<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-03T12:29:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-valvettithurai-massacre-also-known-1785759473"></link>
            <id>https://ibctamil.com/article/the-valvettithurai-massacre-also-known-1785759473</id>
            <summary type="text">வரலாறு சில இடங்களின் பெயர்களை மனிதகுலத்தின் மனச்சாட்சியாகப் பாதுகாத்து விடுகிறது. வியட்நாமின் மை லாய் &amp;nbsp;என்பதும் அத்தகைய ஒரு பெயர்தான். அப்படித்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாறு சில இடங்களின் பெயர்களை மனிதகுலத்தின் மனச்சாட்சியாகப் பாதுகாத்து விடுகிறது. வியட்நாமின் மை லாய் &nbsp;என்பதும் அத்தகைய ஒரு பெயர்தான். </p><p>அப்படித்தான் ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும் வல்வெட்டித்துறை என்பதும் ஒரு மை லாய் போலவே ஆறாவடுவென நிலைத்துவிட்டது.&nbsp;</p><p><b>மை லாய் கிராமத்தில்…&nbsp;</b></p><p></p><p>1968 மார்ச் 16 அன்று வியட்நாமின் சோன் மை கிராமத் தொகுதியில் உள்ள மை லாய் கிராமத்திற்குள் நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர்கள், ஆயுதமேந்தியவர்களையன்றி, பொதுமக்களைத்தான் கண்டார்கள். </p><p>ஆனாலும் இலங்கையில் போலவே அவர்களுக்கும் பொதுமக்களும் எதிரிகளெனத் தோன்றினர். சில மணி நேரங்களுக்குள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோரை அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். </p><p>பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள் கூட உயிருடன் விடப்படவில்லை. வீடுகள் எரிக்கப்பட்டன.</p><p></p><h2>முற்றாகக் கிழிந்த இராணுவ ஒழுக்கம் </h2><p> </p><p>மனித நாகரிகத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த இராணுவ ஒழுக்கம் அங்கே முற்றாகக் கிழிந்தது.

இருபத்து ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆகஸ்ட் மாதத்தில், வல்வெட்டித்துறையிலும் இதேபோலவே ஒரு நிகழ்வு வரலாற்றில் மீண்டும் நிகழ்கிறது. </p><p>இம்முறை அமெரிக்க இராணுவம் அல்ல. அமைதியை நிலைநாட்ட வந்ததாக அறிவிக்கப்பட்ட இந்திய அமைதிப்படையால் அக் கொடுமை நிகழ்த்தப்பட்டது. இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு நாடுகளில் நடந்தவை. </p><p>வெவ்வேறு அரசியல் சூழல்களில் நிகழ்ந்தவை. ஆனால் அவற்றின் மையத்தில் இருந்த தர்க்கம் ஒன்றே. சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்க ஒரு முழு கிராமத்தையும் தண்டிக்கலாம் என்ற ஆக்கிரமிப்பு மனநிலை. அழிப்பு மனநிலை.</p><p> இந்தப் பழிவாங்கலையே அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் இலங்கை இராணுவமும் கொண்டுள்ளது.</p><p></p><h2>வல்வைப்படுகொலை</h2><p>1987 இந்திய–இலங்கை ஒப்பந்தமானது, ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு ஆகியவற்றின் வாக்குறுதியுடன்தான் நிறைவேற்றப்பட்டது. </p><p>ஆனால் சில மாதங்களிலேயே அந்த வாக்குறுதி போரின் கொடுமுகமாக மாறிற்று. இந்திய அமைதிப்படை, தமிழர்களைக் காப்பாற்ற வந்த படையிலிருந்து, தமிழர் குடியிருப்புகளை முற்றுகையிடும் இராணுவமாக மாறியது.</p><p> யாழ்ப்பாணம், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்று பல இடங்களில் பொதுமக்களின் வாழ்க்கை இராணுவ நடவடிக்கைகளினால் பலியிடங்களாகின.</p><p>

1989 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், வல்வெட்டித்துறை முழுவதும் கூட்டுத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது. </p><p>வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் ஒரே நாளில் தங்கள் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்தன.&nbsp;&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவும் இந்தியாவும்&nbsp;</h2><p>மை லாய் படுகொலையின் பின்னர் அமெரிக்க அரசு ஆரம்பத்தில் உண்மையை மறைத்தது. ஆனால் வீரர் ரொனால்ட் ரைடன்ஹவரின் கடிதங்கள், பத்திரிகையாளர் சேமூர் ஹெர்ஷின் விசாரணைகள், புகைப்பட ஆதாரங்கள், உலக ஊடகங்களின் அழுத்தம் ஆகியவை அந்த மூடிமறைப்பை உடைத்தன.</p><p> உலகம் அதிர்ந்தது. அமெரிக்க இராணுவத்தின் ஒழுக்கத்தின் முகம் உலகிற்குத் தெரிய வந்தது. நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. அவை முழுமையான நீதியை வழங்கவில்லை என்றாலும், குற்றம் நிகழ்ந்தது என்பதை மறுக்க முடியாத வரலாற்றுப் பதிவை உருவாக்கின.
</p><p>
ஆனால் வல்வெட்டித்துறையின் கதைக்கு அந்த அளவிலான உலகச் செவியே கிடைக்கவில்லை என்பதே இங்கு வேதனையானது. இந்தியாவின் ஜனநாயக முகமும், பிராந்திய வல்லரசு அரசியலும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் சிக்கல்களும் இப் படுகொலையின் கோரத்தை மறைக்கும் இந்தியாவின் பொறுப்புக்கூறல் மறுப்புக்கு சாதகம் ஆகிவிட்டது. </p><p>உயிரிழந்த தமிழர்கள் சர்வதேச அரசியலில் பேசப்படாத புள்ளிவிவரங்களாகவே விடப்பட்டனர்.&nbsp;</p><p></p><h2>உலகம் துணைநிற்க மறுத்தது</h2><p>இதுவே மை லாய்க்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடு யாதெனில், மை லாய்க்கு உலகம் சாட்சி நின்றது. ஆனால் வல்வெட்டித்துறைக்கு படுகொலையில் உயிர்தப்பிய மக்களே சாட்சி. </p><p>மை லாய்க்காக உலகப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் எழுதப்பட்டன. வல்வெட்டித்துறையின் வரலாறு இன்னும் தமிழர்களின் நினைவிலும் சில ஆவணங்களிலும் மட்டுமே உயிர்வாழ்கிறது.
</p><p>
மை லாய் அமெரிக்க இராணுவத்தின் கறைபடிந்த அத்தியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வல்வெட்டித்துறை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரலாற்றில் இன்னும் பேசப்படாத வெற்றிடமாகவே இருக்கிறது. </p><p>இந்த ஒப்பீடு இரண்டு படுகொலைகளின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகிற நோக்கம் கொண்டதல்ல. ஒரு அரசின் ஆயுதங்கள் எப்போது மனிதத்தன்மையை இழக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காகவும் இராணுவம், ஒரு கட்டத்தில் ஒரு இனத்தின் பொதுமக்களையே எதிரியாகக் காணத் தொடங்கினால், அங்கே &nbsp;மனிதாபிமானத்தின் வீழ்ச்சிதான் நிகழும் என்பதற்கும்கூட இவ்விரண்டு படுகொலைகளும் சாட்சியாகும்.&nbsp;</p><h2>உண்மையை ஏற்றுக்கொள்ளுதல்&nbsp;</h2><p>இன்று இந்தியாவானது, உலக அரங்கில் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது. அந்தக் குரலுக்கு நம்பகத்தன்மை வேண்டுமென்றால், இந்திய அமைதிப்படை இலங்கையில் நிகழ்த்திய மீறல்களையும் அதே நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? </p><p>வரலாற்றை மறப்பது தேசப்பற்ற ஆகிவிடாது. மாறாக பொறுப்பிலிருந்து தப்பித்தலே ஆகும்.

அதேபோன்று வல்வெட்டித்துறைப் படுகொலையை நினைவுகூர்வது என்பதும் இந்தியாவுக்கு எதிரான ஈழத் தமிழர்களின் அரசியல் அணுகுமுறையல்ல.</p><p>&nbsp;மாறாக, இந்திய தேசத்தின் ஜனநாயகத்தின் மனச்சாட்சியையே அழைக்கும் செயலாகும். மை லாய் பற்றிய உண்மையை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருந்தது போல, வல்வெட்டித்துறை பற்றிய உண்மையையும் இந்தியா ஒருநாள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உறுதியாக நம்புவோம்.</p><p> நீதியை மறுத்த வரலாறு ஒருபோதும் நிலைபெறுவதில்லை.

உண்மையில் வல்வெட்டித்துறையில் சிந்தப்பட்ட இரத்தம் தெற்காசிய அரசியலின் மனச்சாட்சியிலும் இன்னும் உலராத கறையாகவே உள்ளது. </p><p>அதனால் அது இந்தியாவின் மை லாய் என வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் மீண்டும் நினைவில்கொள்ளப்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T12:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் திடீரென சந்தித்த ரணில் மற்றும் கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-and-gotabaya-unexpectedly-meet-in-colombo-1785757714"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-and-gotabaya-unexpectedly-meet-in-colombo-1785757714</id>
            <summary type="text">இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொழும்பில் சந்தித்தனர்.

வெகுஜன ஊடக அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொழும்பில் சந்தித்தனர்.
</p><p>
வெகுஜன ஊடக அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமண நிகழ்வில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
கொழும்பில் உள்ள சினமன் ஹோட்டலில் இந்த நிகழ்வுநடைபெற்றது.</p><h2>&nbsp;சந்திப்பில் கலந்து கொண்டோர்&nbsp;</h2><p>முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7344a713-41f3-4d45-add1-c75faf868165/26-6a7085999a913.webp' /></p><p>
</p><p>
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T12:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-s-plan-1785759049"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-s-plan-1785759049</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தவொரு சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தவொரு சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.</p><p>

இதன்மூலம், அன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறியதை நியாயமாகக் காட்டி தாக்குதல்களை இரத்து செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு ஈரான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>

ட்ரம்பின் மேற்படி கருத்தை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி நிராகரித்துள்ளது.
</p><p></p><h2>எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை</h2><p>
இதன்படி அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc1f456-4a70-407f-a923-631a1d5452b0/26-6a70854ccb613.webp' /></p><p> 

ஈராக்கில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைத் தவிர, மற்ற அனைத்து ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களும் தற்போது நாட்டில்தான் உள்ளனர் என்று பாகாயி மேலும் கூறியுள்ளார்.</p><p> 

மேலும் ஹோர்முஸ் நீரிணையின் மேலாண்மை குறித்து ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAP</a>P இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T12:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவும் 6 தமிழ்பேசும் கட்சிகளும்… (தீர்வு )திறந்திடு சீசேம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-parties-meet-anura-sajith-in-colombo-1785756548"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-parties-meet-anura-sajith-in-colombo-1785756548</id>
            <summary type="text">தமிழ் பேசும் 6 அரசியல் கட்சிகளின் அரசியல் பேரவை என்ற புதிய கட்டமைப்பில் உள்ள பிரதிநிதிகள் இன்று சிறிலங்கா அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுடனும் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் 6 அரசியல் கட்சிகளின் அரசியல் பேரவை என்ற புதிய கட்டமைப்பில் உள்ள பிரதிநிதிகள் இன்று சிறிலங்கா அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுடனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடனும் தனித்தனியாகச் சந்திப்புகளை நடத்தி முடித்துவிட்டன.
</p><p>
நாளை இதே குழு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடனும் சந்தோஷமாகச் சந்தித்துப் பேசவுள்ளன.</p><p>

இந்திய ஆசீர்வCartத்துடன் கடந்த மாதத்தில் இந்தத் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தளம் உருவானதாகக் கருதப்படும் நிலையில், அநுரவுடனும் சஜித்திடமும் இன்று என்ன பேசினோம் என்பதை நாளை இவர்கள் கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸுக்கும் அப்டேட் செய்வது, முன்னர் ஒவ்வொரு முறை இலங்கைப்பயணத்தின் பின்னரும் டெல்லிக்கு அறிக்கையிட்ட எரிக் சொல்ஹெய்ம் பாணியை நினைவூட்டுகிறது.
</p><p>
எனினும், இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பழைய பல்லவி முறையீடுகளும் அதற்குரிய "ஆகட்டும் பார்க்கலாம்" பதில்களும்தான் வந்துள்ளன.
</p><p>
அநுர ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிலங்காவுக்கு இப்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை என்ற அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
</p><p>
மாறாக, நீர்கொழும்பு, மஹர சிறைக் கலவரங்களின் வரிசையில் அடுத்து எந்தச் சிறை குழம்பும் என்ற கவலை உள்ள நிலையில், சமகால இலங்கை விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QQCjOdSA-9o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T12:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதை தடுக்கக் கோரி கோட்டாபய தாக்கல் செய்த ரிட் மனு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-to-gotabaya-rajapaksa-s-writ-petition-1785755327"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-to-gotabaya-rajapaksa-s-writ-petition-1785755327</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தார்.</p><p>குறித்த மனு மீதான தனது பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிறைவு செய்துள்ளது.
</p><p>இந்த நிலையில் மனுவை மேற்கொண்டு விசாரிக்க அனுமதி வழங்குவது குறித்த தனது தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு&nbsp;</h2><p>மேலும், இவ்வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஓகஸ்ட் 31-ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது அன்றோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி&nbsp; மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a2847f-5b4a-4b71-b881-712867e5e3f2/26-6a707aa0a7de3.webp' />&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர உதவிக்கு 117 எண்ணை அழைக்கவும்! இடர்முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minor-flood-warning-as-mahaweli-rises-1785750957"></link>
            <id>https://ibctamil.com/article/minor-flood-warning-as-mahaweli-rises-1785750957</id>
            <summary type="text">


மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகப் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என இடர்முகாமைத்துவ மையம் (DMC) எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகப் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என இடர்முகாமைத்துவ மையம் (DMC) எச்சரித்துள்ளது.
</p><p>
பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வெள்ள அபாயம்&nbsp;</h2><p>இதனடிப்படையில் இன்று (03) பிற்பகல் 3:00 மணி முதல் கொத்மலை நீர்த்தேக்கம் (Kotmale Reservoir) வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், மஹாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>

இடர்முகாமைத்துவ மையத்தின் தரவுகளின்படி பின்வரும் பிரதேசங்கள் சிறிய வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன:
</p><ul><li>
உடுநுவர (Udunuwara)
</li><li>
உடபலாத (Udapalatha)</li><li>

யடிநுவர (Yatinuwara)
</li><li>
கங்கா இஹள கோரளை (Ganga Ihala Korale)
</li><li>
பஸ்பாகே கோரளை (Pasbage Korale)
</li><li>
கங்கவட்ட கோரளை (Gangawata Korale)</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a76864-afce-441f-bccc-ca72c205502f/26-6a7071e9c7597.webp' /></p><p>
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு முப்படைகள் மற்றும் காவல்துறையினர் அவசர பாதுகாப்புப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். </p><p>

தேவைப்படின் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்ட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூஜித் ஹேமசிறி தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announcement-regarding-imprisoned-pujith-hemasiri-1785755151"></link>
            <id>https://ibctamil.com/article/announcement-regarding-imprisoned-pujith-hemasiri-1785755151</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலையில் எந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலையில் எந்த விசேட வசதிகளும் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான அநுருத்த கஜநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, கடமைகளைத் தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை&nbsp;இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.</p><p>தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட இந்த முன்னாள் உயர் அதிகாரிகள் இருவரும் முதலில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட விசேட சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>‘ஜம்பர்’ சிறை உடை</h2><p> தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு வழங்கப்படும் ‘ஜம்பர்’ சிறை உடை இவர்கள் இருவருக்கும் அணிவிக்கப்பட்டுள்ளதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிறைச்சாலை வேலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba88631d-b73d-4af2-8db0-f0b2206bf8c9/26-6a707a5104cc8.webp' /></p><p>சிறைச்சாலை வட்டாரங்களின்படி, இவர்கள் இருவருக்கும் வெளியிலிருந்து உணவு பெற அனுமதி இல்லை. தற்போதுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறை குடும்ப உறுப்பினர்கள் இவர்களைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு சந்திக்கும் சந்தர்ப்பங்களில் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை வழங்க முடியாது.</p><p></p><h2>சோப்பு மற்றும் பற்பசை மட்டுமே வழங்க முடியும்</h2><p> </p><p>சோப்பு மற்றும் பற்பசை போன்ற சுகாதாரப் பொருட்களை மட்டுமே குடும்ப உறுப்பினர்களால் வழங்க முடியும். மேலும், இந்த சந்திப்புகளுக்காக குடும்ப உறுப்பினர் ஒருவர் சிறைச்சாலை விதிகளின்படி முன் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454cdbc5-8e53-4a47-899f-ae1a9df64ad1/26-6a707a51aeb65.webp' /></p><p>&nbsp;கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விசேட தேசிய மற்றும் மத பண்டிகைக் காலங்களில் மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியுடன், பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான பரிசோதனைகளுக்கு உட்பட்டு வெளியிலிருந்து இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுகளைக் கொண்டுவர வாய்ப்பு வழங்கப்படும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T11:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே பெண் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-kilinochchi-woman-dies-on-the-spot-1785749620"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-kilinochchi-woman-dies-on-the-spot-1785749620</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பிரதான வீதியில் இன்று (03) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிள் ஒன்றும் கயஸ் வாகனம்
ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த நிலையில் விபத்துச் சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a0d2fe4-ae49-4b00-a094-b5425e8fe058/26-6a70668f380cb.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்கா கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டணத் திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-change-in-electricity-tariffs-2026-3rd-quarter-1785753600"></link>
            <id>https://ibctamil.com/article/no-change-in-electricity-tariffs-2026-3rd-quarter-1785753600</id>
            <summary type="text">மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p></p><h2>கட்டணத் திருத்தம்</h2><p>

அனைத்துக் கணக்கீடுகளின்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a121aa0d-ed76-4553-961f-cfa65a089443/26-6a7072ebd2912.webp' /></p><p>

இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, நிலக்கரியின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை, மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரளவிலான ஜனாதிபதி அனுர : நாட்டை ஆள்வது ரில்வின் சில்வா என்கிறது பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-president-in-name-tilvin-is-ruling-country-1785752847"></link>
            <id>https://ibctamil.com/article/anura-president-in-name-tilvin-is-ruling-country-1785752847</id>
            <summary type="text">தற்போது, ​​மக்கள் ஆணை இல்லாத பெலவத்தரில்வின் சில்வா நாட்டை ஆண்டு வருகிறார், அதே சமயம் அனுர குமார திசாநாயக்க பெயரளவிலான ஜனாதிபதியாக மட்டுமே செயல்பட வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது, ​​மக்கள் ஆணை இல்லாத பெலவத்தரில்வின் சில்வா நாட்டை ஆண்டு வருகிறார், அதே சமயம் அனுர குமார திசாநாயக்க பெயரளவிலான ஜனாதிபதியாக மட்டுமே செயல்பட வேண்டியுள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.</p><p>

சிறிலங்கா பொதுஜன பெரமுன நாவலப்பிட்டியவின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், கண்டியில் ஒரு ஊடக மாநாட்டை நடத்தி, நாடு தற்போது அராஜக நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.</p><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தவை வருமாறு,</p><h2>பரிதாபகரமான நிலையில்&nbsp;கண்டி மாவட்டம்</h2><p>
</p><p>
இன்று, கண்டி மாவட்டம் முழுவதும் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. மத்திய மாகாணத்திற்கு ஆளுநர் இல்லை. ஆளுநரின் செயலாளர் இல்லை. அனைத்து நிர்வாக விஷயங்களும் குழப்பத்தில் உள்ளன. தேசிய மக்கள் சக்தியால் கண்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இன்று எங்கும் காணப்படவில்லை. அவர்கள் ஏழு மாடிக் கட்டிடங்களைக் கட்டி கொழும்பில் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f19b8e0-f357-4a2b-8fb1-10cc6d299a50/26-6a7073e42d7ef.webp' /></p><p> </p><p>திசைகாட்டிக்கு வாக்களித்த கண்டி மக்கள், பெருமூச்சுடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலைமை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கும் காணப்படவில்லை. ஒரு காரியமும் செய்யாத சிலர் இன்று நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>பிரதேச சபையில் இருக்ககூட தகுதியற்றவர்கள் நாடாளுமன்றில்</h2><p> </p><p>இந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. இது ஒரு பெரும் குற்றம். அவர்கள் பொய் சொல்லி நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836f3e09-70b9-40fe-a99c-62e3fae93963/26-6a7073e37ac2b.webp' /></p><p> இப்போது செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றுமில்லாமல் தவிக்கிறார்கள். பிரதேச சபையில் இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர்கள்தான் இன்று நாடாளுமன்றத்திற்குச் சென்று அங்குமிங்கும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flood-warning-issued-for-ratnapura-district-1785747867"></link>
            <id>https://ibctamil.com/article/flood-warning-issued-for-ratnapura-district-1785747867</id>
            <summary type="text">அடுத்த சில மணி நேரங்களில் கலுகங்கையின் கரையோரத்தில் உள்ள பல தாழ்வான பகுதிகளுக்கு&amp;nbsp; நீர்ப்பாசனத்திணைக்கம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த சில மணி நேரங்களில் கலுகங்கையின் கரையோரத்தில் உள்ள பல தாழ்வான பகுதிகளுக்கு&nbsp; நீர்ப்பாசனத்திணைக்கம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p>
 

இன்று (03.08.2026) பிற்பகல்&nbsp; வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (04.08.2026) பிற்பகல் 2:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கூற்றுப்படி, கலுகங்கையின் ஆற்றுப் படுகையில் தற்போது பெய்து வரும் கனமழையும், அத்துறையால் பராமரிக்கப்படும் நீரியல் அளவீட்டு நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட நீர்மட்டத் தரவுகளின் பகுப்பாய்வும், அடுத்த சில மணிநேரங்களில் ஒரு சிறிய வெள்ளச் சூழல் உருவாக வாய்ப்புள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெள்ள எச்சரிக்கை</h2><p>இந்த எச்சரிக்கை, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் அடங்கியுள்ள காலு ஆற்றின் தாழ்வான வெள்ளச் சமவெளிப் பகுதிகளுக்குப் பொருந்தும்:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/230bf3bd-776d-49f5-ae55-32727b8961ca/26-6a706e7474f41.webp' /></p><p>பெல்மடுலை</p><p>
நிவிதிகல</p><p>இரத்னபுரி</p><p>
குருவிட்ட</p><p>
அயகம</p><p>

எலபத்த</p><p>இதன்படி இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பயணிகளும், மிகுந்த விழிப்புடனும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் இந்த எச்சரிக்கைக்கு இணங்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளையும் அத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:47:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-flag-hoisting-1785751449"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-flag-hoisting-1785751449</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி
மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று
நடைபெறுகிறது.</p><p>

மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை
வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ
அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.</p><p></p><h2>சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்</h2><p>

பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள்
நடத்தி வைத்த நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின்
அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8175ad3a-4bab-4dab-9936-117b31da069e/26-6a706c95d7935.webp' /></p><p>

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினத்தன்று
(12) திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு பேரணி மீது தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suicide-bomber-targets-rally-in-pakistan-1785751085"></link>
            <id>https://ibctamil.com/article/suicide-bomber-targets-rally-in-pakistan-1785751085</id>
            <summary type="text">வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு நகரமான கபலில் இந்தத் தாக்குதல் நடந்தது. அங்கு, ஒரு காவல் நிலையத்திற்கு அருகே கூடியிருந்த போராட்டக்காரர்கள், தீவிரவாத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி அமைதியான வாழ்வைக் கோரினர்.</p><h2>தற்கொலைதாரி உட்பட 14 பேர் பலி</h2><p>பலியானவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் எட்டு பொதுமக்களும் அடங்குவர் என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், உயிரிழந்த 14-வது நபர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d327b5-315b-4bab-9501-e243bab0655f/26-6a706dadab202.webp' /></p><p>இந்தத் தாக்குதலில் மேலும் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவருக்கு உதவியிருக்கக்கூடியவர்களை கைது செய்ய காவல்துறை ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.</p><p>&nbsp; &nbsp;இந்தக் கொடூரச் சம்பவத்திற்குச் சற்று முன்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதாகப் பேரணியில் பேசியவர்கள் குற்றம் சாட்டியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>&nbsp;எல்லைப் பகுதிகளில் கடுமையாக அதிகரித்துள்ள&nbsp;தீவிரவாதம் </h2><p>
</p><p>
சமீபத்திய மாதங்களில் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையைக் குறிவைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbfa2729-7245-4a30-b7db-70e2bb035d27/26-6a706dae98042.webp' /></p><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தீவிரவாதிகளின் இருப்பைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் தலிபான்களுக்கு எதிரான பேரணிகளைத் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளனர்.
</p><p>
சுவாத் பள்ளத்தாக்கு ஒரு காலத்தில், ஷரியா அல்லது இஸ்லாமியச் சட்டத்தின் கடுமையான சட்டத்தை திணித்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கோட்டையாக இருந்தது.</p><p>

பின்னர் 2007-ல், பாகிஸ்தான் இராணுவம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை வெளியேற்றி, அரசாங்கக் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தது.
</p><p>
இருப்பினும், தீவிரவாதிகள் அந்தப் பள்ளத்தாக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளனர். இது, பாகிஸ்தானிய தலிபான்கள் அப்பகுதியில் மீண்டும் காலூன்ற முயல்கிறார்கள் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி ஆற்றின் தாழ்நில பகுதிகளில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-flood-warning-low-lying-areas-kelani-river-1785750630"></link>
            <id>https://ibctamil.com/article/severe-flood-warning-low-lying-areas-kelani-river-1785750630</id>
            <summary type="text">அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம், எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம், எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதி நீர்ப்பிடிப்பு பிரதேசங்களில் பதிவான கனமழை காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், திணைக்களத்தின் நீர்மட்ட கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த எச்சரிக்கை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
மேலும், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf3ee4-6360-4e32-b946-9cf98a62ea08/26-6a7064688ab1e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, குறித்த பகுதிகளில் வசிப்போர், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! வினாடிக்கு சுமார் 250 கனஅடி நீர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kotmale-reservoir-water-release-begin-at-3-00-p-m-1785749628"></link>
            <id>https://ibctamil.com/article/kotmale-reservoir-water-release-begin-at-3-00-p-m-1785749628</id>
            <summary type="text">நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோட்மலை காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவுகள் படிப்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோட்மலை காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவுகள் படிப்படியாகத் திறக்கப்படும் என மகாவலி ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

 

நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கீழ்நிலைப் பகுதிகளில் ஏற்படக்கூடிய கடுமையான வெள்ளப்பெருக்கு அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகார அமைப்பு தெரிவித்தது.</p><p>

 

இன்று (03.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு வழிந்தோடும் கதவுகள் மற்றும் வண்டல் மதகு திறக்கும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மகாவலி அதிகாரசபை</h2><p> இதன் மூலம் வினாடிக்கு சுமார் 250 கன அடி நீர் கொட்மலை ஓயாவில் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e10f424-a02e-42e2-b68d-828c761a3415/26-6a70636f096d3.webp' /></p><p>நுகவெல, ஆற்றங்கரை மற்றும் மாவத்தறை, அத்துடன் உலப்பனை முதல் கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரையான மகாவலி ஆற்றங்கரையில் உள்ள பகுதிகள்&nbsp; உயர்ந்து வரும் நீர்மட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என மகாவலி அதிகாரசபை எச்சரித்துள்ளது.</p><p>
 

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:46:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பாதுகாப்புப் பாதை! ஈரான் - ஓமான் கூட்டு முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-discuss-safe-hormuz-passage-1785746724"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-discuss-safe-hormuz-passage-1785746724</id>
            <summary type="text">ஈரான், ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக பாதுகாப்பான பாதையொன்றை அமைப்பது குறித்து
இப்பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேரடிப் பேச்சுவார்த்தை</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஓமானுடன் கலந்தாலோசித்து மிக விரைவாகத் தற்காலிகப் பாதையொன்றை தீர்மானிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a581d46d-5df3-40e8-86bb-7a97a9515a69/26-6a7061ba025f0.webp' /></p><p>

ஈரான் அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்பதை இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இருப்பினும், ஈரானுக்கு எதிரான பாரிய தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சூழ்ந்த மோசமான வானிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bad-weather-engulfs-sri-lanka-1785745461"></link>
            <id>https://ibctamil.com/article/bad-weather-engulfs-sri-lanka-1785745461</id>
            <summary type="text">03.09PM UPDATEநீர்ப்பாசனத் திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>03.09PM UPDATE</b></p><p>நீர்ப்பாசனத் திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.<b></b></p><p><b>03.00PM UPDATE</b></p><p>கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வாயில்களை படிப்படியாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை, தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>வினாடிக்கு சுமார் 250 கனஅடி நீர் கொத்மலை ஓயா ஆற்றில் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;<b></b></p><p><b>02.47PM UPDATE</b></p><p>நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் நாளை (04) மூடல்.<b></b></p><p><b>02.30PM&nbsp;UPDATE</b></p><p>அடுத்த சில மணி நேரங்களில் கலு கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><b>02.10PM UPDATE</b></p><p>நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) மூடப்படும் என நுவரெலியா கல்விப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.<b></b></p><p><b>02.04PM - UPDATE</b></p><p>அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆக்ரா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை .<b></b></p><p><b>01.53PM - UPDATE</b></p><p>மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
</p><p>
 

கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்புகள், மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் உள்ளது என்று அது தெரிவித்தது.<b></b></p><p><b>01.47PM -&nbsp;UPDATE</b></p><p>மத்திய மலையகப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><b>01.47PM - UPDATE</b></p><p>நிலச்சரிவு காரணமாக கண்டி – கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p><b>01.47PM - UPDATE</b></p><p>
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p><b>12.47PM - UPDATE</b></p><p>சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. </p><p>மேலும்,&nbsp; மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்3 வான் கதவுகள் இன்று (03) அதிகாலை தானாகத் திறக்கப்பட்டுள்ளன.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flooding-inside-the-peradeniya-university-hostel-1785737493"></link>
            <id>https://ibctamil.com/article/flooding-inside-the-peradeniya-university-hostel-1785737493</id>
            <summary type="text">புதிய இணைப்புநிலவும் மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நிலவும் மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>

எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமையானபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் கையொப்பத்துடன் பின்வரும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, பாதுகாப்பாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம்.</p><p>

மோசமான வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகத்துக்கு அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95c0dc3d-00bf-493b-b2f5-a10d52a428d8/26-6a705d5c7f6e1.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>
ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருவார்களானால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளை பராமரிக்குமாறு விடுதி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

எந்த மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.</p><p>

நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>பேராதனைப் பல்கலை விடுதிக்குள் வெள்ளப் பெருக்கு : மாணவர்கள் வெளியேற்றம்!&nbsp;</h4><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வெள்ளப் பெருக்கு காரணமாக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீர்மட்டம் உயர்வு&nbsp;&nbsp;</h2><p>இதேவேளை மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
</p><p>இதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தவிர்க்க, மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd44d709-8439-4d75-a16a-c742ca11967e/26-6a7036198eab8.webp' /></p><p>

நேற்றிரவு (02) முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் பேராதனை 'களு பாலம' அருகே உள்ள பாலம் புனரமைப்புத் தளம் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அங்குள்ள பல கனரக இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் சில உபகரணங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999"></link>
            <id>https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999</id>
            <summary type="text">புதிய இணைப்புநிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

​முன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

​முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.</p><p>

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (04.08.2026)&nbsp; மூடப்பட்டிருக்கும் என நுவரெலியா மாவட்ட கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

தற்போது மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.</p><p>

 

கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் என்று கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></h2><p>மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

​நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

​</p><p>இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b21ddb32-c1b8-45b3-bd30-c8068ee96574/26-6a702423f02f5.webp' /></p><p>அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

​</p><p>இந்தநிலையில் இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.</p><p>அதன்படி, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க&nbsp; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

​</p><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c749b28f-b4d0-430f-b9db-4806aa5ac20e/26-6a7004aa0ccf6.webp' /></p><p>அந்த நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RpvrbiBloOw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1785742685"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1785742685</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (03.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (03.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.25 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	444.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.54 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	380.29 ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.74 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.61 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0665fde5-3c59-43cc-9af7-011db62aa75b/26-6a705b1754413.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.41 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.53 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	257.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 267.32 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய வெள்ளப்பெருக்கு அபாயம்! மகாவலி ஆற்றங்கரைவாழ் மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/massive-flooding-threat-mahaweli-1785746729"></link>
            <id>https://ibctamil.com/article/massive-flooding-threat-mahaweli-1785746729</id>
            <summary type="text">மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
</p><p>
கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்புகள், மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் உள்ள மகாவலி ஆற்றங்கரையோரத் தாழ்வான பகுதிகளுக்குப் பொருந்தும்:</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p> </p><p>

உடுனுவர</p><p>
உடபாலத
</p><p>யடினுவர </p><p>
தொலுவ </p><p>
கொத்மலை
</p><p>பஸ்பாகே கோரளை
</p><p>இஹல கோரளை
</p><p>கங்காவட்டா கோரளை
</p><p>ஹரிஸ்பத்துவ
</p><p>பாட்டதும்பரை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4075039e-f4b8-46be-a50e-53429833b714/26-6a705658d8b7f.webp' /></p><p> </p><p>

இந்தப் பகுதிகளில் மகாவலி ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புச் சூழ்நிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, மிகுந்த விழிப்புடனும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். </p><p>

இது தொடர்பாகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
 மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T08:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். காரைநகர் - ஊர்காவற்துறை பாதை பழுது - பொதுமக்கள் கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/damage-to-jaffna-kayts-karainagar-route-1785743822"></link>
            <id>https://ibctamil.com/article/damage-to-jaffna-kayts-karainagar-route-1785743822</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின் அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளது. பாதையின் ஏற்பட்டுள்ள சேதத்தால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின் அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளது. </p><p>பாதையின் ஏற்பட்டுள்ள சேதத்தால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>காயம் ஏற்படும் அபாயம்</h2><p>குறிப்பாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பாதையில் ஏற்றி இறக்குவதில்
சிக்கல்கள் ஏற்படுவதுடன், பயணிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயமும்
நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaaf0869-f23b-420a-8f3c-0baafa9bc5e8/26-6a704f9e07c56.webp' /></p><p>இந்தப் பாதையை நாள்தோறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், நீண்டகாலமாக இந்நிலை தொடர்வதாக பயணிகள்
குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>எனவே, சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான மற்றும்
இடையூறற்ற சேவையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e000f02f-1304-4d57-8c2b-dc6d093ea40c/26-6a704f9eb5e35.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பின் அரிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-s-largest-orchid-blooms-at-peradeniya-sl-1785725855"></link>
            <id>https://ibctamil.com/article/world-s-largest-orchid-blooms-at-peradeniya-sl-1785725855</id>
            <summary type="text">சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் &#039;ராட்சத ஒர்க்கிட்&#039; (Giant Orchid) தாவரத்தின் மலர்க்கொத்து ஒன்று,&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் 'ராட்சத ஒர்க்கிட்' (Giant Orchid) தாவரத்தின் மலர்க்கொத்து ஒன்று,&nbsp; பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துள்ளது.</p><p>பேராதனை பூங்காவில் பூத்துள்ள ராட்சத ஒர்க்கிட் மலர்க்கொத்தைப் பார்வையிடுமாறு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.சி.பி. ஜெயவீர தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு சுற்றுலாப் பயணி</h2><p>
</p><p>
தாவரவியல் ரீதியாக Grammatophyllum speciosum என அழைக்கப்படும் இந்த ராட்சத ஒர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவர இனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee60e721-b62f-4f92-8688-f96fe679be77/26-6a7055aa9c8d3.webp' /></p><p>இது குறித்துக் கருத்து தெரிவித்த பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஒர்க்கிட் பிரிவின் தலைவர் இரோஷனி அந்திராதி, பூங்காவிற்குள் இந்த ராட்சத ஒர்க்கிட் மலர் இனம் கடைசியாக 2010 ஆம் ஆண்டிலேயே பார்க்கக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.</p><p>

தற்போது பூத்துள்ள தாவரம் 2022 ஆம் ஆண்டில் நடப்பட்ட ஒன்றாகும்.

அந்த தாவரத்தில் முதல் முறையாகவே தற்போது பூக்கள் பூத்துள்ளன.
</p><p>
இவ்வாறான பூப்படைதல் மிகவும் அரிதாகவே நடக்கும் என்பதால், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்த மிகவும் அரிய வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ராட்சத ஒர்க்கிட் தாவரம்&nbsp;</h2><p>

இந்த ஆர்க்கிட் தாவரம் முக்கியமாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceac8b57-dc3b-4071-b85f-4bda9d161fef/26-6a7055ab5662e.webp' /></p><p>முழுமையாக வளர்ந்த ஒரு ராட்சத ஒர்க்கிட் தாவரம் ஒரு தொன் (1000 கிலோகிராம்) வரை எடை கொண்டதாக இருப்பதுடன், 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய பூங்கொத்துகளைக் கொண்டிருக்கும்.
</p><p>
இந்த தாவரத்தில் பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கள் பூப்பதுடன், அதற்குச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலமைகளும் பலமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் முதல் உயிரிழப்பு பதிவு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1-dead-in-nawalapitiya-landslide-1785745180"></link>
            <id>https://ibctamil.com/article/1-dead-in-nawalapitiya-landslide-1785745180</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையினால் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையினால் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கை</h2><p>

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038a9242-4b98-46b1-9cb2-46ebd8721d47/26-6a7053e565042.webp' /></p><p>

இதனடிப்படையில் அனர்த்தங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ordered-transferred-security-prison-harak-katta-1785744266"></link>
            <id>https://ibctamil.com/article/ordered-transferred-security-prison-harak-katta-1785744266</id>
            <summary type="text">தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலவால் இன்று(03.08.2026) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் உண்மைகளை முன்வைத்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் அறிவித்துள்ளார்.​</p><p></p><h2>பிணை கோரிக்கை</h2><p>

குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ffa6929-f60c-43d9-a61a-c0267ef4617b/26-6a704b8c9ff63.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பிணை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதுடன், இச்சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.​&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T08:04:39+00:00</updated>
        </entry>
    </feed>
