<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-06T01:29:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டக்ளஸ் காலத்தில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்தே இப்போது பயணிகள் சேவையில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944"></link>
            <id>https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p></p><h2>கட்டி இழுக்கப்படும்&nbsp;பேருந்து</h2><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சமநேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p> கடந்த வெள்ளிக் கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p></p><h2>ரஜீவன் எம்.பி</h2><p>
</p><p>பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்
அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.</p><p>
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்.பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535"></link>
            <id>https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535</id>
            <summary type="text">பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&amp;nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத சொத்துகள்</h2><p>“பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவதுடன், அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் மற்றும் பணத்தை மீண்டும் அரசிடம் பெற்றுக்கொள்வதற்கும் அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742c3aeb-e00e-40f7-9073-1fda1a11334f/26-6a9cbb99cc948.webp' /></p><p>திருட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், முறைகேடாகப் பெற்ற சொத்துகளை மீண்டும் அரசிடம் கொண்டுவருவதற்கான சட்ட சீர்திருத்தங்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
இதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை மீளப் பெறுவதற்கான சட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,000 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நீதிபதிகள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>[PGYK7RB
]</p><h2>நீதியரசரின் பணி</h2><p>
குறிப்பாக பிரதம நீதியரசரின் பணியைப் பாராட்டிய அவர், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8555f0a-3899-4347-82d2-750de3658435/26-6a9cbb99207bd.webp' /></p><p>நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம், மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் திறமையானதுமான நீதித்துறை அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சென்ற நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600"></link>
            <id>https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக&nbsp;நிமல் பெரேரா குறித்து முன்வைக்கப்பட்ட பிரமாண பத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒன்று: ஏர்பஸ் ஊழல்</h2><p><u><b>நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி</b></u></p><p> நாமல் ராஜபக்சவின் சகாவான, விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் வசிக்கும் சட்டத்தரணி இந்திக கருணாஜீவா, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவின் நீண்டகால நண்பரான நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f352e2f1-f75e-4a01-9029-a6b6e791f1af/26-6a9c564bbc750.webp' /></p><p> ராஜபகசவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
கருணாஜீவா, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 என்ற முகவரியில் இயங்கும் ISK Law நிறுவனத்தின் பிரதான சட்டத்தரணியாக உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தோல்வியடைந்த முயற்சி </h2><p>நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, கருணாஜீவாவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு பெரேரா பதிலளிக்கவில்லை என்றும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f1b1555-5e93-4876-b0c0-dc129ed0ac3c/26-6a9c564b0ee8a.webp' /></p><p>

இதனால் அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்சவை மிகவும் அதிருப்தியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>CID அதிகாரிகள் அவுதிரேலியா பயணம்</h2><p>இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுதிரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடமிருந்து சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டத்தரணி ஒருவரின் கூற்றுப்படி, நிமல் பெரேராவுக்கு சாட்சி பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க அவுதிரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
அவர் அவுதிரேலியாவில் இருந்தபடியே Zoom வழியாக சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சர்வதேச பரஸ்பர சட்ட உதவி</h2><p>அவுதிரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் விசாரணைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c92a64-f88c-4b89-a08d-fa4e768bc4b5/26-6a9c564c72257.webp' /></p><p>

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக Airbus நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அமைந்துள்ளது.
</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தகவல் வட்டாரம் இந்த வழக்கு வலுவான நிலையில் இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மேலும் பல ஆதாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>வழக்கு இரண்டு: கிரிஷ் விவகாரம்
நிதி முறைகேடு</h2><p><b><u>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை</u></b></p><h2> </h2><p>இரண்டாவது வழக்கு, ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் தொடர்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ded7ec-8a2f-4214-8f44-72f7bab52c63/26-6a9c564d2a0bd.webp' /></p><p>
</p><p>
இந்தப் பணம் Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிதி தொடர்பாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பணப் பரிவர்த்தனையின் ஓட்டம் தொடர்பான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக நிமல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் நிதியை திரட்டத் திண்டாடும் அரசியல் கட்சிகள்! பொருளாதார நெருக்கடியில் புதிய சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321"></link>
            <id>https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவது அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சில அரசியல் கட்சிகளுக்கு தங்களது தலைமையகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களைப் பராமரிப்பதுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்குவதும் தற்போது மிகவும் சிரமமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கட்டணங்களை செலுத்த முடியாத நிலை</h2><p>
</p><p>மேலும், சில கட்சி அலுவலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9aa0d-85c8-4f54-8bae-bd244568df9b/26-6a9cb6dbd334e.webp' /></p><p>

அதிகரித்துள்ள செலவினங்கள் காரணமாக, பல அரசியல் கட்சிகளின் நிதி கையிருப்புகள் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனால் எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல கட்சிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, கடந்த தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதியுதவிகளில் சிலவற்றை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
கட்சி நிதியை செலவிடும்போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை உருவாக்க சில கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், எனினும் மற்றொரு தரப்பினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இலங்கையில்&nbsp; தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை 85 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729</id>
            <summary type="text">கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பத்தபெண்டியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>காலிமுகத்திடல் முதல் பொல்கொட ஆறு வரையிலான பகுதி ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணி அதனை உள்ளடக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சட்ட ஆலோசனை</h2><p>இதன்படி இதனை அகற்றும் செயல்முறை குறித்த சட்ட ஆலோசனை சட்டமா அதிபரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d241a0de-f5ec-4dbc-8ded-10e9ead92ef0/26-6a9cb0a3b224e.webp' /></p><p>

கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அகற்றி, அப்பகுதியை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213"></link>
            <id>https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் குறித்த இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0845e2e-6ca7-4693-af24-6ae16297ad6d/26-6a9caab8370ef.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதேவேளை, மலையக பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136"></link>
            <id>https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136</id>
            <summary type="text">தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஹவாய் தீவுகள்</h2><p>இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6897b1e-85f4-4e8c-a148-15c6aab3c5be/26-6a9ca6834718b.webp' /></p><p> </p><p>அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆபத்தான நீரோட்டங்கள்</h2><p> </p><p>ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை
சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700"></link>
            <id>https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700</id>
            <summary type="text">அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
</p><p>
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
</p><p>
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/VNz7RtIWc54" title="🔴Special LIVE:நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை | Naattu Nadappu" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணாடியில் தெரிந்த ஏவுகணை! ஈரானிடம் நூலிழையில் தப்பிய அமெரிக்காவின் Super Hornet]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-super-hornet-narrowly-escapes-iran-1788635121"></link>
            <id>https://ibctamil.com/article/us-super-hornet-narrowly-escapes-iran-1788635121</id>
            <summary type="text">ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் F/A-18 Super Hornet போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2026 மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது பரவி வருகிறது. </p><p>தரையில் இருந்து பதிவு செய்யப்பட்டதாகத் தோன்றும் காணொளியில், அமெரிக்க போர் விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கும்போது, கீழ்புறத்திலிருந்து ஏவுகணை ஒன்று பாய்ந்து வருவது காணப்படுகிறது.</p><p></p><h2>வேகமாகப் பரவிய செய்தி</h2><p>
</p><p>
ஏவுகணை விமானத்தை நெருங்கிய நிலையில், விமானி திடீரென இடதுபுறமாகத் திரும்பியதாகவும், சில நொடிகளில் விமானத்தின் பின்புறத்தில் ஏவுகணை வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விமானம் தொடர்ந்து பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360f9472-e675-4b50-a636-72a38bcd7738/26-6a9c67f34b052.webp' /></p><p>சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஊடகம், அமெரிக்க F/A-18 விமானம் புதிய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பால் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகவும் அறிவித்தது.
</p><p>
இந்தத் தகவல் மத்திய கிழக்கு ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
</p><p>
எனினும், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது.</p><p></p><h2>தவறான IRGC-யின் கூற்று&nbsp;</h2><p>மேலும், ஈரானால் எந்த அமெரிக்க போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என CENTCOM தெரிவித்தது.</p><p></p><p>திறந்த மூலத் தகவல் ஆய்வாளர்கள் காணொளியை ஆய்வு செய்து, அது சாபஹார் துறைமுகப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

காணொளியின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏவுகணை விமானத்தை நேரடியாகத் தாக்கவில்லை என்றும், விமானத்தின் பின்புறத்தில் வெடித்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதன் அடிப்படையில், அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான IRGC-யின் கூற்று தவறானது எனக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T21:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் கட்டாரின் இராஜதந்திர முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859"></link>
            <id>https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859</id>
            <summary type="text">பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இன்று லெபனான் பிரதமர் நவாஃப் சலாமுடன் தொலைபேசியில் மத்தியக்கிழக்கு பதற்றம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p>இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ததோடு, பிராந்தியம் முழுவதும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>பிராந்திய முன்னேற்றங்கள்</h2><p>சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e40e4cc4-fc16-403a-b9c3-e70d13d027ff/26-6a9c72a5614c2.webp' /></p><p>

கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான ஒரு விரிவான உடன்படிக்கைக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு கட்டார் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என ஷேக் முகமது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>மேலும், லெபனானின் ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கத்தார் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதோடு, லெபனான் மக்களுடன் தனது தொடர்ச்சியான ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T21:28:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பாரிய போர்குற்றம்! தக்க பதிலடி விரைவில் என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291"></link>
            <id>https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291</id>
            <summary type="text">ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி என்றும், ஈரான் மீதான ஒரு பரந்த கடல் முற்றுகை மற்றும் பொருளாதாரப் போரின் ஒரு பகுதி என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தகக் கப்பல் போக்குவரத்து</h2><p>இவை ஐ.நா. சாசனத்தின் மீறல் மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f03ca9-8290-41e9-9b89-b8233cfb72b2/26-6a9c783d0114f.webp' /></p><p>இந்நிலையில் ஈரானின் உள்ள வியூக ஆய்வுகளுக்கான மையத்தின் பகுப்பாய்வாளரான அலி அக்பர் தாரேனி, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் ஒரு பெரிய பிரச்சினை என்றும், அதற்கு பதிலளிக்காமல் விட்டுவிட ஈரானால் முடியாது என்றும் கூறியுள்ளார்.</p><p>இது ஈரானைக் கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அவரால் கூறப்பட்டுள்ளது. மேலும் கடுமையாகத் தாக்கிப் பதிலடி கொடுக்க இது ஈரானைத் தூண்டுகிறது எனவும் அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T20:16:57+00:00</updated>
        </entry>
    </feed>
