<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-03T18:43:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/office-restructuring-salaries-and-pensions-govt-1785781463"></link>
            <id>https://ibctamil.com/article/office-restructuring-salaries-and-pensions-govt-1785781463</id>
            <summary type="text">அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் நாளை திறக்கப்படவுள்ளது.
</p><p>
இதன்படி, நாளையதினம்(04) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு 07, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p><p>

2026 ஜூன் 22 ஆம் திகதியிடப்பட்ட 2494/ 05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆணைக்குழுவின் முக்கிய நோக்கங்கள்</h2><p>
</p><p>
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரச ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவையில் எவ்வாறான கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e0d9ab-3a9f-4579-9690-9a710bad81fb/26-6a70dff86d5e5.webp' /></p><p>
</p><p>
இந்த நோக்கங்களை அடைவதற்காக தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கோரும் நடவடிக்கையும் செவ்வாய்க்கிழமை (04) உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T18:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து எத்தியோப்பாவில் கடத்தப்பட்ட வடபகுதி இளைஞர்கள் :சூத்திரதாரி வன்னியில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankans-kidnapped-in-ethiopia-fake-canada-job-1785775495"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankans-kidnapped-in-ethiopia-fake-canada-job-1785775495</id>
            <summary type="text">கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து எத்தியோப்பியாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வடக்கு மாகாண இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.</p><p>

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாய் வழியாக எத்தியோப்பியாவுக்குப் பயணம் செய்த மூன்று நபர்களை, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வெளிநாட்டுக் குற்றக் குழு கடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மே 27 அன்று இந்த வழக்கு பதிவானது.</p><h2>சந்தேக நபருக்கு கொடுக்கப்பட்ட பணம்</h2><p>&nbsp;சிஐடியின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சந்தேக நபருக்கு சுமார் ரூ. 64 லட்சம் செலுத்தியமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc8ee901-c40c-4b6f-8901-2489a931ba48/26-6a70dbcfe554e.webp' /></p><p>மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க பணம் தேவை என்று கூறி, சந்தேக நபர் அவர்களின் உறவினர்களிடமிருந்து சுமார் ரூ. 20 மில்லியன் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சந்தேக நபருக்கும் கடத்தலுக்குப் பொறுப்பான வெளிநாட்டுக் குழுவிற்கும் இடையே உள்ள தொடர்புகளையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது</h2><p>&nbsp;சந்தேக நபர் பின்னர் வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a718f7c4-a02a-4dff-b84c-720e8def83b0/26-6a70dbd0bd47b.webp' /></p><p>&nbsp;பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அடிஸ் அபாபா காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்தது. </p><p>எத்தியோப்பிய அதிகாரிகள் ஜூன் 6 அன்று மூன்று இலங்கையர்களை மீட்டதோடு, இச்சம்பவம் தொடர்பாக நான்கு பாகிஸ்தான் நாட்டவர்களையும் ஒரு எத்தியோப்பிய நாட்டவரையும் கைது செய்தனர்.</p><p></p><h2>யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்</h2><p>26 முதல் 34 வயதுக்குட்பட்ட, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட மூவரும் ஓகஸ்ட் 1 அன்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67857351-6e1d-4b37-af4b-bad293dc37db/26-6a70dbd188978.webp' /></p><p>
</p><p>
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புடன் சந்தேக நபருக்கு உள்ள தொடர்புகளின் முழு அளவையும் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பெறுமதிமிக்க தங்க ஆபரணங்கள் திருட்டு! அதிரடியாக கைது செய்யப்பட்ட யுவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-half-pounds-of-stolen-gold-jewelry-recovered-1785779281"></link>
            <id>https://ibctamil.com/article/24-half-pounds-of-stolen-gold-jewelry-recovered-1785779281</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக்
கிராமத்தில் வீடொன்றிலிருந்து தாலிக்கொடி,
கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள்
களவாளப்பட்டுள்ளன.</p><p> இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் சம்பவம் நடத்த நேற்றையதினமே(02)&nbsp; களுவாஞ்சிகுடி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்துள்ளனர்.</p><p></p><h2>யுவதியின் கைது</h2><p>அதனைதொடர்ந்து, உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றையத்தினம் திங்கட்கிழமை(03) களவாடப்பட்ட
பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ccec8-319c-4acd-af10-e6f320c6b09f/26-6a70d757cc6d3.webp' /></p><p>அதன்படி, கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில்
முன்னிலைப் படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>


வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த
யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T18:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409</id>
            <summary type="text">




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளின் போது, ​​முதலில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>மீட்கப்பட்ட உடல்கள்</h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2aac549-ec17-42ea-8de5-a7ac279183ce/26-6a70cf3d7b8f0.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், தற்போதைய மழை நிலைமை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T17:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainy-weather-to-ease-by-tomorrow-afternoon-1785765094"></link>
            <id>https://ibctamil.com/article/rainy-weather-to-ease-by-tomorrow-afternoon-1785765094</id>
            <summary type="text">இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று(03) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அஜித் விஜேமன்ன, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், சபரகமுவ மாகாணத்திலும் இன்று இரவும் நாளை காலையும் மழை தொடரும் என்று கூறினார்.</p><h2>&nbsp;நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும்&nbsp;</h2><p>இருப்பினும், நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uWzoUHpazEk?start=211" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><h2>ஓகஸ்ட் 06 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மழை</h2><p>
இதேவேளை,&nbsp; ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5b4d9e-b662-4d3d-899f-c98fef67a8d4/26-6a70a4de776e8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஓகஸ்ட் 06-ஆம் திகதிக்குப் பிறகு மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா அனர்த்த நிலைமை : காணாமற்போனவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bad-weather-6-people-missing-in-nuwara-eliya-1785772984"></link>
            <id>https://ibctamil.com/article/bad-weather-6-people-missing-in-nuwara-eliya-1785772984</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்த நிலைமைகள் காரணமாக ஆறு பேர் காணாமல் போயுள்ளதுடன், மாவட்டம் முழுவதும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்த நிலைமைகள் காரணமாக ஆறு பேர் காணாமல் போயுள்ளதுடன், மாவட்டம் முழுவதும் 2,331 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>





தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>மண்சரிவால் காணாமற்போன நால்வர்</h2><p>பாதிக்கப்பட்டவர்களில் 1,734 பேர் தற்போது நிறுவப்பட்டுள்ள ஏழு நலன்புரி மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1482f03c-b895-45da-8df5-91e809e2042d/26-6a70c1937ad6a.webp' /></p><p>

காணாமல் போனவர்களில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் அதேவேளை, மற்ற நான்கு பேரும் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே காணாமல் போயுள்ளனர் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். </p><p>மேலும், இந்த காலநிலை அனர்த்தங்கள் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T16:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானிலையில் ஏற்பட்ட மாற்றம்: மாவட்டச் செயலர்களுக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announcement-ministry-of-defense-bad-weather-1785770550"></link>
            <id>https://ibctamil.com/article/announcement-ministry-of-defense-bad-weather-1785770550</id>
            <summary type="text">தற்போது நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
 பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனிநபர்களின் உயிர்களைப் பாதுகாக்க உரிய திட்டங்களைச் செயல்படுத்துமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி</h2><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டு, தேவைப்படும் சமயங்களில் அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி, அவர்களின் உயிர்களைப் பாதுகாக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27af0b78-6f04-4bf1-9514-15a0ea5b40aa/26-6a70b7f467a13.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T15:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலை : மூடப்பட்டன பல வீதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/roads-closed-due-to-adverse-weather-1785768228"></link>
            <id>https://ibctamil.com/article/roads-closed-due-to-adverse-weather-1785768228</id>
            <summary type="text">நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள பல வீதிகள் வாகனப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வீதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள பல வீதிகள் வாகனப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.
</p><p>
பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக, கொழும்பு-கண்டி வீதியின் கடுங்கன்னாவ பிரிவில் இன்று பிற்பகல் முதல் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று RDA பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அனுராதா ஹெட்டியாராச்சி கூறினார்.</p><p>

தற்போது மூடப்பட்டுள்ள வீதிகள்:
</p><p><b>
கொழும்பு-கண்டி வீதியின் கடுகன்னாவ பகுதி (95 கிமீ முதல் 99 கிமீ வரை)</b></p><p><b>
அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதி (66 கிமீ பிரிவு)
</b></p><p><b>நாவலப்பிட்டி - கினிகத்தேன வீதி 4/2 கல்வெட்டுக்கு அருகில்
</b></p><p><b>அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதி (32 கிமீ பிரிவு)
</b></p><p><b>தண்டகல-பாலம்பிட்டிய-டோலஸ்பாகே வீதி (6 கி.மீ பிரிவு)</b></p><p><b>
மாவனல்லை-ஹெம்மாதகம-கம்பொல வீதி (19 கிமீ முதல் 21 கிமீ வரை)
</b></p><p><b>யட்டியாந்தோட்டை-பூனாகலை வீதி மீனகல பிரதேசத்திற்கு அருகில் (21 கிமீ பிரிவு)
</b></p><p><b>தெதுகல - தலம்பிட்டிய - டோலஸ்பாகே வீதி (6 கிமீ பிரிவு)
</b></p><p>
எனவே வானதாரிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T14:44:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து : பயணிகளை மீட்ட இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youths-rescue-passengers-from-flood-hit-sltb-bus-1785763825"></link>
            <id>https://ibctamil.com/article/youths-rescue-passengers-from-flood-hit-sltb-bus-1785763825</id>
            <summary type="text">கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலபிட்டிய பாலந்தோட்ட பகுதியில் பெருகி வரும் வெள்ளநீரால் சூழப்பட்ட அரசபேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலபிட்டிய பாலந்தோட்ட பகுதியில் பெருகி வரும் வெள்ளநீரால் சூழப்பட்ட அரசபேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
</p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், வெள்ளநீர் அப்பகுதியை வேகமாக மூழ்கடித்து, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்ததால் பேருந்து சிக்கிக்கொண்டது காட்டப்பட்டது.</p><h2>பயணிகளை பாதுகாப்பாக மீட்ட இளைஞர்கள் குழு</h2><p>நாவலபிட்டியவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, ஒரு சரக்கு வண்டியைப் பயன்படுத்தி பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றி, மீட்புப் பணிக்கு உதவ முன்வந்தது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F3174067732803326%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>வெள்ளநீர் வாகனத்தைச் சூழ்ந்திருந்தபோது, ​​பேருந்தின் ஜன்னல்கள் வழியாகப் பயணிகள் வெளியேற்றப்படுவதை அந்தக் காணொளிக் காட்சிகள் காட்டின.
</p><p>
மோசமடைந்து வந்த வானிலைக்கு மத்தியில், இளைஞர்களின் விரைவான நடவடிக்கையும் துணிச்சலும் ஒரு பெரும் துயரச் சம்பவத்தைத் தடுக்க உதவியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த தமிழ் தலைமைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-leaders-hold-a-debate-with-the-president-1785764785"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-leaders-hold-a-debate-with-the-president-1785764785</id>
            <summary type="text">தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
</p><p>
இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு காண எதிர்பார்ப்பதாக கூறினார்.</p><p></p><h2>புதிய சமூக ஒப்பந்தம் </h2><p>
</p><p>
புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தரப்பு , அது அவசரமாக கொண்டுவரப்படக் கூடாது என்றும், அனைத்து இன மக்களினதும் ஒப்புதலுடன் உருவாக்கப்படும் மக்கள் ஒப்பந்தமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa40e20-4964-43de-85b5-2086e1c688e8/26-6a709bb792062.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசியலமைப்பு திருத்தப்படுவதோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார். </p><p>அதேவேளை, அவசர திருத்தத்தை விட அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்குவதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T13:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீர்குலைந்துவிட்டது இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு :கவலைப்படுகிறார் பீரிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-system-become-anarchic-said-g-l-peiris-1785760008"></link>
            <id>https://ibctamil.com/article/prison-system-become-anarchic-said-g-l-peiris-1785760008</id>
            <summary type="text">இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு சீர்குலைந்துவிட்டது என்று மக்கள் ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று (3) ஊடக சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு சீர்குலைந்துவிட்டது என்று மக்கள் ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று (3) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
</p><p>
இரண்டு மாதங்களுக்குள் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இரண்டு கடுமையான சம்பவங்கள் பதிவாகியிருந்தபோதிலும், அவற்றுக்குப் பொறுப்பேற்கத் தலைவர் இல்லை என்று ஜி.எல். பீரிஸ் கூறினார்.</p><h2>மிகவும் அபாயகரமான&nbsp; நிலைமை</h2><p>&nbsp; கொழும்பு மால் வீதி அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் மேலும் பேசிய ஜி.எல். பீரிஸ், தெரிவித்தவை வருமாறு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2533ce5a-7bb7-437e-bfb9-94ea3224827d/26-6a7094f3de3d1.webp' /></p><p>
</p><p>
நமது நாட்டின் சிறைச்சாலை அமைப்பு தொடர்பாக மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை எழுந்துள்ளது. சிறைச்சாலை அமைப்புக்கு ஒரு ஆணையாளர் நாயகம் இல்லை.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஒரு வருடமாக வெற்றிடமாக உள்ள பதவி</h2><p>நமது நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் கட்டுப்படுத்தும் இறுதி அதிகாரம் ஆணையாளர் நாயகத்திற்கே உள்ளது. அந்த மிகவும் முக்கியமான பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அது நிரப்பப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48df5d09-719b-40f4-bb2a-dd83ac90bba7/26-6a7094f4918aa.webp' /></p><p> </p><p>அந்தப் பதவி ஒரு வருடம் இரண்டு மாதங்களாகக் காலியாக இருக்கிறது. அதற்கு இன்னும் நிரந்தர நியமனம் செய்யப்படவில்லை. இதன் பொருள், சிறை அமைப்புக்குத் தண்டு இருக்கிறது, ஆனால் தலை இல்லை, என்றார்ஜி.எல். பீரிஸ்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சூழ்ந்த மோசமான வானிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bad-weather-engulfs-sri-lanka-1785745461"></link>
            <id>https://ibctamil.com/article/bad-weather-engulfs-sri-lanka-1785745461</id>
            <summary type="text">06.15 UPDATEநுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

வானிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>06.15 UPDATE</b></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

வானிலை தொடர்பான சம்பவங்களால் ஆறு பேர் காணாமல் போனதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார்.</p><p><b>05.15PM UPDATE</b></p><p>பொல்பிட்டியாவில் ஒரு வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் மூவரைக் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;<b></b></p><p><b>03.09PM UPDATE</b></p><p>நீர்ப்பாசனத் திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.<b></b></p><p><b>03.00PM UPDATE</b></p><p>கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வாயில்களை படிப்படியாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை, தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>வினாடிக்கு சுமார் 250 கனஅடி நீர் கொத்மலை ஓயா ஆற்றில் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;<b></b></p><p><b>02.47PM UPDATE</b></p><p>நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் நாளை (04) மூடல்.<b></b></p><p><b>02.30PM&nbsp;UPDATE</b></p><p>அடுத்த சில மணி நேரங்களில் கலு கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><b>02.10PM UPDATE</b></p><p>நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) மூடப்படும் என நுவரெலியா கல்விப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.<b></b></p><p><b>02.04PM - UPDATE</b></p><p>அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆக்ரா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை .<b></b></p><p><b>01.53PM - UPDATE</b></p><p>மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
</p><p>
 

கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்புகள், மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் உள்ளது என்று அது தெரிவித்தது.<b></b></p><p><b>01.47PM -&nbsp;UPDATE</b></p><p>மத்திய மலையகப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><b>01.47PM - UPDATE</b></p><p>நிலச்சரிவு காரணமாக கண்டி – கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p><b>01.47PM - UPDATE</b></p><p>
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p><b>12.47PM - UPDATE</b></p><p>சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. </p><p>மேலும்,&nbsp; மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்3 வான் கதவுகள் இன்று (03) அதிகாலை தானாகத் திறக்கப்பட்டுள்ளன.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T13:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மீது சரிந்து விழுந்த மண் மேடு! ஒருவர் பலி மூவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-mound-of-earth-collapsed-on-the-house-1785761468"></link>
            <id>https://ibctamil.com/article/a-mound-of-earth-collapsed-on-the-house-1785761468</id>
            <summary type="text">ஹட்டன் - கினிகத்தேன பகுதிக்கு இடைப்பட்ட பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் மூவரைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கினிகத்தேன பகுதிக்கு இடைப்பட்ட பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் மூவரைக் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>
 
இதன்படி காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் அவசரகாலக் குழுக்கள் தற்போது சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>
 மலையகத்தின் பல இடங்களில் நிலவி வரும் மோசமான வானிலைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/068e8faa-ff93-4c4e-92bd-a7d244d4ef99/26-6a708ebf06e6d.webp' /></p><p>
</p><p>
 பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமையைக் கண்காணித்து வரும் அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T13:02:09+00:00</updated>
        </entry>
    </feed>
