<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-18T12:27:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம்! 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-of-c-d-wickramaratne-statements-recorded-1784373467"></link>
            <id>https://ibctamil.com/article/death-of-c-d-wickramaratne-statements-recorded-1784373467</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>இவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை பலப்படுத்தி உள்ளனர்.&nbsp;</p><p></p><h2>சி.டி. விக்கிரமரத்ன மரணம்</h2><p>அந்த வகையில் தற்போது முதல்கட்ட விசாரணையில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e27de4-7a1c-474f-9993-88acefd3c576/26-6a5b6ef54b6db.webp' /></p><p>இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையின் ஒழுக்கக் கோவைக்கு இணங்க அவருக்கு உத்தியோகபூர்வ மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
குறிப்பிட்ட சம்பவத்தின்போது வீட்டில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் இருந்துள்ளனர். </p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவிட்டுள்ளார்.</p><p> இந்த உத்தரவிற்கமைய மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவும், மாலம்பே காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூதாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் உட்பட எட்டு பேர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eight-including-women-arrested-for-gambling-1784373905"></link>
            <id>https://ibctamil.com/article/eight-including-women-arrested-for-gambling-1784373905</id>
            <summary type="text">

கரந்தெனிய, மஹாகொட, பஹலமானான பகுதியில் உள்ள ஒரு பெரிய சூதாட்டக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கரந்தெனிய, மஹாகொட, பஹலமானான பகுதியில் உள்ள ஒரு பெரிய சூதாட்டக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, காவல்துறையினர் அந்த சூதாட்டக் கூடத்தில் சோதனை நடத்தியபோது, ​​சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுப் பெண்கள், தாங்கள் வந்திருந்த எட்டு மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
</p><p>
எட்டு மோட்டார் சைக்கிள்களின் சாவிகளையும் எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடியதால், அவற்றை காவலில் எடுத்து காவல் நிலையத்திற்குக் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17249125-8051-4914-9cfd-d879cb63e6bd/26-6a5b6a592984d.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், சூதாடிய எட்டுப் பெண்களும் எல்பிட்டிய, உரகஹா, கரந்தெனிய போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர்கள் எட்டு பேரும் பலபிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T12:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-sumanthiran-school-function-1784375230"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-sumanthiran-school-function-1784375230</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில்
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில்
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி
ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் அந்த நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக
கலந்து கொள்ளக் கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள
வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>&nbsp; பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை
நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக
வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377a32d1-210e-4321-8188-f7ba4f556f2c/26-6a5b6b1244272.webp' /></p><p>இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது
பழைய மாணவர்கள் யாரையாவது விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு
தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது.</p><p></p><h2>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம்&nbsp;</h2><p>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு
தெரியும். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும்
பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமுகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள்
முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய
மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமுகத்துடனேயே
நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன்பின்னரே நாங்கள்
போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a5f7ec-85cb-40ff-ba9f-a8241a8060bc/26-6a5b6b12ec009.webp' /></p><p>இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழுவானது தெரிவு
செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால்
அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த
ஏற்பாட்டு குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர்
சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.</p><p></p><h2>தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை</h2><p>நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை. எமது பழைய மாணவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது.
போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே
முன்னெடுக்கப்படுகிறது. எமது போராட்டத்தால் யாருக்காவது மனஉளைச்சல்
ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த
விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c172ca90-5ec1-4671-9ddb-7d4933a77254/26-6a5b6b139c3f6.webp' /></p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற
வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்தப்பட வேண்டும் என்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய லோர்ட்ஸ் போட்டியுடன் விடைபெறும் ரோகித் சர்மா..! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sundays-lords-match-not-rohits-last-match-1784374209"></link>
            <id>https://ibctamil.com/article/sundays-lords-match-not-rohits-last-match-1784374209</id>
            <summary type="text">இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முக்கியமான ஒருநாள் போட்டி நாளை (19) நடைபெற உள்ளது.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முக்கியமான ஒருநாள் போட்டி நாளை (19) நடைபெற உள்ளது.
</p><p>
இந்தப் போட்டி, இங்கிலாந்தில் உள்ள 'கிரிக்கெட்டின் தாயகம்' என்று அழைக்கப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

இருப்பினும், இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா எதிர்காலத்தில் இந்திய அணித் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h2>நாளையதினம் ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேசப் போட்டி</h2><p>அதன்படி, நாளையதினம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கலாம் என்று அந்த ஊடகச் செய்திகள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec1027a-7acc-4546-9aed-44c42978a4aa/26-6a5b669e23cf4.webp' /></p><p>

எனினும், ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த செய்திகளுக்குப் பதிலளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்(பிசிசிஐ) செயலாளர் தேவாஜித் சாய்கியா, நாளை லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியை ரோஹித்தின் கடைசிப் போட்டியாகக் கருதி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவிப்பு</h2><p>
</p><p>
அணியின் திட்டங்களில் அவருக்கு இடம் இருக்கும் வரை, இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று தேவாஜித் சாய்கியா வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0464eb-de11-4fc2-a276-90438453dbae/26-6a5b669d73aa8.webp' /></p><p>
</p><p>
"ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை லோர்ட்ஸில் நடைபெறும் போட்டியை ரோஹித்தின் கடைசிப் போட்டியாகக் கருதி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். </p><p>ரோஹித் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர உறுப்பினர். அணியின் திட்டங்களில் அவருக்கு இடம் இருக்கும் வரை, அவர் நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். வேறுவிதமாகக் கூறினால், லோர்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவருடைய கடைசிப் போட்டி அல்ல," என்று அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் : குவைத் விமான நிலைய செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuwait-international-airport-suspends-flights-1784372763"></link>
            <id>https://ibctamil.com/article/kuwait-international-airport-suspends-flights-1784372763</id>
            <summary type="text">குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரான் நடத்திய ஏவுகணை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக&nbsp;விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குவைத்தின் தேசிய விமான நிறுவனம் இன்று (18) அறிவித்துள்ளது.</p><p>
 

விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான 'குவைத் எயார்வேஸ்' தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய நேரங்கள்</h2><p>
</p><p>
 

இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/kuwait_airways?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kuwait_airways</a> announces to its valued customers the rescheduling of most of its flights due to the temporary suspension of takeoff and landing operations at Kuwait International Airport as a result of hostile missile and drone attacks following the Iranian aggression on…</p>&mdash; Kuwait Airways (@KuwaitAirways) <a href="https://x.com/KuwaitAirways/status/2078353472865386885?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுப்பதுடன் அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், அமெரிக்காவின் தளங்களைக் கொண்டுள்ள குவைத் உட்பட பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T11:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்கிரமரத்ன மரணம் சந்தேகத்துக்குரியது: நளின் பண்டார எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mysterious-deaths-witnesses-nalin-bandara-warns-1784366176"></link>
            <id>https://ibctamil.com/article/mysterious-deaths-witnesses-nalin-bandara-warns-1784366176</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்திய முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்திய முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>குருநாகலில் சனிக்கிழமை (18.07.2026 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><h2>நளின் பண்டார</h2><p>இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடும் போது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b9764f-40e3-4315-bf22-69d601d5390a/26-6a5b5e4b0e3a4.webp' /></p><p>

இலங்கை வரலாற்றில் முதன்முறையான சேவையில் இருந்த பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டமை இதுவே முதன்முறையாகும். முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. </p><p>அவ்வாறான பின்னணியில் இந்த மரணத்தை தற்கொலை என்று அடையாளப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.&nbsp;தற்போது சேவையில் உள்ள அரச சேவையாளர்களுக்கும், ஓய்வுப்பெற்ற சேவையாளர்களுக்கும் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. </p><p>இது முறையற்றதொரு செயற்பாடாகும். அரசாங்கம் இதற்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் காவல்துறை உத்தியோகத்தருடன் தவறான நடத்தை : காவல்துறை உத்தியோகத்தர் பணிநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/constable-interdicted-for-allegedly-on-wpc-s-lap-1784371697"></link>
            <id>https://ibctamil.com/article/constable-interdicted-for-allegedly-on-wpc-s-lap-1784371697</id>
            <summary type="text">கடமையின் போது பெண் காவல்துறை கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ காவல் நிலையத்தில் பணிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடமையின் போது பெண் காவல்துறை கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் (Interdicted) செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறை தரப்பு தகவல்களின்படி, கடந்த ஜூலை 15ஆம் திகதி தம்புள்ளை கமுதாவ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு இந்த கான்ஸ்டபிள் காவல் நிலையத்திற்குத் திரும்பியுள்ளார்.</p><h2>பெண் காவல்துறை உத்தியோகத்தரின் மடியில் அமர முயற்சி</h2><p>அவ்வாறு திரும்பிய பின்னர், அங்கு அமர்ந்திருந்த பெண் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரிடம் சென்று, அவரது மடியில் அமர முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அந்த பெண் காவல்துறை கான்ஸ்டபிள் உடனடியாக இச்சம்பவம் குறித்து நிலையப் பொறுப்பதிகாரியிடம் (OIC) புகாரளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4977c8d1-6a0e-4890-9649-5f29f3cd3c70/26-6a5b5f5ee08d1.webp' /></p><p> </p><p>நிலையப் பொறுப்பதிகாரி இது குறித்து பிரிவுக்குப் பொறுப்பான உதவி கால்துறை அத்தியட்சகருக்கு (ASP) அறிவித்ததைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.</p><p></p><h2>மதுபோதையில் இருந்த&nbsp;காவல்துறை கான்ஸ்டபிள்</h2><p>
</p><p>
இச்சம்பவத்தின் போது குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c286b20c-fc64-4c0e-9c4f-fc6181eb4a43/26-6a5b5f5fa2832.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையைத் தொடர்ந்து, உதவி காவல்துறை அத்தியட்சகரின் உத்தரவின் பேரில், மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அந்த காவல்துறை கான்ஸ்டபிள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு : கொழும்பு SSC மைதானத்தில் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/garfield-sobers-passes-away-sl-cricket-condolences-1784369712"></link>
            <id>https://ibctamil.com/article/garfield-sobers-passes-away-sl-cricket-condolences-1784369712</id>
            <summary type="text">கிரிக்கெட் விளையாட்டின் அழியாத நட்சத்திரமும் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரருமான சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு&amp;nbsp;இலங்கை கிரிக்கெட் நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிக்கெட் விளையாட்டின் அழியாத நட்சத்திரமும் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரருமான சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு&nbsp;இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.</p><p>சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (18) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் எல்.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.</p><p>மேலும், அவருக்கு கௌரவம் அளிக்கும் விதமாக இன்றைய போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களும் கறுப்பு நிற கைப்பட்டை அணிந்து விளையாட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தலைமைப் பயிற்சியாளர்</h2><p>அவரின் மறைவு குறித்து இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர் கேரி சோபர்ஸ் இலங்கை கிரிக்கெட்டுடன் மிகவும் சிறப்பான மற்றும் நீண்டகால தொடர்பைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் ஆளுமையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e0b98e8-59af-4732-82ca-f6c3d972a900/26-6a5b5cb5d0ad1.webp' /></p><p>
 

குறிப்பாக, 1980களின் முற்பகுதியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அவர், 1983 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணிக்கு வழிகாட்டியாக இருந்தார்.</p><p>சோபர்ஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், உலக கிரிக்கெட் விளையாட்டுக்காக அவர் விட்டுச் சென்றுள்ள அசாத்தியமான மரபு, பல தலைமுறை வீரர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்“ என்று குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆத்திரத்தில் ட்ரம்ப்! கனடாவுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-new-canada-tariffs-1784370076"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-new-canada-tariffs-1784370076</id>
            <summary type="text">
அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயின் புகை பரவுவதற்கு கனடாவே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மாசுகளைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயின் புகை பரவுவதற்கு கனடாவே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இந்த மாசுகளைக் கையாள்வதற்கான கணக்கிட முடியாத செலவினங்களை, கனடியப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள சுங்கவரிகளுடன் கூடுதலாகச் சேர்க்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
கனடாவில் ஏற்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காட்டுத்தீயிலிருந்து எழும் அடர்ந்த புகை, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரையிலான பரந்த நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.</p><p></p><h2>கனடாவின் திட்டமிட்ட அலட்சியம்</h2><p>

கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் முரண்பாடான உறவைக் கொண்டுள்ள ட்ரம்ப், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிலைமை குறித்து கனடா என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்பதை அறிய அவரைத் தொலைபேசியில் அழைக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b4415e-1b99-4a3e-b98f-dfa73329173d/26-6a5b585200eed.webp' /></p><p> 

அத்தோடு, கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்காததால், அசுத்தமான மற்றும் ஆரோக்கியமற்ற காற்று தேவையற்ற முறையில் அமெரிக்காவை ஆக்கிரமிப்பதாகவும், இது கனடாவின் திட்டமிட்ட அலட்சியம் என்றும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் விமர்சித்துள்ளார்.</p><h2>&nbsp;12 பில்லியன் கனடிய டொலர்கள்</h2><p>
</p><p>
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள கனடாவின் அவசரகால மேலாண்மை மற்றும் சமூக மீள்திறன் அமைச்சர் எலினோர் ஓல்செவ்ஸ்கி, வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளும் நோக்கில் வன நிலைத்தன்மை மற்றும் தீ தடுப்பிற்காக 2020 ஆம் ஆண்டு முதல் தங்களது அரசாங்கம் 12 பில்லியன் கனடிய டொலர்களை முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d628e458-2e69-4b4f-aa9e-1161f468fc3b/26-6a5b5852e276e.webp' /></p><p> </p><p>

மேலும், எல்லை இருபுறமும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்க-கனடா கூட்டுறவின் நீண்டகால வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T10:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pta-accused-granted-bail-after-15-years-1784369140"></link>
            <id>https://ibctamil.com/article/pta-accused-granted-bail-after-15-years-1784369140</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்கின்றி தடுத்து வைத்திருப்பது, அவரை விடுவிப்பதற்கான ஒரு "விதிவிலக்கான சூழ்நிலை" (exceptional circumstance) என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் (என்றழைக்கப்படும் தனுஷ்) என்பவருக்கேபிணை வழங்க மறுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><h2>&nbsp;சிறையில் கழிந்த இளமைக்காலம்</h2><p>குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் போது 26 வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், அவர் தனது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதியினை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தே சிறையில் கழித்துள்ளார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f71893a-182e-4e0a-bb5e-5c5c94f602bb/26-6a5b542acf7da.webp' /></p><p>

கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது, 2012 செப்டம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் (PTA கீழ் 115, அவசரகாலச் சட்டத்தின் கீழ் 115) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.</p><p></p><h2>கடுமையான நிபந்தனைகளுடன் பிணை&nbsp;</h2><p>
</p><p>
இதனடிப்படையில், நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகள் வருமாறு:

ரூ. 200,000 ரொக்கப் பிணை.

தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான நான்கு ஆள் பிணைகள்.

காவல்துறை தலைமையகத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும்.

பிரதிவாதியின் கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c42e467a-1d25-4e30-b711-a19566408052/26-6a5b5429ecdf3.webp' /></p><p>
</p><p>
இந்த பிணை நிபந்தனைகள் எதனையாவது மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
</p><p>
கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15B பிரிவை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தபோது இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அவதானித்துள்ளது.
</p><p>
மேலும், இந்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரது மகளுக்கு ஒரு வயது மட்டுமே ஆகியிருந்தது என்றும், இத்தனை ஆண்டு கால நீண்ட தடுப்புக்காவல் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரது பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்து தவித்துள்ளனர் என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p>

பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான அஸ்திக தேவேந்திர மற்றும் அருண மதுசங்க ஆகியோர் முன்னிலையாகினர். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/16-arrested-riding-illegally-modified-motorcycles-1784365187"></link>
            <id>https://ibctamil.com/article/16-arrested-riding-illegally-modified-motorcycles-1784365187</id>
            <summary type="text">ஹோமாகமவில் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 சாரதிகள் காவல்துறை போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகமவில் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 சாரதிகள் காவல்துறை போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>குறித்த பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.</p><p>கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக காவலதுறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56a427b6-fa9f-4fb6-b443-ff16124cac7d/26-6a5b50c9a8534.webp' /></p><p>இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக காவல்துறை போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கியை அதிர வைத்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-struck-eastern-turkey-on-saturday-1784364423"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-struck-eastern-turkey-on-saturday-1784364423</id>
            <summary type="text">

கிழக்கு துருக்கியில் சனிக்கிழமையன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையம் (AFA...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு துருக்கியில் சனிக்கிழமையன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.
</p><p>
உள்ளூர் நேரப்படி காலை சுமார் 6:20 மணியளவில் மலாத்யா (Malatya) மாகாணத்தின் பட்டல்காசி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

இந்த அதிர்வுகள் மலாத்யா, எலாசிக், அதியமான், துன்செலி மற்றும் ஷான்லியுர்ஃபா ஆகிய அண்டை மாகாணங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதிப்புகள்</h2><p>
</p><p>
தற்போதைய நிலவரப்படி எந்தவொரு மோசமான சூழ்நிலையோ அல்லது பாதிப்புகளோ ஏற்பட்டதாக அறிக்கைகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345d049e-7655-4abd-b218-8017f344241e/26-6a5b495e329bc.webp' /></p><p>

எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரம் குறித்த நேரடி கள ஆய்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உலகின் மிக அதிகமான நில அதிர்வு அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் துருக்கியில், ஆண்டுக்கு ஒரு முறையாவது 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-18T09:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொத்துவில் கடலில் சிக்கி தத்தளித்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fisherman-sea-pottuvil-rescued-by-the-navy-1784361620"></link>
            <id>https://ibctamil.com/article/fisherman-sea-pottuvil-rescued-by-the-navy-1784361620</id>
            <summary type="text">இலங்கைக்கு கிழக்கே பொத்துவில் கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய கடற்றொழிலாளரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கிழக்கே பொத்துவில் கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய கடற்றொழிலாளரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு&nbsp; அமைய இந்த மீட்பு பணி நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p>நேற்று ( 7) நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கபட்டது.</p><p></p><h2>விஜயபாகு கப்பல்</h2><p>இந்த தீவிர தேடுதலில் பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8397c429-7c5d-48eb-8362-3f4edb3562af/26-6a5b3fcc18e9a.webp' /></p><p>மீட்கப்பட்ட கடற்றொழிலாளருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன் அவர் கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.</p><p>இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்படை மற்றும் கடற்றொழிலாள சமூகத்தினரைப் பாதுகாப்பதற்காக, இவ்வாறான உடனடி மீட்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளதாக&nbsp;கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தபக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44edd12c-0400-4348-a746-47e0190899ab/26-6a5b3fcccf306.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/404c90fc-1109-45c8-95a5-40577d1021f1/26-6a5b3fcd97087.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bbd83ff-e5ef-420d-a5a3-5e011412e04f/26-6a5b3fce4fd9d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய் தீவிரம் : மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-deaths-rise-to-53-in-sri-lanka-1784362225"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-deaths-rise-to-53-in-sri-lanka-1784362225</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.டெங்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.</p><p>டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74,478 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>மருத்துவப் பரிசோதனை</h2><p>முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது</p><p>இந்த நிலையில் காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b1b5fd8-cce1-4573-b0b9-eb886571cee5/26-6a5b3c8aedaf7.webp' /></p><p>இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 15,596 டெங்கு நோயாளர்கள் பதிவான நிலையில் முதலிடத்திலும், 14,857 நோயாளர்கள் பதிவான நிலையில் கொழும்பு இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T08:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/malaysian-passenger-arrested-at-bia-with-cocaine-1784359647"></link>
            <id>https://ibctamil.com/article/malaysian-passenger-arrested-at-bia-with-cocaine-1784359647</id>
            <summary type="text">சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருளை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் "பசுமை வழி" ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்</h2><p>குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்றுள்ளார்.</p><p>

அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d626d026-c46a-442a-a2cf-a4f26c531fab/26-6a5b2f4c56d97.webp' /></p><p> 

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொபி போத்தல்களில், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை மதிப்பிலான தொலைபேசிகளை திருடிய சிறுவர்கள் இருவர் சிக்கினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-boys-stole-mobile-phones-worth-million-rupees-1784359623"></link>
            <id>https://ibctamil.com/article/two-boys-stole-mobile-phones-worth-million-rupees-1784359623</id>
            <summary type="text">அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி விற்பனைநிலையத்தில் இருந்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தொலைபேசிகள், துணைக்கருவிகள் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி விற்பனைநிலையத்தில் இருந்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தொலைபேசிகள், துணைக்கருவிகள் மற்றும் பணத்தைத் திருடிய 14 வயதுடைய இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தொலைபேசி விற்பனைநிலையத்தின் முன்பக்க ஜன்னலை உடைத்து, 4ஆம் திகதி அதிகாலை அந்த இரண்டு சிறுவர்களும் கடைக்குள் நுழைந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>பறிமுதல் செய்யப்பட்ட&nbsp;தொலைபேசிகள்</h2><p>
</p><p>
இந்தத் திருட்டு குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நேற்று (17) அந்த இரண்டு சந்தேக நபர்களான சிறுவர்களை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd5ac8d-7b7f-4d76-812e-1ac01a47e47b/26-6a5b2f48ebdc5.webp' /></p><p>
</p><p>
எப்பாவல ஸ்ரீ சுதர்சனராம பிரிவெனாவில் தங்கிப் படிக்கும் அந்த இரண்டு சிறுவர்களும், தலாவ, நபடவெவ மற்றும் எப்பாவல, ரொடவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அவர்கள் கைது செய்யப்பட்டபோது, ​​ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ஆறு ஸ்மார்ட் தொலைபேசிகளையும் ரூ. 5,000 ரொக்கப் பணமும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய இந்த மாணவர், முந்தைய நாள் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு சென்று அப்பிள் தொலைபேசியின் விலை குறித்து விசாரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d134636-82a0-48ef-b19c-155f581b918d/26-6a5b2f49d17eb.webp' /></p><p>
</p><p>
அவன் தன் தந்தையிடம் தொலைபேசியை வாங்கித் தருமாறு கேட்டிருந்த நிலையில், தந்தை அந்தக் கோரிக்கையை மறுத்ததால் தொலைபேசிகள் திருடப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய இரண்டு சிறுவர்களும் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-18T07:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கோர விபத்து - காவல்துறை சார்ஜன்ட் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-sergeant-killed-road-accident-in-vavuniya-1784356461"></link>
            <id>https://ibctamil.com/article/police-sergeant-killed-road-accident-in-vavuniya-1784356461</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவம் வவுனியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்து சம்பவம் வவுனியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்து</h2><p>
வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724da790-95b4-49b5-a5c9-28015d2eea0c/26-6a5b262b26c48.webp' /></p><p>இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் 45 வயதுடைய வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-18T07:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[25 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை : ஐவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-sentenced-to-death-in-2001-murder-case-1784356312"></link>
            <id>https://ibctamil.com/article/five-sentenced-to-death-in-2001-murder-case-1784356312</id>
            <summary type="text">குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கில் அத்தனகல்லாவின் வெலகெதரவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார்.</p><p>2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி ஒரு குழுவினர் வெலகெதர, தியகவிட்டியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.</p><p></p><h2>கம்பஹா மேல் நீதிமன்றம்</h2><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சயங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே ஐவரும் கொலைக் குற்றம் மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e30a94-fd9c-4807-a202-198656e184f8/26-6a5b254766015.webp' /></p><p>இதனையடுத்து அவர்கள் ஐந்து பேருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபரின் இறுதிச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/c-d-wickramaratne-s-funeral-to-be-held-on-monday-1784355833"></link>
            <id>https://ibctamil.com/article/c-d-wickramaratne-s-funeral-to-be-held-on-monday-1784355833</id>
            <summary type="text">

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை செய்துகொண்டதாகக் கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல், திங்கட்கிழமை (20) மாலை பொரளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை செய்துகொண்டதாகக் கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல், திங்கட்கிழமை (20) மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
</p><p>
அதுவரை அவரது உடல் நாளை (19) முதல் பொரளையில் உள்ள ஒரு தனியார் மலர்சாலையில் வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபரின் உயிரிழப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய சிறப்பு உத்தரவின் பேரில், மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவு இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9efc584b-6fae-47e4-a048-088b1ce3358a/26-6a5b24ae0cdd6.webp' /></p><p>

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று (17) காலை துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-18T07:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்ட நிர்ணய சதி - Jaffna கிங்ஸ் உரிமையாளருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-kings-co-owner-another-indiansl-remanded-1784354780"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-kings-co-owner-another-indiansl-remanded-1784354780</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் &#039;ஜப்னா கிங்ஸ்&#039; (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் உட்பட இரண்டு இந்தியர்கள் ஜூலை 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'ஜப்னா கிங்ஸ்' (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் உட்பட இரண்டு இந்தியர்கள் ஜூலை 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று வெள்ளிக்கிழமை காலை விளையாட்டு ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p></p><h2>காணொளி ஆதாரங்கள்&nbsp;</h2><p>நான்கு எல்பிஎல் போட்டிகளின் முடிவுகளை மாற்றி அமைப்பதற்காக சந்தேக நபர்கள் வீரர்களுக்குப் பணம் வழங்கியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc1065-9e07-4fec-9e4a-b53a82c19834/26-6a5b23140d4e4.webp' /></p><p>அத்துடன் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் காணொளி ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.</p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, பானுக ராஜபக்ச, துனித் வெல்லலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ உள்ளிட்ட பல வீரர்களை, போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுகளுடன் சந்தேக நபர்கள் அணுகியதாகக் கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>சாட்சியமும் இல்லை</h2><p>எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad20b613-62cc-4abc-810b-3befc715af98/26-6a5b2314b2635.webp' /></p><p>“முறைப்பாட்டுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை.</p><p> இவர்கள் பெரும் தொகைப் பணத்துடன் இலங்கைக்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவே ஆகும். இந்தச் சந்தேகநபர்கள் இளைஞர்கள் ஆவர் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>விபரங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கினால் விசாரணைகளுக்குத் தடங்கல் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கர்களுக்கு பறந்த அவசர எச்சரிக்கை! உச்சக்கட்ட போர்ப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-reissues-middle-east-travel-warning-1784351128"></link>
            <id>https://ibctamil.com/article/us-reissues-middle-east-travel-warning-1784351128</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்களைக் காரணம் காட்டி, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்களைக் காரணம் காட்டி, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை&nbsp;தனது X தள பதிவில் தெரிவித்துள்ளது.</p><p>மத்திய கிழக்கு நாடுகளுக்கு அல்லது அதன் வழியாகப் பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களை வாஷிங்டன் வலியுறுத்தியதுடன், பயணிகள் அந்தந்த நாடுகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகளை ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம்</h2><p>

 

"மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றம் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடையவும் வாய்ப்புள்ளது," என்று&nbsp; ஆலோசனை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dd7280-373c-4c4c-aa97-8a1074f52d7f/26-6a5b1186582fe.webp' /></p><p>இதனால், அங்குள்ள நிலவரங்கள் குறித்த முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>அத்துடன் மத்திய கிழக்கு பகுதி அல்லது அதன் வழியாகப் பயணிப்பவர்கள் தங்கள் விமான நிறுவனங்களிடம் விமானப் பயண அட்டவணைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியது.</p><p>தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கில் காவல்துறையின் இறுதி மரியாதையை இழந்த சி. டி. விக்ரமரத்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/c-d-wickramarathne-loses-final-police-honor-1784353549"></link>
            <id>https://ibctamil.com/article/c-d-wickramarathne-loses-final-police-honor-1784353549</id>
            <summary type="text">

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு, முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு, முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
காவல்துறை நெறிமுறைகளின்படி, உயிரை மாய்த்துக் கொள்ளும் எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் மரியாதை செலுத்துவதற்கு உரிமை இல்லை என்று கூறப்படுகிறது.</p><p>

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>&nbsp;</p><h2>தீவிர விசாரணை</h2><p>

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை ஆய்வு செய்யும் பாணியில் பெற்று பின்னர், தன்னை தானே சுட்டுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47abcc62-afb1-4d72-a18e-ff4e49fcec07/26-6a5b179942e04.webp' /></p><p>
</p><p>
சம்பவம் நடந்த நேரத்தில், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர, முன்னாள் காவல்துறை மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே காவல்துறையினர் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qNVsY-dHNWo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T06:35:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monthly-stipend-for-students-with-special-needs-1784354613"></link>
            <id>https://ibctamil.com/article/monthly-stipend-for-students-with-special-needs-1784354613</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.</p><p>இதன்போது, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><h2>விளக்கமளித்த அதிகாரிகள்&nbsp;</h2><p>அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8917d7e-f4ba-40ea-a9a0-9f44f3519ea7/26-6a5b1b10445a5.webp' /></p><p>2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>

"டித்வா" சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. </p><p>

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும், அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:28:39+00:00</updated>
        </entry>
    </feed>
