<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-05T11:16:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பறிபோன பாடசாலை மாணவன் உயிர் : 13 மாணவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-dies-after-racing-on-motorbike-1788605156"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-dies-after-racing-on-motorbike-1788605156</id>
            <summary type="text">ஹசலகாவிலிருந்து வஸ்கமுவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வஸ்கமுவா சாலையில் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹசலகாவிலிருந்து வஸ்கமுவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வஸ்கமுவா சாலையில் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>

இந்த விபத்து இன்று காலை (05) சுமார் 05.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹசலகாவின் அதீலா பகுதியில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று, வஸ்கமுவா சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p><h2>அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபரீதம்</h2><p>அதிவேகமாகச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வளைவுக்கு அருகில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியபோது, ​​ஓட்டுநரால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/775e2f72-1b0f-45cc-804d-ddc9c6d96b79/26-6a9bf92fe258b.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

இந்த விபத்தில் மேலும் பதின்மூன்று மாணவர்கள் காயமடைந்து, சிகிச்சைக்காக மஹியங்கன தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து ஹசலக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef546792-2626-40f9-84c1-b7ffdc6bc5ec/26-6a9bf930980f8.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி : தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempt-to-construct-an-illegal-building-in-trinco-1788605482"></link>
            <id>https://ibctamil.com/article/attempt-to-construct-an-illegal-building-in-trinco-1788605482</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில்&amp;nbsp;சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில்&nbsp;சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p>கும்புறுபிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரையை அண்டிய தேவிக்கல்
பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒப்பந்தக்காரர்கள் இன்று (05) கட்டிடம் கட்டுவதற்காக துப்பரவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட கிராம இளைஞர்கள்
இடத்திற்குச் சென்று வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;கட்டிடம் அமைக்க முயற்சி</h2><p>
</p><p>
அத்துடன் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரின் அனுமதியில்லாமல்
தொல்லியல் இடமென்று கூறிக் கொண்டு கட்டிடம் அமைக்க முயற்சிப்பதை
எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362dca0b-eb6c-4982-aa45-1de5fae85cba/26-6a9bf8c6a2158.webp' /></p><p>
</p><p>இதேவேளை வார இறுதி நாட்களில் இவ்வாறான வேலைகள் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த பகுதி தொல்லியல் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கே பழைய விகாரை இருந்ததாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்காக இப்பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-recovered-from-inside-a-house-in-jaffna-1788603814"></link>
            <id>https://ibctamil.com/article/body-recovered-from-inside-a-house-in-jaffna-1788603814</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்தநிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23311860-0ed7-4d73-b508-3744bcd40f1a/26-6a9bf10b80e00.webp' />&nbsp;</p><p>
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை
தொடர்பில் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று பார்வையிட்டார் மகிந்த ராஜபக்‌ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார். 
நேற்றைய தினம், கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார். </p><p>
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05.09.2026) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p></p><h2>மகனிடம் நலம் விசாரித்த&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92595b85-cd5c-4908-9016-399153410c29/26-6a9bf46c6126a.webp' /></p><p> </p><p>
இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி சிறையில் அடைக்கப்பட்ட நாமல் : நீதிமன்றில் இடம்பெற்ற ஆக்ரோஷமான வாதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-happened-in-court-before-namal-was-arrested-1788602232"></link>
            <id>https://ibctamil.com/article/what-happened-in-court-before-namal-was-arrested-1788602232</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இம்மாதம் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட பின்னர், சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த நீண்ட விசாரணைக்குப் பின், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><h2>சிறப்பு சிறையில் அடைக்கப்பட்ட நாமல்</h2><p>&nbsp;நீதிமன்ற உத்தரவின்படி பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை, கொழும்பு விளக்கமறியல் சிறையில் உள்ள ஒரு சிறப்புச் சிறையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள குறிப்பிட்ட தேவைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட பின்னரே சிறையின் சிரேஷ்ட அதிகாரிகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658d9736-9ed7-4cec-87b6-7687de92156e/26-6a9bef32989b9.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு அறையில் மேலும் சுமார் பத்து கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>சிறிலங்கன் ஏர் லைன்ஸிற்காக பத்து விமானங்கள் கொள்வனவு</h2><p>&nbsp;இந்த மாபெரும் நிதி முறைகேட்டின் அடிப்படை, சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக பத்து புதிய விமானங்களை வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். பதினாறு பெரிய ரக விமானங்களை வாங்கும் நோக்கில் பிரெஞ்சு நிறுவனமான ஏர்பஸ்ஸுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53332ab-5c41-4963-9205-1d30ec07ff2c/26-6a9bef33553eb.webp' /></p><p> </p><p>மேலும், ஒவ்வொரு விமானத்திற்கும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெறுவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.</p><p> அதேவேளையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான மறைந்த கபில சந்திரசேன, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் மற்ற சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;நுணுக்கமான முறையில் இலஞ்சப் பணப் பரிமாற்ற செயல்முறை</h2><p>&nbsp; &nbsp;சர்வதேச வங்கி அமைப்புகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் இந்த இலஞ்சப் பணப் பரிமாற்ற செயல்முறை மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5ee8d4-1ef0-4821-9e63-de85b6601b1f/26-6a9bef340982e.webp' /></p><p> அதன்படி, இலஞ்ச ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இணைந்து நடத்திய விசாரணைகளில், புருணை நாட்டில் நிறுவப்பட்ட ஒரு போலி நிறுவனம் மூலம், "ஐரோப்பிய வானூர்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம்" என்ற நன்கு அறியப்பட்ட ஐரோப்பிய சிவில் விமான நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் என்ற பெரும் இலஞ்சம் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக, சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பராமரிக்கப்படும் "பி இசட் சொல்யூஷன்ஸ் என்சி" என்ற கணக்கில் 1,454,651.24 யூரோக்கள் இலஞ்சமாக வரவு வைக்கப்பட்டது. </p><p>மேலும், இந்தத் தனிநபர் நிறுவனம், இவ்வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>கபில சந்திரசேனவின் வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>&nbsp; இந்த நிதி ஆதாரங்கள் பல்வேறு கணக்குகளுக்கு எவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டன என்பது பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. கபில சந்திரசேனாவுக்குச் சொந்தமான அவுஸ்திரேலியாவில் உள்ள கொமன்வெல்த் வங்கி கணக்குகளுக்கு 400,000 யூரோக்களும், மற்றொரு கணக்கிற்கு 200,000 அமெரிக்க டொலர்களும் மாற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54275d0c-5ccd-48cc-9172-317e85f67679/26-6a9bed9017f51.webp' /></p><p> </p><p>மேலும், பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் நிறுவனம் வழியாக ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 167,400 யூரோக்கள் மாற்றப்பட்டன. நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு, டபிள்யூ. டபிள்யூ. டி. நிமல் ஹேமசிறி பெரேரா 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பலமுறை நூறு மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமமான இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் அமைந்துள்ளது.</p><p> விசாரணையில், அந்தத் தொகையில் பதின்மூன்று மில்லியன் ரூபாய் காசோலைகள் மூலமாகவும், மேலும் ஆறு மில்லியன் ரூபாய் ரொக்கமாகவும் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.</p><h2>இலஞ்ச ஆணைக்குழு சார்பாக முன்வைக்கப்பட்ட வாதம்</h2><p>&nbsp;இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இச்சம்பவத்தில் முக்கிய சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ள நிமல் பெரேரா கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46e8d5a-447c-4f9d-968a-08583edcf0c4/26-6a9bed8f5d348.webp' /></p><p> உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின்படி நீதிபதிக்கு முன்பாக இரகசிய வாக்குமூலம் அளித்த பின்னர், அவர் அத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக, அவர் தற்போது அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, இதுகுறித்து ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் இலஞ்ச ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> இந்தச் சூழ்நிலையில் சாட்சியிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக இலங்கை காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தினார்.</p><p>&nbsp;இந்தச் சிக்கலான புலனாய்வு இலங்கைக்கு மட்டும் உரியதல்ல, மாறாக இது ஒரு சர்வதேச அளவிலான விரிவான புலனாய்வு என்று அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. </p><p>அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கி மெய்நிகர் சட்ட முறை மூலம் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரெஞ்சு ஏர்பஸ் நிறுவனத்தின் பல பிரதிநிதிகள் ஏற்கனவே இந்த நாட்டிற்கு வந்து சாட்சியம் அளித்துள்ளனர்.&nbsp;</p><p>மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளிடமிருந்து நான்கு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணைக்குத் தங்களின் முழு ஆதரவையும் வழங்க மற்ற வெளிநாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. </p><p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 149-வது பிரிவின் கீழ் பிணை சாத்தியம் என்றாலும், விசாரணை அதன் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் விளக்கமறியலில் வைப்பது அவசியம் என்றும், சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டால் சர்வதேச மற்றும் உள்ளூர் சாட்சிகள் மீது மேலும் கடுமையான அழுத்தம் ஏற்படும் தெளிவான அபாயம் உள்ளது என்றும் அரசுத் தரப்பு வலுவாக வாதிட்டது.</p><p> இலஞ்ச ஆணைக்குழுவின் ஆணையரால் ஒரு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பிணை வழங்குவதற்குச் சிறப்புச் சூழ்நிலைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>பிணையில் விடுவிக்க கோரிக்கை</h2><p>&nbsp;சந்தேக நபரான நாமல் ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரை உரிய பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். விசாரணை முழுமையாக நிறைவடையாத சூழலில், ஒரு சந்தேக நபரை இந்த முறையில் காவலில் வைப்பது சட்டப்படி பொருத்தமற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b3978a-309e-4bf6-b7dc-3106288415e8/26-6a9bed8ea921e.webp' /></p><p> அரசுத் தரப்பின் வாதங்களை வன்மையாகக் கேள்விக்குள்ளாக்கிய ஜனாதிபதி சட்டத்தரணி, இலஞ்ச ஆணைக்குழு தனது வாதங்களை நிமல் பெரேரா என்ற சாட்சி அளித்த வாக்குமூலங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்வைத்துள்ளது என்று கூறினார்.</p><p> இருப்பினும், சம்பந்தப்பட்ட சாட்சி முந்தைய சந்தர்ப்பங்களில் அளித்த சாட்சியங்கள் விசாரணைகளின் போது பொய்யென நிராகரிக்கப்பட்டதாகவும், அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியத்தை தற்போது எவ்வாறு உண்மையானதாகவும் நம்பகமானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது சிக்கலானது என்றும் அவர் வாதிட்டார்.</p><p> அத்தகைய ஒரு நபரின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனது கட்சிக்காரரைக் காவலில் வைப்பது முற்றிலும் தவறு என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். </p><p>மேலும், நாமல் ராஜபக்ச மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் நீதிமன்றத்தை விட்டு ஒருபோதும் தப்பிக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்திய அந்த சட்டத்தரணி, பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் கோரினார்.</p><p></p><h2>நீதிமன்றின் தீர்ப்பு</h2><p>
</p><p>
புகாரையும், பிரதிவாதியால் முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் சட்ட வாதங்களையும் விரிவாகப் பரிசீலித்த நீதிபதி, தனது தீர்ப்பை அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/743d3148-87c8-453a-9558-5ec437c20dbe/26-6a9bed8debbf3.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் குறித்த விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், சட்டப்படி சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் எந்தவொரு விதிவிலக்கான உண்மைகளையோ அல்லது சூழ்நிலைகளையோ பிரதிவாதி நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி முடிவு செய்தார். </p><p>அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், சந்தேக நபரான நாமல் ராஜபக்சவை எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இறுதியாக உத்தரவிட்டது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-missile-attack-on-iranian-oil-tanker-1788601052"></link>
            <id>https://ibctamil.com/article/us-missile-attack-on-iranian-oil-tanker-1788601052</id>
            <summary type="text">ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் போக்குவரத்துக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பலொன்றை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கார்க் தீவு</h2><p> 

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7bb35b-eabc-4dab-a855-0e43d5edb237/26-6a9bec4d2977d.webp' /></p><p> </p><p>

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். </p><p>கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. </p><p>

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இத்தாக்குதல் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு முறை சிறை சென்ற நாமலின் பலரும் அறியாத கறுப்புப் பக்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dark-side-of-namal-who-went-to-prison-four-times-1788602914"></link>
            <id>https://ibctamil.com/article/dark-side-of-namal-who-went-to-prison-four-times-1788602914</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தில் பல்வேறு நிதி குற்றச்சாட்டுகளையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
</p><p>
2016 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அவர் சந்தித்த நான்கு முக்கிய கைது நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வழக்குகள் விசாரணைகளின் தற்போதைய நிலை மிக விரிவாக பேசப்பட வேண்டிய ஒன்றாகும்.</p><p>


இந்தியாவின் கிரிஷ் குழுமத்திடமிருந்து கொழும்பு கோட்டையில் சொகுசு குடியிருப்பு வளாக திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மையமாக கொண்டு பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதி முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>

குறித்த பணம் விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினரால் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதுடன் இந்த வழக்கு தொடர்பான சட்ட போராட்டங்கள் மற்றும் விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>
இரண்டாவது ஹலோ காப் நிறுவன முதலீட்டு வழக்கு, சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட 70 மில்லியன் ரூபாய் பணத்தை ஹலோ காப் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சட்டவிரோத பணத்தை சலவை செய்ததற்காக நாமல் ராஜபக்ச மீது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.</p><p> 

2016 ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

நீண்ட கால நீதிமன்ற விசாரணைகளுக்கு பிறகு குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்பட்டதால் 2023ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அவர் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
</p><p>

மூன்றாவது அம்பாந்தோட்டை துறைமுக போராட்ட வழக்கு, அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு கூட்டு எதிரணியினரால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அப்போது கைது செய்யப்பட்டார்.</p><p>அரசியல் ரீதியாக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.</p><p>நான்காவது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முறை கேடு வழக்கு - தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமுறைகேடுகள் ஒப்பந்த புனரமைப்புகள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

விமான சேவை தொடர்பிலான நிதி நிர்வாக குழறுபடிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் சட்டரீதியான விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் தற்போது தொடர்ந்து வருகின்றன.</p><p>நாமல் ராஜபக்ச மீதான இந்த வழக்குகள் அவர் மீதான அரசியல் விமர்சனங்களுக்கும் சட்டரீதியான சவால்களுக்கும் பிரதானமான காரணங்களாக அமைந்து காணப்படுகிறது. </p><p>ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் ஏனைய வழக்குகள் நிலுவையில் இருப்பது அவரது எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய செல்வாக்கை செலுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p>
இந்த நிலையில் இலங்கை நாட்டில் மிக மோசமான அரசியல் சூழலையும் மக்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளிய இந்த ராஜபக்ச குடும்பம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாகும்.</p><p>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TydCi4jNYVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T10:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-massgrave-impartial-criminal-investigatio-1788596445"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-massgrave-impartial-criminal-investigatio-1788596445</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. </p><p>அத்துடன் இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><h2>உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை</h2><p>அதற்கமைய இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் வகையில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>குறித்த அறிக்கையானது 2025 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2026 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c8b56-ea28-4c64-b460-b37aae1317e0/26-6a9be60fa7e3c.webp' /></p><p>அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பத்தி கூட்டுப் புதைகுழியில், 2026 ஜூலை மாத இறுதியில், குழந்தைகள் உட்பட 477க்கும் மேற்பட்ட நபர்களுக்குரிய எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.</p><p> </p><p>2025 செப்டம்பரில், செம்மணி கூட்டுப் புதைகுழி விசாரணை குறித்த தனது உண்மை கண்டறியும் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க, நம்பகமான, வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமாக வழிநடத்தப்படும் செயல்முறையை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது.</p><p></p><h2>யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்</h2><p> </p><p>மழையின் காரணமாக ஏழு மாத காலத்திற்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 2026 ஏப்ரலில் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதுடன், தூதரகப் பிரதிநிதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f8c07a-e6a1-4af8-ad47-fd1fd328d379/26-6a9be61073f34.webp' /></p><p> </p><p>இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணிகள் மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், சாத்தியமான கட்டளைப் பொறுப்பு குறித்த விசாரணைகள் உட்பட பாரபட்சமற்ற குற்றவியல் விசாரணைகள் அவற்றுடன் நடைபெறுவதையும் உறுதிசெய்ய, சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நாடுமாறு இந்த அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.</p><p>மேலும், தற்போதுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் செயற்படுத்துமாறு இந்த அலுவலகம் பரிந்துரைப்பதுடன், அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆட்கொணர்வு வழக்குகளையும், குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளையும் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் தீ வைத்து நபரை கொலை செய்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-murdered-by-dehiwala-prime-suspect-arrested-1788599220"></link>
            <id>https://ibctamil.com/article/man-murdered-by-dehiwala-prime-suspect-arrested-1788599220</id>
            <summary type="text">தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கொலைச் சம்பவத்தின் பின்னர் கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் வாகனமும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போதைப்பொருள் வர்த்தகம்</h2><p>
</p><p>&nbsp;இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், குறித்த நபரை கொலை செய்ததாக சந்தேகநபர் காவல்துறையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66dfe135-7ea0-4f35-8362-709145e0e078/26-6a9be053b588e.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர் ‘கொஸ்மல்லி’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும், கொலை செய்யப்பட்ட நபர் ‘படோவிட்ட அசங்க’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் இவர்கள் இருவருக்கும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் காவலவ்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T09:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ciaboc-arrested-namal-rajapaksa-after-namal-x-post-1788588827"></link>
            <id>https://ibctamil.com/article/ciaboc-arrested-namal-rajapaksa-after-namal-x-post-1788588827</id>
            <summary type="text">என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் எக்ஸ் (X) தளத்தில் அவர் சார்பில் வெளியிட்ட பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>மேலும் அந்த பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p></p><h2>மக்களுக்கு உரையாற்றவுள்ள ஜனாதிபதி</h2><p>
</p><p>
என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489fdb00-7ffe-4423-8317-bbe97ae0d45a/26-6a9bbbc64734c.webp' /></p><p>
</p><p>
சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன். இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.</p><p>

இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><p></p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For years, before this Government came to power, public statements were made alleging that significant sums of public money had been misappropriated, with promises that any unlawfully obtained funds would be recovered and returned to Sri Lanka.<br><br>The Government has now been in…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2095909591619952867?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.
</p><p>
எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது. </p><p>அரசியல் அதிகாரம் தற்காலிகமானது. 

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.

இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_z1y1H5Pe1I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T08:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-ltt-sri-lanka-intelligence-1788594654</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><p></p><h2>சஹ்ரான் பற்றிய தகவல்</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a78213c-7d06-4fe6-af66-88ece08a62bb/26-6a9bcbec560ba.webp' /></p><p>இந்தியாவின் சிறப்புப் காவல்துறை&nbsp; பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக காவல்துறை சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.</p><p></p><h2>ஒரு முக்கிய எச்சரிக்கை</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c093ded-dbfa-41de-9d85-b74d0e8da46e/26-6a9bcbeb86f67.webp' /></p><p>
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.</p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும்,அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்</h2><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).</p><p>[198CKN
]</p><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.</p><p></p><h2>வெளிவந்துள்ள வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a837440f-3fe7-488d-9e82-be4313082781/26-6a9bcbedba4b8.webp' /></p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் காவல்துறையினரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.</p><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை ஐந்து ரூபாயால் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/milk-tea-and-plain-tea-prices-reduced-by-rs-5-1788592140"></link>
            <id>https://ibctamil.com/article/milk-tea-and-plain-tea-prices-reduced-by-rs-5-1788592140</id>
            <summary type="text">இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> சமையல் எரிவாயு விலைகள்</h2><p>இதேவேளை&nbsp;லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1236bc-607d-46b4-a004-60d8f3ce4fd9/26-6a9bc40b50e3a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயாலும், 5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 42 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 20 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-saudi-job-seekers-in-sri-lanka-1788590722</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p>
இதுவரை மொழித் தடைகள் காரணமாக குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்ட இலங்கை வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களுக்கு இந்தத் தீர்மானம் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள், தமது தாய்மொழியிலேயே பரீட்சைக்குத் தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6aeb04-7e18-46b5-bf2c-bddac2c867fb/26-6a9bc5bb8f6b4.webp' /></p><p>இந்த நடவடிக்கை, தகுதியான இலங்கை தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் நாமல்! கவனம் பெறும் பிரித்தானிய நீதிமன்ற அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-in-the-world-s-largest-bribery-scandal-1788592106"></link>
            <id>https://ibctamil.com/article/namal-in-the-world-s-largest-bribery-scandal-1788592106</id>
            <summary type="text">சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்முதல் தொடர்பான ஏர்பஸ் இலஞ்ச விவகாரத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p> ஏர்பஸ் நிறுவனம் சிறிலங்கா ஏர்லைன்ஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக முறைகேடான முறையில் பணம் வழங்க முயன்றதாக பிரித்தானிய Serious Fraud Office (SFO) மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.</p><p>இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியிலேயே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதும் இடம்பெற்றது.</p><p></p><h2>ஏர்பஸ் - Business Partner</h2><p>
2011 ஜூலை முதல் 2015 ஜூன் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில், சிறிலங்கா ஏர்லைன்ஸின் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவரின் மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தை ஏர்பஸ் தனது Business Partner ஆக நியமித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்பாட்டின் மூலம், சிறிலங்கா ஏர்லைன்ஸுக்காக 10 ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் மேலும் 4 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கும் சாதகமான முடிவைப் பெறும் நோக்கில், அந்த Business Partner-க்கு மொத்தமாக 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்க ஏர்பஸ் ஊழியர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், அந்த தொகையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே உண்மையில் செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>2012ஆம் ஆண்டு புருனேயில் பதிவு செய்யப்பட்ட Biz Solutions Inc. என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கி கணக்கிற்கு இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

Biz Solutions Inc. நிறுவனம் அப்போது சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜேநாயக்கவுடன் தொடர்புடையதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>UKEF கேள்வி&nbsp;</h2><p>

மேலும், Business Partner-ன் உண்மையான பயனாளியை மறைப்பதற்காக ஏர்பஸ் ஊழியர்கள் UK Export Finance (UKEF) நிறுவனத்திற்கு தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. </p><p>குறித்த Business Partner-க்கு விமானத் துறையில் போதிய அனுபவம் இல்லாத நிலையிலும், அவரை ஏன் நியமித்தனர் என்பது தொடர்பாக UKEF கேள்வி எழுப்பியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இலங்கை தொடர்பான இந்த விவகாரம், ஏர்பஸ் நிறுவனத்துக்கு எதிராக பிரித்தானியாவின் Serious Fraud Office மேற்கொண்ட பரந்த அளவிலான ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாகும். </p><p>பல நாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக, ஏர்பஸ் நிறுவனம் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் மொத்தமாக சுமார் 3.6 பில்லியன் யூரோ தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> 2020 பெப்ரவரி மாதத்தில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கை அரச நிறுவனங்களின் கொள்முதல் நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.</p><p>மேலும், இந்த வழக்கு சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப்பெரிய corporate bribery விசாரணைகளில் ஒன்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T07:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-including-t-56-rifle-recovered-mihintale-1788586907"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-including-t-56-rifle-recovered-mihintale-1788586907</id>
            <summary type="text">அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை (04.09.2026) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>இதை தொடர்ந்து மிஹிந்தலை காவல் நிலைய உத்தியோகத்தர் குழுவொன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைவிடப்பட்ட பொதி</h2><p>
</p><p>கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து, T56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825deb9a-7009-4da1-a29f-5c2c2c65f958/26-6a9bb1da2088f.webp' /></p><p>
</p><p>இத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அப் பகுதிக்குக் கொண்டு வந்து போட்ட நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katchatheevu-belongs-to-sri-lanka-min-chandrasekar-1788585209"></link>
            <id>https://ibctamil.com/article/katchatheevu-belongs-to-sri-lanka-min-chandrasekar-1788585209</id>
            <summary type="text">கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>கிளிநொச்சியில் அண்மையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தமிழக அரசியல்வாதிகள்&nbsp;</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.</p><p>சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dd900f-ad25-45f0-a01a-ce9efb7bc265/26-6a9badbf4db42.webp' />&nbsp;</p><p>தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை.</p><p>
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினைகள்</h2><p> </p><p>மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553e1068-a816-4a39-919a-31b0c8b1def3/26-6a9badbe55dad.webp' /></p><p>குறிப்பாக, இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. </p><p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கே இருதரப்பு கலந்துரையாடல்களில் முன்னுரிமை வழங்கப்படும்.” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-distribution-continue-under-qr-code-system-1788584141"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-distribution-continue-under-qr-code-system-1788584141</id>
            <summary type="text">QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடைமுறை தொடர்வதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தவோ அல்லது அதில் மாற்றங்களை மேற்கொள்ளவோ அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>QR குறியீட்டு முறை</h2><p>
</p><p>
எனவே, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விநியோக முறைமையை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58be8a58-3c28-48d8-8e1c-84d8a4c256c3/26-6a9ba637efd4f.webp' /></p><p>
</p><p>
QR முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் சில கவலைகளுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வை மிகவும் முறையானதும் திறமையானதுமான முறையில் நிர்வகிப்பதே QR எரிபொருள் விநியோகத் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:35:05+00:00</updated>
        </entry>
    </feed>
