<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-10T11:22:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி : ஆறு ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643</id>
            <summary type="text">அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அந்த ஆசிரியர்களை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச செயலகத்தின் பிரிவு பொறுப்பு அதிகாரிகள் இருவர் கடந்த எட்டாம் திகதி ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.</p><p>






</p><h2>&nbsp;மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம்</h2><p>ஹட்டன் கோட்ட விசாரணைப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், இந்த நிதி மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர். மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையது என்பதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355c0c12-dd85-4e6d-a875-8ddf59567d3a/26-6aa28c3063f66.webp' /></p><p>
</p><p>
நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகத்திற்குரிய இரண்டு அதிகாரிகளும் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் இந்த பணத்தை வரவு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;6 ஆசிரியர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p> சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு அறிக்கைகளையும் பரிசோதிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்ததையடுத்து, இந்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12298c1-0550-4830-a1c8-acbafd64582b/26-6aa28c3119bd8.webp' /></p><p>
</p><p>





இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் சகோதரரின் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் இருந்த அந்த சகோதரரின் சேவையையும் தற்காலிகமாக இடைநிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/820-kg-of-fish-caught-using-explosives-1789036390"></link>
            <id>https://ibctamil.com/article/820-kg-of-fish-caught-using-explosives-1789036390</id>
            <summary type="text">திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை&nbsp;இலங்கை கடற்படையினர் நேற்று (09.10.2026) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய பொடுவைக்கட்டு - செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மூதூர் கடற்றொழில் பரிசோதகர்</h2><p>
</p><p>
இலங்கை கடற்படையின் SLNS பராக்கிரம நிறுவனத்துக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், SLNS கோகண்ண நிறுவனத்துடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ae9c00-99b3-4f47-bb36-92d8e51bc24c/26-6aa28c7aca1bb.webp' /></p><p>
</p><p>
இதன்போது சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர், வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 820 கிலோகிராம் மீன்களுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><p>
சந்தேகநபர், லொறி மற்றும் மீன்தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மூதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் டொலர் மோசடிக்கு பின்னால் NPP அமைச்சர்கள் : சபையில் நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/are-ministers-behind-usd-2-5-mn-theft-asks-namal-1789034829"></link>
            <id>https://ibctamil.com/article/are-ministers-behind-usd-2-5-mn-theft-asks-namal-1789034829</id>
            <summary type="text">2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில மூத்த அமைச்சர்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமைச்சர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகையைத் தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>மறுக்கப்பட்ட&nbsp;அனுமதி</h2><p>நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியதுடன், அந்த விநியோகப் பணிகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக நிறைவு செய்யப்பட்டன என்றும் வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc43447-a22c-4a39-958f-b679769602f5/26-6aa287f77ca18.webp' /></p><p>
</p><p>இதேவேளை தங்களுடைய பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானத்தைப் பயன்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில் அடக்குமுறைகளால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/annual-grand-festival-the-vallipura-alwar-temple-1789035490"></link>
            <id>https://ibctamil.com/article/annual-grand-festival-the-vallipura-alwar-temple-1789035490</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இதனை முன்னிட்டு நாளை காலை 7.00 மணியளவில் விசேட யாக பூசைகள் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று, காலை 9.00 மணியளவில் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.
</p><p>
கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் விசேட பூசை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விழா நடவடிக்கைகள்</h2><p> </p><p>பெருந்திருவிழாவின் ஆரம்ப நாட்களில் சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறுவதுடன், ஏழாம் திருவிழாவிலிருந்து வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e7d0e6-7f55-4aa1-959e-e2f0504195b7/26-6aa284f2ae76b.webp' /></p><p>
</p><p>
இம்முறை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, 17.09.2026 அன்று எட்டாம் திருவிழாவில் குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 19.09.2026 அன்று ஒன்பதாம் திருவிழாவான வெண்ணைத் திருவிழாவும், 20.09.2026 அன்று பத்தாம் திருவிழாவான துகிலியுத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
</p><p>
அத்துடன், 21.09.2026 அன்று பதினொன்றாம் திருவிழாவான கம்சன் போர் திருவிழாவும், 23.09.2026 அன்று பதின்மூன்றாம் திருவிழாவான வேட்டைத் திருவிழாவும், 24.09.2026 அன்று பதினான்காம் திருவிழாவான சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
</p><p>
தொடர்ந்து, 25.09.2026 அன்று பதினைந்தாம் திருவிழாவான தேர்த்திருவிழாவும், 26.09.2026 அன்று பதினாறாம் திருவிழாவான சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், 27.09.2026 அன்று பதினேழாம் திருவிழாவான கேணி/பட்டுத் தீர்த்தத் திருவிழாவுடன் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>விசேட ஏற்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை, திருவிழாவுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.</p><p> பக்தர்களின் போக்குவரத்து தேவைகளை கருத்திற்கொண்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொள்ளவுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமதிக்காமல் உடன் வீட்டிற்குச் செல்லுங்கள் : அமெரிக்க இராணுவத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-us-military-1789034842"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-us-military-1789034842</id>
            <summary type="text">ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் கலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><p> அமெரிக்கப் படைகள் தாமதமாகும் முன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 'சம விகித பதிலடி' காலம் முடிந்துவிட்டதாகவும், விளையாட்டின் விதிகள் மாறிவிட்டதாகவும் வோஷிங்டன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><h2>கடுமையான பதிலடி கொடுக்கப்படும்</h2><p>உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையில் அதிகாரத்தை நிலைநிறுத்தும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாள் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43829fac-7011-468f-b285-b5f49889f39b/26-6aa2849769ad0.webp' /></p><p>&nbsp;









நாடாளுமன்றத்தில் உரையாற்றியும், ஒரு டெலிகிராம் செய்தியை வெளியிட்டும், ஈரானின் பாதுகாப்பிற்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கலிபாஃப் கூறினார்.</p><p></p><h2>போர்க்களத்தின் உண்மையான நிலை</h2><p> </p><p>போர்க்களத்தின் உண்மையான நிலையைத் திரிபுபடுத்த அமெரிக்கத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcece6b6-7251-476e-b42b-9c83f2643f4c/26-6aa284981be5a.webp' /></p><p> </p><p>மேலும், விதிக்கப்பட்ட தடைகளை எதிர்கொள்ள உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு மிகவும் கடுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய தரப்பின் தலைவராக செயல்படும் கலிபாஃப் வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parliament-to-debate-22nd-constitutional-amendment-1789032296"></link>
            <id>https://ibctamil.com/article/parliament-to-debate-22nd-constitutional-amendment-1789032296</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அன்றைய தினங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி</h2><p>இதேவேளை&nbsp;உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகக் கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5792fa2-3f35-4747-a873-c5e82f406bbc/26-6aa27f0c3fe44.webp' /></p><p>மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முக்கிய கடற்கரை நகரை கைப்பற்றிய ஹவுதிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789032834"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789032834</id>
            <summary type="text">செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஏமனின் முழு செங்கடல் கடற்கரைப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.</p><p></p><h2>சவூதி ஆதரவுப் படை</h2><p>இதன்மூலம், சவூதி ஆதரவுப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்து, யேமனின் நீண்டகாலப் போரில் ஒரு முக்கிய முனையை மீண்டும் திறக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180d5466-2e1f-47f0-9fd9-24f40988d16a/26-6aa27cc2459a5.webp' /></p><p>இந்நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அவர்கள் நெருங்கியுள்ளனர் என்று யேமன் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த முன்னேற்றம், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றின் மீது ஹவுதிகளுக்கு அதிக செல்வாக்கைக் கொடுக்கும். </p><p>ஏமனை ஜிபூட்டி மற்றும் எரிட்ரியாவிலிருந்து பிரிக்கும் பாப் அல்-மண்டேப், செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. </p><p>மேலும் இது, சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் செல்லும் எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற பொருட்களுக்கான ஒரு முக்கியப் பாதையாகவும் திகழ்கிறது.</p><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆறு மாத கால மோதல், மற்றொரு முக்கியமான எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சீர்குலைப்பதால், இந்த சண்டை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-of-water-from-iranamadu-livestock-drinking-1789028748"></link>
            <id>https://ibctamil.com/article/release-of-water-from-iranamadu-livestock-drinking-1789028748</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு&amp;nbsp;இரணைமடு குளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் தேவையை கருத்திற்கொண்டு&nbsp;இரணைமடு குளத்தின் வாய்க்கால்&nbsp;திறக்கப்பட்டுள்ளது.</p><p>மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வியாழக்கிழமை (10.09.2026) இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.</p><p>
முரசுமோட்டை பகுதியில் நிலவும் வறட்சியால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீர் திறக்கப்படாவிட்டால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து, புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினால் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கு அண்மையில் அவசரக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><h2>இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால்</h2><p>
</p><p>
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு கால்நடைகளின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் நோக்கில் இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1218b11e-6eac-4f04-9d8b-b8d3f3dd3ad6/26-6aa2755370a16.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த நீர் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

எனவே, விவசாயிகள் குறித்த நீரை வயல் நிலங்களுக்குப் பாய்ச்சுவதையோ அல்லது ஏனைய விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-tamil-research-conference-toronto-canada-1789025485"></link>
            <id>https://ibctamil.com/article/world-tamil-research-conference-toronto-canada-1789025485</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொரொன்டோ நகரில் நடைபெறவுள்ளது.</p><p>எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாடு, “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” (Classical Tamil and Tamils in the Age of Artificial Intelligence) என்ற நவீன கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், செம்மொழித் தமிழின் முக்கியத்துவம் மற்றும் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் மாநாட்டில் முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாநாட்டின் ஏற்பாட்டாளர்களான அனைத்துலகத் தமிழர் பேரவை (Federation of Global Tamils) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-hacked-to-death-in-jaffna-1789026348"></link>
            <id>https://ibctamil.com/article/youth-hacked-to-death-in-jaffna-1789026348</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சியில் 33 வயதான இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.</p><p>பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் நேற்று (09/09/2026) இரவு 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட நபர் கடையில் வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே நின்ற மோட்டார்
சைக்கிளில் ஏறி புறப்பட முற்பட்டுள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இதன்போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44d4f3-f2b0-4630-9d2e-68c9339999f7/26-6aa263883d9c4.webp' /></p><p>இந்த நிலையில் பருத்தித்துறை
நீதவான் இன்று (10) காலை 11:00 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன்&nbsp;தடய ஆய்வு காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறை&nbsp;பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-bandarawela-mayor-janaka-nishantha-arrested-1789022832"></link>
            <id>https://ibctamil.com/article/former-bandarawela-mayor-janaka-nishantha-arrested-1789022832</id>
            <summary type="text">பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று (09) இரவு பண்டாரவளை விசேட குற்ற விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நேற்று (09) இரவு பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p>

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே முன்னாள் மேயர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p> </p><p>குறித்த விவகாரம் தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e01c14a-a95b-49ff-97c5-cf9648a79bec/26-6aa25b44d47de.webp' /></p><p> </p><p>இந்தநிலையில் தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இதனையடுத்து சந்தேகநபர் இன்றைய தினம் (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-women-arrested-at-the-airport-1789023050"></link>
            <id>https://ibctamil.com/article/three-women-arrested-at-the-airport-1789023050</id>
            <summary type="text">சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழியாக வெளியே எடுத்துச் செல்ல முயன்ற மூன்று இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த மூவரும் கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும், புத்தளம் - கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும், கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவருமான வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தபெறுமதி&nbsp;80 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இலட்சக்கணக்கான பெறுமதி போதைப்பொருள்</h2><p>
</p><p>
அவர்கள் நேற்று (09) இரவு 10.50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து Thai AirAsia விமான சேவையின் FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d549205-2d1e-49ce-966d-8e4792280774/26-6aa259f4cee42.webp' /></p><p>

இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரிஜுவானா போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் - வந்தாறுமூலை படுகொலை சம்பவங்களில் காயங்களுடன் தப்பிய முக்கிய சாட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukonda-vandarumola-massacre-eyewitnesses-1789024089"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukonda-vandarumola-massacre-eyewitnesses-1789024089</id>
            <summary type="text">மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுன்றில் இது குறித்து நேற்று(09.09.2026) கருத்து வெளியிட்ட அவர், இந்த கொலைகளுக்கான சுயாதீன விசாரணை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ''36 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இந்த படுகொலைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>அயல்நாட்டில் வாழும் சாட்சி&nbsp;</h2><p>

இந்த விடயத்தில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியானது நிலைநாட்டப்படவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca74fe1-7dc0-455b-81c9-15c2ee3cbede/26-6aa25a9cb1d2d.webp' /></p><p>
</p><p>
செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரை மறக்க முடியாத ஒரு கறை படிந்த நாளாகும். </p><p>

90 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமிற்கு கொக்குவில், பிள்ளையாரடி உள்ளிட்ட அப்பகுதியில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அதில் ஒரு வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவர். பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் 40 பேர் பெண்கள் 85 பேர் வயது முதிர்ந்தவர்கள் என மொத்தமாக 186 பேர் போய்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற அந்த முகாமில் வைத்து அன்றைய தினம் அத்தனை பேரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மாத்திரம் கடுமையான காயங்களுடன் தப்பியுள்ளார். அவர்தான் கிருஷ்ணகுமார். அவர் இப்போதும் அயல்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.</p><p></p><h2>பற்றை மறைவிலிருந்து பார்த்தவர்&nbsp;</h2><p> </p><p>

அதேபோன்று இன்னும் ஒருவர் அந்த சம்பவத்தை பற்றை மறைவிலிருந்து பார்த்தவர் என்று அறியப்படுகிறது. அவர் வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர். அவரோடு மேலும் சிலரும் பற்றைகளுக்குள் மறைந்திருந்து இந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e49f11-7284-4535-9241-715464a31409/26-6aa25a9d6c5e8.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் அந்த முகாமில் இருந்த படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி 185 பேரையும் படுகொலை செய்துள்ளார்கள். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்திருந்தார்.</p><p> 

அந்த ஆணைக்குழு மூலம் சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரம் கூட அதன் போது அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அந்த இராணுவ முகாமிற்கு காமினி வர்ணகுல சூரிய என்பவரே பொறுப்பாக இருந்துள்ளார்.

36 ஆண்டுகள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. </p><p>சம்பந்தப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும் அந்த விசாரணை முடிவடைவதற்கு முன்பாக செம்மணியில் மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு தற்போது 584 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T07:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656"></link>
            <id>https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது</p><p>2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
</p><p>குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்</h2><p>
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான பதிவுகளை 2026 செப்டெம்பர் 17ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17601cf9-c1a4-45a8-b2d1-0c848090007b/26-6aa2509e9490e.webp' /></p><p>மேலதிக தகவல்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk-ஐ பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேக நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055"></link>
            <id>https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055</id>
            <summary type="text">கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடையின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10.09.2026) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஐஸ் போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p>
கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியதுடன், கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fdb7ead-01e0-4c22-9c4f-783e5c8f2cc9/26-6aa24ec3c1116.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1000 வாகனங்கள் - பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658"></link>
            <id>https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658</id>
            <summary type="text">துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக,&nbsp;இந்தநிலை ஏற்ப்பட்டுள்ளது.</p><h2>விரைவாக விடுவிக்க நடவடிக்கை</h2><p>
இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ec3a7d-bf1a-41e4-92ef-a6fe3dfa43e2/26-6aa238804c460.webp' /></p><p>இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
</p><p>
இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288</id>
            <summary type="text">புதிய இணைப்புஉரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>உரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) பிணை வழங்கியுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd9c355-5b72-47c5-a1da-c6506c3e1b65/26-6aa23be55b403.webp' /></p><p>குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு : உயர்நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-gnanasara-thero-s-presidential-pardon-invalid-1789019099"></link>
            <id>https://ibctamil.com/article/sc-gnanasara-thero-s-presidential-pardon-invalid-1789019099</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
</p><p>
அதன்படி, ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என உயர்நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.</p><p>

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி பொதுமன்னிப்பு</h2><p> </p><p>



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018 ஆம் ஆண்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேரருக்கு ​மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e4488b-0d6c-4eb1-8212-ff6831edfb3c/26-6aa24d134f2ae.webp' /></p><p> </p><p>


இந்த நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனையடுத்து அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், அவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக கருதுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fMCyGcxLc2w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-10T06:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone Duo... மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/apple-launches-iphone-duo-price-in-sri-lanka-1789017715"></link>
            <id>https://ibctamil.com/article/apple-launches-iphone-duo-price-in-sri-lanka-1789017715</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக மடிக்கக்கூடிய தொலைபேசிகளை விற்பனை செய்து வரும் போட்டியாளர்களை விட, தனது வடிவமைப்பு மற்றும் தரவு தனியுரிமை குறித்த வாக்குறுதிகள் தன்னை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக மடிக்கக்கூடிய தொலைபேசிகளை விற்பனை செய்து வரும் போட்டியாளர்களை விட, தனது வடிவமைப்பு மற்றும் தரவு தனியுரிமை குறித்த வாக்குறுதிகள் தன்னை முன்னோக்கிச் செலுத்தும் என்ற நம்பிக்கையில் புதிய பதிப்பை&nbsp;ஆப்பிள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.</p><p>ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை அன்று, 1,999 டொலர் மதிப்பிலான மடிக்கக்கூடிய ஐபோனான 'iPhone Duo'வை அறிமுகம் செய்து, தனது முதன்மை ஸ்மார்ட்போனுக்கு ஒரு புதிய வரையறையை வழங்கியுள்ளது.
</p><p>இதன் ஆரம்ப விலை இலங்கை மதிப்பில் 6 இலட்சத்துக்கும் அதிகமாகும்.</p><p></p><h2>Smart Watches மற்றும் wireless earbuds</h2><p>
 

Samsung மற்றும் Huawei போன்ற சீன நிறுவனங்களின் சாதனங்கள் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தைத் தாண்டி பிரபலமடையப் போராடி வரும் நிலையில், நீண்ட காலமாக அவற்றின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு பிரிவை இந்த 'டியோ' புரட்டிப் போடக்கூடும் என விளம்பரதாரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b8e8b8-86e6-40d3-b0dd-478aa7605fce/26-6aa24a5a350b2.webp' /></p><p> Smart Watches மற்றும் wireless earbuds போன்றவை ஆப்பிள் செய்ததைப் போலவே, மடிக்கக்கூடிய சாதனங்களின் வடிவத்தையும் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டுவர உதவுவதன் மூலம், ஆப்பிளின் இந்த வருகை அவற்றுக்குத் தேவையான ஒரு உந்துசக்தியாக அமையக்கூடும் என்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர். </p><p>

 

iPhone Duo, வளைந்த விளிம்புகளுடன், பாஸ்போர்ட் போன்ற அளவிலும் வடிவத்திலும் உள்ளது. இதைத் திறக்கும்போது, ​​7.6 அங்குல (19 செ.மீ) கிடைமட்டத் திரை விரிகிறது, இதைச் செங்குத்தாகவும் பார்க்க முடியும். </p><p>ஃபோனை மடிக்கும்போது, ​​முன்பக்கத்தில் ஒரு சிறிய ஒற்றைத் திரை உள்ளது. திறந்த நிலையில், இது ஆப்பிளின் மிகவும் மெல்லிய ஃபோன் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.</p><p> 

 

இருப்பினும், இது சீனப் போட்டியாளர்கள் வழங்கும் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை விட தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>
 

2017-ஆம் ஆண்டு ஐபோன் X-க்குப் பிறகு ஆப்பிளின் முதன்மைத் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீரமைப்பு நிகழ்விற்கு, புதிய தலைமைச் செயல் அதிகாரி ஜான் டெர்னஸ் தலைமை தாங்கியுள்ளார்.</p><p></p><h2>209.6 பில்லியன் டொலர்</h2><p> </p><p>ஐபோன், அதன் சமீபத்திய நிதியாண்டில் 209.6 பில்லியன் டொலர்களை ஈட்டியது, இது ஆப்பிளின் மொத்த விற்பனையில் பாதிக்கும் சற்று அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a35cf8c-8aa8-4184-bee1-2aa5919e0d3a/26-6aa24af3ba21f.webp' /></p><p>

 

தற்போதுள்ள மடிக்கக்கூடிய சாதனங்கள், ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பார்ப்பது போன்ற பொதுவான பணிகளுக்குச் சிரமமானவையாகவும் பொருத்தமற்றவையாகவும் இருப்பதாக டெர்னஸ் விமர்சித்தார். </p><p>மேலும், ஒரு பிரத்யேக கீல், சீரான விகிதாச்சாரத்துடன் கூடிய இரட்டைத் திரைகள் மற்றும் ஒரு புதிய டைட்டேனியம் உடல் ஆகியவற்றின் மூலம், பாக்கெட் அளவில் உள்ள ஒரு சாதனத்தில் ஐபேட் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் iPhone Duo வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். </p><p>&nbsp;'டுயோ' என்ற பச்சை ஆந்தையைச் சின்னமாகக் கொண்ட வெளிநாட்டு மொழி கற்றல் செயலியான டுயோலிங்கோ, X செயலியில், "நாங்கள் காப்புரிமையை மீறிவிட்டோம்," என்று சிரித்து அழும் ஈமோஜிகளுடன் செய்தி அனுப்பியது. </p><p>இதற்கு, மடிக்கக்கூடிய கைபேசி நிறுவனமான Samsung மொபைல் யு.எஸ், "அவர்களும் எங்களைப் பார்த்து நகலெடுத்துவிட்டார்கள்," என்று கூறி, தனது "ஒற்றுமையை" வெளிப்படுத்தியது.</p><p>வெகுஜன ஆடம்பரத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஒரு உலகளாவிய பிராண்டிற்கு புதிய உச்சமாக விளங்கும், சுமார் 2,000 டொலர் விலையுள்ள ஒரு மடிக்கக்கூடிய சாதனம் தங்களுக்குத் தேவை என்று ஆப்பிளின் வாடிக்கையாளர்களை நம்பவைக்கும் பொறுப்பு, இதற்கு முன்பு அதிகம் அறியப்படாத வன்பொருள் பிரிவுத் தலைவரான டெர்னஸிடமே வந்து சேரும்.</p><p> 

 

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் போன்ற பகுப்பாய்வு நிறுவனங்கள், ஆப்பிள் நிறுவனம் தன்னால் உற்பத்தி செய்யக்கூடிய ஒவ்வொரு மடிக்கக்கூடிய ஐபோனையும் விற்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த இலாபகரமான சந்தையில் 40% பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கின்றன. </p><p>ஆப்பிள் நிறுவனம் v&nbsp; ஒரு வணிக உற்பத்தித்திறன் சாதனமாக நிலைநிறுத்தியுள்ளது. இது பல பங்கேற்பாளர்களுடன் zoom அழைப்புகளை எவ்வாறு நிர்வகிக்கும் என்பதையும், ஸ்லாக் மெசேஜிங் செயலியின் விரிவான பார்வையையும் காட்டுகிறது.</p><p></p><h2>அக்டோபர் 23 முதல் விற்பனைக்கு</h2><p> 

 

Duo-வின் பெரிய திரை ஒரே நேரத்தில் பல செயலி சாளரங்களை ஆதரிக்கும். இது, உற்பத்தித்திறனை நோக்கமாகக் கொண்ட ஒரு நகர்வாகும், இதை ஆப்பிள் தனது சில iPad-களில் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc303dd2-a904-453f-a689-5f4c007483ad/26-6aa24af5459de.webp' /></p><p>
</p><p>
 

அக்டோபர் 23 முதல் விற்பனைக்கு வரும் 'iPhone Duo'வில், அதன் திரைகளை இயக்குவதற்காக A20 Pro chip, குவால்காமின் Qualcomm's wireless data chipsகளில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆப்பிளால் வடிவமைக்கப்பட்ட புதிய C2 மோடம் சிப்பும் இடம்பெறும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் பேட்டரி, இரண்டு திரைகளையும் கலந்து 24 மணி நேரம் வரை பயன்படுத்தும் திறன் கொண்டது மற்றும் சுமார் 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துகொள்ளும்.</p><p>ஏனைய நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம், இன்று விதிகளை வகுக்கும் திறனை கொண்டுள்ளது.</p><p>ஆப்பிளின் நன்கு அறியப்பட்ட மற்றும் மடிக்க முடியாத வரிசையின் சமீபத்திய பதிப்புகளான ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் கைபேசிகளையும் காட்சிப்படுத்தினர்.</p><p> ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸின் தொடக்க விலைகளை விட100 டொலர் அதிகமாக, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸின் விலை முறையே 1,199 டொலர் மற்றும் 1,299 டொலர் இல் தொடங்குகிறது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>
</p><p>
 

AirPods மற்றும் Apple Watch புதுப்பிப்புகள்

 

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு, கையாளப்பட்ட படங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.</p><p> 

 

புதிய ஐபோன் iPhone Duo கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக, 'ஆப்பிள் ரெஃபரன்ஸ் இமேஜ்' எனப்படும் ஒரு புதிய தரநிலையை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படங்களை அடையாளம் காண்பதற்கான, வளர்ந்து வரும் SynthID தரநிலையையும் இது ஆதரிக்கும் என்று கூறியுள்ளது. </p><p>இந்த ஆப்பிள் ரெஃபரன்ஸ் இமேஜ் அம்சம் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது சீனாவில் கிடைக்காது.

 

ஐபோன் 18 ப்ரோவில் புதிய A20 ப்ரோ சிப்பும் இடம்பெறும், இது மேம்பட்ட AI மாடல்களை ஐபோன்களில் நேரடியாக இயக்க உதவும் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது.
</p><p>
 

இரைச்சல் நீக்கும் வசதியுடன் கூடிய புதிய ஏர்பாட்ஸ் பதிப்பு 129 டொலர் விலையில் தொடங்கும் என்றும், இது தங்களது பட்ஜெட் இயர்பட்ஸ் வரிசையில் முதல் முறையாகும் என்றும் அந்நிறுவனம் கூறியது. </p><p>மேலும், ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது. இவை, உடல் மீட்சி மற்றும் உடற்தகுதியை அளவிடும் புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இதயத் துடிப்பு கண்காணிப்புடன், ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட முக்கிய மேம்படுத்தல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p> 

 

மைக்ரான் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் ஆப்பிள் இதுபோன்ற நிகழ்வுகளில் அதன் விநியோகஸ்தர்களுக்கு முக்கியப் பங்கை வழங்குவது அரிது. </p><p>ஆப்பிள், ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் அதிக செயற்கை நுண்ணறிவு அம்சங்களைச் சேர்ப்பதால், உயர் செயல்திறன் கொண்ட மெமரிக்கான தேவை அதிகரித்துள்ளது.</p><p> இது, குறிப்பாக உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், மைக்ரான் போன்ற விநியோகஸ்தர்களின் முக்கியப் பங்கை உயர்த்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T06:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரைச் சுற்றியுள்ள கடலில் எரிபொருள் ஆய்வு : கத்தோலிக்க பேரவை வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-exploration-in-the-sea-surrounding-mannar-1789012028"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-exploration-in-the-sea-surrounding-mannar-1789012028</id>
            <summary type="text">இலங்கையின் - மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் - மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிக்கையில், சுற்றுச்சூழலுக்குப் பாதகமான இந்தச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;கடற்றொழில் சமூகம்</h2><p>இந்தச் செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான முன்னெடுப்புகளாக இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு அல்லது வெளிப்படைத்தன்மையுடன் இத்தகைய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி முன்னெடுப்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43be72c-1249-4b01-9a72-b0ae9ce7b869/26-6aa23e177862a.webp' /></p><p> 

இதுபோன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்காக முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும்.</p><p> 

மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தகைய செயற்பாடுகளால் மன்னார் தீவின் கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.</p><p>

ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு அமர்வின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் விமானப் படை தளபதி FCIDயில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-air-force-chief-to-appear-before-fcid-today-1789013594"></link>
            <id>https://ibctamil.com/article/ex-air-force-chief-to-appear-before-fcid-today-1789013594</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (10) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

மிக் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (10) காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></h2><h5>அநுர அரசின் அதிரடி : முன்னாள் விமானப்படை தளபதிக்கு FCID அழைப்பு!</h5><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலகவை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.</p><p>அதன்படி, இன்று (10) காலை 9.30 மணிக்கு அந்த&nbsp;விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><h2>வாக்குமூலம் பதிவு செய்தல்</h2><p>

குறித்த கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/794e2837-c090-4c53-898e-7b824e6f06a9/26-6aa231e91c7bf.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:30:45+00:00</updated>
        </entry>
    </feed>
