<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-22T02:41:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக புதையல் தோண்டிய முன்னாள் அமைச்சரின் மகன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-s-son-arrested-1784686269"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-s-son-arrested-1784686269</id>
            <summary type="text">அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமைச்சரொருவரின் மகன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹபரணை - திருகோணமலை வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமைச்சரொருவரின் மகன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>சந்தேக நபர்கள் கைது&nbsp;</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b08c09-2f9e-43a1-a4d4-3edb486857fa/26-6a602932c4992.webp' /></p><p>ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.</p><p>பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
</p><p>
சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T02:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730"></link>
            <id>https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730</id>
            <summary type="text">மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்த துப்பாக்கி பிரயோகத்தை இன்று (22-07-2026) அதிகாலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>

காரில் வந்த ஆயுதமேந்திய குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு அவர்கள் கைத்துப்பாக்கி (Pistol) ரக ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ec8c9-52c7-4f4c-b0ce-7bc6d257cd0d/26-6a601b00ad734.webp' /></p><p>

தாக்குதலுக்கு இலக்கான வீடு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிவதற்கும் கந்தற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad459c36-9459-4b9e-8a53-cd5407d93933/26-6a60160b07310.webp' /></p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாரிய முறைகேடுகள்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290"></link>
            <id>https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290</id>
            <summary type="text">சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறப்பு விசாரணை</h2><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6ca7fd-80c6-4256-b5f7-c419697a414a/26-6a60134bc334b.webp' /></p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, அப்போதைய சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமரைத் இரகசியமாக நோட்டமிட்ட மூன்று நபர்கள் அதிரடி கைது...! எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-for-spying-on-pm-harini-1784679813"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-for-spying-on-pm-harini-1784679813</id>
            <summary type="text">பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு ஹரினி அமரசூரிய நேற்று (21-07-2026) சென்றிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தினர்.</p><p>
</p><p></p><h2>முழுமையான அறிக்கை</h2><p>இதையடுத்து சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22-07-2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை (23-07-2026) சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91513e12-ec10-4dee-88f0-e25e5e377098/26-6a600d86f38c9.webp' /></p><p>சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாக தெரிவித்திருந்தனர் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள்: பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/valvettithurai-students-released-on-bail-1784678286"></link>
            <id>https://ibctamil.com/article/valvettithurai-students-released-on-bail-1784678286</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று இரவு (21-07-...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று இரவு (21-07-2026) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் சீலாப்புலம் கிராமத்தைச்
சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மனித உரிமைகள்&nbsp;</h2><p>பாடசாலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில்
இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட மாணவர்கள், இரவு 7:48 மணி வரை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542df260-fb3c-4ea9-8d59-e74fc885db10/26-6a60079033b93.webp' /></p><p>

இதனால் காவல் நிலையத்திற்குச்
சென்ற பெற்றோர், மாணவர்களைத் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் நாளை காலை
மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறும் கோரியபோதிலும் அவர்களை
விடுவிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதையடுத்து இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த
நிலையில் மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு விரையும் சர்வதேசக் குழு...! இன்று வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-at-chemmani-mass-grave-today-jaffna-1784676751"></link>
            <id>https://ibctamil.com/article/protest-at-chemmani-mass-grave-today-jaffna-1784676751</id>
            <summary type="text">செம்மணியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் இன்று (22.07.2026) இடம்பெறவுள்ளது.

சர்வதேச விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
குறித்த போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் இன்று (22.07.2026) இடம்பெறவுள்ளது.
</p><p>
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>சமூக பிரதிநிதிகள்</h2><p>
வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74ec9d03-0060-49a6-bdec-53558c3169b6/26-6a6001910bd56.webp' /></p><p>

இன்றைய நாள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T23:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவரிடம் 2 கோடி கொள்ளை! முன்னாள் இராஜாங்க அமைச்சரின் புதல்வன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-state-minister-s-son-arrested-for-theft-1784674722"></link>
            <id>https://ibctamil.com/article/ex-state-minister-s-son-arrested-for-theft-1784674722</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டிய காவல்துறையினர் நேற்று (21-07-2026) இந்த கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கொள்ளுப்பிட்டிய காவல்துறையினர் நேற்று (21-07-2026) இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
சீன நாட்டவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், சீன நாட்டவரொருவரிடம் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் பணத்தை அபகரித்தமை தொடர்பாக சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f68b9cdb-2362-4a9b-8677-e89d77e7d0c4/26-6a5ff9a403127.webp' /></p><p>இந்தநிலையில் இன்றைய தினம் (22-07-2026) அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு, கொள்ளுப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T23:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.4 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மோசடி! சிக்கபோகும் மகிந்தவின் புதல்வர்கள் - நாடாளுமன்றில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-sons-named-in-ev-permit-scam-1784673146"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-sons-named-in-ev-permit-scam-1784673146</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அனுமதிப்பத்திரங்கள் </h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி ருவன்திலக ஜயகொடி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7193d97b-c02a-40eb-bf16-a9b6edaf9f97/26-6a5ff37c69a64.webp' /></p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிகக் குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை குறித்த ருவன்திலக ஜயகொடி சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அறிவியல் அடிப்படை</h2><p>எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ருவன்திலக ஜயகொடி குற்றம் சாட்டிள்ளார். </p><p>

இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5107e88-f38d-475a-8788-1c52b6b35972/26-6a5ff37bb6a38.webp' /></p><p>

இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக ருவன்திலக ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமறைப்படுத்தப்பட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T22:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனானுக்கு நேரடி விமான சேவை...! ட்ரம்ப் வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-orders-direct-us-flights-to-lebanon-1784670393"></link>
            <id>https://ibctamil.com/article/trump-orders-direct-us-flights-to-lebanon-1784670393</id>
            <summary type="text">அமெரிக்க விமான நிறுவனங்கள் லெபனானுக்கு நேரடியாக விமானங்களை இயக்க அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க விமான நிறுவனங்கள் லெபனானுக்கு நேரடியாக விமானங்களை இயக்க அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
இது குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>முக்கிய சந்திப்பு</h2><p>

குறித்த பதிவில், அமெரிக்கர்கள் இந்த அழகான நாட்டிற்கு எளிதாகச் சென்று வருவதற்கு வசதியாக அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களும் லெபனானுக்கு நேரடியாகச் செல்ல அனுமதிக்குமாறு எனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/116959597656685206/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

வெள்ளை மாளிகையில் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்னுடன் (Joseph Aoun) நடத்திய முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T22:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா வழியே அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல்! குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்சிகோ கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-mexicans-admit-to-us-smuggling-conspiracy-1784662294"></link>
            <id>https://ibctamil.com/article/3-mexicans-admit-to-us-smuggling-conspiracy-1784662294</id>
            <summary type="text">கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நூற்றுக்கணக்கான மக்களைச் சட்டவிரோதமாகக் கடத்திய மெக்சிகோவைச் சேர்ந்த மூவர், நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நூற்றுக்கணக்கான மக்களைச் சட்டவிரோதமாகக் கடத்திய மெக்சிகோவைச் சேர்ந்த மூவர், நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்த மூவருக்கும் வரும் நவம்பர் மாதத்தில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
</p><p>
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு இணை குற்றவாளி கடந்த மே மாதமே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்குச் செப்டம்பரில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>தீவிர நடவடிக்கை</h2><p>வடக்கு நியூயார்க் மாநிலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணை அமைப்பும் (HSI) அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இந்த விரிவான விசாரணையை நடத்தின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2ce4dac-4070-4093-b785-d93df95f9752/26-6a5fe5ff35ef1.webp' /></p><p>கனடா எல்லை வழியே நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்களைத் தடுக்க அமெரிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:40:13+00:00</updated>
        </entry>
    </feed>
