<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-17T20:28:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இராணுவக் கோபுரத்தை அழித்த அமெரிக்கா: வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-destroys-irgc-surveillance-tower-in-iran-1784318798"></link>
            <id>https://ibctamil.com/article/us-destroys-irgc-surveillance-tower-in-iran-1784318798</id>
            <summary type="text">ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த, இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்குச் (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமெரிக்கா அழித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த, இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்குச் (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமெரிக்கா அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
சபஹார் துறைமுக நகரில் உள்ள சபஹார் ஷஹீத் கலந்தாரி துறைமுக கண்காணிப்பு கோபுரம் அழிக்கப்பட்டதன் மூலம், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களைக் கண்காணித்து இலக்குவைப்பதற்கும், பொதுமக்களின் கப்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குமான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) திறன் பலவீனமடையும் என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, இந்தத் தாக்குதலானது, ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையை (US naval blockade) மீற முயற்சிக்கும் கப்பல்களைத் தவிர, பிராந்திய கடற்பரப்பில் உள்ள மற்ற அனைத்துக் கப்பல்களின் தடையற்ற கப்பற்போக்குவரத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா எடுத்துவரும் தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலேயே இந்த உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">On July 16, U.S. forces successfully destroyed the Chah Bahar Shahid Kalantari Port surveillance tower, part of a maritime surveillance network along Iran’s Gulf of Oman coastline used for decades by the Islamic Revolutionary Guard Corps (IRGC) to track and target commercial… <a href="https://t.co/CgBNvgOFf9">pic.twitter.com/CgBNvgOFf9</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2078125131847594149?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-3-quake-hits-mexico-tsunami-alert-issued-1784312889"></link>
            <id>https://ibctamil.com/article/7-3-quake-hits-mexico-tsunami-alert-issued-1784312889</id>
            <summary type="text">பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் அருகிலுள்ள கடற்கரையோரங்களில் அலை மட்டத்திற்கு மேல் 0.3 முதல் 1 மீட்டர் (1-3 அடி) வரையிலான அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மிதமான தீவிரம்</h2><p>

இந்த நிலநடுக்கம் மிதமான தீவிரத்துடன் உணரப்பட்டபோதிலும், பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒக்சாகாவின் (Oaxaca) ஆளுநர் சலோமன் ஜாரா குரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e0c4b4-3102-48c5-9c5e-3c3f9c8c3ee4/26-6a5a860765ad9.webp' /></p><p>இந்த நிலநடுக்கம் குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலும் கட்டிடங்களை உலுக்கியுள்ளதாகவும், குவாத்தமாலா நகரில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்குச் சென்றுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>உள்ளூர் அதிகாரிகள்</h2><p>

மெக்சிகோவின் மீன்பிடி நகரமான புவேர்ட்டோ மடிரோவிற்குச் (Puerto Madero) அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 15.2 கிலோமீட்டர் (9 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f482879c-814b-4396-ab93-e5bd30026974/26-6a5a860675a64.webp' /></p><p>கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடார், நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் சுனாமி அலைகள் 0.3 மீட்டருக்கும் குறைவான அளவிலேயே இருக்கும் என அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.</p><p>
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள அரசாங்க முகவர் நிலையங்கள் ஆபத்தில் உள்ள மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தகவல்களைப் பெறுவதில் விழிப்புடன் இருக்குமாறும், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-17T19:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/list-of-129-including-saharan-handed-over-to-cit-1784309085"></link>
            <id>https://ibctamil.com/article/list-of-129-including-saharan-handed-over-to-cit-1784309085</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் உட்பட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) கருத்தியலால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் 129 நபர்களின் பட்டியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் உட்பட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) கருத்தியலால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் 129 நபர்களின் பட்டியலை, 2019 ஜனவரியிலேயே அரச புலனாய்வுச் சேவை (SIS) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுப்பியிருந்தபோதிலும், அன்றைய சிஐடி சிரேஷ்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்படுவதையும் தடுத்து வைக்கப்படுவதையும் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (17-07-2026) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதே இந்தச் சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
மனுதாரர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனக் டி சில்வா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி சஹ்ரான் ஹாஷிம் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 129 ஆதரவாளர்களின் பட்டியலை 2019 ஜனவரி 31 அன்று அரச புலனாய்வுச் சேவை (SIS) சிஐடியிடம் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p></p><h2>தீவிரவாத நடவடிக்கைகள்&nbsp;</h2><p>இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் கருத்தியலை ஊக்குவிக்கும் நபர்களை அந்த அறிக்கை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியிருந்ததாக வாதிட்ட அவர், இவ்வாறானதொரு விரிவான புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தும் அவர்களைக் கைது செய்ய சிஐடி ஏன் தவறியது என்று கேள்வி எழுப்பினார்.
</p><p>
மேலும், இலங்கையில் தீவிரவாதக் குழுவொன்று இயங்கிவருவது குறித்து 2018ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் உளவு அமைப்புகளும் இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a15f4fe-f844-42f7-b76d-613339c95841/26-6a5a7cb7e8b52.webp' /></p><p>

முன்னாள் எஸ்ஐஎஸ் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன முன்னர் தாக்கல் செய்திருந்த சத்தியக்கடதாசியை மேற்கோள் காட்டிய சஞ்சீவ ஜயவர்தன, 2017 அக்டோபர் 31க்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், சஹ்ரான் மற்றும் அவரது சகாக்களால் திட்டமிடப்பட்ட அல்லது நடத்தப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து 97 புலனாய்வு அறிக்கைகளை காவல்துறை மா அதிபருக்கு (IGP) எஸ்ஐஎஸ் சமர்ப்பித்திருந்ததுடன், அந்த அறிக்கைகளின் பிரதிகள் சிஐடிக்கும் அனுப்பப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.</p><p>மாவநெல்லை புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை மற்றும் வநாத்தவில்லுவ பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகள் ஏற்கனவே சஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தியிருந்ததாக வாதிட்ட அவர், சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக நம்பப்படும் இடங்கள் குறித்த தகவல்களை எஸ்ஐஎஸ் புலனாய்வு அதிகாரி ஒருவர் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>விசாரணை ஆணைக்குழு&nbsp;</h2><p>ஜயவர்தனவின் கூற்றுப்படி, சிஐடி தங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி முறையாகச் செயல்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்கலாம் என்று அந்த அதிகாரி இதற்கு முன்னர் விசாரணை ஆணைக்குழு ஒன்றில் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.</p><p>
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவிடமிருந்து (RAW) 2019 ஏப்ரல் 4 அன்று பெறப்பட்ட இறுதிப் புலனாய்வு எச்சரிக்கை குறித்தும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் விவரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5723118f-8ce3-4825-a04b-f1bf622171b5/26-6a5a7cb89c7fd.webp' /></p><p>

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கை இலங்கை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் எஸ்ஐஎஸ் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன அந்த எச்சரிக்கையைக் காவல் மா அதிபருக்கு அனுப்பியதுடன் அதன் பிரதியை சிஐடிக்கும் அனுப்பியிருந்தார்.</p><p>

சமர்ப்பிப்புகளின்படி, அந்தக் கடிதம் 2019 ஏப்ரல் 9 அன்று அப்போதைய சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்னவின் அலுவலகத்தை சென்றடைந்தபோதிலும், அது ஏப்ரல் 16 அன்றே அப்போதைய பிரதிப் காவல்துறை மா அதிபர் நாகஹவத்தவிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2> மேலதிக விசாரணை</h2><p>அதன் பின்னர், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்த மறுநாளான ஏப்ரல் 22 அன்றே சிஐடி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

ஜனக் டி சில்வா ஆணைக்குழுவின் முன்னிலையில் ரவி செனவிரத்ன அளித்த சாட்சியத்தை மேற்கோள் காட்டிய ஜயவர்தன, அவர் 2019 ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 13 வரை மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சென்றிருந்ததாகவும், ஏப்ரல் 16 அன்று மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றதாகவும், எனினும் அந்தப் புலனாய்வுக் கடிதம் ஏப்ரல் 19 அன்றே செனவிரத்னவின் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e806e8dc-8703-4335-9bf8-8fd9f0093a4f/26-6a5a7cb6effe7.webp' /></p><p>சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அந்தத் தீவிரவாதக் குழுவின் செயல்பாடுகள் குறித்து சிஐடி ஏற்கனவே அறிந்திருந்ததாகச் செனவிரத்ன ஆணைக்குழுவின் முன்னிலையில் ஒப்புக்கொண்டபோதிலும், அந்தத் தகவல் தொடர்பாக சிஐடியால் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க முடியாது என அவர் கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதே அதிகாரிகளிடம் இப்போது மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணையை எவ்வாறு ஒப்படைக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய ஜயவர்தன, இவ்விடயத்தை நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
</p><p>
இதற்கமைய, வழக்கை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனு மீதான மேலதிக விசாரணையை வரும் 2026 ஜூலை 21ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டா விவகாரத்தில் கைமாறிய பணம்! லஞ்ச வழக்கில் நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harak-kata-bribe-rakitha-s-remand-extended-1784303773"></link>
            <id>https://ibctamil.com/article/harak-kata-bribe-rakitha-s-remand-extended-1784303773</id>
            <summary type="text">பாதாள உலகக் கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கூறப்படுபவருமான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவின் (Harak Kata) மனைவியிடமிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கூறப்படுபவருமான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவின் (Harak Kata) மனைவியிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா பணத்தில் ஒரு பகுதி, பௌத்த துறவி ஒருவர் ஊடாக சில சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குக் கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணையாளர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (17-07-2026) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><p>

சந்தேகநபர்களான சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ச மற்றும் அருண வருஷஹென்னாதிக ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17-07-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தகவல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஊழல் விசாரணை&nbsp;</h2><p>கருத்துக்களைப் பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதராகம, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 2026 ஜூலை 28ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
ஹரக் கட்டா தடுப்புக்காவலில் இருந்தபோது அவருக்குச் சாதகமான முறையில் செயற்படுவதற்காக 120 மில்லியன் ரூபா லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74ad5f0c-e3d5-4585-9ca6-376f402ac91d/26-6a5a637446d29.webp' /></p><p>முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரண தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருஷஹென்னாதிக ஆகியோரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாவர்.
</p><p>
இந்த நிலையில், விசாரணையின் முற்போக்கு அறிக்கையைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்ட) அனுஷா சம்பந்தப்பெரும, விசாரணையாளர்கள் ஹரக் கட்டாவின் மனைவி மகேஷிகா மதுவந்தியிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

சாட்சியாளர் தனது விருப்பத்தின் பேரில் இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை அடங்கிய காணொளிப் பதிவு ஒன்றையும், அதனை உள்ளடக்கிய குறுந்தகடு (CD) ஒன்றையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>தொலைபேசி அழைப்புகள்</h2><p>மேலும், லஞ்சத்திற்குப் பதிலாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து, சாட்சியாளருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களைக் கொண்ட தொலைபேசி ஒன்றையும் விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரு சந்தேகநபர்களும் தன்னுடன் இருந்தபோது, லஞ்சம் குறித்து விவாதிப்பதற்காகச் சரித் அபேசிங்க இந்தியாவில் இருந்து தன்னைத் தொடர்புகொண்டதாக ஹெர்பி எனப்படும் நிர்மலா பண்டார முன்னர் கூறியிருந்த தகவல்களை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6229365-5b40-45d7-aa85-351ed819babd/26-6a5a6374ebb9a.webp' /></p><p>இந்த நிலையில், குடியேற்றத் துறை பதிவுகளின்படி, மூன்று சந்தேகநபர்களும் 2023 மார்ச் 3 அன்று ஒன்றாக இந்தியாவுக்குச் சென்றுவிட்டு, மார்ச் 7 அன்று ஒரே விமானத்தில் இலங்கை திரும்பியுள்ளனர்.
</p><p>
தொலைபேசி அழைப்புப் பதிவுகளின் பகுப்பாய்வும் ஹெர்பியின் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விவகாரத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே 1300க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளதை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>தனி விசாரணை</h2><p>லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை சில சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குக் கைமாற்றுவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பௌத்த துறவி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவல் முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னர் மேலதிக விவரங்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதே மூன்று சந்தேகநபர்களும் சம்பந்தப்பட்ட மற்றொரு தனிப்பயன்பாட்டு லஞ்சச் சம்பவம் குறித்து ஆணைக்குழுவிற்கு இன்னுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அது குறித்த தனி விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f04bc8-166a-4fae-84ed-e5a190e8b689/26-6a5a63739281c.webp' /></p><p>

இதன்போது, சரித் அபேசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன, லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்றும், இந்த வழக்கு முக்கியமாக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சாட்சிகளையே நம்பியிருக்கிறது என்றும் வாதிட்டுப் பிணை கோரினார்.
</p><p>
அத்தோடு, தனது மனுதாரரின் இதய நோய் நிலைமை மற்றும் அவரது குடும்பச் சூழல் ஆகியவற்றைச் சிறப்புக் காரணங்களாகக் காட்டி அவர் பிணை கோரினார்.
</p><p>
இதையடுத்து, ரகித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸவும், தனது மனுதாரர் சிறையில் இருக்கும்போது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அவர் கடுமையான தூக்க மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரவில் CPAP இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும், அதனைச் சிறையில் சரியாகப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துப் பிணை கோரினார்.
</p><p>
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த தலைமை நீதவான், பிணை மனுக்கள் மீதான உத்தரவை வழங்க ஜூலை 28ஆம் திகதியை நிர்ணயித்ததுடன், அதுவரை மூன்று சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T17:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[F-35 போலியான சதி திட்ட உளவுத் தகவல்: நெதன்யாகு மீது கடுங்கோபத்தில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/f35-plot-intelligence-netanyahu-furious-with-trump-1784296763"></link>
            <id>https://ibctamil.com/article/f35-plot-intelligence-netanyahu-furious-with-trump-1784296763</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கான தனது கோரிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கான தனது கோரிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை இரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. </p><p>

இந்த சந்திப்புக் கோரிக்கை தொடர்பாக நெதன்யாகுவுக்குத் தெளிவான மறுப்பு கிடைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>
எனினும் ட்ரம்ப் குழுவிடமிருந்து அவருக்கு நிச்சயமாக சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று அமெரிக்காவின் முன்னணி ஊடக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு&nbsp;</h2><p>
</p><p>
ஈரானுக்கு எதிரான போரை ஒன்றாகத் தொடங்கிய சகாக்களான ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளியையும், மாறுபட்ட நலன்களையும் சுட்டிக்காட்டும் அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த நிலைஏற்பட்டுள்ளது.</p><p></p><p> 

ட்ரம்ப் அங்காராவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலியத் தலைவர் தொலைக்காட்சியில் தோன்றி, துருக்கிக்கு எஃப்-35 ரக போர் விமானங்களை விற்கும் அமெரிக்கத் தலைவரின் நோக்கத்தை விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு குறித்த வாக்குவாதங்கள் நடைபெற்றன.</p><p>


அந்தப் பேட்டியால் ட்ரம்ப் கடுங்கோபமடைந்தார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

அந்த விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை என்று அமெரிக்கத் தலைமைத் தளபதி கருதியதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
</p><p>
மேலும், ட்ரம்ப் துருக்கியில் இருந்தபோது, ​​அவர் அங்காராவில் இருக்கும் பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஈரான் ஒரு கொலைச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்பது குறித்த உளவுத் தகவல் இருப்பதாக இஸ்ரேலானது அமெரிக்காவை எச்சரித்தது.</p><p>

இந்த உளவுத் தகவலின் காரணமாக, ட்ரம்பின் விமானப் பயணத்தை பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு மாற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இரகசிய சேவை அமைப்பு தூண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T15:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் அமைதி திரும்பும் வரை தாக்குதல்கள் தொடரும்! ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-say-attack-will-continue-calm-returns-hormuz-1784293124"></link>
            <id>https://ibctamil.com/article/iran-say-attack-will-continue-calm-returns-hormuz-1784293124</id>
            <summary type="text">தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அமைதி திரும்பும் வரை ஈரானியத் தாக்குதல்கள் தொடரும் என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் படைத் தளபதி சையத் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அமைதி திரும்பும் வரை ஈரானியத் தாக்குதல்கள் தொடரும் என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் படைத் தளபதி சையத் மஜித் மூசாவி, கூறியுள்ளார்.</p><p>
கணக்கீட்டு முறையில், ஈரானின் தலைநகரம் முதல் தெற்கு வரையிலான அனைத்தும் ஈரானின் முழுப் பகுதி என்பதை அமெரிக்க விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் அமைதி திரும்பும் வரை, ஈரான் முழுவதிலிருந்தும் எதிரிக்கு எதிரான திறமையான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதலின் நோக்கம்&nbsp;</h2><p>

ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக ஆறாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியபோது, ​​பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0fb1be-0c50-49d7-8727-be57054dc509/26-6a5a2746e1d7f.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல்கள், ஈரானின் இராணுவத் திறன்களைக் குறைத்து தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைப்பதை நோக்கமாகக் கொண்டவையா, தரைவழிப் படையெடுப்பிற்குத் தயாராவதற்காக முக்கியப் போக்குவரத்து வலையமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டவையா, அல்லது அன்றாட வாழ்க்கை சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பைச் சீர்குலைப்பதன் மூலம் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவையா என்பதை அமெரிக்க விளக்க வேண்டும் என சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T14:42:57+00:00</updated>
        </entry>
    </feed>
