<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T16:38:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078"></link>
            <id>https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.</p><p>

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு</h2><p>அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c297b2-0c45-400d-895f-73b6631763c4/26-6a9301887510a.webp' /></p><p>
</p><p>
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார்.</p><p>
அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-freezes-rs-6-000m-worth-illegal-assets-1788003954"></link>
            <id>https://ibctamil.com/article/sl-freezes-rs-6-000m-worth-illegal-assets-1788003954</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
</p><p>2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் </h2><p>இவர்களையும் உள்ளடக்கி திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3856d84-3e36-4304-8291-66f2fc9c0d31/26-6a92ccefc8016.webp' /></p><p>

அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூபாய் 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்யா அதிரடி தாக்குதல்: கிடங்கில் பயங்கர வெடிப்பு - 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
கெய்வ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமுர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இராணுவ ஆயுதங்கள்</h2><p>குறித்த அறிக்கையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அறிக்கையில் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f9a375-fb33-47cf-a3bc-019bcd2a83be/26-6a92c1fb7be23.webp' /></p><p>இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வெடிமருந்துகளைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ட்ரோன் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் இராணுவ ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கையே தங்களது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இவ்வாறு புச்சா மாவட்டத்தில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் அமைந்திருந்த கிடங்கு மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறி அப்பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் வீதித் தடையை மீறி சென்ற வாகனம்: துப்பாக்கி சூட்டில் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி - இளம் பெண் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161"></link>
            <id>https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161</id>
            <summary type="text">கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (29-08-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள காவல் வீதித் தடையை மீறி செல்ல வாகனம் ஒன்று முற்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, குறித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d5527b-de96-4718-aaa9-b49118bb1b45/26-6a92e10d343ca.webp' /></p><p>இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக இறைச்சியாக்க தாயார் நிலையில் இருந்த மாடுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன் 58&nbsp;கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது</p><p>குறித்த சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த குற்றத்தில் நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மாடுகள் இறைச்சி</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (29-08-2026) குறித்த இடத்தினை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
</p><p>
அதன் போது மூன்று பசு மாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக
கட்டப்பட்டிருந்த நிலையிலும் ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ
இறைச்சியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ba3306-1388-454e-9f64-a7ce491dcf30/26-6a92d982022b9.webp' /></p><p> அத்துடன் அங்கிருந்த 43 வயதான நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் கைது அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது
தொடர்பிலும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[LCW3R6Fஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்காடு சவுக்கங்காட்டில் தொடரும் தீ : உலங்குவானூர்தி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/helicopter-operation-to-control-fire-in-forest-1788002140"></link>
            <id>https://ibctamil.com/article/helicopter-operation-to-control-fire-in-forest-1788002140</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.</p><p>

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தநிலையில், மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>தேவையான நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ
மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95216d1-154c-46c6-bdbf-d21580fbf63d/26-6a92c26d715a3.webp' /></p><p>
</p><p>
மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினதும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை
முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/discussion-on-lrc-land-release-in-mannar-1788001080"></link>
            <id>https://ibctamil.com/article/discussion-on-lrc-land-release-in-mannar-1788001080</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள
காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.இதன்போது பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள
காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>இதன்போது பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் சொந்தமானதாக காணப்படும்&nbsp;காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28) மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>&nbsp;</p><h2>கையகப்படுத்தப்பட்டுள்ள&nbsp;காணிகள்</h2><p>அத்துடன் பொதுமக்களுக்கும், மத ஸ்தலங்களுக்கும் சொந்தமான காணிகள் மற்றும்
நிலங்கள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>மேலும் சோழமண்டல குளம் பகுதியில் உள்ள காணிகளை பயனாளிகளுக்கு வழங்குவது,
சாளம்பன் – நெடுங்குளம் பகுதியில் பயனாளிகளுக்கான காணி வழங்கல், தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cecaaf0-e1e6-48b1-8da0-c19c0e1f4b94/26-6a92bd6a1aa55.webp' /></p><p>
மேலும், மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான
காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அளவீட்டுத் திட்டங்கள்
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும்
கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் , காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-not-invited-to-the-missing-persons-conference-1787998970"></link>
            <id>https://ibctamil.com/article/itak-not-invited-to-the-missing-persons-conference-1787998970</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பும் அழைப்பு விடுக்கவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று (28) வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதனால் கட்சி சார்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரிந்து நின்று போட்டியாகச் செயல்பட வேண்டாம்</h2><p>அந்த கடிதத்தில், ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p> 

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46382a7b-440b-44f3-9523-ebcd33435019/26-6a92b957186fe.webp' /></p><p> </p><p>

இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. 

ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. </p><p>

எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ள தடையில்லை என்றாலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகையை நிராகரித்தது நேபாள அரசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809</id>
            <summary type="text">இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச நிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. </p><p>இருப்பினும், சர்வதேச நிதி உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிட நேபாள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டு மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சகம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மீட்புக் குழுக்கள்&nbsp;</h2><p>2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் போது 34 நாடுகளைச் சேர்ந்த 76 இற்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்திற்கு வந்தன. </p><p>இதனால் விமான நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வெவ்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய குழப்பமும் முரண்பாடுகளும் உருவாயின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3924154c-454c-4309-acc3-b4080a3b11ac/26-6a92b388b3bc9.webp' /></p><p>அந்த அனுபவத்தை மனதில் கொண்டே இம்முறை உள்நாட்டுப் படைகளை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>வெளிநாட்டு உதவிகள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பிரதமரின் நிவாரண நிதி என்ற ஒற்றைச் சாளர முறைமை மூலமாக மட்டுமே நிதி உதவிகளைப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>சுரங்கப்பாதை மீட்பு, தற்காலிக பாலங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற விசேட தொழில்நுட்ப உதவிகளுக்கு மட்டும் இந்தியாவிடமிருந்து நேபாளம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T10:38:09+00:00</updated>
        </entry>
    </feed>
