<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-31T12:48:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-pujith-jayasundara-1785499237"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-pujith-jayasundara-1785499237</id>
            <summary type="text">போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தது.</p><p></p><h2>மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம்</h2><p>
</p><p>
எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலைத் தீர்ப்பை இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளை மீண்டும் பதிவு செய்து வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6424f537-1db8-4175-ac84-8fcb7efc47ab/26-6a6c92048fddf.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><p>பெரும்பான்மைத் தீர்ப்பை வாசித்த மூவரடங்கிய நீதிமன்றத் தலைவர் நீதியரசர் பிரியந்த லியனகே (<b>சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 நிறுபிக்கப்பட்டது</b>), 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெளிவான புலனாய்வுத் தகவலை முன்னாள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார்.</p><p>
அவ்வாறான எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் காவல்துறைமா அதிபராக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியதாகவும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அந்தக் கடமையின்மை காரணமாக 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்தனர் என்றும், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதியரசர்கள் அறிவித்தனர்.</p><p>

இதற்கிடையில், சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் விராஜ் வீரசூரிய(<b>855 குற்றச்சாட்டுகளில் ஒன்று மாத்திரம்</b>) , பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அவரை குற்றமற்றவர் என விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
</p><p>
இதேவேளை, இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தீர்ப்பு வாசிப்பின் முடிவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_RZRog2w1D8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><b>தொடர்புடைய செய்திகள்</b></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T12:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-prices-to-remain-unchanged-in-august-cpc-1785496329"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-prices-to-remain-unchanged-in-august-cpc-1785496329</id>
            <summary type="text">இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. </p><p>இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா&nbsp; இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும் என குறிப்பிட்டார்.</p><p></p><h2>பழைய விலையில் தொடரும்&nbsp;</h2><p>

அத்துடன், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் தொடர்கின்றது என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4946cfb4-cbfd-4292-b339-460d7f35d7ae/26-6a6c85a87f7bc.webp' /></p><p>

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p><p></p><p>கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதால், அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்திருந்தார்.</p><p>
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன எனவும் அன்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஊடக அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்: பின் கதவால் சென்ற பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-media-repression-in-jaffna-1785496064"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-media-repression-in-jaffna-1785496064</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர்
சென்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர்
சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார் என பிராந்திய ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p>

ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில் அநுர குமாரதிஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம்&nbsp;</h2><p>
மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி
பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f68cc365-163a-4fda-a579-2ade6d21ab13/26-6a6c8309ac288.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில்
மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G86mFxpeN50" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T11:08:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : பிரதியமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-release-under-the-military-control-in-vanni-1785494235"></link>
            <id>https://ibctamil.com/article/land-release-under-the-military-control-in-vanni-1785494235</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
</p><p>
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச்
செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர்,
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>&nbsp;கிளிநொச்சி மாவட்டச் செயலாளரின் கோரிக்கை&nbsp;&nbsp;</h2><p> நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது காவல்துறையினருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர்.</p><p>போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு
டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர்
காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின்
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்“ என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401e3764-61d4-4a44-867d-658c1aaf5254/26-6a6c7ee2d566a.webp' /></p><p>இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி
விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன்&nbsp; இராணுவ முகாமின் வேலியை 10
மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான
ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டிய நிலையில் இதனைச்
சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர்
தெரிவித்தார்.</p><p>அத்துடன் திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம்
தெரிவித்தார்.</p><p></p><h2>முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்</h2><p>இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17
ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 1,493.2
ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும்
கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும் என&nbsp;முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்
அ.உமாமகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>அதனைத் தொடர்ந்து வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28129e20-9a3d-49e0-8430-5cfbdd1b3831/26-6a6c7f2f847f4.webp' /></p><p> வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப்
பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.</p><p> கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப்
பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின்
சிரேஷட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்,
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆதரவு! பல்கேரியா - சைப்ரஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-bulgaria-cyprus-over-us-support-1785492952"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-bulgaria-cyprus-over-us-support-1785492952</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவ விமானங்களை தற்காலிகமாக நிறுத்த அனுமதி வழங்கியுள்ள பல்கேரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவ விமானங்களை தற்காலிகமாக நிறுத்த அனுமதி வழங்கியுள்ள பல்கேரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.</p><p>

பல்கேரிய வெளிவிவகார அமைச்சர் வெலிஸ்லாவா பெட்ரோவா-சமோவாவுடன் தொலைபேசியில் பேசிய அராக்சி, பெஸ்மர் விமானப்படைத் தளத்தில் அமெரிக்க இராணுவ விமானங்களை நிறுத்த அனுமதிப்பது, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாகும் என்றும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், இத்தகைய நடவடிக்கை ஈரான் மற்றும் பல்கேரியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p></p><h2>பலமுறை எச்சரிக்கை</h2><p>
தனது நாட்டுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் "விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று ஈரான் ஏற்கனவே பலமுறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763cdd5a-8197-4a4c-8f87-35328b0d8332/26-6a6c7e196ed27.webp' /></p><p>

இதேவேளை, சைப்ரஸ் வெளிவிவகார அமைச்சர் கான்ஸ்டான்டினோஸ் கொம்போஸுடனும் அப்பாஸ் அராக்சி தொலைபேசியில் கலந்துரையாடினார். </p><p>அப்போது, சைப்ரஸில் உள்ள வெளிநாட்டு இராணுவத் தளங்கள் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
கடந்த வாரம், பல்கேரியா நாடாளுமன்றம், பெஸ்மர் விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் KC-135வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் எட்டு வரை மற்றும் 250 இராணுவப் பணியாளர்கள் வரை தற்காலிகமாக நிலைநிறுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியது. </p><p>இந்த முடிவு ஈரானின் எதிர்ப்பையும் மீறி எடுக்கப்பட்டது.

எனினும், இந்த நடவடிக்கையின் கீழ் தாக்குதல் நோக்கமுடைய ஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படமாட்டாது என்றும், இதனால் பல்கேரியா எந்த இராணுவ நடவடிக்கையிலும் நேரடியாக பங்கேற்கும் தரப்பாக மாறாது என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
</p><p>
சைப்ரஸில், RAF அக்ரோதிரி உள்ளிட்ட இரண்டு பிரித்தானியா இறையாண்மை கொண்ட இராணுவத் தளங்கள் உள்ளன.</p><p></p><h2>ஆளில்லா விமானம் தாக்குதல்</h2><p> </p><p>இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த சில நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் அக்ரோதிரி விமானப்படைத் தளம் மீது ஈரான் அனுப்பிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05792650-0874-4741-b6aa-5eeb499dea62/26-6a6c7e1a2b408.webp' /></p><p>
</p><p>
போரின் ஆரம்ப கட்டத்தில், ஈரானின் ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் ஏவுதளங்களுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல்களுக்காக பிரித்தானியா இராணுவத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு பிரித்தானியா&nbsp; இணக்கம் தெரிவித்திருந்தது.
</p><p>
ஆனால் பின்னர், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் RAF அக்ரோதிரி விமானப்படைத் தளம் பயன்படுத்தப்படமாட்டாது என்று பிரித்தானியா தெளிவுபடுத்தியது.</p><p>

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற புதிய பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹம், அமெரிக்காவுடனான பரந்தளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்பாட்டை தொடர்ந்தார். </p><p>இதையடுத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடாது என்று பிரித்தானியாவை நோக்கி ஈரானின் புரட்சிகரக் காவல்படை (Revolutionary Guards) எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T10:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/49000-migrants-storm-spanish-border-in-24-hours-1785491405"></link>
            <id>https://ibctamil.com/article/49000-migrants-storm-spanish-border-in-24-hours-1785491405</id>
            <summary type="text">மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (31) காலை வரை மக்கள் அங்கு சென்றுவருவதால் ஏறபட்ட நெருக்கடியை அடுத்து ஸ்பெயினின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இன்று செவுட்டா பகுதிக்கு அவசரமாக சென்றுள்ளனர்.</p><p> 
ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் இல்லாமல் மொராக்கோவின் கடற்கரையில் செவுட்டா இருந்தாலும் பகுதிக்குள் நுழைந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கு நிகர் என்பதால் 24 மணிநேரத்துக்குள் அலை அலையாக 49,000 மொரோக்கர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;18 பேர் பலியாகியுள்ளனர்</h2><p> </p><p>ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் நீந்தியும், காற்றடைக்கப்பட்ட சாதனங்களை பயன்படுத்தியும் நுழைந்துள்ள நிலையில் கடலில் நீந்த முற்பட்டவர்களில் 9 பேர் உட்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc84d191-872f-46c7-b1f5-da9c5e4a4f16/26-6a6c74ac5e1a5.webp' /></p><p>மொராக்கோவில் உள்ள செவுட்டா அல்லது மெலிலாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சாதகமாக கருதி இந்த நெருக்கடி உருவாக்கியுள்ளதாக கருதபபடுகிறது. </p><p>தற்போது அங்கு ஸ்பெயின் இராணுவத்தை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இந்த நெருக்கடியை அடுதத்து ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்க தனது விரைவுத் தலையீட்டு எல்லைப் படையை பிரான்ஸ் களமிறக்கியுள்ளது.</p><p></p><h2>மக்கள் தொகை அதிகரிப்பு&nbsp;</h2><p>ஆயிரக்கணக்கான மொரோக்கர்கள் நுழைந்ததால் 24 மணிநேரத்தில் செவுட்டாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011e75a8-fb56-48be-b4bd-11f6a604fe0a/26-6a6c74ad16b3d.webp' /></p><p>
நேற்று முதல், பலர் செவுட்டாவின் தெருக்களில் அலைந்து திரிந்து வருகின்றனர், அவர்களில் பலர் இரவை திறந்தவெளியில் கழித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>
இந்த நிலையில் ஷெங்கன் வலயத்தில் இருந்து ஸ்பெயின் வெளியேற வேண்டும் என்ற இத்தாலியின் கருத்தை ஸ்பெயின் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T10:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-steady-at-rs-340-usd-to-lkr-1785489777"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-steady-at-rs-340-usd-to-lkr-1785489777</id>
            <summary type="text">நேற்றுடன் (30) ஒப்பிடுகையில், இன்று (31) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.இன்றைய நாளுக்கான (31.07.2026) நாணயமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (30) ஒப்பிடுகையில், இன்று (31) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.</p><p>இன்றைய நாளுக்கான (31.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	331.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.33 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.05 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.23 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cedb3d7-db6a-49c3-9a65-79239e464b58/26-6a6c6b6fed450.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.92 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.34 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	256.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.79 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289</id>
            <summary type="text">நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>
இந்த இழப்பீட்டுத் தொகைகள், தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கிளைகள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி வணிக உரிமம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இழப்பீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகபட்சமாக 11 இலட்சம்</h2><p>

இலங்கை வைப்புத் தொகை காப்புறுதி திட்டத்தின் கீழ் தகுதி பெறும் வைப்பாளர்களுக்கு, அவர்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புத் தொகையின் மொத்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 11 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eaadb3d-fdcd-431e-b045-2b2c3f3125a7/26-6a6c678ba7678.webp' /></p><p>
</p><p>
இழப்பீட்டுத் தொகை, ஏற்கனவே உள்ள மக்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவோ, புதிதாகத் திறக்கப்படும் கணக்குகள் ஊடாகவோ அல்லது வங்கி Counters மூலம் பணமாகவோ வழங்கப்படும்.
</p><p>
2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 66(2) ஆம் பிரிவின் கீழ், 2026 ஜூலை 3 ஆம் தேதி முதல் நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிதி வணிக உரிமத்தை மத்திய வங்கி இரத்து செய்திருந்தது.
</p><p>
மேலும், காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் மற்றும் சட்டபூர்வ உரிமையாளர்கள் 2032 ஜூலை 2 ஆம் தேதி வரை இழப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பதுடன், நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மொத்த வைப்புத் தொகை 5,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் தேவையான ஆவணங்களையும் மின்னணு முறையில் மக்கள் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேவையான ஆவணங்கள்</h2><p>
</p><p>
மற்ற காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அசல் வைப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1623fd0f-a0a3-463c-8d77-ec32181a35d1/26-6a6c678c5d0c0.webp' /></p><p>
</p><p>
கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தனித்தனியாக இழப்பீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர இயலாத வைப்பாளர்கள், சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பத்திர (Power of Attorney) பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இழப்பீட்டு வழங்கும் நடைமுறை தொடர்பான விண்ணப்பப் படிவங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் மத்திய வங்கியின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.</p><p> அதேபோல், மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளிலும் அச்சுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் தகவல்கள் தேவைப்படும் வைப்பாளர்கள், இலங்கை மத்திய வங்கியின் வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் தீர்வுகள் திணைக்களம் (Deposit Insurance and Resolution Department) ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களை செலுத்தும் இளம் வயதினர் குறித்து காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-about-young-drivers-1785488381"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-about-young-drivers-1785488381</id>
            <summary type="text">இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதிவேகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் காரணமாக அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இளைஞர்களை உள்ளடக்கியவையாக இருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் உதவி அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.</p><p>
இளம் வயதினருக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோர், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>பொறுப்பற்ற வாகன ஓட்டம்</h2><p>
</p><p>
அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டத்தை சட்டங்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604bbc2d-50db-4e12-a7eb-ccab4c29a8dd/26-6a6c63ff56051.webp' /></p><p>மேலும், இவ்விடயத்தில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்! ஹேமசிறி பெர்னாண்டோ - பூஜித் ஜயசுந்தர வழக்கின் தீர்ப்பு இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-easter-attack-1785487677"></link>
            <id>https://ibctamil.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-easter-attack-1785487677</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க போதுமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க போதுமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்குகளின் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசாரணை நீதிமன்றம் இன்று (31) பிற்பகல் வழங்க உள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு, மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.</p><p> எனினும், சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.</p><p></p><h2>உளவுத்துறை தகவல்</h2><p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8f0e6d-4eb9-4da5-b69b-4a0eebf0bb0c/26-6a6c61c34fcc2.webp' /></p><p>

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 275 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
</p><p>
இந்த வழக்கின் நீண்டகால விசாரணைக்குப் பின்னர், 2022 பிப்ரவரி 18 ஆம் திகதி நீதிபதிகள் நாமல் பலல்லே, முகம்மது இர்ஷாதீன் மற்றும் ஆதித்ய பதபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, பிரதிவாதிகளிடம் பாதுகாப்பு சாட்சிகளைப் பதிவு செய்யாமலேயே அவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது.
</p><p>அந்தத் தீர்ப்பில், தாக்குதல் தொடர்பாகத் தெளிவான மற்றும் குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களை மாநில புலனாய்வு சேவை (SIS) வழங்கத் தவறியதாகவும், அப்போதைய SIS பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனது கடமைகளை முறையாக நிறைவேற்றவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
</p><p>
மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் மீது சுமத்தப்பட்ட கடமையின்மை குற்றச்சாட்டில் குற்றவியல் நோக்கம் (Criminal Intent) இருந்ததை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.</p><p></p><h2>உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு</h2><p>

இதனை எதிர்த்து சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை விசாரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5119a02-73f0-4865-b98e-1902fe9573da/26-6a6c61c430391.webp' /></p><p>
</p><p>
2024 நவம்பர் 5 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், உயர்நீதிமன்றத்தின் விடுதலைத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளைப் பதிவு செய்து வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
அதன்படி, நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
நீண்டகால விசாரணை நடவடிக்கைகளின் பின்னர், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பை இன்று பிற்பகல் அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

உயிர்த்த&nbsp; ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officer-arrested-for-criticizing-anura-1785483113"></link>
            <id>https://ibctamil.com/article/police-officer-arrested-for-criticizing-anura-1785483113</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரான காவல்துறை அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f153f865-ee3c-4b04-ba6b-8aae91ebcce6/26-6a6c564e568a1.webp' /></p><p>குறித்த காவல்துறை அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VDQeYfFlZg4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T08:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுருட்டிய அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/politician-who-seized-thousands-of-acres-land-east-1785484894"></link>
            <id>https://ibctamil.com/article/politician-who-seized-thousands-of-acres-land-east-1785484894</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற பல்வேறு அரச நிறுவனங்களின் ஊடாக ஒரு லட்சத்து இருபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற பல்வேறு அரச நிறுவனங்களின் ஊடாக ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் திட்டமிட்ட முறையில் சுவீகரிக்கப்பட்டு அபகரிக்கப்படுவதாக சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.
</p><p>
அதற்கும் அப்பால் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அரசியல் தலைமைகளும் அவர்களது பினாமிகளும் தங்களது சுய தேவைக்காக பெருமளவு காணிகளை பிடித்து வைத்துள்ளதாக தற்போது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றும் பறந்துள்ளது.
</p><p>
இந்த விவகாரம் திருடர்களின் கைகளில் சாவி கிடைக்க கூடாது என்ற மக்களின் கருத்துப்படி இதிலுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5rE2vDsgHEw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T08:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் மீள அள்ளப்பட வேண்டும் - தவிசாளருக்கு காலக்கெடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deadline-waste-dumped-at-keerimalai-must-cleared-1785470683"></link>
            <id>https://ibctamil.com/article/deadline-waste-dumped-at-keerimalai-must-cleared-1785470683</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள்
கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி
வலி. வடக்கு பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள்
கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி
வலி. வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என வலி. வடக்கு
பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் சுண்ணக்கல் அகழ்ந்தமையால் ஏற்பட்டுள்ள பாரிய
குழிகளில் டிப்பர் வாகனங்களில் கழிவுகள் எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டு
வருகிறது.</p><p>

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கொட்டப்பட்ட
கழிவுகளை அங்கிருந்து மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்த
நிலையில் , நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள்
குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர்.</p><p></p><h2>புகை மண்டலம்</h2><p>
அது கடந்த இரண்டு நாட்களாக எரிந்து வந்தமையால் , அதனால் ஏற்பட்ட புகை
மண்டலத்தால் , அயலவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.</p><p>

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான
உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b2afd5-56ab-4de8-8691-a7bb27eb142e/26-6a6c4e5c9364b.webp' /></p><p>கழிவுகளை நேரில் பார்வையிட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும்
போது,

வலி. வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள பாரிய குழிகளுக்குள் கழிவுகள்
உக்கி , மண் தன்மையில் காணப்படும் கழிவினை கொட்டுவதற்கு , வலி. தெற்கு பிரதேச
சபை அனுமதி கோரியுள்ளதாகவும் , அதற்கு ஒரு டிப்பர் கழிவு மண்ணுக்கு 2500
ரூபாய் அறவிட தீர்மானித்து உள்ளதாகவும் , தவிசாளரால் எமக்கு அறிய தரப்பட்டது.
</p><p>
அப்போதே நாம் குறித்த கழிவுகள் உக்கிய மண்ணினை ஏற்றும் இடத்திலும் ,
அதனை பறிக்கும் இடத்திலும் கண்காணிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பின்
அடிப்படையிலையே அவற்றை கொட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம்.
தவிசாளரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
</p><p>இந்நிலையில் கடந்த முதலாம் திகதி டிப்பர் வாகனங்களில் உக்காத கழிவுகளையும்
இலத்திரனியல் கழிவுகள் , இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக உறுப்பினர்களுக்கு
ஊரவர்கள் அறிவித்தனர்.</p><h2>டிப்பர் வாகனங்களில் கழிவுகள்</h2><p>
அதன் அடிப்படையில் நேரில் வந்து பார்த்த வேளை டிப்பர் வாகனங்களில் கழிவுகள்
கொண்டு வரப்பட்டு , எவ்வித கண்காணிப்புக்களும் இன்றி கண்ட
இடங்களிலும் கொட்டி சென்றதனை அவதானித்து , தவிசாளருக்கு அறிவித்தோம். உடனடியாக
தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b2039ba-f122-4a62-a731-5b5673332eee/26-6a6c4e5bdcb1b.webp' /></p><p>மீண்டும் 10ஆம் திகதி வந்து பார்த்த போது பெருமளவான குப்பைகள் தேங்கி
காணப்பட்டன. அது தொடர்பில் தவிசாளருக்கு தெரிவித்த போது , தான் குப்பைகளை
கொட்ட அனுமதி கொடுக்கவில்லை. தனது அனுமதியின்றி குப்பைகள் கொட்டப்பட்டதாக கூறி
நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.</p><p>

அந்நிலையில் 16ஆம் திகதி சபையின் மாதாந்த கூட்டம் நடைபெற்றது. அதன் போது கட்சி
பேதமின்றி கழிவு கொட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டோம்.
</p><p>
வலி. தெற்கு பிரதேச சபை கழிவுகளை கொண்டு வந்து கொட்ட கூடாது என்றும் ,
அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளி , வலி வடக்கு பிரதேசத்திற்கு
வெளியே கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம்.
</p><h2>சங்கிலி போட்டு&nbsp;பூட்டு </h2><p>
நாங்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் கழிவுகள் கொட்டப்படுவதாக
எமக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் 27ஆம் திகதி இப்பகுதிக்கு நாம் வந்த போது
டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

அதனை குழிகளுக்குள் கொட்ட விடாது தடுத்து நிறுத்தி இருந்தோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97d59ac-d672-4d0b-8516-61ef20ee7cb9/26-6a6c4e5d46a90.webp' /></p><p>எது தொடர்பில்
வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு அறிவித்தோம். அவர் நேரில் வந்து தன்
அனுமதிகளை மீறி கழிவுகளை கொட்ட முடியாது என கூறி , நுழைவாயில்களை சங்கிலி
பூட்டு போட்டு பூட்டியதுடன் , டிப்பர் வாகனங்களையும் திருப்பி அனுப்பி
இருந்தார்.</p><p>

அந்நிலையில் மறுநாள் 28ஆம் திகதி இனம் தெரியாத நபர்கள் நுழைவாயில்
பூட்டுக்களை உடைத்து , நாம் மீள அள்ள கோரிய குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர்.
அந்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வந்தமையால் , அதனால் ஏற்பட்ட புகை
மண்டலத்தால் , அயலவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்தனர்.
</p><p>
அதானல் எமது தவிசாளரின் அனுமதியின்றி , அடாத்தாக எமது பிரதேச சபை ஆளுகைக்குள்
குப்பைகளை கொண்டு வந்து கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபையினருக்கு எதிராக எமது
தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் , நுழைவாயில்
பூட்டுக்களை உடைத்து , அடாத்தாக உட்புகுந்து குப்பைகளுக்கு தீ
வைத்தவர்களை கண்டறியுமாறு பொலிஸ் நிலையத்தில் தவிசாளர் முறைப்பாடு செய்ய
வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கைகளை தவிசாளர் எடுக்காவிடின் , தவிசாளருக்கு எதிராக நாம்
நடவடிக்கை எடுப்போம்.</p><p></p><p> </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆடி அமாவாசை</span></p><p>வடமாகாண ஆளுநர் , உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடமும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகளை கையளிக்கவுள்ளோம். இந்த பகுதி ஒரு புண்ணிய பூமியாகும்.
</p><p>
குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இந்த பகுதிக்கு
அருகில் தான் வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உள்ளது.
தற்போது மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 11ஆம் திகதி தேர் திருவிழாவும் , மறுநாள் 12ஆம் திகதி தீர்த்த
திருவிழாவும் நடைபெறவுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fc8b2b-28f7-42da-822e-ce39b53b8742/26-6a6c4e5df1b8f.webp' /></p><p>மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட இந்த குப்பைகள்
கொட்டப்பட்டுள்ள குழிகளில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தால் செல்லும்
வீதியால் கீரிமலை நோக்கி செல்வார்.

அது மாத்திரமின்றி ஆடி அமாவாசை தினத்தில் கீரிமலையில் பிதிர்கடன்களை நிறைவேற்ற
இலட்சக்கணக்கான இந்துக்கள் கூடவுள்ளனர்.</p><p> அதற்காக நாட்டின் பல பகுதிகளில்
இருந்து இந்துக்கள் கீரிமலை பகுதிக்கு வருகை தருவார்கள்.

தற்போது டெங்கு அபாயம் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் நிலையில் , இந்த
குழிகளுக்கு பிளாஸ்டிக் போத்தல்கள் பலவும் , நீர் தேங்கி நிற்க கூடிய
கழிவுகளும் காணப்படுத்தல் , மழை வருமாயின் இந்த குப்பைகளுக்குள் இருந்து
டெங்கு பரவும் அபாயம் காணப்படுகிறது.
</p><p>
ஆடி அமாவாசையை முன்னிட்டு , சுற்றுலா பயணிகள் , புலம்பெயர் நாட்டவர்கள் ,
நாட்டின் ஏனைய பாகங்களை சேர்ந்த இந்துக்கள் என பலரும் கீரிமலைக்கு
வரவுள்ளமையால் கொட்டப்பட்ட குப்பைகள் அதற்கு முன்னர் அள்ளப்பட வேண்டும்.

இந்த குழிகளுக்குள் , மருத்துவ கழிவுகள் , இலத்திரனியல் கழிவுகள் ,
பெருந்தொகையான பிளாஸ்ரிக் , இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகள்
காணப்படுகின்றன.
</p><h2>நிலத்தடி நீர் மாசு</h2><p>
அதானல் துர்நாற்றம் வீசுவதுடன் , நிலத்தடி நீர் மாசு , சுற்றுசூழல் மாசு ,
என்பவற்றால் ,அயலில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்கள் , முதியவர்கள் , சுவாச
நோய் உடையவர்கள் , நோயாளிகள் , எனவும் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இது தொடர்பில் உடனடியாக எமது தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் மீள அள்ளப்பட்டு , இப்பகுதியில் இருந்து
அகற்றப்பட வேண்டும். அவை வலி. வடக்கின் எந்த பகுதியிலும் கொட்ட அனுமதிக்க
கூடாது.
</p><p>
இவை எவையும் நடைபெறாது விடின் , கட்சி பேதமின்றி , ஊரவர்கள் ,
செயற்பாட்டாளர்கள் , சூழலியலாளர்கள் , பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் என
பல்வேறு தரப்பினர்களையும் ஒன்று திரட்டி பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் என
வலி. வடக்கு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஓர் இடத்தில் சுற்றுச்சூழலை பேணிக்காப்பதற்காக , மற்றுமொரு இடத்தின்
சூழலை நாசமாக்கப்படுவதனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் கீரிமலை
குப்பை மேட்டு பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T07:27:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hamas-agrees-to-trump-s-plan-to-disarm-in-gaza-1785479875"></link>
            <id>https://ibctamil.com/article/hamas-agrees-to-trump-s-plan-to-disarm-in-gaza-1785479875</id>
            <summary type="text">காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர (a monumental step) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர (a monumental step) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>வியாழக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தத்தின் பிரதி சர்வதேச ஊடத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>அந்த ஒப்பந்தத்தின்படி துல்லியமான ஆயுதக் குறைப்புத் திட்ட வரைவு 14 நாட்களுக்குள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சர்வதேச சரிபார்ப்பு அமைப்பின் ஒப்புதல் மற்றும் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டிற்கு உட்பட்டு கால நீட்டிப்புகள் தேவைப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு</h2><p>"இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாகவும் சவாலாகவும் இருந்தன. மேலும் சாத்தியமான சிறந்த தீர்வை எட்டுவதற்கு நாங்கள் முயன்றோம்" என்று ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் காசி ஹமாத் அல் ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc4fee1c-e91c-4485-bcbd-84201acf9eb8/26-6a6c4928eb6e9.webp' /></p><p>எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>


காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன காவல்துறையினர் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>இஸ்ரேலுக்குச் சந்தேகம்</h2><p>
</p><p>


இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008977f4-905c-4b46-bf58-f658b0afb928/26-6a6c53a834574.webp' /></p><p> அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.
</p><p>


மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>ய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T07:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-jaffna-demanding-media-freedom-1785480508"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-jaffna-demanding-media-freedom-1785480508</id>
            <summary type="text">படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்
சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி யாழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்
சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி யாழில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.</p><p>
 யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களால் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (31) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி
அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன்&nbsp;யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கிலும் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>நிகழ்வைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள்&nbsp;</h2><p>இந்த நிலையிலேயே, ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான
தாக்குதல்களுக்கு நீதி கோரியும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி
ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்சரின் கருத்தரங்கைப் புறக்கணித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/438d2cbb-3f50-48eb-b18e-f403c3228298/26-6a6c4aa696247.webp' /></p><p>
</p><p>இந்தப் போராட்டத்தின் போது “அரச இயந்திரமே ஊடகவியலாளர்களை அடக்காதே“, “ஊடகப் படுகொலைக்கு நீதி வேண்டும்”, ”படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி எங்கே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் போாராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p> போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை தகவல் திணைக்கள பணிப்பாளர்
மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்</h2><p>இதேவேளை பிரதி அமைச்சர் ஊடகவியலாளர்களை சந்திப்பதை தவிர்த்தது கருத்தமர்வில்
பங்கேற்றதுடன் கருத்தமர்வில் ஒரு சில அரசசார்பு ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/041ae8d4-2d8f-4490-b044-985e0a2677fe/26-6a6c781082749.webp' /></p><p>இதேவளை போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் ஊடக பிரதி அமைச்சரை சந்திக்க
யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டவேளை, காவல்துறையினர் ஊடகவியலாளர்களை உள்ளே
அனுமதிக்க மறுத்தனர்.</p><p>

தொடர்ந்து பிரதி அமைச்சருக்கு எதிராகக கோஷங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள்
பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். </p><p>இதேவேளை மாவட்ட செயலக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T07:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்படும் நிலையிலும் மலேசியாவில் தப்பித்த கஞ்சிபானி இம்ரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-escaped-in-malaysia-1785480161"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-escaped-in-malaysia-1785480161</id>
            <summary type="text">காவல்துறை தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் இலங்கை காவல்துறை குழு ஒன்று, மலேசிய பாதுகாப்புப் படைகளின் உதவியுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் இலங்கை காவல்துறை குழு ஒன்று, மலேசிய பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் சமீபத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. </p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.</p><p>ஆனால் காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்பே அவர் தப்பிச் சென்றிருந்தார். இருப்பினும், மலேசிய காவல்துறையின் உதவியுடன், அவரது முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான தனுஷ்க கௌசல்ய என்ற 'ரத்மலான சைமா' மற்றும் அவரது சகாக்கள் பலரைக் கைது செய்ய முடிந்தது. </p><p></p><h2>மலேசியாவிற்குத் தப்பிச் சென்ற சைமா</h2><p>மேலும், இம்ரானை விரைவாக நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர காவல்துறை தற்போது பணியாற்றி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e75741de-9473-4b6c-9278-03fbe1b97124/26-6a6c474d62567.webp' /></p><p>
</p><p>பல ஊடகங்கள் இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தன, இருப்பினும், கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரை 'ரத்மலான ரோஹா' என்று அடையாளம் காட்டியதில் சர்ச்சைகள் உறுவானது.</p><p>உண்மையில், ரத்மலானே ரோஹா என்ற தேவமுனி ஹரேல் ரோஹனா டி சில்வா, 2020 செப்டம்பர் 23 அன்று நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறையுடனான துப்பாக்கி மோதலில் கொல்லப்பட்டார். </p><p>அந்தத் துப்பாக்கிச் மோதலின் உண்மைத்தன்மை ஒருபுறம் இருக்க, கைது செய்யப்பட்ட சைமாவும், உயிரிழந்த ரோஹாவும் இதற்கு முன்னர் 'குடு அஞ்சு' என்ற பாதாள உலகத் தலைவரின் சீடர்களாகப் பணியாற்றியவர்கள் ஆவர்.
</p><p>
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்குத் தப்பிச் சென்ற சைமா, ஆரம்பத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக இருக்கும் 'குடு அஞ்சு' என்ற அமலின் நெருங்கிய கூட்டாளியாகப் பணியாற்றினார்.</p><p> இருப்பினும், அஞ்சு தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுவதாக கஞ்சிபானி இம்ரான் அளித்த தகவலின் பேரில், சைமா அஞ்சுவிடமிருந்து பிரிந்து இம்ரானின் அணியில் சேர்ந்தார்.</p><p>அன்று முதல், இம்ரானின் நிதி நிர்வாகம், உண்டியல் அமைப்பு மூலம் உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றும் பணமோசடி நடவடிக்கைகள், சமூக ஊடகச் செயல்பாடுகள், அத்துடன் மலேசியா மற்றும் தாய்லாந்தில் அவர் நடத்தும் உணவகச் சங்கிலி ஆகியவற்றின் பொறுப்பாளராக சைமா இருந்து வருகிறார்.</p><p>





இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்கான கஞ்சிபானி இம்ரானின் தப்பித்தலை ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வாகக் கருத முடியாது. மேலும், இலங்கை காவல்துறை குழுவின் வருகை மற்றும் சோதனைக்கான திட்டங்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது.</p><p> பாதுகாப்புப் படைகளுக்குள் உள்ள ஊழல் அதிகாரிகளின் ஆதரவின்றி இத்தகைய சர்வதேச அளவிலான தப்பித்தல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், காவல்துறையிடமிருந்து தகவல் கசியவிடப்பட்டது என்பது ஒரு சந்தேகம் மட்டுமே.</p><p></p><h2>பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்</h2><p> இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். பெறப்பட்ட இருப்பிடத் தகவல், இம்ரானின் அடிக்கடி மாறும் வசிப்பிடம், சைமாவும் இம்ரானும் தனித்தனியாகத் தங்கியிருந்தது, மலேசிய சட்ட அனுமதியைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பிற போலியான ஆவணங்கள் அல்லது வழித்தடங்களின் பயன்பாடு, சைமாவின் கைதுக்குப் பிறகு ஒரு உள்ளூர் குற்றவியல் வலையமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல், அல்லது சில காவல்துறை அதிகாரிகளால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மூலம் செய்தி கசியவிடப்பட்டது போன்ற பல சிக்கலான காரணிகள் இதற்குப் பங்களித்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9dfaaba-0c61-4b60-8fdf-ddedceefe398/26-6a6c474e1b752.webp' /></p><p>
</p><p>
பாதாள உலகத் தகவல்களை அம்பலப்படுத்தும் முகநூல் பக்கங்கள், இந்த வலையமைப்பு தொடர்பான மற்றொரு தீவிரமான பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளன. </p><p>இவை பாரம்பரிய ஆதாரங்களாகக் கருதப்படாவிட்டாலும், பாதாள உலகத்தின் உள்மோதல்களை முன்கூட்டியே வெளிப்படுத்தும் வரலாற்றை இத்தகைய பக்கங்கள் கொண்டுள்ளன.</p><p> அதன்படி, கஞ்சிபானி இம்ரான் மற்றும் உனகுருவ சாந்தா உள்ளிட்ட ஒரு குழு, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைக் கொலை செய்வதற்காக மலேசியாவில் ஒரு சதித்திட்டக் கூட்டத்தை நடத்தத் தயாராகி வருவதாகவும், அதற்கான நிதி மற்றும் தளவாட வசதிகளை சைமா (SAIMA) வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p> தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து சைமாவிடம் கடுமையாகக் கேள்வி எழுப்புவதும், ஒரு விரிவான விசாரணையை நடத்துவதும் அவசியமாகும்.
</p><p>




சைமா ஒரு குற்றவாளி மட்டுமல்ல, கஞ்சிபானி இம்ரானின் அச்சமூட்டும் பிம்பத்தை உருவாக்கிய ஒரு உளவியல் சமூக ஊடகச் செயல்பாட்டாளரும் ஆவார். </p><p>ஊர்வலத்தில் காவடி குழுக்கள் தொடர்பாக ஏற்பட்ட ஒரு தகராறின் போது, ​​தேவுந்தர தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயை இம்ரான் மிரட்டிய ஒலிப்பதிவுகளையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக 'தெஹிபாலே மல்லி'யின் ஒலிப்பதிவுகளையும் பகிர்ந்தவர் அவரே.</p><p> இந்தத் தகராறு இறுதியில், தேவுந்தர தேவாலயத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் முடிவடைந்தது. </p><p>குற்றக் கும்பல்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு ஒரு போர்க்களமாகப் பயன்படுத்துகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
</p><p>
இந்த வலையமைப்பை முழுமையாக ஒடுக்குவதற்கு, சைமாவின் உணவகங்கள் மற்றும் உண்டியல் பணப் பரிமாற்றங்கள் குறித்தும், இம்ரானுக்குத் தகவல் கொடுத்தவர்கள் மற்றும் சைமாவின் மீதான பிடியாணையை நீக்குவதில் தலையிட்டவர்கள் குறித்தும் சர்வதேச நிதிப் புலனாய்வுப் பிரிவுகள் மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.</p><p>மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நானுஓயா சாதி கொலை, கேகாலை மற்றும் பொல்கஹாவெல வழியாக ஐஸ் போதைப்பொருள் விநியோகம், மற்றும் விமான நிலையம் வழியாக கஞ்சா மற்றும் கொக்கைன் இறக்குமதி செய்யப்பட்டது குறித்தும் அவரிடம் விரிவாக விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தார பத்மேவும், தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். </p><p>அவரைக் கைது செய்வதற்காக, உள்ளூர் காவல் குழு மலேசிய காவல்துறையுடன் இணைந்து மேலும் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T06:57:49+00:00</updated>
        </entry>
    </feed>
