<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-14T21:23:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராகப் பாரிய கடற்படை முற்றுகையை ஆரம்பித்த அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-resumes-naval-blockade-on-iranian-ports-1784060931"></link>
            <id>https://ibctamil.com/article/us-resumes-naval-blockade-on-iranian-ports-1784060931</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த பதிவில், “ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இராணுவ விமானங்கள்</h2><p> 

தற்போதைய நிலையில், இப்பிராந்தியத்தின் கடல் மற்றும் வான் பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில் 20 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களும் நூற்றுக்கணக்கான நவீன இராணுவ விமானங்களும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff0472b-8d28-4455-8f47-36be2c1db692/26-6a56a2da3ad26.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த கடுமையான நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்! பல ட்ரோன்கள் அழிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claims-it-destroyed-us-weapons-in-gulf-1784056092"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claims-it-destroyed-us-weapons-in-gulf-1784056092</id>
            <summary type="text">பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அத்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்தோடு இதன் போது பல அமெரிக்க ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) செய்தி இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7802de1f-6709-4592-9e2d-3b0ea0c9584b/26-6a569adf55c88.webp' /></p><p>இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது விரோதப் போக்கைத் தொடரும் வரை இப்பிராந்தியத்திலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் மேலும் தாமதப்படுத்த மட்டுமே வழிவகுக்கும் எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதலால் உலகளாவிய மனிதாபிமானப் பேரழிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562"></link>
            <id>https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் பின்னடைவு என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன் நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மனித உரிமைகள்</h2><p>

இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d480c24d-812c-4a05-9865-99bbafd96873/26-6a56885522d67.webp' /></p><p>உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>உணவுப் பொருட்கள்</h2><p>இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1e8175-59c2-4c74-a90f-78c8bbac0931/26-6a56885470e73.webp' /></p><p>தற்போதைய இக்கட்டான சூழலில் இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14-07-2026) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>அதிகாரப்பூர்வ இணையத்தளம்</h2><p>இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd59717-f686-412e-ac40-7d4eb6a1728b/26-6a56808acc016.webp' /></p><p>மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப் பொருளாதாரத்தை முடக்க ஈரானின் ஆபத்தான வியூகம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

ஏமனில் உள்ள தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.</p><p>

ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடப்போவதாக ஈரான்
மறைமுகமாக எச்சரித்துள்ளது.
</p><p>
வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம் உலகின் மிக
முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்க ஈரான் முயன்று வருகிறது.</p><p></p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹூதி
அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் இது குறித்து எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67281cf2-92f6-4399-9221-c80c994ca873/26-6a566d4bac8e4.webp' /></p><p>குறித்த எச்சரிக்கையில், “நிலைமை மேலும் மோசமடைந்தால் பாப் எல்-மண்டேப் நீரிணையும்
ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.
</p><p>
இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப்
பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல்
போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது.</p><p>

ஈரானின் இந்த நகர்வு, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என்று அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4931d9c7-1f11-4540-b80c-241fd532684d/26-6a566c668b819.webp' /></p><p>அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால் ஈரான் தனது இறுதி ஆயுதமாக
இதைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
அதே நேரத்தில் ஹூதிகள் இந்த எல்லையைத் தாண்டினால் அமெரிக்கா மற்றும் அதன்
நட்பு நாடுகள் அவர்கள் மீது இன்னும் கடுமையான கூட்டு இராணுவத் தாக்குதலை
நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவிற்கு ட்ரம்ப் இட்ட கட்டளை : உடன் வெளியேற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-urged-netanyahu-israeli-troops-out-syria-1784052835"></link>
            <id>https://ibctamil.com/article/trump-urged-netanyahu-israeli-troops-out-syria-1784052835</id>
            <summary type="text">&amp;nbsp;​​சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;​​சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதாக ஆக்சியோஸ் இன்று செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.
</p><p>
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சிரியப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் இருப்பு பதட்டங்களை உருவாக்குவதாகவும், மேலும் பதற்றம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கூறியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.</p><h2>படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்</h2><p>"நீங்கள் அங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. நீங்கள் படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்," என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசி உரையாடலின் போது, கூறியதாக, ஆக்சியோஸ் மேற்கோள் காட்டிய ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e25a9e0-63b4-4385-a7da-3f376d5da2ff/26-6a567c650f867.webp' /></p><p>லெபனான் தொடர்பாகவும் l்ரம்ப் இதேபோன்ற கோரிக்கையை விடுத்ததாகவும், ஆனால் இஸ்ரேலுக்கு அதன் எல்லைகளில் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்று நெதன்யாகு வாதிட்டதாகவும் அது கூறியது.
</p><p>
துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் ஓரத்தில், சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை ட்ரம்ப் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்த அழைப்பு வந்ததாகவும், இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்வதாகவும் ஆக்சியோஸ் கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T18:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 'கிளி' வைரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-infection-parrot-virus-discovered-in-india-1784047166"></link>
            <id>https://ibctamil.com/article/new-infection-parrot-virus-discovered-in-india-1784047166</id>
            <summary type="text">இந்தியாவில் முதல் முறையாக கிளி போர்னா 4 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உலகெங்கிலும் கூண்டுகளில் வளர்க்கப்படும் கிளிகளுக்கு கடுமையான நோய்கள் உருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் முதல் முறையாக கிளி போர்னா 4 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>

உலகெங்கிலும் கூண்டுகளில் வளர்க்கப்படும் கிளிகளுக்கு கடுமையான நோய்கள் உருவாகும். சிகிச்சை அளித்து, சில நேரங்களில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் இந்த பிஏபிவி4 வைரஸ்தான் முக்கிய காரணியாக இருந்து வருகிறது.</p><p>இந்த வைரஸ் சாதாரண பறவைகளைத் தாக்குவதில்லை. கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், கொண்டைக்கிளிகள், காசுட்டீல்கள், லவ் பேர்ட்ஸ் மற்றும் பட்ஜரீகர்கள் உள்ளிட்ட சிட்டாகைன்' குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்களையே குறி வைத்துத் தாக்குகிறது.
</p><p>
</p><h2>அசாம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு</h2><p>இந்த நிலையில் அசாம் விஞ்ஞானிகள் இந்தியாவில் முதன்முறையாகக் 'கிளி போர்னா வைரஸ் 4' தொற்றைக் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/690dc028-4a3d-4ed1-89a4-f3682e9c0014/26-6a567502a3a0b.webp' /></p><p> கூண்டில் வளர்க்கப்படும் கிளிகளைத் தாக்கும் இந்த வைரஸ், பிடி டி என்ற ஆபத்தான நோயை ஏற்படுத்துகிறது. இதுபறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலங்களைப் பாதித்து, உடனே உயிரிழக்கச் செய்யும்.
</p><p>

அசாம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 83 பறவைகளிடம் நடத்திய ஆய்வில் 44 பறவைகளுக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.</p><p></p><p> </p><h2>கிளிகளில் ஏற்படும் மாற்றங்கள்</h2><p>இதன் காரணமாக செரிமான உறுப்புகள் சரியாக செயல்படாது. உணவை ஜீரணிக்க முடியாமல் போகும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7258184c-75ee-4ef6-9faf-e95abf8bdbb1/26-6a5675036a7a2.webp' /></p><p>
</p><p>
இந்தவைரஸ் தாக்கிய கிளிகளில் உடல் எடை வேகமாக குறைதல், உணவை விழுங்குவதில் சிரமம், ஜீரணிக்காத உணவு மலத்துடன்வெளியேறுதல், வாந்தி உண்டாகும். இந்தியாவில் இந்தவைரஸ் இருப்பதை உறுதிப்படுத்திய முதல் ஆய்வாகும்.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:42:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மொஜ்தபா கமேனி ...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mojtaba-khamenei-make-first-public-appearance-1784043306"></link>
            <id>https://ibctamil.com/article/mojtaba-khamenei-make-first-public-appearance-1784043306</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்த வாரம் தெஹ்ரானில் தனது தந்தை அயதுல்லா அலி கமெனிக்கான நினைவேந்தல் விழாவில் பொதுவெளியில் தோன்றக்கூடும்.என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அவர் பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். பொதுவெளியில் தோன்றாமல் டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்களில் எழுத்து பூர்வமான அறிக்கைகள் வாயிலாக மட்டுமே தனது உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.</p><h2>கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை</h2><p>சமீபத்தில் நடந்த தந்தை கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என்று ஈரான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f436a3-ee4e-48cf-9729-1783886ba362/26-6a565f06cbf16.webp' /></p><p>
</p><p>
</p><h2>அவர் நேரில் பங்கேற்பாரா</h2><p>இந்தநிலையில் வரும் 23-ம் திகதி மாலை 5 மணிக்கு தலைநகர் தெஹ்ரானில் கமெனி நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொஜ்தபா கமெனி பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3fb8c72-e236-4792-8096-42c4983de19a/26-6a5660a31df1f.webp' /></p><p> </p><p>இந்த நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்பாரா? அல்லது காணொளி உரையாடல் மூலம் பங்கேற்பாரா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T16:40:36+00:00</updated>
        </entry>
    </feed>
