச்சாலைகள் </h2><p>இந்த செயல்முறையானது அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை காவல்துறை, சிறப்பு பணிப்படை (STF) மற்றும் தேவைப்படுமிடங்களில் ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821d0f98-6baf-45d3-a3e7-af4a2371e6d2/26-6a75ee65de6cb.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டம் அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T14:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறை கலவரம்! 28 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்பு&amp;nbsp;பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு&nbsp;</u></b></h5><p>பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 இன்று காலை (07) குறித்த சிறையில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் , காவல்துறையினர் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை என்பன வரவழைக்கப்பட்டன.
</p><p>
 இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aeb4c60-5885-4c3d-9cc0-4c8869c33923/26-6a75dd9dd39db.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர் பாதுகாப்புப் படைகள் சிறையின் கட்டுப்பாட்டை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வசம் ஒப்படத்துள்ளனர்.</p><h4><b>🛑 மூன்றாம் இணைப்பு</b></h4><p>பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஆரம்பமாகியுள்ளதுடன், கைதிகள் சிறை அதிகாரிகளை நோக்கிப் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பின்வரும் பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><ul><li>
இலங்கைப் காவல்துறையினர்</li><li>

காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)
</li><li>
கலாபக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Riot Control Unit)
</li><li>
இலங்கை விமானப்படை
</li></ul><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 இரண்டாம் இணைப்பு</u></b></h5><p>பல்ல சேன சிறையில் கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><u><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></u></h5><p>நீர்கொழும்பு - பல்லசேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>சிறையிலும் கலவரம்</h2><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லசேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6584e1-854a-422b-84fd-5f478c1c06ed/26-6a75765ad8d34.webp' /></p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை! ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-saudi-arabia-over-pakistan-turkey-deal-1786108495"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-saudi-arabia-over-pakistan-turkey-deal-1786108495</id>
            <summary type="text">பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் சவூதி அரேபியா புதிதாகக் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டில் ஈரான் தனது முதல் எதிர்வினையை இவ்வாறு வெளியிட்டுள்ளது.
</p><p>

இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு ஒருபோதும் உத்தரவாதம் அளிக்காது என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
</p><p>
</p><p></p><h2>அமெரிக்கர்களை&nbsp;சார்ந்திருந்த&nbsp;பாதுகாப்பு </h2><p>விடயம் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e3ba00-067b-4d43-829f-84f573b384da/26-6a75daa1e0ac1.webp' /></p><p>
</p><p>"பல தசாப்தங்களாக அமெரிக்கர்களை ஒருதலைப்பட்சமாகச் சார்ந்திருந்தது பாதுகாப்பைத் தரத் தவறியதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான ஒரு காகித ஒப்பந்தம் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவூதியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
</p><p>
 ஈராக் மற்றும் யேமனில் உள்ள, ஈரான் ஆதரவு பெற்ற தாக்குதல் குழுக்கள், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் ஒரு பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதலை சவூதி அரேபியா மீது நடத்துவதற்கு தயாராகி வருவதாக வெளியாகிய தகவலை அடுத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, சவூதி அரேபியா மீதான ஒரு பெரிய தாக்குதலின் விளைவுகள் குறித்து தெஹ்ரானுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும்.</p><p>

ஏனெனில் அந்தத் தாக்குதல் இப்போது பாகிஸ்தான் மற்றும் துருக்கியையும் உள்ளிழுத்து, போரை வியத்தகு முறையில் விரிவுபடுத்தும் என நம்பப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலுக்கு எதிராக சவூதியுடன் பாகிஸ்தான் - துருக்கி ஒன்றிணைந்தன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saudi-mobilize-powerful-arms-forces-against-iran-1786106366"></link>
            <id>https://ibctamil.com/article/saudi-mobilize-powerful-arms-forces-against-iran-1786106366</id>
            <summary type="text">ஈரான் போர் சவூதி அரேபியாவை நெருங்கி வருவதால், இஸ்லாமிய உலகின் மிகவும் வலிமைமிக்க இரண்டு இராணுவ சக்திகளை தனது பாதுகாப்பிற்காக தற்போது அணிதிரட்டியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் சவூதி அரேபியாவை நெருங்கி வருவதால், இஸ்லாமிய உலகின் மிகவும் வலிமைமிக்க இரண்டு இராணுவ சக்திகளை தனது பாதுகாப்பிற்காக தற்போது அணிதிரட்டியுள்ளது.</p><p>
பாகிஸ்தானும் துருக்கியும் வெள்ளிக்கிழமை மெக்காவில் சவூதி அரேபியாவுடன் நேட்டோ பாணியிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இதன் மூலம், தங்களின் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் ஒரு கூட்டுப் பாதுகாப்பு கூட்டணியாக உருமாறியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க பாதுகாப்பில் சந்தேகம்&nbsp;</h2><p>
ஒரு நாட்டின் மீதான தாக்குதலை மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதுவதால், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானையும் துருக்கியையும், அவை இதுவரை கவனமாகத் தள்ளி வைத்திருந்த ஒரு போருக்குள் இழுத்துச் செல்லக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857dc7d5-0135-428a-b3d0-d7fccf9e846e/26-6a75d59b12c65.webp' /></p><p>
</p><p>
எண்ணெய் வளம் நிறைந்த தனது வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்காவை இன்னும் நம்ப முடியுமா என்பது குறித்த பிராந்திய சந்தேகங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்காவுடனான அதன் நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மைக்கு அப்பால் ஒரு சக்திவாய்ந்த புதிய பாதுகாப்பு அடுக்கை வழங்கியுள்ளது.
</p><p>
இது சவூதியின் தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதோடு, அதிகரித்து வரும் ஈரானிய அச்சுறுத்தலுக்கு எதிராக இஸ்லாமிய தலைமையிலான ஒரு ஒன்றுபட்ட இராணுவ முன்னணியையும் முன்வைக்கிறது.</p><p> 

மேலும், இஸ்ரேல் இப்பிராந்தியம் முழுவதும் தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்தி வரும் வேளையிலும், அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்துடனான ரியாத்தின் உறவுகள் சீர்குலைந்து வரும் வேளையிலும் இந்த ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவமாய் மாறியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கல்சியம் நீக்கியை குடித்த குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-in-jaffna-dies-after-consuming-descaler-1786103597"></link>
            <id>https://ibctamil.com/article/person-in-jaffna-dies-after-consuming-descaler-1786103597</id>
            <summary type="text">யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்
உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;யாழ்ப்பாணம்&amp;nbsp;அத்தியடி பகுதியைச் சேர்ந்த
துரைராசா புஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்
உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணம்&nbsp;அத்தியடி பகுதியைச் சேர்ந்த
துரைராசா புஸ்பநாதன் (வயது 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக
கல்சியம் நீக்கியை குடித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கல்சியம் நீக்கி குடித்து உயிர்மாய்ப்பு</h2><p> </p><p>இதன்&nbsp; பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bafe5dea-0ba5-4585-b6dc-174c2544c165/26-6a75ca86bc216.webp' /></p><p> எனினும்&nbsp; இருப்பினும் சிகிச்சை
பலனின்றி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:16:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏககால சிறையுடைப்பு சதி... அவசர மிசனில் அநுர!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-calls-urgent-meet-over-prison-conspiracy-1786103916"></link>
            <id>https://ibctamil.com/article/anura-calls-urgent-meet-over-prison-conspiracy-1786103916</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளைச் சீர்குலைத்து ஏககால சிறையுடைப்புகளை செய்ய பெரும் சதித்திட்டம் போடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் கிட்டிய நிலையில் ஜனாதிபதி அநுர கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளைச் சீர்குலைத்து ஏககால சிறையுடைப்புகளை செய்ய பெரும் சதித்திட்டம் போடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் கிட்டிய நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஒரு அவசரகால நெருக்கடிக்கூட்டத்தை நடத்தியுள்ளார். </p><p>

இதனால் சிறைகளின் பாதுகாப்பு குறித்த திடீர் முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கடந்த இரவு முதல் கொழும்பு மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு, பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த மையங்களில் நடத்தப்பட்ட சப்பவங்கள் போதை மாபியாவால் திட்டமிட்டப்பட்ட ரைம்-லைன் குழப்பங்களாக தெரிகின்றன. </p><p>

யாழ்பாணத்தில் உள்ள சிறையிலும் மேலதிக படையினர் காவலுக்கு போடப்பட்டுள்ள நிலையில் அநுரவின் ஒரு அவசர மிசன் வரத்தலைப்படுகிறது. </p><p> 

குறித்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tm-hVr2kJf0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T12:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைச்சாலைகளில் 27 இந்தியர்கள்! அச்சநிலையை மையப்படுத்தி ஜெயசங்கர் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/s-jaishankar-focuses-srilankan-prison-situation-1786104385"></link>
            <id>https://ibctamil.com/article/s-jaishankar-focuses-srilankan-prison-situation-1786104385</id>
            <summary type="text">இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்தியா விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்தியா விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
2026 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று இந்திய நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p></p><h2>தாக்குதலுக்கு உள்ளான&nbsp;கடற்றொழிலாளர்கள்</h2><p>மேலும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 249 கடற்றொழில் படகுகள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91350ad1-1e80-47fc-b8de-ebcfba6c5a4f/26-6a75cb306e21b.webp' /></p><p>
</p><p>
இதன்படி இந்திய கடற்றொழிலார்களில் பாதுகாப்பும் நலனும் மத்திய அரசின் உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக இது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விரைவாக விடுவித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக, இலங்கை அரசுடன் இருதரப்பு செயல்முறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ, உயர்மட்ட சந்திப்புகள் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,554 ஆக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அவர்களில் சுமார் 10 பேர் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானதாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T12:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரின் இல்லங்களை படம்பிடித்த சந்தேக நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-filming-official-residences-igp-cj-1786100498"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-filming-official-residences-igp-cj-1786100498</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள காவல்துறைமா அதிபர் (IGP) மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள வீதிகளையும் படம்பிடித்ததா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள காவல்துறைமா அதிபர் (IGP) மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள வீதிகளையும் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கறுவாத் தோட்டம் காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

காணொளிகளை படம்பிடிக்க பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைபேசியும் அவரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவம்&nbsp;நேற்று இரவு (06.08.2026) நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>STF அதிகாரியின் நடவடிக்கை</h2><p>

 

காவல்துறைமா அதிபர் இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப் படையைச் (STF) சேர்ந்த அதிகாரி ஒருவர், சொகுசு வாகனத்தில் வந்த நபர் ஒருவர் இல்லத்தின் வீதியருகே இருந்து காணொளிகளை பதிவு செய்வதைக் கவனித்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dca6342-d860-4314-a29c-450c9909bfb7/26-6a75c176e0a06.webp' /></p><p>இதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரி அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலருக்குத் தகவல் அளித்துள்ளார்.&nbsp;</p><p>அதனை தொடர்ந்து அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பின்னர்&nbsp; கறுவாத் தோட்டம் காவல் நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்தனர்.</p><h2>சந்தேக நபர் 40 வயதுடையவர்</h2><p>
</p><p>
 

சந்தேக நபர் பயன்படுத்திய கைபேசியும் கைப்பற்றி அக்கருவியை ஆய்வு செய்ததில் காவல்துறைத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம், அதைச் சுற்றியுள்ள சாலை, பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் ஆகியவற்றின் காணொளிக் காட்சிகள் வெளிப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9aa599-2a8a-42d9-ab71-c7cddace8296/26-6a75c3bbc3ac4.webp' /></p><p>

 

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் அந்த காணொளிகளை ஒரு பொழுதுபோக்கிற்காகப் பதிவு செய்ததாகக் கூறியிருந்தார். </p><p>

 

இருப்பினும், மேலதிக விசாரணையின்போது சந்தேக நபர் தனது வசிப்பிடம் மற்றும் பிற விவரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்களை அளித்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அலுபொம்மைலாவில் உள்ள அருகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>மேலும் இச்சம்பவம் குறித்து கறுவாத் தோட்டம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து 19 வயது இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/19-year-old-youth-dies-in-jaffna-1786101968"></link>
            <id>https://ibctamil.com/article/19-year-old-youth-dies-in-jaffna-1786101968</id>
            <summary type="text">யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாரந்தனை பகுதியில் இன்று (07-08-2026) குறித்த இளைஞர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நாரந்தனை பகுதியில் இன்று (07-08-2026) குறித்த இளைஞர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த
19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.</p><p>
சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும்
நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824948e3-c867-4248-ae9b-3095e19c6331/26-6a75c0d19eca1.webp' /></p><p>வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து
செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில்
குறித்த இளைஞன் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பின்னர் இது
குறித்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p>

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானி வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-gazette-on-retirement-age-1786101304"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-gazette-on-retirement-age-1786101304</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான சட்டமூலம் குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ வர்த்தமானி வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இதனடிப்படையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 67 ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.</p><p></p><h2>பதவிக்காலம் நிறைவு&nbsp;</h2><p>

மேலும், பிரதம நீதியரசர், தனது 67ஆவது வயதை எட்டும் போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி ஓய்வு பெறுவார் என்றும் இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19d76aba-68e9-4a3c-9280-ad365c8508f2/26-6a75be3a7ca4b.webp' /></p><p>இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19இலிருந்து 24ஆக உயர்த்தவும் கோருகிறது.</p><p>

அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலத்தை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வெளியிடுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-scholarship-exam-department-of-examination-1786099941"></link>
            <id>https://ibctamil.com/article/2026-scholarship-exam-department-of-examination-1786099941</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (09.08.2026) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (09.08.2026) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை பரீட்சை நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் 5 ஆம் வகுப்ப புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>294,089 பரீட்சார்த்திகள்</h2><p>
புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a8bfdd-639f-43cc-bdec-eaa8be5594f8/26-6a75bcd815ce5.webp' /></p><p>
இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p>

இந்த தடையானது பரீட்சை நிறைவடையும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அத்துடன் இந்த வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் திருவிழாவுக்குக் காளாஞ்சி கையளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-festival-kalanchi-handed-over-1786100109"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-festival-kalanchi-handed-over-1786100109</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07-08-2026) காலை
கல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07-08-2026) காலை
கல்வியங்காட்டில் நடைபெற்றது.&nbsp; </p><p>வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று
பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி
மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச்
செல்லப்பட்டது.</p><p>

பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும்
காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
</p><p>
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10
மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warnings-updated-for-four-districts-1786093767"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warnings-updated-for-four-districts-1786093767</id>
            <summary type="text">தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் புதுப்பித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் புதுப்பித்துள்ளது.
</p><p>
 

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள பஸ்பாகே கோரலே பிரதேச செயலகப் பகுதிக்கு இரண்டாம் நிலை (மஞ்சள்) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>நிலச்சரிவு எச்சரிக்கைகள்</h2><p>மேலும் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட் மற்றும் கொத்மலை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 2 ஆம் நிலை எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f893a6d-8b38-4bd5-b252-0dd451118e43/26-6a75b97351c11.webp' /></p><p> </p><p>

 

கேகாலை மாவட்டத்தில், தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, ஜட்டியாதோட்டை, தெரணியாகல மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

 

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் தொலுவ, பன்வில, மெடதும்பர, உடபலாத்த, கங்கை இஹல கோரளை, உடதும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மட்டம் 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இரத்தினபுரி மாவட்டத்தில், இரத்தினபுர, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவையிலும்... பண்பாட்டிலும்... சிறக்கும் றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-akshaya-patram-food-festival-begins-1786099087"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-akshaya-patram-food-festival-begins-1786099087</id>
            <summary type="text">உணவும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றிணையும் இனிய தருணத்தை உங்களுக்காக வழங்குகிறது றீ(ச்)ஷாவின் &quot;அட்சய பாத்திரம்&quot; உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றிணையும் இனிய தருணத்தை உங்களுக்காக வழங்குகிறது றீ(ச்)ஷாவின் "அட்சய பாத்திரம்" உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இன்று முதல் (7) முதல் எதிர்வரும் 10 திகதிவரை வரை, தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, இயக்கச்சி றீ(ச்)ஷா வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் , பாரம்பரிய உணவுகளின் சுவையை சுவைத்து மகிழ ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
எமது கலாசாரத்தின் செழுமையையும் ஒரே இடத்தில் அனுபவிக்கும் அரிய வாய்ப்பாக அமையவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளான ஒடியல் கூழ், நண்டுப் பிரட்டல், பிட்டு–சொதி, பனங்கிழங்கு பணியாரம் உள்ளிட்ட பல்வேறு சுவைமிகு உணவுகள் பார்வையாளர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900c6235-56d5-4cd6-b604-dec46bce9fb8/26-6a75b590c7baf.webp' /></p><p>அது மட்டுமல்லாது, உலகத் தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களின் நேரடி சமையல் நிகழ்ச்சிகள், பனை மற்றும் தென்னை சார்ந்த பாரம்பரிய சிற்றுண்டிகளின் சிறப்புக் காட்சி, சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பாரம்பரிய சிற்றுண்டிப் போட்டிகள், மேலும் எமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறவுள்ளன.</p><p>

Qick Food, IBC தமிழ், LANKASRI ஆகியன அனுசரணை வழங்கும் இந்த நிகழ்வில் சுவையான உணவுகளை ருசிப்பதற்காக மட்டுமல்ல, எமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் குடும்ப விழாவாகவும் இந்நிகழ்வு அமையவுள்ளது.&nbsp;</p><p>

உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தவறாமல் கலந்து கொண்டு, பாரம்பரிய சுவைகளின் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
</p><p>
மேலும் தகவல்களுக்கு: <b>077 777 2353, 077 777 2354</b></p><p>

 றீ(ச்)ஷாவின் "அட்சய பாத்திரம்" உணவுத் திருவிழா இது பாரம்பரிய சுவைகளும், பண்பாட்டு பெருமையும் சங்கமிக்கும் மகத்தான விழா...</p>]]></content>
            <updated>2026-08-07T10:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் புதிய சட்டம்! சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-bills-new-law-to-control-hormuz-strait-1786090054"></link>
            <id>https://ibctamil.com/article/iran-bills-new-law-to-control-hormuz-strait-1786090054</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டமூலம் ஒன்றை வரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டமூலம் ஒன்றை வரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கடல்சார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், சில குறிப்பிட்ட கப்பல்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவின் மறுஆய்வில் தற்போது உள்ள இந்தச் சட்டமூலம், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமானுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளிலிருந்து சுயாதீனமாக முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.</p><p>
</p><p></p><h2>ஈரானுக்குச் சேதம்</h2><p>இச்சட்டமூலத்தின் ஆரம்ப பதிப்பில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானால் பகை நாடுகளாகக் கருதப்படும் ஏனைய நாடுகளின் கப்பல்கள் இந்த கடல் பாதையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
</p><p>
தற்போதைய புதிய பதிப்பில் இக்கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b963ba-a563-4e7c-994d-000d29849422/26-6a75b42c18a4b.webp' /></p><p>அதன்படி, இஸ்ரேலியக் கப்பல்களுடன் தொடர்புடைய அல்லது ஈரானுக்குச் சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புடைய இராணுவ அல்லது சிவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், உரிய இழப்பீட்டைச் செலுத்தும் வரை இந்த நீரிணையைக் கடக்கத் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இக்கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களில் உள்ள சரக்குகளின் மதிப்பில் 20% வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பான கடற்பயணம்</h2><p>நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்வதற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில், ஈரான் அரசு வழிசெலுத்தல் சேவைக்கட்டணத்தை (Navigation service fees) வசூலிக்கும். </p><p>

இக்கட்டணம் ஈரானிய நாணயத்தில் (Rial) செலுத்தப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f23eefc-685c-446a-a0da-4e0c6a787b15/26-6a75b42cbff87.webp' /></p><p>இச்சட்டமூலத்தை வரைவதற்கான முயற்சி குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
</p><p>
இதையடுத்து ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வரைவில், ஈரானுக்குப் பகை நாடுகளின் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன. </p><p>

எனினும், தற்போதைய புதிய வரைவில் இக்கட்டுப்பாடுகள் கப்பல்களுக்கு மட்டுமன்றி, அவை ஏற்றிச் செல்லும் சரக்குகளுக்கும் (Cargo) விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண சிறைச்சாலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-has-been-strengthened-at-jaffna-prison-1786096050"></link>
            <id>https://ibctamil.com/article/security-has-been-strengthened-at-jaffna-prison-1786096050</id>
            <summary type="text">யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அதற்கமைய&nbsp;அதன்படி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் கள ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்</h2><p>மேலும், யாழ் சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பல இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82e9ed8-ce9c-4c15-9883-ad241df89785/26-6a75b1ad7d858.webp' /></p><p>அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதி காவல்துறை மா அதிபர் (DIG), மாவட்டத்திற்கான சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP), மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறையிலிருந்து கன உலோகப் பொருட்களையும் தளபாடங்களையும் அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-security-around-batticaloa-prison-1786093657"></link>
            <id>https://ibctamil.com/article/army-security-around-batticaloa-prison-1786093657</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு
சிறைச்சாலை பகுதியை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே&nbsp; ஏற்பட்டு வரும் மோதல் நிலை காரணமாக மட்டக்களப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p></p><h2>மட்டக்களப்பு சிறைச்சாலையில் பரபரப்பு</h2><p>இதனுடன்&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/324482c6-e11c-4359-8371-2465f4145981/26-6a75a9e718417.webp' /></p><p>இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கமாக&nbsp;சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து

பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று மொத்தம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் தெரிவித்தார். </p><p>மேலும் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு
விஜயம் மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை ஆராய்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7114d1c-33cb-46fe-9836-2f32e50c33fa/26-6a75a9e5af6ac.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f2e48d-e012-48dd-bbb4-faca63312a3c/26-6a75a9e6646e7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-ordered-to-testify-in-disappearance-1786093505"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-ordered-to-testify-in-disappearance-1786093505</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
</p><p>
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நீதிமன்றத்திற்குச் சாட்சியம்</h2><p>இதனடிப்படையில் அன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, இணையவழி (Online) மூலமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b090279d-1b2d-4d79-bb9f-f859d0caef32/26-6a75a5ec98465.webp' /></p><p>2011 டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வேளையில், லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவாரங்கல் பகுதியில் வைத்துக் காணாமல்போயினர்.</p><p>
</p><p></p><h2>யாழ்ப்பாணத்தில் விசாரணை&nbsp;</h2><p>2012 இல் இவர்களின் உறவினர்களால் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902ba780-ae4e-4777-a002-0c600f7568c5/26-6a75a5ed49177.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

அதன்படி 2012 செப்டம்பர் 19 அன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை ஆரம்பமானது.</p><p>
</p><p></p><h2>மீண்டும் விசாரணை</h2><p>2017 இல் இவ்வழக்கின் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டது.</p><p>

பாதுகாப்பு காரணங்களினால் தம்மால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக முடியாது எனப் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததுடன், தனது சட்டத்தரணிகள் ஊடாக இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி கோரியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed995e9-96ef-49cf-932b-fab3e3b1b52c/26-6a75a5edef296.webp' /></p><p>அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொருத்தமான ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி அங்கிருந்து இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி அளித்திருந்தது.</p><p> 

அதனடிப்படையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T09:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி மன்னாரில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-mannar-demanding-people-s-lands-release-1786088475"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-mannar-demanding-people-s-lands-release-1786088475</id>
            <summary type="text">தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் மன்னாரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் இன்று&nbsp; (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர
சுற்றுவட்டத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
</p><p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு - கேப்பாப்புலவு
மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை
மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம்&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>போராட்டத்தில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>இந்தப் போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின்
உரிமையாளர்களும், கிராம மக்கள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என வடக்கின் சில பகுதிகளில் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78eff8e-a68b-4113-8750-2ad6dbd32b8a/26-6a75a6d0e7324.webp' /></p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் "நிலம் எங்கள் உரிமை - நீதி எங்கள் இலக்கு!", "எமது காணி – எமது உரிமை!", "காணி உரிமை ஒரு மனித உரிமையாகும்!", "காணியே எமது வாழ்க்கையும் அடையாளமும்!", "எமது காணி – எமது குரல்!", "மக்கள் பசியால் தவிக்கையில் மக்களின் காணிகளில் படைகள் பயிரிடுவதா?", "வலிகாமம் வடக்கு மக்களின் காணி அபகரிப்பிற்கான உயர்பாதுகாப்பு வலயத்தை
எப்போது நீக்குவீர்கள்?", "வலிகாமம் வடக்கு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களின்
ஆதரவு!", "முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு
மன்னார் மக்களின் ஆதரவு!", "மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை மக்களின் நீண்டகால நில உரிமைப்
போராட்டத்திற்கு மன்னார் மக்களின் ஆதரவு!", "இலங்கை அரசே! பூர்வீக காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படையுங்கள்!" என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஈந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b><i>செய்திகள் - நயன், கஜிந்தன்&nbsp;</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-07T09:41:07+00:00</updated>
        </entry>
    </feed>
