<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T18:38:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே போகும் நேபாள பேரவலத்தின் பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-death-toll-continues-to-rise-by-the-hour-1788026902"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-death-toll-continues-to-rise-by-the-hour-1788026902</id>
            <summary type="text">நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இன்றைய நிலவரப்படி, மேலும் 2,498 பேரைக் காணவில்லை என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>

உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை தொகுத்ததன் படி, கடந்த ஆறு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நிவாரணப் பணிகள்&nbsp;</h2><p> இருப்பினும், முக்கியமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcd45915-6325-40ba-b4ec-4eaac6ceefaf/26-6a9325a732501.webp' /></p><p>மேலும், நேபாளத்தின்&nbsp; மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தொகுத்த விவரங்களின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 900 நேபாள ஊழியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
இதுவரை அந்தத் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 361 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>நேபாள-சீன எல்லை</h2><p>
</p><p>
திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு, நேபாள-சீன எல்லைக்கு அருகே, குறிப்பாக தொலைதூர ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைந்திருந்த பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadbb5d3-f302-4d1e-be48-e336d64dd4c7/26-6a9325a7e64c8.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, பல தொழிலாளர்கள் கட்டுமானப் பகுதிகளிலும் சுரங்கங்களிலும் இன்னும் சிக்கியுள்ளனர்.
</p><p>
அவர்களைத் தொடர்புகொள்ள இயலாத நிலையில், சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க உதவுவதற்காக, சுரங்க மீட்பு நிபுணர்களை இந்தியா மற்றும் சீனாவிடம் நேபாள அரசு கோரியுள்ளது. </p><p>இரு நாடுகளின் குழுக்களும் இன்று நேபாளம் வந்தடைந்த நிலையில், மேலும் பணியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T18:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078"></link>
            <id>https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.</p><p>

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு</h2><p>அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c297b2-0c45-400d-895f-73b6631763c4/26-6a9301887510a.webp' /></p><p>
</p><p>
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார்.</p><p>
அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T17:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-israeli-liaison-weapons-group-enters-iran-1788024210"></link>
            <id>https://ibctamil.com/article/us-israeli-liaison-weapons-group-enters-iran-1788024210</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோல்வியடையும் ஒரு போரில் சிக்க வைக்கவும்&nbsp; முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p><p>இந்நிலையில் தென்கிழக்கு ஈரானில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ஆயுதக் குழுவை பாதுகாப்புப் படைகள் கலைத்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனியாக அறிவித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><h2>அமெரிக்கக் கடற்படை முற்றுகை</h2><p>
</p><p>
அமெரிக்கக் கடற்படை முற்றுகையையும் மீறி, 7.5 பில்லியன் டொலர் எண்ணெய் வருவாயைத் தனது மத்திய வங்கிக்கு மாற்றியதாக ஈரான் அறிவித்ததுடன், பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களை ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb1cf17-69bc-426f-927b-97d70e7520c7/26-6a931a011d007.webp' /></p><p>இஸ்ரேல் சார்பு சகாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க - இஸ்ரேல் போருக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஈரான் உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாக அராக்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p>அராக்சி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரானிய உளவுத்துறை தகவல்களின்படி உலகளாவிய எரிசக்தி சந்தைகளை கையாளுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்ப் தோல்வியடையும் போர்</h2><p>
</p><p>
அமெரிக்க அரசாங்கத்துக்குள் உள்ள சிலர், நம்பிக்கைக்குரியதாக எளிதில் நம்பும் ஊடகங்களை பயன்படுத்தி எரிசக்தி விலைகளை தங்களது தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09498af3-27dd-415a-a52f-663e701d8fb7/26-6a931a01c7215.webp' /></p><p>
</p><p>
மேலும், இதுபோன்ற முயற்சிகள் ட்ரம்பை தோல்வியடையும் போரில் சிக்கவைத்திருக்க நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இஸ்ரேலுடன் தொடர்புடைய தரப்புகளும் போரை ஆதரிக்கும் வகையில் நம்பிக்கையூட்டும் மதிப்பீடுகளை முன்வைக்கின்றன, என்றும் அராக்சி கூறியுள்ளார்.</p><p>
இதன் பொருளாதாரச் சுமையை அமெரிக்க நுகர்வோர் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T17:38:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-freezes-rs-6-000m-worth-illegal-assets-1788003954"></link>
            <id>https://ibctamil.com/article/sl-freezes-rs-6-000m-worth-illegal-assets-1788003954</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூபாய் 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
</p><p>2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் </h2><p>இவர்களையும் உள்ளடக்கி திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூபாய் 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3856d84-3e36-4304-8291-66f2fc9c0d31/26-6a92ccefc8016.webp' /></p><p>

அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூபாய் 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்யா அதிரடி தாக்குதல்: கிடங்கில் பயங்கர வெடிப்பு - 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
கெய்வ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமுர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இராணுவ ஆயுதங்கள்</h2><p>குறித்த அறிக்கையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அறிக்கையில் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f9a375-fb33-47cf-a3bc-019bcd2a83be/26-6a92c1fb7be23.webp' /></p><p>இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வெடிமருந்துகளைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ட்ரோன் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் இராணுவ ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கையே தங்களது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இவ்வாறு புச்சா மாவட்டத்தில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் அமைந்திருந்த கிடங்கு மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறி அப்பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் வீதித் தடையை மீறி சென்ற வாகனம்: துப்பாக்கி சூட்டில் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி - இளம் பெண் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161"></link>
            <id>https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161</id>
            <summary type="text">கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (29-08-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள காவல் வீதித் தடையை மீறி செல்ல வாகனம் ஒன்று முற்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, குறித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d5527b-de96-4718-aaa9-b49118bb1b45/26-6a92e10d343ca.webp' /></p><p>இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக இறைச்சியாக்க தாயார் நிலையில் இருந்த மாடுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன் 58&nbsp;கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது</p><p>குறித்த சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த குற்றத்தில் நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மாடுகள் இறைச்சி</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (29-08-2026) குறித்த இடத்தினை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
</p><p>
அதன் போது மூன்று பசு மாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக
கட்டப்பட்டிருந்த நிலையிலும் ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ
இறைச்சியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ba3306-1388-454e-9f64-a7ce491dcf30/26-6a92d982022b9.webp' /></p><p> அத்துடன் அங்கிருந்த 43 வயதான நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் கைது அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது
தொடர்பிலும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[LCW3R6Fஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:12:18+00:00</updated>
        </entry>
    </feed>
