<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-29T03:34:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சியில் போதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-jaffna-csi-deputy-chairperson-1787972337"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-jaffna-csi-deputy-chairperson-1787972337</id>
            <summary type="text">தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (28)&nbsp; இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண திருச்சபை பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். </p><p>

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. 

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. </p><p>கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>

தாக்குதலை நடத்திய நபர், தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற 'அமெரிக்கன் இலங்கை மிஷன்' திருச்சபையின் உறுப்பினராக இருந்து, பின்னர் மீண்டும் இதில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T03:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெகிழ்ச்சிச் சம்பவம் : தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த சிறு காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baby-wild-elephant-wandered-around-the-statue-1787970276"></link>
            <id>https://ibctamil.com/article/baby-wild-elephant-wandered-around-the-statue-1787970276</id>
            <summary type="text">புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே காட்டு யானை ஒன்று
சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே காட்டு யானை ஒன்று
சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p>பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விசித்திரமான நடத்தை</h2><p>
கட்டுமானப் பணியில் உள்ள அந்த யானைச் சிலைக்கு அருகில் வந்த இளம் காட்டு யானை
ஒன்று, அங்கிருந்து நகர மறுத்து பல மணி நேரமாகச் சிலையைச் சுற்றிச் சுற்றி
வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e53a79-51ea-49fe-9e54-7f3035013a0c/26-6a92445f3e491.webp' /></p><p>கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம்
யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின் உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது
தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து
நின்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
</p><p>
யானையின் இந்த விசித்திரமான நடத்தையைக் கண்ட அப்பகுதி
மக்களும் அவ்வழியாகச் சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T02:48:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்! மக்களுக்கு முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-heat-in-the-north-east-today-1787966933"></link>
            <id>https://ibctamil.com/article/the-heat-in-the-north-east-today-1787966933</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்தோடு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழை பெய்யக்கூடிய வாய்ப்பு</h2><p>

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27aa2d67-52f8-4f35-8434-2557eb677ed0/26-6a9235d792bb2.webp' /></p><p>
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எவராலும் தடுக்க முடியாது! அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-can-stop-the-22nd-amendment-constitution-1787963768"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-can-stop-the-22nd-amendment-constitution-1787963768</id>
            <summary type="text">


யார் என்ன கூச்சலிட்டாலும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பெருந்தோட்ட மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யார் என்ன கூச்சலிட்டாலும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும் என அவர் நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலத்தில் சட்டமானது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது.</p><p></p><h2>கூச்சலிடும் ஊழல்வாதிகள்</h2><p>
</p><p>
ஆனால் தற்போதைய ஆட்சியில் பெரியவர், சிறியவர் அல்லது பணக்காரர், ஏழை என்ற எந்தவித பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f21751-e47b-47ec-9b65-c2374d3558d5/26-6a922c2f99932.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாகவே பழைய ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்திற்கு எதிராகக் கூச்சலிட்டு வருகின்றனர்.
</p><p>
நீதிமன்றச் சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலைமையை மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்த 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. மக்கள் மத்தியில் இதற்கான தேவைப்பாடும் நீதிக்கான எதிர்பார்ப்பும் தெளிவாகக் காணப்படுகிறது.” என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-29T00:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-warns-israel-removing-it-gaza-ceasefire-center-1787960772"></link>
            <id>https://ibctamil.com/article/uk-warns-israel-removing-it-gaza-ceasefire-center-1787960772</id>
            <summary type="text">காசா போர்நிறுத்த ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பிரித்தானிய அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா போர்நிறுத்த ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பிரித்தானிய அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அத்தகைய எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது என பிரித்தானியா இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
</p><p>
20 அம்ச காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தங்கள் அதிகாரிகளை வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையும் கூட்டு முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கண்காணிப்பு மையத்திலிருந்து பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலிப்பதாகக் கூறப்படும் நிலையில், களத்தில் நிலைமையை மேம்படுத்துவதில் தங்கள் பங்கை ஆற்றுவதில் பிரித்தானியா உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நெதர்லாந்துக்கு பதிலடி&nbsp;</h2><p>
</p><p>
இதனிடையே, போர்நிறுத்த மையத்திலிருந்து இரண்டு நெதர்லாந்து தூதுவர்களை இஸ்ரேல் வெளியேற்றி வருவதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f3cf986-a76a-457b-9486-8ae923eac070/26-6a922614c620c.webp' /></p><p>

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வரும் இஸ்ரேலியப் பொருட்களின் வர்த்தகத்திற்கு நெதர்லாந்து விதித்த தடை மற்றும் பிற நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T00:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-provided-kiev-information-about-moscow-meetings-1787952451"></link>
            <id>https://ibctamil.com/article/us-provided-kiev-information-about-moscow-meetings-1787952451</id>
            <summary type="text">
கடந்த சில நாட்களாக மொஸ்கோவில் நடைபெற்ற பல சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா தங்களுக்கு வழங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கடந்த சில நாட்களாக மொஸ்கோவில் நடைபெற்ற பல சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா தங்களுக்கு வழங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள அவர், மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அதில் யார் யார் கலந்துகொண்டனர் என்ற விவரங்களை வெளியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவிற்கு&nbsp;நன்றி</h2><p>
அத்துடன், இந்த தகவலைப் பகிர்ந்ததற்கும் ரஷ்யாவுடனான உரையாடலில் சரியான தொனியைப் பயன்படுத்தியதற்கும் அமெரிக்காவிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d95c1d8-b9de-433d-a8aa-b2804ac6883f/26-6a92220f01719.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, நேட்டோ உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷ்யாவை எச்சரிப்பதற்காக சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.</p><h2>ரஷ்ய நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
கிரெம்ளின் இந்த செய்தியை நிராகரித்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோ நாட்டைத் தாக்க மாட்டார் எனக் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த செய்தியை நிராகரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7692ad-ce58-4722-b63a-17381449539b/26-6a922210608e5.webp' /></p><p>
</p><p>
எனினும், ராட்க்ளிஃபின் சந்திப்பின் போது நேட்டோ நாட்டிற்கு எதிரான ரஷ்ய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஈரானுக்கான ரஷ்யாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T00:08:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/call-for-immediate-end-to-iran-war-1787950598"></link>
            <id>https://ibctamil.com/article/call-for-immediate-end-to-iran-war-1787950598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க செனட்டராக கருதப்படும் ஆடம் ஷிஃப், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க செனட்டராக கருதப்படும் ஆடம் ஷிஃப், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
இந்தப் போரின் ஆறு மாத நிறைவைக் குறிக்கும் வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீடித்த இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரித்துள்ளார்.
</p><p>
“ஆறு மாதங்களாக எந்தவொரு திட்டமிட்ட உத்தியும் இல்லை, போரின் முடிவும் தெரியவில்லை; அனைத்துத் துறைகளிலும் செலவுகள் அதிகரித்துள்ளன; நமது படைவீரர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.'</p><p></p><h2>போரின் விளைவுகள்</h2><p>
</p><p>
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அவர், “நமது படைவீரர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் அழைத்து வாருங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today marks six months of the Iran War.<br><br>Six months with no strategy and no end in sight.<br><br>Six months of higher costs across the board.<br><br>Six months of our servicemembers being away from their families.<br><br>Six months and 18 service members killed.<br><br>We must end this war and bring our… <a href="https://t.co/pZDbQlBBUj">https://t.co/pZDbQlBBUj</a> <a href="https://t.co/ou7NWywawx">pic.twitter.com/ou7NWywawx</a></p>&mdash; Senator Adam Schiff (@SenAdamSchiff) <a href="https://x.com/SenAdamSchiff/status/2093358027189428357?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அமெரிக்கா வரும் நவம்பரில் இடைக்காலத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், இந்தப் போரின் விளைவுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T22:20:24+00:00</updated>
        </entry>
    </feed>
