<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-26T23:30:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் வழிமறிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-oil-tanker-blocked-in-strait-of-hormuz-1787775562"></link>
            <id>https://ibctamil.com/article/indian-oil-tanker-blocked-in-strait-of-hormuz-1787775562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன்போது, ஹானா (HAANA) என்ற இந்திய எண்ணெய் கப்பலை, ஈரானின் பாரிய போர்க்கப்பல் ஒன்று வழிமறித்து எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அந்நாட்டின் போர்க்கப்பல் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த இந்திய எண்ணெய் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>கப்பல்களின் நகர்வு</h2><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதை வழியிலான கப்பல் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b8b5ff-7bd6-496b-9b5d-f5a185601828/26-6a8f4ccd56930.webp' /></p><p><i>Image Credit:&nbsp;gCaptain</i></p><p>
</p><p>
அத்தோடு, அங்கு எந்தவொரு கப்பல்களின் நகர்வுகளும் பதிவாகவில்லை என்றும் ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821"></link>
            <id>https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் (ARED) வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p>
இது குறித்து தொடர்புடைய சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்பிற்குரியவர்களுக்காக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரி பல ஆண்டுகளாக அமைதியான முறையில் போராடி வரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அவர்களின் தொடர்ச்சியான இப்போராட்டம், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகிய அவர்களின் அடிப்படை உரிமைகளின் வெளிப்பாடாகும்.</p><p>&nbsp;</p><h2>பெண்களுக்கு எதிரான வன்முறை&nbsp;</h2><p>

தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதை உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, உண்மை மற்றும் நீதியைப் பெறுவதற்கான தேடலில் 2 வருடங்களாகத் துன்பங்களையும் உளவியல் ரீதியான வடுக்களையும் தாங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898074b8-4373-4a7a-baa5-f3bf25f63dd6/26-6a8f45b6a6038.webp' /></p><p>
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உடலியல் ரீதியான வன்முறை மேற்கொள்ளப்பட்டமை குறித்து பெரும் கவலையடைகின்றோம். சூழ்நிலை எதுவாக இருப்பினும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கும், மனித கண்ணியத்தைப் பேணுவதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உள்ளது.</p><h2>

அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயம்</h2><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் நீதியைத் தேடுவதில் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் போராட்டங்கள் பொது அமைதிக்கோ அல்லது தேசிய பாது காப்பிற்கோ அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது.</p><p>

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) உட்பட அரசாங்க நிறுவனங்களை அமைதியான முறையில் கேள்விக்குட்படுத்துவதும், பயனுள்ள உண்மை கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைக் கோருவதும் ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத கூறுகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f669cdf8-6917-4bf4-b073-c9f262fb5a6b/26-6a8f45b79a9a5.webp' /></p><p>

நீதி கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் பின்னணியில் இன்றைய சம்பவம் நடந்துள்ளது என்பது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் நீண்டகாலமாக உள்ள நியாயமான கேள்விகள் இவைதான்: </p><p>அவர்களின் அன்பிற்குரியவர்கள் எங்கே? அரசாங்கத்தின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு என்ன நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்?</p><p>
இக்கேள்விகளுக்கு அச்சுறுத்தல், வன்முறை அல்லது அடக்குமுறைகள் மூலம் பதிலளிக்க முடியாது.</p><h3>
சிறீலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் கோருவது:</h3><ol><li>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.</li><li>இன்று காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வன்முறை குறித்து சுயாதீனமான, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
</li><li>சட்டவிரோதமான அல்லது அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அமைதியாக ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
</li><li>அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து பாது காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வன்முறை அல்லது அடக்குமுறை மூலம் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் கலந்துரையாட வேண்டும்.
</li><li>உள்நாட்டு பொறிமுறையை நாம் நம்பிக்கை பெறும் வகையில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும், இதன் அர்த்தம் நாம் உள்நாட்டு பொறிமுறையை வலுபடுத்துமாறு கோருகின்றோம்.</li></ol><h2>
சர்வதேச சமூகத்திற்கு</h2><p>
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைமையை கூர்ந்து கவனிக்குமாறு சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.</p><p>
உண்மை மற்றும் நீதியை அமைதியான முறையில் தொடர்ந்து கோரி வரும் பாதிக்கப்பட்ட மக்களை நடத்தும் விதமே, இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3750ede7-f2d1-4543-a19a-d432e7cef41c/26-6a8f45b85207c.webp' /></p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று அறியக் கோரும் ஒரு அமைதியான தாயை ஒருபோதும் வன்முறையோடு எதிர்கொள்ளக் கூடாது. நீதியைக் கோரும் ஒரு பாதிக்கப்பட்ட நபரை ஒருபோதும் குற்றவாளியாக நடத்தக் கூடாது.</p><p>
இக்குடும்பங்களின் தொடர்ச்சியான துயரங்கள் இயல்புநிலையாக மாற அனுமதிக்கப்பட முடியாது.</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இலங்கையின் முன்னேற்றம், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ” எனக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ! 14 பச்சிளங்குழந்தைகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173"></link>
            <id>https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173</id>
            <summary type="text">பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&amp;nbsp; ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&nbsp; ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.</p><p>இன்றையதினம்(26) புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பவத்தின்போது வார்டில் இருந்த 15 குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவரால் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீ விபத்துக்குக் காரணம்</h2><p> </p><p>

இந்த விபத்து நடந்தபோது பிரசவித்த தாய்மார்கள் ஜன்னல்கள், ஏணிகள் மற்றும் படிகள் வழியாகச் சென்று உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcc44b8-2c9c-4bb7-9085-464bb1c25575/26-6a8f3ef0c1b6a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;japantimes</i></p><p>
</p><p>
மகப்பேறு வார்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாக பணிப்பாளர், குழந்தைகள் திருடப்படுவதைத் தடுப்பதற்காகவே பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், பழுதடைந்த குளிரூட்டும் கருவி (A/C) வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் சிலிண்டர்கள் தீயின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-s-decision-on-22nd-constitutional-amendment-1787769846"></link>
            <id>https://ibctamil.com/article/anura-s-decision-on-22nd-constitutional-amendment-1787769846</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய மிலாத்-உன்-நபி நிகழ்வில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

இந்தச் சீர்திருத்தத்தைச் சுற்றி சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நீதி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>​​மக்களின் நம்பிக்கை</h2><p>

அந்தவகையில், பொதுமக்களுக்கு சிறிதும் அநீதி இழைக்கும் எந்தவொரு முடிவையும் தனது அரசாங்கம் எடுக்காது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வழக்குகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, ​​மக்கள் நீதி அமைப்பின் மீது எவ்வாறு நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0101a7a-2a61-47ed-8d8e-eee074e94ae5/26-6a8f35b0e1bbc.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எதிர்ப்புகள் காரணமாக மாற்றப்படமாட்டாது என்றும், ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றைச் சரிசெய்ய தனது அரசாங்கம் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-26T19:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-prison-prisoner-escaped-1787768860"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-prison-prisoner-escaped-1787768860</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற கைதி நாத்தாண்டிய - மெதகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிறை விடுதியின் மேலாளராகப் பணியாற்றும் சிறைக் காவலரால், அந்த விடுதியைச் சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த&nbsp;மோட்டார் சைக்கிள்</h2><p>
</p><p>
இந்நிலையில், கைதிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறைக் காவலர் மதிய உணவு அருந்துவதற்காகத் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6141b7-c75b-4bd7-bc47-bf690a30e662/26-6a8f3164c9bfe.webp' /></p><p>

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபரான கைதி, விடுதிக்கு முன்னால் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடிக்கொண்டு, லெஸ்லி ரணகல மாவத்தை வாசல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T18:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/36th-memorial-day-mandaitivu-massacre-1787765231"></link>
            <id>https://ibctamil.com/article/36th-memorial-day-mandaitivu-massacre-1787765231</id>
            <summary type="text">

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.</p><p>
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.</p><p>

தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்களகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.</p><p></p><h2>மலர்மாலை அணிவித்து அஞ்சலி</h2><p>தொடர்ந்து அருட்தந்த வசந்தன், மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன் ஆகியொரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நினைவேந்தல் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9661f83-3e0f-4162-abec-0d1529b8357f/26-6a8f238bdbdb9.webp' /></p><p>
தொடர்ந்து உருவப்படங்களுக்கு உறவுகளால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மண்டைதீவு பங்குத்தந்தை அலோய் அருணேஷகும்மார், அருட்தந்த வசந்தன்,அருட்சகோதரிகள், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர், பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், அனுசியா ஜெயகாந்த், மற்றும், ஜோசம் கனிஸ்டன் பொதுமக்கள் என பலரும் மலர்தூவி அஞ்சலித்தனர்.</p><p>
முன்பதாக 1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.</p><p>
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிபையில் குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா, மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இதற்கான தீர்வுகோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.</p><h2>கோர சம்பவத்துக்கான சாட்சி</h2><p>
இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff4035d-a772-4767-9472-e0fcdcd71a3a/26-6a8f238c9720b.webp' /></p><p>
இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.</p><p>
இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.</p><p>

அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் சாட்சி.அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.</p><p>

அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு. இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T18:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/customs-arrest-indians-attempting-smuggle-gold-1787758369"></link>
            <id>https://ibctamil.com/article/customs-arrest-indians-attempting-smuggle-gold-1787758369</id>
            <summary type="text">இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த&amp;nbsp;இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.காங்கேசன்துறை ஊடாக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த&nbsp;இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>காங்கேசன்துறை ஊடாக இன்று நாகப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 19 இந்தியப் பயணிகளை இலங்கை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன்படி தடுத்து நிறுத்தப்பட்டவர்களிடம்&nbsp; 7 பேரிடமிருந்து இதுவரை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>சுங்க அதிகாரிகள் விசாரணை&nbsp;</h2><p>ஏனையோரிடம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஸ்கானிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97193fb9-0665-46c9-b051-29719c2d262f/26-6a8f0723bb663.webp' /></p><p>
சந்தேகநபர்கள் கடந்த 24ஆம் திகதி கொழும்பு ஊடாக இலங்கைக்கு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும், தங்கத்தை உடலுக்குள் அல்லது வேறு நூதனமான முறையில் மறைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்றார்களா என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T17:46:24+00:00</updated>
        </entry>
    </feed>
