<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-16T22:49:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூந்தல் அடர்த்தியாக வளர முருங்கை இலை ஹேர் பேக்: எளிய வீட்டுக் குறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/how-to-use-drumstick-leaves-for-hair-growth-1786912045"></link>
            <id>https://ibctamil.com/article/how-to-use-drumstick-leaves-for-hair-growth-1786912045</id>
            <summary type="text">அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
</p><p>
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
</p><p>
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><u>🛑&nbsp;<b>தேவையான பொருட்கள்</b></u></p><ol><li>முருங்கை இலை - 2 கைப்பிடி
</li><li>தண்ணீர் - சிறிதளவு</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9d0346-287e-46b3-b462-370f00753e24/26-6a821d2f8d852.webp' /></p><p><u>🛑&nbsp;<b>பயன்படுத்தும் முறை&nbsp;&nbsp;</b></u></p><ol><li>முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</li><li>
பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</li><li>அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.</li><li>பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
</li><li>
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

&nbsp;&nbsp;</li></ol><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T20:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/turkey-seeks-to-reopen-strait-of-hormuz-1786909737"></link>
            <id>https://ibctamil.com/article/turkey-seeks-to-reopen-strait-of-hormuz-1786909737</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதே தற்போதைய முதன்மை இலக்கு என்று துருக்கி ஜனாதிபதி ரசிப் தய்யிப் எர்டோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதே தற்போதைய முதன்மை இலக்கு என்று துருக்கி ஜனாதிபதி ரசிப் தய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளில் இந்தக் கடல் வழியின் மீதான கட்டுப்பாடே மிக முக்கிய முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்த</h2><p>இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்தக் கடல் வழிப்பாதையானது சர்வதேச வர்த்தகத்திற்கு குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களின் விநியோகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. 

எனவே, ஹோர்முஸ் ஜலசந்தி முடிந்தவரை விரைவில் மீண்டும் திறக்கப்படுவது மிக மிக முக்கியமானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ec8e9b-4b73-4f7f-b669-354d80dbef23/26-6a821b273b73a.webp' /></p><p>உலகளாவிய எண்ணெய் விநியோகம் எந்தவிதத் தடங்கலுமின்றிச் சீராக நடைபெறுவதையே துருக்கி ஆதரிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் பரஸ்பர தாக்குதல்கள் வெடித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியுள்ளது.</p><p> 

கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தத் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T20:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-citizenship-proof-wait-time-hits-2-yrs-1786908611"></link>
            <id>https://ibctamil.com/article/canada-citizenship-proof-wait-time-hits-2-yrs-1786908611</id>
            <summary type="text">கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.

ஆண்டின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.</p><p>

ஆண்டின் இறுதிக்குள் இது 3 ஆண்டுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் பரம்பரை வழியிலான குடியுரிமை வரம்பை நீக்கிய கனடாவின் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றால், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கனடிய வம்சாவளியினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்துள்ளன.</p><p>
</p><p></p><h2>அவசர உதவி</h2><p>இந்தநிலையில் தற்போது சுமார் 1,21,800 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.</p><p> 

அவசர வேலை அனுமதிப் பத்திரம் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், சாதாரண விண்ணப்பங்களின் தாமதம் மேலும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4ba50f1-07fa-413e-ba9f-720d7d6435ce/26-6a82134426f64.webp' /></p><p>

விண்ணப்பங்கள் சட்டப்படி நியாயமாகவும் முன்னதாக வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் பரிசீலிக்கப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட கால அவகாசம் என்பது தோராயமான மதிப்பீடே தவிர உத்தரவாதம் அல்ல என்றும் கனடிய குடிவரவுத் துறை (IRCC) தெரிவித்துள்ளது.
</p><p>
நிலுவையிலுள்ள பெருமளவிலான விண்ணப்பங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என குடிவரவு வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-nations-slam-israel-for-rejecting-peace-plan-1786901365"></link>
            <id>https://ibctamil.com/article/8-nations-slam-israel-for-rejecting-peace-plan-1786901365</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இது குறித்து 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>இஸ்ரேலின் நிலைப்பாடு&nbsp;</h2><p>இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.
</p><p>
இது அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவை பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabec4ae-17bb-4840-bb80-41b0622b14ac/26-6a820dbb5f157.webp' /></p><p>இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
</p><p>
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:21:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-announces-reward-for-killing-us-soldiers-1786904612"></link>
            <id>https://ibctamil.com/article/iran-announces-reward-for-killing-us-soldiers-1786904612</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்து கொண்டே வருகிறது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கப் போவது யார்? என்பது குறித்த அதிகார மோதலும் நீடித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2d4c4e-859a-4160-b2e1-8065e472afc8/26-6a820025f2ff4.webp' /></p><p>





</p><h2>ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b9f3217-c974-4292-8505-492fb3413c97/26-6a820026a70ae.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவ வீரர்களை பெண்கள் பிடித்து கொடுத்தால், இந்தத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>

கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானியை மீட்பதற்கான அவசரகால நடவடிக்கையைத் தவிர, ஈரானில் எந்த அமெரிக்கப்படைகளும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T18:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-eelam-tamil-drowns-in-mullaitivu-1786897615"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-eelam-tamil-drowns-in-mullaitivu-1786897615</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>

முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று (16.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.</p><p>

இந்நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c13f03-a58b-48cc-9abe-a0db5c19c8cd/26-6a81eda78e309.webp' /></p><p>இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>
அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-1-664-murders-in-the-last-three-years-1786897831"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-1-664-murders-in-the-last-three-years-1786897831</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டிற்காக இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட வருடாந்திர செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2023, 2024, 2025) இலங்கையில் 1,6...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்காக இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட வருடாந்திர செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2023, 2024, 2025) இலங்கையில் 1,664 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>
அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் 573 கொலைகளும், 2024 ஆம் ஆண்டில் 555 கொலைகளும், 2025 ஆம் ஆண்டில் 536 கொலைகளும் நாட்டில் நிகழ்ந்துள்ளன. இந்தக் கொலைகளில் சுமார் 93 சதவிகிதம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.</p><h2>&nbsp;உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை</h2><p>&nbsp; கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தக் கொலைகளில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 317 ஆகும். அதன்படி, 2023-ல் 105 பெண்களும், 2024-ல் 104 பெண்களும், 2025-ல் 108 பெண்களும் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cec2bb38-ba77-4ec4-8506-b4223b223d02/26-6a81f7230a898.webp' /></p><p> </p><p>இந்த மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 48 ஆகும். அதன்படி, 2023-ல் 16 குழந்தைகளும், 2024-ல் 20 குழந்தைகளும், 2025-ல் 12 குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T17:45:11+00:00</updated>
        </entry>
    </feed>
