<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-17T20:34:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் இளைஞனுக்கு சவுதியில் மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-tamil-youth-in-saudi-1789676110"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-tamil-youth-in-saudi-1789676110</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்அனோஜனுக்கு மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் தொடர்பாக பிழையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்அனோஜனுக்கு மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் தெரிவித்தே இந்த மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது</p><h2>மேன்முறையீட்டை அடுத்து வெளியான தீர்ப்பு</h2><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7389777b-780f-4f5d-8511-58bec5497c0c/26-6aac4d616d508.webp' /></p><p>
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp; மத அடிப்படையிலான இழிவான கருத்தை வெளியிடுவதை தவிர்க்க கோரிக்கை</h2><p>

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6125043c-f598-471b-aa87-4492bd3ba57a/26-6aac4d6224d11.webp' /></p><p>
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பலத்த அடி : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள கனடா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-to-join-the-european-union-1789672949"></link>
            <id>https://ibctamil.com/article/canada-to-join-the-european-union-1789672949</id>
            <summary type="text">கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல்&nbsp;அழைப்பு</h2><p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (செப். 17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d54be23-a81f-4599-8854-569d50776b56/26-6aac48396dd81.webp' /></p><p>



</p><h2>மார்க் கார்னியின் பதில்</h2><p>இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பை வரவேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b36139-b9b9-447c-8e0d-bd5e924065dd/26-6aac483a22ad2.webp' /></p><p>
</p><p>
இதுபற்றி, அவர் பேசுகையில்,

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலால் ஏற்படும் அழுத்தங்களால் இருதரப்புக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வர்த்தகம், செய்யறிவு, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரைக் கைது செய்யப்போவது யார்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/we-have-no-authority-to-arrest-gnanasara-prisons-1789670553"></link>
            <id>https://ibctamil.com/article/we-have-no-authority-to-arrest-gnanasara-prisons-1789670553</id>
            <summary type="text">&amp;nbsp;ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார். </p><p>ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஞானசார தேரர் மீது எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.</p><h2>கைது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிப்பு</h2><p>&nbsp; ஞானசார தேரரின் கைது தொடர்பாக காவல்துறைக்கு ஏதேனும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ​​அத்தகைய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d102117-d34b-4f35-93cd-422293887b4d/26-6aac38869de13.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், முன்னதாக ஒரு விசாரணையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவல்துறை மா அதிபரால் அதிகாரபூர்வமாகப் பெறப்படும் வரை ஞானசார தேரர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>கொழும்பு உயர் நீதிமன்றால் விடுதலை</h2><p>
</p><p>
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்த ஞானசார தேரர், நேற்று (செப்டம்பர் 16) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff25daa4-fbaa-4483-abe8-9bc92a31b13b/26-6aac3885e7f27.webp' /></p><p>

 ஞானசார தேரர் மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தற்போது சமூகத்தின் கவனம் குவிந்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை : விரைவில் நாடு திரும்பவுள்ள ஷிராந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275</id>
            <summary type="text">சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
“ மகிந்த ராஜபக்ச முதுமை அடைந்துள்ளார். ஒரு மனைவியாக, அவர் மகிந்த ராஜபக்சவைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறார். எனவே, கூடிய விரைவில் நாடு திரும்புவதே அவரது நம்பிக்கையாகும்,” என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.&nbsp;</p><h2>மகிந்தவுடன் ஷராந்தி இருக்கவேண்டிய நேரம்</h2><p>“இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு 80 வயது ஆகிவிட்டது இத்தகைய சூழ்நிலையில், இது அவரது மனைவி அவருடன் இருக்க வேண்டிய நேரம்,” என்று கமகே மேலும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e82c0d-a0eb-4a15-b799-e00124af6a21/26-6aac177f93f02.webp' /></p><p>
</p><p>
ரூ. 10 கோடி வைப்புத்தொகை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்சவிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில், “சிரிலிய சவியா” கணக்கில் 10 மில்லியன் வரவு வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே ஷிராந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கமகே மறுத்தார்.</p><p></p><p> </p><h2>FCID-யில் ஷிராந்தி முன்னிலையாவது உறுதி</h2><p>மேலும், ஷிராந்தி மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சிங்கப்பூருக்குச் சென்றதாகவும், FCID-யின் முன் ஆஜராவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add4de9f-1e10-42b6-875d-e2ce6afd0b15/26-6aac186814f9c.webp' /></p><p>
</p><p>
ஷிராந்திராஜபக்ச செப்டம்பர் 24 அன்று FCID-யின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, FCID அதிகாரிகள் அது தொடர்பான எழுத்துபூர்வ உத்தரவை அவரிடம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T18:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-in-separate-accidents-in-jaffna-1789667228"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-in-separate-accidents-in-jaffna-1789667228</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு
விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு
விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்

கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் மோட்டார்
சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான ஓய்வு
பெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்</p><p>வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

காரும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில்,
துவிச்சக்கர வண்டி ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>விபத்து சம்பவங்கள் தொடர்பில் விசாரணை</h2><p>

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொடிகாமம்
காவல்துறையினர் , இரு வாகன சாரதிகளையும் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து
வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விபத்துக்குள்ளான வாகனங்களையும்
காவல் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc21403-817a-4783-8b0b-6078e526b794/26-6aac2f3bd9522.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T18:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட மக்களுக்கு புதிய வசதி : அரச உத்தியோகத்தரின் முறைப்பாடுகளை நேரடியாக தெரிவிக்க ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gover-employees-to-submit-complaints-directly-1789665567"></link>
            <id>https://ibctamil.com/article/gover-employees-to-submit-complaints-directly-1789665567</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள்,
சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம்
ஆகிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள்,
சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம்
ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது
உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள்
தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு
தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;அதன் பிரகாரம் பொதுமக்கள், அரச அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை
076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் பி. ப. 5.30 மணி
முதல் பி. ப. 6.30 மணி வரை நேரடி அழைப்பு ஊடாகவும் WhatsApp அழைப்பு
ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.</p><h2>பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வு</h2><p>
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை
விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0deed00-009d-415a-999d-b81ffee9f16a/26-6aac243186d30.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-namal-granted-bail-18th-he-cannot-be-released-1789664227"></link>
            <id>https://ibctamil.com/article/if-namal-granted-bail-18th-he-cannot-be-released-1789664227</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, கோட்டை நீதவான் பாசன் அமரசேன 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால்,நாளை 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை கிடைத்தாலும் விடுதலை பெறும் வாய்ப்பை அவர் இழப்பார் என தெரியவருகிறது.
</p><p>
சந்தேக நபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டபிணைமனு மீதான உத்தரவு நாளையதினம் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.</p><h2>நான்காவது சந்தேக நபர்</h2><p>இந்தச் சம்பவத்தில் நாமல் ராஜபக்ச 4வது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdad6ee0-3013-430c-abd9-09875db2190c/26-6aac1f8e02004.webp' /></p><p>

 ஏர்பஸ் நிறுவனத்தின் உள் மின்னஞ்சல்கள் மற்றும் தடயவியல் தணிக்கை அறிக்கைகள், இந்தச் சம்பவத்துடன் நாமல் ராஜபக்சவின் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.
</p><p>


பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2 மில்லியன் அமெரிக்க டொலர் (1,454 மில்லியன் யூரோ) தொகை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.</p><p></p><h2>வெளிநாட்டில் உள்ள சந்தேக நபர்கள்</h2><p> </p><p>மேலும், அதன் ஒரு பகுதி முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்த ராஜபக்சவின் கணக்குகளில் பெறப்பட்டது.

 இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியும், மூன்றாவது சந்தேக நபரான ஷமிந்த ராஜபக்சவும் வெளிநாட்டில் உள்ளனர், அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/603caf94-438e-43f3-96c2-e3781d5b045b/26-6aac1f8d4ab89.webp' /></p><p>

 இவ்வழக்கின் முக்கிய சாட்சியான நிமல் பெரேரா, அழுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளார்.
</p><p>


சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் டி சில்வா, தனது கட்சிக்காரர் இலங்கையில் ஒரு அரசியல்வாதி என்பதால், வெளிநாடு சென்று தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும், பிணைச் சட்டத்தின் கோட்பாடுகளின்படி அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
</p><p>
இலஞ்ச ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ச ஏற்கனவே 18ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக அவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:12:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ஷிரந்தி சூப்பர் மார்க்கெட்டில் ஷொப்பிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-visited-singapore-shopping-supermarket-1789657609"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-visited-singapore-shopping-supermarket-1789657609</id>
            <summary type="text">சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.</p><p>

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார்.
</p><p>
இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வலைத்தளங்களில் வெளியான&nbsp;புகைப்படங்கள் </h2><p>ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0366884d-e677-4ae5-88c6-5b97f80263d2/26-6aac032ed5e58.webp' /></p><p>அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>

புதிய புகைப்படங்கள்
ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T16:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் டீல் மின்னஞ்சலில் ஜனாதிபதியின் மகன் என்ற வாசகம்! சிக்கலில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/presidents-son-caught-up-in-airbus-deal-1789659703"></link>
            <id>https://ibctamil.com/article/presidents-son-caught-up-in-airbus-deal-1789659703</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில், பல்வேறு முக்கிய விடயங்கள் வெளிச்சமிடப்பட்டுள்ளன. நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில், பல்வேறு முக்கிய விடயங்கள் வெளிச்சமிடப்பட்டுள்ளன.</p><p> நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தடயவியல் விசாரணைகளின் போது மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி விசாரணை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அரச தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த தகவலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>தடயவியல் விசாரணை</h2><p>

தடயவியல் விசாரணைகளின்போது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்ததாகவும், அவை இந்த பரிவர்த்தனை தொடர்பில் சந்தேகநபர் செயற்பட்ட விதம் குறித்து தகவல்களை வெளிப்படுத்துவதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c2e42b-7f9c-46d0-9062-d561828d315b/26-6aac0c91312cd.webp' /></p><p>மேலும், ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், குறித்த விமான கொள்வனவு தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களும் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக விசாரணையாளர்களால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களில், 2013 மார்ச் 23ஆம் திகதியிட்டதாகக் கூறப்படும் ஏர்பஸ் நிறுவன மின்னஞ்சல் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.</p><p></p><h2>முன்மொழியப்பட்ட விமான விற்பனை</h2><p> அதில் “ஜனாதிபதியின் மகன்” எனக் குறிப்பிடப்பட்ட ஒருவர், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான ஏர்பஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி ஊடாக அமைச்சரவைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதேவேளை, இந்த விமான கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி பரிமாற்றங்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அரச தரப்பு தகவலின்படி, பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 800,000 அமெரிக்க டொலர்கள் வர்த்தகர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிதியில் சுமார் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவில் வழங்கிய வாக்குமூலத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளதாக அரச தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.</p><p>

எனினும், நாமல் ராஜபக்ச சார்பிலான சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T15:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் காணாமல் போனோர் எண்ணிக்கை 6,150 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/number-of-missing-persons-nepal-floods-rises-6150-1789656329"></link>
            <id>https://ibctamil.com/article/number-of-missing-persons-nepal-floods-rises-6150-1789656329</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் 1,000 பேரால் அதிகரித்து, தற்போது 6,150 ஆக உயர்ந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் 1,000 பேரால் அதிகரித்து, தற்போது 6,150 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முன்னதாக 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான கள ஆய்வுகளின் பின்னர் கூடுதலாக 1,000 பேரின் பெயர்கள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரிடர், நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p></p><h2>திடீர் பனிச்சரிவு&nbsp;</h2><p>இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாக ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68aa2c08-1151-40e9-b9c4-ac9c96c44e25/26-6aac048850a46.webp' /></p><p>இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் பின்னர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக திருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>திபெத் பகுதி</h2><p>இதேவேளை, நேபாள எல்லையை ஒட்டியுள்ள திபெத் பகுதியிலும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
திபெத் பகுதியில் மட்டும் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 519 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரும் பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி, சேற்றில் புதையுண்டவர்களின் உடல்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T15:28:46+00:00</updated>
        </entry>
    </feed>
