<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-01T12:22:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் - ஹேமசிறி மரணதண்டனை trailer சரி... கோட்டா மெயின் பிக்சர் எப்போது...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-verdict-death-for-ex-officials-1785586486"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-verdict-death-for-ex-officials-1785586486</id>
            <summary type="text">சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு ட்ரையல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு ட்ரையல்-அட்-பார் (Trial-at-Bar) நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியின் அதிர்வுகள், ராஜபக்ச அல்லக்கை முகங்களின் வாய்களை அசைபோட வைக்கின்றன.
</p><p>
2019 ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்தில் நேற்று இந்தத் தீர்ப்பைப் பெற்ற இருவரும், இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவைத் தமது விதியை நொந்தபடி உண்டிருக்கக்கூடும்.
</p><p>
இனி இந்த இருவருக்கும் ரணில் - சுரேஷ் சாலே பாணியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய சடுதி நோய் பீடிப்புகள் வராதிருக்கக் கடவதாக அதுபோல மேன்முறையீட்டில் இவர்களுக்குப் பிணை கிட்டாது என்ற நம்பிக்கையும் அதிகம் இல்லாதிருக்கக் கடவதாக.
</p><p>
ஆனால், முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் சார்ந்த இந்தத் தீர்ப்புகளுக்குப் பின்னர் வரக்கூடிய அடுத்த கட்டத் தீர்ப்புகள், அதிலும் இந்தத் தாக்குதலைத் தந்திரமாக அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி 2019 அரசதலைவர் தேர்தல் வெற்றிக்கான சதித்திட்டத்தைச் செய்தவர்கள் குறித்த தீர்ப்புகள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என ஊகிக்கப்படும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6RhN3uU2aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விசாரணையை புறந்தள்ளும் இலங்கை அரசாங்கம்: அம்பலமாகும் உண்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmanicase-dnatest-british-tamil-forum-ravikumar-1785584517"></link>
            <id>https://ibctamil.com/article/chemmanicase-dnatest-british-tamil-forum-ravikumar-1785584517</id>
            <summary type="text">செம்மணி மனித புதைக்குழி குறித்த விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இலங்கை அரசாங்கம் தயாராகவில்லை என&amp;nbsp;பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநித...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைக்குழி குறித்த விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இலங்கை அரசாங்கம் தயாராகவில்லை என&nbsp;பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த விடயத்தை <a href="https://ibctamil.com/article/high-court-orders-dismissal-sudumalai-temple-case-1785571270" target="_blank">ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சி</a>யில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தெரிவித்த அவர் “<a href="https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378" target="_blank">அகலப்பட்ட என்புத்தொகுதிகளை</a> தமிழர்களால் தமிழர்களால் அடையாளர் காட்ட முடியும் ஆனால் இங்குள்ள நீதித்துறைக்கு அச்சப்பட்டு யாரும் முன்வருவதில்லை.</p><p>அதனால் சர்வதேச தரப்பில் நிபுணத்துவம் பெற்ற விசாரணைக்கு இந்த விவகாரத்தை கையளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்”.&nbsp;</p><p>மேலும் தழிழர் தரப்பு அரசியல் செம்மணி விவகாரம் மற்றும் நடப்பு அரசியல் குறித்து ரவிக்குமார் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது&nbsp;ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JwBZOTPAxxY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T12:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்குள் அமைதியின்மை : மேலதிக படையினர் விரைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076</id>
            <summary type="text">மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

சிறைக்குள் நிலவும் சூழ்நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.</p><p>

சிறைக்குள் நிலவும் சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பல சிறப்பு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
</p><p>
சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது; அமைதியைப் பேணுவதற்கும், எந்தவொரு பதற்றமும் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படை (STF) நிறுத்தப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2489e9b8-dd1e-4d19-9ddd-8e6836ef8c45/26-6a6de39380103.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T12:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசாவுக்குக் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-government-launch-visa-bond-scheme-1785582841"></link>
            <id>https://ibctamil.com/article/us-government-launch-visa-bond-scheme-1785582841</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்க விசா பெறும்போது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத்தொகையாகச் (Visa Bond) செலுத்த வகை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்க விசா பெறும்போது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத்தொகையாகச் (Visa Bond) செலுத்த வகை செய்யும் விசா பிணைத்தொகைத் திட்டத்தை (Visa Bond Program) அமெரிக்க வெளியுறவுத்துறை நிரந்தரமாக்கியுள்ளது.
</p><p>
இது குறித்து வெளியான கூட்டாட்சிப் பதிவேட்டு (Federal Register) அறிவிப்பின்படி, இந்த விதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.
</p><p>
வியாபாரம் மற்றும் சுற்றுலாவுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும்.</p><p>
</p><p></p><h2>அதிகபட்சப் பிணைத்தொகை</h2><p>விசா வழங்கும் நிபந்தனையாக குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களிடம் 20,000 டொலர் வரை பிணைத்தொகையைக் கோரும் அதிகாரம் விசா தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee39325-a186-463b-a0d0-1e3f38913b1b/26-6a6de15d243e9.webp' /></p><p>

2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தில் (Pilot Program) $5,000, $10,000 மற்றும் $15,000 எனப் பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.</p><p> 

இருப்பினும் புதிய நிரந்தர விதியின்படி, $5,000 தொகைக் கட்டணம் நீக்கப்பட்டு, அதிகபட்சப் பிணைத்தொகை $20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆப்பிரிக்க கண்டம்</h2><p>

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 நாடுகளில் 30 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9736ef8a-fa84-49fd-9427-0bfa9a925f3f/26-6a6de15bc1155.webp' /></p><p>விசா அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை மீறி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதைத் (Visa Overstay) தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

முன்னோடித் திட்டத்தின் மூலம் கிடைத்த தரவுகள், இத்திட்டம் விசா விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யப் பயனுள்ளதாக இருப்பதை உணர்த்துவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பேச்சு சுதந்திரம்&nbsp;</h2><p>

இருப்பினும், இத்திட்டம் சட்டப்பூர்வப் பயணங்களை முடக்கும் எனச் சட்ட மற்றும் குடிவரவு ஆதரவாளர்கள் சாடியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ebf774-c332-49bd-80a7-3a64d2670260/26-6a6de15c73301.webp' /></p><p>ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடிவரவு நடவடிக்கைகள் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதிப்பதுடன் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி இனப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். </p><p>

இருப்பினும், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை என ட்ரம்ப் தரப்பு நியாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கன் விமானத்தில் வந்த பரிசுப்பொதி : சுங்க அதிகாரிகள் வசம் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gift-from-bangkok-comes-with-106-million-surprise-1785584443"></link>
            <id>https://ibctamil.com/article/gift-from-bangkok-comes-with-106-million-surprise-1785584443</id>
            <summary type="text">தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பரிசுப்பொதி என வந்தடைந்த உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பரிசுப்பொதி என வந்தடைந்த உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 கிலோவுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான ஹஷிஸ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.</p><p>

இந்த பொதி,சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL405 மூலம் ஜூலை 24, 2026 அன்று வந்தடைந்ததுடன், ஒரு பரிசுப் பொதி என அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>போதைப்பொருட்கள் அடங்கிய பொலித்தீன் பொட்டலங்கள்</h2><p>சுங்க அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில், ஜூலை 31 அன்று பொதியை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, ​​உலோகக் கொள்கலன்களுக்குள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய பொலித்தீன் பொட்டலங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04ce8a9-0a7f-4e4d-982f-5d54718f7e56/26-6a6ddd082aae5.webp' /></p><p>
</p><p>
இறுதிப் பட்டியலில், கஞ்சா, ஹஷிஷ் மற்றும் ஹஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட 10.608 கிலோ (பொதிகள் உட்பட) கஞ்சா தொடர்பான போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. </p><p>இதன் மதிப்பு ரூ. 106.08 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : ஷானி, ரவி மீதும் சட்டநடவடிக்கை கோருகிறார் உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gammanpila-calls-shani-ravi-over-easter-attacks-1785582027"></link>
            <id>https://ibctamil.com/article/gammanpila-calls-shani-ravi-over-easter-attacks-1785582027</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக புதிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>இன்று (01)ஊடக சந்திப்பில் பேசிய கம்மன்பில,மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜெயசுந்தர&nbsp;</h2><p>&nbsp;உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த பிறகும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டால், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன மீதும் இதேபோன்ற அல்லது இன்னும் வலுவான குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாம் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830524de-3609-44a3-8272-5dbf514dcedd/26-6a6dd4d0455ab.webp' /></p><p>சஹ்ரான் ஹாஷிம் சம்பந்தப்பட்ட விசாரணைகள் குறித்து இரு அதிகாரிகளுக்கும் முன்பே தெரிந்திருந்தது என்றும், தாக்குதல்களுக்கு முன்பே உளவுத்துறை மற்றும் விசாரணைகளைக் கையாள்வதில் பல தோல்விகள் இருந்தன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன</h2><p>அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நடத்தை குறித்த முந்தைய விசாரணை நிறுத்தப்பட்டுவிட்டதாக கம்மன்பில மேலும் குற்றம் சாட்டினார். அத்துடன், அந்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc56246-1b8b-43a8-8a79-cdd9bc6c6ad9/26-6a6dd4d0eb077.webp' /></p><p>&nbsp;மேலும், விசாரணை நடத்தப்படும் வரை, ஷானி அபேசேகரவை அவரது குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் பதவியிலிருந்தும், ரவி செனவிரத்னவை அவரது பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்புபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ction-will-be-taken-buses-are-filled-with-kerosene-1785583189"></link>
            <id>https://ibctamil.com/article/ction-will-be-taken-buses-are-filled-with-kerosene-1785583189</id>
            <summary type="text">இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை காவல்துறை திடீர் சோதனைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை காவல்துறை திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p>


டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும்
பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாடு தழுவிய
அளவில் காவல்துறையினர் இந்த விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.</p><p>

இந்த சோதனை நடவடிக்கையின் போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள்
பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஆய்வகப் பரிசோதனை</h2><p>
</p><p>
மேலும் சந்தேகத்திற்குரிய மேலும் பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள்
சேகரிக்கப்பட்டு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப்
பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d8b0ac-5abd-4b6a-81ca-2aaa38807f7d/26-6a6dd7733802f.webp' /></p><p>


டீசல் லீற்றர்ர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால்
கூடுதல் இலாபத்திற்காகப் பல பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள் டீசலுடன்
மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர்.</p><p> இந்த சட்டவிரோதச் செயலால்
பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று
மாசுபாடும் ஏற்படுவதுடன் இலாப நோக்கம் இருந்தாலும் சுற்று சூழல் மாசடைவதுடன்
வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது.
</p><p>
அத்துடன் கான்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய்
வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன்
இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது
பயன்படுத்தவோ துணை போகக் கூடாது என காவல்துறை போக்குவரத்து பிரிவு
அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்திப் பணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-palali-airport-development-min-chandrasegar-1785580614"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-palali-airport-development-min-chandrasegar-1785580614</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.</p><p>பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (31) விஜயம் செய்த அமைச்சர் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக
துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.</p><p>இந்த விஜயம் குறித்து&nbsp;கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் ஊடக செயலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய
பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும்
நோக்கில் இந்த கட்டுமானப் பணிகளின்&nbsp;முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>அமைச்சர் வலியுறுத்தல்</h2><p>பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும்
திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை
வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்
தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.</p><p>இதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும்,
எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை
கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ec574e-735f-4f24-b7f4-0f414d229b5d/26-6a6dd22c430e3.webp' /></p><p>
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின்
ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p>
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின்
சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும்
பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச
பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து சேவைகள் மீண்டும் முடங்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-station-masters-warn-of-strike-action-1785577026"></link>
            <id>https://ibctamil.com/article/railway-station-masters-warn-of-strike-action-1785577026</id>
            <summary type="text">தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் சமிஞ்சை மற்றும் செயற்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
</p><p>
தொடருந்து திணைக்களத்தின் சமிஞ்சை மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்காவிட்டாலே இந்நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் தீவிர சமிஞ்சை தொழிநுட்பப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் தலைமன்னார் வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை</h2><p>அத்தோடு, மதவாச்சி மற்றும் தலைமன்னார் இடையேயான தொடருந்துகள், சமிஞ்சை பழுதுபார்க்கும் போது தற்காலிக நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படும் பயலட் முறைமையின் கீழ் ஒற்றைப் பாதையில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24257b5-b8e4-4ce2-946b-a1cb4bf5147c/26-6a6dc5ec40d03.webp' /></p><p>அதேவேளை, இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடியவரை ஒருமணிநேரத்தில் பிடித்த விசேட அதிரடிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-stealing-money-from-russian-tourists-1785578768"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-stealing-money-from-russian-tourists-1785578768</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி
நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
</p><p>

வெள்ளிக்கிழமை (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு
மகள்கள் அறுகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில்
தங்கியுள்ளனர்.&nbsp;</p><h2>விசேட அதிரடிப்படைக்கு தகவல்</h2><p>அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில்
குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள்
மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c174f9e-e8e7-4f56-bc53-7725c4b44613/26-6a6dc944c3b92.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர் பணப்பையைத் திருடி தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த
ஒருவர், உடனடியாக அறுகம்பே காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல்
வழங்கியுள்ளார்.</p><p></p><h2>ஒருமணிநேரத்திற்குள் கைது</h2><p>

அதற்கமையச் செயற்பட்ட அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி
தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி
நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36305721-3ac9-4f9e-afae-6b68835125bf/26-6a6dc9441f297.webp' /></p><p>
</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில்
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T10:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்து சாரதிகளுக்கு ஆட்சேர்ப்பு : தகுதியானவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/applications-calling-for-new-metro-bus-drivers-1785577290"></link>
            <id>https://ibctamil.com/article/applications-calling-for-new-metro-bus-drivers-1785577290</id>
            <summary type="text">இலங்கையில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மெட்ரோ பேருந்து நிறுவனமான “லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம்” (Lanka Metro Transit) தனது மெட்ரோ பேருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மெட்ரோ பேருந்து நிறுவனமான “லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம்” (Lanka Metro Transit) தனது மெட்ரோ பேருந்து சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>அதற்கமைய தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒரு இட்சத்திற்கும் அதிகமான சம்பளம்&nbsp;</h2><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் கோவையை careers@lankametro.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0701886886 என்ற WhatsApp இலக்கத்திற்கும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f93688b4-fb92-4d7e-af5e-a2ba84244e29/26-6a6dc4dda9555.webp' /></p><p>
</p><p>தேர்ந்தெடுக்கப்படும் மெட்ரோ பேருந்து சாரதிகளுக்கு மாதாந்தம் 115,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T10:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/why-ranil-exonerated-in-easter-attack-case-1785571426"></link>
            <id>https://ibctamil.com/article/why-ranil-exonerated-in-easter-attack-case-1785571426</id>
            <summary type="text">2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடும் விதிக்கப்பட்டது

ஆனால் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மட்டும் குற்றவியல் நடவடிக்கையில் இருந்து தப்பியது எப்படி ?</p><p>

268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட இந்த தேசிய சோகத்தில் நாட்டின் பிரதமராக இருந்தவர் எப்படி பொறுப்பாக முடியாது ? என்ற பொதுமக்களின் கேள்விக்கு, கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, CID விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியன வழங்கும் விடைகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h5><b><u>1. 2018 அரசியலமைப்பு நெருக்கடி உருவாக்கிய அதிகார வெற்றிடம்</u></b></h5><p>2018 ஒக்டோபர் 26 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். 

52 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்தின் பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவால் டிசம்பர் 16 அன்று ரணில் மீண்டும் பிரதமரானார்.
</p><p>
அரசியலமைப்பு நெருக்கடிக்கு பின்னர் ஜனாதிபதி-பிரதமர் உறவு முற்றாக முறிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a259c20-5540-4373-90c8-a0af9aa612df/26-6a6dac2845176.webp' /></p><p> 

இதன் நேரடி விளைவாக, 2018 ஒக்டோபர் 26 முதல் 2019 ஏப்ரல் 21 தாக்குதல் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்பு சபையின் ஒரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை.
</p><p>
தேசிய பாதுகாப்பு சபைதான் புலனாய்வுத் தகவல்களை ஆராய்ந்து தேசிய பாதுகாப்பு முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பு. 

அதில் இருந்து பிரதமர் முற்றாக விலக்கப்பட்டதால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய 3 எச்சரிக்கைகளும் அவருக்கு சென்றடையவில்லை. </p><p>

இதில் தான் தகவல் வழங்கப்படாத ஒருவர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? என்ற சட்ட வாதம் ரணில் தரப்புக்கு பலமாக அமைந்தது.&nbsp;</p><p></p><h5><b><u>2. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தமை</u></b></h5><p>இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறைமைப்படி, பாதுகாப்பு அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆகியன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழேயே இயங்கின. </p><p>

2015-2019 காலகட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfe0203d-16c4-42ac-81a2-33ae7a4b4dd5/26-6a6dac275c7c8.webp' /></p><p>காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு சேவைகள் அனைத்தும் இவரின் கீழும் அவசரகால உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவரின் கீழே இருந்தது

இதில் பிரதமராக இருந்த ரணிலிடம் பொருளாதாரம், கொள்கை வகுப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஒருபோதும் பாதுகாப்பு விவகாரங்களில் நேரடி நிர்வாக அதிகாரம் வழங்கப்படவில்லை.
</p><p>
இது குறித்த விசாரணையில் உயர் நீதிமன்ற தீர்ப்பில் ( SC FR 163/2019) 7 நீதிபதிகள் கொண்ட ஆயம், பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கே புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் இறுதி பொறுப்பு உள்ளது என தெளிவாக குறிப்பிட்டது. </p><p>

இதனால் கடமை தவறுதல் என்ற குற்றவியல் பிரிவு ரணில் மீது பாயவில்லை.&nbsp;</p><p></p><h5><b><u>3. CID அறிக்கையும் தகவல் பரிமாற்ற துண்டிப்பும்</u></b></h5><p>அப்போதைய அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன CID இடம் வழங்கிய வாக்குமூலத்தில், “(2020 ஜூன்), ஏப்ரல் 9, 11 மற்றும் 20 ஆகிய தினங்களில் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய எச்சரிக்கைகளை ஜனாதிபதிக்கான தினசரி புலனாய்வு அறிக்கையில் சேர்த்தேன். </p><p>

அது ஜனாதிபதி செயலகத்துக்கு மட்டுமே அனுப்பப்படும். 

பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும் நடைமுறை அப்போது இருக்கவில்லை” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fcc3e5a-2538-43d7-be90-c690a8f58593/26-6a6dac28ed62f.webp' /></p><p>அத்தோடு "ஏப்ரல் 20 அன்று தகவல் கிடைத்ததும் நான் ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டுமே வட்ஸ்அப் அனுப்பினேன். </p><p>பிரதமருக்கு அனுப்பவில்லை. காரணம் பாதுகாப்பு விவகாரங்கள் ஜனாதிபதியின் நேரடி பொறுப்பு. 

தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பிரதமர் அழைக்கப்படாததால் அவருக்கு தகவல் தெரிவிக்கும் வழமை இருக்கவில்லை” என ஹேமசிறியும் அப்போது உயர் நீதிமன்றில் வாக்குமூலம் அளித்தார்.</p><p>

இதன்படி தகவல் பரிமாற்ற சங்கிலியில் பிரதமர் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் குற்றவியல் பொறுப்பில் இருந்து ரணில் மீண்டும் தப்பினார்.</p><p></p><p>
</p><h4><b><u>4. உயர் நீதிமன்றத்தின் தெளிவான பிரித்தாளும் தீர்ப்பு
(2023 ஜனவரி 12 - SC FR 163/2019)</u></b></h4><p>இந்த வரலாற்று தீர்ப்பில்தான் உயர் நீதிமன்றம் யார் யார் பொறுப்பு என்பதை தெளிவாக பிரித்தது.</p><p>1. மைத்திரிபால சிறிசேன: ரூ.100 மில்லியன் நட்டஈடு. </p><ul><li>காரணம் - பாதுகாப்பு அமைச்சர், தகவல் கிடைத்தும் நடவடிக்கை இல்லை.</li></ul><p>
</p><p>2. பூஜித் ஜயசுந்தர: ரூ.75 மில்லியன் நட்டஈடு.</p><ul><li>காரணம் - காவல்துறைமா அதிபராக எச்சரிக்கையை செயல்படுத்தவில்லை.</li></ul><p>&nbsp;3. ஹேமசிறி பெர்னாண்டோ: ரூ.50 மில்லியன்.</p><ul><li>காரணம் - பாதுகாப்பு செயலாளராக தடுப்பு நடவடிக்கை தவறியமை.</li></ul><p>&nbsp;4. நிலந்த ஜயவர்தன: ரூ.75 மில்லியன்.</p><p> 
</p><ul><li>காரணம் - புலனாய்வு பணிப்பாளராக தகவலை முறையாக கையாளவில்லை.</li></ul><p>இந்த தீர்ப்பின் முடிவில்தான் ரணில் விடுவிக்கப்பட்டவர்.</p><p></p><h2>புலனாய்வுத் தகவல்கள்</h2><p>
</p><p>ரணில் விக்ரமசிங்க, "பிரதமருக்கு புலனாய்வுத் தகவல்கள் முறையாக வழங்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு சபையில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். எனவே அவரால் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருக்கவில்லை" என நீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கில் இருந்து விடுவித்தது.</p><p>எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க குற்றவியல் பொறுப்பில் இருந்து தப்பியதற்கு சட்ட ரீதியான 4 காரணங்கள் இருந்தாலும் அரசியல் ரீதியான கேள்விகள் இன்னும் எழுப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0378f264-3175-4c6e-9bf6-729a7bdc147c/26-6a6dac29a209c.webp' /></p><p>
</p><p>நாட்டின் பிரதமராக இருந்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டறியவில்லை.தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படாவிட்டாலும் நாடாளுமன்றல் அல்லது அமைச்சரவையில் இதை பிரச்சினையாக எழுப்பியிருக்கவில்லை. ஜனாதிபதியுடன் முரண்பாடு இருந்தாலும் 268 உயிர்கள் தொடர்பான விவகாரத்தில் அரசியல் பாராமல் செயல்பட்டிருக்கவில்லை.</p><p>இவற்றையே அப்போதைய எதிர்க்கட்சிகள் கேள்விகளாக எழுப்பின.</p><p>சட்டப்படி குற்றமில்லை என்பதற்கும், அரசியல் ரீதியாக பொறுப்பு இல்லை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது அவர்களின் வாதம்.&nbsp;</p><p>2019 உயிர்த்த தாக்குதல் வழக்கில், அதிகாரம் இருந்தவர்களுக்கு தகவல் இருந்தது, தகவல் தேவைப்பட்டவருக்கு அதிகாரம் இருக்கவில்லை என்ற அவல நிலையே 268 உயிர்களை காவு கொண்டது என்பதை இந்த விசாரணை ஆவணங்கள் தெளிவாக காட்டுகின்றன.&nbsp;&nbsp;</p><p>இதில் ரணில் விக்ரமசிங்க சட்டத்தின் முன் தப்பியிருந்தாலும் வரலாற்றின் கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்ல வேண்டியுள்ளது.&nbsp;</p><p>
</p><p> 
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:43:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித - ஹேமசிறி மரண தண்டனை தீர்ப்பு : நீதியின் வெற்றியா... அல்லது தற்காலிக அரசியல் வடிகாலா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujith-jayasundara-and-hemasiri-sentenced-to-death-1785571012"></link>
            <id>https://ibctamil.com/article/pujith-jayasundara-and-hemasiri-sentenced-to-death-1785571012</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும், அதனால் உண்டான வடுவும் ஆறாத்துயரமும் இலங்கை மக்களின் நெஞ்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும், அதனால் உண்டான வடுவும் ஆறாத்துயரமும் இலங்கை மக்களின் நெஞ்சை விட்டு அகலவில்லை.</p><p>சுமார் 270க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரவலத்தின் தொடர்ச்சியாக, அண்மையில் கொழும்பு மூவரடங்கிய நிரந்தர மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கை அரசியலிலும் நீதித்துறை பரப்பிலும் இப்போது மீண்டும் ஒரு விவாதப் புயலைக் கிளப்பியிருக்கிறது.</p><p>சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c19ccc2-fbf6-410c-8bb7-699dc4c4d605/26-6a6dba3cf35f8.webp' /></p><p> அதாவது வெளிநாட்டு உளவுத்துறை மூலம் துல்லியமான எச்சரிக்கை கிடைத்தும், அதைக் கண்டுகொள்ளாமல் கடமை தவறினார்கள் என்பதே இவர்கள் மீதான பிரதானமான குற்றச்சாட்டு ஆகும். </p><p>

ஒரு நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக மேலோட்டமாகத் தோன்றலாம். </p><p>ஆனால், உண்மையில் சிறிலங்காவின் சட்டக் கட்டமைப்பு, வரலாற்று அனுபவங்கள் மற்றும் அதிகார மையங்களின் நகர்வுகளை உற்றுநோக்கும் எவருக்கும் ஒரு கேள்வி எழாமல் இல்லை.</p><p>அதாவது "இந்த மரண தண்டனை உண்மையில் நிறைவேற்றப்படுமா? அல்லது ஏதோ ஒரு சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புப் படிவத்தில் கையெழுத்தாகி இவர்கள் அமைதியாக வெளியேறுவார்களா?"</p><p></p><p>
</p><h2>
சட்டப் புத்தகத்தில் மரண தண்ட<span style="color: inherit; font-size: 1.75rem;">னை ஆனால் நடைமுறையில் ஆயுள் தண்டனை</span></h2><p>சிறிலங்காவின் குற்றவியல் சட்டப் புத்தகத்தில் மரண தண்டனை இன்றும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் எந்தவொரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09112b62-eb94-4334-b558-c8c16faed60a/26-6a6dba3de23d7.webp' /></p><p> </p><p>சட்டத்தால் அறிவிக்கப்படும் மரண தண்டனைகள் அனைத்துமே நடைமுறையில் ஆயுள் தண்டனையாகவே மாற்றப்படுகின்றன.
அப்படியிருக்க, பூஜிதவிற்கும் ஹேமசிறிக்கும் வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைத் தீர்ப்பு என்பது, பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் மற்றும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தணிப்பதற்காக வீசப்பட்ட ஒரு சட்டரீதியான "தற்காலிக வடிகால்" என்றே கருத வேண்டி இருக்கிறது.</p><h2>
அரசியலமைப்பு பிரிவு 34 - திறந்தே இருக்கும் பின்னடைவுக் கதவுகள் </h2><p>சிறிலங்கா அரசியலமைப்பின் 34ஆம் சரத்து, நாட்டின் ஜனாதிபதிக்கு அபரிமிதமான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு கைதியின் தண்டனையைக் குறைப்பதற்கோ, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது முற்றிலும் இரத்து செய்து "ஜனாதிபதி பொதுமன்னிப்பு" வழங்கி விடுவிப்பதற்கோ ஜனாதிபதிக்கு முழு உரிமை உண்டு.</p><p>

அப்படியாக இலங்கை வரலாற்றில் சுதந்திர தினம் மற்றும் புனித வெசாக் பண்டிகைகளின் போது கைதிகள் விடுவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337a6288-d796-4b86-a659-ba804722d857/26-6a6dbbb3e972d.webp' /></p><p> இங்கும் அரசியல் சூறாவளிகள் தணிந்து, மக்களின் நினைவலைகளில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கொந்தளிப்புகள் மெல்ல மெல்ல மறையும் போது, மேல்முறையீட்டு வழக்குகளின் போக்கிலோ அல்லது பின்னணியில் நடக்கும் அரசியல் காய்நகர்த்தல்களிலோ இவர்களுக்கான மன்னிப்பு வாசல்கள் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. </p><p>உண்மையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் காலத்தைக் கழிப்பதும், பின்னர் அமைதியாக விடுதலையாவதும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்குப் புதிய விடயமல்ல.</p><p></p><h2>

சமாந்தரமற்ற நீதிமுறைமை தமிழ் மக்களுக்கான தராசு வேறுதானா?
</h2><p>
அதிலும் நேற்றைய இந்தத் தீர்ப்பை அணுகும் போது, இலங்கையின் நீதித்துறையில் நீண்டகாலமாகக் காணப்படும் "சமாந்தரமற்ற நீதிமுறைமை" குறித்துப் பேசாமல் கடந்து செல்ல முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d70409-f3ac-4389-b166-fb1d4bf86832/26-6a6dbbb4a6847.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இனமும் அதிகார பலமுமே இங்கு நீதியின் வேகத்தைத் தீர்மானிக்கின்றனவா என்ற ஐயம் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் வலுத்து வருகிறது.</p><p>
</p><h2>
செம்மணி முதல் ஏனைய மனிதப் புதைகுழிகள் வரை </h2><p>
1990களில் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் போர்க்கால மனித உரிமை மீறல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான தண்டனைகளும் வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4ad6c2-1f90-4695-a8d4-ea438814e783/26-6a6dbbb5635df.webp' /></p><p> </p><p>மாறாக, அவர்களில் பலர் பதவி உயர்வுகளையும், தூதரகப் பொறுப்புகளையும், அரசு கௌரவங்களையுமே பரிசாகப் பெற்றனர்.</p><h2>

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சாலே விவகாரம்</h2><p> 
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்ட கையோடு இராஜாங்க அமைச்சராக ஆக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32de08f-4bd8-4da7-b722-23643b6dca7c/26-6a6dbbb615723.webp' /></p><p> அதேபோல ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சர்வதேச ஊடகங்களால் (Channel 4 உட்பட) கைநீட்டப்பட்ட முன்னாள் புலனாய்வுத் துறை பிரதானி சுரேஷ் சாலே மீதான விசாரணைகள் எந்த மட்டத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்பது நாட்டிற்கே வெளிச்சம்.</p><p>
ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களாக இருக்கும் போது தசாப்த கணக்கில் இழுத்தடிக்கப்படும் விசாரணைகளும், மூடிமறைக்கப்படும் குற்றங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையான சமூகம் சார்ந்த மக்களாக இருக்கும் போது விரைந்து அளிக்கப்படும் தீர்ப்புகளும் இலங்கையின் "இரட்டை நீதித் தராசை" தோலுரித்துக் காட்டுகின்றன.</p><h2>

'சூத்திரதாரி' யார்?
</h2><p>உணமையில் பூஜித ஜெயசுந்தரவையும் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தண்டனைக்கூண்டில் ஏற்றுவதுடன் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு முடிந்துவிடப்போவதில்லை. அவர்கள் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய "கடைநிலை பலியாடுகள்" மட்டுமேயாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160ca50d-9c2e-4059-a387-12d05e8380bf/26-6a6dbbb6c4efc.webp' /></p><p>
</p><p>ஆனால், இந்தக் கொடூரத் தாக்குதலைப் பின்னணியில் இருந்து திட்டமிட்டது யார்? இதன் மூலம் அரசியல் இலாபம் அடைந்த "மகா மூளை" யார்? என்ற கேள்விகள் இன்னமும் பலரிடம் இருக்கத்தான் செய்கின்றன.</p><p> சுருக்கமாகச் கூறினால், தற்போதைய மரண தண்டனைத் தீர்ப்பு என்பது அமைதியின்றித் தவிக்கும் மக்களுக்குக் காட்டப்பட்ட ஒரு தற்காலிகச் சமாதானக் கொடிமட்டுமே.</p><p> நாளையே ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது அரசியல் சமரசங்களோ ஏற்படும் போது, "சுதந்திர தினப் பரிசாக" இவர்களது தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை சாத்தியமானால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T09:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட எண்ணெய்ப் தாங்கி கப்பல்...! அமெரிக்க முற்றுகையால் உச்சக்கட்ட பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tanker-hit-by-projectile-off-oman-1785574868"></link>
            <id>https://ibctamil.com/article/tanker-hit-by-projectile-off-oman-1785574868</id>
            <summary type="text">ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரித்தானியக் கடற்படையின் கடல்சார் வர்த்தகச் தொழிற்பாடுகள் பிரிவு (UKMTO) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஓமானின் லிமா பகுதிக்கு வடகிழக்கே சுமார் 12 மைல் (20 கிலோமீற்றர்) தொலைவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>கடுமையாகச் சேதம்</h2><p>தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை (Engine Room) கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
</p><p>
தாக்குதலையடுத்துக் கப்பலைத் தன் கட்டுப்பாட்டில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cac8af2-5bea-4a20-b66d-1fc4d71643f3/26-6a6dba5ecd529.webp' /></p><p>அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் பணியாளர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விவரங்களை UKMTO அமைப்போ அல்லது அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>இதனிடையே, சனிக்கிழமையன்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் மற்றொரு எண்ணெய்ப் தாங்கி கப்பலின் மாலுமி, கப்பலுக்கு அருகே கடலில் பெரிய வெடிப்புச் சத்தத்துடன் நீர் எழும்பியதைக் கண்டுள்ளதாக UKMTO பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

எனினும், இச்சம்பவத்தில் கப்பலுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4a0aae-7677-4aa6-98cb-17cd80e9fa84/26-6a6dba5f7cb7e.webp' /></p><p> 

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்தோடு அமெரிக்கா, ஈரானியத் துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்திற்கு முற்றுமுழுதாகத் தடை மற்றும் முற்றுகை விதித்துள்ளதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முற்றாக முடக்கும் நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் சபையின் செயலாளர் முகமது பாகர் சோல்காத்ர் எச்சரித்திருந்தார்.</p><p>

இந்தநிலையில் உலகின் மிக முக்கிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியே சாதாரண நாட்களில் நாளொன்றுக்குச் சுமார் 130 கப்பல்கள் வரை பயணித்து வந்தன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்ததில் வீட்டு உபகரணங்கள் சிதைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lightning-struck-the-house-setting-it-on-fire-1785569214"></link>
            <id>https://ibctamil.com/article/lightning-struck-the-house-setting-it-on-fire-1785569214</id>
            <summary type="text">அம்பாறை இகினியகல&amp;nbsp; காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்&amp;nbsp;கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை இகினியகல&nbsp; காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்&nbsp;கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.</p><p>இந்த விபத்து நேற்று&nbsp; (31.07.2026) நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p>சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மின்னல் தாக்கத்தால் எரிந்த வீடு</h2><p>குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகள் மழை தொடங்கியதும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f750dfe1-e11a-4b85-ad25-5e2515619262/26-6a6daff92d8b7.webp' /></p><p>
மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே தீ வேகமாகப் பரவியுள்ளது.</p><p>இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்</p><p>ஆனாலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது.&nbsp;</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக இகினியகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/high-court-orders-dismissal-sudumalai-temple-case-1785571270"></link>
            <id>https://ibctamil.com/article/high-court-orders-dismissal-sudumalai-temple-case-1785571270</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் கோவிலில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் கோவிலில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (31.07.2026) இடம்பெற்றது.</p><p>மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாதென இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் கோரியிருந்தனர். </p><p>இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார். நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><h2>சுதுமலை அம்மன் கோவில் வழக்கு</h2><p>விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0eb0ee8-2fa9-4ec9-a3d2-dc977df9a02f/26-6a6daac2a05c0.webp' /></p><p>எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும்கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான நியாயாதிக்கம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.</p><p> மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இவ்வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இவ்விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார்.&nbsp;</p><p>எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு;, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p>மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது விவகாரம்...! எதிர்ப்புகளுக்குப் பின்னால் அரசியல் சதி - ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-on-protests-over-judge-retirement-age-1785565049"></link>
            <id>https://ibctamil.com/article/probe-on-protests-over-judge-retirement-age-1785565049</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து அரசாங்கத்தின் உளவுத்துறையினர் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த எதிர்ப்புகளுக்கு ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து அழுத்தங்களோ அல்லது தூண்டுதல்களோ வழங்கப்படுகிறதா என்பது குறித்துக் கண்டறிந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த விசாரணையின் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதனடிப்படையில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் நபர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து உளவுத்துறையின் பல குழுக்கள் தற்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>சட்டத்தரணிகள் சமூகம்</h2><p>


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் தீர்மானத்தைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் சமூகம் மற்றும் நீதித்துறை அமைப்பினுள் ஒருவித பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e82837-4ac3-4838-aa91-3eea349a7e10/26-6a6da6370f013.webp' /></p><p>இது தொடர்பாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசாங்கத்தின் நடவடிக்கை</h2><p>அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14cec49-26a8-45cc-a0e4-da0709cac520/26-6a6da637b4e82.webp' /></p><p>இதனிடையே, நீதித்துறையில் உருவாகியுள்ள இந்த நெருக்கடி நிலைமை குறித்து எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் பலமாகக் குரலெழுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்த எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வரை சந்திக்கத் திட்டமிடும் இலங்கை எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rauff-hakeem-plan-to-meet-the-tn-chief-minister-1785569544"></link>
            <id>https://ibctamil.com/article/rauff-hakeem-plan-to-meet-the-tn-chief-minister-1785569544</id>
            <summary type="text">தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.</p><p>திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கயில், திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாகச் சந்தித்து, தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள்</h2><p>அத்துடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், இலங்கைக்கு விரைவில் வரவுள்ள இந்திய வெளியுறவு செயலாளரையும் சந்தித்து 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab894b69-dee0-447f-9315-4a0aaaee1d58/26-6a6da449bf2ef.webp' /></p><p>


தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை இரு நாடுகளின் கடற்றொழிலாளர் சமூகங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். </p><p>அத்துடன் இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். </p><p>



மேலும், யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கையையும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-gce-al-exam-and-grade-5-scholarship-exam-doe-1785568138"></link>
            <id>https://ibctamil.com/article/2026-gce-al-exam-and-grade-5-scholarship-exam-doe-1785568138</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும்&amp;nbsp;ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை குறித்து&amp;nbsp;இலங்கை பரீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும்&nbsp;ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை குறித்து&nbsp;இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.&nbsp;</p><p>அதன்படி, தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறும் எனவும்,&nbsp;க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாடசாலை விண்ணப்பதாரர்கள்</h2><p>அத்துடன் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8aef521-f96d-45b6-ad1e-a27fd2e72243/26-6a6d9e6fb5e90.webp' /></p><p>

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலயக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>அனுமதி அட்டைகளில் திருத்தங்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>இதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c09a013-01d7-4936-b34b-88ce7bec48e8/26-6a6d9e6f07230.webp' /></p><p>

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/57-people-die-tens-of-thousands-cross-to-spanish-1785561088"></link>
            <id>https://ibctamil.com/article/57-people-die-tens-of-thousands-cross-to-spanish-1785561088</id>
            <summary type="text">மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்பெயினுக்குள் நுழைய மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போதே இவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சம்பவத்தை அடுத்து, தனது வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவின் ஜனாதிபதி, அங்கு இராணுவத்தையும் காவல்துறையையும் ஸ்பெயின் நிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மனிதக் கடத்தல் கும்பல்கள்</h2><p>மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0aac92-d4cc-4527-8e2f-0bfd6a54f55a/26-6a6d9b0d516d2.webp' /></p><p>செயுட்டா அல்லது மெலில்லாவை அடைய முயலும் போது கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று இந்த மாத தொடக்கத்தில், ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>மனிதக் கடத்தல் வலையமைப்புகள் அந்தத் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, " ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் குறிப்பாக இளைஞர்களின் வருகையை ஊக்குவிப்பதாக நம்புவதாக" ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும்.

முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தீவிர கண்காணிப்பு</span></p><p>இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e5cbe2-2287-4638-b14e-6970a9c6d6c9/26-6a6d9b0c9c3b5.webp' /></p><p>நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், காவல்துறையினரைம் அதிக அளவில் குவித்திருந்தது.</p><p>
</p><p>மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/17-shipping-containers-adrift-in-sea-after-falling-1785564578"></link>
            <id>https://ibctamil.com/article/17-shipping-containers-adrift-in-sea-after-falling-1785564578</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>தற்போதைய கடல் நீரோட்டத்தின் அடிப்படையில், இந்த கொள்கலன்கள் பேருவலை, நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரை உள்ள கடலோரப் பகுதிகளை நோக்கி கரையொதுங்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கடலில் மிதக்கும் 17 சரக்குக் கொள்கலன்கள்</h2><p>இதனால், அந்தக் கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0014ab-7a0b-4260-b31a-fc83589e5863/26-6a6d98eace4dd.webp' /></p><p>மிதக்கும் கொள்கலன்களில் ஏதேனும் ஒன்றைக் காணும் மீனவர்கள் மற்றும் மாலுமிகள், உடனடியாக மீன்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்கள் துறையின் வானொலித் தொடர்பு மையத்திற்குத் தெரிவிக்குமாறு அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், கடலில் மிதந்து வரும் இந்தக் கொள்கலன்கள் எங்காவது தென்பட்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்தொழிலாளர் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களும் கடற்தொழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகுகள் விபத்து : மீட்பு நடவடிக்கையில் விமானப்படையின் ஹெலிகொப்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fishing-vessel-in-distress-off-negombo-1785565033"></link>
            <id>https://ibctamil.com/article/fishing-vessel-in-distress-off-negombo-1785565033</id>
            <summary type="text">நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. </p><p>

மேலும், விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான 'பெல் 412' (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.</p><p> 

நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற டிங்கி படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலமே முதன்முதலில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>ஒருவரின் சடலம் மீட்பு&nbsp;</h2><p> 

இருப்பினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடிக்கச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5921307-3b24-466b-a27d-17305b643445/26-6a6d95f74f1cb.webp' /></p><p> </p><p>

தற்போது வரை, விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில், அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இதற்கமைய, காணாமல் போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காகக் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விசேட மூழ்கிச் செல்லும் அணியினருடன் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், வான் மற்றும் கடற்படைப் பிரிவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mE-f7vAG1S0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T06:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்கள்: பின்கதவால் தப்பி ஓடிய NPP அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-journalists-protest-demanding-justice-1785565445"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-journalists-protest-demanding-justice-1785565445</id>
            <summary type="text">படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக
கோடிட்டு காட்டியுள்ளதாக, யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.
</p><p>
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மாவட்ட செயலகம் முன்பாக
ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது , ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம்.</p><p></p><p>
</p><h2>ஊடகவியலாளர்கள் படுகொலை&nbsp;</h2><p>
எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை
முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ee02c2-0ef6-46cd-9996-6d33c14a85d3/26-6a6d953000e2d.webp' /></p><p>இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39
ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள்
அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம்கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்தோம்.</p><p>

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும்
எங்களோடு பேசுறதுக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். எங்களுடைய பேச்சை கேட்டார்கள்.
</p><p>எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான,
விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.</p><p></p><p> </p><h2>அப்புறப்படுத்த சொன்ன மாவட்ட செயலர்&nbsp;</h2><p>இந்த
அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது
காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில்
முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட
செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a9b692-8e78-4b4c-a1a8-fc786dcffa90/26-6a6d93d21bd9f.webp' /></p><p>
இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த
அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. </p><p>தமது பதவிகளை
தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில்
வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து
வலிகளோடுதான் இருக்கிறோம். </p><p>ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர்
படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி
கூறினார்கள்

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது.
அதன் வெளிப்பாடே இன்று எங்கள் கோரிக்கைகளை, எங்கள் நியாயங்களை கேட்க கூட பிரதி
அமைச்சர் தயாராகவில்லை.</p><h2>அரசாங்கம் தயாராகவில்லை</h2><p>

அநுர அரசாங்கத்தின் ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு
நியாயம் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e9abdac-00c7-405c-97cc-10ef6941b00d/26-6a6d93d2e860e.webp' /></p><p>இந்த அரசு வாய்மொழி மூலம் சொல்ற
அனைத்தும் பொய்களாகவே இருக்கின்றது என்பது புலனாகிறது.

எனவே, யாழ் ஊடக மையம் , யார் வந்தாலும் என்ன செய்தாலும் எமக்கான நீதி
கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும்.</p><p>

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி நாம் மாவட்ட செயலகத்தின் வெளியே
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது, மாவட்ட செயலகம் உள்ளே சில ஊடகவியலாளர்களை
அழைத்து செயலமர்வு நடக்கிறது,

உண்மையிலேயே இந்த செயலமர்வு நடப்பதாக இருந்தால், அங்கே அந்த இடத்தில் முழு
ஊடகவியலாளரும் பங்குபற்றி இருக்க வேண்டும். </p><p>ஆனால் தாம் யாழ்ப்பாணத்தில் ஊடக
செயலமர்வை நடாத்தி விட்டோம் என காட்ட , முனைந்துள்ளார்களே தவிர ,
ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் பிரச்சனைகளை கேட்க இந்த அரசாங்கம்
தயாராகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:42:19+00:00</updated>
        </entry>
    </feed>
