<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-19T17:28:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் சரிந்தது ஈரானின் சாம்ராஜ்ஜியம் : ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1b-barrels-of-oil-shipped-through-strait-of-hormuz-1789833846"></link>
            <id>https://ibctamil.com/article/1b-barrels-of-oil-shipped-through-strait-of-hormuz-1789833846</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு&nbsp;(CENTCOM), &nbsp;சனிக்கிழமையன்று தெரிவித்தது.</p><p>

"வளைகுடாப் பகுதியிலிருந்து 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் வெளியேறுவதற்கு CENTCOM படைகள் ஆதரவளித்துள்ளன" என்று அட்மிரல் பிராட் கூப்பர் கூறினார்.</p><p>&nbsp;இத்தகவலை&nbsp; x சமூக ஊடகத் தளத்தில் அக் கட்டளைப் பிரிவு வெளியிட்டது.</p><h2>நீரிணையை கடந்த 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள்</h2><p>
</p><p>
ஒருங்கிணைந்த பாதுகாப்பை வழங்குவதன் மூலம், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையில் 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் அமெரிக்கப் படைகள் உதவியுள்ளதாக கூப்பர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc05fb52-0af5-41f4-a2b4-28d710f036dd/26-6aaeb8e81b229.webp' /></p><p>
</p><p>
நீரிணையில் உள்ள முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான கப்பல்கள் அந்த நீர்வழிப் பாதை வழியாகக் கடந்து சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஈரான் எண்ணெய் ஏற்றுமதி&nbsp;</h2><p>அதே வேளையில், ஈரான் "பூஜ்ஜியம் பீப்பாய்" அளவிலேயே எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட கூப்பர், இந்தத் தடைக்கு அமெரிக்காவின் "உறுதியான முற்றுகையே" காரணம் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2446baa7-68ad-4f48-8b81-90d00d566d66/26-6aaeb8e8dd70c.webp' /></p><p>
</p><p>
கடந்த இரண்டு வாரங்களில் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய், சரக்கு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் அளவு, முந்தைய ஆறு மாதங்களில் இருந்த எந்தவொரு காலகட்டத்தை விடவும் அதிகமாக இருந்ததாக கூப்பர் தெரிவித்தார்.
</p><p>
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த நீர்வழிப் பாதை வழியாகப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்க, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T16:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் வீடொன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-and-son-dead-from-a-house-in-vavuniya-1789830835"></link>
            <id>https://ibctamil.com/article/mother-and-son-dead-from-a-house-in-vavuniya-1789830835</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
மீட்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.&nbsp; சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்…</p><h2>இரத்தகாயங்களுடன் வீட்டில் வீழ்ந்து கிடந்த&nbsp;தாய் </h2><p>&nbsp; இன்றையதினம் வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில்
உறவினர் இருவர் இன்று மாலை குறித்த வீட்டிற்கு சென்றபோது தாய்
இரத்தகாயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ec7cc-22ff-4d05-afc5-78aadae36f71/26-6aaea8a6ad28c.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தூக்கில் தொங்கிய நிலையில்&nbsp;மகன்</h2><p> </p><p>இதேவேளை குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன்
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d0a809-b5c7-4725-ae0c-39e8a8290570/26-6aaea8a78bf06.webp' /></p><p>சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு
சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் வயது 60 என்ற
பெண்ணும் அவரது பெறாமகனான அயந்தன் வயது 35 என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என
காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தடயவியல் காவல்துறையின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T15:22:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மல்லாகம் விசாலாட்சி தரம் 1 மாணவிக்கு விஞ்ஞானத்துறையில் கிடைத்த கௌரவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/honor-bestowed-upon-a-jaffna-student-1789829949"></link>
            <id>https://ibctamil.com/article/honor-bestowed-upon-a-jaffna-student-1789829949</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய விஞ்ஞான மன்றம் வருடாந்தம் விஞ்ஞானத்துறை சார் செயற்பாடுகளில் ஈடுபடும்
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18.09.2026) பண்டாரநாயக்கா சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய விஞ்ஞான மன்றம் வருடாந்தம் விஞ்ஞானத்துறை சார் செயற்பாடுகளில் ஈடுபடும்
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18.09.2026) பண்டாரநாயக்கா சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.</p><p>

இதில் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய தரம் ஒன்று மாணவி கார்த்தீபன்
கிருணிகா வீடுகளில் பல்லிகளின் நடமாட்டம் பற்றிய அவதானத்தை மேற்கொண்டு அது
தொடர்பான அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்து "இயற்கை ஆர்வம் மிக்க சிறுமி"
(Kid Naturalist) எனும் சான்றிதழைப் பொற்றுக் கொண்டார்.</p><h2>மாணவிக்கு கிடைத்த சான்றிதழ்</h2><p>
</p><p>
இம்மாணவிக்கான சான்றிதழும், பரிசிலும் பிரதமரும்,கல்வி அமைச்சருமான 
ஹரிணி அமரசூரியவினால் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
வைத்து வழங்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5287b0d4-d32c-44e8-94b9-23efe39b51b4/26-6aaea33f66a66.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T14:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்த விளையாட்டு அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/volleyball-referee-dies-in-accident-1789826793"></link>
            <id>https://ibctamil.com/article/volleyball-referee-dies-in-accident-1789826793</id>
            <summary type="text">&amp;nbsp;குருநாகல் - நீர்கொழும்பு பிரதான சாலையில், தும்மலேவத்தை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரி மற்றும் கடற்கரை கைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குருநாகல் - நீர்கொழும்பு பிரதான சாலையில், தும்மலேவத்தை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரி மற்றும் கடற்கரை கைப்பந்து நடுவர் ஒருவர் உயிரிழந்ததாக நாரம்வல காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சாகரிக லக்மாலி என்ற விளையாட்டு அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>காவல்துறையின் தகவலின்படி, நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற ஒரு சிறிய பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>தம்பதெனிய மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவி</h2><p> </p><p>இந்த விபத்தில் இருசக்கர வாகனம் கிட்டத்தட்ட முழுமையாக சேதமடைந்தது.

உயிரிழந்த சாகரிகா லக்மாலி, தம்பதெனியா மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b82f705-78e1-412e-92d8-066923a25f13/26-6aaea09babc61.webp' /></p><p> </p><p>அங்கு அவர் கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதாகவும், தேசிய அளவிலும் சிறந்து விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

அவர் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரியாகவும், தேசிய கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T14:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரிக்கு தங்கப்பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-medal-for-jaffna-hindu-college-1789825031"></link>
            <id>https://ibctamil.com/article/gold-medal-for-jaffna-hindu-college-1789825031</id>
            <summary type="text">அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப்
போட்டிகளில், *தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தங்கப்பதக்கத்தைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப்
போட்டிகளில், *தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது.</p><p>இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட
தமிழ்மொழித்தினப் போட்டிகளில், *தனிநடிப்பு மூன்றாம் பிரிவில்* யாழ்ப்பாணம்
இந்துக் கல்லூரியைச் சேர்ந்த *தேவானந்த் அஸ்வின்ராம்* முதலாம் இடத்தைப்
பெற்று, தேசிய ரீதியாக *தங்கப்பதக்கத்தை* வென்றுள்ளார்.
</p><p>
</p><h2>&nbsp;யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை&nbsp;</h2><p>இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள்
பங்கேற்ற இப்போட்டியில், வடக்கு மாகாணத்திற்காக தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்
கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0502b080-4c6b-49a2-83e7-51e1c6858daa/26-6aae94fb9fb1d.webp' /></p><p>
</p><p>
தேசிய மட்டத்தில் பெற்ற இவ்வெற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு
மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு : இலங்கை அரசு துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541</id>
            <summary type="text">&amp;nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp; தீவிர செயற்பாட்டில் வெளிவிவகார அமைச்சு</h2><p>&nbsp;இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவுதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345fec4c-3648-4205-af37-fb9943cbef4f/26-6aae68ce646d6.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.</p><p>

 

இச்சம்பவம் தொடர்பில் சவுதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:48:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அரசியல்வாதிகள் : புலனாய்வுத்துறைக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intelligence-bigwigs-fleeing-abroad-by-illness-1789823308"></link>
            <id>https://ibctamil.com/article/intelligence-bigwigs-fleeing-abroad-by-illness-1789823308</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை விசாரிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
அதன்படி, பல புலனாய்வு அமைப்புகள் இப்போதெல்லாம் அத்தகைய நபர்களைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.</p><h2>மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா&nbsp;என&nbsp;விசாரணை</h2><p>&nbsp;இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30f1fbf-d138-4323-8d2b-fa8879987d62/26-6aae8e2c7ea5d.webp' /></p><p>
</p><p>
சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து திரும்பாத பல அரசியல்வாதிகளையும் உளவு அமைப்புகள் விசாரித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.</p><p></p><h2>தூதரக மட்டத்திலும் பேச்சு</h2><p>
</p><p>
அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff7838e-f05f-4cf9-b5b7-8dc2e7cb1114/26-6aae8e2d326bc.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது விடுதலை சட்டபூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனை : காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/loudspeaker-at-dileepan-s-memorial-issue-1789820456"></link>
            <id>https://ibctamil.com/article/loudspeaker-at-dileepan-s-memorial-issue-1789820456</id>
            <summary type="text">&amp;nbsp; தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான்
புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான்
புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண தலைமையக
காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
</p><p>
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
சாதனங்களை பயன்படுத்தினார்கள் என குற்றம் சாட்டி சாதனங்களை காவல்துறையினர்
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.</p><h2>ஏற்பாட்டாளர்களை அலைக்கழித்த காவல்துறையினர்</h2><p>&nbsp;அதனை அடுத்து ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி சாதனத்திற்காக காவல் நிலையம்
சென்றிருந்த வேளை , பொறுப்பதிகாரி இல்லை என திருப்பியனுப்பியுள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் காவல் நிலையம் சென்ற போதும் திருப்பி
அனுப்பியுள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c45c756-c75a-453c-89c6-26261a86cde8/26-6aae870938d14.webp' /></p><h2>புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்ற பின்னரே அனுமதி</h2><p>

காவல்துறையினர் ஏற்பாட்டாளர்களை அலைக்கழித்ததை அடுத்து, அது தொடர்பில்
ஏற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு
தகவல் வழங்கியதை அடுத்து , நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண மூத்த காவல்துறை
அத்தியட்சகரை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a9d1bb-0cd6-4c65-9139-02a7895cc6a7/26-6aae8709e4275.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து , யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற
உறுப்பினரை தொடர்பு கொண்டு , ஒலிபெருக்கி சாதனம் பெறுவதற்கான அனுமதிக்காக
காவல் நிலையத்தில் விண்ணப்பிக்க கூறியதுடன் , புலனாய்வாளர்களின் அறிக்கையை
பெற்ற பின்னரே அனுமதி வழங்குவதா ? இல்லையா என முடிவெடுக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T12:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காவல்துறையினர் மறித்த வேளை கீழே விழுந்து இளைஞன் திடீர் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-stopped-by-police-in-jaffna-dies-suddenly-1789817166"></link>
            <id>https://ibctamil.com/article/youth-stopped-by-police-in-jaffna-dies-suddenly-1789817166</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - காரைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக இன்றையதினம் (19) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p>சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை மானிப்பாய் போக்குவரத்து காவல்துறையினர் மறித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb43f3d-98bf-464d-abbf-554f847e9bd8/26-6aae7504eb432.webp' /></p><p>இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே
கீழே சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> பின்னர் குறித்த இடத்திலேயே அந்த இளைஞர் அசைவற்று காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T12:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-arrested-three-firearms-and-heroin-1789819313"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-arrested-three-firearms-and-heroin-1789819313</id>
            <summary type="text">கொஹுவலா, விஜயபா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய பின்னர்,காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவலா, விஜயபா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய பின்னர்,காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை மூன்று துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்களைக் கைது செய்தபோது, ​​அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது</p><p>விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்தி இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது.</p><p>

</p><h2>&nbsp;துப்பாக்கிகளுடன்,தோட்டாக்கள்&nbsp;
மற்றும் முச்சக்கரவண்டி பறிமுதல்</h2><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று துப்பாக்கிகளுடன், எட்டு தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b426d22-f0f1-497b-8132-befbf470a4d3/26-6aae7c22e887c.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், இப்போதைப்பொருட்கள் திட்டமிட்ட குற்றவாளியும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'களுபோவில அவிஷ்க' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பைக் கையாளுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அவருக்குப் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும் ஆவர்.</p><p></p><p>

 

</p><h2>காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைப்பு</h2><p>சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ce7ff4b-f57e-4a10-a480-bed5e1604cd5/26-6aae7c239d0b7.webp' /></p><p>
</p><p>
 

கடந்த 14ஆம் திகதி கொஹுவல காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 504 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இவர்களது நெருங்கிய கூட்டாளிகள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T12:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக்கொடுங்கள் : அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/request-to-the-gover-grant-pardon-to-anojan-1789816743"></link>
            <id>https://ibctamil.com/article/request-to-the-gover-grant-pardon-to-anojan-1789816743</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அறியாமல் ஒரு தவறை செய்து அந்த தவறுக்காக அவரும், அவரது குடும்பமும் பல
தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ள நிலையில் சவூதி அரேபியாவில் நீதிமன்ற
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அறியாமல் ஒரு தவறை செய்து அந்த தவறுக்காக அவரும், அவரது குடும்பமும் பல
தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ள நிலையில் சவூதி அரேபியாவில் நீதிமன்ற
தீர்ப்பின் பிரகாரம் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான
எஸ்.அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து
வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அனோஜன் தொடர்பான விடயம் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்
மட்டுமல்ல எங்களுக்கும் மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவரது குடும்பத்தின் துயரத்தை கருத்திற்கொண்டு, மனிதாபிமான
அடிப்படையில் இவ்விடயத்தில் தலையீடு செய்து, சவூதி அரேபிய அரசாங்கத்துடன்
இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>&nbsp;சாத்தியமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்</h2><p>அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பான சட்டரீதியான நிலைமைகள்,
மேல்முறையீட்டு வாய்ப்புகள் மற்றும் மன்னிப்பு கோருவதற்கான நடைமுறைகள்
குறித்து உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று, சவூதி அரேபிய அதிகாரிகளின்
ஒத்துழைப்புடன் அவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து சாத்தியமான
முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906e9dfd-c462-4886-b58a-18064bcd8033/26-6aae7602c5c87.webp' /></p><p>மேலும், இவ்விடயம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சவூதிக்கான
இலங்கைத் தூதரகம், முஸ்லிம் எம்.பிக்கள், ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு
எம்.பிக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன்,
அனோஜனின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்கள் மற்றும் சட்டரீதியான
வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.</p><p></p><h2>நாடு திரும்புவதற்கான நடவடிக்கை</h2><p>இலங்கைப் பிரஜை ஒருவரின் உயிர் மற்றும் எதிர்காலம் தொடர்பான இவ்விடயத்தில்
அரசாங்கம் தாமதமின்றி தலையிட்டு, அனோஜனுக்கு மன்னிப்பு கிடைத்து அவர்
பாதுகாப்பாக விடுதலை பெற்று நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a39e89c-ea20-4801-bb8f-896cb2f0adb3/26-6aae7603795a6.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T11:47:06+00:00</updated>
        </entry>
    </feed>
