<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-02T13:31:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-district-first-nationally-scholarship-exam-1788354368"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-district-first-nationally-scholarship-exam-1788354368</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p>

அதேவேளை தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளது&nbsp;</p><h2>பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு</h2><p>இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9125c8d-c35b-4090-83d0-6c49485087c5/26-6a982241d994a.webp' /></p><p> </p><p>



இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p></p><p> </p><p>

</p><h2>56,000 மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளியை விடவும் அதிக புள்ளி</h2><p>அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பெறுபேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802fbd29-c285-44a2-a295-6b4b7e3760f2/26-6a9822428cbd3.webp' /></p><p> </p><p>

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க: தமிழக சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-nadu-assembly-over-katchatheevu-issue-1788353656"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-nadu-assembly-over-katchatheevu-issue-1788353656</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றுள்ளது.

இதன்போது சட்டப்பேரவையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். </p><p>இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளர் எ.வ. வேலு, கச்சத்தீவு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை</h2><p> </p><p>அத்துடன், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9889a9-9368-4943-ad98-8a75b07cab32/26-6a98202f725a5.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கச்சத்தீவு தொடர்பான அன்றைய மத்திய அரசின் முடிவின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். </p><p>மேலும், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்த பின்னரே கச்சத்தீவு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.</p><p>

இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.வுக்கும் பொறுப்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
இதன்போது, கச்சத்தீவு விவகாரத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அமைச்சர் ராஜமோகன் சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இந்த விவாதத்தின்போது ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T13:04:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைமுகமாக தாக்குவதை நிறுத்துங்கள் : ட்ரம்பிற்கு கனடா பிரதமர் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-pm-carney-fires-back-at-trump-1788351350"></link>
            <id>https://ibctamil.com/article/canada-pm-carney-fires-back-at-trump-1788351350</id>
            <summary type="text">&amp;nbsp;மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>


வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ட்ரம்பின் 50% வரி விதிப்பு,ஒன்ராறியோ ஏரிக்கு பெயர் மாற்றம் மற்றும் பெண் ராணுவப் பயிற்சி அதிகாரிகளை பென்டகன் கேலி செய்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவை மீம்ஸ்களையும் மறைமுகமான விமர்சனங்களையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.</p><h2>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை</h2><p>&nbsp;இது குறித்து மார்க் கார்னி தெரிவித்துள்ளதாவது, </p><p>

பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தினால், அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ed5f0f-ce51-40a9-ac53-5c911f705acd/26-6a981d32ca0d6.webp' /></p><p> </p><p>கனடா தொழில்துறைகள் படிப்படியாகச் சுருங்கி அழிந்துபோகும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது. நாங்கள் நிச்சயமாக அந்த நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை. மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்.</p><p></p><h2>மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்</h2><p>
</p><p>

மேலும் கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள். மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி, தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை நிறுத்தினால், மீண்டும் நம்மால் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2c0719-4943-4a85-8d12-2949089f16b4/26-6a981d337b866.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-teachers-protest-1788353141"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-teachers-protest-1788353141</id>
            <summary type="text">மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் மதிய உணவு இடைவேளையின்போது இந்த அடையாளப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை</h2><p> இதில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்று, தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9787ff-cd2a-4e0f-9625-dbdd7ce56ad0/26-6a981a7699821.webp' /></p><p>

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், அத்துடன் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
</p><p>
போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
</p><p>
மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாத நிலையில், மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதுடன், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fced8e2-87a6-44ae-a771-e9ceb4157aa0/26-6a981b0c61d5b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29eb13d8-fbf6-4e3c-93dd-944f8ba16d7e/26-6a981b0d30355.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb51334-be7d-4d80-82b5-ce67c4ee9672/26-6a981b0de6459.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d92ee4-5fa4-4761-99be-e1432e041775/26-6a981b0ea93be.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T12:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் வீதிக்கிறங்கிய பல்கலைக்கழக ஆசிரியர்கள்...! முன்னெடுக்கப்பட்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-university-teachers-stage-gate-protest-1788349529"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-university-teachers-stage-gate-protest-1788349529</id>
            <summary type="text">வவுனியா பல்கலைக்கழக
ஆசிரியர் சங்க கிளையினரால்&amp;nbsp;கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பல்கலைக்கழக
ஆசிரியர் சங்க கிளையினரால்&nbsp;கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு அங்கமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த போராட்டம் இன்று (02-09-2026) பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நியாயமான கோரிக்கை</h2><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு
நியாயமான கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாததை சுட்டிக்காட்டியே
குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த
தலைமுறையின் கல்விக்கான வை அழிக்காதே, கல்விசார் பணியாளர்களின்
பற்றாக்குறைக்கு உடன் தீர்வு காணுங்கள், கல்விக்கான நிதியினை அதிகரிக்கவும்
பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை
ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7b5468-71ff-4ada-b935-b777bab9392b/26-6a98115e26e26.webp' /></p><p>ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய தினம் இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின்
சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இந்த மதிய நேர போராட்டமானது
பிரதானமாக இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்
சம்மேளனத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட
பல்வேறுபட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.</p><p>

அது பிரதானமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகரித்த மாணவர் உள்வாங்கை,
அதுதவிர்த்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள், மேலும்
உயர்கல்விக்குரிய ஒதுக்கீடுகள் சம்பந்தமான கோரிக்கைகள் என்பவற்றை
அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்துப்
பல்கலைக்கழகங்களினதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் வந்து இந்த மதிய நேர
இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.</p><p>


அந்த வகையிலே, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அந்தப் போராட்டத்தில்
இணைந்து கொண்டு எங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-strike-on-wedding-event-in-sirik-city-5-killed-1788347375"></link>
            <id>https://ibctamil.com/article/us-strike-on-wedding-event-in-sirik-city-5-killed-1788347375</id>
            <summary type="text">தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த தாக்குதலில், 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர்.</p><p>

இந்தத் தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இதனை “அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்” என ஈரான் தரப்பு சாடியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்</h2><p>
</p><p>
ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cae59a7-e1e7-4b52-98dc-373c9355de7c/26-6a98133a80917.webp' /></p><p>ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் அறிவித்துள்ளன.
</p><p>
கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதலாக இது கருதப்படுகிறது. இதனால் மேற்காசியாவில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/official-trailer-of-eelam-film-porattam-today-1788337266"></link>
            <id>https://ibctamil.com/article/official-trailer-of-eelam-film-porattam-today-1788337266</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.&amp;nbsp;ஈழத்து கலைஞர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.&nbsp;</p><p>ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><p> திரைப்படத்தை தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முழுநீளத் திரைப்படம்</h2><p>போராட்டம் திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p></p><p>திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் அதன் முதல் பார்வையில் (First Look) அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியமை ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான முழுநீளத் திரைப்படமாக போராட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பாடல்கள் ரசிகர்கள்&nbsp;</h2><p>இந்நிலையில், ஏற்கனவே திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெளியாகவுள்ள ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4512295f-84e3-4569-ba76-c2c1f343b5c5/26-6a97e9e325341.webp' /></p><p>
</p><p>
ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படமான போராட்டம், எதிர்வரும் ஒக்டோபர் இரண்டாம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
</p><p>
இந்நிலையில், திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் வறட்சியை நோக்கி நகரும் மட்டக்களப்பு மாவட்டம்: அரசாங்கத்தின் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-moving-towards-severe-drought-1788349649"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-moving-towards-severe-drought-1788349649</id>
            <summary type="text">தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது. </p><p>

இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குடிநீர் பற்றாக்குறை</h2><p>
</p><p>
மேலும் கருத்து தெரிவித்த அவர், 

''எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd11efc3-3e03-42c3-92a0-ff5b0be9f301/26-6a9810a48cf9c.webp' /></p><p>
</p><p>
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வழங்கும், பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
</p><p>
இந்தநிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குடிநீர் பற்றாக்குறையை எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதில்பிரதேச சபைகள் ஊடாக பவுசர் மூலம் வழங்கப்படுகின்ற தண்ணீருக்கு செலவழிக்கும் நிதிகளை மீள் அழிப்பது தொடர்பாகவும் இருக்கும் சுற்றுநிருபத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும். </p><p>

பிரதேச சபைகள் ஊடாக வழங்குகின்ற நீரை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் அதற்கான நிதியை அரசின் ஊடாக வழங்கப்படும்" என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T12:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறிய மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-asks-colombo-uni-for-5-million-rupees-1788349172"></link>
            <id>https://ibctamil.com/article/student-asks-colombo-uni-for-5-million-rupees-1788349172</id>
            <summary type="text">கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>


நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிபதியின் உத்தரவு</h2><p>குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எந்தவித மீள் பரீட்சையும் இன்றி பின்னர் எவ்வாறு சித்தியடைந்ததாக மாற்றப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b353348-d356-4c8f-8611-c9175e3b7a25/26-6a980e77e20e8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:56:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/car-hits-cyclist-on-a9-road-in-kilinochchi-1788345480"></link>
            <id>https://ibctamil.com/article/car-hits-cyclist-on-a9-road-in-kilinochchi-1788345480</id>
            <summary type="text">கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த
நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற
மகிழுந்து (கார்) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/565a91f5-86cb-47ae-9c08-ab7f2a7e8d64/26-6a980a1fadd69.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக்
குழுவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/japan-donates-seven-buses-to-boost-sri-lanka-1788347504"></link>
            <id>https://ibctamil.com/article/japan-donates-seven-buses-to-boost-sri-lanka-1788347504</id>
            <summary type="text">ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
</p><p>

ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யொகோஹாமா நகர மக்களின் கூட்டு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த புதியபேருந்துகள், இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.</p><h2>உத்தியோகபூர்வமாக கையளிப்பு</h2><p>இந்த பேருந்துகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) கலந்து கொண்டு பேருந்துகளை உத்தியோகபூர்வமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்காவிடம் கையளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e365f6c7-19c2-4994-ac86-525e721b6381/26-6a98058a101e8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994"></link>
            <id>https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994</id>
            <summary type="text">புதிய இணைப்பு2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.&amp;nbsp;இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>புதிய இணைப்பு</u></b></h5><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.</p><p></p><p><b style="color: inherit; font-size: 1rem;"><u>முதலாம் இணைப்பு</u></b></p><p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று (02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை <a href="https://doenets.lk/" target="_blank">doenets.lk</a> என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T11:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earth-observation-satellite-isro-to-launch-sep-4-1788344071"></link>
            <id>https://ibctamil.com/article/earth-observation-satellite-isro-to-launch-sep-4-1788344071</id>
            <summary type="text">இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஏவுதல் இடம்பெறவுள்ளது.
</p><p>
EOS-05 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.</p><p></p><h2>&nbsp;EOS-05 செயற்கைக்கோள்</h2><p>
</p><p>
பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிப்பதற்கும், பேரிடர் மீட்புப் பணிகளை விரைவாகத் திட்டமிடுவதற்கும் உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98c72ab-3546-4548-ba13-2499d54cc5de/26-6a97feaa43e56.webp' /></p><p>மேலும், சுமார் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் புவிப் படங்களை வழங்கும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், முக்கியமான புவியியல் தகவல்களைப் பெறவும் முடியும்.</p><p>
</p><p>
இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட EOS-03 (GISAT-1) செயற்கைக்கோள், GSLV ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையாமல் தோல்வியடைந்தது.
</p><p>
அதன் தொடர்ச்சியாக, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய EOS-05 (GISAT-1A) திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.</p><p>சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் இஸ்ரோ மீண்டும் செயற்கைக்கோள் ஏவுதலை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியாவின் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சாலே தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/courts-swift-order-regarding-suresh-saleh-1788345269"></link>
            <id>https://ibctamil.com/article/courts-swift-order-regarding-suresh-saleh-1788345269</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உடல்நிலை குறித்தும், அவர் தேசிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (02) உத்தரவிட்டார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஒக்ஸ்ஃபோர்ட் பெரேரா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஷம்மி சில்வா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-slc-officials-summoned-by-illegal-assets-unit-1788341989"></link>
            <id>https://ibctamil.com/article/ex-slc-officials-summoned-by-illegal-assets-unit-1788341989</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அதிகாரிகளின் கூற்றுப்படி, விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பான 36 அம்சங்களைக் கொண்ட ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்குமாறு குறித்த இரண்டு முன்னாள் பதவியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>நிர்வாக அமைப்பு</h2><p>நாட்டின் விளையாட்டு நிர்வாக அமைப்பிற்குள் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a207b86b-0486-4778-85e7-f1f4370871cd/26-6a97f855431d9.webp' /></p><p>இந்நிலையில், அவர்கள் பதவி விலகி சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/in-piyankaras-hand-are-two-jumpers-a-tin-plate-1788343237"></link>
            <id>https://ibctamil.com/article/in-piyankaras-hand-are-two-jumpers-a-tin-plate-1788343237</id>
            <summary type="text">&amp;nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல், முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்தச் சிறைத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p><h2>வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர்&nbsp;</h2><p>நேற்று(01) மாலை 5 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரதான வாயிலுக்குள் நுழைந்ததும், கைதிகளுக்கு வழங்கப்படும் இரண்டு ஜம்பர்கள், தகரத் தட்டு, தகரக் கோப்பை மற்றும் கூடை என்பன வழங்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் ஒரு கைதியாகப் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட கைதி இலக்கம் சிறைத்தண்டனைக் காலம் முடியும் வரை பயன்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa74e21-222f-4e2d-ae6e-5e51aedc2780/26-6a97f928e2f3a.webp' /></p><p>சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது ஏற்படும் கடுமையான மன உளைச்சல் காரணமாக சிறைச்சாலையில் சேர்க்கப்படும் மற்ற கைதிகளைப் போலவே பியங்கர ஜயரத்னவுக்கும் மனநல ஆலோசனை சேவை வழங்கப்பட்டதுடன், நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிறைச்சாலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் கிடைக்கும் சலுகைகள் குறித்து அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>சாதாரண கைதியை போலவே நடத்தப்படுவார்</h2><p>சாதாரண கைதியைப் போலவே காலை 6 மணிக்கு வார்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் வார்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் அமைச்சருக்கு வீட்டிலிருந்தோ அல்லது வெளித் தரப்பினரிடமிருந்தோ உணவு பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் மூன்று வேளை உணவை மட்டுமே பெற முடியும். அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் குடும்ப சந்திப்புகளின் போது சுகாதாரப் பொருட்களை மட்டுமே பெறுவதற்கு அனுமதி உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fb9b7a-6071-4435-b784-c3266e05ddc8/26-6a97f92997d48.webp' /></p><p>இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன இன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதுடன், அங்கு அவரது திறன்கள் மற்றும் ஆற்றல்கள் ஆராயப்பட்ட பின்னர், மேசன், தச்சு, அச்சு, பேக்கரி அல்லது சமையல் போன்ற சிறைச்சாலையில் இயங்கும் பொருத்தமான வேலைப் பிரிவொன்றுக்கு அவர் அனுப்பப்படவுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T10:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான மோசடி விசாரணை! தயாராகிறது குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-action-on-mig-aircraft-scam-1788343706"></link>
            <id>https://ibctamil.com/article/cid-action-on-mig-aircraft-scam-1788343706</id>
            <summary type="text">இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(02.09.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தசம்பவம் தொடர்பில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>நிதி புலனாய்வு&nbsp;பிரிவு </h2><p>
</p><p>
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குரிய ஆவணத் தொகுப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c40394-74aa-44ca-a1f6-8d8123b7537e/26-6a980373376a7.webp' /></p><p>இந்நிலையில் இந்த வழக்கை&nbsp;எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.</p><p>2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கும், ஏற்கனவே இருந்த சில விமானங்களை பழுதுபார்ப்பதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>அப்போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். இந்தக் கொள்வனவு தொடர்பில் பின்னர் முறைகேடுகள் மற்றும் அரச நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p></p><h2>கோட்டாபய ராஜபக்ச</h2><p> </p><p>குறிப்பாக, இந்த ஒப்பந்தம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் (Government-to-Government) என்ற அடிப்படையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் உக்ரைன் அரச நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படாமல் Bellimissa Holdings Limited என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2f6f2e1-eb93-4b37-8a69-4a8bbef71044/26-6a98037268b00.webp' /></p><p>அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்ட தரப்பினர் சந்தித்ததாக விசாரணை ஆவணங்களை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p> விமானப்படைத் தளபதி முன்னதாக வழக்கமான டெண்டர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், 2006 பெப்ரவரி 6ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் உக்ரைன் தரப்பின் முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>எனினும், கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவில் ஊழல் செய்தார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.</p><p>எனினும் அவர் முன்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார். </p><p>உதயங்க வீரதுங்க தொடர்பான தற்போதைய நிலை
இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேகநபராகக் குறிப்பிடப்படும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் தொடர்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T10:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் உணவு நஞ்சாகியதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesian-officials-suspect-food-poisoning-1788341174"></link>
            <id>https://ibctamil.com/article/indonesian-officials-suspect-food-poisoning-1788341174</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த சம்பவம்&nbsp;கிழக்கு ஜாவாவின் சிடோஆர்ஜோ பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய குடியிருப்புப் பாடசாலையில் நேற்று (01.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இது குறித்த விசாரணையில் தெரியவருகையில், மதிய உணவு சாப்பிட்ட பின்னரே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலைய அதிகாரி கெதுத் சுமேதான தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 80 குழந்தைகள் பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e43d17-8147-41aa-a964-eba8ad2b1eeb/26-6a97f0244c542.webp' /></p><p>உணவு விநியோகம் செய்த சந்தேகத்திற்குரிய சமையலறை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டு, அதிகாரிகளால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் ஊட்டச்சத்து முறைகேட்டை ஒழிப்பதற்காகப் பல பில்லியன் டொலர் செலவில் இந்த இலவச உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.</p><p>
'Network for Education Watch' அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நிலவரப்படி இத்திட்டம் தொடர்பான 37,600 உணவு ஒவ்வாமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. </p><p>இந்த நிலையில் முறையற்ற உணவு சேமிப்பு மற்றும் தாமதமான விநியோகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sivajilingam-in-the-icu-1788342497"></link>
            <id>https://ibctamil.com/article/sivajilingam-in-the-icu-1788342497</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T09:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-saudioiltanker-strait-of-hormuz-two-killed-1788341141"></link>
            <id>https://ibctamil.com/article/attack-saudioiltanker-strait-of-hormuz-two-killed-1788341141</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

ஓமானின் கச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.</p><p>

ஓமானின் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 16.6 கடல் மைல் (19 மைல்) தொலைவில், சித்ர் என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் அடையாளம் தெரியாத எறிகணைகளால் தாக்கப்பட்டதாக, கப்பல் கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டன.
</p><p>
இந்நிலையிலேயே அந்த நிறுவனம் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தேசிய கப்பல் நிறுவனமான பஹ்ரி , இந்தச் சம்பவத்தில் இரண்டு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது .</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
இன்று காலை X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பஹ்ரி நிறுவனம் பின்வருமாறு கூறியுள்ளது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32547dc4-e169-48e3-8a48-51980ba2950f/26-6a97ec4b95131.webp' /></p><p>
</p><p>
 “இந்தக் கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சக ஊழியர்களுக்கும் தனது முழு ஆதரவையும் வழங்கி வருகிறது.” என்றுள்ளது.
</p><p>
பெப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T09:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dharmalingam-observed-today-at-thavadi-1788331816"></link>
            <id>https://ibctamil.com/article/dharmalingam-observed-today-at-thavadi-1788331816</id>
            <summary type="text">யாழ். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு&nbsp; முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த நிகழ்வு இன்று (02.09.2026) காலை யாழ்ப்பாணம்
தாவடியில் நடைபெற்றது.
</p><p>1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில்
இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் வி. தர்மலிங்கத்தின் நினைவாக
அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.</p><p></p><h2>மலரஞ்சலி</h2><p> </p><p>நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def220ef-1ee8-4ca3-a6ef-ed2b28d4956c/26-6a97de096b642.webp' /></p><p>தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.</p><p>
</p><p>அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1918 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி
யாழ்ப்பாணம் கந்தரோடையில் விஸ்வநாதர் – சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாகப்
பிறந்தார்.
</p><p>சிறுவயது முதலே சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அவர், தனது அரசியல்
மற்றும் சமூகப் பணியின் பயணத்தை உள்ளூராட்சி மட்டத்திலிருந்து ஆரம்பித்தார்.
உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், ஐந்துக்கும்
மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக அப்பதவியை வகித்தார்.</p><h2>&nbsp;மானிப்பாய் தொகுதி</h2><p> </p><p>பின்னர் சுன்னாகம் பட்டின
சபையின் தலைவராகவும் பணியாற்றினார்.
1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு
முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 1983 ஆம் ஆண்டு வரை
நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4654df6-9209-4c3b-9629-1d24c5b69943/26-6a97e473e02f6.webp' /></p><p> தான் போட்டியிட்ட தேர்தல்களில்
தொடர்ச்சியாக வெற்றிபெற்று, உடுவில் – மானிப்பாய் தொகுதி மக்களின்
நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக விளங்கினார்.
</p><p>தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில்
ஒருவராக விளங்கிய அமரர் வி. தர்மலிங்கம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து
தடவைகள் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின்
புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி.வி.கே. சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா,
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம்
வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hambantota-municipal-council-eraj-fernando-dead-1788332953"></link>
            <id>https://ibctamil.com/article/hambantota-municipal-council-eraj-fernando-dead-1788332953</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
சடலம் இவ்வாறு மீட்டக்கப்பட்ட நிலையில், உயிரை மாய்த்துக்கொள்ள முயச்சி செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p></p><h2>எராஜ் பெர்னாண்டோ&nbsp;</h2><p>தற்போது அவருக்கு 57 வயது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c40d4e-8da3-453c-9fa4-d05fefd8d9bd/26-6a97ceb512be5.webp' /></p><p> </p><p>அம்பாந்தோட்டை மாநகரசபைக்கு மேயராக 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தெரிவாகியிருந்தார் என தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T08:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/apple-to-launch-iphone-18-pro-series-on-sept-9-1788334301"></link>
            <id>https://ibctamil.com/article/apple-to-launch-iphone-18-pro-series-on-sept-9-1788334301</id>
            <summary type="text">ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி&nbsp; நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்பதிவுகள்&nbsp;</h2><p>இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகளுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a81dc5c-f32a-4c1e-bfa6-bfb8a3eccd71/26-6a97da6c0f515.webp' /></p><p>அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:18:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-against-159-mps-of-npp-1788335963"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-against-159-mps-of-npp-1788335963</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவிக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், அவை வழங்கப்படுவதன் நோக்கமான பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படாமல், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதுதொடர்பில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, “தினன தகுண” அமைப்பு இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வாக்குமூல&nbsp;பதிவு </h2><p>
</p><p>
மேலும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துவதுடன், குறித்த அரசியல் கட்சியின் வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறும் முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3eb839a-c27f-4b98-9614-c36e17fe1ac7/26-6a97d9ca0bb90.webp' /></p><p>
</p><p>
மொத்தம் ஐந்து விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T08:10:02+00:00</updated>
        </entry>
    </feed>
