<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-05T10:31:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உரிமையாளரின் கீழ் Jaffna Kings அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-kings-team-under-new-ownership-1785924683"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-kings-team-under-new-ownership-1785924683</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக்(LPL) தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையை Anchor Sports AB நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்த நிறுவனம் இந்திய முன்னாள் வேகப்பந்து வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக்(LPL) தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையை Anchor Sports AB நிறுவனம் கைப்பற்றியுள்ளது.</p><p>இந்த நிறுவனம் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோர் இணை உரிமையாளர்களாக உள்ள ஸ்டொக்ஹோம்-ஐ தளமாகக் கொண்ட நிறுவனமாகும்.</p><p>ஜஃப்னா கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையை வகித்த Sports Commune நிறுவனத்தின் இணை உரிமையாளரான இந்திய 19 வயதுக்குட்பட்ட முன்னாள் வீரர் மன்ஜோத் கல்ரா, ஆட்ட நிர்ணய மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கை</h2><p>இதனை அடுத்து அவரது&nbsp; உரிமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890fe6c4-214c-4f6a-9d0a-0664f8a9366a/26-6a730f2579c3f.webp' /></p><p>அதன் பின்னர் SLC மற்றும் LPL உரிமைகளை கொண்டுள்ள Innovation Production Group இன் கீழ் அணி தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T10:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் காசாளர் மீது துப்பாக்கிசூடு : சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-seek-public-help-to-arrest-suspect-1785924652"></link>
            <id>https://ibctamil.com/article/police-seek-public-help-to-arrest-suspect-1785924652</id>
            <summary type="text">17 நவம்பர் 2025 அன்று மீட்டியகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் ஹிக்கடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 நவம்பர் 2025 அன்று மீட்டியகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
</p><p>
காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொட காவல் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தால் பல பிடியாணை உத்தரவு</h2><p>&nbsp; கந்தாரா மற்றும் அம்பலாங்கொட காவல் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாகவும் சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும், பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவருக்கு எதிராக பல பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc8bc1c7-d205-434d-8bcb-964c880e06b3/26-6a730e545636f.webp' /></p><p>

தகவல் தெரிந்த எவரும் 071‑8591481 (பொறுப்பாளர்/மீட்டியகொட) அல்லது 091‑2260423 (மீட்டியகொட காவல் நிலையம்) என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T10:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/decision-of-gce-a-level-exam-gr-5-scholarship-exam-1785922109"></link>
            <id>https://ibctamil.com/article/decision-of-gce-a-level-exam-gr-5-scholarship-exam-1785922109</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (05) இக்கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>இதன்போது நாளை (06), நாளை மறுதினம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மழைக்காலநிலை நிலவினால், பரீட்சைப் பணிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாட்டு அறையில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்</h2><p>இதேவேளை, வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் அதற்காகப் படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e635d896-b039-4198-9b0e-003e7ea0ef7b/26-6a730bd2ad977.webp' /></p><p>
 

கடந்த ஆண்டும் உயர்தரப் பரீட்சை நடைபெற்ற நவம்பர் மாதத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசௌகரியத்திற்கு உள்ளான உயர்தர மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
 

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் தென் மேல் பருவபெயர்ச்சி! நாளை 100mm மழைவீழ்ச்சி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-of-100mm-rainfall-tomorrow-1785923290"></link>
            <id>https://ibctamil.com/article/warning-of-100mm-rainfall-tomorrow-1785923290</id>
            <summary type="text">தென்மேல் பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதால், நாளை நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேல் பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதால், நாளை நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நாளை (06) முதல் அதிகரித்து அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,</p><p></p><h2>&nbsp;பலத்த மழை</h2><p>''மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b33c41-24a3-4dd9-a29d-e27be26300b7/26-6a730a7e32d5a.webp' /></p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p>இதற்கிடையில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>மேலும், வட மத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T10:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-dismisses-petition-seeking-postponed-of-al-exam-1785916609"></link>
            <id>https://ibctamil.com/article/sc-dismisses-petition-seeking-postponed-of-al-exam-1785916609</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>குறித்த மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 

பரீட்சைக்கு முதன்முறை மற்றும் இரண்டாம் முறை தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>ஆரம்பமாகவுள்ள பரீட்சை&nbsp;</h2><p>இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e390aec9-cc08-48a0-9ce3-f1fbabf78a1a/26-6a73009a9e79f.webp' /></p><p>நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413"></link>
            <id>https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு நிதி இழப்பு&nbsp;</h2><p>ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட நான்கு ஊழியர்களை அகில விராஜ் கரியவசம் தனது தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுத்தியதாக&nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a724148-9c10-4ac7-b319-333c730daacd/26-6a7310ec6366a.webp' /></p><p>அவர்களில் மூவர் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஊழியர் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>அதன்படி, ஊழியர்கள் தங்களது அலுவலக பணிகளுக்குத் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர்களுக்குச் சம்பளம் மற்றும் படிகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு 2,768,836.14 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (05) அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா - கிளிநொச்சியில் பிரம்மாண்ட ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/food-festival-taste-celebrate-reecha-augest-1785914903"></link>
            <id>https://ibctamil.com/article/food-festival-taste-celebrate-reecha-augest-1785914903</id>
            <summary type="text">தமிழரின் தொன்மை மிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் வகையில் &quot;றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா&quot; கிளிநொச்சி - இயக்கச்சியில் கோலாகலமாக ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழரின் தொன்மை மிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் வகையில் "றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" கிளிநொச்சி - இயக்கச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
“உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற நம் மூதாதையர் வாக்கிற்கு உயிர் கொடுக்கும் வகையில், அறுசுவையும் அள்ளித் தரும் இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7, 8, 9,10 ஆகிய நான்கு நாட்களும்&nbsp;றீச்ஷா வளாகத்தில் நடைபெறவுள்ளது.</p><h2>
தாயகமும் புலமும் கைகோர்க்கும் தருணம்
</h2><p>
இலங்கைத் தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் வாழும் நம் தமிழ் உறவுகளும் இந்த உணவுத் திருவிழாவில் பங்குபற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51dae8b5-6cca-4e37-a380-732e559d1405/26-6a72f1ee495eb.webp' /></p><p>வடக்கு - கிழக்கின் பாரம்பரிய சுவையை தேடி புலம்பெயர் தமிழர்கள் பலர் தாயகம் நோக்கி பயணமாகியுள்ளனர். இது வெறும் திருவிழா அல்ல - தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையிலான சுவைப் பாலம்!</p><p>
உலகளாவிய சமையல் கலைஞர்கள்

இலங்கையின் புகழ்பெற்ற சமையல் வல்லுநர்களுடன் சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து, ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம் நண்டு பிரட்டல் வரை நாவூறும் பாரம்பரிய உணவுகளை பரிமாறவுள்ளனர்.</p><p>றீ(ச்)ஷாவின் பிரம்மாண்டமான உணவுத் திருவிழாவிற்கு Qick Food, IBC தமிழ், LANKASRI ஆகியன அனுசரணை வழங்குகின்றன.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">சிறப்பம்சங்கள்&nbsp;&nbsp;</span></h2><p>
</p><ul><li>100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்
</li><li>நேரடி சமையல் செய்முறை விளக்கங்கள்
</li><li> பனை, தென்னை சார்ந்த உணவுகளுக்கான தனி அரங்கு</li><li>சிறுவர்களுக்கான பாரம்பரிய சிற்றுண்டி போட்டிகள்</li><li> கலை கலாசார நிகழ்ச்சிகள்

தமிழர் உணவு மரபின் தனித்துவத்தை, ஆரோக்கியத்தை, சுவையை ஒரே இடத்தில் அனுபவிக்க இது ஒரு அரிய வாய்ப்பு. </li></ul><p> அட்சய பாத்திரம்போல அள்ள அள்ள குறையாத சுவையை ருசிக்க றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு வாருங்கள்!&nbsp;</p><p>
நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள<b> 077 777 2353 / 077 777 2354</b> என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.</p><p>அனைவரும் வருக! சுவைத்து மகிழ்க!</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூட்டம் கூட்டமாக நடமாடித் திரியும் மான்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-tourists-visiting-trincomalee-1785914864"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-tourists-visiting-trincomalee-1785914864</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்கா முக்கிய பங்காற்றுகின்றது</p><p></p><h2>சுற்றுலாப்பயணிகள்</h2><p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ac9b2c-cf7b-4630-9762-f0398f76d642/26-6a72ececf150a.webp' />&nbsp;&nbsp;</p><p>
மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும். இந்த மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.</p><p>இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.&nbsp;&nbsp;</p><p>

மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.</p><p> இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:57:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785910521"></link>
            <id>https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785910521</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-08-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><h2>மேலதிக அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c22b00f-b131-4ff4-8674-2a059cdc9655/26-6a72d83b47c92.webp' /></p><p>புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
</p><p>
 

எனவே, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T07:08:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தன்னிசை்சையாக திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-spillway-gates-upper-kotmale-reservoir-opened-1785911490"></link>
            <id>https://ibctamil.com/article/3-spillway-gates-upper-kotmale-reservoir-opened-1785911490</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.இதனால் அதன் மூன்று வான் கதவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>இதனால் அதன் மூன்று வான் கதவுகள் இன்று (05.08.2026) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீர்த்தேக்கத்திற்கு பெருமளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த வான் கதவுகள் தானாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>3 வான் கதவுகள் தன்னிச்சையாக திறப்பு</h2><p>அதன்படி, திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வான் கதவிலிருந்தும் வினாடிக்கு சுமார் 30 கன மீற்றர் வீதம் நீர் கொத்மலை ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b590f5-3d32-45c2-89dc-3d7fece8f013/26-6a72ddb664390.webp' /></p><p>மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடித்தால், நீர்த்தேக்கத்தின் எஞ்சியுள்ள வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படக்கூடும் என பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இதையடுத்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் பாயும் கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் ஆற்றை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயரக்கூடிய சாத்தியம் இருப்பதால், ஆற்றைக் கடக்கும் நடவடிக்கைகள், நீராடுதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் வழங்கும் மேலதிக பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது குண்டு வீச்சு : பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-ratmalana-1785905124"></link>
            <id>https://ibctamil.com/article/grenade-attack-on-a-house-in-ratmalana-1785905124</id>
            <summary type="text">புதிய இணைப்புஇரத்மாலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இரத்மாலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
 

இந்தத் தாக்குதலினால் எவருக்கும் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3457b4ac-954b-4796-973b-26102c4f0dbf/26-6a72d9cae9310.webp' /></p><p>தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.</p><p>
 

ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள குறித்த வீட்டின் மீது இன்று (05) அதிகாலை இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> 

 

எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித காயமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e2f2df-16b4-4f7c-b96b-91c76a26aa78/26-6a72c7ed14221.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதேவேளை தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gdkTfTgVKuA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு: விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/outsiders-cooperation-in-mahara-prison-conflict-1785908008"></link>
            <id>https://ibctamil.com/article/outsiders-cooperation-in-mahara-prison-conflict-1785908008</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 03.45 மணியவில் மூன்று கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.</p><p></p><h2>சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம்&nbsp;</h2><p> </p><p>சிறைச்சாலையின் காவலர் அந்த இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.


இவ்வாறான நிலையில் ஒரே நேரத்தில் அவ்விடத்தில் 1,000 பேர் அளவிலான கைதிகள் ஒன்றுக்கூடி கூச்சலிட்டு கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்கள்.</p><p>

நிலைமையை உணர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள். சிறைச்சாலையில் இருந்த ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏனைய பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைத்ததன் பின்னர் பிரதான இரும்பு கதவுகளை முடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac986e7-6ad3-4a77-93bf-c339404296db/26-6a72d4263723d.webp' /></p><p> இதன் பின்னர் கைதிகள் இரும்பு கதவின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

 சிறைச்சாலையின் சமையல் அறை, உணவு உண்ணும் இடம், வைத்தியசாலை, பதிவு பிரிவு, அலுவலகம் ஆகிய பகுதிகளை கைதிகள் சேதப்படுத்தியுள்ளார்கள். தீ வைத்துள்ளார்கள்.</p><p>இவ்வாறான பின்னணியில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலையும், மஹர சிறைச்சாலை மோதலையும் ஒன்றாக கருத முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை.</p><p></p><h2>போராட்டத்துக்கான காரணம்</h2><p>மூன்று கைதிகள் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன் பின்னர் போராட்டம் தோற்றம் பெற்றது. இந்த போராட்டத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.</p><p>மஹர சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கூண்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை தான் இலக்காக் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee22923-920a-4006-8095-a4e74c7941e7/26-6a72d42705130.webp' /></p><p>ஒரே கட்டத்தில் 1,000 பேர் ஒரு இடத்தில் ஒன்றுகூடியது சந்தேகத்துக்குரியது. திட்டமிட்ட செயற்பாடுகள் ஊடாக மஹர சிறைச்சாலையின் கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சித்துள்ளார்கள்.</p><p>மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் காணப்படுகிறது. அது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைத்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தற்போது உணவு வழங்கப்படுகிறது.

சிறைச்சாலையின் சொத்துகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது</h2><p> </p><p>இது மக்களின் வரிப்பணம் என்பதை கைதிகள் உறவுகள் விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொண்டே மீண்டும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும். தமக்கான வசதிகளையே இவர்கள் இல்லாதொழித்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d5f3329-fbf1-4269-8a17-ae92990e72b7/26-6a72d427a8a20.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு எனது தலைமைத்துவத்தில் அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>சிறைச்சாலை மோதல் ஒரு அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>


மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் சிறைச்சாலை திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.</p><p></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vtSsSfeKoY0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T06:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/level-2-landslide-warnings-extended-four-districts-1785905540"></link>
            <id>https://ibctamil.com/article/level-2-landslide-warnings-extended-four-districts-1785905540</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலை 2 (மஞ்சள்) நிலச்சரிவு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.</p><p>

இந்த எச்சரிக்கை இன்று (05.08.2026) காலை 9.00 மணி முதல் நாளை (06.08.2026) காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கண்டி மாவட்டத்தில் உடதும்பர, கங்கை இஹல கோரளை, தெல்தோட்டை, பஸ்பாகே கோரளை, டோலுவ, மெடதும்பர, பன்வில மற்றும் உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>

அதேபோன்று, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59bb3ee-5665-44ea-a672-30142984d2ba/26-6a72d11adbec2.webp' /></p><p>
</p><p>
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, அம்பகமுவ, நோர்வூட், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் நிலை 2 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) நிலச்சரிவு எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமலில் உள்ளது.</p><p>தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் மலைச்சரிவுகள், பாறை சரிவுகள், மண்சரிவுகள் மற்றும் திடீர் மண் இடிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த விலை - திறக்கும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-prices-fall-on-hopes-strait-of-hormuz-reopen-1785902170"></link>
            <id>https://ibctamil.com/article/oil-prices-fall-on-hopes-strait-of-hormuz-reopen-1785902170</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் <a href="https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388" target="_blank">நீரிணையை</a> மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளன. </p><p>

 

அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலராகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்</h2><p>
</p><p>
 

குறுகிய காலத்தில் ஹோர்முஸ் வழியாக மேலும் பல கப்பல்கள் எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து ஓமான் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15594521-0eb8-4f78-9731-865591ba2090/26-6a72bbc8589d8.webp' /></p><p>பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறையில் செய்தியாளர்களிடம் ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோக அபாயங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-foreign-secretary-vikram-misri-arrives-sl-1785908889"></link>
            <id>https://ibctamil.com/article/indian-foreign-secretary-vikram-misri-arrives-sl-1785908889</id>
            <summary type="text">உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.அவரை விமான நிலையத்தில் வைத்து&amp;nbsp;இன்று (5) புதன்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டை வந்தடைந்துள்ளார்.</p><p>அவரை விமான நிலையத்தில் வைத்து&nbsp;இன்று (5) புதன்கிழமை காலை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றுள்ளார்.</p><p>
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம் முழுவதும் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட சந்திப்பு</h2><p>இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய ஒத்துழைப்புத் துறைகளையும் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a739793a-1ff6-4d02-ac11-d30f44767167/26-6a72d1c7b9a14.webp' /></p><p> </p><p>மேலும் தனது பயணத்தின் போது, ​​இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜய ஹெரத் உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-bus-set-on-fire-early-this-morning-1785899414</id>
            <summary type="text">பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் இன்று அதிகாலை (05) கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில்&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முற்றிலுமாக எரிந்து நாசம்</h2><p>



</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e1bef4-6bd2-4ec4-ad93-86456ea2050f/26-6a72b7a7de023.webp' /></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.</p><p>
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் ஆடம்பர பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p>தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கடுவெல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்தேக வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கடுவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று - செயலகம் வந்தடைந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/first-budget-of-tvk-government-led-by-cm-vijay-1785904702"></link>
            <id>https://ibctamil.com/article/first-budget-of-tvk-government-led-by-cm-vijay-1785904702</id>
            <summary type="text">2026 - 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.&amp;nbsp;முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.&nbsp;</p><p>முதல்வர் <a href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765" target="_blank">விஜய்</a> தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் <a href="https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693" target="_blank">உதயநிதி ஸ்டாலின்</a>, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வருகை செய்துள்ளனர்</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fcbe8b-4e8d-4720-bc7e-b06236ff1403/26-6a72c19c702ce.webp' /></p><p>மற்றும் அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p>தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், தவெகவின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:41:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவத்தகமவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teenager-dies-in-motorcycle-accident-sri-lanka-1785902995"></link>
            <id>https://ibctamil.com/article/teenager-dies-in-motorcycle-accident-sri-lanka-1785902995</id>
            <summary type="text">மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந்துள்ளது.&nbsp;</p><p>
 

மாவத்தகமவிலிருந்து அகஸ்யனபிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>இளைஞன் பலி&nbsp;</h2><p>
</p><p>விபத்துக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4883c54c-e8fa-4fa5-bd72-95f58e75565a/26-6a72be1145023.webp' /></p><p>
</p><p>இதன் பின்னர் குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த பயணிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p>
 

இச்சம்பவம் குறித்து மாவத்தகம காவல்துறை&nbsp; மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் : கிடைத்த அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-amendments-to-epf-act-1785902912"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-amendments-to-epf-act-1785902912</id>
            <summary type="text">ஊழியர் சேமலாப நிதிய (Employees Provident Fund - EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தனியார் மற்றும் பகுதியளவு அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமலாப நிதிய (Employees Provident Fund - EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இலங்கை மத்திய வங்கி</h2><p>இந்தநிலையில், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, தரமானதும் திறன்மிக்கதுமான சேவைகளை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53894ec-0fb2-4c10-9703-0862673a2d0d/26-6a72be824e18b.webp' /></p><p>
</p><p>
இதற்கான முன்மொழிவுகளை இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவைத் தயாரித்துள்ளது.
</p><p>
அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:41:38+00:00</updated>
        </entry>
    </feed>
