<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-18T04:47:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலியில் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம் - அனுஷியா உள்ளிட்ட 5 பேருக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-summons-issued-palaly-land-release-protest-1787026703"></link>
            <id>https://ibctamil.com/article/court-summons-issued-palaly-land-release-protest-1787026703</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக பலாலி காவல்துறையால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
</p><p>காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை, உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றில் அறிக்கை</h2><p>
இதன்போது, பலாலி பிரதான வீதியின் T சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffcc286-756f-4218-8e3f-4a6980eadd97/26-6a83e3880dbe0.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினரால் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, MA/MC/PC/07381/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, குறித்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ea777e9-38f6-4220-8743-32bfc43aa3b1/26-6a83e388cbd21.webp' /></p><p>மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:46:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் உறவினரை இலக்குவைத்த துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட 5 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/murder-kanjipani-imran-relative-5-people-arrested-1787025916"></link>
            <id>https://ibctamil.com/article/murder-kanjipani-imran-relative-5-people-arrested-1787025916</id>
            <summary type="text">பாதாள உலக சூத்திரதாரியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக சூத்திரதாரியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட ஐந்து சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>கொலை தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த தகவலின்படி, கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் சந்தேக நபர்கள் நேற்று (17.08.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.</p><p></p><h2>கஞ்சிபானி இம்ரான்&nbsp;</h2><p>
</p><p>தற்போது பிரான்சில் வசிப்பதாகக் கருதப்படும் ‘குடு அஞ்சு’ (Kudu Anju) என்ற மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியால் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce1e9d2-672d-414a-9c43-99e94822e237/26-6a83df04b07ac.webp' /></p><p>

அதன்படி, கொழும்பு 15-ஐச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 23 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேக நபர்கள் 25 கிராம் 840 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
19, 25 மற்றும் 28 வயதுடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களும், 12 கிராம் 380 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
சந்தேகத்திற்குரிய மூவரும் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suranjith-wewita-appointed-as-sltda-s-new-chairman-1787025101"></link>
            <id>https://ibctamil.com/article/suranjith-wewita-appointed-as-sltda-s-new-chairman-1787025101</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதி செயலணியின் உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில் முனைவோராகவும் மதிப்பீடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.</p><p></p><h2>பதவி விலகிய முன்னாள் தலைவர்&nbsp;</h2><p> 

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவிட்ட, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ad297c-7dfe-463d-9342-b454f4c14ee0/26-6a83dfa8ce077.webp' /></p><p> </p><p>

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் நேற்று (17) தனது பதவியிலிருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-import-and-export-control-act-1787026460"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-import-and-export-control-act-1787026460</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(18.08.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(18.08.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 5.00 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்படவுள்ளன.</p><p>மாலை 5.00க்கு இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.</p><p>மாலை 5.00 முதல் 5.30 வரை எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AjTBAFdq0Rc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-18T04:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - பளையில் பயங்கரவாத பயிற்சி முகாம் - காவல்துறை தரப்பு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/igp-abt-secret-training-camp-in-palai-kilinochchi-1787019133"></link>
            <id>https://ibctamil.com/article/igp-abt-secret-training-camp-in-palai-kilinochchi-1787019133</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட வனப்பகுதியில் பயங்கரவாத முகாமோ அல்லது வெடிபொருள் உற்பத்தி நிலையமோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>
பளைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் விவசாயப் பண்ணை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது.&nbsp;இதில் கற்றாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். </p><p></p><h2>கடுமையான விசாரணை</h2><p>மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4137cbdf-1e79-4aa4-8ac2-bc177fce9592/26-6a83d8364ec9c.webp' /></p><p>இந்த விவசாயப் பண்ணை மற்றும் தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பணியாற்றுகின்றனர்.
</p><p>
காணியை முறையற்ற வகையில் பயன்படுத்தி அனுமதி பெறாமல் கட்டடங்களை நிர்மானம் செய்தமை தொடர்பில், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>

போலித் தகவல்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வோர் மீது கடுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>பயங்கரவாத முகாம் என சர்ச்சை</h2><p>
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அனைத்து கண்டங்களுக்கான மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3548a1ed-a2ee-4623-baa8-0ff7ea70708b/26-6a83d835989e3.webp' /></p><p>விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஓர் இடத்தை பயங்கரவாத முகாம் என சர்ச்சையை கிளப்பும் தரப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-expected-to-visit-sl-1787025854"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-expected-to-visit-sl-1787025854</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடக செய்திகள் வெளியிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளன.</p><p>

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.</p><h2>கூட்டு நடவடிக்கைகள்</h2><p> </p><p>

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ada012ae-7be6-4841-870e-bc05077fda7f/26-6a83dc26a04d7.webp' /></p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. </p><p>

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அவ்விஜயம் பின்னர் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்..</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T04:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-has-not-been-arrested-aruna-said-1787022442"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-has-not-been-arrested-aruna-said-1787022442</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுக்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பிரதான நபர்களில் ஒருவரான கஞ்சிப்பானி இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் கைது செய்யப்படவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுக்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பிரதான நபர்களில் ஒருவரான கஞ்சிப்பானி இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் கைது செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
கஞ்சிப்பானி இம்ரான் நேற்று முன்தினம் (16) இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சரிடம் ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>
</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டதாக என்னை மேற்கோள் காண்பித்து வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை. ஆனால் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>போலி கடவுச்சீட்டு</h2><p>
</p><p>

முன்னதாக கடந்த 2019 ஏபரல் 4ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானி இம்ரான் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி போலி கடவுச்சீட்டில் டுபாய் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da4fb8cd-f210-449c-9a24-8fc0a314df07/26-6a83d3655e4b6.webp' /></p><p>
</p><p>
போலி கடவுச்சீட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
2015இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிப்பானி இம்ரான், 2016 ஜனவரி 26 ஆம்திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>பிணையில் விடுதலை</h2><p> </p><p>இவ்வாறான நிலையில் 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியன்று அனைத்து வழக்குகளிலும் கொழும்பு மேலதிக நீதிவானால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ccfedc-78c9-462f-a19b-8d9296e1522d/26-6a83d364abd54.webp' /></p><p>இதனையடுத்து அவர் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கடவுச்சீட்டுக்களின் ஊடாக ஐரோப்பிய நாடொன்றில் தலைமறைவாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T03:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட சமித்புர சது நாட்டுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summitpura-chatu-brought-back-to-sri-lanka-today-1787017806"></link>
            <id>https://ibctamil.com/article/summitpura-chatu-brought-back-to-sri-lanka-today-1787017806</id>
            <summary type="text">ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சமித்புர சது இன்று (18.08.2026) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.</p><p>மட்டக்குளி பகுதியை சேர்ந்தவரும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு உள்ளவருமான 28 வயதான நபர் சமீபத்தில் ஓமானில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/217bd1fb-e76d-4cbc-8340-fe018d2f1a54/26-6a83bc6362dc9.webp' /></p><p>அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T02:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-private-bank-managers-remanded-over-alleged-usd-1787016772"></link>
            <id>https://ibctamil.com/article/4-private-bank-managers-remanded-over-alleged-usd-1787016772</id>
            <summary type="text">சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை &#039;உண்டியல்&#039; முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாட்டின் பிரதான 4 தனியார...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வரும்&nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>நாட்டிற்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த சந்தேகநபர்கள் இன்று அந்தந்த வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்</h2><p>இவ்வாறானதொரு கைது நடவடிக்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa33afe-0530-4460-9891-a190929d8206/26-6a83b9b094e29.webp' /></p><p>இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, ஜெப்ரி மொஹமட் எனப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அதற்கமையவே, குறித்த சந்தேகநபர்களான நான்கு வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜெப்ரி மொஹமட் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது. </p><p>

குறித்த சந்தேகநபர் நாட்டிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்குச் சென்றுள்ளதாகவும் அதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><p>அவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நாட்டிலிருந்து பணம் வெளியேறிய போதிலும், நாட்டிற்கு அத்தகைய பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p></p><h2>விசாரணைகள்</h2><p> 

மேலும், இன்று கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் குறித்த சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளைச் செய்து கொடுத்துள்ளதுடன், ஏறக்குறைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/021d202c-2ba8-48e0-ad76-f198af188371/26-6a83b9b1471b9.webp' /></p><p> 

வங்கி அதிகாரிகள் என்ற ரீதியில் நிறுவனமொன்றின் கணக்குகளைத் திறக்கும் போது, அந்நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டவையா எனச் சரிபார்க்க வேண்டியிருந்த போதிலும், அதைச் செய்யாமல் இந்த அதிகாரிகள் குற்ற எண்ணத்துடன் கணக்குகளைத் திறக்க ஒத்தாசையாக இருந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், நாட்டிலிருந்து வெளியேறிய பணத்தில் 6.5 மில்லியன் ரூபா பணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p> 

சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T02:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/liquor-shops-closed-for-kandy-perahera-1787015079"></link>
            <id>https://ibctamil.com/article/liquor-shops-closed-for-kandy-perahera-1787015079</id>
            <summary type="text">இன்று முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 

இன்று (18-08-2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.</p><p> 

இன்று (18-08-2026) முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ளது.</p><p>

இந்த நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28-08-2026) வரை மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>பிரதான சாலை</h2><p>எனவே, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8277efbe-6210-4ca6-9de0-96c61506710f/26-6a83afa9d9b47.webp' /></p><p>மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T01:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787014659"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787014659</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.






</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa44ee8-876f-465f-947b-00dfebbcbe33/26-6a83ae04e6e7d.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-inflation-to-stay-low-if-oil-hits-80-1787014217"></link>
            <id>https://ibctamil.com/article/sl-inflation-to-stay-low-if-oil-hits-80-1787014217</id>
            <summary type="text">இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அதிக விலை</h2><p>இதில் மேலும் தெரிவித்த அவர் "இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நீடித்தால், நாம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.</p><p>இருப்பினும் ஏதேனும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும்.&nbsp;&nbsp;</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2613b05f-35fc-417c-9463-0b137ae6226e/26-6a83ac4c2a6e4.webp' /></p><p>இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> 

மே மாதத்தில் மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிலைமை சாதகமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன.
</p><p>
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், இறுக்கமான நிதி நிலைமைகளும் அதிக விலைகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T00:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வைத்தாவது நாமலை ஜனாதிபதியாக்குவோம்...! அநுர அரசாங்கத்திற்கு அதிரடி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-political-tensions-rise-1787011238"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-political-tensions-rise-1787011238</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றாலும் கூட அவரை சிறையில் வைத்தே ஜனாதிபதி ஆக்குவோம் என அவர் தரப்பினர் அரசாங்கத்தை எச்சரித்து வருகின்றனர். </p><p>

இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி விலகினால் அவரை கைது செய்யும் நிலை ஏற்படலாம் என எதிர்தரப்புக்களில் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>

அதேநேரம், கடற்றொழில் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. </p><p>

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZXdAKNMU7LA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு...! சாய்ந்தமருது காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-police-officers-arrested-for-bribes-1787013020"></link>
            <id>https://ibctamil.com/article/two-police-officers-arrested-for-bribes-1787013020</id>
            <summary type="text">&amp;nbsp;இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிர் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (17-08-2026) முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிர் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (17-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலஞ்ச ஊழல் விசாரணை
ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து
விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக குறித்த காவல்துறையினர் பெற்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6071746c-95dc-4814-8d51-cefafc701d04/26-6a83a79ee926e.webp' /></p><p>சாய்ந்தமருது காவல் நிலையத்தில்
கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது
காவல் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை காவல் நிலையத்தின்
பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் காவல்துறை பரிசோதகர் (இன்ஸ்பெக்டர்)
ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ முகாம்கள் - விகாரைகளுக்குள் புதைக்கப்பட்ட தமிழ் மக்கள்! ரவிகரன் எம்.பி சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/raviharan-suspects-mass-graves-in-camps-1787008768"></link>
            <id>https://ibctamil.com/article/raviharan-suspects-mass-graves-in-camps-1787008768</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>
செம்மணியில் நேற்று (17-08-2026) நீதியின் ஓலம் - 02 இறுதி நாள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
</p><p>
இதில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீதி விசாரணை</span></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதி தேவை என்பதை வலியுறுத்தியே சிறார்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பெருந்திரளானவர்கள் ஆர்ப்பட்டப் பேரணியினை முன்னெடுத்திருக்கின்றனர்.
</p><p>
ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை தற்போதைய ஆட்சியாளர்களாவது ஏற்றுக்கொண்டு, குறித்த படுகொலைகளுக்குரிய சர்வதேச நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d95483-4b35-46b9-82d3-374c2e6301f1/26-6a839d1ab89c5.webp' /></p><p>

கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் செம்மணிப் புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன.</p><p> அவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தினை மூடிமறைத்த இனவாத ஆட்சியாளர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

இது தொடர்பில் ஏற்கனவே நான் நாடாளுமன்றிலும் வலியுறுத்தியுள்ளேன். </p><p>

அத்தோடு தற்போது வடகிழக்கில் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எமக்கு எழுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T23:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: டுபாய் கசுனின் உறவினர் வைத்தியசாலையில்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-shot-injured-in-athurugiriya-1787008325"></link>
            <id>https://ibctamil.com/article/man-shot-injured-in-athurugiriya-1787008325</id>
            <summary type="text">அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு நேற்று (17-08-2026) இரவு இடம்பெற்றுள்ளது.

 து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த துப்பாக்கி சூடு நேற்று (17-08-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
</p><p>
 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p> </p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f11fa4-7b4d-4930-ba99-76a09cf9c5c8/26-6a839547eccd6.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T23:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பதவி விலகல்! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourism-chairman-buddhika-resigns-1787006405"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourism-chairman-buddhika-resigns-1787006405</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். </p><p>

இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T22:53:58+00:00</updated>
        </entry>
    </feed>
