<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T14:36:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபத்தின் அஞ்சலி நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chairman-boycotts-flame-sacrifice-tribute-event-1789654461"></link>
            <id>https://ibctamil.com/article/chairman-boycotts-flame-sacrifice-tribute-event-1789654461</id>
            <summary type="text">வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp;</p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச
சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது.</p><p>
</p><p></p><h2>திலீபனின் நினைவேந்தல்</h2><p>அதன் போது கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர்
கழிவுகளை கொட்டியமைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை
எடுக்காதமையை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் , சபை
அமர்வில் கலந்து கொள்ளாது புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c62bbeba-b9eb-4b90-86c2-70dca705883f/26-6aabf5bf599ed.webp' /></p><p>
அதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை,
சபா மண்டபத்தினுள் செய்யாது, பிரதேச சபை வளாகத்தினுள் செய்வதற்கான
ஏற்பாடுகளை செய்து , அதில் தவிசாளரை கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அதற்கு,தவிசாளர் சபையை புறக்கணித்து , வெளியே நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில்
தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவருடன் இணைந்து தமிழரசு
கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தாமும் கலந்து கொள்ள மாட்டோம் என
நிகழ்வினை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
அதனை அடுத்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை
வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்து ,
தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி
செலுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T14:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள இராஜியத்தை வடிவமைத்த ஷிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-underworld-inside-the-prison-1789653152"></link>
            <id>https://ibctamil.com/article/the-underworld-inside-the-prison-1789653152</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும்&amp;nbsp; ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும்&nbsp; ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவல்துறையினர் கண்டறியும் பின்னணியில் சிறைச்சாலை மோதல்கள் குறித்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளன.</p><p>போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் (Shiran Basik) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை அறிக்கைகள் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளன.</p><p>அரசியல் அதிகாரத்திற்கும் பாதாள உலகிற்கும் இடையிலான இந்த இருண்ட தொடர்பு முழு நாட்டையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><h2>புதிய கோணத்தில் விசாரணை</h2><p>

இதைவிட மிகவும் ஆபத்தான விடயம் என்னவெனில், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இரத்தக் கறை படிந்த வெலிக்கடை சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளுக்குப் பின்னணியிலும் இவரது தொடர்பு ஏதேனும் இருந்ததா என்பதுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd08b693-e113-40c3-952b-476c8c04e639/26-6aabf236e77b6.webp' /></p><p>

சிறைச்சாலைக்குள்ளேயே தனது எதிரிகளைப் படுகொலை செய்யும் அளவுக்கு இவர் சக்திவாய்ந்தவராக இருந்தாரா என்பது குறித்து தற்போது புதிய கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் மு குறித்த சந்தேகநபரின் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் எம்.னி அருந்திக்க பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக (CCIB) அதிகாரிகள் நீண்ட வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்திருந்தது.</p><p>மேலும், ஷிரான் பாசிக் ஒரு சாதாரண பாதாள உலகக் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் மிகச்சிறந்த ஆதாரம் இதுவே.
⠀
</p><p>அவர் துபாயில் தங்கியிருந்தபோது ஹெலிகாப்டர் ஓட்டுவதில் சிறப்பு விமானிப் பயிற்சி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது.
⠀</p><p></p><h2>&nbsp;போதைப்பொருள் கடத்தல்</h2><p>
ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு வானத்தை இப்படி ஆள ஏன் பயிற்சி அளிக்கப்பட்டது?
⠀
</p><p>இது சர்வதேச அளவில் போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு புதிய முறைக்கானதா?
⠀</p><p>
அல்லது, கொலம்பிய பாதாள உலகத் தலைவரான பாப்லோ எஸ்கோபரைப் போல, அவசர காலத்தில் எல்லையைக் கடந்து தப்பிச் செல்லும் நோக்கில் தனக்கென சொந்தமாக திட்டத்தை உருவாக்குகிறாரா?
⠀</p><p>இந்த சந்தேகங்கள் நீளும் நிலையிவ் பாதுகாப்புப் படையினர் தற்போது இவ்விவகாரம் குறித்து&nbsp; முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T13:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் ஷிரந்திக்கு விசேட மருத்துவப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-admitted-to-a-hospital-in-singapore-1789651051"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-admitted-to-a-hospital-in-singapore-1789651051</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு , சில விசேட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வார காலமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி , நேற்று (16) திடீரென சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>FCID அழைப்பு</h2><p>இதனிடையே, அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னர், நுழைவாயில் அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அவரிடம் FCID முன்னிலையில் முன்னிலையாகுமாறு கோரும் கடிதத்தை கையளித்ததாக ராஜபக்சர் தரப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba13c58-782c-4e68-99d6-e74e172b5d00/26-6aabe95552cf2.webp' /></p><p>இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான (FCID) முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு காவல்துறை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T13:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[136 கிலோ போதைப்பொருளுடன் கைதான தொழிலதிபருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-drug-trafficker-1789644378"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-drug-trafficker-1789644378</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.</p><p>சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17.09.2026) பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p>
2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p></p><h2>பெறுமதி 100 கோடி ரூபாய்</h2><p>
</p><p>
அந்தச் சுற்றிவளைப்பின்போது&nbsp; காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் 211 கிலோ 818 கிராமாக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba13ee89-4610-492e-9af3-d87087e09082/26-6aabd6491690d.webp' /></p><p>பின்னர் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மேற்கொண்ட பரிசோதனையின் அறிக்கையின்படி, அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக இது பதிவாகியிருந்ததுடன், அதன் பெறுமதி 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது.</p><p></p><p>[RFPCXGQ ]</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T12:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடவில் பதற்றம்: கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gun-shooting-near-the-dematagoda-kalu-bridge-1789644867"></link>
            <id>https://ibctamil.com/article/gun-shooting-near-the-dematagoda-kalu-bridge-1789644867</id>
            <summary type="text">தெமட்டகொட, களு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17.09.2026) பிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொட, களு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் இன்று (17.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p> துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997b9681-52ca-4d22-9961-29bcb5827e46/26-6aabd2c915d2b.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் இடித்தழிப்பு : நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கடும் கண்டனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-stone-1789641940"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-stone-1789641940</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளமைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.</p><p>காவல்துறையினரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அண்மையில் குறித்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் இது குறித்து&nbsp;நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வடக்கு கிழக்கு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் முற்றத்தின் நினைவுக்கல் இடித்தழிக்கப்பட்டது.</p><p></p><h2> இராணுவ வெற்றிச் சின்னம்</h2><p>

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான
முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக் காட்டுவதற்காக
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி கல் கடந்த
2026.09.14 அன்று முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி
அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள்
ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ce274d-9975-4fd0-8d7a-f314169edbd9/26-6aabcdc264874.webp' /></p><p>

வகை தொகையின்றி தமிழினம் கொத்துக் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித
குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும்
திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை
தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இவ்
வழிகாட்டல் கல்லின் இடித்தழிப்பு அமைந்துள்ளது.
</p><p>
முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான
பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும்,
கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும்.</p><p>இடித்தழிக்கப்பட்ட இவ் வழிகாட்டல் கல்லுக்கு அப்பால் சில 100 மீற்றர் தூரம் தள்ளி
முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில்
அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே
வீதியில் புக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச்
சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.</p><p></p><h2>தமிழர் விரோத செயற்பாடுகள்</h2><p>
இந்தநிலையில் இவ்வழிகாட்டி கல், அனுமதியற்ற கட்டடம் என முல்லைத்தீவு காவல்துறையினரால்
கடந்த 2026.06.11 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட
B/692/2026 இலக்க வழக்கின் மீதான கட்டளையாகவே இவ்வழிகாட்டி அமைப்பை அகற்றுமாறு
பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முல்லைத்தீவு மாவட்ட
நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3836e780-cdf8-43c9-9e2c-31d21623875c/26-6aabcdc161d25.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே முல்லைத்தீவு காவல்துறையினரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்
இவ்வழிகாட்டி கல் மேல் அமைக்கப்பட்டிருந்த "காயமடைந்த பாடசாலைச் சிறுவன்
ஒருவன் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு
செல்லும் பாதையை சுட்டிக்காட்டுவது போல்" அமைக்கப்பட்டிருந்த சிலையை
அகற்றுவதற்காக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றினால்
அச்சிலையை அகற்றுவதற்கான கட்டளை வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் இரவோடிரவாக
இனந்தெரியாதோரால் அச்சிலை அகற்றப்பட்டது.
</p><p>
தற்போதைய நிலையில் சிறிலங்கா காவல்துறையினரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற
வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்த வகையில் சிறிலங்காவில் எந்த
அரசுகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின
அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருகின்றன.</p><p>ஆகவே சிறிலங்கா அரசினுடைய இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக
கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும்
வலியுறித்தி நிற்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T11:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262"></link>
            <id>https://ibctamil.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-by-ciaboc-1789628262</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதற்கமைய அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b934bb-13f5-4849-8cc6-3c6fbecad528/26-6aabca01b634d.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களைச் சட்டவிரோதமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a21728f-4282-42ca-b9a5-ef282ffb309e/26-6aab9586aef65.webp' /></p><p> 

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6n0dAt4jQ1s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த நடிகர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/popular-actor-vishwa-kodikara-arrested-1789640147"></link>
            <id>https://ibctamil.com/article/popular-actor-vishwa-kodikara-arrested-1789640147</id>
            <summary type="text">சிங்கள திரைப்பட நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கள திரைப்பட நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (16.09.2026) இரவு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (17) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>விஷ்வ கொடிகார&nbsp;</h2><p>

இதன்போது, விஷ்வ கொடிகாரவிடம் இருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd316708-49b7-461e-81df-120a95478b8e/26-6aabc96f5fc03.webp' /></p><p>
</p><p>
கொக்கெய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை விஷ்வ கொடிகார ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-s-39th-year-commemoration-in-batticaloa-1789638594"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-s-39th-year-commemoration-in-batticaloa-1789638594</id>
            <summary type="text">தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று
வருகின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று
வருகின்றன.</p><p>செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ். நல்லூரிலே தியாக தீபம் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்த்தி பவனியானது&nbsp;மக்களின் அஞ்சலிக்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஊடாக நல்லூரைச் சென்றடைவது வழமை.</p><p></p><h2>மலர் தூவி அஞ்சலி</h2><p>அந்த வகையில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி இன்று (17.09.2023) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ள நிலையில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல ககுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdb16ab-a11b-4af0-8e61-9157eea160d3/26-6aabc1486208f.webp' /></p><p>இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p>இந்தநிலையில், 26ஆம் திகதி திலீபன் உயிர்த் தியாகம்
செய்த நல்லூரிலே மிகப் பிரமண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என&nbsp; செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ஒக்டோபர் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் உள்ள பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். </p><p>

இதன்போது, வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில வாக்குமூலங்களின் முழுமையான பிரதிகள் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p>யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் தெளிவற்றதாக இருப்பதால், அவற்றின் தெளிவான பிரதிகளை வழங்குமாறு கோரினார்.</p><h2>குற்றப்பத்திரங்கள் தாக்கல்</h2><p>இதற்கு பதிலளித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க, பிரதிவாதிகள் கோரும் சில ஆவணங்கள் மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது எனவும், ஆணைக்குழுவிடம் உள்ள ஆவணங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a186842-2a87-4a4a-a15d-87109f227667/26-6aabc0b79e775.webp' /></p><p> 

விடயங்களை பரிசீலித்த நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை உரிய கட்டணத்திற்கு உட்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். </p><p>

மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உள்ள ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரிப் பயிற்சிப் கேடட்டாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்கு புறம்பாக பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பயிற்சி நெறிமுறைக்கு அரசாங்கப் பணத்தை செலவிட்டு பங்கேற்கச் செய்தமையின் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை பிரித்தானியாவில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளி பகுதியை உலுக்கிய விபத்து...! கார் சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686"></link>
            <id>https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் சாரதியை&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சாரதியை&nbsp;செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குறித்த நபர் இன்று (17-09-2026) கொழும்பு அல்ஃபிட்ஸ்டார்ப் (அளுத்கடை) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தீவிர சிகிச்சை&nbsp;</h2><p>இந்தநிலையில் விபத்து நடந்த சமயத்தில் கார் சாரதி கஞ்சா போதையில் காரைச் செலுத்தியுள்ளது காவல்துறை மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e81dbe2-8e53-428b-b295-6127fe1fd4c8/26-6aabbbae38dea.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவளிவில் (16-09-2026) வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
</p><p>விபத்தில் காயமடைந்த 13 நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இறந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df507453-1319-44a4-93d5-bb23e2f272eb/26-6aabbbad5a648.webp' /></p><p>விபத்தை ஏற்படுத்திய 52 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.</p><p> மட்டக்குளி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் : உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/supreme-court-rules-judges-liable-to-pay-incometax-1789630589"></link>
            <id>https://ibctamil.com/article/supreme-court-rules-judges-liable-to-pay-incometax-1789630589</id>
            <summary type="text">நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து&amp;nbsp; நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து&nbsp; நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி குறித்த தீர்மானம் சட்டபூர்வமானது என&nbsp;உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

குறித்த தீர்மானத்திற்கு சவால் விடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.</p><p></p><h2>உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டம்</h2><p> </p><p>

குறித்த மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04ea294-13db-4918-aca8-14e7f8dbbc01/26-6aabb5b919548.webp' /></p><p> அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்கள் சம்பளத்தின் மீது வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும், அந்த ஊதியத்திலிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி...! மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-dead-one-injured-in-eachilampattu-crash-1789633527"></link>
            <id>https://ibctamil.com/article/one-dead-one-injured-in-eachilampattu-crash-1789633527</id>
            <summary type="text">திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17-09-2026) குறித்து விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம் வயது (33) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த மேற்படி நபரே உயிரிழந்துள்ளார்.</p><p>அத்தோடு அவரோடு மோட்டார்
சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர்
படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f690270-ed33-45a1-a371-24780fe5d93c/26-6aabae24cf819.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:09:05+00:00</updated>
        </entry>
    </feed>
