<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-18T04:43:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-against-the-justice-minister-1784346792"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-against-the-justice-minister-1784346792</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. </p><p>

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டனர்.</p><p></p><h2>ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான பிரேரணை</h2><p>இதேவேளை, தரமற்ற நிலக்கரி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051d4527-ab0f-4de3-ac3e-0b2b92c72079/26-6a5b00fc5a988.webp' /></p><p>

ஏப்ரல் 10ஆம் திகதி அது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதற்கமைய அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.</p><p> 

அங்கு குறித்த பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் கிடைத்தன. 

மேலும், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகவும் கடந்த ஜனவரி மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட சினத்தில் ஈரான் - மத்திய கிழக்கு நாடுகள் மீது குண்டு மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jordan-says-air-defences-intercept-iran-missiles-1784343752"></link>
            <id>https://ibctamil.com/article/jordan-says-air-defences-intercept-iran-missiles-1784343752</id>
            <summary type="text">ஈரானின் “கண்காணிப்புத் தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு, நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்கள்” மீதான தொடர்ச்சியான ஏழாவது இரவுத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் “கண்காணிப்புத் தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு, நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்கள்” மீதான தொடர்ச்சியான ஏழாவது இரவுத் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>லோரெஸ்தான் மாகாணத்தின் கோர்ரமாபாத் நகரில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குவைத்திலிருந்து அமெரிக்கா ஏவிய ஏவுகணைத் தாக்குதல்களின் விளைவாக இந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்தச் செய்திகள் தெரிவித்துள்ளன.&nbsp;இதற்கு பதிலடியாக பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>இடைமறித்து வீழ்த்தியதாக&nbsp;வான் பாதுகாப்பு</h2><p>இந்நிலையில், ஜோர்டானின் வான்பரப்புக்குள்&nbsp;சனிக்கிழமை அதிகாலையில் நுழைந்த ஈரானிய ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வீழ்த்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a68fe9-e82d-4ae4-a847-a3979b13ddb4/26-6a5af76756660.webp' /></p><p>நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் வழக்கமான தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோர்டான் இராணுவம் கூறியது.</p><p>இந்த இடைமறிப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் விழுந்த இடங்களிலிருந்து சிதிலமடைந்த பாகங்களை அகற்றி அப்பகுதிகளைப் பாதுகாப்பானதாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அது மேலும் தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலைப் போன்று மகிந்தவும் சிறையில் அடைக்கப்படலாம் : எச்சரிக்கும் அரச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-may-be-imprisoned-like-ranil-1784344978"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-may-be-imprisoned-like-ranil-1784344978</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணியதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம் என கடற்றொழில், ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணியதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நேற்று (17) நடைபெற்ற&nbsp;வடக்கு மாகாண பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிக்கப்போகும் ஊழல்வாதிகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccf5935-9464-4050-b499-0baf7a2f5e28/26-6a5af6d251778.webp' /></p><p> </p><p>இலஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனச் சிலர் பேசுகின்றனர்.
</p><p>

எதிர்காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் திறக்கப்படவுள்ளன. எனவே, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.</p><p>மக்களின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடும்.</p><p></p><h2>அநுரகுமாரவின் அரசாங்கம்</h2><p>இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை. எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8cfc06-dd43-4ceb-8efb-8f2d7ab3e1c5/26-6a5af6d16ca1a.webp' /></p><p> </p><p>அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார். அரச அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர். </p><p>ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது நாம் ஒருபோதும் தராதரம் பார்ப்பதில்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/details-revealed-on-cd-wickramaratne-s-death-1784341488"></link>
            <id>https://ibctamil.com/article/details-revealed-on-cd-wickramaratne-s-death-1784341488</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.</p><p>

</p><p>
</p><p>
விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, காவல்துறை திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அதிகாரி வாக்குமூலம்</h2><p>இவ்வாறான பின்னணியில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
“நேற்று காலை 7.00 மணியளவில், சர், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார். </p><p>நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். </p><p>அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. </p><p>நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்” என முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T03:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் - விரையும் ஐரோப்பியத் தூதுவர் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/european-delegation-visit-chemmani-mass-grave-1784342697"></link>
            <id>https://ibctamil.com/article/european-delegation-visit-chemmani-mass-grave-1784342697</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு
வருகை தரவுள்ளது.
</p><p>
இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து
மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப்
புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது.
</p><p>யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22
ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சேதமடைந்த மோதிரம்</h2><p>மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்
எனவும் அறியமுடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93b78f1f-1ad8-435b-b835-485c1e5a627a/26-6a5aebc356510.webp' /></p><p>இதேநேரம், செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான&nbsp;நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதன்போது சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா வரலாற்றில் முதல்முறை சாம்பியன்ஷிப் மோதிரங்கள் - இறுதிப் போட்டியில் பங்கேற்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355"></link>
            <id>https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355</id>
            <summary type="text">உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக &quot;சாம்பியன்ஷிப் மோதிரங்கள்&quot; வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக "சாம்பியன்ஷிப் மோதிரங்கள்" வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.</p><p>திங்கட்கிழமை அதிகாலை நியூயார்க்கிலுள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் மோதவுள்ளன.</p><p>அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணியும், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன.</p><p></p><h2>வரலாற்றில் முதன்முறையாக</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதிப் போட்டியில் பங்கேற்று உலகக் கோப்பையை வழங்குவார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 BREAKING! 🤯<br><br>The 2026 World Cup champions will receive exclusive championship rings for the first time in FIFA competition history. 💍<br><br>Inspired by North American sports tradition, 30 rings for the winners, 1,996 numbered limited-edition rings available for fans worldwide. ✨ <a href="https://t.co/rP49whydhp">pic.twitter.com/rP49whydhp</a></p>&mdash; Polymarket FC (@PolymarketFC) <a href="https://x.com/PolymarketFC/status/2077932342371389932?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, தங்கப் பதக்கங்களுடன் வைரங்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக மோதிரங்களும் சாம்பியன் அணிக்கு வழங்கப்படவுள்ளன.</p><p>மொத்தம் 2,026 வரையறுக்கப்பட்ட பதிப்பு மோதிரங்களில், 30 மோதிரங்கள் சாம்பியன் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ரசிகர்களுக்காக வெளியிடப்படவுள்ளன.</p><p></p><h2>பெரும் எதிர்பார்ப்பு</h2><p>மேலும், 39 வயதான லியோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் இளம் நட்சத்திரம் லமின் யமாலுக்கும் இடையிலான முதல் சர்வதேச மோதலாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a722cff-33c5-4bf4-b540-d5c11626437a/26-6a5ae14d9c545.webp' /></p><p> தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் அர்ஜென்டினாவும், புதிய சாம்பியனாக உருவெடுக்கும் நோக்கில் ஸ்பெயினும் களமிறங்குவதால், இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T02:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784336995"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784336995</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "வெப்பச் சுட்டெண்" காரணமாக மனித உடலினால் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1335061-19b3-4f07-a3d4-cbd73917d100/26-6a5ad265454bb.webp' />&nbsp;&nbsp;</p><p>வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-5kg-ganja-seized-from-ruined-house-in-jaffna-1784336808"></link>
            <id>https://ibctamil.com/article/14-5kg-ganja-seized-from-ruined-house-in-jaffna-1784336808</id>
            <summary type="text">யாழில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் இருந்த கட்டிடத்திலிருந்தே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆழியவளைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மருதங்கேணி காவல்துறையினர்</h2><p>

இதனடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் 14.5 கிலோகிராம் கஞ்சா பொதிகளைக் கைப்பற்றி, மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228a5957-ad0c-4187-b733-284c5a3835c6/26-6a5ad1aa28ab6.webp' /></p><p>இருப்பினும், குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: திரைமறைவில் அரங்கேறிய சதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspicion-mounts-over-ex-igp-wickramaratne-death-1784336067"></link>
            <id>https://ibctamil.com/article/suspicion-mounts-over-ex-igp-wickramaratne-death-1784336067</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை உள்ளிட்ட பல முக்கிய மற்றும் சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பில் பல ரகசியங்களை அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரியின் மரணம் என்பதால், இதன் பின்னணியில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.</p><p>

அவர் வசம் இருந்த முக்கிய தகவல்கள் மற்றும் விசாரணைகளின் திசைகளை முடக்குவதற்காக ஏதேனும் திரைமறைவுச் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் தற்போது பலமாக எழுந்துள்ளது.
</p><p>
முக்கிய சாட்சிகளும் அதிகாரிகளும் இவ்வாறான மர்மமான சூழலுக்கு உள்ளாவது, இலங்கையின் சட்டம், ஒழுங்கு மற்றும் முக்கிய வழக்குகளில் உண்மையான நீதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்களையே மீண்டும் வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட்ஸ் (Newsinsights) நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aXDy5QAPX6A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மது அருந்திவிட்டு உறங்கிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-youth-found-dead-after-drinks-with-friends-1784334237"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-youth-found-dead-after-drinks-with-friends-1784334237</id>
            <summary type="text">யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.
</p><p>
பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக்காணப்படுவதை அவதானித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e760b11-5858-4377-88d5-4894f98fc0e9/26-6a5ac79f4893a.webp' /></p><p>அதன்பின்னர், காவல்துறையினருக்கு மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-igp-cd-wickramaratne-dies-of-gunshot-1784316080"></link>
            <id>https://ibctamil.com/article/ex-igp-cd-wickramaratne-dies-of-gunshot-1784316080</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே காவல்துறையினர் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (18-07-2026) காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முன்னதாகச் சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd20e38b-db61-41df-a701-0a888f34ed0a/26-6a5ac01710421.webp' /></p><p>

இந்த நிலையில், நேற்று பிற்பகல் குறித்த இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
</p><p>
தற்போதைய காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்ற அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இதன்போது கடுவலை நீதவான், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:06:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cricket-legend-sir-garfield-sobers-passes-away-1784331362"></link>
            <id>https://ibctamil.com/article/cricket-legend-sir-garfield-sobers-passes-away-1784331362</id>
            <summary type="text">கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 ஆவது வயதில் காலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,032 ஓட்டங்களையும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர், வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என இரண்டிலும் அசத்தக்கூடிய பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்ந்தார்.
</p><p>
1958-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த ஆட்டமிழக்காத 365 ஓட்டங்கள், 36 ஆண்டுகள் உலக சாதனையாக நீடித்ததுடன், முதல்தர போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரரும் அவரே ஆவார்.</p><p>
</p><p></p><h2>சகலதுறை ஆட்டக்காரர்</h2><p>நாட்டிங்ஹாம்ஷையர் கவுண்டி அணிக்காகவும் விளையாடிய இவரது விளையாட்டுச் சேவையைப் பாராட்டி 1975-ல் நைட்ஹுட் பட்டமும், விஸ்டன் அமைப்பால் 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்களில் ஒருவராகவும் கௌரவிக்கப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/222903e8-2e5b-4b47-8032-7041ca9fd8b9/26-6a5abc6403736.webp' /></p><p>அவரது மறைவிற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும், நாட்டிங்ஹாம்ஷையர் கிளப்பும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்: அறிவித்தது CENTCOM]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-wave-of-airstrikes-on-iran-1784328381"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-wave-of-airstrikes-on-iran-1784328381</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில், கிழக்கு நேரப்படி (ET) பிற்பகல் 3 மணி முதல் ஈரான் மீது ஒரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய கட்டளையகம்</h2><p>

ஈரானிய இராணுவத் திறன்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM launched a round of strikes against Iran at 3 p.m. ET today for the seventh consecutive night. The strikes are designed to continue degrading Iranian military capabilities at the Commander in Chief&#39;s direction.</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2078206333640233200?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இருப்பினும், இந்தத் தாக்குதல்களின் இலக்குகள் அல்லது அதன் விரிவான அளவு குறித்த மேலதிக விவரங்களை மத்திய கட்டளையகம் (CENTCOM) வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T22:46:53+00:00</updated>
        </entry>
    </feed>
