<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-03T00:15:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு காலக்கெடு! உடல்கள் மட்டுமே நாடு திரும்பும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-issued-to-us-troops-in-iraq-1788390495"></link>
            <id>https://ibctamil.com/article/warning-issued-to-us-troops-in-iraq-1788390495</id>
            <summary type="text">





ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவக் குழுவான ஹரகாத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபாவின் தலைவர் அக்ரம் அல்-காபி, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>





ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவக் குழுவான ஹரகாத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபாவின் தலைவர் அக்ரம் அல்-காபி, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். </p><p>

செப்டம்பர் 30-ஆம் திகதி பிறகும் அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தங்கியிருந்தால், அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதன்படி, தொடர்ந்து அங்கு தங்கியிருந்தால் அவர்களின் உடல்கள் மட்டுமே ஈராக்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் என அல்-காபி மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஆயுத இயக்கங்களின் கூட்டணி</h2><p>

12-வது படைப்பிரிவு என்றும் அழைக்கப்படும் இந்த அமைப்பு, ஈரானுக்கு நெருக்கமான ஆயுத இயக்கங்களின் கூட்டணியான, ஈராக்கை தளமாகக் கொண்ட மக்கள் திரட்டல் படைகளின் (PMF) ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a92e87a-b123-456d-acc2-71d83c516e5e/26-6a98b3ffc5215.webp' /></p><p> 

கடந்த 2019-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு இந்த அமைப்பையும் இதன் தலைவர் அக்ரம் அல்-காபியையும் பயங்கரவாதிகள் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T23:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இஸ்ரேலின் பணி முடிவடையவில்லை! மீண்டும் போருக்குள் நுழையும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-said-israel-s-mission-in-iran-1788382012"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-said-israel-s-mission-in-iran-1788382012</id>
            <summary type="text">
ஈரானில் இஸ்ரேலின் பணி இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், &quot;எனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானில் இஸ்ரேலின் பணி இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், "எனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் எங்களது அனைத்து அமைப்புகளும் ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்காகவே செயல்பட்டு வருகின்றன" என்று என அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன்போது, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்கு அதனுடன் நேரடியாக மோதுவதே தனது நோக்கம் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் அறிவிப்புக்கு பதில்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே நெதன்யாகுவின் மேற்கொண்டு கருத்து வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483db2f2-8301-43db-915b-51c8b7289cad/26-6a98b0d622897.webp' /></p><p><i>Image Credit:&nbsp;www.scmp.com</i></p><p>

எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலுக்குப் பங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகவில்வை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>






</p>]]></content>
            <updated>2026-09-02T23:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-israel-not-worry-about-resuming-war-1788380823"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-israel-not-worry-about-resuming-war-1788380823</id>
            <summary type="text">ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
தொலைபேசி வழியிலான அந்த நேர்காணலின் போது பேசிய ட்ரம்ப், "நான் ஜனாதிபதியாக இருக்கிறேன், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மிகப்பெரிய பலத்துடன் பதிலடி</h2><p>
</p><p>
அடுத்த வாரம் தொடங்கும் யூதப் பண்டிகைக் காலத்தில் ஈரான் தங்களைத் தாக்கினால், அதற்கு மிகப்பெரிய பலத்துடன் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a4ec33-11e1-41f9-8268-0c60f43acdd5/26-6a988a1fbd928.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T21:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான மோதல் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/renewed-conflict-with-iran-not-last-long-trump-1788379362"></link>
            <id>https://ibctamil.com/article/renewed-conflict-with-iran-not-last-long-trump-1788379362</id>
            <summary type="text">ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இரு தரப்பிற்கும் இடையே அண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இரு தரப்பிற்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுமையான கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் வசமே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். &nbsp;</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு</h2><p> </p><p>

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் எங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றிய பல கப்பல்களை நாங்கள் அப்பகுதி வழியாக பாதுகாப்பாக இயக்கி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd909444-41c6-40cf-a8bf-6d050fc57369/26-6a9883055ef7a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;abcnews</i></p><p> </p><p>

பெரும்பாலான நேரங்களில் எந்த தடங்கலுமின்றி இப்பணியை மேற்கொள்கிறோம். </p><p>

எப்போதாவது அவர்கள் ஒரு ட்ரோனை அனுப்பும்போது, நாங்கள் அதை சுட்டு வீழ்த்துகிறோம். அங்கு மிகவும் வலுவான கட்டுப்பாட்டை நாங்கள் நிறுவியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T20:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை முதலிடம்! மல்லாகம் மாணவன் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grd-five-scholarship-exam-tamil-first-place-1788378696"></link>
            <id>https://ibctamil.com/article/grd-five-scholarship-exam-tamil-first-place-1788378696</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6681cb8c-85e6-4073-ae67-e1517c8d3fdf/26-6a9880161b184.webp' /></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T19:59:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு முன்னாள் மேயர் முகமது முஸாமிலின் மகன் கட்டுநாயக்கவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eldest-son-of-ex-colombo-mayor-muzammil-arrested-1788376359"></link>
            <id>https://ibctamil.com/article/eldest-son-of-ex-colombo-mayor-muzammil-arrested-1788376359</id>
            <summary type="text">
முன்னாள் ஊவா மாகாண ஆளுநரும், கொழும்பின் முன்னாள் மேயருமான முகமது முஸாமிலின் மகனான முகமது நிஷாம் ஜமால்தீன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஊவா மாகாண ஆளுநரும், கொழும்பின் முன்னாள் மேயருமான முகமது முஸாமிலின் மகனான முகமது நிஷாம் ஜமால்தீன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(02) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
47 வயதான ஜமால்தீன், லண்டன் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>விமானப் பயணத் தடை</h2><p>

கொழும்பு நிதி மற்றும் மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்ட ஒரு விசாரணை தொடர்பாக விதிக்கப்பட்ட விமானப் பயணத் தடையின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163621a2-ca7a-4326-9593-8f60f4fbfd33/26-6a9876eca7967.webp' /></p><p>

இதன்படி, அவர் கட்டுநாயக்க விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மாலை சுமார் 04.30 மணியளவில் கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T19:50:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவெடுத்துவிட்டு எங்களை அழைக்க வேண்டாம்: தமிழரசுக் கட்சி தன்மானக் கட்சியாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-said-don-t-call-us-after-making-a-decision-1788374888"></link>
            <id>https://ibctamil.com/article/itak-said-don-t-call-us-after-making-a-decision-1788374888</id>
            <summary type="text">
தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குவதாகவும், ஏனைய கட்சிகளோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குவதாகவும், ஏனைய கட்சிகளோ அல்லது சிவில் அமைப்புகளோ தங்களது தீர்மானங்களை எடுத்துவிட்டு பின்னர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்கப் போவதில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் இன்றையதினம் இடமபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தமிழரசுக் கட்சி பிரசன்னமாகாது</h2><p>
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனித்துவமானதும் பழம்பெருமை மிக்கதுமான அரசியல் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் தனித்துவமும் தன்மானமும் எந்த இடங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதோ, அந்த இடங்களில் தமிழரசுக் கட்சி பிரசன்னமாகாது. இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2476b27f-8f02-49ea-a3aa-0b0793e1303b/26-6a98725f0854a.webp' /></p><p>
பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியோ அல்லது ஓரங்கட்டியோ தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதன் பின்னர் பகிரங்கமாக ‘வாருங்கள்’ என அழைப்பு விடுத்தால் எவ்வாறு நாம் அங்கு செல்ல முடியும்? அவ்வாறு அழைக்கப்படும் இடங்களுக்கு நாம் செல்லவும் மாட்டோம்.</p><p>
தமிழரசுக் கட்சி யாராவது அழைத்த இடத்தில் சென்று அமருகின்ற கட்சி அல்ல. அதற்கென ஒரு தனித்துவமும் கௌரவமும் இருக்கின்றது. இதனை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.</p><h2>உறுதியான நிலைப்பாடு</h2><p>

தமிழரசுக் கட்சியை கடந்த காலங்களில் வழிநடத்தியவர்கள் முதுகை வளைத்து அரசியல் செய்தவர்கள் அல்லர். அவர்கள் முதுகை நிமிர்த்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/410f5f9f-b8a1-4bef-8f09-d102577e2ca4/26-6a98725fb4d3e.webp' /></p><p>
அந்த வழியில் வந்த நாங்களும் வளைந்து செல்ல முடியாது. எங்களை மதிப்பவர்களிடம் ஒரு படி கீழிறங்கி சென்று பேசுவதற்கும், இணைந்து செயல்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்களை மதிக்காதவர்களிடம் எங்களுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது.&nbsp;</p><p>தேவைப்பட்டால் ஒரு படி மேலே சென்று எங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவும் தயாராக இருக்கின்றோம். இதனை நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T19:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் கடத்திய வெளிநாட்டவர்களை கப்பலுடன் கைப்பற்றிய ஈரான் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-seizes-barge-for-smuggling-of-diesel-1788373661"></link>
            <id>https://ibctamil.com/article/iran-seizes-barge-for-smuggling-of-diesel-1788373661</id>
            <summary type="text">சுமார் 382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு வெளிநாட்டு கப்பலை, வளைகுடாக் கடற்பரப்பில் இன்று (02)புதன்கிழமை ஈரான் அதிகாரிகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு வெளிநாட்டு கப்பலை, வளைகுடாக் கடற்பரப்பில் இன்று (02)புதன்கிழமை ஈரான் அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதில் இருந்த 11 வெளிநாட்டினரைக் கைது செய்ததாகவும் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.</p><p>வடக்கு வளைகுடாவில் ஒரு கப்பலில் பெட்ரோலியப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஈரான் பாதுகாப்புப் படைகள் அந்த கப்பலுக்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக ஐஆர்என்ஏ கூறியது.</p><h2>கப்பலில் இருந்த பதினொரு வெளிநாட்டினரும் தடுத்து வைப்பு</h2><p>
</p><p>
அபாதானில் உள்ள ஈரான் எல்லைக் காவலர்கள் அந்தப் கப்பலை வழிமறித்து, 382,000 லிட்டர் டீசலைக் கைப்பற்றியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

 கப்பலில் இருந்த பதினொரு வெளிநாட்டினரும் தடுத்து வைக்கப்பட்டனர், இருப்பினும் அவர்களின் தேசியம் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f923910-0e79-438e-8d32-ca107cb1c924/26-6a986dd17b2ee.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை வழங்கும் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் ஈரான் அதிகாரிகளிடமிருந்து உடனடியாக வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T18:41:25+00:00</updated>
        </entry>
    </feed>
