<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T13:40:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக இறைச்சியாக்க தாயார் நிலையில் இருந்த மாடுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன் 58&nbsp;கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது</p><p>குறித்த சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த குற்றத்தில் நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மாடுகள் இறைச்சி</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (29-08-2026) குறித்த இடத்தினை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
</p><p>
அதன் போது மூன்று பசு மாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக
கட்டப்பட்டிருந்த நிலையிலும் ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ
இறைச்சியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ba3306-1388-454e-9f64-a7ce491dcf30/26-6a92d982022b9.webp' /></p><p> அத்துடன் அங்கிருந்த 43 வயதான நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் கைது அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது
தொடர்பிலும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[LCW3R6Fஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்காடு சவுக்கங்காட்டில் தொடரும் தீ : உலங்குவானூர்தி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/helicopter-operation-to-control-fire-in-forest-1788002140"></link>
            <id>https://ibctamil.com/article/helicopter-operation-to-control-fire-in-forest-1788002140</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.</p><p>

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தநிலையில், மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>தேவையான நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ
மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95216d1-154c-46c6-bdbf-d21580fbf63d/26-6a92c26d715a3.webp' /></p><p>
</p><p>
மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினதும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை
முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/discussion-on-lrc-land-release-in-mannar-1788001080"></link>
            <id>https://ibctamil.com/article/discussion-on-lrc-land-release-in-mannar-1788001080</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள
காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.இதன்போது பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள
காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>இதன்போது பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் சொந்தமானதாக காணப்படும்&nbsp;காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28) மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>&nbsp;</p><h2>கையகப்படுத்தப்பட்டுள்ள&nbsp;காணிகள்</h2><p>அத்துடன் பொதுமக்களுக்கும், மத ஸ்தலங்களுக்கும் சொந்தமான காணிகள் மற்றும்
நிலங்கள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>மேலும் சோழமண்டல குளம் பகுதியில் உள்ள காணிகளை பயனாளிகளுக்கு வழங்குவது,
சாளம்பன் – நெடுங்குளம் பகுதியில் பயனாளிகளுக்கான காணி வழங்கல், தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cecaaf0-e1e6-48b1-8da0-c19c0e1f4b94/26-6a92bd6a1aa55.webp' /></p><p>
மேலும், மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான
காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அளவீட்டுத் திட்டங்கள்
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும்
கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் , காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-not-invited-to-the-missing-persons-conference-1787998970"></link>
            <id>https://ibctamil.com/article/itak-not-invited-to-the-missing-persons-conference-1787998970</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பும் அழைப்பு விடுக்கவில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று (28) வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதனால் கட்சி சார்பில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரிந்து நின்று போட்டியாகச் செயல்பட வேண்டாம்</h2><p>அந்த கடிதத்தில், ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p> 

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்பதை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதோடு, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இதில் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46382a7b-440b-44f3-9523-ebcd33435019/26-6a92b957186fe.webp' /></p><p> </p><p>

இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. 

ஆனால், கட்சி நிர்வாகத்துடன் கலந்துரையாடி எந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலும் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. </p><p>

எனவே, எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்வில் கட்சி சார்பில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ள தடையில்லை என்றாலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகையை நிராகரித்தது நேபாள அரசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-rejects-foreign-search-and-rescue-teams-1787995809</id>
            <summary type="text">இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச நிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது. </p><p>இருப்பினும், சர்வதேச நிதி உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிட நேபாள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டு மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சகம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மீட்புக் குழுக்கள்&nbsp;</h2><p>2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் போது 34 நாடுகளைச் சேர்ந்த 76 இற்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்திற்கு வந்தன. </p><p>இதனால் விமான நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வெவ்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய குழப்பமும் முரண்பாடுகளும் உருவாயின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3924154c-454c-4309-acc3-b4080a3b11ac/26-6a92b388b3bc9.webp' /></p><p>அந்த அனுபவத்தை மனதில் கொண்டே இம்முறை உள்நாட்டுப் படைகளை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>வெளிநாட்டு உதவிகள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பிரதமரின் நிவாரண நிதி என்ற ஒற்றைச் சாளர முறைமை மூலமாக மட்டுமே நிதி உதவிகளைப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>சுரங்கப்பாதை மீட்பு, தற்காலிக பாலங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற விசேட தொழில்நுட்ப உதவிகளுக்கு மட்டும் இந்தியாவிடமிருந்து நேபாளம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T10:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-monitoring-iran-oil-tankers-near-srilanka-eez-1787991223"></link>
            <id>https://ibctamil.com/article/govt-monitoring-iran-oil-tankers-near-srilanka-eez-1787991223</id>
            <summary type="text">இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். </p><p>எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். </p><p>

தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடற்படைத் தடை&nbsp;</h2><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba9babec-f3eb-4b97-8133-0b5e008a5167/26-6a92b08baddd3.webp' /></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் கூறுகிறது. </p><p>

எனினும் குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>ஐரிஷ் டேனா கப்பல் மீது தாக்குதல்&nbsp;</h2><p>

கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c69c000b-9cf2-4a82-a83e-b2a1ae158e26/26-6a92b08c5cfa2.webp' /></p><p> </p><p>

எனினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்...! நீதி கோரி திரண்ட தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-outside-sl-high-commission-in-london-1787986588"></link>
            <id>https://ibctamil.com/article/protest-outside-sl-high-commission-in-london-1787986588</id>
            <summary type="text">லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த போராட்டமானது சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ் மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (28.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பொறுப்புக்கூறல்&nbsp;</h2><p>ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரித்தானிய அரசு இந்த விகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10991be-9ac7-43ea-ba7c-a41cd33fa1d6/26-6a92a09676604.webp' /></p><p>இதன்போது சர்வதேச நாடுகளின் கவனம் தேவை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நிற்கின்றோம், உண்மை, நீதி மற்றும் மாண்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/major-change-in-the-weather-in-sept-and-oct-in-sl-1787985307"></link>
            <id>https://ibctamil.com/article/major-change-in-the-weather-in-sept-and-oct-in-sl-1787985307</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி, அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழைக்கு வழிவகுக்கும் என&nbsp;முன்னாள் புவியியல் துறை பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p>ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகளவு வெப்பநிலை</h2><p>அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகின்றது.</p><p>அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்தப் பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b856462-8658-4513-bf34-8ad8ac9b34b7/26-6a929145ef90a.webp' /></p><p>படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளது.
</p><p>
புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகின்றது.</p><p>இதனால் நீர்நிலைகள் வற்றுவதுடன், விலங்குகள் மற்றும் விவசாயத் துறையும் பாதிக்கப்படக்கூடும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.</p><p>நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். </p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தப் பேரிடர் குறித்து நேபாளத்துக்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காததால் தான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் மறுத்துள்ளது.
</p><p>
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சீனத் தூதரகம் இந்தத் தகவல்களைப் போலியானவை என்று கூறி&nbsp; "ஆகஸ்ட் 26-ஆம் திகதி&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவால் நிலச்சரிவு ஏற்பட்டது. </p><p>இதில் பலர் உயிரிழந்ததுடன் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீண்டும் வெள்ளப்பெருக்கு</h2><p>இதேவேளை, வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825bd583-d60e-4f38-8e14-ba7832b0f9db/26-6a928ab956f99.webp' /></p><p>நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய ஏரியில்&nbsp; சுமார் 20 இலட்சம் கனமீற்றர் நீர் காணப்பட்டதாகவும், அடுத்த மூன்று நாட்களில் இது 50 இலட்சம் கனமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தால், நேபாளத்தில் மீண்டும் பாரிய பேரிடர் ஏற்படக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.</p><p></p><h2>காணாமல் போயுள்ளனர்&nbsp;</h2><p>நேபாளத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 579 பேர் உயிரிழந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 2,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இது முந்தைய மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்&nbsp; என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b33180b-73e0-40a6-8561-f29cd46f8eb0/26-6a928aba13106.webp' /></p><p>நேபாளம் மற்றும் சீனாவில் 90 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், நேபாளத்தில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர்</p><p>இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296"></link>
            <id>https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296</id>
            <summary type="text">நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நேற்று (28) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p>மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4438af-c76b-48c7-8c64-564df89f4184/26-6a928c4b76026.webp' /></p><p> தங்காலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:38:30+00:00</updated>
        </entry>
    </feed>
