<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T00:16:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல்வாதிகளை காப்பாற்ற திட்டமிடும் ரணில்: அரசாங்கத்தை திசை திருப்ப சதி...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-creating-panic-to-save-corrupts-1787269085"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-creating-panic-to-save-corrupts-1787269085</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்த தெளிவான பார்வையும் திட்டமும் உள்ளது.</p><p> </p><p></p><h2>பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p>2028 ஆம் ஆண்டளவில் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் 15 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இலக்கை அடைந்து நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba06f05-3282-47a9-867c-0fe9cba6d5d8/26-6a8793e65102f.webp' /></p><p>2028 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்த தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளின்படி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்றும் தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். </p><p>இதன் மூலம் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் அதனால் அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் அந்நிய செலாவணியை பெருக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூற முற்படுகிறார்.</p><p>
</p><p></p><h2>பொருளாதார ஆலோசகர்</h2><p>இருப்பினும், ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பொருளாதார ஆலோசகராக மாற முயல்வதும் அவரே பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் என்று பரப்புவதும் ஒரு கட்டுக்கதையாகும்.
</p><p>
2015 நல்லாட்சி காலத்திலிருந்தே ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் உருவாக்க வழிவகுத்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab49cd7-54dd-4375-9cbd-36814b888cff/26-6a8793e595667.webp' /></p><p>மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்புக் கூற வேண்டிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் எதுவும் இல்லை.
</p><p>

அவர் எப்போதும் தீவிர நவதாராளவாத கொள்கைகளின் மூலம் மக்கள் மீது அதிக வரிகளைய சுமத்தி பொதுச் சொத்துக்களைய தனியார்மயப்படுத்தி மக்களை துன்புறுத்தினார்.
</p><p>
மக்களின் அரகலய போராட்டத்துக்குப் பின்னரும் ரணில் விக்ரமசிங்க செய்தது ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பாதுகாத்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு சென்றதல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sritharan-meets-indian-high-commissioner-jha-1787267923"></link>
            <id>https://ibctamil.com/article/sritharan-meets-indian-high-commissioner-jha-1787267923</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட
சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட
சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றையதினம் (20-08-2026) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

​</p><p>இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.</p><p></p><h2>முக்கிய பிரச்சினைகள்</h2><p>

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ்
மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/941ebb82-7ac8-4fa1-ad49-765b87b8829b/26-6a878b560fad1.webp' /></p><p>
நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில்
நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது
தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை
மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை
முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள்
குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>மேலும் வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும்
காங்கேசந்துறை (KKS) துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை
மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும்
மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:18:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனி பற்றாகுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-coconut-dept-faces-staff-shortages-1787264211"></link>
            <id>https://ibctamil.com/article/northern-coconut-dept-faces-staff-shortages-1787264211</id>
            <summary type="text">வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெங்கு முக்கோண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெங்கு முக்கோண வலய உதவி பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
</p><p>வடமராட்சி கிழக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பயிர் செய்கை</h2><p>மேலும் தெரிவித்த அவர், “வட மாகாணத்தில் தெங்கு பயிர் செய்கை சபைக்கு ஒரே ஒரு தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் மட்டும் பணியாற்றுகின்றார்.</p><p>

மேலும் 3 தென்னை அபிவிருத்தி உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4de1f888-4790-4d89-84ad-dc579206b7e0/26-6a877cd6641bd.webp' /></p><p>எமக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட போதும் இதுவரை ஆளனி நியமனங்கள் எதுவும் நிரப்பப்படாமலுள்ளது.
</p><p>

இலங்கையில் தற்போது தேங்காய் விலை அதிகரிப்பிற்கு காரணம் தேங்காய் உற்பத்தி மிக குறைவாக உள்ளமையே. </p><p>குறைவான தேங்காய் உற்பத்தியிலிருந்த வடக்கு மாகாணம் தற்போது தேங்காய் உற்பத்தியில் அதிகரித்து காணப்படுகின்றது. </p><p>இதற்கு வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்பட்டமையே காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T22:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை வீழ்த்த அமெரிக்கா கையாளும் முதன்மை ஆயுதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vance-pressure-most-effective-tool-1787262828"></link>
            <id>https://ibctamil.com/article/vance-pressure-most-effective-tool-1787262828</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பயன்படுத்தும் பொருளாதார நெருக்கடியே மிகவும் பயனுள்ள ஆயுதம் என&amp;nbsp;அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (J...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பயன்படுத்தும் பொருளாதார நெருக்கடியே மிகவும் பயனுள்ள ஆயுதம் என&nbsp;அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.</p><p>அதேவேளையில் இது மிகவும் நுட்பமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் மீது பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா அதிகரிக்கும் போது பதிலுக்கு அவர்களும் அமெரிக்கா மீது பொருளாதார ரீதியான அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதால் இது ஒரு நுட்பமான சூழல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f05e030-5d88-4fe1-a4df-5e7e5bcceebe/26-6a8777fd03aa6.webp' /></p><p>இருப்பினும், கடந்த சில வாரங்களாக அமெரிக்காவை விட ஈரான் தரப்பே அதிக நெருக்கடியை உணர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் அமெரிக்க மக்கள் பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டி உள்ளது உண்மைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிவாயுக் கப்பல்கள்&nbsp;</h2><p>ஆனால், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்க முயன்றாலும் அந்தப் பாதை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்களைப் பாதுகாப்பாக அனுப்பி அமெரிக்க மக்களுக்குச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2aad839-07a4-4fb6-a6e1-d97e8b2e1fc8/26-6a87776eab226.webp' /></p><p>ஈரான் தனது அணுஆயுதக் கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்வதே தங்களது இறுதி இலக்கு என அவர் குறப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்காது என்ற நிலையை உருவாக்குவதற்கான கட்டத்தில் அமெரிக்கா செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் செக்! ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-warns-china-on-new-iran-sanctions-1787252041"></link>
            <id>https://ibctamil.com/article/us-warns-china-on-new-iran-sanctions-1787252041</id>
            <summary type="text">ஈரான் மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் திட்டத்திற்குச் சீனா ஒத்துழைக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் திட்டத்திற்குச் சீனா ஒத்துழைக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நேரடித் தடைகள்&nbsp;</h2><p>இந்தநிலையில் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தக உறவு வைத்துள்ள சீனா மீது அமெரிக்கா நேரடித் தடைகளை விதிக்குமா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த ஸ்காட் பெசென்ட், இதுபோன்ற பல உணர்வுபூர்வமான விவாதங்களைத் தனிப்பட்ட முறையில் பேசுவதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைய வேண்டும் என்றும் சீனா உட்பட அனைவரும் விரும்புகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca32809-3f5a-4126-84ae-c65582c0f65f/26-6a8761fedcba0.webp' /></p><p>சீனா தனக்குத் தேவையான மொத்த எரிசக்தியில் 50 சதவீதத்தைப் பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில் இருந்தே (Persian Gulf) இறக்குமதி செய்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அதனால் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பது சீனாவிற்கே பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் ஈரானுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.</p><p>இந்தநிலையில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியைச் சீனா வாங்கி வருவதன் அடிப்படையில் அமெரிக்க நிதித்துறைச் செயலாளரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T20:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்! திருப்பி அனுப்பப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-diversifies-ships-from-iranian-ports-1787247723"></link>
            <id>https://ibctamil.com/article/us-diversifies-ships-from-iranian-ports-1787247723</id>
            <summary type="text">ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவு (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.</p><p>ஈரான் மீது புதுப்பிக்கப்பட்ட கடற்படை முற்றுகையை (Naval Blockade) பலப்படுத்தும் நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றுகை உத்தரவு</h2><p>
</p><p>
மேலும், முற்றுகை உத்தரவுகளை மீற முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் 2 கப்பல்களில் அமெரிக்கப் படையினர் ஏறி சோதனை நடத்தியதாகவும் மத்தியக் கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
</p><p>மத்திய கிழக்கில் போர் வெடித்ததில் இருந்து ஹோர்முஸ் நீரிணை பகுதி ஒரு இரட்டை முற்றுகை நிலையை எதிர்கொண்டுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">U.S. Marine Corps MV-22B Osprey utility aircraft take off from the flight deck of USS Boxer (LHD 4) while the ship transits the Arabian Sea and continues to enforce the U.S. blockade against Iran. As of Aug. 20, U.S. forces have redirected 67 commercial vessels, disabled 3 and… <a href="https://t.co/UAOmcLWExf">pic.twitter.com/UAOmcLWExf</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2090472446314848321?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தநிலையில் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் முயன்று வருகிறது.
</p><p>
இதற்குப் பதிலாக, சர்வதேச எரிசக்திப் பாதைகளைத் திறந்த நிலையில் வைத்திருக்க அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்கள், கடற்படைப் பாதுகாப்பு மற்றும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
</p><p>இந்த பிண்ணனியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததைத் தொடர்ந்து ஈரான் மீது மேலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய (Crushing) கடுமையான பொருளாதார நடவடிக்கைகளும் தடைகளும் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை எச்சரிக்கை...! ஈரான் வெளியிட்ட கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-condemns-new-us-sanction-threats-1787242734"></link>
            <id>https://ibctamil.com/article/iran-condemns-new-us-sanction-threats-1787242734</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்றது என்று ஈரான் சாடியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> </p><p></p><h2>கொள்கை வகுப்பாளர்கள்</h2><p>இது தொடர்பில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானியப் பிரதமர் முகமது மொசாதெக்கை (Mohammad Mosaddegh) பதவியிலிருந்து அகற்றிய சதித்திட்டத்தின் ஆண்டு நினைவு நாளுடன் ஒத்துப் போவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be74e1d9-08bf-4e68-908b-296f62ff0edf/26-6a873bcdb3495.webp' /></p><p>இந்த நடவடிக்கை, கடந்த 73 ஆண்டுகளாக ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் காட்டி வரும் பகைமையின் தொடர்ச்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருளாதார விளைவுகள்</h2><p> மேலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மனிதநேயமற்ற, சட்டவிரோதமான மற்றும் அடாவடியான குணத்தையே இது நிரூபிக்கின்றது எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d6b41d7-49af-4990-ab4b-2507ba867d5e/26-6a873bce64953.webp' /></p><p>அமெரிக்காவின் புதிய தடைகள், மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றம் புரிவதை ஒப்புக்கொள்வது போலாகும் என்றும் இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு பழைய கொள்கையின் தொடர்ச்சியே என்றும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.</p><p>ஈரானுக்கு நிதி, வர்த்தகம் அல்லது தளவாட ஆதரவை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் (Economic Warfare) தொடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையிலேயே ஈரானின் இந்த அதிகாரப்பூர்வப் பதில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:10:20+00:00</updated>
        </entry>
    </feed>
