<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-22T22:10:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பொருளாதார தடைகள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-defense-chief-warns-gulf-countries-1787434430"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-defense-chief-warns-gulf-countries-1787434430</id>
            <summary type="text">

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரக் தடைகளை விதிக்க வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ரெசாய் எச்சரிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரக் தடைகளை விதிக்க வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ரெசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

மீறிச் செயல்பட்டால் அவர்களின் நலன்களை இலக்கு வைத்து ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

"ஈரானைச் சுற்றியுள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரப் போரில் இணைந்தால், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது, அத்துடன் பாரசீக வளைகுடாவின் பிற எண்ணெய் ஏற்றுமதி பாதைகளையும் நாங்கள் இலக்கு வைப்போம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவை தூண்டிய&nbsp;நெதன்யாகு</h2><p>
</p><p>
மேலும், ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரப் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவே தூண்டிவிட்டதாகவும் ரெசாய் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5834613c-333a-4056-9ba3-db3eaffdafd5/26-6a8a1b012d08a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Modern Diplomacy</i></p><p> 

இத்திட்டம் குறித்து ட்ரம்ப் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய போதிலும், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இதனைச் சோதித்துப் பார்த்து, பின்னர் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதா என்பதை முடிவு செய்யலாம் என இஸ்ரேலிய பிரதமர் அவரைச் சம்மதிக்க வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T22:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுப் படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-time-world-champion-tete-shot-dead-1787432388"></link>
            <id>https://ibctamil.com/article/two-time-world-champion-tete-shot-dead-1787432388</id>
            <summary type="text">தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான ஜொலானி டெட்டே (37), அவரது வீட்டின் வாசலில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான ஜொலானி டெட்டே (37), அவரது வீட்டின் வாசலில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
2007-2008 ஆம் ஆண்டுகளில் WBF பிளைவெயிட் உலக சாம்பியன் பட்டத்தையும், 2017 முதல் 2019 வரை WBO பேண்டம்வெயிட் உலக சாம்பியன் பட்டத்தையும் ஜொலானி டெட்டே வென்றுள்ளார்.</p><p>

2017-ல் சிபோனிசோ கொன்யா என்பவரை எதிர்கொண்ட போட்டியில், வெறும் 11 வினாடிகளிலேயே அவரை வீழ்த்தி உலக தரத்திலான போட்டிகளில் மிக வேகமான நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்து கின்னஸ் சாதனையும் படைத்திருந்தார்.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து தென்ஆப்பிரிக்க விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவிக்கையில், ஈஸ்டர்ன் கேப் நகரில் உள்ள டான்ட்சேன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு டெட்டே காரில் திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2be43d56-cb0c-4f59-97ad-34d0f19b7c18/26-6a8a0dc66faa4.webp' /></p><p><i>Image Credit: WBO</i></p><p>

 வீட்டு வாயிலின் கதவு திறப்பதற்காகக் காரில் காத்திருந்தபோது, முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த டெட்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>

அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய இளம்பெண்ணும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டிற்குப் பெருமை சேர்த்த சிறந்த விளையாட்டு வீரரை இழந்துவிட்டதாகக் கூறி அமைச்சர் தனது ஆழ்ந்த கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T21:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடியை அறிவித்த கனேடிய பிரதமர்! செப்டம்பர் முதல் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-also-taxes-instead-of-us-taxes-1787430182"></link>
            <id>https://ibctamil.com/article/canada-also-taxes-instead-of-us-taxes-1787430182</id>
            <summary type="text">செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவின் உலோகங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மற்றும் பிற ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குக் கனடா வரி விதிக்கும் என கனேடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவின் உலோகங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மற்றும் பிற ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குக் கனடா வரி விதிக்கும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
கனேடிய பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகளுக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
பல நாட்கள் நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை.</p><p></p><h2>கேள்விக்குறியாகியுள்ள வர்த்த ஒப்பந்தம்</h2><p> 

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மேலும் மோசமடைந்துள்ளதுடன், அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) என அறியப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53a1ed3-2d8d-411a-826a-821e4c86f3da/26-6a8a08051fc44.webp' /></p><p>
</p><p>
கனடா மீதான ட்ரம்பின் புதிய வரிகள் வயின், மரத்தினாலான உபகரணங்கள், பால் பொருட்கள், சீமெந்து, ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளைப் பாதிப்பதுடன், அமெரிக்காவிற்கான கனடாவின் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் கார்னி, "கனேடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு ஈடாகக் கனடாவும் அதே அளவு வரி விதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T20:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்பகுதியில் 24 பணியாளர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்! மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shipwreck-in-the-eastern-seaboard-of-india-1787428049"></link>
            <id>https://ibctamil.com/article/shipwreck-in-the-eastern-seaboard-of-india-1787428049</id>
            <summary type="text">இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் பனாமா கொடி எந்திய &#039;ஓஷன் வின்னர்&#039; (Ocean Winner) என்ற சரக்குக் கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் பனாமா கொடி எந்திய 'ஓஷன் வின்னர்' (Ocean Winner) என்ற சரக்குக் கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்தியக் கடலோரக் காவல்படைத் தகவல்களின்படி, அதனுடனான தொடர்பை இந்தியக் கடல்சார் மீட்பு முகமை இழந்துள்ளளதாக தெரியவருகிறது.</p><p>

இந்நிலையில், உயிர்காப்புப் படகுகளில் இருந்த இருவர் இதுவரை கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>மூழ்கியதற்கான காரணம்&nbsp;</h2><p> </p><p>

இந்தியக் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டன்ட் அமித் உனியல் அளித்த தகவலின்படி, இக்கப்பலில் 20 சீனர்கள், 3 மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் உட்பட மொத்தம் 24 பணியாளர்கள் இருந்ததுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e44971-748f-4064-84af-8e74c8018637/26-6a89feebac6e4.webp' /></p><p><i>image Credit: Odisha Bytes</i></p><p>
</p><p>
இரும்புத் தாதை ஏற்றிச் சென்றபோதே இக்கப்பல் இந்த விபத்தை சந்தித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T20:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் ஆணையை பறிக்கவே ‘பிரஜா சக்தி’ திணிக்கப்படுகிறதா.! செ. நிலாந்தன் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilanthan-questions-prajashakthi-1787424822"></link>
            <id>https://ibctamil.com/article/nilanthan-questions-prajashakthi-1787424822</id>
            <summary type="text">

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் அதிகாரங்களை புறக்கணித்து, மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் அதிகாரங்களை புறக்கணித்து, மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத “பிரஜா சக்தி” குழுக்களின் அனுமதி மற்றும் பரிந்துரைகளை பெற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை உள்ளூராட்சி சபைகள் மீது திணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்களை முற்றாக புறக்கணித்து, புதிதாக ‘பிரஜா சக்தி’ என்ற அதிகார மையத்தை உருவாக்கி அதன் அனுமதியை பெற்றால்தான் குறித்த அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு எழுத்து மூல அறிவுறுத்தல் விடுப்பது எந்த வகையான ஜனநாயகம்? இதற்கான சட்டபூர்வ அதிகாரம் என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு கூற வேண்டும்.</p><p>

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள Local Authority Small Bridges Sustainable Improvement Project 2026–2029 தொடர்பான கடிதத்தில், 2027ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட பிரஜா சக்தி குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் சம்மதத்துடன் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அதிகாரங்களை பறிக்க அரசாங்கம் சதி?</h2><p>
இதன் மூலம், மக்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் தீர்மானங்களை புறக்கணித்து அதற்கு மேலாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத ஒரு குழுவின் சம்மதம் தேவை என்ற நிலை உருவாக்கப்படுகிறது.</p><p>
 அப்படியானால் மக்கள் எதற்காக பிரதேச சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்கள்?</p><p>தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டை புறக்கணித்து, தங்களது வாக்குகளின் மூலம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தங்களுக்கு தேவையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab142107-b767-4504-af3c-997bffdc5438/26-6a89f7cb67a7b.webp' /></p><p>

 அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலா, ‘பிரஜா சக்தி’ என்ற அமைப்பை எம் மீது திணித்து, மக்கள் தேர்தல் மூலம் எங்களுக்கு வழங்கிய அதிகாரங்களை பறித்தெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.</p><p>
பிரஜா சக்தியை மக்கள் சக்தியாக மாற்றி அதனை அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் விடயங்களிலும் ஆலோசனைகள்,பரிந்துரைகள் வழங்குவதோ அல்லது தவறுகளை சுட்டிக் காட்டுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை கிராம மட்ட அமைப்புகளின் பங்களிப்பு அபிவிருத்தி திட்டங்களின் போது கட்டாயமானது தான். 
ஏற்கனவே பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழ் சனசமூக நிலைய கிராம மட்ட அமைப்புக்கள் உள்ளன, அதேபோல் பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கீழ் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கம் உள்ளிட்ட ஏராளமான கிராம மட்ட மக்கள் அமைப்புக்கள் உள்ளன இவற்றை எல்லாம் புறக்கணித்து அரசாங்கம் தற்போது பிரஜா சக்தியை முதன்மைப் படுத்த காரணம் என்ன?</p><p>

அதுவும் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாகவும், அவர்களுக்கு மேலான அதிகார மையமாகவும் அரசாங்கம் பிரஜா சக்தியை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>

பிரஜா சக்தியின் நிர்வாகத் தெரிவு முதல் அதில் உள்வாங்கப்படும் உறுப்பினர்கள் வரை அவர்கள் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.</p><p>

 அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பின்னணி தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை இல்லை அவர்களின் தெரிவுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆளும் அரசியல் கட்சியின் பக்கச்சார்பான தெரிவுகளாக உள்ளது.</p><p>குறிப்பாக, அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், கட்சி உறுப்பினர்கள் அல்லது தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்டு தோல்வியடைந்தவர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.</p><p>
 மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளை அரசாங்கத் திட்டங்களில் அதிகாரப்பூர்வ பங்கு வகிக்கும் வகையில் வேறு ஒரு பெயரில் மீண்டும் அதிகார மையமாக்கும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கின்றோம்.</p><p>
“மக்கள் நிராகரித்தவர்களை பிரஜா சக்தி மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதா அரசாங்கத்தின் நோக்கம்?”/

ஒரு தேர்தலில் மக்கள் ஒருவரை நிராகரித்தால், அந்த நிராகரிப்பை மதிப்பதே ஜனநாயகம்.</p><p>

 ஆனால் தேர்தலில் மக்கள் வழங்காத அதிகாரத்தை வேறு ஒரு குழுவின் ஊடாக வழங்கி, பின்னர் அந்தக் குழுவின் பரிந்துரைகளை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குவது மக்களின் தேர்தல் தீர்ப்பை அரசாங்கம் புறக்கணிப்பதாக உள்ளது.</p><p>

இன்று அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவதில்லை,
 அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை, கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை, ஆனால், அரச அதிகாரிகள் மற்றும் மத்திய அரச திணைக்களங்களை மட்டும் கொண்டு கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.</p><p>

ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றால், அந்தக் கிராம மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அந்தக் கிராமத்தின் வளர்ச்சியை யார் தீர்மானிக்கிறார்கள்?</p><p>

அரச அதிகாரிகள் தங்களது நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கடமைகளை செய்ய வேண்டும், மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தலாம் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.</p><p>
செங்கலடி களுவன்கேணி சம்பவம் தொடர்பிலும் கேள்வி!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத் தீர்மானத்தின் ஊடாக களுவன்கேணி கிராமத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பில், அரச அதிகாரிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கோ தெரியாமல், பின்னர் “பிரஜா சக்தியின் தீர்மானம்” என்ற அடிப்படையில் அந்த நிதி வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயம் பிரஜா சக்தி அமைப்பின் அதிகாரம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.</p><p>

இது உண்மையாக இருந்தால், ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானித்த நிதி ஒதுக்கீட்டை மாற்றும் அதிகாரத்தை பிரஜா சக்திக்கு யார் வழங்கியது?</p><p>
அரச அதிகாரிகளுக்குத் தெரியாமல், மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குத் தெரியாமல் ஒரு குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் அபிவிருத்தி நிதியை மாற்ற முடியுமா?</p><p>
இவ்வாறு நடந்திருந்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிமேல் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் பிரஜா சக்திதான் தீர்மானிக்கப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது?
அப்படியானால் மக்கள் தேர்தலில் தெரிவு செய்த உள்ளூராட்சி சபைகளும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் எதற்காக?</p><p>

இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும்.

நாங்கள் பிரஜா சக்திக்கு எதிரானவர்கள் அல்ல. பிரஜா சக்தியை உண்மையான மக்கள் சக்தியாக மாற்றி, அனைத்து சமூகங்களின் கருத்துக்களையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி சமமாக அனைவரும் இணைந்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலம் செயற்பட்டால் அதனை நாம் வரவேற்போம்.</p><p>

ஆனால், மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து, அவர்களை ஒரு புதிய அமைப்பின் ஊடாக அதிகார மையமாக உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>
“மக்களின் வாக்கு இருக்கும்போது, மக்களால் தெரிவு செய்யப்படாதவர்களின் அனுமதி எதற்கு?” என்பதே எங்களது அடிப்படைக் கேள்வி.</p><p>
எனவே, பிரஜா சக்தி அமைப்பிடம் அனுமதி பெற்றால் தான் குறித்த அபிவிருத்தி திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்ற அதிகார திணிப்பு குறித்தும், அதன் சட்டபூர்வ அதிகாரம் குறித்தும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு பிரஜா சக்தியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை அனைத்தையும் ஜனாதிபதி உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி உள்ளூராட்சி சபைகளின் ஜனநாயக சட்டவாக்க ஆட்சி முறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>
தமிழ் மக்கள் தேர்தல் மூலம் வழங்கிய ஜனநாயக ஆணையை எந்தவொரு நிர்வாக நடைமுறையின் ஊடாகவும் பறிக்க அனுமதிக்க முடியாது.</p><p>

இந்த விடயங்களை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, உள்ளூராட்சி சபைகளின் சட்டபூர்வ அதிகாரங்களையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளேன் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T19:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றாக முடக்கப்படும் ஷிரான் பாசிக்கின் வலையமைப்பு! சொத்துக்களை நிர்வகித்த ஆசிரியர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-drug-and-business-network-revealed-1787421278"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-drug-and-business-network-revealed-1787421278</id>
            <summary type="text">



கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப்பொருள் மற்றும் வணிக வலையமைப்புகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்த சட்டவிரோத கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 சந்தேகநபர்களை வரும் நாட்களில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>

பாசிக்கின் சட்டவிரோத சொத்துக்கள் ஒரு பிரபல மேலதிகவகுப்பு ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள இந்தச் சந்தேகநபரைக் கைது செய்ய இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>தப்பியோடியுள்ள முக்கிய புள்ளிகள் </h2><p>
அத்துடன், இந்த வலையமைப்பின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரும் பாசிக்கின் நெருங்கிய தோழியுமான பெண் ஒருவர் தற்போது துபாயில் உள்ளார். அவரைக் கைது செய்ய கொழும்பு மத்திய குற்றப்பிரிவு துபாய் காவல்துறை சிறப்பு அறிவித்தல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9ad99-81e7-492d-a58b-22364f38f4ee/26-6a89e5b371269.webp' /></p><p>
</p><p>
மேலும், ஷிரான் பாசிக் பயன்படுத்திய கைபேசிகளின் மின்னணுத் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், சொத்துக்களைக் கட்டுப்படுத்திய குழு உட்பட இந்த வலையமைப்பின் முக்கிய புள்ளிகள் தப்பியோடியுள்ள போதிலும், பெறப்பட்ட மின்னணுத் தரவுகளின் அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களையும் விரைவில் கைது செய்ய முடியும் என காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T19:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு அனுப்புவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண்! அம்பலமான அதிச்சிகர பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-defrauding-millions-1787423030"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-defrauding-millions-1787423030</id>
            <summary type="text">தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, சந்தேகநபரான பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட பேருந்து உரிமையாளர்</h2><p> </p><p>

அனுராதபுரம் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த இவர், ரத்மலான விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறி பேருந்து உரிமையாளர் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c6ad18-5418-4150-8d9e-72b383446804/26-6a89eb15126c0.webp' /></p><p>

பிலியந்தலையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் தனது பேருந்தை விற்று 6 மில்லியன் ரூபாய் வழங்கியது உட்பட, பல தடவைகளில் மொத்தம் 13.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்தப் பெண்ணிடம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொள்ள போலி விமானப்படை சீருடையில் வந்த அப்பெண், பின்னர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பேருந்து உரிமையாளர் கடந்த மே மாதம் காவல்துறையில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>15 காவல்நிலையங்களில் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>
அதன்படி, குருநாகல் பகுதியில் வைத்து அந்தப் பெண்ணும் அவரது கணவர் எனக் கூறிக்கொண்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5e8ca3-3921-49b8-ab5d-362011872275/26-6a89eb1460791.webp' /></p><p>

இதற்கு முன்னரும் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி இவர் 2.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இதேவேளை, கொல்லுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட 15 காவல் நிலையங்களில் இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பண மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T18:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தடி ஏவுகணை உற்பத்தி தளத்தை பார்வையிட்டார் ஈரான் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-general-visits-missile-production-site-1787417792"></link>
            <id>https://ibctamil.com/article/iran-general-visits-missile-production-site-1787417792</id>
            <summary type="text">ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு நிலத்தடி தளத்தைப் பார்வையிட்டார் என அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டது.</p><p>ஈரானின் பாதுகாப்புத் தொழில் தினத்துடன் ஒத்துப்போகும் வகையில், ஓகஸ்ட் 22 அன்று மேஜர் ஜெனரல் அப்தொல்லாஹி அந்த நிலத்தடி உற்பத்தி ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.</p><h2>பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி</h2><p> </p><p>மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும் அவர் ஆய்வு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cec0778b-e084-4cb4-889a-e22ccb34f320/26-6a89e56b2ee3b.webp' /></p><p>

இந்த ஆய்வின்போது, ​​ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மஜித் இப்னு அல்-ரெஸா, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுடன் சென்றிருந்தார்ம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T18:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காவல்துறையிடமிருந்து சான்றிதழ் பெறக் காத்திருப்போருக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-clearance-data-system-back-to-normal-1787419829"></link>
            <id>https://ibctamil.com/article/police-clearance-data-system-back-to-normal-1787419829</id>
            <summary type="text">

இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, காவல்துறை சான்றிதழ் அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை வழக்கமான நிகழ்நிலை முறைமையின் மூலம் மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நிகழ்நிலை முறைமை</h2><p>

குறித்த தரவுத் தொகுதியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27c8360-4d77-421f-ae23-457032c07f1a/26-6a89de876e952.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், தற்காலிக மின்னஞ்சல் முறையைப் பயன்படுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களும் நிகழ்நிலை முறைமை மூலம் மீண்டும் விண்ணப்பித்து, தேவையான கட்டணங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T17:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>இளைஞனை கைது செய்த காவல்துறை</h2><p>முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த காவல்துறையினர் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b2b2eb-7917-4865-89f0-2d50940e0ae8/26-6a89d1b3d514f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:44:26+00:00</updated>
        </entry>
    </feed>
