<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-22T17:27:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>இளைஞனை கைது செய்த காவல்துறை</h2><p>முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த காவல்துறையினர் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b2b2eb-7917-4865-89f0-2d50940e0ae8/26-6a89d1b3d514f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு : ஹிஸ்புல்லா எம்.பிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-against-hezbollah-mp-links-zahran-1787412380"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-against-hezbollah-mp-links-zahran-1787412380</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில்
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில்
ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான
சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை
சூறையாடியுள்ளார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி
மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு
செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
</p><p>
ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு
தலைமையக காவல் நிலையத்தில் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முறைப்பாடு செய்த
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><h2>ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்திற்கு செய்த அநீதிகள்&nbsp;</h2><p>கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இந்த கிழக்கு
மாகாணத்திற்கு செய்த அநீதிகள் இரு சமூகங்களையும் பிரித்ததுடன் மட்டுமல்ல
ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள்
இன துவேசம் மூலம் பிளைவை ஏற்படுத்தி வரும் செயல்பாடு இன்று
முற்றுப்பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa16d7d-a9d0-4523-9fe9-67e00a1334f5/26-6a89c642732f9.webp' /></p><p>இவர் தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண
புகைப்படங்களை மட்டு தலைமையக காவல் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p>இதில் மட்டக்களப்பு நீதவான் மாற்றி தனக்கு சாதகமான நீதவானை கொண்டுவந்து
உத்தரவு பிறப்பித்தது. மற்றது ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து அதில்
மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைத்துள்ளதாக அவரது வாயால் தெரிவித்துள்ளது
தொடர்பாகவும் மற்றும் சஹ்ரானுடன் கைகோர்த்து ஒன்றாக இருந்து உறவு கொண்டாடி ஒரு
மாதத்தின் பின்னர் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இவருக்கும்
சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும்</p><p></p><h2>இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல</h2><p>மாவட்டத்தில் அவர் அதிகாரத்தை வைத்து பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை
சூறையாடியுள்ளது தொடர்பாக தீர்வை பெற்றுத் தருமாறு அந்த முறைப்பாட்டில் பதிவு
செய்துள்ளேன் அதன்போது காவல்துறையினர் அதனை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை
செய்வார்கள் என தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0740ebd0-643e-4a20-a8d9-d4211b85ec00/26-6a89c64346a2c.webp' /></p><p>அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய
மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும் நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர்
அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த
ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய
மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டாம். என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T16:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பிரதேசம் : ஈரானை மீண்டும் சீண்டும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-as-part-of-the-u-states-trump-1787410321"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-as-part-of-the-u-states-trump-1787410321</id>
            <summary type="text">&amp;nbsp;ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற ஒரு பேரணியில் அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஈரான் குறித்து அந்தப் பேரணியில் ட்ரம்ப் பேசியதாவது:</p><h2>அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது</h2><p>
அவர்கள் (ஈரான்) அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும். இனி அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7fdeef6-47da-4c57-a58c-d2903c1e97c8/26-6a89bb7568d5b.webp' /></p><p>ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஈரானியர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவைப்படுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். அது ஒரு அமெரிக்கப் பிரதேசம்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;எங்கள் முழு கட்டுப்பாட்டில்</h2><p>

என்ன நடக்கப்போகிறது என்று நாம் பார்ப்போம். ஈரான் எல்லைகளையும் ஹோர்முஸ் நீரிணையையும் நாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f4ad4-7a1e-49cb-a9dd-ff6137a8eba5/26-6a89bb761d66e.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T15:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள் பிரதமரிடம் யாழில் மகஐர் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-lands-held-by-soldiers-magair-hands-harini-1787407651"></link>
            <id>https://ibctamil.com/article/release-lands-held-by-soldiers-magair-hands-harini-1787407651</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த
மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதமர்
கலாநிதி ஹரிணி அமர சூரியவிடம் காணி விடுவிப்பு தொடர்பான மஜகரை இன்று
சனிக்கிழமை கையளித்தனர்.</p><p>அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள்
அமைப்பின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ, யாழ் மாவட்ட செயலகத்தில்
இலங்கையின் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான
கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரை, நிகழ்வு
நிறைவடைந்த பின்னர் சந்தித்து பேசினோம்.</p><h2>வீதி வீதியாக போராடுகிறார்கள்</h2><p>வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீகக் காணிகளை இழந்து, நீண்டகாலமாக
அவற்றை மீட்டெடுப்பதற்காக வீதி வீதியாக போராடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2c4fe5-a577-4564-9e57-3d0afa02fb87/26-6a89afa26b570.webp' /></p><p>



யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி ,வசாவிளான் , மயிலிட்டி பாதுகாப்பு தரப்பினரின்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு கேப்பாப்புலவு ,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு ,மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு
பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடிவருகிறார்கள்.
</p><p>

கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக காலதாமதத்திற்கும்
புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை
மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>முழுமையானதும் நீதியானதுமான தீர்வு</h2><p>
</p><p>


புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த
மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு
முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348aa7dc-78f3-4a83-83a2-570fd5f188b0/26-6a89afa336573.webp' /></p><p>
</p><p>
அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும்
கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க
வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப்
போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜர் பிரதமரிடம்
கையளிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/financial-assistance-uni-students-special-needs-1787405436"></link>
            <id>https://ibctamil.com/article/financial-assistance-uni-students-special-needs-1787405436</id>
            <summary type="text">ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக
மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக
மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
</p><p>
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கு காசோலைகளை
வழங்கி வைத்தார்.</p><h2>76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு&nbsp;&nbsp;நிதியுதவி</h2><p>இதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும்
பெரதெனியாபல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட
தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி
வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/becb8184-1c16-4415-9797-426d2196ba91/26-6a89aae42f123.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு
காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால
முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp; </p><p> </p><h2>நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர்
வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்
சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான
க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப்
நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற
உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7de3869f-cf1c-4dc1-9d53-97b98aae457b/26-6a89aae50448b.webp' /></p><p>
</p><p>
அத்துடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், வவுனியா
மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வடக்கு மாகாண மாவட்டச்
செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி நிதியத்தின் பதவிநிலை
உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குற்றவாளி வெளிநாட்டில் கைது : பிரதேசவாசிகள் மகிழ்ச்சி ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892"></link>
            <id>https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892</id>
            <summary type="text">துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற &#039;பஸ் லலித்&#039; கைது செய்யப்பட்ட நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற 'பஸ் லலித்' கைது செய்யப்பட்ட நிலையில் ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>கைது செய்யப்பட்ட அவர் நாளைமறுதினம் (24 ஆம் திகதி )இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். சந்தேகநபரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><h2>துபாய் காவல்துறையினரால் கைது</h2><p>இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் பேரில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1652e9a7-c13a-4d5a-bb35-23d608fa6437/26-6a8975d9ba26a.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான இவர் துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. </p><p>பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் உட்பட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் விதித்தது FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அர்ஜென்டீனா அணியின் முக்கிய வீர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டீனாவின் மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஸ்பெயின் வீரருக்கும் போட்டித்தடையும் அபராதமும்</h2><p>இதே சம்பவத்தில் சிக்கிய ஸ்பெயின் வீரர் கவி 1 போட்டி தடையும், 30,000 டொலர் அபராதமும் பெற்றார்.

AFA மீது பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொத்தம் 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8c36d-83fc-4326-b04d-ae47c59d385d/26-6a899f297febc.webp' /></p><p>
</p><p>
FIFA சுட்டிக்காட்டிய குற்றங்கள்
</p><p>அரசியல் பதாகை: அரையிறுதிக்குப் பின்னர் 'மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே' என்ற பதாகையை காட்சிப்படுத்தியது.</p><p>இனவெறி நடத்தை: அர்ஜென்டீனா ஆதரவாளர்களின் இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்பு.</p><p>ஒழுங்கீனம்: அணியினரின் ஒழுக்க மீறல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள்.</p><p></p><h2>அர்ஜென்டீனா அணிக்கான தண்டனை</h2><p>
</p><p>
தண்டனையாக அர்ஜென்டீனா தனது அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் FIFA உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44cfd3d0-b9db-4b9b-a6cd-88252349926d/26-6a899f2a31d61.webp' /></p><p>
</p><p>
மேலும் தண்டனை பெற்றவர்கள்
</p><p>
நஹுவேல் மோலினா 	அணி வீர்ர்7 போட்டிகள் தடை, $90,000 அபராதம்
</p><p>
ரோபர்ட்டோ அயாலா உதவி பயிற்றுநர்	3 போட்டிகள் தடை, $30,000 அபராதம்
</p><p>
தியாகோ அல்மாடா வீரர்	1 போட்டி தடை, $30,000 அபராதம்</p><p>

உலக் கிண்ண இறுதியில் ஸ்பெயினிடம் 1-0 என அர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
FIFA ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குழு விளையாட்டின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-conference-relatives-disappeared-1787400831"></link>
            <id>https://ibctamil.com/article/international-conference-relatives-disappeared-1787400831</id>
            <summary type="text">அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.</p><p>&nbsp; இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ,முல்லைத்தீவு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் 
றஞ்சினிதேவி சசிக்குமார்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க
உபசெயலாளர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி
குறித்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு
கோரிக்கை விடுத்தனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f874bbf-12e9-4081-85d8-2f5620f39b78/26-6a8994e9da4ef.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு கொலைவழக்கில் தொடபுடைய நபர் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-who-aided-the-killer-arrested-1787398195"></link>
            <id>https://ibctamil.com/article/person-who-aided-the-killer-arrested-1787398195</id>
            <summary type="text">துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை காவல்துறையினர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த நபர் இன்று (22.08.2026) விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/369252fb-21a6-4ab4-8761-e74fb07d2415/26-6a898f5c3a338.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
கொலைச் சம்பவத்தில் சந்தேகநபரின் பங்கு மற்றும் போதைப்பொருள் தொடர்பான விடயங்கள் குறித்து மீனுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வரி விதிக்கும் ட்ரம்ப் : பதிலடியில் இறங்கியது கனடா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-responds-to-new-tariffs-imposed-by-the-us-1787397331"></link>
            <id>https://ibctamil.com/article/canada-responds-to-new-tariffs-imposed-by-the-us-1787397331</id>
            <summary type="text">கனடா பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிவிதிப்புக்கு, கனடா “டொலருக்கு டொலர்” பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிவிதிப்புக்கு, கனடா “டொலருக்கு டொலர்” பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார். இந்நிலையில், ஒட்டாவா வோஷிங்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தி, தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்தது.</p><p>ட்ரம்ப் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் இரு நாடுகளும் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறியதைத் தொடர்ந்து, பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள கனடா பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய 50 சதவீத வரிவிதிப்புகள், கிழக்கு நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><h2>மார்க்கார்னி வெளியிட்ட அறிக்கை</h2><p>வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பிரதமர் மார்க் கார்னி, கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாகவும், தனது பேச்சுவார்த்தைக் குழுவை ஒட்டாவாவிற்குத் திரும்ப அழைப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் நிலைப்பாட்டில் கடைசி நிமிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை, பொருளாதாரமற்றவை மற்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன என்றும் அவர் வாதிட்டார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">My statement on Canada-U.S. trade negotiations: <a href="https://t.co/65OuQH40ra">pic.twitter.com/65OuQH40ra</a></p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2091008744427598021?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>புதிய அமெரிக்க வரிகளுக்கு ஈடாக கனடாவும் அதே அளவு வரி விதிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை வரும் நாட்களில் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>ஒன்டாரியோ முதல்வர் ஆதரவு</h2><p>ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், கார்னியின் அணுகுமுறையை ஆதரித்து, "வரிக்கு வரி, டொலருக்கு டொலர் என்ற வலுவான பதிலடிக்கு பிரதமருக்குத் தனது முழு ஆதரவும் உண்டு" என்று கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Team Canada needs to stand together more united than ever before. <br><br>The prime minister has my full support for a strong response—tariff for tariff, dollar for dollar. As we fight to protect Canadian sovereignty and economic security, everything needs to be on the table. Ontario…</p>&mdash; Doug Ford (@fordnation) <a href="https://x.com/fordnation/status/2091010417560551898?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> கனடாவின் இறையாண்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பாதுகாக்க "எல்லாமே பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும், ஒன்டாரியோ தனது பங்கைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஃபோர்ட் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-sentenced-to-15-years-prison-abuse-daughter-1787390308"></link>
            <id>https://ibctamil.com/article/father-sentenced-to-15-years-prison-abuse-daughter-1787390308</id>
            <summary type="text">வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் 14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.
ஆனந்தராஜா நேற்றைய தினம் (21/08/2026) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>அத்துடன்&nbsp;பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.</p><p></p><h2>குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டது</h2><p>
</p><p>
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற
போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்த நிலையில் இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd25bdf9-3546-4310-af6c-9b094b2eb914/26-6a896ed04bc34.webp' /></p><p>எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம்
(21.08.2026) வழங்கப்பட்டது.</p><p>
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும்
பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.</p><p>
குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள்
நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த
குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடுங்காவல் சிறைத்தண்டனை</h2><p>

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல்
புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும்
இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும்
நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை
வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a766033-9322-40e7-9712-0e416a759330/26-6a896ed0f26a1.webp' /></p><p>
</p><p>
இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம்
சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன்
ரூபாய் நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2
வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.</p><p>

தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும்,
சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான
தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-irreversible-federal-solution-for-tamil-people-1787397433"></link>
            <id>https://ibctamil.com/article/an-irreversible-federal-solution-for-tamil-people-1787397433</id>
            <summary type="text">இலங்கையின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத
வகையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடக்கு
கிழக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத
வகையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடக்கு
கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்
குழுவினர் இன்று (22) திருகோணமலையில் ஏற்பாடு
செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போது இவ்வாறு கோரியுள்ளனர்.</p><p>இங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல்
உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூக–பொருளாதார
உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று
ஏற்படுத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p></p><h2>சமஷ்டி அரசியல் தீர்வு</h2><p>

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள்
முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்கின்றது, எனவே எதிர்காலத்தில் மாற்ற முடியாத மற்றும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட
சமஷ்டி அரசியல் தீர்வே அவசியம்.</p><p> மேலும், வடக்கு - கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை
அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல்
தீர்வை உருவாக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8acafc-ee3d-4b5a-9cdd-0cb90dbf96e8/26-6a898761a51e6.webp' /></p><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை
உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தனர்.</p><p>நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனைவின் நான்காவது வருட அணி
திரளல் நிகழ்வான இந்த நிகழ்வில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், சமூக
செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் வழக்கில் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/life-imprisonment-for-youth-involved-heroin-trade-1787396730"></link>
            <id>https://ibctamil.com/article/life-imprisonment-for-youth-involved-heroin-trade-1787396730</id>
            <summary type="text">வவுனியாவில்&amp;nbsp;2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில்&nbsp;2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த இளைஞன் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்படதை தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21.08.2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, மெனிக்பாம் பகுதியில் இக் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>இளைஞனுக்கு ஆயுள் தண்டனை</h2><p>இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/782de96c-190f-4c06-9c93-924879daae9f/26-6a8986c318c6b.webp' /></p><p>வழக்கு விசாரணையின்போது, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.</p><p>நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த வழக்கின் சாட்சியங்களை அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:27:03+00:00</updated>
        </entry>
    </feed>
