<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-14T11:21:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் இன்று பிற்பகல் கோர விபத்து ஒருவரின் உயிர் பறிபோனது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fatal-accident-one-person-loses-his-life-1784026156"></link>
            <id>https://ibctamil.com/article/fatal-accident-one-person-loses-his-life-1784026156</id>
            <summary type="text">&amp;nbsp;மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
உயிரிழந்தவர், மதவாச்சியாவில் உள்ள வஹமாலு கொல்லேவ பள்ளியைச் சேர்ந்த 32 வயது நபர் ஆவார்.
</p><p>
</p><h2>பாரவூர்தி -மோட்டார் சைக்கிள் மோதி விபத்து</h2><p>ஹட்டனில் உள்ள கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ஒருபாரவூர்தி, மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியபோது இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b3f7d4-5513-4c3d-a239-94906648b160/26-6a56176e65cf7.webp' /></p><p>ஒரு நீதிமன்ற வழக்குக்காக மதவாச்சியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குச் சென்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>
பாரவூர்தியின் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மதவாச்சி காவல்துறைபோக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் சர்ச்சை : இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-airbus-aircraft-deal-ciaboc-1784025154"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-airbus-aircraft-deal-ciaboc-1784025154</id>
            <summary type="text">சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்&amp;nbsp;இலஞ்ச ஊழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அந்த ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.</p><p>

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p></p><h2>&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு</h2><p>

வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/630e6fd3-bf5b-4f6e-85e2-8b7ee64a531b/26-6a56132ff35f7.webp' /></p><p> </p><p>

அத்துடன், இந்த விசாரணைகளின் மேலதிக முன்னேற்றங்களை அறிக்கை செய்வதற்காக மற்றுமொரு திகதியை வழங்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர். </p><p>

இதன்போது, வர்த்தகரான நிமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதார முஹந்திரம்கே, நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரினார்.</p><p></p><h2>கபில சந்திரசேன உயிரிழப்பு&nbsp;</h2><p> </p><p>

இருப்பினும், குறித்த நபர் இதுவரையில் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படாததால், அவர் சார்பில் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதம நீதவான் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4341e2-0566-4a5d-9944-2d056a3d8765/26-6a56132f331ad.webp' /></p><p> </p><p>

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

வழக்கின் இரண்டாவது சந்தேகபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகபரான ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p> 

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு அஞ்சுகிறாராம் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டனின் புதுக்கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-kumara-our-namal-is-very-afraid-johnston-1784025236"></link>
            <id>https://ibctamil.com/article/anura-kumara-our-namal-is-very-afraid-johnston-1784025236</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ்சுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அனுர குமார திசாநாயக்க தற்போது அந்த அச்சத்தை மறைக்க முடியாத வகையில் நடந்துகொள்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்கு பெருகும் ஆதரவு</h2><p>"அந்த அச்சத்தை வைத்துக்கொள்ளுங்கள், கனவான்களே..." என்று கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு நகரக் கடைகளிலும் கிராமப் பேருந்துகளிலும் ஒருமித்த கண்டனத்தை சாமானிய மக்கள் கோரி வருவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d19690-227d-4ad1-b726-17bcd8e861c7/26-6a56133e6e40c.webp' /></p><p> </p><p>இன்றைய சமூகத்தில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக உருவாகி வரும் இந்த மாபெரும் மக்கள் போக்கைக் கண்டு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மிகவும் கவலை கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&amp;nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயற்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் அதிக நெரிசல்&nbsp;</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7104383-0891-45fe-84b0-1ac05f32cf67/26-6a560d29529c2.webp' /></p><p> சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன.</p><p> வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை&nbsp;</h2><p>காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67bf3e2-df55-47fe-a714-fa95efcfb06a/26-6a560cf6844a0.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம். சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பிரசன்னவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612"></link>
            <id>https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612</id>
            <summary type="text">&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) முடிவு செய்தது.</p><p>

முன்னாள் அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>சட்டத்தரணி விடுத்த கோரிக்கையும் நீதிமன்றின் அனுமதியும்</h2><p>&nbsp;சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை இன்றிலிருந்து ஓகஸ்ட் 02 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ad96f0-4b29-4a5f-a262-ac70b8af28d5/26-6a560d1dd0ee8.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அவர் மீதான பயணத்தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973"></link>
            <id>https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை 02 சரீரப் பிணைகளில்
விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c656a68-8058-4002-a30a-e79c1a1cc2b4/26-6a5607beeb451.webp' /></p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டார். </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டார்.</p><p>

மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-defers-hearing-on-suresh-sallay-s-petition-1784019981"></link>
            <id>https://ibctamil.com/article/court-defers-hearing-on-suresh-sallay-s-petition-1784019981</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்படி, குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி&nbsp;சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0d96606-8b34-433f-ad67-f8cc2a2f1eb8/26-6a560048cd790.webp' /></p><p>இதனைத் தொடர்ந்தே, மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை தவிர்த்து புதிய துறைமுகத்தை அமைக்க தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uae-prepares-to-build-new-port-bypassing-hormuz-1784020073"></link>
            <id>https://ibctamil.com/article/uae-prepares-to-build-new-port-bypassing-hormuz-1784020073</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து ஒரு புதிய துறைமுகத்தை அமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து ஒரு புதிய துறைமுகத்தை அமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்படி, துபாயை தளமாக கொண்ட முக்கிய உலகலாவிய நிறுவனங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குக் கடற்கரையில் ஒரு புதிய துறைமுகம் மற்றும் கொள்கலன் முனையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை</h2><p>மேலும், ஃபுஜைரா கடற்கரையில் இந்த புதிய பல்நோக்கு துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fee679-0739-4100-a88a-895718bc6517/26-6a55fc6a9e4fb.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-gold-price-rate-reduce-in-sri-lanka-1784018944"></link>
            <id>https://ibctamil.com/article/today-gold-price-rate-reduce-in-sri-lanka-1784018944</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><p>அதற்கமைய 24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று (14) 374,000 ரூபாயாக ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>ஒரு கிராமின் விலை</h2><p>மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c15d45f2-2369-4340-ab43-96c56f0d42ab/26-6a55fb009b6d5.webp' /></p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள்: இந்தியரும் பலி! பதிலடி தமது உரிமை என்கிறது UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-oil-tankers-in-strait-of-hormuz-indian-dies-1784009035"></link>
            <id>https://ibctamil.com/article/attack-oil-tankers-in-strait-of-hormuz-indian-dies-1784009035</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>ஒமான் கடல் எல்லை</h2><p>

'மொம்பாசா' (Mombasa) மற்றும் 'அல் பாஹியா' (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e0bd881-b904-4064-b63b-5843d9ac6131/26-6a55e0642aa34.webp' /></p><p>ஒமான் கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>கப்பல்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல்களால் இரண்டு டேங்கர் கப்பல்களுக்கும் பொருள் சேதம் ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>"அப்பட்டமான தாக்குதல்" என்று கண்டித்ததோடு, "இதற்கு பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையையும் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளது" என்றும் கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நண்டுக்கறி - சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-named-world-s-top-50-food-destinations-1784013235"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-named-world-s-top-50-food-destinations-1784013235</id>
            <summary type="text">உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.
ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்&#039; (Travel and Tour World) நிறுவனம் 2026 ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.</p><p>
</p><p>ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel and Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்&nbsp;இந்த விடயம்&nbsp;குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர நேர்த்தியான உணவகங்கள் வரை இங்கு பலதரப்பட்ட சுவைகளை அனுபவிக்க முடியும்" என அதில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>தனித்துவமான உணவு</h2><p>
இந்தத் தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கை இந்தப் பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dca23f-7ce9-4d04-90c2-3c1911a3c754/26-6a55f14e70675.webp' /></p><p>
உணவு கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவுகளின் பன்முகத்தன்மை, வீதி உணவுக் கலாசாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள், நிலைத்தன்மை.</p><p> மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>10 முக்கிய இடங்கள் </h2><p>இலங்கையின் சமையல் கலையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய 10 முக்கிய இடங்களையும் இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது:</p><p>1. கொழும்பு: சோறும் கறியும், கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள்.

2. காலி: பிரசித்தி பெற்ற கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் காலணித்துவ காலத்து உணவகங்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb6f470-0751-44ce-bcc0-4b8349e66324/26-6a55f14d89f6e.webp' /></p><p>3. கண்டி: பாரம்பரிய சோறும் கறியும் மற்றும் உள்நாட்டு பாரம்பரிய இனிப்பு வகைகள்.

4. நீர்கொழும்பு: கடல் உணவு கறிகள், சுடச்சுட வறுத்த மீன்கள் மற்றும் காயல் (Lagoon) உணவுச் சிறப்புகள்.

5. எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மலையக உணவு அனுபவங்கள்.
</p><p>
6. யாழ்ப்பாணம்: உலகப் புகழ்பெற்ற நண்டுக்கறி, தோசை மற்றும் காரசாரமான தமிழ் பாரம்பரிய சுவைகள்.

7. மிரிஸ்ஸ: புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் கடற்கரையோர தளர்வான உணவு அனுபவம்.</p><p>

8. நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலணித்துவ கால பாரம்பரிய உணவுகள்.

9. ஹிக்கடுவ: கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் துடிப்பான கடற்கரை உணவகங்கள்.
</p><p>
10. திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கடலோர உணவு கலாசாரம்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966"></link>
            <id>https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966</id>
            <summary type="text"> புதிய இணைப்பு  கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை க...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு </h2><p> கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் லிந்துலை பாடசாலையில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>
ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p> 

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சிறுவனைத் தேடும் பணி</h2><p> 

காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d34e4c-2d79-4fee-8d27-d6a29c1758ce/26-6a55bd1436a70.webp' /></p><p>காவல்துறை கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாய நோக்க அரசியல் செய்யும் சஜித்தின் திட்டங்கள்! கடுமையாக விமர்சித்த வட்டகல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-rajapaksa-plans-politics-for-political-gain-1784015846"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-rajapaksa-plans-politics-for-political-gain-1784015846</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் இன்று அவர்களுடனையே கூட்டணியம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் இன்று அவர்களுடனையே கூட்டணியமைக்க முயற்சிப்பது வேடிக்கையான அரசியல் கொள்கையை வெளிப்படுத்துகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல விமர்சித்துள்ளார்.</p><p>

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், </p><p>


பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருளுக்கும் எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சியினர் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.</p><p></p><h2>பாதாளக்குழுக்களுடன் தொடர்பு</h2><p>

பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. பாதாளக்குழுக்களுடன் கொண்டுள்ள தொடர்பு விசாரணைகளில் வெளிவரும் என்று எதிர்க்கட்சியினர் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c78a8661-a2d2-4cc9-a8fa-0a87e1829e9e/26-6a55ebe87bb70.webp' /></p><p>
போதைப்பொருளுக்கும் எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை எவ்வழியிலாவது நிறுத்த வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். அதற்காக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
</p><p>
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அவர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அவர்களுடன் கூட்டணியமைக்க முயற்சிப்பது அவரது அரசியல் கொள்கையை வெளிப்படுத்துகிறது.</p><p>

தேவைக்கு ஏற்ப அரசியல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை எதிர்கட்சித் தலைவர் திருத்திக் கொள்ள வேண்டும். 

எதிர்க்கட்சியினர் எதற்காக கூட்டணியமைத்துள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.</p><p> ஊழல் மோசடியில் ஒருவர் சிறைச் செல்லும் போது வெளியில் இருந்து அவருக்காக குரல் கொடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள்.இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது"என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைகக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகும் பிள்ளையான், சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillayan-and-suresh-salley-in-custody-economy-risk-1784012988"></link>
            <id>https://ibctamil.com/article/pillayan-and-suresh-salley-in-custody-economy-risk-1784012988</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது குறித்து&nbsp;முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி,&nbsp;பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது GSP+ சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற மதிப்பீட்டை பாதிக்கக் கூடும் என்று பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.</p><p> 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் GSP+ வர்த்தக சலுகைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c4462f3-a9c8-480f-9da9-67ae9fafa715/26-6a55e806426ff.webp' /></p><p>இலங்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றது. இத்தகைய விவகாரங்களை மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானிக்கின்றது.&nbsp;</p><p>இந்த நிலையில், பிள்ளையான் மற்றும் சலே ஆகியோரின் தொடர்ச்சியான தடுப்புக் காவலும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் மரணங்களும், GSP+ சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டை பாதிக்கக் கூடும். </p><p>இந்த சலுகையை இழப்பது, ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் மீது, 5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும்“ என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து அபராதம் குறித்த போலி தகவல்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fake-information-about-traffic-fines-1784013887"></link>
            <id>https://ibctamil.com/article/fake-information-about-traffic-fines-1784013887</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>
மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>அரசின் உத்தியோகபூர்வ GovPay&nbsp;</h2><p>இது குறித்த அறிக்கையில், “அரசின் உத்தியோகபூர்வ GovPay இணையதளத்தைப் போல போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32560322-5bc6-47db-bc40-c36d2a74c53c/26-6a55e4a87e040.webp' /></p><p>
இலங்கை அரசின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் இணைய வழியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கட்டண முறையே GovPay ஆகும்.
வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில், காவல்துறையால் வழங்கப்படும் இடத்திலேயே வழங்கப்படும் அபராதப் பத்திரங்களுக்கான தொகையையும் இந்த முறையின் ஊடாக செலுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், இந்த உத்தியோகபூர்வ முறையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பல சம்பவங்கள் இலங்கை காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T07:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/change-in-second-term-examination-dates-1784011743"></link>
            <id>https://ibctamil.com/article/change-in-second-term-examination-dates-1784011743</id>
            <summary type="text">வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, வடமேல் மாகாணத்தில் நாளை (15) முதல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த பரீட்சைகள், ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திருத்தப்பட்ட கால அட்டவணை</h2><p>

வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 6 - 9 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.17 வரையிலும், 10 - 11 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.20 வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82040ef5-9237-44a1-962b-f24888d507ab/26-6a55dd52b209b.webp' /></p><p>எவ்வாறாயினும், திட்டமிட்டபடி பரீட்சை நடவடிக்கைகளை நாளை முதல் 20 ஆம் திகதி வரை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய, இவ்வாறு பரீட்சையின் 4 நாட்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த 4 நாட்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை இன்றைய தினம் (14) வழங்கப்படவுள்ளது.</p><p>வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நிறுவனம்இ அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கோட்ட அலுவலகங்களுக்கு விடுவிப்பதில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல ட்ரோன் விமான சேவை : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-test-plans-for-passenger-carrying-drone-service-1784009813"></link>
            <id>https://ibctamil.com/article/sl-test-plans-for-passenger-carrying-drone-service-1784009813</id>
            <summary type="text">நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>இலங்கையின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளன&nbsp;</h2><p>

இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3fbb24-9327-45e0-a0a4-f42f307f46cc/26-6a55d9781c575.webp' /></p><p>சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த நிலையில் அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q7omPHyPxYQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுதான் பசிலும் கப்ராலும் அரங்கேற்றிய சர்ச்சைக்குரிய ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-cabral-s-bad-economic-plan-for-sri-lanka-1784009410"></link>
            <id>https://ibctamil.com/article/basil-cabral-s-bad-economic-plan-for-sri-lanka-1784009410</id>
            <summary type="text">இலங்கை மக்களின் பணத்தை கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு செய்து நாட்டிற்கு ரூ. 184 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களின் பணத்தை கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு செய்து நாட்டிற்கு ரூ. 184 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மீதான வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளது.</p><p>

2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, ரூ. 184 மில்லியன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின் பேரில் திரும்பப் பெறப்பட்டது.</p><p> இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி உரிய தொகையைச் செலுத்தாமல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>நிதி அமைச்சராக இருந்த&nbsp;பசில் </h2><p>அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (13) தனது தீர்ப்பை அறிவித்து. அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3032b268-f979-4726-a798-bff382cfbc8a/26-6a55d6abdc332.webp' /></p><p>பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சரவை அதிகாரங்களுடன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவர்த் கப்ரால், இலங்கையைத் திவாலாக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளை, 2022 மார்ச் 4 அன்று பி.பி.சி சிங்கள இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பு உறுதிப்படுத்துகிறது.</p><p>&nbsp;இலங்கை மத்திய வங்கியின் பணவியல் சபை, நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார சவால்களைச் சமாளிப்பதற்காக 8 முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. </p><p>அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் பணவியல் ஆலோசகராக, இலங்கை மத்திய வங்கி இந்த முன்மொழிவுகளை உடனடியாகச் செயல்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவை அறிவித்து, மத்திய வங்கியின் பணவியல் சபை இந்தப் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது.</p><p></p><h2>உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கை</h2><p>

அதன்படி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக, இலங்கை மத்திய வங்கியானது நிலை வைப்பு வசதி விகிதத்தையும் (SDFR) நிலை கடன் வசதி விகிதத்தையும் (SLFR) 100 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.</p><p></p><p>வெளிப்புற அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் இடையூறுகளையும் கருத்தில் கொண்டு, இத்தகைய பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்க, வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், அத்துடன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு கொள்கைத் தொகுப்பு அவசியம் என்று பணவியல் வாரியம் கருதியது," என மத்திய வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், நாட்டின் பணவியல் கொள்கை வகுக்கும் அமைப்பான மத்திய வங்கி, அரசு வருவாய்க் கொள்கையை மாற்றுவது தொடர்பான பல பரிந்துரைகளை முன்வைத்தது.</p><p></p><h2>அந்நிய செலாவணி வரவு</h2><p> அந்த முன்மொழிவுகள் பின்வருமாறு:
</p><ul><li>
மத்திய வங்கியின் முந்தைய பரிந்துரையின் அடிப்படையில், அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a0aa44-f573-4684-bebc-eb1b193f93cd/26-6a55d6ac94649.webp' /></p><ul><li>
எரிபொருள் விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்களில் உடனடி உயர்வு
வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களையும் முதலீடுகளையும் மேலும் ஊக்குவித்தல்.</li><li>ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நகர்வை விரைவுபடுத்துதல்.</li><li>பொருத்தமான வரி உயர்வுகளின் மூலம் நிலையான அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரித்தல்
</li><li>அவசர அடிப்படையில் வெளி நிதியுதவி மற்றும் கடன் அல்லாத அந்நிய செலாவணி வரவுகளைத் திரட்டல்.</li><li>உத்திசார்ந்ததல்லாத மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத சொத்துக்களைப் பணமாக்குதல்
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதனத் திட்டங்களை ஒத்திவைத்தல்.&nbsp;</li></ul><p> இந்த முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக, வங்கி வட்டி விகிதங்களைப் பாதிக்கும் கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிப்பது, பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை மேலும் ஊக்குவிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவை முறையே 6.50% மற்றும் 7.50% ஆக உயர்த்தப்பட்டன. அதே நேரத்தில், வங்கி வட்டி விகிதம் தானாகவே 10.5% ஆக உயரும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><h2>டொருக்கும் அதிகமான வருமானம்</h2><p>மத்திய வங்கியும் ஒழுங்குபடுத்தப்பட்ட வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

அதன்படி,

கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 20.00% ஆகும்.
வங்கி மேலிருப்புக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 18.00% ஆகும்.
வீட்டுக் கடன் வசதிகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12.00% ஆக உயர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86966843-91d6-4a69-92f4-e46ebeb4872b/26-6a55d6ab226cd.webp' /></p><p> </p><p>பொருட்கள் ஏற்றுமதி மூலம் தொடர்ந்து ஒரு பில்லியன் டொருக்கும் அதிகமான வருமானம் கிடைத்தபோதிலும், 2022 ஜனவரி மாதத்தில் தொடர்ந்து எட்டாவது மாதமாக இறக்குமதி செலவினங்கள் அதிகமாகவே இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டது.</p><p>

சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், சமீபத்திய புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், இலங்கைத் தொழிலாளர்களின் இடம்பெயர்வு கணிசமாக அதிகரித்துள்ளதால், வரும் காலத்தில் வெளிநாட்டுப் பணவரவு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
2022 ஜனவரி மாத இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெருமளவில் நிலையாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவிக்கிறது.</p><p>

இக்காலகட்டத்தில் மொத்த அதிகாரப்பூர்வ கையிருப்பு, 1.3 மாத இறக்குமதிகளுக்குச் சமமாக, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அரசின் வெற்றிகரமான கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இருப்பினும், சமீபத்திய உலகளாவிய பாதகமான நிகழ்வுகள் பொருளாதார நடவடிக்கைகளில் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டது. </p><p>இது விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கும், பண்டங்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது என்றும், உள்நாட்டு உற்பத்தியைத் தக்கவைத்து, சாதகமான ஏற்றுமதி நிலைமைகளைப் பேணுவதற்கு உள்நாட்டு எரிசக்தி மற்றும் விநியோக இடையூறுகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T06:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு படைத்த நோர்வே: 90,000 இரசிகர்கள் உற்சாக வரவேற்பு - ஹாலண்ட் செய்த தவறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norway-receive-heros-welcome-after-world-cup-exit-1784005439"></link>
            <id>https://ibctamil.com/article/norway-receive-heros-welcome-after-world-cup-exit-1784005439</id>
            <summary type="text">நோர்வேயில் உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாகக் கால் இறுதி வரை முன்னேறிப் புதிய சாதனை படைத்த நோர்வே தேசிய கால்பந்து அணி வீரர்களை வரவேற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயில் உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாகக் கால் இறுதி வரை முன்னேறிப் புதிய சாதனை படைத்த நோர்வே தேசிய கால்பந்து அணி வீரர்களை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டனர்.</p><p>நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சுமார் 90,000 இரசிகர்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான மற்றும் உற்சாகமான வரவேற்பை அளித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>அதிக கோல்கள்&nbsp;</h2><p>ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலியிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நோர்வே அணி களமிறங்கியது. காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணியை வீழ்த்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130adda8-3eda-4698-81de-a96378dade2b/26-6a55cc428fe78.webp' /></p><p> நோர்வே வீரர எர்லிங் ஹாலண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எர்லிங் ஹாலண்ட் மேஜிக்கை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.&nbsp;</p><p> </p><p>இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக&nbsp; 7 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பே, மெஸ்சிக்கு அடுத்த இடத்தில்&nbsp;ஹாலண்ட் இருந்தார்.</p><p></p><h2>தோல்விக்கு முக்கிய காரணம்</h2><p>ஆனால் எர்லிங் ஹாலண்ட் செய்த தவறே நோர்வே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🇳🇴 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧<br><br>This is how the Norway national team were welcomed back in Oslo after their FIFA World Cup campaign came to an end. ❤️🤍💙<br><br>A heartfelt reception from supporters, celebrating a memorable tournament despite their quarter-final exit. 👏🇳🇴 <a href="https://t.co/quZhH7xl6E">pic.twitter.com/quZhH7xl6E</a></p>&mdash; WorldCup2026🏆 (@1amsepp) <a href="https://x.com/1amsepp/status/2076854693054095504?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தப் போட்டியின் 55வது நிமிடத்தில் நோர்வே அணி அடித்த கோல் நடுவரால் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது.&nbsp;</p><p>உலகத் தரவரிசையின் முன்னணி 4 அணிகளான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஆர்ஜெண்டினா ஆகியன தற்போது அரையிறுதிச் சுற்றில் மோதவுள்ளன.</p><p>


இந்நிலையில், இத்தொடரில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதி வரை தகுதிபெற்று வெளியேறிய நோர்வே அணிக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான வெளிநாட்டுப் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/philippines-woman-arrested-with-kush-at-bia-1784006631"></link>
            <id>https://ibctamil.com/article/philippines-woman-arrested-with-kush-at-bia-1784006631</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்போது அவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 180 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த போதைப்பொருளுடன் சந்தேக நபரான பெண்ணிடம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95ded461-6089-484a-8c9e-dc5b649608b2/26-6a55ccf40749c.webp' /></p><p>

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T05:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரகுராம் மீதான அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defamatory-statement-against-professor-raghuram-1783950083"></link>
            <id>https://ibctamil.com/article/defamatory-statement-against-professor-raghuram-1783950083</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுவதுடன், பேராசிரியர் ரகுராம் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது என இடைக்கால கட்டளையொன்றை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>இந்த வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர்
என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>

</p><h2>தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்&nbsp;</h2><p>
குறித்த வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதலாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரை அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc0cfc9-447c-4088-bea6-dae96164b803/26-6a54eb0519b1b.webp' /> </p><p>

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு
இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றுக்கு முனிலையாகி தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும்
காரணங்காட்டுதலுக்காகவும் ஜூலை 27ம் திகதிக்கு வழக்கை மன்று திகதியிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T05:25:21+00:00</updated>
        </entry>
    </feed>
