<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-13T01:19:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வெப்பச் சுட்டெண் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e35a67-c256-4505-a2d2-ec610a029e1a/26-6a543b50130d1.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868"></link>
            <id>https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868</id>
            <summary type="text">கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மேற்படி கைது நடவடிக்கை நேற்று (13-07-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே மேற்படி மாணவன் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed02a88b-7fd9-45f2-8e58-822054ca4408/26-6a543a6584ae3.webp' /></p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் தம்பதியினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949</id>
            <summary type="text">இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாள அட்டை</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில் குறித்த இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af81fc56-d642-49b1-b404-e5ddf2d4478c/26-6a54358594e3c.webp' /></p><p>தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
விசாரணையின் முடிவில் குறித்த இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், குறித்த இருவரும் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:47:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/viral-woman-in-negombo-prison-roof-protest-1783900921"></link>
            <id>https://ibctamil.com/article/viral-woman-in-negombo-prison-roof-protest-1783900921</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
</p><p>
இந்தநிலையில் குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார். </p><p>

இந்தநிலையில் தற்போது அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ?start=1" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-suspects-identified-police-1783897465"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-suspects-identified-police-1783897465</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும்
சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட
இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.</p><p> </p><p></p><h2>சிறைச்சாலை அதிகாரிகள்</h2><p>துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை
விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc2ff95-dc4c-42ee-8399-9024636cb10d/26-6a5429a919e1c.webp' /></p><p>மோதலுக்குப் பின்னர் சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில்
கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.</p><p> 

இதுவரை அங்கிருந்து
பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் 600 கைதிகளும்
விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>கைதிகளின் சடலங்கள்&nbsp;</h2><p>உயிரிழந்த
கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக
தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e4672d2-57a0-4105-8e55-5a094886184a/26-6a5429a9bee76.webp' /></p><p> 

மேலதிகமாக தலா 20 இலட்சம்
ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல்
காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னாள் மனித உரிமைகள்
ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-statue-for-sambanthan-in-public-1783896338"></link>
            <id>https://ibctamil.com/article/no-statue-for-sambanthan-in-public-1783896338</id>
            <summary type="text">இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது எனவும் கிழக்கு
மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

 ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத செயற்பாடுகள்</h2><p>இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து
செயல்பட்டுக் கொண்ட நிலையில் நான் வெளிநாடு சென்ற நிலையில் எனக்கு
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சுமார் 6 மாதகாலம் கட்சி வேலைகள்
தொடர்ந்து செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.</p><p>

இந்த இடைவெளி ஏற்பட்டது
இருந்த போதும் கட்சி வேலைத்திட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29888dd6-c35b-4145-85f2-3dd873a92b91/26-6a541c46a5e94.webp' /></p><p>

இருந்தபோதும் எங்களின் நிகழ்ச்சி நிரலில் இந்த தமிழரசு கட்சியை கிழக்கு மண்ணில்
இருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்று கருத்துக்கும் இடம் இல்லை
சிலருக்கு இது ஏளனமாக இருக்கும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.</p><p>

கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகள் அதற்கான காரணங்களையும் மிக விரைவில் இந்த அரசாங்கம் கண்டறிய
வேண்டும் என்பதுடன் அந்த குற்றத்தை செய்த குற்ற வாளிகளுக்கான தண்டனையை
வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.</p><p>
</p><p></p><h2>குற்றச் செயல்கள்</h2><p>அதே நேரத்தில் இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காது
இருப்பதற்கான ஒரு நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்றோம்.</p><p>

அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a707cdb0-429f-4fd3-8256-0222d335a543/26-6a541c460324b.webp' /></p><p> 

எனவே
அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும் பொது
இடத்தில் அமைக்க கூடாது.</p><p>

இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை
அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. 

அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும்
பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை
அகற்றுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்வோம்.</p><p>

அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை
நாங்கள் அறிவிக்கின்றோம். </p><p>

இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971"></link>
            <id>https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அமெரிக்காவின் ஹைமார்ஸ் (HIMARS) ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களே இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>குவைத்தின் பாதுகாப்பு&nbsp;</h2><p>சில மணிநேரங்களுக்கு முன்னர் குவைத்தின் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் இது குறித்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec37aab-6d7e-4811-92e4-5efe8026189f/26-6a53e71282da3.webp' /></p><p>அதில் நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் தாக்குதல் காரணமாக மூன்று எல்லை மையங்களும் கடல் கடந்த எண்ணெய் அகழ்வாராய்ச்சி தளம் (Offshore oil drilling platform) ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் ஹர்ஷனவுக்கு எதிரான பிரேரணை வீண்! பத்தரமுல்ல சீலரத்ன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-futile-says-seelarathna-1783889640"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-futile-says-seelarathna-1783889640</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று (12-07-2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது.</p><p> </p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும்.</p><p> எனவே,
இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a769297c-42a6-4484-b4bb-4ef72c23f413/26-6a540a04df840.webp' /></p><p>

நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப்
பக்குவமும் முதிர்ச்சியும் அவசியம்.
</p><p>
அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார்.
</p><p></p><h2>மருத்துவப் புனர்வாழ்வு&nbsp;</h2><p>நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது.&nbsp;&nbsp;</p><p> 

நீதி
அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbbddc2-fc45-4e29-bbf1-23672cc15cf0/26-6a540a05c73b1.webp' /></p><p> </p><p>மாறாக சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப்
புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்.</p><p>
நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின்
நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது.</p><p> 

கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின்
மகனாக இருந்தும் அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத்
தேடித் தருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:44:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் தாய்லாந்தை உலுக்கிய பாரிய தீ விபத்து...! 27 பலி - தொடரும் தேடுதல் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27-killed-in-thailand-bar-fire-accident-1783887053"></link>
            <id>https://ibctamil.com/article/27-killed-in-thailand-bar-fire-accident-1783887053</id>
            <summary type="text">தாய்லாந்தில் தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்காக் (Bangkok) நகரில் உள்ள மதுபானக் கடை (Bar) ஒன்றிலேயே இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பேங்காக் (Bangkok) நகரில் உள்ள மதுபானக் கடை (Bar) ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
நள்ளிரவு கடந்த உடனேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>தீயணைப்புப் படையினர்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்த போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்த கட்டடத்தின் முதன்மை வாயில் வழியாக அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43669a45-d58f-4c37-b378-d19b168f7656/26-6a53f4cea7d1f.webp' /></p><p> 

இவ்விபத்து தொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p>

தீ விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் (Anutin Charnvirakul) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><h2>பலர் சிகிச்சை</h2><p>மேலும் தெரிவித்த அவர், இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியதுடன் காயமடைந்த மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அத்துடன் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4008d9-747d-493c-9dcc-44cb859ce313/26-6a53f4cf57047.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் இக்கோர விபத்தின் பின்னர் அங்கு வந்திருந்த பலரைக் காணவில்லை எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T20:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-stronger-than-us-for-now-analyst-says-1783884560"></link>
            <id>https://ibctamil.com/article/iran-stronger-than-us-for-now-analyst-says-1783884560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வாளர் வொல்ஃப்காங் புஸ்ஸாய் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்குத்தான் தற்போது
சாதகமான சூழல் இருப்பதாக ஈரான் கருதுகிறது.</p><p>
</p><p></p><h2>தொழில்நுட்ப நிலை</h2><p>இராணுவ ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த தொழில்நுட்ப
நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
</p><p>
இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காவிடம் பல
வழிகள் இருப்பதால் அதுவே வலுவான மூலோபாய நிலையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca7d9bd6-861d-4276-ba76-4b41302876c9/26-6a53ef1b41b19.webp' /></p><p>

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அளவில்
செல்வாக்குமிக்க நாடுகள் தலையிட வேண்டியது அவசியம்.</p><p>

இது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு காரியம்.
</p><p>
ஈரானை நல்வழிப்படுத்த வெளியில்
இருந்து ஒரு பரந்த அளவிலான அணுகுமுறை தேவைப்படுகிறது.</p><p>

இதில் அரபு வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் குறிப்பாக ஈரானின் மிகப்பெரிய
பொருளாதார வாடிக்கையாளர்களாக இருக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்
தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:46:49+00:00</updated>
        </entry>
    </feed>
