<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-19T11:33:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் துப்பாக்கி முனையில் நடந்த திருட்டு முயற்சி முறியடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempted-robbery-at-gunpoint-in-trincomalee-1789815580"></link>
            <id>https://ibctamil.com/article/attempted-robbery-at-gunpoint-in-trincomalee-1789815580</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத்
திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன்
கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p>

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி
துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது. அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் ஏறி அனுராதபுரம் வீதி
வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p></p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது</h2><p>
எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், திடீர்
தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து
இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b97c270c-8e94-4591-a5c5-4b5c46b66635/26-6aae6e9927c3e.webp' /></p><p>
</p><p>குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் உப்புவெளி காவல் நிலையத்தில்
கடமையாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் எனவும்
தெரியவருகிறது.</p><p>குறித்த இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு : இலங்கை அரசு துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541</id>
            <summary type="text">&amp;nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp; தீவிர செயற்பாட்டில் வெளிவிவகார அமைச்சு</h2><p>&nbsp;இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவுதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345fec4c-3648-4205-af37-fb9943cbef4f/26-6aae68ce646d6.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.</p><p>

 

இச்சம்பவம் தொடர்பில் சவுதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர இலக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmt-introduces-new-whatsapp-number-for-complaints-1789813978"></link>
            <id>https://ibctamil.com/article/dmt-introduces-new-whatsapp-number-for-complaints-1789813978</id>
            <summary type="text">மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 074 245 3300 என்ற புதிய வட்ஸ்அப் (WhatsApp) அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 074 245 3300 என்ற புதிய வட்ஸ்அப் (WhatsApp) அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இதன் மூலம், மோட்டார் வாகனப் பதிவு தொடர்பான சிக்கல்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகள் குறித்த எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைப் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தச் சேவையானது மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள ஆணையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>முறைப்பாடுகளை சமர்ப்பித்தல்</h2><p>பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான நேரடி மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஒரு வழிமுறையை வழங்குவதையும், உரிய நேரத்தில் அதற்கான பதில்கள் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acb582b0-9959-4b81-8134-92995ae73703/26-6aae678f5fe1a.webp' /></p><p>
</p><p>
வாகனச் செயற்பாடுகள் தொடர்பான தாமதங்கள், முறைகேடுகள் அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் போன்ற விடயங்கள் குறித்த முறைப்பாடுகளை, இந்த எண்ணிற்கு வட்ஸ்அப் செய்திகள் மூலம் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T10:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-student-school-courtyard-fell-down-and-died-1789813794"></link>
            <id>https://ibctamil.com/article/female-student-school-courtyard-fell-down-and-died-1789813794</id>
            <summary type="text">மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாலிம்பட தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் தெலிஜ்ஜவில, கல்எந்தகுட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பஹந்துவே சிகன்யா மிபுனி என்ற சிறுமி ஆவார்.&nbsp;</p><h2>&nbsp;சக மாணவின் கையை பிடித்து பாடிக் கொண்டிருந்தவேளை சம்பவம்</h2><p>கடந்த 17ஆம் திகதி காலை பாடசாலைக்கு வந்த குறித்த மாணவி, ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையிலிருந்து வெளியே சென்று சக மாணவியின் கையைப் பிடித்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவியின் கையிலிருந்து நழுவி, அவள் மல்லாக்க தரையில் விழுந்தாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293d5ed6-70a2-48e6-9936-6ef9f88b2652/26-6aae6425542ae.webp' /></p><h2>மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதி</h2><p>

இந்த சம்பவத்தை அடுத்து ஏனைய மாணவிகள் கூச்சலிட்டனர், உடனடியாக செயல்பட்ட ஆசிரியர்கள் இது குறித்து விசாரித்து, 1990 அம்புலன்ஸ் மூலம் சிறுமியை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbdccb70-45e7-4044-b601-6048909df853/26-6aae6424a09ae.webp' /></p><p> </p><p>அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவள் உயிரிழந்தாள். உயிரிழந்த சிறுமி சிறு வயதில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம் : தம்புள்ள தேசிய பாடசாலை அதிபர் உயிரிழந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dambulla-national-school-principal-dies-1789811858"></link>
            <id>https://ibctamil.com/article/dambulla-national-school-principal-dies-1789811858</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். </p><p>

இந்த விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபராக பணியாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜனக விஜேசிங்க என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.</p><h2>&nbsp;சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்</h2><p>ஒரு சொகுசு பேருந்துக்கும் இரண்டு கார்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த விபத்து நிகழ்ந்தது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச் சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e257c1-05f5-42f3-8ffc-26b87df82eb8/26-6aae5f4c789d9.webp' /></p><p> அப்போது, ​​தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிபரின் கார், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில்,கார் சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டது. நிற்காமல் தொடர்ந்து சென்ற பேருந்து, ஒரு சுற்றுலா விடுதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரைக் கவிழ்த்து, அருகிலிருந்த உணவகம் ஒன்றில் மோதியது.
</p><p>
விபத்துக்குப் பிறகு, பலத்த சேதமடைந்த தனது காரில் அதிபர் ஜனக விஜேசிங்க 45 நிமிடங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்தார். அவரை வெளியே கொண்டுவர உள்ளூர் மக்கள் கடுமையாகப் போராடினர்.</p><p></p><p> </p><h2>மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார்</h2><p>உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அதிபர், பின்னர் தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தம்புள்ளை தலைமையக காவல்துறை ஆய்வாளர் சுகத் விஜேசிங்க உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740ee916-5207-476e-a5bb-08882ebe7904/26-6aae5f4d2e452.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பல ஆண்டுகளாக தம்புள்ளை தேசியபாடசாலையில் மிகவும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்த ஜனக விஜேசிங்க, அப்பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் பிற பள்ளிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி, பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததன் காரணமாக அப்பகுதி மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார் மற்றும் மதிக்கப்பட்டார். </p><p>விபத்தில் அதிபரின் கார் பலத்த சேதமடைந்தது, மேலும் இச்சம்பவம் குறித்து தம்புள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானைக் கண்டதுமில்லை பேசியதுமில்லை : குற்றச்சாட்டை நிராகரித்த ரிசாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-sri-lanka-rishad-mp-statement-1789811351"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-sri-lanka-rishad-mp-statement-1789811351</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில்
கண்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில்
கண்டதுமில்லை, பேசியதுமில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில், ”உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவொரு
சம்பந்தமும் கிடையாது.</p><p></p><h2>இரவோடு இரவாகக் கைது</h2><p> </p><p>சஹ்ரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகமோ
அல்லது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. இத்
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும்
என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக உள்ளது.</p><p>இப் பயங்கரவாதச் செயற்பாட்டினால்
பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஓர் அரசியல்வாதியாக நானும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d128c74a-cd73-425c-bff1-abb3290a2ac9/26-6aae5d80957f0.webp' /></p><p>

நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த
என்னை சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாகக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.</p><p>அரசியல்
உள்நோக்கத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்
மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, சில
தமிழ் ஊடகங்கள் தமக்கு வேண்டியவாறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
சஹ்ரானுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதால், இவ்வாறான பொய்யான
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் சட்ட நடவடிக்கை
எடுப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354282fb-7ae5-45e0-b1af-2166d15eb39f/26-6aae5d81480c4.webp' /></p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள்
நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.</p><p> பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்" என அவர் மேலும்
குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T10:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-arrested-in-jaffna-with-sea-turtles-1789799452"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-arrested-in-jaffna-with-sea-turtles-1789799452</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு
கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு
கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்தனர்.</p><p></p><h2>பறிமுதல்</h2><p>
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு
ஆமைகளையும், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகினையும் பறிமுதல்
செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e315e3-5615-43ca-9ec6-c9e4951e7c57/26-6aae5216d6642.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள்
இரண்டையும் இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள காவல்துறையினர் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான்
நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T09:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் கோர விபத்து : இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/road-accident-in-nanu-oya-young-woman-died-1789801457"></link>
            <id>https://ibctamil.com/article/road-accident-in-nanu-oya-young-woman-died-1789801457</id>
            <summary type="text">நுவரெலியா - நானுஓயாவில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (19) காலை இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - நானுஓயாவில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>தொழில் நிமித்தம் நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது&nbsp; கட்டுநாயக்கவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வான் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> 

இந்த விபத்து தொடர்பில் 42 வயதான வானின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca80a21-ba95-4825-8722-f9e48fb3f7b9/26-6aae4961539f2.webp' /></p><p>

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. </p><p>குறித்த விபத்து தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/request-to-saudi-king-regarding-anojan-punishment-1789798514"></link>
            <id>https://ibctamil.com/article/request-to-saudi-king-regarding-anojan-punishment-1789798514</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அவரின் இல்லத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அனோஜனின் விடுதலை</h2><p>

இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d6da208-af64-4180-803a-081b4b269ae2/26-6aae2aeb2f143.webp' /></p><p> </p><p>அத்துடன் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p> 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ஆரோக்கியமான நடவடிக்கை</h2><p> </p><p>இதேவேளை அனோஜனின் குடும்பத்தினர் அவரின் விடுதலை தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் இருப்பதாகவும் இதன் போது அவர்களிடத்தில் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63427c2-4112-4589-8c75-569be62f6400/26-6aae2aec1a84d.webp' /></p><p> </p><p>

இதேவேளை சக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் ராசமாணிக்கம், மனோ கணேசன் ஆகியோர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழுவாக அனோஜனின் விடயம் தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yHLr4DbsWZc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்தாருடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-youth-faces-death-sentence-in-saudi-1789803038"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-youth-faces-death-sentence-in-saudi-1789803038</id>
            <summary type="text">சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த உரையாடலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இந்த உரையாடலின் போது, தன்னை சாதாரண கைதிகள் தடுத்து வைத்திருக்கும் சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக&nbsp;அனோஜன் கூறியுள்ளார்.</p><p>
எனினும், இந்தத் தண்டனை குறித்த அடுத்தக்கட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அனோஜன் தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொதுமன்னிப்பு&nbsp;</h2><p>

இதனிடையே, அனோஜனின் நலனை உறுதிசெய்ய, இராஜதந்திர ரீதியாக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0f536b-5a5c-4bf6-aa15-104fa9d61339/26-6aae3dd3ae2c9.webp' /></p><p>அதேபோன்று, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>மன்னரிடம் அவசர வேண்டுகோள்</h2><p>சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ef2c3-e28e-4a87-b287-a7b9de13e431/26-6aae3dd30183d.webp' /></p><p>இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T08:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-notice-issued-for-ex-min-basil-rajapaksa-1789802373"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-notice-issued-for-ex-min-basil-rajapaksa-1789802373</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், பசில் ராஜபக்சவை கைது செய்வதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகள்</h2><p>இலங்கையில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தநிலையில், இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்டறிய அரசாங்கம் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956d4a5c-b0d7-4584-af9e-9a88438ecc19/26-6aae41e2a87e5.webp' /></p><p>பசில் ராஜபக்ச தொடர்பான குற்றவியல் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் பெற்றுக்கொள்வதை சாத்தியமாக்கும் வகையில் அவருக்கு எதிராக 'நீல நிற அறிவிப்பு' ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீல நிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு நபர்கள் தேவைப்படும்போது, ​​'நீல நிற அறிவிப்பு' மூலம் இன்டர்போலுக்கு அறிவிக்கிறோம். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பதற்கான முகவரி தெரிந்திருந்தால், அந்த நாட்டிற்கு அவர் தேவைப்படுகிறார் என்பதை 'நீல நிற அறிவிப்பு' உணர்த்துகிறது என்று அமைச்சர் கூறினார்.</p><p> குற்றவியல் மற்றும் இலஞ்சம் தொடர்பான வழக்குகளில் தேடப்படும் நபர்கள், அவர்கள் முன்பு வகித்த அரசியல் பதவிகள் எதுவாக இருந்தாலும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்து - ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-jaffna-kantharmadam-one-injured-1789796848"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-jaffna-kantharmadam-one-injured-1789796848</id>
            <summary type="text">யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த விபத்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இன்று (19) சனிக்கிழமை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>


பலாலி வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், ஓட்டுமட வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>



இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c477d93-9ef7-4fbc-9b83-e21d327523a0/26-6aae26012a318.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T06:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789798567"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789798567</id>
            <summary type="text">கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p>இன்று (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07983583-f246-4c5c-a282-507828aab137/26-6aae2a325cbbc.webp' /></p><p>மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T06:23:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-over-online-scam-via-telegram-1789795433"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-over-online-scam-via-telegram-1789795433</id>
            <summary type="text">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படுவத்தை பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த பெண்&nbsp;நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசடி செய்யப்பட்ட பணம்&nbsp;</h2><p>அத்துடன் இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc0246e-47da-4a0a-995d-aa40d11d892d/26-6aae212bb0fe2.webp' /></p><p>இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:42:28+00:00</updated>
        </entry>
    </feed>
