<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-18T07:46:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கோர விபத்து - காவல்துறை சார்ஜன்ட் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-sergeant-killed-road-accident-in-vavuniya-1784356461"></link>
            <id>https://ibctamil.com/article/police-sergeant-killed-road-accident-in-vavuniya-1784356461</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவம் வவுனியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்து சம்பவம் வவுனியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்து</h2><p>
வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724da790-95b4-49b5-a5c9-28015d2eea0c/26-6a5b262b26c48.webp' /></p><p>இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் 45 வயதுடைய வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-18T07:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[25 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை : ஐவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-sentenced-to-death-in-2001-murder-case-1784356312"></link>
            <id>https://ibctamil.com/article/five-sentenced-to-death-in-2001-murder-case-1784356312</id>
            <summary type="text">குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கில் அத்தனகல்லாவின் வெலகெதரவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார்.</p><p>2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி ஒரு குழுவினர் வெலகெதர, தியகவிட்டியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.</p><p></p><h2>கம்பஹா மேல் நீதிமன்றம்</h2><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சயங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே ஐவரும் கொலைக் குற்றம் மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e30a94-fd9c-4807-a202-198656e184f8/26-6a5b254766015.webp' /></p><p>இதனையடுத்து அவர்கள் ஐந்து பேருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபரின் இறுதிச் சடங்கு தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/c-d-wickramaratne-s-funeral-to-be-held-on-monday-1784355833"></link>
            <id>https://ibctamil.com/article/c-d-wickramaratne-s-funeral-to-be-held-on-monday-1784355833</id>
            <summary type="text">

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை செய்துகொண்டதாகக் கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல், திங்கட்கிழமை (20) மாலை பொரளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை செய்துகொண்டதாகக் கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல், திங்கட்கிழமை (20) மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
</p><p>
அதுவரை அவரது உடல் நாளை (19) முதல் பொரளையில் உள்ள ஒரு தனியார் மலர்சாலையில் வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபரின் உயிரிழப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய சிறப்பு உத்தரவின் பேரில், மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவு இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9efc584b-6fae-47e4-a048-088b1ce3358a/26-6a5b24ae0cdd6.webp' /></p><p>

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று (17) காலை துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-18T07:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்ட நிர்ணய சதி - Jaffna கிங்ஸ் உரிமையாளருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-kings-co-owner-another-indiansl-remanded-1784354780"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-kings-co-owner-another-indiansl-remanded-1784354780</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் &#039;ஜப்னா கிங்ஸ்&#039; (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் உட்பட இரண்டு இந்தியர்கள் ஜூலை 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'ஜப்னா கிங்ஸ்' (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் உட்பட இரண்டு இந்தியர்கள் ஜூலை 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று வெள்ளிக்கிழமை காலை விளையாட்டு ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p></p><h2>காணொளி ஆதாரங்கள்&nbsp;</h2><p>நான்கு எல்பிஎல் போட்டிகளின் முடிவுகளை மாற்றி அமைப்பதற்காக சந்தேக நபர்கள் வீரர்களுக்குப் பணம் வழங்கியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc1065-9e07-4fec-9e4a-b53a82c19834/26-6a5b23140d4e4.webp' /></p><p>அத்துடன் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் காணொளி ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.</p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, பானுக ராஜபக்ச, துனித் வெல்லலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ உள்ளிட்ட பல வீரர்களை, போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுகளுடன் சந்தேக நபர்கள் அணுகியதாகக் கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>சாட்சியமும் இல்லை</h2><p>எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad20b613-62cc-4abc-810b-3befc715af98/26-6a5b2314b2635.webp' /></p><p>“முறைப்பாட்டுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை.</p><p> இவர்கள் பெரும் தொகைப் பணத்துடன் இலங்கைக்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவே ஆகும். இந்தச் சந்தேகநபர்கள் இளைஞர்கள் ஆவர் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>விபரங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கினால் விசாரணைகளுக்குத் தடங்கல் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கர்களுக்கு பறந்த அவசர எச்சரிக்கை! உச்சக்கட்ட போர்ப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-reissues-middle-east-travel-warning-1784351128"></link>
            <id>https://ibctamil.com/article/us-reissues-middle-east-travel-warning-1784351128</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்களைக் காரணம் காட்டி, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்களைக் காரணம் காட்டி, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை&nbsp;தனது X தள பதிவில் தெரிவித்துள்ளது.</p><p>மத்திய கிழக்கு நாடுகளுக்கு அல்லது அதன் வழியாகப் பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களை வாஷிங்டன் வலியுறுத்தியதுடன், பயணிகள் அந்தந்த நாடுகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகளை ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம்</h2><p>

 

"மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றம் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடையவும் வாய்ப்புள்ளது," என்று&nbsp; ஆலோசனை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dd7280-373c-4c4c-aa97-8a1074f52d7f/26-6a5b1186582fe.webp' /></p><p>இதனால், அங்குள்ள நிலவரங்கள் குறித்த முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>அத்துடன் மத்திய கிழக்கு பகுதி அல்லது அதன் வழியாகப் பயணிப்பவர்கள் தங்கள் விமான நிறுவனங்களிடம் விமானப் பயண அட்டவணைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியது.</p><p>தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கில் காவல்துறையின் இறுதி மரியாதையை இழந்த சி. டி. விக்ரமரத்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/c-d-wickramarathne-loses-final-police-honor-1784353549"></link>
            <id>https://ibctamil.com/article/c-d-wickramarathne-loses-final-police-honor-1784353549</id>
            <summary type="text">

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு, முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு, முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
காவல்துறை நெறிமுறைகளின்படி, உயிரை மாய்த்துக் கொள்ளும் எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் மரியாதை செலுத்துவதற்கு உரிமை இல்லை என்று கூறப்படுகிறது.</p><p>

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>&nbsp;</p><h2>தீவிர விசாரணை</h2><p>

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை ஆய்வு செய்யும் பாணியில் பெற்று பின்னர், தன்னை தானே சுட்டுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47abcc62-afb1-4d72-a18e-ff4e49fcec07/26-6a5b179942e04.webp' /></p><p>
</p><p>
சம்பவம் நடந்த நேரத்தில், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர, முன்னாள் காவல்துறை மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே காவல்துறையினர் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T06:35:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monthly-stipend-for-students-with-special-needs-1784354613"></link>
            <id>https://ibctamil.com/article/monthly-stipend-for-students-with-special-needs-1784354613</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.</p><p>இதன்போது, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><h2>விளக்கமளித்த அதிகாரிகள்&nbsp;</h2><p>அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8917d7e-f4ba-40ea-a9a0-9f44f3519ea7/26-6a5b1b10445a5.webp' /></p><p>2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>

"டித்வா" சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. </p><p>

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும், அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T06:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/terrorism-act-pta-1784352347"></link>
            <id>https://ibctamil.com/article/terrorism-act-pta-1784352347</id>
            <summary type="text">பொதுவாக சட்டங்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவே உருவாக்கப்படுகின்றது. ஆனால் இனமொன்றையே நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதே பயங்கரவாத தடைச்சட்டம். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக சட்டங்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவே உருவாக்கப்படுகின்றது. ஆனால் இனமொன்றையே நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதே பயங்கரவாத தடைச்சட்டம். </p><p>இதனால் இலங்கை அரசின் பயங்கரவாத சட்டம் உலகின் கொடூரமான சட்டமாக கருதப்படுகிறது. &nbsp;இதனை உடன் நீக்க வேண்டும் என்று இலங்கை அரசு மீது பன்னாட்டுச் சமூகம் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இலங்கையில் தொடர்ந்த ஆட்சி அமைக்கும் அரசுகள் “நீக்காமல் திருத்துகிறோம்!” என்று கூறி சர்வதேசத்தை சமாளிக்க முற்படுகின்றன. </p><p>ஆனால் புதிய சட்டம் இன்னும் ஆபத்தைக் கொண்டது என்றும் அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் தொடர் குரல்கள் எழத் துவங்கியுள்ளன.</p><p></p><h2>தற்காலிக ஏற்பாடாக வந்த சட்டம்</h2><p>

ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பெரும் எழுச்சி கொண்டிராத காலப் பகுதியாக எழுபதுகளின் இறுதியை கருதலாம். </p><p>தனிச்சிங்கள சட்டம் அதனை தொரடந்து முன்னெடுத்த இனப்படுகொலைகளும் தனி ஈழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழர்களை தள்ளிய காலத்தில் குறிப்பாக தமிழ் இளைஞர்களை கபளீகரம் செய்கிற நோக்கில் சிங்கள அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. </p><p>1979ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் 48ஆவது இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவே இன்றைக்கு 47 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்து வருகிறது.
</p><p>
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த காலத்தில் &nbsp;இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியிருந்தார். </p><p>எமர்சன் வருகை தந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது என்பதை பகிரங்கமாக ஏற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff3ebc2-7fdf-434c-8d9a-9fda5a330175/26-6a5b15660ed45.webp' /></p><p></p><h2>பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன?
</h2><p>
இது உதிரத்தை உறைய வைக்கும் மனதை நடுங்கச் செய்யும் விரிவாக இருக்கலாம். பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது. </p><p>சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும்.</p><p> எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.

கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய மற்றும் கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. </p><p>நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது. </p><p>பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28bb5776-24f8-4a73-916b-c3a431796481/26-6a5b1566b8997.webp' /></p><h2>&nbsp;PTA ஏன் கொண்டுவரப்பட்டது?
</h2><p>
தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. </p><p>அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்து அதனை தொடர்ந்தும் தீவிரப்படுத்த முனைவதே இங்கு ஈழத் தமிழ் இனம் சந்திக்கப் போகும் ஆபத்தாகும்.

ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது.</p><p> &nbsp;தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில், தொடர்ந்தும் இக் கொடிய சட்டத்தை தொடர்ந்து ஈழத் தமிழர்களை ஒடுக்குவதில்தான் ஶ்ரீலங்கா அரசு கடும் கண்ணாயிருக்கிறது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-18T06:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/details-revealed-on-cd-wickramaratne-s-death-1784341488"></link>
            <id>https://ibctamil.com/article/details-revealed-on-cd-wickramaratne-s-death-1784341488</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.</p><p>

</p><p>
</p><p>
விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, காவல்துறை திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>அதிகாரி வாக்குமூலம்</h2><p>இவ்வாறான பின்னணியில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a09aa-69fb-4297-8d3b-e0f7c9eff902/26-6a5b13fa3069e.webp' /></p><p>உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
“நேற்று காலை 7.00 மணியளவில், சர், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார்.</p><h2>வெடிப்பு சத்தம்</h2><p> </p><p>நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff69921-7037-4343-8df8-77ad69dcc03d/26-6a5b13fb039d4.webp' /></p><p>அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. </p><p>நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்” என முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்! கை வசமிருந்த ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/angolan-woman-arrested-at-bia-1784351591"></link>
            <id>https://ibctamil.com/article/angolan-woman-arrested-at-bia-1784351591</id>
            <summary type="text">


அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரான குறித்த பெண்ணை ரூ. 10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 237 கிராம் கொக்கைனை வைத்திருந்த குற்றச்சாட்டில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>தோஹா வழியாக இலங்கை</h2><p>

அவர் அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்குப் பயணம் செய்து, பின்னர் கத்தாரின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b38076-b905-4618-8241-18f83da055d6/26-6a5b10d0e8684.webp' /></p><p> 

விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, அவர் சக்கர நாற்காலியில் முனையத்தில் நடமாடியது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, சந்தேக நபர் தானாக முன்வந்து கொக்கைன் அடங்கிய 14 உருண்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேலும் பல உருண்டைகளை விழுங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8546fa97-ea18-40e7-9f52-6f0f9f8f591e/26-6a5b10d1a2539.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், இந்த விடயம் குறித்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-18T05:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் : பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-will-be-a-major-crisis-in-sl-train-services-1784349536"></link>
            <id>https://ibctamil.com/article/there-will-be-a-major-crisis-in-sl-train-services-1784349536</id>
            <summary type="text">இலங்கையில் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொடருந்து திணைக்களத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>தொடருந்து திணைக்களத்தின் வசமுள்ள தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள தொடருந்து நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தொடருந்து இயந்திரங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த தொடருந்து இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d41907b-ba29-42ef-bcd2-65a58970890d/26-6a5b0d8e7fe93.webp' /></p><p> 

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த தொடருந்து நேர அட்டவணையின்படி, சுமார் 450 தொடருந்து சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக தொடருந்து திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.</p><p> 

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.</p><p>இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் தொடருந்து திணைக்களத்திடம் 109 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது.</p><p></p><h2>தொடருந்து திணைக்களம்</h2><p>இதன்படி, 3 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.</p><p>

2023ஆம் ஆண்டில் தொடருந்து திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372d6a8f-8057-4d5f-a229-bf449c34078e/26-6a5b0d8f5ea9f.webp' /></p><p> </p><p>இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது. </p><p>

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p> 

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-died-in-a-landslide-in-alavathugoda-1784347560"></link>
            <id>https://ibctamil.com/article/person-died-in-a-landslide-in-alavathugoda-1784347560</id>
            <summary type="text">அலவத்துகொடை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம்&amp;nbsp;கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலவத்துகொடை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில்&nbsp;இடம்பெற்றுள்ளது</p><p>குறித்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p></p><h3>மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி</h3><p>விபத்து தொடர்பில் தெரியவருகையில், வீடொன்றின் அத்திவாரம் தோண்டும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அலவத்துகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2cfc9c-37bd-43f0-9f02-766de9ab0793/26-6a5b0ed613a71.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொடை காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heat-weather-advisory-issued-for-several-districts-1784346696"></link>
            <id>https://ibctamil.com/article/heat-weather-advisory-issued-for-several-districts-1784346696</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><h2>எச்சரிக்கை நிலை</h2><p>

குறித்த பிரதேசங்களில் இன்று பகல் மனித உடலால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவானது 'எச்சரிக்கை நிலைக்கு' உயர்வடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் அதிக வெப்பமான சூழலில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை உண்டாக்கும்.

தொடர்ந்து அதிக வேலைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
எனவே போதிய அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>வெயிலின் தாக்கம்</h2><p>

அதீத உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
குறிப்பாக, மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T05:02:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-against-the-justice-minister-1784346792"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-against-the-justice-minister-1784346792</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. </p><p>

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டனர்.</p><p></p><h2>ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான பிரேரணை</h2><p>இதேவேளை, தரமற்ற நிலக்கரி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051d4527-ab0f-4de3-ac3e-0b2b92c72079/26-6a5b00fc5a988.webp' /></p><p>

ஏப்ரல் 10ஆம் திகதி அது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதற்கமைய அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.</p><p> 

அங்கு குறித்த பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் கிடைத்தன. 

மேலும், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகவும் கடந்த ஜனவரி மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட சினத்தில் ஈரான் - மத்திய கிழக்கு நாடுகள் மீது குண்டு மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jordan-says-air-defences-intercept-iran-missiles-1784343752"></link>
            <id>https://ibctamil.com/article/jordan-says-air-defences-intercept-iran-missiles-1784343752</id>
            <summary type="text">ஈரானின் “கண்காணிப்புத் தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு, நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்கள்” மீதான தொடர்ச்சியான ஏழாவது இரவுத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் “கண்காணிப்புத் தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு, நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்கள்” மீதான தொடர்ச்சியான ஏழாவது இரவுத் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>லோரெஸ்தான் மாகாணத்தின் கோர்ரமாபாத் நகரில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குவைத்திலிருந்து அமெரிக்கா ஏவிய ஏவுகணைத் தாக்குதல்களின் விளைவாக இந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்தச் செய்திகள் தெரிவித்துள்ளன.&nbsp;இதற்கு பதிலடியாக பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>இடைமறித்து வீழ்த்தியதாக&nbsp;வான் பாதுகாப்பு</h2><p>இந்நிலையில், ஜோர்டானின் வான்பரப்புக்குள்&nbsp;சனிக்கிழமை அதிகாலையில் நுழைந்த ஈரானிய ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வீழ்த்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a68fe9-e82d-4ae4-a847-a3979b13ddb4/26-6a5af76756660.webp' /></p><p>நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் வழக்கமான தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோர்டான் இராணுவம் கூறியது.</p><p>இந்த இடைமறிப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் விழுந்த இடங்களிலிருந்து சிதிலமடைந்த பாகங்களை அகற்றி அப்பகுதிகளைப் பாதுகாப்பானதாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அது மேலும் தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலைப் போன்று மகிந்தவும் சிறையில் அடைக்கப்படலாம் : எச்சரிக்கும் அரச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-may-be-imprisoned-like-ranil-1784344978"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-may-be-imprisoned-like-ranil-1784344978</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணியதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம் என கடற்றொழில், ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணியதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நேற்று (17) நடைபெற்ற&nbsp;வடக்கு மாகாண பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிக்கப்போகும் ஊழல்வாதிகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccf5935-9464-4050-b499-0baf7a2f5e28/26-6a5af6d251778.webp' /></p><p> </p><p>இலஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனச் சிலர் பேசுகின்றனர்.
</p><p>

எதிர்காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் திறக்கப்படவுள்ளன. எனவே, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.</p><p>மக்களின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடும்.</p><p></p><h2>அநுரகுமாரவின் அரசாங்கம்</h2><p>இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை. எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8cfc06-dd43-4ceb-8efb-8f2d7ab3e1c5/26-6a5af6d16ca1a.webp' /></p><p> </p><p>அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார். அரச அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர். </p><p>ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது நாம் ஒருபோதும் தராதரம் பார்ப்பதில்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் - விரையும் ஐரோப்பியத் தூதுவர் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/european-delegation-visit-chemmani-mass-grave-1784342697"></link>
            <id>https://ibctamil.com/article/european-delegation-visit-chemmani-mass-grave-1784342697</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு
வருகை தரவுள்ளது.
</p><p>
இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து
மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப்
புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது.
</p><p>யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22
ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சேதமடைந்த மோதிரம்</h2><p>மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்
எனவும் அறியமுடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93b78f1f-1ad8-435b-b835-485c1e5a627a/26-6a5aebc356510.webp' /></p><p>இதேநேரம், செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான&nbsp;நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதன்போது சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/njSC04MgyCc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா வரலாற்றில் முதல்முறை சாம்பியன்ஷிப் மோதிரங்கள் - இறுதிப் போட்டியில் பங்கேற்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355"></link>
            <id>https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355</id>
            <summary type="text">உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக &quot;சாம்பியன்ஷிப் மோதிரங்கள்&quot; வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக "சாம்பியன்ஷிப் மோதிரங்கள்" வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.</p><p>திங்கட்கிழமை அதிகாலை நியூயார்க்கிலுள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் மோதவுள்ளன.</p><p>அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணியும், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன.</p><p></p><h2>வரலாற்றில் முதன்முறையாக</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதிப் போட்டியில் பங்கேற்று உலகக் கோப்பையை வழங்குவார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 BREAKING! 🤯<br><br>The 2026 World Cup champions will receive exclusive championship rings for the first time in FIFA competition history. 💍<br><br>Inspired by North American sports tradition, 30 rings for the winners, 1,996 numbered limited-edition rings available for fans worldwide. ✨ <a href="https://t.co/rP49whydhp">pic.twitter.com/rP49whydhp</a></p>&mdash; Polymarket FC (@PolymarketFC) <a href="https://x.com/PolymarketFC/status/2077932342371389932?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, தங்கப் பதக்கங்களுடன் வைரங்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக மோதிரங்களும் சாம்பியன் அணிக்கு வழங்கப்படவுள்ளன.</p><p>மொத்தம் 2,026 வரையறுக்கப்பட்ட பதிப்பு மோதிரங்களில், 30 மோதிரங்கள் சாம்பியன் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ரசிகர்களுக்காக வெளியிடப்படவுள்ளன.</p><p></p><h2>பெரும் எதிர்பார்ப்பு</h2><p>மேலும், 39 வயதான லியோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் இளம் நட்சத்திரம் லமின் யமாலுக்கும் இடையிலான முதல் சர்வதேச மோதலாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a722cff-33c5-4bf4-b540-d5c11626437a/26-6a5ae14d9c545.webp' /></p><p> தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் அர்ஜென்டினாவும், புதிய சாம்பியனாக உருவெடுக்கும் நோக்கில் ஸ்பெயினும் களமிறங்குவதால், இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T02:29:01+00:00</updated>
        </entry>
    </feed>
