<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-15T18:10:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244bf37d-9f61-4e36-ab67-efaec71b7d9d/26-6aa981e9360b7.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T17:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் சைபர் தாக்குதல்! உளவுத்திட்ட நகர்வு குறித்து அமெரிக்கா - பிரித்தானியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804"></link>
            <id>https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804</id>
            <summary type="text">ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து உளவு பார்க்க 'ஸ்பைவேர்' (Spyware) எனப்படும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p>பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையின்படி, </p><p>“ஈரான் அரசு ஆதரவு பெற்ற சைபர் தாக்குதல்தாரர்கள் "CHOSEN BRICK" எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>திருடப்பட்ட&nbsp;மின்னஞ்சல்கள்</h2><p>WhatsApp மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறிப்பிட்ட நபர்களை ஏமாற்றித் தாக்கும் 'ஸ்பியர்-ஃபிஷிங்' (Spear-phishing) பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களின் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் இதர முக்கியமான இரகசியத் தகவல்களை இக்குழுவினர் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32310355-c360-43ee-863d-e8f5853a4c01/26-6aa97bfdd906e.webp' /></p><p>பிரித்தானியா உட்பட உலகம் முழுவதும் வாழும், ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதிருப்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே இந்த உளவுத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.</p><p>ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகத் கருதப்படும் தனிநபர்களை ஒடுக்குவதற்கும், அவர்களைக் கண்காணிப்பதற்கும் ஈரான் இத்தகைய சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை உறுதியாகப் பயன்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T17:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அழைப்பை நிராகரித்து பேச்சுவாரத்தைக்கான கதவை மூடியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467</id>
            <summary type="text">ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.</p><p>

ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பதிவில், “இனி பேச்சுவார்த்தை கிடையாது என்பதிலிருந்து நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்பது வரை அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான சமிக்ஞைகளைக் கண்டு யாரும் திசைதிரும்ப வேண்டாம்.</p><h2>ஈரானின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே பேச்சு</h2><p>எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. சேதத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளால் வரப்போகும் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb050ff8-b200-45c6-92ca-ca6dbe9d1ada/26-6aa97a66a6264.webp' /></p><p>போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இது மிகவும் ஆரம்பநிலை என்று பல நாள்களாகக் கூறி வந்த ட்ரம்ப், நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்</h2><p>
</p><p>
அந்தப் பதிவில், "வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe01a6-50e6-47ac-8435-5ae5867af26a/26-6aa97a675c4f8.webp' /></p><p>போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள,போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855"></link>
            <id>https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
</p><p>
சந்தேக எண்கள் 61 முதல் 81 வரை பெயரிடப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பிற்காக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு&nbsp;</h2><p>&nbsp;அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக 25 பெண் சந்தேக நபர்களையும் முற்படுத்துமாறு நீதவான்&nbsp; உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109a8f7e-aef8-4625-92f2-caa60ca29784/26-6aa9493d2650f.webp' /></p><p>

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை கோரியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சந்தேக நபர்களாக 106 பேர்</h2><p>அதன்படி, இதுவரை 106 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,மேலும் 81 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக முற்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb1d520-766a-486f-942f-5ebe3bb0a850/26-6aa9493dd1c09.webp' /></p><p>

நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷீலானி பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், 30 சந்தேக நபர்கள் (சந்தேக எண்கள் 31 முதல் 60 வரை) முற்படுத்தப்பட்டு, சாட்சிகளாக ஆஜரான சிறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><h2>முதலிடத்தில் இந்தியா</h2><p>செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8193ee-f953-403c-94c5-78c5b6ace360/26-6aa96b85727f4.webp' /></p><p>அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இதர நாடுகளில் இருந்து வந்தவர்கள்</h2><p>

 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b0463a-cbaa-4101-9690-00abe878a3d1/26-6aa96b8626d84.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608"></link>
            <id>https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p>
வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5567a31e-b432-43ad-b249-869f2e3487dd/26-6aa957b7a2d59.webp' /></p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>
</p><p>
தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.</p><p>
</p><p>
இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T14:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.</p><h2>விமானங்கள்,ட்ரோன்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அழிப்பு</h2><p>அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன.


சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6b6045-ff59-41f9-b07e-a4d6a45cbda9/26-6aa95483df116.webp' /></p><p> துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p></p><h2>முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை&nbsp;</h2><p>
</p><p>

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b90e7a-1f08-46d4-be87-a5b52271dde0/26-6aa95484972dd.webp' /></p><p> </p><p>இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460"></link>
            <id>https://ibctamil.com/article/sanjika-wins-gold-in-school-wrestling-event-1789476460</id>
            <summary type="text">
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்துள்ளார்.
</p><p>
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா என்பவரே இவ்வாறு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மல்யுத்தப் போட்டிகள்</h2><p>அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டிகள்
பண்டாரவளை கினிஹம உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இதில்
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா, 48 - 50 கிலோ கிராம் நிறைப்பிரிவில் தங்கப்பதக்கத்தைக்
கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T13:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமது அரசில் ஊழல் செய்தவர்களை ஜனாதிபதிக்கு தெரியாதாம் கூறுகிறார் சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-is-unaware-of-those-engaged-in-corruption-1789475008"></link>
            <id>https://ibctamil.com/article/anura-is-unaware-of-those-engaged-in-corruption-1789475008</id>
            <summary type="text">&amp;nbsp;ராஜபக்‌சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ராஜபக்‌சாக்களை ஊழல்வாதிகள் என கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது என பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.</p><p>&nbsp;ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக தனது கண்களை மறைத்து கட்டியுள்ள துணியில் ஓட்டை இருப்பதாக கூறிய அவர் அதன் காரணமாக கூறும் ஜனாதிபதியின் கண்களுக்கு தமது அரசில் கொண்டைனர் கடத்தியவர்கள் , நிலக்கரி ஊழல் செய்தவர்களை தெரியாது எனசாகர காரியவசம் தெரிவித்தார்.</p><h2>சாதாரண விடயங்களுக்கே வழக்கு பதிவு</h2><p>
</p><p>

முழு நாட்டையும் கொள்ளையடித்தாக கூறி சேறு பூசிய ஜனாதிபதி தற்போது கெரன் போர்ட் விநியோகித்தமை , சோறு பார்சல் விநியோகித்தமை போன்ற விடயங்களுக்கே வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e8394-cbbc-4f61-8915-1f5b70cb79d7/26-6aa941be46bef.webp' /></p><p>
</p><p>

பில்லியன் கணக்கில் நாட்டை கொள்ளையடித்தாக கூறிய விடயங்கள் தற்போது எங்கே என அவர் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T13:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillaiyan-and-two-others-remanded-further-1789476101"></link>
            <id>https://ibctamil.com/article/pillaiyan-and-two-others-remanded-further-1789476101</id>
            <summary type="text">
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (15) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.</p><p>
2008 ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்தமை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொன்றமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிள்ளையானின் கைது</h2><p>
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e56073-9a97-4592-8250-70b19e75d1fa/26-6aa940d9807ee.webp' /></p><p>
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தினர்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
இதன்போது, சிஐடியினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு எதிராக சமர்பணம் முன்வைத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e0c4b9-8610-44b0-9cda-1f733659a3ba/26-6aa940da40d6e.webp' /></p><p>

இதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பாக முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம் பிள்ளையானுக்கு சிறையில் வழங்கும் உணவு தொடர்பாகவும் அவரது தாயார் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு கடந்த வழக்கு விசாரணையின் போது அனுமதி கோரியது தொடர்பாக வாதங்களை முன்வைத்தார்.</p><p>
அத்தோடு, நீதவான் சிறைச்சாலை அதிகாரியை அழைத்து பிள்ளையானின் உணவு மற்றும் தாயுடன் தொலைபேசியில் உரையாடுவது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 22 ம் திகதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டதுடன் பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.</p><p>
அதன்படி, லண்டனில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பாயிஸ் என்பவரை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை சர்வதேச காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T12:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கடற்றொழில் சம்மேளனத்தின் அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-fishermen-demand-end-to-illegal-fishing-1789470693"></link>
            <id>https://ibctamil.com/article/north-fishermen-demand-end-to-illegal-fishing-1789470693</id>
            <summary type="text">வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.</p><p>

சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலார்கள் 
சங்கங்களை சேர்ந்தவர்கள் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கடற்தொழிலார்கள்&nbsp;</h2><p>நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலார்கள் தடை செய்யப்பட்ட
வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விருவதாகவும் ஏனைய சிறு தொழில்
கடற்தொழிலார்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் இதன் போது அவர்கள் 
குறிப்பிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409ed240-604b-458c-b509-24e6442f15a1/26-6aa93b3905114.webp' /></p><p>சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும்
சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுவதாலும் அதனை
கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என்றும்
அவர்கள் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:46:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும்&amp;nbsp;முன்னாள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும்&nbsp;முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார். </p><p> முன்னதாக, மகிந்த ராஜபக்ச, கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ச்சுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ச்சுனா வின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ச்சுனா வின் வரலாற்றைப் பார்த்தால், அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ச்சுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ச்சுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T12:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791"></link>
            <id>https://ibctamil.com/article/cpc-not-yet-submitted-a-proposal-fuel-prices-1789471791</id>
            <summary type="text">
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், நாடு தற்போது ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பையே நம்பியுள்ளது என்றும், இந்த நிலையில் விலைகளை திருத்துவது குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>உலகளாவிய விலை மாற்றங்கள்</h2><p>
</p><p>
தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவர்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மூன்று மாத காலத்திற்குச் சலுகைகளை வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90111092-4335-42e6-b439-ad58c370470b/26-6aa931c3db7c7.webp' /></p><p>
</p><p>
 இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்காக திறைசேரியிலிருந்து மொத்தம் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
</p><p>
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான எதிர்கால முடிவுகள் உலகளாவிய விலை மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறிய அமைச்சர், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கின்றனவா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே அரசாங்கம் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-15T12:25:37+00:00</updated>
        </entry>
    </feed>
