<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-27T14:33:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862"></link>
            <id>https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862</id>
            <summary type="text">காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, பொதுமக்கள் வழமைபோன்று இணையவழியில் காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி பிற்பகல் 12.50 மணியளவில் குறித்த தரவு முறைமை செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் முறைமை மீளமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்</h2><p>

எனினும், ஆகஸ்ட் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தரவு முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தை இணையவழியில் மீண்டும் சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f904e9-253b-430b-b6c6-acf21cc3636e/26-6a90419001a97.webp' /></p><p>புதிய விண்ணப்பத்திற்கான உரிய அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் காவல்துறை அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னைய விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.5,100 கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்த பயன்படுத்திய கடன் அட்டைக்கு மீளச் செலுத்தப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளை சிதைக்கும் கலாசார சீர்கேடு! எழுந்துள்ள கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693"></link>
            <id>https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693</id>
            <summary type="text">சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட பாரம்பரிய நடைமுறைகள் முறையாகப் பேணப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
</p><p>திருமணம், இறப்பு உள்ளிட்ட சடங்குகளில் இடம்பெறும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு முரணான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.</p><p>இது தொடர்பில் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9ODhOhjET4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அரசியல் வாதிகளின் தொடர்பை அம்பலபடுத்திய சிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055"></link>
            <id>https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055</id>
            <summary type="text">தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>
சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>10 அரசியல்வாதிகள்</h2><p>
விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் இருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4238dce6-73dc-4d0c-bab9-9157268ca8da/26-6a902a012aa23.webp' /></p><p>
இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர்,&nbsp; பாசிக்கிற்கு சட்டவிரோதமாக காணிகளை பெற்றுக்கொடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த நடவடிக்கைகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர், பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நீண்ட நேரமாக விசாரணை</h2><p>நீண்ட காலமாகவே சிரான் பாசிக் இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறைமா அதிபர்&nbsp; பிரியந்த வீரசூரிய,சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979"></link>
            <id>https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979</id>
            <summary type="text">இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​ஜூன் 2026 வரையிலான ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​</p><p>ஜூன் 2026 வரையிலான ஒரு ஆண்டில் அகதி உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை 21
சதவீதம் குறைந்து 86,000 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய சாதாரண அளவை விட
அதிகமாகவே உள்ளது.

​</p><p></p><h2>சிறிய படகுகள்&nbsp;</h2><p>அதேபோல், சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்தவர்களின் எண்ணிக்கையும்
23 சதவீதம் குறைந்து 33,000 ஆக பதிவாகியுள்ளது.
</p><p>
இவர்களில் எரித்திரியா, சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய
நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde74349-a7e3-470c-b14c-0ab48220ac9a/26-6a9038aa5bfab.webp' /></p><p>அகதிகளுக்கான விடுதி பயன்பாடும் பாதியாகக் குறைந்துள்ளது, கடந்த ஜூன் மாத
நிலவரப்படி, சுமார் 16,000 அகதிகள் மட்டுமே விடுதிகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

​</p><p>கன்சர்வேடிவ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளின்
காரணமாக வேலை, கல்வி மற்றும் குடும்ப விசாகளின் எண்ணிக்கையும்
சரிவடைந்துள்ளது.

​</p><p>இந்தத் தரவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா
மஹ்மூத், அரசாங்கம் இதில் திருப்தியடைந்து விடவில்லை இன்னும் செய்ய
வேண்டியவை நிறைய உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

​</p><p>அதேவேளை, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் அகதிகள் மேல்முறையீட்டு
வழக்குகளை விரைந்து முடிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக
இருக்கும் என இடம்பெயர்வு கண்காணிப்பகம் (Migration Observatory)
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667"></link>
            <id>https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ​​ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை</h2><p>இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89bbb263-6c65-420f-b29a-1d4e64a31eba/26-6a90327ca6cb9.webp' /></p><p>“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T12:50:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கிய 350 பேர் மீட்பு...! தொடரும் மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/350-rescued-from-nepal-floods-1787828553"></link>
            <id>https://ibctamil.com/article/350-rescued-from-nepal-floods-1787828553</id>
            <summary type="text">நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பாதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். </p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 50 வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>தரைப்படையினர்&nbsp;</h2><p>மீட்கப்பட்ட 50 வெளிநாட்டவர்களில் 30 இந்தியர்கள், 8 சீனர்கள், 8 கொரியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 2 இத்தாலியர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8278132-0193-4d62-930a-2c2253e0e348/26-6a9028947971e.webp' /></p><p>வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தரைப்படையினர் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் அவசர மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மாதத்திற்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-overcrowding-to-be-reduced-within-a-month-1787829780"></link>
            <id>https://ibctamil.com/article/prison-overcrowding-to-be-reduced-within-a-month-1787829780</id>
            <summary type="text">அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரச பகுப்பாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை இன்று (27) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/804f385d-8226-4e48-a271-e908b4f93601/26-6a901f5e650b2.webp' /></p><p>
</p><p>
இந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு 70 அதிகாரிகள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>மேலும், கைதிகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கூட்டு பொறிமுறை ஒன்றையும் அரசாங்கம் நிறுவியுள்ளது“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை முறைகேடுகளில் சிக்கிய 461 அதிகாரிகளின் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/461-officials-caught-in-examination-irregularities-1787818168"></link>
            <id>https://ibctamil.com/article/461-officials-caught-in-examination-irregularities-1787818168</id>
            <summary type="text">பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை கடமைகளுக்காக அதிகாரிகளை நியமிக்கும் போது கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் கணக்காய்வின்போது கண்டறியப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 461 அதிகாரிகளில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும், 182 அதிகாரிகளின் பரீட்சை பணித் தடையை ஆரம்பித்த திகதியும் குறித்த பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை எனவும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதில்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியுடன் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக, இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280a3ac2-399c-45e8-8036-ca8df0f5323b/26-6a8ff59f9743f.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த பெயர்கள் நீக்கப்பட்டமை, கறுப்புப் பட்டியலை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாக, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை பணிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
போலி பரீட்சை பெறுபேறுகள் தயாரித்ததாக குற்றச்சாட்டு
இதற்கிடையில், 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய ஐந்து பரீட்சார்த்திகள், போலியான பரீட்சை பெறுபேறுகளைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், தொடர்புடைய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், க.பொ.த. சாதாரண தரம் 2024 (2025) பரீட்சையின் நான்கு பரீட்சை நிலையங்களில், பரீட்சை நடைபெறும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய ஆறு மேற்பார்வையாளர்களின் தொலைபேசிகள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T11:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீரர் சோனல் தினுஷவை சச்சினுடன் ஒப்பிட்ட BCCI துணைத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758</id>
            <summary type="text">இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளப் பதிவில் சுக்லா, “இலங்கையின் இந்த சோனல் அற்புதமான வீரர். டெண்டுல்கரைப் போலத் தெரிகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாக முடியும்” எனக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட்டையும் பதிவில் இணைத்துள்ளார்.</p><p>
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினுஷ தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் பின்னணியிலேயே சுக்லாவின் இந்தப் பாராட்டு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>100 ஓட்டங்கள்</h2><p>நான்கு இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை தினுஷ பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d936d7-91e2-47f0-a303-1ff600618ccb/26-6a90069061d4c.webp' /></p><p>
</p><p>இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 100 ஓட்டங்களையும், இரண்டாம் இனிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.</p><p>மேலும், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில்&nbsp; இரண்டாவது இன்னிங்ஸான இன்றைய இறுதி நாளில் மற்றொரு அரைச்சதம் கடந்து தற்போதுவரை 98 ஓட்டங்களை ஆட்டமிக்காது பெற்றுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This Sonal of Srilanka is an amazing player. Looking like Tendulkar. Can be a wonderful test player in international cricket. <a href="https://x.com/OfficialSLC?ref_src=twsrc%5Etfw">@OfficialSLC</a></p>&mdash; Rajeev Shukla (@ShuklaRajiv) <a href="https://x.com/ShuklaRajiv/status/2092835598235304013?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிய நிலையில், தினுஷ கடைநிலை துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் துடுப்படுத்தாடி வருகிறார்.</p><p>இந்தத் தொடரில் தினுஷவின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட விதமும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
</p><p>
25 வயதான சோனல் தினுஷவின் இந்த ஆட்டம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T11:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்ட அனுமதி : அரச தரப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permission-to-build-hous-on-released-lands-jaffna-1787827826"></link>
            <id>https://ibctamil.com/article/permission-to-build-hous-on-released-lands-jaffna-1787827826</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக&nbsp;கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதியில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவு</h2><p>தற்போது ஜனாதிபதியே அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட தனியார் காணிகளில் வீடுகள் தேவையெனின் கட்ட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40de110-a8e0-4352-8695-5dffa32a1e9b/26-6a9018faec7ce.webp' /></p><p>


அரசாங்க வீட்டுத் திட்டம் தேவையானவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியானவர்களுக்கு வீட்டுத் திட்டம் கிடைக்கும்“ என மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saiva-leadership-gap-in-sri-lanka-demands-action-1787824184"></link>
            <id>https://ibctamil.com/article/saiva-leadership-gap-in-sri-lanka-demands-action-1787824184</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்டுப் பாரம்பரியமும் நிலைபெற்றுள்ளது. </p><p>அதாவது உலகளவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்து மதத்தின் முதன்மையான பிரிவான சைவ சமயம், இலங்கையின் பண்பாட்டு அடையாளத்தோடு பிரிக்க முடியாதவாறு வரலாற்று ரீதியாக பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் சைவ சமயம் ஒரு கடுமையான தலைமைத்துவ இடைவெளியையும் மற்றும் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு நிற்கிறது.</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>தலைமைத்துவ இடைவெளியும் நடைமுறைச் சவால்களும்...</u></b></h5><p>இலங்கையிலுள்ள ஏனைய முதன்மைச் சமயங்களை உற்றுநோக்கினால் அவற்றின் குரலாகப் பேசுவதற்கும், அரசிடமும் சர்வதேச மட்டத்திலும் அந்தச்சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வமான தலைமைப் பீடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.</p><ul><li>பௌத்த சமயம்:மகாநாயக்க தேரர்கள்</li><li>கிறிஸ்தவ சமயம்: கர்தினால் மற்றும் ஆயர் பேரவை</li><li>இஸ்லாமிய சமயம்: அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை</li></ul><p>ஆனால், சைவ சமயத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான ஆலயங்களும், நூற்றுக்கணக்கான சைவ அமைப்புகளும் இயங்கி வந்தபோதிலும், "சைவ சமயத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி இவர்தான் என்று அரச நிகழ்வுகளிலோ அல்லது தேசிய அளவிலான கொள்கை முடிவுகளின்போதோ முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுவான உச்சக்கட்டத் தலைமை இல்லாத பரிதாப நிலை நீடித்து வருகிறது.</p><p>இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு இல்லாததால் சைவ சமய சமூகத்தின் உரிமைகள், ஆலயப் பாதுகாப்பு மற்றும் சமய வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த குரலாகக் குரல் கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது . </p><p>தென்கயிலை ஆதீனமும் தலைமைத்துவ முன்மொழிவும்
இப்படியான சூழலில்தான், சைவ சமயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அனுபவமிக்க, ஆளுமைமிக்க ஒரு தலைமையின் தேவை தீவிரமாக உணரப்படுகிறது. </p><p>வடக்கு கிழக்கில் இயங்கும் பல சைவ அமைப்புகள், திருகோணமலையை மையமாகக் கொண்டு இயங்கும் தென்கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களை இந்த அமைப்பிற்கான முதன்மைத் தலைமையாக ஏற்றுக் கொள்ளலாம் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.</p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாகத் துறவற வாழ்வை மேற்கொண்டு, சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் தங்களை அர்ப்பணித்துள்ள தவத்திரு அகத்தியர் அடிகளார், தற்போதைய துறவிகளில் நீண்ட அனுபவமும் சமய முதிர்ச்சியும் கொண்டவராக விளங்குகிறார்.</p><p>பாரம்பரியமிக்க நல்லூர் ஆதீனம் போன்ற பிற பீடங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் நீண்டகாலத் துறவு வாழ்க்கையையும், கிழக்கு மற்றும் வடக்கு சமூகங்களுடனான ஆழமான தொடர்பையும் கருத்தில் கொண்டு அகத்தியர் அடிகளாரை முதன்மைப்படுத்துவது பொருத்தமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.</p><p>
</p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><b><u>எதிர்கால நோக்கும் தீர்வும்</u></b></h5><p>எப்படியாக இருந்தாலும் தனிநபர் ஒருவரைத் தலைவராக நியமிப்பதில் எழும் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கவும், அனைத்துப் பகுதிச் சைவர்களையும் ஒருங்கிணைக்கவும் பின்வரும் வழிமுறைகளைச் நாம் செயல்படுத்தலாம்:</p><ul><li>அகில இலங்கை சைவ சமய பீடம்: தென்கயிலை ஆதீனம், நல்லூர் ஆதீனம், மற்றும் ஏனைய துறவிகள் மற்றும் சைவப் பெரியார்களை உள்ளடக்கிய ஒரு துறவிகள் சபை அல்லது உச்சக்கட்ட சைவ பீடம்&nbsp; உருவாக்கப்பட வேண்டும்.</li><li>ஒருங்கிணைந்த குரல்: இந்தச் சபையின் முதன்மைப் பொறுப்பை அனுபவ முதிர்ச்சி கொண்ட துறவிகளிடம் வழங்கி அரச மட்டத்திலான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.</li></ul><p>தொன்மையான சைவப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்குச் சமய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கவும் இலங்கையில் சைவ சமயத்திற்கென ஒரு வலுவான கட்டமைக்கப்பட்ட தலைமை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.</p><p>இந்த விவகாரத்தில் ஈழத்து சைவசமயிகள் விரைந்து ஒரு முடிவெடுக்காதவிடத்து 
ஆகப்பெரும் விளைவுகளை எதிர்காலங்களில் சந்திக்க நேரிடும் என்பதனை தவிர்க்கமுடியாது.</p><p>
</p><p>
</p><p>
</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிச்சயம் : யாழில் அமைச்சர் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/punishment-for-involved-in-the-chemmani-mass-grave-1787825276"></link>
            <id>https://ibctamil.com/article/punishment-for-involved-in-the-chemmani-mass-grave-1787825276</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் மனிதப் புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்</h2><p>
</p><p>
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bcf8957-fa91-4ffc-8990-2296c2029601/26-6a9011b710336.webp' /></p><p>

இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.</p><p>


அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 585 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது“ என தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865"></link>
            <id>https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&amp;nbsp; 200க்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&nbsp; 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று (26) 10 தொன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.</p><p>
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“நேபாளத்துக்காக 37.5 தொன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவு பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜெய்சங்கரின் பதிவு&nbsp;</h2><p> இந்தியா - நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A second flight has just taken off, carrying 37.5 tonnes of HADR material, medicines &amp; food packets for Nepal.<br><br>India remains in close and continuous touch with the Nepalese authorities. We will continue to strongly support the ongoing relief efforts.<br><br>🇮🇳🇳🇵 <a href="https://t.co/4m46leqfkC">pic.twitter.com/4m46leqfkC</a></p>&mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href="https://x.com/DrSJaishankar/status/2092849615360114978?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>இதேவேளை முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம். </p><p>உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி&nbsp; நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.</p><p>அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355"></link>
            <id>https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இரு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள விசேட தீர்மான மனுவை நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
BASL பொருளாளர் T.M.S. பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் முன்னதாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து விசேட தீர்மான மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் BASL மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.</p><p></p><h2>மனு மீதான விசாரணை</h2><p>இந்நிலையில் நிபுண ஆரச்சி தனது மனுவில், இந்த வழக்கில் இடையீட்டாளராக இணைந்து, சட்டத்தரணி ஊடாக BASL மனு மீதான விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e4c1ef-5fd8-4d39-93fb-ed04368b1721/26-6a900ccd71995.webp' /></p><p>மேலும், BASL மனுதாரர்கள் முன்வைத்துள்ள பல முக்கிய வாதங்களை அவர் நிராகரித்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை, சட்ட அடிப்படையற்றவை அல்லது சட்டரீதியாக நிலைக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T10:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்...! சஜித் தரப்பு எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/take-control-to-protect-democracy-harshana-1787820618"></link>
            <id>https://ibctamil.com/article/take-control-to-protect-democracy-harshana-1787820618</id>
            <summary type="text">இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>

கம்பஹாவில் நேற்று (26-08-2026) மக்கள் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மையான மக்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும் அதனை
யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச்
சாத்தியமற்றது. </p><p>ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be4fd669-e286-40f1-9c52-c366347efe66/26-6a9004fa68cef.webp' /></p><p>தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசு
நிறைவேற்றவில்லை.</p><p> மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல்,
நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் எச்கரிக்கப்படவில்லை.</p><p> </p><p></p><h2>மக்கள் விடுதலை&nbsp;</h2><p>இதனால்
இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன்
மூலம் வடகொரியாவைப் போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகாரப்
போக்கை நோக்கி அரசு நகர முற்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998edbaf-a06c-4f95-88a0-f3f4376a602c/26-6a9004f9b3c83.webp' /></p><p>மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட
முடியாமல் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின்
உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
</p><p>
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும் மற்றும் சர்வாதிகார
ஆட்சியை வீழ்த்தவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட
வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701"></link>
            <id>https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701</id>
            <summary type="text">தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரர்களிடம் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.</p><p>

மரணப்படுக்கையில் இருந்த சிவகுமாரனைப் பார்த்து கவலையடைந்த சகோதரியிடம், ”ஏன் அழுகிறாய், நான் மீண்டும் உன் வயிற்றில் பிறப்பேன், இந்த மண்ணின் விடுதலைக்காக போராடுவேன்”என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழின விடுதலைக்காக போராடிய பொன் சிவகுமாரன் 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - உரும்பிராயில் பிறந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்டு 1974 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி உயிரிழந்தார்.</p><p>

ஈழப்போராட்ட வராற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த வீரரான பொன் சிவகுமாரன் உயர்தரத்தில் கல்வி கற்ற போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைக்கு எதிராக போராடி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சேவையாற்றியுள்ளார்.
</p><p>
மேலும் தியாகி பொன் சிவகுாரனின் மறைவின் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தியமை அக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AHIq_O-T3Ho" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:48:22+00:00</updated>
        </entry>
    </feed>
