<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-10T12:41:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவரை மிரட்டி 3 மில்லியன் ரூபா கப்பம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gang-arrested-demanding-ransom-from-foreigner-1783683472"></link>
            <id>https://ibctamil.com/article/gang-arrested-demanding-ransom-from-foreigner-1783683472</id>
            <summary type="text">

பிரேசில் நாட்டவர் ஒருவரைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்து, 3 மில்லியன் ரூபாயை பிணைப்பணமாகக் கோரிய மூன்று நபர்களை உனவட்டுன சுற்றுலான காவல்துறையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரேசில் நாட்டவர் ஒருவரைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்து, 3 மில்லியன் ரூபாயை பிணைப்பணமாகக் கோரிய மூன்று நபர்களை உனவட்டுன சுற்றுலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டவர் காலி, தல்பேவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு நபர்கள் தங்களை சுற்றுலா காவல்துறையினர் என்று கூறி அறையைச் சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அதன்போது, குறித்த சந்தேகநபர்கள், அந்த வெளிநாட்டவரின் பிரேசில் கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், கைபேசிகள் மற்றும் பல பொருட்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>3 மில்லியன் ரூபாய்</h2><p>
</p><p>
பின்னர், மற்றொரு நபர் அந்த இடத்திற்கு வந்து, அவரும் அந்தப் போலி காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அந்த வெளிநாட்டவருக்குக் கைவிலங்கிட்டு அவரிடமிருந்த 3 மில்லியன் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0095cd-5afc-4a89-8da6-1080f2c9de9f/26-6a50e39181b5c.webp' /></p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலா காவல் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதேவேளை, இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஆல்டோ காரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94fb1c6-7183-420f-b78a-e2303815d470/26-6a50e3924be80.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-10T12:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-arrested-with-two-swords-in-jaffna-1783680684"></link>
            <id>https://ibctamil.com/article/five-arrested-with-two-swords-in-jaffna-1783680684</id>
            <summary type="text">


திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>


திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அத்துடன், யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றிருந்தது.</p><p></p><h2>நிறுத்தாது சென்ற கார்</h2><p>

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற சம்பந்தப்பட்ட கும்பல் அந்த இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ். பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740cfc37-cb5c-4766-900e-2b59fe5641fa/26-6a50d3d6820f5.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த காவல்துறையினர் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.</p><p>

சந்தேகமுற்ற காவல்துறையினர் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்த நிலையில், அதற்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளதோடு, ஆணொருவரின் சட்டையும் இரத்தக் கறையுடன் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1be10a0b-f09b-4cd1-a7c6-195090475672/26-6a50d3d7547e4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து காவல்துறையினர், குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
இதேவேளை, விசாரணையில் கடத்தலுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T12:05:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழ மக்கள் 147பேரை பலியெடுத்த நவாலி தேவாலயம் மீதான விமானத் தாக்குதல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-attack-on-the-navali-church-1783684699"></link>
            <id>https://ibctamil.com/article/the-attack-on-the-navali-church-1783684699</id>
            <summary type="text">சந்திரிகாவினால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட &amp;nbsp;நவாலி தேவாலயப் படுகொலையின் &amp;nbsp; இனப்படுகொலையின் நினைவுநாள் 09.07.1995ஆம் அன்று. அதுதான் நவாலி தேவாலய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்திரிகாவினால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட &nbsp;நவாலி தேவாலயப் படுகொலையின் &nbsp; இனப்படுகொலையின் நினைவுநாள் 09.07.1995ஆம் அன்று. </p><p>அதுதான் நவாலி தேவாலயப்படுகொலையின் நினைவேந்தல் நாள். </p><p>இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் மிகவும் கொடூரமாக எமது மக்கள் கொன்றழிக்கப்பட்ட கசந்த நினைவுகளைக் கொண்டது நவாலி தேவாலயப் படுகொலை.</p><p></p><h2>வானத்தை கண்டு அஞ்சினோம்</h2><p>வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. </p><p>புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட &nbsp;எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.
</p><p>
நவாலிப்படுகொலை நடைபெற்று &nbsp;இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். </p><p>அந்தப் படுகொலை இடம்பெற்றபோது அதிபராக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இருபத்து ஆண்டுகளின் பிறகு, யாழ்ப்பாணத்தில் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.</p><p></p><p>
</p><h2>மறக்க முடியாத வடு</h2><p> உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்கள் எவராலும் &nbsp;மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது.</p><p> 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
</p><p>
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர்.</p><p> இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன.</p><p> யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீது கொட்டி வெறி தீர்த்தன.</p><p></p><p>
</p><h2>147பேரை காவு கொண்ட தாக்குதல்</h2><p> இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் &nbsp;செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது.</p><p> இந்த இனப்படுகொலைத் தாக்குதலில்147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள்.

சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.</p><p> &nbsp;உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு.

அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். </p><p>மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். </p><p>இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.</p><p></p><p>
</p><h2>இனப்படுகொலையை புனித யுத்தமெனும் அரசு</h2><p> இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. </p><p>அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு.

நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் சந்திரிக்கா கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்த பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் - &nbsp;தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.</p><p> நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.
</p><p>
இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் &nbsp;அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். </p><p>அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள்.</p><p></p><p>
</p><h2>சந்திரிகா அரசின் விமானத்தாக்குதல்கள்</h2><p>போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள். &nbsp;</p><p>அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர்.

எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது. &nbsp; </p><p>சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. </p><p>சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள் மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சக்கள் குண்டுகளை கொட்டினர்.
</p><p>
போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை. இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன் அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு வேண்டும்.</p><p> அத்தடன் நவாலி இனப்படுகொலை உள்ளிட்ட படுகொலைகளுக்கு சிறிலங்கா அரசு மன்னிப்புக் கோர வேண்டும். நடந்த அநீகளை ஏற்றுக்கொள்ளாதவிடத்து எந்தவொரு நிலையான தீர்வையும் காணும் சூழல் ஏற்படாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T11:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்கப்படவுள்ள செம்மணி அவலத்திற்கான நீதி நகர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-issue-in-tamil-nadu-assembly-1783683230"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-issue-in-tamil-nadu-assembly-1783683230</id>
            <summary type="text">செம்மணி அவலத்தின் இனப்படுகொலை சாட்சியங்களை தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி அவலத்தின் இனப்படுகொலை சாட்சியங்களை தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>
அண்மையில் தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ண அரசியல் ரீதியான விஜயத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்தமை குறித்து ஐ.பி.சி தமிழ் ஊடகங்கத்துக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறினார்.
</p><p>
மேலும் செம்மணி போன்ற இனப்படுகொலை சாட்சியங்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் நகர்வில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கது எனவும் விளக்கியிருந்தார்.
</p><p>
அத்தோடு, செம்மணி சாட்சியங்களை மன்னார் மனித புதைகுழி போல மூடு மறைக்க அனுமதிக்ககூடாது என்றும் சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/o8ADVJMv44E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T11:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-wrong-decision-by-slitting-his-own-throat-1783681095"></link>
            <id>https://ibctamil.com/article/man-wrong-decision-by-slitting-his-own-throat-1783681095</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (10) பகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.</p><p>இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.</p><p>இவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே
பிளேற்றினால் வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>மனநலம் பாதிக்கப்பட்ட நபர்</h2><p>குறிப்பிட்ட நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் என்பவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bbeca24-0a03-4501-9ac9-8b05655843bc/26-6a50dae5a9f8d.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட நபர் தவறான முடிவை செய்ய முற்படும் சமயத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மக்கள் அவரின் கால் கைகளை பிடித்து கட்டி 1919 காவுவண்டியில் ஏற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;</p><p> மேலும் அந்த நபர் மனநோய் கொண்டவர் என காவல்துறையின் ஆரம்பகட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் மட்டு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-of-high-security-zone-lands-in-jaffna-1783682020"></link>
            <id>https://ibctamil.com/article/release-of-high-security-zone-lands-in-jaffna-1783682020</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள்&amp;nbsp;அமைதி வழியில் போராட்டத்தினை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள்&nbsp;அமைதி வழியில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p> இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (10) 12வது வாரமாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வலி. வடக்கு பலாலி, மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத
கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,
அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.</p><p></p><h2>தொடர் போராட்டம்&nbsp;</h2><p>

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ccc906-c0b8-4056-81da-74df61194888/26-6a50d5cf0cbea.webp' /></p><p> தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில்
காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.</p><p>
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e446b3f-2dce-4acf-bf2c-a0b9a24da5d6/26-6a50d5d036e39.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffe2068d-6fb1-436d-9c50-c1ef5a6484dd/26-6a50d5d1115b4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:28:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய - அசாத் மௌலானா சந்திப்பில் மேலும் பல தகவல்கள்! நீதிமன்றில் இரகசிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-info-on-the-gotabaya-azad-maulana-meeting-1783678613"></link>
            <id>https://ibctamil.com/article/more-info-on-the-gotabaya-azad-maulana-meeting-1783678613</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா குறித்து மேலும் பல உண்மைகள் நீதிமன்றில் வெளிப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா குறித்து மேலும் பல உண்மைகள் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பு, இந்த மனு நேற்று நான்காவது நாளாகப் பரிசீலிக்கப்பட்டது.</p><p></p><h2>ஆணைக்குழுவின் பரிந்துரை</h2><p>
</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் தொடர்புடைய மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட ஒரு குழுவினர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629f2213-0a4c-414a-bb56-a74b2d214327/26-6a50cd8b7950a.webp' /></p><p>
</p><p>அவர் முன்வைத்ததன்படி, 
“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, எதிர்வாதியான ஷானி அபேசேகராவுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியிருந்ததாக மனுதாரர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
</p><p>இதை நீதிமன்றத்தின் முழுமையான திசைதிருப்பல் என்று விவரிக்கலாம். அது சம்பந்தமாக இது ஒரு பொய்யான கூற்று.
இந்த ஆணையத்தின் அறிக்கையில், விடுபட்ட அம்சங்களின் கீழ் காவல்துறை தொடர்பாகப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>அதில் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன, நான்கு முன்னாள் சிரேஷ்ட பிரதிப் புலனாய்வாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவற்றுள், முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தர மீது ஏற்கனவே குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்துள்ள சட்டமா அதிபர், அந்தத் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>நிலந்த ஜயவர்தன மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை சட்டமா அதிபர் ஆராய்ந்து வருகிறார்.
இந்த ஆணைக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளில், பிரதிவாதி ஷானி அபேசேகரவுக்கு எதிராக எதுவும் கூறப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902d0c0b-2beb-4a03-8e34-b0601e55b7bf/26-6a50cd8c2cff2.webp' /></p><p>எனவே, மனுதாரரால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் முற்றிலும் தவறானவை.
மேலும், இந்த மனுதாரர் ஜனாதிபதியான பிறகு அவரால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் விசாரணை ஆணைக்குழு, பிரதிவாதி ஷானி அபேசேகரவைக் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><p>ஆனால், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆணையத்தின் முழு அறிக்கையுமே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, மனுதாரர் வேண்டுமென்றே நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, உண்மைகளை மறைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
இவ்விஷயத்தை மேலும் விளக்கிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஷானி அபேசேகரா தீய எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.</p><p>
இந்த மனுதாரர், அசாத் மௌலானா என்ற நபரைத் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
அரசியலில் இது போன்ற நபர்களைச் சந்திப்பது சகஜம்தான் என்றும் மனுதாரரின் கூறியிருந்தனர். </p><p>


இது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் ஆசாத் மௌலானா ஒரு சாதாரண நபர் அல்ல.


அவர் பிள்ளையனின் செயலாளர். எனவே, மனுதாரர் அவரைத் தெரியாது என்று கூற முடியாது.</p><p></p><h2>தொலைபேசி அழைப்புப் பதிவுகள்&nbsp;</h2><p>மேலும், இந்த மனுவை கூடிய விரைவில் தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். 


மனுதாரர் தனது மனுவில், பிரதிவாதி ஷானி அபேசேகர ஜனாதிபதியான பிறகு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/388218e8-f031-40d0-81b3-12a33ba3270f/26-6a50cd8cd25ea.webp' /></p><p> </p><p>


எனவே, அவர் தன்மீது வன்மத்துடன் செயல்படுவதாக பிரதிவாதி கூறியுள்ளார். 


இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், ஜனாதிபதி காவல்துறை இடமாற்றங்களைச் செய்வதில்லை.
</p><p>

 அந்த இடமாற்றங்களை தேசிய காவல்துறை ஆணைக்குழுவே செய்கிறது. எனவே, மனுதாரரால் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
</p><p>

 ஷானி அபேசேகர வன்மத்துடன் செயல்பட்டார் என்பதை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. 


மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். </p><p>


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மிகவும் சிக்கலான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.


 அது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ முடிந்துவிடும் என்று கூற முடியாது.</p><p> 


அதற்குப் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. தற்போது பணியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். 


அதன் நகல் ஒன்று இரகசிய உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 


தொலைபேசி அழைப்புப் பதிவுகள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக, அமெரிக்காவில் உள்ள அந்த சமூக ஊடக நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 


எனவே, இது ஒரு சிக்கலான வழக்கு. இந்த நேரத்தில், மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்தை வழங்க முடியாது” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T11:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-jaffna-for-smuggling-heroin-1783680181"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-jaffna-for-smuggling-heroin-1783680181</id>
            <summary type="text">யாழில் வாசனை சவற்காரத்திற்குள் வைத்து நூதனமான முறையில்
போதைப் பொருள் கடத்திய ஒருவர்&amp;nbsp;யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் வாசனை சவற்காரத்திற்குள் வைத்து நூதனமான முறையில்
போதைப் பொருள் கடத்திய ஒருவர்&nbsp;யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>யாழ்ப்பாண நகர்புறப் பகுதியில் போதைப்பொருளை விற்பனைக்காக
கொண்டு சென்றவேளை உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று (9) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில்
இடம்பெற்று வருவதாக யாழ் காவல்துறையினருக்கு இரகசிய தகவல்&nbsp;கிடைத்தது.</p><p></p><h2>&nbsp;நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>அதன் அடிப்படையில்
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் காவல்துறை புலனாய்வு பிரிவினரும் இணைந்து
முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
</p><p>காவல்துறையினரின் சோதனையின் பொது
வெளியிடம் ஒன்றிலிருந்து பொதிகள் அனுப்பும் சேவை மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில்
மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abe75a7-b089-49be-b448-17de05af1909/26-6a50d1335c80f.webp' /></p><p>கைதுசெய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த
மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட
ஒருவராவார்.</p><p>
கைதான நபரரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ் காவல்துறை பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-summons-opposition-sajith-1783673917"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-summons-opposition-sajith-1783673917</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.ஆணைக்குழுவினால் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஆணைக்குழுவினால் பிரப்பிக்கபட்ட இந்த அழைப்பானையானது இவரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த மாதம் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>சேவை நீக்கம் செய்யபட்ட சமிந்த குலரத்ன</h2><p>முந்தைய அரசாங்கத்தின் போது, ​​சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f56f46e-509a-4459-aa2d-f824a503dc89/26-6a50c597bd171.webp' /></p><p>
அந்த நியமனம் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும், அது குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கும் சஜித் பிரேமதாசவை இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்னவின் சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:04:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி! மீண்டும் சந்தேகநபரானார் துமிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-named-suspect-in-gold-plated-firearm-case-1783673544"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-named-suspect-in-gold-plated-firearm-case-1783673544</id>
            <summary type="text">தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிணையில் அனுப்பப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிணையில் அனுப்பப்பட்டுள்ளார்.</p><p>

கல்கிசை பதில் நீதிபதி ரவி மத்துகம இன்று (10) தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் செல்லுமாறு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>

வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் வீட்டுவசதி வளாகத்தில் ஒரு மூதாட்டியின் பையில் பாதுகாப்பு அதிகாரிகளால் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0959cca4-017b-486d-b835-eca6b097c3f5/26-6a50c728aabda.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, அவர் மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T10:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரம் : நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-against-justice-min-harshana-1783676846"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-against-justice-min-harshana-1783676846</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு&amp;nbsp; தீர்மானித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு&nbsp; தீர்மானித்துள்ளது.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.</p><p> 

அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) நாடாளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>28 பேர் உயிரிழப்பு</h2><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் உட்பட 28 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b5f800-dcd0-427f-9523-23f5a6d70f6b/26-6a50c3dcf1e1a.webp' /></p><p>இந்தநிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்போது ஒரு "குற்றப் பிரதேசம்" என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783675157"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783675157</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (10.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (10.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.70 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		443.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.22 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	377.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.69 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.99 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7fb50ba-829a-4c13-a064-7c75c219fb1c/26-6a50bee5ce3da.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.04 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.47 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.81ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T09:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி வைத்தியசாலை காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-land-cannot-be-released-jaffna-army-1783669806"></link>
            <id>https://ibctamil.com/article/palali-land-cannot-be-released-jaffna-army-1783669806</id>
            <summary type="text">பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பலாலி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
</p><p>
பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுன்னதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட அவர், </p><p></p><h2>இழப்பீடு வழங்க நடவடிக்கை</h2><p>


“இந்த வலயத்துக்குள் உள்ள 1661 ஏக்கர் காணியை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்துக்கு உரித்தாக்குவதற்கும், காணி உரிமையாளர்களுக்கு காணி அமைச்சின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a5fd2-1c86-4a58-831e-8836fe01dfa0/26-6a50b598a8a65.webp' /></p><p>
</p><p>

பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன.

2009 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். எதிர்வரும் ஓரிரு மாத காலப்பகுதியில் 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தத்தவில்லை. 

அத்தியாவசிய தேவை மற்றும் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இந்த காணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பலாலி விமான நிலையம் 774.98 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பயிர்ச்செய்கையில் இராணுவத்தினர்</h2><p> 

எதிர்காலத்தில் விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக மேலதிகமாக காணிகள் தேவைப்படும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையானது விமான படை ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், முப்படை மற்றும் பிரதேச செயலக பிரிவுகளை ஒன்றிணைந்து பொது கொள்கை அடிப்படையில் முரண்பாடற்ற வகையில் இந்த கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f02621-a585-444c-a027-38552f6de67a/26-6a50b5995ecb3.webp' /></p><p>
</p><p>

இந்த பகுதியில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

தமது சுய தேவைக்காகவே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.</p><p>இது வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல,

பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டடத்தை புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.</p><p> இந்த வைத்தியசாலை 27.9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலை புனரமைப்புக்கு 99.3 மில்லியன் ரூபா மதிப்படப்பட்டு 55 மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஆண்டு 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முப்படையின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை தற்போது விடுவிப்பதற்கான இயலுமை கிடையாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T09:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னணு விசா! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-review-process-of-issuing-electronic-visas-1783670001"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-review-process-of-issuing-electronic-visas-1783670001</id>
            <summary type="text">மின்னணு விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக முந்தைய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை இந்த அரசாங்கம் மறுபரிசீலனை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னணு விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக முந்தைய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை இந்த அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.
</p><p>
அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் இன்று(10) மேல்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் விவேக சிறிவர்தனவுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மனு விசாரணை</h2><p>
</p><p>
மேல் நீதிமன்ற நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன், பிரதம நீதிபதி பிரித்திபத்மன் சுரசேன இந்த மனுவை விசாரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f25f425-0879-4931-bea2-88e3204feecc/26-6a50aac5e6ec1.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நீதிமன்றத்தில் முன்மொழிவுகளை முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மின்னணு விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை விசாரிக்க தற்போதைய அமைச்சரவை ஒரு துணைக்குழுவை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், மேற்படி குழு தற்போது சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஒரு திகதியை கோரியுள்ளார்.</p><h2>மனுதாரர்கள்</h2><p>

இதேவேளை, தற்போதைய அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், செப்டம்பர் 29 அன்று இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2987e45-0992-4a6e-b2cd-2c8f60837fe3/26-6a50aac69d83e.webp' />&nbsp;</p><p>
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பட்டாலி சம்பிக ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T08:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்துக்கும் மறைமுகமாக வழங்கப்பட்ட போதைப்பொருள் பணம்! ஆளும் தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charith-abeyasinghehanded-1-crore-sajith-premadasa-1783668290"></link>
            <id>https://ibctamil.com/article/charith-abeyasinghehanded-1-crore-sajith-premadasa-1783668290</id>
            <summary type="text">பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>ஊழல் மோசடியில் இதுவரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனதான் முன்னிலையில் இருந்தது என்றும் தற்போது&nbsp; ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பின்தள்ளியுள்ளது என்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன முன்வைத்த கருத்துக்களில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
நாடளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>
</p><h2>கோபமடைந்த&nbsp;ஹர்ஷ டி சில்வா</h2><p>இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p>“கடந்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வத்தளை பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிட்ட யோஹான் விக்ரமசிங்க தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9e7375-1b1a-461a-9614-5b9bea6a70e6/26-6a50a2e8ad8ed.webp' /></p><p> </p><p>இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யபட்டுள்ளார்.

இதுவரை காலமும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் நபர்களுடன் தொடர்புக் கொண்டு முன்னிலையில் இருந்தது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது அந்த கட்சியை பின்தள்ளியுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்த போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, எனவே நான் இப்போது கூறியதைக் கேட்டு நாடளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏமாற்றமடைவதும் கோபமடைவதும் நியாயமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. </p><p>நான் எந்தவொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடவில்லை.

எனது கூற்றைக் கேட்டு கோபமடைந்த ஹர்ஷ டி சில்வா போன்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள், குற்றம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
</p><p>

நாட்டில் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான போராட்டத்தை, எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் எமது அரசாங்கம் பின்வாங்காது.'' என கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் மாயம் : நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட COPF குழுவின் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/usd-2-5-million-missing-copf-report-in-parliament-1783668877"></link>
            <id>https://ibctamil.com/article/usd-2-5-million-missing-copf-report-in-parliament-1783668877</id>
            <summary type="text">இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்புக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான, அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்புக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான, அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா இன்று (10) இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்ட சம்பவம், ஒரு சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என அரச நிதி பற்றிய குழு கண்டறிந்துள்ளது.</p><p></p><h2>தேசிய கணக்காய்வு அலுவலகம்</h2><p>குறித்த அறிக்கையில், ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள் செலுத்தல் செயல்முறை குறித்து, தேசிய கணக்காய்வு அலுவலகம் உடனடியாக கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab14c37-3fc9-43c9-9332-f47d137c2d1f/26-6a50a70dcc438.webp' />&nbsp;</p><p>இந்த மோசடி விவகாரத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்ட மா அதிபரின் பொறுப்பாகும்.” என தெரிவித்தார்.</p><p>இதேவேளை, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம், ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>கட்சித் தலைவர்களின் கூட்டம்</h2><p>
</p><p>
இதனிடையே, குறித்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரம் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க கோரிக்கை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779bb8fb-d28a-4223-8c57-9ccc8a820b58/26-6a50a70ce2d52.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2_IpIuGz8_s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T08:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உட்பட மாவட்டங்களில் 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heat-advisory-issued-for-eight-districts-1783664072"></link>
            <id>https://ibctamil.com/article/heat-advisory-issued-for-eight-districts-1783664072</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் கடுமையான வானிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் கடுமையான வானிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘வெப்ப எச்சரிக்கை’ (Heat Advisory) விடுத்துள்ளது.
</p><p>


பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (Heat Index) வழக்கத்தை விட அதிகரித்து, 'எச்சரிக்கை' நிலையை எட்டக்கூடும்.



வட, கிழக்கு மற்றும் தென்னகத்தின் குறிப்பிட்ட 8 மாவட்டங்களின் சில பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக காணப்படுகின்றது.</p><p>



உடலின் நீர்ச்சத்தைப் பேண அடிக்கடி போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். பகல் நேரங்களில் நேரடியாக வெயில் படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.



வேலைகளைக் குறைத்தல்: பகலின் கடுமையான வெப்பம் நிலவும் நேரங்களில், கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>


இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94456c89-7bc9-4888-babe-a9c2ac010a7f/26-6a508fa13a0de.webp' /></p><p>முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>



இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T07:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-road-opened-for-kataragama-pilgrims-1783666313"></link>
            <id>https://ibctamil.com/article/forest-road-opened-for-kataragama-pilgrims-1783666313</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்
உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி
உகந்தை மலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்
உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி
உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p> இன்று (10) காலை 5.30 மணியளவில் 'அரோகரா' கோஷத்துடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இந்தப் பாதை&nbsp;வருகின்ற 24 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை
முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை
வழிபாடுகள் இடம்பெற்றன.</p><p></p><h2>குமண தேசிய பூங்கா</h2><p> அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட முக்கிய
அதிதிகளால் உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை பக்தர்களின்
பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40cf20eb-a15b-42d6-883c-9e05ef98ce1d/26-6a509d53a5932.webp' /></p><p> </p><p>இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டுப்
பயணிகள் எனப் பலரும் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>ஆடிவேல் உற்சவம்</h2><p>சுமார் 80 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அடர்ந்த காடு, மேடு, சேறு மற்றும்
முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான பக்கர்கள் கதிர்காமம்
நோக்கித் தங்களது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5e959c-417d-4a10-a257-b018564c867c/26-6a509d5484976.webp' /></p><p>


இவ்ஆண்டிற்கான கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் 15ஆம்
திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க
கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன்
நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா கனவை தொலைத்த மொராக்கோ! பிரித்தானிய தலைநகரில் பெரும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/morocco-loses-to-france-clashes-erupt-in-london-1783667031"></link>
            <id>https://ibctamil.com/article/morocco-loses-to-france-clashes-erupt-in-london-1783667031</id>
            <summary type="text">

 மொராக்கோ பிரான்சிடம் மீண்டும் தோல்வியடைந்ததால் அந்நாட்டின் ஃபிஃபா உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்த நிலையில் லண்டனில் ரசிகர்களுக்கும் காவல்துறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

 மொராக்கோ பிரான்சிடம் மீண்டும் தோல்வியடைந்ததால் அந்நாட்டின் ஃபிஃபா உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்த நிலையில் லண்டனில் ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
</p><p>
பரவலான அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சம் இருந்தபோதிலும் பாரிஸ் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்த நிலையில், லண்டனில் இவ்வாறு மோதல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>குழப்பமான மோதல்கள்</h2><p>

இந்த நிலையில், லண்டனின் எட்ஜ்வேர் வீதி குழப்பமான மோதல்களின் களமாக மாறியதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb40d524-6a08-4a76-a57e-385f741fc368/26-6a509df057cf9.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Latest News in Cyprus - Philenews</i></p><p>
</p><p>
அதன்போது, அப்பகுதியில் உருவான பெருங்கூட்டங்களைக் கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் காவல்துறை களமிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், கலவரத் தடுப்பு உடைகள் அணிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை நோக்கி ஒளிவிளக்குகள், பட்டாசுகள் மற்றும் போத்தல்களை வீசுகின்றமை பதிவாகியுள்ளது.</p><h2>அரசியல் எதிர்வினை</h2><p>

அறிக்கைகளின்படி, கலவரங்களின்போது காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0926a9e6-5ac6-4441-a28e-95c31b031d6e/26-6a509df109051.webp' /></p><p>இதேவேளை, இந்தக் காட்சிகள் அரசியல் ரீதியான எதிர்வினைகளையும் தூண்டியதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p>
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கும் வகையில், பாரிஸில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ கொடிகளை ஏந்திய கார்கள் ஒலிப்பான்களை எழுப்பி ஒன்றாகக் கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T07:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-investigations-handed-cid-1783659692"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-investigations-handed-cid-1783659692</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்ற வேண்டும் என நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்ற வேண்டும் என நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p> 
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக பார்க்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef1a4adb-81de-407f-9e81-27b33e651b46/26-6a5083095c169.webp' /></p><p>
</p><p>

எனவே தற்போதைக்கு சிறைச்சாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அனுமதியின்றி எந்தவொரு மாற்றத்திற்கும் அனுமதி்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

சிறைச்சாலை மோதல் காரணமாக&nbsp; அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்&nbsp; சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T06:53:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/support-of-the-writ-petition-filed-suresh-sallay-1783665058"></link>
            <id>https://ibctamil.com/article/support-of-the-writ-petition-filed-suresh-sallay-1783665058</id>
            <summary type="text">

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

பெங்கமுவே நலக்க தேரர், தேசபக்தி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர மற்றும் பல தரப்பினர் இந்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரியவருகிறது.</p><p></p><h2>நீதிமன்ற அறிவிப்பு<span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></h2><p>

இந்த நிலையில், குறித்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்களான நீதிபதிகள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84633ad2-446a-4bf3-ae83-65175c3b47f9/26-6a5095013dc0c.webp' /></p><p>
</p><p>
இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், இடைக்கால மனு தொடர்பாக நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பினால் மட்டுமே இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அந்த வகையில், வாதங்கள் முடிவடைந்த பின்னர் இந்த இடைக்காலக் மனுக்குள் பரிசீலிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோகந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T06:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின் காணாமல் போன துப்பாக்கி மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gun-missing-after-negombo-prison-clash-recovered-1783663671"></link>
            <id>https://ibctamil.com/article/gun-missing-after-negombo-prison-clash-recovered-1783663671</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலை அடுத்து காணாமல்போன ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலை அடுத்து காணாமல்போன ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

குறித்த துப்பாக்கி சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 6ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த துப்பாக்கி காணாமல்போயிருந்தது.</p><p></p><h2>போகம்பரை சிறைச்சாலை</h2><p>அத்துடன்&nbsp;விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான 22 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளையும் 10 ரி58 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af450852-6d8e-4e00-9ad6-56db303eaf2a/26-6a509297dd77d.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, கண்டி - பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளை அடைப்பதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T06:43:34+00:00</updated>
        </entry>
    </feed>
