<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-06T11:19:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு இறுகும் பிடி: நீதிமன்றம் சென்றது காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-police-chief-issue-1786013855"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-police-chief-issue-1786013855</id>
            <summary type="text">பொது வீதியில் வைத்து காவல்துறை மா அதிபரை (IGP)பொதுமக்கள் படுகொலை செய்வார்கள் என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது வீதியில் வைத்து காவல்துறை மா அதிபரை (IGP)பொதுமக்கள் படுகொலை செய்வார்கள் என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் வெளியிட்ட அறிக்கை குறித்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இன்று (06) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
</p><p>
உண்மைகளை ஆராய்ந்த பின்னர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><h2>காவல்துறை மா அதிபருக்கு நீதிமன்றின் உத்தரவு</h2><p>&nbsp;அதன்படி, காவல்துறை மா அதிபர்(IGP) பொதுச் செயலாளர் சாகர கரியவசம் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது காவல்துறை மா அதிபர்(IGP) குறித்து வெளியிட்ட அச்சுறுத்தும் அறிக்கையின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளை காவல்துறைக்கு வழங்குமாறு கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று (06) உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28af7f0c-d5ff-4f0d-a72e-8a11624fcea9/26-6a746c4f7f096.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவில் கல்வியுடன் வேலை வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/job-opportunities-with-education-in-south-korea-1786012823"></link>
            <id>https://ibctamil.com/article/job-opportunities-with-education-in-south-korea-1786012823</id>
            <summary type="text">தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அதிகார வரம்புகள் தொடர்பான படிப்புகளைப் பயிலும் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அதிகார வரம்புகள் தொடர்பான படிப்புகளைப் பயிலும் மாணவர்களை, உயர்கல்விக்காக தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் திட்டம் ஒன்று அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒரு சிறப்புக் கூட்டம் சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்றது.
</p><p>கடந்த ஆண்டு சாங்ஷின் பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>சாங்ஷிங் பல்கலைக்கழகம்</h2><p>இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தில் (NIOSH) பயிலும் மாணவர்கள், சாங்ஷிங் பல்கலைக்கழகத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு வரை உயர்கல்வியைத் தொடரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a6eab6-84cb-464d-a579-55d43efe5cdc/26-6a746acd85fcf.webp' /></p><p> மேலும், படிக்கும்போதே பகுதிநேர வேலை செய்யும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் பாடக் கட்டணத்தில் 50% மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அதே சமயம் கல்வித் திறமையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% வரை பாடக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தென் கொரியாவில் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.</p><p>
இந்தக் கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், இந்தப் பாடத்திட்டத்தில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆழமாக விவாதித்தனர்.
</p><p>கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிட்டு முழுவீச்சில் செயல்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; &nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா - உக்ரைன் போரில் மீண்டும் பதற்றம்...! இரு பக்கமும் தீரமடையும் தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deadly-strikes-escalates-russia-ukraine-war-1786011411"></link>
            <id>https://ibctamil.com/article/deadly-strikes-escalates-russia-ukraine-war-1786011411</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக இரு நாட்டு அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைத் (Oil Refineries) தங்களது படைகள் வெற்றிகரமாகத் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ள பின்னணியில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் ரஷ்யாவின் யாரோஸ்லாவ் (Yaroslavl) பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்லாவ்நெப்ட்-யானோஸ் (Slavneft-Yanos) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>சுத்திகரிப்பு ஆலை</h2><p>

தாக்குதலுக்குள்ளான இந்த ஆலை ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.</p><p> 

இது ஆண்டிற்கு சுமார் 1.5 கோடி (15 மில்லியன்) மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7d503f-03d5-4fdc-843b-b100b0ece388/26-6a746b9dc6b11.webp' /></p><p>ஆலையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

இருப்பினும், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவற்றின் இடிபாடுகள் விழுந்ததால் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் சேதமடைந்து நகரின் மேல் புகைமூட்டம் சூழ்ந்ததாகவும் யாரோஸ்லாவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அவசர கால சேவை</h2><p>

இதேவேளை, உக்ரைனின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் உக்ரைனிய கோதுமையைச் சுமந்து சென்ற கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6ea269-4685-435e-a08f-31ac85b47814/26-6a746b9d1e647.webp' /></p><p>

கார்கிவ் தொடருந்து நிலையத்தை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
பாலாக்கிலியா பகுதியில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர கால சேவைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வான் துருப்புகளுக்கு அமெரிக்கா இரகசிய இராணுவப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-conduct-secret-training-taiwanese-troops-1786011989"></link>
            <id>https://ibctamil.com/article/us-conduct-secret-training-taiwanese-troops-1786011989</id>
            <summary type="text">அமெரிக்கா நீண்ட காலமாகத் தனது துருப்புகளுக்கு இரகசிய இராணுவப் பயிற்சி அளித்து வருவதை தாய்வான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா நீண்ட காலமாகத் தனது துருப்புகளுக்கு இரகசிய இராணுவப் பயிற்சி அளித்து வருவதை தாய்வான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சில அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா -&nbsp; தாய்வான் இடையிலான வலுவான உறவை உலகிற்கு வெளிக்காட்டும் முயற்சியாக இந்தத் தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>




இது குறித்து கருத்து தெரிவித்த தாய்னின் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு பொதுமக்கள் நினைப்பதை விட மிகவும் ஆழமானது என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>தாய்வானின் பாதுகாப்பு</h2><p>அமெரிக்க சட்டத்தின்படி தாய்வானின் பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கப்பட்டாலும், பொதுமக்கள் அந்த ஆயுத விற்பனையை மட்டுமே பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2bcd61e-1d3b-4783-ba2a-519bd40aba68/26-6a74698d1a7be.webp' /></p><p>இருப்பினும், பல்வேறு இராணுவப் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் தாய்வான் ஏராளமான நடைமுறை இராணுவ அனுபவத்தைப் பெற முடிந்துள்ளது என்றும் சுட்க்காட்டியுள்ளார்.</p><p> எனினும், எதிர்காலத்தில் சீனாவுடன் ஒரு மோதல் ஏற்பட்டால், அமெரிக்கப் படைகளின் நேரடித் தலையீட்டை தைவானின் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளடக்கவில்லை என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><h2>சீனா எச்சரிக்கை</h2><p>தாய்னைத் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, தேவைப்பட்டால் அதை பலவந்தமாகக் கைப்பற்றும் என்று எச்சரித்துள்ள சூழலில், இந்த இரகசியப் பயிற்சிகள் சீனாவைக் கோபப்படுத்தக்கூடும் என்பதால் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864778f4-36ff-4969-bbcf-abaa15f3023e/26-6a74698dc3dd2.webp' /></p><p>இந்நிலையில் பென்டகனும் அமெரிக்க பசிபிக் கட்டளையகமும் இந்த இராணுவப் பயிற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தாலும், தாய்வானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்படும் AIT இரு நாடுகளின் கடலோரக் காவல் கப்பல்கள் ஒன்றாகப் பயணிக்கும் புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T11:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்று மாசுபாடு : இலங்கையில் வருடாந்தம் பறிபோகும்7000 மனித உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/air-pollution-kills-7-000-people-sri-lanka-1786012265"></link>
            <id>https://ibctamil.com/article/air-pollution-kills-7-000-people-sri-lanka-1786012265</id>
            <summary type="text">வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காற்றிலுள்ள பல்வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே இதற்குக் காரணம் என விசேட ய நிபுணர் சாந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் முதல் 8 மில்லியன் மக்கள் வரை உயிரிழப்பதுடன், இலங்கையிலும் இக்காரணத்தால் ஆண்டுக்கு 7,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர்.</p><h2>விறகு எரிப்பதால் மாசடையும் வளிமண்டலம்</h2><p>விறகுகளை எரிப்பதன் மூலமும் பெருமளவிலான நச்சு வாயுக்கள் சுற்றாடலில் வெளிவிடப்பட்டு வளிமண்டலம் மாசடைவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c3ecac-7d9a-4dc7-994c-308228b3668c/26-6a7466439f0e2.webp' /></p><p>
</p><p>
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் சாந்தனி விதான இத்தகவல்களை வெளியிட்டார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/litro-lp-gas-prices-unchanged-for-august-1786011810"></link>
            <id>https://ibctamil.com/article/litro-lp-gas-prices-unchanged-for-august-1786011810</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வருவதோடு, நாணய மாற்று விகிதத்திலும் சவாலான நிலமைகள் காணப்பட்டபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய விற்பனை விலைகள்:
</p><ul><li>
12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 4,465
</li><li>
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 1,792
</li><li>
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 835</li></ul><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-oil-supply-project-targeting-trinco-1786009957"></link>
            <id>https://ibctamil.com/article/international-oil-supply-project-targeting-trinco-1786009957</id>
            <summary type="text">இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறியுள்ளார்.</p><p> திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகளை ஆய்வு செய்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
அனுர கருணாதிலக திருகோணமலை எண்ணெய் தேக்க வளாகத்தைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த நிலையில் இந்த விடயத்தை குறித்து விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>அனுர கருணாதிலக</h2><p>

மேலும் திருகோணமலை எண்ணெய் தேக்கங்களை மேம்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசு முன்னெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4de8d9-a8a4-46bf-a321-9ea2ee76b2b0/26-6a7462c1eaa7b.webp' /></p><p> </p><p>பிரதி அமைச்சர்களான ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்ல யோசித ராஜபக்சவிற்கு அனுமதி மறுத்தது நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-denies-permission-yositha-to-travel-abroad-1786009897"></link>
            <id>https://ibctamil.com/article/court-denies-permission-yositha-to-travel-abroad-1786009897</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ச விடுத்த கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நிராகரித்தார்.
</p><p>



இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த இந்த முறைப்பாடு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><h2>கல்வித்தகுதி இல்லாமல் கடற்படையில் இணைப்பு</h2><p>&nbsp;அதன்படி, உரிய அறிவிப்புகள் கிடைத்ததும் சந்தேகநபர்களை மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடுமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4e8d73-2523-43a6-9606-6a446c9e1a8f/26-6a745c4a53bde.webp' /></p><p>2006 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 2007 ஜூன் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிய கல்வித் தகைமைகள் இல்லாத யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்து, பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியை வழங்குவதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவருக்கு அநியாயமான ஆதாயத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.</p><p></p><h2>வசந்த கரன்னாகொட மற்றும் யோசித ராஜபக்ச பிரதிவாதிகள்</h2><p>&nbsp;கடந்த 31 ஆம் திகதி இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் பிரதிவாதியாக வசந்த குமார ஜயதேவ கரன்னாகொடவும், இரண்டாவது பிரதிவாதியாக யோஷித கனிஷ்க ராஜபக்சவும் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கிற்கு சம்பந்தமாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 சாட்சி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010d3c11-d3d5-45ce-8cb9-090cb1740c8c/26-6a745c4b21769.webp' /></p><p>சந்தேகநபரான யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீன் நுவரபக்ச நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால், விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் சமர்ப்பித்த விசேட மனு மூலம் கோரியதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விசேட மனு நிராகரிப்பு</h2><p> </p><p>இருப்பினும், தற்போது மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதான நீதவான், சம்பந்தப்பட்ட கோரிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e61bde-7e24-40bc-811e-08a239301863/26-6a745c4bcddbd.webp' /></p><p> </p><p>இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவிந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் கலை மூலம் புதிய பாதை! சாதனையாளர்களை உருவாக்கும் றீ(ச்)ஷா பண்ணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-farm-culinary-training-concludes-1786008741"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-farm-culinary-training-concludes-1786008741</id>
            <summary type="text">கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வு (05-08-2026) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>பணப்பரிசுகள்&nbsp;</h2><p>பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஊக்கமளிக்கும் வகையில் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c00d447-d132-4bc6-959d-fd316dc7b3ab/26-6a745550c3b02.webp' /></p><p>

ஆயிரம் கவிதைகள் தொகுப்பின் ஆசிரியரான யோ. புரட்சி, நிகழ்வை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கி, விழாவின் நோக்கத்தையும் சமூகப் பயனையும் அனைவரும் அறியச் செய்தார்.
</p><p>
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.</p><p>
</p><p></p><h2>ஒருங்கிணைந்த பண்ணை</h2><p>தவறான வழிகளில் செல்லக்கூடிய இளைஞர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து, சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்த இத்தகைய தொழில்முனைவுப் பயிற்சிகள் பெரும் பங்காற்றுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01197076-a070-41ef-a1d0-3373eff72356/26-6a745551abdf3.webp' /></p><p>சோம்பலைத் தவிர்த்து உழைப்பை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், உலக அரங்கில் தமிழர்கள் சாதனையாளர்களாகத் திகழ முடியும் என்பதை இந்நிகழ்வு வலியுறுத்துகிறது.</p><p>


இந்நிகழ்வில் கலந்துகொண்ட குமாரு யோகேஸ்வரன், இப்பயிற்சி விழா தனக்கு ஒரு பெரிய வாழ்வியல் பாடமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இளைஞர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-gold-jewelry-stolen-in-urumpirai-jaffna-1786007844"></link>
            <id>https://ibctamil.com/article/28-gold-jewelry-stolen-in-urumpirai-jaffna-1786007844</id>
            <summary type="text">கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க
நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த வீட்டார் கொண்டாட்ட
நிகழ்வு ஒன்றுக்கு மறுநாள் காலை செல்வதற்காக இரவு வேளை தயார் படுத்தலில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் வீட்டில் இருந்த ஒருவர் குளியல் அறைக்கு சென்ற நேரம் கதவின் ஊடாக திருடன் வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>28 பவுன் தங்க நகை களவு</h2><p>மறுநாள் காலை வீட்டார் எழுந்து அறையை பார்வையிட்டபோது அலுமாரிகள் திறந்த
நிலையில் வீட்டில் திருட்டு இடம்பெற்றதை உணர்ந்து தமது தங்க ஆபரணங்கள் இருந்த
இடத்தை தேடி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eab19974-5b64-489b-a217-0a00b2c3054f/26-6a745543a87a3.webp' /></p><p>
மறுநாள் நிகழ்வுக்கு எடுத்து வைத்த ஆபரணங்கள் அனைத்தும் களவாடி செல்லப்பட்டதை
அறிந்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும்
அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளின் சொத்து விபரம் இனி பகிரங்கம்! திட்ட வட்டமாக அறிவித்த அரச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-privacy-for-mps-asset-declarations-bimal-1786005260"></link>
            <id>https://ibctamil.com/article/no-privacy-for-mps-asset-declarations-bimal-1786005260</id>
            <summary type="text">லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தும் போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தும் போது, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று (06-08-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>


2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்கள் குறித்து தெளிவுபடுத்திய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரச அதிகாரிகள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் சாதாரண அரச அதிகாரிகளை விட வேறுபட்ட ஒரு பிரிவினர் என்பதால், அவர்களின் சொத்துக்கள் குறித்து அறிந்துகொள்ளப் பொதுமக்களுக்கு முழுமையான உரிமை உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214b76d5-87aa-47d7-add3-1cf2e11723fb/26-6a744cad8ea84.webp' /></p><p>முன்னர் 300 உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த சொத்துப் பிரகடன சமர்ப்பிப்பு செயல்முறை, புதிய சட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒரு இலட்சத்து அறுபதாயிரமாக (160,000) விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இவ்வாறு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது, சில பொறுப்பற்ற நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இணையத்தளத்தில் பதிவேற்றம்&nbsp;</h2><p>
மேலும் தெரிவித்த அமைச்சர், “லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்களைச் சிதைத்து சில ஊடக நிறுவனங்கள் நபர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.
</p><p>
இதன்காரணமாக அரச அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகச் சில கட்டுப்பாடுகளை விதிக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்மொழிந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ecd10a9-3dd9-4d1c-82fc-efdaa1c93ef3/26-6a744e0328273.webp' /></p><p>இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தக்கூடாது எனத் தீர்மானித்தோம். </p><p>

அவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் சொத்துக்கள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் பரிசீலிப்பதற்கான உரிமையை நாங்கள் அப்படியே உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த புதிய திருத்தத்தின் மூலம் அரச அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அரசியல்வாதிகளின் நிதிப் வெளிப்படைத்தன்மையை (Financial Transparency) மேலும் உயர் மட்டத்தில் பேண எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-navy-rescues-indian-fishermen-off-delft-1785991809"></link>
            <id>https://ibctamil.com/article/sl-navy-rescues-indian-fishermen-off-delft-1785991809</id>
            <summary type="text">யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p>

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக நுழைந்து கடற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>விசேட தேடுதல்</h2><p>


விபத்தையடுத்து இலங்கை கடற்படை விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.</p><p>


இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சாமிந்த வலக்குளுகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbb929c-26ea-41e5-a0c5-03a768c80d0c/26-6a741cc4e8aa4.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 பேரைக் கொண்ட இந்திய மீன்பிடிப் படகொன்று நேற்று இரவு (05-08-2026) விபத்துக்குள்ளானது என உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்களை மீட்கும் பொருட்டு இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:42:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடியின் பதிவை நீக்கிய மெட்டா நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meta-company-removes-modi-s-post-1786002939"></link>
            <id>https://ibctamil.com/article/meta-company-removes-modi-s-post-1786002939</id>
            <summary type="text">இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முதன்மை அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan), இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O), புதுப்பிப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு பதிவை ஜூலை&nbsp;23 அன்று மாதம் சிறிது நேரம் கட்டுப்படுத்தியதாக தெரிய வருகிறது.</p><p>இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்தின்&nbsp; தலைவர் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>நீண்ட கலந்துரையாடல்</h2><p>அன்றைய தினம் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி&nbsp; பதிவு ஒன்று, மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1311ae-08e6-4ae5-b5b5-89dd9c00b9d0/26-6a7446cc9d32c.webp' /></p><p>இச்சம்பவம் ஒரு ‘தொழில்நுட்பக் கோளாறு’ (Technical glitch) காரணமாகவே ஏற்பட்டது என்றும், தவறுதலாகவே இப்பதிவு நீக்கப்பட்டதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.</p><p>
மெட்டா உயர் அதிகாரி ஜோயல் கப்லான், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்தித்து 45 நிமிடங்கள் கலந்துரையாடியதுடன், இத்தவறுக்காக முறைப்படி மன்னிப்பும் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>எனினும் மெட்டா அளித்த இந்த விளக்கத்தைப் போதியதாக இல்லை (inadequate) என இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிராகரித்துள்ளது.</p><p></p><h2>3 நாட்களுக்குள் மன்னிப்பு</h2><p>இந்நிலையில் பிரதமரின் காணொளியை நீக்கியமை ஒரு இடைத்தரகர் தளத்தின் செயல் அல்ல, அது ஒரு பதிப்பகத்தின் (Publisher) செயல் எனக் குறிப்பிட்ட இந்திய நாடாளுமன்ற&nbsp; தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே, மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100c779d-dc91-4246-b5d0-8b947c0bdd2b/26-6a7446cbe29bc.webp' /></p><p>ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா கண்டிராத மிகப்பெரிய இளைஞர் தலைமையிலான போராட்ட அலையை மோடி சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் காணொளிகள் பரவின. </p><p>தேசியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததன் காரணமாக அவரது கல்வி அமைச்சர் பதவி விலகல் செய்ததால், அந்தப் போராட்டங்கள் வெடித்தன.
</p><p>பிரதமர் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து மெட்டாவுக்கும் மோடி அரசுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வரும் பதட்டங்களின் ஒரு பகுதியாக இந்தச் சம்பவங்கள் அமைந்துள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T08:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை (2006): 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20-years-on-no-justice-for-muttur-acf-17-1786003399"></link>
            <id>https://ibctamil.com/article/20-years-on-no-justice-for-muttur-acf-17-1786003399</id>
            <summary type="text">மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
</p><p>
இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை.
</p><p>
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று, திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில் பிரெஞ்சு மனிதாபிமான அமைப்பான Action Contre la Faim (ACF) / Action Against Hunger-இல் பணியாற்றிய 17 மனிதாபிமானப் பணியாளர்கள் தங்களது அலுவலக வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
</p><p>
2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி மற்றும் உள்நாட்டு ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த அவர்கள், ஆயுதம் ஏந்திய போராளிகள் அல்லர் மனிதாபிமானச் சேவையில் ஈடுபட்ட பொதுமக்கள்.
</p><p>
உயிரிழந்தவர்களில் 16 பேர் தமிழர்களும், ஒருவர் முஸ்லிமும் ஆவர்.
</p><p>
நான்கு பெண்களும் இதில் அடங்குவர். </p><p>இந்தப் படுகொலை உலகளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியதுடன், இலங்கையில் தண்டனையின்மையின் முக்கிய அடையாள வழக்காகவும் மாறியது.
</p><p>
2006 ஜூலை மாதத்தில் மாவிலாறு நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கை அரசுப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்தது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கடுமையான மோதலுக்குள்ளான பகுதியாக மாறியது.
</p><p>
இந்த ஆபத்தான சூழலிலும், ACF அமைப்பின் பணியாளர்கள் தங்கள் பணியைக் கைவிடாமல், சுனாமி மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.
</p><p>
அவர்களின் பணி மனிதாபிமான சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.</p><h5><b><u>2006 ஆகஸ்ட் 4 – என்ன நடந்தது ?</u></b></h5><p>&nbsp;2006 ஆகஸ்ட் 4 அன்று மூதூரிலுள்ள ACF அலுவலகத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அலுவலக வளாகத்தில் 15 பணியாளர்களின் உடல்கள் முகங்குப்புறக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. </p><p>மேலும் இரு பணியாளர்களின் உடல்கள் அருகிலிருந்த வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகஸ்ட் 8 அன்று உடல்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.</p><p>பெரும்பாலானோர் தலையிலும் கழுத்திலும் மிக அருகிலிருந்து சுடப்பட்டிருந்தமை பதிவாகியது.</p><p><u><b>உயிரிழந்த 17 மனிதாபிமானப் பணியாளர்கள்</b></u></p><ol><li>மு. நர்மதன் (23) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்</li><li>ரா. அருள்ராஜா (24) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்</li><li>சு. கோணேஸ்வரன் (24) – சாரதி</li><li>மு. ரிஷிகேசன் (24) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்
</li><li>ரா. சிவபிரகாசம் (25) – சுகாதார மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்</li><li>க. கவிதா (27) – சுகாதார மேம்பாட்டு பணியாளர்</li><li>த. பிரதீபன் (27) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்</li><li>அ. ஜெசீலன் (27) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்</li><li>க. கோவர்த்தனி (27) – சுகாதார மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்</li><li>வி. கோகிலவதனி (29) – சுகாதார மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்</li><li>யா. கோடீஸ்வரன் (30) – உணவுப் பாதுகாப்பு தொழில்நுட்ப நிபுணர்</li><li>அ.லெ.மு. ஜவ்பர் (31) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்
</li><li>சு.பி. ஆனந்தராஜா (32) – நிகழ்ச்சித் திட்ட மேலாளர்</li><li>இ. முரளிதரன் (33) – சாரதி</li><li>க. ஸ்ரீதரன் (36) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்</li><li>மு. கேதீஸ்வரன் (36) – நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்</li><li>&nbsp;சு. கணேஷ் (54) – சாரதி</li></ol><p>உயிரிழந்தவர்களில் யு. கோடீஸ்வரன், 2006 ஜனவரியில் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான யு. ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>மேலும், ஒரு தந்தையும் அவரது மகளும் இந்தப் படுகொலையில் உயிரிழந்தனர். படுகொலைக்குப் பின்னர் நீதவான் விசாரணை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணை மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட பல உள்நாட்டு விசாரணைகள் நடைபெற்றன.</p><p>ஆனால் எந்தவொரு விசாரணையும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவில்லை. Sri Lanka Monitoring Mission (SLMM), University Teachers for Human Rights (UTHR) மற்றும் International Commission of Jurists (ICJ) உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகள், விசாரணைகளில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக சுட்டிக்காட்டின.</p><p>ஆதாரங்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், விசாரணையின் சுயாதீனத்தன்மை, சாட்சிகளின் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
ICJ நியமித்த சுயாதீன பார்வையாளர் Michael Birnbaum QC, விசாரணை சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிட்டார். பின்னர் IIGEP அமைப்பும் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கவலை தெரிவித்து தனது பணியிலிருந்து விலகியது.</p><p>

2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ACF அறிக்கை, இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொணரவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியது.</p><p> ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையராக இருந்த நவி பிள்ளையும், இந்த வழக்கில் போதுமான முன்னேற்றம் இல்லை என்று தனது அறிக்கைகளில் குறிப்பிட்டார். LLRC அறிக்கையும் மேலதிக விசாரணை நடத்த பரிந்துரைத்தது.</p><p>Amnesty International, Human Rights Watch மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்த வழக்கில் நீதியை வலியுறுத்தி வந்துள்ளன. சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி, மனிதாபிமானப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொதுமக்களாகக் கருதப்படுகிறார்கள்.</p><p>அவர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவது சம்பவத்தின் உண்மை நிலை மற்றும் சட்டரீதியான மதிப்பீட்டைப் பொறுத்து, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறலாகவும், போர்க்குற்றமாக விசாரிக்கப்படக்கூடிய செயலாகவும் அமையலாம்.
</p><p>
2026 ஆகஸ்ட் 4 இன்றோடு இந்தப் படுகொலையின் இருபதாவது ஆண்டு நிறைவடைகிறது. இவ்வளவு காலம் கடந்தும் எந்த ஒருவரும் குற்றவாளியாகத் தண்டிக்கப்படவில்லை. </p><p>இதனால் மூதூர் ACF படுகொலை, இலங்கையில் தண்டனையின்மையின் முக்கிய எடுத்துக்காட்டாக மனித உரிமை அமைப்புகளால் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது.
</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று வரை உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக காத்திருக்கின்றனர். இந்த வழக்கு, மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.</p><p>

மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை, 17 அப்பாவி உயிர்களின் இழப்பாக மட்டுமல்ல மனிதாபிமான சேவையின் மீதான தாக்குதலாகவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு எதிரான ஒரு கடுமையான சவாலாகவும் உலக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
</p><p>
இந்த வழக்கில் உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்படுவதும், சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் நடைபெறுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதும் நல்லிணக்கத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் இன்றியமையாதவை.
</p><p>
மூதூரில் உயிர்நீத்த 17 மனிதாபிமானப் பணியாளர்களின் நினைவு என்றும் நிலைத்திருக்கட்டும். </p><p>அவர்களின் அர்ப்பணிப்பு மனிதநேயத்தின் அடையாளமாகவும், அவர்களுக்கான நீதி உலக மனசாட்சியின் தொடர்ந்த கோரிக்கையாகவும் என்றும் நினைவில் நிற்கும்.</p><p>
</p><p>
</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களிடம் பிரமாண்ட ஆயுதங்கள் உள்ளன..! ஊடகங்களுக்குப் பதிலடி கொடுத்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-claims-us-has-massive-arms-stockpile-1785997580"></link>
            <id>https://ibctamil.com/article/trump-claims-us-has-massive-arms-stockpile-1785997580</id>
            <summary type="text">அமெரிக்காவிடம் பிரமாண்ட அளவிலான போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிடம் பிரமாண்ட அளவிலான போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் (Pentagon) ஆயுதக் கையிருப்பு ஆபத்தான அளவில் குறைந்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவிடம் குறிப்பாகச் சில குறிப்பிட்ட வகையான போர்க்கருவிகள்' பாரிய அளவில் கையிருப்பில் உள்ளன.</p><p> </p><p></p><h2>பெருமளவிலான ஆயுதங்கள்</h2><p>மேலும், தேவைக்கு ஏற்ப பெருமளவிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.</p><p>

நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான தொழிற்சாலைகளைக் கட்டி வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00a0f04d-e800-40a3-9d34-fbb0b3c80b74/26-6a743ce680780.webp' /></p><p>
எனினும் எந்த வகையான ஆயுதங்களைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் தெளிவாக வரையறுக்கவில்லை.
</p><p>
அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, அமெரிக்க இராணுவத்தின் முதன்மையான THAAD (Terminal High Altitude Area Defense) ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளில் (Interceptors) கிட்டத்தட்ட 80 வீதம் வரை செலவிடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், பென்டகனின் மொத்த ஆயுதக் கையிருப்பு ஆபத்தான நிலைக்குக் கீழ் குறைந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகள் எச்சரித்துள்ளதாகப் பல மூலாதாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T07:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/footballer-dies-after-lightning-strike-in-thailand-1786001086"></link>
            <id>https://ibctamil.com/article/footballer-dies-after-lightning-strike-in-thailand-1786001086</id>
            <summary type="text">மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.தென...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>24 வயதான சோஃப்வான் அவா என்ற வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>தாய்லாந்தில் பெரும் சோகம்</h2><p>சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50facede-84bb-4a54-9eef-7ba880c79541/26-6a743a2f5dcdb.webp' /></p><p>



மின்னல் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் மற்றும் அவசர வைத்திய குழுவினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>


கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமான் இறுதிக்கட்ட ஒப்பந்தம்! தலைகீழான மத்தியகிழக்கின் முக்கிய பங்கு குறியீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-says-deal-oman-on-strait-of-hormuz-reopen-1785985326"></link>
            <id>https://ibctamil.com/article/iran-says-deal-oman-on-strait-of-hormuz-reopen-1785985326</id>
            <summary type="text">ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தைகள், சவுதி தாக்குதல்கள் ஆகியவற்றால் முக்கிய வளைகுடா பங்குச் சந்தைகள் தேக்கமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தைகள், சவுதி தாக்குதல்கள் ஆகியவற்றால் முக்கிய வளைகுடா பங்குச் சந்தைகள் தேக்கமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.</p><p>அமெரிக்கா - ஈரான் பதட்டங்களைத் தணிப்பதற்காக முன்மொழியப்பட்ட ஈரான்-ஓமான் கட்டமைப்புடன் இந்த நடவடிக்கைக்கு மத்தியில் இந்த நிலை உருவாகியுள்ளதாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இந்த நகர்வு இது வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீது தெஹ்ரானுக்குக் கட்டுப்பாட்டை வழங்கும் ஒரு முக்கிய உலகளாவிய எரிசக்தி வழித்தடம் தொடர்பான ஒரு பெரிய சலுகையாகும் என ஈரான் தரப்புக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இந்த ஒப்பந்தத்தின்படி, சரக்கு கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்து, ஓமன் நாட்டு கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக வெளியேறும் என்றும், இதற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் கடல்சார் சூழலைப் பேணுவதற்கும் சேவைக் கட்டணம் அறவிட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c5c6ccd-b3de-4730-93d2-15546e222c0b/26-6a743c3891f11.webp' /></p><p>வளைகுடா நாடுகளின் முக்கிய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை கலவையான போக்கைக் கண்டன. குறிப்பாக, துபாய், அபுதாபி மற்றும் கத்தார் பங்குச் சந்தைகள் சரிவை பதிவு செய்தன.</p><p>ட்ரம்ப், முக்கிய ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று தெரிவித்திருந்தாலும், அந்த ஜலசந்தியின் கட்டுப்பாட்டை ஈரானிடம் ஒப்படைக்கும் சாத்தியத்தை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். </p><p>இதற்கிடையில், அமெரிக்கா புதிய தாக்குதல்களை மேற்கொண்டால், பிராந்தியத்தின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம் என்று தெஹ்ரான் வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி அமைப்பு, சவூதி அரேபியாவின் யான்பு கடற்கரைக்கு அருகிலும், ஏடன் வளைகுடாவிலும் சென்ற இரண்டு சவூதி எண்ணெய் கப்பல்களை ஏவுகணைகளால் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சூழ்நிலையில், துபாயின் முக்கிய பங்குக் குறியீடு 0.7 சதவீதம் சரிந்தது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஈமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் பங்கு 2 சதவீதம் வீழ்ச்சியடைந்தது இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
</p><p>
அபுதாபி பங்குச் சந்தைக் குறியீடும் 0.1 சதவீதம் குறைந்தது. கத்தார் பங்குச் சந்தையில், பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனமான இண்டஸ்ட்ரீஸ் கத்தாரின் பங்கு 0.7 சதவீதம் சரிந்ததையடுத்து, அந்த நாட்டின் முக்கிய குறியீடு 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
</p><p>
இதற்கிடையில், சவூதி அரேபியாவின் முக்கிய பங்குக் குறியீடு 0.1 சதவீதம் உயர்வைப் பதிவு செய்தது. </p><p>நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான சவூதி நேஷனல் வங்கியின் பங்கு 1.2 சதவீதம் உயர்ந்தது இந்த ஏற்றத்திற்கு ஆதரவாக அமைந்தது.</p><p>

பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதால், வளைகுடா பங்குச் சந்தைகளில் அடுத்தடுத்த நாட்களிலும் ஏற்றத் தாழ்வுகள் நீடிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T07:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785993685"></link>
            <id>https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785993685</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>அத்தோடு கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

இயற்கை பேரிடர் முன் எச்சரிக்கை மையத்தால் இன்று (06.08.2026) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07.08.2026) காலை 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p>வானிலை ஆய்வு மையத்தின்படி மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d51608e-6e9f-4855-9aa0-c895ecc63313/26-6a74367939de8.webp' /></p><p>இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை வலுப்பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

கடலில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன்பு, எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடற்படைத் தரப்பினரை வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாழிறங்கும் அபாயத்தில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hatton-colombo-road-restricted-after-heavy-rains-1785999238"></link>
            <id>https://ibctamil.com/article/hatton-colombo-road-restricted-after-heavy-rains-1785999238</id>
            <summary type="text">கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வாகனச் சாரதிகளுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த விடயத்தை நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வீதி தாழிறங்கும் அபாயம்</h2><p>வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add73f4b-4e88-40db-8d86-e48d5c2fc82c/26-6a743374d9478.webp' /></p><p>

இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு நிறைவேற்றுப் பொறியியலாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>சீரற்ற வானிலை&nbsp;</h2><p>இதேவேளை, தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493e1acb-ce3a-4add-a42d-c533bb628375/26-6a74337596380.webp' /></p><p> </p><p>

மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். </p><p>

தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-udaya-dilith-others-named-in-contempt-case-1785993942"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-udaya-dilith-others-named-in-contempt-case-1785993942</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பதிரண ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இதனடிப்படையில் குறித்த ஆறு பேருக்கும் எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (05.08.2026) உத்தரவிட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டு முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, மேற்படி நபர்கள் பகிரங்கமாக வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</h2><p>நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர்கள் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a4746b-7dd4-400e-857a-6ca00af68a47/26-6a7426575ed20.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்த உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நே்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அறிக்கையிட்டது.</p><p>சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம், மேற்படி நபர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், முதற்பார்வையில் நீதித்துறை நடைமுறையை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தது.&nbsp;</p><p>அதன்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785995726"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785995726</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (06-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (06-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,353,918 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 382,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cae7546-eb82-42e5-9f77-2bcfc84ed56c/26-6a7424c886d29.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 350,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 41,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 334,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கதுரை சிலை விவகாரம் - ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statues-for-kuttimani-thangathurai-case-issus-1785995445"></link>
            <id>https://ibctamil.com/article/statues-for-kuttimani-thangathurai-case-issus-1785995445</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை
நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை
நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சிறையில் படுகொலை</h2><p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8052baa3-9cb6-4b13-95ec-2523664efefc/26-6a742e3c9ea16.webp' /></p><p>எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் நேற்று பிற்பகல்
வல்வெட்டித்துறை police ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு
விசாரணைக்காக இன்று அழைப்பதற்க்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-2026-1785982223"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-2026-1785982223</id>
            <summary type="text">கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது.</p><p> ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையும் உலகிற்குப் பறைசாற்றும் நோக்குடன் "	றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" இயக்கச்சி 	றீ(ச்)ஷா வளாகத்தில் லங்காசிறி , IBC தமிழ் , Quick Food ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கோலாகலமாக அரங்கேறுகிறது.</p><p>இன்று முதல் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு 2026 ஆகஸ்ட்&nbsp; 8, 9, 10 மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கடந்த கால நினைவுகளையும், நம் மூதாதையரின் "உணவே மருந்து என்ற தத்துவத்தையும் புதுப்பிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3df4d1-6488-4610-86e7-dd597c8ccd11/26-6a73ed1145156.webp' /></p><p>லண்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா என உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள், தங்கள் மண்ணின் சுவையைத் தேடி ஒன்றிணையும் ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா இது கடந்த ஆண்டு காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதனை விடவும் சிறப்பான ஏற்பாடுகளை றீ(ச்)ஷா வடிவமைத்துள்ளது.</p><p>உள்நாட்டு சமையல் ஜாம்பவான்களுடன், சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து சமையல் கலைகளில் புதிய உத்திகளைப் புகுத்தவுள்ளனர்.</p><p>ஒடியல் கூழ், காரசாரமான நண்டுப் பிரட்டல், சுடச்சுட பிட்டு-சொதி, மற்றும் பாரம்பரிய பனங்கிழங்கு பணியாரம் என அள்ள அள்ளக் குறையாத சுவை வகைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.</p><p>உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் உங்கள் கண்முன்னே சமைக்கும் நேரடி செய்முறை விளக்கங்கள்.</p><p>எமது வாழ்வாதாரமான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான சிற்றுண்டிகளுக்கான பிரத்தியேக பகுதி.</p><p>அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் சிற்றுண்டிப் போட்டிகள்.</p><p>சுவையோடு சேர்ந்து விழாவை இரசிக்க வைக்கும் எமது மண்ணின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் என்பன அரங்கேற காத்திருக்கின்றன.</p><p>இந்த மாபெரும் சுவைப்பாலத்தில் இணைந்து கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் இன்றே வருகை தாருங்கள்</p><p><b> தொடர்புகளுக்கு: 077 777 2353 | 077 777 2354</b></p>]]></content>
            <updated>2026-08-06T06:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக அனுமதி: மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/registrations-for-uni-admissions-to-begin-1785993607"></link>
            <id>https://ibctamil.com/article/registrations-for-uni-admissions-to-begin-1785993607</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.மாணவர்களைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><h2>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு&nbsp;</h2><p>

இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70e1f381-41b7-476b-b16f-d401d41fe180/26-6a741aba50550.webp' /></p><p>

மேலதிக விபரங்களுக்கு https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.</p><p>இதேவேளை கடந்த வாரம் 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
</p><p>
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:33:04+00:00</updated>
        </entry>
    </feed>
