<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-21T23:23:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mercury-combustion-zodiac-signs-in-dangerous-1787343311"></link>
            <id>https://ibctamil.com/article/mercury-combustion-zodiac-signs-in-dangerous-1787343311</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.

பலவீனமான நிலையில் இருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.
</p><p>
பலவீனமான நிலையில் இருக்கும் புதனின் இந்த அமைப்பு செப்டம்பர் 18 வரை நீடிக்கும். </p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
</p><p>
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். </li><li>அலுவகலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். </li><li>நிறைய வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. </li><li>வேலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.</li><li> இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.</li><li> இக்காலத்தில் தொழிலில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. </li><li>குறிப்பாக எந்த ஒரு விஷயத்தை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.&nbsp;&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி </td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். </li><li>எந்த நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். </li><li>பெரிய முதலீடுகள் எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>வணிகர்கள் ஒப்பந்தங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். </li><li>ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். </li><li>மொத்தத்தில் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</li><li> பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. </li><li>இக்காலத்தில் உங்களுக்கு எதிராக மற்றவர்கள் செயல்படலாம்.</li><li> எனவே அப்போது உடனடியாக அவசரப்பட்டு எதையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். </li><li>அலுவலகத்தில் தகராறுகளை பெரிதாக்கவோ அல்லது கவனக்குறைவாகவோ முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா வர்த்தகப் போரில் வெடித்த புதிய சர்ச்சை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vance-mocks-pm-carney-s-trade-stance-1787340317"></link>
            <id>https://ibctamil.com/article/vance-mocks-pm-carney-s-trade-stance-1787340317</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளை எதிர்க்கும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney), அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளை எதிர்க்கும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney), அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) கடுமையாகச் சாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நியூயார்க்கில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும் தெரிவித்துள்ள அவர், கார்னி நான் டொனால்ட் ட்ரம்பை விடக் கடுமையாக நடந்துகொள்ளப் போகிறேன் என்று காட்டிக்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க மதுபானங்கள்</h2><p>இருப்பினும், இறுதியில் பல விவகாரங்களில் அவர் பணிந்துதான் போவதாகவும் இது கனடாவுக்குப் பெரிய வெற்றி என்று அவர் சித்தரிப்பது வேடிக்கையாக இருக்கின்றது எனவும்&nbsp;வேன்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a83ab71-7537-43c9-b0b6-93bd11ff4c5a/26-6a88a6214a353.webp' /></p><p>கனடா மீது 50 வீதம் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில் இதற்கு முக்கியக் காரணம் கனடாவில் அமெரிக்க மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுதான்.</p><p>இந்தநிலையில் வர்த்தக வரி உயர்வைக் தவிர்க்க அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்க கனடா ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்&nbsp;</h2><p> இந்தச் சூழலில் வேன்ஸின் கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>கனடிய மாகாண தலைவர்கள் பலர், பிரதமர் கார்னி அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகப் பணிந்து செல்வதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13c1066e-3656-4656-b6ab-6a284e7a7e20/26-6a88a621f206b.webp' /></p><p>இருப்பினும், அமெரிக்கத் தயாரிப்புகளைத் தடையின்றி விற்க அனுமதித்தாலும் அவற்றை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.</p><p>இந்த விவகாரம், அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளபோது வெளிவந்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் நிலத்தடி ஆயுதப் புதையல் கண்டுபிடிப்பு: ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பென சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/germany-uncovers-russian-weapons-cache-forest-1787333468"></link>
            <id>https://ibctamil.com/article/germany-uncovers-russian-weapons-cache-forest-1787333468</id>
            <summary type="text">ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வெளியே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள் (Handguns) மற்றும் வெடிமரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வெளியே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள் (Handguns) மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஆயுதப் புதையலை ஜெர்மன் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p>இந்தச் சம்பவம் ரஷ்ய உளவு அமைப்புகளின் கொலைச் திட்டங்கள் அல்லது சதி வேலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.</p><p>இது தொடர்பில் ரோமானியாவில் உள்ள உளவு அதிகாரி ஒருவரை தங்கள் நாட்டிற்குக் கொண்டுவந்து விசாரிக்க ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>கடுமையான வன்முறை</h2><p>இந்த விடயம் குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் (Alexander Dobrindt) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தெரிவித்த அவர், “தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் கடுமையான வன்முறைச் செயலைச் செய்யத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a2167c-ffe3-4809-baef-2a63977be9a3/26-6a88998a75399.webp' /></p><p>நாட்டின் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.</p><p>உளவுத்துறை தகவலின்படி இந்த ஆயுதப் புதையல் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், காவல்துறையினர் அந்த ஆயுதங்களை உடனடியாக அகற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> மாறாக, அவற்றை பயன்படுத்த முடியாதவாறு செயலிழக்கச் செய்து, அந்த இடத்திற்கு ஆயுதங்களை எடுக்க யார் வருகிறார்கள் என்பதை மாதக்கணக்கில் மின்-கண்காணிப்பு (Electronic Surveillance) மூலம் கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T18:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-korea-sends-drone-operators-to-russia-1787332384"></link>
            <id>https://ibctamil.com/article/north-korea-sends-drone-operators-to-russia-1787332384</id>
            <summary type="text">ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வடிம் ஸ்கிபிட்ஸ்கி (Vadym Skibitskyi) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இந்த புதிய படையில் உக்ரைன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 400 ட்ரோன் இயக்குநர்கள் (Drone Operators) சேர்க்கப்பட்டிருப்பது உக்ரைனுக்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>வடகொரிய வீரர்கள்&nbsp;</h2><p> ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டு வரும் நிலையில் ட்ரோன்களை இயக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த அலைவீச்சில் சேர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். </p><p>இவர்களது ட்ரோன்கள் உக்ரைன் எல்லைக்குள் உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என உக்ரைன் எச்சரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5911ce48-1294-4aac-a63e-274663690da7/26-6a88894934fbd.webp' /></p><p>புதிதாக வந்துள்ள வடகொரியப் படைகள் பெரும்பாலானவை ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>இதில் 1,000 பொறியாளர்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்களும் (Engineers and Deminers) அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>வடகொரிய வீரர்கள் உக்ரைனிய எல்லைக்குள்ளே நேரடியாகப் போரிடாமல், ரஷ்யாவின் பின்பகுதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் கூடுதல் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வடகொரிய வல்லுநர்கள்</h2><p>செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் சந்திப்பின் போது மேலும் 50,000 வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷ்யா கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வடகொரியா இதுவரை ரஷ்யாவிற்கு 150-க்கும் மேற்பட்ட KN-23 மற்றும் KN-24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் 120 ஏவுகணைகளை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6627bb-9dd2-405d-a44b-b9e9ca3b3cdf/26-6a88894a05a08.webp' /></p><p>ஏவுகணைகளை இயக்குவதற்கு உதவ வொரோனேஷ் (Voronezh) பகுதிக்கு சுமார் 90 வடகொரிய வல்லுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>ஆட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்குப் பதிலாக ரஷ்யாவின் சக்திவாய்ந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தருமாறு வடகொரியா கோரியுள்ளதுடன் ஏற்கனவே Pantsir-S1 அமைப்பைப் பெற்றுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜோங் உன்னைக் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தென்கொரியாவுடனான கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளைக் குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த தீவிர இராணுவ ஒத்துழைப்பு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:26:26+00:00</updated>
        </entry>
    </feed>
