<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-20T07:33:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cbsl-usd-daily-buy-and-sell-exchange-rates-1784530423"></link>
            <id>https://ibctamil.com/article/cbsl-usd-daily-buy-and-sell-exchange-rates-1784530423</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் இன்று (20) வெளியிடப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியினால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.</p><p>அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 340.90 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.78 ஆக காணப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாணயமாற்று விகிதங்கள்</span></p><p>ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 460.24 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d84d260-c64d-4a6e-a4ee-d94d7af279e5/26-6a5dc6a9984e9.webp' /></p><p>
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.39 ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி&nbsp;243.96 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிக் கொண்டாட்டத்தில் FIFA தலைவரால் விலக்கி வைக்கப்பட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-s-behavior-at-fifa-world-cup-award-function-1784530071"></link>
            <id>https://ibctamil.com/article/trump-s-behavior-at-fifa-world-cup-award-function-1784530071</id>
            <summary type="text">202 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்த காட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>202 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்த காட்சி சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரிக்கு கோப்பை வழங்கப்பட்ட பின்னரும், ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்தமை தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்சிகளில் பதிவாகியுள்ளது.
</p><p>
அதன்பின், ஸ்பெயின் வீரர்கள் உலகக் கோப்பையை ஏந்தி வெற்றியைக் கொண்டாடிய வேளையிலும் ட்ரம்ப் மேடையை விட்டு உடனடியாக விலகவில்லை என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்பின் நடத்தை</h2><p> </p><p>மேலும் அந்தக் காட்சிகளில், ரோட்ரி ட்ரம்புக்கு சற்றுப் பின்வாங்குமாறு சைகை செய்வது போன்ற தருணமும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">President Donald J. Trump presents the World Cup Trophy to Spain, the 2026 <a href="https://x.com/FIFAWorldCup?ref_src=twsrc%5Etfw">@FIFAWorldCup</a> Champions! 🏆 <a href="https://t.co/SHsoBhYm1b">pic.twitter.com/SHsoBhYm1b</a></p>&mdash; The White House (@WhiteHouse) <a href="https://x.com/WhiteHouse/status/2078976201188606160?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதற்கிடையில், FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோ ட்ரம்பிடம் சென்று, அவரை மேடையிலிருந்து அழைத்துச் செல்ல முயற்சிப்பது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><p>குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில் ட்ரம்பின் நடத்தை குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் மாறுபட்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடி அரசாங்கத்துக்கு எதிர்ப்பு! டெல்லியை முற்றுகையிட்ட கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cockroach-janata-org-that-laid-siege-to-delhi-1784531310"></link>
            <id>https://ibctamil.com/article/cockroach-janata-org-that-laid-siege-to-delhi-1784531310</id>
            <summary type="text">சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்தியாவின் &quot;கொக்ரோச்&quot; (Cockroach) அமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்தியாவின் "கொக்ரோச்" (Cockroach) அமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி அந்நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் பாரிய போராட்டம் ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
</p><p>
இதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று(20.07.2026) அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக திரண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.</p><p></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">All of India and all of the world is watching this cruel and authoritarian regime trying to crush a peaceful and democratic protest.<br><br>Why is the government so scared of a peaceful protest? All this to save Dharmendra Pradhan? <a href="https://t.co/UeP16iLFoM">pic.twitter.com/UeP16iLFoM</a></p>&mdash; Cockroach is Back (@Cockroachisback) <a href="https://x.com/Cockroachisback/status/2079100591079395522?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>அனுமதி மறுத்த&nbsp;காவல்துறை </h2><p>

போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும், திட்டமிட்டபடி பேரணியை கொக்ரோச் அமைப்பின் குழுவினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5b63b2-e9d1-4bcb-8d94-7adfc2362042/26-6a5dccefeb07e.webp' /></p><p>
</p><p>
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராக எழுந்துள்ள மிகப் பெரிய மக்கள் சவாலாக இந்த போராட்டம் கருதப்படுகிறது. </p><p>

சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றுள்ள இந்த அமைப்பு , இந்திய மக்களிடத்திலும் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று வருகிறது.</p><p> 

கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை காவல்துறை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. </p><p>

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இரவு முழுவதும் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p></p><h2>கசிந்த வினாத்தாள்கள் </h2><p>அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ஏராளமான காவல்துறையினரும் துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f30222c5-a87c-45d3-af14-409c386c8e1c/26-6a5dccf0a252e.webp' /></p><p>போராட்டக்காரர்கள் "தர்மேந்திர பிரதான் பதவி விலகு", "நரேந்திர மோடி பதவி விலகு" எனக் கோஷமிட்டடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
தேசிய வைத்தியத்துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கடந்த மே மாதம் கசிந்ததைத் தொடர்ந்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

இதையடுத்து "Cockroach Janta Party (CJP)" என்ற இயக்கம் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது. 

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். </p><p>

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கும் வினாத்தாள் கசிவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் அல்லது போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்ற உறுதியை அரசாங்கம் வழங்கினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T07:23:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! முக்கிய சந்தேநபர்களை தேடி அவுஸ்திரேலியா பறக்கும் சிஐடி குழுவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-to-australia-investigate-airbus-deal-case-1784529693"></link>
            <id>https://ibctamil.com/article/team-to-australia-investigate-airbus-deal-case-1784529693</id>
            <summary type="text">

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களைக் கொண்ட ஒரு விமானக் குழுமத்தை வாங்குவதற்காக, 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களைக் கொண்ட ஒரு விமானக் குழுமத்தை வாங்குவதற்காக, 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய விசேட காவல்துறை குழுவொன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளது.</p><p>
குறித்த வழக்கு தொடர்பான சந்தேக நபர்களையும் சாட்சிகளையும் தேடுவதற்காக, லஞ்ச விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒரு கூட்டு காவல்துறை குழுவே இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

ஏர்பஸ் லஞ்சப் பரிவர்த்தனையில் பணம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும், ஆதாரங்களைக் கண்டறிவதற்கும் இந்தக் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கிய சந்தேகநபர்கள்</h2><p>

லஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் என்று கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா, அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக லஞ்ச ஆணைக்குழு முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e8cbaa-299a-42dd-8031-e32ef60cb472/26-6a5dc7bcb853c.webp' /></p><p>
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களான, உயிரிழந்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸின் முன்னாள் பணிப்பாளர் சி.டி.ஏ. கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர்.</p><p>
அவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு</h2><p>

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் லஞ்ச ஆணைக்குழுவும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யும் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019d6389-a6d4-4452-a509-56bc5dcc208b/26-6a5dc7bc06d5a.webp' /></p><p>

புருனேயில் ஒரு போலி நிறுவனத்தை நிறுவியது மற்றும் ஒரு புகழ்பெற்ற ஐரோப்பிய சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் (இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்) லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T07:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ள இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-1784527555"></link>
            <id>https://ibctamil.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-1784527555</id>
            <summary type="text">இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்த வரி ஒப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, இந்த வரி ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ள நிலையில் இந்த புதிய கொள்கை நேற்று (19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p>

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய முதலீட்டு கட்டமைப்புகளை வரி அதிகாரிகள் இனி வித்தியாசமாக மதிப்பீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p></p><h2>&nbsp;இந்திய நிதியமைச்சு</h2><p>

முக்கியமாக, வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே சில கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து, அத்தகைய வரி ஏய்ப்பைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. </p><p>

இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்க இந்திய நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஈட்டப்படும் வருமானத்திற்கே இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60b63b6-63d7-44c4-a654-3b9dcf4dde44/26-6a5dc6686e7ae.webp' /></p><p> </p><p>

இந்த புதிய PPT விதிமுறையின் கீழ், வெறும் சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதாக கருதப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நிறுவனங்கள், தாங்கள் அமைத்துள்ள ஹோல்டிங் கம்பெனிகள் அல்லது விசேட நோக்கத்திற்குரிய வாகனங்கள் (SPVs) உண்மையான வணிகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய நேரடி வரிகள் அதிகார சபை</h2><p>

வரிச் சலுகையைப் பெறுவது ஒரு முக்கிய நோக்கமாக இருந்தால், ஒப்பந்தத்தின் பலன்களை மறுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

எனவே, முதலீட்டாளர்கள் இனி தங்கள் குறுக்கு-எல்லை ஏற்பாடுகளுக்குத் தெளிவான வணிகக் காரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb21ea7-aa49-4369-9941-2929c1446b1d/26-6a5dc66929e37.webp' /></p><p>இது நிறுவனங்களுக்கு தங்கள் வரி மற்றும் முதலீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தியா மற்றும் இலங்கை இடையே செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், தங்கள் வணிகத்தின் உண்மையான நோக்கத்திற்கான ஆவணங்களைச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும். </p><p>

வரிக் கணக்குத் திட்டமிடலுக்கு மேலும் தெளிவைத்தரும் வகையில், 'முக்கிய நோக்கம்' என்பதை நிரூபிப்பதற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் குறித்த மத்திய நேரடி வரிகள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recent-earthquake-in-iran-1784523493"></link>
            <id>https://ibctamil.com/article/recent-earthquake-in-iran-1784523493</id>
            <summary type="text">புதிய இணைப்புஈரானின் மேற்குப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில்&amp;nbsp;&amp;nbsp;5.7 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஈரானின் மேற்குப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில்&nbsp;&nbsp;5.7 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:18 மணிக்கு (03:43 GMT) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதுவரையில் வெளியாகவில்லை.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலைமைகளை மதிப்பிடுவதற்காக, மதிப்பீட்டுக் குழுக்களும் அவசரகால மீட்புப் பிரிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><h4><b>ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்&nbsp;</b></h4><p>ஈரானின் மேற்குப்பகுதியான&nbsp;கெர்மன்ஷா மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள குசரான் அருகே 8 கி.மீ (5 மைல்) ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து&nbsp; தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஈரானிய நிலநடுக்கவியல் மையத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><h2>நிலநடுக்கத்தின் தாக்கம்</h2><p>உள்ளூர் நேரப்படி காலை 7:13 மணிக்கு (03:43 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb4ada7-dea6-4eb7-9d1f-0392c5e2b0d7/26-6a5dc1d7539e0.webp' /></p><p>இதன் மையப்புள்ளி குசாரானிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், மாகாணத் தலைநகரான கெர்மன்ஷாவிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/collision-jeep-lorry-on-the-accident-matara-road-1784522191"></link>
            <id>https://ibctamil.com/article/collision-jeep-lorry-on-the-accident-matara-road-1784522191</id>
            <summary type="text">மாத்தறை - தங்காலை&amp;nbsp; பிரதான வீதியில்&amp;nbsp; இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - தங்காலை&nbsp; பிரதான வீதியில்&nbsp; இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து&nbsp;நேற்று (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>பிற்பகல் 3.50 மணியளவில் மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும், தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p> </p><h2>இருவர் பலி</h2><p>சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இரு வண்டியிலும் மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5353f52-eb80-4410-a4ec-3b43562648de/26-6a5dc38051189.webp' /></p><p> </p><p>விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி ஜீப் வாகனத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை - ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37,36 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
காயமடைந்தவர்களில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-recovered-from-asp-residence-1784528521"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-recovered-from-asp-residence-1784528521</id>
            <summary type="text">
கண்டியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கையெறி குண்டுகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கண்டியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கையெறி குண்டுகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

கண்டி, நத்தரம்பொத்தவில் அமைந்துள்ள குறித்த வீட்டில், சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளரின் மனைவி வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டி காவல்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இந்த அதிகாரி, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.எனினும், தம்பதியினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு நிலவி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

 இந்த ஆயுதங்கள் உதவி காவல் கண்காணிப்பாளரின் ஆடை அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக பல்லேகெலே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6e895b-0b64-43ef-8fb1-9e0fc368cb03/26-6a5dc13298a42.webp' /></p><p>இதேவேளை,&nbsp;இது குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக சந்தேநபரான காவல்துறை அதிகாரி கண்டி மாவட்ட
குற்றத்தடுப்பு காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகெலே காவல்துறையினரும், கண்டி மாவட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T06:39:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம முடிச்சுக்களுடன் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் - களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-inquiry-launched-into-death-of-former-igp-1784527436"></link>
            <id>https://ibctamil.com/article/special-inquiry-launched-into-death-of-former-igp-1784527436</id>
            <summary type="text">தனது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேற்கு தெற்கு குற்றப்பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேற்கு தெற்கு குற்றப்பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகரவை விசாரணையை மேற்பார்வையிடுமாறு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>துப்பாக்கிச் சூட்டினால் மரணம் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அது தற்கொலையா அல்லது தற்செயலாக வெடித்ததா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை.</p><p></p><h2>பிரேதப் பரிசோதனை</h2><p> </p><p>வரவிருக்கும் தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளிலிருந்து இதுபற்றித் தெளிவு கிடைக்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93292a96-fdc9-4afb-ba85-0bcc2af39be8/26-6a5dbc9c18573.webp' /></p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, விக்ரமரத்னவின் மார்பில் குண்டு பாய்ந்ததில், அது அவரது முதுகு வழியாக வெளியேறியது. சம்பந்தப்பட்ட துப்பாக்கி, அவரது பாதுகாப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த சார்ஜென்ட்டுக்குச் சொந்தமானது.</p><p> உடற் பயிற்சிக்குக் கிளம்புவதற்கு முன்பு, சி.டி. விக்ரமரத்ன அந்தத் துப்பாக்கியைச் சோதிக்கக் கோரியதாக அந்த சார்ஜென்ட் புலனாய்வாளர்களிடம் கூறினார். சில கணங்களுக்குப் பிறகு, தண்ணீர் போத்தல்களை எடுப்பதற்காக அந்த சார்ஜென்ட் உள்ளே சென்றபோது, ​​துப்பாக்கிச் சத்தம் கேட்டது.</p><p></p><h2>இறுதிச் சடங்கு&nbsp;</h2><p>

அப்போது, ​​விக்கிரமரத்னவின் மனைவியும் இளம் மகனும் வீட்டிற்குள் இருந்தனர். அவர்கள் வெளியே விரைந்து வந்து பார்த்தபோது, ​​அவர் சரிந்து விழுந்து கிடப்பதையும், துப்பாக்கி அருகில் கிடப்பதையும் கண்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3c7f34-c516-47be-889e-f3271e7955f1/26-6a5dbc9b5f6b3.webp' /></p><p>மறைந்த முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு இன்று (20) முழு மரியாதையுடனும் சம்பிரதாய மரியாதையுடனும் நடைபெறும் என காவல்துறை அறிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T06:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Golden Boot விருதை வென்று இமாலய சாதனை படைத்த எம்பாப்பே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mbappe-makes-world-cup-history-2nd-golden-boot-1784523774"></link>
            <id>https://ibctamil.com/article/mbappe-makes-world-cup-history-2nd-golden-boot-1784523774</id>
            <summary type="text">உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார்.</p><p>உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் பிரான்ஸின் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) தங்கக் காலணி (Golden Boot) விருதை வென்றுள்ளார்.</p><p> </p><p>தங்கப் பாதணி விருதைத் தன்வசப்படுத்தியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக மகா சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>கோல்டன் பூட்</h2><p>நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தபோது லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், எம்பாப்பே தனது இரண்டாவது 'கோல்டன் பூட்' விருதை வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17024600-087a-4e29-b2f6-7b7598586b20/26-6a5db89a276d5.webp' /></p><p>உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், மெஸ்ஸியை (21 கோல்) முந்தி, 22 கோல்களுடன் எம்பாப்பே இப்போது முதலிடத்தில் உள்ளார்.</p><p> </p><p>ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பிறகு, ஒரே உலகக் கோப்பை தொடரில் 10 கோல்களைத் தொட்ட முதல் வீரர் எம்பாப்பே தான்.</p><p></p><h2>கோல்டன் பால்</h2><p>​ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோத்ரி, தொடரின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e6ada1c-3e01-4a9b-a589-fba65099a28c/26-6a5db89af2360.webp' /></p><p> அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு 'சில்வர் பால்' விருதும், எம்பாப்பேவுக்கு 'வெண்கல பால்' விருதும் வழங்கப்பட்டது.</p><p>ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் பின்கள வீரர் பாவ் கியூபார்சி, 'சிறந்த இளம் வீரர்' விருதைத் தட்டிச் சென்றார்.</p><h2>கோல் அடிக்க விடாமல் க்ளீன் ஷீட்</h2><p>​ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன், சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் க்ளோவ்' விருதை வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cf75a2-ccdd-4693-a305-8664164e2104/26-6a5db89ba8828.webp' /></p><p> இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில், பெல்ஜியத்திற்கு எதிரான ஒரே ஒரு கோலைத் தவிர, மற்ற 7 போட்டிகளிலும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் 'க்ளீன் ஷீட்' தக்கவைத்து மிரட்டினார்.</p><h2>அதிக கோல் அடித்தவர்கள்</h2><p>2026 உலகக் கோப்பை அதிக கோல் அடித்தவர்கள்:

10 கோல்கள்: கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்)</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1aec981-34de-486e-bb00-6300e04db178/26-6a5db89c57fcd.webp' /></p><p>8 கோல்கள்: லயனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)
7 கோல்கள்: ஜூட் பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து), எர்லிங் ஹாலண்ட் (நார்வே)
</p><p>6 கோல்கள் : உஸ்மான் டெம்பேலே (பிரான்ஸ்), ஹாரி கேன் (இங்கிலாந்து)
5 கோல்கள்: மிக்கேல் ஓயர்சபால் (ஸ்பெயின்)
</p><p>4 கோல்கள்: வினீசியஸ் ஜூனியர் (பிரேசில்), ஜூலியன் குயினோனெஸ் (மெக்சிகோ), இஸ்மாயிலா சார் (செனகல்)</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/quality-testing-for-all-public-transport-vehicles-1784522612"></link>
            <id>https://ibctamil.com/article/quality-testing-for-all-public-transport-vehicles-1784522612</id>
            <summary type="text">நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.</p><p>அதற்கமைய இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளுமே பிரதான காரணம்.</p><p></p><h2>தொழில்நுட்ப அதிகாரிகள்</h2><p>இது தொடர்பில் கவனம் செலுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d363826-7da5-4e65-bb3b-1d30e1c82b62/26-6a5db124e5f21.webp' /></p><p>குறித்த தரப் பரிசோதனைக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும்.</p><p>அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் பரபரப்பு - முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்: தி.மு.க. MLA கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmk-mla-arrested-over-threatening-tn-cm-vijay-1784519853"></link>
            <id>https://ibctamil.com/article/dmk-mla-arrested-over-threatening-tn-cm-vijay-1784519853</id>
            <summary type="text">முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (20.07.2026) அதிகாலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் தெரியவருகையில், கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது.</p><p></p><h2>முதலமைச்சருக்கு மிரட்டல்</h2><p>அந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564a9ae3-bb1a-4ca2-be03-19db75833b0d/26-6a5da9cfd5f26.webp' /></p><p>திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;இதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். </p><p>ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் வழங்கினர்.</p><p>இந்த நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஆதரவாளர்கள் கோஷம்</h2><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர், மேலும் காவல்துறை வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da496e6d-c22e-41e1-a594-88e10231fb3b/26-6a5da9ceef147.webp' /></p><p>விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் மர்ம மரணங்கள் : சர்வதேச விசாரணை கோரும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mysterious-deaths-continue-under-anura-s-rule-1784518609"></link>
            <id>https://ibctamil.com/article/mysterious-deaths-continue-under-anura-s-rule-1784518609</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p>

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.</p><p></p><h2>சர்வதேச விசாரணை&nbsp;</h2><p>
</p><p>எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
</p><p>
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ச என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d36428b-9776-4a00-be77-c7e06691303a/26-6a5d9a80d455e.webp' /></p><p>
</p><p>
தற்போது, முன்னாள் காவல்துறை மா அதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது. இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது, இவற்றில் சந்தேகம் நிலவுகின்றது.</p><p>
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1HOV--MMOW4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களில் டெங்குவை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டல் : கல்வி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/guidelines-to-control-dengue-in-universities-moe-1784520247"></link>
            <id>https://ibctamil.com/article/guidelines-to-control-dengue-in-universities-moe-1784520247</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.</p><p>அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு இன்று (20) காலை 10 மணிக்கு உயர் கல்வி அமைச்சில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம் என&nbsp;உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>மூடப்பட்ட&nbsp;பல்கலைக்கழகங்கள்</h2><p>இதேவேளை அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d133078-f0f7-48da-a7cd-55cb36870b75/26-6a5da421cdb9a.webp' /></p><p>அத்துடன், இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 53 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் சபாநாயகர் கபில கன்னங்கர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்தில் நீடிக்கும் மர்மம் - மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி கிரியை இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/final-rites-of-ex-igp-cd-wickramaratne-held-today-1784516197"></link>
            <id>https://ibctamil.com/article/final-rites-of-ex-igp-cd-wickramaratne-held-today-1784516197</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.&nbsp;</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்றும், தமது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியாலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94523e2d-4fe6-4b1b-ab08-b0a39e531933/26-6a5d978f7f2e7.webp' /></p><p>சி.டி. விக்ரமரத்னவின் சடலம் மீதான கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், முன்னாள் காவல்துறை மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியும் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

விசாரணைகளுக்கு அமைவாக, அன்னாரின் மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை</h2><p>இதேவேளை முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c5ca59-acaf-4bb7-9e71-8ddb10128e50/26-6a5d99678c8ce.webp' /></p><p>அவர் மரணமடைந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன். அவ்வாறான நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது கூற முடியாது.
</p><p>
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான தீர்மானத்துக்கு வரமுடியும்.
</p><p>
எனினும், முன்னாள் காவல்துறை மா அதிபரின் விடயத்தில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் குறித்த விடயத்தினை வைத்து அரசியல் சுயலாபம் தேடுவதற்கு முயற்சிகின்றன“ என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T03:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Red card ஆல் கலைந்த அர்ஜென்டினாவின் கனவு - கண்ணீர் சிந்திய மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533"></link>
            <id>https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.</p><p>2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் கூடுதல் நேரத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது.</p><p>போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.</p><h2>அணிக்கு பெரும் பின்னடைவு</h2><p> இதற்கிடையே, போட்டியின் கூடுதல் நேரத்தில் (90+3' நிமிடம்) அர்ஜென்டினா வீரர் பெர்னாண்டஸ் முரட்டு ஆட்டம் விளையாடியதால், ரெட் கார்டு காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🎥 What an emotional moment! 🥹😢<br><br>• The legend Lionel Messi cries after the defeat in his final World Cup match. ❌ <a href="https://t.co/EjkVJq29Mb">pic.twitter.com/EjkVJq29Mb</a></p>&mdash; Tiger eye 👁️ (@Tigereye_ball) <a href="https://x.com/Tigereye_ball/status/2078976496576729225?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தில் மிகுந்த உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது. அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்கள் அடித்துள்ளார். எனினும் பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 22 கோல்களுடன் அவரை முந்தியுள்ளார்.</p><p>அர்ஜென்டினா அணியின் தோல்வியைத் தொடர்ந்து உணர்ச்சிவசத்தால் கண்ணீர் சிந்திய மெஸ்ஸியின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.</p><p>ஸ்பெயின் எங்களை விட சிறந்த அணி. அவர்கள் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்” என&nbsp;அர்ஜென்டினா அணித்தலைவர் Lionel Messi</p>]]></content>
            <updated>2026-07-20T02:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-earthquakes-strike-peru-killing-at-least-five-1784511973"></link>
            <id>https://ibctamil.com/article/twin-earthquakes-strike-peru-killing-at-least-five-1784511973</id>
            <summary type="text">பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெருவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பெருவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, முதல் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. </p><p>அதன் பின்னர் சில மணி நேரங்களில் 3.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.</p><p></p><h2>எளிதில் இடிந்து விழும் தன்மை</h2><p>இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை இரவு 9.24 மணிக்கு ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கு-தென்மேற்கே 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab84097-45c7-4a92-8967-ff7acaf58dbf/26-6a5d7fe217bb9.webp' /></p><p>காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>சூபாக்கா நகரில், வீடுகள் பெரும்பாலும் களிமண் செங்கற்களால் கட்டப்படுவதால், அவை எளிதில் இடிந்து விழும் தன்மை கொண்டவையாக உள்ளன.&nbsp;உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு ரீதியாக சேதமடைந்தன.</p><p>

"நிலநடுக்கம் எங்கள் வீட்டை அழித்துவிட்டது. இங்கு பல களிமண் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன," என்று சோங்கோஸ் பாஜோவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடியிருப்புவாசி N தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T01:54:45+00:00</updated>
        </entry>
    </feed>
