<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T06:13:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-in-peru-1787289886"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-in-peru-1787289886</id>
            <summary type="text">பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இது கடுமையான அதிர்வாக உணரப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கொராகோராவுக்கு வடக்கே 35 கிலோமீற்றர் தொலைவில், பூமிக்கு அடியில் 108 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்</h2><p>

பூமியின் மிக ஆழமான பகுதியில் இது உருவானதால், தலைநகர் லிமா உட்பட அந்நாட்டின் பல பிராந்தியங்களில் இந்த அதிர்வு உணரப்பட்ட போதிலும், எவ்வித கடுமையான பாதிப்புகளையும் இது ஏற்படுத்தவில்லை என பெருவின் புவிப்பௌதிக நிறுவனத்தின் (IGP) தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9b1acd-ae89-490e-a01c-460d8e44be88/26-6a87e2aca9d2d.webp' /></p><p>

எவ்வாறாயினும், துரிதப் மீட்புக் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுவரை சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரியவருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T05:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335</id>
            <summary type="text">காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.</p><p>நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b16b93-34fa-4e71-a4db-fbc3e65e535e/26-6a87d890e8fa6.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பேருந்து மோதியதில் பலியான வெளிநாட்டுப் பயணி! சாரதி அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-national-died-after-being-hit-by-a-bus-1787286444"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-national-died-after-being-hit-by-a-bus-1787286444</id>
            <summary type="text">கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்று(20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><p>

புறக்கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற அந்த நபர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>பேருந்தின் சாரதி கைது</h2><p> </p><p>

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe58d63c-421f-463f-ae34-a56cd0e8c945/26-6a87d597873bd.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த்தில் குதிக்கும் பொது சுகாதார ஆய்வாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/phi-officers-islandwide-strike-1787285531"></link>
            <id>https://ibctamil.com/article/phi-officers-islandwide-strike-1787285531</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டுநாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் மூத்த சுகாதார மருத்துவ அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 19ஆம் திகதி இரவு கூடிய இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுடா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சுகாதார அமைச்சுக்கு கடிதம்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக, நேற்று (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் பொது சுகாதார ஆய்வாளர்கள் விலகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0bb1562-63c7-416c-8775-b8c934203845/26-6a87d1ff85bb0.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T04:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3000-year-old-pottery-shards-discovered-1787277127"></link>
            <id>https://ibctamil.com/article/3000-year-old-pottery-shards-discovered-1787277127</id>
            <summary type="text">நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று (20) மேற்கொண்ட ஆய்வில் இந்த பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.</p><p>மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p></p><h2>பானைமூடியின் உடைந்த துண்டு</h2><p> </p><p>அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3801167-1769-4b5e-b4bb-d49b887e3699/26-6a87c760a8e6c.webp' /></p><p>

வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். </p><p>ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. 

மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை.</p><p> அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும். 

அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். </p><p>

இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T03:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் பாடகி நந்தா மாலனி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-day-national-mourning-declared-for-nanda-malani-1787279392"></link>
            <id>https://ibctamil.com/article/3-day-national-mourning-declared-for-nanda-malani-1787279392</id>
            <summary type="text">இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.</p><p>பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலனியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><h2>இறுதிச் சடங்குகள்&nbsp;</h2><p>இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f521c910-c7a1-4fe7-aea2-ebaf8c29a12c/26-6a87b9bae13e6.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் நந்தா மாலனியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) இடம்பெறவிருக்கின்றதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>தனது கலைப் பயணத்தில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான பாடகிக்கான 12 சரசவிய விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் வென்றுள்ள இவர், புதிய படைப்புகளை ஒலிநாடாக்கள் (Cassettes) மற்றும் குறுந்தகடுகள் (CDs) மூலம் ரசிகர்களுக்கு வழங்கி இசைத்துறையில் பல புதிய பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட வடக்கில் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - ஜனாதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-order-release-land-in-northand-east-1787274138"></link>
            <id>https://ibctamil.com/article/president-order-release-land-in-northand-east-1787274138</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.</p><p>கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளையே உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அநுர குமார தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க முடியாது</h2><p>தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53c4aa53-8ae1-4515-a9b6-8147ccdd228a/26-6a87a5f3e92b9.webp' /></p><p>அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார். </p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். </p><p>

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-dead-including-two-from-the-same-family-1787275082"></link>
            <id>https://ibctamil.com/article/five-dead-including-two-from-the-same-family-1787275082</id>
            <summary type="text">மொனராகலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்த்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்குறித்த விபத்து இன்று அதிகாலை (21) மணியளவில் மொனராகல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்த்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>குறித்த விபத்து இன்று அதிகாலை (21) மணியளவில் மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>மொனராகலை ,கும்புக்கன பகுதியில், கெபிலித்த ஆலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற டிராக்டர் சுற்றுலா வாகனம் மீது டிப்பர் மோதியதில்&nbsp;இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.&nbsp;மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08579531-b6ae-487b-9258-48eb2f5a8299/26-6a87ad9c02937.webp' /></p><p>தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, 21,26,31,55 மற்றும் 56 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p>விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 வயதுடைய ரோஹன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-year-old-rohan-from-jaffna-national-level-team-1787277471"></link>
            <id>https://ibctamil.com/article/10-year-old-rohan-from-jaffna-national-level-team-1787277471</id>
            <summary type="text">தேசிய டெனிஸ் போட்டியில் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியினர் சாதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெனிஸ் போட்டியில் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியினர் சாதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் (Jaffna Flamingos) அணியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா நேற்று (20.08.2026) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.</p><p>இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட டெனிஸ் போட்டியில் பங்கேற்கும் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தேசிய மட்டப் போட்டி</span></p><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 வயதுடைய ரோஹன் தேசிய மட்ட அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சிறுவயதிலேயே தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd17ebc-67de-429f-928c-9893707533f6/26-6a87b278d85a1.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாண டெனிஸ் வீரர்களுக்கு உயர்மட்டப் பயிற்சிகளையும் போட்டி அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இதனால் தேசிய மட்டத்திற்கு வீரர்கள் தெரிவாகுவதில் சவால்கள் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.</p><p>

டெனிஸ் விளையாட்டு தற்போது விளையாட்டைத் தாண்டி பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், மாணவர்களை கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.
</p><p>
எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி தொடர்ச்சியான சுற்றுகளில் முன்னேறி வெற்றிபெற வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.</p><p>இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் (UK) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டலின் உரிமையாளருமான சந்திரசேகரம் கேதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக அருட்தந்தை அ.பி. திருமகன் கலந்து கொண்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடியாக அகற்றுங்கள் - யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-removal-liquor-shop-in-inuvil-1787272665"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-removal-liquor-shop-in-inuvil-1787272665</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.
</p><p>
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

இதன்போது, “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டதுடன், மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p>
</p><h2>மதுபானப் பாவனையின் தாக்கம்&nbsp;</h2><p>
மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் காணப்படுவதால், இதனால் சமூக ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b672bc5a-277f-40e6-8908-5e65d8989e14/26-6a87a149b2f0f.webp' /></p><p>குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது மதுபானப் பாவனையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும், கிராமத்தின் சமூகச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
அத்துடன், மக்களின் எதிர்ப்பையும் சமூகத்தின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த மதுபானசாலையின் அனுமதியை மறுபரிசீலனை செய்து, அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p>
இந்தக் கண்டனப் போராட்டத்தில் பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T01:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி.தெற்கு பிரதேச சபை எதிராக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/val-north-uc-demands-removal-of-illegal-waste-1787272123"></link>
            <id>https://ibctamil.com/article/val-north-uc-demands-removal-of-illegal-waste-1787272123</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபைக்கு எதிராக தீர்மானம் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபைக்கு எதிராக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 13 ஆம்
திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி.
வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (20-08-2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.</p><p>
</p><p></p><h2>பாரிய பள்ளங்கள்</h2><p>அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09126a1-3474-4aac-8a62-ce0b224dfedd/26-6a879bbc63a9a.webp' /></p><p>அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும்
13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>

அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் 13ஆம் திகதிக்கு முன்னர் வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது
விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில்
தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:51:21+00:00</updated>
        </entry>
    </feed>
