<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-31T06:18:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015"></link>
            <id>https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015</id>
            <summary type="text">கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அந்தவக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>
அந்தவகையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.</p><p>குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கோதுமை மாவின் விலை</h2><p>


பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65045cd1-f63a-45cc-8b13-f6d1c9a80588/26-6a951b5dac3fa.webp' /></p><p>



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் புற்தரைக்கு தீவைத்தவர் கையும் மெய்யுமாக சிக்கினார்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-setting-fire-to-lawn-in-jaffna-1788154991"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-setting-fire-to-lawn-in-jaffna-1788154991</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்தரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்தரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் இன்று (31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.
அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின்
மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்தரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு
நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</h2><p>
இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன்,
புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும்
போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3d281c-708d-44ca-8e96-1078a5947a92/26-6a95192deef61.webp' /></p><p>
புற்தரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை
அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச
சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>இந்தநிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர்
கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
எனினும், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப்
பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய 24 வருட சிறை தண்டனைக் கைதி - தீவிர தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-year-prison-sentence-escapes-from-hospital-1788153412"></link>
            <id>https://ibctamil.com/article/24-year-prison-sentence-escapes-from-hospital-1788153412</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர
நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை&nbsp;வழங்கப்பட்டது.</p><p>அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e8e508-1f45-4913-ae58-7d5262b94abb/26-6a951113b4a41.webp' /></p><p>கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்
</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் , மறுநாள் சனிக்கிழமை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் , மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளே வாக்குகள் மட்டும் போதுமா! பாலமீன்மடு மக்களின் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-shortage-1788150949"></link>
            <id>https://ibctamil.com/article/water-shortage-1788150949</id>
            <summary type="text">மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்றொழிலாளர் எழுச்சி கிராமத்தில்
வாழும் 30 குடும்பங்கள் மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இன்றி குப்பி
விளக்கில் கடந்த 20 வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்றொழிலாளர் எழுச்சி கிராமத்தில்
வாழும் 30 குடும்பங்கள் மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இன்றி குப்பி
விளக்கில் கடந்த 20 வருடத்துக்கு மேலாக சொல்லனா துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.</p><p>ஓலை
குடிசைகளில் வாழ்ந்து வரும் குறித்த மக்களின் குறைகளை தீர்க்காத அரசியல்வாதிகள், அதிகாரிகளா தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க போகின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>&nbsp;2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி
அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு
மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.</p><p></p><h2>முன்னாள் போராளி&nbsp;நவராஜ் </h2><p>
அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5155c0c0-4877-4001-8534-788c15a6278b/26-6a9511fe37535.webp' /></p><p> </p><p>இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.</p><p> மலசலகூடம் , குடிநீர் ,
மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் மீனவருமான
அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்,
</p><p>''பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான், விடுதலைப் புலிகள்
அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம்
முடித்து, இருப்பதற்கு சொந்தமாக காணி,வீடு,மலசலகூடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.</p><p>நாங்கள் பரல் வைத்து
கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம்.</p><p>&nbsp;எனது பிள்ளைகள் மனைவி தொழு
நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற
நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர்,
கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து
அனுமதிதர மறுத்து வருகின்றனர்.
</p><p>
இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய
பணக்காரர்களுக்கு வழங்குகின்றன நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல்
வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச்; காணி தருமாறு அரசாங்கத்திடம்
கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>55 வயதுடைய பெண்ணின் கருத்து </h2><p>
இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் ஒருவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/714962ab-7224-4160-beb5-0cd0c12e5c6b/26-6a95154574da7.webp' /></p><p> நான் அடிப்படை
வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து
வருகின்றோம்.</p><p> இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு
இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம்,
கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். </p><p>பிரதேச
செயலாளர், கிராம உத்தியோகத்தர் எந்தவொரு கவனமும் எடுக்கிறார்கள் இல்லை.&nbsp; பெண்கள் காட்டுக்குள் மலசலம் கழிக்க செல்லும் போது அதை காணொளி எடுத்து
முகநூல்களில் பதிவிடுகின்றனர்.</p><p>இதை கேட்க ஒருவரும் இல்லை, தேர்தல் காலத்தில்
மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள், 'எங்களுக்கு வாக்கு போடுங்க' அதை
செய்கின்றோம் இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை.</p><p>எனவே எங்களின் அடிப்படை
உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம்
கேட்கின்றோம்.</p><p>
அரச காணி என தெரிவித்து கொண்டு எங்களுக்கான ஆவணங்களை தரமறுக்கின்றதுடன்
பரலில் கிணறு அமைத்து கறல் குடிநீரை பெற்று வருவது கூட பொது சுகாதார
பரிசோதகர்கள் கூட வந்து எங்களை பார்ப்பதில்லை, ஆனால் தேர்தல் வந்தால் மட்டும்
எல்லோரும் வருகின்றனர்.
</p><p>
எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது, அதை பணம் படைத்தவர்கள்
பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.</p><p> கேட்டால்
அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர் ஆனால் அது முழுக்க அரச காணி, இது
தொடர்பாக அரச அதிகாரிகளே, அரசியல்வாதிகளே எந்தவிதமான நடவடிக்கையும்
எடுப்பதில்லை.</p><p> இந்த கடற்றொழிலாளர் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று
நிர்மாணிப்பதற்காக 2014ம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு
தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி
வழங்கப்பட்டு இருந்தது.</p><p>
இதன்போது பாலைமீன்மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு
எதிர்த்து அதை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச
செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
</p><p>
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள்
சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம்
இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத நாங்கள்
குடியிருப்பது அனர்த்த வலயமா?</p><p>

ஏழைகள் காணி இல்லை என 10 பேச் காணியை அடைத்தால் சட்டம் வெகு வேகமாக எங்கள் மீது
பாயும்.</p><p> அதே நேரத்தில் சண்டியர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் பணபலம்
படைத்தவர்கள் காணிகளை அடாத்தாக பிடித்து விற்பனை செய்யும் போது சட்டங்கள்
அவர்களுக்கு எதிராக பாய்வது மிகவும் குறைவு.</p><p> எனவே பணக்காரர்களுக்கு ஒரு
சட்டமும் ஏழைகளுக்கு ஒரு சட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி
அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில்
இருந்து யாரும் எழும்ப போவதில்லை'' என்றார்.</p><p></p><h2>65 வயது&nbsp;கடற்றொழிலாளர்</h2><p>கடற்றொழிலாளரான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d37478d1-7626-4be6-88f3-72ce5982f51a/26-6a9515465ac6f.webp' /></p><p>"இந்த
கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத
காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன் இந்த
நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு
இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.</p><p> நாங்கள் இந்த ஓலை
குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்

குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது,</p><p> 2200 ரூபா
கியுபார் போட்டு 1200 ரூபாவை தந்தார்கள், பின்னர் 4 மாதத்தில் அதனையும்
நிறுத்தினர் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் அரசாங்கம் யோசித்துக் கூட
பார்க்கிறார்கள் இல்லை.
</p><p>
நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன் இன்று
எனது வாழ்கையை பாருங்கள் உதவித்தொகை பணமும் இல்லாது தத்தளிக்கிறேன் மனைவி மலசலம்
கழிக்க போவது என்றால் நான் காட்டுக்கு கூட்டிச் சென்று நிற்க வேண்டியுள்ளது.</p><p> எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள், அரசாங்கம் உதவி செய்ய வேண்டும், 'இதைவிட
என்னத்தை சொல்லமுடியும்' கடற்கரையில் ஓலை மட்டையை நாட்டி மறைத்து கொண்டு
பெண்கள் மலம் கழிக்க வேண்டிய காலமாக உள்ளது என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்".</p><p></p><h2>கணவனை இழந்த&nbsp;ஒரு பிள்ளையின் தாய் </h2><p>
</p><p>
கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe351c45-bc81-465e-8092-91e39ddfc00a/26-6a9511fedde77.webp' /></p><p>"ஓலைக்குடிசையில் கடந்த 12
வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றேன் நான் வீட்டு வேலைக்கு
சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம்
குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.</p><p>

இது வரை எங்களுக்கு எந்த விதமான உதவிகளும் கிடைக்கவில்லை,</p><p> வீட்டுக்கு ஆவணம் கூட
இதுவரை தரவில்லை உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு
வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும்" என்றார்.</p><p>

இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும்
இந்த கடற்றொழிலாளர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல்
இடம்பெற்றுள்ளது எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர், மலசல கூடம்,
மின்சாரம் போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள்,
மற்றும் அரசியல்வாதிகளின் கடைப்பாடு ஆகும். என்பதை சம்மந்தப்பட்டவர்கள்
கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562"></link>
            <id>https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வான் பாதுகாப்பு</span></p><p>ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹோர்முஸ் நீரிணை வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நீண்ட தூர அமெரிக்க ட்ரோனைத் துல்லியமாக அடையாளம் கண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இவ்வாறு அழித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3179777-b9e5-4423-89f6-65e7ac72c6e4/26-6a951289cccc7.webp' /></p><p>இந்தநிலையில் தாக்குதலுக்கு இலக்கான ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து பாரசீக வளைகுடா நீரில் மூழ்கியுள்ளதாக IRGC பொது உறவுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைப் படைகளுக்கும் ஈரானியப் படைகளுக்கும் இடையே கடற்படைத் தடைகள் மற்றும் இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானுக்கு விஜயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-harini-departs-for-bhutan-1788151154"></link>
            <id>https://ibctamil.com/article/pm-harini-departs-for-bhutan-1788151154</id>
            <summary type="text">உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.</p><p>அவர் இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நாளை (01) பூட்டானில் நடைபெறும் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளதுடன், அங்கு "நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்" (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார்.</p><p></p><h2>பலதரப்பினருடன் பேச்சுவார்த்தை</h2><p> 

இப்பயணத்தின் போது பிரதமர், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6183409-94e1-4c2e-a44d-b4a71c650059/26-6a950e06497ce.webp' /></p><p>அத்துடன் நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-government-popularity-drops-below-50-percent-1788148934"></link>
            <id>https://ibctamil.com/article/npp-government-popularity-drops-below-50-percent-1788148934</id>
            <summary type="text">இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் நேற்று (30-08-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p>O5BXCQI
</p><h2>நாடாளுமன்ற தேர்தல்</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள், மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.</p><p>

சமீபத்திய வெரிடே ரிசர்ச் ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின் செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன் பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61c027f-ec1d-4e56-bf5f-5afc0f059d90/26-6a9507b30f0ee.webp' /></p><p>நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.</p><p>

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே உள்ளனவே தவிர உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல.</p><p>தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு முயல்கின்றது.</p><p>
</p><p></p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும் நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு நினைவில்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2930c39a-8901-478c-9bf4-92f28c86718b/26-6a9507b3b88a5.webp' /></p><p>மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.</p><p>

22 ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடிய நீதி அமைச்சர், எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது அரசுடன் விளையாட வேண்டாம் என கூறி தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும் இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மண்ணுக்குள் புதைந்த நேபாளம்: காணாமல் போன பிரித்தானியர்கள் தொடர்பில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/britons-peoples-missing-china-tibet-nepal-floods-1788149006"></link>
            <id>https://ibctamil.com/article/britons-peoples-missing-china-tibet-nepal-floods-1788149006</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 33 பிரித்தானிய குடிமக்களில் யாரும் மீட்கப்படவில்லை என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 33 பிரித்தானிய குடிமக்களில் யாரும் மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.</p><p>பேரிடரில் காணாமல் போன ஆஸ்திரேலியர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சிறிதளவு அதிகரித்து வருகிறது. இன்று, 43 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போயிருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>"அந்த ஆஸ்திரேலியர்களைப் பத்திரமாகவும் நலமாகவும் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என்று வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மாட் திஸ்டில்வெயிட் ஏபிசி-யிடம் தெரிவித்தார்.</p><p></p><h2>தேடும் பணிகள்&nbsp;</h2><p>நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவில் குறைந்தது 794 பேர் உயிரிழந்ததாகவும், 2,500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6364492-8513-45e6-81f2-2219c2cd60fb/26-6a950b90ab9d5.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட ஒரு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இதுவரை குறைந்தது 289 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது&nbsp;&nbsp;</p><p>மீட்கப்பட்டவர்களில் 180 இந்தியக் குடிமக்கள், 89 சீனர்கள், பல்கேரியா மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த தலா ஒருவர், இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஐரோப்பாவைச் சேர்ந்த பலரும் அடங்குவர்.</p><p>"சிக்கித் தவிப்பவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், தேடும் வெளியேற்றும் மற்றும் உதவிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெள்ள அபாயம்</h2><p> போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0048eb26-4735-4f31-b68f-6603b26389ad/26-6a950b916526a.webp' /></p><p> மேலும் குடியிருப்பாளர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-local-government-member-arrested-over-nelliady-1788143097"></link>
            <id>https://ibctamil.com/article/npp-local-government-member-arrested-over-nelliady-1788143097</id>
            <summary type="text">ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்றில் முன்னியாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விளைவித்த ஒருவருக்கு காவல்துறையினரால் பிணை வழங்க முடியாது என்றும் காவல்துறை பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.</p><p>தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் என்பவரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிணை&nbsp;&nbsp;</span></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஓய்வுபெற்ற அரச உத்தி யோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805020d6-99fd-4dd4-b0db-02145849a342/26-6a94fb431f0c5.webp' /></p><p>மதுபோதையில் குறித்த வீட் டிற்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 119 அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p>அதிகாலை 12.45 மணியளவில் கைது செய்யப்பட்ட அவர் காலை 7.00 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்வெளியாகி உள்ளது.</p><p>குறித்த நபரை காவல்துறை பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு&nbsp;அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T04:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : இன்றுடன் நிறைவடையும் காலக்கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942"></link>
            <id>https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942</id>
            <summary type="text">இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது. </p><p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p> 

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p></p><h2>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf20ee1-6ed3-4def-a238-6fae29b67117/26-6a95042d33294.webp' /></p><p> </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.</p><p> </p><p>இந்தநிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T04:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணாநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T03:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-reported-missing-after-drowning-incident-1788140643"></link>
            <id>https://ibctamil.com/article/four-reported-missing-after-drowning-incident-1788140643</id>
            <summary type="text">புதிய இணைப்பு பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களுள் பெண் ஒருவரினதும் இரண்டு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு </h2><p>பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களுள் பெண் ஒருவரினதும் இரண்டு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

அத்துடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண் மற்றும் 04, 12 ஆகிய வயதுடைய இரு சிறுமிகள் ஆவர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2e3a19-6580-4b76-897d-24544c6ba87d/26-6a950c50f3174.webp' /></p><p>குறித்த சம்பவம் பமுணுகம - எபாமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெண், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் ஆவர். </p><p>

இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு 10 மணி முதல் 6 மணி வரை வருகிறது புதிய தடை: வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-against-loudspeaker-use-after-10pm-1788142064"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-against-loudspeaker-use-after-10pm-1788142064</id>
            <summary type="text">ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான சட்ட ஒழுங்கு குறித்து இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.ஒலி மாசுபாடான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான சட்ட ஒழுங்கு குறித்து இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.</p><p>ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சட்டரீதியான அனுமதி</span></p><p>இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475a4900-e1db-43bb-be63-1c29b217a428/26-6a94e350d0fb6.webp' /></p><p>அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
</p><p>
எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:43:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-revision-today-new-fuel-prices-1788138191"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-revision-today-new-fuel-prices-1788138191</id>
            <summary type="text">உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>​சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போதெல்லாம், அந்தப் சுமையை மக்கள் மீது சுமத்தி எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், உலகச் சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p><p>இந்நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.</p><p></p><h2>பெட்ரோலின் விலை</h2><p>
</p><p>
முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b93a8ab-33f2-4f5c-b763-36b6df38070d/26-6a94d60d8e2c2.webp' /></p><p>அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது</p><p>ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T01:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788139263"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788139263</id>
            <summary type="text">மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p> 

வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>காற்று மற்றும் மின்னல்</h2><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99a26aa0-2b0f-4989-bb05-20bfa47468bc/26-6a94d8ddcb57c.webp' /></p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><h2>வறட்சியான வானிலை</h2><p> </p><p>நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f2c34b-6b91-4843-9f80-86a0f46c17ac/26-6a94d8dd1c53a.webp' /></p><p>

அதேநேரம், சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>

அதற்கிணங்க இன்று (31) நண்பகல் 12.10 அளவில் நேரியகுளம், பூனேவ, கெப்பித்திகொல்லாவ, பன்குளம் மற்றும் சிங்கபுர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m22In8XAvxY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T01:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-ignored-support-for-the-tamil-people-1788138768"></link>
            <id>https://ibctamil.com/article/itak-ignored-support-for-the-tamil-people-1788138768</id>
            <summary type="text">இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் தாய்மார்களும் ஏனையவர்களும் வீதியில் நின்று நெஞ்சம் வெடிக்கக் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் தாய்மார்களும் ஏனையவர்களும் வீதியில் நின்று நெஞ்சம் வெடிக்கக் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் நீதி கேட்கும்போது, "இந்த மாநாட்டிற்கும் போராட்டத்திற்கும் தமிழரசுக்கட்சி பங்கேற்காது, ஆதரவும் இல்லை" என்று மிகச் சாதாரணமாக அறிக்கையை விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டது இந்தச் சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சி.</p><p>
அடுத்ததற்கெல்லாம் நாங்கள் தமிழ் மக்களினுடைய ஏகப்பிரதிநிதிகள். வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்கள் மக்கள் அதிக அளவில் வாக்களித்தது எங்களுக்குத்தான். எங்களுக்குத்தான் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள். </p><p>நாங்கள்தான் தமிழ்த்தேசியவாதிகள். எங்களிடம்தான் தமிழ்த்தேசியம் இருக்கிறது. நாங்கள்தான் தமிழ்த்தேசியத்தைக் கட்டிக்காக்கிறோம். இப்படி அடிக்கடி முழங்கிக் கொள்கின்றவர்கள் நேற்று அரசியல் குழு கூட்டத்தை நிகழ்நிலை (Zoom) இல் நடத்தியிருக்கிறார்கள்.</p><p></p><h2>ஶ்ரீநேசன் எம்.பி கேள்வி</h2><p>
"இந்த மாநாட்டிற்கு ஏன் போகக் கூடாது?" என ஶ்ரீநேசன் எம்.பி கேள்வி எழுப்பியபோது, "எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று சாக்குப்போக்குச் சொல்லியிருக்கிறார் சுமந்திரன். அதற்கு மட்டக்களப்பு முன்னாள் உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், "நாங்கள் ஸ்ரீதர் தியேட்டர் வாசலில் போய் நின்றால் எங்களை வாருங்கள் என்று அழைப்பு விடுப்பார்களா ?" என்று கேட்க பதிலளிக்க வழியின்றி zoom மீட்டிங்கை விட்டே சுமந்திரன் நழுவி ஓடியிருக்கிறார்.</p><p>
அழைப்பு வரவில்லை என்ற இவர்களின் அப்பட்டமான பொய்யை, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியிடம் நாம் கேட்டபோது சுமந்திரனின் வீடு தேடிச் சென்று, அவர் இல்லாததால் அவரின் மகளிடமே அழைப்புக் கடிதத்தைக் கையளித்ததாகச் சான்றுகளோடு கூறியுள்ளார்.&nbsp;</p><p>

ஆனால், அந்த தாய்மார் கொடுத்த கடிதத்தில் 'தமிழரசு கட்சி' என்பதற்குப் பதிலாகப் பிழையாக 'தமிழரசு காட்சி' என்று எழுதப்பட்டிருந்ததாம் இதை வைத்துக் கொண்டு, தன்னை அவமதித்துவிட்டார்கள் என்று சுமந்திரன் தரப்பு புலம்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகின்றன.</p><p>
சுமந்திரன் அவர்களே.

வீதியில் நின்று போராடும் அந்தத் தாய்மார் ஒன்றும் பல்கலைக்கழகத்தில் ப (PhD) பட்டமோ, சட்டத்துறையில் பட்டமோ பெற்றுவிட்டு வீதிக்கு வரவில்லை! இந்த மண்ணிற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் பெற்ற பிள்ளைகளையும் உறவுகளையும் தொலைத்துவிட்டு, முதுமையிலும் தள்ளாத வயதிலும் கண்ணீரோடு நீதிக்காக அலைபவர்கள். </p><p>நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் தாயைப் போன்றவர்கள். அவர்களது எழுத்துப் பிழையை ஆராய்ந்து அரசியல் செய்யும் உங்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருக்கிறதா?</p><p></p><h2>கண்ணீரும் நியாயமான போராட்டமும்</h2><p>
சிங்களச் சமூகத்திற்கோ கொழும்பு மேல்தட்டு வர்க்கத்திற்கோ ஒரு பிரச்சனை என்றால் மூக்கு வியர்க்க ஓடிப்போய் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் தெரிந்த இவர்களுக்கு, சொந்த இன தாய்மார்களின் கண்ணீரும் நியாயமான போராட்டமும் மட்டும் கசக்கிறதோ?&nbsp;</p><p>தான் வாதாடிய வழக்கறிஞர் தொழில் பட்டியலைச் சமூக ஊடகங்களில் தன் விசிறிகளை வைத்துப் பரப்பி, தன்னை ஒரு 'சட்டரீதியான கிங் மேக்கர்' என்றும், தமிழினத்தின் மீட்பர் என்றும் போஜிக்க வைக்கும் சுமந்திரனிடம் கேட்கிறோம்:</p><ul><li>தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கோ, அரசியல் கைதிகளின் விடுதலைக்கோ, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கோ சட்டரீதியாக நீர் பெற்றுத் தந்த ஒரு துளி தீர்வுதான் என்ன?</li><li>நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கித் தொழில் தர்மத்தின் பெயரால் வாதாடியதை, தமிழ்த் தேசியத்திற்கான வரலாற்றுச் சாதனையாகக் காட்டி எத்தனை காலம்தான் இந்த மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?</li><li>தமிழ் மக்களின் இரத்தத்தில் கறைபடிந்த அப்பட்டமான தமிழர் விரோத சக்தியான ஈபிடிபி (EPDP) உடனெல்லாம் ஸ்ரீதர் தியேட்டர் வாசலில் கை குலுக்கி, அரசியல் பங்காளிகளாக நின்று பேரம் பேசத் தெரிந்த உங்களுக்கு, சொந்த மக்கள் வீதியில் நின்று போராடும்போது மட்டும் "கட்சி கலந்து கொள்ளாது" என்று புறக்கணித்து ஓட எப்படி மனம் வருகிறது?</li></ul><p>

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற ஈபிடிபியின் அரசியல் பங்காளிகளாக மாறியுள்ள சுமந்திரன் தரப்பால் ஒருபோதும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதும், தமிழர்களின் உரிமைக்கான உண்மையான குரலாக நிற்க முடியாது என்பதும் எப்போதோ தெரிந்த உண்மை.</p><p></p><h2>தமிழர் விரோதப் போக்கு</h2><p> </p><p>இதனால்தான் இன்றைய காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டைக் கண்டு தமிழர் தேசத்தின் திரட்சியைக்கண்டு அஞ்சியபடி இவர்கள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.</p><p>

மக்களின் உண்மையான வலிகளைப் புறக்கணித்துவிட்டு, தமிழர் விரோத சக்திகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தங்களைத் 'தமிழ்த் தேசியத்தின் உயிர்மூச்சு' என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொள்ளும் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கில் பயணிக்கும் இந்தச் சுமந்திரன் தரப்பிற்கு, இந்த மண்ணில் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கு எந்தவொரு தகுதியும் அருகதையும் எள்ளளவும் கிடையாது எனப் பலரும் ஆங்காங்கே அங்கலாய்த்துக்கொள்கிறார்களாம்.</p><p>

சில வேளைகளில் இன்றைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய அந்த மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவர்களுக்கு எதிராக கட்சியினுடைய முடிவை மீறியதாக சில வேளைகளில் கடிதம் கூட அனுப்பலாம்.&nbsp;</p><p>

அப்படி இந்த சுமந்திரன் என்று கையப்பம் இட்டு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினால் ஈழத்து தமிழ் மக்களே நீங்களே தீர்மானியுங்கள். தமிழ் தேசிய அரசியலில் இவர்கள் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T01:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-is-trying-to-take-control-judiciary-ajith-p-1788135885"></link>
            <id>https://ibctamil.com/article/govt-is-trying-to-take-control-judiciary-ajith-p-1788135885</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
இந்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான அமர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

இதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அஜித் பி பெரேரா, “நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடும் கவலை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f929ed60-6179-4cfd-b6de-9bfa1d03f592/26-6a94cd556703c.webp' /></p><p>

இத்திருத்தம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 14(1) பிரிவுக்கு முரணானது என்றும், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
மேலும், இத்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் எந்தெந்த அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டம் என்ன என்பது குறித்து விளக்குமாறு ஐ.நா பிரதிநிதி அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.</p><p>

 ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில் மிகவும் மோசமானது. முழுமையான நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இத்திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு 2026 ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது.&nbsp;</p><p>
ஆனால், குறிப்பிட்ட எந்த திகதியும் இல்லாத இந்த அறிக்கை ஒரு அப்பட்டமான பொய்யாகும். அரசாங்கம் இலங்கை மக்களை மட்டுமன்றி சர்வதேச அமைப்பையும் ஏமாற்றப் பார்க்கிறது.” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T00:39:56+00:00</updated>
        </entry>
    </feed>
