<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-11T01:44:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783731065"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783731065</id>
            <summary type="text">ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7048b490-7876-422c-a19f-865ec5759c1b/26-6a51937bb971a.webp' /></p><p>இது ஒரு எச்சரிக்கை மட்டமாகக் கொள்ளப்படும், இது மனித உடலில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் வெப்பச் சுட்டெண் என அழைக்கப்படும்.</p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>வறட்சியான வானிலை&nbsp;</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b2e7eb3-5a63-4717-838c-90d72edb336e/26-6a51937b128db.webp' /></p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்லைன் கடன் விளம்பரங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slcert-warns-public-over-loan-app-scams-1783730559"></link>
            <id>https://ibctamil.com/article/slcert-warns-public-over-loan-app-scams-1783730559</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் பகிரப்படும் உடனடி மற்றும் அவசர கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் பகிரப்படும் உடனடி மற்றும் அவசர கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு (SLCERT) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த குழு, “எவ்வித ஆவணங்களும் இன்றி 5,000 முதல் 500,000 ரூபாய் வரை கடன் தருவதாக விளம்பரங்கள் பகிரப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>தனிப்பட்ட புகைப்படங்கள்</h2><p>இத்தகைய செயலிகளைப் பதிவிறக்கும் போது உங்கள் கைபேசியின் கட்டுப்பாடு மோசடியாளர்களிடம் சென்றுவிடுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52140dc2-7a53-4180-b86e-946b91fa2538/26-6a5191818e706.webp' /></p><p>இதன் மூலம் தனிப்பட்ட புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்புகள் திருடப்படுகின்றன.</p><p>
</p><p>கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கைபேசியில் உள்ள தொடர்புகளுக்கு மோசடியாளர்கள் அழைப்பு விடுத்து அவமானப்படுத்துகின்றனர்.</p><p>
</p><p></p><h2>கடன் விளம்பரங்கள்</h2><p>எனவே சந்தேகத்திற்கிடமான கடன் விளம்பரங்களை அணுகவோ மற்றும் அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கவோ வேண்டாம்.
</p><p>
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை மட்டும் நாடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c83dd4ac-0f25-42f8-bb38-3d8e48c9b9d3/26-6a519180df7f6.webp' /></p><p>

இத்தகைய மோசடிகளை உடனே உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடளியுங்கள்.</p><p>

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க அறியப்படாத நபர்களிடமோ அல்லது செயலிகளிடமோ எவ்வித நிதித் தகவல்களையும் பகிர வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ravi-karunanayake-summoned-by-bribery-comm-1783729276"></link>
            <id>https://ibctamil.com/article/ravi-karunanayake-summoned-by-bribery-comm-1783729276</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஆணைக்குழுவினால் தற்போது மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p> 

ஆணைக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இதனடிப்படையில் இம்மாதம் 17 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாரு கருணாநாயக்கவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>தேசிய லாட்டரி சபைக்கு (National Lotteries Board) விசேட திட்டமொன்றின் கீழ் ஊழியர்களை இணைத்துக்கொண்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே ரவி கருணாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8df8b08-fe39-440e-9647-10a0aa7cd68f/26-6a518c7e19bf2.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பாக தேசிய லாட்டரி சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேராவும் இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: பாதாள உலக ஆதிக்கம் முதல் நிர்வாகத் தோல்வி வரை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajivkanth-slams-negombo-prison-failure-1783728526"></link>
            <id>https://ibctamil.com/article/rajivkanth-slams-negombo-prison-failure-1783728526</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கொடூர வன்முறை, சிறை அமைப்பிற்குள் பாதாள உலகக் குழுக்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை அப்பட்டமாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கொடூர வன்முறை, சிறை அமைப்பிற்குள் பாதாள உலகக் குழுக்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.</p><p> 

கைதிகள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள், சிறைச்சாலையின் உளவுத்துறைத் தோல்வியையும் ஆயுதக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் உள்ள பலவீனத்தையுமே தெளிவாகப் பிரதிபலிக்கிறது. </p><p>

கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நெரிசலான சூழல், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதோடு இவ்வாறான வன்முறைகள் வெடிப்பதற்கான உந்துசக்தியாகவும் அமைகிறது. </p><p>

நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவப் பிரிவினரை அழைக்க வேண்டியிருந்தமை, சிறைச்சாலை நிர்வாகத்தின் தன்னிச்சையான அவசரகால நெருக்கடி மேலாண்மைத் திறனின்மையைக் காட்டுகிறது. </p><p>

இவை குறித்து அரசியல், சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WpaWSc8gKQY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொக்கட்டிச்சோலையில் 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-150l-illicit-liquor-1783726484"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-150l-illicit-liquor-1783726484</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு கசிப்பு கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (10-07-2026) இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு கசிப்பு கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (10-07-2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவத்தில் ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து
கொக்கட்டிச்சோலை காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி
காவல்துறை பரிசோதகர் வேனுஜன் தலைமையில் காவல்துறை கொஸ்தாப்பரகளான யசோதரன்,
ஹேமச்சந்திர மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தநிலையில் சம்பவ தினமான நேற்று
அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9fb8f1-868f-4ea1-a9b2-7624a594b39f/26-6a51819689098.webp' /></p><p>இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு
பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பண மழையில் நனைய போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-rasi-palan-top-3-luckiest-rasigal-today-1783727394"></link>
            <id>https://ibctamil.com/article/today-rasi-palan-top-3-luckiest-rasigal-today-1783727394</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் மீது மீனத்தில் இருக்கும் சனியின் 3 ஆம் பார்வை விழுகிறது.

ஆகஸ்ட் 2 வரை நீடிக்கவுள்ள இந்த அபூர்வ கிரகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜூலை மாதத்தில் ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் மீது மீனத்தில் இருக்கும் சனியின் 3 ஆம் பார்வை விழுகிறது.
</p><p>
ஆகஸ்ட் 2 வரை நீடிக்கவுள்ள இந்த அபூர்வ கிரகப் பார்வையால் அனைத்து ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
</p><p>
இந்த அமைப்பால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் பெரும் யோகத்தையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் பெறப்போகிறார்கள்.</p><p>அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>ரிஷபம்</td><td><ol><li>சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.</li><li> இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். </li><li>நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</li><li> இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி </td><td><ol><li>சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். </li><li>நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. </li><li>தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>மகரம்</td><td><ol><li>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.</li><li> நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். </li><li>நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </li><li>நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.</li><li> அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும். </li><li>முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். </li><li>பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:50:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539"></link>
            <id>https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
</p><p>
இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.
</p><p>
இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், "அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள். </p><p>

அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது" என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_MFgBUULEYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T22:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்களுக்கு அமைச்சரைக் குறைகூறுவதில் நியாயமில்லை! முன்னாள் அமைச்சர் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranjan-defends-minister-over-prison-riot-1783720078"></link>
            <id>https://ibctamil.com/article/ranjan-defends-minister-over-prison-riot-1783720078</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல அது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடு என்பதே உண்மையாகும்.</p><p>

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில் இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றேயாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083b7c85-4eb1-406d-ba9f-82c2ba5bfb08/26-6a516ab581dc0.webp' /></p><p>இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது. 

நானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவேன்.</p><p> 

அதே போலவே நானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்தேன்.

மேலும் சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.</p><p></p><h2>பெரிய பேரழிவு</h2><p> 

சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.</p><p>

இதேவேளை இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8035e9-e3b5-46ec-821a-90360a63e77b/26-6a516ab4b8d39.webp' /></p><p>

இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன் என்று தைரியமாக முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது.</p><p>

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம். </p><p>

அதேபோன்று உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T22:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lankan-woman-attacked-by-italian-husband-1783715443"></link>
            <id>https://ibctamil.com/article/lankan-woman-attacked-by-italian-husband-1783715443</id>
            <summary type="text">இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கை பெண்ணே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரான 41 வயதுடைய இத்தாலிய நபரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்ணாடிப் போத்தல்&nbsp;</h2><p>குறித்த நபர் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதையடுத்து படுகாயமடைந்த பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3919d33a-3a2c-4309-bdd7-4e3d20e47c2e/26-6a5157c02c55c.webp' /></p><p>மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 தாக்குதல் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[TTMN7PP
]</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:42:38+00:00</updated>
        </entry>
    </feed>
