<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T15:19:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>
தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.
</p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dbb5db-c4df-4024-a092-dfa4013abbe3/26-6a88687298a9d.webp' /></p><p>
விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி திருவிழா வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178"></link>
            <id>https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.பனை மரம் ஒன்றும் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் சம்பவத்தில் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தேவையற்ற&nbsp;பயன்பாடு</h2><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126091cd-6d20-4eab-8919-79f75c92f206/26-6a8855c421567.webp' /></p><p>

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/member-who-came-to-manipay-assembly-with-fire-1787323066"></link>
            <id>https://ibctamil.com/article/member-who-came-to-manipay-assembly-with-fire-1787323066</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா
ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு
சட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா
ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.</p><p> இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு
சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன், ''கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற
மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை
எதிர்கொள்ளுகின்றனர்.</p><p></p><h2>தீர்க்கமான முடிவு இல்லை</h2><p>
</p><p>
நேற்றும்கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற
வகையில் செயற்படுகிறது.

இந்த பிரச்சினையானது எமது பிரதேச சபையிலும், பல திணைக்களங்களிலும்
பேசப்பட்டிருப்பதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொணரபட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f211d4fc-eb3c-4371-9928-737b2d21abf8/26-6a8862bd3cee3.webp' /></p><p> </p><p>ஆனால் இதுவரை
எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.

கல்லூண்டாயில் பொலுத்தீன், பம்பஸ் உள்ளிட்ட கழிவு பொருட்கள் எரிவதன் மூலம்
மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களை எதிர்கொள்கின்றனர். </p><p>இதனை வெளிப்படுத்தும்
முகமாக நான் இன்று பொலுத்தீன் உள்ளிட்ட பொருட்களை எரித்துக்கொண்டு சபைக்குள்
வந்தேன். </p><p>எமது மக்கள் தினம் தினம் படுகின்ற துயரத்தை அடையாள ரீதியாக
வெளிப்படுத்துகிறேன்.

குப்பைமேடு தொடர்பாக மானிப்பாய் தவிசாளர் க.ஜெசீதனின் செயற்பாடுகள் எனக்கு
திருப்தி அளிக்கவில்லை. </p><p>மாநகர சபையின் கண்மூடித்தனமான செயற்பாட்டுக்கு
தவிசாளர் துணை போகின்றார். ஏனெனில் இது சம்பந்தமாக நான் பல தடவைகள்
கோரிக்கைகள் முன்வைத்தும் அது சம்பந்தமான எந்த விதமான நகர்களையும் தவிசாளர்
முன்னெடுக்கவில்லை.
</p><p>
யாழ். மாநகர சபையிலும் மானிப்பாய் பிரதேச சபையிலும் ஆளுங்கட்சி இலங்கை தமிழரசு
கட்சி என்பதால் தவிசாளர் க.ஜெசீதன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு துணை
போகின்றார் போல் தெரிகிறது. </p><p>அவ்வாறு இல்லாமல் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட
வேண்டும். எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற வேளை காட்சிக்காகவோ மேலிடத்திற்காகவோ
அவர் துணை போகின்றது என்பது ஒரு கேவலமான விடயம்" என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக்கு சீனா மீண்டும் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-reiterates-call-for-us-iran-talks-1787322110"></link>
            <id>https://ibctamil.com/article/china-reiterates-call-for-us-iran-talks-1787322110</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா புதிய பொருளாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வரும் நிலையில் சீனா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
</p><p>சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு</h2><p>
</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c336bc28-83c5-45af-aeb8-25244e5439c4/26-6a885f0005895.webp' /></p><p>“சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி விதிக்கப்படும் ஒருதலைப்பட்ச தடைகளை சீனா எதிர்க்கின்றது.</p><p>இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதும் அழுத்தம் கொடுக்கும் உத்திகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">China opposes unilateral sanctions that lack basis in international law and UN Security Council mandate. Military force and pressure tactics will only lead to escalation that serves no one’s interests. We call on parties to act responsibly and solve disputes through dialogue and… <a href="https://t.co/6Z1QfRadsj">pic.twitter.com/6Z1QfRadsj</a></p>&mdash; CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) <a href="https://x.com/MFA_China/status/2090764849047626029?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு தரப்பினருக்கும் நன்மையை ஏற்படுத்தாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவிழா நிகழ்வில் கண் பாதிப்புக்குள்ளான பக்தர்கள்: தென் கயிலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/devotees-affected-by-festival-eye-disease-1787321152"></link>
            <id>https://ibctamil.com/article/devotees-affected-by-festival-eye-disease-1787321152</id>
            <summary type="text">யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது&amp;nbsp; இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது&nbsp; இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்
கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என
தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். </p><p>அதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதே போல கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல்
பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயிகளிடையே பெருமை விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p>[FAFAGWS
]</p><h2>சைவ பரிபாலன சபை</h2><p>சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை
கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது
வரவேற்கத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a6213e-dd9d-4055-8735-2b217fe41b0f/26-6a885b423deb5.webp' /></p><p>
</p><p>
ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய
திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல்
நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.</p><p>

இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள்
குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த
சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். </p><p>அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக
நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்ட்ட தரப்புக்களையும் கோருவதுடன்
அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு
கொள்கின்றோம்.</p><p>

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை
பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568</id>
            <summary type="text">இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் பணியாற்றவுள்ள அவர், மூத்த ஆடவர் அணியின் தேசிய வீரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளார்.</p><p>

முன்னதாக இலங்கைஆடவர் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் ஹஷான் திலகரத்ன பணியாற்றியுள்ளார்.</p><p></p><h2>புதிய நியமனம்&nbsp;</h2><p>
அத்துடன், பங்களாதேஷ் மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3a8bb26-a1ab-4889-a85e-ffca1c4f9775/26-6a8858fb23418.webp' /></p><p>

1989 முதல் 2003ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடிய ஹஷான் திலகரத்ன, 83 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, இரு வடிவங்களிலும் 8,200க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.</p><p>

அவரது புதிய நியமனம் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T13:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/time-to-end-the-war-with-america-1787317463"></link>
            <id>https://ibctamil.com/article/time-to-end-the-war-with-america-1787317463</id>
            <summary type="text">போரை இப்போது முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது. ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் என&amp;nbsp;&amp;nbsp;ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரை இப்போது முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது. ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் என&nbsp;&nbsp;ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p>ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் எனக் குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் ஈரானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>பல தசாப்தங்களாக எதிரிகளாக இருந்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில், இரு தரப்பினரும் போர் நிலைமையில் தேக்கநிலையை எதிர்கொண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில்&nbsp;பெசெஷ்கியன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.</p><p></p><h2>புரிந்துணர்வு உடன்பாடு&nbsp;தோல்வி</h2><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போருக்கு முடிவு காணும் நோக்கில் ஜூன் மாதம் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டியதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4edced-e878-4b31-93fa-a0bff666fafb/26-6a885057efbdd.webp' /></p><p>மேலும், ஜூன் மாதம் அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட போர் முடிவுக்கான புரிந்துணர்வு உடன்பாடு ஈரானின் தோல்வியை பிரதிபலிப்பதாகக் கூறப்படுவதை பெசெஷ்கியான் மீண்டும் நிராகரித்துள்ளார்.</p><p>இந்த உடன்பாட்டில் ஈரான் சரணடைந்ததைக் காட்டும் ஒரு விதியைக் கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியாது. </p><p>அனைத்து பொறுப்புகளும் மறுதரப்பினருக்கே விதிக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்த அவர்,&nbsp; ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும், தமக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T13:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684</id>
            <summary type="text">

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை காவல்துறையினர் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த மின் விளக்குகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34f6294-7e71-4c1c-a132-724473664568/26-6a88418b02d85.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-21T12:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-vehicle-owners-1787314476"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-vehicle-owners-1787314476</id>
            <summary type="text">நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக&amp;nbsp;காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக&nbsp;காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வாகன உரிமையாளர்களின் கவனக்குறைவும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதும் திருட்டுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>
பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகள்</span></p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்காலத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதுடன், உரிமையாளர்களின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06efc53f-d38b-439b-a694-0976e8e51ed0/26-6a8846aa329e5.webp' /></p><p> </p><p>மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் இயக்கத்தில் இருக்கும் போதே அவற்றை விட்டுச் செல்கின்றனர்.</p><p>மேலும், சாவியை திறப்பு துளையிலேயே கவனக்குறைவாக விட்டுவிடுவது மற்றும் தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை இருக்கைகளுக்கு அடியில் கவனமாக விட்டுச் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்களால் இழைக்கப்படுகிறது</p><p>எனவே, பொதுமக்கள் அனைவரும் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்பற்ற மற்றும் தனிமையான இடங்களைத் தவிர்த்து, பகல் அல்லது இரவு நேரங்களிலும் கூட பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
</p><p>
மேலும், பாதுகாப்புப் பணியாளர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவிப்பதுடன், சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
</p><p>
வாகனங்களில் ஒலி அமைப்புகள், ஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பொருத்துவதும், வாகனங்களின் புகைப்படங்களைப் பாதுகாப்பாக நகல் எடுத்து வைத்திருப்பதும் திருட்டுக்களைத் தவிர்க்க உதவும். </p><p>ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டால், உடனடியாக 24 மணிநேரமும் சேவையில் உள்ள காவல்துறையின் அவசர இலக்கங்களான 119 அல்லது 118 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வும் பொறுப்பான நடத்தையுமே குற்றவாளிகளுக்கான வாய்ப்புகளை முற்றிலுமாக அகற்றும்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>குறித்த போராட்டம்,&nbsp; இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய
கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு
கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு,
யாழ் வலி வடக்கு தையிட்டி, மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள்,
கிராஞ்சி மற்றும் ,பொன்னாவெளி அமைப்புக்கள் பங்குற்றி இருந்தன.</p><p></p><h2>பல்வேறு கோரிக்கைகள்&nbsp;</h2><p>

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் "மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு,
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா,
மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று" என கோஷங்களை
எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebade4b-0cea-4a9f-afd7-4f6360faf510/26-6a883ce857238.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள்
தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் நீண்ட கால வதிவிட விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444"></link>
            <id>https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444</id>
            <summary type="text">தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை வழங்க தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p><p>

உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றின்படி, 2022 ஒகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் மஞ்சள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
விபத்து நடந்த உடனேயே அவர்கள் செயல்பட்டு, தாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன், கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.</p><p></p><h2>வேலைவாய்ப்பு அனுமதி</h2><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில், இந்த இலங்கையர்கள் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசாக்களில் தென் கொரியாவில் பணிபுரிந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c452ce3-e2fd-4ee3-b4fa-b9bfd6bf039d/26-6a88387cb9d36.webp' /></p><p> பொதுவாக, அந்த விசா வகையின் கீழ் ஒரு வெளிநாட்டுப் பணியாளர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p>

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும், அவர்களின் மனிதாபிமானப் பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரிய நீதி அமைச்சு, சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கும் இந்த நீண்ட கால விசாக்களை வழங்கியுள்ளது. </p><p>இந்த விசாக்கள், அவர்கள் தங்கள் விசாக்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியமின்றி, நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு உரிமை அளிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்ற இலங்கையரும் ஏற்கனவே நீண்ட கால விசா வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741"></link>
            <id>https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741</id>
            <summary type="text">
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
</p><p>
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.</p><p></p><h2>தமிழ்த் திரையுல அறிமுகம்</h2><p>
</p><p>
1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d057ce-d5cd-4a61-8713-91901241a9ba/26-6a88304fc9bd0.webp' /></p><p> </p><p>

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார். </p><p>

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன. </p><p>

2020-ஆம் ஆண்டில், சௌகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா! நீதிமன்றில் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407"></link>
            <id>https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் ஹரக் கட்டாவும் கருத்துக்களை முன்வைக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h3>முழங்கால் பாதிப்பு</h3><p>இந்த வழக்கிற்காக பிரதிவாதியான ஹரக் கட்டா ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7741ba3d-fa22-4533-acc7-ae7c1c36533d/26-6a88256246955.webp' /></p><p> </p><p>அவர் தொலைக்காட்சித் திரை ஊடாக கையை உயர்த்தி, தாம் எதிர்நோக்கும் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.</p><p>&nbsp;தமக்கு பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போது தாம் கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் பாதிப்புக்காக ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> </p><p>இதன்போது ஹரக் கட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாலிய சமரசிங்க, தமது சேவை பெறுநரை பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர் தற்போது கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9590a-175f-44f4-bd27-edbdee915d5a/26-6a882562efa22.webp' /></p><p> </p><p>இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இதன்போது அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதிநாளாக வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587"></link>
            <id>https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், விசாரணைக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு
உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும்
அதிகளவில் கலந்து கொண்டனர்.</p><p></p><h2>உரிய விசாரணைகள்</h2><p>
</p><p>வாக்குமூலம் பெறும் நடவடிக்கையின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்,
வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் மற்றும் அது
தொடர்பான ஏனைய முக்கிய தகவல்கள் குறித்து உறவினர்களிடம் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb2053f-699b-453e-801b-6ae6a2c33213/26-6a882fff487e5.webp' /></p><p>
</p><p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும்,
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம்
வாய்ந்ததாக அமைந்துள்ளது.</p><p>இதன்போது நீண்டகாலமாக தமது உறவுகளின் நிலை தொடர்பில் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை
அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை பயங்கரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901</id>
            <summary type="text">
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் பயங்கரவாதியாக காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் பயங்கரவாதியாக காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டமொன்றின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சில முக்கிய வரலாற்று உண்மைகளை நினைவூட்ட விரும்புகிறேன். 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் 4,000 முதல் 5,000 பேர் வரையிலும், 1987-89 காலப்பகுதியில் 40,000 முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.</p><p></p><h2>சஹ்ரான் குழுவுக்கும் ஜனநாயக உரிமை?</h2><p>
</p><p>
அன்று தவறான பாதையில் சென்று கொலைகளைச் செய்தவர்கள் பின்னர் ஜனநாயகத்துக்கு வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேச முடிந்தது என்றால், ஏன் அந்த உரிமையைச் சஹ்ரான் குழுவுக்கும், சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும், நாட்டைக் காப்பாற்றப் போராடிவிட்டு இன்று சிறையிலிருக்கும் போர் வீரர்களுக்கும் வழங்க முடியாது?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37843fad-c130-45c4-8bd6-1aa44d8c9b1d/26-6a882708a116c.webp' /></p><p>
1983 முதல் 2009 வரை வடக்கில் நிலவிய பயங்கரவாதத்தினால் 27,000 போர் வீரர்களை நாம் இழந்தோம்.
</p><p>
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க எமது பாதுகாப்புப் படைகள் செயல்பட்டபோது, அவர்களுக்குத் தேவையான புலனாய்வு ஆதரவை அதிகளவில் வழங்கியவர்கள் முஸ்லிம் சகோதரர்களே.</p><p>

ஆனால், 1990களில் உருவான ஆயுதக் குழுக்கள் அல் கொய்தா, போகோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கினால் வஹாபி தீவிரவாதத்துக்கு இரையானார்கள்.
</p><p>
சுரேஷ் சலே போன்ற புலனாய்வு அதிகாரிகள் இந்த வஹாபி பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் பாடுபட்டவர்கள்.
</p><p>
அத்தகைய போர் வீரர்களைத் பயங்கரவாதிகளாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சிறையில் அடைத்தாலும் நாம் எமது தேசியப் பொறுப்பையும், சாசனப் பொறுப்பையும் கைவிடப் போவதில்லை.” என்றார்.</p><p></p><p>[IIXB9PG</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு மணிநேர வாக்குமூலம்! நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>
விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் அந்த வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.</p><p>நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b16b93-34fa-4e71-a4db-fbc3e65e535e/26-6a87d890e8fa6.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் திரையரங்குகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-movie-october-2nd-1787305005"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-movie-october-2nd-1787305005</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஈழத்து கலைஞர்களை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><p>

 திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p>

திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) புகைப்படத்தில் அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியுள்ளமை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:36:55+00:00</updated>
        </entry>
    </feed>
