<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-10T19:29:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539"></link>
            <id>https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
</p><p>
இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.
</p><p>
இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், "அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள். </p><p>

அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது" என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_MFgBUULEYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-of-huge-strikes-if-iran-kills-him-1783705504"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-of-huge-strikes-if-iran-kills-him-1783705504</id>
            <summary type="text">ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கின் போதே ட்ரம்பைக் கொல்லுமாறு கோரி காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளைக் (Banners) சுட்டிக்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>இலக்குப் பட்டியல்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். </p><p>

நாம் இத்தகையதொரு சூழலையே எதிர்கொண்டுள்ளோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e59fe2-60f7-480c-b2e1-f9f37e0c4992/26-6a5138fb06d86.webp' /></p><p>ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் இதற்கு முன் பார்த்திராத அளவிலான மட்டங்களில் மிகக் கொடூரமாக அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்துமாறு நான் அறிவுறுத்தல்களை விட்டுச் சென்றுள்ளேன்.
</p><p>
தெஹ்ரான் (ஈரான்) தான் இறக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விரும்புகின்றது.</p><p>

நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ratnapura-5-arrested-for-illegal-gem-mining-1783701913"></link>
            <id>https://ibctamil.com/article/ratnapura-5-arrested-for-illegal-gem-mining-1783701913</id>
            <summary type="text">இரத்தினபுரியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியிலே இவ்வாறு சந்தேகநபர்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a52263-e4d3-4c8a-ab3d-3d5ec7aef160/26-6a512c566dca5.webp' /></p><p>கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T17:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-8-deceased-cops-promoted-1783699128"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-8-deceased-cops-promoted-1783699128</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த எட்டு அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 5 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த எட்டு அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்குள் கிளம்பிய மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><h2>மருத்துவமனையில் சிகிச்சை&nbsp;</h2><p>

இதன் அடிப்படையில், நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1afc9db-b1b3-4ab8-865a-d712c200550c/26-6a511e4173d1f.webp' /></p><p>அத்தோடு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர்களில் உள்ள அனைத்து கைதிகளும் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>

இந்தநிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் அவற்றை இன்னும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0493779-b1e2-4edd-a2b2-1fd1afbc797a/26-6a511e40c3cbe.webp' /></p><p>

ஏனெனில் சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்கு உகந்த உடல்நிலையில் இல்லை.
</p><p>
இதற்கிடையில் மோதலில் உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறைக்காவலர்கள்&nbsp;</h2><p>கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும் மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e2e446-a439-4eaf-80f9-e00071049397/26-6a51210fba188.webp' /></p><p>சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜென்ட் கமகே உபாலியின் உடல், இன்று (10.07.2026) கம்புருபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில் மோதலில் உயிரிழந்த சார்ஜென்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று (10) பிற்பகல் அம்பகஹாவெவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T16:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை நிலைகுலைய செய்த பாவி புயல்! அடுத்து தாய்வானை நோக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-bavi-taiwan-about-to-hit-japan-1783692046"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-bavi-taiwan-about-to-hit-japan-1783692046</id>
            <summary type="text">சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் கூடிய இந்த புயல், தற்போது&nbsp;தாய்வானின் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை தாய்வானில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p></p><h2>முடப்பட்ட&nbsp;பாடசாலைகள்</h2><p>இதன்படி அந்நாட்டின் தலைநகரான தாய்பேயில் அனைத்து பாடசாலைகளும் முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612731f0-a830-487c-9755-80f699356ff4/26-6a50fb10a5eae.webp' /></p><p>மேலும், ஜப்பான், ஹாங்காங் மற்றும் பிற இடங்களுக்கான பல விமானங்கள் சனிக்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>புயலின் தற்போதைய வடமேற்குப் பாதையானது, சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கே கடந்து செல்வதற்கு முன்பு, சில தொலைதூர ஜப்பானியத் தீவுகளைக் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சீனாவின் ஃபுஜியான் சில படகு வழித்தடங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், படகுகளைத் துறைமுகத்திற்குத் திரும்புமாறும் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>இடிந்து விழுந்த&nbsp;அணை</h2><p>மழையால் நீர்த்தேக்கங்கள் உடைந்த நிலையில், ஹெங்சோவில் உள்ள ஒரு அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், வேகமாகப் பாய்ந்த சேற்று நீர் ஒரு பரந்த பகுதியை மூழ்கடித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915dafd1-5f39-486d-86fb-5628668b89f8/26-6a50fb0fee5fa.webp' /></p><p>இந்த வெள்ளத்தால், கட்டிடங்களின் இரண்டாவது மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகளில் இருந்த மக்கள், மீட்புக் குழுவினர் வந்து சேரும் வரை பல நாட்களாக மின்சாரமின்றி சிக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T15:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695"></link>
            <id>https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695</id>
            <summary type="text">யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ். காவல்துறையின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>
இது தொடர்பில் அவர் கூறுகையில்,&nbsp; &nbsp;“சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து
நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய
பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும்
உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற
போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம்
கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p></p><h2>30 யாசகர்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித
செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb2442d-92a5-4a81-b30a-0206dded6699/26-6a50f5c8c0428.webp' /></p><p>
</p><p>
அத்துடன் யாழ் மா நகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம். இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும்
வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் கைதுசெய்யப்படு,&nbsp; தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286"></link>
            <id>https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286</id>
            <summary type="text">தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>முன்னரே எச்சரித்தபடி, ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட றிலையில்&nbsp;ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் முகமது பாகர் சுல்காத்ரினால் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும் ஈரானிய ஆயுதப் படைகளின் எதிர்வினையிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்காது என்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் எதிரொலி</h2><p>ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4e7911-3580-4201-8b25-a13fc1603c79/26-6a51005e3b4d4.webp' /></p><p>மேலும், வடகிழக்கு ஈரானில் உள்ள இரண்டு தொடருந்து பாலங்களையும் இந்த தாக்குதல் குறிவைத்தது.</p><p>இதற்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கட்டார் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையும் இராணுவமும் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானும் அமெரிக்காவும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த மோதல்கள் நிகழ்ந்தமை அமைதியடைந்த மத்தியகிழக்கின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-uni-faculty-of-arts-fomer-dean-court-case-1783691084"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-uni-faculty-of-arts-fomer-dean-court-case-1783691084</id>
            <summary type="text">


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>தொடரப்பட்டுள்ள&nbsp;வழக்கு </h2><p>

இந்நிலையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a43d160-a399-4870-b226-61817768a671/26-6a50fe28b4a46.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
</p><p>
இந்நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><h2>தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்</h2><p>

குறித்த 14 பேரில், சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக், பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad778b9-dea3-4373-9e74-4deae61f5b75/26-6a50fe296bc7e.webp' /></p><p>
</p><p>
சம்பந்தப்பட்ட வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை இன்றையதினம் வெள்ளிக்கிழமைக்கு திகதிக்கு மன்று திகதியிட்டு இருந்தது.
</p><p>
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எவ்வித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:14:11+00:00</updated>
        </entry>
    </feed>
