<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-15T17:32:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பார்சல்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drugs-thrown-into-galle-prison-hunt-for-duo-1784130715"></link>
            <id>https://ibctamil.com/article/drugs-thrown-into-galle-prison-hunt-for-duo-1784130715</id>
            <summary type="text">காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் காலி சிறைச்சாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தநிலையில் காலி சிறைச்சாலையின் பின்புறம் அமைந்துள்ள காலி தொடருந்து நிலைய வளாகத்திற்கு (Galle Railway Yard) அருகில் இருந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.</p><p>

காவல்துறை விசேட பணியகத்திற்கு (Police Special Bureau) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறை தலைமையகத்துடன் இணைந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>தடைசெய்யப்பட்ட பொருட்கள்</h2><p>அந்த இரு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலை மீட்ட காவல்துறையினர் அதனைப் பரிசோதித்த போது அதில் ஐஸ் (Ice) என அழைக்கப்படும் 2,180 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள், புகையிலை மற்றும் மொத்தம் 49 சிகரெட் லைட்டர்கள் (Cigarette lighters) இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af5e590-bca7-4ec7-babd-8688f325f67f/26-6a57bf478851d.webp' /></p><p>சிறைச்சாலை கைதிகளை சென்றடையும் நோக்கில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட இந்த பார்சல் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறை தலைமையகத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணி மோசடி :முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mervyn-prasanna-ranatunga-indicted-over-alleged-1784132595"></link>
            <id>https://ibctamil.com/article/mervyn-prasanna-ranatunga-indicted-over-alleged-1784132595</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மேலும் நான்கு பேர் மீது சட்டமா அதிபரால் புதன்கிழமை (15) அன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>கம்பகா உயர் நீதிமன்ற நீதிபதி நயன செனவிரத்னவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><h2>வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை&nbsp;</h2><p>
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்ட ஆலோசகர் சமதாரி பியசேன, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் குற்றப்பத்திரிகைகளை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a38ceb9-8040-4225-8dcc-78fa02bc0bd4/26-6a57b97d3f8bf.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நவீன் வீரகோன், மில் ராய் பெரேரா, ஜயந்த கப்ரால் மற்றும் சரத் எதிரிசிங்க.
</p><p>
கிரிபத்கொடவில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க குற்றம் சாட்டப்பட்டவர் முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இதுவாகும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T16:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன...! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-happened-in-negombo-prison-1784130604"></link>
            <id>https://ibctamil.com/article/what-happened-in-negombo-prison-1784130604</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே கலவரம் அல்ல. மாறாக அது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே கலவரம் அல்ல. மாறாக அது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் ,வாழ்விடங்கள் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டன.அவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். சுமார் 5000 பேர் கொல்லப்பட்டார்கள்.</p><p>சிறையில் குட்டிமணி,தங்கத்துரை உட்பட்டோர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு பல சாட்சிகள் உண்டு.அந்த சம்பவத்துடன் தற்போது நீர்கொழும்பு சிறையில் நடந்த சம்பவத்தை ஒப்பிடமுடியாது.
</p><p>
இவ்வாறு தெரிவித்தார் மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்.

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் "களம்" நிகழ்ச்சியில், அன்றைய காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளை வரலாற்று சான்றுகளுடன் அவர் விவரிக்கும் தகவல்கள் காணொளியில்</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WnyVEz62VZo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T16:05:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடும் அச்சுறுத்தல்: ஹோர்முஸை தவிர பிற விநியோகப்பாதைகளும் மூடப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-threatens-to-block-more-trade-routes-1784126933"></link>
            <id>https://ibctamil.com/article/iran-threatens-to-block-more-trade-routes-1784126933</id>
            <summary type="text">அமெரிக்கா தனது &quot;ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை&quot; நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தனது "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை" நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், பிராந்தியத்தின் பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விநியோகப்பாதைகளையும் மூடிவிடுவோம் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
</p><p>

அமெரிக்காவின் முற்றுகை மீண்டும் விதிக்கப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்குப் பயன்படும் மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிப் பாதைகள் மூடப்படும் என எதிர்பார்க்க வேண்டும்" என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.</p><h2>எந்தெந்த விநியோக பாதைகள் பாதிக்கப்படலாம்</h2><p> </p><p>எந்தெந்த விநியோக பாதைகள் பாதிக்கப்படலாம் என்பது குறித்து அது விரிவாகக் கூறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3907a6-a22f-4220-87db-7db075b2678f/26-6a57a3eb7d4f4.webp' /></p><p>செவ்வாய் இரவு முழுவதும் ஏழு மணி நேர நடவடிக்கையைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை ஈரான் மீது ஆளில்லா விமானம், வான்வழி மற்றும் கடற்படைத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p></p><h2>அமெரிக்க இலக்குகள் மீது&nbsp; தனித்தனித் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது அந்நாட்டு இராணுவம் தனித்தனித் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206bbc3c-671f-4e91-9e5d-9a6942eefebd/26-6a57a3ec2e3aa.webp' /></p><p>

மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாக அமெரிக்காவின் நட்பு நாடுகளும் தெரிவித்தன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T15:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணியிலும் மீட்கப்பட்ட சிறுவர்களுடைய என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784123727"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784123727</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
இன்றைய தினம் புதன்கிழமை(15) ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
இன்றைய தினம் புதன்கிழமை(15) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள்
இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் அகழ்வு பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம்&nbsp;</h2><p>மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 என்பு கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிறுவர்களுடையதாகும். அதேவேளை இரண்டு
என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84f2c48b-12f6-475c-bf61-37ecc1a06b27/26-6a57975e0bb0f.webp' /></p><p>இன்றைய தினம் என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள
நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வருடங்கள் நடைபெற்ற வழக்கு : இருவருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/balapitiya-high-court-sentences-two-death-1784122123"></link>
            <id>https://ibctamil.com/article/balapitiya-high-court-sentences-two-death-1784122123</id>
            <summary type="text">&amp;nbsp;எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ருசிரா வெலிவத்த இன்று அறிவித்தார்.</p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
முதல் குற்றவாளியான வஹும்புரகே திலக் புஷ்ப குமார மற்றும் இரண்டாம் குற்றவாளியான வீரதுங்க சமிந்த ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bce2d3-5889-4dc8-9491-82441b404f15/26-6a578ebeda402.webp' /></p><p>கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 296-வது பிரிவின் கீழ் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T13:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[திசைக்காட்டியின் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-negombo-municipal-council-mayor-resigns-1784121578"></link>
            <id>https://ibctamil.com/article/npp-negombo-municipal-council-mayor-resigns-1784121578</id>
            <summary type="text">

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>மாற்றப்பட்ட முடிவு</h2><p>

ஹீன்கெந்த இதற்கு முன்னர் பலமுறை மேயர் பதவியை விட்டு விலகுவதாக செய்வதாக அறிவித்திருந்தாலும், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பகடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8ac01d-215c-4953-8575-dfce848580fa/26-6a578b407947b.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், தற்போது அவர் இன்று (15) அதிகாரப்பூர்வமாக அப்பதவியிலிருந்து விலகியதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தர பரீட்சை! அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ordinary-level-applications-close-on-july-23-1784120106"></link>
            <id>https://ibctamil.com/article/ordinary-level-applications-close-on-july-23-1784120106</id>
            <summary type="text">&amp;nbsp;2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்று பரீட்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, விண்ணப்பங்களை ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>தேசிய அடையாள அட்டை</h2><p>தங்கள் தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறாத பாடசாலை விண்ணப்பதாரர்களுக்காக முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da635bae-ec0e-44b4-a3c6-5f5ec72fe38b/26-6a5786b855e51.webp' /></p><p> </p><p>தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவுசெய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.</p><p></p><p>
</p><p>
</p><h2>மேலதிக தகவல்கள்&nbsp;</h2><p>அதன்படி, தேசிய அடையாள அட்டை இல்லாதது, உரிய திகதிக்கு முன்னர் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு ஒரு தடையாக இருக்காது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8bfb4b6-dd8e-460b-9918-c7752b13e471/26-6a5786b907b1a.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக ஏதேனும் மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால், 1911 என்ற ஹொட்லைன் எண் மூலமாகவோ அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தகவல்களைப் பெறலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T13:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையம் படைத்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bia-records-4-7-milli-passenger-in-first-half-2026-1784116793"></link>
            <id>https://ibctamil.com/article/bia-records-4-7-milli-passenger-in-first-half-2026-1784116793</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வலுவான செயல்பாட்டு செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது,நாட்டிற்கு வரும் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வலுவான செயல்பாட்டு செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது,நாட்டிற்கு வரும் பயணிகள் போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
</p><p>
விமான நிலைய தகவலின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் விமான நிலையம் மொத்தம் 4,748,481 பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டுள்ளது.</p><h2>விமான போக்குவரத்துகள்&nbsp;</h2><p>&nbsp;அதே காலகட்டத்தில், 30,659 விமான போக்குவரத்துகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன், நாட்டின் பிரதான சர்வதேச நுழைவாயில் வழியாக 424,856 இடைவழிப் பயணிகள் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86d726f-bbc2-4310-8f42-45cb77c8b785/26-6a57821005d0c.webp' /></p><p>மேலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்றும் விமான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது, நாட்டின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான மீட்சி மற்றும் வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.</p><p></p><h2>சுற்றுலாத் தொழில்</h2><p>அரையாண்டு செயல்பாட்டுத் தகவலைப் பகிர்ந்துகொண்ட விமான நிலையம், இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் தொழில்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதோடு, மக்களையும், கலாசாரங்களையும், வாய்ப்புகளையும் தொடர்ந்து இணைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d76df3a-5884-4d38-9158-c53800eee6d9/26-6a57820f5414c.webp' /></p><p>
</p><p>
2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேலும் பல மைல்கற்களை எட்டுவதில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அந்த விமான நிலையம் கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-warrant-issued-kapila-chandrasena-s-wife-1784118494"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-warrant-issued-kapila-chandrasena-s-wife-1784118494</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு&amp;nbsp;சர்வதேச பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு&nbsp;சர்வதேச பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (15.07.2026) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்ற விடயம் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவைக் கைது செய்வதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சந்திரசேனவின் மனைவி&nbsp;</h2><p>சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9e90a3-135e-41ea-a1ee-efcf1763f823/26-6a577e0432a7f.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச காவல்துறை உள்ளிட்ட வெளிநாட்டு விசாரணைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆங்கில மொழி திறந்த பிடியாணை அவசியம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T12:33:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்காவில் சற்று முன்னர் துப்பாக்கிசூடு : காவல்துறை அதிகாரி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-injured-in-shooting-in-katunayake-1784117135"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-injured-in-shooting-in-katunayake-1784117135</id>
            <summary type="text">இன்று பிற்பகல் (15) கட்டுநாயக்க மொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று பிற்பகல் (15) கட்டுநாயக்க மொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைத் துரத்திச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.</p><h2>காவல்துறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து தாக்குதல்</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, ​​காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துவரச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19ccc114-ae52-4922-8dd0-c8f9b0c93e3b/26-6a57793417b23.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T12:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது நாளாந்தம் மூன்று முறை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-negombo-are-brutally-beaten-three-times-1784111435"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-negombo-are-brutally-beaten-three-times-1784111435</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து வெலிக்கடை சிறையின் Y.O. அறைக்கு மாற்றப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கைதிகள், திட்டமிட்ட மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து வெலிக்கடை சிறையின் Y.O. அறைக்கு மாற்றப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கைதிகள், திட்டமிட்ட மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>
குழு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தக் கைதிகள் சிறை அதிகாரிகளால் ஒரு நாளைக்கு மூன்று முறை (காலை, மதியம் மற்றும் இரவு) திட்டமிட்டுத் தாக்கப்படுகின்றனர்.</p><h2>முறைப்பாட்டிற்கு பழிவாங்கல்</h2><p>இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கைதிகள் அளித்த புகார்களுக்குப் பழிவாங்கும் விதமாக, சிறை அதிகாரிகள் இந்தச் சித்திரவதையை நிகழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aebd051e-175e-4f50-a64f-4934a6ee27b8/26-6a57654e47d7b.webp' /></p><p>

இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களால் பல கைதிகள் படுகாயமடைந்து, நடக்கவோ அல்லது எழுந்து நிற்கவோ கூட முடியாமல் உள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
</p><p>
வழக்கறிஞர்கள் செனகா பெரேரா, சுரேன் டி. பெரேரா, தனுஷ்கா டி சில்வா, மனுஷிகா கூரே மற்றும் மாதவ இரியகம ஆகியோர் அடங்கிய குழு, வெலிக்கடை சிறைக்குச் சென்று கைதிகளைப் பரிசோதித்தபோது, ​​அவர்களின் உடல்களில் வெளிப்படையான காயங்கள் இருப்பதைக் கண்டனர்.</p><p></p><p>

</p><h2>&nbsp;வழக்கறிஞர்களுடன் தனிப்பட உரையாட அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>இருப்பினும், சிறை அதிகாரிகள் வழக்கறிஞர்களை கைதிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச அனுமதிக்கவில்லை, மாறாக, அவர்களுக்கு அருகில் நின்று அவர்களை அச்சுறுத்த முயன்றனர். இது வழக்கறிஞர்-வாடிக்கையாளர் சிறப்புரிமையின் மீறல் என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4286828-9507-4c28-838e-48ff0410fff4/26-6a57654eee7a8.webp' /></p><p>

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரபூர்வ புகாரை ஏற்கக்கூட வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிறை அதிகாரிகள் தகவல்களை மறைப்பதாகவும், கடந்த 48 மணி நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நிராதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சிபிஆர்பி (CPRP) கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>காயமடைந்த கைதிகளுக்கு உடனடி சிகிச்சை</h2><p>சில குடும்பங்கள் தங்கள் உறவினர்களைக் கண்டுபிடித்த போதிலும், அவர்களைச் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6f1e55-e85d-41eb-b622-922169184e56/26-6a5766598680c.webp' /></p><p>
</p><p>
தற்போதைய கடுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகத் தலையிட்டு, ஒரு சுயாதீன மருத்துவக் குழுவின் உதவியுடன் காயமடைந்த கைதிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மேலும் வலியுறுத்துகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-kumara-jayakody-ordered-1784115692"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-kumara-jayakody-ordered-1784115692</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. </p><p>

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணையை செப்டம்பர் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார். </p><p></p><h2>ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு</h2><p>

2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2799870e-3012-4887-b0a7-a3135ceea380/26-6a5771ee0a45f.webp' /></p><p>இதன்படி அந்நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை மேற்கொள்வதை தனியார் நிறுவனமொன்றிடம் கையளித்தபோது, குறித்த நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டதன் மூலம் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T11:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்தினால் மீது பொய் குற்றச்சாட்டு! சாமரவுக்கு எதிராக சட்டநடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cardinal-to-legal-action-against-chamara-mp-1784113711"></link>
            <id>https://ibctamil.com/article/cardinal-to-legal-action-against-chamara-mp-1784113711</id>
            <summary type="text">



தனக்கு எதிராக தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



தனக்கு எதிராக தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயத்தை கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.</p><p>

கர்தினால் ரஞ்சித் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கள், மதக் குழுக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சாமரவின் குற்றச்சாட்டு</h2><p>

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அருட்தந்தை சிரில் காமினி, “தற்போதைய இராணுவத் தளபதி, தனது பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி, இந்த ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி கர்தினால் ரஞ்சித்தை ஒரு பழக்கூடையுடன் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தசனாயக்க குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e266341-87da-48bc-8c64-b99cbf47baf8/26-6a5770928e69e.webp' /></p><p> </p><p>

இருப்பினும், அன்றைய தினம் கர்தினால், திருத்தந்தை பதினாறாம் லியோவால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வத்திக்கானில் இருந்தார்,” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், கர்தினாலுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T11:36:11+00:00</updated>
        </entry>
    </feed>
