<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T06:27:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.</p><p>நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். </p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தப் பேரிடர் குறித்து நேபாளத்துக்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காததால் தான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் மறுத்துள்ளது.
</p><p>
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சீனத் தூதரகம் இந்தத் தகவல்களைப் போலியானவை என்று கூறி&nbsp; "ஆகஸ்ட் 26-ஆம் திகதி&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவால் நிலச்சரிவு ஏற்பட்டது. </p><p>இதில் பலர் உயிரிழந்ததுடன் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.</p><p><br></p><h2>மீண்டும் வெள்ளப்பெருக்கு</h2><p>இதேவேளை, வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.</p><p>நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய ஏரியில்&nbsp; சுமார் 20 இலட்சம் கனமீற்றர் நீர் காணப்பட்டதாகவும், அடுத்த மூன்று நாட்களில் இது 50 இலட்சம் கனமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தால், நேபாளத்தில் மீண்டும் பாரிய பேரிடர் ஏற்படக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.</p><h2>காணாமல் போயுள்ளனர்&nbsp;</h2><p>நேபாளத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 579 பேர் உயிரிழந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 2,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இது முந்தைய மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்&nbsp; என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>நேபாளம் மற்றும் சீனாவில் 90 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், நேபாளத்தில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர்</p><p>இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787983872"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787983872</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>சிம்ம ராசி பலன்</h2><p>பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9320c062-357e-4f26-a7c3-a2c0f5bea96e/26-6a927a462fd23.webp' /></p><p>கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.</p><p>

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். </p><p>கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற் கான முயற்சிகளில் ஈடுபடலாம். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வாடிக்கையாளர் களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
</p><p>
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.</p><p></p><h2>தனுசு ராசி பலன்&nbsp;</h2><p>பண வரவுக்குக் குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e307147-778f-4493-ada5-07a46540efc1/26-6a927a46e3950.webp' /></p><p>சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. நீதிமன்ற வழக்குகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.</p><p>

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும். </p><p>சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். </p><p>புதிய முதலீடுகள் விஷயத்தில் நன்றாக யோசித்து இறங்கவும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குக் குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.</p><h2>மகர ராசி பலன்&nbsp;</h2><p>எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவு கள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து திரு மணம் கூடி வரும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93acc4e5-936d-45d1-9a56-77dc3cc5ee3c/26-6a927a479d163.webp' /></p><p>வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். </p><p>நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். நிர்வாகத்தினரிடம் கேட்ட கடனுதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தி தருவதாக இருக்கும். </p><p>பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சலுகைகளும் கிடைக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/short-eats-prices-change-from-today-midnight-1787983025"></link>
            <id>https://ibctamil.com/article/short-eats-prices-change-from-today-midnight-1787983025</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. </p><p>அதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>புதிய விலைகள்&nbsp;</h2><p>இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு&nbsp;இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf62e2eb-94a6-434b-accc-b0b4f6283ed3/26-6a92799e2abc2.webp' /></p><p> </p><p>இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை! கடற்றொழிலாளர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-warning-issued-for-rough-seas-in-sri-lanka-1787981993"></link>
            <id>https://ibctamil.com/article/amber-warning-issued-for-rough-seas-in-sri-lanka-1787981993</id>
            <summary type="text">காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-07-2026) காலை விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில்&nbsp;காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அத்தோடு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a36b31-33a0-4205-9e4d-bd1126219179/26-6a92779b6abca.webp' /></p><p>இதனுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடலலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன்காரணமாக, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா.... பொதுமக்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/garbage-piled-up-on-jaffna-hospital-road-jaffna-mc-1787978848"></link>
            <id>https://ibctamil.com/article/garbage-piled-up-on-jaffna-hospital-road-jaffna-mc-1787978848</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் 
யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் 
யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த பகுதி பொறுப்பு வாய்ந்தவர்களால் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதியிலுள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் குப்பைகளைச் சேகரிப்பதற்காக வருவதில்லை எனவும் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கழிவு நீரை வடிகால்களுக்குள் விடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

மாநகர சபைக்கு பல தடவை அறிவித்திருந்தும் சுத்திகரிப்பு பணியாளர்கள் குப்பையகற்றுவதற்காக 3 மாதங்களுக்கு மேல் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
வடிகால்களில் குப்பைகள் தேங்கியிருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இரவில் நுளம்புத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த விடயம் குறித்து ஐபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்கள் இந்த விடயங்களை தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளயில் காண்க...&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PxdiUKygdnw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள்பயணம் மாநாடு : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conference-on-enforced-disappearances-in-jaffna-1787980633"></link>
            <id>https://ibctamil.com/article/conference-on-enforced-disappearances-in-jaffna-1787980633</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; மாநாட்டிற்கு முழுமையான ஆத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்துள்ளார்.</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (30) “நீதிக்கான நீள் பயணம்“ மாநாடும் அதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள&nbsp;பாரிய பேரணிக்கும் ஆதரவு வழங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பல ஆண்டுகளாக போராடும் உறவுகள்&nbsp;</h2><p> </p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல், உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d419fb5-9bc0-4950-b156-38ed96126ac7/26-6a9271d576870.webp' /></p><p>இந்தநிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.</p><p>அந்தவகையில், எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (30)&nbsp; 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும் வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது ஆதரவு தொடரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2926312f-8a67-43b4-a008-e10c87a83d14/26-6a9271d4bd3d3.webp' /></p><p>அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது.</p><p>எனவே பேரன்புமிக்க தமிழ் சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல் ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என தெரிவித்தார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AUWjiJXjOcM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T05:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அராங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-government-set-for-major-cabinet-reshuffle-1787979955"></link>
            <id>https://ibctamil.com/article/npp-government-set-for-major-cabinet-reshuffle-1787979955</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதனடிப்படையில் அமைச்சர் விஜித ஹேரத் கட்சியின் மூத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கும் முக்கியமான அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>அமைச்சர்களின் பொறுப்பு</h2><p>


அதற்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75176f89-02c4-4599-8340-fb79a4fcd169/26-6a926d48a09d3.webp' /></p><p>
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் தேசியப் பட்டியல் முஸ்லிம் அரசியல்வாதியொருவருக்கும் வடமாகாணத்தின் தமிழ் இளம் அரசியல்வாதியொருவருக்கும் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை அண்மித்ததாக குறித்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T05:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர் படுகொலை - சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-more-chinese-nationals-over-port-city-murder-1787971036"></link>
            <id>https://ibctamil.com/article/two-more-chinese-nationals-over-port-city-murder-1787971036</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலை சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சீன நாட்டவர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சீகிரிய பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.</p><p></p><p> </p><h2>விசாரணை</h2><p>பின்னர், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb3d3bef-a7e7-4348-a13c-a6ba8f3f0b94/26-6a926288e4968.webp' /></p><p> 

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தப்பிச் சென்றிருந்த ஏனைய சந்தேகநபர்கள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.</p><p> 

அதன்படி, சந்தேக நபர்களான மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர். </p><p>

இவ்வாறான பின்னணியில், நேற்று (28) சீகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒளிந்திருந்த போதே இவ்விரு சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ff9sJslabv4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T04:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோதுமை மா விலையில் இன்று முதல் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wheat-flour-price-increased-by-17-rs-from-today-1787977475"></link>
            <id>https://ibctamil.com/article/wheat-flour-price-increased-by-17-rs-from-today-1787977475</id>
            <summary type="text">வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனஅந்தவகையில், கோது...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளன</p><p>அந்தவகையில், கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 17 ரூபாயால் உயர்த்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. </p><p>

இந்த விலை அதிகரிப்பு இன்று (29.08.2026) முதல் நடைமுறைக்கு வருவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்</h2><p>இதேவேளை உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40103177-b03e-44a5-ab90-29260af4a27d/26-6a9276e476616.webp' /></p><p> </p><p>அன்றைய கூட்டத்தின் போது பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T04:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் சிக்கலின்றி நாடு திரும்பலாம் : அநுர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-refugees-in-india-can-return-without-problems-1787975638"></link>
            <id>https://ibctamil.com/article/sl-refugees-in-india-can-return-without-problems-1787975638</id>
            <summary type="text">யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது ஏற்பட்ட சிக்கல்களை நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது ஏற்பட்ட சிக்கல்களை நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
2023ஆம் ஆண்டு பண்டாரவளை - பூனாகலையில் நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'நவோதயா புரம்' வீட்டுத்திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது கடந்த காலங்களில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்தார்கள்.</p><p></p><h2>குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>


அந்த சகல தடைகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளேன். அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adae7402-3eb3-49f6-95cf-70850a6f360d/26-6a925d4cb562e.webp' /></p><p>
</p><p>
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. </p><p>இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்.

அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><br><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-29T04:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சியில் போதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-jaffna-csi-deputy-chairperson-1787972337"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-jaffna-csi-deputy-chairperson-1787972337</id>
            <summary type="text">தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (28)&nbsp; இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண திருச்சபை பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><h2>திட்டமிட்ட தாக்குதல்</h2><p> </p><p>

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. 

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5a5703-7cf4-4b70-b311-9e3fa09e1fa6/26-6a92567a6e7e6.webp' /></p><p>கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>

தாக்குதலை நடத்திய நபர், தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற 'அமெரிக்கன் இலங்கை மிஷன்' திருச்சபையின் உறுப்பினராக இருந்து, பின்னர் மீண்டும் இதில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனம் : போக்குவரத்திற்கு ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/container-truck-overturned-in-the-middle-road-1787973315"></link>
            <id>https://ibctamil.com/article/container-truck-overturned-in-the-middle-road-1787973315</id>
            <summary type="text">ஹொரணை - கொழும்பு வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோனபொல சந்திக்கு அருகில் இன்று (29) அதிகாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை - கொழும்பு வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கோனபொல சந்திக்கு அருகில் இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>இந்த விபத்தினால் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விபத்திற்கான காரணம் </h2><p>ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d84495f4-e94c-4c32-bbfe-6b25c48c5e69/26-6a92536b8ec5e.webp' /></p><p> 

கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்திற்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T03:37:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெகிழ்ச்சிச் சம்பவம் : தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த சிறு காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baby-wild-elephant-wandered-around-the-statue-1787970276"></link>
            <id>https://ibctamil.com/article/baby-wild-elephant-wandered-around-the-statue-1787970276</id>
            <summary type="text">புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே காட்டு யானை ஒன்று
சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே காட்டு யானை ஒன்று
சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p>பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விசித்திரமான நடத்தை</h2><p>
கட்டுமானப் பணியில் உள்ள அந்த யானைச் சிலைக்கு அருகில் வந்த இளம் காட்டு யானை
ஒன்று, அங்கிருந்து நகர மறுத்து பல மணி நேரமாகச் சிலையைச் சுற்றிச் சுற்றி
வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e53a79-51ea-49fe-9e54-7f3035013a0c/26-6a92445f3e491.webp' /></p><p>கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம்
யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின் உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது
தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து
நின்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
</p><p>
யானையின் இந்த விசித்திரமான நடத்தையைக் கண்ட அப்பகுதி
மக்களும் அவ்வழியாகச் சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T02:48:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்! மக்களுக்கு முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-heat-in-the-north-east-today-1787966933"></link>
            <id>https://ibctamil.com/article/the-heat-in-the-north-east-today-1787966933</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்தோடு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழை பெய்யக்கூடிய வாய்ப்பு</h2><p>

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27aa2d67-52f8-4f35-8434-2557eb677ed0/26-6a9235d792bb2.webp' /></p><p>
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எவராலும் தடுக்க முடியாது! அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-can-stop-the-22nd-amendment-constitution-1787963768"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-can-stop-the-22nd-amendment-constitution-1787963768</id>
            <summary type="text">


யார் என்ன கூச்சலிட்டாலும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பெருந்தோட்ட மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யார் என்ன கூச்சலிட்டாலும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும் என அவர் நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலத்தில் சட்டமானது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது.</p><p></p><h2>கூச்சலிடும் ஊழல்வாதிகள்</h2><p>
</p><p>
ஆனால் தற்போதைய ஆட்சியில் பெரியவர், சிறியவர் அல்லது பணக்காரர், ஏழை என்ற எந்தவித பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f21751-e47b-47ec-9b65-c2374d3558d5/26-6a922c2f99932.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாகவே பழைய ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்திற்கு எதிராகக் கூச்சலிட்டு வருகின்றனர்.
</p><p>
நீதிமன்றச் சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலைமையை மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்த 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. மக்கள் மத்தியில் இதற்கான தேவைப்பாடும் நீதிக்கான எதிர்பார்ப்பும் தெளிவாகக் காணப்படுகிறது.” என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-29T00:48:23+00:00</updated>
        </entry>
    </feed>
