<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-26T18:37:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-prison-prisoner-escaped-1787768860"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-prison-prisoner-escaped-1787768860</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற கைதி நாத்தாண்டிய - மெதகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிறை விடுதியின் மேலாளராகப் பணியாற்றும் சிறைக் காவலரால், அந்த விடுதியைச் சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த&nbsp;மோட்டார் சைக்கிள்</h2><p>
</p><p>
இந்நிலையில், கைதிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறைக் காவலர் மதிய உணவு அருந்துவதற்காகத் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6141b7-c75b-4bd7-bc47-bf690a30e662/26-6a8f3164c9bfe.webp' /></p><p>

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபரான கைதி, விடுதிக்கு முன்னால் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடிக்கொண்டு, லெஸ்லி ரணகல மாவத்தை வாசல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T18:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/36th-memorial-day-mandaitivu-massacre-1787765231"></link>
            <id>https://ibctamil.com/article/36th-memorial-day-mandaitivu-massacre-1787765231</id>
            <summary type="text">

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.</p><p>
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.</p><p>

தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்களகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.</p><p></p><h2>மலர்மாலை அணிவித்து அஞ்சலி</h2><p>தொடர்ந்து அருட்தந்த வசந்தன், மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன் ஆகியொரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நினைவேந்தல் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9661f83-3e0f-4162-abec-0d1529b8357f/26-6a8f238bdbdb9.webp' /></p><p>
தொடர்ந்து உருவப்படங்களுக்கு உறவுகளால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மண்டைதீவு பங்குத்தந்தை அலோய் அருணேஷகும்மார், அருட்தந்த வசந்தன்,அருட்சகோதரிகள், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர், பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், அனுசியா ஜெயகாந்த், மற்றும், ஜோசம் கனிஸ்டன் பொதுமக்கள் என பலரும் மலர்தூவி அஞ்சலித்தனர்.</p><p>
முன்பதாக 1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.</p><p>
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிபையில் குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா, மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இதற்கான தீர்வுகோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.</p><h2>கோர சம்பவத்துக்கான சாட்சி</h2><p>
இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff4035d-a772-4767-9472-e0fcdcd71a3a/26-6a8f238c9720b.webp' /></p><p>
இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.</p><p>
இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.</p><p>

அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் சாட்சி.அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.</p><p>

அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு. இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T18:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/customs-arrest-indians-attempting-smuggle-gold-1787758369"></link>
            <id>https://ibctamil.com/article/customs-arrest-indians-attempting-smuggle-gold-1787758369</id>
            <summary type="text">இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த&amp;nbsp;இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.காங்கேசன்துறை ஊடாக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த&nbsp;இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>காங்கேசன்துறை ஊடாக இன்று நாகப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 19 இந்தியப் பயணிகளை இலங்கை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன்படி தடுத்து நிறுத்தப்பட்டவர்களிடம்&nbsp; 7 பேரிடமிருந்து இதுவரை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>சுங்க அதிகாரிகள் விசாரணை&nbsp;</h2><p>ஏனையோரிடம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஸ்கானிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97193fb9-0665-46c9-b051-29719c2d262f/26-6a8f0723bb663.webp' /></p><p>
சந்தேகநபர்கள் கடந்த 24ஆம் திகதி கொழும்பு ஊடாக இலங்கைக்கு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும், தங்கத்தை உடலுக்குள் அல்லது வேறு நூதனமான முறையில் மறைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்றார்களா என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T17:46:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளம்! கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-floods-sri-lanka-concerned-1787764139"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-floods-sri-lanka-concerned-1787764139</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.</p><p>

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பான பதிவை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்</h2><p>
</p><p>
இந்த சவாலான காலகட்டத்தில் நேபாள அரசாங்கத்துடனும் அந்நாட்டு மக்களுடனும் இலங்கை முழுமையாக உறுதுணையாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I am deeply saddened by the devastating floods reported in Rasuwa District and other parts of Nepal.<br><br>My thoughts are with all those affected, and especially with the families and communities enduring this difficult time. I commend the efforts of the Nepalese authorities and all…</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2092617429570801843?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்த கடினமான சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ள அவர், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் முயற்சிகளையும் எடுத்துரைத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T17:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு.. நிலநடுக்கம் குறித்து வெளியாகிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-from-26-countries-killed-in-nepal-floods-1787759655"></link>
            <id>https://ibctamil.com/article/people-from-26-countries-killed-in-nepal-floods-1787759655</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.சில மணி நேரங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p>சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழப்பு எண்ணிக்கை 31 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 403 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p>இவர்களில் 61 பேர் நேபாளர்கள் என்றும் 341 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வெளியாகிய காரணம்</h2><p> காணாமல் போனவர்களில் 200 பெண்களும், 203 ஆண்களும் அடங்குவதாக நேபாள அரச தரப்பு அறிக்கை வெளியட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9a28b1-35d3-4371-b19a-f063e920af4b/26-6a8f0d08662f7.webp' /></p><p>இதில் சிக்கியவர்கள் 26 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இந்நிலையில் உள்ளூர் நேரப்படி காலை 8.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும் 26 காவல்துறையினர், 9 ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் 44 இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gPvWckTqSqk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T15:58:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி கிழக்கு உள்ளிட்ட தனியார் காணிகளை விடுவிக்க அநுர உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-order-release-private-land-under-north-1787755577"></link>
            <id>https://ibctamil.com/article/anura-order-release-private-land-under-north-1787755577</id>
            <summary type="text">வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;கடந்த 20ஆம் திகதி பாதுகாப்புத் தரப்பினருக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், ''வசாவிளான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில், இதுவரை உரிமையாளர்கள் விவசாயம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p></p><h2>மீள்குடியேற அனுமதி</h2><p>தற்போது அந்தக் காணிகளை முழுமையாக விடுவித்து, உரிமையாளர்கள் வீடுகளை அமைத்து மீள்குடியேற அனுமதிக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152f088a-4f10-47c1-871b-f0b99a2c2379/26-6a8f00469ac28.webp' /></p><p>பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.</p><p>மேலும், வடக்கின் பல பகுதிகளில் முப்படையினரின் வசமுள்ள சிறிய அளவிலான தனியார் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>இதன்படி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு உண்மையில் தேவைப்படும் காணிகள் மட்டும் சுவீகரிக்கப்படும்.</p><p> அவற்றின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .</p><p>சில காணிகளை பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களால் விடுவிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு அல்லது இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T15:34:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF- இன் இலங்கை குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நிர்மலா சீதாராமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071"></link>
            <id>https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பங்காற்றியதாக முன்னாள் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>வலைதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலி சப்ரி, தான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக IMF தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.</p><p>அமெரிக்காவில் IMF-ன் பிராந்திய இயக்குநர்களுடன் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்த அலி சப்ரி, இலங்கை தொடர்பாக அதிகாரிகள் மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>அலி சப்ரிக்கு கிடைத்த வாய்ப்பு</h2><p>அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் ஆகியோரை சந்திக்க அலி சப்ரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53e3b90-1c26-43a4-a23d-1e90fa820d57/26-6a8ee7d436377.webp' /></p><p>
அதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மதிய உணவு அருந்தியதாக அவர் கூறியுள்ளார்</p><p>இது குறித்த மேலும் கருத்து வெளியிட்ட&nbsp;அலி சப்ரி,</p><p>&nbsp;“அவர் என்னிடம் ‘அமைச்சரே, சந்திப்பு எப்படி நடந்தது?’ என்று கேட்டார். நான், ‘அவ்வளவு சிறப்பாக இல்லை என பதில் வழங்கினேன்.</p><p>அவர்கள் தயக்கத்துடன் இருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றேன்.</p><p> அதற்கு நிர்மலா சீதாராமன், “கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு முன்பாக நான் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்திக்கிறேன். நான் இலங்கை குறித்து அவரிடம் பேசுகிறேன்” என்றார்.</p><p></p><h2>IMF தலைமைத்துவம்</h2><p>அதன்பின்னர் IMF தலைமைத்துவத்துடன் நடைபெற்ற சந்திப்பில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.</p><p>IMF நிர்வாக இயக்குநரை சந்திக்கச் சென்றபோது, அது எனக்கு மிகவும் முக்கியமான சந்திப்பாக இருந்தது. </p><p>ஆனால் அப்போது அவர்களின் தொனி, அணுகுமுறை, சூழல் என அனைத்துமே மாறியிருந்தன.</p><p> அப்போது கிறிஸ்டலினா ஜார்ஜீவா, தாம் சிறிது நேரத்திற்கு முன்புதான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை பேச்சு இந்தியாவைப் பற்றியது அல்ல.</p><p>இலங்கையைப் பற்றியே இருந்தது என்றும் தன்னிடம் தெரிவித்தார்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T14:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்க்கரை இல்லா சூயிங்கத்தால் மாரடைப்பு - பக்கவாதம்! ஆய்வில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugar-free-chewinggum-linked-to-heart-attack-1787753785"></link>
            <id>https://ibctamil.com/article/sugar-free-chewinggum-linked-to-heart-attack-1787753785</id>
            <summary type="text">சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி அதிக அளவு சைலிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அதிக அளவு சைலிட்டால் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜெர்மனியின் பெர்லின் சாரிட்டே பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வாளர்கள் 17,710 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.</p><p></p><h2>இதயநோய் பாதிப்பு</h2><p>இரத்தத்தில் சைலிட்டால் அளவு அதிகமாக இருந்தவர்களுக்கு இதய நோய் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்ததாகவும், ஆறு ஆண்டுகள் கண்காணிப்பில், அதிக சைலிட்டால் அளவு கொண்டவர்களுக்கு முக்கிய இதயநோய் பாதிப்பு 57% அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f267382-0d2b-44f1-a7cb-497957036c0c/26-6a8ef86a84d9f.webp' /></p><p>அதிக அளவு சைலிட்டால் இரத்தத்தை அடர்த்தியாக்கி, ஆபத்தான ரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>சைலிட்டால் குறைந்த கலோரியுடன் இனிப்புச் சுவை தருவதால் சூயிங்கம், புதினா இனிப்புக்கள் உள்ளிட்ட பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>பல் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பது போன்ற பல் ஆரோக்கிய நன்மைகளும் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>எனினும், சைலிட்டாலின் நீண்டகால இதய ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், சைலிட்டால் கொண்ட பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SF7gurlvFUA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T14:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச் சந்நிதியானின் சப்பறத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannidhi-sappara-tiruvila-1787752904"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannidhi-sappara-tiruvila-1787752904</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.இதேவேளை சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின்
வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று சப்பரத்திருவிழா இடம்பெற்று வருகிறது.</p><p>இதேவேளை சந்நிதி முருகன் ஆலய பெருந் திருவிழாவில் அடியவர்கள் தொடர்ச்சியாக தூக்கு காவடி, பறவை காவடி, பால் காவடி, பால் செம்பு, அங்க பிரதட்டை உட்பட பல்வேறு நேற்றிக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில் தேர் திருவிழா நாளை வியாழக்கிழமை காலை 7:30
மணியளவில் இடம் பெறவுள்ளதுடன் தீர்த திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை
இடம் பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ocsd33zZzaw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-26T14:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் விற்பனை: ஆரம்பமாகிறது விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sale-of-intimate-photos-of-women-and-children-1787751158"></link>
            <id>https://ibctamil.com/article/sale-of-intimate-photos-of-women-and-children-1787751158</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்ந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் உள்ளடக்கங்களை சமூக வலைதளக் குழுக்கள் மூலம் வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணையவழி வலையமைப்பு தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இயங்கி வரும் சில குழுக்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விற்பனைக்கு வழங்கப்படுவதாகவும், அவற்றை வாங்குவதற்கு சில பயனர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>இது தொடர்பாக அமைச்சகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>உதவி இலக்கங்கள்</h2><p>முதற்கட்ட ஆய்வில், போலியான சமூக வலைதளக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு, அந்தக் கணக்குகளை இயக்குபவர்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197e355a-8316-4f9b-87b7-1599db0061df/26-6a8eef5e6e082.webp' /></p><p>மேலும், சிலர் தங்களது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட உள்ளடக்கங்களைப் பகிர முயன்ற சம்பவங்களும் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் நபர்கள் உதவியை நாடலாம்</p><p>1938 – பெண்கள் தொடர்பான உதவி
</p><p>1929 – குழந்தைகள் தொடர்பான உதவி
</p><p>இரு கட்டணமில்லா உதவி எண்கள் மூலமும் தேவையான உதவியைப் பெறலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரிகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் இணையத்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T13:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[🔴LIVE : நல்லூர் கந்தனது பெருமஞ்ச உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-temple-annual-festival-begins-1787749649"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-temple-annual-festival-begins-1787749649</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் இன்று (17.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் இன்று (17.08.2026) காலை கொடியேற்றத்துடன் மிகக் கோலாகலமாக பெருந்திருவிழ ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
</p><p>
 அரோகரா முழக்கத்துடன் எம்பெருமான் முருகனின் அருள்பெற அடியார்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
</p><p>
அதன் நேரடி ஒளிபரப்பு காட்சிகளை இங்கே காணலாம்...!&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zVHpdi2LynQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T13:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு விசேட மாநாடு...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-first-money-next-ampara-relatives-1787744530"></link>
            <id>https://ibctamil.com/article/justice-first-money-next-ampara-relatives-1787744530</id>
            <summary type="text">எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட
எமக்கு நீதியே மிக முக்கியமானது என&amp;nbsp;அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட
எமக்கு நீதியே மிக முக்கியமானது என&nbsp;அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>இந்தநிலையில் நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு எனவும் நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26-08-2026) விசேட
ஊடகவியலாளர் சந்திபொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பல்வேறு நாடுகள்</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f35b23f-c738-4b20-8b55-388aff7ec1b6/26-6a8ee00cb574a.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும்
நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.</p><p> ஆனால், நீதிக்கு
முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல. இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது
தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி வழக்கை முடிக்கப் பார்க்கிறது.
</p><p>
உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில நாடுகளுக்கு
30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன.</p><p></p><h2>எலும்புக்கூடுகள்&nbsp;</h2><p> நாங்களும் கடந்த 17
வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம். எமது இலக்கை அடைய 15
முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். </p><p>ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்
என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்.

இன்று செம்மணியில் 650 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13884f41-629f-4919-afe9-b3e854075e24/26-6a8ee00c0406f.webp' /></p><p> எமது உறவுகளை காணாமல் ஆக்கியது இந்த இலங்கை அரசுதான்.
தற்போதைய அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு
முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. </p><p>நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வலி
எமக்குத் தெரியும் நீதியைப் பெற்றுத் தருவோம் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு
வந்த பின்னர் எனது இராணுவத்தினரை என்னால் காட்டிக் கொடுக்க முடியாது என்று
ஜனாதிபதி கூறிவிட்டார்” அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து
காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின்
சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட மாநாடு தொடர்பிலும் ஊடகங்களுக்குத்
தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:53:10+00:00</updated>
        </entry>
    </feed>
