<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-08T21:13:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா! வெளியிடப்பட்ட புதிய சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576"></link>
            <id>https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.</p><p> 

இச்சட்டம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, ஈரானிய கப்பல்களைக் குறிவைப்பதற்கான அதிகாரங்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.</p><p>

அத்தோடு, ஈரானின் பிரித்தானிய நிதி அமைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கூடுதல் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வகையில் வர்த்தகத் தடைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறப்பு விதிவிலக்குகள் இல்லாத பட்சத்தில் ஈரானிய விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்குவதைத் தடை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>துறைசார் கட்டுப்பாடுகள்</h2><p>

“ஸ்னாப்பேக்” (snapback) எனப்படும் பொறிமுறையின் கீழ் ஈரான் மீது ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07c6ecd-4a88-46cd-a21f-e73f11f96346/26-6aa0725f12873.webp' /></p><p> </p><p>

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல்வேறு துறைசார் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஈரானின் அணுசக்தித் திட்டம்</h2><p>
</p><p>
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிதி திரட்டும் திறன் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களைப் பெறும் திறனையும் மேலும் மட்டுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f861c6c-e737-4acb-9585-55b321373903/26-6aa0725ff1992.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
இந்நிலையில், “ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கைகளை இச்சட்டம் மேலும் வலுப்படுத்துகிறது” என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் டவுட்டி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T21:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824"></link>
            <id>https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824</id>
            <summary type="text">ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், அவற்றின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
</p><p>
இதன்போது, ஈரானின் கார்க் தீவின் கடற்கரைப் பகுதியில் ஒரு கப்பல் குறிவைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>கப்பல்களை வெளியெற உத்தரவு</h2><p>குறிவைக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d5e6143-b907-4773-839f-153561255a8c/26-6aa075d9e2a77.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களின் அருகில் உள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் (அவை நங்கூரமிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிருந்து வெளியேறுமாறு ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் கார்க் தீவு மிக முக்கியமான இடமாகும். போருக்கு முன்பு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 வீதம் இந்தத் தீவின் மூலமே கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய ஆயுதத்தை தாக்கி அழித்த ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-destroyed-a-us-made-mq-1-drone-1788898304"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-destroyed-a-us-made-mq-1-drone-1788898304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p> ஈரானிய ஒலிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
</p><p>
MQ-1 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு ஆளில்லா விமானமாகும். இது பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் பதில்&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில், ஈரானின் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f491f7e-e298-4755-b6af-838fbeddf5bd/26-6aa0705bdb7eb.webp' /></p><p><i>Image Credit:migflug</i></p><p>

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் நுழைவாயிலில் அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் IRGC-யின் கடற்படைப் பிரிவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-08T20:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382"></link>
            <id>https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382</id>
            <summary type="text">இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை ரத்து செய்ய தாய்லாந்து எடுத்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், தாய்லாந்து அரசாங்கம் உலக நாடுகளுக்கான தனது விசா நடைமுறைகளை மறுஆய்வு செய்து, இலங்கை உட்பட 60 நாடுகளுக்கான விசா விலக்கு வசதியை திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விசா இல்லாத வசதியைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டதை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>சிறப்பு விசா நடைமுறை</h2><p> </p><p>

குறிப்பாக, பௌத்த பிக்குகள் தாய்லாந்திற்குள் குஷ் வகை போதைப்பொருளைக் கொண்டுவர முயன்ற சமீபத்திய சம்பவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dc23fa-6309-482a-9882-cf8daa6f594d/26-6aa05b8582d73.webp' /></p><p>
</p><p>
திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் வருகையின் போது விசா பெறும் வசதி (Visa on Arrival) தொடர்பான அறிவிப்புகள் ஓகஸ்ட் 31 அன்று தாய்லாந்தின் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. </p><p>

இது குறித்து இலங்கை அரசு தாய்லாந்து அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அப்போது, இலங்கைக்கு சிறப்பு விசா நடைமுறையை வழங்குவதற்காக புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள தாய்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு ஒப்பந்தம்</h2><p>இதற்கான வரைவு ஒப்பந்தம் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அடுத்தகட்டமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60899d8-58f8-41d3-bdd7-4de7339b1f8c/26-6aa05b866fd4b.webp' /></p><p>
</p><p>
இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 14 அன்று தாய்லாந்து செல்லவுள்ளார்.</p><p> 

தனது இந்தப் பயணத்தின் போது, முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு விசா நடைமுறை குறித்தும் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எந்த நெருக்கடியிலும் உறுதுணை! இந்திய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajnath-said-india-always-stands-by-sri-lanka-1788894859"></link>
            <id>https://ibctamil.com/article/rajnath-said-india-always-stands-by-sri-lanka-1788894859</id>
            <summary type="text">இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p>

பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்ட அவர், இன்று(08) கொழும்பில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருடனான சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருக்கமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இவை இருதரப்பு உறவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை எடுத்துரைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33be6b3e-381d-4050-a780-b567f2f15829/26-6aa065f9592eb.webp' /></p><p> மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
 மேலும், 2014-ல் சுமார் 2 டிரில்லியன் டொலராக இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது சுமார் 4 டிரில்லியன் டொலராக விரிவடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T19:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் பதிவாகியுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-shooting-today-1788889239"></link>
            <id>https://ibctamil.com/article/another-shooting-today-1788889239</id>
            <summary type="text">மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனமல்வில - கல்வல யாய பகுதியில் இந்தத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
தனமல்வில - கல்வல யாய பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b55f7b55-c12c-4c48-bcd5-75b785a40527/26-6aa04a39d5121.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T17:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் பெருந்தொகை அபராதம்! திருத்தப்பட்டது சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/child-labour-fines-from-rs-10-000-to-rs-100-000-1788888095"></link>
            <id>https://ibctamil.com/article/child-labour-fines-from-rs-10-000-to-rs-100-000-1788888095</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சான்றளித்துள்ளார். 

இதன்மூலம், இத்திருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சான்றளித்துள்ளார். </p><p>

இதன்மூலம், இத்திருத்தச் சட்டம் "2026-ஆம் ஆண்டின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டம் எண் 21" என அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
</p><p>
தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்தவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலம், ஓகஸ்ட் 20 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) சபாநாயகரின் சான்றளிப்பைப் பெற்றது.</p><p></p><h2>அபராதத் தொகை&nbsp;</h2><p>
</p><p>
இந்த புதிய திருத்தத்தின் மூலம், 1956-ஆம் ஆண்டின் 47-ஆம் எண் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கான அபராதத் தொகை ரூ. 10,000-இலிருந்து ரூ. 100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b905f0-f044-42f8-9f5c-d3b2baeb827b/26-6aa04624053b2.webp' /></p><p>
</p><p>
இச்சட்டம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கடுமையாகத் தடை செய்கிறது.
</p><p>
தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப குற்றங்களுக்கான தண்டனைகளை மாற்றியமைக்கவும், சிறுவர் தொழிலாளர் முறையைத் தடுத்து, தொழில்துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T17:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரண குணவர்தனவின் தண்டனையை குறைப்பதாக இலஞ்சம் பெற்ற நீதிமன்ற உதவியாளருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-assistant-remanded-over-bribe-1788885887"></link>
            <id>https://ibctamil.com/article/court-assistant-remanded-over-bribe-1788885887</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைப்பதாக வாக்குறுதியளித்து, அவரின் மனைவியிடமிருந்து ரூ. 750,000 இலஞ்சம் பெற்றதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைப்பதாக வாக்குறுதியளித்து, அவரின் மனைவியிடமிருந்து ரூ. 750,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஒரு நீதிமன்ற உதவியாளர் செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜி.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc919d2-abdf-4ad2-b6a8-7484ed1ba5ca/26-6aa03eeee4d36.webp' /></p><p>

சந்தேக நபர் தொலைபேசி மூலம் நீதிபதியைத் தொடர்புகொண்டு ஒரு வழக்கு குறித்து கலந்துரையாட முயன்றதாக CIABOC நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p></p><h2>உரையாடலில் ஈடுபட மறுத்த&nbsp;நீதிபதி </h2><p> நீதிமன்ற வழக்குகள் குறித்து கலந்துரையாடும் அவரது அதிகாரத்தை நீதிபதி கேள்விக்குட்படுத்தி, அத்தகைய உரையாடலில் ஈடுபட மறுத்துவிட்டார்.

சந்தேக நபர், இவ்விஷயத்தை நீதிமன்றத்தில் கலந்துரையாட முடியாது என்றும், இதுகுறித்து தனியாக சந்தித்து கலந்துரையாடலாம் என்றும் நீதிபதியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2e62ec-3577-49d0-8a6e-69740427255d/26-6aa03eee39f21.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அத்தனகல்ல நீதிமன்றத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றப் புத்தகக் கட்டுநர் மீதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிஐஏபிஓசி (CIABOC) தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் பிரதி அமைச்சரும், அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான குணவர்தன, சபைக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் தண்டனை விதிக்கப்பட்டார்.</p><p> இந்தத் தண்டனையை 16 ஆண்டுகளில் அனுபவிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:59:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் : நாளை கையெழுத்தாகும் மூன்று ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-agreements-with-indian-defense-minister-1788879793"></link>
            <id>https://ibctamil.com/article/three-agreements-with-indian-defense-minister-1788879793</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>மூன்று ஒப்பந்தங்கள்</h2><p>இதற்கமைய இலங்கை மற்றும் இந்திய மாணவர் படைப் பிரிவுகளுக்கு இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய பாதுகாப்புக்கல்லூரி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு பீடத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை இலவசமாக பராமரித்து தருவதற்கான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களிலேயே நாளை கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701fc252-3e76-4aed-9323-1ed9e7e5d813/26-6aa039e3b76fd.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadas-retaliatory-tariffs-on-us-goods-1788874533"></link>
            <id>https://ibctamil.com/article/canadas-retaliatory-tariffs-on-us-goods-1788874533</id>
            <summary type="text">அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலடி வரிகளை விதித்தது.
</p><p>
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.01 மணிக்கு (0401GMT) நடைமுறைக்கு வந்த இந்த எதிர் நடவடிக்கைகள், அமெரிக்காவின் பிரிவு 338 வரிகளுக்கு "டொலருக்கு டொலர்" என்ற விகிதத்தில் இணையாக உள்ளன.&nbsp;</p><h2>அமெரிக்க இறக்குமதிகள் மீது&nbsp;வரி</h2><p>ஒட்டாவா, எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், காகிதக்கூழ் மற்றும் காகிதம், மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க இறக்குமதிகள் மீது 15%, 25% மற்றும் 50% வரிகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d5a41f6-50a7-4098-8cc0-9b8c340786d5/26-6aa01321453ea.webp' /></p><p>
</p><p>
ஓகஸ்ட் மாத இறுதியில் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், முக்கிய கனடியப் பொருட்கள் மீது 50% வரிகளை விதித்தது.</p><p> அமெரிக்க வர்த்தக விதியான பிரிவு 338-இன் கீழ், எஃகு, அலுமினியம், மரக்கட்டைகள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் மீது அமெரிக்க நடவடிக்கைகள் குறிவைக்கப்பட்டன.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அதிகாரம்</h2><p> இந்த விதி, பதிலடி வர்த்தகத் தடைகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த எதிர் வரிகள் அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அமல்படுத்தப்படும் நாளில் ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள சரக்குகளைப் பாதிக்காது என்றும் கனடா தெளிவுபடுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eef1f13-ec94-4ff4-a470-34a8a9ac78f1/26-6aa0132093deb.webp' /></p><p>

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், தொடர்ச்சியான இறக்குமதி வரிகள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் இந்த வர்த்தகப் பிரச்சினை வியத்தகு முறையில் தீவிரமடைந்துள்ளது.</p><p>

ட்ரம்ப், கனடா-அமெரிக்க வர்த்தக இடைவெளியை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார். வரிகளை விதிப்பதற்கான முக்கிய காரணமாக அதைச் சுட்டிக்காட்டி, ஒட்டாவா அமெரிக்காவை "ஏமாற்றுகிறது" என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்துக் கோயில்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதுதான் கிளீன் சிறிலங்கா திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meat-waste-near-hindu-temples-1788874992"></link>
            <id>https://ibctamil.com/article/meat-waste-near-hindu-temples-1788874992</id>
            <summary type="text">இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
</p><p>
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள கழிவுப் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் கழிவுகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றனவா அல்லது மக்கள் குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் கொட்டப்படுகின்றனவா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற செங்கலடி - ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், ஐந்தாம் குறிச்சி பகுதியில் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகளில் இறைச்சிக் கழிவுகள் இல்லை என தவிசாளர் நளீம் தெரிவித்ததாகக் கூறிய கஜேந்திரன், அதனை நேரில் ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக குறித்த பகுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்&nbsp;</h2><p>
</p><p>
அங்கு தான் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நகர சபை ஊழியர்கள் கழிவுகளை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அங்கு சென்றதாகவும், ஆனால் சம்பவத்தில் தமது தரப்பு கருத்துகள் உரிய முறையில் கேட்கப்படவில்லை என்றும் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குப்பை மேட்டை நேரில் பார்வையிட்டு நிலைமையை மதிப்பிடாமல், ஒரு தரப்பின் கருத்துகளை மாத்திரம் கேட்பது நடுநிலையான அணுகுமுறையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>குப்பைகள் ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இனவாதம் அல்லது மதவாதம் எனக் கூறப்படுவதை கஜேந்திரன் நிராகரித்துள்ளார்.</p><p>

குப்பைகளால் மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகக் கூறுவது இன, மத வேறுபாட்டைத் தூண்டும் செயல் அல்ல என அவர் வாதிட்டுள்ளார்.
</p><p>
குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் வசிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பிரச்சினையை இன அல்லது மதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவே அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏறாவூர் நகர சபையின் பத்து வட்டாரங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக வகைப்படுத்தி, ஏறாவூர்ப்பற்று கொடுவாமடுவில் இயங்கும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திடம் கையளிக்க முடியும் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அரசாங்கத்துடன் கலந்துரையாடி, ஏறாவூருக்கு பொருத்தமான இடமொன்றில் முறையான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை அமைப்பதன் மூலம் கழிவுப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோதமாக நில நிரப்புதல்</h2><p>இதனிடையே, ஆற்றங்கரைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் காணிகளில் குப்பைகளைப் பயன்படுத்தி நிலங்களை நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதன் மூலம் தனியார் காணிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
ஏற்கனவே பல ஏக்கர் காணிகள் இவ்வாறு நிரப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ள போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான சுயாதீனமான ஆதாரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p><p>
எனவே, ஆற்றங்கரை, சதுப்பு நிலம் மற்றும் வயல் நிலங்களில் கழிவுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நில நிரப்புதல் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சட்டவிரோத நில நிரப்புதல் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>குப்பைக் கழிவு விவகாரம் தற்போது வெறுமனே உள்ளூராட்சி சபையின் நிர்வாகப் பிரச்சினையாக இல்லாமல், சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலப் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகப் பொறுப்புடன் தொடர்புடைய விவகாரமாக மாறியுள்ளதாக கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
தமக்கு எதிராக இனவாதம் அல்லது மதவாதம் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதன் மூலம் அடிப்படை சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் கேள்விகளைத் திசைதிருப்பக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்த விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நகர சபையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நகர சபை, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியாகிய பின்னரே விவகாரத்தின் முழுமையான உண்மை நிலையைத் தீர்மானிக்க முடியும்.
</p><p>
இதனால், குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சனங்களையும் தாண்டி, குறித்த குப்பைக் கொட்டும் இடம், கழிவுகளின் தன்மை, நில நிரப்புதல் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T16:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்றிரவு துப்பாக்கிசூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-injured-in-athurugiriya-shooting-1788880325"></link>
            <id>https://ibctamil.com/article/man-injured-in-athurugiriya-shooting-1788880325</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு அத்துருகிரியவின் வளேகடே பகுதியில் இன்றிரவு நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு அத்துருகிரியவின் வளேகடே பகுதியில் இன்றிரவு நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காயமடைந்த நபரின் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T15:12:13+00:00</updated>
        </entry>
    </feed>
