<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-12T23:13:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-statue-for-sambanthan-in-public-1783896338"></link>
            <id>https://ibctamil.com/article/no-statue-for-sambanthan-in-public-1783896338</id>
            <summary type="text">இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது எனவும் கிழக்கு
மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

 ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத செயற்பாடுகள்</h2><p>இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து
செயல்பட்டுக் கொண்ட நிலையில் நான் வெளிநாடு சென்ற நிலையில் எனக்கு
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சுமார் 6 மாதகாலம் கட்சி வேலைகள்
தொடர்ந்து செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.</p><p>

இந்த இடைவெளி ஏற்பட்டது
இருந்த போதும் கட்சி வேலைத்திட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29888dd6-c35b-4145-85f2-3dd873a92b91/26-6a541c46a5e94.webp' /></p><p>

இருந்தபோதும் எங்களின் நிகழ்ச்சி நிரலில் இந்த தமிழரசு கட்சியை கிழக்கு மண்ணில்
இருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்று கருத்துக்கும் இடம் இல்லை
சிலருக்கு இது ஏளனமாக இருக்கும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.</p><p>

கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகள் அதற்கான காரணங்களையும் மிக விரைவில் இந்த அரசாங்கம் கண்டறிய
வேண்டும் என்பதுடன் அந்த குற்றத்தை செய்த குற்ற வாளிகளுக்கான தண்டனையை
வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.</p><p>
</p><p></p><h2>குற்றச் செயல்கள்</h2><p>அதே நேரத்தில் இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காது
இருப்பதற்கான ஒரு நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்றோம்.</p><p>

அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a707cdb0-429f-4fd3-8256-0222d335a543/26-6a541c460324b.webp' /></p><p> 

எனவே
அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும் பொது
இடத்தில் அமைக்க கூடாது.</p><p>

இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை
அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. 

அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும்
பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை
அகற்றுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்வோம்.</p><p>

அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை
நாங்கள் அறிவிக்கின்றோம். </p><p>

இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் ஹர்ஷனவுக்கு எதிரான பிரேரணை வீண்! பத்தரமுல்ல சீலரத்ன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-futile-says-seelarathna-1783889640"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-futile-says-seelarathna-1783889640</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று (12-07-2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது.</p><p> </p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும்.</p><p> எனவே,
இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a769297c-42a6-4484-b4bb-4ef72c23f413/26-6a540a04df840.webp' /></p><p>

நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப்
பக்குவமும் முதிர்ச்சியும் அவசியம்.
</p><p>
அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார்.
</p><p></p><h2>மருத்துவப் புனர்வாழ்வு&nbsp;</h2><p>நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது.&nbsp;&nbsp;</p><p> 

நீதி
அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbbddc2-fc45-4e29-bbf1-23672cc15cf0/26-6a540a05c73b1.webp' /></p><p> </p><p>மாறாக சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப்
புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்.</p><p>
நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின்
நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது.</p><p> 

கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின்
மகனாக இருந்தும் அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத்
தேடித் தருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:44:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் தாய்லாந்தை உலுக்கிய பாரிய தீ விபத்து...! 27 பலி - தொடரும் தேடுதல் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27-killed-in-thailand-bar-fire-accident-1783887053"></link>
            <id>https://ibctamil.com/article/27-killed-in-thailand-bar-fire-accident-1783887053</id>
            <summary type="text">தாய்லாந்தில் தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்காக் (Bangkok) நகரில் உள்ள மதுபானக் கடை (Bar) ஒன்றிலேயே இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பேங்காக் (Bangkok) நகரில் உள்ள மதுபானக் கடை (Bar) ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
நள்ளிரவு கடந்த உடனேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>தீயணைப்புப் படையினர்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்த போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்த கட்டடத்தின் முதன்மை வாயில் வழியாக அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43669a45-d58f-4c37-b378-d19b168f7656/26-6a53f4cea7d1f.webp' /></p><p> 

இவ்விபத்து தொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p>

தீ விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் (Anutin Charnvirakul) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><h2>பலர் சிகிச்சை</h2><p>மேலும் தெரிவித்த அவர், இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியதுடன் காயமடைந்த மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அத்துடன் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4008d9-747d-493c-9dcc-44cb859ce313/26-6a53f4cf57047.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் இக்கோர விபத்தின் பின்னர் அங்கு வந்திருந்த பலரைக் காணவில்லை எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T20:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-stronger-than-us-for-now-analyst-says-1783884560"></link>
            <id>https://ibctamil.com/article/iran-stronger-than-us-for-now-analyst-says-1783884560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வாளர் வொல்ஃப்காங் புஸ்ஸாய் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்குத்தான் தற்போது
சாதகமான சூழல் இருப்பதாக ஈரான் கருதுகிறது.</p><p>
</p><p></p><h2>தொழில்நுட்ப நிலை</h2><p>இராணுவ ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த தொழில்நுட்ப
நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
</p><p>
இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காவிடம் பல
வழிகள் இருப்பதால் அதுவே வலுவான மூலோபாய நிலையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca7d9bd6-861d-4276-ba76-4b41302876c9/26-6a53ef1b41b19.webp' /></p><p>

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அளவில்
செல்வாக்குமிக்க நாடுகள் தலையிட வேண்டியது அவசியம்.</p><p>

இது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு காரியம்.
</p><p>
ஈரானை நல்வழிப்படுத்த வெளியில்
இருந்து ஒரு பரந்த அளவிலான அணுகுமுறை தேவைப்படுகிறது.</p><p>

இதில் அரபு வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் குறிப்பாக ஈரானின் மிகப்பெரிய
பொருளாதார வாடிக்கையாளர்களாக இருக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்
தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்கள்! ஜெர்மனியின் பிரம்மாண்ட இராணுவ ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/germany-funds-50-000-drones-for-ukraine-1783872031"></link>
            <id>https://ibctamil.com/article/germany-funds-50-000-drones-for-ukraine-1783872031</id>
            <summary type="text">உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன்
கொள்முதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 90 மில்லியன் யூரோக்கள் (103 மில்லியன்
டொலர்) ஆகும்.</p><p></p><h2>முன்னணி உற்பத்தியாளர்</h2><p> 

இதில் பயன்படுத்தப்படும் ஷ்ரைக் வகை ஃபர்ஸ்ட்-பர்சன்-வியூ (FPV) ட்ரோன்கள் உக்ரைனின் முன்னணி உற்பத்தியாளரான ஸ்கைஃபால் நிறுவனத்தால்
தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdff8dc-8671-4e0e-8c3f-9bfa09fcb3be/26-6a53c5d3ca8df.webp' /></p><p>

இந்த ட்ரோன்களில் அமெரிக்காவின் ஆட்டேரியன் பாதுகாப்பு தொழில்நுட்ப
நிறுவனத்தின் மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.
</p><p>
இது பறக்கும் இறுதி கட்டத்தில் நகரும் இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக்
கண்காணித்துத் தாக்கும் திறன் கொண்டது.</p><p>
</p><p></p><h2>நிர்வாக அதிகாரி&nbsp;</h2><p>ஆட்டேரியன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோரென்ஸ் மேயர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தின்படி சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைன் அரசாங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்டுவிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51372ea7-789d-4981-a0dd-7be3a5b89dc2/26-6a53c5d318dcd.webp' /></p><p> 

மீதமுள்ளவை இந்த ஆண்டிற்குள் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><p>இந்த ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் பங்களிப்பை ஸ்கைஃபால் நிறுவனம் உறுதிப்படுத்திய போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு காரணங்கள்</h2><p>இதேபோல் ஜெர்மனி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகங்களும் இது குறித்து
கருத்து தெரிவிக்கவில்லை.</p><p>

இதுமட்டுமின்றி பல்வேறு மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியுடன் இந்த ஆண்டு
உக்ரைனுக்கு மொத்தம் 1,00,000 ட்ரோன்களை வழங்க ஆட்டேரியன் நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e666b64-12b7-439b-8a1f-ee1d84c1d7ce/26-6a53c5d4822f9.webp' /></p><p>இதில் அமெரிக்க பென்டகனின் 50 மில்லியன் டொலர் ஒப்பந்தமும் அடங்கும்.</p><p>
மேலும், பிரித்தானியாவும் இந்த ஆண்டு உக்ரைனுக்கு 1,50,000 ட்ரோன்களை
வழங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமரை பதவி நீக்க ஸெலென்ஸ்கி முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskyy-to-replace-ukraine-prime-minister-1783876382"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskyy-to-replace-ukraine-prime-minister-1783876382</id>
            <summary type="text">உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்
ஸெலென்ஸ்கி முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்
ஸெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.
</p><p>
நாட்டின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை செயல்படுத்துவதற்காக இந்த
அமைச்சரவை மாற்றம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
</p><p></p><h2>தெளிவான நிலை</h2><p>
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு
எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46bd01cf-24d7-484f-aa21-5de2043d59ec/26-6a53d5cb96f6c.webp' /></p><p>
</p><p>
உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு
புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்" என
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான
உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பெரிய அளவு</h2><p>உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும்
கலைக்கப்பட வேண்டும் என்பதால் உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e2a8b-bab3-46c3-a4e8-15bec1725ca1/26-6a53d5cadb3b5.webp' /></p><p>புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ
ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் நாஃப்டோகாஸ் (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின்
பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட அமுலாக்க முகமைகளின் தலைவர்களும்
மாற்றப்பட உள்ளதாக ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:14:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971"></link>
            <id>https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அமெரிக்காவின் ஹைமார்ஸ் (HIMARS) ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களே இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>குவைத்தின் பாதுகாப்பு&nbsp;</h2><p>சில மணிநேரங்களுக்கு முன்னர் குவைத்தின் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் இது குறித்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec37aab-6d7e-4811-92e4-5efe8026189f/26-6a53e71282da3.webp' /></p><p>அதில் நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் தாக்குதல் காரணமாக மூன்று எல்லை மையங்களும் கடல் கடந்த எண்ணெய் அகழ்வாராய்ச்சி தளம் (Offshore oil drilling platform) ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரவும் சூழல் : இலங்கையின் பிரதான சிறுவர் மருத்துவமனை மீது வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lady-ridgeway-children-s-hospital-dengue-breeding-1783880601"></link>
            <id>https://ibctamil.com/article/lady-ridgeway-children-s-hospital-dengue-breeding-1783880601</id>
            <summary type="text">இலங்கையின் பிரதான சிறுவர் மருத்துவமனையான, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வளாகத்தில் பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரதான சிறுவர் மருத்துவமனையான, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வளாகத்தில் பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகிறது.</p><p>சுகாதார அலுவலகத்தின் சுத்தமான இலங்கை கொசு ஒழிப்புத் திட்ட அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை (10ஆம் திகதி) மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த இடங்களைக் கண்டறிந்தனர். </p><h2>பன்னிரண்டு இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறிவு</h2><p>குறிப்பாக, பன்னிரண்டு இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டன.

மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திலும், மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள குப்பை அகற்றும் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d427ce2-881d-463f-a026-bd594a0e0d66/26-6a53db9a8ac18.webp' /></p><p>
</p><p>


கடந்த சில நாட்களில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுமார் 50-75 டெங்கு பாதித்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 1,200 குழந்தைகள் மருத்துவமனைக்குள் மற்ற நோய்களுக்காக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கை</h2><p>இந்த மருத்துவமனை வளாகத்தில் இதற்கு முன்பும் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டு, வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை, மேற்கு மாகாணத்தில் மட்டும் முப்பத்தைந்தாயிரம் டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95f8d24-e27d-4aed-98f4-fc6013a60398/26-6a53db9b39c56.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T18:23:29+00:00</updated>
        </entry>
    </feed>
