<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-18T10:51:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-to-issue-the-first-digital-identity-card-1787048599"></link>
            <id>https://ibctamil.com/article/steps-to-issue-the-first-digital-identity-card-1787048599</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
 

டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள சில மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>புதிய டிஜிட்டல் முறைமை</h2><p>
</p><p>
 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

"டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த வருடத்திற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடும் கட்டத்தை எட்டுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef4a281-c9f2-43b3-a3c8-363bf67bfadc/26-6a84374178e98.webp' /></p><p> </p><p>அதேபோன்று, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். </p><p>அங்கிருந்து சுமார் 2 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் 17 மில்லியன் மக்களையும் பழைய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் முறைமைக்குக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்." என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-couple-honeymoon-killed-helicopter-crash-1787047785"></link>
            <id>https://ibctamil.com/article/british-couple-honeymoon-killed-helicopter-crash-1787047785</id>
            <summary type="text">&amp;nbsp;கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர்கள் அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தத் தம்பதியினர் தேனிலவுக்கு சென்றிருந்ததாக கதிமெரினி செய்தித்தாள் கூறியுள்ளது.</p><h2>தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்து</h2><p>அந்தத் தனியார் உலங்கு வானூர்தி, தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அந்தத் தம்பதியினரும், கிரேக்க நாட்டவரான அவர்களது விமானியும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffeb508d-3e66-4489-8ceb-f04e8b2e4485/26-6a84330cb1faf.webp' /></p><p>
</p><p>
ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து அந்தப் பிரபலமான விடுமுறை தீவுக்கு அந்தத் தம்பதியினர் உலங்கு வானூர்தியில் சென்றதாகக் கூறப்படுகிறது என கதிமெரினி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை</h2><p>விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98456c1-0196-4461-b89b-604345aada87/26-6a84330d64a9c.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-housing-allowance-payment-jaffna-1787046115"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-housing-allowance-payment-jaffna-1787046115</id>
            <summary type="text">வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி நிதியை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - அராலி மத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று (18) சங்கானை பல நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி நிதியை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - அராலி மத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இன்று (18) சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு
காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்&nbsp;</h2><p>குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று
கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த
போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e06a32-474a-4aad-be6b-048f24a14187/26-6a842fde18c04.webp' /></p><p>
</p><p>இந்த போராட்டத்தின் போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோசமிட்டவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>

அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித்
திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.</p><p></p><h2>கையளிக்கப்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p> </p><p>குறித்த மனுக்கள் பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/351d586d-83e5-4597-a8b6-430e29c5eb42/26-6a842fdf1dc29.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா
இலங்கேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-new-anti-terrorism-bill-1787047111"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-new-anti-terrorism-bill-1787047111</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.</p><p>

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்ட வரைவு, 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பூர்வாங்க வரைவு</h2><p>

தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஒரு பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக, தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று முன்னதாக நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5186f7-e8be-4d74-9619-341f7ae204cd/26-6a84305be1568.webp' /></p><p>

அந்த வரைவின் அடிப்படையில், புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கை ஒப்புதலை அமைச்சரவை தனது ஆகஸ்ட் 10, 2026 கூட்டத்தில் வழங்கியது.
</p><p>
அதனைத் தொடர்ந்து சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், அதனை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என அமைச்சர் ஜெயதிதசா தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T10:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கான 5000 ரூபாய் உதவித்தொகை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-5-000-monthly-allowance-students-1787045791"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-5-000-monthly-allowance-students-1787045791</id>
            <summary type="text">குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான வரவு&nbsp; செலவுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்த உதவித்தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
</p><p>இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தகுதியான மாணவர்களை அடையாளம் காண்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.</p><p></p><h2>மாதம் ரூ. 5,000 உதவித்தொகை</h2><p>அதன் அடிப்படையில் 5,530 மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b802bbde-f003-4407-973e-be3038cad330/26-6a842ea815d72.webp' /></p><p>
இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திரமாக ரூ.5,000 வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:08:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய நில நடுக்கத்தை அடுத்து இந்தோனேஷியாவில் தொடரும் நில அதிர்வுகள் : பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-records-over-2100-aftershocks-1787046766"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-records-over-2100-aftershocks-1787046766</id>
            <summary type="text">கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தொடர்ச்சியான தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தொடர்ச்சியான தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 2,119 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்த அதிர்வுகள் மேலும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குத் தொடரக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை எச்சரித்துள்ளதாக ஜகார்த்தா குளோப் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>70 அதிர்வுகளை உணர்ந்த மக்கள்</h2><p>இந்தப் பின் அதிர்வுகள் 1.3 முதல் 6.2 ரிக்டர் அளவு வரை இருந்தன, அவற்றில் 24 அதிர்வுகள் 5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகின. மேலும், அவற்றில் 70 அதிர்வுகளைப் அப்பகுதி மக்கள் உணர்ந்ததாக அந்த முகமையின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பணிப்பாளர் விஜயந்தோ கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724010b6-cf74-4f7b-939c-3df46cfeb953/26-6a842e00aa249.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமை, கிழக்கு நுசா தெங்காராவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குதான் பிரபலமான சுற்றுலா மையமான லபுவான் பாஜோ அமைந்துள்ளது. இதனால் பரவலான சேதம் ஏற்பட்டது.</p><p></p><h2>68 பேர் உயிரிழந்தது உறுதி</h2><p>அரசு நடத்தும் அந்தரா செய்தி நிறுவனத்தின்படி, இதுவரை 68 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fbff7c0-8993-4d2c-abe8-a6454235054c/26-6a842e0003b39.webp' /></p><p>

இதற்கிடையில், பாதுகாப்பு ஆய்வுகளுக்காக, மேற்கு மங்காராயில் உள்ள ரங்கோ குகை, மங்காராயில் உள்ள வே ரேபோ பாரம்பரிய கிராமம் மற்றும் எண்டேயில் உள்ள கெலிமுட்டு தேசியப் பூங்கா உள்ளிட்ட புளோரஸ் தீவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.</p><p>

12,000-க்கும் மேற்பட்ட மக்கள் "நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளுக்கு அஞ்சி", வளாகங்களிலும் கிராமங்களிலும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை திங்களன்று தெரிவித்தது.</p><h2>ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதம்</h2><p>

குறைந்தது 914 வீடுகள் கடுமையாகவும், 126 வீடுகள் மிதமாகவும், 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக கூட்டுக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மேலும், 93 கல்வி நிறுவனங்கள், 36 சுகாதார நிலையங்கள் மற்றும் 38 அரசு அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8f77d8-bfc0-4c91-b9a6-f9869f029234/26-6a842dff52bfd.webp' /></p><p>

இதற்கிடையில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள பத்து தீவுகள் பகுதியில் செவ்வாயன்று 5.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக யூரோ-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.6 ரிக்டர் அளவாகப் பதிவு செய்திருந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:03:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி மன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-education-forum-in-sri-lanka-1787046004"></link>
            <id>https://ibctamil.com/article/new-education-forum-in-sri-lanka-1787046004</id>
            <summary type="text">இலங்கையில் கல்வி மன்றம் ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கல்வி மன்றம் ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக் கல்வியில் உள்ள அனைத்து தொழில்முறைப் பிரிவினருக்கும் தரப்படுத்துதல், பதிவு செய்தல், உரிமம் வழங்குதல் மற்றும் தர உறுதிப்பாடு ஆகியவற்றுக்கான ஓர் நிறுவனப் பொறிமுறையாக இந்த மன்றம் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்தக் கல்வி மன்றத்தை நிறுவுவதன் அவசியத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, சிரேஷ்டப் பேராசிரியர் ஜி.பி. தயரத்ன தலைமையிலான ஒரு குழு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் செயலாளரால் நியமிக்கப்பட்டது.</p><p></p><h2>நாடாளுமன்ற&nbsp;ஆலோசனைக் குழு</h2><p>
</p><p>
2025 ஒக்டோபர் 3 திகதியிட்ட அந்தக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட துணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22ae4406-ef4e-46b3-8e50-9c62b078853d/26-6a842b4174edf.webp' /></p><p>மேலும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்த பிறகு தயாரிக்கப்பட்ட மறுஆய்வு அறிக்கையும் அந்தக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>அந்த முன்மொழிவில், முன்மொழியப்பட்ட கல்வி மன்றத்தின் வரம்பிற்குள் வரும் விஷயங்கள் தொடர்பாக ஏற்கனவே சட்ட அதிகாரங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுடன் உரிய ஒருங்கிணைப்புடன், கல்வி மன்றத்தை நிறுவுவதற்கான ஒரு மசோதாவைத் தயாரிக்குமாறு சட்டவரைவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T09:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790</id>
            <summary type="text">புதிய இணைப்புஅமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இன்று (18) இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c586c888-859b-4989-a442-115c3c6c1775/26-6a8427468aeca.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்!&nbsp;</h4><p>அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p> நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தல்&nbsp;</h2><p>

அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c290fe7-2c83-4765-9817-42b8dd76fd52/26-6a8409eaf2ab9.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>இதேவேளை&nbsp;சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.</p><p></p><h2>சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்</h2><p>அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98b38cc-1939-46aa-8070-ad07263b60c4/26-6a8409ebdd26d.webp' /></p><p> </p><p>

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.&nbsp;</p><p>நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Sjen6oDZeZY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-18T09:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[YouTube பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/your-youtube-views-could-soon-look-higher-1787042231"></link>
            <id>https://ibctamil.com/article/your-youtube-views-could-soon-look-higher-1787042231</id>
            <summary type="text">YouTube
, தளத்தில் பதிவேற்றப்படும் நீண்ட நேர காணொளிகள், short காணொளி மற்றும் நேரலை ஒளிபரப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொதுப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>YouTube
, தளத்தில் பதிவேற்றப்படும் நீண்ட நேர காணொளிகள், short காணொளி மற்றும் நேரலை ஒளிபரப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையை ஒரே மாதிரியாக மாற்றியுள்ளது.</p><p>இந்த புதிய முறையின் கீழ், காணொளி எந்த வடிவத்தில் இருந்தாலும், அது இயக்கப்படும் ஒவ்வொரு முறையும் அல்லது மீண்டும் இயக்கப்படும் போதும் பொதுப் பார்வை எண்ணிக்கையில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
கடந்த ஆண்டு short காணொளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், இது தளத்தில் படைப்பாளிகளின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் YouTube
நிறுவனம் கூறியுள்ளது.</p><p></p><h2>YouTube&nbsp;</h2><p>
</p><p>இதன்படி புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்படுவதால், படைப்பாளிகள் எதிர்காலத்தில் பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f04484dc-0055-4110-bda5-7d0607b5cbc7/26-6a842398b659f.webp' /></p><p> </p><p>புதுப்பிக்கப்பட்ட இந்தப் புள்ளிவிவரங்கள், YouTube Studio Analytics மற்றும் பொதுப் பார்வைகள் காட்டப்படும் பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கும்.
</p><p>
இந்த மாற்றத்தால் படைப்பாளர்களின் வருமானம் அல்லது YouTube Partner திட்டத்திற்கான தகுதி நிபந்தனைகள் பாதிக்கப்படாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
குறும்படங்கள், நீண்ட வடிவ காணொளிகள் மற்றும் நேரலை ஒளிபரப்புகள் என அனைத்திற்கும் ஒரே பார்வைக் கணக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது, படைப்பாளிகள் தங்கள் சென்றடைதலை அளவிடுவதற்கும், விளம்பரதாரர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குத் தங்கள் பார்வையாளர்களின் வெளிப்பாட்டைக் காண்பிப்பதற்கும் மிகவும் சீரான ஒரு வழியை வழங்கும் என்று&nbsp;YouTube கூறியுள்ளது.
</p><p>
இந்த மாற்றம், பொதுப் பார்வைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது தொடர்பாக காட்டப்படும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மட்டும் படைப்பாளிகள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள் என்று அர்த்தமல்ல எனவும்&nbsp;YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interest-free-student-loan-scheme-by-moe-1787043377"></link>
            <id>https://ibctamil.com/article/interest-free-student-loan-scheme-by-moe-1787043377</id>
            <summary type="text">வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

அதற்கமைய, உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த கடன் திட்டத்திற்கு சில அடிப்படைத் தகுதிகளை கெண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்</h2><p>அதன்படி, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2400ec50-84ca-40d5-854c-af5133438fc3/26-6a84246adb664.webp' /></p><p>

 

க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருப்பதுடன் பொதுச் சாதாரண பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.</p><p>
 

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) 25 வயதிற்கு கூடாமல் இருக்க வேண்டும்.
</p><p>
 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகிலவிராஜ் கரியவசத்துக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803"></link>
            <id>https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(18.08.2026)&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>வெளிநாடு செல்ல தடை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a2de228-aa4f-4444-8472-d26df8b35759/26-6a84180dd097c.webp' /></p><p>மேலும், குறித்த இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p><b>தொடர்புடைய செய்திகள்...</b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T08:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[லலித் - குகன் விவகாரத்தில் புதிய சாட்சியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722"></link>
            <id>https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722</id>
            <summary type="text">இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>கடந்த கால ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் லலித் - குகன் கடத்தல் வழக்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியள்ளார்.</p><p>
 "இவை கடந்த காலத்தில் நடந்தவை, இதற்கும் எனக்கும் தொடர்பில்லை" என தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது எனவும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். </p><p>

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்த முன்னாள் போராளிகள் இன்றும் சந்தித்து வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்துக் கவலை வெளியிட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களின் நீதிக்கான காத்திருப்புக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு முறையில் தீர்க்கமான அரசியல் சித்தாந்தத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்நிலையில் ஐ.பி.சி தொலைக்காட்சியின் சக கரவியூகம் அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prYpfBion5U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-court-order-1787032337"></link>
            <id>https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-court-order-1787032337</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது காணொளி வழியே பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298923ee-663f-4f5f-a3b5-d54e1a96bc1f/26-6a83f923c60ca.webp' /></p><p>

அதில் அவர் 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த விசாரணைக்காக&nbsp;இன்று (18) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை&nbsp;</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427eb487-a1a4-43a7-bb7d-bc716895a77d/26-6a83edf50a2f0.webp' /></p><p>
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் குறித்த விசாரணைக்காக&nbsp; கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-go-to-prison-in-a-few-days-1787034722"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-go-to-prison-in-a-few-days-1787034722</id>
            <summary type="text">மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கூறிவருவதை அடிக்கடி நாம் கேட்கும் பார்க்கும் விடயமாக மாறியுள்ளது.</p><p>எனினும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவது யார்? என்ற கேள்வியை மொட்டுக்கட்சி தரப்பும் எதிர்கட்சிகளும் பறந்த அளவில் எழுப்பி வருகின்றன.</p><p>இன்றுவரை வழக்குகளை விசாரிப்பது நீதிமன்றம் என்றுதான் மக்களும் சமூகமும் நினைப்பதாகவும், ஆனால் நீதிவிவகாரத்தில் ஆளும்கட்சி தலையிடுவது குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் அந்த தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><h2>ராஜபக்சர்களின் ஊழல்</h2><p>அமைச்சர் ஒருவர் நபர் ஒருவரை சுட்டிக்காட்டி சிறைக்குச் செல்வார் என்று கூறுகிறார் என்றால், வழக்கை எழுதுவது அவர்தானா? என்று நாமல் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abeb8781-bb54-408a-874b-3614db3fc1bd/26-6a840c3842570.webp' /></p><p>ஒருபுறம் இந்த கேள்வி நியாயமானதுதான். ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் கருத்துக்களில் அரசாங்கம் தலையிடமுடியாது.</p><p>இருந்தும் ராஜபக்சர்களின் ஊழல் ஆட்சியை நீதித்துறை கூறிதான் இலங்கை மக்கள் அறியவேண்டும் என்ற அவசியம் இருக்காது. நாளுக்கு நாள் வெளிவரும் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள் எங்கெங்கோ சுற்றி இருதியில் வந்து முடிவதென்னவோ ராஜபக்சர்கள் என்ற புள்ளியில்தான்.</p><p>ஆக அரசாங்கம் நாமல் மிது முன்வைக்கும் சிறை கருத்துக்கள் நீதித்துறை மீதான தலையீடாக இல்லாவிட்டாலும், ஒரு எதிர்வுகூறலாக இருக்கலாம்.</p><p>அது ஒருபுறம் இருக்கநாமல் நடத்தும் உள்ளக் கலந்துரையாடல்களில், கோட்டாபய , பசில் மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில் மகிந்தவையும் விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என சிங்கள நாளிதல் ஒன்று செய்தி வெளியிட்டது.</p><p></p><h2>பை தக்சலாவ&nbsp;பிரசார நடவடிக்கை</h2><p>
சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சிலரைச் சந்தித்த சந்தர்ப்பத்திலும், கோட்டாபய மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9de9786b-9af7-409a-ac37-83266382d8b1/26-6a840c3915d37.webp' /></p><p>

நாமல்&nbsp; முன்னெடுத்து வரும் இந்தப் பிரசார நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ள அரசியல் ஆய்வாளர்கள், “பை தக்சலாவ” (Bai Thaksalawa) என்ற அணுகுமுறையைப் பின்பற்றும் நாமலிடமிருந்து இதைவிட வேறுபட்ட ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

கோட்டாபய&nbsp; தனது அரசியல் பிரசாரத்தின் அடிப்படையாக, 2016 பெப்ரவரி 04ஆம் திகதி “வியத்மக” (Viyathmaga) என்ற அமைப்பை உருவாக்கினார்.</p><p>வைத்தியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் அந்த அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் அல்லது நிறுவனர்களாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>
ஆனால், நாமல் தனது “பை தக்சலாவ” என்ற பிரசார நடவடிக்கையை மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்றவர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதன் மூலம் மேலும் அரசியலை தரக்குறைவான அல்லது கீழ்த்தரமான பிரசாரமாக மாற்றுவதே அவரது உத்தியாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ராஜபக்சர்கள் மீது நாளுக்கு நாள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அதற்கு தனி ஒரு ராஜபக்சராக இருந்து நாமல் வழங்கும் பதில்களும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.</p><p>கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், நாமல் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து மேலதிக விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு அறிவித்தது.</p><p>இந்தப் முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவால்&nbsp; விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் துறை, இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை முடித்து, விசாரணை கோப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தது.</p><p></p><h2>நீதித்துறை நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி சட்டமா அதிபரால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, ​​பான் ஆசியா(Pan Asia) மற்றும் நேஷன் டிரஸ்ட் வங்கிகளிடமிருந்து கணக்குப் பதிவேடுகளைப் பெற்று, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் தங்களுக்கு அறிவுறுத்தியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>இவ்வாறு ராஜபக்சர்கள் மீது முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு மத்தியில் நீதித்துறை நடவடிக்கைகளில் சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>எந்த மேடைகளிலும், நிகழ்வுகளிலும் குற்றமற்றவர்கள் நாங்கள் என கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் நீதித்துறையிடம் ஒரு நாள் பதில் வழங்கவேண்டிய கட்டயத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சன விஜேசேகர நிலக்கரி விசாரணை தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-kanchana-appears-commission-of-coal-1787035612"></link>
            <id>https://ibctamil.com/article/minister-kanchana-appears-commission-of-coal-1787035612</id>
            <summary type="text">முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று&amp;nbsp; (18.08.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று&nbsp; (18.08.2026) முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>முன்னாள் அமைச்சர் காஞ்சன</h2><p>

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbce46e9-0862-40d7-9d77-a209fa6cb5df/26-6a8408e50e65e.webp' /></p><p>இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>&nbsp;இன்றைய விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-alert-issued-for-several-sea-areas-1787036152"></link>
            <id>https://ibctamil.com/article/amber-alert-issued-for-several-sea-areas-1787036152</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலை நிலவுவதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிறத்திலான அவசர எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.</p><p>காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பட்டி வரையிலான மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>கடல் பகுதிகள் கொந்தளிப்பு</h2><p>
</p><p>மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான மற்றும் காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பட்டி வரையிலான கடல் பிராந்தியங்களில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57de87e5-0bbf-4a6a-a00d-9ef608b03195/26-6a8408f7efd9c.webp' /></p><p>நீர்கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajithas-brother-maheel-senaratne-arrested-ciaboc-1787034431"></link>
            <id>https://ibctamil.com/article/rajithas-brother-maheel-senaratne-arrested-ciaboc-1787034431</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹில் சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹில் சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைது செய்யப்பட்ட மஹில் சேனாரத்ன 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு&nbsp;</h2><p>இந்தநிலையில் நாடு பூராகவும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிறுவுவதிலும் பராமரிப்பதிலும் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83533704-b509-41ae-a1f1-2d88dc742112/26-6a8401d6e2db3.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து - கடற்படை அதிகாரியை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/search-continues-for-missing-navy-officer-1787032079"></link>
            <id>https://ibctamil.com/article/search-continues-for-missing-navy-officer-1787032079</id>
            <summary type="text">அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன கடற்படை அதிகாரியைக் தேடும் பணி&amp;nbsp; இன்று (18) நான்காவது நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போன கடற்படை அதிகாரியைக் தேடும் பணி&nbsp; இன்று (18) நான்காவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>


அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15 ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>



கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>விசேட நிபுணர் குழு</h2><p>


இதற்கிடையில், காணாமல் போன அதிகாரியைக் கண்டறிதல், கப்பலை மீட்பது மற்றும் சம்பவத்திற்கான துல்லியமான காரணங்களைத் தீர்மானித்தல் போன்றவற்றுக்காகக் கடற்படையினர் விமானப்படையின் உதவியுடன் விசேட வளங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0844d51f-2464-4c82-8d96-ca686d95f224/26-6a84003b8533e.webp' /></p><p>


ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தீவிர முயற்சிகளைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான கப்பலை வெற்றிகரமாக மீட்கப்பட்டது.</p><p>



மீட்கப்பட்ட பணியாளர்கள் வழங்கிய ஆரம்பக் கூற்றுக்களின்படி, அப்பகுதியில் மூழ்கியுள்ள கப்பல் சிதைவுப் பகுதியுடன் (submerged wreck) இக்கப்பல் மோதியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2>விசாரணை</h2><p> இதுவே தற்போது விசாரிக்கப்பட்டு வரும் சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும் எனக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e5ed20-8199-4dfd-b2d9-38633d627c49/26-6a84003c3a4a5.webp' /></p><p>மேலும், இச்சம்பவம் குறித்து ஆரம்ப விசாரணைகளை நடத்துவதற்காக விசேட நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>


மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrest-with-ice-narcotics-worth-8-million-1787031447"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrest-with-ice-narcotics-worth-8-million-1787031447</id>
            <summary type="text">அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் குறித்த போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் (16.08.2026) மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதற்கு தயாரான வேளையிலேயே கைது செய்யப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரிவிக்கபட்டுள்ளது.</p><p></p><h2>80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்</h2><p> </p><p>

சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த&nbsp; 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 204 கிராம் 660 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f29fcb3-d713-48b0-ba19-9dd9f4dcb675/26-6a83fe412adc3.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நேற்று (17.08.2026) பலபிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T06:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நகரில் நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்த சந்தேகநபர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-breaking-into-homes-in-jaffna-1787028400"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-breaking-into-homes-in-jaffna-1787028400</id>
            <summary type="text">யாழ் நகரின் - பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள்
இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் நகரின் - பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள்
இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.</p><p>
கடந்த 15ஆம் திகதி பெண்ணொருவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் செய்த
முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
</p><p>இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை காவல்துறையினர் கைது
செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>விசாரணைகளின்போது, முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டு
வளாகத்திற்குள் தான் நுழைந்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dce36629-0aa1-45d4-83fd-4c2c549c80af/26-6a83ed99e8497.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள வேறு வீடுகளின்
வளாகங்களுக்குள் நுழைந்துள்ளாரா என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணம் காவல்துறையினர்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p>இந்தநிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிக அவலட்சணமான நாய்க்கான பட்டத்தை ஜின்னி வென்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-world-s-ugliest-dog-1787028632"></link>
            <id>https://ibctamil.com/article/the-world-s-ugliest-dog-1787028632</id>
            <summary type="text">‘ஜின்னி லூ’ (Ginny Lou) எனப்படும் 6 வயதுடைய பக் (Pug) இன நாய், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில் வெற்றியீட்டி அரிய பட்டத்தைத் தனதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘ஜின்னி லூ’ (Ginny Lou) எனப்படும் 6 வயதுடைய பக் (Pug) இன நாய், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில் வெற்றியீட்டி அரிய பட்டத்தைத் தனதாக்கியுள்ளது.
</p><p>
வித்தியாசமான தோற்றம் கொண்டிருந்தாலும், அன்பான குணம் கொண்ட நாய்கள் ஒன்றுகூடிய இந்தப் போட்டி, இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
</p><p>
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா ரோசாவில் அமைந்துள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில், ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்தப் போட்டி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலகின் அவலட்சணமான நாய்</h2><p>
</p><p>
சோனோமா - மரின் விவசாயச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில், பல்வேறு தனித்துவமான தோற்றங்களைக் கொண்ட நாய்கள் கலந்து கொண்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63976215-d865-4e8d-a5e7-a773d24f5bca/26-6a83e7b293a9d.webp' /></p><p>
</p><p>
இவற்றில் 6 வயதுடைய ஜின்னி லூ தனது வித்தியாசமான தோற்றத்தின் மூலம் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து.</p><p>இதனால் 2026ஆம் ஆண்டின் ‘உலகின் அவலட்சணமான நாய்’ என்ற பட்டத்தை வென்றுள்ளது.</p><p>

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கவனத்தை ஈர்க்கும் இந்தப் போட்டி, நாய்களின் தோற்றத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், அவற்றின் தனித்துவம், வசீகரம் மற்றும் அன்பான குணநலன்களையும் கொண்டாடும் நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T05:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ கொலை சதியின் முக்கிய சந்தேகநபர் பலத்த பாதுகாப்புடன் நாட்டுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summitpura-chatu-brought-back-to-sri-lanka-today-1787017806"></link>
            <id>https://ibctamil.com/article/summitpura-chatu-brought-back-to-sri-lanka-today-1787017806</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;இன்டர்போல் பிடியானையின் கீழ் ஓமானில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் சு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>இன்டர்போல் பிடியானையின் கீழ் ஓமானில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் சுமித்புர சதுர், 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இன்று அதிகாலை (18) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கங்கனமகே திமுத்து சதுரங்க பெரேரா, என்றழைக்கப்படும் “சுமித்புர சதுர்”, குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்புக்களில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பிரிவுக்கு (CCD) அளித்துச்செல்லப்பட்டுள்ளார்.

 “மோதர சத்து” அல்லது “சுமித்புர சத்து” என்றும் அறியப்படும் திமுத்து சதுரங்க பெரேரா, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.</p><h5>கணேமுல்ல சஞ்சீவ கொலை</h5><p> 

கொழும்பு 15, மோதர , சுமித்புரவைச் சேர்ந்த 38 வயதான குறித்த சந்தேகநபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025 மார்ச் 22 அன்று ஓமானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeffe5e5-eff4-433a-9251-8ff89f28fc90/26-6a83e56ec0ab2.webp' /></p><p>
</p><p>
 இந்நிலையில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட அவர், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பல குற்றங்கள் தொடர்பாகத் தேடப்படும் ஒரு முக்கிய நபராகவும் கருதப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa61f1a5-2943-4be5-b5a6-2bf6a0ac3732/26-6a83e57054f14.webp' /></p><p>சமித்புர சது இன்று (18.08.2026) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.</p><p>மட்டக்குளி பகுதியை சேர்ந்தவரும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு உள்ளவருமான 28 வயதான நபர் சமீபத்தில் ஓமானில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:54:54+00:00</updated>
        </entry>
    </feed>
