<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T23:18:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை : போர் நினைவிடமாக மாறிய பாடசாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-school-becomes-a-war-memorial-1788735961"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-school-becomes-a-war-memorial-1788735961</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த பள்ளி போர் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது..
</p><p>


சேதமடைந்த பள்ளிக்குள் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்</h2><p>செப்டம்பர் 5ம் திகதி பத்திரிகையாளர்கள் அங்கு சென்றபோது, குடும்பத்தினர் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைதியாக அஞ்சலி செலுத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c3f809-8b07-406d-8daf-558f031f05a0/26-6a9df3a5a6669.webp' /></p><p> </p><p>"பள்ளி இனி இயங்காது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்" என்றும் மாகாண ஆளுநர் முகமது அஷூரி தாசியானி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கி இயங்காதமையால் உயிர் தப்பிய பெண்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-escapes-after-gun-malfunctions-1788732424"></link>
            <id>https://ibctamil.com/article/woman-escapes-after-gun-malfunctions-1788732424</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>
கொழும்பு கொஸ்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>பெண்ணொருவரை இலக்குவைத்தே&nbsp; துப்பாக்கிச் சூட்டு முயற்சி</h2><p>துப்பாக்கி இயங்காத காரணத்தால் ஆயுததாரிகள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/344be223-9233-4e3d-b032-fc50fba9e110/26-6a9def384f1d2.webp' /></p><p>

கொஸ்கொடை, நானோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருமான ‘கொஸ்கொட தாரக்க’வுடன் நெருங்கிய தொடர்புடைய பெண்ணொருவரை இலக்குவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தின் போது வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f886ac8-fed7-489d-bdac-ec95ad3fbfaf/26-6a9def390361f.webp' /></p><p> 9 எம்.எம். ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை குறித்த பெண்ணை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும், துப்பாக்கி இயங்காமையால் அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T22:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது. </p><p>இந்த தாக்குதல்கள் தொடர்பான காணொளியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டு உள்ளது.


இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.</p><p>அவர் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,</p><h2>அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும்</h2><p>
</p><p>
அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது என்றார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… <a href="https://t.co/UGGcSGsUtd">pic.twitter.com/UGGcSGsUtd</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096247889366290840?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>


அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T21:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பொறிக்குள் சிக்காமல் லாவகமாக தப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஒரு வித்தியாசமான அரசியல் வியூகத்தில் ஈடுபட்டது.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை இந்த நிகழ்விற்கு வரவழைத்து, இதை நாட்டின் முன் ஒரு பெரிய அரசியல் ஒற்றுமையின் தொடக்கமாக சித்தரிப்பதே ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. குறிப்பாக, சஜித் பிரேமதாசவை எப்படியாவது இந்த நிகழ்வில் பங்கேற்க வைப்பதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.</p><h2>ஹரினிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு </h2><p>

ரணில் விக்ரமசிங்க இந்த அமைப்புப் பணியை ஹரின் பெர்னாண்டோவிடம் ஒப்படைத்தார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb228dbd-7663-4222-add4-b9f18f69959c/26-6a9ddf75b6e2c.webp' /></p><p> </p><p>அவர் நிகழ்வின் அமைப்புப் பணிகளைப் பொறுப்பேற்றார்.

 பொதுவாக எந்தவொரு அமைப்புச் செயல்பாட்டிற்கும் பகிரங்கமாக முன்வரும் ஹரின், இவ்விதமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுவிழா நடவடிக்கைகளைத் திரைமறைவிலிருந்து ஏற்பாடு செய்வதை உறுதிசெய்தார். தற்போதைய அரசியல் சூழலில் சில கட்சிகளால் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் இவ்வாறு பகிரங்கப்படுத்தலைத் தவிர்த்தார்.</p><p></p><h2>சஜித் பிரேமதாசவின் பதில்</h2><p>

 நிகழ்ச்சிக்கு சஜித்தை அழைத்து ஹரின் பெர்னாண்டோ அனுப்பிய பல செய்திகளுக்கு சஜித் பதிலளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88473460-336e-487a-97c8-6876aeeca032/26-6a9ddf76894d6.webp' /></p><p>
</p><p>
 பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க சஜித்தை அழைத்தார். அதற்குப் பதிலளித்த சஜித், கொழும்புக்கு வெளியே பல முக்கியப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று கூறினார். அதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.</p><h2>ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு</h2><p> பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் சஜித்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், சஜித் அந்த அழைப்பை மறுத்து, சகாலாவுக்கு அளித்த அதே பதிலை ரணிலுக்கும் அளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T21:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051"></link>
            <id>https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை
வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.</p><h2>குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது&nbsp;</h2><p>&nbsp;காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da989345-4575-4733-b2f2-412d89b56560/26-6a9da218dcaaf.webp' /></p><p>
</p><p>
காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T20:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயிகளின் தலைவராக தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meeting-of-heads-of-saiva-organizations-1788722533"></link>
            <id>https://ibctamil.com/article/meeting-of-heads-of-saiva-organizations-1788722533</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை ஏகமனதாக சைவசமயிகளின் தலைவராக முன்மொழிந்து ஏற்றுக்கொண்டதுடன் அதனை சைவசமயிகளிடமும் இந்து கலாசார திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அரச உயர் மட்டத்திற்கும் எடுத்து செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது</p><p>இன்றைய கூட்டம் தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அருளாட்சி வகிக்க அகிலாணடேசுவரர் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா திருக்கோணேசுவர தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன் நயினை நாகபூசணி தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன்
இலண்டன் கனகதுர்க்கை அறங்காவலர் மருத்துவர் பரமநாதன்
அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார் அகில இலங்கைச் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம்
வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன் சிவ சகோதரர்கள் சிவதொண்டர் சிவமங்கயர் மாவட்ப இணைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>


</p><h2>தவத்திரு அகத்தியர் அடிகளார்&nbsp;</h2><p>யாழ்ப்பாணத்தை தலைமையாக் கொண்ட சிவகுரு ஆதீனம் , சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம் மலையகத்தை தலைமையாக கொண்ட சிவசகோதரர் அமைப்பு கொழும்பை தலைமையமாக்
கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் போன்ற நாடாளாவிய அமைப்புக்களும் பிராந்திய மற்றும் நாடாளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் 
அம்பாறை சைவநெறிக்கூடம் மட்டக்களப்பு சிவதொண்டர் கூட்டம் கல்முனை சைவ அறப்பணி நிலையம் ஆகிய மாவட்டநிலை சைவ அமைப்புக்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவசமயிகளின் தலைமையாக ஏற்க தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டு இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab6a8c73-467d-466b-ae0f-4f70e0677e24/26-6a9dc892e8977.webp' /></p><p>
</p><p>
அதே நேரம் கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையமாக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்கும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது

அதே போல வெற்றிடமாகவுள்ள நல்லை குருமகா சந்நிதான அருளாட்சியை ஏற்று வீற்றிருக்க தவத்திரு அக்த்தியர் அடிகளாருக்கு அனேக சைவ சமய அமைப்புக்களும் நல்லை ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபையும் விடுத்த விண்ணப்த்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதனை நல்ல ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபை விரைந்து அதனை செயற்படுத்த வேண்டும் என இணைய அமைப்புக்கள் வலியுறுத்தின.
</p><p>
திருக்கோவில்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் பக்தர்களிற்கும் அயற் பிரதேச குடிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதீத ஒலி ஒளி நிகழ்வு செயற்பாடுகளும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது</p><h2>அனைத்து ஆலயங்களும் அறப்பணி</h2><p>
</p><p>
அனைத்து ஆலயங்களும் அறப்பணிக்களை சைவ சமயக் குடிகளிற்கு ஆற்ற நயினை நாகபூசணி வவுனியா சிவன் இலண்டன் கனதுர்க்கை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்தப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7caf0ff4-d083-4697-96e9-707663279f7d/26-6a9dc8939e421.webp' /></p><p>

22வது அரசியலமைப்பு உட்பட எதிர்வரும் அரசியல் அமைப்பு யாப்பு சீரதிருத்தங்களில் சைவசமயிகளின் அபிலாசைகளை சரிவர சட்ட ரீதியாக சைவசமய தலைமைப்பீடத்தினால் அரசிற்கு வெளிப்படுத்தும் வகையில் திருக்கோணேசுவர ஆலய தலைவர் சட்டத்தரணி துசியந்தன் அவர்களை இணைப்பாளராகக்கொண்டு ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது
</p><p>இதில் ஏற்கனவே மூத்த சட்டதரணிகளான இரட்ணவேல் ஜெயரூபன் தயாபரன் ஆகியோரும் முன்னாள் தமிழ் கூட்டமைப்பு சைவ சமய விவாகாரங்களிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் அவர்களும் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
</p><p>
மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது

வவுனியா சிவன் கோவிலின் மாகேசுவர பூசையுடன் பயனுறுதி வாய்ந்த கலந்துரையாகல்கள் ஏகமனதாக தீர்மானத்துடனும் கொள்கை பிரகடனத்துடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T20:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-sub-inspector-dismissed-sexual-bribe-1788719225"></link>
            <id>https://ibctamil.com/article/police-sub-inspector-dismissed-sexual-bribe-1788719225</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா காவல் நிலையத்தில்
கடமையயாற்றிவரும் ஓட்டமாவடியைச் சோந்த காவல்துறை உப பரிசோதகர் ஒருவரை
நேற்று சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை காவல்
நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை
பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின்
மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><h2>காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக&nbsp;&nbsp;முறைப்பாடு</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தருக்கு
எதிராக திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு
செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c13a08-e132-482b-abfb-ebbe78f437ce/26-6a9db33ac3b60.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும்
கந்தளாய் காவல்துறை பிரிவிலுள்ள காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு
அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா காவல் நிலையத்திற்கு
இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற&nbsp;நிலையில் அவரை உடனடியாக பணி இடைநீக்கம்
செய்வதாக காவல்துறை தலைமையகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T18:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணி உரையை நாடாளுமன்றில் ஆற்றவுள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695"></link>
            <id>https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அவர் ஆற்றவிருந்த சிறப்புரை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்தக் கைது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தின் கீழ்கூட இதுபோன்ற செயல்கள் நடந்திருந்தால், தான் அவற்றை அனுமதித்திருக்க மாட்டேன் என்றும், ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52b9072-4e0a-4520-99c6-6fe054af54d9/26-6a9dab9ad9d37.webp' /></p><p>
</p><p>
அனுராதபுர பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்சவின் மனைவி உரையாற்றுவார் என்று சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் பரவிவரும் வதந்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறினார்.</p><p></p><p>

</p><h2>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் விசேட உரை</h2><p>"நாமல் ராஜபக்ச அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருவார். அன்று, அனுராதபுர மக்களுக்கு அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு வழங்குவார். அதைக் கவனிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன்," என்று ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7f0b34-cb45-4f70-a8a8-ef36e9707008/26-6a9dab9a273db.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T18:06:34+00:00</updated>
        </entry>
    </feed>
