<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-02T03:32:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917"></link>
            <id>https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917</id>
            <summary type="text">யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.</p><p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.</p><p>ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது செய்ய நடவடிக்கை</span></p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.&nbsp; தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f869bf7a-89e7-415b-ada0-bbf61c9c3617/26-6a978730db372.webp' /></p><p>அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p>அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.
</p><p>
எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T03:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-65-million-gold-stolen-travel-agency-robbery-1788315727"></link>
            <id>https://ibctamil.com/article/rs-65-million-gold-stolen-travel-agency-robbery-1788315727</id>
            <summary type="text">பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த சம்பவம்&nbsp;நேற்று (01) பிற்பகல் கொழும்பு தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e47a9f-d006-4519-b09b-d635dd010c96/26-6a97917924cea.webp' /></p><p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T03:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.</p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
உடனடியாக உறவினர்கள் குழந்தை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a796199e-e206-4f77-8d24-32ad8e2ffa47/26-6a9775fa04832.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>உறவினர்களிடமும் விசாரணை</h2><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30cbd17a-ae0c-49cd-b674-198dec802589/26-6a9778220a7cb.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று(01) மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T01:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thunderstorms-expected-northern-eastern-provinces-1788309482"></link>
            <id>https://ibctamil.com/article/thunderstorms-expected-northern-eastern-provinces-1788309482</id>
            <summary type="text">




வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் ஆனமடு, மொரகொல்லாகம, தம்புள்ளை, மன்னம்பிட்டி மற்றும் வாழைச்சேனை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb96d70f-e111-4847-82b6-3ad6c77b1514/26-6a9772939b131.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acb83e34-2848-4ce7-982e-e5ef9198c267/26-6a977292e611c.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-02T01:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-parties-launch-hunger-strike-against-govt-1788308158"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-parties-launch-hunger-strike-against-govt-1788308158</id>
            <summary type="text">எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று (01) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
</p><p>
அதன்போது, அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிறைவேற்றப்படாத வாக்குகள்</h2><p>
</p><p>
அந்தவகையில், அதனை அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed44d6a5-1b2d-4a95-a44f-1892a3ebfe41/26-6a976d786995e.webp' /></p><p>

அத்துடன், இப்போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>

அதன்போது, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த போராட்டமானது, ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>மாகாண சபை அதிகாரங்கள்</h2><p>
</p><p>
குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccfaa0a2-e875-42cf-8120-e2394e526844/26-6a976d793d00e.webp' /></p><p>
</p><p>
இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை 7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408"></link>
            <id>https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு எச்-4 விசா வழங்கப்பட்டு வருகிறது.</p><p>
ஆரம்பத்தில் எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலமே, நிரந்தரக் குடியுரிமைக்கு (Green Card) விண்ணப்பித்துக் காத்திருக்கும் எச்-1பி பணியாளர்களின் துணைவர்கள் வேலை அனுமதிப் பத்திரம் (EAD) பெற்றுப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>சட்ட நடைமுறைகள்</h2><p>
இச்சலுகையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்; குறிப்பாக எச்-1பி பணியாளர்களின் மனைவிகளே அதிகளவில் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9a4e5b-98f8-4867-890c-c2231a7cb16b/26-6a9742a13332c.webp' /></p><p>
தற்போது இந்த வேலை அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கான முதற்கட்ட சட்ட நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளதுடன், இது தொடர்பான பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>
ஏற்கனவே ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017-ஆம் ஆண்டு இவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டு, பின்னர் 2021-ல் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589</id>
            <summary type="text">ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.
</p><p>
ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி</h2><p>

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரில் நடந்த திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d220cc1-5412-4422-b7af-827a47a5e1b8/26-6a9765ff20b5e.webp' /></p><p> </p><p>

அந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக IRGC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

தற்போதைய மோதலின் போது ஈரான் இந்த இராணுவத் தளத்தை பலமுறை குறிவைத்துத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:01:06+00:00</updated>
        </entry>
    </feed>
