<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-12T03:30:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267"></link>
            <id>https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267</id>
            <summary type="text">நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&amp;nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிவிப்பில், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.</p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008cf931-d44a-46be-a1d5-f340e538b577/26-6a5306094bf06.webp' /></p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023"></link>
            <id>https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023</id>
            <summary type="text">இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&amp;nbsp;நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>
பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அதிக அறுவடை உள்ள பகுதிகளைக் அடையாளப்படுத்தி நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என வாரியத்தின் தலைவர் மஞ்சுலா பின்னலந்த கூறியுள்ளார்.</p><p>

அதன்படி, நாடு முழுவதும் 143 இடங்களில் அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தனியார் துறை களஞ்சியசாலை</h2><p>
களஞ்சியசாலைகளின் கொள்ளளவு நிரம்பிவிட்டால், அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளை பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f86d15-6441-467e-b6ec-de65abdea8f8/26-6a52f6c8aad7c.webp' /></p><p>மேலும், குறிப்பிட்ட நெல் ஆலை உரிமையாளர்களும் தனியார் நிறுவனங்களும் அந்தக் களஞ்சியசாலைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T02:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் - தேசப்பந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255"></link>
            <id>https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255</id>
            <summary type="text">சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&amp;nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய அரசாங்கம், கந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட எம். பிக்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு</h2><p>மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்தா ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152adb0a-1068-45f5-80e6-af9acf7b1ff3/26-6a52efe14e931.webp' /></p><p>
</p><p>
மேலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, வினாயகமூர்த்தி முரளிதரன்மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கூன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
</p><p>
பொதுபல பால சேனா கட்சியின் தேசிய அமைப்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7daf4ed-c78c-47a5-b7ca-78a2540290a1/26-6a52efe206a83.webp' /></p><p>இதற்கிடையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேட்படி விடயங்களை உள்ளடக்கி தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>வி.பி.ஏ பாதுகாப்பு வழங்கப்பட்ட நபர்கள் யார் என்று எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T01:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை அதிகாரிகள் படுகொலை: 75 கைதிகளுக்கு எதிராக CID தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/75-inmates-identified-in-massacre-prison-officers-1783818763"></link>
            <id>https://ibctamil.com/article/75-inmates-identified-in-massacre-prison-officers-1783818763</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் 8 சிறை அதிகாரிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் 8 சிறை அதிகாரிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இந்தக் கொடூரமான கொலைகளில் ஈடுபட்ட சுமார் 75 கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணும் விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்துள்ளது.</p><p></p><h2>சித்திரவதை செய்து கொலை</h2><p>சிறை அதிகாரிகளை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளிடமும் தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6fb5ac-ca95-476f-a33f-6628fde2170c/26-6a52ea0cbc000.webp' /></p><p>
</p><p>மேலும், சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்ட டிவிஆர்-களைத் தேடி, காவல்துறையினர் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் முழுமையான சோதனையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T01:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் பதவி விவகாரத்தில் விஜித ஹேரத்தின் பதிலால் கிளம்பிய புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782"></link>
            <id>https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782</id>
            <summary type="text">வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இது குறித்த செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
</p><p>
ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரின் மகளுடைய திருமணம், கடந்த வாரம் காலியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><p> </p><h2>ரணிலின் கருத்து&nbsp;&nbsp;</h2><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் அமைச்சர்கள் தலதா அதுகோரல மற்றும் வஜிர அபேவர்தன மற்றும் மேலும் பலர் அதே மேசையில் அமர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcf1003-9f3d-4ac7-8bce-9ba207b0db09/26-6a52c58f2d3d0.webp' /></p><p>இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கியமை குறித்துப் பேச்சு எழுந்துள்ளது.</p><p>
அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கையில்,

 "அதற்கு நான் பதிலளிக்கிறேன். நான் தலையிடச் செல்லவில்லை. அவர்கள் என்னுடன் விளையாட்டு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.</p><p> அந்தப் பெண்மணிதான் எல்லாவற்றிலும் தலையிட்டார்," என்பதே முன்னாள் ஜனாதிபதியின் பதிலாக இருந்தது என கூறியுள்ளார்.
</p><p></p><h2>சர்வதேசத்தின் பார்வை&nbsp;</h2><p>
இந்த உரையாடலின் போது, ​​வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அங்கு வந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அருகில் அமர்ந்துள்ளார்.
</p><p>
அந்த மேசையில் இருந்த ஒரு பத்திரிகையாளர் வெளியுறவு அமைச்சரிடம், "நீங்கள் அடுத்த ஆண்டு பிரதமராகிவிடுவீர்கள் என்று கேள்விப்படுகிறேன்" என்று கேட்டுள்ளார்.</p><p>

" இந்த வருடமே ஏன் கூடாது?" என்று அமைச்சர் புன்னகையுடன் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

இவ்வாறான பின்னணியில், அமெரிக்கத் தூதரகத்தின் 250வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது, ​​பல தூதரகங்களின் அதிகாரிகளும், ஒரு மேற்கத்திய தூதரகத்தின் அதிகாரிகளும், எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கான போட்டி உருவாகும் என்று ஊகித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T00:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லிங்ஹாம் அபார ஆட்டத்தால் கலைந்த நோர்வேயின் உலகக்கிண்ண கனவு! அரையிறுதியில் இங்கிலாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/england-in-semi-finals-thanks-to-bellingham-magic-1783817670"></link>
            <id>https://ibctamil.com/article/england-in-semi-finals-thanks-to-bellingham-magic-1783817670</id>
            <summary type="text">உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் தங்களது வெற்றிப்பாதையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் தங்களது வெற்றிப்பாதையில் அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.
</p><p>
இதன்படி காலிறுதி அறையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இங்கிலாந்து தக்கவைத்துள்ளது.

60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புக்காக, இங்கிலாந்து அணி புதன்கிழமை அன்று அர்ஜென்டினா அல்லது சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
</p><p>

மேலதிக நேரத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன், நோர்வேயின் உலகக்கோப்பை கனவை இங்கிலாந்து கலைத்துள்ளது.</p><p></p><h2>எர்லிங் ஹாலண்டின்</h2><p>

போட்டியின் ஆரம்பத்தில் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் கோல் அடித்து நோர்வேயை முன்னிலை பெற செய்தார். எனினும், முதல் பாதி முடிவதற்கு முன் பெல்லிங்ஹாம் சமநிலைக் கோலைப் பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ec86afe-88a8-45f9-94f2-92f4551f915c/26-6a52e5c7eb59e.webp' /></p><p>
இரண்டாம் பாதியில் நோர்வே அடித்த மற்றொரு கோல் VAR பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. 

அதன் பின்னர், கூடுதல் நேரத்தில் பெல்லிங்ஹாம் வெற்றிக் கோலைப் பதிவு செய்து இங்கிலாந்தை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
</p><p>
இதற்கிடையில், நோர்வே அணிக்காக தொடர்ந்து 14 போட்டிகளில் கோல் அடித்திருந்த எர்லிங் ஹாலண்டின் கோல் சாதனையும் இந்தப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T00:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நிலையில் தமிழ் அரசியல் கைதிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-political-prisoners-in-danger-1783814417"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-political-prisoners-in-danger-1783814417</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை
பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
பாதுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை
பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’
அமைப்பின் தலைவர் கோமகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அச்சத்தை
வெளிப்படுத்தினார்.
</p><p>
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “சிறைச்சாலைகளில் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகம்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு கைதிகள் மீது மிலேச்சத்தனமான
கொடுமைகளே அரங்கேற்றப்படுகின்றன.</p><p></p><h2>தமிழ் அரசியல் கைதிகள்</h2><p>

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர்
கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/417b1ce1-5dd6-4e13-b366-d00fe89add73/26-6a52dc9544bca.webp' /></p><p>
</p><p>
கைதிகள் யாராலவும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்வது
அவசியம்.

அதே நேரம் இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் இவ்வாறான வன்முறைச் சூழலை நோக்கும்போது,
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட
தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்.
</p><p>
அவர்களது பாதுகாப்பு தற்போது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது என
சுட்டிக்காட்டிய அவர்,

இவ்வாறான சூழலில் சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கையும், அங்கு
இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் ஆபத்தானது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T00:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் - கோட்டாபய வழக்கில் தற்போதைய அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-summons-current-cabinet-ranil-gotabaya-case-1783814113"></link>
            <id>https://ibctamil.com/article/court-summons-current-cabinet-ranil-gotabaya-case-1783814113</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இ-விசா வழங்கும் திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்து, தற்போதைய அமைச்சரவைக்கும் அறிக்கை அனுப்புமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>
சம்பந்தப்பட்ட இ-விசா ஒப்பந்தத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.</p><p></p><h2>அமைச்சரவை மனு</h2><p> </p><p>அந்த அமைச்சரவை மனுவில் பதிலளிப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளதால், தற்போதைய அமைச்சரவைக்கும் இந்த வழக்கில் பதிலளிக்கும் பொறுப்பு பொருந்தும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4e11af-cdd7-4333-84c4-5b1e8f777fb4/26-6a52d7e28ab95.webp' /></p><p>
</p><p>
பதிலளிப்பாளர்கள் சார்பில் முன்னிறையான மேலதிக சட்டமா அதிபர் விவேகா சிறிவர்தன, இ-விசா ஒப்பந்தத்தின் சட்டபூர்வத்தன்மையை ஆராய அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.
</p><p>
இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-targeting-a-house-in-southern-sri-lanka-1783806152"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-targeting-a-house-in-southern-sri-lanka-1783806152</id>
            <summary type="text">மத்துகம, நேபொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று (11) மாலை வந்த குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச் சூடு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்துகம, நேபொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

நேற்று (11) மாலை வந்த குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b3f0cb-82ea-49ec-bdf5-a565c8e43deb/26-6a52b8c9e3de0.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்! விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794"></link>
            <id>https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794</id>
            <summary type="text">பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் அவரது மரணம் கொலையாக சந்தேகிக்கப்படும் நிலையில், ஆன் விடெகோம்பின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
இறுதியாக வெளியாகிள ஒரு புதிய தகவலில், விடெகோம்ப் புதன்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p></p><h2>கண்டெடுக்கப்பட்ட&nbsp;உடல் </h2><p>

கடந்த வியாழக்கிழமை(09.07.2026) காலை 11.40 மணிக்கு, டெவோனின் ஹேட்டரில் உள்ள விடெகோம்பின் பங்களாவில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbe1ea0-393c-4a90-ab82-fd2fba02c612/26-6a528c6c6cca2.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞன், தற்போது எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும், அவர் இனி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் இருக்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/huge-drop-in-remittances-fromlankan-workers-abroad-1783812235"></link>
            <id>https://ibctamil.com/article/huge-drop-in-remittances-fromlankan-workers-abroad-1783812235</id>
            <summary type="text">வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் சதவீதத்தில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இது குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் சதவீதத்தில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக&nbsp;இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.</p><p>இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>மேலும், கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருமானம் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>வெளிநாட்டு வருவாய்</h2><p>
</p><p>
மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருவாயானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b815f9-7af3-45c8-9f5c-0d51c8e8d1d7/26-6a52d08d64289.webp' /></p><p>
இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
</p><p>&nbsp;எவ்வாறாயினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது. </p><p>அதேநேரம், 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.
</p><p>
இருப்பினும், 2025 ஜூன் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T23:24:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கை ஆரோக்கிய உணவை ஊக்குவிக்கும் பரப்புரை சாவகச்சேரியில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/campaign-to-promote-natural-health-food-1783810754"></link>
            <id>https://ibctamil.com/article/campaign-to-promote-natural-health-food-1783810754</id>
            <summary type="text">World Vision உலகத்தரிசன நிறுவனத்தின் பரப்புரையான ENOUGH நாடளாவியரீதியில் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்முக்கிய குறிக்கோள் சிறுவர்களின் பசியினைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>World Vision உலகத்தரிசன நிறுவனத்தின் பரப்புரையான ENOUGH நாடளாவியரீதியில் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p> இதன்முக்கிய குறிக்கோள் சிறுவர்களின் பசியினையும் ஊட்டச்சத்துக்குறைபாட்டையும் முடிவுக்கு கொண்டுவருவதாகும்.</p><p>

யாழ் . மாவட்ட பரப்புரை உலகத்தரிசன சாவகச்சேரி அபிவிருத்தித் திட்டத்தின் ஒருங்கிணைப்பில் ஆடி 11 ம் திகதி காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் பாடசாலை மாணவர்கள் கல்வித் திணைக்களம் சுகாதாரத் திணைக்களம் பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சித் அமைப்புக்களின் பங்களிப்போடு உலகத்தரிசன அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p><p>

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இயறகை ஆரோக்கிய உணவுகளை மட்டும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இயற்கை ஆரோக்கிய உணவுகளின் அணிவகுப்பும் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T22:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரம்மாண்டமான புதிய டைனோசர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/150-million-year-old-dinosaur-family-discovered-1783799454"></link>
            <id>https://ibctamil.com/article/150-million-year-old-dinosaur-family-discovered-1783799454</id>
            <summary type="text">வடகிழக்கு தாய்லாந்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட டைனோசர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாபெரும் தாவர உண்ணியானது, இதற்கு முன்னர் ஆவணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு தாய்லாந்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட டைனோசர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த மாபெரும் தாவர உண்ணியானது, இதற்கு முன்னர் ஆவணப்படுத்தப்பட்ட எந்த டைனோசரின் உடற்கூறியல் அம்சங்களையும் கொண்டிராதது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
இது தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை குறித்த புதிய பார்வையைத் தொல்லுயிரியலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>15 கோடி ஆண்டுகள்</h2><p>

உரகாசாரஸ் கலாசினென்சிஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த நீண்ட கழுத்துடைய டைனோசர், சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிந்தைய ஜுராசிக் காலத்தில் இப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c551e9-2b40-4af9-8c29-272473ba974a/26-6a52a1f4efcf5.webp' /></p><p>
</p><p>
பாம்பின் செதில்களைப் போன்ற அசாதாரணமான துண்டுகளை அப்பகுதிவாசி ஒருவர் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, கலாசின் மாகாணத்தில் உள்ள புதைபடிவங்கள் நிறைந்த ஒரு தளத்தில் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அன்று முதல், பூ நோய் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஆயிரக்கணக்கான புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மீட்கப்பட்டவற்றில் 90%-க்கும் அதிகமானவை டைனோசர் எச்சங்களாகும்.

இது குறித்த சமீபத்திய ஆய்வு, அந்தப் புதைபடிவங்களில் ஒன்று முற்றிலும் புதிய இனத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.</p><p>
</p><p>
அகழ்வாராய்ச்சி தளத்திலிருந்து மீட்கப்பட்ட, டைனோசரின் முதுகின் நடுப்பகுதியைச் சேர்ந்த எலும்பான முதுகுத் தண்டுவட எலும்பை விஞ்ஞானிகள் உன்னிப்பாக ஆய்வு செய்த பின்னரே இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.</p><p></p><h2>மாமென்சிசாரிடே&nbsp;இனம்</h2><p>

CT ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புதைபடிவம், தங்களின் வியக்கத்தக்க நீண்ட கழுத்துகளுக்காகப் புகழ்பெற்ற சௌரோபாட் டைனோசர்களின் ஒரு இனமான மாமென்சிசாரிடே குடும்பத்தைச் சேர்ந்தது என்று கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4a36fa-d324-49b9-8b0c-750f9a916698/26-6a52a1f5a6684.webp' /></p><p> 

இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள், தங்களின் பிரம்மாண்டமான உடல்களை அதிக தூரம் நகர்த்தாமல், பல்வேறு உயரங்களில் உள்ள தாவரங்களை உண்பதற்காகத் தங்களின் நீண்ட கழுத்துகளைப் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
</p><p>
முன்னர் அடையாளம் காணப்பட்ட டைனோசர்களில் காணப்படாத பல தனித்துவமான உடற்கூறியல் அம்சங்களை அந்தப் புதைபடிவம் கொண்டிருந்ததுதான் ஆய்வுக் குழுவை ஆச்சரியப்படுத்தியது.
</p><p>
மகாசரகம் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் வைத்தியர் அபிருத் நீல்பானபன், அந்த டைனோசர் 'லமினா' எனப்படும் தாங்கு எலும்புகளின் தனித்துவமான அமைப்பைக் கொண்டு 'Y' வடிவ கட்டமைப்பை உருவாக்கியிருந்தது” என கூறியுள்ளார்.</p><p></p><h2>கிரிக்கெட் மைதானத்தின் நீளம்</h2><p>
</p><p>
கிடைத்துள்ள புதைபடிவங்களின் அடிப்படையில், உரகாசாரஸ் கலாசினென்சிஸ் 20 மீட்டர் அல்லது சுமார் 66 அடி நீளம் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thailand just named its 15th dinosaur species: Uragasaurus kalasinensis. This 150-million-year-old sauropod was unearthed in Kalasin by researchers from Mahasarakham University. And it&#39;s the first member of the Mamenchisauridae family ever found in Thailand and Southeast Asia. <a href="https://t.co/fpBOTX0Vny">pic.twitter.com/fpBOTX0Vny</a></p>&mdash; PR Thai Government (@prdthailand) <a href="https://x.com/prdthailand/status/2075442060233158658?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இது ஏறக்குறைய ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்திற்குச் சமமாகும். மற்ற சௌரோபாடுகளைப் போலவே, இதுவும் நான்கு தூண் போன்ற கால்களால் தாங்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான உடலைக் கொண்டு இயங்கிய ஒரு தாவர உண்ணியாக இருந்திருக்கும்.
</p><p>

பாம்பின் செதில்களைப் போன்ற அசாதாரணமான துண்டுகளை அப்பகுதிவாசி ஒருவர் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, கலாசின் மாகாணத்தில் உள்ள புதைபடிவங்கள் நிறைந்த ஒரு தளத்தில் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்பட்டது” எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T21:57:18+00:00</updated>
        </entry>
    </feed>
