<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-30T21:28:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு பலத்துடன் செயற்படும் ஈரானிய கடற்படை! ட்ரம்ப்பின் கூற்று பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-navy-response-to-trump-s-statement-1788116271"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-navy-response-to-trump-s-statement-1788116271</id>
            <summary type="text">ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த கருத்துக்களை ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த கருத்துக்களை ஈரான் நிராகரித்துள்ளது.</p><p>

இந்நிலையில், அவரது இந்த அறிவிப்பை ஈரானியக் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி (Shahram Irani) முற்றாக நிராகரித்துள்ளார்.</p><p>
ஈரானிய அரசுப் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான IRIB-க்கு அளித்துள்ள அதிகாரப்பூர்வ பேட்டியில், ஈரானின் கடற்படை எந்தவிதப் பாதிப்பும் இன்றி மிகவும் ஆரோக்கியமாகவும் முழு வலிமையோடும் தனது அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய மக்களின் பாதுகாப்பு</h2><p>
</p><p>
மேலும் தனது அறிக்கையில், "தாய்நாடான ஈரானைப் பாதுகாக்கவும், நமது மாபெரும் ஈரானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைத் தொடர்ந்து உறுதிப்படுத்தவும் கடற்படை எவ்விதத் தயக்கமுமின்றி முழு ஆற்றலுடன் தொடர்ந்து செயலாற்றும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d571b916-d103-49ee-b904-f196ca0622e9/26-6a947d31335c5.webp' /></p><p> </p><p>

ட்ரம்பின் கூற்றுக்கு ஈரானிய ராணுவத்தின் உயர்மட்டப் பொறுப்பில் இருந்து வந்துள்ள இந்த நேரடி பதில், ஈரானின் ராணுவத் திறன் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதப்படுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T20:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி! இளைஞனுக்கு 24 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-sentenced-to-24-years-in-prison-1788115478"></link>
            <id>https://ibctamil.com/article/man-sentenced-to-24-years-in-prison-1788115478</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டு ,
சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகள் இடம்பெறு வந்தன.</p><p></p><h2>24 வருட சிறைத்தண்டனை</h2><p>
</p><p>
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது ,
எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை
விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4925116-dffc-4d24-bf64-b3ff12804a4b/26-6a947a18c3a66.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க
வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govert-official-dies-of-electrocution-in-jaffna-1788114248"></link>
            <id>https://ibctamil.com/article/govert-official-dies-of-electrocution-in-jaffna-1788114248</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக
அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த
துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ
அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான
நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2>அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு</h2><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
</p><p>அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில்
பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும்
ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d64fb44-0a17-488d-b6f1-5c8465320f3c/26-6a94754a862e4.webp' /></p><p>
</p><p>நாளை திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட
நிலையில், விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு
கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு
விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><h2>மின்சாரம் தாக்கியிருக்கலாம்&nbsp;</h2><p>
இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த
மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட
நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fcc98e5-3e97-4e05-b891-546ac63a3d55/26-6a94754b37b70.webp' /></p><p>
மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.</p><p></p><h2>ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ள&nbsp;மரணம்</h2><p>
</p><p>விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின்
தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை
அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில்
ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebb4c12-0152-410c-9c29-1c965e86abfb/26-6a94754bdd093.webp' /></p><p>
</p><p>

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த
உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T19:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை! சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-selling-cannabis-mixed-legium-1788114085"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-selling-cannabis-mixed-legium-1788114085</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><p>
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் உற்பத்தி செய்யும் நிலையம்
ஒன்றை காவல்துறையினர் இன்று முற்றுகையிட்டதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.</p><p>
இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பக்கற்றுகள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் 20 வயதான இளைஞர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இலக்காக்கப்பட்டுள்ள மாணவர்கள்&nbsp;</h2><p>இந்த லேகியங்கள் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e87a9d6-30d6-4aa1-9a4e-8023861192be/26-6a9476f985d08.webp' />&nbsp;</p><p>
</p><p>இதேவேளை, குறித்த லேகிய உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788111871"></link>
            <id>https://ibctamil.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788111871</id>
            <summary type="text">

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.அண்மையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.</p><p>அண்மையில்&nbsp; பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை "ஹர்ஜன் அலெக்சாண்டர்" என மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.</p><p>

2015ஆம் ஆண்டு மத்திய வங்கிபிணைமுறி பத்திர மோசடி தொடர்பாகத் தேடப்பட்டு வரும் அவரை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதில் சிக்கல்கள் நிலவும் சூழலில், மாற்று சட்ட வழிகளை ஆராயும் நடவடிக்கையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்தகவல் அடிப்படையில் அமைச்சர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>சிங்கப்பூர் முகவரியுடன் பெயர்</h2><p>

இந்நிலையில், ஊடக நிறுவனமொன்றுக்கு ஓகஸ்ட் 30ஆம் திகதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டைப் பொய் என மகேந்திரன் நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddd6e3d9-0ddd-45f2-b02a-1b20ba2892cd/26-6a946d69d54f9.webp' /></p><p>
</p><p>
 "லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன்" என்ற தனது சொந்தப் பெயரிலேயே கையொப்பமிட்டு சிங்கப்பூர் முகவரியுடன் அவர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், தான் பெயரை மாற்றியதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் உண்மையற்றது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>

இந்நிலையில், அவரது பெயர் மாற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளின் கூற்றுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T18:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-prices-reduced-1788110155"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-prices-reduced-1788110155</id>
            <summary type="text">

நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 414-லிருந்து ரூ. 15 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>விலை திருத்தம்&nbsp;</h2><p> </p><p>

இதேவேளை, ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 495-லிருந்து ரூ. 20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b739fb42-cc14-4663-9494-7647d4f50460/26-6a94689fcee55.webp' /></p><p> 

எவ்வாறாயினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T17:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;உண்மையான எதிரி&quot;யை அடையாளம் காணுங்கள் : முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் உச்சதலைவர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/muslim-nations-recognize-true-enemy-mojtaba-1788106793"></link>
            <id>https://ibctamil.com/article/muslim-nations-recognize-true-enemy-mojtaba-1788106793</id>
            <summary type="text">முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள்,உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இன்று ஞாயிற்றுக்கிழம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள்,உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் இஸ்லாமிய ஒற்றுமையின் "பரம எதிரிகள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>"இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, எனது அழுத்தமான மற்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பரிந்துரை என்னவென்றால், உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி அவரது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ செய்தியில் இந்த முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.</p><h2>முஸ்லிம் மக்களிடையே பிளவை உருவாக்க முயற்சி</h2><p>&nbsp; "ஈரானிலும் மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை உருவாக்குவதற்காக, அவர்கள் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைச் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a4b5fe9-f21d-4e5c-98a9-9f22024386ff/26-6a94639690181.webp' /></p><p> மேலும், ஈரானியர்கள் தங்களுக்குள் வேறுபாடுகள் உருவாக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"அன்புக்குரிய மற்றும் மேலாதிக்க இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம்," என்று கமெனி குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>அமெரிக்காவும் இஸ்ரேலும் பரம எதிரிகள்</h2><p>அமெரிக்காவும் இஸ்ரேலும் "இந்த ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் பரம எதிரிகள்" என்று கூறிய அவர், வோஷிங்டனும் டெல் அவிவும் ஈரானுக்கு மட்டுமல்ல, "முழு" இஸ்லாமிய உலகிற்கே எதிரிகள் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f961c48-9915-49b8-9c6e-afcdbc316991/26-6a946395de024.webp' /></p><p>
</p><p>
"இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T17:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-stabbed-to-death-1788105284"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-stabbed-to-death-1788105284</id>
            <summary type="text">எஹெலியகொட, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எஹெலியகொட, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்த அந்த மாணவன் நேற்று முன்தினம், எரெபொல பாடசாலைக்கு அருகில் தனது நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்த காணொளி தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞனுடன் வாக்குவாதம் செய்துள்ளான்.</p><h2>இன்று அதிகாலைவேளை தாக்குதல்</h2><p>பின்னர், இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், இரவில் மாணவனின் வீட்டிற்கு அருகே இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08226adc-f3ff-434e-a910-3b74fa8b5421/26-6a94540876048.webp' /></p><p>
</p><p>
கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த அந்த மாணவன், எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தான்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:03:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-verdict-father-who-raped-daughter-in-jaffna-1788104000"></link>
            <id>https://ibctamil.com/article/court-verdict-father-who-raped-daughter-in-jaffna-1788104000</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கோப்பாய் பகுதியில் கடந்த 200...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
</p><p>
கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய
குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p>அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த
நிலையில் தீர்ப்புக்காக நேற்றுமுன்தினம்(28) வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது.</p><h2>16 வருட சிறைத்தண்டனை</h2><p>
</p><p>
அதன்போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று , 16 வருட
சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.&nbsp;</p><p><br></p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc20b12-90f3-43ca-a9e5-83062fe6b4bd/26-6a944efd25da3.webp' /></p><p></p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p></p>]]></content>
            <updated>2026-08-30T15:40:52+00:00</updated>
        </entry>
    </feed>
