<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-24T06:28:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட செயலக பழைய கட்டடம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protect-jaffna-old-district-secretariat-building-1784872100"></link>
            <id>https://ibctamil.com/article/protect-jaffna-old-district-secretariat-building-1784872100</id>
            <summary type="text">தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிகளுக்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p>குறித்த புராதனக் கட்டடத்தை பார்வையிட்டதுடன், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலைப் பெறுமதிகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள், புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.</p><p></p><h2>ஆலோசனை வழிகாட்டுதல்</h2><p>
</p><p>
மேலும், குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee821b9-751f-4798-afec-540ad04e6f81/26-6a63055fb4101.webp' /></p><p>
</p><p>
இக் களவிஜயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-arrest-sparks-international-sensation-1784869729"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-arrest-sparks-international-sensation-1784869729</id>
            <summary type="text">சர்வதேச மன்னிப்பு சபையின்&amp;nbsp; ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மன்னிப்பு சபையின்&nbsp; ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த குற்றங்களை மேற்கோள்காட்டி இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.&nbsp;</p><p>சமீபத்தில் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவைக் கைது செய்து காவலில் வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.</p><p></p><h2>நெதன்யாகு எதிரான பிடியாணை</h2><p>இந்நிலையில் இதனைத்தொடர்ந்து வந்துள்ள எரிக்கா குவேராவின் அறிக்கை, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d36f15-a3e0-4376-bb1b-60a2d74c05b7/26-6a630081ef88f.webp' /></p><p>

2024-ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரின்போது போர்க்குற்றங்களைச் செய்ததாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு பூட்டு - டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் எதிராலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385"></link>
            <id>https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385</id>
            <summary type="text">சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி&nbsp;விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e65934-3c55-416b-b1a9-0486ef5dfc1b/26-6a630264c803e.webp' /></p><p>நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தடியடிக்குப் பின்னர், அங்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற&nbsp;நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் திணறும் டெல்லி - நள்ளிரவில் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129"></link>
            <id>https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129</id>
            <summary type="text">பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>குறித்த காணொளியில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. </p><h2>பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனை</h2><p>இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! <a href="https://t.co/NRysBukk5U">pic.twitter.com/NRysBukk5U</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080357811662492096?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும். அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம்.</p><p> இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது.</p><h2>கடுமையான தண்டனை</h2><p> எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00bc1f2-4dd2-49aa-9325-70dc452f935f/26-6a62e11cd7147.webp' /></p><p> 

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.</p><p> வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-24T05:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தை கடத்த டக்ளஸ் தேவானந்தா போட்ட திட்டம் : வெலிக்கடை சிறை அனுபவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784869953"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784869953</id>
            <summary type="text"> 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறித்த விமானத்தைக் கடத்துவதற்கு தான் திட்டமிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற கலவரத்தின் போது தமிழ் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட காலத்தில் அங்கிருந்த கைதிகளில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்.</p><p>
இந்தநிலையில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

1983 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
</p><p>
யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பிற்கு தான் எங்களை கொண்டு போவார்கள் என்று தெரியும்.

வெலிக்கடையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு விமானத்தில் ஏற்றிய போது விமானத்தைக் கடத்துவோம் என்ற எண்ணம் வந்தது. </p><p> விமானத்தைக் கடத்தி இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என நினைத்தேன். அந்த நேரம் சக கைதிகள் இதனை விரும்பவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கைவிட்டேன்.</p><p>
</p><p>
பின்னர் விமான நிலையத்தில் இறங்கி சிறைச்சாலைக்கு கொண்டு வரும் நேரத்தில் இடையில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். எனினும் நான் தப்பினால் மற்றவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தேன்.</p><p>

நாங்கள் சிலர் தப்பியோடாமல் பெருமளவானோர் தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிறைச்சாலைக்குள் சென்றோம்.

கூட்டு முயற்சியின் பயனாக ஒன்றரை மாதங்களுக்குள் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டது.” என தெரிவித்தார்.</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_u3PpAPiRaY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><br><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகப் பிடியாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-arrest-warrant-was-issued-against-mp-arjuna-1784868846"></link>
            <id>https://ibctamil.com/article/an-arrest-warrant-was-issued-against-mp-arjuna-1784868846</id>
            <summary type="text">யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;அர்ச்சுனா ராமநாதனுக்கு&amp;nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;அர்ச்சுனா ராமநாதனுக்கு&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கோட்டை காவல் அதிகாரிகளின் கடமையைத் தடுத்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>மேலும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணைத்தாரர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9499b9b8-de91-4654-8f98-5f4d2282482d/26-6a62fb33d7614.webp' /></p><p>

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் அடங்கிய மழலையில் உயிர் - இதுவே தீர்வு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-jaf-uni-students-union-1784868173"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-jaf-uni-students-union-1784868173</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது.
ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண
பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது.
ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன்
தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் இடம்பெற்ற
போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கண்ணதாசன் சுடரோன் இதனை தெரிவித்துள்ளார். </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான
நீதி கிடைக்கவில்லை.</p><p></p><p> </p><h2>அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறை</h2><p>இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம்
சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும்
வகையிலேயே அமைகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92965557-f4ec-4250-a78e-61097d02b32f/26-6a62f2c475ede.webp' /></p><p>அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான
தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. </p><p>ஒரு முறையான சர்வதேச பொறிமுறை
ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.

2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய
ஒன்றகயத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது
நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது.</p><p></p><p> </p><h2>பயங்கரவாத தடைச் சட்டம்</h2><p>ஆனால்
இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள்
நீக்கப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73eda22a-082c-49ec-aaed-3484e77869a2/26-6a62f2c3bd4ae.webp' /></p><p>
இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட
மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே
பார்க்கப்படுகிறது. </p><p>அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில்
இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக்
கேட்காது. </p><p>எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும்
என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற அமர்வு : நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162"></link>
            <id>https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(24.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(24.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்&nbsp;</h2><p> </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede2174c-ebb1-4244-9aee-db25a08c3959/26-6a62f8ee67ef7.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று முன்தினம் (22) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையின்போது, தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7w3j8717jt0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-were-not-buried-legally-at-siththupaththi-1784863705"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-were-not-buried-legally-at-siththupaththi-1784863705</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில்&amp;nbsp;வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில்&nbsp;வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை எனவும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 41 ஆவது நாளான நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 

இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்படும்.</p><p></p><h2>சவப்பெட்டிகளோடு காணப்பட்டது</h2><p>

ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது இது ஒரு குற்றம் நடந்தது, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது. 

இது சம்பந்தமாக அறிக்கைகள் வந்த பிற்பாடுதான். அது தொடர்பில் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c4080a-9409-4ad0-b70e-9ad7af3a145d/26-6a62e09eddfea.webp' /></p><p>இங்கு மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு, சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனை சான்றுகளும் காணப்பட்டன. </p><p>ஆனால் அவைகள் இங்கு புதைக்கப்பட்டதற்கு இந்த இந்து மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை.

அதேநேரம் வைத்தியசாலையை அணுகிய போது, அவர்களும் இந்த இந்து மயானத்தில் சடலங்களை புதைக்கவில்லை என்றும், தாங்கள் கோம்பயன்மணல் மயானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள்.</p><p> 

எனவே செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கைகள் வந்த பின்னரே தெளிவாக கூற முடியும் என“ தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கு கொடுப்போம் - யாழில் புத்தசாசன அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/building-viharas-in-the-north-east-area-1784860400"></link>
            <id>https://ibctamil.com/article/building-viharas-in-the-north-east-area-1784860400</id>
            <summary type="text">மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறோம்&nbsp;என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.</p><p>மிக விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச்
செல்வோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தையிட்டி
திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில், அரசாங்கம் தற்போது விரிவான
பேச்சுவார்த்தைகளை நடத்தி பெரிய அளவிலான பணிகளை மேற்கொண்டுள்ளது.&nbsp;அனைத்துத் தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, நீதி அமைச்சர், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நான், ஆளுநர், மாவட்டச்
செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்
பாராளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b99688-308e-4913-8ece-058d1301a90e/26-6a62d9c5b0a45.webp' /></p><p>அத்துடன் அப்பகுதியின் காணி உரிமையாளர்களான
மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம்.</p><p>

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி
அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் தையிட்டி
பகுதிக்குச் சென்றனர். </p><p>ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை
முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.

எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி
உரிமையாளர்களான எமது அன்பிற்குரிய மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்பதே.</p><p>

அதேநேரம், 1972-ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மக்களுக்குச் சொந்தமான காணி</h2><p> </p><p>விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும்
தெளிவான புரிதலோடு இருக்கிறார். அப்பகுதி மக்களோடு இணைந்து, மிகவும்
நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மதக் குருவாக அவர் உள்ளார்.</p><p>

நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. மக்களுக்குச் சொந்தமான
நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக்
கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். </p><p>மிக
விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம். இன்று
காலையும் இது குறித்து எமது அமைச்சின் செயலாளருடன் விவாதித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/225b3e65-7ff8-45ea-8220-2a7abed25cea/26-6a62d9c6820a3.webp' /></p><p>

எனவே, மக்களுக்குச் சொந்தமான காணி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்,
விகாரைக்குரிய காணி விகாரைக்குக் கிடைக்க வேண்டும். இரு தரப்பினரிடையேயும்
உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது.</p><p>அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல
அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம்
சித்தரிக்கப்படுகிறது.
</p><p>
அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும்
விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம்
ஒப்படைப்பதே எமது திட்டமாகும் - என்றார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DeLQMkPynLE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக் - அதிர்ச்சியில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-impose-new-global-tariffs-including-sl-1784856673"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-impose-new-global-tariffs-including-sl-1784856673</id>
            <summary type="text">அமெரிக்கா, இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.</p><p></p><p> </p><h2>ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதி</h2><p>

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befe03c3-1c45-45d6-a724-f9b2e80c59f9/26-6a62d3fe20a36.webp' /></p><p> 

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது. </p><p>

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர" வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. </p><p>

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-date-announced-1784856942"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-date-announced-1784856942</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அந்தவகையில், புலமைப்பரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அந்தவகையில், புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த பரீட்சையானது நாடு முழுவதிலும் உள்ள 2,723 மையங்களில், முதலாம் பாகம் முற்பகல் 9.30 முதல் 10.45 மணி வரையிலும், இரண்டாம் பாகம் முற்பகல் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையிலும் நடத்தப்படும்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்தநிலையில் விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35a87ec-6120-4709-89fe-629ae0996da9/26-6a62c34671cbf.webp' /></p><p>தங்கள் தகவல்களைத் திருத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள், www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பரீட்சைகள் தகவல் மையத்தை அணுகுவதன் மூலமாகவோ அல்லது http://onlineexams.gov.lk மூலமாகவோ, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3, 2026 வரை இணையவழியில் அவற்றை மேற்கொள்ளமுடியும்.
</p><p>
மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சாத்திகள், 011-2784208, 011-2784537, 011-2786616 அல்லது 011-2785413 ஆகிய எண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ள முடியும்.
</p><p>
அத்துடன் 1911 என்ற துரித இலக்கத்துக்கும் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T01:43:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி அதிகரிப்பால் குறைந்த வாகன இறக்குமதி! அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-vehicle-import-lc-rates-drop-1784856434"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-vehicle-import-lc-rates-drop-1784856434</id>
            <summary type="text">வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று (23-07-2026) உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வாகன இறக்குமதி</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.</p><p>

எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a1dca81-cc19-4112-b77f-e592dde4f189/26-6a62c0db188d5.webp' /></p><p>அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
</p><p>
கூடுதல் தீர்வை வரி நடைமுறைக்கு வந்த மே மாதம் 15ஆ ம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் வக்ர நிவர்த்தி...! பண மழையில் நனையப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mercury-direct-in-gemini-lucky-zodiac-signs-1784855518"></link>
            <id>https://ibctamil.com/article/mercury-direct-in-gemini-lucky-zodiac-signs-1784855518</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றமும் வக்ர இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில், புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றமும் வக்ர இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். </p><p>

அந்த வகையில், புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் தொழிலுக்கு அதிபதியான புதன், தற்போது தனது சொந்த ராசியான மிதுனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
</p><p>
இந்நிலையில், ஜூலை 24 அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார். </p><p>

புதனின் இந்த நேர்கதிப் பயணம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தைக் தந்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் அமோக முன்னேற்றத்தையும் தரவுள்ள நிலையில் அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். </li><li>இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.</li><li> நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.</li><li> தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். </li><li>குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். </li><li>ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</li><li> மந்தமாக இருந்த மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி </td><td><ol><li>கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். </li><li>இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.</li><li> நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. </li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </li><li>வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். </li><li>தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். </li><li>இருந்தாலும், பண விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</li><li> அதேப் போல் ஆரோக்கிய பிரச்சனைகளைப் புறக்கணிக்காதீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கும்பம்</td><td><ol><li>கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். </li><li>இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய நட்புகளைப் பெறுவார்கள்.</li><li> தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </li><li>நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். </li><li>சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</li><li> பண வரவு அதிகரிக்கும். </li><li>தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.</li><li> குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:18:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784853462"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784853462</id>
            <summary type="text">மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db153e08-5f52-495f-a463-e41ddc893874/26-6a62b3d85753b.webp' /></p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை உள்ளடக்கிய கும்பலுக்கு எதிராக திரும்பிய ரணில் - மைத்திரி யோசனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ideas-turned-against-the-rajapaksa-gang-1784813921"></link>
            <id>https://ibctamil.com/article/ideas-turned-against-the-rajapaksa-gang-1784813921</id>
            <summary type="text">உயர்நீதிமன்றங்களின் நீதியரசர்கள், முதன்மை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேலும் சில சிறப்பு தொழில்முறைப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றங்களின் நீதியரசர்கள், முதன்மை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேலும் சில சிறப்பு தொழில்முறைப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டிப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், அதற்கு எதிராக திவாலான, பலவீனமடைந்த எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வரும் பிரசாரம் அவர்களுக்கே எதிர்விளைவாக மாறியுள்ளது.
</p><p>
இந்த ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் ரணில் - மைத்திரி ஆட்சிக் காலத்தில் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.</p><p> 

2016 நவம்பர் 19ஆம் திகதி“அரசியலமைப்பு சபை” என்ற பிரதான குழு அமைக்கப்பட்டதுடன், அதன் கீழ் ஆறு துணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டன.</p><p></p><h2> தேங்கியுள்ள வழக்குகள் </h2><p>அவற்றில் நீதித்துறை தொடர்பான விடயங்களை ஆய்வு செய்வதற்காக தனிப்பட்ட துணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95bc8db-de97-47f1-9ab1-61b898417aaf/26-6a621b07ea368.webp' /></p><p>அந்த துணைக்குழு, அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், கீழ்நிலை நீதிமன்றங்களுக்கு புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு தேவையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 70 ஆக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.</p><p>

எனினும், அந்த பரிந்துரைகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால், நீதிமன்றங்களில் வழக்குகள் தாங்க முடியாத அளவிற்கு தேங்கியுள்ளன.</p><p>

 அதற்கான தீர்வாக அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளை தற்போதைய அரசு முன்னெடுத்து வரும் நிலையில், இதற்கு எதிராக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p></p><h2>நீதித்துறை தொடர்பான துணைக்குழு</h2><p>

2016ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க - மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் காலத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆய்வு செய்வதற்காக பல துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb347321-f550-4877-8e66-93c3fd29ba43/26-6a621b08c0b23.webp' /></p><p> </p><p>அவற்றில் நீதித்துறை தொடர்பான துணைக்குழு, நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் பல பரிந்துரைகளை முன்வைத்தது.

அந்த பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று, அனைத்து நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நிர்ணயிப்பதுடன், உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை 70 வயது வரை நீட்டிப்பது குறித்த யோசனையாகும்.</p><p> அனுபவமிக்க நீதிபதிகள் நீண்ட காலம் பதவியில் இருப்பதன் மூலம் புதிய நீதிபதிகளுக்கு வழிகாட்டுதல் வழங்க முடியும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகக் கூறப்பட்டது.</p><p>


இலங்கை நீதித்துறையில் நீண்ட காலமாக வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலை தொடர்கிறது. சில வழக்குகள் விசாரணை நிறைவடைய பல ஆண்டுகள் எடுப்பதாக விமர்சனங்கள் உள்ளன.</p><p>இதற்கான முக்கிய காரணங்களாக நீதிபதிகள் பற்றாக்குறை, நீதிமன்றங்களின் பணிச்சுமை, நிர்வாக தாமதங்கள் மற்றும் போதிய வளங்கள் இல்லாமை ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.</p><p>
இத்தகைய சூழலில் அனுபவமிக்க நீதிபதிகளை உடனடியாக ஓய்வுபெறச் செய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட காலம் கூடுதலாக சேவையில் வைத்திருப்பது வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க உதவும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.</p><p></p><h2>நீதித்துறையின் சுயாதீனத் தன்மை</h2><p>
</p><p>

இந்த யோசனையை ஆதரிப்பவர்கள், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் அறிவும் தீர்ப்பளிப்பு திறனும் நீதித்துறைக்கு தொடர்ந்தும் பயனளிக்கும் எனக் கூறுகின்றனர். மேலும், புதிய நீதிபதிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதிலும் மூத்த நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01001c00-364a-4561-a11e-0c2ce001630f/26-6a621b09826f7.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, புதிய நீதிபதிகளை நியமிக்கும் வரை ஏற்படும் வெற்றிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கும் இந்த நடவடிக்கை உதவக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
</p><p>


மறுபுறம், இந்த யோசனை குறித்து பல தரப்பினர் கவலைகளையும் முன்வைக்கின்றனர். ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டால் இளம் நீதிபதிகள் பதவி உயர்வு பெறும் வாய்ப்புகள் தாமதமாகலாம் என்ற கருத்து ஒன்று உள்ளது.</p><p>

மேலும், நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் சில சட்ட நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>ஓய்வுபெறும் வயது மாற்றம் அனைத்து நீதிபதிகளுக்கும் சமமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், தெளிவான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்பட&nbsp; வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
</p><p>


இந்த விவகாரம் தற்போது அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது. </p><p>அரசாங்கம், இது நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் நிர்வாகச் சீர்திருத்தம் எனக் கூறுகிறது. </p><p>அதேவேளை, எதிர்க்கட்சிகள் இதன் நோக்கம் மற்றும் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T00:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
