<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-14T15:22:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீயை ஏற்படுத்திய 474 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642"></link>
            <id>https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642</id>
            <summary type="text">பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>பிரான்ஸின் தென்மேற்கு பகுதி</h2><p> </p><p>

பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, ''ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad473ad-c651-4478-834a-846531dc6467/26-6a7f21e533953.webp' /></p><p> </p><p>அந்தத் தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லாண்டெஸ் (Landes) பிராந்தியத்தில் புதிய காட்டுத்தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லுக்லோன் (Luglon) பகுதியில் 525க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633"></link>
            <id>https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.</p><p>

போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
</p><p>இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மலர்
மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.</p><p></p><h2>பல்வேறு படுகொலைச் சம்பவங்கள்</h2><p>

இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2f01077-8210-4b48-8c65-0a4c6ef68569/26-6a7f1b334832f.webp' /></p><p> </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மனு கையளிக்கப்படவுள்ளது.</p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
</p><p>
நீதியைத் தேடும் இந்தப் பயணம் எந்தவொரு தனிப்பட்ட தரப்பினருக்கோ அல்லது
அமைப்புக்கோ மாத்திரம் உரித்தானதல்ல என வலியுறுத்தும் ஏற்பாட்டாளர்கள், தமிழ்
அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள்,
மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து
தரப்பினரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து இந்த நீதிக்கான பயணத்தில்
பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><h2>பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் போராட்டம் </h2><p>நீதிக்கான ஓலம் என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c477f511-ec27-43ed-b19c-a43ba5c86a26/26-6a7f1b33f08eb.webp' /></p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்குள் ஊடுருவிய அமெரிக்க ட்ரோன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123"></link>
            <id>https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123</id>
            <summary type="text">ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஐ.ஆர்.ஜி.சி வான்வெளி படையால் இயக்கப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு குறித்த ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம், தென்மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு மேல் பறந்த மற்றொரு அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை தனது விண்வெளிப் படை சுட்டு வீழ்த்தியதாக ஐ.ஆர்.ஜி.சி. முன்னதாக அறிவித்தது.</p><p></p><h2>ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c5b566-ba3d-4830-b406-98aaf733fb7f/26-6a7f27adbe2d0.webp' /></p><p>

எனினும் இந்த செய்தி குறித்து அமெரிக்கா எந்த வித தகவலையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/106th-day-of-excavation-of-the-chemmani-grave-1786715336"></link>
            <id>https://ibctamil.com/article/106th-day-of-excavation-of-the-chemmani-grave-1786715336</id>
            <summary type="text">

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளன.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளன.
</p><p>
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>நீதிமன்ற அனுமதி</h2><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 52ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/040acd10-853d-42bc-b513-c20a57e834f6/26-6a7f2000a4ee8.webp' /></p><p>
</p><p>
அத்துடன் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364b1fe-fd03-457b-ba4c-a511d8e29b91/26-6a7f200169019.webp' /></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி மீதான 50% கூடுதல் கட்டணம்! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-extended-vehicle-import-surcharge-1786713109"></link>
            <id>https://ibctamil.com/article/govt-extended-vehicle-import-surcharge-1786713109</id>
            <summary type="text">
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைய, இந்த நீட்டிப்பு ஓகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. </p><p>

இதன்படி, தொடர்புடைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு, பொது மற்றும் முன்னுரிமை ஆகிய இரு அடிப்படைகளின் கீழும் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரியின் மீது இந்த 50% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.</p><p></p><h2>விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p>
</p><p>
பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனப் பிரிவுகள் இந்த அட்டவணையில் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799652ae-9463-4016-bfb9-bd840e3da0e9/26-6a7f193dbdf4c.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், 2026 மே 15 அன்று அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு பொதுவாக இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. </p><p>

ஆனால், அத்தகைய கடன் கடிதங்களில் வாகன எண்கள், அடையாள எண்கள், விவரங்கள், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் அல்லது காலாவதியாகும் திகதிகள் போன்ற விவரங்கள் பின்னர் திருத்தப்பட்டிருந்தால், அவற்றுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T13:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அவர்களது எதிர்வாத நிலைப்பாடுகள் நேற்று (13) நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து இன்று (14) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒவ்வொரு பிரதிவாதியும் எதிர்வரும் விசாரணைகளில் கடைப்பிடிக்கவுள்ள தமது எதிர்வாத நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><h2>பிரதிவாதிகளின் நிலைப்பாடு</h2><p>

அதன்படி, சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து தமது வாக்குமூலத்தை வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23247fe4-025f-46ec-99c7-ad94a1c00b43/26-6a7ef2d3c0bd1.webp' /></p><p> </p><p>மேலும் சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், ஆனால் தமது தரப்பில் வேறு சாட்சிகளை அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><ol><li>

முதலாம் பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இரண்டாம் பிரதிவாதியான மொஹமட் சரீபுத் ஆதம் லெப்பை (ஹஜ்ஜி மாமா) குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
மூன்றாம் பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

நான்காம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் ஐந்தாம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</li><li>

ஆறாம் பிரதிவாதியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் அமைதியாக இருப்பதாகவும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
ஏழாம் பிரதிவாதியான மொஹமட் மன்சூர் மொஹமட் சனூஸ்தீன் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
எட்டாம் பிரதிவாதியான அப்துல் மனாஃப் மொஹமட் ஃபர்தௌஸ் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளார்.
</li><li>
ஒன்பதாம் பிரதிவாதியான மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் மற்றும் 10ஆம் பிரதிவாதியான அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். </li><li>எனினும், 10ஆம் பிரதிவாதி சார்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
11ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
12ஆம் பிரதிவாதியான மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் மற்றும் 13ஆம் பிரதிவாதியான மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

14ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

15ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளும் அழைக்கப்படவுள்ளனர்.
</li><li>
16ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இதற்கிடையில், 18ஆம் பிரதிவாதி உயிரிழந்துள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
19ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li> 20ஆம் பிரதிவாதி வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
21 மற்றும் 22ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

23ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
24 மற்றும் 25ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்களது தரப்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</li></ol><p></p><h2>எதிர்வாத நிலைப்பாடு </h2><p>
இவ்வாறு ஒவ்வொரு பிரதிவாதியும் தமது எதிர்வாத நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையில், சிலர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன் மேலதிக சாட்சிகளையும் முன்வைக்கவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa1ded2-9de4-4d11-b0e0-da6e35fbd033/26-6a7ef2e9b3a63.webp' /></p><p> மற்றுமொரு தரப்பினர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பிரதிவாதிகளுக்கும் அவர்களுக்குரிய அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்வாத விசாரணையின்போது கடைப்பிடிக்கவுள்ள நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான இந்த விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கின் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினசரி நடைபெறவுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T13:13:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் இதுவரை அனுபவித்திராத நடவடிக்கை! மத்தியகிழக்கை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்க நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/operation-unexpected-us-action-on-iran-1786711947"></link>
            <id>https://ibctamil.com/article/operation-unexpected-us-action-on-iran-1786711947</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

உலகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.</p><p>

உலகம் இதுவரை அனுபவித்திராத வகையிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை ஈரான் எதிர்கொள்ளும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், </p><p></p><h2>மேலும் பல அறிவிப்புகள்</h2><p>

ஹோர்முஸ் நீரினை முற்றுகை தொடர்வதால், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதோ வெளியேறுவதோ முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ceadd00-5b72-4061-b50a-f5f78bca6a98/26-6a7f0f8e38231.webp' /></p><p>
</p><p>
அடுத்த வாரம் மேலும் பல அறிவிப்புகள் வெளிவரும்.காத்திருங்கள். 
ஏனெனில், ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தனிமைப்படுத்தலை விதிக்கும் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.
</p><p>
உலகம் இதுவரை கண்டிராத பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை ஆகியவற்றின் கலவையானது, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்" என்று பெசென்ட் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T13:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம்! ரணில் தரப்பு அநுரவுக்கு அனுப்பிய அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-s-request-22nd-amendment-constitution-1786710138"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-s-request-22nd-amendment-constitution-1786710138</id>
            <summary type="text">
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரைக்கான திருத்தங்கள் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இறையாண்மை&nbsp;</h2><p>
</p><p>
மேலும், இலங்கைக் குடியரசில் இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அதனை பிரிக்க முடியாது என்ற அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையே இதன் அடிப்படையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20bcde8-0421-49ea-a0e3-6af72bf20576/26-6a7f0f667e098.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p> 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்யும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையை மீறும் செயலாகும் என்றும், இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் தேவை என்றும் 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>சர்வதேச நீதித்துறை தரநிலைகள்</h2><p>

சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி, வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள், நீதித்துறை சார்ந்த இந்த விடயத்தில் சார்புத்தன்மை அல்லது பாரபட்சம் ஏற்படுவதைத் தவிர்க்க சர்வதேச நீதித்துறை தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c19a309-5e4b-4e3a-b2cd-4d636a52b4fb/26-6a7f0f6744985.webp' /></p><p>

எனவே, மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரே சட்டப்பூர்வமான வழிமுறையாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், அரசியலமைப்பின் 85(1) உறுப்புரைக்கு அமைவாக இந்தச் சட்டமூலத்தைச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை ஊடாக எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QWPt0xc9gyM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T12:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் கேள்விகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பெஷெஷ்கியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-major-move-with-iran-amid-hormuz-tensions-1786708637"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-major-move-with-iran-amid-hormuz-tensions-1786708637</id>
            <summary type="text">எதிர்வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு வட்டாரங்கள் வட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு வட்டாரங்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் பெஷேஷ்கியன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

2026-ஆம் ஆண்டுக்கான தனது தலைமைப் பொறுப்பின் கீழ் இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துவதால், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. </p><p></p><h2>இருதரப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினை</h2><p>இந்த உச்சிமாநாடு, "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற இந்தியாவின் கருப்பொருளின் கீழ் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5968bbab-c216-4a1f-895b-7a46dbdb8cd2/26-6a7f0740ecfe3.webp' /></p><p>
</p><p>
இதன்படி 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலிடமிருந்து பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

2024 அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, பெஷெஷ்கியன் -&nbsp; நரேந்திர மோடியைச் சந்தித்தார். </p><p>

அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

2024-ல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினரானது.
</p><p>
2025-ல் இந்தோனேசியா இந்த அமைப்பில் இணைந்ததன் மூலம், முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.

முன்னதாக ஜூன் மாதம், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வந்தடைந்தார்.
</p><p>
கூட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அராக்சி, உலகளாவிய சமாதானத்தை நிலைநாட்டும் சக்தியாக இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எடுத்துரைத்தார். </p><p></p><h2>நிலவும் பதற்றமான சூழ்நிலை</h2><p>

மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதில் இந்தியா ஒரு பெரிய பங்கை ஆற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0911e2-6ed1-41da-aae1-3c902bc8d83d/26-6a7f0740427ab.webp' /></p><p> 

ஆயுத மோதலில் தெஹ்ரான் எதிர்காலத்தைக் காணவில்லை என்பதையும் அராக்சி தெளிவுபடுத்தினார்.

 

தற்போதைய நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு இல்லை என்றும், 'பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே' முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்றும் அவர் கூறினார்.
</p><p>
 இந்திய மத்தியஸ்தத்திற்கு தெஹ்ரான் தயாராக இருப்பதை வலியுறுத்தும் வகையில், இந்தியாவின் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய அரக்சி, வர்த்தகப் பாதுகாப்பிற்காக நட்பு நாடுகள் ஈரானை நம்பியிருக்கலாம் என்று உறுதிப்படுத்தினார்.
</p><p>
 மேலும், ஹோர்முஸில் பாதுகாப்பைப் பேணும் தனது வரலாற்றுப் கடமையை ஈரான் எப்போதும் நிறைவேற்றும் என்று அராக்சி தெளிவுபடுத்தினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T12:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோராவெளி - ஈச்சையடித்தீவுப் படுகொலை நினைவுதினம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/koraveli-and-eechaiyaditheevu-massacres-1786707700"></link>
            <id>https://ibctamil.com/article/koraveli-and-eechaiyaditheevu-massacres-1786707700</id>
            <summary type="text">கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. </p><p>இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது கிராமத்திற்குரிய தனித்துவமான கலைகளையும் வளர்த்து வந்தார்கள். </p><p>கோராவெளிக் கிராமத்தில் இந்து மதத்தவர்களின் பிரசித்திபெற்ற கோராவெளி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.</p><p><span style="color: inherit;">இங்கு கடந்த 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.</span></p><p><span style="color: inherit;"> இராணுவத்தினரும் சிங்கள-முஸ்லிம் குழுக்களும் மக்கள் மீதான தாக்குலை நடத்திவந்தனர் என குற்றச்சாட்டுக்கள் இன்றளவும் பரந்து காணப்படுகின்றன.&nbsp;</span></p><p>இந்த கோரத்தில் 1990.08.14 நண்பகல் செங்கலடி, கல்லடி இராணுவ முகாம்களிலிருந்து வந்த இராணுவத்தினர் கோராவெளி, பச்சையடித்தீவு கிராமங்களைச் சுற்றிவளைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். </p><p>இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீடுகளிலிருந்தவர்கள், வீதிகளிற் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனப் பதினைந்து பேர் உயிரிழந்தார்கள். மேலும் இருபத்தைந்து பேர் காயமடைந்தார்கள்.</p><p>&nbsp;அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T12:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பமாகும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evaluation-of-answer-sheets-5-grd-scholarship-1786707291"></link>
            <id>https://ibctamil.com/article/evaluation-of-answer-sheets-5-grd-scholarship-1786707291</id>
            <summary type="text">

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
மதிப்பீட்டு செயல்முறை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் நிறைவடையும் என்றும், இதன்மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புலமைப்பரிசில் பரீட்சை</h2><p>

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82d001a-081e-4e9b-b738-8783e4f47c38/26-6a7f0115ea4af.webp' /></p><p>

அதன்போது, சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-14T11:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kandy-esala-perahera-special-traffic-and-security-1786704099"></link>
            <id>https://ibctamil.com/article/kandy-esala-perahera-special-traffic-and-security-1786704099</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைபடுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>எசல பெரஹரவின் முக்கியத்துவமிக்க நிகழ்வுகளான கும்பல் பெரஹேரா ஆகஸ்ட் 18 முதல் 22 வரையிலும், ரந்தோலி பெரஹேரா ஆகஸ்ட் 23 முதல் 27 வரையிலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன.</p><p>இந்தப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சாலைத் தடுப்புகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைச் சோதனையிடுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களுக்கான விசேட தரிப்பிடங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>கண்டி எசல பெரஹேரா</h2><p>பெரஹேராவின் போது பாதுகாப்புப் பணிகளுக்காக, மொத்தம் 6,200 காவல்துறைப் பணியாளர்கள், காவல்துறை சிறப்பு அதிரடிப் படையைச் (STF) சேர்ந்த 564 பணியாளர்கள், முப்படைகளைச் சேர்ந்த 1,200 பணியாளர்கள் மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 29 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d528e323-16db-407b-8f83-1eb81e1ea48e/26-6a7efa7490c57.webp' /></p><p>

 

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக காவல்துறை கே9 (K9) பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.</p><p>பெரஹேரா காலப்பகுதியில் கண்டி நகருக்குள் நுழையும் 14 பிரதான நுழைவாயில்களிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>பெரஹேராவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களின் வாகனங்களுக்காக 13 விசேட வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இதில் இலகுரக வாகனங்களுக்காக 6 தரிப்பிடங்களும், கனரக வாகனங்களுக்காக 7 தரிப்பிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>
 

பெரஹேரா காலத்தில் கண்டி நகரைத் தவிர்க்க விரும்பும் வாகன சாரதிகளுக்காக காவல்துறையினரும் மாற்று வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><p>

 

வாகன சாரதிகள் இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பெரஹேராவின் போது நடைமுறையில் உள்ள சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amendment-to-increase-judges-retirement-age-1786705447"></link>
            <id>https://ibctamil.com/article/amendment-to-increase-judges-retirement-age-1786705447</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் அன்றைய தினமே நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஊடகமொன்றுக்கு&nbsp; குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுடன், இதற்கு ஆரம்பக்கட்டத்திலிருந்தே முன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.</p><p></p><h2>வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5598a448-7e77-44f6-926d-2b7b40e7e997/26-6a7efb29dd624.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதும், இந்தத் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருந்தார்.</p><p></p><h2>நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> </p><p>

இத்தகைய பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c0536a-dd1b-4266-9be8-91bab00ceccf/26-6a7efb2add399.webp' /></p><p> </p><p>இலங்கையின் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. </p><p>

அந்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோணேஸ்வரத்தை தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்திலும் அடாவடி : ஆலய வரலாற்றை மறைக்கும் தொல்லியல் திணைக்களம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archaeology-dept-hide-the-thiruketeeswaram-history-1786703120"></link>
            <id>https://ibctamil.com/article/archaeology-dept-hide-the-thiruketeeswaram-history-1786703120</id>
            <summary type="text">மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக 
நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>மேலும், ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என குறிப்பிட்ட அவர் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.
</p><p>
கௌதம புத்தரின் தலையை எடுத்து கொழும்பில் வைத்திருப்பதாக அந்தப் பெயர்ப்பலகையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் மற்றும் நந்தி தொடர்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் குறித்த பெயர்ப்பலகை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/t7jfv7v-bY8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் மேச்சல் தரைக்காக பண்ணையாளர்கள் பாரிய போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mailathamadu-farmers-protest-in-batticaloa-1786700428"></link>
            <id>https://ibctamil.com/article/mailathamadu-farmers-protest-in-batticaloa-1786700428</id>
            <summary type="text">
பல வருடக் கணக்காக தமது மேச்சல் தரைப் பகுதிக்காகப் போராடி வரும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பல வருடக் கணக்காக தமது மேச்சல் தரைப் பகுதிக்காகப் போராடி வரும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தமது நீண்ட கால பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை(14) பாரிய அமைதி வழி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.</p><p>

Mannar Social and Economic Development Organization எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>தீர்வு வழங்குவதில் தாமதம்</h2><p>இதேவேளை, போரட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக காணியை இழந்த மன்னார் மக்கள், யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிளவு மக்கள் மற்றும் மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a132898-d090-4036-8a44-66f11238715e/26-6a7ee83fe4572.webp' /></p><p>
</p><p>இதன்போது, பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதால் தீர்வு வழங்குவதில் தாமதமா? பண்ணையாளர்களின் மேச்சல் தரையைப் பதிவு செய்வதில் ஏன் தாமதம், பல ஆண்டுகள் கடந்தும் மக்களின் காணிகளை ஒப்படைக்க காலம் போதாதா என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T10:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20th-commemoration-of-sencholai-massacre-in-batti-1786699635"></link>
            <id>https://ibctamil.com/article/20th-commemoration-of-sencholai-massacre-in-batti-1786699635</id>
            <summary type="text">முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.</p><p> தமிழ் தேசிய
பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (14) மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.</p><p>இதன்போது&nbsp;இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றது.</p><p></p><h2>சுடர் ஏற்றி அஞ்சலி</h2><p> </p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய
அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795c73cb-e09b-4967-8841-270e1c4c21e4/26-6a7ee6bde9c91.webp' /></p><p>நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் உயிரிழந்த சிறுவர்களின் திருவுருவப்படங்களை கொண்டு காட்சிபடுத்தப்பட்ட பதாததைக்கு முன்னால் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி
செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc163ab-3548-48d8-860b-8983f003b455/26-6a7ee6bec4870.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார் சிறிதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-sritharan-visited-the-chemmani-mass-grave-1786698597"></link>
            <id>https://ibctamil.com/article/mp-sritharan-visited-the-chemmani-mass-grave-1786698597</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
</p><p>
செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார்.</p><p></p><h2>51ஆவது நாள் அகழ்வு பணி</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் பணி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8d3aed-5590-4966-a3c6-b45bfd79c2ee/26-6a7ee5e50346c.webp' /></p><p> </p><p>இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 10 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் மொத்தம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.</p><p> இதனடிப்படையில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 552 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 540 எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளும், அவை தொடர்பான சட்ட&nbsp; நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:58:13+00:00</updated>
        </entry>
    </feed>
