<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-31T11:15:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>காவல்துறையின் விசேட நடவடிக்கை&nbsp;</h2><p>மன்னார், இலுப்பைக்கடவை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572323e-f157-4cd1-ae2a-0b987e9efc1c/26-6a9557d8da86f.webp' /></p><p>
</p><p>


 இஷாரா செவ்வந்தி துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசம்பர் முதல் இலங்கைக்கு வரும் புதிய விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372"></link>
            <id>https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372</id>
            <summary type="text">எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனமான S7 ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்படும் இந்த விமானங்கள் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப்போகும் வசதி</h2><p>&nbsp; இந்த புதிய விமான இணைப்பு மூலம் இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவ, பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களை எளிதாக அடைய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd68c353-e207-4a7a-a982-97cbd6df5c78/26-6a955fee9eff8.webp' /></p><p> இந்த விமானங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோவோசிபிர்ஸ்கில் உள்ள டோல்மாச்சேவோ விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கும் புறப்படும் விமானங்கள், அதே நாளில் பிற்பகல் 1.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.</p><p></p><p> </p><h2>பயணத்திற்கான மொத்த நேரம்</h2><p>கொழும்பிலிருந்து மீண்டும் விமானம் புறப்படுவது அதே நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும், மேலும் அந்த விமானங்கள் அடுத்த நாள் அதிகாலை 2.15 மணியளவில் நோவோசிபிர்ஸ்கை செ்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801b7609-a733-4250-8885-6f515128b0df/26-6a955fedec304.webp' /></p><p>
</p><p>





இந்த பயணத்தின் போது இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் தொழில்நுட்ப எரிபொருள் நிரப்புதல் நடைபெறும், இதற்காக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க வேண்டிய அவசியமில்லை. இந்த பயணத்திற்கான மொத்த நேரம் சுமார் 10 மணிநேரம் ஆகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-vehicles-collided-in-a-horrific-accident-1788172793"></link>
            <id>https://ibctamil.com/article/two-vehicles-collided-in-a-horrific-accident-1788172793</id>
            <summary type="text">மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.&amp;nbsp;குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது. இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவனெல்லை கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்க பேர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த விபத்து இன்று (31.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>இந்த வாகன விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இரு வாகனங்களின் கோர விபத்து</h2><p>அரநாயக்க பகுதியில் இருந்து மாவனெல்லை நகரை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்லை நகரிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f3963e-d1f8-417b-bc0e-c6be12ebcc4d/26-6a955de793bb0.webp' /></p><p>
விபத்தில் தொடர்புடைய டிப்பர் லொறி, உரிய அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

விபத்தில் வேனில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371"></link>
            <id>https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371</id>
            <summary type="text">அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த வியடத்தினை தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாயால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>&nbsp;நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்</h2><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையைத் திருத்தியமைத்து ஒக்டேன் 92 ரக பெட்ரோலை மேலும் 15 ரூபாயால் குறைத்துள்ளது. </p><p>உண்மையில் இந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் தந்திரமான முறையிலேயே இந்த வேலையைச் செய்கிறது. ஏனெனில் ஒரு புறம் பால் மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்திக்கொண்டு, மறுபுறம் எரிபொருள் விலையில் 15 ரூபாயைக் குறைக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c0278d7-c68c-446f-9856-676b570cc683/26-6a955742714e2.webp' /></p><p>ஆனால் முச்சக்கர வண்டி சேவைக்கான கட்டணங்கள் குறித்துக் கூறுவதானால், இந்த முறைப்படுத்தலுக்குரிய அனைத்து விலைகளையும் குறிப்பிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.</p><p> தற்போது அமைச்சு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பியுள்ளது.</p><p> எனவே சட்டமா அதிபரே இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு அனுமதி பெறப்பட்டு கையொப்பமிட்ட பின்னரே இது சட்டமாக மாறும்.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு</h2><p>

இப்போது எம்மால் வழக்கம்போல மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியாது.</p><p>ஏனெனில் கடந்த காலத்தில் நாங்கள் கோரிக்கை விடுத்தபோது, அதன் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டார், இனி இந்த விலை குறித்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனேயே இது பற்றிப் பேசுமாறு கூறினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39590ecd-1f20-4228-bd70-2171c4c4c9fc/26-6a95574321ffe.webp' /></p><p>தற்போது நாங்கள் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p><p> 

எனவே, சட்டபூர்வமான விலை வரும் வரை பழைய விலையையே நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற வரம்பிற்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது.</p><p> ஆனால் பொது வீதிகளில் சாதாரண முச்சக்கர வண்டி பயன்பாட்டில் 110, 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணம் அறவிடப்படுகிறது. </p><p>இன்னும் இது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைமையின் கீழ் மிக விரைவில் புதிய விலைகள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786"></link>
            <id>https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், தற்செயலாக ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், தற்செயலாக ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
</p><p>
சீன புகைப்படக் கலைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளில், கடல் மட்டத்திலிருந்து 7,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலைச் சிகரத்திற்கு அருகில், பாரிய பாறைகள் மற்றும் பனிப்பாறைத் துண்டுகள் மலையின் சரிவிலிருந்து இடிந்து விழும் காட்சி அநடத காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பெரும் தூசிப் படலம் மலைப் பகுதி முழுவதும் பரவுவதையும் அந்த ட்ரோன் காட்சிகளில் காண முடிகிறது.</p><p></p><h2>நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பனி, பாறைகள், சேறு மற்றும் பெருமளவான குப்பைகள் சுமார் 1,200 மீற்றர் கீழே அமைந்துள்ள பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdbcb9fd-edc9-472c-a056-f7d34486f077/26-6a95570b36872.webp' /></p><p> இதன் காரணமாக தான் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்தப் பேரழிவில் நேபாளத்தில் 903 பேரும் திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நேபாளத்தில் மாத்திரம் மேலும் 4,500க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நேபாளத்தை உலுக்கிய பாரிய இயற்கைப் பேரழிவு

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரழிவை” எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://youtu.be/qEic2ZU6taM" target="_blank"><b>காணொளியை காண இங்கே க்ளிக் செய்யவும்</b></a></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா விகாரை கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645"></link>
            <id>https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645</id>
            <summary type="text">கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியா காணி உரிமையாளர் கோகிலரமணியால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவின் அடிப்படையில் இன்றைய தினம் (31-08-2026) வழக்கு
விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><h2>எட்டப்பட்ட உடன்படிக்கை</h2><p>இதன் போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் முன்னிலையாகி இருந்தனர்.
</p><p>
அதே சமயம் அரச சட்டத்தரணி, திருக்கோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் W. W. சுரங்க பெரேராவும் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c41f26-4465-434f-9fb5-71289449c2af/26-6a954ef35a343.webp' /></p><p>வழக்கின் போது 2019 ஆம் ஆண்டு இரு தரப்புக்கு இடையில் எட்டப்பட்ட
உடன்படிக்கையின் அடிப்படையில் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான உரிமை
மாத்திரமே கன்னியா விடயத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் புனர்நிர்மாணம்
செய்வதற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கு வாதம்
வைக்கப்பட்டது.
</p><p>
மேலும் அரச சட்டத்தரணியால் குறித்த இடத்தை பார்வையிட்டு வாதங்களை முன்வைக்க
காலம் கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை
வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மேலும் அதுவரையான காலப்பகுதியில் எந்த புதிய
கட்டுமானப் பணிகளையோ, மாற்றங்களையோ செய்யக்கூடாது என்ற உத்தரவும்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738"></link>
            <id>https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738</id>
            <summary type="text">இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&amp;nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நாட்டில் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அந்தவகையில், இதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சட்டமூலத்தை தயாரித்தல்</h2><p>
</p><p>குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c87d60d-7238-4566-9f0d-4615fd4c2caa/26-6a954e5832957.webp' /></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கிறங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/development-officers-in-mannar-stage-a-protest-1788165672"></link>
            <id>https://ibctamil.com/article/development-officers-in-mannar-stage-a-protest-1788165672</id>
            <summary type="text">மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட செய்லகத்திற்கு முன்பாக குறித்த இன்று இன்று (31.08.2026) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.&nbsp;</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துதல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab60aaa-0195-4bef-9881-b93cdd15142f/26-6a954502c78ac.webp' /></p><p>
</p><p>
குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல
நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p>போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் -ஐ சந்தித்து ஜனாதிபதிக்கு
கையளிக்க வேண்டிய மனுவை ரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச
திணைக்களங்களில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம்
அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942"></link>
            <id>https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.</p><p>
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த குழாமின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h5>22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : இன்றுடன் நிறைவடையும் காலக்கெடு!</h5><p>இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது. </p><p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p> 

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p></p><h2>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf20ee1-6ed3-4def-a238-6fae29b67117/26-6a95042d33294.webp' /></p><p> </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.</p><p> </p><p>இந்தநிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dog-meat-sale-in-the-sainthamaruthu-area-1788164993"></link>
            <id>https://ibctamil.com/article/dog-meat-sale-in-the-sainthamaruthu-area-1788164993</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்தன்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இந்த தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளது.</p><p>

கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ்
உள்ள பிரதான வீதிப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.</p><p>
</p><p></p><h2>ஆட்டிறைச்சிக் கடை</h2><p>இதன்போது அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a4c036-4e79-4742-a258-58e9a9d74ae4/26-6a954140f1af6.webp' /></p><p>குறித்த
இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அங்கீகரிக்கப்பட்ட
கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை
கண்டறியப்பட்டது.
</p><p>
இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக்
கையகப்படுத்தப்பட்டு கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>வைத்திய அதிகாரி&nbsp;</h2><p>எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து சாய்ந்தமருது பகுதியில்
நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல்
செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்
நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக
வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும் இது தொடர்பில் எவ்வித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015"></link>
            <id>https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015</id>
            <summary type="text">புதிய இணைப்புஇன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.</p><p> கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் உயர்த்தியதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். </p><p>

இதனிடையே, ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>
அந்தவகையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.</p><p>குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கோதுமை மாவின் விலை</h2><p>


பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65045cd1-f63a-45cc-8b13-f6d1c9a80588/26-6a951b5dac3fa.webp' /></p><p>



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - டெய்ஸி ஃபாரஸ்ட் மீதான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-and-daisy-forest-case-adjourned-1788166438"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-and-daisy-forest-case-adjourned-1788166438</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி வழக்கனது எதிர்வரும் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்கு இன்று (31.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>உயர் நீதிமன்ற விசாரணை</h2><p>
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விடயம் குறித்து பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மேல்முறையீடு செப்டம்பர் 04 ஆம் திகதி விசாரணைக்கு வரவிருப்பதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad9bfed-abe9-4bc7-8979-74b5a8721472/26-6a9543733cff3.webp' /></p><p>
</p><p>
அதன்படி, உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு ஒரு திகதியில் வழக்கை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது. </p><p>

இதன்படி சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை செப்டம்பர் 28 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.</p><p>

 சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஏறத்தாழ 57 மில்லியன் ரூபாயை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக யோஷிதா மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T09:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு : நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/invalidate-the-parliamentary-seat-of-mp-archchuna-1788165482"></link>
            <id>https://ibctamil.com/article/invalidate-the-parliamentary-seat-of-mp-archchuna-1788165482</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இந்த மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவிப்பு&nbsp;</h2><p>இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/500961d8-2a58-4ce4-aba8-d040fc2435e4/26-6a954368d349b.webp' /></p><p>

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cVovd8D_zRA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24th-tamil-catholic-pilgrimage-in-netherlands-1788164012"></link>
            <id>https://ibctamil.com/article/24th-tamil-catholic-pilgrimage-in-netherlands-1788164012</id>
            <summary type="text">நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றது.
</p><p>
நெதர்லாந்தில் அமைந்துள்ள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தில் எதிர்வரும் (06.09.2026) திருயாத்திரை இடம்பெறவுள்ளது.
</p><p>
இத்திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்ட இறை அருளைப் பெற்று, விழாவைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைவரித் திணைக்களத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tax-collection-from-slc-players-is-prohibited-1788159000"></link>
            <id>https://ibctamil.com/article/tax-collection-from-slc-players-is-prohibited-1788159000</id>
            <summary type="text">இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தனிநபர் முன்கூட்டிய வருமான வரியை (Personal Advance Income Tax) அரவிடுவது குறித்து நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தனிநபர் முன்கூட்டிய வருமான வரியை (Personal Advance Income Tax) அரவிடுவது குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.</p><p>

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எடுத்திருந்த தீர்மானத்தை இரத்து செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் சான்றாணை (Certiorari) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் முன்வைக்கபட்ட குற்றச்சட்டுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ள ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள், தத்தமது அணித் தலைவர்கள் ஊடாக நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.</p><p></p><h2>ஊழியர்களுக்கான வரி விதிமுறை</h2><p>
</p><p>தாங்கள் இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் அல்ல என்றும், பல ஆண்டுகளாக சுயாதீன சேவை வழங்குநர்களாகவே அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் வீரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eef41b8-241c-443b-8fb2-1a5e9e4de422/26-6a9537f4b1397.webp' /></p><p>
</p><p>
எனவே, தங்களிடம் அறவிடப்படும் வரியானது ஊழியர்களுக்கான வரி விதிமுறைகளின் கீழ் அல்லாமல், சுயாதீன சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும் சட்ட விதிகளின் அடிப்படையில் அறவிடப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.</p><p>
</p><p>
இதன்படி&nbsp; இலங்கையின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>
</p><p>
எனினும், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்தத் தீர்ப்பு தடையாக அமையாது என நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T08:14:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-protest-demands-safe-railway-gates-1788154939"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-protest-demands-safe-railway-gates-1788154939</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று (31-08-2026) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார்
35 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பற்ற கடவைகள் காணப்படுகின்றன.</p><p></p><h2>பாதுகாப்பு கடவைகள்</h2><p>
இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு கோரி குறித்த போராட்டம்
இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623d71f-104e-476f-abd0-0c7bfcae0492/26-6a95314c27417.webp' /></p><p>குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மத்த
தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள்
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த
மாணவியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> தொடர்ந்து கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சரிடம் தொடருந்து திணைக்களம்
ஆகியவற்றிற்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் - மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dry-spell-affects-81k-in-7-districts-1788159032"></link>
            <id>https://ibctamil.com/article/dry-spell-affects-81k-in-7-districts-1788159032</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த&amp;nbsp; பிரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த&nbsp; பிரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இதன்படி 25,647 குடும்பங்களின் 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு</h2><p> </p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த வறட்சியான காலநிலையால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d6d36f-2d69-4f00-9244-e3d1b985f8b6/26-6a952e653ded9.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக பாதித்துள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் பவுசர் வாகனங்கள் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
எதிர்வரும் காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு, குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என&nbsp;சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:42:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்டார் ரவி கருணாநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.4 சந்தர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பிரதமராகும் எண்ணத்தில் முதல்வர் விஜய்..! உண்மையை உடைக்கும் வைகோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cm-vijay-becoming-the-prime-minister-vaiko-1788157096"></link>
            <id>https://ibctamil.com/article/cm-vijay-becoming-the-prime-minister-vaiko-1788157096</id>
            <summary type="text">தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தவெக கூட்டணியில் காங்கிரஸ் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p>தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.&nbsp;இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்தவகையில், "ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தவெகவிற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் கடந்த (30.08.2026)&nbsp;ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><p></p><h2>பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்காலத்தில் பிரதமராகும் நோக்கத்துடன் அரசியலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் கருத்துகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b51a3b-f421-4866-b517-491bbd4db43c/26-6a952c09bed79.webp' /></p><p>அதில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பபதவி விலகல் செய்வோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததாக கூறப்படுவது குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வரின் கற்பனையில் கூட இதுபோன்ற கருத்து இருக்காது என்று தெரிவித்தார்.</p><p> அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
</p><p>


அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை கைவிட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:27:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு வாரத்தில் 40 கோடியை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/expressways-generate-over-rs-355-mln-in-revenue-1788157177"></link>
            <id>https://ibctamil.com/article/expressways-generate-over-rs-355-mln-in-revenue-1788157177</id>
            <summary type="text">இலங்கையின்&amp;nbsp;அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் கடந்த வாரத்தில் கிடைத்த&amp;nbsp;வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, கடந்த 24...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின்&nbsp;அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் கடந்த வாரத்தில் கிடைத்த&nbsp;வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மட்டும் 408 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 1,095,895 ஆகும்.</p><p></p><h2>355 மில்லியனுக்கு அதிக வருமானம்&nbsp;</h2><p> 

இதனிடையே, கடந்த ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db71540-b267-4afc-a523-3b48b5af1dde/26-6a9524c86dde3.webp' /></p><p>இதேவேளை கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 12.4 கோடி ரூபாய்க்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி விருது - அப்பாவி உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-honoured-as-president-of-the-happiest-era-1788155874"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-honoured-as-president-of-the-happiest-era-1788155874</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு &#039;மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி&#039; என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு 'மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்ற ஒரு சிறப்பு சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது</p><p>
சிறிசேனா இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிறபிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p></p><p>
</p><h2><b>எந்த அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது?</b></h2><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னரான விசாரணைகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகக் கடுமையான கேள்விகளை இன்றும் மைத்திரிபால மீது எழுப்பப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120a0c7e-15f5-4587-b74d-51dc1b54cfd5/26-6a9522d56d474.webp' /></p><p>அந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்ததுடன், அவர்களைப் பாதுகாப்பதில் அரசின் பொறுப்பு என்னவாக இருந்தது? அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கை என்ன என்பதும் அவரிடம் இருந்து தேடும் பதிலுக்கான கேள்வி ஆகும். </p><p>அன்று அவர் குடும்பத்தோடு கொண்டாட்டத்திற்க்காக சிங்கப்பூருக்கு பறந்தார். ஒரு நாட்டின் சாதாரண அமைச்சர் கூட வெளிநாட்டுக்கு சென்றால், அதற்கான அவர் வகிக்கும் பதவிக்கான பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பார். </p><p>&nbsp;இதுவே இலங்கை அரசியல் நியதி. இருந்தும் மைத்திரி பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பை வகித்தும் கண்டும் காணாததுமாக, பதவிக்கான பொறுப்புக்கு எவரையும் நியமிக்கது பறந்துவிட்டார். இது எங்கோ தேடிய கருத்தல்ல.</p><p></p><p> </p><h2>பொறுப்புக்கூறல் மற்றும் நீதி</h2><p>அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர ஹேமசிறி பெர்னாண்டோ இருவரும் நீதிமன்றில் தெரிவித்தது. இத்தகைய பின்னணியில், அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி போன்ற கௌரவப் பட்டம் வழங்கப்படுவது இயல்பல்லவே? ஒரு ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மதிப்பிடும்போது, பொருளாதாரக் கொள்கைகள், சமூகப் பணிகள் அல்லது அரசியல் சாதனைகள் மட்டுமல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் அடிப்படைப் பொறுப்பும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a6146c4-4c9d-4a40-87b4-7df09434097c/26-6a9522d4b3a20.webp' /></p><p>மகிந்தவை ஆட்சிக்கு வரவழைக்க ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்ட கதையெல்லாம் மைத்திரியின் அரசியல் பக்கத்தில் விமர்சனங்களின் அடுக்குகள். இவ்வாறு உயிர்த்த ஞாயிறு பேரழிவை ஏற்படுத்திய ஒரு பாதுகாப்புத் தோல்வி குறித்து கேள்விகள் எழுந்திருக்கும்போது, அந்தக் காலத்தின் அரசியல் தலைமைக்கு வழங்கப்படும் கௌரவம் பொதுமக்களின் மனதில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. </p><p>இங்கு முக்கியமானது, மைத்திரிபால சிறிசேனாவை தனிப்பட்ட முறையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது அல்ல. மாறாக, அரசின் பொறுப்பு, அரசியல் பொறுப்பு மற்றும் ஒழுக்கப் பொறுப்பு ஆகியவை எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன? என்பதே கேள்வி.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பாகவும் பல ஆண்டுகளாக கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் முழுமையான உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சூழலில், முன்னாள் அரசுத் தலைவருக்கு மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் உயரிய கௌரவத்தை வழங்குவது உணர்வுபூர்வமான முரண்பாடே...&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q07o6jhgT8k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:44:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562"></link>
            <id>https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வான் பாதுகாப்பு</span></p><p>ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹோர்முஸ் நீரிணை வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நீண்ட தூர அமெரிக்க ட்ரோனைத் துல்லியமாக அடையாளம் கண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இவ்வாறு அழித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3179777-b9e5-4423-89f6-65e7ac72c6e4/26-6a951289cccc7.webp' /></p><p>இந்தநிலையில் தாக்குதலுக்கு இலக்கான ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து பாரசீக வளைகுடா நீரில் மூழ்கியுள்ளதாக IRGC பொது உறவுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைப் படைகளுக்கும் ஈரானியப் படைகளுக்கும் இடையே கடற்படைத் தடைகள் மற்றும் இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பிக ரணவக்க இல்லத்தில் துண்டிக்கப்பட்டதா மின்சாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/was-electricity-cut-off-champika-ranawaka-s-house-1788156340"></link>
            <id>https://ibctamil.com/article/was-electricity-cut-off-champika-ranawaka-s-house-1788156340</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய நிலையில், &quot;மக்கள்தொகை கூட்டு எதிர்க்கட்சி&quot; என்ற பெயரில் ஒன்றிணைந்த பிளவுபட்ட எதிர்க்கட்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய நிலையில், "மக்கள்தொகை கூட்டு எதிர்க்கட்சி" என்ற பெயரில் ஒன்றிணைந்த பிளவுபட்ட எதிர்க்கட்சியானது, இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகப் பொதுக் கருத்தைக் கட்டியெழுப்புவதற்காக, பிரச்சாரத்தை மேற்கொண்டது.
</p><p>
அந்த கும்பலின் கோட்பாட்டாளரும் பிரதான பிரச்சாரக்காரரும் ஆன முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, ஏப்ரல் 23 அன்று ஒரு ஊடக மாநாட்டில், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடி ஏற்படும் என்றும், மின்வெட்டு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.</p><p>

இருப்பினும், போரின் மத்தியகிழக்கு விளைவுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டபோது, ​​எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, வாரத்தின் நடுவில் ஒரு குறுகிய விடுமுறை, மற்றும் சீரான மின்சார விநியோகத்தைப் பராமரிப்பதற்கான முறையான திட்டமிடல் ஆகியவற்றைச் செயல்படுத்தி, உலகம் முழுவதும் போரினால் ஏற்பட்ட நெருக்கடி இந்த நாட்டு மக்களைப் பாதிக்காத வகையில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.</p><p></p><h2>ரணவக்க முன்வைத்திருந்த எச்சரிக்கை</h2><p>

தற்போது 7 மாவட்டங்களைப் பாதிக்கும் கடுமையான வறட்சிக்கு மத்தியிலும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அரசாங்கம் எவ்வித மின்வெட்டும் இன்றி பொது இயல்பு வாழ்க்கையைத் தக்கவைத்துள்ளது.
</p><p>

இந்நிலையில் சம்பிக்கவின் கருத்து குறித்து விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள், ''பாட்டலி சம்பிக்கவின் வீட்டில் என்ன மின்சாரம் தடைபட்டு விட்டதா? அல்லது நின்றுவிட்டதா" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p><p>

நாட்டின் எரிசக்தி நிலைமை தொடர்பாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்த எச்சரிக்கைகள் மீண்டும் அரசியல் விவாதப் பொருளாகியுள்ளன.
</p><p>
எரிபொருள் விநியோகம், மின்சார உற்பத்தி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உள்ளிட்ட காரணிகள் நாட்டின் மின்சார விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என அப்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. </p><p>

குறிப்பாக, நீடித்த வறட்சி ஏற்பட்டால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் நிலவியது.</p><p></p><h2>மின்சாரத் தேவை முகாமைத்துவம்&nbsp;</h2><p>
</p><p>
எனினும், அரசாங்கத்தின் தரப்பில், எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், மின்சார உற்பத்திக்குத் தேவையான வளங்களைத் திட்டமிட்டு பயன்படுத்துதல் மற்றும் மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட அளவிலான மின்வெட்டு ஏற்படாததை அரசாங்கம் தனது நிர்வாக நடவடிக்கைகளின் வெற்றியாக முன்னிறுத்தி வருகிறது.
</p><p>
 மறுபுறம், எதிர்க்கட்சிகள் மின்சாரத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை, உற்பத்திச் செலவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.
</p><p>
இதனால், தற்போதைய நிலைமை அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மற்றுமொரு அரசியல் விவாதமாக மாறியுள்ளது. </p><p>

எனினும் எதிர்காலத்தில் மின்சாரத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது, நீர்மின் உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சமாளிப்பது மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் சர்வதேச விலை மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பதே அடுத்த கட்டத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் முக்கியமான கேள்விகளாக உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a><a> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T06:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் புற்தரைக்கு தீவைத்தவர் கையும் மெய்யுமாக சிக்கினார்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-setting-fire-to-lawn-in-jaffna-1788154991"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-setting-fire-to-lawn-in-jaffna-1788154991</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்தரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்தரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் இன்று (31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.
அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின்
மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்தரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு
நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</h2><p>
இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன்,
புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும்
போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3d281c-708d-44ca-8e96-1078a5947a92/26-6a95192deef61.webp' /></p><p>
புற்தரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை
அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச
சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>இந்தநிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர்
கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
எனினும், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப்
பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய 24 வருட சிறை தண்டனைக் கைதி - தீவிர தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-year-prison-sentence-escapes-from-hospital-1788153412"></link>
            <id>https://ibctamil.com/article/24-year-prison-sentence-escapes-from-hospital-1788153412</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர
நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை&nbsp;வழங்கப்பட்டது.</p><p>அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e8e508-1f45-4913-ae58-7d5262b94abb/26-6a951113b4a41.webp' /></p><p>கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்
</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் , மறுநாள் சனிக்கிழமை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் , மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:48:10+00:00</updated>
        </entry>
    </feed>
