<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-26T10:31:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவக மக்களுக்கு மின் கட்டணக் குறைப்பு...! அநுர அரசிற்கு ஈ.பி.டி.பி விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/epdp-urges-lower-power-tariffs-for-islands-1787737496"></link>
            <id>https://ibctamil.com/article/epdp-urges-lower-power-tariffs-for-islands-1787737496</id>
            <summary type="text">தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.ஈழ மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இதனை தெரிவித்துள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (26.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,&nbsp; ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இந்திய அரசாங்கத்தின்
உதவியுடன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள்
கடந்த அரசாங்க காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>இணைப்புக் கட்டமைப்பு</h2><p>குறிப்பாக அதற்கான நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தாவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.</p><p>
குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில்
இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த டக்ளஸ் தேவானந்தா, தீவகங்களில்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் இணைப்புக் கட்டமைப்புடன்
இணைக்கவேண்டிய அவசியம் இல்லாமையால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த
தீவுகளின் மக்களுக்கே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3accb7f2-a6e6-40c5-94aa-a9611df3a330/26-6a8ebc3233268.webp' /></p><p>மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவக மக்கள் பொருளாதார
ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதை கருத்தில்
கொண்டு இந்திய உதவியுடன் அமைக்கப்படும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளில்
இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட தீவக மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற
கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.</p><p>

இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய அமைச்சரவையும் சாதகமான இணக்கத்தை
வெளிப்படுத்தியிருந்தார்.</p><p> கடந்த அரசாங்க காலத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T10:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-bishop-of-the-jaffna-diocese-has-taken-charge-1787739491"></link>
            <id>https://ibctamil.com/article/new-bishop-of-the-jaffna-diocese-has-taken-charge-1787739491</id>
            <summary type="text">யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) புனித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.</p><p> 

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்து வரப்பட்டார்.</p><p></p><h2>புனித மரியன்னை பேராலயம்</h2><p> 

தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ebd4ff7-8d26-47cb-80d5-566508d683ca/26-6a8ebd6618e33.webp' /></p><p> </p><p>

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T10:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரனின் கபடத்தனமான அரசியல்! கடுமையாக சாடிய ஆளும் தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sumanthiran-s-hypocritical-politics-1787738046"></link>
            <id>https://ibctamil.com/article/sumanthiran-s-hypocritical-politics-1787738046</id>
            <summary type="text">வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி
சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை
விடயங்களையும் அறிந்த முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி
சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை
விடயங்களையும் அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை
கொழும்பில் போராட அழைப்பது கபடத்தனமான அரசியல் செயற்பாடாகும் என கடத்தொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>
யாழ் மாவட்ட செயலகத்தில். நேற்று இடம்பெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு
அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டு கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம்.</p><p></p><h2>அரசாங்கத்தை குழப்பும் முயற்சி</h2><p>
</p><p>
இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல்
நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad92bbd-fd93-4892-9d88-774b8c8a1aa7/26-6a8eb82887d9c.webp' /></p><p>
</p><p>
அண்மையில் வலிவடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சில
கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.</p><p>

அதாவது வலி. வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை அழைத்துக் கொண்டு கொழும்பு
ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காகன அழைப்பை
விடுத்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி கடந்த வாரம் வலி. வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட
தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன்
கொழும்பில் மக்களை போராட அழைத்திருக்கிறார்.
</p><p>
இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற
நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்கு
ரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடு.</p><p>

யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கம்
மக்களுடைய காணிகளை மக்களுக்கு என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் எமது வேலை
திட்டங்களை மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T09:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உரம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483</id>
            <summary type="text">சீனாவிடமிருந்து&amp;nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&amp;nbsp;விசாரணைகள்&amp;nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கையூட்டல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவிடமிருந்து&nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&nbsp;விசாரணைகள்&nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d329b42f-070c-4f76-b17b-cb152d9a2306/26-6a8eb2f9638bc.webp' /></p><p>இந்தநிலையில் கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T09:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-grants-permission-to-walk-along-palaly-road-1787728841"></link>
            <id>https://ibctamil.com/article/army-grants-permission-to-walk-along-palaly-road-1787728841</id>
            <summary type="text">செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p>

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி வீதியில் கடந்த வருடம் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வீதி திறந்து விடப்பட்டது.
</p><p>
இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27.08.2026) வியாழக்கிழமையும், மறுநாள் (28.08.2026) வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>பலாலி வீதி&nbsp;</h2><p>
</p><p>
இதனை முன்னிட்டு, ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் பலாலி வீதியூடாக காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a6c8c5-413d-4209-bac2-f312740b9b6c/26-6a8e987f57bb1.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:22:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1787730228"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1787730228</id>
            <summary type="text">காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு&nbsp;தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp; எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவி்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு</h2><p> 

</p><p>எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7579e0bc-8989-4ade-99aa-ab37edcb3ba1/26-6a8e9c740d62d.webp' /></p><p>மேலும் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழையுடனான வானிலை அவ்வப்போது தொடரும் என தெரிவிக்கப்பட்டு்ளளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய அமைதிப்படை நகர்வை நேரில் அனுபவித்த ஜெய்சங்கருக்கு ஆச்சரியம் அளித்த இலங்கை மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lanka-look-towards-ind-beyond-political-opposition-1787728949"></link>
            <id>https://ibctamil.com/article/lanka-look-towards-ind-beyond-political-opposition-1787728949</id>
            <summary type="text">இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையர்கள் இந்தியாவை நோக்கும் விதம் தொடர்பான சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவை குறிப்பிடத்தக்கதாகக் கூறியிருந்தார்.</p><p>அமெரிக்காவை தளமாக&nbsp; தளமாகக் கொண்ட Pew Research Center மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், இலங்கையர்களில் 79% பேர் இந்தியா குறித்து சாதகமான பார்வையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த எண்ணிக்கை தம்மை ஆச்சரியப்படுத்தியதாக ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>இந்தியாவுக்கு எதிரான அரசியல் பிரசாரங்கள்</h2><p>ஒரு கால கட்டத்தில் இலங்கையில் இந்திய உயர் ஆணையகத்தில் பணியாற்றிய ஜெய்சங்கர், இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தின் சூழ்நிலைகளை நேரில் அனுபவித்தவர் என்றே சொல்லியாகவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/052b413e-8dcc-40e4-9dbe-d973c726cc59/26-6a8e987281ccc.webp' /></p><p>அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களும் தாக்குதல் சம்பவங்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
</p><p>
அந்தப் பின்னணியை நினைவுகூர்ந்த ஜெய்சங்கர், “79% இலங்கையர்கள் இந்தியாவை சாதகமாகப் பார்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை எனக்கு ஆச்சரியத்தைத் தாண்டிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்தது. குறிப்பாக அக்காலகட்டத்தில் ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான கடுமையான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்தது.
</p><p>
ஆனால் பல தசாப்தங்களுக்குப் பின்னர், இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணும் அரசியல் அணுகுமுறையுடன் இலங்கை முன்னேறி வருகிறது.</p><p></p><h2>கடந்த கால அரசியல் நிலை</h2><p> </p><p>இதன் ஒரு வெளிப்பாடாகவே 79% சாதகமான கருத்துக்கணிப்பு முடிவு பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8121d889-1d62-46ac-a82a-74af373c70ff/26-6a8e987351b49.webp' /></p><p>
</p><p>
ஜெய்சங்கரின் கருத்து, கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளுக்கும் தற்போதைய இலங்கை மக்களின் இந்தியா தொடர்பான பார்வைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.</p><p>இலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வு எப்போதும் பொதுமக்களின் நிலையான மனநிலையின் நேரடி வெளிப்பாடாக இருந்ததா அல்லது குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலைகளில் அரசியல் சக்திகளால் தீவிரப்படுத்தப்பட்டதா என்ற கேள்வியையும் தற்போதைய நிலை எழுப்புகிறது.</p><p>

கடந்த காலங்களில் இந்தியாவை எதிர்க்கும் அரசியல் பிரசாரங்கள் பல்வேறு தருணங்களில் வலுப்பெற்றிருந்தாலும், தற்போதைய கருத்துக்கணிப்பு இலங்கை மக்களிடையே இந்தியாவுக்கு கணிசமான அளவில் நல்லெண்ணம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.</p><p>

அதேவேளை, இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக இலங்கையில் அவ்வப்போது எழும் எதிர்ப்புகளையும் புறக்கணிக்க முடியாது.</p><p></p><h2>முடிவுக்கு வந்த&nbsp;விமர்சனங்கள்</h2><p> எனவே, 79% என்ற எண்ணிக்கை இந்தியா தொடர்பான அனைத்து விமர்சனங்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்காது.</p><p>மாறாக, இந்தியாவுடனான உறவைப் பற்றிய இலங்கை மக்களின் ஒட்டுமொத்த அணுகுமுறை கடந்த காலத்தை விட குறிப்பிடத்தக்க வகையில் சாதகமாக மாறியிருப்பதை காட்டுகிறது.
</p><p>இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்தப் பின்னணியில், இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவை சாதகமாகப் பார்ப்பதாக வெளியாகியுள்ள Pew கருத்துக்கணிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சமூக அடித்தளத்தையும் வெளிப்படுத்துகிறது.
</p><p>
ஒருகாலத்தில் இந்திய எதிர்ப்பு அரசியல் இலங்கையின் முக்கியமான அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், இன்று 79% இலங்கையர்கள் இந்தியாவை சாதகமாகப் பார்ப்பதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு, அந்த அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தும் முக்கியமான தரவாக அமைந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T07:57:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் மர்ம மரணங்கள் - உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-body-found-in-jaffna-beach-1787726214"></link>
            <id>https://ibctamil.com/article/death-body-found-in-jaffna-beach-1787726214</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
</p><p>
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாளம் காணப்படவில்லை</h2><p>
</p><p>அதன்பின்னர் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee5dc71-dd90-4f3c-8fce-772501bffad9/26-6a8e8b3727ada.webp' /></p><p>சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
</p><p>
குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையும் நீதியும் கோரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க போராட்டம்! விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-relatives-association-protest-1787727705"></link>
            <id>https://ibctamil.com/article/missing-relatives-association-protest-1787727705</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித்துள்ளார்.</p><p> அவர் இன்று வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக
சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை
செல்வாநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய
ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p></p><h2>யுத்தம் முடிந்து 17 வருடங்கள்&nbsp;</h2><p>
</p><p>அவர்களால் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் நிறுவனங்களுக்கும் கலந்து
கொள்வதற்கான அழைப்பும் ஆதரவுகோரியும் ஊடக சந்திப்பு ஒன்று நடாத்தப்
பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f487113-c7d9-4d11-ba19-de0029964d2c/26-6a8e90233e920.webp' /></p><p> வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக
போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்.
</p><p>யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான
இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். </p><p>அதேபோல்
பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.</p><p>
பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக
பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு
வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்க விருக்கிறார்கள்.
அந்த போராட்டத்தில் அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T07:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிவாரணம் வழங்குவது நீதிக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை அல்ல! ஆளுநர் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-to-end-the-fight-for-justice-1787726320"></link>
            <id>https://ibctamil.com/article/action-to-end-the-fight-for-justice-1787726320</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நிவாரணம் வழங்குவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்கள்</h2><p> </p><p>இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee99cdb-b131-43cf-b8c2-aa48a56868b3/26-6a8e8aee12adc.webp' /></p><p>பல ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை முழுமையாக உணர்வதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன் வெளிப்பாடாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கக்கூடிய நிலையில், உண்மையைத் தேடும் விசாரணைகளுடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>உண்மை, நீதி, நிவாரணம், கண்ணியம் மற்றும் மீள்நிகழாமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்விடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T06:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொடூரம்: கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067"></link>
            <id>https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067</id>
            <summary type="text">கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம்&amp;nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>இந்த சம்பவம்&nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.</p><p></p><h2>கணவர் கைது</h2><p>
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a64116-e201-46bb-a64e-399fffc72e93/26-6a8e87f5d3285.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய 15 வயதான இந்திய இளம் சதுரங்க வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020</id>
            <summary type="text">ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
2,288 தரவரிசை புள்ளிகளைக்கொண்ட இந்திய வீரர் வந்தன், 2,823 புள்ளிகளுடன் போட்டியில் பங்கேற்ற கார்ல்சனை இரண்டாவது சுற்றில் இவ்வாறு தோற்கடித்தார்.</p><p>

26ஆவது நகர்வு வரை ஆட்டம் சமநிலையில் இருந்த நிலையில், கார்ல்சன் செய்த முக்கிய தவறை பயன்படுத்திக் கொண்ட வந்தன், தனது சாதகமான நிலையை வெற்றியாக மாற்றினார்.</p><p></p><h2>சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம்</h2><p>
</p><p>
இந்த வெற்றி குறித்து வந்தன் தெரிவிக்கும்போது, கார்ல்சனுக்கு எதிராக விளையாடுகையில் தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வழக்கமான அணுகுமுறையுடன் நிதானமாக விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c618468-af11-4420-9c69-0bd7a8ae0feb/26-6a8e852a153b2.webp' /></p><p>
</p><p>
வந்தனின் பெற்றோருக்குக்கூட அவர் கார்ல்சனுடன் விளையாடியது முதலில் தெரியவில்லை. போட்டி குறித்து குடும்பத்தினர் கேட்டபோதுதான் அவர் கார்ல்சனை தோற்கடித்த செய்தியை அறிந்துள்ளனர்.</p><p>

போட்டியில் வந்தன் மொத்தம் 3 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த நிலையில், நான்காவது சுற்றுக்குப் பின்னர் சோர்வாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
தற்போது தனது முக்கிய இலக்கு சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தை பெறுவதே என வந்தன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> எனினும், எதிர்காலத்தில் சதுரங்கத்தை முழுநேரத் தொழிலாகத் தொடர்வாரா என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
</p><p>
குறிப்பாக, கார்ல்சனின் 2,823 தரவரிசை புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2,288 தரவரிசை புள்ளிகளை கொண்டிருந்த 15 வயது வீரரின் இந்த வெற்றி, அவரது இளம் சதுரங்க வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை கைவிடத் தயார்! விளக்கம் வழங்கிய ஆளும் தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilanthi-kottahachchi-ready-to-resign-1787722943"></link>
            <id>https://ibctamil.com/article/nilanthi-kottahachchi-ready-to-resign-1787722943</id>
            <summary type="text">தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மக்களின் பிரச்சினைகள்</h2><p>
</p><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd5988c-235e-4eb4-9cef-ba62e57be772/26-6a8e7fb098501.webp' /></p><p>“ 2029ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை இலக்காகக் கொண்டு செயற்படும் சிலர் உள்ளனர். அவ்வாறானவர்கள் மிகவும் சிரமப்பட்டு மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் இயக்கங்களை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.</p><p>தற்போதைய ஜனாதிபதி கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கிராமத்திற்கு வந்தவர் அல்ல. தம்புத்தேகம ரம்பண்டாவின் மகனாக, மண்ணில் காலூன்றி, மண்ணின் வாசனையை அறிந்த தலைவராக அவர் இருக்கின்றார்.</p><p>நாங்கள் மீண்டும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து மண்ணுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எப்போதும் மக்களோடு, மண்ணோடுதான் இருக்கிறோம். </p><p>எனவே, 2029ஆம் ஆண்டை கனவு காண்பவர்களிடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், மிகவும் திட்டமிட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து இந்தப் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T05:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் பெற்றோல் மற்றும் எரிவாயு - அமைச்சர் வெளியிட்ட ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-offers-4-blocks-in-mannar-basin-for-oil-and-gas-1787720329"></link>
            <id>https://ibctamil.com/article/sl-offers-4-blocks-in-mannar-basin-for-oil-and-gas-1787720329</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>அதற்காக&nbsp;இலங்கை தனது வடமேற்கு மன்னார் படுகையில் உள்ள நான்கு கடலோரத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்வதற்காக வழங்கியுள்ளது.</p><p>இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fa031f-1d6d-4a64-905d-c02dc9de29a8/26-6a8e79983364e.webp' /></p><p>அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும்.

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது.</p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பிரச்சினைக்கு தீர்வாக அமையும்&nbsp;</h2><p>

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>
மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5377b83c-10c1-423b-9334-70279b464b16/26-6a8e7998df8c7.webp' /></p><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

&nbsp;&nbsp;</p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271</id>
            <summary type="text">இந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்&amp;nbsp;இலங்கை அணியின் வீரர் சொனால் தினுஷ சதம் விளாசியுள்ளார்.இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்&nbsp;இலங்கை அணியின் வீரர் சொனால் தினுஷ சதம் விளாசியுள்ளார்.</p><p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.</p><p>இதன்படி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் 2 ஆவது போட்டியில்&nbsp;முதலில் களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 503 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.</p><p>இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.</p><p></p><h2>சொனால் தினுஷ சதம்</h2><p> </p><p>இதையடுத்து நேற்றும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d6fed3-c6a5-4b24-8eee-1380bf207f29/26-6a8e7cbe5a4c9.webp' /></p><p>இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் சதத்தை பதிவு செய்த தினுஷ, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதத்தை தனதாக்கியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p> 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இவ்வாறு தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். </p><p>இந்த போட்டியில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்களாக அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.</p><p>கடந்த 15ம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் இருந்து அழுகி வீங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-found-dead-under-suspicious-in-hotel-1787713440"></link>
            <id>https://ibctamil.com/article/man-found-dead-under-suspicious-in-hotel-1787713440</id>
            <summary type="text">விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.</p><p></p><h2>அதிக துர்நாற்றம் வீசியது&nbsp;</h2><p>
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192dd370-a142-4e0b-ac09-51fc0edf76d9/26-6a8e6197524af.webp' /></p><p>இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
</p><p>
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-illicit-liquor-in-kiribathgoda-1787716702"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-illicit-liquor-in-kiribathgoda-1787716702</id>
            <summary type="text">கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Cent...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிபத்கொடை காவல் பிரிவிற்குட்பட்ட ஈரியவெட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (Walana Central Anti-Corruption Unit) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>காவல்துறையினருக்கு நேற்று (25.08.2026) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத மது</h2><p>
</p><p>காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கிரிபத்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78d8c182-b55b-4258-8d70-befca8bf8871/26-6a8e70a76c5dc.webp' /></p><p>காவல்துறை விசாரணையின்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவராவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சம்பவம் தொடர்பாகக் கிரிபத்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:51:59+00:00</updated>
        </entry>
    </feed>
