<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-10T17:20:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பதிலடியில் சிதைந்துபோன அமெரிக்க கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-us-ships-fighter-jets-damaged-irans-response-1789056935"></link>
            <id>https://ibctamil.com/article/10-us-ships-fighter-jets-damaged-irans-response-1789056935</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது சமீபத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவுகணைகளை வீசி தாக்கியது.&nbsp;</p><p>இதற்குப் பதிலடியாக, கடந்த 8ம் திகதி அமெரிக்க இராணுவம், ஈரானுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அன்று இரவே மேற்காசியாவில் உள்ள ஜோர்டானின் பப்ரக், அஸ்ரக் நகரங்களில் இயங்கி வரும் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>அமெரிக்காவின் புகழ்பெற்ற விமானம் சேதம்</h2><p>


தாக்குதலில், நவீன போர் விமானங்களில் மிகவும் புகழ்பெற்ற எப்-15 ரக 8 விமானங்கள் சேதமடைந்தததாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c68b1c-d073-4496-a754-92e4ca32f91d/26-6aa2dc86bcc45.webp' /></p><p> இதேபோன்று 'வார்ஹாக்' என்று அழைக்கப்படும் ஏ-10 ரக தாக்குதல் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து, அதன் ஒரு சக்கரம், இறக்கை காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>

இந்நிலையில் தங்களுடைய, 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 2 போர்க் கப்பல்கள், 8 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p></p><h2>10 கப்பல்கள் மீதும் தாக்குதல்</h2><p> மேலும், தடையை மீறிச் சென்றதாக மற்ற நாடுகளைச் சேர்ந்த, 10 கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணையை தாண்டி, ஓமான் வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் ஈரான் தன் கட்டுப்பாட்டு மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726ca560-0bdb-403c-881a-eb862e3c25ef/26-6aa2dc8771ffa.webp' /></p><p> அனுமதியின்றி இந்தப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பரல் 100 டொலரைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T16:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவத்தில்&nbsp;60 வயதுடைய நபர் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcb2f8a-bd9c-4835-965a-ef9838a2a765/26-6aa2d87c1c811.webp' /></p><p>லண்டன் முழுவதும் உள்ள யூத மற்றும் ஈரானிய சமூகங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இவ்வருட தொடக்கத்தில் இடம்பெற்ற எந்தவொரு சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்களுடனோ இந்த விசாரணைக்குத் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>லண்டன் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு : சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினார் மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-escaped-amnesty-act-regarding-gnanasara-1789053238"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-escaped-amnesty-act-regarding-gnanasara-1789053238</id>
            <summary type="text">பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை அளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.</p><p>காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், நீதிபதிகள் சம்பத் அபேகோன் மற்றும் சோபிதா ராஜகருணா ஆகியோர் உடன்பட்ட 58 பக்கத் தீர்ப்பை, நீதிபதி ஜனக் டி சில்வா இன்று வழங்கினார்.</p><p>இது தொடர்பில் நீதிபதி தெரிவித்தவை வருமாறு,</p><h2>எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்</h2><p>
</p><p>
"முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b8f0ff-85df-4efa-8789-66ba2e873122/26-6aa2ce2e7af1e.webp' /></p><p>
</p><p>
 மகாநாயக்க தேரர்கள், தியவதன நிலமே மற்றும் பிற மதத் தலைவர்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக் கோரியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அரசியலமைப்பின் 34(1) பிரிவின்படி, ஜனாதிபதி தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும். இருப்பினும், இந்த வழக்கில், இந்த பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கியதற்கான காரணங்களை ஜனாதிபதி விளக்கத் தவறிவிட்டார்.</p><p>

எனவே, அரசியலமைப்பின் 12(1) பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது."</p><p></p><p>

</p><h2>மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை&nbsp;</h2><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதி ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினார். வணக்கத்திற்குரியவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு,சட்டத்தின்படி நீதிமன்றத்தின் பார்வையில் செல்லாதது மற்றும் பயனற்றது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407afa52-1a34-4a1a-a3f0-696e5073cb67/26-6aa2ce2f2dfbb.webp' /></p><p>

இருப்பினும், மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த மன்னிப்பை வழங்கியுள்ளதால், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T15:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் விருந்து : காவல்துறை தொடங்கியுள்ள சிறப்பு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intelligence-information-about-facebook-parties-1789051047"></link>
            <id>https://ibctamil.com/article/intelligence-information-about-facebook-parties-1789051047</id>
            <summary type="text">முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக, காவல்துறை மா அதிபர் ஒரு சிறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக, காவல்துறை மா அதிபர் ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் விளைவாக, சில நாட்களுக்கு முன்பு தெல்தெனிய காவல் பிரிவில் நடைபெற்ற முகநூல் விருந்தில் பங்கேற்ற 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.</p><h2>இளைஞர்கள் பலியாகும் அபாயம்</h2><p>இதுபோன்ற இடங்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களைப் பெறும் திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் என்றுகாவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f1bd98-f357-4b19-a6f4-05c25bbbec5c/26-6aa2c56c82cb7.webp' /></p><p>

முகநூல் விருந்துகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இளைஞர்கள் பலியாகும் அபாயம் இருப்பதால், இதுபோன்ற விருந்துகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.</p><p></p><h2>பணத்தை மையமாகக் கொண்ட வணிகங்கள்</h2><p>
</p><p>
சில நேரங்களில் இதுபோன்ற விருந்துகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்றும், அவை இணையவழிக் குற்றங்கள் மற்றும் பணத்தை மையமாகக் கொண்ட வணிகங்கள் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fc0e85-d638-41e5-9c5b-6383622d248e/26-6aa2c56d39880.webp' /></p><p>

பிள்ளைகளின் பேச்சு, நடத்தை மற்றும் நடமாட்டங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்குமாறும் அவர் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.</p><h2>போதைப்பொருள் பாவனையால் பறிபோன உயிர்கள்</h2><p>

இதற்கிடையில், போதைப்பொருள் பரவல் காரணமாக 2025-ஆம் ஆண்டில் 175 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், அவர்களில் 172 பேர் ஆண்கள் மற்றும் மூன்று பேர் பெண்கள் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab1b08f-2531-4230-a612-accabe46d903/26-6aa2c56de6fe5.webp' /></p><p>
</p><p>
மேலும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் இன்று அர்ச்சுனா எம்.பியால் ஏற்பட்ட சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commotion-caused-by-mp-arjuna-in-parliament-today-1789048062"></link>
            <id>https://ibctamil.com/article/commotion-caused-by-mp-arjuna-in-parliament-today-1789048062</id>
            <summary type="text">நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், “ஆடு திருடர்களையும், போன் திருடர்களையும் சபையில் அமர வைத்துள்ள இந்த அரசாங்கம், குற்றவாளிகளை கூண்டிலிடுவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.</p><h2>யாழில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ள அனுர அரசு</h2><p>அத்துடன், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61d7733-2295-4d51-a056-daaec6d203d9/26-6aa2baa48c952.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தமக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

“எனக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதனை தெளிவுபடுத்தவும்.</p><p></p><h2>போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்</h2><p> போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்றைய ஆட்சியாளர்கள் போலியான விடயங்களை சோடித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d569b48-177a-4db2-8e93-433e4d5cb7d3/26-6aa2baa3d3dff.webp' /></p><p> </p><p>எனவே, உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கருத்துக்களை முன்வைக்கவும்” என இளங்குமரன் தெரிவித்தார்.

மேலும், குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
“உங்களது திருட்டுக் கூட்டங்கள் முதலில் அந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்” எனவும் இளங்குமரன் பதிலளித்தார்.
</p><p>
</p><h2>தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்</h2><p>இதன்போது அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, “இவர் இப்படித்தான் தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff7d349-6d1e-48de-9160-1eda34182a9a/26-6aa2baa32725d.webp' /></p><p> அதை நிறுத்துமாறு அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை மீறி நடந்துகொள்கின்றார். இவ்வாறு பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுமாறும், தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>

“நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுங்கள். குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்றேன். அப்படியானால் அனைவரும் பதவி விலகுவீர்களா?” எனவும் அர்ச்சுனா இராமநாதன் சவால் விடுத்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கையருக்கு கிடைக்கப்போகும் பெருந்தொகை இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-who-die-working-abroad-increased-1789046146"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-who-die-working-abroad-increased-1789046146</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களுக்கான மரண இழப்பீட்டை ரூ. 2 மில்லியனாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களுக்கான மரண இழப்பீட்டை ரூ. 2 மில்லியனாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p><p>வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழந்த 50 வெளிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
</p><p>
</p><h2>இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை</h2><p>முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 600,000 வழங்கி வந்தது.

தற்போது இந்தத் தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0916b9-7e7f-48ed-8fba-b0c63f77238d/26-6aa2b2505e3f3.webp' /></p><p>
</p><p>
ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் ஒரு துரதிஷ்டவசமான காரணத்தால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இந்த நிலைமையைக் குறைப்பதற்காக, குழுத் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>ஆண்டுதோறும் 8 பில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

“வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். பணியகம் ஏற்கனவே அவர்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது, மேலும் நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8241f561-704e-4964-b5db-85a008e26919/26-6aa2b24faaf0e.webp' /></p><p> இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும். இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன, மேலும் அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகிறது. </p><p>கூடுதலாக, பணியகம் தற்போது பணியாளர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.”&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி : பாயப்போகும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743"></link>
            <id>https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (10) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி, தான் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணான சாட்சியத்தை அளித்திருந்ததை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.</p><h2>சாட்சி மீது நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பொய்ச் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d6c431-a297-41bc-a4af-6fc7a27ecb78/26-6aa29eba4553e.webp' /></p><p>
</p><p>
பின்னர், அந்த சாட்சியைப் பிணையில் விடுவிக்க செல்ல உத்தரவிட்டது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukondan-massacre-1789045315"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukondan-massacre-1789045315</id>
            <summary type="text">ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கிழக்கு மண் சிந்திய குருதி அளவற்றது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் இனப்படுகொலைகளையும் காணாமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கிழக்கு மண் சிந்திய குருதி அளவற்றது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் இனப்படுகொலைகளையும் காணாமல் ஆக்கல்களையும் எதிர்கொண்டது. </p><p>அந்த ஆண்டிலும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமை, பாதுகாப்பு மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தின. </p><p>அந்த வரலாற்றில் 1990ஆம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை முக்கியமானதாகும்.</p><p></p><h2>சத்துருக்கொண்டான் எனும் வடு</h2><p>
</p><p>
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு நான்கு நாட்களே கடந்திருந்த நிலையில், மட்டக்களப்பை அடுத்த சத்துருக்கொண்டான் பகுதியில் தமிழ் மக்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p> </p><p>இன்று அந்தப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p>மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சத்துருக்கொண்டான் பிரதேசம் ஊறணி, பிள்ளையாரடி, பனிச்சையடி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியது. </p><p>1990ஆம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதிகளை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.</p><p> மாலை சுமார் 5.30 மணியளவில் வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமில் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இராணுவச் சீருடையில் வந்த ஒருவர் மக்களுக்கு அறிவித்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இராணுவத்தின் அழைப்பை நிராகரித்தால் பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் முகாமுக்குச் சென்றனர். அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் முதியவர்கள் உட்பட பலர் லொறிகளில் ஏற்றப்பட்டனர்.</p><p> பின்னர் ஆண்கள், பெண்கள் எனப் பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக நினைத்த மக்கள், தாங்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைக்குள் கொண்டு செல்லப்பட்டிருந்ததை அறிய முடியவில்லை.</p><p></p><h2>சிறுவர்களையும் விட்டுவைக்காத கொடூரம்</h2><p>அன்றிரவு சுமார் 7 மணியளவில் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p>வாள்கள் மற்றும் கத்திகளால் வெட்டியும் குத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும் சாட்சியங்கள் கூறுகின்றன. </p><p>குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக சிறுவர்களின் கைகளைப் பின்னால் கட்டி அவர்களை கத்தியால் குத்திக் கொன்றதாக உயிர்தப்பிய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.</p><p> படுகொலையில் 184 பேர் கொல்லப்பட்டதாக பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் பதிவு செய்யப்பட்டது.</p><p> அவர்களில் ஐந்து கைக்குழந்தைகள், பத்து வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 85 பெண்கள் மற்றும் 28 முதியவர்கள் அடங்கியிருந்தனர். ஒரே இரவில் ஒரு கிராமத்தின் குடும்பங்கள் அழிக்கப்பட்டன. மறுநாள் வரை வின்சன் டிப்போ தோட்டப் பகுதியில் எரிந்த நெருப்பையும் புகையையும் அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.</p><p></p><h2>சாட்சியாக உயிர் தப்பிய கிருஷ்ணகுமார்</h2><p>படுகொலையை முழுமையாக மறைத்துவிட முடியாமல் செய்த முக்கியமான சாட்சியாக கந்தசாமி கிருஷ்ணகுமார் உயிர்தப்பினார். மக்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர் தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானார்.</p><p> </p><p>இறந்துவிட்டதாகக் கருதி மற்ற உடல்களுடன் வீசப்பட்ட நிலையில், உயிருடன் இருந்த அவர் அங்கிருந்து தப்பி வேலிக்கரையை நோக்கி ஊர்ந்து சென்று புதருக்குள் மறைந்துகொண்டார். </p><p>மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
அவரை வைத்தியசாலையிலிருந்து இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் செல்ல முயன்றதாகவும், குறித்த மதகுரு அவரைப் பாதுகாத்து இரகசியமாக சிகிச்சை அளித்து காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>பின்னர் கிருஷ்ணகுமார் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பான விசாரணைகளில் முக்கியமான சாட்சியங்களை வழங்கினார். </p><p>அவர் உயிர்தப்பியிருக்காவிட்டால் அந்த இரவில் என்ன நடந்தது என்பதை நிரூபிக்கும் முக்கியமான நேரடி சாட்சியம் ஒன்று இழக்கப்பட்டிருக்கும்.</p><p></p><h2>விசாரணைகளால் வெளிப்பட்ட உண்மை</h2><p>படுகொலை இடம்பெற்ற பின்னர் வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமை மக்கள் அணுகுவதற்கே அஞ்சினர். சில நாட்களுக்குப் பின்னர் தங்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்கள் எங்கே என இராணுவத்தினரிடம் மக்கள் கேள்வி எழுப்பினர்.</p><p> </p><p>காணாமல் போனவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. மனித உரிமை அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தரப்புகள் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டன.
</p><p>
இராணுவத்தினர் தமக்கு இதில் தொடர்பில்லை என மறுத்தபோதிலும், பின்னர் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் சம்பவத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்தன. </p><p>அன்றைய அரசாங்கம் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையையும் முன்னெடுத்தது.</p><p> ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிஷ்ணர் தலைமையிலான விசாரணையில் படுகொலை இடம்பெற்றதற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.&nbsp;</p><p></p><h2>பன்னாட்டு ஆய்வுகளிலும் பதிவான படுகொலை&nbsp;</h2><p>சத்துருக்கொண்டான் படுகொலை இலங்கைக்குள் மட்டுமல்லாது பன்னாட்டு மனித உரிமை ஆய்வுகளிலும் பதிவானது.</p><p> </p><p>அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆய்வுகளில் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கல்கள் ஆவணப்படுத்தப்பட்டன. </p><p>அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர்களும் இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட பொதுமக்கள் அழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு மனித உரிமைத் தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. </p><p>விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அரச படைகளின் பொறுப்பு மற்றும் கட்டளைப் பொறுப்பு தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.</p><h2>நீதி மறுக்கப்பட்டு 36 ஆண்டுகள்</h2><p>சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. விசாரணைகள் இடம்பெற்றன; சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன; படுகொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது.</p><p> </p><p>இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயுதமற்ற பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தில் கூட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலை, இலங்கையில் போர்க்காலக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு படுகொலைகளுடன் இணைந்து பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும். </p><p>குறிப்பாக குழந்தைகள் உட்பட பொதுமக்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் படுகொலை செய்யப்பட்டவர்களினதும் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்தை மேலும் நீடிக்கச் செய்கிறது.
</p><p>
36 ஆண்டுகள் கடந்தாலும் சத்துருக்கொண்டான் மறக்கப்படவில்லை. அங்கு கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு முதியவரும் ஒரு எண்ணிக்கை அல்ல; அவர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒரு சமூகத்தின் அங்கங்கள். </p><p>அவர்களின் மரணம் குறித்த உண்மையும் அதற்கான பொறுப்பும் முழுமையாக வெளிப்படுத்தப்படும் வரை சத்துருக்கொண்டான் படுகொலை முடிந்துபோன வரலாறாக மாறாது. </p><p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உள்ளிட்ட போர்க்காலக் குற்றங்களுக்கு நீதி கோரும் போராட்டத்தில் சத்துருக்கொண்டான் படுகொலையும் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையாக முன்வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T13:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் பேரணியில் பங்கேற்க விமலுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-weerawansa-invited-rally-of-slpp-1789042819"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-weerawansa-invited-rally-of-slpp-1789042819</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசத்திற்கும் இடையேயான சந்திப்பு இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசத்திற்கும் இடையேயான சந்திப்பு இன்று (10) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
</p><p>
சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 12ஆம் திகதி அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க இந்த சந்திப்பில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.</p><h2>கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவு</h2><p>
</p><p>
இருப்பினும், இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து இன்று (10) கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a06194f-4fcc-42ae-963a-e9803e965095/26-6aa2a3f24b556.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிவேண்டி விசேட மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-petition-regarding-sathurukondan-massacre-1789043184"></link>
            <id>https://ibctamil.com/article/special-petition-regarding-sathurukondan-massacre-1789043184</id>
            <summary type="text">மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் அமைந்துள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி வளாகத்தில், 
நேற்றைய உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தலில் வெளிப்படுத்தப்பட்ட மனுவில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 186 பொதுமக்கள் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் 85 பெண்களும், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்களும், 25 வயோதிபர்களும் அடங்கியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர், முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டதாக நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ulxIE5d8fDo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வழங்க்கப்படவுள்ள சிறப்பு உளநல பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-is-world-wrong-decition-prevention-day-1789041641"></link>
            <id>https://ibctamil.com/article/today-is-world-wrong-decition-prevention-day-1789041641</id>
            <summary type="text">தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் எனும் தொனிப்பொருளில் உளநல ஆற்றுதல் பயிற்சி யாழில் வழங்க்கப்படுகின்றது.</p><p>இதன்படி&nbsp;இதன் ஒரு பகுதியாக, நாளை பிற்பகல் 3 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் உளநல மருத்துவர்களால் சிவ சகோதரர்களுக்கு முதற்கட்ட உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.</p><p>இந்தப் பயிற்சியில் சிவ சகோதரர்களுடன் ஆர்வமுள்ள சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையரும் கலந்துகொள்ள முடியுமென ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
மேலதிக தகவல்களுக்கு நிர்வாக உத்தியோகத்தரை 077 694 3179 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி : ஆறு ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643</id>
            <summary type="text">அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அந்த ஆசிரியர்களை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச செயலகத்தின் பிரிவு பொறுப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.</p><p>






</p><h2>&nbsp;ஷமோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம்</h2><p>ஹட்டன் கோட்ட விசாரணைப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், இந்த நிதி மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர். </p><p>மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையது என்பதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355c0c12-dd85-4e6d-a875-8ddf59567d3a/26-6aa28c3063f66.webp' /></p><p>
</p><p>
நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகத்திற்குரிய இரண்டு அதிகாரிகளும் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் இந்த பணத்தை வரவு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;6 ஆசிரியர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p> சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு அறிக்கைகளையும் பரிசோதிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்ததையடுத்து, இந்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12298c1-0550-4830-a1c8-acbafd64582b/26-6aa28c3119bd8.webp' /></p><p>
</p><p>





இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் சகோதரரின் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் இருந்த அந்த சகோதரரின் சேவையையும் தற்காலிகமாக இடைநிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T12:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 ஆண்டுகளாக காணாமல் போன தனது மகனை தேடும் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-father-searching-for-his-son-for-eight-years-1789036575"></link>
            <id>https://ibctamil.com/article/a-father-searching-for-his-son-for-eight-years-1789036575</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற இவர், அதன் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அவர் காணாமற்போனமை தொடர்பாக 10.03.2018 அன்று பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>குடும்பத்தினர் கவலை</h2><p>

காணாமற்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரையில் அவரது கையடக்கத் தொலைபேசி இயங்கியதாகவும், அந்தக் காலப்பகுதியில் பலர் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0db1d163-fe2d-426d-a084-fbc67009dc80/26-6aa288214278f.webp' /></p><p> </p><p>எனினும், அந்த உரையாடல்களில் காணாமற்போன செல்வராசா அருந்தவச்செல்வன் நேரடியாகப் பேசியதாகத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், தனது கணவர் காணாமற்போனமை தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமது உறவினரின் நிலைமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், அவர் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் அல்லது அவரது இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு (<b>077 432 3487</b>) குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-cooperates-with-mahinda-and-namal-1789038301"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-cooperates-with-mahinda-and-namal-1789038301</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்திய அவர், இவ்வாறான வித்தியாசமான பதிவுகள் தொடர்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சஜித் அழைத்தால் நான் செல்வேன்</h2><p>நாங்கள் நிற்பது அரசியல் மேடை. சஜித் ஜனாதிபதியாக வந்து தன்னை வருமாறு அழைத்தால் நான் செல்வேன். இதுதான் அரசியல். இது ஒரு பொது எதிர்கட்சி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b67665be-bb9c-45a3-9ad0-dc0bba1bcc50/26-6aa293020d9be.webp' /></p><p>எந்த ஒரு எதிர்கட்சி உறுப்பினருக்கும் நான் ஒத்துழைப்பை வழங்குவேன். நாமலும் எனக்கு அவ்வாறேதான்.
</p><p>

அவர் திருடியிருப்பார் என்றால் அவற்றுக்கு நான் துனைபோக மாட்டேன்.

நான் மேடைகளுக்கு ஏறுவது என மக்கள் சார்பாக.
</p><p>
இனப்படுகொளையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக சிலர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

வடக்கில் தலைவன் இல்லாது இருக்கும் ஒரு சமூகத்திற்காக யாருடன் சென்று அரசியலை கதைக்கலாம்? இது ஒரு அரசியல் மேடை. இது போர் அல்ல.</p><p>
இந்த அரசியல் மேடையில் அநுர அரசாங்கம் வடக்கு மக்களுக்கு நன்மையை செய்யும் என நம்பிக்கை இல்லை.” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:57:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-imposed-for-selling-non-sls-cords-1789038457"></link>
            <id>https://ibctamil.com/article/fine-imposed-for-selling-non-sls-cords-1789038457</id>
            <summary type="text">லங்கை தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய SLS தரச்சான்று இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வயர்களை (Extension Cords) விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ்&amp;nbsp;வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கை தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய SLS தரச்சான்று இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வயர்களை (Extension Cords) விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ்&nbsp;வர்த்தக பண்டாரவளை பகுதியிலுள்ள நிறுவனமொன்றுக்கு ரூ. 400,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கட்டாய SLS தரச்சான்று தேவைப்படும் மின் நீட்டிப்பு வயர்கள் SLS இலச்சினை இன்றி 2,790 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.</p><p></p><h2>4 இலட்சம் ரூபாய் அபராதம்</h2><p>
</p><p>
மேலும், குறித்த பொருட்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காமை மற்றும் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட சட்டபூர்வ பற்றுச்சீட்டுகள் இன்றி பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe659a9c-82af-470d-a38b-d2d2d5c8af2a/26-6aa296075370f.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தில் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>கட்டாய SLS தரச்சான்று பெற வேண்டிய மின் உபகரணங்கள்
</h2><p>
2017 டிசம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்ட 2048/39 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 63ஆம் கட்டளையின் கீழ், 250 வோல்ட்டுக்கு மேற்படாத சில மின் உபகரணங்களுக்கு கட்டாய SLS தரச்சான்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc52ce82-408f-41c3-95e9-8dbf247fda65/26-6aa2960807826.webp' /></p><p>

அதன்படி, Plugs, Socket Outlets, Extension Cords, Adaptors, Fused Connection Units, Conversion Plugs மற்றும் Cable Reels ஆகியவற்றுக்கு SLS தரச்சான்று இருப்பது கட்டாயமாகும்.
</p><p>
மின் விபத்துகள் மற்றும் தீ விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், இவ்வாறான மின் உபகரணங்களை வாங்கும்போது அவற்றில் SLS தரச்சான்று இலச்சினை மற்றும் உத்தரவாதக் காலம் உள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும்போது சட்டபூர்வமான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/coal-losses-mahinda-and-maithri-tenure-414-crore-1789039139"></link>
            <id>https://ibctamil.com/article/coal-losses-mahinda-and-maithri-tenure-414-crore-1789039139</id>
            <summary type="text">2009 முதல் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் நொரோசொல லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக லங்கா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 முதல் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் நொரோசொல லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக லங்கா நிலக்கரி நிறுவனத்திற்கு ரூ. 414 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு சிறப்புத் தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

எரிசக்தி மீதான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் வேண்டுகோளின் பேரில், 2009 முதல் 2016 வரை லங்கா நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள் குறித்து இந்த சிறப்புத் தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><h2>வருவாய் இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல்&nbsp;</h2><p>ரூ. 414 கோடிக்கும் அதிகமான இழப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்புகள், மேலதிக செலவுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல் செயல்முறை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த சிறப்புத் தணிக்கை அறிக்கையில் தலைமைத் தணிக்கையாளர் முடிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920991ea-515b-4ca6-b2ee-f65be912c23e/26-6aa29436a8579.webp' /></p><p>
</p><p>
போதுமான நிலக்கரியைக் கொள்முதல் செய்ய இயலாமை மற்றும் மின் நிலையத்தைக் குறைக்கப்பட்ட திறனில் இயக்க வேண்டியதன் காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் குறித்து இந்தத் தணிக்கை அறிக்கை அதிக கவனம் செலுத்தியுள்ளது.</p><p></p><h2>கூடுதல் செலவுகள் ரூ. 1,25 கோடி</h2><p>
</p><p>
போதுமான நிலக்கரியைப் பெற இயலாததாலும், மின் உற்பத்தி நிலையத்தைக் குறைக்கப்பட்ட திறனில் இயக்க வேண்டியிருந்ததாலும் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் ரூ. 1,25 கோடி என அமைச்சகச் செயலாளர் கணக்கிட்டிருந்ததாகத் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecee217c-6dcc-41ba-837e-4bc623d1f7bc/26-6aa294375c13a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை : நீதிமன்றம் விதித்த அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-48-000-fine-imposed-on-curd-sellers-in-jaffna-1789037379"></link>
            <id>https://ibctamil.com/article/rs-48-000-fine-imposed-on-curd-sellers-in-jaffna-1789037379</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு&amp;nbsp;48,000 ரூபாய் அபராதம் விதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு&nbsp;48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒருவருக்கு தலா 24,000
ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சந்நிதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் உதயபாலா, சார்ல்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>மல்லாகம் நீதவான் நீதிமன்றம்</h2><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c241b799-8e8e-47a6-a89a-cbf3d4007d43/26-6aa291bd6010a.webp' /></p><p>இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கும் எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலனால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:21:32+00:00</updated>
        </entry>
    </feed>
