<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-19T06:28:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-anti-cultural-events-at-nallur-temple-1784438912"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-anti-cultural-events-at-nallur-temple-1784438912</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலய&nbsp;வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று (18) யாழ் மாநகர முதல்வர்&nbsp; தலைமையில் யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.</p><p></p><h2>ஐந்து இறுக்கமான தடைகள்</h2><p>இங்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,&nbsp;கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இம்முறை ஐந்து இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f649cb-7e16-4b27-b753-18e03497917a/26-6a5c6a9724de9.webp' /></p><p>
</p><p>

1.உற்சவ காலங்களில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடுதல், ஆடல் பாடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை மீறுவோரின் ஒலி, ஒளி சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
</p><p>
2. உற்சவ காலத்தில் தெய்வீக நிகழ்வுகள் சாராத காட்சிகள், காணொளிகள், விளம்பரங்களை திரையிடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>
3. உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் படப்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் சமய பண்பாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தவிர தனிநபர்களின் புகைப்படங்களை அல்லது காணொளிகளை பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">ட்ரோன் கமரா பறக்கவிடுதல்&nbsp;&nbsp;</span></h2><p>4. ஆலய சுற்றாடலில் ட்ரோன் கமரா பறக்க விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் வர்த்தமானி அறிவித்தலின் மூலமும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd30913c-24bc-4c9a-8eac-ef8ae69372b2/26-6a5c6a97cb6d0.webp' /></p><p>

5. சிவப்பு வெள்ளை நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள உற்சவ பகுதிக்குள் வியாபாரம் செய்தல் மற்றும் யாசகம் பெறுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறுவோரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.” என தெரிவித்தார்.</p><p>
</p><p>இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினர், யாழ் மாநகர சபை ஆணையாளர்,
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல்! அரசாங்கத்தின் துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-purchases-tons-of-paddy-from-farmers-1784440074"></link>
            <id>https://ibctamil.com/article/govt-purchases-tons-of-paddy-from-farmers-1784440074</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 13 முதல் ஜூலை 17 வரையான நான்கு நாட்களுக்குள் இந்த மொத்த அளவும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். </p><p>

இதில் அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொள்முதல் விலை&nbsp;</h2><p>
</p><p>
இந்த சிறுபோக நெல் கொள்முதல் திட்டமானது கடந்த ஜூலை 13 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாயிகளின் வசதிக்காக பிரதான அறுவடைப் பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை திறந்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34434b7-0991-46aa-9e5b-79ba759ae239/26-6a5c68f5d3157.webp' /></p><p> 

முன்னதாக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவாத விலையின் கீழ், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
</p><p>
அங்கீகரிக்கப்பட்ட இந்த விலை திட்டத்தின் கீழ், தற்போது நாடு முழுவதும் உள்ள 143 நெல் கொள்முதல் மையங்களில் இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-quantity-drugs-in-kiribathgoda-1784434700"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-quantity-drugs-in-kiribathgoda-1784434700</id>
            <summary type="text">கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.கைது செய்யபட்ட நபர்&amp;nbsp; கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யபட்ட நபர்&nbsp; கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர்&nbsp;கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கைது செய்யபட்ட நபர்</h2><p>
சந்தேக நபரிடமிருந்து 6 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 2 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின், 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73757a5a-3ac3-498a-91f3-4eb3486a87c5/26-6a5c5e6b39fd0.webp' /></p><p>
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-s-signature-is-worthless-mojtaba-khamenei-1784436370"></link>
            <id>https://ibctamil.com/article/trump-s-signature-is-worthless-mojtaba-khamenei-1784436370</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>மொஜ்தபா கமேனி நேற்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>போர்நிறுத்த உடன்படிக்கை</h2><p>அத்துடன் ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளிடமிருந்து அமெரிக்கா மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக்கொள்ளும் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6dbcf27-2fba-464b-bedb-f12a563d9311/26-6a5c5cfc1b980.webp' /></p><p>
</p><p>
 

போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததை அடுத்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.</p><p>இந்த நிலையில்&nbsp;பாலங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, அமெரிக்கா இந்த வாரம் ஈரான் மீதான தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. </p><p>இதற்குப் பதிலடியாக, ஈரான் குவைத்தில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-who-promoted-c-d-wickramaratne-1784436696"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-who-promoted-c-d-wickramaratne-1784436696</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>

இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டிலும் அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய மறைகரம் குறித்து ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, சி.டி. விக்ரமரத்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.</p><p></p><h2>விசாரணைகள்</h2><p>

இதனைதொடர்ந்து, அவர் 2020 நவம்பர் 25 அன்று காவல்துறை மா அதிபராக உறுதிப்படுத்தப்பட்டு, 2023 நவம்பர் 25 வரை இலங்கை காவல்துறையின் 35வது காவல்துறை மா அதிபாக பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f36b4c71-cde9-4549-a9d3-9921c8fe2744/26-6a5c5a6c6d056.webp' /></p><p>

இவ்வாறானதொருபின்னணியில், அவர் 2023 மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில், அக்காலத்தில் இருந்த அதிகாரிகள் பலமுறை அவரது சேவையை பல மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இது அக்காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதன்படி, அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய முக்கிய புள்ளிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T05:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி DCC கூட்ட விவகாரம் : ரஜீவன் எம்.பியின் கருத்தால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-chandrasekar-argument-in-kilinochchi-1784433526"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-chandrasekar-argument-in-kilinochchi-1784433526</id>
            <summary type="text">கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் தனக்கும் இடையேயோ, அல்லது தனக்கும் தங்கள்
கட்சிக்குமிடையேயோ எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் தான் கூறிய கருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் தனக்கும் இடையேயோ, அல்லது தனக்கும் தங்கள்
கட்சிக்குமிடையேயோ எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் தான் கூறிய கருத்து
திரிவுபடுத்தப்பட்டு வெளியே செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்தால் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று (18) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>மேலும் அந்த அறிக்கையில்,

என்னால் கூறப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்டு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும்
பரவி வரும் செய்திகள் தொடர்பாக பின்வரும் விளக்கத்தை வழங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p><b>
1. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக
</b></p><p>
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூட்டத்திலிருந்து
வெளியேற்றப்பட்டமை குறித்து நான் எனது வருத்தத்தை பதிவு செய்திருந்தேன்.
</p><p>மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் சார்பில் கேள்விகளை முன்வைக்கும் போது,
அதற்கான உரிய விளக்கங்களையும் பதில்களையும் அரச அதிகாரிகள் வழங்குவது
நல்லாட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையாகும் என்பதே எனது
நிலைப்பாடாகும்.</p><p><b>

2. எனது முகநூல் பதிவு தொடர்பான தவறான விளக்கங்கள்
</b></p><p>
எனது முகநூல் பதிவை அடிப்படையாகக் கொண்டு, எனக்கும் நான்
பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடு
இருப்பதாகவும்,&nbsp; கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரை நான் விமர்சித்ததாகவும் சிலர் பரப்பி வரும் செய்திகள்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.</p><p>

நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறான கருத்தை வெளிடவில்லை. அதேபோல்,
அமைச்சருடனோ அல்லது எனது கட்சியுடனோ எந்தவித கருத்து முரண்பாடோ அல்லது அரசியல்
பிரச்சினையோ இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd636ff-fd6d-4ed4-aabc-944e1b7e80eb/26-6a5c5277c9d29.webp' /></p><p>
</p><p><b>
3. கூட்ட ஒழுங்கும் மக்கள் நலனும்</b></p><p>
பொதுவாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு போன்ற முக்கியமான
கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ கூட்டத்தை இடைநடுவில்
விட்டு வெளியேறுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பதே எனது கருத்தாகும்.
</p><p>
குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் மூத்த அதிகாரிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த நிலையில், மாவட்ட அபிவிருத்தி
தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் அனுமதிகள் அன்றைய தினம்
பரிசீலிக்கப்படாமல் போனமை குறித்து நான் கவலை வெளியிட்டிருந்தேன்.
</p><p><b>
4. ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் அவசியம்
</b></p><p>
மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கேள்விகள் தொடர்பான விடயங்கள் இயன்றவரை
முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டால், தேவையான
தரவுகளுடன் முழுமையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவதற்கு அது உதவியாக
இருக்கும் என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.</p><p> இது கேள்வி கேட்கும்
உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல; மாறாக, பயனுள்ள நிர்வாக கலந்துரையாடலை
உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறை ஆலோசனையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/268c6783-e19f-4bd3-92eb-e5a34915b284/26-6a5c5278948fc.webp' /></p><p>
</p><p><b>
5. சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்</b></p><p>

கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளால் உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான
இடங்களில் சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நான்
கேட்டுக்கொண்டிருந்தேன்.
</p><p><b>
6. DCC கூட்டங்கள் விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற வேண்டு</b>ம்</p><p>

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள், நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு
அமைவாக நடைபெறுவது மிகவும் அவசியமானது. </p><p>மாவட்ட அபிவிருத்தி பணிகள் தடையின்றி
முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரச
அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடனும்
ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
</p><p>
மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்தி,
பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் செயற்படுவது நம் அனைவரின் கடமையாகும்“ என
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f04d59fb-56b7-4a7e-af01-1f88d5327823/26-6a5c52794727c.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T04:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருப்பி அனுப்பப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/election-commission-money-diverted-pc-election-1784432854"></link>
            <id>https://ibctamil.com/article/election-commission-money-diverted-pc-election-1784432854</id>
            <summary type="text">2025 மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாததன் காரணமாக குறித்த நிதி இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மொத்த நிதி ஒதுக்கீடு</h2><p>
</p><p>
2025ஆம் ஆண்டுக்கான செலவின மதிப்பீட்டின்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு மொத்தமாக 21,487 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதில் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களுக்காக மாத்திரம் 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5b11f9-3116-4310-bea4-718d23594eda/26-6a5c4d3269554.webp' /></p><p>
</p><p>
இதன்படி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரூ. 12,487 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது, அதில் ரூ. 12,278 மில்லியன் தொடர் செலவினத்திற்காகவும், ரூ. 209 மில்லியன் மூலதனச் செலவினத்திற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T04:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ird-issued-warning-to-those-who-do-not-pay-taxes-1784431451"></link>
            <id>https://ibctamil.com/article/ird-issued-warning-to-those-who-do-not-pay-taxes-1784431451</id>
            <summary type="text">வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, வரி செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டுத் தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
2026 ஜூன் 3 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின்கீழ், உரிய கால அவகாசத்திற்குள் இணங்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிக்கப்படவுள்ள தண்டனை</h2><p>
</p><p>அதற்கமைய, ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e739bb0-8265-4512-a309-69e2c33905c3/26-6a5c486735d04.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்படும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து, குறைபாடுகளைச் சரிசெய்ய வரி செலுத்துபவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
இந்த 30 நாட்களுக்குள் இணங்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும் எனவும் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
</p><p>
இந்தச் சட்டங்கள் வரி செலுத்தாமல் இருப்போரை குறிவைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ஒத்துழைப்பு வழங்கும் குடிமக்களை இது பாதிக்காது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T03:53:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் மானியம் மீண்டும் நடைமுறை! அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-reintroduce-fuel-subsidy-1784431137"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-reintroduce-fuel-subsidy-1784431137</id>
            <summary type="text">வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் மானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அண்மையில் வளைகுடாப் பகுதியில் நிலைமை சீரடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த எரிபொருள் மானியத்தை, ஜூன் மாதத்தில் அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது.</p><p>

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரிப்பதால், அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>எரிபொருள் விலை</h2><p>
</p><p>
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தற்போதுள்ள எரிபொருள் விலையை மாற்றாமல், அதற்கான கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50360bc0-82bf-450c-8efe-ec0d71677303/26-6a5c46964af3d.webp' /></p><p>
</p><p>
முந்தைய மானியத் திட்டத்தின் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ. 100 மற்றும் ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ. 20 மானியம் வழங்கப்பட்டது, இதற்காக அரசு ரூ. 57 பில்லியன் ஒதுக்கியிருந்தது.</p><p>

இது தொடர்பாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ரஷ்யா நிறுவனங்கள்</h2><p>
</p><p>
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5328d79-0151-4215-8733-a01d628dd460/26-6a5c4696f0598.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், ரஷ்யாவின் அரசுடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்து, கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.
</p><p>
சந்தையில் ரஷ்ய நிறுவனங்களின் நுழைவு, போட்டியை அதிகரிப்பதோடு, உள்நாட்டு எரிபொருள் விலைகளை நிலையாகப் பராமரிக்கவும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T03:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையிலேயே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-open-fire-in-piliyandala-1784427651"></link>
            <id>https://ibctamil.com/article/police-open-fire-in-piliyandala-1784427651</id>
            <summary type="text">பிலியந்தலை - வீரசிங்க மாவத்த பகுதியில், சந்தேகத்திற்குரிய இரு நபர்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு ஒன்றை நடத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலியந்தலை - வீரசிங்க மாவத்த பகுதியில், சந்தேகத்திற்குரிய இரு நபர்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு ஒன்றை நடத்தியுள்ளனர்.</p><p>

குறித்த துப்பாக்கிச் சூடானது, இன்று(19) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>காவல்துறையினரின் தகவலின்படி, சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை நிறுத்தி சோதனையிட அதிகாரிகள் முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/015443a8-056d-4460-ac7b-cdf09caa4aec/26-6a5c380421498.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில்,&nbsp;இரண்டாவது சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்ய&nbsp;மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T02:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27age-man-found-dead-in-foul-smelling-house-1784420812"></link>
            <id>https://ibctamil.com/article/27age-man-found-dead-in-foul-smelling-house-1784420812</id>
            <summary type="text">யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.இது குறித்து தெரியவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp; குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம
உத்தியோகத்தர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் காவல்துறையினர் , பூட்டப்பட்டிருந்த
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.</p><p></p><h2>பியர் போத்தலும் -&nbsp; சிரிஞ்சும்</h2><p> </p><p>இதன்போது, 1997 ஆம்
ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcad534-6629-412a-be7a-57a15c1746ea/26-6a5c1a46bcc6d.webp' /></p><p>
சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும்
சிரிஞ்சும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளில்,, அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே
உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர்
சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினரால் தொடர்ந்து
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nJlIVJy5ugo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:54:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/serial-death-key-witnesses-to-corruption-and-fraud-1784422607"></link>
            <id>https://ibctamil.com/article/serial-death-key-witnesses-to-corruption-and-fraud-1784422607</id>
            <summary type="text">எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் பிணையில் வெளியில் உள்ளார்கள், பலர் வெகுவிரைவில் சிறை செல்வார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொள்ளவார்கள்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் பிணையில் வெளியில் உள்ளார்கள், பலர் வெகுவிரைவில் சிறை செல்வார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொள்ளவார்கள்&nbsp; என்று தெரியவில்லை என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நேற்று(18.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய சாட்சிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது கவலைக்குரியது.</p><p></p><h2>மர்மமான முறையில் உயிரிழப்பு&nbsp;</h2><p> </p><p>எயார் பஸ் கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவுக்கு சத்தியகடதாசி ஊடாக பலவிடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e423489-c64e-4eef-a6ae-50b0c5926e47/26-6a5c20d0d8ca9.webp' /></p><p>
</p><p>
எயார்பஸ் கொள்வனவு மோசடியில் தான் அப்போதைய ஜனாதிபதிக்கு தங்காலை கால்டன் இல்லத்தில் வைத்து இலஞ்ச தொகையை வழங்கியதாகவும்,பியங்கர ஜயரத்னவுக்கும் இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.</p><p>


தற்போது முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன.</p><p>

கடந்த கால படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில் அதனுடன் தொடர்புடைய பலர் அச்சமடைந்துள்ளனர்.</p><p>

எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியில் உள்ளார்கள். வெகுவிரைவில் சிறை செல்வார்கள்.</p><p>ராஜபக்ச குடும்பத்தின் சகலருக்கும் வழக்குகள் உள்ளன. அனைவரும் வரிசையாக வழக்கு விசாரணைகளுக்காக செல்கிறார்கள்” என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்தின் அலுவலகத்திற்கு முதன்முறையாக செல்லவுள்ள ரணில்! முக்கிய சந்திப்பில் நாமலும் இணையக்கூடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-to-visit-sajith-s-office-for-the-first-time-1784424142"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-to-visit-sajith-s-office-for-the-first-time-1784424142</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசின் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசின் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (23) கொழும்பு, சிறிமத் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.</p><p>இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>ஐக்கிய தேசியக் கட்சி - பொதுஜன பெரமுன</h2><p>சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவரது அலுவலகத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்தக் கூட்டத்தை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c4d91a-58dc-4474-a8fa-b66205d59a38/26-6a5c26d0012a3.webp' /></p><p>இதுதொடர்பாக நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையிலும் எதிர்க்கட்சித் தலைவரை தொடர்புகொண்டு கலந்துரையாடலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
தான் யால பகுதியில் இருப்பதால் எதிர்வரும் 23 ஆம் திகதியை கூட்டத்திற்காக ஒதுக்க முடியும் என சஜித் பிரேமதாச அறிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினம் கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ச நிச்சயமாக பங்கேற்கவுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர, எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAP</a>P இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:22:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 ஆண்டுகளின் பின்னர் கால்பந்து உலகக் கோப்பை வெற்றி மேடையில் இங்கிலாந்து அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-england-team-on-the-podium-vs-france-football-1784418632"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-england-team-on-the-podium-vs-france-football-1784418632</id>
            <summary type="text">1966-க்குப் பிறகு சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க&amp;nbsp; ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 3வது இடத்தை தனதாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1966-க்குப் பிறகு சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp; ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 3வது இடத்தை தனதாக்கியுள்ளது.</p><p>அமெரிக்காவின் மியாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, வெறும் மூன்று நிமிடங்களிலேயே இங்கிலாந்து&nbsp; முன்னிலை பெற்றது. </p><p>மீண்டும் 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சா மூலம் த்ரீ லயன்ஸ் அணி(இங்கிலாந்து ) தங்களது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The <a href="https://x.com/hashtag/ThreeLions?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ThreeLions</a>&#39; best-ever World Cup finish on foreign soil 👊 <a href="https://t.co/AUVdkZzAGB">pic.twitter.com/AUVdkZzAGB</a></p>&mdash; England (@England) <a href="https://x.com/England/status/2078616874087034930?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>நான்கு கோல்கள்&nbsp;</h2><p> </p><p>Defender வீரரான அவர், பந்தை தலையடியால் முட்டி கோலாக்கினார். 37-வது நிமிடத்தில்,&nbsp; இங்கிலாந்து தனது மூன்றாவது கோலை அடித்தது.&nbsp;&nbsp;</p><p>
முதல் பாதியின் கூடுதல் நேரத்தின் இறுதியில் சாகா மீண்டும் கோல் அடித்து தனது இரண்டாவது கோலைப் பூர்த்தி செய்தார்.</p><p>இங்கிலாந்து, பிரான்சின் தடுப்பாட்ட பலவீனங்களை பயன்படுத்திக்கொண்டு, இடைவேளையின்போதே நான்கு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இதில் சாகாவின் இரட்டைக் கோல்களே தனித்துவமான பங்களிப்பாக அமைந்தன.</p><p> </p><p>இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மிகவும் மேம்பட்டிருந்த பிரான்ஸ் அணிக்கு, 48-வது நிமிடத்தில் கைலியன் எம்பாப்பே துல்லியமாக கோல் அடித்து, புது நம்பிக்கையை அளித்தார்.</p><p></p><h2>மெஸ்ஸியை பின்தற்றிய&nbsp;எம்பாப்பே</h2><p>
</p><p>மாற்று வீரராகக் களமிறங்கிய பிராட்லி பார்கோலா, 66-வது நிமிடத்தில், மற்றொரு மிகச்சிறப்பான ஆட்டத்தால் பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d1ec97-8ef2-49ec-88c9-54aad5755529/26-6a5c13c3c6e1b.webp' /></p><p>பின்னர், பிரான்ஸ் கேப்டன் திரும்பி, பந்தை மிகத் துல்லியமாகக் கோலின் கீழ் மூலைக்குள் அடித்தார். இந்த கோல், கோல்டன் பூட் விருதிற்கான போட்டியில் எம்பாப்பேவை லியோனல் மெஸ்ஸியை விட இரண்டு கோல்கள் முன்னிலைப்படுத்தியதுடன், இத்தொடரின் எல்லாக் காலத்திற்குமான கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெ ஒரு கோல் மெஸ்ஸியை விட முன்னிலை பெற வைத்தது.
</p><p>
பிரான்ஸ் இங்கிலாந்தை நெருங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றிய நிலையில், 87-வது நிமிடத்தில் பெனால்டியை சாகா கோலாக மாற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.</p><p>

இருப்பினும், மீண்டும் ஒருமுறை, பிரான்ஸ் அணி முயற்சியைக் கைவிடவில்லை. ஆட்டத்தின் 90+6-வது நிமிடத்தில்&nbsp; டெம்பலே கோல் அடித்து, பிரான்ஸ் அணிக்கு வெற்றிபெற ஒரு வாய்ப்பை வழங்கினார்.</p><p></p><h2>நிறைவு பெற்ற பயணம்</h2><p>
</p><p>
பிரான்ஸ் அணி சமன் செய்வதற்காக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், ஜூட் பெல்லிங்ஹாம் கோலாக மாற்றி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="fr" dir="ltr">Fin de notre Coupe du Monde. Merci pour toutes les émotions 🙏<br><br>Tout un pays a vibré à vos côtés. Vous reviendrez plus forts, et nous serons toujours là 🇫🇷💙<a href="https://x.com/hashtag/FIFAWorldCup?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FIFAWorldCup</a> <a href="https://t.co/TAfoxa2sSB">pic.twitter.com/TAfoxa2sSB</a></p>&mdash; Equipe de France ⭐⭐ (@equipedefrance) <a href="https://x.com/equipedefrance/status/2078623998565380105?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இது ஆட்டத்தின் 10வது கோலாகவும், இங்கிலாந்தின் ஆறாவது கோலாகவும் அமைந்தது.
</p><p>
2026 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இது 1966-ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு அவர் பெற்ற சிறந்த நிலை இதுவாகும்</p><p> அதே நேரத்தில், பிரான்ஸ் நான்காவது இடத்துடன் இந்தத் தொடரில் தனது பயணத்தை நிறைவு செய்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T00:30:18+00:00</updated>
        </entry>
    </feed>
