<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-19T04:31:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருப்பி அனுப்பப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/election-commission-money-diverted-pc-election-1784432854"></link>
            <id>https://ibctamil.com/article/election-commission-money-diverted-pc-election-1784432854</id>
            <summary type="text">2025 மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாததன் காரணமாக குறித்த நிதி இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மொத்த நிதி ஒதுக்கீடு</h2><p>
</p><p>
2025ஆம் ஆண்டுக்கான செலவின மதிப்பீட்டின்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு மொத்தமாக 21,487 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதில் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களுக்காக மாத்திரம் 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5b11f9-3116-4310-bea4-718d23594eda/26-6a5c4d3269554.webp' /></p><p>
</p><p>
இதன்படி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரூ. 12,487 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது, அதில் ரூ. 12,278 மில்லியன் தொடர் செலவினத்திற்காகவும், ரூ. 209 மில்லியன் மூலதனச் செலவினத்திற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T04:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ird-issued-warning-to-those-who-do-not-pay-taxes-1784431451"></link>
            <id>https://ibctamil.com/article/ird-issued-warning-to-those-who-do-not-pay-taxes-1784431451</id>
            <summary type="text">வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, வரி செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டுத் தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
2026 ஜூன் 3 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின்கீழ், உரிய கால அவகாசத்திற்குள் இணங்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிக்கப்படவுள்ள தண்டனை</h2><p>
</p><p>அதற்கமைய, ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e739bb0-8265-4512-a309-69e2c33905c3/26-6a5c486735d04.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்படும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து, குறைபாடுகளைச் சரிசெய்ய வரி செலுத்துபவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
இந்த 30 நாட்களுக்குள் இணங்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும் எனவும் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
</p><p>
இந்தச் சட்டங்கள் வரி செலுத்தாமல் இருப்போரை குறிவைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ஒத்துழைப்பு வழங்கும் குடிமக்களை இது பாதிக்காது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T03:53:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் மானியம் மீண்டும் நடைமுறை! அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-reintroduce-fuel-subsidy-1784431137"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-reintroduce-fuel-subsidy-1784431137</id>
            <summary type="text">வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் மானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அண்மையில் வளைகுடாப் பகுதியில் நிலைமை சீரடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த எரிபொருள் மானியத்தை, ஜூன் மாதத்தில் அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது.</p><p>

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரிப்பதால், அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>எரிபொருள் விலை</h2><p>
</p><p>
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தற்போதுள்ள எரிபொருள் விலையை மாற்றாமல், அதற்கான கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50360bc0-82bf-450c-8efe-ec0d71677303/26-6a5c46964af3d.webp' /></p><p>
</p><p>
முந்தைய மானியத் திட்டத்தின் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ. 100 மற்றும் ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ. 20 மானியம் வழங்கப்பட்டது, இதற்காக அரசு ரூ. 57 பில்லியன் ஒதுக்கியிருந்தது.</p><p>

இது தொடர்பாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ரஷ்யா நிறுவனங்கள்</h2><p>
</p><p>
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5328d79-0151-4215-8733-a01d628dd460/26-6a5c4696f0598.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், ரஷ்யாவின் அரசுடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்து, கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.
</p><p>
சந்தையில் ரஷ்ய நிறுவனங்களின் நுழைவு, போட்டியை அதிகரிப்பதோடு, உள்நாட்டு எரிபொருள் விலைகளை நிலையாகப் பராமரிக்கவும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T03:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையிலேயே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-open-fire-in-piliyandala-1784427651"></link>
            <id>https://ibctamil.com/article/police-open-fire-in-piliyandala-1784427651</id>
            <summary type="text">பிலியந்தலை - வீரசிங்க மாவத்த பகுதியில், சந்தேகத்திற்குரிய இரு நபர்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு ஒன்றை நடத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலியந்தலை - வீரசிங்க மாவத்த பகுதியில், சந்தேகத்திற்குரிய இரு நபர்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு ஒன்றை நடத்தியுள்ளனர்.</p><p>

குறித்த துப்பாக்கிச் சூடானது, இன்று(19) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>காவல்துறையினரின் தகவலின்படி, சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை நிறுத்தி சோதனையிட அதிகாரிகள் முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/015443a8-056d-4460-ac7b-cdf09caa4aec/26-6a5c380421498.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில்,&nbsp;இரண்டாவது சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்ய&nbsp;மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T02:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27age-man-found-dead-in-foul-smelling-house-1784420812"></link>
            <id>https://ibctamil.com/article/27age-man-found-dead-in-foul-smelling-house-1784420812</id>
            <summary type="text">யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.இது குறித்து தெரியவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp; குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம
உத்தியோகத்தர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் காவல்துறையினர் , பூட்டப்பட்டிருந்த
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.</p><p></p><h2>பியர் போத்தலும் -&nbsp; சிரிஞ்சும்</h2><p> </p><p>இதன்போது, 1997 ஆம்
ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcad534-6629-412a-be7a-57a15c1746ea/26-6a5c1a46bcc6d.webp' /></p><p>
சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும்
சிரிஞ்சும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளில்,, அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே
உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர்
சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினரால் தொடர்ந்து
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:54:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/serial-death-key-witnesses-to-corruption-and-fraud-1784422607"></link>
            <id>https://ibctamil.com/article/serial-death-key-witnesses-to-corruption-and-fraud-1784422607</id>
            <summary type="text">எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் பிணையில் வெளியில் உள்ளார்கள், பலர் வெகுவிரைவில் சிறை செல்வார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொள்ளவார்கள்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் பிணையில் வெளியில் உள்ளார்கள், பலர் வெகுவிரைவில் சிறை செல்வார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொள்ளவார்கள்&nbsp; என்று தெரியவில்லை என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நேற்று(18.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய சாட்சிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது கவலைக்குரியது.</p><p></p><h2>மர்மமான முறையில் உயிரிழப்பு&nbsp;</h2><p> </p><p>எயார் பஸ் கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவுக்கு சத்தியகடதாசி ஊடாக பலவிடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e423489-c64e-4eef-a6ae-50b0c5926e47/26-6a5c20d0d8ca9.webp' /></p><p>
</p><p>
எயார்பஸ் கொள்வனவு மோசடியில் தான் அப்போதைய ஜனாதிபதிக்கு தங்காலை கால்டன் இல்லத்தில் வைத்து இலஞ்ச தொகையை வழங்கியதாகவும்,பியங்கர ஜயரத்னவுக்கும் இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.</p><p>


தற்போது முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன.</p><p>

கடந்த கால படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில் அதனுடன் தொடர்புடைய பலர் அச்சமடைந்துள்ளனர்.</p><p>

எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியில் உள்ளார்கள். வெகுவிரைவில் சிறை செல்வார்கள்.</p><p>ராஜபக்ச குடும்பத்தின் சகலருக்கும் வழக்குகள் உள்ளன. அனைவரும் வரிசையாக வழக்கு விசாரணைகளுக்காக செல்கிறார்கள்” என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்தின் அலுவலகத்திற்கு முதன்முறையாக செல்லவுள்ள ரணில்! முக்கிய சந்திப்பில் நாமலும் இணையக்கூடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-to-visit-sajith-s-office-for-the-first-time-1784424142"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-to-visit-sajith-s-office-for-the-first-time-1784424142</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசின் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசின் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (23) கொழும்பு, சிறிமத் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.</p><p>இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>ஐக்கிய தேசியக் கட்சி - பொதுஜன பெரமுன</h2><p>சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவரது அலுவலகத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்தக் கூட்டத்தை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c4d91a-58dc-4474-a8fa-b66205d59a38/26-6a5c26d0012a3.webp' /></p><p>இதுதொடர்பாக நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையிலும் எதிர்க்கட்சித் தலைவரை தொடர்புகொண்டு கலந்துரையாடலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
தான் யால பகுதியில் இருப்பதால் எதிர்வரும் 23 ஆம் திகதியை கூட்டத்திற்காக ஒதுக்க முடியும் என சஜித் பிரேமதாச அறிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினம் கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ச நிச்சயமாக பங்கேற்கவுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர, எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAP</a>P இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T01:22:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 ஆண்டுகளின் பின்னர் கால்பந்து உலகக் கோப்பை வெற்றி மேடையில் இங்கிலாந்து அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-england-team-on-the-podium-vs-france-football-1784418632"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-england-team-on-the-podium-vs-france-football-1784418632</id>
            <summary type="text">1966-க்குப் பிறகு சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க&amp;nbsp; ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 3வது இடத்தை தனதாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1966-க்குப் பிறகு சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp; ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 3வது இடத்தை தனதாக்கியுள்ளது.</p><p>அமெரிக்காவின் மியாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, வெறும் மூன்று நிமிடங்களிலேயே இங்கிலாந்து&nbsp; முன்னிலை பெற்றது. </p><p>மீண்டும் 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சா மூலம் த்ரீ லயன்ஸ் அணி(இங்கிலாந்து ) தங்களது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The <a href="https://x.com/hashtag/ThreeLions?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ThreeLions</a>&#39; best-ever World Cup finish on foreign soil 👊 <a href="https://t.co/AUVdkZzAGB">pic.twitter.com/AUVdkZzAGB</a></p>&mdash; England (@England) <a href="https://x.com/England/status/2078616874087034930?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>நான்கு கோல்கள்&nbsp;</h2><p> </p><p>Defender வீரரான அவர், பந்தை தலையடியால் முட்டி கோலாக்கினார். 37-வது நிமிடத்தில்,&nbsp; இங்கிலாந்து தனது மூன்றாவது கோலை அடித்தது.&nbsp;&nbsp;</p><p>
முதல் பாதியின் கூடுதல் நேரத்தின் இறுதியில் சாகா மீண்டும் கோல் அடித்து தனது இரண்டாவது கோலைப் பூர்த்தி செய்தார்.</p><p>இங்கிலாந்து, பிரான்சின் தடுப்பாட்ட பலவீனங்களை பயன்படுத்திக்கொண்டு, இடைவேளையின்போதே நான்கு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இதில் சாகாவின் இரட்டைக் கோல்களே தனித்துவமான பங்களிப்பாக அமைந்தன.</p><p> </p><p>இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மிகவும் மேம்பட்டிருந்த பிரான்ஸ் அணிக்கு, 48-வது நிமிடத்தில் கைலியன் எம்பாப்பே துல்லியமாக கோல் அடித்து, புது நம்பிக்கையை அளித்தார்.</p><p></p><h2>மெஸ்ஸியை பின்தற்றிய&nbsp;எம்பாப்பே</h2><p>
</p><p>மாற்று வீரராகக் களமிறங்கிய பிராட்லி பார்கோலா, 66-வது நிமிடத்தில், மற்றொரு மிகச்சிறப்பான ஆட்டத்தால் பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d1ec97-8ef2-49ec-88c9-54aad5755529/26-6a5c13c3c6e1b.webp' /></p><p>பின்னர், பிரான்ஸ் கேப்டன் திரும்பி, பந்தை மிகத் துல்லியமாகக் கோலின் கீழ் மூலைக்குள் அடித்தார். இந்த கோல், கோல்டன் பூட் விருதிற்கான போட்டியில் எம்பாப்பேவை லியோனல் மெஸ்ஸியை விட இரண்டு கோல்கள் முன்னிலைப்படுத்தியதுடன், இத்தொடரின் எல்லாக் காலத்திற்குமான கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெ ஒரு கோல் மெஸ்ஸியை விட முன்னிலை பெற வைத்தது.
</p><p>
பிரான்ஸ் இங்கிலாந்தை நெருங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றிய நிலையில், 87-வது நிமிடத்தில் பெனால்டியை சாகா கோலாக மாற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.</p><p>

இருப்பினும், மீண்டும் ஒருமுறை, பிரான்ஸ் அணி முயற்சியைக் கைவிடவில்லை. ஆட்டத்தின் 90+6-வது நிமிடத்தில்&nbsp; டெம்பலே கோல் அடித்து, பிரான்ஸ் அணிக்கு வெற்றிபெற ஒரு வாய்ப்பை வழங்கினார்.</p><p></p><h2>நிறைவு பெற்ற பயணம்</h2><p>
</p><p>
பிரான்ஸ் அணி சமன் செய்வதற்காக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், ஜூட் பெல்லிங்ஹாம் கோலாக மாற்றி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="fr" dir="ltr">Fin de notre Coupe du Monde. Merci pour toutes les émotions 🙏<br><br>Tout un pays a vibré à vos côtés. Vous reviendrez plus forts, et nous serons toujours là 🇫🇷💙<a href="https://x.com/hashtag/FIFAWorldCup?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FIFAWorldCup</a> <a href="https://t.co/TAfoxa2sSB">pic.twitter.com/TAfoxa2sSB</a></p>&mdash; Equipe de France ⭐⭐ (@equipedefrance) <a href="https://x.com/equipedefrance/status/2078623998565380105?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இது ஆட்டத்தின் 10வது கோலாகவும், இங்கிலாந்தின் ஆறாவது கோலாகவும் அமைந்தது.
</p><p>
2026 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இது 1966-ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு அவர் பெற்ற சிறந்த நிலை இதுவாகும்</p><p> அதே நேரத்தில், பிரான்ஸ் நான்காவது இடத்துடன் இந்தத் தொடரில் தனது பயணத்தை நிறைவு செய்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T00:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27age-dies-in-motorcycle-accident-in-jaffna-1784420020"></link>
            <id>https://ibctamil.com/article/27age-dies-in-motorcycle-accident-in-jaffna-1784420020</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச்
சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச்
சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு&nbsp;</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f54bad8-ee68-4870-9bf0-e40068f91225/26-6a5c16b681423.webp' /></p><p>
</p><p>
இதன்போது அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டுசெல்லப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T00:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓயாது தொடரும் கேப்பாப்புலவு நிலத்திற்கான பல வருட போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/in-the-keppapulavu-protest-1784416221"></link>
            <id>https://ibctamil.com/article/in-the-keppapulavu-protest-1784416221</id>
            <summary type="text">கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக்
காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக்
காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின்
போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம்
சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் ஆதரவை
வழங்கியுள்ளனர்.</p><p>இராணுவத்தினரின்
கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி,
அப்பகுதி மக்கள் தங்களது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க மீண்டும் இரண்டாவது
கட்டமாக ஆரம்பித்த தொடர் போராட்டம் 25 ஆவது நாளாக தொடர்ந்து
இடம்பெற்று வருகிறது.</p><p>பல வருடங்களாக இடம்பெற்ற தொடர் போராட்டம் காரணமாக வற்றாப்பளை
புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் இருந்த காணிகளை இராணுவம் விடுவித்தது.</p><p></p><h2>பல வருடங்களாக போராடிய&nbsp;மக்கள் </h2><p> இருப்பினும் முழுமையாக காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து பல வருடங்களாக
போராடிய போது அரச தரப்புக்களினால் உங்களுக்காக காணிகள் முழுமையாக
விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழிகளோடு இந்த தொடர் போராட்டத்தை மக்கள் 1111
ஆவது நாளில் நிறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8fe16b-a47b-4cbc-8ff3-d402fa49a58d/26-6a5c0b197f79d.webp' /></p><p> இதன் பின்னர் இன்று வரை மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை. எனினும் மக்கள்
இது தொடர்பில் ஜனாதிபதி, ஆளுநர், மாவட்ட செயலாளர் என பலரிடமும் பலதடவைகள்
தமது காணி விடுவிப்பு தொடர்பாக கோரியும் எந்த தீர்வுமற்ற நிலையில் போராடியே
தமது நிலங்களை பெறுவது என்ற அடிப்படையில் மீண்டும் தொடர் போராட்டத்தை
ஆரம்பித்துள்ளனர்.</p><p>

​பல வருடங்களாகத் தொடரும் இந்த நில உரிமைப் போராட்டத்தில், தங்களின் சொந்தக்
குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரக் காணிகள் முழுமையாகத் தங்களிடம்
ஒப்படைக்கப்படும் வரை தங்களின் தார்மீகப் போராட்டம் ஓயாது என்பதை மக்கள்
இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தி தொடர்
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T23:24:14+00:00</updated>
        </entry>
    </feed>
