<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-18T05:17:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-arrested-assistant-controller-of-immigration-1789706827"></link>
            <id>https://ibctamil.com/article/cid-arrested-assistant-controller-of-immigration-1789706827</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்புலனாய்வு திணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>இவ்வாறு கைது செயய்ப்பட்ட அதிகாரி 42 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b7b44f9-11e5-49f3-bb3c-2cd309dfbd0e/26-6aacc5056a93d.webp' /></p><p>இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-39th-commemoration-in-trincomalee-1789705989"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-39th-commemoration-in-trincomalee-1789705989</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -&amp;nbsp;சிவன் கோயில் மூன்றலில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.குறித்த இடத்தில் கடந்த 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -&nbsp;சிவன் கோயில் மூன்றலில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.</p><p>குறித்த இடத்தில் கடந்த 15.09.2026 தொடக்கம் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி அளவில்
செயற்பாட்டாளர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p>

அந்த வகையில் நேற்று (17.09.2026) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த
ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் மையம் ஆகியோரால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>மலர் தூவி அஞ்சலி&nbsp;</h2><p>இதன்போது&nbsp;தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்பு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, பொதுச் சுடரும் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து
மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5afe4aa4-7984-4571-926d-edecebfefe65/26-6aacc188eb865.webp' /></p><p>இந்த நிலையில் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி மேற்கொள்ள ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:42:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

நாமல் ராஜபக்‌ச ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்‌ச சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைப் பேருந்தில் இன்று (18) காலை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54276906-90ca-4b6f-9fbf-463369fbde74/26-6aacbd2f300d9.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் ராஜபக்ச!</h5><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்சகைது செய்யப்பட்டார்.</p><p>

இந்த வழக்கில் இலஞ்சமாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>

பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419789ed-9197-4378-9a7a-d0b38425c933/26-6aacb5612268f.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-government-s-key-duty-president-1789703474"></link>
            <id>https://ibctamil.com/article/the-government-s-key-duty-president-1789703474</id>
            <summary type="text">குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘திவியட்ட சவியக்’ வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்திட்டத்தின் கீழ், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளர்ந்து 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சமூகமயமாகும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பற்ற, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க</h2><p>
</p><p>
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688059d3-4b10-4aad-9509-c0eb11069a50/26-6aacbc04f159d.webp' /></p><p>
</p><p>
குழந்தைகள் எந்தச் சூழலில் வளர்ந்தாலும் அவர்கள் நாட்டின் குழந்தைகள் என்பதால், அவர்களின் பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p><p>

எந்தவொரு குழந்தையும் பாதுகாப்பற்ற நிலையில் அல்லது அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரக்கூடாது எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.
</p><p>
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்பாக வைப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.</p><h2>20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு</h2><p>
</p><p>
அத்துடன், 18 வயதை பூர்த்தி செய்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fff4c96-f00b-4460-b7c7-fb501581d93c/26-6aacba4d9bf59.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஆண்டு பாதுகாப்பான வீடொன்றை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு அந்த உதவித் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தொகையும் போதுமானதாக இல்லாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மேலும் நிதி ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.</p><p>

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தால் மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக சமூகமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
</p><p>
எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய ரீதியில் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789704054"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789704054</id>
            <summary type="text">இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94471a97-7b34-4c14-b7ed-c9b1c6508fb9/26-6aacbab0220d6.webp' />&nbsp;</p><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-in-katunayake-airport-women-1789693476"></link>
            <id>https://ibctamil.com/article/missing-in-katunayake-airport-women-1789693476</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய காவல் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய காவல் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1384cd3-9629-4fb2-9c58-184213859dfb/26-6aac8fa630698.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலைய காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh7" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-09-18T03:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989"></link>
            <id>https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989</id>
            <summary type="text">வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் ஒன்றுக்கான கோரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் ஒன்றுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி லண்டன் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைக் கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் ஒரு மனுவை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;"யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்" என்ற தலைப்பிலான இந்த மனு, திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமய விழாக்கள் மற்றும் குடும்ப சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகிறது.</p><h2>400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம்</h2><p>
</p><p>
ஹாரோ மேற்கு தொகுதியின் பிரதிநிதியான தோமஸ், தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என்றும், இதனால் பயணிகள் கொழும்பு வழியாகப் பயணித்து, கூடுதலாக சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df4cb5bb-4d97-47bd-9b28-ce601f68a772/26-6aac6ef49116a.webp' /></p><p>மனுவின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சாலை அல்லது&nbsp;தொடருந்து வழியாகச் செல்வதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இது வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட சிரமங்களை ஏற்படுத்துகிறது.
</p><p>
முன்மொழியப்பட்ட இந்த நேரடிச் சேவையானது, பயண நேரத்தைக் குறைக்கவும், அணுகலை மேம்படுத்தவும், இங்கிலாந்துக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையே குடும்ப, கலாச்சார மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவை</h2><p>இந்த மனு, வட மாகாணத்தில் சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான சாத்தியமான நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

லண்டனுக்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து ஆதரிப்பதற்காக, ஐக்கிய ராச்சிய அரசாங்கம், இலங்கை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு தோமஸ் அழைப்பு விடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f73ef6-1913-4a17-a979-9db00c279028/26-6aac6ef547557.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட விமான இணைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்த மனுவில் கையொப்பமிடுமாறு இந்தப் பிரசாரம் பொதுமக்களை அழைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T01:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தானாகவே வேகமெடுத்த கார்: மட்டக்குளிய வாகன விபத்து தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakuliya-accident-resond-1789694586"></link>
            <id>https://ibctamil.com/article/mattakuliya-accident-resond-1789694586</id>
            <summary type="text">மட்டக்குளிய பகுதியில்&amp;nbsp; பல வாகனங்கள் மோதிக்கொண்ட கோரமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், தான் ஓட்டிவந்த மின்சாரக் கார் திடீரெனத் தானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளிய பகுதியில்&nbsp; பல வாகனங்கள் மோதிக்கொண்ட கோரமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், தான் ஓட்டிவந்த மின்சாரக் கார் திடீரெனத் தானாகவே வேகமெடுத்ததாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.</p><p>இதன்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை தான் இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>காவல்துறையின் கூற்றுப்படி, தனது தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வாகனம் எதிர்பாராத விதமாக வேகமெடுத்ததாகவும், அதனால் தன்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஓட்டுநர் கூறியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>நிபுணர் குழுவால்&nbsp; தொழில்நுட்பப் பரிசோதனை</h2><p>விபத்துக்கு இயந்திரக் குறைபாடா அல்லது தொழில்நுட்பக் குறைபாடா காரணம் என்பதைத் தீர்மானிப்பதற்காக, மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் தலைமையிலான நிபுணர் குழுவால் வாகனத்தின் தொழில்நுட்பப் பரிசோதனை நடத்தப்படும் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e340df7-d9d9-489c-b2e0-a1c453bf3c90/26-6aac970562517.webp' /></p><p>
காவல்துறையினர் ஒரு மருத்துவக் குழுவின் மூலம் மனநல மதிப்பீட்டைப் பெறவும் உத்தேசித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவரது சட்டத்தரணி மறுத்துள்ளனர்.</p><p>

தங்கள் கட்சிக்காரர் மதுவையோ அல்லது சட்டவிரோத போதைப்பொருட்களையோ ஒருபோதும் உட்கொண்டதில்லை என்றும், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p>மருத்துவப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட பொருளுக்கு அந்த மருந்துகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்று சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
</p><p>இந்நிலையில் சந்தேக நபரை விடுவிப்பது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டு, பிணை&nbsp; வழங்குவதை காவல்துறை எதிர்த்துள்ளது.</p><p>

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், ஓட்டுநரைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T01:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போருக்கு மத்தியிலும் ஐநா கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவர்களுக்கு விசா அளித்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-granted-visas-to-iranian-leaders-un-meeting-1789691116"></link>
            <id>https://ibctamil.com/article/us-granted-visas-to-iranian-leaders-un-meeting-1789691116</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும், நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும், நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விசா அனுமதி அளித்துள்ளது.
</p><p>
ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்க ஈரானின் "முக்கிய குழுவினர்" மற்றும் அவசியமான பணியாளர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்தது.</p><h2>போர் நிறுத்தப்படாத நிலையிலும் விசா அனுமதி</h2><p>விசா தொடர்பான தனியுரிமை சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, இந்த குழுவில் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b1ef28-94ea-481b-ab50-c9c86182bcac/26-6aac86f07fce6.webp' /></p><p>
</p><p>
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வரும் சூழலிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அல்லது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லாத நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T00:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய ஹவுத்திகள் : காணொலியும் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthi-rebels-shot-down-a-saudi-arabian-f-15-jet-1789685931"></link>
            <id>https://ibctamil.com/article/houthi-rebels-shot-down-a-saudi-arabian-f-15-jet-1789685931</id>
            <summary type="text">ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். </p><p>இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொளியையும் ஹவுதிகள் வெளியிட்டுள்ளனர்.</p><p>ஏமனின் மரீப் மாகாணத்தின் வான்பரப்பில், சவுதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அந்த போர் விமானம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்-வழி ஏவுகணையை பயன்படுத்தி எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளனர்.</p><h2>வெளியான காணொலி</h2><p>ஹவுதிகள் வெளியிட்டுள்ள சுமார் 4 நிமிட காணொளியில், வானில் விமானத்தை குறிவைத்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் இரவு நேரத்தில் தரையில் விமானத்தின் சிதைவுகள் தீப்பற்றி எரியும் காட்சிகளும், பாலைவனப் பகுதியில் கிடக்கும் கருகிய பாகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F3023283081342255%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> விமானத்தில் சேத பகுதிகளில் சவுதி அரேபிய கொடியின் அடையாளம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், காணொளியில் இடம்பெறும் விமானத்தின் வகையை அதன் சேதம் காரணமாக உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சவுதி உறுதிப்படுத்தவில்லை</h2><p>



ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும், சவுதி அரேபியா இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே, சவுதி எப்-15 விமானம் உண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9da49b7-1b89-4551-999e-1424e20cdf05/26-6aac7b65da6aa.webp' /></p><p>இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஹவுதிகள் சவுதி பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T23:44:46+00:00</updated>
        </entry>
    </feed>
