<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-14T19:21:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதலால் உலகளாவிய மனிதாபிமானப் பேரழிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562"></link>
            <id>https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் பின்னடைவு என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன் நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மனித உரிமைகள்</h2><p>

இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d480c24d-812c-4a05-9865-99bbafd96873/26-6a56885522d67.webp' /></p><p>உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>உணவுப் பொருட்கள்</h2><p>இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1e8175-59c2-4c74-a90f-78c8bbac0931/26-6a56885470e73.webp' /></p><p>தற்போதைய இக்கட்டான சூழலில் இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14-07-2026) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>அதிகாரப்பூர்வ இணையத்தளம்</h2><p>இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd59717-f686-412e-ac40-7d4eb6a1728b/26-6a56808acc016.webp' /></p><p>மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப் பொருளாதாரத்தை முடக்க ஈரானின் ஆபத்தான வியூகம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

ஏமனில் உள்ள தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.</p><p>

ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடப்போவதாக ஈரான்
மறைமுகமாக எச்சரித்துள்ளது.
</p><p>
வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம் உலகின் மிக
முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்க ஈரான் முயன்று வருகிறது.</p><p></p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹூதி
அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் இது குறித்து எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67281cf2-92f6-4399-9221-c80c994ca873/26-6a566d4bac8e4.webp' /></p><p>குறித்த எச்சரிக்கையில், “நிலைமை மேலும் மோசமடைந்தால் பாப் எல்-மண்டேப் நீரிணையும்
ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.
</p><p>
இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப்
பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல்
போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது.</p><p>

ஈரானின் இந்த நகர்வு, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என்று அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4931d9c7-1f11-4540-b80c-241fd532684d/26-6a566c668b819.webp' /></p><p>அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால் ஈரான் தனது இறுதி ஆயுதமாக
இதைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
அதே நேரத்தில் ஹூதிகள் இந்த எல்லையைத் தாண்டினால் அமெரிக்கா மற்றும் அதன்
நட்பு நாடுகள் அவர்கள் மீது இன்னும் கடுமையான கூட்டு இராணுவத் தாக்குதலை
நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவிற்கு ட்ரம்ப் இட்ட கட்டளை : உடன் வெளியேற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-urged-netanyahu-israeli-troops-out-syria-1784052835"></link>
            <id>https://ibctamil.com/article/trump-urged-netanyahu-israeli-troops-out-syria-1784052835</id>
            <summary type="text">&amp;nbsp;​​சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;​​சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதாக ஆக்சியோஸ் இன்று செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.
</p><p>
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சிரியப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் இருப்பு பதட்டங்களை உருவாக்குவதாகவும், மேலும் பதற்றம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கூறியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.</p><h2>படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்</h2><p>"நீங்கள் அங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. நீங்கள் படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்," என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசி உரையாடலின் போது, கூறியதாக, ஆக்சியோஸ் மேற்கோள் காட்டிய ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e25a9e0-63b4-4385-a7da-3f376d5da2ff/26-6a567c650f867.webp' /></p><p>லெபனான் தொடர்பாகவும் l்ரம்ப் இதேபோன்ற கோரிக்கையை விடுத்ததாகவும், ஆனால் இஸ்ரேலுக்கு அதன் எல்லைகளில் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்று நெதன்யாகு வாதிட்டதாகவும் அது கூறியது.
</p><p>
துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் ஓரத்தில், சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை ட்ரம்ப் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்த அழைப்பு வந்ததாகவும், இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்வதாகவும் ஆக்சியோஸ் கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T18:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 'கிளி' வைரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-infection-parrot-virus-discovered-in-india-1784047166"></link>
            <id>https://ibctamil.com/article/new-infection-parrot-virus-discovered-in-india-1784047166</id>
            <summary type="text">இந்தியாவில் முதல் முறையாக கிளி போர்னா 4 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உலகெங்கிலும் கூண்டுகளில் வளர்க்கப்படும் கிளிகளுக்கு கடுமையான நோய்கள் உருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் முதல் முறையாக கிளி போர்னா 4 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>

உலகெங்கிலும் கூண்டுகளில் வளர்க்கப்படும் கிளிகளுக்கு கடுமையான நோய்கள் உருவாகும். சிகிச்சை அளித்து, சில நேரங்களில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் இந்த பிஏபிவி4 வைரஸ்தான் முக்கிய காரணியாக இருந்து வருகிறது.</p><p>இந்த வைரஸ் சாதாரண பறவைகளைத் தாக்குவதில்லை. கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், கொண்டைக்கிளிகள், காசுட்டீல்கள், லவ் பேர்ட்ஸ் மற்றும் பட்ஜரீகர்கள் உள்ளிட்ட சிட்டாகைன்' குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்களையே குறி வைத்துத் தாக்குகிறது.
</p><p>
</p><h2>அசாம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு</h2><p>இந்த நிலையில் அசாம் விஞ்ஞானிகள் இந்தியாவில் முதன்முறையாகக் 'கிளி போர்னா வைரஸ் 4' தொற்றைக் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/690dc028-4a3d-4ed1-89a4-f3682e9c0014/26-6a567502a3a0b.webp' /></p><p> கூண்டில் வளர்க்கப்படும் கிளிகளைத் தாக்கும் இந்த வைரஸ், பிடி டி என்ற ஆபத்தான நோயை ஏற்படுத்துகிறது. இதுபறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலங்களைப் பாதித்து, உடனே உயிரிழக்கச் செய்யும்.
</p><p>

அசாம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 83 பறவைகளிடம் நடத்திய ஆய்வில் 44 பறவைகளுக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.</p><p></p><p> </p><h2>கிளிகளில் ஏற்படும் மாற்றங்கள்</h2><p>இதன் காரணமாக செரிமான உறுப்புகள் சரியாக செயல்படாது. உணவை ஜீரணிக்க முடியாமல் போகும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7258184c-75ee-4ef6-9faf-e95abf8bdbb1/26-6a5675036a7a2.webp' /></p><p>
</p><p>
இந்தவைரஸ் தாக்கிய கிளிகளில் உடல் எடை வேகமாக குறைதல், உணவை விழுங்குவதில் சிரமம், ஜீரணிக்காத உணவு மலத்துடன்வெளியேறுதல், வாந்தி உண்டாகும். இந்தியாவில் இந்தவைரஸ் இருப்பதை உறுதிப்படுத்திய முதல் ஆய்வாகும்.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:42:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மொஜ்தபா கமேனி ...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mojtaba-khamenei-make-first-public-appearance-1784043306"></link>
            <id>https://ibctamil.com/article/mojtaba-khamenei-make-first-public-appearance-1784043306</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்த வாரம் தெஹ்ரானில் தனது தந்தை அயதுல்லா அலி கமெனிக்கான நினைவேந்தல் விழாவில் பொதுவெளியில் தோன்றக்கூடும்.என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அவர் பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். பொதுவெளியில் தோன்றாமல் டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்களில் எழுத்து பூர்வமான அறிக்கைகள் வாயிலாக மட்டுமே தனது உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.</p><h2>கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை</h2><p>சமீபத்தில் நடந்த தந்தை கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என்று ஈரான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f436a3-ee4e-48cf-9729-1783886ba362/26-6a565f06cbf16.webp' /></p><p>
</p><p>
</p><h2>அவர் நேரில் பங்கேற்பாரா</h2><p>இந்தநிலையில் வரும் 23-ம் திகதி மாலை 5 மணிக்கு தலைநகர் தெஹ்ரானில் கமெனி நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொஜ்தபா கமெனி பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3fb8c72-e236-4792-8096-42c4983de19a/26-6a5660a31df1f.webp' /></p><p> </p><p>இந்த நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்பாரா? அல்லது காணொளி உரையாடல் மூலம் பங்கேற்பாரா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T16:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/respect-for-iran-s-rights-reopening-of-hormuz-1784036920"></link>
            <id>https://ibctamil.com/article/respect-for-iran-s-rights-reopening-of-hormuz-1784036920</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்று ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். </p><p>மேலும், அழுத்தம் அல்லது இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் திணிக்கப்படும் எந்தவொரு ஏற்பாடுகளையும் தெஹ்ரான் ஏற்காது என்றும் அவர் எச்சரித்தார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணையில் மாற்று வழி</h2><p>தெஹ்ரானில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா, ஈரானிய ஆயுதப் படைகள் நாட்டின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், இந்த மூலோபாய நீர்வழியில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9598ea01-545a-4708-8bc1-5feec6194b6c/26-6a5644772d1d4.webp' /></p><p>ஈரான்-அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><h2>அழுத்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது&nbsp;</h2><p>மேலும், ஈரான் முன்மொழிந்த ஏற்பாடுகளை முன்னர் ஏற்றுக்கொண்ட போதிலும், வோஷிங்டன் பின்னர் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மாற்று வழியை நிறுவ முயன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e76fd893-db85-4304-9b49-fff6106355f5/26-6a56447678cbb.webp' /></p><p>&nbsp;ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்கு வெளியே ஹோர்முஸ் நீரிணையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈரானிடமிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த இராணுவ செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அல்லது அழுத்தத்தின் மூலம் அந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படாது என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை : துப்பாக்கிசூடு நடத்திய அதிகாரி திடீர் இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/officer-opened-fire-negombo-prison-transferred-1784039295"></link>
            <id>https://ibctamil.com/article/officer-opened-fire-negombo-prison-transferred-1784039295</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை சிறை ஊடகப் பேச்சாளரும், சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
</p><p>
ஜூலை 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறைச் சம்பவத்தின் போது, ​​கைதிகள் சிறையின் கடைசி மரக் கதவை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றபோது, ​​ஒரு சிறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.</p><h2>நிலைமையைக் கட்டுப்படுத்த&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>இவ்விவகாரம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், சிறைக்குள் இருந்த கைதிகள் குழு ஒன்று சிறை அதிகாரிகளை கொடூரமாகத் தாக்கியதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும் அந்த அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35d250d-456a-4b45-9101-c49c9ca5313c/26-6a564c3a554bd.webp' /></p><p>
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடு சிறை விதிகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா மற்றும் அதிகார வரம்பு மீறப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொடூரமான மோதலில் இதுவரை 10 சிறை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் பூத்துள்ள பிணவாடை வீசும் மலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corpses-flower-have-bloomed-in-california-1784035165"></link>
            <id>https://ibctamil.com/article/corpses-flower-have-bloomed-in-california-1784035165</id>
            <summary type="text">கலிபோர்னியாவின் ஹன்டிங்டான் தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் இரண்டு ஒரே நேரத்தில் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலிபோர்னியாவின் ஹன்டிங்டான் தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் இரண்டு ஒரே நேரத்தில் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.
</p><p>


டைட்டன் ஆரம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இரு மலர்களுக்கும் ஒடோரா - ஒடோரைஸியஸ் என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.</p><p>இந்த மலர்கள் மலர பத்து ஆண்டுகள் வரையில் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மலர் மலர்ந்து புதிதாக இருப்பது வெறும் 24 மணி நேரம்தான்.</p><h2>உலகம் முழுவதும்&nbsp;ஆயிரம் மலர்கள்</h2><p> </p><p>இது அச்சுறுத்தல் கொடுக்காத பூ இனம் என்றும், இதுபோன்ற வெறும் ஆயிரம் மலர்கள் மட்டுமே உலகம் முழுவதும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b82a555-7855-4a1f-affb-7b391113d14e/26-6a5639f571547.webp' /></p><p>
</p><p>
ஒரே நேரத்தில் இரண்டு மலர்கள் ஒன்றாக மலர்ந்திருப்பதால் வாசனையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வரிசையில் நின்று மலரைப் பார்த்து மக்கள் ரசித்துள்ளனர்.</p><p></p><h2>ஆயுள் காலம் சில மணி நேரங்கள்&nbsp;</h2><p>
</p><p>


இதன் ஆயுள் காலம் சில மணி நேரங்கள் என்பதால், இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் தாவரவியல் பூங்காவுக்கு வந்து மலரைக் கண்டும், வாசனையை நுகர்ந்தும் செல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67147a87-dc80-47c0-96c6-0e4564aa6d88/26-6a5639f63600b.webp' /></p><p>
</p><p>


கலிபோர்னியா தாவரவியல் பூங்காவில் இதுவரை நடைபெறாத ஒரு அதிசயம் நடந்துள்ளது. இங்கு வளர்க்கப்பட்டு வரும் பிணவாடை வீசும் மலர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இரண்டு மலர்கள் மலர்ந்துள்ளன. ஒன்று பூத்தாலே அப்பகுதியே நாறும். இரண்டும் ஒன்றாகப் பூத்திருப்பதால் சுற்றுவட்டாரம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமன் கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள்! UKMTO அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tankers-attacked-near-oman-coast-1784033794"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tankers-attacked-near-oman-coast-1784033794</id>
            <summary type="text">ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு வழித்தடம் வழியாகக் கடந்து சென்றபோது, ​​இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக , இங்கிலாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு வழித்தடம் வழியாகக் கடந்து சென்றபோது, ​​இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக , இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

நேற்று இந்தத் சம்பவங்களை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு கப்பல்களும், தாக்குதல்கள் நடந்த நேரத்தில் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.</p><p>எனினும் UKMTO மையம்&nbsp; அந்தக் கப்பல்களின் பெயர்களையோ அல்லது அவற்றை யார் குறிவைத்தார்கள் என்பதையோ குறிப்பிடவில்லை.</p><p></p><h2>இரண்டு எண்ணெய்க் கப்பல்கள்</h2><p> </p><p>ஆனால், நீரிணையில் தென்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் நேற்றிரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af53dd9-f3e7-44f3-8501-9c9b16d0507e/26-6a5632040f89a.webp' /></p><p>
இதற்கிடையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனது அறிக்கையில் , “நீர்வழியில் தறிகெட்டு ஓடிய இரண்டு சூப்பர்டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என கூறியுள்ளது.</p><p>

கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்ல, தன்னால் நியமிக்கப்பட்ட வடக்கு வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஈரான் கூறுகிறது. </p><p>ஆனால், பெருகிவரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் ஓமான் கடற்கரைக்கு மிக அருகில் அதைக் கடக்கத் தொடங்கியுள்ளன. இது, அந்த நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T13:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&amp;nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயற்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் அதிக நெரிசல்&nbsp;</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7104383-0891-45fe-84b0-1ac05f32cf67/26-6a560d29529c2.webp' /></p><p> சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன.</p><p> வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை&nbsp;</h2><p>காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67bf3e2-df55-47fe-a714-fa95efcfb06a/26-6a560cf6844a0.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம். சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாபுலவு மக்கள் நிலத்திற்காகப் பத்தாண்டுகளாகவா போராடுகின்றனர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/of-keppapulavu-are-fighting-for-land-1784035433"></link>
            <id>https://ibctamil.com/article/of-keppapulavu-are-fighting-for-land-1784035433</id>
            <summary type="text">ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மிக நீண்டகால மக்கள் போராட்டத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. </p><p>போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்தும், மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாமல் இராணுவ முகாம்களின் வேலிகளுக்கு வெளியே நின்று நீதி கேட்கும் துயரமான காட்சியை ஈழம் இன்னமும் சுமக்கிறது எகன்பதற்கு கேப்பாபுலவு ஒரு சாட்சி. </p><p>அந்தப் போராட்டம் இப்போது பத்தாண்டுகளைத் தாண்டியிருக்கிறது. ஒரு தலைமுறையின் குழந்தைகள் தமது முன்னோரின் நிலங்களை கதைகளில் மட்டுமே கேட்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பது ஈழ நிலத்தின் பெருந்துயரம்.</p><p></p><h2>கேப்பாபுலவின் கதை</h2><p>நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த பின்னர் வன்னி மாவட்ட படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஒருமுறை குறிப்பிட்டார். </p><p>கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். இதுதான் போரை நடத்தியவர்களின் நிலம்மீதான
ஆக்கிரமிப்பு மனநிலை. ஆனால் இந்தச் சொற்கள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை மிகவும் உக்கிரமாக்கியதே தவிர, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடவில்லை. </p><p>பாரிய அரச அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நெடிய போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் நடாத்தி வந்திருக்கிறார்கள். &nbsp;

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் ஆகப்போகின்றன என்றால், கேப்பாபுலவை அந்த மக்கள் இழந்தும் அதற்காகப் போராடியும் பதினேழு ஆண்டுகள்தான். </p><p>எம்மை சுட்டுக்கொன்றாலும் நிலத்திற்கான போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று இந்த மக்கள் தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை பத்தாண்டுகளாக முன்னெடுக்கின்றனர். </p><p>2017இல், கேப்பாபுலவின் பிலக்குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக சுமார் எண்பது ஏக்கர் நிலப் பகுதியை இந்த மக்கள் மீட்டிருந்தனர். 2017ஆம் ஆண்டு தை மாத்தில் இந்த மக்கள் தமது போராட்டத்தை பிலக்குடியிருப்பில் ஆரம்பித்தனர். </p><p>பிலக்குடியிருப்பு விமான படை முகாமின் முன்பாக தகரக் கொட்டில்களில் இருந்து பனியிலும் வெயிலிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த மக்கள் நடத்திய போராட்டம் அவர்களின் பூர்வீக நிலத்தை வெல்ல வைத்தது.</p><p></p><h2>தொடர் போராட்டம்</h2><p>பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அவர்கள் வீதியோரத்தில் அமர்ந்தனர். வெயிலும் மழையும் அவர்களைத் தடுக்கவில்லை. பல அரசுகள் மாறின. பல அமைச்சர்கள் வாக்குறுதிகள் அளித்தனர். </p><p>அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் நிலம் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. அதனால் இந்தப் போராட்டம் மக்களின் வாழ்வுரிமை வரலாறாக மாறியிருக்கிறது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது. </p><p>மாற்றுக் காணி வேண்டாம். நஷ்டஈடு வேண்டாம். எமது முன்னோர்கள் வாழ்ந்த நிலம், தமது குடும்பத்தின் சொத்து, தமது நினைவுகளின் வாழ்நிலம் மட்டுமே வேண்டும் என்பதுதான் அம் மக்களின் பெருங்குரல். &nbsp;
</p><p>
அந் நிலம் மக்களின் நிலம். கிணறுகளில் நீர் எடுத்தும் தம் ஊரின் ஆலயங்களில் வழிபட்டும் தம் உறவினர்கள் வாழ்ந்தும் விதைந்துமான &nbsp;அந் நிலம் அவர்களின் சொந்த நிலம். எனவே அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு எதையும் ஏற்க முடியாது என்பதே மக்களின் உறுதியான குரல்.</p><p> 2017இல் தொடங்கிய இம் மக்களின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. சமீபத்திலும் பாரியபோராட்டம் நடந்தது. கடந்த ஜூன் 05ஆம் நாளன்று கேப்பாபுலவு மக்கள் இராணுவ முகாமின் முன்பாக மீண்டும் ஒன்றுகூடி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். </p><p>பல நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நிலமின்றி வாழும் துயரம்</h2><p>இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களின் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அண்மைய போராட்டத்தில் வலியுறுத்தினர். </p><p>போராட்டத்தில் பெண்களும் முதியவர்களும் அதிகளவில் பங்கேற்று, தமது நிலமின்றி வாழும் வாழ்க்கையின் துயரத்தை மீண்டும் உலகிற்கு எடுத்துரைத்தனர். இந்தப் போராட்டம் சமூக ஊடகங்களிலும் பரவலாகக் கவனம் பெற்றது.
</p><p>
இன்றும் கேப்பாபுலவில் வாழும் குடும்பங்களின் நிலை மிகவும் துயரமாகவே நீள்கிறது. தமது சொந்த விவசாய நிலங்களை இழந்ததால் பல குடும்பங்கள் கூலித்தொழிலையே நம்பியிருக்கின்றன. விவசாயம் செய்து வாழ்ந்த குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.</p><p> இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர். பெண்கள் குடும்பத்தை நடத்த பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வயதான பெற்றோர்கள் தாங்கள் பிறந்த மண்ணைப் பார்த்தே இறக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர். பலர் &nbsp;இறந்தும் போயுள்ளனர். </p><p>பல குழந்தைகள் தமது பெற்றோர் கூறும் கதைகளில்தான் தங்கள் சொந்த நிலத்தை அறிந்திருக்கின்றனர். ஒரு சமூகத்தின் பொருளாதாரமும், பண்பாடும், நினைவுகளும், மரபும் நிலத்துடன் இணைந்திருக்கின்றன என்பதை கேப்பாபுலவு மக்களின் வாழ்க்கை நினைவூட்டுகிறது.</p><p></p><h2>வாய்ச் சொல்லில் நல்லிணக்கம்</h2><p>ஒரு புறம் மக்கள் நிலமின்றி தவிக்கும்போது, மறுபுறம் அந்த நிலங்கள் இராணுவப் பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்கும்போது மக்களின் மனவேதனையை மேலும் பெருகுகிறது.</p><p> போருக்குப் பிறகு நல்லிணக்கம் பற்றி அரசுகள் தொடர்ந்து பேசினாலும், நல்லிணக்கத்தின் அடிப்படை நிபந்தனையான நீதி இன்னும் வழங்கப்படவில்லை என்பதே கேப்பாபுலவு மக்களின் விடயத்தில் தெளிவாகத் தெரிகின்ற செய்தியாகும்.</p><p> நிலம் மீளக் கிடைக்காமல் நல்லிணக்கமும் நம்பிக்கையும் உருவாக முடியாது என்பதை இந்தப் போராட்டம் தெளிவாகச் சுட்டுகிறது.

அத்துடன் கேப்பாபுலவு மாத்திரன்றி, வலி வடக்கு, மயிலிட்டி, வட்டுவாகல் போன்ற பகுதிகளிலும் மக்கள் தமது நிலங்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><p> இந்த எல்லாப் போராட்டங்களும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. நிலம் என்பது வெறும் சொத்தல்ல, அது வாழ்வுரிமை. உண்மையில் நிலமென்பது அடையாளமாக, வரலாறாக நினைவாக, &nbsp;எதிர்காலமாக நம் வாழ்வின் எல்லாமுமாக உயிர்பிணைத்து நிற்கின்றது.</p><p></p><h2>நிலத்தை ஆக்கிரமிப்பது மனித உரிமை மீறல்</h2><p>ஒரு ஜனநாயக அரசின் கடமை, மக்களின் சொத்துரிமையை மதிப்பதும், நீதியை நிலைநிறுத்துவதுமே எனப்படுகிறது. ஆனால் போர் முடிந்து இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னரும் பொதுமக்களின் காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விசயம். </p><p>நில உரிமை என்பது அடிப்படை மனித உரிமை. அதை மறுப்பது, போரின் காயங்களை தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கிற செயல்.

எனவே கேப்பாபுலவு மக்களின் பத்தாண்டு கால அமைதியான போராட்டத்திற்கு இலங்கை அரசு இனியும் தீர்வு வழங்காமல் இருக்க இயலாது. </p><p>மீதமுள்ள அனைத்து காணிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக உரிமையாளர்களாக மக்களிடம் கையளிக்க வேண்டும். தமது மண்ணில் மீண்டும் வீடு கட்டி, விவசாயம் செய்து, தமது குழந்தைகளுடன் வாழும் கனவும் உரிமையும் கேப்பாபுலவு மக்களுக்கு கிடைத்தாக வேண்டும். &nbsp;</p><p>

தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கிய சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டு போராடுகிற கேப்பாபுலவு மக்களுக்கு விரைவில் தீர்வை வழங்க வேண்டும். </p><p>எங்கள் தேசத்தில் இன்னமும் மக்கள் நிலத்திற்காகப் போராடுகிறார்கள். எங்கள் தேசத்தின் உறவுகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். எங்கள் தேசத்தின் உரிமைகளுக்காக இன்னமும் போராடுகிறோம். ஆட்சிகள் பல மாறி, ஜனாதிபதிகள் பலர் மாறிய பின்னரும் ஈழத் தமிழர்களின் நிலைதான் இன்னமும் மாறாமல் இருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p><p>
</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T13:24:09+00:00</updated>
        </entry>
    </feed>
