<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-28T15:45:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர திரைப்படக் காட்சி போல பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-issues-heat-warnings-in-wildfire-hit-areas-1785250697"></link>
            <id>https://ibctamil.com/article/france-issues-heat-warnings-in-wildfire-hit-areas-1785250697</id>
            <summary type="text">பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
அந்த இரு நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் அளவுக்குக் காட்டுத் தீ மோசமாகிவிட்டது.
</p><p>
கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலவரத்தால் மேற்கு ஐரோப்பா மற்றொரு வெப்ப அலைக்குத் தயாராகிவரும் நிலையில் அதன் ஒரு பகுதியில் தீ வேகமாகப் பரவிவருகிறது.</p><p></p><h2>இரவு முழுவதும் போராடி</h2><p>
</p><p>பிரான்சின் போர்டோ பகுதியில் மூண்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி, ஒருவழியாகக் கட்டுப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/858d2de2-0e6d-4c66-b381-a965559be2e8/26-6a68c6e26890c.webp' /></p><p>எனினும் போர்டோ நகரின் புறநகர்ப் பகுதியிலிருந்து வெறும் 15 கி.மீ (9.3 மைல்கள்) தொலைவில் காட்டுத்தீ எரிந்து வருவதால், அந்நகர மக்கள் "பதட்டமாகவும் அச்சமாகவும்" உணர்வதாக அங்கு வசிக்கும் ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்துள்ளார்.</p><p>நகரம் முழுவதும் பரவியுள்ள "அடர்த்தியான புகை மூட்டம்" காரணமாக மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதாகவும், சிலர் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பியர் போர்குவரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்</p><p>
நகரம் 'புகையால் சூழப்பட்டிருப்பதைக்' கண்ட பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள மற்றொருவர், "அது ஒரு பயங்கரமான திரைப்படக் காட்சி போல இருந்தது" என்று கூறினார்.</p><p></p><h2>கட்டுக்கடங்காத தீ</h2><p>
</p><p>
அதேவேளை, ஸ்பெயினின் மத்திய டோலிடோ மாகாணத்தில் உள்ள 11 நகரங்களில் ஒன்பதிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c9d3ba-fb88-43ec-aebd-eb6fca68e58b/26-6a68c6e1b09ed.webp' /></p><p>இருப்பினும், மாட்ரிட்டிலும் அருகிலுள்ள மாகாணங்களிலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது.

பொதுமக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தப்பி ஓடியதைக் கண்டதாக, ஸ்பெயினிலிருந்து தீ காரணமாக வெளியேற்றப்பட்ட ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.
</p><p>
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-shakes-southern-japan-1785246802"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-shakes-southern-japan-1785246802</id>
            <summary type="text">நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜப்பானின் தெற்குப் பகுதியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மின்சார விநியோகம்</h2><p>
</p><p>
 

வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், தீப்பற்றியுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab1dcd6-92be-4473-9b9b-25d9023c86ac/26-6a68b7d81751f.webp' /></p><p>இதேவேளை, சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கைபேசி சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

அதிவேக தொடருந்துகள் உட்பட அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளன.
</p><p>
 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TSMC (சிப் தயாரிப்பு நிறுவனம்), Sony மற்றும் Fujifilm போன்ற முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
 

ஆரம்பத்தில் சுமார் ஒரு மீற்றர் உயரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013c5e3b-b848-4a8a-b2e6-276485fb5521/26-6a68b7d74537b.webp' /></p><p>
 

இதனிடையே, எதிர்வரும் வாரத்தில் மேலும் நிலநடுக்க அதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழன்று விடும் நிலையில் Boeing 737 விமான இருக்கைகள் - பறந்த அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100-of-boeing-737-max-jets-may-need-inspections-1785241620"></link>
            <id>https://ibctamil.com/article/100-of-boeing-737-max-jets-may-need-inspections-1785241620</id>
            <summary type="text">அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள்
தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய
வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள்
தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய
வேண்டும் என்றும் அமெரிக்கக் கூட்டாட்சி வான்வெளி நிர்வாகம் (FAA)
எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட 453 போயிங் விமானங்களில் இந்தப் பிரச்சினை
இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>கழன்று விழக் கூடும்</h2><p>
</p><p>
அவசரக் காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் போது இந்த இருக்கைகள் தளர்ந்து
கழன்று விழக் கூடும் என்றும், இதனால் பயணிகள் மற்றும் விமானப்
பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவசர காலங்களில் மக்கள்
வெளியேறும் வழியையும் அடைக்கக்கூடும் என்று FAA தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34effe35-b1fa-471a-92a7-c2422025091b/26-6a68bd01ecc10.webp' /></p><p>

இந்த உத்தரவு அமெரிக்கப் பதிவெண் கொண்ட விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்
என்றாலும், பிற நாட்டு வான்வெளி அமைப்புகளும் அமெரிக்காவின் இந்த
வழிகாட்டுதலைப் பின்பற்றிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
</p><p>
இது குறித்து போயிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் ஏற்கனவே கடந்த
டிசம்பர் 2025-இல் விமான நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை
வழங்கிவிட்டதாகவும், அதைத் தற்போது FAA கட்டாயமாக்குவதை வரவேற்பதாகவும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mandaitivu-mass-grave-case-postponed-1785243691"></link>
            <id>https://ibctamil.com/article/mandaitivu-mass-grave-case-postponed-1785243691</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில்
நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு காவல்துறையினரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p></p><p>
</p><h2>காவல்துறை பாதுகாப்பு</h2><p>
முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d217774b-5f29-4657-9d54-f1116167b9e7/26-6a68aac037f73.webp' /></p><p>பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் குறித்த விடையம் தொடர்பிக்
அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கி
காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,
அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று, கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
</p><p>
அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p></p><p>
</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>
முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966d71fd-8df1-4416-92d5-0d138833efce/26-6a68aac0e28aa.webp' /></p><p>
</p><p>
முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.
</p><p>
இன்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நாவற்குழி பகுதியில் கோர விபத்து - குடும்பஸ்தர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/road-accident-kills-femily-men-in-jaffna-1785242012"></link>
            <id>https://ibctamil.com/article/road-accident-kills-femily-men-in-jaffna-1785242012</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த
வேளை, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.</p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9f6da5-2d5d-4a1d-b651-0a39fb64f2da/26-6a68a47ea3c16.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jba-urges-president-to-drop-judge-age-amendment-1785241672"></link>
            <id>https://ibctamil.com/article/jba-urges-president-to-drop-judge-age-amendment-1785241672</id>
            <summary type="text">உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவும் கொண்டுவரப்பட்டால் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதை ஏற்க முடியும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அவசரத் திருத்தம் நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் சலுகையாகவோ அல்லது தலையீடாகவோ பார்க்கப்பட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் எனச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
</p><p>
 குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய சீர்திருத்தங்கள் ஜனநாயகக் கொள்கைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு மீதான மரியாதையைப் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்த முயற்சியை ஜனாதிபதி உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாத யாத்திரையை முடக்கும் நவ சதிகளும்... சவூதி தண்டனை அனோஜனும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monks-demand-protection-for-ne-sacred-sites-1785237828"></link>
            <id>https://ibctamil.com/article/monks-demand-protection-for-ne-sacred-sites-1785237828</id>
            <summary type="text">கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கூட்டப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது பௌத்த தொல்பொருள் உள்ளதாகக் கூறப்படும் நிலங்களை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கூட்டப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது பௌத்த தொல்பொருள் உள்ளதாகக் கூறப்படும் நிலங்களை அபகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
</p><p>
கடந்த 5 மாத காலத்திற்கு இடையில் நடத்தப்பட்ட காவிகளின் இரண்டாவது திரள்நிலை, வடக்கு கிழக்கில் அடாவடி விகாரைகளை நிறுவிய பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கான காவிகள் கலந்துகொண்டனர்.
</p><p>
அரசிலிருந்து பௌத்தத்தைப் பிரிக்க முடியாது, பௌத்த மத நம்பிக்கையற்றவர்கள் இந்த நாட்டை ஆளக்கூடாது, புத்தர் சிலைகளை யாரும் அவமதித்தால் அது குற்றம் எனப் பல விடயங்கள் அடுக்கப்பட்டன.
</p><p>
மாநாட்டில் உரையாற்றிய இந்துரகரே தம்மரத்ன தேரர் போன்றவர்கள், வடக்கு கிழக்கில் பௌத்த தொல்பொருள் தளங்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை, தமிழர்கள் என்னதான் நில அபகரிப்பு குறித்துக் கத்தினாலும் வடக்கு கிழக்கில் 1,000 இற்கும் மேற்பட்ட பௌத்த தொல்பொருள் இடங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு தேவை என அலறினார்.</p><p>

இந்த பௌத்த மாநாடு இடம்பெற்ற சமகாலத்தில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியக் கதிர்காம யாத்திரையால் யால-குமண காடுகள் பாழ்பட்டுப்போவதான குய்யோ முறையோக்கள் வந்துள்ளன.
</p><p>
ஏற்கனவே இந்தப்பாதயாத்திரையுடன் சுப்பிரமணி என்ற நாய் கிழக்கு நகரமான கல்முனை வழியாகச் சென்றபோது உள்ளூர் முஸ்லிம் ஒருவர் நாயை உதைப்பது காணொளியில் பதிவான பின்னர், சவூதி அரேபியாவில் பணிபுரியும் கல்முனைத் தமிழர் அனோஜன் இறைதூதர் நபி குறித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிந்தனைப் பதிவுக்காக அவர் அங்கு குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் றியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் இந்த யாத்திரையை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற திட்டங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D6--LyfYYxA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழி குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி - நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/punishment-for-the-perpetrators-chemmani-grave-1785239774"></link>
            <id>https://ibctamil.com/article/punishment-for-the-perpetrators-chemmani-grave-1785239774</id>
            <summary type="text">செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (28.07.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் அவ்வபறு கருத்து தெரிவித்தார்.&nbsp;</p><p>இந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பான இன்னும் சில விடயங்களை அவர் கூறி இருந்தார்.</p><p></p><h2>ஹர்ஷண நாணயக்கார உறுதி</h2><p>

இதன்படி கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், 

"இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்" என கூறி இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89298d41-0853-4d13-aa40-dc905077745a/26-6a689bd13f137.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:09:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து முக்கிய தரப்புக்களுடன் ஈரான் கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-foreign-minister-discusses-strait-of-hormuz-1785219576"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-foreign-minister-discusses-strait-of-hormuz-1785219576</id>
            <summary type="text">ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பேச்சுவார்தையில் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் விவரித்தார் என கூறப்பட்டுள்ளது.</p><p> மேற்குறிப்பிட்ட விடயம் இன்று (28.07.2026)&nbsp; அவரது டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>ஈரானின் வெளியுறவு அமைச்சர்&nbsp;</h2><p>மேலும் அந்த அறிக்கையில்&nbsp;சமீபத்திய இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடிய அவர், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e264978-f142-4ecc-9c31-016964e2fe71/26-6a68922febf52.webp' /></p><p>
 

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் சவூதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களை சவூதி பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பாஸ் அராக்சியும் சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானும் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>

 </p>]]></content>
            <updated>2026-07-28T11:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-new-deputy-chairman-selected-1785235530"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-new-deputy-chairman-selected-1785235530</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் (28) காலை
நடைபெற்ற போதே கோகுலராஜ் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.</p><p>உள்ளூராட்சி
ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி
வீசியதாக சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>வடக்கு ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல்</h2><p>குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால்
நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின்
பரிந்துரைக்கு அமைய உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும்
கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக
வறிதாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f10d01-0ca2-4bd7-bf74-9930fd359fed/26-6a688f36863e9.webp' /></p><p>அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர்
தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி சார்பிலும்
இருவர் போட்டியிட்டனர்.
</p><p>
அதில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6
உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.</p><p>

ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு
உறுப்பினரும் வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை
வகித்தனர்.</p><p></p><h2>சட்டத்தரணியின் கோரிக்கை</h2><p>சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழரசுக்
கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06
உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் உள்ள நிலையில் அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfb24e8-6de7-4b34-b958-788f12ac4786/26-6a688f37691a9.webp' /></p><p> அதன் அடிப்படையில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர், தேசிய மக்கள் சக்தியின்
மூன்று உறுப்பினர்கள் அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதன்
அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு
உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
</p><p>
இந்நிலையில் இன்றைய தினம், உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு 16
உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.</p><p>இதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு
மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாத் துறை முதலீடுகளுக்காக ஜனாதிபதி மாளிகைகள்...! அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-to-lease-president-palaces-for-tourism-1785233336"></link>
            <id>https://ibctamil.com/article/sl-to-lease-president-palaces-for-tourism-1785233336</id>
            <summary type="text">
நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகால சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்காகக் குத்தகைக்கு விடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகால சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்காகக் குத்தகைக்கு விடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஜனாதிபதி மாளிகை</h2><p>பெந்தோட்ட, கதரகம, மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளே இவ்வாறு சுற்றுலாத் துறை முதலீடுகளுக்காக வழங்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1450f8-bed3-45a5-9030-779486fa77b3/26-6a6886980e6b1.webp' /></p><p>

இவை முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காகவும் ஓய்வு நேரப் பயணங்களுக்காகவும் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.
</p><p>
தற்போதைய ஜனாதிபதியினால் இந்த மாளிகைகள் பயன்படுத்தப்படாத போதிலும், உயர் கட்டிடக்கலை மற்றும் பொருளாதார மதிப்புடைய இச்சொத்துக்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த ஏனைய செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகத் தொடர்ந்து பெருமளவிலான அரச நிதி செலவிடப்பட்டு வருகின்றது.</p><p>
</p><p></p><h2>சொந்தமான பங்களாக்கள்</h2><p>இந்தநிலையில் அரசுக்குச் சொந்தமான பங்களாக்கள், வீடுகள் மற்றும் ஓய்வு விடுதிகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0761cf69-3ceb-4120-844a-6aa2839a313e/26-6a68869719015.webp' /></p><p>இதனடிப்படையில் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளைக் கோருவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
</p><p>
இம்மாளிகைகளின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் இவற்றைச் சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-sallay-s-writ-petition-consider-on-aug-25-1785233598"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-sallay-s-writ-petition-consider-on-aug-25-1785233598</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p>குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இம்மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிபதிகள் குழாம் உத்தரவு</h2><p> </p><p>

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c18273-80c5-40c8-8fdc-5e4ebdfab871/26-6a688708ee9ee.webp' /></p><p>இந்த நிலையில் அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-in-japan-tsunami-warning-1785230398"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-7-1-earthquake-in-japan-tsunami-warning-1785230398</id>
            <summary type="text">ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (28) ச...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (28) செவ்வாய்க்கிழமை பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<br></p><p>நிலநடுக்கத்திற்குப் பிறகு, 1 மீற்றர் (3.28 அடி) உயர அலைக்கான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நிலநடுக்க எச்சரிக்கை</h2><p>ஜப்பானின் தெற்கு கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60999db0-2817-4c0c-9f7a-e54d8114e97a/26-6a687da28377c.webp' /></p><p>நிலநடுக்கம் ஏற்பட்ட குறித்த பகுதியில்&nbsp; (6758.T) மற்றும் டி.எஸ்.எம்.சி (2330.TW) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>நிலநடுக்கத்திற்குப் பிறகு, தனது செண்டாய் மற்றும் கென்காய் அணுமின் நிலையங்களில் எந்தவிதமான முறைகேடுகளும் பதிவாகவில்லை என்று கியூஷு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><br></p>&nbsp;</p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p></p>]]></content>
            <updated>2026-07-28T09:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு குற்றசாட்டில் 25 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-gem-mining-25-people-arrested-1785229608"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-gem-mining-25-people-arrested-1785229608</id>
            <summary type="text">ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான காவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான காவல்துறை பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர்.</p><p>இந்த குற்றச்சாட்டில்&nbsp;மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>இதன்போது சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 படகுகள் மற்றும் ஐந்து மோட்டார்கள் உட்பட, ரூ. 70 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இரத்தினக்கல் அகழ்வு உபகரணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு</h2><p>மேலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a74f4ab-9cae-45a7-88b3-7b0b188835b4/26-6a687cb917fc8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T09:56:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-youth-jailed-for-train-attack-in-australia-1785227744"></link>
            <id>https://ibctamil.com/article/sl-youth-jailed-for-train-attack-in-australia-1785227744</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar - 22) என்ற இளைஞருக்கே இவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar - 22) என்ற இளைஞருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது கண்ணாடிப் போத்தலால் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இச்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்காணிப்பு கேமரா</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரும் அவரது நண்பரான பேட்லி மாவினி ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/096cd039-e363-4ab5-b5b5-faf1deb94556/26-6a68778fb83e8.webp' /></p><p>
இச்சம்பவத்தின் காட்சிகள் தொடருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.
</p><p>
இந்தநிலையில் குறித்த வழக்கில் நண்பரான ஏற்கனவே பேட்லி மாவினிக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சரணீஸ் சிவகுமார் திங்கள்கிழமை கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.</p><p></p><h2>மன உளைச்சல்</h2><p>

தனியாகப் பயணித்த நபர் ஒருவரை அணுகிய இவ்விரு இளைஞர்களும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட நபர் தொடருந்தை விட்டு இறங்க முயன்றபோது கதவுகளை மூடி அவரை இழுத்துச் சென்று தடுத்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cffa15-8c10-40a3-9eee-2a4d1ba462dd/26-6a6877906799a.webp' /></p><p>பின்னர் அந்த நபரின் பையை பறிக்க முயன்ற போது, சரணீஸ் சிவகுமார் அவரது மண்டையில் கண்ணாடிப் போத்தலால் அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>
இந்த கொடூர சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தை விட்டே வெளியேறியுள்ளார்.</p><p></p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>

நீதிமன்றத்தில் தனது செயலைத் தற்காப்புக்காக (Self-defence) செய்ததாகச் சரணீஸ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும் அதனை முற்றாக நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்தா தேவைப்படும்போது உங்களைத் தற்காத்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது எனவும் ஆனால் ஒருவரின் தலையில் போத்தலால் அடிப்பது தற்காப்பு ஆகாது எனவும் இது நிரபராதி ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ce39eb-2a91-4c7d-8e84-560ebf52fe69/26-6a68778f06b50.webp' /></p><p>இக்குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் மட்டுமே என்பதால் சரணீஸுக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அவர் ஏற்கனவே 89 நாட்களைக் (சுமார் 3 மாதங்கள்) காவலில் கழித்துள்ளதால் எஞ்சிய காலத்தைக் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனைப் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-28T09:49:51+00:00</updated>
        </entry>
    </feed>
