<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-20T21:26:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கொரியா - அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northkorea-missile-test-korea-us-military-exercise-1789933896"></link>
            <id>https://ibctamil.com/article/northkorea-missile-test-korea-us-military-exercise-1789933896</id>
            <summary type="text">வடகொரியா ஞாயிற்றுக்கிழமை தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா ஞாயிற்றுக்கிழமை தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சுமார் ஒரு வார காலத்திற்குள் வடகொரியா மேற்கொண்டுள்ள இரண்டாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும். </p><p>அமெரிக்கா மற்றும் தென்கொரியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளே கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து வருவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்த ஏவுகணைச் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணை என அடையாளம்</h2><p>
</p><p>
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கிழக்குக் கடலை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவியதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2725bf53-6333-4b1e-a625-2753a9fb94af/26-6ab039496d4e5.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அதேபோன்ற மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முதல் ஏவுகணை ஏவப்பட்டதை தென்கொரிய கூட்டு இராணுவத் தலைமைத்துவம், வொன்சான் பகுதியில் இருந்து பிற்பகல் சுமார் 3 மணியளவில் கண்டறிந்துள்ளது. </p><p>அந்த ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் அந்த ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்கா மற்றும் தென்கொரியா</h2><p> </p><p>ஜப்பானின் பொது ஒலிபரப்பு நிறுவன தகவலின்படி, அந்த ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்துள்ளது.</p><p>

450 கிலோமீற்றர் பயணம்
தென்கொரிய இராணுவத்தின் தகவலின்படி, முதல் ஏவுகணை சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளது. </p><p>அது வடகொரியாவின் Hwasong-11 ஏவுகணைத் தொடரைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, வொன்சான் பகுதியில் இருந்து மாலை சுமார் 5.50 மணியளவில் மற்றொரு குறுகிய தூர ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
இரண்டாவது ஏவுகணை 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரண்டாவது ஏவுகணையும் பாலிஸ்டிக் ஏவுகணை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், சுமார் மூன்று மணி நேரத்திற்குள் வடகொரியா தொடர்ச்சியாக இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக அது அமையும்.
</p><p>
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகள் தொடர்பாக வடகொரியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், புதிய ஏவுகணைச் சோதனைகள் கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான கவலையை மேலும் அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் பிராந்திய போரில் இத்தாலி! மறுக்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/italy-in-the-red-sea-region-conflict-1789932090"></link>
            <id>https://ibctamil.com/article/italy-in-the-red-sea-region-conflict-1789932090</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக
வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹவுதி
அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>கடற்படை நடவடிக்கை</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் (Taif) விமானப் படைத்தளத்தின் மீது ஹவுதி
அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000
(Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும்
நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db79708-f102-452c-b0dc-225ad57856f9/26-6ab0323bca97c.webp' /></p><p>

செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக்
கப்பல்களை ஹவுதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின்
'அஸ்பைட்ஸ்' பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.
</p><p>
இந்நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி
தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,
இத்திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும்,
ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும்
செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு
பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்! ரஷ்யா மீது ஒரே இரவில் ஏவப்பட்ட 1000 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-drones-launched-at-russia-overnight-1789928215"></link>
            <id>https://ibctamil.com/article/1000-drones-launched-at-russia-overnight-1789928215</id>
            <summary type="text">ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவற்றில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தலைநகர் மொஸ்கோவை நோக்கி ஏவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மொஸ்கோமீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலை இதுவரை இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என மொஸ்கோ மேயர் வர்ணித்துள்ளார்.</p><p></p><h2>மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள்</h2><p>
</p><p>
இந்த தாக்குதலில் மொஸ்கோஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட சில இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குடியிருப்பு கட்டடம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16cda424-ce0f-4c15-b1aa-2e256a007dd1/26-6ab0250b8d100.webp' /></p><p> </p><p>மொஸ்கோ நகருக்கு எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்கும் முக்கிய நிலையங்களில் ஒன்றாக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காணப்படுகிறது.</p><p>மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த தாக்குதலில் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>Pelican ஏவுகணைகள்</h2><p>
</p><p>
உக்ரைனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Flamingo மற்றும் Pelican ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c894c-9ddc-4a18-961c-8c1081d0211d/26-6ab0250c4a599.webp' /></p><p> </p><p>ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் தளவாட வசதிகளை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த வசதிகள் மூலம் கிடைக்கும் வருவாய் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான கழிவுகளை கொட்டாதே! கீரிமலையில் கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-keerimalai-despite-pouring-rain-1789931062"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-keerimalai-despite-pouring-rain-1789931062</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம்
முன்னெடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம்
ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள் , பிளாஸ்ரிக் கழிவுகள் , மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p></p><h2>2 மாதங்களுக்கு மேலாக&nbsp;மக்கள் குரல்</h2><p>
</p><p>
அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf8bc43-01eb-463c-a78e-34bd3d038c98/26-6ab02e37d0149.webp' /></p><p>
</p><p>
இதேவேளை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா , வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்துடன் உள்ளூராட்சி ஆணையாளர் ச.சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e314e13-91fc-4d08-a1b4-462702aa917e/26-6ab02e389ae12.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.

இந்நிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தயார் நிலையில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-ready-to-meet-iranian-president-1789926242"></link>
            <id>https://ibctamil.com/article/trump-ready-to-meet-iranian-president-1789926242</id>
            <summary type="text">ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி&amp;nbsp;மசூத் பெசெஷ்கியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஈரான் ஜனாதிபதி&nbsp;மசூத் பெசெஷ்கியானை சந்திப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும்&nbsp;ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>அமெரிக்கா - ஈரான் மோதல் நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானின் நடவடிக்கை&nbsp;</h2><p>இதன்போது, ஈரானின் நடவடிக்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றும்,&nbsp;தான் முடிவு எடுக்கும் நிலையில் இருக்கின்றேன் எனவும், அவற்றால் மிகப் பெரிய விடயங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f685114a-d59e-4a43-8c4d-e4ea08f67a6f/26-6ab01b63ce1d6.webp' /></p><p>ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் முன் உள்ள விருப்பங்களில், ஈரானை முழுமையாக அழிப்பது, பொருளாதார ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அந்நாட்டை வீழ்ச்சியடையச் செய்வது அல்லது புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவை இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு போரின் பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்தைத் தடுக்க ஈரான் முயற்சித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தனது நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துநர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T18:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருக்கெடுத்து ஓடும் மகாவலி ஆறு வெள்ளத்தில் மூழ்கின நாவலபிட்டியவில் பல கிரமங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/several-areas-in-nawalapitiya-inundated-1789923931"></link>
            <id>https://ibctamil.com/article/several-areas-in-nawalapitiya-inundated-1789923931</id>
            <summary type="text">இன்று அதிகாலை (20) முதல் நாவலபிட்டியாவின் பஸ்பாகே கொரள பிரதேச செயலகப் பகுதியில் மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று அதிகாலை (20) முதல் நாவலபிட்டியாவின் பஸ்பாகே கொரள பிரதேச செயலகப் பகுதியில் மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. </p><p>இதன் காரணமாக சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பஸ்பாகே கொரள பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன</h2><p>நாவலபிட்டியாவில் உள்ள கித்துல்கொட்டை, லபுவெல்கொட்டுவ, ஜெயசுந்தராவ்திய உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6edc5df-720c-4d8e-81c5-b900199ce4cb/26-6ab016f157837.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல் - அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய அமைச்சர்! ஜோர்தான் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-minister-inside-al-aqsa-mosque-1789922420"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-minister-inside-al-aqsa-mosque-1789922420</id>
            <summary type="text">ஜெரூசலமில் உள்ள&amp;nbsp; அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர்&amp;nbsp; நுழைந்த சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெரூசலமில் உள்ள&nbsp; அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர்&nbsp; நுழைந்த சம்பவத்தை ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p>

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டல் என சுட்டிக்காட்டிய ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுஃப்யான் அல்-மோமானி, இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் குடியேற்றவாசிகளின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல்களை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p></p><h2>மதத் தல&nbsp;ஆக்கிரமிப்பு</h2><p><span style="font-size: 14px;">ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் நகரத்தின் மீதும், அங்குள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீதும் இஸ்ரேலுக்கு எந்தவித இறையாண்மையும் இல்லை&nbsp; எனவும் அல்-மோமானி வலியுறுத்தியுள்ளார்.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f54cec-51d7-4f31-9ab6-f9c4f0d6f4e3/26-6ab00c76f3199.webp' /></p><p>
</p><p>
மேலும், மதத் தலங்களை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதுடன், அவற்றை வழிபாட்டாளர்கள் அணுகுவதற்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நிறுத்துவதற்காக சர்வதேச சமூகம் உறுதியான சர்வதேச நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-dies-after-being-struck-by-lightning-1789921104"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-dies-after-being-struck-by-lightning-1789921104</id>
            <summary type="text">அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா பகுதியில் உள்ள வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயது பள்ளி மாணவன், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக அகலவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா பகுதியில் உள்ள வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயது பள்ளி மாணவன், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக அகலவத்தை காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர், அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா முகவரியில் வசித்து வந்த, அகலவத்தை மிஹிந்து மத்திய மகா வித்யாலயத்தில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவரான ஹசிதா பிரதீப் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>வீட்டின் தரையில் உறங்கியவேளை தாக்கிய மின்னல்</h2><p>அறையின் தரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது மாணவனை மின்னல் தாக்கியது. இதனையடுத்து அகலவத்தை பிம்பூரா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66240643-e851-4de4-b9da-ac57a19e4ebe/26-6ab00a606254f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பாடசாலைகள் நடைபெறுமா..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110"></link>
            <id>https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கொழும்பு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;நுவரெலியா பாடசாலைகளுக்கான அறிவிப்பு</h2><p>&nbsp;இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் சிரமம் காணப்படுமாயின், அது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66f367-1470-49d0-a2d8-5dfb00525147/26-6aaff8907b7c8.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/valikamam-north-land-release-issue-1789917700"></link>
            <id>https://ibctamil.com/article/valikamam-north-land-release-issue-1789917700</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அனுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அனுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><p>

இன்று ஞாயிற்றுக்கிழமை பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14வது வாரமாக
இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><h2>எமது வளமான காணிக்குள் விவசாயம் செய்யும் இராணுவம்</h2><p>&nbsp;போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்தம் நிறைவடைந்து
17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள்
கடக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d411db9e-9375-400d-a28d-235cbe77bfdf/26-6aaffeb18d839.webp' /></p><p>
</p><p>
இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின்
வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து
வருகிறது.</p><h2>யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்</h2><p>
</p><p>
தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின்
காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து
விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4da6bf0-d08a-4bf3-af83-6c5c6444dcdc/26-6aaffeb25d296.webp' /></p><p>
</p><p>
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், வலி வடக்கில்
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் காணிகளை பார்வையிட்ட பின்னர் மக்களின்
காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.</p><h2>பிரதி பாதுகாப்பு அமைச்சரின் முரண்பாடான கருத்து</h2><p>
</p><p>
ஆனால் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தேவைக்காக 1700 ஏக்கரும்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக 700 ஏக்கர் வேண்டும் என கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/992efe7c-ceab-4bc7-a473-ceb0b2c286b3/26-6aaffeb32d329.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தையும் கூறும்
அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு
நம்புவது</p><h2>கொடுத்த வாக்குறுதி உதாசீனம்&nbsp;</h2><p>

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்
மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை
உதாசீனம் செய்துவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e45021-667e-4a52-adf2-e93a8a7f10af/26-6aaffeb402b02.webp' /></p><p>

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான
காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:22+00:00</updated>
        </entry>
    </feed>
