<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-07T20:28:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;சந்திரனும் அமெரிக்காவிற்குச் சொந்தமானது&quot; ட்ரம்பின் அடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-moon-belongs-to-america-trump-says-1788808579"></link>
            <id>https://ibctamil.com/article/the-moon-belongs-to-america-trump-says-1788808579</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தனது &#039;ட்ரூத்&#039; சமூக வலைதளக் கணக்கில், சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு புகைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சந்திரனின் புகைப்படத்தை, "சந்திரன் நமக்குச் சொந்தமானது" என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>அதன் ஓரத்தில் ஒரு அமெரிக்கக் கொடியும் இருந்தது.</p><h2>&nbsp;சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், ட்ரம்பின் இந்தப் புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்ததுடன், அது விமர்சிக்கவும் பட்டது.

ஒரு சமூக வலைதளப் பயனர், ட்ரம்ப் சந்திரனோடு நின்றுவிடாமல், செவ்வாய் மற்றும் சூரியனுக்கும் செல்ல வேண்டும் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41dd0166-2db7-45c8-a52e-e075f83af397/26-6a9f1d158362c.webp' /></p><p> சமீபத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், ஹோர்மஸ் நீரிணையும் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறியிருந்தார். மேலும், நியூ மெக்ஸிகோவிற்கு 'நியூ அமெரிக்கா' என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T20:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள் : பின்னணியில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-assailants-who-killed-a-foreigner-1788805410"></link>
            <id>https://ibctamil.com/article/the-assailants-who-killed-a-foreigner-1788805410</id>
            <summary type="text">கொழும்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா (46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

</p><h2>அதிகாலைவேளை இடம்பெற்ற சம்பவம்</h2><p>இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8979a10d-dd95-400c-80e8-4fcf7c3b6cae/26-6a9f0c22b953a.webp' /></p><p> 

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.</p><p></p><p> 

</p><h2>காவல்துறை&nbsp; மேலதிக விசாரணை</h2><p>படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cc90303-e9b2-40f1-a65e-7a0f08b4c1fd/26-6a9f0c236dbea.webp' /></p><p> </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என காவல்துறையினர்சந்தேகிக்கின்றனர். 

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழும் 102 வயது பாட்டியின் நிறைவேறிய ஆசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-102-year-old-woman-walks-new-l-bridge-1788803476"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-102-year-old-woman-walks-new-l-bridge-1788803476</id>
            <summary type="text">கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
</p><p>
</p><p>


கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் நகரின் சாண்ட்விச் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரீட்டா ஜார்ஜெஃப். இவர் கடந்த ஓகஸ்ட் 28-ஆம் திகதியன்று தனது 102-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.</p><h2>கட்டுமான பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்த பாட்டி</h2><p>அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரையும், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சர் நகரையும் இணைக்கும் வகையில் டெட்ராய்ட் ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக ‘கோர்டி ஹோவ் சர்வதேச பாலம் ’கட்டப்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca9335df-d2b6-4fa2-88aa-ed7e459f41a9/26-6a9efdaf866f7.webp' /></p><p>
</p><p>





ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் பகுதியில் வாழ்ந்து வரும் ரீட்டா, இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.</p><p>

தனது 100-வது பிறந்தநாளிலேயே இந்தப் பாலத்தின் மீது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பாலம் கட்டி முடிக்கப்படும் வரை மேலும் 2 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது தனது 102-வது பிறந்தநாளில் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்</h2><p>இதுகுறித்து அவர் பேசுகையில், "ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்! எனது 7 வயதில் பீட்டர் மற்றும் இண்டியன் ரோடு சந்திப்பில் வசித்தபோது, பாலத்தில் மக்கள் கூட்டமாக இருந்ததை பார்த்த நினைவிருக்கிறது.

ஆனால் அப்போது என்ன நடக்கிறது என்று புரியும் வயது இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57f97ae1-4a1e-4e94-bc05-8f170da15f6c/26-6a9efdaed3b4f.webp' /></p><p> இப்போது இந்த வயதில் சாண்ட்விச் பகுதிக்குச் செல்வதே கடினம், இருந்தாலும் இந்த கோர்டி ஹோவ் பாலம் நமது நகரத்திற்குச் செய்துள்ள நன்மைகளை நான் பாராட்டுகிறேன். இது மிகவும் அற்புதம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
</p><p>


பாலத்தைக் கடந்து முடித்த ரீட்டாவிடம், செய்தியாளர்கள் உங்களது அடுத்த (103-வது) பிறந்தநாளுக்கான ஆசை என்னவென்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நான் எனது அடுத்த பிறந்தநாளை சென்றடைய வேண்டும், அதுவே எனது ஆசை" என்று மிகவும் எதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T18:09:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் : நிமல் பெரேரா 'பெரும் கள்ளன்' : டி.வி. சானக கொதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nimal-perera-is-a-blatant-thief-dv-chanaka-1788798034"></link>
            <id>https://ibctamil.com/article/nimal-perera-is-a-blatant-thief-dv-chanaka-1788798034</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஏர்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஏர்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக வணிகர் நிமல் பெரேரா என்பவர் சத்தியக் கடதாசி மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். </p><p>அந்த வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, அவர் குறிப்பிடுகையில், 'பிஸ் சொலூஷன் இன்கார்பரேஷன்' என்ற கணக்கிலிருந்து நிமல் பெரேராவுக்கு சொந்தமான 'சேபர் விஷன் ஹோல்டிங்ஸ்' கணக்கிற்கு எட்டு லட்சம் அமெரிக்க டொலர் பணம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;நாமலிடம் சென்ற 100 மில்லியன் இலஞ்சப்பணம்</h2><p>இலங்கை நாணயத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான இந்த இலஞ்சப் பணம் ரூபாயாக மாற்றப்பட்டு சந்தேகநபரான நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட வணிகர் சாட்சியமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005dca1a-246f-40f9-8761-c5dc0dca8171/26-6a9ee8d6ddbf4.webp' /></p><p>





எனினும், நாமல் ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இந்த சத்தியக் கடதாசி மூலம் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததுடன், நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை குறித்து நீதிமன்றத்தில் சவால் விடுத்தார்.</p><p></p><p> </p><h2>சானக எம்.பி கொதிப்பு</h2><p>இதற்கிடையில், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக, நிமல் பெரேரா என்பவர் கிட்டத்தட்ட 100 வழக்குகள் உள்ள, அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் ஒரு பொய்யான, ஊழல் நிறைந்த வணிகர் ஆவார். அத்தகைய ஒரு ஊழல் நிறைந்த நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்ய முயற்சிக்கிறது என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a28a876-7fb8-4d9c-8e4f-c3b46b077cf0/26-6a9ee8d6345d0.webp' /></p><p>
</p><p>



 பொதுஜன பெரமுனவால் ஊழல்வாதி என அழைக்கப்படும் நிமல் பெரேராவின் பிறந்தநாள் விருந்தில் நாமல் ராஜபக்சவும் அவரது மனைவியும் கலந்துகொண்ட பல புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.</p><p></p><h2>கிரிஷ் ஒப்பந்த வழக்கிலும்&nbsp;&nbsp;நிமல் பெரேராவுடன் நாமலுக்கு தொடர்பு</h2><p> கூடுதலாக, தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கிலும் நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட வணிகருடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bf592c-cb8a-42fa-9119-b752dc6ea296/26-6a9ee8d57f62b.webp' /></p><p> அதில், ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக நிதி உதவியாக கிரிஷ் நிறுவனத்தின் இயக்குனர் ஆர். பி. குப்தாவிடம் கோரப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் 2012 ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நிமல் பெரேராவின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் 2013 ஆம் ஆண்டு சூப்பர் செவன்ஸ் ரக்பி போட்டிக்கு முன்னர் தவணைகளாக நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T17:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும்: ரணிலின் சகா ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-should-be-put-in-jail-says-ashu-1788800688"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-should-be-put-in-jail-says-ashu-1788800688</id>
            <summary type="text">முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மராசிங்க, ராஜபக்ச குடும்பத்தினர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,அவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மராசிங்க, ராஜபக்ச குடும்பத்தினர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

"ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட வேண்டும், ரணில் இதை எதிர்க்கிறார், அஷு இந்த நோக்கத்தை ஆதரிக்கிறார்," என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>"நல்லாட்சி" அரசாங்கத்தை அமைப்பதில் ஐ. தே. க ஆற்றிய பங்களிப்பு&nbsp;</h2><p>தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "நல்லாட்சி" அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆற்றிய பங்கை நினைவு கூர்ந்த மாரசிங்க, "நாங்கள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்தோம்," என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b80eda-ebb7-49ad-890e-2b9541e9cbfb/26-6a9ef6dccf26e.webp' /></p><p>
</p><p>
மேலும், அக்காலத்தில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்த அரசியல் சமநிலை குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். "தராசுகள் ஒன்று சேர்ந்தபோது எட்டப்பட்ட சமநிலையை நாங்கள் அறிவோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T17:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : கலக்கமடையாத Gen Z தலைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-is-worried-about-namals-arrest-vasudeva-1788796542"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-is-worried-about-namals-arrest-vasudeva-1788796542</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறை கலக்கமடையவில்லை என்று கூறிய முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறை கலக்கமடையவில்லை என்று கூறிய முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயக்கார தற்போதைய ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமான ஒன்றிணைப்பின் மூலம் நாட்டை மீண்டும் பின்னோக்கி இழுக்கும் முயற்சி குறித்துதான் அவர்களுக்கு உண்மையான கலக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.</p><p>&nbsp;இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மக்கள் அதிருப்தி உருவாகும்வரை காத்திருக்கும் எதிர்க்கட்சி</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிருப்தி உருவாகும் வரை எதிர்க்கட்சி காத்திருக்கிறது, ஏனெனில் அது தனது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முக்கிய உத்தியாக அதைப் பயன்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95c0709a-2e5e-4614-a9cd-8d831384cec3/26-6a9ee1aeee2ad.webp' /></p><p> </p><p>மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சிரமங்களை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வழிநடத்த எதிர்க்கட்சி தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆளும் தரப்பு&nbsp; எச்சரிக்கையாக செயல்படுவது அத்தியாவசியம்</h2><p>
</p><p>





 இத்தகைய சூழ்நிலையில் ஆளும் தரப்பு மிகவும் புத்திசாலித்தனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுவது அத்தியாவசியம் என்று வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfc752d-c6fa-46c0-aed1-57dccff175c4/26-6a9ee1ae454bd.webp' /></p><p> மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் வலதுசாரி ஐக்கிய எதிர்க்கட்சி பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து புதிய திட்டத்திற்கு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் தவறுகள் மற்றும் அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் உருவாகும் அமைதியின்மை குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T16:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரானுக்கு இன்று ஒருமுகத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandhasuwami-kovil-22-day-1788790837"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandhasuwami-kovil-22-day-1788790837</id>
            <summary type="text">நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா
என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய உற்சவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா
என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய
வீதிகளில் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
</p><p>அதனை முன்னிட்டு கட்டியம் சொல்லி, பாரம்பரிய மரபுகளுடன் வீதி உலா சிறப்பாக
இடம்பெற்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oPSDX4quwSI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T15:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தியின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-krisanthi-s-30th-anniversary-commemoration-1788791502"></link>
            <id>https://ibctamil.com/article/student-krisanthi-s-30th-anniversary-commemoration-1788791502</id>
            <summary type="text">யாழ். செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட
ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம்
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த
போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டார்.</p><p></p><h2>செம்மணி இராணுவ முகாம்</h2><p>
</p><p>
கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள்
அவதானித்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00fd61d0-86a4-465f-884a-8827d1de4a6c/26-6a9ecacfda16e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின்
சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில்
வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய
சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ
முகாமில் விசாரித்துள்ளனர்.
</p><p>
அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை
செய்திருந்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு கிருஷாந்தி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட நால்வரின்
உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைத்திருந்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b18e1f4a-81e5-43cf-b9e4-717f3afeb842/26-6a9ecbb3bcde9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c46a094-9a36-4479-b930-d1dcff685fa1/26-6a9ecbb47ca32.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b75101-12c1-4a96-b7c1-19288fd9f2ba/26-6a9ecbb53d4ba.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T15:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-to-establish-control-zone-in-strait-of-hormuz-1788792755"></link>
            <id>https://ibctamil.com/article/iran-to-establish-control-zone-in-strait-of-hormuz-1788792755</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரான் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அடுத்த சில நாட்களில் நீரிணைக்கு அருகில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலம் அறிவிக்கப்பட உள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெசாய் இன்று(07.09.2026) தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;அந்த மண்டலத்திற்குள் வரும், ஈரானியர்களுடன் ஒத்துழைக்காத அனைத்து கப்பல்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு விலை</h2><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில், “ இது அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோட்டிலிருந்து தொடங்கி பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை நீட்டிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce5d941-590b-4c4f-9d41-0a2ed72d01b4/26-6a9ecfb56434e.webp' /></p><p>ஈரான் போர் ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இந்த மோதல் அமெரிக்காவின் வரலாற்று நட்பு நாடுகளுடனான உறவுகளைச் சீர்குலைத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் மத்தியில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.</p><p>மேலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் அமெரிக்கப் பொதுமக்களிடையே இது செல்வாக்கற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவக் கப்பல், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் (IRGC) தாக்கப்பட்டதாக அந்த இராணுவக் குழு தெரிவித்துள்ளது.</p><p>சர்வவல்லமையுள்ள இறைவனின் அருளாலும் கருணையாலும், எதிரியின் ஒவ்வொரு தீவிர முயற்சியும், வீரமும் தியாக மனப்பான்மையும் கொண்ட ஐ.ஆர்.ஜி.சி கடற்படையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, தீர்க்கமான தாக்குதல் மூலம் முறியடிக்கப்படும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:52:53+00:00</updated>
        </entry>
    </feed>
