<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-19T11:49:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-makes-wrong-decision-at-eastern-uni-hostel-1787137133"></link>
            <id>https://ibctamil.com/article/student-makes-wrong-decision-at-eastern-uni-hostel-1787137133</id>
            <summary type="text">கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, குறித்த சம்பவத்தை இன்று புதன்கிழமை (19) பிற்பகல் நேரில் கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்போது, திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df71c297-d45a-4e4f-8683-d33ba92e1ab3/26-6a8594b969257.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் சுமார்.12.00மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அதனை கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்த மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.</p><h2>பிரே பரிசோதனை</h2><p>
</p><p>
அதன்போது, தவறான முடிவெடுத்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e7a94e-3bd8-4616-81bd-bdeeee9a5492/26-6a8594b8b5f6d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T11:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளித்தவர் இடமாற்றம் : வேலை நிறுத்தத்தில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-health-inspectors-plans-strike-1787139005"></link>
            <id>https://ibctamil.com/article/public-health-inspectors-plans-strike-1787139005</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

சங்கத்தின் செயற்குழு இன்று பிற்பகல் (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
சங்கத்தின் செயற்குழு இன்று பிற்பகல் (19) கூடி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என அதன் பதில் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
</p><p>
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் குறித்து சுகாதார அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் அளித்த ஒரு பொது சுகாதார பரிசோதகர், நிர்வாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு</h2><p>
</p><p>
இவ்விடயம் தொடர்பாக மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும், நாளை தொடங்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் என்றும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8062afc-a8cf-474c-be1c-21f200925591/26-6a859739375ca.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-petition-filed-challenging-22nd-amendment-1787137774"></link>
            <id>https://ibctamil.com/article/another-petition-filed-challenging-22nd-amendment-1787137774</id>
            <summary type="text">நாடாளுமன்றில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, சிவில் சமூக அமைப்பான 'பஹுஜன பலய' உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் விதிகள் அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளனவா என்பதையும், அதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் மக்களின் அனுமதி பெறப்பட வேண்டுமா என்பதையும் தீர்மானிக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்&nbsp;</h2><p> </p><p>

கொள்கையளவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைத் தமது அமைப்பு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள 'பஹுஜன பலய' அமைப்பு, ஆனால் எந்தவொரு திருத்தமும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டும், மக்களின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனக் கட்டுப்பாடுகளையும் சமநிலையையும் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4b55e8-b45c-4b97-bc24-222d821d493b/26-6a85930475abe.webp' /></p><p>அத்துடன் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பும் சில விதிகள் குறித்து அந்த அமைப்பு தனது பிரத்தியேக கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> 

தனது மனுவில், பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கம், LAWASIA, சர்வதேச நீதிபதிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட்&nbsp; உள்ளிட்ட சர்வதேச சட்ட அமைப்புகளும் நிபுணர்களும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் கவலைகளையும் 'பஹுஜன பலய' சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p> </p><p>

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் சட்டமாக இயற்றப்படுவதற்கு முன்னர் விரிவான மற்றும் சுயாதீனமான அரசியலமைப்பு ரீதியான பரிசீலனை அவசியம் என்பதை இத்தகைய கவலைகள் கோடிட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23333e82-36a7-4a4b-8ae9-7b17605023e4/26-6a8593056deed.webp' /></p><p> 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் சரியான அரசியலமைப்பு நடைமுறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் மக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் 'பஹுஜன பலய' வலியுறுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மில்லியன் கணக்கான குழந்தைகளின் தரவுகளை திரட்டிய மெட்டா: அமெரிக்காவில் வழக்கு தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-state-have-lawsuit-against-meta-200-billion-1787135734"></link>
            <id>https://ibctamil.com/article/us-state-have-lawsuit-against-meta-200-billion-1787135734</id>
            <summary type="text">11 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான குழந்தைகள் மெட்டாவின் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வருவதை அறிந்திருந்தும், அதைத் தடுக்க மெட்டா நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான குழந்தைகள் மெட்டாவின் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வருவதை அறிந்திருந்தும், அதைத் தடுக்க மெட்டா நிறுவனம் எந்தவொரு&nbsp; நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது.</p><p>கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று இந்த வழக்கு முதல் முறையாக நடுவர் குழுவின் முன் விசாரணைக்கு வந்தது. </p><p>கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய நான்கு மாநிலங்கள் கூட்டாக இந்த வழக்கை முன்னெடுத்துள்ளன.</p><p></p><h2>200 பில்லியன் டாலர் இழப்பீடு</h2><p>
</p><p>மேலும் மெட்டா நிறுவனம் மீது 200 பில்லியன் டொலர் அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்குமாறு அவை நீதிமன்றத்தைக் கோரியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4145a03-e687-41b7-b0af-c0bdcca6b97d/26-6a858c9526b32.webp' /></p><p>பெற்றோரின் அனுமதியின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தரவுகளைச் சேகரித்தல், மற்றும் குழந்தைகளிடையே மனநல நெருக்கடியை ஏற்படுத்தும் லைக்குகள், ரியாக்ஷன்கள், கமெண்ட்கள், ஸ்க்ரோலிங் போன்ற அடிமையாக்கும் அம்சங்களை உருவாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு அமைந்துள்ளது.&nbsp;</p><p>மெட்டாவின் வணிக மாதிரியை நான்கு பகுதிகளாக எளிமையாகச் சுருக்கிக் கூறலாம் என நேற்று கலிபோர்னியா தலைமை சட்டத்தைரணிகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

இதில், பயனர்களை வலையில் வீழ்த்தி, அவர்களை முடிந்தவரை நீண்ட நேரம் செயலியில் வைத்திருந்து, அவர்களின் தரவுகளைச் சேகரித்து, பின்னர் உண்மையை பொதுமக்களிடமிருந்து மறைப்பது அடங்கும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும், அடுத்த ஆறு வாரங்களில் நடுவர் மன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பார் என அமெரிக்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடமையாகிறது பசிலின் பிணை பணம் : சிறைக்கு செல்லப்போகும் பிணைதாரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497"></link>
            <id>https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497</id>
            <summary type="text">சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைப்பணத்தை அரசுடமையாக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.</p><p>மாத்தறை, எலியகந்த வீதியில், பிரவுன்ஹில்லில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக காவல்தறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>சிறைக்கு செல்லப்போகும் பசிலின் பிணைதாரர்கள்</h2><p>இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையைக் கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39366ce4-3ac6-4b86-b8f2-65319e98d7b0/26-6a859008422a9.webp' /></p><p> </p><p>மேலும், அவருக்காகப் பிணைதாரர்களாகக் கையெழுத்திட்ட மூன்று பேருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>நீடிக்கப்பட்ட பிடியாணை</h2><p>இது தவிர, பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை 2026 ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501bcbb5-56ad-4665-9ea3-ce1acec28640/26-6a859008e89e1.webp' /></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். அத்துடன், முறைப்பாடு சார்பில் FCID அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகினர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவியேற்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-province-sdig-of-police-takes-charge-1787136629"></link>
            <id>https://ibctamil.com/article/northern-province-sdig-of-police-takes-charge-1787136629</id>
            <summary type="text">வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க&nbsp;இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p>வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடமைகளை பொறுப்பேற்றார்</h2><p>இந்த நிலையில் விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32c6e8ac-89a1-4070-acf1-0333ab73bcb2/26-6a858c322ff5b.webp' /></p><p>குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-with-drugs-worth-around-rs-12-crore-1787135665"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-with-drugs-worth-around-rs-12-crore-1787135665</id>
            <summary type="text">




சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 18.672 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு கைபேசிகள் மற்றும் ஒரு இலத்திரனியல் தராசு என்பன கவால்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>போதைப்பொருள் களஞ்சியசாலை</h2><p>

விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, பண்டாரகம மஸ்வில வெந்தேசி வத்த பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர், சந்தேக நபரையும் போதைப்பொருள் இருப்பையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc11415-7bd6-47ed-897c-320264e1f853/26-6a8589c54226e.webp' /></p><p>

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பானந்துர கூடு சலிந்து மற்றும் துபாயில் பதுங்கியிருக்கும் ரவிஷ்க ஆகியோரின் போதைப்பொருள் வலையமைப்பில் இயங்கி வந்தவர் என்பதும், அவர்களின் போதைப்பொருள் களஞ்சியசாலையின் பாதுகாப்பாளராகச் செயற்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T10:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பதிலடி: கலிபோர்னியாவை தனது பிரதேசமாக அறிவித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-labels-california-its-new-territory-1787135101"></link>
            <id>https://ibctamil.com/article/iran-labels-california-its-new-territory-1787135101</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டதற்குப் பதிலடியாக ஈரானின் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டதற்குப் பதிலடியாக ஈரானின் அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்கு ஒன்று செவ்வாயன்று கலிபோர்னியாவை ஈரானின் “புதிய பிரதேசம்” எனக் குறிப்பிட்டது.
</p><p>
போர் முடிந்த பிறகு அந்த நீரிணை அமெரிக்கப் பிரதேசமாக மாற்றப்படும் என்று அவர் முன்பு கூறியிருந்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் செவ்வாயன்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் அந்தப் படத்தைப் பகிர்ந்தார்.</p><h2>புதிய அமெரிக்கப் பிரதேசம்</h2><p>அதில், “புதிய அமெரிக்கப் பிரதேசம்” என்ற வார்த்தைகளுக்குக் கீழே அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி வட்டமிடப்பட்டு, ஹோர்முஸ் நீரிணையின் வரைபடம் காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c7138e-c639-40fa-9bff-c6400dd55b4f/26-6a85870e5cc09.webp' /></p><p>

பின்னர் வெள்ளை மாளிகை,சமூக ஊடகத் தளமான X-இல் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் ட்ரம்பின் பதிவை மீண்டும் வெளியிட்டது.</p><p></p><h2>ஈரானின் பதிலடி</h2><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, X தளத்தில் உள்ள 'ஈரான் இன் ஹைதராபாத்' அதிகாரபூர்வ கணக்கு, அமெரிக்காவின் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அதில் கலிபோர்னியா நீல நிறத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டிருந்ததுடன், "ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய பிரதேசம்" என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f8cad6-5dae-47b8-b76b-9b56af4dcba6/26-6a85870f0e9ca.webp' /></p><p>
</p><p>
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடியும் ட்ரம்பின் பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, X தளத்தில் இவ்வாறு எழுதினார்: "ஹோர்முஸ் நீரிணை குறித்த அவரது பிரமை விரைவில் சரிசெய்யப்படும், அல்லது இந்த பிரமை பிடித்த மனிதனின் பிரமைகளை நாங்கள் சரிசெய்வோம்."&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரிகளின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officers-salary-increase-ananda-wijepala-1787134858"></link>
            <id>https://ibctamil.com/article/police-officers-salary-increase-ananda-wijepala-1787134858</id>
            <summary type="text">சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக&amp;nbsp;பொது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக&nbsp;பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஆனந்த விஜேபால இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளது.</p><p></p><h2>சீருடையில் மாற்றம்</h2><p>காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது, இது ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dcb1fe-d5f9-47e7-8798-4ca60a5967a7/26-6a85884f0e1a1.webp' /></p><p>காவல்துறை அதிகாரிகளின் தோற்றத்தை மாற்றுவதுடன் மட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் நின்றுவிடவில்லை.</p><p>சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும் அதனை மக்கள் நட்புறவுடையதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:37:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-gets-caught-up-in-gov-uk-report-1787128754"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-gets-caught-up-in-gov-uk-report-1787128754</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.</p><p>

GOV.UK இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையினை மேற்கோள்கட்டி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடும் ரணிலுக்கு எதிராக திரும்பும் ஒரு சட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.
</p><p>
GOV.UK வெளியிட்ட இந்த அறிக்கையில் இராஜதந்திர முறையில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு வருகைதந்ததாக எந்த விதமான தரவுகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
</p><p></p><h2>குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு</h2><p>
இந்நிலையிலேயே சமூக செயற்பாட்டாளரான ஒஷால ஹேரத்தால் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5ac17e-cc30-4513-bd1f-a1ce85510f14/26-6a857b1f73dc6.webp' /></p><p>

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ரணில் விக்ரமசிங்க பிரேதனியாவுக்கு மேற்கொண்ட விஜயம், ஓர் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல என்பது அந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டானது ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு முன்னதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது 

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து. </p><p>அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. 

எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெறும் வரை இந்த வழக்கை வேண்டுமென்றே காலதாமதம் செய்ய சட்டமா அதிபர் முயல்வதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p> 

இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
</p><p>
இது குறித்து நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையே வழக்குகளின் தாமதத்திற்கு முதன்மைக் காரணம் என்றும், நீதித்துறையின் சுயாதீனமான செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டமாதிபர் திணைக்களம்</h2><p>

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

"ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாட்டின் இந்த பாரிய குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19e6665e-07a5-4a51-87cf-d2cfe69acfff/26-6a857b20485bc.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, 

குற்றப்புலனாய்வு திணைக்களம் பிரித்தானியாவுக்கு சென்று தேவையான தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.
</p><p>
அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள.

எனவே மேல்நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
குறிப்பாக இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
</p><p>
மேலும் இதனை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வை அமைக்க பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இருந்தும் இந்த அணைத்து ஆவணங்களும் சட்டமா அதிபரின் மேசைக்கு சென்று பல மாதங்கள் கடந்த போதும், சட்டமா அதிபர் மௌனம் காப்பது சரியானதா?
</p><p>
சட்டமா அதிபருக்கு இந்த வழக்கை தொடர்வதில் ஏதேனும் குழப்பம் உள்ளதா?</p><p></p><h2>மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை&nbsp;</h2><p> 

ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சட்டமா அதிபருக்கு உள்ள பிரச்சினை என்ன?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c4b73b0-b7f0-46e5-adaa-5a47b10fecef/26-6a857b2102d7d.webp' /></p><p>பிரதம நீடியரசரும், சட்டமா அதிபரும் முறையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஓஓய்வு பெறவுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் வேறு எதனையும் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு திட்டம் உள்ளதா?</p><p>
சட்டமா அதிபரே, உங்களுக்கு முன்னாள் ரணில் குறித்த விடயத்தில் சாய்வு நினை இருக்கின்றது என்ற கருத்து சமூகத்தில் பரவி உள்ளது.
</p><p>
அது என்னவாக இருந்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தன்மைக்கு இது ஏற்றது அல்ல.
</p><p>
தற்போது ரணில், சஜித் மற்றும் கம்பன்பிலவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க திட்டமிடுகிறார். 

இந்த கதாபாத்திரம் மற்றும் தூண்டுதலில் ரணில் இருப்பது தெளிவாகிறது." என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T10:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன அமைச்சர் இஸ்ரேலிய காவல்துறையால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-police-arrest-palestinian-minister-1787133425"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-police-arrest-palestinian-minister-1787133425</id>
            <summary type="text">&amp;nbsp; ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை புதன்கிழமை கைது செய்ததாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, காரணம் ஏதுமின்றி அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை தடுத்து வைத்ததாக ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.&nbsp;</p><h2>கைதுக்கான காரணம்&nbsp;</h2><p>கைதுக்கான காரணம் குறித்து இஸ்ரேலிய காவல்துறை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18df8546-8d24-461b-a00c-f2e0e452a5d2/26-6a8581332e7f3.webp' /></p><p>கடந்த ஆண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்குள் அல்-அவார் நுழைவதற்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதித்து இஸ்ரேலிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர், பின்னர் அந்தத் தடை நீடிக்கப்பட்டது.</p><p>

ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அல்-ராம் நகரில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் பாலஸ்தீன அரசாங்கக் கூட்டங்கள் ரமல்லாவில் நடைபெறுகின்றன.</p><p>

ஒக்டோபர் 7, 2023 முதல், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் விளையாட்டு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேலிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>இடிக்கப்படும் பாலஸ்தீனர்களின் வீடுகள்</h2><p>இஸ்ரேலிய அதிகாரிகள் குடியேற்ற நடவடிக்கைகளையும் பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிப்பதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afe4056-8b0d-48eb-b40c-fabd48d67dcf/26-6a858133da237.webp' /></p><p> </p><p>அதே நேரத்தில், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் குடியேறிகள் ஊடுருவுவதற்கு வழிவகை செய்வதுடன், வழிபாட்டாளர்களையும் மத போதகர்களையும் அவ்விடத்திற்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால நாட்டின் தலைநகரம் என்று பாலஸ்தீனியர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இஸ்ரேல் அந்நகரம் முழுவதையும் தனது தலைநகரம் எனக் கோருகிறது. இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் பரவலாக நிராகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-supermarket-s-business-license-cancel-1787130550"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-supermarket-s-business-license-cancel-1787130550</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு
வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து
செய்யுமாறு நீதிமன்றம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு
வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து
செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p>குறித்த வர்த்தக நிலையத்தில்
காலாவதியான சொக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள்
விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின்
பரிசோதனையின்போது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1977db52-336a-484b-b542-2a59037bf635/26-6a85795fc67ec.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக
நிலையம் இதேபோன்ற குற்றச்செயலில் முன்னரும் ஈடுபட்டிருந்தமை தொடர்பான
முற்குற்றம் ஒன்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
</p><p>இந்தநிலையில் வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன்,
குற்றத்திற்காக 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின்
வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு நீதிமன்ற பதிவாளர்
ஊடாக அறிவித்தல் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றம் உத்தரவு</h2><p>
மேலும், குறித்த தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர்
மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம்
ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும்
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4698d06e-b0b7-4c04-a1c8-5585daebc7a8/26-6a8579607e318.webp' /></p><p>
</p><p>அத்துடன் அதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப்
பொருட்களை விற்பனைக்கு வைப்பது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக இந்த நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்: விசாரணை நடத்த முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/funerals-of-muslims-cremated-during-covid-1787133562"></link>
            <id>https://ibctamil.com/article/funerals-of-muslims-cremated-during-covid-1787133562</id>
            <summary type="text">கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை கடிதம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிய பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. </p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து குறித்த கோரிக்கை கடிதத்தை கையளித்த்துள்ளனர்.</p><p></p><h2>முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கை</h2><p>
</p><p>
அப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறித்த தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe23641b-a22d-4d16-9974-381e728cef46/26-6a857e7c8c934.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்த மனித உரிமை மீறல் மற்றும் அநீதி தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T09:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-india-wins-by-165-runs-1787127285"></link>
            <id>https://ibctamil.com/article/team-india-wins-by-165-runs-1787127285</id>
            <summary type="text">காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
 

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களின் உதவியுடன் 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.
</p><p>
 

 இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.</p><p></p><h2>165 ஓட்டங்களால் வெற்றி&nbsp;</h2><p>இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி, சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களின் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d2ba2c-cf4d-4999-a58f-bb15933bf799/26-6a8570ffa0ed4.webp' /></p><p>

 

இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.</p><p>

 

முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர். </p><p>

 

இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதன்படி, இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.</p><p> 

 

372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.</p><p>

 

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். </p><p>

 

பந்துவீச்சில் இந்திய அணியின் மானவ் சுதார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-minister-s-wife-dies-in-accident-1787128676"></link>
            <id>https://ibctamil.com/article/former-minister-s-wife-dies-in-accident-1787128676</id>
            <summary type="text">


முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>

அவர்களுக்குச் சொந்தமான, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தே அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை (19) அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>இரண்டு பிள்ளைகளின் தாய்</h2><p>

55 வயதுடைய தேஷானி குணரத்ன என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c93aad15-90f3-4920-9e95-ddd8a69aaf9a/26-6a856fe302c2b.webp' /></p><p>அவரது உடல் தனமல்விலவில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 28 வாகனங்கள் : வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493"></link>
            <id>https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493</id>
            <summary type="text">தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
 

நுவரெலியா காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொறிகள் உட்பட 40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டது</h2><p>
</p><p>
 

இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6262f421-72c7-4957-b669-bbe442da73db/26-6a85601805412.webp' /></p><p>
</p><p>வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் (Undial) முறைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த நபர் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று( 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, வேல்ல வீதி காவல்துறை பிரிவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாத ரூ. 10,467,000 பணமும், ஒரு போலி 1000 ரூபா நாணயத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c0aacfa-42e8-4def-a2d5-a97730d84ff7/26-6a855fc9c1591.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், இந்த சந்தேக நபரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலியுடையவர்கள் மட்டுமே போராடுகிறார்கள்; நாம் ஏன் இப்படி மாறினோம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-social-structure-eelam-tamil-community-1787121024"></link>
            <id>https://ibctamil.com/article/political-social-structure-eelam-tamil-community-1787121024</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் சதுரங்கத்தில் ஈழத்தமிழினத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு, தன் வரலாற்றுப் பாதையில் மிக ஆபத்தான ஒரு தேக்கநிலையைச் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் சதுரங்கத்தில் ஈழத்தமிழினத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு, தன் வரலாற்றுப் பாதையில் மிக ஆபத்தான ஒரு தேக்கநிலையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. </p><p>ஒருபுறம், போரின் கொடுமைகளையும் அதனால் ஏற்பட்ட அளப்பரிய இழப்புகளையும் சுமந்த மனிதர்கள் நீதிக்காகவும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் இன்னும் இந்த தேசத்தின் தெருக்களில் நின்று போராடுகிறார்கள். </p><p>அதேநேரம் மறுபுறம், அதே நிலத்தில் பெரும்பான்மையானவர்கள் அதை வெறும் பார்வையாளர்களாகக் கடந்து செல்கிறார்கள் . அவர்கள் நுகர்வுப் பண்பாட்டிலும் அன்றாடக் கொண்டாட்டங்களிலும் மூழ்கியிருக்கிறார்கள். </p><p>ஆனால். "வலியுடையவர்கள் மட்டுமே தொடர்ந்து போராடுகிறார்கள் நாம் ஏன் இப்படி மாறினோம்?" என்ற கேள்வி, வெறும் உணர்ச்சிவசப்பட்ட புலம்பல் கிடையாது . இது ஒரு தேசிய இனத்தின் எதிர்காலக் கூட்டு மனசாட்சியை நோக்கி எழுப்பப்படும் மிக முக்கியமான அரசியல் கேள்வியாகும்.</p><p></p><p> </p><h2>ஈழத்தமிழர்களின் கூட்டுப் பொறுப்பும் இழைக்கப்படும் தவறுகளும்</h2><p>ஒரு தேசிய இனம் தன் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடும் போது, அங்கு சமூகத்தின் கூட்டுப் பங்கேற்பு மிக அவசியமானது. ஆனால், இன்றைய சூழலில் ஈழத்தமிழினம் தன் வரலாற்றுப் பயணத்தில் சில அடிப்படைத் தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdc36f9-aca8-4545-9a11-8c73c33bccab/26-6a855ec73d1f9.webp' /></p><p> </p><p>அதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான எதிர்ப்புகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் "சொந்தப் பிரச்சனை" போலச் சுருக்கப்பட்டுவிட்டது .</p><p> 

ஒரு சமூகம் தனது கூட்டுப் பொறுப்பைத் துறந்து, பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே வீதியில் நிறுத்துவது வரலாற்றுத் தவறாகும். </p><p>நில ஆக்கிரமிப்பு, அடையாளச் சிதைப்பு என எதுவாக இருந்தாலும், அதற்கான நீண்டகால அரசியல் மூலோபாயம் இல்லாமல், அவ்வப்போது எழும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளோடு நமது எதிர்ப்புகளை முடித்துக் கொள்வதும் பெருந்தவறனான ஒன்றாகவே அமைந்துவிடுகிறது .</p><h2>"செயற்கையான திசைதிருப்பல்"&nbsp;</h2><p>
</p><p>குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் அதன் ஏனைய பகுதிகளிலும் கடைகளிலும் திருவிழாக்களிலும் அலைமோதும் கூட்டத்தில் ஒரு சிறிய பகுதியினர் கூட நீதிக்கான போராட்டங்களில் அணிதிரள்வதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b57c2bee-df25-4066-9afe-8566088d2fe4/26-6a855ec8165f6.webp' /></p><p> 
இதில் இருந்தே, நீண்டகாலப் போருக்குப் பிந்தைய சமூகங்களில் நிகழும் "செயற்கையான திசைதிருப்பல்" இங்கு ஆதிக்கம் செலுத்துவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p>ஈழத்தமிழர்களின் கள நிலைமையும் கூட்டு அலட்சியத்தின் ஆபத்தும்
அதாவது பன்னாட்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளின்படி, ஶ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆயிரக்கணக்கான கோரிக்கைகளும் வழக்குகளும் எந்தவிதப் பதிலும் இன்றி கிடப்பிலையே போடப்பட்டுள்ளது .</p><p> 
இது எப்படியென்றால் போருக்குப் பிந்தைய காலத்தில் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பொதுமக்களின் பங்கெடுப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது.</p><h2>தேசிய இனம்</h2><p> </p><p>
இது நீதியை மறுக்கும் தரப்பினருக்குச் சாதகமான சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் வயோதிபர்களும் மட்டுமே நிற்பதால், அது அரசால் கண்டுகொள்ளப்படாமல் நீண்டகாலமாக பாராமுகமாகவே இழுத்தடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6be24e1-78ec-4f71-a7a1-29ec95a8fa2a/26-6a855ec8c4958.webp' /></p><p>அரசியல் கைதிகளின் விடுதலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் சில ஆர்வலர்களும் மட்டுமே குரல் கொடுப்பதால், வலுவான அரசியல் அழுத்தமின்றி சட்ட முட்டுக்கட்டைகள் நீடிக்கின்றன. </p><p>அதேபோல நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பிலும் எல்லைப்புற மக்களே தனியாக நிற்பதால், ஒட்டுமொத்த சமூக ஆதரவு இல்லாத சூழலைப் பயன்படுத்தி நிலப் பறிப்புகள் துரிதமடைகின்றன.
</p><p>
தேசிய இன அரசியலின் மறுவரையறை
உலகளாவிய அரசியல் சிந்தனையாளர்களின் கருத்தியல்படி , ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தன் அடையாளத்தையும் உரிமையையும் தக்கவைத்துக் கொள்ள கூட்டு விழிப்புணர்வு, தெளிவான தலைமைத்துவம் மற்றும் மூலோபாயக் கட்டமைப்பு ஆகிய மூன்றும் மிக முக்கியமான தேவையாகும் .</p><h2>உலகத்தமிழினத்தின் நீதிக்கான போராட்டம்&nbsp;</h2><p>அரசியல் சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்சியின் கருத்துப்படி, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் தன் உரிமைகளுக்காகப் போராட வேண்டுமானால், அதற்கு அறிவுசார் விழிப்புணர்வு மிக அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce89406-92b8-4882-8963-aa30fe9c214e/26-6a855ec9825e2.webp' /></p><p> </p><p>வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே ஒருபோதும் போராட்டத்தைத் தக்கவைக்க முடியாது. 
ஈழத்தமிழினத்தின் தற்போதைய அமைதி என்பது இயல்பான அமைதி அல்ல. அது தொடர் ஏமாற்றங்களால் ஏற்பட்ட ஒருவகை கற்றுக் கொண்ட நம்பிக்கையின்மை ஆகும். </p><p>அரசியல் என்பது தேர்தல் கால வாக்குச் சேகரிப்போ அல்லது நாடாளுமன்றப் பதவிகளோ மட்டும் அல்ல . அது ஒரு சமூகமாகத் திரண்டு தன் நிலத்தையும், வரலாற்று உரிமையையும், நீதியையும் கோரும் போராட்டமே உண்மை அரசியல.</p><p> ஆகும் . சிவில் அமைப்புகளும், இளைஞர்களும், பல்கலைக்கழகச் சமூகமும் மீண்டும் அரசியல் விழிப்புணர்வுடன் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.</p><h2>நீதிக்கான பயணம்</h2><p>காலத்தின் தேவையும் வரலாற்றுப் பொறுப்பும்
அதேபோல "நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?" என்ற கேள்விக்கான பதில், நமது சுயபரிசோதனையில்தான் தங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0b1ba5-3f05-45bb-82bc-85d72937434b/26-6a855eca3c465.webp' /></p><p> </p><p>அதாவது பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரை அவர்களின் தனிப்பட்ட அவலமாகப் பார்க்காமல், அது உலகத்தமிழினத்தின் நீதிக்கான போராட்டம் என்பதை உணர்ந்து இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்.</p><p> </p><p>

அதேபோலவே நம்மில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வறுமையிலும் அனாதரவாகவும் விட்டுவிட்டு நீதி கோர முடியாது என்பதால், அவர்களுக்கு வலுவான பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க வேண்டும். </p><p>அத்துடன், பழைய போராட்ட வடிவங்களைத் தாண்டி, சர்வதேச சட்டங்களையும் மனித உரிமை அமைப்புகளையும் திறம்படக் கையாளக்கூடிய ஒரு இளம் தலைமுறையினரின் அறிவுசார் பங்களிப்பு போராட்டங்களுக்குள் உட்புகுத்தப்பட வேண்டும். </p><p>அதேபோல நீதிக்கான பயணம் நீண்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தெருவில் விட்டுவிட்டுப் பார்வையாளர்களாகப் படம் பிடிக்கும் சமூகம், வரலாற்றின் முன் தன் தார்மீக உரிமையை இழந்துவிடும். </p><p>எனவே இனியும் மௌனமாக இருப்பது நமது அடையாளத்தையே அழித்துவிடும் என்பதால், கூட்டுப் பொறுப்போடு திரள்வதே ஈழத்தமிழினத்தின் இப்போதைய ஒரே வரலாற்றுத் தேவையாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-19T07:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் வடக்கிற்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sudden-rain-fall-impact-of-recent-super-el-ni-os-1787116531"></link>
            <id>https://ibctamil.com/article/sudden-rain-fall-impact-of-recent-super-el-ni-os-1787116531</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த சில வாரங்களாக அதிகரித்து +0.64 என்ற அளவை எட்டியிருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி, இவ்வாரம் திடீரென +0.18 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்த திடீர் மாற்றம் எதிர்பாராத நிகழ்வாகும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குறைந்த மழைவீழ்ச்சி</h2><p>

இந்து சமுத்திர இருமுனையின் நேர்மறையான பெறுமதி வலுவாக காணப்படும்போது, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு போதுமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad66198-fc3e-4903-b75a-2a99fb3ce8fc/26-6a85592f54636.webp' /></p><p>எனினும், எல்நினோவின் தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி மேலும் வலுவிழந்தால், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தென்மேற்கு இலங்கையில் பருவமழை காலத்தில் குறைந்த மழைவீழ்ச்சி பதிவான பகுதிகளில் இது எதிர்காலத்தில் நீர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதியின் போக்கை உன்னிப்பாக அவதானித்த பின்னரே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>நீருக்கான தேவை</h2><p>
எல்நினோ தொடர்ந்து வலுவாகச் செயற்பட்டு, இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை நிலையில் காணப்பட்டால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிகவும் குறைந்தளவிலான மழைவீழ்ச்சியே கிடைக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0009ffb3-dbd3-45a9-b3dd-80483a5c585b/26-6a85575e9b9ec.webp' /></p><p>இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது இடைப்பருவ மழை மற்றும் வடகீழ் பருவமழையின் நிலைமை இந்து சமுத்திர இருமுனையின் அளவு செப்டெம்பர் நடுப்பகுதி பெறுமதியைப் பொறுத்தே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீர்வளம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு இந்த இரு பருவமழைகளும் மிகவும் முக்கியமானவை. அப்பகுதிகளின் பெரும்பாலான நீர்த்தேவைகள் இந்த மழைப்பொழிவுகளிலேயே தங்கியுள்ளன.
</p><p>
எனவே, எதிர்வரும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற நீர் விரயத்தைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கோவில் திருவிழாக்கள், அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலம் உள்ளிட்ட காரணங்களால் இக்காலப்பகுதியில் நீருக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், தற்போதுள்ள நீர்வளத்தைப் பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் மின் தடை - அவதியில் மக்கள்: வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/work-underway-to-restore-power-supply-in-jaffna-1787122339"></link>
            <id>https://ibctamil.com/article/work-underway-to-restore-power-supply-in-jaffna-1787122339</id>
            <summary type="text">யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். </p><p>குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
</p><p>
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே என
தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>மின்தடை</h2><p>

அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை
மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1f11a8-7d59-43fd-ac48-08eb5ed25753/26-6a8554f17f872.webp' /></p><p>
அந்தவகையில் நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இவ்வாறு சுத்தம் செட்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடைக்கு முடியும் என
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பொருளாதார நெருக்கடி! ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-responds-to-ranil-s-warning-1787122287"></link>
            <id>https://ibctamil.com/article/government-responds-to-ranil-s-warning-1787122287</id>
            <summary type="text">


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.</p><p>

நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறிய அவர், இலங்கையின் கடன் பொறுப்புகள் முழுமையாக நிர்வகிக்கக்கூடிய அளவில் தான் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இலங்கை 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்தியுள்ளதாகவும், ,2026 ஆம் ஆண்டில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>மத்திய வங்கி புள்ளிவிபரங்கள்</h2><p>

அதன்படி, 2027-ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறையும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a43a365-d148-48eb-a83b-12bf48723166/26-6a85576c2d944.webp' /></p><p>

முதலீட்டாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கிய புள்ளிவிபரங்கள், இலங்கை தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பு நிலையை வலுப்படுத்திக் கொண்டே தனது கடனைத் தொடர்ந்து செலுத்த முடியும் என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்தநியைலில், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கடன் செலுத்துவதில் எவ்விதச் சிரமமும் இருக்காது என்று அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><h2> மீண்டும் பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், 2028-க்குப் பிறகு கடன் சுமைகளை எதிர்கொள்ள கையிருப்பை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியது தவறான வழிகாட்டல் என்றும், அவர் நாட்டின் கடன் நிலவரம் குறித்து தவறான சித்திரத்தை அளிக்க முயல்வதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95862d6-6b5f-4fe8-805e-639d5451891d/26-6a85576d0cd99.webp' /></p><p>
</p><p>
வெளிநாட்டவர் அனுப்பும் பணம், ஏற்றுமதி, சுற்றுலா வருவாய் மற்றும் முதலீடுகள் 2026-ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்பதால், இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியையோ அல்லது திவால்நிலையையோ சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை திருடிய கெஹெலிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-who-stole-the-sandakada-pahana-1787121351"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-who-stole-the-sandakada-pahana-1787121351</id>
            <summary type="text">குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றில் நேற்று(18.08.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>மகிழ்ச்சியுடன் பேசும் மகான்கள் </h2><p>
</p><p>
''கெஹெலிய ரம்புக்வெல்ல இப்போது ஒரு வழக்குப் பொருளைப் போல ஆகிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07462fb3-678f-4ad9-8f8c-78542a50b121/26-6a8554d25faa5.webp' /></p><p>
</p><p>
இந்த மகான்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் பாருங்கள். சந்திரக்கல்லைக்கூடதூக்கிச் சென்றிருக்கிறார்கள்.</p><p>
தொலைக்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். இன்றும் வழக்குகள் உள்ளன.
</p><p>
நாமல் யார் என்பதை நாங்கள் அறிவோம். தாஜுதீனை எப்படிக் கொலை செய்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.</p><p> 

பின்னர் பின்வாசல் வழியாகச் சென்று திருகோணமலையில் மறைந்துகொண்ட விதமும் எங்களுக்கு நினைவிருக்கிறது. 

அந்தக் காலத்தில் ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருந்தவர் ரணில். அதனால்தான் அது ரணில் - ராஜபக்ச அரசாங்கமாக இருந்தது" என கடுமையாக சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-petitions-against-22nd-constitutional-amendment-1787120999"></link>
            <id>https://ibctamil.com/article/3-petitions-against-22nd-constitutional-amendment-1787120999</id>
            <summary type="text">இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றைய (19.08.2026) நாடாளுமன்ற அமர்வின் போது, தெரிவித்துள்ளார்.</p><p>
 

அத்துடன், நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.</p><p></p><h2>உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்</h2><p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ffaf56-1a32-43c3-882c-51a55fbf9fb3/26-6a8553ea359cc.webp' /></p><p>இந்தநிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த கோரி ஐக்கிய மக்கள் சக்தியும், 22வது திருத்தச் சட்ட மூல வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரமும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை - யாழில் மக்களை அணிதிரள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079"></link>
            <id>https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.08.2026) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக்
கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள்
பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு
செய்யப்படவுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிக்கான நீள்பயணம்</h2><p>
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ம் திகதி
அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில்
அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை
9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e758eee5-0dc2-4f0b-9659-496a03035bc0/26-6a854e999cd32.webp' /></p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்
ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில்
தெரிவிக்கப்பட்டது.</p><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ,
நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச
விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக ஊடக
சந்திப்பில் தெரிவித்தனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z1InkbLOamw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் அதிகாரி! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936"></link>
            <id>https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936</id>
            <summary type="text">அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று(18) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண், அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்ததுடன், சம்பவம் குறித்து அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43e8f55-1721-4913-9520-c68dbe70f2de/26-6a854d8e634f9.webp' /></p><p>
</p><p>
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>

இந்நிலையில், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியில் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d530f16d-bdae-4fa3-bf75-f07ecdcc6ffa/26-6a854d8f1cd55.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்று ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T06:31:54+00:00</updated>
        </entry>
    </feed>
