<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-20T02:31:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-next-stage-of-the-easter-attack-case-1789866294"></link>
            <id>https://ibctamil.com/article/the-next-stage-of-the-easter-attack-case-1789866294</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவிதுள்ளார்.</p><p>

“சிலரைக் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்படுகின்றனர். இந்த விசாரணைகளில் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என சரத் பொன்சேகா மேலும், கூறியுள்ளார்.</p><p></p><h2>நாட்டைச் சூறையாடிய&nbsp;ராஜபக்‌சர் </h2><p>
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆர்வத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தான் கருதுவதாகவும், இதனை வரவேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6909af-ba88-459b-9150-260ddae6bcd4/26-6aaf32367eae7.webp' /></p><p>அத்தோடு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு உரிமையுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p>ராஜபக்‌சர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் நாட்டைச் சூறையாடியதாக தான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>சட்டரீதியான விசாரணை</h2><p>ஷிரந்தி ராஜபக்‌ச தொடர்பாகவும் சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f10ae28c-8c36-4f52-a3e6-90dd38c87195/26-6aaf323734ebf.webp' /></p><p>2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்‌ச நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயம்.</p><p>அவ்வாறான முடிவு நாட்டுக்கு விரும்பத்தக்கதல்ல. நாமல் அரசியலில் முன்னேறுவதற்கான பாதை திறந்தே இருக்கின்றது. அவர் அந்தப் பாதையில் செல்லலாம்” என கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T01:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sarathweerasekera-furiously-thileepan-memorial-1789865411"></link>
            <id>https://ibctamil.com/article/sarathweerasekera-furiously-thileepan-memorial-1789865411</id>
            <summary type="text">வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என&amp;nbsp;முன்னாள் பொதுமக்கள் பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என&nbsp;முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசு அனுமதியளிக்குமா என&nbsp; சீற்றத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p></p><h2>விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகள்
தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், பௌத்த சின்னங்களும்
மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a37f5a-d783-43f5-b6d2-1ed80d2475fe/26-6aaf2dc672755.webp' /></p><p>
</p><p>
வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகும். </p><p>இவ்வாறான சூழலில்,
எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசு அனுமதியளிக்குமா
என்று நாம் கேட்கின்றோம்.
</p><p>
திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன்
கலந்துகொண்டுள்ளனர். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை
ஏற்றுக்கொள்வாரா?</p><p>

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதம்
விதைக்கப்படுகின்றது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபலமடைய வேண்டும்
என்பதற்காக அரசு பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசும் இதேபோன்று செயற்பட்டதன் இறுதிக் கட்டமாகவே உயிர்த்த
ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. </p><p>மேலும் அரசியல் வெற்றிகளுக்காகப்
பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை எந்தக் காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த
வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.</p><p></p><p><b>you may like this&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/toUCR-sCchQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரம் எம்.பி வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின்&nbsp;சிவராசா தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய விசேட கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இது குறித்து கடிதத்தில் பின்வரும் விடயங்களை சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;அனோஜனின் குடும்பப் பின்னணி</h2><p>“இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433f48d-605e-4a71-ae08-8502853e0c8f/26-6aaf2962bb761.webp' /></p><p>அந்த உயரிய அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் குடும்பப் பின்னணி, வயது, சமூக மற்றும் பொருளாதாரச்சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவ்விடயத்துக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்கான இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.</p><p>

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொழில் வாய்ப்புக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு வசித்துவந்த நிலையில், நபிகள் நாயகம் தொடர்பாக சமூக ஊடகத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.</p><p>இதுகுறித்து சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவருக்கு கடந்த மாதம் 3 ஆம் திகதி கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன்.
</p><p>
குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அனோஜன் சவுதி அரேபியாவில் டைனமிக் அன்ட் எக்ஸலன்ஸ் அரேபியா கம்பனி என்ற நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.</p><p></p><h2>குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரம்</h2><p>சவுதி அரேபியா தனது மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை மிக உயர்ந்த முறையில் பேணிவரும் ஒரு நாடாகும் என்பதை நான் முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43b8ca8-3cda-4dd6-b6a6-84092211de86/26-6aaf296374497.webp' /></p><p> </p><p>ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இறைமையுரிமை இருப்பதையும் மதிக்கிறேன்.
</p><p>

அனோஜன் சிவராசா குற்ற நோக்கத்துடன் சவுதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. அவரது தந்தை சிவராசா மற்றும் தாய் யோகேஸ்வரி ஆகியோரின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பை அணுகியுள்ளார். </p><p>அவரது உழைப்பே குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தின் பிரதான ஆதாரமாக இருந்து வருகின்றது.
</p><p>
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை அவரை மாத்திரமன்றி, அவரைச் சார்ந்த முழுக்குடும்பத்தின் வாழ்வையும் முற்றாக முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
</p><p>
அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைக்கும் விளைவையே இது ஏற்படுத்தும்.</p><p> இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067"></link>
            <id>https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067</id>
            <summary type="text">அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மோடியிடம் கோரிக்கை</h2><p>

எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b6f523-f80c-40c1-b6c0-4fabfd49786e/26-6aaf2503a9803.webp' /></p><p>

மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-tea-meeting-with-zahran-s-brother-1789861758"></link>
            <id>https://ibctamil.com/article/a-tea-meeting-with-zahran-s-brother-1789861758</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் முக்கிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் சில உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அவை உரிய முறையில் பகிரப்பட்டனவா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். </p><p> 

CID தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, இராணுவப் புலனாய்வுடன் தொடர்புடைய தகவல் அளிப்பவர் ஒருவரிடமிருந்து சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் கிடைத்திருந்ததாகக் கூறப்பட்டது.</p><p></p><h2>தற்போது கவனம் பெற்றுள்ள விடயம்</h2><p>
</p><p>
மேலும், தாக்குதலுக்கு முன்னதாகவே சில எச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தனவா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49505cdc-913e-4fc5-8ed8-b84153fe86e8/26-6aaf223b075f2.webp' /></p><p>


இந்த விசாரணையில் தற்போது கவனம் பெற்றுள்ள மற்றொரு விடயம், அரச புலனாய்வு சேவையுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் காவல்துறை அதிகாரி ரஞ்சன் செனரத் பண்டார.
</p><p>
அதாவது அவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரை சந்தித்ததாகக் கூறப்படும் சம்பவமாகும்.</p><p>

 CID தரப்பில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் கிடைத்த பின்னர் அந்த அதிகாரி கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சஹ்ரானின் சகோதரரை சந்தித்ததாகவும், அங்கு தேநீர் அருந்திய பின்னர் திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதல்களுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினர் தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், அவருடைய நெருங்கிய உறவினரை அதிகாரி ஒருவர் சந்தித்ததன் நோக்கம் என்ன? அந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஏன் உடனடி கைது அல்லது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

 இவ்வாறான கேள்விகள் அன்று முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>குற்றப்புலனாய்வு அறிக்கை</h2><p>
</p><p>
இவை சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளாகும்.
</p><p>
இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரஞ்சன் செனரத் பண்டார விசாரணைக்கு முக்கியமான நபராக இருப்பதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>இங்கு குறிப்பாக பல வழக்குகளில் மையப்படுத்திய விடயம் என்பது உளவுத்தகவலில் பின்னணி.அப்படியானால் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் உளவுத் தகவல்கள் எந்த அளவில் கிடைத்தன?அவை எந்த அதிகாரிகளுக்கு சரியாக அனுப்பப்பட்டன? 

தகவல்கள் கிடைத்த பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சஹ்ரானின் சகோதரரை சந்தித்த அதிகாரி ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை?</p><p>
 இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களே, தற்போதைய விசாரணைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T23:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜின்பிங்கை வரவேற்க தயாராகும் அமெரிக்கா! சீன - அமெரிக்க இராஜதந்திரத்தின் மீது உலகின் கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214</id>
            <summary type="text">ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இந்த விஜயத்தின் போது ட்ரம்ப்,&nbsp;ஷி ஜின்பிங்கை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்</h2><p>வெளிநாட்டு தலைவர்களை பொதுவாக வெள்ளை மாளிகையில் வரவேற்கும் ட்ரம்ப், இந்த முறை விமானத் தளத்திற்கே சென்று ஷி ஜின்பிங்கை வரவேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7d0fa6-ccd6-479d-8272-3f69e93e3cee/26-6aaee2c88d2f3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங், வெள்ளை மாளிகையின் Rose Garden பகுதியில் இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளனர். </p><p>பின்னர் இரு தலைவர்களும் மூடிய அறையில் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
</p><p>எனினும் இந்த சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
</p><p>இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T22:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624"></link>
            <id>https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624</id>
            <summary type="text">ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ எனப்படும் இந்தச் சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்பின் கையெழுத்துடன் சட்டமாகியுள்ளது. </p><p>


இந்தச் சட்டத்தின் கீழ், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beaf7f5b-2823-4e5f-b438-ed060e6ff5f1/26-6aaef0f2c4352.webp' /></p><p>


எனினும், இந்தியா அல்லது சீனா மீது 100 சதவீத வரி தானாகவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக இந்தச் சட்டம் பொருள்படாது. </p><p>

வரி விதிக்க வேண்டிய நாடுகள், வரி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்க நிர்வாகத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>


ரஷ்ய கச்சா எண்ணெயின் முக்கிய கொள்முதல் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.</p><p> </p><p>

இதனால் புதிய அமெரிக்க சட்டத்தின் கீழ் இரு நாடுகளும் கூடுதல் வர்த்தக அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்துவதுடன், ரஷ்யாவுடன் எரிசக்தி வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-19T22:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானாவின் மரணத்தால் பேரானந்தத்தில் திளைத்த சார்லஸ்! அதிர்ச்சியூட்டும் ஸ்பென்சரின் குறிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601"></link>
            <id>https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601</id>
            <summary type="text">டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், தனது நினைவுக் குறிப்புகளில் கூறிய விடயங்கள் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இங்கிலாந்தின் நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை வெளியான நூல் பகுதியை மேற்கோள்காட்டியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதி ஊர்வலத்தில் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி பங்கேற்கக் கூடாது என தான் கருதியதாக ஸ்பென்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கோபத்தின் வெளிப்பாடு</h2><p> </p><p>இது தொடர்பாக தொலைபேசியில் பேசியபோது சார்லஸ் கோபத்தின் வெளிப்பாடாக தொடர்ந்து பேசினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c6991db-0778-420f-b4f0-603722ffdc19/26-6aaecfb8517ff.webp' /></p><p>
</p><p>
மேலும், டயானா உயிரிழந்த இரவில் சார்லஸ் தன்னிடம் பேசியபோது, லாட்டரி வென்றவர் போல மிகுந்த உற்சாகத்துடன் அவரது குரல் ஒலித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>வேல்ஸ் இளவரசியான டயானா, 1997 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கி, உட்புற காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
</p><p>
அப்போது அவருடைய மகன்களான வில்லியம் மற்றும் ஹரிக்கு முறையே 15 மற்றும் 12 வயது.</p><p></p><h2>ஸ்பென்சரின் குற்றச்சாட்டு</h2><p> </p><p>டயானாவின் இறுதிச்சடங்கிற்கு சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் இருவரும் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095a8115-aaa6-453e-9f02-4b54f6bc77a6/26-6aaecfb90bf7b.webp' /></p><p>
</p><p>இந்நிலையில் ஸ்பென்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.</p><p>
“புத்தகங்கள் தொடர்பாக பொதுவாக கருத்து தெரிவிப்பது எங்கள் நடைமுறை அல்ல. இருப்பினும், சகோதரரை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மங்கச் செய்யலாம். தீர்மானிக்கும் திறனை பாதிக்கலாம்.</p><p> மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகளை பிறர் உணராத வகையில் மாற்றியமைக்கலாம் என்பதை மன்னர் சார்லஸ் கவனத்தில் கொண்டுள்ளார்” என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T21:10:48+00:00</updated>
        </entry>
    </feed>
