<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-02T22:33:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் தற்கொலை தாக்குதல்! 14 பேர் படுகொலை - பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-in-pakistan-14-killed-1785708250"></link>
            <id>https://ibctamil.com/article/attack-in-pakistan-14-killed-1785708250</id>
            <summary type="text">பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளாகவும், பலர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
வன்முறை அதிகரிப்பிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகே காவல்துறையினர் அவரைச் சோதிக்க முயன்றபோது, ​​ சந்தேகநபர் தனது வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>பலர் கவலைக்கிடம்</h2><p>

இந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து சோதனைகளை முடக்கி விட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da70517-d882-41ea-8ac2-d6f77c7b7a51/26-6a6fc22e5857b.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876</id>
            <summary type="text">புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி</h2><p> </p><p>

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்து, அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பதிவிலும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec736-e183-4885-94c5-e8a546f0e92c/26-6a6fb4bede358.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியது மற்றொரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளது.</p><h2>எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்</h2><p>
</p><p>
அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98229757-d6d5-4569-afb8-b38c19e924fa/26-6a6fb4bfd1650.webp' /></p><p>

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் வணிகக் கப்பல்கள் இதன் வழியே கடந்து செல்வதற்கு ஈரானிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T21:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை! ஈரானின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-understanding-with-oman-1785702440"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-understanding-with-oman-1785702440</id>
            <summary type="text">புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாக ஓமானுடன் ஈரான் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாக ஓமானுடன் ஈரான் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அறிவித்துள்ளார்.</p><p>

நீரிணையை நிர்வகிப்பதற்கான பரஸ்பர வழிமுறை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>

இந்நிலையில், ஓமானுடனான புதிய வழித்தடம் தொடர்பான புரிந்துணர்வு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதற்கோ அல்லது தொடர்ந்து மூடப்பட்டிருப்பதற்கோ தொடர்பற்றது என்று பாகாயி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க கடற்படை முற்றுகை</h2><p>
</p><p>
இந்த ஒப்பந்தத்தை ஒரு தேவையான நிபந்தனை மட்டுமே என விவரித்துள்ள அவர், குறித்த விவகாரத்திற்கு இது ஒரு தீர்வாக மாறாது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe8f119-4db0-49c4-aed4-2965d741ecf4/26-6a6faae158ebd.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியதும், ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகையுமே நீரிணை மூடப்பட்டதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், அதனை மீண்டும் திறப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T20:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய அணுமின் நிலையத்தை அதிர வைத்த உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukrain-attack-near-russian-nuclear-power-plant-1785697487"></link>
            <id>https://ibctamil.com/article/ukrain-attack-near-russian-nuclear-power-plant-1785697487</id>
            <summary type="text">
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாடமின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆலையின் ஆறு மின் அலகுகளுக்கு இடையில் பணியாளர்கள் நடமாடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூடத்தின் மீது இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
"நல்லவேளையாக, எந்த வெடிப்பும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள அந்த ஆலையின், பிரிவு 3-இன் அணு உலை அறையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தாக்குதல் முயற்சி</h2><p>
</p><p>
அத்தோடு, கடந்த வாரம் உக்ரேனியப் படைகள், அந்த ஆலையின் பயன்படுத்தப்பட்ட உலர் அணு எரிபொருள் சேமிப்புக் கிடங்கைத் தாக்க முயன்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db136e43-bd6f-42af-a1cc-74f9f99fa026/26-6a6f9ac360bd1.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
ஜூன் மாதம் ரஷ்ய குழுவினரால் பழுதுபார்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டாவது மின்பாதை மீண்டும் இணைக்கப்படாததால், தற்போது அந்த ஆலை 330-கிலோவோல்ட் கொண்ட ஒற்றை மின் செலுத்து பாதை வழியாக மின்சாரத்தைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், பெரும்பாலான ஆலை ஊழியர்கள் வசிக்கும் அருகிலுள்ள எனர்ஹோதர் நகரம், சமீப நாட்களாக தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைச் சந்தித்து வருவதாகவும், இதனால் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T19:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902</id>
            <summary type="text">மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சிறைக்கைதிகள் சிறையில் உள்ள பல சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைதச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களைச் கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கற்களை வீசி தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நள்ளிரவு வேளையில், சிறைக்கைதிகள் சிறை வளாகத்திற்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bd66349-93cc-4be9-8fb0-38294d981121/26-6a6f8157aebe8.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்த கலவரம் திட்டமிடப்பட்டது என்று காவல்துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>மாற்றப்பட்ட கைதிகள்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று பிற்பகல், கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளைச் சிறைச்சாலை திணைக்களம் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூஸ்ஸ உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b662a4d-22a0-4fb0-977b-d1e6dd3de6bb/26-6a6f81586530d.webp' /></p><p>
</p><p>
4,100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்ததையடுத்து, 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T19:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பு - சிறீதரன் எம்.பி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/senior-journalist-sabeswaran-passes-away-1785696701"></link>
            <id>https://ibctamil.com/article/senior-journalist-sabeswaran-passes-away-1785696701</id>
            <summary type="text">இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

​</p><p>சிறீலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டுவந்தவர். ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று, தமது பேனாவை ஆயுதமாக ஏந்தி களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர் சபேசன்.</p><p></p><h2>காத்திரமான ஆளுமை</h2><p>​ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும், அஞ்சாது களத்தில் நின்று பணியாற்றியதோடு, யாழ். ஊடக அமையத்தின் தலைவராக இருந்து தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005ef93f-35b1-45ea-9c5b-c9e43afec490/26-6a6f930255677.webp' /></p><p> தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின் அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர். </p><p>

போர்க்காலத்திலும் அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ் மக்களின் குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். </p><p>அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

ஊடகப் போராளி சபேசனுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும் பகிர்ந்துகொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T18:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினர் வசமுள்ள காணிகள்! பலாலி சந்தியில் ஏழாவது வாரமாகவும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-the-release-lands-1785693383"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-the-release-lands-1785693383</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம்(21) ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம்(21) ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்</p><p>

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T18:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் இன் அறிவிப்பிற்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-more-us-refueling-aircraft-to-israel-1785686603"></link>
            <id>https://ibctamil.com/article/10-more-us-refueling-aircraft-to-israel-1785686603</id>
            <summary type="text">ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு மேலதிகமாக பத்து அமெரிக்க வான்வழி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு மேலதிகமாக பத்து அமெரிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஏற்கனவே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள 30 அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களுடன் இந்த விமானங்களும் இணையும் என எதிர்பார்க்கப்படுவதாக 'தி கல்கலிஸ்ட்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது.</p><h2>விமான நிலையத்தில் நெருக்கடி</h2><p>வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான இராணுவ விமானங்கள் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் சுமையை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் சமீப நாட்களில் பயணிகள் விமானங்களில் சுமார் இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விமானங்கள் வந்தவுடன் இந்த இடையூறுகள் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் கூறியதாக அது மேற்கோள் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c7238c-589f-4edc-af58-0043de3b17c2/26-6a6f77fd0ac97.webp' /></p><p>பொதுவாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>விமானங்களை மாற்ற உடன்பாடு</h2><p>&nbsp;பென் குரியோன் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களின் எண்ணிக்கையை ஜூலை 21-க்குள் 20 ஆகக் குறைக்கவும், மீதமுள்ள விமானங்களை இஸ்ரேலிய விமானப்படைத் தளங்களுக்கு மாற்றவும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம் ஜூலை 15 அன்று அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a49c2eb-145c-4318-b00f-3467b5257d48/26-6a6f77fdb188a.webp' /></p><p>&nbsp;பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, பென் குரியோன் விமான நிலையம் மற்றும் இஸ்ரேலில் உள்ள பிற இடங்களில் அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T17:02:11+00:00</updated>
        </entry>
    </feed>
